கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2003.09

Page 1
செப்டெம்பர் 2008
 
 

1.│ │ │ |||||||||||||
|
|
|
|
**-----#): 議후kms.谢 |-|-*闇

Page 2
ளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், 辑畿 பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள்,
இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், 2த்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின்
நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
சாஹித்திய புத்தக இல்லம் இவ. 4. கருநாகல் வீதி, (LIbishUbl)LLffi) H6OdThULDLllsb) புத்தளம்.
T6DbDBudbgllTGGlidiff D3-GG875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ாங்1.ா உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து தலபுபே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்"
38-வது ஆண்டு GaribLi2Oos 298
Mallikai' Progressive Monthly Magazine
Lusoluurtsflas6floor புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201-11, Sri Kathresan Street, Colombo - 13. Te:2320721
變
39வது ஆண்டுமலர் தயாராகின்றது.
மல்லிகையின் தொடர் வரவில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் அதன் ஆண்டு மலர்களின் வரவுதான்.
சென்ற சில ஆண்டுகளாக மல்லிகையின் ஆண்டு மலர்கள் பலராலும்
விதந்து பாராட்டப்பட்டு வந்துள்ளன.
அதற்காக நாம் அர்ப்பணித்த உழைப்பு விலைகளுக்குக் கணக்கீடு எதுவுமே யில்லை.
அடுத்து 39-வது ஆண்டு மலர் தயாரிப்பு வேலைகளைத் தொடங்க வுள்ளோம். 2004 ஜனவரியில் இம் மலர் சுவைஞர்கள் கைகளுக்குக் கிட்டக்கூடும்.
இம்முறை ஆண்டு மலரையும் உருவ, உள்ளடக்கக் காத்திரச் சிறப்புகளுடன் பாதுகாத்து வைக்கக்கூடிய தரமான மலராகவே வெளியிட விரும்புகின்றோம்.
தொடர்ந்து எழுதிவரும் சகோதர எழுத்தாளர்கள் தமது ஆக்கங்கள் முலம் எமது உருவாக்கத்தைச் செழுமைப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளு கின்றோம்.
மலர் அவசியம் தேவையெனக் கருதும் சுவைஞர்கள் முன்கூட்டியே எம்முடன் தொடர்பு வைத்துக் கொள்வது விரும்பத் தக்கது. வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்கள் தொலைபேசி முலம்
தொடர்பு கொள்ளலாம்.
- ஆசிரியர்.

Page 3
ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்.
நான் சென்ற இதழில் எழுதிய இதன் தலைப்புச் சம்பந்தான குறிப்பைப் படித்தவர்கள் பலர் இந்த எனது முயற்சி பற்றிக் கடிதங்கள் மூலமும் தொலைபேசியிலும் பாராட்டிக் கருத்துச் சொல்லியுள்ளனர். தனித் தனியாக அவர்களுக்கு எனது நன்றிகள்.
இந்தப் புகைப்படம் சேகரிக்கும் கையெழுத்தைப் பாதுகாக்கும் முயற்சி பற்றி நானே பல கோணங்களில் யோசித்துப் பார்த்துள்ளேன்.
இப்படியான ஒரு பாரிய முயற்சியைப் பக்கபலம் வாய்ந்த தகுந்த நிறுவனம் ஒன்றுதான் செய்து முடிக்க வேண்டிய தேவையாகும். என்னைப் போன்ற ஒரு சிற்றேட்டுக்காரன் இந்தச் சேகரிப்பு வேலையை ஆரம்பிட் தே ஒரு முன்னோடி முயற்சியாகத்தான்.
இதை மிக வெற்றிகரமாகச் செய்து பிற்காலச் சந்ததிக்கு ஆவணப்படுத்தி வைப்பேன் என்ற உறுதி எனக்கு நிறையவே உண்டு.
மல்லிகையில் படைப்பாளிகள், தகைமை வாய்ந்தவர்களின் உருவங்களை அட்டைப் படமாகப் பதிய வைத்தபோது, அது ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் அட்டை நிரப்பும் வேலையாகத்தான் முதலில் பலராலும் கருதப்பட்டது.
ஆனால், அட்டைப் பட ஓவியங்கள், மல்லிகை முகங்கள், அட்டைப் படங்கள் என மூன்று நூல்கள் அட்டைப் படத் தகவல்களை உள்ள க்கமாகக் கொண்டு வெளிவந்ததன் பின்னர் அந்த வேலையின் ஆழ அகலத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. பலரும் அந்த நூல்களை இன்று தேடுகின்றனர்.
ஒரு சில ஆண்டுகள் இடைவெளியினுாடேயே இந்த வேலை பற்றி இத்தனை காத்திரமான எதிர்பார்ப்பு இருக்குமானால், நான் தொடர்ந்து செய்யப் போகும் சேகரிப்பு வேலை இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் எத்தகைய ஆவண மரியாதையைப் பெற்றுத் தரும் என இப்போதே கற்பனை செய்து குதுாகலிக்கின்றேன். இதைக் கொச்சைப்படுத்துபவர்களைப் பற்றி நான் ஒன்றும் கவலைப்படவில்லை.
- டொமினிக் ஜூவா

VN லங்களுக்காக ஆசிரியத் தலையங்கம் எழுதினார்.
அவருக்காக ஆசிரியத் தலையங்கம் எழுதுகின்நோம், நாம்!
கைலாசபதியின் தினகரன் காலத்தை அவர் பின் வந்த சிவகுருநாதன் அவர்கள் தக்க வைத்துக் கொண்டது மாத்திரமல்ல, அந்தத் தினசரியைத் தொடர்ந்து தனது ஆளுமையின் தனி வீச்சால் செழுமைப்படுத்தியும் உயிரூட்டியும் வந்துள்ளார்.
இன்று இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டு வரும் பல எழுத்தாளர்களை ஊக்குவித்து வந்ததுடன். அவர்களினது படைப்புகளை வார வெளியீடுகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வந்துள்ளதை நாம் நன்றியுடன் இந்த இடத்தில் நினைவு கூருகின்றோம்.
சிங்களவர்களினால் சூழப்பட்டு வாழ்ந்து வந்த பல பிரதேசத்து இளம் முஸ்லிம் படைப்பாளிகளை இனங் கண்டு, ஊக்குவித்து, தமிழ் இலக்கிய உலகிற்கு அவர்களைப் பாரப்படுத்தியதில் கலாசூரி அவர்களுக்குக் கணிசமான பங்குண்டு என்பதை இலக்கிய உலகம் நன்கறியும். ஆரோக்கியமான பங்களிப்பு இது.
து தினகரன் தினசரியின் வார இதழ்களில் இந்த நாட்டுப் படைப்பாளிகளைப் பாராட்டி, ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது வரலாற்றில் இது ஒரு புதுமை. இந்த நாட்டுத் தினசரிகள் இந்த நாட்டுக் கலைஞர்களை எத்தகைய விதத்தில் கனம் பண்ணிக் கெளரவித்துள்ளன என்பதை வரலாற்றுப் பதிவிலிருந்து கண்டு கொள்ளலாம். இத்தகைய செயலுக்காக நமது தினசரிகளில் பெருமிதம் கொள்ளலாம்.
எல்லோரையும் நேசித்தவர். இவர். எல்லோரிடமும் வெகு சுமுகமாக நட்புப் பாராட்டி வந்தவரான கலாசூரி, கொழும்புத் தமிழ் சங்கத்தின் தலைவராகத் தொடர்ந்திருந்து, பல்வேறு இலக்கிய விழாக்களிலும் தலைமையுரை ஆற்றியவர். நகைச்சுவையாகப் பேசும் வல்லமை பெற்றவரான இவரது இழப்பு மிகப் பெரிய சோகம்.
இந்த மண்ணில் கடைசிப் படைப்பாளி இருக்கும்வரை அவரது நாமம் வாழும்! - வளரும்

Page 4
GüGOLÜLLE
அமரர் கலாசூரி. இ.சிவகுருநாதன் அவர்களுக்கு அழியாத ஞாபகப் புத்தகம்
- CLDLD6 assil -
எந்த கணமும் வந்து இறங்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விருந்தாளியை வரவேற்க காத்துக் கொண்டிருக்கும் மனிதரைப் போல் நீங்கள் மரணத்தை எதிர்பார்த்ததனால் தானே ஐயா,
மரணத்தையிட்ட அச்சமற்ற முகத்துடனான உங்கள் நிரந்தர சரீர நித்திரை;
இறுதி மூச்சுவரை
உங்கள் இருப்பில் இருந்த சமூக நேயத்தின் மீதான
உங்கள் விருப்பு - உங்கள் சரீர இன்மைக்கு பின்னும் கூட
உங்கள் சரித்திர இருப்பினை உறுதி செய்தது.
வானத்தைப் போல
உங்கள் மனம் - கலை நட்சத்திரங்களின் வாழ்வு இருண்ட பொழுதெல்லாம் அவர் தமக்கு ஒளி வாங்கி தந்ததனால்தானே

് ബ KON
அவர் தம் விழிகள் இன்று கண்ணிரை வாங்கிக் கொண்டன.
அங்கதமும் சங்கீதமும் பொங்கிடும்
உங்கள் உரைகளின் கரைகளில் எங்கள் உள்ளங்கள் ஒதுங்கிய பொழுதெல்லாம் எங்களுக்குள் பதுங்கிக் கிடந்த கவலைச் சருகுகள் காணாமல் போன கணங்களை நாங்கள் அறிவோம் ஐயா!
எளிமைக்கு ஆயுள் சந்தா கட்டி பந்தா ஏதுமின்றி வாழ்ந்த மனிதர்
உங்களின் ஆயுளை ஆயுள் சந்தாவாய் கேட்ட மரணமோ எடுத்துச் சென்றது
உங்களின் சரீரம் எனும் அட்டைப் படத்தை மட்டுமே!
உங்களது ஞாபகங்களையே என்றுமே அழியாத உன்னதப் புத்தகமாய் வாசித்துக் கொண்டே இருக்கும் எங்கள் மன உதடுகள்!

Page 5
uarfag
- இணுவையூர் உத்திரன்
“பேராசைக்காரன்”
தூக்கி அடிக்கப்பட்ட அந்தப் பந்து பார்வையாளர்களுக்குள் விழுந்து ஆறு ஓட்டங்களைப் பெற்றது.
*விசரன்!”
அடுத்த பந்து நேர்த்தியாக மிடோன் திசையில் நான்கு ஓட்டங்களை அவனுக்குப் பெற்றுக் கொடுத்தது.
''gris,'
ஓங்கி அடிக்கப்பட்ட அந்தப் பந்தும் சோட்லெக் திசையில் பாய்ந்து சென்று இன்னொரு நான்கு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தது. அந்த சர்வதேசப் போட்டியில் அடித்து ஆடிக் கொண்டிருந்தான் வளர்ந்து வரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் கந்தையா கணேஸ்வரன். ஒவ்வொரு பந்தையும் மிகவும் வேகமாகவும் விவேகமாகவும் அடித்துத் துவம்சம் செய்து கொண்டிருந்தான் அவன். அந்தக் கண்களில் தெரியும் உறுதி, முகத்தில் தெரியும் கோபம், கைகளில் தெரியும் வேகம், இதுதான் அவனது வெற்றியின் இரகசியம். அன்றைய தினம் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்ததோடு ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுக் கொண்டான் அவன். கரகோஷம் வானைப் பிளந்தது. ஆனாலும் இந்தப் புகழ்ச்சிகள் எதுவுமே அவனைப் பாதித்ததாகத் தெரியவில்லை. சேவ் செய்யப்படாத முகம், யாருடனும் அதிகம் பேசாத மெளனம், எதையோ பறிகொடுத்தவனைப் போல தோன்றும் அவனுள் நிச்சயமாக ஏதோ ஒரு சோகம் புதையுண்டுதான் இருக்கவேண்டும்.
அன்று அந்த மாலை வேளையில் முதற் தடவையாக பிரசித்திபெற்ற பத்திரிகையொன்று அவனைப் பேட்டி கண்டுகொண்டிருந்தது. வழமையான கேள்விகளையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்த நிருபர் “கணேஸ்வரன் இறுதியாக ஒரு கேள்வி. உங்களுடைய இந்த வெற்றிக்கும் புகழுக்கும் காரணம் யார்? அதாவது தூண்டுகோலாய் இருந்தவர் யார்?” என்று கேட்டார்.
“நிலோசினி கணேசுவிற்கு கொஞ்சம் ரீ போட்டுக் கொடுக்கிறியா?”
“எனக்கு வேறை வேலை இல்லை. வாற்வைக்கும் போறவைக்கும் f போட்டுக் கொண்டிருக்க.” அந்த வார்த்தைகள் அவனை ஈட்டி கொண்டு குத்தும். நிலோசினி

് ബം VN
அவனுடைய மாமாவின் மகள் . கொழும்பிலே பிறந்து, வளர்ந்து, படித்து வருபவள். ஒரே ஒரு பெண்பிள்ளை என்பதால் கொஞ்சம் எதேட்சைப் போக்கும் தான் அடிக்கடி கோபம் வரும் வார்த்தைகள் பறக்கும். மற்றவரைக் காயப்படுத்தக் கூடிய வார்த்தைகள் அவை. கிராமத்தில் இருந்து ஆயிரம் கனவுகளோடு மேற்படிப்பிற்காக கொழும்பு வந்த அவனுக்கு சொந்தம் என்று சொல்லி அவர்களை விட்டால் வேறு யாருமே இல்லை. எவ்வளவுதான் வேதனை கள் உதாசீனங்கள் இருந்தாலும், அந்த விட்டைச் சுற்றித்தான் அவனது சந்தோஷங் களும் அமைந்திருக்கும். அவனைக் கருணையோடு அரவணைக்கின்ற மாமா, மாமியினது அன்பு இந்தக் காயங்களுக் கெல்லாம் ஒரு மருந்தாக அமைந்துவிடும்.
தன்னுடைய பெற்றார் உறவினர்களையெல்லாம் ஊரிலே விட்டு விட்டு நகரத்திற்கு வந்திருக்கும் அவனுக்கு அவளுடைய அன்பும் தேவைப்பட்டது. ஆனால் அவளைப் பொறுத்தவரை கிராமத்துக்காரர் எல்லாம் நாகரிகம் தெரியாதவர் என்ற நினைப்பு எப்பொழுதுமே உண்டு. தனது நட்பையும் உறவையும் கூ நகரத்தில் உள்ளவர் மீதே ஏற்படுத்தி இருந்தாள். இயலுமானவரை அவனைப் புறக் கணித்தும் வந்தாள். ஆனால் நிலோசினி அவனை வெறுக்க வெறுக்க அவள் மீதுள்ள அபிமானம் கூடியதே தவிர குறையவில்லை. இந்த உலகத்திலே இவளுக்கு இணையாகக் கூட என்னால் முடியவில்லையே! அவ்வளவு கீழ்த் தரத்திலா நான் இருக்கிறேன். வாழ்வின் உன்னதங்களில் நட்பும் ஓர் விடயம் என்று கருதும் அவனுக்கு அவள் மீது கொண்ட நட்பு எத்தகையது என்பதை கடைசிவரை இனம்காணவே முடியவில்லை.
2» дђдртії
‘வேண்டாதவன் பெண்டாட்டி கால் பட்டாற் குற்றம் கை பட்டாற் குற்றம் என்பதைப் போல அவனுடைய ஒவ்வொரு சின்ன அசைவுகளுமே அவளுக்கு பிடிக்கா மற்த்தான் போனது. அவள் விரும்பினால் LDL (Btô f.6úì tIIIửdoah.6òII tò. (8/Jtọ(8u III கேட்கலாம். ஏன் சத்தம் போட்டு யாருமே கதைக்க கூடாது. ஏன் இவள் என்னோடு இப்படி? அவளுக்கு பிடித்த மாதிரி என்னுடைய நடவடிக்கைகள் அயைய வில்லையோ? என்னை ஒரு வேண்டாதவன் என்று நினைத்து விட்டாளே! வேதனையாக இருந்தது. அன்று நேரடியாக கேட்டும் விட்டான்.
"நிலோசினி நீ ஏன் இப்பிடி? என்னை ஒரு விரோதி மாதிரி பார்க்கிறாய்? என்னையெல்லாம் ஒரு மனிசனாய்க்கூட நீ மதிக்கிறதே இல்லை. சரி அன்பாய் பேச விட்டாலும் ஆத்திரப்படாமல் பேசலாமே! உங்களையெல்லாம் நம்பி வந்திருக்கிற என்னை இப்படி உதாசீனப்படுத்தக் கூடாது. இனிமேலாவது நாங்கள் நல்ல நண்பர் களாகப் பழகலாமே!”
“ “ lufölömösi உன்னைக் கன்ைடாலே எனக்கு பிடிக் குதில்லை. நியெல்லாம் ஊரிலை இருந்திருக்கலாம் தானே! இங்கை வந்து ஏன் எங்களின்லர கழுத்தை அறுக்கிறீங்கள்? எப்பிடி பிகேவ் பண்ணுறது எண்டு தெரியாது. நாலு இங்கிலஷ வார்த்தை தெரியாது. நியெல்லாம் என்னத்தை முன்னேறி? நீ எங்களின்ரை விட்டுக்கு வா. தண்ணி குடி. சாப்பிடு, அதோடை நிறுத்திக் கொள். உன்னுடைய சொந்த பந்தத்தையெல்லாம் அம்மா, அப்பா கூட வைச்சுக் கொள். உன்னைப் பார்க்கமாட்டன். உன்னோடை பேச மாட்டன். எனக்கு முன்னாலை வந்து நிற்காதை, பிளிஸ். ܝܼܕܐ
கணேஷ்!

Page 6
t அந்த நிராகரிப்புக்கள், உதா சீனங்கள், அவன் பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல, ஓர் ஆண்மகன் தனக்கு ஏற்படுகின்ற அவமானங்களைக் கூட தாங்கிக் கொள்ள முடியும், ஆனால் உதாசீனங்களை தாங்கிக் கொள்ளவே முடியாது. பாடசாலை நாட்களில் கிரிக்கட் மீது கொண்டிருந்த திறமை கை கொடுத்தது. பயிற்சி பயிற்சி பயிற்சி! அந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவனுக்கு இருந்தது கோபம், வேகம், எதையாவது சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி அவா! அந்த வெறிதான் இன்று அவனை இந்த நிலைமைக்கு உயர்த்தி இருந்தது. தேசிய அணியில் இணைந்து கொண்டான். அவனுக்கு எதிராக வீசப்படும் ஒவ்வொரு பந்தையும் பந்தாக நினைக்க வில்லை. அவள் வீசிய வார்த்தையாக நினைத்துக் கொள்வான். அவனின் கவனம் சிதறாது. அந்த பந்து (வார்த்தை)களை நான்கு பக்கமும் அடித்து விரட்டுவான். அதுதான் அவனுக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்தது. அந்த நிம்மதி அவனுக்கு கிடைக்கின்ற பணம், மேலானது. நெஞ்சில் பட்ட காயங்களை யெல்லாம் மறக்க முடிந்தால் நான் எவ்வளவு அதிர்ஸ்டக்காரன்!
665);
‘என்ன மிஸ்டர் கணேஸ்வரன் அதிகமாகவே யோசிக்கிறீங்கள்? உங்களின் இந்த முன்னேற்றத்திற்கு யார் காரணம் என்று கேட்டேன்?” அந்த பத்திரிகை ஆசிரியரின் கேள்வியினால் சுயநினைவுக்கு வந்தான் கணேஸ்வரன்.
“என்னுடைய இந்த முன்னேற்றத் திற்கும் புகழுக்கும் காரணம்? என்னுடைய மாமன் மகள் நிலோசினி!”
புகழ் எல்லாவற்றையும் விட
EXCELLENT
PHOTOGRAPHERS
MODERN COMPUTERIZED
FHOTOGRAPHY
OR WEDDING PORTRAITS
8 CHILD SITTINGS
00, Moder Street, Colombo. 15.
526345
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவக் கோலங்கள்
- ஆசி.கந்தராஜா
கடலிலிருந்து வீசிய உப்புக்காற்று உடலுக்கு இதமாகவும் மனசுக்கு சுகமாகவும் இருந்தது. கடற்காற்றை அளைந்தபடி வண்டி பாலத்தின் மீது சென்றது.
ஆயத்தடியில் நிறுத்தும்படி குரல் கொடுத்தேன். என்னுடைய பத்தொன்பது வயது மகனும் கூடவே இறங்கிக் கொண்டான். மகளும் மனைவியும் வண்டியிலே வீடு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
கைதடியையும் கோப்பாயையும் இணைக்கும் பாலத்தின் கைதடி அந்தலைக்குப் பெயர் 'ஆயம்’. கடலின் கைதடிக் கரையோரமாகக் கோடை காலத்தில் பெருமளவு உப்பு விளைந்திருக்கும். இந்த உப்பினை அறுவடை செய்தோரிடம் அந்தக் காலத்தில் வரி அறவிடப்பட்டதாம். அந்தக்காலம் என்பது ஆங்கிலேயர் ஆண்ட காலம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை ஆயத் தீர்வை' என அழைக்கப்பட்டதாகவும், அது வசூலிக்கப்பட்ட இடம் ஆயத்தடி என வழங்கப்படலாயிற்று என்றும் என் ஐயா ஆயர் பற்றிக் கூறியவை நினைவுக்கு வருகின்றன. அவர் கைதடியிலே பிறந்து வளர்ந்து அங்கேயே தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். பொருள் சேர்க்காவிட்டாலும், ‘நல்ல மனிதர் என்ற பெயரை பல வட்டங்களிலும் சம்பாதித்திருந்தார். இப்படிப்பட்ட வாத்தியாரின் பிள்ளை தப்புத் தண்டா செய்யக்கூடாது என்ற கிராமத்தின் பொதுவான விதி பல தடவைகளில் என்னை சங்கடத்தில் ஆழ்த்தியதுண்டு.
ஆயத்தடியில் இறங்கியதும் நினைவு ஒழுங்கைகளிலே, என் மனசு அறுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியை நோக்கிப் பயணித்தது. ,
ஆயத்தை சுற்றிய வீடுகள் பலவும் இப்போது சிதிலமடைந்து விட்டன. எஞ்சியுள்ள விடுகுள் சில, மனித சஞ்சாரம் இழந்தனவாகத் தோன்றின. அங்கிருந்த ஆரம்ப பாடசாலையும் தரைமட்டமாயிருந்தது. திட்டியாய் தெரிந்த மண் மேட்டையும் அருகிலுள்ள கல்லுக் குவியலையும் வைத்துத்தான் பாடசாலை இருந்த இடத்தினை என்னால் அடையாளப்படுத்த முடிந்தது. அந்த ஆரம்ப பாடசாலை மழலைகளின் இரைச்சலுடன் இருந்த அந்தக்
sold....
LDITsfassrootb!
வெள்ளமும் சேர்ந்து கொள்ள பாலத்தின் கீழே நீர் முட்டி மோதி ஓடியது. கடல் நீரின் வீச்சு என் மன ஓட்டத்துடன் போட்டியிட்டது.

Page 7
up 666): Q
பாலத்தின் மீது போடப்பட்டடிருந்த தார் றோட்டு யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து குண்டும் குழியமாக காணப்பட்டது. யுத்த களமாக்கப்பட்ட பிறந்த மண். இதனை நினைத்துக் கொண்டதும் இதயத்திலே ஒரு துடிப்பு நின்று, மீண்டும் துடிக்கத் துவங்கியது போன்றதொரு வலி.
பாலத்தில் காவலுக்கு அமைக்கப் பட்டிருந்த ‘சென்றியில் இருந்து இராணுவச் சிப்பாய்கள் இருவர் துவக்கும் கையுமாக எம்மை நோக்கி வந்தார்கள். போர்க் காலமாக இருந்திருந்தால் ஆயத்தடி யிலுள்ள இராணுவ முகாமிலிருந்தே சரமாரியாக வெடி வைத்திருப்பார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் இந்த கெடு பிடிகள் சற்றே ஓய்ந்திருக்கின்றன.
எங்களை நெருங்கியதும், ‘வெளி நாடா..? என இராணவத்தினர் தமக்குத் தெரிந்த தமிழில் கேட்டார்கள். உள்ளுரிலே வசிப்பவர்கள் கடற்காற்று வாங்க ஆயத் தடிக்கு வரத் துணிய மாட்டார்கள் என்று அவர்கள் சரியாகவே ஊகித்திருந்தார்கள்.
‘ஆம்' என்பதற்கு அடையாளமாகச் சிரித்தேன். ஒன்றுமறியாத என் மகன் என்னைப் பார்த்தான். அசடு வழியும் என் முக பாவத்திற்கு அவன் என்ன அர்த்தம் கொடுத்திருப்பான், ஆமிக்காரர் சுணங்கி நிற்காது எம்மைக் கடந்து நடந்து கொண்டி ருந்தார்கள்.
கடல் அலைகள் நுரை தள்ளியபடி பாலத்தின் மதகுச் சுவர்களில் மோதித் திரும்பின.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு.
அப்பொழுது எனக்கு என்னருகில் நின்ற மகனின் வயசு கூட இருக்காது.
நீர் பாலத்தின் கீழே ஒடிக் கொண்டி ருக்க நாங்கள் றோட்டில், உப்புக்காற்றை கிழித்துக் கொண்டு சைக்கிளிலே தலை தெறித்த வேகத்தில் ஒடிக் கொண்டிருப்போம். நாங்கள் என்றால் பாலன், சொக்கன், சந்திரன், பூபாலன், துரையன், பற்பன், நான் என்கிற அனைவரும். அப்போது எமக்கு சேவல் கூவும் விடலைப் பருவம்.
உயர் வகுப்பு விஞ்ஞானம் படிக்க அந்தக் காலத்தில் கைதடியில் பாடசாலை கள் கிடையாது. இதனால் பாலத்தின் மீது மறு தொங்கலைத் தொட்டு நிற்கும் கோப்பாய் பாடசாலையில் சேர்ந்து படிக்கலா னோம். விஞ்ஞானம் படிப்பதில் ஆர்வம் இருந்ததோ இல்லையோ, கோப்பாய் பெட்டைகளுடைய செந்த பூழிப்பான முகங் களின் நினைவு, சைக்கிளை மிதிப்பதிலேயே உபரியான உந்து விசை யை சேர்த்ததாக
நிதானிக்க முடிகிறது.
பாலத்தினூடாக ஒரே ஒரு பஸ் மாத்திரம் சாவகச்சேரியிலிருந்து மானிப்பாய் வரை ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நிமிஷம் பிந்தினாலும் பல மணித்தியாலங்கள் வீதி ஒரம் காத்துக்கிடக்க வேண்டும். அந்தக் காலத்தில் கோப்பாய்க்கு படிக்க வரும் கைதடிப் பெட்டையஞக்கு அந்தப் பஸ்தான் கதி. வசதி படைத்த ஒரு சிலர் ஒன்று சேர்ந்து தமது பிள்ளைகளை வாடகைக் காரிலும் பாடசாலைக்கு அனுப்பினார்கள். பெட்டையள் சைக்கிள் ஓடுவது "நோடாலத் தனம்' என்று அந்தக்கால யாழ்ப்பாணம் விமர்சனம் செய்தது. பணத்தால் எதையும் செய்யலாம் என்று நினைத்த சிங்கப்பூர் சிதம்பரத்தின் மகள் சைக்கிள் ஓடத் துவங்கி ‘ஆட்டக்காரி' என்று ஊரில் பெயர் எடுத்ததுதான் மிச்சம்.
கோப்பாய்க்கு சைக்கிளில் செல்லும் விடலைப் பருவத்து பெடியன்களுக்கு
(10)

068
பஸ்ஸுக்காக காத்திருக்கும் பெட்டைகளைக் கண்டால் சற்று இழப்பமான எண்ணமே!
அவர்களைக் கண்டதும் சுழட்டி, வெட்டி, கைவிட்டு ஒடி பல சாகஸங்கள் செய்ய விழைந்ததுமுண்டு. இந்த 'ஸ் டைல்’ காட்டலில் சைக்கிளும் முட்டுபட்டோ, கொழுவுப்பட்டோ றோட்டில் விழுந்து அடி பட்டதுமுண்டு.
கைகால்கள் உரஞ்சுப்பட்டு விழுப் புண்கள் சுமந்த காலமது!
நாம் கோப்பாயில் படித்த பாடசாலை கிறீஸ்தவ தேவாலயத்தை ஒட்டினாற் போல் அமைந்திருந்தது. அதன் அயலிலே அதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் வாழ்ந் தார்கள். இதனால் இந்தப் பகுதி நாகரிகம் பெற்றது போல் பளிச்சென்று தோன்றியது. கிறிஸ்தவம் மூலம் இந்த கோப்பாய் பெட்டை களுடைய அலங்காரத்திலே இலேசாகத் தலைகாட்டிய மேற்கத்திய நாகரிகம் கோப்பாய் பெட்டைகளுடைய வடிவை உயர்த்திக் காட்டுவதாக நாம் நினைத்துக் கொண்டோம். உண்மையிலேயே அப்போது எனக்கு அவர்கள் அழகு தேவதைகளாகவே தோன்றினார்கள்.
கைதடியிலிருந்து பாலத்தினூடாகக் கோப்பாய் பாடசாலைக்குச் செல்லும் நாம் எமது தலைமுடி குழம்பாமல் இருக்கப் படாதபாடுபடுவோம். இதற்காக நாம் எண்ணையும் தண்ணிரும் கலந்து வைத்து தலைமயிரை படிய வாரி இழுத்திருப்போம்.
எண்ணையோடை தண் ணியை கலந்து வைக்காதை, தடிமன் பிடிக்கும் என்று அம்மா சத்தம் போடுவதை என்றுமே சட்டை செய்ததில்லை. தலைவாரி முடித்த பின், எண்ணையும் தண்ணீரும் தலை யூத்தையும் கலந்த - கோப்பி நுரையின் நுதம்பலுடன் கூடிய மஞ்சள் கலவை ஒன்று சீப்பில் படிந்திருக்கும். அதை சுத்தப்படுத்து
வதற்கு என்றுமே எனக்கு நேரம் இருந்த
தில்லை.
நாங்கள் என்னதான் பிரயத்தனங்கள் எடுத்தாலும் சோளகக் காற்றும், கோடைக் காலத்தில் அள்ளி வீசும் உப்புமண் காற்றும் எங்களுடைய சிகை அலங்காரங் களைக் குழப்பிவிடும்.
கோப்பாய் சந்தியிலே சிகை அலங்கார நிலையம் ஒன்றுண்டு. நாங்கள் போய்ச் சேரும் அந்தக் காலை நேரங்களில் முதலாளி அங்கு நிற்பதில்லை. அவருடைய மகன் கோபாலுவே சலூனை திறந்து வைத்திருப்பான். அவனுக்கும் கிட்டத்தட்ட எங்களுடைய வயதுதான் இருக்கும். கைதடியில் இருந்து வரும் எங்களுக்கென்று சலூனில் ஒரு சீப்பு வைத்திருப்பான். உப்பு மண்ணும் நல்லெண்ணையும் சொடுகும் சேர்ந்த ஒருவகை கலவை இந்தச் சீப்புப் பற்களின் அரைப்பகுதியை அடைத் திருக்கும். அதுபற்றி நாங்கள் என்றுமே கவலைப்பட்டது கிடையாது. சலூனில் தலைவாரிய பின் அங்குள்ள புதுல்மா பவுடரில் கொஞ்சம் எடுத்துப் பூச கேபாலு அனுமதிப்பான். வேர்வை அப்பிய முகத்தில் பவுடரை பூசிக் கொண்டு சேட் கொலரையும் கை மடிப்புகளையும் சரிசெய்தால் நாம் வகுப்பறைக்குப் போக ‘ரெடி’ அர்த்தம்
என்று
கோப்பாய் சந்தியில் கிடைத்த இந்த அலங்கார வசதிகள் அப்பொழுது ஆயத் தடியில் கிடையாது. கைதடி தன் கிராமியத் தன்மையை இழக்காது சோம்பல் முறித்தது. நாவிதர்கள் நடமாடும் சலுானாக கைதடியில் சேவை புரிந்தார்கள்.
இன்னொரு விசயத்தையும் சொல்ல வேணும். கோப்பாயில் வாழும் நாகரிகமான பேட்டைகளின் தரிசனம் கிடைத்த பின் கைதடிப் பெட்டைகள் எனக்கு ‘பிரமிப்பை

Page 8
ye GSG): ܓ
கொடுக்க முடியாத சாதாரணமானவர் களாகத் தோன்றினார்கள்.
கைதடிப் பெட்டையளை மட்டந் தட்டிய நான் பின்னர் கைதடிப் பெட்டையை மனைவியாகப் பெற்று வாழ்வதை நினைத்து சிரித்துக் கொண்டேன்.
நான் இவ்வாறு நனவிடை தோய்ந்து கொண்டிருப்பது மகனுக்கு அலுப்புத் தந்திருக்கலாம். "நாங்கள் வீட்டுக்குப் போவோமா..? என்று மெதுவாகக் கேட்டான். என் கனவுகளிலிருந்து என்னை விழித்தெழச் செய்யாத ஒரு பவ்வியம் அவன் குரலிலே தொனித்தது.
வீட்டை நோக்கி நடக்கத் துவங்கு கிறோம்.
வீதியோரத்தில் உடைந்துபோய் நாதியற்று கிடந்த சீமந்து வாங்கு தெரிந்தது. அதன் அருகே நெளிந்து வளைந்த இரும்புக் குழாய் ஒன்று மண்ணுக்குள் புதைந்தும் புதையாமலும் தெரிந்தது. அந்தக் காலத்திலேயே அது பஸ்தரிப்பு நிலை யத்தை அடையாளப்படுத்தியது. பஸ்ஸ"க் காக காத்திருப்பவர்கள் சற்றே காலாறி அமர்வதற்காக அந்த சீமெந்து வாங்கு அங்கு போடப்பட்டிருந்தது.
என்ன காரணமோ அந்த சீமெந்து வாங்கையும் பூரணி ரீச்சரையும் என்னால் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. அசோக வனத்திலே ராமபிரானை நெஞ்செல்லாம் தியானித்து, அந்த மிதிலையின் ஜானகி தவமிருந்த காட்சியை என் ஐயா, கோவிலில் புராணத்துக்குப் பயன் சொல்லும் போது உபகதையாகக் கூறக் கேட்டிருக்கிறேன்.
இநீத சீமெந்து வாங்கரிலே ஏகாந்தியாக பூமணி ரீச்சர் எதற்காக தவ மியற்றினார்?
சட்டென்று அந்த தவக்கோலமும் அதனால் ஏற்பட்ட சலசலப்புகளும் என் நெஞ்சிலே.
பாலத்தின் கீழே ஒடும் நீரிலே கல்லை விட்டெறிந்தால் அலைகள் வட்டமாக மிதக்குமே, அது போல.
அவை எங்கே செல்கின்றன.?
பூமணி ரீச்சர் பற்றிய நினைவுகள்.
கைதடியிலே புதிதாக ஒரு ஆரம்ப பாடசாலையைத் திறந்தார்கள். அந்தப் பாடசாலையிலே மொத்தம் இரண்டு வாத்திமாரே. தலைமையாசிரியர் பதவிக்காக
யோசெப் மாஸ்டர் வந்து போனார். அவர்
சைக்கிள் ஒரு நடமாடும் வீடுபோல. அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அந்த சைக்கிள் அவருடன் சுமந்து திரிந்தது.
யோசெப் மாஸ்டர் வரும் நேரமே பாடசாலை துவங்கும் நேரம் என்கிற ரீதியில் சகல வல்லமை பெற்றவராக அவர் அந்தப் பாடசாலையை நடத்தினார். அங்கு படிக்கும் பிள்ளைகளுடைய பெற்றோர் சிலருடன் அறிமுகம் வைத்துக் கொண்டு, யோசெப் மாஸ்டர் இல்லாமல் அந்தப் பாடசாலையை நடத்த முடியாது என்ற எண்ணத்தை அங்கு நிலைநாட்டி விட்டார்.
அந்தப் பாடசாலையின் உதவி ஆசிரியராக கோப்பாயிலிருந்து பூமணி ரீச்சர் வந்து போனார்.
அரசாங்கம் கொடுக்கும் பணிஸ் விநியோகத்துடன் அந்தப் பாடசாலை முடிவடையும். எப்படியும் ஆடிப்பாடி யோசெப் மாஸ்டர் இரண்டு மணிக்குத்தான் பாடசாலையை மூடுவார். பூமணி ரீச்சர் ஆயத்தடி பஸ்தரிப்புக்கு வருவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்னர்தான்
(12)

மானிப்பாய் நோக்கி பஸ் சென்றிருக்கும். அந்த பஸ் கோப்பாய் வழியாக ஆயத்தடி தாண்டி சாவகச்சேரி சென்று மீண்டும் திரும்ப. நாலரை மணியாகிவிடும். அதுவரை பூமணி ரீச்சர் அந்த சீமெந்து வாங்கில் தவம் கிடப்பார்.
அப்போது நாமும் பாடசாலை முடிந்து கோப்பாயிலிருந்து பாலத்தூடாக ஆயத்தடி வந்து சேர்வோம். பாலத்தில் வீசும் உப்புக் காத்துக்கெதிராக சைக்கிள் மிதித்து களைத்துவரும் எமக்கு சீமெந்து வாங்கில் தனித்திருக்கும் பூமணி ரீச்சரை கண்டால் உற்சாகம் பிறந்துவிடும்.
பூமணி ரீச்சர் வடிவுதான் என்று சொல்ல வேணும். அதிகமான பூச்சு
மினுக்குகள் நாடாதவர். அமைதியானவர்.
இருப்பினும் அவரது முகத்தில் எப்போதும் ஒருவகைச் சோகம் எட்டிப் பார்க்கும். “நல்லாய்ப் படிப்பிக்கிற ரீச்சர் என்று ஊரில் எல்லோரும் சொல்வார்கள்.
பாடசாலையால் நாங்கள் திரும்பி வரும் போது பூமணி ரீச்சர் அந்த வாங்கிலே பஸ்ஸாக்கு காத்திருப்பது எமக்கு தூரத்தி லேயே தெரிந்து விடும். குனிந்த தலை நிமிராமல் புத்தகக் கட்டும் கையுமாக தனித்து அவர் சீமெந்து வாங்கில் இருப்பதைப் பார்க்கும் போது ‘அவரைக் கின்ைடல் செய்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றும்.
ஊர்ப் பெரிசுகள் மத்தியிலே அப்போது கசிந்த ஒரு கதை என் செவிகளிலே விழுந்தது. பூமணி ரீச்சர் ஒருமுறை எங்கள் வீட்டுக்கு ஐயாவைப் பார்க்க வந்து போன பிறகுதான் எல்லாவற்றையுமம் கோர்வைப் படுத்தி விளங்கிக் கொண்டேன்.
யோசெப் மாஸ்டர் கண்டிப்பான தலைமை வாத்தியார் என்று ஊருக்கு
காட்டிக் கொள்வார். தன்னுடைய மனைவி தீராத வருத்தக்காரி என்றெல்லாம் சொல்லி பூமணி ரீச்சரின் அநுதாபத்தினைப் பெற்று தனக்கு சாதகமாக்கும் திட்டம் போட்டிருக் கிறார். பாடசாலை முடிவதற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன் போய் பஸ்ஸை பிடிக்கும் படியும், ரீச்சரின் வகுப்புக்களை தான் பார்த்துக் கொள்வதாகவும் சிலநாட்கள் சலுகைகள் கொடுத்துப் பார்த்தார். 'உந்த எளிய வீட்டுப் பொடியள் படிச்சென்50 உத்தியோகம் பார்க்கப் போகுதுகளோ..? எனக்கூறி வகுப்பு நேரங்களிலே அதிகம் கஸ்டப்பட வேண்டாம் என்றும் சொல்லிப் பார்த்தார். பூமணி ரீச் சரோ இவை ஒன்றுக்கும் அசைந்து கொடுக்கவில்லை.
இதுபடியாது’ என்பதைப் புரிந்து கொண்ட யோசெப் மாஸ்டர் பூமணி ரீச்சரை வதைக்கத் துவங்கினார். ஒன்றரை மணி பஸ்ஸை தவறவிட்டு ஆயத்தடியில் அடுத்த பஸ்ஸாக்கு நாலரை மணி மட்டும் காத்தி ருக்கும் விதமாக பாடசாலை மணி அடிக்கத் துவங்கினார். இப்பொழுதும் பூமணி ரீச்சர் எந்தவித முணுமுணுப்புமின்றி தன் கடமையை ஆற்றினார்.
பூமணி ரிச்சருக்கு பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் கணிதப் பாடத்திலே விசேட பயிற்சி பெறுவதற்கு அனுமதி
கிடைத்திருந்தது. இது சம்பந்தமாக ஐயா
வின் ஆலோசனை கேட்பதற்கு இரண்டாம்
முறை வீட்டுக்கு வந்திருந்தார். ஐயாவுக்கு
பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஆலோசனை சொல்லும் தகமை இருந்தது என்று உணர் மதித்ததுதானி இதற்குக் காரணம.
பூமணி ரீச்சர் கைதடிக்கு படிப்பிக்க வந்துபோன காலங்களில் யார் விட்டுப் படலையும் திறந்தது கிடையாது. இரண்டு முறை எமது விட்டுக்கு வந்து போனதை

Page 9
ye GSG) y
பக்கத்து வீட்டு விதானையார் மாமி கண்டி ருக்கிறார். அவவுக்கு எப்பொழுதும் கழுகுக் கண்கள். இருப்பினும் மாமியை உச்சிப் போட்டு விதானையார் மாமா ஊர் எல்லாம் மேய்ந்து திரிவார். இதனால் மாமி இந்த விசயங்களில் ஊர் ஆம்பிளையளை என்றுமே நம்பினது கிடையாது.
மாமி சாதாரணமாக வீட்டால் வெளிக் கிடுவது குறைவு பூமணி ரீச்சர் வந்துபோன அன்று மாலை மாமி எங்கள் வீட்டுக்கு வந்தது இதற்காகத்தான். பலதும் பத்தும் ஊர்க்கதைகள் பேசியபின் ரீச்சர் பற்றிய கதையை துவங்கி ஆண் வர்க்கத்தையே ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தார். இறுதியில் "நீயும் கவனமாக இரு' என அம்மாவையும் எச்சரித்து, தன் கதையை முடித்தார்.
அம்மாவுக்கு மாமியின் பெலவீனம் நன்கு தெரியும். பூமணி ரீச்சர் பற்றிய சகல விபரங்களையும் மாமிக்கு கூறும் போது நான் படிப்பது போன்று பாசாங்கு பண்ணி கேட்டுக் கொண்டிருந்தேன்.
**நல்ல குணமான் பெட் டை. அதின்ரை தலைவிதி இன்னும் கலியாணம் கட்டாமல் இருக்குது. தகப்பன் முந்தி இவரோடை கோப்பாய் தமிழ் றெயினிங் கொலிஜிலை (College) ஒண்டாய்ப் படிச்ச வராம். அந்தாள் பாரிசவாதம் வந்து செத்துப் போச்சு. பெட்டைக்கு இப்ப முப்பதெட்டு வயதாகுது” என அம்மா உச்சுக் கொட்டி
நிறுத்தினார்.
“பெட்டைக்கு சகோதரங்கள் ஒண்டு மில்லையே..?’ என மாமி விடுப்புப் புடுங்கினார்.
“தம்பிக்காரன் ஒருத்தன் இருக்கிறான். குடிகாரன். வேலை வெட்டி இல்லாமல் சொத்தை வித்து குடிச்சுக் கொண்டு திரியிறானாம். தமிழ் வாத்தியார் எண்ட
படியாலைதானே கண்ட நிண்ட பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் தூக்கி அடிக் கிறாங்கள். அதுதான் பெட்டை கெட்டித் தனமாய் படிச்சு மற்ஸ்' றெயினிங் போக இடம் கிடைச்சிருக்கு. ஸ்பெசல் றெயினிங் குக்கு போய் வந்தால் பெரிய பள்ளிக் கூடங்களில் படிப்பிக்கலாமெண்டு பா(ர்)க் குதாம்’ என ரீச்சர் பற்றிய வர்த்தமானத்தை சொல்லி முடித்தார் அம்மா.
பூமணி ரீச்சர் பற்றிய சகல விபரங் களையும் அறிந்த பின் அவர் மீது ஒரு மரியாதை ஏற்பட்டது. ஆனாலும் ஒருநாள் பேய்த்தனமான உசாரிலே முப்பத்தெட்டு வயதாகியும் ரீச்சர் இன்னமும் கலியாணம் கட்டாத சங்கதியை பெடியள் மட்டத்திலே அவிட்டு விட்டேன். அப்படியே சங்கதி என கவனமாக விஷயத்தை உள்வாங்கிக் கொண்டான் பாலன்.
பாலனுக்கு அவனுடன் படிக்கும் கோப்பாய் பெட்டை ஒன்றிலே கண், அதற் காக அவன் படாதபாடில்லை. உடுப்புகளை சலவை செய்து மினுக்குவதிலும் விதம் விதமாக தலையை இழுத்து 'ஸ்டைல் செய்வதிலும் அதிக நேரம் செலவளிப்பான், பாலன் எவ்வளவுதான் திருகுதாளங்கள் செய்து முயன்ற போதிலும் பெட்டை பாலனை என்றுமே திரும்பி பார்த்ததில்லை. ஒருதலைக் காதல் உச்சிவரை ஏறியதால் அவன் வெறிகொண்டு அலைந்தான்.
பாலன் கணக்கில் கெட்டிக்காரன். ஒருநாள் கணித வாத்தியார் கஷ்டமான கணக்கொன்றை கரும்பலகையில் எழுதி னார். பாலனால் மட்டுமே அந்தக் கணக்கை செய்ய முடிந்தது. அன்றைக்கு அந்தப் பெட்டை பாலனைப் பார்த்து அருட்பார்வை ஒன்றை வீசி விட்டாள். இதனால், அன்று பின்னேரம் தலைகால் புரியாத சந் தோசத்தில் எங்களுடன் சைக்கிளில் வந்து
(1)

to:
கொண்டிருந்தான்.
ஆயத்தடியில் பூமணி ரீச்சர் வழக்கம் போல் வாங்கில் அமர்ந்திருந்தார்.
தன்மயமான நினைவுகளிலிருந்து விழிப்படைந்து சடுதியாக 'தனிமையிலே இனிமை காண முடியுமா..? என்ற சினிமாப் பாடலை பாலன் ராகம் இழுத்துப் பாடத் தொடங்கினான். அவனுக்கு ஒரு "கொம்பனி கொடுக்கும் நட்புணர்விலேயும் பாடுவதிலே நான் பாலனுக்கு சளைத்தவன் அல்ல என்கிற எண்ணத்திலேயும் பாடலின் அடுத்த வரியை நான் படித்து முடித்தேன்.
அடுத்த நாளும் அதே பாடலை அதே சந்தர்ப்பத்திலே பாடியதை தற்செயல் என்று சொல்ல முடியுமா?
மூன்றாம் நாளும் பாலன் தனிமை யிலே இனிமை காண முடியுமா? எனப் பாடத் துவங்கினான். ஓர் உள்ளுணர் வால், நான் பூமணி ரீச்சரின் திசையிலே பார்த்தேன். அவர் முகத்தை பொத்தி குலுங்கி அழுவது தெரிந்தது.
நான் வீட்டுக் குள் நுழைந்து சைக்கிளை நிற்பாட்டியதும் ‘உன்ரை மகன் ஆயத்தடியில் பாட்டுக் கச்சேரி நடத்திப் போட்டு வாராராக்கும் என்று அம்மாவுக்கு குத்தல் கதை சொன்னவாறு ஐயா என்னைப் பிடித்துக் கொண்டார். ‘செல் போன்’ இல்லாத அந்தக் காலத்தில் ஆயத்தடியில் நடந்தது எப்படி ஐயாவுக்குப் போனது என்பதை நான் அறிவேன்.
ஐயாவின் கையிலிருந்த துவரந்தடி என் உடம்பில் துள்ளி விளையாடியது. என் தொடை வழியாக சிறுநீர் கழிந்த பின்பே ஐயா அடியை நிப்பாட்டினார்.
சிறிது காலத்தின் பின் அந்த வாங்கு வெறிச்சோடிக் கிடந்தது.
பூமணி ரீச்சர் பலாலி றெயினிங் கொலிச்சிலே படித்துக் கொண்டிருக்கிறார் எனக் கேள்விப்பட்டோம்.
இதற்கு பல வருடங்களின் பின், நான்
ஜேர்மன் பல்கலைக்கழகத்திலே படித்துக்
கொண்டிருக்கிற காலத்தில் யாழ்ப்
பாணத்தின் பிரபல கல்லூரியொன்றிலே
பூமணி ரீச்சர் படிப்பிப்பதாகவும் அற்புதமான கணக்கு ரீச்சர் என மாணவர்கள் புகழ் வதாகவும் ஜேர்மனிக்கு அகதியாக வந்து சேர்ந்த என் பள்ளித் தோழன் துரையன் சொன்னான். இப்பொழுதும் அவர் குடும்ப பந்தங்களுள் ஈடுபடாது மாணவ உலகில் அறிவுச்சுடர் ஏற்றுபவராகவே வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் புகழ்ந்தான்.
சடுதியாக பூமணி ரீச்சரின் உருவம் என் உள்ளத்திலே விஸ்வரூபம் கொள்ள லாயிற்று. இப்பொழுது பூமணி ரீச்சர் இருக் கிறாரா..?
பழைய நினைவுகளிலே மிதந்து கொண்டிருந்த நான், யதார்த்தத்தை மறந்து விட்டேன் போலும். என் மனைவியும் என் உறவினர் ஒருவரும் எம்மைத் தேடி வண்டியில் ஆயத்தடிக்கு வந்தார்கள்.
‘‘ ஆமரிக் காரணிகள் உலாவுற இடத்தில, வளர்ந்த பொடியனையும் வைச்சுக் கொண்டு என்ன செய்யிறியள்? சும்மா வெளிப்பார்வைக்குத்தான் அமைதி, உள்ளுக்கை இன்னும் புகைஞ்சு கொண்டு தான் இருக்கு” என்று உறவினர் கண்டித் தார். மனைவி பொங்கி வந்த அழுகையை மறைத்தாள்.
எனக்கு தர்மசங்கடமாகி விட்டது.
எதுவும் பேசாமல் வண்டியில் வீடுபோய் சேர்ந்தோம்.
மறுநாள் உறவினரை அழைத்து
(s)

Page 10
666) QS
பூமனி ரீச்சர் பற்றி விசாரித்தேன். உறவினருக்கு என் வயதுதான். விவசாயி. ஊரைவிட்டுப் போகாமல் நாட்டுப் பற்றோடு வாழ்பவர். ஊரில் நல்லது கெட்டது எல்லா வற்றிற்கும் முன்னின்று உதவி செய்பவர்.
“அந்த 'பூமணி ரீச்சர் இப்ப கைதடி யிலைதான் இருக்கிறா. அவ பென்சன் எடுத்து கனகாலம். ரத்வத்தை நடத்திய யாழ்ப்பாண படையெடுப்போடை கோப்பா யிலையுள்ள வீடுகளெல்லாம் அழிஞ்சு போச்சு. கைதடி பழக்கப்பட்ட ஊரெண்டு இங்கைதான் வந்தவ. வன்னிக்கு போகேலா மல் அல்லோல கல்லோலப்பட்டு சனம் கைதடிக்கு வர அனாதை குழந்தைகளுக்கு ஒரு ஆசிரமம் துவங்கினவ. ஊர்ச்சனம் எல்லாம் அவவுக்கு நல்ல சப்போட்டும் மரியாதையும். அனாதைக்ளுக்கு மறுவாழ்வு அளிக்கிற ஒப்பற்ற சேவை. உண்மையாய் நீங்கள் அதை ஒருக்கா போய் பார்க்க வேணும். பூமணி ரீச்சர் அந்த ஆசிரமத்தை கைலாயம் போலத்தான் நடத்திக் கொண்டி ருக்கிறார். அவவிடம் படிச்ச பொடியள் வெளிநாட்டாலை இருந்து நிறைய நன்கொடை அனுப்பி வைக்கினம். வாற காசிலை ஒரு சதமும் அவம் போகாமல் பிள்ளைகளுக்கு சிலவழிக்கிறா’ என தெட்டம் தெட்டமாக பூமணி ரீச்சர் பற்றிய சகல விபரங்களையும் உறவினர் சொல்லி முடித்தார்.
அவர் சூட்டிய புகழாரம் உண்மை
தான் என்று ஊரே ஒப்புக் கொள்வதை அறிந்து மகிழ்ந்தேன்.
அன்று மாலை குடும்பத்துடன் பூமணி ரீச்சரின் ஆசிரமத்துக்குச் சென்றேன்.
தன்னலமற்ற சேவையால் அந்த ஆசிரமம் மிகச் செழுமையாக இருந்தது.
பூமணி ரீச்சர் என்னை உடனடியாக
அடையாளம் காணவில்லை. வாத்தியாரின் மகன் என அறிமுகம் செய்ததும் மகிழ்ச்சி யுடன் வரவேற்றார்.
அவரது தலை நரைத்திருந்தது. முதுமை தலை காட்டியது. இருப்பினும் அந்தக் கண்களிலே அன்று பார்த்த அதே நேசம் தேங்கியிருந்தது.
‘‘தம் பி. நீங்கள் முதலிலை ஜேர்மனியிலும் இப்ப அவுஸ்ரேலியாவிலும் வாழ்வதாகக் கேள்விப்பட்டன்’
நான் இலேசாக சிரித்தேன்.
என் மனைவி ஆசிரமத்துக்கு மகன் பெயரில் வருடா வருடம் அவனது பிறந்த நாளையொட்டி நன்கொடை அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்துடன் வந்தி ருந்தாள்.
ரீச்சரிடம் விபரம் கூறி பணம் கொண்ட கவரை கையில் கொடுத்தேன்.
"மகன்ரை வயதில உம்மை அப்ப கண்டது. உம்மைப் போலத்தான் துருதுரு வென்று இருக்கிறார்” என்று கூறிச் சிரித்தார்.
மனிதநேயம் செழித்து வளரும் அந்த ஆசிரமத்திலே கொஞ்ச நேரம் பூமணி ரீச்சருடன் இருந்தது நெஞ்சுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.
புறப்படத் தயாராகினோம். ஆசிரமத்தின் வாசல் வரையிலும் ரீச்சர் நடந்து வந்தார். விடைபெறும் பொழுது என் மனைவியின் கையிலே மிகப் பவ்வியமாக நாம் கொடுத்த நன்கொடைக்கான பற்றுச் சீட்டினைக் கொடுத்தார்.
பூமணி ரீச்சர் நடத்தும் அந்த ஆசிரமத்திலே மனித நேயம் மட்டுமல்ல, நாணயமும் தன் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

மல்லிகைப் பந்தல் சமீபத்தில் மலிலே வெளியிட்டுள்ள நூல்கள்
1. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு
(இரண்டாம் பதிப்பு - புதிய அநுபவத் தகவல்கள். தகவல்களில் நம்பகத்தன்மை பேணப்பட்டுள்ளது) விலை: 250/= 2. எழுதப்பட்ட அத்தியாயங்கள் ~ (சிறுகதைத் தொகுதி) சாந்தன் οδούλους Ι 4ο/- 3. அநபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவாவின் 660su: I8o/F 4. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - (இரண்டாம் பதிப்பு) சிரித்திரன் சுந்தர் விலை: 175/= 5. மண்ணின் மலர்கள் -
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 13 மாணவ - மாணவியரத சிறுகதைகள்) 6oo6o: II o/=
நானும் எனத நாவல்களும் - செங்கை ஆழியான் விலை: 80/=
கிழக்கிலங்கைக் கிராமியம் - ரமீஸ் அப்தல்லாஹற் oso: oo/= 8. முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ~ (பிரயாணக் கட்டுரை)
டொமினிக் ஜீவா ώδουλους II o/- 9. முனியப்ப தாசன் கதைகள் - முனியப்பதாசன் விலை: 150/= 10. மனசின் பிடிக்குள் (ஹைக்கூ) - பாலரஞ்சனி விலை: 60/= 11. கார்ட்டூன் ஓவிய உலகில் நான் - 'சிரித்திரன் சுந்தர்' விலை: 175/=
12. அட்டைப் படங்கள்
(மல்லிகை அட்டையை அலங்கரித்தவர்களின் தொகுப்பு) விலை: 175/= 13. சேலை - முல்லையூரான் 6.506): 15o/F 14 மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் விலை: 275/-
(30 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு) 15. மல்லிகைச் சிறுகதைகள் - செங்கை ஆழியான் (இரண்டாவது தொகுப்பு) விலை: 350/=
(41 எழுத்தாளர்களின் படைப்பு)
16. நிலக்கிளி - பாலமனோகரன் 140 :)6606 سمیے/- 17. நெஞ்சில் நிறைந்திருக்கும் சில இதழ்கள் - தொகுப்பு: டொமினிக் ஜீவா 6606): 150/= 18. மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் பாகம்) வெளிவந்த விட்டத விலை: 350/=
தொகுப்பு - செங்கை ஆழியான் 19. நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி) - ப.ஆப்டீன் 6%150 :ט6ת/= 20. தரை மீன்கள் - ச.முருகானந்தன் விலை: 150/=
21. கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் - செங்கை ஆழியான் 6606): 150/-
மேற்படி நூல்கள் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும் வியாபாரிகளுக்கு விசேஷ கழிவுண்டு
(17)

Page 11
காலமள்ளிய பிரிவும் மீண்டுமொரு காலைப்பொழுதும்.
- புதுவை இரத்தினதுரை
மீண்டும் உன் ஊர்கள் கடந்து பயணிக்கும் பாக்கியம் எனக்கு அதிகாலையில்
அந்தி மாலையில், நள்ளிரவிற் கூடப் போய் வருகிறேன். இருபது வருடங்களுக்குப் பின்னான உலா.
உன்னுடையதென இன்றுவரை நீயும், என்னுடையதென நேற்றுவரை நானும் மனதில் பூவெறிந்து மகிழ்ந்த ஊர்களைக் கடக்கும் ஒவ்வொரு தடவையும் நெஞ்சில் முள்ளேறி வலிக்கிறது. என் காதற்கிராமங்களென இருந்த இவ்வூர்களை அந்நியமாக்கிய கொடுமையையெண் உள்ளே அழுதபடியிருப்பேன் வாகனத்தின் உள்ளே. சாரதிக்குத் தெரியுமா என மனக்கிளர்வு? ‘ஐயா இனிச் சிங்களவங்க ஊர்கள்” என அவதானமாய் விரைவான். ஊர்களின் அழகிற் கிறங்கி நான் குறிப்பதறியாது, “கண்ணாடிகளை உயர்த்துங்கள் ஐயா" என்று கட்டளை வேறு,
இந்தக் கிராமங்களிலெல்லாம் இருந்தேன் நானென்பது அவனுக்கெங்கே தெரியும்?

DEE
பயண வழியில் இருளிருந்த காலையில் நிலம் வெளிக்காத நேரத்தில் ஒரு நாள் மிகிந்தலையில் நின்றேன் பனிபூசிய தெரு மீது இறங்கி திறந்திருந்த கடையில் தேநீர் பருகினேன். குடித்து வெளிவந்த போதும் குளிரிருந்தது, தூரத்தெரிந்த மலையுச்சியில் புகாரிடை தெரிந்தார் புத்தபெருமான் வெள்ளைச் சிலையில் மட்டும் வெளிச்சமிருந்தது. நாற்சந்தியில் ஒருதூபி தர்மசக்கரம் அதன் தலையிலிருந்தது. கையிற் கமரா இருந்தும்
படமெடுக்கப் பயம். தமிழனிங்கு படமெடுப்பது தண்டனைக்குரியதாம். ஆசையை உள்ளே அடித்திருத்திவிட்டு கணிகளைத்தான் கமராவாக்க முடிந்தது.
என் விதியெண்ணிய கோபமாயப் மேலே வானம் சிவந்து வந்தது. காலைக்கு வரவு கூறும் காகங்கள் மட்டும் இங்கேன் இல்லாமற் போனது? காகங்களாற் தான் காலை வடிவு பெறுகின்றது. இத்தனை அழகிருந்தும் காகங்கள் இல்லாமை குறையெனப்பட்டது. புத்த பிக்குகளிருவர் கடந்தபோது ஒருவர் புன்னகை வீசிப்போனார். பதிலுக்கு நானுமொரு சிரிப்பெறிந்தேன். இருபது வருடங்களுக்குப் பின்னர் என் மீது பரவிய சிங்களச் சிரிப்பு. அந்தச் சிரிப்பு மொழியின் அர்த்தம் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும் எனக்கது வாசம் பூசிற்று.
ஆனையிறவில் செத்துக் கிடந்த சிப்பாய்களிடையே
இந்தவுரைச் சேர்ந்தவனும் இருந்திப்பானோ? மந்துவிலில் குண்டெறிந்த விமானமோட்டி இந்தவுர்க்காரனாகவும் இருக்கலாம்.
(10)

Page 12
് ബ8
ང་
ウ
நானிங்குலவிய நாட்களில் சிறுவராயப் அவர்கள் திரிந்திருக்கலாம். வன்மம் களைய வந்தவரே м இனவாத வலையிற் சிக்குண்டபோது என்னால் என்ன செய்ய இயலும்? எல்லாம் தலைகீழாகிப்போனது. * வெலாவ கியத?” தலையில் மரக்கறிக் சாக்குச் சுமந்த சிறுவன் மணி கேட்டான்.
சொன்னேன். w நன்றி சொல்லி சிரிப்புதிர்த்துப் போனான். மிகிந்தலையே! சின்னக் கிராமமாய் நீயிருந்த போது உன்னில் சில நாள் தங்கினேன். நினைவிருக்கிறதா? என்னை வீட்டுக்கழைத்து விருந்தளித்த விமலசேனா! சந்தியில் நின்று தேடுகின்றேன் இன்று உன் வீடிருந்த இடம் தெரியவில்லை. எங்குள்ளாயப் நண்பா? கத்திஅழ வேண்டும் போல கனக்கிறது. நெஞ்சு. என்னவாய் எழில் கொண்டு இலங்கினோம்? இப்படி இடி விழுந்து சிதறிப்போனோமே? ஒட்டுப்போட முடியாத உடைவு சத்திரச்சிகிச்சைதான் சரிவருமோ? ‘போவோம் ஐயா!’ என்றான் சாரதி.
மிகிந்தலையே!
விமலசேனாவே! உம்மைப் பிரிந்து போகிறேன், மனமின்றி. என்னை யாரென்று தெரியாமல் பிள்ளைகள் எனக்குக் கையசைத்துப் போகின்றனர், பள்ளிக்கு. விடைகொண்டு விரைகிறது என் வாகனம்.
(20

இன்னொரு விடியலுக்காய்.
ச. முருகானந்தன்
சாந்தா கண்களை மூடிப்படுத்திருந்தாள்.
விடிவை அறிவிக்கும் சேவலின் கூவலும், பெயர் தெரியாத பட்சிகளின் மெலிய சங்கீதமும் இசைக்கத் தொடங்கியிருந்ததைத் துல்லியமாகக் கேட்க முடிந்தது. பாடசாலைக்குப் போக வேண்டும். கண்களை விழித்துப் பார்த்தாள்.
அடர்ந்த கருமை நீங்கி அழகான சாம்பல் நீல வர்ணத்திற்கு மாறிக் கொண்டிருந்தது வானம். இருள் விலகி, ஒளி வீசி, இரவின் விடியல் இனிதாய் அரங்கேறுகின்றது.
இதோ இன்னொரு விடியல், இன்னொரு புத்தம் புதுநாள். ஆனால் சாந்தாவுக்கு.? வாழ்வில் இருளே நித்தியமாய், ஒளிமங்கி, விடிவே கிடையாது என்று ஆகிவிட்டது.
ஒரு இளம் விதவையாய் இருக்கின்ற கொடுமை இந்த உலகில் எவருக்குமே வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாள். யார் நினைத்தார்கள் இப்படி நடக்குமென்று? எமது தமிழ் மண்ணில் கடந்த இரு தசாப்தங்களாக இது ஒன்றும் புதுமையானதல்லவே! எத்தனை எத்தனை இளம் பெண்கள் கணவனை இழந்து.
இனவெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டவர்கள், கண் முன்னே கதறக் கதற சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், ஷெல் விழுந்து, பொம்பர் தாக்கி என்று எத்தனையோ அவலமான மரணங்கள் நிகழ்ந்துவிட்டன!
எனினும் இப்படி தமக்கும் நடக்கும் என்று யார்தான் எதிர்பார்ப்பார்கள்? சாந்தாவுக்கு நடந்துவிட்டது: இந்தக் கொடிய யுத்தத்தின் சகுனிகளின் தந்திரோபாயங்களால், மூதூரில், ஒரே மொழியைப் பேசுகின்ற, மதத்தால் மட்டும் வேறுபட்ட இரு இனங்கள் அர்த்தமில்லாத தப்பெண்ணங்களைத் தம்மிடையே ஏற்படுத்திக் கொண்டு முட்டி மோதுகின்ற அவலம்.
ஆண்டாண்டு காலமாக அண்ணன் 5" அயல்வீடுகளில் வசித்து வந்த

Page 13
66568 VN
இவர்களிடையே பகையை மூட்டியது யார்? பெரும்பான்மை இனம், பிரித்து ஆண்டு குளிர்காய்வதை ஏன் இவர்கள் யாரும் புரிந்து கொள்கிறார்களில்லை?
அப்படி ஒரு மோதல் வெடித்த நாட்களில் தான் அந்த அவலம் நிகழ்ந்தது. கடமை முடிந்து, மனைவியையும் குழந்தையையும் காணும் துடிப்போடு மாலையில் தயாளன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் மசூதிக்கு அண்மையில் அவன் வெட்டிக் கொல்லப் பட்டான். நேற்று நடந்த கொலைக்கு இது பழிவாங்கலாம். எதுவித தப்புத் தண்டாவுக்கும் போகாத தயாளன் தன் இரத்தத்தை மண்ணோடு மண்ணாகக் கலந்து காற்றில் கரைந்து போனான்.
பிறந்தநாள் பரிசோடு அப்பா வருவார் என்று ஆசையோடு காத்திருந்த தனுசனும், மணவாளனுக் காயப் க் காத் திருந்த சாந்தாவும் நடந்த கொடுரத்தை அறிந்திருக் கவில்லை. நேரம் செல்லச் செல்ல அவன் வராதமையினால் மனம் கலங்கிப் பதைபதைத்தனர்.
மறுநாள் காலைவரை செய்வது அறியாது தவித்தபடி வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டினாள் சாந்தா. நாட்டு நிலைமை காரணமாக காலையில் கணவனைக் கடமைக்குச் செல்ல வேண்டாம் என்று சாந்தா தடுத்தாள்.
“இப்ப நிலைமை மோசமில்லை. அதுமட்டுமல்ல என்னை எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் பாரபட்சமின்றி அன்போடு வைத்தியம் செய்யிறன். எனக்கு ஒன்றும் பயமில்லை. அதோடை தனுக்குட்டிக்கும் பிறந்தநாள் பரிசு வாங்க
வேணும். போட்டோ எடுக்க வேணும்.” இவன் அவளைச் சமாதானப்படுத்திப் புறப்பட்டான். அவன் நினைத்தது ஒன்று நடந்ததோ வேறு.
மறுநாள் காலையில் தகவல் கிடைத்து, தயாளனின் உடலைச் சவக்கிடங்கில் பார்த்த கணமே அவள் வாழ்வு இருண்டுவிட்டது. அன்றோடு எல்லா இன்பங்களும் கரைந்து போய்விட்டன. சாந்தா நடைப்பிணமானாள். ஒரு வருடம் கடந்துவிட்ட பின்னும் அவனது நினைவுகளிலிருந்து சாந்தாவால் மீள முடியவில்லை. கட்டிலில் கைகள் விடிகாலைப் பொழுதில் அவனைத் தேடும் - நேரத்துடன் எழுந்து காலைக்கடன்களை முடித்துச் தேநீருடன் அவள் வந்து அவனை எழுப்புவாள். கண்விழிக்கும் தயாளன் தேநீரை வைத்துவிட்டு முதலில் அவளது இதழ்களில் தேன் அருந்துவான். “சீயப். போங்க..?" என்று அவள் செல்லமாய்ப் பிகு பண்ணியபடி இன்னும் அவனை நெருங்கி. நினைவுகள் நெருப்பாய்த் தகிர்த்தன.
இன்று அருகில் இவன் இல்லை. எல்லாம் ஒரு கனவு போல நேற்று நடந்தது போலிருக்கின்றது. தனுசன் தயாளனையே உரித்துப் பிறந்தவன். அப்பா அப்பா என்று கொஞ்சநாள் நடைப்பிணம் போல் திரிந்தவன். இப்போது என்னமாய் மாறி விட்டான்! ஏன் அப்படி அவளால் முடிய வில்லை. சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்த சாந்தா தனுசனை எழுப்பினாள். “குட் மோர்னிங் தணுக்குட்டி.”, “குட் மோர்னிங் அம்மா” என்று எழுந்து அவளது கழுத்தைச் சுற்றிக் கன்னத்தில் முத்த மிட்டான். தனுசன் யதார்த்தமாகப் பேசியும், சிரித்தும் அப்பாவின் பிரிவை மறந்து
(22)

geese): Q
விட்டான் என்று கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
அவனோடு கொஞ்சி விளையாடுகிற அப்பா. மார்பிலே தூக்கிப் போட்டுக் கொண்டு முதுகைத் தட்டித் துங்க வைக்கின்ற அப்பா. கடற்கரை மணலில் அவனை ஓடி விளையாடவிட்டு அம்மா வுடன் சோடியாக அமர்ந்து கதைத்துக் கொண்டிருக்கிற அப்பா. அவர் இனி இல்லை என்ற உண்மையை மனதார ஏற்றுக் கொண்டு விட்டானா? அல்லது அப்பா இல்லாத குறை தெரியாமல் அவனை வளர்க்கிற சாந்தாவின் கெட்டித் தனத்தால்தான் இயல்பாகிவிட்டானா? ஆனால் தன்னளவில் அவளால் ஏன் மாற முடியவில்லை? அவனது பிரிவு, அதனால் வாழ்வு அவள் மீது சுமத்தியிருந்த பாரம் இந்த ஏகாந்தமான, தவிப்புடனான தனிமை எல்லாமே மன அழுத்தங்களை ஏற்படுத்தி யிருந்தன. அவன் இருந்திருந்தால் இப்படி யான ஒரு நிலையை அவள் எதிர் கொண்டிருக்க மாட்டாள்.
அவள் எது சொன்னாலும் அவன் கேட்பான். அவள் எது கேட்டாலும் மறுக்க மாட்டான். ‘அத்தான் சிகரட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த மாட்டீர்களா? அவள் அன்போடு கேட்டாள். “அது 616ன் முதல் மனைவி.” என்று கண் சிமிட்டிவிட்டு குறைச் சிகரட்டை காலில் மிதித்தான். பொக்கற்றில் இருந்த சிகரட் பைக்கற்றையும் எடுத்து எரியும் அடுப்பில் விசினான். அவள் ஒரு கணம் திகைத்துப் போனாள். கண்கள் பனிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் மீதுள்ள அன்பின் தீவிரத்தை எண்ணி உளளூரப் பெருமிதப்பட்டபடி அவனை அணைத்தாள்.
ஓ! அவன்தான் எவ்வளவு அன்பு நிறைந்த துணையாக இருந்தான். பெண் விடுதலையென்று அவள் வாசித்த கட்டுரை க்ளில் வரும் ஆணாதிக்க சமுதாயத்தின் பிரதிநிதிக்கு நேர்மாறாக இருந்து அவளை ஒரு பூப்போல நடாத்தினான். அவனை நினைக்கையில் சோடிக்குயிலைத் தேடும் ஒரு பேதைக் குயிலின் சோகமாய் உணர்ந்தாள். காலம் அளித்திருக்கும் கொடிய துன்பத்தின் மத்தியிலும் அவன் நினைவுகள் இனிதாய் நெஞ்சை வருடிச்
"இன்றைக்கு எங்கடை கல்ய600 நாள். ஒரு சாறி எடுக்க வேணும் வாரும் சாந்தா” என்று முதலாம் ஆண்டு நிறைவின்போது அவன் அழைத்தது நேற்றுப் போலிருக்கின்றது. அவனோடு மோட்ட பைக்கில் சோடியாக அமர்ந்து கொண்டு பவனி வருகையில் ஒரு மகாராணி போல் தன்னையுணர்வாள்.
'உமக்குப் பிடிச்ச புடவையாக 6T(5ub...."
"நீங்களே எடுத்துத் தாங்கோ.”
“கட்டப் போறது நீர் தானே?”
"ரசிக்கப் போறது நீங்கள் தானே?”
“அப்ப நான் ஒன்ற தெரிவு செய்யிறன். நீர் ஒன்று தெரிவு செய்யும்.” இருவரும் கடையைச் சல்லடை போட்டுத் தெரிவு செய்தார்கள். இருவரது தெரிவும் ஒன்றாக இருந்தது. அவன் கண்சிமிட்டிச் சிரித்தான். இவளது முகமும் சிரிப்பில் நிறைந்தது. நினைவுகளில் நெஞ்சம் விம்முகின்றது அவளது அழகான வாழ்வில் கண்ணிழை வாரிக் கொட்டிவிட்டுச் சிரிக்கிறது விதி.
(2)

Page 14
yeggio
பிரிவு அவளது முகத்தில் வாட்டத்தை ஏற்படுத்தி உடலையும், உள்ளத்தையும் சோர வைத்துவிட்டது உண்மைதான். எனினும் அவளது இயல்பான அழகையும், கட்டுவிடாத உடலையும் பார்க்கின்ற போது, முப்பது வயதுக்குள்ளாகவே கணவனைப் பறிகொடுத்து விட்டு நிற்கிறாளே என்ற பரிதாபத்தை ஏற்படுத்தும். சில நண்பர்கள் அவளை மறுமணம் செய்து கொள்ளும்படி ஆலோசனை கூறினர். ‘வாழவேண்டிய வயது. இன்னும் எவ்வளவு காலம்தான் தனிமரமாக இருக்கப் போகிறாய்? அப்பாவின் அரவணைப் பில் லாமல் தனுசனும் பாடசாலை செல்ல ஆரம்பித்த பின் ஏங்குவான்’ என்று எடுத்துச் சொல்வார்கள். அண்ணா அவளுக்கு இடம் பார்த்தே விட்டான். அவளோ பிடிவாதமாக மறுத்து விட்டாள்.
பாலைவனத்தில் பொழிகின்ற நிலவு போல், பற்றிப் படர கொழுகொம்பு இல்லாத கொடி போல், அவளது வாழ்வு அர்த்தமின்றி நகர்ந்தது.
ஆனால் அவளால் தயாளனை மறக்க முடியவில்லை. அவளது மனதில் அவன் இன்னமும் நிறைந்து போயிருந்தான். மறக்கக் கூடிய உறவா அது?
ஒருநாள் பார்த்து அவளை ஏசிக்கடிந்திருக்க மாட்டான். அவள் நினைப்பதை அவனே முந்திக் கொண்டு நிறைவேற்றி விடுவான். வெளி வேலை களிலும் வீட்டு வேலைகளிலும் அவன் பங்கு அதிகம். இரவெல்லாம் இனிக்க இனிக்கப் பேசி எல்லையில்லா இன்பத்தைக் கொடுப்பான். அவளும் அன்பைச் சொரிவாள்.
“நீங்கள் இலட்சியத் தம்பதியடி’ என்று தோழி பாத்திமா பாராட்டாகவும், பொறாமையாகவும் கூறுவாள். “எங்கடை அவர் வியாபாரம் என்று எப்பவும் வெளியே போய்வருவார். உன்கென்னடி அவர் எந்நேரமும் அருகில் தானே” எனக் கண் சிமிட்டுவாள். நீண்ட நாட்களின் பின் பாத்திமாவைக் கண்டபோது இருவரும் ஆழ்ந்த மெளனத்தில் கண்கலங்கினர். “சாந்தா விதி செய்த சதியைப் பார். இருவரும் விதவையாகி.’ என்று கலங்கினாள் பாத்திமா. “இது விதியின் விளையாட்டல்ல. எம்மிரு சமூகத்தினரதும் மதி கெட்ட வினை. ஊர்காவற் படை என்ற ஒன்றை உருவாக்கி, ஆயுதமும் வழங்கி எங்களை பகைவர்களாக்கியது பெரும் பான்மை அரசுதான்” “உண்மை தான் சாந்தா. நீங்க இனவாத அரசின்ரை அடக்குமுறைக்கு எதிராகப் போராடுறியள். நாங்கள் உங்களுக்கு உதவி புரியாமல் விட்டாலும் , மாறாக நடக்காமல் இருக்கலாமில்லையா? அடிப்படையில் நாங்கள் இரு சாரரும் தமிழ் பேசும் மக்கள். எங்களை இணையாவிட்டால் தனக்கு ஆபத்து என்று அரசு நினைக்சுக் குறிச்சுச் செயற்பட்டது. நாம் இருசாரரும் அதற்குப் பலியாகிட்டம், பாத்திமா நடந்தது எதுவானாலும் நம்மிருவர் வாழ்வும் இளமையிலேயே கருகிப் போய்விட்டது. பாடசாலையில் படித்த நாட்களில் நாம் சிட்டுக் குருவிகள் போல சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய ஆசைகள் கூட இனியில்லையென்றாகி விட்டதடி.”
தனுசன் இப்போது பாலர் பராமரிப்பு நிலையத்திற்குப் போய் வருகின்றான். அடுத் வருஷம் பாடசாலைக்குச் சேரவேண்டும். அவனை வளர்த்து ஆளாக்க வேண்டியதே அவளுக்குரிய சவால். இவளின் ஒளிக்கிற்று
(2)

ye GSG) is
அவன்தானே? குறுகிய இல்வாழ்வில் தயாளன். துணிச்சலுடையவளாக அவளை மாற்றியிருந்தான். இதனால் அவள் வாழ்வில் இன்னல்களையும் தைரியத்தோடு எதிர் கொள்கின்றாள். ஏதாவது ஒரு வேலை தேடிக் கொள்ள எண்ணுகின்றாள். அதிலும் இனப்பாகுபாடு காரணமாக வாய்ப்புக்கள் நழுவிக் கொண்டிருந்தன. அண்ணாவிடம் சொன்ன போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் உளளுர்ப் பாடசாலையில் தொண்டர் ஆசிரியராக பணியாற்றும்படி ஆலோசனை சொன்னான்.
இன்று முதல் தொண்டர் ஆசிரியராக பாடசாலைக்குப் போகப் போகிறாள். காலையில் அசதியையும் மனச் சோர்வையும் விலக்கிக் கொண்டு துரிதமாக தனுசனை வெளிக்கிடுத்தித் தானும் வெளிக்கிட்டாள். தாமதமாக எழும்பியதால் சகலதிலும் அதே தாமதம் தொடர்ந்தது.
‘அப்பாவிடம் போகப் போகின்றோமா? என்று தனுசன் ஒருநாளும் இல்லாத்வாறு கேட்டபோது துணுக்குற்றாள். “இல்லை தனுக்குட்டி. அம்மாவும் இண்டைக்குப் பள்ளிக்கூடம் போகப்போறா.” “பெரியவர் களும் பள்ளிக்கூடம் போறதே?” என வியப்போடு தாயை நோக்கினான். “அம்மா இனி ரீச்சர். படிக்க இல்ல, படிப்பிக்கப் போறர்.” மென்மையாக சொன்னபடியே தனுசனை முத்தமிட்டாள். தூரத்தே செல் அடிக்கும் சத்தம் கேட்டது. ‘இந்த ஆக்கினை எப்பதான் முடிவுக்கு வரப்போகுதோ, என்று நினைத்தாள். பாடசாலைக்குச் சென்று கடமையைப் பெறுப்பேற்றுக் கொண்ட சாந்தாவுக்கு சின்னஞ்சிறார்களின் புதிய உலகம் உவகையளித்தது. அவர்களது முகத்தில் தெரிந்த ஒளி மன இருளை அகற்றுமாற்ப் போல் ஒத்தடம் கொடுத்தது.
இனி தன் மனமும் தேறிவிடும் என்று பூரித்தாள். ...
சாந்தா காலையில் தான் போகும் போது மகனையும் பாடசாலையில் விட்டுவிட்டு, வரும்போது அவனையும் அழைத்துக்கொண்டு வருவாள். இவளின் வாழ்க்கைச் சக்கரம் சுழல அண்ணாவும் தம்பியும் அவ்வப்போது பொருளாதார உதவிகள் செய்தனர். அமைதியாக சென்று கொண்டிருந்தது வாழ்வு.
ஆனால்.
மனித வாழ்வில் நினைப்தெல்லாம் நடப்பதில்லையே!
அன்று காலையிலிருந்தே செல்கள் அடுத்தடுத்து வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்து. சாந்தா படிப்பித்துக் கொண்டிருந்த போது செல் அண்மையில் விழுவது கேட்டது. துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டவண்ணமிருந்தன. ஏதோ நடக்கப் போகின்றது என எல்லோரும் பயப்பட்டார்கள். பாடசாலையில் ஒரே பரபரப்பு
‘ஆமி எங்கட உருக்குள் வருகு தாம்.” எல்லாப் பக்கத்தாலையும் ரவுண் டப்பாம்.” காட்டுத் தீ போல செய்தி பரவியது. மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். சாந்தா மகனையும் கூட்டிக் கொண்டு அண்ணன் வீட்டுக்குச் சென்றாள்.
‘தங்கச் சி. ஆமி ஊருக்குள் வந்திட்டான்கள். அண்ணியோட காட்டுக் குள்ள ஒடுங்கோ. நான் முக்கியமான சாமான்களை எடுத்துக் கொண்டு வாறன்.”
(s)

Page 15
3 try guese);
அவர்கள் காட்டை நோக்கி விரைந்தார்கள். துப்பாக்கி வேட்டுக்கள் அண்மையில் வெடிக்கவே சாந்தா திரும்பிப் பார்த்தாள். "ஐயோ’ என அலறியபடி நிலத்தில் வீழ்ந்த அண்ணாவை நோக்கி அண்ணியுடன் திரும்பி ஓடினாள். அடுத்த வேட்டு அண்ணியையும் பதம் பார்த்தது. “ஐயோ” என்று அலறினாள் சாந்தா. “ஓடித் தப்பு சாந்தா’ அண்ணாவின் இறுதி வார்த்தை அதுதான்.
கண்ணுக்கு முன்னால இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்துக் கொண்டிருந்த அண்ணாவை விட்டு தனுசனைத் தூக்கிக் கொண்டு, உயிரைப் பிடித்துக் கொண்டு ஊரவருடன் சாந்தாவும் சேர்ந்து ஓடினாள். தூரத்தே எங்கும் சுவாலை விட்டெரியும் வீடுகளும், புகை LD605L6)LDTui...
அடர்ந்த காட்டுக்குள் நுழையும்போது அனைவருக்கும் மூச்சிரைத்தது. சாந்தா தனுசனை இறக்கிவிட்டு தன்னை ஆசுவா சப்படுத்தினாள். குழந்தைகள் எல்லாம் வீறிட்டு அழுது கொண்டிருந்தன. “அம்மா தண்ணி.” தனுசன் அழுதான். யாரிடமும் தண்ணிர் இல்லை. நகைநட்டு, உடுப்பு, பணம்தான் வைத்திருந்தார்கள். “கிட்டடியில் குளம் இருக்கவேணும். பாத்து வாறம்” என இரண்டு இளைஞர்கள் புறப்பட்டார்கள். மாலை நெருங்கியதும் எல்லோருக்கும் பசிக்கத் தொடங்கியது. இதற்கிடையில் குளம் பார்க்கச் சென்றவர்கள் திரும்பி வந்து எல்லோரையும் அழைத்துச் சென்றார்கள். தாகம் தீர தண்ணிர் அருந்தியபோது அது சொர்க்கமாய் இருந்தது. இளைஞர்கள் சில பழங்களை பறித்து வந்தார்கள். பசித்த வயிறு. அனைவரும் ஆவலோடு உண்டனர்.
இதற்கிடையில் தவறியோர் பற்றிய பேச்சும் எழுந்தது. பெண்ணெருத்தி ‘ஐயோ நான் போகப்போறேன். என் பிள்ளைகள்' எனக் கதறினாள். ‘உனக்கென்ன விசரே?. ஆமி இந்தப் பக்கம் சென்றி போட்டுட்டானாம். இனி நாம் ஊர் திரும்பேலாது. வேறு வழிதான் யோசிக்க வேணும்.”
இரவு எல்லோரும் காட்டினி வெட்டையில் உறங்கினார்கள். தொலைவில் நரியின் ஊளை, யானையின் பிளிறல் போன்ற சத்தங்கள் பயத்தை ஏற்படுத்தின. ‘அம்மா எறும்பு கடிச்சுப் போட்டுது. தனுசன் வீறிட்டான். அவள் அவனை அணைத்தாள். கையில் ஏதோ தட்டுப்பட்டு நெளிந்து ஓடுவதை உணர்ந்தாள். பதற்றத்துடன் எழுந்து பார்த்தபோது நிலவொளியில் பாம்பு ஒடுவது தெரிந்தது. ‘ஐயோ கடவுளே. பாம்பு கடிச்சுப் போட்டுது” சிலர் அருகே வந்தார்கள். தனுசன் அழுது கொண்டிருந்தான். 'இப்ப என்ன செய்யலாம்?” என்று ஒருவர் கேட்க, இன்னொருவர் “ஒண்டும் செய்யேலாது. விடியத்தான் யோசிக்க வேணும்.” என்றார். 'அறுகம் புல் லிருந்தால் பார்த்துப் புடுங்குங்கோ.’ஒருவர் கூற அறுகம் புல்லைத் தேடி ஓரிருவர் பதைத்தனர். இரவில் அடையாளம் காண முடியவில்லை.
தனுசன் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்து கொண்டிருந்தான். ‘ஐயோ என்ர பிள்ளையை காப்பாத்துங்கோ.” என்ற பிரார்த்தனையோ அழுகையோ அவனைக் காப்பாற்றவில்லை. சாந்தாவுக்கு வாழ்வே வெறுத்தது. ‘இன் நான் ஏன் வாழவேணும்? நானும் உன்னோடை வாறன் தனுக்குட்டி.”
(26)

8 passed IRN
மறுநாள் காலை காட்டுக்குள்ளேயே மைந்தனை அடக்கம் செய்தாள். அவளை எவராலும் தேற்ற முடியவில்லை. ஒரு பைத்தியக் காரி மாதிரி அரற்றிக் கொண்டிருந்தாள். சாக வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த சாந்தாவின் மனதில் மின்னல் போல் ஒரு ஒளிக் கீற்று. 'வீணாய்ச் சாவதை விட.
இதற்கிடையில் உணவுப் பிரச்சினை பலரையும் வாட்டியது. ’’ இப்படியே பழங்களைச் சாப்பிட்டபடி வன்னிப் பக்கம் போய் மிதப்பம். அதுதான் எங்களுக்குப் பாதுகாப்பு.’ பலரும் ஆமோதிக்க வன்னி நோக்கிய பயணம் தொடர்ந்தது. கணவன் இறந்தபோது, அண்ணன் இறந்தபோது எல்லாம் கதறி அழுதது போலவே சாந்தா இப்பொழுதும் அழுதாள். எனினும் விரைவில் தேறிவிட்டது. அவளது மனதிலே ஏற்பட்டுவிட்ட ஒரு தெளிவான முடிவுதான் அதற்குக் காரணம்.
‘தொடர்ந்து எமது வாழ்வு இப்படி இருண்டு கொண்டே இருக்க வேண்டுமா? இதற்கு ஒரு முடிவே இல்லையா? மனதில் ஆயிரம் கேள்விகள் உருவாகின. 'ஓடி ஒடிச் சாவதைவிட எதிர்த்து நிற்கலாமே! அவளது மனதில் எழுந்த கேள்விக்கு விடையளிப்பது போல அவர்களுக்குப் பாதை காட்டிக் கொண்டு வந்த இளைஞன் தன் மனதில் எழுந்ததைக் கூறினான்.
‘நாங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒளிஞ்சு ஒளிஞ்சு ஒடுறது? எங்கட தமிழ் சனங்களை கென்று தள்ளுறாங்க. ஏன்? தமிழராகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக குட்டக் குட்டக் குனியுறது எங்கட முட்டாள்தனம். எமக் கெதிரான அடக்குமுறையை எதிர்த்து நாங்கள் எல்லாம் போராட வேணும்.
அடம்பன் கொடி கூட திரண்டால் மிடுக்குத்தான். நாம் சிறுபான்மையினம்தான். அதிலையும் வெகுசிலர்தான் தாயக விடுதலைக்காகப் போராடுகினம். ஒரு சலர் மட்டும் போராட, மற்றவர்கள் பார்வையா ளர்களாக இருந்து கொண்டு இந்தச்
சணி டையிலை வெல்ல முடியாது.
எல்லோரும் போராட்டத்திலை இணைய வேணும். நாம் போராளியாக மாறா விட்டாலும் கூட எதிரியின்ர பார்வையில தமிழன் எல்லோருமே பயங்கரவாதிகள்தான்.
எத்தனை அப்பாவிகளை கொண்று
குவிசிட்டான்கள். எத்தனை அப்பாவிகள் சிறையில் சித்திரவதைகள் அநுபவிக்குதுகள் ஏன்?. தமிழன் என்ற ஒரே காரணத்தினால் தான்! சுட்ட மண்ணும், பச்சை மண்ணும் ஒட்டாது என்பது போல இனி இரண்டு இனங்களும் இணைஞ்சு வாழுறது சாத்திய மில்லை. இது இன்றல்ல. நேற்றல்ல. எல்லாளன் துட்டகைமுனு காலத்திலிருந்தே ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற
சற்று நிறுத்திவிட்டு எல்லோரையும் பார்த்தான் அந்த இளைஞன்.
எல்லோர் மனதிலும் அவனது வார்த்தைகள் பசுமரத்து ஆணி போல ,lيرتLáb
“மக்கள் போராட்டயாக கபது போராட்டம் மாறவேணும். அமெரிக்கரை விரட்டியடித்த வியட்நாமியரைப் போல ஒரு விடியலுக் காயப் நாம் ஒன்றிணைய வேலும்.” மீண்டும் கலீைரென்று அவனது குரல்.
* உண்மைதான் தம்பி. நான்
இணையுறன்.” பதில் சொன்னது வேறு யாருமல்ல. சாந்தாவேதான்!

Page 16
படிக்காதவர் படிப்பித்த பாடங்கள்
உடுவை. தில்லை நடராசா
அந்த நாட்களில் ஐஸ்கிறீம் விற்பனை செய்யாத கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகளைக் காண்பதரிது. பெரும்பாலும் போதியளவு எல்லாப் பொருட்களையும் உடனடியாகக் கொள்வனவு செய்வதிலேயே மக்கள் நாட்டம் மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சில பொருட்களை அவித்தோ அல்லது வற்றலிட்டோ பதப்படுத்தி அடுத்த சில நாட்களுக்குப் பயன்படுத்தினர். இப்போதுள்ளது போல பல நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சி மீன் முதலியவற்றை உறைய வைத்து உண்ணும் வழக்கம் இருக்கவில்லை. இந்நிலையில் முகவர் ஒருவரின் சாமர்த்தியத்தால் அப்பாவின் முதலாளி குளிர்சாதனப்பெட்டி ஒன்றை வாங்கினார். சோடா போன்ற குளிர்பானங்கள் வைத்தெடுப்பதற்கு இப்பெட்டி பயன்பட்டது. சாதாரண சோடாவை விட கூல் சோடாவின் விலை ஐந்து சதம் அதிகம். எதிர்பார்த்தளவுக்கு குளிர்சாதனப்பெட்டியால் வருமானம் வராதது ஒருபுறம் இருக்க குளிர்சாதனப் பெட்டியைத் தொடர்ந்தும் இயக்கியதால் மின்சாரக் கட்டணம் அதிகரித்தது முதலாளிக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அவரின் நண்பர் காட்டிய மாற்று வழி “இரவில் மின்னிணைப்பைத் துண்டித்து குளிர்சாதனப் பெட்டியின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். நீர் நிறைந்த வாளிக்குள் அமுக்கி மீண்டும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்யலாம். சோடாவை விலை கூட்டி விற்கலாம். மின்சாரக்கட்டணமும் குறையும்”
காலையில் குளிர்பானம் விற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் "கூல் கொஞ்சம் காணாது” என்று சொல்லிக் கொள்வார்கள். அப்யா போலி வேலைகளுக்கு பச்சைக்கொடி காட்டாததால் குளிர்சாதனப்பெட்டி விற்கப்பட்டது.
எனது நிதி நிலை திருப்தியாக இருந்த போது நான் ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்கிய போது எனது நண்பர் ஒருவரும் குளிர்சாதனப்பெட்டி வாங்கினார். வாழைப்பழம் போன்றவற்றை அதனுள் வைக்கக் கூடாதென்றும் காலத்துக்குக் காலம் சுத்தமாக்க வேண்டுமென்றும் சொல்லித் தந்த அப்பா வேறு ஒரு விடயத்தையும் வற்புறுத்திச் சொன்னார்:
“சில பொருட்களை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்ததும் தாமதிக்காமல் பயன் படுத்த வேண்டும். சில பொருட்களைக் குளிரில் வைத்திருந்தாலும் அவற்றின் காலம் காலாவதியாகும் முன் பயன்படுத்த வேண்டும். மின்சாரக் கட்டணத்தைக் கணக்கிலெடுத்து தொடர்ச்சியாக மின் இணைப்பைக் கொடுக்காமல் விட்டாலும் பொருட்கள் பழுதாகிவிடும்”
இந்த விடயத்தில் நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. நான் மட்டுமல்ல, உயர் அதிகாரியான எனது நண்பரும் தான்.
இள வயதிலேயே நண்பரைச் சில வருத்தங்கள் வாட்டியதால் அடிக்கடி ஊசி மூலம் மருந்தேற்றிக் கொள்வார். அடிக்கடி ஆஸ்பத்திரி செல்வதும் டாக்டர் என அலைவதும் சிரமம் எனச் சொல்லி தனக்குத் தானே ஊசி மூலம் மருந்தேற்றப் பழகிக் கொண்டார்.

Go பார்மஸிகளில் தளசி மருந்தை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பார். தனக்கு விருப்பமான போது தானே வைத்தியம் பார்த்துக் கொள்வார்.
திருகோணமலையில் வேலை செய்த நண்பர் கடமையொன்றுக்காக சில தினங்கள் மட்டக்களப்புக்கு சென்று திருமலை திரும்பி யதும் குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். வழமைபோல ஊசி மருந்தை எடுத்து தனக்குத்தானே ஏற்றிய பின் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்து குடும்பத்தினருக்குச் சோன்னதும் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர்தான் நடந்த விஷயம் தெரிய வந்தது. நண்பர் மட்டக்களப்பு சென்றபின் மின்னிணைப்பை நிறுத்தி குளிர்சாதனப் பெட்டியை துப்பரவாக்கிய போதும் சில நாட்களுக்குப் பீன்தான் குளிர்சாதனப் பெட்டியை இயங்க வைத்திருக்கின்றனர்.
பழுதான மருந்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்தியா சென்றும் ஏற்ற சிகிச்சை பெற முடியாமல் போனதால் மிகவும் திறமையான ஈழத்தமிழ் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரை இளவயதில் இழந்து விட்டோம்.
+ +
அந்த சுற்றாடலில் இருந்த சாப்பாட்டுக் கடைகளை விட சில பொருடகளின விலை Grip SÐ4f9-bLi. BóŠliġib UtpåJ Ls: 133 Gl'Itävib)P-L யாளர் ஒருவர் என் காது கேட்கக் கூடியதாகச் சொன்னார்.
"விலையெல்லாம் கூடச்சொல்லி இப்படி வயித்திலை அடிக்கிறீங்களே” அப்பாவின் முகத்தில் மெல்லிய சிரிப்பு. "விலை உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக் கும் கட்டுப்படியாகதனும் கலப்ப மில் லாமல் சாப்பாடு செய்யிறதால விலை கொஞ்சம்
கூட. வயித்தில அடிச்சாலும் இந்தச் சாப்பாட்டால வருத்தம் வராது.”
கலப்படம் இருக்கக் கூடாது என்பது கடையை ஆரம்பித்த தில்லைவனம் பிள்ளை முதலாளியின் கண்டிப்பான உத்தரவு சாப்பிட வருவோர் அடுக்களை வரை வந்து சாப்பாடு தயாராகும் விதத்தைப் Lu:TizijdbbUTLü. 3)fdlus II. Ló611d'Tugbybolt, கோப்பித்துள் போன்றவற்றை ஆட்களைக் கொண்டுவந்து ஹோட்டலில் தயாரிப்
பார்கள். பால் பெற்றுக் கொள்வதற்காக
மாட்டுப் பண்ணையொனறும நடாததப பட்டது. தேவை அதிகரித்ததால் வெளியே பால் வாங்கினாலும் மாட்டுப்பன்ைனை தொடர்ந்தும் பேணப்பட்டது.
“நாளைக்கு ஆட்கள் வராவிட எலும் பரவாயில்லை. சாப்பாட்டைக் குறை சொல்லக்கூடாது. நேர்மையாகச் சம்பாதிக் கிற காசுதான தங்கும. ஏமாததிச சமாதிக் கிற காசு எங்களை ஏமாத்திட்டோடும்” என அடிக்கடி சொல்லி கோதுமை மாவுடன் தவிட்டைக் கலந்து தயாரித்த இடிபட்டத்தை 9{tlefint (39,1 Jüttb 66ó3 6ń'i)]] i JóRTł აy-ti:t u I რწჭიჭი უკყ სი)It &პიII ი)tu Wუწ(Bის (3.11 நீரிழிவு நோய்க்கு ஆளாகி தனிட்டுப் பலன் சாப்பிடும் உதாரணத்தையும் சுட்டிக் காட்டுவார்.
ーサ +
db 60)U- 3)Ib gib bíI 6 6))Lpéib *bÜ Ut? 'சைவாள் காப்பி ஹோட்டல்’ எனவும் அழைக்கப்பட்டது. கடையில் வேலை செய்ய வர்கள் கூட முட்டையென்றாலும் உள்ளே கொண்டு வந்தல் வேலையிலிருந்து நீக்கப் படுமளவுக்கு கடும் உத்தரவு. சைவத்தை விரும்பிச் சாப்பிடுவோர் முகம் சுளிக்காமல் வந்து போக வேண்டுமென்ற எதிர்பார்ப்பு. ஒரே ஒரு விதிவிலக்கு செல்லமாக வளர்த்து

Page 17
ye GSG) KNS
வந்த நாய்க்கு மட்டும். கடையின் மாற்று வழியொன்றினால் நாயாரின் தேவை கவனிக்கப்படும்.
+ +
சின்ன வயதில் இன்னுமொரு கெட்ட பழக்கம். நல்ல விடயங்களை விரும்பிக் கேட்கும் எனது காது தீப்பெட்டிக்குச்சு, கிளிப், ஊசி போன்றவற்றையெல்லாம் கேட்கும் - காது குடைவதற்காக. சிலசமயம் கை ஏதாவது பொருளைத் தேடியெடுத்து காதினுள்ளே விட்டு பெரிய அட்டகாசம் செய்யும். அப்பா பார்த்து விட்டால் அவ்வளவு தான்.
"கட்டிக்கு எத்தனை தரம்.” அவர் ஆரம்பித்ததும் அவர் பார்வையிலிருந்து மறைவதைத் தவிர வேறு வழியில்லை.
குளிக்கும் போது நீருற்றி காதுகளைக் கழுவ வேண்டும். பின்பு சற்று தடிப்பான பழைய சீலைத்துண்டை திரிபோல உருட்டி காதில் விட்டு அழுக்கையகற்ற வேண்டும். கிளிப் ஊசி போன்றவை காதில் காயத்தை ஏற்படுத்தினால் புண் உண்டாகலாம். தீக் குச்சின் மருந்துள்ள முனை காதில் போனால் மேலும் அழுக்குச் சேரும். பயன்படுத்தி எறிந்த தீக்குச்சை எடுக்கிற போது நிலத்தி லிருந்த அழுக்கையும் சேர்த் தெடுத்து காதுக்குள் சேமிக்கின்றோம்.
"இரு முனைகளிலும் பஞ்சு வைத்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட க்ாது குடையும் குச்சியை அப்பாவிடம் காட்டினேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்போதும் சிரித்தார். ஒரு முனையில் ஒட்டப்பட்டிருந்த பஞ்சு சிறிது கழன்றிருந்தது. “நல்ல வேளை காது குடையும் போது காதுக்குள் கழன்றால்.” என நான் சிந்தித்த போது இன்னொரு சம்ப வத்தைச் சொன்னார்.
(30)
அப்பாவின் மருமகன் ஒருவன் பாட சாலைக்குச் செல்லும் நாட்களில் பொழுது போக்காக தும்பு சிறு குச்சு போன்றவற்றை மூக்கினுள் நுழைத்து தும்மலை வர வழைத்து மற்றவர்களைச் சிரிக்க வைப் பான் ஒரு நாள் அவனுக்கு கிடைத்த பொருள்
கொப்பியில் எழுதுவதற்கும் எழுதியவற்றை
அழிப்பதற்கும் சிறு இறப்பர் ஒரு முனையில் பொருத்தப்பட்ட பென்சில், இறப்பர் முனையை மூக்கினுள் விட்டு தும்மல் விளையாட்டு காட்டிய போது இறப்பர் கழன்று மூக்குத்துவாரத்தில் சிக்கி விட்டது.
தும்மி மற்றவர்களைச் சிரிக்க வைத்த மருமகனின் கண்கள் சிவந்து நீரைச் சிந்த மூச்சு விடுவதற்கும் வெகு சிரமப்பட்டான். பல முயற்சிகள் பயன் தராமல் போக ஆஸ் பத்திரியில் டாக்டர் வளைந்த கம்பி யொன்றை மூக்குக்குள் செலுத்தி இறப்பரை எடுத்தபின் மருமகனுக்குத் தும்மல் வருவ தில்லை.
சில வேளை என்னை மறந்து ஊசி யெடுத்து பல்லைக்குத்தினால், நகத்தைக் கிண்டினால் அப்பா என் முன்னால் நின்று ஏசுவது போல ஒர் உணர்வு. உஷாராகி உள்ளத்தால் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டு ஊசியை எறிந்து விடுவேன்.
+ +
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘சுதந்திரன் வாரப்பத்திரிகையின் வளர்மதி சிறுவர் பகுதியில் வெளியிடுவதற்காக உதவி புரிவோம்' என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்த கட்டுரையைப் படித்த தந்தை அது நல்ல கட்டுரை எனவும் திரும்ப அழ கான கையெழுத்தில் எழுதியனுப்பும் படியும் சொன்னார்.

്യബ
மீண்டும் எழுதி கட்டுரையை கடித உறையரினுள் வைத்து ஒட்டியபின் உறையை வாங்கியவர் மேலும் கீழும் பார்த் தார் - அவரே அந்தப் பார்வையை மொழி பெயர்த்தார்
"கடிதத்தை உறைக்கு அடங்கத் தக்க வகையில் பக்குவமாக மடித்து உறையில் வைத்து ஒட்டும் போது கடிதத்தைப் பெறுபவர் கிழிக்கும்போது கூட தவறியேனும் கடிதம் கிழியாத வகையில் உறையின் ஓரங்களுக்கு மாத்திரம் பசை தடவ வேண்டும்” கடித உறைக்கு அளவுக்கதிக மாகப் பயன்படுத்திய பசை கட்டுரையையும் சேதமாக்கிவிட்டது. இன்றைக்கு அலுவல கங்களுக்கு வரும் கடிதங்களில் பெரும் பாலானவற்றை உறையிலிருந்து நடுப்பதற் குள் அவை துண்டு துண்டாகி விடுகின்றன. கடிதங்கள் மட்டுமல்ல, காசோலைகளும்கூட.
ート +
சில விடயங்களை மனதைப் புண் 15}x} Loi: Jil 19 ixit 5b); Sou coeb 19 sixbi Ji. ஒரு நாள் மாலை வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டில் அட்டா மாத்திரம் இருந்தார்.
“என்ன கட்டி சப்பாத்துக் காலிலை ஏதோ மீதிச்சிட்டீர் போலையிருக்கு. ஒரே என்றார்.
iLibolulii. Nub:hä.
காலைத் தாக்கிப் பார்த்து விட்டு ஒன்று மில்லையென்றேன். அவர் விடவில்லை. "அப்ப சப்பாத்துக்குள்ளாயிருந்து மணக் குதா?”
பல நாட்களாகக் காலுறைகளைத் தோய்க்காத காரணத்தால் வியர்வையும் அழுக்கும் சேர்ந்துவரும் துர்நாற்றம் என எப்படி அப்பாவுக்குச் சொல்வது?
Guigiousld bigyfoolidobojbliui do) is காரத்தையும் எடுத்துக்கொண்டு கிணற்
றடிக்குச் சென்ற என்னைப்பின் தொடர்ந்த அப்பாவின் கைகளில் அழுக்கான எனது பெனியன் கைலேஞ்சி.
”சேட்டையும் காற்சட்டையையும்
மட்டும் தோய்த்து iron செய்தால் போதாது.
எல்லா உடுப்புகளையும் சுத்தமாக வைச்
சிருக்க வேணும். இல்லையெணடால
ஊத்தை உடுப்புகள1லை உடம்பு கடிக்கும். வருத்தமும் வரும்” என்று அப்பா சொன்னது மாலையில் வீட்டுக்குச் சென்று ஆடைகளை களையும் போது நினைவுக்கு வரும்.
+ +
அட்டா தொழில் செய்த க ைக்கு அருகி லமைந்த கட்டிடமொன்றில் பல அறைகள்.
ஒவ்வொரு அறையிலும் தங்கியிருந்தவர்கள்
சாப்பிடுவதற்காக கடைக்கு வந்த போதும சிலரின் அறைகளுக்குச் சென்ற போதும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. சொந்த ஊர் நிரந்தர வதிவிடம் வேறாக இருந்தாலும் சிறு சிறுதொழில முயற்சி:bbயில் ஈடுபடுவதால் அவப்கள் யாழ்ட்டாண நகரத்தில் தங்கியிருந்தார்கள்.
ஒருவர் ஐளல்கிறிம் விற்பவர். இன் னொருவப் புதிய வீடுகள் கட்டிடங்கள் கட்டு மிடங்களில் சீமேந்து பைகளை வங்கி வந்து சிறு சிறு பைகளாக ஒட்டி விற்பவர். 6îĵ6lfUiUJ LJouy53)-db 6 ligpb/Ulb)Jli, LJ 1 J29 Li db) „Ü#dfl விற்பவர். தையற்க்காரர் தும்பு மிட்டாய் b3 9-165 postoji (oglu Jubili 3ЈLugu Lesot அங்கே தங்கியிருந்தனர். அவர்களில் இரு 6)J6o)J ĝ9xb b ) 6i Urijú"JUIT 683I LJonüĚĞ3)busuuj, தில் காணநேர்ந்தது. ஒருவர் கையில் சிறிய காட்போட் பெட்டி மறு கையில் கண்ணாடிப் பேப்பரில் சுற்றப்பட்ட இனிப்புகள்.
"இருபது தோடமபழ இனிபபு பதது சதம. தாகத்துக்கு நல்லது. இருபது தோடம்பழ
(3)

Page 18
yet GSe: N
இனிப்பு பத்துச் சதம்” எனக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்.
மரநிழலின் கீழே நின்ற மற்றவரைச் சுற்றிவர சிறுவர் கூட்டம். ஒரு அட்டைப் பெட்டியில் இனிப்புகளும் ஒரு சிறிய தகரத்தில் தண்ணிரும் வைத்திருந்தார். கையில் இரண்டு அங்குல நீளம் இரணடு அங்குல அகலத்தில் வெட்டப்பட்ட காகித்தத் துண்டுகளை வைத்திருந்தார்.
அவரிடம் ஐந்து சதம் கொடுத்தால் கையிலிருக்கும் காகித் துண்டொன்றைக் கொடுப்பார். எதுவும் எழுதப்படாத காகித்தத் துண்டை தகரத்திலுள்ள தண்ணிரில் போட்டதும் அத்துண்டில் ஒன்று முதல் இருபது வரையிலான இலக்கங்களுள் ஏதாவது ஒரு இலக்கம் தோன்றும் என்ன இலக்கம் தோன்றுகிறதோ அத்தனை இனிப்புகளைக் கொடுப்பார். வெற்றுக் காகிதத்தை தண்ணிரில் போட இலக்கம் தோன்றுவதும் இலக்கத்துக்கேற்ப இனிப்புக் கொடுப்பதும் வேடிக்கையாகத் தோன்ற சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஐந்து சதம் கொடுத்து வாங்கும் துண்டுகளில் இடையிடையே 10 அல்லது 12 இலக்கங்கள் தோன்றும் போது அவர் பார்த்துப் பாராமல் இனிப்புகளை அள்ளிக் கொடுப்பதும் அநேகமாக 1 அல்லது 2 அல்லது 3 இலக்கங்கள் தோன்றும் போது கணக்காக இனிப்புகள் கொடுப்பதையும் கவனித்தேன். நானும் ஐந்து சதம் கொடுத்து துண்டு கேட்டபோது என்னை அடையாளம் கண்டு கொண்டதுடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் கைநிறைய இனிப்புகளை அள்ளித் தந்து அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்றார்.
பணம் கொடுக்காமல் பலர் முன்னிலை யில் நிறைய இனிப்புகளைப் பெற்றுக் கொண்டது சந்தோஷத்தைத் தந்தாலும் என மனதை ஏதோ உறுத்தியது.
0
அன்று மாலை நடந்ததை அப்பாவிடம் சொன்னேன்.
அப்பா அவரை அழைத்து பத்து ரூபா பணம் கொடுத்து "இந்தாய்யா இனி சின்னம் சிறுசுகளை ஏமாத்தாம நான் சொன்னதைச் செய்' என்றார்.
பின்னர் நான் அப்பாவிடமிருந்து தெரிந்து கொண்டது.
ஒருவர் பெரும்தொகையான இனிப்பு களை மொத்த விலைக்கு வாங்கி பத்து சதத்துக்கு இருபது இனிப்பு விற்பனை செய் கின்றார்.
மற்றவர் சவர்க்காரத்தை நீரில் கரைத்து அந்த நீரால் கடதாசியில் எழுதினால் அந்த இலக்கங்களை எழுத்துக்களை எல்லோரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என எண்ணிக் குறைந்த பெறுமதியுள்ள கடதாசிகளை அதிக அளவில் குறிப்பாகச் சிறுவர்களை ஏமாற்றி இனிப்பு விற்பனை செய்கின்றார்.
அட்_ாவுக்கு ஏமாற்றி வியாபாரம் செய் வதில் உடன்பாடில்லாததால் அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றார். அவர் தனது வியாt Tரத்தை மாற்றவேயில்லை.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக் குப் பின்பும் அவர் இலக்கத் துண்டுகளை வைத்தே இனிப்பு வியாபாரம் செய்ததைக் கண்டு அப்பாவிடம் சொன்னேன். அவன் கதையை விடு. நீ ஏமாறதே என்றார்.
பின்னர் சுமார் ஆறேழு மாதங்கள் போயிருக்கும். அவர் பஸ் நிலையத்தில் பொரித்த பருப்பு கடலை டொபி விற்பனை செய்வதைக் கண்டு அப்பாவிடம் சொன் னேன். “அவனுடைய பிள்ளையை யாரோ ஏமாத்திப் போட்டாங்களாம். என்னட்டச் சொல்லி அழுது கொண்டிருந்தான். அதுக்கப் | mi. s86 (Tsui LT6ö' 6Tsö3Ti 2. jT.

விரிசல்
- சி.சுதந்திரராஜா
நகைக்கடை வாசலில் கவிதாவைக் கண்டு அதிர்ந்தான். கண்ணில் கண்டு பல காலம் கடந்து பூவாகிப் பழமாகி அழுகி விழுந்த விதையில் மரம் கூட முகிழ்ந்து விட்டது. பித்தளைக் கடைவரை போன அருந்தவத்திற்கு அதிர்வலைகள் தந்தபடியே கண்டும் காணாமல் விலகினால்.
அத்தனை காலம் பிரிவிலும் வெறுந் தனிமையிலும் கழிந்திடும் என எதிர்ப்பார்த்துப் பழகிக் கொண்டவனே அல்லன். சித்தமழகி யார் என்கின்ற அதிநுட்பத் திருவெம்பாத் திறனாய்வுதனை அவளுக்கெனவே எழுதி அவளது இந்து நாகரீகப் படிப்புக்குத் தோன்றாத் துணியாகி நின்றவன் இன்று எவனோவாகிப் போயிருந்தான். பவள மல்லிகைச் சரம் கோக்கும் போதெல்லாம் இளமஞ்சள் பூக்காம்பெல்லாம் அவளுக்கு திரும்பாவையும் அருந்தவம் எழுதிய திறனாய்வுமே நினைப்பூட்டிய அந்த வசந்த காலம் இறந்த காலமாயிற்று.
ஒய்யாரக் கொண்டை போட்டபடி மதவடித் திருப்பத்தில் அருந்தவம் அவள் வருவதையே எதிர்பார்த்த காலமும் காலமாகிப் போனது. சண்முகலிங்கம் கூட அவனுக்குத் தெரிந்தவன் தான்.
காளி கோயிலில் வாகனம் தூக்கி சாமியை ஏந்திப் பிடிப்பதில் எப்பவுமே முந்திரிக் கொட்டை மாதிரி முன் நிற்கிறவனே ஒழிய தேவாரம் பாடுகின்றவனல்ல. அதற்கேற்றபடி கன்னங்கரேலென கறுத்துத் திரளும் தேகம் அவனுக்குண்டு. நேரெதிரான அருந்தவம் கூச்ச சுபாவம் கொண்டவன். மென்மை உடலம். முகத்திலே எளிதில் கவருந்தன்மை கனிந்திருந்தது. கர்வமுமிருந்தது.
கவிதாவை ஊதாநிற ஹீரோ ஹொண்டாவின் பின் இருக்கையில் அமர்த்தி ஓடிக் கொண்ட போதும் வழிமருங்கில் கண்ட அவன் இதே போலவே அதிர்ந்து போனான். பறித்தெடுத்த பாவத்தை சண்முகலிங்கம்தான் கட்டிக் கொண்டவன் போலக் கருதினான்.
“உங்களின்ரை பேரென்ன?”
‘காதலிக்கப் பிறந்தவன்.”
“உண்டு வளர்ந்தவன் எண்டு சொல்லுறது தானே”
(33)

Page 19
《༧ D&GSG);
“என்னைவிட நல்லாயக் கதைப்பியள் போலை”
அருந்தவத்திற்கு அப்படியே தான் கவிதாவும் அறிமுகமாயிருந்தாள். ஒளியுமிழ்ந்தாள்.
சும்மா சொல்லக் கூடாது. அருந்தவம்
அருமையான உடல் உழைப்பாளி. லேத் மிஷினிலே கை வைத்தான் என்றாலே அற்புதங்கள் பல விளையும். இருட்டிய பின்னாலும் இயந்திரத்தோடு அத்து விதமாக இணைந்து பிணைந்து தொழிற்படுவான். கவிதாவை நெஞ்சிலிருத் திடவே ஆசைப்பட்டு காசு சேகரித்து புது நெக்கிலஸ் செய்விக்கவும் எண்ணி யிருந்தான்.
சண்முகம் முந்திக் கொண்டான்.
பூமாலை கட்டுகிற வேகத்தில் குறுந் தகடுகளை அடுக்கி நுட்பத்தோடு ஒளித் தொகுப்புச் செய்பவன். அவனுக்கு அதனால் பெருந்தொகை புரளுகின்றது. அருந்தவம் ஏங்குமளவிற்குத் திரளுகின்றது.
தொழுவத்தின் குதிரைகள் போலவே ஏராளமான ஊர்திகள் உடமை கொண் டாடுகின்றான். நீலநிறத்தின் சாலியிலே ரஞ்சிதாவை இருத்தி வைத்து ஓடியபடி திரிந்தான். அவளோ எவனோ வசதியான ஒருத்தனின் அணைப்பைப் பயன்படுத்தி இவனை உதறி கொண்டாள். அவள் மறைந்த சுவடே தெரியாமல் கவிதாவின் அழகான கால்களை மடக்கி இருத்தி வைத்தபடி ஊதாநிற ஊர்தியில் ஒடுகிறான் இந்தச் சண்முகலிங்கம்.
ரஞ்சிதா அபிநய சரஸ்வதிதான். எடுப்பான தோற்றம். பெரிய மிளகாயின் மூக்கு. பிறைச் சந்திரன் நெற்றி. கவிதாவை
விடுத்த சிற்றிடைதான்.
சங்கிலி மாலை கொண்டு காளி கோயிலின் விக்கிரகங்களைச் சாத்துவதை மறந்து கவிதாவை சண்முகலிங்கம் நகைகளால் அலங்கரித்து மகிழ்வித்தான். அருந்தவம் அண்ட முடியாத இக்கட்டில் இருப்பது சண்முகலிங்கத்துக்கு நல்ல வாய்ப்பாகிப் போனது. கிடைத்த துரும்பைக் கொண்டு வைகுண்டம் ாேயிடலாம் போலிருந்தது. கவிதா மனிதிலிருந்த அருந் தவத்தை வலு விரைவில் சண்முக லிங்கத்தால் துடைத்தெறிய முடியுமா யிருந்தது.
சண்முகலிங்கத்தின் செய்கைகள் அருவருப்பை ஏற்படுத்துவதாக அவளுக்குப் படவேயில்லை. சயிலென்சர் பைப் உடைந்து விழுந்த போதெல்லாம் கவிதாவே தன்னுடைய கைப்பையைத் திறந்து பணத்தை உருவிக் கொடுத்தாள். அத்தனை தூரம் இறுக்கமாயிருக்க கைவளையல் களை அள்ளிப் போட்டிருந்தான் சண்முகலிங்கம்.
இறுமாப்பு அதனால் இயல்பாகப் பூத்தது!
ஏறேறு சங்கிலி இறங்கிறங்கு சங்கிலிக் கனவுகளாகி கவிதா அருந் தவத்தின் அடிமனதில் கனன்று கொண்டி ருந்தாள். உள்ளாடையில் கூட அருந் தவத்தின் பட்டறை எச்சங்கள் ஒட்டிக் கொண்டேயிருந்தன. புத்துலகு சமைக்கிற வேகத்தையே அவனுக்குள் உருக்கி உலுக்கியே வார்த்தன.
(34)

வாராதே! வரவல்லாய்.
கம்பவாரிதி இ. ஜெயராஜ்
ஒரு நிமிஷம் பொறுங்கள்! இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கவேண்டாம். உங்களுக்காக இதை நான் எழுதவில்லை. என்ன முறைத்துப் பார்க்கிறீர்கள்? புத்தகம் உங்களுடையதானலும், கட்டுரை என்னதல்லவா? யார் படிக்கவேண்டும் என நான்தானே சொல்லவேண்டும். "இந்த லூசன்’ எப்பவும் இப்பிடித்தான்.” உங்கள் முணுமுணுப்புக் காதில் விழுகிறது. நீங்கள் என்ன திட்டினாலும், இந்தக் கட்டுரை உங்களுக்கானதல்ல என்பதுதான் உண்மை. பின் யாருக்கு இக்கட்டுரையெனக் கேட்கிறீர்களா? இந்த மண்ணில் பிறந்து, இன்று உலகெல்லாம் பரவியிருக்கும், என் அன்பான இரத்தத்தின் இரத்தங்களுக்காகவே இக்கட்டுரை. சிலநாள் பலபிணிச் சிற்றறிவு உடைய மனிதர்கள், தேர்ந்தெடுத்து தேவையானதைப் படிக்கவேண்டும் என்று, அறிவிற்காகக் கல்வியென நினைத்த, சில பழைய பைத்தியக்காரப் புலவர்கள் சொல்லியிருக்கிறார்களாம். அதனால்தான்,
உங்களுக்காக எழுதப்படாத இக்கட்டுரையை, படிக்கவேண்டாம் எனச் சொண்னேன். சரி, நீங்கள் இனி அடுத்த கட்டுரைக்குப் போகலாம்! என்ன இவ்வளவு சொல்லியும், கேட்க மாட்டேன் என்கிறீர்கள். பத்திரிகை படிப்பதையே அறிவென்று நினைக்கும் உங்களை, திருத்தவா முடியும்?
இதற்கு மேல் உங்கள் இவர்டம்

Page 20
ge ܠܓ
காலத்தை வீணாக்குவது என்று நீங்கள் முடிவுசெய்துவிட்டால், அதைத் தடுக்க நான் யார்? 'கெடுகுடி சொற்கேளாது' என்று சும்மாவா சொன்னார்கள். படித்துத் தொலையுங்கள்! உங்களோடு மினக்கட எனக்கு நேரமில்லை. நான் சொல்லவந்ததை, சொல்ல வந்தவர்களுக்குச் சொல்லவேண்டும். சொல்கிறேன்.
நம் செம்பாட்டு மண்ணில் பிறந்து, இன்று தேசமெல்லாம் வேரூன்றி நிற்கும், என் உடன்பிறப்புக்காள்! உங்களுக்காகத்தான் இக்கட்டுரை வரைகிறேன். உங்களில் ஓரிருவராவது இக்கட்டுரையைப் படிப்பர்கள்தானே? ஏன் கேட்கிறேன் என்றால்,
டொச்' என்றும், பிரெஞ்’ என்றும், இங்கிலிவர்" என்றும், இன்று பலமொழிகளை வெளுத்து வாங்கும் உங்களுக்கு, தமிழ் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறதா? என, எனக்கு ஒரு சிறு ஐயம்! ஏன் இந்த ஐயம் என்கிறீர்களா? எல்லாம் உங்களால்தான் ஐயா! அணர்மையில், , சுவிஸிலிருந்து வந்திருந்த, என் அக்காவின் பேரன், தன் மாமனைப் பார்த்துக் கேட்டானே ஒரு கேள்வி, ஊரே சிரித்து விட்டது போங்கள். தன் அன்புப் பேரனுக்கு என் அக்கா, ஆசையாசையாயப் ஆனை வாழைப்பழம்
in Ihala Gab/706é45, அவன் அதைத்தின்னும் அவதியில், குளிக்கத் தயாராய்த் துணர்டோடு
கிணற்றடியில் நின்ற, தன்
மாமனிடம் கொணர்டோடிப் போய்,
பிளிவுர் அங்கிள், வாழைப்பழத்தை ஒருக்கா கழட்டித் தாங்கோ’ என்று கேட்க, எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அந்த மாமன், அக்கேள்வியால் பதறியடித்து, இடுப்பிலிருந்த துண்டை இறுஆப் பொத்திய காட்சி கண்டு, எங்கள் ஊரே சிரித்தது. வாழைப்பழத்தை உரித்துத் தாருங்கள் என்பதற்குப் பதிலாக, கழட்டித்தாருங்கள் என்கிறது ஈழத்தமிழினத்தின்
(1) பொறின் வாரிசு. பாவம்! ரமில்ராய், உங்கள் பிள்ளைகளிடம் அவள் படும்பாட்டைப் பார்த்ததால்த்தான், மேற்சொன்ன ஐயம் வந்தது. தயவுசெய்து கோபிக்காதிர்கள்.
எங்களுக்கா தமிழ் தெரியாது? இதோ! உம் கட்டுரையை முழுக்கப் படித்துக்காட்டுகிறோம்" என்கிறீர்களா? நன்றி, நன்றி, நன்றி. தொடருங்கள்.
எல்லாத் திமையுள்ளும் ஒரு நண்மையுணர்டு என்று, அறிஞர்கள் சும்மாவா சொன்னார்கள்? உரிமைக்காகத் தொடங்கப்பட்ட போரால், உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உடைமையிழப்பு என, பலபேர் அனுபவித்த திமைகளுக்குள், உங்களுக்கான நன்மை ஒளிந்திருந்தது மறுக்கமுடியாத உண்மை. ஈழத் தமிழர்கள் இன்னலுக்காளாகிறார்கள் என,
(36)

yeese): অভ্ৰ
உலகம் முழுவதும் பரவிய செய்திகளால், வளம் மிக்க நாடுகள் பல வாசல் திறக்க, இன்னலுற்றவர்களாய் இனங்காட்டி, மின்னல் போல் உள் நுழைந்திர்கள். பக்கத்து விட்டு முருங்கைக்காuப் திருட முனைந்து, விழுந்து முறிந்த முழங்கையை, இராணுவத் தாக்குதலில் ஏற்பட்ட விழுப்புணர்ணாய் நீங்கள் விபரிக்க, தூதராலயங்கள் ப6) துடிதுடித்துப்போயின. தேசத்தைக் காக்க முன்வந்த பல உணர்மைப் போராளிகளின், ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்ட, உறவெல்லாம் காட்டி உங்களில் பலர் ஓடித் தப்பினர்கள். வெளர்ளைக்காரனின் பெருந்தன்மையில், உங்கள் கள்ளங்கள் விலைபோயின. எது, எப்படியோ? செல்வந்த நாடுகளின் உள்வந்த காரணத்தால், இன்று நீங்கள்தான் ஐயா பெரிய மனுசர்கள்.
பணம் பத்தும் செய்யும்' எனும் பேருண்மையைத் தெரிந்துகொண்டு, பலம் பெற்ற உங்களைப் பாராட்டாமல் இருக்கமுடிய6விருப்வேகப. "எங்களைக் கிண்டலடிப்பதற்குத்தான் இக்கட்டுரையா? நீங்கள் கோபப்படத் தொடங்குவது தெரிகிறது. கொஞ்சம் பொறுங்கள். சமுகத்தின் பெரிய மனிதரான உங்களை நான் பகைத்துக்கொள்வேனா? ஈழத்தமிழினத்திற்கு வழுச்சி
ஏற்படுத்திய இயக்கங்களே, உங்களுக்கு மரியாதைசெய்யும் இக்காலத்தில், உங்களைப் பகைத்துக் கொள்ள நான் பைத்தியக்காரனா, என்ன? உங்களுக்கு நண்மை தருகிர ஒரு
திதிமதியைச் செ16ப்6த்தான், இக்கட்டுரை வரைகிறேன். தயை கூர்ந்து கோபப்படாமல் பொறுமையாய் மேலே படியுங்கள்
"டொக்ரராக வேனும், "எஞ்சினியராக வேணும், எக்கவுண்டனாக வேணும் என்று, யாழ் இளைஞர்கள் கனவு கண்டதெல்லாம் பழைய கதை. ‘வெளிநாடு போகவேணும்', இ.தொன்றே இன்றைய எல்லா இளைஞர்களினதும் ஒரே கனவு. &b&ờvoo) ou gu (utboluuvášasou volumi abbri BSÝáb67Ť. uiap up6wiawiaoi gualiuaoL6opugu ஆட்டங்கான வைத்த, உங்கள் ஆற்றல் கண்டு அதிசயிக்கிறேன். வெளிநாடு போய்ச் சேர்ந்த ஓரிரு மாதங்களுக்குள்ளேயே, ab6ft 66ft 607 distia Gubdisco முன்னின்று, கோர்ட் டோடும்,
"ரையோடும், நீங்கள் அனுப்பி வைத்த புகைப்படங்களைக் கனடு, யாழ்ப்பாணமே கதிகலங்கிப் போய்விட்டது. அந்தக்கார் உங்கள் சொந்தக்கார் இல்லையாம்." பொறாமைக்காரர் சிலர் உங்கள்
குட்டோடும்,
புகழைக் கெடுக்க முனைந்தார்கள். ந/ங்கen/ நம்புவோம்? Aw Baħéb67) L/60)ébL LJL, Péb6Op67TL )
(37)

Page 21
E. ye GSG) ܠܓ
பார்த்த பிரமிப்பிலிருந்து, நாங்கள் இன்னும் விடுபடவே இல்லை. பரிளேன்ரிக்கும் வழியில்லாமல் காய்ந்து திரிந்த உங்கள் தோற்றத்தில், கோர்ட்டாலும், குட்டாலும், ரையாலும் ராஜ களையே வந்துவிட்டது போங்கள். உங்கள் வெளிநாட்டு விலாசத்தால், இங்கு எல்லோரதும் மனநிலை மாறிவிட்டது மற்றொரு கூத்து. இங்கிருந்த போது தெரியாமல் சினேகிதர்களோடு நீங்கள் படி குடித்ததை, பக்கத்து விட்டு அங்கிள்" வந்துசொல்ல, ஆவேசம் வந்து, உங்களை அடி அடியென்று அடித்து, இல்லாத குலமானம் போய்விட்டதாயப் ஏங்கிய உங்கள் தகப்பனாரும், தாயாரும், லண்டனில், நீங்கள் (b)பாரில் இருந்து எடுத்தனுப்பிய புகைப்படத்தில், கையில் வைத்திருப்பது விஸ்கியா'7 டபிரண்டியா? என, பக்கத்து விட்டாரைக் கூட்டி, பட்டிமண்டபம் நடாத்துகிற அளவில் முன்னேறி இருக்கிறார்கள் என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன். இவனுக்குப் பொம்பிள கொடுக்கிறத விட, எண்ட மேள பாழுங்கிணத்தில தள்ளுவன்’ என்ற உங்களின் மாமா,
மச்சானுக்கு பேத்டே கார்ட்” போட்டனியே' என்று, இன்று மகள அக்கறையாய் விசாரிக்கிறார். இங்கிருக்கும்போது, சொறி நாயை விடக் கேவலமாய் உங்களைப் பார்த்த உங்களின் மச்சாள், உங்களிட்ட இருந்து ஒரு கிழமை
'கோல்' வரவில்லை என்றதற்காக, ஏழு கிழமையா அந்தோனியார் கோயிலுக்குப் போறாவாம். தெரியாமல் முழங்காலுக்கு மேல ஒருநாள் சட்டை ஏறியதற்காக, தண்ட மகளுக்குக் காலில குடு போட்ட செல்லம்மா மாமி, இப்ப தண்ட மகள் வெள்ளக்காரனோட நீச்சல் உடையில குளிக்கிற படத்தை,ஊரெல்லாம் கொண்டு பெருமையாய்க் காட்டுது. ஊரில குறுக்குக்கட்டோட இலுப்பங்கொட்டை பொறுக்கின எங்கட குஞ்சாச்சி, மகன் கனடாவில இருந்து காசனுப்ப, இப்ப கொழும்பில, மக்ஷரியும், ஹை ஹரீல்ஸ்சும் போட்டுக்கொண்டு, வெள்ளவத்தை 'மாக்கற்றுக்குள்ள, றுப்பியல் பஹாயப்" என்று சிங்கள வியாபாரி சொன்ன ஈரப்பிலாக்காயை, நோ நோ, ஐ கிவ் ஒன்லி (f)பிப்ரின் றுப்பவர்' எனக் கூறி, இல்லாத தன்ர ஆங்கில ஞானத்தை அவனுக்குக் காட்ட, அநதியாயமாய் பத்து ரூபாவை அதிகம் குடுத்துட்டு வருகுது. சும்மா சொல்லக் கூடாதையா, அங்க இருந்து நீங்கள் ஆட்டின ஆட்டத்தில, இங்க எங்கட ஆணி வேரே ஆடிப்போனது உண்மையிலும் உணர்மை.
இதுகளப் பாத்திட்டும்,
எஞ்சினியருக்கும்', 'டொக்ரருக்கும்" படிக்க, எங்கட பொடியள் என்ன விசரங்களே? யாழ்ப்பாணப் பொடியள் அறிவாளிகளாக்கும்! நீங்கள்தான் அவர்களின் இன்றைய
(38)

ygosos
குறிக்கோள்கள். உங்களைக் குறைசொன்னதாய்க் கோபித்தர்களே! பார்த்திர்களா? உங்கள் பெருமையை, எவ்வளவு அழகாய், என் கட்டுரை எடுத்துரைக்கிறது. இனியேனும், ஆறுதல/ய்தி தொடர்ந்து பரu/ங்கள்.
சும்மா சொல்லக்கூடாது. ஊர் பேர் தெரியாத தேசங்களுக்குப் போய், பத்துப் பதினைந்து ஆண்டுகளில், நீங்கள் செய்திருக்கும் சாதனைகளைப் பாராட்டாமல் இருக்கமுடியாதுதான். என் முன்னைத் தவப்பயனால், உங்களை எல்லாம் நேரில் வந்துபார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. என் அனுபவங்களை எப்படிச்சொல்ல? லண்டனில் மட்டும் இன்றைக்கு பதினான்கு கோயில்களாம். கோயில்களின் எண்ணிக்கை கடிக்கொண்டே போகிறதாம். அங்கு வந்து இந்தச் செய்தி கேள்விப்பட்டதும், ஆத்மீகவாதியான நான் ஆனந்தப்பட்டுப் போனேன். பிறகுதான் தெரிந்தது உண்மை. கோயில்களுக்கென்று அந்நாட்டு அரசாங்கம் காசு ஒதுக்குகின்றதாம். அரசாங்கமே காசு ஒதுக்கும்போது, நாங்கள் ஒதுக்கக்கூடாதா? என்று, அறங்காவலர்களுக்குள்ளே அடிதடி சண்டையாம். செவிவாக்காலி ஒருவர் வெல்ல, பிரிந்தவர் மற்றொரு கோயில் தொடங்குகிறாராம். பதினான்கு கோயில்கள் என்றால் பதிண்முன்று சண்டை என்று அர்த்தமாம். நண்பன் ஒருவன் சொன்னான்.
உண்மை, பொய் எனக்குத் தெரியாது. ஆனால், கவலையாய் இருந்தது. கனடா போனபோது, இங்கு பதினாறு கோயில்கள் என்று ஒருவர் சொல்லத் தொடங்க, காதுகளை முடிக்கொணர்டேன். சரி அதைவிடுங்கள். கேயfeப்களுக்கு 6ர் கடவுள்கள் படும்பாடு இருக்கிறதே! அது பெரியபாடு எற்புத்துளைதொறும் லண்டன் குளில், பரமசிவனுக்குப் பச்சைத் தணர்ணில் அபிஷேகம், அன்றாடம் நடக்கிறது. தங்கள் குளிர்திர கோர்ட் டோடும்.
குட்டோடும் நின்று கொண்டு, பக்தர்கள் அடlஷேகம் செய்விக்கிறார்கள். வெறும் மேலை, பனிக்குளிரும், பச்சைத்தணர்னர்க் குளிரும் சேர்ந்து தாக்க, நடுநடுங்கிக்கொண்டிருக்கிறார் பரமன். வேதம் வழங்காத நாடுகளுக்கு வரமாட்டேன் என்ரிருந்த அவரைu/ம், கட்டாயமாய் அங்கு கொணர்டுபோuப் tulÓ6ög/tó i Ha(6... tunt 62/hlö ςf6ømTsi/ அவரைப்ப7ாக்க, அழுகையழுகையாயப் வந்தது எனக்கு.
கோயில் நிலையே இதுவென்றால, விட்டு நிலையைக் கேட்கவn வேணடும்? வெள்ளைககாரன் விரித்த கடன் வலையுள் விழுந்து, விடு, கார் என எல்லாவற்றையும் கடனுக்கு வாங்கி, மாதாமாதம் அக்கடன் கட்டுவதற்காக, மாய்ந்து கொண்டிருக்கிறார்கள் நம் மனிதர்கள். கணவன் மோனிங் டியூட்டி' போப்வர, மனைவி நைட் டியூட்டி' போகிறாள். இந்த டியூட்டிகளுக்கரிடையில்,
அக்சிடண்ராய் பிறந்த குழந்க்லத,
அனாதையாய் ஆகாயம் பார்த்தபடி
(39)

Page 22
t yet 636): Q
இருக்கிறது. அக்கிரமம் ஐயா! அக்கிரமம்! ஒருமாதக் கடன்கட்டத் தவறினாலும், உரிமைக்காரர்களால் அபகரிக்கப்படக் கூடிய, இருபதாண்டு கடனிலுள்ள, வீட்டையும், காரையும், சொந்தவீடு, சொந்தக்கார் எனக் கூறிப் பெருமைப்படுகிறது ஒரு கூட்டம் கூலி வேலை செய்யும் இடத்தில், வெள்ளைக்கார எஜமானர்களிடம் நல்ல பெயர் வாங்க, தலைமயிரை மட்டுமன்றி, கால்மயிரையும் வழித்துக் கொள்கின்றனர் நம் காளிகையர் நவீன இயந்திரங்கள் நிறைந்த அவர்களின் குசினி. அடுத்த விட்டு வெள்ளைக்காரர்களுக்கு மணந்து விடும் எண்பதற்காக, சமையல் இன்றிக் கிடக்கிறது. லட்சக் கணக்கான ரூபாயில் வாங்கிய குஷன் செற்றி, குந்தியிருந்து குதுரகலிக்க, உறவேதுமின்றி ஓய்ந்திருக்கிறது. பொருள் நிறைந்தும் போகம் இல்லாத வாழ்க்கை. எங்கட றோட்டில ரமில்எப் இல்லை. அவையளோட இருந்தால் பெரிய பிரச்சினை. இது தன்னை மறந்த ஒரு தமிழ்ப்பெண்ணின் பெருமிதம். இப்படிக் சுத்துகளுக்கு அங்கு குறைவே இல்லை.
நீங்கள் என்ன செய்வீர்கள்? கைநிறைய காசு கிடக்கிறது. வெள்ளைக்காரனர் ஏனெனிறும் உங்களைத் திரும்பிப் பார்க்கிறானில்லை. இங்கு 'பறையன்' என்றுசொல்லி சிலரை நீங்கள் ஒதுக்கியதுபோல, அங்கு பாக்கி" என்று எல்லோரையும் சேர்த்து ஒதுக்குகிறான் அவன். இந்தநிலையில் உங்களது பணப்
பவுசை யார் முலம் காட்டுவது? அகப்பட்டவர்கள் உங்கள் குழந்தைகள்தான். பள்ளிக்கூடத்தில் வெள்ளைக்காரர்களாகவும், வீட்டில் தமிழர்களாகவும், வேஷம் போட்டு, எது வேஷம்? எது நிஜம்? என்று தெரியாமல், அர்த்தநாரிஸ்வரராமப் இரண்டும் கெட்டுக் குழம்பும் அவர்கள் நிலை பரிதாபம்!
வெள்ளைக்காரர்களாகுங்கள்' என்று அவர்களை இலட்சியப்படுத்தி, தமிழராகவும் இருங்கள்" என்று, அவர்கள் முதுகில் நீங்கள் ஏற்றும், பண்பாட்டு முட்டையின் கமை தாங்கமுடியாமல், அக்குழந்தைகள் படும்பாடு. பரிதாபத்திலும் பரிதாபம் "அங்கிளுக்கு ஒரு
டேவாரம்’ பாடிக் காட்டுங்கோ", டாடி சொல்ல, தொடு உடாய செவியேன் விடாயப்" என, ஆங்கிலத்தில் எழுதிப் படித்த தமிழ்த் தேவாரத்தை பிள்ளை பாடுகிறான். 'வெரி கிளவு போய்” என்று தேவாரத்திற்கு கைதட்டுகிறார் மம்மி'செத்தார் சிவபெருமான் என்று ஓடியே வந்துவிட்டேன். "எண்ட 'டோற்றர், நல்லா டான்ஸ்' பண்ணுவா” என்று சொல்லி, மகளை எங்களுக்கு ஆடிக்காட்டச் சொல்ல, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எல்லாம் கழற்றி எறிந்து, காற்சட்டையோடு வந்து நின்ற அந்த கலவன் குஞ்சு, இன்ன ரவம் செத்தனை யஷோடா' என்று பாடி ஆடத்தொடங்க, நான் செய்த தவத்தால் ஏதோ ஒருமாதிரித் தப்பி ஓடி வந்தேன். வேறொரு நாள், "இந்த டேட்டி ரானல்கள் பனல்கக்குள்ள, என்னப் LJTü5gy,
(40)

என்ன மச்சான்' என்று, ரமில்ல' கேக்கிறான். வெள்ளக்காரங்களெல்லாம் திரும்பிப் பார்க்கிறாங்கள். “மனஸ்' தெரியாத (b) பாஸ்ரேட்' சொல்லும் சொல்லின் விரசம் தெரியாமல், மனைவியுடன் என் நண்பன் உரையடியது கதிப்ே விழுந்தது. அவர்களே, பிறகு “ஆனையிறவு அட்ராக் நைஸ் என்ன? எப்பிடியும் எங்களுக்குத் ரமில் ஈலம் 'கிடைக்கும் பாருங்கோ. பிரபாகரன் இளம் வெரி கிரேட் "என்று என்னிடம் பாராட்டினார்கள். இப்படி தெளிவான குழப்பத்தில், அல்லது குழப்பமான தெளிவில், வாழும் உங்கள் நிலை இங்குள்ளவர்களுக்குத் தெரியவா போகிறது? அதனாலித்தான், உங்களுக்கு முக்கியமான ஒருபுத்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் இந்தக்கட்டுரை.
ஊரெல்லாம் சுற்றி ஒருமாதிரி தேர் இருப்பிடத்திற்கு வந்துவிட்டது. இனி, விஷயத்திற்கு வருகிறேன். அரசாங்கத்திற்கும், புலிகளுக்குமிடையிலான, போர்நிறுத்தத்தைப் பயண்படுத்தி, உங்களில் பலபேர் தாய்மணர்ணர்கு 6)/(5óstfi á56ld. பதினைந்தாண்டுகளுக்குப் பிறகு தாய்மணனைப் பார்ப்பதென்றால கம்மாவா? போர் நிறுத்தத்தால் விலையேறியுள்ள வீட்டை விற்கவும், ஆயுள் முழுக்க உங்களுக்கு அடித்துக் கொடுத்துவிட்டு, அனாதை விடுதிகளில் இருககும் டாடியையும்,
மம்மியையும், உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டவும்,
பதினைந்தாண்டுகளில் நீங்கள்
பெற்றிருக்கும், வெள்ளைக்காரத்
தகுதிகளை விளம்பரப்படுத்தவுமே, உங்களில் பலர் இங்கு வருவதாய், என் நண்பன் ஒருவன் குற்றம் சாட்டுகிறான். அவன் கிடக்கிறான், அறிவில்லாதவன். நீங்கள் எதற்காக வந்தாலும், வருவதற்கு முன் இந்தக்கட்டுரையை வாசிப்பது நலலது. அதற்காகத்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
ஊருக்கு வெளிக்கிடும் நாள், கொஞ்சம் பெ0ப்பூம்' போத்தல்கள், ஒ(1)பிஸ் சில டியூட்டிக்காக வெள்ளைக்காரன் தந்த சேட்டில, ஏமாற்றி எடுத்தவை கொஞ்சம், உங்கள் மனைவியும், பிள்ளைகளும் பாவித்த சிலை, சட்டைகள் சில,
கிறிஸ்மஸ் சேல்ஸ்சில்' வாங்கிய மலிவு விலைப்பொருட்கள் கொஞசம், (b)பிஸ்கட், சொக்லேட், முதலிய இன்ன பிற மலிவுப் பொருட்கள். இதைவிட, நீங்களும், உங்கள் மனைவி பிள்ளைகளும், இங்குள்ள ஏழைச் சொந்தக் காரர்களுக்குப்
பவுசு காட்ட, புதிதாப் வாங்கிச் சேர்த்த, ரவுசர், சேட் , சட்டை, சப்பாத்து
என சாமான்களால, இரண்டு, முன்று பெரிய பெரிய குட்கேஸ் சுகளை நிரப்பி விட்டீர்களா? இனி வெளிக்கிட வேண்டியதுதான். 6451Téš67ub GungfEí4567í. (pašaluuteo இரண்டு பொருட்கeைr மறந்து விட்டீர்கள். எவை என்று தெரிகிறதா? நேற்று சுப்ப மாக்கற்றில், உங்கள் பாசத்தில் அலடயH6luwய், அenக்லத விடுதியிலுள்ள அப்பாவிற்குக்
()

Page 23
yet escot ܐܠܓ
கொடுக்கவென, உங்கள் அன்பைப் போன்ற, செயற்கை ரோஜா மலர்களாலான பூச்செணர்டு ஒன்றை வாங்கினர்களே? அதையும் எடுத்து வையுங்கள். அடுத்தது, வெளிநாட்டிலிருந்து வந்தவர் நீங்கள் என்று, மற்றவர்கள் தெரிந்துகொள்ள, முழுசுமில்லாமல், அரையுமில்லாமல், முக்காலாயப்ப் புதிதாய் வந்திருக்கிறதே ஒரு காற்சட்டை, அதிலும் ஐந்தாறைத் தூக்கிப் போடுங்கள். எல்லாம் 'ரெடி' இனிப் புறப்படலாம், திரும்பவும் மறந்து விட்டது. இங்கு நாங்கள் காய்கறி வாங்கும் கூடையைப்போல, கைக்குழந்தையைக் கிடத்த ஒன்று வைத்திருப்பர்களே, அதையும் எடுங்கள். ஏனென்று கேட்கிறீர்களா? அப்போதுதான், பக்கத்துவிட்டுச் சின்னம்மா, உதெண்ன தங்கச்சி’ என்று கேட்க, அதெங்கட (b)பபாவைக் கிடத்துறத்துக்கு’ என்று, உங்கள் மனைவி பெருமையாய்ச் சொல்லலாம். குழந்தயக் கிடத்துறத்துக்கு என்னத்துக்கு மேனே கூடை? தோளில கிடத்தலாம் தானே! கூடையோட வச்சிட்டு அங்கால பார்க்கேக்க, நாய் கிப் கொண்டு போனா என்ன செய்யுறது? சின்னம்மா பேத்தனமாக் கேக்கும். "என்ன அண்ரி? நீங்கள் சரியான கண்றி புறுாட்டா” இருக்கிறங்க, பேபியைத் தோளில் போட்டா, அது கு’ செய்து, டிரெஸ்ச' எல்லாம் பழுதாக்கியெல்லே போடும்." உங்கள் மனைவி பெருமையாய்ச் சொல்லுவா.அவா குழந்தையா இருக்கேக்க,தண்ட தோளில் கிடந்து, பெஞ்ச குவை, எண்ட சின்னக்
குஞ்சு தேன்மாரி பொழியுது எனச்சொல்லி, தண்ட சிலைத் தலைப்பால துடைச்சு விட்டத, சின்னம்மா பெருமையாச் சொல்லும். "யூறினை சிலையால துடைக்கிறனங்களோ? 'டேட்டி ஹபர்" "ல60ர்டனில "டெநர்றேல்' போட்டுத் துடைக்காமல், நாங்கள் tff67ĩ6IIuuš 695fft - tDTt t_tô” 42_/5á5Lமனைவி பெருமையாய்ச் சொல்ல, øžavoitötDT I JITGD/uð 6au(Tu u ptgáš கொள்ளும். இவையெல்லாவற்றுக்கு மாகத்தான்.அந்தக் கடையையும் எடுத்து வைக்கச் சொல்கிறேன். சரி, இனி குட்கேசை முடலாம்.கொஞ்சம் பொறுங்கோ! பிறகும் உந்த வீடியோக் கமராவை விட்டிட்டீங்களே! என்னது, அதைத் தோளில மாட்டப் போரிங்களோ? அதுவுஞ் சரிதான். அப்பதான் நீங்கள் வெளிநாட்டில இருந்து வர்றது, மற்றவையஞக்குத் தெளிவாய்த் தெரியும். சரி, மின்னை குட்கேஸை முட வேண்டியதுதான். நீங்கள் முக்கால் காற்சட்டை போட்டுவிட்டீங்களா? உங்கள் மனைவி, தன் உறுப்புக்களின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தும், சேட்டும், ஜின்கம்" போட்டுவிட்டாரா? பதிர்ைமுண்று வயதler, பருவ வலம்வeபயில் நிற்கும் உங்கள் பIலகிulன், பட்டராலும், சிஸ்சாலும் கொழுத்துக்கிடக்கும் தொடையின், முக்கால் பாகம் தெரியும் காற்சட்டை போட்டாகி விட்டதா? கூடையுடன் குழந்தையை எடுத்து விட்டீர்களா? து7க்குங்கள் குட்கேஸை, இனி ரமிகப் சலம்' போகனேடியதுதான்.
(42)

محمے
கட்டுநாயக்கா விமான நிலையம். கொண்டுவந்த பெரிய குட்கேசுகளை நீங்கள் ஏற்ற, அங்குள்ள பழைய தள்ளுவண்டிகள், தள்ளnத வண்டிகளாய்த் தடுமாறும். உங்கள் மனைவி, வேறு பலவற்றோடு அதையும் தள்ளிக்கொண்டு வெளியே வர, பெரியணர்ன! குஞ்சக்கா! எடி பேபி பெரியவன்!" இப்படிப் பலகுரல்கள் ஒருமித்து வரவேற்கும். உங்களை வரவேற்க வென யாழ்ப்பாணத்திலிருந்து, வான்’ பிடித்துவந்த உங்கள் உாவுக்கூட்டத்தின் கூக்குரல் அது. பதினைந்து வருஷத்துக்கு முன் பழகிய பழைய உறவாய் நினைந்து, உங்களைக்கண்டு அதுகள் பரவசப்படும். உங்கள் பாடு கொஞ்சம் சங்கடம்தான். "இதுகள் என்ன 'டீசனிற்" இல்லாமல் கத்துதுகள்?" இங்க இருக்கேக்க சுத்துக்குப் போன உங்கள் மனைவி, சுறுசுறுவென்று கோபிப்பா. ஹாய்! ஹரவி ஆர் யூ" ஏதோ வெளிநாட்டுத் தலைவர்போல, நீங்கள் தூர இருந்து கைகாட்டுவீர்கள். உங்கள் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தியதில், உங்களுக்கோர் மகிழ்ச்சி உறவுகள் உங்களைச் குழ்ந்துகொள்ளும். எடேய்! எங்கட சித்தண்ட பெட்டையே இது! பார் மொழுமொழுவெண்டு என்ன வடிவா நிக்குது' என்று சொல்லி, குஞ்சம்மா தண்ட வெத்தில வாயால, உங்கட மேளப்பிடிச்சு ஒருதரம் கொஞ்சும். அருவருப்பில் உங்கள் மகள் முகத்தைச் சுழித்துக் கொள்வாள். "எண்ட ராசாத்தி எண்னைப் பாக்கவெண்டோ ஓடி வந்தனி? சொல்லியபுடி குஞசம்மா உங்கட
பெரிய குட்கேசைப் பார்க்கும். அதெல்லாம் தனக்குத்தான் என்ற அதன் ஆசை கணிகளில் தெரியும்.
குட்கேசின் எண்ணிக்கை கூடக்கூட உறவின் உரிமை பெருகும். நீங்கள் சும்மாவா இருக்கப் போகிறீர்கள்? இடைக்கிடை சென்ர்" அடிச்சு, "இந்த ஹொட் கிளைமற்’ ‘துப்பதுவ ஒத்துக் கொள்ளுதில்ல அதுக்கில்ல இது வேற கசகசக்குது' என்று பதினாறு பவுன் சங்கிலிய, வெளியில தூக்கிப் போடுவர்கள். அதப் பார்த்த உங்கட சின்னத் தங்கச்சி, எப்பிடியும் அண்ண எனக்கும் ஒண்டு கொண்டு வந்திருக்கும்' என்று, ஏங்கத் தொடங்கும். போதாக்குறைக்கு, “iotuor / A96ša i v62/6oř6rý' மாத்தலாமே?” என்று சொன்னபடி, கடன்காட்டுகளால் கர்ப்பமுற்றிருக்கும் உங்கள் பேர்சைத தட்டிக்காட்ட, அவ்வளவும் பவுண்ஸ்தான் என நிலைந்து, உதவியால் குமரக் கரையேற்ற6யம் எலும் மகிழ்ச்சியில, அதெலலப் நானல்லோ மாத்தித்தர்றது, நீங்கள் ஒண்டும் யோசிக்காதைங்கோ தம்பி" 676øía maff to Tutort. Az úLuig? Guu ABHIf
se býeboj
போய்ச்சேர்வர்கள்.
அi போய்ச் சேர்வதற்குமம், நீங்கள் புழுகிய லண்டன் புழுகுகளிலப்
முழுதாய் மயங்கி, பிரிட்டிவர்" மகாராணிக்கு அடுத்தது எங்கட பெடிதான் என்று, அந்த அப்பாவிச் சொந்தங்கள் அநியாயமாய் நம்பியிருக்கும். குட்கேஸ் முழுக்கத் தங்கக் கட்டிதான் என்ற கனவிலி, செயந்தயெல்லாப் சிவிக்கும்.
பதிவிலக்கஞ்சு வருவத்துக்குப் பரகு
(s)

Page 24
t ye;636): Q
பெடி’ வந்திருக்கு. அவனக்கொண்டு காணி வாங்கவேனும் அடகெடுக்க வேனும் குமர் காரியம் முடிக்க வேணும். கோயில் கோபுரம் கட்டிவிக்க வேணும். கோழிக்கூடு திருத்துவிக்க வேணும். ' எனும், ஆயிரம் கனவுகளோடு அடுக்கடுக்காயப் உறவுகள் உங்களைச் சூழும். நீங்கள் பவுசு காட்ட வந்த பரிதாபம், அதுகளுக்குத் தெரியவா போகிறது? கோடியாயப் கொண்டுவந்து கொட்டி, தங்கள் குடிமுழுவதையும் நீங்கள் ஆளப்போவதாய் எண்ணி, அந்த எளிய சனங்கள் ஏமாறும் தங்கள் எதிர்பார்ப்பில், பாற்புட்டும், பனங்கிழங்கும், பனாட்டும், பனங்காயப்ப் பணியாரமும், எள்ளுருண்டையும், இலந்தைப்பழமும், கறுத்தக்கொழும்பானும், கழியும், கூழாம் பழமும், கூழுமென, தம் வறுமையிலும், வளமை காட்டி, உறவுகள், தூண்டில் போடும். எல்லாம் நீங்கள் குட்கேஸ் திறக்கும் மட்டுந்தான். நான்குநாள், ஐந்துநாள் எதிர்பார்ப்புக் காட்டி, நீங்கள் உங்கள் அலுவல்கள் பார்க்க, 'எப்பையடா இவன் குட்கேஸ்’ திறப்பான்' என்ற எதிர்பார்ப்போடு, எல்லா உறவும் ஏங்கிக்கிடக்கும். பழைய கட்டாடியும், தம்பிய ஒருக்காக் காணலாம் எண்டு வந்தனான்’ என்று தலை சொறிவார். தம்பிட பேரில அர்ச்சனை பணிணி விபூதி கொண்டு வந்தனான், கும்பாபிஷேக நோட்டிசோட குருக்களும் வருவார். ஒண்டவிட்ட அண்ணன், இரண்ட விட்ட அக்கா, முண்டாம் விட்டு அன்ரி" என்று, அடுக்கிய சுற்றத்தால் குழப்படுவீர்கள். அத்தனைபேர் கண்களும், நீங்கள் கொண்டுவந்த குட்கேசை'
இடையிடையே நோட்டம் விடும். வெளிக்கிடுற அன்று நீங்களும் குட்கேசைத் திறப்பர்கள். அண்ரிக்கு சென்றி, அக்காவிற்கு பழஞ்சிலை, பெரியப்பாவிற்கு பிஸ்கட், மச்சாளுக்கு இமிற்றேசன் காப்பு, சின்னம்மாட பெடியளுக்கு சொக்லேட், மருமோனுக்கு மகன் பாவிச்ச சப்பாத்து, கட்டாடிக்கு காசு ஐம்பது ரூபா என்று, வள்ளல் தன்மையாய் நினைந்து கொண்டு வந்த அத்தனையையும், வீசி எறிந்து நீங்கள் விமானம் ஏறுவர்கள்.
அதோடு உங்கள் பயணம் முடிந்தது. லண்டனில் காட்ட முடியாத பெருமையை, ஊரில் காட்டிவிட்ட உவப்பு உங்களுக்கு. உறவெல்லாவற்றையும் ஆட்கொண்டு வென்றதாய், உங்களுக்கு நினைப்பு. ஆனால், இங்கோ நிலைமை தலைகீழ், ஓயாமல் உங்களுக்கு இங்கு விழும் திட்டு, அங்கு கேட்கவா போகிறது? "குமரக் கரையேத்த உதவுவான் எண்டு பாத்தா, கோதாரி விழுவான் சென்ற் எல்லே கொண்டு வந்து தர்றான். அவங்களப் போல குளியாதவங்கள் எண்டு, எங்களயும் நினைச்சிட்டாங்கள் போல."
அவண்ட பெண்டில்ட பழஞ்சிலை உடுக்கவே, நாங்கள் பாத்துக் கொணர்டிருந்தனாங்கள்? அவாட ஜூன்சும் முஞ்சையும், குரங்குக்கு கோவணம் கட்டின மாதிரி' "இவன் வெளிநாடு போக, எண்ட தங்கக் காப்ப அடகு வைச்சுக் குடுத்தனான். துலைஞ்சு போவான்

Deese)is ༧ இப்ப எண்ட குமருக்கு, இமிர்ரேசன்' காப்பல்லே கொண்டு வந்து தர்றான்."
"அந்தப் பாடேல போவானுக்கு, பாலிப்புட்டுமெல்லே அவிச்சுக் குடுத்தனான். நாய் மேணர் அம்பது ரூபாய்க்கு 'சொக்லேட்' கொண்டு வந்து தந்திட்டு, ஐநூறு ரூபாயான் மாம்பழங்களயும் திணர்டிட்டெலிலே si mus froi. '''
அவரும் அவற்ற காற்சட்டையும். அந்தக் காற்சட்டையைப் பார்க்கவே நினைச்சனார்ை, தம்பி அங்க பிச்சைதான் எடுக்குது எண்டு. அம்பது ரூபாயெல்லே தர்றார், ஆருக்குவேனும் இந்த நாயுந் திண்னாக் காசு? அவற்ற திறத்தில கழுத்தில கமரா வேற. வைரவற்ற á5(pší76M 6N/6øpt. DiTap6v upíTL'lıp 6øy மாதிரி அம்மி, குளவி, ஆட்டுக்கல்லு எல்லாமெல்லே படமெடுக்கிறார். அஞ்சு தலைமுறையாய் லண்ட பிணில வாழ்ந்தவர் மாதிரி'
எண்ட மேலுருக் கொடுத்துவிட்ட Apo (upgögbubupit Limitió#6øp6Mvuyu, விட்டுட்டல்லே போயிட்டான் அந்தப் பேயன். அவற்ற பெண்டிலிண்ட பிள்ளப்பேறுக்குச் சரக்குச் சாமான் முழுவதும்,எண்ட மேண்ட தலையில தான் கட்டிவிட்டவங்கள். இப்ப ‘வெயிற் றாமெல்லே, ‘வெயிறர்' அடுத்தமுறைர எண்ட மேணர் வரேக்க, அவள் குமரி ஏதும் கொணர்டு வரட்டன். அப்ப கதைக்கிறன்.
இவையெல்லாம் எனினவென்று கேட்கிறீர்களா? அத்தனையும் உங்களுக்கான அர்ச்சனைகள்தான் Քմաս.
இப்படியாக உங்களுக்கு விழும் திட்டுக்கள், உங்கள் காதில் கேட்க நியாயமில்லை.
சொந்தம் எல்லாம் சுயநலத் தோடுதான். நான் சொன்ன உணர்மைகளைக் கேட்டு, நீங்கள் முகம் சுழித்துச் சொல்வது கேட்கிறது. நீங்கள் மட்டும் என்னவாம்? அன்பினாலா அவர்களைப் பார்க்க வந்தர்கள்?நீங்கள் காட்டிய பவரில், பாவம்!அந்த ஏழை உறவுகள், எதிர்பார்த்ததில் என்ன தவறு? நினைத்தது கிடைக்காமல் பே/க, உங்களைப் போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும், நாகரீகம் தெரியாத அந்தக் கிராமத்து மனிதர்கள், திட்டத்தான் செய்வார்கள். நீங்கள் போய் ஒரு மாதமாயிற்றா? இன்னும் ஊரில் அர்ச்சனை முடிந்த பாடிலிலை என்றால, பார்த்துக்கொள்ளுங்களேன். பதினைந்தாண்டுகளின் பின்னான உங்கள் பயணத்தின் முடிவு, அந்தோ பரிதாபர்!
போங்கள்.
வெளிநாட்டிலிருக்கும் அத்தவar பேர்களும் இப்படிப்பட்டவர்கள்தானா? ewewig, கோபக்குரல் 6léül áblg5lső 6l(pélugby. évég5luuiu அப்படி நான் சொலல வரவிலலை. தேசங்கடந்தும், நேசம் கடவா நெஞசங்களை நன்கறிவேன். தொப்ப பொருந்துகிறவர்களுக்கு மட்டுமே இக்கட்டுவது. அrைகளுக்காகக் கட்டுரையைத் தொடர்கிறேன்.
ിu ിfിo
(s)

Page 25
yggs অ
எங்களை மற்றவர்கள் திட்டுவதைச் சொல்லத்தான், இவ்வளவு கவுர்ரப்பட்டு கட்டுரை எழுதினரா? ஆத்திரத்தில் உங்கள் மிசை இருந்த இடம் துடிப்பது தெரிகிறது. வெள்ளைக்காரர்கள் மதியார்கள் என, மிசையைத்தான் எப்போதோ எடுத்து விட்டீர்களே! கொஞசம் அமைதி அடையுங்கள். எங்களை இழிவு படுத்தவே இக்கட்டுரை வரைந்திருக்கிறீர்!" உங்கள் சுட்டுவிரலி என் நெஞ்சு நோக்கி நீள்கிறது. சத்தியமாய்ச் சொல்கிறேன். உங்களை இழிவுபடுத்த நான் இக்கட்டுரையை எழுதவில்லை. உங்களுக்குப் புத்தி சொல்வதே என்நோக்கம். 'விஸா'வும் 7ரிக்கட்டும் இருந்தால் ஊருக்கு வரலாம் என, நீங்கள் நினைத்தால் அது தவறு. உங்கள் வருகைக்காக, இத்தனை உறவும், எத்தனையோ கனவுகளோடும், ஏக்கங்களோடும் காத்திருக்கும். அத்தனை ஏக்கங்களையும் தீர்க்க முடிந்தாலி இங்கு வாருங்கள். உறவுகள் புதிப்பிக்கப்படும். இல்லாமல் இங்கு வந்திர்களே, உள்ள உறவும்
சிதைந்துபோகும். வந்தால் உதவுவான் என, உங்கள் கடிதங்கள் கண்ட கனவிலேனும், உறவுகள் இருந்து விட்டுப் போகட்டும். அவர்கள் கனவை, உங்கள் வருகையால் சிதைக்காதிர்கள். கனவுதரும் இன்பத்தை நிஜங்கள் நிர்முலமாக்குகின்றன. இத்தனை பேரினதும் தேவைகளை நிறைவேற்ற, நாங்கள் என்ன கோடீஸ்வரர்களா?
நீங்கள் கேட்பது புரிகிறது. கோடீஸ்வரராuப் உங்களை இனங்காட்டியது நீங்கள்தானே! உங்கள் எதிர்பார்ப்பு வேறு, அவர்கள் எதிர்பார்ப்பு வேறு. எவ்வளவுதான் முயன்றாலும்,அத்தனைபேரையும் உங்களால் திருப்திப்படுத்த (Upկ2 եւ 1/75/. அத்தனைபேராலும் உங்களிடம் எதிர்பார்க்காமல் இருக்கவும் (ԼpկշաՈ5/. பிறகென்ன? பவர் காட்டி உங்கள் பயணம் முடிய, லட்சார்ச்சனைதான் மிஞ்சும். ஏன் இந்த வீண் வேலை? தாய் மணிணாவது? தகப்பன் LD60of607/76125/2 6faoistul விலைகொடுத்து வம்பை வாங்காதிர்கள். இடைவெளி நீண்டுவிட்டது. உங்களால் உறவுகளைத் திருப்திப்படுத்தமுடியாது. உறவுகளால் உங்களை ஆரணிக்கமுடியாது. வீணாய் ஏன் வேதனைப்படுகிறீர்கள்? கனவுகளாவது é36ofi76OLDuburujo, இருக்கட்டும். உணர்மை சுடத்தான் செய்யும். அதற்காக உணர்மையைத் தரிசிக்காமலே வாழ்ந்துவிடமுடியுமா? நீங்கள் துன்பப்படக்கூடாது என்ற அக்கறையால் சொல்கிறேன். வரமுடிந்தாலும் இனிஇங்கு வராதர்கள். இது உங்களின் நன்மை நோக்கிய உபதேசமே. கம்பனின் கவி கருத்தில் வருகிறது.
வாராதே! வரவல்லாயப்
(46)

ஒரு பிரதியின் (UPO)D(IUP900D LL85 5966TT
- மேமன்கவி
1. மலையக மகளிர் அமைப்பினர் அதிர்வுகள்
இன்று பரவலாக பெண்ணியம் சம்பந்தமான சிந்தனைகளிட்ட உணர்வு அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழில் பெண்ணியம் சம்பந்தமான எழுத்துக்கள் பரவலாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. தமிழ் பேசும் சூழலில் அவரவர் சமூக அரசியல் கலாச்சார சூழலில் பெண் இனம் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்ட படைப்புக்கள் கவனத்திற்குரிய படைப்புகளாக இன்றைய வாசக உலகினால் எதிர் கொள்ளப்படுகின்றன. எவ்வளவுதான் ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து படைப்புகள் படைத்தாலும் அவ்வெழுத்துக்களில் வெளிப்படாத, வெளிப்பட முடியாத பெண் அகம் சார்ந்த மெல்லிய உணர்ச்சிகளை பெண்களால் மட்டுமே படைக்க முடியும். அதே வேளை, பெண்ணியம் சம்பந்தமான அந்த எழுத்துக்களை புரிந்து கொள்ளக்கூடிய அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபக்குவமும், மன முதிர்ச்சியும் இன்னும் நமது சூழலில் உள்ள சாதாரண அல்லது எழுத்து உலகத்தைச் சார்ந்த ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி இன்னும் ஏற்படவில்லை என்பதும் ஓர் உண்மை. இத்தன்மை உயர்தர மத்தியதர வர்க்க நிலை சார்ந்த ஆண்களிலும் பெண்களிடமும்தான் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆனால் உழைக்கின்ற விளிம்பு நிலை சார்ந்த பெண்களிடம் அத்தன்மை இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் நாம் மேற்குறித்த பெண்களின் அகம் சார்ந்த பிரச்சினைகளையிட்ட மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளிட்ட எழுத்துக்கள் பெண்ணிய உணர்வு மிக்க புத்திஜீவிகளால் படைக்கப்படும் பொழுது அந்தப் படைப்புக்களின் மொழி அந்த உழைக்கும் மற்றும் விளிம்பு நிலை சார்ந்த பெண்களுக்கு அப்படைப்புக்கள் சென்றடைவதில் தடையாக இருக்கின்றது. அதே வேளை அத்தகைய பெண்கள் அவர்களுக்கான பிரச்சினைகளின் ஆழத்தை உணர்ந்து அவை தமக்கு எதிராக. இயக்க ரீதியான செயற்பாட்டில் பங்கு எடுத்து கொள்வதில் முன்முகம் காட்டுவதில் தயங்குவதில்லை. அத்தகைய இயக்கம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்குப் புரிகின்றன. மொழியில் அவர்களுக்கான பிரச்சினைகளிட்ட எழுத்துக்களை கொடுக்க வேண்டிய ஒரு தேவையும் கடமையும் பெண்ணிய இயக்கம் சார்ந்த புத்திஜீவிகளுக்கு இருக்கிறது.
அந்த வகையில், சமீபத்தில் மலையக மகளிர் அமைப்பின் வெளியீடாக வெளிவந்து

Page 26
yet 636):
இருக்கும் 'அதிர்வுகள்’ எனும் நூல் நம் கவனத்தை கவர்கிறது.
ரொம்பவும் எளிமையான நடையில் எழுதப்பட்ட படைப்புகளுடன் வெளி வந்து இருக்கும் இச்சஞ்சிகை மலையக பெண்களிடையே நிலவும் பிரச்சினை களையும் அவர்களுக்கெதிரான சக்திகளை அடையாளப்படுத்தும் வகையில் செயற்படும் ஓர் அமைப்பின் குரலாக இச்சஞ்சிகை அமைந்துள்ளது. உதாரணத்திற்கு அவ்வமைப்பு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மலையகத்தில் பாடசாலை மட்டத்தில் உயர்வகுப்பு மாணவிகளை கொண்டு நடாத்திய ஒரு செயல் அமர்வை பற்றிய ஒரு செய்தி காணப்படுகிறது. அச்செயல் அமர்வில் கலந்து கொண்ட மலையக உயர்வகுப்பு மாணவிகள் வழங்கிய கருத்துரைகளின் தலைப்புக் களை படிக்கும் பொழுது இந்த மலையக மகளிர் அமைப்பு மலையக பெண்களின் சிந்தனை மட்டத்தில் நல்ல பல அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் சேவையாற்றுகிறது என்பது நமக்குப் புலப்படுகின்றது.
எதிர் காலத்தில் இந்த மலையக மகளிர் அதிர்வுகள் எனும் சஞ்சிகையின் மூலமும், தனது களச் செயற்பாடுகளின் மூலமும், மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.
2. ஷோபா சக்தியின் கொரில்லாவும் ஈழத்து தமிழ் எழுத்தும்
நவீன தமிழ் எழுத்து முயற்சிகள் இன்று பல புதிய பரிமாணங்களை தொட்டு வளர்ச்சியடைந்து வருகின்றது. கடந்து போன கால நவீன தமிழ் இலக்கியத்தில் வந்து போன எழுத்து முயற்சிகள் ஒரு
தளத்தில் இயங்கியது என்றால், 80க்குப் பின்னான நவீன தமிழ் இலக்கிய முயற்சிகளின் இயங்கு தளம் வேறுபட்டு நிற்கிறது. இவ்வகை எழுத்து முயற்சியின் முக்கியத் தன்மையும் சிறப்பு அம்சம் என்று குறிப்பிடுவதனால் கடந்த கால நவீன தமிழ் இலக்கியத் தளம் வெளிப்படுத்தாத இன்றைய வாழ்க்கையின் பல்வேறு நுண்ணிய பிரச்சினைகளை புதிய மொழியுடனும் புதிய தொனியுடனும் பேசுவதுதான். இந்தத் தொனியும், இந்த மொழியும் வெளிப்பாட்டுத் தன்மையும் கடந்த அரை நூற்றாண்டு கால நவீன தமிழ் இலக்கிய தளத்தில் காணக் கிடைக்காத தன்மைகள். உலகளாவிய மாற்றங்களும், தமிழ் பேசும் மக்களின் வாழ்வுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கங்களும் இன்றைய நவீன தமிழ் இலக்கியப் போக்கில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதில் பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக
ஈழத்து தமிழ் பேசும் மக்களின் வாழ்வில்
ஏற்பட்ட மாற்றங்களும், அதிர்வுகளும் உலகின் வேறு எந்த பகுதியில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் ஏற்படாத மாற்றங்களும் அதிர்வுகளாக இருப்ப தனால் அவர் தம் இலக்கியப் படைப்புக்கள் தவிர்க்க முடியாத வகையில் இயல்பாகவே இன்றைய நவீனத் தன்மையுடன் வெளிப்படு கின்றன.
அந்த வகையில், ஐரோப்பியச் சூழலில் கால் பதித்து இருந்தாலும் இலக்கியப் படைப்பின் களம் ஈழத்தில் கால் பதித்து ஷோபா சக்தி படைத்திருக்கும் கொரில்லா எனும் நாவல் கவனத்திற்குரிய நாவலாக நமக்குத் தெரிகிறது. அந்த நாவல் பேசும் உள்ளடக்கம் சம்பந்தமாக கருத்து சொல்லும் அதிகாரமும், தகுதியும் நமக்கு இல்லாவிடினும், அந்த நாவல் படைக்கப்
(48)

6696DE KNS
பட்டு இருக்கும் முறைமையின் காரணமாக, அதுவொரு ஈழத்து எழுத்தாளனின் படைப்பு என்ற வகையில் நாம் பெருமை பட்டு கொள்ளலாம்.
ஏனெனில், நவீன, பின்நவீனத் துவம் இன்ன பிற சிந்தனை முறை களுடனான சோதனை முயற்சிகளுக்கு தாங்கள்தான் சொந்தக் காரர்கள் என இறுமாப்பு கொள்ளும் தமிழக எழுத்தாளர்களுக்கு அத்தகைய சிந்தனையுடனான சோதனை முயற்சி ஈழத்து தமிழ் எழுத்தாளனுக்கும் முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டும் தகுதி ஷோபா சக்தியின் கொரில்லா எனும் இந்த நாவலுக்கு இருக்கிறது. நேர் கோட்டு முறையில் கதை சொல்லும் பாணியிலிருந்து விலகி, கதை சொல்லும் முறைகூட, ஷோபா சக்தி தனது நாவலுக்காக எடுத்து விடயத்திற்கு மிகவும் பொருத்த முடையதாக இருக்கிறது. அவ்வாறான அந்த முறைமையே கொரில்லா பேசும் பிரச்சினையின் உக்கிரத்தையும் சரியாகவும் ஆழமாகவும் நமக்கு உணர்த்துகிறது. இதுவே ஷோபா சக்தியின் கொரில்லாவின் வெற்றி எனலாம்.
யாழ்ப்பாணத்தின் கிராம வெளி ஒன்றின் புள்ளியில் தொடங்கி ஐரோப்பிய தேசம் ஒன்றின் மையத்தில் முடிவாக, நாவல் சொல்லும் செய்தி மனதை கவ்வுகின்ற விதம், நேர்கோட்டு முறை சார்ந்த படைப்புக்கள்தான் மனதில் நிற்கும் என்று கூற்றை பொய்யாகிவிடும் விதத்தில் அமைந்த ஒரு படைப்பாக ஷோபா சக்தியின் கொரில்லா என்ற இந்த நூல் அமைந்துள்ளது.
3. அபிவிருத்தியினர் அடியில்
பிணங்கள்
சமூக அபிவிருத்தி என்பதன் ஒரு பகுதியாக இருக்கும் நகரமயமாக்கலின் பொழுது இழப்புகள் என பார்க்கு மிடத்தது, கிராமிய வாழ்வின் இழப்புக் களாகவே இருக்கின்றன. கிராமிய சூழலில் பேணப்பட்டு வரும் கலாசார அம்சங் களின் இழப்புகளுக்கு அப்பால் உயிர்களினதும், உடமைகளினதும் இழப்புகளுடனும் சம்பந்தப்பட்ட தனி மனித உணர்ச்சிப் பாதிப்புக்கள் மிகவும் துயரமான மனோ நிலையினை ஏற்படுத்தி விடுகின்றன.
அவ்வாறான ஒரு பிரிவின் துயரத்தை எடுத்துச் சொல்லும் நல்லதொரு சிறு கதையினை 'தீராநதி’ ஆகஸ்ட்-2003 இதழில் படிக்கக் கிடைத்தது. இந்தியாவைச் சேர்ந்த கொங்கணி மொழி எழுத்தாளர் தாமோதர் மெளஸோ எழுதிய ‘என் குழந்தைகள்’ எனும் அச்சிறுகதையாகும்.
கோவாவின் பிரதேசத்தின் ஒரு கிராமத்திற்கு நகர மயமாக்கலுக்கான ஓர் ஊடகமான ரயில் போக்குவரத்திற்கான பாதை உருவாக்க, அந்த கிராமத்தைச் சேர்ந்த ரோஸலினா எனும் தாய் ஒருத்தி தனது ஒவ்வொரு பிள்ளைகளின் பேரில் நட்டு வைத்த மரங்கள் ரயில் பாதை அமைக்க வெட்டப்படும் பொழுது அவள் அடையும் வேதனையை தாமோதர் மெளஸோ மிகவும் உணர்ச்சி மயமான நடையில் அழகான ஒரு சிறுகதையாக வடித்துத் தந்திருக்கிறார். கணவனை இழந்த பிள்ளைகள் அவரவர் தேவைகளுக்காக அவளை விட்டுப் பிரிந்து பல நகரங்களை நோக்கி போய் விட்ட நிலையில், அந்தப் பிள்ளைகளின் ஒவ்வொருவரதும் பேரிலும்
(49)

Page 27
yg; GSG)
நட்டு வைத்திருக்கும் மரங்கள் எந்தக் காரணம் கொண்டும் வெட்டப்படக் கூடாது என்பதற்காக அந்தத் தாய் போராடும் போராட்டம் மனசைக் கீறுகிறது.
அபிவிருத்தி எனும் தேவையின் பெயரால் நடக்கின்ற நிகழ்வுகளின் அடியில் எத்தனை ஆயிரம் உணர்ச்சி பிணங்கள் இருக்கும்? என்ற கேள்வி மனசில் அந்தக் கீறலுடன் எழுகிறது. இந்தக் கேள்விக்குப் பின் அபிவிருத்தி தரும் சுகத்தை அனுபவிக்க ஒரு கணம் மனம் கூசுகிறது.
இதே இதழில் தாமோதர் மெளஸோ அவர்களை சிவசங்கரி அவர்கள் கண்ட பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. (மேற்குறித்த கதையையும் சிவசங்கரி அவர்களே மொழி பெயர்த்திருக்கிறார்.) அப்பேட்டி மூலம் கொங்கணி மொழிச் சமூகத்தினரின் வாழ்வுச் சூழலைப் பற்றியும் அழகாக அறிய முடிகிறது. அந்த அறிதலுடன் தாமோதர் மெளஸோ அவர்களின் மேற்குறித்த சிறுகதையைப் படிக்கின்ற பொழுது அக்கதையின் சூழலுடன் நெருக்கம் வருகிறது.
தாமோதர் மெளஸோ எழுதிய ‘என் குழந்தைகள்’ எனும் சிறுகதையினைப் பற்றி யோசிக்கும் பொழுது எனக்கு தோன்றிய சிந்தனை இதுதான்
இந்த வலியின் மொழியினைப் பற்றி எண்ணும் வேளை
இதே தீராநதியின் இதழில் இடம் பெற்றுள்ள ‘நேயன் எழுதிய ஹைக்கூ ஒன்று ஏனோ நினைவுக்கு வருகின்றது.
இதுதான் அந்தக் ஹைக்கூ
'மறைவான இடத்தில் வெட்டலாமே. எத்தனை முறைதான் இறக்கும் கடைசி ஆடு.”
மரங்களானாலும் என்ன? மனிதர்களானாலும் என்ன? குடியிருந்த மனைகளானாலும் என்ன? இழப்பின் வலியின் மொழி பொதுவானதுதான்.
எழுதப்படாத கவிதைக்கு வரையய்படாத சித்திரம்
 

கலாசூரி
- டொமினிக் ஜீவா
திடீர் இழப்பினால் ஏற்பட்டுவிட்ட இரங்கல் கருத்துக்களாக அல்லாமல், கலாசூரி அவர்களினது கடந்த கால இலக்கிய ஆளுமைகள், செயற்பாடுகள் வெகுசன மக்கள் தொடர்புகளை முன்னிறுத்தி அவரைப் பற்றிச் சரியான ஆய்வு ரீதியான கணிப்பீடுகளை எழுத்தில் ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எமது இன்றைய தேவையாகும்.
இழப்பின் - இறப்பின் - தாக்கத்தினால் அப்படியானதொரு விரிவான ஆய்வுக் கட்டுரை வெளிவரக்கூடிய சூழ்நிலை உடனடியாக இங்கு நடந்தேற முடியாது விட்டாலும் கூட, அவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் நிச்சயமாக இந்த ஆரோக்கியமான பணியில் எதிர்காலத்தில் ஈடுபடுவார்கள் என்பது திண்ணம்.
தினகரன் கைலாசபதி காலம் எனச் சொல்லப்பட்ட காலத்தின் தனிக்கால கட்டத்தைத் தொடர்ந்து தினகரனில் பேணி வளர்ந்து வந்தவர் மாத்திரமல்ல, அதைக் கட்டிக் காத்து வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு வகித்துவந்தார் சிவகுருநாதன்.
அவர் இரண்டு தளங்களில் தனது காலடியை நன்கு பதித்து, தனது பொறுப்பைப் பொறுப்புணர்ச்சியுடன் ஆற்றி வந்தவராவார். இவை இரண்டும் அதிமுக்கிய தளங்களாகும்.
தினகரன் ஆசிரியராகவும் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
இந்த இரண்டு வெகுசனத் தொடர்புத் தளமும் அவரைக் கடைசி வரை கைவிட்டு விடவில்லை என்பதை அவரது இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மக்கள் திரளைக் கூர்ந்து பார்த்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
தான் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மாணவன் எனப் பொதுமேடைகளில் பெருமையுடன் தனது கல்வித் தளத்தைப் பிரகடனப் படுத்தி வந்தவர் இவர். இன்று சிங்கள மக்களால் சூழப்பட்டு வாழ்ந்து வரும் முஸ்லிம் கிராமங்களிலிருந்து புதுப்புதுக் கவிஞர்கள் இளைஞர்களும் யுவதிகளும் தோன்றி இலக்கிய உலகில் காலடி பதித்து நிமிர்வதற்கும் இவரது தினகரன் பங்களிப்பு மெத்தப் பெரிய உதவிகரமானவே இருந்து வந்துள்ளது.
என்ன காரணமோ தெரியவில்லை. தமிழகப்பத்திரிகை உலகில் படைப்பாளிகளின் செய்திகள், தகவல்கள் வெளிவருவதே அரிது. அரசியல்வாதிகளின் வாய்ச் சவடால் களும் சினிமாப் பிரபலங்களின் பந்தாக் கூச்சல்களும் பெரும்பாலும் அந்த நாட்டுத் தினசரிகளில் செய்திகளாக மலிவாக இடம் பிடித்து விடுகின்றன.
நமது நாட்டில் இந்தச் சினிமாத் தளங்கள் இல்லை. இந்த நாட்டில் வெளிவரும்
(s)

Page 28
t ye GSG) is VS
தினசரிகளின் செய்திகளில் பெரும்பாலும் இந்த நாட்டு எழுத்தாளர்களினது கருத்துக்கள் அல்லது அவர்களைப் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற்றுப் பிரசுரிக் கப்படுகின்றன.
வெகுசன மக்கள் முத்தியில் எழுத் தாளர்களது நாமம் பரவ அவர் தனது கால கட்டச் செயற்பாடுகளினாலும் உண்மையான படைப்பாளிகளை இனங் கண்டு அவர்களை ஊக்குவித்து உற்சாகப் படுத்தியதாலும் சாதித்துக் கொண்டார்.
கலாசூரி சிவகுருநாதன் பல கலைஞர் களின் ஆக்கங்களுக்கு மறைமுகமாகப் பல உதவிகளை நல்கி வந்தவர்.
நகைச்சுவையாக மேடைகளில் உரை நிகழ்த்தி, ரசிகர்களைச் சிரிக்க வைத்த இவர் ஒரு தரமான சட்டத் தரணியாவார். இவரது நகைச்சுவை மேடைப் பேச்சுக்களின் ஊடே அடி நாதமாக நல்ல பல கருத்துக்கள் நிரம்பியிருக்கும்.
கைலாசபதியின் தினகரன் ஆளுமைக் காலம் ஈழத்து இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டிருந்தது. விமரிசன மட்டத்தில் பேசப்பட்டு வந்தது.
மல்லிகை ஆசிரியரின்
இந்த ஆளுமையைத் தினகரனின் பின் தொடர்காலத்தில் தக்க வைத்துக் கொள் வதற்கும், அதைத் தொடர்ந்து மேம்படுத்திச் செல்வதற்கும் அபாரத் திறமையும் அர வணைப்பு மனப்பான்மையும் அவசியம் தேவைப்பட்டதொன்றாகும்.
இந்தப் பரிணாம கால கட்டத்தில் சிவகுருநாதன் கைலாசபதி விட்டுச் சென்ற ஈழத்துத் தனித்துவப் பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வந்ததுடன், தனது ஆசிரியத் தலைமையின் கீழ் இயங்கிவந்த தினசரியை இன்னும் இன்னும் செழுமைப் படுத்தி மக்களிடம் எடுத்துச் சென்றார்.
அதன் வெளிப்பாடுகளின் ஒன்று தான் இந்த மண்ணில் சிறப்புற்றுத் திகழ்ந்த கலைஞர்களை ஆசிரியத் தலையங்கத்தில்
பாராட்டி, வாழ்த்தி எழுதிய ஒரு சம்பவ LDIT(35lb.
சும்மா பத்தோடு பதினொன்றாக வந்து வாழ்ந்துவிட்டுப் போனவரல்ல நமது கலாசூரி. தனது வரவையும் தகைமை யையும் இருப்பையும் தற் போதைய வரலாற்றில் பதிய வைத்து விட்டுப் போனவரே சிவகுருநாதன் அவர்களாகும்.
பவள விழ ஞாபகார்த்தமாக வெளியிட்டு
வைக்கப் பெற் சிறுகதைத் தொகுதி
30 எழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு சிறுகதைகளை உள்ளடக்கிய இரண்டாம் பாகம் தயாராகின்றது
 

&lötdjbgb(16lilaði Dsun Ildb ஒர் அநுபவப்பயணம்
- டொமினிக் ஜூவா
திருநெல்வேலிப் பிள்ளைமார் - அவர்களைச் சைவப்பிள்ளைமார்கள் எனப் பரவலாக அழைப்பார்கள் - சமூகக் கூட்டத்தினர் தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். இவர்களில் பலர் மகா ஆற்றல் படைத்தவர்கள். கலை இலக்கியத்துறையில் தமது முத்திரையைப் பதித்தவர்கள். பழக்க வழக்கங்களில் ஆளுமையை நிலை நாட்டியவர்கள். தரமான இலக்கியச் சுவைஞர்கள். ரசிக மனசு படைத்தவர்கள். விருந்தினர்களை உபசரிப்பதிலும் கலைஞர்களுக்கு மனமுவந்து உதவுவதிலும் தனிக் கவனம் செலுத்தி வருபவர்கள்.
நமது குருசுவாமி அண்ணாச்சியும் இந்தத் திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் வழி வழி மரபில் வந்தவர்தான். அவர்களது உணவுச் சுவைகள், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயச் சடங்கு முறைகள் மனதில் கொள்ளத் தக்கவை. தனிக் கவனத்திற் குரியவையுமாகும். அதன் பாரம்பரியம் கவர்ச்சிகரமான பண்புகளும் நடத்தைகளும் அண்ணாச்சி குடும்பத்திலும் வேரோடி இருந்ததைப் பலமுறைகளில் கொழும்பில் அவதானித்து வந்துள்ளதுடன் அவர்களைப் பற்றியும் மனசுக்குள் மட்டிட்டுக் கொண்டுள்ளேன்.
கொழும்பில் அந்தக் காலத்தில் புறக்கோட்டைப் பகுதியில் மிகப் பிரபலம் வாய்ந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்களாகவும் வணிகர்களாகவும் தனவந்தர்களாகவும் தர்மகர்த்தாக்களாகவும் திகழ்ந்தவர்களில் இந்தச் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்து வந்துள்ளனர்.
“ரசிகமணி டி.கே.சி. வீட்டுத் தோசையை இரவு சாப்பிட்டுப் பார்ப்போமா!” எனக் குருசுவாமி அண்ணாச்சி அன்று சாயங்காலம் சொல்லி விட்டதும் நான் தோசைக் கனவு காணத் தொடங்கி விட்டேன். -
'ரசிகமணி வீட்டுத் தோசை ருசி எப்பிடி இருக்கும்?
பல இடங்களில் பல கட்டங்களின் உணவு வகைகளின் சுவை, தரம், அதன் மறக்கப்படாத ருசி பற்றியே தொட்டம் தொட்டமாக அழுத்தி அழுத்தி எழுதி வருகிறேனே என்ற உணர்வு எனது நினைவுகளில் தோன்றாமலில்லை.

Page 29
t ye GSG): N
ஒரு தரமான மக்கள் எழுத்தாளன் சாப்பாட்டு விவகாரத்தில் நல்ல கலைஞ னாக, சுவைஞனாக இருக்க வேண்டும் என்பது எனது நேரடி அநுபவமாகும்.
மூதறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் முதல் முறையாக யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருக்கு எனது இலக்கிய நண்பர் செ.கணேசலிங்கனது உரும்பிராய் வீட்டில் பகல் போசன விருந்து கொடுக்க ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.
கணேசலிங்கன் சைக்கிளில் அங் கிருந்து நேரடியாக என்னிடம் வந்து அந்த மதிய போசன விருந்தில் என்னையும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.
பகல் வெயிலையும் பொருட்படுத் தாமல் யாழ் நகரிலிருந்து ஐந்து மைல்கள் துாரமிருக்கும் உரும் பிராயிலுள்ள கணேஷின் வீட்டிற்கு வேர்க்க விறுவிறுக்கச் சைக்கிளில் போய்ச் சேர்ந்தேன்.
உணவு பறிமாறப்பட்டது.
தோட்டத்திலிருந்து தானே வெட்டி வந்த நீண்ட தலைவாழை இலைகளை விருந்தினர் முன் பரவலாக விரித்து, நண்பர் கணேஷே நேரடியாக உணவு பரிமாறத் தொடங்கினார். அவரது தாய் உபசரிப்பில் பங்கு கொண்டு உதவினார்.
கி.ஆ.பெ. அவர்களுக்கு அருகேதான் நான் உட்கார்ந்திருந்தேன்.
உணவுகள் பரிமாறப்பட்டதும் அப்படியே சோறுகளை உருட்டி கவளம் கவளமாக நானும் பந்தியிலிருந்த மற்றவர் களும் சாப்பிடத் தொடங்கினோம்.
பெரியார் கி.ஆ.பெ. அவர்களின் இலையில் சாம்பாருடன் ஒரு நெட்டி
கருவேப்பிலைக் கொத்து சேர்த்து பரிமாறப்பட்டு விட்டது.
அவர் எம்மைப் போல முதலில் சோறு கறிகளைப் பிசைந்து உண்ணாது அந்தக் கருவேப்பிலை நெட்டியிலிருந்து காம்பு களைப் பிரித்தெடுத்து ஒவ்வொரு நெட்டிக் காம்பிலையையும் வாய்க்குள் வைத்து உதட்டால் உருவி உருவிச் சுவைத்த வண்ணமிருந்தார்.
எனக்கோ வியப்பாக இருந்தது.
இயல்பாக நாமெல்லாம் சாப்பாட்டுடன் அல்லது குழம்புடன் கருவேப்பிலை நெட்டிகளை எடுத்து ஒரு மூலையில் முதலில் வைத்து விட்டுத்தான் சாப்பிட ஆரம்பிப்போம்.
ஆனால், பெரியவர் நெட்டிக் காம்பு களை எடுத்து நாக்கால் வார்ந்து வார்ந்து சாப்பிடுவதைக் கண்டு முதலில் ஆச்சரியப் பட்டேன். பின்னர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வியப்புடன் அவரைப் பார்த்தேன்.
என்னுடைய வியப்பான பார்வையைப் புரிந்து கொண்ட அவர், “சாப்பாட்டை உடனே பிசைந்து சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது. மெல்ல மெல்ல அதன் சுவையைச் சுவைத்துச் சுவைத்து நாக்கைப் பக்கு வப் படுத்திக் கொண்டதன் பின்னர்தான் முழுச்
சாப்பாட்டையும் நாம் உண்ண வேண்டும்.
அத்துடன் நம்மை அழைத்து விருந்து தருபவர்கள் எவ்வளவு கரிசனையுடன் எமக்குப் போசனம் தருகின்றனர். நாம் இப்படி ஆறுதலாக ரசனையுடன் தமது உணவை நாம் ஏற்றுக் கொண்டு உண்ணும்போது அவர்களுக்கும் ஒரு தனிச் சந்தோஷம் ஏற்படுமல்லவா? எனவே சாப்பாட்டை அவக் அவக்கென முழுங்கக் கூடாது. மெல்ல மெல்லச் சுவையறிந்து
(s)

് ബ്
உண்ணப் பழகவேண்டும். ஒருவன் சுவைத்துச் சாப்பிடுவதை வைத்தே அவன் தரமான கலைஞனா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்!”
நான் விக்கித்துப் போய் விட்டேன்.
அன்றன்றாடு நாம் உணவு அருந்து வதில் இத்தனை நுணுக்கங்களும் கலைத்து வமும் பொதிந்து போய்க் கிடக்கின்றனவா? என நான் பிரமித்துப் போய் விட்டேன்.
இந்தப் பின்னணி அநுபவத் திரட்சி யுடன் இரவு தோசை வார்த்துப் போடப் போட, ஒரு பிடி பிடித்தேன். அதற்கேற்றாற் போல அதற்கே என அமைத்த சட்னியின் தனிச் சுவை இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்கூட, நாக்கில் நீரூற வைக்கின்றது.
அண்ணாச்சியின் வீட்டுக்கு அருகாமை யில் அமைந்துள்ள இல்லத்தில் குடியி ருந்தவர் பெயர் இளசை அருணா. ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர். இவரது கடிதங்கள் அனைத்துமே ஓவிய எழுத்தில் எழுதப் பட்டிருக்கும். விதம் விதமான அழகிய நிறங் களில் இவர் தீட்டிய கடித ஒவியங்களில் சிலவற்றை இன்றும் நான் பாதுகாத்து வைத்துள்ளேன். அவருடைய இல்லத்தில் அடுத்த நாள் மதிய உணவை உட் கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
பின்னர் செக் கிழுத்த செம்மல் சிதம்பரத்தின் வீட்டைக் காட்டினார் அண்ணாச்சி. தொடர்ந்து கயிற்றில் தொங்கிய கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்திற்கும் அழைத்துச் சென்று காட்டினார்.
இளசை மணியன் என்பவர் அருணாவின் சகோதரரல்ல. இளசை என்பது ஊரின் பெயர். அவர் எட்டயபுரம் பாரதி இல்லத்தின் பாதுகாவலராக இருந்தார்.
என்னைக் கூட்டிக் கொண்டு போய் எட்டயபுரம் பாரதி மண்டபத்தைச் சுற்றிச் சுற்றிக் காட்டினார்.
அம்மண்டபத்தை பார்த்த போது கவிப் பாட்டன் பாரதியைத் தரிசித்தது போன்ற ஒரு மனநிறைவு ஏற்பட்டது.
எட்டயபுரத்தைப் பார்த்துவிட்டு இராஜ பாளையம் நோக்கி எனது பயணம் தொடர்ந்தது.
இராஜபாளையம் என்றாலே என் தேகத்தில் ஒரு புல்லரிப்புத்தான் தோன்றும்.
அத்தனை இலக்கிய விசுவாசமும் அபிமானமும் கொண்டது அவ்வூர்.
என் மீதும் மல்லிகை வரவின் மீதும் சொல்ல முடியாத அபிமானமும் பாசமும் கொண்டு இயங்கி வரும் அவ்வூர் இலக்கிய வாதிகளை எண்ணிப் பார்த்தாலே உணர்வில் ஒரு புதுத் தெம்பு பிறக்கும்.
ராஜ"க்கள் எனச் சொல்லப்படும் இராஜபாளையத்துப் பெருங்குடி மக்கள் பாரம்பரியத் தமிழ் பேசும் மக்களல்ல. தெலுங்கர்கள். ஆந்திராவிலிருந்து எப்போவோ ஒரு காலத்தில் அரச பயங்கர வாதக் கொடுங்கோன்மையைச் சகிக்க முடியாமல் ஊரை விட்டுப் புலம் பெயர்ந்து தமிழ் நாட்டில் காலூன்றிக் கொண்டவர்கள் தான் இந்த ராஜ பரம்பரையினர்.
தமிழ்மொழியில் மகாபாண்டித்தியம் பெற்றவர்கள் இவர்கள். தமிழகத்தில் ஒரு கால கட்டத்தில் முதலமைச்சராக சிறப்புற்று விளங்கிய குமாரசுவாமிராஜா இவர்களது சமூகத்தைச் சேர்ந்தவரே.
இவர்களில் பலர் தரமான நல்ல
எழுத்துக் கலைஞர்களாக இன்று விளங்கி வருகின்றனர்.
(ss)

Page 30
665); ܐܢ
இவர்களுக்கு வழிகாட்டி வருபவர் பன்மொழிப் புலவர் ஜெயநாதராஜா என்பவர். பண்பும் படிப்பும் நிரம்பப் பெற்றவர்.
இந்த ஊரில் ஜவுளி மில்லில் வேலை செய்து வருபவர்தான் கோ.மா.கோதண்டம் என்பவர். எழுத்தாளர்களை நேசிப்பதும் வரவேற்று உபசரித்து மகிழ்வதுமே இவரது வாழ்வின் அடிப்படை நோக்கமாகும்.
1981ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராக இருந்த சமயம் மதுரையில் ஒரு உலகத் தமிழ் விழா நடை பெற்றது. அந்த விழாவுக்கு நானும் போயிருந்தேன்.
இராஜபாளையத்து இலக்கியத் தோழர்களும் இவ்விழாவில் பங்கு கொண்டார்கள்.
அங்கு விநியோகித்த உணவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் எனது நாக்கு உணர்வுகள் அடியோடு செத்துப் போய்விட்டன. “மதுரை நகரில் நல்ல உறைப்பான புலால் உணவு எங்கு கிடைக்கும்?” என கோதண்டத்திடம் கேட்டு வைத்தேன்.
அவர் அழைத்துச் சென்று காரமான உணவு உண்ண வைத்ததுடன் அதற்குரிய பணத்தையும் அவரே செலுத்தினார். “நம்ம Đ6I fĩ விருநீதினர்கள் . நம் ம விருந்தாளிகள்.” எனச் சொல்லிச் சொல்லிச் சிரித்தவர் அவர்.
இயல்பாகவே சைவ போசனக்காரரான அவர், இலக்கிய நிமித்தமாக என்னைக் கூட்டிச் சென்று இறைச்சிச் சாப்பாடு சாப்பிட வைத்ததுடன் அருகிருந்து எனது தேவை களைக் கவனித்ததையிட்டு நான் அன்னாரிடம் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன்.
இராஜபாளையம் போன அன்று மதிய போசனத்திற்கு என்னை அழைத்திருந்தார் கோதண்டம்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடை வேளையில் “உங்களுக்குப் பிடித்தமான உங்களுக்கென்றே தயாரித்த சட்னி இது!” எனச் சொல்லிய வண்ணம் இலையின் ஒரு மூலையில் சட்னியை வைத்து விட்டு நிமிர்ந்தார்.
‘நானும் ஏதோ புதுவகைத் தயாரிப்பாக இருக்கும்!’ என்ற நினைவில் அள்ளி யெடுத்துச் சோறுடன் பிசைந்து இரண்டு
கவளம் சாப்பிட்டும் விட்டேன்.
‘ஐயோ! ஐயோ!” வாய்திறந்து சொல்ல முடியாத காரம். உறைப்பு. வெளியே அவக்கென்று துப்ப முடியாத அவல நிலை. ஒருவாறாக விழுங்கி விட்டேன். கண்களில் கண்ணிர் வந்தது. தண்ணிரை எடுத்து அவக். அவக். எனப் பருகினேன்.
தொடர்ந்து சாப்பிடவே இயலவில்லை.
“என்னையா? இத்தனை காரத்தைச் சட்னி என்று சொல்லி இலையில் வைத்து என்னைத் திணறடித்து வீட்டீரையா?”எனச் சற்றுக் கோபமாகவும் எரிச்சலாகவும் கேட்டு வைத்தேன்.
“நீங்கதான் காரம் வேணும் எனக் கடை கடையாக மதுரையில் என்னைக் கூட்டிக் கொண்டு அலையா அலைஞ் சீங்களே. அதுதான் காரமா என் வீட்டில் சட்னி செய்து தந்தேன்!”
மனுஷன் வெறும் மிளகாயை அம்மியில் வைத்து அரைத்தெடுத்து எனக் கென்று தனி ஸ்பெஷல் சட்னி தயாரித்துத் தந்துதவினார்.
(so)

நட்பு எப்படிப்பட்ட அற்புதமானது!
பலராமன் என்றொரு நண்பரும் அங்கு நெருக்கமானார். சொல்லப் போனால் மல்லிகை மூலம்தான் பெற்றுக் கொண்ட மிக நேசிக்கப்படத்தக்க நண்பர்கள் இன்று வரைக்கும் இராஜபாளையத்தில் எனக் கென்றே இருந்து வருகின்றனர்.
இந்த நணர் பர்களில் இருவர் கோதண்டமும் ஜெகந்நாதராஜாவும் ஒரு தடவை இலங்கை வந்திருந்தனர். அந்தச் சமயத்தில் மல்லிகை விளம்பரம் சம்பந்த மாக நானும் கொழும்பில் தங்கியிருந்தேன். இந்த இலக்கிய நண்பர்களை வரவேற்று மல்லிகைப் பந்தல் சார்பாக ஒரு மாலை வேளையில் ஓர் இலக்கியக் கூட்டத்தை மகிழ்ச்சியாக ஒப்பேற்றி முடித்தேன்.
மல்லிகை இதழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள இடைவேளையை இலக்கியச் சுற்றுலாவாகாவே பெரிதும் பயன்படுத்தினேன்.
எனது இந்தத் தமிழ் நாட்டுப் பயணத்தில் மல்லிகையைப் பற்றித் தெரிந் திருந்தவர்கள். அதன் மீது பேரபிமானம் கொண்டிருந்தவர்களையே தேடித் தேடிச் சந்தித்தேன்.
பலர் நேரடியாகவே மல்லிகை ஏன் இப்பொழுது நிறுத்தப்பட்டு விட்டது? சிற்றிலக்கிய ஏடுகளுக்கு இயல்பாகவே வந்து சீரழிக்கும் கொள்ளை நோய்க்கு மல்லிகையும் ஆட்பட்டு விட்டதா?’ எனப் பலரும் அநுதாபத்துடனும் அக்கறையுடனும் விசாரித்தனர். -
நான் அவர்களுக்கு நேரடியாகவே பதில் சொன்னேன்.
மல்லிகை தொடர்ந்து வெளிவருவ தற்கான பொருளாதார அச்சக வேலைகளை
ањыgЫ
ஒழுங்குபடுத்திய பின்னர்தான் ஒய்வுக் காகவும் சிறிய அவகாசத்திற்காகவும் தமிழகம் வந்திருக்கிறேன். திரும்ப ஊர் போனதும் மல்லிகை புதுப்பொலிவுடன் புதிய ஆக்கபூர்வமான செயல் திட்டத் துடனும் மீண்டும் வெளிவரும்!” என அவர் கேள்விகளுக்குத் திடமாவவே பதிலளித்தேன்.
தமிழகத்தில் என்னைச் சரஸ்வதி எழுத்தாளன் என்றே இலக்கிய உலகில் அறிந்திருந்தனர். குறிப்பிட்ட ஒருபகுதி எழுத்தாளர்கள்தான் மல்லிகை ஆசிரியர் என்ற வகையில் என்னைத் தற்போது அறிந்திருந்தனர்.
பெரும் பகுதியினர் எனச் சொல்ல முடியாது போனாலும் கணிசமானவர்கள் மல்லிகைச் சஞ்சிகையை பற்றித் தெரிந்து வைத்திருந்ததில் ஒரளவு மனநிறைவு எனக்குப் புத்தூக்கம் ஊட்டியது என்றே சொல்ல வேண்டும்.
ஊர் திரும்பி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மல்லிகையின் அச்சக உபகரணங்களை மீட்டெடுத்துத் திரும்பவும் அவ்விதழை புதுப் பொலிவுடனும் புதிய அ69)பப்புடனும் வெளிக்கொணர வேணடும் என்ற புத்தூக்கம் என் நெஞ்சில் அரும்பத் தொடங்கியது.
எனவே, திருச்சி வழியாக பலாலி 6îDT 607 660)6uuuypu II ab u 11 půLui 6001 Liö திரும்பிவிட வேண்டுமெனத் திட்டமிட்டேன். அப்பொழுது பலாலிக்கும் திருச்சிக்கும் விமானப் பயணப் பாதை நடைபெற்று வந்தது. நாற்பது நிமிஷ நேரத்தில் திருச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்து விடலாம். அரைமணி நேரம் எடுத்துக் கொண்டால் வீட்டுக்கே வந்து மத்தியானச்
சாப்பாடு அருந்திவிடக் கூடிய கால
�s7»

Page 31
5 pe; GSG)
SS22 கட்டத்தில் அப்பொழுதெல்லாம் தமிழகத் திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் போக்குவரத்து வசதி நிரம்பப் பெற்றிருந்தது. அது ஒரு 56T6)LD.
தமிழகத்திற்கு வந்ததன் பின்னர் சென்னைக்குச் செல்லாமல் ஊர் திரும்புவது எனக்குப் பூரண திருப்தியை எப்போதுமே தந்து விடுவதில்லை.
மதுரை இலக்கிய நண்பர்கள் மூலம் எனது தமிழக வரவைத் தெரிந்து கொண்டிருந்த இலக்கிய நண்பர்களில் சிலர், சென்னையில் கோடம்பாக்கத்தில் ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து நண்பர் ஜெயகாந்தன் மூலம் எனக்கு மதுரைத் தோழர்கள் மூலம் தகவல் தந்திருந்தனர்.
சென்னையில் பாரதி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய பிரதம பேச்சாளர் நண்பர் ஜெயகாந்தன். ஈழத்து எழுத்தாளன் என்ற தகைமையை முன்னிறுத்தி என்னையும் அக்கூட்டத்தில் பேச்சாளனாக விளம்பரப்படுத்தி நோட்டீஸ் வெளியிட்டிருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொள்வதை விட, இலக்கிய நண்பர்களையும் நெருங்கிய நீண்ட காலத் தோழர்களையும் ஒருங்கு சேரச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும் என்பதற்காக நான் ஆரம்பத்தில் சிந்தித் திருந்த காரணத்தால்தான் இந்தப் பாரதி விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.
சென்னையில் பாலன் இல்லத்தில் தங்கியிருந்தேன். நான் சென்னை வரும் சமயங்களில் எல்லாம் பாலன் இல்லத்தில் தங்குவதுதான் வழக்கம்.
நண்பன் ஜெயகாந்தன் பாலன் இல்லத்துடன் தொடர்பு கொண்டு என்னுடன்
பேசினார். “கூட்டத்திற்குப் போவதற்கு முன்னர் ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள தனது மேல்மாடி குடிலுக்கு வந்தால் இருவரும் சேர்ந்து கோடம்பாக்கம் கூட்டத்திற்குப் போகலாம்!” எனத் தகவல் தந்து என்னை நேரே ஆழ்வார்பேட்டைக்கு மாலை ஆறு மணிக்கு வந்துவிடும்படி சொன்னார்.
ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள மேல் மாடிக்குச் சரியாக மாலை ஆறு மணிக்கு நான் போய்ச் சேர்ந்த சமயம் பல நண்பர்கள் ஜெயகாந்தனுடன் பேசி, விவாதித்துக் கொண்டிருந்தனர். 'மோகன் என ஜெயகாந்தனால் அன்புடன் அழைக்கப் படும் அவரது உதவியாளன் எல்லாருக்கும் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்தார். எனக்கும் ஒரு கிளாஸ் தேநீர் பருகத் தரப்பட்டது.
அந்த மேல்மாடிக் குடில் அன்று சென்னையில் பேசப்படும் முக்கிய இடமாகக் கருதப்பட்டது. அங்கு சினிமாப் பிரபலங்களிலிருந்து பதிப்பகப் பிரம்மாக்கள். எழுத்தாள நண்பர்கள் வரையும் வாரநாட் களில் கூடிக் களிக்கும் விநோத மேல்மாடிக்
குடிலாக அது அந்தக் கால கட்டத்தில் பிர
பலமாக இலக்கிய வட்டாரத்தினால் பேசப் பட்டு வந்தது.
அந்தச் சூழ்நிலை எனக் குப் புதுமையாக இருந்தது. விநோதமாக என் மனசுக்குப் பட்டது.
நான் எத்தனையோ இலக்கிய மன்றங்கள், தனிநபர் இல்லங்களுக்கெல் லாம் இதுவரை போயிருக்கிறேன். ஆனால், ஆள்வார்ப்பேட்டை மேல்மாடிக் குடில் எனது மனசில் பசுமையாகப் பதிந்திருப்தைப் போல, வேறெந்த இடமுமே இதுவரை பதிந்திருக்க வில்லை. எடிட்டர் லெனின், கலைஞன் பதிப்பகம் மாசில்லமணி ஆகியோர் அங்கு தான் அறிமுகமானார்கள்.
(மீண்டும் சந்திக்கின்றேன்)
(ss)

கடிதங்கள்
மல்லிகை பற்றிய அபிப்பிராயம்
ஜனநாயக முறைப்படி வாசகர்களிடம் அபிப்பிராயம் கேட்டது ஒரு ஆரோக்கியமான இலக்கிய சிந்தனை. நன்றி. மல்லிகை இதழைக் கையில் எடுக்கும் போது ஒரு படைப்பாளியின் சலியாத உழைப்பு என்பதை மனதில் வைத்தே எடுக்கின்றோம். இது நிதர்சனமான உண்மை. அத்துடன் எமது நாட்டுப் பத்திரிகை என்ற பெருமை கூட வந்து விடுகின்றது.
மல்லிகையின் அட்டைப்பட அறிமுகம், ஆசிரியர் தலையங்கம், உங்களின் நினைவுகள், கேள்வி - பதில் மிகச் சிறப்பானவையே. கதைகள் கூட மனதைக் கவரும் வகையில் உள்ளன. இத்துடன் சிறு திருத்தங்களைக் கூற விரும்புகின்றேன்.
1. குறுங்கதைகளை அறிமுகப்படுத்தலாம். ஒரு பக்கக் கதைகள் சிற்றுண்டி போல் கொறிப்பதற்கு உதவும். ஆரம்ப எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும். பல குறுங் கதைகளை படித்த பின் நெடுங்கதைகளுக்குப் போவது சுகமான சவாரி
2. நகைச்சுவைத் துணுக்குகள், கதைகள் அறிமுகப்படுத்தலாம் - சிரித்திரன் பெற்ற வெற்றி தாங்கள் அறியாததா?
3. தத்துவக் கதைகள், உருவகக் கதைகள் சிறுவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் இச்சிறுவர்கள்தான் வருங்கால ரசிகத் தூண்கள் - மறக்க வேண்டாம்.
4. ஒரு தொடர் கதை சேர்க்கலாம் - விறுவிறுப்பாக இருக்கும்.
5. சிறந்த கடிதங்களுக்கு நட்சத்திரக்குறி போட்டுப் பாராட்டலாம்.
மல்லிகையின் வளர்ச்சிக்கு என்றும் துணையாக இருக்க விரும்பும்
S.R. Lumra)ğ #göş5hgGei
நாற்பதாவது ஆண்டை நோக்கி.
மல்லிகை இப்பொழுது அந்த அந்த மாதங்களின் ஆரம்ப கட்டங்களில் சுவைஞர்களின் கரங்களில் கிடைத்து வருவது ஒரு முன்னேற்றமே.
அந்த இதழ்களிலெல்லாம் உங்களது சலியாத உழைப்பும் விடா முயற்சியும் தெரிகின்றன.
(s.9)

Page 32
st GSG)
39-வது ஆணிடு மலரை வெகு பொறுப்பாகவும் கனதியாகவும் தயாரிக்க முனையுங்கள்.
அடுத்த ஆண்டு மலர் 40 -வது ஆண்டு ஞாபகார்த்த மலர். ஒரு சிற்றிலக்கிய ஏடொன்று தனது நாற்பது வருட இருப்பை வெளியிடப் போகும் சிறப்பு ஆண்டுமலர். இப் போதிருந்தே புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள இலக்கிய ஆர்வலர்களுடன் தொடர்பு கொண்டு மலரைச் சிறப்புற வெளியிடுவதற்கு ஆவன செய்யுங்கள்.
நீங்கள் நினைப்பதைவிட, இன்று உங்களையும் உங்களது விடாமுயற்சி உழைப்பையும் கணிடு மலைத்து, ஆனந்தித்திருக்கும் இலக்கிய இதயங்கள் இப்பூவுலகில் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் மறந்து விடாதீர்கள்.
எஸ்.சிவானந்தன் பாரிஸ் .
இந்த மல்லிகை, கோடையிலும் மாரியிலும் மாறிமாறி 38 ஆண்டுகள் பூத்து மணம் பரப்புவது பெருஞ்சாதனைதான்! அதற்காக, இந்த தோட்டக்காரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ஈழத்து இலக்கியப் பூங்காவனமும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது!
ஜுலை மல்லிகையின் எல்லா இதழ்களையும் நுகர்ந்தேன். குறிப்பாக, உங்களின் 'ஜீலை 27"மனதைத் தொட்டது. கண்ணுறு படாமல் நீங்கள் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துகிறேன்! உடுவை தில்லை நடராசாவின் படிக்காதவர்
படிப்பித்த பாடங்கள்’ படித்தவர்கள்
கட்டாயம் படிக்க வேண்டும் இதயத்தில் உள்ள சுத்தம் அவரின் எழுத்தில் தெரிகிறது.
கவிஞர் அம்பியின் ‘அட்டைப்பட பிந்தினாலும்
கெளரவம் காலம்
மகிழ்ச்சிதான்!
ஜனாதிபதி அவர்களுடனும் பேச வேண்டும்’ ஆசிரியத் தலையங்கம் உருப் படியானது. யதார்த்தமானது. அவசியமானது.
G. G.
• • • чஇத்தனைக்குப் பிறகும் அன்றைய ஆதிக்க சக்திகளின் இன்றையப் பிரதி நிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியு மென்றால், ஏன் இன்றைய ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது?’ என்ற, உங்கள் கேள்விக்கு, அவர்கள் ஜனாதிபதியுடன் பேசியாக வேண்டும் பேசுவார்களா?
மருதுTர்க்கணி.
சந்தா செலுத்தி விட்மர்களா ?
தயவுசெய்து மல்லிகையுடனர்
ஒத்தழையுங்கள். அசட்டை செய்வோருக்கு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்படும்.
(60)
 
 
 
 
 
 
 

தூண்டில்
இ கடந்த மாதங்களில் தூண்டில் பகுதியில் ஒரு கேள்விக்கு உங்களுடைய மகன் திலீபனைப் பற்றிப் புகழ்ந்துரைத்தீர்களே, இது தேவைதானா, மல்லிகைக்கு?
கொக்குவில். எம்.ரமணசிவன்
பிரச்சினையை நீங்கள் எனது மகன் என்ற கோணத்தில் பார்க்காதீர்கள். நான் வருங்கால மல்லிகையின் தொடர் வரவு சம்பந்தமாக யோசித்துச் செயலாற்றுபவன். கோமலின் ‘சுபமங்களா இலக்கிய இதழின் மறைவைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தச் சம்பவம் என் மனசை ரொம்பவும் பாதித்த ஒன்று. 38 ஆண்டுகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துத் தொடர்ந்து வந்த மல்லிகையைத் தொடர்ந்து வெளியிடத் தக்க ஆள் இவர் என்ற தகவலை மல்லிகைச் சுவைஞர்களுக்கு மாத்திரம் மறைமுகச் செய்தியாகச் சொல்வதுடன் திலீபனை அதற்குத் தயார்ப்படுத்தும் பாரிய பொறுப்பும் அந்தப் பதிலில் தொக்கி நிற்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனக்கென்றான சகலதையும் ஒப்புக் கொடுத்துக் கடந்த காலங்களில் இயங்கிவந்த நான், என்னால் பரிபூரணமாக நேசிக்கப்படும் என் மகனையும் இத்திருப்பணிக்கு ஒப்புக் கொடுக்கத் தயார்ப்படுத்தியுள்ளேன் என்ற செய்தியை உங்களுக்கு மாத்திரமல்ல மகனுக்கும் சொல்லி வைப்பதற்காகவே அப்பதிலைச்சொல்லிவைத்துள்ளேன். இதனை வெறும் அப்பா-மகன் விவகாரமாகப் பார்த்து உங்களது பார்வையைக் குறுக்கிக் கொள்ளாதீர்கள். நான் மல்லிகைக்கு எப்பொழுதுமே நிரந்தரமானவனல்ல எனக்குக் கிடைத்த பெருமை மிக்க விருதே எனது மனைவிதான் என ஒரு பேட்டியில் ஜெயமோகன் சொல்லியிருக்கிறாரே, இதற்கென்ன சொல்கிறீர்கள்?
இ செல்போன் வைத்துக் கொண்டு இடையிடையே கூட்டத்தின் நடுவில் நாடகமாடி
வருபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
LD66OTIT. ம.ராஜேந்திரன்
ஒருசிலரைத் தவிர்த்துப்பார்த்தால் இவர்களில் பலர் பம்மாத்துவிடுகிறார்களே
என எண்ணத் தோன்றுகின்றது. நவீன சாதனங்களுக்கு நான் எதிரானவனல்ல.
அதைச் சுய கோமாளித்தனங்களுக்குப்பாவித்துப்பந்தா காட்டுபவர்களைத்தான் என்
கண்களில் காட்டவே முடியாது.
* மல்லிகையின் வளர்ச்சி இப்போது எந்தக் கட்டத்தில் இருக்கிறது? கொழும்பு வந்தால்
(6)

Page 33
D&GSG)
உங்களை நேரடியாகச் சந்தித்து உரையாட இயலுமா?
குருனாகல். ஆர்.முகம்மது மீரான்
சும்மா ஜாம் ஜாமெனப் போய்க் கொண்டிருக்கிறது. மல்லிகைக் காரியாலத்தைத்தொடர்ந்துவிஸ்தரித்து வருகிறேன். இப்போது உள்ள இடத்தைப் புத்தகங்களின் வைப் பிடமாகவும் அதற்குப் பக்கத்தேயுள்ள புதிய இடத்தை மல்லிகைக் காரியால யமாகவும் மாற்றியமைத்து இயங்கி வருகின்றேன். நான் பல சோலிக்காரன். தயவு செய்து என்னைச் சந்திக்க வருவதற்கு முன்னர் தொலைபேசியில் முன் அறிவித்தல் தந்துவிட்டு வந்தால் நீங்கள் அலைக்கழியவேண்டிய நிலை இருக்காது. எனது இப்போதைய தொலைபேசி எண்: 320721. புதிய திட்டத்தின்படி 2320721 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இ இப்பொழுது நீங்கள் கொழும்பில் ஓர் இலக்கியப் பிரமுகராகப் பிரகாசிக்கத் தொடங்கி விட்டீர்களே, இந்த வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதுளை. 6T6).5FLC3Srtuest
நான் ஓர் அரசியல்வாதியல்ல. இலக்கியக்காரன். எனக்கு இந்த விளம்பர உத்திகளில் அதீத நம்பிக்கை யில்லை. ஆனால் எழுத்தாளன் ஒருவன் சமூக, ஊடக, பத்திரிகை வட்டத்தில் கனம் பண்ணப்படுவதை வரவேற் கின்றேன். இதில் ஒரு சங்கடமும் உண்டு. என்னைப் போன்றவர்களுக்கு இலக்கியத்தைத் தவிர வேறு எந்த வருமானமும் இல்லை. பஸ்ஸில் கூட்டங்களுக்குப் போவதும் வருவதும்
பெரிய சங்கடங்களில் ஒன்று. நான் ஒன்றும் இன்று இளைஞனல்ல. முதுமை சில அசெளகரியங்களை இடையிடையே தந்து தொந்தரவு செய்கின்றது. எனவே கூட்டத்திற்கு அழைப்பவர்கள் போக்குவரத்து ஏற்பாடுகளைக் கவனித்துச் செய்து தர முன்வரவேண்டும். புகழ் புனுகைப் போன்றது. அதன் சுகந்த வாசனை சொற்ப நேரத்திற்குத்தான் நின்று நிலைக்கும். இதைத் தெளிவாக அநுபவி பூர்வமாகத் தெரிந்து வைத்திருப்பவன், நான்.
இ யாழ்ப்பாணத்தைப் போல இலக்கிய உலக நணி பர்கள் மல் லி கைக் காரியாலத்திற்கு வந்து போகின்றனரா?
நெல்லியடி. எஸ்.சத்தியசீலன்
யாழ்ப்பாணத்தில் ஒரு குறிப்பிட்ட நண்பர்கள்தான் வந்து போவார்கள். கொழும்பு தலைப்பட்டினம். பல்வேறு வேலைகள் சம்பந்தமாக நாடு பூராவுமிருந்து ஏராளமானவர்கள் வந்து வந்து திரும்புகின்றனர். அவர்களில் மல்லிகையை மனசார நேசிக்கும் நண்பர்கள் இடையிடையே வந்து போகின்றனர். இதில் முக்கியமானத் தகவல் என்னவென்றால், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், லண்டன், நோர்வே, டென்மார்க், அவுஸ்திரேலியா போன்றநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து போயுள்ள இலக்கிய நேசர்கள் பலர் கொழும்பு வந்து செல்லும் போது மல்லிகைப்பக்கமும் ஒரு தடவை எட்டிப் பார்த்துவிட்டு, பழைய நட்பைப் புதுப் பித்துக் கொண்டு செல்கின்றனர். இது மல்லிகைக்கு கிடைத்துள்ள பெரும் வசதிகளில் ஒன்று. இவர்களின் தொடர்
(62)

i どエ GSG): வரவால் மல்லிகை இன்று சர்வதேச மெங்கும் பேசப்பட்டு வரும் ஒரு சஞ்சிகையாகத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி யாகும்.
& நீங்கள் இலக்கியக் கூட்டங்களில் உணர்ச்சிகரமாக உரையாற்றுகிறீர்களே. இதைக் குறைத்துக் கொண்டால், என்ன?
வெள்ளவத்தை. எஸ்.கலாமோகனி
பேசுவது என்பதே எனக்குச் சுகம் தரும் அநுபவமாகும். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். பேச்சாளன் உணர்ச்சி வசப்பட்டால் பேச்சு வராது. நாக்குக் கொன்னை தட்டும். தொடர் சிந்தனை அறுபடும். பேச்சு வராது. நான் பேசும் போது உணர்ச்சி வசப்படுவ தேயில்லை. மனசுக்குள் சிரித்துக் கொண்டுதான் உரை நிகழ்த்துவேன். ஆனால், வார்த்தைகளின் ஏற்ற இறக்கம், நிறுத்தம, மொழியின் கூர்மை, சில சொற்களை அழுத்தி உச்சரிப்பதால் உணர்ச்சி கலந்த பேச்சு எனச் சொல்லுகின்றனர். அந்த உணர்ச்சி இல்லையேல் எனது பேச்சு எடுபடாது.
* மல்லிகை தொடர்நது படிக க வேண்டுமென்ற ஆசை எனக்கு. எங்களது பகுதியில் கடைகளில் கிடைப்பதில்லை. நானி மாணவன் . பொருளாதார வசதியற்றவன். நான் மல்லிகையைத் தொடர்ந்து பெற்றுப் படிக்க என்ன செய்ய (86)u6თშiGBub?
எம்.திருமூர்த்தி
உங்களைப் போன்ற மாணவர் களுக்காகவே தபால் தலைத் திட்ட
பசறை.
மொன்று வைத்துள்ளேன். மல்லிகை பழைய-புதிய பிரதிகள் தேவையானால் ஒரு பிரதிக்கு இருபது ரூபாய் விகிதம் தபால் தலைகளை மல்லிகை முகவரிக்கு அனுப்பி வைத்தால் மல்லிகை இதழ்கள் உங்களது முகவரி தேடிவரும். இதை உங்களது மாணவச் சுவைஞர்களுக்கும் தெரியப்படுத் துங்கள.
* தூண்டிலில் கேள்வி - பதில் பகுதிக்கு எழுத விரும்புகின்றேன். எத்தகைய கேள்விகளைத் தூண்டிலுக்கு எழுதலாம்?
உடுப்பிட்டி. ஆர்.சுந்தரன்
நீங்கள் எதைக் கேட்டறிய விரும்பு கிறீர்களோ அந்தக் கேள்விகளைக்
கேட்கலாம். இது கேள்வி - பதில்
பகுதியல்ல. பரஸ்பரம் கலந்துரையாடும் பக்கங்களகும்.
இ தமிழ் நாட்டில் இன்று என்ன நடக்கிறது? இலக்கிய உலகில் ஏதாவது புதினம் உண்டா?
திருமலை. க.ஜெகதீசன்
உங்களுடைய முதலாவது கேள்விக்கு விடை: அங்கு ஆட்சி என்ற ஒரு பண்டம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எனக்கு நெடுநாட்களாகவே உண்டு. நாறிப் போயுள்ளது தமிழ் நாடு. இரண்டாவது கேள்விக்குப்பதில் பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர் களுக்கு இந்த ஆண்டுக் கதா விருது கிடைத்துள்ளது. எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் சு.ரா.விற்கு. ஞானபீடப் பரிசு நண்பர் ஜெயகாந்தனுக்கு கிடைக்கக் கூடும் என்றொரு ஊகம். தமிழக இலக்கிய உலகச் செய்திகள்
(63)

Page 34
ബ8 ஆரோக்கியமாகவே உள்ளன.
& ‘இலங்கை விகடன்' என்றொரு வார இதழ் வெளி வந்து கொழும்புக் கடைகளில் விற்பனையாகி வருகின்றதே, இதைப் பற்றிய
உங்களது அபிப்பிராயம் என்ன?
மருதானை. க.தவயோகம்
இந்த மண்ணில் எத்தனை இலக்கியப் புஷ்பங்கள் பூத்து மலர்ந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தியே. அதன் வரவை வாழ்த்தி வரவேற் கின்றேன். வார வெளியீடு அது. கவனம் முக்கியம்.
& ஜெயகாந்தன் உங்களது நீண்ட நெடுங்கால இலக்கிய நண்பர்களில்
ஒருவர்தானே? அவர் இப்போது ஏன் எழுதுவதில் லை எனக் கேட்டுச் சொல்லுங்களேன்?
வவுனியா. எம்.ராஜசேகரன்
நான் கேட்டு மீண்டும் எழுத வைக்கக் கூடிய ஆளல்ல, அவர். அவருடன் பழகுவதற்கே தனி நுணுக்கம் தேவை. நானே சும்மா அலட்டிக் கொள்ளக் கூடாது. எழுதுவதற்கு ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு சுதந்திரம் உணர்டோ, அப்படியே எழுதாமல் இருப்பதற்கும் அப்படைப்பாளிக்கு சுதந்திரம் உண்டு. அவரது சுதந்திரத் தில் தலையிட எனது நட்புக்கு இட மேயில்லை.
இ உங்களுக்குப் பின்னர் மல்லிகையின் எதிர்காலம் என்ன?
கொக்குவில், எஸ்.தவலிங்கம்
இதைப் பூடகமாகத் தூண்டில் பகுதியில் சொன்னதும் அதை அதீத ஆர்வலர்கள் இது குடும்பப் பிரச்சினை. அப்பா - மகன் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை என வக்கணை பேச முனை கின்றனரே, என்ன செய்வது? இந்த வக்கற்ற விமரிசனங்களை நான் பொருட் படுத்துவதேயில்லை. மல்லிகையை ஆரம்பித்த காலத்திலேயே வக்கணை பேசி குதூகலித்த கூட்டத்தினர் இவர்கள். இதற்கான பதிலை ஆரம்பக் கேள்வியிலேயே விவரமாகச் சொல்லி யுள்ளேன்.
இ உங்களுடைய மல்லிகை அநுபவங் களைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். அதில் சில இடங்களில் உணவு வகைகளின் சிறப்புப் பற்றியும் சுவைருசி பற்றியும் சிலாகித்து எழுதுகிறீர்களே. அதன காரணம என்ன?
உரும்பிராய். செல்வி. சுபத்திரா
உண்மையைச் சொல்லப் போனால் உணவு வகைகளை ருசித்துச் சுவைத்து உண்ணத் தெரிந்தவன்தான் தரமான கலைஞனாக் urístify Մ»ւջպմ5, உலகத்தில் நான் ரசிக்கும் பிரபலம் வாய்ந்த அத்தனை தரமான கலைஞர் கள் அத்தனை பேருமே சாப்பாட்டுச் சுவைஞர்கள்தான். திண்பது ஒன்று. சுவைத்து உண்பது மற்றொன்று.
கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத
ஆமைகளும் செங்கை ஆழியானின் சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.
201 - 1/1, பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியிட்டாளருமான டொமினிக் ஜ்வா அவர்களுக்காக கொழும்பு விவேகானந்த மேடு, 98A, இலக்கத்திலுள்ள U.K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
(64)
 

Professional Colour Lab & Studio
* Jindoor & Ouldoor Pholography * Quality Colour ailm Processing & Printing
Pholosaminaling Covering Album * Quality & Mormal Picture 3raming * tideo filming
Quick Photo Service Systems
64, Sumanatissa Mawatha, (Armour Street), Colombo - 12. Tel: O74-61O652

Page 35
ÄÝMalikai
pa
EXPO PRODUC
Export 9on ra Sri Lanka
Te: 25

September 2003 *
A.
TS (PVT) LTD.
ers of
ditional m °Foods
Venue
O a O23ς 3717