கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிழக்கொளி 1995.07-09

Page 1
KIL.AKKOLI Quarterly. Published
 

ரக்/க7
ஆத - புரட்டாதி நிதி
by: Eastern University Employees' Union

Page 2
C2)
கட்டுரைகள் பக்கம்
* மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழங்கும் 03
பேச்சுத்தமிழ்
திருமதி நூமி வலன்ரினா பிரான்சிஸ் * ஜலபிதி
R 24
Dr. வி. சிவலிங்கம் * கிராமிய மூல வளங்களும் சுயதொழில்
திட்டமும் S
சே. சீவரத்தினம் * தமிழ் இலக்கியத்தில் ஆண்முதன்மைக்
கருத்துநிலை 28
சித்திரலேகா மெளனகுரு * பண்டைய இந்தியப் பல்கலைக்கழகங்கள் 8
FáFasavur aizvan LuaLuar * கவிதை பற்றியும் கவிதைகள் பற்றியும் 10
கவிதைகள்
* இலைகளும் கிளைகளும் வாய்பொத்திய
இரவில் ァ
ஆரையம்பதித, மலர்ச்செல்வன்
* பாட்டன்களும் பேரர்களும் 1
சி. சிவசேகரம்
sk stså Sousad-u I anpa 22
வாசுதேவன்
* மெளன ராத்திரிகள் 32
இளைய அப்துல்லாஹ்
* கவிதைகள் 40
S. கிரிதரன்
* சூனியம் 48
க. அன்பழகள்
* ஒரு மனோதத்துவப் பிரச்சனை 3
மலையாள மூலம் - கிளிரூர் ராதாகிருஷ்ணன் தமிழில் - வீ ஆனந்தன் * பிச்சை 33
க. கலைச்செல்வன் இவைதவிர குறுக்கெழுத்துப் போட்டி, கவிதைப்போட்டி, Eus Sports NeWS 6Tai Lussiab
 
 
 
 

தமிழ்மொழி எழுத்துவழக்கு, பேச்சுவழக்கு ஆகிய இரு வழக்குகளைக் கொண்டது. செம்மையான இலக்கண வரன்முறைக்கு உட்பட்டதாகவும், செந்நெறி உடையதாகவும், ஒருமைப்பாட்டினைப் பேணுவதாகவும் எழுத்து வழக்கு பெரும்பாலும் அமையும். இதனால் எல்லாவிடங்களிலும் எழுத்து வழக்கு ஒரேதன்மையுடையதாகின்றது.
ஆனால், பேச்சு வழக்கு அவ்வாறனதல்ல. பேச்சு வழக்கு பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடும். பேசுகின்ற நபர், இடம் பேசப்படுகின்ற பொருள், காலம், கலாசாரம், பண்பாடு என்னும் பல்வேறு காரணிகளுக்கேற்ப வேறுபடும். இவ்வழக்கு, பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுவதோடு பிரதேசத்திற்குள்ளேயும் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.
ஒரு பிரதேசத்தில் வழங்கும் பேச்சுமொழியினைக் கொண்டு அப் பிரதேசத்து மக்களுடைய சமூக - மானிடவியல் மற்றும் வரலாற்றுப் போக்கு, பண்பாட்டுப் பேணல், வாழ்க்கை நெறிகள் என்பவற்றை அறியலாம். இதனால் பேச்சு வழக்கு பற்றிய ஆய்வு முக்கியத்துவமுடையதாகின்றது. இந்த அடிப்படையிலேயே மட்டக்களப்பு பிரதேசத்தில் வழங்கும் பேச்சுத் தமிழ் பற்றிய ஆய்வும் முக்கியத்துவமுடையதாகின்றது.
இந்த விடயம் ஆழமாக நோக்கப்பட வேண்டியதொன்றாகும். சஞ்சிகைத் தேவை, அதன் வரையறை என்பனவற்றைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்புப் பிரதேசத்தின் பேச்சுத் தமிழ் பற்றியும் அது எவ்வெவ் வகைகளில் ஏனைய பிரதேசங்களில் வழங்கும் பேச்சுத் தமிழிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமாகத் திகழ்கின்றது என்பது பற்றியும் முக்கியமாக இனங்காணப்பட வேண்டிய கூறுகளை சுருக்கமாகக் கூற முற்படுகின்றது.
இவ்விடயத்தினை மூன்று பகுதிகளாக்கி நோக்கலாம்.
1.மட்டக்களப்புப் பிரதேசத்தின் அமைவிடம், அதன் வரலாறு, இங்கு மேற்கொள்ளப்படும் பாரம்பரியத்தொழில்கள் என்பன பற்றிய விபரங்கள்
2.பாரம்பரியத் தொழில் தொடர்பாகவும் சமூக - சமயச் சடங்குகளினடியாகவும் வழங்குகின்ற பேச்சு வழக்குச் சொற்கள் (வரையறுக்கப்பட்டவை)
3.மட்டக்களப்புப் பிரதேசத்தில் பிரத்தியேகமான வழக்கிலுள்ள சில பேச்சுவழக்குச் சொற்கள் என்பன அவையாகும்.
அமைவிடம்: ஈழத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள மட்டக்களப்புப் பிரதேசம், அதன் வடக்கு எல்லையாக வெருகல் ஆற்றினையும், தெற்கே துறைநீலாவணையினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும், மேற்கே பொலநறுவை மாவட்டத்தினையும்
3路
i
Gs)

Page 3
G4)
கொண்டுள்ளது. இப்பிரதேசம், சுமார் 2632.7 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும், ஏறத்தாழ 4 இலட்சத்து 35 ஆயிரம் மக்கட் தொகையினரையும் கொண்டது. இப்பிரதேசத்தின் தலைநகராகிய மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கு நோக்கி 30 மைல் நீளமான வாவி ஒன்றுள்ளது. பெயர்க் காரணம்: மட்டக்களப்பு என்னும் பெயர் வந்தமை பற்றிப் பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. இவற்றுள் மூன்று விளக்கங்களை மட்டும் இங்கு நோக்கிச் செல்லலாம்.
1.களப்பு என்னும் பதம் ஆழமற்ற கடலேரி எனவும் பொருள் தருவதால், மட்டமான கடலேறி அல்லது உப்பாறு எனப் பொருள் தரக் தக்கதாய் 'மட்டக்களப்பு' என்னும் பெயர் அமைந்தது என்பது (ஆதாரம்: நடராசா.FXC தொகுப்பாசிரியர் 'மட்டக்களப்பு மான்மியம்')
2. மட்டக்களப்பு வாவியின் மேற்குப் பகுதியிலுள்ள மரச் சோலைகளிலிருந்து மட்டு (தேன்) வழிந்தோடி களப்பில் (வாவி) கலந்ததால், அவ்வாவி மட்டுக்கலப்பு எனப் பெயர் பெற்றது. மட்டுக்கலப்பு என்பது காலப்போக்கில் திரிபடைந்து மட்டக்களப்பு என ஆயிற்று. (கந்தையாVC மட்டக்களப்புத் தமிழகம்)
3.மட்டக்களப்பு என்னும் பெயர் 'மடகளப்புவ (சேறு நிறைந்த நீர்நிலை) என்னும் சிங்களச் சொல்லின் திரிபாக வந்தது.
மேற்குறிப்பிடப்பட்ட மூன்று கருத்துக்களுள்ளும் 'மட்டமான சதுப்பேரி எனப் பொருள்தரும் வகையிலேயே மட்டக்களப்பு பெயர் பெற்றதென்பதை ஆய்வாளர் பலர் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 'மட்ட அல்லது 'மட்டு' களப்பு' என்னும் தமிழ்ச் சொற்களாலேயே இப்பெயர் ஆக்கம் பெற்றுள்ளதேயன்றி, மேற்குறித்தபடி சிங்களச் சொல்லின் திரிபல்ல என கலாநிதி.இ.பாலசுந்தரம் கூறுவார். (பாலசுந்தரம்.இ, ஈழத்து நாட்டார் பாட்டுகள்: 1979:பக்:30)
வரலாறு: ஒரு பிரதேசத்தினுடைய வரலாறு அப் பிரதேசத்தினுடைய இயங்குநிலையை நிர்ணயிக்கின்றது. குறித்த பிரதேசத்தின் மொழி வழக்கு பற்றி நோக்குகையில் அப்பிரதேசத்தின் வரலாறு குறித்தும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பேச்சு வழக்கின் உருவாக்கம், உருமாற்றம், அதனைப் பாதுகாத்தல், அதன் அழிவு போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு அக்குறித்த பிரதேசத்தின் வரலாறு காரணமாக அமைகின்றது. இவ்வடிப்படையில் மட்டக்களப்புப் பிரதேசத்துத் தமிழ்பேசும் மக்களது வரலாறு குறித்து நோக்கலாம்.
1.வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இங்கு தமிழ் மக்கள் வாழ்ந்ததாக இராமாயணசமூகம்' எனும்நூலின் ஆசிரியர்கூறுகின்றமை.

2. விஜயன் என்னும் முதற்சிங்கள மன்னன் (கி.மு.540) மதுரையிலிருந்து சில தமிழ்க் குடும்பங்களை வரவழைத்து, அவர்களுட் சிலரை மட்டக்களப்பின் எல்லைப் புறங்களிற் குடியேற்றியதாக மகாவம்சம் கூறுகின்றமை,
3.சிலப்பதிகார காலத்தில் சேரன் செங்குட்டுவனின் அழைப்பின் பேரில் கண்ணகி விழாவிற் கலந்து கொண்ட இலங்கை மன்னன் 1ம் கஜபாகுஇலங்கைக்குத்திரும்புகையில் சேரநாட்டு மக்கள் சிலரைத் தன்னுடன் அழைத்து வந்தமையும், அவர்களுட் சிலர் மட்டக்களப்பிற்குடியேற்றப்பட்டமையும்
4.சேரநாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற இலங்கை மன்னன் 2ம் கஜபாகு 1200 தமிழர்களைச் சிறைப்பிடித்துக் கொணர்ந்தமையும், அவர்களுட் சிலர் மட்டக்களப்பிற் குடியேற்றப்பட்டமையும்.
இத்தகைய விபரங்களுடன், இப்பிரதேசம் வரலாற்றுரீதியாக பல்வேறு மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தமை பற்றியும் இவ்விடத்திற்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.
தமிழ் மன்னர்களின் தனி ஆட்சியின் பின் இப்பிரதேசம் உருகுணைச் சிங்கள மன்னரின் ஆட்சிப் பகுதியின் ஒரு பிரிவாக இணைக்கப்பட்டு, அவர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களால் ஆளப்பட்டது. கி.பி.8ம் நூற்றாண்டில் அநுராதபுரியைத் தலைநகராகக் கொண்ட இராசரட்டை இராச்சியத்துடன் 2ம் மகிந்தனால் இப்பிரதேசம் (முன்னைய எல்லைப் பரப்பை அடிப்படையாகக் கொண்ட பகுதி) இணைக்கப்பட்டது. பின்னர் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக ஈழம் இணைக்கப்பட்டபோது (கி.பி. 1017-1070) இப்பிரதேசமும் சோழ நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. பின்னர், கண்டிச் சிங்கள மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அதன் பின்னர், ஐரோப்பியர்களான போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் இலங்கையைக் கைப்பற்றித் தமது ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்ந்த போது இப்பிரதேசமும் அத்தகையோரின் ஆளுகைக்கு உட்பட்டது.
இத்துடன், வணிக நோக்கின் பொருட்டு இலங்கைக்கு வந்த அராபியர்களின் வழித் தோன்றல்களான முஸ்லீம் மக்களின் வரலாறு குறித்தும் குறிப்பிட வேண்டும். மட்டக்களப்புப் பிரதேச எல்லையுள் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை (மேற்குப் பகுதி), மீராவோடை, மாவடிச்சேனை ஆகிய பகுதிகளில் சிறப்பாகவும் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கும் முஸ்லீம்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற வகையில் (மதத்தாலும், பண்பாட்டாலும் வேறுபட்டிருந்தாலும்) மட்டக்களப்பு வழக்குத் தமிழிற் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளனர். கி.மு.2ம் நூற்றாண்டு தொடக்கம் அராபியர்கள்
G5)

Page 4
G6)
இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகொண்டிருந்தரெனவும், கி.பி.7ம் நூற்றாண்டில் இலங்கையில் அரபு முஸ்லீம்களின் குடியேற்றம் இடம் பெற்றதாகவும், போத்துக்கேயரதும், ஒல்லாந்தரதும் ஆட்சிக் காலங்களில் புத்தளத்திலும் மற்றும் இலங்கையின் தென் பகுதியிலும்
மேற்குப் பகுதியிலும் இருந்த முஸ்லீம்கள் பலர் கண்டிக்கூடாகக்
கிழக்கிலங்கையில் குடியேற்றப்பட்டதாகவும் அத்துடன் மட்டக்களப்பின் ஆதிக்குடிகளான மக்குவக் குடியினருக்கும் முஸ்லீம்களுக்குமிடையே திருமணங்களும் இடம் பெற்றதாகவும் அறியமுடிகிறது. w
இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் நோக்கும் போது அவ்வக் காலத்து அரசியல், சமூக, பொருளாதார, சமய, பண்பாட்டு அம்சங்கள் தவிர்க்க முடியாதவாறு மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலும் தமது
பாதிப்பினைச் செலுத்தியமை தெரிய வரும்.
பாரம்பரியத் தொழில்கள்: மட்டக்களப்புப் பிரதேச மக்களது பாரம்பரியத் தொழில்களுள் மிக முக்கியமானவை விவசாயமும் மீன்பிடியுமே. இவ்விரு தொழில்களுக்கும் உகந்த அமைவிட வளப் பொருத்தப்பாடுகளே, இவ்விரு தொழில்களும் இங்கு சிறப்புப் பெறுவதற்கான காரணங்களெனலாம். சில நெருக்கடிகள்
இடையிடையே தோன்றினாலும் கூட இன்று வரை இவை தம்
முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. ஏனைய தொழில்கள் பலவும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவெனினும், மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்ச் சொற்களைக் கருவூலமாகக் கொண்டு இன்றும் அவற்றை மெருகு குறையாத வகையிலும் -பெரும்பாலும் கூட இவ்விரு தொழில்களும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
பகுதி2 அ)விவசாயம், மீன்பிடித் தொழில் தொடர்பாகவும் ஆ) சமூக-சமயச் சடங்குகள் தொடர்பாகவும் இ) தம் அன்றாட வாழ்வில் சரளமாகவும்
மட்டக்களப்புப் பிரதேச மக்கள் பயன்படுத்துகின்ற பேச்சுத் தமிழ்ச் சொற்கள் (வரையறக்கப்பட்டவை) அ) விவசாயம், மீன்படித் தொழில் தொடர்பான பேச்சுத் தமிழ்ச் சொற்கள்: விவசாயம்: இப்பிரதேச மக்களின் மிக முக்கியமான பாரம்பரியத் தொழிலும், ஜீவனோபாயத் தொழிலும் விவசாயமேயாதலால், அதனுடன் தொடர்புடைய நிலமானிய சமுதாய அமைப்பு இங்கு நிலவி வந்துள்ளது. இம்மாவட்டத்தின் பிரதான விவசாயம் பயிர் தொடர்ச்சி பக்கம் 41 இல்

ஒரு சனமுமில்லை தெருவில் தூரத்தில் இரண்டுமுன்று கட்டாக்காலி மாடுகளைத் தவிர எங்கும் நிலா ஒளியை பாய்ச்சுகிறது குண்டூசி விழுந்தாலும் எடுக்கலாம். நாய்கள் மட்டும் உறைந்துபோன மெளனத்தினை துயில் எழுப்பின.
எப்படியிருந்த ஊர் தெரியுமா! நேற்றிலிருந்து இதன்முகம் வேறு காற்றும் இலைகளும் வாய்பொத்தி ஒருபூனையும் "மியாவ்' என்க. அஞ்சுகிற இரவிது.
ஆறுமணிக்குப் பின் வெளியில் வருவது பூச்சியாயினும் அது சுடப்படும்.
எனக்கின்று நித்திரை வரவில்லை புழுக்கமும் அவிச்சலும் நேற்றைக்கு முன்பு என்றால் கண்ணகி அம்மன் வம்மிமர குருத்து மணலில் அலுப்புப் போகப் படுத்துறங்கி புழுக்கமும் அவிச்சலும் விலக வீடு செல்வேன்.
நானும் மதியும் நன்கு இருட்டுப் பட்டயிரவில் காளிகோவில் ரோட்டால் 'சைக்கிளை உருட்டி உருட்டி கதைத்துச் சிரித்து வருவது இனி எப்ப?
ஆரையம்பதி த.மலர்ச்செல்வன். (கிழக்குப் பல்கலைக் கழகம்)

Page 5
கில்வியின் மகத்துவத்தை இந்தியர்கள் பண்டைக்காலம் முதல் அறிந்திருந்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆயிரக்கணக்கான பழமொழிகள் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் உண்டு. அத்துடன், கல்வி கற்பது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கட்டாயக் கடமை என்றும், கல்வியே மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்துகின்றது என்றும் அறிந்திருந்தனர்.
ஐரோப்பாவில், கல்வி என்ற சிந்தனை தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவையாக தட்சசீலம், நளாந்தா, விக்ரமசீலம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைந்திருந்த பல்கலைக் கழகங்களைக் குறிப்பிடலாம். இவற்றில், மிகவும் பழமையானது தட்சசீலப் பல்கலைக்கழகமாகும். இது, இன்றைய பாகிஸ்தானின் பெசாவர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
இப்பல்கலைக்கழகம், புத்தர் பெருமான் வாழ்ந்த காலமாகிய கி.மு.ம்ெ நூற்றாண்டில் பெரும் பேரும், புகழும் பெற்று விளங்கியது. இதன் கல்வி நிலை பற்றிய விபரங்களை புத்தஜாதகக்கதைகள் மூலம் அறியலாம். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால்இருந்து மாணவர்கள் வந்து கல்விகற்றனர். பலநாட்டு அரசகுமாரர்களும் கல்விபயின்றனர். பல அறிஞர்களும், சகலகலாவிற்பன்னர்களும் இங்கு கல்விகற்பித்தனர். 'புனர்வசு அந்திரேயா என்ற புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியரும் இங்கு கற்பித்துள்ளார். இப்பல்கலைக்கழகத்தில், மிகச் சிறந்த பாடத் திட்டம் அமுலில் இருந்தது. இங்கு நியாயம், சங்கீதம், புராணம், வைத்தியம், இதிகாசம், அரசரீதி, பாம்புகள் பற்றிய அறிவுநூல், மாயாஜாலம் என்பன கற்பிக்கப்பட்டன. வறிய மாணவர்களுக்குஇங்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. கல்வி கற்று முடிந்தபின் இவ்வளவுதான் குருதட்சணை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. மாணவர்கள் தங்களால் இயன்றதைக் கொடுக்கலாம்.
தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் வடமொழி இலக்கண ஆசிரியனும், அட்டத்தியாயி என்ற இலக்கண நூலின் ஆசிரியனுமான பாணினி அர்த்தசாஸ்திரம் எழுதிய இராஜதந்திரி கெளடில்யர் (சாணக்கியன்), பிம்பசார மன்னர் காலத்தில் (கி.மு. 525-500) புகழ் பெற்ற மருத்துவரும், புத்தரின் மருத்துவருமான ஜீவகன் ஆகியோர் கல்வி கற்றனர் என்பதை புராதனநூல்களில் உள்ள குறிப்புகளால் அறியலாம்.
பாடலிபுரத்திலிருந்து 55மைல் தூரத்தில்நளாந்தாப்பல்கலைக்கழகம் அமைந்திருந்தது. அழகான ஆறுமாடிக் கட்டிடத்தில் அமைந்திருந்த இப் பல்கலைக் கழகத்தில், பத்தாயிரம் மாணவர்களும் ஆயிரம் ஆசிரியர்களும் தங்கியிருந்தனர். வேதாந்தம், சாவான சாஸ்திரம், சதுர்வேதம், உபநிடதங்கள் ஆகிய விடயங்கள் கற்பிக்கப்பட்டன. குலபதி, பண்டிதன், வித்தியா விபூஷணன் ஆகிய பட்டங்களை இப்
பல்கலைக் கழகம் வழங்கியது. செல்வந்தர்களின் உதவியும்,

அரசர்களின் ஆதரவும் நளாந்தா பல்கலைக்கழகத்திற்கு இருந்தது.
நளாந்தாவிலிருந்து 15மைல் தூரத்தில் விக்ரமசீலப் பல்கலைக்கழகம் அமைந்திருந்தது. இதுவும் அழகான மணிமண்டபங்களால் ஆனது. நளாந்தாவும், விக்ரமசீலமும் ஒரே நிருவாகத்தின் கீழ் இருந்தன. ஆசிரியர்கள் பலர், இரண்டு பல்கலைக் கழகங்களிலும் மாறிமாறிக் கற்பித்தார்கள். ஆய்வு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு விசித்திரமான முறை கடைப்பிடிக்கப்பட்டது. பல்கலைக்கழக கோபுர வாசலில் பண்டிதர்கள் காவல் நிற்பார்கள். பல்கலைக் கழக பிரவேசத்திற்கு வரும் மாணவர்களிடம் கடினம்ான கேள்விகளைத் தொடுப்பார்கள். இதில் சித்தியடைந்தவர்களுக்கு பல்கலைக் கழகப் பிரவேசம் கிடைக்கும். சிற்பம், நாட்டியம், சங்கீதம் ஆகிய நுண்கலைகளைக் கற்பிக்கும் கலைக்கூடங்கள் காஞ்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகியஇடங்களில்இருந்தது. பல்லவர்காலத்து காஞ்சிக் கோயில் சிற்பங்களும், மகாபலிபுரத்தில் உள்ள சப்ததூபங்களும், ஒற்றைக் கல்லில் செதுக்கியுள்ள ரதமும் சிற்பக்கலையில் இந்தியா அடைந்த உச்சங்களையும், இக்கலாசாலைகளின் திறமையையும் பறைசாற்றுகின்றன. காஞ்சிபுரத்தில் பாட்டு, நாட்டியம் கற்பிற்பதற்கான பாடசாலைகள் இருந்தாலும், தஞ்சாவூரிலும், கும்பகோணத்திலும் சங்கீதக்கலைக்கூடங்கள் இருந்தன. ・ ">
பண்டைய இந்தியப் பல்கலைக் கழகங்களில், மாணவர்கள் சதா படித்துக் கொண்டே இருக்கவில்லை. ஆய்வுகளிலும் சிரத்தை காட்டினார்கள். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக் கொணர்வதற்குரிய சந்தர்ப்பங்கள் அங்குநிறைய இருந்தன. இவ்வகைத் தன்மைகளைக் கொண்ட பல்கலைக் கழகங்கள், 169 நூற்றாண்டுக்கு முன் இந்தியாவில் இருந்ததை நாம் அறிந்து கொள்ளலாம். இது அறிய வேண்டியதும், ஆச்சரியத்திற்குரியதுமான ஒரு விடயமாகும்.
செல்வி. சசிகலா சுப்பையா 2ம் வருடம், வர்த்தக முகாமைத்துவபீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்
எவ்விதமான காகிதாதிகள், புத்தகங்கள், சஞ்சிகைகளுக்கும்
O O சக்தி நூல் நிலையம்
53, திருமலை வீதி, மட்டக்களப்பு.

Page 6
G10)
கவிதை என்றால் என்ன என்பது வடிவஞ் சார்ந்த ஒரு பிரச்சினையாகவே மரபுவாதிகளால் கருதப்பட்டு வந்ததை நாமறிவோம். செய்யுளுக்கு உகந்தனவாக மரபு அடையாளங் கண்ட வடிவங்களில் எழுதப்பட்டு அவற்றுக்குரிய யாப்பு விதிகளை மீறாத ஆக்கங்களே கவிதைகளாக ஏற்கப்பட்டன. காலத்தையொட்டித் தமிழ்ச் செய்யுளின் வடிவம் விருத்தி பெற்று வந்ததை மரபுவாதிகள் கணிப்பிலெடுத்தாலும் இவ்வாறான மாற்றங்கள் சமகாலத்திற்கும் பொருந்துமென்று அவர்கள் ஏற்க ஆயத்தமாக இல்லை. ஒசைநயம் என்பது மரபினால் அடையாளங் காணப்பட்ட எதுகை, மோனை மற்றுஞ் சந்த ஒழுங்கு தொடர்பான யாப்பு விதிகட்குட்பட்ட ஒன்றாகவே இன்னமும் மரபுவாதிகளாற் கருதப்படுகிறது.
அதேவேளை மரபை அறியாமையே புதுக்கவிதையாளர்க்குரிய ஒரே தகுதி என்ற மனோபாவம் சில புதுக்கவிதையாளரிடமும் விமர்சகர்களிடமும் காணப்படுகிறது. புதுக்கவிதைக்கு ஒசைநயம் அவசியமில்லை என்ற வாதமும் மரபுசார்ந்த அலங்காரப் பண்புகள் கவிதைக்கு வேண்டாதவை என்ற வாதமும் புதுக்கவிதை என்பது மரபுக் கவிதை என்பதன் எதிர்ச்சொல் என்ற நிலைப்பாட்டினின்று தான் பிறந்தனவோ தெரியவில்லை. மரபுசார்ந்த கவிதையையும் சீரான சந்த அமைப்பையுடைய கவிதையையும் சமகாலத்துக்கு ஒவ்வாதன என்று கருதுவோரும் உள்ளனர். அண்மைக் காலத்தில் முருகையன் எழுதிய கவிதைகள் யாவும் வெறும் சொல்லடுக்குகள் என்று ஒருவர் நிராகரித்து எழுதியிருந்தார். முருகையன் கவிஞரே இல்லை என்றும் யாரோ ஒருவர் பேசியதாக செய்தி பிரசுரமாயிருந்தது. இங்கே வெறும் அரசியற் கருத்து வேறுபாடு விமர்சகரால் கவித்துவத்தைக் காணமுடியாமல் மறிக்கிறது. வடிவத்தின் அடிப்படையில் கவிதையை நிராகரிப்பதாயின் தீவிர மரபுவாதிகள் சண்முகம் சிவலிங்கத்தை நிராகரிக்க இயல்வது போல மரபின் மறுப்பாளர்கள் மகாகவியையும் நிராகரிக்க இயல வேண்டும்.
எவர் என்ன சொன்னாலும், நமக்கு இன்று அந்நியப்பட்டுப்போன ஒரு மொழியான சங்ககாலத் தமிழில் உள்ள கவிதைகள் தமிழ்க் கவிதையின் ஒரு உச்சநிலையைக் குறிக்கின்றன. தமிழ்க் கவிதை பற்றிப் பேசுவோர் சங்கக்கவிதைகளைக் குறிப்பிடாமல் ஒரு முழுமையான சித்திரத்தை வரையமுடியாது. சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் நிராகரிப்பது சிலருக்குப் புரட்சிகரமானதாகத் தோன்றலாம். ஆயினும் பாமரத்தன்மை புரட்சியாகி விடாது.
இன்றுங்கூட பாரதியின் மரபுசார்ந்த கவிதைகளின் வேகமும் வீச்சும்
மிக அருமையாகவே புதுக்கவிதையாளர்களால் எட்டப்பட்டுள்ளது. மரபுக் கவிதை என்றால் வெறும் கட்டுப்பெட்டித்தனம் என்று கருதுகிறவர்கள் மரபுக்கும் நவீனத்துக்குமிடையிலான உறவை உணராதவர்கள். மரபுடனான முறிவுபூரணமான முறிவாகவே இருக்க

அவசியமில்லை. புதியது ஒரு திசை மாற்றத்தைக் குறிக்கிறது. அதற்காக அது பழையதன் நல்ல பண்புகளை எல்லாந்தூர எறிந்து விடாது. மரபுக் கவிதையின் சில பண்புகளைப் புதுக்கவிதையில் பயன்படுத்தும் நல்ல கவிஞர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மரபுசாராத கவிஞர்கூட மரபை அறிந்திருப்பது அவரது படைப்பிற்கு வலுவூட்டும் என்பது என் மதிப்பீடு.
புதுக்கவிதையின் வருகைதமிழ்க்கவிதைக்குச் சாத்தியமான கவிதை வடிவங்களின் எண்ணிக்கையை எல்லையின்றிவிஸ்தரித்தது. இதன் விளைவான கட்டற்ற தெரிவு புதுக்கவிதையின் வருகைக்கு முன் இருந்த தெரிவை உள்ளடக்கக்கூடாது என்பது மெய்யாகஇன்னொரு வகையான கட்டுப்பெட்டித்தனந்தான்.
பாட்டனாரின் பேரர்கள்
பாட்டனாரின் விட்டுக்குட் படியேறி எல்லாரும் அடிவைக்க முடியாதாம். வைக்கிறபேர் அனைவருமே அமருமென்று சொல்லாமல் உட்கார முடியாதாம் அமர்வதற்குத் தகுதியிலார் கைகட்டித் தம்தோளிற் துணிகழற்றி நிற்பாராம்.
பாட்டனார் வளவுக்குட் கண்ட நின்ற பேரெல்லாம் கால்பதிக்க முடியாதாம் வரத்தகுந்த பேரெல்லாம் முன்படலை வழியாக உள் நுழைய முடியாதாம் பின்படலை வழிவருவோர் குரல்கொடுத்து உத்தரவு பெற்றாற்தான் வரலாமாம்
பாட்டனார் வாழுகின்ற தெருவழியே சத்தமாய்ச் சிரிப்பதற்கும் முடியாதாம் சாவிடு என்றாலும் பாட்டனார் காதுபடப் பறையொலிக்க முடியாதாம் விதிவழி பாட்டனார் வருகையிலே எல்லோரும் வழிவிலகி நிற்பாராம்.
GD

Page 7
yr
Simply the best for Quality - Style - Service
23 TrinCO ROad Batticaloa Teles Fax: 065 - 2491
பாட்டனார் செத்துப்போய் பலகாலம் இப்போது ஊர்சனங்களெல்லோரும் போய்வருவார் தெருவழியே. வாகனங்கள் விரைந்தோடும் வாலிபங்கள் விசிலடிக்கும் வாசல்வரை வருவோரை வழிமறிக்க இயலாது. விட்டுக்குள் நுழைவோரின் சாதிகுலந்தெரியாது. பணிந்திருந்த சாதியினர் பயமின்றித் திரிகின்றார். போட்டிருந்த சட்டங்கள் காற்றோடு தூசாச்சு. ஆண்டிருந்த பரம்பரையின் அதிகாரங் குறைவாச்சு. பாட்டனார் குலப்பெருமை பழங்கதையாய்ப் போயாச்சு.
பேரர்களின் சந்திப்பிற் பாட்டன்மார் காலத்துப் பழங்கதைகள் பேசிடுவார். போயொழிந்து காலத்தின் மேன்மைகளைக் கீர்த்திகளை மீட்டுமிக மனம் நெகிழ்வார் சுற்றிவரும் வரலாற்றின் பொற்காலம் மீளுமெனத் தேற்றி தம்வழி பிரிவார்.
அயல்மண்ணில் அனைவருமே
அகதியாய் வாழ்ந்தாலும் கரியவராய் அந்நியராய்க் கழித்தொகுக்கப் பட்டாலும் பாட்டனார் இருக்கின்றார் பழங்கள்ளின் போதை தர.
சி.சிவசேகரம்
நன்றியுடன் ஏகலைவபூமியிலிருந்து

Dafi பன்னிரெண்டரை ஆகிறது. மனநோய் வைத்தியர் டயறியைப் பார்த்தார். நாலு 'அப்பொயின்மன்ட்'தான் இன்றுள்ளது. ஆனால் ஏனோ இதுவரை யாரும் வரவில்லை. நகரத்திலே மிகவும் பிரபலமான, பிஸியான மனநோய் வைத்தியர் அவர். சஞ்சிகைகளில் அவர் எழுதும் உளவியல் கட்டுரைகளை வாசியாதவர் எவரும் இல்லை. அதிகமான உளவியல் நூல்களை எழுதி, கேரளத்திற்கு சமர்ப்பித்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது என்றாலும் இன்றுபோல் ஒருநாளும் இவ்வளவு நேரம் ஒன்றும் செய்யாமல் வெறுமனே.
சேச்சே!
அவர் மிகவும் அலுத்து விட்டார். திடீரென அவருடைய கதவுச்சீலை விலகியது. இரண்டு முகங்கள் தோன்றின. அத்தோடு ஓர் அந்நியத்தன்மை கூடிய குளிர்காற்றும் உள்ளே வந்தது. ஒரு சோகப் பாடலின் இரண்டடிகளை மெல்லிய குரலில் பாடுவது கேட்பது போல் தோன்றியது. அவருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. காலம் தாழ்த்தியாவது வந்து விட்டார்கள் அல்லவா! 'யெஸ் கமின். ஏன் இவ்வளவு லேட்?" அவர்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆணும் முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணும். தடித்த குட்டையான பெண். மெலிந்த உயரமான ஆண், மொத்தத்தில் பொருத்தமில்லாத ஒரு சோடி பிரச்சனையும் அதுவாகத்தான் இருக்கும். தாம்பத்தியத்திலும் பொருத்தமின்மை.
இருவரும் அறைக்குள் வந்தார்கள். மிதந்து வருவது போலிருந்தது அவர்கள் வரவு. நாட்டிய அபிநயங்கள் போல அவர்களின் அங்க அசைவுகள் இருந்ததை அவரால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. ஒருவேளை இவர்கள் நாட்டியக்காரர்களாகக் கூட இருக்கலாம் அல்லவா? யார் நோயாளியாக இருப்பார் என்பதை அவரால் அனுமானிக்க முடியவில்லை. இரண்டுபேருமே ஒரேவிதமாக அதிர்ச்சி அடைந்தவர்கள் போல் காணப்பட்டார்கள். அவர்களுடைய பார்வைகள் ஒரே இடத்தில் நிலைத்து நிற்காமல் அறை முழுவதும் அலைந்தன. 'இருங்கள்'
அவர்கள் இருந்தார்கள்.
G13)s

Page 8
இப்போது மனநோய் வைத்தியருக்கு திருப்தியாக இருந்தது. காணாமல் போன பொம்மையைக் கண்டெடுத்த குழந்தையைப் போல் சந்தோசமாக இருந்தார். 'சரி என்ன உங்களுடைய பிரச்சனை?" உடனே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வை ஒருவர்மீது ஒருவர் குற்றம் சுமத்துவதாக இருந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்த இருவரும் ஒன்றும் சொல்லாமல் தங்கள் கைகளினால் முகத்தை மூடிக் கொண்டார்கள். இருவருடைய செய்கையும் ஒன்று போலே இருந்தது, அவருக்குப் புதுமையாக இருந்தது. புதுமையான ஒரு கேஸாக இருக்கும் என்று அவர் அனுமானித்துக் கொண்டு மிகவும் சிநேகயூர்வமான பார்வையுடன் அந்த ஆணை நோக்கி, "நீங்கள் கொஞ்ச நேரம் வெளியில் இருங்கள். நான் கொஞ்சம் இவருடன் கதைக்க வேண்டும்' என்றார். அந்த ஆண் ஒரு கீழ்ப்பணிவுள்ள மாணவனைப் போல அவ்விடத்தை விட்டுச் சென்றார். இப்போதும் நிலத்தில் கால்படாமல் மிதந்து செல்வது போலே
அவருக்குத் தோன்றியது. அவர் போவதையே பார்த்துக்
கொண்டிருந்த பெண்ணை, அவள் அறியாமலே மனநோய் வைத்தியர் கவனித்தார். 'இனிச் சொல்லுங்கள். என்ன உங்களுடைய பிரச்சனை? என்னவாக இருந்தாலும் அதற்குப் பரிகாரம் உண்டு. தைரியமாகச் சொல்லுங்கள்'. மனநோய் வைத்தியர் தனது வழமையான சீட்டை இறக்கி விளையாட்டை ஆரம்பித்தார். அந்தப் பெண் ஏதோ யோசனையில் இருந்தாள். பிறகு சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, தலையைக் கொஞ்சம் முன்னுக்கு நீட்டி, குரலை மிகவும் தாழ்த்தி இரகசியம் போலச் சொன்னாள்.
グキ
கிழக்கொளியின் நற்பணிக்கு வாழ்த்துக் கூறும்
CITY MEDICALS
Batticaloa

'விஷம் அப்பம்'
'ம் விஷம் அப்பம்"
'விளக்கமாகச் சொல்லுங்கள்.' 'பாம்பின்ர விஷம் இருட்டில் மினுமினுக்கும் கண்டிருக்கிறீர்களா? நான் கண்டிருக்கிறேன். விஷம் அப்பம்" "எங்கே எப்போது கண்டீர்கள்?" 'கனவில் கோட்டப்புரத்தம்ம எனக்குக் காட்டித் தந்திருக்கிறாள்; அவள் இருக்கிறாள் அல்லவா அந்தத் தேவடியாள் அவள் என்ட புருஷனுக்கு விஷம் கொடுத்து.' மனநோய் வைத்தியருக்கு இப்போது விளங்கி விட்டது. நோயாளி இவள்தான். புருஷன் வேறு ஒரு பெண்ணுடன் கொண்டுள்ள கள்ளத் தொடர்புதான் இவளை மனநோயாளி ஆக்கியது. வைத்தியம் அவ்வளவு பிரச்சனை இல்லை. சிலவேளை கவுன்சலிங்' மூலமே சுகப்படுத்தி விடலாம்.
"என்ன உங்களுடைய பேர்?"
"தேவு. தேவகி"
"நல்லபேர். கணவனுடைய பேர்?"
"சுகுமாரன்' 'இடையில் ஒரு பெண்ணைப் பற்றிச்சொன்னீர்களே,யார் அவள்?" 'அவளா?! விசாலாட்சி. இராட்சசி. அடுத்த வீட்டிலிருந்து கொண்டு கண்ணும் கையும் காட்டி என்ட சுகுமாரனை வசியப்படுத்திப் போட்டாள். அதுவும் போதாதென்று விஷமும் கொடுத்து.' "அப்படியா. பிறகு?" r 'சுகுமாரன் என்னை வெறுத்துவிட்டு அவள் நினைவாகவே இருந்தார். நான் மனம் பொறுக்க முடியாமல் என்ட தெய்வம் கோட்டப்புறத்தம்மயிடம் சொல்லி அழுதபோது, அவள் எனக்குக் கனவிலே காட்டித் தந்தாள் விஷம் அப்பம்."
'பிறகு.' "நான் கட்டாயப்படுத்தித்தான் புத்தன் முரிசுக்குப் போனது." "அங்கே ஏன் போனது.?" "அங்கே இரண்டு கண்ணும் தெரியாத ஒரு தச்சன் இருக்கிறார். அவர் எல்லாம் அச்சொட்டாகச் சொல்லுவார்.' மனநோய் வைத்தியர் புன்சிரிப்போடு மூக்குக் கண்ணாடியைக் கழட்டித் துடைத்து மீண்டும் போட்டுக் கொண்டு கேட்டார். 'அந்தத் தச்சன் என்ன சொன்னார்?'. "அதுதான் சுவையானது. அங்கு போனபோது சுகுமாருடன் அந்த ஊர்வசியின் புருஷனும் கூட இருந்தார். அந்த ஆள் பாவம்.
G15)

Page 9
G16)
அவருக்கு இது ஒன்றும் தெரியாது. இருவரும் போனபோது அநதக
கண் தெரியாத தச்சன் என்ன சொன்னார் என்றால் 'இரண்டு எசமானர்கள் வந்திருக்கிறீர்கள் மெலிந்த உயரமுள்ள எசமான்தான் விஷயம் அறிய வேண்டியவர். அவர் கூட வந்திருக்கும் மீசை வைச்ச கறுத்த எசமான் வெளியே போனால் தான் நான் உள்ளது சொல்வேன்.'
மனநோய் வைத்தியருக்கு இது மிகவும் சுவாரசியமாக இருந்தது. பாட்டியிடம் கதை கேட்கும் குழந்தையின் சுவாரசியத்தோடு கேட்டார்.
"அப்படியா? பிறகு." "விசாலாட்சியின் புருஷன் வெளியில் நின்றபோது தச்சன் சொன்னான். 'உங்களுடன் வந்த எசமானின் பெண்டாட்டிதான் உங்களுக்கு விஷம் தந்தது. அதை வாந்தி எடுக்க வேணும். இல்லாவிட்டால் உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும்." "என்ன வாந்தியோ..?!' 'பின்ன என்ன! நான் விடுவேனோ?, வாந்தி எடுத்த போது அஞ்சாறு அப்பத் துண்டுகள் சமிக்காமல் நீல நிறத்தில் கிடந்தது." "அதெல்லாம் சரி அதற்குப் பிறகு.?" 'பிரச்சனையெல்லாம் முடிந்து இனிச் சமாதானமாக வாழலாம் என நினைத்துத் திரும்பி வரும்வழியில், சுகுமாரனை பாம்பு கடித்து விட்டது. எட்ட விரியன் பாம்பு. அப்போதே அந்த இடத்தில் இறந்து விட்டார்.”
நடுக்கத்தோடு மனநோய் வைத்தியர் கேட்டார்.
"யார் இறந்தது?"
"என்ட சுகுமாரன்' அவள் விம்மி விம்மி அழுதாள். இது நினைத்ததை விட மோசமான நிலை. ஷொக்ட்றீட்மென்ட் தான் கொடுக்க வேண்டி வரும். 'சரி நீங்கள் வெளியே போய் சுகுமாரனை இங்கு அனுப்புங்கள். அவள் அமைதியாக வெளியே போனாள். ஆனால் அவள் மிதந்து போவது போல் இருந்ததைப் பார்த்து அதிசயித்தார். கொஞ்சநேரம் கழித்து அந்த மனிதனும் மிதந்து வருவது போல் வந்து கதிரையில் அமர்ந்தான்.
'நீங்கள் சுகுமாரன்தானே?"
"ஆம்"
"எவ்வளவு காலமாக அவவுக்குச் சுகமி ல்லை?'
^^ கட்டைவரம்பறியேன்
கல்முனைக் கோடறியேன் வெஞ்சமணமறியேன்
விண்வழக்கு வேணாம்புள்ள அவர் ஒன்றும் பேசா

மல் மெளனமாக இருந்தார். ஒரு பெருமூச்சுடன் அவர் சொல்லத் தொடங்கினார். "அவள் நல்லவள் டொக்டர். அவள் என் உயிராக இருந்தாள். அவள் என்மீது அளவிற்கு அதிகமாக அன்பு கொண்டிருந்ததால் என்னவோ அவளுக்கு என்மீது எப்போதும் சந்தேகம்' "அதெல்லாம் அவ சொன்னா. அதில் ஏதும் உண்மை உண்டா? 'விசாலாட்சியைக் கண்டால் ஒரு மரியாதைக்காக ஏதும் கதைத்திருப்பேன். அதில்லாமல் எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இதொன்றையும் இவள் நம்பவில்லை. ஒருநாள் இவள்." "சொல்லுங்கள் அவ என்ன செய்தா?’ 'அவள். என்ட தேவு. தூக்குப் போட்டு செத்து விட்டாள் டொக்டர்'
இப்போது மனநோய் வைத்தியர் உண்மையாகவே நடுநடுங்கிப்
போனார். இவர்களில் யாருக்கு நோய்கூட என்று பார்க்க வேண்டும்.
இரண்டு பேருக்கும் ஷொக்ட்றீட்மென்ட் செய்ய வேண்டிவரும். எத்தனையோ மனநோய்களைத் தீர்த்தவருக்கு இது மிகவும் வியப்பைத் தந்தது. 'உங்களுக்கு எத்தனை மணிக்கு அப்பொயின்மன்ட் என்று சொன்னது'
"அப்பொயின்மன்ட் ஒன்றும் இல்லை. கீழே சனக்கூட்டமாக இருந்தது. அதைப்
பார்த்துத்தான் இங்கே வந்தோம்'. நியாய விலையில்
'சனக்கூட்டமா..! இங்கேயா..? என்ன அது'
அவருடைய கையிலிருந்த நோட்டீசை மனநோய் வைத்தியர் வாங்கிப் பார்த்தார். அதில் தன்னுடைய புகைப்படம் கறுத்த போர்டரினுள் அச்சடிக்கப்பட்டிருந்ததைக் கண்டார். அதன் கீழ் இந்த வாசகம்
இருந்தது. DELIXIN STORES
மலையாளமூலம் う。ラ 三a n <രർ, கிளிரூர் ராதாகிருஷ்ணன் 劲
"பிரபல மனநோய் வைத்தியருக்கு நினைவஞ்சலி”.
தமிழில்: வீஆனந்தன் ܢܠ
சகலவித மளிகைப் பொருட்களுக்கும்
N

Page 10
哈
G18)
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் ஆரம்பகால சமூக பொருளாதார நிலை, மானிய அடிப்படையில் சுயதேவைப்பூர்த்தியை மையமாகக் கொண்டிருந்தது. இந்தநிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதி கிராமங்களை உள்ளடக்கியதாக இருந்தது. விவசாய அடிப்படைப்பொருளாதாரமாகஇருந்ததால், நகர அபிவிருத்தி குறிப்பிடக்கூடிய அளவுக்குத் தென்படவில்லை. அன்னிய ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த காலத்திலும், கிடைத்த வளங்களை உறிஞ்சுவதிலும், வருமானம் தரக்கூடிய பணப்பயிர் விருத்தியிலும் நாட்டம் காட்டப்பட்டதே தவிர, கிராமிய வளங்களை முறையாக பயன்படுத்தித் தூரநோக்குடன் நாட்டின் எதிர்கால விளைவுகளுக்குவிடைகாணக்கூடிய விதத்தில்,கொள்கைத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கவில்லை. நாட்டின் பொருளாதார விருத்திகிராமியமூலவளங்களை அபிவிருத்தி செய்வதன் மூலமேபெருக முடியும் என்ற சிந்தனை குடியேற்ற காலங்களில் உணரப்படவில்லை. ஆனால், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதும், ஆட்சியை ஏற்ற புதிய ஆட்சியாளர்களால் கிராமிய வளங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட விவசாய வளத்தினைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உணவில் தன்னிறைவு காணவேண்டிய அவசியமும் அதற்கு ஒருகாலாக அமைந்தது. ஆனால், அதனைச் செயற்படுத்த முனைந்த விதத்தில் ஏற்பட்ட பல்வேறுபட்ட குறைபாடுகள்காரணமாக எதிர்பார்த்த பூரண பலனை பெற முடியாமல் போயிற்று. விவசாய உற்பத்தித்திறனைப் பெருக்குதல், அதன் மூலம் வருமானத்தை உயர்த்துதல், அதனோடினைந்ததான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியன பெருஞ்செலவினை ஏற்படுத்துவனவாகவே அமைந்தன. கிடைக்கக்கூடிய வளங்களிலிருந்து பெறப்படும் வருமானத்தை இவற்றுக்குச் செலவிடும் போது, ஏனைய முதலீடுகளை மேற்கொள்ள முடியாமலிருந்தது. இதனால் காலத்திற்குக் காலம், வெளிநாட்டுக் கடன்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு முட்டுக்கொடுக்க வேண்டியேற்பட்டது. கிராமிய மூலவளங்கள் ஒழுங்காகப் பயன்படுத்தப்படாமை காரணமாகத் தேசிய பொருளாதாரத்தின் பயன் சிறிதளவே அனுபவிக்கப்பட்டது. காலத்திற்குகாலம் இவை கருத்திற்கொள்ளப்பட்டு பல்வேறுபட்ட கொள்கைத்திட்டங்கள். நிகழ்ச்சித்திட்டங்கள், செயற்திட்டங்கள் மூலமாகப் பரீட்சிக்கப்பட்டும்கூட எதிர்பார்த்தளவுக்கு உயரிய பலனை அளிக்கவில்லை.
கடந்த காலங்களில், அனுபவரீதியாக இக்குறைபாடுகள் உணரப்பட்டதன் காரணமாக அண்மைக்காலத்தில் கிராமிய மூலவளங்களை, சுயதொழிற்திட்டங்கள் ஊடாக முடிந்தளவு உச்சப்பயன்பாட்டுக்குட்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்தல் ஒருபுறமுட டருமான அதிகரிப்பும் வேலையில்லாத்திண்டாட்ட ஒழிப்பு மறுபுர மாகஇது சமுதாயத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது கடந்தஐக்கிய தேசியக்கட்சிஅரசின்காலத்தில் அறிமுகட்ட ஆதப்பட்ட வறுமை ஒழிப்புத்திட்டம், கிராமிய மூலவள புகளோடு பின்னிப்பிணைந்து, "சனசக்தி' என்ற சுயதொல் திட்ட வடிவமைப்பினுள் பரீட்சிக்கப்பட்டது. இதுவரை காலமும் கையாளப்பட்ட விதத்தில் காணப்பட்ட குறைபாடுகளை களைந்து நிலவளம், நீர்வளம், மனிதவளம் ஆகிய கிராமிய மூல."ங்களான பெரும் கூறுகளை ஒன்றொடொன்று பிணைத்து, ஒருங்கின்னருத கிராம அபிவிருத்தித் திட்டம் மூலமாக விருத்திசெய்யும் நோகதீடன் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. தேவைக்கேற்ப அரச உதவ வங்கிகள் மூலமான கடனுதவி போன்ற ஒத்தாசைகளும் வழக சடபட்டன. ஆனால், இத்திட்டம் உருவாக்கப்பட்ட குறிக்கோளை திருப்தியான அளவுக்கு நிறைவேற்ற முடியாது போயிற்று. இன்னறய அரசு இத்தகைய சுயதொழில் வேலைவாய்ப்புத்திட்டத்தை "சமுதநி" என்ற பெயரில் அமுல்நடத்தநடவடிக்கை மேற்கொண்டுள்ளது கிராமிய மூலவளங்களைப் பயன்படுத்திச் சடதொழில் விருத்திசெய்யும்போது, தனது தொழில்முயற்சி என்ற சொந்த உணர்வு தலைப்படுகிறது. அதனால் காலவிரயம், மூலதனவிாபம், ஏன் இலவசமாகக் கிடைக்கக்கூடிய மூலவளங்களின் விாடம் கூடத் தடுக்கப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரை நகரங்கள் விருத்தியடைந்து கொண்டிருக்கும் அதேவேளை, நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி குடிப்பெயர்வு நடந்து கொண்டிருக்கிறது. மக்கட்பெருக்கத்தோடு தொடர்புடைய வேலையின்மையு- அதனோடு இணைந்து கொள்கிறது. அதற்கு அவ்வப்போது உரிய நிவாரணம் வழங்கக்கூடியளவு நடவடிக்கை எடுக்கட்படாமை, அண்மைக்காலத்தில் நிகழ்ந்த இளைஞர் விரக்தியின் விளைவாக தோன்றிய அராஜக நடவடிக்கைகளுக்கு பெரிதும் பங்களித்ததெனலாம். அதிகாரபலத்தால் அடக்கமுடிந்தது தற்காலிக வெற்றியென்பதை அரசு அறிந்திருந்ததனால்தான், அரச உத்தியோகங்கள் மட்டுமல்லாது, அவரவர் கிராமவளத்தைப் பயன்படுத்தி பூரண ஈடுபாடு கொண்ட உற்பத்தி முயற்சிகளில் இளைஞர்களையும் பங்குகொள்ள வைக்கக்கூடிய சயதொழில் திட்டங்களில் ஈடுபட்டு, புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற துறையின்கீழ் பூரண பயிற்சிகளும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நம்நாட்டின் எல்லாக்கிராமங்களும் ஒரேவிதமான பண்புகளைக் கொண்டவையல்ல. பாலைநிலம் தவிர்ந்த வளம்மிக்க நால்வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியன
G19)

Page 11
G20.)
அடுத்தடுத்துக் காணப்படுவது, உல்லாசப்பயணிகளால் சொர்க்கபுரியென அழைக்கப்படும் எம்இலங்காபுரியின்தனித்தன்மை, அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ற மூலவளமும், அதனோடிணைந்த தொழில்களும் சுயமாக ஒவ்வொருவராலும் மேற்கொள்ளக்கூடிய அளவுக்குதாராளமாகக் கிடைக்கின்றன. கடலை அண்டியுள்ள கரையோர கிராமங்களிலும், நீர்நிலைகளை உள்ளடக்கிய உட்பிரதேசங்களிலும் மீன்பிடித் தொழிலுக்கும், அதனோடிணைந்த உபதொழில்களுக்கும் நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. மனிதவளம் இருக்கும்வரை, தத்தமது சக்திக்குட்பட்ட வகையில் அத்தகையதொழில்களில் ஈடுபட்டு, விருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் நிறையஇருக்கின்றன.நன்னீர்வளம்நிறைந்த குளங்களை, ஆறுகளை அண்டியுள்ள கிராமங்கள் பிரதான உணவுத்தானியமான நெல்மட்டுமன்றி தேவைகளை அடிப்படையாகக் கொண்ட உபஉணவுப் பயிர்ச்செய்கைக்கும் ஏற்புடையதாயிருக்கின்றன. சிறிய நிலப்பரப்பில், நிறைந்த வருவாய் பெறக்கூடிய வாய்ப்புகள் ஏராளம் இருப்பதனை, நம்கண்முன்னேகாணக்கூடியதாயிருக்கின்றது. கிராமிய மூலவளம் சுயதொழில் மூலம் கிரமமாகப் பயன்படுத்தப்பட்டு வெற்றி கண்டமைக்கு, 1978ல் கிழக்குக்கரையைப் பாதித்த குறாவளியின் பின் வேகமாக விருத்தி கண்ட உபஉணவுப் பயிர்ச்செய்கையைச் சிறந்த உதாரணமாகக்குறிப்பிடலாம். மகாவலிநீர்புகுந்த கிராமங்களிலிருந்து, இலங்கையின் நாலாபக்கங்களுக்கும் வினியோகிக்கப்படும் காய்கறி, தானிய வகைகள் கண்ணெதிரே தோன்றும் சான்றுகளாகும்.
தேவைகளுக்கு ஏற்பவும், நிலத்தின்தன்மைக்கு ஏற்பவும் மட்பாண்ட
குடிசைக்கைத்தொழில்கள், செங்கல் உற்பத்திமுதலானசுயதொழில்கள்
உந்துவிக்கப்படுகின்றன. மனித முயற்சிகூடியதாகவும், மூலதனத்தைக் குறைவாகவும் கொண்டு, பெருமளவு இலாபம் தரக்கூடிய தொழில்களாக இவை காணப்படுகின்றன. மக்கள், பிறக்கும்போதே சில திறமைகளுடன் பிறக்கின்றனர். மரங்களையும் புற்களையும், தேங்காய் மட்டைகளையும், சிரட்டைகளையும், சிப்பிகளையும், கழிவுப்பொருட்களையும் கொண்டு கண்கவர் கைவினைப் பொருட்களைப் படைக்கின்றனர். இலவசமாகக் கிடைக்கும் கிராமிய மூலவளம், இயற்கையாய் ஒருவருக்கமைந்த திறமை மெருகூட்டலின் பயனாக ஏராளமான வருவாய்தரும் தொழிலாகப் பரிணமிக்கிறது. மூலவளமும், திறமையும் இருந்து பொருள்வளம் பற்றாக்குறையாயிருக்கும் சந்தர்ப்பங்களில்தான், நிதி வசதிகள் அளிக்கப்பட்டு, செய்திட்டங்கள் மூலம் பல்வேறுபட்ட உற்பத்திமுயற்சிகள் உயிரூட்டம் பெறுகின்றன. தெங்கு அடர்ந்துள்ள கிராமங்களை அண்டியதாக செயற்படுத்தக்கூடிய தும்புக் கைத்தொழில்கள், ஒலைக்கைத்தொழில்கள் ஆகியன சுயதொழில் மூலம்நாட்டின் தேவையை பூர்த்தி ச்ெய்யும் அளவிற்கு,

மேலும் விருத்தி செய்யக்கூடியன. சில கிராமங்களில் காணப்படும் பிரம்பு, பன்(புல்) முதலானவை முழுக்க முழுக்க இயற்கையின் கொடையாகவே இருப்பதால் மூலப் பொருளுக்காக செலவிட வேண்டிய பாரிய தொகை மீதப்படுத்தப்பட்டு, மனிதவளம் கலக்கப்பட்டதும் மிகப்பெரும் வருவாய் தரக்கூடிய சுயதொழிலாக பரிணமிக்கின்றது. இவற்றைவிட, சற்று முதலீடு அதிகம் தேவைப்படும் தொழில்களான கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை முதலானவையும் கிராமிய மட்டத்தில் பராமரிப்புச் செலவில் சிக்கனம் தரக்கூடிய சுயதொழிலாக தன்னிறைவோடு நின்றுவிடாது, வருமானப் பெருக்கத்திற்கும் வழிகோலுகின்றன. பொதுவாக, மனிதனுக்குநாளுக்குநாள்அதிகரித்துக்கொண்டுசெல்லும் தேவைகளுக்கேற்ப, கிராமியமட்டத்தில் காணப்படும் மூலவளங்களை கிரமமான முறையில் பயன்படுத்தி சுயதொழில் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், நாட்டின் வேலையின்மையை ஒழித்து, வறுமைக்கு முடிவுகட்டி, வருமானத்தைப்பெருக்கி மொத்தத் தேசிய உற்பத்தி, வருமானம் ஆகியவற்றில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும். இவை வெற்றியளிக்க வேண்டுமாயின், கிராமிய மட்டத்தில் இவை ஒருங்கிணைக்கப் பட்டவிதத்தில் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். உற்பத்தியின்தரத்தை கூட்ட, தொழில்நுட்ப ஆலோசனை, உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு, போக்குவரத்து வசதிகள், இயற்கை அழிவுகளைத் தவிர்ப்பதற்கான அல்லது தாக்குப்பிடிப்பதற்கான வழி முறைகள் யாவும் உயர்மட்டத்தில் ஒருங்கிணைப்பு அடிப்படையில் செய்யப்பட வேண்டும். தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கான பயிற்சி நெறிகள், உற்பத்திப் பொருட்களை பற்றிய நன்மைகளை அறியக்கூடிய வகையில் பொருட்காட்சிகள் முதலானவை ஒதுங்கி இருப்பவர்களைக்கூட ஊக்குவிக்கும் உந்து சக்திகளாக அமையும். வேலையின்மையொழிந்து, வேலைவாய்ப்பு உற்பத்திகள் மூலம் வருமானப் பெருக்கம் ஏற்பட சமுதாயப் பொருளாதார நிலையில் பாரிய முன்னேற்றத்தோடு கூடிய மாற்றம் ஏற்படும். இளைஞர்களிடையே காணப்படும் விரக்திகளையச் சந்தர்ப்பம் கிடைப்பதனால், அரசியலில் கூட சாதகமான விளைவுகள்ஏற்படலாம். எனவே, ஊழல், விரயம் தவிர்ந்த வகையில் கிராமிய மூலவளங்கள் சுயதொழில் திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படுமானால், நாடு சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி ஏறுநடைபோடுமென்பதில் ஐயமில்லை.
சே.சீவரெத்தினம், B.A. (Hons) உதவிப் பிராந்திய முகாமையாளர் மக்கள் வங்கி, மட்டக்களப்பு.
G2D

Page 12
G22)
என்னுடைய வாழ்வு
நேற்றுவரை
கற்றத்தில் நல்ல பெயர் ஊராரின் மரியாதை நண்பர்களின் அமோக விழைச்சலுமாய், என் முதாதையரின் கையுடனும் காலுடனும் செவியுடனும் தோலுடனும் கண்கள் மூக்குடனும் வாயுடனும் வயிற்றுடனும் நானிருந்தேன்.
இன்றோ - என் கண்களால் பார்த்து என் செவியினால் கேட்டு என் கைகளை விசி என் கால்களால் நடந்தபோது,
என் மூக்கினால் நுகர்ந்து என் நாவினால் ருசித்து என் வயிற்றுக்கு உண்டபோது
என் இதயத்தின் பெருக்கை நான் இறைத்த போது,
முகம் சுழிக்கிறது ஊர் உதிர்ந்து போயினர் நண்பர்
தண்ணிருக்குள் துளி எண்ணெய் போல் தனித்துள்ளேன்
நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த யாரோ ஒர் மனிதனுக்காய் என் வாழ்வு பலியாகும் அர்த்தமின்மை தீவிரமாகையில்,

இரும்பினாலும் தங்கம் பொன் செம்பினாலும் ஈயம் பித்தளை வெண்கலத்தாலும் கெட்டித்த மூதாதையரின் இதயம் கொண்டு ஊரினை வெல்லேன்.
தசைகளாலான
எனதே எனது இதயம் பூக்க வாழ்வினைப் புணர்வேன் கானகத்துள் நீர்ச்சுனை தேடும் வெறியன் நான்
நேற்றுவரை என்னிடம் இருந்தது முன்னோர்கள் பலரின் மூளை. இன்றோ என்னிடம் இருப்பது ஒரேயொரு மூளை - என்னுடைய மூளை என்னுடைய மூளை என்னுடைய மூளை
- வாசுதேவன்.
* பல்வேறு நெருக்கடிகளாலும் பிறநாடுகளுக்கு புலம் பெயர்ந்த நம்மவர்தாம் வாழும் வித்தியாசமான சூழலினதும், சமூகத்தினதும் பாதிப்புக்குள்ளாகியவாறே எழுதும் எழுத்து க்கள் தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கிய மெனப் புதியதோர் வடிவை தோற்றுவித்துள்ளது. அந்நாடு களிலிருந்து நிறையவே தமிழ் சஞ்சிகைகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் எங்கள் கைகளுக்கு அருமையாகவே இருக்கிறது. அந்த படைப்புக்களை அறிமுகஞ் செய்வதற்கும் மென்மேலும் பரவலடையச்செய்வத ற்குமாய் எமது சஞ்சிகையில் சிலவற்றை மீள்பிரசுரித்து உங்கள் முன்வைக்கிறோம். ★女 தவிர்க்க முடியாத காரணங்களால் "உறவு எனும் உலகங்கள் நீ தந்தது” “திருமண வழக்காற்று சட்டங்களும், சட்ட அந்தஸ்தும்” ஆகியன இடம் பெறவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். *** நீங்கள் அறிந்து வைத்திருக்கும் கிழக்கில் வழக்கிலு ள்ள நாட்டார் பாடல்கள், விடுகதைகளை அனுப்பி வையுங் கள். இம்முறை போன்று தொடர்ந்து பிரசுரிக்கவுள்ளோம்.
-ஆசிரிய பீடம்.
G23)

Page 13
G24)
மேற்குலக நாடுகள் சட்ட விதிகள், சுகாதார நடவடிக்கைக மூலம் நாடு கடத்தி விட்டன. விசர் வியாதியால் பிடிக்கப்படு நாயின்கடி மூலம் பொதுவாகப் பரப்பப்படும் இந்நோய், முை
இருவார எல்லைக்குள்ளும், கை கால் போன்றவற்றில் மாத
குணங்குறிகள் பொதுவாக ஒன்றரை மாத எல்லையை
தண்மையில் பல வித்தியாசங்கள் உண்டு. மனிதரி
சம்பந்தப்பட்ட உறுப்புகளிலும், இரத்தத்திலும் தாக்கத்ை ஏற்படுத்தும். கடியின்மூலம் அதிக நரம்புகள் சிதைவடைந்தால் வியாதி சீக்கிரம் ஏற்படும். எனவேதான்தலையின் உறுப்புகளி
கணக்கிலும் நோயின் அறிகுறிகளைக் காணலாம். கடியி
கொண்டவையாயினும் விதிவிலக்குகளும் உண்டு. கடிக்கு இலக்காகிய зтват விலங்குகளும், இவ்வியாதியினா பிடிக்கப்பட மாட்டா பல்வேறு இனங்களிடையேயும், ஒே இனத்தின் பல அங்கத்தினரிடையேயும் இவ்வியாதியி
எனr இந்நோய்த் தொ களவில் சுவாசிப்பு
ஐதரோபோபியா, தண்ணீர் அதிர்ச்சி, ஜலபீதி" பலவாறாக அழைக்கப்படும் உமிழ்நீரினாலும் கிருமிகளை அ ஏற்படும் என்பது ஆராய்ச்சிமு
வியாதியின் அறிகுறிகள்:
ஆரம்பத்தில் நோயுற்றதுபோல் தோற்றமளித்தல், பசியின்மை, உறங்கிய சுபாவம், இருட்டான இடங்களை நாடி படுத்துக் கொண்டிருத்தல், சைகைகளுக்குக் கட்டுப்படாமை, கண்கள் சிவந்திருத்தல், உமிழ்நீர் வடிதல், அதிர்ச்சியுறல், கோபத்தோடு எதிர்த்தல், எதிர்ப்படும் பொருட்களையோ, பிராணிகளையோ கடிப்பதோடு எதிர்க்க எத்தனித்தல், சண்டையிட்டு வெற்றி கொள்ளல்; சங்கிலி, மரம் கூட்டின் பலகை போன்றவற்றை கடித்துச் சேதப்படுத்தல், சில வேளைகளில் தன் உடம்பையே கடித்துச் சிரங்காக்குதல், காற்றில் பறக்கும் பொருட்களை வாயால் பிடிப்பதுபோல் கவ்வுதல், ஊளையிடுதல் என்பன அறிகுறிகளாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுதியில் கால்கள் வழக்கமற்று, மரணமும் ஏற்படும். இவ்வியாதியினால் பீடிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் நாயை, பலமான கூட்டினுள்ளோ அல்லது சங்கிலியாலோ கட்டி வைத்து அவதானித்தல் அவசியம். விசர் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக 6pტ 6) ITT காலத்தினுள் நாய் இறந்து விடும். இறக்காவிடில், இவ் வியாதியால் தொற்று ஏற்பட வில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இவ்விதமாக தொற்று அவதானிக்கப்படும் நாயைத் தொடுவது அல்லது சாந்தப் படுத்த முயல்வது அபாயகரமானது. அவதானிக்கப்படும் நாய் மரணமடையுமானால், அதன்| தலையை அவதானமாக வெட்டி, பழுதுபடாத நிலையில் கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு ஒருவர் மூலம் அனுப்பிவைத்தில் அவசியமாகும். எவரேனும் இந்நாயால் கடிபட்டிருந்தால், காலம் கடத்தாது வைத்திய சிகிச்சையை நாடுவதுடன் ஊசி மருந்தையும் தவறாது பாய்ச்சிக் கொள்ள வேண்டும்.
சிகிச்சை
வியாதி ஏற்பட்ட பின், சிகிச்சையால் ஒரு பயனும் ஏற்படாது. இற்றைவரைக்கும் இவ்வியாதியைச் சுகப்படுத்துவதற்கு எதுவித மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்' எனும் சஞ்சிகையில், இவ்வியாதியால் பீடிக்கப்பட்ட ஒரு சிறுவன் உயிர்தப்பியது பற்றிய செய்தி, கட்டுரை மூலம் வெளியாகியது. இது ஒரு மருத்துவ அபூர்வம் என டாக்டர்கள் கூறியுள்ளார்கள்.
நமது வீட்டில் அன்புடன் வளர்க்கும் நாய், பூனை போன்ற
பிராணிகளுக்கு, முதல் ஆறுமாத வயதில் தடையூசி மருந்து பாய்ச்சிக்கொள்வதால் வீட்டிலுள்ளோருக்கு இவ்வியாதி தொற்றாது பாதுகாத்துக் கொள்ளலாம். பின்னர் வருடத்திற்கு ஒருமுறை இம்மருந்தை தவறாது பாய்ச்சிக் கொள்வது அவசியம்.
வியாதி பரவாதிருக்க கையாள வேண்டிய நடைமுறைகள்

Page 14
G26)
விசர்நாய்க்கடி வியாதியைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முக்கிய நடைமுறை விதிகளை ஏற்படுத்தினாலும், அவற்றைக் கடைப்பிடித்து அமுலாக்குவதில் கஷ்டங்களும், தாமதங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. இவ்வியாதி ஏற்படுமிடத்து அதை பொது மக்களுக்கு அறியச் செய்தல், ஐயமான விலங்குகளை எப்படிப் பாதுகாத்தல், அவை நிச்சயமாக வியாதியால் பீடிக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து அதற்கேற்ப நடைமுறைகளைக் கையாளுதல், வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்குக் கட்டாயத் தடுப்பூசி மருந்து பாய்ச்சுதல், வெளியில் கொண்டு செல்லுமிடத்து நாய்களுக்கு வாய்த்தடை இடுதல், வெளிநாடுகளிலிருந்து வரும் நாய்களை ஆறு மாத காலம் பாதுகாப்பில் வைத்திருத்தல், வனவிலங்குகளில் இவ்வியாதி தோன்றினால் எப்படிக் கட்டுப்படுத்தலாம் / தடை செய்யலாம் என்பனவற்றை பொது மக்களுக்கு அறியத் தருவதுடன், அவற்றிற்கேற்ற நடைமுறைவிதிகளையும் இயற்றி, பூரணமாக அமுலாக்க வேண்டும். இம்முறையான நடைமுறை விதிகளைக் கையாள்வதிலும், அமுல்படுத்துவதிலும் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு முக்கியமாகின்றது. எமது நாடு ஒரு தீவாதலால், மேற் குறித்த நடைமுறைகளைக் கையாண்டு, எமது நாட்டில் இவ்வியாதியை முற்றாக கட்டுப்படுத்த முடியும். ஏற்புவலி, 'டிஸ்ரெம்பர் கொறியா' வலிப்பு, தொண்டையில் உணவு அடைத்தல் போன்ற வியாதிகளும் விசர் நாய்க்கடி வியாதியின் சில அறிகுறிகளாகையால், அவற்றையும் நாம் மனதிற் கொள்ளல் நன்று. மனிதருள்:
மனிதருக்கு, பெரும்பாலும் இவ்வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கும் நாயின் கடிமூலமே தொற்று ஏற்படுகின்றது. கடிபட்டதினத்திலிருந்து, பத்து நாள் தொடக்கம் பன்னிரெண்டு மாதகால இடைவெளிக்குள் நோயின் அறிகுறிகள் தென்படலாம். பொதுவாக, முப்பது தொடக்கம்
முப்பத்தைந்து நாட்களுக்குள் வியாதி ஏற்படுவதை அறியலாம்.
உணர்ச்சிவசப்படுதல், காய்ச்சல், பதற்றம் ஆகிய குணங்கள் கூடிக் கொண்டு வருவதுடன், அதிர்ச்சியும் முக்கிய குணமாகக் காணப்பட லாம். உமிழ்நீர்ச்சுரப்பிகளில் கிருமிகள் அதிகம் உண்டென்பதால், உமிழ்நீர் அதிகம் சுரக்கும் குரல்வளை, குரல்பெட்டி ஆகிய உறுப்பு களின் தசைநார்களில் வலி ஏற்படுவதால், உமிழ்நீர் விழுங்குவது கஷ்டமாக இருக்கும். இதனால்தான், தண்ணீர் குடிக்க எத்தனி க்கும்போது, தண்ணீரைப் பார்த்ததும் அதிர்ச்சியேற்படக் காரண மாகின்றது. சில சமயங் களில் நாய் ஊளையிடு ) 4 கோரக்கல்லி மாடு வந்து தல் போன்று சத்தமிடு கூரையைப் பிக்கிதென்டு வதையும் அவதானிக்க ஏசாதகா புளளநமமட
முடியும், குணங்கள் எருதுவந்துபோகுதுகா

பிரதிபலிக்கத் தொடங்கிய ஐந்து தொடக்கம் ஏழுநாட்களில் பெரும்பாலும் மரணம் சம்பவிக்கலாம்.
கடிபட்டால் கையாள வேண்டிய நடைமுறைகள் நாயின் கடிமூலமோ அல்லது நாயின் உமிழ்நீர் உடம்பிலுள்ள சிரங்குகளில் படுவதன் மூலமோ இவ்வியாதி தொற்றுவதாகக் கருதப்படின் கையாள வேண்டிய நடவடிக்கைகள் பின்வருமாறு. 1.சிரங்கினைப் பரிகாரம் செய்தல்; சவர்க்காரம் கொண்டு சிரங்கினை நன்றாகத் தேய்த்து நீரால் கழுவுதல் (கிருமிகள் அமிலம் கொண்ட சூழ்நிலையில் அதிகமாகப் பெருகுவதால், காரம் கொண்ட பொருளாகிய சவர்க்காரத்தினால் கழுவுதல் உகந்ததாகும். இதனாற்தான் எமது மூதாதையர் கல்சியம் அதிகம் கொண்ட முருங்கையிலையையும் , கறட்டிச் சுண்ணாம்பையும் கசக்கி, கடிவாயில் மருந்தாக உபயோகித்தனர் போலும்.) 2.நாயைப் பாதுகாத்தல்:- கடித்த நாயைக் கட்டி வைத்து அவதானித்தலும், கால் நடை வைத்தியரின் ஆலோசனையைப் பெறுதலும் உடனடி முக்கிய நடவடிக்கைகளாகும். இம்முறையைக் கையாளுவதால், கடித்த நாயின்நிலைமையையறிந்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிதானமாகக் கையாள ஏதுவாகிறது. நாயை அடித்துக் கொல்வதோ, சுட்டுக் கொல்வதோ இயன்றளவு தவிர்க்கப்படல் வேண்டும். 3. வியாதியைத்தடுப்பதற்கு கையாள வேண்டியநடைமுறைகள்: நாயின் கடிக்குள்ளாகிய அனைவரும் காலம் தாழ்த்தாது, வைத்திய உதவியைநாடி, வைத்தியரின் ஆலோசனைக்கேற்பநடந்து கொள்ள வேண்டும். கீழ்க்காணும் நிலைமைகள் ஏற்படின், ஊசி மருந்தைத் தவறாது தொடர்ந்து ஏற்றிக் கொள்வது அவசியம்.
அ) கடித்த நாய் நிச்சயமாக வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தால்
ஆ)கடித்த நாயை அவதானி க்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாவிட்டால்
இ) வனவிலங்குகளர்ல் கடிபட்டால் அவதானிக்கப்பட்ட நாயின் நிலைமையை அறிந்த பின்னரோ அல்லது மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் முடிவுகள் தெரிந்த பின்னரோ ஊசி மருந்தைத் தொடர்ந்து பாய்ச்சுவது சம்பந்தமாக நிச்சயித்துக் கொள்ளலாம்.
Dr. a. Aalasiusb. G.V.Sc.
G7)

Page 15
敬
G28D
இலக்கியம் கருத்துநிலையின் பிரதான குறியீட்டுக் களமாய் விளங்குகிறது. ஒரு சமூகத்தினுடைய சிந்தனைப் போக்கு பார்வை, உளவியல் ஆகியவை ஐதீகங்களாகவும், கதைகளாகவும், பாடல்களாகவும், பழமொழிகளாகவும் இலக்கியத்தில் வடிவெடுக்கின்றன. இவ்வகையில் சமூகத்தின் பண்பாடு பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாகவே இலக்கிய ஆய்வு இன்று வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், இலக்கியம் என்பது கருத்துக்களையும், சிந்தனைகளையும் பிரதிபலிப்பது மாத்திரமன்றி: அவற்றை மறு உருவாக்கம் செய்வதுமாகும். இந்நிலையில் அது கருத்துக்களை உருவாக்கவும் உளவியலில் பாதிப்புச் செலுத்த வல்லதாகவும் விளங்குகிறது.
தமிழ் இலக்கியங்களும் இத்தகைய பொதுப்பண்பிற்கு விதிவிலக்கானவை அல்ல.எனவே, இலக்கியங்களில் பல்வேறு வகைகளிலும் உட்பொதிந்திருக்கும் கருத்துநிலையை வெளிக்கொண்டு வர முயற்சிப்பது அவசியமாகும். இதற்கு ஒரு முக்கியமான காரணமுண்டு. குறிப்பாகப் பண்டைக்கால இடைக்கால இலக்கியங்கள் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடவிதானத்தின் பகுதியாக அமைந்துள்ளன. இவை, பரீட்சைக்காகப் படித்து மறப்பவையோ இலக்கிய இன்பத்திற்கான அப்பியாசங்களோ அல்ல. மாறாகக் கட்டாயமாகவும், கூட்டாகவும் கற்கப்பட வேண்டிய தேவை இருப்பதால், இவை இளம் சந்ததியினது கருத்தியலையும், உளவியலையும் வடிவமைக்கக் கூடிய வல்லமை வாய்ந்தவையாக விளங்குகின்றன.
பண்டைய , இடைக்காலத் தமிழ் இலக்கியங்களிற் பேசப்படும் பெண்கள் பற்றிய கருத்துகள், தீட்டப்பட்டுள்ள சித்திரங்கள் ஆகியவற்றை மேற்கூறிய அடிப்டையிலேயே நோக்குதல் வேண்டும். ܡ
இடைக்காலத்தைச் சேர்ந்த (கி.பி.6ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை) தமிழ் இலக்கியத் தொகுதியில் கணிசமானவை சிற்றிலக்கியங்கள் எனக் கூறப்படுபவை. காவியத்தைப் பேரிலக்கியம் எனவும் அதற்கு வேறான பிரபந்தங்கள் சிற்றிலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன. பரணி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், மடல், தூது, உலா, மாலை, என இவற்றைப் பல்வேறாக வகுக்கலாம்.
இப் பிரபந்தங்கள் இறைவன் அல்லது அரசன் அல்லது பிரபுவினது பெருமை பேசுவனவாக அமையும். இவற்றில் உலாப் பிரபந்தத்தில் பெண்கள் பற்றிய சித்திரிப்பையும், அச் சித்திரிப்பு பயன்பட்டிருக்கும் வகையையும் எடுத்துக்காடடிநான் மேலே கூறிய

கருத்தை விளக்க முற்படுகிறேன்.
பெண்கள் பற்றிய கருத்துநிலையின் இலக்கிய வெளிப்பாட்டிற்கு இது பதச்சோறாக விளங்குகிறது. "கடவுளர் மீதும் தம்மைப் பேணிய அரசர்கள் மீது கடவுளோடு ஒப்ப வைத்து எண்ணத் தகுந்த அடியார் மீதும் ஞானாசிரியர் மீதும் தமக்கு உதவிய வள்ளல்கள் மீதும் பண்டைக் காலந்தொட்டுப் புலவர்கள் உலாப் பிரபந்தந்தங்கள் பாடி வந்துள்ளனர். உலாப் பிரபந்தத்தில் தலைவரது பெருமை கூறப்படும் தன்னிகரில்லாத் தலைவன் தெருவில் உலாவருவான். அவனை ஏழு பருவப் பெண்களும் கண்டு மையல் கொள்வர். இந்நிகழ்ச்சியினை விபரிப்பதனூடாக தலைவனது பெருமையை விளக்குவது உலாவின் நோக்கமாகும்.
இங்கு எமது கவனத்திற்குரியது ஏழு பருவப் பெண்கள் என்கிற பகுப்பும் தலைவனைக் கண்டு அவர்கள் காதல்வயப்பட்டு எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதுமாகும்.
ஏழு பருவப் பெண்கள் என்கிற பகுப்பு சற்று விநோதமானது. இதனைப் பாடசாலைகளில் எத்தகைய விமர்சனமுமின்றி மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம். ஆனால் இந்தப் பகுப்பின் பின்னால் பெண்ணை வெறும் உடலாகவும், ஆசையைத் தூண்டுவோளாகவும், ஆசை உடையவராகவும் காணும் ஒரு பார்வையே வெளிப்படுகிறது. பண்டைய காலத்திலிருந்து வளர்ந்து வந்த ஆணாதிக்கக் கலாசாரத்தின் ஒரு வெளிப்பாடாகவே இது அமைகிறது. ஏழு பருவப் பகுப்பு பின்வருமாறு அமையும்.
5 வயது முதல் 7வயது வரையுள்ள பெண்கள் பேதைப்பருவத்தினர். 8 முதல் 11 வரையுள்ளோர் பெதும்பைகள், 12 முதல் 13வரையுள்ளோர் மங்கைப் பருவத்தினர். 14 தொடக்கம் 19வரை மடந்தையர். 20 முதல் 25 வயது வரை அரிவையர், 26 முதல் 32 வரை தெரிவையர், 32இலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் பேரிளம்பெண்களாவர்.
இத்தகைய ஏழு பருவப் பெண்களும் கண்டு காதல் கூரும் வண்ணம் தலைவன் வீதியில் உலாவருவதை உலாப்பிரபந்தங்கள் சித்திரிக்கின்றன. ஐந்து வயதுப் பாலகிகளாக இருந்தாலும் பெண்கள், மோகத்தை உள்ளடக்கியவர்கள் என்ற ஒரு கருத்தின் அடிப்படையிலேயே இப் பிரபந்தங்களை இயற்றியவர்களும், அவற்றுக்கு விளக்கம் கூறியவர்களும், அவற்றைக் கற்பித்தவர்களும் செயற்பட்டிருக்கின்றனர். அதாவது சிறுபிள்ளைகள் என்ற கருத்தேயன்றி எல்லாப் பெண்களையும் ஆசை, மோகம் என்ற ஒரு வட்டத்திற்குள்ளேயே அடக்கி விடும் கருத்து மிக அபாயம் வாய்ந்ததாகும்.
G29)

Page 16
Go)
மூவருலா என்ற பிரபந்தத்தில் எட்டு வயதுக்கும் பதினொரு வயதுக்கும் இடைப்பட்ட பெதும்பைப் பருவத்துப் பெண் பின்வருமாறு சித்திரிக்கப்படுகிறாள்.
"தையல் கண்ட கண் வாங்காள் தொழ முகிழ்த்த கை விடாள் மனம் மீட்டும் வழி அறியாப் பண்டு அறியாக் காமம் கலக்கக் - கலங்கித் தனி நின்றதன்." சிறு வயதுப் பெண்காமத்தினால் கலங்குவதாகக் கூறுவது எவ்வளவு அபத்தமானது? ஏன் அவ்வாறு கூறப்படுகிறது என்ற வினாக்களை நாம் எழுப்ப வேண்டும். அத்துடன் பெண்கள் பற்றி இவற்றில் இடம்பெறும் வர்ணனைகளும் எமது அக்கறைக்குரியவையாகும்.
கொம்புள் அடங்குமொரு கோங்கரும்பும் பைம்பாளை நள்ளடங்குஞ் செவ்வி நறும் குரும்பையும் பசுந்தாள் உள்ளடங்கும் அம்போருக அரும்பும் வெள்ளைக் கரீரத்து அடங்கும் களமருப்பும் போல், சரீரத்து அடங்கு தனத்தாள்'
என்றெல்லாம் ஐந்து வயதுக்கும் ஏழு வயதுக்கும் இடைப்பட்ட சிறுமி வர்ணிக்கப்படுவதைக் காணலாம். சிறுமியை வர்ணிக்கும் போதும் அவளது உடலின் மீதே கவனம் செலுத்தப்படுகிறது. அதுவும் அவளை மோகத்துக்குரியவளாகக் காட்டும் வகையிலேயே இந்த வர்ணனை அமைகிறது.
இன்று சிறுமியருக்கு எதிரான வன்முறை, அவர்களுடனான தகாத உறவு பற்றி மிகுந்த அக்கறை காட்டப்படுகிறது. பெண்பிள்ளைகளை இத்தகைய வன்செயல்களிலிருந்து பாதுகாப்பதற்குச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இந்தப் பின்னணியில் நோக்கும் போது பெண்கள் (சிறுமிகள்) பற்றிய இந்த வர்ணனைகள் விலக்கத்தக்கவை: கண்டிக்கத்தக்கவை. இவை பெண்களுக்கு எதிரான வன்முறையையும் உளவியலையும் தூண்டிவிடவும், அவற்றை நியாயப்படுத்தவும் வல்லவையாகும். இத்தகைய வர்ணனைகளையே பெண்நிலைவாதிகள் 'ஆபாசக் கற்பனை யாக்கம்' என வரையறுக்கின்றனர்.
மேலும் இந்த உலாப் பிரபந்தத்தில் தலைவன் உலாவரும்போது அவனது பெருமை, அழகு ஆகியவற்றைக் கேட்டும், கண்டும் பெண்கள் காதல் கொள்கிறார்கள். இத்தகைய கட்டுக்கடங்காத காதலால் அவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கைவளை கழன்றும், ஆடை நெகிழ்ந்தும், ஆபரணம் தளர்ந்தும் தலை அவிழ்ந்தும் அவற்றைக் கவனியாமல் பித்தர் போல் நடந்து கொள்கின்றனர். ஆனால் உலாவரும் தலைவ்னோ பெண்களது

இத்தகைய உணர்வினால் எத்தகைய பாதிப்பும் அற்றவனாகத் தன்பாட்டில் போய்விடுகிறான்.
இங்கு பெண்களது காதல் என்பது தலைவனது பெருமையை வெளிப்படுத்துவதற்காகவே பயன்பட்டுள்ளது. ஆணினுடைய வீரம், கருணை, கொடை போன்றவை இதன் மூலம் கூறப்படு கின்றன.
ஆண் உயர்ந்தவன், அவனே முதன்மையானவன் என்ற ஒரு கருத்துநிலையின் அடிப்படையாகவே இத்தகைய வர்ணனைகள் இடம்பெறுகின்றன. அத்துடன் இத்தகைய கற்பனைகளுக்கும் வர்ணனைகட்கும் அடிப்படையான உளவியல் நிலை ஒன்றும் உள்ளது என்பதை மறந்துவிடலாகாது. அதனை விநோதப்படுத்தும் (Fantasy) மனோநிலை எனக்கூறலாம். ஒன்றைப் பற்றி பெரிதாககக் கற்பனை செய்தல், விதவிதமாக விசித்திரக் கற்பனை செய்தல், அதில் இன்பங் காணுதல், சுயதிருப்தி அடைதல் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. இத்தகைய நிலை தனிமனித உளவியலிலும், கூட்டாகச் சமூகத்தின் உளவியலிலும் இடம்பெறக் கூடியது. பெண்களை ஆண்களது காதலுக்கு ஏங்குவோராகச்
சித்திரிப்பது இதனுடைய ஒரு வெளிப்பாடேயாகும். ஆண்களையும்
பெண்களையும் 'புரவலர் - இரவலர் நிலையிற் காணும் இத்தகைய பார்வை சமூகத்தில் ஆண் பெண் உறவில்
காணப்படும் அசமத்துவ நிலையின் ஒரு ( பிரதிபலிப்பாகவும் அமைகிறது. அதே
வேளை பெண்களை ஒடுக்குகின்ற ஆண் *---- பொருட்கள்,
முதன்மைக் கருத்து நிலையின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது.
இலக்கியத்தைப் பண்பாட்டின் ஒரு Paint வகைகளுக்கு
பகுதியாகக் கொண்டும், பெண்நிலை நோக்கிலும் ஆராயும் போது அதனுட் பொதிந்துள்ள இத்தகைய ஆண் முதன்மைக் கருத்துநிலைகளின் செயற்பாடு பற்றிக்
༄།
மின்சார உபகரணங்கள்,
கவனம் செலுத்துவதும் அதனை மீளாய்வு செய்வதும் அத்தியாவசியமானதாகும்.
சித்திரலேகா மெளனகுரு
V.S. HA RdwARE & Alectricals
Y அக்கரைப்பத்தோ
அவரும் கரவாகோ சாஞ்சமருதூரில் சாதிசனம் உண்டாமோ
R 065-7259, 24 MAin STREET, VALAich ENAi.

Page 17
இறந்து இறந்து பழகிப்போன எங்கள் இரவுகளில் இன்னும் நாம் விலக முடியாமல் வாழ்ந்து கொண்டே (?)
பயந்த இரவுகளாய் இன்னும் எத்தனை யுகங்கள் கழிவதாய் எண்ணுகிறார்கள்.
நிம்மதிக்காய் உலகினில் பிறந்தோம். என்பது பழமொழி. நிம்மதி அறுப்பதற்காய் குழந்தைகளே இனி - இனி ஜனனியுங்கள்
மெளனமான இருண்ட இரவுகள் எங்கள் முன் கொலைகாரனாய்.
3ளூசெத்துப்போகும் நினைவுகள் சொல்லாமல் எந்தக் காலையும் எந்த மாலையும் புலர்வதுமில்லை - மறைவதுமில்லை.
இப்பொழுதெல்லாம் எங்கள் இரவுகள் மெளனமாய்த்தான் இருளுகின்றன. சின்னவர் - பெரியவர் - கிழவிகள் - விதவைகள் எல்லோரும்
爵 விழிபிதுங்க. மெளனமாய். OŠ
இளைய அப்துல்லாஹ் நன்றி அஆஇ
 
 
 
 

பே ானகிழமை வரை எனக்கு 'செவ்வாக இருந்த அலி, இப்போது என்னோடு வேலை செய்கின்றான். நாலு வருசம், அலி ஏன் சிரிக்கிறான், முறைக்கிறான் என்பதற்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் அவதிப்பட்ட காலம் போய். பார்த்த மாத்திரத்திலேயே பளிச்சென்று தெரிகிற மாதிரிப் பழகுகிறான். அவனுக்கு ஆட்களைக் கொண்டு வேலை வாங்கத் தெரியாதாம். இது மேலிடத்து விளக்கம். கெளரவம் பார்த்து வேலையை விடமுடியாத வாழ்வின் நெருக்கம். நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ. இன்றுமுதல் நான் வேறோ நீ வேறோ.
வேலை முடிந்து கதவடியில் கடனுக்குநிற்கிறமாதிரிமசிந்துக்கொண்டு நின்று, ஏன் நிற்கிறோம் என்பது எப்பனும் தெரியாததுபோல்
பத்திரோன் அலட்சியமாகப் பார்த்து யாரோடையோ அலட்டி முடிந்து
பிச்சைபோட்ட மாதிரி 150 பிராங்குகள் சில்லறை தர. நேரம் மாலை .20lک வீட்டிலை நாலு சனம். ஏற்கனவே இருந்த இரண்டும் இப்பதான் பெட்டி இறக்கிறமாதிரி பெட்டை இறக்கிற மாதிரி பெட்டை இறக்கி வைச்சிருக்கினம். ஒன்றுக்கும் உருப்படியான வேலையில்லை. காலமை வேலைக்கு வெளிக்கிடேக்கைதான் 'குசினிக்கை ஒரு கோதாரியும் இல்லை. வரேக்கை ஏதேன் வாங்கியாடாப்பா'. இனி ஏழு மணிக்கெல்லாம் கடைபூட்டிவிடும். என்ன செய்யிறது. எல்லாம் நம்ம காலம். மனதுக்குள் வெதும்பியபடி அலியோடு லகாருக்குள் படி இறங்கினேன். படிவாசலை எதிர்நோக்கியபடி பிளாட்பாரத் தூணோடு ஒருத்தன் இருந்து அழுது கொண்டிருக்கிறான். பிச்சை எடுப்பவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். இந்தமாதிரி அழுகையை ஒருபோதும் பார்த்ததில்லை. யாரையும் குறித்துப் பார்த்து முகத்தின் உணர்ச்சித் திரைகளை மாற்றாமல் தேம்பித் தேம்பி அழுகிறான். அவனுக்கும் நாலு சில்லறைகளுக்கும் நடுவே ஒரு கடுதாசி மட்டையில் ஏதோ பிரெஞ்சில், மேலே 'பொன்ஞ் கீழே "மெர்சி" தவிர வேறெதுவும் விளங்கவில்லை. ஆயினும் என்ன. அவன் அழுகைக்கும் அந்தச் சில்லறைகளுக்கும் இடையே என்ன இருக்கும். 'எனக்கு வாழ வழியில்லை’ என்பதுதானே. ஐந்தடி தள்ளி நின்று அவனை மீண்டும் அளந்தேன். சதம் அளவேனும் ஊத்தையில்லாத பளிச்சென்று சீமெந்து கலரில் கொட்றோய் ஜீன்சும், நல்ல ரக வெளிர்நிற சேட்டும் அணிந்திருந்தான். சப்பாத்து என்னவோ கொஞ்சம் ஊத்தையாக, லெதர் அல்லாத சப்பாத்து கொஞ்சம் ஊத்தையாக இருப்பதுதான் பிரெஞ்ச் ஸ்ரைல் என்று போனமாசம் வந்து சேர்ந்த தம்பி சொன்னதும் நினைவுக்கு வந்து போனது. வயசென்ன? மிஞ்சிப் போனாலும் முப்பதைத் தாண்டாது.
<33_Ds

Page 18
G34)
போர்த்துக்கல்லோ, ஸ்பனியனோ என்று கருதக் கூடியளவிற்கு, உழைப்பின் செம்மை முகத்தில் இல்லை. களையென்றால் முகத்திலேயே தெரியும். அல்லாட்டியும் அலி அவசரப்பட்டுத்தள்ளிப் போயிருப்பான். சந்தேகமேயில்லை. பிரெஞ்சுக்காரன் தான். நேற்று நன்றாக இருந்து, இன்று இந்தக் கதி வந்து விட்டதே என்று விம்மி வெடிக்கிறான் போலும். யாரையும் பார்க்கவும் விரும்பாமல், முகத்தை மறைக்கவும் முடியாமல் பார்வையை நாலடி முன்னே குத்தி தேம்புகிறான். கிளிசரீன் காணாத கண்ணீர்.
விலத்திநாலடி நகர்ந்திருப்பேன். வேறு நகரத்தில் இருந்தோ அல்லது வேறு நாட்டில் இருந்தோ ரூறிஸ்ராக வந்து காசைத் தொலைத்துத் திரும்பிப்போக வழியில்லாமல். இப்படி ஒரு நினைப்பு என்னையும் முந்திக்கொண்டு வழிமறித்தது. ஒரு நிமிடம் நின்று யோசித்தேன். இந்த நினைப்பை எப்படித்தான் உதறியெறிந்தாலும் அது என்னைத் தொடர்ந்து வந்து இரவு எங்கை தூங்கு பார்ப்பம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும். பேந்து விடிய வேலைக்கெழும்பிற பஞ்சியிலை 150 பிராங்கும் போய், பத்திரோனிட்டை நாறல் பார்வையோடைநாலு கிழியலும் வாங்க வேண்டும். சற்றுப் பின்னால் திரும்பிப் பின்பொக்கற்றுக்குள் கைவைத்து பத்துப் பிராங்கைத் தூக்கிப் போட்டேன். அவன் பார்வை அசையக்கூட இல்லை. பத்து சென்ரிம் போட்டேனா? பத்து பிராங் போட்டேனா? கறுவல் போட்டதா? வெள்ளை போட்டதா? எந்தத் தேடலும் அவனில் இல்லை. அரை மணிநேர உடம்பு முறிப்பு. மனசுக்குள்ளே இருக்கிற மனிதத்தின் உயிரைக் காப்பதற்கு காசு சம்பாதிக்க வேண்டியதாய்க் கிடக்கு. றெயின் வந்தது. அலியோடு ஒட்டிக்கொண்டேன். றெயின் இருட்டறைக்குள்ளால் வேகமாக ஓடியது என் வாழ்க்கை போல. மனிதத்தைப் பத்துப் பிராங்கும் திருப்திப்படுத்தலில்லைப் போலும். அவன் திரும்பத் திரும்ப கண்முன் நின்றான். அவன் கண்கள் குளமாகியிருந்ததும், முகத்து மேடுகள் ஆறாகியிருந்ததும் அம்மாவை ஞாபகம் ஊட்டியது. காதுக்கு வேப்பம் குச்சியடைத்து, கண்ணின் அயலட்டைகளும் கறுத்துக் கண்டிப் போய், அழுக்கேறிப்போன சீலையோடு அம்மா அழுகிறாள். காய்ச்சிய கஞ்சியை 'மங்குக்கை வார்த்து வார்த்து "சாப்பிடுங்கோ பிள்
> மண்டூர்க் கந்தா ளைகள் சாப்பிடு மனக்கவல தீர்ப்பாயெண்டா ங்கோ' என்று தட்டிக் கூரையை அண்ணாந்து
சாகும்மட்டும் உன்னை சாமி எனைக் கையேப்பன்.
பெருமூச் சுவிட் ட

அம்மா அழுகின்றாள். பிள்ளைகளுக்கு அரை வயிறுகூட நிரம்பாத கஞ்சியை, அம்மா நாவில் கூட நனைத்துக்கொள்ளவில்லை. பசி கடித்துக்குதறுகிறதோ, இல்லை எப்படித்தான் இந்தப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறேன் என்று நினைக்கிறாளோ தேம்பித் தேம்பி அழுகின்றாள். செய்வதறியாது பரிதாபமாகப் பார்த்துநின்ற நான் தெருவில் யாரோ இறங்கியது கண்டு "அழாதையுங்கோ அம்மா, றோட்டிலை ஆட்கள்" என்றேன்.
முந்தானையால் முகத்தை வழித்து அம்மா தன்னை
ஆசுவாசப்படுத்தியபோது நினைத்தேன், ஏதோ சொல்லப்போகிறாள் என்று. என்ன சொல்வாள்? "நான் அழுகிறேன் என்று உனக்கு இரக்கம் வரவில்லை. யாரோ பார்த்துச் சங்கடப்படப் போகிறார்கள் என்று என்னையடக்குகிறாய். என்னைக் காட்டிலும் உனக்கு அவர்கள் மேல் எம்மட்டு இரக்கம். ஏண்டா, உனக்கு நான்கூட ஏழையாக தெரியுதா’ என்றுதானே! ஆனால் அம்மா சற்று வேறுவிதமாகச் சொன்னான். "பயப்பிடாதையப்பு. பக்கத்து வீட்டு ராசாத்தி அழுதால், பத்துப்பேர் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்வார்கள். நாங்கள் அழுதால் யாரும் இங்கு வரமாட்டார்கள். ஏனெண்டா, அவள் பணக்காறி, நாங்கள் பரம ஏழைகள். துக்கம் தொண்டையை அடைக்க கஞ்சியை உறிஞ்சினேன். அலி கையில் சுரண்டியிருக்க வேண்டும். சுயநினைவுக்கு வந்தவனாய் திரும்பினேன். 'என்ன யோசிக்கிறாய்? பத்து பிராங் அநியாயமாய்ப் போச்சுதெண்டுதானே!" அலிகரவுப் பார்வையோடு கேட்டான். அதுதானே. பத்து பிராங் ஏன் போட்டேன். வியந்து பார்த்தேன். பின்னையென்ன. அதிலயிருந்தவன் ஊத்தை உடுப்புப் போட்டிருந்தால் பத்து பிராங் போட்டிருப்பேனா? அவன் தேவை வெகு தூரம் வீடு போய்ச் சேர வேண்டும் என்று எண்ணிவிட்டேன். இரவு சாப்பிட வேண்டும் என்று கேட்டிருந்தால் என் மனிதநேயம் இன்னும் கொஞ்சம் 'சீப்"பாகவும் இருந்திருக்கும். உள்ளம் குறுகி நூலில் தொங்கத் தலை கவிண்டேன்.
அலி மீண்டும் தட்டினான். 'நீ ஒரு காசுக்காறன். ஏன் உன்னிடம் |
ஒன்று, இரண்டு பிராங் இல்லையோ?” ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்தான். குமட்டிக்கொண்டு வந்தது. பத்திரோன் தந்த சில்லறை பத்துப் பிராங் தாளில் போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் “காசுக்கு ஒரு பெறுமானம் இருக்கு. அந்த இடத்தைவிட்டுக் கழன்றால் காணும், அதுக்கு ஒரு சில்லறை நிலத்தில் விழுந்து சத்தம் கேட்டால் போதும் என்று நான் நினைக்கவில்லை' என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுத்தான் சொன்னேன்.
<3sD

Page 19
G6)
அவன், அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லைப் போலும். என்ன எனக்கா புலுடா விடுகின்றாய் என்பது போல தலையாட்டி, நாயைக் கூப்பிட்டு "அது சரிசொல்லுவாய்தான் சொல்லு' என்று சிரித்தான். றெயினுக்குள் துல்லியமான உரத்த குரல் ஒன்று கேட்டுத் திரும்பினேன். பக்கத்தில்தான். முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பேசுகின்றாள். 'நான் இந்த நாட்டைச் சேர்ந்தவள். எனக்கு இரண்டு குழந்தைகள். வேலையில்லை. வீடு இல்லை. வேலையிருந்தால் சொல்லுங்கள், றெஸ்ரோறன்ற் ரிக்கற். றெயின் ரிக்கற், காசு. எது வேண்டுமானாலும் உதவி செய்யுங்கள்' நிறையப் பேசினாள். விளங்கியது இவ்வளவுதான். அவளிள் சங்கடம். தவிப்பு - ஒருவேளை நடிப்பாகவும் இருக்குமோ? - எல்லாம் அவள் கண்ணின் படபடப்பிலும், தன்னை மறந்து கையில் உள்ள சஞ்சிகையை மாற்றி மாற்றிச் சுருட்டுவதிலும் தெரிகின்றது. ஒன்றுக்கு இரண்டு மூன்று தரம் நன்றி சொல்லிக் கை நீட்டத் தொடங்கினாள். நான் பின்பொக்கற்றில் விரல்களைச் செருகினேன். அலி தோளால் இடித்து என் மணிக்கட்டில் கைவைத்தான். 'நீ எங்கேயிருக்கிறாய். இன்னும் நாற்பது கிலோ மீற்றர் போகவேணும். நீ போய்ச் சேருவதற்குள் உன் இன்றைய சம்பளம் முடிந்து விடும்' என்று ஏசினான். நியாயம்தான். ஆயினும் மனசு ஒற்றைக்காலில் நின்றது. கையை எடுத்துவிட்டு நின்றேன். அவள் என்னைக் கடந்து போனாள். அழகான பெண்தான். நன்றாக உடுத்தியிருந்தாள். கொஞ்சநாட்களாகவே பார்க்கிறேன். இப்படிப் பிச்சையெடுப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. போன வருடத்திற்கும், இந்த வருடத்திற்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம். மூன்று நாலு பேர் என்றிருந்து இப்போ முந்நூறுக்கும் மேல் ஆகிப் போச்சு. இன்னும் கூடுமோ? இடையே பாரதியின் நினைப்பு வர லேசாகச் சிரித்தேன். 'என்ன சிரிப்பு' அலி சற்று அதட்டலுடன். 'இல்லை நம்ம நாட்டில் ஒரு கவிஞன் இருந்தான். அவன் மனைவி வீடுவீடாகத் தண்டிவந்த அரிசியைக் குருவியின் இன்பங் கண்டு அவை பசியாற அள்ளி வீசினானாம்'
'அவனுக்கு விசர்" 'அப்படிச் சொல்லாதே. அவன் பெரிய மனிதாபிமானி' 'மனிதாபிமானி அதுதான் மனிதனைப் பார்க்கவில்லை” சிந்தனை வெடிக்கச் சிறிது மெளனமானேன். அவனுக்கு கவிஞரை விளங்கப்படுத்த எனக்குப் பிரெஞ்சு போதாது.
பிச்சை எடுத்து முடித்த அவள் அடுத்த நிலையத்தில் பெட்டி மாறுவதற்கு வசதியாக கதவு வாசலோடு என் பக்கத்தில் நின்றாள்.

இளமை மாறாத அழகான முகம் சோகத்தில் தோய்ந்து வதங்கிக் கிடக்கிறது. நாலு கலரும் பூசி நயமாகச் சிரித்தாள் என்றால் நல்ல எடுப்புச் சாய்ப்பாய்த்தான் இருப்பாள். என் ஆம்பிளைப் புத்தி இப்பிடிப் போச்சோ என்னவோ? உடலையும். உணர்வையும் விற்கும் தொழிலுக்குப் போனால் நல்லாகவே உழைக்கக் கூடியவள்தான். இப்படி கைநீட்டிப் பிச்சை வாங்குகிறாள் என்ற எண்ணம், அவள் மேல் ஒரு மரியாதையை பதித்தது. பாவம்.! நாளை இதிலும் அவள் வயிறு நிரம்பவில்லையென்றால் அங்குதானே போக வேண்டும். என்ரை கை, தன்ரைபாட்டுக்கே பத்துப் பிராங்கை தூக்கி அவள் கையில் வைத்தது. அலி தன் பூட்ஸ் காலால் என் காலில் குத்தினான். வலித்தது. அடுத்த ஸ்ரேஷன் வந்து அவன் இறங்கிப் போக 'அவளுக்கு இதில் வருமானம் இல்லையென்றால் தன்னை விற்கத்தானே போவாள்' கொஞ்சம் கடுமையான குரலில் மெதுவாகவே கத்தினேன். "போகட்டன். அதுக்கு உனக்கென்ன. சரி. இப்ப போனவையளை என்ன செய்யப் போறாய்? கொஞ்சம் காசு கூடக் கொடுத்து வீட்டை அனுப்பிவிடன்' சிரிப்பும் சினப்புமாகப் பேசினான். நான் எதுவும் பேசவில்லை. இன்னும் கழன்று போகாத கற்புப் புத்தியோ என்னவோ. சீர் அப்பிடியென்றும் சொல்லேலாதுதான். மீண்டும் 'பொன்ஞ" என்ற குரல் கேட்டு பார்வையைச் செலுத்தினேன். கோ-ரை எல்லாம் கட்டிய நாற்பது வயதுக்கும் மேலான ஒருத்தன். "நான் ஒரு மதமற்றிக்கன், வேலை இல்லை, அதை விட எனக்குத் தெரிந்தது இதுதான்' புல்லாங்குழல் ஒன்று மேலே வந்து கீழே போனது. 'விருப்பமானவர்கள் கேளுங்கள். மற்றவர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்' புது மரியாதை உணர்வோடு அலியைப் பார்த்தேன். நக்கலாக கண்ணடித்து 'சரிதான் போச்சு' என்றான். அவன் புல்லாங்குழலை வாயில் வைத்ததுதான். நம்ம ரமணி பிச்சை வாங்க வேண்டும். அதுதான் போகட்டன். 'என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்.' என்ற பாட்டை வாசித்தான். ஒருகணம் திகைத்துத்தான் போனேன். அலியை அவசரமாகச் சுரண்டி இது நம்ம நாட்டுப் பாடல் என்றேன். அவன் மீண்டும் நக்கலாக 'உன்ரை நாட்டுப் பாட்டோ, அவனைப் பார்க்க ஆர்ஜன்ரீனாக்காறன் மாதிரிக் கிடக்கு' என்றான். அது என்னமோ உண்மைதான். ஆனால் இது நம்ம் பாட்டு, அலி விழுந்து விழுந்து சிரிக்கிறான். வெட்கமாய் கிடக்கு விசரன் சிரிக்கிறான். முதலில் பாட்டை ரசிப்பம். சீமான் நல்லாய்த்தான் வாசிக்கிறான் பாவி,
G7)s

Page 20
Gs)
நம்ம இசையமைப்பாளரின் கள்ளத்தனத்தை உணர்ந்தாலும் இந்தவகையான மெட்டை நாம் கேட்க வைக்கிறதுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
புல்லாங்குழல் வெளியே இறங்கியதும் அலிகேட்டான். இவனுக்கேன்
காசு போட்டாய் என்று. நீண்டநாட்களாக என்னுள் இருந்த
கருத்தையே அலிக்கும் சொன்னேன். அவனிடம் இருந்து எதையோ பெற்றுக் கொண்டோமே அதற்காக நாம் ஏதாவது கொடுக்க வேண்டாமா என்று. 'உன்னோடை கதைச்சுப் பிரயோசனம் இல்லை. படியடியிலை இருந்தவன் நாளைக்கு இருக்க மாட்டான் என்கிறாய். பிச்சை கேட்டவன் நடுத்தெருவுக்குப் போகக் கூடாது என்கிறாய். பாட்டை ரசித்ததாலை இவனுக்குப் பணம் கொடுத்தேன் என்கிறாய். எல்லாம் நியாயம்தான். எங்கைபோய் முடியப்போறியோ...' பெருமூச்சு வேறுவிட்டு விட்டு தன் ஸ்ரேசன் வந்ததும் இறங்கிக் கொண்டான்.
நம்ம ஸ்ரேசன் வந்து நான் இறங்கிறோட்டுக்கு ஏற. என்ரைக்ஷ்ட காலமோ, கைக்குழந்தையோடை மனிசியொன்று இருந்தபடி கை நீட்டிற்று. நான் கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான். வாற போறவர்களையும் விட்டிட்டு குழந்தையைக் காட்டி என்னைத்தான் கெஞ்சினாள். 'தூண்டில் ஞாபகம் வந்தது. நாடற்றவர்களாம். றோமாவோ, ஸ்ந்தியோதான். ஏதோ வட இந்திய வழித்தோன்றல்களாம். வந்த இடத்திலை தங்கேலாம நாடு நாடாய்த் திரிய ஐரோப்பிய அரக்கர்களும் பிடிச்சு பிடிச்சுக் கொல்ல. எங்களுக்கும் இதுதானே நடக்கிறது. இந்தக் கோலத்தை நாம் புரியாவிட்டா.
அப்புறம் என்ன அதே தான். வாழ்க. வளர்க.
நேரம் ஏழு மணியாகி விட்டது. இனி அடையான் கடைதான் தஞ்சம். மூன்று பிராங் உப்புக்கும் மூன்று பிராங் கூட்டி வைச்சிருப்பான். ஆனால் கடை மட்டும் அடையான். அவனுக்கும் இந்தத் தொழில் ஒன்றுதான் மிச்சம் -லூபென் நாஸியை விட்டுக் கடையை எரிக்கும் வரை. கடைக்குள் நுழைந்ததும் காசைக் கணக்குப் பார்த்தேன். அரைகுறைச் சாமான்களோடு வீட்டை போனேன். 'என்னடாப்பா பத்திரோன் குறையவே தந்தவன்" 'இல்லை. இடையிலை செலவாய்ப் போச்சு'
"என்ன செய்தேனி"
'ஏதோ செய்தேன்'

'ம் ஒன்றுமில்லை. உனக்கும் பெட்டி இறக்கத்தான் வேணும்' அவன் நக்கல் சிரிப்பு என்னில் பாய கண் அவன் பெட்டிக்குப் பறந்தது. நான் எதுவும் பேசவில்லை. என்னத்தையன் நினைக்கட்டும். மேலும் பேசி விசரைக் கிளப்பக்கூடாது என்பதற்காக. இரவு தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவேணும் எனக்கு காசு கொடுத்தேன். ஒருவேளை பத்து பிராங் மட்டும் போயிருந்தால் தூக்கம் வந்தாலும் வந்திருக்கும். நூறு மட்டும் எண்ணிப் பார்த்து எல்லாம் பண்ணிப்பார்த்தும் நித்திரை வரவில்லை. அலிதான் வந்தான். 'உன்னை மாதிரி ஆட்களின் காசு சேர்ந்தால் அவர்கள் உன்னை மாதிரிக் கஷ்டப்படாமலே உனக்குமேல் சம்பாதிப்பார்கள். நீங்களே உருவாக்கி நீங்களே வளர்க்கிறீர்கள். காசு கொடுப்பதால் உனக்குக் கிடைக்கும் திருப்தி நீ பிச்சையெடுப்பதில் தான் முடியும்" காலை வேலைக்குப் போனதும் அலிக்குச் சொன்னேன். 'இரவு உன்னோடு பெரிய சண்டை' 'என்ன பிச்சைக்காரன் பற்றியா?" "ஆமாம். நம்மைப் பற்றியேதான். கஷ்டப்படுபவர்களைக் கண்டும் காணாமற் போக முடியவில்லை. எது கேட்கின்றார்களோ அது இருந்தால். குறைந்தபட்சம் மனிதனாக இருக்க விரும்புகிறேன்' 'கொடு, உன்ரை காசைத்தானே கொடுக்கிறாய். ஆனால்.இதன் மூலம் யாராவது குறைந்தால் சரிதான். நீ மனிதனாக இருந்து கொள்ளலாம். அல்லாவிடில்!" வேலை முடிந்து லகாருக்குள் படியிறங்கினோம். அதே மனிதன். அதே போன்ற அழுகை. அதே உடுப்பு. தேம்பித் தேம்பி அழுகின்றான். கிளிசரீன் காணாத கண்ணீர், அப்படியே படியடியில் அசந்து நின்றுவிட்டேன். மனிதர்கள் மனிதர்களைப் பார்த்துப் பார்த்து சந்தோஷமடைவது எப்போது? கேள்வி மட்டும் எனக்குள்ளே நிழலாடிக் கொண்டிருந்தது.
க.கலைச்செல்வன்.
நன்றி; தூண்டில் பத்தரோன் -முதலாளி லகார்-புகையிரநிலையம் பொன்ஞ-வணக்கம்
மெர்சி - நன்றி
அடை-அராபியன் ^4 கல்லாத்து விரிச்சலிலே
லூபென் - நாஸித் கறுப்பெண்டு ஒருமுதள
தலைவன் மல்லாத்திப் போட்டு
மணிக்குடல வாங்குதுகா.
<39Ds

Page 21
S.கிரிதரன்
அந்தப் பாதையில் நீ ஏற்கனவே போயிருக்கவும் கூடும் இல்லையேல் இன்னும் நீ போகாமலும் இருந்திருக்கவும் கூடும் என்றாலும்
எனக்குக் கிடைத்த
இந்தக் குறுகிய நேரத்தில் வெளியே வந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
W G8 ITS infras. நானே வெட்கப்பட்டுக் கொள்கிறேன் -இருந்தும் நகர மனமின்றி
நிற்கிறேன்.
费费寮
மழைபோல் இரைச்சலாகவும் பணிபோல் மெளனமாகவும் என் ஒரே உணர்வை மாற்றிக் கொண்டிருக்கிறாய் எல்லாம் நீ தான் வடிவங்களில் வேறாகிறாய் நான் பணியைத்தான் நேசிக்கின்றேன் நீ மழைபோல் நிற்கிறாய்.
*** *紫*
திட்டுத் திட்டாய் மேகம் குட்டி போட்டுக் கொண்டு கலைந்து போனது. குட்டிகளும் ஒன்று சேர்ந்து குட்டி போட்டுக் கலைத்து போனது வெட்ட வெளியில்
கட்டி வைக்க எதுவும் இன்றி யாவும் கரைந்து போனது.
 

6ம் பக்கத் தொடர்ச்சி.
நெல்லாகும். எனவே கமத்தொழில் தொடர்பான வழக்குச் சொற்கள் சிலவற்றை இங்கு நோக்கலாம்.
காடழித்து வயல் பெருக்கி பெரும் நிலங்களுக்குச் சொந்தமாக வாழ்ந்தோர் 'போடியார்' எனப்பட்டனர். போடி என்ற சொல் உழவர் தலைவன் என்ற பொருள்படும். 'முல்லைக்காரன்' என்னும் சொல்லும் வழக்கிலுள்ளது. வயற் செய்கைக்கு வேண்டிய மந்தைகளைப் பராமரிக்கும் தொழிற் தலைமையையும் மேற்கொண்டிருந்தமையால் அதுபற்றி அவனை முல்லைக்காரன் என அழைக்கும் மரபு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
வயற்பரப்பின் சிறு பகுதிகள் வரவை' என்றழைக்கப்படும். வரம்பினால் எல்லைப்படுத்தப்பட்டது என்பது இதன் பொருள். மிகப் பெரிய வரவை போட்டா' என்றும் சிறிய வரவை 'கன்னட்டி" (கன்னம்+தி. இதன்பொருள் ஒரத்திலுள்ளது என்பதாகும்) ஒவ்வொரு வயலிலும் குறிப்பிட்ட ஒரு பகுதியினை 'முத்தெட்டு' என வழங்குவர். (இது முற்றுட்டு என்னும் சொல்லின் திரிபாகும். முழு உரிமையாக ஒருவனுக்கு விலை எதுவும் கொள்ளாது அளிக்கப்படும் நிலம் முற்றுாட்டு எனப்பட்டது) வயற்பரப்பு முழுவதையும் 'வட்டை' என்ற சொல்லாற் குறிப்பர். (வயற்பகுதிகள் முன்னர் வட்டமாக அமைந்திருந்தமையால், வட்டம் என்ற சொல்லின் அடியாக இது பிறந்திருக்கலாமென்றும் கூறுவர்.)
நீர் செல்லுவதற்காக வரம்பில் வெட்டி விடப்படுவதும், வேண்டும்போது அடைக்கப்படுவதுமான வழி வக்கடை என்று அழைக்கப்படும். (வங்கு+அடை= வக்கடை, வங்கு என்பது வெட்டப்படுவதையும், அடை என்பது அடைக்கப்படுவதையும் குறிக்கும். ‘வக்கடை" என்னும் சொற் பிரயோகத்ததுடன் ஒட்டியதாக, இங்கு வழங்கும் 'வக்கட்டு' என்னும் வழக்குச் சொல்லையும் பொருத்தம் நோக்கி இவ்விடத்திற் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகின்றது. சிறுவர்களை, அதுவும் குறும்பும் குழப்படியும் மிக்க சிறுவர்களைக் குறிக்க இச்சொல்இங்கு பயன்படுத்தப்படுகின்றது. சிறுவனாயினும், பெரிய தொழிற்பாட்டை சொல்லாலோ அன்றிச் செயலாலோ உணர்த்தும் சிறுவர்கள் இவ்வாறு அழைக்கப்படுவர். 'வக்கடை என்பதும், சிறிய வழிப்பகுதியாக இருந்தாலும் நிறைந்த பயனைத் தரக்கூடியது. எனவே 'வக்கட்டு' என்னும் சொல் 'வக்கடை" என்பதிலிருந்து உருவாகியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கமத் தொழில் சார்ந்த வழக்குச் சொற்கள் மிக ஏராளமாகப் பயன்பாட்டில் இருப்பினும், அவை எல்லாவற்றையும் குறிப்பிடுவது அசாத்தியமானது என்பதால் மேலும் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச்
GD

Page 22
G2)
செல்வது பொருத்தமானது.
'மாவக்கை" (அரிந்த ஒரு பிடியளவு நெற்கதிர்த்தொகுதி), 'உட்பட்டி' (மாவக்கை சில சேர்ந்தது), "கட்டு" (உப்பட்டிசில சேர்ந்தது), "ஆடு' (பல நூறு கட்டுக்கதிர் சேர்ந்த போர்க்குவை), 'கந்து' (சிறிய சூடு), 'ஒட்டுத்தாள்’ (கதிர் அறுக்கப்பட்டு வயலில் மீதியாகக் கிடக்கும் பயிரின் அடிப்பாகம்), தா(ள்)க் கத்தி (வேளாண்மை வெட்டும் கூன்கத்தி), 'வத்தை (நென் முறைகள் தெரிந்தெடுக்கப்பட்டு மீந்து கிடக்கும் முளைக்காத நெல்), 'சூடு போடுதல்" (போர் மிதித்தல்), 'வைரப்பொலி (நல்ல நெல்), "அவுரி (வைக்கோலாற் செய்யப் பட்டதும் பொலி தூற்றப்பயன்படுவதுமான உயர்ந்த முக்காலி), 'களவெட்டி' -களவெட்டி (சூடு மிதிக்கும் களம்), நட்டுமை' -நடு+உமி-நட்டுமை (வரம்புகளின் நடுவில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் அமைந்துகிடக்கும் நீர் கசிந்து பொசியும் கண்ணறை)
(நடராசாFXC 1980 மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்)
கலங்கல், வெள்ளம் தண்ணீரைக்குறிப்பன
வேலைக்காரன் கம்பு (போர் கிளறும் வளைவான தடி)
மக்கள் மத்தியில் "வேலைக்காரன் கம்பு’ என்னும் தொடர் மரபுத் தொடராக இங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக முயற்சியும் வேலைகளிற் சுறுசுறுப்பும் உள்ளவர்களை இது குறிக்கும்.)
"வலிச்சான்' (உரொட்டி), 'வாரிக்காலன் (மாடு), "வெள்ளோடன்' (தேங்காய்), "கணக்கன் (மரைக்கால்), "குஞ்சுவாயன் (கைப்பெட்டி) 'பெருவாயன்' (சாக்கு அல்லது கடகம்), "அரக்குக் கிளப்புதல்' (சூடு போடுதலாகிய பொலிவிழாவின் முடிவு),
மீன்பிடித்தொழில் சார்ந்த வழக்குச் சொற்கள் சில:
தோணி, வள்ளம், கூறைப்பாய் வள்ளம், மச்சுவாய் உரு, ஒட்டங்குத்தி (ஒடத்தின் வகைகள்), அணியம் (தோணியின் முன்புறம்), புறகம் (தோணியின் பின்புறம்), கொல்லா (தோணியுடன் கட்டப்படும் மிதவைக் கட்டை), விசாள் (கொல்லாவையும் தோணியையும் இணைக்கும் கம்புகள்), சமள் (தோணியைச் செலுத்தும் துடுப்பு) பண் (மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலை), அத்தாங்கு (ஒரடி முதல் மூன்றடி வரை குறுக்களவு உள்ளதும் மட்டை கட்டப்பட்ட வட்டமான வாயை உடையதுமான ஒரு மீன்படி வலைக் கருவி), வடித்தல் (அத்தாங்கிகளால் மீன் பிடிப்பது), கொண்டடி (பெரிய அத்தாங்கு), கரப்பு (சிறு தடிகளால் வட்டமாய் வேலி போல் வாய் குவிய நிரைத்து வரிந்து கட்டப்பட்ட ஒரு மீன் பிடி கருவி), கரப்புக் குத்துதல் (மேற்குறித்த கருவியினால்மீன்பிடித்தல்),மப்புலி-மப்பிலிதூண்டிற்கழையின் -கம்பு- கயிற்றிலுள்ளதுண்டில், நீரின்கீழே சென்று நிலமட்டத்தை அடையாமல் நடுநீரில் நிற்குமாறு கயிற்றிற்

கட்டப்பட்டிருக்கும். மிதப்பிற்கு மப்பிலி என்று பெயர். இது மயில் இறகினால் ஆனது. அடிப்புறமாக வெட்டப்பட்டு இரண்டாக மடித்துக் கயிற்றுடன் சேர்த்து இரு நுனியும் மேலே நேரே இரு பிரிவாக நிற்குமாறு ஒரு மயில் இறகுத் துண்டு கட்டப்பட்டிருக்கும். மயிற்பீலி என்பது மப்புலி எனச் சிதைந்து விட்டதாக அறிய முடிகிறது. (நடராசா FXC.1980மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்) மட்டக்களப்பு மக்கள் தம் அன்றாட வாழ்வில் சரளமாகப் பயன்படுத்தும் வழக்குச் சொற்கள்: 'கா' என்னும் அசைச்சொல் மட்டக்களப்பு மக்களது வழக்குச் சொற்களுடன் ஒன்றிணைந்திருப்பதை, யாவரும் எளிதாக இனங்கண்டு கொள்வர். இந்தச் சொல் உயர்ந்தோர் வழக்குப் பெற்றிருப்பதனை அறியலாமாயினும், (தொல்காப்பியம்: சொல்லதிகாரம்: 279ம் சூத்திரம்) தற்போது இச்சொல் பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது.
- மிகுதிஅடுத்த இதழில்
கிழக்கே ஏற்படுத்தும் கவிதையாக
༼───────────ཛོད།
i.
盖
吕
O 6)
i
الگS"

Page 23
அழகிற் சிறந்த தங்க நகைகளுக்கு
நம்பிக்கையான இடம்
அம்பிகா
நகை மாளிகை மெயின் விதி,
வாழைச்சேனை.
N
இடமிருந்து வலம்:
1.
10.
இரவில் இணைபிரிந்து வருந்து வதாகச் சொல்லப்படும் பறவை
660)85. இங்கே திசைமாறியது போன்று இதுவும் திசைமாறினால் எங்கும் அழிவுதான். சொர்க்கத்திற்குரிய சொல். தெய் வத்தன்மையுடையது என்றும் பொருள்படும். நடு எனப் பொருள்படும் இச் சொல்லின் இறுதி எழுத்து இல் லையே! சாதனைத் தொகுப்புக்கள் கொண்ட புத்தகம். நிறத்தில் எதிரான குயிலுக்கும், கொக்குக்கும் பொதுவான சொல், இறுதி எழுத்தை இழந்து நிற்கின்
D5.
 

N
Thivaish Book Centre
மாணவர்களுக்கான புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் அலுவலக காகிதாதிகள், பிறந்தநாள், திருமண வாழ்த்து மடல்கள்/ அழைப்பிதழ்கள் இன்னும் பல
62, திருமலை விதி,
மட்டக்களப்பு.
Y கொண்டவட்டான் புட்டியில குரவைவெடி என்ன மச்சான் பூசாரிமச்சான்ட
12. ஒரு வகை வாத்தியக்கருவி. காது ("
டனும் சம்பந்தப்பட்ட வார்த்தை. இறுதியெழுத்தை இழந்துள்ளது. 13. வழுக்கைத் தலையன் இங்கே போனால் வாய் சொல்லும், Take lt Easy. 15. ஒருமையில் நோக்கச் சொன்னது சரி,
திரும்பியுள்ளது ஏன்? 16. மகாபாரதத்தில் இடம்பெறும் மன்ன
வன் ஒருவன் 17. தசரதன் மைந்தன்.
மேலிருந்து கீழ்
1. அரசர்க்குரிய பெயர். 'செவாலியே
விருதுக்குரியவருக்கு நெருங்கிய தொடர்பு. 2. சண்டை, சச்சரவு என்றெல்லாம்
பொருள்படும். 3. கிழக்கொளியின் ஓர் ஆக்கமான இது, பண்டைக்கால போர் ஆயுதமு Lost Gud. м 4. தென்றற்காற்று குழம்பல் நிலை
யில். 5. சூரியன் 7. சகல நாடுகளிலும் ஏற்படும், சர்வ தேசப் பிரச்சினை. கடத்தலுடன் சம் பந்தப்பட்ட இது குழம்பியுள்ளது. 10. சிலப்பதிகாரத்தில் தலைவன். 11. இறைவனை இப்படியும் அழைக் 7
கலாம். 14. கமலஹாசனின் நடிப்புத்திறமைக்கு எடுத்துக்காட்டான ஒரு பாத்திரம். இறுதி எழுத்தை இழந்து குழம்பி விட்டது. 16. உளவாளிகளுக்கு இதுவும் கைவந்த
ᎦᏚᎧᏡ)Ꭷu) .
பொண் சமஞ்சி போச்சுதாங்கா.

Page 24
இல: 12 இற்கான முடிவுகள்
3
நியூமர்ழியாஸ்
44, பிரதான விதி,
மட்டக்களப்பு.
வு
ள்
/ー மட்டுநகரில் N
V உயர்தர ஆடைத்தெரிவுக்கு
குறுக்கெழுத்துப் போட்டி இல: 12 இற்கான மிகச் சரியான விடையை எவரும் அனுப்பவில்லை. எனி னும், முயற்சித்த வாசகர்களுக்கு எமது பாராட்டுக்கள். குறுக்கெழுத்துப் போட்டி இல: 13ஐ முழுமனதோடு முயற்சி செய் யுங்கள்.
Yகாலி விளை பாக்குக்கும்
களுதாவளை வெத்திலைக்கும் ஏலம் கிராம்புக்கும் ஏத்ததுதான் உன்எழில்வாய்.
 
 
 

கிடந்த 31.05.95இல் பல்கலைக்கழக கல்வியாணிசாரா ஊழியர் அணிக்கும், பல்கலைக்கழக ஆசிரியர் அணிக்குமிடையே 15 ஓவர்கள் கொண்ட, சிநேகயூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. கல்வியணி சாரா ஊழியர் அணி:- P.ரமணிஸ்வரன், Tசிறிதரன், K.C.பரராஜசிங்கம், Rராகல், G.A.மோசஸ், Mசதீஷ், Sராஜ்மோகன், S.மணிவண்ணன், S.சோமகேசன், Sசதீஸ்குமார், K.ரொகான்
ஆசிரியர் அணி:-Kபிரேமகுமார், VMரொகான், M.மோகனராஜா, Tதிருச்செல்வம், M பிரிந்தன், S. புஷ்பராஜா, K.கணேசன், B.சுகுமார், WA.செல்வின், PS.சதானந்தன், K.சத்தியேந்திரா நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஊழியர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி ஏழு விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களை, 15 ஓவர்கள் முடிவில் பெற்றது. M. சதீஷ், S.சோமகேசன், K.C.பரராஜசிங்கம் ஆகியோர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி முன்றயே 39, 20, 10 ஓட்டங்களைப் பெற்றனர். Tதிருச்செல்வம், M. மோகனராஜா, M.பிரிந்தன் ஆகியோர் முறையே 3,2,2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். பதிலளிக்கக் களத்தில் இறங்கிய ஆசிரியர் அணி, தனது ஆரம்ப வரிசைத் துடுப்பாட்ட வீரர்களை மிகக் குறைந்த ஓட்டத்திற்கு சடுதியில் இழந்தமையால், 15 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 40 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. K.பிரேமகுமார் சிறப்பாக விளையாடி 14 ஓட்டங்களைக் குவித்தார். GA. மோசஸ், M. சதீஷ், S. சதீஸ்குமார் முறையே 3,2,2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். ஆட்ட முடிவில், கல்வியணி சாரா ஊழியர் அணி, ஆசிரியர் அணியை 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
* மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற தோற்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், பல்கலைக்கழக மாணவர் அணி பல சிறந்த வெற்றிகளைப் பெற்று, அரையிறுதி ஆட்டத்தில் சிவானந்தா அணியிடம் ஒரு ஓட்டத்தால் தோல்வி கண்டது.
* பல்கலைக் கழக மைதானத்தில் சிவானந்தா அணியுடன் நடைபெற்ற சிநேகயூர்வ தோற்பந்து கிரிக்கெட் போட்டியில், பல்கலைக்கழக மாணவர் அணி ஒரு ஒட்டத்தால் தோல்வியுற்றது. கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் தம்மிடையே இலைமறைகாயாக இருக்கும் விளையாட்டு வீரர்களை வெளிக்கொணர்வதற்கு இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கு செய்ய முன்வர வேண்டும் என்பது எமது தாழ்மையான விண்ணப்பமாகும்.
翡
Q47Ds

Page 25
SANDOS AGENCY for \ Neuj & Re - Conditiomed
Motor Cycles S Genuine spore parts
Tphone 065 - 2903. 81, Trinco Road, Batticaloa
=്
உங்களது தேவை
எதுவாயினும்
T. L. T & BROS
MOSQUE STREET VALACCENA TEL: 065/ 7245
2-ܠ
2-ܠ
/
ܓܠ
TECHNO PRINT
6, JEYAWARDENA AVENUE, DEHIWALA. TEL: O 1 - 73577O8
N
ン

கிழக்கொளி
ஆடி புரட்டாதி 1995 ஒளி 5 - கதிர் 1
பிரதம ஆசிரியர் Magely
இணை ஆசிரியர்
S.ஆதவன்
ஆசிரிய பீட உறுப்பினர்கள் S.நாகரெட்னம் Kராஜகோபால்
Tசிறிதரன்
M.மகேந்திரன்
கிழக்கொளி பல்வேறு விடயங்
களிலும் படைப்பாளிகளிடமிரு ந்து ஆக்கங்களை வரவேற்கின்ற அதேவேளை அதன் தரத்தை நிலைநாட்டுவதிலும், பலமான ஆ ரவை நாடுகின்றது.
凶
பிரதம ஆசிரியர்,
சூனியம்
இச்சாதாரிகள் சப்பித்துப்பிய எச்சில் சக்கையாய் எம் வாழ்வு
சுதந்திர மற்ற எச்சில் இரவுகளின் விடியல்களில் கண்விழித்து கருவறையை மீண்டும் அடைக்கலம் கேட்கும் ஆத்மாக்கள்
ஊன்களை எங்கும் மறைக்க முடியாத கொடுமையால் உலகை வெறுத்து உயரப் பறக்க அவா உதயங்கள் இங்கு முடிவுகளாய் நாட்களற்று நசுங்கி விட்ட கொடுமை
நச்சரிப்புக்கள், நடுநிலைமை மையம் - மத்தியஸ்தங்கள் மாயமாய் தோன்றும் கானல்கள் அமைதியை அள்ளியிறைத்த அன்றைய சுதந்திரக் காற்றுகள்
தூர எங்கோ. பறந்து விட்டதாய் . . . ه/62 ,AOL) . . . இது முற்றுப் புள்ளியாகுமா?
க.அன்பழகன் (நுண்கலை) கிழக்குப் பல்கலைக் கழகம்
வந்தாறுமூலை செங்கலடி.

Page 26
s
C. K. Enterpris
AGENT
DF WWFF FO
阜 FA57-WF57 /WA
(C/10/MEC) 6A
CA VF5, MARKF
DFC:KA CONFE
49/1, PANSALA RO, T'PHONE - O65-2
Hes) C. F-84-PeOPLeS PARK, GASUOF T'PHONE -

κας (Pνί) Ltd.
FOR:
R5Y7HW 5 (CTO), JTD,
|METING (РУГ) ITD,
|5 CO, ITD,
TING SERVICES 17D,
YWONFRFS,
AD, BATTICALOA, 636, O65-2623
FFICE:
HSSTREET, COLOMBO - ll
421.57