கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1982.12.15

Page 1
கைலாஸ் என்ற
 

5 டிசம்பர் 1982

Page 2
கண்களில் நீர்: நெஞ்சில் தீ
கைலாஸ் என்ற மலை சாய்ந்துவிட்டது.
சிலரது மரணம் மலைபோன்றது; பலரது இறகு போன்றது என் ருர் மாஒ.
அவரவ்ர் சமுதாயத்திற்கு, அதன் ஏற்றத்திற்கு, சிந்தனை வளர்ச் சிக்கு ஆற்றிய சேவையை வைத்தே மாஒ மரணத்தை அளவிட்டார்.
கைலாசபதி சமுதாய வளர்ச்சியின் முன்னேடியாக வாழ்ந்தார்; அதன் உந்து சக்தியாக விளங்கினர்.
கைலாசபதி இலங்கையில் இந்நூற்ருண்டின் கலை, இலக்கிய மறு மலர்ச்சியின் தந்தை: ஈடுசெய்ய முடியாத மேதை.
கைலாசபதி ஒரு நிறுவனமாகவே இயங்கினர்.
·器 கைலாசபதி ஒரு கல்விமானக யாழ். பல்கலைக்கழகத்தைக் கட்டி எழுப்பினர். யாழ். வளாகத்தின் முதற் தலைவராகவும் கலைப்பீடாதி பதியாகவும் இறுதிவரை உறுதியாக உற்சாகத்துடன் உழைத்ததை எவ ரும் மறக்கமுடியாது. சென்ற 18 ஆண்டுகள்வரை அவரிடம் கல்வி கற்று வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மாணவர் மூலம் புதியதோர் பரம் பரையையே நாட்டில் உருவாக்கினர்.
தமிழ் இலக்கிய ஆராய்ச்சித்துறையில் அவர் ஒரு தனித்துவ ஆய் வாளனுக விளங்கினர். ஆராய்ச்சி மாணவர்க்கு நவீன ஆய்வு முறை களை வகுத்துக் காட்டினர். பண்டைத் தமிழ் இலக்கியத்தை அவர் முற் முக ஒதுக்கிவிடவில்லை. அதை பழைய பண்டிதர்போலல்லாது ம்ார்க் சிய அறிவியல் நோக்கில் அணுகினர். தமிழில் முதன் முதலில் இம் முறையைக் கையாண்டவர் இவரே. அத்தோடு நவீன கலை, இலக்கியங் களையும் விஞ்ஞான முறையில் விமர்சிக்கும் முறையைக் காட்டியவரும் அவரே. இவ்விரண்டு முறைகளும் தமிழ்நாட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அங்கு கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் புதுமை யைக் கண்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்தோடு அவ ரைக் கற்கவும் அவர் வழியைக் கடைப்பிடிக்கவும் தொடங்கினர்.
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், அடியும் முடியும், ஒப்பியல் இலக்கியம் ஆகிய நான்கு நூல்களும் சென்ற 15ஆண்டுகளில் தமிழகத்தில் பெரியதோர்தாக்கத்தை ஏற்படுத் தின. இவற்றுடன், இருமகாகவிகள், இலக்கியமும் திறனுய்வும், மக்கள் சீனம், தமிழ் விரயுகப் பாடல் (ஆங்கிலம்) ஆகிய நூல்கள், ஆங்காங்கே எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அவரின் சிந்தனையின் புதுமையைக் | g5 fT GðÕTG) s TLD. 屬 கைலாசபதி தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலம்
ஈழத்து எழுத்துலகின் தனித்துவகாலமாகும்.
இவற்றிற்கும் மேலாக, ஈழத்து முற்போக்கு இயக்கத்தின் முன் னேடியாகவும் முதல்வராகவும் நின்றவர் கைலாசபதியே. கலைஞர்களை யும் படைப்பு இலக்கிய கர்த்தாக்களையும் அவர் மதித்தார்;ஆதரித்தார். கண்டன விமர்சனமூலம் அவர்கள் ஒதுங்கிவிடாதபடி,ஆர்வமூட்டி முன்
னேறும் வழியாக விமர்சித்தார்.
畏、
 
 
 

விமர்சனத்தை ஒரு தனிக் கலையாகக் கையாண்டார். அண்மையில்
அவர் முன்னுரை எழுதாத நூல்கள் அரிதே. புதிய எழுத்தாளரின் நூல்
வெளியீட்டுவிழாக்களிலெல்லாம் பங்கு பற்றி, ஆர்வ மூட்டி விமர்சித்
O -
g5rtit.
அண்மையில் பாரதி பற்றிய ஆழ்ந்த, புதிய ஆராய்ச்சியில் ஈடு பட்டிருந்தார்; முழுவதும் எழுத்தாக வடிக்கப்படவில்லை.
அவரது தமிழ் நடை ஒரு தனி நடை சிக்கலான விஷயங்களையுட் தெளிவாகக் கூறும் ஆற்றல் நடை; அவரது சிந்தனையிலிருந்து வழிக் தோடுவதுபோல அகண்டு விரிந்து குறுகும் நடை நூற்றுக் கணக்கா புதிய தமிழ்ச் சொற்களை அவர் தமிழுக்குத் தத்துள்ளார்.
புதிய சிந்தனையையும் அணுமுறையையும் அவரது பேச்சுகளில் என் றும் காணலாம். தீவிர உணர்ச்சிப் போக்கை அவரது எழுத்திலோ பேச்சிலோ பார்க்க முடியாது. ஓர் அறிஞனின், சிந்தனையாளனின் சிறப்புகளையே காண முடியும். '
அவர் பரந்த உலகையே பார்த்தார். என்றென்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கமாகவே நின்ருர், எழுதினர். "(-)"
யாழ். வளாகத் தலைவர், பேராசிரியர் பதவிகளை அவர் உயர்வாகக் கருதியதில்லை. நண்பர்களே, எழுத்தாளர்களை மட்டுமல்ல மாணவர் களையும் சம நிலையில் வைத்தே என்றும் பழகினர். அதனலேயே அவர் பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் தன்மதிப்பையும் பெற்றிருந்தார். கலை, இலக்கிய வளர்ச்சிக்குக் கைலாசபதி ஆற்றிய பங்களிப்பு மல்ை போன்றது. அதைத் தமிழ் இலக்கிய வரலாறு நிட்சயம் உறுதிப்படுத் தும. s
கைலாசபதி ஒரு சிறந்த கல்விமான்; நவீன ஆராய்ச்சியாளன்; சிறந்த பத்திரிகையாளன்; நல்ல விமர்சகன்; உயர்ந்த எழுத்தாளன்; புதுமைப்பேச்சாளன். சென்ற 25 ஆண்டுகளாகக் கைலாசபதி தமிழுக்கு, மக்களுக்கு ஆற்றிய பணிகள் அளப்பில. தன் குறுகிய வாழ்நாளில் பாதிக் காலத்தைத் தன் சொந்த வாழ்விற்கோ, குடும்பத்திற்கோ அல் லாது சமுகத்திற்காகப் பணியாற்றினன். இரவு என்பதை கலை இலக்கி யத்திற்கு உழைக்கும் காலமாகக் கழித்தான். முதுகுவலி, குன்றிய கண் பார்வை, உளைவெடுத்த கரம் ஆகியவற்றையெல்லாம் பொருட்படுத் தாது தூக்கம் விழித்து எழுதினன். நண்பர்கள் மனம் சுளியாதிருக்க கூட்டங்களுக்காக உடல் நலத்தைப் பாராது பிரயாணம் செய்தான்.
கொடிய இயற்கை, பாதி வயதில், திடீர் நோய் தந்து, விபத்து நடந்ததுபோல, பாதி மாதத்தில் கொன்றுவிட்டான். மனித உணர்வு களை அறியாத இயற்கை கைலாசபதியைக் கண்டறிந்த பல லட்சம் மக் களது-எழுத்தாளர், நண்பர்கள், மாணவர், குடும்பத்தவரது கண்களில் நீரையும் நெஞ்சில் தீயையும் மூட்டிவிட்டுப் போய்விட்டான். காலந் தான் இத்தீயை அணைக்க வேண்டும். ܚ - -
செ. கணேசலிங்கன். LSLSLSLSLSLSLSLSGSLSGSSLSLSSLSLSSLSLSSLSLLLLSLLLLLL

Page 3
அபிப்பிராய வாக்கெடுப்பின் காரணங்களும் எதிர்ப்பும் நாடோடி
மூன்ருவது உலக நாடுகளில் (பூர்ஷ்வா) ஜனநாயகம் புதிய வடி வங்களையும் விளக்கங்களையும் பெறுகிறது. இலங்கை அதற்கு விலக் கல்ல. அதற்குரிய காரணங்கள் சில:
(1) - தேசிய முதலாளிகளின் தலைமை இன்றி திரகு முதலாளிகள் ஆளும் வர்க்கமாக வருதல்.
(2) உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் ஆதிக்கம் உள்நாட்டு அரசியல் நலன்களைப் பாதித்தல். -
(3) பிறநாட்டுக் கடனும் வட்டியும் ஆதிக்கம்பெற அபிவிருத்தி என்ற போர்வையில் அரசு ஆதிக்கம் ஒருமுகப்படுத்தல்.
அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்துவது நியாயமல்ல. தேர் த ல் நடத்துவதே ஜனநாயக முறையானது என்பதற்கு மனித உரிமைக் கழ கம், பகுத்தறிவுக் கழகம், எதிர்க்கட்சிகள், தொழிற் சங்கங்கள் கூறும் காரணங்களைப் பிற தமிழ் இதழ்கள் வெளியிடாததால் இங்கு தொகுத் துத் தருகிருேம்.
l. 6TCup. நீதிபதிகளில் efit எதிர்த்துள்ளனர்.
2. 1978 அரசியலமைப்பு நடைமுறையில் இருக்கும்போது 1972 அரசியலமைப்புத் தேர்தலை இது நியாயப்படுத்துகிறது.
- 3. புதிய அரசியலமைப்புக் கட்சிகளை வோட்டு விகிதாசாரப்படி பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது என ஜே. ஆர். 4 ஆண்டு களாகப் பிரச்சாரம் செய்ததை நாம் மறக்கவில்லை.
4. தற்போதுள்ள யு. என். பி. கட்சி பா. உ. 51% வோட்டில் 2/3 பலத்துக்கு மேலே உள்ளனர். புதிய அரசியலமைப்பின்படி தேர்தல் நடாத்தின் பாதிப்பலமே கிடைக்கலாம். ஆகவே இம்முயற்சி நல்லெண் ணம் கொண்டதல்ல.
5. தற்போதைய பா. உ. மேல் மக்கள் வெறுப்புற்றிருக்கலாம், மக்கள் அவர்களை மாற்றும் உரிமை நிராகரிக்கப்படுகிறது.
( 2)

6, பரவலாக 196 பேரைத் தேர் முடியாது. பழைய 168 பேரையே பிரதிநிதித்துவப் படுத்தும்.
7. 49% மக்கள் தேர்தல் வேண்டும் எனக் கூறின் அவர்களைப் பிரதி நிதித்துவப்படுத்தப் பாராளுமன்றத்தில் எவருமில்லை.
8. அண்மையில் நடைபெற்ற ஜளுதிபதித் தேர்தலில் 6 பேர் போட்டியிட்டனர். 53% வாக்குகள் தனிநபருக்காக வாக்களிக்கப்பட் டவையே. பா. உ.க்கு அல்ல்.
9, தேர்தல் நடப்பின் மக்கள் பிரதிநிதிகளே மாற்றிவிடுவர். மக் கள் விரும்பா உறுப்பினர் மேலும் 6 வருடம் பதவி வகிப்பது தவறு. 10. சர்வதேச ஜனநாயக, மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு இது முரணனது. م *
11. மறு தடவையும் தேர்தலை நடத்தாது வாக்கெடுப்பு மூலம் தள் ளிப் போடலாம். தவழுன வழிமுறை முதல்தடவை புகுத்தப்படுகிறது. 12. கட்சித் தேர்தலைத் தவிர்க்கத் தற்போது யுத்தம் போன்ற தவிர்க்க முடியாத காலகட்டமல்ல.
13. இம்முறை பாராளுமன்றத்தின் தராதரத்தை மதிப்பிறக்கம் செய்கிறது. -
14. சுதந்திரக்கட்சியிலும் பலம் குறைந்த த. வி. கூட்டணி தொ டர்ந்து எதிர்க்கட்சியில் இருப்பது நியாயமற்றது.
15. சென்ற 5 ஆண்டுகளில் வாக்களிக்கத் தகுதிபெற்றவர் தாம் விரும்பும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை மறுக்கிறது.
16. ஜனதிபதி பா. உஇடம் ராஜிநாமாக் கடிதம் பெற்றுள்ள தால், பொதுஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறும்போது பாராளுமன் w றம் ஜனதிபதி ஆன தனி நபரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்படுகிறது. 17. பிரதான எதிர்க்கட்சியைத் தற்போது சிதைக்கும் முயற்சியும் அவசரகாலச் சட்டத்தின்போது வாக்கெடுப்பு நடத்துவதும் நல்லெண்ண முறையிலான தேர்தலல்ல.
குமரன் விஷயங்கள் ஆழமாகவும், தேவைக்கும் சிந்தனைக்குரியவை யாயுமுள்ளன. இலங்கைத் தமிழ் சமுகம் பற்றிய கட்டுரை தனிச் சிறப் பானது. "தரப்படுத்தல் அல்ல உயர்கல்வியே பிரச்சனை' என்ற வரிகள் பல பிரச்னைகளின் ஆழத்தையே தொட்டுக் காட்டுகின்றன.
--செ. க. நாதன், யாழ்ப்பாணம்,
( 3 )

Page 4
கேள்வி பதில்!
கே: பூர்ஷ்வா ஜனநாயகம் என்ருல் என்ன?
கே. ராஜசிங்கம், கொழும்பு.
ப; முதலாளித்துவ சமூக அமைப்பில் முதலாளிகளால் வகுக்கப் பட்ட ஜனநாயகமாகும். இங்கு ஆளும் வர்க்க முதலாளிகள் தம்வர்க் கத்தவரிடைமட்டும் ஜனநாயகத்தை வைத்துக் கொண்டு தொழிலாளி, விவசாயிகள் மேல் நடாத்தும் சர்வாதிகார ஆட்சியாகும். நாடாளுமன் றம், அரசியல் கட்சிகள், தேர்தல், வயது வந்தோர் வாக்குரிமை, தொழிற்சங்க” உரிமை யாவும் முதலாளித்துவப் புரட்சி ஏற்பட்டபின் கிடைக்கப்பட்ட சலுகைகளாகும். இவை யாவும் ஆளும் வர்க்கத் திற்கு ஆபத்து ஏற்படாதமட்டுமே கிட்டுவன. நெருக்கடி ஏற்படும் போது உரிமைகள் யாவும் தம் வர்க்க அளவில் வைத்துக் கொள்வர்.
ஆங்கிலேயர் தமது ஜனநாயக முறையைத் தாம் ஆண்ட காலணி நாடுகளுக்கும் வழங்கிச் சென்றனர். இதன்படி நாடாளுமன்றம் சட் டம் இயற்றவும், அதை நடைமுறைப்படுத்த அரசு அதிகாரிகளும், நீதி வழங்க நீதித்துறையும் ஆக மூன்று வடிவங்களும் தனித் தனியே சுதந் திரமாக, ஒன்றின் சுதந்திரத்தில் மற்றென்று தலையிடாது இயங்கும் என்ற தூய்மையான, கோட்பாடுகளைக் கொண்டிருக்கும். இது பாடப் புத்தக ஜனநாயகம். நடைமுறையில் வேருக இருக்கும். அண்மையில் இலங்னையில் பிரதம நீதியரசருக்கும் ஜனதிபதிக்கும் (நிர்வாகம்) இடையில் ஏற்பட்ட முரண்பாடு யாவரும் அறிந்ததே. பிரதம நீதியர சரால் சாட்டப்பட்ட குற்றங்கள் தவறு என ஜனதிபதி வாதாடுகிருர், இவ்வழக்கை விசாரித்து நீதி வழங்குபவர் யார்? மக்களா?
கே. அமெரிக்காவில் பொருளாதார அமுக்கம் ஏற்பட்டு வருவ தாகக் கூறப்படுகிறது. இது எமது நாட்டையும் பாதிக்குமா?
ப. செல்வராணி, யாழ்ப்பாணம்.
ப: அமெரிக்காதும்மினல் உலகமெங்கும் சளி பிடிக்கும் என்பார் கள். சோஷலிச நாடுகள் ஒரளவு தப்பிக் கொள்ளலாம், வளர்முக நாடுகளும் நிட்சயமாகப் பாதிப்படையும். எம்நாட்டின் அரசியலாரும் இந்நெருக்கடியில் பாதிப்படையவே செய்வர்,
( 4 )

கே: யு. என். பி. ஆட்சியை மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கப்
பொதுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்துவது நீதியா?
巴历, பரமலிங்கம், யாழ்ப்பாணம்.
ப; நீதிமன்றத்திலேயே இதற்கு எதிர்ப்பு இருந்தது. ஜனதி பதியே புதிய அரசியலமைப்புக்குப் பிரசாரம் செய்யும்போது அரசியற் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளுக்குஅளவாகத் தொகுதிகள் கிடைக் கும் என்று அடிக்கடி கூறினர். தேசிய அரசாங்கம் என்ற பேச்சும் அடி படுகிறது. சகல முறைகளிலும் ஆளும் வர்க்கத்தை ஒருமுகப்படுத்தும் செயலே நடைபெறுகிறது. இது தொழிலாளர், பாட்டாளிகளுக்கு வாய்ப்பான நிலையல்ல. மேலும் தேர்தல்கள் மூலம் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தலாம் என நம்புவதும் தவருன கருத்தாகும்.
கே. மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றிய தங்கள் கருத்து என்ன? r
தி. தங்கையா, திருமலை,
ப: முதலாளித்துவ வளர்ச்சி என்பது அதிகாரங்கள் மத்தியப்படுத் தப்ப்டுவதாகும். அவற்றை மாவட்டங்களுக்குப் பங்கீடு செய்வது என் பது வளர்ந்து வரும் முதலாளித்துவ அமைப்புக்கு முரணுனதாகும் ஆகவே இது நடைமுறையில் சாத்தியப்படாதது. சோஷலிச அமைப் பில் தான் நிர்வாகமும் கிராமமட்டத்திற்குப் போக முடியும். இன் றைய ஆட்சியின் நடைமுறையைப் பார்க்கும்போதே அதிகாரங்கள் மேலும் மேலும் ஓரிடத்தில் குவிந்து வருவதைக் காணலாம்.
கே: சுதந்திரக்கட்சியில் நக்சலைட்டுகள் இருப்பதாக ஜனதிபதி கூறுகிமுர். தம் ஆட்சிக்கால நக்சலைட்டுகளை (மக்கள் விடுதலை முன் னணி) விடுதலை செய்தவர் ஜே. ஆர். என்று சிறிமாவோ குற்றம் சாடிடு கிருரே. அப்போது நக்சலைட்டுகள் என்பவர் யார்?
மு. சிவலிங்கம், ܢ• கொழும்பு.
ப; வடஇந்திய நக்சல் பாரி என்ற கிராமப் பகுதியில் சாரு மிஜ7ழ் தாரால் ஆரம்பிக்கப்பட்ட விவசாயப் புரட்சியாளர்களைக் குறித்தே இவ் வார்த்தை புதிதாகப் பிறந்தது. இந்திய விவசாயப் புரட்சியாளர்களைக் குறிப்பிடும் இவ்வார்த்தை இன்று வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படு கிறது. கொலே செய்ய முயற்சித்தவர்கள் என்ற அர்த்தத்தில் ஜனதி பதியும் பயங்கர கிளர்ச்சிக்காரர் என்ற கருத்தில் சிறிமாவும் புயுன்
படுத்துகின்றனர்.
( 5 )

Page 5
8 சொல்லும் வர்க்கச் சார்பும்
. விந்தன் 0. 1. முன்னுரை:
சொல்லுக்குப் பின் வர்க்கச் சார்பு இருக்கிறது என்றும் இல்லை என் றும் இரு வேறு கருத்துக்களை இருவேறு முகாம்களிலிருந்து கேட்க முடி கிறது. சொல்லுக்குப் பின் வர்க்கச் சார்பு இருக்கிறதா இல்லையா, அப் படி இருக்குமானல்-எந்த அளவு இருக்கிறது என்று பார்ப்பதே இக்கட் டுரையின் நோக்கம். - 0, 2. எல்லாம் வர்க்கச் சார்புடையன; w
உலகிலுள்ள எல்லா இயக்கங்களும் வர்க்கச் சார்புடனேயே அமைந்துள்ளன. சமுதாயத்தின் அடிப்படை அமைப்பான பொருளா தாரக் கட்டமைப்பிலுள்ள இயக்கமாயினுஞ் சரி, அல்லது அது தவிர்த்த பிற எல்லாவுமான மேல்மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த இயக்கமாயி னுஞ்சரி, அங்கெல்லாம் வர்க்கச் சார்புடனேயே இயக்கங்கள் காணப் படுகின்றன. ஒருவகையில் பார்த்தால் இந்தச் ‘சொல்’ என்பதும் "வர்க் கம்’ என்பதும் கூட வர்க்கச் சார்புடனேயே பிறந்ததெனலாம்! முன் னிலையே பயன்படுத்தப்படும், தன்னிலும் மேலானவர்களிடம் 'நவில்க" "மொழிக" என்றும், தன்னைப்போல ஒப்பாரிடம் கூறு கூறுக" என் றும் வழங்கி வருகிறது. ஒடுக்கப்பட்டவர் ஒடுக்குவோரிடமிருந்து மீட்சிபெற வேண்டும் என்ற நல்லெண்ணம் தோன்றுகின்றபோதுதான் மக்கள் முதலான பல்வேறு பகுதிகளைப் பாகுபடுத்திப் பார்க்கும் ‘வர்க் கம்’ என்ற சொல் பிறக்கிறது. எதிர்மறையாக முரண்பட்டிருக்க எல் லாச் சொல்களும் ஒன்று ஒரு தரப்பிற்கும் மற்றது மற்றத் தரப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது வெளிப்படை. 0, 3. வர்க்கம் / வர்க்கச் சார்பு என்ருல் என்ன?
சொல்லுக்கும் வர்க்கச் சார்புக்குமுள்ள தொடர்புகளைஆயப்புகுமுன் வர்க்கம் என்ருல் என்ன? வர்கச் சார்பு என்ருல் என்ன? என்ற கேள்வி களுக்கு ஒரு தெளிவான வரையறை செய்து கொள்ளலாம். 0, 3. 1. வர்க்கம் --
இயற்கைச் சமூகம் சிந்தனை முதலானவற்றில் ஒரே மாதிரியா நலன் கொண்ட குழுவே ஒரு வர்க்கமாகும். w
இயற்கையில் முரண்பாடான காட்சிகள் பல கண்ணுக்குப் பளிச் செனத் தெரியும் இரவுXபகல்; பயிர்Xகளை; புலிXமான். சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகள் சில: ஒவ்வொரு சமுதாயமும் தனக்கு முன் தோன்றிய சமுதாயத்திற்கு உற்பத்தி முறையால் முரண்பட்டு இருக் கிறது. உடைமை வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் முரண் உடைய
(6 )

தாகும். கருத்து முதலியமும் பொருள் முதலியமும் சிந்தனையில்காணப் படும் முரண்பாடுகளாகும்: s
எனவே முரண்பாடுகளால் வர்க்கங்கள் தோன்றுகின்றன என்று கூறலாம். - s t 0. 3.2. வர்க்கச் சார்பு
தத்துவம் எப்பொழுதுமே ஒருதலைச் சார்புடையது. எல்லா வர்க் கங்களின் நலனையுங் காக்கும் பொதுசன தத்துவம் உலகில் எப்பொழு துமே இருந்ததில்லை. சமுதாயத்தில் உதித்தெழும் ஒவ்வொரு தத்துவ மும் ஏதாவதொரு வர்க்க நலனைக் காக்கும் பொருட்டே பணி செய் கிறது. பல சமயம் வலுவுடைய வர்க்கம், தன் வர்க்க நலனைக் காக்கும் பொருட்டே, தனக்குரிய தத்துவத்தைத் தானே சிருஷ்டித்துக் கொள் கிறது. ኳ
ஒரு தத்துவம் / கொள்கை / கருத்து | மெய்மை உடைமை வர்க்க நலனைக் காத்தால் அது உடைமை வர்க்கத் தத்துவம் என்றும் பாட் டாளி வர்க்க நலனைக் காத்தால் அதனைப் பாட்டாளி வர்க்கத் தத்துவம் என்றும் கூறுகிருேம். 'ኑ
காந்தியடிகள் கண்ட தருமகருத்தாமுறை, வினேபாபாவே தோற் றுவித்த பூமிதான இயக்கம், மாநில அரசுகள் கண்டிருக்கும் நிலஉச்ச வரம்புச் சீர்திருத்தச் சட்டங்கள் முதலானவைகள் எல்லாம், கூர்ந்து கவனமாக ஆராய்ந்து பார்த்தால், உடைமை வர்க்கம் அழிந்துவிடாத படி பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்டவை அல்லது அவ்வர்க்கத்தின் ஆயுளை நீடிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவை என்பது புலப்படும். எனவே இத்தத்துவங்களை உடைமை வர்க்கத் தத்துவங்கள் என்றும், இவை உடைமை வர்க்கச் சார்புடையன என்றும் கூறலாம்.
மார்க்சுக்கு முன்னும் பின்னும் இன்றுவரையுள்ள விஞ்ஞான சோஷ லிச தத்துவவாதிகள், சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் எல்லாம் சமூக உடைமைகளாக இருக்க வேண்டும் என்றும், யார் எந்தப் பண் டத்தை உற்பத்தி செய்கிருர்களோ அந்தப் பண்டத்தை விநியோகிக்கக் கூடிய சகல உரிமைகளும் அவர்களுக்கே இருக்க வேண்டும் என்றும் கூறு கிறது. அதாவது நிலங்கள் எல்லோருக்கும் பொதுவான சமூகச் சொத் தாக இருக்கும் அந்நிலத்தில் வரக்கூடிய உற்பத்திப் பண்டங்களை அந் நிலத்தில் பாடுபடுபவர்களே சகலருக்கும் விநியோகிப்பர். இந்தத் தத் துவம் உடைமையற்ற பரட்டாளிகளின் நலனைக் கொண்டிருப்பதால், இதனைப் பாட்டாளிவர்க்க தத்துவம் என்றும், இது விஞ்ஞான முறையில் அமைந்துள்ளதால் விஞ்ஞான சோஷலிச தத்துவம் என்றும். இதனை உரு வாக்குவதில் மார்க்சின் பங்கு அதிகமிருந்ததால் மார்க்சிய தத்துவம் என் றும் அழைக்கின்றனர். மார்க்சியம் வளத்தை எல்லோருக்கும் பங்கிடக் கூறுகின்றதேயன்றி சிலர் தவருகக் கூறுவதுபோல் வறுமை யைப் பங்கு போடக் கூறவில்லை. s
( 7 )

Page 6
தேயிலையின் நிறம் சிவப்பு
• செ. க. தேநீரும் இரத்தமும்
"தேநீரைக் குடிக்கும்போது எமது இரத்தத்தைக் குடிக்கிறீர்கள். எங்கள் தோலின் நிறம் தேயிலையின் நிறம். உள்ளே மறைந்திருப்பது இரத்தம்'-சாயம் என்ற சிறுகதையில் தோட்டத் தொழிலாளி ஒரு வன் கூறுகிறன்.
*70 வீத தோட்டத் தொழிலாளர் குதிரை லாயத்தை இரண்டா கப் பிரித்ததுபோன்ற தொடர் கொட்டகைகளில் தனித் தனியான புகை படிந்த அறைகளில் வாழ்கின்றனர்." -அண்மையில் இலங்கை வந்து சென்ற ஆங்கிலப் பேராசிரியரான டேவிட் செல்போன் எழுதுகிறர்.
*தோட்டத் தொழிலாளர் பன்றிகளிலும் மோசமான வாழ்க்கை வாழ்கிறர்கள்'- அரசியல் வாதியான அநுரா இந்தியப் பத்திரிகை நிருபர்களுக்குக் கூறுகிருர், -- நூற்றண்டுக் கொடுமைகள்
லாயங்களில் அடைபட்டுக் கிடக்கும் இவர்களுக்குப் போதிய நாட் கள் வேலை தருவதில்லை. மாதத்தில் 10, 12 நாட்களே வேலை தரப்படு கிறது. சில மாதங்களில் சில தோட்டங்களில் மட்டுமே 20, 22 நாள் வரை வேலை கிடைக்கிறது.
தக்க கூலி கிடையாது. மற்றத் தொழிலாளருக்கு வழங்கும் சம் பள உயர்வு, வாழ்க்கைச் செலவுப் புள்ளிப்படி உயர்வு கிடையாது. கிடைக்கும் கூலி உணவிற்கே போதாது. சத்துணவே கிடையாது.
பிரசவ சிசு மரணம் 1000க்கு 150. உலகிலே மிக உயர்வானது. நிமோனியா, புளூறு சி, தொய்வு நோய்கள் தொழிலாளரிடையே மலிந்துள்ளன. கல்வி அறிவு மிகக் குறைவான மக்கள் இவர்கள். பிள் ளைகளுக்குப் போதிய ஆரம்பக் கல்விக்கே வசதி கிடையாது. நடுத்தர வகுப்பு மாணவர் 8%. 10ஆம் வகுப்புப் படிப்போர் 3%. உயர்கல்விக்கே வாய்ப்பில்லை. இன்னும் 5 இலட்சம் பேர் நாடற்றவர்களாக உள்ள னர். இவர்கள் வாக்குரிமையும் அற்றவர்கள்.
ஆங்கிலேயர் கொடுமையாக நடாத்தி இவர்கள் உழைப்பைப் பறித் தனர். சுதந்திரத்தின் பின் இலங்கையர் கைக்குத் தோட்டங்கள் மாறின. தற்போது பெரும்பாலான தோட்டங்களை அரசு நிர்வகிக் கிறது. நிலைமையில் மாற்றமில்லை.
( & )

விடிவு சிடையாதா?
தோட்டத் தொழிலாளர் இன்னும் நவீன அடிமைகளாகவே பிறந்து இருளடைந்த லாயங்களில் வாழ்ந்து, இரத்தத்தையும் உழைப்பையும் தேயிலைச் செடிகளுக்கு வழங்கி, இறக்கும்போதும் தேயிலைச் செடிகளுக்கு உரமாகி வருகின்றனர். ..=م
மக்கள், அரசியலார், எழுத்தாளர்கள், பொருளாதார நிபுணர்கள் எல்லோரும் இவர்களுக்காகக் கண்ணிர் வடிக்கின்றனர். ஆயினும் இவர் கள் வாழ்நிலையை உயர்த்த முடிந்ததா? இல்லை. ஏன்? இதற்கு ஏதா வது விடிவு சிடையாதா? எதற்காக இத்தனை ஈவிரக்கமற்ற கொடும்ை கள், பரம்பரையாக, 100 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நடைபெற் கொண்டிருக்கின்றன.
Luus"IsmLư6uử uIIrữ?
1981 மத்திய வங்கி அறிக்கையின்படி 2,45,009 ஹெக்டர் நிலத்தில் தேயிலை பயிரிடப்படுகிறது இவ்வாண்டில் பெறப்பட்ட தேயிலை 21 கோடி கிலோ கிராம். இதில் ஏற்றுமதி செய்யப்பட்டது 19.2 கோடி கி. கி. இவற்ருல் கிடைத்த வெளிநாட்டுச் செலாவணி ரூபா 644 கோடி. அரசு பெற்ற ஏற்றுமதி வரி ரூபா 187.8 கோடி. டிொத்த தேசிய உற்பத்தியில் தேயிலையின் பங்கு 4.7%
தோட்டப் பொருளாதாரத்தால் பயனடைபவர்கள் உள்ளனர். அவர்கள் திண்டு கொழுப்பதற்காகவே இக்கொடுமைகள் நடைபெற் றுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் யார்? இங்குள்ள ஆளும் வர்க்க மும் அவர்களில் சார்ந்திருப்பவர்களும். இவர்களுக்கு வேண்டிய கார் கள், பெற்றேல், உணவுப் பொருட்கள், நுகர் பண்டங்களைப் பிறநாடு களிலிருந்து வரவழ்ைக்கத் தேயிலையால் கிடைக்கும் அந்நிய செலாவணி ரூபா 644 கோடி பயன்படுகிறது. இவர்களது சம்பளம், கல்வி, மருத் துவம், மானியங்களுக்கு வரிப்பணமாக ரூபா 187.8 கோடி பயன்படு கிறது. மற்றும் தரகு முதலாளிகளுக்குப் டெருந்தோட்டங்களில் விற் பனை செய்யும் உரம், கிருமிநாசினி, யந்திர உபகரணங்களால் கோடிக் கணக்கான ரூபாய்கள் லாபமாகக் கிடைக்கிறது. இதுதவிர இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானேர் வாய்ப்பாக வாழமுடிகிறது. வறுமையும் பசியும்
அரசியல் பொருளாதார வாய்ப்புப் பெற்றவர்கள் ஒரு பகுதியின ரைப் ‘பசி என்ற நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுதே அவர்கள் குறைந்த கூலியில, துன்பமான சூழ்நிலையிலும் உழைப்பர். பசிக்குக் காரணம் வறுமை-உணவுக் கட்டுப்பாடோ, குடிப்பெருக்
( 9 )

Page 7
கமோ, தொழில் நுட்ப அறியாமையோ அல்ல என்பதைஇன்று உலக ஆய்வாளர் ஒப்புக் கொள்ளுகின்றனர்.
உணவு, உற்பத்தி செய்யும் நிலம், நீர், ஒரளவு கடன் வசதி கிட்டின் உலகில் எவரும் பட்டினியிருக்க நேராது. ஆனல் இவற்றைச் சிறுபான் மையினரான முதலாளிகள் தமது . ஆதிக்கத்தில் வைத்துள்ளனர். தொழி லாளர் உழைப்பு முழுவதையும் அபகரிக்கப் பயன்படுத்தும் ஆயுதம் பசி. 6)10)}6ð) Lð.
ஏமாற்றுகள்
"தோட்டத் தொழிலாளரின் பள்கிலுள்ள சேமலாப நிதியே தோட் டங்களைத் தொழிலாளரே வாங்கி நடத்தப்போதுமானது" என்று அமைச் சர் தொண்டமான் சுதந்திரக்கட்சி ஆட்சியின்போது கூறினர். அவரால் இன்று தோட்டங்களைத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க முடிந்ததா? அல்லது ஆளும் வர்க்கம் சுரண்டும் பணத்தில் மற்றெல்லாத் தொழி லாளருக்கும் கிடைத்த ரூபா 70.00 சம்பள உயர்வைக் கொடுக்க முடிந் ததா? அப்படித்தரின் லாபகரமாகத் தோட்டங்களை நடாத்த முடி யாது போகும் என்று அவர் கூறுவார். யாருக்கு லாபம்? முதலாளிக்கா? அரசுக்கா? தோட்டத் தொழிலாளர்களுக்கா?
தேயிலை விலை வீழ்கிறது. அதிக கூலி கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர். உயர்ந்த விலை கிடைத்தால், அல்லது கிடைக்கும்வேளை (கொரிய யுத்தக் காலம்) அவர்கள் கூலி உயர்த்தப்பட்டதா? அதிக லாபம் கிடைப்பின் தரகர்கள் பகிர்ந்து கொள்வர். ஏனெனில் தொழி லாளர்களைப் பசியில் வைத்திருந்தாலே தோட்டங்களில் கடுங்குளிரிலும் வேலை செய்வர். அறியாமையில் வைத்திருந்தாலே அடங்கி வேலைசெப் வர். அரசியலுரிமை வழங்கின் அதிகாரம் பேசுவர். மேலதிக தொழி லாளரை வைத்திருப்பின் தேவைக்கு எப்பொழுதும் உழைப்பாளர் கிடைப்பர்; வேலை செய்யப் போட்டி போட்டு வருவர்.
இந்த ஏமாற்று நுட்பங்களையெல்லாம் நிர்வாகிகளும் முதலாளி களும் அறிவர். ஒரளவு உணவுப் டண்டம் மட்டும் வழங்கிவிடின் போதும். உயிரோடு வாழ்ந்து உழைப்பர். இதுவே முதலாளித்துவம் இத்தொழிலாளர் விவசாயக் கூலிகளே. யந்திர உற்பத்தியாளரல்ல இதையும் தரகர் அறிவர்.
முதலாளித்துவ வளர்ச்சி
தேயிலை உற்பத்தி யந்திர உற்பத்தியைச் சார்ந்ததா? இல்லை. விவ சாய உற்பத்தியே. தேயிலை அரைக்கும் தொழிற்சாலையில் வேலை செய் பவர் ஒரு சிலர் மட்டுமே.
( 10 )

தேயிலை உற்பத்தி மூலதன வளர்ச்சியைக் கொண்டதா? இல்லை. தொழிலாளர் உழைப்பையே அடிப்படையாகக் கொண்டது. இதனல் முதலாளித்துவ வளர்ச்சிக் கோட்பாடுகளுக்கு உட்படாது உள்ளது: பஞ்சாலை, நெசவாலை, சீமெந்து, கடதாசி, அச்சிடுதல், கம்பியூட்டர் ஆகியவற்றில் பூத உருவில் யந்திரங்கள் வரத் தொடங்கிவிட்டன. மூல தனம் அதிகமாகத் தொழிலாளர் தொகை குறைந்து வரும். இதுவே முதலாளித்துவ வளர்ச்சியாகும். ஒரு தொழிலில் கிடைக்கும் லாபத் தைத் தொடர்ந்து அத்தொழிலிலேயே முடக்கி, உற்பத்தியைப் பெருக் கிக் கொண்டு செல்வதே முதலாளித்துவம், தேயிலை உற்பத்தி சென்ற நூற்றண்டில் முதலாளித்துவ தொழிலாகத் தோன்றியிருக்கலாம். இன் றல்ல. தோட்ட நிரந்தர மூலதனம் (F1XED CAPITAL) குறைவு. அது வளர்வதாக இல்லை. இதனுல் உற்பத்தித் திறன் வளர்ச்சியும் குறைவே. தொழிலாளர் மிகக் குறைந்த நாட் கூலி அடிப்படையி லேயே இன்னும் உள்ளனர். போராட்டங்களும் பயன்தரவில்லை. மாதச் சம்பளம் என்ற பேச்சேயில்லை.
தேயிலைத் தோட்டங்கள் அந்நிலையிலில்லை. தேயிலைக் கொழுந்து பறிப்பதற்கோ, நிலங் கிண்டி உரமிடுவதற்கோ, புல்லு வெட்டுவ தற்கோ இன்னும் யந்திரங்கள் புகுத்தப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம்: குறைந்த கூலியில் போதிய மனித உழைப்புக் கிடைப்பது, கொழுந்து பறிப்பதற்கு யந்திரம் அமைப்பதிலுள்ள பெருஞ் செலவு, உலகச் சந்தையின் போட்டா போட்டி முதலியன.
தேயிலை உற்பத்தி முதலாளித்துவ வளர்ச்சியடைந்திருப்பின் அதற். களவான தொழிலாளர் மட்டுமே அங்குவாழ, பிறர் வேறு இடங்களுக் குச் சென்று வேறு உழைப்பில் ஈடுபட்டிருப்பர். தோட்ட உற்பத்தியில் ஈடுபட்டிருப்போர் முற்போக்கான சங்கம் அமைத்து மற்றைய யந்திர உற்பத்தியில் பெறுவதுபோன்ற கூலி பெற்றிருப்பர். வெளியேறிய தொழிலாளர் நிலை மோசமடைந்திருக்கும் என்று எண்ணுவது தவறு. மற்றவர்க்கு வேலையில்லாவிடின் அது பெரிய அரசியல் பிரச்சனையாக வளர்ந்திருக்கும்; முற்போக்கான ஆட்சி ஏற்பட்டிருக்கும்.
கூட்டுறவில் தோட்டங்கள்
இன்று தோட்டங்களைக் கூட்டுறவு முறையில் நடாத்தத் தொழிலா ளரிடம் ஏன் கொடுக்க முடியாது? அவ்வாறு கொடுப்பின் தொழிலாளர் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வர். முதலில் தமது உண வுத் தேவையைப் பூர்த்தி செய்வர். பட்டினி நிலை ஏற்படாது. எல் லோரும் முழுநேர உழைப்பில் ஈடுபடுவர். (அல்லது வாய்ப் பா ன உழைப்புத்தேடி வெளியேறுவர்). தொழிலாளர் தமது தேவையை
( 11)

Page 8
ஒட்டியே உழைப்பர். தரகர் லாபத்தை, ஒட்டியல்ல. தேயிலை லாபந் தராத பகுதிகளில் மாற்றுப் பயிரிடுவர். அல்லது பால்ப் பண்ணைகள் நிறு வுவர். தற்போது அரசு ஏராளமான நிலங்களைச் சர்வதேசக் கம்பெனி களுக்கு வழங்க உள்ளது. நெசில்ஸ் கம்பனி பால் பண்ணைகளை ஏற்படுத்த உள்ளது. இங்குள்ளவர்களுக்கு, தோட்டங்களில் வசிப்பவர்களுக்குக் கொட்டில் போடவும் நிலம் வழங்கார்,
மனிதாபிமானமும் விடிவும்
தோட்டத் தொழிலாளர்களே இலங்கையின் மிகப் பெரிய பாட் டாளிகளாக உள்ளனர். விவசாய உற்பத்தியாளர் நிலையில் இருப்பதா லும், வறுமை, அரசியல் உரிமை அற்ற அடிமை நிலையில் உள்ளதாலுமே இவர்கள் புரட்சி உணர்வு குன்றியவராக உள்ளனர். இவர்களது இந்த அரசோ, வேறு எவ்வித முதலாளித்துவ அரசோ தோட்டத் தொழி லாளர் பிரச்சனையைத் தீர்க்கப்போவதில்லை. இங்குள்ள முற்போக்கு அணிகளுடன் இணைந்து ஒரு சோஷலிசப் புரட்சியை ஏற்படுத்துவதன் மூலமாகவே அவர்களுக்கு நிரந்தர விடிவு ஏற்பட முடியும். அது வெறும் தேர்தல் மூலம் ஏற்படக் கூடிய மாற்றமல்ல. அதுவரை தோட்டத் தொழிலாளருக்காக முதலைக் கண்ணிர் வடிப்பதால் எவ்வித பயனு மில்லை. ஏனெனில் நூற்ருண்டு காலமாக இக்கண்ணிர் வடிக்கப்படு கிறது. மனிதாபிமானம் பற்றிப் பேசப்படுகிறது. அது முதலாளித்துவத் திடமோ, அதன் தரகர்களிடமோ எள்ளளவும கிடையாது. தொழி லாளர்கள்தான் மனிதாபிமானத்துடன் வாழ்கிருர்கள்; ஏமாறுகிறர் கள். ஒரு மனிதாபிமானம் மட்டுமே உள்ளது. அதுவே வர்க்கமனிதாபி மானம், இரத்தத்தை உறுஞ்சுபவன் மேல் மனிதாபிமானம் காட்டிக் கொண்டிருக்கும்வரை தொழிலாளர்கள் மனிதர்களாக வாழ முடியாது. அடங்கி ஒடுங்கி வாழ்ந்து இரையாகும் மிருகங்களாகவே வாழ முடியும், இவ்வாறு வாழும் ஆடு, மாடுகளே எளிதில் கொல்லப்படுகின்றன.
இலாப வீழ்ச்சியும் புரட்சியும்
இலாப விகிதத்தில் வீழ்ச்சி என்பது உபரியைப் பறித்தெடுக்கும் முறையின் வீழ்ச்சியுமாகும் முதலாளித்துவ அமைப்புள் லாபம் தவிர மற்ருேர் முறையைப் புகுத்துவது சிரமமானதாகும். இம்முரண்பாடு உற்பத்திமுறை, அரசியல்’ அமைப்பு, உறவுகளை பரீட்சிக்கிறது .இன் றைய பிரச்சனைகளை 1848, 1871, 1917 ஆகியவரலாற்றுக் காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இக்காலகட்ட நெருக்கடிகள், நிலையற்ற தனமை, பிரச்சனைகளின்ப்ோது புரட்சி நடைபெற்று அரசியல் வாழ்வில் மறு பிறவி ஏற்படுவதற்கு வழி வகுக்கலாம். இவ்வாறு 194*வி கம்யூனிஸ்டு அறிக்கை, 1871-ல் 'பாரிஸ் கம்யூன், 1917-ல் அக்டோபர் புர ட்சி ,பின்னர் சீனுவில் பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் காணலாமி
--சமீர் அமின்
( 12 )

பாரதி யார்?
-த, ச. இராசாமணி
வெற்பையடிக்கும் திறமுடையார்
நம்முன்னேரின் - வாள் வலியாலும் வேல்வலியாலும் பெற்றவிண்முட்டிய புகழ் இன்றில்லையே என்று பாரதி ஏங்குகிருன், போர் முரசின் ஒலியும் சங்கொலியும் அம்பாரத் தூணியிலிருந்து அம்பெடுத்து வில் லெய்து போரிட்ட பழங்கால நினைவுகளை எல்லாம் எண்ணிப் பெரு மூச்செறிகிருன்.
விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறமுடையார்-சமர் பண்ணிக் கலிங்கத்(து) இருள்கெடுத் தார்தமிழ்ப்
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு. - செந்தமிழ்நாடு என்ற பாடல் தொகுப்பில் உள்ளது இப்பா. இமய மலையின் உச்சி, வானத்தை இடித்துக் கொண்டிருக்கிறதாம். வானம் என்ன தவறு செய்தது? இமயம் ஏன் தன் தலையால் அதனை மோது கிறது? இப்படியொரு அநீதியா? இதைத் தமிழன் பொறுக்கலாமா? இமயமலை எவ்வளவு உயரமாய் இருந்தாலும் பெருமிதத் தோற்றம் கொண்டிருந்தாலும் வன்மை உடைத்தாயிருந்தாலும் என்னவாம்? மணி தனின் ஆற்றல் இதன் ஆற்றலிலும் மிகுந்ததன்ருே?! தமிழன் ஒருவன் கொடுமை செய்த இமயத்தை அடித்தான் என்றன். கரிகாலன் செண்டு கொண்டு இமயத்தை அடித்துத் திருப்பியதாக வழங்கும் கதையை நினைத்துப் பூரிப்படைகின்றன்.
‘செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச் சிமய மால்வரை திரித்தருளி மீளஅதனைப் “பண்டு நின்றபடி நிற்க இது!" என்று, முதுகில்
பாய்புலிக் குறி பொறித்து, அதுமறித்த பொழுதே!" கலிங்கத்தார் நம்மீது பகை கொண்டபோது அப்பகையை ஆயுதப் போர் வழியாக வென்ற பழைய வரலாற்று நிகழ்ச்சிகளையும் கூறித் தமிழ் மக்கட்குத் தெம்பூட்டுகிருன். - கலைஞானம் படை
‘கலை ஞானம் படைத்தொழில் வாணிப மும்மிக
நன்று வளர்த்த'தமிழ்நாடு’
( 13 )

Page 9
என்று செந்தமிழ் நாட்டின் பெருமைகளைப் பழந்தமிழர் கொண்ட நடைமுறைகளை-எண்ணி மகிழ்கிறன். இதில் தமிழர் வளர்த்த சிறப் நக்களாகக் குறிப்பிடுவன மூன்று;- 1. கலை ஞானம் வள்ர்த்தல் 2. படைத்தொழில் பயிற்சி 3. வாணிபத்தைப் பெருக்குதல் படைத்தொழில் பயிற்சியை எடுத்துக் காட்டித் தமிழர் பண்பாகக் குறிப்பிடுகிருன்.
போர்த் தொழில் பழகு முனையிலே முகத்து நில்-புதிய ஆத்திசூடியில் வருவன இவை. போர்த்தொழில் பழகுவதையும் - போர் முனையிலே முன் நின்று போராடுவதையும் ஊக்குவிக்கிருன்.
“கொடுமையை எதிர்த்து நில்" ‘சாவதற்கு அஞ்சேல்" * சிதையா நெஞ்சு கொள்' “தேசத்தைக் காத்தல் செய்' “பூமியை இழந்திடேல்" "நையப்புடை'- இவையெல்லாம் புதிய ஆத்திசூடியில் இடம் பெற்ற தொடர்களே. இவற்றைப் படிக்கும் பொழுதும் பாரதிக்கு வன் முறையில் நம்பிக்கை உண்டென்று கருத இடந்தருகிறது.
பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முக்த்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! இவ்வாறு பாப்பாப் பாட்டில் பாடியுள்ளான். பயங் கொள்ளாதே, மோது, மிதி, முகத்தில் உமிழ் என்றெல்லாம் பாடிக் குழந்தைக்கு வன் முறையில் நம்பிக்கையூட்டுகிருன். துன்பம் செய்பவன் வன்முறையைப் பயன்படுத்துவதால் அதனை வன்முறையால்தான் எதிர்க்க வேண்டு மென்கிருனே?
வீரமிலா நாய்கள்
பாஞ்சாலியை - திரெளபதியை - துச்சாதனன் தெருவழியே கூந்
தலைப் பற்றி இழுத்துச் செல்லும் காட்சி ஒன்று பாரதத்தில் வருகிறது.
இப்பகுதியைப் பாடவரும்பொழுது கவிக்கூற்முக - கதையில் இல்லாத
( 14)

செய்தியாகக்கூறும் செய்தியொன்றினையும் இங்கு நினைத்துப் பார்த்தல் நலம்.
கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினக் கையினுற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான் ‘ஐயகோ வென்றே யலறி யுணர்வற்றுப் பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர, நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னித்துச் சென்ருன், வழிநெடுக, மொய்த்தவராய், "என்ன கொடுமையிது வென்று பார்த் திருந்தார் ஊரவர்தங் கீழ்மை யுரைக்குத் தரமாமோ! வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே, பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினர் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
இளவரசன் திரெளபதியின் கூந்தலைப் பிடித்துத் தெருவழியே இழுத்துச் செல்லுகிருன். பாஞ்சாலி ‘ஐயகோ வென்று அலறுகிருள். உணர்விழக்கிருள். அந்நிலையிலும் தொடர்ந்து அவளை இழுத்துச் செல் கிருன், அக்கயவன். அவன் ஒரு விலங்கு பாரதியின் கணிப்புப்படி, ஆம், உண்மை, அவன் மனிதனு? இல்லை. விலங்கின் செயலைத்தானே செய்கிருன். நம்மால் இவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. இத னைப் பார்த்து நின்ற ஊர்மக்கள் என்ன கொடுமையிது என்று துடித்தார் கள் - பார்த்து நின்ருர்கள். அம்மக்கள் உணர்வைப் பாரதியும் உணர் ந்து கொண்டான். மதித்தான். இதுமட்டும் போதுமானது என்று அவன் நினைக்கவில்லை; அவ்வுணர்வு செயல்வடிவம் பெறல் வேண்டு மென்று கருதுகிருன். செயல்வடிவம் பெருத உணர்வால் பயனென்ன, இதனைத்தான் பாரதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பார திக்கும் கடுஞ்சினம் வந்தது. ஊர்மக்களைப் பார்த்துக் களிக்கூற்முகதன் கருத்தாக - "வீரமில்லா நாய்கள்', 'நெட்டை மரங்கள்" என்று சொற்கணைகளை ஏவுகிருன் ஒருவேளை மக்கள் சக்தியை மதிக்கத் தெரி யாதவனே என்ற எண்ணமும் சிலருடைய உள்ளத்தில் எழலாம். செயல் வடிவில்தான் சக்தி வெளிப்படும்; உணர்வை அறிந்து கொள்ள முடி யும். மக்கள்தான் செயலற்று நிற்கிருர்களே! புலம்பலும் ஒரு செயல் தானே. இச்செயலைக் "கீழ்மைச் செயல்’, ‘பெட்டைப் புலம்பல்” என்றெல்லாம் கடிகிருன். அவ்வாருயின் அவன் விரும்பும் உயர்ந்த
( 15 )

Page 10
செயல் - மனிதச் செயல் - என்ன? அவற்றையும் அவன் பாடல்களில் அடுத்து வரும் அடிகள் விளக்குகின்றன:-
1. ஊர்மக்கள் இளவரசனை மிதித்தல் வேண்டும்
2. அவனைப் பாதாளத்தில் தள்ளுதல் வேண்டும். அதாவது அழித்.
தல் - ஒழித்தல் -'வேண்டும். p
3. பாஞ்சாலியை மறுபடியும் அந்தப்புரத்தில் கொண்டுபோய்ச்
சேர்த்தல் வேண்டும். T 4.
இவையே அவன் விரும்பி ஏற்கும் செயல்கள். இந்த நடைமுறை என்பது ஒருவழிப் பாதையா? வேறு வழியேயில்லையா? இளவரசனின் மனத்தை அறிவுரையால் மாற்றி அவன் தவற்றை அவனுக்கு எடுத்துக் காட்டிப் பாஞ்சாலியை அவனிடமிருந்து விடுவித்து அவளை அவள் அந் தப்புரத்தில் சேர்த்தல் என்ற ஒரு வழியும் உண்டுதானே! கதைப்போக் கில் இந்நிகழ்ச்சி இல்லையே என்ற வினவையும் அவசரக்காரர் சிலர் கேட் கலாமல்லவா? ஏன் களிக்கூற்முகவேனும் இவ்வறிவுரையைப் பாரதி மக்கள் முன் வைக்கவில்லையே! நீதியை எடுத்துக் கூறி இளவரசனின் மனத்தை மாற்றும் அறிவாற்றல் அங்கு குழுமியிருந்த மக்களிடம் இல்லை யென்று கருதுகிருனே? அவ்வாற்றல் இருந்தும் துணிவில்லை என்று எண்ணுகிருனே? அநீதியால் வெல்லுதல், தீமையை நன்மையால் வெற்றி கொள்ளல், பாவத்தைப் புண்ணியத்தால் வெல்லுதல் ஆகிய இவையே சரியான நெறி; மற்றவை பரமமூடர்களின் செயல் என்று ஒரு சார் கொள்கையுண்டே, இக்கொள்கை பாரதிக்குத் தெரியாதா? அன்றி இவ்வேளையில் அவற்றை எண்ணிப் பார்த்திருக்க மறந்திருப் பாஞே? அவ்வாழுயின் இவை உணர்ச்சியில் வெடித்த சொற்களா? அன்றிக் கொள்கையில் மலர்ந்த கருத்துக்களா? என்ற ஐயப்பாடும் சிலரிடம் எழலாமல்லவா?. வன்முறையை வன்முறையால்தான் தூக்கி யெறிய முடியும் என்று நம்புகிருன் போலும். ஈட்டியவர் சிரங்களை
*சத்ரபதி சிவாஜி - தன் சைனியத்திற்குக் கூறுவது" என்ற தலைப் பிட்ட பாடலில் வரும் கருத்துக்களையும் நாம் இங்கு நினைவு கூர்தல் நலம்.
‘வீரரைப் பெருத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு! தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்?"
வீரரைப் பெற்றெடுக்காத பெருமையிழந்த தாய்மார்களை ஊர்மக் கள் மலடி, மக்களைப் பெருதவள் - என்று அழைப்பர் நம்மக்கள்
( 16 )

என்று ஆர்வமூட்டுவதாகப் பாடுகிறன், தாய்த்திருநாட்டை அழிக்கும் பகைவரை ஒழித்துக் கட்டாதவன் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்று கேட்கிருன், சிவாஜி கேட்பதாகப் பாடினன்.
செற்றின் மிலேச்சரைத் தீர்த்திட வம்மின்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின் நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடை முனையிலும் வயந்திகழ் சூலிலும் ஆளுடைக் கால்கள் அடியிலும் தேர்களின் உருளையின் இடையிலும், மாற்றவர் தலைகள் உருளையிற் கண்டுநெஞ்சு உவப்புற வம்மின் நம்மிதம், பெருவளம் நலிந்திட விரும்பும் (வன்மியை) வேரறத் தொலைந்தான் என்றே ஆனெனப் பெறுவோம்.'
பகைவர்களைத் தீர்த்துக்கட்ட வாருங்கள். ஈட்டியால் பகைவர் தலிைகளை வெட்டிட எழுங்கள். வேல்களைப் பகைவரின் மார்பில் எதிர் நின்று எறியுங்கள். வாள்முனையினலும், சூலாயுதத்தினுலும் துணிக் கப்பட்ட பகைவர்களின் தலைகள் போர் வீரர்களின் கால்களுக்கடியிலும் தேர்களின் உருளையின் இடையிலும் உருள்வதைக் கண்டு மனமகிழ வாருங்கள். நம் இன்பம், மிகுந்தவளம், போன்றவற்றை அழித்திட நினைக்கும் பகைவர்களை முழுமையாக வீழ்த்திய பின்னல்லவா நாம் ஆண் என்ற சொல்லுக்கு அருகதையாவோம்.
பகைவர் தலையை நம்போர்வீரர்களின் கால்களின் கீழும் தேர் களின் உருளையின் இடையிலும் உருள்வதை எண்ணிப் பாரதி பூரித்துப் போகிருன். இவ்வாறு செய்யவில்லையேல் ஆண்பிள்ளைகள் அல்லர் என் முன். இதுபோல் வீரரைப் பெருத தாய்மார்களைச் சிறப்பிழந்தவர்பெண்மையற்றவர் - என்று குத்திக் காட்டுகிறன்.
கால்பந்தாட்டத்தில் விளையாட்டு வீரர்களின் கால்களுக்கிடையே உருளும் பந்தைப் பேர்ன்று போர்க்களத்தில் உருளும் தலைகளைப் பார்த் துப் பூரித்துப் போகிறன். அப்பூரிப்பில் பிறரும்கலந்து மகிழல் வேண்டு மென்று விரும்புகிறன். அரசு ஒரு பலாத்கார வன்முறைக் கருவி என் பதையும், ஒரு வர்க்கம் - ஆளும் வர்க்கம் - தன் நலனைக் காத்துக் கொள்ள அதைப் பயன்படுத்துகிறது என்பதையும் அடக்கப்படும் வர்க் கம் தன் நலனைக் காக்க அவ்வரசைக் கைப்பற்ற வன்முறையைத்தான் பயன்படுத்துதல் வேண்டும் என்பது வரலாற்றுப் போக்கில் நடந்தே தீர வேண்டிய ஒன்று - தவிர்க்க முடியாத ஒன்று-என்றுங் கருதுகிருைே?
( I7ル

Page 11
எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக்கூடாதென்ற ஒரு சாரார் கருத்தைப்பாரதி அறி யானே? அறிவான். அறிந்தும் போர், கொலை, வன்முறை போன்ற வற்றை ஆதரிக்கிறனே. இவற்றைப் டாடுங்கால் அவனுக்கு ஒரு புதிய வேகம் தோன்றுகிறதே.
ஒருவன யொருவன் அடுதலும் தொலைதலும் புதுவ(து) அன்(று) இவ்வுலகத்(து) இயற்கை" -புறம் 76 ஒருவனை ஒருவன் கொல்லுதலும் ஒருவற்கு ஒருவர் தோற்றுப் போதலும் புதுமை இல்லை. இவ்வுலகில் தொன்றுதொட்டு நிகழும் ஒன்றே! என்ற புறநானூற்றுப் புலவன் கூறிய கருத்தோடு ஒன்றி நிற் கிருனே? இவை அவன் கொள்கையை நிலைநாட்ட அவன் தேர்ந் தெடுத்த நடைமுறைகளோ?
sisi 260T 6TL-IT
அரசியல் விடுதலை வன்முறையின் வழியாகவே பெறமுடியும் என்று
பாரதி நம்புகிறன். அவன் அரசியலைப் பற்றிப் பாடிய பாடல்கள் இதனை வலியுறுத்தும். பக்தியின் செயல்பாடுகளும் அரசியலின் வெளிப் பாடே என்று பாரதி நம்புகிறன். பக்தி என்பது அன்பு கனிந்து உருகும் நிலை என்று பொதுவாகப் பேசப்படுகிறது. ஆனல் அதை நிலைப்படுத்த வும் வன்முறை தேவைப்படுகிறது. இது பாரதிக்கும் உடன்பாடே. அவன் பக்திப்பாடல்களில் ஒன்றிரண்டை எடுத்துக் காட்டாகப் பார்க் கலாம். “கிருஷ்ணுர்ஜ"ன தரிசனம்" என்ற தலைப்பில் பின்வருமாறு பாடுகிருன்
... ... ... ... ... ... ... -Qalapith
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே
வில்லினை எடடா! - கையில்
வில்லினை எடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா - (வில்லினை)
இது பாரதப் போரில் வரும் ஒரு காட்சி.
சீனவில் குற்றச் செயல்கள் இவ்வாண்டில் 15% குறைந்துள்ளது. 1980இல் சீனவில் கொலை, திருட்டு கற்பளிப்பு ஆகிய பாரிய குற்றச் செயல்கள் 10,000 குடித்தொகைக்கு 1.1 ஆக உள்ளபோது அமெரிக் காவில் 590ம், மேற்கு ஜெர்மனியில் 620ம், யப்பானில் 120ம் ஆக உள்ளது.
( 18 )

சிறு கதை செ. யோகநாதன் நவீன ஏற்றுமதிகள்
இராமையாவுக்கு அந்தச் செய்தியைக் கேட்டதும் நெஞ்சு நின்று விடும்போலிருந்தது. தொண்டைக்குள் என்னவோ செய்ய கண்கள் இருட்டிக் கொண்டு வந்து வார்த்தைகளற்று வாய் கோணித் துடித்தது. அவனையறியாமலே கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் வடிய அசைவற்று நின்றவன் மெது மெதுவாகப் புற உலகக் காட்சிகள்
கண்களிலிருந்து ஒலியும் ஒளியுமற்றுக் கரைந்துபோக மயங்கியவனுய்ச் சரிந்து தரையோடு சாய்ந்தான்.
பொன்னேயாவின் மகன் இராமையாவுக்கு இப்போது வயது அறு பது. அவனுடைய பரம்பரையே வெலிமடத் தோட்டத்திலேதான் வாழ்ந்து முடிந்தது என்று பொன்னையா இராமையாவுக்கு அடிக்கடி சொல்லுவான். வெலிமடைத் தோட்டத்திலிருந்து இராமையா தன் னுடைய தகப்பன் இறந்ததன் பிறகே வெளியேறினன். வழமையான *காம்பரு’ச் சண்டை மிகப் பெரிதாகிப் பொலிஸ் வரை போய், விசா ரணை தொடங்க முதலே தன்னைப் பொலிஸார் "குற்றவாளிக்குரிய மரி யாதைகளுடன் நடத்தத் தொடங்கியதும் இராமையா பிள்ளைகுட்டி, மனைவியோடு லயத்தினை விட்டே ஓடிவந்து விட்டான். கடைசி முறை யாக, தானும் தனது பரம்பரையும் பிறந்து வளர்ந்த தேயிலைத் தோட் டத்தை ஆசைதீரப் பார்த்தான் இராமையா. தேயிலைச் செடிகள் பசுமையாக நிரை வகுத்து நின்றன. அதோ பிரட்டுக்களம். லயன் கள், துரையின் பங்களா. மலையைத் தழுவி வருகின்ற முகிற் கூட்டம். கண்களில் துளிர்த்த கண்ணிரை அவன் துடைத்துக் கொண்டு மனை வியையும் பிள்ளைகளையும் பார்த்தான். இந்தத் தேயிலைச் செடிகளுக்கே தனது பரம்பரையினரெல்லாம் உரமாக்கப்பட்டனர் என்று சிலவேளை களிலே பொன்னையா மனம் வெறுத்துச் சொல்லுகிற வார்த்தைகளிலே பொதிந்துள்ள நிஜத்தினை இப்போதுதான் அவன் அர்த்த புஷ்டியாக உணர்ந்து கொண்டான். ஒரு சின்னச் செய்கைக்காக அவன் இந்தத் தோட்டத்தைவிட்டே ஒளித்தோட நிர்ப்பந்திக்கப்பட்டான். அவனு டைய பரம்பரையின் சரித்திரம் எவ்வளவு இலேசாகத் தூக்கி வீசப்படு கிறது? தொழிற்சங்கக் கூட்டமொன்றிலே ஒருவர் பேசியது அவனது நினைவுக்கு வந்தது. ‘இலங்கை தன்னுடைய பெருமளவு வருமானத் தினைத் தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலமே பெற்று வருகிறது. ஆனல் அத்தத் தேயிலையை உற்பத்தி செய்தவர்களோ மிகக் கேவல மாகப் புறக்கணிக்கப்படுகிறர்கள். அதோடு நமது பொருளாதார
( 19 )

Page 12
அமைப்பும் இந்த முறையினல் சீரழிந்து போய்விடுகிறது. இந்த முறையை அடியோடு மாற்றியமைக்க வேண்டும் . இந்த ஆவேசமான குரல் இப்போதுந்தான் அவனுடைய மன அடிவாரத்தில் தைத்து நெருடு கிறது. ஆனல்.?
தூரத்தில், தெரிந்த முகங்கள் வருவதைக் கண்டு கொண்ட இரா மையா மனைவி மக்களுடன் பதுங்கிப் பதுங்கி பஸ்ஸில் ஏறிக் கொண் டான். இராமையாவின் மனைவி காமாட்சி. ஐந்து வயதான அம் முணி, பன்னிரண்டு வயதான கமலா, பதினறு வயதான மீனட்சி யோடு தோட்டத்தைவிட்டு வெளியேறிய இராமையா வவுனியாவிலே தான் வந்து தரித்தான். கூலியாய் அவன் குடும்பத்தோடு பட்டபாடு நெஞ்சைக் கரைய வைக்கும். வவுனியாவுக்கு வந்த மறு வருஷமே மீனட் சிக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டான். கந்தசாமி அந்த ஊர் வாசி. மீனட்சியின் பளபளவென்று மினுமினுக்கிற கறுப்பு நிறமும், தோகையாய் முதுகோடு வழிகிற கூந்தலும், புன்னகை தவழ்கிற முக மும், உற்சாகமான தோற்றமும் அவள் மீது அவனை மையல் கொள்ள வைத்தன. ஆயினும் அவனும் ஒரு கூலி விவசாயி என்பதே முக்கியம். மறு வருஷம் மீனட்சிக்கு ஒரு குழந்தை பிறந்தது. இறந்து போன தனது மனைவியின் பெயரே பேத்திக்குப் சூட்டப்பட வேண்டும் என் குழைந்தான் இராமையா. பேத்தி காமாட்சியோடேயே தனது பெரும் பொழுதின வாஞ்சையோடு கழித்து வந்தான் அவன். பதினெட்டு வரு ஷங்களாகக் காமாட்சியே அவனது சுமைதாங்கியாய், தோழியாய் தாயாய், எல்லாமாக.
காமாட்சி "பொலிடோல் குடித்து மரணமான செய்தியைத் தாங் கிக் கொள்ள முடியாத இராமையா மூர்ச்சையுற்று வீழ்ந்ததைக் கேள் விப்பட்டு மீண்டும் தலை தலையாய் அடித்துக் கொண்டு அலறிஞள் மீனட்சி. *
பதினெட்டு வருஷங்களாக இருந்த வீட்டில் சந்தோஷத்தையும், நம் பிக்கைகளையும் தோற்றுவித்துக் கொண்டிருந்த காமாட்சி, முகம் கோணி, உடல் நொருங்கி இப்படிப் பிணமாய்க் கிடப்பாள் என்று யார் தான் எண்ணியிருக்க முடியும்? அவளைச் சிறுவயதிலிருந்தே மிகவும் செல்லமாகத்தான் மீனட்சி வளர்த்து வந்தாள். அவளைவிட ஒருபடி முன்னே நின்று பேத்தியில் மிகவும் கரிசனை கொண்டிருந்தான் இரா மையா. காமாட்சி துறு துறுவென்றிருப்பாள். படிப்பிலும் மிகவும் கவனம். வயதை மீறிய உடல், உள வளர்ச்சி அவளுக்கென்று ஆசிரி யர்களே புகழ்ந்து சொல்வார்கள். லயத்திலும், தேயிலைத் தூரினுள் ளும் மக்கிப்போக இருந்த தன்னுடைய பேத்தியின் வாழ்க்கை இப்பகுதி
( 20 )

யில் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே இராமையாவின் தொடர் கனவாயிருந்தது.
*அப்பு, w நீங்க சொல்லுறதெல்லாம் சரி இப்பவும் குத்தகைக் காணியிலை இருந்து வாழ்க்கை நடத்துகிற எங்களுக்கு நீங்க நினைக்கிற மாதிரி உயர்ந்த சீவியம் எப்பிடிக் கிடைக்க முடியும்?"
காமாட்சி இப்படிச் சொன்னல் போதும். இராமையாவுக்குப் பொல்லாத கோபம் வந்துவிடும். கண்கள் சிவக்கப் பேர்த்தியைப் பார்ப் பான்.
"மோளே, ஒருபோதும் அப்புடிச் சொல்லிப்பிடாதை. நா ஒன்னை நெறையப் படிக்க வெச்சி உஸ்தியோகமாக்கி; நீ நெறையச் சம்பாரிக் கணும்..”*
பேரனை வாத்ஸல்யத்தோடு பார்ப்பாள் காமாட்சி. சூதுவாது அறி யாத பேரனைவிட அவள் நிஜஉலகினை அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப் புக்களிருந்தன. அவளது வகுப்பே ஒரு சிறிய உலகமாயிருந்தது. ஏழ் மையின் அதீத கனவுகளும், பணக்காரத்துவ உதாசீனங்களும், வாய்ப் பின்மையின் பரிதாபகரமான தோல்விகளும், வசதிகளும் முன்னேற்றங் களுமுண்டான முதன்மை பெற்று நிற்கிற அறிவுவிழுக்காடுகளும் அவ ளிற்கு வாழ்க்கையின் உண்மைகளை நிதர்சனமாகக் காட்டின.
தற்செயலாகத்தான் அவளின் காதிலே அந்தச் செய்தி விழுந்தது. "அதே பள்ளிக்கூடத்தில் மூன்ருண்டுகளுக்கு முன்னர் கல்வியை முடித்த மனேன்மணி, வெளிநாடு ஒன்றிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயாவாகப் போய்விட்டு நிறையப் பொருள், பணத்தோடு லீவில் வீடு வந்திருக்கிருள். மனேன்மணியின் வீட்டிற்கு அவளது ஆசிரியைகள் உட்பட நிறையப் பேர் - அவளுந்தான் சென்ருள். நம்ப முடியவில்லை. மனேன்மணியா இந்தக் குக்கிராமத்தில் பிறந்தாள்? தடித்திருந்தாள். வீடு நிறையப் பொருட்களிருந்தன. வாசனைத் திரவியங்கள் மணத்தன. விதம் விதமான அணிமணிகள். குளிரூட்டப் பெற்ற அறையிலிருந்த தால் இங்கு வந்து மகள் கொஞ்சம் கஷ்டப்படுவதாக, தாய் கூறியதை ஆசிரியைகள் அவதானித்துக் கேட்டனர். அது இயல்புதான் என்றனர்
ஊரெல்லாம் மனேன்மணியைப் பற்றிய பேச்சு.
காமாட்சியின் கனவு நினைவெல்லாம் மனேன்மணிதான். ஐந்தா வது நாள் வரதாம்பிகை ரீச்சர் காமாட்சியைத் தனியே அழைத்து, “காமாட்சி, ஒரு விஷயம் சொல்லுவன். இதை ஒருவருக்கும் இப்ப சொல்லக் கூடாது." என்ற பீடிகையோடு கதையைத் தொடங்கினள்.
( 21 )

Page 13
"மனே, தன்னேடை நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டுபோக விரும்புகிருள். நான் உன்னுடைய பெயரையும் சொன்னனுன் "'
அதிர்ந்து, பேச்சற்று, திகைத்து நின்முள் காமாட்சி.
“'' tየëëቸff ...” ” V
"ஒம் . வெளிநாட்டிலை போனல் ரெண்டு மூன்று வருஷத்திலை நிறைய உழைச்சுக் கொண்டு வந்திடலாம். இங்கை நாங்கள் வீட்டு வேலை செய்யிறதில்லையோ. அதுபோலை தான்.'
இது உண்மையானல் - அப்பு, உங்களை வீட்டிலை சாய்மனைக் கதிரை யிலை இருத்தி வைத்து நான் சாப்பாடு தருவேன். கல்வீடு கட்டுவேன். புதுப்புது உடுப்புகள் அம்மாவுக்கு வாங்கிக் கொடுப்பேன். அய்யாவுக்கு நல்ல வயற் காணியும் உழவு யந்திரமும்.
"ஆணுல் ஒன்று. மனேவுக்கு இதுக்கு ஒம்பதாயிரம் ரூபா கொடு க்க வேணும். ஒம்ப்தாயிரம் பெரிய காசில்லை. ஆயா வேலைக்குப் போனல் இரண்டு மாதத்திலை கிடைக்கிற் சம்பளம். நல்ல தருணம்.'
பேத்தி சொன்னதைக் கேட்டதும் இராமையா விழுந்து விழுந்து சிரித்தான்; பின்னர் சிரிப்பே கோபமாக மாறி, வார்த்தைகள் கடுமை யாக வெடித்தன.
மூன்று நாட்கள் ஒன்றுமே சாப்பிடாமல் அடம் பிடித்த காமாட்சி நான்காவது நாள் “பொலிடோல் குடித்துச் செய்துவிட்டாள்.
பிரேத ஊர்வலம் போய்க் கொண்டிருக்கையில்தான் இராமையா ஆஸ்பத்திரியில் சுயநினைவெய்தினன். அவனது சரித்திரத்தைத் தெரிந்த பக்கத்து வீட்டுக்கார கணேசு கவலையோடு கூறினன்;
'முந்தின காலத்திலை தேயிலையை ஏற்றுமதி செய்து எங்களினு டைய நாடு காசு சம்பாதிச்சுது, இப்பவோ ஆயாக்களை ஏற்றுமதி செய்து காசு சம்பாதிக்குது."
அந்த வார்த்தைகளைக் கேட்ட இராமையா தாங்க முடியாத சோகத் தோடு மீண்டும் விம்மி விம்மி அழத் தொடங்கினன்.
அங்கோர் கண்ணற்ற தீவினிலேதனிக்காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றர்.
-unt D5.
( 22

மார்க்சிய அரசியற் பொருளாதாரத்தின் இயல்பும் இலக்கும் (2)
--அ. வரதராஜப் பெருமாள்
மார்க்சிய தத்துவம் பிரதானமாக மூன்று கோட்பாடுகளை ஒன்றி ணைத்து நிற்கின்றது!
(1) வரலாற்று ரீதியான பரிணும வளர்ச்சி.
(2) இயங்கியல் இயக்கம்.
(3) பொருள் முதல் வாதம்.
மார்க்சிஸ்டுகள் எனக் கூறும் பலர் இவற்றின் ஒன்றில் அல்லது இவை "மாதிரியான ஒன்றில் நின்று விள்ங்குவதையே மார்க்சியம் என நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பலர் இந்தத் தத்துவார்த்த அடிப்படை பற்றிய சிந்தனை எதுவுமின்றி மார்க்சியத்திற்கே யுரித்தான சொற்ருெடர்களை (மட்டுமே) பயன்படுத்திக் கொள்பவர்களாக உள் ளனர். இவர்கள் மார்க்சிசம் ஒரு பாஷன்” என்று எண்ணுகின்றனர். இந்நிலை ஆபத்தானதே.
எனவே மார்க்சிசம் என்பது மேற்கூறப்பட்ட மூவகைத் தத்துவங் களையும் ஒன்றிணைத்து நிற்கும் தனித்துவமான தத்துவம் ஆகும். மேற் கண்ட மூன்று கோட்பாடுகளில் ஒன்றில் தங்கி நிற்றலோ அல்லது ஒன் றைத் தவிர்த்து நிற்றலோ மார்க்சிய அணுகு முறையாகாது. ஒரு மார்க் சிய வாதியை இம்மூன்று அடிப்படைகளையும் ஒரு விடயத்தில் ஒன்றிணைப் பதிலேயே இனம் கண்டு கொள்ளலாம்.
அடம் சிமித், ரிக்கார்டோ, மல்தூஸ் போன்ற ஆங்கில அறிவிய லாளரிடமிருந்து கார்ல்மார்க்ஸ் அரசியற் பொருளாதாரத்தைக் கற்றுக் கொண்டார். அவ் அர சி யற் பொருளாதாரம் முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று ரீதியானபரிணும வளர்ச்சியை இசைவுத் தொழிற்பாட்டு ரீதியான (FUNCTIONAL) பொருள் முதல் வாத அடிப்படையில் விளக்கியிருத்தது, ஆனல் மார்க்ஸ் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டவரல்ல. மாறக அவர் ஆங்கில அரசியற் பொருளா தாரத்தில் விளக்கப்பட்டிருந்த பொருளாதார இயக்கக் கூறுகள் முதலா ளித்துவ வரலாற்றில் எவ்வாறு இயங்கியல் ரீதியில் பரிணுமமடைந்தது,
( 23 )

Page 14
சமூகமாற்றப் புரட்சிக்கு எவ்வாறு வழி வகுக்கும் என்பதை விளக்கினர். எனவே மார்க்சியத்தில், விளக்கப்படுகின்ற விடயம் என்பதற்கு மேலாக விளக்கப்படும் ‘முறையே முதன்மையாகும்.
நடைமுறையில் "இசம்’ (1SM) என்பது திரிபுபடுத்தப்பட்ட அர்த்தத்தை உடிையதாக உள்ளது. ஓர் அறிஞரின் சொற்கள் யாவை யும் விழுங்கிக் கொள்வதே அவர் சார்ந்த 'இசம்’ எனக் கொள்ளப்படு கிறது. இதனலேயே லெனினிசம், ஸ்டாலினிசம், ட்ரொக்கிஸம், மாவோயிசம் எனப் பலவற்றைக் காண நேரிடுகின்றது. உண்மையில் * இசம்’ என்பது தத்துவார்த்த முறைமையே தவிர வேருென்றுமல்ல. எனவே மார்க்சிசம் தவிர்ந்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்த இசமும் உண்மையானது அல்ல. ஏனெனில் இவுை அனைத்தும் மார்க்சிச தத்து வார்த்த அடித்தளத்தையே ஏற்று நிற்கின்றன. மேற்கூறப்பட்டவற் றில் எவராயினும் குறைபாடு காண முற்படின் மார்க்சின் விளக்கத் திலும் குறைபாடுகள் உண்டு என்பதை அவர் மறுத்துவிட முடியாது. எனவே மார்க்சிசம் என்பது ஒரு தத்துவார்த்த-முறைமையியல் அடிப் படையேயாகும். அதில் மேற்கண்ட எவரும் மாற்றங்களை-திருத்தங் களைச் செய்யவில்லை. மார்க்சிய விஞ்ஞானத்தில் புதிய தோற்றப்பாடு களுக்கான விளக்கத்தை இவர்கள் மேலதிகமாக இணைத்தார்கள் என் பது மட்டுமே உண்மையாகும். வர்க்க நலன்
மார்க்சிச அரசியற் பொருளாதாரம் எந்த வர்க்கத்தின் நலனை இலட்சியமாகக் கொண்டுள்ளது? மார்க்சிசம் சுரண்டும்-ஒடுக்கும் வர்க் கத்தை நியாயப்படுத்தி, அதன் அமைப்புகளைப் பாதுகாக்கும் இலக் குடையதல்ல. மாறக, சுரண்டப்படும்-ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சார்பான அறிவியல் ஆகும்.
பூர்ஷ-சவா விஞ்ஞான தத்துவம் இலக்கு சாரா ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையுமே விஞ்ஞானம் என்கின்றது. மார்க்சிய விஞ்ஞானத்தத்து வம், இதற்கு மாருக, இலக்கு சாரா விஞ்ஞானம் என்ருென்றில்லை என் பதையும்; “இலக்கு சாராதிருத்தல்" என்னும் வாதம் மறைமுகமாகச் சுரண்டும் வர்க்கத்தின் நலன்"பேணும் வாதமே என்பதையும் தெளிவு படுத்துகிறது. மாற்றத்தை எவ்வாறு மேற்கொள்வது என்னும் இல க்கே யதார்த்தம் பற்றிய விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சியின், தேவையை அவசியப்படுத்துகின்றது என்பதையும் வலியுறுத்தி நிற்கின் Ո951
இவ்வகையில், மார்க்சிச அரசியற் பொருளாதார விஞ்ஞானம், சுரண்டும் வர்க்கத்துக்கும் சுரண்டப்படும் வர்க்கத்திற்குமிடையேயுள்ள
( 24 )

முரண்பாட்டின் வளர்ச்சிப் போக்கினை இனம் கண்டு, வர்க்க அமைப்பை அழித்தொழிப்பதை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டும் விஞ் ஞானமாகவும் உள்ளது.
புரட்சிகர உணர்வு
பூர்ஷ"வா அரசியற் பொருளாதாரம் இலாபத்தை உச்சப்படுத் தலையும், முதலாளித்துவ அமைப்பில் ஏற்படும் நெருக்கடிகளைச் சரி செய்வதற்கும் வழி காட்டுகிறது. இதன் மூலம் முதலாளித்துவம் சுரண் டல், ஒடுக்கு முறைகளை நியாயப்படுத்தி அவ் அமைப்பைப் பாதுகாப்ப தையும் இலக்காகக் கொண்டுள்ளது. முதலாளித்துவ உற்பத்தியமைப் பின் தீவிரமான அடிப்படையம்சம் தொழிற் பிரிவு ஆகும். இவ்வ மைப்பு கல்வி முறையை அரசியல் பொருளாதாரம், சமூகவியல், வர லாறு, தத்துவம் என அரசியற் பொருளாதார விஞ்ஞானச் சிந்தனை யைத் தூண்டி வைத்துள்ளது. இதன் மூலம் புரட்சிகரச் சிந்தனை வளர்ச்சியைத் தடுக்க முனைந்துள்ளது.
ஆனல், மார்க்சிச விஞ்ஞானம் அரசியல் பொருளாதாரச் சிந்த னையை ஒரே இயலாகவே நோக்குகின்றது. அதன் மூலம் சமூக யதார்த் தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வழி வகுக்கின்றது. துண் டாடப்பட்ட சிந்தனைகள் மார்க்சியத்துக்கு மாமுனவை.
உலகில் பெரும்பான்மை மக்கள் சுரண்டப்படும் வர்க்கத்தவரே. அதனலேயே மார்க்சியத்தின் இறுதி இலக்கினைப் பெரும்பாலானேர் ஏற்றுள்ளனர். இதனல் உலகில் புரட்சிகர உணர்வே மேலோங்கியிருக் கின்றது. மக்கள் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்தை உலகெங் கும் வேண்டுகின்றனர். புதிய கடமை
இன்றைய உலகை மாற்றியமைக்கக் கூடியவகையில் மார்க்சிச ரீதி யான அரசியற் பொருளாதார அறிவியல் வளர்ச்சி, நவமார்க்சிஸ்டுகள் எனப்படும் மிகச் சிறு குழுவினராலேயே தரப்படுகிறது. பெரும் பாலா னேரிடையே முரணுன, திரிபுபட்ட, வரட்டுத்தனமான நிலையே நிலவு கிறது. சரியான மார்க்சியப் பாதையில் செல்ல முற்பட்டுக் கொண் டிருக்கும் நவமார்க்சிஸ்டுகள் கூட இன்றைய உலகை விளங்கிக் கொள் வதில் சிறிதளவு தூரமே முன்னேறியுள்ளனர். எனினும் அவர்கள் உறுதியாகக் காலடிகளைப் பதித்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.
எனவே மார்க்சிய தத்துவார்த்த-முறைமையின் அடிப்படையில் இன்றைய உலகின் அரசியற் பொருளாதார அறிவியல் விளக்கங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதனை பூர்ஷ"வா அறிவிய லுக்கும் மார்க்சிய லேபலோடு நின்றுலாவும் திரிபுவாத வரட்டு வாதத் துக்கும் பலியாகிப் போயிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும், தொழி லாள வர்க்க நலன் விரும்பிகளுக்கும் விளக்க வேண்டும். இதுவே மார்க் சிய-புரட்சிகர அறிவியலாளர்களின் இன்றைய முதன்மையான கடமை யாகும.
( 25 )

Page 15
யாழ். சிற்றேடுகளின்
சிறுமையின் காரணங்கள் - மாதவன் -
இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதி தனித்துவ நாடாக வளர் கிறது. செய்திப் பத்திரிகைகள், ரேடியோ, டி. வி. மூலம் அடிக்கடி அதிர்ச்சிதரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அங்கு பொலிஸ் நிலையங்கள் தாக்கப்படுகின்றன. பொலிசார் கொல்லப்படுகின்றனர். துப்பாக்கிகள் திருடப்படுகின்றன. ஆளும்கட்சியின் அமைப்பாளர் கொல்லப்படுகின்றனர். அரசாங்க வங்கிப் பணங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. பயமுறுத்தல் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. அச்சகப் பெயரில்லாத துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின் றன. தெரு மதில்களில் இரவில் விசித்திர போஸ்டர்கள் ஒட்டப்படு கின்றன.
யாழ். தெருக்களில் தனியாகப் பொலிசாரைக் காணமுடியாது. வாகனங்களை வழிநடத்தும் பொலிசாரைச் சந்திகளில் காணமுடிய வில்லை. ஒருவழிப் பாதைகளில் இருவழியாகவும் வாகனங்கள் ஒடுகின் றன. பொலிஸ் நிலையங்களில் விசேட பாதுகாவல்கள்.
இராணுவ உடையிலும் தனியாக எவரையும் காணமுடியாது. சுழல் துப்பாக்கிகளை நீட்டிய வண்ணம் இராணுவ வீரர்கள் பெரிய டிரக்குகளில் ரோந்து சுற்றிக் கொண்டுள்ளனர். பொலிசாரையும் இதே நிலையில் ஜீப்புகளில் மட்டுமே காணக் கூடியதாக உள்ளது.
இராணுவ துண்டுப் பிரசுரங்கள் ஹெலிகொப்டர் மூலம் விநி யோகிக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பு நாடுகள் போன்ற நிலை.
இரவில் தெருக்களில் நடமாட்டமே குறைவு. இரண்டாவது சினிமா பார்ப்பவர்கள் மிகக் குறைவு பெண்களையே காண்பது அரிது. --
கடைகள் சிலவேளைகளில் திடீரென அடைக்கப்படுகின்றன. பஸ் ஒட்டங்கள் நின்றுவிடுகின்றன.
ஆங்காங்கே வழியில் வாகனங்கள் வழிமறித்துப் பொதிகள் யாவும் இராணுவத்தாலும் பொலிசாலும் ஆராயப்படுகின்றன.
இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ், இராணுவ முகாம் களில் விசாரிக்கப்படுகின்றனர். இவை பற்றி பலவித செய்திகள், வதந் திகள் பரப்பப்படுகின்றன.
உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப் படுகின்றன.
இளைஞர்கள் பொலிஸ், ராணுவ முகாம்களில் துன்புறுத்தப்படுவ தாகவும் விசாரணையின்றி நீண்ட காலம் சிறையிருப்பதாகவும், நீதி மன்றங்களில் குற்றம் சாட்டப்படுகிறது.
( 26 )

பயங்கரவாதச் சட்டம் யாழ். இளைஞர் மேலாகவே அமுல் நடத்தப் படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது.
இப்பயங்கரச் சட்டத்தை நீக்கும்படி நாடு பூராவும் குரல் எழுப் பப்படுகிறது. இச்சட்டப்படி வழக்குகள், யூரிமாரின்றி நடத்தப்பட்டு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துப் போஸ்டர் கள், மனித உரிமைக் கழகங்களின் குரல்கள் ஒலிக்கின்றள.
பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். வாய்கட்டி மெளன ஊர்வலம் போகின்றனர்.
இவற்றை எல்லாம் தினப் பத்திரிகைகள் மூலமும் அறிகிருேம். யாழ்ப்பாணத்திலிருந்து பல கலை, இலக்கிய சிற்றேடுகள் வெளிவரு கின்றன. அவற்றைப் படித்துப் பார்ப்பின் மேலே கூறப்பட்ட யாழ்ப் பாணத்தை நீங்கள் காணமாட்டீர்கள், அண்மையில் பார்ப்பின் பாரதி பற்றிய கட்டுரை, கவிதைகள், கதைகள், வேற்றுநாட்டு எழுத் தாளர், கலை இலக்கியம் பற்றிய செய்திகள், காதற் கதைகள், கடந்த கால இலக்கிய ஆராய்ச்சிகள், தனிநபர் பிரலாபங்கள் ஆகியவற்றையே காணலாம். இச்சஞ்சிகை ஆசிரியர் சிலர் தாமே எழுத்துலக ஜாம்ப வான்கள் என்றும் பறைதட்டிக் கொள்கின்றனர்.
இவ்வேறுபட்ட நிலைகள் பற்றிய காரணங்களைக் கண்டுபிடிக்க டாக் டர் பட்டத்திற்கு எவராவது பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி நடத்த வேண்டும் என எண்ணுகிறேன். ஆயினும் சில காரணங்களை என் சிற் றறிவிற்கு ஏற்ப இங்கு குறிப்பிடுகிறேன்:- மி 1. இச்சம்பவங்களுக்கும் கலை, இலக்கியத்திற்கும் எவ்விததொடர்பு
ல்லை.
2. இச்சம்பவங்கள் அரசியல் சார்ந்தவை, கலை, இலக்கியத்திற் கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்புமில்லை. பாரதி ஒரு மடையன். அரசியல்பற்றியும் பாடிவிட்டான்.
3. இவை பயங்கரவாதிகளின் செயல்கள். அவற்றிற்கும் எமது கருத்துகளுக்கும் தொடர்பில்லை.
4. இவை வேறுகட்சி அரசியல் சார்ந்தலை. நாம் அக்கட்சியைச் சாராதவர்கள்.
5. இளைஞர்களை ஆதரித்து எழுதின் அரசின் பகையைத்தேட நேரி டும். எதிர்த்து எழுதின் இளைஞர் பகை எம்மேற் பாயநேரிடும்.
6. நாம் எவற்றலும் பாதிக்கப்படவில்லை. ஏன் வீண்தொல்லையில் இறங்க வேண்டும்? Y
7. எழுதின் எம்இதழ் தடைசெய்யப்படலாம் . 8. நாம் இலக்கியம் பண்ண இவற்றிலும் பார்க்க முக்கிய பிரச்சனை கள் உள்ளன.
9. இவை, மாதிரிச் சம்பவங்களல்ல. அங்கொன்றும் இங்கொன்று மாக நடைபெறும் தனிச் சம்பவங்களே. பரவலானவையல்ல.
10. தீவிரவாதத்தில் இறங்குபவர் நன்கு வதைபடவேண்டியவர் களே. தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
11. சமகால சம்பவங்கள் செய்திகளே. இலக்கியத்திற்கு லாயக் கற்றவை.
( 37)

Page 16
சொற்பாதம்
புரியாத
சங்கிலி மன்னன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட போதும் எல்லாள மன்னன் அனுராதபுரியை ஆண்ட போதும் தமிழர்களுள்
ஆள்வோரும் இல்லை ஆளப்படுவோரும் இல்லை சுரண்டும் வர்க்கமும் இல்லை சுரண்டப்படும் வர்க்கமும் இல்லை எல்லாத் தமிழர்களும் மன்னர்களாயிருந்தோம் துட்டகெமுனுவும் பராக்கிரமபாகுவும் ஏனைய சிங்கள மன்னர்களும் இந்நாட்டை ஆண்டபோது சிங்களவர்களுள்
ஆள்வோரும் இல்லை ஆளப்படுவோரும் இல்லை சுரண்டும் வர்க்கமும் இல்லை சுரண்டப்படும் வர்க்கமும் இல்லை எல்லாச் சிங்களவரும் மன்னர்களாயிருந்தனர். அப்போது தமிழர்கள் எல்லோரும் ஆளப்படுவராயிருந்தோம். அன்னியர் இந்நாட்டை ஆண்டபோது மாத்திரமே
6. ரலாறு யோ.
சிங்களவரும் தமிழரும் ஆளப்படுபவராய் இருந்தனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் மீண்டும் சிங்களவர் எல்லோரும் ஆள்பவராயும் தமிழர்கள் எல்லோரும் ஆளப்படுவராயும் மாறி விட்டனர் இதுதான் எமது கண்ணுேட்டம் எமது அரசியற் றத்துவம் மார்க்சுக்கும் லெனினுக்கும் இந்த வரலாறு புரியவில்லை அதனுலேயே இதுவரை நிகழ்ந்த உலக வரலாறு வர்க்கப் போராட்டத்தின்
வரலாறென விளக்க மளித்தனர் சுரண்டும் வர்க்கத்தை பூண்டோ டொழிக்க உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்களென அறை கூவல் விடுத்தனர் அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னெரு வர்க்கத்தை அடக்கியாளக் கையாளும் சாதன மென்றனர்.
பன்றிக்குட்டிகளின் வாழ்க்கையிலும் பார்க்க இந்தியத்தோட்டத்
தொழிலாளர் வாழ்க்கை மிகமோசமானது. எங்கள் அரசாங்கம் உட்பட எந்த அரசுமே அவர்கள் வாழ் நிலையை உயர்த்த முயலவில்லே
அநுரா - இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் -
28 )

சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண்கள் -மாதவன்
‘மெஷின் ஊசி குத்திய காயம் இல்லாத பெண்களை எங்கள் உடை தைக்கும் தொழிற்சாலையில் காண முடியாது."
சுதந்திரவர்க்க வலயத்தில் (சு. வ. வ.) வேலை செய்யும் 18 வயதான சுவர்ணு சொல்லுகிருள். தன் வயதையொத்த 4, 5 தோழியருடன் கட்டுநாயக்க சு. வ. வ. கேட்டைத் தாண்டி பஸ்சை நோக்கி தெரு வழியே நடந்து கொண்டிருக்கிருள், முன்னும் பின்னும் நூற்றுக்கணக் கான இளம் பெண்கள். வியர்வை படிந்த முகங்களைத் தற்போது காற்று ஆற்றுகிறது.
‘நான் பொய் சொல்லவில்லை. எல்லோர் கைகளையும் பாருங்கள்.
யாவரும் கைகளை விரித்துக் காட்டுகின்றனர். பூப்போன்ற விரல் களல்ல. ஊசிபட்டுக் கண்டலான நகக் கண்கள். காய்போல கண்ட
லான விரல்கள்.
“ஊசி விபத்துகள் எப்படி நடக்கின்றன?
"ஒரே வேலையையே சிறிதும் ஒய்வின்றி 8, 10 மணி நேரம்வரை செய்யவேண்டி இருக்கிறது. மாலை வேளையில் கண்கள், தோள்மூட்டு கள், விரல்கள் யாவும் சோர்ந்து விடுகின்றன. அவ்வேளைகளிலேயே இவ்விபத்துகள் நடைபெறுகின்றன. இவைபற்றி நாங்கள் முறைப்பாடு களே செய்வதில்லை. வாயில் சிறிது நேரம் விரலை வைத்து இரத்தத்தை உறுஞ்சிவிட்டுத் தொடர்ந்து தைப்போம். இதுதவிர நாள் பூராவும் குனிந்தபடி வேலை செய்வதால் முதுகு வலி, நெஞ்சு நோ, மூட்டுவலி யும் இங்கு சாதாரணமான நோய்கள்."
"உங்கள் தொழிற்சாலையில் டாக்டர் இல்லையா? ‘இல்லை, தனியார் டாக்டரிடம்தான் இரவில் போக வேண்டும். 10 மணிவரை டிஸ்பென்சரிகள் திறந்திருக்கும். காலையில் மீண்டும் வேலைக்
குப் போகவேண்டுமல்லவா?
உடலில் வியர்வை படிந்த சேட் அல்லது ஜாக்கெட்போட்டு அரை யில்ஷ்கேட். வேகமாக பஸ்ஸைநோக்கி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக் கான சுவர்ணுக்கள் நடக்கின்றனர். 3 மைல் தொடக்கம் 15 மைல் வரை சிலர் பிரயாணம் செய்ய வேண்டும். இரவு சமைத்துச் சாப்பிட்
( 29 )

Page 17
வேண்டும். தூங்கி அதிகாலை 4, 5 மணிக்கு எழுந்ததும் வேலைக்குப் புறப்பட வேண்டும். பகல் உணவு தயாரிக்க வேண்டும். 6 நாள் வேலை. ஞாயிறுமட்டுமே ஒய்வு.
சென்ற 4 ஆண்டுகளிடை ஏற்பட்ட நவீன வலயம். இங்கு 20,000 க்கு மேற்பட்ட இளம் பெண்கள் கூலி அடிமைகளாக உழைக்கின்றனர். இப்பெண்கள் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள். முதல் தடவை யாக வீடுகளிலிருந்து உழைப்பதற்காகப் புறப்பட்டவர்.
பெரும்பாலும் யு.என். பி. சிபார் சில் வேலை பெற்றவர்.
இப்பெண்களில் 75%, 25 வயதிற்கு உட்பட்டவர்கள். 88% திரு மணமாகாதவர். 70% ஜி. சி. ஈ. சாதாரண வகுப்புவரை படித்தவர்; 28% சித்தியடைந்தவர்.
யாவரும் நாட்கூலியே பெறுகின்றனர். வேலையில் சேர்ந்ததும் ரூபா 17-50 கிடைக்கிறது. 6 மாதத்தின் பின் நிரந்தரமாக்கப்பட்ட தும் ரூபா 20-00 நாட்கூலி தருகின்றனர். 2, 3 வாரப் பயிற்சியிலேயே தைப்பதற்குப் போதிய திறமை பெற்றுவிடுகின்றனர். மேற்பார்வை யாளர் பதவி கிட்டின் ரூபா 22-50 கிட்டும். நடுத்தர தொழிற்சாலை களில் நாட்கூலி ரூபா 11-50இல் இருந்து ரூபா 16 00 வரை கிடைக் கிறது. 57% பெண்கள் மட்டுமே மாதம் ரூபா 50000 க்கு மேலாகப் பெற முடிகிறது. ஆண்டுகளுக்குப் 14 நாட்கள். லீவு உண்டு. பெரும் பாலான தொழிற்சாலைகளில் காலையும் மாலையும் தேநீர் இலவசமாகத் தரப்படுகிறது. ஒரு சில கம்பனிகளில் நண்பகல் உணவும், யூனிபோ மும் வழங்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், கொரியா, தாய்லாந்து, மலேசியா, பிலிப் பைன்ஸ் நாடுகளிலும் திறமையாக இலங்கைப் பெண்கள் உழைக்கின்ற னர். உதாரணமாக, இலங்கைப் பெண் 8 மணி நேரத்தில் 90 சோடி கையுறை தைக்கும்போது பாகிஸ்தான் பெண் 65 சோடியே தைக்கிருள். அதேவேளை இலங்கைப் பெண்ணுக்கே குறைந்த கூலி வழங்கப்படுகிறது. இலங்கையில் மாதம் ரூபா 700.00 வரை ஒகு கூலிக்கு முதலாளிக்ள் செல விடும்போது மலேசியாவில் ரூபா 2000.00, தென்கொரியாவில் ரூபா 2600-00, சிங்கப்பூரில் ரூபா 3300-00, கொங்கொங்கில் ரூபா 4800-00ம் செலவிடப்படுகிறது. அமெரிக்காவில் ஆயின் மாத உழைப்பிற்கு ரூபா 12,000-00க்கு மேலாகக் கூலி வழங்க நேரும்.
ஏற்றுமதிக் கோட்டா, குறைந்த கூலி ஆகியவற்றிற்காகவே வெளி நாட்டுக் கம்பணிகள் சு. வ. வலயத்தில் பெரும்பாலும் உடை தைக்கும் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன.
(30)

மூன்றும் உலக நாட்டுக் கம்பனிகளே பெரும்பாலும் இத்தொழிற் சாலைகளை நிறுவியுள்ளன. யந்திரங்கள் யாவும் ஜப்பான், அமெரிக்கா மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தவிை. உடைகளும் இந்நாடு களுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மூன்ரும் உலக நாடுகளில் பெண்களின் உழைப்பு மலிவாகக் கிடைக் கிறது. இலங்கையில் மிக மலிவு. இளம் பெண்கள் மிகவும் சுறுசுறுப் பாக வேலை செய்வர். 16-30 வயதுவரை பெண்களின் விரல்கள் சுறு சுறுப்பாக இயங்கக் கூடியவை என்பதை முதலாளிகள் நிர்வாக, அனு பவ, ஆய்வுமூலம் கண்டுள்ளனர்.
இளம் பெண்கள் குறைந்த கூலிக்கே உழைப்பர். பொறுமையாக வேலை செய்வர். தொழிற் சங்கம் அமைக்க மாட்டார்கள். (சு. வ. வலயத்தில் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமையே கிடையாது. எவ ராவது முயன்ருல் உடன் வேலை நீக்கம் செய்யப்படுவர்.)
பெண்கள் தொடர்ந்து வேலையில் இருக்க மாட்டார்கள். திருமணம் ஆனதும் வேலையை விட்டுவிடுவர். அல்லது ஒரிரு குழந்தைகளின் பின் னர் வேலையை விட்டுவிடுவர். தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் சிறிது உயர்வாகக் கூலி வழங்க வேண்டும். வயது ஏற, விரல்களின் சுறுசுறுப்புக் குறைந்து உற்பத்தித் திறமை குறையும். ஆகவே இளம் வயதில், இளம்பெண்களது சுறுசுறுப்பான உழைப்புத் திறனை, குறைந்த விலையில் பறித்தெடுக்கும் முயற்சியிலேயே வெளிநாட் டுக் கம்பணிகள் சு வ. வலயத்தில் ஈடுபட்டுள்ளன்ர். ஆண்களாயின் வேலை இழப்பு நன்கொடை, பென்ஷன், இளைப்பாறும் சம்பளம் யாவும் வழங்க நேரும். YA
ஒரு தையற் தொழிற்சாலையிலிருந்து இளம் பெண்களால் “பெண் ணின் குரல்" இதழுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் சில பகுதிகள் வரு t DFTg)/:''
, "எத்தனை வேகிமாக உழைத்தாலும் மேற்பார்வையாளர் திருப்தி யடைவதில்லை. ஒரு நிமிஷமும் ஒய்வின்றி வேலை செய்கிருேம். 12மணி நேரம்வரை உழைக்க வேண்டியுள்ளது. கூலி உயர்வே இல்லை. நிர்வாகி கள் லேண்டுவது உற்பத்தி மட்டுமே. அன்ருட உழைப்பின் அளவு குறைந்தால் தெண்டம். நிர்வாகத்தில் இருப்பவர் மாதம் ரூபா 5000, 6000 வரை சம்பளம் பெறுகின்றனர். எமக்கு ரூபா 20-00 தினக் கூலி. விடுதிகள் அண்மையில் கிடையாது. அதற்கு மாதம் ரூபா 300 வரை செலவாகிறது. யந்திரங்களுக்கும் எமக்கும் ஒப்வற்ற வேலை. அவை சூடேறி அனலைக் கக்குகின்றன. எம் உடலிலிருந்து எத்தனை சக்தி வெளியாகிறது என்பதைக் கணக்கிட முடியாது. அதை ஈடு செய் யக் கூடிய் கூலியும் கிடையாது '
‘அறியாமையில் அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்" தி
' - LurtJg5),
( 31 )

Page 18
போலந்தில் தொழிலாளர் எழுச்சியும் முரண்பாடுகளும்
--மாதவன் - உள் முரண்பாடுகள்
இன்று உலகின் கவனத்தை அடிக்கடி ஈர்க்கும் நாடு போலந்தாகும், அந்நாடு பல உள்முரண்பாடுகளைக் கொண்டது. அவற்றுள் சில வற்றை இங்கு காண்போம்.
போலந்தில் ரஷ்யா சார்ந்த கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நிலவு கிறது. கட்சிக்கும் தொழிலாளர்களை உள்ளடக்கிய *சொலிடாரிட்டி" என்ற அமைப்பிலுள்ள தொழிற்சங்க சம்மேளனத்திற்கும் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இது மிக விசித்திரமானதே. ஏனெ னில் சோஷலிச ஆட்சி என்பது பாட்டாளிகளது சர்வாதிகாரத்தை நிலை நாட்டி கம்யூனிசத்தை நோக்கிய பயணமாகும். பாட்டாளிகளது சோசலிச அமைப்பாயின் அங்கு வேலை நிறுத்தம் நடைபெற முடியாது. ஆனல் போலந்தில் அடிக்கடி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தலே மைப் பீடத்திற்கும் ம்க்களுக்குமிடையில் பகைமை முரண்பாடு ஏற்பட முடியாது. (கலந்து பேசித் தீர்க்கும் பகைமை பற்ற முரண்பாடே நிலவ முடியும்.) போலந்தில் பொலிசாருக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் அடிக்கடிமோதல் ஏற்படுகிறது. பல் s தொழிலாளர் கொல்லப்பட்டனர்; காயப்பட்டுள்ளனர்; சிறைப்பட்டுள்ளனர்; இந்நிலை தொடர்கிறது.
சொலிடாரிட்டி’ தலைவர் வலேசா உட்பட நூற்றுக் கணக்கானவர் சிறையில் உள்ளனர். வலேசா மட்டும் அண்மையில் விடுதலை செய்யப் பட்டார். சொலிடாரிட்டியில் ஒருகோடி தொழிலாளர் உள்ளனர். இவர்களில் 10 இலட்சம் தொழிலாளர் போலிஸ் கம்யூனிஸ்டுகட்சி அங் கத்தவராவர். இதைவிட கிராமப்புற சொலிடா ரிட்டியைச் சேர்ந்த 25 இலட்சம் விவசாயிகளும் உள்ளனர். தொழிலாளர் வாழ்க்கைத்தர வீழ்ச்சி, நுகர் பண்டத் தட்டுப்புாடு, பணவீக்கம், ஏற்றுமதி வீழ்ச்சி, பிறநாட்டுக் கடன்களை அடைக்க முடியா நிலை, தொழிலாளர் உழைப்பை முழுமையாகப் பயன்படுத்த முடியாததன்மை ஆகிய பிரச்சனைகள் வளர் ந்து கொண்டே செல்கின்றன.
ஆடு நனைகிறது ஓநாய்கள்
*சொலிடாரிட்டி அமைப்பைக் கலைக்க கம்யூனிஸ்டுகட்சித் தலைவர் கள் முயல்கின்றனர். தொழிலாளர்கள் மார்க்சிய - லெனிச சித்தாந்
( 32)

தத்தைக் கைக்கொள்ளாதவர்களாக உள்ளனர். கத்தோலிக்க மதமும் சேச்சுகளும் தொழிலாளர்களை ஆக்கிரமித்துள்ளன. சொலிடாரிட்டி" யின் போராட்டத்தை, வேலை நிறுத்தத்தை போப்பாண்டவர்மட்டு மல்ல அமெரிக்க ஜனதிபதியே ஆதரிக்கிருர் (தமது நாட்டில் நசுக்கு வர்) ஆடு நனைகிறது என்று ஒநாய்கள் கவலைப்படுவதுபோல ஐரோப் பிய முதலாளித்துவ நாடுகளுக்கும் போலந்து தொழிலாளர்களுக்காக இரங்குகின்றனர். இப்படியாகப் பல்வேறு வேடிக்கைகளை போலந்தில் பார்க்க முடிகிறது.
அமெரிக்காவும் பிறமேற்கு ஐரோப்பிய நாடுகளும் போலந்தை ரஷ்யப் பிடியிலிருந்து பறித்துவிட முயல்கின்றனர். முதலாளித்துவ அமைப்பிலிருந்த ஆப்கானிஸ்தானை அண்மையில் தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்த ரஷ்யா 88 ஆண்டுகளாகத் தன் ஆதிக்கத்திலுள்ள போலந்தை விட்டுக் கொடுத்துவிடப் போவதில்லை. முதலாளித்துவ நாடுகள் வெறும் பகற் கனவே காண்கின்றன.
சமூக அமைப்பும் சுற்றடலும்
போலந்தில் இன்றுள்ள சமூக அமைப்பை மூன்று சமூக வர்க்கங் களில் அடக்கலாம்.
(1) பெரிய கூட்டுறவுப் பண்ணைகள் உடைக்கப்பட்டதால் அதிர்ஷ் டவசமாகத் தனிச் சொத்துப் பெற்று விவசாயம் செய்யும் குட்டி பூர்ஷ் வாக்கள். இவர்கள், தம் உற்பத்திப் பண்டத்தின்மேல் ஆதிக்கம் கொண்டவர்கள். 80% விவசாயிகள் இத்துறையைச் சார்ந்துள்ளனர்.
(2) நடுத்தர தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர், கலை
ஞர்கள்.
(3) சிறு வர்த்தகர்கள், வங்கி, பிற வர்த்தக நிலையங்களில் உழைப்
’ போலந்து தொழிலாளர்களிடையே மார்க்சிய சித்தாந்தப் பிடிப் பில்லை. அவர்கள் இன்று காண்பது மூன்று அம்சங்கள். (1) மேற்கு ஐரோப்பிய பொருளாதார வெற்றியும் தம்மிலும் பார்க்க உயர்ந்த வாழ்க்கைத் தரமும். (2) போலந்தின் பொருளாதார அமைப்பின் தோல்வி. காரணம்: தொழில் நுட்ப வளர்ச்சியில் போலந்து முன்னேற வில்லை. மேற்கு ஐரோப்பிய நாட்டு தொழில் நுட்பம், கடன் உதவி களைக் கொண்டே முன்னேற முயன்றனர். போலிஸ் யந்திர உற்பத்திப் பண்டங்களை பிறநாடுகளில் விற்க முடியவில்லை; ஜர்மனி, யப்பான், பிரான்ஸ், அமெரிக்க யந்திர உற்பத்திப் பண்டங்களுடன் போட்டியிட முடியவில்லை. முதலாளித்துவ நாடுகளில் பெற்ற கடன் தொகை 2700 கோடி டாலர்களாகும். (3) ரஷ்யாவின் ஆதிக்கம்-போலிஸ் கம்யூ
( as

Page 19
னிஸ்கட்சி ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருப்பதால், போலிஸ் தேசிய உணர் வுடன் கூடிய எதிர்ப்பு மக்களிடை நிலவுகிறது, ரஷ்யா போலந்து எல் லையில் படைகளைக் குவிப்பதாக அமெரிக்கா அடிக்கடி கூக்குரலிட்டுப் பிரச்சாரம் செய்கிறது. ஆயினும் போலிஸ் கட்சியால் சமாளிக்க முடி யாது போகும் நிலையில், அல்லது அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பிய நாடுகளோ நுழைய நேரிடும்போதே ரஷ்யா போலந்தில் படைகளுடன் நுழையலுTம். ரஷ்யா-மூன்று காரணங்கள்
போலந்தில் மிக மோசமான நிலைமையடைந்தால் ஒழிய ரஷ்யா
அங்கு நேரடியாக நுழையமாட்டாது என்பதற்கு மூன்று காரணங் களைக் கூறலாம்.
(1) போலிஸ் தொழிலாளர் எதிர்ப்பு. அவர்களது கூக்குரலைத் தொ டர்ந்து (ஆப்கானிஸ்தான் எதிர்ப்பின் குரல் அடங்குமுன்) முதலாளித் துவ நாடுகளின் குரல் ரஷ்யாவின் உலக நல்லெண்ணத்தைப் பாதிக்கச் செய்யும். --
(2) ரஷ்யா நுழைவதால் அங்குள்ள பொருளாதார நிலை சீரமையப் போவதில்லை. ۔
(3) ரஷ்யாவின் மேல் பெரிய பொருளாதாரப் பழு ஏற்பட்டுவிடும் படைகளை நிரந்தரமாக வைத்திருக்கும் செலவுமட்டுமல்ல, முதலாளித் துவ நாடுகளில் போலந்து பெற்ற கடன்களும் ரஷ்யாவின் தலைமேல் வந்துவிடும்.
எப்படியிருப்பினும் போலிஸ் தொழிலாளரின் ஒற்றுமையும் போராட்டமும் பாராட்டுக்குரியதே. ஆயினும் அவர்களது இடதுசாரிப் போக்கு, தொடர்ந்த தோல்விகளிஞல் விரக்தியடைந்து விடுமோ என் றும் அஞ்சப்படுகிறது. ரஷ்யத் தொழிலாளர்களும் உலகத் தொழிலா ளர்களும் போலந்து விஷயத்தில் எத்தகைய கொள்கையைக் கடைப் பிடிப்பர் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பொருளாதாரத்தை முன்வைத்த தொழிற்சங்க வர்க்கப் போராட் டம் தற்காப்பு நடவடிக்க்ையாகும். வேலை நேரத்தை முதலாளிகள் கூட்டுதற்கும் கூலியைக் குறைப்பதற்கும் உள்ள எதிர்ப்பாகும். அர சியல் சார்ந்த வர்க்கப் போராட்டமே முதலாளித்துவத்தைத் தாக்கும் நடவடிக்கையாகும். இதன் மூலமே உழைக்கும் வர்க்கமும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஆதிக்கத்தைக் கைப்பற்ற முடியும்.
7 -அல்தூசர்,
(84)

அடச்சனமே
-சாருமதி
நடுக்கடலில் ஓடும் படகு
நாலு திசையும் பெரு வெளிகள் (சுடச் சுடத்தான் பொன் மிளிரும்; துயர்
படப் படத்தான் நிலை தெளியும்.
கடப்பாறை தூக்கியவன் நிலத்தின் கல்லுகளைப் பெயர்த் தெறிவான் நிலப் பாவாடை விரியென்று நடப்பவர்க்கு சுதந்திர நினைவுகள் செமிக்காது.
a
முடக் கழுதை மீதேறி வெற்றி முனை தேடிப் பயணம் போனல் துவக் கொலிகள் தீருமா; துன்பு தலப் புராணம் சாகுமா? V
கலைக் கொழுந்து மரத்தோப்பில் காக்கைகளே பீச்சுமானல் அடச் சனமே இனியுமா நீங்கள் அற்புதங் களுக்காய் காத்திருப்பீர்,
அடுப்படிக்குள் ஆக்கிய கஞ்சி அரசியலில் ஊசிப் போக படிப் படியாய் மரத்துப் போகும் பாவப் போர்வையால் சமூகம் மூடி இடித்திடும் வெறும் உரல்களில்; இனி எதைத் தேடுவீர் என் சனமே!
நடித்து நடித்து நாளெல்லாம் முடித்து விட்டோம் முழு நிலவில் அழுக்குப் படிய அமாவாசைகளே அடுத்து அடுத்து பூரணைகளாய் இங்கே!
நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவிவிழும் சிற்றெறும்பால் யான சாகும்
-பாரதி.
( Jo J

Page 20
மார்க்ஸ் மறைந்த நூற்றண்டு நினைவு
மார்க்ஸ் கல்வி வட்டத்தின் முடிவுகள்
உலக வரலாற்றின் உன்னத அறிஞரான கார்ல் மார்க்ஸ் மறைந்த நூற்ருண்டு நினைவுநாள் 14-3-1983 இல் வருகிறது. யாழ் நகரில் கூடிய மார்க்ஸ் கல்வி வட்டம் அன்னர் நினைவைக் கொண்டாடும் முகமாக பின்வரும் முடிவுகளை எடுத்துள்ளது.
1. 14-3-83இல் இருந்து ஓராண்டு காலத்தை மார்க்ஸ் நினைவு ஆண்
2. மார்க்ஸ் நினைவாகத் தபால் தலை ஒன்று வெளியிடும்படியும் மார்க்சிய விஞ்ஞானத்தை உயர்வகுப்பு மாணவரின் சமுக விஞ்ஞான பாடத்திட்டத்தில் சேர்க்கும்படியும் அரசை வேண்டுவது.
3. இவ்வோராண்டு காலத்திலும் தொழிலாளர், விவசாயிகள், கல் லூரி மாணவர், பல்கலைக்கழக மாணவரிடை மார்க்சிய விஞ்ஞானத்தை கூட்டங்கள் துண்டுப் பிரசுரங்கள், நூல்கள் மூலம் அறிமுகம்செய்வது.
4. ஒவ்வொரு மாதமும் முக்கிய மாவட்டத் தலைநகர்களில் மார்க் சிய விஞ்ஞானத்தின் அடிப்படைத் தத்துவங்கள் பற்றி மார்க்சிய ஆர் வலருடன் கலந்துரையாடல் நடத்துவது. மார்க்சிய கலை, இலக்கிய வட்டங்களே அமைப்பது. ۔۔۔۔۔۔۔
5. சிங்கள மார்க்சிச ஆர்வலர்களை இந்நினைவு ஆண்டிற்காக ஒன்றி ணைப்பது. கடிதப் போக்குவரத்து, பிற ஏற்பாடுகள் யாவையும் செ. கணேசலிங்கன் அவர்கள் கவனிப்பார்.
இவை சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,
செயலாளர்.
மார்க்ஸ் நூற்ருண்டு நினைவு,
201, டாம்வீதி,
கொழும்பு-12.
மார்க்சியகோட்பாடு மனித அறிவின் வரவாற்றில் முன் என்றும் இல்லாத புரட்சியைக் கூறுகிறது.
-அல்துரசர்,
( 36 )

பிரெஸ்னேவ் மறைந்து விட்டார். அன்ரபோவ் நீடு வாழ்க!
-மாதவன்
தனி மனிதரும் வரலாறும்
லெனின், ஸ்டாலின், குருசேவ், பிரெஸ்னேவ்-சோவியத் ரஷ்யா வின் நான்கு தலைவர்கள்-65 ஆண்டுகள். வரலாற்றுச் சாதனைகள் மிகப் பல. அண்மையில் பிரஷ்னேவ் இறந்துவிட்டார். , அவரிடத்திற்கு வந்த அன்ரபோவ் நீடுழி வாழ்க. X
மக்கள் தான் வரலாற்றைப் படைக்கிறர்கள். தனி மனிதர்கள் அல்ல. மனித வரலாறு முழுதும் வர்க்கப் போராட்ட வரலாறு. இதுவே மார்க்ஸ், ஏங்கெல்ஸ் முதன் முதலில் விடுத்தகோட்பாடு ஆகும்.
ஆயினும், நாம் தலைவர்களே வைத்தே நாடுகளின் வளர்ச்சியைக் கணிப்பது இன்னும் நடைமுறையிலிருந்து வருகிறது. முதலாளித்துவ ஆய்வுப் பிடிகளிலிருந்து நாம் முற்ருக விடுபடவில்லை. காரணம் நாமும் இன்னும் முதலாளித்துவ ஆளுகையிலேயே வாழ்ந்து கொண்டிருக் கிருேம். லெனின்
லெனின் தலைமையில் சோவியத் தொழிலாளர் நடத்திய அக்டோ பர் புரட்சியின் வெற்றி உலக மனித வரலாற்றின் ஒரு திருப்புமுனையா கும். லெனினின் புரட்சி அனுபவங்கள், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய விளக்கங்கள், செயல்கள், எழுத்துகள், பேச்சுகள் வரலாற்றில் அழியா இடம் பெற்றுள்ளன. வர்க்கங்களை ஒழித்து பாட்டாளிகளின் சர்வாதி காரத்தை நிலைநாட்ட அவர் எடுத்த முயற்சிகள் புதிய அனுபவங்களே.
புதிய அனுபவங்களில் ஆறுஆண்டுகள்: நோய்வாய்ப்பட்டுவிட்டார். மத்திய கமிட்டி அறிக்கைகளை, முடிவுகளை லெனினிடம் எடுத்துச் செல் லும் பொறுப்பு ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. லெனினின் நேர டிப் பழக்கத்தால் சிறிது காலத்தில் கட்சியில் ஸ்டாலினின் செல்வாக்கு வளரத் தொடங்கியது. லெனின் இறந்ததும் மரணச் சடங்கு ஏற்பாடு களை ஸ்டாலினே முன் நின்று நடத்திஞர். ஸ்டாலின்
டிரொக்ஸி லெனினின் மரணத்தின்போது சைபீரியாவில் இருந்தார். தந்தி பெற்று மொஸ்கோ திரும்ப மூன்று நாட்களாகிவிட்டன.
( 37 )

Page 21
அதற்குள் மரண ஏற்பாடுகள் யாவும் முடிந்துவிட்டன. அவ்வேளை முன் னின்று உழைத்த ஸ்டாலின் மத்திய கமிட்டியின் நல்லெண்ணத்தைப் பெற்றுவிட்டார். டிரொக்சி பெரிய சித்தாந்த வாதியாக இருந்த போது லெனினது கோட்பாடுகளுடன் நெடுகவே முரண்பட்டிருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளராக ஸ்டாலின் பெயர் அறிவிக்கப்பட் டதும் முதலாளித்துவ நாடுகளெல்லாம் அதிர்ச்சியடைந்தன. ஏனெ னில், ஸ்டாலின் பெயரை அதன் முன் வெளிஉலகில் எவரும் அறிந் திருக்கவில்லை. ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் பேசுவதையோ, பரவ லான பத்திரிகைப் புகழ் பெறுவதையோ தம் வளர்ச்சிக்காக நம்பி இருக்கவில்லை. கட்சி அமைப்பு அடிமட்டத்தில் உழைப்பதிலேயே அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்,
ஸ்டாலின் தன் தலைமையில், அனைத்தையும் வர்க்கக் கண்ணுேட்டத் தில் பார்ப்பதை இறுக்கமாகக் கடைப்பிடித்தார்.
டிரொக்சியுடன் முரண்பாடு
ஸ்டாலினுக்கும் டிரொக்சிக்கும் அடிக்கிடி முரண்பாடுகள் எழத் தொடங்கியது. டிரொக்சி லெனினேடு முரண்பட்டபோதும் அன்ன ரின் திறமையை உணர்ந்த லெனின் முக்கிய பல பொறுப்புகளை ஒப் படைத்திருந்தார். செம்படையைக் கட்டி எழுப்புவதிலும் எதிர்ப் புரட்சியை ஒடுக்குவதிலும் டிரொக்சி ஆற்றிய திறமையை லெனின் என் றும் மறக்க்வில்லை. டிரொக்சியும் லெனினின் சித்தாந்த திறமையை மதித்திருந்தார். ஆனல் ஸ்டாலினுக்கு அத்தகைய மதிப்பு அளிக்க டிரொக்சி தயாராக இல்லை. ஸ்டாலினின் தலேமையையும் கட்சியின் செயல்களையும் டிரொக்சி கண்டித்துக் கொண்டேயிருந்தார். இதனுல் முரண்பாடுகள் முற்றின. 1928இல் டிரொக்சி கட்சியிலிருந்து வெளி யேற்றப்பட்டார். 1929இல் அவர் நாடுகடத்தப்பட்டார். 1932இல் டிரொக்சியின் சோவியத் பிரஜாயுரிமை பறிக்கப்பட்டது. (1940இல் டிரொக்சி மெக்சிக்கோவில் கொல்லப்பட்டார்) டிரொக்சியின் வெளி யேற்றம் ஸ்டாலினின் தலைமையையும் கோட்பாடுகளையும் உறுதியாக்கி Այ5):
இரண்டாவது உலகப் போர்
1939இல் கிட்லர் போலந்தின் மீது படையெடுத்தான். கிட்லரைப் பற்றிச் சரியாக மதிப்பீடுசெய்வதில் ஸ்டாலின்தவறியிருந்தார். பூர்ஷ்வா ஆட்சியில் வளரும் ஏகாதிபத்தியத்திற்கும் பாசிசத்திற்குமுள்ள வேறு பாடுகளைத் தெளிவாக அவரால் கணிக்க முடியவில்லை. பாசிசம், ரஷ் யாவை நோக்கிப் படையெடுக்கப்பட்டபோதே ஸ்டாலின் கண்களை
( 38 ).

விழித்துப் பார்த்தார். கிட்லரின் தாக்குதல் பயங்கரமாக இருந்தது. ரஷ்யா சிறிதளவு தயார் நிலையிலும் அவ்வேளை இருக்கவில்லை.
இதனுல் சோவியத் ரஷ்யா மிகப் பெரிய பாதிப்புக்குள்ளானது. லெனின் கிராட் சுற்றி வளைக்கப்பட்டது. அந்நகரைக் காப்பாற்றிய வீரப் போராட்டம் சோவியத் அமைப்பின் உயர்வைக் காட்டி நிற்கும். ஆேனல் உயிரிழப்பு மிகவும் பயங்கரமாகும்.) ஓரிரு ஆண்டுகளில் ஸ்டா லின் கட்டி எழுப்பிய படை, யுத்தத் தயார் நிலை வியக்கத்தக்கது.
‘நாரைகள் பறக்கின்றன’
உலகின் முதலாவதாக ஏற்படுத்தப்பட்ட சோஷலிச அமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பு ஸ்டாலின் பொறுப்பில் வந்தது. அதற்காக சோவியத் மக்கள் செய்த தியாகம் அளப்பரியது. இரண்டுகோடி சோவி" யத் மக்கள் உயிரைத் தியாகம் செய்தனர். மேலும் இரண்டுகோடி மக் கள் காயமுற்று உடலுறுப்புக்களை இழந்தனர். தியாகத்திற்குத் தயா ரில்லாத பல்லாயிரம் பேர் சிறையில் இருந்தனர்.
யுத்தத்தின் வெற்றி சோவியத் அணியில் போலந்து, செக்கோசெல வாகியா, யூகோசிலவாகியா, கங்கேரி, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடு களைச் சேர்த்துக் கொண்டது. அந்நாட்டு மக்கள் புரட்சி செய்யாத போதும் அங்குள்ள சிறிய கம்யூனிஸ்டு கட்சிகளிடம் ஆட்சி ஒப்படைக் கப்பட்டது. சோவியத் கம்யூனிஸ்டு கட்சி இந்நாடுகளின் ஆட்சியை மேற்பார்வை பார்த்துக் கொண்டது.
1953இல் ஸ்டாலின் மரணமடைந்தார். குருசேவ் கட்சித் தலைவ ராக வந்தார்; தற்போது தான் "நாரைகள் பறக்கின்றன" என்ருர்,
இவ்வளவு காலமும் பாரதியை அதிகற்பனைவாத, கருத்துகளை வைத்தே ஆராய்வு செய்தனர். மார்க்ஸிய பார்வை சற்றும் இல்லை. ஆனல் ராஜாமணி, கணேசலிங்கன் ஆகியோர் அச்சமின்றி-நழுவல் தன்மையின்றி வரலாற்று பொருள் முதல் வாத அணுகுமுறையோடு முதல் தடவையாக, பாரதியை ஆய்வு செய்த பணியைச் சிறப்பாகக் குறிப்பிடுவேன். இனிமேல் பாரதியை ஆராய்வு செய்பவர்களுக்கும் இவைகள் உதவியாக அமையும். சாருமதி, வரதபாக்கியான் கவிதை கள் புதிய கருத்துகளைச் சிறப்பாக வழங்கியுள்ளன.
-கே. தர்மகுலசிங்கம், ஏருவூர்-4
(39)

Page 22
குட்டிக் கதை ...:
琴 聽 அரசனும நணபனும - யோ, பெ. .
மதக நாட்டின் அரசமாளிகைச் சயன அறை. மன்னன் வீரதீரன் தன் பஞ்சணையில் கண்மூடி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். '
மூன்றம் சாம வேளை. எங்கும் அமைதி. அவனது காலை ஒரு இருள்கரம் அவதியாகத் தடவிற்று. மன்னன் திடுக்குற்று விழித்தான். நெஞ்சு நடுங்கிற்று. ““ug iffit ß' ‘பயப்படாதே. உன் வலக்கரம்!" அவன் விளக்கை ஏற்றி உருவத்தை உற்று நோக்கினன். அரசன் பயம் விலகி மனந் திறந்து சிரித்தான். 'நான் உன்னை வாழ்த்த வந்தேன். கலகத்தைப் படைபலத்தால் அடக்கிவிட்டாய். நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. உன்னை எதிர்க்க எவருக்கும் துணிவில்லை. மக்கள் உன்னையே தங்கள் இரட்சக் ஞக ஏற்கும் வகையில் உன் பேச்சாலும் செயலாலும் அவர்கள் மனங் களை வென்றுவிட்டாய். படைப்பலத்தோடு என்பலமும் வலதுகரமாய் உதவிற்று இல்லையா?"-அவன் அமைதியாகப் பற்களைக் காட்டிச் சிரித்த படியே கூறினன்.
"நிச்சயமாக!' என்றன் மன்னன். 'ஆனல். எதிர்காலத்தில் மாபெரும் ஆபத்துக்கள் விளையவிருப் பதை வரும்போது அறிந்து அதிர்ந்து விட்டேன்.""
“என்ன ஆபத்து? எப்படி அறிந்தாய்?"-- மன்னன் வீரதீரன் மிரண்டு போனன். -
‘என் பகைவனுண பகவான் மக்களிடம் இறங்கி வந்ததைக் கண் டேன். அவன் மக்களுக்கு ஒரு வல்லமையை அருளப்போகிருஞம்!??
“அது என்ன வல்லமை?'- மன்னனின் நெஞ்சம் வெலவெலத்தது. “மக்களின் எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று இனங் கண்டு கொள்ளும் வல்லமை!’
அவன் மெதுவாகக் கூறினன். 'ஐயோ! என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். என்னைக் கை விட்டுவிடாதே!' மன்னன் ஒககூப்பி நின்றன்.
‘என்ன செய்ய வேண்டும்?" அவன் தன் கோரப் பற்களைக் காட்டிச் சிரித்தபடி நின்றன். 'நீ என்னுடனே நின்று எனக்கு வழிகாட்டு." - சாத்தான் சந்தோசமாக அவனுக்குள்ளே புகுந்து கொண்டான்.
( 40 )

இலக்கிய உலகில்
ஜானகிராமன் மறைவு
ஜானகி ராமன் முதுபெரும் தமிழ் எழுத்தாளர். தமிழ் எழுத்தா ளர்களாலும் இலக்கிய ஆர்வலர்களாலும் விரும்பிப் படிக்கப்பட்ட நாவலாசிரியர். அவர் நாவல், சிறுகதை நடை, கதை சொல்லும் முறையே அலாதியானது. அவரது சொல்லாட்சி இந்திய நிலப்பிரபுத் துவ பண்பாடு-வாழ் முறை, மதம், வேதம், இதிகாசங்கள், 9-5 g, முறைகள், நம்பிக்கைகள், அபிலாசைகள், உணவு, உடை அதன் மேலாக பாலுறவின் தாற்பரியங்கள்-யாவையும் உள்ளடக்கியது வேறு எவராலும் பிடித்துவிட முடியாத தனித்துவ நடை அவர் நடை ஜெயகாந்தன் எழுத்துக் கூட குட்டி பூர்ஷ்வாக்களுக்கே சலித்துவிட் டது. ஜானகிராமன் கதைகள், நடை என்றும் சலிக்காதவை. கார ணம் பெரும்பாலும் பாலுறவு, பாலுணர்வு அவரது கதைகளின் அடித் தளமாக இருப்பதாகும். (ஆபாசமல்ல) கதைகளில், எழுத்தில் சமுதாய உணர்வு, அரசியலுணர்வு பற்றிச் சிறிதும் அவர் கவலைப்படாதவர். அவருக்கு முதற் புகழ் தந்த நாவலான மோகமுள் எழுதிக் கொண்டிரு ந்த காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தின் உச்சிக்கட்ட மான ஆகஸ்டு 42 நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போராட்டங் கள் பற்றி ஒருவரிதானும் இந்நாவவில் காணமுடியாது. அதுபோலவே மற்றைய நாவல்களுமாகும். அவர் நாவல்கள் விரிந்து செல்வதும் அமைப்பில் குறைபாடு இருப்பதற்கும் காரணம் நாவல்களை முழுமை யாக எழுதாமையாகும். வாரம், மாதத் தேவைகளுக்கேற்ப அவர் சிறு சிறு பகுதிகளாக எழுதிக் கொண்டிருந்தார். ‘அம்மா வந்தாள்" ஒன்றே விதிவிலக்கானது. அதன் அமைப்பு அவர் நாவல்களில் சிறப் பானது. அவரது நாவல்களில் ஓரளவு சமுதாய உணர்வு மிக்க நாவல் மரப்பசு ஆகும்.
ஜானகி ராமன் எழுத்தாளர்களையெல்லாம் நண்பராகக் கொண்ட வர். பழகுவதற்கு இனியவர். பொருமையோ, செருக்கோ இல்லாத வர். டெல்லி ஆல்இந்திய ரேடியோவில் பணி ஆற்றி, ஒய்வு பெற்றுச் சென்னை திரும்பியவர். அவரது திடீர் மரணம் நண்பர்கள், இலத்கிய ஆர்வலருக்கு அதிர்ச்சி ஊட்டியது. அவரது குடும்பத்தாருக்கு இலங்கை , எழுத்தாளரது, வாசகரது அனுதாபங்களைத் தெரிவிக்கிருேம்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை இந்தியாவிலோ தென்கிழக்கு ஆசிய நாடுகளிலோகாணமுடியாது. அதற் குரிய அடிப்படைக் காரணங்களைக் குமரன் மட்டுமே ஆழமாக ஆராய்ந்து கூறியுள்ளது. யாழ். பகுதியிலிருந்து வெளிவரும் சிறிய மாத இதழ்கள் இவைபற்றி இருட்டடிப்புச் செய்வதே வியப்பாக உள்ளது.
-த. அசோகன், வவுனியா.

Page 23
KUMARAN—58 (15-12-198
கண்களில் நீர் நெஞ்சி நவீன ஏற்றுமதிகள்
சு.வ. வலயத்தில் பெர்
அன்ரபோவ் நீடு வாழ்க
போலந்தில் தொழிலா
பாரதி யார்?
மார்க்சிய அரசியற் பொ
சொல்லும் வர்க்கச் சார்
தேயிலேயின் நிறம் சிவ
அபிப்பிராய வாக்கெடுட்
யாழ். சிற்றேடுகளின் வி
அரசனும் நண்பனும்
கேள்வி பதில்
அச்சு : குமரன் அச்சகப்
ஆசிரியர் : செ. கணேசலிங்
 

82) 2) I, Dum St, Colombo - l2.
ல் தி ட செ. கணேசலிங்கன்
- செ. யோகநாதன்
1ண்கள்
மாதவன் - זו וה:
- த. ச. இராசாமணி
ருளாதாரம்
- அ. வரதராஜ பெருமாள் I |ւն - விந்தன்
ப்பு - செ. கணேசலிங்கன்
I
றுமை - நாடோடி
- யோ. பெ.
ட வேல்
விலை ரூ. 2.
h, 201, டாம்வீதி, கொழும்பு-12.
கன்