கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2005.06

Page 1
50வது ஆண்டை நோக்கி.
&L)656S
GabếifińsLITñt
 

WT|-
W"
| |
| |- |-|- |-|-|-||- | | | | | () |-|
.
|||-|-|-| |-,,
|-
|
|
|
|-
, | , ,|- , ---- |- , |- , , |- , \,“ 言 |-
|-
||| |- |-
|- | |- |
|-|- \, | 2| _
|

Page 2
۶a44۶ Zഗ്ഗd ബ്രی)
Digital Colouvadě Šudio
MAN ZATURZS G慈 Automatic dust & scratch correction
sk Maximum Size: 12” x 18'Disill pint) * Output Resolution: 4oodpi * Film lnput Fomats: I35, IX24o, Izo, APS * Film Types: Colour negative & positive, Baw
negative, Sepia negative
* Compatible linput & Output Media:
(Floppy Disk, CD-Rom, CD-R/RW, MO, ZIP, DVD-RAM, DVD-R, DVD-ROM, PC Card, CompactFlash, SmartMedia,)
sk Print to Print * Conduct sheet & lindex print
ck Templates: Greeting Cards, Frame Prints, Calandar Prints,
Album Prints.
HEAD OFFICE BRANCH HAPPYDIGITAL CENTRE HAppy PHOTO
1GAL K. ()() tyR AN Soko 6 PROFESSONA
& Studio Porocaps4 5 & WoEoCAPHERS
No. 64, Sri Sumanatissa Mw, No. 3oo, Modera Street, Colombo - 12. Tel-o74-61o652. Colombo - 15.Tel:-oII-252,6345.

ഴ്സുത്രക്ര
ஒரு வார்த்தை
LDல்லிகை இதழின் தொடர்
வரவுக்கும் வளர்ச்சிக்கும் ஆதார பலமாக
இருப்பது "மல்லிகைப் பந்தல் வெளி யீடுகளின் விற்பனவுப் பின்னணிதான்.
எனவே, மல்லிகை மீது பேரபி மானம் கொண்டவர்கள் எமது வெளியீடு களைச் சந்தைப்படுத்துவதற்கான முன்
எடுத்து ஒத்துழைப்புத் தரவேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
முயற்சியை எமக்கு
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்
வெறுமனே வெளியீட்டுப் பிரசுரங்க
ளல்ல. பல நாட்கள் ஆய்ந்து ஆய்ந்து தேர்ந்தெடுத்துப் பிரசுரித்த தரமான நூல்கள். தனிநபர் சேமிப்புக்களிலும், நூலக, கல்வி நிறுவன, பல்கலைக்கழக நூலகங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்க வேண்டிய புத்தகங்கள்.
நாளைய சந்ததியினரை மனங் கொண்டு தேடித் தேடித் தயாரிக்கப்பட்ட நூல்கள். இது சம்பந்தமாக நம்முடன் தொடர்பு கொள்பவர்கள் தோழமையுடன்
எம்முடன் எப்பொழுதும் தொடர்பு
கொள்ளலாம்.
ஒருதடவை மல்லிகைக்கு வந்து பாருங்களேன்.
ஆசிரியர்
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவர்'
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே,
sad iš 6 s * TT o si iš 6s . மாத்திரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற பெற ம தி மிக்க க ம ய வ ம் இடம்பெற்றுள்ளது. அங்கு பாராட்டப் பெற்ற சஞ்சிகை மல்லிகை. இதனை இலங்கை நாடாளுமன்றப் பதிவேடான
*ஹன்லார்ட் பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக
படைப்பாளிகளின் புதிய ஆக்கங்களை மல்லிகை எதிர்பார்க்கின்றது.
201-1/4, Sri Kathiresan Street, Colombo - c. Te: 232O721

Page 3
Prop V. Nagadevan J. P.
| COLOMBO CENTRE
Importers & Dealers of Toys, Fancy, Oilment Goods & Textiles
Head Office:
89/22, Prince Street, Colombo - 11. T.P. : 2473314, 4717972 Fax : 94-1-449599, 94-1-445559 E-mail : Coimpada(Osltnet.lk
Resident : 93/69, Kalyani Gangarama
Mawatha, Mattakkuliya, Colombo - 15. T.P. : 2523114, 2527572, 2528.177
Factory:
DANA ALUMNIUM INDUSTRIES
49/6, Maligawatta Place, Maligawatta,
Colombo - 10.
Manufacturers Of Aluminium KitchenWare
T.P. 2459134 & 2430158 Mobile : 0.777 55.1726
COLOMBO CENTRE (CC1)
Branches : 89/22, Prince Street,
Colombo - 11.
Dealers of Toys, Fancy, Imitation JeWelleries, Eversilver & 0ilment G00 dS
We undertake all kinds of goods to send Jaffna.
Τ.Ρ. : 2345 193, 2478654, 2529888
COLOMBO CENTRE (CC2) Branches:
11611, Prince Street,
Colombo - 11.
Dealers of Toys, Fancy, Imitation Jewelleries &
Oilment G00ds
T. P. :2325901, 2543999

vaftлбãýán L, а5йбарсf அதிபர்களுக்கு.
இந்த நாட்டிலுள்ள தமிழ்மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பள்ளிக்கூட, கல்லூரி அதிபர்கள் தத்தமது கல்வி நிறுவனங்களின் நூலகங்களுக்குத் தமது நேரடி உத்தரவின் பேரில் ரூபா. 5000/-க்குக் குறைவான நூல்களைக் கொள்வனவு செய்யலாம் எனக் கல்வி உயர் அதிகாரிகளை நாம் விசாரித்த வேளைகளில் எல்லாம்
இந்த உண்மையை எமக்குக் கூறியுள்ளனர்.
ஆனால், நடைமுறையில் எந்தவொரு பள்ளிக்கூட, கல்வி அதிபர்களும் கூடத் தமக்கே உரிமையான இந்தச் சலுகையை எந்தக் கட்டத்திலும் நிறைவேற்றி வந்ததாக இதுவரை எமக்குத் தகவல் கிடைக்கவில்லை.
ஏன்? எதற்கு? என்ற காரணமும் எமக்குப் புரியவில்லை.
வாரம் ஒரு தமிழ் நூல் இந்த மண்ணில் இன்று வெளிவந்த வண்ணமேயுள்ளது.
ஆனால், வெளியிடப்படும் இந்தப் புத்தகங்களுக்கு எந்தவிதமான சந்தை வசதிகளும் இன்று எம் நாட்டில் பரந்த அளவில் இல்லவேயில்லை.
இன்றைய மாணவர்கள்தான் நாளை நாடு போற்றும் சிறந்த கலைஞர்களாக, எழுத்தாளர்களாக, கல்விமான்களாக உருவாகப் போகின்றனர்.
சென்ற காலத் தலைமுறை மாணவர்கள் வெறும் பாடப் புத்தகங்களையே மனனம் பண்ணி ஒரு வழியாகத் தமது கல்வித் தகைமைகளை ஒப்பேற்றி வந்துள்ளனர்.
இன்றைய தலைமுறை மாணவர்களின் வெளி உலகம் விரிந்து பரந்து வந்து கொண்டிருக்கிறது. சர்வதேசங்களையும் நோக்கி வியாபித்து வருகின்றது.
தலைமை ஆசிரியர்கள், அதிபர்கள் தமக்குரியதான இந்தப் புத்தகக் கொள்வனவு விவகாரத்தில் முன் கையெடுத்து செயற்படுவது எழுத்தாள உலகத்திற்கே நன்மை பயப்பதாக இருக்கும். இளைய தலைமுறைக்குப் புத்தூக்கமூட்டுவதாகவும் அமையும்.
இனிமேலாவது உங்களது அதிகாரத்தைப் பயன்படுத்துவீர்களா?

Page 4
அEல்டற்டற்
தமிழுலகு நன்கறிந்த தமிழ்ப் படைப்பாலி செ.யோகநாதன்
செங்கை ஆழியான்
தமிழுலகு நன்கறிந்த ஈழத்தின் படைப்பாளி செ.யோகநாதனாவார். ஈழத்தின் இன்றைய பிரபல எழுத்தாளர்களை இனங்கண்ட சிற்பியின் 'கலைச்செல்வி மூலம் யோகநாதன் எழுத்துலகிற்குள் பிரவேசித்தார். 1960களில் ஆற்றல் மிக்க இளம் எழுத்தாளர் கூட்டமொன்று ஈழத்துச் சிறுகதைத் துறைக்குள் பிரவேசித்தது. செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ.யோகநாதன், செ.கதிர்காமநாதன், குந்தவை, க.பரராஜசிங்கம், அங்கையன் கைலாசாதன், சிதம்பரபத்தினி முதலான சிறுகதைப் படைப்பாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் முகிழ்ந்தார்கள். இக்குறித்த “எழுத்தாளர்களோடு பல்கலைக்கழகத்திற்கு வெளியே உருவாகிய தெணியான், தெளிவத்தை ஜோசப், பெனடிக்ற்பாலன் முதலான எழுத்தாளர்களும் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றனர் என்பது முக்கியமான சங்கதியாகும்.
பேராதனைப் பல்கலைக்கழகம் 1960-1964களில் வெளிக்கொணர்ந்த முக்கிய படைப்பாளிகளில் ஒருவர் யோகநாதன். தமிழகம் நன்கு அறிந்த ஈழத்து எழுத்தாளர்களில் யோகநாதன் முக்கியமானவர். 1962களில் யோகநாதனின் முதல் சிறுகதையான 'மனக்கோலம் கலைச்செல்வியில் பிரசுரமாயிற்று. அதனை அடுத்துச் சோளகம்; வடு, கலைஞன், மலரும் கொடியும், நிறங்கள், புதிய நட்சத்திரம் ஆகிய சிறுகதைகள் படைக்கப்பட்டன. யோகநாதனின் சிறுகதைகள் வெளிவராத ஈழத்து, தமிழகப் பத்திரிகைகள் எதுவுமேயில்லை. யோகநாதனின் முதலாவது சிறுகதைத் தொகுதி 1964ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவரது மாணவ நிலையில் வெளிவந்தது. ஆரம்பத்தில் இனவுணர்வு, மொழியுணர்வு மிக்கவராகத் தமிழரசுக் கட்சியால் கவரப்பட்டிருந்தார். பின்னர் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் ஈடுபட்டு மார்க்சிய முற்போக்குவாதியாகித் தேசியம், மண்வாசனை, யதார்த்தம் ஆகிய கருத்து நிலைகளுக்குட்பட்டிருந்தார். 1983களின் பின்னர் மீண்டும் தமிழ்த் தேசியவாதம் இவரின் சிறுகதைகளில் ஆழவேரூன்றியுள்ளதைக் காணலாம். எவ்வாறாயினும் யோகநாதனின் சிறுகதைகள் சமுக வாழ்க்கை விமர்சனங்களாக விளங்குகின்றன.
4.

ygge);
தமிழ்த் தேசிய உணர்வுக் கால கட்டத்தில் ஈழத்துச் சிறுகதை உலகிற்குக் காத்திரமான பங்களிப்பாக அமைவன ஈழத்து வாழ்க்கைப் பிரச்சினைகளின் மையங் களை இனங்கண்டு வார்த்தைகளில் உணர் வோடு பதிய வைத்திருக்கிறார். தமிழகப் பத்திரிகைகளில் படைப்புகளால் அர சோச்சிய காலத்தில் எழுதிய - என்று தணியும், அகதி, வீழ்வேன் என்று நினைத்
தாயோ?, அன்னையின் குரல், மைலாய்,
யோகநாதனின் கதைகளாம்.
தேடுதல், சரணபாலாவின் பூனைக்குட்டி,
இன்னொரு மனிதன், அவர்களின் மகன், அடிமைகள் இல்லாத இடத்தில், பூமுதிரை முதலான பல சிறுகதைகளின் சிருஷ்டி கர்த்தா. தமிழீழப் போராட்டச் சூழலில் இந்திய அமைதி காக்கும் படை யினரின் நடவடிக்கைகளையும், இலங்கை இராணுவத்தினரின் அட்டுழியங்களையும், அரச பயங்கரவாதப் போக்குகளையும், தமிழ் மக்களது அகதி வாழ்வின் அவலங் களையும், போராளிகளின் தியாகங்களை யும், இனவொடுக்கல் நடவடிக்கைகளை யும், சாதிப் பிரச்சினைகளையும் யோக நாதன் தன் சிறுகதைகளின் உள்ளடக்க மாகக் கொண்டுள்ளார். மார்க்சிய முற் போக்குவாதி ஒருவர் தமிழ்த் தேசியத் தினையும், தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் அங்கீகரித்து சிறுகதைகள் எழுதியுள்ளார் என்பது இதில் அவ தானிக்க வேண்டிய முக்கிய அம்சம். 'கண்ணீர் விட்டே வளர்த்தோம்" என்பது இவரது முக்கியமான சிறுகதைத் தொகுதியாகும்.
ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு யோகநாதனின் இன்னொரு பாரிய
5
பங்களிப்பாக விளங்குவது அவர் தமிழ கத்தில் வாழ்ந்த காலத்தில் இந்த நூற் றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள்' என்ற பெயரில் இரண்டு பாரிய சிறுகதைத் தொகுதிகளாக ஈழத்தின் பல தரத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து 'வெள்ளிப்பாதசரம்', 'ஒரு கூடைக்கொழுந்து' என்ற இரு தொகுதி களாக வெளியிட்டிருந்தார். ஈழத்துச் சிறு கதைப் படைப்பாளிகளைத் தமிழகத் திற்கு உரிய முறையில் அறிமுகம் செய்த தொகுதிகள் இவையாம்.
யோகநாதனின் எழுத்துலக வாழ்க்கை தங்கப் பதக்கங்களைப் பரிசில் களாகத் தன் படைப்புகளுக்காகப் பெறு வதுடன் ஆரம்பமாகியது. இளம் எழுத் தாளர் சங்கம், பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் இலக்கியப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்றவர். "ஒளி நமக்கு வேண்டும்" என்ற குறுநாவல் தொகுதிக்காக இலங்கை சாஹித்திய மண்டலப் பரி சினைப் பெற்றுக் கொண்டார். சாஹித் திய மண்டலப் பரிசினைப் பெற்ற இந் நூல் யுனெஸ்கோ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. சிரித்திரன் நடாத்திய போட்டியில் ‘காவியத்தின் மறுபக்கம் என்ற குறுநாவல் முதற் பரிசினைப் பெற்றது.
யோகநாதனின் குறுநாவல்கள் நவீன இலக்கியத்திற்கு வழங்கியிருக்கும் செழுமை முக்கியமானது. இரவல் தாய் நாடு, கனவுகள் ஆயிரம், காணிநிலம் வேண்டும், தலைவர்கள், கேட்டிருப்பாய் காற்றே, சுந்தரியின் முகங்கள், இனிவரும்

Page 5
வசந்தங்கள் என இவரின் குறுநாவல் தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஒவ் வொன்றிலும் மூன்றிற்கு மேற்பட்ட குறு நாவல்கள் அடங்கியுள்ளன. தி.ஜானகி ராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் முதற் பரிசினைச் சுவிகாத்துக் கொண்ட இரவல் தாய்நாடு இந்தியாவில் நூலுரு வில் வெளிவந்ததும் தமிழ் இலக்கிய வட்டாரத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் துணிச்சலாக வெளியிடும் படைப்பாளி யாக யோகநாதன் அடையாளம் காணப் பட்டார். அவரது தேடுதல் குறுநாவலை தமிழக அரசு இலங்கைக்கு வரவிடாமல் தடை செய்தது.
‘சுந்தரியின் முகங்கள்’ என்ற குறு நாவல் தொகுதி தமிழக அரசின் விருதி னைப் பெற்றுக் கொண்டது. மத்திய அரசு அதற்குப் பரிசு வழங்கி கெளர வித்தது. இது செ.யோகநாதனின் ஆரம்ப கால வரலாறு, 96ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பும் வரை எல்லா இலக்கிய உயர் விருதுகளும் அவர் பெற்றுக் கொண்டார். உயர் விருதான இலக்கிய சிந்தனை விருது அவரது நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே"க்காக வழங்கப்பட்டது. தமிழக அரசின் விருதை நான்கு தடவைகளும், கலை இலக்கிய பெருமன்ற விருதுகளை இரண்டு தடவைகளும், பாரத ஸ்டேட் பாஸ் விருதை ஒரு முறையும், இலக்கிய சிந்தனை விருதை நான்கு தடவைகளும், திருப்பூர் தமிழ்ச் சங்க விருதை ஒருமுறை
யும் அவர் பெற்றுக் கொண்டார்.
இன்னும் இங்கே கணக்கிலே வராத பரிசில்கள் பல.
யோகநாதன் சிறுகதை,
D&GSG): །
செ.யோகநாதன் படைப்பாளி என்ப தோடு, பன்முனை ஆர்வலராகவும் இருந் திருக்கிறார். திரைப்படத் துறையில் அவர் மிகுந்த விருப்பம் உள்ளவராக மதிக்கப் படுகின்றார். பாலுமகேந்திரா, பி.லெனின் ஆகியோருடன் இவர் கூட்டாகப் திரைப் படப் பணியாற்றி இருக்கிறார். மலை யாளத்தில் கண்ணாடி விட்டினுள் இருந்து ஒருவன்' என்ற திரைப்படத்துக்கு இவர் திரைப்பட வசனம் எழுதியிருக்கிறார். பல திரைப்படங்களுக்கு இவர் அங்கே உதவியாளராக பணி புரிந்திருக்கிறார்.
இலங்கையில் நான்கு சாஹித்திய விருதுகளை இவர் பெற்றிருக்கின்றார். குறுநாவல், நாவல், குழந்தை இலக்கியம், கட்டுரை, திரைப்படம் உட்பட எண்பத்தேழு (87) இப் பொழுது பல நூல்கள் அச்சில் வர வேண்டி உள்ளன.
நூல்களை எழுதியிருக்கின்றார்.
யோகநாதன் கூடுதலாக குழந்தை இலக்கியங்களை வெளியிடுவதில் அக் கறை உள்ளவராக இருக்கின்றார். தமிழ் நாட்டில் இருந்தபோது, 'ரத்தினபாலா", 'கலாமணி', 'கலைச்செல்வம் போன்ற பத்திரிகைகளை அவர் ஆசிரியராக இருந்து நடத்தியிருக்கிறார். இலக்கியத்தை மேம்படுத்தும் நோக்குடன் சிறுவர் நூல்கள் பலவற்றினை ஆக்கித் தந்துள்ளார். இவர் வழியில் இவரது மகன் யோ.சத்யன், சிறுவர் நூல்களை
எழுதி வருகின்றார்.
சிறுவர்
யோகநாதன் என்ற படைப்பாளி, ஈழத்து இலக்கியவுலகிற்கு அளித் திருக்கும் பங்கு செழுமையானதாகும்.
G

முஸ்லிம் இனத்தவர்கள் யாழ் குடாவில் சாவகச்சேரி, அல்லைப்பிட்டி ஆகிய வற்றோடு யாழ்ப்பாண மா நகர எல்லைக்குள்ளும் காலாதி காலமாக வசித்தவர்கள். அப்துல் காதர் விதி, ஆசாத் விதி என்ப்ன அவர்களது யாழ்ப்பாண இருப்பை அடை யாளப்படுத்துகின்றன. அவர்களுக்கென உஸ்மானியாக் கல்லூரியும் இருக்கின்றது.
அழகு சாதனங்கள் (Fancy Goods), நகை, ஆட்டிறைச்சி ஆகிய வியாபாரங் களையும் இவர்கள் அப்பொழுது செய்து கொண்டிருந்தனர். பிரசித்தி பெற்ற தையல் காரராக முஸ்லிம்கள் விளங்கினர். பாய்மார் (Bhai) எனப்படும் மேமன் இனத்தவர்கள் தனித்து வாழ்ந்தனர். யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு முன்னால் இவர்களுக்கெனப் பள்ளிவாசல் இருந்தது. அக்காலத்தில் EA பாய் (ESMALJEE AMJEE) கடை மிகவும் பிரபலமாக இருந்தது.
யாழ்ப்பாணத்து ஐந்து முச்சந்தியில் 'பிளவுஸ்" என்றொரு ஹோட்டல் இருந்தது. மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் 'றோஸ்ற் பொரித்த இறைச்சி மிகவும் பிரசித்தம். இதைச் சாப்பிடுவதற்கு "சாப்பாட்டு ராமன்கள் இங்கு தேடி வருவார்கள். ஐந்து நட்சத்திரக் ஹோட்டலுக்குள்ள மதிப்பு இதற்கு அப்பொழுதிருந்தது.
முஸ்லிம் இனத்தவர்களுள் அக்காலத்தில் மிகவும் பேசப்பட்டவர் சுபைர் இளங்கீரன். ஈழத்து நாவல் இலக்கிய முன்னோடிகளில் இவருமொருவர். மார்க்சிய வாதி. யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் மத்தியில் கொமியூனிச விதைகளை விதைத்தவர் களுள் இவருமொருவர். சிறந்த மேடைப் பேச்சாளர். இலங்கை முற்போக்கு அணியில் முதற் பந்தியில் இருந்தவர். இதழியலாளரின் கவனத்தைப் பெற்ற மரகதம்' சஞ்சிகை யின் ஆசிரியராக இருந்தவர். யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் மத்தியில் இவர் விதைத்த இலக்கிய வித்துகள் பலித்து விட்டதை அங்கீகரிப்பது போல், அந்த மண்ணில் விழுந்த வித்தொன்று இன்று முகை கக்கி மரமாகிக் கொண்டிருக்கிறது. ஆம்! மொஹிதீன் ரஜா. இளங்கீரனின் இடத்தை நிரப்புபவராக அகதி நிலையிலும் ஈழத்து இலக்கியச் செடிக்குத் தனது படைப்புகளால் ?ட-”~ பாசனம் செய்கிறார். நீண்டகாலப் பயணி----۰.۰۰۰۰۰۰۰-سسسسسس i ކ ރހި d dh> d இவரது நாவல். கற்கும் மாணவருக்கான அன்றும் இன்றும் l பாட உதவி நூல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் > ----------ל ו-"־°
༄།། இளைஞர்.
மறக்காத சொந்தங்கள்
அறுபது களி ல் மெளல வி Lig it மொஹிதீன் லெப்பை இலங்கை வானொலியில்
- செல்லக்கண்னு -

Page 6
'திருக்குர் ஆன்" விளக்கப் பிரசங்கம் செய்தார். இவர் நோயாளிகளுக்கு, துவா ஓதி நூலும் கட்டினார்.
யாழ் மா நகர சபையில் நீண்ட கால மாக ஒரே ஒரு முஸ்லிம் உறுப்பினர்தான் இருந்தார். பின்னர் இருவராக்கப்பட்டது. இப்படிப் பெரும்பான்மை அற்றிருந்த நிலையிலும், யாழ் மாநகர சபைக்குச் சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக இருந்த காதி.எம்.எம்.சுல்தானை மேய ராக்கி, சகோதர இனத்தவர்களையும் அர வணைக்கும் பண்பாட்டினை அன்றைய மாநகர சபை உறுப்பினர்கள் வெளிக் காட்டினர். அத்தோடு முஸ்லிம்கள் இந் நாட்டில் மூன்றாவது மனிதர்களல்ல என்பதையும் உணர்த்தினர். இது ஈழத்தின் ஏனைய பகுதிகளுக்கு ஒர் எடுத்துக் காட் டாக அமைந்தது. இந்த நியமனத்தைச் சாத்தியப்படுத்தியவர் தோழர் மு.கார்த்தி கேசன். இவர் தனது பெரும் உழைப்பை இதற்காகப் பணயம் வைத்ததை யாழ் மண் மறந்திருக்காது.
காதி.எம். எம்.சுல்தான் நீண்ட சிகப்புத் தொப்பி அணிந்திருப்பார். இத் தொப்பியின் பின் பகுதியில் இருபத்தைந் திற்கும் மேற்பட்ட கறுத்த, தடித்த நூல்கள் தொங்க விடப்பட்டிருக்கும். அபுசாலி ஹாஜியார் என்பவரும் உதவி மேயராக இருந்தார்.
அன்று யாழ் மாநகர சபை எல்லைக் குள் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு யாத்திரை ஸ்தலமாக விளங்கியது தீவுப் பகுதியில், அல்லைப்பிட்டி என்ற கிராமத்தில் இருக்கும் வெள்ளைக் கடற்கரையில் அமைந்துள்ள பள்ளிவாசல், சில நாட்
களில் இவர்கள், யாழ் முத்தமிழ் விதியில் நடப்பட்டிருக்கும் 1ம் மைற் கல்லிற்கு முன் ஊதுபத்தி பற்ற வைத்து பள்ளி வாசல் திசையை நோக்கித் தொழுவர். தொழுகை முடிந்ததும் பேரீச்சம் பழம் வழங்குவர்.
முஸ்லிம் வீடுகளில் அக்காலத்தில், பெண்கள் "காசுக்கட்டி" என்றொரு பிட்டுக் குழல் சில்லு வடிவான தின் பண்டமொன்றைத் தயாரித்து விற்ப துண்டு. இது, தற்பொழுது பீடாக்களில் வெற்றிலைக்குள் வைத்திருக்கும் பாக்குக் கூடு மாதிரி இருக்கும். பாக்கோடு வேறும் ஏதோவெல்லாம் சேர்த்து இதைத் தயாரிப்பார்கள். வெற்றிலை சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் "காசுக்கட்டி"யில் சின்னதொரு துண்டை நுள்ளி எடுத்து வெற்றிலையோடு சேர்த்துச் சுவைப்ப துண்டு.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் களாக யாழ்ப்பாண மா நகரப் பகுதியில் சோனகர், செம்மார், பாய்மார் (மேமன்) எனப்பட்டோர் வாழ்ந்தனர். செம்மாரும், பாய்மாரும் மிகவும் குறைந்த அளவி லேயே இருந்தனர். செம்மார் பஜார் விதி யும், கஸ்தூரியார் விதியும் அடங்கிய 'டா' னாப் பட்ட செம்மா தெரு பகுதிக்குள் வசித்தனர். இந்தப் பகுதியில் மசூதியும் இருக்கின்றது. இவர்கள் பெரும்பாலும் செருப்புகளைத் தயாரித்துச் சந்தைப் படுத்தினர்.
எழுத்தாளர்களில் பலர் தமது நூல் களுக்கு மதிப்புரையைப் பெரும்பாலும் சமூகத்தில் மிகவும் உச்ச நிலையில் இருப்பவர்களையே பொறுக்கி எடுப்பர்.
8

( ஆனால் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவைப் பொறுத்த மட்டில் இந்த முறைமை பேணப்படுவதில்லை. அவர் தனது அப்போஸ்தலர்களையே இந்த விவிலியத்தில் பொருட்படுத்தியதில்லை. பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மதிப் புரை கொடுத்தார். அடுத்தவர் ஒரு தொழி லாளி. "பாதுகை" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு டொமினிக் ஜீவா செருப்புத் தயாரிக்கும் தொழிலாளியாகிய முத்து முஹம்மதுவிடமே மதிப்புரை பெற்று இணைத்திருக்கிறார். இந்த முத்து முஹம்மதுவே "பாதுகை சிறு கதையின் கதை மாந்தன். யதார்த்தமான பாத்திரப் படைப்பு. முத்து முஹம்மது கடை கஸ்தூரியார் விதியில் இருந்தது. அவர் வாழ்ந்ததும் செம்மா தெரு ஒழுங்கைக்குள்தான்.
பாசையூர் புனித அந்தோனியார் கோவில் அவ்வூருக்கு மகிமையைக் கொடுத்து வருகின்றது. இதுவொரு கட லோரக் கிராமமாகும். கூத்துக் கலையைக் காத்து வருவதில் முன்னுரிமை காட்டு கின்றது. உதைப் பந்தாட்டத் துறைக்குச் சிறந்த வீரர்களைத் தந்துள்ளது. கலா பூஷணம் அண்ணாவியார் பாசையூர் தேவதாசன் இவ்வூரின் பிரசித்தத்திற்கு தனது ஆளுமைகளால் பாசனம் செய் கிறார். இவரொரு குறிப்பிடத்தக்கக் கவிஞருமாவர். சிங்கள மொழி பெயர்ப்பில் தேர்ந்தவர்.
இது இலத்திரன் யுகம். உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டு விட்டது. இந்த உலகத்தை மாற்றி
அமைக்கப் பல்லாயிரக்கணக்கான விஞ்
S)
ஞானிகள் தமது மண்டைகளை உடைத்து யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அன்றைய மக்கள் தம்மோடு கட்டிக் காத்து வந்த பாரம்பரியப் பழக்கங்களைச் சொன்னால் அவை எடுபடா! இருந்தும் உலகம் இப்படியுமிருந்ததென்பதை அறிவதற்கு அவைகளைச் சொல்லி வைப்பதும் சிறந்ததே!
நீண்ட வரட்சி நாட்டில் நிலவினால் மக்கள் அதை இல்லாமல் போகச் செய் யச் சில நடவடிக்கைகள் எடுப்பதுண்டு. அதில் கொடும்பாவி கட்டி இழுப்பது மொன்று மாதமும்மாரிகளில் ஒன்று கற்புடைய பெண்களுக்கானது என அன்றைய தமிழன் வகுத்திருப்பதை தமிழுலகு அறியும். கற்புடைய பெண் களுக்காக வர்ண பகவான் இரங்குவா னென்பது எமது மூதாதையரின் நம்பிக்கை. எனவே பாவப்பட்ட பெண் களே வரட்சிக்கு காரணமென்பது அவர் களது நம்பிக்கை. இன்றைய பெண்ணியம் இதை எப்படி எடுக்குமோ! பொறுத்திருந்து பார்ப்போம்!
இந்த நம்பிக்கையை ஊர்ஜிதப் படுத்துவதே இந்தக் கொடும்பாவி இழுப்பு! மண்ணால் ஒரு பெண்ணின் பாவையைச் செய்து அதைப் பாடை யொன்றில் வைத்து, ஊரைச் சுற்றிக் கட்டி இழுப்பார்கள். அதை இழுத்துக்
கொண்டு செல்லும் பொழுது “கொடும்
பாவி சாகாளோ கோடி மழை பொய் யாதோ' என மாரடித்து ஒப்பாரி வைப் பார்கள். இப்படி ஒப்பாரி பாடுபவர்கள் ஆண்களே! ஆனால் இவர்கள் பெண் வேடமிட்டிருப்பார்கள். ஊரிலுள்ள சகல

Page 7
பகுதிகளுக்கும் சென்ற பின் கொடும் பாவிப் பொம்மையை எரிப்பார்கள். இப்படிச் செய்த பின் மழை கொட்டு கொட்டென்று கொட்டுமென்பது அக் காலத்து நம்பிக்கை. இதையெல்லாம் இன்றைய சந்ததி பார்க்க முடியாது. கேட்பதற்கும் முடியாதுதான்!
யாழ்ப்பாணத்தில் கிணறுகள் அதிக மென்பது பிரசித்தம்! விவசாயத்திற்குக் கூடக் கிணற்று நீர்தான் கை கொடுப்ப
துண்டு. இருந்தும் குளிப்பதற்கென்று
அங்கு வாளிக் கிணறும் இருந்தது. இது காங்கேசன்துறை விதியிலிருக்கும் சி. எஸ்.கே.மில்லுக்கு முன்னாலுள்ள நாக லிங்கம் போசனசாலைக்கு அருகே இருக்கும் ஒழுங்கையில் இருந்தது. பலர் unross560Ti
அக்காலத்தில் தீர்த்தக்கரை' என்ற சொல்லொன்று யாழ்ப்பாணத்தாரின் நாவில் அடிக்கடி வந்து போனது. இன்றைய சந்ததிக்கு இது மலையகத்தி லிருந்து வெளிவந்த இலக்கிய சஞ்சிகை யொன்றை நினைவுபடுத்தலாம். ஆனால் அதுவல்ல! இதுவொரு கேணி, சிறிய நீர்த்தடாகம். இது தற்பொழுது கன்னா புரம் என்றழைக்கப்படும் சூழலில் இன் னமுமுண்டு. இங்கு அந்தியேட்டிக் கிரி யைகளும் செய்வதுண்டு. அக்காலத்தில் இந்த உரிமை தாழ்த்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டது. அவர்கள் பணம் செல வழித்து, கீரிமலைக்குச் சென்றுதான் இக் கிரியைகளைச் செய்தனர். சோ.இராசரெத்தினம் செட்டியார் வில்
லூன்றி மயானத் தடையை நீக்கிய
பொழுது, இதற்கான தடையையும் நீக்கி
ஆனால்
is 6656);
வில்லுரன்றிக் கேணியை ஏனைய சமூகத் தினரும் பாவிப்பது போல் பஞ்சமரும் பாவிக்க உதவினார். வில்லூன்றி என்ற பெயருக்கு வரலாற்று இதிகாசச் சிறப்பு முண்டு. அதை ஆய்வாளர் கவனிப்பது பெருந் தமிழ்ப் பணியாகும்!
இன்றைய தலைமுறைக்கு இன் னொரு சொல் மயக்கமும் உண்டு. அன்று சிலர் சொல்வார்கள் "பரித்தி யடைப்பானிட்டப் போயிட்டு வாறேன்" என பருத்தியடைப்பு ஊர்காவற்றுறையி லுள்ள ஒரு கிராமம். அங்கு ஏன் போ வான்? இது அதுவல்ல யாழ்ப்பாணத்து மணிக்கூட்டுக்குத் தெற்கே பிரியும் தெரு வில். வேம்படி பெண்கள் பாடசாலை சூழலில் ஒரு கட்டு வைத்தியர் அன்றும் இருந்தார். இந்தக் கட்டுநோய்ச் சிகிச்சைக் காகத்தான் மக்கள் படையெடுத்தனர். இன்றும் அந்தப் பெருமை தளரவில்லை. பருத்தியடைப்பான் ஒருவர் இருக்கிறார். கட்டு வைத்தியத்தில் பருத்தியடைப்பார் மகா நிபுணரென்பது யாழ்ப்பாணத்தாரின் அதீத நம்பிக்கை.
நல்லூர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர் ஊர். அன்றைய தமிழ் இராஜ தானி இங்குதான் நிறுவப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. நல்லூர் கந்தனின் கோயில் கொடியேறி விட்டால் முழு யாழ்ப்பாணமும் விழாக் கோலம் காணும். பக்தர்கள் நெடுந்துரங்களிலிருந்தும் அங்கப் பிரதிஷ்டை செய்து நல்லூர் கந்தனின் அருளை வேண்டுவர். பெண் கள் மடிப்பிச்சை எடுத்து அடியளிப்பர். மஞ்ச, சப்பற, தேர், தீர்த்தத் திருவிழாக் காலங்களில் அப்போதெல்லாம் புகை
1 Ο

ബ
யிரத ரிக்கற் எடுப்பது மகா கஷ்டம். அரச ஊழியர்கள் நாட்டின் நாலா பகுதி களிலிருந்தும் நல்லூருக்கு யாத்திரை வருவர்.
புகழ் பூத்த யாழ்ப்பாணத்து அறிஞர் கள் நல்லூரில் தோன்றி இருக்கின்றனர். நல்லை ஆறுமுக நாவலர், சின்னத்தம்பிப் புலவர், ஞானப்பிரகாச அடிகாளர். இவர் கள் நல்லூர்க் கந்தனோடு நல்லூரை துலங்க வைக்கின்றனர். பிரபல தமிழ் இலக்கியவாதி எஸ்.பொன்னுத்துரையும் தான் நல்லூரின் மைந்தனே என நிறுவு கிறார்.
கொய்யாத் தோட்டம் - திட்டி, ஈச்சமட்டை, குருநகர் என்பவற்றால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன் பெயருக்கேற்ப இங்கு கொய்யா மரங் களைக் காண்பதரிது.
மூதவை உறுப்பினராகவிருந்த ஞானப்பிரகாசம் நல்லையா இதன் மாநகர சபை உறுப்பினராக இருந்தவர். இவர் பின்தங்கிய சமூகங்களின் பிரச்சினை களுக்காகக் குரல் கொடுக்கும் சமூகத் தொண்டராகவும் தன்னை இனங் காட்டி யவர். தமிழரசுக் கட்சியின் போக்கில் அரசியலைக் கண்டவர். கொய்யாத் தோட் டத்தின் கலை வளத்தை செழுமைப் படுத்துவதில் பி.என்.ஆர். அமிர்தவாசகம் தன் உழைப்பை அர்ப்பணித்தவர். இவர் சிறந்த வானொலி நடிகர். வாசகரின் நெறியாள்கையில் ஏராளமான
கே.எம்.
வானொலி நாடகங்களை நடித்தவர். இவரது அப்போதைய நடிப்புத் தோழர்
களாக கே.கணேசபிள்ளை (வரணி
11
யூரான்), கே. மார்க்கண்டன், யேசுரட்ணம்
ஆகியோரிருந்தனர்.
சிறுபான்மைத் தமிழராகிய சமூகத் தொண்டர் தோழர் எம்.சி.சுப்ரமணியம் ஸ்ரேசன் வட்டாரத்தில் இருமுறை கொம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டி இட்டு தோல்வி கண்டார். இவரைத் தோற்கடித்தவர் மன்மதராயன். ஆனால் என்.ரி.செல்லத்துரை தமிழரசு வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். இவரொரு தாழ்த்தப்பட்டவரென்பது இங்கு குறிப்பிடத்தக்கதே!
வண்ணார் பண்ணை வாக்காளர்கள், வடபிரதேசத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி நிலைகொள்ளப் பாடுபட்ட தோழர் மு. கார்த்திகேசனை மாநகர சபை உறுப்பினராக்கியது. ஒரு மூளைச் சலவைதான்!
பஞ்சமர் இலக்கியவாதிகளான டானியல், டொமினிக் ஜீவா, ரகுநாதன் ஆகியோரை "அடியொற்றிப் பின்வந்த சிலர் எந்தவித சிந்தாந்தத் தெளிவுமின்றி வெறும் தீவிரத்தை மட்டும் கதைகளில் புகுத்திய போது அவை வெறும் மலடு களாக வந்து விழுந்தன" எனவொரு அபத்தமான கருத்தை சில சிந்தாந்த் எழுத்தாளர்கள் பரம்பல் செய்திருப்பதை இலக்கிய அபிமானிகள் அறிவர். இது மேற்குறிப்பிட்ட மூன்று பஞ்சம இலக்கியவாதிகளுக்குப் பின்னர் பஞ்சம இலக்கியம் வளர்ச்சி பெறவில்லை யென்பதை சூசகமாகப் பிரசித்தப்படுத்து கிறது. இம்மூவருக்குப் பின்னரும் பஞ் சமர் இலக்கியம் வளர்ச்சி கண்டுள்ளதை

Page 8
upgлө56p8 སྔ། །
நியாயப்படுத்தலாம். சில எழுத்தாளர் களது படைப்புகளையும் ஆதாரப்படுத்த லாம். அப்படியான படைப்புகளைத் தந்தவர்தான் அமரர் பெனடிக்ற் பாலன். தீண்டப்படாத மக்களின் பிரச்சினைகளை தகுந்த முறையில் உள்வாங்கி தனது படைப்புகளை மிக ஆத்திரத்தோடு படைத்தவர். இந்த ஆக்ரோசம் சிறு கதையின் எந்தத் தன்மையையும் சிதைவு
மல்லிகை ஆசிரியர்
டொமினிக் ஜீவாவின்
78வது பிறந்த தினம்
27 - 06 - 2005
படுத்தவில்லை. வாசகனைப் போராளி யாக்கும் பெருவீச்சு அவைக்கிருந்தன. இவரது சிறுகதையான "லெட்சுமியை அவிழ்த்து விடுங்கோ கலை மெருகோடு
புனையப்பட்டது. “சொந்தக்காரன் என்ற
மலையக நாவலை எழுதியவர். கல்விசார் மேன்மை பெற்றார். இவரொரு
நூல்கள் பலவும் இவரது உழைப்பில் தேறின. ஊக்கமோடு செயல்பட்டு, உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்
தல்லாலை மைந்தன்!
(சொந்தங்கள் தொடரும்)
L L LL L L L L L L
கொழும்பில் - மட்டக்குளியில் அதி நவீன சாதனங்களைக் கொண்டு, திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களினால் அழகுபடுத்தப்படும் புதுமையான சிகை அலங்கரிப்பு நிலையம்
R.R.R. HRIRDRESSERS
89, St. Mary's Road Mattakuliya Colombo - 15.
முற்றிலும் குளிரூட்டப் பெற்ற சலூன் தொலைபேசி : 0777 - 790385
12
 

டவுன் பள்ளிவாசல்.
ளுஹருக்குப் பாங்கு சொன்னதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைக்கே gorffluu சுறுசுறுப்பு களை கட்டியது.
ஃபேன்களெல்லாம் ஒஹோவென்று தலைதெறிக்கச் சுழன்றன. "முஸ்லிமான நல்ஜனங்களே!” என்று ஆரம்பித்த குத்பாப் பிரசங்கம் ஒலிக்கருவி களுக்கூடாக வெகு ஜோராகப் பரவியது.
ஹவுளின் நீர்ச் சலசலப்புக்கு ஒய்வில்லை.
அவ்வளவு சனத்தையும் உள்வாங்கிக் கொள்ள இயலாமல் பள்ளிவாசல் திக்குமுக்காடியது. மற்றைய வ க் து க ஞ க் கு இ ர ண் டெ ரா ரு
வரிசைதான்.
பல்வேறு தேவை நகரத்துக்கு வரும் சனங்கள். அரச நிறுவனங்களில் கடமையாற்றுவோர், கம்பஸ் பிள்ளைகள், மாற்றுப்
களுக்காக
பள்ளிக் கூடங்களில் ஏ.எல் படிக்கும் மாணவர்கள். பாதுகாப்புப் பிரிவு உத்தி யோகத்தர்கள். இப்படித்தான் இவ்வளவு சனமும் வந்து சேரும். மற்றப்படி டவுன் கடைக்காரர் தான் நிரந்தர மஹல்லாவாசிகள்,
நேரம் ஒன்று பதினைந்து. 'முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழாததால்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கிறோம்" பேஷ்இமாம் சகல பிரச்சினைகளுக்குமுரிய அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்து மிம்பரில் முழங்கித் தள்ளினார்.
“சீ... இந்த மனிசன் முடிக்கமாட்டார் போலிக்கி’ அந்தக் கம்பஸ் மாணவன் மிகுந்த அலுப்போடு கழுத்தைச் சுழற்றி நான்கு பக்கமும் பார்த்தான்.
சக மாணவர்கள் ஆங்காங்கே உதட்டைப் பிதுக்கிக் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர்.
"மசான் அடுத்த லெக்ஷர் எகவுன்ட்ஸ். ஒன்ட மிஸ் பண்ணினா அங்கால ஒன்னும் வெளங்காது’ வரும்போது இப்படிச் சலித்துக் கொண்டான் ஒருவன்.
"வன் தேட்டிக்குள்ள எப்பிடியும் தொழுது முடிப்பாங்க. நாங்க துவாக்கு நிக்காம எழும்பினா லெக்ஷரப் புடிக்கேலும்."
13

Page 9
அவன் இப்படிக் கொடுத்த வாக்குப் பொய்த்துப் போய்விட்டது.
அவர்களது அடுத்த விரிவுரை ஒன்று முப்பதுக்கு ஆரம்பிக்க விருந்தது. இப்படிப் போட்டு அாப்'ாரென்று யார் தான் நினைத்தது நேரக் கட்டுப்பாடு விதிக்காத நிர்வாகத்தை அவர்கள் சபித்துக் கொண்டார்கள்.
தன்னை மறந்த பயான் முப்பது நிமிடத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.
நேரம் ஒரு மணி இருபத்தைந்து நிமிடம்.
"இன்றைய இளைஞர்கள் அந்நிய கலாசாரத்தில் மூழ்கிப் போயிருக் கிறார்கள்” மிக்க கவலை தோய்ந்த தொனியில் பிரஸ்தாபிக்கத் தொடங் கினார் பேஷ்இமாம்.
“சீ... இதென்ன இந்த மனிசன் சம்பந்தமில்லாமல் பேசிப் பேசி." விவசாயத் திணைக்களத்தில் கடமை யாற்றும் அகமட் கான் பொருமி வெடித்தான்.
'தம்பி. இந்தக் கடிதத்த அடிச்சி இன்னக்கே போஸ் பண்ணினாத்தான் ஒரு கிழமைக்குள்ளயென்டாலும் பதில் வந்து சேரும்.”
காலையில் ஏஓ சொன்னது அவன் காதுக்குள் எதிரொலித்தது. டைபிஸ்டிடம் கொடுத்து விட்டு ஜூம்மாவுக்கு ஓடி வந்தான். இனித்தான் கையொப்பம் வேண்டி, ரோணியோ செய்து, அட்ரஸ் எழுதி தபால் செய்ய வேண்டும்.
அவனுடைய தலை வெடிக்கும் போலிருந்தது.
தொழுத கையோடு ஒட வந்தவன் வகையாக மாட்டிக்கொண்டு தடு மாறினான். இன்று சாப்பிடக் கூட நேரம் கிட்டாது போலிருந்தது.
பரிதாபத்தோடு திரும்பிப் பார்த்தான் அகமட்கான். வெவ்வேறு திணைக்களங் களில், வங்கிகளில் கடமையாற்றும் அவனுக்கு அறிமுகமான பலர் அமர்ந்து விழிபிதுங்கி நின்றனர்.
நேரம் ஒன்று முப்பது. “இன்று எங்களுடைய பெண் பிள்ளைகள் படிப்பு - ரியூசன் என்று ஊரெல்லாம் சுற்றித் திரிகிறார்கள்' பெண்களில் குற்றம் சுமத்தாத பிரசங்க மும் ஒரு பிரசங்கமா என்பது போல் சுற்றி வளைத்து அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார் பேஷ்இமாம்.
"புள்ளயஸ்ட படிப்புக்கு மண்ணப் போடப் பாக்கிய இந்த மனிசன்’ அபுநானாவுக்குக் கோபம் கொப்பளித்தது. ஒன்று ஐம்பது இன் ரஸிடி பஸ்ஸுஜூக்கு கொழும்பில் மையத்து விடொன்று போகும் அவசரம் இம்தி யாஸஅக்கு. ஜூம்மா தொழுதுவிட்டு பஸ் ஸேற முடிவு செய்திருந்தான். போகிற போக்கைப் பார்த்தால் பஸ்ஸைத் தவறவிட வேண்டும் போல் தெரிந்தது.
“ஹலோ நாங்க ராவோட ராவா மையத்த அடக்குவோம். எட்டு மணிக் குள்ள வந்தாச் சரி’ பதினொரு மணிக் குப்போல வந்த கோல் அவனது ஞாப கத்தில் உதைத்தது. என்ன செய்வது.
14

நானாவையும் நிப்பாட்டிக் கொண்ட, இப்ப அவருக்கிட்ட ஏச்சிக் கேக்க வாகும்" இம்தியாஸ் அங்குமிங்குமாகத் தடுமாறினான். நேரம் ஒன்று நாற்பத்தைந் தாகி விட்டது.
“ஆலிம் உலமாக்களின் பேச்சுக் களை ஏற்று நடக்காத ஒரு சமூகச் சூழல் இப்பொழுது உருவாகி வருவது கவலைக்கிடமான விடயமாகும்"
ஸியாது காக்காவின் எண்ண ஒட்டம் அவரது மனைவியின் பக்கம் நேரத்தை விட வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
புண்ணிய ஆஸ்பத்திரி வெளி நோயாளர் பிரிவுக்கு மனைவியைக் கூட்டி வந்திருந்தார். எழுபத்தெட்டாம் நம்பர் கிட்டியிருந்தது. பன்னிரண்டு மணியாகும் போது நாற்பதுக்கு மேல் ஒடியிருக்க வில்லை.
“மரியம் நான் தொழுதிட்டு வாரன். எப்பிடீம் ஒன்னறக்கி வந்திடுவன். அதுக் குள்ள ஒங்கட நொம்பர் வராது" என்றார் இரக்கமாக,
"ஒ தொழுதிட்டு சொணங்காம வாங்கொ. எனக்கு தொஸ்தர்மாரோட பேசத் தெரிய. நொம்பர் பிந்தினா இந்த தொஸ்தர் எடுக்கியல்லியாம்’ மனைவி இரண்டும் கெட்டான் நிலையில்தான் விருப்பம் கொடுத்தாள்.
"நான் டக்கெண்டு வாரன்” என்ற படி வெளியிறங்கினான் ஸியாத். அவன்
தடுமாறினான். வெளியிறங்கி ஓடவும்
முடியவில்லை. மனைவியின் நிலையை நினைக்க பரிதாபமாக இருந்தது. இருபத்
15
ம். ஒடனே போகப் போன சதக் d
திரண்டு மைல் தொலைவிலிருந்து
வந்தவனல்லவா?
'மனிசரட கஷ்டத்த. தேவயள நெல எச்சிப் பாக்காம பயான் பண்ணி யாங்க $ பயான். ஊருக்குள்ள பள்ளிவாச லென்டா எத்தின மணித்தியாலமும் பேசேலும். டவுனுக்கு ஒவ்வொரு மணிசரும் ஒவ்வொரு வேலயோட வார'
அவரது ம னம் துடிதுடித்தது.
ஒருவாறு குத்பா முற்றுப் பெற்றது. கிடைத்ததுதானென்று மிம்பரி லிருந்து இமாம் இறங்குமுன்பே, சனம் முந்திக் கொண் டு எழுந்து நின்றது.
“அல்லாஹ? அக்பர்' விடுவாரா. . . அமைதியாகத் தொழுகையை நடாத்தினார்.
“ஸமியல்லாஹs) லிமன்ஹமிதா” சனத்துக்குத் தான் அவசரம். “அஸ்லாமு அலைக்கும் வரஹ்.” ஸலாம் கொடுத்தாய பிற்று. இதற்கு மேல் எவரையும் தடுக்க இYயலாதே.
அவசர அவசரமாக வெளிப் பாய்ந்தவர்களில் அகமட்கான், அபுதானா, இம்தியாஸ், ஸியாத். ஆகியோர் அடங் காமலிருப்பார்களா? முட்டி மோதிய சனத் துக்குள்ளால் தங்கள் தங்கள் காரியங் களை நோக்கி வெறிபிடித்தவர்களாக.
AA
ம். சோறு தின்டிட்டு தண்ணி குடிக்காமப் போற மாதிரி, தொழு திட்டு துவாவுக்கு நிக்காம இவளவு அவசரம் இவங்களுக்கு.” அதற்குள் யாரோ ஒரு இபாபத்தாளியின் குரல் வேறு.

Page 10
பாசி படிதல்
- த. அஜந்தகுமார்
சூரியனின் முன் அவிழ்ந்து விழுகிறது ஒளிமுகத்து ஒப்பனைகள்
புதிரெறிந்து என்னோடு உலாவுகிறது நிழல்களின் நீட்சி
ஒர்மம் வடிந்து ஒன்றிலும் ஒன்றாது ஒடுங்குகிறது வாழ்வு வட்டம் ஒரு சிறு புள்ளியாய்.
நிலையற்றதென்றறிந்தும் நிலைக்கண்ணாடி முன்
விம்பம் பார்த்துச் சிரிக்க முயல்கிறது பிரேமையின் பின்னலிட்ட
ਰੰਤ 然
! நினிக் ஜீ f х: rк У
எந்தன் உருவம்
துயரின் நிலைத்த வாழ்வில் பெயர்ந்திடா அதன் தன்மையின் பலத்தில் பின்னடைந்து போய் அழுகிறது கண்
அலையின் ஆர்ப்பரித்த சிரிப்பு துயரின் துயரான துயரில் வளைகிறது வாழ்க்கை
கடலின் ஆழத்தில் R ஏதோவோர் மூலையில் கிடந்து
பாசி படிகிறது நம்பிக்கை. الشمسيع
 
 
 
 
 
 

நீங்கள் அனுப்பிய இரண்டு மலர்களும், ஆங்கிலத்தில்
எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறும் கிடைக்கப் பெற்றேன். இலக்கிய வரலாற்றில் உங்களுடைய பங்களிப்புக் கணிசமானது. உழைப் பாலும், மன உறுதியினாலும் இப்பொழுது தமிழர் வரலாற்றிலே உயர்ந்து நிற்கும் உங்களைக் கண்டு நான் பெருமிதமடைகின்றேன்.
பேராயர் எஸ். ஜெபநேசன் - மருதனாடிடம்
1970/71 காலப்பகுதியில் நான் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இருந்தபோது, மல்லிகையின் அறி முகம் கிடைத்தது. அதன் பிறகு கலாசாலையை விட்டு வெளியேறிய பின்பு, எனது மாவட்டமான மன்னாரில் மல்லிகை வாசிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.
இருப்பினும் தாங்கள் சஞ்சிகை விற்பனை செய்து கொண்டிருந்தபோது சஞ்சிகையை வாங்கி உங்கள் முகத்தில் வீசிய சம்பவம், பின்னர் அண்மையில் அதே நபர் உங்களிடம் மன்னிப்புக் கோரிய செய்தி, குமுதம் சஞ்சிகையில் தங்களையும் மல்லிகையையும் பற்றிய செய்தி யாவும் தங்கள் மேலும் மல்லிகையின்
மேலும் எனக்கு ஓர் உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்தோனிப்பிள்ளை - முருங்கன்.
ஏப்ரல் 2005 மல்லிகை படித்தேன். 'உண்மைக்குப் புறம்பானது' என்ற தலைப்பில் செ.சுதர்சன் எழுதியவை பற்றி எனது கருத்துக்களை இங்கு எழுத விரும்புகிறேன். மார்ச் 2005 மல்லிகை இதழில் ச.குகனேசன் . செ.சுதர்சன் போன்றவர்கள் கிளறுகிறார்கள்’ என்றே குறிப்பிட்டுள்ளார். இங்கு கிளறுகிறார் என்பது சர்ச்சையைக் கிளப்புவதைக் குறிக்கவில்லை. ஜபாரைப பேட்டி கண்டு ஞானத்தில் பதிவு செய்ததையே ச.குகனேசன் கிளறுகிறார் என்ற சொல்லின் மூலம் குறிப்பிட்டுள்ளார் என்பது செ.சுதர்சனின் பதிலின் மூலமே எல்லோருக்கும் இலகுவாகப் புரிகின்றது. இதைப் புரியாமல் செ.சுதர்சன் ஏப்ரல் 2005 மல்லிகையின் நான்கு பக்கங்களை வீணடித்துள்ளார். பட்டிமன்றப் பாணியில் தனிநபரைத் தாக்கும் வசனங்களை வெளியிடுவது 50வது ஆண்டை நோக்கி அடி வைக்கும் மல்லிகைக்கு நல்லதல்ல.
- தேவ. முகுந்தன்.
17

Page 11
STZ
2. "بر 一ü Undrawn Rortraitif 陸学 Unwritten Poetry
... " . RE Z 李 출 டொமினிக் ஜீவாவின் சுயவரலாற்றின் ஆங்கில
மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது.
李 인 ኧ தேவையானோர், புலம் பெயர்ந்த புத்திஜீவிகள் 感 洽。 管 மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளவும்
علی گئی
;'.'జిపి ܝܢܠ
மே 2005 'மல்லிகை இதழ் பாரத ஞானபீட விருது வென்ற என் அபிமான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது அட்டைப்படம் தாங்கிய அற்புத இதழாய் மலர்ந்தது கண்டேன். மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.
அட்டைப்படம் அருமை. உங்களது தலையங்கமும் அருமை. ஜே.கே. உடனான உங்களது அரை நூற் றாண்டுக்கால நட்புறவு பற்றிய கட்டுரை யில் இன்னும் ஆழமாகப் பல விடயங் களை எதிர்பார்த்தேன். விருதும் ஜெயகாந்தனும் நவாஸ் கட்டுரையும் நன்று.
ஞானபீட ஏ.எஸ் எம்.
தூண்டிலுக்கு வந்த கேள்வி - நீங்கள் அளித்த பதில் மனதை நீண்ட நேரம் நெருடியது. எஸ்.பொ. அவர்களது கண்டனங்கள் உங்களை எந்தளவு பாதித்துள்ளன என்பதும், அது குறித்த ஒளிவு மறைவற்ற உங்களது பிரகடனங்
களும் நெஞ்சைத் தொட்டன. இதற்குப் பிறகு இதுபற்றி பேசாமலே விட்டு விட்டால் நல்லது என்று படுகிறது.
'மல்லிகையின் எதிர்காலமென்ன? எத்தனையோ முறை கேட்ட கேள்விக்கு எத்தனையோ முறை நீங்களும் பதிலளித் "மல்லினை தனது நூற்றாண்டை நானில்லாமலே. என்று இந்த பதில் கண்ணிரைத் தளும்பச் செய்தது. "தொண்ணுாறு வயதில் போய்ச் சேர்ந்திடனும்” என்று நீங்கள் ஒருமுறை என்னிடம் கூறியது ஞாபகம் வந்தது.
துள்ளிர்கள்.
ஷோபா சக்தியின் புகைப்படம் மட்டுமே காணப்பட்டது. தூண்டிலில் எந்தக் குறிப்பும் இல்லையே. கே.ஆர். டேவிட் அவர்களது கதை
"செம்மை
'மல்லிகைக்கு மகுடமாக அமைந் திருந்தது.
ஸ்ஹானா - கெக்கிராவ.
18
 
 
 
 
 
 
 
 

எனது பிரதி
- கெகிராவ ஸஹானா
தவறுதலாகக் கோர்க்கப்பட்டாலும் சிறந்த அச்சுப்பதிப்பாய் கண்முன்னே மலர்ந்து கிடக்கும் வெள்ளைப் பிரதி.
அழிப்பதற்காய் குடித்த டிஸ்பிரின்களும், கடித்த பப்பாசிக்காய்களும், சுவைத்த அன்னாசிப் பழங்களும் பழைய ஞாபகங்களில் தீக்கோடுகள் இழுக்க, அதை மறக்க முயன்று வழக்கம் போல எனது ஆசைகளும் கனவுகளும் வரிகளாய் விரிந்த பஞ்சுக் கன்னத்தில் பலநூறு முத்தம் நான் தந்து கொஞ்ச, அங்குமிங்கும் மருளும் கருநாவல் விழிகளில் ஆயிரம் மர்ம வினாக்கள் தேக்கிய, இப்பொழுது இரவிரவாய் நான் கண்விழித்துக் காக்கும் எனது பிரதி.
S

Page 12
சினாமி வந்ததும் வந்தது. கடலோரம் எல்லாம் உடைத்து நொறுக்கி அழித்துக் கடலுக்குள்ளும் உள்வாங்கிக் கொண்டது. மனித உயிர்களும் இதற்கு விதி
விலக்கல்லவே!
(ன்ேடுத்ளுரேந்துறியது\*
- வெலிப்பன்னை அத்தாஸ்
பூகம்ப
வலயத்துள் இல்லை. எனவே புவியதிர்ச்சி, நில நடுக்க ஆபத்து எமக்கில்லை என்று வளாவிருந்தோம். என்றாலும் சுமத்திரா தீவில் ஏற்பட்ட பூகம்பமே 2004 டிசம்பர் 26ல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தக் காரணமானது. அதன் பின்புதான் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். இலங்கையிலும் நில அதிர்வுகள் ஏற்படலாம். மேலும் சுனாமிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே ஏற்பட்ட நில அதிர்வினால் நிலத் தட்டுகள் முறை மாறிக் கிடக்கின்றன. அதன் இயல்பு நிலைக்கு மீள வேண்டும். அதுவரை எப்பொழுதோ, எந்நேரத்திலோ நிலம் உயர்ந்து பணிந்து, குறுக்காக புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி. இவ்வாறெல்லாம் அறிக்கைகள் வெளிவரத் தொடங்கின.
புவியியல் அறிஞர்கள், புவிச்சாத்வியலாளர்கள், வானிலை, காலநிலை எதிர்வு கூறுவோர், சோதிடர்கள் நாளொரு கருத்தும், தினம் ஒரு அறிக்கையும் விடுக்கத் தொடங்கினர். கடலோரத்தில் வசிக்கும் மக்கள், கடற்கரை எல்லைக்கப்பால் குறித்த தூரத்தில் வசிக்கும் மக்கள் பீதியடைந்து இடைக்கிடை வீடுகளை விட்டு நடுச்சாமத்தில் நள்ளிரவில் வெளியேறவும் தொடங்கினர். எவ்வாறோ மூன்று மாதம் கடந்து விட்டது.
மேலும் ஒரு சுனாமி வரவில்லை. நில அதிர்வுகள் ஏற்பட்டன. இலங்கையிலும் கூட!
இப்போதெல்லாம் சனத்தைப் பேய்க்காட்டுறானுகள். அரசாங்கமும் வக்காலத்து வாங்குகிறது. கடற்கரையிலிருந்து 100 மீட்டர், 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்துக்கப்பால் வசிப்பிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இப்படியான கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டன. இஃது வெறும் வெற்று வேட்டு. சுவாரிஸ் இப்படிக் கருதினான்.
எதிர்க்கட்சிகள் தமது வழக்கமான மறுதலிப்பைக் காட்டத் தவறவில்லை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், கோஷங்களும் எழுந்தன. மீனவர்களின் உரிமையை மறுக்கக் கூடாது. கோரிக்கை விடுத்தார்கள்.
2O
 
 
 
 

E. 665); অস্ত্ৰ
வேர்விலைக் கடற்கரை ஓரத்தில் மீன் பிடிப்பதே தனது சீவியத்தின் ஆதாரம் என வாழ்ந்தவன் சுவாரிஸ். எனவே இப்பொழுதெல்லாம் இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அவன் உடன்படாத நிலைக்கு வந்து விட்டான். இழப்புகளை எல்லாம் தாங்கி பழையபடி மனநிலையில் மீட்சி கண்டவன் சுவாரிஸ்.
மனைவியைச் சுனாமியில் பலி கொடுத்த சுவாரிஸ் தனது இளைய மகன், மூத்த மகள் இருவருடனும் வழமை வாழ்க்கையை மேற்கொண்டான்.
வீடு ஒரளவு நொறுங்கியிருந்த நிலையில் குடிசை அமைத்து வாழ்ந்தவன். அரசாங்கக் கெடுபிடிகளைப் பொருட் படுத்தாமல் முழுவீட்டையும் திருத்தத் தொடங்கினான்.
மீண்டும் ஒரு சுனாமி வரமாட்டாது. அவனது திடமான முடிவு.
சுனாமி நிகழ்வின் மூன்று மாதங்கள் கடந்தன. 4ம் மாதம் ஆரம்பிக்கும் போது சுவாரிஸின் வீட்டுத் திருத்த வேலைகளும் முற்றுப் பெற்றன. அரசாங்க உதவி, வெளிநாட்டு உதவி, கடன் பெற்றமை இவைகளால் 'எஞ்சின் போட்' (விசைப் படகு) வைத்து மீன் பிடிக்கும் வேலை யில் மும்முரமாக ஈடுபட்டான் சுவாரிஸ்.
அன்று நள்ளிரவு. ஜப்பான் அறிவித்தல். டி.வி. ரேடியோ மூலம் அடிக்கடி கொடுக்கப்படுகிறது. ஜப்பானில் பூகம்பம். மீண்டும் சுனாமி அலை அடிக்கும் அபாயம். இலங்கை யையும் தாக்கலாம். கடலோரத்தை விட்டு வெளியேறுங்கள்! நாடு முழுக்கக் கட
21
லோரப் பிரதேச மக்களுக்குப் பொலிஸ் மூலமும் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டன. W
சுவாரிஸ் விழித்திருந்தான். ஆனால் வீட்டை விட்டு வெளியேறி ஓடிவிட வில்லை.
அடுத்தநாள் மீண்டும் டி. வி. வானொலி அறிவிப்புகள், சுனாமி ஆபத்து இனி இல்லை!
இதன் பிறகு சுவாரிஸ் மீண்டும் மிடுக்காக நடந்தான். இனிப் பழையபடி
எல்லாம் செய்யலாம். இந்தப் பிதற்றல்
களை நம்பி ஏமாறக் கூடாது. கடற்கரை யோர இடத்தை விட்டால் தூர நின்று இந்தத் தொழில் செய்ய முடியாது. மீன் பிடி வேலைகளைக் கண்காணிக்கவும் முடியாது. அரசாங்கப் பயமுறுத்தல் களுக்கு இணங்க வேண்டிய அவசிய மில்லை.
முன்னெப் பொழுது மில்லாத தைரியம் சுவாரிஸ9க்கு வந்து விட்டது. பிள்ளைகள் மூன்று பேரையும் அவ் வீட்டிலேயே வைத்துக் கொண்டான். மூத்தவள் மாலினி. உயர்தரம் கற்றுப் பரீட்சைக்குத் தோற்றியவள். சர்வ கலாசாலைப் பிரவேசத்தை எதிர்பார்க் கின்றாள். இளையவன் ரோஹண மூன்றாம் வகுப்பில் கற்கும் சிறுவன். இவர்களையும் வைத்துத் தன் எண்ணப்படி செயலாற்றி வருபவன் சுவாரிஸ். நாளாந்தம் வருமானம் கொஞ்சம் கொஞ்சம் கூடிக்கொண்டு போவதும் அவனது தைரியத்திற்குக் sismigaOSTGudnt?

Page 13
passe): །
வாசிகள் இம்முறையும் பெருந்தொகை
யாகப் பாதிக்கப்பட்டனர்.
முன்பு போல் மீண்டும் ஒர் அறிவித்தல். இரவோடிரவாக டி.வி, வானொலி மூலம் மக்களுக்கு விடுக்கப் பட்டது. மீண்டும் சுமத்திராவில் நில நடுக்கம். இலங்கையையும் பேரலைத்
இனி நாங்கள் 300 மீற்றருக்கப்
ಶಖ್ನ | தாக்கும். உடனடி".கக் கடலோரத்தில்
பாலேயே அமைத்துக் கொள்வோம். அரசாங்கம் காணி ஒதுக்கித்தர வேண்டும். இருப்போர் வெளியேறுங்கள். கடலோரவாசிகள் ஏகோபித்து முடி
வெடுத்தனர். அன்று உண்மையிலேயே சுனாமி
எதிர்ப்பலைகள் பிசுபிசுத்தன. இன்றும் புனர் நிர்மாண வேலைகள் நாட்டைச் சுற்றிக் கரையோரப் பிரதேசங் களில் 300 மீற்றருக்கப்பால் நடந்த வண்ணமுள்ளன:
வந்துவிட்டது. அடுத்தநாள் காலை சுவாரிஸ் வீடு வெறிச்சோடித் தென்படு கிறது. அங்கு எவரையும் காணவில்லை. அனைவரும் கடலுக்கே அடித்துச் செல்லப்பட்டார்களோ? கடலோர
N முடிவு திகதி : 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது, பரிசுக் கதைகள் தகுந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.
அமரர் எஸ்.வி. தம்பையா
சிறுகதைப் போட்டி.
மல்லிகையின் வளர்ச்சிக்கு அபார ஒத்துழைப்பு நல்கியவரும், தொழிலதிபரும், எழுத்தாளருமான மறைந்த எஸ்.வி. தம்பையா அவர்களது ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்படவுள்ளதென்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இப்போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் முன்னர் வெளியிடப்படாத படைப்புகளாகவும் "புல்ஸ்கப்' தாளில் எட்டுப் பக்கங்களுக்கு மேற்படாமலும் அமைய வேண்டும். தபால் உறையின் இடது பக்க மூலையில் போட்டிச் சிறுகதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
முதற் பரிசு 7000/-
இரண்டாம் பரிசு : 5000/-
மூன்றாம் பரிசு : 3000/-
22
 

திரு. மு. அநாதரட்சகன் தொகுத்தளித்த வட அல்வை முருகேசு வாத்தியார் பற்றிய பன்முகப் பார்வை நூலிலிருந்து.
சமூக மேம்பாட்ருக்கான
கல்விச் சேவையாளன்
கலாநிதி. மா. கருணாநிதி
அல்வையூர் திரு. க. முருகேசு உபாத்தியாயர் அவர்கள் தமது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஆற்றிய சமூகப் பணிகளும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற அனுபவங்களும் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகங்களிலுள்ள இளந்தலைமுறையினரும் சந்ததியினரும் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டியவை. எமது சமூக முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படுகின்ற முருகேசு வாத்தியார் அவர்கள் 1920 இலிருந்து 1970 காலம் வரையில் ஆற்றிய பணிகள் கல்வி மற்றும் சமூக விடுதலைக்கான அடிப்படைகளை வகுத்துக் கொடுத்திருந்தன.
கல்வி அபிவிருத்தியின் மூலம் சமூக விடுதலையை அடையாளம் என்னும் சிந்தனையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த இவருடைய கல்வி வாழ்க்கையோ ஒரு போராட்டமாக இருந்தது. இவருடைய தந்தையார் திரு. கந்தப்பு அவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 1914இல் சேர்ந்து கொண்டார். அதன் பின்னர் எட்டு ஆண்டுகளில் தேவரை யாளிச் சைவவித்தியாசாலையில் கற்றார். தமது 16வது வயதில் மாணவ ஆசிரிய ராக அமர்த்தப்பட்டார். அக்காலத்தில் எமது சமூகத்தில் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவியமையால் சிறப்பாகப் பயன்படுத்த மாணவர்களை ஆசிரியராக அமர்த்துதல் வழக்கமாக இருந்தது. 1926ல் ஆசிரியர் பயிற்சியைப் பெற முற்பட்டபோது அன்றிருந்த உரிமை மறுப்புக்கள் காரணமாகக் கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆயினும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் விடாமுயற்சியின் மத்தியில் 1930 தொடக்கம் 1931 வரையிலான காலப்பகுதியில் தெல்லிப்பளை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில்
23

Page 14
சேர்ந்து பயிற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டார். அதன் பின்னர் மீண்டும் 1932இல் தேவரை யாளி சைவ வித்தியாசாலையில் சேர்ந்து ஏறக்குறைய 27 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பல நல்ல மாணவர்களை உருவாக்கிய பெருமைக்கும் உரியவர்.
உரிமை மறுக்கப்பட்டவர்களின் சமூக மேம்பாட்டுக் கல்வியின் பங்களிப்பு அத்தியாவசியமானது சமூக முன் னோடிகள் நன்கு புரிந்தனர். எமக்
என்பதனை எமது
கெனத் தனித்துவமான கல்வி நிறு வனங்களை உருவாக்கும் பணியில் அந்நிறுவனங்களை விரிவுபடுத்துவதிலும், பயன்படுத்து வதிலும் கவனங் கொண்டிருந்தனர். இந்த வகையில் தேவரையாளி இந்துக்கல்லூரியானது தரம் மிக்க கல்வி நிறுவனமாக மாறியமையை
ஈடுபட்டனர்.
எவரும் மறுப்பதற்கில்லை.
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்
கிடைக்குமிடம்
நீயூபுக் லாண்ட் 52C, நோர்த் உஸ்மான் ரோடு, சென்னை - 17.
الم
pesos
சமூகத்தைப் பொறுத்த வரையில் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி காலங்
யாழ்ப்பாணச்
காலமாக ஒரு சாராருக்கு மறுக்கப் பட்டு வந்தது. இவர்கள் பொருளா தார ரீதியாக மேம்படுவதற்கும் சூழல் இருந்தது. சுயமுயற்சிகளில் ஈடுபடு வதற்குச் சொந்தமாக விவசாய
வாழ் விடச் தடையாக
நிலங்கள் இருக்கவில்லை. வாழ்விடங் களை அமைத்துக் கொள்வதற்காக சிறிதளவு நிலங்கள் மட்டும் இருந்தன. இவை இயல்பாகவே சமூக ஒடுக்குமுறையில் நகர்ந்து செல்வதற்கு தடைகளை விதித்திருந்தன. ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டும் தென்னிலங்கையில் வியாபார முயற்சி களில் ஈடுபட்டு வாழ்க்கையில் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் சமூக நகர்வை எண்ணக்கூடிய வழிமுறையாக்க கல்வி யைத் தேர்ந்தெடுத்தமை சரியான வழியாகவே அமைந்தது. இதற்குத் தேவரையாளி இந்துக்கல்லூரி உறுதி யான அடித்தளத்தை இட்டிருந்தது. இக்கல்லூரியின் வெற்றியிலே முருகேசு உபாத்தியாயருக்கும் பங் குண்டு. அங்கு கற்ற மாணவர்கள் உயர் கல்வியடைவுகளைப் பெற்றமை யால் நல்ல தொழில் வாய்ப்புகளைப் பெற்றார்கள். முதற்படியாக அநேகர் ஆசிரியர்களாக வரமுடிந்தமையால் அவர்களுடைய பொருளாதாரக் கட்ட மைப்பில் மாற்றங்கள் உருவாகின.
அடுத்த கட்டத்திலே ஆசிரியர்களின்
之4
 
 

t D 665); வழிகாட்டல்கள் இன்னும் பலரைக் கல்வியில் வைத்தன. இன்றைய பொறுத்த வரையில்
நாட்டங் கொள்ள நிலையைப் கணிசமான அளவில் மாற்றங்கள் உண்டாகி வருதலும், துரித நகர்வு ஏற்படுதலும் மகிழ்வு தரும் விடயமாகும்.
முருகேசு ஆசிரியரின் கல்விப் பணிகளில் காலத்தால் நிலைத்து நிற்கக்கூடிய பணியாக அவர் உரு வாக்கிய பாடசாலைகள் அமைந் துள்ளன. கவிஞர். மு.செல்லையா அவர்கள் தேவரையாளிச் சைவ வித்தியாசாலையை விட்டுச்சென்ற காலத்தில் அவருக்கு ஒரு பாடசாலை அவசியமாயிற்று. மற்றும் பிரதேச ரீதியாகப் பொழுது அல்வாய் வடக்கு மாறாம்புலம்,
பார்க்கும்
மற்றும் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கிராமங்களை மையப்படுத்தும் கல்வி நிறுவனமொன்றும் அவசிய மாகக் காணப்பட்டது. இவ்விரு தேவைகளும் முனைப் படைந்த வேளையில், ஊர்மக்களின் ஒத்துழைப் புடன் அல் வையூர்ச் சிறீலங்கா வித்தியாசாலை 1954இல் உருவாக்கப் அவர்களும் , முருகேசு உபாத்தியாயர் அவர்களும் தோளோடு தோள் நின்றமையால் இப்
கவிஞர்
பட்டது.
பாடசாலை துரித முன்னேற்றம் அடைந்து வடமராட்சியில் குறிப் பிடத்தக்கதொரு பாடசாலையாக விளங்கிற்று. இப்பாடசாலையை உருவாக்கிய முருகேசு உபாத்தியாயர், வாழ்ந்திருந்த புத்தூர் கிராமத்து
25
.
மக்களின் வேண்டுகோளை ஏற்று அங்கும் ஒரு பாடசாலையை 1957இல் பூரீ விஸ்ணு வித்தியாலயம் என்னும் பெயருடன் உருவாக்கினார். இப்பணி யின் பலாபலன்களை அந்தக் கிராமத்து மக்கள் அறுவடை செய்து வருகின் றார்கள். W
1940கள் தொடக்கம் 1960கள் வரையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற சமூக விடுதலைப் போராட் டங்கள் சற்று வித்தியாசமான செல் நெறிகளைக் கொண்டிருந்தன. கவிஞர் செல்லையா, சி.வல்லிபுரம், ஆ.ம. செல்லத்துரை ஆகியோருடன் முருகேசு ஆசிரியரும் இணைந்து இப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இந்த முன்னோடிகள் உயர் சமூகத் தினரோடும் அக்காலத்து உயர் நிர் வாகப் பணிகளில் ஈடுபட்டவர் களுடனும் சிறப்பான முறையில் கண் ணோட்டம் கொண்டிருந்தமையால் சாத்வீகப் போராட் டங்களை முன்னெடுத்துச் செல்லல் சாத்தியமாக இருந்தது. இந்தியாவில் சமஸ்கிருத மயமாதலும் இலங்கையில் பெளத்த சமூக விடுதலைக்கான எடுத்துக்காட்டுகளாக இருந்தபோதிலும் அதற்கு இயைந்து போகவில்லை. ஆயினும் பிற்காலங்களில் குறிப்பிட்ட தொரு சந்தர்ப்பத்தில் முருகேசு உபாத்தியாயர் அவர்கள் சில முரண்
அமைதியான,
மயமர்தலும்
எம்மவர்கள்
பாடான திருத்தங்களுடன் செயற் பட்டார் என்றும் அறிய முடிகின்றது. ஆயினும் அதற்கான சான்றுகள்

Page 15
வலுவாக இல்லை. தாலும் இந்தியச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த எமது ஆசிரியர்கள்
எப்படியிருந்
ஆழமான சைவ சமய உணர்வும் தமிழ் மொழி அபிமானமும் காந்திய நெறியில் பக்தியும் கொண்டிருந்தமை அவர்கள் தம்மை உயர் சமூகத்தினர் மத்தியில் தம்மை நிலைநிறுத்துவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியாகவே சிலர் தவறாகப் புரிந்துகொண்டனர். அத்தகைய விமர்சனங்களுக்கு அவர்கள் அஞ்சாமல் செய்த முயற்சியே மக்கள் மத்தியில் விழிப் புணர்வையும் பொறுப்புணர்ச்சி யையும் ஊட்டின. அவர்கள் சென்ற பாதை உறுதியானது என்பதால் தான் வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரக் கோயில், யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் மற்றும் நல்லூர் கந்தசுவாமிக் கோயில் என்பன அமைதியான
மல்லிகையின் ஆழ்ந்த அநுதாபங்கள்
வாக்குச் சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் சமீபத்தில் நம்மை விட்டு மறைந்து விட்டார். அவரது இழப்பால் துயருற்றுள்ள குடும்பத்தினர், இலக்கிய நண்பர்கள் ஆகியோருக்கு எமது அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
অs X
- ஆசிரியர்
முறையில் திறந்து வைக்கப்பட்டன. இதன் பின்னர் நீண்ட காலமாக இத்தகைய பெறாமற் போனதும் தொடர்ந்து மார்க்சிசவாதிகளால் ஆரம்பிக்கப்
முயற்சிகள் இடம்
பட்ட ஒரு சில முயற்சிகளின் பின்னர் மீண்டும் தோற்றுப் போனதும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் முழுமையான வெற்றிகளை ஈட்டிக் கொள்வதற்கும் தடையாக இருந்தது.
கல்வி, விடுதலைப் பங்கேற்றமையினாலேயே முருகேசு
மேம்பாடு,
F (typ S5
போராட்டங்களில்
உபாத்தியாயர் போற்றப்பட வேண்டி யவராகி நின்றார். அவரது இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு “சேவாதிலகம்' என்ற பட்டமளித்து எமது சமூகம் உண்மையிலேயே தமது பொறுப்பினை உணர்ந்துள்ளார்கள்.
2G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழு வேண்கும் நான்..!
- கெக்கிராவை ஸஅலைஹா
கண்களுக்குள் ஒரு சாகரம்
காண நேர்ந்ததே,
கண்ணா நீயா இது.?
ஏனழுதாய் என் கண்மணி? நேசம் என்றதோர் நாமத்தில் உன்னை நான் சிதைத்து விட்டேனா? என்னை அழக்கூடாதென்றாயே. என் கண்ணிர் உனக்குப் பிடிக்காதென்றாயே. பின்னே நீ மட்டும் ஏன்
கண்ணிர் மல்கினாய்? நான் வேறு நீ வேறென்று சொல்லாமல் சொன்னாயோ? இது கண்ணனை நினைக்கும் நாளாமே. கண்ணன் ராதையை நினைக்கும் நாளாமே. ஆயின், நீ என்னை நினைக்கிறாயா கண்மணி? என்னை நினைக்கையில் உறைந்து கிடந்த உன் அழுகை நதி கண்ணிராய் உடைந்து வெளிக் கிளம்பிற்றா..? கண்களாய் இருக்க வேண்டிய நானே, உன் கண்ணிராகிப் போனது இந்நேசக் கதையின் சோக அத்தியாயமா கண்ணா? பேசாமல் இருந்து விடுவோம்' என்றாயே ஒருநாள் மெளனமாய் இருந்து விட்டாலும், நேசத்தை இனி நம் கண்ணிர் பேசுமோ? நம் பெருமூச்சுகள் பெரிதாய்ச் சொல்லுமோ? நாமிருவரும் ஒருவருக்கொருவர் வார்த்தைகளாகிப் போவோமோ? நான் எட்டியும் பார்க்க முடியாத,
ராஜதானியா உனது?
27

Page 16
உன் கோயிலில் நான் சிற்பமில்லையா? உன் கைகளுக்குள் வந்தடைந்த மைனாக் குஞ்சு நானா? எதை எண்ணி அழுதாய் கண்மணி? என்னைப் புரிந்து கொள்ள மாட்டாயா நீ.? உன் அன்பின் பாயில் துயில் கொள்ளவும், உன் நேசப் பாடலில் மனம் நிரம்பி வழியவும், உன் வானப் பரப்பில் என் முதல் சிறகு விரிக்கவும் எதிர்ப்பார்த்துக் கிடக்கின்ற என் நேசத் தவம் உனக்குப் புரியவில்லையா?
ஆயின்,
கொஞ்சம் பொறு கண்மணி. உனக்கே என்னைப் புரியவில்லை என்ற அவமானத்தை அழிக்கவும், உனக்கே நான் கேள்வியாகிப்போன சோகத்தைச் சொல்லவும், ஒரு சமுத்திரம் அளவேனும் நான் அழவேண்டும்!
గJఒసగి аосолст ఏసెటబడి
áഗൃ/? ருெதடலை అనినీడామిల
ပÁ;?)လွှyĀ@ αλήη GoAnjašn.
Zy [በNM፴፫ክõ[ዛህiጻ∂ለቦW!
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சகல ஆக்கங்களையும் அவரிடமிருந்தே நேரில் பெற்றுக் கொள்ளலாம். அவரே கையெழுத்திட்டுத் தருவார்.
LDfb0]Lb பள்ளிக்கூட, பொது நூலகங்களுக்கும் தேவையான நூல்களையும், மல்லிகை ஆண்டு மலர்களையும் மல்லிகைப் பந்தலில் பெற்றுக்
GasTeiteTT sortb.
28
 

செல்வச் சந்நிதிமுருகன் கோயில் திருவிழாக் கோலத்தில் சிறப்பாகத் தெரிந்தது. இரவைப் பகலாக்கும் விதத்தில் மின்சார வர்ண விளக்குகள் அங்குள்ள மரங்கள் பூராவிலும் உள்ள கிளைகளில் இருந்து ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுர உச்சியில் பிரத்தியட்சமாய் உள்ள வேல் ஒன்று ஜெகஜோதியாய் ஒளி வீசியபடி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதைப் போலத் தெரிந்தது. கருவறையில் காட்சி தரும் முருகனை வணங்கிவிட்டுக் கோயிலையும் மூன்று முறை வலம்வந்து மூலவரை வணங்குகிறார்கள் பக்தர்கள். கோயிலின் உள்ளே தவில் சத்தம் தொடங்குவது கேட் கிறது. நாதஸ்வரமும் தொடர்ந்தது.
elడాయి அடல்கஹில்லை
- நீ.பி. அருளானந்தம்
அங் கே ஆலய முன்றில் விண்ணார்ந்து வளர்ந்திருந்த ஒரு பெரு மரத்துக்குக் கீழே அவன் நின்று கொண்டிருந்தான். அங்கு நின்றிருந்த அழகான பட்டுக்கரை வேட்டி கட்டி வந்த தன்னைப் போன்ற இளைஞர்களையெல்லாம் அவன் புதினம் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இடங்களிலேயெல்லாம் நடந்து திரிகின்ற இளம் பெண்களின் மேனியில் வர்ண ஒளிகள் கவிந்ததால் - தேவதைகளோ இவர்கள்? என்று வியக்குமளவிற்கு அவனுக்குத் தெரிந்தார்கள்.
இளமை எண்ணங்கள் அவன் இதயத்தில் இருந்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு என்னத்தைத்தான் அவனது கண்கள் தேடும். சந்நிதி முருகனைக் கும்பிடவென்று அவன் கோயிலுக்கு வந்திருந்தாலும் அழகே உருவான அந்த முருகனின் பக்தன் என்ற அளவில் காண்பதையெல்லாம் ரசிக்கும் அளவுக்கு அவன் ஒரு ரசிகனாகவே இருந்தான். பூ, செடியிலே பூத்திருக்கும் போது அதற்கு ஒரு அழகுதான் உண்டு. அதே பூக்கள் பூவையரின் கூந்தலில் இருக்கும் போது முன்னை யதை விட அதற்குப் பேரழகு வந்துவிடுவது வாஸ்தவம்தானே! இதன் பொருட்டு அந்தப் பூக்களா இல்லை பூவையரா உண்மையில் அழகிற் சிறந்தவர்? என்று அதற்கு விடை காண முடியாமல் அதிலே நின்றபடி அவன் நினைத்துக் கொண்டு நாலாபுறமும் நடந்து திரிகின்ற அந்தப் பெண்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.
இளமை எப்போதுமே அழகுதான். அந்த அழகு தன்னில் அதிக நாள் நிலைக்க வேண்டும் என்று அவன் மனம் ஆசைப்பட்டது.
2S)

Page 17
ஆலய முன்றிலில் பார்த்த இட மெங்கும் கண்குளிரும் பொன்மணல். எத்தனையோ பேர் அந்த மணல் படுக்கை யில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒலி பெருக்கியிலிருந்து கேட்கும் சீர்காளியின் பக்திப் பாடல் கேட்கக் கேட்க தித்திப் பான தேனைப் போல சுவைக்கிறது. அந்த வெளியில் வீசிய காற்று உச்சுவா சத்தையும், நிச்சுவாசத்தையும் ஆனந்தப் படுத்தியது அவனுக்கு.
அங்கே நின்று கொண்டு அங்குள்ள வர்கள் ஒவ்வொருவரையும் அவன் மனதுக்குள்ளே கொண்டுவந்து கணக்குப் போட்டுப் பார்க்கிறான். அவன் நின்று கொண்டிருக்கும் இடத்துக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கிற அந்த இளம்தாயும், அவள் கணவனும் கனகுவியாக கதைகள் பல சொல்லிச் சிரித்துக் கொண்டிருக் கிறார்கள். அந்தக் குழந்தை மணலிலே கொஞ்சத் தூரம் தத்தித்தத்தி நடந்து சென்றுவிட்டுத் திரும்பி விரைவாக காலடியெடுத்து வைத்துத் தாயின் மடி யிலே வந்து விழுகிறது. பின்பு தாயின் முகத்தைப் பூப்போன்ற தன் பிஞ்சு விரல் களால் வருடிக்கொண்டு அன்னத்தின் வாய் போலிருக்கும் தன் சின்ன வாயைத் திறந்து மழலை பேசுகிறது. குண்டுமணி மாதிரி சின்னச் சின்னக் கண்கள் கொண்ட அந்தக் குழந்தையின் அழகு அவனைக் கட்டி இழுப்பதாக இருந்தது. சின்ன வெள்ளரிப் பழம் போலிருந்த அந்தக் குழந்தையின் பருவத்திலே அவன் மனம் அவாக் கொள்கிறது. "கள்ளம் கபடம்
'அம்மா. அம்மா' என்று
666): Q
தெரியாத இந்தக் குழந்தை போல் நானி ருந்தால்..' என்று நினைத்துக் கொண்டு இன்னும் எட்டவாய் அவன் தன் பார்வையை நகர்த்துகிறான்.
இப்போது அவன் காண்பது ஒரு கிழத் தம்பதியினரை. உடல், சுருக்கங்கள் கண்டாலும் உள்ளம் சுருங்கி மூப்படைய வில்லை அவர்களுக்கு. அந்தக் கிழவனின் பொக்கை வாய்ச் சிரிப் பினிலே மனம் நிறைவடைந்தவள் போல் முகம் மலர்ந்து காணப்படுகிறாள் அந்தக் கிழவி.
ஒரு மனிதன் தனது வாழ்க்கைக் காலத்தில் எத்தனை விசித்திரமான அனுபவங்களைக் காண்கின்றான். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவமென்று மாறுபடும் இந்த வாழ்க்கைக் கோலத்தில் எதுதான் அவனுக்கு நிலைத்திருக்கிறது? இந்தத் தத்துவார்த்தமான கேள்வியை அவன் மனதில் நினைத்துக் கொண்டே கோயில் கோபுரத்தைப் பார்த்தான்.
'ஓம்' என்று ஒளி விளக்கால் எழுதி யிருந்த அந்தப் பிரணவ மந்திரத்திலே அவன் மனம் ஒருகணம் நிலைத்துப் பின்பு மறுபடியும் அவனது பார்வை மணல் தரைக்கு மீண்டது. அங்கே இருளும் ஒளியுமான ஒரு இடத்திலே இருக்கும் அந்த இளம்பெண்ணின் பார்வை தன்னைத் துளைப்பது மாதிரி அவனுக்குத் தெரிகிறது. இடையிடையே ஆனந்தமான புன்சிரிப்பும் அவளிடத்தே பிறக்கிறது. ஏதோ மின்னலைத் திடீ ரென்று பார்த்தது போலக் கொஞ்ச நேரம் அவன் செயலோய்ந்து நின்றான். அவளை
3O

யாரென்று அவனுக்குத் தெரியவில்லை. சுழற்சியாக வருகின்ற சிந்தனை வட்டத் துக்குள்ளே அவளை யாரென்று ஞாப கத்தில் கொண்டு வரமுடியாத நிலையில் அவன் திண்டாடுகிறான். இப்படிச் சிரிப் பதற்கு என்னை நன்றாக அறிந்தவளாக அவள் இருக்க வேண்டும். இவள் யார்? என்று அறிய இன்னும் போட்டு தன் மூளையைக் குடைகிறான்.
அவளோ இவன் மீது வைத்த கண் பார்வையை விலத்தவில்லை. அவள் இத ழோரங்களில் தொடர்ச்சியான புன்னகை. இங்கே என் அருகில் வா! என்ற விதமாக அந்தப் பார்வை காந்தம் போல் அவனை
அவளிடமாக இழுக்கிறது.
அவன் கூச்ச சுபாவம் உள்ளவன் தான் என்றாலும் அதையெல்லாம் அந்த இடத்திலே போக்கிவிட்டு அவளின் பார்வை கொடுத்த துணிச்சலில் அவளுக் குக்கிட்டவாய்ப் போக நடந்தான். அவள் காலை மடித்து உட்கார்ந்து கொண்டி ருக்கும் அழகே தனி அழகுதான். அந்த ஒயிலான சுந்தரிஅவன் நடந்து வருகின்ற பக்கமாய்த் தன் கழுத்தைத் திருப்பிப் பார்க்கிறாள். மயில்தோகை போல் அவள் உடுத்தியிருந்த அந்தக் குடைவெட்டுக் கவுண் அவளைச் சுற்றி நிலத்தில் விரிந்து கிடக்கிறது. அந்த ஆடைக்கு அவளது தேகவாளிப்பும் சோபையும் உயர்ந்து தோன்றிற்று.
அவள் ஒரு ரோஜாப் பூவைத் தலை யில் சூடியிருக்கிறாள். கற்றையான தலை முடியில் இருக்கும் அந்த ஒற்றை ரோஜா மலரின் மூலம் இன்னும் அவள் எடுப்
31
பாகத் தெரிகிறாள். அவள் நெற்றியிலே பிறை நிலா போல் இருக்கும் அந்தப் பொட்டு மின்னொளி பட்டு வர்ணஜாலம் காட்டுகிறது. அவளது யெளவனத்தின் நிறைவு ஒவ்வொரு அங்கத்தின் அசை விலும் தென்பட அவளது மாந்தளிர் நிற மேனியழகை விழுங்குமாப் போல் பார்த்துக் கொண்டே அவளின் கிட்டவாய் அவன் போனான்.
"சேகர்” என்று அவனின் பெயரை மயிலிறகு உதடுகளால் மென்மையாக அழைக்கிறாள் அவள். பின்பு சிரிக் கிறாள். சிரிக்கும் போது கன்னங்கள் நாவல்பழச் சிகப்பாய் மாறுகிறது.
"என் பெயர் எப்படித் தெரியும் உங்களுக்கு?" என்று அவன் கேட்க,
"தெரியும்!" என்று சொல்லியபடி விழிகளை அகலத் திறந்து முகம் விகாசித்தாள் அவள்.
"உங்களின்ரை முகம் எங்கயோ நான் கண்ட மாதிரி பழக்கமானதுதான். எண்டாலும் எங்கனேக்க எப்ப கண்டன்? எண்டதுகள்தான் இப்ப ஞாபகம் வரேல்ல!??
கடற் சோகிகளை நிலத்தில் கொட் டினாற் போல மீண்டும் அவன் சொல் வதைக் கேட்டு அவள் "கலகல"வென்று சிரிக்கிறாள். அப்படிச் சிரித்தவள் தனது சிரிப்பை இடைநிறுத்தி விட்டு, "இன்னும் உங்களுக்கு நான் ஆரென்று ஞாபகத்தில வரேல்லயே. கொஞ்சம் ஊண்டி ஞாபகப்படுத்திப் பாருங்கோ. இந்தச் செல்வி ஆரென்று அப்ப உங்களுக்குத் தெரியும்"

Page 18
“செல்வியா எந்தச் செல்வி?” என்று விட்டு மீண்டும் தன் நினைவுகளைப் பின்னோக்கிச் செலுத்தினான்.
'இவள் அவளாகத்தான் இருக்க வேண்டும். இருக்க வேண்டுமென்பதாய் ஏன் ஒரு கேள்விக் குறியை வைக்க வேண்டும். .அவள்தான். நிச்சயமாக அவள்தான் இவள். என்ற முடிவுக்கு வந்துவிட்டு, “நீங்க. நீ. நீ.கமலம் மாமியின்ர மகள்தானே?' என்று அவளைக் கேட்டான் இவன்.
அவன் அப்படிக் கேட்டதும் அவள் இதழ்க்கடையில் சிரிப்புச் சுழித்தது. உடனே தன் கை விரல்களைப் பந்தாய் வாய்க்குள் அடக்கிக் கொண்டு "ஒம்’ என்றதாய் இருக்க தலையை மட்டும் ஆட்டினாள்.
“கனகாலம் உன்னைக் கண்டு. எட்டு வருஷங்கள் இருக்குமா?"
'''
"அப்பவெல்லாம் நாங்க மாமி மாமி யெண்டு உன்ரை அம்மாவைக் கூப்பிட்டு | பகிடி பண்ணுவம். அது உனக்கு ஞாபகம் இருக்கே?
அவன் அப்படிச் சொல்லவும் அவளுக்கிருந்த உற்சாகம் ‘புஸ்சென்று இறங்கி விட்டது. அவளுக்குக் கவலை வந்துவிட்டது. சொட்டு நீர் சுமந்த விழிச் சுடர்களோடு அவள் கீழே தலையைத் தாழ்த்தி நிலத்தைப் பார்த்தாள். பின்பு விரல்களால் நிலத்தில் கோடு கிழித்தபடி அவள் இருந்தாள்.
it. அந்த நேரம் அவனது நினைவுகள் அவளது சின்ன வயதுக் காலக் கதையை ஊன்றி ஊன்றி ஆராய்ந்தது. இப் பொழுதுக்கும் அப்பொழுதுக்கும் உள்ள இடைவெளி எட்டு வருஷங்கள்.
அப்பொழுது இவளுக்கு பன் னிரண்டு வயதிருக்கும். இவளும் தாயு மாகச் சேர்ந்து அந்நேரம் கடைத் தெரு வழியே பிச்சை எடுத்துக்கொண்டு திரிந் தார்கள். கழுகு மாதிரி அலையும் காமுகரி னது கண் பார்வைகள் அப்பொழுதே இவளது வளர்ச்சியடைகின்ற அங்கங் களை துளைக்கத் தொடங்கிவிட்டன. தங்கள் காமப் பசிக்கு மலைப்பாம்பு போல் அவளை விழுங்க அவர்க ளெல்லாம் காவல் கிடந்தார்கள். அவர் களிடமிருந்ததெல்லாம் இவள் பிழைப் பாளா? என்று இவனுக்குச் சந்தேகம் இருக்கவும் செய்தது.
இவளின் தாய் ஒரு மனநோயாளி. இந்தப் பூவைப் பாதுகாக்க ஒரு முள் வேலியாய் அவள் இருக்க மாட்டாள் என்றே அவன் நினைத்தான். இப்படியாய் இருந்த காலத்தில் திடீரென்று இந்த இருவரையும் அந்த ஊரில் காணவில்லை! என்ன நடந்தது அவர்களுக்கு? என்று எல்லோரும்தான் விசாரித்தார்கள். எல்லோ ருக்கும் பின்பு அவர்களைப் பற்றிய கதை ஒரு ப்ழங்கதையாய் ஆகிவிட்டது. அந்த நினைவுகளிலிருந்து அவன் விடுபட்ட பின்.
'உன்ரை அம்மாவுக்கு என்ன நடந்தது” என்று அவளைக் கேட்டான்.
32

GGSG); অs
"அம்மாவுக்கு மூளைப் பிசகு கூடிப் பேந்து ஒரு வாய்ச் சோறு கூட சாப்பிடா மலும் விட்டுப் போட்டா. பிறகு அப்பிடி யேயிருந்து அன்னந்தண்ணி ஒண்டுமே யில்லாமக் கிடந்து தன்ரை உசிரையே விட்டிட்டா” இப்படிச் சொல்லியதோடு அவள் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தாள்.
"அதுக்குப் பிறகு" என்று கேட்டு அவன் அவளது மெளனத்தைக் கலைத்தான்.
"எங்க நான் போறதெண்டு அதுக் குப் பிறகு எனக்கு ஒண்டுமே தெரி யேல்ல. எங்களுக்கும் சொந்தக்காரர் இருக்கினமெண்டுதான் முந்தி அம்மா எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தவ. எண்டாலும் அம்மா செத்தாப் பிறகு சொந்தக்காரரின் விடுவழிய போக எனக்கு விருப்பம் வரேல்ல. அம்மா இல்லாம றோட்டு வழிய திரிய எனக்குப் பயமாயி ருந்தது. அதால ஒரு விட்டில வேலைக் காரியா வேலைக்குச் சேந்தன். அங்க நடந்த கதையைச் சொல்லேக்க கொஞ்சம் மறைச்சும் சொல்ல வேணும். அந்த வீட்டுக்காறன் காமவெறி பிடிச்சவன். என்ன இரவு வழிய வந்து படுத்த பாயில வைச்சு தொந்தரவு செய்தான். எங்கயும் அப்ப நான் போக வழி தெரியாததால பிறகு அவன்ரை சபல சித்தம் போக்க நானும் அவன்ரை விருப்பத்துக்கு 'ஓம்'பட்டுப் போனன். காஞ்ச மாடு கம்பங் கொல்லேல பூந்த மாதிரி அவன் கொஞ்ச நாளா என்னை நாசப்படுத்தி னான். அது அவன்ரை மனிசிக்கும் பிறகு தெரிய வந்திச்சு. அதால அந்த வீட்டில
33
யிருந்து நான் கலைக்கப்பட்டன். அதுக்குப் பிறகு ஒழுங்கா வாழ ஒரு வழியும் தெரியாம வேற ஒரு வாழ்க் கைக்கு நான் என்னை தயார்படுத்தினன். வாழ்க்கை என்னைக் கடுமையாச் சோதிச் சதால அதுக்கெல்லாம் நான் துணிஞ்சன். இப்ப நான் பழைய செல்வியில்ல. பலருக்கும் தெரிஞ்ச செல்வி. இப்ப நான் சாம்பலைத் திண்டு வெண்ணையைப் பூசிக் கொண்டு திரியிறன். நான் எருக்கம் பூ மாதிரியானவள். ரோசாப்பூ மாதிரி யானவளல்ல சேகர் நான்'
"என்ன சொல்லுறாய் நீ"
விட ஆம்பிளையஸ்தான் ஒண்டுமே தெரியாத
'பொம் பிளையளை
வயள் போல வேசம் போடுறவயள். நான் பச்சையாகச் சொல்ல வேணுமே என்ரை வாயால நான் ஒரு வேசையெண்டு? பட்டவர்த்தனமாக அவனைக் கேட்டாள் அவள்.
அவன் விழி இ ைமக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இப்படிச் சொன்னாலும் அவ னால் அவள் சொல்வதையெல்லாம் நம்ப முடியவில்லை. அவள் கைபடாத ரோஜா போன்றே அவனது கண்களுக்குத் தெரிந்தாள். பரிசுத்தத் தன்மை கர்ணனின் கவசம் போல் அவளைச் சுற்றி இருப்ப தாக அவனுக்குத் தெரிந்தது. ஒரு பெண்ணுக்குரிய பரிபூரண லட்சணங் களும் அடங்கியதாய் காட்சி தரும் இவளா விபச்சாரி?
'இல்லை. நான் நம்பேல்ல. உன்ரை மனச்சுத்தம் முகத்தில தெரியுது. களங்க

Page 19
மில்லாதவள் மாதிரித்தான் நீ எனக்குத் தெரியிறாய். நான் பூவாக நினைச்சு உன்னைப் பார்க்கிறன். நீயேன் முள்ளாக உன்னை நினைக்கிறாய்?"
"நீங்கள் உங்களையே ஏமாத்துறிங்க சேகர். உங்களுக்குத் தீர்த்தத்தையும் தெரி யேல்ல, சாக்கடையையும் தெரியேல்ல. உலகத்தை அறியாத ஒரு அப்பாவியாத் தான் நீங் எனக்குத் தெரியிறீங்க"
“நீ நினைக்கிறதுதான் பிழை. உன்ரை பழைய சீவியத்தை நான் திரும் பிப் பாக்கேல்ல. நீயும் கடந்து போன காலத்தில நடந்து போன சம்பவங் களையெல்லாம் மறந்திடு. அதற் கெல்லாம் நான் ஒத்தாசையாயிருக்கிறன். உண்மையா என்ரை மனதைத் திறந்து சொல்லுறன். உன்னை நான் வாழ வைக்கிறன் செல்வி. என்னை நம்பு”
இதைக் கேட்டதும் அவள் தனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியாது கெக் கட்டமிட்டுச் சிரித்தாள். அவளது சிரிப்பில் கரைந்து மறைந்திருக்கின்ற உண்மை என்ன , என்று அவனுக்குப் புரியவில்லை. அவர்களுக்குத் தூரமாய் இருந்தவர்கள் கண் பார்வையெல்லாம் இவர்களது பக்கமாக அந்த நேரம் ஒருமித்துத் திரும்பின. கண்களா அல்லது கட்டுவிரியன்களா என்பது மாதிரியாக இருந்தது அவர்களது பார்வை. அவர் களது பார்வையிலிருந்து தப்பிவிட அவனது பார்வை மரங்களிலே உள்ள வர்ண விளக்குகளின் பக்கமாகக்
கவிந்தது.
666):
'எதுக்கும் உனக்கு இந்தச் சிரிப்பு எங்கயிருந்துதான் வருகிதோ?" என்று சொல்லி அவன் அலுத்துக் கொண்டான்.
"வாழ்க்கையில அது ஒன்று மட்டும் தானே எனக்கு நிம்மதி. சந்தோஷம் வந் தாலும் சிரிக்கிறன். கவலை வந்திட் டாலும் சிரிக்கிறன். ஏன் எதுக்குச் சிரிக் கிறனெண்டு எனக்கே தெரியேல்ல சேகர். அப்பிடியாப் போயிட்டன். எல்லாத் துன்பத்தையும் அனுபவிச்சு அனுபவிச்சு மரத்துப் போயிட்டுது மனம். உடம்பும் அப்பிடித்தான் மரத்துப் போச்சு. உண் ணாணை உங்களுக்கு மட்டும்தான் இதுகளை மனம் திறந்து சொல்லுறன்"
அஸ்தமிக்கும் ஆதவனைக் கண்ட அல்லி மலரைப் போல் அவள் முகம் வாடி விட்டது.
"எல்லாஞ் சரி, உன்னை நான் வாழ வைக்கிறனெண்டு மன உறுதி எடுத்துக் கொண்டு முன்னம் நான் அதையெல்லாம் உனக்கு மனசைத் திறந்து சொன்னன். அதைக் கேட்டிட்டு நீ ஏன் சிரிக்க வேணும்”
"ஒமோம் சிரிச்சன். உண்மையில நீங்க சொன்னதுகளைக் கேட்டு மனம் சந்தோஷப்பட்டுத்தான் நான் சிரிச்சன். இந்த விஷயத்தில ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் அதற்கெல்லாம் துணிஞ்ச தாய் நீங்க நிக்கிறீங்க. அதை நினைச்சு எனக்கு சந்தோஷம்தான். உங்கடை கொள்கைகள் உங்களை பெரியவராக்கும். ஆனா, உங்களைப் போல என்னால வாழ முடியாது. குற்ற உணர்ச்சிகளோடு உங்களோடு சேர்ந்து வாழேக்க நான்
34

666): ཡམས། །བུ་
மனம் கருகிப்போயிடுவன். வேண்டாம் சேகர். இப்படியெல்லாம் செய்து உங்களைச் சங்கை குலைக்க வேண்டாம். நான் உங்களை உண்மையிலேயே மதிக் கிறன். வாடுகிற பயிரைக் கண்டாக் கூட வாடுகிற மனம் கொண்டவராய் நீங்க இருக்கிறீங்க. அப்பிடி மனம் உங்களுக்கு. அது எனக்கு நல்லா விளங்குது. உங்களை மாதிரி குணம் உள்ளவயளை நான் உண்மையாகவே மதிக்கிறன். என்ரை உயிர் இருக்கு மட்டும் உங்களை நான் ஞாபகத்தில் வைச்சிருப்பன். எண் டாலும் இப்போதைக்கு நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போயிடுங்கோ. பிளிஸ் சேகர் நான் சொல்லுறதைக் கேளுங்கோ, என்னை நிம்மதியாய் இதில இருக்க விடுங்கோ"
அப்படி அவள் சொல்வதைக் கேட்டு உடனே அவன் மனம் சோர்ந்து விட்டான். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் உண்ர்ச்சி வசப்படுபவன். எப்போதுமே உண்மை பேச வேண்டும் என்ற கொள்கை உடையவன். அப்படியான வனுக்கு அவள் அவ்வாறு சொல்லியது யாரோ நான்கு பேர் முன் அம்மணப் படுத்தப்பட்டது மாதிரியான கூச்சமாக வந்தது. திடீரென்று அவன் உள்ளத்தில் விழிப்பு ஏற்பட்டது. இந்தச் சொற்ப நேரத்தில் இப்படி யெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனா? என்று அவன் தன்னையே மனதுக்குள்ளாக கேட்டுக் கொண்டான். அந்த மரங்களிலிருந் தெல்லாம் சடசடவென சிறகடித்துக் கீழ் இறங்கும் காக்கைகள் கூட்டம் போல அவன் சற்று முன் எடுத்த தீர்மானம்
35
ܢ - -- -- -- -- -- -- -- -- -- --
எமது ஆழ்ந்த அநுதாபங்கள்
பேனா பிடிப்பவர்களுக்கு இந்த மண்ணில் இதுதான் கடைசி முடிவா?
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத் திற்காகத் தனது இன்னுயிரைப் பலி கொடுத்த ரி. சிவராமின் குடும்பத் தினருக்கு மல்லிகையின் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
-ஆசிரியர்
மனதிலிருந்து வெளிக்கிட்டு எங்கேயோ வெளியில் பறந்து போனது. கூரையேறிக் கோழி பிடிக்காதவன் வானத்திலேறி வை குண்டம் போக ஆசைப்பட்டானாம்" என்று யாரோ ஒருவன் அவனைப் பார்த்து கேள்வி கேட்டுவிட்டு கேலி செய்து சிரிப்பது போலவும் ஒரு பிரமையும் அவனது மனதில் எழுந்தது. உடனே அங்கிருந்து செல்வியிடம் கூட கூறி விடைபெற்றுக் கொள்ளாது அவ்விடத்தை விட்டு கிறுகிறுவென்று அவன் நடந்தான். கோயில் வளாகத்தைத் தாண்டிப் பஸ்தரிப்பு நிலையத்தை அவன் சென்றடைந்தபோது 50 இலக்க பஸ் அச்சுவேலிக்குப் போகவென்று புறப்பட ஆயத்தமாயிருந்தது.

Page 20
வானம்
9 பாடிகளின்
நடுவே
ஓர்
ளெமுைக்
குயில்
- LDr. Lrr6VérolæLb -
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்ஹமீத் அவர்களது பாராட்டு விழாவை முன்னிட்டு பிரித்தானியா, உலகத் தமிழ்க் கலையகம் வெளி யிட்டிருக்கும் மலரில் பதிவாகியிருக்கும் கட்டுரை யொன்றில் இப்படிச் சில வரிகள்.
"விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளைத் தெரிவு செய்து, தொடர்ந்து வந்த காலங்களில், நிகழ்ச்சிகளினூடாக மக்களுக்கு அளித்திருந்தார்.
அதற்குக் காரணம், அவர் மனதில் எங்கோ ஒரு
மூலையில் பதுங்கிக் கிடந்த பொதுவுடைமை அல்லது சமத்துவக் கொள்கைகளே எனின், அது மிகையல்ல. தனக்களிக்கப்பட்ட மட்டுப்படுத்தப் பட்ட அதிகாரத்திற்குள் மிகச் சிறப்பான விழிப் புணர்வுக் கதைகளை அவர் தெரிவு செய்தது அசாத்தியம்."
இக்கருத்துருவாக்கம், அப்துல் ஹமீத் தயாரித்து ஒலிபரப்பிய ஒலி மஞ்சரி" என்ற சஞ்சிகை நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சிறு கதையைக் கேட்ட பின்னர், வானொலி நேய ரொருவரது சிந்தனையை ஆக்கிரமித்ததாகும். இவரொரு பத்திரிகையாளர். பெயர் ஜெயபூரீ.
இக்கருதுகோளோடு ஹமீதின் வானொலிப் பணியை உரைத்துப் பார்க்கும் பொழுது, நேயரின் மதிப்பீடு உணர்ச்சி வெளிப்பாடல்ல. அவரது ஆழ் மனதில் நீண்ட நெடுநாள் அலை மோதிய தேடல் களின் வெளிப்பாடாகவே கருத முடிகின்றது. இதன் மூலமாக அப்துல் ஹமீத் ஓர் அரச ஊழிய ரென்ற தடத்திலிருந்து ஒரு சமூகப் பணியாள னென்ற திருப்புமுனைக்குப் பெயர்த்தப்படுகிறார்.
3G

666):
அவரது பணியில், படுத்தப்படாது அடிமட்ட, வலுவற்ற, பாமர மக்களது சார்பு நிலை விஞ்சியே நிற்பதை அறிவுசார் உலகம் ஏற்றுக் கொள்ளும். இம்மக்களை விழிப்பு நிலைக்குத் தட்டி எழுப்பி, நிமிர வைத்து, சமகாலச் சமுதாயத்தின் கவனத்தை
பிரகடனப்
அவர்கள் மீது பாய்ச்சுவதற்கு, ஹமீதின் அறிவிப்பாளர் உத்தியோகம் பயன்பட்டுக் கொண்டிருப்பது ஒரு புத்தம் புதுச் சமுதாயத்திற்கான விடியலை ஏற்படுத்தக் கூடியதாக அமைகின்றது.
தமிழ்ச் சிறுகதையைப் புதிய பாதை யில் திருப்பி விட்ட புதுமைப்பித்தன், வாழ்வின் அருவருக்கும் பக்கங்களைக் கலைத்துவ அழகோடு தமிழுக்குத் தந்த - இந்தியாவின் பாரதீய ஞானபீடப் பரிசைப் பெறும் இரண்டாவது தமிழ னென்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ஜெயகாந்தன், மோகமுள் நாவல் தந்த ஜானகிராமன் ஆகியோரின் கதைகளில் தன்னை இழந்திருப்பதாக ஹமீத் ஒப்புக் கொள்கிறார். இம்மூன்று படைப்பாளி களும் நவீன தமிழ் இலக்கியத்தின் கொடு முடிகளென்பதை இன்றைய இலக்கிய உலகு அறியும்! இவர்களது ஆற்றல்மிகு பேனாக்கள் சேரிகள், குப்பங்கள், சந்து கள் என்பனவற்றை உழுது, அங்கு வாழ்
வோடு போராடிக் கொண்டிருக்கும் ஏழை.
பாளைகளின் வாழ்வைச் சுற்றிச் சுழலும். இம்மூவரும் ஹமீதைப் பாதித்தார்க ளெனில், நொடிந்து போனவர்களின் அறிவுத்தளத்தை மேம்படுத்தி, அவர் களது பாமரத் தன்மையைத் துடைத்து, அவர்களையும் இன்ப மயப்படுத்த அவர் தனது ப்னியை அர்ப்பணித்தது
37
எவருக்குமே புதினமாக இருக்காது.
தமிழ் சினிமாவின் இசைத் தட்டுக் களுக்குள் அடைவு வைக்கப்பட்டிருந்த வர்த்தக ஒலிபரப்பைத் தமது கெட்டித்த கலைப் பற்றாலும், உழைப்பாலும் மீட் டெடுத்து, அதில் மக்கள் பங்களிப்பு களுக்கும் வசதி செய்து நெறிப்படுத்திய சிலருள் ஹமீதிற்குச் சிறப்பிடமுண்டு. W முன்னொரு காலத்தில் இசை மேட்டுக் குடியினரின் ஏகபோகச் சொத் தாக இருந்தது. கர்நாடக சங்கீதமென்ற சாஸ்திரிய இசை வழியூடாக மேட்டுக் குடியினரே இசையை ஆண்டு அனு பவித்து வந்தனர். ஏழை பாட்டாளி வர்க் கத்திற்கு இசை அந்நியமாகி நின்றது. கர்நாடக சங்கீதம் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதே தோஷமென்ற ஏதேச்சாதிகாரம் கோலோச்சியது! இத் துர்ப்பாக்கிய நிலையிலிருந்து இசை யின்பத்தை ஒரு துளியாவாவது சுவைத் துப் பார்ப்பதற்குப் பாமரரையும், அடி மட்ட மக்களையும் ஆற்றுப்படுத்தியது சினிமாவெனில் மிகையாகாது.
தமது கலாசாரத்தோடு, நாட்டை அபகரிக்க வந்தவர்கள் தங்களது இசை வடிவங்களையும் இந்நாட்டில் விதைத் தனர். அதில் 'பைலாவும் ஒன்று. இதை இன்றைய பழகு மொழியில் கூறுவதாகில் துள்ளிசை எனவும் கூறலாம். கண்டனங் களுக்கு மத்தியிலும் தமிழ் சினிமா இந்த இசை வடிவத்தையும் தத்தெடுத்தது. கர் நாடக சங்கீதத்தைக் கட்டுக் குலையாமல் வைத்திருக்க வேண்டுமென்ற இறுக்க மான கருதுகோளுடைய கல்கி, சுப்புடு
ஆகியோரால் கூட இதைத் தடுக்க

Page 21
முடியாது போய் விட்டது. இவ்வகையில் தமிழ்ச் சமுதாயத்தோடு ஊடாட்டம் பெற்றவை தான் பைலா இசையை ரிஷி மூலமாகக் கொண்ட பொப்பிசைப் பாடல்கள்.
"டிங்கிரி, டிங்காலே, மீனாட்சி சங்கதி சொன்னாளே."
“என்னடி மீனாட்சி."
"உனக்காக எல்லாம் உனக்காக."
“யாரடி நீ மோகினி." இப்பாடல் கள் தமிழ்ப் பரப்பில் நீக்கமற நிறைந்த ஜனரஞ்சகத்தைப் பெற்றன. இவைகளுக் குப் பெரும்பாலும் மேற்கத்திய வாத்தி யங்களே பின்னணி இசையை வழங்கின.
அடிமட்ட மக்கள் கூத்தும் கும்மாளத் தோடும் இரசித்து வரவேற்றனர். இவை மேல்தட்டு "மேதை'களையும் பாதித்த தென்றால் நூறு விகிதம் நம்பக் கூடியதே! எல்விஸ் பிரஸ்லி போன்றோரை நாள் முழுதும் கேட்டு இரசிப்பவர்கள் இவை களை விட்டு வைப்பார்களா? வாய் திறந்து பாராட்டாது விட்டாலும், குளிய லறைச் சங்கீதமாகவாவது சுகித்தனர்.
கர்நாடக சங்கீதத்தோடு இலகு சங்கீதத்தை இந்நாட்டிலும் உற்பத்தி செய் தால் என்ன? ஒரு புதிய பரம்பரையைத் தோற்றுவிக்கலாமே? என்ற இந்த முதல் முட்டையை அடை காத்தவர் அமரர். எஸ்.கே.பரராசசிங்கம். இவரே ஒரு கர் நாடக சங்கீதக்காரர். இருந்தும் எளி யோருக்காக இவரது இதயம் கனிந்தது. பகிர்தல் நோக்கோடு "மெல்லிசை" என்ற புதிய இசை வடிவத்தைச் சகல இசைப்
č? 6,656); பிரியர்களும் கேட்கும் வகையில் அறி முகப்படுத்தினார் - தனக்கு அப்பொழு திருந்த மட்டுப்படுத்தப்பட்ட அதி காரத்தைப் பாவித்து.
எஸ்.கே. பரராசசிங்கம் நாட்டார் பாடல்கள், ஈழத்து முன்னணிக் கவிஞர் களால் இயற்றப்பட்ட கவிதைகள் என்ப வற்றிற்கு மெட்டமைத்துத் தானும் ஏன்னய குரல்வளம் மிக்க சிறந்த மெல் லிசைப் பாடகர்களும் பாட அவற்றை வர்த்தக ஒலிபரப்பில் தான் தயாரித்து ஒலிபரப்பும் மலிபன் கவிக்குரல்" என்ற நிகழ்ச்சியில் சேர்த்தார். அக்காலத்தில் சிங்கள வாத்தியக் கோஷ்டியில் வயலின் வித்துவானாக இருந்த அமரர் றொக்சாமி நாட்டார் பாடல்களுக்குப் புது மெட்ட மைப்புடன், பின்னணி இசைக் கோர்வை யையும் சேர்த்தார்.
இந்த மெல்லிசை வடிவத்தை இரசித் தவர்களுள் அப்துல் ஹமீதுமொருவராக இருந்தார். நிகழ்ச்சி சிறிது காலமே ஒலி பரப்பானது. ஒராண்டுக்குப் பிறகு, திரு. பரராசசிங்கம் அவர்களின் வீட்டு அலுமாரிக்குள் ஒரு நினைவாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த, மெலிபன் கவிக் குரல் பாடல்கள் கொண்ட இசை நாடாக் களை அவரது அனுமதியுடன் எடுத்து வந்து, வானொலி நிலையத்தில் தொழில் நுட்பவியலாளராயிருந்த குமார் கண்க ரட்ணத்தின் துணையோடு, ரசாயனமுலாம் பூசிய அலுமினியத் தட்டுக்களில் பதிவு செய்து, எவருடைய அனுமதியும் பெறா மலேயே தினந்தோறும் மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகும் இசைக்களஞ்சியம் நிகழ்ச்சியில் கடைசியாக நம்நாட்டுப்
38

ä: GSG)
பாடல் ஒன்று என அறிவித்து ஒலிபரப் பினார். மனதை நெருடிய இந்த விட யத்தை மனதில் காவித் திரிந்தவர் ஒரு சமயம் தான் கடமையிலிருந்த சமயம் இந்த மெல்லிசைப் பாடலொன்றையும் சேர்த்து ஒலிபரப்பினார். அப்பொழுது வர்த்தக ஒலிபரப்பில் கட்டுப்பாட்டாள ராக இருந்த அமரர் விவியன் நமசிவாயத் தின் செவிகளில் இப்பாடல் ஒலித்து விட்டது. விவியன் நமசிவாயம் சிறந்த தொரு இலக்கிய இரசிகர். மறுமலர்ச்சி, ஈழகேசரி ஆகிய ஈழத்து இலக்கிய முன் னோடி ஏடுகளில் கணிசமான ஈடுபாடு கொண்டிருந்தவர். இக்குழுக்கள் மத்தியில் பெருமதிப்பைப் பெற்றவர். ஈழத்துக் கலை வடிவங்களுக்குப் புது இரத்தம் பாய்ச்சுவது அவசியமெனக் கருதிய விவியன் ஹமீதைத் தேடினார். சந்தித்தார்.
"திரைப்படப் பாடல் நிகழ்ச்சியில் மெல்லிசையைக் கலக்காமல் அதற்கென் றொரு நிகழ்ச்சியைத் தயாரியும். ஈழத்துப் பாடல்களென ஒலிபரப்பாகட்டும். நேரத்தை ஒதுக்கித் தருகிறேன்” என மெல்லிசையில் ஆர்வங் கொண்டிருந் தவரைத் தட்டிக் கொடுத்தார். விடுவாரா ஹமீத்! ஈழத்தவர்களது மெல்லிசை வளத் தையும், கவிதைப் புனைவையும் பூமிப் பந்தில் சகலரும் கேட்டு அதிரும் படி யான இன்றைய உச்ச நிலைக்குத் தூக்கி விட்டார். நம் நாட்டுப் பாடல்கள்’ என்ற நிகழ்ச்சி, ஈழத்துப் பாடலாகப் பொலிவு பெற்றது. இதன் திரிபாகவே Popular Music என்ற பொப் இசைப் பாடல்கள் தொடர்ச்சி கண்டனவென்பதை இத் தருணத்தில் மறந்துவிடக் கூடாது.
3S
கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், பண்டிகைக் களியாட்டங்கள், விருந்துப சாரங்கள் என்பனவற்றில் இப்புதிய வடி வங்கள் அரங்கேறத் தொடங்கின. இசை அமைப்பில் நாளாந்தம் முன்னேற்றம், சாஸ்திரிய சங்கீதத்தை அறியாத மெல் லிசைப் பாடகர்களின் பொருளாதாரத்தில் பெருக்கம் என்பன போன்ற தேட்டங் களை இப்புதிய வடிவங்கள் இந்நாட்டிற் குச் சுவற வைத்தன. தென்னிந்தியப் பாடகர்களையே நம்பி இருந்த இசை மேடைகள் நம் நாட்டு இசைஞர்களால்
பொலிவைப் பெற்றன.
ஈழத்து மெல்லிசைக்கு வர்த்தக ஒலி பரப்பே நதிமூலமாக இருந்தது. அதனை தேசிய சேவை அங்கீகரித்து ஏற்று அதற் கான நிகழ்ச்சியொன்றையும் ஏற்படுத்தி தனியான வாத்தியக் குழுவொன்றையும் சகாயித்தது. தொடர்ந்து சிங்களத் திரைப் பட உலகில் கொடிகட்டிப் பறந்த, ஆர். முத்துசுவாமி மெல்லிசை வாத்தியக் குழு வின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது இசையிலும், கர்நாடக இசைக் குழுவுக்குத் தலைவராயிருந்த மணி பாகவதரின் இசையிலும், தேசிய சேவை யிலும் மெல்லிசைப் பாடல்கள் உரு வாகின. ஆரம்பகாலப் பாடல்களைப் பாடியவர்கள் அம்பிகா தாமோதரம், மீனா மஹாதேவன் ஆகியோர் அதன் பின்னர் வெளிச்சத்துக்கு வந்த கலைஞர்கள் எம். ஏ.குலசீலநாதன், சுஜாதா அத்தநாயக்க, வி.முத்தழகு, என்.கிருஷ்ணன், பாக்கிய ராஜா, கதிர்கந்தரலிங்கம், கனகாம்பாள் சதாசிவம், முல்லை சகோதரிகள், கே. எஸ்.பாலச்சந்திரன், எம்.ஜோம்.அன்சார்,

Page 22
கலாவதி சின்னச்சாமி, அமுதன் அண்ணா LD G3)6), எஸ். கே.கணபதிப்பிள்ளை, சாந்தன் இவர் களோடு கூச்சமின்றிச் சில கர்நாடக இசை ஞர்களும் சேர்ந்து அப்துல் ஹமீதின் இந்தச் செழுமையான திட்டத்தை முழுமைப்படுத்தினர்.
பூரீதர் பிச்சையப்பா,
'இறைதாசன்" என்ற புனைப் பெயருக்குள் ஒளிந்து கொண்டு அப்துல் ஹமீத் தானும் கவிதைகளை யாத்து ஈழத்து வானொலிப் பாடல்களுக்குப் பசளையிட்டார். "இசையின் மழையில் நனைந்திடும் நேரம்." என்ற பாடல் அவரது கவிதைப் புனைவிற்குக் கட்டியமிடுகிறது.
இந்தப் புதிய இசை வடிவத்தை தூக்கிப் பிடிக்காது விட்டிருந்தால் அப்சராஸ், கண்ணன் கோஷ்டி போன்ற இசைக் குழுக்கள் படுத்திருக்கும். தான் | வெளிநாடுகளுக்குச் செல்லும் பொழுது இக்கோஷ்டிகளையும் அழைத்துச் சென்று ஹமீத் புகழைப் பகிர்ந்து கொண்டார்.
அமரர் எஸ்.கே.பரராசசிங்கத்தின் உருவாக்கமொன்று கிணற்றுக் கல்லாகி விடாது இந்நாட்டவரது வாழ்வோடு சங்க மிக்க அப்துல் ஹமீத் தனக்கு அளிக்கப் பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அதி காரத்தைப் பயன்படுத்தினார். வெற்றியுங் புதியன புகுதலுக்கு செங் கம்பளமிட்டார்.
கண்டார்.
இவரது மூளைப் பிரசவங்களான சில நிகழ்ச்சிகள், இன்றைய வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சில வற்றிற்கு ரிஷி மூலமாகி இருக்கின்றன.
Ø (සංසාගය
QN
அவைகளுள் தற்பொழுது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் Top 10 தொலைக்காட்சி நிகழ்ச்சியுமொன்றாகும். இவர் தயாரித்து 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிபரப்பிய இசை அணித் தேர்வு" என்ற நிகழ்ச்சியே இதற்கு தோற்றுவாய் என்கிறார்.
தமிழ்ச் சினிமாவில் பாடலாசிரியராக இன்று கொடிகட்டிப் பறந்து கொண்டி ருக்கும் கவிப் பேரரசு வைரமுத்துவிற்கு விசாலமான ஒளி வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த இசை அணித் தேர்வு' என்ற நிகழ்ச்சியே! கவிப் பேரரசு எழுதிய முதல் பாடலான 'பொன்மாலைப் பொழுது' என்ற பாடல் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து 52 வாரங்கள் - அதாவது ஒரு வருடம் - முதலாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது கவிப் பேரரசால் மறக்க முடியாத ஒன்றாகும். அந்த இனிய நினைவுகளில் ஒன்றித்துப் போகும் போதெல்லாம், அங்கே அப்துல் ஹமீதின் ஆகிருதி பிம்பமிடுவது இயல்பே
வளர் இளம் பருவத்தில் இவரால் தூக்கி விடப்பட்ட இன்னொருவர் நவீன படைப்பிலக்கியவாதி மனுஷ்சபுத்திரன். இவர் இன்று காத்திரமான இலக்கியப் படைப்பாளியாக நிமிர்ந்துள்ளார். தமிழ கத்து இலக்கியச் சிற்றேடுகள் இவரது பரீட்சார்த்தமான, நவீன இலக்கியப் படைப்புகளால் கனதியாகின்றன. அப்துல் ஹமீதால் தயாரித்து ஒலிபரப்பப் பட்ட 'வானொலி மலர் நிகழ்ச்சி', ஆசிய சேவையில் ஒலிபரப்பப்பட்ட பொழுது வளரும் இளம் படைப்பாளியாக இருந்த மனுஷ்சபுத்திரன் அதன் ஆஸ்தான எழுத்
4O

தாளராக இருந்திருக்கிறார். அங்கவீன முற்ற விளிம்பு நிலையானவர் இவரென் பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவரது பலமாக இருப்பது மானுடத்திற்கொரு எடுத்துக் காட்டு!
இந்த வகையில் வர்த்தக சேவையின் ஊடாக தமிழ் மெல்லிசைக்குப் பெரும் பட்டாளமொன்றை சேர்த்துக் கொடுத்
தவர் அன்பு அறிவிப்பாளர் அப்துல்
ஹமீதெனில் மிகையாகாது!
அரச ஊழியர்களது இருப்பு, கையொப்பமிட்டுச் சம்பளம் எடுப்ப தற்கே என்பதுதான் பொதுவான வெகு ஜன அபிப்பிராயமாகும்! அவர்கள் பணி நிறுத்தம் செய்தாலும், "வேலை செய்யிற கடுமையில, உரிமை, சம்பள ஏற்றம்' கேட்கிறார்கள் எனவும் நகைப்பதுண்டு! இவைகளை அங்கீகரிக்கும் முகமாக 1980ஆம் ஆண்டில் அரச எழுதுவினை ஞர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்த பொழுது, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு, பணி நிறுத்தம் செய்தோரை வெளியே தூக்கி எறிந்து, அவர்களது வெற்றிடங்களுக்குப் புதியவர்களை நியமித்தது வரலாறு புகட்டும் உண்மை!
இக்கருதுகோளைச் சம்பந்தப்பட்ட அரச ஊழியர்களே தங்களது வீராப்புப் பேச்சுக்கள் மூலமாகவும் உறுதிப்படுத்து வதுமுண்டு. "கனக்கக் கதைச்சா ரான்ஸ் வர் இருக்கு." இப்படி முழக்கமிட்டு பணி கொள்வோரை அச்சப்படுத்த நினைப்பதுமுண்டு. "உதை எறிஞ்சு போட்டு, நீ ரீ குடிக்க வா." அரச பணியை மக்கள் பணியாகக் கருதாது
41
சில ஊழியர்கள் தமது தேநீர் குடிக்கும் நேரத்தை குண்டு பிசகாமல் பேணுவது முண்டு.
எழுபதுகளிலாக இருக்க வேண்டும்! யாராவது கூட்டாளியொருவர் கோப்புக் குள் சிரசைப் புதைத்து மிகவும் அக்கறை யாக வேலை செய்து கொண்டிருந்தால் அல்லது தேவாரமோ திருவாசகமோ படித்துக் கொண்டிருந்தால் சக ஊழியர்கள் "ஒரு வீடு கோயிலாகிறது" என நளினப் படுத்துவதுண்டு. எடுத்த எடுப்பிலேயே இப்படியான பொருள் பொதிந்த சொற் றொடரைப் பாவிக்க அவர்களால் எப்படி முடிந்தது. அன்று இப்படி வியந்த அரச ஊழியர்களுமுண்டு! இன்றும் இதை வாசிக்கும் சிலருக்கு இதுவொரு பத்திரிகையின் செய்தித் தலைப்பாக இருக்க வேண்டுமென்ற முடிவு ஏற் படலாம். உண்மையென்னவெனில், இத் தலைப்பில் வானொலி வர்த்தக ஒலி பரப்பில் தொடர் நாடகமொன்று ஒலி பரப்பானது. எழுதியவர் பிரபல வானொலி நாடக எழுத்தாளர் எம். அஷ்ரப்கான். இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் சமூகப் பார்வை கொண்ட, கிராம வாழ்க்கையைப் பின் னணியாகக் கொண்ட பல நாடகங்கள் அறுபதுகளில் ஒலிபரப்பாகக் காரணமாக இருந்தவர். பின்னைய காலத்தில் முஸ்லிம் நாடகப் பிரிவின் தயாரிப் பாளராக உயர்ச்சி கண்டவர்.
"ஒரு வீடு கோயிலாகிறது" என்ற இந்நாடகத்தின் இரண்டு கூறுகளில் அப்துல் ஹமீத் தனது வானொலி நாடக ஆளுமையை ஆற்றுப்படுத்தியவர். நடிக

Page 23
ராகவும், நெறியாளராகவும் தனது பணிகளை வகுத்து இந்நாடகத்தைச் செழுமைப்படுத்தினார். இந்நாடகத்தைத் தவறாது கேட்டுத்தான் அரச ஊழியர்கள் தங்களது நளினமான உரையாடல்களுக்கு "ஒரு வீடு கோயிலாகிறது" என்ற சொற் குவியலைத் துணைக்கு இழுத்தனர். எனவே இது அவர்களது சொந்தச் சிருஷ்டியல்ல. வானொலியிலிருந்து இரவலாகப் பெற்றதே!
இந்த வானொலி நாடகம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லத் திலும் கமகமத்ததாம்! சிவாஜி வானொலி கேட்பவரென்றால் பெரும்பாலானோர் நம்ப மாட்டார்கள். அதுவும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையை கேட்பவரென்றால் "எல்லோருக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே' என மடக்குவர். "அவர் பேசாத வசனமா. நடிக்காத நடிப்பா. அதுபோக இதுக் கெல்லாம் அவருக்கு நேரந்தான் கிடைக் குமா?" எனவும் சிவாஜியின் ஒய்வு நேரம் குறித்து வாதிடுவர். ஆனால் உண்மை. சிவாஜியுமொரு வானொலி நேயர்தான்! இதன் நம்பகத்தன்மைக்கு அப்துல் ஹமீத் உத்தரவாதம் செய்கிறார். சிவாஜியின் படுக்கை அறையில் இரண்டு ரேடியோக் களாம். ஒன்றை ஆகாச வாணிக்கும் மற்றையதை இலங்கை வானொலிக்கு மென வைத்திருந்தாராம். இனி நம்பலாந் தானே!
ஹமீதைச் சிவாஜி கப்ரின் சாம்ப சிவம்" எனத்தான் அழைப்பாராம். இதற் குக் காரணம், "ஒரு வீடு கோயிலாகிறது" என்ற வானொலி நாடகமே! இதில்
DeGe): y
ஹமீதுக்குக் கப்ரின் சாம்பசிவம் பாத் திரம்.
கப்ரின் சாம்பசிவம் பாத்திரத்தை சிவாஜி யின் மனத்திரையில் பிம்பமிட வைத்து
தனது பண்பட்ட நடிப்பால்
விட்டார் ஹமீத். எனவே சொந்தப் பெயரை விழிக்காமல், நடிப்பில் ஹமீத் எந்தப் பாத்திரமானாரோ அந்தப் பாத்திரத் தின் பெயரால் நடிகர் திலகம், கப்ரின் சாம்பசிவம்' என அன்புருக அழைத்துக் ஹமீதின் சிறப்பான அங்கீகரித்தார்.
நடிப்பை
தாம் நடித்த பாத்திரங்களின் மூல மாகப் பெற்றோர் சூட்டிய இயற்பெயரை காவு கொடுத்த சிலரைச் சினிமா உலகம் இனங்காட்டி இருக்கின்றது. சிவாஜி (கணேசன்), அவ்வை (சண்முகம்), இலங் கேஸ்வரன் (ஆர்.எஸ்.மனோகர்), மேஜர் (சுந்தரராஜன்) ஆகியோர் அத்தகையோரே! இத்தகைய நடிப்பு மேதைகளின் பட்டி யலில், நடிப்பின் சிகரமான சிவாஜியே அப்துல் ஹமீதைச் சேர்த்துவிட்டது ஈழத்து நாடகக் கலைஞர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும்.
கதாபாத்திரமொன்றை மேடை நடிப் பில் உருவகித்து நடிப்பதைக் காட்டிலும், வானொலியில் சொற்களின், குரலின் மூலமாக காற்றில் மிதக்க வைத்து கேட்ப வனின் மனத்திரையில் வரைந்து விடுவது மகா கஷ்டம். இதில் கதாசிரியர் பாவிக் கும் வசனங்களின் தாக்கம் பெரும் பங்காற்றும். குரலில் நடிப்பைப் பிழிற்றி அத்தோடு சொற்களைப் பிசைந்து கொடுப்பதன் மூலமாகவே பாத்திர மொன்றை வானொலி கேட்டுநனின் மனதில் வனைய முடியும்.
42

6666):
VN
அப்துல் ஹமீதின் வானொலி நடிப் பிற்கு மேலுமொரு வானொலி நாடகப் பாத்திரமும் இன்று வரை கட்டியம் கூறு கின்றது. இதை ஏற்படுத்திக் கொடுத்தது
'மரைக்கார் ராமதாஸின் 'கோமாளிகள்'.
இதுவரை வானொலி நாடகங்களில் சினிமா ஆக்கப்பட்டது "கோமாளிகள்’ தான் என்பதை வாசகர்கள் அறிவார்கள். எமது நாட்டின் தமிழ்த்திரைப்படத் துறையை எண்ணிப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சும்! ஒட்டகத்திற்கு இடம் கொடுத்த அரேபியனின் நிலையாகி விட்டது. இந்திய தமிழ் சினிமா சாவ தானமாகச் சந்தையைப் பிடித்து, ஈழத்து முயற்சிகளை ஏப்பமிட்டு விட்டது. ஈழத்துச் சினிமா உற்பத்தி படுத்து விட்டது.
நடிப்பாற்றல் உடைய, எத்தனையோ நடிகர்கள், தமது திறமையை வெளிக் காட்ட முடியாமல் சோர்ந்து போய்த் திரி கின்றனர். இதையெல்லாம் யார் கவனிக் கின்றனர்? உலக்கை போகின்ற இடத் தைக் கண்டு கொள்ளாமல் ஊசி போகின்ற இடங்களுக்கு வெளிச்ச மிட்டுக் கொண்டிருக்கின்றனர்!
இருந்தும், 'கோமாளிகள்’ என்ற வானொலி நாடகம் சினிமாவாக்கித் திரை யிட்ட பொழுது, அது 97 நாட்கள் காட்டப் பிரமிக்க
வைத்தது. அதன் நூறுநாள் கொண்டாட்
பட்டு அனைவரையும்
டத்தை புரட்சி நடிகரின் படமொன்று
முழுங்கி விட்டது. இது மற்றவர்களின் குறையல்ல! குற்றம் நமதே!
43
'கோமாளிகள் வானொலி நாடகம் இன்று மக்களால் பேசப்படும் முக்கிய ஈழத்து நடிகர்களை கலை உலகிற்குத் தந்தது. மரைக்கார் ராமதாஸ், உபாலி செல்வசேகரன், ஐயர் - அப்துல் ஹமீத், அப்புக்குட்டி - டீ.ராஜகோபால், டேவிட் - கே.சந்திரசேகரன். ஆகியோரே அவர்கள். இதில் அப்துல் ஹமீதின் ஐயர் பாத்திரம் அனைவரையும் வியக்க வைத்தது. ஹமீத் இந்த நடிப்பை எங்குதான் மறைத்து வைத்திருந்தார் என நாடக அபிமானிகள் பாராட்டினர். அவரிடம் இயல்பாகவே நடிப்பு இருந்தது உண்மைதான்! ஆனால், அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் பேசும் மொழி? இதுவே அவருக்கு சவாலாக இருந்தி ருக்கும்! இதுவே வானொலி ரசிகரின் சமிசியம்!
அப்துல் ஹமீதின் சொந்த மண் கொழும்பு மாவட்டத்திலுள்ள தெமட்ட கொடை, வாழ்ந்த சூழல் உரத்த கல்வி மான்களைக் கொண்டிருக்கவில்லை. தனக்கு நினைவு தெரிந்த காலம் வரை
இப்பகுதிக்கு மின்சார விநியோகம்
கிடைக்கவில்லையென்கிறார். பின்தங்கிய மக்கள் அடர்த்தி கொண்ட ஒரு கிராமத் தில் வாழ்ந்த ஹமீதின் நாப்பழக்கம்! " எப்படி இருந்திருக்கும்? கேட்பதெல்லாம் கொச்சைத் தமிழ்! அந்த நிலையிலும் கூட அவர் சமஸ்கிருதம் கலந்த தமிழைப் பேசிக் கச்சிதமாக ஐயராக நடித்தார். அசல் ஐயரொருவரைக் காற்றில் ஏற்றி வானொலி இரசிகனுக்குக் கொடுத்தார். அமோக வரவேற்புக் கிடைத்தது. 'கோமாளிகள்? வானொலி நாடகத்தின்

Page 24
வெற்றிக்கு ஐயர் பாத்திரமும் உடந்தை யானது. இது எப்படிச் சாத்தியமாகிய தெனக் கேட்ட பொழுது, மரைக்கார் ராம தாஸின் அம்மா, அப்பாவின் உரை யாடலைத் தான் மிகவும் உன்னிப்பாகக் கவனிப்பதுண்டாம்! அதற்காகவே தான் அடிக்கடி அவர்கள் இல்லம் செல்வாராம்.
அந்த இடைவிடாத ஊடாட்டமே தனக்கு
ஐயர் பேசும் மொழியை உவந்தளித்த தென ராமதாசின் பெற்றோருக்கு நன்றியோடு சொல்கிறார்.
மரிக்கார் குடும்பம், ஐயர் குடும்பம், உபாலியின் குடும்பம், அப்புக்குட்டியின் குடும்பம், டேவிட் (கிறிஸ்தவக்) குடும்பம் எனப் பலரும் ஒரே இடத்தில் கூட்டுக் குடும்பமாய் வாழும் இல்லத் தைக் களமாய்க் கொண்ட கதை 'கோமாளிகள்'. இல்லத்தின் உரிமை யாளருக்கு வாரிசுகள் இல்லை. வயதான காலத்தில், உரிமையை உயில் எழுதி வைக்க நினைக் கும் அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.
யார் உண்மையாக ஒற்றுமைக்கு உதாரண
யாருக்காவது வீட்டு
மாக விளங்குகிறார்களோ அவர்களுக்கே அந்த வீடு சொந்தமாகும் என்று.
நாடகத் தயாரிப்பாளரென்ற நிலை யில் அப்துல் ஹமீதிற்கு மறக்க முடியாத நிகழ்வு!
ஆங்கில இலக்கிய பரப்பில் இன்றும் மங்காத செழிப்போடு வாழும் நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் 420ஆவது நினைவுக் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இலங்கை வானொலியும் அதை அங்கீகரித்துக்
666): y
கெளரவிக்க வேண்டும். அவரது நாடக மொன்றைத் தயாரித்து, ஒலிபரப்பும்படி மேலிடம் உத்தரவிடுகின்றது. பொறுப்புக் ஹமீதின் தலையில் விழுகிறது. ஷேக்ஸ் பியர் நாடகாசிரியர் மட்டுமன்றிப் பிரபல கவிஞரும் கூட. எனவே கவிதை நாடக மாகவே ஒலிபரப்புவது பொருத்தமாக இருக்குமெனக் ஹமீத் தீர்மானிக்கிறார்.
சில்லையூர் செல்வராசன் (தான் தோன்றிக் கவிராயர்) இலங்கை வானொலிக்குள் நனைந்து தோய்ந்தவர். அவர்தான் பொருத்தம்! ஷேக்ஸ்பியரின் 'றோமியோ ஜூலியத் நாடகத்தைக் கவிதையில் வானொலி நாடகமாக்கும்படி செல்வராசனைக் கேட்கிறார். கவிஞர் சம்மதிக்கிறார்.
பங்கு பற்றுவோரை ஒழுங்கு செய்துவிட்டார். வானொலி நிலையத்திற் குள் சகல ஏற்பாடுகளும் தயார் நிலை யில்: கவிஞரிடமிருந்து எதுவித தகவலு மில்லை. பிரதி இன்று வரும். நாளை வரும். வரவில்லை. ஹமீதுக்கு அடி வயிற்றில் புளி கரைத்த மாதிரி. நடக் குமா? நடக்காதா? ஏக்கம். நிர்வாகத்திற்கு விளக்கம் சொல்ல வேண்டும். ஒரு மணித்தியால நாடகம்! திரிசங்கு சொர்க்க நிலையில் இருந்த பொழுது கவிஞர் வரச் சொன்னார். அன்றுதான் நாடகம் ஒலி பரப்பும் தினம்! ஆரவாரப்பட்டுக் ஹமீத் புறப்பட்டார். சில்லையூர் செல்வராசனின் தட்டச்சின் Key Boaardல் அவரது இரு கை விரல்களும் வேகமாக ஒடிக் கொண்டிருந்தன.
“இந்தாப் புடி.” அது முதலாவது அங்கம். எதுவும் பேசாது அதை வாங்கிக்
44

essed
கொண்டு வானொலி நிலையத்திற்குச் சென்றார் ஹமீத். சில்லையூர் செல்வ ராசன் தட்டச்சு இயந்திரத்தில் ஒவ்வொரு பக்கமாக உழுது தள்ள, தன்னுடைய
துரட்டியில் (மோட்டார் சைக்கிளில்)
அங்கும் இங்கும் என அலையோ அலை யென அலைந்தார் ஹமீத். ஹமீதிற்கு குட்டி ஈன்ற பூனையின் நிலை! சில்லை யூர் வீட்டிற்கும் வானொலி நிலையத் திற்குமாக! இப்படியாக எழுத, எழுத ஓடி, ஒடிப் பிரதியைப் பெற்று முழுமை
யாக்கினார்.
வானொலி நிலையத்துத் தட்டெழுத் தாளர் எவ்விதமான முகச்சுழிப்புமின்றி ஸ்ரென்சிலை வெட்டிக் கொடுக்க, அதைக் கல் அச்சில் பிரதி எடுத்துக் காத்
திருந்த கலைஞர்களிடம் ஹமீது கொடுத்
தார். கல் அச்சு இயந்திரம் ஏற்படுத்திய வெக்கை பிரதியிலிருந்து கழரவில்லை! பங்குபற்றுவோரது கையையும் சுட்டது. மூத்த பழம்பெரும் வானொலி நடிகர்கள் தங்களது அநுபவத்தைப் பணயமாக வைத்து சில்லையூரின் கவிதை வரிகளை நாடகத் தேரில் ஏற்றினர். கேட்போர் வியந் தனர். எம்.எஸ்.இரத்தினம், தாஸன் பெர்னாண்டோ, ரீ.இராஜேஸ்வரன், இராசேஸ்வரி சண்முகம், கே.ஏ.ஜவாஹர், நடராஜ சிவம் இவர்களோடு சில்லை யூரும், கமலினியும் கவிதை நாடகத்தைத் தமது நடிப்பால் செழுமைப்படுத்தினர்.
தயாரிப்பாளரென்ற நிலையில், ஏற் பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தனக் குள் சமாளித்து, நாடகத்தை வானொலி யில் ஒலிக்க வைத்ததற்கு அப்துல் ஹமீதின் நிதானமும் பொறுமையுமே
45
காரணம். இது முகாமைத்துவத்தின் சிறப்புகளில் ஒன்று. சில்லையூர் செல்வ ராசனின் கவிதை யாக்கும் ஆளுமை நாடறிந்ததே. கடைசி நேரத்திலும் அவரது கவிதை ஊற்றுத் தீரா நதியாகப் பாயக் கூடியது. எனவே, தக்கார் அவரே! ஹமீத் நம்பிக்கையோடு பொறுத்திருந்தார். வானொலி நேயர்களுக்கு நல்லதொரு நாடகத்தைக் கொடுக்க வேண்டும். அத்தோடு வில்லியம் ஷேக்ஸ்பியரின் "ரோமியோ ஜூலியட்' என்ற அசலில் கருச் சிதைவு ஏற்படக் கூடாது. நினைவு நிஜமானது. ஒழுங்கு செய்யப்பட்ட நடிகர்கள் கண் பார்த்தாக் கை செய்யும்’ என்ற அபூர்வத் திறமைசாலிகள். இத் தகைய சங்கமம் சாதனை செய்யும் என்பதற்கமைய 'றோமியோ ஜூலியட்' உரத்த ஜனரஞ்சகத்தைத் தேற வைத்தது.
இத்தகைய அசாதாரண சூழ்நிலை யொன்று, முன்னோடி வானொலித் தயாரிப்பாளர் 'சானா" எஸ்.சண்முக நாதனுக்கும் பிரபல எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ.)க்கும் இடையில் ஏற்பட்ட தகவலொன்று இக் கட்டுரைத் தொடரின் முற்பகுதியில் பதி வாகி இருப்பதை வாசகர்கள் படித் திருப்பர். இன்றைய வளர் இளம் தலை முறையின் நன்மை கருதியே இக் கூறியது கூறல்" இங்கு இடம்பெறுகின்றதென்பது கவனத்திற்குரியது.
கடைசி நேரத்தில் அப்துல் ஹமீதிற்கு ஏற்பட்ட இத்தகைய கையறு நிலை இன்றைய தவ்வல்களுக்கு ஏற்பட்டிருப்பின் 'ஸ்கிரிப் மத்தியானம் என் மேசையில் இருக்க வேணும்' என

Page 25
முஷ்டியை உயர்த்தி இருப்பர்! இத்தகைய அதிகாரத் தொனிகள் புதிய சாதனை களைக் கொல்லுமே தவிர நல்ல விளைச் சல்களைத் தராதென்பதை இன்றைய முகாமையாளர்கள் தமது தாரக மந்திர மாகக் கடைப்பிடிக்க வேண்டும். முகாமைத்துவத்தின் சூட்சுமம் இது வென்பதையும் அறிதல் நல்லதே!
அதிர்ஷ்டமென்பது நித்தியமான தல்ல! அது தேடிவரும் பொழுது அதை இறுக்கிப் பிடித்து, தமது உழைப்பாலும், ஊக்கத்தாலும் தமது நிலையை உயர்த்த எத்தனிப்பவர்களே சாதனையாளரா கின்றனர். இதற்குத் தக்க உதாரணமாக அப்துல் ஹமீதைக் காட்டலாம்.
அக்காலத்தில் இவரது இல்லத்தில் வானொலிப் பெட்டி இருக்கவில்லை. மின் கலங்களால் இயங்கக் கூடிய வானொலிப் பெட்டிகளும் புழக்கத்திற்கு வரவில்லை. ரான்ஸ்சிஸ்ரர் இல்லை. எனவே ரிடிபியூசன் என்ற வானொலி அஞ்சல் சேவையினூடாகத்தான் இவரால் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடிந்தது. ரிடிபியுசன் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால், நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு வானொலி அஞ்சல் கருவி களைக் கொண்டு வந்து பொருத்தி விடுவர். இதில் இலங்கை வானொலி நிலையத்திலிருந்து அஞ்சலாகும் மும் மொழிச் சேவைகளையும் கேட்க முடியும்.
மாதாந்தக் கட்டணம் அறவிடப்படும்.
இந்த வசதி வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழைகளுக்கும் பேருதவியாக இருந்தது. அக்காலத்தில் ஆகக் குறைந் தது ரூபா 5000/- கொடுத்துத்தான்
வானொலிப் பெட்டியை வாங்க முடிந் தது. அந்தச் சிரமம் தவிர்க்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் அப்துல் ஹமீதிற்கு 10 வயது. கட்டைக் களிசா னோடுதான் திரிவார்.
மலர்
அப்பொழுது சிறுவர்
நிகழ்ச்சிக்குத் தயாரிப்பாளராக இருந்தவர்
எஸ்.நடராசன் (ஐயர்). மாதத்தின் கடைசி வாரத்தில் இரு சிறுவர்களுக்கு அனுமதி வழங்கி, நேரடியாக ஒலிபரப்பாகும் சிறுவர் மலர் நிகழ்ச்சியைப் பார்க்க வைக்கும் நடைமுறை பேணப்பட்டு வந்தது. ஹமீதின் நண்பனொருவனுக்கு இத்தகைய வாய்ப்பொன்று தேறியது. வழித்துணைக்காகத் தன்னோடு வரும்படி அவன் ஹமீதை அழைத்தான். சம் மதித்துக் ஹமீத் இந்நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்கு நண்பனோடு சேர்ந்து கொண் டார். இருவரும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் கலையகத்திற்குள் வானொலி மாமாவின் உதவியோடு நுழைந்து கொண்டனர். சிறிது நேரத்தில் ஒரு பதற்ற நிலை! மாமா அங்குமிங்குமாக ஓடினார். புதி தாக வந்த இருவரையும் அழைத்தார். நண்பனிடம் தட்டச்சுப் பிரதியொன்றைக் கொடுத்து நடித்து வாசிக்கச் சொன்னார். நண்பன் ஒலிவாங்கிக்கு முன் நின்று அதை வாசித்தான். பின்னர் பிரதி ஹமீதின் கைக்கு மாறியது. ஹமீது நடித்து வாசித்துக் காட்டினார். மாமாவின் முகத்தில் மலர்ச்சி. ஹமீதை அழைத்துக் கொண்டுபோய் அன்றைய தொடர் நாட கத்தில் நடிக்கும் மருமக்களோடு சேர்த்து விட்டார்.
46
 

GSG);
t அப்பொழுது ஆ.கருணைரத்தினம் என்பவர் எழுதும் ‘பச்சை மலைத் தீவு' என்ற சிறுவர் நாடகம், சிறுவர் மலரில் வாரந்தோறும் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நாடகப் பிரதியை எழுதும் ஆ.கருணைரத்தினம் கிராம சஞ்சிகை நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி பங்குபற்றுபவர். இந்நாடகத்தில் பூதம் என்றொரு பாத்திரம். மரைக்கார் ராமதாஸ் இப்பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். அன்றைய தினம் தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் வர முடியாதென வானொலி மாமாவுக்கு அறிவித்திருந்தார். அதுவும் கடைசி நேரத் தில். இந்த எதிர்பாராத சம்பவமே அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் ஒலி பரப்புச் சேவைக்கு நுழைவுச் சீட்டாகச் சேவித்தது. அன்று சிறுவர் மலர் ரசிகர் - பிற்காலத்தில் மிகப் பிரபல ஒலிபரப் பாளராகத் திகழப் போகும் ஹமீதின் குரலை வானொலியில் கேட்டனர். அந்தச் சுபநாளில் காற்றிற்குச் சுவை கொடுத்தவர் இன்றும் அதே தித்திப்பைத் தந்து கொண்டிருக்கிறார். இன்னொரு நாள் கட்டைக் களிசான் அணிந்து இளைஞர் மன்ற நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்தவரை, கல்விச் சேவையில் தயாரிப் பாளராக இருந்த வீஏ.சிவஞானம் கண்டு விட்டார். ஹமீதின் கையைப் பிடித்தபடி, பகுதி நேர அறிவிப்பாளருக்கு விண்ணப் பங்கள் கோரப்பட்டிருப்பதைச் சொன் னார். அத்தோடு விண்ணப்பிப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் பெருந்தன்மையோடு தானே முன் நின்று செய்து கொடுத்தார். வி.ஏ. சிவஞானத் தின் எதிர்பார்ப்பு நிறைவு பெற்றது.
47
அப்துல் ஹமீத் 1967ல் பகுதி நேர அறிவிப்பாளர். ஆறு மாதங்கள் பயிற்சி. எஸ்.கே. பரராசசிங்கத்தின் வழிகாட்ட லில் அறிவிப்புக்களைச் செய்யத் 1971ல் நிரந்தரமாகி, 1998ல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலிருந்து ஓய்வு கொண்டார். ஆனால் அவரது மகோன்னதக் குரலுக்கு ஒய்வு கொடுக்கவில்லை. இன்னமும் குரல் வானலையை வருடிக் கொண்டு தானிருக்கிறது!
பகுதி நேர அறிவிப்பாளராக இருந்த பொழுதே - அதுவும் மூன்றே மூன்று மாதங்களுக்குள் விளம்பர நிகழ்ச்சியொன்றைத் தயாரித்து ஒலி பரப்பும் பெரு வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அறிவிப்புத்துறையில் ஆரம்ப நிலையிலிருந்த வளர் இளம் அறிவிப்பாளரொருவருக்கு இத்தகைய கணிப்புக் கிடைத்தது வானொலி வட்டாரத்தைக் குலுங்க வைத்தது!
தொடங்கினார்.
அப்துல் ஹமீத் தயாரித்து ஒலி பரப்பிய முதல் வர்த்தக விளம்பர நிகழ்ச்சியின் பெயர் "நவரசக் கோவை' ஆகும். "ரன் பக்", "ரன் ரற்’ நாசினியைத் தயாரித்தவர்களான அப்துல்லா இன்டஸ்ரீ சாரின் அனுசரணையில் இவ்விளம்பர நிகழ்வு ஒலிபரப்பானது. வெறும் சினிமா இசைத் தட்டுகளை வைத்து நேரத்தைச் சமாளிக்காமல் வெளிக்களக் கலைஞர்கள் பங்கு பற்றும் 12 நிமிட குறு நாடகங்களையும் சேர்த்துக் கொண் டார். இதன் மூலமாக இந்நிகழ்ச்சி இலை மறை காயாக இருந்த பல கலைஞர்களுக்குப் பூபாளமிசைத்தது.

Page 26
மெற்றோ பொலிற்றன் என்ற நிறுவனமே இந்நாட்டின் முன்னோடி விளம்பர நிறுவனமென்கிறார்.
அரச திணைக்களமாக இருந்து, ஒலிபரப்புத்துறை இயங்கிய காலத்தில் (1967 வரை) வெளிக் களங்களில் ஒலி பரப்பு நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய் தல், நேரடியாக ஒலிபரப்புதல் மிகவும் அரிதாகவே நிகழ்ச்சிகளை அப்பொழுது Show Programme என அழைத்தனர். கலை விழா என்றும் சொன்னார்கள். இவைகள் பெரும்பாலும் பண்டிகைகள் குறித்தே ஏற்பாடு செய்யப்பட்டன. தீபாவளி, சித்திரை புதுவருடப் பிறப்பு, சரஸ்வதி பூசை என்பவற்றை முன்னிட்டே ஏற் பாடு செய்யப்படுவதுண்டு. குறித்த பண்டிகை நாளுக்கு ஒரு சில நாட்கள் முன்னதாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு, பண்டிகை தினத்தன்று ஒலிபரப்புச் செய் யப்படும். மறுஒலிபரப்புகளும் செய்யப் படுவதுண்டு. இது அப்பொழுது தேசிய ஒலிபரப்புக்கே உரித்தானதாக இருந்தது.
இந்நிகழ்ச்சிகளின் ஆற்றுகைக் களங்
களாகக் கொழும்பு றோயல் கல்லூரி
மண்டபம், சரஸ்வதி மண்டபம் அத்தோடு
இலங்கை வானொலியின் 6வது கலை யரங்கம் என்பன அமைந்தன.
அறுபதுகளுக்குப் பின்னர் சில வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் உரத்த ஜனரஞ்சகத்தைப் பெற்றதால், அவை களை வானொலி நிலைய கலையரங் கங்களில் ஒலிபரப்போ, ஒலிப்பதிவோ செய்யாமல், தேசிய ஒலிபரப்பைப் பின்
இருந்தது. இத்தகைய
čo 6656); །།
பற்றி, பார்வையாளர்களையும் அழைத்து வெளிக்கள மண்டபங்களில் நடாத்தத் தொடங்கினர். இப்பாரம்பரியத்தை வர்த் தக சேவையில் தொடக்கி வைத்த முன்
னோடிகள் எஸ்.பி.மயில்வாகனம், எஸ்.
கே.பரராசசிங்கம் ஆகியோரே. அத்தோடு இதற்கு அனுசரணையாக அப்பொழுது பி.சி.சி. நிறுவனம் இருந்ததாகச் சொல் லப்படுகிறது. ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சி யின் பெயர் "BCCயின் கேள்வி
அரங்கம்'.
இக்கலை விழா அளிக்கை நிகழ்ச்சி களை அளிக்கை செய்வதற்கு அப் பொழுது தேசிய ஒலிபரப்பின் அறிவிப் பாளர்களால் பேணப்பட்ட அளிக்கைத் தன்மை வர்த்தக சேவையில் பேணப்பட வில்லையென்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக ஒலிபரப்பால் அளிக்கை செய்யப் பட்ட இந்நிகழ்ச்சிகளின் வெற்றி ஒட்டு மொத்தமாக அறிவிப்பாளர்களிலேயே தங்கி இருந்தது. நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதற்கு மட்டுமன்றி அறிவிப்பாளர் களைப் பார்ப்பதற்கும் மக்கள் திரண் டனர். அத்தகைய ஆளுமையை வர்த்தக சேவை அறிவிப்பாளர்கள் உண்டாக்கி இருந்தனர். பொருட்டு அறிவிப்பாளர்கள் தங்களது இயல்பான பாணிகளை விடுத்தும் அறி
மக்களைக் கவரும்
விப்புகளைச் செய்தனர். குரல்கள் உச்ச ஸ்தாயியில் ஒலித்தன.
இத்தன்மையில் அமைந்த அளிக்கை நிகழ்ச்சியான 'பாட்டுக்குப் பாட்டு' அப்துல் ஹமீதிற்கு ஒர் அகலித்த ஒளி
வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
வர்த்தக ஒலிபரப்பின் பாரம்பரியத்தைப்
ததக ஒ
48

பிசக்காது இந்நிகழ்ச்சிக்கும் சினிமாப் பாடல்களே கைகொடுத்தன. ஒரு வித்தி யாசம் பாட்டுக்களைப் பாடியவர்கள்
சினிமாவுக்குப் பாடிய பிரபலங்களல்ல!
தமது இசை வல்லமையை வெளிக்காட்ட எத்தனித்த உள்ளூர் கலைஞர்கள் இந்த மேடையைப் பாவித்தனர். வளர் இளம் இசைக் கலைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி தொட்டிலாக அமைந்தது. இலங்கைக்குள் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இந் நிகழ்ச்சியின் தாக்கம் பரந்தது. இசையைக் கேட்பதற்கு மட்டுமன்றி ஹமீதின் அளிக்கையைக் கேட்டும் பார்த்தும் இரசிப்பதற்கு நேயர்கள் குவிந்தனர்.
பாஞ்சாலங்குறிச்சியின் மண்ணை மிதித்து விட்டால் வீரம் உடலில் செறிந்து விடுமாம்! பாட்டுக்குப் பாட்டு அரங்கை மிதித்து விட்டால் ஹமீது புதிய பிறவி எடுத்து விடுவார். இம்மேடையில் ஏறி நிற்கும் பொழுது மட்டும் இவருக்கு எப்படி இந்த உசார் பிறக்கின்றதென ஹமீதோடு மிகவும் அந்யோன்மாகப் புழங்குபவர்கள் விசனிப்பதுண்டு. அத் தகைய கட்டித்த சுறுசுறுப்போடு மேடை யில் நிகழ்ச்சியை அளிக்கை செய்து கொண்டிருப்பார். கல்விக்கு அதிபதியான நாமகள் இவரது நாவில் நிரந்தரமாக வாழுகின்றாரோவென அதிசயிக்கும்படி யாகத் தமிழ்ச் சொற்கள் அரணை உடைத்த ஆறாகப் பாயும். இருமலோ செருமலோ அவருடைய குரலில் குறுக் கிட்டுக் கேட்போர், இரசனையை இடையில் முறிக்காது. இதற்கும் மேலாக, இசைஞர் பாடும் பாட்டில் சிறு வழுக்கள் ஏற்பட்டு விடினும், அதைக் கண்டு பிடித்து,
49
பார்ப்போரது
இசைஞரின் தகுதியைக் கூறி விடுவார். புதியவரை அழைக்கும் பொழுது இந்த எழுத்திலான பதத்தில் தான் மணி ஒலித்தது. பாடுங்கள் என் பார். 'குறில்", "நெடில் இப்படியான தமிழ் இலக்கணக் கூறுகளைச் சொல்லி சம்பந்தப்பட்ட பதத்தைப் புதிதாக வந்த இசைஞர் இலகுவில் கண்டுபிடிக்கும் படியான உதவிகளைச் செய்வார். தடயங்களை உணர்த்துவார்.
எதிலும் துடக்கைத் தேடும் எம் மவரில் சிலர் குறில்', 'நெடில் போன்ற தமிழ் இலக்கணக் கூறுகள் சினிமாப் பாடல் நேயர்களுக்கு - அதுவும் வர்த்தக ஒலிபரப்பு நேயர்களுக்கு விளங்குமா? எனக் குதர்க்கமிடக் கூடும். ஆனால் செந் தமிழும் நாப்பழக்கமென இவர்கள் அறிதல் வேண்டும். திரும்பத் திரும்பக் காதில் ஒலிக்க வைத்தால் அதில் ஏதோ விசேடம் இருக்குமென ஊக்கமுள்ள மனங்கள் தேடல் செய்யும். ஈழத்தில் மட்டுமன்றி தற்பொழுது அனைத்துலகத் திலும் தமிழ் எழுச்சி பரிணமித்து விட்டது. இத்தகைய கட்டத்தில் 'குறில்’, "நெடில்’ என்பதன் விளக்கத்தை அறியாத தமிழர்கள் இருக்கிறார்களென்றால் தமிழுக்காக மரணித்த அத்தனை உயிர் களும் கண்ணிர் வடிக்கும்! அரங்கிற்கு வராதவைகளை ஜனரஞ்சகப்படுத்தினால் அவைகள் சகலராலும் உணரப்படும். மக்களின் மொழி வல்லபத்தை விரிவு படுத்தும் நோக்கோடு தனது அறிவிப் பாளர் உத்தியோகத் தோடு, தமிழ் பண்டிதப் பணியையும் செய்யும் ஹமீத் தமிழுலகால் பாராட்டப்படக் கூடியவரே!

Page 27
இவர் தயாரித்து அளிக்கை செய்த முதல் அறிவிப்பாளர் அளிக்கை நிகழ்ச்சி பாட்டுக்குப் பாட்டே! ஆரம்பமே அவருக் குச் சாதனையாகி விட்டது. இந்நிகழ்ச்சி சிலரை வாழ்வில் துலங்க வைத்த வரலாறுமுண்டு. தமிழகத்தில் இந் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, விழிப்புலனற்ற ஒரு பெண் மிக அருமையாகப் பாடிச் சபையோரை மகிழ்வித்தார். அவரது திறமையைக் கண்ட, நிகழ்ச்சியின் அனுசரணையாள ரான, லலிதா ஜூவலரி உரிமையாளர்
அப்பெண் மீண்டும் விழிப்புலனைப்
பெறச் செலவாகும் முழுத் தொகையை யும் தான் தருவதாக அறிவித்தார். இந்த வகைகளில் ஹமீதின் மானுடத்திற்கான சேவை அவரைப் பல நெஞ்சங்களில் இருத்தி விட்டன.
'பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில்
அப்துல் ஹமீத் பெற்ற அபார வெற்றியே அகில இந்திய தொலைக்காட்சியான தூரதர்சனின் கவனத்தை இவர் மீது ஈர்க்க வைத்தது. ‘வெல்ல முடிந்தால் வெல்லுங்கள்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குக் கால்கோள் அமைத்தது. இது வேறெந்த இந்தியரல்லாதார்க்கும் கிடைக்காத பெருமை!
சிங்கப்பூர் வானொலியின் 25வது ஆண்டு - வெள்ளி விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒலிபரப்பும் வரத்தைப் பெற்றார்.
இந்தியா சுற்றுலா பிரகடனப் படுத்தப்பட்ட ஆண்டினைக் கொண் டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட
மதுரா இசை விழா இசை நிகழ்ச்சியைத்
தயாரித்து அளிக்கை செய்ய ஹமீத் அழைக்கப்பட்டது ஒரு வரலாற்றுத் திருப்பமாகும். மாலை ஆறு மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, மறுநாள் அதிகாலை ஒன்றரை மணிக்கே நிறைவு பெற்றதாம். பதினேழரை மணித்தி யாலங்கள் ஒரு நிகழ்ச்சியோடு ஒன்றித் திருந்ததைக் கூறி உவகை கொள்கிறார். இவைகள் இந்நாட்டின் ஒலிபரப்புக் கலை வல்லமைக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்!
அனைத்துலக ஒலிபரப்பாளர் (5Cup வோடு நெதர்லாந்தின் புலமைப் பரிசிலைப் பெற்று அங்கு சென்றவர் 6 மாதங்கள் பயிற்சி பெற்று ஆகக் கூடிய புள்ளிகளையும் சுவீகரித்து தமிழ் ஒலி பரப்புக் கலைக்கு ஒர் அகலித்த பரப்பை ஏற்படுத்தினார்.
நாம் தமிழர் என்ற பிரக்ஞையோடு வேறெந்த மொழிச் சொற்களின் கலப்பு மின்றி இந்த அதி உயர்தர அறிவிப்பாளர் உரையாடுகிறார். இதை வானொலியைக் கேட்பவர்கள் அறிந்திருக்கக் முடியும். இன்றைய இளம் தலைமுறை அறி விப்பாளர் சிலர், ஆங்கிலச் சொற்களைத் தமிழோடு கலந்து, அறிவிப்புகளைச் செய்வதைத் தமது மேலதிகத் தகைமை யாக உபாசனை செய்து தமது அறிவிப் பாளர் தொழிலைப் புரிந்து கொண்டி ருக்கும் இக்காலகட்டத்தில் மூத்த அறிவிப்பாளரொருவர் இத்தகைய பக்கு வத்தைக் கொண்டிருப்பது அவரது தெளிந்த அறிவுக்கு எடுத்துக் காட்டா கின்றது.
தமிழை விஞ்ஞானத் தேரில் ஏற்றிச் சிறப்பிக்க வேண்டுமென்கிறார். தமிழ்
SO

čo p666): অ
பேசும் மக்கள் மத்தியில் விஞ்ஞானிகள் தோன்ற வேண்டும். அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும். அக்கண்டுபிடிப்புகளுக்குத் தனித் தமிழி லேயே பெயர் சூட்ட வேண்டுமென அபிப்பிராயப்படுகிறார். அதைச் செய் யாமல் வட துருவத்தில் கண்டு பிடித்த ஒன்றிற்கு, தனித் தமிழ்ப் பெயரைத் தேட
முனைவது உமியைக் குத்துவதற்குச் சமனென்கிறார்!
வளரும் தலைமுறைக்குத் தமிழை, தமிழ் எழுத்துக்களை, சொற்களைத் தெளிவாக, அழகாக, இனிமையாக உச்சரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் பொறுப்பு வானொலி அறி விப்பாளர்களுக்கு இருக்க வேண்டுமென அறிவிப்பாளருக்கு வரைவிலக்கணம் கூறுகிறார். வேண்டுகோள் விடுக்கிறார். அதுவே நமது விருப்பமும்! அதுவே தமிழை அழியாமல் பாதுகாப்பதற்கான பாசனமிடும் பெருநதி.
தனக்குக் கிடைத்த மட்டுப்படுத்தப் பட்ட அதிகாரத்தைத் தகுந்த தடத்தில்
திரு. தரும சிவராமு
ஏற்றி தியாகங்களையும் சிரமங்களையும் எதிர் கொண்டு மற்றையோர் மலைக்கும் படியான, மெச்சத்தக்க ஆக்கபூர்வமான பணிகளை ஒலிபரப்புக்குக் கலைக்குச் செய்து கொண்டிருப்பவர் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத். அவரது பணி மேன்மையுறும் திருப்பணி.
வைக்கப் பெற்ற சிறுகதைத் தொகுதி. '
30 எழுத்தாளர்களினது தரமான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு
41 சிறுகதைகளை விற்பனையாகின்றது
: நாலுகங்களில் இருக்க வேண்டிய தொகுப்புகள். VN
மல்லிகைப் பந்தலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
51
ள்ளடக்கிய இரண்டாம்

Page 28
நினைலுலைகள்!
மழை குடை விரிக்கும் மெல்லிய தூறல்கள்
நேற்றைய நினைவுகளை நெஞ்சினில் சுமந்தபடி எங்கோ பறக்கும் கனவுக் கால்கள்
புதிய நிலவாய்ப் பூத்திருக்கும் அந்த பெளர்ணமியில் அடிக்கடி திறந்து கொள்ளும் ஆயிரம் சாளரங்கள்
விலங்கிடப்பட்ட விடுதலைப் பறவையாய் ஒடிக்கப்பட்ட இறகுகளைத் தேடி அலையும் பீனிக்ஸ் பறவை
இன்னும் எழுதப்படாத ஒரு சோகக் கவியின் கருவாக அழும் வாழ் நாட்கள்
- மும்தாஸ் ஹபீள்
கல்விக் கூடம் தந்த கைக்குட்டையில்
அவள் பற்றி காதல் நினைவுகள் பசுமையாக தேடுகிறேன் புழுதியில் எறியப்பட்ட அந்தப் புல்லாங்குழலை
கருந்திரை மூடிய இந்த செவ்வானத்தில சில பவித்ர பொழுதுகள் மட்டும் எனது பேனாவுக்குள்ளும் மையாகக் கசியும்
அப்போதெல்லாம் எனது கவிதைகளிலும் வந்து போகும் அந்த வண்ணத்துப் பூச்சிகள்!
52

ge(65 பிரதியின்
முணுமுணுர்வுக்கள்
- மேமன்கவி
ஈழத்து, தமிழகச் சிறுசஞ்சிகைச் சூழல்
சில குறிப்புகள்.
இன்றைய நாள் வரை தமிழகத்திலிருந்து கணிசமான சிறு சஞ்சிகைகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. நண்பர் பூபாலசிங்கம் பூரீதரசிங் அவர்களின் முயற்சியினால், அவை பல்வேறு கருத்தியல் நிலைச் சார்ந்தவர்களால் வெளிக் கொணரப்படுகின்றன. தாமரை, கணையாழி, காலச்சுவடு, உயிர்மை, தீம்தரிகிட, கவிதாசரண், பன்முகம், புதிய கலாசாரம், சொல் புதிது, புதிய கோடாங்கி, புது எழுத்து, அட்சரம், தீராநதி இப்படியாக அதன் பட்டியல் நீளும். அந்தச் சிறு சஞ்சிகைகளில் வெளிவரும் கருத்துக்களுடன் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அது அவரவர் கருத்தியல் சார்ந்த விடயம். ஆனால், இன்றைய கால கட்டத்தில் அவையும் சிந்திக்க வேண்டிய விடயங்கள் என்பது என்னவோ உண்மைதான். தலித்தியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் மற்றும் தமிழகம் சார்ந்த அரசியல் கட்சிகள், மத நிறுவனங்கள் போன்றவைகளின் மீதான விமர்சனங்கள் மற்றும் உலக மொழிகளின் படைப்புகளின் மொழிப்பெயர்ப்புகள். இப்படியாகப் பல்வேறு விடயங்களைப் பற்றிய விவாதங்கள் (குழுநிலை விவாதங்களையும், தனிமனிதச் சண்டைகளையும் மீறிப் பார்க்கும் பொழுது) கணிசமான முறையில் இடம் பெறுகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.
தமிழகத்துடன் ஒப்பிடும் பொழுது ஈழத்தில் சிறுசஞ்சிகைகளின் தொகை குறைவுதான். மல்லிகை, ஞானம், தாயகம் இப்படியாக ஒரு சில சிறுசஞ்சிகைகள்தான் தொடர்ந்து வெளிவருகின்றன. மூன்றாம் மனிதன் மீண்டும் வரப்போவதாகத் தகவல். வடக்கிலிருந்து யேசுராசா போன்றவர்களின் முயற்சியினால் ஆரம்ப படைப்பாளிகளுக் கென சில பத்திரிகைகள் வெளிவருவதோடு சரி. மற்றப்படி ஈழத்தவர்களின் முயற்சி யினால் புலம் பெயர்ந்தவர்களின் மத்தியிலிருந்து வெளிவந்த சிறுசஞ்சிகைகளின்
53

Page 29
தொகையும் குறைந்து விட்டது. காலம், எக்ஸில், உயிர் நிழல் போன்ற ஒரு சில சிறுசஞ்சிகைகள் மட்டும் வெளி வருவதாக அறிய முடிகிறது. அவையும் தமிழகச் சிறுசஞ்சிகைகள் பரவலாக கிடைப்பது மாதிரி அவை கிடைப்ப தில்லை. தமிழகச் சிறுசஞ்சிகைகளில் நடைபெறும் வகையான பன்முகத் தன்மைகள் கொண்ட விடயங்களைப் கலந்துரை யாடல்கள் நமது சிறுசஞ்சிகைகளில்
பற்றிய விவாதங்கள்,
நடப்பதில் நாம் ஒரு போதாமையை உணர் கிறோம். அதற்குக் காரணம், நமது சிறு சஞ்சிகைகளின் தொகை குறைவாக இருப்பதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை நாம் தேடிப் பார்ப்பது நல்லது. அதேவேளை நாம் மேற்குறித்த தன்மைகள் கொண்ட விவாதங்கள் தமிழகச் சிறுசஞ்சிகைகளில் நடைபெறும் பொழுது நம்மவர்கள் பங்கு பற்றிக் குறித்த அந்தந்த கருத்துக் களுடன் நமது அனுபவங்கள் என்ன என் பதையும் சொல்வதற்கு அந்தத் தமிழகச் சிறுசஞ்சிகைகளுடன் தொடர்புடையவர் கள் முன்வர வேண்டும். குறிப்பாக, தலித் திய எழுத்துக்கள் மற்றும் பெண்ணிய எழுத்துக்கள் சம்பந்தமான நமது அணுகு முறைகள் என்ன என்பதை நாம் எடுத்துச் சொல்ல முன்வர வேண்டும். ஏனெனில் தலித்தியமும் சரி, பெண்ணிய அனுப வமும் சரி தமிழகத்திலிருந்து அவை சார்ந்த அனுபவங்கள் வித்தியாசமானவை.
ஏனெனில், தமிழக தமிழ் பேசும் சமூகம் சார்ந்திராத மிக மாறுபட்ட அனுப வத்தை இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் சந்தித்து வந்துள்ளது. அதனால்தான்
666): অ_2 =
என்னவோ தமிழகச் சிறுசஞ்சிகைக்
காரர்கள் கூட, தமிழில் என அடையாளப்
படுத்தி பல்வேறு கோட்பாடுகளைப்
பற்றி விவாதிக்கும் பொழுது மாறுபட்ட
அனுபவங்களைக் கொண்ட ஒரு தமிழ்
பேசும் சமூகம் ஒன்று இலங்கையில்' இருப்பதை மறந்த நிலையில் தங்கள்
கருத்துகளுக்கான முடிவுகளை வெளியிடு
கிறார்கள்.
அதனால், கலை இலக்கியத்தைச் சார்ந்த அறிவுஜீவிகள் அந்தக் கலந்துரை யாடலிலும், விவாதங்களிலும் பங்கேற்க வேண்டும். அப்பொழுதுதான் தாங்கள் தான் எல்லாவற்றிலும் முதன்மையான வர்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்துச் சிறுசஞ்சிகைச் சூழலைச் சார்ந்த அறிவுஜீவிகள் முன்வைக்கும் கருத்துக்களைப் படித்துவரும் இலங்கை தமிழ் பேசும் வாசகனுக்கும் அந்த கருத்து களிட்ட நம்மவரின் பார்வை என்ன? என்பதும் தெளிவு பெறக் கூடியதாக இருக்கும்.
2. தமிழ்த் திரைப்படங்களின்
இன்றைய நிலை
தமிழகத்திலிருந்து வரும் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கும் பொழுது தமிழகத்தில் நல்ல சினிமா பற்றி அக் கறை இன்னும் பரவலாக வளரவில்லை என்பது நிச்சயமாகிறது. இன்று தமிழ கத்தில் தமிழ்த் திரைப்படத்தை பிரபல ஹிரோக்கள் தங்களைப் பற்றிய படிமங் களை வளர்த்தெடுப்பதற்கான ஒரு சிறந்த சந்தை உற்பத்திப் பண்டமாகவே பாவித்து வருகிறார்கள். இந்த நிலை
54

8 666):
། நீடிக்கும் வரை தமிழகத்திலிருந்து நல்ல சினிமா வருவது என்பது சாத்திய மில்லை என்றே தோன்றுகிறது.
மேம்போக்காக அந்தத் திரைப் படங்களைப் பார்க்கின்ற பொழுது ஏதோ பெரிய புரட்சியினை நிகழ்த்து கின்ற கருத்துக்களைச் சொல்லுகின்ற படங்களாக அடையாளப்படுத்தியும், விளம்பரப்படுத்தியும் தமிழக மக்களை முட்டாள்களாக்குவதில் அந்தப் பிரபல ஹிரோக்கள் முன் நிற்கிறார்கள். வன் முறைக் கலாசாரத்திற்கு எதிராகப் படம் எனச் சொல்லிக் கொண்டு முக்கால் வாசிப் படம் முழுக்க மிக வக்கிரமான, யதார்த்தத்திற்கு முரணான காட்சிகளின் தொகுப்புகளாகவும், பெண்ணின் நிர் வாணத்தைக் காட்டி பணப் பண்டங்க ளாக அப்படங்களை மாற்றி இன்றைய தலைமுறையினரை வழிகெடுக்கும் வேலையை செம்மையாக அந்த பிரபல ஹிரோக்கள் செய்து முடித்துக் கொண்டி ருக்கிறார்கள். ஆழமான விமர்சனப் பார்வையில் அத்தகைய படங்கள் பிற் போக்கான, மற்றும் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் சக்திகளுக்கு துணை போவது தெரியவரும்.
அன்றைய தமிழகச் சூழலில் திரா விட இயக்கம் (நான் இங்கு திராவிட இயக்கம் என குறிக்கும் போது அது பெரியாரை மையப்படுத்திய திராவிட இயக்கத்தை நினைத்து சொல்லவில்லை. மாறாக, அறிஞர் அண்ணா முதல் இன்றைய தமிழகத்தில் அ.தி.மு.க., இ.தி.மு.க. என இப்படியாகப் பல கிளை களாகப் பிரிந்து கிடக்கும் கட்சிகளையே
55
சொல்லுகிறேன் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது நல்லது.) போன்ற அரசியல் இயக்கங்கள் நேரடியாக தமது இயக்கக் கருத்துக்களைப் பரப்பத் தமிழ் சினிமாவைப் பயன்படுத்தியதன் வழி யாக அன்றைய காலகட்டத்தில் தமிழக சமூக அரசியல் மாற்றங்களுக்குத் தமிழ்ச் சினிமா நன்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய தமிழக அரசியல் சூழலில் திராவிட இயக்கத்தின் கடைசிக் கொழுந்துகளாலும் சரி, அந்த இயக் கத்தின் வாரிசுகளாய் மிஞ்சி இருக்கும் அந்த இயக்கத்தின் தலைமைகளாலும் சரி, தமிழ் சினிமாவைப் பயன்படுத் தாமையும், அப்படிப் பயன்படுத்தியும் பயனை ஏற்படுத்தாத நிலையும்தான் காணமுடிகிறது. உதாரணத்திற்கு அந்த இயக்கத்தின் முக்கிய தலைகளாக இருந்த, இருக்கும் நபர்களை வைத்து மணிரத்தினம் எடுத்த இருவர் என்ற படமும் சரி, சமீபத்தில் கலைஞர் கருணா நிதி வசனம் எழுதி வெளிவந்த ஒருசில படங்களும் சரி எந்தவொரு தாக்கத்தை யும் ஏற்படுத்தாது காணாமல் போன கதையும் இங்கு நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.
அந்தக் காலகட்ட அரசியல் இயக் கங்களும் சரி, இன்றைய தமிழக அரசி யல் இயக்கங்களும் சரி எவையுமே தமது கருத்துக்களைப் பரப்புவதற்கான ஆயுத மாக சினிமாவைப் பயன்படுத்தவே இல்லை. திராவிட இயக்கம் மாத்திரம் தான் தமிழ் சினிமாவைத் தமது கருத்துக் களை பரப்புவதற்கான நல்ல ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டது. (அன்றைய தமிழகத்தில் திராவிட இயக்கம் தமிழ்

Page 30
சினிமாவை தனது முக்கிய ஊடகமாக பயன்படுத்தியதற்கு என்ன காரணம்? அன்றைய, இன்றைய தமிழகத்து மற்ற அரசியல் இயக்கங்களும் சரி, இன்றைய திராவிட இயக்கமும் சரி தமிழ் சினிமாவைத் தமது கருத்துக்களைப் பரப்புவதற்கான ஊடகமாகப் பயன் படுத்த முடியாமல் போனதற்கான காரணங்கள் என்ன? என்பது நீண்ட ஆய்வுக்குரிய வினாக்கள்.)
ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. அதே திராவிட இயக்கத்தின் கடைசிக் கொழுந்துகளும், அந்த இயக் கத்தின் மிஞ்சி நிற்கும் தலைமைகளின் வாரிசுகளும் இன்று பணம் பண்ணும் பண்டங்களாகத் தமிழ்ப் படங்களைத் தயாரித்துக் கொண்டிருப்பதன் மூலமும், எந்தவொரு சமூக அரசியல் இயக்கத் துடன் நிரந்தரமாகத் தம்மை அடையாளப் படுத்தி கொள்ளாது தங்களது ஹீரோயிச படிமத்தையும், பணத்தையும் வளர்த்துக் கொள்ள முனையும் ஒருசில தனிமனிதர் களாலும், தமிழக தமிழ்ச் சினிமா ஒரு சிறந்த தொழிற்றுறையாக இனங்கண்டு கொண்ட பல முதலிட்டாளர்களாலும் இன்றைய தமிழ்ச் சினிமா ஒரு ஆரோக் கியமான வளர்ச்சியைக் காண முடியாத
சூழலில் சிக்கி இருக்கிறது.
அத்தி பூத்தாற் போல் ஆட்டோ
கிராப், கண்ணாடிப் பூக்கள் போன்ற சில நல்ல தன்மைகள் கொண்ட படங்கள் வெளிவந்து அவை தோல்விப் படங் களாக மாறி விட்டாலோ, அத்தகைய படங்களை தயாரித்தவரோ, இயக்கிய வரோ காணாமல் போய் விடுவார்கள்.
|
666):
தப்பித் தவறி அதே படங்கள் வெற்றிப் படங்களாகி விட்டாலோ அத்தகைய படத்தைத் தயாரித்தவரோ, இயக்கிய வரோ அடுத்த படம் அதே மசாலா பட மாகி மாறி அவர்களை வெற்றிப்படத் தயாரிப்பாளராகவோ, இயக்குநராகவோ பேர் பெற்றுக் கொடுத்து அவர்களையும் கெடுத்து விடுகிறது.
இந்த லட்சணத்தில் தமிழகத்துத் தமிழ்த் திரைப்படம் எப்படி உருப்படும்?
இத்தகைய சூழலின் மத்தியில் குறுந் திரைப்பட, ஆவணத் திரைப்பட முயற்சி கள் தமிழகத்தில் நடைபெறத்தான் செய்கின்றன. அத்தகைய திரைப்படங்கள் இலங்கையைச் சார்ந்த நல்ல திரைப்பட பார்வையாளன் பார்க்கும் சந்தர்ப்பத்தை பரவலாக ஏற்படுத்த வேண்டும். அதே வேளை, நமது வடக்கிலும், இங்கிருந்து புலம் பெயர்ந்து போனவர்களாலும், நமது சகோதர சிங்கள மக்களிடையேயும் மேற் கொள்ளப்படும் காத்திரமான சினிமா பற்றிய குறைவான ஒர் அறிதலில்தான் தமிழக சினிமா உலகம் இருக்கிறது. (நிழல் போன்ற தமிழகத்திலிருந்து வெளிவரும் சினிமா சம்பந்தமான சிறு சஞ்சிகைகள் மட்டும் நாம் மேற்குறித்த முயற்சிகளைப் பற்றிய அறிதலில் ஆர்வம் கொண்டுள்ளதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டிய ஒரு செய்தி.) தமிழில் பல்வேறு துறைகளுக் குள் ஈழத்தமிழ் பேசும் மக்கள் கொண்டு வந்திருக்கும் மாற்றம் போல் தமிழில் மாற்றுச் சினிமாவும் நம்மிடையேதான் தோன்றும் போல் தெரிகிறது.
5G

3. கெக்கிராவ ஸஹானாவின் "இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்' ஈழத்தில் முஸ்லிம் பெண் சிறு
கதைப் படைப்பாளியாகப் பரவலாக
மூலம் கெக்கிராவ ஸஹானாவின் “இன்றைய
மல்லிகை அறியப்பட்ட
வண்ணத்துப் பூச்சிகள்” தமிழகத்தில் மாங்குயில் பதிப்பக வெளியீடாக சமீபத்தில் வெளிவந்து இருக்கிறது.
ஈழத்தில் கணிசமான தொகை முஸ்லிம் பெண்கள் எழுதிக் கொண்டி ருப்பதாக நமக்குத் தெரிகிறது. அவர் களில் அதிகமானவர்கள் ஒரு கால கட்டத்தில் காணாமல் போய் விடு கிறார்கள். அப்படி அவர்கள் காணாமல் போனதற்கான சமூகக் காரணிகள் பல இருப்பினும், காத்திரமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் எழுத்து உலகத்தி லிருந்து காணாமல் போவது வருத்தத்தை தருகிறது. கொழும் பு எம்.ஏ.றஹீமா)
(உ- ம்
அப்படி எழுத வந்து காணாமல் போன முஸ்லிம் பெண் படைப்பாளி
களும் சரி, இப்பொழுது எழுதிக்
கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்
படைப்பாளிகளும் சரி, ஈழத்து தமிழ் இலக்கியம் என்ற பெரும் பிரவாகத்திற்கு வளம் சேர்க்கும் வகையிலான கேள்வியும் நம் கைவசம் இருக்கத்தான் செய்கிறது. அக்கேள்விக்கான பதிலை இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கும் நயீமா ஏ.சித்தீக் (இவரது படைப்புகளைக் கொண்ட நூல்
57
ஒன்று சமீபத்தில் வெளிவரப் போவதாக இக்குறிப்பு எழுதிக் கொண்டிருந்த இரவில் நண்பர் அந்தனி ஜீவா தொலை பேசியில் அறிவித்தார்.) முதற் கொண்டு சுலைமா ஏ.சமி, கெக்கிராவ ஸஹானா என நம் முன் இருக்கும் முஸ்லிம் பெண் சிறுகதைப் படைப்பாளிகள் முதற் கொண்டு, கவிதைத் துறையில் சுல்பிகா, மசூறா ஏ. மஜீட், அனார் போன்ற முஸ்லிம் பெண் கவிதைப் படைப்பாளி களின் படைப்புக்களையிட்ட ஆழமான பரவலான விமர்சனங்கள் மூலம்தான் பெறக்கூடியதாக இருக்கும். ஆனால், நம் மத்தியில் அவ்வாறான விமர்சன முயற்சி கள் நடைப்பெற்றதாகத் தெரியவில்லை.
ஒரளவு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் ஈழத்துத் தமிழ்க் கவிதைத் துறையில் சம்பிரதாய பூர்வமான ஆண்ணிய மொழியிலிருந்து விடுபட்ட நிலையில், பெண் மொழி என்ற பிரஞை
யுடன் எழுதி வரும் ஈழத்து முஸ்லிம்
பெண் கவிஞர்களான சுல்பிகா, மசூறா ஏ.மஜிட், அனார் போன்ற முஸ்லிம் பெண் கவிதைப் படைப்பாளிகளின் கவிதைகள் சற்று அவதானம் பெற்றி ருக்கும் சூழலில், கெக்கிராவ ஸஹானா வின் 'இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்” வெளி வந்திருக்கிறது.
பெண் மொழி என்கின்ற பொழுது, பெண் படைப்பாளிகள் தமது சொந்த அல்லது இன்றைய பெண்ணின் அனுப வங்களைத் தமக்கான மொழியினைக் கொண்டு படைப்பில் வெளிப்படுவது ஆகும். (தமிழக மற்றும் அன்றைய நமது போர்ச் சூழல் அனுபவங்களை இன்று

Page 31
தமக்கான பெண் மொழியில் தமது படைப்புக்களை வெளியிட்டு, சர்ச்சை களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் சக தமிழ்ப் பெண்களைப் பற்றி நமது ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளிகள் எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக் கிறார்கள்? என்பதும் எனக்குள் ஒரு கேள்வி.) அந்த வகையில் கெக்கிராவ ஸஹானாவின் “இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்” எனும் இத்தொகுப்பில், அவர் தனது அனுபவங்களைச் சொல்லுகிறார் என்ற வகையிலும், பெண் மொழி என்ற தளத்திற்குச் செல்வதற்கான எத்தனிப் புக்கள் அவரது இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சில கவிதைகளில் தெரி இத் தொகுப்பு நமக்குத் திருப்தியினை அளிக்கிறது.
கின்றன என்ற வகையிலும்
வரும் காலத்தில் ஈழத்து முஸ்லிம் பெண் கவிதைப் படைப்பாளிகளைப் பற்றிய ஆய்வில் ஆர்வம் மிக்கவர்கள். தனது அனுபவங்களைத் தனித்துவமான ஒரு மொழி வடிவில் சொல்ல எத்தனித் திருக்கும் கெக்கிராவ ஸஹானாவின் கவிதைகள் மீதும் தமது பார்வையைச் செலுத்த வேண்டும் எனக் கூறி, உங்கள் பார்வைக்கு அவரது இரு கவிதைகளைத் தருகிறேன்.
இன்றைய வண்ணத்துப்
பூச்சிகள்
ஜன்னலின் மீதொரு வண்ணத்துப் பூச்சி நின்றமர்ந்து தியானித்திருந்தது. தடி கொண்டதை மெல்லத் தட்டினேன். துடித்தெழுந்து வட்டமிட்டு
ஒருமுறை என்னை மோதி உயரப் பறந்தது.
ரிசல்ட்ஸ்
உன் வரவால் ஆனந்த மழை பொழியும் என்று நினைத்திருந்தேன்.
வந்தாய்! மழை பொழிகிறது.
assovTsofií Losop!
大 ★ ★ 女 ★
யுக யுகாந்தரமாய் கண்ணில் நின்ற கனா உன் பாதத் துகள்பட்டுக் கண்ணிராய் கரைந்ததென்ன?
女 ★ ★ ★ 决
கூண்டில்தான் இருக்கிறேன் என் சிறகுகள் வானத்தில்
58
 

சிங்களத்தில் : தர்ஸனா ஸம்மி விஜேதிலக
நாட்டைக் eoட்டியெழுப்புலுேனன்..!
- தமிழில் திக்குவல்லை ஸப்வான்
“ஸேர். நீங்க எங்களுக்கு இப்படிச் செய்விங்கன்னு நாங்க கனவுலேம் நினைக்கல்ல. இப்போவெல்லாம் ரீ.வி.யில உயரப் பாய்ந்து பாய்ந்து சிலர் பாடுறாங்களே. யார் அது? அமைச்சர் உங்களுக்கு சும்மாவாவது எங்கள நினைவுக்கு வந்தாத்தானே..? பழைய பாடகர்களான எங்கள நீங்க முழுசாகவே மறந்திட்டீங்க. நீங்க இந்தப் பதவிக்கு வர வழி சமைச்சதே நாங்கதான். மேடைக்கு மேடை தொண்டை கிழியப் பாட்டுப் பாடியது யாரு...? நாங்கதான். ஆனா இப்போ ஆசைக்காவது எங்கட மூஞ்சிய ரீ.வி.யில காட்டுறாங்களா..? சுனாமிப் பாட்டு. சுனாமிப் பாட்டு என்று சொல்லிச் சொல்லி எங்கேயோ போகிற குரங்குக் கூட்டம் கொஞ்சம் உடம்ப தளுக்கிக் குலுக்கி பாட்டுப்பாடி கழுத்தறுக்கிறானுவள்."
பிரபல பாடகியான தேராணி, அமைச்சர் பியதாஸகங்கே அவர்களின் முன்னால், மூச்சுவிடாமல் தனது வயிற்றெரிச்சலைக் கொட்டத் தொடங்கினாள். அமைச்சர் அலட்டிக் கொள்ளாமல், மிகவும் அமைதியோடு அவளைப் பார்த்தார்.
"மிஸ். இதுக்கெல்லாம். போய் இவ்வளவு கோபம் எடுக்கிறது தப்பு. அது மேலிடத்து உத்தரவு. அதனால்தான் அந்தப் பாடல அவங்களக் கொண்டு பாட வெச்சன். அதுக்குப் போய் நீங்க குழம்ப வேண்டிய அவசியமே இல்ல. நாங்க இனி வருகிற நாட்கள்ல மக்கள்ட மனசுக்கு ஆறுதல் தருகிற விதத்தில ரெண்டு மூன்று பாடல்கள எடுத்து விடுவம். இதன் மூலம் அவங்கட சோகத்தப் போக்க வேணும். இந்தப் பாடல்களுக்காக மாத்திரம் இருவது லட்சத்த ஒதுக்கி இருக்காங்க. மிஸ் கீதராணி. இந்த வேலய நீங்களே. முன் நின்று. பொறுப்பெடுத்துச் செயல்ல இறங்குங்கோ. பாடல்கள் ஒன்று ரெண்டு இயற்றித் தர எனக்கு யோசனை இருக்கு. ஆனா பாருங்கோ. இந்த வேலைகளுக்கு மத்தியில அதுக்கெல்லாம் எனக்கு நேரமா கெடைக்குது..?"
59

Page 32
எவரையும் மடக்கி, அமைதிப்படுத்தி பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அமைச்சர் கங்கே அலாதியான திறமை படைத்தவர். இந்த வல்லமை மாத்திரம் இல்லா விட்டால் கடந்த நாட்களில் தலையைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டிற்குள்ளே பதுங்க வேண்டி நேரிட்டிருக்கும். நிவாரணங்களைப் பங்கிடுதல், பணம் வழங்கல், பாதிக்கப்பட்டவர்களின் பிரச் சினைகளைத் தீர்த்தல், மீள் கட்டமைப் புப் போன்ற நடவடிக்கைகள் யாவும் அமைச்சரின் கண்காணிப்பின் கீழ் நடக்க வேண்டுமென்பது மேலிடத்து உத்தரவு! இந்தக் கட்டளையினால் சில அமைச்சர் களின் வேண்டாத பார்வைக்கு அமைச்சர் சிக்கினாலும், அதையெல்லாம் பொருட் படுத்தாமல், தன்னால் இயன்ற விதத்தில் மேலிடத்தில் உள்ளவர்களின் மனத்தை வென்று கொண்டு காரியமாற்றுவதில் அமைச்சர் விசேட கரிசனை காட்டினார்.
அன்று காலை வெளியான ஒரு பத்திரிகைச் செய்தியினால் அமைச்சர் சற்று ஆடிப்போனார். மனைவியின் உறவினர்கள் மீது கோபம் பீறிட்டுப் பாய்ந்தது.
“ச்சே. இவனுகளுக்கு ஒரு எழ வுமே விளங்குதில்ல. மலத்த தின் றாலும். ஒடம்புல பூசிக்காம சாப்பிடக் கூட அதுக்குத் திறமையிருக்கணும்."
முணுமுணுத்துக்
கொண்டே செய்தியைக் கண்களால்
அமைச்சர்
மேய்ந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டப் படவுள்ள வீடுகளின் அடிக்கல் நடும்
விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்களுக்கு உபசரிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து
SpaceSG)85
நிவாரணமாகக் கிடைத்த சீஸ், பிஸ்கட், சொக்லட், முந்திரிப் பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட குளிர்பானம் போன்றன பாரிமாறப்பட்டதாகவும், அதற்காக சம்பந் தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் மைத்துனருக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறியது.
இந்தச் செய்தியை யார் எழுதி யிருக்கக் கூடும் என்று துருவி ஆராய அமைச்சர் முடிவு எடுத்தார். எதற்கும் அவசரப்படுவது புத்தியல்ல என்று மனம் எச்சரித்தது.
"இந்தப் பத்திரிகைப் பசங்கள மடக் குற விதம் எனக்கா தெரியாது” தனக்குள் எண்ணிக் கொண்டே செயலாளர் முது குமாரணவைப் பார்த்தார்.
"தினஜய பேப்பர்காரனோட "லைன’ எடுத்துத் தாங்க” என்றார்.
மிக விரைவில் தொடர்பு கிட்டியது.
"என்ன.
தினஜய ஆசிரியரா.
செளக்கியமா இருக்கிறீங்களா. உங்
களுக்கு நன்றி சொல்லத்தான் எடுத்தன். எனது அமைச்சு என்றாலும் எனக்கே தெரியாத தில்லுமுல்லுகள அம்பலத் துக்கு கொண்டு வந்தீங்களே அதுக்குத் தான். இங்க பாருங்க ஐசே. எனக்கு இதைப் பற்றி கடுகுமணியாவது தெரியா துன்னா நம்புங்க. என்னைச் சுற்றியுள்ள வங்க சந்தர்ப்பத்தில பிரயோசனம் எடுக் கப் பார்க்குறாங்க. யார் என்றாலும் பரவாயில்ல. எனது மச்சான் ஆகட்டும். மனைவி ஆகட்டும். இது மாதிரி கேடு கெட்ட வேல செஞ்சா சும்மா விட மாட்டன். உடனடியா நடவடிக்கை
GO

č? Dege): Qs
எடுத்து அதைப் பற்றித் தேடுவன். செய்தியை வாசித்தவுடனேயே என்ன செய்ய வேணும் என்று செயலாளருக்கு அறிவிச்சிட்டன். அந்த துணிச்சலான செய்திக்கு எனது பாராட்டுக்கள். அதுசரி செய்தியை எழுதிய அந்த முதுகெலும் புள்ள ஆசாமி யாரு. பார்க்கணும் போல இருக்கு. ஆள எனக்கிட்ட அனுப் புங்கோ. அதோட ஒரு விஷயம். எதிர் வரும் நாட்கள்ல, நாங்கள் தீபங்களா வோம்' என்று ஒரு வேலைத் திட்டத்தத் தொடங்க இருக்கிறன். பாதிக்கப்பட்ட வர்களை மீண்டும் தட்டி எழுப்பும் அருமையான திட்டம். இதப்பற்றி பொது மக்களும் அறியணும். உங்கட ஆளுக்கு விபரமாப் பத்திரிகையில எழுதச் சொல் லுங்கோ... உங்களுக்கு கடவுள்ட துணை. புத்த பெருமானோட பாதுகாப்பு. வைக்கிறன்"
அப்போ
மனைவிக்கும், அவளது உறவினர் களுக்கும் இதைவிட ஜாக்கிரதையாக, விஷயம் வெளியில் ஒழுகாமல் வேலை செய்ய அறிவுறுத்த வேண்டுமென, ரிஸிவரை வைக்கும் போதே நினைத்துக் கொண்டார்.
அமைச்சர் பியதாஸ் கங்கே அவர் களுக்கு இத்தினங்களில் ஒய்வு ஒழிச்சலே இல்லாத வேலை! நிம்மதி துளியும் கிடை யாது. இந்தியாவிலிருந்து கிடைத்த இயந்திரம் மூலம் சீமெந்துக்கல் உற்பத்தி செய்யும் நிலையத்தைத் திறந்து வைக்கும் விழா இன்று காலைதான் ஆரம்பமானது. அமைச்சர் கங்கே முழுப்பலத்தையும் பிர யோகிந்து, ஆயாசத்தோடு முதலாவது சீமெந்துக்கல்லை வெட்டினார். தொலைக் காட்சி "கெமரா தன் பக்கம் திருப்பப்
G1
பட்டிருப்பதை உணர்த்தும், முகத்திற்கு சிரமத்துடன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டார்.
அதையடுத்து மரணித்தவர்கள் சில ரின் குடும்பங்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்குவதற்காகப் பிரதேசச் செயலகத்தை நோக்கிப் புறப்பட்டார். தன் னால் போக முடியாத இடங்களுக் கெல்லாம் தனது அதிகாரிகளை அனுப்ப வழிபார்த்துக் கொண்டார். பாதிக்கப்பட்ட வர்க்ளுடன் பணி புரிவது இலேசுப்பட்ட காரியமா என்ன...?
நேற்றுக் கூட அகதி முகாம் ஒன்றைப் பார்வையிடச் சென்ற அமைச்சரின் செயலாளரையும், இன்னும் சில அதிகாரிகளையும் அங்குள்ளவர்கள் ஒடோட விரட்டி விட்டார்கள்.
"எங்கே அமைச்சர்.? இங்கே எங் களுக்குத் தருகின்ற குழைந்த சோற்றை ஊட்ட அவரை அழைத்து வா...' என்று கோஷம் எழுப்பி, சோற்றுப் பீங்கான் களை தரையில் அறைந்து, நொறுக்கிப் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
பெருங்
எந்தவொரு விடயத்திற்கும்
பதட்டம் கூடாது; நிதானம் தேவை என்பது அமைச்சர் கங்கே அனுபவத்தில் கண்ட உண்மை. நிவாரணமாகக் கிடைத்த பொருட்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு தானே அங்கு போகத் தீர்மானித்தார்.
பொறுப்பாக நியமித்த ஆட்கள் விட்ட தவறுதான் இதற்கெல்லாம் காரணம். ஒவ்வொருத்தனும் தன்னுடைய மடியைப் பெருக்க முயற்சிக்கின்றானே

Page 33
ஒழிய,
மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என்ற
கிடைத்ததில் கொஞ்சமாவது
எண்ணம் கிடையாது. நேற்று நகர சபை மண்ட பத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் சென்ற போது அந்த உண்மையை உறுதியாகவே கண்டார். வேறு நாட்களில் நகர சபையில் நடை பெறும் ஏதாவது ஒரு கூட்டத்திற்குச் சென்றால், அங்குள்ள ஊழியர்கள் அவ. ரைச் சுற்றி வளைத்துக் கொள்வார்கள். தங்களுடைய குறைபாட்டை முன் மொழிந்து மூக்கால் அழுவார்கள். இப் பொழுதெல்லாம் இந்த ஊழியர்களின் முகத்தில் சோகத்தையே காண முடிய வில்லை. அலாதியான பிரகாசம். பல மடங்கு மகிழ்ச்சியுடன் செயற்படுகின் றார்கள். வாய் காது வரையில் கிழிய முகம் நிறையச் சிரிப்பு. இவ்வாறான ஒரு 'கற்பகத்தரு’ ஒருபோதும் அவர் களுக்கு இரங்கியதில்லை.
கூரை முட்டும்வரை அடுக்கப்பட்டி ருந்த சீஸ், ரின் உணவு, பிஸ்கட் வகையறாக்கள், மருந்
அரிசி மூடைகள்,
துச் சாமான்கள், ஆடைகள், பாதணிகள். சுருக்கமாகச் சொல்வதானால் உப்புக் கட்டியிலிருந்து எல்லாமே கிடந்தன. ஆடையணிகள், கீழாடைகள் முதல் தொப்பி வரையில் இருந்தன. எவரது கட்டுப்பாடும் அங்கு இருக்கவில்லை. அனுமதியும் அவசியப்படவில்லை. உயர் அதிகாரிகள் தொட்டுக் கீழ்மட்ட ஊழி யர்கள் வரை பொருட்களின் கைமாற்றம் அபாரமாய் நிகழ்ந்தது. மற்றவர்களுக்கும் பங்கிட்டு, சமாளித்துச் சாப்பிட்டுப் பழக்கமில்லாமைதான் அவர்களிடையே காணப்பட்ட பாரிய தவறாகும்.
Es 66SG)is
"சீஸ்" பக்கெட் பத்து பன்னிரண்டை எடுத்துக் சென்றால், அகதி முகாமுக்குள் இருக்கின்ற அத்தனை பேருக்கும் பகிர்ந் தளிக்க முடியும். "எங்களுக்கும் "சீஸ்" கிடைத்தது" என்று சொல்வார்களே தவிர, "சீஸ்" துண்டின் நீள அகல பரி பற்றி வாதிக்க வரவே மாட்டார்கள்.
Ld T 6sor uib
"ச்சே. மூளையப் பயன்படுத்தி ஒரு வேல செய்ய எங்கடவனுகளுக்குத் தெரிஞ்சாத்தானே. அதுதான் அகதி களுக்கிட்ட வாங்கிக் கட்டிக் கொள்ளு றானுவள்.”
அமைச்சர் கங்கே ஒரு வாய் விஸ்கியை பருகி விட்டு முந்திரிப்
பருப்பைக் கொறிக்கலானார். R R R R R
அனர்த்தம் ஏற்பட்டு இப்போது நாலு மாதங்கள் கடந்து விட்டன. பாதிக் கப்பட்டவர்களுக்காகக் கட்டப்படும் வீட்டுத் திட்டத்தினால், அமைச்சர் கட்டிக் கொண்டு செல்லும் அவரது சொந்த விட்டு வேலை தாமதித்துக் கொண்டே போனது. வீட்டுத் திட்டத்தை ஒப்படைத்திருந்த குணசேகர தனது சொந்த வேலை போல் அமைச்சரின் வீட்டு வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்திருந்த தால் மனதிற்கு அலாதியான நிம்மதி.
முன்பு தயாரித்திருந்த வீட்டுப் "ப்ளானை சற்று வித்தியாசப்படுத்தி, "ஸ்விமிங் ஃபூலை இன்னும் சற்று விசாலமாக்கி, அதற்கருகில் 'விஸ்கி பார்’ ஒன்றையும் அமைத்து, விட்டிற்கு கூடுத லாக இன்னும் இரண்டு அறைகளைச் சேர்த்துத் தெரிகின்ற மாதிரியான
G2

čo DeGSG) অ
தோற்றத்தை 'கம்பியூட்டரில் பெற்று அபாரம் என்று அமைச்சர் பூரித்துச் சிலிர்த்துப்
குணசேகர காட்டியபோது,
போனார்.
மகளின் திருமண வைபவத்தினால் கடந்த வாரம் பொது நிகழ்வுகளில் அமைச்சரால் கலந்து கொள்ள முடிய வில்லை. குடும்ப விவகாரங்களுக்குத் தானும் சிறிதளவாவது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நினைத்தார். அதைவிட, கடந்த நாட்களில் தன்னோடு சேர்ந்து மகளும் மனைவியும் பட்ட சிரமத் தினை அமைச்சர் யோசனை செய்து பார்த் தார். பாதிக்கப்பட்டவர்களின் விபரங் களைச் சேகரிப்பது முதல், பல நடவடிக் கைகளை ஒடிப்பாய்ந்து அர்ப்பணிப்புடன் மகளும், மனைவியும் முன்நின்று செய் தனர். அதனால் அமைச்சர் செய்ய வேண் டிய அதிக பொறுப்புக்கள் அவர்களின் கண்காணிப்பின் கீழேயே நடைபெற்றன.
மனைவியிடம் ஆளுமையும், சிறந்த நிர்வாகத் திறமையும் மின்னி நின்றதைக் கடந்த நாட்களில் அமைச்சர் நன்றாகவே புரிந்து கொண்டார். நிவாரணப் பொருட் கள் அனைத்தும் மனைவியின் கண் காணிப்பின் கீழேயே பகிர்ந்தளிக்கப் பட்டன. சில நாடுகளிலிருந்து கிடைத்த ‘பாஸ்மதி அரிசி மூடைகளை விணாக்க மனைவி இடமளிக்கவில்லை. அவசரத் தேவைக்கு சமைக்க முடியாத அரிசியாக அது இருந்ததால், அனைத்து மூடைகளை யும் மொத்த விற்பனைக் கடையொன்றுக் குக் கொடுத்து, பணமாக்கி வங்கியில் இட்டாள். எதிர்காலத்தில் நிவாரணம் தேவைப்பட்டால் பயன்படுத்த வேண்டும் என்ற மனைவியின் தீர்க்கதரிசனப் புத்தியை மணந்துள் மெச்சிக் கொண்டார்.
G3
அனர்த்தம் நடைபெற முன்பு, தனது மகளுக்கு தொண்ணுறு இலட்சம் பெறு மதியான வீடொன்றையே சீதனமாக வழங்க அமைச்சர் தீர்மானித்தருந்தார். அனர்த்த வேளையின் போது களத்தில் இறங்கி அவள் செயற்பட்ட தன்மையை நினைவு கூர்ந்து, சேவைக்கு நன்றிக் கடன் செலுத்துவது போலப் 'பான்ஸ் ப்ளேஸில் இருநூறு லட்சம்
அவள் செய்த
பெறுமதியான விடொன்றை வாங்கிக் கொடுத்தார்.
நிவாரண உதவி வழங்குவதில் பெரும் ஒழுங்கீனங்கள், முறைகேடுகள் நிலவுவதாகச் சிலர் மேலிடத்திற்கு அறி வித்திருந்தனர். உடனடியாக கொழும் புக்கு வரும்படி தனக்குக் கிடைத்த உத்தரவினால் அமைச்சர் பதறியடித்துக் கொண்டு பறந்தார். முறைப்பாடுகள் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் அங்கே நிகழ்த்திய உணர்வுபூர்வமான உரையினால்
சகலரும் கலங்கிப்
போனார்கள்.
“மெடம். உங்களிடம் முதல்ல ஒரு விஷயம் சொல்லணும். நீரிழிவு, ப்ரஸர் ரெண்டுமே எனக்கு இருக்குது. இந்த அனர்த்தம் ஏற்பட்ட பிறகு இன்று வரை யில் டொக்டர்கிட்டப் போய் மருந்து சொட்டும் எடுக்கல்ல. எனது தனிப் பட்ட வாழ்க்க. உடல் நலக்குறைவு. எல்லாவற்றையும் ஒரு பக்கம் வெச் சிட்டுத்தான் வேலையில இறங்கினன். எனக்குக் கீழே உள்ள அதிகாரிகள் என்ன மாய்க் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா. பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாய் வேலை செய்வது லேசுப்பட்ட காரிய மல்ல. ஒரு நாள் ஒன்றரை நாள் கழிந்த பிறகுதான், 'மெடமு’க்கு என்றாலும்

Page 34
அவர்களைப் புரிந்து கொள்ள முடியும். இதுதான் அங்கே இருக்கிற பெரும் பிரச்சினை. ஒரு முகாமுக்குத் தேநீ ரோடு "கேக்கைக் கொடுத்துட்டு, அடுத்த முகாமுக்கு பிஸ்கட்டைக் கொடுத்தா அங் கேயும் பெரிய பிரச்சினை. "எங்களுக்குச் சரியான முறையில நிவாரணம் கெடைக் கல்ல, கவனிப்பே இல்ல" என்று கூப் பாடு போடுவாங்க. இப்போ பாருங்க. கடற்கரைய அண்டி உள்ள மக்களுக்கு இருந்ததை விட நல்ல வசதி வாய்ப் புக்கள் செய்து கொடுத்திருக்கிறம். முன் பெல்லாம் இந்த சனங்க மலசலகூடம் செல்றதுன்னா பழைய தகரப் பேணி யிலதான் தண்ணீர் எடுத்துப் போவாங்க. நான் முன்வந்து ஒவ்வொரு குடும்பத் திற்கும் "ப்ளாஸ்ரிக் வாளி எடுத்துக் கொடுத்திருக்கிறன். அதைப் பற்றி யெல்லாம் சொல்ல ஒருத்தரும் இல்ல. ஒரு திட்டத்தோடுதான் நாங்க வேல செய்றம். நிவாரணமாகக் கிடைத்த எல்லா உணவுப் பொருள்களையும் ஒரேடியாக அள்ளிக் கொடுத்தா. பிறகு தேவைப் பட்டா என்ன செய்றது.? எங்களுக்கு எந்தநாளும் வானத்த பார்த்துக்கிட்டு, வெளிநாடுகளிலிருந்து வருகிற உதவிகள எதிர் பார்த்துகிட்டு இருக்க முடியாது. மெடம். நாங்க தூர நோக்கோடு. அறி வோடு செயற்பட வேணும். பரவாயில்ல மெடம். இந்த நிவாரணப் பொறுப்ப விருப்பமான ஒருத்தருக்கு ஒப்படை யுங்க. என்னால தடையில்ல. எனக்கும் இந்த விடயம் சம்பந்தமா வேலை செய்து போதும் போதுமென்றாகி விட்டது. எவ் வளவு செய்தாலும் நல்ல பேர் மாத்திரம் கிடைக்கவே கிடைக்காது."
அமைச்சர் தனது பேச்சின் கடைசிப்
|
6656):
VNS
பகுதியை மிகவும் விரக்தி ஏற்படும்
தோரணையில், பெருமூச்சோடு முடிப்
பதற்கு வழிபார்த்துக் கொண்டார்.
இனிவரும் நாட்களிலும் பணம் வழங்கல், நிவாரணப் பொருள் பகிர்வு, மீள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அலுவல்களையும் அமைச்சர் கங்கே அவர்கள்தான் தொடர்ந்தும் பொறுப் பேற்று செய்ய வேண்டுமென மேலிடம் உத்தரவு பிறப்பித்தது.
K R K R &
அனர்த்தம் முடிந்து எட்டு மாதங் களாகி விட்டன.
இந்தக் கால எல்லைக்குள் பாதிக்கப் பட்ட அனைவருக்கும் வீடுகள் கட்டி முடிக்க முடிந்தமை அமைச்சருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று பல ரும் பேசிக் கொண்டார்கள். கொந்த ராத்தை ஒப்படைத்த குழுவின் அபரிமித மான திறமையை விட்டுத் திட்டம் வேக மாக முடியக் காரணம் என்பதை ஏற்றுக் கொண்ட அமைச்சர், அவர்களுக்கு தனது செலவில் இராப்போசன விருந்தளிக்க முடிவு செய்தார். அமைச்சரின் பிறந்த தினமும் வந்து வாய்த்தது சிறப்பம்சமாகும்.
அன்றைய தினம்
வீடு கட்டுந் திட்டத்தின் பிரதான கொந்தராத்துக்காரர்களான குணசேகர, எல்டன், சமரதிவாகர உட்பட அமைச் சருக்கு நெருக்கமான பலரும் உபசாரத் தில் கலந்து கொண்டனர். ஏனைய பிரதேசங்களை விட முன்பதாக வீடுகள் கட்டி முடிந்தமை அமைச்சரின் சாதனை என்று ஆளுக்காள் புகழத் தொடங்
கினார்கள்.
G4

č? at GSG)
a?svoa arvaruvas QPIrra) வார்த்துக் கொண்ட குணசேகர அமைச் சரின் தூர நோக்கைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்.
'உண்மையிலேயே அமைச்சர் எதைச் சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும். கடந்த நாட்கள்ல ஏற்பட்ட அனர்த்தத்தினால அதிகமானவங்க தண்ணீர்ல மூழ்கி இறக்கல்ல. மதிற் சுவர் களுக்கும், கூரைகளுக்கும் அடிப்பட்டுத் தான் செத்தாங்க. பரம்பரை பரம்பரையாக வாழலாம் என்ற நெனப்புல தடித்த சுவர் கள கட்டி, மிகப் பாரமான பலகைகள கூரையில வெச்சி வீடுகள் கட்டினாங்க. கடைசியில பரம்பரைக் கணக்கில வாழ நெனச்சவங்க அவற்றுக்கே அடிப்பட்டு இறந்தாங்க. போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டால்
எதிர்காலங்கள்ல இது
இறப்பு வீதம் குறைய பாரமில்லாத சின்னஞ்சிறு வீடுகள்தான் கட்ட வேணும் என்று அமைச்சர் தகுந்த ஆலோசனை சொன்னார். எங்கட நாட்டைப் பொறுத்த மட்டில் ஒற்றைச் செங்கற்கள் கொண்டு له (اطلاع
கட்டப்படுகின்ற நாட்களுக்கு நின்று பிடிக்கும்."
வீடுகள்தான்
மதுபானம் அருந்தாத சமாதிவாகா சோடா நீரினால் உதடுகளை நனைந்த படியே அதனை ஆமோதித்தார்.
"ஆமாம். ஆமாம். இன்று ஜப் பானப் பாருங்கோ. அங்கு அதிகமான வங்க பலகையால விட கட்டியிருக் காங்க... ன்ன்ன, ஜப்பான்காரனுக்குப் பணத்துக்காப் பஞ்சம்? அனர்த்தம் எற் பட்டா முகங்கொடுக்க நாங்க அந்த மாதி நுணுக்கங்கள முன்மாதிரியா எடுத்துக் கணும்."
G5
“ஸேர். வீட்டுத் திட்டத்திற்கு உதவி செய்த நாடுகளின் தூதுவர்களை வீடு குடிபுகு விழாவுக்குக் கட்டாயம் அழைக்கணும்.”
அனுபவத்தில் பூச்சியமான, அவசர மாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள முடியாத, அனர்த்தத்தின் பின் இரும்புக் கடை ஒன்றை புதிதாகத் திறந்துள்ள அமைச்சரின் உறவுமுறைப் பையன் ஒருவன் வாயைத் திறந்தான். அவனது கோரிக்கையில் அமைச்சர் குழம்பிப் போனார்.
"விசர் கத கதைக்க வேணாம். வீடு
கள் கட். இவ்வளவு உதவி செஞ்சவங்
களுக்கு நாங்க ஏன் திரும்பத் திரும்ப தொந்தரவு கொடுக்கணும். ரொம்ப அழகாப் புகைப்படம் கொஞ்சம் பிடித்து சிறிசா புத்தகம் ஒன்றையும் அச்சடித்து சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பு வோம். இது சம்பந்தமான பொறுப்பினை ஏற்கனவே நம்பிக்கை வாய்ந்த ஒருத்தருக் கிட்ட நான் ஒப்படைச்சிட்டன்."
அமைச்சரின் பதிலினால் அனை வரும் வியந்து போனார்கள்.
A
ஆகா. அமைசசாட மூளதான
gy
மூள.
வீடு குடி புகும் வைபவம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. கவர்ச்சிகர மாகக் கட்டப்பட்டிருந்த மேடையில் பாடகர்கள், பாடகிகள் ஒன்றிணைந்து "கனாமி எழுச்சி கீதம் இசைத்தார்கள். மேடைக்கும், பாடகர்களுக்கும் மாத்திரம் இலட்சக் கணக்கில் செலவழிக்கப்பட்டி ருந்தது. என்றாலும் இந்த இனிமையான பாட லைக் கேட்கும் பொழுது, செல

Page 35
வழித்த இலட்சக் கணக்குகள் விண்போக வில்லை என அமைச்சர் நினைத்தார். பெறுமதியான பாடலை நாட்டு மக்களுக் குத் தரமுடிந்ததே என்று குதூகலித்தார். பாடலின் இறுதி வரிகளைப் பாடும் பொழுது பாடகர்கள் மனதைக் கவரும் | விதமாக இசைவாக அசைந்தபடி, ஓர விழிப் பார்வையால் தன்னை நோக்கிய படி, அசைந்த விதம் அமைச்சர் கங்கே யின் உள்ளத்தில் நிலையாக எதி ரொலித்து, மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிப் பிரவகித்தது.
"எங்கள் மண்ணின் பிதா போன்றவரே - என்று; சிரசுக்கு நிழல் தந்தவரே தங்குமிடம் தந்து காத்தவரே - உங்களுக்கு புத்தர் கருணை காட்டுவாராக" பாடலுக்கிடையில் சிறிய கோவணத் துணியோடு மேடைக்கு ஓடிவந்த கலை I ஞர் விஜேவன்ன மனத்தைத் தொடும் மனோ ரம்மியமான நடனத்தைத் தந்தார். அவரோடு சேர்ந்து மெல்லிய சேலை | அணிந்து அவரது பெண் நடனக் குழு வினர் ஆடிய ஆட்டத்தை அமைச்சர் வெகுவாக ரசித்தார்.
கோழிக் கூடு, போன்றவற்றுக்கு உவமித்து, வீடுகளைப்
பக்கிஸ் பெட்டி
பற்றி அரசுக்கு விரோதமாகப் பத்திரிகை களில் கட்டுரைகள் எழுதியோருக்குச் சாட்டையடி போல, அரசு பத்திரிகை களில் வீடுகளின் புகைப்படங்கள் பிர மாதமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தன. வெளியே காணப்பட்ட போகன்விலா பூஞ்செடிகள், வானவில் வர்ணத்தில்
தொங்க விடப்பட்டிருந்த கதவுத் திரைச்
Ecco: QN
சீலைகள், வாசலின் நடுவே தென்பட்ட அலங்கார வேலைப்பாடுகளையுடைய "ப்ளாஸ்ரிக் நாற்காலிகள் வீடுகளை விடப் பெரிதாக அந்தப் புகைப்படங் களில் காட்சியளித்தன.
செலவழிக்கப்பட்ட பணத்திற்கு ஒப் பான பெறுமதி வீடுகளுக்கு இல்லை என்ற குசுகுசு பரவலாக எழுந்தபோது, வெகு அலங்காரம் வீடுகளின் பெறுமதி யை பத்து மடங்கு அதிகரித்துக் காட்டுவ தாக விட்டுத் திட்டத்தின் அலங்கார வேலைப் பொறுப்பாளர் பத்மகுமார வாய்ப்பந்தல் விரித்தார்.
பேரழிவை நிகழ்த்திய சுனாமியைத் தான் நாட்டின் உயர்வுக்கு வழிகாட்ட வந்த பேரொளி தீபமாகவும், நாட்டின் அரசியல், பொருளாதார, இனப்பிரச் சினையைத் தீர்க்க வந்த ஆசீர்வாத மாகவும் காண்பதாகவும் அமைச்சர் தனது அபூர்வமான சொற்பொழிவில் சுட்டிக் காட்டினார்.
R R R R R
நாளை பிறக்கப் போகும் 2006 புத்தாண்டு முதலாந் திகதியிலேயே தனது புதுமனையில் குடிபுக அமைச்சர் திட்ட மிட்டிருந்தார். அன்யை தினம் எந்தவித உத்தியோகபூர்வ வைபவங்களிலும்
கலந்து கொள்வதில்லையென முடிவு
செய்தாலும், புறாக்களை விடுதலை செய்து, புத்தாண்டுக்கு ஆசி கூற பன் சாலையில் நாளை காலை ஏற்பாடு செய் திருந்த சமயக் கிரியைகளில் மாத்திரம் கலந்து கொள்வதென அமைச்சர் தீர்மானித்தார்.
வீட்டு உப்பரிகையில் சொகுசான
GG

UDCCGCDC
நாற்காலியில் சாய்ந்த அமைச்சரின் சிந்தனை கடந்த வருட நிகழ்வுகளை அசை போடத் தொடங்கியது.
கடந்த டிசம்பரில் எற்பட்ட அனர்த் தத்தோடு ஆரம்பமான பலவித சம்பவங் கள், காரண காரியங்கள் அமைச்சர் அவை யில் உள்ள சிலருக்கு எரிச்சலை ஊட்டி னாலும், ஒருவராவது அவரோடு நேரடி யாக மோத வரவில்லை. அவர்களது எல்லாத் தேவைகளுக்கும் எந்தவித சிணுங்கலுமின்றி முன்வந்து கரிசனை யோடு உதவி செய்தமையே காரணமாகும்.
வீட்டுத் திட்டத்திற்குத் தேவையான காணியை வாங்கும்போது அமைச்சர் களினதும், அவர்களது உறவினர்களதும், தனது அதிகாரிகளதும் காணிகளை மிகவும் நியாயமான விலைக்கு மதிப்பீடு செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங் கியது அமைச்சர் கங்கேதான் என்பதை அவர்கள் நன்கறிவார்கள்.
as Gur rrus) u rrij G. Lug) 0 0 m i & Sinar இழந்த பதினைந்து பதினாறு வரு சிறுவர் சிறுமியரைச் சொந்தப் பிள்ளை கள் போல வளர்ப்பவர்கள் என்று உறுதி கூறிவிட்டு அமைச்சர்களின் மனைவி மாருக்கும், அவர்களின் உறவினர்க(ளக் கும் ஏதோ புண்ணிய கருமத்திற்கு பங்களிப்புச் செய்தது போல பெற்றுக் கொடுத்தவர் அமைச்சர் கங்கேதான்.
ஒரு வருடத்திற்குள் பாதைகள் அமைத்து, வீடுகள் கட்டிக் கொடுத்து அவர் செய்த சேவை சாமானியப்பட்ட விவகாாமா என்ன?
சில வர்த்தகர்கள் ஒருவரை மிஞ்சி
67
மற்றவர் பாதிக்கப்பட்டோருக்கு உதவ பணமாக, காசோலையாக உதவி செய் தாலும், அந்தப் பணத்தை அநியாயமாக வீணாக்க அமைச்சர் இடமளிக்கவில்லை. அமைச்சரின் பெயரிலேயே புதுக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அப்பணத்தை வைப் பில் இட்டார். பிற நாட்டிலிருந்து கிடைத்த நிவாரணங்கள் முடிந்த பிறகு, வைப்பிலுள்ளதை ப்யன்படுத்தும் நல்ல நோக்கிலாகும். கிடைத்த பண உதவிகளில் நூற்றுக்குப் பத்து வீதமாவது பாதிக்கப் பட்டவர்களின் நலன் கருதி பயன் படுத்தப்படவில்லை என்று பலரும் பெரி தாகக் கொக்கரித்தாலும், அமைச்சர் அவற்றைத் துட்டுக்கும் பொருட்படுத்த
வில்லை.
சிந்தனையில் மூழ்கிப் போன அமைச்சர் தனது புதிய விட்டுப் பக்க மாய்ப் போய்வர வேண்டுமென்று திடீ ரென்று நினைத்தார். நாளை புதுமனை குடிபுகு விழாவுக்கு வருகை தந்திருந்த மகளின், மகனின் குடும்பத்தோடு போக வேண்டுமென்று நினைத்த அமைச்சர் இருந்த இடத்திலிருந்து எழுந்தார்.
மனதைச் சுண்டி இழுக்கும் ஆடம் பர மாளிகையின் மேல் மாடிக்குப் போய்ச் சுற்றியுள்ள அழகை ரசிக்கத் தொடங் கினார் அமைச்சர். வெளியே முற்ற வெளியில் அமைத்திருந்த நீர்த்தடாகத்தின் அருகே குடும்பத்தவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். நாளைய வைபவத்திற்கு மின் குமிழ்களால் சோடனை செய்ய வந்த மாழியர்கள் கடமையை முடித்து விட்டுப் போயிருந்தார்கள்.
அரச காலத்துப் பிரமுகர்கள் இது போன்ற மாளிகைகளில்தான் வாழ்ந்திருப்

Page 36
Ş. (සංඝ
VIS
பார்கள் என்று ஒருகணம் அமைச்சரின் | தலைச்சுற்றல் போல வந்தது. "ப்ரஸர்
மனம் பெருமிதத்தில் மிதந்தது. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து பார்வை யிட்டதும், வீட்டினைப் பொறுப்போடு கட்டி முடித்த குணசேகர மீது வேறு நாட்களை விட நல்ல அபிப்பிராயம் தோன்றியது.
இந்தியாவிலிருந்து கிடைத்த
சீமெந்து, மணல், மலேஷியப் பலகை, இங்கிலாந்து இரும்பு எல்லாவற்றையும் பயன்படுத்தி என்ன உறுதியாய் கன கச்சிதமாய் வீட்டைக் கட்டியுள்ளார். குளியலறை கூட, சாதாரணமா என்ன? இத்தாலியிலிருந்து கிடைத்த குளியலறை உபகரணங்கள் ஆங்காங்கே பளிச்சிட்டன. வீட்டுச் சுவர்கள் கூட பிரான்சிலிருந்து கிடைத்த ரப்பர் சாயத்தில் பளபள வென்று மின்னின.
“ஏற்பட்ட அனர்த்தத்தைப் போல எதிர்காலத்திலும் இதே போன்ற கடற் பேரழிவு அல்லது நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு' என்று அமைச்சருக்கு நன்கு அறிமுகமான புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர் ஒருவர் ஆரூடம் கூறியிருந்தார். அதனால் வீட்டின் கதவுகள், யன்னல்கள் மிக உறுதியாக அமைந்திருக்க வேண்டும் என்று.அமைச்சர் நினைத்ததை குணசேகர செயலில் காட்டியிருந்தண்ம மனதிற்கு நிறைவைத் தந்தது.
திடீரென்று மிக இதமான தென்றல் வீசத் தொடங்கியது. அமைச்சர் இருந்த இடத்திலிருந்து எழுந்து, 'பெல்கனி'யின் முற்பகுதிக்குச் செல்ல முற்பட்டார். அவரால் முடியவில்லை. மெல்லிதான
கூடிவிட்டதோ? என்னவோ? என்று சிந்தித்தபடி, கீழ்ப்பகுதியில் குடும் பத்தினரின் இடத்திற்குச் செல்ல
முனைந்த போது ஒலத்தோடு கூடிய
பெரும் இடிமுழக்க ஒசை கேட்டது.
காற்றில் சிக்கிய காய்ந்த இலை களைப் போல மனைவியும், பிள்ளை 'பல்கனி இருந்த பக்கமாய் நீட்டியபடி வருவது தெரிந்தது. அவர்கள் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்
களும் கைகளைப்
குள் மாளிகையைச் சுற்றிக் கட்டப் பட்டிருந்த அதி உயரமான மதிற் சுவர்கள் ஒரேடியாக அவர்களை உள்வாங்கிக் கொண்டு கீழே சரிந்து விழுந்தன. அடித் தொண்டையினால் மரண ஒலம் எழுப்பிய அமைச்சரின் ஒப்பாரிச் சத்தத்தையும் மீறிக்கொண்டு மாளிகையின் மகா சக்திவாய்ந்த சுவர்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உடைந்து விழத் தொடங்கின.
பாரிய மரங்களை, கற்பாறைகளைப் புரட்டிக் கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம் சில நிமிடங்களில் தணிந்தது. சூழல் அமைதியானது.
அமைச்சர் கங்கேயின் மாளிகை கணப்பொழுதிற்குள் சிதைந்து ஒரு குவியலாகக் காணப்பட்டது. உடம்பி லிருந்து துண்டிக்கப்பட்ட அமைச்சரின் தலை உடைந்திருந்த வீட்டுக் கூரையின் முகட்டு வளையில் தங்கியிருந்தது. இரத்தத்தில் தோய்ந்து விகாரப்பட்டிருந்த முகத்தில் அதீதமான பயம் அழுத்தமாய் பதிந்து கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
G8

ܘܐܶܝܟܼ[ܐܰܗܶܗ%
- டொமினிக் ஜீவா
X மல்லிகையின் ஓரிதழில் இந்திய அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக அங்கீகரித்துள்ளதாகப் புளகாங்கிதப்பட்டுத் தலையங்கம் தீட்டியிருந்தீர்களே, செம்மொழியாகத் தமிழை இந்திய அரசு அங்கீகரித்துள்ளதைச் சற்று விளக்கமாகக் கூறுவீர்களா?
Lurrrgconcur பல்கலைக்கழக மாணவன்
* அந்தத் தலையங்கத்தைத் தீட்டியிருந்த போதும் எனக்கு அது சம்பந்தமாகப் போதிய தகவலொன்றும் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சித்தேன். உம்மைப் போன்ற பல்லைக்கழக மாணவர் ஒருவர் இக்கேள்வியைக் கேட்டதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மாணவர் பரம்பரை இத்தகவலைக் கவனமாகச் சேமித்து வைத்திருக்க வேண்டும். இக்கேள்விக்கு தூண்டிலில் இடம் போதாது. இருந்தும் சுருக்கமாகச் சொல்லுகிறேன். உலகில் கிட்டத்தட்ட 6000 மொழிகள். இதில் இலக்கண இலக்கியம் வாய்க்கப் பெற்றவை 3000, 2000 ஆண்டுக் கால மொழிகள் 6. அவையாவன: தமிழ், சமஸ்கிருதம், சீனம், கிரேக்கம், லத்தீன், ஹிப்ரு, ஹிப்ரு பாஷையைத் தான் யேசுநாதர் பேசிப் போதனை செய்தவர். அவரது பிரசித்தி பெற்ற மலைப் பிரசங்கமும் ஹிப்ரு மொழியிலேயே நிகழ்த்தப்பட்டது வரலாற்றுச் செய்தியாகும். ஆனால், யேசுக்கிறிஸ்து பிறப்பதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழி இலக்கியச் செழுமை மிக்க மொழியாகத் திகழ்ந்து வந்துள்ளது. மற்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொற்றொடர் இலக்கணம் மற்றும் இலக்கிய வளம் மிக்கதாகவும் இம்மொழி திகழ்ந்து வந்துள்ளது.
58 நாடுகளில் இன்று தமிழ்மொழி பேசப்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர் அதை வளர்ந்து வருகின்றனர். ஆங்கிலத்திற்கு அடுத்ததாக உலகப் பரப்பில்
GS)

Page 37
பல நாடுகளில் இன்று பேசப்படும் மொழி தமிழே அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் இன்று பல தமிழ் இலக்கிய விழாக்கள் நடந்தேறி வருகின்றன. 32ற்கு மேற்பட்ட சிறு சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. நூல் வெளியீடுகள் அடிக்கடி நடைபெறு கின்றன. மொழிக்கு விழா எடுப்பதில் தமிழன் மன்னன்! இது வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத தனிப்பெரும் சிறப்பு.
மேலே குறிப்பிட்டுள்ள 6 மொழி
களில் லத்தீன், ஹிப்ரு மொழிகள் கிட்டத்தட்ட இறந்துபோய் விட்டன.
இப்பொழுது இஸ்ரேல் அரசு ஹிப்ரு
மொழிக்கு மெல்ல மெல்ல உயிரூட்டிக் கொண்டு வருகிறது. லத்தீனின் கதை முடிந்த சங்கதிதான். சமஸ்கிருதம் எழுத்து மொழி மாத்திரமே. என்றுமே அது மக்களினது பேச்சு மொழியாக இருந்ததில்லை. இந்தியாவில் தமிழுக்கு அடுத்தபடியாக நீண்டகால மொழி அதுவே. அடுத்த பழம்பெரும் மொழி சீனம். அதன் எழுத்து வரிவடிவங்கள் சித்திர, பட வடிவமைப்பைக் கொண்ட மொழியது. ஆனால் தமிழில்தான் எழுத்து வடிவ வளம் அதிகம்.
இந்திய அரசு தமிழைச் செம்மொழி களில் ஒன்றாக இன்று அங்கீகரித் துள்ளது. ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதற்கு 11 தகுதிகள் வேண்டும். தொன்மை, தனித்தன்மை, பொதுமை, சாரு நிலை, பல மொழிகளுக் கும் தாயாக இருக்கும் தகுதி, அநுபவ
Nu 666):
அறிவு வெளிப்பாடு, பிற மொழிச் சொற்களின்றியே தனித்தியங்கும் தன்மை, இலக்கிய வளம், உயர்ந்த சிந்தனை, இலக்கிய ஆளுமை வெளிப்பாடு, பங்களிப்பு, மொழியியல் கோட்பாடு. இவைகளே அந்தத் தகுதிகளாகும்.
இத்தகைய அனைத்துத் தகுதிகளும் கொண்ட ஒரேயொரு மொழி, தமிழ் மொழி ஒன்றுதான். ஒரு மொழி செம் மொழியாகக் கணிக்கப்படுவதற்கு 11 தகுதிகள் வேண்டும். சமஸ்கிருதம் 7, கிரேக்கம், லத்தீன் 8, சீனம் 9, தமிழுக்குத் தான் 11 தகுதிகளும் உண்டு. இது வரையும் மூன்று மொழிகளைத்தான் இந்தி மத்திய அரசு செம்மொழிகளாக அங்கீகரித்துள்ளது. பாரசீகம், அரபு, சமஸ்கிருதம் இப்பொழுது தமிழ் இந்திய நாட்டின் செம்மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
மல்லிகையில் எழுதியதன் பின்னர் நான் படித்துத் திரட்டிய தகவல்கள் இவை.
தலையங்கம்
- 0 - 0 - 0 - . 0 -
区
பாராட்டி சமீபத்தில் மல்லிகைப் பந்தல் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளிர்களே, இதன் உள்நோக்கம் என்ன?
எழுத்தாளர் ஜெயகாந்தனைப்
தெவறிவளை dar. LoCBasarciör
இ "சரஸ்வதி காலத்து நண்பர். நீண்ட நெடுநாளையச் சிநேகிதர். அதுவுமல்லா மல் தமிழுக்கு அகில இந்தியப் பரிசை 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பெற்றுத் தருபவர். இதற்காக இலங்கை எழுத்
7O

தாளர்களின் ஒருமனதான மகிழ்ச்சியைத் தெரிவிப்பதன் நிமித்தாகவே அவாது பாராட்டுக் கூட்டம் ஒழுங்கு செய்யப் பட்டது. இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டீர்களே, கடந்த மே 1ாத மல்லிகை இதழ் கூட, ஜெயகாந்தனின் அட்டைப் படத்து ன்தான் வெளிவந் துள்ளது. நாம் மனந்திறந்து சகோதா எழுத்தாளர்களினது சாதனைகளைப் பாராட்டப் பாராட்டத்தான் தமிழ் சர்வ தேசப் புகழடையும். மல்லிகையின் அடிப் படைக் கொள்கையே அதுவேதான்.
- 0 - 0 - 0 - 0 سه
ΣK
கடந்த இதழில் சொல்லியுள்ள தகவல்
ஜெயகாந்தனைப் பற்றி நீங்கள்
கள் அத்தனையும் என் மனதைத் தொட் டது. அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேலான நட்புறவைப் படித்துப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். இன்னும் தகவல்கள் இருந்தால் தொடர்ந்து சொல்லுங்கள்.
шpcйтсалrптfr எஸ்.தானதிரவியம்
* எனது கடந்த காலத் தமிழகப் பயணங்கள் பற்றி ஏராளமான சுவையான தகவல்கள் உண்டு. நேரம் வரும்போது அவைகள் அத்தனையையும் எழுத்தில் பதிய வைக்க முயற்சிக்கின்றேன்.
- O - 0 - 0 - O -
பல்வகைப்பட்ட பலரது உருவங் களை மல்லிகையின் அட்டையில் பதிப்பித்து வருகிறீர்களே, இன்னும் சிலரை அறுகாதது ஏன்?
ασύπιο. ebir, asGGJurastir
71
43 மக்களால் மதித்துப் போற்றப்படு’ பலாைப் பலதடவைகள் அணுகினே: இவர்களில் சிலரோ 'பந்தா' காட்டின தவிர, என்னுடன் ஒத்துழைக்க முன் வரவேயில்லை. வேறு சிலருக்கு நேர மிருப்பதில்லை. மல்லிகையின் அட்டைப் பட வாலாறு இன்னும் ஐம்பது ஆண்டு களுக்குப் பின்னர்தான் இவர்களது பிற் சந்ததியினருக்குப் புரியும். இதை இவர் கள் இன்று புரிந்து கொள்ளவில்லையே!
سس 0 - 0 - {0 - 0 -
இலக்கிய உலகில் இத்தனை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வருகிறீர்களே, இந்த உணர்வை யாரிட மிருந்து கற்றுக் கொண்டீர்கள்?
கோப்பாய். стub. arcucuллтcйт
இS உண்மையைச் சொல்லப் போனால் இந்த உழைப்பின் அர்ப்பணிப்பு உணர்வை நான் ஞானமாகப் பெற்றுக் கொண்டதே அன்று வட பிரதேசத்தில் மக்கள் தொண்டு செய்து வந்த இடது சாரித் தோழர்களிடமிருந்துதான். தோழர் கள் தருமகுலசிங்கம், கார்த்திகேசன், பொன். கந்தையா, வைத்தியலிங்கம், பூபாலசிங்கம், ராமசாமி ஐயர், எம்.சி. சுப்பிரமணியம் போன்றோரிடமிருத்து தான் மக்களுக்காக உழைக்கும் மகத்து வத்தைப் புரிந்து கொண்டேன். இன்று வரை தடம் புரளாமல் அவர்கள் காட்டிச் சென்ற பாதையில் நடைபோட்டு வருகின்றேன். எத்தனையோ சிரமங்கள், அரசியல் சங்கடங்கள், பயமுறுத்தல்கள் எல்லாம் இடையிட்டன. நான் தயங்காமல் இன்றுவரை அப்பாதையை விட்டு விலகவில்லை.

Page 38
கங்கள் பார்க்கும் அனுபவம் உண்டா?
தொலைக்காட்சியில் தொடர் நாட
தெவறிவளை. 6fr.dfaugmlib
2 இடையிடையே பார்ப்பதுண்டு. காதிலே பூ சுற்றுவது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் தமிழ் நாடகக் காட்சிகளில் இடம்பெற்று விடுகின்றது. இந்த நிலையிலே தொலைக்காட்சி நாடகங்கள் தொடருமே யானால், வளர்ந்து வரும் இளந்தலை முறையினர் தொலைக்காட்சி நாடகங் களை மாத்திரமல்ல, தொலைக்காட்சிப் பெட்டியையே இயக்குவதிலிருந்து தூர விலகிப் போய்விடுவார்கள். கண்டு பிடிக் கப்படும் நவீன விஞ்ஞான சாதனங்கள் தமிழனது மூளையில் எத்தகைய வகையில் சிறுமைப்படுத்தப்படுகின்றன பார்த்தீர்களா?
- O - O - O - O -
ec3stas Lólggy 657 OUT LOOK சஞ்சிகைக்குக் கொடுத்துள்ள பேட்டியில்
'பிராமணர்கள் எல்லாம் யூதர்கள்
போலத் தமிழ்நாட்டில் நடத்தப்படு கிறார்கள்! என்ற கருத்துப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
புத்தளம். எஸ்.ராமதுரை
* இதில் சொல்வதற்கு என்ன இருக் கிறது? "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இது இவர்களைப் போன்ற வர்களுக்குப் பொருந்தவே செய்யும்.
666) இவரையும் இவரைப் போன்ற விஷமக் கருத்துக் கொண்ட சுந்தர ராமசாமியையும் பற்றி வரும் தகவல்களைப் பார்க்கும் போது இவர்கள் மீது பரிதாபப்படுவதைத் தவிர, வேறென்ன செய்ய முடியும் நம்மால்?
- O - O - O - O -
ΣΚ உங்களை நானொன்று கேட்டுக் கொள்ளுகின்றேன். இனிமேல் எக்கார ணத்தைக் கொண்டும் உங்களைத் தாக்குபவர்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதாதீர்கள். அழுக்கணவன் பீடித்த மனசு படைத்தவர்கள் உங்களைப் போன்றவர்களைச் சீண்டிக் கொண்டே தமது இருப்பைப் பலப்படுத்துவார்கள். நீங்களேன் அவர்களது கீழான அவதூறு களுக்கெல்லாம் நேரமெதுக்கிப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? தய்வு செய்து நீங்கள் இதுவரை தொடர்ந்து வந்த பாதையிலேயே நடந்து செல்லுங்கள். நாங்களிருக்கின்றோம். பதில் சொல்வதற்கு.
வெள்ளவத்தை. க.செல்வராஜா
* பலர் இப்படியான கருத்தையே முன் வைக்கின்றனர். நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்ன சொன் னாலும் நானும் மனிதன் தானே. சில சமயங்களில் என் நெஞ்சு கனத்துப் போய் விடுகிறது. இனிமேல் இப்படி யான எழுத்துப் பதிவுகள் இடம்பெற மாட்டா. இது நிச்சயம்.
201 - 1/4, ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13. முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103, இலக்கத்திலுள்ள U. K. பிரிண்டர்ஸில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
72

TN-la புத்தளம் மாவட்டத்தில் ஒரு புத்தக இல்லம் 垒 சாஹித்திய புத்தக இல்லம்
எம்.டி. குணசேனவின் ஏஜன்ட்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் அனைத்தையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தேவையான காகிதாதிகள், பாடநூல்கள், அகராதிகள், உபகரணங்கள், இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள், ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்திற்கும்
புத்தகக் காட்சியும் விற்பனையும்
\\
?ே சாஹித்திய புத்தக இல்லம் இல. 15, குருநாகல் றோட், பஸ்நிலையம், புத்தளம். தொலைபேசி தொலைநகல் : 032-66875
ஈழத்து, மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும், பாடநூல் வெளியீட்டாளர்களும் தய்வு செய்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நூல்களை காட்சிக்கு வைத்து விற்பனை செய்து உதவுவோம்.

Page 39
Mallikai
F
SUR
| TEXTLE MIL
-:
32/34, 3rd C
Colom
Te: 233697
2449 FaX: 24

JUne 2005
YA
s (PVI) LTD.
经
Cross Street )O - 1 1.
7, 2438494,
1 Ο5 38531