கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிந்தனை 1968.04

Page 1
கலை, சமூக விஞ்ஞானக் காலாண் QUARTERLY JOURNAL OF ARTS & SOCIAL St.
جد 1968 ميلية هد
QLDILLI
JIJIaui •.
1+5 பொருளியல்
OJJ6AJ *
தொல் பொருளியல்
கலைக் கல்விக் கழக
பேராதனை
இலங்கை PERADENIYA -- CEYLON
 
 

| * 『』 · 고지이익이위한읽히지위있정지원한정지휘하지的的***凶Bはほ 町—*--------S------
「s.
鸚 密阳
GINT A NA I
டுச் சஞ்சிகை
IENCES (TAMIL)
அரசியல்
oob
விலே ரூ.1/25
| || ||仍

Page 2
CINTANA
C.
S.
K.
K.
R. Srinivasan, M.A. (Madras), Epigraphical
Sepulchral Temples
Rajaratnam, M.Sc. Econ (Lond.), Lecturer ir
The Great Depression in England in
Indrapala, Ph. D. (Lond.) Lecturer in Histor)
The Anuradhapura Tamt Inscriptions
. Velupillai, D. Phil. (Oxon); Lecturer in Tam
Puranic Religion and Jainism (in the
Arumainayagam, B. A. Hons. (Cey.) Asst. Llec
The Portuguese and the Kotte Kingdo
T. Kandiah, Ph. D. (Lond), Lecturer in English,
.
II.
III,
IV.
VI.
Standard Ceylon Tamil - Some pers
J. Wilson, Ph. D. (Lond.), Lecturer in Politic
Factors Determining the Working of P
தமிழ் இலக்கிய ஆராய்ச்சித் :
ò. 60ò6ገ)ffፅ
TAMIL HER
பொரு Survey of the Sources: Cankam legend
Pura nanuru, Pati rruppattu, The Antholog
The Tolkappiyam, Purapporul Venpa Mai Singers and Patrons: Poetry and Prop Shame and Blame பக். 55 - 93,
Bards and Bardic Traditions: The Pana Kotiyar, Vayiriyar. Kan nular, The Akar
Genealogies, Catalogues பக், 94 - The Technique of oral Verse - making: Substitution பக், 135 - 186.
Themes and Cycles: Earlier Views, W Treatment of Themes tudi. 187 - 228.
The World of the Heroes: The Desire Wealth, Heroes and non-Heroes பக்.
OXFORD
AT THE CAI

In this Number
asst., Govt. Epigraphist's Office, Mysore, India. P. 3
Economics, University of Ceylon:
the 19th century p. 10.
7, University of Ceylon:
of the Kumarakanattuperurar p. 19.
il, University of Ceylon:
Tamil Country) p. 24.
:turer in History, University of Ceylon:
Jniversity of Ceylon:
pectives p. 38
:al Science, University of Ceylon:
'arliamentary Institutions in Ceylon p. 51.
516) puñóù 95 q3u Qalafuï6 *பதி எழுதிய O C POETRY
ளடக்க
, Bardic Poetry, Unity of Akam and Puram, ies of Love Poems, The Ten Songs,
ai. பக். 1 - 54,
hecy, Greek Evidence, Bardic functions.
r, The Porunar, The Kut t ar, The Viraliyar, 'unar, The Pulavar, Classification of Mins reis,
34.
The Formulae, The Metre, improvisation and
elsh and irish Evidence, Greek Evidence.
for Fame, Prowess in Battle, Wrath, lineage,
229 - 27.
968
NIVERSITY
RENDON PRESS

Page 3
if bg
கலை, சமூக விஞ்ஞானக்
மலர் 2 ஏ ப்ரில்
பள்ளிப்படை
19-ம் நூற்ருண்டில் இங்கிலாந்தில்
ஏற்பட்ட பெருமந்த பு
அநுரர்க புரத்திலுள்ள குமாரகணத்துப் பேரூரார்
கல்வெட்டுக்கம்
பெளராணிக மதமும் சமணமும் போர்த்துக்கீசரும் கோட்டை இராச்சியமும் தராதர இலங்கைத் தமிழ்
இலங்கைப் பாராளுமன்ற நிறுவனங்களின்
செயற்படை நிர்ணயிக்கும் காரணிகள் 11
தனிப்பிரதி 1-25

260T
காலாண்டுச் சஞ்சிகை
1968 இதழ் 1
(tal
சி. ஆர். பூர்நிவாசன் 3
D ... (4. ராஜரத்தினம் O
கா, இந்திரபாலா 19 ஆ. வேலுப்பிள்ளை 24 寻G。 அருமைநாயகம் 30
தி. கந்தையா 38
ஏ. ஜெ. வில்சன் so
ஆண்டுச் சந்தா 4-00
தொடர்புகள் :
க. அருமைநாயகம், நிர்வாகி, ‘சிந்தனை? வரலாற்றுத்துறை, " இலங்கைப் பல்கலேக்கழகம், பேராதனை.

Page 4
306)
i. ஆர். யூரீநிவாசன், M. A. இந்திய 2. செல்: ரத்தினம் B. A.
ராஜரத்தி: , விரிவுை Gulritg 3. க" இந்திர 6 , B. A.,
வரலாற் 4. ஆ. வேலுப்பிள்ளை, B. A. F. விரிவுரை -- பேரtதன் 5. க. அருமைநாயகம், B. A. H வரலாற் 6. தி. கந்தையா B. A. H ஆங்கிலத்
$%); ଅର୍ଗା)ଙ୍ଗୀi# ଅ மேற்படி கழகத்தின் வெளியீடாகிய சிந்தனே யில் சிறப்பாக வரலாறு, புவியியல், பொருளியல்,
போன்ற துறைகளைச்சார்ந்த விஷயங்கள் பற்றிக் கட் இடையிடையே பிரசுரிக்கப்படும்.
சிந்தனை ஏப்ரில், ஜூலை, ஒக்டோபர், ஜனவரி
ரூ. 4. தனிப்பிரதி ரூ. 1-35. தபாற்செலவு (ஒர் ஆண் கள் தபாலில் அனுப்பப்படமாட்டா.
கட்டுரைகள் அனுப்புவதற்கு :-
கா. இந்திரபாலா,
ஆசிரியர்,
*சிந்தனை?
வரலாற்றுத்துறை இலங்கைப் பல்கலைக்கழகம்,
பேராதனை,

Iftaufsar
சென்னை) துணைச் சாசனவியலாளர்
அரசாங்கச் சாசனவியலாளர் அலுவலகம், மைசூர்,
ons. (இலங்கை), M. Sc. (லண்டன்)
யாளர், பொருளியல்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம்
矿,
兹
Ols. (இலங்கை) Ph.D. (லண்டன்) விரிவுரையாளர், றுத்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை.
ons. Ph. D. (gavrši GMs) D. Phil. (SiGiv'Glutt.) யாளர், தமிழ்த்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம்
OS (இலங்கை) துணைவிரிவுரையாளர், றுத்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், பேர்ாதனை"
Οι 8 (இலங்கை) Ph.D. (Gaia, Lir) c3thayao) is unrant, துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை"
ழகம் . பேராதனை,
ஆண்டுக்கு நான்கு முறை வெளிவரும், இச் சஞ்சிகை இலக்கியம், கலைகள், தொல்பொருளியல் சமூகவியல்
ைெரகள் வெளிவரும். அத்துடன் நூல் விமர்சனங்களும்
ஆகிய மாதங்களில் வெளியிடப்படும். ஆண்டுச்சந்த டுக்கு) 40 சதம். சந்தாதாரரல்லாதர்ருக்குத் தனிப்பிரதி
's
சந்தா, விற்பனை சம்பந்தமான தொடர்புகளுக்கு :
க. அருமைநிாயகம், நிர்வாகி, ‘சிந்தனை? வரலாற்றுத்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை,

Page 5
சி. ஆர். யூரீனிவாசன்
இறைவனுக்கு பல பெயர் க ள் உண்டு. இறைவனின் இருப்பிடத்திற் கும் பல பெயர்கள் உண்டு. அவை அம் பலம், ஆலையம், கல் வீடு, கற்றளி, கோட்டம், கோயில், பொதியில் என் பன. கோயில்களின் அமைப்புக்கு ஏற்ற வாறு அவை ஆலக்கோயில், இளங் கோயில், ஈசுவரம், கரக்கோயில், கொகு டிக்கோயில், ஞாலற்கோயில், துரங்கான மடம், பெருங்கோயில், மணிக்கோயில் எனப் பெயர்களிடப்பட்டு வழங்கி வரு கின்றன. இதைத் தவிர பள்ளிப்படைக் கோயில்கள் என்ற சிறப்புப் பெயருடைய கோயில்கள் சில தென்னுட்டில் உள்ளன:
"திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே" என்ற மொழிக் கேற்ப மன்னனை மக்கள் மதித்தனர். அவ்வாறு மன்னனைப்போற்றிப் புகழ்ந்த மக்களின் பொருட்டே அவன் பூதவுடல் மறைந்தவுடன், அவன் புகழுடலின் கரு
象
பள்ளிப்படைக்கோயில் எழுப்ப காரணமாயிருந்த காலம்
அரசர்
1. முதலாம் இராஜராஜன் 87-ம் ஆண்டு
3. (மதலாம் ஜேந்திரன் 7-ம் ஆண்டு
முதலாம் இராஜேந்திரன் :
சோழன் தலைகொண்ட 9-ம் ஆண்டு முதல்
3. $uru. urt Göf i qu || 657 15-ம் ஆண்டுவரை
Goiburu. urt G007lgo 3. S. 955-61
முதலாம் ஜடாவர்ம 15-ம் ஆண்டு 4。 சுந்தரபாணடியன .கி. பி. 1865
பல்லவவிஐைய
w - . . கம்பவர்மன் கங்கசூறுநிலமன்னன் ஆட்சியின் போது 5. இராஜாதித்யன் (ஒன்பதாம் நூற்
ருண்டு)
в. மூன்ரும் இராஜ
ராஜனின் ஆட் w-wimmi சிக்கு முன்பாக
பதிமூன்ரும் நூற் (ருண்டுக்குமுன்பாக)
-5. . . 1 0 1 1-12
-
-

பள்ளிப்படை
வூல மெனவும், நினைவைப் போற்றும் நெடுவரை யெனவும் முன்னேரின் மாண் பைப் பேணும் மக்களின் மாட்சிமைக்கு எடுத்துக்காட்டெனவும் விளங்கிய சீரிய ஆலயங்களை அவ்வரசன் பின் வழி வந் தோர் எழுப்பினர். இவற்றைப் பெரும் பாலும் மன்னர்களின் வழி வந்தவர்களே
தோற்றுவித்தனர் என்று குறிப்பிடுதல்
இன்றியமையாதது இவ்வகைப் பள் ளிப்படை ஆலயங்கள் ஒன்பதாம் நூற் ருண்டிற்கு முன்பாக இருந்தமைக்குச் சான்றுகள் கல்வெட்டுகளில் காணப்பட வில்லை. கூர்ந்து நோக்கின் சைவசமயத் தில் பற்றுள்ள மன்னர்கள் இவ்வகைப் பள்ளிப்படைக் கோயில்களை எடுப்பித் தனர் என்று புலணுகிறது,
பள்ளிப்படைக் கோயில்கள் கீழ் க் கண்டவாறு மன்னர்களால் கட்டப்பெற் றன என்பது கல்வெட்டுகளால் அறியப் படும்.
கோயில் யாrநக்
கட்டிய யாருககாக Lotraju*il-b
G) —th 5- -t-t-t-t-gil
மேல்பாடி ஆற்றுார் துஞ்சின சித்தூர்
கேவர் (அரிஞ்சயன்) _ -- -- பஞ்சவன் கேசை பட்டீசுவரம் மாதேவி 豆@
இளவரசர் பள்ளிமடம் சுந்திரபாண்டியன் இராமநாதபுரம்
விக்கிரம ー koek 2 G.FFT سر தமககைககு : . 0 a
కథ (அக்கன் பள்ளிப்படை) தென்னுர்க்காடு
சோழபுரம் தன் தந்தைக்காக வடார்க்காடு
திருநீர்மலே . . . .mത്ത செங்கல்பட்டு

Page 6
பள்ளிப்படை என்ற சொல்லுக்குச் affigy விளக்கம்காண விழைவோம். பள்ளி என்ற சொல்லுக்கு பல பொருள் கள் இருப்பினும், இடம், கல்விநிலையம் சமணரின் கோயில் என்றும் "மடப்பள்ளி" (சமயலறை) என்ற சொல்லில் அது பொதுவாக "இடம்" என்ற பொருளி லும் குறிப்பிடப்படுகிறது.ஆனல் பள்ளிக் கட்டில், பள்ளிகொண்ட பெருமாள், பள்ளிப்படுத்தல், பள்ளிமாடம், பள்ளி யறை, பள்ளியெழுச்சி முதலிய பல்வேறு சொற்ருெடர்களில், இச்சொல் தூக்கம், துயிலல் என்ற பொருளிலேயே பயன் படுத்தப்பட்டிருக்கிறது:
கம்பராமாயணத்தில் 'பள்ளியடைப் படலம்' என்ற படலத்தில் தசரதனின் ஈமச்சடங்குகளைப் பற்றிய வருணனையி லிருந்து பள்ளி என்ற சொல் உறக்கத் திற்கு மட்டுமின்றி ‘மீளாத் தூக்கத் திற்கு" பொருந்துமாறு வழங்கி வந்தது தெரிகிறது. படை என்ற சொல்லுக்கு த்ொழுதல் என்ற பொருள் கொண்டால் மீளாத் தூக்கத்திலாழ்ந்தவரை, மாண்ட வரைப் போற்றுதல் எனப் பொருள் கொள்ளலாம். இறந்தவர்களின் நினை வாக அவர்களைப் புதைத்த அல்லது எரித்த இடத்தின் மீது எழுப்பப்பட்ட கோயில்கள் "பள்ளிப்படைக் கோயில்கள்" என்றழைக்கப்படுகின்றன. தற்காலத்தில் கல்லறைக் கோயில்கள் என்று இதைக் கூறுகின்றனர். படை என்பதற்குத் துயிலும் படுக்கை என்ற பொருள் கொள்ளலாம். இச்சொல் "படு' என்ற வேரிலிருந்து (Root) தோன்றியது என்று பேரறிஞர் திரு. R. R. பூரீனிவாசன் கூறுகிருர் மேலும் அவரே படை என் பதற்கு பூமியின் கீழ் புதையுண்டோ அல்லது மேலோ எழுப்பப்பட்ட நினைவு கட்டிடம் என்றும் பொருள் கொள்வார். நிலத்தில் குழிவெட்டி சவ அடக்கம் செய்து அதன் மீதும் சுற்றிலும் கற்களே நிரப்பும் வழக்கம் தொன்று தொட்டு தென் குட்டில் இருந்து வந்தது. இதற்கு
4

இலக்கிய2 தொல் பொருள் சான்றுகள் பல உள. இத்தகைய கற்சுற்ற (Stone circle) as dia, a spigs குரக்குப்படை என்று பெயர் வழங்கி வந்தது ஈண்டு குறிப்பிடத்தக்கது. திரு லாங்கர் ஸ்ட் (Longurst) என்பவர் மனித எலும்புக ளின் மேல் எழுப்பப்பட்ட கருவறைக் கோயில்களைப் பற்றிக் கூறிய கருத்துக் களை நோக்குங்கால் இக் கோயிலமைப்பு மக்களின் அன்ருடப் பழக்கமாகவே மாறிவிட்டது என்று தெரிகிறது.
"பொன் வைக்குமிடத்தில் பூ" என்ற ஒரு பழமொழி உண்டு. பொன்னில்லா தவர்கள் பூவாலும் புகையாலும் ஆண்ட வனத் ; தொழுதனர். அதே போன்று பள்ளிப்படைக் கோயில்கள் எழுப்ப இய லாதவர்கள், கல்லிலும் செம்பிலும், மன்னரின் அல்லது பெருமைமிக்க பெரி யோரின் உருவச் சிலைகளைச் சமைத்து அவருக்காக வழிபாட்டைச் செவ்வனே செய்தனர்; கற்புத் தெய்வம் கண்ணகிக் குச் சேரர் கோமான் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்து, கண்க விசயர்களுடைய முடித்தலையில் ஏற்றிக் கொண்டு வந்து கங்கையாற்றில் முறைப் படி நீராட்டி, தென்னுட்டில் கொணர்ந்து சிஃலவடித்து முறைப்படி கோயிலெழுப் பிப் பத்தினித் தெய்வமாக வணங்கினுன் என்று சிலம்பதிகாரம் கூறுகிறது. இது போன்றே சங்க காலத்திற்குப் பின்பும், நீத்தோர் தம் நினைவு, பெருமை சிலை வைப்பதஞலேயே உணர்த்தப் பெற்றது எனப் பல இலக்கிய, கல்வெட்டுச் சான் றுகள் பகர்கின்றன.
சில பள்ளிப்படைக் கோயில்களை ஆராய்வோம். தஞ்சை மாவட்டத்தில் இராமநாதன் கோயில் (பட்டீசுவரம்) ஒரு சிற்றுார். இவ்வூருக்கு அண்மையில் தற்போது பாழடைந்துள்ள பழையாறு சோழ மன்னர்களின், தலைநகரங்களுள் ஒன்ரு கும். சில சோழ மன்னர்கள் இங்கு முடிசூட்டிக்கொண்டதால் முடி

Page 7
கொண்ட சோழபுரம் என்ற காரணப் பெயரும் இப்பாடல் பெற்ற தலத்திற்கு உண்டு. இது குந்தவைப் பிராட்டியா ரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப் பழையாரைக் கல்வெட்டுகள் இவ்வூரை கூத்திரிய சிகாமணி வளநாட்டு திரு நறையூர் நாட்டு முடிகொண்ட சோழ புரமான பழையாறு என்று குறிப்பிடு கின்றன. இப் பட்டீசுவரத்தில் உள்ள கோயிற் கருவறையின் வட தென் சுவர் களில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராஜேந்திர சோழனின் ஏழாமாண்டுக் கல்வெட்டு இவ்வூர்க் கோவிலை "பஞ்ச வன் மாதேசுரம்' என்றும் பள்ளிப் படைக்கோயில் என்றும் அறிவிக்கிறது, இராஜராஜனின் தேவியார் ஐவரில் பஞ் சவன் மாதேவி ஒருவர் என்பது தெரிந் ததே. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இக் கோயில் பஞ்சவன் மாதேவியாரின் நினைவாக அவளின் ஊனுடம் பின் மேல் எடுப்பித்த பள்ளிப்படைக் கோயிலாகும் இக் கல்வெட்டில் காணப்படும் "பள்ளிப் படை' என்ற சொல்லை எவரோ அழிக்க முயன்றிருப்பது பிற்காலத்தில் இவ்வகை கோயில்களுக்கு ஆதரவின்மையையும், மேலும் இக்கோயிலின் கருவறை கல் லறையின் (சவக்குழி) மேல் கட்டப்பட் டது என்ற சான்றை இழிவாகக் கருதிய மையும் சுட்டக்கூடுமா என்ற வெண் ணம் எழுகின்றது,
இராஜராஜதேவர், "ஆற்றுார் துஞ் சின தேவர்க்கு மேல்பாடியில் (சித்தூர் மாவட்டம்) எடுப்பித்த பள்ளிப்படைக் கோயில் திருவரிஞ்சீசுவரமாகும். மேல் பாடி என்னும் இவ்வூர் மேற்பாடி என் றும் இது ஜயங்கொண்ட சோழமண்ட லத்துப் பெரும்பாணப்பாடித் தூஞாட்டு ராஜா சிரியபுரம் என்று அவ்வரசனின் இருபத்தேழாமாண்டுக் கல்வெட்டுக் கூறு கிறது. மேற்பாடிக்கு மற்ருெரு பெயர் ராஜாசிரியம் என்று தெரிகிறது. ஆற்றுர சில்7 இறந்த அரிஞ்சயனுக்கு கோயிலே எடுப்பித்ததால் இக் கோயிலில் குடி

கொண்ட இறைவர் அரிஞ்சிகை ஈசு வரத்து மஹாதேவர் என்றே குறிப்பிடப் பட்டுள்ளார். இக்கோயிலை தற்போது கோதண்டராமேஸ்வரன் கோயில் என்று அழைக்கின்றனர். காளஹஸ்திக்கு அரு கில் உள்ள தொண்டைமானற்றூரில் இறந்தவன் பராந்தகனின் மைந்தன் அரிஞ்சயன வான். இக்கல்வெட்டிலுள்ள ‘எங்கள் நகரத்தில் எடுப்பித்தருளின98 என்ற சொற்ருெடரினல் முன்னர் இது நகரமாக திகழ்ந்திருக்கவேண்டும்.
செங்கற்பட்டு Lم IT هl L- L- jراقل و ژ சென்னைக்கருகில் உள்ள திருநீர் மலை புகழ் வாய்ந்த வைணவத் தலமாகும். பின் வந்த மதுராந்தகப் பொத்தப்பி சோழன் இங்கு 'திருவாழிப் பரப்பினன் 4F5S'9 ஏற்படுத்தி இக்கோயிலைச் சிறப்பித்தான் இங்கு இரண்டு பெருமாள் கோயில்கள் ஒன்று குன்றின் மீதும், பிறிதொன்று ஊரிலும் உள்ளன, இவ்விரு ஆலய களும் அரங்கநாதர் கோயிலென்றே அழைக்கப்படுகின்றன. இத் திருநீர்மல் முந்திய ஜெயங்கொண்ட சோழமண்டலத் தில் சுரத்தூர் நாட்டு புலியூர் கோட்ட மான குலோத்துங்க சோழவளநாட்டில் உள்ள ஒரு சிற்றுாராகும். திருநீர் மலைக் கோபுரத்தில்' உள்ள இரண்டு கற்களி லிருந்து பஞ்சநதிவாண நீத கங்கரையர் என்பவனல் பள்ளிப்படை அகரத்தில் எழுந்தருளிய சிவாலயத்திற்கு தண்ணி யாலத்தூரில் நிலமளிக்கப்பட்டது தெரிய வருகின்றது. கல்வெட்டில் கூறப்பட டுள்ள சிவன் கோயில் எதுவும் இப் பொழுது இவ்வூரில் காணப்படவில்லை ஆகவே கல்வெட்டில் குறிப்பிடப்பட் டுள்ள சிவன் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களினல் இவ்விரு வைன வாலயங்கள் பின்னர் கட்டப்பட்டுள்ளன என்று புலப்படுகிறது. இச் சிவன் கோயில் மூன்ரும் இராஜராஜன் ஆட் சிக்கு முன்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை, கிடைக்கப்பெறும் கல்வெட் டுக்களால் ஊகித்துணரலாம். நீர்வண்,

Page 8
னப் பெருமாள் என்று கல்வெட்டுக்க ளால் அழைக்கப்படும் இவ்விரு வைண வக் கோயில்கள் வைஷ்ணவப் பாசுரங் களால் பாடப்பட்டிருக்கின்றன.
தென்னுர்க்காடு மாவட்டம் பெரும் பற்றப்புலியூருக்கு (சிதம்பரம்) அருகில் உள்ள விக்கிரமசோழ நல்லூரை அக்கன் பள்ளிப்படை என்று கல்வெட்டு கூறு கிறது. இச் செய்தியை முதலாம் ஜடா வர்மன் சுந்தரபாண்டியனின் பதினைந் தாம் ஆண்டு கல்வெட்டினுல் 12 உனர் கிருேம். மூன்ரும் குலோத்துங்கனின் அதிகாரியினல் இவ்வூர் இறைவனுக்கு மலர் மாலைகளுக்காக விக்கிரம சோழ நல்லூரில் நிலம் விடப்பட்டதாக அறி கிருேம் இக் கல்வெட்டின் வாயிலாகத் தான் விக்கிரமசோழ நல்லூரை ‘அக் கன் பள்ளிப்படை' என்று ந்மக்கு தெரி கிறது. விரிவான குறிப்புகள் மேலும் கிடைக்கவில்லை
இராமநாதபுரம் மா வட்டத் தில் உள்ள பள்ளிமடம் ஊரில் உள்ள கால நாத சுவாமி கோயில் மிகப் பழமை யானது. வரலாற்றுச் சிறப்புக் கொண் டது என்றும் கூறலாம். வெண்புநாட்டு குறண்டி என்னும் ஊர் சமணர் இருக் கைகளுள் சிறப்புற்றதென்று மாறஞ் சடையனின் கல்வெட்டால் 13 அறிகிருேம். திருக்காட்டாம் பள்ளி என்னும் சமணப் பள்ளியிலிருந்து கொண்டுவரப்பட்ட கற் களை கொண்டு காலநாத சுவாமி ஆல யம் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.14 சமணச் சிறப்புவாய்ந்த வெண்பு நாட் டுக்கு அருகில் உள்ள பள்ளிமடத்தில் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் கல்வெட்டுக்களிலிருந்து குறிப்பாக ஏழா மாண்டு முதல் பதின்மூன்ரு மாண்டு வரை கல்வெட்டுகளினல்1 இவ்வூர் கோயில் பள்ளிப்படையாக சுந்திரபாண் டியன்' என்னும் இளவரசனின் நினை வாக எழுப்பப்பட்டது என்று புலன கிறது; இவ்வூரை பருத்திகுடி நாட்டு
6

தேவதானம் திருச்சுழியல் பள்ளிமடை என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இக் கோயிலுக்கு வீரபாண்டியனின் அதிகாரி யான மாறனுதிச்சன் மற்றும் ஏனையே நிவந்தங்கள் அளித்தமை குறிப்பிடத்தக் கது திருச்சுழியல் பள்ளிப்படை என் னும் ஊர் நாளடைவில் பள்ளிமடம் என்று மாறுபட்டிருத்தல் வேண்டும்3
வடார்க்காடு மாவட்டத்தில் உள்ள வேலூருக்கு அண்மையில் உள்ள சோழ புரத்திலிருந்து கிடைக்கப்பெற்றது கங்க குறுநில மன்னனன இராஜாதித்யன் 17 பல்லவ விஜைய கம்பவர்மனின் எட் டாமாண்டு கல்வெட்டு, இதின் வாயிலாக, இக்குறுநில மன்னன் 18 தன் தந்தைக்காக எழுப்பிய சிவன் கோயிலும் சமாதியும் பள்ளிப்படைவகையைச் சார்ந்தன என் பதைத் ‘தம் அப்பனரைப் பள்ளிபடுத்த விடத்து ஈசுவர் ஆலயமும் அதிய்த கர மும் எடுப்பித்து" என்ற சொற்ருெடரி ணுல் நன்கு விளங்குகிறது. இச்சோழ புரத்திற்குக் காட்டுத்தும்பூர் என்பது பழம் பெயரென்றும், உய்யக்கொண்ட சோழபுரம் பிற்காலப் பெயரென்றும் இது ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்கள நாட்டுப் படுவூர்க் கோட்டத்தை சார்ந்தது என்றும் கூறலாம்.
கல்நாட்டி நினைவு கூர்தல் தமிழர் களுக்கு புதியதல்ல. வீரர்களுக்கு அவ ரின் வீரத்தின் பெயரால் வீரக்கல்லும், நடுகல்லும் நாட்டினர். இன்னும் சிலர் வீரர்களின் உருவச் சிலையைக் கல்லில் பொறித்து வழிபட்டனர். இன்னும் ஒருவர் இறந்தவுடன் அவருக்குச் செய் யும் ஈமச்சடங்கிலும், ஒரு கல்லில் இறந்தவர் இருப்பதாக உருவகித்து சடங்கு முடியுமட்டும் அக்கல்லை வழிப் பட்டு வருகின்றனர். இதையே "சிலாஸ் தாபனம்" என வடமொழியிலும் "கல் லெடுப்பு’ எனத் தமிழிலும் கூறுவர் இம்முறை நாளடைவில் பெரிய அழகிய உருவச் சிலைகளைக் கல்லிலும் படிமங்களை

Page 9
உலோகங்களிலும் அமைக்க அடிகோலி யிருக்கும் என்று எண்ணத் தோன்று கிறது. ஒருவர் இறந்துவிட்டால் "அவர் தெய்வமாகிவிட்டார்" என்று சொல்லும் வழக்கு நம்மிடையே நிலவுகிறது: தெய் வத்தை எவ்வாறு வழிபடுகிருேமோ, அவ்வாறே இறந்தவரின் கற்சிலையையும் படிமத்தையும் வணங்கி வழிபட்டிருத் தல் கூடும். இவ்வழக்கம் பார்வேந்தர் களால் பெருமளவில் பரப்பப்பட்டுப் பாமர மக்களாலும் பிறகு பின்பற்றப் பட்டு இருத்தல் வேண்டும். நாளடை வில் மக்களால் வழிபட்ட சிலைகள் இன்று வழிபடும் படிமங்களாக மாறி விட்டன. ஆதலாலன்ருே 6 LDu 6.pr வர்களின் சிலைகளை ஒவ்வொரு கோயில் களிலும் அன்ருடம் காண்கிருேம்.
அக்காலத்தில் இறந்தவருக்கு நினைவு மண்டபம் கட்டி அதில் அவர் சிலையை வைக்கும் வழக்கம் நில்வியது. இதற் குச் சான்று வடமொழியில் பாசன் என் பான் எழுதிய "பிரதிமா நாடகம்" என் னும் நூலில் காணலாம்: 63o Liberów lillபத்தில் தசரதனின் சிலை இருக்கக்கண்ட மைந்தன் பரதன் தன் தந்தை உயிர் நீத்தமையை குறிப்பால் எவ்வாறு உணர்த்தப்பட்டான் என்று இந்நூலின் வாயிலாக அறிகிருேம்.
கல்வெட்டுகளில் உருவத்தை சிலை யில் வடித்து வழிபட்டமைக்கு கீழ்வரு வனவற்றை எடுத்துக்காட்டாக இயம்ப லாம். முதலாம் இராஜராஜனின் திருத் தமக்கை யாரும், இரண்டாம் பராந்தக னின் மகனுமான குந்தவைப் பிராட்டியார் தன்னுடைய பெற்ருேரிகளின் திருமேனி களைத் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு அளித்து, அவற்றுக்குரிய வழிபாட்டிற்கு பொன் முதலான நிவந்தங்களை அளித் தமைபற்றி மேற்படியூர் கோயிற்கரு வறை சுவரிலுள்ள கல்வெட்டு19 விரி
வாக வெளிப்படுத்துகின்றது:
முதலாம் இராஜராஜனுடைய a t 9. மத்திற்கு கோயிலில் நடைபெற்ற சிறப்

புக்களை- மற்றத் தெய்வ படிமங்கள் திருவீதி உலா புறப்பட்டுச் செல்கையில் அரசர் பிரானின் படிமமும் பின் தொடர்ந்து செல்வது- பற்றி மற்ருெரு கல்வெட்டு20 கூறுகிறது. இப்படிமத்தில் அரசரின் பெயரும் பொறிக்கப்பட்டிருப் பது நேர்க்கத்தக்கது.
செம்பியன் மாதேவியினுடைய அறப் பணிகள் எண்ணிலடங்காதவை. அவ ருடைய பிராட்டியார், பிராந்தகன் மாதேவியார், செம்பியன் மாதேவியார் என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படு கிருர் இவர் பல கோயில்களைக் கட்டி யுள்ளார். இவ்வம்மையாரின் பணிக ளால் சோழரின் கட்டிடக்கலை ஏற்றம் பெற்றது என்று கூறுவாருமுளர் 21. இள மையிலேயே கைம்பெண் நிலையை அடைந்த இவர், உய்யக்கொண்ட வள நாட்டு வெண்நாட்டு பிரமதேயமான திருநல்லம் (கோனேரி ராஜபுரம்) என்னு மிடத்தில் கோயில் எழுப்பினர். திரு நல்ல முடையார் என்ற பெயர்கொண்ட இக்கோயில் தன்னுடைய கணவர் கண்ட ராதித்யன் நினைவாக, அவர் உருவச் சிலையை, உடையாரை தொழுத நிலையில் சுவற்றில் வடித்து வழிபாட்டிற்கு நிவந் தங்கள் அளித்தனன் என்று மேற்படியூர் கல்வெட்டு கூறுகிறது?
முதலாம் இராஜேந்திரனின் எட் டாம் ஆண்டுக் கல்வெட்டு இச் செம் பியன் மாதேவி23 என்னும் ஊரில் அவ் வம்மையாரின் படிமத்திற்கு வழிபாடு செய்ய அறக்கட்டளைகளை ஏற்படுத்தின மை பற்றிக் கூறுகின்றது. இவ்வம்மை யாரின் பெயரிலேயே இவ்வூர் இன்றும் வழங்கிவருவது நோக்கற்பாலது.
சித்துரர் மா வட் டத் தி ல் உள்ள பூரீகாளஹஸ்தி24 என்ற சைவத் தலம் வேடன் கண்ணப்பநாயனருக்கு இறை வன் முக்திதந்த இடமாகும். இத்திருக் காளத்தி ஜயங்கொண்ட சோழமண்ட லத்து, ஆற்றுார் நாட்டு திருவேங்கட
7

Page 10
கோட்டத்தில் உள்ள ஒரு ஊராகும்3 இக்கோயிலில் உள்ள கல்வெட்டிஞல் கேட்டான் ஆதித்தனன மாங்கலுTர் நாடாழ்வான் என்பவன் இறந்தகாலை அவனுடைய தமக்கையார் அவனுடைய படிமத்தைச் 29 செய்வித்து கோயிலில் விளக்கு எரிப்பிக்கும் அறத்தைப் பணித் தாள், என்று தெரியவருகிறது. மேற் கூறப்பட்ட கே ட் டா ன் ஆதி த் த ன் குலோத்துங்க சோழ கருப்பாறுடையார் எனும் படைத்தலைவனின் வேலைக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது:
மதுரை மீனுட்சி சுந்தரேசுவரர் கோயிலிலுள்ள சங்ககாலப் புலவர்களின் சிலைகளும் மற்றும் பல ஆலயங்களி லுள்ள அறுபத்து மூன்று நாயன்மார் களின் சிலைகளும் உருவச் சிலைகளை அமைத்து வழிபடும் முறை பெருகி வழக்கிலிருந்ததைச் சுட்டிக்காட்டுகின் றன. இவ்வழக்கத்தை விஜயநகரப் பேரர சர்களும் அவர்கள் வழிவந்த நாயக்க மன்னர்களும் கடைப்பிடித்தனர் என் பதற்குச் சான் ருகத் திருப்பதியில் உள்ள கிருஷ்ணதேவராயர் அவருடைய தேவிய ருடைய உருவச் சிலைகளை குறிப்பிடலாம். கும்பகோணத்தை அடுத்த பட்டீசுவர ஆலயத்திலுள்ள கல்வியிற் சிறந்தவரும் மிக்க புகழ்வாய்ந்த அமைச்சருமான கோவிந்த தீட்சதரின் சிலையும், தேரழுந் தூரிலுள்ள கம்பர் சிலையும் அடையபுலத் தில் உள்ள அப்பைய தீகPதர் சிலையும் கல்வியிற் சிறந்தவர்களுக்கு சிலை எடுத் தமைக்கு எடுத்துக்காட்டாக அமைகின் றன
இறந்தவர்களை நினைவு கூர்தலில் இரண்டு வகைகளை முன்னர்க் கண்டோம். மூன்ருவதாக இவ்வகையில் அமைவது சமாதிக்கோயில்கள் மைசூர் மாநிலத் தில் உள்ள சிருங்ககிரி (சிருங்கேரி) என்னு மடத்தில் மதத் தலைவர்களுக்கு எழுப் பப்பட்ட சமாதியும் தென் கருநாடகத் தில் உடுப்பியைச் சுற்றியுள்ள பல இடங்
8

களில் மதத்தலைவர்களுக்கு அல்லது மடத்தின் தலைவர்களுக்குரிய sr upm gé. கோயில்களும் பரவலாகக் காணப்படுகின் றன; இவ்வகையில் மல்கேட், மந்திரால யம் முதலிய இடங்களில் அமைந்த சமா திக்கோயில்கள் குறிப் பி ட த் தக்கன. திருச்சி மாவட்டத்தில் கரூர் என்னு மிடத்தில் உள்ள கருவூர்த் தேவர் சமா தியும், சென்னைக்கடுத்த திருவொற்றி யூரில் பட்டினத்துப்பிள்ளை சமாதியும், சித்தூர் மாவட்டத்தில் புத்தூருக்கு அருகாமையிலுள்ள சுரக்காய் பரதேசி யின் சமாதியும் சமாதிக் கோயில் வகை யைச் சேர்ந்தவை. சமாதிக்கோயில் எழுப் பும் வழக்கம் சைவர். வீரசைவர், முக மதியர் ஆகிய எல்லா வகுப்பாரிடையே யும் உள்ளது. பார்ப்பன வகுப்பா ரிடையே, மதத்தலைவர்களில் துறவி களுக்கு மட்டும் சமாதிகளை எழுப்பும் வழக்கம் காணப்படுகிறது.
பண்டைக்காலத்தில் எ கி ப் தியர் இறந்த அரசருக்குக்கல்லறைக்கோயிலென பிரமிடுகளை (Pyramid) கட்டினர். இவ் வாறு கோயிலெழுப்பி, உருவச் சிலை அமைக்கும் வழக்கம் கீழ் நாடுகளில், குறிப்பாகக் கம்போடியா, ஜாவாவில் பெரும்பாலும் வழக்கில் இருந்தது. மனித எலும்பின்மேல் அல்லது சாம்ப லின் மேல் சிவன் கோயிலோ, புத்த விஹாரமோ கட்டப்பட்டு இறந்த அர சரிகளின் அல்லது அவர் தேவியரின் உரு வச் சிலையை வைத்து மக்கள் வழி பட்டனர். பிராக்ஜா பாரமிதாவின் சிலையை26 சான்ருக குறிப்பிடலாம். கொற்றவனும் கடவுளின் கூறு என்று தொன்றுதொட்டு மக்கள் கருதியதே இதற்குக் காரணமாகும்27.
பள்ளிப்படைக் கோயில்களில் சில இடுகாட்டிற்கு அருகில் அல்லது இடு காட்டிலேயே கட்டப்பட்டன என்று தெரிகிறது. பள்ளிபடைக் கோயில்கள் சைவசமயத்தைச் சார்ந்த அரசர்களா

Page 11
லேயே பெரும்பாலும் கட்டப்பட்டன. இவ்வகைக் கோயில்களுள் சிவன் கோயில் களே மிகுந்து காணப்படுகின்றன. சில கோயில்கள் சமணர் பள்ளிகளாகத் திகழ்ந்தன. ஆனல் மற்ற சமயத்தாரான வைஷ்ணவர்களால் இம்முறை கடை பிடிக்கப்படவில்லை. ஒன்பதாம் நூற்றுண் டில் தோன்றிய இவ்வகைக் கோயில் அமைப்புமுறை சில நூற்ருண்டுகளுக்குப் பிறகு அருகியது. ஆனல் உருவச் சிலை
SIl!ð Ösll :-
1. Ancient India, No. 2, Lješ. 9
2. நற்றிணை, 371, வரிகள் 11-12; பதிற்றுப்பத்து இவற்றினின்று பலவகையான முறையில் சவத்6
3. Archaeological Report, 1915-16, Lai. 28.
Annual Report on Indian Epigraphy, (ARE
4. 5 AIRE, No, 271 of 1927
6. SII, Vol. II. Lu&š. 203.
7. SII, Vol. III, lušš. 26; Luntii & 35 ARE, for 190 8
9
10
SII, Vol. III, udiš. 25 ARE, No. 534 of 1912 ARE, No. 559 of 1912
11. ARIE, for 1912, L uiĝo 42
12, ARE, No. 275 of 1913
13. SII, Vol. XIV, No. 32
14. மேற்படி, No. 39 முன்னுரை
15. Gudiyuq, Nos. 79, 80, 82, 83, 88 etc.
16. இச்சந்திரபாண்டியன் யார் என்பது தெரியவில் ஞக இருத்தல் வேண்டும். இவனைப்பற்றிய குறி சில கல்வெட்டுகளிலிருந்தும் அறிகிருேம். Epig
SII, Vol. XIV Gustgaup637 SpyGOJ LJ35. iii
17. Epigraphia Indica, Vol. Vel, Luji. 193
18. ARE, for 1907, பந்தி 30 பக். 57, இவ்வரசன்
கூறப்பட்டுள்ளது.
19. , SII, Vol. II, Luái. 68
20. ARE, for 1925, U55, 12. Luá. 81 (Lu 5g/l.
21. மேற்படி, பந்தி 22
22. AIRE, for 1909, Luis S. 41 and ARE for 19
23. ARE, for 1925-26, Us58 24
24. பூரீ - சிலந்தி, காள - பாம்பு, ஹஸ்தி - யானை,
ஹஸ்தி’ என்று இவ்வூருக்கு பெயர் வழங்கிவரு
25, AIRE, for 1921-22 Luž, g, 21; Luar fi 35 A RE.
26. gjiga) &j 6ër (Leiden) பொருட்காட்சியில்
(படத்துடன்)
27. மேற்மடி, பக், 80
28. Journal of Oriental Research, Vol. XI, L

களைக் கல்லிலோ, செம்பிலோ அமைத்து அவற்றை ஆலயங்களில் வைத்து மக்கள் வழிபட்டனர் என உ ன ர் கி ருே ம். தெலுங்கு கன்னட நாடுகளில் பள்ளிப் படைக் கோயில்கள் இருந்தன என்பதற் குச் சரியான ஆதாரங்கள் கிடைக்க வில்லை. ஆனல் அரசர்களுடைய பெயர் களைக் கோயிலுக்கு வைக்கும் வழக்கம் மட்டும் தொடர்ந்து இருந்தமைக்குக் கல்வெட்டுக்கள் சான்றுபகர்கின்றன28,
, 44, வரிகள் 32-23; புறநிானூறு, 288, வரிகள் 1-15 : தை அடக்கம் செய்தனர் என்று புலனுகிறது.
, No: 630 of 1909
7 பந்தி 30 பக். 57.
லே. இவன் பத்தாம் நூற்றண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவ ப்புகள் அம்பா சமுத்திரம் கல்வெட்டிலிருந்தும் மற்றும் raphia Indica, Vol. XXVIII, u5. 39; Guosyö uTriäas
ஒன்பதாம் நூற்ருண்டைச் சார்ந்தவன் என்று
ன்)
11, பந்தி 18
இவை மூன்றிற்கும் வீடுபேறு அளித்தமையால் "பூரீகர்ள வது காண்க .
No. 95 of 1925 (c) མ་ Dairart by Luitridis The Influences of Indian Art, Ludii. 84
i. 262; ridis ARE No. 337 of 1919

Page 12
செல்வரத்தினம் ராஜரத்தினம்
19-i) ) ஏற்பட்
கெத்தொழிற் புரட்சியுடன் இங்கி லாத்தின் பொருளாதாரம் கூடியளவு உறுதியின்மையைக் காட்டியது. உற்பத் திப் பொருட்களின் ஏற்றுமதியில் அது தங்கியிருக்க ஆரம்பித்ததன் மூலம் தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திக ளில் அது தங்கியிருக்க ஆரம்பித்திருந்தது: உற்பத்திப் பொருட்களுக்கான வெளி நாட்டுக் கேள்வியில் (கிராக்கி) வீழ்ச்சி ஏற்பட்ட போதெல்லாம், அது இ ங் கி லாந்தில் பொது விலை மட்டத்தில் வீழ்ச்சி பையும், வெளியீட்டில் சுருக்கத்தையும், வேதனக் குறைவையும், வேலையின்மை யையும் ஏற்படுத்தக்கூடிய வகையிலும் பிர திபலிக்க ஆரம்பித்தது. தூரதேசமொன் றில் ஏற்படக்கூடிய பயிர் நஷ்டமோ அல் லது நிதி நெருக்கடியோ அல்லது இது போன்ற வேறெந்தக் காரணியோ ஆங்கி லப் பொருளாதாரத்தைக் குழப்பத்தில் ஆழ்த் தவல்ல தாயிருந்தது; இ வ ற் றுக்கு எதிர்மாருன நிலைமைகளின் போது விளைவுகள் சாதகமாயிருக்குமென்பதும் உண்மையே. உற்பத்திப் பொருட்களை வாங்கும் நாடுகளின் கொள்வனவு சக்தி யில் முன்னேற்றம் காணப்படுமானல் அது பொது விலைமட்டத்தில் உயர்வைக் கொண்டுவரும். பொது விலைமட்ட உய ர்வைத் தொடர்ந்து உற்பத்திப் பெருக்க மும் கூடியளவு தொழில் வாய்ப்புகளும் ஏற்பட்டு நாட்டு நிலை மை யி ல் பொது வான ஒரு முன்னேற்ற உணர்வு காணப் படும்; இதன் காரணமாகப் 19-ம் நூற் ருண்டில் ஆங்கிலப் பொருளாதாரம்
10

ாற்ருண்டில் இங்கிலாந்தில் - பெருமந்தம்
கூடியளவு உறுதியின்மையைக் காட்டிற்று: இங்கிலாந்து கைத்தொழில் நாடாக இருப் பதற்குக் கொடுத்த விலை இந்த உறுதி யின்மையேயாகும்.
19-ம் நூண்ருண்டு பூராவும் சிறந்த வருடங்களும், சிறப்பற்ற வருடங்களும் ஒன்றையொன்று தொடர்ந்து காலத்துக் குக் காலம் வந்துகொண்டிருந்தன. ஆனல் இவ்வாறு வருடா வருடம் ஏற்பட்டுக் கொண்டிருந்த தளம்பல்களின் பின்னணி யில், சில நீண்ட காலப் போக்குகளையும் அவதானிக்கக் கூடியதாயுள்ளது. ஆங் காங்கு ஏற்படும் சிறப்பற்ற வருடங்க ளுடன் தொடர்ச்சியான சிறந்த வருடங் களை நாம் காணலாம். அத்துடன் இந்தச் சிறப்பற்ற வருடங்கள் கூட அறுதியாக நோக்குமிடத்துச் சிறப்பற்றவையாயிருக் கவில்லை. இதற்கு முந்தியிருந்த சிறந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது மட்டுமே அவை சிறப்பற்ற்வையாயிருந்தன. ஒரு சில சிறந்த வருடங்களால் இடைமறிக் கப்பட்ட தொடர்ச்சியான சிறப்பற்ற வருடங்களும் காணப்பட்டன. இங்கும் கூட சிறந்த வருடங்கள் ஏற்கனவே யிருந்த பொதுவான சிறப்பற்ற நிலைமை களுடன் ஒப்பிடும் போது மட்டுமே சிறந் தவையாயிருந்தன. இவ்வாருன நீண்ட காலப் போக்குகளின் அடிப்படையிலேயே 19-ம் நூற்ருண்டின் "பெருமந்தத்தை" நாம் சரியானபடி மதிப்பிடமுடியும் பெருமந்தம் நிலவிய காலப்பகுதியானது 1873 - 1886க்கு மிடைப்பட்டதென நிறுவப்பட்டுள்ளது. ஆனல் "பெருமந்தம்"

Page 13
என்ற சொற்ருெடரையும், இந்தக் கால வரையறையையும் நாம் ஏற்றுக் கொள் வதற்கு முன்பு சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது அவசியமாகின் றது. 1873-ம் ஆண்டுக்கும், 1886-ம் ஆண்டுக்குமிடைப்பட்ட வருடங்களில் பொருளாதார நிலைமைகள் சீர்கெட்டி ருந்ததென்பதில் எதுவித சந்தேகமுமில்லை ஆணுல் அதை நாம் "பெரும்' மந்தம் நிலவிய காலப்பகுதியென அழைக்க லாமா? செழிப்பு நிறைந்த நீண்டதொரு காலப்பகுதியை இது தொடர்ந்து வந்த தன் காரணமாக அறிஞர் இதற்குத் தேவையற்ற முக்கியத்துவம் அளித்துள் ளனரா? அல்லது விலைகளிலும், லாபத் திலும் ஏற்பட்ட சடுதியான வீ ழ் ச் சி ஆங்கில மக்களின் நம்பிக்கையைத் திடீ ரெனச் சீர்குலைத்து, அதன் ப ய ஞ க எழுந்த பயத்தின் காரணமாக éFfl யான சரித்திர உண்மைகள் திரிபு படுத் திக் கூறப்பட்டுள்ளனவா?
"பெருமந்தம்' நிலவிய காலப்பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அம்சங்களை, அதற்கு முந்திய கால ப் பகுதி யோடு ஒப்பிட்டு நோக்குமிடத்து, டிழுமையாக இல்லாவிடினும், கூடியளவு T தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது. இந் நோக்கம் கருதி பெருமந்தக் காலப் பகுதிக்கு முத்திய காலப் பகுதிகூட ஒரு குறிப்பிட்ட அபிவிருத்திப் போக்கினைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமா கின்றது.
கைத்தொழிற் புரட்சி ஏ ற் பட்ட காலம் முதல் ஆங்கிலப் பொருளாதாரத் தின் போக்குப் பெருமளவு சுமுகமான தொன்ருயிருக்கவில்லை. சில கைத்தொ ழில்களில் யந்திரங்களும் இயக்கு சக்தியும், இலகுவான உபகரணங்களினதும், மனித சக்தியினதும் இடத்தை எடுக்க ஆரம் பித்தபோது பிரான்சுடனன யுத்தம் தலை யிட்டது; இது நீண்ட காலத்திற்குத் தொடர்த்திருந்த ஒரு யுத்தமாயிருந்தது. இது 1793ம் ஆ ண் டு ஆரம்பித்து,

இடையிடையே நிறுத்தப்பட்ட போதும் 1815ம் ஆண்டு வரை தொடர்ந்து நடை பெற்றது. இந்தக் காலப்பகுதி பூராவும் யுத்தத்திற்கு ஆயத்தமான ஒரு நிலயி லேயே இங்கிலாந்து எந்நேரமும் இருக்க வேண்டியிருந்தது. சில கைத்தொழில்க ளுக்கு இது நன்மை பயப்பதாயிருந்தது. பருத்திக் கைத்தொழிற் இ த ன் மூலம் பெருமளவு நன்மை அனுபவித்தது. இரா ணுவ வீரர்களது உடைக்குப் பெருமளவு கேள்வி ஏற்பட்டதால், அ த ன் மூலம் பருத்திக் கைத்தொழிலிற் பெ ரு க் கம் காணப்பட்டது. யுத்த முடிவைத் தொட ர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பருத்தித் துணிகளுக்குப் பெருமளவு கேள்வி ஏற் படுமென எதிர்பார்க்கப்பட்டதால், இவற் றின் உற்பத்தி தொ ட ரீ ந் து கூ டி க் கொண்டேயிருந்தது. ஆனல் இவ்வாருக எதிர்பார்க்கப்பட்ட கேள்வி யுத்தமுடிவில் ஏற்படவில்லை. உண்மையில் பருத்தித் துணிகளுக்கான கேள்வியில் பெருமளவு வீழ்ச்சியே காணபட்டது. ஏனெனில் யுத்த திற்குப் பின்பு ஐரோப்பிய நாடுகள் பெரு மளவு களைத்திருந்தது மட்டுமன்றி வெளி நாட்டுப் பொருட்களை வாங்கக்கூடிய பணமும் அவற்றிடம் இரு க்க வி ல் லை. இதன் விளைவாக மேலதிக உற்பத்தியும், விலை, லாபம் ஆகியவற்றில் வீழ்ச்சியும்" வேதனக் குறைப்பும், வேலையின்மையும் ஏற்பட்டிருந்தன. இத ன ல் பருத்திக் கைத்தொழில் ஒரு பொதுவான மந்த நிலை ஏற்பட்டிருந்தது. மற்றக் கைத் தொழில்களிலும் இதே போன்று கஷ்டங்கள் காணப்பட்டன. மந்தத் தின் விளைவுகளும், அதனது போக்கும் நாணய நெருக்கடிக்ளினலும், தொழி லாளி வகுப் புக் குழப்பங்களினலும் மேலும் பெரு பிக் க ப் பட் டி ரு ற் தன.
பொருளாதார நிலையில் முன்னேற் றம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் 1842ம் ஆண்டளவில் முதன் முதலாகத் தோன் றின. ஆனலும் கூட அந்த முன்னேற்றம்

Page 14
நிலத்திருக்கக்கூடியதொன்றெனக் கூறுவ தற்கு எதுவித ஆதாரமும் இருக்கவில்லை; உண்மையில் 1842-ம் ஆண்டுக்குப் பிந்திய காலப்பகுதியானது கூடியளவுக்கு பொரு ளாதார உறுதியற்ற ஒரு காலப்பகுதியா கவே காணப்பட்டது. இக் காலத்தில் அடிக்கடி நிதி நெருக்கடிகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இவ்வாருன நிதிக் கஷ் டங்களிற் பல மக்கள மேற்கொண்ட மேல் மிச்சமான முதலீடுகளின் ப ய ஞ க வே ஏற்பட்டிருந்தன. வி ரை ந் த பொருளாதாரச் சீரமைப்பைக் கருத்திற் கொண்ட இவர்கள் விலைகள் சடுதியாக உயர்ச்சியடையுமென எ தி ர் பா ர் த் தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி விலைகள் உ ய ர் ச் சி ய டை ய ர த போது, அவர்கள் மேற்கொண்ட புதிய முயற்சிகள் பலவும் தோல்வியையே கண் 1 - Gðf • ஆனல் 1850-ம் ஆண்டுக்குப் பிறகு, பொருளாதாரச் சீரமைப்பானது குறிப்பிடத்தக்கதொன் ருகவும், கூடியள வுக்கு நிலைத்திருக்கக்கூடியதொன்ருகவும் ஆனது. ஐரோப்பியப் பேரரசுகள் பல வும் யுத்தகாலத் தீய விளைவுகளிலிருந்து விடுபட்டுப் பொருளாதரி) ப் புனருத்தா ரண வேலைகளில் போதிய கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தன. ஆங்கிலப் பொருட்களுக்குப் பெருமளவு கேள்வி ஏற்பட்டிருந்தது. குறிப்பாக ஆங்கில முதற் பொருட்களுக்குப் பெரும் கிராக்கி யிருந்தது. இதைத்தொடர்ந்து ஆங்கில நாட்டு விலைகளின் பொது மட்டத்திலும் ஒர் உயர்ச்சிப்போக்குத் தெ ன் பட லாயிற்று. அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் தங்கமும், வெள்ளி யும் கண்டுபிடிக்கப்பட்டதன் பயனக விலைகளின் இந்த உயர்வடையும் போக்கு மே லும் அதிகரித்ததுமட்டுமன்றிப் பொதுவான ஒரு பணவீக்கப் பான்மை யும் நாட்டில் நிலவலாயிற்று. இவ்வா ருன பணவீக்கப்பான்மை பொருளா தார அபிவிருத்திக்குச் F TE S LOT 67 தொன்ரு யே இருந்தது. இதன் மூலம்
2

இங்கிலாந்து, தனது பொருளாதாரச் செழிப்பின் பொற்காலத்தை அடைந் திருந்தது.
1850-1870 க்கு மிடைப்பட்ட இரு பது வருட காலப்பகுதியும், இங்கிலாந் தின் பொருளாதார நன் ன்லையின் உச்ச கட்டமாகவே கொள்ளப்படுகின்றது. ஆங்கிலப் பொருளாதார முன்னேற்றப் பாதையின் சிகரமாக விளங்கிய இக் காலத்தில் இங்கிலாந்து பல துறைகளி லும் முதன்மைவாய்ந்த ஒரு நாடாக விளங்கியது. இக்காலப் பகுதியில் இங்கி லாந்து முழு உலகத்தினதும் கைத்தொ ழிற் சாலையாகவே கணிக்கப்பட்டது. அதுவே உலகின் தலைசிறந்த கப்பல் டும் நாடாக விளங்கியதுடன், அ கி ல உலகத்துக்குமான பொருட்களையும் எடுத் துச் சென்றது. இது மட்டுமன்றி இங்கி லாந்தே உலகின் நிதி நிலையமாகவும், அகில உலகத்துக்குமான தீர்வகமாகவும் காணப்பட்டது. கனரகக் கைத்தொழில் களில் இங்கிலாந்து நினைத்துப் பார்க்க முடியாதளவிற்குப் பெரு முன்னேற்றம் அடைந்திருந்தது இரும்பு, உருக்கு நிலக் கரிச் சுரங்கத்தொழில், பொறி யி ய ற் பொருள் உற்பத்தி, புகையிரத நிர்மா னப் பொருட்களின் உற்பத்தி, கப்பல் கட்டும் தொழில் ஆகிய எல்லாத் துறை களிலும் பெருமளவு அபிவிருத்தி ஏற்பட் டிருந்தது, துணிக் கைத்தொழில் முன்பு வளர்ச்சியடைந்த அ தே வேகத்தில் தொடர்ந்தும்வளர்ச்சியடைந்து கொண்டி ருந்தது. கைத்தொழில்கள் மட்டுமன்றி விவசாயிம் கூட இக்காலத்தில் த ன து மிகச் சிறந்த நிலையை அடைந்திருந்தது. இந்தச் சகாப்தம் விவசாயத்தின் பொற் காலம் என அழைக்கப்படுகிறது. பொரு ளாதார அபிவிருத்திக்கேற்ப ஆங்கிலக் கடல் கடந்த வர்த்தகமும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருந்தது. ஆங்கில நாட்டு ஏற்றுமதிகள் 1854ம் ஆ ண் டு 97,000,000 பவுண் பெறுமதியுடையவை யா யி ரு ந் து, 1872-ம் ஆண்டில்

Page 15
256,000,000 பவுண் பெறுமதியுடைய வையாய் அதிகரித்தன. இதே ஆண்டு களில் இறக்குமதிகளும் அதிகரித்திருந்தன. 1854-ம் ஆண்டு 155,000,000 பவுண் பெறுமதியுடைய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 1872-ம் ஆண்டு இவற் றின் பெறுமதி 355,000,000 பவுணுக உயர்ந்திருந்தது. இக்காலப் பகுதியில் வேலையில்லாத்திண்டாட்டம் ம  ைற ந் திருந்ததுடன், வேதனங்களும் அதிகரித் துச் சென்றன, அத்துடன் ஆங்கில மக் களின் லெளகீக வாழ்க்கை நிலைமைகளும் பெருமளவு முன்னேற்றத்தைக் காட்டின லெளகீக வாழ்க்கை நிலைமைகளில் ஏற் பட்ட இம்முன்னேற்றத்திற்கேற்ப, மக் களுடைய மனப்போக்கிலும் ஒரு மாறு தல் ஏற்பட ஆரம்பித்தது. புதிய சமு தாயக் கோவைகள் பல உருவாக ஆரம் பித்தன. கடும் உழைப்பும், முன்னெச் சரிக்கையும், ஒருவருடைய சமுதாய அந் தஸ்தைச் சீர்திருத்த வேண்டுமென்ற ஆர்வமும், சமத்துவ அடிப்படையி லமைந்த சமூகமொன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணமுமே, சமுதாய மொன்றிற்கிருக்கவேண்டிய புதிய அம் சங்களாகக் கருதப்பட்டன. இங்கிலாந் தின் எதிர்காலம் பற்றி எல்லையற்ற நம் பிக்கையும், உற்சாகமும் மக்களிடம் காணப்பட்டது. உன்னதமான இந்தப் போக்கிற்கு எதிர் மாருனதொரு போக்கு ஏற்படக்கூடுமென்பதையே ஒருவரும் எண் னிப்பார்க்கவில்லை.
ஆனல் பொருளாதாரச் செழிப்பு என்பது ஒரேசீராக அமைவதொன்றல்ல செழிப்பு நிலைகளுக்கு எதிர்மாருன மந்த நிலைகளும் ஏற்படுவதுண்டு. 1873-ம் ஆண்டளவில், தாம் இதுவரை அநுப வித்த செழிப்புக்காலம் முடிவடைந்து விட்டதென்பதை இங்கிலாந்து மக்கள் உணரத் தலைப்பட்டனர். ஆளுல் ஆராய்ச் சிக் கண்கொண்டு நோக்குவோர்க்கு 1867-ம் ஆண்டளவிலேயே பொருளா தார நிலைமைகள் சீர்குலைய ஆரம்பித்

தமை தெளிவாகப் புலப்படும். 1870-ம் ஆண்டளவில் பொருளாதாரத்தின் வீழ்ச் சிப் போக்கு என்பது முற்றும் உறுதி யானதொரு விடயமாக ஆகியிருந்தது 'பெரும் பிளவு" காலப்பகுதி என அழைக்கப்படும் 1870-1880க்குமிடைப் பட்ட பத்துவருட காலப்பகுதியிலும், பொருளாதார அபிவிருத்தியில் ஒரு பெரும் சீர்குலைவு ஏற்பட ஆரம்பித்திருந் தது. விலைகள் பெருமளவு வீழ்ச்சி யடைந்ததுடன், வெளியீட்டிலும் சுருக் கம் ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் 'பெருமந்தம்' ஏற்படுவதற்கான ஒரு தகுந்த பின்னணி ஏற்கெனவே உருவாகி யிருந்தது.
1873-ம் ஆண்டு முதல் 19-ம் நூற் ருண்டின் முடிவுவரையுள்ள பிரித்தானிய மொத்த விலைச் சுட்டெண்களை எடுத்து நோக்குவோமானல், அவை தொடர்ச்சி யான வீழ்ச்சிப் போக்கைக் காட்டுவதை நாம் காணலாம். 1873-ம் ஆண்டில் 111 ஆயிருந்த மொத்தவிலைச் சுட்டெண் (1866/67-100) 1896-ம் ஆண்டில் 61 ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. 1880-82 வரையுள்ள காலப்பகுதியிலும்" 1889-91 வரையுள்ள காலப்பகுதியிலும் மட்டும் இது ஒரு சிறிதளவு முன்னேற்றத்தைக் காட்டியிருந்தது. ஆனல் விலை வீழ்ச் சியை விட மோசமாயிருந்த பிரச்சினை லாப எ ல் லை யா ன து படிப்படியாக மறைந்து கொண்டு வந்ததேயாகும். இவ்வாருக லா ப ம் குறைவடைந்து கொண்டு சென்றமையே, உற்பத்தி யாளனை வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் படியும், வேதனவெட்டை மேற்கொள் ளும் படியும் நிர்ப்பந்தித்திருந்தன. இதன் மூலம் வேலையில்லாத்திண்டாட்டம் என் * பது மோசமான ஒரு பிரச்சினையாக ஆகி யிருந்தது. தொழிற்சங்க மதிப்பீடுகளின் படி வேலைசெய்யும் மொத்தச் சனத் தொகையினரில் வேலையில்லாதிருந்தவர் களின் தொகை 1872-ம் ஆண்டு, 1% த்
திலிருந்து 1879-ம் ஆண்டு 12% மாக
3.

Page 16
அதிகரித்திருந்தது; 19-ம் நூற்ருண்டில் முடிவிற் கூட இந்த வீதாசாரம் 10% க்கு அண்மையிலேயே தொடர்ந்திருந்தது. S.
இம் மந்தத்துக்குரிய காரணங்கள் யாவை? பல காரணங்கள் இதற்குக் குறிப்பிடப்பட்ட போதிலும், இவற் றுள் முக்கியமாகக் குறிப்பிடப்படுபவை மேலதிக உற்பத்தி, தங்கத்திற்கு ஏற் பட்ட தட்டுப்பாடும். அதன் மதிப்பு அதிகரித்தமையும்; மற்ற நாடுக ளின் போட்டி வர்த்தகத்தின் மீதான தீர் வைக் கட்டுப்பாடுகள், தொழிற்சங்கங் களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் ஏற்பட்ட கைத்தொழிற் குழப்பங்கள், விவசாயத்தில் ஏற்பட்ட மந்தநிலை; செல் வமானது மறுபங்கீடு செய்யப்பட்டமை ஆகியவையேயாகும். இவ்வாரு ன கார ணங்களிற் பலவும் மந்தம் நட்ைபெற் றுக்கொண்டிருந்த காலப் "பகுதியிலேயே எடுத்துரைக்கப்பட்டன. இதனல், இக் காரணங்கள் யாவும், தகுந்த பரிசீலனை யின் பின்புதான் எடுத்துக் கூறப்பட்ட னவோ என்பது சந்தேகத்துக்கிடமானதே. ஏனெனில் சற்றும் எதிர்பாராதவகையில் மந்தம் ஏற்பட்டிருந்ததால், இந்தத் தன் மையும், போதிய விசாரணையின்றி ஒரு வர் கொள்ளக்கூடிய தனிப்பட்ட கருத் துகளும் இக் காரணங்களின் மேல் தமது செல்வாக்கைச் செலுத்தியிருக்கும். ஜேர் மனியும், ஐக்கிய அமெரிக்காவும் புதிய கைத்தொழில் வல்லரசுகளாகத் தோன்றி யிருந்தமை, பாதுகாப்புத் தீர்வைகள் மூலம் இவ்வல்லரசுகள் தம் கைத்தொழில் களை விருத்தி செய்வதாக, இவற்றைக் குற்றம் சாட்டும்படி மக்களைத் துரண் டின. இவையெல்லாம் மந்தத்திற்குத் துணைக் காரணங்களாக இருந்தனவென் பதில் எத்துணை சந்தேகமுமில்லை. ஆனல் மந்தத்திற்கான அடிப்படைக் கார ணத்தை அறிய வேண்டுமானல், மந்தத் தில் சம்பந்தப்பட்டிருந்த கைத்தொழில் கள் பலவற்றையும் பற்றி நுணுகி ஆராய வேண்டியது அவசியமாகின்றது. மந்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் பலவும் அதற்கு முந்
14

திய செழிப்புக்காலத்தில் பெருநன்மை அனுபவித்த கைத்தொழில்களாகவே இருந்தன; இதன் காரணமாக மேலதிக உற்பத்தி பற்றிய பிரச்சினை எழுவது பெருமளவுக்கு இயல்பானதொரு விடய மாகவே இருந்தது. ஆனல் மேலதிக உற்பத்தியிருந்த போதும், அப்போது மேற்கொள்ளப்பட்ட உற்பத்திக்குறைப்பு நடவடிக்கைகள் மூலம், குறுகியதொரு காலப்பகுதியினுள் சமநிலை ஏற்பட்டிருக்க வேண்டும்: ஆளுல் மந்தநிலையானது தொடர்ந்தும் நீடித் திருந்ததால், அவ் வாருன சமநிலை ஏற்படமுடியவில்லை. மந்தத்தினல் பாதிக்கப்பட்ட கைத் தொழில்கள் பலவும் மீண்டும் சரியான திசையில் இயங்க ஆரம்பிப்பதற்கு முன், அவற்றின் தன்மையே முற்ருக மாறு படும் வகையில் பலத்த மாற்றங்களுக் குள்ளாக வேண்டியிருந்தன. இரும்புக் கைத்தொழில் இதற்குரிய சிறந்த உதா ரணமாகத் திகழ்கிறது. 1850-70 க்கு மிடைப்பட்ட காலப்பகுதி பூராவும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண் டிருந்த இரும்புக் கைத்தொழிலின் கேள் வியில் சடுதியான ஒரு வீழ்ச்சி ஏற்பட் டது. இவ்வாறு கேள்வி வீழ்ச்சியடைந் தமைக்குப் புகையிரத நிர்மாண அலு வல்களில் ஏற்பட்ட குறைவும், கூடி யளவு வெளிநாட்டுப் போட்டியுமே கார ணங்களாகக் குறிப்பிடப்பட்டன. ஆனல் உண்மையில் இவ்வாருண் கேள்வி வீழ்ச் சிக்குக் காரணமாயிருந்தது, இரும்புக்குப் பதிலாக உருக்கு பாவிக்கப்பட ஆரம் பித்தமையேயாகும். இரு ம்  ைப விட உருக்கு நீண்டகால பாவனையுடைய ஒரு பொருளாயிருந்ததால், குறுகிய காலங் களில் அதைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதன் காரணமாக எந்நேரமும் நிலையானதொரு கேள்வியும் அதற்கிருக்கமுடியாது. அத்துடன் உருக்கு உற்பத்தியில் கையாளப்பட்டபுதிய செய் முறையின் மூலம், உருக்கு மிகவும் மலிந்த ஒரு பொருளாகியதுடன் மற்ற நாடுகளும் அதன் மூலம் நன்மைபெற

Page 17
முடிந்தது. ஏற்கெனவே மேல் மிச்சமான தொகையை உற்பத்தி செய்துகொன் டிருந்த இரும்புக் கைத்தொழிலில் இங்கி லாந்து தனது மூலதனம் முழுவதையும் முதலீடு செய்திருந்ததால், புதிய உருக்கு யுகத்தினுல் விடுக்கப்பட்ட சவாலை ஏற்க முடியாத ஒரு நிலையில் அது இருந்தது: ஆளுல் மற்ற நாடுகளோவெனின் இப் படியான கைங்கரியங்களெதிலும் ஈடுபட் டிராததன் காரணமாக, நவீன செய் முறைகளைக் கையாண்டு புதிதாக உருக்கு உற்பத்தித் தொழிலில் ஈடுபடக்கூடியதா யிருந்தது. இதன் காரணமாக முன்பு உருக்கை இறக்குமதி செய்த நாடுகளே இப்போது பிரதான உருக்கு ஏற்றுமதி நாடுகளாக மாறியிருந்தன. இரும்புக் கைத்தொழிலில் மட்டுமன்றி கப்பற் தொழிலிலும் இதே போன்றதொரு பிரச்சினை உருவாகியிருந்தது. பர்ய்க் கப் பல்களுக்கும், நீராவிக்கப்பல்களுக்குமிடை யில் இக்காலத்தில் போட்டி ஏற்பட ஆரம்பித்திருந்தது. இங்கிலாந்து பெரும் தொகையான பாய்க்கப்பல்களை வைத் திருந்தது. ஆனல் மற்ற நாடுகளோ வெனில் பெருமளவில் நீராவிக்கப்பல் களைச் செய்து குவித்துக்கொண்டிருந்தன. இங்கிலாந்து இதைக் கண்கூடாகக்கண்ட போதும். வேண்டியளவு விரைவாகப் புதிய போக்குவரத்து முறைக்கு அதனல் மாறமுடியவில்லை. இதைவிட நீராவி மூலம் இயக்கப்பட்ட கப்பல்கள் கூடியளவு வேகம் பொருந்தியவையாயிருந்ததுடன் அளவிலும் பெரியவையாயி ரு ந் தன. இதனல் முன்பிருந்ததைவிடக் குறைந் தளவு கப்பல்களே போதுமானவையா யிருந்தன3 சூயெஸ் கால்வாய் திறக்கப் பட்டதைத் தொடர்ந்து கடல் மார்க் கங்களின் தூரமும் குறைக்கப்பட்டிருந் தது. அது மட்டுமன்றிக் கடல் கடந்த வர்த்தகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் பய ஞக, எடுத்துச் செல்லவேண்டிய பொருட் களின் தொகையும் குறைவடைந்திருந் தது; இதன் விளைவாகப் போக்குவரத் துக் கட்டண விகிதங்களையும் குறைக்க வேண்டி நேரவே, கப்பற் சொந்தக்காரர்

பலரும் ஒரு மந்தநிலையை எதிர்நோக்க வேண்டியவர்களானர்கள். afarrnuă தைப் பொறுத்தவரை, மற்றத்துறைகளை, விட வெளிநாட்டுப்போட்டியின் மூலம் அது மிக நேரடியாகவே பாதிக்கப்பட் டிருந்தது; அதே நேரத்தில் சாதகமற்ற காலநிலை, பயிர் நட்டம் போன்ற இயற் கைக் காரணங்களும் தம் பங்கை வழங்கி யிருந்தன. ஆனல் இக் காரணங்களின் பின்னணியில் விவசாய மந்தநிலைக்கு உண்மையில் காரணமாயிருந்த வேறு அடிப்படைக்காரணங்களும் இருந்தன. புதிய உலகத்தில் விசாலமான பரப் புடைய கன்னி நிலங்கள் பயிர்ச்செய் கையின் கீழ் கொண்டுவரப்பட்ட அதே நேரத்தில், இங்கிலாந்தில் தொடர்ந்தும் சிக்கனமற்ற சிறு நிலத்துண்டுகளிலேயே விவசாயம் நடைபெற்றுக்கொண்டிருந் தது; இது மட்டுமின்றி வேகம் கூடிய தும், மலிவானதுமான போக்குவரத்து வசதிகள் மூலம் ஏராளமான விவசாயப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இங் கிலாந்தில் கொண்டு வந்து குவிக்கப்பட் டன. இவையெல்லாம் சேர்ந்து ஆங்கில விவசாயத்தைப் போட்டியிடக் கூடிய நிலையிலிருந்து மற்ற நாடுகளுடன் முற்ருக ஒதுக்கிவிட்டன.
ஆகவே மந்தநிலைக்கு உண்மையில் காரணமாயிருந்தது மேலதிக உற்பத் தியோ அல்லது போட்டியோ அல்ல, ஆனல் கைத்தொழில்மயமாக்கலின் முன் னேற்றமேயாகும். விவசாயத்தில் ஏற் பட்ட மந்த நிலைக்கும் கைத்தொழிற் துறையில் ஏற்பட்ட கூடியளவு திற மையே காரணமாக இருந்தது, விசால மான நிலப்பரப்புகள் பயிர்ச் செய்கை யின் கீழ் கொண்டு வரப்படுவதற்கும், நாடெங்கிலும் பரந்த அளவில் புகை யிரதப் பாதையமைப்பு முறை உருவாவ தற்கும், விவசாயப்பொருட்கள் மலிவா கவும், திறமையாகவும் கடல்மார்க்கமாக அனுப்பப்படுவதற்கும் இத்திறமையே காரணமாக அமைந்தது மேலதிக உற் பத்திகூட, கூடியளவு கைத்தொழிற் திற மையினுல் ஏற்பட்ட ஒரு விளைவேயாகும்3
15

Page 18
இதுமட்டுமன்றி மற்றைய நாடுகளின் மூலம் ஏற்பட்ட போட்டியும் கைத் தொழில்மய முன்னேற்றத்தின் ஒரு பகு தியேயாகும். இந்தத் திறமையின் மூலம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருந்த இங்கி லாந்து போன்ற ஒரு வல்லரசுடன் புதிய நாடுகள் பலவும் சமமாகப்போட்டியிடக் கூடியதாயிருந்தது. இதன் மூலம் இங்கி லாந்து கஷ்டமானதொரு நிலையை எதிர் நோக்கவேண்டியிருந்தது; இங்கிலாந்து இச்காலத்தில் கைக்கொண்டிருந்த கட் டில்லா வர்த்தகக் கொள்கை இவ்வாரு ன அதனுடைய கஷ்டங்களை மேலும் அதி கரிப்பதொன்ருயிருந்தது;
இதுவரை மந்தம்பற்றி நாம் மேற் கொண்டிருந்த ஆய்வு நேரடியானதொன் றேயாகும். உலகெங்கும் பொதுவான மந்த நிலை காணப்பட்டது. அம்மந்தநிலை யால் மற்றெல்லா நாடுகளையும் விட இங்கிலாந்து கூடுதலாகப் பாதிக்கப் பட்டிருந்தது. ஆனல் இம்மந்தநிலை, எப் பொழுது "பெரும் மந்தம்" என வர் ணிக்கப்பட்டதென்றதொரு கேள்வி எழு கின்றது. இந்த வர்ணனைக் கேற்றபடி உண்மையிலேயே அது ஒர் பெருமந்த மாக இருந்ததா அல்லது மற்ற நாடு களை விட இங்கிலாந்து கூடுதலான கஷ் உங்களே அனுபவித்ததன் காரணமாகத் தான் அவ்வாறு வர்ணிக்கப்பட்டதா என் பதும் கவனிக்கப்படவேண்டும். இதை விட மந்தம் ஏற்பட்டதாகக் கூறப்படும் வழமையான கால எல்லை பற்றியும் சந் தேகம் உண்டு; 1873-1886 க்குமிடை யில் மந்தம் ஏற்பட்டதாகக் கூறப்படும் இக்கால எல்லை உண்மையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று தான? விச்ை சுட்டெண்களையும், கடல்கடந்த வர்த் தகம் சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்களை யும் கொண்டு நோக்குமிடத்துச், செழிப்பு நிலையின் உச்சக்கட்டத்திலிருந்ததை விட அவை வீழ்ச்சியைக் காட்டிய போதும், நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மிகக் குறைந்த வீழ்ச்சியாய் அவை இருக்க
6

வில்லை. மொத்த விலைச் சுட்டெண்ணை எடுத்து நோக்கின் 1874-ம் ஆண்டு 156 ஆக இருந்த அது (1850 -100) மந்த காலப்பகுதியில் சராசரி 146 அல்லது 147 ஆகவே குறைவடைந்திருந்தது, ஏற்றுமதி அளவுகளை எடுத்து நோக்கின் இந்த நிலை மேலும் தெளிவாகும். 1772-ம் ஆண்டு 256,000,000 பவுண் பெறுமதி யாயிருந்த ஏற்றுமதி அளவுகள் 1885.8 க்கு மிடையில் 213,000,000 பவுண் பெறுமதியுடையவையாய் மட் டு ம்ே குறைவடைந்திருந்தன. ஆகவே இதில் ஏற்பட்ட வீழ்ச்சி 16.8% மேயாகும், இந்தச் சிறிதளவு வீழ்ச்ஓ பெருமந்தம் என அழைக்கப்படுவது பொருத்தமான திாகுமா? அத்துடன் ஏற்றுமதி அளவு களில் வீழ்ச்சி ஏற்பட்ட போதும் ܝܬ ܝܗܶஇறக்குமதி அளவுகள் வீழ்ச்சியடைய வில்லை. அதற்குப்பதிலாக வெளிநாடு களில் முதலீடு செய்யப்பட்டிருந்த ep6) தனத்திலிருந்து கிடைத்த வருமானத் தைக்கொண்டு, இங்கிலாந்து தனக்கு வேண்டியிருந்த மேலதிக இறக்குமதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலையில் இருந்தது. ஆகவே, மந்தம் இங்கிலாந் தைப் பொறுத்தவரை LATTg5TTOT6 தொன்முயிருந்ததெனின், பொருளாதார ரீதியில் அது தன் உலக GPA566o Lo நிலையை இழந்ததை, வேண்டுமானல் அதற்குரிய காரணமாகக் குறிப்பிடலாம். 39ல் இங்கு கூட அந்த உண்மை நிலநிறுத்துவதற்குப் போதிய ஆதாரங் கள் இல்லையென்றே கூற வேண்டும். உருக்கு, நிலக்கரி ஆகியவற்றின் உற்பத் தியில் தொடர்ந்தும் இங்கிலாந்தே முதன்மை நிலையில் இருந்தது: 1900-ம் ஆண்டளவில் தான் ஐக்கிய அமெரிக்கா அத்துறைகளில் இங்கிலாந்தை முந்தீக் கூடியதாயிருந்தது. ஜேர்மனி கூட இங்கி லாந்தை விட மிகவும் பின்தங்கிய நிலை யிலேயே இருந்தது; இதைவிட இங்கி லாந்திலிருந்த எல்லாக் கைத்தொழில் களும் மந்த நிலையினற் பாதிக்கப்பட

Page 19
வில்லை. உதாரணமாகப் பருத்தி நெச வுக் கைத்தொழிலானது மந்தகாலப் பகு தியிலும்கூடத் தொடர்ந்து விரிவடைந்து கொண்டேயிருந்தது. நிலக்கரிக் கைத் தொழிலானது உற்பத்தியில் அதிகரிப் பைக்காட்டியது மட்டுமின்றி, ஏற்றுமதி செய்யப்பட்ட அளவிலும் அதிகரிப்பைக் காட்டிற்று. இவ்வாருக ஆங்கில நிலக்கரிக் கான கேள்வி அதிகரித்தமைக்கு, ஜேர் மணி அனுபவித்துக்கொண்டிருந்த கைத் தொழிற் பெருக்கமே முக்கியகாரணமா யிருந்தது. ஆகவே இக்காலத்தை மந்த காலப்பகுதியென அழைப்பதற்கு ஆதார மாயுள்ள ஒரேயொரு காரணம் லாப அளவில் ஏற்பட்ட வீழ்ச்சியேயாகும். செழிப்புக்காலத்தில் உழைக்கப்பட்ட பெருமளவு லாபத்துடன் ஒப்பிடுமிடத்து அதற்கும் இக்காலத்தில் உழைக்கப்பட்ட லாபத்துக்குமிடையில் பெரும் இடையீடு காணப்பட்டது விலைகள் குறைவாயிருந் தது மட்டும் இந்த வீழ்ச்சிக்குப் பொறுப் பாயிருக்கவில்லை. மு ன் னை வி டக் கூடி யிருந்த வேதனங்களின் மூலமும், கூடி யளவு வரிகளின் வடிவத்திலும், லாபத் தின் ஒரு பகுதியை நாடே பெற்றுக் கொண்டிருந்ததும் இதற்குரிய ஒரு கார னமாயிருந்தது.
பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரைகூட மந்தநிலையானது குறிப்பிடத்தக்க மாற் ற மெ தை யும் கொண்டுவரவில்லையென்றே கூறவேண் டும்; கடந்த காலத்தில் அரசாங்கம் மேற் கொண்டிருந்த, "எதிலும் தன்யிட்ாதிருக் கும் கொள்கைபற்றி ஒரளவு பிரச்சினை இருந்துகொண்டேயிருந்தது இக் கொள் கைக்குதவியாகப் பல சட்டங்கள் இயற் றப்பட்டபோதும் அவை முன்பைவிடக் கூடியளவு அரசாங்கத் தலையீட்டுக்கு வழிவகுக்கும் வகையில், அரைமனதோடு இயற்றப்பட்ட சட்டங்களாகவே இருந் தன விவசாயத்துறையில் சிறு நிலத் துண்டுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. புகையிரதப் பாதை

களைப் பொறுத்தவரை வெளிப்படை யான போட்டி ஊக்குவிக்கப்படாமல், தீர்வைகளையும், கட்டணங்களையும் விதிப் பதில் அரசாங்கம் ஒரு முக்கிய பங்கின் வகுக்க ஆரம்பித்தது. குடியேற்றநாடுகள் பொறுத்துக்கடைப்பிடிக்கப்பட்ட கொள் கையிற் கூட ஒரு மாற்றம் காணப்பட் டது; ஆனல், இவை ஒவ்வொன்றைப் பொறுத்தவரையிலும் கடந்த காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளினின் றும் முற்ருக வழுவிய ஒரு நிலை காணப் படவில்லை. இக்கொள்கைகளில் பெரும் மாற்றமெதையும் கொண்டுவரவேண்டிய அளவுக்கு மந்தநிலை அவ்வளவு மோச மானதொன்ருக இருக்கவில்லை; ஆகவே "பெருமந்தம்" பொறுத்து, அது நில வியதாகக் கூறப்படும் வருடங்கள் உண் மையில் சிறப்பற்றவையாயிருக்கவில்லை; "பெருமந்தம்" என்ற பதமே உண்மை யில் சிறப்பற்றதாயிருந்தது; இதைவிட 1873-1886 காலப்பகுதியை, 18151842 க்குமிடைப்பட்ட சிறப்பற்ற வரு டங்களுடனும், 1928 ம் ஆண்டுக்குப் பின்பு ஏற்பட்ட அகில உலகப் பொரு ளாதார முறிவுடனும் ஒப்பிட்டு நோக் குவோமாயின் அதைப் பெருமந்த காலப் பகுதியென அழை ப் பது சற்றும் பாருத்தமாகாதென்பது நன்கு புலப் படும் உண்மையில் அது ஆங்கில மக்க ளின் மன இயல்பை வெளிப்படுத்திய ஒரு பதமாகவே இருந்தது. தமது பொரு ளாதாரத்தை ஒருவராலும் முறியடிக்க முடியாதென எண்ணம் கொண்டிருந்த ஆங்கில மக்களால் வழங்கப்பட்ட ஒரு பதமாகவே "பெருமந்தம்" என்பது காணப்படுகின்றது.
1873-1886 க்கு மிடைப்பட்டதென வழமையாகக்கூறப்படும் கால எல்லையும் கருத்தற்றதொன்ருகவே தெரிகிறது. 1867-ம் ஆண்டிலிருந்தே விலைமட்டம் லாப எல்லை ஆகிய இரண்டும் வீழ்ச்சி யடையி ஆரம்பித்திருந்தன. 1873-ம். ஆண்டில் இவை இரண்டு பொறுத்தும்
17

Page 20
கூடியளவு செங்குத்தான வீழ்ச்சியே ஏற் பட்டதெனலாம். 1886-ம் ஆண்டை மந்தகாலத்தின் முடிவாகக் கொள்வது இன்னும் கூடியளவு கருத்தற்றதாயுள் ளது: மந்தமடைந்திருந்த பொருளாதார நிலைமைகளைப் பற்றி விசாரணை செய் வதற்கென நியமிக்கப்பட்டிருந்த முடிக் குரிய விசாரணைக்குழு இவ்வாண்டில் தன் அறிக்கைகளைச் சமர்ப்பித்ததன் பயணு கவே இவ்வாண்டு மந்தகாலத்தின் முடி வாகக் கொள்ளப்பட்டுள்ளது: பொரு ளாதார மந்த நிலைமைகளுக்கான கார
தமிழ்நாட்டில் விஞ்ஞ
**விஞ்ஞான, பொறி இயல் சொற்களேத் தமி தமிழ் எழுத்துக்களில் உபயோகிக்க வேண்டும் என்று ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் எல்லாம் தமிழில் மொழிெ னர், டிக்கி என்ற சொற்களை எல்லாம் ம்ோட்டார் ளியும் தினம் உபயோகித்து வருகிருர். ரளிகமணி கில மொழியிலுள்ள விஞ்ஞான, பொறி இயல் கலைச் லத்தீன், கிரீக், பிரஞ்சு ஆகிய மொழிகளிலிருந்து அ வாங்கக்கூடாது? பிறமொழிச் சேர்க்கையால் எப்
செய்யும்.’
18

னங்களையும், அவற்றிற்கான நிவர்ரனங் களையும் இவ்வறிக்கைகள் எடுத்துக் கூறி யிருந்தன. ஆனல் மந்தகாலம் முடிவ டைந்து விட்டதாக இவை கூறவில்லை; மொத்த விச்ைசுட்டெண்களைக் கொண்டு நோக்குவோமாயின், உண்மையில் 1896 ம் ஆண்டுவரை விலைகள் வீழ்ச்சியடைந்து கொண்டு சென்றதைக் காணலாம், 1896-ம் ஆண்டுக்குப் பிறகே விலைகள் உயர்ச்சிப் போக்கைக் காட்ட ஆரம் பித்தன;
-மொழிபெயர்ப்பு: வி. நித்தியானந்தம்
நானக் கலைச்சொற்கள்
ழில் மொழிபெயர்க்காமல் ஆங்கிலச் சொற்களாகவே, மந்திரி நெடுஞ்செழியன் கருத்துத் தெரிவிக்கிருர், பயர்க்கவேண்டிய அவசியமில்லை. கார்பரேடர், ஸ்பா ரிப்பேர் தொழிலில் ஈடுபட்டுள்ள எந்தத் தொழிலா டி. கே. சி. அவர்கள் சொல்லிவந்தார்போல், ஆங் சொற்கள், ஆங்கிலமொழிக்கு மட்டும் உரியனவல்ல. பூங்கிலம் கடன் வாங்களாமெனில், தமிழ் ஏன் கடன் பொழுதுமே ஒரு மொழி கெடுவதில்லை; வளரவும்
கல்கி, 10.3-1968, (என்ன சேதி?) பக். 5.

Page 21
கா. இந்திரங்ாலா
அநுராதபுரத்திலு குமாரகணத்துப்
அநுராதபுரத்திலுள்ள "நான்குநாட் டார்" கல்வெட்டைவிட, அநுராதபுரக் காலத்தைச் சேர்ந்த வேறு இரு கல்வெட் டுக்கள் அந்த நகரத்தின் "இந்து அழி பாடுகளிடையே கண்டுபிடிக்கப்பட்டன. அவையிரண்டும் ஏறக்குறைய ஒரே காலத் தைச் சேர்ந்தவையாகவும் ஒரே நோக்கத் துடன் ஒரே குழுவினராலே பொறிக்கப் பட்டவையாகவும் காணப்படுகின்றன:
இக் கல்வெட்டுக்கள் 1893-ல் இலங்கை யின் தொல்பொருளாய்வு ஆணையாள ராக இருந்த திரு. H. C. P. பெல் அவர் களால் கண்டுபிடிக்கப்பட்டன. இச் செய்தி 1893-ம் ஆண்டுத் தொல்பொரு ளாய்வு அறிக்கையிலே தெரிவிக்கப்பட் டது. 1 திரு. பெல் கல்வெட்டுக்களின் மைப்பிரதிகளைத் தென்னிந்தியச் சாசன வியலாளரான திரு. H. கிருஷ்ணசாஸ்திரி அவர்களுக்கு அனுப்பிவைத்ததினல், சாஸ் திரி அவர்கள் அவற்றை வாசித்து, South Indian Inscriptions, IV ih Lu Tas iš São வெளியிட்டார்; 2
முதலாவது கல்வெட்டு பொறிக்கப் பட்டகாலம் சிரிசங்கபோதி மாராயணு டைய ஐந்தாவது ஆட்சியாண்டு, மார்கழி மாதம் முன் ஐந்தாம் பக்கம் என்று தரப்பட்டுள்ளது: இங்கு விரிசங்கபோதி எனத் தரப்பட்டுள்ளது மன்னன் பெய ரன்று அது மன்னனுடைய விருது மட் டுமே. பிற்பட்ட அநுராதபுரக்காலத்தி

Fg5 T63 5s. Jaf GT36T-2
லுள்ள
பேரூரார் கல்வெட்டுக்கள்
லும் அதற்குப் பின்னரும் சிங்கள மன் னர்கள் "Rரிஸங் க போதி", "அயைய ஸலாமேக" என்ற விருதுகளை அல்லது சிம்மாசனப் பெயர்களை மாறி மாறித் தரித்துக்கொண்டனர்5 சோழர்கள் "ராஜ கேசரிவர்மன்" "பரகே ச ரி வர் மன்" என்ற விருதுகளையும் பாண்டியர் "ஜடா வர்மன், "மாறவர்மன்" என்ற விருது களையும் தரித்துக் கொண்டதைப் போலவே சிங்கள மன்னர்களும் இரு சிம் மாசனப் பெயர்களை மாறி மாறித் தரித் தனர். சிம்மாசனப் பெயருடன் மன்ன னுடைய பெயரையும் சாசனங்களிலே கொடுக்கின்ற வழக்கம் இருந்தாலும், பல தடவைகளிலே, சிறப்பாகஒன்பதாம், பத்தாம் நூற்றுண்டுக் கல்வெட்டுக் களிலே, விருதுகளை அல்லது சிம்மாசனப் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டனர். 3 இங்கும் அவ்வாறே விருது மட்டும் குறிப் பிடப்பட்டுள்ளதால் அதனைக் கொண்டு மன்னனைச் சரியாக அடையாளங்கண்டு கொள்ள முடியாதுள்ளது. ஸிரிஸங்கபோதி என்ற பெயர் சிங்கள மன்னன் ஒருவனுல் முதன்முறையாக விருதுப் பெயராகவன் றிச் சொந்தப் பெயராகத் தரிக்கப்பட்டி ருந்தது. அம் மன்னன் காலம் கி. பி. 247க்கும் 249 க்கும் இடைப்பட்டது. 4 எங்களுடைய கல்வெட்டின் எழுத்தும் அதிலே காணப்படும் சில சொற்களும் பிற்பட்ட காலத்தவையாகையால், அது இம்மன்னன் காலத்திலே பொறிக்கப்பட் டது என்று கொள்ள முடியாது, ஆகவே
19

Page 22
அது ஸிரிஸங்கபோதி என்ற விருதுப் பெயரைக்கொண்ட மன்னன் ஒருவனு டைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் "ஸிரிஸங்கபோதி என்ற விரு தினத் தாங்கிய முதலாவது மன்னனுக நாம் அறிந்துள்ள மன்னன் (11) வது அக்ர போதி ஆவான். இவன் காலம் இ. 804 க்கும் 614 க்கும் இடைப்பட்டது. எனினும் இவனுக்கு முன் ஐந்தாம் մIfն ருண்டில் ஆண்ட மஹாநாம மன்னனும் ஸிரிஸங்கபோதி என்ற பெயரையும் பெற்றிருந்தான் என்று தெரிகின்றது. 5 எட்டாம் நூற்ருண்டின் பின்னர் Ժռtդ Այ தொகையிலே சாசனங்கள் பொறிக்கப் பட்டபோது, ‘விரிஸங்கபோதி" ஸ்ல மேவன்" என்ற விருதுகள் அடிக்கடி இச் &FITF60F tiss6th G6 குறிப்பிடப்பட்டன. ell ராதபுரக் காலப்பகுதியில் ஆண்ட மன் னர்களுள் "Rரிஸங்கபேரதி" என்ற விரு தைப் பெற்றவர்களாகச் சாசனங்களிலும் குளவங்ஸ்த்திலும் குறிப்பிடப்பட்டுள்ள வர்களுடைய பட்டியல் பின்வருமாறு 6:
- ii ģ அக்ரபோதி 628, 62ழ 63 2 iv வது அக்ரபோதி 667-683 3 i வது ஸேந 853-887 4g iv வது காஸ்யப 898-91.4 5e iv வது மஹிந்த 956-972
எங்கள் கல்வெட்டிலே குறிப்பிடப் பட்டுள்ள ஸிரிஸங்கபோதி இவர்களுள் ஒரு வனக இருக்கலாம். இப் பிரச்சினையை ஆராய்ந்ததிரு. கிருஷ்ண சாஸ்திரி இங்கு குறிப்பிட்டுள்ள மன்னன் i வது அக்ர போதி என்று கூ றி யு ள்ளார். 7 111 வது அக்ரபோதி குளவங்ஸத்தின் படி ஸிரிஸங்கபோதி என்ற விருதைப் பெற்றி ருந்தான் என்றும், இக் கல்வெட்டு அவன் காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லக் கூடிய அளவிற்குக் கல்வெட்டின் எழுத்து பழமையானதாக உள்ளது என்றும் திரு கிருஷ்ண சாஸ்திரி தன் முடிபுக்குக் கார னம் காட்டியுள்ளார். இம் முடிபினைத் தெரிவித்தபோது, சாஸ்திரி அவர்கள்
●@ விஷயத்தை அறிந்திருக்க
20

வில்லை என்று தோன்றுகிறது, அதாவது, 111 ஆவது அக்ரபோதி மட்டுமின்றி, அவனுக்குப் பின் வந்த பல. மன்னர்கள் கூட "ஸிரிஸங்கபோதி" என்ற விருதைத் தரித்திருந்தனர் என்பது. இக் கல்வெட் டிலே வரும் இரு சொற்கள் சாஸ்திரி அவர்களுடைய முடிபை ஏற்றுக்கொள் வதற்குத் தடையாக உள்ளன. ஒன்று குமாரகணம் என்ற சொல். இச்சொல் லின் பொருளை சாஸ்திரி அவர்கள் பிழை யாக விளங்கியுள்ளார்கள் 8. இக் கலைச் சொல் ஒன்பதாம் நூற்ருண்டிற்கு முன், அதாவது சோழர் காலத்திற்கு முன், கல் வெட்டுக்களிலே குறிப்பிடப்படவில்லை.9 அது சோழர் காலத்து நிறுவனம் ஒன் றைக் குறிக்கும் சொல்லாகவே தோன்று கிறது; அதேபோல, இக் கல்வெட்டில் வரும் ஈழக்காசு என்னும் சொல்லும் முதன் முறையாக 1 ஆவது பராந்தக சோழனுடைய (907-955) கல்வெட்டுக் களிலேதான் வருகின்றனது.10 III ஆவது அக்ரபோதியின் காலத்தில் அச்சொல் வழக்கிலிருந்தது என்று கொள்ளச் சான் றில்லை. ஆகவே, இந்த இரு சொற்க ளும் எங்கள் கல்வெட்டிலே காணப்படு வதால், எங்கள் கல்வெட்டு ஒன்பதாம் நூற்ருண்டிற்கு முந்தியதாக இருக்க முடி யாது. ஒன்பதாம் நூற்ருண்டிற்கு பிந் தியதாகவே இருக்கவேண்டும் ஒன்பதாம் நூற்ருண்டிற்குப் பின் "ஸிரிஸங்கபோதி" என்ற விருதைப் பெற்றிருந்த மன்னர் களுள், IV ஆவது மஹிந்த என்பான் வெஸ் ஸ்கிரிக் கல்வெட்டில், மஹாராஜா என்ற விருதையும் பெற்றுள்ளான்.11 எங்கள் கல்வெட்டிலும், "கோச் ஸிரிஸங்க போதி மாராயன்" என்ற விருதுகள் காணப்படுகின்றன. ஒருவேளை இவ்விருது களைப் பெற்றிருந்த மன்னன் IV ஆவது மஹிந்த மன்னனுக இருக்கலாம். எங்க ளுடைய கல்வெட்டு ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்ருண்டைச் சேர்ந்தது என்று பொதுப்படக்கூறலாமே ஒழிய, திட்ட வட்டமாக அதன் காலத்தை நிர்ணயித்

Page 23
துக் கூறமுடியாது; அது ஒன்பதாம் பத் தாம் நூற்றுண்டுகளைச் சேர்ந்த அழிபாடு களாகிய இந்து அல்லது திராவிட அழி பாடுகளிடையே காணப்படுவதாலும், அதன் காலம் ஒன்பதாம் அல்லது பத் தாம் நூற்றண்டு என்று சொல்வது பிழையாகாது.
இரண்டாவது கல்வெட்டின் காலம் ஸிரிஸங்கபோதி மாராயனுடைய ஏழா வது ஆட்சியாண்டு என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆகவே, இக் கல்வெட்டு முதலாவது பொறிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும்.
ஒரு குறிப்பிட்ட சமயத்தலத்திலே தினமும் ஒரு திருவமுதும் ஒரு நந்தா விளக்கும் வைப்பதற்குச் செய்யப்பட்ட ஒழுங்குகளே இந்த இரண்டு கல்வெட்டுக் களிலும் பதிவு செய்துள்ளனர். சமயத் தலத்தின் பெயர் தரப்படவில்லை. அது ஒரு பெளத்த விகாரையாக இருக்கலாம் என்று திரு. கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் ஊகித்திருந்தார்கள். ஆனல் இச் சமயத் தலம் ஓர் இந்துக்கோயில் என்று கொள் ளப் பல காரணங்கள் உள. கல்வெட்டுக் கள் இரண்டும் இத்துக்கோயில்களின் அழி பாடுகளிடையே காணப்பட்டன. சமயத்
தலத்திலே திருவமுதும் திருநந்தாவிளக் கும் வைப்பதற்கு ஒழுங்கு செய்தவர் கள் குமாரகணத்தைச் சேர்ந்தவர்கள், குமாரகணம் என்பது இந்துக் கோயில் களின் பரிபாலனத்திற்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய ஒரு குழு வாகும் மேலும் திருவமுது வைக்கும் வழக்கம் பெளத்த கோயில்களில் இருந்ததாகக் கூறமுடியாது. அது இந்துக்கோயில் களிலே காணப்பட்ட வழக்கமாகும் இக்காரணங்களினலே, எங்கள் கல்வெட் டுக்களிலே குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு கள் ஓர் இந்துக்கோயிலிலே செய்யப் பட்ட ஒழுங்குகள் என்று கொள்ளுதல் பொருத்தமாகும்.

குமாரகணத்தவர்கள் திருவமுதும் நந்தாவிளக்கும் வைப்பதற்கு சேக்கிழான் செட்டி சங்கன் என்பவனிடமிருந்து முப் பது பொற்காசுகளும் சே க் கிழா ன் சென்னை என்பவனிடமிருந்து முப்பது பொற்காசுகளும் பெற்றிருந்தனர்.
இக் கல்வெட்டுக்களின் மொழி இடைக்காலத்துத் தமிழாகும். கல்வெட் டுக்களின் ஆரம்பப்பகுதியாகிய வாக்கிய த்திலுள்ள மங்கலக்கொண்ட முதலிரு சொற்களுமே சமஸ்கிருதத்தில் உள.
முதலிரு சொற்கள் கிரந்த எழுத் திலே பொறிக்கப்பட்டுள்ளன: ஏனைய பாகம் ஒன்பதாம் பத்தாம் நூற்றண்டு களைச் சேர்ந்த தமிழ் எழுத்திலே பொறிக்கப்பட்டுள்ளது.
முதலாவது கல்வெட்டில் ஒன்பது வரிகள் உள. இரண்டாவது கல்வெட் டிலே எட்டு வரிகள் உள.
இக் கல்வெட்டுக்களிலே குறிப்பிடத் தக்க சொற்களாக இரண்டு சொற்கள் இருக்கின்றன. ஒன்று குமாரகணம் இக் கல்வெட்டுக்களிலே காணப்படும் “குமார கணத்துப் பேரூரோம்" என்ற சொற் ருெடரை விளக்கிய திரு. கிருஷ்ணசாஸ் திரி அவர்கள், அது குமாரகணத்துப் பேரூர் என்னும் ஊரிலுள்ளவர்களைக் குறிப்பிடுவதாக விளக்கியுள்ளார்.12 ஆனல் இவ்விளக்கத்தைச் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக இடைக்காலத்துத் தமிழ்க் கல்வெட்டுக் களிலே "பேரூரோம்" என வரும் சொற் ருெடர் ஊர்ச் சபையாரைக் குறிக் கும்.13 குமாரகணம் என்ற சொல்லும் தென்னிந்தியத் தமிழ்ச் சாசனங்களிலே காணப்படுகின்றது. அதன் பொருள், தனிக் கோயில்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக உள்ள வணிககனம் அல் லது நிர்வாகக்குழு என்பதாகும்,14 ஆகவே எங்கள் கல்வெட்டுக்கவில் வரும் "குமார கணத்துப் பேரூரோம்" என்ற சொற் ருெடரி கோயிலின் குமாரகணத்திலே
2.

Page 24
இருந்த ஊர்ச் சபையாரை அல்லது சபையாரைக் குறிக்கும்
இக் கல்வெட்டுக்களிலே வரும் குறிப் பிடத்தக்க இன்னுெரு சொல் ஈழக்காசு என்பதாகும். ஈழக்காசு என்பது ஒரு வகைப் பொற்காசு என்று கொள்ள இடமுண்டு. அவ்வகைக்காசு இலங்கை யைச் சேர்ந்த காசாக இருந்திருக்க வேண்டும். அதனுலேதான், ஈழக்காசு என்ற சிறப்புப்பெயரைப் பெற்றிருக்க வேண்டும். ஈழம் என்ற சொல் தமி ழிலே ‘பொன்" என்ற கருத்தைப் பெறு வதற்கு ஈழக்காசு தமிழ்நாட்டில் வழங்கி வந்தமை காரணம் என்று ஊகிக்க முடி இன்றது, ஈழக்காசு என்ற சொல் தென் னிந்தியக் கல்வெட்டுக்களில் 1 ம் பராந் தக சோழன் காலத்திலும் அதன் பின் னருந்தான் காணப்படுகின்றது.18 ஈழம் என்ற சொல் தமிழிலே பொன்னைக் குறித்து நிற்கத் தொடங்கிய காலம் பிற்பட்டகாலமாகும், ஈழம் என்ற சொல் பொன்" என்ற கருத்திலே பயன்படுத் தப்பட்டதற்கு பிங்கல நிகண்டின் காலத் துக்குமுன் ஆதாரம் கிடைக்கவில்லை.15 பிற்பட்ட காலத்திலே ‘தங்க' என்ற நாண யம் பொன் நாணயமாக இருந்ததினுல், தங்கம் என்ற சொல் "பொன்" என்ற பொருளைப் பெற்றது போல வும், பவுண்ட்" என்ற ஆங்கில நாணயம் பொன் நாணயமாக இருந்ததினுல் "பவுண்" என்ற சொல்லும் “பொன்" என்ற கருத்தைப் பெற்றது போலவும், ஈழக்காசு பொன் நாணயமாக இருந்த படியினுல் ஈழம் என்ற சொல் ‘பொன்’ என்ற பொருளைப் பெற்றது என்று கூற லாம். ஈழம் என்ற சொல் ஏற்கனவே * பொன்" என்ற பொருளைப் பெற்றிருந் ததற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அப்படியான கருத்து இருந்து, ஈழக்காசு என்ற சொற்ருெடர் தோன்றிற்று என வாதாடுவதற்கு மறுப்பாக "ஈழக்கருங் ாேசு (பொற்காசல்லாத வேறு காசு)
22

என்ற சொற்ருெடிரின் வழக்கும், 17 ‘ஈழ விளக்கு" என்ற சொற்றெடரின் வழக் கும் காணப்படுகின்றன. சோழர் கல் வெட்டுக்களிலே "ஈழக்காசு" காணப்படு வதுபோல "ஈழவிளக்கு" என்ற சொற் முெடரும் காணப்படுகின்றது:18 இங்கு ஈழ விளக்கு என்பது "பொன்விளக்கு" என்ற பொருளைப் பெறுகின்றது என்று கொள்ளமுடியாதுள்ளது. ஈழ விள க்கு கோயில்களிலே எரிப்பதற்காக வைக்கப் பட்டதினல் அது பொன் விளக்காக இருக்க முடியாது எனத் தோன்றுகிறது:19 மேலும், வைக்கப்பட்ட ஈழவிளக்குகளின் நிறையை நோக்குமிடத்தும் அவ்விளக்கு கள் பொன் விளக்குகளாக இருந்திருக்க முடியாது.? அது மட்டுமன்றி, LD2h) யாண் விளக்கு (மலையாள விளக்கு) என்ற சொற்ருெடரும் சோழர் கல்வெட்டுக் களிலே காணப்படுவதை நோக்குமிடத்து ஈழ விளக்கு என்ற சொற்ருெடரிலே ஈழம் என்பது பொன்னையன்றி, இலங் கையைத்தான் குறிக்கின்றது என்று கொள்ளமுடிகின்றது? ஈழக்காசும் அவ் வாறே இலங்கைக் காசைக் குறிக்கும் என்று கொள்ளமுடியும்,
இக்கல்வெட்டுக்களின் உதவிகொண்டு கி.பி. ஒன்பதாம் நூற்றண்டளவிலே அநுராதபுரத்தில் குறிப்பிடத்தக்க ஒரு தமிழ்க் குடியேற்றம் இருந்தது என்று ஊகிக்க முடிகின்றது. மேலும் அநுராத புரத்திலே இந்துக் கோயில்கள் இருந் தமைக்கும் அக்கோயில்களின் பரிபாலரை முறையிலே தென்னிந்திய முறையின் அம்சங்கள் காணப்பெற்றமைக்கும் இக் கல்வெட்டுக்களிலே சான்றுகள் கிடைக் கின்றன. அத்துடன், சேக்கிழான்செட்டி சங்கன் என்ற பெயரை நோக்குமிடத்து தென்னிந்தியாவில் இருந்ததுபோல இலங் கையிலும் செட்டிகள் போன்ற தென் னிந்திய வர்த்தக சமூகத்தினர் காணப் பட்டனர் என்றும் அறியமுடிகின்றது,

Page 25
முதலாவது கல்வெட்டு
1. ஸ்வஸ் தி பூணூரீ [:11) கொச்சிரி சங்க (பொதி)
2. மாராயற்கியாண் ெெடந்தாவ 3. து மார்கழி முன்னந்தாம் பக்க 4. த்துச் செக்கிழான் செட்டி சங்கநி 5 ெெட க்குமாரகணத்துப்பெரூரொ (ம்) 6. முப்பதிழக்காசு கொண்டிதுமுத 7. ல் கெடாமல் நிசதி ஒரு திருவமிர் து 8. மொரு நொந்தா விளக்கும் ெெவப்
9. பொமா நொம் (11)
அடிக் குறிப்பு:
8.
0.
11. 12. 3. 14. 15. 16.
17.
19. 20,
21.
Archaeological Survey of Ceylon - Annual R South Indian Inscriptions (S. I. I.), IV, QGV உதாரணமாக, நாகமத்துரண் கல்வெட்டு, Epgrt University of Ceylon History of Ceylon (U. C மேற்படி, பக். 365. WN E. Z., II, L.J. 9-10
U. C.H. C. , II, Ly. 845,; 846, U. C. H. C., I, L. 365. (9ñ(5 (9).JGöTL-T6ug5 விருதைப் பெற்றுள்ளான் என்று ஸ்ெ. பரணவித யம் 83ம் செய்யுள். Madras Epigraphical Report for 1913, L. 103 இக் கட்டுரையிலே 21-ம் பக்கம் பார்க்கவும். 5. 5603TU.S. 1 sitat, A Study of the Language Eighth Centuries A. D. 6) Gör L. Går ući 35&aviš s Ph D. ஆய்வுரை, ஆளுங்கணம், அமிர்தகணம் எ கல்வெட்டுக்களிலே குறிப்பிடப்படவில்லை, Admin L} . 130, 132. g. Gols) - 9sirakit, A Study of the Language 920 A, D, ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்திற்கு 19 படாதது) w E. Z., I, l. 3. Madras Epigraphical Report for 1913, L.J. 10 க. அ. நீலகண்ட சாஸ்திரி, The Colas, (1955), மேற்படி, ப. 498, S. I. I, XVII, 6). 466; S. I. I. , XIII, Lu. 3, g பிங்கல நிகண்டு, (X), 156, (இரகு வமிசத்தில் S. I. I,, VII, G2QQ). 84, 6uffñ 3, Lu. 40. S. I. I., VI, g6). 893, 955, 956, 959, 962. S. I. I. , VIII, glav. 893. "ஈழவிளக்கொன்று நிறை னுாற்றிருபது’, 8. 1 நிறை னுாற்ருெருபது’, S. . . . VII, இல. 9 S. 1. I. , VII, gav. 958, 975.

இரண்டாவது கல்வெட்டு
1. ஸ்வஸ்தி பூரீ (:11) கொ 2 ச் சிரிசங்கபொதி மாராயற்கியா 3. ண்டெழாவதிற் செக்கிழான் சென் 4 னையிெெடக் குமாரகணத்துப் பெ M 5 ரூரொம் முப்பதிழக்காசு கொண்டிது (LP5 ༤
6 ல் கெடாமல் நிசதி ஒரு திருவமிர்து மொரு 7 நொந்தா விளக்கும் ெெவப்பொமா 8. ւհ. [111 (G(s))
eport for 1893, Lj. 12. . 1403, 1404, aphia Zeylanica (E. Z.), II, L. 16. 2. H. C.) I, U. 189.
அக்ரபேர்தியே குளவங்ஸத்தில் முதன்முறையாக இவ் ான கூறியுள்ளது பிழை: குளவங்ஸ், 44ம் அத்திய
2 of the Tamil Inscriptions of the Seventh and கழகதிற்கு 1936ல் சமர்ப்பித்த பதிப்பிக்கப்படாத ான்ற கணங்கள் கூட ஒன்பதாம் நூற்ருண்டிற்கு முன் tistration, and Social Life Under the Pallavas,
of Tamil Inscriptions of the Period 800 to ** 64 ல் சமர்ப்பித்த D. Phil. ஆப் வுரை (பதிப்பிக்கப்
3.
. . 494.
இல, 7, 85, 106, 108, 223, இச் செசல் வருகின்றது)
1 , VII, இல. 955, வரி. 5-5. "ஈழவிளக்கொன்று 962 வரி 8-9.
23

Page 26
용· வேலுப்பிள்ளை
பெள
1ல்லவர் காலத்தில் மறுமலர்ச்சி பெற்ற இந்துமதத்தை ஒரு வகையிலே பெளராணிக மதம் என்றுங் கூறலாம். வைதீக சமய மறுமலர்ச்சியிற் புராண இதிகாசக் கதைகள் பெரு முக்கியத்துவம் பெற்றன. சைவ வைணவ பக்திப் பாடல் களே மேலோட்டமாகப் பார்ப்பவரும் அவற்றுட் புராண இதிகாசக் கதைகள் பெறும் முக்கியத்துவத்தைக் கவனிக்காம லிருக்க முடியாது. புராணக் கதைகள் தமிழ்ப் பொதுமக்களைக் கவர்ந்திழுப்ப தைக் கண்ட சமணரி சமயப் போட்டி யிலே தோல்விகண்ட நிலையில் எவ்வாறு நடந்துகொண்டிருப்பர் என்று ஆராய்வது அறிவுக்கு விருந்து பல்லவர் காலத்துச் சமணரின் சமயப் பிரசாரத்தையறிவதற் குப் போதிய சான்றுகள் கிடைக்க வில்லை. உதீசித் தேவரியற்றிய திருக்கலம் பகம் என்ற பிரபந்தம் பல்லவர்கால நூலாகலாம் என்று கொள்வதற்கு அகச் சான்று ஒன்று காணப்படுகிறது. "பரந்தியலும் சுடர் மெளலிப் பல்லவரும் பண்ணவரும் விண்ணுடாளும் புரந்தரருந்தொழவுறையும்பொன்னெயில் விட்டென்னிதய நண்ணினரே" (61) இச் செய்யுட்பகுதி பல்லவர் புகழுடன் ஆண்டகாலத்தைக் குறிக்கிறது. இப் pr பந்தத்திற் காணப்படும் கருத்துக்களும் வைதீக சமயப் புராணக் கதைகள் சம னத்தை எவ்வாறு பாதித்தன என எடுத்துக்காட்டுகின்றன. வைதீக சமயத் தின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடி யாத நிலையிலேயே, சமணரிடையே இத் தகைய கருத்துக்கள் தோன்றியிருக்கக் கூடும் என்ற முடிபு பிரபந்தத்தைப் பார்க்கும்போதே ஏற்படும்.
24

ராணிக மதமும் சமணமும்
திருக்கலம்பகம் சமண இலக்கிய வர லாற்றிலும் தமிழர் சிந்தனை வளர்ச்சியி லும் தனியிடம் பெறுகிறதெனலாம். சமணர் நோக்கில் வைதீக சமயப் புரா ணக் கதைகளை விமரிசனஞ் செய்து சித் தனையைத் தூண்டுவதாகத் திருக்கலம் பகம் அமைகிறது. புராணக் கதைகளுக் குப் புது விளக்கங்கள் கொடுக்கப்பட்டு அவை அருகனேடு இணைக்கப்படுகின் றன புராணக் கதைகளில் இடம்பெறும் செய்திகள் சில இழித்துக் கூறப்படுகின் றன. இவற்ருலே, பல்லவர் காலத்தி லேயே புராணக் கதைகளுக்கு உட் பொருள் அல்லது தத்துவார்த்தம் கொள்ளாவிட்டால், அவை கடவுளின் பெருமைக்கு அடுக்கா என்ற நிலை தோன்றிவிட்டது. சைவ புராணங்களில் இடம்பெறும் சிவபெருமானுடைய வீரச் செயல்கள் சிலவற்றைக் கூறிச் சிவபெரு மான் அவற்றை இயற்றியது ஏன் என்று கேட்கும் நிலை சுந்தரர் தேவாரங்கள் சில வற்றிற் காணப்படுகிறது. திருமூலரும் பட்டினத்தாரும் புராணக்கதைகள் சில வற்றிற்கு உட்பொருள் கூறுவர் சமணர் வைதீக சமயப் புராணக் கதைகளை ஆராயப் புகுந்து தமக்கேற்ற புராணக் கதைகளை வகுத்தனர். சமணருடைய மகாபுராணம் ஒன்பதாம் நூற்ருண்டு இறுதியில் எழுதிமுடிக்கப்பட்டதென்பர் இவையாவும் திருக்கலம்பகத்திலே தோன் றிய சிந்தனையலைகளின் விளைவுகளென்று கூறலாம் போலத் தோன்றுகிறது5
வேதம் என்ற வைதீக சமய முதனூ லின் பெயரைச் சமனரி தம் மத முத னுாலுக்கு வழங்குவதைத் திருக்கலம் பகத்திற் காணலாம்; வைதீக சமயம்

Page 27
என்ற பெயரே வேதம் என்ற நூலே முதனூலாகக் கொண்ட சமயம் என்ற பொருளிலேயே தோன்றியது. இறைவ ஞல் முதன் முதல் அருளப்பட்ட ஆதி மத நூல் வேதம் என்ற கருத்தை வைதீக சமயத்தினர் மக்கள் மனதில் வேரூன்றச் செய்துவிட்டதனல், அருக குல் அருளப்பட்ட முதனூல் வேதமே என்று கூறவேண்டிய நிலைக்குச் சமணர் வந்துவிட்டனர். ஐரோப்பியர் காலத்தி லும் தற்காலத்திலும் கிறித்தவ சமய முதனூலாகிய விவிலியம் வேதம் என வும் கிறித்தவர்கள் வேதக்காரர்கள் என வும் தமிழ் கூறு நல்லுலகத்தின் சில பகுதி களில் வழங்கப்படுவது இத்துடன் ஒப் பிடத்தக்கது; திருக்கலம்பகம் வேதத்தை யும் அருகனையும் தொடர்புபடுத்துமாறு:- வேதம் ஓதியே (25): வேதம்மொழிந்த பரம்பரன் (26), தொன்மறையை விரித் தோய் நீ(1): தூய நான்மறைத் தலை வன (90) எண்மூன்று படக்கிடந்த வெழுமூன்றினிரட்டிமறை தோன்றச் சிந்தையுன் மூன்று குற்றமவித் தொரு மூன்று பேருலக முணர்ந்த கோவே(37) வேதத்துக்கே சிறப்பாக உரிய பெயராகிய மறையென்ப  ைத யு ம் சமணர் தம் நூலுக்கு ஏற்றுவிட்டனர் அருகனே வேதத்தையருளினன், ஏனைய சமயத்த வர்கள் வேதத்தைப் புரிந்துகொள்ளமுடி யாமையால் தவறுபடக்கொள்கின்றனர் என்ற கருத்தும் காணப்படுகிறது.
"ஒதா துலகிற் பொருளனைத்து முடனே புணர்ந்தா னுணர்ந்தவற்றை வேதாகமங்க ளாறேழால் விரித்தான் விமலன் விரித்தளவே கோதார் நெஞ்சத் தவர்பிறழக்கொண்டே தாமே கண்டார்போற் பேதா பேதம்பேதமெனப் பிணங்கா
நின்ருர் பிரமித்தே" (78). ஆளுல் வேதமும் வேதியரும் சமனத் தொடர்பு அற்றவை என்பதை 'வேதியரி வேத மந்திர மோதி நின்றுண்ணு மற்திர

மன்று" (91) என்று வைதீகத்தைப் பிரித் துக்காட்டும் பகுதி தெளிவாக்கி விடுகிறது. பெளராணிக மதம் போற்றிய மும் மூர்த்திகளாகிய சிவன், திருமால், பிர மன் என்பார் பெயர்களை அருகனுக்கு உரியனவாகக் கூறுவதையும் திருக்கலம் பகத்திற் காணலாம்,
சிவன் - அருகன்:-
"வீர னி; விண்ணு னி; விமல னி; கண்ணு னி; தீர னி; சுகத னி; சிவனு னி;தவனு னி" (1) "ஏசரிய சிவகதியி லேறுமவர் குறுகுநெறி யேடவிழு நளினமிசை யேகுமவ ரடியினையே" (53) "கயிலாய மெனுந்திரு மலைமேலுறை கின்றவரி கணநாயகர் தென்றமிழ் மலைநாயகர்" (74) திருமால் - அருகன் :-
"தேவாதிபனே திருமாலே " (21). 'திருமாலே (33), "மாறிலாத மலர் மகள் காந்தன்" (32),
'நாம மாயிரம் பாடவந் திருளுஞ்
சயங்கொ ளாழியங் கடவுளே" (35)
"வாமன் (43, 62; 76) >. பிரமன் - அருகன்:-
"கலைமகள் கிர்ந்தர் கண்டீர்? (6)。
"பிரமன்', "சதுமுகன்" (79);
"ஆதிமுதற் கடவுளுக்குக் குணப்பேர் தூய ஆயிரத்தெட்டு’ (49) என்பது சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுவாகப் பக்திப் பாடல்களிற் கூறப்பட்டதெனலாம்; அரு கனை "மலர்மிசை வருமால்" என விளித்து அவனே அரி என்ற பெயருக்குத் தனி யுரிமையுடையவ னென்கிறது பின்வருஞ் செய்யுள்:-
"மண்ணர் கதிர்மணி மலரார் செங்கையில்
வைத்துக் கண்டவரொத்தென்று மெண்ணு தகிலமு முடனே கண்டருள் - கின்ரு ய் நீயலநிலை யென்முற், பண்ணுர் வண்டிறை கொள்ளக் கள்ளவிழ்
25

Page 28
பனிமா மலர் மிசை வருமாலே கண்ணுர் கடலுல கெல்லா மறிவதொர் கரியாவற்கெவ ருரியாரே (10) மும்மூர்த்திகளின் பெயர்களை அருகனுக் குக் கையாளும் ஆசிரியர் அம் மும்மூர்த்தி களைத் தாழ்த்திக் கூறுவதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
"அரியினெடு கரியுமிருந் தறங்கேட்குங் ઝrr 6) th” ( I 7)
"மாயஞ் செய்யுங் கரியநெடு மாலு மனுகா மலரடியாய்' (48) "பண்டையன்றலை மண்டையிற்றிரு மால ரற்கு நிறைந்திடும் பழைய மந்திரமன்று" (91), சிவபெருமான் மன்மதனை யெரித் தவர் என்ற புராணக்கதைக்கும் அருகன் காமத்தைக் கடந்தவன் என்ற சமணர் நம்பிக்கைக்கும் உள்ள ஒற்றுமை சிவன் செயலே அருகன் மேலேற்றிக் கூறச் சம ணகுக்கு வசதியளித்திருக்கிறது:
"நறையோடத் தோடவிழு நறும்பூமென் x கணை துறந்து நிறையோடப் பொருமதனை நீருக நோக்கினையே" (1) 'கண்மூன்று தோற்றியிகல் காமனுடல் பொடியாகக் கனன் ருய்" (37) மொய்த்தபோர் வேக வெங் கனை க் காமனைச் செரு" (39) * அனங்கனை நீறு படுத்து (60) "காமனை வெ ந் கண் ட வென் றி ப் பெருமானே’ (79) ‘போரேறு sтио 6tr பொரு சிலையி னணறுத்தாய் என்குவேனே" (80) "மகர வெல் கொடிய வன் றனைக் காய்ந்து
(90) "சுருப்புநாண் வில்லிபட - நெருப்புமிழ்
நெடுநோக்கினை" (109) சிவனை உமையொருபாகன் எனச் சைவர் வருணிப்பதையும் சமணர் அருகனை வரு ணிப்பதிற் பின்பற்ற முயல்கின்றனர். காமத்தை வென்ற அருகனுக்கு நிசப் பெண்ணைச் சோடி சேர்ப்பது பொருந் திTது:
26

'தனஞ்சுமந் தலமரு மிடையவர் தடங் கணின் கடைதற மெலியலர் (107) அதனல், கேவல ஞானத்தைப் பெண் ணுக உருவகஞ் செய்கின்றனர்:- "பரிவில்கே வலக்கிழத்தி - பிரிவில்லா
வொரு பாகனை" (109)
இராமன் ஜனகன் காட்டிய வில்லையிறுத் துச் சீதையை மணந்ததைக் குறிப்பாக உணர்த்துவதாக அமைகிறது. அருகன் காமத்தை வென்று ஞானத்தைப் பெற் றதை உதீசித்தேவர் உருவகிப்பது:- "உரந்திகழும் வில்லவன்றன் சிலையையிறுத் துயர் ஞான மகளை வேட்டு" (61) திருமாலின் மார்பிலே திருமகள் வீற்றிருக் கிருள் என்பதுபோல அருகனின் மார்பி லும் திருமகள் வீற்றிருக்கிருள் என் கின்ருர்,
"மலைவயங்கு திருமார்பின் மலர் மடந்தை வீற்றிருப்ப மகிழ்வையாகிற் சிலைவயங்கு தோளனங்கன் றிறலழித்த விசயமென்னே விசையுமாறே" (46) சிவபெருமானுடைய வீரச் செயல் களில் கூற்றுவனை"வென்றமை. முப்புரம் எரித்தமை முதலியனவற்றுக்கும் அருகன் செயல்களென விளக்கந்தந்து அமைதி காண்கின்றனர் சமணர். மெய்ந்நெறி கண்ட அருகன் மரணத்தை வென்றனென் றும் காமம், வெகுளி, மயக்கம் முதலிய முக்குற்றங்களை நீக்கினன் என்றும் உதீசித்தேவர் விளக்கந் தருகின்ருர்:- “அலைமாருக் கதிக்கடலு ளழுந்துயிர்வேட் டல மரூஉங் கொலைமாருக் கொடியவெங் கூற்றினை - யுங் குதித்தனையே" (1): *கோறன் மாற்றி யுதைப்பது கூற்றையே (38) *கோள்வலிய கொடுங்கூற்றைத் தாள் வலியின் விழவுதைத்தனை" (109) "இருவினை யிரிய மூவரண் முருக்கிய பொருவி ருளினை (16)

Page 29
*அரணங்கொடிய மதின்மூன்று மழியக் கனன்றீர்" (36) ‘மூவெயின் முரண்முருக்கி-மூவர் சரண டைய நின்றன’ (109) முக்கண்ணன், தாழ்சடையோன், ஆல் நிழலிலமர்பவன் என அருகனை வருணிப் பது சிவபெருமான் பக்திப் பாடல்களிற் பெறும் வருணனையை நிக்னவூட்டுகிறது:-
*ஆன்றமெய் யறம் வளர்க்கும் - மூன்று கண் முனித்தலைவனே பாலநெடு நிழலமர்ந்தனை - காலமூன்று முடனளந்தனை தாழ்சடை முடிச்சென்னிக்- காசறு பொன் னெயிற்கடவுளை" (109) ஆளுல், சிவபெருமான் சுடுகாட்டிற் பேயோடு ஆடுதலையும் பிச்சையெடுப் பதையும் தாழ்த்திக்கூறி அருகனை,உயர்த் துகிருர், "மனஞ்சலம் படுகழு தொடுபின வனந் தொறும் படர்தரு மயலிலர் வனந்தரும் பதிதொறு மிடுபவி வருந்தி யுண்டலமருபசியிலர்" (107)
திருமாலின் மிக முக்கியமான ஆயுத மான சக்கரம் அருகனுடைய ஆணையைக் குறிக்க வழங்கிய சக்கரத்துடன் இணைக் கப்பட்டதனற் போலும், அருகனுடைய சக்கரத்தை விதந்து கூறும் பாடற்பகுதி கள் பல காணப்படுகின்றன.
"புலவுசுவைத் தொளிருபடை தொடாது முத்தி பொருபகடிப் பகைதுரந்த 4ವಾಡ್ಗಿ! 13) "மறங்கொ ணேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோரியிற் பிறங்கவென்ற வென்றியோ ரனேகபேரு லகெல்லா மிறைஞ்ச வெங்கண் வல்வினைத் தெல்வர் சிந்த வெந்துபே ரறங்கொ ணேமி கொண்டு வென்றசோதி யெங்க ளாதியே (24)
"மகரவா ருதிவலயத் துலக மேழும்
வந்திரைஞ்ச வருளாழி வலங்கொண் டேந்துஞ்

சிகரமா மணிநீல வண்ண வெற்பைத்
தேரு தார் தாந்தம்மைத்
தேரு தாரே (32)
"கொண்டல் வண்ணனைப் பண்னவர்
தலைவனைக் கொலைகடிந்துயிரோம்பும் கொற்ற நேமியங்கடவுளை (90)
ஆனல், அருகன் பகைவரில்லாதவன்,
அகிம்சைக் கொள்கையன் என்ற கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின் றன;-
*சரண்புகுந் தடிதொழி னலர்தரு சரந் துரந் தெதிர்பொரு பகையிலர்"; "சினஞ்செய்வன் பகைவரு மெனவலி சிதைந்துவெம் படைபல சுமவலர்’ (107) திருமால் உலகையுண்டது, உலகையளந்தது, கடல் கடைந்தது முத லிய புராணக் கதைகளும் அருகனுக் கேற்ற முறையில் அருகன் மேலேற்றிக் கூறப்படுகின்றன.
"பேசி லகண்டமுநின் பேரறிவின்
பாலதள் வாசி லறிவுன் னகத்தான்-மாசிகற்த மெய்ஞ்ஞான வேந்தர்தொழ வீற் றிருந்தாய் நீயல்லா லிஞ்ஞால முண்டார் மற்றியார்"
(29) "இஃலவயங்கு கனைகடகத் திமையவர்க
ளமையலரா யேத்தவானுேர் தலைவயங்கு பிணிமகரக் கடலலறக்
கடைந்த மிர்த மளித்தகோவே' (46) "உலகளந்த முகில்வண்ணன்" (52); "பாரே முடையாயைப் பாரளந்து
படைத்துண்ட்ா யென்குவேனுே காரோர் கருமக் கடல்கடந்த கைவலத்தா யென்குவேனே" (80) "மன்னியபே ருலகனைத்தும்-நின்னுள்ளே நீயொடுக்கினை நின்னின்று நீவிரித்தனை-நின்னருளி
னிகாத்தனை" (109); மாயச்சகடம் உதைத்த குறிப்பும்
திருமாலோடு அருகனை இணைத்துக்
27

Page 30
கற்பனை செய்தபோதே தோன்றியிருக்க
வேண்டும் "சிதைக்குங் கதிப்பெயர் மாயச்சகடஞ்
சிதைந்து சிந்த வுதைக்குந் திருவடிப் போதிரண்டான்"
(22) ஆனல், திருமால் பாம்பின்மிசைப்பள்ளி கொள்வதைக் குறைகூறி அருகனை உயர்த் துகிருர் "அனந்தர்கொண் டமளியின் மிசையறி வழிந்துகண் படுவதோரசைவிலர்" (107). இரண்டு செய்யுட்களில் திருமாலுக்கு வழங்கிய பெருமை அருகனுக்கே யுரிய தென்பதை அருகனே எடுத்துச் சொல்ல வேண்டும் எனப்படுகிறது. "இருந்தாய் வேறே யரியணைமே லெல்லா வுலகுந் தொழவுலகை யருந்தா வுமிழா திருந்தாயென் றறையா நின்ற மறையானுல் விருந்தார் சுரும்பு கொப்புளிக்கும் வேரித் துவலை மாரியருப் பெருந்தோ ளசோக மொன்றுடையா
யாதோ வுண்மை பேசாயே (28) 'யாரே கால மூன்றுமுழு தெல்லா வுலகு முடனளந்தார் நீரே யான லுலகளந்த நெடுமா நெடுமா லென்ப துமையன்றே காரே சிறந்து மலர்களுலிக் களிவண்
டறைய நறவொழுகிப் பாரேழ் கமழும் பூம்பிண்டி நிழலீரொரு சொற் பகரீரே" (30) அருகனே கூறவேண்டும் என்பதால், மக் கள் அருகனின் பெருமைகளாக இவற் றைக் கொள்ளவில்லையென்பது புலனு கிறது.
பிரமனுடைய படைத் தற்ருெழில், எல்லாம் அறியும் அறிவு என்பன அருக னுக்கே யுரியன எனப்படுகிறது. மும் மூர்த்திகளின் தொழில்களும் அருகனுக்கு ஏற்றமுறையில் விளக்கப்படுகின்றன. "பெருந்தகைநின் றெய்வமொழி
தோன்றத் தோன்றிப்
28

பிறழாநின் றுாயமொழி நிற்ப
நின்றுன் னருந்தகைய செய்யமொழி செல்லச் ^- செல்லு மகன் ஞால முழுதுமுட
னென்ருல்- --
e a 0 to s' a s நீயலான் மற் றிகாவர் படைத் தளித் தழிக்கு மியல்பினரே (4) திசைமுகன் என்ற பிரமனது பெயர் 9) Co. கனுக்கே உரியதெனப்படுகிறது. "இயல்கொண்ட பொருளனைத்து மெஞ் சாம லெப்பொழுது முடனே காணுஞ் செயல்கொண்ட திசைமுழுதுந் திகழ்ந்
திலங்குந் திருமுகத்து நின்னையல்லான் முயல்கொண்ட கறைதுடைத்த முத்
தணிந்த மும்மதிமுக் குடையா யிற்த மயல்கொண்ட வகன் ஞாலந் திசைமுக னென் றெவவாறு வழங்குமாறே (5) பிரமனுக்குப் பல த லே களிருப்பதைக் குறைகூறி அருகனை உயர்த்துகிறது இப் பிரபந்தம். ‘சிரங்களெண் டிசை நிரை கொளவரை செயும்புயம் பலகொடு திரியலர்" (107) வைதீக சமயத்தில் முக்கியத்துவம் பெறும் பிரணவ மந்திரமாகிய ஓம் என் பதும் சைவசமயத்தில் முக்கியத்துவம் பெறும் பஞ்சாட்சரமும் சமணத்தொடர் புடையனவாக உதீசித் தேவராற் கூறப் படுகின்றன. "நாதனக் கமிழ்து நன்சுவை யுதவு
நற்கனி மருத்துவர் நாணு நோய்தளைத் தணிக்கு நன்மருந்துழலு
நோன்பகை யெறிதருந் திகிரி வேதனைக் கடலின் றணிப்புணை நெஞ்சம் வேண்டிய வெலாந்தரு நிதிய மாதலிற் பரமன் மூலமற் திரமைந்
தெழுத்தல தொன்றறியனே" (40) அப்பர் சுவாமிகளும் திருஞான சம்பந்த ரும் பாடிய பஞ்சாட்சரப் பதிகங்களின் பொருளை இச் செய்யுள் நினைவூட்டுகிறது. "கற்றுணைப் பூட்டியோரி கடலிற்
Eurtrid Sigith

Page 31
நற்றுணையாவது நமச்சிவாயவே" என்று அப்பர் பாடுவதையே, இவர் "வேதனைக் கடலின் தனிப்புணை" என்கிருரெனலாம். பிரணவ மந்திரத்திற்குச் சமணருக்கு ஏற் புடைய விளக்கம் கூறப்படுகிறது. "அறிவரிய குணத்தருக னசரீரி யாசிரிய னுவாத்தி கோதஞ் செறிவரிய முனிவரெனுந் திருநாம
முதலெழுத் தோரைந்தும் சேர்ந்து பிறிவரிய வோங்கார முன்னுரைப்பர்
பின்னுமதன் பெருமை யோரார் பொறிவழியில் வருநாதர் பொருளில் வறும் பெயர்புனையும் புவனத்திாரே' (41)
பெளராணிகக் கதைகள் சிலவற்றில் கடவுளர் கொள்ளும் வடிவங்கள் இப் பிர பந்தத்திற் குறை கூறப்படுகின்றன. "விலங்காய்ப் பிறந்து தடுமாறி வீழ்வார் தம்மைத் தேவரிவர் கலங்காக் கருணையாற் பிறந்து காப்பா ரென்பீர்” (83) "கரமனே கம்படைத்துப் படைகளேந்திக் கண்ணனே கம்பரப்பிக் - கனல்கள் சிந்திச் சிரமனே கஞ்சுமந்து செருச்செய்தோடுந் தேவரோ வீரரெனத் தேர்கிற்பாரே' (79)
சங்கரர் நிறுவிய அத்துவிதக் கொள்கை யைக் கண்டிக்குங் குரலும் கேட்கிறது. "பெருமானை யறியாதே பெருமால் கொண்டிங் கிம்மான நிலஞகித் தீயாய்க் காலா

யிருசுடரா யெறிபுனலாய் வானுய்
மற்று
மெம்மானெவ் வுயிர்களுமாய் நின்ரு
னென்றே யியம்புவார் துணிவென்னே யிருந்த art Go" (27)
அருகன் குணக்குன்ருக இருத்தலிளுல், அவன் குண இயல்புதம் கடவுளுக்குமுண் டெனப் பிறசமயத்தார் வாதிப்பாராயி னும் அவர் வணங்குவது தம் கடவுளின் பேய்த்தனத்தையே என்கிருர், *வணங்கப் படுந்தெய்வ நீயல்ல தியார் நின் வரம்பிகந்த குணங்கட் கியார் குற்றங் கூறவல் லார் குறி யாறிரண்டு கணங்கட் கிறைநின் குனமெங் கடவுட்கு மாமென்றுதாம் பிணங்கப் புகுவர் பின்கொண்டாடுவதவர் பேய்த்தனமே" (106) அருகனை யுணர்தல் வீட்டின்பத்தையும் உணராமை நரகத் துன்பத்தையும் தரு தலினுல், அருகனே உலக காரணஞகிய முழுமுதற் கடவுள் எனப்படுகிறது.
"வாகன மாகம் பூத்த மாமலராக
வேகு மேகனை யுணர்ந்தி லாமை யுணர்த
லவ் விரண்டினலும் வேகவெங் கதியும் வீடும் விளைதரு மென்ரு லெண்ணில் போகனே யன்றியாரே புவனகா
pretargrm aum Gr” (20);
29

Page 32
க. அருமைநாயகம்
போர்த்துக்கீசரு
(அரசியல் 16-ம் நூற்றண்டின் ஆரம்பத்தில் ஈழ
*ழத்தில் 16-ம் நூற்றண்டின் ஆரம் பத்தில் கோட்டை, கண்டி, யாழ்ப்பா ணம் என மூன்று சுதந்திர இராச்சியப் பிரிவுகளிருந்தன. இவ்விராச்சியங்களுக் கிடைப்பட்ட ஆனல் அவற்றின் ஆட்சி யெல்லைக்குட்படாத வன்னிப்பிரதேசம் வன்னியர் என்போரால் ஆளப்பட்டது. யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய இராச் சியங்கள் நீண்டநாள் வரலாற்றை யுடையனவல்ல. இவ்விராச்சியப் பிரிவினை ஈழத்திலே காணப்பட்ட அரசியல் வலு வின் தளர்ச்சியைக் கு றிக் கி ன் ற து கோட்டை மன்னர் வழக்கப்படி ஏனைய இராச்சிய மன்னர்களின் மீது மேலாதிபத் திய உரிமை கோரினரேனும் அதனைச் செயற்படுத்தும் வலு அவர்களிடம் இருக்கவில்லை. ஏனையவிரு இராச்சிய மன் னர்களாவது அரசியல் ஒற்றுமையை ஏற் படுத்தக்கூடிய நிலையிலிருக்க வில்லை; பொலன்னறுவை இராச்சிய வீழ்ச்சியின் பின்னர் பிரிந்தழிந்துவந்த ஈழத்து அர சியலின் இறுதிக்கட்டமாக இந்நூற்ருண்டு விளங்குகின்றது. 16-ம் நூற்ருண்டில் ஈழத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்களுள் சீதாவக்கை மன்னரைத்தவிர, ଶ୍ରtଥିତor யோர், தத்தம் ஆட்சியெல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் பறிபோவதைத் தடுப்ப தைப் பிரதான நோக்கமாகக் கொண் டிருந்தனரன்றி ஈழத்தில் மறுபடியும் அரசியல் ஒற்றுமையை நிலைநாட்டவே இங்கிருந்து அன்னியரை விரட்டவோ அவர்களால் முடியவில்லை.
கலாச்சார, மொழி அடிப்படையில் ஈழம் இரு தனிக்கூறுகளாகப் பிரிந்திருந்
30

பாடசாலைகளுக்கு
ம் கோட்டை இராச்சியமும் தாடர்பு - 1505-1597 வரை) தின் நிலை:
தது. போர்த்துக்கீசருக்கெதிராக ஓரிரு சந்தர்ப்பங்களில் இவை ஒன்றுக்கொன்று உதவ முன்வந்தனவேயாயினும் அவற்றுக் கிடையில் பிற தொடர்புகளிருக்கவில்லை. ஆகவே போர்த்துக்கீசர் ஈழத்துக்கு வந்தநாளன்று இங்கு மூன்று இராச்சியங் களும் இரு தேசிய இனங்களுமிருந்தன! எனலாம். இத்தகைய பிரிவினையும், அவற் றுக்கிடையே இருந்த ஐயப்பாடுகளும் ஈழத்தில் மாத்திரமன்றி ஏனைய கீழைத் தேச நாடுகளிலும் ஐரோப்பியர் தமது அரசியல், பொருளாதாரச் செல்வாக் கினைப் பரப்புவதற்குச் சாதகமாயமைந் தன.
கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இராச்சியங்களினது பொருளா தாரம் தன்னிறைவு பெற்ற விவசாயப் பொருளாதாரமாகவே வி ள ங் கி யது. கோட்டையும், யாழ்ப்பாணமும் பிற நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தா லும் பிறநாட்டு வர்த்தகத்தில் தமது பொருளாதாரத் தேவைகளுக்காகத் தங்கி யிருக்கவில்லை. கோட்டை இராச்சியத் தினது வர்த்தகம், அப்பிரதேசத்தில் விளைந்த கறுவாவுக்கு ஐரோப்பாவிலிருந்த கிராக்கியினுல், செழிப்பானதாக விளங் கியது. கீழைத் தேசங்களில் கிடைத்த கறுவாவில் ஈழக் கறுவாவே சிறந்தது என ரி: பெய்ரோ என்ற போர்த்துக் கீசன் குறிப்பிட்டுள்ளான். கறுவாவைத் தவிர, ஈழத்திலிருந்து முத்து, இரத்தினக் கற்கள், பாக்கு மிளகு, கராம்பு, சாதிக் காய் போன்றவையும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இவ் வி யா பாரம்

Page 33
கோட்டை மன்னரது ஏகபோக உரிமை சபாக விருந்ததால் கோட்டை மன்னர் பெரும் பொருளிட்டினர். பிறநாட்டு வர்த்தகத்தை நடாத்தினேர் கோட்டையி லிருந்த முஸ்லிம்களாவர் இவ்வர்த்த கம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. 16-ம் நூற்ருண்டின் ஆரம்பம் வரை முஸ்லிம்களுடன் இவ் வர் த் தக த் தி ல் பங்குகொள்ளவோ, போட்டியிடவோ வேறெவ்வினத்தவரும் முயலவில்லை. இதனல் முஸ்லிம் வியா பாரிகள் இங்கு பண்டசாலைகள் அமைக்க வேண்டிய தேவையும், கப்பல் போக்கு வரத்துச் செய்வதற்கும், பொருட்களைப் பாதுகாப்பதற்காகவும் காவல்நிலையங்களை அமைக்கவேண்டிய அவசியமும் ஏற்பட வில்லை. இங்கு வந்த முஸ்லிம்களது வர்த்தகக் கப்பல்கள் வெறும் வியாபாரக் கப்பல்களேயன்றி, போர்த்துக்கீசரது கப் பல்கள்போல ஆயுதந்தாங்கியவையல்ல. இந்நிலேயே பிற ஆசியப் பகுதிகளிலும் நிலவியது.
போர்த்துக்கீசர் முதலில் கோட்டை யுடனேயே தொடர்புகொண்டனர். அக் காலத்தில் கோட்டையின் அரசியலில் தலையிடும் நோ க் க மோ, பிறதேச ஆசையோ விருக்கவில்லை, ஈழத்தின் அரசியல் நிலை தமது பொருளாதார நல னைப் பாதிக்குமென்ற உணர்வும், ஐரோப் யாவிலும், ஆசியாவிலும், அரசியல் வர்த்தகத்துறைகளில் ஏற்பட்ட அபி விருத்திகளுமே 16-ம் நூற்ருண்டின் பிற் பகுதியில் கோட்டை இராச்சியத்தின் மீதும், பின்னர் ஈழம் முழுவதின் மீதும், பிரதேச ஆசை கொள்ளச் செய்தன. Il 5 0 5-1 6 5 6 au Goor கோட்டையுடன் போர்த்துக்கீசர் கொண்டிருந்த தொடர்பு தான்கு வகைப்பட்டது. அவர்கள் நிலை யைப் பின்வருமாறு வர்ணிக்கலாம்:-
1505-1521 வர்த்தகர்கள்; 15211551 சீ தா வ க் கை க் கெ தி ரா த க் கோட்டை மன்னருக்கு ஆயுத உதவி

புரிவோர் 1551-1596 தர்மபாலனின் பாதுகாவலர்; 1597-1656 கோட்டை இராச்சியத்தின் அதிபதிகள்:
1505-க்கும் 1521-க்குமிடைப்பட்ட காலத்தில் போர்த்துக்கீசர் முழுக்கவனத் தையும் ஈழம் மீது செலுத்த முடியவில்லை. தமது வியாபார ஆதிக்கத்தினை இந்து சமுத்திரத்தில் நிலைநாட்டுவதிலே கவ னஞ் செலுத்தினர். ஆபிரிக்காவின் கிழக் குக் கடற்கரையோரத்திலுள்ள சோபா லா (Sofala) தொடக்கம் மலாய்த்தீப கற்பம் வரையிலுமுள்ள பிரதேசத்தில் முக்கிய வர்த்தக மார்க்கங்கள் காணப் பட்ட அரபிக் கடல், பாரசீகக்குடா, இந்தியாவின் மேற்குக் கரையோரம் போன்ற பகுதிகளிலிருந்து முஸ்லிம்-இற் திய வர்த்தகரை அகற்றுவதிலும், வர்த் தகத்தைத் தமது சொந்தமாக்கும் முயற் சிகளிலும் ஈடுபட்டனர். மேற்கூறப் பட்ட பிரதேசத்திலுள்ள வர்த்தகப் பாதைகளைக் கண்காணிக்கும் வகையி லமைந்த முக்கிய கேந்திரஸ்தானங்க ere ம்யூ. ஒமஸ் , கோவா, ஏடன் போன்ற பகுதிகளையும் கைப்பற்றவேண்டி யிருந்தது. இக் காரணங்களினலேதான் ஆரம்பத்தில் கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கீசர் பண்டசாலை, காவல் நிலையம் போன்றவற்றை நிறுவுவதற்கு எடுத்த முயற்சியை மறைமுகமாக மன் னரும், வெளிப்படையாக முஸ்லிம் வர்த் தகர்களும், கோட்டை இராச்சிய மக் களும் எதிர்த்தபொழுது அம்முயற்சி யைக் கைவிட்டனர். எனினும் அவர்கள் சில வியாபாரச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டனர். இக்காலப்பகுதியில் தாங் கள் உண்மையான நோக்கத்தையும் வெளி யிடத் தவறவில்லை. 1505-ம் ஆண்டில் போர்த்துக்கீசருக்கு வியாபாரச் சலுகையு மளித்துத் தி  ைற யும் செலுத்தக் கோட்டை மன்னன் சம்மதித்தான் என் பது ஏற்றுக்கொள்ள முடியாததாயினும், ஈழம் மீது மீண்டும் போர்த்துச்கீசர் தங்கள் முழுக்கவனத்தையும் திருப்பும்
3.

Page 34
பொழுது, அங்கு வியாபாரத்திலீடுபட்ட முஸ்லிம்கள் துரத்தப்படவேண்டிய நிலை ஏற்படும் என்பதும் கோட்டையில் பண்ட சாலையும், காவல் நிலையமும்* நிறுவப் படும் என்பதும் தெளிவாயின. ஆனல் ஈழ மன்னர்கள் பெரும்பாலும் வெளி நாட்டு அபிவிருத்திகளைக் குறுகிய மதிப் பீடு செய்யும் தன்மையினராதலால் போர்த்துக்கீசரால் ஏ ற் பட விரு ந் த ஆபத்தை எதிர்பார்க்கவில்லை; அதற்கு மாருக அதை வரவேற்றனர் எனலாம்;
மேலே கூறப்பட்ட கேந்திரஸ்தானங் களில் ஏடனைத் தவிர்ந்த ஏனைய இடங் களைக் கைப்பற்றி, எகிப்தியர்; துருக்கி யர், கேரள மன்னர்கள் ஆகியோரது எதிர்ப்பையும் முறியடித்தபின்னர் ஈழம் மீது கவனத்தைத் திருப்பினர். அப் பொழுது கோட்ட்ை இராச்சியத்தில் நடைபெற்ற "அரண்மனைப் புரட்சி" (விஜயபாகு கொள்ளை) கோட்டை இராச் சியத்தின் அரசியல் தகராற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பினை போர்த்துக்கீச ருக்கு அளித்தது. கோட்டை மீன்னனன விஜயபாகு (1509-1521) முறைப்படி வாரிசுகளான தனது புதல்வர்களை வாரி சுரிமையற்றவர்களாக்க முயற்சியெடுத் ததையறிந்த அவனது புதல்வர்கள் விஜய பாகுவைக் கொலைசெய்து, இராச்சியத் தைத் தம்முள்ளே பங்கிட்டுக்கொண்ட னர். இப் பங்கீட்டின் படி கோட்டை யின் பிரதான பகுதிகளைப் புவனேகபாகு வும், சீதாவக்கையை மாயதுன்னையும், ரய்கமத்தை ம த் து ம ப ண் டாரனும் பெற்றுக் கொண்டனர். ஏற்கனவே அரசியல் ஒற்றுமையற்றிருந்த ஈழத் துக்கு இப் பிரிவினை மேலும் அதிர்ச்சி யைக் கொடுத்தது. சீதாவக்கையும் கோட்டையும்:
சீதாவக்கை மன்னனுன DIT AT* துன்னை பேராசை மிக்கவன். அதற்கேற்ற
ஆற்றலும், போர்த்திறமையுமுடையவன். தென்மேற்குக் கரையோரப் பகுதிக்குத்
32

தானே முதல்வனக வேண்டுமென விரும் பினன் அந்நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு கோட்டை மன்னன் மீது தொடுத்த போர்கள் ஈற்றில் கோட்டை இராச்சியம் முழுவதுமே போர்த்துக்கீசர்
வசம் சிக்க வழிவகுத்தன. எவ்வளவு தேசியப் பற்றுடையவர்களாகச் சீதா வக்கை மன்னர் சிறப்பிக்கப்பட்ட
பொழுதும், அவர்களது விவேகமற்ற நடவடிக்கைகளே போர்த்துக்கீசரது செல் வாக்குக் கோட்டையில் அதிகரிக்கவும், சிங்கள அரச குடும்பம் அழியவும் வழி வகுத்தன என்பது மறுக்கமுடியாததொன் ருகும். கோட்டை மன்னனது பதவிக்கும், இராச்சியத்துக்கும் உ ண்  ைம ய ர ன ஆபத்து ஏற்பட்ட இக்காலத்திலேதான் கோட்டைமன்னருக்கும் போர்த்துக்கீச ருக்குமிடையே திட்டவட்டமான உடன் படிக்கை ஏற்பட்டது எனலாம். மாயா துன்னையினதும், பின்னர் tomrunrg Götåæகள்ளிக்கோட்டை சாமோரின் ஆகியோ ரினதும் கூட்டு நடவடிக்கைகளை முறி யடிக்கு முகமாகப் போர்த்துக்கீசரது உதவியைப் புவனேகபாகு தாடினன். அவர்களது உதவியைப் பெறுவதற்காக வியாபாரச் சலுகைகள் திறை போன்ற வற்றைக்கொடுத்து மு ஸ் லி ம் களையும் கோட்டையிலிருந்து துரத்த உடன்பட் டான். 1543-ல் தனது பேரனண தர்ம பாலனின் உருவச் சிலைக்கு போர்த்துக் கல் மன்னனைக்கொண்டு முடிசூட்டுவித்து அவனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் உறுதி யும் போர்த்துக்கீசரிடமிருந்து பெற்றுக் கொண்டான். கத்தோலிக்கப் Lumrgiffluonrtf. இங்கு சமயப் பிரசாரம் செய்யவும், சமய மாற்றஞ் செய்யவும் அனுமதிவழங் கினன். இதுபோன்ற நடவடிக்கைகள் புவனேகபாகுவிற்குப் போர்த்துக்கீசரது உதவியைப் பெற்றுக்கொடுத்தன. அத் துடன் மாயாதுன்னையினது போரிகள், போர்த்துக்கீசருக்கெதிராகவும், திருப்பப் பட்டதனல், போர்த்துக்கீசரும் கூடிய ளவு கோட்டை மன்னரைப் பாதுகாக் கும் நிலையை அடைந்தனர்.

Page 35
1521-ம் ஆண்டு தொடக்கம் ஈழவர லாற்றில் சீதாவுக்கை மன்னர் கண்ான மாயாதுன்னேயும், அவனது பகஜன முதலாம் ராஜசிங்கனும் தென்மேற்குப் பகுதியில் தமது ஆதிக்கத்தை நிவேதாட்டு வதற்காக 1593-ம் ஆண்டுவரை இடை விடாது போரிட்டனர். சீதாவக்கையின் எழுச்சிக்கு அம் மன்னர்களின் ஆற்றலும் பேராசையும் மாத்திரமன்றி வேறு கார னங்களும் உதவின. அவற்றுள் புவனேக பாதுவின் கொள்கையும் ஒன்றெனலாம். சீதாவக்கை இராச்சியம் வலுவுடன் திகழ்வதைப் புவனேகபாகு விரும்பியிருத் தல் வேண்டும். போர்த்துக்கீசருக் கெதி ராகத் தனது இராச்சியத்தின் இறைமை யையும், தனது நிஃயையும் பாதுகாக் கும் பொருட்டு சீதாவக் கையின் உயிர் வாழ்வு அவனுக்குத் தேவைப்பட்டது. சீதாவக்கை இல்லாவிட்டாலும் அது போன்ற எதிர்ப்புச்சக்தியொன்றை அவ ணுல் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இக் காரணத்தினூலேதான் பல தடவைகளில் 1537, 1537. I 539) மாயாதுன்ஃனயை போர்த்துக்கீசர் உதவியுடன் முற்ருகச் சரணுகதியடையச் செய்யும் நிலே ஏற் பட்டபொழுது போர்த்துக்கீசர் விருப் பத்துக்கு மாருகப் பின்வாங்கிஒன், அதா வது மாயதுன்ஃனயைத் தோற்கடிப்பதன்றி தசுக்குவதை விரும்பவில்லே. புவனேக பாகுவின் இவ்வுண்மை நோக்கத்தை அறியாத குவெய்ருே ஸ் போன்ருேர் சகோதர பாசமும், தேசிய உணர்ச்சியுமே அவனது நடவடிக்கைகளுக்குக் காரண மென்பர் புவனேகபாகு போர்த்துக்கீச ரிடமிருந்து சுதந்திரமாக ஆட்சிபுரிய விரும்பினுன் என்பதைப் பாதிரி மாரது வற்புறுத்தலுக்கிடையேயும் புவனே க பாகு சமயம் மாற மறுத்ததினின்றும், கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந்த கோட்டை மக்கள் அவனது ஆனேயை ஏற்க மறுத்த பொழுது அதனே அடக்க முயற்சித்ததி விருந்தும் அறிந்து கொள்ளலாம். பொது வாகக் கருதப்படுவதுபோவ புவனேக
 

பாகு போர்த்துக்கீசரின் கைப்பொம்மை யாக விளங்கவில் 9ே. தன்னுடையதும், த இனது வழித்தோன்றல்களினதும் ஆட்சி கோட்டையில் நிலவுவதற்குப் போர்த் துக்கீசரது உதவியை ஒரு கருவியாக உபயோகிக்க முயன்று ன். அத்தகை மனப் பாங்கே அவ*னப் போர்த்துக்கீசர் கொலே செய்யத் தூண்டியிருத்தல் வேண்டும்,
மாயாதுன்ஃா போர் த் து க் கீ ச ரு க் கெதிராகப் போரிடுவதற்குக் கள்விக் கோட்டைச் சாமோரினிடமிருந்து பெற்ற கடற்படை சிறிது காலம் உதவியது. சாமோரினது கடற்பு:ம் போர்த்துக் கீசருடைய கடற்படை வலுவிலும் குறை வானதானுலும் அதனேச் சரிவர உப யோகிக்க மாயாதுன்னே தவறினுன் எனி ஒனும் மாயாதுன்னேயும், சாமோரினும் ஒன்று சேர்ந்த மே தென்னுசியா பன் னர்கள் பொது ஆபத்திலிருந்து தப்பு வதற்கு மேற்கொண்ட முயற்சியை விளக்குகின்றது.
1551-ல் புவனேகபாகு கொஃ செப் யப்பட தர்மபாசன் பின்னணுணுன் சிறு வயதினனு ன காரணத்தினுல் சிறிது காவம் அவனது தகப்பனு ன விதிய பண் டாரன் இராசப் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தான். புவனே பாகுவின் மரணம் போர்த்துக்கீசரது செல்வாக்குக் கோட் டையில் பரவுவதற்குப் பெருவழியொன் றைத் திறந்துவிட்டது. பிரான்ஸிஸ் கத் திருச்சபைப் பாதிரிமாரது பராமரிப்பில் வளர்ந்த தர்மபாகன் 1557-ல் சமயம் மாறிக் கத்தோலிக்கணுகியமை ஈழத்தில் போர்த்துக்கீசரது ஆதிக்கப்பரம்ப வில் ஒரு பெருந் திருப்பம் எனலாம் சமயம் மாறிய தர்மபாலன் புவனேகபாகுவிலும் கூடியளவு போர்த்துக்கீசரின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. தர்மபால னது சமய மாற்றப் ஈழ அரசியல் மரபுப் படி சிங்கள மக்கரே ஆட்சிபுரியும் தகுதி பற்றவனுக்கியது. சிங்கள gypJ'óf lugá கருதீதப்படி Lெனத்த சமயத்தைச்
器器

Page 36
சார்ந்த ஒருவனே சிங்கள மக்களை ஆட்சி புரிவதற்குத் தகுதியுடையவனுவான்; ஈழ வரலாற்றில் காணப்படும் சிறப்பு அம் சங்களிலொன்று பெளத்த சமயத்திற் கும் மத்திய அரசுக்குமிடையே நிலவி வரும் நெருங்கிய உறவாகும்: பெளத்த சமயத்தை அனுஷ்டிக்காத மன்னர் மக் களின் விசுவாசத்தையும். நம்பிக்கையும் பெற முடியாது. இத்தகைய நிலை ஏற் படுவதைத் தடுப்பதற்காகவே புவனேக பாகு சமயம் மாற மறுத்தான். இரண் டாவதாகச் சிங்கள வாரிசுரிமை முறைப் படி சகோதரர்களே ஒருவர் பின்னெருவ ராக ஆட்சிப் பொறுப்பேற்போராக விளங்கினர். தர்மபாலனது முடிசூட்டல் (1543-ல் நடந்தது) அம்முறைக்குப் புறம் பானதாகும். ஈழ அரசபத முறைப்படி வாரிசாக விளங்கியவன் மாயாதுன்னை. ஏற்கனவே ரய்கமப் பகுதியை, மத்தும Lu 67 Urrgr இறந்ததும் சீதாவக்கை யுடன் இணைத்திருந்த மாயாதுன்ஆன கோட்டை இராச்சியத்திலேற்பட்ட சம் பவங்களைச் சாட்டாகக் கொண்டு தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தினன். இக் காலந் தொடக்கம் சிங்கள-பெளத்த சமய பாதுகாவலராக விளங்குபவர்கள் சீதாவக்கை மன்னரே எனப் பிரசாரஞ் செய்யக்கூடியதாகவும், கோட்டைமீது சீதாவக் கை மன்னர் தொடுக்கும் போர் களில் நியாயமிருப்பதாகவும் காட்டக் கூடியதாகவிருந்தது. சீதாவக்கை மன் னர் கோட்டை இராச்சியத்தில் ஊடுரு வித் தலைநகரைத் தாக்கத் தொடங்கி னர். தர்மபாலன் ஆட்சி முதல் ஒத வக்கை மன்னர் போர்த்துக்கீசரையும் கோட்டையிலிருந்து துரத்துவதைப் பிர தான குறிக்கோளாகக் கொண்டதால் தர்மபாலனையும், கோட்டை இராச்சியத் தையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்புப் போர்த்துகீசருக்கு ஏற்பட்டது: போர்த் துக்கீசர் கோட்டை மன்னனுக்குக் கொடுத்த உதவியே பெருமளவில் சிதா வக்கை மன்னரது நோக்கங்களைச் சிதற
34

டிேத்துக் கொண்டிருந்தது; கோட்டையை யும், கொழும்பையும் ஏக காலத்தில் பாது காக்க முடியாததினுலும், சீதாவக்கை மன்னனது முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்ததினலும் 1585-ம் ஆண்டு போர்த்துக்கீசர் கோட்டையைக் கைவிட் டுத் தர்மபாலனுடன் கொழும்புக்குச் சென்றனர்; ஒவ்வொரு தலைநகர் மாற்ற மும் இராச்சிய வீழ்ச்சியாகக் கொள்ளப் பட்டால் 1565-ல் கோட்டை இராச்சி யம் வீழ்ச்சியுற்ற தெனலாம்; அக்கால முதல் கோட்டை இராச்சியத்தின் பெரும் பகுதி சீதாவக்கை மன்னர்வசம் சிக்கிக் கொண்டது.
மாயாதுன்னையின் வாரிசான முத லாம் ராஜசிங்கன், மன்னன் பதவி வாரி சாக மாத்திரம் விளங்கவில்லை. மாயா துன்னையினது நோக்கங்களினது வாரிசாக வும் விளங்கினன். கொழும்பைப் பல தடவைகளில் முற்றுகையிட்டான். ராஜ சிங்கனிடம் போதிய கடற்படைப் பலம் இல்லாதிருந்தமை அவனுக்குப் போர்த் துக்கீசருக் கெதிராகப் பெரும்முட்டுக் & - 60 - ultras அமைந்தது. போர்த்துக் கீசருக்குத் தேவையான மேலதிகப்படை களும், உணவுப் பண்டங்களும் கோவாவி லிருந்தும் கொச்சியிலிருந்தும் கிடைத் தன. இவ்வுதவிகள் போர்த்துக்கீசருக்குக் கிடைப்பதற்குத் தடை ஏதும் ஏற்பட்டி ருந்தால் ராஜசிங்கன் தனது நோக்கங் களை நிறைவேற்றியிருக்கலாம். இராஜ சிங்கனது ஆட்சிக்காலத்தில் சீதாவக்கை இராச்சியம் உன்னத நிலையடைந்தது. 1582-ல் கண்டியையும் சீதாவக்கையுடன் இணைத்துக்கொண்டான். ஆனல் கொழும் பின் மீதிருந்த கவனத்தை இழக்க வில்லை. இராஜசிங்கனது கவனத்தைக் கொழும்பிலிருந்து வேறு திசையில் திருப்பு வதற்காகவும், அவனது படைகளை இரண் டாகப் பிரிப்பதற்காகவும் போர்த்துக் கீசர் கண்டி இராச்சிய வாரிசுகளான கரலியட்ட பண்டாரனின் மகளதும், மரு மகனதும், உரிமைக்காக கண்டியில்

Page 37
போரை ஆரம்பித்தனரீ ராஜசிங்கன் கண்டிப் பிரதானிகளை மிகவும் கடுமை பான முறையில் நடாத்தியமையால் தனக்கு முன்னர் ஆதரவளித்த பிரதானி களது நன் மதிப்பையும், ஆதரவையும் இழந்தான். இதன் விளைவாகப் போர்த் துக்கீசர் ஆதரவுடன் ராஜசிங்கனுக்கு எதிராகப் போர் தொடங்கிய வேளை அவனுக்கு ஆதரவிருக்கவில்லை; இதனல் கண்டியை இழந்தான். ஆனல் போர்த்துக் கீசர் கண்டியில் செல்வாக்குச் செலுத்த வில்லை; அது வேறு கதை:
1593-ல் ராஜசிங்கன் இறக்கும் பொழுது சீதாவக்கை இராச்சியம் மிகவும் வலுவுடையதாக விளங்கினலும் முறைப் படி வாரிசுகள் இல்லாத காரணத்தினுல் போர்த்துக்கீசரது ப  ைட களி ஞ ல் கோட்டை ராச்சியத்துடன் இணைக்கப் பட்டது. மாயாதுன்னையும், ராஜசிங்க னும் தமது காலம் முழுவதையும் போரில் கழித்தமையினுல் இராச்சியத்துக்குத் தேவையான நிருவாக அமைப்பை ஏற் படுத்தவில்லை. பொருளாதாரமும், மனித பலமும் போர்களினுல் அழிந்தன. தனது ஆதிபத்தியத்தைச் சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையில் ராஜசிங்கன் பல சிங்கள அரச குடும்பத் தவரைக் கொன்றன். ஈற்றில் சமயம் மாறி இந்துவான காலந்தொடக்கம் பெளத்த குருமாரினதும் மக்களினதும் நம்பிக்கையை இழந்தான். FLD ULI கொள்கை அவனைப் பெருமளவு மக்க ளிடையே செல்வாக்கிழக்கச் செய்திருக்கு மெனக் கூற முடியாது. ஏனெனில் இந்து சமயம் பெளத்தத்திற்குப் போட்டியாக விளங்கவில்லை. சிங்கள மன்னர்கள் பெளத்தர்களாக விளங்கினும் ஆரம்ப காலந்தொடக்கம் இந்து முறைகளுக்கு மதிப்பளித்து வந்திருக்கின்றனர். சீதா வக்கை பழையபடியும் தர்மபாலனது இராச்சியமானது. கோட்டை இராச்சியத் தில் போர்த்துக்கீசர் செல்வாக்குப் பரவு தற்குப் பெருந் தடையாக விளங்கிய

சீதாவக்கை வீழ்ச்சியுற்றது போர்த்துக் கீசருக்கு எதிராகவிருந்த எதிர்ப்புகளைத் தணித்தது. ஈற்றில் 1580-ல் தர்ம பாலன் எழுதிய மரணசாதனத்தின் பிர காரம் 1597-ல் அவனிறக்கக் கோட்டை இராச்சியம் போர்த்துக்கீசர் வச மாகியது. 7 போர்த்துக்கீசர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் மல்வானையைத் தமது தலைநகராக்கினர். ஆகவே ஆட்சி மாற்றுத்துடன் தலைநகர் அல்லது இராச் கிய மாற்றமும் ஏற்பட்டுக் கோட்டைக் குப்பதிலாக மல்வானை இராச்சியம் தோன்றியதெனலாம்: 16-ம் நூற்ருண் டில் போர்த்துக்கீசர் தமது கவனத்தைப் பெரும்பாலும் கோட்டையிலே செலுத் தினர். எனினும் தென்மேற்கு ஈழத்தின் வரலாற்றில் இக்காலப்பகுதியில் சீதா வுக்கையே வலுவுடைய அரசாகவும், வரலாற்றின் போக்கினை நிர்ணயிக்கும் இராச்சியமாகவும் விளங்கியது 16-ம் நூற்ருண்டு சீதாவக்கையின் எழுச்சியும் வீழ்ச்சியுமாக இருக்கின்றதே யன்றிப் போர்த்துக்கீசர் வரலாழுகவிருக்கவில்லை; இதனுல் 16-ம் நூற்ருண்டைச் சீதா வக்கைக் காலம் என அழைப்பதில் தவறில்லை.
போர்த்துக்கீசரது எழுச்சி
1505-ல் வியாபார நோக்கத்துடன் ஈழம் வந்த போர்த்துக்கீசர் 1597-ல் கோட்டை இராச்சிய அதிபதிகளாகிய வரலாறு சுவையானதாகும்.8 கோட்டை யில் சிங்கள மன்னரிடையே ஏற்பட்ட அரசியல் சீர்குலைவும், ஆதிக்க விஸ்தரிப் புப் போட்டியும் போர்த்துக்கீசர் செல் வாக்கினை அதிகரிக்கச் செய்தன. கோட்டை மக்களிற் பலரும் போர்த்துக் கீசருக்கு உதவினர். கோட்டை மன்ன னது உரிமையைப் பாதுகாப்பதற்காக அவர்கள் போராடியதினல் மக்கள் ஆத ரவும் கிடைத்தது. கோட்டை மன்னன் சமயம் மாறியபொழுது சீதாவக்கைக்குச் சிலர் புலம்பெயர்ந்து பெரும்பான்மை
35

Page 38
செல்லவில்லை; மக்களுடைய வாழ்வு நிலத்துடன் பிணைந்திருந்ததிளுல் பலர் கோட்டையை விட்டுப் பிரிந்து செல்லத் தயங்கினர், கோட்டையிலிருந்த நிலச்சுவாந்தர்களும், கத்தோலிக்க சம யத்தைத் தழுவியோரும் போர்த்துக் கீசருக்குப் பக்கபலமாகவிருந்தனர்.
போர்த்துக்கீசருக்கு வ-லு வினை அளித்த சிறப்பான காரணி கடற்படை யாகும். ஈழத்தில் மட்டுமன்றிக் கீழைத் தேசம் முழுவதிலுமேயே போர்த்துக்கீச
9Ilå i fili
l.
2.
S.
36
Arasaatnams Ceylon, (Englewood Cliffs,) N. 16-ம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீச துக்கீச இராசப் பிரதிநிதியாக விளங்கிய அல் கொள்கை சுருக்கமாகப் பின்வருமாறு:-
(அ) இந்து சமுத்திரத்திலுள்ள பிரதான
களேயும் அமைப்பது. (ஆ) உள்ளூராட்சியாளருடன் வியாபார (@) கோவாவில் போர்த்துக்கீசரது குடிே இக் கொள்கையின் பிரதான குறிக்கோள் இந்து பெறும் வர்த்தகத்தைத் தமது ஏகபோகவுரிம்ைய நாடுகளுக்கு வந்த ஐரோப்பிய அரசுகள் முதலில்
பெறவில்லை.
Abeyasinghe, T., Portuguese Rule in Ceylon, { நன்கு அரண் செய்யப்பட்டு பிறநாட்டுப் போர் ஈழத்தவர் மத்தியில் புதிய தாபனமாகவே கருத நாட்டு வர்த்தகக் குடும்பங்கள் வசித்த பொழுது வில்லை. இதனுல் மன்னர், மக்கள், முஸ்லிம்கள் தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியதில் வியப் 1505-ம் ஆண்டு புயலினுல் அடிபட்டு வந்தவர் படிக்கை செய்துகொண்டான்" என்பது ஏற்று: களுக்கோ வெளிநாட்டார் பயமிருக்கவில்லை. சிங் துக்கீசரே திறை கொடுக்கச் சம்மதித்தனரென்பது பட்ட கறுவா அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டி
1581-ன் பின்னர் புவனேகபாகுவிற்கு மாயா

ருக்கு வியாபார ஆதிக்கத்தினை நில் நாட்ட தனிப் பெருங் காரணியாக விளங் கியது அவர்களது கடற்படைத்திறனே யாகும் 16-ம் நூற்றுண்டில் அவர்களது கடற்படைக்குப் போட்டியாக இந்தியக் கடலில் வேறெவ்வித கடற்படையுமிருக்க வில்லை. இந்தியாவின் பேரரசுகள் உள் நாட்டு விடயங்களிலே பெருங்கவனத் தைச் செலுத்தின. கடற்படை வலிமை குன்றியபோது கிழக்கில் போர்த்துக் கீசரது ஆதிக்கம் அஸ்தமித்தது;
J. 1964. ui. 124. ாது கீழை நாட்டுக் கொள்கையினை வகுத்தவன் போர்த் பகேக் (Abuguerque) என்பவனுவான். அவனுடைய
கேந்திரன்தானங்களில் காவல் நிலேய்ங்களையும் கோட்டை
உடன்படிக்கைகள் செய்வது, யற்றத்தை ஏற்படுத்துவது.
சமுத்திரத்தைத் 5եD3}} வாவியாக்கி அதில் Eaotrக்குவதாகும். இவ்வடிப்படைக் கொள்கையையே கீழை
பின்பற்றின. பிரதேச விஸ்தரிப்புக் கொள்கை இடம்
ίοίοηιθο 1966, Lμό, 1ο.
வீரர்களால் காவல் செய்யப்படும் வியாபார நிலையங்கள் ப்பட்டன. கொழும்பு போன்ற துறைமுகங்களில் பிற~ 1ம் அவை மேற் கூறப்பட்ட வகையில் ஒன்றும் நிறுவ ஆகியோர் மத்தியில் போர்த்துக்கீசரது முயற்சி அச்சத் பில்லே.
களுடன் கோட்டை மன்னன் திறை கொடுத்து உடன் i கொள்ளக் கூடியதல்ல. மன்னனுக்கோ, துறைமுகங்க கள நூலான மஹா ஹட்டனவின் கூற்றின்படி போர்க் ஏற்றுக்கொள்ள்க் கூடியதாகும். ஆரம்பத்தில் கொடுக்கப் நக்கலாம்.
துன்னையினலும், சாமோரினலும் ஏற்படவிருந்த ஆபத்துக்

Page 39
காலத்திலேயே ஆயுத உடன்படிக்கையும், திறை பற்றிய மேலதிக விபரங்களுக்குப் பின்வரும் நூே “ “Kas frC36m?gp செய்த Gasfro” Pieris, P. E., Ceylon, The Portuguese Era Yo மல்வான மகாநாடு நடைபெற்று அதன் பின்னர் ஏற்றுக் கொண்டனர் என்ற கருத்துத் தவருனது திற்கு மாருக நடந்து கொண்டனர் என்பதற்கு டிப்புக்கு ஆளாகினர் என்பதை விளக்குவதற்கு! காகக்கொண்ட குவெய்ருெஸ் போன்ருேர் அவ்வ போர்த்துக்கீச இராணுவத் தளபதி மல்வாஞ் தியதால் அங்குதான் அத்தகையதொரு மகாநாடு வேண்டும். மக்களும் அத்தகைய அடிப்படையி6ே துக்கலுக்கு அனுப்ப முயற்சித்தனர். Abeyasing 1505-ல் போர்த்துக்கீசர் வருகையினல் ஈழவரலா யரது "1505-ம் ஆண்டும் அதன் முக்கியத்துவ குணி, சித்திரை 1968 பேராதனை) கட்டுரையை
வரலாறு என்ருல் என்ன?
* வரலாறு என்பது ஒருவகை ஆராய்ச்சி அல் யர்களும் ஏற்றுக்கொள்வர் என நான் நினைக்கின் இப்பொழுது கேட்கவில்லே. இப்பொழுது கவனிக்க:ே என அழைக்கும் அறிவுத்துறைகளைச் சார்ந்தது என்ட விடை கான முயற்சிக்கும் சிந்தனைத் துறைகளே: என்ருல் நாம் ஏற்கனவே அறிந்துள்ளவற்றை அந் படுத்துவதல்ல என்பதை உணர்ந்து கொள்ளுதல் அ வைத்து அதனைக் கண்டு பிடிக்க முயலுவது விஞ் விஷயங்களைக் கண்டுபிடித்தல். அந்தக் கருத்தில், வ
ஒவ்வொரு விஞ்ஞானமும் வேறுபட்ட விஷய: வேறுபடுகின்றது. வரலாறு எத்தகைய விஷயங்களைக் செயல்களைக் கண்டு பிடிக்கின்றது என்று நான் வினுக்களுக்கு விடை கொடுக்க முயற்சிக்கின்றது? ச சான்று என்பது தனித்தனியே ஆவணங்கள் என்று
பெயராகும். . . . . .இறுதியாக, எதற்காக லாம். ... என்னுடைய விடை என்ன என்ரு காகவே வரலாறு என்பதாகும்......ஆகவே,
செய்தான் என்பதையும் அவன் யார் என்பதையும்

செலுத்தும் Փգւլմ: ஏற்பட்டிருத்தல் வேண்டும். இது லப்பார்க்கவும்: Abeyasinghe, மேற்படி பக். 10.
l: I Colombo 1913 L i 118.
போர்த்துக்கீசர் கோட்டையின் ஆட்சிப்பொறுப்பினை து. போர்த்துக்கீச அதிகாரிகள் ஈழ மக்களின் விருப்பத். ம், அதன்மூலம் மக்களினதும், ஆண்டவனினதும் தண் ம் போர்த்துக்கீச நிர்வாகிக்ளேக் கண்டிப்பதை நோக் ாறு கற்பனை செய்திருக்கலாம்.
விைலிருந்து (மல்வான மன்னன்) நிர்வாகத்தை நடத்
நடந்திருக்குமெனப் பிற்காலத்தவர் கருதியிருத்தல் யே பாதிரிமார் மூலம் தமது முறையீடுகளைப் போர்த் he, மேற்படி பக் ?5-?6.
ற்றில் ஏற்பட்ட விளேவுகள் பற்றி அறிவதற்கு ஆசிரி மும்’ தமிழ் இளைஞன், அகவை 1, திங்கள் 3, 4, (பங்
வாசிக்கவும்.
லது விசாரணை என்று கூறினுல் எல்லா வரலாற்ருசிரி எறேன். எத்தகைய விசாரணை அது என்பதை நான் வண்டியது என்னவெனில், அது நாம் விஞ்ஞானங்கள் பதே. அதாவது, வினுக்களை எழுப்பி நாம் அவற்றுக்கு ச் சார்ந்ததே வரலாறு. பொதுவாக விஞ்ஞானம் த முறைப்படியோ இந்த முறைப்படியோ ஒழுங்கு புவசியம். நாம் அறியாத விஷயமொன்றில் கவனம் ஞானத்தில் இடம் பெறும். விஞ்ஞானம் ரலாறும் ஒரு விஞ்ஞானமாகும்.
வ்களைக் கண்டு பிடிப்பதனுல் ஒன்று மற்ருென்றிலிருந்து கண்டு பிடிக்கின்றது? அது, மனிதர் முன்பு செய்த விடை கூறுவேன்...எப்படி வரலாறு ான்றுகளுக்கு விளக்கம் கொடுப்பதன் மூலம். இங்கு அழைக்கப்படுவனவற்றுக்குக் கொடுக்கப்படும் கூட்டுப் வரலாறு? இது பிற வினுக்களை விடக் கடினமானதாக ல், மனிதன் தன்னைப் பற்றிய அறிவைப் பெறுவதற் * வரலாற்றின் பயன் என்னவெனில் மனிதன் என்ன
3
அது நமக்குக் கற்பிப்பதாகும்
R. G. Gastroit al. (Collingwood) The Idea of History, Oxford 1946,
பக்கங்கள் 9.10
37

Page 40
தி. கந்தையா
திராதர இலங்கைத் தமிழ் என்னும் விஷயம் இக் கட்டுரையிலே ஆராயப் படும். இங்கு எடுத்து ஆராயப்படும் பிரச்சினைகளுள் பின்வருவன சில: இன்று தராதரத் தமிழ் வடிவம் ஒன்று தேவைப் படுகின்றதா? அப்படித் தேவைப்பட் டால், இலங்கையில் வழக்கிலுள்ள பல் வேறு தமிழ் வடிவங்களுள் (forms) எது தராதரத் தமிழாகத் தெரிந்தெடுக்கப் படுவதற்குத் தகுதியுடையது? அம்மொழி வடிவம் என்ன காரணிகளுக்காகத் தெரிந் தெடுக்கப்படவேண்டும்?
தராதர மொழிவடிவம் சம்பந்தமா கக், காட்டப்படும் அக்கறை தமிழ்மொழி யின் வரலாற்றிலே ஒரு புதிய விஷயம் அன்று. அது குறைந்தது தொல்காப்பி யர் காலத்திலிருந்து காட்டப்பட்டுவந் துள்ள அக்கறையாகும். தொல்காப்பி யர் உள்ளடக்கமான முறையிலே தரா தரத் தமிழ் பற்றிய கருத்தினை உடைய வராகக் காணப்படுகின்றர். கற்றவர்கள், புலவர்கள் ஆகியோருடைய வழக்கே அவர் கருதிய தராதரத் தமிழ், தொல் காப்பியத்திற்குப் பிற்பட்ட காலத்துத் தமிழ் இலக்கண வரலாற்றிலே அடிக்கடி செந்தமிழ், கொடுந்தமிழ் என்பவை குறிப்பிடப்படுகின்றன. இவ்விரு பதங் களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை மிக அண்மைக் காலத்தில் வாழ்ந்த மேனுட்டு அறிஞர்களாகிய வீரமாமுனி வர்2, போப் ஐயர், கால்டுவெல் ஐயர் 4 போன்றவர்க்ள் கூட ஏற்றிருந்தனர். இவ் விரு பதங்களையும் பயன்படுத்தும்போது
38

தராதர இலங்கைத் தமிழ்
- சில கருத்துக்கள் -
தமிழ் வடிவங்கள் சம்பந்தமாக உள்ள டக்கமாகத் தெரிவிக்கப்படும் மதிப்பீடு ஒரு தராதர மொழி பற்றிய கருத்தோடு தொடர்புடையது. அதாவது, தராதரத் தமிழ் எது என்ற மதிப்பீட்டின் ട}\}.' படையிலேதான் ஒன்றைச் செந்தமிழ் வடிவம் என்றும் மற்றென்றைக் கொடுந் தமிழ் வடிவம் என்றும் வேறுபடுத்தினர் இன்றும், தராதரத் தமிழாக எந்த வடி வம் அமையவேண்டும் என்னும் பிரச்சி னைக்கு இதே போன்ற தீர்வினைக்காட்டும் இதே வகையான மதிப்பீடு இலங்கை யிலும் இந்தியாவிலும் வாழும் தமிழ்ச் சமுதாயத்தினரிடையே புத்துயிர் பெற் றுக் காணப்படுகின்றது. பிற வடிவங் களே ஒதுக்கிச் செந்தமிழ் வடிவத்திற்குச் சார்பாக அறிஞர்கள் அடிக்கடி கருத்துத் தெரிவிப்பதைக் காணமுடியும். இப்படி யாகத் தெரிவிக்கப்படும் கருத்துச் சில இடங்களிலாவது நடைமுறையில் அழு லாக்கப்படுவதையும் காணுகின் ருே ம் உதாரணமாக, இலங்கையில் அரசகரும மொழித்திணைக்களத்தினருடைய செயஐ எடுத்துக்காட்டலாம். செந்தமிழல்லாத பிற தமிழ் வடிவங்கள் எவ்வளவுதான் வழக்கில் இருந்தாலும், அவற்றை இவர் கள் ஏற்க மறுத்து, தூய வடிவங்கள் (அதாவது, மறைமுகமாக, தராதரவடி வங்கள்) எனத் தாங்கள் கருதும் வடி வங்களை ஏற்கின்றனர். இதனல், ஷேக்ஸ் பியர் என்று நிலைபெற்றிருக்கும் வடிவம் கட்டாயமாக செகசுப்பிரியர் என்ற ώνι - வத்தைப் பெறவேண்டியுள்ளது. இந்த இரண்டாவது வடிவத்தின் சிறப்பு என்ன

Page 41
வென்ருல் அது தூய தரா தரத் தமிழின் விதிகளுக்கிணங்கியதாக இரு க் கி ன் ற தெனக் கருதப்படுவதாகும். இக் கருதி தினேவிட, தராதரத் தமிழ் பற்றிய வேறு கருத்துக்களும் இலங்கையில் தமிழ்மொழி விலே அக்கறை கொண்டுள்ள அறிஞர் கள் மத்தியிலே நிலவுகின்றன. தூய தமி ழுக்காகப் பரிந்து பே சு ம் அறிஞர்க குடைய கருத்திலிருந்து பெரிதும் வேறு படும் கருத்தொன்றை உடைய அறிஞர் கள் சிலர் இலங்கைப் பல்கலைக் கழகத் தில் இருக்கின்றனர். அவர்கள் ஆற்று கின்ற விரிவுரைகளிலும் எழுதும் கட்டுரை களிலும் இடம் பெறும் வழக்கு இக் கருத்தினைத் தெளிவாகப் புலப்படுத்து கின்றது. இத்தகைய பல்வகைப்பட்ட கருத்துக்கள் பின்னர் மதிப்பிடப்படும்; இப்பொழுது, அவற்றின் முக்கியத்துவம் என்னவெனில் அப்படியான வேறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன என்பதே. அதாவது ஒரு தராதர மொழி பற்றிய கருத்தொன்று - பலராலும் பயன்படுத்தப் படவேண்டி.ப தராதர மொழி எதுவாக இருக்கவேண்டும் என்ற கருத்து-இலங் கையிலே தமிழைப் பயன்படுத்துவோர் களிடையே நிலவுகின்றதென்பதைச் சற் தேகத்திற்கு இடமின்றிச் சுட்டிக்காட்டு கின்றன. மயே இவற்றின் முக்கியத்துவ மாகும் நடைமுறையில் இல்லாவிட்டா லும் பெயரளவிலாவது, தமிழைப் பயன் படுத்துவோர் தாம் பேசவேண்டுமென் றும் எ ஓதவேண்டுமென்றும் தம் பிள்ளை களுக்குப் பாடசாலைகளிலே கற்பிக்கப்பட வேண்டுசென்றும் விரும்பும் மொழியே இந்த மொழி.
ஒரு மொழியைப் பயன்படுத்துவோர் அம்மொழி தராதரப்படவேண்டும் என் னும் கருத்”தக் கொண்டிருக்க முடியு மென்ருலும் , உண்மையில் அத்தகைய கருத்து எந்த மொழியைப் பொறுத்த மட்டிலும் இயல்பாகவே காணப்படும் அம்சம் அன்ஜு; அப்படி இயற்கையாகவே காணப்படும் அம்சமாக இருப்பதற்கு

முற்றிலும் மாருகவே அது இருக்கின்றது: எல்லா மொழிகளிலும் நாம் தெளிவா கக் கானக்கூடிய இயற்கை அம்சம் என்ன வெனில் அவை மாறுபட்டும் வேறுபட் டும் செல்லுகின்றமையாகும் ஆளுல் இப்போக்குக்கு எதிரான ஓர் அம்ச மாகவே மொழிகள் தராதரப்படுத்தப் படவேண்டும் என்னும் கருத்து அமை கின்றது எந்த ஒரு மொழியை எடுத் துக் கொண்டாலும் அம்மொழியைப் பயன்படுத்துவோர் தனி ஒரு பெரும் மொழிச் சமூகத்தைச் சேர்ந்தவராகக் காணப்படுவர். ஆனலும் இப் பெரும் மொழிச் சமூகம் பல்வேறு சிறு சமூகங் களை உள்ளடக்கியதாகவே உண்மையில் காணப்படும் (இங்கு மேற்கூறிய பெருஞ் சமூகத்தைப் பெருமொழிச்சமூகம் எான் றும் சிறியதைச் சிறுமொழிச்சமூகம் என்றும் இனிமேல் குறிப்பிடுவோம்); சிறுமொழிச் சமூகங்களின் எல்லைகள் (வரையறைகள்) புவியியல் அடிப்படையிலுள்ள எல்லை களாக அல்லது சமூக எ ல் லைக ளாக அமையலாம். சமூக எல்லைகள் என்ருல் கல்வி, வர்க்கம், இனம், சமூகப்பிரிவுகள் போன்ற காரணிகளால் ஏற்படும் எல் ஜலகள் அல்லது கட்டுப்பாடுகள். சில எல்லைகள் நிச்சயமாக ஒன்ருே டொன்று பெருமளவிற்கோ சிறிய அளவிற்கோ இணைத்து கொள்ளும் எல்லைகளாகும்: எப்படியும், ஒவ்வொரு சிறிய சமூகத்திற் குள்ளும், அச் சமூகத் தினரிடையே தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கைத் தொடர்புகளால், தவிர்க்கமுடியாத வகை யில் அவர்களுடைய பேச்சின் ஒலி அமைப்பு, சொற்ருெகுதி, சொற்ருெடர் களின் அமைப்பு ஆகியவை சம்பந்தமாக ஓர் ஒருமைப்பாடு வளர்ந்துகொள்ளும். ஒவ்வொரு சிறுமொழிச் சமூகத்திலும் ஒருமைப்பாட்டை நோக்சிச்செல்லும் இந்தப் போக்கானது, அச்சிறுமொழிச் சமூகங்கள் அடங்கிய பெருமொழிச் சமூ கத்தைப் பன்முகப்படுத்தி அதில் வேறு பாடுகளை ஏற்படுத்தும் ஒரு போக்காக
39

Page 42
அமைகின்றது. இதனைப் பின்வருமாறு விரித்துக் கூறலாம், சிறுமொழிச் சமூகம் ஒவ்வொன்றிலும் உள்ள மக்களின் எண் ணிக்கையை விடப் பெகுமொழிச் சமூ கத்திலுள்ள மக்களின் எண்ணிக்கை பெரி பது எந்த ஒரு சிறுமொழிச் சமூகத்தி இம் ஏற்பட்டிருக்கும் ஒருமைப்பாடா னது எந்த அளவிற்குப் பெரிதாக இருக் கின்றதோ அந்த அளவிற்கு அச் சமூகத் திற்கும் அதன் பெருமொழிச் சமூகத்தி லுள்ள பிற சமூகங்களுக்குமிடையில் உள்ள வேறுபாட்டின் தன்மை பெரிய தாக இருக்கும். இங்கு நாம் வர்ணித் துள்ள இந்தப் போக்கினலேயே தமிழ் மொழி பல்வேறு கிளைமொழிகளாகவும் கிளைமொழிகளைப்போன்ற - பிரிவுகளாக வும் பிரிந்திருக்கின்றது. உதாரணமாக, புவியியல் அமைப்பினுல் தமிழ்மொழி பேசும் சமூகம் சென்னை அல்லது தமிழ் நாட்டுச் சிறுமொழிச் சமூகமாகவும் யாழ்ப்பாணத்துச் சிறுமொழிச் சமூக மாகவும் பிரிந்து நிற்கின்றது. இந்தச் சமூகங்கள் ஒவ்வொன்றிலும் தனித் தனியே அபிவிருத்தியடைந்துள்ள மொழி வழக்கின் ஒருமைப்பாட்டினல் அறிஞர் கள் யாழ்ப்பாணக் கிளைமொழி, தமிழ் நரிட்டுக் கிளைமொழி என இரண்டு கிளை மொழிகளை ஏற்படுத்தி அவற்றை வேறு படுத்தி வைத்துள்ளனர்.
இந்த விளக்கத்தைவிட்டு, மீண்டும் தராதர மொழிபற்றிய கருத்தினை எடுத் துக் கொள்வோம்; மேலே காட்டப்பட் டது போல, மொழியைத் தராதரப் படுத்த வேண்டுமென்ற கருத்து ፴® மொழியில் நாம் காணுகின்ற இயற்கை யான போக்குக்கு மாருனது. அதாவது இயற்கையாக ஒரு மொழி வேறுபாடுகளை உடையதாக வளரும்போது, அந்தப் போக்கினை எதிர்த்துச் செயற்கையான முறையிலே வேறுபாடுகளை மேவி ஓர் 6G36zotDütum G (Unifornity) éTib-Gal தற்கு இக் கருத்து உதவுகின்றது.
இங்கு விளக்கப்பட்டுள்ள இருவகை யான போக்குகளும் இன்றைய தமிழ்
40

பேசும் சமுதாயத்திலே காணக்கூடிய வையாய் உள்ளன. அதாவது, ஒரு தரப் பில் மொழி பிரிந்து வேறுபட்டுச் செல் லும் போக்குக் காணப்படுகின்றது. மறு தரப்பிலே, பெயரளவிலாஞலும்சரி, இந்த பிரிவினகளை எதிர்த்து ஒருவகைப் பட்ட ஒருமைப்பாட்டை மொழி மீது திணிப்பதற்கு அம்மொழியைப் பேசு வோர் முயலுவதைக் காணலாம். இந்த இருவகையான போக்குகளிலும், முத லாவதே ஆராய்ச்சியாளருடைய கவனத் திற்கு ஆளாகியிருக்கின்றது எனலாம்; ஸ்வெலபில் என்ற செக்கோஸ்லாவாக்கிய அறிஞர் இதுபற்றி இரு கட்டுரைகளை 6.Typ Syair GMT Tfî. A Few notes on Colloquial Tamil’ * “Tamil in Synchromy and Dachromy 8 என்பன அவை. இவற்றிலே சில பயனுள்ள யோசனைகள் இடம்பெற் றுள்ளன. இவற்றின் அடிப்படையிலே, சில திருத்தங்களுடன், தமிழ்க் கிளை மொழிகளை (Dialects) பெருமளவு பூரண மாக ஆராய்ந்து கொள்ள முடியும்; இவ் விஷயம் சம்பந்தமாகப் பெருமளவு ஏற் பாடுகள் இன்னும் செய்யப்படாதிருக்கின் றன. இருந்தும் இந்த விஷயத்தை ஆழ மாக ஆராய்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்த முறையிலே வேலை ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்று கூறவேண்டும்
தமிழ் மொழியிலே காணப்படும் பிரி வினைப்போக்கு இத்தகைய கவனத்தைப் பெற்றிருந்தபோதும், தமிழ் மொழியிலே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான தராதர மொழிக் கருத்து ஆராய்ச்சி யாளருடைய கவனத்தை எதுவிதத்திலும் புெறவில்லை என்றே தோன்றுகிறது.
இதஞல், இப் பிரச்சினையின் அடிப் படை விஷயங்கள் மறைக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக அறிவுத் துறை. சாராத போலிக் கருத்துக்கள் இப்பிரச் இனையில் இடம்பெறுவது இலகுபடுத்தப் பட்டுள்ளது; இவ்வாறுதான். "மொழி யில் தனித்திறன்", "முன்னுேருடைய

Page 43
அறிவுச் சிறப்பு" போன்ற கருத்துக்களை பலர் அடிக்கடி குறிப்பிட்டு, இப் பிரச் சினை சம்பந்தமான விவாதத்தைக் குழப்புகின்றனர்; “மொழியின் தனித் 5 spoir" (Genius of the language) upfistu கருத்து எங்களுடைய விவாதத்தில் பய னுள்ளதாக அமைய வேண்டுமென்ருல், அக்கருத்தின் வரைவிலக்கணம் என்ன என்பதை சார்பற்ற முறையிலே எடுத்துக் கூறுதல் அவசியமாகும். ஆனல் இக் கருத்தினைப் பயன்படுத்தி வாதாடுபவர் கள் அத்தகைய வரைவிலக்கணத்தைக் கொடுக்கத் தவறுகிருர்கள். இதனைவிட, "முன்னுேருடைய அறிவுச் சிறப்பினை" எடுத்துக் கூறி வாதாடுவது எங்கள் விவா தத்திற்குப் பயனளிக்கும் என்பது சந் தேகம். அதாவது, முன்னுேருடைய மொழி வழக்கு தற்காலத்தவர்களுடைய வழக்கினைக்காட்டிலும் உயர்ந்தது என்று முன்னுேர் வழக்கிற்கு ஒரு விசேஷ மொழியியல் ரீதியான அல்லது தத்துவ ரீதியான பரிசுத்த நிலையை அளிப்பது எங்களுடைய தராதரத் தமிழ் பற்றிய விவாதத்திற்குப் பயன் கொடுக்கும் என் பது சந்தேகம்,
மொழியியலைப் பொறுத்தமட்டிலே இத்தகைய முயற்சிகள் நிச்சயமாக அர்த்தமற்றவை. எந்த மொழியையும் அல்லது ஒரு மொழியின் எந்த ஒரு வடி வத்தையும் (Form) எடுத்து, அதன் (3) uáis (Ip69Ap60) u u ub (Mechanism) egy gi செயற்படுவதற்கு உதவும் வழிவகைகளை யும் (Devices) விவரிப்பதே, மொழியிய வின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற விஷய ரீதியான (Objective) சில ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த ஆராய்ச்சி முறைகள் மொழியின் தன்மையைப் பற் றிய சில ஊகங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்ட முறைகள். இந்த ஊகங் கள் சரியா பிழையா என அனுபவ ரீதி யாகச் சோதிக்கப்படத்தக்கவை. அதுமட் டுமல்லாது, இவை எந்த மொழி-அரசை

aqub (etat de langue, - language-state) grrr யத்தக்க முறையிலே (அந்த மொழி-அரசு எத்தகைய மொழி வடிவத்துடன் சம்பந் தப்பட்டதாக இருந்தாலும் சரி) ஒரே மாதிரியாகப் பயன்படுத்தத்தக்க ஆரா ய்ச்சி முறைகள். இம் முறைகளை உப யோகித்து ஆராய்வதன் மூலம் பெறப் படும் முடிபுகள் (Results) ஒரே மதிப்பு (Vaidity) உடையவை உயர்வு தாழ்வு பற்றிய மதிப்பீடுகளுக்கு இடமளிக்கக் கூடிய அம்சங்கள் இவற்றுள் இடம்பெரு, இதனுல், விவரண மொழியியலின் ஆராய்ச்சி முறை ஒரு நொதுமல் நிலையில் (Neutrality) இருக்கின்றது என்று கூற லாம். இப்படியான நொதுமல் நிலையிலே இந்த ஆராய்ச்சி முறை இருப்பதனல், அதனைப் பயன்படுத்தி நாம் பெறும் முடி புகளைச் சரியோ என்று நிரூபிக்கத்தக்க தாய் இருக்கின்றது. அதே நேரத்தில், தராதர மொழி சம்பந்தமான பிரச்சினை களை ஆராயுமிடத்து இந்த நொதுமலான ஆராய்ச்சிமுறை நிச்சயமாக ஒரு கட்டுப் பாடுள்ள வகையிலேதான் உதவும் என் பதும் புலப்படும். தராதர மொழி சம் பந்தமான பிரச்சினை என்னும்போது பல வகையான மொழி வடிவங்களிலிருந்து ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கும் பிரச் சினை உள்ளடக்கமாக இருக்கின்றது. எவ்வாறு இந்தத் தராதர வடிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள் விக்கு விவரன மொழியியல் விடைகான உதவாது. ஒரு விதத்தில் மட்டும் அது உதவும் என்று சொல்லலாம். அதாவது, ஒரு குறிப்பிட்ட வடிவம் ஏனையவற்றை விட மொழியியல் அடிப்படையிலே மேலானது என்று கருதி அவ்வடிவத்தைத் தேர்ந்துகொள்ள அறிஞர் எவராவது முயற்சித்தால், அம்முயற்சி பிழையானது என்று காட்ட விவரண மொழியியல் உதவும்.
இதுவரை கூறப்பட்டவை மூலம் ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படுகின் றது; அதாவது தராதர வடிவம் ஒன்
4丑

Page 44
றைத் தேர்ந்துகொள்வதற்கு உதவும் காரணிகள் மொழியியற் காரணிகள் அல்லாதவை என்பது, அக்காரணிகள் எவை என்பதை இப்பொழுது ஆராய்ந்து பார்ப்போம்; எவை அக் காரணிகளாக இருக்கவேண்டுமென்று சட்டமியற்றிக் கூறுவதுபோல நாம் கூற முயற்சிக்கமாட் டோம்; பிற மொழிகளைப் பொறுத்த மட்டிலே எப்படியாக ஒரு தராதர வடி வம் வளர்ச்சிபெற்றது என்பதை எடுத் துக்கூறுவோம். அப்பொழுது, பிற இடங் களிலே இந்தப் பிரச்சினை தோன்றிய போது எத்தகைய காரணிகள் தராதர வடிவம் ஒன்றைத் தெரிந்தெடுக்க உத வின என்று காட்டிக்கொள்ளலாம்:
நாம் முதலாவதாக எடுத்துக்கொள் ளும் மொழி ஆங்கிலமாகும் பிறமொழி களைவிட ஆங்கில மொழியே இக்கட்டுரை யிலே கூடிய அளவிற்குப் பூரணமாக ஆராயப்படும் தராதர ஆங்கிலத்தின் (Standard English) a Janij6op Jggruyö போது எமக்குப் புலப்படும் முக்கியமான விஷயங்களுள் ஒன்றினை முதலிலே குறிப் பிடவேண்டும். ஒரு தராதர வடிவம் எத் தகையதாக இருக்கவேண்டும் என்று இலட்சியமான முறையிலே அறிஞர்களும் பிறரும் தெரிவிக்கும் கருத்துக்கள் (ideal reflections) ஒரு தரப்பிலே காணப்படு கின்றன; மறுதரப்பிலே இருப்பவை, ஒரு தராதர வடிவம் நடைமுறையிலே செயற்படவேண்டிய முறைகள் (practial functions which a standard has to serve) -இவையே அவ்வடிவம் தராதரமாகத் தெரிந்தெடுக்கப்படுவதற்கு உண்மையில் காரணமாய் இருக்கின்றன- இவை இரண்டும் கலக்கப்படாது தெளிவாக வேறுபடுத்தப்பட வேண்டும் இரண்டும் ஒன்ருேடொன்று இணைந்தவையாக இருக் கலாம்; ஆனலும், எங்களுடைய பிரச் சினே ஒவ்வொன்றிலும் உண்மையிலே நாம் கவனத்திற்கொள்ளவேண்டிய விஷ பங்கள் இரண்டாவது தரப்பில் உள்ள அம்சங்களோடு சம்பந்தமுடையவையே
42

அதாவது, ஒரு தராதர வடிவம் நடை முறையிலே செயற்படவேண்டிய முறை களுடன் சம்பந்தமான விஷயங்களே கவ னிக்கப்பட வேண்டியவை
இதனலேதான், ஆங்கி லத்  ைத ப் பொறுத்தமட்டில், அவ்வக் காலங்களிலே சமுதாயத்திலே தோன்றிய குறிப்பிட்ட சில அ வ சி ய மா ன தேவைகளோடு தொடர்புடைய முறையில் தராதர வடி வம் ஒன்று அபிவிருத்தியடைந்து வந் துள்ளது. உதாரணமாக 1066ம் ஆண் டில் நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப் பற்றுமுன் உள்ள காலப்பகுதியை எடுத் துக்கொள்வோம். இக்காலப்பகுதியிலே, அல்வ்ரெட் (Alfred) மன்னனுடைய ஆட் சிக்காலத்தைத் தவிர, பொதுவாக சமு தாயத்திலே கானப்பட்ட நிலைமைகளி னல் அச் சமுதாயத்திற்கு ஆங்கிலத்தின் தராதர வடிவம் ஒன்று தேவைப்பட வில்லை. நாட்டிலே போக்குவரத்து வசதி கள் மிகக் குறைவாக இருந்தன. வர்த்த கம் நாடு முழுவதிலும் பரந்த முறை யிலே அமைந்திருக்கவில்லை. பொதுவாக ஒவ்வோர் இடத்திலும் ஒருவகைச் சுய 260) spany (self-sufficiency) கானப்பட் டது. கடும் தேசிய உணர்ச்சி எதுவும் இல்லாதிருந்தது. இதனல், இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலேயர் அனைவருக்கும் பொதுவான ஒரு தராதர ஆங்கிலம் தேவைப்படவில்லை. என்ருலும், அல்வ் ரெட் மன்னனுடைய காலத்திலே ஆங்கி லேய சமுதாயம் ஒரு தேசிய இனமாக வளர்ச்சி பெறுவதற்கான முதலாவது அறிகுறிகள் தோன்றின. இதே நேரத் தில் ஆங்கில மொழியின் தராதர வடி வம் பற்றிய கருத்தொன்றும் தோன்றி யமை தற்செயலாகத் தொடர்பற்ற முறையிலே ஏற்பட்ட சம்பவம் அல்ல. முன்னைவிடக் கூடிய அளவிலே நிர்வாகம் ஒருமுகமாக்கப்பட்டது. இந்த அளவு எத் துணை சிறியதாக இருந்தாலும், அப்படி யான கூடிய அளவு ஒருமுகமாக்கத்தி ணுலே (centralization) ஒருவகை ஒருமைப்

Page 45
பாடுடைய மொழி (பiform languag) தேவைப்பட்டது. மேலும், அல் ஸ்ரெட் மன்னன் ஆங்கிலக் கல்வியிலே ஆழமான அக்கறை கொண்டிருந்தான். الليل الات التي டைய ஆதரவோடு எழுத்தில் பயன் படுத்தப்பட்ட வடிவம் 'Titten inguage) தராதர வடிவமாக மாறத்தொடங்கி
தராதர வடிவதொன்றை வளர்ப்ப தற்கு எடுக்கப்பட்ட (P) :: J. J. T. Ellir 35, 15 LLவடிக்கை திடீரென ஏற்பட்ட நோர் மானியப் படையெடுப்பினுலே தடைப் பட்டது. இப்படையெடுப்பின் விளேவாக இங்கிலாந்திலே பொழித்துறையிலும் சமூகத்துறையிலும் இதுவரை காணப் பட்ட அமைப்பு மாற்றமடைந்தது. இங் கிலாந்திலே கல்பிமொழியாகப் பல காலம் இடம்பெற் றிரு ந் த லத்தின் மொழியை அதன் உன்னத நிலையிலிருந்து அகற்றமுடியவில் .ே ஆணுல், சான்ருேரி சமூகத்திலே சம்பானே மொழியாக (Language of polite social intercourse) ஆங்கிலம் பெற்றிருந்த இடத்தை நோர் மானியக் கைப்பற்றலின் பின் பிரெஞ்சு பெற்றது. கல்வாதாடுடைய மொழியா கவும், தாழ்குவத்தி வர்களுடைய மொழி யாகவும் ஒரு குறைந்த நிைேய ஆங்கி ஐம் அடைந்தது நிலேமை இவ்வாறு கானப்பட்டபோது தராதர ஆங்கில் வடிவமொன்று வகிர்வதற்கு அவசியம் ஏற்படவில்ஃப், இன் விளேவாக, அடுத்த இரண்டு நூற்றுண்டுகளிலும் ஆங்கிலத் தின் பல்வேறு சிாமொழிகள் (dialects) நாட்டின் வெவ்வேறு LIITS sig gifCSL தொடர்ந்து விருத்தியடைந்தன. (அல்ல் ரெட் மன்னன் தெரிந்தெடுத்த தராதர ஆங்கிலம் இக்காலத்தில் மேற்கு மிட் வண்ட் (Midland) பாகத்திலே ஒதுக்கப் பட்டிருந்தது; அது மா கா ன க் கிளே மொழிகளுள் ஒன ரகக் காணப்பட்டது) இந்தக் கிண்மொழிகளுள் எதுவும் தரா தர மொழி என்று வர்ணிக்கத்தக்கதாக அமையவில்லே.

எனினும், பதினுன்காம் நூற்ருண் டிலே சில புதிய பண்பாட்டு அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகள் செயற் படத் தொடங்கின. இதன் விளேவாகத் தராதர ஆங்கில வடிவமோன்று வளர்ச்சி பெறுவது மீண்டும் அவசியமாயிற்று: இதுவரை சான்ருே ரது சம்பா ஷனே மொழியாக இருந்த நோ ர் மா னி ய பிரெஞ்சுப் தன் சிறப்பினே இழக்கத் தொடங்கியது. இதோடு சம்பந்தப்பட்ட காரணிகளே பண்பாட்டுத்துறையில் இப் பொழுது செயற்படத் தொடங்கின.
இதனே விளங்கிக்கொள்ள பிரான் 3ரிவே நடைபெற்ற சில சம்பவங்களேக் கவனித்தல் அவசியம். பிரான் எபிலே ஏற் பட்ட சில அரசியல், பொருளாதார , சமூக மாற்றங்களின் விளேவாக நோர் மானியப் பிரெஞ்சு இதுவரை பெற்றி ருந்த அந்தஸ்தை அங்கு இழந்தது: பிரான்ஸின் சிறப்பு மொழியாகப் பாரி வியப் பிரெஞ்சு உயர்நில் பெற்றது. இதன் காரணமாக நோர்மானியப் பிரெஞ்சு மொழி தரங்குறைந்ததாகக் கருதப்படத் தொடங்கியது. அந்நேரத் தில் ஆங்கிலேய அரச சபையி:ே நோர் மானியப் பிரெஞ்சு மொழியே சிறப் பிடம் பெற்றிருந்தது. பிரான் வில் ஏற்
பட்ட மாற்றம் இங்கிலாந்தையும் பாதித்தது. பிரான் எயில் Lifa LL பிரெஞ்சு மேலாதிக்கம் பெற்றதைக் கண்ட ஆங்கிலேய அரச சபையினர்
நோர்மானியப் பிரெஞ்சிக்னத் தொடர்ந்து உபயோகிக்கத் தயங்கினர். இந்த இக் கட்டான நிலேயிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆங்கிலேயப் பிரபு குலத்திற்கு இருந்த ஒரு வழி பாரிஸியப் பிரெஞ்சைக் கற்றுக்கொள்ளுதலாகும் ஆணுல் ஆக் காலத்திலிருந்த அரசியல் நிலேயின் கார னமாக பாரிளியப் பிரெஞ் ஐசக் கற்றுக் கொள்வதற்குப் பவத்த எதிர்ப்புக் கானப் பட்டது. மூன்ரு வது எட்வேட் (Edward) மன்னன் காலத்திலிருந்து ஆங்கிலேய மன்னர்கள் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து
生器

Page 46
தம்மை விடுவித்துத் தங்கள் சுதற் திரத்தை நிலைநாட்டத் தொடங்கினர் இதனல், வேண்டுமென்றே பிரெஞ்சியப் பண்பாட்டு அம்சங்களைப் பாதிக்கத் தக்க முறையில் ஆங்கிலேயப் பண்பாட்டு அம்சங்கள் வளர்க்கப்படுவதற்கு வழி வகுக்கப்பட்டது. இவற்றை வளர்ப்பதில் அரச சபை வழிகாட்டியது,
இதுகாறும் ஆராயப்பட்ட காரணி கள் ஒரு தராதர ஆங்கில வடிவம் அபி விருத்தியடைவதற்கு நிச்சயமாக வழி வகுத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை; இக் காரணிகள் பிற அவசியமான தேவைகள் அல்லது நெருக்கடிகள்(Press ures) தோன்றுவதற்கு வழிவகுத்தன. அவை தோன்றியதன் விளைவாக ஒரு தராதர வடிவம் தோன்றுவது தவிர்க்க முடியாததொன்ருயிற்று, அதுமட்டுமல்ல, அவை இந்தத் தராதர வடிவம் எதுவாக இருக்கவேண்டும் என்ற பிரச்சினைக்கும் தீர்வு கண்டன. இச் சம்பவங்கள் நடை பெற்ற காலமளவில், வளர்ந்துகொண்டே சென்ற வர்த்தக நடவடிக்கைகளின் நடு நிலையமாக லண்டன் இடம்பெற்றது: அப்படியான நகரத்துடன் நாட்டின் பல் வேறு பாகங்களிலும் இருந்த வர்த்தகர் களும் பிறரும் தொடர்பு வைத்திருத் தல் அவசியமாயிற்று. இதனல், பதின் மூன்ரும் நூற்றண்டளவில் ஒரு தனிக் கிளைமொழியாக வளர்ந்திருந்து லண்ட னில் பேசப்பட்ட ஆங்கிலக் கிளைமொழி செல்வாக்குப்பெற்ற மொழியாக மாறி யது. இதே காலமளவிலேதான் மன்ன னும் வெஸ்ற்மின்ஸ்டரில் (Westminster) நிரந்தரமாகத்தன் சபையைக் கூட்ட ஆரம்பித்தான். இதனல், லண்டனுக்கும் அரச சபைக்குமிடையில் ந்ெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இதன் விளைவாக லண்டன் நகரத்திலே உருவாகிக்கொண் டிருந்த மத்திய வர்க்கத்திலே லண் டன் கிளைமொழி பெரிதும் பரவியது: இந்த மத்திய வர்க்கத்தினருடைய எண் ணிக்கை பெரிதாக இருந்ததினுல் இக்
44

கிளைமொழி பரவலாகப் பயன்படுத்தப் பட்டது மட்டுமின்றி, உயர்ந்த அந்தஸ் தையும் அது பெற்றது: லண்ட்னுக்கு வெளியேயிருந்த இடங்களிலிருந்து வந்து அடிக்கடி அரச சபைக்குச் சமூகமளித் தோருள் பலர் பிரபுகுலத்தவர், உயர்தரத் திருச்சபை அதிகாரிகள், உயர் குலத் தோர், உயர்தர நிர்வாகிகள் பிற அதிகாரிகள் (பெரும் வழக்கறிஞர்கள் போன்றேர்) ஆவர். தமக்கிருந்த பொது விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள ஒரு பொதுப் பேச்சு முறையும் (Mode of Speech) எழுத்து முறையும் தேவைப் பட்டன. இதனல், இவர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய தராதர மொழி பற்றிய கருத்து வளரத்தொடங்கியது இதுவரை விளக்கப்பட்ட சூழ்நிலையின் விளைவாக இவர்கள் தராதரமாகத் தெரிந்து கொள்ளக்கூடிய மொழி வடிவம் லண்டனில் பேசப்பட்ட மொழிவடிவ மாக இருந்தது. அதாவது, இவர்கள் அனைவரும் லண்டனிலே அடிக்கடி சந் தித்து, அந் நகரத்தை நடு நிலையமாகக் கொண்டு தத்தம் விவகாரங்களைக் கவனித்தபடியிஞல் அவர் ளெல்லோருக் கும் பொதுவான மொழிவடிவம் லண் டன் மொழியாக அமைந்தது. இதனல், தராதரமாகக் கொள்ளுவதற்கு வேறெந்த மொழிவடிவத்தையும் தெரிந்தெடுக்கச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை; அப்பொழுது நிலவிய சூழ்நிலையினுல் பிரச்சினை தீர்க் கப்பட்டது. இதே சூழ்நிலை, லண்டன் மொழியின் உபயோகம் நாட்டின் பல பாகங்களிலே பரவுவதற்கும் உதவியது, ஒக்ஸ்போட் (Oxford), கேம்ப்றிட்ஜ் (Cambridge) ஆகிய இடங்களிலிருந்த பல்கலைக் கழகங்கள் இத் தராதர ஆங்கில மொழியை ஏற்றுக்கொண்டதனல், இம் மொழியின் நிலை மேலும் உறுதியாக்கப் பட்டது. இவ்விரு பல்கலைக்கழகங்களும் எடுத்துக்கொண்ட நடவடிக்கை தவிர்க்க முடியாததொன்முக இருந்தது. ஏனெனில், அப் பல்கலைக்கழகங்களிலே இருந்தவர்க ளும், அவற்றிலிருந்து கற்று வெளியேறி

Page 47
வவரிகளுட் பவரும் அரச சபையுடன் பெருமளவிற்கு ஒழுங்காகத் தொடர்பு கொண்டிருந்தவர்களாவர், இத் தொடர் பிற்கு லண்டன் மொழி இன்நிமையாத தாக இருந்தது. ஆகவே, பதினேந்தாம் நூற்ருண்டளவில் லண்டன் மொழியானது எழுதுவதற்காகப் பயன் படுத்தப்பட்ட ETT FUT LITT ÁLIT (Sta Illa Td in Writing) நன்கு நிஃநாட்டப்பட்டிருந்தது. பேச்சுத் 45LJ TIEJ ĜILI rr Li? Ju T-35 ("Spokcrn standži rid) அது நிலநாட்டப்படுவதற்கு இன்னும் சில காலம் எடுத்தது. இருந்தும் அந்த நிலயை நிச்சயமாக அது அடையும் என்பது அப்பொழுது தெளிவாக இருந்
நிதி
பதினு ன்காம் நூற்ருண்டிலே ஆரம் பித்த போக்கு தடைப்படாது மேலும் வளரத்தக்க முறையிலே பதினேந்தாம் நூற்ருண்டில் ஏற்பட்ட அபிவிருத்திகள் ஆமைந்தன: அந் நூ ற் ரு எண் டி ல், அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாக வும் இங்கிலாந்து ஒற்றுமைப்படுத்தப்பட் டது; அதன் விளேவாக, இங்கிலாந்து ஒரு முகமாக்கப்பட்ட நிர்வாகத்தையுடைய தற்காலத்துக்குரிய தேசமாக (moderncentralized mation) எழுச்சி பெற்றது: அத்ததைய தேசத்தின் சகல விவகாரங் களுக்கும் நடுநிலையமாக (hut of activities) லண்டன் இடம்பெற்றது. இத்தகைய சூழ்நிவேயிலே, ஒவ்வொரு பிரதேசத்து மக்களும் அவ்வப் பிரதேசத்தின் கிளே மொழியைப்பயன்படுத்துவதோடு திருப்தி படைவதென்பது tւքLգ. II-IT 5 TrfEL மாயிற்று. பொது மொழியாக லண்டன் மொழியைப் பயன்படுத்தவேண்டியிருந்த தால், லண்டன் மொழி மேலும் உறுதி பெற்றது. இதே நேரத்திலேதான் இங்கி லாந்தில் நூல்கள் அச்சிடப்படுவதற்கு வசதிகள் ஏற்பட்டன. இதனுலும் லண்டன் மொழி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு வழிவகுக்கப்பட் டது அச்சிடும் முறை ஆரம்பிக்கப்படு முன், எழுத்துவே ஃ பெரும்பாலும் உள்

ளூர்த் தேவைகளேப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட் டது; இதனுல், ஒரு பிரதேசத்திலே எழுதப்படும் நூல்களிலும் ஆவணங்களி லும் அப்பிரதேசத்தில் வழங்கும் உச்ச ரிப்பு வேறுபாடுகளுக்கேற்பச் சொற்களே எழுதிக்கொள்ள முடிந்தது; ஆனுங் அச் சிடும்முறை ஆரம்பிக்கப்பட்ட பின், முன்னே விட மிக விரைவாகவும் பெருந் தொகையாகவும் நூல்கள் வெளியிடப் பட்டன. இந்நூல்கள் முழுத்தேசத்தின் தேவைகளேயும் பூர்த்தி செய்யக் கூடிய வையாய் இருந்தன. இந்த நியிேல், பல்வேறு மொழிவடிவங்கள் நாட்டில் இருப்பது அச்சிடுபவர்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் காணப்பட்ட து: ஒவ்வொரு மொழிவடிவத்திலும் நூல்களே வெளியிடுதல் சிரமமானது என்று கருதிய தினுலும், ஆங்கில இலக்கணம் திட்ட வட்ட மற்றதாக இருப்பதாகக் கருதிபதி ணு,லும் ஒரு தராதர மொழியின் அவசி யத்தை அச்சிடுபவர்கள் உணர்ந்தனர்; இதனுல், வண்டன் கிளே மொழியை அடிப் படையாக வைத்துப் பலவித வழக்கு கஃளத் தராதரப்படுத்த அச்சிடுபவர்கள் ஆரம்பித்தனர்.
இப்படியான நெருக்கடிகள் தோன் நியதன் விளேவாகப் பதிஞரும் நூற்ருண் டின் இறுதியளவில் லண்டன் கிளே மொழி (இப்பொழுது அது ஒரு பிரதேசக் கிளே மொழியின் நிலையிலிருந்து ஒரு வர்க் கக் கிளே மொழியாக (Class dialect) மாறி பிருந்தது எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் பயன்படுத்தப்பட்ட தராதர மாக நிலேபெற்றது.
தராதர ஆங்கிலம் அபிவிருத்தி படைந்த வரலாற்றிலே அடுத்த கட்டம் பதினேழாம் நூற்றுண்டில் இடம்பெறு கிறது. லண்டன் கிளே மொழி தராதர மொழியாக நிெேபற்றி ரு ந் தா லூ ம், அதன் எழுத்து வடிவம் (Writter form) ஒரு குறைபாடுடையதாக இருந்தது:

Page 48
கருத்துப் பொருட் சிந்தனை யை யோ (Abstract thought) sägs ajáë Saềsiðar GO) u G3 Lumr (Philosophical thought) efo GGT Gauré 6?558kor68) du G3 (Lurr (Scientific thought), விளக்குவதற்கு வேண்டிய மொழியமைப்பு (Structure) இத் தராதர மொழிக்கு இருக்கவில்லை. பெக்கன் (Bacon) தனது greavint Suu Novum Organtum a T6ăTu Gaos ஆங்கிலத்தில் எழுதாது ஏன் லத்தீன் மொழியில் எழுதினுர் என்று விளங்கிக் கொள்ள இவ்விஷயம் உதவும் உண்மை யில், பதினேழாம் நூற்ருண்டுவரை லத் தீன் மொழியே சிந்தனை மொழியாகவும் (Language of thought) is 6969 Goudirfurras ayib (Language of learning) QUE L'IL 5 fið gjë சிறந்த மொழி என்ற கருத்து நிலவியது. இதன் விளைவாகச் சிந்தனைத் துறையிலும் கல்வித் துறையிலும் பயன்படுத்தப்படுவ தற்கு ஆங்கிலம் தகுதியுடைய மொழி யாகக் கருதப்படவில்லை. இருந்தாலும், ஆங்கிலத்தின் தராதர வடிவமொன்று நிலைபெற்றதும், இத்துறைகளிலும் அம் மொழி பயன்படுத்தப்படத் தொடங்கி யது. இதன் பேருகப் பதினேழாம் நூற் முண்டின் இறுதியில் வேத்தியல் கழகம் (Royal Society) தாபிக்கப்பட்டது. பரந்த புலமை விருத்திக்கு ஒரு கருவியாக ஆங் கிலத்தைப் பக்குவம் செய்வது இக்கழ கத்தின் நோக்கமாக அமைந்தது. இத்த கைய முயற்சிகள் தொடர்ந்து பதினெட் டாம் நூற்ருண்டிலும் எடுக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்ருண்டின் பின் ஏற் பட்ட பல்வேறு சிறு மாற்றங்களை இங்கு எடுத்துக் கூறவேண்டிய தேவை இல்லை.
இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தராதர ஆங்கிலத்தின் அபிவிருத்திக்கு உதவிய காரணிகள் இதுவரை எடுத் துக் காட்ட ப் பட் ட். வை யே. இம் மொழியின் வரலாறு முழுவதையும் ஆராய்கின்றபோது, அம்மொழி எத்த கையதாக அமையவேண்டுமென்பதை க் கூறும் இலட்சியக் கருத்துக்களும் (Ideatreflections) தெரிவிக்கப்பட்டே வந்தன
46

என்பது புலப்படும். ஆனல் தராதர மொழி வளர்ச்சி பெறுவதற்கு இக்கருத் துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவகையிலே உதவவில்லை என்றே கூறவேண்டும். உதா ரணமாக, பதினைந்தாம் பதினரும் நூற் ருண்டுகளிலே, "நல்ல ஆங்கிலம்" (Good English) சம்பந்தமாகத் தெரிவிக்கப்பட்ட இலட்சியக் கருத்துக்களின்படி லண்டனின் மூலநகரக் கிளைமொழியைப் (Metropolitan London dialect) பொது மொழியாகக் (Norm) கொள்ளுவது சரியான செயல் என்று கருதப்பட்டது. இதுவே "மன்னன் QLDnA' ('King's English'); கூடியளவு 'Garthold' ('Elegance') "நுட் பம்" ("Fineness”) Gurgirp சிறப்பியல்புகள் இதனைப் பிற “கொடும்" ("Rude') Gr தேசக் கிளைமொழிகளி லிருந்து வேறு படுத்துகின்றன என்பன போன்ற கருத் துக்கள் நிலவின. பதினேழாம் பதினெட் டாம் நூற்றண்டுகளிலே, அதிகம் பிரபு வர்க்கத்தைச் சாராத, கூடிய அளவிற்கு மத்திய வரிக்கத்தைச் சார்ந்த கருத்தாகிய 'நிறைமை" அல்லது "குறையின்மை" ("Correctness") uibou கருத்துடன் தொடர்புடைய இலட்சியக் கருத்துக்கள் நிலவின. பின்னர், இருபதாம் நூற்ருண் டிலே, கிளை மொழிகளின் 'மிலேச்சப் பண்புகளை"க் ("Barbarisms") "கண்டு திடுக் குற்ற ருெ பெற் ப்ரிட்ஜெஸ் (Robert Bridges) &5 (Tair és (Digith தராதரமொழி by 4p6GuLuổv FITri gös Lu Luleår (Aesthetic function) உடையது என்ருர் ? இப்படியாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், நாம் முன்பு காட்டியதுபோல, இந்த இலட்சியக் கருத்துக்களுள் எதுவேனும் அபிவிருத்தியை உண்மையில் நிர்ணயிக்க வில்லை என்பது தெளிவாகின்றது. எது சரியான வழக்கு எது பிழையான வழக்கு என்பதைப் பற்றிய தத்துவக் கருத்துக்கள் (Philosophical notions) gav L" SA Luši as(Bồ . துக்களைவிட மேலும் குறைந்த முறையி லேயே தராதர மொழி வளர்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றைக் காட்டிலும், நடைமுறைச் சமூகக் காரணி

Page 49
is Garr (Practical social factors) as TT5g மொழியின் அபிவிருத்தியை நிர்ணயித் துள்ளன:
இதே முடிபினே வலியுறுத்தும் சான் றுகள் வேறு இரு தராதர மொழிகளேச் சிறிது நோக்குமிடத்து நமக்குக் கிடைக் EsäTIJGT - -gnusspéir ஒன்று பஹா gšGTfs Bahasa Indonesia).g) தான் இந்தோனிஸியாவின் 岳厂T岛闻 மொழி. இந்தோனிஸியாவில் அடங்கு கின்ற எண்னற்ற தீவுகளிலே பல்வேறு வகைப்பட்ட கிங் மொழிகள் பேசப் LIL-Gelug SäPET. இந்தோனினியா சுதந்திரம் பெற்று ஒரு தேசீயத்துவ நி&லயை (Nationh00l) அடைந்ததும், எல்லாத் EA = SCfSJh , ALI Girlsi; கூடிய ஒரு பொது மொழி பெரிதும் தேவைப்பட்டது. அப் பொது மொழி மூலம் தேசியத்துவ உணர்வினே (80ே8: of nationhoன்ச்) நடைமுறையிலே நிர் வாகம் முதலியவற்றில் தெரிவிப்பதற்கு அவ்சியம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல, தேசியத்துவ உணர்வின் வெளிப்படுத் தும் ஒரு குறியாக (Symbol) இப் பொது மொழியை உருவாக்கிக்கொள் ள வு ம் அவசியம் ஏற்பட்டது. அப்பொழுது இந் தோனிலியாவிலே பல இலக்கியக் கிளே Glost Asir (Literary dialects, gy 5 stalgi இலக்கியச் சிருஷ்டிகளுக்காகப் பயன் படுத்தப்பட்ட கிளமொழிகள்) இருந்தன. ஆணுல், அவற்றுள் ஒன்றுவது நாடு முழு வதிலும் வாழ்ந்தவர்களால் விளங்கிக்
கொள்ளத்தக்க மொழியாக இருக்க வில்லே. இதஞல், அவற்றுள் எதை யேனும் பொது மொழியாகப் பயன்
படுத்த முடியவில்லே. இப்படி எல்லா ராலும் விளங்கிக்கொள்ளக்கூடிய மொழி யாகக் காணப்பட்ட கிளே மொழி இலக் கிய மொழியல்வாத தரங்குறைந்த ஒரு Ln aurr tử GLTTg/? sư Lg sư LDTg, Lh. (A T1{1n-Literary lower class form of Malay). - as ar, இதனேயே தராதர மொழியாக இந்தோ எனினியர் தெரிந்தெடுத்தனர். ஒரு தற்

காலத் தேசமாகியா இந்தோணிவியாவின் வேறு மொழித் தேவைகளேப் பொறுத்த மட்டில் இந்தக் கிளே மொழி சில குறை பாடுகளே உடையதாகக் கானப்பட்டது: சொற்ருெ குதி (Wocabulary), மொழி யமைப்பு (StTபcture) ஆகியவை சம்பந்த மான குறைபாடுகளே இவை. எனினும், இப்பொழுது ஏற்பட்டுள்ள தேவைகளின் நெருக்கடியினுல் அல்லது அவசியத்தி ஞல் இக் குறைபாடுகள் மிகு விரைவாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன: இக் கிளமொழி இப்பொழுது ஒர் இலக் Si Lu (QLDT is aup- GIJI LIDT ES (LitĽTary form) மாறியுள்ளது. பெருந்தொகையான புதுச் சொற்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
நடைமுறையிலே ஏற்படும் தேவை களேப் பூர்த்தி செய்ய இதுபோன்ற உணர்ச்சி ஒன்று உண்டான தையே சீனு, வில் அபிவிருத்தியான தராதர மொழி யும் காட்டுகின்றது. 1949-ல் நடைபெற்ற புரட்சி ஈட்டிய பல சாதனைகளுள் ஒன்று சீனுவை ஒரு தற்காலத் தேசமாக (தற்கால என்பது இங்கு சாதாரண கருத்திலல்லாது மிக அடிப்படையான ஒரு கருத்திலே இடம்பெறுகின்றது) மாற் Its Lugii) Li Li Ti (The conversion of China into a modern nation in the most fundamental sense of the term). 3) is மாற்றத்தின் விளேவாக நடைமுறையிலே பயன்படுத்துவதற்கு ஒரு தேசிய மொழி அவசரம் தேவைப்பட்டது; சீனுவிவே பேசப்பட்ட கிளே மொழிகளே ஆராய்ந்தபோது, அவற்றுக்கிடையே பெரும் வேறுபாடுகள் காணப்பட்டன; உதாரணமாக, பீக்கிங் கிளே மொழியில் நான்கு குரல்வகைகள் (tones) இருந்தன; ஆணுல் கன்ரன் கிளே மொழியில் ஆறு குரல் வகைகள் இருந்தன.) இவ்வேறு பாடுகளினுல், ஒரு கிளே மொழியைப் பேசுபவர் இன்னுெரு கிண்மொழியை விளங்கிக்கொள்ள முடியாதிருந்தது ஆகவே, நடைமுறையில் இவ்வாறு பல் வேறு கிளே மொழிகள் இருப்பது தேசீய
士直

Page 50
För, LéG (National integration) als வகுக்காது தேசத்தைத் துண்டுபடுத்து வதற்கே (Fragmentation) உதவக் கூடிய தாகக் காணப்பட்டது. ஆனலும், சீன மொழியின் ஓர் அம்சம்மட்டும் தேசீயப் பண்புடையதாக இருந்தது. அதுதான் அம்மொழியின் எழுத்து முறை. இந்த எழுத்து முறை ஒரே வகையான சொற் குறிகளை (Characters) உடையதாக இருந் தது. அதாவது, தாட்டின் பல்வேறு பாகங்களிலும் வழங்கிவந்த பல்வேறு சிளைமொழிகள் ஒரேவகையான எழுத்து முறையையே உடையனவாய் இருந்தன. இதஞல், நாடெங்கிலும் இந்த எழுத்து முறையில் அடங்கிய சொற்குறிகளுக்கு ஒரே வகையான பொருள் கொடுக்கப் பட்டு வந்தது (அதாவது, ஒரு குறிப் பிட்ட சொற்குறி நாட்டின் எந்தப் பாகத்தில் எழுதப்பட்டாலும் ஒரே கருத்துடையதாக அமைந்தது, ஆளுல் அது உச்சரிக்கப்பட்ட முறையிலேயே இடத்துக்கு இடம் வேறுபாடுகள் இருந் தன). இப்படியான முறை மிகவும் சிக்க லான முறையாகும் (பழைய சீனக் சிவில் அதிகாரிகள் பல்லாயிரக்கனக் கா, ன சொற்குறிகளைக் கற்றுக்கொள்ளவேண்டி யிருந்தது); மேலும், இப்படியான முறை மக்களுள் ஒரு சிறு வர்க்கத்தினர் மட் டுமே பிரத்தியேகமாக அறிந்திருந்த முறையாகக் காணப்பட்டது. இவ்வர்க் கத்தினர் பழைய நிர்வாக அதிகாரிகளும் அரச சபையில் இடம் பெற்றவர்களு மாவர் நாட்டின் பிற பிரஜைகளைவிடத் தாம் மேலானவர்கள் என்பதை உறுதிப் படுத்துவதற்காக இவ் வர்க்கத்தினர் இந்த முறையைத் தொடர்ந்து சிக்க லானதாகப் பேணிக் கொள்வதற்குத் தயாராய் இருந்தனர். சீனுவைப்போன்று மிகவும் சமத்துவமான நிலையில் (கொள் கையளவில் மட்டுமல்லாது, நடைமுறை யிலும் கூட) இருக்கும் ஒரு தேசத்திற்கு இந்த எழுத்து முறை மாற்றமின்றி அப்படியே தராதர முறையாகக் கொள் ளப்படுவதற்குத் தகுதியற்றதாக இருந் தது
48

தராதரப் பேச்சு மொழி சம்பந்த மாகவும் தராதர எழுத்து மொழி சம் பந்தமாகவும் தோன்றிய பிரச்சினைகள் பின்வருமாறு தீர்க்கப்பட்டன; சீன முழு வதும் பீக்கிங் கிளை மொழி இரண்டா வது மொழியின் அந்தஸ்தைப் பெற்றது: இதனல் நாடு முழுவதிலும் தொடர்பு கள் ஏற்படுத்துவதற்கு ஒரு தேசீய மொழி இருப்பதற்கு வசதி ஏற்பட்டது: அதே வேளையில், அப்பொழுது வழக்கில் இருந்த எழுத்து முறையை இலகு படு த்த முயற்சி எடுக்கப்பட்டது. இந்த முயற்சியில் கூடிய அளவு ஒலியெழுத்துக் Gsmr6îr Gods (Phonographic Principle) Lulu Gör படுத்தப்பட்டது. (அதாவது, மொழியில் உள்ள தனித்தனி ஒலிகளுக்குத் தனித்தனி எழுத்துக்களை உபயோகிக்ககும் முறை) இதஞல் Lu 600 DL1 சொல்லெழுத்து (yp60 sp6Mu (Logographic principle - SyStr வது, எழுத்து முறையில் இடம் பெற்ற ஒவ்வொரு குறியும் அல்லது சொற் குறி யும் ஒவ்வொரு சொல்லைக் குறித்து நிற் கும் முறை) அகற்ற முயற்சி எடுக்கப் பட்டது. இதன் விளைவாக, நடைமுறை யில் எழுந்த தேவைகளைப் பூர்த்தி செய் யக் கூடிய ஒரு தராதர மொழி உரு வாக்கப்பட்டது:
நாம் இது வரை எடுத்து விளக்கிய மூன்று உதாரணங்களும் சில முக்கிய மான விஷயங்களை நமக்குத் தெரிவிக் கின்றன; அவையாவன: ஒரு தராதர மொழியானது நடை முறையிலே எழும் எத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டப்படுகிறதோ அத் தேவைகளி ஞல் ஏற்படும் நெருக்கடியே (Pressure) அதனை அபிவிருத்தியடைய அல்லது உரு வாகக் செய்கிறது. இதே தேவைகள் தான் பல்வகைக் கிளை மொழிகளுள் எது தராதர மொழியாக அமைகின்றது என்ற கேள்விக்கான பதிலை நிர்ணயிக் கின்றன,
(தொடரும்)

Page 51
அடிக் குறிப்பு
1.
:
0.
11.
at 7:35 dafu frch 5th, P. S. Tolkappiyam: The Madras: The Madras Law Journal Press (1 தோல்காப்பியம்: சொல்லதிகாரம், Annamalai U T. P. Minakshisundaram) egyGörg)LO3v 55i: egy Beschi, Rev. Const: J, A Grammar of the Gang figlisp. Translated by C. H. Hoest Ma A Grammar of High Tamil, Ed. Rev. L. Bes Trans. B. G. Babington, Trichinopoly, St. Jo Pope, G.U., A Grammar of the Tamil Lany Madras: The American Mission Press (1859) A Handbook of the Ordinary Dialect of the (Seventh Edition) Oxford Clarendon Press ( Caldwell, R., A Comparative Grammar of (Second Edition) Revised and Enlarged
London: Trubner and Co., Ludgate Hill (18 Zvelebil, K., 'Spoken Language of Tamiln Zvelebil, K. , 'A Few Notes on Colloquial Zvelebıl, K. , “Tammil in Synchrony and Dia சில மாற்றங்கள் செய்யப்படவேண்டியிருப்பதற்கு பேசப்படும் தமிழ்ப் பிரதேசக் கிளைமொழிக்குப் அவர் இலங்கையை ஒரு தனிக்கிளைமொழி பேசப் 1904 ஜூன் 4ல் வெளிவத்த The Speaker என்ற e7 (! Égu “The Making of English' Grøåt sp SL" “Our speech is at a present in a critical st practical means of oral communication has a fact has to be faced that a very considerabi necessary both for practical differentiation and (degradation) is rapidly eating away into the las Daryish 67G25u “Robert Bridges. His W. Clarendon Press, Oxford (1931) A. T. A. q. 6MU SÐGnj ft (de Souza) Grup 69ulu “The C of Ceylon" என்பதிலிருந்து இங்கு கொடுக்கப்ப J. sicial . (J. Sledd), A Report of the Confe University of Ceylon, Peradeniya, January 3. iq- EU TE) GAUIT, ““The Changing Place of English
வரலாறு என்
'வரலாறு என்ருல் என்ன? அது மனிதர்களுடை
கருதமுடியுமே; அப்படிச் சடப்பொருளாக அவர்கள் தில் இடம்பெற வேண்டிய விஷயம் அல்ல, பெளதி பொருள், மிருகங்கள் ஆகியவற்றைக்கொண்ட "இய, களின் விளைவாக ஏற்படும் சம்பவங்களே வரலாற்றி
இயக்கத்தைப் பற்றிய விதி; சடப்பொருள்களாகவே கவோ மனிதர்கள் இயங்குவதைப் பற்றியது அல்ல, படும் முறையிலே, அவர்கள் சமூக அமைப்புடைய பி Further Studies in a Dying Culture, C. G5 it Gal

Earliest Extant Tamil Grammar, Vol. I, Mylapore. 530) niversity Tamil Series No. 9 (General Editor: ண்ணுமலைப் பல்கலைக்கழகம் (1945). Common Dialect of the Tamil Language called dras, Verpery Mission Press (1835).
se,
seph's Industrial School Press (1917), ruage in Both its Dialects, (Second Edition)
Татil Language, 1911) the Dravidian or South Indian Family of Languages
75) ado, Archiv Orientalni, 32, Lé. 237–263. (1962) Гаni", Tamil Culture, X, Lud. 36-47 (1963) chrony”, Tamil Culture, XI, jáš. 339-352 (1964) க் காரணம் என்னவெனில் ஸ்வெலபில் இலங்கையிற் போதிய கவனஞ் செலுத்தாது விட்டுள்ளமையாகும். படும் இடமாகக் கருதியுள்ளார்.
பத்திரிகையில் ஹென்றி ப்ராட்லி (Henry Bradley) டுரையிலே பின்வருமாறு கூறியுள்ளார்: ate........ Every language which is used as a
constant tendency to degradation in sound ... the !e amount of difficulty and delicacy of speech is for beauty of Speech............in our English today it it traditions and aesthetics of the language.' Elizabeth ork on the English Language'. SPE Tract XXXV,
hanging Place of English in the Educational System ட்டுள்ள முதலாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. rence of Teachers of English held at the 8, 1960 (பதிக்கப்படாதது)
тUgdu 6 тетбот?
டய கதை. ஆனல், மனிதர்களைச் சடப்பொருளாகக் சில அசைவுகளைச் செய்கின்ருர்களே. இது வரலாற் 6த்தில் இடம்பெறவேண்டிய விஷயம். உயிரற்ற சடப் ற்கையிலிருந்து மனிதகுலத்தை வேறுபடுத்தும் குணங் ல் அடங்குபவை. வரலாறு என்பது மனிதர்களுடைய 1ா, சுவாசிக்கும் பிராணிகளாகவோ, மிருகங்களா ஆனல் இவற்றிலிருந்து திட்டவட்டமாக வேறு ராணிகளாக நடந்து கொள்வது பற்றியது. ii) (Caudwell) London 1949, Lujš. 126-127,
49

Page 52
ஏ. ஜெ. வில்சன்
இலங்கைப் பாரா செயற்பாட்டை நி
அமைச்சு
10த்திரி சபையின் அங்கத்தவர்களை யும் இலாகாக் கருமங்களை ஆற்றுவதில் மந்திரிகளுக்கு உதவும் வண்ணம் நியமிக் கப்பட்ட பாராளுமன்றக் காரியதரிசிகளை யும் இது அடக்கும் எல்லா மந்திரி களும் மந்திரிசபையின் அங்கத்தவர்களா வர்த
இலங்கைச் சமூகம் ஒரு பல இனச் சமூகமாகையால், அமைச்சு as L-IT tu மாக ஒரு பிரதிநிதித்துவத் தாபனமாக விருக்கவேண்டும். 1956-ம் ஆண்டுவரை நாட்டின் எல்லாப் பிரதான குழுக்களி னதும் பிரதநிதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்தமையால், அது தேசியத் தன்மை வாய்ந்ததாகவிருந்தது. மந்திரி சபையில் இலங்கைத் தமிழ்ச் சமூகத் தின் ஆகக் குறைந்தது இரண்டு அங்கத் தவர்களாவது இருப்பதை ஐ. தே, கட்சி உறுதி செய்தது. அரசகரும மொழிச்சட் டம் நிறைவேற்றப் பட்ட மை யால், 1956 முதல் 1965 வரை ஓர் இலங்கைத் தமிழராவது மந்திரிசபை அங்கத்தவ ராகவோ, பாராளுமன்றக் காரியதரிசி யாகவோ கடமையாற்றவில்லை. 1965-ல் திரு. டட்லி சேனநாயகாவின் மந்திரி சபையில் ஒரு தமிழர் இடம் பெற்ருர், ஆரம்பந்தொட்டு இன்றுவரை ஒவ்வொரு அமைச்சும் கண்டிச் சிங்கள, முஸ்லீம் கிறித்தவமத (சில சந்தர்ப்பங்களில் ரோமன் கத்தோலிக்கரும் வேறுசில சந் தர்ப்பங்களில் புரட்டஸ்தாந்த மதத்த வரும்) பிரதிநிதிகளைத் தம்மகத்தே
50

"ளுமன்ற நிறுவனங்களின் ர்ணயிக்கும் காரணிகள் II
கொண்டிருந்தன. மேற்கூறிய விதத்தில் மந்திரிசபையை அமைத்தல் மிகப் பரந்த ரீதியில் ஆதரவைத் திரட்டுவதற்கு அர சாங்கத்திற்கு வாய்ப்பளிக்கின்றது: மேலும், இச் சமூகங்களில் எவையேனும் புறக்கணிக்கப்படுமானல், இச் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தின் எதிர்த்திறத்தார் பொதுத்தேர்தலில் அச் சமூகத்தினரனைவரும் அரசாங்கத்திற் கெதிராக வாக்களிக்கச் செய்வர் என்ற அபாயமும் இதிலுண்டு. "
இலங்கையின் அரசியலில் பிரதம மந்திரி ஒர் உன்னத ஸ்தானத்தை வகிக் கின்றர் என்ற உண்மை இன்று நிலை நாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு தேசி யத் தலைவராவர். சில சந்தர்ப்பங்களில் பிரிவுத்தன்மைவாய்ந்த கொள்கைகளை அமுலாக்குவதற்குப் பொறுப்பாகவிருந்த போதும், சமூகத்தின் பல்வேறு பிரிவின ராலும் அவர் ஒரு மத்தியஸ்தராகக் கரு தப்படுகிருர், இந்த அடிப்படையில் பூரீ லங்கா சுதந்திரக்கட்சியினது பிரதம மந் திரிகளிலும் பார்க்க ஐ. தே. கட்சியின் பிரதம மந்திரிகள் அதிக பிரதிநிதித்து வத்தன்மை வாய்ந்தோராக விளங்கியுள் Gr6GT rř.: S(U. S. W. R. D. Lu 67 nrr நாயக, அவரது மொழிக்கொள்கை களுக்கு மாருக, சமூகச் சச்சரவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தலவராகக் கருதப் பட்டார். ஆனல் திருமதி பண்டார நாயக இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின ரிடையே இதே ஸ்தானத்தை வகிக்க வில்லை; மேலும், சில முக்கிய பதவி களுக்கான நியமனங்களில் கண்டிச் சிங்

Page 53
களச் சமூகத்தினருக்குச் சார்புகாட்டிய மையால் (அவரும் ஒரு முக்கிய கண்டிச் சிங்கள்க் குடும்பத்தைச் சேர்ந்தவராவர்) இச் சமூகத்தோடு அதிகம் தொடர் புடையவராகக் கருதப்பட்டார்.
அரசியற்றுறையில் பிரதம மந்திரி தனக்கிருக்கும் பெருமளவு அதிகாரத் தைத் தனது கட்சி, அரசாங்கம் என் பவற்றின் நலனையும் தனது அரசாங் கத்தின் தேசியப் பண்பையும் வலுப் படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்கி ருர் அமைச்சுப் பதவிகளுக்கும் பாராளு மன்றக் காரியதரிசிப் பதவிகளுக்கும் நியமனங்களைச் செய்யும் பொழுதும் மேற்சபைக்கும் பிரதிநிதிகள் சபைக்கும் பிரதிநிதிகளை நியமிப்பதற்குத் தேசாதி பதிக்கு ஆலோசனை கூறு ம் போது ம் இவற்றை மனத்திற்கொண்டே பிரதமர் செயலாற்றுகின் ருர். மந்திரிமார்களின தும் தமது பரிபாலனத்தின் கீழிருக் கும் காரியதரிசிகளினதும் எண்ணிக்கை யைக் கூட்டுவதன் மூலம் சில பிரதம மந்திரிகள் பிரதிநிதிகள் சபையில் தம் பெரும்பான்மையைப் பாதுகாத்துள்ள னர். திரு. பண்டாரநாயக இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். அவரது இரண்டாவது பாராளும்ன்றத் தில் பெரும்பான்மை குறுகிய நிலையில், அரசாங்கப்பாராளுமன்றக் குழுவினது அங்கத்தவர்களுள் ஏறக்குறைய அரை வாசிப்பேர் ஏதாவதொரு பதவியை வகித்தமையை ஈண்டு நினைவுபடுத்த லாம். திரு. D. S. சேனநாயகவும் அவ ரது பெரும்பான்மை குறுகிய நிலையில் விரிவான நிர்வாக அமைப்பை நிறுவி ஞர்
பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் தள்ளிப்போடுவதற்கும் கலைப்பதற்கும் பிரதமரே தேசாதிபதிக்கு ஆலோசனை கூறுகின்ருர்,
மந்திரிமாரிடையே எழும் பிணக்கு களைத் தீர்த்துவைத்தல், கருத்து வேறு

பாட்டிற்குரிய விடயங்களைப் பற்றி க் கொள்கைகளைத் தீர்மானித்தல், மொழி, மதம், தொழிற்சங்கச் சச்சரவுகள் சம்பந் தமாக எழும் தேசீய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற இன்ஞேரன்ன விஷயங்கள் சம்பந்தமாக மந்திரி சபை பிரதம மந்திரியின் தலைமையில் தங்கியுள் ளது. 1953-ல் அரிசி விலையைக் கூட்டும் அரசாங்கத்தின் முடிவு காரணமாக எழுந்த நெருக்கடி நிலையைச் சமாளிக்கப் பிரதம மந்திரியான திரு. டட்லி சேன நாயக்கவின் தலையீடு அவசியமாயிற்று. சிங்களவரும் தமிழரும் நாட்டின் அரச கரும மொழிகள் என்ற ஐ. தே. கட்சியின் கொள்கையால் 1955-ல் எழுந்த நெருக் கடியைச் சேர் ஜோன் கொத்தலாவலையே தீர்த்துவைத்தார். 1956 தொடக்கம் 1959 வரை தமிழரைச் சாந்தப்படுத்துவ தோடு திரு. பண்டாரநாயக சிங்களத் தீவிரவாதத் சக்திகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது: இக் காலப்பகுதியில் எழுந்த பல வேலைநிறுத்தங்கள் அவரது தலையீட்டின் பின்னரே சமரசமாக்கப் பட்டன.
பிரதமர் தனது சகாக்களிடையே ஒழுங்கை நிலைநாட்டும் அதே வேளையில், இவர்களிடமிருந்து விசுவாசமான சேவை யையும் எதிர்பார்க்கிருர். இவ்வித ஒழுங்கை நிலைநாட்டுவதில் பெரும் பாலான பிரதமர்கள் வெற்றியடைய வில்லை.
திரு. D. S. சேஞநாயகவினது மந் திரி சபையில் அவரது உதவி மந்திரி யாகக் கடமையாற்றிய திரு. S. W. R. D
பண்டாரநாயக ஒரு பெரும் பிரச்சினே யாகவிருந்தார். திரு பண்டாரநாயக மந்திரி சபையோடு ஒத்துழைக்க மறுத்த தோடு, அதனை மறைக்காது பகிரங்கப் படுத்தினர்; அரசாங்கப் பாராளுமன்றக் குழுவில் திரு. பண்டாரநா ப4 விற்கிருந்த செல்வாக்குக் காரணமாக திரு. சேஞ நாயக அவரைக் கட்டுப்படுத்த முடிய
வில்லிை. ஈற்றில், பிரதமர் கூட்டுப்
51

Page 54
பொறுப்புப்பற்றி எல்லா மந்திரிசபை அங்கத்தவர்களுக்கும் ஒரு குறிப்பை அனுப்பியபொழுதும் நிலைமை சீரடைய ණ9ණ්ඨි.
திரு. டட்லி சேனநாயக பிரதமராக நியமிக்கப்பட்டபொழுது அ வருட ன் போட்டியிட்டுத் தோல்வியுற்ற சேரி ஜோன் கொத்தலாவலையைச் சமாளிப்பது அவருக்குப் பெரும் தொல்லையாகவிருந் ABS e
சேர் ஜோன் கொத்தலாவல பிரதம ரான பொழுது, பிரதமர் பதவிக்கு விழைந்து தோல்வியுற்ற அபேட்சகரான திரு. ஜே. ஆர். ஜயவர்த்தன அவருக்குப் பூரண ஆதரவை நல்கவில்லை; மேலும் அவர் பிரதமராகவிருந்த காலத்தில் மந்திரிசபை ஒரு கோஷ்டியாகக் கடமை யாற்றவில்லை என்பதற்கு வெளிப்படை GS ஆதாரங்களுண்டு. ஒரு தேசீயத் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமரின் தகுதிபற்றி மந்திரிமார்கள் அதிகம் திருப்தியடைந்ததாகவும் தெரியவில்லை;
S. S. W. R. D. பண்டார்நாயக தனது சகாக்களிடையே ஒருவித முதன் மைத்தனத்தை வகித்தபொழுதும், அவ ரது மந்திரி சபை ஒரு கூட்டு மந்திரிசபை யாக விருந்தமையால் மார்க்ஸிய சாரா ருக்கும் பூரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கார ருக்குமிடையே மந்திரி சபையில் அடிக் கடி எழுந்த பிணக்குகளை அவர் தீர்க்க வேண்டியிருந்தது. தனது மந்திரி"சபையி லிருந்த எதிர்க் குழுக்கள் முரண்பட்ட கருத்துக்களைப்பகிரங்கமாக வெளியிட்ட சந்தர்ப்பத்தில், மந்திரி சபையின் கூட்டுப் பொறுப்புப்பற்றிய ஒரு சுற்று நிருப ணத்தை அவரும் வெளியிட்டார். 1959-ல் மந்திரி சபையின் பெரும்பான்மையின
59

ரால் நடத்தப்பட்ட ஒரு வே ைநிறுத் தத்தையும் அவர் எதிர்நோக்க நேர்ந்தது: பிரதமர் தனது மார்கஸியவாத விவ சாய மந்திரியான திரு பிலிப்குணவர்த னவை மந்திரிசபையினின்றும் வெளி யேற்ருவிடில், மந்திரி சபைக் கூட்டங்கி ளுக்குச் சமூகமளிப்பதில்லையென இச் சாரார் கூறினர். இவ்விக்கட்டான நிலை யைச் சமாளிக்க முடிTதி பிரதமர் ஈற்றில் பெரும்பான்மையினரின் Gastrdhë; கைக்கு விட்டுக்கொடுத்தார்.
குறைந்து செல்லும் பெரும்பான் மைப் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்து வதற்கான அவகாசத்தை அளிக்கும் நோக்கம் பாராளுமன்றக் கூட்டத் GA95T Lரைத் தள்ளிப்போடும் யுக்தி, 1956-ம் ஆண்டின் பின் பிரதம மந்திரிகளால் அடிக்கடி கையாளப்பட்டது இதில் எதிர்ப்புக்குரியது யாதெனில் அசாதார னமான நீண்டகால எல்லைகளுக்கு அதி னைத் தள்ளிப்போடுதலாகும். சபையில் தோற்கடிக்கப்படலாம் என்ற பயத்தில் அரசாங்கம் சபையை எதிர் நோக்கத் தயங்குகின்றது என்றும் ga & Tidsrom மேற் கொள்ளப்பட வேண்டிய சில கரு மங்கள் அணுவசியமாகத் தாமதப் படுத் தப் படுவதாகவும் எதிர்க்கட்சி குறை கூறிற்று. மறு பக்கத்தில், முக்கிய இலா காக் கருமங்களை மேற்கொள்ள மந்திரி மாருக்கு அவகாசமளிக்க வேண்டியது அவசியமென அரசாங்கக் கட்சியினர் வாதிட்டனர். 1964-ம் ஆண்டின் முற் பகுதியில், சபைக் கூடடம் நீண்டகாலத் திற்குத் தள்ளிப்போட பட்டமைக்கான காரணங்களை விளக்கும் பொழுது திருமதி பண்டாரநாயக்க அவசரமான வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சியின் தடுப்பு உபாயங்களி ஞலும் சபைக்கிரம விவாதங்களினல் அரசாங்கத்தின் நேரம் பாராளுமன்றத் தில் விரயமாகப் படுவதாகக் கூறினர்3 ஆனல், அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் குன்றிய நிலையில் அதற்கான

Page 55
காரணங்களை ஆராய்வதற்கும் ஏதாவ தொரு சிறு குழுவுடன் கூட்டுச்சேர்வ தற்கான வாய்ப்புக்கள் பற்றி ஆராய்வ தற்கும் தேவையான சகல அவகாசத் தை மந்திரி சபைக்கு அளிப்பதே சபைக் கூட்டம் தள்ளிப்போடப் பட்டமைக் கான உண்மையான காரணமாகும்; திரு. பண்டாரநாயக்க கூடத் தனது கட்சி யின் பெரும்பான்மைப் பலம் குன்றிய பல சந்தர்ப்பங்களில் இந்த வழியைக் se asuntsilmf. உறுதியான பெரும் பான்மைப் பலம் இருந்ததாலோ, அல் லது பெரும்பான்மைப் பலத்தைப் பாது காப்பதற்குத் தம் ஆட்சி அதிகாரத்தை தக்க சந்தர்ப்பங்களில் ப்யன் படுத்திய தரலே 1947-க்கும் 1956-க்கு மிடையே ஐ; தே5 கட்சிப் பிரதம மந்திரிகள் கூட் டத் தொடரைத் தள்ளிப்போடும் உபா பத்தைக் கையாளவில்லை ہے۔
பாராளுமன்றத்தைக் கலைத்தல் என்ற உபாயம் சில சந்தர்ப்பங்களில் சபையை ஒழுங்கு படுத்தும் ஒரு வழி பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 1947-ல் பிரதிநிதிகள் சபையில் (101 அங்கத்தவர் களைக் கொண்டிருந்தது) 42 ஐ. தே8 கட்சி அங்கத்தவர்களினதும் 6 நியமன அங்கத்தவர்களினதும் ஆதரவை மட்டும் பெற்றிருந்த திரு. D. S. சேனநாயக்க, சபையில் தோற்கடிக்கப்பட்டால் பாரா ளுமன்றத்தைக் கலைக்க உத்தேசித்துள் ளார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. இவ்வெறும் அச்சுறுத் தலே பெரும்பாலான சுயேட்சை அங் கத்தவர்களை திரு. D. S. சேனநாயக்க விற்கு ஆதரவளிக்குமாறு செய்தது. ஒரு சிறுபான்மைப் பிரதமருக்குக் கூடச் சபையைக் கலைக்கும் உரிமையுண்டு என தம்பத்தக்கதாக உள்ளது 1960ஆண்டு ஏப்ரல் மாதம் திரு. டட்லி சேஞநாயக்கவின் சிறு பான்மை அர சாங்கம், சபையில் திட்டவட்டமாகத் தோற்கடிக்கப்பட்ட பொழுது, சபையை கலக்கும் அவரது கோரிக்கைக்கு அனு

மதி வழங்கப்பட்டது. 1959 டிசம்பர் மாதத்தில் சபைப் பெரும்பான்மைப் பலத்தையும் தனது பூரீ லங்கா சுதந்திர கட்சியின் நம்பிக்கையையும் இழக்கும் நிலையைக் சந்தேகமற அறிந்த திருத தஹாநாயக்க, நாட்டின் சம்மதத்தைப் பெற விரும்பிய போது, பாராளுமன் றத்தைக் கலைக்கும் அவரது வேண்டு கோளுக்குத் தேசாதிபதி இணக்கம் தெரி வித்தார்:
திருமதி. பண்டாரநாயக்காவும் தனது மந்திரிமாருடன் சில சிக்கல்களை அனுப வித்தாரி அவரது பிரதமர்பதவியின் ஆரம்ப காலத்தில், மந்திரிசபையின் செல்வாக்கு மிக்க ஒரு குழுவினர் நிதி மந்திரியாக விருந்த அவரது மருமகனுன திரு; பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவை வெளியேற்றுமாறு ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர் திரு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் ச டு தியான முன் னேற்றம்பற்றி இம் மந்திரிமார் ஒரு வித அச்சம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அரிசி உதவிப்பணத்தின் மீது கைவைக் கும் திரு. டயஸ் பண்டாரநாயத்கவின் பிரேரணையைத் தொடர்ந்து 1963 ஒகஸ் டிலேற்பட்ட நெருக்கடியின் போது, அவரை ஆதரிக்குமாறு பிரதமர் வற்பு றுத்திய பொழும் பெரும்பாலான மந்தி ரிமாரிகள் அதனை வெளிப்படையாகவே எதிர்ப்பதற்குத் தயாராக விருப்பதாகச் சுட்டிக்காட்டினர்; இந்நிலையில் மந்திரி சபைப் பெரும்பான்மையின் கருத்தைப் பிரதமர் ஏற்கவேண்டியிருந்தது. 1964 டிசம்பரில் உதவிப்பிரதம மந்திரியான திரு. சி. பி. டி. சில்வா, ட்ரொட்ஸ்கிவாதி களுடன் பிரதமர் ஏற்படுத்தியிருந்த கூட்டொப்பந்தத்தை நிராகரித்தமை யால், சிம்மாசனப்பிரசங்கத்தின் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வி auaolu G15 ill-gis ܀ܝ
53

Page 56
மேலே கூறப்பட்ட பல குறை பாடு கள் காணப்பட்ட பொழுதும், அதிகாரத் திலிருக்கும் கட்சியின் கொள்கைகளைச் செயற்படுத்துவதில் மந்திரிசபை திருப்தி யளிக்கும் வகையில் செயலாற்றியுள்ளது. 1949-க்கு முன்னிருந்த மந்திரிசபைகளில் கடமையாற்றிய பெரும்ப்ாலான மந்திரி கள், 1931 முதல் 1947 வரை அமுலி லிருந்த டொனமூர் யாப்பு நிர்வாகக் குழுக்கள் காலந்தொட்டே நீண்டகாலப் பயிற் சி பெற்ற வர்களாக விருந்தனர். எனவே, இவர்கள் தம் பொறுப்புக் களைத் திறமையான முறையில் ஏற்று நிர்வகித்தனர். திரு. பண்டாரநாயக வினது முதலாவது மத்திரிசபை அனுபவ மின்மையால் பல சிக்கல்களை எதிர் நோக்கியது. தொடர்ந்துவந்த பூரீ லங்கா சுதந்திரக் கட்சி மந்திரிசபைகள் தேவை
ରା]]ର )]] [], ଗର୍ଭା ($ରି ଗର୍ଭିରା ?
**வரலாறு என்பது மனிதர்களுடைய கதை மனிதர்களுடைய அனுப்வங்களைப் பற்றிய கன்
நாகரிகமடைந்த சமுதாயங்களிலே வாழும் மல்
54

யான பயிற்சியை ஓரளவு பெற்றிருந் தமை, அவைதம் கடமைகளைத் திருப்தி Ta' முறையில் மேற்கொள்ள வாய்ப் பளித்தது. எல்லா மந்திரி சபைகளும் கூட்டு அடிப்படையில் செயலாற்ற வில்லை என்பது உண்மையாகவிருப்பி னும், எமது அரசியல் வாழ்வில் பிரதம மந்திரியின் அதிமுக்கிய பங்கு காரணமாக அவரது மந்திரிசபைச்சகாக்களிடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்ட சந்தர்ப்பங்களில், தேர்தற்முெகுதியும் பாராளுமன்றமும் அதிகாரபூர்வமான கொள்கைப்பிரகடனம் பற்றிய விடயத் தில் பிரதமமந்திரியிலேயே நம்பிக்கை வைக்கின்றன.
(முற்றும்) மொழிபெயர்ப்பு -
எம். சின்னத்தம்பி B. A. Hons
வேருென்றுமல்ல. சமுதாயங்களிலே வாழும் 2தயே நாம் வரலாறு என்று அழைப்பது. ரிதர்களுடைய கதையே அது."
G. J. GJ Golfulu (Renier)
History - Its Purpose and Method, London 1950), Ludii. 32, 33, 36.

Page 57
...
WHILE IN
For all your requirements
Provisions
Cigarettes
* Groceries
o Luxuries
Textiles
THE JAFENA co-or
HOSPT JA
လ်hop ام
 

JAFFNA
of:-
Motor Spares
* Radio Spares
Batteries
o Tyres Etc., Etc.
ERATIVESTORES ITD,
AL ROAD, FFNA.

Page 58
3. J644 foe
த
TRICOT Nylon Shirting Pla
TRICOT. Nylon Jacket Lac
TRICOT. Nylon Saree mate
TRICOT Nylon Net in Blac SANYO Nylon Shirts 8è? Bu
TRUTEX Nylon Longsleeve
LUX Nylon Baby suits
Plaas Visit:
S.V.R.SAJAYM(
No. 245, M.
COLOMB.
Pole: 3535
இச்சஞ்சிகை பேராதனேக்கக் கல்விங் கழகத்தி நெஷனல் பிரிண்டர்வில் அச்சிட்டு ஆசிரியர் கா.இ

quirements
in & Stripe e in pleasing shades
rials in pleasing colours
k 8 white colours
sh Shirts
shirts - all sizes
HAMED & Co.
in Street,
O - i.
Grams; “PERDESH
னரால் கண்டி 241 கொழும்பு வீதியிலுள்ள நிதிரபாவா அவர்கள்ாள் வெளியிடப்பட்டது.