கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்றம் 1993.10-12

Page 1

ஆண் டு

Page 2
வாழ்த்துகிறோம்.
எஸ். எம். பெர்னான்டோ
கண்ணாடி வழங்குபவர்கள் 580 ஆஸ்பத்திரி வீதி, [இலங்கை வங்கி அருகில் யாழ்ப்பாணம்.
遂彦
 

பயணம், 02 ஐப்பசி - மார்கழி 1993 பாதை 05
"மாற்றம்’ புதிய பயணத்தின் நேரான பாதையில் எம் காதை அடைத்திடும் கூரான விமர்சன விஷமங்கள்.
மாற்றத்தின் வளர்ச்சியின் படிகற்கள் தடைக்கற்களாக மாறின. நான்கு இதழ்களை வெளியிட்டு பெருமூச்சு விட்ட எம்மை ஆண்டு நிறைவு அன்பாகத் தழுவியது.
பெரும் நிதி நெருக்கடி தனிப்பட்ட எம்மவர் சிலரின் அயரா முயற்சி; உழைப்பு, ஐந்தாவது பிரசவத்தை உருவாக்கி நிற்கிறது. வாழ்க்கை எனும் வேதனைக் கடலில் இவ்வாக்க முயற்சி முத்துக் குளிப்பது போன்றுள்ளது. இருளை ஒளிதேடும் காலம் இனி.
"உங்களால் இது முடியுமா?" என்ற இதய மணி ஒசைக்கு சாவு மணி அடித்து ஓராண்டு பூர்த்தியாகிறது.
**இந்தாருங்கள் எங்கள் கரங்களைப்பற்றி முன்னேறுங்கள்’’ என ஊக்கக்கரம் கொடுத்து வழிகாட்டிய நலன்விரும்பிகள், விளம்பர தாரர்கள், நண்பர்கள் அனைவர் மேல் ஆணையாக "மாற்றம் பணி ஓயாது தொடரும்; சமூக அநீதிகளை மாற்றும் வரை."
- ஆசிரியர்.

Page 3
ஆசிரியர் குழு :
மல்லிகை மைந்தன் சமுத்திர பந்தன் உரும்பையூர் முரளி நிலாமகள்
மன்ற ஆலோசகர்:
திரு. க. கனகராசா
ஒவியர்:
தயா
ஒற்றுரு:
ஆனந்தன்
அச்சமைப்பு:
அருண் பிறிண்டேர்ஸ்
விநியோகம்:
ச. சுமணன் கோ. கமலதாஸ் கி. ஞானவதனி தூயவன் திமோதி இளங்கோ ராஜ்குமார் சபேசஷன்
கடிதத்தொடர்பு: - "மாற்றம் பணிமனை’’ புதிய செங்குந்த வீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.
வாசகர்களே!
மாற்றம் காலாண்டு மக்கள் சஞ்சிகை பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் ஆக்கங்களை யும் எதிர் பார்க்கிறோம்.
ஆ- ர்.
O 2
vice என்பதன் இந்த முத்திரை குத்திய தபால்
GT LI LI Lq வந்தது?
* காது குத்தல் Y
ஏமாற்ற வேண்டாம் என்பதைக் குறிக்க "காது குத்தாதே’ என்று என்று கூறுவது வழக்கம். இது எப்படி வந்தது தெரியுமா?
காதில் நகை அணிய விரும்பி னால் குத்தும்போது வலிக்கத் தானே செய்யும் ? குழந்தைக்கு
காது குத்தும் கைவினைஞர் அதற்கு போக்குக் காட்டித் தந்திரமாகக் குத்திவிடுவார் இ தி லி ரு ந்து தான் காதுகுத்துதல் என்ற பதத் திற்கு ஏமாற்றுதல் என்ற பொருள் ஏற்பட்டது.
* ஒசியில் கிடைத்தது.
இலவசமாக ஏதாவது கிடைத்
தால் அதை ஒசி என்று கூறுவது வழக்கம். இந்தச்சொல் எப்படி
வந்தது தெரியுமா ?
கிழக்கிந்தியக்கம்பெனி நிர்வாகத் தில் இந்தியா இருந்தபோது அதி காரிகள் அனுப்பும் தபால்களில் о. с. S என்ற முத்திரை குத்தப் LJiř4-(53 Gub. On Company Serசுருக்கம் இது.
களுக்கு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய தில்லை. அதனால் அதை ஒசியில் போகிறது என்று சொல் லத் தொடங்கினார்கள். காலப்போக் சும்மா கிடைக்கும் எல்லாமே"ஓ யாகி விட்டது P

உள்ளே
fs -8 அச்சவுணர்வு
சாதாரண மனித வாழ்க்கையில்
அச்சவுணர்வு தற்காப்பு நிலையை ஏற்படுத்தி வழிநடத்தினாலும் பல சந்தர்ப்பங்களில் பின் ன  ைட வையே ஏற்படுத்துகிறது. இதற் கான காரணங்களை ஆராய்ந்து இவைகளைத் தவிர்க்க, வழிவகை க  ைள க் காண அனைவரையும் சிந்தி க்க த் தூ ண் டு வ தே இக் கட்டுரையாகும்.
9 - 13 இத்தாலியும் இன்பத்
தமிழும் செந்தமிழில் காதல் கொண்ட ஒருவர் இத்தாலியையும் இன்பத் தமிழையும் இணைத்து நின்றார். எப்படி? கட்டுரையைப் படியுங்கள்.
ஆசிரியர் : யாதுமூரான்
தனிப்பிரதி
5UT : 1 5 - OO
uácsavasan : 48
அடுத்த இதழ் : 1994 மாசி.
17 கஞ்சப்பிரபுகள்
மிளகு நிறுத்துக் கொடுத் த கையைக் கழுவி இரசம் வைத்த.
18-26 உருமறைப்பு (சிறுகதை)
ஊரெங்கும் மூடியிருந்த கதவு களை வாய்பிழக்க வைக்கிறார் ஃபொறின் மாப்பிளை.
29 - 31 மணவாழ்க்கையில் . மா றி வரும் உலகில் மண வாழ்க்கையில் நூறு ஆண்டுகள் வாழும் தம்பதியரைப் பற்றிய படி க்க ப் படிக்கச் சுவைக்கும்
கட்டுரை.
33-36 இதயமாற்று சிகிச்சை மாற்றம் வேண்டும் ம னி த ர் இதயத்தையும் விட்டுவைக்க வில்லை என எழுது கிறார் பிரதீபன்.
முகப்போவியம் :
*மாற்கு”
வெளியிடு: தலைமையலுவலகம் : தமிழ்த்தாய் மன்றம் பருத்தித்துறை வீதி, நல்லூர் வடக்கு.
1ாற்றம்
s= O 3

Page 4
வயிற்றுக்குசோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதர்க்கெல்லாம்
பயிற்றி பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
மாற்றம் அச்சமைப்பு
அருண் பிறிண்டேர்ஸ் அன்ட் பப்பிளிஷேர்ஸ்
இல; 15, 2 ஆம் ஒழுங்கை மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
 

அக்கரைச்சக்தி
மாற்றம் மண
s
தன உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து நேரப்போகிறதென்று எண்ணக்கூடிய உயி ரினங்களுக்கு ஏற்படும் ஒரு மனநிலையே அச்சவுணர்வாகும். ஏனைய உயிரி ன ங்
களுக்கு இவ்வுணர்வு, தம்மை; ஆபத்திலி
ருந்து தற் கா த் து க் கொள்வதற்காகவே பெரும்பாலும் தோன்றினாலும், ஆறறிவு ஜென்மமான மனிதனுக்கோ பல்வேறுபட்ட பரந்த வகைகளில் அச்சவுணர்வு மனநிலை தோன்றுகின்றது. மனிதனுக்கு மட்டுமே யுள்ள சிந்தனையாற்றலே அச்சவுணர்வு இவ்வாறு ஏற்படுவதற்கான காரணமாகும்.
மனிதன் தாயின் கருவில் குழந்தையாய் உருவெடுத்தது முதல், அவளால் பூச் சாண் டி ' காட்டப்பட்டு உணவூட்டப்படும் வரை அல்லது உறங்கவைக்கப்படும் வரை அவனுக்கு அச்சவுணர்வு எழுவதில்லை. அது மனதில் அதுவரை செயலற்று இருக்கிறது. அதனைத் தாயானவள் தூண்டி விழிக்கச் செய்கிறாள் என்றுதான் சொல்லவேண் டும். அந்தநேரம் முதல் தூண்டப்படும் அச்சவுணர்வு மனத்தில் நன்கு கருக்கொண்டு வளர்ச்சியடைந்து பல்வேறுவிதமாகப் பரி ணாமம் பெற்று மனிதனின் இறப்புவரை ஆட்டிப்படைக்கிறது. மனத்தினால் ஆளப் டுபவனே மனிதன் ஆகையினால் மனத் இல் ஊன்றிவிட்ட அச்சவுணர்வினால் அவ
னது சிந்தனை, செயல்திறன் என்பனவும்
பெரும் பாதிப்புகளுக்குள்ளாகின்றது.
குழந்தையாயிருக்கும் போது, தன்னைத் தாய், தந்தையர் கைவிட்டுவிடுவார்களோ, பிரிந்துவிடுவார்களோ என்று அச்சமடை கின்றது. இந்த நியாயமான அச்சம் கார ணமாக அது தாய், தந்தையரே தஞ்சம் என எண்ணி அவர்களை விட்டுப் பிரியாமல்
E — G 5

Page 5
இருக்கிறது. ஒரளவு வளர்ந்ததும் பாடசாலை செல்லும் பருவத்தில் தன் வாழ்க்கைக்கு வழி கா ட் டி களாக விளங்கும் ஆசிரியர்களைச் சந்திக்கிறது. ஆசிரியர்களிடம் இயல்பாகவே பிள்  ைள அச்ச உணர்வோடு பழகுவது, ஆசிரிய ரிடமிருந்து அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும். ஒழுக்கத்தைக் கற்று க் கொள்வதற்கும், வழி வகுப்பதனால் அதுவும் நியாய மான, தேவையான அச்சவுணர் வாகவே இருக்கிறது. தொடர்ந்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழ கங்களிலும் உயர்படிப்புக்களை மேற்கொள்ளும் பொழுது, விரி வுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்ற கல்விமான்களுடன் ஒரு வித அச்சவுணர்வுடனேயே மாண வன் பழகுகிறான். அப்போது தான் கல்விமான்களின் ந ல் ல அ பிப் பி ரா ய த்தையும், அதன் மூலம் அவர்களின் உயர்தர கல்வி ஞானத்தையும் மா ன வ னா ல் பெற்றுக் கொள்ளமுடிகிறது. கல் லூரி வாழ்க்கை முடிந்து இனி வேலை தேடும் படலம் தொடங் குகிறது. தொழில் ஒன்றில் சேர் வதற்காகப் பல நிபுணர்களின் மத் தியில் நேர்முகப்பரீட்சை நடை பெறுகிறது. அதில் ப்ங்குகொள் ளும்போது அவனுக்கு ஒருவித அச்சவுணர்வு ஏற்படுகிறது. தான் சொல்லுவதை நிபுணர்கள் ஏற் றுக் கொள் வாரா, தன்னை வேலைக்குச் சேர்த்துக் கொள் வாரோ என்ற சந்தேகங்கள் அவன்
மனதில் அச்சவுணர்வாகப் பிரதி பலித்து, சில வேளைகளில் நினைத் ததைச் சொல்ல வாயில் வார்த் தைகள் வராமல் ஊமையாய்ப் போவதும் உண்டு. அதனால் நேர் முகப்பரீட்சை தோ ல் வி யில் முடிந்து வேலை வாய்ப்புகள் தடைப்படுதலும் உண்டு. உயர்தர கல்விவரை அவன் வளர்வதற்கு ஊன்று கோலாய் விளங்கிய அச்ச வுணர்வு, நேர்முகப்பரீட்சைக்குச் செல்லும்போது அவனின் வளர்ச் சியைத்தடைப்படுத்தும் ஒன்றாக வும் மாறலாம். இவ்விதமாகக் கல்வி கற்காதவர்களுக்கு இப்படி யான அச்சவுணர்வுக்கு இடமிருப் பதில்லை. ஆனால் யாராயினும் வேலை ஒன்றில் சேர்ந்துவிட்டால் அவ்வேலையைக் கண்காணிக்கும் அதிகாரிகளிடம் அச்சவுணர்வோடு தான் பழகவேண்டியுள்ளது. அதி காரிகளின் நன் மதிப்பைப் பெறு வதற்காகவும், அவர்களிடமிருந்து தொழில் திறனை நன்கு கற்றுச் கொள்வதற்காகவும், வேலையில் தொடர்ந்து நிலை கொள்வதற் காகவும் இவ்வாறு நடந்துகொள்ள
வேண்டியுள்ளது.
பொதுவாகவே நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து உயர்ந்த ஒழுக்க நெறியைப் பின் பற்றி வாழும் ஒருவனுக்கு அச்ச வுணர்வு அதிகமாகவேயிருக்கும் தனது நடத்தைகள், வார் த் தைகள் எங்கே தனது வாழ்க்கை. போக்கில் களங்கத்தை உண்டு
( 6

பண்ணிைவிடுமோ என கC லைப்படுவதன் காரணமாகவே இவ்வித அச்சவுணர்வு எழுகிறது. து அவனை வழிதவறவிடாது ாதுகாக்கும் கவசமாக இருப்பது உண்மையே. எனினும், தொடர்ந்த அச்சவுணர்வின் காரணமாக மன நிலையில் பாதிப்பு ஏற்படவும் இடமளித்துவிடுகிறது.
குறுக்குவழியால் பணம் சேர்க் கும் ஒருவனுக்கு ஏற்படும் அச்ச வு னர் வோ வேறுவிதமானது. எந்த நேரத்திலாவது காவலர்களி டம் அகப்பட்டுவிடுவமோ என்ற பயமே அவனைப்போட்டு அரித்துக் கொண் டி ருக்கும் . அல் லது பிறர் தன் பணத்தை அபகரித்து
விடுவார்களோ என்று சிந்தித்து அச்சவுணர்வுத் தீயில் கருகிக் கொண்டிருப்பான்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என இலட்சியப் பெண்களுக்கான நாற்குணங்களில் அச்சமே முன் னிலைப்படுத்திக் கூறப்படுகின்றது. தன் கணவரல்லாத பிறரை நேருக்கு நேர் காணும் போது வெண்ணுக்கு இயற்கையாகவே உளத்தின் அச்ச உணர்வு எழ வேண்டும் என இலக் கியங்கள் கூறுகின்றன. அது பெண் மைக்கு ஒரு அணிகலன் என்பர்.
தனி மனிதர் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அச்சவுணர்வில் மூழ்கிக் கிடக்கிறது என்று சொல்லவேண் டும்.
எங்கே மூன்றாம் உலகப்போர் மூண்டு, அணுக்குண்டுகளாலும், ஐதரசன் குண்டுகளாலும், ஏவு க ைண க ளாலும் தாக்கப்பட்டு விடுமோ என்று உலகநாடுகள் பலவும் அச் சவுணர்வினால் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. இது போதாதென்று பயங்கர இயற் கைச் சக்திகளான பூகம்பம், எரி மலைக்குமுறல், பெருவெள்ளம், சூ றா வளி போன்றவைகளால் அழிவுநேருமோ என்றும் அஞ்சி யஞ்சிச்சாகும் மக்களும் உள்ளனர். பஞ்சம், பட்டினிகள் ஏற்பட்டு விடுமோ என்றும் பயப்படுபவர் பலர் உளர்.
நமது ஈழத்திருநாட்டில் தமிழர் கள், பூறிலங்கா அ ர சினதும், இராணுவத்தினதும் கொடுமை யான செ யற் பாடு க ள் கார ணமாக அச்சவுணர்வில் நீண்ட கா ல ம் திளைத்திருந்தவர்கள். இருந்தபோதும் அச்சவுணர்வைத் தகர்த்தெறிந்து, உயிரைத் திரண மென மதித்து ஆண்மையோடும், உறுதியோடும் எதிரியின் பலத்த நவீன ஆயுதங்களின் தாக்குதல் கள் மத்தியிலும் எதிரியை நேருக்கு நேர் சந்தித்துப் போராடவல்ல தமிழ் வீரர்கள் தோன்றிவிட்ட படியால் தமிழர்கள் மத்தியிலுள்ள அச்சவுணர்வு குறைந்துவருகிறது. சாவைக் கண்டு பயந்து ஓடாமல் தமிழ் மண்ணிலேயே எதிரியின் தாக்குதலுக்காளாகி இரத்தம் சிந் து த லை யும், மரணித்தலையும்
மாற்றம்

Page 6
பெருமையாய்க் கருதும் மனநிலை தோன்றிவருகிறது. தமிழர்களின் சுதந்திர வேட்கையானது அச்ச வுணர்வைக் கொஞ்சம் கொஞ்ச மாக அகற்றி, விடுதலையை நாடிச் செல்ல வைக்கின்றது எனலாம் உல கம் முழுதும் அகதியாய் அலைந் தாலும், உள்நாட்டிலேயே அகதி யாய் இருந்தாலும் தமிழனின் இதயம் தனிநாடு காணவேண்டும் என்ற இலட்சியம் காரணமாக அச்ச உணர்வு நீங்கி, உறுதி பெற்று
இரும்பனைய பலம்வாய்ந்ததாக மாறிவருகிறது. அச்சமில்லை அச் சமில்  ைல அச்ச மென் ப தில்லையே என்று கவியரசர்
சுப்பிரமணிய பாரதியார் அன்று கூறியது இன்று நனவாகிவருகிறது.
“எவனொருவன் உலகைக் கண்டு அஞ்சவில்லையோ, எவனைக் கண்டு உலகம் அஞ்சவில்லையோ அவனே எனது பக்தன்' என்று பகவான் கிருஷ்ணர் இந்துமத ஆதார நூலான பகவத்கீதையில் அருளி யுள்ளார். * உனது இருதயம் கலங் காமலும், பயப்படாமலும் இருப்ப தாக’ என்று இயேசுகிறீஸ்துநாதர் பரிசுத்த வேதாகமமான பைபிளில் திருவாய்மலர்ந்துள்ளார். பஞ்சமா பாதகங்கள் செய்வதற்கே அஞ்ச வேண்டும் என்றே நீதி நூல்கள் யாவும் போதிக்கின்றன. அறந் தவற நேருமிடத்தும், மானம்இழக் கப் போகுமிடத்தும், கும் போக்கு ஏற் 11 டு மிடத் து அச்சவுணர்வு தோன்றி அவை
நன்றிமறக்
நடைபெறாமல் காக்க வழி ஏற் படுத்தவேண்டும். அச்சவுணர்வா னது மனிதனின் பிறழ்வான போக் கினை மாற்றம் செய்யும் ஒரு கார ணியாய் அமையும் பொழுதே அது ஆக்கசகதியாய் வேலைசெய்யும்.
மனிதனின் ஒரு பிரதான உணர் வான அச்சத்தைப் போக்குவதற் கென்றே கடவுள் வழி பா டு தோன்றியது தனக்கு வரக்கூடிய் ஆபத்துக்கள், இடர்கள் அனைத் தையும் போக்கி, சு க ம 1ா ன அமைதியான, சு பீட் ச மா ன வாழ்வு தரக்கூடிய பேராற்றல் ஆண்டவனிடம் உண்டு என்று மனிதன் நம்பிக்கை கொள்ளும் போது, அவன் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும்! எனத் துணிவுடன் இருந்து செயற்பட இடம் ஏற்படுகிறது. ஆண்டவனி டம் இவ்வாறு கொள்ளும் நம் பிக்கை படிப்படியாக வளர்ந்து தன்னம்பிக்கையை வலுவூட்டுவ தால் அவன் பெரும்பெரும் நற் காரியங்களை இவ்வுலக மனித சமுதாயத்திற்குச் செய்யமுடியும். வேண் டாத முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள அச்ச வுணர்வை மனத்திலிருந்து அகற்றி அ வ்விடத்தில் துணிவையும், தன னம்பிக்கையையும் இருத்தி, இந்த ஓய்வில்லாத வாழ்க்கைப் போராட் டத்தை எதிர்கொண்டு, விழிப் பாகச் செயற்பட்டு மனிதகுலத் தின் மாண்பினைக்காக்க உறுதி
கொள்வோமாக. *
8

இத்தாலியும் இன்பத் தமிழர்
மாற்றம்
“u Tமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்' எனப் பாரதி யால் விதந்தோதப்பட்டது தமிழ் மொழி. பா ர தி இக்காலக் கவி ஞன். அவன் பல மொழிகளை அறிந்தவன். அந்த மொழி அறி வின் துணையோடுதான் இவ்வாறு கூறும் துணிவு அவனுக்கு வந்திருக் கிறது. அவனது கூற்றை மறுத் துக் கூறவும் - எவரும் மு ன் வர வில்லை. எனவே தமிழ்மொழி மற்றைய மொ ழி க  ைள விட இனிமையானது என்பதை எண்ணி நாம் பூரிப்படைதல் வேண்டும்.
ம. ஜெயராமசர்மா
இப்படியான எமது இ ன் பத் தமிழை - விரும்பிக் கற்றனர். பல மே  ைல நா ட் டு அறிஞர். எமது மொழியின்பால் ஆராக் கா த ல் கொண்டே அவர்கள் கற்றார்கள். கற்ாதோடு மட்டும் நின்றுவிட வில்லை. நன்றிக்கடனாகப் பல வற்றைத் தமிழ் அன்னைக்குச் செய்தார்கள். அவர்களது இந்தத் தமிழ்த் தொண்டானது யாவரா லும் ஏற்றிப் போற்றப்படுகின் றது. இந்த ரீதியி ல் மேலை நாடான இத் தா லி யும் எமது
தமிழ் வளர்ச் சிப் பாதை யில் தன்னை இணைத்து கொண்டதை
நாம் காண்கின்றோம்.
கி 'ஸ்த மதப்பணியினை முன் , னிட்டு
1680 ல் தமிழ்நாட்டுக்கு
ਜਜਜਜ ( 9

Page 7
வந்தவர்தான் பாதிரி பெஸ்கி என் பவர். இவர் முப்பது வ ய தி ல் தமிழ் நா ட் டு க் கு வந்து ஏறக் குறைய முப்பத்தேழு வருடம் மதப்பணியில் ஈடுபட்டார். இவர் தமிழை விரும்பிக்கற்றார். இத னால் இவருக்குத்தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை ஏற்பட்டது. இத் தாலி, கிரேக்கு, லத்தீன், எபிரே யம் ஆகிய மொழிகளிலும் பாண் டித்தியம் உடையவராகவும் விளங் கினார். இவரது பண்மொழியாற் றல் - தமிழ் மொ ழி யி ல் இவர் படைப்புக்களைப் படைப்பதற்கும் பயன்பட்டது எனலாம்.
தமிழ் மொழியைப் பொறுத்த வரை பல்வேறு வகைகளில் இவரது தொண்டுகள் அமைந்து காணப் படுகின்றன.
தமிழ் எழுத்துத் திருத்தம் செய்யுள் நூல்கள் ஆக்கம் உரைநடை நூல்கள் ஆக்கம் . மொழிபெயர்ப்புப் பணி
இலக்கண நூல்கள் ஆக்கம் அகராதி நூல்கள் ஆக்கம்
தமிழ் எழுத்துக்களைப் பண் டைக்காலத்தில் எழுதும் பொழுது அவற்றில் ஒசை குறைவாக வரும் இடங்களுக்கு அ ந் த எழுத்துக் களின் மேல் புள்ளி வைப்பது ஒரு வழக்கமாக இருந்தது. "க" என் னும் எழுத்துக்கு மாத்திரை ஒன்று. அதே எழுத்தின்மேல் ஒரு புள் ளியை இட்டால் அந்த எழுத்து "க்" என மாறுகிறது. உச்சரிப்பி லும் மாற்றம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல-ஒரு மாத்திரை புள்ளி,
--......................... ۔،، دالہ۔ --1ء............... سم۔۔--سیمسحسس۔۔۔۔۔یس۔ .۔ ------بسمی--جس سسہ • مہ ۔ ۔
கடவுள் நம்பிக்கை
நாத்திகர் ஒருவர் கையில் ஒரு நாயைப்
பிடித்துக்கொண்டு
குளக்கரை விநாயகர் அருகில் நின்று பேசத்தொடங்கினர். கூட் டம் சேர்ந்ததும் அவர் ** விநாயகரைத் தூக்கி இந்தக் குளத்தில்
போடுவோம். இந்த நாயையும் போடுவோம். நாய் கரையேறி வந்துவிடும். விநாயகர் வரமாட்டார். உங்கள் கடவுள் ஒன்றும் செய்ய இயலாதவர் ' என்று நக்கலாக சொன்னார் நாத்திகர்.
உடனே, கூட்டத்திலிருந்து ஒருவர் "" நாயையும் விநாயகரை யும் குளத்தில் போட்டு ஏன் பார்க்கவேண்டும்? நாயைத் தூக்கி விநாயகர் மேல் போடுவோம். அதன் பின் விநாயகரைத் தூக்கி நாய் மேல் போட்டுப் பார்ப்போம் எது காயம்படாமல் இருக் கிறது ' என்று பதிலடி கொடுத்தார்.
தொகுப்பு: மதன்
O 10

இடப்பட்டதால் அரை மாத்திரை யாகிக் குறுகி ஒலிக்கிறது. இந்த வகையில் 'எ' 'ஒ' என்னும் இரண் டும்-புள்ளிபெற்றால் அவை குறி லாகவும்-புள்ளிபெறாத நிலையில் அவை நெடிலாகவுமே உச்சரிக்கும் வழக்கம் காணப்பட்டது. நாள டைவில் இவற்றுக்குப் புள்ளியிட்டு எழுதும் வழக்கம் மறந்துபோன நிலையில் இவற்றினது குறில் - நெடில் வித்தியாசங்களை அடை யாளம் காண்பது சிக்கலாகிவிட் டது. இந்தச் சிக்கலுக்குத் தக்க பரிகாரம் கண்டவர் இத்தாலியப் பாதிரி "பெஸ்கி ஆவார். இவரால் இப் புள்ளியிடும் முறை அகன்றது அதற்குப் பதிலாக "எ" எழுத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு கோடும், "ஒ" என்ற எழுத்தில் ஒரு சுழியும் புதி தாக ஏற்படுத்தப்பட்டது. அது மட்டுமல்ல-கெ, கொ என்ற எழுத் துக்களில் காணப் படுகின்றஒற்றைக் கொம்புகளை - மேலே
சுழித்து இரட்டைக் கொம் பு
களாக்கி-கே,கோ என்ற உச்சரிப்பு
வரத்தக்கதாக-இன்றுவரை அந்த அமைப்பிலேயே தொடர்ந்து நாங் கள் பின்பற்றக் கூ டி யதாகஎழுத்து முறையில் திருத்தம் செய் தார். ஏ, ஓ, -ே என்ற வடிவ மைப்பைத் தமிழ் எழுத்தில் இடம் பெறச் செய்தமையைத் தமிழர் க ளு ம் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் எழுத்தில் திருத் தம் செய்த இப் பெரியார் தமிழ் இலக்
கிய வரலாற்றில்-அதாவது காப் பிய இலக்கியத்திலும் தனது ஆற்ற லைக் காட்ட வி ைளந் தார். இதன் பயனாக 3615 விருத்தப் பாக்க  ைளக் கொண் டு "தேம் பவானி’ என்னும் காப்பியம் எழுந் தது. இது மூன்று காண்டங்களை யும் 36 படலங்களையும் கொண்ட
தாக அமைக்கப்பட்டது. திருக் குறளின் தென்னியநயம், சிந்தா மணியின் செழுஞ்சுவை, கம்பரா
மாயாணத்தின் கவியின்பம் யாவும் இந்தத் தேம்பவானியில்-தேம்பிக் கிடக்கக் கூடியதாக இந்த இத்தாலி யப் பாதிரியார் படைத்தளித்தார். இந்தச் செழுமிய நூல் - தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. அவ்வேளை-இவரது தமிழ் ஆற் றலை மெச்சிய புலவர்கள் இவ ருக்கு "வீரமா முனிவர்" என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தார் கள் என அறியமுடிகிறது. அது தொடக்கம் இவ் இத் தாலியப் பெருமகனை யாவரும் "வீரமா முனிவர்" என்று அழைத்து வரலா யினர் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
இதை விட - 101 பாக்களைக் கொண்ட "திருக்காவலூர் க.):ம் பகம்’, ‘கித்தேரி அம்மாள் அம் மானை', 'அடைக்கல நா ய கி வெண்கலிப்பா போன்றவற்றை யும் ஆக்கி அளித்தார். தேவாரப்
பதிகம் இத்தாலியப் பெருமகனைக்
கொள்ளை கொண்டது. அதன் காரணத்தால் "கருணா ம் பரப்
மாற்றம்
G 11

Page 8
பதிகம்" உருவானது. மேலும் இவ ரால் பல பாடல்கள் இலக்கிய நமக் F%Eபப்பாடப்பட்டன " "தமிழ்ச் செப் யு ள் தொகை" என் : தொகுப்பின் மூலமாக - தமிழி லுள்ள பலநயமான நீதி நூல் சுளைத் தெரிந்து தொகுத்துக் இது ஒரு சிறந்த
। . .
கருத்தாகும்.
காட்டினார். வழிகாட்டவாக என்பது அறிஞர்
செய்யுள் இயற் றிச் செந் தமிழுக்கு அணிசெய்த இவ்வறிஞர் -- உரைநடை இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை. முதன் முத லாகப் பாமரரும் விளங்கக்கூடிய தாக - இலகுவான வசனதன.
பில் "அங்கத' இலக்கியத்தைத் தோற்றுவித்த பெருமை இல் ரையே சாகும் "பரமார்த்த குரு என்ற இந்த நூலைப் பண்டிதர்கள் கூட ஏற்றுக் கொண்" டார்கள் என்றால் இவரின் ஆற் ரவை வியக்காது இருக்கமுடியுமா? தாம் சார்ந்த கிறிஸ்தவம் சம்பந்த
மாகப் பல உரநடை நூல்கன் பும் - துண்டுப்பிரசுரங்கனாபு: - பரபாத்தகுரு க ைத E புத்
கதை"
தொடர்ந்து ஆக்கி வெளியிட் டார். இந்தவகையில் வேதியர் ஒழுக்கம், வேதவிளக்கம், பேதகம் மீறுதல் ஒாந்தர் இனத்தியல்பு என்பவன் குறிப்பிடத் வாகும்.
உங்களுக்குத் தெரியு
மா?
* நெப்போலியனை தோற்கடித்த ஆங்கிலேய கடற்படைத்
தனிபதி யார்? நெல்சன். - ந.ரோமாபுரி எரியும்போது பிடில் வாசித்துக்கொண்டிருந்த
நீரோ
ஜனாதிபதி யார்?
曜、
முதலாவது அமெரிக்க
ஜோர்ஜ் வாரிங்டன்,
மகா அலெக்ஸ்பாந்தரின் தந்தை பெயர் என்ன?
எதனைக்கொண்டு முதலையின் வயதை அறிய முடியும்? அதன் நீளத்தால்.
தில்லைநாதன் கோபிநாத்,
யாழ். இந்துக் கவ்லூரி,
青
eSeSLLS S LSLSLSLLLSLYSLLLSLSSLLSSSLSJSeuSLSS ee SLSLSS LL LSLSLSS LSL LLLLSS
蠱 12
SLLLLL SMLSS SLLLL LSeLeLeeLeLeeLSeeeeLSeLeeeLL SSeLeLeeLee LLL eeLLe
 
 
 
 
 

ஆக்க இலக்கியம் படைத்த இப் பெருமகன் - மொழி பெயர்ப்புக் ாறயிலும் முன்னின்று உழைத் இந்தத்துறையில் இவரது இயக்காசி
卓Tf,
ாழிபெயர்ப்புக்கு இருந்தது வள்ளுவரின் வான்மவி யாரும் போன நாட்டவர் பரும் நாள்ாரைத்தின் பாவ் பெருவிருப்புக் கொண்டிருந்தனர் என்பது பொது உண்கையாகும் குறளின் அமந்திருந்த - அறத்துப்பால், பொருட்டாள் - ஆகிய இருபகுதி கரையும் - வத்தீன் மொழியில் பொழி பெயர்த்தார். இம் புயற்சி டானது - குறளின் அருமையையும் பெருமையையும் மேனாட்டாகும் உணர்ந்து கொள்ள உதவியது
| iii
Լյի , : L - ք
விரமாமுனிவரின் பண் பட்ட டன்களம் - தமிழ் அன்னைக்கு மேலும் ஏதாவது பயனுள்ள பணி பைச் செப்ப வேண் டு பின விளைந்தது. 3. Tissir l I II I iiiiiT ii r R, lதமிழ் இலக்கண நூலான தொல் காப்பத்தைப் பிரதிபலிக் கும் வகையில் "தொன்ஜாவ் விளக்கம் என்னும் இன்க்சு3 நூல் உருப் பேற்றது. இதனைத் தமிழ் அறி
ஞர் ' குட்புத் தொல் காப்பியம்' " என ஏற்றிக் கொண்டாடனார்
# வழக்கில் காரைப்படும்
தமிழ் மொழி இலக்கE% த்தக் கொடுந் தமிழ் இலக் காண " என்னும் நூ ைவத்தின் மொழி
பில் இவர் எழுதினார்.
இ ங் சு 3 ந் தி ல் ஆர்பர் கொண்டு உழைத்த இவர் -
மொழித் தொடர்புக்கான ஊட
ாம் என்ற முறையில் அகராதி
பாரதம்
ஆக்கத்திலும் தனது நுண்மான் நுழை புலத்தைக் காட்டினார். இந்த வகையில் தமிழில் இவரால் படைக்கப்பட்டதே " "சதுர் அக
ராதி' ஆகும். பின் I T அளில் எந்த அகராகிகளுக்கெல்லாம்
வழிகாட்டியாகவும் - புதன் நூாப்ா கவும் அமைந்தது என்பது மனங் காள்ளத்தக்கதாகும் ୋ st ol, விட - "தமிழ் வத்தீன் அகராதி" "போர்த்துக்சிேயம் - தமிழ் வத்தீன் அகராதி" யும் ar படைப்பேயாகும். தமிழ் - சித் தின் அகராதியில் - 90 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் மொழியில் போருள் விளக்கம் எதப்பட்டி ருக்கிறது. இது முதல் நடந்த புயற்சி என்பதால் ப பெரால் பாராட்டுக்கு உரியதாகி நிற்கின் 占匣
எங்கிருந்தோ வந்த ஒருவர் - எமது அன்னை மொழியாம் தமிழ் மொழியின் அருமை -ெ  ைம | {STL &לה5 לחופ. = fת: i? זה קונ1. ביF יזדוולט # றோடும். பாசத்தோடும் படிக் தார். படித்ததோடு நிங்கவில்: தனது ஆராக்காத வால் நாட்டு வேற்றுமையை பரந்தTர் தான் ஒரு இத்தாலியனாக இருந்தும்இன்பத் தமிழனாகத் தன்  ைஎன
ஆக்கிக்கொண்டார் இதனால் இத்தாவியும் இன்பத் தி பி பூ ம்
இனைந்தன. டெஸ்கி என்ற
। முனிவராகி - வளர்ந்த ரொறு தமிழோடு கலந்த வாழ்வாகும். இப் பெ ரு 1 கன T ல் மேவில் நா டா ன இத்தாலியும் : நாடான தமிழ்நாடும் இணைந்து கொண்டன். :
H டு 13

Page 9
யாதது மனிதனின் மனவளர்ச்சிக்குத் தாய்மொழி
- மகாத்மா காந்தி.
ĝi g'on] (Tî :
குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எவ் வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமை
மில்க் வைற்
காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம். R
 
 

குளித்தால் தண்டனை
பிரான்சு நாட்டு மன்னனான பதின்மூன்றாம் லூயி தன் வாழ் நாளில் ஒரே ஒரு தடவைதான் குளித்தானாம். அதற்காக வாழ்நாள் புராவும் வருந்தினானாம்! ஏனெனில் அவனுக்கு நரம்புத்தளர்ச்சி நோய் இருந்தது. அது குளித்த பின்பு ஏற்பட்டதாக மூடநம்பிக்கை கொண்டிருந்தான். அதனால் நாடு முழுவதும் மக்கள் குளிப்பதற்குத் தடை விதித்தான் மீறிக் குளித்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாம். -
வினோதச் சட்டங்கள்
பெர்முடாவில் 1948 ஆம் ஆண்டு வரையில் யாரும் சொந்தத்தில் கார் அல்லது வேறு எந்தவிதமான மோட் டார் வாகனங்களோ வைத்துக் கொள்ளக் கூடாது, என்று சட்டம் இருந்தது. நியூயோர்க் மாநிலத்தில் ஒடும் காரிலிருந்து யாரும் முயல் களைச் சுடக்கூடாது, ஆபாசமான உருவங்களை பச்சை குத்திக் கொள் பவர்கள் அமெரிக்கக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. கெண்டக்கியில் எல்லோரும் ஆண் டொன்றுக்கு ஒரு தடவையாவது குளித்தாக வேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்கள்.
சுவீடன் அரசு குழந்தைகளை கையினால்கூட அடிக்கக் 5th LT.gif என்று தடை விதித்துள்ளது. இச்சட்டத்தினால் பெற்றோர்கள் கூடத் தங்கள் குழந்தைகளை கையினால் அடிக்கக்கூடாதாம்.
- நிலா.
கொட்டாவியால், கெட்டார்
பதின்மூன்றாம் நூற்றாண்டில் பர்மாவை ஆண்ட நாரதி ஹாபேட் மன்னனின் முன்னிலையில் யாரும் தும்மவோ, கொட்டாவி விடவோ *டாதாம். அக் குற்றத்தைச் செய்தவருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டதாம்.
மாற்றம் () 15

Page 10
தப்பிய கைதிகள்
சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் தப்பிச் செல்வது பற்றிய செய்திகளை நீங்கள் ஏராளமாய் படித்திருப்பீர்கள். ஆனால், அமெ ரிக்காவில் நடந்த சம்பவம் மிகவும் வினோதமானது. 1971 ஜூலை மாதம் தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து 106 கைதிகள் சுரங்கப்பாதை தோண்டி தப்பிவிட்டார்கள்! அவர்கள் தோண்டிய சுரங்கப்பாதையின் நீளம் 91 மீற்றர்.
திருமணச் சடங்கு
நரிக்குறவர்கள் திருமணச் சடங்கின்போது தம்பதியரின் உள்ளங் கைகளிலும் பற்களிலும் எண்ணெய் பூசுகின்றனர். பின் "தாசின்" என்ற பொடியைப் பற்களின் மீது அப்படியே அழுத்தி எடுக்கிறார்கள். உடனே பற்கள் கறுப்பாகின்றன. அதனால்தான் நரிக்குறவர்களின் பற்கள் எப்போதும் கறுப்பாக இருந்து வருகிறது.
- யோ. தர்ஷினி, அதிக வின்ல
நெப்போலியன் தன் காதலி ஜோசபினுக்கு எழுதிய காதல் கடிதங்கள்தான் அதிகவிலைக்கு ஏலம்போன காதல் கடிதங்களாகும். மொத்தம் எட்டுக் கடிதங்கள் அடங்கிய கடிதத் தொகுதி 66 ஆயிரம் ரூபாவிற்கு ஏலம் போயிற்று.
– 6ro. grusi" தென் அமெரிக்காவில் - சில கிராமப்புறங்களில் போதியளவு ஆசிரியர்கள் இல்லாதபடியால் அங்கே கடமை புரியும் பொலீஸார் ஆசிரியர்களாக மாறி - மாணவர்களுக்கு படிப்பிக்கிறார்கள்.
- இண்டியன். காதல் பரிசு
விக்டோரியோக் காலத்தில் இங்கிலாந்தில் குளிப்பதே வினோதம்! நெப்போலியன் காலத்திலும் குளிப்பதென்பது ‘ஆடம் பரம்" ( லக் சு வ ரி ) ஆகும்; வசதியுள்ளவர்களால் மட்டுமே முடிந்தது. நெப்போலியன் தன் காதல் பரிசாக ராணி ஜோசபினுக்கு ஒரு
"பாத் - டப்* தான் கொடுத்தானாம். "டர்க்கிஷ் பாத்”
துருக்கியர்களுக்கும் அராபியர்களுக்கும் தண்ணீர் கிடைப்பது அரிது. 'அப்போ அவர்கள் குளிப்பதில்லையா?** என்று தானே கேட் கிறீர்கள்.
அவர்கள் குளிப்பதை வேறு பொருளைக்கொண்டு செய்தார்கள். அது என்ன தெரியுமா? " nண்'தான். மண்ணை உடலில் தேய்த்துக் கொண்டு குளிப்பார்கள். இதுதான் " டர்க்கிஷ் பாத்’. சிலர் சாம்பலி லும் குளிப்பதுண்டு.
e 16 - ബ

கஞ்சப் பிரபுக்கள்
@°
32ے
ஒர் ஊரிலே கடைந்தெடுத்த
ஈஞ்சப்பிரபு ஒருவன் இருந்தான்.
எச்சில் கையால் காகம் விரட் டினால் இருக்கிற சோறும் போய்
விடுமே என்று சாப்பிட்டகையை
முற்றிலுமாக நக்கி சுத்தப் படுத்திக் கொண்ட பிறகுதான் அவன் காகத்தை விரட்டுவான்.
ஒரு நாள் அவன் தனது மகனு டன் அமர்ந்து மதிய உணவு உண்டு சொண்டிருந் தான். மருமகள் பரிமாறிக்கொண்டிருந்
தாள . m
அன்று மருமகள் வைத்திருந்த
r 3Fb மாமானாருக்கு மிகவும் விட்டாயே!** என்று பிடித்திருந்தது. "இன்று ரசம் மகனைக் கண்டித்தார்.
மாற்றம்
மிகவும் நன்றாக இருக்கிறது" என்று மாமானர் மருமகளைப் பாராட்டினார்.
உடனே அருகில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மகன் " "அப்பா! இது மிளகு ரசம். நான் நமது கடையிலே மிளகு நிறுத்துக் கொடுத்துவிட்டுக் கை கழுவிய நீரைக் கொண்டு வைக்கப்பட்ட ரசம் இது" என்று பெருமையாகக் கூறிக் கொண்டான்.
தன்னுடைய கஞ்சத்தனத் தைத் தந்தை பாராட்டுவார் என்று மகன் எதிர் பார்த்தான்.
தந்தையோ அவன் பேச்சைக் கேட்டு கோபாவேசமடைந்தார்.
ம. சுமணன்
"இது என்ன ? மிகவும் மடத் தனமான வேலை செய்திருக் கிறாயே! மிளகு நிறுத் துக் கொடுத்த பிறகு ஒவ்வொரு விர லாகக் கழுவி சேகரித்து வைத் திருந்தால் பல நாட்கள் ரசம் வைக்க முடிந்திருக்கும், ஒரே யடியாக கை முழுவதையும் கழுவி ஒருநாளில் ரசம் வைக்கச் சொல்லி தந்தை
3・
O 17

Page 11
2 (IDG) of
விருந்து தேடிவந்த குற்றத்துக்காய்த் திகைக்க வேண்டியதாயிற்று. முதன்மைத் தெருவின் பெரிய சந்தியுடன் மிதிவண்டிகளைத் தரிக்க வைத்தோம். விலாசத்தைச் சொல்லி, யாரைக்கேட்டாலும் கருவிழி. வெண்விழி மட்டுந்தான் முழுதாய்த் தெரிந்தது. மனிதர் என்ன சுலப மாய்ச் சொல்லிவிட்டார்: "எந்தக் குழந்தைப் பிள்ளையையுங் கேளுங்கோ, என்ர வீட்டை டக் எண்டு காட்டும்.’’
ஒவ்வொரு த் தனும் நினைச்சுக் கொண்டு இருக்கிறான்: 'ஊருக்கை நான் தான் விலாசம், தேட வெளிக்கிட்டாத் தானே தெரியுது! அடிக்கடி நடக்கிறது தான். தெரிஞ்சும் நம்பினமே! எங்கடை மூளையை. நாய் கொண்டுபோக !
இடைத்தூரம் பத்துப்பன்னிரண்டு கட்டை, புதிய வருகை - சுளுவாகவா கண்டுபிடித்துவிட முடியும்? வார்த்தை வடிவிலா ன வரை குறிப்பை நினைவு கூர்ந்தோம் - அதன்வழிதான் முனைய வேண்டிய தாயிற்று கிராமத்தின் முள் ளந்தண்டுப் பள்ளத்தில் இறங்கினோம் (நடுவூடாய்ச் செல்லும் கிளைத்தெரு) காற்கட்டை தூரத்தில் இடப் புறக் கையொழுங்கை, எட, இதென்னடா இது, முடிவே இல்லாத ஆறே வளைஞ்சு . . நெளிஞ்சு . . சூ, எல்லாம் கல்வீடுகள்
செ. பொ. சினேசு
மனிசன் சொன்னதுஞ் சரிதான்: 'எங்கடை ஊரைக் குறைவா நினைச் சிடக் கூடாது. படிச்ச, படிச்ச, பணக்காரர் நிறைஞ்ச ஊர்!"
எட, வீட்டுக்கொரு ரீ. வி ! இதேன் அன்ரனாப் பைப்புகளை அப்பிடியே விட்டிருக்குதுகள் ? ஏது கரண்ட்? அவன் நிப்பாட்டி மூண்டாவது வருசமாப் போகுது . அங்கெ ஒரு அன்ரனாவெ!.
 

செத்துக் காஞ்ச மீன்முள்ளு மாதிரி! . . அதுசரி இதுகளெ (மத்தத்தில தான் நடவேணுமோ? கோடிக்குள்ளே நட்டா என்ன? கெட்டிக்காரர்தான் எங்கட சனங்கள். கண்டுபிடிச்சவனுங் கற்பனை பண்ணியிருக்கான். ஏலுமே இன்னொரு பயன் பாட்டையும் வழங்க? - பறையறையிறது: “எங்களிட்டை ரீ. வி. இருக்கு எவ்வளவு வசதி டிான குடும்பம் நாங்கள் ! வியாதி - மனோவியாதி ! பணக் தாரரிட்டை இல்லை; ஏழையளுக்கும் கிடையாது. இதுகளுக்குத்தான்! மையலறைக்கை முடங்கவேண்டியது ஃப்றிச். நடுக்கூடத்தில வைக் நிறதுகளெல்லே, நாலுபேருக்குப் படங்காட்ட? இந்த நடுத்தர மேற் தட்டத் தான் மனிசன் பணக்காரர் எண்டிருக்குது.
ஆண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலாயிற்று. பல விரல் ஒழுங்கைகள். (கையொழுங்கையிலிருந்தும் பல பிரிந்தால். வேறு பதத்திற்கு எங்கே போக ?) எல்லாம் ஒரே மாதிரி! இரண்டொரு குருட்டொழுங்கைகளுள்ளுந் தட்டுத்தடுமாறினோம். சவிப்படை இல் நண்பன் முந்திக்கொண்டான். ‘என்னடாப்பா இது!
மின்னல்: இயற்கையைப் படம்பிடிக்கும் * பிளாஷ்".
யூரீலங்கா ஆட்களை அந்நிய தேசத் திற்கு அனுப்புவதில் அரிய சா த  ைன படைத்திருக்கிறது.
கறுத்தக்கொழும்பான் தமிழர்களின்
கரும்புலிகள் தற்கொடையின் சின்னம்.
கனவு நிகழப்போவதை நித்திரையில் காட்டும் சோதிடத் திரைப்படம்.
வியாபாரிகள்: கண்கட்டு வித்தைபுரியும் மந்திரவாதிகள்.
ஆக்கம்: நிலாமகன்.
19 g دستساخ به پیشبینشتین کسیمینیسمهستیمنستانتیمنسینمنتیسیسم نسیت= ض ریز از orا

Page 12
ஆரையேன் விசாரிக்கலாமெண்ட ஒரு குஞ்சு குருமனைக் கூடச்
, '
"எல்: வீடுகளிலயுஞ் சத்தடி தெரியுது பூட்டிப்டோட்டுச் கிடக்குதுகள் என்ன சாங்கப்பா'
சற்றுத் தள்ளிப்போக, அங்கே பார் கேற்றடிபிலை ஒரு கிழவன்
இருக்குது - கேப்டம். '
முதியவரின் நோக்குதல் மது திக்கிற் தான் கவனித்ததாய் தெரியவில்லை. "கண்ணுறுஞ் சரியாத் தெரியாது போவை'
மிக நேருங்கிய நிலையிற் சற்றுத் திடுக்குற்றார். வலுமிக்க ஒளிக்கதிர்கள் ஊடுருவுவதெனச் சிரமப்பட்டார் - மைகளை இறுக் கினார்; புருவங்களின் மேற் கிைவைத்துப் பிம்பப் பிசிறுவைச் சிசி செய்து, உற்று நோக்கினார்.
"அப்பு. " மறுகை செவிச்சோனையை அனைத்தது. தரவின் வலுவை உயர்த்தினேன். ". இந்த ஊரின் என்னண்ணன வரடங்கு சட்டமே போட்டிருக்கு?
"ஒரு மனிசரையும் வெளியினை கானேவ்வை'
வெடுக்கென எழுந்தார்; தன்னாடினாலும் வினோத 3ே ம் உட்சென்று மறைந்தார்.
"என்னெடா இது விலாசம் விசாரிக்கலாமெண்டா
"ஒண்டு தெரியுமே? நாயிருக்கைல்லே ஆரேன் சின்னப்பெடியன் கல்லெறியவேணும், தெருவில்ை ஒருத்தர் போ:ோது - 3 ல்வா பிரையும் பாத்துக் குரைப்புத்தான் - எறியிரவன் ஆர். எறியாதவன் ஆர்? நல்லவன் ஆர் கேட்ட வன் ஆர்? - எல்லாருக்குந் தேவாரந் தான் அதின்ர ஆயுள் முழுக்க இதேதான். । । வயசு பானதுக்ளெண்டா ஒரு பவுபு-நக்கீல்கள், நளினங்கள் தாங்களும் பிநயாண்டயோண்ட தொடங்கீட்டம். எங்களைப் பாத்துங் கிழவன் பயப்பிடுறது ஞாயந்தானே?
2O 三 = LSSLLS SDS S DD SDDS

சிறியதொரு சந்திப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம் சூழவுங் குடியிருப்புகளின் அடர்த்தி
நண்பனுள் எரிச்சல் மிகுந்து போயிருந்தது. " என்னடா இது? ஒருநேர விருந்துக்காக நாப்படாப் பாடு மனிசன் கூப்பிடாமவே விட்டிருந்தா எவ்வளவு நல்லது. தேவையில்வாத அலைச்சல்! "
பொறு, பொறு, இந்தச் சனங்களுக்கு ஒண்டுஞ் செய்யேலாது. தந்திரோபாயத்தான் சரி. "
தந்திரோபாயமா? "
ஒ, அரசியல் தந்திரோபாயம் மாதிரி . " செரும ல | ற் குரலைச் சரிசெய்தேன். வலுமிக்க குரல்வளம் எவ்விதம் வந்ததோ இன்னுள்! " . சரியான மடையன்ரா நீ வேறெ இடமில்லாமல் இந்த ஊருக்கே வந்தன பொம்பிள பார்க்க: '
" தட, தட வென வீடுகள் வாப்பிளந்தன.
டேய், ஏன்ரா இப்பிடிக் கதைக்கிறாய்? ஏன்ர மனிசி கேள்விப் பட்டா
நீயேன் நடுக் நான் சமாளிப்பன். பவுடியெப்பார் . பெரிய கதாநாயகன் மாதிரித் தத்துவம் பேசினாய் - மோட்டச் சைக்கிளைக் கொண்டுவா எண்டா - வசதி, செழிப்புகளைக் காட்டக் கூடாது; வறுமைப்பட்டவன் மாதிரிப் போகவேணும் பெட்டேன்"
டன்பார்ந்த கடவுளே!
பிருெ தாரும் என்னுடைய அம்மா இவ்வா ? ' (':') ? : &്തൂഥo/ ενώ βασιτσή, οι ομά கிரி பிொருநாளும் அவற்றைக் கொண்டு 125-f ார்கள் நிலத்தைக் கிண்டி மண்ணில் போட்டு) 'சிறார்கள் என் என்னுடைய அம்மா '(?:'നൃ'മ്'
டேவி ஒடப பாலஸ்தினார். ஈழந்தை நான்
│offs fum Falas Tinian Childrgn to God
மாற்றும் = = ஆழ் 21

Page 13
குடும்பம் பணத்தை விரும்புதோ, பண்பை விரும்புதோ எண்டு அறிய வேணும் " - உன்னாலெ பார், சேர்ந்த குற்றத்துக்குக் கால்மூட்டெல் லாங் கழண்டு போச்சு! "
தந்திரம் நம்பவியலாக் கச்சிதம். நண்பனின் காதோடு, “ பார், பார், வாறவை எல்லாரிட்டையுங் கலியான வயசிலை குமருகள் இருக்குப் போலை! "
நொடிக்குள் ஊரின் சுற்றிவளைப்பு நோட்டமிட்டேன். என்ன முகங்கள்! என்ன களை! படிச்சதுகள், அதிலும், வசதியானதுகள்மிடுக்குஞ் செருக்குங் கலந்த களை!
வந்த வரத்தையுந்தான் வர்ணிக்கவேண்டும் ஒவ்வொருவராய் தேவையில்லை. பருத்த உடலங் கொண்ட அம்மாள் போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு . கடவுளை நம்பாமையைத் தற் காலிகமாய் ஒதுக்க வேண்டியிருந்தது. ' ஆன்மா " வை தொடி ப் பொழுது நம்ப விரும்பினேன். அத்தகைய கற்பனையிற் சுகங் கிடைத் ததே! இதுதான்: " என்ன உடம்பு! இவ்வளவு வீச்சாய் வருகுதே, சுமக்கிற ஆத்துமா என்ன பாடுபடும்! " - அட, ஒரு முற்போக்கு வாதி இப்படியும் நினைக்கிறதா? சக மனிதரின் உடலியல்பைக் கேலி பண்ணுவது எத்தனை அலத்தம் மூன்றாந்தர நகைச்சுவையில்லையா?-- உண்மைதான். மனச்சான்றுக்கு விரோதமின்றியுங் குறிப்பிட்டாக வேண்டுமே?
விசாரித்தனர். ஆளுக் காட் கேள்வி சிலர் என்னிடம்; சிலர் மாப்பிள்ளையிடம் நேரடியாக வாயே திறக்கவில்லை. வெலவெலத்துப்
போயிருந்தானே? எ ல் லா விடையும் எனது உபயம்- சொந்த இடம்??-அங்கை "இன்னாரைத் தெரியுமே?"- "ஆற்றைப்பகுதி? " "மாதச் சம்பளம்?’- 'தாய், தகப்பன்?" - "சகோதரங்கள்? ? -
"சொந்த பந்தங்கள்?"
முக்கியமானது "என்ன உத்தியோகம்?"
"வெளிநாடு-கனடா"
"ஆற்றை மேஞக்குப் பேச்சுக்கால் நடக்குது?" சொல்லவில்லை; மர்மம்.

பாரிய உடலம் மற்றவர்களைப் பின் தள்ளியது; மிண்டி, மிண்டி புன்பகுதியைத் தக்கவைத்தது. 'தம்பிமார், நல்லாக் களைச்சுப்போனி யள்! வந்து ஏதாவது குடியுங்கோவன்'
நின்றுகொண்டிருந்த உரு, இல்லத்திற்கு நேராய் எம்மை ஈர்த்துச் செல்வதிற் சிரமமில்லை.
"ஏன் முத்தத்திலயே நிண்டிட்டியள்? உள்ளுக்கு வாங்கோவன்!
"பரவாயில்லை. கொஞ்சப் பச்சத்தண்ணி தந்தியளெண்டாக் காணும். ?
"ஏன்?.
‘இல்லை, பரவாயில்லை. தண்ணி காணும்."
வரச் சற்றே தாமதம். கு, என்ன துப்பரவு! தண்ணியெப்போலை வெள்ளிச் செம்புந்தான் மிளிருது; பேணியளுந்தான் எட, பச் சத் தண்ணியில்லை; எலுமிச்சம்பழத் தண்ணி!
திருவாய் மலர்ந்தார்; குடித்தபடியே கேட்.ோம்: "என்ர அவ ாரும் வெளியிலதான்-சவுதி-எஞ்சினியர், மாசம் அறுவது அறுவத் தஞ்சு வரும். ஒரு மகனும் மகளும் கனடாவில-சிற்றிசன் ஆயிட்டி னம் கல்யாணமும் முடிஞ்சுது. இந்த ஊரில ஞாயமான காணி எங்களிட்டெத்தான். என்னோ டெ மகள் மட்டுந்தான்-கடைசி. கல்யாண ஒழுங்கைப் பாக்கச் சொல்லி அவரிட்டெயிருந்து காகிதம் வந்தது-போன கிழமைதான். 影
முன்னிலும் வியர்வை பெருகியது - ஆசுவாசமான வியர்வை குளிர்ச்சியும், வெக்கையுமாய் மேற்சட்டை உடலில் ஒட்டியது தொண்டை நனைந்ததிற் தெம்பு, விடைபெற்றோம். ஏனையோர் இன்னமும் தெருவில்.
வாசலைத் தாண்டவும் முதலிற் தோன்றிய முகம் அவசரமாய் முன்வந்தது. வழுக்கைத்தலை, அலட்சியப் பார்வையின் நிரந்தரம். முதுமையாலையா?. . படிச்ச தடிப்பிலையா? . . . . அல் லது இரண்டாலையுமா?. இந்தக் குறியீடு?
பேச முனைந்தார். ஏனையோரிடமும் உந்துகை முந்திக்கொண் டேன். ‘ஐயா, இந்த விலாசத்துக்குப் போகவேணும். வீடு எங்கே?"
மாற்றம் கை (D 23

Page 14
* பாடசாலை உபகரணங்கள்
* அப்பியாக் கொப்பிகள்
* காசிநாதிகள்
1 நவிகள்
Bjö, GiffGLIAT GGib.j is Géif
--,
晶 மிக் கைத்தொழில் நிறுவனம்
26, 26/1, சிவன் புதுவிதி, திருநெல்வேலி, யாழ்ப்பானம்
*ణ్ణి --

(மீண்டும் அம்மாள் அரக்கப்பரக்க ஒடிவந்தாள். இந்தக் கழுகு மாப் பின்ளைக்குஞ்செக் கடனீசுரஞ் செய்துபோடுமெண்ட பயமாக்கும்.)
வழுக்கையைத் தடவினார். "அட, இந்த அட்றசா? எங்கடெ றிலேசன் தான். வாங்கோ, கொண்டுபோய் விடுறன். '
மிதிவண்டிகளை உருட்டியபடி கிளம்பினோம். "எனக்கு நாலு சிண், ஒரு டோற்றர், எல்லாரும் ஃபொறினில. தம்பி கனடாவில்
எந்தப் பிளேஸ்? . ஆங். ரொறன்ரோவா? மகள் மொன்றி யால் சிஸ்ரருக்காக குமிச்சு வச்சிருக்கினம் பிறதேஸ்மார். நல்ல மாப் பிள்ளையாப் பாக்கச் சொல்லி அடிக்கடி வெற்றேஸ் வந்தபடி ."
நிறையப் பேசினார். இறுதியாய்க் கேள்வி: ' என்ன அலுவலா
அவரெப்பாக்கப் போறியள்? . அவருக்கு டோற்றேஸ் இல் வையே?" நாங்கள் அங்கு விருந்துக்குதான் போறம், வேறொன்றுமில்லை ای
என்றேன்.
திடுக்குற்றிருக்க வேண்டும். சற்றே திணறியவர் சட்டென்று: நின்றார். என்னை உறுத்தார். ஒரு நொடி, எனது தொள தொளத்த, "டாங் டாங்" போற்சட்டை வழியாகக் கால்வரை வழிந்தது பார்வை. அவ்வளவுந்தான் பாதையைக் கைகாட்டிப் பின்வாங்கிக் கொண்டார்
மூப்பு ஏற்படுவதை ஒத்திப்போடுதல்
மலத்திற்கு இருப்பிடமான பெருங்குடலை தேகத்திலி
ருந்து எடுத்துவிடுதல் அல்லது
ஆ. சிரமப்படி தயிரை உண்டுவருதல்
பெருங்குடவி பத்தியாகும் பகோசைற்ண் (Phagocytes) எனப்படும் விக்கிருமிகளே உடலின் இளமையைப் பாதுகாக் கும் காார் ருெமிகா நாசமாக்குகின்றன. இந்த விஷம் கிருமிகா. நயிரிலுள்ள இத்திக் அமிலம் (Lactic Acid) பெருக் கம ை பல் நடுப்பதாங் குயிர் இளமையைப் பாதுகாக்கியது.
।
طالتكتيكاكا
மாற்றம்

Page 15
தெளிவில்லை. விளக்கம் பெறு வோ  ெம ன் ற ர ல் . al இந்த மனிசன் என்ன மந்திரவாதியே? மூடிமுழிக்கிறதுக்குள்ளெ!.
66
ப்ெபடி என்ர புலுடா? இதுகள் தரவழியலை இப்படித்தா
ஆட்டிப்படைக்க வேணும், !'
"அதுசரி, இப்ப எங்கெ திரும்புறாய்?" "பழைய இடத் 8 க்கு; வேறெ ஆரையேன்தான் பிடிச்சர வேணும். இளைஞன் ஒருவனது உதவி கிட்டியது.
திரும்பும்போது பெரியவர் வழிமறித்தார். 'தம்பி என்ெ நாலு மகன்மாரும் கலியாணஞ் செய்திட்டினம். அவெயள் தங்க தங்கடை பாட்டெப் பாக்கத் தான் சரி. மகளும் றிபூஜி. இந்த. அகதிக் காசெ எடுத்துத்தான் சமாளிக்கிறா! யொப். என்ன ?. இந்த. வேலையெண்டு இன்னும் ஒண்டுங் கிடைக்கேல்லெ! என்ர பென்சனில. தான் எங்கடை வண்டி ஓடுது. அதை 'டுக்கிறதுக்கே பெரும்பாடு . உ ந் த ப் பாழ் பட் ட அாசாங்கம் ஒழுங்கா அனுப்பினாத்தானே? இந்த நிலமையிலை, மாப்பிளையும் பாரெண்டா முடியுமே? அதுதான் தள்ளித் தள்ளிக்கொண்டு போறன். ஏதோ . பெரிசா. ஆங். பெரிசா நினெச்சுப் போடாதேங்கோ!'
தாண்டி வந்தோம். அம்பாள் குறுக்கே பாய்ந்தாள். எத்தனை நேரமாய்த் தெருவாசலிற் காத்துக்கிடந்தாளென்று புரிந்தது. 'தம்பி. சவூதியென்டாத் தெரியுந்தானே ? நல்ல சம்பளமெண்டு பேர்தான்" எங்கடெ காசுக்கெல்லோ? எடுக்கிறதெல்லாம் அங்கேயே சிலவறிக்கக் தான் சரி! எய்பவேன் நாலோ, அந்சோ வரும், அவ்வளவுதான். வற்புறுத்தேலுமே ? பிள்ளையஸ் சிற்றிசன் ஆனவெ - அவேன்ர புரடு , ஒரு கடிதத்துண்டு இல்லை. அப்போதே இந்த மனிசி புளுகிச்சுதே, எண்டு வித்தியாசமா நினையாதேங்கோ! கலியாணமெண்டு வந்தா ஆங் கூட்டிக்குறைக்கிறது உலக வழக்கந்தானே ? . என்ன தம்பி, விளங்கிக் கொண்டியளோ ? GlufgFir ... . ' '
எங்களுக்கென்ன? எல்லாம் என்னத்துக்கு? வந்தது விருத்துக்கு; முடிஞ்சுது; திரும்பிட்டம்.
கையொழுங்கைகள் - ஆங்காங்கு குருட்டொழுங்கைகள் -கிளைத் தெரு. முதன்மைத் தெருவில் ஏறினோம். −
(கற்பனை யாவுமல்ல. )
O 26

குகை
*
ஆதிகாலத்தில் மனிதனதும் மிரு கல்வினதும் உறைவி ! " கக் காணப்பட்ட- (ህyፍኽነðኔሓቴክ 6 siudhJ TIOJ உருவாகின்றன G), fu infr? உக்கி ரமான கடல் அலைகள் பெரும் பாறைகள் மீதும் குன்றுகள் மீதும் இடைவிடாமல் மோ துவதால் பாறைகளும் குன்றுகளும் கு!ை பப்பட்டு குகைகள் உருவாகின் றன. இவ்வாறு பல குகைகள் உருவாகினாலும் பல ஆயிரம் ஆண்டுகளின் பின்னே இது நிகழ் கின்றன.
எரிமலைகளும் குகைகள் ஏற் படக்காரணமாய் இருக்கின்றன.
புவியின் மேற்பரப்பில் உள்ள பாறைகளை எரிமலைகள் இ-ம் (Tசெய்கின்றன. இடம்
பெயர்ந்த பாறைகளில் நெருப்பக் குழம்ப ாய்ந்தோடுகின்றது. 2 1 ) மாதிரி f கழ்வகளினாலும் குடிப்). கள் உருவான்ெறன.
மேலும் , டங்கிய தண்ணீர் சுல் sourirth ! Il rrap, pas 6fabr (8 in tip ' ' '! ' to tu 9巾两叫 s፴(ኛ@ዞቃFቇሀዞኮ கு5:14, ஈள் ஏற்படுன்ெறன. 6( 3) ارائه tل Ir 6ሓ ይወ குகைகள் வட அமெரிக்காவில்
இந்தியனா, டென்னசி, கென் டக்கி மாநிலங்களில்
காணப்ப, மென்றன.
வும் 9ణీ க்கு மேல் ஒன்றாக தட்டுக்கள் ே ாலவும் அடுக்கிக நிலையிலும் காணப்படுகின்றன.
குகைகள் வரிசை
ஆதாரம்: துளிர்
மாற்றம் ട്ടത്ത്
காபனீரொட்சைட்டு
யே. நிரோஷானந்த 55, செட்டித்தெரு, நல்லூர்,
கு. தவாளன் அ. அ. இல: 19043, தொழில்நுட்பக் கல்லூரி பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். வயது 20
ud int Fr "அஷ்டல சுஷ்மி வாசா' புதிய செய்குந்தாவீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம். வயது : 12
ہے%7حت کے (
பேனா. நண்பர்களாக விரும்பின் to 5.00 முத்திரையுடன் உங்கள் பெயரை அனுப்பிவையுங்கள்
o 27

Page 16
அட்டைப்படக் கவிதை:
s: •-> {{ܢܔܓܓܔ
தி சொல்லுதெடா ல்லர் உன் பகுதி செழித்து
இழுக்கின்றாய் *யோடு இத்ப்பதனால் - எரி O டுட்த டயுைசஜிடக்கின்றாய் 24இருமை பர்ந்த 2:32 நல் ക്ലബE് இழுக்கின்ற
ெைசக் 4உன்போல்
முகவரி: யோகராசா ஜெயவதனி,
**ஜீவனாலயா'
முகமாலை, எழுதுமட்டுவாள்.
O 28 విజEడాEడా-డా-E-జామా==
 
 
 
 
 
 
 
 

பழமையும் பாரம்பரியமும் வேகமாக மாறிவரும் இந்தக் காலத்திலும் கணவன்மனைவி என்ற பந்தபாசம் நிகரற்றது, என்றும் அழியாதது என்பதற்கு எடுத்துக் காட்டாக நூறாண்டு காலத்தை மண வாழ்க்கையில் சந்தித்த தம்பதி இந்திய நாட்டில் இன்று வாழ்ந்து வருகிறார்கள்.
. Lf600IQ) Tiā05tioù
இவர்கள் கேரளாவில் உள்ள கிளிமனுரர் என்னும் ஊரில் வாழ்ந்து வருகிறார்கள். " ஐந்து தலைமுறைச் சந்ததியினருடன் இவர்கள் வாழ்ந்து வருவது மிகவும் பாராட்
டத்தக்க ஓர் உண்மை "", என்கிறார் இவர்களை நேரில் சந்தித்த ஒரு பத்திரிகை நிருபர்.
இவர்கள் சென்ற நூற்றாண்டில், அதா வுது 1892 இல் மணம் செய்து கொண்ட வர்கள். மணம் செய்து தொண்டபோது எந்தளவுக்கு ஒற்றுமையுடன் பாசத்துடன் இணைபிரியாமல் இன்னும் வாழ்கிறார்கள்.
கணவன் பெயர் ஷஜூகுமான், மனைவி பெயர் சாய்தத்பீவி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். மணமாகும்போது ஷூகு மானுக்கு 19 வயது. சாய்தத் பீவிக்கு 13 வயது. இப்போது கணவருக்கு 119 வயது
100 9,656
மனைவிக்கு 113 வயது. வயதாகி விட்ட தால் ஏற்பட்டிருக்கும் சிறு கோளாறு களைத் தவிர இருவரும் இன்னும் ஆரோக் கியமாக வாழ்ந்து வருகிறார்கள்.
vt pp) → : O 29

Page 17
முஸ்லீம்கள் திருமணத்தை நி காஹ் என்கிறார்கள். இவர்களது நிக் கா ஹ் ஏழு நாட்க ள் தொடர்ந்து ஆடம்பரமாக நடந் தது. ** என்னை மணந்துகொள்ள என்கணவர் வெள்ளைக் குதிரை யின் மீது கம்பீரமாக ராஜ குமார னைப்போல் வந்ததை என்னால் மறக்க முடியாது’’ என்கிறார் சாய்தத் பீவி.
சென்ற நூற்றாண்டில் பிள்ளை குதிரையின் மீது வருவது
என்றால் அது மிகவும் ஆடம்பர t
மான செயல். இவர்கள் திருமணத்
மாப்
* பேசி ய தோ
வரவழைத்தார்கள். அதற்கான வாடகை 14 ரூபாய், *ஆனால் அப்போது ஒரு ச வ ரத் தின் விலையே 13 ரூபாய்தான்', என் கிறார் சாய்தத் பீவி பெருமை யுடன்.
சிறு வயதிலிருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக் கிறார்கள். இருவர் குடும்டங்களும்
ஒரே தெருவில் இருந்தன ஆனால்
ஒருவர் பழகியதோ கி  ை. யா து. *பெண்கள் வீட்டை விட்டு வெளி யில் வருவது அவ்வளவு சுலபமல்ல
ஒருவருடன்
துக்காக கி ஸ்ரீ ம னு ர் அரச பெற்றே ரா ர் களு க்கு மிகவும் மாளிகையிலிருந்து குதிரையை கட்டுப்பட்டு வாழ்ந்த காலம் جستجسیجیسی مستحستحسنسنثر سستی سستی سمت سستحسحسستحستحسن سجستجسسحسس
மாணவர்களின் தேவைக்ள் எதுவானாலும் பூர்த்தி செய்ய யாழ் நகரில்.
அறிவகம் புத்தகசாலை
மணிக்கூட்டு வீதி, ( வெலிங்டன் சந்திக்கருகாமையில் )
யாழ்ப்பாணம்,
* சிறந்த முறையில் தட்டச்சு, றோணியோ பிரதிகளை நேரந்தாழ்த்தாது செய்து கொடுப்பவர்கள்
 
 

மணமான பின்பே இருவரும் ஒரு வரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். இப்போது இவர்களுடைய பேரப்பிள்ளைகள், அவர்களுடைய பிள்  ைள க ள், பேரப்பிள்ளைகள் நவநாகரிகமாக ஆடையணிந்து வெளியில் நட மாடுவதைப்பார்க்கும் G3 L T 5 காலம் வேகமாக மாறிவிட்டது என்பதை உணர்கிறார்கள்
சாய்தத் பீவிக்கு 17 ஆவது வயதில் ஒரு பெண் குழந்தை பிற ந் த து, அ த ன் பிற கு தொடர்ந்து 15 குழந்தைகளைப் பெற்றார். குடும்பக்கட்டுப்பாடு என்பதெல்லாம் தெரியாத காலம் அது. மருத்துவ உதவிகளும் சரி வர இல்லாத காலம். ஆகவே, பிறந்த குழந்தைகளில் பல இறந்து விட்டன. 4 ஆண் குழந்தைகளும், 4 பெண் குழந்தைகளும் மிஞ்சின, ஆனால் இப்போது அவர்களிலும் 5 பேர்கள் தான் உயிருடன் இருக்
கிறார்கள். மற்றவர்கள் வயதாகிப்
போய் இறந்துவிட்டார்கள்.
தஸிமா. ரஸினா ஆகிய இரண்டு இளம் பெண்கள் இவர்களுடைய கொள்ளுப் பேர்த்திகள். இவர்கள் இருவரும் வயதான இத்தம்பதி  ை!ப் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஷ"குமானுக்கு சாய் த த் பீவி தான் உணவு பரிமாற வேண்டும்.
கணவன் சா ப் பி ட் ட பின்பே மனைவி சாப்பிடும் வழக்கம் தொடர்கிறது.
இணைபிரியாத பறவைகளைப் போல் இவர்கள் வாழ்கிறார்கள். வாழ் க் கை யில் பெரிதாகச் சண்டை போ ட் டு க் கொண் 1. தில்லை. 'சின்னச்சின்ன மனஸ் த ரா பங் கிள் ஏற்பட்டதுண்டு. ஆனாலும் அன்பு மட்டும் கொஞ் சமும் குறைந்ததில்லை' என் கிறார் இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்.
இவர்கள் இருவரும் வாழ்ந்த காலத்தை நினைத்துப் பெருமைப் படுகிறார்கள். "எங்களில் ஒருவர் இறந்தாலும் மற்றவரால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆகையால் இருவரும் ஒன்றாக ஒரே நேரத்தில்
இறக்க விரும்புகிறோம்.’’ என் கிறார் சாய்தத் பீவி. க
56ör gó: THE WEEK.
பொது அறிவுப் போட்டி விடைகள் - 04
. புலவர் பொ. ஜெகந்நாதன். பீசா (சாய்ந்த) கோபுரம் 3. செங்கையாழியான்’
கலாநிதி க. குணராசா, 4. நவரத்தினசாமி 5. அமெரிக் காவிலுள்ள சிகாகோநகரம் இப் பொது அறிவுப்போட்டியில் ஒருவரும் ஐந்து கேள்விக்கும் சரி யான விடைகளை எழுதி அனுப் பவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
2.
31
மாற்றம் -க

Page 18
Gllé Iö6halIl II.jp
* பெண்களுக்கு மதிப்பளிக்காத எந்தத் தேசமும் நாடும் என்றும் பெருமையடைந்தது இல்லை. எதிர்காலத்தில் அடையப்போவது
மில்லை.
- வேகானந்தர்,
பெண்ணே காதலன் உன்  ைன நேசிப்பதை விட நீ அவனை நேசிப் பது அதிகமாக இருக்கட்டும். அப் போதுதான் நீ அவனுடைய இதய பீடத்தில் அமர முடியும்.
- நீட்ஷே.
ஒரு பெண் ஆண்களைக் கவர்ந்தால் அவள் கவர்ச்சியாக இருக்கிறாள்.
எல்லோரையும் கவர்ந்ததால் அவள்
அழகாக இருக்கிறாள்.
- ജ്
பெண்களோடு பழகுவதால் ஆண்க ளுக்குக் கேடு வருவதில்லை. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை; அவர்கள் ஆபத்தான நிலை அடை வார்கள்.
m AST6rry .
* குருட்டு நம்பிக்கையின் காலடியில் இரக்கமற்ற சமூகக்கட்டுப்பாடு களின் கீழே பெண்மை நசுக்கப்படுகிறது. மனித வர்க்கத்தைச்
சேர்ந்தவள் என்ற
முறையில் வாழ்வதற்கு இன்றியமைய்ாத
அவளுடைய உரிமைகள் கூடப் பொடிசூரணமாக்கப்படுகின்றன.
- காண்டேகர்,
O 32
 

இதயமாற்று.
##୩୪
Ε', ι' , 1 ώότ,
aurrip. OCh ... ji th:
SSAAASASASASASLSSASLSAeMeMTMMS SSLSLSSSSiSMMTSYS
மாற்றம் =ങ്ങ=
இதயம் ஒரு தசையினால் ஆன பம்பி, நெஞ்சறைக் கூட்டினுள் மார்பென்பிற்கு முதுகுப் புறமாக அமைந்துள்ளது. 300 - 400 g நிறை உடையது. தொழிற்பாட்டு ரீதி யாக இதயம் வலது, இடது ஆகிய இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள் ளது. அமைப்பு ரீதியாக இவ் ஒவ் வொரு பாகமும் ஒரு சோனை அறையையும் ஒரு இதய அறையை யும் கொண்டது. s
வலது சோனை அறை ஆனது உடலின் குருதியைப் (Venovs Blood) பெற்று வலது இதயவறை gllnes நுரையீரல் களிற்கு BP 25/8 mm Hg அமுக்கம் ஊடாக குருதியைச் செலுத்தும். பின் நுரையீரல்களை அடைந்த குருதி ஆனது நுரையீரல் நாளம் ஊடாக
இடது சோனை அறையையும், அங்கு இருந்து இதய,அறை
osa-rs BP 120/80 mm H9 அமுக் கத்தோடு உடல் இழையங்களிற் கான குருதியை தொகுதிப்பெரு நாடி ஊடு செலுத்துகிறது Oxygenated Blood). 36670 தொழிற்படும் இதயம் ஆனது ஒரு சாதாரண சுகதேசியில் ஒரு நிமி டத்திற்கு 70-75 தடவை துடிக் விறது. 5.5 Lite குரு தி  ைய குறித்த அமுக்கத்துடன் ! நிமிடத் தில் செலுத்துகிறது. (Cadac out put). கடின வேலைகள் | all-fi பயிற்சியின்போது Cad&ே out Put 0-35 Litre I minute ஆகவும் அதிகரிக்கிறது.நித்திரையின்போது

Page 19
இதயத் துடிப்பு சற்று குறைவாக வும் இவ்வாறு உடல் பல ஏற்ற இறக்கங்களுக்கு இசைந்து செயற் படுகிறது.
இவ்வாறு செயற்படும் இதயம் e2.60T 51 ep66Tö6 750 ml / minute என்ற வீதத்தில் தொடர்ச்சியாக குருதியைச் செலுத் து கிற து தொடர்ந்து 10 செக்கனுக்கு மேல் மூளைக்கு குருதி விநியோ கம் தடைப்படின் மயக்கமும் 10 - 15 நிமிடங்களுக்கு மேல் தடைப்படின் மரணமும் சம்பவிக்கிறது. இதில் இருந்து இதயத்தின் தொடர்ச்சி யான இயக்கத்தின் அவசியத்தை உணரலாம்.
இனி உறுப்புமாற்றுச் சிகிச்சை
யைப் பற்றிப் பார் க் கலாம்.
உறுப்புமாற்றுச் சிகிச்சை பொது வாக இரண்டு வகைப்படும்.
1. Homo Transplantation - 6 (5 இனத்தைச் சேர்ந்த விலங்கின் ஒரு உறுப்பை அதே இன விலங்கின் உறுப்பிற்கு மாற்
ரீடாகட பொருத்துதல்.
உ-ம் : மனிதன் -> மனிதன்
2. Hetro Transplantation —— (ab இனத்தின் ஒரு உறுப்பை வேறு ஒரு இனத்தின் தொழில் ஒத்த உறுப்பிற்காக மாற்றீடு செய் தல்.
உ-ம்: குரங்கு - மனிதன்.
இவ்வாறான சிகிச்சையில் சிறு நீரகம், ஈரல், நுரையீரல், இதயம்
UTO நகரில் & w a v w
ནི་
புதிய, பழைய படங்களை வாடகைக்கும்; பதிவு செய்து கொள்வதற்கும்
சிறந்த இடம்
42, மணிக்கூட்டு வீதி, saleera
O 34
குணம் வீடியோ சென்ரர்
- s
யாழ்ப்பாணம்.
JAKOMKOMSga
SSMSSSMSSSLSL SSAAAT iiTSeASqTSeSTSqMSqeqS

என்பன அடங்கும். இதில் சிறு நீரக மாற்றுச் சிகிச்சை முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இலங்கை உட்பட பல நாடுகளிலும் வெற்றி
கரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதய மாற்றுச் சிகிச் சையோ, செய்முறைப் பராம
ரிப்பு, மாற்று இதயத்தைப் பெறு தல் ஆகிய சிக்கல்களினால் இன னும் (புன்னேற்றத்தை நோக்கிய பாதையிலேயே செல்கிறது.
இதய மாற்று சிகிச்சை ( Heart trans Plantation) Lubnu 2ů6) கள் 19 ஆம் நூற்றாண்டிலேயே துவக்கப்பட்டாலும், 1905 ஆம் ஆண்டில் தான் ஒரு நாய்க்கு Dr Carrel g) 657 stráiv (@anusibstólagsgruDTaF5 இதயம் மாற்றப்பட்டது. இத னால் புத்துயிர் பெற்ற இத்துறை 1967. Dr. Burnart LD Gof 3 Gir g).5ub Homo Trans plantation. முறையில் (விபத்தில் இறந்த ஒரு வரது இதயம் மற்றொரு இதய நோயாளிகரு) வெற்றிகரமாக மாற்றப்பட்டது.
இனி, இகயத்தை மாற்றீடாக பெறுவபர் (வாங்கி), மாற்று இத யத்தை தானம் செய்பவர் (வழங்கி ஆசியோரின் தகுதி களைப் பார்ப்போம். வாங்கியின் தகுதி - இதய மாற்று சிகிச் சைக்கு தெரிவு செய்யப்படுவர். மாற்று மருத்துவ சத்திர சிகிச்சை களால் குணப்படுத்த முடியாத வராகவும், இறுதிக்கட்ட முயற் சியாகவும் இது இருத்தல் வேண் டும். சுவாச வியாதிகளால் பாதிக் கப்படாதவராகவும், வ ய தி ல் இளையவராகவும் இருத்தல் நன்று.
வழங்கியின் தகுதி'- வழங்கி யின் இதயம்தோய் அற்றதாயும் மரணத்தின்போது காயப்படாத தாயும்இருத்தல் வேண்டும். மற்றும்
மாற்றம் =
வழங்கியின் உடல் நிறை, உயர பெருமளவு வாங்கியை ஒத்திருத் தல் வேண்டும். ஏனெனில் வழங்கி யின் இதயகுருதி வழங்கும் வீதம் வாங்கியின் உடல் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருத் தல் வேண்டும் வயது 35 வருடங் களுக்குள் இருத்தல் நன்று. வழங்கி யின இதயத்தை இறந்த கணத் தில் இருந்து 6 மணி ரேத்திற் குள்ளாக மாற்றி ஆகவேண்டும். காரணம், இதயத்தை குளிர் CARDO PLEGIC GranušGg Gir 6 மணித்தியாலத்துக்கு கு  ைற வாகவே கெடாமல் பாதுகாக்க லாம்.
சத்திர சிகிச்சையின் போது செயற்கையான பம்பி மூலமாக குருதி சுற்றோட்டம் தொடரப் படுகையில் வாங்கியின் இதய அறைகளின் முதுகுப்புறப் பகுதி (வலது இதயவறை முற்பெரு நாளம், பிற்பெருநாளம் திறக் கும் பகுதியும் இடது இதயவறை சுவாசப்பை நாளங்கள் திறக்கும் Ug,5uptib (Base of the heart) SA கணு அமைந்த இதயப் பகுதி யும் பாதுகாக்கப்பட ஏனையவை வெட்டி அகற்றப்படும். ஆனால் வழங்கியின் இதயம், இதய ம் தொடர்பான குருதிக்குழாய்களை வெட்டுவதால் முழுமையாக அகற் றப்படும். பின்னர் இடது இதய வறை முதுகுப்புறப் பகுதியை வெட்டி அ பற்றி வாங்கியின் Base of the heart g». Gör இணைக்கப்படும். இதே போல வலது இதயவறை நெடுக்காக வெட்டி திறக்.ட்டு வாங்கியின் வலது இதயவறையின் முதுகுப் 1ற பகுதி யு ட ன் இணைக்கப்படும். வழங்கியின் மேலப் பெருநாளமும் கட்டப்படும். இவ்வாறு சத்திர சிகிச்சைப்பகுதி முடிவடைகிறது.
O 35

Page 20
இதயமாற்று சிகிச்சை இத யத்தை மாற்றுவதுடன் நின்று விடுவதில்லை. மாற்று இதயத்தை எமது உடலின் ஒரு உறுப்பாக இயங்கச்செய்தல் அவசியம் ஆகி றது.ஏனெனில் எமது உடலினால் மாற்றும் இதயத்திற்கு (Antigen) எதிராக பிறபொருள் எதிரியை (Antibody) உருவாக்கி மாற்று இதயத்தை செயல் இழக்கச் செய்து si) is. Cellular immune Res-tחs plaחסtrסוחםnse)ggIHםp ation செய்யும் ஒத்த இரட்டை Irri dentical 監s) தவிர்ந்த எல்லோருக்கும் ஏற்படும் பிரச் சனையாகும். இதுவும் மாற்று சிகிச்சையின் தோல்வியில் பங்கேற் கும் அம்சமாகும். இதனை தவிர்க்க நிணநீர் தொகுதியை அடக்கும் மருந்துகள் (Immபா8 Sபpression dாபg8) பாவிக்கப்படு
கிறது. இவ்வகை மருந்துகள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. இதனால் பல பக்க விளைவுகளை தோற்றுவிக்கிறது. மற்றும் இதய பக்கத்தையும், பிறபொருள் எதிரியால் தாக்கப் படுகிறதா என்பதையும் (E.C.G. ETitlt m yo Cardia biopsy) போன்ற பரிசோதனைகள் அடிக் கடி நிகழ்த்தி ஆராயப்படும்.
இவ்வாறு இதயமாற்று சிகிச் சையை வெற்றி கரமாக நிகழ்த்து வதற்கு பொருத்தமான இதயத் தைப்பெறுதல், சத்திர சிகிச்சை பிரச்சனைகள், பராமரிப்பு பிரச்சினைகளைத் தாண்டவேண்டி உள்ளதால் இத்துறை ஆமை வேகத்தில் தான் வெற்றி நடை போடும் துறையாக முன்னேறி வருகிறது. *
பூரிப்பு
ஒன்றரைக்கு மேல் 凸_s
எடுத்துக்கொண்டு காலையும்
ட்டுக்கொண்டு இருந்
கார் அந்த இடந்தான் அர இருந்தது நெருங்கி ஒர் அமர்ந்தேன். 'இன்னொருவர் அமர வேண்டும் என்றும், துமர் வந்துள்ளார் என்றும் சிறிதும் அசைவின்றி அமர்ந்திருந்தார் அவர்
மான் ஒன்றும் சொல்லாமல் பாதி உள்ளும் பாதி
வெளியுமா
அந்தேன் பையில் இருந்த திருக்குறள்ள எடுத்து து எடுத்ததும் படித்ததும் அவர் களில் பட்ட பின் இருப்பில் தாக்கிப்போட்டிருந்த | iii ஒன்று ஒன்றே சாலாப் ஒன்றாய்க் குறுகியது இடம் அவர் வாய் அவரை அறியாமல்ே நன்றாக இருந்து கொள்ளுங்கள் ான்றது. நீங்கள் வாய்ப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றேன். இல்ல்ை இல் நீங்கள் நன்றாக டிட்சர்ந்து கொள்ளுங்கள் ான்று என்போவே ஒல்வியாக அவர் முக்காலும் ஆன்ார்
விரிவான்ே ஒன்றே முக்காவடித்திருக்குறள் தன் வேனே ால்லாம் செய்து விடுகின்றது என்று பூரிப்படைந்தேன்.
36
( in தொகுப்பு-க கனகராசா ஆதாரம் - குறளியம்

65țIîifoii 1993
போர்க்காலச் சூழ்நிலையில் இந்த மண்ணை விட்டோடாது னையே நேசித்து இருக்கின்றவர்கள் எல்லோரும் தேசாபிமானிகள் ான். ஆனால் ஏனைய மக்களுக்கு முன்னுதாரணமாக பணியாற்று ான்ற ஒவ்வொரு மனிதரும் உன்னதமானவர் இவர்கள் "தேசாபிமானி, ாக கெளரவிக்கப்படவேண்டியவர்கள்.
இந்த வகையில் எமக்கு கிடைக்கப்பெற்ா ஆதரவுச்சீட்டுக்களின் டி திரு ஆ. சி. முருகுப்பிள்ளை (விநாயகர் தருமநிதியம்), திரு. க. ாணிக்கவாசகர் (அரசாங்க அதிபர்), திரு. இ. மகேநீதிரன் (அதிபர்). ாநிதி க. கனகராசா, துணைவேந்தர் அ துரைராஜா, துர்க்கா ாந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி என்போர் இந்த ஆண்டுக் ான தேசாபிமானியாக மக்களால் விதப்புரை செய்யப்பட்டார்கள்
இவர்களின் விதப்புரைகளின் படி ஆதிகமான ஆதரவுச்சீட்டுக் ாளப்பெற்று எமது மன்றத்தின் பெறுமதிமிக்க 1993ம் ஆண்டிற்கான தேசாபிமானி விருதைப்பெற்றுக் கெளரவிக்கப்படவுள்ளவர் உயர்திரு
ஆ. சி. முருகுப்பிள்ளை அவர்கள்
- - - -
தேசாபிமானி விருது
விருதின் பெறுமதியையோ, வேறு எந்த அளவு கோல் களாலோ கொண்டு விருதினை மதிப்பீடு செய்யலாகாது. இந்த விருது எதற்காக, ஏன், யாரால், யாருக்கு வழங்கப்பட்டது என்பதை சிந்தித்துப் பாருங்கள்
இவர் இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பவர். மக்கள் ாளியே மகேசன் பணி என வாழ்ந்து கொண்டிருப்பவர் . لا الاقة اليا களைக் காதலிக்கும் எளிமையான மனிதர் ஏழைகள், இடம்பெயர்ந் வர்கள், ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு பல்வேறு உதவிகள் புரிந்து ஆதரிப்பவர். இலவசமாக நூல்கள், சஞ்சிகைகள் வெளியிட்டு விநியோகிப்பவர்; அறநெறிச்சிந்தனையில் அறம் வளர்ப்பவர்; பெரும் கொடையாளர். இவரது பணிகளை எழுதத் தொடங்கினால் விரிந்து கொண்டே போகும். இவ்வாறான ஒருவருக்கு எமது மன்றத்தின் :மானி 93" விருது கொடுப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடை கிறோம்.
இதேவேளை பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் மக்களின் பின் ਸ਼ੇ உழைக்கின்ற இந்த நாட்டை நேசிக்கின்ற அனைத்துத் தேச அபிமானிகளையும் நன்றி உணர்வுடன் வாழ்த்துகின்றோம்.
|마 - 12 - 1993 தமிழ்த்தாய் மன்றம்.
Title = @ 37

Page 21
g
O 38
மக்கள் பணி
நீர் விரும்பும் uLurT6Tri- u urrfit ?
ச. சுகன்யா, நீர்வேலி, எங்கள் தொழிலதிபர் க. கனகராசா
சிலர் ஆற அமர இருந்து சாப் பிடுவதில்லையே! ஏன்? ப. ரவி, பளை. சிலருக்கு இல்லை பசி, சில ருக்கு பிஸி.
சுருட்டியாரே! நீர் நரகத்துக் குப் போக விரும்புவதாகக் கூறினீரே! ஏன்?
எஸ். சுமங்கலி, அது தான் என் நகரம்.
சுன்னாகம். காதலியின்
இ9 சுருட்டியாரே! உமக்குப்
பிடித்தது எது? அறவே பிடிக்காதது எது?
வரதன், யாழ்ப்
பாணம், வாதம் - பிடிவாதம்.
இ9 சுருட்டியாரே! நீர் பெண் ணாகப் பிறந்திருந்தால் இப்போ என்ன செய் ബ്f്? ம. ஜெயந்தி, மட்டுவில். *சும்மா போங்க - வெட் கமாய் இருக்கு.
இ9 சுருட்டியாரே! நீட்டக்
கூடாதவை எவை? செந்தில், உரும்பிராய், கை, நா.
தங்களுக்குத் தாங்களே பட் டம் சூட்டுபவர்கள் பற்றி. க. கோபி, கோண்டர்வில். முடிசூடும் பரதேசிகள்.
சுருட்டியாரே! தீர்? க. வதனி, உடுவில். பொன்விழாக் கண்ட கல்லூரி யின் சகோதரர் நூற்றாண்டு விழாக்கண்டதிலே!!
எங்கே படித்
 
 

ଓଡ୍ର
ཉུ་
ཞུ་ཟེ་
{0 /ፃ
சுருட்டியாரே! உங்கள் கல் யாணம் எப்போ? த. ராஜா, புத்தூர். வெள்ளைப் பச்சை விற்கிற விலையிலை கல்யாணமாவது கத்தரிக்காயாவது.
நீங்கள் உங்களை நினைத்து எப்போதாவது பெருமைப்பட் Ligi 6' -ti P இ. தடவி, உரும்பிராய். என்லையே நான் சுருட்டிக் கொண்டு கிடைப்பதைச் சுருட் டிக்கொண்டு இருப்பவனுக்கு கர்வமா! அதர்மமே! சத்தியம்,
உண்மை என்ற
”பதங்கள் ஒரே பொருளுடை
Görørr? இ விாபன், சாவகச்சேரி 6ài quino) tí) (ohn II tī), o. 6): 6ön to (2 si arr), Goti6pLD (Guoti)
ஒருங்கு சேர்ந்ததே சத்தியம் சுருட்டியாரே! லே க ம ர் கப்
Lilgid, 6) frt Dirp
ம நளினி , அரியாலை. Gi su chưI trib, cứìGous Loirësử tuu. யுங்கள்.
என்றுமே ஒன்று உள்ள இடத் தில் இன்னொன்று இருக்க முடியாது. அதைக் கூறமுடி | այլոn ?
க. சேகர், பருத்தித்துறை. இருள் - ஒளி சுருட்டியாரே! நீர் உலகில் விர ல்வி ட் டு எண்ணக்கூடிய Lu Goor dj, hrr p r mr Go? Gur. ers என்ன? படிப் பறி வில்லாத தாலோ.
92
சுருட்டியாரே! தூக்கம் வரு குதில்லையே! எம். சோபனா, நல்லூர் கேள்வி இடம்மாறி வந்திருக் கிறது. பரவாயில்லை தினசரி பத்திரிகை படியுங்கள்.
சுட்டியாரே! நன்றாகப் படிப் பதற்கு என்ன வழி? ச. தர்ஷா, மானிப்பாய். இள மயில் கல் உங்கள்.
எப்படிப் பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண் டும்?
ப. பிறேம், அச்சுவேலி. தட்டிப் பேசு பவர்களிடமே அன்றி அதட்டிப் பேசுபவர்களி டம் அல்ல.
சுருட்டியாரே! உயர்வதற்கு என்னவழி? ஐ. சுதா, வல்வெட்டித்துறை. மரத்தில் ஏறிக்கொள்ளுங்கள்.
குத்துச் சண்டை வீரர்களைப்
... (ژLtbn |
சி. சுரேஷ், சாவகச்சேரி. கையை மூடிக் கொண்டே கைநிறைய உழைப்பவர்கள்.
நகங்கடிக்கும் பழக்கம் எனக்
குள்ளது எவ்வாறு இதை நீக்கலாம் ? ம. மயூரன், நல்லுTர்.
பற்களைப் பிடுங்கிவிடுங்கள்.
TTTTTLTLT LTTTTLYLLLL LLLLLLLTLTTS LLLTTTTTTLT LLTTLTTTTLLTLLLLLLLLS
-g-
ற்றம்
O 39

Page 22
சுந்தரின் பக்கம்
ല്ല്ല മഗസ്ത്രഞ്ച് ബ്ലുമ
炎=s'%「尋。 ކިބައި
代代 A2. s: :22,
.S ܓܠ N《 مر alo
ല്ലു,മ്ലീ,മ്ലYഗ്ലൂക്നe }, ൧ിന്നീ|ബബ്ലേ ഴ്ചല്ലa 荔经 ഴ്ചക് 罗
نثر مجبریخ مجھ لیجی ترویجیۓ
 

மண்டையோட்டு மனிதன் எப்படி ஏமாந்தார்?
அந்த மண்டையோட்டு மனிதன் உஷாரானவர். வேலை செய் பவர்கள் ஒய்வெடுத்துக்கொள்ள வெளியே போய்விடாதபடி, நடு விலுள்ள மாளிகையிலிருந்து ஜன்னல் வழியே கண்காணிப்பார். 16 ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். எந்த ஒரு ஜன்னலில் நின்று பார்த்தாலும் ஐந்து பேராவது வேலை செய்வது அவர் கண் களுக்குத் தெரியும்,
மண்டையோட்டு மனிதனை விட வேலையாட்கள் கெட்டி, அவர் களில் இrண்டுபேர் ஒய்வெடுக்கப் போய்விட்டார்கள். ஆனால் பாக்கி யுள்ளவர்கள். ஏதோ ஒரு விதத்தில் நின்றுகொண்டு மண்டையோடு மனிதன் எந்த ஒரு ஜன்னலிலிருந்து பார்த்தாலும் பழையபடி ஐந்து பேர் இருப்பது போல் காட்சி தந்தனர். எந்த மாதிரி அமைப்பில் அவர் கள் நின்றனர்? (தீக்குச்சிகளை உதவிக்கு வைத்துக்கொண்டு புதிரை விடுவிக்கப் பாருங்கள். முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது44ஆம் பக்கம் )
v v v
( - D B O e-سے <
D-O
> ----CD
> ----CD to O O ()- a
A A A
மாற்றம் O 41

Page 23
O 42
பல உண்மைகளையும் அறிவுக்குச் சுவை1 யான விடயங்களையும் அள்ளி வழங்குகின் றாய். உன் பயணத்தின் இடைநடுவில் கரடு முரடான பாதைகளைச் சந்திக்க நேர்ந் தாலும் வீறு நடை போட்டு வெகு சிறப் பாகத் தொடர எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
ந. தேவா, அத்தியடி,
வீ ட் டி ல் இருந்துகொண்டு நாட்டு நடப்புக்களை அறிய ’ ‘மாற்றம்’’ எனும்
அறிவையூட்டும் சஞ்சிகை உதவுகிறது.
யே. நிரோஷானந், யா/மத்திய கல்லூரி.
மங்கல வோசை முழங்க - மன
மலரினம் பூத் தெழில் குலுங்க
நற்றமிழ் மாற்றம் வந்தான்
அறிவெனும் தீபத்தை ஏற்றி - நல்ல
வாழ்வெனும் சுடரினைப் படைத்து
தெளிவெனும் ஒளியாய் நாங்கள்-பெரும்
சிந்தனை வளர்த்திடுவோமே.
இ. ஜெயக்குமார் யா/ஹாட்லிக் கல்லூரி.
மாற்ற மலரே உன்னைக் காணாது
எனக்குத் தூக்கமேது
நீ மாதத்திலொரு முறையாவது
மலரக் கூடாதா!
நீ தாங்கியிருக்கும் அனைத்து
அம்சங்களும் பிரமாதம்.
ச. சுதர்க்ஷா மெய்கண்டான் மகாவித்தியாலயம்.
 

ദ്ദ്
பெருமைதனில் உயர்ந்திட்ட பெண் என்னும் பெருவிளக்கே
அடுக்களை வாழ்க்கையை நீக்கு
புதுயுகமே எங்கள் நோக்கு
பூவென்று சொல்வார் - உனைப் பூசைப் பொருள் என்பார்
பூவே நீயிங்கு பூகம்பமாய் மாறிவிடு
புல்லவர்கள் புதையட்டும் நிலவென்று சொல்வார் - உனை
நெருங்கிடவும் முனைவர் நிலவே நியிங்கு நெருப்பாக மாறிவிடு
நீசர்கள் எரியட்டும்
மலரென்று சொல்வார் - உனை மாய்த்திடவும் முனைவர்
oഖരേ நியிங்கு முள்ளாக மாறிவிடு மூர்க்கர்கள் மிரளட்டும்
கன்னிகளே நீங்கள் கண்ணிகளாகுங்கள் கயவர் படை சிதறட்டும் பொறுத்தது போதும்
பெண்ணே நீ மாறிவிடு.
O 43
மாற்றம்

Page 24
LLLLLL SSS AAMAAMALkE DSSzSeLLLLLLLSLLLLLLLAeeAeAS eeLTAS AAAAA AAAAS ESAAAAS
இன்றைய அறிமுகம்!
சிற்றி போய்
ரெயிலர்ஸ்
பெற்றுக்கொள்ள
CITY BOY
TALORS
181, சிவன்பண்ணை வீதி, Go 35 TIL Lą, யாழ்ப்பாணம்.
நவநாகரிகத்திற்கேற்ப ஆடைகள் தைத்துப்
உரிமையாளர்: R. LfTR)ff
மண்டையோட்டு மனிதரை
பதிலளிக்கிறார்
மாற்றிய விகம் உங்கள் கேள்விகளுக்கு" மாற்றம் ஏமாற்றய விதம் அடுத்த இதழில் கம்ப வாரு தி ஜெயராஜ் அவர்கள் பதிலளிக் கிறார். கேள்விக்கணைகளை விரை வில் "மாற்றம் பணிமனைக்கு MuzМ kumwuruv அனுப்பிவையுங்கள். *xmaw
அட்டைப்படக் கவிதைப்
போட்டி - O) அட்டைப்படத்தைப் பார்க்க என்ன தோன்றுகின்றது என்ப தைக் கவிதையாக எழுதி அனுப் -- XrWv My புங்கள். சிறந்த கவிதை எழுதிய MM-sass Wor வருக்கு 'இளங்கவிஞர் பட்டம் வழங்கி, அவருடைய கவிதை எடுத்த இதழில் பிரசுரமாகும்.
O 44

உறவு உண்மை உதட்டினில் Gλανσιόνευ (ο Φνευσώωνσυςνώ இருநெஞ்சம் கொண்ட பகல்வேஷம் போட்ட பரந்தாம ரூபங்கள்.
inst to
இரண்டால் ஒன்றாகி
- பின் இறந்தாகி நானகால
நகராவிடின் நாற்மெடுக்கும்
நாயுமிழுக்கும்.
- சந்திக்கல்.
அனுபவங்கள்
நினைவின் நெருப்பில்
m 6(1567 கடந்தகால அனுபவங்கள் பல கறுத்துப்போயின புதிய அனுபவங்களை புகுத்திவிட - எந்தப் பிரபஞ்சமும் எங்களுக்கு பிடித்தாகவில்லை.
- சமுத்திரபந்தன்.
கண்
சின்ன விழிப்பார்வை
இனி மீளாதோ ! சிரிப்பினின் ஒசை
கேளாதோ மான் இணைநெஞ்சம்
இனி ஆளாதோ ! மறுகண்ணிலா நிலை
மாளாதோ ! - us T3).
வளர்பிறை வளரும் இளங்கவிஞர்
களுக்கான பக்கம். மாணவர்களே! நீங்களும் எழுதலாம்.
சிறுகதைப் போட்டி: 02
வாசகர்களே!
தரமான கருத்தாழமுள்ள சிறுகதைகளை "மாற்றம்" சஞ்சிகையில்
பிரசுரிப்பதற்காக எதிர்பார்க்கிறோம்.
தெரிவுசெய்யப்படும் தரமான
சிறுகதைக்கு ரூபா 99.00 பரிசாக வழங்கப்படும்.
45O
மாற்றம்

Page 25
*அறிவியல்
O 46
ton Lost'
* அறிவியல் மாமா' உங்கள் சிந்த னையைத் தூண்டும் புதிய பகுதி. மாமா உங்களுடன் உறவாட ஒவ்வொரு மாற்றத் திலும் மகிழ்வுடன் வருவார். அன்புத் தங்கை தம்பியரே உங்கள் அறிவியல் புதிர் களுக்கு விடைதர வரும் மாமா, இம்முறை உங்களிடம் சிலகேள்விகளை கேட்கவுள் ளார். உங்களிடமிருந்து இக்கேள்விக்கான உரிய விடைகள் கிடைக்கப்பெற்றால் அதை மாமா பிரசுரிப்பார் அல்லது மாமாவே உங்களுக்கு விடைதகுவார்.
இனிவரும் ஒவ்வொரு மாற்றம் பாதை லும் நீங்கள், ஒவ்வொருவராக கேள்விகள் மூ கட்பீர்கள். அதை நாம் பிரசுரிப் போம்.
இன்னொரு சாரார் அக்கேள்விகளை பார்த்து விடைகண்டவுடன் பணிமனைக்கு அனுப்பிவைப்பார்கள் , மாமா அடுத்துவரும் இதழில் பிரசுரிப்பார். தேவை ஏற்படின் மாமாவே பதிலளிப்பார். ܗܝ
இதோ இம்முறைக்கான கேள்விகள்,
1. மின்னலின் மின்சக்தியைப் சோதனை மூலம் ஆராய முற்பட்ட விஞ்ஞானி
Liri ? 2. அறிவியல் அறிஞர் மாமேதை ஐன்ஸ்ரீன்
கண்டுபிடித்த தத்துவம் யாது? 3. இரும்பு நீரில் அமிழ்கிறது. ஆனால், இரும்பால் செய்த கப்பல் நீரில் மிதக் கிறது. இதற்குக் காரணம் தருக. 4. குண்டு வெடிக்கும்போது காது செவிடு படும்படியான ஓசை வருவதற்குக் காரணம் என்ன? 5. ஒரு இறாத்தல் பஞ்சா ஒரு இறாத்தல் இரும்பா உண்மையில் நிறை கூடியது?

பெயர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
turtled tooa) : . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
.. au
குறுக்கெழுத்துப் போட்டி முடிவுகள்: 04
இ , ம60ளிnேகலை மே 4 1. மகுடி
4. குக்கர் 2. மேகநாதன் n, நாத்தி ( கன் ) 3. கர்த்தபம் 8. துன்பம் 6. திடம்
f), fn) y 7. மதுரை
ufiສ6 ຕງໃໃຄງຕໄ:
நா. தரவிதரன், யாழ். இந்துக்கல்லூரி. ரா. கம்ஸலா, வட்டுக்கோட்டை. ச. மஷோ, இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம். ச ரி.,ாயன், யூனியன் கல்லூரி. திரும , கு. சகுந்தலா, யாழ்ப்பாணம்.
:
*********ம்
e aos 88,66aAaaAmhdhähtavataa* dadi settaessabsabas:
* பாடசாலை உபகரணங்கள் * இந்திய சஞ்சிகைகள், புத்தகங்கள்
நியாய விலையில் பெற்றுக்கொள்ள
அம்மா புத்தகசாலை
51-55, அரசடி வீதி, யாழ்ப்பாணம்.
亨亨F夺°F亨亨呼亨FFFFFFFFFF卒卒FF°卒a卒平FFFrp夺卒卒卒卒变露
orpp9 = O 47

Page 26
I 2 _L上兴爱
兴兴K※※3 巻愛| 鈴姿 a 兴爱桧兴 ※爱1 蚤空 G 4 やさや|5 6 S) , ? I' l_l_l__မ္ဘိဒါ့” _ s E 米兴17 ** 速 |姿送 ܚܚܚܚܝ ** es
v 8 | 9
岑兴
இ -> 1. இது ஒரு வலை
2. பசுத்தொழுவம்; பசுக்கூட்டம் 3. ஒரு விஞ்ஞானி 4. உதவிக்காக உதவுவது 5. இறங்கச்சொன்னால் இவனுக்கு கோபம்
இறுதி எழுத்து மறைந்தது. 7. சங்குகளில் சிறந்தது 8. ஊசி போடும் அம்மையார்.
9. ஏறச்சொன்னால் இதற்குக் கோபம்.
மே 4 1. இதில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது.
'மதியாதார் வாயில் மதித் தொரு காற் சென்று மிதியாமை" இவ்வளவு பெறும். 3. இது ஊர கற்குழியும். 6. எல்லேர்ருக்கும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பது. 7. செல்வம்; செழுமை குறிப்பதின் ஈற்றெழுத்து ஒழிந்தது.
போட்டியில் யாவரும் பங்குகொள்ளலாம். இக்கூப்பனை நிரப்பி ** மாற்றம் பணிமனை ** புதிய செங்குந்த வீதி, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம். என்ற முகவரிக்கு அனுப்பிவையுங்கள். பரிசுத் தொகை: ரூபா 99. 00
இச் சஞ்சிகை தமிழ்த்தாய் மன்றத்துக்காக புதிய செங்குந்த வீதி யில் உள்ள வே. நவமோகன் என்பவரால், யாழ்ப்பாணம் அருண் பிறிண்டேர்ஸில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
O 48 c ܚܫܚ-ܫܟܚ

“மாற்றம்" தொடர வாழ்த்துகிறோம்.
செல்லையா சிவபாதலிங்கம்
வைரக்கல் நகை வியாபாரம் 191 11, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
LL LLLLLtttLLtLLLsOsOsOOOCLL00OkOLOLOLLLLLOLOLeeSLLkHLLLLLLL0000OLOLSLOsLLLz
வாழ்த்துகிறோம்.
மங்கள நிகழ்வின் மறக்க முடியாத நிகழ்ச்சியை தெளிவான கவர்ச்சியான, நேர்த்தியான படங்களைத் தருவதில்
பல வருட அனுபவம் உள்ளவர்கள்
ஜெகன் போட்டோ
399, மணிக்கூட்டு வீதி, 234/4 A, அருச்சுனா வீதி, (பெருமள் கோவில் அருகில்) (பூரீதர் திரையரங்கு முன்பாக) யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்.

Page 27
தங்கப்பவுண் நகைகளு
உங்களது நயம் நம்பிக்
நாணயமுள்ள தங்க ை
நகைகளுக்கு சிறந்த ஸ்த
நியூ
741, கஸ்தூரியா

TIL SISTE
jblI
பிதா ஜபவல்லர்ஸ்
萨á品,
யாழ்ப்பாணம்,