கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விபவி 2000.05

Page 1
மனிதநேயக் குை பின் கீழ்
ד"ר
 
 
 
 

சிறுமிகள்

Page 2
குடலற ஒடுது : ' . . . சுடரொளி பெருக்கிடும் செந்நாளே
நன்றி : சுபத்திரன் கவிதைகள்
மே மாத நிகழ்ச்சி நிரல்
மே 20 י - )$L28 מ சனி பி.ப 3.30 ஞாயிறு பி.ப 3.30
சரோஜா சிறுகதை மேம்பாட்டு அரங்கு
திரைப்படம் திரையீடும் மார்ச், ஏப்ரல் மாத சிறுகதைகள்
கலந்துரையாடலும் வீரகேசரி :தெளிவத்தை ஜோசப்
தினக்குரல்: நடராஜா காண்டீபன் தினகரன்: கே. ஏஸ். சிவகுமாரன்
3 -is: சஞ்சீவி:டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்,
58,தர்மராம வீதி, இடம் :
கொழும்பு -O6. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58,
தர்மராம வீதி, கொழும்பு -06.
 
 

புறநானூறும் வீரயுகப் பண்பாடும்
பேராசிரியர் க.கைலாசபதியின் தமிழில் வீரயுகக் கவிதை" என்னும் ஆய்வுநூல் வெளிவந்து மூன்று தசாப்தங்கள் கழிந்து விட்டது. எனினும் தமிழ் இலக்கியக் கல்வியிலும் ஆய்வுகளிலும் அவர் எடுத்துக் கூறிய கருத்துக்கள் சுவறியதாகவோ, தொடர் ஆய்வுகள் பெரும் அளவில் மேற்கொள்ளப்பட்டதாகவோ குறிப்பிடுவதற்கு இல்லை. விதிவிலக்காக சில ஆய்வுகளும்நூல்களும்தமிழகத்தில் வெளிவந்துள்ளனன. முனைவர் இராம.குருநாதன்'புறநானூறு-ஒரு புதியபார்வை (1997) என்னும் நூலில் வீரயுகப்பண்பாடுபற்றி எழுதியுள்ளவற்றை இங்குதந்துள்ளோம்.
நன்றி- கே. சண்முகலிங்கம்
புறநானூற்றை, உலகத்தின் தொன்மையான மொழியிலக்கியங் களான குறிப்பாக 1 கிரேக்க, சீன இலக்கியங்களோடு தொடர்புறும் வகையில் ஒப்பிட்டு ஆராய வீரயுகப் பண்பாடு துணை செய்கிறது.
சங்கப்பாடல்களில் குறிப்பாக, கிரேக்க வீரயுகப் பாடல்களின் தன்மை இருப்பதாக வடபுல, தென்புல அறிஞர் சிலர் எடுத்துக்காட்டியுள்ளனர்.
'தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர் கிரேக்கர் முதலியோரின் வீரயுகங் களுடன் ஒருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது எனலாம்.
(ஒப்பியல் இலக்கியம் ப. 69)
எனக் கூறும் கலாநிதி கைலாசபதி
அவர்கள் வீரயுகத்தையும், சங்கப்
பாடல்களையும் ஒப்பிட்டு விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளமை கவனத்திற் கொள்ள வேண்டியது.
ஆநிரை கவர்தல், வீறுணர்ச்சி, ஒரு வரையொருவர் அடுதலும், தொலை தலும், பகைவர் நாட்டைக் கொள்ளை யிட்டு தீக்கிரையாக்குதல், வெற்றிக் களிப்பில் மது அருந்துதல், காதல், உடன்போக்கு, வெறியயர்தல், பாணர்
புகழ்ச்சி, ஒழக்கமல்லாதவற்றை எண்ணி நாணுதல், பழியஞ்சுதல், அறநெறி நெஞ்சம் உடைமை, வானுலகு பற்றிய எண்ணம் முதலிய பண்புகளை வீரயுகத்தின் போக்கில் காணலாம். கிரேக்க வீரயுக வாழ்க்கை இவ்வாறு இருந்ததாக சாட்விக், சிஈஎம். பெளரா முதலியோர் விளக்கமாகக் கூறியுள்ள னர். இவர்தம் கருத்தினை ஏற்றும் மறுத்தும் வீரயுகப் பண்பாட்டுக் கூறு களைத் தமிழில் கைலாசபதியும், கதிர். மகாதேவனும் விளங்க உரைத்துள் ளனர்.
மேலே கூறிய வீரயுகப் பண்புகளைப் புறநானூறும் கொண்டுள்ளது. வெட்சிப் போரும், தும்பைப் போரும் இடம் பெற்றிருத்தல், செருவிடை வீழ்தல், பகைவர் நாட்டைக் கொள்ளையிட்டுத் தீக்கிரையாக்குதல், வெற்றிக் களிப்பில் கள்ளினைப் பகிர்ந்து மாந்திக் களித்தல், விருந்தோம்பல், புலவரைப் போற்றுதல், ஈகை நெஞ்சம், பரிசளித்தல், புலவர் களின் புகழ்ச்சிமொழி, வானுலகம் பற்றிய நம்பிக்கை ஆகிய வீரயுகத்தின் உள்ளடக்கப் பொருண்மைகளைப் புற நானூற்றில் காண இயலும். இவை ஒவ்வொன்றிற்கும் இலக்கியமாகத்

Page 3
திகழ்ந்துதன் தொன்மையை உணர்த்தி நிற்கின்றது புறநானூறு.
உள்ளடக்கம் மட்டுமன்றி உருவ அமைதியிலும் புறநானூறு, கிரேக்க வீரயுகப் பாடல்களின் இயல்புகளை ஒத்துள்ளது. வீரயுகத்துக்குரிய அமைதி வருமாறு:
வாய்மொழிப் பண்பு - பேச்சு மொழி, இசைவடிவம் -யாப்பு, உரைநடை வடிவம், கேட்போர்க்கான விளி, தொன்மை உவமங்கள், சொற்கள் திரும்ப இடம் பெறுதல், மரபு அடை மொழி புணர்த்தல் முதலியவற்றை வீரயுகப் பண்பாட்டின் உருவமாகக் கருதுவர். وي؟
சங்க இலக்கியச் செய்யுட்கள், வாய்மொழிப் பண்பினது எனலாம்.
சங்கச் சான்றோர் செய்யுட்கள் தொடக்கத்தில் வாய்மொழி வாயிலா கவே பிறந்து வளர்ந்து நடந்திருத்தல் வேண்டும் என்பது பல காரணங்களால் உறுதிப்படுத்தப்படுகின்றது. சான்றோர் செய்யுட்களில் பாடலைக் குறிக்கும் போதெல்லாம் அவை வாயாற் பாடப்படுவனவன்றி எழுதப்படுவன வாகக் குறிப்பிடப் படாமை முதற்கண் அவதானிக்கத் தக்கது
(ஒப்பியல் இலக்கியம் ப.76) எனக் கலாநிதி கைலாசபதி கூறி யுள்ளமை எண்ணற்குரியது. தொன்மை இலக்கியம் யாவுமே இப்பண்பினது என்பது பொதுவான கருத்து. ‘பண் பாடும் பண்டும் பாடுநர் உவப்ப என வரும் புறப்பாடலை (151) எடுத்துக் காட்டிவாய்மொழி இலக்கியம் வழிவழி வந்ததை கைலாசபதி எடுத்துக் காட்டுவர்.
இசைவடிவமாக உள்ள செய்யுட்கள் புறத்தில் உள்ளன. கேட்போர்க்கு
இனிமையும் ஒசை ஒழுங்கும் தருவன வாய் அத்தகைய செய்யுட்கள் விளங்கு கின்றன. மாவாராதே! மாவாராதே (273); கையது கடன் நிறை யாழே (69) மண்முழா மறப்ப (65) கையது வேலே காலன புனைகழல் (100) முதலிய தொடக்கத்தனவாக வரும் செய்யுட்கள் இசை வடிவோடு இயைபுடையன.
உரைநடை இயல்பினவாய் வருவன சில புறப்பாடல்கள். சிற்றில் நற்றுரண் பற்றி (86) பாரி பாரி என்று பல ஏத்தி (107) யாண்டு பலவாகியும் நரையில வாகுதல் (191) உண்டாலம்ம இவ்வுலகம் (182) சிறிய கட்பெறினே (235) என வரும் செய்யுட்களில் உரைநடைப் பண்பினை உணரலாம்.
இயல்பும் எளிமையும் கருதிய செய்யுள் வகையான அகவலே சங்க யாப்பாகும். அதுவே அக்காலத்தில் தலைமை ஒய்ச்சிய யாப்பாகும். புகழ்மொழிக்கும், போற்றிப் பாடலுக் கும், வீறுணர்ச்சி கொள்வதற்குமான அகவல் யாப்பின் சூழ்நிலையைப் புறத்தில் உணரலாம். விளிக்கும் முறையில் அவை வெளிப்படுவன.
கூற்றொத்தியே மாற்றாருஞ் சீற்றம் வலியொத் தியே வாலியோனை புகழொத் தீயே இகழுநர் அடுநனை முருகொத் தீயே முன்னியது முடித்தலின்க,
(Lq. 5O/11-14) எந்தை வாழி ஆதனுங்க! என் நெஞ்சம்திறப்போர்நிற்காண்குவரே,
எனவும்
நின்யான் மறப்பின் மறக்கும் காலை என்னுயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் என்யான் மறப்பின் மறக்கு வென்.
1 - . . . . . as a vor a a . . . . . . . . . . . . . . .
(L. 175/1-5) எனவும்

உடைவள கடுப்ப மலர்ந்த காந்தள்
மறப்புலி உடலின் மான்கணம் உளவோ? மருளின விசும்பின் மாதிரத்(து) ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? அச்சொடு தாக்கிப் பாருற்(று) நியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணல் ஞெமர கல்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையுமுன்டோ
(L 90,1-9) எனவும் வரும் செய்யுட்கள் சூழ்நிலைகளை உணர்ச்சி கொள்ள வைக்கும் அகவல் யாப்பினவாகும்.
முன்னிலைப் புறமொழியாக விளிக்கும் பல செய்யுட்களைப் புறப் பாடலில் காணமுடிகிறது. நேரடியாகக் கண்டு பாடுதலின் முன்னிலைப்படுத்திக் கூறுவதாகப் பாடல்கள் அமையும்.
அடுநையாயினும் விடுநையாயினும் (36) ஆனா ஈகையடுபோர் அண்ணல் (42) ஆரம் தாழ்ந்த அணிகிளர் மருங்கின் (59) பல்சான்றீரே பல்
சான்றிரே (195) வாயிலோயே வாயிலோயே (206) என வரும் செய்யுட்கள் கேட்போர்க்கான விளிகளைப் பெற்றுள்ளன.
பழைய புராணச் செய்திகளைப்
போற்றுதலும் அவற்றை உவமை யில் பெய்துரைப்பதும் வீரயுகச் செய்யுளி யல்புகளாகும். புறப் பாடல் 58, 378
முதலியன புராண இதிகாசக் குறிப்புக்
களைக் கொண்டுள்ளன. கூற்றுவன்,
வாலியோன், மாயோன், முருகன்,
ஆகியோர் மன்னனின் தனித்தனி ஆற்றலுக்கு ஒப்பிடப்படுவதையும், சீதையை இராவணன் இலங்கைக்கு எடுத்துச் செல்லுகையில், அவள்
நிகழ்வை
அணிகலன்களைக் கழற்றி எறியவும், அவற்றைப் பிற்பாடு குரங்குகள் தாறு மாறாக அணிந்த இராமகாதை நிகழ்ச்சி எடுத்துக் காட்டப்பெறுவதையும் ஈண்டு எண்ணலாம்.
புறத்தில் திரும்பத்திரும்பவரும் பல தொடர்களைக் காண்கிறோம். பல்சான்றீரே பல்சான்றிரே (285-301) கலம்செய் கோவே (228-256) யானே பெறுக (379) என்கோ (387) முதலிய பாடல்களில் அடிகளும், சொற்களும் ஒருமுறைக்கு இருமுறை பயின்று வருதல் காண்க.
அடைமொழி புணர்த்த பெயர்கள் தொன்மைச் செய்யுளுக்குப் பெருமை சேர்ப்பதாகும். சங்க இலக்கியத் தனிச் சிறப்புகளுள் ஒன்று அட்ைப் பெயர்கள். நெடுந்தேர் அஞ்சி, வல்வேல் சாத்தன், நெடுஞ்செவி குறு முயல், சிறியிலை தீங்கனி என வரும் தொடர்கள் இத் தகையன.
சில மரபுத் தொடர்களும் திரும்பத் திரும்ப இடம்பெறுதல் உண்டு. பீடு கெழு நோன்றாள், அகமலி உவகை, நாட்படுதேறல், அரவு வெகுண்டன்ன தேறல், அறம் மண்டிய மறப்போர் என வரும் தொடர்கள் மரபுவழிப் பட்டன.
வீரயுகப் பண்பாட்டில் கூறப் பெறும் அகப்புறக்கூறுகளான உள்ளடக்கமும் உருவமும் புறநானூற்றில் இடம் பெற்றுள்ள தையறிய, தமிழர் தம் வீரமும், செவ்வியல் இலக்கியப் பண்பும் நன்கு புலனாகும். தொன்மைக் காலப் பெருமையையும், அருமையையும் புறநானூறு உலகிற்கு என்றும் உணர்த்திய வண்ணம் நிலைத்து
நிற்கின்றது.

Page 4
dകു یم مجھنے^
’’کیمبرے حتمی یمی خھ)خلاقی ممبر 3/ هرورش) محمد تحقیح نوح عجہنم^سمبر تمے ہوے
سلا”5 مخھوڑو نے بھی ہونے وہ چیہ ゲ** مح~rیئے شعبہ عمحے
アム മേരിട്" به ضه «ه
V
ട്ബ ع4 ? ہمہ ”قحمد یورپ مجھےچرچے تھے(. لیۓ کہ وہی ہے یعہ ھے -ه مY?ے --?? ދެهކ-އީ7-
24 حمعہ" کشمیریت ^ہونےرکs "قے ظلق>رحمتS جبر ہونے بھی نہ ہو گرمه و قی) ജ്ഞമ്മ 4് -少・宋**グ? نی 盔 دھنکے
کہ میرے بھرتی ہے 72ح عے لح ہے نہ ہوہر
as 74. ay sap جمه چوتھ ه سگ همایی
به جرح و در یا « ماه همه رم نامه ?rیہ مکہ رنہ یہ ryھیے
മമേsg) ~ تھے ?طہ --سے ”نیویسہ مر نے جمہ 7 حصہ ہے نممکنہ ح^بہ 6$ بھی حلیمہ مسیح سےہ
محہء لگا۔مn <ون<کھ ھمیر - همه روحیه മർ' ( re് ڑھ
W ? 7 محرچ سے یھ اعترجمعہ *ദേs عه <حیه ; به حبقه ^ مص4?۶۶**? خلیج مسہ ویب نہ بے بری ، Sasae 2! * ص P7<5م مرم زی rr zsحدr
--
சிங்களத்தில் நந்தன வீரசிங்க தமிழில் : கே. கணேஷ்

~ഭര حه ح۶۶. که حت عنصر :
マリ・な>
3ള
Wa-Wa Selv af 97്രഞ്ച് &4.- /3 KM” - C6, a r-N- ഉ_ം 75
昂 هدر سجة مممޤޫބޫބަބީ;" يشلەت
A. Ary frwyr ஜே டூ رکھ 67 حملے ہوے
アマアのう、工
mù خشی** علیحدہ بہہ ہک ロー・マa^ぶ・テ"ら“ア ം ആസ്മ പ? *>? ފ.އަچى:423.7:ޝްބީ2% Ao rW2 V M/M 2/4 64 m - avl- مه په کودته ج چی
aジー・* →ーrタ多? =も・ア2か Gelu Sw
Mi-a Boavf A term ra' sa- (ed 3 Δ d v •ം ആ ജ്വ്', '3' ۶ میلایلامیه "هسوی دG دو دهه .as ma- asa-MP4 موثر ہو۔ --محض
சிங்களத்தில்: நந்தன வீரசிங்க தமிழில் : கே. கணேஷ்

Page 5
தேசிய செல்வத்தைப் பாதுகாப்போம்
எப்பாவெல்ல என்ற இடத்தில் போஸ்பேற் படிமம் சம்பந்தமான ஆய்வு இலங்கை விஞ்ஞானிகளால் பல
ண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது. 1971இல் இந்த இடத்தில் பெருமளவு போஸ்பேற் படிமம் உண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள போஸ்பேற் Liquidd 120 O ஆண்டுகளுக்கு எமக்குத் தேவையான உரத் தயாரிப் புக்குப் போதுமானதாக
உள்ளதுஎன்று உறுதிப்படுத்தப்பட்டது. ”
இவ்விடத்திலுள்ள போஸ்பேற் படிமம் 25 மில்லியன் மெற்றிக் தொன்கள் என்று கூறப் பட்டிருப்பினும் இத்தொகை 60 மில்லியன் மெற்றிக் தொன்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கு மென்று கருதப்படுகின்றது. அத்துடன் இவ்விடத்தில் பெறுமதி மிக்க பல்வேறு கணிப்பொருள் வகைகளுமுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கணிப்பொருள் உடன்படிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கு சொந்த மான "லங்கா பொஸ்பேற் லிமிட்டெட் கம்பெனியும், அமெரிக்க பிறீபோட் மக்மறான் கம்பெனியும், ஜப்பானிய தொமேன் கம்பெனியும் ஒரு உடன் படிக்கையைச் செய்து கொள்ள முற் பட்டன. ஆனால் இவ்வுடன்படிக்கை சமபலமற்றதாகவும் எமது நாட்டுக்கு பாதகமானதாகவும் இருக்கின்றது. இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்க மக் மறான் கம்பெனிக்கு 65 வீத பங்குகளும், ஜப்பானிய தொமென் கம்பெனிக்கு 25 வீத பங்குகளும். லங்கா பொஸ்பேற் லிமிட்டெட் கம்பனிக்கு 10 வீத பங்கு களும் உள்ளதாகக் கூறுகின்றது.
12 வருடங்களின் பின் இந்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்
முதலீட்டு
கொள்வதற்கு அமெரிக்க கம்பெனிக்கு உரிமையுண்டு. ஆனால் இலங்கை 30 ஆண்டுகள் முடிவடையும் வரை இதிலிருந்துவிலகிக்கொள்ள முடியாது. மேலும் இந்த உடன்படிக்கையின் மூலம் பின்கூறப்படும் பொஸ்பேற் படிமங்களை இலங்கைக்கு வெளியே ஏற்றுமதி செய்ய அமெரிக்கக் கம்பெனி க்கு உரிமையளிக்கப்பட்டுள்ளது.
1வது வருடம் - 250,000 தொன்கள் 2லிருந்து 7வது வருடம் - 350,000 தொன்கள் வருடாநதடி
7வதிலிருந்து 12வது வருடம் - 250,000 தொன்கள் வருடாந்தம்
இதன் பிரகாரம் 3,600,000 மெற்றிக் தொன் பொஸ்பேற் படிமம் எமது நாட்டிலிருந்து அமெரிக்க கம்பெனி யால் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. 10 வருடங்களில் ஏற்றுமதி செய்யப்பட விருக்கும் பொஸ்பேற் படிமம் 17 மில்லியன் தொன்களென்று கொள்ளப் பட்டால் 12 வருடங்களில் 3.6 + 17 மில்லியன் தொன்கள். ஆகவே 30 ஆண்டுகள் திட்டத்தின்படி 60 மில் லியன் தொன்கள் பொஸ்பேற் படிமங் கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
மேற்படி உடன்படிக்கையின்படி எமது நாடு 20 வருடங்களில் ஏற்றுமதி செய்யப்படும் பொஸ் பேற் படிமத்தின் மூலம் 107 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் 672.72 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொஸ்பேற் படிமக் கணிப்பொருளை அமெரிக்கக் கம்பெனி கொள்ளையடித்துச் செல்ல உடன்படிக்கை வழிவகுக்கின்றது. ஆனால் அதனுடைய மொத்த முதலீடு 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே.

திரைமறைவுப் பேச்சுவார்த்தை
இந்த உடன்படிக்கைக்கான பேச்சு
வார்த்தை திரைமறைவில்தான் நடத்
தப்பட்டது. 1992 டிசம்பரில் இந்தத் திட்டத்திற்கான செயற்பாடு ஆரம்பிக் கப்பட்டது. ஆனால் 1994 மார்ச்சில் வெளிநாட்டுப் பங்காளிகளுடன்
இணைந்து செயல்படுவதற்கான பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால்
அவர்களது வாழ்வும் வளங்களும் பாதிப்புக்கு உள்ளாக இருக்கின்ற இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு இப்பேச்சுவார்த்தை பற்றித் தெரிவிக்
காமல் பரம இரகசியமாகவே நடத்தப்
Lill-gi.
வெளிநாட்டுப் பல்தேசிய கம்பெனி
களுக்கு எமது தேசிய வளங்களை
விற்பதையும், இந்த பொதுமக்களுக்கு பாதகமான தனியார்மயப்படுத்தலை
யும், தாங்கள் அதிகாரத்துக்கு வருமுன்
தற்போதைய அரசாங்கத்தினர் முழு மூச்சாக எதிர்த்து வந்தனர். ஆனால்
அதிகாரத்துக்கு வந்த பின்னர் 1995 மார்ச் மாதத்திலிருந்து இந்தப் பேச்சு வார்த்தையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து நடத்துவதற்கு தற்போ தைய மந்திரிசபை அங்கீகாரமளித்தது. 1996 டிசம்பரில் மூன்றாம் கட்டப் பேச்சு
வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால்
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான
பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூட
இதுபற்றித் தெரிவிக்கப்படவில்லை.
இந்த உடன்படிக்கை எமது நாட்டுக்கு
பெரும் பாதகமானதாகவும், பேரழிவி னைக் கொண்டுவரக்கூடியதாகவுமிருப் பதனால், எமது நாட்டிலுள்ள தேச விரோத சக்திகளால் திரை மறைவில் நடத்தப்பட்டு அரங்கேற்ற முயற்சிக்கப் பட்டு வந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த பிறீபோட்
மக்மாறன் கம்பெனி ஒரு சர்வதேச
மோசடிக் கம்பெனியாகும். இதன் செயற்பாடுகள் ஈரான் நாட்டிலும், இந்தோனேசியாவிலுமுள்ள மக்களுக்
கும் இயற்கை வளங்களுக்கும் பாரி யளவு சேதங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நாசகாரக் கம்பெனிக்கெதிரான இந்தோனேசிய, மக்களின் பெரும் போராட்டம் மிகக் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது. அங்கு இந்தக் கம்பெனியின் செயற் பாடுகள் பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளையும் அழிவையும் ஏற்படுத்தின. இந்த நெருக்கடிகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் காப்புறுதிக் கம்பெனி வெளிநாட்டு முதலீடுகளுக் கான காப்புறுதியை வழங்குவதற்கு மறுத்து விட்டது. இதன்மூலம் இக் கம்பெனியின் நேர்மையையும், நாணயத் தையும் பற்றி மிகவும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
பாதகமான விளைவுகள்
இந்த உடன்படிக்கைடியை அமுல் படுத்தினால் இப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு பாரதூரமான விளைவுகள் ஏற்படுவது நிச்சயம். இத்திட்டம் அமுல் படுத்தப்படும் பொழுது மக்களுக்குச் சொந்தமான 56 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பை கபஸ்ரீகரம் செய்துவிடும். இதனால் 20 கிராமங்கள் முற்றாக அழிக்
கப்படும். 6.பாடசாலைகள் 5 கோவில்கள் அநேக அரசாங்கக் கட்டடங்கள் சம்பூரணமாகத்
தரைமட்டமாக்கப் படும். மகாவலி பிரிவிலுள்ள இந்த56 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பு மிகச் செழிப்பான பூமியாகும். இந்த நிலப் பரப்பில் ஹெக்ரக்கு 7000 கிலோ கிராம் அரிசியைத்தான் சாகுபடி செய்ய முடியும். 56 கிலோமீற்றர் நிலப்பரப்பை இழப்பதுடன் திருகோணமலை துறை முகப் பிரதேசத்திலுள்ள 400 ஏக்கர் நிலத்தை இத்திட்டம் கபளிகரம் செய்கின்றது. ,
இத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் 3000 விவசாயக் குடும்பங்கள் தங்கள் விளைநிலத்தைவிட்டு இடம்

Page 6
பெயர வேண்டிய நிலை ஏற்படும். மேலும் 12000க்கு மேற்பட்ட மக்கள் தமது தொழில்களை இழந்து அனாதர வாக்கப்படுவர். அத்துடன் "ஜெயகங்கா என்று பிரசித்தி பெற்ற நீர்நிலையும், 23 குளங்களும் இதிலிருந்துநீரைப் பெற்று வருகின்ற பல கால்வாய்களும், அநேக பண்ணைகளும், இவற்றிலுள்ள மிரு கங்களும் அழிந்து போகும் நிலைமை நிச்சயம் ஏற்படும். எல்லாவற்றிற்கும் மேலாக போஸ்பேற் படிமத்துக்காக
சுரங்கம் தோண்டப்படும் நிலப்பகுதியில்
500லிருந்து 750 சதுர அடிகள் ஆழமுள்ள பாரிய குழி ஏற்படும். மேலும் 10 சதுர மைல் சுற்றளவு நிலப்பரப்பு அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் படுத்தப்படுவதன் மூலம் எமது நாட்டு மக்கள் இப்பிரதேசத்திற்குள் செல்வது தடைசெய்யப்டும்.
எதிர்ப்பியக்கம்
நாட்டுப்பற்றுள்ள மக்களும் அரசியல் விழிப்படைந்தவர்களும் மக்கள் நலன் களில் அக்கறையுள்ளவர்களும் பொது நல ஸ்தாபனங்களும் நமது தாய் நாட்டின் கணிப்பொருள் மூலகங்கள் பல் தேசியக் கம்பனிகளுக்கு பேரம் பேசி விற்கப்படுவதை சும்மா பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.
எப்பாவெல்ல பொஸ்பேற் படிமத் தைப் பாதுகாப்பதற்கென ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. எப்பாவெல்லை பிரதேசத்திலுள்ள விவசாயிகள் வணக்கத்துக்குரிய மஹாமங்கடகல பியரத்ன தேரர் தலைமையில் ஒரு எதிர்ப்பியக்கத்தை ஆரம்பித்தனர். இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம், தொலைத் தொடர்பு உத்தியோகத்தர் சங்கம், வாணிப தொழில் நுட்ப ஊழியர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களும் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் எப்பவெல்ல பொஸ்பேற் படிமத்தைப் பாதுகாப்பதற்கென வணக்கத்துக்குரிய மஹாமங்கடகல பிரியரத்ன தேரர்
1O
தலைமையிலுள்ள எதிர்ப்பு இயக்கத் துடன் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினர். எப்பவெல்ல பொஸ் பேற் படிம பாதுகாப்பு ஒருமைப்பாட்டுக் கமிட்டி என்ற ஒரு அமைப்பை உரு வாக்கினர் .
எப்பவெல்ல போஸ்பேற் படிமத்தைப் பாதுகாப்பதற்கான இந்த அமைப்பு எதிர்ப்புப் பாதயாத்திரைகள், சத்யாக் கிரகங்கள், மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டப் பேரணிகள் துண்டுப் பிரசுர சுவரொட்டி இயக்கங்கள் ஆகியவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது. இந்த அமைப்பு இத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர், ஜனாதிபதி மற்றும் இது தொடர்பான அரசாங்க அதிகாரிகளுக்கும் மகஜர்களையும் ஆட்சேபனை மனுக்களையும் காலத் துக்குக் காலம் அனுப்பிவந்துள்ளதுடன் இது சம்பந்தமான தரப்பினருடன் சந்திப்புக்களையும் பேச்சுவார்த்தை களையும் நடத்திவந்துள்ளது.
03-02-98 ல் இந்த அமைப்பின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் அனுராதபுரத்திற்கு பாதயாத்திரையை நடத்தி சத்தியாக்கிரகத்தையும் நட்த் தியது. இதை அடுத்து 19-02-98 ல் கொழும்புக் கோட்டை புகையிரத நிலயத்திற்கு முன்னால் ஆயிரக் கணக் கான தொழிலாளரும் விவசாயிகளும் ஒரு மறியல்போராட்டத்தை நடத்தினர். சென்ற 30-03-2000ல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் 10,000 க்கு மேற்பட்ட தொழிலாளர், விவசாயிகள் பல அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலு மிருந்து வந்த பெரும் தொகையான மக்கள் ஒரு மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டத்திற்கு ஆயிரக் கணக்கான வர்த்தக சங்க ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் அரை நாள் லிவு

போட்டுவிட்டு வந்து இந்த போராட்டத்தில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது. இந்த மறியல் போரட்டத்தின் இறுதியில் இதற்கு தலைமை தாங்கிய வணக்கத்திற்குரிய மஹாங்கடல்ல பிரியரத்ன தேரர் உணர்ச்சிமயமான ஒரு உரையை நிகழ்த்தினார். அதன் சாராம்சம் இதோ: வீரச் சவால்
ஜனாதிபதி அவர்களே! தங்களையும் தங்களது பாரளுமன்ற உறுப்பினர் களையும் அமைச்சர்களையும் நாம் தெரிவு செய்தோம். உங்கள் மீது நாம் அபார நம்பிக்கை வைத்திருந்தோம். எங்களை நீங்கள் காப்பற்றுவீர்கள்
என்று நாம் நம்பியிருந்தோம். ஆனால்
நடந்தது என்ன? எமதுநாட்டின் தேசிய செல்வங்களில் ஒன்றான மிக முக்கிய மானதான இந்த எப்பாவெல்ல போஸ் பேற் படிமத்தையும் இங்கு வாழ்கின்ற மக்களையும் காப்பாற்றும்படிதங்களுக் கும் இது சம்பந்தப்பட்டவர்களுக்கும் பல தடவைகள் கடிதங்கள், மகஜர்கள், மனுக்கள் மூலம் முறையிட்டுள்ளோம். நேரடியாகவும் சம்பந்தப்பட்ட அமைச் சருடனும் அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தினோம். கண்ட பலன்தான் என்ன?
எங்கள் நாட்டின் இந்த முக்கியம்ான செல்வத்தை தாங்களோ அல்லது தங்களது அமைச்சர்களோ காப்பற்ற மாட்டீர்கள் என்பதை இப்பொழுது நாங்கள் நன்றாகப்புரிந்துகொண்டோம். இன்றிலிருந்து தாங்கள் எங்கள் ஜனாதி பதியில்லை. தங்கள் பாராளுமன்ற
உறுப்பினர்களும் அமைச்சர்களும்.
எமது பிரதிநிதிகளல்ல என்பதை திட்ட வட்டமாக உங்களுக்கு கூறி வைக்கின்
றோம். இன்றிலிருந்து எமது நாட்டின்
செல்வத்தைக் காப்பற்றும்படி தங்க ளுக்கோ தங்கள் அமைச்சர்களுக்கோ நாங்கள் எதுவித கடிதங்களையோ மகஜர்களோ மனுக்களோ அனுப்பி வைக்கப்போவதில்லை. காரணம்
11
உங்கள் மீது எங்களுக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லை .
எப்பவெல்லயிலுள்ள இந்த செல்வம் தங்களுடையதோ அல்லது தங்களு டைய அரசாங்கத்துடையதோ அல்ல, இது இந்த நாட்டிலுள்ள மக்களாகிய எங்களுடைய சொத்து. இது இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடைய செல்வம். இந்த தேசிய செல்வத்தைப் பாதுகாப்பது இனிமேல் மக்களாகிய எங்களுடைய பொறுப்பு அமெரிக்க மக்மறான் கம்பனியோ அல்லது வேறு எந்த பல்தேசிய கழ் பனியோ எங்கள் தேசிய செல்வத்தை அபகரித்துச்செல்ல தங்களுடைய அரசு அனுமதித்தாலும் அவர்களை இங்கு வாழும் மக்களாகிய நாம் ஒரு அடிகூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம்: இந்த அந்நிய பல் தேசியகம்பெனியைச் சார்ந்தவர்கள் எமது செல்வத்தை அபகரிக்கும் நோக்குடன் இந்தப் பிரதேசத்திற்குள் காலடியெடுத்து வைப்பதென்பது நடக்காத காரியம், எமது பிணங்கள் மீது அவர்கள் நடந்து சென்றாலும் அவர்களது நோக்கம் ஒரு பொழுதும் ஈடேற முடியாது. இது ஒரு பொழுதும் சாத்தியப்படாது என்பதை உறுதியுடன் இங்குள்ள மக்களின் பேரால் கூறி வைக்கின்றேன்.
எப்பாவெல்ல போஸ்பேற் படிமத் தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஒரு முன் உதாரணமாக அமைந்து விட்டது. இப் போராட்டம் நவீன ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனி களின் சுரண்டலுக்கும் சூறையாடல் களுக்கும் எதிரான ஐக்கியப்பட்ட மக்களின் போராட்ட உணர்வையும் ஆத்ம சக்தியையும் தாங்கி நிற்கின்றது. மக்கள் சக்தியை எந்த அரசாலும் தோற்கடிக்க முடியாது. இந்த மக்கள் போராட்டம் ஜெயிப்பது நிச்சயம்.
-நீர்வை பொன்னையன்

Page 7
தமிழ் ஓவிய மரபு
சங்க காலத்திலேயே தமிழர்கள் ஓவியக்கலையில் சிறந்திருந்தனர். இதற்கு சங்க இலக்கியம் முழுவதும் சான்றுகள் உள்ளன. வார்த்தைகளின்
உதவியின்றி பார்வை மொழி மூல
மாகவே உணர்ச்சிகளைத் தெரிவிப் பதில் வல்லவர்கள் தமிழர்கள்.
ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது மாங்கனி முகம் என வர்ணிப்பது உண்டு. அதை ஒரு சித்திரமாக வரைந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை மகாபலிபுரம் சிற்பி கோ. திருஞானத் திடம்தான் கேட்க வேண்டும்.
மனிதனின் உடம்பு கழுத்திலிருந்து இடைவரை உள்ள பகுதி ஒரு காளை யின் முகத்தைப்போல் அமைந்திருக் கின்றது என்று பேசுகின்றன தமிழனின் சிற்பநூல்கள்.
பெண்ணின் விழியைக் கயல் விழி என்று சொல்வதுண்டு. மீன் போன்ற கண்கள் என்பதை சிற்பி திருஞானம் வரைந்து காட்டுகின்ற பொழுதுதான் புரிந்துகொள்ள முடிகின்றது.
பெண்ணின் இடையை உடுக்கை இடை என்று சொல்வதுண்டு. ஒரு சூலத்தைப்போல இருக்கிறது என்றும் சொல்வதுண்டு.
உருவங்களை 'அருவம்', 'உருவம்", 'அருவுருவம் - என்று விவரிப்பதுண்டு. மனித உடம்பைப்போலவே உள்ள உருவத்திற்கு உதாரணம் நடராசர் திருமேனி.
சொல்வதுண்டு. இதற்கு உதாரணம் லிங்கம்.
இரண்டும் கலந்த 'லிங்கோ’ திரு மேனியை அருவுருவம் என்று சொல்வதுண்டு.
தமிழர்களின் மரபான சிற்பங்களை
எடுத்துக்கொண்டால் அவை அபிநய
இதனை 'உருவம்’ என்று சொல்வ
துண்டு. கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் குறியீட்டால் உணர்த்தப்படும் பொருள் ஒன்றை "அருவம்' என்று
12
மொழியைச் சார்ந்து இயங்குவது மரபு.
உருவச் செயல்முறைகளை மூன்று வகையாகப் பிரித்தனர்.
முழு ஓவியம் - சித்திரம் புடை ஓவியம் -சித்தார்த்தம் பட ஓவியம் - சித்திரா பாசம்
 

உருவங்கள் செய்யப்படும் கலை சாதனங்களைப் பற்றி பிங்கள நிகண்டு கீழ்க்கண்டவாறு பேசுகிறது. கல்லும், உலோகமும், செங்கல்லும், மரமும் மண்ணும், சுதையும், தந்தமும்,
வண்ணமும் கண்ட சருக்கரையும், மெழுகும் இன்றிவை பத்தும் சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும்
(பிங்கள நிகண்டு 3-129) ஒவ்வோர் உருவம் செதுக்கும் போதும் அதற்கென்று தனித்தனியான தாள அளவுகள் உண்டு. இந்த அளவு களை மிக நுட்பமாக உருவாக்கி யுள்ளனர். ஓர் அணு எவ்வளவு சிறிய தாக இருக்குமோ அதன் அடிப்படை யில் இருந்து அளவுகளை உருவாக்கி யுளளன.
உதாரணமாக எட்டு "பரமானு' அளவுகள் ஒரு "தோர்த்து ஆகும். இதே போல எட்டு தோர்த்துகள் கொண்டது ஒரு 'மயிர்நுனி அகலமாகும்.
சோழர்காலச்சிற்பங்கள் இந்தச் சிற்ப
அளவுகளைக் கொண்டு உருவானவை தான்.
இத்கைய செழிப்பான தமிழ் ஒவிய மரபு உள்ள நமது மண்ணில் தான் தங்களுக்கென்று தனியான ஓவிய மரபு இருக்கின்றதா என்று கேள்விகேட்டுக் கொண்டிருக் கிறார்கள் நமது தமிழர்
s
இதுதான் சோகம்.
பிரிக்கா அழிந்
&hlwytholwyr Ywen, **Y w'r nwyfyffesin.
1ெ990ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் ஆபிரிக்கப் பிராந்தியத் திலுள்ள 10 நாடுகளில் ஆய் வொன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி 15 வயதுக்குக் கீழ்ப் பட்ட அனாதைகளாக்கப்பட்ட சிறு வர்களின் எண்ணிக்கை 55 லட்சம். 02000ஆம் ஆண்டின் முடிவில் ஆப்பிரிக்க நாட்டில் 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஒரு கோடிநான்கு லட்சம் ஆப்பிரிக்கச் சிறுவர்கள் அனாதை களாக்கப்படுவர் என்று ஆய்வுமூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இது உலக ளாவியரீதியில் அனாதைகளாக்கப் பட்ட சிறுவர்களில் 90 வீதமாகும். 1ெ999 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 26 லட்சம் பேர் நோய் களினால் இறந்துள்ளனர். இவர் களில் 85வீதமானவர்கள் ஆபிரிக்க நாடுகளைச் சார்ந்தவர்கள். 0 1990ஆம் ஆண்டில்எயிட்ஸ்நோயை ஏற்படுத்தும் எச். ஐ. வி வைரஸ் கிருமியினால் பாதிக்கப் பட்டவர் களின் எண்ணிக்கை 56 லட்சம். இதில் பெரும் எண்ணிக்கை யினர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த
வர்கள்.

Page 8
-வித்தியாசாகரும்
வித்தியாசாகர் வங்க மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மேதை களில் முன்னணியில் நிற்கின்றார். அவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் மகாபண்டிதராக வந்தார். 1829லிருந்து 1841 வரை சமஸ்கிருதப் பள்ளியில் கல்வி கற்றார். பின்னர் வில்லியம் கோட்டைக் கல்லூரியில் தலைமைப் பண்டிதராகச் சேவையாற்றி னார். பின்னர் சமஸ்கிருதக் கல்லூரியின் முதல்வராகச் சேவையாற்றினார்.
பண்டைய சமஸ்கிருத இலக் கியத்தில் பெரும் புலமை பெற்ற அவர் ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்தார். இதனால் அவர் கீழைத்தேச, மேலைத்தேச கலாசாரங் கள் இரண்டும் ஒன்றிணைந்த ஒரு உருவமாக விளங்கினார். 1847க்கும் 1863க்கும் இடையில் வித்தியாசமான வங்க மொழியில் அவர் எழுதினார். இந்திய இதிகாசங்கள், கிராமியக் கதைகள், மேலைத்தேச பழங் கதைகள், மேற்குலக பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றை சிறந் முறையில் படைத்தார்.
நவீன தேவைகளுக்கு எந்த எந் வகையில் சமஸ்கிருத மொழியையும், இலக்கியத்தையும் படிக்கும் சிறுவர் களுக்கு பொருத்தமான பாடநூல் களையும் எழுதினார். பண்டைய சமஸ்கிருத நூல்களைத் திரட்டிப் பாதுகாக்கும்பணியையும் செய்தார்.
வங்கமொழி உரைநடையின் விருத் திக்கு அவர் பெரும் பங்களித்துள்ளார். அழகான, அதே நேரத்தில் கம்பீரமான,
O
ஒரு ஆங்கிலேயனும் தூய உரைநடையை அவர் கையாண் டார். அவரது மொழிநடை அனைவ ராலும் போற்றிப்பாராட்டப்பட்டது.
வித்தியாசாகர் வெறும் அறிவுத் துணையுடனும் எழுத்துப் பணியுடனும் நின்று விடவில்லை. அவர் ஒரு தீவிர சீர்திருத்தவாதி. இதை அவர் நடை முறையில் சாதித்துள்ளார். சமஸ்கிருதக் கல்லூரியில் பிராமண குலத்தைச்
சாராத, எனைய குல பிள்ளைகளையும்
14
சேர்த்து அவர்கள் கல்வி பயில வகை செய்துள்ளார். சமஸ்கிருதம் கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தையும் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
வித்யாசாகர் அரசாங்க கல்விப் பரி சோதனை அதிகாரியாக பணியாற்றிய' காலத்தில் கல்வித்துறைக்கு குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்பதற்கு பாரிய பணியை செய்துள்ளார். வங்கத்தின் நான்கு மாவட்டங்களில் 35 மகளிர் பாட சாலைகளையும் 20 மாதிரிப்பாடசாலை! soapsTuti (Model School) 96f நிறுவினார்.
அரசாங்கத்தாலன்றி, முழுக்கத் தனியாரால் நடத்தப்படுகின்ற கல்வி நிறுவனங்களில் தலை சிறந்தாக" விளங்குகின்ற, அவரது பெயரைத் தாங்கி நிற்கின்ற வித்யாசாகர் கல்லூரியை அவர் நிறுவி திறம்பட நடத்தி (அரசாங்க கல்லூரிகளிலும் பார்க்க மிகச் சிறப்ப்ாக) சாதனை புரிந்தார். இந்த நிறுவனம் சமயசார்பற்ற அனைவராலும் பாராட்டத்தக்க ஒரு நிறுவனம். வங்கத்தின் சமூக விருத்திக்கும் கலை இலக்கிய வளர்ச்சி

க்கும் மறுமலர்ச்சிக்கும் அரசியல் விழிப்புக்கும் இக்கல்லூரி மாணவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். அவரது மேற்பார்வையின் கீழ் முழுக்க முழுக்க இந்திய ஆசிரியர்களையே கொண்ட உயர்கல்வி நிறுவனம் இது. அதனால் தான் வங்காள கலை இலக்கிய முன் பாய்ச்சலுக்கும் தீவிர சமூக மாற்றத் திற்கும் புரட்சியின் அரசியல் விழிப்புக் கும் இக்கல்லூரியால் பெரும்பங்காற்ற முடிந்தது. v.
கணவன் இறந்ததும் அவனுடைய மனைவி அவனுடைய சிதையில் உடன் கட்டை ஏறும் சதி” என்ற கொடூரமான மரபு முறைக்கெதிராக வித்யாசாகர் தீவிரமாகப் போராடினார். அதேவேளை விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். இந்த நடவடிக்கைகள் மூலம் வங்க சமூகத்தில் விழிப்புணர்வும் பெரும் மாறுதல்களும் ஏற்பட்டன.
ஒருநாள் வித்யாசாகர் புகையிரதத் தில் முதலாம் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அதே பெட்டியில் அவருக்கு முன்னால் உள்ள ஆசனத்தில் ஒரு ஆங்கிலேயத் துாையும் அமர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தான். ஒரு சுதேசி(Native) முதலாம் வகுப்புப் பெட்டியில் தனக்கு முன்னாலுள்ள ஆசனத்தில் சமமாக அமர்ந்து பிரயாணம் செய்வதை அந்த ஆங்கிலேயன் விரும்பாதது மாத்திர மல்ல கடும் சினமும் அடைந்தான். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 'இந்த சுதேசிக்கு நான் சரியான பாடம் புகட்டாமல் விட மாட் டேன், தருணம் வரும்தானே' என்று தனக்குள் கறுவிக் கொண்டு சந்தர்ப் பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டி ருந்தான்.
வித்தியாசாகர் ஒருதடவை அப்
15
பெட்டியிலுள்ள மலசல கூடத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது அவருடைய சப்பாத்து ஒன்றைக் காணவில்லை. ஒன்றும் தெரியாதவர் போல அவர் ஒரு நூலைப் படிப்பதில் ஆழ்ந்திருந்தார். சிறிது நேரத்தில் அந்த ஆங்கிலேயனும் மலசலகூடத்திற்கு சென்றுவிட்டு திரும்பிவந்தான். அவனுடைய ஆசனத் திலிருந்த தொப்பியைக் காணவில்லை. ‘என்னுடைய தொப்பி எங்கே? என்று கோபத்துடன் கர்ச்சித்தான்.
'உன்னுடைய தொப்பி என்னுடைய சப்பாத்தைத் தேடிப்போய்விட்டது என நிதானமாகக் கூறிவிட்டு வித்தியாசாகர் மீண்டும் படிப்பதில் ஆழ்ந்துவிட்டார். வாயடைத்துப் போன ஆங்கிலேயன் தலை கவிழ்ந்தான்.
O
பேராபத்தான மருந்துச் சீட்டு
ஜேர்மனியில் வருடாந்தம் வீதி விபத்துக்களில் இறந்தவர்களை விட தவறான மருந்துச் சீட்டுகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஸ்டட்காட்டநாக்ரிக்டன் என்ற செய்தித்தாள் கூறுகின்றது. 1998 ல் டாக்டர்மார்களினால் எழுதிக் கொடுக்
கப்பட்ட தவறான மருந்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 பேர் இறந்திருக்கின்றார்கள். இத்
தொகை இதே காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிகம். ஜெர்மனியில் ஆராய்ச்சியையும் பயிற்சியையும் முழு மையாகப் பயன்படுத்திக் கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் 10,000 சாவுகளையும் 2,50,000 பேருக்கு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுக ளையும் தவிர்க்க முடியும் என்கிறார் மருந்தியல் நிபுணர் இன்கால்ப் காஸ்கோர்பி.

Page 9
ஈழத்து ஆங்கில இலக்கியம்-தமிழர்/முஸ்லிம்பங்களிப்பு
இச்சிறுகட்டுரை எனக்குக் கிட்டிய தகவல்களைக் கொண்டு மாத்திரமே எழுதப்படுகிறது. கிடைக்கப் பெறாத தகவல்கள் அதிகம் இருக்கக்கூடும்.
ஈழத்து ஆங்கில இலக்கியத்துக்குச் சில தமிழரும், ஒரிரு தமிழ்பேசும் முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செயதுள்ள போதிலும், இந்த விபரம் தமிழர் வட்டாரத் திலும், ஏனைய வட்டாரங்களிலும் கவனத் தைப் பெறவேயில்லை என்பது கவலைக் குரியது.
ஈழத்து ஆங்கில இலக்கியம் என்னும் பொழுது புனைகதை (நாவல், சிறுகதை போன்றவை) கவிதை,நாடகம்,திறனாய்வு பிற என நாம் இத்தகைய இலக்கியத்தை வகுக்கலாம்.
இந்தவிதமான பங்களிப்பைச் செய்த வர்களுள் ப்லர் கிறிஸ்தவர்களாகவும், முழுத் தமிழர் அல்லாதவர்களாக (அதாவது, இவர் கள் கலப்புத்திருமணம் காரணமாகப் பிறந் தவர்கள் எனலாம்) இருப்பதையும் நாம் அவதானிக்கலாம்.
புனைகதை ஆசிரியர்களிற் சிலர்: எஸ். ஜே. கே. க்ரெளதர் ஒரு தமிழர். டெயிலி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியராய் இருந் தவர். மட்டக்களப்பு, அர்ச். மைக்கல்ஸ் கல்லூரியின் அதிபராகவும், கல்கிஸை சென். தோமஸ் கல்லூரியின் கிரிக்கட் கப்டனாகவும் விளங்கிய ஈ. க்ரெளதரின் தமையனாவார். இவர் ஆங்கிலத்தில் ஒரு 51T6Nu6io 6Tugálu SlobéságpTi.The Knight Errant என்பது இப்புனைகதையின் பெயர்.
ராஜா ப்ரொக்டர் என்பவர் மற்றொருவர். இவர் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
அழகு சுப்பிரமணியம் என்பவர் பற்றித் தமிழ் வாசகர்கள் ஓரளவு அறிவர். இதற்குக் காரணம், தினகரன் நாளிதழின் தற் போதைய பிரதம ஆசிரியரும், சிறுகதை
ஆசிரியருமான ராஜபூரீகாந்தன் விடாப்
6
பிடியாக அழகு சுப்பிரமணியத்தை அறிமுகப்படுத்திவருவதே.
இதேபோல் ஸி.வி.வேலுப்பிள்ளையின் ஆங்கிலப் படைப்புகளைப்பற்றி, அந்தனி ஜீவா முதற்கொண்டு மலை நாட்டு எழுத்தாளர்கள் பலர் அவரைப் பற்றி நினை வூட்டுவதே இவர் பற்றித் தமிழ் வாசகர்கள் அறிந்திருப்பதற்கான முக்கிய காரணம்.
மற்றொருவர் கவிஞர் தம்பிமுத்து. இவர் Poetry London-Newyork 856,6056Jillq6it ஆசிரியராக இங்கிலாந்தில் செயல்பட்டு வந்தவர்.
வின்ஸன்ட் துரைராஜ், ஈ. ஸி. டி. கந் தப்பா (இவர் கொழும்புச் செட்டி வகுப்பைச் சேர்ந்தவர்) போன்றோரும் தமது பங்களிப் புகளைச் செய்து வந்துள்ளார்கள்.
ஜீன் அரசநாயகம் (இவர் தமிழரை மணம் புரிந்த ஒரு பறங்கியர்), அவருடைய கணவர் அரசநாயகம், ஷியாம் செல்வதுரை (இவருடைய தாயார் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்), அ. சிவானந்தன், ஏர்னஸ்ட் மக்கின் டாயர் (பறங்கி - தமிழ் கலப்பு), ஜெகதீஸ்வரி நாகேந்திரன், ரிச்சர்ட் டி சொய்சா (இவருடைய தாயார் ஒரு தமிழர்) போன்று சிலர் ஆக்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் படைத்துவருகின்றார்கள்.
திறனாய்வுத்துறையில் எஸ். கனக நாயகம் (மறைந்த தமிழ்ப் பேராசிரியர் சோ. செல்வநாயகத்தின் மகன்), சுரேஷ் கணக ராஜா, ஏ. ஜே. கனகரத்தினா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இக் கட்டுரை யாசிரியரும் சில முயற்சிகளை மேற்கொண்டி ருக்கிறார்.
இப்பொழுது பஃஹிமா ரிஸ்வான் அ. சிவானந்தனின் நினைவு மடியும் வேளை ulso” (When Memory Dies) 6T6Typ 51T6nuson6o அண்மையில் நடந்த இலக்கிய மகாநாட்டில் அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- கே. எஸ். சிவகுமாரன்

இலக்கியத்தில் புதுப்புனல்
வடிவங்கள் -கவிதைத்தொகுதி
நீர்கொழும்பு ந. தருமலிங்கன் எழுதிய புதுக்கவிதைகளின் தொகுப்பு வடிவங்கள் என்னும் மகுடத்தில் வெளிவந்திருக்கிறது. ஐம்பதுக்கு மேற்பட்ட பொருள் தலைப்பு களில் புனையப்பட்ட கவிதைகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. அத்தனையும்
ஆசிரியரது சிந்தனையின் வியாபகத்தைக்
காட்டுகின்ற கவிதைகள்.
ஆசிரியர் தம்முடைய கவிதை களிலே, வாழ்க்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கு களிலும் தாம் காணுகின்ற மகிமைகளைத் தொட்டுக் காட்டுகிறார்; அவ்வாறே மானுடத்தின் அவலங்களையும் சீற்றத் துடன் கூறிச் செல்கிறார். மனிதம் மேம்பட வேண்டும் என்பது பற்றிய நல்ல இலக்கு களும் எதிர்பார்ப்புகளும் ஆசிரியரிடம் இருப் பதை இங்குள்ள கவிதைகள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. மானுட த்தின் மூடத்தனங்கள், குருட்டு நம்பிக் கைகள், வஞ்சனை, சமுதாயச் சீரழிவு- என, தம்முடைய நெஞ்சில் ஏற்படும் உறுத்தல் களையெல்லாம் இக் கவிதைகள் மூலம் எங்களது நெஞ்சிலும் பாய்ச்சி விடுகிறார், ஆசிரியர். நன்றி மறத்தல், தன்மானம் இழத்தல், அகதிவாழ்வு முதலிய கேடுகளை இவருடைய கவிதைகள் அப்படியே கிள்ளி யெடுத்து நமக்குக் காட்டுகின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு முதலிய பண்டிகைகளைப் பாடும்போதும் பழைய தடத்தை விலக்கி, இன்றைய சமுதாயத் தளத்திலே வைத்து அவற்றுக்குப் புதிய அர்த்தங்கள் கற்பித்துச்செல்வது கருத்துக்கு நல்ல விருந்து.
கவிஞருடைய சிந்தனை மானுடம் என்னும் விரிந்த பரப்பில் உலாவினாலும், அது ஈழத் தமிழரது இன்றைய இன்னல் களிலேயே வந்து மையம் கொள்கிறது. 'மனித வாழ்வைத் தட்டி நின்ற மனித வாழ்வின் சமகால வடிவங்களை வக்கிரங்களை - எழுச்சிகளை - வீழ்ச்சிகளை என் பாணியிலே எடுத்துச் சொல்ல முயன்றிருக்கின்றேன். என்று கவிஞர் தமது கவிதைகளின் இலக்கினைச் சுட்டிக் காட்டுகிறார், நூலின் முன்னுரையிலே.
இவரது கவிதைகளில் வீச்சு இருக்கிறது. விடுகதை போலவும் விளங்க முடியாத மர்மமாகவும் முறித்து அடுக்கிய வாக்கியங் களாக வருகின்ற புதுக்கவிதைகளிலிருந்து இவை வித்தியாசமானவைகளாக இருக்கின் றன.
'விலைகள்' என்னும் இவரது கவிை யின் ஒரு பகுதி இது:
"மண்ணுக்கு உரம் போட மாட்டெரு வைக் கூட / விலை கொடுத்துத்தான் மனிதன்! வெளியே வாங்குகின்றான்.
திருமணச் சந்தையிலே I விலை கொடுத்து/விற்கப்படுபவள் பெண் என்ற/
வித்தியாசமானதொரு/வியாபாரமும்/விதி
17
விலக்கும் / வேதனையைத்தான் தர வில்லை!! வெட்கத்தையுமா தரவில்லை?" நீர்கொழும்பிலே பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் கவிஞர் தருமலிங்கன், நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தி யாலயத்தின் முன்னாள் மாணவர். பள்ளிப் பருவத்திலேயே கவிதைகள் புனைந்து பாராட்டுக்கள் பெற்றவர். வியாபாரத்தைத் தொழிலாகக் கொண்ட இவர், கடந்த சில ஆண்டுகளாக கவிதை புனைவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 'பிள்ளைப்பா - பூக்கள்' என்னும் சிறுவர்க்கான கவிதைத் தொகுதி தருமலிங்கன் வெளியிட்ட முதலாவது நூல். "வடிவங்கள் இவரது இரண்டாவது நூலாகும்.
‘வடிவங்கள் அழகான அச்சுப் பதிவு: கொண்ட, கையடக்கமான நூல்.
-வ.இராசையா

Page 10
புற்றுநோய் e இலங்கையில் வருடாந்தம் 4000 பேர் புற்றுந்ோயினால் மரணிக் கின்றனர். ம ஒவ்வொரு வருடமும் 12000 பேர் இந்த நோயினால் பீடிக்கப் படுகின்றனர். 9 உலகில் ஒவ்வொரு வருடமும் 60 லட்சம் மக்கள் இந்த நோயினால் இறக்கின்றனர். 0 ஆண்டொன்றுக்கு உலகின் 100 லட்சம் மக்களை இந்த நோய் பீடிக்கின்றது. e அப்பிள், தக்காளி போன்ற
பழங்கள், ஆகியவற்றுக்கு உபயோகிக்கப் படுகின்ற கிருமி கொல்லி மருந்துக்களால் புற்றுநோய் ஏற்பட்டு வருடாந்தம் 20,000 பேர் இறக்கின்றனர்.  ைபுகைத்தலினால் புற்றுநோய் ஏற் பட்டு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
O O O
கண்பார்வையிழப்பு
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகளின்படி உலகளாவிய ரீதியில் 180 மில்லியன் மக்கள் கட்புலன் பாதிக்கப்பட்ட வர்களாக இருக்கின்றார்கள். இவர்களில் சுமார் 40 இலிருந்து 45 மில்லியன் மக்கள் முற்றாகப் பார்வையிழந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் கிட்டத் தட்ட 60 வீதத்தினர் ஆப்பிரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச்
உருளைக்கிழங்கு
சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். உலகளாவிய ரீதியில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களில் 80 வீதம் தவிர்க்கப்படக்கூடியதாகும். உலக ளாவிய ரீதியில் பார்வையிழப்புக்கு 'கற்றாக்' என்ற கண்ணில் மெல்லிய சவ்வு படர்வதுதான் முக்கிய காரணம். N.O.D. O வைச் சேர்ந்த ஸ்தாபனங் கள் ஒன்றிணைந்து கண்பார்வை யிழப்பைத் தடுப்பதற்கு ஆண்டு தோறும் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்கின்றது. O Ο Ο
சிறுவர் துஷ்பிரயோகம் உலகில் 14 வயதுக்குட்பட்ட 40,000,000 சிறுவர்கள் துஷ்பிர யோகத்துக்குள்ளாக்கப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக் கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடு கூறுகிறது.
தென் ஆபிரிக்கா, சுவீடன், டொமி னிக்கன் குடியரசு போன்ற 19 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு களின்படி 7 வீதத்திலிருந்து 34 வீதம் வரையிலான சிறுமிகளும் 3 வீதத் திலிருந்து 29 வீதம் வரை யிலான, சிறுவர்களும் பாலியல் வல்லுற வினால் ஏற்பட்ட மோசமான பாதிப்புக்குள்ளாகின்றனர்.
உதாரணமாக பாலியல் வல்லுற வுக்குள்ளாகி கடுமையாகப் பாதிக் கப்பட்டிருக்கின்ற 20,000,000 சிறுவர்களைப் பராமரிக்க ஆண் டொன்றுக்கு 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப் படுகின்றது.
O O O

பிரபல சிங்கள கவிஞர்
நந்தன வீரசிங்கவிற்குட
அண்மையில் ஜப்பான் - நட்புறவுச் ஏற்பாடு செய்த புன்கா விருது வழங்கும் வைபவம் கொழும்பில் இடம் பெற்றது. இம்முறை ஆறு இலங்கைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்
இலங்கை சங்கம்
களுள் பிரபல சிங்களக் கவிஞர் நந்தன வீரசிங்கவும் ஒருவர் .
THE PEAK 66p. 56osoÚLeo ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருந்த கவிதையை பிரபல ஆங்கில ஊடகவியலாளர் அருண் டயஸ் பண்டாரநாயக்க மேற்படி வைபவத்தில் வாசித்தார். இதனைச் செவிமடுத்த ஜப்பானி யர்கள் மகிழ்ச்சி பொங்க கை தட்டி இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக
கரகோஷம் செய்தனர்.
கெளரவ கலாசார அலுவல்கள்
திரு. ஜயக்கொடியும் பங்குபற்றினார்.
அமைச்சர் லக்ஷ்மன்
மேற்படி கவிதையை ஜப்பானியர் களும் ரசிக்கத்தக்க வகையில் மொழிபெயர்த்தவர் கலாசார அலு வல்கள் அமைச்சின் செயலாளர்
திரு. ஆர். ஏ. ஏ. ரணவீரஆவார்
19
புன்கா விருது
சிங்களத்திலும் தமிழிலும் பிரசுரமாகும் சிறந்த இலக்கிய ஆக்கங்களை குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது மொழிமாற்றம் செய்து வெளியிட்டால் எமது நாட்டின் உன்னத படைப்பு களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். குறிப்பாக சர்வதேச இலக்கிய கர்த்தாக்களின் மட்டத்தில் இலக்
அங்கீகாரம் பெற்ற
கிய சிருஷ்டிகளைச் செய்யும் சிங்களக் கவிஞர்கள் எம்மத்தியில் உள்ளனர். அவர்களுள் ஆரிய ரத்னபூரீ விஜே
ஹேகொட,
வன்ச ரணவீர,
சிங்க, லால் மொனிக்கா, றுவான் பத்திரன, பராக்ரம கொடித்துவக்கு. நந்தன வீரசிங்க என்போர் குறிப்பிடத் தக்கவர்கள்
நந்தன வீரசிங்க எழுதிய மலை உச்சி (GIRAGA) என்ற கவிதை யை ஆங்கில மொழிமூலம் செவிமடுத்த மேற்குறிப்பிட்டவாறு மடைந்திருந்தால் மேலும் ஓரிரு கவிதைகளை ஜப்பான் மொழியில்
ஜப்பனியர்கள்
J6 JF
(20ம் பக்கத்தில் தொடர்கிறது)

Page 11
(19ம் பக்கத் தொடர்ச்சி)
நந்தன வீரசிங்கவிற்கு. மொழிபெயர்த்திருப்பின் எவ்வளவு ஆனந்தமடைந்திருப்பார்கள்? சின்னஞ் சிறிய எமது தீவின் அழகைக் கேள்வியுற்று மிக மிக மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் கவிதைளைப் படிக்கும்போது ஆனந்தத்திலிருந்து ஆரம்பமாகி அறிவில் முற்றுப் பெற வேண்டும் என்ற ஓர் இலக்கிய மரபு உண்டு. அறிவு ஆனந்தமாகாது என்ற தவறான பொருள்கோடலும் இக்கூற்றில் அடங்கியுள்ளது. கவிதை செவிக்கு இனிமை யாகவும் அமைதல் வேண்டும். ஆனால் அதேசமயம் கவிதையின் பொருள் மிக முக்கியமாகும். அறிவு இல்லா வெறும் ஆனந்தத்தை மாத்திரம் இன்று கவிதை மூலம் நாம் பெற முடியாது. கவிதை யிலிருந்து பெறும் ஆனந்தம் அறிவே ஆகும். எமது ஆக்கங் களை தேசிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப் பதற்கு போதிய தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத நிலையிலும் நந்தன வீரசிங்க என்ற கவிஞர் புன்கா விருது பெறுவது மாபெரும் சாதனையே. O

£88g.gɛ ɛ-0 * 20.sz. IĘ - i sły siosto “Toco solgos) sū (Ĵosto Ticolaetisi +?I$
G(\sariņa