கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரும்பு 2002.01

Page 1
|
* * *
த்
* *
הר" .
-
 
 
 
 
 
 
 
 


Page 2
மூளைக்கு வேலை விவேக வினாக்கள் ஏழு
() 15cm X 12cm X 3cm பரிமாணமுள்ள சவர்க்காரக் கட்டியொன்றின் நிறை 600g எனின் அதே சவர்க்காரத்தின் 10cm X 7.5cm X 4cm அளவுடைய கட்டியொன்றின் நிறை என்ன?
(2) நேரான ரெயில் பாதையொன்றில் பத்து புகையிரத நிலையங்கள் உள்ளன. இப்பாதை வழியே செல்லும் புகையிரத வண்டிகளுக்காக எத்தனை வகையான 3ம் வகுப்பு டிக்கட்டுக்கள் அச்சடிக்கப்பட வேண்டும்?
(3) ஒரு பரீட்சைக்கு 600 பிள்ளைகள் தோற்றினர். அதில் 6 சதவீதமானோர் சித்தியடையவில்லை. ஆண்களில் 2% சதவீதமும், பெண்களில் 10 சதவீதமும் சித்தியடையவில்லை எனின் பெண் பிள்ளைகள் எத்தனைப் பேர் பரீட்சைக்குத் தோற்றினர்?
(4) வாய்க்கால் ஒன்றை வெட்டுவதற்கு 8 ஆண்கள், 5 நாட்கள் எடுப்பர். 10 பெண்கள் 6 நாட்கள் எடுப்பர். 20 சிறுவர்கள் 4 நாட்கள் எடுப்பர். 5 ஆண்களும் 12 பெண்களும் 14 சிறுவர்களும் இவ்வேலைக்கென அமர்த்தப்பட்டால் அவ்வேலையை முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?
(5) சில தோடம்பழங்களை ஒரு குறிப்பிட்ட தொகைப்பிள்ளைகளுக்கிடையே பங்கிட வேண்டும். ஒவ்வொரு பிள்ளைக்கும் 8 பழங்கள் கொடுத்தால் 4 மீதியாக இருக்கும். 9 வீதம் ஒவ்வொருவருக்கும் கொடுத்தால் 5 போதாமற் போகும். தோடம் பழங்களின் எண்ணிக்கையையும், பிள்ளை களின் தொகையையும் காண்க.
(6) 8ஆல் வித்தியாசப்படும் இரு எண்களில் சிறிய எண்ணின் 5 மடங்குடன் ஒன்றைக் கூட்டும் போது பெரிய எண்ணின் இரு மடங்கு பெறப்படு மாயின் அவ்வெண்களைக் காண்க.
(7) ஒரு மனிதன் ஒரு மாதத்தில் சேமிக்கும் தொகை அதற்கு முந்திய மாதத்தில் சேமித்ததைவிட 100/= கூடுதலாக இருக்கும். முதலில் 350/= இட்டு சேமிக்கத் தொடங்கிய அவனது மொத்த சேமிப்பு 26000/= ஆக இருப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும்?
(விடைகள் 24ம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன)
 

90P பொது அறிவுச் சஞ்சிகை இதழ் 25
ARUMBU Educational Magazine Issue No. 25
Editor: M. Hafiz Issadee
Published By: Nilssadeen Memorial Educational Foi
70, Main Street, Dharga Town
Sri Lanka. ;Vبس Phone: 034-70151 E-Mail: royalGeureka.k Website: www.arumbu.itgo.com Type-setting & Computer Lay-out by: Royal CoMPUTERs, 70, Main Street, Dharga Town, Sri Lanka.
உள்ளே . . . .
கோட்பாடும் நடைமுறையும் 2 ஜனாதிபதியும் அமைச்சரவையும் 3 மயில் 5 ஸிம்பாப்வே 7 உயிரியல் ஆயுதங்கள் 11 (5055 stay (Black Death) 13 ஸ்குவாஷ் விளையாட்டு (Squash) 16 Tonsillitis , 19 நிவ்யோர்கில் சில நாட்கள் 22 இந்தியாவின் முகலாயப் பேரரசு 25 துருவ ஒளிகள் (Auroras) 28 நெஸ்லே கம்பனி 30 போலியோத் தடுப்பு 33 டிட்டிக்கா ஏரி 36 ஜாம் தயாரிக்கும் முறை 38 அல்ப்ேஃ காமூ 40 அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும் 42 அரும்பு இதழின் கதை 45 பொது அறிவுப் போட்டி-24 48
பொது அறிவு விடயங்களில் எனக்கு
வோர் அரும்பு இதழினதும் முதற் பிரதி
தாயாருக்கும் இவ்வெள்ளி இதழைக்
01.01.2002 ܓܠ
உங்களுடன் ஒரு அன்புள்ள வறுதத்தி
Y üb“ 6T6ofć U6Uf 6T6öf ரன் எச்சரித்தனர்.
எனவே எப்படியாவது 25 இதழ் களையேனும் வெளியிட வாய்ப்புக் கிடைத்தால் போதும் என எனது இலக் கை மட்டுப்படுத்திக் கொண்டு செயற் I பட்டேன். அந்த இலக்கைஇப்போது
அடைந்தாகிவிட்டது.
பல கஷ்ட நஷ்டங்களுக்கு மத்தி யில் தன்னந்தனியாக இந்த அளவுக் காவது சாதிப்பதற்கு, இறைவனின் பேரருளும், உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் உற்சாக வார்த்தைகளு மே காரணமாக இருந்துள்ளன.
எனது பிள்ளைப் பருவம் முதல்
ஆர்வமூட்டிவந்த மறைந்தஎன்தந்தை
யாருக்கும், பாடசாலை செல்ல முன் பிருந்தே எனக்கு எழுதக் கற்பித்து, இன்று வரை எழுத்துத்துறையில் என் னை ஊக்குவித்து, தொடர்ந்து ஒவ்
யைப் பெற்று வாசித்து என்னை ஊக் கப்ப்டுத்தி வருகின்ற எனது அன்புத்
காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன். அனைவருக்கும் நன்றி எம். ஹாபிஸ் இஸ்ஸதீன் ஆசிரியர்
محے سے -------- س --------

Page 3
ஒரு சின்னக் கதை
重 . Y
Y naam mn = E)
மிகவும் திறமை வாய்ந்த சமய அறிஞர் ஒருவர் மாணவர்களை சன்
மார்க்க அழைப்புப் பணியில் பயிற்று வித்து வந்தார். கோட்பாடுகள் பற்றி ஆறு
மாதங்கள் பயிற்சியளிக்கப்பட்டதுடன், மூன்று மாதங்கள் வெளிக்கள நடை முறைப் பயிற்சியும் வழங்கப்பட்டது. கோட்பாட்டுப்பகுதியைக் கற்றுத்தேர்ந்த அதிக தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு
மாணவர் நடைமுறைப் பகுதியைத்'
கத்தைச் செவிமடுத்துக் கேட்ட அறிஞர் -எழுந்து நின்று “உங்களுடைய
தானே நிறைவேற்றிக்கொள்ள முடியு மெனக் கருதினார்.
இந்த மனப்போக்கு குறித்து அறி ஞர் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அந்த மாணவர் அந்த எச்சரிக் கைக்குச் செவிமடுக்கவில்லை. அவர் சன்மார்க்க அழைப்புப் பணியை நடை முறைப்படுத்துவதற்காக வெகு தொலை வில் அமைந்திருந்த கிராமமொன்றுக்குச் சென்றார். அங்கு வெள்ளிக்கிழமையன்று உதவாக்கரை இமாம் ஒருவர் இறை வனையும் அவனுடைய தூதரையும் பற்றிய பொய்கள் மலிந்த பிரசங்க மொன்றை நடத்தினார்.
உடனே அந்த மாணவர் எழுந்து நின்று "இந்த இமாம் ஒரு பொய்யர். இறைவனோ அவனுடைய தூதரோ இத் தகைய கூற்றுக்கள் எதனையும் கூறியதில் லை” எனச் சத்தமிட்டார். அதற்கு அந்த இமாம் “இந்த இளைஞன் ஓர் இறை மறுப்பாளன்.இவனுக்குத் தண்டனை கொடுங்கள்” எனக் கூறினார். எனவே பள்ளிவாசலில் இருந்த மனிதர்கள் அந்த மாணவரை நன்றாக அடித்துத் துன்புறுத் தினார்கள்.
அவர் எலும்புகள் முறிந்த நிலை யில் கட்டுக்களுடன் தனது ஆசிரியரிடம் இரும்பி சென்றார். “நடைமுறை'சன்,
* * ...
மார்க்க அழைப்புப் பணி சம்பந்தமாக நல்ல உதாரணமொன்றை நான் உமக்குக் காட்டுகிறேன்” என்று கூறிய அறிஞர்
”அடுத்த வெள்ளிக்கிழமை அந்த மாண
வுனை அழைத்துக் கொண்டு அதே பள்ளி ஷ்ாசலுக்குச் சென்றார்.
! அங்கு அதே இமாம் முன்னைய வாரம் நிகழ்த்தியதைப் போன்ற பொய்
ಹ! மலிந்த பிரசங்கமொன்றை அந்த
"வாரமும் நிகழ்த்தினார். அவரது பிரசங்
மாம் சுவர்க்கத்துக்குரிய ஒரு மனிதராவார். அவருடைய தாடியிலிருந்து ஒரு மயிரை யேனும் பிடுங்கிக்கொள்ளும் எவரும் சுவர்க்கத்தைப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். r
அதை நம்பிய அந்தப் பாமர மக்கள் உடனே இமாமின் தாடியை நோக்கிப் பாய்ந்து தாடி மயிர்களைப் பிடுங்கத் தொடங்கினார்கள். இறுதியில் அந்த இமாம்தாடியை இழந்து இரத்தம் கசிய வீழ்ந்து கிடந்தார். அதன்பின்னர், அறிஞர் அந்த இமாமிடம் குனிந்து தாழ்ந்த குரலில் “இறைவனையும் அவனுடைய தூதரையும் பற்றிப் பொய் கூறுவதை இனிமேல் நிறுத்தி, நீர் நல்ல விதமாக நடந்துகொள்ளப் போகிறீரா? அல்லது உமக்கு மேலும் தண்டனை வேண்டு மா?” எனக் கேட்டார். அந்த இமாம் தனது விஷமத்தனத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு வருத்தம் தெரிவித்தார். தனது தவறை உணர்ந்துகொண்ட அந்த மாண வழம் மூன்று மாத நடைமுறைப் பயிற் சியைத் தமக்குப் பெற்றுத் தருமாறு அறிஞரிடம் மன்றாடி வேண்டிக்கொண் டார்.
நன்றி:தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி
அரும்பு-25

கிடந்த பொதுத் தேர்தலைத்
தொடர்ந்து நாட்டில் புதிய அரசியல்
நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அரசுத் தலைவரான ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் பிரதம அமைச்சரும் அவரது அமைச்சர்களும் இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர் களாகவும் இருக்கின்றனர். இந்த நிலைமையில் நாட்டின் ஆட்சித் துறை அதிகாரங்கள் எப்படிப் பகிரப் பட வேண்டும் என்பது பற்றி அறிந் துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டு வது நியாயமானதே.
இந்த விடயம் தொடர்பாகத் தெளிவு பெறுவதற்கு இலங்கையின் அரசியல் யாப்பையே நாம் அணுக வேண்டியிருக்கிறது. லங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அரசியல் யாப்பினுடைய VI ஆம் VI ஆம் அத்தியாயங்கள் நாட்டின் ஆட்சித் துறை எப்படி அமைய வேண்டும் என்பது பற்றித் தெளிவாக வரையறை செய்கின்றன.
ஜனாதிபதி
நாட்டின் ஜனாதிபதியே அர Stair 56066 unt 56th (Head of State), ஆட்சித் துறையினதும் அரசாங்கத் தினதும் தலைவராகவும், ஆயுதப் படைகளின் படைத் தலைவராகவும் இருப்பார் என யாப்பின் VI ஆம் அத்தியாயத்தின் 30ஆம் உறுப்புரை யின் 2ஆம் பந்தி எடுத்துக் கூறுகிறது. அரசின் சார்பில் போர், சமா தானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யும் அதிகாரமும் அரச தூது வர்களை நியமிக்கும் அதிகாரமும்
25 - اطلازی)sy
ஜனாதிபதியும் அமைச்சரவையும்
ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள் ளது.
அதேவேளை, ஜனாதிபதி யானவர், அரசியல் யாப்பின் படி அல்லது பொதுமக்கள் பாதுகாப்புப் பற்றிய சட்டத்தின்படி தமது அதி காரங்களைப் பிரயோகிக்கும் போதும் பணிகளையும் கடமை களையும் நிறைவேற்றும் போதும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறுபவராக இருத்தல் வேண்டும் என VH1 ஆம் அத்தியாயத்தின் 42ம் உறுப்புரை குறிப்பிடுகின்றது.
அமைச்சரவை
இலங்கைக் குடியரசின் அர
சாங்கத்தை நெறிப்படுத்துவதற்கும்
கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்புச்
சாட்டப்பட்ட ஒர் அமைச்சரவை
இருத்தல் வேண்டும் என அரசியல் யாப்பின் VI ஆம் அத்தியாயத்தின் 43ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தி கூறுகிறது. அத்தோடு அந்த அமைச் சரவையானது பாராளுமன்றத்துக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூறவும் மறு மொழி கூறவும் கடமைப்பட்டுள் துெ.
ஜனாதிபதி, அமைச்சரவையின் ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும் அவரே அமைச்சரவைக்குத் தலைவராக இருக்க வேண்டும் எனவும் மேற்குறித்த 43ஆம் உறுப் புரையின் 2ஆம் பந்தி கூறுகின்றது. எனினும் அமைச்சரவை கலைக்கப் படும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி தொடர்ந்தும் தன் பதவியை வகித்து வருவார்.

Page 4
பிரதம அமைச்சர்
பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் நம் பிக்கையைப் பெறுவதற்கு அதிகளவு வாய்ப்புக்களைக் கொண்டிருக்கிறார் எனஜனாதிபதி கருதுகிறாரோ, அந்த உறுப்பினரை அவர் பிரதம அமைச்ச ராக நியமித்தல் வேண்டும் என அதே உறுப்புரையின் 3ஆம் பந்தி குறிப் பிடுகிறது.
அமைச்சர்கள்
பிரதம அமைச்சருடன் கலந்தா லோசிப்பது அவசியம் என ஜனா திபதி கருதும் பட்சத்தில், அவரோடு கலந்தாலோசித்து, அமைச்சரவை யில் இருக்கவேண்டிய அமைச்சர் களின் எண்ணிக்கை, அத்தகைய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய துறைகளும் பணிகளும் என்பன பற்றி ஜனாதிபதி தீர்மானித் தல் வேண்டும் என VI ஆம் அத்தி யாயத்தின் 44ஆம் உறுப்புரையின் 1ம் பந்தியின் (அ) பகுதி கூறுகின்றது.
அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக இருப்பதற்கெனப் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர் களை நியமிக்கும் பொறுப்பும் ஜனாதிபதிக்கே உண்டு என மேற் குறித்த பந்தியின் (ஆ) பகுதி கூறுகின் Dgbl.
அமைச்சரவையின் எந்தவொரு துறையையும் அல்லது எந்தவொரு பணியையும் ஜனாதிபதி தமக்கென ஒதுக்கிக்கொள்ள முடியும் என 44 ஆம் உறுப்புரையின் 2 ஆம் பந்தி குறிப்பிடுகின்றது. அத்தோடு அமைச் சரவையின் எந்தவொரு துறை அல் லது பணி அமைச்சர்கள் எவரே
னுக்கும் ஒதுக்கப்படாமல் இருந் தால் அத்துறைக்கும் ஜனாதிபதியே பொறுப்பாக இருத்தல் வேண்டும் எனவும் இப்பந்தி குறிப்பிடுகின்றது.
அமைச்சர்களுக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட துறைகளையும் பணிகளையும், அமைச்சரவையின் அமைப்பையும் ஜனாதிபதி எந்த நேரத்திலும் மாற்றலாம் என 44 ஆம் உறுப்புரையின் 3ஆம் பந்தி எடுத்துக் கூறுகின்றது. எனினும் இத்தகைய மாற்றங்கள் அமைச்சரவையின் இடையறாத் தொடர்ச்சியையும் பாராளுமன்றத்தின் பால் அமைச் சரவைக்குள்ள பொறுப்பின் இடை யறாத் தொடர்ச்சியையும் பாதித்தல் ஆகாது.
பிரதி அமைச்சர்கள்
பிரதம அமைச்சருடன் கலந்தா லோசிப்பது அவசியம் என ஜனா திபதி கருதும் பட்சத்தில், அவரோடு கலந்தாலோசித்து, அமைச்சரவை யின் அமைச்சர்கள் தமது கடமை
களைப் புரிவதில் அவர்களுக்கு உதவு
வதற்கெனப் பாராளுமன்ற உறுப் பினர்களிலிருந்து பிரதி அமைச்சர் களை ஜனாதிபதி நியமிக்கலாம் என அரசியல் யாப்பின் VI ஆம் அத்தி யாயத்தின் 46 ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தி குறிப்பிடுகிறது.
பதவிநீக்கல் ܥ
முதலமைச்சர், அமைச்சரவை யின் ஓர் அமைச்சர் அல்லது ஒரு பிரதியமைச்சர் ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்ட ஒரு கடித்த்தின் மூலம் தம் பதவியிலிருந்து அகற்றப் பட முடியும் என அரசியல் யாப்பின் VII ஆம் அத்தியாயத்தின் 47 ஆம் உறுப்புரை கூறுகின்றது.
“தந்திரமாய்ப் பெறப்பட்ட செல்வம் நிச்சயமாக அவமானத்துடன்
இழக்கப்படும்.”
4
stop-25

e
(Pea fowl)
பறவையினங்களுள் மயிலுக்கு ஒரு விசேட இடம் உண்டு. அழகும் கம்பீரமும் மிக்க ஒரு பட்சியாக அது கருதப்படுவதோடு இந்து சமயத் தினரால் முருகப் பெருமானின் வாக னமாகவும் அது மதிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசியப் பறவை என்ற கெளரவமும் அதற்கு உண்டு.
uDuî Gö35 Gir, Galliformes 67 Götp விலங்கு வர்ணத்தில் Phasianidae என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றுள் இரண்டு பிரதான இனங் கள் உள்ளன. இந்தியாவிலும் இலங் கையிலும் காணப்படும் நீல மயில் அல்லது இந்திய மயில் என்ற இனம் Pavo cristatus 660Ti LT (gL (333' பட்டுள்ளது. தென்கிழக்காசியா விலே மியன்மார், இந்தோசீனா, ஜா வா போன்ற பிரதேசங்களில் காணப் படும் மயில் இனம் பச்சை மயில் அல்லது ஜாவா மயில் எனப்படும். இதன் விலங்கியற் பெயர் Pavo muticuS GTGõTLug5 IT (5id.
இவை தவிர கொங்கோ மயில்
(Afropavo congensis) 6T6ốTp g) GOTüd 1936இல் ஆபிரிக்காவிலே கண்டு பிடிக்கப்பட்டது. 1913இல் ஆபிரிக்கர் ஒருவரின் தொப்பியில் அணியப்பட்
டிருந்த இறகொன்றை அடிப்படை
யாக வைத்து நடாத்தப்பட்ட நீண்ட
காலத் தேடுதல் வேட்டையின் பின் னரே இவ்வினம் கண்டுபிடிக்கப்பட் டது. இவ்வின மயில்கள் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (முன்னைய Zaire) காணப்படுகின்றன.
இருவகை Pavo மயில் இனங் களிலும் ஆண் பற்வைகள் சுமார் 150 அரும்பு- 25
cm நீளமுள்ள தோகையைக் கொண் டிருக்கும். ஆண் மயிலின் வாலுக்கு
மேற்புறமாக உள்ள இறகுகள் நீட்சி
யடைந்தே தோன்க உருவாக்கப்பட் டுள்ளது. தோகையின் இறகுகள்
பளபளப்பான உலோகப் பச்சை
நிறத்தைக் கொண்டுள்ளன. தோகை யை ஆக்கியுள்ள ஒவ்வோர் இறகின் முனையிலும் வானவில்லின் நிறங் களைக் காட்டுகின்ற கண் போன்ற பொட்டொன்று காணப்படுகின்றது. இதனைச் சூழ நீலமும் பொன் னிறமும் கொண்ட வளையமொன்று உண்டு. இதிலுள்ள அழகான fia pipid LDuigi) falo (Peacock blue) எனப்படும். w
இதே நீல நிறம் இந்திய மயி லின் தலை, கழுத்து, நெஞ்சு, கொண் டை போன்ற பகுதிகளிலும் காணப்
படும். ஜாவா மயிலில் இப்பகுதிகள்
பச்சை நிறமாக இருக்கும். இவ்விரு இனங்களிலும் ஆண் மயில் 90 - 130 cm நீளமான உடலைக் கொண்டிருக் கும். பெண் மயில்கள் உருவத்தில் ஓரளவு சிறியனவாக இருப்பதோடு அவற்றில் தோகையும் காணப்பட
மாட்டாது.
பெண் பறவைகளைக் கவர் வதற்காக ஆண் மயில் தன் தோகை யை முற்றாக விரித்து அழகு காட்டு வது வழக்கம். அது தன் தோகைக்குக் கீழாக உள்ள வாலை உயர்த்தும் போதே தோகையின் இறகுகள் 5

Page 5
உயர்ந்து முன்னோக்கி அசைந்து விரிகின்றன. இக்கண்காட்சியின் உச்சக் கட்டத்தின் போது ஆண் மயில் தன் வால் இறகுகளைப் படபடக்கச் செய்யும். அவ்வாறு செய்யும் போது தோகை மினுமினுப்பது போன்று தோற்றமளிப்பதோடு ஒரு வகைச் சலசலப்பு ஒலியும் உருவாகும். மயில் தோகை விரித்தாடினால் மழை பெய்யும் என மரபுரீதியான நம்பிக்கையொன்றும் உண்டு.
இலங்கை இந்தியத் தாழ்நிலக் காடுகளில் மயில்கள் காணப்படுகின் றன. மயில்கள் தம் கூட்டைத் தரை
யில் அல்லது மரங்களின் கிளைகளில்
அமைத்துக் கொள்கின்றன. பகல் வேளைகளில் ஒர் ஆண் மயில் பல பெண் மயில்களுடன் கூட்டாக இரைதேடிச் செல்லும்.
மயில்கள் அனைத்துமுண்ணி களாகும். இவை தம் வலிமையான கால்களால் நிலத்திலுள்ள சருகு களை விலக்கித் தம் உணவைத் தேடு கின்றன. புழுக்கள், பூச்சிகள், சிறு பாம்புகள், தாவர வித்துக்கள் முதலியவற்றையே இவை உணவா கக் கொள்கின்றன.
இனப்பெருக்கக் காலத்தின் போது ஓர் ஆண் மயில் 2 முதல் 5 வரையிலான பெண் மயில்களுடன் கூடி வாழும். ஒவ்வொரு பெண் மயி லும் நான்கு முதல் எட்டு முட்டை களை நிலத்தில் ஏற்படுத்தப்பட்ட பள்ளமொன்றில் இடும். இம்முட் டைகள் நல்ல வெண்ணிறமுள் ளனவாக இருக்கும்.
மயில்களால் பறக்க முடியுமாக இருப்பினும் அவை பெரும்பாலும் கால்களினாலேயே இடப்பெயர்ச்சி அடைகின்றன. மயில்கள் பறக்கும் போது பெரிய ஓசை உருவாகின்றது. மயிலின் அகவல் ஒலியும் கடூரமான தாகவே இருக்கும். 6
கவர்ச்சியான பறவை என்ற வகையில் உலகிலுள்ள எல்லா விலங்கினக் காட்சிச் சாலைகளிலும் மயில் தவறாது இடம்பெற்றுள்ளது. பச்சை மயில்கள் ஓரளவு ஆக்கிர மிப்புத் தன்மை கொண்டவை. என வே அவற்றை ஏனைய பறவை களிலிருந்து பிரித்தே வைக்கவேண்டி உள்ளது. நீல மயில்கள் வெப்ப வல யப் பகுதிகளுக்குரியனவாக இருந்த போதிலும், புவியின் வட பகுதியில் உருவாகும் பனிக் காலங்களை அவற் றால் தாங்கிக்கொள்ள முடியும். எனினும் பச்சை மயில்களால் அதிக குளிரைத் தாங்கிக்கொள்ள முடிவ தில்லை.
?ífli 35 T 6îG3 Gv Phasianidae குடும்பப் பறவைகளுள் மிகப் பெரி யதாக கொங்கோ மயில் விளங் குகிறது. இவ்வின ஆண் மயில் நீல நிறத்தையும் பச்சை நிறத்தையும் கொண்டிருக்கும். அதனுடைய வாற் பகுதி கட்டையாகவும் வட்டமாக வும் காணப்படும். ப்ெண் பறவை யின் உடலில் சிவப்பும் பச்சையும் கலந்திருக்கும். அதன் கொண்டை கபில நிறமாக இருக்கும்.
தேர்வு னப்பெருக்கத்தின் (Selective breeding) epauld p-Claust di கப்பட்ட முற்றிலும் வெள்ளை நிற மான மயில்களும் சில விலங்கினக் காட்சிச் சாலைகளில் வளர்க்கப்படு கின்றன. இவற்றின் தோகையில் பல வண்ண அலங்காரம் எதுவும் காணப் படுவதில்லை. L
நம்பு- 25
 

தென் ஆபிரிக்காவில் அமைந் துள்ள ஸிம்பாப்வே முன்னர் ரொடீஷியா (Rhodesia) என்ற பெயரில் சிறுபான்மை வெள்ளை இனத்தவரால் ஆட்சி செய்யப் பட்டு வந்தது. பல்வேறு போராட்டங் களின் பின்னர் 1980ம் ஆண்டு அங்கு பெரும்பான்மைக் கறுப்பு இனத்தவரின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதுதான் நாட் டின் பெயர் ஸிம்பாப்வே என மாற்றப் பட்டது. அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள மகா ஸிம்பாப்வே என்ற புராதன நகரத்
தின் நினைவாகவே இப்பெயர் சூட்டப்
பட்டது.
ஸிம்பாப்வே இலங்கையை விடச் சுமார் 6 மடங்கு பெரியது. அதன் சரப் பளவு 390,759 சதுர km ஆகும். வடக்குத் தெற்காக அதன் ஆகக்கூடிய நீளம் 760km
ஆக உள்ளது. கிழக்கு மேற்காக இப்பெறு
மானம் 820km ஆகும்.
ஸிம்பாப்வேயின் கிழக்கு எல்லை யில் மொஸாம்பிக் தேசமும் மேற்கு எல் லையில் பொட்ஸ்வானாவும் உள்ளன. தெற்கு எல்லை நெடுகே ஒடும் லிம்பொ போ நதிக்கு அப்பால் தென்னாபிரிக்கா
அமைந்துள்ளது. அதேபோன்று வடக்கில்
ஒடும் ஸாம்பெஸி நதி ஸிம்பாப்வேக்கும் ஸாம்பியாவுக்கும் (முன்னைய வட ரொடீஷியா) இடையில் எல்லையாக அமைந்திருக்கின்றது.
நாட்டின் மத்திய பகுதியில் இருக் கும் கருங்கல் மேட்டு நிலம் தென்மேற் கிலிருந்து வடகிழக்கு நோக்கி விரிந்திருக் கிறது. இப்பகுதியில் செழிப்பான பயிர் செய் நிலங்கள் காணப்படுகின்றன. நாட் டின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சுமார் 520 km நீளத்துக்கு எரிமலைப்
65ubuffGongo
(Zimbabwe) us 變型
பாறைகள் காணப்படுகின்றன. Great Dyke எனப்படும் இப்பகுதியில் இரத் தினக் கற்களும் கணிப்பொருட்களும் பெருமளவில் பொதிந்துள்ளன. ஸிம்பாப் வேயின் தென் எல்லை நெடுகே இன் யங்கா, வும்பா, சிமணிமனி ஆகிய மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. இன்யங்கா தொடரிலுள்ள இன்யங்கானி என்ற 2,592 m உயரமுடைய சிகரமே நாட்டிலுள்ள மிக உயர்ந்த புள்ளியாக விளங்குகிறது.
ஸிம்பாப்வேயின் மிக முக்கியமான ஆறு ஸாம்பெஸி (Zambes) நதியாகும். இந்த நதியிலிருந்து வீழ்கின்ற உலகப் புகழ்பெற்ற விக்டோரியா நீர்வீழ்ச்சி (Victoria Falls) நாட்டின் மேற்கு அந்தத்தில் காணப்படுகின்றது. மஸோ, ஸன்யாதி, ஸாபி, லிம்பொபோ என்பன குறிப்பிடத் தக்க ஏனைய நதிகளாகும்.
ஸிம்பாப்வேயின் பெரும்பகுதி ஸவன்னாப் புல் வெளியினால் மூடப் பட்டுள்ளது. மலைநாட்டுப் பகுதியில் இடையிடையே அடர்ந்த காடுகளும், மழைக் காடுகளும் காணப்படுகின்றன. யானை, நீர்யானை, சிங்கம், ஒட்டைச் சிவிங்கி, மரை, பபூன்குரங்கு, இம்பாலா மான், முதலை, hyena என்னும் கழுதைப்
புலி போன்ற வன விலங்குகள் இங்கு
பெருமளவில் வாழ்கின்றன. நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள Hwange தேசிய வனத்தில் காண்டாமிருகம் சீற்றா (chee
tah) வகைச்சிறுத்தை, hartebeest என்னும்
ஆபிரிக்க மரை இனம் போன்ற ஆபத்துக் குள்ளான விலங்குகள் பேணப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
7
அரும்பு-25

Page 6
ஸிம்பாப்வேயின் காலநிலை இந்து சமுத்திரத்திலிருந்து வீசும் பருவப்பெயர்ச் சிக் காற்றுக்களிலேயே தங்கியிருக்கிறது. ஒக்டோபர் முதல் மார்ச் வரையான காலத்தில் நாட்டின் கிழக்குப் பகுதிக்கு 1000mm வரையான மழைவீழ்ச்சி கிடைக் கின்றது. வறண்ட தென்மேற்குப் பகுதி யில் இதன் பாதியளவு மழையே பெய் கின்றது. மார்ச் முதல் ஒக்டோபர் வரை யான குளிர்காலத்தில் மழை அரிதாகவே
பெய்கிறது. மத்திய மேட்டுநிலப் பகுதி
யில் சாராசரி வெப்பநிலை ஜூலையில் 7°C முதல் 21°C வரை வேறுபடும். ஜன வரியில் இவ்வீச்சு 16C முதல் 26°C வரை இருக்கும். ஸாம்பெஸி பள்ளத்தாக்குப் பகுதியின் வெப்பநிலை மேற்குறித்ததை விட சுமார் 5-7C கூடுதலாக இருக்கும்.
2000ம் ஆண்டில் ஸிம்பாப்வேயின் சனத்தொகை 11,272,013 என மதிப்பிடப் பட்டிருந்த்து. இதன்படி நாட்டின் சனத் தொகை அடர்த்தி சதுர kmக்கு 29 பேர் களாகும். பிறப்பு வீதம் 1000க்கு 30 ஆகவும் இறப்பு வீதம் 1000க்கு 21 ஆகவும் இருப் பதனால் நாட்டில் 0.9 சதவீத சனத்
தொகை வளர்ச்சியே காணப்படுகின்றது.
1985இல் ஸிம்பாப்வே மக்களின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 59 வருடங் களாக இருந்தது. 2000ம் ஆண்டாகும் போது இது 39 வருடங்களாக வீழ்ச்சி யடைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ் வீழ்ச்சிக்கு அங்கு பரவிவரும் எயிட்ஸ் (AIDS) நோயே பிரதான காரண மாக உள்ளது. 2000ம் ஆண்டில் வளர்ந் தோர் கல்வியறிவு வீதம் 93% என மதிப்
பிடப்பட்டிருந்தது. 1962இல் இது 39%
ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸிம்பாப்வேயின் மக்கள் மொழி
வாரியான இரு பிரதான இனங்களாகப்
பிரிந்துள்ளனர். ஷோனா (Shoma) என்ற மொழியைப் பேசும் ஷோனா இனத்த வர்கள் மொத்த சனத்தொகையில் 71% ஆக உள்ளனர். இவ்வினத்தவருள்ளே
8
மேலும் பல உப கூட்டங்கள் உள்ளன. Zulய மொழியுடன் நெருங்கிய தொடர்
புடைய மொழியொன்றைப் பேசும்
என்டெபிலே (Ndebele) என்ற சிறுபான் மை இனத்தவர்கள் 16% உள்ளனர். இவர்கள் நாட்டின் தென்மேற்குப் பகுதி யில் செறிவாக வாழ்கின்றனர். இவர் களைத் தவிர பொருளாதார முக்கியத் துவமுடைய சிறுபான்மைக் குழுக்களாக ஆசிய ஐரோப்பிய வழித்தோன்றல்கள் உள்ளனர். அத்தோடு மொஸாம்பிக் போன்ற ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களும் கணிசமான அளவு வசிக்கின்றனர்.
ஆங்கிலமே Rம்பாப்வேயின் அரச கரும மற்றும் கல்வி மொழியாகத் திகழ் கின்றது. வெள்ளை இனத்தவர்களில் ஒரு சாரார் Afrikaans என்ற தென்னாபிரிக்க டச்சு மொழியைப் பேசுகின்றனர். சனத் தொகையில் சுமார் 55 சதவிகிதத்தினர் கிறிஸ்தவ சமயப் பிரிவுகளைச் சேர்ந்தவர் களாவர். முஸ்லிம்களும் யூதர்களும் சிறியளவில் உள்ளனர். ஏனையோர் பாரம்பரிய சமயங்களைப் பின்பற்று கின்றனர்.
ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவ மிஷ னரிப் பாடசாலைகளே ஸிம்பாப்வேயில் செயற்பட்டன. இப்போது அரசாங்க செலவினத்தில் சுமார்20% கல்வித்துறைக் காகச் செலவிடப்படுகின்றது. 1987 முதல் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள் ளது. எல்லாப் பிள்ளைகளும் ஆரம்பக் கல்வியைப் பெறுகின்ற போதிலும் சுமார் 50% மாத்திரமே இடைநிலைக் கல்வி யைத் தொடர்கின்றனர். ஸிம்பாப்வேயில் இரண்டு அரச பல்கலைக்கழகங்கள் உள் GTGST.
வடமத்திய பகுதியிலுள்ள ஹராரே (Harare) மாநகர் நாட்டின் தலைநகராக வும் வர்த்தக மையமாகவும் விளங்குகின் றது. முன்னாள் ரொடீஷியாவின் தலை நகராக இருந்த போது இதன் பெயர்
அரும்பு-25

ஸலிஸ்பரி (Salisbury) என இருந்தது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கிலுள்ள புலவாயோ (BulaWayo) நகர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது 19ம் நூற்றாண்டில் Ndebele ராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. Chitungwiza, Gweru, Mutare 6Taitu 6.736), 616) 6Tu குறிப்பிடத்தக்க நகரங்களாகும்.
ஸிம்பாப்வேயின் பொருளாதார மானது விவசாயம் உற்பத்தித் துறை, சுற்றுலாத்துறை, கணிப்பொருள் அகழ்வு என்பவற்றில் தங்கியுள்ளது. சோளம்,
புகையிலை, கரும்புச் சீனி, பருத்தி,
கோப்பி என்பன பிரதான விவசாய உற் பத்திப் பொருட்களாக உள்ளன. புகை யிலையே பிரதான ஏற்றுமதிப் பொரு ளாக விளங்குகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 50% இத னுரடாகவே பெறப்படுகின்றது. சோள உற்பத்தி மழைவீழ்ச்சியில் தங்கியுள்ள போதிலும் நாட்டின் நுகர்வுத் தேவையின்
ரு மடங்கை உற்பத்தி செய்யக்கூடிய
வளம் காணப்படுகின்றது. கால்நடை வளர்ப்பும் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
ஐரோப்பியர்குடியேறுவதற்கு முன் பிருந்தே ஸிம்பாப்வேயில் சுரங்கத் தொழில் இடம்பெற்று வந்துள்ளது. அந்திமனி, அஸ்பெஸ்ற்றோஸ், குரோ மியம், நிலக்கரி, கோபால்ற்று, செம்பு, பொன், காரீயம், இரும்புத் தாது, மங்கனீஸ், நிக்கல், வெள்ளி, வெள்ளியம்
போன்ற பல்வேறு கணிப்பொருட் படிவு
கள் அங்கு உள்ளன. மொத்த ஏற்றுமதியில் பொன் இரண்டாம் இடத்தை வகிக் கின்றது. மின்வலுவைப் பிறப்பிப்பதில் பிரதான சக்தி முதலாக நிலக்கரி பயன் படுத்தப்படுகின்றது. நாட்டின் மின்னுற் பத்தியில் 78% நிலக்கரியைப் பயன் படுத்தும் இரு வெப்ப மின்வலு நிலை யங்களாலேயே உற்பத்தி செய்யப்படு
கின்றது. மீதி 22% கரிபா அணைப் பிர
அரும்பு- 25
படுத்தப்பட்டது.
தேசத்திலுள்ள நீர்மின் வலு நிலையங் களால் உற்பத்தியாக்கப்படுகின்றது.
முன்னைநாள் ரொடீஷியாவுக்கு எதிராக 1965 முதல் 1980 வரை சர்வதேச பொருளாதாரத் தடையொன்று அமுல் செய்யப்பட்டது. இக்காலத்தில் அங்கு கைத்தொழில் உற்பத்தித்துறை பன்முகப் இன்று இரும்பு, உருக் கு, துணிவகைகள், பதப்படுத்திய உணவு கள், இரசாயனப் பொருட்கள் முதலியன வும் பலதரப்பட்ட நுகர்வுப் பொருட் களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இப்போது தெற்கு ஆபிரிக்கா விலே கூடுதலான உல்லாசப் பிரயாணி கள் விஜயம் செய்யும் நாடொன்றாக ஸிம்பாப்வே திகழ்கின்றது. விக்டோரியா நீர்வீழ்ச்சி, Hwange தேசிய வனம், கரிபா ஏரி, புராதன மகா ஸிம்பாப்வே நகரம் என்பன பிரதான சுற்றுலாத் தளங்களாக விளங்குகின்றன. பெரும்பாலான பிரயா ணிகள் சூழவுள்ள தெற்கு ஆபிரிக்க நாடு களிலிருந்தே வருகின்றனர்.
அரசுக்குச் சொந்தமான ஸிம்பாப் வே ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆங்கி லம், ஷோனா, என்டெபிலே ஆகிய மொழிகளில் ஒலிபரப்புக்களை நடாத்து கின்றது. அரசுடைமையான தேசிய தொலைக்காட்சி நிலையம் இரு அலை வரிசைகளில் ஒளிபரப்புக்களை வழங்கு கின்றது. ஹராரேயிலிருந்து The Herald எனவும் புலவா யோவிலிருந்து The Chronicle எனவும் இரு தேசிய நாளிதழ் கள் வெளிவருகின்றன. வையும் அரசுக்குச் சொந்தமானவையே.
நாட்டின் நாணயமான ‘ஸிம்பாப் வே டொலர், 1964இல் ஸ்தாபிக்கப்பட்ட ஸிம்பாப்வே ரிஸர்வ் வங்கியினால் வெளியிடப்படுகின்றது. ஸிம்பாப்வே டொலர் 100 சதங்களைக் கொண்டது.
1980இல் சுதந்திரம் பெறமுன் ஸிம் பாப்வே சிறுபான்மை வெள்ளையரி னால் ஆட்சி செய்யப்பட்டது. அக்காலத்
9

Page 7
தில் வாக்குரிமை வெள்ளையர்களுக்கும் ஒரு சில கறுப்பர்களுக்கும் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. சுதந்திரத்தின் பின் வரையப்பட்ட அரசியல் திட்டத்தின்படி ஸிம்பாப்வே பெரும்பான்மையினரின் ஆட்சிக்குரிய குடியரசாக மாற்றப்பட் டது. 1987ஆம் 1990ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் வெள்ளையருக்கென ஒதுக்கப்பட் டிருந்த பாராளுமன்ற ஆசனங்கள் ஒழிக் கப்பட்டன. அத்தோடு பாராளுமன்றம் தனிச்சபையுடையதாக மாற்றப்பட்டது. ஸிம்பாப்வேயின் அரசுத் தலை வராக மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நிர்வாக அதிகாரமுள்ள ஜனாதிபதி திகழ்கிறார். அமைச்சரவை ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகிறது. அமைச்சரவையின் இரண்டு உறுப்பினர் கள் உப ஜனாதிபதிகளாக நியமிக்கப்படு வர். அமைச்சர்கள் தமது செயற்பாடுகள் தொடர்பாகப் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும். ரொபர்ட் கப்ரியல் முகாபே (Mugabe) சுதந்திர காலம் முதல் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.
House of Assembly 6TGigold uit TT ளுமன்றத்தில் 150 உறுப்பினர்கள் உள்
ளனர். இவர்களுள் 120 பேர் தொகுதி ரீதியாகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக் கப்படுகின்றனர். 10 பேர் பாரம்பரிய கோத்திரத் தலைவர்களாலும் 12 பேர் ஜனாதிபதியினாலும் தெரிவுசெய்யப்படு கின்றனர். மீதி 8 பேரும் மாகாண ஆளுனர் களாவர். இவர்களுடைய பதவிக்காலம் 6 வருடங்களாகும்.
ஸிம்பாப்வேயின் பாராளுமன்றம் ஜனாதிபதியின் ஆதிக்கத்தின் கீழ் ல்லை. சுயாதீனமாகச் சட்டங்களை åíÏ திருத்தவும் வரிகளை அறவிட
வும் அதற்கு அதிகாரம் உண்டு. ப
பொல்லாத கொசு
கிராமத்து விவசாயி ஒருவன் தனது உழவு இயந்திரத்தை வீதியில் அதிவேகமாக ஒட்டிச் செல்வதைக் கண்ட ஒரு பொலிஸ்காரர் அவனைத் தடுத்து நிறுத்தி தண்டப் பத்திரம் எழுதத் தொடங்கினார். அப்போது பெரிய கொசுவொன்று பொலிஸ்காரரின் முகத்தைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. அடிக்கடி அவர் அதனைக் கையால் விரட்டியும் அது மீண்டும் மீண்டும் வட்டமிட ஆரம்பித்தது.
“அது கழுதை மூஞ்சிக் கொசு! அது அப்படித்தான்’ என்றான் விவசாயி. “கழுதை மூஞ்சிக் கொசுவா ? நான் கேள்விப்பட்டதில்லையே!” என்றார் பொலிஸ்காரர் எழுதுவதை நிறுத்திவிட்டு.
“ஆம்! கிராமத்தில் அதனை அப்படித்தான் அழைப்போம். எந்நேரமும் கழுதை களின் மூஞ்சியைச் சுற்றிக்கொண்டே இருக்கும்” என்றான் விவசாயி.
“ஏய்! என்ன சொன்னாய்? எனது முகமும் கழுதை மூஞ்சி மாதிரி என்கிறாயா?” என்று கோபமாய்க் கேட்டார் பொலிஸ்காரர்.
“சீ. நான் அப்படிச் சொல்வேனா? நான் எப்போதும் சட்டத்தின் காவலர்களை மதிப்பவன். ஆனால். அந்தக் கொசுக்கள் பொல்லாதவை. அவை இலேசில் ஏமாற மாட்டா. . .” என்றான் விவசாயி - அப்பாவி போல் பாவனை செய்துகொண்டு.
1. O அரும்பு-25
 

; உயிரியல் ஆயுதங்கள் :
(Biological Weapons)
ணுவ நோக்கங்களுக்காக மனிதர்கள் மீதும் ஏனைய விலங்குகள், தாவ ரங்கள் முதலியவற்றின்மீதும் பிர யோகிப்பது உயிரியற் போர்முறை (biological warfare) egy Gbagl 6G56lü
Gusticp60p (germ warfare) 6T60T'
படும். விவாறான தாக்குத லொன்றை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் நோய்க்காரணி களையே உயிரியல் ஆயுதங்கள் (biological weapons) a fairSlairGpIT p.
யுத்தங்களின் போது எதிர்ப் படையணிகளுக்கு எதிராக உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தும் வழக் கம் மிக முந்திய காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. சிலவேளை களில் இவ்வாறு உபயோகிக்கப் பட்ட உயிரியல் ஆயுதங்களின் பாதக மான விளைவுகள் கட்டுக்கடங்கா மல் போன சந்தர்ப்பங்களும் வரலாற் றில் பதியப்பட்டுள்ளன.
வரலாற்றிலே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய உயிரியல் ஆயுதத் தாக்குதல் கிரீமிய யுத்தத் தின்போது 1347இல் இடம்பெற்றது. அப்போது, மொங்கோலியப் படை கள் தற்கால உக்ரேன் பகுதியில் அமைந்திருந்த Cafa என்ற நகரை முற்றுகையிட்டன. லிருந்த ஜெனோவா ராச்சியத்தின் படைகள் அந்நகரைக் காப்பதற்காக அரண்களை அமைத்துக்கொண்டு மொங்கோலியரை எதிர்கொள்ளத் தயாராகின. அப்போது, கொள்ளை நோய் (Plague) என்னும் பயங்கரத்
அரும்பு- 25
’ப்ந்நீர்ப்ர்'ன்வ்ர்க்’போன்ற நோயுண்டாக்கும் காரணிகளை இரா
இத்தாலியி
'தெர்ற்றுநோயின்ால்’ இறந்தவர்
களின் சடலங்கள் பலவற்றை மொங் கோலியர்கள் Caffa நகரின் காப் பரண்களுக்குள் எறிந்தனர்.
இதன் விளைவாகக் கொள்ளை நோய்க்குக் காரணமான பசிலசு வகைக் கிருமி ஜெனோவாப் படை யினரிடையே பரவியது. அத்தோடு ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல் களினூடாக அது ஐரோப்பாவையும் வட ஆபிரிக்காவையும் அடைந்து அங்கெல்லாம் துரிதமாகப் பரவியது. இதனால் 1348ம் ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சுமார் 25 மில்லியன் பேர் அதற்குப் பலியா யினர். அக்காலத்தில் இப்பயங்கர G3g5m tiu '35(15@5 gFT Gaj” (Black death) 6T607 அழைக்கப்படலாயிற்று. (கருஞ்
சாவு பற்றிய கட்டுரையைப் பார்க்க.)
அதற்குப் பிறகும் பல சந்தர்ப் பங்களில் தம் எதிரிகளிடையே தொற்றுநோய்களைப் பரவச் செய் வதற்குப் பல்வேறு நாடுகள் முயற் சிகளை மேற்கொண்டன. எனினும் அவற்றினால் பெரிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை. முதலாம் உலகப் போரின் போது ரோமேனிய குதிரைப்படைக் குதிரைகளிடையே glanders என்ற
பற்றீரிய நோயை ஜெர்மனி பரவச்
செய்தது. அத்தோடு நேசநாட்டுப் படைகளின் உணவுத் தேவைக்காக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட
விருந்த கால்நடைகளிலும் இந் நோய் பரவுவதற்கு ஜெர்மனி வழி
வகுத்தது.
11

Page 8
1950-53 காலப்பகுதியில் இடம் பெற்ற கொரிய யுத்தத்தில் பங்கு பற்றிய ஐக்கியநாட்டுப் படைகள் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத் தியதாகச் சீனா குற்றம்சாட்டியிருந் தது. எனினும் அதனை நிரூபிப் பதற்கு ஏற்ற சான்றுகளை அது சமர்ப் பிக்கத் தவறிவிட்டது. பொதுவாக 20ஆம் நூற்றாண்டிலே எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டுப் படை கள் மீதோ பொதுமக்கள் மீதோ உயிரியல் ஆயுதங்களாகக் கொண்டு வெற்றிகரமான தாக்குதல் எதனை யும் மேற்கொண்டதாக அறிவிக்கப் படவில்லை.
அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்காவை அதிர்ச்சிக்குள் ளாக்கிய 'அந்திரக்ஸ்’ (Anthrax) நோய்க் கிருமித் தாக்குதல்கள் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தின. கடிதங்களில் வைத்து வெள் ளைத் தூள் வடிவில் அனுப்பப்பட்ட Bacillus anthracis , 67 Görp Lusibförî? யாவின் வித்திகளே பல அமெரிக்கர் கள் இந்நோய்க்குப் பலியாவதற்குக் காரணமாக அமைந்தன.
இந்த பற்றீரியாவின் வித்திகள் உலர்த்தப்பட்ட நிலையிலும் நீண்ட காலத்திற்கு உயிர்ப்பாக இருக்க வல்லவை. இதனால்தான் உயிரியல்
நோயாளி ஒருவரின் சுவாசப்பை
படுகின்றன. அந்திரக்ஸில் தோலைப் பாதிக்கும் வகை, சுவாசத் தொகுதி யைப் பாதிக்கும் வகை என இரண்டு பிரதான வகைகள் உள்ளன.
இன்று சர்வதேச அரங்கில் உயிரியல் ஆயுதங்களின் உபயோகம் சட்ட விரோதமானதாகவே கருதப் படுகின்றது. எந்தவொரு நாடும். தான் உயிரியல் ஆயுதங்களை உற்
பத்தி செய்வது பற்றியோ அவற்றை
உபயோகிப்பது பற்றியோ பகிரங்கப் படுத்திக்கொள்ளத் துணிவதில்லை. எனினும் பல நாடுகள் இரகசியமான முறையில் இவ்வகை ஆயுதங்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்வதிலும், அவற்றை உற்பத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
உயிரியல் ஆயுதங்களை விருத்தி செய்தல், உற்பத்திசெய்தல், சேமித்து வைத்தல் முதலிய செயற்பாடு களைத் தடைசெய்யும் ஒப்பந்த மொன்று 1972ஆம் ஆண்டு கைச்சாத் திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தில் 70 நாடுகள் கைச்சாத்திட்டன
ஆயுதமாக இவை பயன்படுத்தப் என்பதும் குறிப்பிடத்தக்கது. து
9I90)IIIIîIII IIII?
இரவிலே கடும் காற்றுக்கும் மழைக்கும் மத்தியில் சிறிய குடையொன்றைப் பிடித்தபடி நடுங்கிக்கொண்டு வந்த ஒரு நடுத்தர வயது மனிதன் அந்தக் கடைக்குள் நுழைந்தான்.
“வெற்றிலை இருந்தால் தாருங்கள்! இந்த மனுஷிக்கு வெற்றிலை சாப்பிடா விட்டால் நித்திரை வராதாம்” என்று கடைக்காரனிடம் முணுமுணுத்தான் அவன்.
“வெற்றிலை யாருக்கு? உன் மனைவிக்கா தீஅம்மாவுக்கா?” என்று அவனிடம் கேட்டார் கடைக்காரர். :
" என் அம்மா இந்தமாதிரி கடும் மழையிலும் காற்றிலும் என்னைக் கடைக்கு
அனுப்புவார் என நினைத்தீரா?” என்று ரோசத்தோடு கேட்டான் அந்த மனிதன்.
12 அரும்பு-25
 

Lதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே ஐரோப்பாவில் gaîìgu DIT 35'i i urafuu Bubonic Plague என்ற கொள்ளை நோய் காரணமாக வரலாற்றில் அதுவரை இடம் பெற் றிராத அளவுக்கு அழிவுகளை மனித குலம் எதிர்கொள்ள நேரிட்டது. Pasteurella pestis 6 TGðıp uśFAGLv3, 6 JG035 பற்றீரியாவின் காரணமாக உரு வாகும் இந்நோய் எலிகள் மூலமாக விரைவாகப் பரவுகிறது. நோயுற்ற எலிகளின் உடலில் ஒட்டிவாழும் தெள்ளுப் பூச்சிகள் கடிப்பதன் மூலம் இப்பயங்கர நோய் மனிதனைத் தொற்றுகிறது.
பற்றீரியாவைப் பற்றி அறியப் படாத அக்காலத்தில் கொள்ளை நோயைக் குணமாக்க மருந்துகள் எதுவும் இருக்கவில்லை. எனவே இந்நோய் தொற்றியவர்கள் மூன்று நான்கு நாட்களுக்குள் இறந்துபோக நேரிட்டது.
சீனாவிலும் ஆசியாவின் உட் பகுதியிலும் ஆரம்பமான இந்நோய் கிரீமிய யுத்தத்தின் போது ஐரோப் பியர்களைத் தொற்றியது. 1347இல் Caffa என்ற நகரை முற்றுகையிட் டிருந்த மொங்கோலியப் படையினர் கொள்ளை நோய்க்குப் பலியான வர்களின் சடலங்களை அந்நகருக்குள் எறிந்தனர். அங்கே இருந்த ஜெனோ வாப் படையினர் மூலமாகக் கடல் வழியாக இந்நோய் ஐரோப்பாவை அடைந்தது.
1347இல் ஸிஸிலித் தீவுகளிலும் 1348இல் வட ஆபிரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ் systby-25
கருஞ் சாவு
(Black Death)
ஆகிய நாடுகளிலும் 1349இல் அவுஸ் திரியா, ஹங்கேரி, ஸ்விட்ஸர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து என்பவற் றிலும் 1350இல் ஸ்வீடன், டென் மார்க், நோர்வே மற்றும் போல்ற்றிக் பிரதேசங்களிலும் கொள்ளை நோய் தீவிரமாகப் பரவலாயிற்று. இந் நாடுகளில் நோயின் தாக்கம் இடத் துக்கிடம் வேறுபட்டிருந்தது.
கிராமப்புறங்களைவிட நகர்ப் புறங்களே கூடுதலாகப் பாதிக்கப் பட்டன. நகர்ப்புறங்களிலும் மதகுரு மார் நெருக்கடியாக வாழ்ந்த மடங் களில் நோய் கடுமையாகப் பரவி யது. வசதிபடைத்த அரச குடும்பத் தினராலும், உயர் குடியினராலும்கூட இந்நோயிலிருந்து தப்பித்துக் கொள் ள முடியவில்லை. ஸ்பெயின் நாட்டு மன்னர் பதினோராம் அல்பொன் ஸோ, Aragon என்ற அரசின் ராணி எளியனோர், இங்கிலாந்து மன்னர் மூன்றாம் எட்வர்டின் மகள் ஜோன் ஆகியோரும் கொள்ளை நோய்க்குப் பலியாகினர். இங்கிலாந்துத் திருச் சபையின் அடுத்தடுத்துப் பதவி யேற்ற இரண்டு தலைமை பிஷொப் மார்களும் இறக்க நேரிட்டது.
சில ಟ್ವಿ: குடும்பங் களும் சமுதாயங்களும் முற்றாக அழி வுற்றன. ஐரோப்பாவில் சுமார் ஆயி ரம் கிராமங்கள் முற்றாக இல்லா தொழிந்தன. சில நகரங்கள் தேசப் படத்திலிருந்தே மறைந்து போயின. பெரும்பாலான ஐரோப்பிய மா நகரங்களின் சனத்தொகை பாதி யாகக் குறைந்தது. ஜெர்மனியின் Bremenநகரில் வாழ்ந்த 12,000 பேரில் 13

Page 9
7,000 பேர் கொல்லப்பட்டனர். 90,000 பேர் வாழ்ந்துவந்த இத்தாலியின் புகழ்மிக்க புளோரன்ஸ் நகரிலே சுமார் 40,000 பேர் இறந்தனர். பரிஸ் மாநகரிலே 50,000க்கும் மேற்பட் டோர் பலியாயினர். ஐரோப்பிய நக ரங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்குப் பாரிய புதைகுழி களைத் தோண்ட வேண்டியதா யிற்று.
1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 25 மில்லியன் பேர் ஐரோப்பாவில் இந்நோய்க்குப் பலியாயினர். இது அன்றைய ஐரோப்பாவின் சனத்தொகையில் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கா கும். இத்தொற்று நோய் அப்பிரதேச மக்களிடையே மரண பீதியையும் அவர்களது வாழ்க்கையில் பேரவலத் தையும் ஏற்படுத்தியது
இந்நோயினால் பீடிக்கப்பட் டவர்களின் உடல் இறுதிக் கட் டத்தில் கரு ஊதா நிறமாக மாறி விடுகிறது. இதனாலேயே பிற்காலத் தில் இதனைக் கருஞ் சாவு (Black Death) என அழைக்கலாயினர். கருஞ்சாவின் பின்னர் ஐரோப்பா வின் சனத்தொகை பழைய மட் டத்தை அடைய 150 வருடங்களுக்கு மேல் பிடித்தது.
கருஞ்சாவு காரணமாக அன் றைய ஐரோப்பாவின் சமூக, பொரு ளாதார அமைப்புக்களில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டன. யூதர்கள் திட்டமிட்டுக் குடிநீரில் அல்லது காற்றில் விஷத்தைக் கலந்ததனா லேயே கொள்ளை நோய் ஏற்படு
கின்றது என நம்பிய கிறிஸ்தவர்கள்
யூதர்களின் மீது கொடூரமான தாக் குதல்களைத் தொடுத்தனர். ஸ்விட் ஸர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடு
களில் யூதர்கள் சுற்றிவளைக்கப்
14
பட்டுத் தீயிலிட்டுக் கொல்லப்பட் டனர். வேறு சில பகுதிகளில் அவர் களைச் சகதி நிலங்களில் அமிழ்த்திக் கொன்றனர். கொள்ளை நோய் பர வாத இடங்களில் கூட யூதர்கள் தாக் கப்பட்டனர். தொழு நோயாளர் களும் வெளிநாட்டவரும் கூட தாக் குதல்களுக்கு உள்ளாயினர். போப் அரசரும் ஏனைய அரச அதிகாரிகளும் எவ்வளவோ முயன்றும் இப்படு கொலைகளைத் தடுக்க முடியவில் லை. கொள்ளை நோயின் சீற்றம் தணிந்த பின்னரே இப்பயங்கரத் தாக்குதல்களும் முடிவுக்கு வந்தன.
கருஞ்சாவைத் தொடர்ந்து தொழிலாளர்களின் தொகை குறைந் ததால் பயிர் செய்யப்படும் நிலங் களின் அளவும் குறைந்தது. இதனால் உற்பத்தியும் நில உரிமையாளர்களின் வருமானமும் வீழ்ச்சியடைந்தன. உயிர் தப்பிய தொழிலாளர்கள் அதிக சம்பளத்தையும் சலுகைகளையும் கோரலாயினர். இந்நிலையைச் சமாளிப்பதற்காக நில உரிமையாளர் கள் பண்டங்களின் விலைகளை அதி கரித்தனர். விலையதிகரிப்பைத் தடுப் பதற்காக அரசுகள் சட்டங்களைக் கொண்டுவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேபோன்று தொழி லாளர்களின் சம்பளங்களை மட்டுப் படுத்தவும் சட்டரீதியான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெருந்தொகையானோர் இறந் ததனால் அவர்களின் சொத்துக்கள் யாவும் உயிர்தப்பிய சிலரின் கை களைச் சென்றடைந்தன. இதனால் மத்திய வகுப்பினரிடையே புதிய செல்வந்தர்கள் உருவாகினர். நகர்ப் புறங்களில் மக்கள் செலவிடும் பணத் தின் அளவும் அதிகரித்தது. நில உரிமையாளர்கள் விவசாயிகளிட மிருந்து அறவிடும் குத்தகையை
25 - پاظزویلاو

அதிகரித்ததால் உழவர்களிடையே கிளர்ச்சிகள் ஏற்படலாயின. 1381இல் ஆங்கிலேய விவசாயிகள் மேற் கொண்ட கிளர்ச்சி இதற்கோர் எடுத் துக்காட்டாகும். 14ம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஐரோப்பாவெங்கும் பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கள் ஏற்படுவதற்கு கருஞ்சாவின் பின் விளைவுகள் கார ணமாக அமைந்தன.
ஐரோப்பாவின் இலக்கியத்
கருஞ்சாவின் நிழல் பதியத் தொடங்
கியது. உயிர் தப்பிய செல்வந்தர்கள் ஆலயங்களிலும் கோயில்களிலும் நுண்கலை வேலைப்பாடுகளைச் செய்வதற்காகத் தாராளமாக நன் கொடைளை வழங்கலாயினர். கருஞ் சாவுக் காலத்தைத் தொடர்ந்து உரு வான இலக்கிய மற்றும் ஓவிய ஆக் கங்களில் பெரும்பாலும் மரணமே கருப்பொருளாக அமைந்திருந்ததை
யும் காணக்கூடியதாக இருந் தது. L நல்ல கேள்வி மதுபோதையில் தள்ளாடியவாறு வந்த ஒருவன் பஸ் நிலையத்திலிருந்த பஸ்ஸொன்றின் முன்வாயிலால் உள்ளே ஏறி “இது கண்டிக்குப் போகுமா ?” என்று கேட்டான்.
“இல்லை” என்றான் பிரயாணிகளுக்கு டிக்கட் வழங்கிக் கொண்டிருந்த sts.
சிறிது நேரத்தின் பின் பின்வாயிலால் மீண்டும் அதே பஸ்ஸுக்கு ஏறிய அக்குடிகாரன் “ஏய்! இது கண்டிக்குப் போகுதா?’ என்று கேட்டான்.
“இல்லை” என்று கண்டக்டர் சொன்னதும் முறைத்துப் பார்த்துவிட்டு இறங்கிப் போனான் அவன்.
சில நிமிடங்களின் பின் மீண்டும் முன்வாயிலால் ஏறிய குடிகாரன், “இந்த பஸ் கண்டிக்குப் போகுமா?’ என்று கேட்டான்.
“இல்லை” என்று எரிச்சலோடு கத்தினான் கண்டக்டர். அவனை ஆச்சரியத்தோடு பார்த்த குடிகாரன் “நீ எப்படி எல்லா பஸ்ஸி லேயும் ஒரே நேரத்தில் கண்டக்டர் வேலை செய்கிறாய்?’ என்று கேட்டான்.
திலும், நுண்கலைகளிலும் கூட
அரும்பு இதழ்களைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ளல்
அரும்பு இதழ்களைத் தொடர்ச்சியாகத் தபால் மூலம் பெற விரும்புவோர் அடுத்து வரவுள்ள 6 இதழ்களுக்கும் ரூபா 130/= மணியோடர் மூலம் அனுப்பலாம். தனிப்பிரதி தேவைப்படுவோர் தபாற் கட்டணத்தையும் சேர்த்து ரூபா 22.00 அனுப்பவும்.
மனியோடர் அனுப்பும் போது பணம் பெறுபவர் பெயர் M. Hafiz Issadeen எனவும் தபாற் கந்தோர் Dharga Town எனவும் குறிப்பிடத் தவறாதீர்கள்.
சிலர் தபாற் கந்தோரில் தரப்படும் மணியோடர் பிரதியை எமக்கு அனுப்பாமல் தம்வசம் வைத்துக்கொள்கின்றனர். அப்பிரதி எமக்கு அனுப்பப்பட வேண்டியது என்பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறு அனுப்பும் போது உங்கள் பெயர் முகவரி என்பவற்றைத் தாளொன்றில் தெளிவாகக் குறித்து அனுப்புங்கள். பெயர், முகவரி குறிப்பிடாமல் சிலர் மனியோடரை மாத்திரம் அனுப்புகின்றனர். மணியோடர் விண்ணப்பத்தில் நீங்கள் எழுதும் பெயர், முகவரி, விபரங்கள் எமக்கு அனுப்பப்படும் மணியோடர் பிரதியில் குறிக்கப் படுவதில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
15 25 - كفارقeyى

Page 10
நான்கு பக்கங்களிலும் சுவர் களைக் கொண்ட களமொன்றில் டென் னிஸ் ரக்கெட் (racket) போன்ற மட்டை யொன்றையும் பந்தையும் கொண்டு ஆடப்படும் விளையாட்டே ஸ்குவாஷ் எனப்படுகின்றது.
உண்மையில், இருவகையானSquash விளையாட்டுக்கள் உள்ளன. இவற் gp6i 66ðrgny Squash racquets 6TGözgjid LDjib p51 Squash tennis 676örgyúb sy60ypj5ú படுகின்றன. இவ்விரு வகைகளும் பெரும்பாலும் ஒன்றையொன்று ஒத்தன வாகவே உள்ளன. எனினும் Squash racquets என்ற வகையே உலகில் பரவலாக ஆடப்படுவதனால் அதனைப் பற்றியே இக்கட்டுரையில் விவரித்துள்ளோம்.
ஸ்குவாஷ் பந்து சுமார் 4.4cm விட்ட முடையது. பந்தை அடிக்கப் பயன்படும் மட்டை அல்லது ரக்கெட் சுமார் 68.6 cm (27 அங்குலம்) நீளமுடையது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் டென்னிஸ் பந்து போன்ற மென்பந்தொன்றே பயன் படுத்தப்படுகின்றது. இவ்வகை ஸ்கு வாஷ் விளையாட்டுSoftbalSquashஅல் Gvg. English Squash GTGOTŮLuGid.
ஐக்கிய அமெரிக்காவின் சில பகுதி களில் வன்பந்து ஸ்குவாஷ் (Hard ball Squash) விளையாடப்படுகின்றது. இவ் வகை American Squash எனவும் அழைக் கப்படும். மேற்குறித்த இருவகை ஆட் டங்களிலும் பந்தின் இயல்பு வித்தியாசங் கள் காரணமாக ஆட்ட நுட்பங்களும் வேறுபடுகின்றன.
6
ஸகுவாஷ்
clarinarri! irro sì
vel Ivvuv II I -Viji (Squash)
டென்னிஸ் ஆட்டத்தில் போன்றே ஸ்குவாஷ் விளையாட்டிலும் இருவர் ஆடும் தனி ஆட்டம் (Singles), நால்வர் ஆடும் இரட்டை ஆட்டம் (Doubles) என இரு பிரிவுகள் உண்டு.
மென்பந்து ஸ்குவாஷ் விளையாட் டுக்குரிய நியம தனியாட்டக் களம் 9.75m நீளமும் 6.40 m அகலமும் கொண்டது. இக்களத்தின் நாற்புறங்களிலும் உயர மானசுவர் உண்டு. பின் சுவரிலிருந்து 4.26 mg/TujSai Service - court Line GTGiglio பணிப்புப் பிரதேசக் கோடு குறுக்காக வரையப்பட்டிருக்கும். ஒருவர் பணிக்கும் பந்து முன்சுவரில் பட்டபின் இக்கோட் டுக்குப் பின்னால் வந்து விழுதல் வேண் டும்.
பின்சுவரிலிருந்து மேற்குறித்த குறுக் குக் கோட்டுக்கு வரையப்பட்டுள்ள ஒரு நேர்கோடு, பணிப்புப் பிரதேசத்தை இரு சம பகுதிகளாகப் பிரிக்கிறது. ஆடுகளத் தின் இரு பக்கங்களிலும் 1.60m நீள அகல முள்ள சதுரமொன்று வீதம் வரையப்பட் டிருக்கும் இது பணிப்புக் கூண்டு (Service box) எனப்படும். பந்தைப் பணிக்கும் ஆட் டக்காரர் தனது ஒரு பாதத்தையாவது கட்டாயம் இக்கூண்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
முன்சுவரிலே தரையிலிருந்து 1.82m (6 அடி) உயரத்தில் கிடையான கோ டொன்று வரையப்பட்டிருக்கும். இது Service line எனப்படும். பணிக்கப்படும் பந்து கட்டாயமாக இந்தக் கோட்டுக்கு மேலாகவே முன்சுவரில் படவேண்டும்.
அரும்பு-25
 
 

(15 ft)
Service-Cortire .י{
ஸ்குவாஷ் ஆட்டக்களத்தின் அமைப்பு
هو m 160 سم
《5ft3in》
. 9.Sm. முன் சுவரில், தரையிலிருந்து 480 mm உயரத்திற்கு குறுகிய தகரப் பெட்டி யொன்று பொறுத்தப்பட்டிருக்கும். பந்து இதில் படும்போது பலமான ஓசை உரு வாகும். Teltale எனும் இந்தப் பெட்டி யின் மீது படும் அடிகள் செல்லுபடியற்ற வையாகும்.
ஆட்டத்தின் போது, நான்கு சுவர் களிலும் வரையப்பட்டுள்ள எல்லைக் கோடுகளுக்குள்ளேயே பந்து இருத்தல் வேண்டும். முன் சுவரின் எல்லைக் கோடு தரையிலிருந்து 4.57m (15அடி) உயரத்தில் இருக்கும். பின்சுவரின் எல்லைக் கோடு தரையிலிருந்து 2.13m (7 அடி) உயரத்தில் வரையப்பட்டிருக்கும். இரண்டு பக்கச் சுவர்களிலும் உள்ள எல்லைக் கோடுகள் முன்சுவர் எல்லைக் கோட்டிலிருந்து பின் சுவர் எல்லைக் கோடு வரை சாய்வாக வரையப்பட்டிருக்கும். இவ்வெல்லைக் கோடுகளுக்கு மேலுள்ள பகுதிகளில் (சீலிங் உட்பட) படும் அடிகள் நிராகரிக் கப்படும்.
இரட்டை ஆட்டத்திற்குரிய ஆடு களங்கள் பருமனில் கொஞ்சம் பெரி யனவாக இருக்கும்.
ஓர் ஆட்டக்காரர் பந்தைப் பணிப் பதன் மூலம் ஸ்குவாஷ் ஆட்டம் ஆரம்ப ‘மாகும். பணிக்கப்பட்ட பந்து முன்சுவரி
(14 ft)
_యిము, బల్లో"
a Sidě kval fire
* 53 kwiał ine
బుగ్గ"
Foreihārd Eckhard court :
C3.it • Half-court ine
:
(31 ft.
லுள்ள பணிப்புக் கோட்டுக்கும் எல்லைக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் பட்டுத் தெறித்து எதிராளியின் பணிப்புப் பிரதேசத்தில் வந்து விழுதல் வேண்டும்.
எதிராளி பின்வருவனவற்றுள் ஏதே
னும் ஒரு தவறைச் செய்தால் பந்து பணித்
தவருக்குப்புள்ளி வழங்கப்படும் : 1. பந்து ஒரு தடவைக்கு மேல் நிலத்தில் பட்டுத்துள்ள அனுமதித்தல். 2. பந்தை teltale என்னும் தகரப் பெட் டிக்கு மேலுள்ள முன்சுவர்ப் பகுதிக்குத் திருப்பியடிக்கத் தவறுதல். 3. பந்து சுவர் எல்லைக் கோடுகளுக்கு அப்பால் அல்லது சீலிங்கில் படுமாறு அதனை அடித்தல்.
ஒவ்வோர் அடியும் முன்சுவரில் கட்டாயம் படுதல் வேண்டும். எனினும் பந்து முன்சுவரில் பட்டபின் வேறு எந்தச் சுவரில் பட்டுத் தெறித்து வந்தாலும் அத னைத் திருப்பி அடிக்கலாம். முன்சுவரில் பட்டுத் தெறித்து வரும் பந்து நிலத்தில் வந்து விழ முன்னரும் திருப்பி அடிக்கப் படலாம்.
ஓர் ஆட்டக்காரர் 9 புள்ளிகளைப் பெறும் வரை மென்பந்து ஸ்குவாஷ் ஆட் டம் தொடரும். எப்போதும் பந்து பணிப்பவரே புள்ளி பெற முடியும். ஒரு புள்ளியைப் பெற்றவர் தொடர்ந்தும் பந்து 17
அரும்பு- 25

Page 11
பணிப்பார். ஒரு போட்டியின் போது மூன்று ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் மூன்றை வெல்பவர் வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார்.
கடந்த காலத்தில் பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஜஹாங்கீர் கான் என்பவர்
ரண்டை அல்லது
ஸ்குவாஷ் ஆட்டத்தில் அபார திறமை காட்டுபவராகத் திகழ்ந்தார். இவர் பத்துத் தடவைகள் பிரிட்டிஷ் சம்பியனாகவும் ஆறு தடவைகள் (1981-1985, 1988) உலகச் சம்பியனாகவும் தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. க
IIJJ,i IITiijja) நடுவானிலே பறந்துகொண்டிருக்கும் சிறிய ஜெட் விமானமொன்றின் என்ஜின் கள் இரண்டும் தீப்பற்றிக் கொண்டன. விமானத்திலுள்ள பரசூட்களை மாட்டிக் கொண்டு உடனடியாகக் கீழே குதித்துவிடுமாறு பிரயாணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார் விமானி.
அந்த விமானத்தில் ஆறு பிரயாணிகள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கென ஐந்து பரசூட்கள்தான் இருந்தன.
பிரயாணிகளுள் ஒருவரான ஐ. நா. செயலாளர் கொபி அனான் எழுந்து “நான் ஐ.நா.வின் புகழ்பெற்ற செயலாளராக இருக்கிறேன். உலகத்தில் அமைதியைப் பேணு வதற்காக நான் கட்டாயம் உயிரோடு இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டுப் பரசூட் ஒன்றை எடுத்துத் தோள்களில் மாட்டிக்கொண்டு விமானத்திலிருந்து வெளியே குதித்து விட்டார்.
அடுத்து எழுந்தவர் திருமதி ஹிலரி கிளிண்டன். “நான் நிவ்யோர்கின் செனட்டராக இருக்கிறேன். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நான்தான் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எனவே நான் எப்படியாவது உயிர் தப்ப வேண்டும்” எனக் கூறிய அவரும் பரசூட் ஒன்றை மாட்டிக் கொண்டு கீழே குதித்தார்.
மூன்றாவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் எழுந்தார். “அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் புத்திசாலியான ஜனாதிபதி நான் தான். பயங்கரவாதிகளிட மிருந்து உலகைக் காப்பதற்கு நான் உயிரோடு இருப்பது அவசியம்” எனக் கூறிக் கொண்டு அவரும் ஒன்றை மாட்டிக்கொண்டு கீழே குதித்தார்.
நான்காவது பிரயாணி ஒரு பிரபல விஞ்ஞானி. உலக உய்வுக்குத் தான் உயிர்வாழ் வது அத்தியாவசியம் எனக் கூறி அவரும் ஒரு பரசூட்டை மாட்டிக் கொண்டு கதவி னுரடாக வெளியே பாய்ந்தார்.
இறுதியில் போப் ஆண்டவரும் ஒரு பாடசாலைப் பையனும் மாத்திரமே எஞ்சி யிருந்தனர். போப் ஆண்டவர் எழுந்துநின்று ‘நான் கத்தோலிக்க உலகின் தலைவனாக இருக்கிறேன். என்றாலும் வயோதிபனான எனது உயிரைவிடச் சிறுவனான உனது உயிரே முக்கியமானது. எனவே மீதியாயுள்ள பரசூட்டை எடுத்துக்கொண்டு நீ கீழே குதித்துத்தப்பிக்கொள்’ எனச் சிறுவனைப் பார்த்துக் கனிவோடு கூறினார்.
அதைக்கேட்ட அந்தச் சிறுவன் “பிதாவே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். நம் இருவருக்கும் இரண்டு பரசூட்கள் எஞ்சியிருக்கின்றன. அமெரிக்காவின் புத்திசாலி ஜனாதிபதி பரசூட் என நினைத்து அவசரத்தில் எனது புத்தகப் பையைத் தான் தோளில் மாட்டிக் கொண்டு கீழே குதித்தார்’ என்றான் ஆறுதலாக,
ஒரு சந்தேகம் விமானம் விழுந்து நொறுங்கினாலும் தீப்பற்றிக் கொண்டாலும் அதன் கறுப்புப் பெட்டி பாது காப்பாக இருக்கும் என்கிறார்களே! அப்படியானால் அந்தப் பெட்டியைச் செய்கிற விதத்தில் முழு விமானத்தையும் செய்து விட்டால் என்ன? 18 25 - اطلاژویی لاوی

TonsiΙΙitis என்னும் தொண்டை மூளை அழற்சி
எமது வாயிலே தொண்டைப் பகுதியின் இரு புறங்களிலும் Tonsis எனப்படும் தொண்டை முளைகள் காணப்படுகின்றன. நிணநீர் இழையங் களின் திணிவுகளால் ஆன தொண்டை முளைகள் எமது நிணநீர்த் தொகுதியின் (Lymphatic System) Sp| Lig.5Guit Gilpit 5 விளங்குகின்றன.
ஒருவரது வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் நோயெதிர்க்கும் தன்மை யுடைய நிர்ப்பீடனப் பதார்த்தங்களை (immune bodies)2 (56), Tig,615 gigaO)6), பங்குகொள்கின்றன. அத்தோடு தொண் டைப் பகுதியில் தொற்று ஏற்படாமல் காக்கும் தடையொன்றாகவும் தொழிற்படுகின்றன.
எனினும், தொற்றைத் தடுப்பதற் கென இருக்கும் இத்தொண்டை முளை களே அடிக்கடி தொற்றுக்குப் பலியாகி விடுகின்றன. தொண்டை முளைகளில் தொற்று ஏற்பட்டு அவை வீங்கிச் சிவந்து சீழ்கட்டும் நிலை தொண்டை முளை அழற்சி (Tonsilitis) எனப்படும்.
சிலர் அடிக்கடி தொண்டை முளை அழற்சியினால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாகத் தொண்டை முளையில் அழற்சி ஏற்படும் போது அதைச் சூழ வுள்ள தொண்டையின் ஏனைய பகுதி களும் ஓரளவு பாதிக்கப்படுவது சகஜம். எனவே, இந்நோய் நிலையை Adenotonsilitis என மருத்துவத்தில் குறிப்பிடு வதுண்டு.
தொண்டை முளை அழற்சி ஏற்படு வதற்குப் பல காரணிகள் ஏதுவாக அமை
வை
யலாம். போசணைக் குறைபாடு, அனு சேபச் செயன்முறைகளில் ஏற்படும் அசா தாரண நிலைகள், நிர்ப்பீடனக் குறை பாட்டு நிலைகள் முதலிய உடற் காரணி களும், குளிர், வளிமண்டல மாசுக்கள் போன்ற சூழற் காரணிகளும், பற்றீரியா அல்லது வைரசுக்கள் போன்ற நோய்க் காரணிகளும் இணைந்து செயற்படு வதன் மூலமே தொண்டை முளை அழற்சி உருவாகின்றது.
தொண்டை முளை அழற்சியை உரு வாக்கும் பிரதான நோய்க் காரணி பற்றீரி யாவா அல்லது வைரசுக்களா என்பதை நிர்ணயித்துக் கொள்வது சிரமமாகும்.
3i Lost få 50 åg, 6sig, LDT 6IT adenotonsillitis
தொற்றுக்களுக்கு வைரசுக்களே காரண மாக இருப்பதாக நம்பப்படுகின்றது. சாதாரணதடுமலை உண்டாக்குகின்ற thinOVirus, 3T6ổiịp 3)6) 1993; 96, L’ L (tpửbadenovirus, enterovirus Gu T Gip 606). Jafi கூட்டங்களுமே இவ்வாறு தொண்டை முளை அழற்சிக்குக் காரணமாக அமை கின்றன.
பற்றீரியா வகைகளில் Streptococcus, Staphylococcus, pneumococcus, Haemophilus influenzae (up56ólu 16ð6) | 65T6ð76ðLமுளை அழற்சியை உருவாக்கவல்லவை. ஆரம்பத்தில் வைரசுக்களினால் தோற்று விக்கப்பட்ட தொண்டை முளை அழற்சி யில் பற்றீரியா காரணமாகத் துணைத் தொற்று ஏற்படுவதும் சகஜமாகும்.
19
25 - اپال 6ی sey

Page 12
நோயின் முதல் அறிகுறியாகத் தொண்டையின் அடிப்பாகம் புண்ணா னது போன்ற உணர்வு ஏற்படும். இதைத் தொடர்ந்து தொண்டை நோவு உருவா கும். சிலவேளைகளில் உணவை விழுங் கும் போது மாத்திரம் இந்நோவு உணரப் படக்கூடும். தொண்டை இறுகிக்கொண் டது போன்ற உணர்வும் ஏற்படலாம். தொண்டையில் அதிகளவு சுரப்புக்கள் உண்டாவதனால் அவற்றை அடிக்கடி விழுங்கிக்கொள்ள நோயாளி நாடுவார். எனினும் இவ்வாறு விழுங்குதல் கடும் வேதனை தருவதாக இருக்கும்.
தாடைக்குக் கீழாக அமைந்துள்ள நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கிக் காணப்படு வதோடு அவை தொடுகைக்கு மிருது வானவையாகவும் மாறும், உட்புறமாக உடல் குளிர்தல், தலையிடி, காய்ச்சல், உடற் செளகரியமின்மை, நோயுற்றது போன்ற உணர்வு என்பன காணப்படும்.
தொற்று கடுமையானதாக இருப் பின் நோயாளியின் நிலைமையும் பார தூரமானதாக அமையலாம். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்களில் delirium என்னும் மனக்குழப்ப நிலை ஏற்படக் கூடும். இந்நிலையில் சிந்தனைக் குழப் பம், பயம், அமைதியின்மை, hallucinations என்னும் மாய உணர்வுகள் முதலி யன தோன்றலாம்.
நோயுற்றிருக்கும் ஒருவரின் வாயின் உட்பகுதியைக் கூர்ந்து அவதானித்தால் தொண்டை முளைகள் இரண்டும் வீங்கி யிருப்பதைக் காணலாம். அத்தோடு தொண்டையின் சீத மென்சவ்வுகள் பிர காசமான சிவப்பு நிறத்தனவாய்க் காணப் படும். உள்நாக்கும் வீக்கமடைந்திருக்கக் கூடும். மென் அண்ணம் தடித்தது போன்று தோற்றமளிக்கும். நோய் கடுமையாகும் போது தொண்டை முளைகளின் மேற்பரப்பில் சீழ்கட்டிய நுண் பைகள் தோன்றும்.
20
இந்தக் கட்டத்தை அடையும் போது விழுங்குதல் மேலும் கஷ்டமான செயலாக மாறும், நோயாளியினால் உமிழ்நீரைக்கூட விழுங்க முடியா மற் போய்விடும். மிகக் கடுமையான நோய் நிலைகளில் தொண்டை முளைகளின் மேற்பரப்பிலுள்ள சீழ்ப்பைகள் ஒன்றி ணைந்து ஒரு மென்சவ்வு போல் மாறு கின்றன.
ஆரம்ப அறிகுறிகள் தென்படும் போதே மென்சூடான உப்பு நீரினால் அல்லது மென்மையான தொற்று நீக்கித் திரவமொன்றினால் வாயைக் கொப்பு ளித்துத் தொண்டையைக் கழுவிக்கொள் வதன் மூலம் நோயின் தாக்கத்திலிருந்து ஒரளவு நிவாரணம் பெறலாம். அஸ் பிரின்கரைத்த நீரினால் கொப்புளிப்பதும் சுகம் தரும். கடுமையான அழற்சி இருக்கும் சந்தர்ப்பங்களில் மென்சூடான சோடியமிரு காபனேற்றுக் கரைசலைத் தொண்டைக்கு விசிறுவது நல்ல செளகரி யத்தை ஏற்படுத்தும்.
தொண்டை முளை அழற்சியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் வைத்திய உதவியை நாடுவது நல் லது. காய்ச்சல் இருப்பின் நோயாளியைக் கட்டிலில் இருக்கச்செய்து சிகிச்சையளிப் பதே ஏற்றது. மென்மையான ஆனால் போஷாக்குமிக்க உணவுகளை நோயா ளிக்கு வழங்குதல் வேண்டும். பொது வாகத் திரவ உணவுகளை மாத்திரமே அவரால் எளிதில் உட்கொள்ள முடியு மாக இருக்கும். எனவே போதியளவு திரவங்களை உட்கொள்ளுமாறு அவரைத் தூண்ட வேண்டும்.
நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் துணைத்தொற்று ஏற்படுவதைத் தடுக்க வும் நிலைமை சிக்கலாவதைத் தவிர்க்க வும் உதவும். எனினும் மிகவும் கடுமை யான தொற்றுக்களின் போது மாத்திரமே அவற்றை உபயோகித்தல் வேண்டும். இலேசான தொற்றுக்களைப் பொறுத்த
அரும்பு-25

மட்டில் அவை அவசியமில்லை. 50%க் கும் மேலான தொற்றுக்களுக்கு வைரசுக் களே காரணமாக இருப்பதால் நுண்ணு யிர்கொல்லி மருந்துகள் பெரிய பய
தொண்டை முளை அழற்சியினால் மீண்
டும் மீண்டும் பாதிக்கப்படுவதுண்டு.
இவ்வாறு ஒருவருடைய அன்றாட
வேலைகளைப் பாதிக்கும் அளவுக்கு
னெதுவும் தர மாட்டா.
சாதாரண நிலையில் இரண்டு வாரங்களுக்குள் தொண்டை முளைகள் பழைய நிலைமைக்குத் திரும்பி விடக் கூடும். எனினும் பெரும்பாலானவர் களில் தொற்று முற்றாக நீங்கி விடுவ தில்லை. இதன் விளைவாக அவர்கள்
அடிக்கடி தொண்டை முளை அழற்சி ஏற்படுமாயின் tonsilectomy என்னும் சத்திர சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட தொண்டை முளையை வெட்டி அகற்று வது அவசியமாகலாம். இதன் அவசியத் தை வைத்தியரே தீர்மானிக்க வேண்டும்.
கரெட காலம் திங்கட்கிழமை காலையில் அந்த மனிதன் வேலைக்கு வந்த போது அவனது இடது கண் கறுத்து முகம் வீங்கியிருந்தது. ‘என்ன நடந்தது?’ என அனுதாபத் துடன் கேட்டனர் சக தொழிலாளர்கள்.
“எனது கஷ்டகாலம்! நேற்றுக் காலையில் ஆராதனைக்காக ஆலயத்துக்குப் போயிருந்தேன். எனக்கு முன்வரிசையில் பயில்வான் மாதிரி பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள். ஆராதனைக்காக எழுந்து நின்ற போது அவளது ஆடை பின்புறமாக உள்ளே செருகிக்கொண்டிருந்ததைக் கண்டேன். அலங்கோலமாக இருக்கிறதே என அதை வெளியே இழுத்துவிட்டேன். அவள் திரும்பி என் முகத் தில் தாறுமாறாக அறைந்துவிட்டாள்’ என்றான் அந்த மனிதன் கவலையோடு.
அடுத்த திங்கட்கிழமை அவன் வேலைக்கு வந்த போது அடுத்த கண்ணும் கறுத்து வீங்கிப் போயிருந்தது. “என்ன? பழையபடி வம்பு செய்தாயா?” என்று கேலியாகக் கேட்டனர் சகாக்கள்.
“அதையேன் கேட்கிறீர்கள்? நேற்றும் அதே பெண் ஆலயத்தில் எனக்குமுன் வரிசையில் அமர்ந்திருந்தாள். ஆராதனைக்காக எழுந்து நின்றபோது முன்போலவே அவளது ஆடை பின்புறமாக உள்ளே செருகிக்கொண்டிருந்தது. நான் கண்டும் காணாதது போல் இருந்தேன். ஆனால் எனக்கு அருகில் நின்ற ஒரு மடையன் அதை வெளியே இழுத்துவிட்டான். அப்படிச் செய்தாள் அவள் கோபிப்பாளே என்பதால் உடனே நான் முன்பாய்ந்து பழையபடி அதைச் செருகி விட்டேன். அப்படிச் செய்தும் அந்தப் பாவிப் பெண் என்னைச் செம்மையாக அறைந்துவிட்டாள்” என்று கண் கலங்கியவாறு கூறினான் அந்த மனிதன்.
66660 6 (J D2
வழமையாக டெலிபோனில் மணித்தியாலக் கணக்கில் பேசிக்கொண்டி ருக்கும் தன் மனைவி அன்று 25 நிமிடத்தில் பேச்சை முடித்துக்கொண்டதைக் கண்ட கணவன், “என்ன? இன்று அரை மணிநேரங்கூடப் பேசவில்லையே. என்ன விசேடம்?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டான்.
“இல்லை! அது ஒரு ரோங் நம்பர்” என்று அலட்சியமாகப் பதில் வந்தது மன்ைவியிடமிருந்து. -
.21 | 25 - اپظاژی sey

Page 13
ற்ெகனவே பல தடவைகள் நிவ் யோர்கிலுள்ள ஜோன் F. கென்னடி (I.F.K.) விமான நிலையத்தில் தரித்துச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்த போதிலும் நிவ்யோர்க் மாநகரைச் சுற்றிப் பார்ப்பதற்கோ அங்கு தங்கியிருக்கவோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனவே இந்தத் தடவை சிகாகோவிலிருந்து லண் டனுக்குச் செல்லும் வழியில் சில நாட்
களை நிவ்யோர்கில் கழிப்பதற்கு ஏற்பாடு
களைச் செய்துகொண்டேன்.
நிவ்யோர்க் மாநகரை அடைவதற்கு J.F. K, La Guardia, Newark 6767 ep6510 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. FK எப்போதும் 'பிஸியானதாக இருப் பதனால் நெவோக் (Newark) விமான நிலையத்தில் இறங்குவதற்காகவே என் பிரயாண முகவர் ஒழுங்குகளைச் செய் திருந்தார். இந்த விமான நிலையம் நிவ் யோர்க் மாநகருக்கு அண்மையில் இருக் 5airp Gu T53 to 95, New Jersey 61657p) அண்டை மாநிலத்திலேயே அமைந்திருக் கின்றது.
அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4ம் திகதி நான் சிகாகோவின் ஒஹெயார் (OHare) விமான நிலையத் திலிருந்து அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் நெவோர்க் நோக்கிப் பயணமானேன். சுமார் ஒன்றரை மணித் தியாலம் பறந்த பின் குறித்த நேரத்துக்கு
முன்பாகவே விமானம் நெவோர்கை
அடைந்தது.
22
ိ.မ္မိိမ္ပိ ......န္တိ· ဒိဗွို
நிவ்யோர்கில்
ல நாட்கள் }:1 (2һ) “15ії і іъ аїї
நிவ்யோர்கில் எனக்குப் புகலிடம்
வழங்க இணங்கியிருந்த இலங்கை
நண்பரை ஊரிலுள்ள இன்னொரு நண்பர் தான் அறிமுகம் செய்து தந்திருந்தார். வாக்குறுதியளித்தது போலவே அவர் என்னை அழைத்துச் செல்வதற்காக Newark விமான நிலையத்துக்கு வந்திருந் தார். அவர் தனது காரிலேயே என்னை நிவ்யோர்க் நோக்கி அழைத்துச் சென் றார். அன்று விடுமுறை தினமாக இருந்த தனால் பாதையில் வாகன நெரிசல் இருக்கவில்லை. ஏனைய நாட்களில் நிவ் யோர்க் நகரை அடைய ஒரு மணித் தியாலத்திற்கு மேல் எடுக்கும் என நண்பர் கூறினார்.
நிவ்யோர்க் நகரை ஆரம்பத்தில் டச்சுக்காரர்களே நிறுவினார்கள். அந்தக் காலத்தில் அதற்கு நிவ் அம்ஸ்டர்டாம் என்ற பெயரே வழங்கப்பட்டிருந்தது. பின்னர்தான் இங்கிலாந்தின் அப்போ தைய யோர்க் பிரதேச கோமகனின்(Duke of York) நினைவாக ஆங்கிலேயர்கள் அந்நகருக்கு New York என்ற பெயரைச் சூட்டினர்.
1898ஆம் ஆண்டுவரை நிவ்யோர்க் நகரானது Manhattan என்ற தீவை மாத் திரமே உள்ளடக்கியிருந்தது. இன்று Queens, Brooklyn, Bronx. Staten Island, Manhattan ஆகிய ஐந்து பிராந்தியங்களை இந்நகர் கொண்டுள்ளது. இவற்றுள் Bronx மாத்திரமே அமெரிக்காவின் பிர தான நிலப்பரப்பில் அமைந்திருக்கின்றது. இப்பகுதிகூட மூன்று பக்கங்களில் நீரால் (5lpĽil JLug:(5563štpgl. Manhattan. Staten
25 - انارویی sey
 
 

Island என்பன தனித்தனித் தீவுகளாகும். Queens, Brooklyn 9,5ul Lig 5.56ir Long Island என்ற தீவில் அமைந்துள்ளன. மேற் குறித்த புவியியல் அமைப்புக் காரணமாக நிவ்யோர்க்கின் எல்லாப் பகுதிகளிலும் பெரிய பாலங்களும், நீருக்கடியிலான
சுரங்கப் பாதைகளும் காணப்படுகின்றன.
Staten Islandig'i போய் வர வள்ளச் Gaging) (Ferry Service) 96ipid p5L-gigs' படுகின்றது.
நிவ்யோர்க் மாநகரத்தின் பிராந் தியங்களில் Queens என்பதே மிகப் பெரி யதாகும். இங்குதான் என்னை அழைத் துச் சென்ற நண்பர் வசித்து வருகிறார். பழைய மாடிவீட்டுத் தொகுதியொன்றில் அவரது இல்லம் அமைந்திருந்தது. அவர் தனது மனைவி பிள்ளைகளுடன் அங்கு வசித்து வருகிறார். அத்தோடு Queens பகுதியில் சொந்தமாகக் கடையொன் றையும் வைத்திருக்கிறார்.
முதல் நாளே அவர் என்னை மன் ஹட்டன் பிரதேசத்துக்குக் காரில் அழைத் துச் சென்றார். நிவ்யோர்க்கின் பிரதான வர்த்தக, நிதி நிறுவனங்கள் அங்கேயே அமைந்துள்ளன. அத்தோடு வானைத் தொடும் பல்மாடிக் கட்டடங்களும் அங்குதான் செறிந்திருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தையும் பார்க்கச் சென்றோம். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் தலைமையகம் மூடப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக வரிசையாக நடப்பட்டிருந்த நூற்றி எண் பதுக்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்க ளும் கொடிகள் இன்றி அன்று மொட்டை யாகவே காட்சி அளித்தன.
மன்ஹட்டன் தீவில் Hudson நதிக் js60) Jiu L 5 JG3gsġiġġssib World Trade Centre என்னும் உலக வர்த்தக மையத்தின் இரட் டைக் கோபுரங்கள் அமைந்திருந்தன. நண்பருக்கு அதிக வேலைப் பளு இருந்த தால் அக்கோபுரங்களின் உச்சிக்கு ஏறிப் பார்க்க வேண்டும் என நான் நினைக்க
geyqô5ʻdbC# - 25
வில்லை. ஏற்கனவே கனடாவின் CN Tower, gay, it G5, IT 67667 Sears Tower போன்றவற்றுக்கு ஏறியிருப்பதால் இது புது அனுபவமொன்றாக இருக்கும் என வும் தோன்றவில்லை. எனினும் இரண்டு மாதங்களில் அக்கோபுரங்கள் சரிந்து விழப் போகின்றன என்பது தெரிந்திருந் தால் நான் அப்படி அலட்சியமாக இருந் திருக்க மாட்டேன்.
நண்பரின் வீடு இருந்த பிரதேசம் மிக அமைதியானதாகவும் சுத்தமான தாகவும் இருந்தது. நிவ்யோர்க்கில் வாழ்ந்தாலும் அவரும் குடும்பத்தினரும் தம் சொந்தக் கலாசார விழுமியங்களைப் பேணியே வாழ்ந்தனர். அவர்களோடு வீட்டில் இருந்த போதெல்லாம் ஏதோ இலங்கையில் இருக்கிறோம் என்ற ሎ உணர்வுதான் ஏற்பட்டது. அவர்களது உடை, உணவு, பேச்சு எல்லாம் அமெரிக் கக் கலாசாரத்தின் தாக்கத்துக்கு உட்பட் டிருக்கவில்லை. நண்பரின் மனைவி சுவையாகச் சோறும் கறியும் சமைத்துப் பரிமாறினார். பிள்ளைகள் மூவரும் என் னோடு மிகவும் பாசத்தோடு பழகினர். அடுத்த நாளே e-mail மூலம் எனது பிள் ளைகளுடன் தொடர்புகொண்டு அவர் களது போட்டோக்களையும் தருவித்துக் கொண்டனர். இந்த அனுபவங்கள் கார ணமாக 'நான் நிவ் யோர்கில் இருக் கிறேன்’ என்பதை நான் அடிக்கடி நினை வூட்டிக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
மாலை வேளைகளில் நண்பரின் கடையில் வியாபாரம் மும்முரமாக இருக்கும். எனவே நான் அங்கு கழித்த மூன்று நாட்களிலும் மாலை வேளை களில் நண்பரின் கடையில் அவரது விற்பனைப் பணிகளில் உதவி புரிந்தேன். நிவ் யோர்க்கின் மக்களைப் பற்றியும் அவர்களுடைய மனப்பாங்குகள், விழு மியங்கள் முதலியன பற்றியும் ஓரளவு அறிந்துகொள்வதற்கு இதன்மூலம் வாய்ப்புக் கிடைத்தது. -
23

Page 14
இரண்டு பிரதான பாதைகள் சந்திக் கும் இடத்தில் கடை இருந்ததால் சிவப்பு விளக்கில் வாகனங்கள் தரித்து நிற்கும் போது அவற்றில் செல்வோரை அவதா னிக்கவும் சிலரோடு வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைத் ჭნტJ.
கார்களில் பிரயாணம் செய்யும் இளம் வயதினர் அனைவரும் காதுகளில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு
ஏதோ ஒரு வகைத்துள்ளல் இசைக்கு ஏற்
பத் தலையை ஆட்டிக்கொண்டே இருந் தனர். கறுப்பு இனத்தவர்களிடையே நடு வயதினரிடமும் இப்பழக்கம் காணப்பட் l-gil.
மன்ஹட்டன் தவிர்ந்த நிவ்யோர் கின் ஏனைய பகுதிகள் அழுக்கும் குப் பையும் நிறைந்தனவாகவே காணப்பட் டன. சிகாகோ, பிட்ஸ்பேர்க், லொஸ் ஏஞ்ஜலிஸ், இந்தியானாபோலிஸ் முத லிய அமெரிக்க நகர்களின் தூய்மையை யும் நேர்த்தியையும் அழகையும் கண்டு பழகிய எனக்கு நிவ்யோர்கின் அவலத் தோற்றம் ஆச்சரியத்தையே ஏற்படுத் தியது. பாதைகளின் கீழால் ஒடிய சாக் கடைகளில் குப்பைகூளம் நிரம்பிக் காணப்பட்டது. கொழும்பு நகரின் வீதி கள் ஒப்பீட்டளவில் தூய்மையானவை என்றே எனக்குத் தோன்றியது.
ஒழுங்காக நிர்வகிக்க முடியாத அளவுக்கு நிவ்யோர்க் மாநகர் பெரிதாக இருப்பதும், இரண்டு நூற்றாண்டுகளாக அங்கு வந்து குடியேறியுள்ள பல்லின
குக் காரணமாக உள்ளன. சுமார் 15 மொழி களைப் பேசுகின்ற பிறநாட்டு மக்கள் கூட்டத்தினர்கள் பெருந்தொகையினராக அங்கு வாழ்கின்றனர். அத்தோடு கறுப்பு இனத்தவர்களும் சில பிரதேசங்களில் செறிவாக வாழ்கின்றனர். அவர்களிடை யே காணப்படும் தொழிலின்மை, பொரு ளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூக எதிர்ப்புப் போக்குகள், வாழ்க்கைப் போராட்டங் கள் என்பன நிவ்யோர்கின் சமூக அமைப் பை மிகவும் சிக்கலாக்கியுள்ளன.
அவகாசம் கிடைக்கும் போதெல் லாம் நண்பர் தன் காரில் பல்வேறு பகுதி களுக்கு என்னை அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் வாழ்பவர்கள் வெளி யில் செல்லும் போதெல்லாம் ஏதாவது பானங்களை அருந்திக்கொண்டே இருப் u II i 56ir, Pepsi, Coca Cola (3u T gip பானங்களை நான் விரும்பி அருந்துவதில் லை என்பதைத் தெரிந்துகொண்ட அவர், வேறு வகை மென்பானம் வாங்கித் தருவ தாகக் கூறி ஒரு கடையின் பக்கம் காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில் எமது நாட்டு யானை மார்க் Necto போத்தல்
இரண்டை வாங்கி வந்து “இதையாவது
குடியுங்கள்’ என்றார்.
Nectoவை அங்கு கண்டதும் எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம் ஏற்பட்டது. அந்தக் கடையின் ஒரத்தில் உட்கார்ந் திருந்த ஒருவர் ‘வீரகேசரி’ பத்திரிகையை வாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் நான் அசந்தே போய்விட்டேன். “உலகம் எவ்வளவோ சுருங்கிவிட்டது” என்ற உண் மையை மீண்டும் நினைத்துக்கொண்
மக்கள் கூட்டத்தினரின் மனப்பாங்கு டேன்.
களும் நிவ்யோர்கின் இன்றைய நிலைக் - மீதி அடுத்த இதழில்
மூளைக்கு வேலை (விடைகள்)
(1) 125 g (2) 90 (3) 280 (4) 2நாட்கள்
(5) 76 பழங்கள், 9 பிள்ளைகள் (7) 17 மாதங்கள்
24
(6) 13, 5,
25 - اطازی لاوی

ཙི་ 醬*。
ந்திய உபகண்டத்தை 1526 - 1858 காலப்பிரிவில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு பேரரசையே வரலாற்றாசிரியர் கள் முகலாய சாம்ராஜ்யம் என அழைக்கின்றனர். இப்பேரரசு 1556 முதல் 1707 வரை சுமார் 150 வருட காலம் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜ ஹான், அவுரங்களிப் ஆகிய அரசர்
களின் கீழ் செழித்தோங்கி இருந்தது.
மத்திய ஆசியாவைச் சேர்ந்த துர்க்கிய இனத்தவரான பாபர் என்ப வரே 1526இல் முகலாய சாம்ராஜ் யத்தை நிறுவினார். மொங்கோலியத் தளபதி ஜெங்கிஸ் கானின் வழித் தோன்றலான இவர் ஸமர்கந்தை ஆட்சி செய்த ஸ"ல்தான் மஹமூத் மிர்ஸா என்பவரின் நெருங்கிய உற வினராவார். இளவயதிலேயே ஆட்சிபீடமேற விரும்பிய பாபர் ஸமர்கந்தைக் கைப்பற்றுவற்கு முயற் சிகள் மேற்கொண்டு தோல்வி அடைந்தார். பின்னர் ஆப்கானிஸ் தானில் பல வெற்றிகள் அவருக்குக் கிடைத்தன. 1504இல் தனது 21வது வயதில் அவர் காபூல் நகரைப் பிடித்துக்கொண்டார்.
ஆப்கானிய லோதி சாம்ராஜ் யத்தின் ஒரு பகுதியான டில்லியை ஆட்சி செய்து வந்த இப்றாஹிம் லோதி என்பவரை 1526இல் தோற் கடித்த பாபர், தலைநகரான ஆக்ரா வைக் கைப்பற்றிக்கொண்டார். இதுவே முகலாய சாம்ராஜ்யத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1527இல்
25 - اطلاژویی sey
இந்தியாவின் له
i. | முகலாயப் பேரரசு ४र्क्षे (Mughal Empire of India)
தனது படைப்பலத்தைக் கொண்டு இந்து ராஜபுத்திரர்களின் கூட்டாட் சியை வெற்றிகொண்ட அவர், தனது பேரரசை நிலைநிறுத்திக் கொள்வதற் குப் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டார்.
அபார திறமையுடைய போர் வீரராக விளங்கிய பாபர், ஒரு கவி ஞனாகவும், கட்டடக் கலையிலும் இசையிலும் ஆர்வமுடையவரா கவும் விளங்கினார். தான் ஒரு முஸ் லிமாக இருந்தபோதிலும் முஸ்லி மல்லாதா ரைச் சகிப்புத் தன்மை யுட்ன் நடாத்துபவராகவும் அவர் இருந்தார். அவரது பேரரசு நல்ல உறுதி நிலையை எய்த முன்னரே அவர் 1530இல் தனது 47வது வயதில் காலமானாா.
அடுத்து ஆட்சிபீடமேறிய அவ ரது மகன் ஹூமாயூன் பல இன்னல் களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
ஆப்கானியர்களும், குஜராத்தின் ஆட்சியாளர்களும் அவருக்குத் தொல்லை கொடுக்கலாயினர்.
போதாக்குறைக்கு அவரது சொந்தச் சகோதரர்களும், தந்தையின் உயர் அதிகாரிகளும் அவருக்கு எதிராகச் செயற்பட்டனர். 1540இல் ஆப்கா னியத் தலைவரான ஷேர் கான் (பிற் காலத்தில் ஷேர் ஷா என அழைக்கப் பட்டவர்) ஹஜூமாயூனைத் தோற் கடித்து அவரது அரசைக் கைப்பற்றிக் கொண்டார்.
இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று பாரசீகத்தில் அலைந்து திரிந்த ஹஜூமாயூன் இறுதியில் 25

Page 15
காபூல் நகரிலே குடியமர்ந்தார். 15 வருடங்களின் பின்னர் மீண்டும் இந் தியா வைக் கைப்பற்றிக் கொள்ளும் வாய்ப்பு 1555இல் அவருக்குக் கிட்டியது. எனினும் ஆட்சிபீடமேறி ஒரு வருடத்தின் பின்னர் அவர் காலமானார்.
அவருக்கு அடுத்ததாக அவரது மகன் ஜலாலுத்தீன் முஹம்மத் அக்பர் 1556இல் அரசரானார். அவரது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் பல உள்நாட்டுக் கலவரங்களும் கிளர்ச் சிகளும் இடம்பெற்றன. எனினும் விரைவில் விந்தியா மலைத்தொட ருக்கு வடக்கேயுள்ள முழு இந்திய உபகண்டப் பிரதேசத்தையும் அவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு Gjö57. i. LD57 9y jL i (Akbar the Great) எனப் பின்னர் அழைக்கப் பட்ட அவரையே முகலாயப் பேர ரசின் உண்மையான ஆரம்பகர்த்தா எனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
பாதைகள் பலவற்றை அமைத் து வர்த்தகத்தை விருத்தி செய்த அக்பர், வரி அறவிடும் முறைகளை யும் முற்றாகச் சீர்திருத்தினார். முஸ்லிமல்லாதாரை சகிப்புத்தன் மையோடு அனுசரித்து நடந்த அவர் தன் அரசவையில் விஞ்ஞானம், இலக்கியம், நுண்கலைகள் முதலிய வற்றுக்கு முக்கிய இடம் வழங்கி அவற்றின் வளர்ச்சிக்கு வழிகோலி னார். அடிமைத்தனத்தை இல்லா தொழித்தமை, விதவைகள் உடன் கட்டையேறும் கொடுர வழக்கத் தைத் தடைசெய்தமை, விதவைகள் மறுமணம் செய்ய வழிவகுத்தமை முதலியன அக்பர் செய்த மிக முக்கி யமான சமூக சீர்திருத்தங்களாகும்.
கல்வி பெறாத பாமரனாக இருந்த போதிலும் அக்பர் தனது
26
பேரரசர் அக்பர் அவுரங்கஸிப் தீட்சண்யமான புத்தி, கூர்மையான சிந்தனை என்பவற்றின் மூலம் அபார திறமையுடன் ஆட்சிபுரிந்தார். அவ ரது ஆட்சி சுமார் 49 வருடங்கள் நீடித் தது. அவர் 1605இல் தனது 63வது வய தில் காலமானதும் அவரது மூத்த மக னான ஸலீம் என்பவர் ஜஹாங்கீர் என்ற பெயரில் அரசரானார்.
ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத் தின் ஆரம்பப் பகுதி அமைதியும் சுபீட்சமும் நிரம்பியதாகக் காணப் பட்டது. வர்த்தகமும் வாணிபமும் நன்கு விருத்தியடைந்ததோடு அரச ஆதரவில் நுண்கலைகளும் வளர்ச்சி கண்டன. பிற்காலத்தில் அவருக்கெதி ராகக் கிளர்ச்சிகள் தொடரலாயின. குறிப்பாக அவரது மகன் குர்ரம் என் பவர் தன் தந்தைக்கு எதிராகப் பகிரங் கமாகவே கிளர்ச்சி செய்யலானார்.
எனினும் ராணி நூர் ஜஹானின்
துணிச்சல் காரணமாக ஜஹாங்கீரின் ஆட்சி அவரது மரணம் வரை நீடித் தது.
ஜஹாங்கீர் 1627இல் காலமான தும அவரது மகன குர்ரம, வடிா ஜஹான் என்ற பெயரில் அரசரா னார். இவரது காலத்தில் சீக்கியர் களுடன் ஏற்பட்ட பிணக்குகள் கார ணமாக முகலாயப் படைகள் பஞ் ஜாப் பகுதியில் தோல்வியுற்றன.
முகலாயப் பேரரசின் தலை داى(g&164
நகர் ஆக்ராவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது. 1653இல் கந்தஹார்
96tby-25
 
 
 

நகரைப் பாரசீகப் படைகள் கைப் பற்றிக்கொண்ட போதிலும் டெக் கான் மேட்டுநிலப் பகுதியில் ஷா ஜஹான் தனது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொண்டார். மராத்தியர் களும் தோற்கடிக்கப்பட்டனர்.
1657இல் அவர் நோயுற்றதும் அவரது புதல்வர்கள் கிளர்ச்சி செய்ய லாயினர். மூத்த புதல்வரான தாறா ஆட்சியை அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டார். எனினும் ஏனைய புதல்வர்களான ஷ ஜூஜா, முராத், அவுரங்களிப் ஆகியோர் தாறாவுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். இறு தியில் அவுரங்களிப் ஏனையவர்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார். தாறாவுக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டது. ஷூஜா நாட்டைவிட்டு ஓடிவிட்டார். தனது தந்தை ஷாஜஹானையும் சகோதரன் முராதையும் அவுரங்களிப் சிறையி லடைத்து வைத்தார். 1666இல் இறந்து போகும் வரை, ஷாஜஹான் டில்லியில் சிறைப்பட்டே இருந்தார். மயில் சிம்மாசனம், தாஜ் மஹால், முத்துப் பள்ளிவாசல், டில் லியிலுள்ள செங்கோட்டை, ஜாமா மஸ்ஜித், 98 மைல் நீளமான ரவி கால் வாய், லாஹூரிலுள்ள சாலிமார் பூங்கா என்பன ஷாஜஹானின் பிர தான நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
அவுரங்களிபின் ஆட்சி 1659 முதல் 1707 வரை 48 வருடங்கள் நீடித் தது. இக்காலத்திலேயே முகலாயப் பேரரசுசு நிலப்பரப்பில் மிகப் பெரி யதாக மாறியது. அவர் இறக்கும் போது இந்திய உபகண்டத்தின் தென் பகுதி தவிர்ந்த ஏனைய முழுப் பிர தேசமும் முகலாயப் பேரரசுக்கு உட்பட்டிருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் நாடு நல்ல சுபீட்ச நிலை யில் இருந்த போதிலும், அவரது சில கொள்கைகள் காரணமாகப் பல் வேறு பிரிவினரிடையே அதிருப்தி யும் எதிர்ப்பும் கிளம்பின. மராத்தியர் கள் பேரரசுக்கு எதிராக ஆயுதப் போ ராட்டம் நடாத்தி அதன் அத்திவாரத் தையே ஆட்டம் காணச் செய்தனர்.
1707இல் அவுரங்களிபின் மர ணத்தின் பின்னர் சுமார் 40 வருடங் களுக்கு முகலாயப் பேரரசு தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. அதன் பின்னர் அது படிப்படிய்ச் சிதைந்து போய்விட்டது. ப
d፬ã፭ቇ60ቻ மிகையாகக் கொழுத்துவிட்ட ஒரு பெண்தன் உடற் பருமனைக் குறைப்பதற்காக ஒரு வைத்தியரிடம் சென்று மருந்து கேட்டாள்.
அவருக்கு ஐநூறு வில்லைகள் அடங்கிய சிறு போத்தலொன்றைக் கொடுத்தார்
வைத்தியர்.
“இவற்றை எப்படி உபயோகிக்க வேண்டும்?” என்று அப்பெண் கேட்டார்.
“ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பாட்டின் பின்னர் வில்லைகள் அனைத்தை யும் நிலத்தில் கொட்டிவிட்டு ஒவ்வொன்றாகக் குனிந்து பொறுக்கிப் போத்தலில் போடுங்கள். ஒரு மாதம் தொடர்ந்து அப்படிச்செய்தால் உங்கள் உடற் பருமன் குறைந்து விடும்” என்று அறிவுறுத்தினார் வைத்தியர்.
27 a 25 - 0قاقyى

Page 16
வியின் வடவரைக் கோளத் திலும் தென்னரைக் கோளத்திலும் துருவங்களை அண்மிய பிரதேசங் களில் காலத்துக்குக் காலம் அற்புத
மான வண்ண ஒளி ஜாலங்கள் வளி
மண்டலத்தின் மேற்படைகளிலே தோன்றுகின்றன. AuroraS என ஆங் கிலத்தில் அழைக்கப்படும் இவற்றை நாம் துருவ ஒளிகள் என அழைக் d56) (TLD.
வடவரைக் கோளத்தில் தோன்
gpy to g5 (1561 6? Gňîn Aurora Borealis gjsbsvg|Northern Lights 6T601l i L1(S) ld, இதேபோன்று தென்னரைக் கோளத் தில் தோன்றும் துருவ ஒளியை Aurora Australis egy Gb Gog5 Southern Lights என அழைக்கின்றனர். இவற் றைத் துருவங்களை அண்மிய பகுதி களில் வசிப்பவர்களால் கண்டு களிக்க முடியும்.
துருவ ஒளிகள் எவ்வாறு உரு வாகின்றன என்பது பற்றி இதுவரை முற்றாக அறியப்படவில்லை. எனி னும் சூரியனின் தொழிற்பாட்டுடன் இவை தொடர்புடையனவாக இருக் கின்றன என்பது நன்கு தெளிவாகி யுள்ளது. சூரியனின் மேற்பரப்பில் தொழிற்பாடு அதிகரிக்கும் காலங் களில், துருவ ஒளிகள்துருவங்களுக்கு அப்பாலுள்ள நடு அகலாங்குகள் வரை வியாபிப்பது அவதானிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, இக்
காலங்களில் aurora borealis என்னும்
28
வட துருவ ஒளி வடக்கில் 40 அக லாங்கு வரை நீட்சியடைவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
சூரியனின் மேற்பரப்பிலிருந்து Solar wind 6 TGörgg)/ D (grîului; 35T jibgp பல மில்லியன் கிலோமீட்டர் தூரத் துக்கு வீசுகின்றது. இக்காற்றிலே இலத்திரன்கள், புரோத்தன்கள் போன்ற மின்னேற்றப்பட்ட துணிக் கைகள் உயர் சக்தி நிலைகளில் கொண்டு செல்லப்படுகின்றன. இத் தகைய துணிக்கைகள் பூமியை அண் மும் போது அவை புவியின் காந்த முனைவுகளால் கவரப்பட்டுத் துரு வப் பகுதிகளை நோக்கி இழுக்கப் படுகின்றன.
இவ்வாறு துருவங்களை நோக் கிக் கவரப்படும் சக்திமிக்க துணிக் கைகள் வளிமண்டலத்தின் மேற் படையினுள் நுழையும் போது அங் குள்ள ஒட்சிசன் அணுக்களுடனும் நைதரசன் அணுக்களுடனும் மோது கின்றன. இப்படி மோதும் போது மேற்குறிப்பிட்ட வாயு அணுக்களி லுள்ள இலத்திரன்கள் அடித்து நீக்கப் படுவதனால் விவாயுக்களின் அயன்கள் உருவாகின்றன.
அருட்டப் பட்ட நிலையில் (excited State) đ5T 350TỦLI(6)ử) g)6ủ6)J Tu! அயன்கள் பல்வேறு அலைநீளங் களைக் கொண்ட மின்காந்த அலை களை வெளிவிடுகின்றன. இந்த அலைகளே துருவ ஒளிகளின் சிறப் பியல்பான வண்ண ஜாலங்கள் மேல் வளிமண்டலத்தில் உருவாகக் கார ணமாகின்றன.
துருவ ஒளிகள் பல வடிவங் களில் தோன்றக்கூடும். ஒளிரும் திரைகளாகவும், விற்களாகவும் (arcs), பட்டைகளாகவும், ஒளிப் பொட்டுக்களாகவும் இவை தோற்ற மளிக்கலாம். இவற்றுள் வில் வடி வமே மிக உறுதியான துருவ ஒளி
அரும்பு-25
 

வடிவமாக விளங்குகின்றது. இத் தகைய ஒளி விற்கள் பல மணித் தியாலங்களுக்கு எவ்வித மாற்றமும் இன்றிக் காட்சியளிக்கக் கூடும்.
எனினும் பெரிய அளவில் துருவ ஒளிகள் தோன்றும் போது வேறு பல வடிவங்கள் தோன்றி கண் ணைக் கவரும் மாற்றங்களுக்கு உள் ளாவது வழக்கம். பொதுவாக துருவ ஒளி விற்களின் கீழ் விளிம்புகள் மேல் விளிம்புகளைவிடக் கூர்மையாக வரையறுக்கப்பட்டிருக்கும். சில வேளைகளில் பச்சை நிறமான கதிர் கள் நடு வானிலிருந்து புவிக் காந்தத் துருவம் வரை வானத்தை மூடிக் கொண்டிருப்பதைக் காணக்கூடிய தாக இருக்கும். இக்கதிர்கள் துருவத் துக்கண்மையில் ஒரு வில்லில் முடி வடையும். இவ்வில்லின் கீழ்ப்பகுதி யில் சிவப்பு நிறக் கரையொன்று (border) காணப்படும். இது துணி யாலான திரைகளில் ருப்பது போன்று சுருக்கங்களைக் கொண் டிருக்கவும் கூடும்.
துருவ ஒளி வடிவங்கள், குறித்த
துருவத்தை நோக்கிப் படிப்படியாகச் சுருங்கி மறைந்து போகும்போது இந்த அற்புத இயற்கைக் கண்காட் சிகள் முடிவுக்கு வரும். துருவ ஒளி யின் ஒளிக்கதிர்கள் படிப்படியாகச் சிதைந்து போன பின்னர் அப்பிர தேசத்தில் பரவலான வெள்ளொளி சிறிது நேரத்துக்குக் காட்சியளிக் கக்கூடும்.
துருவ ஒளிகள் தோன்றும் வளி மண்டலப் படை தரையிலிருந்து சுமார் 60 - 180 km உயரத்தில் காணப்
படுகின்றது. வளிமண்டலத்தின் இப்
பிரதேசம் இதுவரை காலமும் சரிவர ஆராயப்படவில்லை. சாதாரண ஆகாய விமானங்களாலும் வாயுக் கூண்டுகளாலும் (baloons) இந்தளவு உயரத்தை அடைய முடியாமல் இருப்பது இதற்கொரு காரணமா கும். அதேவேளை, ஆய்வுச் செய்மதி களைப் பொருத்தமட்டில் நேரடிக் கணிப்பீடுகளைச் செய்ய முடியாத அளவுக்கு இப்படை தாழ்வாக இருப்பது ன்னொரு காரண மாகும்.
துருவ ஒளிகள் உருவாகும் வளிமண்டலத்தின் மேற்படைகளை ஆராய்வதற்கென அமெரிக்காவின் NASA நிறுவனம் விசேட ஆய்வுக் கலமொன்றை 2001 டிஸம்பர் 7ம் திகதி அனுப்பிவைத்துள்ளது. TIMED (Thermosphere, Ionosphere, Mesosphere Energetics and Dynamics) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கலம் Delta II வகை ரொக் கட் ஒன்றின் மூலம் கலிபோர்னி யாவிலுள்ள Vandenberg விமானப் படைத் தளத்திலிருந்து ஏவப்பட்டது. TIMED ஆய்வுக் கலத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய் வுகள் துருவ ஒளிகளின் பொறிமுறை பற்றி விரிவாக அறிந்துகொள்ள உத வும் என நாம் எதிர்பார்க்கலாம்.
கெட்டித்தனம்
“எங்கள் நாய் எவ்வளவுகெட்டித்தனமானது பாருங்கள் அது தினமும் காலையில் தவறாது பத்திரிகையொன்றை எடுத்துக்கொண்டு வருகிறதே’ என்று தன் கணவனிடம்
சான்னாள் ஒரு பெண்.
“இது பெரிய காரியமா? சில நாய்கள் கடைக்குப் போய் சாமான்கள்கூட வாங்கி
வருகின்றனவே!” என்றான் கணவன்.
ஆனால் நாங்கள் பத்திரிகைக்கு ஒரு போதும் காசு கட்டினதில்லையே” என்று
விளக்கினாள் அப்பெண்.
29
அரும்பு- 25

Page 17
இ
*。ベ
பொருள் வர்த்தக நிறுவனமான நெஸ்லே கம்பனி (Nestle S. A.) ஸ்விட்ஸர்லாந்தின் Vevey என்ற இடத்தில் தன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஸ்விட்ஸர்லாந்தின் மிகப் பெரிய உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. எனினும் அதன் வருமானத்தில் மிக வும் சொற்பமான பங்கே அந்நாட் டிலிருந்து பெறப்படுகிறது.
சொக்லேட், இனிப்புப் பண் Liit5Gir, 2.6ðir G35 IT L'ull ? (instant coffee) மற்றும் வறுக்கப்பட்ட கோப்பி, பால் மா, குழந்தை மற்றும் சிறுவர் உணவுகள், செல்லப் பிராணிகளுக் கான உணவுகள், காலையுணவுக் கான சீரியல் (Cereal) வகைகள், கட் டிப் பால், ஐஸ்கிரீம், உறைய வைக் கப்பட்ட உண்வுகள், சுவையூட்டும் பதார்த்தங்கள், Sauce வகைகள், ஸ"அப் வகைகள், பஸ்ட்டா (Pasta), 3, Gofu fisii (mineral water) GLT airp ன்னோ ரன்ன உணவுகளையும் பானங்களையும் நெஸ்லே உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றது. உல கின் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இக்கம்பனியின் தொழிற்சாலை களும் களஞ்சிய சாலைகளும் செயற் பட்டு வருகின்றன.
நெஸ்லே கம்பனியின் ஆரம்ப
கர்த்தாவாகக் கருதப்படுபவர் ஹென் if G 56v GG) (Henri Nestlé) 6T657p ஸ்விஸ் நாட்டு பாமஸிஸ்ட் ஒருவ ராவார். தாய்ப்பால் அருந்த முடியா மற் தவிக்கும் சிசுக்களின் மரணவீதத் தைக் குறைக்கும் நோக்குடன் அவர்
30
(Nestlé Company)
தாய்ப்பாலுக்கான நல்ல மாற்றுப் பொருளொன்றைத் தேடுவதில் ஈடு பட்டார். பசுப்பால், கோதுமை மா, சீனி என்பவற்றைக் கலந்து சிசு உண வொன்றைத் தயாரித்த நெஸ்லே,
1867இல் அதனை நோயுற்றிருந்த
குறை மாத ஆண் சிசுவொன்றுக்கு வழங்கிச் சோதித்தார். தாய்ப்பால் குடிக்க் மறுத்த அச்சிசு, நெஸ்லேயின் உணவை ஏற்றுக்கொண்டு சுகதேகி யாக வளர ஆரம்பித்தது.
தனது கண்டுபிடிப்பான சிசு உணவுப் பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான கம்பனி யொன்றை நெஸ்லே 1867இல் ஸ்விட்ஸர்லாந்தின் Vevey என்ற இடத்தில் ஆரம்பித்தார். Farine Lactée Henri Nestlé 6TGST 9jigsibLuGini, குப் பெயரிட்ட நெஸ்லே, தனது சிசு 2 6076)jö(5 Farine Lactée Nestlé 67GOTL’i பெயர் சூட்டியிருந்தார். (Farine Lactée (பரீன் லக்ற்றே) என்றால் பிரெஞ்சு மொழியில் ‘பால் மா’ எனப் பொருள்படும்.)
1875இல் ஹென்ரி நெஸ்லே ஒய்வு பெற்றதோடு தனது கம்பனி யை உள்ளூர் வர்த்தக நிர்வாகிகள் மூவருக்கு விற்றுவிட்டார். எனினும் புதிய உரிமையாளர்களின் கீழும் -9ydi 5 to Lu Gof Farine Lactée Henri Nestle என்ற பெயரிலேயே இயங்கி வரலாயிற்று.
இதற்கிடையில் 1866இல் Charles Page, George Page 67657p 3)(5 அமெரிக்கச் சகோதரர்கள் AngloSwiss Condensed Milk Company என்ற பெயரில் வர்த்தக நிறுவன geiqo55abC+ - 25
 
 
 

மொன்றை ஸ்விட்ஸர்லாந்தின் Cham என்ற இடத்தில் ஆரம்பித்திருந் தனர். பேணியிலடைத்த பசுப்பாலை ஐரோப்பாவில் சந்தைப்படுத்துவதே இக்கம்பனியின் நோக்கமாக இருந் தது. எனினும் 1877இல் இக்கம்பனி சிசுக்களுக்கான பால் மா உற்பத்தி யிலும் இறங்கியது. இதனால் இக் கம்பனிக்கும் நெஸ்லே கம்பனிக்கும் இடையில் கடுமையான வர்த்தகப் போட்டி ஆரம்பமாயிற்று. 1878இல் கட்டிப்பால் உற்பத்தியில் நெஸ்லே இறங்கியதும் போட்டி மேலும் தீவிரமாயிற்று.
19049)65 Swiss General Chocolate Company 6Taip floj6j6TjGogji சுவீகரித்துக்கொண்ட நெஸ்லே கம் பனி அதுமுதல் சொகலேட் தயாரிப் பிலும் ஈடுபடலாயிற்று. 1905ஆம் ஆண்டு நெஸ்லே கம்பனியும் அதன் போட்டி நிறுவனமான Anglo-Swiss Condensed Milk Company up to ஒன்றாய் இணைந்துகொண்டன. விவிணைப்பின் விளைவாக உரு 6) IIT 607 fig)16. 1607 to Nestlé and AngloSwiss Milk Company GT607-9) 60-pds, படலாயிற்று.
முதலாம் உலகப் போரின் (1914 -1918) போது பாலுற்பத்திப் பொருட் களுக்கு ஏற்பட்ட அதிகரித்த கேள்வி காரணமாக நெஸ்லே கம்பனி தன் வர்த்தக நடவடிக்கைகளை ஏனைய நாடுகளுக்கும் விஸ்தரிக்க நேர்ந்தது. போர் முடிவடைவதற்குள் உலகெங் கும் 40 தொழிற்சாலைகளை நெஸ் லே நிறுவியிருந்தது. 1920களில் புதிய உற்பத்திப் பொருட்கள் பலவற்றை நெஸ்லே அறிமுகப்படுத்தியது. இவற்றுள் மோல்ற்று சேர்க்கப்பட்ட LuТ 6) LDT (Malted Milk), GoupGGvТ (Milo) என்பன குறிப்பிடத்தக்கவை.
19299)ob Peter, Cailler, Коhler
Chocolats Suisses S.A. 67657p. L'îguay
சொக்கலேட் கம்பனியை நெஸ்லே சுவீகரித்துக்கொண்டது. மேற்படி கம்பனியின் ஆரம்பகர்த்தா வான, Daniel Peter GIGirug) (3d 1875g)ai Milk Chocolate தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
1938இல் நெஸ்கபே (Nescate) என்ற பெயரில் உடன் கோப்பித் தூளை நெஸ்லே அறிமுகப்படுத் தியது. இரண்டாம் உலகப் போரின் (1939 - 1945) போது நேச நாட்டுப் படையினரின் பிரதான பானமாக நெஸ்கபே விளங்கியது. உலகெங் கும் கோப்பி அருந்துவோரிடையே நெஸ்கபே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நெஸ்லேயின் உல களாவிய விரிவாக்கத்துக்கும் அது தூண்டுகோலாய் அமைந்தது.
Maggi ஸ ஒப் தயாரிப்பாளர் 5 GTT 607 Alimentana S. A. 67 airp ஸ்விஸ் கம்பனியுடன் 1947இல் நெஸ் லே ஒன்றிணைந்த போது கம்பனி uhair Guuji Nestlé Alimentana Company என மாற்றமடைந்தது. அடுத்து வந்த தசாப்தங்களில் பெருந்தொகை யான வர்த்தக நிறுவனங்களை நெஸ் லே சுவீகரித்துக்கொண்டது. இவற் gol Gir Crosse & Blackwell (G3 uGIIIIofuî6io அடைத்த உணவு வகைகள்), Findus (உறையவைத்த உணவுகள்), Libby, McNeill & Libby (26opuu 686) 155 உணவுகளும் பேணியிலடைத்த உண 615 (6.5 in), Stouffler Corporation (உறையவைத்த உணவுகள்), Source Perrier (கனிய நீர்) என்பன குறிப் பிடத்தக்கவை. இவற்றோடு பாற் பொருட்கள், ஐஸ்கிரீம், செல்லப் பிராணிகளுக்கான உணவுகள் போன் றவற்றை உற்பத்தி செய்து வந்த Carnation என்ற இராட்சத அமெ ரிக்கக் கம்பனியையும் நெஸ்லே
31
25 - پنظازey

Page 18
உள்வாங்கிக் கொண்டது. 1977இல் கம்பனியின் பெயர் Nestle S. A. என மாற்றியமைக்கப்பட்டது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குழந்தைகளுக்குரிய பால் மா வகைகளைச் சந்தைப்படுத்து வதற்கு நெஸ்லே பயன்படுத்தும்
முறைகள் தொடர்பாக பிற்காலத்தில்
சர்வதேச ரீதியில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. குழந்தைகளின் போச ணைக்குத் தாய்ப்பாலே சிறந்தது என்பதை எடுத்துக்காட்டாமல் விளம்பரங்கள் செய்யப்படுவதா கவும் மகப்பேற்று வைத்தியசாலை களில் தாய்மாரிடையே இலவசமா கப் பால் மா மாதிரிகளை விநியோ கித்து அவர்களைப் பால் மாவுக்கு அடிமைப்படுத்த முயற்சிகள் செய்
யப்படுவதாகவும் நெஸ்லே மீது
குற்றம் சாட்டப்பட்டது.
அத்தோடு படிக்காத ஏழைத் தாய்மார் பால் மா வைக் கரைப் பதற்கு மாசடைந்த நீரை உபயோ கிப்பதால் குழந்தைகளில் வயிற்
றோட்டம், போசாக்கின்மை, மர ணம் என்பன நிகழ்வதாகவும் சுகா தார உத்தியோகத்தர்கள் எடுத்துக் காட்டினர். இவற்றின் காரணமாக 1977இல் நெஸ்லே உற்பத்திகளைப் பகிஷ்கரிக்கும் இயக்கமொன்றை சர்வதேச குழுக்கள் பல அமுல் படுத்தின.
குழந்தை உணவுகளைச் சந்தைப் படுத்தல் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் (W.H.O) விதிமுறை களைப் பின்பற்றுவதற்கு நெஸ்லே இணங்கியதன் விளைவாக 1984இல் மேற்குறித்த பகிஷ்கரிப்பு கைவிடப் பட்டது. எனினும் அதன் பின்னரும் சில நாடுகளில் W.H.O. விதிமுறை களை நெஸ்லே மீறிவருவதாக UNICEF நிறுவனமும் வேறு குழுக் களும் குற்றச்சாட்டுக்களைச் சுமத்த லாயின. இதனால் நெஸ்லே உற்பத் திகளைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை 1990களில் மீண்டும் தலையெடுத்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம்
அந்தப் பெரிய கம்பனியின் ஊழியர்களை மேற்பார்வை செய்வதற்காகப்
புதிதாக நியமனம் பெற்ற ஓர் இளம் பெண் துணிச்சலோடு வேலை செய்து வந்தாள். கம்பனி ஊழியர்கள் அனைவரும் நேர்த்தியாக உடையணிந்து வர வேண்டும் என்பதில் அவள் கண்டிப்பாக இருந்தாள்.
ஒரு நாள் லிப்டில் செல்லும் போது அவளுடன் ஒன்றாக ஏறிய ஒருவர் உரிய முறையில் நீட்டக் கை சேர்ட் அணியாமல் T-சேர்ட்டுடன் இருப்பதைக் கண்ட அவள், கண்டிப்பான பார்வையுடன் “ஏன் இன்று இவ்வளவு சுதந்திர மாக?’ என்று நாசூக்காகக் கேட்டாள்.
“கம்பனிச் சொந்தக்காரனாக இருப்பதிலுள்ள சுதந்திரம் தான்” என்றார்
கூட இருந்தவர் புன்னகையுடன்.
விற்பனை முகவர்கள் தேவை
அரும்பு இதழ்களை ஒழுங்காகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள கிண்ணியா,
அநுராதபுரம், பதுளை, நுவரெலிய, வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களில்
விற்பனை முகவர்களாகச் செயற்பட விரும்புவோர் ‘அரும்பு’ ஆசிரியருடன் தொடர்பு கொள்ளலாம். முகவர்களுக்கு 20% கழிவு வழங்கப்படும்.
32 geqô5ʻdbq# - 25

போலியோத் தடுப்புமருந்துகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
ளம்பிள்ளை வாதம் (Infantie
Paralysis) yabag, Guit GSGuit (Poliomyelitis) என்றழைக்கப்படும் வைரசு நோய் உலகளாவிய ரீதியில் இளம் சந்ததியின ரை ஊனப்படுத்தி வந்த ஒரு தொற்று நோயாகும். போலியோவுக்கு எதிரான
தடுப்பு மருந்துகளைக் (வக்சீன்களை)
கண்டுபிடித்து உலகெங்கும் இந்நோ யைக் கட்டுப்படுத்த உதவியவர்கள்Jonas E. Salk, Albert B. Sabin Sulu gy@udíflis விஞ்ஞானிகள் இருவருமாவர். ஜோனாஸ் எட்வர்ட் ஸேர்ல்க் (Jonas Edward Salk)
ஜோனாஸ் ஸோல்க், அமெரிக்கா வின் நிவ்யோர்க் மாநகரிலே 1914 ஒக் டோபர் 28ஆம் திகதி பிறந்தார். 1939இல் நிவ்யோர்க் பல்கலைக் கழகத்தின் மருத் துவக் கல்லூரியில் வைத்தியக் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர், அங்கு வைரசுக்கள் தொடர்பான நிர்ப்பீடனம் பற்றி ஆய்வு கள் நிகழ்த்திக்கொண்டிருந்த தோமஸ் பிரான்ஸிஸ் என்பவருடன் இணைந்து பணியாற்றினார்.
1942இல் பிரான்ஸிஸுடன் மிச்சி கன் (Michigan) பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஸோல்க், இன்புளுவென்ஸா (ஜலதோஷம்) நோய்க்கெதிரானதடுப்பு மருந்தொன்றை விருத்தி செய்யும் பணி யில் கூட்டாக ஈடுபட்டார்.
1947இல் அவர் பிட்ஸ்பேர்க் பல் கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் பற் ரீரியவியல் துறையின் இணைப் பேரா சிரியராக நியமிக்கப்பட்டார். அத்தோடு அங்கிருந்த வைரசு ஆராய்ச்சி ஆய்வுகூடத் தின் தலைவராகவும் கடமைபுரிந்தார். இக்காலத்தில்தான் அவர் போலியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடலானார்.
ஏனைய பல்கலைக்கழகங்களைச்
சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து
செயலாற்றிய அவர் போலியோ வைர சின் மூன்று வகையான பேதங்களை (strains) gaTil காண்பதில் பங்களிப்புச் செய்தார். இம்மூன்று வகை வைரசுக் களும் கொல்லப்பட்ட நிலையில் குரங்கு களின் உடலுக்குள் செலுத்தப்படும்
போது அங்கு போலியோவுக்கு எதிரான
பிறபொருள் எதிரிகள் உருவாக்கப்படு கின்றன என்பதை ஸோல்க் பரிசோ தனைகள் மூலம் எடுத்துக் காட்டினார்.
கொல்லப்பட்ட வைரசுக் களைப் பயன்படுத்தித் தயாரித்த தனது வக்சினை 1952ஆம் ஆண்டில் அவர் பரவலான களச் சோதனைகளுக்கு உட்படுத்தினார். முத லில் போலியோவினால் பீடிக்கப்பட்டுச் சுகம்பெற்ற பிள்ளைகளுக்கும் பின்னர் போலியோ வினால் அறவே பீடிக்கப் படாத பிள்ளைகளுக்கும் தனது வக்சினை அவர் ஊசிமூலம் செலுத்தினார்.
இக்களச்சோதனையின் போது எல் லாப் பிள்ளைகளினதும் உடலில் பிற பொருளெதிரிகளின் அளவு கணிசமான அளவு அதிகரித்ததோடு அவர்களில் எவ ரும் வக்சினின் காரணமாக போலியோ வுக்கு ஆளாகவில்லை. அவரது கண்டு பிடிப்பு பற்றிய விபரங்கள் அமெரிக்க மருத்துவ சங்க நாளேட்டில்(Journalofthe American Medical Association) 195396)
பிரசுரிக்கப்பட்டன.
1954இல் இவ்வக்கீன் தொடர்பாகப் பாரிய அளவிலான களச் சோதனைகளை தோமஸ் பிரான்ஸிஸ் மேற்கொண்டார். ஸோல்கின் போலியோ தடுப்பு மருந்து பாதுகாப்பான முறையில் போலியோ பரவுவதைத் தடுக்கவல்லது என்பதை
33
அரும்பு-25

Page 19
இச்சோதனைகள் நிரூபித்தன. இதனடிப் படையில் 1955 ஏப்ரல் 12ம் திகதி இத் தடுப்பு மருந்து பொதுப் பயன்பாட்டுக் காக விடுவிக்கப்பட்டது. s
ஊசிமூலம் வழங்கப்படும் ஸோல்
Sait QJigG67 (Salk's Vaccine) (But 65
யோவுக்கு எதிராக வெற்றிகரமாகப் பிர யோகிக்கப்பட்ட முதலாவது தடுப்பு மருந்தாகும். எனினும் வாய்மூலம் வழங் கப்படக்கூடிய சக்திவாய்ந்த போலியோ வக்கீனொன்று பிற்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டதால் ஸோல்கின் வக்கீன் இப்போது பரவலாகப் பயன்படுத்தப் படுவது இல்லை.
பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத் திலே பற்றீரியவியல், நோய்த் தவிர்ப்பு மருத்துவம், பரிசோதனைசார் மருத்துவம் போன்ற துறைகளில் பேராசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய ஜோனாஸ் ஸோல்க், 1963இல் கலிபோர்னியாவின் ஸாந்தியாகோ நகரிலுள்ள உயிரியற் கற் GM3556ir ffig)J6) uGSljĝ96ăT (Institute of Biological Studies) பணிப்பாளராக நியமிக்கப் பட்டார். அவரைக் கெளரவிக்கும் முக மாக இந்நிறுவனத்தின் பெயர் பிற்காலத் தில் Salk Institute என மாற்றம் செய்யப் பட்டது.
தனது வாழ்நாளிலேயே பல் வேறு கெளரவங்களையும் விருதுகளையும் பெற்றுக்கொண்ட ஜோனாஸ் ஸோல்க், 1995 ஜூன் 23ஆம் திகதி கலிபோர்னி யாவிலுள்ள La Jolla என்ற இடத்தில் காலமானார். sycöGuill Lig)A civ Gyul9cir (Albert Bruce Sabin)
அல்பேர்ட் ஸபின், தற்போதைய போலந்திலுள்ள Bialystok என்ற இடத் தில் 1906 ஒகஸ்ட் 26ஆம் திகதி பிறந்தார். தனது 15வது வயதில் பெற்றோருடன் ஐக் கிய அமெரிக்காவில் குடியேறிய ஸ்பின், 1930இல் அமெரிக்கப் பிரஜையாக அங் கீகரிக்கப்பட்டார்.
34
Jonas E. Salk Albert B. Sabin
நிவ்யோர்க் பல்கலைக்கழகத்தில் தனது வைத்தியக் கலாநிதி (M.D.) பட்டத் தை 1931இல் பெற்றுக் கொண்ட அவர், அங்கு போலியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடலானார். நிவ்யோர்க் நகர வைத் தியசாலை யொன்றில் வைத்தியராக இரண்டு வருடங்கள் பணிபுரிந்த பின்னர், GvGöTLGöflaö 9-6irGT Lister Institute 676ôp நிறுவனத்தில் கல்வியைத் தொடர்ந்தார். 1935இல் நிவ்யோர்கிலுள்ள மருத் துவ ஆய்வுக்கான ரொக்பெல்லர் நிறு வனத்தில் ஆய்வாளராக ஸபின் சேர்ந்து கொண்டார். உடலின் வெளியே மனித நரம்பு இழையத்தில் போலியோ வைர சை முதன் முதலாக வளர்த்துக்காட்டிய ஆய்வாளர் இவராவார்.
ஸின்ஸினாட்டி பல்கலைக்கழக (University of Cincinnati) LD(55516).jd, கல்லூரியின் சிறுவர் நோயியல் துறை இணைப் பேராசிரியராக 1939இல் இவர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஆய்வுரீதி யான சிறுவர் நோயியற் துறைப் பேராசி ரியர் பதவியையும் அவர் வகித்தார். போலியோ வைரசு மூக்கினூடாகவும் சுவாசத் தொகுதியினூடாகவுமே தொற்று கின்றது என்ற கொள்கை பிழையானது என நிரூபித்த அவர் மனிதனிலே உணவுக்
கால்வாய்க்குரிய ஒரு தொற்றாகவே
போலியோ திகழ்கின்றது என்பதை எடுத் துக்காட்டினார்.
நலிவாக்கப்பட்ட போலியோ வைரசுக்களை வாயினுடாக வழங்கு வதன் மூலம் அந்நோய்க்கெதிரான நிர்ப் பீடனத்தை உருவாக்கலாம் என ஸபின்
25 - پلاژی لاوی
 
 

கருதினார். அவ்வாறு பெறப்படும் நிர்ப் பீடனமானது, கொல்லப்பட்ட வைரசுக் களை ஊசி மூலம் வழங்கும் போது உரு வாவதைவிட நீண்டகாலத்துக்கு நிலைத் திருக்கும் எனவும் அவர் நம்பினார்.
நோயை உருவாக்கும் தகைமை யற்ற, ஆனால் உடலில் பிறபொருள் எதிரிகளை உருவாக்கக்கூடியதான போ லியோ வைரசுப் பேதங்களை அவர் 1957இல் தனிமைப்படுத்திப் பெற்றுக் கொண்டார். பின்னர், நலிவான இவ் வைரசுப் பேதங்களை வாய்மூலம் வழங் கும் ஆரம்பப் பரிசோதனைகளை ஸபின்
மேற் கொண்டார். இப்பரிசோதனை
களில் மெக்ஸிகோ, நெதர்லாந்து, சோவி யத் யூனியன் போன்ற நாடுகளின் விஞ் ஞானிகளும் ஒத்துழைத்தனர்.
ஸபின் கண்டுபிடித்த வாய்மூல மான போலியோ வக்சின் போலியோ வைத் தடுக்க வல்லது என்பதைப் பர வலான களச் சோதனைகள் தீர்க்கமாக எடுத்துக்காட்டின. எனவே 1960ஆம் ஆண்டு இதன் உபயோகத்தை ஐக்கிய
அமெரிக்கா அங்கீகரித்தது. இன்று உல கெங்கும் போலியோவைத் தடுப்பதற் கான போராட்டத்தில் இந்த ஸபின் வக் சீனே பிரதான ஆயுதமாக விளங்குகிறது. இலங்கையிலும் சிறுவர் நிர்ப்பீடன நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த வக்சினே உபயோகிக்கப்படுகிறது.
B-Virus என்னும் வைரசைத் தனி மைப்படுத்துவதிலும் ஸபின் வெற்றிகண் டார். டெங்குக் காய்ச்சலுக்கு எதிரான வக்சினை விருத்தி செய்வதற்கு இக்கண்டு பிடிப்புப் பெரிதும் உதவியது. வைரசு களுக்கு எதிராக நிர்ப்பீடனம் உருவாகும் பொறிமுறை, நரம்புத் தொகுதியைத் தாக் கும் வைரசுக்கள், புற்றுநோயில் வைரசுக் களின் பங்களிப்பு என்பன பற்றியும் ஸபின் ஆய்வுகளை மேற்கொண்டார்.
1974 முதல் 1982 வரை தென் கரொ
லைனா பல்கலைக்கழகத்தின் ஆய்வுத்
துறைப் பேராசிரியராகக் கடமையாற்றிய அல்பேர்ட் புறூஸ் ஸபின் 1993மார்ச்3ஆம் திகதி வொஷிங்டன் D.Cயில் காலமா
σοτπή.
அப்பாவும் மகனும்
கல்லூரி விடுதியில் தங்கிப்படிக்கும் மகன் பின்வருமாறு வீட்டுக்குக் கடிதம்
எழுதினான்.
"அன்புள்ள அப்பா,
அடிக்கடி உங்களிடம் பணம் கேட்டு எழுதவேண்டியிருப்பதை நினைத்து வருந்து
கிறேன். வெட்கமும் துக்கமும் என்னைப் பிடுங்கித் தின்கின்றன. என்றாலும்
இன்னு
மோர்ஆயிரம் ரூபாய் அனுப்பிவைக்குமாறு மிகப் பணிவாய் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக் கேட்கும் போது என் கை எழுத மறுக்கிறது. என்னை மன்னித்துவிடுமாறு மானசீகமாக உங்கள் காலடியில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
அன்பு மகன் கமால்
பி.கு : இதை எழுதித் தபாலிலிட்ட பின்னர் என் மனச்சாட்சி என்னை உறுத்தியது.
6TLu Jigurt Ghigi
க்கடிதத்தை எடுத்து எரித்துவிட நினைத்தேன். எனினும் நான் போகும்
போது நேரம் பிந்திவிட்டது. தபாற்காரன் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இது உங்களுக்குக் கிடைக்காமற் போனால் நல்லது எனப் பிரார்த்தித்தேன். சில நாட்களின் பின்னர் தந்தையாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது:
“மகனே!
உனது பிரார்த்தனை நிறைவேறிவிட்டது. உன்கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை.
அரும்பு-25
- இப்படிக்கு, அப்பா.”
35

Page 20
ன் அமெரிக்காவின் அண் டீஸ் (Andes) மலைத்தொடரில் அமைந்துள்ள டிட்டிககா ஏரி, உல கிலே மிக உயரத்தில் காணப்படும் ஏரி என்ற புகழைப் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,810 m
உயரத்தில் அமைந்துள்ள இதன் மேற்கு எல்லையில் பேரு (Peru) தேசமும் கிழக்கில் பொலீவியாவும்
உள்ளன.
சுமார் 8,300 சதுர km பரப்புக்
கொண்ட டிட்டிககா, தென்னமெரிக் காவின் இரண்டாவது பெரிய ஏரி யாகும். இது வடமேற்கு - தென் கிழக்குத் திசையில் 190 km நீள முடையது. இதன் ஆகக்கூடிய அக Gvid 80km (35id. Gj:676ITIT (Tiquina) என்னும் குறுகிய நீரிணை இவ்வேரி யை இருவேறு நீர்நிலைகளாகப் பிரிக்கின்றது. இவற்றுள் சிறியது தென்கிழக்கிலும் பெரியது வடமேற் கிலும் அமைந்துள்ளன. இவற்றுக்கு பொலீவியாவிலும் பேருவிலும் வித்தியாசமான பெயர்கள் வழங்கப் படுகின்றன.
டிட்டிககா வின் வடமேற்குக் கரையில் (பொலீவியப் பிரதேசத் தில்) அண்டிஸ் தொடரிலுள்ள சில சிகரங்கள் சுமார் 6400 mக்கு (21,000 அடிக்கு) மேல் எழுந்துள்ளன. இவ் வேரியின் ஆழம் 140 m முதல் 180 m (460 அடி முதல் 600அடி) வரை வேறு படுகின்றது. எனினும் ஏரியின் அடிப் பகுதி பொலீவியக் கரையை நோக்கி
36
(Lake Titicaca)
ஆழமாகிச் செல்கின்றது. இதுவரை அறியப்பட்டுள்ள மிக ஆழமான இடம் ஏரியின் வடகிழக்கு மூலை யில் உள்ளது. இவ்விடத்தின் ஆழம் 280 m (920 அடி) எனக் கணிக்கப் பட்டுள்ளது.
இருபத்து ஐந்துக்கும் மேற் பட்ட ஆறுகள் தம் நீரை டிட்டிககா ஏரியினுள் கொண்டு வந்து சேர்க் கின்றன. இவற்றுள் மிகப் பெரிய தான ரமிஸ் (Ramis) என்ற நதி, ஏரியின் வடமேற்கு மூலையில் வந்து கலக்கின்றது. டிட்டிககாவின் தென் முனையில் ஆரம்பிக்கின்ற Desaguadero என்ற ஒரேயொரு சிறு நதி மாத்திரமே ஏரியின் மேலதிக நீருக்கு
வடிகாலாக அமைந்திருக்கின்றது.
எனினும் ஏரிக்குள் வந்துசேரும் மேலதிக நீரில் 5% மாத்திரமே இந் நதியினூடாக வெளியே பாய முடி கிறது. மீதி நீர் அப்பிரதேசத்தின் கடுங்காற்று, கொடூரமான வெய்யில் என்பன காரணமாக ஆவியாகிவிடு கின்றது.
டிட்டிக்காவின் நீர் மட்டம் பருவகாலங்களுக்கு ஏற்ப மாற்ற மடைகின்றது. டிஸம்பர் முதல் மார்ச் வரையிலான மழை காலத்தில் அதன் மட்டம் அதிகரிப்பதோடு குளிர் காலத்தில் அது குறைவடைகின்றது. டிட்டிககா தொடர்ந்து வற்றி வரு வதாக முன்னர் கருதப்பட்டது. எனி னும் அதன் நீர் மட்டம் நீண்டகால யற்கை வட்டமொன்றுக்கு ஏற்ப
25 - اپاطازی لاوی
 

ஏறி இறங்குகிறது என இப்போது
அறியப்பட்டுள்ளது.
இந்த ஏரியின் நீர் மிகத் தெளி
வாகவும் சிறிதளவு உவர்ப்புத் தன்
மையுடையதாகவும் காணப்படுகின்
றது. இதன் நீரில் 1000 பங்குக்கு 5.2 முதல் 5.5 பங்கு வரை உப்புத் தன்மை உள்ளது. நீர் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14°C ஆகும். ஏரியின் அடிப்பகுதியில் நீரின் வெப்பநிலை 11°C வரை வீழ்ச்சியடைகின்றது. டிட் டிககா ஏரியின் நீரில் சோடியம் குளோரைட்டு, சோடியம் சல்பேற் று, கல்சியம் சல்பேற்று, மக்னீசியம் சல்பேற்று ஆகிய உப்புக்கள் கணிக் கத்தக்க அளவில் உள்ளன.
இவ்வேரியில் இரண்டு வகை மீனினங்களே பிரதானமாகக் காணப் படுகின்றன. அவற்றிலொன்று உட லிலே கறுப்புக் கோடுகளைக்
கொண்ட Orestias என்னும் கிள்ளி மீன் இனமாகும். மற்றது Tricho
mycterus 6Tairgolo Catfish g)6OTLDIt கும். 1939இல் Trout மீனினம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் ஓர் அடி நீளத்துக்கு வளரக்கூடிய Telmatobius என்னும் தவளை இனம் ஏரியின் ஆழம் குறைந்த பகுதிகளில் வாழ்கின்றது.
டிட்டிககா ஏரியில் மொத்தம் 41 தீவுகள் உள்ளன. அவற்றுள் சிலவற்
றில் மக்கள் அடர்த்தியாக வசிக் கின்றனர். இத்தீவுகளுள் மிகப் பெரி ugil Isla de Titicaca (glly-dist go) என அழைக்கப்படுகிறது. இது பொலீவியப் பிரதேசத்தில் அமைந் துள்ளது.
இந்த ஏரியில் கப்பற் போக்கு வரத்து நடைபெறுகின்றது. இதில் ஓடுவதற்கான முதலாவது நீராவிக் கப்பல் 1862ம் ஆண்டு இங்கிலாந்தி லே தயாரிக்கப்பட்டது. இது துண்டு துண்டாகக் கோவேறு கழுதைகளின்
25 - بانقاقهو
மீது ஏற்றப்பட்டு ஏரிவரை மேலே கொண்டு செல்லப்பட்டது. இப் போது பேரு நாட்டுக் கரையிலுள்ள Puno என்ற இடத்திலிருந்து பொலீ வியாவிலுள்ள Guaqui என்ற சிறு துறைமுகம் வரை ஒழுங்கான கப்பற் சேவை நடைபெறுகின்றது. குறுகிய கேஜ் ரெயில் பாதையொன்று Guaqui துறைமுகத்தையும் பொலீ வியாவின் முன்னைய தலைநகரான La Paz uqửd g)GOD GOOTěšGašpg.
டிட்டிககாவின் கரைப்பகுதி களிலும் தீவுகளிலும் காணப்படும் புராதன சிதைவுகள் சுமார் 2000 வரு டங்களுக்கு முன்னர் அங்கு செழித் தோங்கிய நாகரிகத்துக்குச் சான்று
பகர்கின்றன. ஏரியின் வடிநிலப்
பகுதியில் வசிக்கும் Aymara என்ற மக்கள் கூட்டத்தினர் மிகப் புராதன முறைகளை உபயோகித்துப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர் கள் பார்லி, உருளைக் கிழங்கு,
கினோவா என்னும் சிறு தானிய
வகை முதலியவற்றைப் பயிரிடுகின் றனர். உருளைக் கிழங்குப் பயிர் இப்பிரதேசத்திலிருந்தே உலகின் ஏனைய பகுதிகளுக்கு அறிமுகப் படுத்தப்பட்டதாக நம்பப்படுகின் Dg.
உலகிலே மிக உயரத்திலமைந்த பயிர் செய் நிலம் டிட்டிககாவுக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட் டது. கடல் மட்டத்திலிருந்து 4,700 m (15,420 அடி) உயரத்தில் அமைந் திருந்த இவ்வயலில் பார்லி பயிர் செய்யப்பட்டிருந்தது. இத்தகைய உயரத்தில் பார்லித் தானியம் ஒரு போதும் முற்றுவதில்லை. எனினும் அத்தாவரத்தின் பகுதிகள் லாமா (lama), அல்பகா போன்ற அங்குள்ள வளர்ப்பு மிருகங்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. பா
37

Page 21
இலங்கையின் பெரும்பா லான பகுதிகளில் வீட்டுக் கைத் தொழிலாக ஜாம் உற்பத்தியை மேற் கொள்ள முடியும். இக்கைத்தொழி
லுக்குக் குறைந்த செலவுடைய உபகரணங்களே தேவைப்படுவதால் பழவர்க்கங்கள் கூடுதலாகக் கிடைக் கும் பிரதேசங்களில் இதனை எவரும் இலாபகரமாக மேற்கொள்ள முடி கின்றது. மூலப் பொருட்கள்
ஜாம் உற்பத்திக்குத் தேவை
யான பிரதான மூலப்பொருள் பழங் களாகும். மாம்பழம், அண்ணாசி,
விளாம்பழம், பப்பாசி, தோடை
போன்ற கனிவர்க்கங்களை இதற்
காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சுத்தமான வெள்ளைச் சீனி, பெக்றின் (Pectin), 9gbgóli gyl 6lavib (Citric acid) என்பனவே தேவைப்படும் ஏனைய மூலப்பொருட்களாகும்.
பின்வரும் பட்டியலில் காட்டப் பட்டுள்ள விகிதங்களில் இம்மூலப் பொருட்கள் உபயோகிக்கப்பட வேண்டும் :
பழங்கள் - 500g
6osof - 500g
சிற்றிக் அமிலம் (தூள்) - 01g
பெக்றின் - 10g
கொய்யா, விளாம்பழம், வில் வம் பழம் போன்ற பழ வகைகளில் பெக்றின் கணிசமான அளவு காணப் படுகின்றது. எனவே ஜாம் உற்பத் திக்கு இப்பழவர்க்கங்களைப் பயன்
38
படுத்துவதாயின் உபயோகிக்கும் பெக்றினின் அளவைச் சிறிது குறைத் துக் கொள்ளலாம். செய்முறை :
முதலில் நன்கு முற்றிக் கனிந்த பழங்களைத் தேர்ந்து எடுத்துக்கொள் ளுங்கள். அளவுக்கு மிஞ்சிக் கனிந் துவிட்ட பழங்களை உபயோகிக்க வேண்டாம். பழங்களின் தோல், வித்து முதலியவற்றை நீக்கிச் சுத்தி கரித்துக்கொண்ட பின் சதைப் பகுதி யை அறைத்துக் கூழ் போன்று ஆக் கிக் கொள்ளுங்கள். பழங்களை அறைப்பதற்கு அறைக்கும் பொறி யொன்றை (grinder) பயன்படுத்த லாம். அண்ணாசியைச் சுத்தம் செய் யும் போது அதிலுள்ள கண்களை
நீக்குவதற்குக் கூர் முனையுள்ள கத்தி
யொன்றை உபயோகிக்கலாம்.
பின்னர், பழக் கூழுக்கு சிற்றிக் அமிலத்தைச் சேர்த்து, கறையில் உருக்குப் (Stainess Steel) பாத்திர மொன்றில் இட்டு அவித்துக் கொள் ளுங்கள். சீனியையும் பெக்றினையும் கலந்து வைத்துக்கொண்டு, பழக்கூழ் நன்றாக வெந்த பின்னர் அதனுள் இட்டுக் கலக்குங்கள். அகப்பை யினால் நன்றாகக் கலக்கியவாறே கலவை 104.5°C-105C வெப்பநிலைக் குச் சூடாக்கப்பட வேண்டும்.
சரியான வெப்பநிலையை அறிந்து கொள்வதற்காக வெப்ப மானியொன்று உபயோகிக்கப்பட வேண்டும். கலவை சூடாக இருக்
25 - بافارقsyى
 

கும் போதே, கிருமி நீக்கப்பட்ட போத்தல்களினுள் இடப்பட்டு காற் றுப் புகாதவாறு மூடியிடப்பட வேண்டும்.
இதற்கான போத்தல்களை ஏற் கனவே நன்கு கழுவிச் சுத்தம் செய்த பின் கொதிநீரில் அவித்துக் கிருமி நீக்கம் செய்துகொள்ள வேண்டும். அவிக்கப்பட்ட போத்தல்கள் ஈர மின்றி உலர்த்தப்பட்ட பின்னரே பழக்கூழைச் சுடச்சுட அதனுள் இட வேண்டும். போத்தல் குளிரான பின் னர் அதன்மீது லேபலை ஒட்டிக் கொள்ளலாம்.
குறிப்பு : ஜாம் தயாரிக்கும் போது
பெக்றின் பயன்படுத்துவதன் நோக்
கம் ஜாமின் ஜெலி போன்ற
தன்மையைப் பேணிக்கொள்வதே யாகும். பெக்றின் சேர்க்காதுவிட்
டால் ஜாம் நீர்த்தன்மையானதாக
இருக்கும். போதியளவு சிற்றிக்
அமிலத்தைப் பயன்படுத்தத் தவறி
னால் சீனி திரண்டு கட்டியாதல் நடைபெறும். இவ்விரு பதார்த்தங் களையும் திறந்த சந்தையில் பெற்றுக் கொள்ள முடியும்.
ஜாம் தயாரிப்பை வீட்டுக் கைத் தொழிலாக ஆரம்பிப்பதற்கு அதி வேக அறைக்கும் பொறி, ஜாம்
போத்தல், மூடி அடைக்கும் கருவி
(Jam bottle sealer), 560 puSai 2 (Did குப் பாத்திரங்கள், கறையில் உருக் குக் கத்திகள், தராசு, வாயு அடுப்பு, 110°C வரை வீச்சுடைய வெப்பமானி
முதலிய உபகரணங்கள் தேவைப் படும்.
கையால் இயக்கப்படக்கூடிய ஜாம் போத்தலுக்கு மூடியடைக்கும் கருவியொன்றை சுமார் 1000/= ரூபா வுக்கு இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையிலிருந்து பெற் றுக்கொள்ள முடியும். அவர்களது முகவரி பின்வருமாறு : Technological Service Division, Sri Lanka Industrial Development
Board, 615, Galle Road, Katubedda, Moratuwa.- Tel. 01-605278
ஜாம் அடைப்பதற்குரிய போத் g56b56061T Ceylon Glass Company, Sangabo Mawatha, Borupana Road, Ratmalana (Tel. 01-636538) 6Taip இடத்திலோ அல்லது பழைய போத்தல் சேகரிப்பவர்களிடமோ பெற்றுக்கொள்ளலாம்.
தேவையான போத்தல் மூடி 560) 6T Metal Packaging Ltd., 75, Kandawala Road, Ratmalana (Tel. 01636501) என்ற முகவரியில் பெற்றுக் கொள்ள முடியும்.
போத்தல் மூடிகள், மூடியடைக் கும் உபகரணம் என்பவற்றை Best Traders, 57, Avis sawella Road, Well'ampitiya (Tel. 01-572331) 6Taip நிறுவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்யலாம்.
(தகவல் உதவி: இலங்கை கைத் தொழில் அபிவிருத்திச் சபை)
G166 (660 J56061TIII
காரியாலயத்திலிருந்து வீடு திரும்பியதும் அவன் உடுப்பு மாற்றா மலேயே மிகுந்த சோர்வுடன் கட்டிலில் சாய்ந்து கொண்டான்.
இதைக் கண்ட அவனது மனைவி “என்ன இது? ஒரு நாளுமில்லாத மாதிரி இவ்வளவு களைத்துப் போயிருக்கிறீர்களே” என்று கேட்டாள்.
“இன்று எங்கள் கம்பியூட்டர் பழுதாகிவிட்டதால் சுயமாகச் சிந்திக்க வேண்டி ஆகிவிட்டது” என்று ஆயாசத்துடன் பதில் வந்தது அவனிடமிருந்து.
39
அரும்பு- 25

Page 22
கிடந்த நூற்றாண்டிலே சர்வ
தேசப் புகழ்பெற்றிருந்த பிரெஞ்சு மொழி எழுத்தாளர்களுள் அல்பேஃ 5íTep (Albert Camus) GTGăTLu Gui 635 முக்கியமானவராகக் கருதப்படுகின் றார். சிறந்த நாவல், கட்டுரை மற்றும் நாடக ஆசிரியராகவும் பத்திரிகை யாளராகவும் புகழ்பெற்றிருந்த அவர் இளவயதிலேயே இலக்கியத்துக் கான நொபெல் பரிசு வழங்கி கெளர விக்கப்பட்டார்.
அல்பேஃகாமூ 1913 நவம்பர் 7ம் திகதி அல்ஜீரியாவிலே பிறந்தார். அப்போது அல்ஜீரியா பிரெஞ்சுக் குடியேற்ற நாடொன்றாக இருந்தது. பிரெஞ்சுக்காரரான அவரது தந்தை முதலாம் உலகப் போரின் ஆரம்பத் திலேயே கொல்லப்பட்டார். படிப் பறிவற்ற ஸ்பானியப் பெண்ணான அவரது தாயார் சுத்திகரிப்புத் தொழி லாளியாக வேலை செய்துகொண்டு வறுமையில் காமூவை வளர்த்தார். இளவயதில் கசநோய் தொற்றிக் கொண்டதால் அல்ஜியர்ஸ் பல் கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந் த கல்வியை காமூ இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டது. நோய் காரண மாக, உதைபந்தாட்டத்தில் அவருக் கிருந்த ஈடுபாடும் தடைப்பட்டது.
இளவயதில் நாடகாசிரியரா கவும், இயக்குனராகவும் நடிகரா கவும் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் அரசியலிலும் ஈடுபாடு காட் 40 A
பிரெஞ்சு எழுத்தாளர்
(Albert Camus)
டினார். அல்ஜீரியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவர் சிறிது காலம் அங்கத்துவம் வகித்தார். 1930களில் காமூ பத்திரிகையாளராகப் பணி புரியத் தொடங்கினார். அல்ஜீரியா வின் சுதேசிகளான அரபு மக்கள் வாழ்க்கையில் படும் அவலங்களைப் பற்றி எழுதியதன் காரணமாக அவர் அல்ஜியர்ஸ் பத்திரிகையிலிருந்து நீக்கப்பட்டார்.
1940இல் பிரான்ஸுக்குச் சென்ற 5тер, шћsiv basiћарjsirom Paris-Soir என்ற பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். நாஸி ஜெர்மனியின் படைகள் பிரான்ஸை ஆக்கிரமித்துக் கொண்ட போது அவற்றை எதிர்த் துப் போராடும் எதிர்ப்பியக்கத்தில் காமூ பங்குபற்றினார். 1943இல் Combat என்ற தலைமறைவுப் பத்திரி கையில் எழுதத் தொடங்கினார். 1944 முதல் 1947 வரை அப்பத்திரிகையின் முகாமை ஆசிரியராகவும் பணியாற் றினார்.
1957இல் இலக்கியத் துறைக் கான நொபெல் பரிசு அல்பேஃ காமூ வுக்கு வழங்கப்பட்டது. அல்ஜீரியா வின் விடுதலைப் போரின் (1954 - 1962) விளைவுகளைக் கண்டு மன முடைந்துபோன அவர் நாடகத் துறையிலும் சுயசரிதை நாவலொன் றை எழுதுவதிலும் கவனம் செலுத் தலானார். பிரான்ஸில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தொன்றில் சிக்கிய அல்பேஃ காமூ 1960 ஜனவரி 4ஆம் திகதி தனது 47வது வயதில்
காலமானார்.
அரும்பு-25
 
 

காமூவின் நாவல்களான L'étranger (1942), La Peste (1947), La Chute (1956) என்பனவே அவருக்கு உலகப் புகழைத் தேடிக் கொடுத்தன. இவற்றுள் L'etranger (அந்நியன்) என்ற நாவல் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு 1946இல் வெளி யிடப்பட்டது. இம்மொழிபெயர்ப்பு -gy6)LDfiá5T Gólob The Stranger 6Taip பெயரிலும் இங்கிலாந்தில் The Outsider என்ற பெயரிலும் வெளிவந்து ஆங்கில வாசகர்களிடையே பிரபல் யம் அடைந்தது. பிற்காலத்தில் அது உலக மொழிகள் \ பலவற்றிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள் ளது. La Peste (கொள்ளை நோய்) என்ற அவரது நாவல் 1948இல் The Plague என்ற தலைப்பில் ஆங்கிலத் தில் வெளியிடப்பட்டது. The chute (வீழ்ச்சி) என்னும் நாவலின் ஆங்கில Quiquid 1957g) Giv The Fall GT Götp பெயரில் வெளியாகியது.
காமூவின் சிந்தனைக் கட்டுரை கள் பலவும் பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலக வாழ்க்கையின் அர்த்தமில்லாத் தன்மையைப் பிரதிபலிப்பனவாக வும், சித்தாந்தங்களுக்கு அடிமையா வதின் பாதகங்களை விளக்குவன வாகவும் அவரது ஆக்கங்கள் அமைந் துள்ளன.
அவர் எழுதிப் பிரசுரிக்காது விட்டிருந்த பல ஆக்கங்கள் அவரது மரணத்தின் பின்னர் வெளியிடப்பட்
டன. அவரது Carnets (குறிப்பேடு கள்) என்ற ஆக்கம் 1962, 1964ஆம். ஆண்டுகளில் இரு தொகுப்புக்களா கப் பிரசுரிக்கப்பட்டது. இது ஆங் கிலத்தில் Notebooks என்ற பெயரில் பின்னர் வெளியாகியது. காமூவின் ஆரம்பகால ஆக்கமொன்றான La mort heureuse (ori Goffoy LDIT GIT &FIT6)!) என்ற நாவல் 1971இல் வெளிவந்தது.
அல்பேஃ காமூ விபத்தில் சிக் கிய போது அவரது கையிலிருந்த பிரீப்கேஸில் அவரால் எழுதிமுடிக் கப்படாதிருந்த சுயசரிதை நாவலின் கையெழுத்துப் பிரதி காணப்பட்டது. Le Premier Homme (pg56ù LDGoflg5667) என்ற ந்நாவல் அவரது மகள் கதெரின் காமூவினால் 1995இல் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில Gilg-6)uto The First Man 6TGip Ghulu ரில் அதே ஆண்டில் வெளியாகியது.
கடந்த நூற்றாண்டில் உலகிலே வெளியான மிகச் சிறந்த புனை கதை 56156it 5 Tep6flait L'étranger (67625 ரோஞ்சே0%), La chute என்பன முன் னணி இடத்தைப் பெற்றுள்ளதாக இலக்கிய விமர்சகர்கள் கூறுகின் றனர். அல்பேஃ காமூ, உண்மையில் தன் சக மனிதர்களோடு ஒழுக்கம், நீதி, நியாயம், அன்பு என்பன பற்றி உள்ளூற உறவாட விரும்பிய ஒரு சர்வதேச இலக்கியவாதி என்பதை அவரது ஆக்கங்களை வாசித்துச் சுவைத்த எவரும் மறுக்க மாட் Llm issør.
நல்ல அன்பளிப்பு
“மாமா! நத்தாருக்கு நீங்கள் வாங்கித் தந்த ஹார்மோனிகா தான் வாழ்க்கையிலே எனக்குக் கிடைத்த சிறந்த அன்பளிப்பு” என்றான் சிறுவன் பீட்டர்.
"அப்டியா! நீ அதை நன்றாக இசைக்கப் பழகிவிட்டாயா?” என்று பூரிப்போடு கேட்டார்
அவனது மாமா.
“இல்லை மாமா! பகல் நேரத்தில் அதனை இசைக்கக் கூடாது என அம்மா தினமும் ஐந்து ரூபா தருகிறார். இரவில் இசைக்கக் கூடாது எனக் கூறி அப்பா தினமும் பத்து ரூபா தருகிறார். வேறெவருடைய அன்பளிப்பும் இந்தளவு பயன் தரவில்லை” என்றான் சிறுவன்.
soby-25
41.

Page 23
அமெரிக்காவின் மீது 2001 செப்
டம்பர் 11ம் திகதி மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல்களை அடுத்து உலகிலே தீவிர மான மாற்றங்கள் இடம்பெற்று வரு கின்றன. அத்தாக்குதல்களின் சூத்திரதாரி என உஸாமா பின் லாதின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனை நிரூபிப்பதற் கான சாட்சியமாக அமெரிக்கா வீடியோ நாடாவொன்றை உலகுக்குச் சமர்ப்பித் துள்ளது. காபூல் நகருக்கருகில் கைவிடப் பட்ட வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப் பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ வைப் பற்றிப் பலத்த சந்தேகங்கள் எழுப் பப்பட்டு வருகின்றன.
எது எப்படியிருப்பினும் உஸாமா
வையும் அவரது அல் காயிதா இயக்கத் தலைவர்களையும் கைது செய்யும் அல் லது ஒழித்துக்கட்டும் நோக்கோடு ஆப்கா னிஸ்தான் மீது பெருந்தாக்குதலொன்றை அமெரிக்கா நடாத்தியது. பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவழித்து அமெரிக்கா மேற்கொண்ட இத்தாக் குதல்களின் காரணமாக ஆப்கானிஸ்தான்
முற்றாக அழிந்து போயுள்ளது. இலட்சக்
கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் பலியாகியுள்ளனர்.
இறுதியில், தாலிபான் படையின ரை முறியடித்து ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிக் கொள்வதில் அமெரிக்க ஆதரவுடனான வடக்கு முன்னணிப் படைகளும் பல்வேறு கோத்திரத் தலை
வர்களின் படைகளும் வெற்றி கண்டுள்
ளன. ஹமீத் கர்ஸாயி என்பவரின் தலை மையில் பொம்மை அரசாங்கமொன்றை யும் அமெரிக்கா உருவாக்கி இருக்கிறது. ஆனால், உஸாமாவும் அவரது அல்
42
காயிதா தளபதிகளும் இதுவரைஅமெரிக் காவிடம் சிக்கியதாகத் தெரியவில்லை.
எனவே அமெரிக்கா இத்தனை வாரங்களாக ஆப்கானிஸ்தான் மீது நடாத்திவந்த தாக்குதல்களின் அடிப் படை நோக்கம் நிறைவேறவில்லை என எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். இதனால் அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என்று நாம் நினைக்க முடியுமா? உஸாமாவையும் அவரது ஆட்களையும் பிடிப்பது பற்றி அமெரிக்காவுக்குள்ள அக்கறை தணிந்து போய்விட்டது போல் சில வேளைகளில் தெரிகிறது.
அப்படியானால் ஆப்கானிஸ்தா னை அமெரிக்கா தாக்கித் தாலிபான் ஆட்சியைக் கவிழ்த்ததற்கு வேறு மறை முகக் காரணங்கள் ஏதும் இருக்கின்றன வா என்ற கேள்வி எழுகின்றது. நிச்ச யமாக இருக்கின்றன என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் பலர்.
அமெரிக்காவின் மீது நடாத்தப் பட்டதாக்குதல்களுக்குக் காரணகர்த்தாக் கள் யார் என்பது பற்றி இன்னும் தீர்க்
கமாக அறிந்துகொள்ள முடியாமல்
இருக்கிறது. மேற்கத்திய தொடர்பு
சாதனங்கள் ஒரு பக்கச் சார்பான செய்தி
களையே வெளியிடுவதனால் பல உண் மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. பொய்யான, புனையப்பட்ட செய்திகள் விசுவரூபமெடுத்துள்ளன.
மேற்படி தாக்குதல்களை இஸ்ர வேலே திட்டமிட்டு மேற்கொண்டிருக்க வேண்டுமெனப் பல ஆய்வாளர்கள் (சில அமெரிக்கர்கள் உட்பட) சந்தேகிக்கின் றனர். இதற்கு முன்னரும் இஸ்ரவேல் இவ்வாறு அமெரிக்க நலன்களின் மீது - அரும்பு-25
 

இரகசியமாகத் தாக்குதல்களை நடாத்தி விட்டு அரபு நாடுகளின் மீது பலியைப் போடுவதில் வெற்றி கண்டிருக்கிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின் றனர்.
மத்திய கிழக்குப் போரின் போது USS-Liberty என்ற அமெரிக்கப் போர்க் கப்பலின் மீது இஸ்ரேலிய போர் விமா னங்கள் கடும் தாக்குதலை மேற்கொண் டன. அப்போது அந்த விமானங்களில் இஸ்ரவேலிய அடையாளங்கள்.அழிக்கப் பட்டு எகிப்திய விமானப்படைச் சின் னங்கள் வரையப்பட்டிருந்ததனால், எகிப்தே அத்தாக்குதலை நடத்தியதாக
அமெரிக்கா முதலில் நினைத்தது. பல.
அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட அத்தாக் குதல் பற்றிய உண்மைகள் வெளிவந்த போது அமெரிக்கா அவற்றை மூடி மறைத்துவிட்டதாகவும் இஸ்ரவேலுக் கெதிராக எந்த நடவடிக்கையையும் அது மேற்கொள்ளவில்லையென்றும் The Tribune போன்ற சில அமெரிக்கப் பத்திரி கைகள் எழுதியுள்ளன. R
இதேபோன்று The Cole என்ற அமெரிக்கக் கப்பல் தாக்கப்பட்டமை, லொக்கர்பீஎன்ற இடத்தில் அமெரிக்கப் பிரயாணிகள் விமானம் விழுந்து நொறுங் கியமை போன்ற பல நிகழ்வுகளுக்கு இஸ்ரவேலின் உளவு ஏஜண்டுகளே கார ணமாக இருந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. எனினும் அத்தாக்குதல் களுக்கு எதிரான பதிலடிகள் அரபு நாடுகளுக்கே கிடைத்து வந்துள்ளன.
சென்ற வருடம் அமெரிக்காவி ,
லிருந்து எகிப்து நோக்கி வந்துகொண் டிருந்த Egyptair விமானம் கடலில் வீழ்ந்ததற்கும் இஸ்ரவேல் ஏஜண்டுகளே காரணமாக இருந்துள்ளனர் என்பதற் கான சான்றுகள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எப்படியிருப்பினும் செப்டம்பர் 11ம் திகதியதாக்குதல்கள் நிகழ்ந்து சில மணித் தியாலங்களுக்குள்ளேயே அமெரிக்கா
25 - لاbلاقeydo
உஸாமா பின் லாதினின் மீது குற்றப் பத்திரத்தை வாசிக்கத் தொடங்கி விட்டது. அதன் பின்னரேயே அதற்கான சான்றுகளை அது தேடவும் சோடிக்கவும் ஆரம்பித்தது. அமெரிக்கா சமர்ப்பித்துள்ள சான்றுகள் திருப்திகரமானவையாக இல் லை என்பதே பக்கச் சார்பற்ற அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
ந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் அந்தரங்க நோக்கங்கள் பற்றி இப்போது பல் தகவல்கள் வெளி வந்தவண்ணமிருக்கின்றன. பிரெஞ்சு எழுத்தாளர்கள் இருவர் இந்த விடயம் சம்பந்தமாக நூலொன்றையும் எழு யிருக்கின்றனர். .
தனக்குத் தேவையான எண்ணெ யைத் தொடர்ந்து தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்வதில் அமெரிக்கா பெரும் அக்கறை காட்டுகின்றது. இந்த வகையில் உஸ்பெகிஸ்தானிலுள்ள எண் ணெய் வயல்களிலிருந்து கிடைக்கும்
எண்ணெயை எதிர்காலத்தில் பெற்றுக்
கொள்ள அது திட்டமிட்டுள்ளது. இதற்கு உஸ்பெகிஸ்தானும் உடன்பட்டிருக்கிறது. உஸ்பெகிஸ்தானில் துறைமுகம் எதுவும் இல்லாததால் அண்டை நாடொன் றிலுள்ள துறைமுகத்துக்கு அவ்வெண் ணெய் குழாய் மூலம் கொண்டுவரப்பட வேண்டும்.
ஈரானிலுள்ள அரசியல் நிலைமை காரணமாக அமெரிக்காவின் தேவைக் கேற்ப அந்நாட்டினூடாக எண்ணெய்க் குழாயை அமைப்பது சாத்தியமானதாக இல்லை. அப்படித்தான் அமைத்தாலும்
அது எந்நேரமும் ஆபத்துச் சூழ்ந்த நிலை
யிலேயே இருக்கும். எனவே அடுத்த தெரிவாக அமைவது ஆப்கானிஸ்தா னுரடாகப் பாகிஸ்தானின் கராச்சி போன் ற துறைமுகமொன்றுக்கு அக்குழாய் களை அமைப்பதாகும். இதற்குப்பாகிஸ்
தான் அரசாங்கத்தை அமெரிக்கா உடன்
படச் செய்துகொண்டது.
43

Page 24
ஆப்கானிஸ்தானினூடாகக் குழாய் அமைப்பது தொடர்பாக 2001ஜனவரியில் தாலிபான் ஆட்சியாளர்களுடன் அமெ ரிக்க அதிகாரிகள் இரகசியப் பேச்சுவார்த் தைகளில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய்க் குழாய் அமைப்பதற்கு இடமளித்தால் தாலிபான்அரசாங்கத்துக்குப் பெருமளவு பொருளாதார உதவி வழங்குவதாக அமெரிக்கப் பிரதிநிதிகள் வாக்களித் துள்ளனர். எனினும் அமெரிக்காவின் திட்டத்திற்கு இணங்கத்தாலிபான்தலை வர்கள் அடியோடு மறுத்துவிட்டனராம். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக் கப் பிரதிநிதி ஒருவர் “எங்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் ஆப்கானிஸ்தானின் மீது பொன்னையும் பொருளையும் பொழிவோம். இதற்கு மறுப்புத் தெரி வித்தால் ஆப்கானிஸ்தான் மீது குண்டு மழை பொழிவோம்’ எனப் பயமுறுத் தியதாகவும் தெரிய வருகிறது.
இந்த வாக்குறுதிகளுக்கோ பய முறுத்தல்களுக்கோ தாலிபான்கள் மசி யாததனாலேயே உஸாமா பின் லாதி னைத் தேடிப்பிடிக்கும் சாட்டில் தாலி பான்களின் ஆட்சியைக் கவிழ்த்துத் தனக் குச் சாதகமான அரசாங்கமொன்றை காபூலில் நிறுவும் முயற்சியில் அமெ ரிக்கா இறங்கியது.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியிலும் பெருமளவு எண்ணெய்ப்
படிவுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப் படாமல் இருக்கின்றன. இவற்றின் மீதும் அமெரிக்கா குறிவைத்திருக்கிறதாகத் தெரிகிறது. அத்தோடு சோவியத் ஆக் கிரமிப்புக் காலத்தில் அகழ்ந்தெடுக்கப் பட்டுப் பின்னர் கைவிடப்பட்ட இயற் கை வாயுப் படிவுகளும் அங்கு பெருமள வில் உள்ளன.
இப்போது அமெரிக்காவுக்குச் சாதகமான காபந்து அரசாங்கமொன்று காபூலில் நிறுவப்பட்டுள்ளது. பின்னர் நடாத்தப்பட இருக்கும் தேர்தலிலும் அமெரிக்கா தனக்கு வேண்டியவர்களை ஆட்சியிலமர்த்தத்தான் போகின்றது. அதன் பிறகு தனது அந்தரங்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில் அதற்கு எவ்வித இடையூறும் இருக்காது.
ஆப்கானிஸ்தான்மக்கள் எவ்வளவு
காலத்திற்கு அமெரிக்கத் தலையீட்டைச்
சகித்துக் கொள்ளப் போகின்றார்கள்? தமைறைவாகியுள்ள இஸ்லாமியப் போராளிகளின் கெரில்லாத் தாக்குதல் களுக்கு அமெரிக்கப் படைகளும் ஐ. நா. வின் அமைதிப்படையும் எவ்வாறு முகங் கொடுக்கப்போகின்றன? அமெரிக்கா வின் அந்தரங்க நோக்கங்கள் அங்கு எந்தளவுக்கு நிறைவேறப் போகின்றன? போன்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ப
நல்ல கமெரா
புகைப்படக் கலைஞராகத் தொழில் பார்க்கும் இளைஞர் ஒருவர் விருந்தொன் றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். தான் எடுத்திருந்த சில போட்டோக்களைக் கையோடு எடுத்துச் சென்ற அவர் அவற்றை விருந்துக்கழைத்த பெண்மணிக்குப் பெருமிதத்தோடு காட்டினார்.
“போட்டோக்கள் நன்றாகத் தானிருக்கின்றன. உங்களிடம் நல்ல கமெரா வொன்று இருப்பது போல் தெரிகிறது” என்றார் அப்பெண். இளைஞரின் முகம் சுருங்கிப் போய்விட்டது. எனினும் ஒன்றும் பேசாமல் இருந்து விட்ட்ார்.
விருந்து முடிந்த பின்னர்“சாப்பாடு எப்படி?” என அப்பெண்மணி வந்திருந்தவர் களிடம் கேட்டார். அதற்கு அந்த இளைஞர்"சாப்பாடு மிகப் பிரமாதமாக இருந்தது. உங்களிடம் நல்ல சட்டிபானைகள் இருக்கின்றனபோல் தெரிகின்றது” எனப் பட்டெனக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
44 • ew25- لفقازق

執 அரும்பு’ இதழின் கதை
அரும்பு - 25 இதழ் வெளிவரும் இச்சந்தர்ப்பத்தில் அரும்பின் பூர்வீகம் பற்றியும் இன்றைய நிலை பற்றியும் சுருக்கமாகச் சொல்லி விடுவது பொருத் தம் என நினைக்கிறேன்.
1963ஆம் ஆண்டு, 7ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது நானும் தோழர்கள் இருவரும் ணைந்து கையெழுத்துப் பத்திரிகையாக ‘அரும்பு' இதழை ஆரம்பித்தோம். முதல் இத ழுக்கு 'கரும்பு’ எனப் பெயரிட்டு அட் டைப்படமும் வரைந்த பின்னர், இந்தி யாவில் அப்பெயரில் ஒரு பத்திரிகை வெளிவருவதாக யாரோ சொன்னதால் அரும்பு’ எனப் பெயர் மாற்றம் செய் தோம். முதலாம் இதழ் எமது பாட சாலை அதிபரினால் காலைக் கூட்டத் தின் போது வெளியிட்டு வைக்கப் பட்டது.
இரண்டாம் இதழை அச்சிட்டு
வெளியிட்டால் என்ன என்ற வயதுக்கு
மீறிய ஆசை எமக்குள் ஏற்பட்டது. என வே பிரபல கொடை வள்ளல் நளீம் ஹாஜியார் அவர்களிடம் உதவி கோரும் நோக்குடன் நாம் மூவரும் அவரது வீடடைத் தேடிச் சென்றோம். கையில் பணம் இல்லாததால் சுமார் 3 மைல் களுக்கு மேல் நடந்தே செல்ல வேண்டிய தாயிற்று.
நளிம் ஹாஜியார் அவர்களிடம் அரும்பின் முதலாம் இதழைக் காட்டி, அடுத்து வரும் இதழ்களை அச்சிடு வதற்காக அச்சு இயந்திரமொன்றை வாங் கித் தருமாறு கேட்டோம். அவர் சிரித் துவிட்டு நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளைகள். இப்படிக் கையெழுத்தா கவே எழுதி வாருங்கள். பெரியவர்களான பிறகு பார்ப்போம்’ என்றார். எமக்குப் பெரிய ஏமாற்றமாகிப் போய்விட்டது. அரும்பு- 25
ஒரு ரோணியோ மெஷினாவது வாங்கித் தர மாட்டீர்களா?’ என்று மீண்டும் கெஞ்சினோம். அவர் முன்னைய பதி லைத்தான் திருப்பிச்சொன்னார். எனவே பெரும் விரக்தியோடு வீடு திரும்பி னோம். இந் நிகழ்ச்சியை இப்போது நினைத்துப் பார்க்கும் போது எமது சிறுபிள்ளைத்தனத்தை எண்ணிச்சிரிப்புத் தான் வருகிறது. ܖ
தொடர்ந்து மாதந்தோறும் ஒரு கையெழுத்துப் பிரதி வீதம் அரும்பை வெளியிட்டு வந்தோம். அட்டை உட்பட 40 பக்கங்கள் கொண்டதாக அப்பியாசக் கொப்பி அளவில் ஒவ்வோர் இதழும் அமைந்திருந்தது. பிரதியை எழுதும் வேலையை நானே செய்து வந்தேன். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், சித்திரக்கதைகள், தொடர்கதைகள் எனப் பல்வேறு அம்சங்கள் அப்போதைய அரும்பில் இடம்பெற்றன. ஊர்ப் பாட சாலைகள் இரண்டிலும் நகரசபை வாசிக சாலையிலும் அரும்பு இதழ் மாறி மாறி வைக்கப்பட்டது.
ஜீ. ஸி. ஈ. பரீட்சை நெருங்கியதும் வேலைப் பளு அதிகரித்ததால் அரும்பு வெளியிடுவதைக் கைவிட்டோம். அதன் பின்னர் அதனைத் தொடரவே முடிய வில்லை. சில பழைய இதழ்களும் இனிய நினைவுகளும் மாத்திரமே எஞ்சியிருந்தன. நண்பர்களும் பிரிந்து போய்விட்டனர். இப்போது ஒருவர் அமெரிக்காவிலும் மற்றவர் இங்கிலாந் திலும் வாழ்கின்றனர்.
எனினும் மீண்டும் அரும்பை வெளி யிட வேண்டும் என்ற எண்ணம் என் மன தில் அடிக்கடி துளிர்த்துக்கொண்டே இருந்தது. அந்த ஆர்வத்தில் 1983இல் அச்சகமொன்றை நானும் சகோதரர்களும் ஆரம்பித்தோம். எனினும் எனது கற்பித் 45

Page 25
தல் பணி காரணமாக அரும்பை வெளி யிட அவகாசமே கிடைக்காமற் போய் விட்டது. இறுதியில் அச்சகத்தை மூடி விட்டுக் கம்பியூட்டர் நிலையமொன்றை ஆரம்பித்த பின்னரே அரும்பை அச்சேற்றி வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தது.
புதிய தொடரில் அரும்பு'-1இதழ்
1997 ஜூலையில் வெளியாகியது. விற் பனை செய்ய முடியுமோ என்ற சந்தே கத்தில் 2000 பிரதிகளை அச்சடித்தேன்.
ஆனால் அவை யாவும் விரைவில் விற்
றுத் தீர்ந்தன. அதனால் ஏற்பட்ட தைரியம் காரணமாக அடுத்த இதழில் 3000பிரதிகள் அச்சிட்டேன். இவ்வாறு படிப்படியாக பிரதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டு இப்போது ஒவ்வோர் இதழிலும் 5500 பிரதிகள் வீதம் அச்சேற்றப்படு கின்றன. •፡
ஓர் இதழ் அச்சேற்றப்பட்டு விநி யோகிக்கப்பட்டு முடிந்த பின் அடுத்த இதழுக்கான ஆயத்தத்தைச் செய்வேன். முதலில் என்னென்ன தலைப்புக்களில் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்து ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்வேன். பின்னர் அத் தலைப்புக்களுக்குத் தேவையான தகவல் களைச் சேகரிக்கத் தொடங்குவேன்.
Britannica, Encarta, Grolier, Americana, World Book 86uu 560MGvi 35 GMTG சியங்களின்CD பதிப்புக்களை வைத்திருக் கிறேன். எடுத்துக்கொண்ட ஒவ்வொரு விடயம் பற்றியும் வெவ்வேறு கலைக் களஞ்சியங்கள் என்ன சொல்கின்றன என்பதை வாசித்துப் பார்த்துப் பொருத் தமான தகவல்களை முதலில் ஆங்கிலத் தில் குறித்துக் கொள்வேன். தேவைப் பட்டால் Internet இலிருந்தும் தகவல் களைப் பெறுவேன்.
பின்னர் இத்தகவல்களை அடிப் படையாக வைத்துக் கொண்டு கட்டுரை யை எழுதுவேன். பெரும்பாலான சந்தர்ப்
46
பங்களில் ஒன்றிரண்டு பக்கங்கள் எழுதிய பின் ஏதாவது அதிருப்தி ஏற்பட்டால் அப்படியே அடித்துவிட்டு மீண்டும் வேறு விதமாக எழுதுவேன். சில கட்டுரைகள் மூன்று, நான்கு தடவைகள் திருத்தி எழு தப்படுவதும் உண்டு.
மருத்துவக் கட்டுரைகளுக்கான தக வல்களை மருத்துவப் பாடநூல்களில் இருந்தே எடுக்கிறேன். 25க்கும் மேற் பட்ட மருத்துவநூல்கள் எனது நூலகத்தில் உள்ளன. எனவே மிகத் திருத்தமான தக வல்களைத்தரக்கூடியதாக இருக்கின்றது. மருத்துவம் சம்பந்தமாக அரும்பில் வரும்
கட்டுரைகளை வைத்தியர்களே பாராட்
டியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் இரவு 9.00 மணிக் குப் பின்னரே கட்டுரைகளை எழுதத் தொடங்குவேன். சில நர்ட்களில் இரவில் நெடு நேரம் வேலை செய்வதுண்டு. நல்ல மூட் அமைந்துவிட்டால் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளை எழுதி முடிப்பதும் உண்டு. சிலவேளை களில் ஒரே கட்டுரை பல நாட்களுக்கு இழுபடுவதும் உண்டு. எப்படியோ இது வரை சுமார் 450 கட்டுரைகளை எழுதி விட்டேன் என்பதை நினைத்துப் பார்க் கும் போது மலைப்பாகவே இருக் கின்றது.
கட்டுரைகள் எழுதிமுடிக்கப்பட்ட பின் அவற்றை எனது பிள்ளைகள் ஒவ் வொருவராக வாசிப்பார்கள். 12-23 வயது வீச்சிலுள்ள அவர்களுடைய அபிப்பிரா யங்கள் எனக்கு மிகவும் உதவியாக அமை வதுண்டு. அடுத்ததாக எனது டைப் செற்றிங் உதவியாளர் கட்டுரைகளைக் கம்பியூட்டரில் டைப் செய்யத் தொடங் குவார். நான் பல நாட்கள் கஷ்டப்பட்டு எழுதியவற்றை அவர் ஓரிரு நாட்களில் டைப் செய்துவிடுவார். தமிழ் நாட் டிலிருந்து அதிக விலைகொடுத்து வாங் கப்பட்ட கம்பியூட்டர் தமிழ் எழுத்து வடி
25- {bزی gy

வங்களை (Fonts) நாம் வைத்திருக்கி றோம். இதனால் ஏனைய பெரும்பா லான வெளியீடுகளில் உபயோகிக்கப் படும் இலவச எழுத்து வடிவங்களை விடத் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட வடிவங்களை அரும்பில் உபயோகிக்க முடிகிறது.
கட்டுரைகள் யாவும் டைப் செய்து முடிக்கப்பட்ட பின் பக்கம் அமைத்தல், தலைப்பிடுதல், படங்களைச் சேர்த்தல் போன்ற இறுதி வேலைகளை நானே உட்கார்ந்து செய்வேன். எந்தவொரு கட் டுரையும் அப்பாலுள்ள வேறொரு பக்கத் தில் தொடர்வதற்கு இடமளிக்க மாட் டேன். நானே எழுதியவை என்பதால் இடத்திற்கேற்ப சுருக்கியோ விரிவாக்கி யோ பக்க அமைப்பைச் சரிசெய்து கொள் வேன்.
இறுதி வேலையாகவே அட்டைப் படத்தை வடிவமைப்பேன். எந்த வித
முன் திட்டமும் இல்லாமல் கம்பியூட் டரின் முன் அமர்ந்து ஓரிரு மணித்தியா லங்களுக்குள் ஏதோ ஒருவகையில் அட் டைப் படமொன்றை அமைத்து விடு வேன். அதற்குரிய நிறத்தைத் தெரிவு செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும்.
அரும்பில் வரும் “ஜோக்'குகள் பற் றியும் நிறையப் பேர் கேட்கின்றனர். அவை யாவும் இண்டர் நெட் அல்லது ஈ-மெயில் மூலம் சேகரிக்கப்படுபவை. பெரும்பாலானவற்றை எமது மொழிக் கும் சூழலுக்கும் ஏற்றவாறு மாற்றி யமைத்து விடுகிறேன்.
அரும்பின் பக்கங்கள் யாவும் தயா ரிக்கப்பட்ட பின் கம்பியூட்டர் திரை யிலேயே Proof பார்த்துக்கொள்வேன். இவ்வளவு காலத்துக்கும் ஒரு பக்கத் தைக்கூட அச்சுப் பிரதியெடுத்து Proof பார்த்ததில்லை. எல்லாம் சரி எனத் தீர் மானித்த பின்கம்பியூட்டரிலிருந்துtracing பேப்பரில் பொஸிட்டிவ்களை அச்சடித்து அச்சகத்தாரிடம் ஒப்படைப்போம். அவர் கள்3-4 நாட்களுக்குள் பிரதிகளை அச்சிட்
25 - byلاقgeye
விடயத்தையும்
டுத் தந்து விடுவார்கள். அவற்றை விநி யோகம் செய்ய முன் பக்கங்கள் சரியாக உள்ளனவா என்பதை ஒவ்வொரு பிரதி யாகச் சரிபார்த்துக் கொள்ளும் வழக்கத் தைத் தொடர்ந்து கைக்கொள்கிறோம். ந்தப் பொறுப்பை எனது துணைவியார் நிறைவேற்றுகிறார்.
இதுவரை நாம் எவ்வித விளம் பரமும் செய்ததில்லை. அரும்புக்கு வெளி யீட்டு விழாக்களோ, அறிமுகக் கூட்டங் களோ ஒரு போதும் நடந்ததில்லை. தேசி யப் பத்திரிகைகளில் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரும்பைப் பற்றிச்சாதக மான கருத்துரைகள் எழுதியிருந்தனர். சக்தி தொலைக் காட்சியில் திரு எழில் வேந்தன் அவர்கள் அரும்பு இதழ்களைக் காட்டி அறிமுகப் படுத்தியதோடு எனது தொலைபேசிப் பேட்டியொன்றையும் ஒலிபரப்பினார்.
இந்த நேரத்தில் நான் இன்னொரு இங்கு குறிப்பிட வேண் டும். அரும்பில் வெளிவரும் கட்டுரை களையும், ஹாஸ்யத் துணுக்குகளையும் எமது அனுமதியின்றிப் பலர் பத்திரிகை களுக்கும் வானொலிச் சேவைகளுக்கும் தமது பெயரில் அனுப்பி வருகின்றனர். இதுவரை இத்தகைய பல உரிமை மீறல் கள் இடம்பெற்றுள்ளன. அரும்பில் வெளிவரும் ஜோக்குகளின் தமிழ் வடி வம் எம்முடையதே என்பதை யாரும் மறக்கக்கூடாது. இனிமேல் அப்படியான இலக்கியத் திருட்டுக்கள் இடம் பெற மாட்டா என நினைக்கின்றேன்.
எனவே "அரும்பு’ பல வகைகளி லும் வித்தியாசமான ஒரு வெளியீடு. இது ஒரு தனிமனித முயற்சி என்பதால் எவ் வளவு காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பது எப்போதும் ஒரு கேள்விக்குறி யாகவே இருக்கும். ப
அரும்பு - பழைய பிரதிகள் அரும்பு-3,19, 22,23, 24 ஆகிய இதழ்களின் பிரதிகள் மாத்திரமே கைவசம் உள்ளன.
47.

Page 26
(பொது அறிவுப் போட்டி இல : 24)
வாசகர்களே! பின்வரும் பத்து வினாக்களுக்குமுரிய சரியான விடைகளைத் திருத்தமாக ஒரு தாளில் எழுதிக் கடித உறையினுள் இட்டுத் தபாலில் அனுப்பி வையுங்கள். விடைத்தாளில் உங்கள் பெயர், முக வரி, மாணவராயின் பாடசாலை யின் பெயர் என்பவற்றை விபரமாக எழுதத் தவறாதீர்கள். எமது புதிய முகவரி பின்வருமாறு: EDITOR - ARUMBU' ROYAL COMPUTERS, 70, MAIN STREET, DHARGA TOWN - 12090. போட்டி முடிவுத் திகதி 2002.02.15
கீழே தரப்பட்டுள்ள அரும்பு சின்னத்தை , வெட்டி, விடைத் தாளில் ஒட்டி அனுப்பத் தவறாதீர் கள். இச்சின்னம் ஒட்டப்படாத விடைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
பத்து வினாக்களுக்கும் சரியான விடைகளை எழுதியனுப்பும் வாசகர் களுள் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்தெடுக் கப்படும் மூவருக்குப் பணப் பரிசுகள் வழங்கப்படும்.
முதற் பரிசு ரூபா 500.00
இரண்டாம் பரிசு ரூபா 250.00
மூன்றாம் பரிசு ரூபா 100.00
மேலும் 25 அதிர்ஷ்டசாலிகளின்
பெயர்கள் அரும்பில் பிரசுரிக்கப்படுவ தோடு அவர்களுக்கு அரும்பின் அடுத்த இதழ் இலவசமாக அனுப்பிவைக்கப்படும்,
வினாக்கள்:
1ஸிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயின்
முன்னைய பெயர் என்ன?
2. பொலீவியாவின் புதிய தலைநகரம்
எது? 3.நிவ்யோர்கின் வர்த்தக மற்றும் நிதிநிறு வனங்கள் அமைந்துள்ள தீவின் பெயர் யாது? f
4. தென்னரைக் கோளத்தில் தோன்றும் துருவ ஒளி என்ன பெயரால் அழைக்கப் படுகிறது?
5. இலங்கையின் தற்போதைய அரசியல் யாப்பு எந்த ஆண்டில் அமுலுக்கு வந்தது? 6. Plague என்னும் கொள்ளை நோயை உருவாக்கும் பற்றிரியாவின் பெயர் என்ன?
7. நெஸ்லே கம்பனி பொறுப்பேற்பதற்கு முன்னர் பொலன்னறுவையிலிருந்த கட் டிப்பால் தொழிற்சாலை என்ன வர்த்தகப் பெயரில் கட்டிப்பாலை உற்பத்திசெய்தது?
8. முகலாயப் பேரரசின் ஆரம்பகாலத் தலைநகர் எது?
9. ஆங்கிலம், ஹிப்ரூ உட்படப் பிற மொழி கள் பலவற்றுக்கு மொழிமாற்றம் செய்யப்
பட்டுள்ள “ஒரு புளியமரத்தின் கதை" என்ற தமிழ்நாவலை எழுதியவர் யார்?
10. அல்ஜீரிய - பிரெஞ்சு எழுத்தாளர் அல்பேஃ காமூ அவர்களுக்கு எந்த
ஆண்டில் நொபெல் பரிசு கிடைத்தது?
அடுத்த இதழ்
அரும்பு இதழ் - 26 எதிர்வரும் 2002 மார்ச் 01ம் திகதி வெளிவரும்.
அரும்பு-25
 

அரும்பு பொது அறிவுப் போட்டி - 23 சரியான விடைகளும் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகளும்
கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் பின்வருமாறு: 1. தைகிரீஸ் 2. நிவ்யோர்க் 3. ஸாஹிர் ஷா 4. இரண்டு பேர் 5. ஏந்தியுரு, பட்டடையுரு, சம்மட்டியுரு 6. 17வது 7. Lýlífl' L6öT 8. Daimler-Benz AG 9. 6mv6b6 IGLITri 9Glav6toT; 10. திமிங்கிலச் சுறா
இம்முறை நூற்றுக்கணக்கானோர் 10 விடைகளையும் சரியாக அனுப்பியிருந் தனர். அவர்களுள் அதிர்ஷ்டசாலிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மூவரினதும் விபரங்கள் பின்வருமாறு: 1th Urflagi (e5UIT 500): M.I.Ashiq Hassan, Paranawalawwatte, Mawanella . " 2hufflji (eIBLIT250): M.H.F. Shafna, Gampola Rod, Hijragama, Hemmathagama 3th Life, (eBust 100): A.S. Irsath, Nooraniya Rd, Meeravodai-04, Oddamavadi
இலவசமாக அரும்பு-25ஜப் பெறுகின்ற 25 பேரின் பெயர் விபரங்கள்:
T. M. Thanseel, Al-Hamra Village, Pallivasalthurai
M. Charmeendran, Wanaraja U.D.T.V., Dickoya A. S. M. Rikas, Keppetiya, Galewela F. Risana M. Thaha, Old Road, Hettiya Kanda, Beruwala S. A. S. Aneesa, Lane No. 9, J. P. Lane, Puttalam M. T. Rinas Mohamed, Mannar Road, Puttalam A. M. Niyas, Muruthagahamula M. I. M. Ramzy, Meegahamula, Atulugama, Bandaragama M. Fasily, Talduwa, Avissawella 10. M. F. Fathima Simana, Zahira College, Gampola 11. Aysha A. Rauf, Kurundugaha Ela, Akurana 12. M. M. Maleeha, Al-Minhaj National School, Hapugastalawa 13. M. R. M. Hafeel, Old Road, Mahagoda, Beruwala 14. M. M. Rihana, Al-Munawwara Rd, Akkaraipattu-04 15. Mrs. A. S. F. Razeeya, Kahira Muslim W., Hapugastalawa 16. Mumthaj A. Latheef, Mannar Road, Puttalam 17. A. S. M. Aslam, Pahalagorakaya Muslim V., Nawalapitiya 18. Ummu Kulzum Niyas, Manamboda, Ukuwela 19. M. M. Shaira Shireen, Boyagala, Kal-Eliya 20. M. M. F. Mafeeza, Minhath Mw., Thihariya, Kalagedihena 21. Munawwar Mohamed, Thunduwa, Bentota 22. F. Rashka Muslih, Omar Mihular Masjid Mw., Welligama 23. M. S. M. Nasri, Kovilanda, PanagamuvWa 24. M. M. Farhan, Madawakkulam M. M.V., Andigama 25. M. A. M. Imsiran, Kahatowita, Veyangoda.
அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!

Page 27
அரும்பு - 25
கேளிக்கை இன்
(Fun and மகிழ்ச்சியைப் பெறுவதற்க பயனங்கள், அரட்டைக் கச்சேரிக முதலியவற்றில் ஈடுபடுகிறார்கள் இறுக்கத்தைக் குறைக்கவும், பிரச்சி நேரம் மறந்திருக்கவும், சிரிக்கவும் து: எனினும் இவ்வாறு கிடைக்கும் கேள் மகிழ்ச்சிக்கும் இடையில் எவ்வித ச பலர் உணர்வதில்லை.
கேளிக்கை இன்பம் (fun) என் அனுபவிக்கும் ஒரு தற்காலிக உணர்வி தும் அந்த உணர்வும் கலைந்துவிடும். பட்டதல்ல. அது ஒரு செயற்பாட்டின் ஆழமானதும் உள்ளத்தில் நிலைபெ
கேளிக்கை இன்பங்களினூட எப்போதும் புதுப்புது வகைக் கேளி ஆனால் எதிலும் அவர்கள் உண்மை மாட்டார்கள்
நவீன சமூக அமைப்பிலே கவ நிறைந்த வாழ்க்கையே மகிழ்ச்சிகரம யிருக்கின்றனர். எனினும், இப்படியா விரக்தியையும், ஒழுக்கக் கேட்டையும் என்பது நிதர்சன உண்மையாகும்.
உண்மையான மகிழ்ச்சியைத் த அர்ப்பணிப்பும் உழைப்பும் தேவை வேதனைகளையும் எதிர்கொள்ளவே கத் தயங்குபவர்களுக்கு மகிழ்ச்சி ஒரு சமய ஈடுபாடு, குடும்ப வா மற்றும் தொழில் சாதனைகள், பொது சிகள் போன்றவை எமக்கு மெய்ய எனினும் கடும் முயற்சியும் உடற் கஷ் சாதிக்க முடியாது.
உண்மையான மகிழ்ச்சி என் முற்றிலும் வேறுபட்டது என்பதைப் விடுதலையைத் தேடித் தரும். அது உள்ளத்தையும் அர்த்தமற்ற செயலி கேளிக்கை இன்பங்கள் உண்மையான நாம் உணர்ந்துகொண்ட மறுகணமே (திருப்பம் ஏற்படுவதைக் கண்டு கொ
printed by a prints. .

AFILMELI - 25
IIJID IDÊjjju) Happiness) ாகப் பலர் சினிமா, TW உல்லாசப் ள், கேளிக்கை விளையாட்டுக்கள் ". இச்செயற்பாடுகள் எமது மன னைகளையும் கவலைகளையும் சற்று னைபுரிகின்றன என்பது உண்மையே, ரிக்கை இன்பத்துக்கும் உண்மையான சம்பந்தமுமில்லை என்பதை எம்மில்
பது ஒரு செயற்பாட்டின் போது நாம் பாகும். குறித்த செயற்பாடு முடிவுற்ற ஆனால், மகிழ்ச்சி என்பது அப்படிப் விளைவாகப் பின்னர் ஏற்படுகின்ற றுவதுமான ஒர் அனுபவமாகும்.
-ாக மகிழ்ச்சியைத் தேடுபவர்கள் க்கைகளைத் தேடி அலைகிறார்கள். யான மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள
லையற்ற, (care-free) கேளிக்கைகள் ானது என்ற மாயையில் பலர் மூழ்கி ன வாழ்க்கை மகிழ்ச்சிக்குப் பதிலாக p, பிரச்சினைகளையுமே ஏற்படுத்தும்
கரும் எந்தவொரு செயலுக்கும் கடும் பப்படும். அதில் கஷ்டங்களையும் ண்டியிருக்கும். வேதனை அனுபவிக் போதும் கிடைக்கப்போவதில்லை. ழ்க்கை, பிள்ளை வளர்ப்பு, கல்வி வப் பணிகள், சுய மேம்பாட்டு முயற் ான மகிழ்ச்சியைத் தரக்கூடியவை. டமும் இன்றி இவற்றை ஒருவரால்
து கேளிக்கை இன்பங்களிலிருந்து புரிந்துகொள்வது எமக்குப் பெரிய எமது நேரத்தையும், பணத்தையும், களிலிருந்து விடுதலை செய்யும். மகிழ்ச்சியைத் தரமாட்டா என்பதை எமது வாழ்க்கையில் புதியதொரு ள்வோம்.
station road. Dehiwala