கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பு 1974 (1.5)

Page 1

அறிவியல் திங்கள் ஏடு
வில: 75 சதம்

Page 2
து

அம்பு
அறிவியல் திங்கள் ஏடு
G0Ofl: 1 t) (T i 35 yi uтgић: 5
ਘ يرنلاروئل
கீப்ே(கதிகழநூஜி
பசீர்
இந்த இதழில்.
* வரண்ட வாழ்வை அமுதமாக்கும் நிலத்தடி நீர் - 2
* சார்பியல் கோட்பாடும் அதன்
விளைவுகளும்
* மின்சித்தனின் மினிக்கட்டுரைகள்
மறைந்திருந்தே தாக்கும்
மர்மமென்ன?
தொல்லுலகை ஆள்கிறது நண்டு!
மூட நம்பிக்கையிலிருந்து பிறந்த பால்கட்டும் முறை அடியைப்போல அண்ணனும்
தம்பியும் உதவாது சாத்திரங்கள் பேசுகின்ற
சட்டநாதப் பட்டர்கள் களைகளும் களைகளைக்
கட்டுப்படுத்தலும் இன்னும் பல

Page 3
எண்ணம்
சமூகத்தையும், சூழலையும் அறிவதற்குக் கல்வி துணை புரியவேண்டும். மாறிவரும் சூழ்நிலைக்கேற்றவாறு புதிய நெறிமுறைகளையும், ஒழுக்கக் கோட்பாடுகளை வகுத்தலும், தேவையற்ற பழைய கோட்பாடுகளைக் கழிப்பதற்கும் கல்வி ஊக்கமும், உறுதியும் அளிக்கவேண்டும். இப்படிப்பட்ட பரந்த நோக்கமுள்ள கல்வியினல் மட்டுமே இனிமேலாவது மனிதாபிமான அடிப்படையில் நமது சமூகம் இயங்க முடியும். அறிவியல், கலைத்துறை, இலக்கியம், வரலாறு என்று எல்லையிட்டு ஒன்றுடன் ஒன்று கலக்காமல் வேலி கட்டி மாணவர்களை ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் பயிற்றுதல் இப்படிப்பட்டதொரு பரந்த கல்விக்கு இடை யூருக அமைகிறது. அறிவியல்துறைப் படிப்பு மாணவர் களுக்கு அறிவியலுக்குரிய சிறப்பு ஒழுங்குமுறைகளையும் ( Discipline ) சில தொழில்நுட்ப உத்திகளையும் மட்டும் வழங்குகின்றது. தொழில்நுட்ப உத்திகள், மருத்துவம் போன்ற இன்றைய அறிவியல் துறைகள் சமூகத்திற்கு வேண்டிய பணியைச் செய்ய இன்றியமையாதது என்பது உண்மை. ஆனல் இவ்வித ஒருமுகப்பட்ட பயிற்சி வேறு பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். சமூகத்துடன் ஒரு அங்கமாக இணங்கி வாழும் முக்கிய கலையை நாம் புறக் கணிக்கிருேம். இந்தக் குறைபாட்டைத் தவிர்க்க மாணவர் கள் நுண்கலைகள், இலக்கியம், சமூகவியல் போன்ற மனித இயல்புகளைச் சிறப்பாக விளக்கும் கலைகளில் ஈடுபாடு கொள்ளுதல் வேண்டும்.
சூழலையும், சமூகத்தையும் தன்னுடன் இணைக்காதவர் கள் நடைப்பிணமாகவே இயங்கமுடியும். நகரவாழ்க்கையில் ஊறித் திளைத்த நடுத்தர வகுப்பு ஊழியர் தனது ஐம் புலன்களையும் கந்தோருக்கு விபத்து நேராமற் சென்று மீளுவதற்கு பயன்படுத்துகிருர், கந்தோருக்குச் சென்று விபத்தின் றி வீடு மீண்டு, எதுவும் மாற்றமின்றி வாழ்க்கையை ஒட்டுவதுதான் பிறவிப்பயன். இதற்காகவே ஐம்புலன்கள்ை

3.
யும் தான் பெற்றதாக அவர் சொல்லாவிடினும், அப்படியே அவரது வாழ்க்கைமுறை அமைகிறது.
இந்த வாழ்க்கைமுறை எமது படைப்பாற்றல் எல்லா வற்றையும் அழித்துவிடுகிறது. ஆனல் " கல்வி என்பது வெள்ளைக்காலர் வேலைக்கு " என்ற அடிப்படை நோக்கம் இருக்கும் மட்டும் இப்படிப்பட்ட விரயமான வாழ்க்கை முறையை நாம் மாற்றமுடியாது.
அறிவியல் தரும் கூர்மையான அறிவுடன்; நுண்கலைகள், இலக்கியம் தரும் பரந்த இதயத்துடன், ஒரு புதிய பண் பாட்டைத் தேடுவதற்கு இளைஞர்கள் நிர்ப்பந்திக்கப்பட்
டிருக்கின்றனர். -
- பதிப்பாசிரியர்.
இலக்கை நோக்கி விரைவது “ ہاش ہوئے ” இன்றைய தலைமுறையினரின்
இனிய விருப்பம் * அம்பு” வேகம், வீச்சு, ஆழம் கொண்டது “ அம்பு’ ஈழத்தின் விஞ்ஞான மாத இதழ் “ அம்பு' இன்றே வாங்குங்கள் 66 அ 99
அம்பு எங்கும் கிடைக்கும்
சந்தாதாரராகச் சேருங்கள்.
நிர்வாக ஆசிரியர் அம்பு
ஸாஹிருக் கல்லூரி கல்முனை

Page 4
சாத்திரங்கள் பேசுகின்ற சட்டநாதப் பட்டர்கள்
பல்லாயிரக் கணக்கான வரு டங்களாக, எல்லா மதங்களும் சமத்துவத்தையும், மனிதாபிமா னத்தையும் ஒவ்வொரு விதமாக வலியுறுத்தி வந்த போ தி லும், வெகு சிலரே நாட்டு வளங்களை தமது ஏகபோக உரிமையாக்கி ஆண்டு அனுபவித்து வந்தனர். இவர்கள் வகுத்த ஆண்டான் அடிமை முறைகள், நடைமுறைக் கோட்பாடுகளாகவோ, அன்றி வேறு வியாக்கியானங்களாகவோ, எப்படியோ மத தாபனங்களுள் நுழைந்தன ; இத் தாபனங்களும் இந்த ஆண் டான் அடிமை முறையை நிலைநாட்ட ஒத்துழைத் தன. அதற்கேற்ப சமாதானங்கள், தத்துவ விளக்கங்களாகப் புகுத் தப்பட்டன. இந்த உண்மையை மறுத்தல் அவ்வளவு சுலபமல்ல.
இங்கு மதங்கள் என்று குறிப் பிடப்பட்டது நிலவேந்தர்களின் ஆணையை, கடவுளைக் காட்டி நிலை நிறுத்தும் தாபனங்களைத்தான் என்று வரையறுக்க வேண்டும். இன்று நடைமுறையிலுள்ள எல் லாச் சமயங்களும் காலகதியில் இக் கதிக்கு உள்ளாயின என்பதை மறுக்க முடியவில்லை.
தங்களுடைய ஆன்மீக விழிப் பினுல் படைப்பின் ஊற்றுக்களா கத் திகழ்ந்து மனிதனைப் பண்படுத் திய அன்புத் தெய்வங்களைப் பற்றி இங்கு விமர்சிக்கப்படவில்லை என் பதை தெளிவாக்கவேண்டும்.
நாட்டு
வரலாற்றின் போக்கை
பிரஞ்சுப் புரட்சி, உருஷ்யப் புரட்சி போன்ற மக்களின் egelg. மட்ட இயக்கங்கள் மனிதனுடைய சமத்துவத்தை நிலைநாட்டவும், வளங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளவும் எல்லோரையும் உழைக்க வேண் டும் என்று நிர்ப்பந்தித்ததினுலும் சில மனிதாபிமானக் கோட்பாடு களை நடைமுறைப்படுத்தியுள்ளன. மார்க்சீய சித்தாந்தங்களை அரசின் அடிப்படையாகக் கொள்ளாத நாடுகளிலும்கூட, சில குறைந்த பட்ச மனிதாபிமானக் கோட்பாடு கள் பலவிதமான முறைகளில் வலி யுறுத்தப்படுகின்றன என்றல் இந்த மாற்றத்தை ஏற்படுத்தி மனிதாபிமானத்தை நடைமுறைப் படுத்திய இயக்கங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
மனித சமத்துவம் என்ற இலட்சியம் இன்னும் தொலைவி லேயே இருக்கிறது என்ருலும், இனித் திருப்ப முடியாது.
எல்லாரும் கடவுளின் குழந் தைகள் என்று சொல்லிக்கொண்டு, மரபுகள், அதிகாரங்கள் தரும் சலுகைகளை மனச் சாட்சியின் உறுத்தலின்றி அனுபவித்துக் கொண்டு, சொல்லளவில் ஆன்மீ கம்தான் எங்களைக் காக்கும் என்று போடும் வேஷங்கள் கலை வதை, ஆன்மீகத் துறைகளில்

உண்மையான பற்றுக்கொண்ட எவரும் வரவேற்பார்கள். தங்க ளால் செய்ய இயலாததை கொஞ்ச மாவது செயல்படுத்திய இந்த இயக்கங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
இங்கு எனது சொந்த நம்பிக் கைகள் பற்றிய கேள்வி 6T(լք 56ն
நியாயமானது. மாாக் சீயம் சார்ந்த பொருள் முதல வாதத்தை உண்மையின் (Մ) (Լք
வடிவம் என நான் ஏற்றுக்கொள்ள வில்லை. அதில் பல குறைபாடுகள் உள்ளதாகவே எனக்குத் தோற் றப்படுகிறது. எனக்கு ஏதாவது மிென்ருல் ஆன்மீகவாதி என்ற பதமே கிட்டத்தட்டப் பொருந் தும்.
என்ருலும், இங்கு பொருளா
தார நெருக்கடிகள் மக்களின் பண் பாட்டை வாழ்க்கையை, சிந்தனை களை அளவுக்கு அதிகமாக விகாரப் படுத்துகிறது என்பது கண்கூடு. இந்தச் சூழலில் இவ்வூண்மையை மறுத்துவிட்டு, ஆன்மீகம் பேசும் நெஞ்சழுத்தம் எனக்கில்லை. *eւp கத்தின் நிலையையுணர்ந்து எங்கள் வேஷங்களை கொஞ்சமாவது உதற
வேண்டிய தருணத்தில் வார்த்தை
களால் ஆன்மீகம் பேசுவது, ஆன் மச் சிதைவுக்கு ஒப்பானது என்ப தைச் சொல்ல விரும்புகிறேன்.
புதுமை காண்போம்
உண்மையை உரைத்து என்றும்
உலகினில் உயர்வு கான'
நன்மைகள் பலவும் செய்யும்
தற்பணி நமதாய் கொள்வோம்
கல்வியும் கடமை என்ற
கருத்தினில் கவனம் கொண்டு
நல்வழி கான நாமும்
நாடுவோம் நாடும் வாழ !
ஒய்வினை ஒழித்துக் கட்டி
ஒளியினை உள்ளம் காண ஆந்தநல் இலக்கியங்கள்
ஆராய்ச்சி பலவும் செய்வோம்!
பட்டங்கள் பதவி என்ற
.படிப்பினை விட்டு எங்கள்
நாட்டினிற் கென்ற கல்வி
நாம்பெற உறுதி கொள்வோம்!
அஞ்ஞான இருள் அகற்றி
அறிவினைப் பரந்த தாக்கி
விஞ்ஞான மென்ற கல்வி
விளக்கிடும் புதுமை 576iròumro
முதூர் முகைதீன் (u8) r66 ஆசிரியர் Sevrv ráv)
somme
இறைச்சிதோ லெலும்பிலும் பறைச்சிபோகம் வேறதே?
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ 655L
இலக்கமிட் டிருக்குதோ? பணத்தியோகம் வேறதோ? பறைச்சியும் பணத்தியும் பகுந்துபாரு
மும்முள்ளே,
- சித்தர் சிவவாக்கியர்
മ്മ--—

Page 5
* ஆஸ்பால்ட் ஏரி”
- சண்முகநாதன், மகாஜனக் கல்லூரி
காப்டன் ருேபேர்ட் டட்லி எனும் uongyl 6). மேற்கிந்திய தீவாகிய டிரினிடாட் கரையை 1595 ஆம் ஆண்டில் அடைந்தபோது, அக் கடற்கரையோரம் ஒரு பசைத்தன்மை யுள்ள பதார்த்தத்தைக் கண்டார். இப் பதார்த்தம், கப்பலில் ஏற்படும் துவாரங்களை அடைப்பதற்குப் பயன் படும் (Pitch) தார் போன்று பசைத் தன்மையாக இருந்தது; டட்லி அப் போதிருந்த திறமையான பசைகளை யெல்லாம் உபயோகித்தும் அக் கப் பலிலிருந்த துவாரத்தினூடாக, நீர் கீசிக் து கொண்டேயிருந்தது. அவர் கடற்கரையிற் தேடுவாரற்றுக்கிடந்த அப்புதிய பதார்த்தத்தை உபயோ கித்து ஒட்டிப்பார்த்தார்; கச்சித மாக ஒட்டுப்பட்டது! ஒரு துளி நீரேனும் கசியவில்லை 1 அத்துடன் முன்பு உபயோகிக்கப்பட்ட பசைகள் போன்று சூரிய வெப்பத்தினல் ஒட் டுகள் உருகவில்லை !
பாரிய இயந்திரங்கள்-புல்டோசேர் கள் - ஆஸ்போல்ட் பசைக் கிடங்கைத் தோண்டின. பசை மூலப்பொருள் தொன் கணக்கில் வாரி அள்ளி ஊர்திகளில் தொழிற்சாலை ஒன் றுக்கு அனுப்பப்படுகின்றது. அங்கு இது மணலுடனும், சுண்ணும்புக் கல் (கல்சியம் காபனேற்) லுடனும் கலக்கப்படுகின்றது. பின்னர் 300°C வெப்ப நிலையில் நன்கு அரைக்கப்பட்
டுப் பீப்பாக்களில் அடைக்கப்பட்டு உலகெங்கும் ஏற்றுமதி பெய்யப்படு கின்றது. இக்த ஆஸ்பால்டை வெப்ப மாக்கி உருக்கி வீதிகட்கு இட்டு உருளைகளால் அழுத்துகின்றனர். இது குளிர்ந்தவுடன் கற்பாறை போன்று இருக்கின்றது. கடந்த 100 வருடங்களாக உலகின் பிரபல கக ரங்களிலுள்ன ஆயிரக்கணக்கான தெருக்கள் ஆஸ்போட்டிஞல் ஆக்கப் பட்டுள்ளன.
* ஆஸ்பால்ட் ஏரி எனப்படும் இப் பசைக்கிடங்கு, ஒரு மைல் விட்டமும் மத்தியில் 250 அடி ஆளமுமுள்ளது. பல விஞ்ஞானிகள் இப் பசைக்
கிடங்கை ஆாாய்ச்சி செய்தபோது,
சிறிது காலத்திற்கு மட்டுமே அக் கிடங்கிலுள்ள பசை கிண்டியெடுக் கப் போதுமானது எனக் கூறினர். இவ் வேரியிலிருந்து இதுகாறும் பெருந்தொகையான பசை கிண்டி யெடுக்கப்பட்டும் இன்னும் இது வற்றவில்லை! ஏன் இதன் மட்ட மே சிறிதும் குன்றவில்லை. இப்பசை ஒரு வகை எண்ணெய் (Oil) ஆவியா கும்போது மீந்திருக்கும் "மாசு ’ ஆகும். போதிய அளவு எண்ணெய் கிலத்தினடியிலிருந்து தொடர்ச்சி யாக மேலே வந்து ஆவியாவதால், இவ்வேரியின் மட்டம் வற்ருது பேணப்படுகின்றது.
அறிஞன் நிலாவைச் சுட்டி விரலைக் காட்டும்பொழுது, முட்டாள்
விரலையே பார்க்கின்றன்.
- சென் மொழி

مرحمیسیسم میامی
மினிக் கட்டுரைகள்
SAAAAAAASAAAAA LALSLALALSLASASAAALSSeMLMMSLAM LALqAeMLALqMSAAAAS
ASALSLSeSSLASeSLSAeSSASSASSASSASSASSASASALqLqLLqSqLAL LqLSASLSLqAqALAMMSLLLSMASLSASqMMSMLSSLASeLSLSALSLAqSAS
அ ம்  ைம. விசர்நாய்க்கடி, இளம்பிள்ளை வர்தம், புளூசுரம் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட தொற்றுநோய்கள் உண்டாகிப் பரவுவதற்குக் காரணம் வைரஸ்க ளாகும். வைரஸ்கள்தான் புற்று நோயையும் உண்டாக்குகின்றது என் ருெரு தடயத்திலும் விஞ் ஞானிகள் கவனம் செலுத்துகின் றனர். ஆனல் இது நிரூபிக்கப்பட வில்லை.
வைரஸ்களை முதன்முதலில் கண்டுபிடித்தவர் பையைரிங்க் என்னும் டச்சு விஞ்ஞானியாவார். புகையிலைச் செடியைத் தாக்கி இலைகளில் வாய்க்கால் செதுக்கிய மாதிரி அறிகுறிகளைக் காட்டும் நோயை ஆராயப் புகுந்த பையை ரிங்க், முதலில் இது நுண்ணுயிர்பக்ரீடியா - காரணமாயிருக்குமேர்
எனச் சந்தேகித்தார். நோய்பட்ட
இலைகளைப் பிழிந்தெடுத்து அச் சாற்றை, நுண்ணுயிர் புகாத
வடிகட்டியினூடாக வ டி த் து ப் பார்த்தவருக்கு, வடிகட்டப்பட்ட
மறைந்திருந்தே தாக்கும் மர்மமென்ன?
திரவத்தில் நுண்ணுயிர் ஒன்றும் தென்படவில்லை. எழுபது வருடங் களுக்கு முன்பு நடந்தது இப்
பரிசோதனை. அன்று பாவனையில்
உள்ள மைக்கிரஸ்கோப்பின் வழி யாக வடிகட்டப்பட்ட சாற்றை உற்றுப்பார்த்து அதில் நுண்ணுயிர் கள் இல்லை என்று நிரூபிக்கப் பட்டது. ஆனல் அச் சாறு புகை யிலைச் செடிகளுக்கு மீண்டும் இலை நோயை உண்டுபண்ணும் ஆற்றல் உள்ளதாக இருந்ததுதான் வியப் புக்குரிய விஷயம். இச் சாற்றில் உயிரற்ற விஷம் இருப்பதால் இப்படி இலைகளில் நோய் ஏற்படு கிறதோ என ஆராயப் புகுந்த பையைரிங்க், இச் சாற்றிலுள்ள நோயுண்ட்டாக்கும் தன்மை கூடிக் கொண்டு வருவதை அவதானித் தார். உயிரற்ற விஷம் இப்படித் த ன் னை த் தானே பெருக்கிக் கொள்ளமாட்டாது எ ன் ற படி யால் நிச்சயமாக இதில் ஏதோ உயிருள்ள விஷம் (நுண்ணுயிர்
போன்றது) உண்டு எனத் தீர்,

Page 6
8
மானித்தார். ஒருவேளை இவ்வுயிர் கள் நுண்ணுயிரை விட மிகவும் சிறியதாக இருக்கலாம் எனவும் யூ கித் தா ர். இந் நோய்க்குக் காரணமாகவிருந்த இவ் வுயிர் களுக்கு வைரஸ் எனப் பெயரிட் டார். இவை மிகவும் சிறியதாக இருந்தபடியால் வடிகட்டும் சல் லடைக்குள்ளாகச் சென்றதும் அல்லாமல் மைக்கிரஸ்கோப் வழி யாகவும் தெரியவில்லை என்று பொட்டிட்டாப்போல் சொ ன் ஞர். அத்துடன் நுண்ணுயிர் களுக்கு ஏன் உயிருள்ளவை எல்லா வற்றிற்கு மே அடிப்படையாக வுள்ள செல்கள் என்ற அமைப்பு முறை வைரஸ்களில் இல்லை என்றும் துணிந்து கூறினர். ஏன் எனில் வழமையான செல்களின் பரிமாணத்தை அறிந் திருந்த பையைரிங்க், இப்படிச் செல்கள் இருந்திருந்தால் இவை நிச்சயமாய் சல்லடைக்குள் அகப்பட்டிருக்கும் என யூகித்தார்.
 ைவ ரஸ் உயிருள்ளவையா அப்படியானுல் இவற்றிற்கு ஏன் செல் அமைப்பு முறையில்லை : அல்லது இவை ஏதாவது இரசா பனப் பொருட்களா ? எத்தனை
விதமான வைரஸ்கள் உண்டு?
என்று வைரஸ் பிரச்சனை சூடு பிடிக்கத் தொடங்கியது. புதிய கண்டுபிடிப்புகளுடன் ծr (լք ւն வழமையான வாதப்பிரதிவாதங் கள் களை கட்டி நுண்ணுயிராளர் களின் ( இவர்கள் மனிதர்கள், பக்ரீடியாக்கள் அல்ல) கவனத்தை ஈர்த்து, ராசயோகத்துடன் கண் ணுடி சிலேட்டுகளில் வீற்றிருந்தன வைரஸ்கள் !
நுண்ணுயிர்கள், வைரஸ்களை நாயகர்களாகக்கொண்டு பரிசோ தனை செய்வது எளிதல்ல. வைரஸ் கள் மைக்கிரஸ் கோப்பிற்குப் புலப் படாமல் இருந்தது என்பதோடு அல்லாமல் இவற்றைக் கையாள் வதிலும் அந்தந்த நிலைமைக்கேற்ப புதிய உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு எல்லையற்ற பொறுமை அவசியம். உதாரண மாக புகையிலை நோயுண்டாக்கிய வைரஸ்களை தனியாகப் பிரித்து எடுப்பது பல நடைமுறைச் சிக்கல் கள் கொண்ட பிரச்சனையாகும் வைரசைத் தனியாகச் சுத்தமாகப் பிரித்தெடுத்தவர் அமெரிக்க விஞ் ஞானியான ஸ்டான்லியாவார். இதைச் சுத்தமாகப் பிரித்துப் படிவங்களாக எடுப்பதற்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. அத் துடன் தொன் கணக்காகப் புகை யிலையும் ைேவப்பட்டது. இப்டியா கப் பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் கள் மிகவும் கொடியவை என்பது தெரியவந்தது.
வைரஸ்சின் இயல்பு என்ன ? வைரசைப் பிரித்துத் தனியாக எடுத்தபின்பு அவை இரசயான பொருள் போல் அமசடக்கமாக, எ ந் த வித உயிர்த்தன்மையும் காட்டாமல் இருந்தன. ஆளுல் புகையிலையில் பட்டவுடன் உயிர்த் தன்மை பெற்று நோயைப் பரப்பி Ամ Ֆ] •
பல புதிய கண்டுபிடிப்புகளின் பயணுக, குறிப்பாக இலத்திரன் மைக்கிரஸ்கோப், வேறு புதிய கருவிகள் நுண்ணுயிராளர்களின் கையில் அகப்பட்டது. இதுகாறும்
மறைந்திருந்த வைரஸ்களின் பரி

மாணங்களை இக் கருவிமூலம் அளவிட முடிந்தது. வைரஸ்கள் 16 மில்லி மைக்கிரானிலிருந்து 300 மில்லி மைக்கிரான் வரை நீளம் உள்ளவையாகக் காணப்பட்டன. (ஒரு மில்லி மைக்கிரான் ஒரு சென்டிமீட்டரை பத்துக்கோடி யாகப் பிரித்ததில் ஒருபாகம்) இலத்திரன் மைக்கிரஸ்கோப் வந்த பின்பு பலவகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு பகுக்கப்பட் டன. ஒவ்வொரு நோயை உண் டாக்கும் வைரஸ்களுக்கும் வாயில் நுழையமுடியாத அருமையான பெயர்களைச் சூட்டினர் விஞ்ஞானி கள்.
இவ்விடத்தில் நுண்ணுயிர்கள் அதாவது பக்டீரியாவின் அளவை
யும் குறிப்பிடுதல் நன்று. இவை
ஒரு சென்டிமீட்டரைப் பத்தா யிரம் பாகமாகப் பிரித்ததில் ஒரு Lumrs uid. Joy Snr 6 ugl Firmr Friluunt es இவை வைரஸ்களிலும் பார்க்க கிட் டத் த ட் ட 1000 - 10,000 மடங்கு பெரிதானவை.
விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிய எண்ணம் பிறந்தது. இரவு முடிந்து விடியுமுன்பு இரண்டும் கெட்டான்  ைவக  ைற ப் பொழுதுபோல், இரசாயன பொருளுக்கும் முழுமை யான உயிர் என்று சொல்லக் கூடிய செல் அமைப்புக்கொண்ட
நுண்ணுயிர்களுக்கும் இ ை. ப் பட்ட உயிரினம் என வைரசை மதிப்பிட்டார்கள்.
இரசாயனப் பொருள் தன் னைத் தானே பெருக்கிக்கொள் ளாது. ஆளுல் வேறு உயிருடன் இணைந்து தன்னைப் பெருக்கும்
9
இயல்புகொண்டது  ைவ ர ஸ். எனவே உயிரின் ஆரம்ப நிலை அல்லது ஜடம் உயிர்த்தன்மை பெறும் வைகறைப்பொழுதுதான் வைரஸ் என்று வியாக்கியானம் செய்தனர் விஞ்ஞானிகள்.
இவ் வியாக்கியானத்திற்குப் பின் வைரஸ் பற்றிய ஆராய்ச்சி கள் திடீர் திருப்பத்தையடைந் தன. வைரஸைக்கொண்டு உயிரின் இரகசியத்தைத் தி ற க் கலாம் என்று உணரத் தலைப்பட்டனர்.
வைரஸ் என்ன இரசாயனக் கூட்டாலானது என்று ஆராய்ந்த விஞ்ஞானிகள் 94 வீதம் புரதப் பொருளும் 6 வீதம் நியூகிளிக் அமிலமும் கலந்தது என்று கண்ட 6CT fif. 、ベー
நுண்ணுயிர்களை  ைவ ர ஸ் எப்படித் தாக்குகின்றன என ஆராயத் தலைப்பட்டவர்களுக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. நுண்ணுயிரின் செல்லமைப்பின் துவாரம் துளைத்து உட்சென்றது. நியூகிளிக் அமிலம் புரதப்பொருள் மட்டும் நுண்ணுயிருக்கு வெளியில் நின்றது. உள்சென்ற நியூகிளிக் அமிலம் கொஞ்சநேரத்தில் நுண் ணுயிரைச் சிதறவைத்தது. அத் துடன் மத்தாப்பு மாதிரி ஒரு நுண்ணுயிரிலிருந்து இரு நூறு முந்நூறு வைரஸ்கள் கிளம்பின. நுண்ணுயிரைத் தேடித்தேடிப் பலி வாங்கித் தாங்கள் பெருகின.
நியூகிளிக் அமிலத்தில் ஏதோ சிறப்பு இருக்கவேண்டுமெனச்
சரியாக ஊகித்த விஞ்ஞானிகள்
இதற்கு NA எனப் பெயரிட்டனர்.

Page 7
O
(DNA, RNA at Got இரட்டையர்கள் உண்டு ) உயிரின் இரகசியமாம் பதுங்கும் இடம்தான் DNA என்று தெரிந்த பின்னர் DNAஐ இரசா யனப் பொருட்களிலிருந்து மட்டும் ஆக்க முற்பட்டனர். அத்துடன் இவற்றின் அமைப்பையும் ஆராய அங்கலாய்த்தனர். இது இத்துடன் நிற்க;
மறைந்திருந்து தா க் கும் வைரஸ்கள் பல நே ா ய் களை உண்டா க்குகிறது என அறிந்ததும் அவற்றைத் தடுப்பதற்கு ஊசி
மருந்துகள், பால் கட்டும் முறை முதலியனவற்றைக் கண்டுபிடிப்ப தில் முனைந்தனர் விஞ்ஞானிகள். ஏறத்தாழ இவற்றைக் கட்டுப் படுத்துவதற்கு பல பயன்தரும் மருந்துகளைக் கண்டுபிடித்தனர்.
இந்தப் புளுக்காச்சல் வைரஸ் களி ல் தா ன் எத்தனை வகை. இலண்டனிலிருந்து டெங்குவாகத் தொடங்கி ஆசிய புளூ, கொங் புளூ
கொங் என்று போகும் திக்கெல்லாம் புதுப்புது உருவம் எடுத்து எம்மை வதைக்கின்றன.
2. தொல்லுலகை ஆள்கிறது கண்டு!
எறும்பு, கறையான் முதலிய புழு, பூச்சிகள் மாறுபடும் சூழ் நிஜலக்கேற்ப வெகு விரைவாகத் தங்களை மாற்றியமைக்கக்கூடியன. இதற்கு ஒரு உதாரணம், கரப் பொத்தான் பூச்சி. இவை நம்ப முடியாத கெடுபிடியான சூழல் களுக்கும் ஏற்றவாறு தம்மைக் ப்பாற்றிக் கொள்கின்றன. பிளாஸ்டிக், மரம், தங்கள் சொந் தச் செட்டைகள் போன்ற
அம்பிட்டதைச் சாப்பிட்டு உயிர்
பிழைக்கும் ஆற்றல் இவைக்கு உண்டு. (lடர்ஸ் டைஜெஸ்டில் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு கரப்பொத்தான் கட்டுரை வந்தா லும் வந்தது. இன்றுவரை கரப் பொத்தான் பற்றிய துணுக்கு களும், கட்டுரைகளும் அங்கொன் றும் இங்கொன்றுமாக வந்த வண்ணமிருக்கின்றன).
t Ꭵ ᎶᏓ? பூச்சி கொல்லிகளைக் கண்டுபிடித்தும் பூச்சிகளை முற்ருக அழிக்கமுடிவதில்லை என்று குறைப்
படுகின்றனர் சில விஷம் தயாரிக் கும் விஞ்ஞானிகள்! முதல் சந்த திப் பூச்சிகள் பூச்சி கொல்லி களுக்கு இரையானலும் தப்பி யொட்டியவை அதிசயமான முறையில் இம் மருந்துகளுக்கு மா யா ம ல் இரு ப் பதுடன் அ வ ற் றி ல் S J 6ir L- n lä மூன்ரும் சந்ததிகள் இம் மருந்து களுக்கு எதிர்ப்புச் சக்தியை ஏற் படுத்திக்கொள்கின்றன.
இதுமட்டுமல்ல, கதிரியக்கம் மிகுந்த சூழலிலும் இவை திருப்தி கரமாகத் தங்கள் உடல்வாகை மாற்றியமைக்கின்றனவாம். அணு சக்தி மின் நிலையங்களிலும், சில அணுப் பரிசோதனை நிலையங்களி லும் விபத்து ஏற்பட்டுக் கதிரியக் கம் எங்கும் பரவிஞல் அந்த நிலையங்களை ஒரேயடியாக மூடி விட்டு சுற்றவர வேலிபோட்டு எச்சரிக்கை எழுதுவது வழக்கம். இப்படிப்பட்ட இடங்களுக்குள்ளே պւծ ւI(Լք, பூச்சிகள் நன்முகவே

வாழ்ந்துவருகின்றனவாம். மனிதர் கள் தாங்கக்கூடிய கதிரியக்க மட்டத்தைவிட எ ல் வள வே ர அதிகமான கதிரியக்கத்தைப் பூச்சி கள் தாங்கிக்கொள்ளும், அதுவும் முதற் சந்ததியில் சில இறந்தா லும் தொடர்ந்து வரும் சந்ததி கள் கதிரியக்கத்திற் திளைக்கவுங் கூடும்.
மனிதன் அதிகமாகச் சூழ லுடன் இணைந்து தன்னை மாற்றி அமைப்பதில்லை. உதாரணமாகக் குளி ரி லு ம், சூட்டிலுமிருந்து தன்னைப் பாதுகாக்கக் கவசங்கள் தேடுவதும் மனித இயல்பு.ஆனல் உடலமைப்பில் மாற்றம் ஏற்படுத் திய சுவாத்தியத்தைத் தாங்குவது புழு, பூச்சிகளினது இயல்பு. சுருங்கக் கூறின் மனிதன் தனக்கு ஏற்பச் சூழலை மாற்றியமைக் கிருன், புழு. பூச்சிகள் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைக் கின்றன. நிற்க.
மனித சமூகம் தங்களைச் சில சித்தாந்தப் பாசறைக்குள் சிக்க வைத்து ஒரு பாசறையிலிருந்து எதிர்ப் பாசறைக்கு அம்பு எய்து, பின்னர் படிப்படியாகத் துவக்கு, பீரங்கிகள், மெசின் துவக்கு, குண்டுகள், ஏவுகணைகள் என்பன வற்றைக் கொண்டு சுட்டுத்தள்ளிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வரலாறு தெரிந்த காலம் முதல் இதுதான் எங்கள் கதை. நாகரிகத்
தின் உச்சக்கட்டத்தில் அணு ஆயுதங்களையும் உண்டாக்கியது மட்டுமல்ல, அவற்றைக் குறிப்
பிட்ட சில நிமிடங்களில் எதிர்ப் பாசறையைத் தாக்கு ம் படி அருமையான முறைகளை விருத்தி
அணுக்குண்டை
1
செய்திருக்கிருேம். அணுக்குண்டு களைக் கொண்டுசெல்லும் விமா னங்கள், கண்டம் விட்டுக் கண்டம் fd யும் ஏவுகணைகள், இவ் ஏவுகணை களைக் கண்டுபிடித்து வானத்தி லேயே அழிக்க மாற்று முறைகள் என்று பல அற்புதங்களைச் செய் திருக்கிருேம்.
ஹிரோஷிமாவிற் போட்ட மத்தாப்பூவாக மங்கச்செய்யும் ஆ ந் ற ல் மிக் க குண்டுகளை இருபது ஆண்டுகளுக் கு ஸ் விருத்திசெய்திருக்கிறுேம் என்ருல் எங்கள் திறமையை எப் படி மெச்சுவது.
ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு ( கடல் புடைசூழ் நெடு வுலகில் காரணத்திற்கா பஞ்சம்?) அணுக்குண்டுகள் பாவிக்கப்பட் டால் மனிதகுலமே பூண்டோடு அழியலாம் என்றும் சொல்லப்படு கிறது. இந்த அளவுக்குத் தேவை யான கையிருப்பு கிட்டங்கிகளில் உண்டாம். தப்பியொட்டுகிறவர் களும் கதிரியக்கச் சூழலில் வாழ -Gupt9 untgi.
இந்த ஆபத்தை உணர்ந்த சில புண்ணியவான்கள் அணுக் குண்டுக்கு எதிராகக் குரல் எழுப் பினர். இவர்களைப் பார்த்து எல் லா ப் பாசறைகளிலிருந்தும் எங்கள் வழமையான விளம்பரச் சுலோகங்களை உரத்த குரலிற் சொல்லிச் சொல்லி இவர்களைக் கேலிக்குள்ளாக்கினர். இவர்களுக் கெதி ராசச் சொல்லப்படுகிற மாமூல் சுலோகங்களை - இவர்கள் இலட்சியவாதிகள் - நடைமுறை. விவகாரங்கள் தெரிந்திருப்பது

Page 8
12
இல்லை. இவர்கள் சொல்லும் தீர்வுகள் மிகவும் இம்பிளானவை. இப்படிப்பட்ட நெருக்கடியைத் தீர்க்கத் தேவையான சோபிஸ்டி கேசன் இவர்களிடம் இல்லை என்றெல்லாம் சொல்லிப் பின்னர் இவர்களுக்கு, பசிபிஸ்ட் அல்லது ஏதாவது இஸ்ட் என் ருெரு லேபலே யும் ஒட்டிவிட்டு இக் குரல்களையும் வலியிழக்கச் செய்துவிட்டனர் சித் தாந்தச் சிங்கங்கள்.
இது இப்படியிருக்க, பூண் டோடு மனிதகுலம் அழிந்தால் இவ்வுலகை முன் சொன்னபடி பூச்சி, புழுக்கள் ஆக்கிரமிக்கலாம்.
கதிரியக்கத்தைச் சமா ளித் து மனிதனின் தொல்லையுமில்லாமல் செழிப்புற இவை வாழலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் "புழு வாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடிகள்" என்ற வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. இதை மஹாகவி தனக்கேயுரிய பாணியில் ஒரு குறும்பாவில் சொல்கிருர்,
வல்லரசின் செய்கையினைக் கண்டு வல்லரசு வீசியதோர் குண்டு நல்லபடி நம்மனிதர் நச்சரிப்புத் தீர்ந்துவிடத் தொல்லுலகை ஆள்கிறது நண்டு.
- மஹாகவி
3. அடியைப்போல அண்ணனும் தம்பியும் உதவார்
1670 மட்டில் நியூட்டன் புவி ஈர்ப்புக் கோட்பாடுகளை எழுதினர் என்று தெரிகிறது. புவியீர்ப்புக் கேட்பாடுகள் மிகவும் இரத்தினச் சுருக்கமானவை, இதில் முக்கிய மானது பொருட்கள் ஒன்றை ஒன்று விசையுடன் ஈர்க்கின்றன. இவ் ஈர்ப்பு விசை இரு பொருட்
களின் திணிவு (நிறை) களில் நேரடியாக்த் தங்கியிருக்கிறது. அத்துடன் அப் பொருட்களின்
இடைவெளித் தூரத்திலும் தங்கி யிருக்கிறது என்பதாகும். பொருட் களின் நிறை கூடினுல், அவை களுக்கிடையிலுள்ள விசை கூடும். பொருட்களுக்கு இடையிலுள்ள தூரம் கூடினல் அவைகளுக்கு இடையிலுள்ள ஈர்ப்பு வேகம் குறையும் என இக் கட்டுரையின் தேவை க் கா க வரையறுத்துக் கொள்ளலாம்.
நியூட்டனின் காலத் துள் எழுந்த மிகவும் துணிகரமான
கோட்பாடுகளில் புவியீர்ப்புக் கொள்கையும் ஒன்ருகும். இன்னும் மற்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கும் எமது அறிவு புவியீர்ப்புக் கோட்பாட்டில் மட்டும் அடிப்படை மாருமல் இருக்கிறது. இவ் ஈர்ப்பு விசையின்
தன்மைகள் பற்றி இன்றுவரையும்
சரியான விளக்கம் இல்லை. ஏன் ஜடப்பொருட்கள் ஒன்றை ஒன்று கவரவேண்டும் என்பதற்கும் விடை காணமுடியவில்லை.
அப் பிள் மரத்தடியிலிருந்து யோசித்துக்கொண்டிருந்த நியூட் Lனின் தலையில் விழுந்த அப்பிள் பழந்தான் இவருடைய அருட் டுணர்வுக்குக் காரணம் என்று தர்ன பரம்பரையான கதை ஒன்று உண்டு. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்தான் நியூட்டன் இக் கோட்பாடுகளை நிறுவினர் என்று தான் கதை. நியூட்டன் ஒரு மாமேதை. அப்பிள்பழம் அவர்

தலையில் விழாவிட்டாலும் மனிதர்
கோட்பாடுகளை எழுதியிருப்பார்
என்றே எனக்குத் தோன்றுகிறது.
காலம், காலமாகப் பழங்கள், இலைகள் நிலத்தைநோக்கி விழு ன்ெறன. நியூட்டனுக்கு முன்பும் பழங்கள் கீழே விழுந்தவண்ணம் இருந்தன. இவற்றிற் பல பல ருடைய தலைகளையும் பதம் unir fi iš திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நியூட்டனின் தலையில் விழுந்த அடிதான் அவருக்கு ஞானக் கண் ணைத் திறந்தது என்று கொள்ள முடியாது. இந்த சர்வசாதாரண நிகழ்ச்சியை நியூட்டனுக்கு முன்பு ஒருவரும் ஏன் ? என்று கேட்க தில்ஜல. அதுபற்றி ஆழமாகச் சிந்திக்கவில்லை. ஏனெனில் மிகவும் சாதாரணமான கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்ச்சி ஒரு வரை வியப்பூட்டுமென்ருல் அவ ருக்கு மேதாவிலாசம் உண்டு என்று கொள்ளலாம் : அல்லது
என்றும் கொள்ளலாம்.
தலையில் விழும் பழங்கள் வேறு சிலரைச் சிந்திக்கத் தூண்டி இருக்கலாம்-ஒப்புக்கொள்கிறேன். இதற்கு ஆதாரமாக ஒரு கதையும் உண்டு. கடவுள் இருக்கிருரா இல்லையா என்று சிந்தித்துக் %ளத்து ஒருவர் ஆலமரத்தடியிற் படுத்திருக்கிருர், சட்டென அவர் தலையில் ஆலம்பழம் விழுகிறது. மனிதருக்கு வந்த யோசனை ஆலம் பழத்திற்குப் பதில் பூசினிக்காய் மேலுக்கிருந்திருந்தால் என் தலை பனி யாய் ப் போயிருக்கும்: கடவுளுக்கு எந்தப் பழம் எங்கு வைக்கவேண்டுமென்று தெரியும்;
Li Gol)
ாங்கள் பமக் ந p கோட்பாடுகளைக்
13
இயற்கைக்குப் பின்னல் இறைவன் தான் புத்தியாக நிற்கிருன் என்று. சிந்தித்தவண்ணம் சென்ருராம்.
இவ்விதமாகச் சிந்தித்தவர்
ஒரு இந்தியராகவோ இலங்கைய ராகவோ தான்
இருக்குமென்று நான் எண்ணுகிறேன்.
உலகை ஆராயத் தடயங்கள்
உண்டு. அத் தடயங்கள் எப்படி வரும் என்று முன்கூட்டியே சொல்லமுடியாது. மண்டையில் அடியாகவும் வரலாம். ஆணுல் என்ன தடயம் வந்தாலும் அதைப் பிடித்து மேலும் சிந்திப்பதற்கு
ஆற்றல் அவசியம்.
நியூட்டன் இப் புவியீர்ப்புக் கண்டுபிடித்த காலத்தில் ஈழத்தில் நம் முன்னேர் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கும் பொழுது இங்கு ஆப்பிள் மரம் இல்லை, பனையுந் தென்னையுந்தான் மிகு தி யாக உண்டு. எனவே பனம்பழம், தேங்காய் விழுந்து அருட்டுணர்வு (Inspriation) பெற்றவர்கள் அதற்கு மேல் இதுபற்றிச் சிந்திக்காது விட்டது நியாயமாகவே படுகிறது. அவனவன் கரைச்சல் அவனவனுக் குத்தான் தெரியும். அத்துடன் காலனி ஆட்சியின் கொடூரப் பிடியிற் சிக்குவதற்கு நம்மவர்கள் எல்லா முயற்சியும் எடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில் இப் படிப்பட்ட அறிவியல் இங்கு வளராததில் வியப்பில்லை என்றும் ஒரு வரலாற்றுப் பேராசிரியர் களும் இதுவரை கூருதது வியப்புக் குரியது.

Page 9
14
புவியீர்ப்புத்துறை, ஐயன்ஸ் டீனுக்குப் பின்னர் கொஞ்சம் தட்டி வேகமாக விடப்பட்டது. புவியீர்ப்பைச் சமன் செய்ய முடிந் தால், அதன் விளைவு மிகவும் வேடிக்கையாகவும், பிரயோசனம் உ ள் ள தாக வும் இரு க்கு ம். எங்களை உலகத்தில் இழுத்து வைத்திருப்பதும் ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செ ல் ல த் தடையாய் இருப்பதும் இவ் ஈர்ப்பு விசையாகும். இரு பொருட்
4. விண்வெளி விருந்தினர்
சென்ற இதழ் அம்பில் விண் லெளி விருந்தினர் என்ற கட்டு ரையை மிக நல்ல முறையில் நிந் தாவூர் மாணவர் யூசூப் எழுதி யிருந்தார். இதை வாசித்த எனக் குச் சில எண்ணங்கள் தோன்றின. சேர் பேர்ணுட் லொவல் என்ற தலைசிறந்த பிரிட்டிஷ் வானியலா ளர், எமது நட்சத்திரத் தொகுதி யில் (Galaxy) ஐந்துசத விகித மான நட்சத்திரங்களுக்குரிய கிர கங்களில் உயிரின்த்தைப் பராமரிக் கக்கூடிய சூழல் இருக்கும் எனக் கணிப்பிட்டுள்ளனர். இக்கணக் கின்படி பார்க்கும்பொழுது 100 பில்லியன் நட்சத்திரங்களுள்ள எங்கள் நட்சத்திரத் தொகுதியில் 5 பில்லியன் நட்சத்திரத்தைச் சார்ந்த கிரகங்களில் உயிரிருக்க
லாம். லேவெலின் கணிப்பைப் பத்தாயிரத்தால் பிரித்தாலும் குறைந்தபட்சம் பத்து லட்சம்
நட்சத்திரங்களைச் சுற்றும் கிரகங் களில் உயிரினம் வாழும் சாத்தி யக்கூறுகள் உண்டு. பேராசிரியர் லெவெல் கணிப்புப்படி 50 கோடி
கள் ஒன்றையொன்று கவர்கின் றன என்ற கோட்பாடு மாறி சில எதிர்மறைப் பொருட்கள் (Negative Matter) 365, 60 spGuit air to தள்ளப்படுதலுங்கூடும். எனவே எதிர்மறை பொருள் கண்டுபிடித் தால் புவியீர்ப்பு ன் செய்யப் படும் என்று 1 கற்பனைகள் உண்டு. புவியீர்ப்புப பற்றிய புதிய
வியாக்கியானங்கள் எ ங் களை த்
திகைக்கவைக்கும் கண்டுபிடிப்புக் களாக இருக்கக்கூடும்.
கிரகங்கள் இந் நட்சத்திரத் தொகுதியில் உயிரினங்களைக் கொண்டிருக்கும். எமது நட்சத் திரத் தொகுதி யைப் பே n ல் எண்ணிலடங்காத் தொகுதிகள் பிரபஞ்சத்தில் உண்டு என்ற உண் மையை நோக்கும்பொழுது கட் டாயம் பலகோ டி கிரகங்களில் உயிரினங்கள் இருக்கும் என்று கூறலாம்போல் தோன்றுகிறது.
செல்வன் யூசூவ் இன்னெரு கருத்தைக் குறிப்பிட்டிருக்கிருர்,
இப்படிப்பட்ட உயிர்வாழ் கிரகங்
களில் பலவற்றிலேனும் எம்மை விட அல்லது அதற்கு உய்ர்வான நா க ரி க வளர்ச்சியுடையவை இருக்கும் என்பதாகும். இக் கிர கங்களிலுறைவோர் மற்றைய நாக ரிக வளர்ச்சியுள்ள கிரகங்களுடன்
தொடர்புகொள்ள எத்தனிப்பர்.
அதுவும் றேடியோ சமிக்ஞை மூலம் எனவும் தெரிவிக்கிருர், இப்படிப்பட்ட தொடர்புகளை ஏற் படுத்தி அவற்றை விளங்கிக் கொள்ள முயற்சிகள் எடுக்கப்படு

கிறது என்பது பற்றியும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
மிகவும் நாகரிக வளர்ச்சி, பண்பாட்டு வள ர் ச் சி யு ள் ள வேருெரு கிரகத்துடன் நாம் றேடியோ மூலமாகவோ அல்லது அவர்கள் இங்கு பறக்கும் தட்டு
மூலம் வந்தோ தொடர்பு ஏற் படுத்தலாம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாயின்
முழுமையான வித்தியாசமுடைய பண்பாடுகள், அவற்றல் விளைந்த கலைகள், ஒவியங்கள், இலக்கியங் கள் (போன்றவை) எங்களுக்கு முற்றிலும் விளங்காமல் போக லாம். இதனல் விண்வெளி நாக ரிகத்துடன் தொடர்புகொண்ட பிறகும் அதைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற
ஏக்கம் எங்களுக்கு எழுவது இயல்பு. இன்னுெரு விதத்தில் யோசிக்கும்பொழுது இன்றைய ஓவியங்கள், இலக்கியங்கள்
போன்ற எங்கள் உலக பண்பாடு களை வெளிப்படுத்த முற்படும் சில கலைஞர்களின் படைப்புகள் விண் வெளி நாகரிகத்தின் வெளிப்பாடு போன்று விளங்காத புதிராகவே உள்ளது என்பதையும் நினைவு கூரவேண்டும். எனவே நாங்கள் விண்வெளி விருந்தினர்களிள் கலை
5. மூட நம்பிக்கையிலிருந்து
அறிவியலால் அங்கீகரிக்கப்படு முன்பும் சில நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளன. இவை எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று லேபல் ஒட்டி ஒதுக்க முடி யாது. இவற்றுள் சில பலகால அனுபவ உண்மைகளைத்தம்மகத்தே
15
இலக்கியம் விளங்காததுபற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்ஜல. எங்கள் கலைஞர்களின் படைப்புகளை ஒருவேளை விண்வெளி விருந்தினர் விளங்கிக்கொள்ளலாம். y ʼ
அத்துடன் நமது விண்வெளித் தேவர்களுக்கு, நம்மைப் போலவே பஞ்சதந்திரங்களில் சிலவான பேத, தண்ட உபாயங்கள் தெரிந்திருந் தால் எங்கள் சந்திப்பு அவ்வளவு திருப்திகரமாக அமையாது என் றும் எண்ணத் தோன்றுகிறது.
பறக்கும் தட்டுகள் இவ் வுலகிற்கு வந்து போயுள்ளன என்று சிலர் நம்புகின்றனர். அமெரிக்க வில் ஒரு பறக்கும் தட்டு தெரிந்த பொழுது, விமானப்படை விமானம் ஒன்று அதைத் துரத்திச் சென்ற தாம். பறக்குந் தட்டிற்கு கிட்ட அணுக றேடியோ, ருடார் கருவி கள் மற்றும் மின்சார இயக்கங்க ளும் தடைப்பட்டனவாம். விமா னம் தளத்திற்குத் திரும்பிவிட்ட தாம். இதை சில வருடங்களுக்கு (up 657 67 ri Glou6f6ujig, Science Today என்ற சஞ்சிகையில் வாசித்ததாக ஞாபகம். ஆனல் விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுகளை ஒரு நிச்சய மான நிகழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பிறந்த பால்கட்டும் முறை
கொண்டிருக்கவும் கூடும்.
கட்டும் முறை பிறந்த இதற்கு ஒரு உதாரணம்.
பால்
கதை
டாக்டர் எட்வர்ட் ஜென்னர், 1796ம் ஆண்டில் பால் கட்டும் முறையைத் தொடங்கினர். ஜென்

Page 10
7 6
னர் டாக்டர் தொழில் நடாத்திய இடம் இங்கிலாந்தில் கிளஸ்டர்சயர் என்னும் பாற்பண்ணைகள் நிறைந்த மாகாணம். இங்குள்ள இடையர்சு ளிடையே ஒரு நம்பிக்கை இருந்து வந்தது. அதாவது மாட்டம்மை (Cowpox) நோப் மாடுகளுக்கு உண் டாவதுண்டு. இது வந்ததும். சில நாட்கள் காய்ச்சலும் அதிக தொந் தரவில்லாமல் நோய் மாறிவிடுகி றது. மாடுகளுடன் புழங்கும் இடைச்சிகளுக்கும் தொற்றும் இந் நோய் சிறு காய்ச்சலாக வந்து சில நாட்களில் மாறிவிடும். இந் நோய் வந்தவர்கட்கு அம்மை நோய் வராது என்ற நம்பிக்கை இம் மக் கள் மத்தியில் இருந்ததை அறிந்த ஜென்னர், இதைப்பற்றிப் புள்ளி விபரங்கள் சேகரித்தார். தாம் கண்ட முடிவுகளை நம்பிக்கொண்டு ஒரு சிறுவனுக்கு மாட்டம்மை நோய்க் கிருமிகளைச் செலுத்தினர்.
(அவருடைய காலத்தில் தொற்று
நோய்கள் பரவுவது கிருமியினல் என்று தெரியாது. நுண்ணுயிர் (பச் ரீடியா) பற்றியும் தெரியாது. ஆனல் நோய் கண்ட மாட்டின் புண் கசிவிலிருந்து பெற்ற பொரு ஆளச் செலுத்தினர்). அவனுக்கு அம்மையின் மெல்லிய ரூபமான மாட்டம்மை வந்து மாறிற்று. அடுத்து டாக்டர் அம்மைக் கிருமி
களை சிறுவனுடலில் செலுத்தினர். (இன்றைய உலகில் இப்படிப் பரி சோதனைகள் நிகழ்ந்திருக்க முடி யாது. சிறுவர்களின் பெற்றேரின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்) சிறுவனுக்கு அம்மை வரவேயில்லை. இதேபோல் தடுப்பு நடவடிக்கை எடுக்காது வேருெரு சிறுவனுக் கும் அம்மைக் கிருமிகளை ஏற்றிய வுடன் அம்மை தொற்றுவது தவிர்க்கப்பட்டது என்று நன்கு உணர்ந்தார். தனது முடிபுகளை சொல்ல வெளிக்கிட்ட டாக்டர் பலத்த எதிர்ப்புக் குரல்களை சமா ளிக்கவேண்டி யிருந்தது. என்ரு லும் சிறிது காலம் செல்ல இவரு டைய தடுப்பு முறை வெற்றி யளித்தது கண்டு புகழ் இவரைத் தேடிவந்தது.
இவரது தடுப்பு முறை இன்று பல தொற் று G3 p n till as ளுக்கும் விரிவுபடுத்திப் பயன் படுத்தப்பட்டதஞல் பொதுச் சுகாதாரத்தில் வியக்கத்தக்க முன் னேற்றம் அடைந்திருக்கிருேம். டாக்டர் ஜென்னர் பால் கட்டும் முறையைத் தொடங்கினலும், லூயி பாஸ்டரின் பின்புதான் இது பற்றிய தெளிவான விளக்கமும், ஏற்பட்டு இம்முறை விரிவுபடுத் தப்பட்டது.
|
t
அடிநாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் அமிர்தமும்
வேப்பெண்ணெய் போன்ற கசப்பான பொருட்களை உணரும் தன்மை அடி நாக்கிலிருக்கும் மூளைகளுக்கே உண்டு. அதேபோல் சீனி போன்ற தித்திப்பான பண்டங்களின் ருசியை உணருந் தன்மை நுனி நாக்கின் முளைகளுக்கே உண்டு.
- மண்மதி

'பால்'பாயிண்டுப் பேணுவை,tஃபில் புதுப்பிக்கும் முறை
பால்பாயின்ட் பேணுக்களின் உப யோகம் நாளுக்குகாள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பேக்ைகள் ஒர ளவு மலிவாக இருப்பதோடு மைக் கழிவு ஏற்பட்டுக் கைவிரலைக் கறை படுத்துவதுமில்லை. ஆனல் இந்தப் பேணுவில் ஒரேயொரு குறையுண்டு. மை தீர்ந்துபோஞல் அவற்றை வீசிவிட்டு மறுபடியும் புதிய ரீஃபில் வாங்க வேண்டும். ஆனல் பழைய ரீஃபில் புதுப்பித்து உபயோகிக்க ஒரு முறையுண்டு. மை தீர்க்தூபோன பழைய ரீஃபிலை உற்று நோக்கினல் அதன் ஒரு பாகத்தில் நோக்கினுல் குழாயின் வாயை அடைக்கும் முடி (எழுதும் முனை) யை எடுத்தபின் தேவை யான மையை நிரப்பி எழுதலாம்.
நீலநிற மை தயாரிக்கும் முறைகள்:
தேவையான பொருட்கள் :
செல்லாக் 2 அவுன்ஸ்
பொரெக்ஸ் 14 அவுன்ஸ்
தண்ணீர் 10 அவுன்ஸ் செய்முறை:
மேற்கண்ட மூன் று பொருட்களே யும் கலந்து கொதிக்கவைத்தால் ஒரு
கரைசல் கிடைக்கும். அந்தக் கரை சலில் பின்வரும் பொருட்களைச் சேர்க்கவும்.
பிரசியன் கீலம் 1 அவுன்ஸ் சீனுக்களிமண் த் அவுன்ஸ் கருவக்கோக்து அவுன்ஸ்
செல்லாக், பொரெக்ஸ், பிரசியன்
கீலம், சீனுக்களிமண் ஆகியவை பெயின்ட் வார்ணிஸ் கடைகளில் கிடைக்கும்.
முறை 11 தேவையான பொருட்கள் :
பிரசியன் நீலம் 2 அவுன்ஸ் விளக்குக்கரி 1 அவுன்ஸ் கருவக்கோந்து 3 அவுன்ஸ் கிளிசறின் தேவையான அளவு, செய்முறை :
முதலில் கூறிய மூன்று பொருட்க ளையும் துகள் செய்து ஒன்ருகக் கலந்த பின்னர் கிளிசறினில் கொட்டி ாகன்கு கலந்து ஒன்று சேர்க்க. ஒன்று சேர்க்ததும் போதுமான அளவு கிளிசறின் சேர்த்துப் பிறகு உப போகிக்கலாம்.
முறை III
வேறுபட்ட கலர் மை தயாரித்தல் :
ஒரு அவுன்ஸ் கருவக்கோங்தை ஆறு அவுன்ஸ் தண்ணிரில் கன்கு கரைககவும். கறுப்பு நிற மை தேவை யாஞல், கயமான கறுப்புக் கரித் துரளில் இந்தக் கருவச்ாோங்தையும், நீரையும் சேர்த்து கன்கு கடைந்து ஒன்று சேர்த்துக்கொள்ளவேண்டும். கீலநிற மை வேண்டுமாளுல் சலவை நீலப்பவுடரை இதே மாதிரிக் கடைந்து சேர்த்துக் கொள்ளவும். பச்சையாயின் எமர்ல்டு பச்சைப் பவுடரையும், சிவப்புக்காயின் வெர் மிலியன் பவுடரையும், மஞ்சளுக்கு குரோம் மஞ்சள் பவுடரையும் இதே மாதிரிக் கடைந்து மை தயாரிக்க லாம். மை அதிக கெட்டியாகவிருந் தால் வேண்டியளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம்,
ஏ. எஸ். ராஜா

Page 11
காச நோய்
— R. ஜோர்ஜ் பெனடிக்ற், புனித பெனடிக்ற் கல்லூரி, கொழும்பு -
15ம் நாட்டில் மலிந்துகிடக்கும் கொடிய கோய்களில் ஒன்று காச நோயாகும். இக் கோய் சிறு வயதின ரையும் வாலிப வயதை அடைந்தவர் க3ளயும், முதியோர் களையும் மிகப் பா தி க் கிற து. கெடுகாட்களுக்கு கோயின் அடையாளங்களை வெளிக் காட்டாமல், சிறுகச் சிறுக உடலே வாட்டி வதைத்துப் பல மாதங் களுக்கு மருங்தை உட்கொள்ளும் தொல்லையை உண்டாக்கவல்லது இத் தொற்றுநோய்.
நோய் உண்டாகும் விதம்:
காசநோய் மைக்கோபக்டீரியம்
பேர்குலோசிஸ் (Mycobacterium Tuberculosis) என்னும் கிருமிகளால் ஏற்படுகிறது என்று ராபர்ட் காக் என்பவர் 1882ஆம் ஆண்டிற் கண்டு பிடித்தார். இக் கிருமிகள் காற்றின் மூலந்தான் அதிகமாகப் பரவுகின் றன. கோயாளி இருமும்போது வெளியாகும் கிருமிகள்கொண்ட சளித்துளிகள் காற்றில் மிதந்து, சுவாசப்பை வழியாக இன்னெருவர் 513οσμήσεου அடைகின்றன. இக் கிருமிகள் குடல், மூளை, எலும்பு, சிறுகீரகம், கண் ஆகிய முதன்மை யான உடல் உறுப்புகளையும் பாதி க்கும். நோய் இயல்:
நுாையீரலுக்குள் சென்ற காச நோய்க் கிருமிகளை இரத்தத்திலுள்ள அணுக்கள் தாக்குகின்றன. இவற் றிற் சிறப்பாக மேக்ரோபேஜ் (Macro
phage) என்னும் அணுக்கள் கிருமி
25Tr e “Glassa GösTGS) (Phagocytosis)
அவற்றை அழிக்கின்றன. கிருமி களுக்கும் இரத்த ஒனுக்களுக்கும் கடை பெறும் ராட்டத்தில்
நுரையீரலில் சிறிய கட்டி (Tuberele) ஏற்பட்டு, நாளடைவில் છે5) மென்மையாகித் (Sottering) திரவத் 56öT GOUD 9 GOL-fög) ( Liquefaction) பிறகு அமைப்பும், உயிர்த்தன்மை யும், (Caseation) இழந்து, மற்றப் பாகத்திலிருந்து "உடைந்து விடு கிறது. "உடைந்த இடத்தில் "புண் உண்டாகிறது. இவையெல்லாம் நடைபெறும் வேளை, பாதிக்கப்பட்ட இடத்தில் சிறு இரத்தக் குழாய்கள் * அரிக்கப்பட்டு ' இரத்தம் கசிந்து, சளியுடன் கலந்து இருமும்போது வெளியாகும் * புண் குணமா கம் போது கார்த்திசுக்கள் என்னும் அணுக்கள் அங்கு வளர்கின்றன.
நோயின் அறிகுறிகள் :
ஆரம்ப அறிகுறிகள் : காய்ச்சல் உடல் எடை குறைதல், உற்சாகம் இன்மை இங்கோயின் முதன்மை யான அறிகுறிகள். இருமல், காய்ச் சல், இரத்தங்கலந்த சளி வெளியேறு தல், கெஞ்சு வலி ஆகிய இக் கான்கு அறிகுறிகளும் ஒரே நேரத்திற் தோன்ருது. ஒன்று இல்லாமல் மற்றவை இருக்கலாம். சளி கட்டி யாகவும், அதிக துர் நாற்றம் இல்லாததாகவும் இருக்கும். நுரை ஈரலில் இரத்தக் கசிவு ஏற்பட்டால் சளி இரத்தம் கலந்ததாக வரும். நோய் முற்றியநிலையில் சிறு வேலை செய்தாலும் இளேப்பு உண்டாகும்.

நோய்க்குரிய சோதனைகள் :
1. 9 மாண்டோ’ சோதனை
(Mantoux Test) :
2. சளிச்சோதனே.
3. நுண்கதிர்ச் சோதனை.
நோய்க்குரிய சிகிச்சை முறைகள் :
1. காசநோயால் பீடிக்கப்பட்ட வர் காய்ச்சல் உணடாகும் வே8ள யில் முழுகேர ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும்.
2. புரதச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள் அதிகம் சாப்பிடவேண்டும் ; நல்ல காற்றை ஆழச் சுவாசிக்கவேண்டும்.
நோய்த் தடுப்புமுறைகள்:
1. பி. சி. ஜி. தடுப்பு ஊசி
(B. C. G. Vaccine) (3 lu m G di கொள்ளவேண்டும். •
2. பி. சி. ஜி. கோயாளி இருமும் போது முகத்தில் துண்யைவைத்துக்
9
கொள்ளவேண்டும்.சாப்பிடுவதற்குத் தனிப் பாத்திரங்கள் வைத்துக்
கொள்வது கல்லது.
3. ஒருவருக்குக் கா சகோய் ஏற்பட்டிருந்தால் அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் முக்கியமாகச்
சிறுவர்களும் மற்றும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் மருத்துவ மனேயில் உடம்பை அவசியம்
சோதித்துக்கொள்ளவேண்டும்.
4. சளியை மரத்தூள் (Saw dust ) உள்ள கிண் ண த் தி ல் உமிழ்க் து தீயிட்டுப் புதைத்துவிட வேண்டும். அல்லது கிருமிகாசினி uSci) (Antiseptic Lotion) 5, Gigi புதைத்துவிடலாம். .
ச த் து ள் ள உணவை உட் கொண்டு தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு, உடம்பின் எதிர்க்கும் &&gsgou ( Defence Mechanism ) வளர்த்தால் இக் நோய் வராமல்
தடுக்கமுடியும்.
ஆபத்தும் உண்டு.
வாழ்க்கைப்
வழக்கு. தமிழ்த்தாயின்
நூல்களே தேவை.
சொல்லடுக்டு மியூசியம்
தமிழுக்குப் புதிய வீரியம் ஏற்படவேண்டுமென்றல், இது புதிய சிந்தனைகளைத் தமிழில் எழுதும்பொழுதே உண்டாக்கமுடியும். முத் தமிழ்ச் சோலையில் உலாத்துவதும், கவிதைப் பூங்காவில் பூப்பறிப்பதும் பல காலமாகத் தமிழ் வளர்க்கச் செய்யப்பட்ட பணிகள். இந்த ரீதியில் தமிழ் வளர்ச்சி சென்றல் தமிழ் சொல்லடுக்கு மியூசியமாக மாறிவிடும்
இன்றைய தேவை, தமிழ் மக்களின் நாளாந்த தொழில்,
பிரச்சினைகளைத் தெளிவுடன்
பாதாரவிந்தங்களை அலங்கரிக்கும் காவிய மாலைகள் இன்று தேவையில்லை. மக்களின் நாவில் நர்த்தனமாடும்.
எடுத்தியம்பும் மொழி

Page 12
அணிநடை பயிலும்
உலகின் பல குளிர்ந்த பிரதேசங்க ளில் மிகப் பெரிய பனிக்கட்டி ஆறு கள் காணப்படுகின்றன. மலைச் சாரலிலிருந்து கீழ்நோக்கி ககர்ங்து பள்ளத்தாக்குகளினூடு வழுக்கிக்கொண்டு தம் பாதையில் இயங்குகின்றன. இவ்வாறுகள் பனிக் கட்டித் துண்டங்களாலான பல பனிக்கட்டிப் படைகளால் (Glaciers) ஆக்கப்பட்டுள்ளன.
இப் பனிப்பாறைப் படைகளில் (Glaciers) இருவகை உண்டு அவை யாவன: (1)பணிக்கட்டிக்கண்டங்கள் (continental glaciers) (2) uGit GMT35 தாக்குப் பனிப்படலங்கள் (Valley Glaciers). கோடானுகோடி வருடங் கட்கு முன்பு (Ice Age காலத்தில்) பூமியை மூடியிருந்த உறைந்த பனிக் கட்டிப் போர்வை அழிவுற்றபோது, சில பகுதிகளிலிருந்த பனிக்கட்டிப் படலங்கள் மட்டும் உருகாது பனிக் கட்டிக் கண்டங்களாக நிலைத்திருந் தன. கிரீன்லாந்தின் 400,000 சதுர மைல் பரப்புப் பனிக்கட்டிக் கண்ட மாகவேயுள்ளது. உலகின் மிகப் பிர மாண்டமான பனிக்கட்டிக் கண்டம் அன்ராக்ரிக்கா" எனப்படும் தென் துருவக் கண்டமாகும். பள்ளத்தாக் குப் பிரதேசங்களிலுள்ள பனிக்கட்டி ஆறுகள் சமீபத்திலேயே தோன் றின. இவற்றிற் பல மிக உயர்ந்த மலைகளிலேயே ஆரம்பிக்கின்றன. ஏனெனில் இங்குதான் (கோடை காலத்தில் உருகிப்போகாத அளவில்) மிக அதிகமான பனிக்கட்டி மழை பெய்யும். எனவே ஒவ்வொரு வருட மும் தரையில் மிக அதிகமாகப் பனிக்கட்டிப் படலங்கள் சேர்ந்து கொண்டேயிருக்கும். கோடை காலத் தில் மேலேயுள்ள மிகச் சிறிய அளவு பனித்துணிக்கைகள் உருகினலும்,
இவை
பனிக்கட்டி நதிகள்
இவை மிகைக்குளிரினல் மீண்டும் பனிக்கட்டியாகின்றன. காளாவட் டத்தில் எல்லாம் ஒன்றுசேர்ந்து, மிகப் பெரும் பனிப்படலங்களாக உருமாறி வழுக்கியபடியே இயங்க ஆரம்பிக்கின்றன.
இவ்வாறுகள் ககரும்போது, வழி யிற் குறுக்கிடும் கற்றுண்டங்கள், பாறைகள், மண் என்பனவற்றைத் தம்மோடு வாரி இழுத்துச் செல்கின் றன. இப் பணிக்கட்டி ஆறுகள் மிக வும் கடினமான தரையினூடு பிர யாணம் செய்கையில், பெருங் தடிப் புள்ள பனிஆறு இ  ைட யி ல் வெடித்து மிக ஆழமான பிளவுகள் தோன்றுகின்றன. இப் பனிக்கட்டி ஆறுகள் கடலமட்டத்தை (தாழ்ந்த பிரதேசங்களை) அண்மிக்கையில், மிகையான வெப்பத்திஞல், ஆற் றின் முன்பகுதி உருக ஆரம்பிக்கின் றது. எனினும், இதை ஈடுசெய்ய ஆற்றின் பின்பகுதியில் (ஆரம்ப இடத்தில்) மிகுதியான பனிக்கட்டி கள் சேர்வதால் ஆறு தொடர்ச்சி யாகப் பனிக்கட்டி ஆருகவே இயங்கு கின்றது.
பனிக்கட்டி ஆறுகள் பொதுவாக மிக ஆறுதலாகவே நகருகின்றன. கோடைக்குப்பின் சடுதியாகக் குளிர் காலம் ஆரம்பிப்பின் இவை ஓரளவு விரைவாக இயங்கும். சாதாரணமாக வருடத்திற்குச் சில அங்குலங்கள் மட்டுமே இயங்கும் ஆறுகள் மேற் கூறிய காலங்களில் காளுக்கு நூறு அடி வீதம் நகருகின்றன.
அல்ப்ஸ் பகுதியில் இவ்வாறன 1200க்கும் மேற்பட்டாகதிகள் உண்டு. ஆசியாவிலும்கூட தென்பிராங்திய மலைச் சாரல்களில் இவை காணப் படுகின்றன.
ப, மோகன், மகாஜனக் கல்லூரி

வரண்ட வாழ்வை அமுதமாக்கும் நிலத்தடி நீர்-2
வரண்ட பிரதேசத்தை வள முடையதாக்கவும் வாழ்வை வள முடையதாக்கவும் நாம் காணும் ஒரே வழி நிலத்தடி நீரின் நேரடிப் பிரயோகமேயாகும். ஆனல் இக் கருமத்தைக் கையாளும் வழிவகை களை விஞ்ஞான பொறியியற் கண் கொண்டு முதலில் எண்ணித்
வடதாழ் நிலம் (1) நீட்டும் போக்கும்
தெற்கே மாத்தளைக் குன்றுக ளாலும், தென்கிழக்கில் மகாவலி கங்கை, தென்மேற்கில் தெதுறு ஒயா என்னும் இருகைகளாலும் ஏந்தப்பட்டு நிற்கும் தீவின் வட
சென்ற இதழில் திரு. சி. குமாரபாரதி எழுதிய இக் கட்டுரையின்
முதற் பகுதியை வாசித்து ரசித்திருப்பீர்கள். நிலவியல், மழை வீழ்ச்சிப் போக்கு, இதனுல் ஏற்படும் நிலப் பிரிவுகள், இந் நிலப் பிரிவுகள் மனத் தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்பனவற்றை முதலாவது பாகம் விப ரித்தது. இரண்டாவது பகுதியை எழுதும் திரு. A, நடராசா, நீர்ப் பாசனத் திணைக்களத்திலும் மகாவலி திசை திருப்பல் திட்டத்திலும் பணியாற்றியவர். எனவே நீர்வளம் பற்றிய இவரது குறிப்புக்கள் மிகவும் பயனுடையன. இக் கட்டுரைத் தொடரைப் பலரும் கவனமாகப் படிக்க வேண்டும். பயன்பாடு மிகுந்த கட்டுரைத் தொடர். wW
கல்லூரி மாணவர்கட்கும், பட்டதாரி மாணவர்கட்கும், வேறும் பலருக்கும் இக் கட்டுரையில் சில பகுதிகளாவது நன்றகப் பயன்படும் என்பது திண்ணம். இக் கட்டுரைத் தொடர் பல தகவல்களைத் தொகுத் துத் தருவதுடன், சூழலைப் பார்ப்பதில் ஒரு புதிய கண்ணுேட்டத்தை
யும் ஏற்படுத்த முயலுகிறது.
- ஆசிரியர் குறிப்பு
துணியவேண்டும்; புவியியல் ரீதி யாக அலசி ஆராயவேண்டும்.
இலங்கையின் வரண்ட பிர தேசத்தைப் புவியியல் ரீதியாக (i) வட தாழ்நிலம் (ii) தென்கீழ் தாழ்நிலம் என்று வித்தியாசமான குண இயல்புகள் கொண்ட இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம். இந்த இதழில் முன்னையதைப்பற்றி ஆராய்ந்தறிவோம்.
வரண்ட பிரதேசத்தின் பாகம். இதில் முக்காற் நிலப்பரப்புக்கு மேல் கடல் மட்டத்திலிருந்து 400 அடிக்கு மேற்படாத உயரமுள்ள தாழ்நிலம். முக்கோண வடிவுள்ள இக்கூறு வடக்குத் தெற்காக 120 மைலும் அடியில் 90 மைல் அகல மும் உள்ளது. (II) ஆறும் அருவியும்
வரண்ட பிரதேசத்தில் உற் பத்தியாகி வங்காள விரிகுடாக்
பகுதி பெரும் Luj Iš GE5

Page 13
22
கடலிலோ பாக்கு நீரிணையிலோ சங்கமமாகும். ஆறுகளின் விப
ரங்களை அட்டவணை இரண்டி ற்
காணலாம். ஆற்றின் நீரேந்தும் நிலப்பரப்பு (Catchment Area) (up 5 லில் தரப்பட்டுள்ளது. ஒரு வீட் டுக் கூரையின் முகட்டிலிருந்த வடக்குப்பக்கச் சாய்வில் விழும் மழைத்துளி எல்லாம் வடக்குப் பக்கத் தாவாரத்துப் பீலியில் சென்று விழும். வடக்குப் பக்கத் துக் கூரை அப்பக்கத்துப் பீலிக்கு *நீரேந்தும் பரப்பு". இப்படி ஆறு களுக்கு நீர் சேர்த்துக் கொடுக் கும் நிலப்பரப்பை அட்டவணை காட்டுகிறது.
அடுத்து ஆறுகளின் நீர் விளைச் சல் (Yield) தரப்பட்டுள்ளது. மழை வீழ்ச்சியால் (ஆவியாகவும், நிலத் துள் ஊறியும் சேதமானது போக எஞ்சிய மேற் தரை பரப்பில் ஓடி ஆற்றையடையும் நீரின் தொகை கனவளவு. ஒரு ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் ஒரு அடி உயரமுள்ள கன அளவை ஒரு ஏக்கர் - அடி என்று அழைக்கிருேம். ஒரு ஏக்கர் 43,500 சதுர அடிப்பரப்பான தால் ஒரு ஏக்கர் அடி 43,500 கன அடி அளவுள்ளது.
அடுத்து இவ்விளைச்சலைப் பயன் படுத்தும், ஏற்கனவே நிர்மாணிக் கப்பட்ட குளங்களும் பயன்படுத் தும் அளவும் தரப்பட்டன. கடைசி யாக நிலத்துள் ஊறி ஒளித்து விடும், நிலத்தடி நீர்வளத்தின் உத்தேச அளவும் குறிக்கப்பட்டது. (11) மழைவீழ்ச்சியும் பருவப்
பெயர்ச்சியும் வட தாழ்நிலத்தில் பிரபல்ய மான சில வட்டாரங்களில்
மாதாந்த சராசரி மழை வீழ்ச்சி அட்டவணை 1இல் தொகுக்கப்பட் டுள்ளது.
அட்டவணையிலிருந்து வடதாழ் நிலத்தின் சராசரி வருடாந்த மழை வீழ்ச்சி முன் இதழில் கூறியது போல் கிட்டத்தட்ட 50 அங்குலம் என்பதும் இதில் 40 அங்குலம் புரட்டாதி முதல் தை ஈரு கவுள்ள மாரி காலத்திலும் கிடைக்கிறது என்பதும் காணக் கூடியதாய் உள் ளது. வடபகுதியில் மாரிமழையின் முற்பகுதி 'மேற்காவுகை' மழை யாகும.
ஆவணி, புரட்டாதி மாதங்க ளில் சூரியன் தலைக்குமேல் உச் சத்தில் நிற்கும் காலமாதலால் கடலிலிருந்து மேலெழும்பும் ஆவி உயரத்தில் அமுக்கக் குறைவினுல் குளிர்ந்து ஒடுங்கி இடி முழங்க மழையாகப் பொழியும். கார்த் திகை முதல் தொடங்கும் அடை மழை வடகீழ்ப் பருவப் பெயர்ச் சிக் காற்றினல் ஏற்படும் "சுழி மழை", மேற்குறிப்பிட்டவற்றை யும் அட்டவணையில் காணும் புள்ளி களையும் எங்படிப் புத்திசாலித்தன மாகப் பயன்படுத்தலாம் என்ப தைப் பின்பு காண்போம்.
(IV) நீர்வளம் - வரவும் செலவும்
ஐம்பது அங்குலம் மழை பெய்
கிறதே ! என்னவாகிறது? அப் படியே தேங்கி நின்ருல் அடங்க லும் ஆளுடைய கழுத்தளவுக்கு குளமாய் நிற்கும். ஆனல் அது தான் நடப்பதில்லை. மழைத் துளிகள் நிலத்தில் விழுந்ததும் முன் இதழில் சுருங்கக் கூறியது போல், கீழ்க்கண்டவாறு வியா
பாரம் நடாத்துகிறது.

(அ) நிலத்தில் விழுமுன்பே ஒரு சிறு பகுதியை மரம் செடி கள் ஏந்தி ஆவியுயிர்ப்பில் (Transpiration) பருகி விடுகின்றன. இச்
சேதம் அடர்ந்த காடுகளில் கூடவும் வெட்ட வெளியில் குறைந்தும் இருக்கும். பயன்
தரு பயிர்கள் உட்கொள்ளும் நீரை மாத்திரம் கணிக்க முடியாது. இதன் அளவை பயிர்களின் தண்ணிர் தேவையை கவனிக்கும்பொழுது guilt Gunth.
(ஆ) மழையின் ஒரு பகுதி தரையின் மேற்பரப்பில் நீர் பள்ளத்தை நோக்கி பாயும் பண் பால் பரப்போட்டமாக (Surface flow) பாய்ந்து ஓடைகள், வாய்க் காலாகி, வாய்க்கால்கள் சிற்ரு? முகி, பேராருகி கடலில் கலக்கும். மழை வீழ்ச்சியில் இப்படி எத் தனை வீதம் மேற்பரப்போட்ட மாக பாய்கிறது என்று தரை யின் சாய்வு, அழுத்தம் உட் புக விடுமியல்பு (உ. பு. இ.) என் பன வற்றிலும், பெய்யும் பொழுது தரை எவ்வளவு ஈர மாக இருந்தது என்பன போன்ற காரணிகளில் தங்கியிருக்கிறது. மலைச் சரிவுகளிலும், வெற்றுப் பாறைகளிலும் விழும் மழையின் பெரும் பாகம் இப்படி மேற் பரப்போட்டமாக கடலை அடை இறது. ஆனல் சமாந்தரமாக
வுள்ள மணற் பூமியில் பெய்த
மழை பெரும்பாலும் நிலத்தில் ஊறிவிடும். ஏற்கனவே பூமி வரண்டிருந்தால் நிலத்துள் 2ளறும் பங்கு கூடவாகவிருக்கும். வ.தாழ் நிலத்தில் மழை வீழ்ச் சியின் மூன்றில் ஒரு பங்கு இப்
சேதமாகக்
23
படி ஆருகப் பாய்ந்து கடலை அடைகிறது.
(இ) மழை வீழ்ச்சியின் ஒரு பகுதி ஆவியாக மாறி சேதமாகி விடும். ஆவியாகும் பங்கு வெப் பத்தையும், காற்று எவ்வளவு உலர்ந்திருக்கிறது என்பதையும் பொறுத்திருக்கிறது. வரண்ட பிரதேச வாவிகளில் மாதம் 4 அங்குலம் மட்டம் ஆவியாக வெளியேறி குறைகிறது. .
(ஈ) எஞ்சிய பகுதி நிலத்துள் ஊறி மண்ணிலும் அடிக் கற்பா றைகளிலுள்ள கல் வெடிப்புகளி லும் (Fissures) கரைக் குகைக் கண் ஆகியவற்றிலும் நிறைந்து செறிந்து நிலத்தடி நீராக தேங்கி நிற்கும்.
இந்த நிலத்தடிநீர்க் கணக்கைவியாபாரக் கணக்கை வரவு. செலவு என்று சமன்படுத்தலாம்.
மழை வீழ்ச்சி= ஆவியாகும் சேதம் + ஆவியுயிர்ப்பு + பரப் போட்டம் நிலத்தடிநீர்.
(V) நிலத்துள் மறைந்த நீர்
நிலத்தின் ஊறவிடும் இயல்பு பற்றியும், உட்புகவிடும் இயல்பு பற்றியும் சென்ற இதழில் குறிப் பிடப்பட்டது. என்றலும் இவ்வித ழில் இவற்றைக்கொண்டு நிலத்தடி நீர் பற்றிய கணக்கு - வழக்குப் பார்க்கும் விதத்தைக் கவனிப் போம்.
கடற்கரை மணலில் ஊற விடும் இயல்பு 300/0 என்ருல் ஒரு கன அடி அள்ளி எடுத்த மணலில் 0.7 கன அடி மட்டும் சிறு சிறு மணற் பளிங்குகளின் தனித்தனி

Page 14
24
கன அளவின் கூட்டுத்தொகை மீதி 0.3 கன அடி. மணற் பளிங்கு களுக்கிடையிலுள்ள இடைவெளி இடை காற்று முழு வதும் வெளியாகி நீர் செறிந்தால் நீர் திகட்டல் அடைந்ததாகக் கூறுகிருேம்.
களின் கூட்டுத்தொகை. வெளிகளிலுள்ள
1 ஏக்கர் நிலப்பரப்பில் அடிப் பாறைக்கு மேல் 6அடி ஆழத் திற்கு மணல் மேற்படுக்கையாக அமைந்திருந்தால் அந்த ஒரு ஏக்கர் நிலத்திற்குள் # X 6 X (43,560)=1806 ಹೆ.೨g;
நிலவகை களிமண்
- 3 கலன், கரும்மண்
அதர்வது 78,000 கன அடி தண்ணிரைத் தேக்கிவைக்கலாம்.
இப்படித் தேக்கிவைக்கப்படும் நீர் கடல்மட்டத்திற்கு மேல் இருந் தால் கடலை நோக்கி நிலத்துள் ஊடுருவி ஊர்ந்துசெல்ல (Percola. tion) எத்தனிக்கிறது. அப்படி எவ்வளவு நீர் என்ன வேகத்தில் ஊர்ந்து செல்லும் என்பதன் அளவுகோல் தான் ஒவ்வொரு நிலத்தின் உட்புகவிடும் இயல்புக் ga007 5th (Permeablity Coefficient) உ. இ. கு. வட தாழ்நிலத்தில் கர்ணப்படும் சிலவகை நிலத்தின் உ. இ. குணகங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளன.
உ. இ. கு.
-ஒரு அடி அமுக்கத்தின் கீழ் மணிக்கு/சதுர அடிக்கு
-ஒரு அடி அமுக்கத்தின் கீழ் மணிக்கு/சதுர அடிக்கு
-3 முதல் 4 கலன் வரை.
மணல்
--ஒரு அடி அமுக்கத்தின் கீழ் மணிக்கு/சதுர அடிக்கு
-12 முதல் 20 கலன் வரை.
urpurretor சுண்ணும்புக்கல் படுக்கை
குருகு மணல் குறைந்த உட் புகவிடும் இயல்பையும் கடற்கரை மணல் கூடிய இயல்பையும் கொண் டன. சுண்ணும்புக் கற் படுக்கை வெடிப்புகள் கரை குகைகள் நிறைந்ததானல் உட்புகவிடும் இயல்பு கூடுதலாக இருக்கும். கிணறுகள் எவ்வளவு வேகமாகச் கரக்கின்றன என்பதை உ. இ. கு. நிர்ணயிக்கும்,
உதாரணம்
கரைவுகள், உ  ைட வு க ள் நிறைந்த சுண்ணும்புப் படுக்கை
-ஒரு அடி அமுக்கத்தின் கீழ் மணிக்கு/சதுர அடிக்கு
- 0.8 முதல் 8 கலன் வரை.
யுள்ள தரையில் ஒரு கிணறு தோண்டியிருப்பதாக வைத்துக் கொள்வோம். கீழே ஒரு மாதிரிக் கணக்குத் தரப்பட்டுள்ளது.
கிணற்றின் விட்டம்-10 அடி சுற்றளவு - 31.4 அடி 垒一。 କ୍ଷୁତ୍ତ• @・ sa மணிக்கு / சதுர அடிக்கூடாக -8 கலன் இறைக்கும்போது நீர் மட்டம் .3 அடி குறைந்து ஸ்திரமாக நிற்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீர் சுரக்கும் அமுக்கம் - 3 அடி
தண்ணிருக்குச் சமம்.

`- – ', 'e66 me
எதிர்பார்க்கக்கூடிய ஊற்றுமணிக்கு 3x31.4x8-753 கலன்.
இப்பொழுது நாம் ஒரு சில முடிவுகளுக்கு வருகிருேம். (a) உட்புகவிடும் அதிகமாக உள்ள நிலங்களில் வேகமாக மழைநீரின் கூடிய பங்கு ஊறிச் செல்லும்.
(b) அதேபோல் வேகமாக வடிந்து வற்றியும் விடலாம்.
(c) உட்புகவிடும் இயல்பு அதிகமாகவுள்ள நிலங்களில் தோண்டப்படும். கிணறுகள் வெற்றிகரமான விளங்கும். முதலாவதும், மூன் ருவதும் நிலத்தடி நீரை தேக்கி வைத்துப் பிரேயாசனப்படுத்து வதற்கு சாதகமானவை. ஆனல் இரண்டாவது குண இயல்பு நமது நோக்கத்திற்குப் பாதக
இயல்பு
சுரப்பிகளாக
25
மானது. (சாதகமானவற்றை பயன்படுத்தி பாதகமான இயல் பைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் செயற்கை வழிகளை அடுத்த இதழில் ஆராய்வோம்.
இந்த இதழில் அப்படி அமைந்
து ஸ் ள வட தாழ்நிலத்தில் காணப்படும் சில இயற்கைச்
சூழ்நிலைகளை நோக்குவோம்.
(d) எனவே, அடிப்புறத்தி
லும், சுற்றிலும் உட்புகவிடும் இயல்பு குறைந்து இறுகிய பண் டத்தால் சூழப்பெற்று, மேற் தரையிலும் நடுவிலும் உட்புக
டைய சூழ்நிலை அமைந்திருந் தால் அல்லது அமைக்கப்பட் டால் அதுவே நிலத்தடி நீர் வளத்தை தேக்கிப் பயன் படுத்த மிகச் சிறந்த சாதனமாகும்.
?ހަ&ލިށިމރި%ށްހު,<{?
. كصر
vޗި 44
ത്ހހ
།ག་བ་ང་མ་
Sseཟོ་རྒྱན་ ܔܑܖ
*
༡༡ བ་དེ་ཤེས་ཡོད་དང་།
ഞു:->- 4oyo 6ഗത്രൈ',
تنسیخ نمبھ ہی م%ھی تک ”ک“

Page 15
26
脚人-- -
8.6 ° Z 9
† go g g04。A岭 9 I * Ig I o I0,6 * I 岭戏。g8 * Ig2 og 0,8 * ?96 * †6 & * & 0 g * 0 I† 0 ° § I.g. Z * † I 6 I o 9 I- 9 g * g I8.6 ° § I 69:6时的。8ỹ go 6 Z 8 ° {99°30好。的 *z, r99 * 3.ぬ0。も 9.9 ° 0 0 g * I£ I • Z ỹ.9 ° 00.9 ° 0Ɛ Z * 0 A Ꭽ * Ꮡ以甜。舒Z 9 * 3. 92 o 3 :8 ), * 3g0 * ? qı soos unţaţi urm
q'oogiốiusē —ıro-goșđişo fioson Jouse I
o quaedo 1999 do o logogę@g) ygf --ırısıtırıņ& q2≤ng@rı Çı veș șH o qī wagoș @@ to urm{goog) yĝi ap u sē qÌ QŪ , so ude topo qi - -ī gorısı-ı ge(s) IỆ qỉ số so urnųoo –l (gorąfono
· @ @@. Igo urag) sī Ģoeổ qī£)os logo Nog ņi uđi@ @ @ uego ue ip-a qeựng@fi rasēą959 @ @ @ ₪gere 'qi log șH
8对。8好· 19'8 g zlog # 60’s e 96-99 gioșune)
†† . I9Ꭽ * Ꮡ66° 3 g / o I68°的ựgeorgiri og 1 9 6 * II I o asI I og闪的。TI I * 3.ég ugi · I I 83。哈ኗ ፻ * ኗ3. I o go甜甜的哈9:寸goqo • o I 0 Z * so I36 * 0 I«-»Z 6 “ Z† go 6sfio • uqa *6 jogo 9 I.gg · I I Nog ’0 I 9 go 6み z、6otog? gavo og 0A, * 2so Z * 8.60 * Z 99 o 9 ... Z I o 6egrarıố3 • Z A 9 * 3.I I o o68 " I£ 6 * 0# Z oggu-ızı nF -9 9 # * I69 ° 398 , 0 · 8-9 * 0șę o Igassfesso - g 99° 09-0 * I0.9 ° 08 3 * 0g g * I寸%>·谢 I 3 * 0A so ' 028 ° 0 6 I ’0og o 0ựce se og 8好。z ɛ's I go ɛ #6 · 1፭6 “ ፪egluso reco» og § 9 og#9 og† oog - og # * ggg。ミமே9குழிகு •
qiao@rpko – sofiss fioson
· @ @ ugog
ș@@ »uorntive patrio gaessaeğ
1ņodeso ez @@@@ stessagi sąją) go Ựąs logo (3 §§ 11ogs qi IĜię919 ego-ı logo uoto) · @ aïgo@@ ou@rmotivo ș @ @ @o(o) sugÌ Qș [$ $ 109 o uri sự gì tri-if 1,9 psiqırı çıs@șugo
1,9ş sĩ logog smuđi@ 1,9 ugn fisse qi sẽ ��No ogofio filo og á spog
ș-i Tarte un 41 @199an
go ogqo (fi) (oggi Q5 ego ugïo yeeg urnųos sere quisoq H y GÐ 199• ự Hoasso
100ഴു9-1iഒ
șog) 199 urmfīrīņsố • 1,91919-a qeg 19.ogg? @g) yĝi · 1991/9 1/96) Trīņos são o qp um regs af 1ço urag) sposaqseg o lyooqs so qŤ 1990’ı 119 119-æ sĩ ŋo urīgo qø-7@1,9-æ
`-tso-noșđì) uoso rmg)-ios) qi@
spaľogo urısıfıło 42ørşı@ę w @ș-ı (geri qŤqig) q9oșHạ765) ș9 og af spurig) sẽ-17īriņ–177 uso por sr-ırı

m ༄། t s ܐܚܝܢ „jégri கிணறு w s \أمح መመ9• savs lo mosoof -P4 T ーエリ
A. Fعه ومو مTه ګلa79
سمه مینه ダ گھه
areau/d
/エコ ! : « La LL Ce
, ) དེ་
65, 6
". . . 3Y. . . . . . . .۰ : ح . . . . . : السطص . له " .
layova 勾工三>
vr 2 ستمبر
عجی
of Liu of ''
یہ کس حمزoہوں نہ 4ر 4. ffør By gy PH
a 6 o
[ U-_། །།
୍ୱି 绊 烹
* uւմ ` 2. աng Խn or, படம் 2இல் காணப்படும் சுண் ஞணும்புக் கல் நீர்த் தேக்கிகள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. புத்தூர்க் கிணறு, கீரிமலை ஊற்றுக் கரை குகைகள் சுரங்கங்கள் எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று தொடர் புடையவை என்பதைப் படம் விளக்குகிறது. நிலா வரை (நில-- அறையில் போட்ட எலுமிச்சை, கீரிமலையில் வந்து மிதந்தால் ஒன் றும் அதிசயப்படுவதற்கில்லை.
?不三s-一とニーニづミラミエ リエ
、2《究gé oaa a
புத்துTர்க் நாளொன்றுக்கு 100,000
கிணறறிலிருந்து
கலன்
நீர் இறைத்தும் நீர்ப்படுக்கை மட்டம் குறையவில்லை. 250 ஏக் கர் நிலம் இக்கிணற்று நீரினுல்
உப உணவு பயிரிடுவதற்காக நீர்ப் பாசனம் பெறுகிறது. புளிமூட்டை முல்லைத்தீவுப் பகுதிகளில் நல்ல கனமுள்ள மணல் படுக்கை இருந் தும் கடற்கரையோரம் உட்புக விடும் இயல்பு குறைந்த தரையில் லாததால் நிலத்தடி நீர் சேதமாகி விடுகிறது. (தொடரும்)
நண்பரிடம்,
ஒருவர்
5«w st, என்று புரட்டினுர். அதில் நண்பர் சொன்னுர்
* இப்போதான் ஒரு வீடு பயங்கரமாக விழ்ந்ததைக் கண்டேன்" என்று சொன்ஞர். ஆங்கிலக் கல்வி கற்ற "ஒரு நிமிடம். இன்றைய பத்திரிகையைப் பார்க்கிறேன்"
இதைப்பற்றிக் குறிப்பிடவில்லை. * நான் உதை நம்பமுடியாது. உது பொய். ஏனென்றல் உது பத்திரிகையில் இல்ல்ை."

Page 16
あs
00ɛog, {}
00 g * I gqi 119 @ ự goo fərtə
qniyo @ @), o Agerm @ a9@ (fi) qī u9@ ự009 sog) ஓழை q. 1199 Hırıs'a trono togs @
tako pop 6299년T녀7:3 _ qalle fie țigsqi Qiğift:($ #ı oșaeg
0|- 00 g og o 000 og 1 000 o A 0 0 0 ‘ 6 I 0 0 0 0 ‘ ģ8 0 g I o 6 000 o £ 009′9 0 | 0 0 0 0 * I † 0 0 I 3 0 0 0 og I 0 0 0
ș og legge yo potise poș e qene soo ---ırısı, şori qi -1,1 urīgs arī fıçıları çıdegi きもbggトg essミ越s gggト)
0 0 0 ‘8 I 0 0 0 ‘89. I 0 0 0 ‘ I g 000“ i z I 000“ Z0 I 0 0 0 ‘ † ? 000‘Z8 的 0 0 0 * I g 0 0 0 ‘ I † 0 0 0 * 6 £ 0 0 0 og g 0 0 0 ‘ Þ Þ 000 og 8 I
000 og Þ
000 o 06 0 0 0 ‘98
o 0 0 0 og I
000’0 £
&g 9 / I 39 9 I I og Z. 3 3 0 g
· Z, Ž 38
岭的 9 I & 的
9 jo s
63 8° Z. † g 3. I
| 63
sĩ sợ sıçış sĩ sẽ giori 1çormua stedøqørı
q9o-ı ışsgi
1çormu úoșko Hranorte uneo
Algomu ús? soo gogă șoje) egggDトg 9தeயெசிகு 11:21,95īņa@ @qi sĩ sẽ-ự99 r. sĩ sẽ grag) së po ogo u-i vog) sĩ sẽ qø og goofi) sĩ sẽ thuis pri đì sẽ gree Nofło gornų“)
4ımrio, 1go gïgî să
quings ipųoeso cogiốius –iro z logro-i-se
Ź, 8 98 § 8 Þ8 翻8 28 , I 8 08 -62 8 Z 44 9 Z 9 2 † 2. Ɛ Z 创A I Z 02 ngels so no e uri
raggi

● 舒乙
--“gosong 19 qiłņoẾes-ışı@91ựss şısı,goqọge @grestos@ 1ęs nī£ğło *** Lasnangi lors qi@oneto úışs@rug) qoysiçõgiđfigioĒ ĢgĚusąžuosú@@gsupoeg@mfù les um binné)
· 'quo logo.svg)$$@rı |og stelo qoğoặ-176,991, șiwisgogo@gan ugogoșug,1ĝosĝqỉnsúışsung) Qs Qtours ouơngesegmājus 1ęsẽ} opossosoɛɛgsuo ĝonoje loĝiĝis legoaltos@greg) - ontsiɑɑsɛ ışsgogoror,@75,3 tūtes greinsfè affaes f) 9fnuosogễ lạs-af@mụsasg; hún qi@ęyňnqimas2.gi ugo@jose nɔIỆąofiugoto, mghog 8)ingsreg)
yngoặngos ing@sqjong) gymgoặrowsosoïg offişsı'ngjisë -ầgaen,
@@@@sosoɛ “sugukonus-soqışıợsrug)īgs reas-a ặsgìgą, įssựsere qo-irinošos@nnicossoű sporțiosu@@se sümptığı gặīs ģiju hồonquos@ế qoğșæșđih golyngjqsonμμ. εφα
RT 長安 9 교世 u on GD나 6
o nowolsohn&gs-ıko 425m aegre-17.Tfersos quae @ @ ugi ugotājs,osoɛ457 #ī logo regÐ uolųo usoe) af weggaeqoựgỉ thosaegs
opueu od uossued oy-exneri sus so səəunosəși Ione« punolo : » tueấuuuuuuw 's-uos seo go səəunosəyiJesɛAA · I q.q.vos,
000 o 2 © IỮ• 000 * I I ise o su se83 「T니7rTA :藏 qī qig)劑}0 0 0 * #6 @ơn Tựrio s@qn oog)gn 009“ ogigo uo {osgb390 0 0 ‘0 IŞ>000 og so I -sı içerı • • dog uriqi , rmgroep que@ şeyde uri•* 00 g o 6 oEsso sự lo &封000 o 0 3 (>000‘993
83 Z ľ
闪8
6 I 3
ぬgg
ựe@ışı 6 Noon qoaeg tự đù
199
s@s, in ugi
st??>soơn
| 96
甜6 I 6 0 6
68
88
冷

Page 17
-- சின்னச் சின்னப் பார்வைகள் E
*swaM. நடையர்
O சைபர்னெத்தியம் (Cybernetics) என்னும் புதிய அறிவியற்றுறை வேகமாக வளர்ந்து வருகிறது. இத் துறை நரமபு மண்டலம், மூக்ள, தன் னியங்கிக் கட்டுப்பாடுகள் போன்ற வற்றின் இயக்கங்களே தனியாகவும், அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தொழிற்படும் மு 1றயையும் ஆராயும் ஒரு வளர்ந்துவரும் விஞ்ஞானத்துறை யாகும். இத்துறையின் சிறப்பும், சிக்க லும் என்னவென்ருல் கணிதம், உயி ரியல், இலத்திரோனிச்சு, தர்க்கவியல் (Logic), செய்தித் தொடர்புகள் துறை, பொறியியல் என்ற எல்லாத் துறைக களையும் ஒருங்கிணைந்து aeops காண வேண்டிய நிர்ப்பக்தமாகும். மூளை, கரம்பு மண்டலம் தூண்டல் கள், தசைநார் இயக்கம் போன்ற வ்ற்றை இவ்வளவு காலமும் தனித் தனி ஒழுங்குகளுக்குள் வளர்த்துப் பார்த்த விஞ்ஞானிகள், மருத்துவர் கள், இப்படிப்பட்ட தனித்தனியான ஆய்வுகள் முற்றுப்பெருதவை என உணர்ந்தனர். அத்துடன் கம்புயூட் டர், QuišÂ9r 1060fisoir (Robots) போன்ற புதிய துறைகள் விகுத்தி பாக, சைபனெத்தியம் தேவையின் கிமித்தம் தூண்டப்பட்டது. சம்பிரதாய விஞ்ஞானத்துறைகள் வழங்கக்கூடிய பரபரப்பான கண்டுபிடிப்புக்கள் ஒயும் காலம் வந்துவிட்டது. இனிமேல் சைபர்னெத்தியம் போன்ற பன்முக 6Đprišvis (Multi-discipline) i Coppasir பல விக்றையான விசயங்களே வழங் கலாம் என எதிர்பார்க்கலாம்.
மூளையைகம்புயூட்டராக கொள்ள லாம். நரம்பு மண்டலத்தையும் முக்ள
யையும் தொலபேசி பரிவர்த்தனை நிலையமாகக் கொள்ளலாம். இப்படி ஐந்து குருடர்கள் யானையைப் u F iš துத் தாங்கள் தடவிய பகுதிகளை உரல், சுளகுபோல் இருக்கு என்று விபரித்தபடி, குறிப்பிட்ட ஒரு நோக் கில் மட்டும் உயிரினங்களுக்கு மாதிரி மொடல் அமைத்து ஆய்வுகள் செய்து, விளங்க முயற்சித்தல், குறுகிய எல் கலக்குள் மட்டுமே நிற்கின்றது என்ற உண்மையை உணர்ந்த விஞ்ஞானிகள் வேறு திசைகளில் கவனத்தைத் திருப் பிக்கொண்டிருக்கின்றனர்.
எனவேதான்,மூளை தான் கண்டு பிடித்த எல்லாத் துறைகளையும் ஒன் றிணைந்த பல முனைத் தாக்குதலுக்கு ஆயத்தப்படுத்தி, தன்னையே விளங் கிக்கொள்ள முயற்சிக்கிறது.
O தரம்பு மண்டலத்தையும்,
பையும், இருதயத்தையும், பால் உறுப்புக்களையும் ஒன்றிணைத்து மணி தன விளங்க முற்படும் துறையை யோகம் என்றும் அழைக்கலாம். இன்றைய சைபர்னெத்தியத்துறை நவீன கருவிகளுடனும், புதிய உத்தி க3ளயும் பயன்படுத்தி விரிவடைகிறது. ஆனுலும் இத் துறையில் மிகவும் வித்தியாசமானதொரு கோக்கில் கவீன விஞ்ஞானத்துறையை ShortCircuit செய்து, வேறு குறியீடுகளை யும், ஒருவகையான சொற்ருெடர்களை யும், தந்திரங்களையும் பிரயோகித்து நூதனமான வரையறைகளேயும் கொண்டு இத்துறை யோகம் என்ற பெயரில் வளர்ந்திருக்கிறது. விஞ்ஞா Gafas sir Guira utopru desir Fray udausitu Gub

அலுத்துச் சலித்திருக்கும்போது,
* யூடிகோலோன்".
நாம் நாடும் மருந்து
எம்மைத் தாக்கத் தொடங்கும்போது,
அல்லது களைத்திருக்கும்போது தலைவலியோ தடுமலோ நாம் தேடும் கேடயம் * யூடி
கோலோன்". ஆயிரம் நன்மை செய்யும் இந்த அற்புத மருந்தின்
வரலாறு இது.
யூடிகோலோன்
- செல்வன் ஏ. எல். ஜுனைதீன், சாய்ந்தமருது-4, கல்முனை -
மேற்கு ஜேர்மனியில் முன்ருவது பெரிய நகரமான கோலோன் சென்ற 250 வருடங்களாக 'கோலோன் திரவம் என்ற ஒரு பொருளே உற்பத்திசெய்து உ ல கமெங் கும் அதைப் பரப்பியுள்ளது. இத்தாலியில் இருந்து வந்து மேற்கு ஜேர்மனியில் குடியேறிய ஒரு இத்தாலியர் தான் இத் திரவத்தைத் தயாரிக்க அரம்பித் தார் என்று கூறப்படுகிறது. அப் போது இதற்கு லத்தீன் பாஷையில " அக்வா மிராப்லே ' என்று பெய ரிடப்பட்டிருந்தது.
சரித்திர ஆதாரத்திலிருந்து இத் திரவம் 1714ஆம் வருடம் முதல் விற்கப்பட்டதாகத் தெரிகின்றது. அக் காலத்தில் உடம்பில் தேய்த்துக் கொள்ளும் ஒரு மருந்தாக மட்டுமே at உபயோகிக்கப்பட்டுவந்தது. பின்னர்தான் அது வர்சனப் பொரு ளாக மாறிற்று. 19ஆம் நூற்ருண்டு முடிவிற்குள் கோலோனில் சுமார்
அநுபவங்களே சைபர்னெத்தியத் துறைக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித் திருக்கின்றனர்.
எதிர்கால விஞ்ஞான வளர்ச்சி யின் போக்கு, மனிதன் தன்னைப் பற்றி, விகாரமின்றி முழுமையாக, அறியும் போக்காகவேயிருக்கும் என்ப தற்கு பல சான்றுகள் தென்படுகின் றன. இன்று மனிதகுலமும், விஞ் மூதாளமும் ஒரு புதிய திருப்பு முன
90 ஸ்தாபனங்கள் இதைத் தயாரிக்க ஆரம் பித் து விட் டன. " யூ டி கோலோன் ” என்ற பெயர் உலக மெங்கும் வீடுகள் தோறும் வது சங்கம் பெயராகப் பிரபலமாகிவிட்டது.
1810இல் நெப்போலிய பெரு
மன்னன் பிறப்பித்த உத்தரவின் காரணமாகவே இத் திரவம் ஒரு வாசனைப் பொருளாக மாறிற்று.
* யூடிகோலோன் ” என்ற நாமத்தை அதை வாங்கி உபயோகிப்பவர்களே குட்டினர்.
*கெரோலி** தைலம் மிக வாசனை யுள்ளது; விலையுயர்ந்தது. அதுதான் * யூடிகோலோன் ” தயாரிப்பில் பிர தானமாக உபயோகிக்கப்படுகிறது.
* யூடிகோலோன் ” தயாரிப்பில் 88 சதவிகிதம் "ஆல்கஹால்' என்ற 4 T if a 4. 5 சதவிகிதம் 'எஸ்ஸென்ஸ்”, 7 சதவிகிதம் சுத்தத் தண்ணtர். ' யூடிகோலோன்’ திரவத் தின் வரலாறு ஒரு வெற்றிவரலாறு ஆகும். x * . . . . . .
யில் நிற்கின்றன. இதன் லாபலன் களாக பல வருடங்களுக்குப் பிறகு எதிர்பார்க்காத சில நல்லியல்புகளும் பண்புகளும் மனிதகுல வளர்ச்சியில் தோன்றும் என்பதற்குரிய அறிகுறி கள் தென்படுகின்றன.
aktik**
இன்றை உலக அரசியல் . பொரு ளாதார நெருக்கடிப் பின்னணியில் இப் புதிய போக்குகளை சரிவர மதிப் பிட முடியவில்லை என்று நினைக்கிறேன்.

Page 18
ஐயன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடும் அதன் தாக்கங்களும்
சி. குமாரபாரதி (பொறியியலாளர், மத்திய பொறியியல் உசாதுணை பணியகம்)
இந் நூற்ருண்டின் முற்பகுதி யில் பெளதிக - கணிதவியல்களில் பல சிக்கல்கள் ஏற்படத் தொடங் கின. மூன்று நூற்ருண்டுகளுக்கு மேலாகக் கட்டப்பட்ட சம்பிரதா வப் பெளதிக - கணிதவியல்கள் சில முரண்பாடுகளைத் தம்மகத்தே கொண்டு தத்தளித்துக்கொண்டு இருந்தன. மெத்தக் கவனமாக அடுக்கடுக்காகக் கட்டப்பட்ட பெளதிக - எந்திரவியல் சித்தாந் தக் கோட்டைகள் இலேசாக ஆட் டம் காணத் தொடங்கின.
நியூட்டனின் நாட்டாண்மை ༣
பொருட்களின் அசைவு, ஒய்வு முதலிய நிலைகளை நியூட்டனின் விதிகள் தெளிவாக எடுத்துக் காட் டின. இவ் விதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுந்த எந்திரவியல் நியூடோனியன் எந்திரவியல் எனப் பெயர் பெற்றது. குறைந்த வேகத் தில் ஊடாடும் பொருட்களின் போக்கை மிகத் துல்லியமாகக் கணக்கிட்ட இயக்கவியல் சமன் பாடுகள் எந்திரவியல், கிரகங்க ளின் இயக்கம், பொறியியல் பிரச் சினைகள் என்று பலதரப்பட்ட பிரச்சினைகளுக்குப் பிரயோகப் படுத்தப்பட்டு மிகுந்த பயனளித் தது முன்னுாறு ஆண்டுகளாகப் பெற்ற அநுபவத்தின் விளைவாக நியூடோனியன் எந்திரவியல், அசைவியல், நிலையியல், நீர் அசை வியல், நீர் நிலையியல், பொறி
யியல், வானியல், பெளதிகம் என்று பல துறைகளையும் வளைத்துப் பிடித்து நாட்டாண்மை காட்டிக் கொண்டிருந்தது. சுருக்கமாகக் கூறினுல் அறிவியல் சார்ந்த எல் லாத் துறைகளிலும், நீக்கமற நிறைந்த பரம்பொருளாகி விட் டது நியூடோனியன் எந்திரவியல். இக் கட்டத்தில் நியூடோனியன் சம் பிரதாயச் சித்தாந்தங்களை முழுமுதற் கடவுளாக அறிவியல் ஆய்வாளர்கள் மதித்ததில் வியப் பில்லை.
நியூடோனியன் எந்திரவியலுடன் தாச்சி மறிப்பு
பத்தொன்பதாம் நூற்ருண் டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றுண்டின் முற்பகுதியிலும் மரபுவழி வந்த கண்டுபிடிப்புக்களை வி. மிகுந்த வேறுபாடுடைய கண்டுபிடிப்புக்கள் ஒன்றன்பின் ஒன்ருக வரத்தொடங்கின. இவ் வளவு காலமும் மிகவும் குறைந்த வேகத்துடன் இயங்கும் பொருட் களுக்கு நியூடோனியன் எந்திர வியல் பயன்படுத்தப்பட்டது. ஆனல் புதிய கண்டுபிடிப்புக்க ளான எலத்திரன்கள், கதிரியக்கம் போன்ற நூதனமான துணிக்கை கள் மிகுந்த வேகத்துடன் ஊடா டின. இவை அணுவின் அமைப்பு. இயக்கம் முதல் அண்டத்தின் அ  ைம ப் பு: இயக்கம் வரை பெளதிக - கணிதவியல்களில் இது

வரை அறிவியலாளர்கள் கண்டு கேட்டறியாத புத்தம்புதுச் சிந் தனைக் கதவுகளைத் திறந்தன. இவற்றை விளங்குவதற்குப் புதிய வியாக்கியானங்கள் பல எழுந்தன. இக் கண்டுபிடிப்புக்கள் மரபு வழி வந்த பெளதிக - கணித சித்தாந் தங்களில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்தன. ஒளியின் வேகத் திற்கொத்த வேகத்துடன் சஞ்சரிக் கும் துகள்களின் (எலத்திரன், நியூதிரன் போன்றவை) இயல்பு கள் சம்பிரதாய நியூடோனியன் எந்திரவியலுக்கு படியாமல் தாச்சி மறித்துக்கொண்டிருந்தன.
இந்த சம்பிரதாய பெளதிககணிதவியலுக்கு ஏற்பட்ட சிக்கல் கள் பல என்ருலும், எல்லாவற் றிற்கும் கொடுமுடியாக விளங்கி யது ஒளியியல் கோட்பாட்டி லுள்ள ஈதர் என்ற ஊடகமாகும். முரண்பாடுகளைத் தீர்க்கப் பல அறிவியலாளர்கள் பலவிதமாக ஒட்டுப் போட்டுக்கொண்டிருந்த னர். இவர்களுள் லோறன்சு, பிற்ஜெருல்ட் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
வளியாகி, ஒளியாகி, மின்காந்த se sou TS... --
ஒளியியல் கோட்பாட்டினல் ஏற்பட்ட முரண்பாடுதான் இறுதி யில் ஒரு புதிய சித்தாந்தத்தையே உருவாக்கியது. எனவே இதைக் கொஞ்சம் விபரமாகக் கவனிப் போம்.
ஒளிக்கதிர்கள் மின்காந்த அலைக் குடும்பத்தில் ஒன்ருகும். ஒளியானது அலைத்தன்மையுடை யது என்று கணிதச் சமன்பாடுக ளுடன் 1850 அளவில் கிளாக்
3g
மாக்ஸ் வெல் நிரூபித்தார். இது வரை காலமும் ஒளியென்பது போட்டன் துகள்களாலானது என்ற நியூட்டனின் ஒளிக்கோட் பாடு மூட்டை கட்டி வைக்கப்
• لكي سانا لا
ஒளியின் அலைத்தன்மையைப் பல வழிகளில் நிரூபித்தவர்கள் ஒளியின் வேகத்தையும் அளந்து அவ்வேகம் மின்காந்த அலைக் குடும்பத்தின் வேகத்தை ஒத்தது என்றும் கண்டு பிடித்தனர். ஒளி யின் வேகம் செக்கனுக்கு 186,000 மைல்களாகும். (மின்காந்த அலைக் குடும்பத்தில் றேடியோ அலைகள் முக்கிய அங்கம் வகிப்பவை) இந்த மின்காந்த அலைக் கொள்கைக்கு ஒரு பிரச்சினை குறுக்கிட்டது. அலை பரம்புவதற்கு ஊடகம் தேவை. உதாரணமாக ஒலியதிர்வுகள் சாதரணமாகக் காற்றினூடாகப் பரவுகின்றன. ஒலிக்குக் காற்றுத் தான் ஊடகம். மின் காந்த அலை கள் பரம்புவது எப்படி என்ற கேள்விக்கு ஈதர் என்ற ஊடகம் பிரபஞ்சம் முழுவதும் வியாபித் திருக்கிறது என்று ஒரு விஞ்ஞானி கூறியதை மிகுந்த விநயத்துடன் ஏற்றுக்கொண்டு எல்லோரும் ஆறு தல் பெருமூச்சு விட்டனர். இதை ஆதாரமாகக் கொண்டு மாக்ஸ் வெல் தனது மின்காந்த அலைக் கொள்கையை எழுதி முடித்தார். ஈதர் என்ற ஊடகமே ஒளி அலை களையும் மற்றும் மின்காந்த அலை
களையும் கடத்துகிறது அல்லது பரப்புகிறது என்று காப்புச் சொல்லிவிட்டு மேற்கொண்டு
மின்காந்த அலைக் காவியத்திற்கு வியாக்கியானம் செய்தார்கள், மாக்ஸ்வெலும் அவரது சகபாடி

Page 19
34
களும் இந்த அடிப்படையில் மிக வேகமாக மின் கா ந் த வி ய ல் வளர்ச்சியுறலாயிற்று.
ஈதர் தென்றலடிக்குது என்னை மயக்குது தேன்மொழியே. '
அசையாத, நிலையான, கும் வியாபித்த ஊடகம் ஈதர் என்று இலக்கணப் புலிகள் மேலும் தொல்காப்பியம் வகுத்தனர். இந்த ஈதர் ஊடகத்தைக் கண்டு பிடிக்காமல் சில விஞ்ஞானி களுக்கு அரிப்பெடுத்தது. இவர் கள் 'நிலையான ஈதர் ஊடகம் அசையும் பூமியுடன் நெருங்கும்
எங்
பொழுது ஈதர்க்காற்று என்று ஒன்று இருக்கவேண்டுமே!" என அங்கலாய்த்தனர். ஒளியின்
வேகத்தை மிக மிகச் சரியாகக் கணக்கிட முடிந்தால் "ஈதர் தென் றலை" கண்டுபிடிக்கும் வழியொன் றையும் வகுத்தனர். ஒளியின் வேகமோ செக்கனுக்கு 186,000 மைல்களாகும். ஆனல் சூரியனைச் சுற்றிப் பூமி செக்கனுக்குப் 15 மைல் வேகத்தில் வாணவெளியில் நீந்திக்கொண்டிருக்கிறது. (குரிய னைச் சுற்றிப் பூமி வலம் வருவது தெரிந்ததே!) இதனுல் நிலையான, சலனமற்ற ஈதர் என்ற ஊடகம் பூமியை நெருங்கும்பொழுது “ஈதர் காற்று" இருக்கும். இவ் ஈதர் காற்றின் வேகம் செக்கனுக்கு 15 மைலாகும்.
இதனுல் ஒளியின் வேகம் பூமி யில் ஈதர் காற்றினுல் பாதிக்கப் படுகிறது. 186,000 மைல்/ செக் கன் வேகமுள்ள ஒளிக்காற்றை பூமியில் ஈதர் காற்றிற்கு எதிர்த் திசையில் 18 ,090 + 15 மைல்/ செக்கன் ஆகவும் வேறு திசைகளில்
அத்திசைகளுக்கேற்ப சிறு வித்தி யாசம் ஏற்படும். எனவே ஈதெர் காற்றினல் ஒளியின் வேகத்தில் ஏற்படும் தாக்கம் மிகமிக நுண் ணியது. ஒன்றில் பன்னிராயிரம் என்ற அளவிலேயே வேக வித்தி யாசம் ஏற்படுகிறது. செக்கனுக்கு 186,000 மைல் வேகத்தைக் கணக் கிடும் கருவி செக்கனுக்குப் 15 மைல் வேகத்தையும் கணக்கிட வேண்டும். இந்த நுண்ணிய ஒளி வேக மாறுபாடுகளை கருவிகளால் அளவிட முடியாது என்றும், அத ஞல் ஈதர் காற்றைக் கண்டு பிடிக்காவிட்டால் என்ன, பேசா மல் வேறு தொழிலைப் பார்ப்போம் என்று கொஞ்ச காலத்திற்கு விஞ் ஞானிகள் இருந்தனர்.
பழைய வேதாளம்
பழையபடி வேதாளம் சென்ற நூற்ருண்டின் பிற் பகு தி யில் முருங்கை மரத்தில் ஏறிக்கொண் டது. மைக்கல்சன் - மோர்லே என்ற இரு அமெரிக்க அறிவிய லாளர்கள் 1880 மட்டில் இந்த ஒளிவேக மாறுபாடுகளை எடுத்துக் காட்டக்கூடிய பரிசோ த னை த் தொகுப் பொன்றை நடத்தலானர் கள். ஒரே அலை நீளமுள்ள ஒளிக் கற்றைகளை ஈதர் காற்றுக்கு ஒத்த திசையிலும், எதிர்த் திசையிலும், குறுக்குத் திசையிலும் செலுத்தி
ஒளியின் வேக மாறுபாடுகளை கணிக்கக்கூடிய உத்தியொன்றைக் கண்டுபிடித்தனர். இந்தப் பரி
சோதனைகளின் பெறுபேறு என்ன வென்ருல் ஒளியின் வேகம் பூமி யின் வேகத்தினுல் பாதிக்கப்பட வில்லை என்பதாகும். இதன் தாற் பரியம் என்னவென்முல் ஈதர் காற்று என்பது இல்லை; இதனுற்

நான் எந்தத் திசையில் ஒளியின் வேகத்தை அளந்தாலும் அது மாறிலியாக இருக்கிறது என்ப தாகும்.
ாதர் காற்றில் விஞ்ஞானப் புழுக்கம்
எனவே ஈதர் காற்றைக் கண்டுபிடிக்க " வெளி க் கிட்ட மைக்கல்சன் - மோர்லே அப்படி ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை என்று அழாக்குறையாகச் சொன் ஞர்கள். உங்கள் பரிசோதனை
இவ்வளவு சிறிய வேக வித்தியா
சங்களை எடுத்துக்காட்ட வல்லதா
ான்று சந்தேகம் கிளப்பியவர் களுக்கு கற்பூரம் கொழுத்தாக் குறை யா க கருவிகளினதும்,
தங்களது உத்தியினதும் நம்பகர மான நாணயமான தன்மைகள் மேல் சத்தியம் செய்தனர்.இதனல் ாதர் ஊடகம் இருக்கிறதா? இல்லையா? என்ற நெருக்கடி எழுந்தது.
பெளதிகக் கடையில் ஐயன்ஸ்டீன் யானை
இந் த க் ஐயன்ஸ்டீன் என்னும் இருபத் தைந்து வயது இளைஞர் வெண் கலக் கடைக்குள் L9prrGJyrr பொலிஷ் நுளைந்தமாதிரி பெளதிக கணிதவியலுக்குள் பியானே வாசித்துக்கொண்டும், அடக்கமாக ஒரு கிளாக்கர் உத்தி யோகம் பார்த்து, சீவன ம் நடாத்த வந்த இவருக்குக் கணி தத்தில் காதல். 1905ஆம் ஆண்டு
இவர் வெளியிட்ட தனிச்சார்புக்
கொள்கை திடீரென இவரை கணித - பெளதிகவியலின் தலைக் குரு க் களாக உயர்த்தியதுடன் நோபல் பரிசையும் கொடுத்தது.
கட்டத்தில்தான்
நுளைந்தார்.
*
35
ஐயன்ஸ்டீன் முதன்முதல் தன் சார்புக் கொள்கைச் சித்தாந் தத்தை விளக்கியபொழுது அங்கு குழுமியிருந்த அனைத்துலக அறிவிய லாளர்களில் , பன் னி ரண் டு பேருக்கு மட்டும் அது புரிந்ததாம். இதைப்பற்றி ஒரு பகிடி ஒன்று. ( வி ஞ் ஞா ன உலகத்திலேயே சார்பியற் கொள்கையைப்பற்றித் தான் அதிகமான பகிடிகளும், புனைகதைகளும், குறும்பாவுகளும் எழுந்தன). சார்பியல் தத்து வத்தை ஜனரஞ்சகமாக விளக்கு வதற்கு பேட்றன்ட் றஸல் முதற் கொண்டு பல அறிஞர்கள் அக் காலத்தில் முயன்றனர். இவர் களில் ஒருவர் எழுதிய புத்தகத் தைப்பற்றி ஐயன்ஸ்டீன் பின்வரு மாறு குறிப்பிட்டார். "எனது சார்பியல் கொள்கையோ பன்னி ரண்டு பேருக்காவது விளங்கி யது. ஆனல் இந்த ஜனரஞ்சகப் புத்தகமோ ஒருவருக்கும் புரிய வில்லை. (நான் உட்பட) ! " இப் பொழுது சார்புக்கொள்கை ஒரள வுக்காயினும் பட்டதாரி மாணவர் களுக்குப் பயிற்றப்படுகிறது.
iji
சார்புக் கொள்கையின் தாக்கம்
இவரது சார்புக் கொள்கை பெளதிக, இரசாயன, அணுவியல் பிரபஞ்ச அமைப்புப் போன்ற பல துறைகளுக்கு பிரயோகப்படுத்தப் பட்டு வருகிறது. முக்கியமாக இவரது சார்புக் கொள்கை அறி வியல், தத்துவ, மனே தத்துவ சிந்தனைகளிற் தாக்கங்களை ஏற் படுத்தியது.இதற்கு முக்கியதொரு காரணம் வெளி, நேரம் ஆகிய இரு அடிப்படைப் பரிமாணங்களை ஒரு அலசு அலசிவிட்டது சார்புக் கொள்கை. இதனுல் பெளதிக,

Page 20
36
இர சர் ய ன, கணிதவியல்களில் மட்டுமல்ல மனே தத்துவ ரீதியாக வும் வெளி, காலம் ஆகிய இரு பரிமாணங்கள் பற்றிய கற்பிதங் கள், சிந்தனைகள், உருவகங்கள் மிகுந்த மாற்றமடைந்தன.
அசைவுகளில் சார்புத் தன்மை
பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா விதமான அசைவுகளும் சார்பு இயல்புடையவை என்பது இவ ரது முக்கிய கோட்பாடுகளில் ஒன்று. அதாவது அசைவுகளைத் தனியான முறையில் வரையறுக்க முடியாது. உதாரணமாகக் காரின் வேகம் 30 மைல் / மணி என்ருல் அந்தக் கார் பூமிக்குச் சார்பாக 30 மைல் வேகத்தில் செல்கிறது என்றே பொருள். இதுபோலப் பூமியின் வேகம் 15 மைல் / செக் கன் என்ருல் சூரியனுக்குச் சார் பாகப் பூமி 15 மைல் / செக்கன் வேகத்தில் செல்கிறது என்றே பொருள். பிரபஞ்சத்தில் எதுவுமே சிவனே யென்று சும்மாயிருப்பது இல்லை, எனவே ஒரு பொருளின் வேகம் 50 மைல் / மணி என்ருல் அவ் வேகம் பிறிதொரு பொரு ளுடன் தொடர்புபடுத்திப் பார்க் கும்பொழுது அல்லது சார்பாகப் பார்க்கும்பொழுதுதான் 50மைல்/ மணியாக இருக்கிறது. இந்த வாதத்தைத் தர்க்கரீதியாக நீட் டிக்கொண்டு சென்ருல் சலனமற்ற நிலையான ஊடகம் ஒன்று இருப் பது சார்புக் கொள்கைக்கு முர ஒனனது என்றே தோன்றும். சலன மற்ற, நிலையான என்று சொல்லும் பொழுது எதற்குச் சார்பாக
நிலையான ஊடகம்? என்ற கேள்வி
யும் கூடவே எழுகிறது. சூரிய
னுக்குச் சார்பாகவா, வளி மண்ட லத்திலுள்ள பிறிதொரு நட்சத் திரத்திற்குச் சார்பர்கவர் எதற் குச் சார்பாக என்ற கேள்வி எழுகிறது.
என்வே ஈதர் என்ற நிலையான ஊடகம் இருத்தாலும் அதைக் கண்டுபிடிக்கமுடியாது எ ன் பது
தான் சார்புக் கொள்கையின் Փւգւլ.
கால ரதம்
சார் பி ய ல் கொள்கையின் இன்னுெரு முக்கிய கோட்பாடு காலம் அல்லது காலவோட்டம் வேகத்திஞல் பாதிக்கப்படுகிறது என்பதாகும். எனவே காலம் அல் லது நேரமும் தனியாக வரையறுக்க முடியாததொன்ரு கும். உதாரண மாக ஏவுகணை ஒன்றுள் இருக்கும் விண்வெளிவீரர் தனது ஏவு கணையைச் செக்கனுக்கு 133,000 மைல் வேகத்தில் செலுத்துகிருர் எ ன் று வைத்துக்கொள்வோம். இவர் 12 மணிக்குப் பூமியிலிருந்து புறப்பட்டார். இவரது கைக் கடிகாரம் ஒரு மணி காட்டுகை யில் பூமியிலுள்ள மணிக்கூடுகள் 1 மணி 45 நிமிடங்கள் காட்டும். இதிலிருந்து வேகமாகச் செல்லும் பொழுது காலம் அல்லது நேர ஒட்டம் மெதுவாகிறது என்று தெரிகிறது. ஐயன்ஸ்டீனின் இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இந்தக் கால ஓட்ட வித்தியா சத்தை மிகைப்படுத்தும் பலவித அறிவியல் புனைகதைகள் உருவா கின. ஒளியின் வேகத்தை அணுக அணுகக் கால ஓட்டம் மெல்ல மெல்லக் குறைகிறது. அப்படிப் பார்க்கங்போனுல் ஒளியின் வேகத்

துடன் செல்லமுடிந்தால் காலம் என்ற வரையறையே இருக்கமுடி யாது. அதாவது க ர் ல த்  ைத அல்லது காலனை வென்ற மார்க் கண்டேயர்களாகிவிடுவோம். இக் காலவோட்டத்தை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்ட புனைகதைகள் ஒன்றின் கரு இங்கே தரப்படுகிறது. ஒளியின் வேகத்
திற் கண்மையான வேகத்திற் சென்ற விண்வெளி வீரர்கள் தங்களுடைய கணக்குப்படி சில
ஆண்டுகள் விண்வெளியில் உலாச் சென்று திரும்பவும் மீண்டனர். இங்கு வந்து சேர்ந்த வர்களுக்கு ஒரே ஆச்சரியம். தங் களுக்குத் தெரிந்தவர்கள் எவருமே உலகில் இல்லை. மூன்ருவது தலை முறையினர் சொன்ன தகவலின் படி தாங்கள் விண்வெளி சென்று மீளுவதற்குள் பூமியில் நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன என்று தெரிந்ததாம். எப்படிக் கற்பனை ?
ஒளியின் வேகமே பிரபஞ்சத் தில் ஆகக்கூடிய வேகமாகும். இதற்கு மிஞ்சிய வேகம் இருக்க முடியாது என்பது சார் புக் கொள்கையின் ஒரு முடிபு. ஆனல் ஒளியின் வேகத்தை அணுக அணுகப் பொருட்கள் பொருட்க ளாக இருப்பதில்லை; அவை சக்தி யாகப் பரிணமிக்கின்றன. எனவே ஒளியின் வேகத்திற் சென்று காலத்தை வென்றலும், எமது பூதவுடம்பு சக்தியாக மாறிவிடும் சாத்தியக்கூறும் உ ண் டென த் தெரிகிறது ! நடைமுறையில் ஒளி யின் வேகத்தில் ஒரு சிறு பங்கை யாவது நாம் அடையமுடியுமோ என்பது சந்தேகம். ஆனல் கற்பனை யைக் கொஞ்சம் விரித்துவிட்டால்
பூமிக்கு
37
ஒளியின் வேகத்தை மிஞ்சிப் பிரயாணஞ் செய்தாற் கால ஒட் டத்தை நிற்பாட்டுவது மட்டுமல்ல காலத்தை முந்தலாம். இதைவிட வேடிக்கையான நிகழ்ச்சி இருக்க முடியாது. உ தா ர ண மா க க் கொழும்புக்கு இன்றிரவு பயணம் தொடங்கினல் நாளை காலை போய்ச் சேரலாம். ஆனல் கால ஒட்டத்தை முந்தினல், இன்று தொடங்கிப் பிரயாணஞ்செய்து திரும்பும்போது நேற்றே திரும்பி விடலாம். இது பற்றிய குறும்பா ஒன்று இதோ.
இன்று பேய் நேற்று வா! பவளக் கொடி யென்னும் பாவை ஒளியை விட விரைவாகச் செல்லும் பூவை அருந்ததியை தரிசிக்க ருெக்கட் ஏறி, இன்றுபோய் திரும்பி நேற்றுவந்தாள் என்ரூல் சார்புநிலத் தத்துவத்தின் மகிமை கண்டாய்.
35ff6Ủtt 36T60ưDII tỉi கந்தோருக்குப் போகலாம்!
கால ஒட்டத்தை நாங்கள் நினைத்தபடியே மு ன் னு க்கு ம் பின்னுக்கும் நினைத்தமாத்திரத்தில் மாற்றவேண்டும் என்ற அவா மனிதர்களுக்குண்டு. இப் படி ப் பட்ட சாத்தியக்கூறுகளை அது எவ் வளவுதான் நடைமுறைக்கு ஒவ் வாததாயினும் சார்புக்கொள்கை சுட்டிக்காட்டியதுதான் தாமதம், இந்தக் கால ஓட்ட சார்புநிலைத் தத்துவத்தைத் தங்கள் கற்பனை வளத்துடன் சேர்த்துப் பல அறி வியல் புனைகதைகளைப் பலர் உரு வாக்கினர். காலம் என்ருல் சென்று கொண்டேயிருக்கும். அ  ைத த் தடுத்து நிறுத்தவோ, ஒரு கண மேனும் காலத்தை வெல்லவோ

Page 21
38
முடியாது என்று ஒமர் கையாம் முதல் பல கவிஞர்கள் ஒப்பாரி  ைவத் தி ரு ந் த ன ர். எனவே கா லத்  ைத வெல்லவேண்டும், அதாவது காலனை வெல்லவேண் டும் என்ற பேரவா மனித இதயத் தில் வேரூன்றியுள்ளது என்றே தோன்றுகிறது. காலத்தை வென்ற மார்க்கண்டேயச் சித்து விளை யாட்டு உண்மையில் நாம் நினைத்த மாதிரி இப்படியான வேகமாகச் செல்லும் காலரதத்தில் சென்ருல் நிகழ்ந்துவிடாது. இதற்குப் பல நடைமுறைச் சிக்கல்களும் வேறும் பல சிக்கல்களும் இடையூருக உண்டு. எதற்காக இப்படி வில்லங் கப்பட்டுக் காலத்தை வெல்லவேண் டும் என்ற நியாயமான கேள்விக்கு ** இல்லை, நான் இப்படியே காலம் காலமாகக் கந்தோருக்குச் சென்று வரலாம்' என்று பதில் கிடைக் கலாம். எது எப்படியிருப்பினும், கால ஓட்டம் வேகத்தைச் சார்ந் தது என்பது அசைக்கமுடியாத உண்மை. ஆனல் இதைச் சாட் lf as உத்தியாக வைத்துக் கொண்டு காலதேவனை நாம் வி ர ட் ட மு டி யு மா என்பது வேருெரு விஷயம்.
நீளம், திணிவு ஆகியவற்றின் சார்புத்தன்மை
நீளம், அகலம், ஆழம் என்று
ஒரு பொருள், வெளியில் நிரப்பும் இடத்தை வரையறுக்கும் முப்பரி மாணங்களும் மாருத இயல்பு கொண்டவை எனக் காலம் கால மாக நம்பப்பட்டது. ஆனல் சார்புக் கொள்கையின் வேருெரு கோ ட் பா டு என்னவென்முல் நீ ள ம், அ க ல ம், ஆழம்
போ ன் ற முப்பரிமாணங்களும்
வேகத்தைச் சார்ந்திருக்கின்றன என்பதாகும். இதன் தாற்பரியம் என்னவென்ருல் மிகுந்த வேக
மாகச் செல்லும் ஏவுகணையுள், அது செல்லும் திசையில் நீளம் குறுகுகிறது என்பதாகும். அதா வது பூமியில் ஒரு யார் என்று சொல்லப்படுகிற அளவு வேக மாகச் செல்லும் ஏவுகணைக்குள் ஒரு யாரில் குறைவாகச் சுருங்கு மாம். ஆனல் இதில் வேடிக்கை என்னவென் ருல் இம் மாற்றத்தை நாம் தெரிந்துகொள்ளவே முடி யாது. ஏனெனில் நாம் எடுத்துச் செல்லும் அளவுகோலும் அதே அளவால் நீளம் குறுகுவதால் இங்கு ஒரு யார் நீளக் கயிறு அங்கும் ஒரு யார் என்றுதான் கொள்
வோம். சாதாரணமாக இந் நீளக்
ஒடும் கார்களிலும், ஆகாய விமானங்களிலும் ஏற் படும். ஆணுல் இவை மிக மிக (ஒளியின் வேகத்தை ஒப்பிடும் பொழுது) மெதுவாகச் செல்வ தால் இவற்றை நாம் அவதானிக்க முடியாது. இந்த நீள் குறுக்கத்தை லோறன்சு-பிற்ஜெருல்ட் குறுக்கம் என்றும் சொல்வார்கள்.
குறுக்கம்
சார்புக் கொள்கையின் பிறி தொரு கோட்பாடு என்னவென் ருல் வேகம் அதிகரிக்க அதிகரிக்க திணிவும் அதிகரிக்கும் என்பதா கும். இதன்படி பார்த்தால் எனது திணிவு பூமியிலிருக்கும்பொழுது 200 ருத்தல் என்ருல் ஒளியின் வேகத்தில் அரைவாசி வேகத் துடன் செல்லும்பொழுது 230 ருத்தல் திணிவுள்ளவனுவேன்.
சார்புக் கொள்கையின் சில முக்கிய கோட்பாடுகளை இங்கு

கவனித்தோம். இவற்றைச் சுருக்க மாகக் கூறின் காலம், நீளம், திணிவு ஆகிய மூன்று அடிப்
படைப் பரிமாணங்கள் வேகத்
தைச் சார்ந்திருக்கிறது என்ப தாகும். மனிதன் இவ்வுலகைப் பற்றிய சில அடிப்படையான
கற்பிதங்களை தன்னுள் வளர்த் துக்கொண்டிருக்கிருன். உதாரண மாக காலம், வெளி, நிறை ஆகிய வற்றின் இயல்புகள் எந்தச் சந் தர்ப்பத்திலும் மாருதவை, என்ற கருத்துடன் உலகு பற்றிய தனது கற்பிதங்களையும், உருவகங்களை யும் ஆக்க முற்படுகிறன். எனவே காலம், வெளி, நிறை ஆகியவை நாம் செல்லும் வேகத்தில் தங்கி யிருக்கிறது அல்லது சார்ந்திருக் கிறது. இவை மாறும் இயல்பு உடையவை என்னும் கருத்துப் பலருக்கு எரிச்சலூட்டுவதாயிருந் ததில் வியப்பில்லை. உலகைப்பற்றி யும், பிரபஞ்சம் பற்றியும் நாம் கொண்ட நம்பிக்கைகள், கற்பனை கள் காலம், வெளி ஆகியவற் றுடன் நெருங்கிய தொடர்புடை யவை. எனவே இந்த அடிப்படைப் பரிமாணங்கள் பற்றிய நமது சிந்தனைகள் மாறியவுடன் பெளதி கம் மட்டுமன்றி மனுேதத்துவ ரீதி யாகவும் பல மாற்றங்கள் ஏற் படத் தொடங்கின.
கிணறு வெட்டப் புறப்பட்ட பூதம்
ஐ யன் ஸ் டீ னி ன் சார்புக் கொள்கை பெளதிகவியலிலுள்ள சிக்கல்களை நைசாக அவிழ்த்தது மன்றி, எதிர்பாராத பூதம் ஒன்றை யும் ஏவிவிட்டது. E=mc2 என்ற சமன்பாடு விஞ்ஞான வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இச் சமன்பாட்டை மனித நாகரி
39
கத்தின் உச்சாணிக் கொப்பென்று சொல்ல லாம் (சிலசமயம் கொப்பு முறிந்துவிழக்கூடிய சாத் தியக்கூறுகள் தென்படுகின்றன.) இச் சமன்பாடு ஜடப்பொருள் தனது நிறையிற் கொஞ்சம் தியா கஞ் செய்தால் அளப்பரிய சக்தி சீறி எழும்பும் எனத் தெரிவித்தது. இச்சமன்பாட்டில் E என்பது சக்தி யையும், m என்பது சக்திக்காகச் செலவிடும் நிறை, c என்பது ஒளி யின் வேகத்தையும் சுட்டுவன. ஒரு சிறிய அணுவைப் பிளந்தால் இச் சக் தி  ைய வெளியேற்றலாம். அப்படி ஜடப்பொருளைத் தின்று வெளியேறும் சக்தி இவ்வளவு அதிகமாயிருக்கும் என ஒருவரும் கணுவிற்கூடக் கண்டதில்லை. அணு சக்தி மின்நிலையம், அணுக்குண்டு போன்ற வற்றி ன் சிதம்பர இரகசியத்திற்கு இச் சமன்பாடே
திறவுகோலாகும். யூரானியம், தோரியம் போன்ற கதிரியக்க
ஆற்றல் கொண்ட மூல கங்கள்
ஒன்றை எடுத்து அதில் பத்தில் ஒரு
கிராம்மட்டும் சக்தியாக மாறினற்
போதும் இலங்கைக்கு ஒரு ஆண்டு
தேவையான மின் சக்தியைக்
காலாட்டிக்கொண்டு பெற்றுவிட
லாம். ஆனல் பூதத்தைக்கொண்டு
வேலை செய்விப்பதும் ஒரு கலை.
* ஆயிரம் சூரியர்களுக்கு நிகரான பிரகாசமாய், சக்தியாய்."
ஐயன்ஸ்டீன் சமன்பாடுகள் பூதாகரமான சக்தியைச் சுட்டின. ஆணுல் இச் சக்தியை எப்படி வெளியேற்றுவது என்ற பிரச்சினை எழுந்தது. பூதத்தைத் திறந்து விட்டவர் ஒப்பன் கைமர் என்னும் விஞ்ஞானியாவர். முதலாவது:

Page 22
40
அணுக்குண்டு ( 1941 - 1944) இ வ ரது மேற்பார்வையிலேயே தயாரிக்கப்பட்டது. இவ்வணுக் குண் டு வெடிக்கப்பட்டபோது அதன் சக்தி வெளிப்பாட்டைக் கண்ட ஒப்பன் கைமர் 'ஆயிரம் சூரியர்களுக்கொத்த பிரகாசமு மாய்." என்று பகவத்கீதையில் விஸ்பரூப தரிசனத்தை இச் சம்ப வ த் தி ற்கு உவமையாக்கினர். சும்மா கிடந்த பூதாகரமான சக்தி யைத் தட்டி எழுப்பிவிட்டதில் இனம்புரியாப் பயமும், பரவசமும் சேர ஒப்பன் கைமர் பகவத்கீதை யைப் படபட்வென்று அவிழ்த்து sí Limr tř.
சார்புக் கெர்ள்கைக்குப் பிறகு விஞ்ஞானிகள் சிலர் வேதாந்தம், அத்வைதம், தம்மபாதம், சீனத்து சென் போன்ற தத்துவ நூல்களைத் தூசுதட்டிக்கொண்டிருந்தனர்.சித் தர்களின் பாடல்களிற் சில எங் களுக்கு உளறலாயிருந்தாலும், அவ் விஞ்ஞானிகளோ " அடடா இது ஐயன்ஸ்டீன் ஒய்வுநேரத்தில் எழுதியதுபோலிருக்கிறது ' என் றனர். காளிதாசனின் "காலைக்கு வணக்கம்" போன்ற பாடல்கள் விஞ்ஞானிக்ளின் மேசைக் கண் ணுடிக்குள் தலைநீட்டின.
கிழக்கத்திய சித்தார்த்தங்களில் விஞ்ஞானிகட்கு நாட்டம் எப்படிப் பிறந்தது என்று முற்ருக ஆராய் aது இக் கட்டுரையின் வரை பறைக்கு அப்பாற்பட்டதாகும். என்ருலும் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடு வது ருசிகரமாயிருக்கும் என்பதா லும் பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும் சில இங்கு தரப்படுகின்ற்ன.
பொருட்கள்
குறிப்புகள்.
பன்மையில் ஒருமையும், ஒருமையில் பன்மையும்
உலகிற் கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் யாவும் பல இயல்பு களும், பல நிறங்களும் உடை யன. என்றலும் அவற்றின் அடிப் படை அணு அமைப்பிற் சில வியத்தகு ஒருமைப்பாடு தென் படுகிறது. பொருட்களை மூலகம், பல மூலகங்கள் சேர்ந்த கூட்டுப் என இருவகைப் படுத்தலாம்.
மூலகம் என்பது வேறெந்தப் பொருட்களும் கலவாத தனி இயல்பு கொண்ட பொருள். இரும்பு, ஒட்சிசின், அயடீன், கரி போன்றவை மூலகங்களிற் சில வாகும். இப்படியான மூலகங்கள் நூறுவரை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்கள் இரசாயன ரீதியாகச் சேரும் பொழுது மற்றைய பொருட்கள் உண்டாகின்றன. உதாரணமாகக் கரியும் ஒட்சிசனும் சேர்ந்து எரி யும் பொழுது கரியமிலவாயு அல் லது காபனீர் ஆக்சைட் உண்டா கிறது. இப்படியே நாம் காணும் பொருட்கள் பலவும் மூலகங்களின் இரசாயனச் சேர்க்கையால் உண் டாகின்றன.
இரண்டு மூலகங்கள் இயல்பா லும், நிறத்தாலும் பெரிதாக மாறுபடினும், அவற்றின் அடிப் படை அணு அமைப்பிலுள்ள ஒரே 655 unt & Lh அணு வி லு ள் ள புரோ த் த ன், இலத்திரன்கள் ஆகிய அணுக்கூற்றுக்களின் எண் ணிக்கை மட்டுமேயாகும். உதா ரணமாகக் ஐ த ர ச ன் எ ன் ற

வாயுவுக்கு ஒரு புரோத்தனும் அதைச் சுற்றிக்கொண்டிருப்பது ஒரு இலத்திரனுமாகும். கரிக்கு 6 புரோத்தன் அணுக் கருவாக அமைய அதைச்சுற்றி 6 இலத் திரன்கள் சுழன்று கொண்டிருக் கின்றன. எனவே ஏதாவதொரு முறையால் இலத்திரன்களையும், புரோத்தன்களையும் கூட்டிக் குறைக்க முடிந்தால் இரும்பைப் பொன்னக்கும் இரசவாத வித்தை செய்யலாம்.
எ ன வே. தர்க்கரீதியாகப் பார்க்கும்பொழுதும் அதாவது விஞ்ஞானம் தந்த அறிவுடன்
நோக்கும்பொழுது பல நிறங்கள், பல்வேறு இயல்புகள் கொண்ட பல்லாயிரம் பொருட்களும் அடிப் படை அமைப்பில் இலத்திரன் கள், புரோத்தன்கள் ஆகியவற் றின் எண்ணிக்கைகளில் மட்டும் வித்தியாசப்படுகின்றன. எனவே பன்மையில் ஒருமை காண்பது நவீன விஞ்ஞானத்தின் சிறப்பா கும். கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணு உனது காட்சியே!
பன்மையில் ஒருமை காண் பதும், ஒருமையில் பன்மை காண் பதும் அனுபூதியுணர்வுள்ள பல சமயகுரவர்களிடம் காணப்படும் சிறப்பியல்பாகும். "அருவமும் உருவமாகி அநாதியாய் பலவாய் ஒன்ருய், பிரமமாய் நின்ற சோதி" (கந்தபுராணம்) என்னும் கருத்துக் கொண்ட பாடல்கள் சமய இலக் கியங்களில் மலிந்து காணப்படு கின்றன.
ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, உயிருள்ளவை உயிரற்ற சடப்
41
பொருட்கள் ஆகிய எல்லாவற்றி லும் ஏதோ ஒரு இழையான அத்தி யந்த தொடர்புடன் தன்னில் உலகையும், உலகில் தன்னையுங் காணும் விசித்திர உணர்வு பல சித்தர்களிடமும் இரு ந் திருக் கிறது.
விஞ்ஞான அறிவுடன் பார்க் கும்பொழுது பலவாகத் தெரியும் உலகிலும் ஒரு அடிப்படை ஒரு மைப்பாடு இருப்பது தெரிகிறது. இப்படியான ஒரு உண்மையை வெறும் கருத்தளவில் மாத்திரம் தெரிந்து கொண்டிருப்பது சிந்த னைக் கூர்மையுள்ள விஞ்ஞானிகள் சிலருக்குத் திருப்தியளிக்கவில்லைப் போலும், பன்மையில் ஒருமை காண்பதைக் கருத்துடன் மட்டும் அல்ல நேரடியாக அனுபவிக்க முடியுமாவென அவர்கள் சிந்தித் திருக்கலாம்.இதற்கேற்பத் தங்கள் மன இயல்புகளிலேற்பட்ட மாற் றங்கள் காரணமாக இவர்கள் கிழக்கத்திய சித்தாந்தத் துறை களை நாடியிருப்பார்கள்.
* பிரபஞ்ச மாயையை உணரும் அனுபவம் ஒன்றுதான் அற்புத அழ வாய்ந்த உன்னத உணர்ச்சி. உண்மை யான விஞ்ஞானத்தின் கருவூலம் அதுதான். மெய் சிலிர்க்கும் அவ் வுணர்ச்சி இல்லாத மனிதன் உயிர் அற்றவன். மனித அறிவுக்கு அப்பாற் பட்டதொரு சக்தி உண்மையில் இருக் கிறது. அந்தச் சக்தியே இப் பிரபஞ் சத்தில் அழகுவடிவாகவும், அறிவின் சிகரமாகவும் பரிணமித்திருக்கிறது. மனிதனின் மந்தபுத்தி அப் பரி மாணங்களின் ஆரம்ப நிலையைத் தான் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த அனுபவம்

Page 23
மனிதனுக்கு ஏற்படுமானுல் அதுவே அவனுடைய உண்மையான சமயக் கொள்கையின் கேந்திரமாகும்."
-ஐயன்ஸ்டீன்
“brity என்றும் பிறிதென்றும் -
பார்க்கப்படும் பொருள் பார்வையா ளன் என்ற மன இடைவெளி இல்லாத தரிசன நிலையில் அறிவு அற்புதமாகச் செயற்படுகிறது. இந் நிலையில் உண்மையாகவே உள்ளுக் கும் - வெளிக்கும் பிரிவு இருப்ப தில்லை. பார்க்கும் பொருளும் பார்வையாளனும் எவ்வித புறத் தூண்டலுமின்றி, நெருக்குவாரம்
இன்றி ஒன்ருகின்றன” என்பது போ ன் ற கருத்துக்களை ஜே. கிருஷ்ணமூர்த்தியும், ரமணரிஷி
யும் கூறியுள்ளனர்.
காலம், வெளி ஆகிய பரி மாணங்கள் பற்றிய சார்பியல் கோட்பாடுகளைப்பற்றிக் கவனித் தோம். சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளை விளக்கிய விஞ் ஞானிகட்கும் காலம், வெளி பற்றிய மனே தத்துவப் போக்கு சிக்கல்களைக் கொடுத்திருக்கலாம். எனவே காலம், வெளி ஆகிய வற்றை மனே தத்துவ ரீதியாக அணுகும் வேதாந்தப் போக்குகள் ஒரு வேளை பிடித்திருக்கலாம். காலம் - வெளி ஆகியவற்றின் தன்மைபற்றி ஜே. கிருஷ்ண மூர்த்தியுடன் விஞ்ஞானிகள் அள வள்ாவியிருப்பது அவரது புத்தகங் களிலிருந்து தெரியக்கிடக்கிறது.
வெட்டவெளியின் விரிவெல்லாம் நான் "வெட்ட வெளியின் விரிவெல்லாம் நான்
– Uls காலப் பெருங்களத்தின் மீதுஎங்கள் காளி நடமுலகக் கூட்டம் - பாரதி”
குறுகிய
போன்ற விஸ்வரூப தரிசன நோக் குகள் இந்திய சித்தர்களிடமும் சீன, ஜப்பானிய சென் மாஸ்டர் களிடமும், அரேபிய சூபி என்ற
ஞான மரபினரிடமும் காணக் கூடிய ஒரு போக்கு. இப்படி வெளியைங் பற்றியும், காலத்
தைப்பற்றியும் தீவிரமாகச் சிந் தித்த மரபுகளை, அண்ட அமைப்பு அணு அமைப்பு பற்றிய அடிப் படை ஆய்வுகளில் புகுந்த விஞ் ஞா னி க ள் பொழுதுபோக்கிற் காகவோ, ஏதாவது பயன்பாடு கருதியோ நாடியிருக்கலாம்.
பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதன் வேரறியாமல் விளம்புகின்றேனே!
பேர்டண்ட் றசல் போன்ற தத்துவ - கணித புலிப்பாணிகள் பலர் சார்புக் கொள்கைக்குக் காண்டம் காண்டமாக உரை எழுதியிருந்தனர். இதை உணரும் பொழுது கட்டுரை ஆசிரியரின் மனப்பான்மை கட்டு ரையையும் பாதித்திருக்கும் என் பதிற் சந்தேகமில்லை.
சார்புக் கொள்கை தரும் ஒரு பாடம், எந்த விஷயத்தைப்பற்றி யும் நாங்கள் கொண்டிருக்கும் கரு த் து க் கள் முடிவானவை, மாருனவை என்று கொள்ளமுடி யாது. இதற்காக உலகிலுள்ள எதைப்பற்றியும், ஒருவிதமான கருத்தும் எண்ணங்களும் கொண் டிருக்கக்கூடாது எ ன் ப த ல் ல. ஆனல் எங்கள் மனத்திற் கொண் டிருக்கும் இக் கற்பிதங்கள் எண் ணங்கள் உண்மைக்குப் புறம்பான தாகவும் இருக்கக்கூடும் என்ற விரிந்த நோக்கு இருக்கவேண்டும்.

பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட சோயா அவரை ஈந்தபிரான்
நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான மூன்றுவகையான சத்துணவுகள் தேவைப்படுகின்
ற்ன. அவையாவன (1) சக்தியை அளிக்கும் உணவு
S6ff GT எனப்படும் அரிசி, சீனி, குரக் கன் போன்றவைகள். (i) பால், பருப்பு, முட்டை மீன், இறைச்சி போன்ற புரதவகை கள். இவ்வகை உணவு உடலை வளர்ப்பதற்கு இன்றியமை யாதவை. பழங்கள், காய்கறிகள், இலைக் கறிவகைகள் போன்றவை. வைட்டமன் சத் தூ ட் ட க் Ցռւգ-Ամ உணவு வகைகள். இவை உடலைப் பாதுகாக்கும் உணவுகளர்க்கும்.
(iii)
இங்கு குறிப்பிட்ட உணவு வகையிற் பால் ஒரு முழு உணவு. அதாவது மனிதனுக்குத் தேவை யான பல சத்துக்களடங்கிய ஒரு
காபோ கைட்றேற்
பூரணமான உணவாகும். எனவே குழந்தைகட்குப் பால் உணவு இன்றியமையாததாகிறது. உலகச் சந்தையில் எல்லா உணவுப் பொருட்களின் விலையும் ஏறிவரு கிறது. இதற்கு உலர்ந்த பால்மா விலக்கன்று. இதனுல் பாலுக்கு என்ன பிரதியீடு செய்யலாம் என்ற கேள்வி எழுகிறது. சோயா அவரை பாலுடன் சரிசமமாக நிற்கக்கூடிய உணவாகும். இது தான் இன்றைய "விந்தையுணவு' என்று அறிமுகப்படுகிறது. இப் பொழுதுதான் இது ஈழத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாயினும் வெகு விரைவில் சோயா அவரை
யில் தயாரித்த பால், மற்றும் உணவுவகைகள் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கலாம்;
மாறும் சூழ்நிலைக்கேற்ப உணவு விடயத்திலும் மாற்றங்களை ஏற் படுத்துவதுதான் நாம் உறுதி யுடன் வாழ வழியாகும்.
-மண்மதி
விஞ்ஞானக் கருத்துக்களும், மக்கள் மனங்களில் வேரூன்றி உள்ள நம்பிக்கைகள் பற்றியும் தொடர்புபடுத்தி எழு துவ து தேவையானது எ ன எ ன் ணு கிறேன்.
மக்களை விஞ்ஞானத்தினின் றும் தேவையில்லாமல் பிறத்தியா ஞக்குவதில் நன்மையில்லை.
LSLSLSLSLL LLSLSL SLL LSLSLSLS LSLSLSL0 LLLLSLL LLLL LLLLLL L000
ஆரறிவார் அதன் அகலமும் நீளமும்
பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதன் வேரறியாமல் விளம்புகின்றேனே.
-(அவையடக்கம்) திருமூலர்
என்னுடைய சமயம், நமது அற்ப ஆற்றலைப் பெற்றிருக்கும் புலன் களால் உணரக்கூடிய சாதாரண விளக்கங்கள் மூலம் தன்னை வெளிப் படுத்தும். அந்த மகத்தான எல்லை அற்ற சக்தியைப் பாராட்டும் அவை
யடக்கத்திற்தான் அடங்கியுள்ளது.
-ஐயன்ஸ்டீன்
இந்த அவையடக்கங்களுடன் கட்டுரை நிறைவுறுகிறது.

Page 24
கண்டுபிடியுங்கள்
பரிசுபெற்றேர் விபரம்
சரியான விடை
கார்த்திகை மாத இதழில் 15ஆம் பக்கத்தில் உள்ள பிழை "லூனுக் கோட்" படம் தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. பல வாசகர்கள் சரியான விடையை அனுப்பியிருந்தனர். இன்னும் மிக ஏராளமான வாசகர்கள் பிழையான விடைகளை எழுதி அனுப்பியிருந்தனர்.
முதலாவது பரிசுபெறும் அதிர்ஷ்டசாலி: செல்வி M. S. மதீனு பசீலத் தோரயாய அத்தாரிக் முஸ்லிம் வித்தியாலயம் தோரயாய, குருணுகல் இவருக்குரிய ரூபா 25/-க்கான காசுக்கட்டளை மேற்படி விலாசத்திற்கு ஜணுப் எஸ். எம். எம். இஸ்மாயில் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஆறுதல் பரிசுகள் பெறும் மற்றும் நால்வரின் விபரம் இதோ: () K. M. ஆயிசா றெளப்
அல் - ஹம்ரா மகா வித்தியாலயம் தோப்பூர் (2) K. Sí969uus epijí
G. C. E. (உயர்தர வகுப்பு) மகாஜனக் கல்லூரி தெல்லிப்பழை (8) M. H. ஜஃபர்தீன்
மடிகேமிதியாலை அல்பதுர் முஸ்லிம் மகா வித்தியாலயம் பண்டாரகொஸ்வத்தை (4) M. I. I. Såærflugt
மடிகேமிதியாலை பண்டாரகொஸ்வத்தை
பரிசுபெறும் யாவருக்கும் அம்பு குழுவினர் சார்பில் எமது நல்வாழ்த்துக்கள்.
ஒருவருட*அம்பு" இதழ்கள் இவர்களுக்கு இணுமாக அனுப்பி வைக்கப்படும்.
இதிற் பங்குபற்றிய யாவருக்கும் எமது நன்றி.
------g,6èrflurir

களைகளும், களைகளின் தொல்லேயும் களைகளைக் கட்டுப்படுத்தலும்
செல்வன் M. S. சின்னலெவ்வை அல் - அக்றக் மகாவித்தியாலயம், இறகாமம், அம்பாறை
இலங்கையில் பொதுவாக விவ சாயிகளுக்குக் களைகள் பெருங் தொல்லையாகும். பயிர் உற்பத்தியில் களைகளினல் மிகக் கணிசமான அளவு விளைவு குறைகிறது. ஆகவே, விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத் தல் முக்கிய பிரச்சினையாகும்.
களகளின் வகைகள் :
i. அகன்ற இலைக் களைகள் i. ஒடுங்கிய இலைக் களைகள்.
இலக் களைகள்: கிடைச்சி, தொ ட் டா ற் சுருங்கி, நரிப்பயிற்றை, ஒடுங்கிய இலைக் களைகள் :
அகன்ற (2-- b)
(உ-ம்) அறுகுவகைகள், கோரை
வகைகள், கெற்சப்பி.
களைகளின் வயது:
i. ஓராண்டுக்களை i, பல்லாண்
டுக் களை என இரு பிரிவுகளுண்டு.
ஓராண்டுக் களை
(உ-ம்) சந்தனக்கோரை, கெற்சப்பி,
கோழிச்சூடன்.
பல்லாண்டுக் களை
(உ-ம்) அறுகுவகைகள்,
இலுக்கு.
பன்,
களைகளினுல் உண்டாகும் தீமைகள்:
உற்பத்தியாக்கும் ப யிருக்கு இடும் உரம் யாவையும் களைகள் எடுத்துவிடும். இதனுற் பயிர்களின்
செழிப்புக் குன்றும். ஆகவே பயிர்கள் கல்விளைவைத் தராது. இதுதான் களைகளை அழிப்பதற்கு முக்கிய காரணி. மேலும் அறுவடைசெய்யும் போதும் அறுவடையாளர்கள் களை களின் தொல்லையால் இடையிடையே சில விளைவுப் பயிர்களையும் விடுகிருர் கள். இதனுல் விளைவுவீதம் மேலும் குறையும். அத்தோடு உற்பத்திக்குத் தூய்மையான விதையைப் பெற முடியாமலும் இருக்கும்.
கண்களின் இனவிருத்தி:
களேகள் மேற்றண்டு, வேர், இலை, விதை போன்ற பகுதிகள் மூலம் இனவிருத்தி செய்கின்றன.
களைகள் சூழ்நிலையை எதிர்த்துப் போராடல்:
களைகளின் விதை, தண்டு என் பன நாம் உற்பத்தியாக்கும் பயிரின் விதை, தண்டு என்பனவற்றின் தன்மையைவிட விஷேச தன்மை வாய்ந்தது. ஆதலால் களைகளே அழித்தல் பெரும் இக்கட்டான நிலை ஆகும். பயிரின் விதை நிலத்தில் பல அங்குல ஆழத்திற்குச் சென்றல் அது பங்கசு, பக்டீரியா போன்ற நோய்களினல் தாக்கமுற்று அழிக் து விடும். ஆனல் களைகளின் விதை, தண்டு என்பன எதுவித மாற்றமும் இன்றி உரிய கேரம் வந்ததும் முளைத்துத் தன் தொழிலைச் செய்யும்,

Page 25
46
இதேபோன்று களைகளின் இனப் பெருக்கும் பகுதிகள் எப் ட டி ப் பட்ட கோய்களிலிருந்தும், குளிர், வெப்பம், நீர் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தும் தப்பிக்கொள் ளும் ஆணுல் பயிரின் இனப்பெருக் கும் பகுதியில் பொதுவாக இவ்வித மான தாக்கங்களிலிருந்து எள்ளள வும் தப்பாது. ஆகவேதான் களைகளை அழித்தல் பெருக்தெர்ல்லையாகும்.
களைகளை அழிக்கும் பிரதான வழிகள்:
களைகளே உயிரியல், பெளதிக,
இரசாயன முறைகளால் அழிக்
கலாம்.
உயிரியல் முறை:
ap38%mr ass8%mraj u பூச்சிகளைக்
கொண்டும் அழிக்கலாம். மேலும் எருமை எருது போன்ற மாடுகளைப் பயன்படுத்தியும் அழிக்கலாம். இம் முறையைச் சிறிதளவு பயிர் உற் பத்தியாக்கும் விவசாயிகள் கையாள 6υπ ιο.
பெளதிக முறை:
மணவெட் டி யைக் கொண்டு கொத்திப் புரட்டுதல்மூலம் களைகளை அழிக்கலாம். மற்றும் இயந்திரங் களைக் கொண்டும் கக்ளகளே அழிக் 4GUTLD.
உயிரியலாலும் பெளதிக த் தாலும் பயிர் செய்வதற்கு முதல் பெரும் கக்ளகளை மாத்திரம் அழிக் கலாம். பயிர் ஊடுசாகுபடி செய்த பிறகு கையால் அல்லது இரசாயன மூலம் களைகளைக் கட்டுப்படுத்தல் வேண்டும், பெருங்தோட்டப் பயிர்ச் செய்கையில் மண்வெட்டி அல்லது இ யங் திர ம் போன்றவற்றைக் கொண்டு களைகளை அழிக்கலாம்.
'mbfrტfმფofმ
இரசாயன முறை :
இரசாயன முறையால் களை காசினி தெளிப்பதன்மூலம் கக்ளகள் அழிக்கலாம். − களைநாசினிகள் மூன்றுவகைப்படும்:
i. சர்வ களே காசினி, i.
காஞ வித களைநாசினி, i. தேர்வுக் களை miðst følfi
சர்வகளே நாசினி (உ-ம்) i. பரக்குவாட் i, டலபோன்
iii. 242-T
இம் மூன்று ககளநாசினிகளும் எப் பயிரானலும் சரி எக் களேயான லும் சரி உடனடியாகத் தாக்கிக் கக்ளகளையும் பயிர்களேயும் வேரோடு இறக்கச்செய்யும். நானவித களைநாசினி: (உ-ம்) றயப்பூடோன்
இக் களை காசினி தொட்டாவாடி மரம், செடி போன்ற பெரும் அகன் இலைக் கண்களை அழிக்கும், தேர்வுக் களைநாசினி : (d-b) i, M.C.P.A., ii. 3 4 D.P.A.,
i. ஹெடனுேல் D,
இக் களோாசினி குறிப்பிட்ட களைகளேயே தாக்கும். உதாரணமாக ஹெடனுேல் D என்ற தேர்வுக் களை நெற்பயிரோடு வளரும் அகன்ற இலைப் பூண்டுவகைகளே அழிக்கும். M. C. P. A. நெற் பயி
ரோடு வளரும் கோரைவகைகள்,
நீர்முள்ளி, கிடைச்சி ஆகிய கக்ள வகைளே அழிக்கும்
இத் தேர்வுக் கக்ளகாசினி களை களையே தாக்கும். ஆகவே முற்றிய களேகளுக்குத் தேர்வுக் கக்ளகாசினி களைப் பாவித்தால் பயனளிக்காது. ஆகவே இக் களை காசினிகளே இர

சாயனவியலாளர் குறிப்பிட்டுள்ள ாகாட்களுக்கிடையில் பா வித் த ல் வேண்டும்.
உயிரியல் பெளதிகமூலம் களை களே அழிப்பதைவிட , இரசாயன மூலம் களைகளை அழித்தலே சுலப மான முறையாகும் எந்த முறை யைக் கொண்டு கண்களை அழித்தா லும், களைகள் பயிர்களிடையே போட்டியிட்டு வளர்ந்துகொண்டே இருக்கின்றது. களைகளை அழிப்பது விஞ்ஞானத்தால் சாதிக்கமுடியா மலே இருக்கின்றது. விஞ்ஞானத் தா ல் சாதிக்கமுடியாவிட்டாலும் விவசாயிகள் ஒரு கூட்டுறவினுல் சாதிக்கலாம்.
கூட்டுறவினுல் உண்டாகும் நன்மைகள்
பத்து விவசாயிகள் அடுத் தடுத்துள்ள பூமிகள் நூறு ஏக்கரில் வேளாண்மை செய்கிருர்கள். இவர் கள் கவின முறையில் வேளாண்மை செய் கி ருர் கள். இவர்களது வேளாண்மை அறுவடை முடிந்த
கூட்டுறவாகாததால் எல்லா
47
தும் எதுவித களையுமோ இவர்களது பூமியில் காணப்படவில்லை.
ஆளுலை ஒருவர் மாத்திரம் வேளாண்மை செய்யவில்லை. அப் பூமியில் களைகள் மாத்திரம் வளர்ந் திருக்தது. அடுத்த போகம் செய்யும் போது அக்த நூறு ஏக்கரிலும் களை கள் பிடித்திருந்தது.
இ தற்கு க் கார ண ம் வேளாண்மை செய்யாமற் கிடந்த ஒரு விவசாயியின் பூமியில் இருக்த விதை, களை வேர், களைத்தண்டுகளே ஆகிய எல்லாம்கீர்மூலமும் கால்கடை மூலமும் காற்றுமூலமும் பறவை மூலமும எங்கும் பரவியிருந்ததே காரணம். --
பத்து விவசாயிகளோடும் அந்த வேளாண்மை செய்யாத விவசாயி விவ சாயிகளுக்கும் களைகளோடு பெரும் தொல்லையாயிற்று ஆதலால் கூட் டுறவு விவசாயிகளுக்கு அத்தியா வசியமாகும்,
முற்றும்
து குறுகிய
தொன்று."
அன்று கண்டதும் அதே நிலா !
* சந்திரனை அடையமுடியும் என்ற நம்பிக்கை மடைத்தனமானது. சிந்தனை வட்டத்துள் ஒரு குறிப்பிட்ட துறையில் வேலை ய்யும் விஞ்ஞானிகளிற் சிலர் கேலிக்கூத்தாடுவதில் எவ்வளவுதூரம் முன்னேறியிருக்கிருர்கள் என்பதற்கு ஒரு உதாரணமாகும். இந்த நிலாவுக்குச் செல்லும் கருத்தை ஊன்றிக் கவனிப்போம். ஒரு பொருள் மியின் ஈர்ப்பு வலயத்திலிருந்து வெளியேறச் செக்கனுக்கு 7 மைல் வகத்தைக் கொண்டிருத்தல்வேண்டும். ஒரு கிராம் பொருளைப் பூமியின் ஈர்ப்புவிசையினின்றும் வெளியேற்ற 15, 180 கலோரி சக்தி தேவைப்படுகிறது.எனவே நிலாவுக் குச் செல்லும் எண்ணம் அடிப்படையில் நடைமுறைப்படுத்தமுடியாத -1926ஆம் ஆண்டில் பேராசிரியர் A. W. பிக்கிரின் ( இதிலிருந்து 45 வருடங்களில் ஏற்பட்ட விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி எத்தகையதென்று கணிக்கலாம்.)
இந்த ரீதியிற் பார்த்தால்
4. மண்மதி
m

Page 26
வேகங் கெடுத்தாண்ட வே ந்தனடி
- * செந்தி 99
அமெரிக்கா, பிரித்தானியா, என்பதுடன் அவ்வளவு பாதுகாப் ஜெர்மனி, பிரான்சு போன்ற பான செய்கையுமல்ல. எல்லாக் நாடுகளில் பெரிய நகரங்களை கார்களும் 90 மைல் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் சீறிக்கொண்டு செல்லும்பொழுது
 ெத டு ஞ ச ர் லை களை ச் சுப்பர் ஹெவே ஒட்டோ பான் மோட் டர் வே என்று பலவாருக அழைக் கிருர்கள். 200 - 300 மைல் தூரங் களிலுள்ள முக்கிய நகரங்களை,
குறுகிய நேரத்தில் சென்றடைய,
இந் நெடுஞ்சாலைகள் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றில் பாதசாரி
கள், மாடுகள், சைக்கிள் போன்ற வ ற் றி ற் கு இப் படி ப் பட்ட ஒரு நெடுஞ் சாலைக்குள் கார் ஒன்று நுளைந் தால் 40 / 50 மைல்களுக்கு ஒரு திருப்பமும் இருக்காது. இந்த ஒருவழி நெடுஞ் சா லை களி ல் காரைத் திருப்பி மறுதிசையில் செல்லவும் முடியாது. எனவே தெரியாத்தனமாக இவ ற் று ஸ் நுளைந்துவிட்டால் 50  ைம ல் சென்று அதற்குரிய இடத்திற் தான் காரைத் திருப்பமுடியும்.
விமானம் கிளம்புமுன்னர் சீட் பெல்ட் கட்டவேண்டும் என்ற விதியுள்ளது. அதேபோல் இத்
தெருக்களிற் செல்லுமுன்னர் முன் சீட் பயணிகளும், காரோட்டியும் கட்டாயமாகச் சீட் பெல்ட் கட்ட வேண்டும். இந்தச் சாலைகளிற் கார்கள் 90, 100 மைல் வேகத் தில் விண்மண் தெரியாமல் ஒடு கின்றன. எனவே 50 மைல் வேகத் திற்குக் குறைவாகச் செல்லுதல் இச் சாலைகளில் மிகுந்த கரைச்சல்
இட மில் லை.
$ర్టీ
ஒரு கார் மட்டும் 30 மைல் வேகத் திற் செல்வது அவ்வளவு விரும்பத் தக்கதல்ல,
இங்கு செல்லும் கார்களைப் பார்க்கும்பொழுது தமிழ்ப்படங் களிற் கடைசி 10 நிமிடங்களில் வில்லனைக் கதாநாயகன் காரிற் துரத்தும் சீன்கள் ஞாபகத்திற்கு வரும் (ம யிர் க் கூ ச் செறியும் காட்சி ! )
இப்படிப்பட்ட வேகத்திற்கு என்றே உருவாக்கப்பட்ட சாலை களில் இன்று மணிக்கு 50 மைல் வேகத்திற்கு அதிகமாகச் செல்ல வேண்டாமெனக் கட்டாயப்படுத் தப்பட்டுள்ளது. மணிக்கு 90மைல் வேக மட்டங்களிற் சஞ்சரித்தால் பேற்ருேல் அதிகமாகவே குடிக் கின்றன கார்கள். கார்கள் 40 மைல் 50 மைல் வேகங்களிற்தான் திறமையாக (Eificient) செயற்படு கின்றன. இவ் வேக மட்டங்களில் பெற்றேல் கு  ைற வா க வே தேவைப்படுகிறது. எனவேதான் மசகு எண்ணெய்த் தட்டுப்பாட் டைச் சமாளிக்க அவ்வரசாங்கங் கள் வேகத்தை 50 மைலுக்குக்
குறைவாக வைத்துக்கொள்ளும் படி வற்புறுத்துகின்றன.
அரேபிய எண்ணெய் வீக்கு
களும், சுல்தான்களும் இன்று வேகள் கெடுத் தாண்ட வேந்தர்களாக விளங்குகிறர்கள்.


Page 27