கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முகில் 1995.09-10

Page 1
sEPT. oct. 19.
கால்மேல்கால் போட்ட கால்பின் உயிர்பிரித்த Api, Illi) புரிந்த
Jl. Liri மனதேற்கும் ஆற்றல் இலாதே அலையும் எனைநோச் காற்று விரித்துக் கழறுமிது:-
மாவிடனே!
செத்தும் கவிகொடுக்
செல்வராசன் இத்தை நித்தம் நிழற்றும் நிழலாக மாறிபுவான் ஆங்கமர்ந்து சற்றே அலுப்புத் தொலைத் ஓங்கற் கெழுதிவ் வுெ
From DoLLAR
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

e5 176 Rs. 20.oo

Page 2

முகில் - 1 செப்டம்பர் 1995 1 76
பிரதம ஆசிரியர் :-
அல் அஸ9மத்
இணை ஆசிரியர்
கலைவாதி கலீல்
வெளியீடு:-
டொலர் ஏக்கேயெம் பப்ளிக்கேஷன்ஸ்
அச்சகம்:-
ரி. ப்காஸ் ஏக்கேuெம் பிரிண்டர்ஸ்
அச்சிட்டு வெளியிடுபவர்
அல் அஸ்சிமத்
காலக்கெடுவின்றி முகில் வெளி
யிடப்படுமாகையால் வாசகர்கள்
பொறுப்பார்களாக. அன்பளிப்பும்
இதழுக்கிதழ் மாறுபடலாம்.
இவ்விதழ்ச் சிறுகதைகள் பற்றிய
சிறந்த விமரிசனம் ஒன்றுக்குப் பரி சுண்டு. 20.12.1995 க்கு முன்னர்
கிடைக்கக் கூடியதாக எ மு தி
அனுப்புங்கள்,
படைப்பாளிகளே தத்தம் படைப்
புகளுக்குப் பொறுப்பினராவர்
சகல தொடர்புகளுக்கும் :-
M.A.AL ASUMATH, 111, ST MARY S ROAD,
MA HABAGE, RAGA MA.

Page 3
LLLLSLLLLLLLYLLLLLYLLLLLLLLLLLLLeLLLLLLeeLEz பாணந்துறை நகரில்
SF 366 மளிகைப் பொருட்களையும் பெற்றுக்கொள்ள
ஒரே இடம்
Bismiah Grocery
53 A, MARKET AVENUE, PANADURA.
சகல வித அச்சு வேலைகளுக்கும்
kifaqa"s AKM Printers
1 / 1, ST. MARY'S ROAD, MAHABAGE, RAGAMA,
 

முகிழ்த்திருக்கிறது முகில்".
கார்முகிலாய் நிழற்றி இலக்கிய மழை பொழிதற்கு அனைவரின் குளிர் மனங்களும் தேவை; வீசுங்கள்.
சிறு சஞ்சிகைகள் நீடு வாழ விளம்பர உணவும் சந்தா நீரும் அவசியம்; நீட்டுங்கள்.
உங்கள் அபிமானமே முகிலின் உயிர்த்துடிப்பாகும். குறை நிறைகளைத் திறந்த மனத்தோடு சுட்டிக் காட்டுங்கள்.
கலையம்சமான புகைப்படங்கள், ஒவியங்களையும் கருத்தாழமான ஆக்கங்களையும் எமக்கனுப்பி முகிலேட்டைக் காத்திரமாக்குவதில் பங்கெடுங்கள்.
ஆண்டொன்றில் ஆயிரம் பக்கங்களில் சந்திப்போம்.
செப்டம்பர் - 1995

Page 4
கன வு ச் ச ட ல ங் க ஸ்
மேமன்கவி
! 、 ܀ என கனவு F சடிலங்களில் முன்னைய கணங்களில் நெளிந்தவை பற்றிய அறிதலின் பொழுது அரித்தது ஆக்1 !
நிஜமும்
நிழலும்
நிழலும்
நிஜமுமாய்க் கலந்து கிடந்தனஎன் நனவிலி நிகழ்வுகள்
முன்னாள் சரீரங்களாய் என்னில் நெளிந்த கனவுச் சர்ப்பங்களில் எனது துகள் தாள் வாசம் செய்தது!
ஒவ்வொரு கணத்தின் சமாந்தரக் கோட்டிலும் தொங்கின என் கனவுகளின் சரீரங்கள்சடலங்களாய்!
நேற்றும்
இன்றும்
நாளையும் எனது கனவுச் சர்ப்பங்களைத் தன் சிவந்த வாயால் இழந்து செல்லும்விடியல் ஓநாய்!
س 5 89 0 0 صر
geه
(பு வில் 1

புலருமா?
கரையை நோக்கும் அலைகளுக்குக்கூட ." ܀ 7
W எல்லை தெரிகிறது;
இடம் பெயர்ந்த நாங்கள் மட்டும் வாழ்வெல்லையைத் தேடிக்கொண்டிருக்கிறோம்!
s
இல்லமும் செல்வமும் இழத்துவிட்டோம்; எப்படி எங்கள் உள்ளம் மட்டும் உறுதியாயிருக்க முடியும்? இப்போதுஅகதியெனும் அவமானப் பட்டமும்.
நாங்கள்ென்ன அமாவாசையின் அவதார மா? விடியலொன்றும் இனிப்புலருமா?
கந்தளாய்
நிலவு
வான மங்கைக்கு இரவுக்காதலன் கிகாடுத்த முதல் முத்தம். மோகம் கொண்டு மேகம் மூடினாலும் தண்ணொளி மாறாத் தங்கப் பவுண். நட்சத்திரப் படையோடு நாடு சுற்றிவரும் வானரசியின் ஏக புதல்வி,
ஹோராப்பொல பெரோலா
முகில் 1 v- ow 5

Page 5
எடுலகான் வைக்கம் முஹம்மது லயில் காலம hனார். அவர்தம் பெள திக இப்போதில்ல்ையெனினும், அவரைப் $லும்ஆர்ஜிதாப்பிரபஞ்சம் சிருஷ் *இல் \ , நோபுரமும் நம்மோடுள.
D6 nélu TóT ரின்த்ரீல்கில் இரசித்தமானவர்களுள்
ஒருவரான கேஸ் ". ரேடு நெருக்கமானவர். அவர் எழுதியிருந்V கட் வரிகமிமாக்கம் : @野 ཨ༧ན་ అళ్లj p இது
w کنتيجS கேட்ட காண்ங்கி 斋考 மையானது கேளாக்
*
கானங்கள்" என்பூசிதை rNeir றதிே,(A கதைத் தலைவனாகிய வைக்கம் முஹம்மது ப4rரும்ை ழதப்படாக் கதைகளின் விஷயமும், ஐந்து தசாப்தத்துக்கும்திேகமாக நீண்டு நின்ற எழுத்து வாழ்வில், உண்மையில் பஷ்ர் எழுதியுள்ளவை ஏ ற க் குறையக் கதை"கள் மட்டுமே. ஆனால் எழுதியதன் இரட்டிப் புக் கதைகளை இக்கதாசிரியர் கூறியிருக்கிறார். அனைத்துமே தம் அனுபவங்களிலிருந்து கூறப்பட்டவை.
"அனுபவங்களே யதார்த்தத்தில் மிகப்பெரிய அறிவு' என பவுர் தாம் கதைக்கும்போது யாரும் மனம் கொள்ளும்படி செய்வார். சூரியனின் கீழுள்ள அவ்வளவு விஷயங்களைக் குறித் தும் அவர் பேசுவார். அக்கதைகளிலும் விஷயங்களிலும் ஏதா வதொரு விதத்தில் அவரும் ஒரு பாத்திரமாகவே அமைந்திருப் பார் . வேப்பூரில், தம் வீட்டு முன்புள்ள மரநிழலிலிருந்து அவர் உரையாடிய சந்தர்ப்பங்களிலெல்லாம், ஒரு விஷயம் 10% க்குத் தோன்றியதுண்டு. ‘கேரளம் கண்ட மாபெரும் உரையாடல் மன்னன் என்று வைக்கம் முஹம்மது பஷீரை நாம் சிறப்பிக்க லாம்" என்பதுவே அது.
இவ்வளவு அதிகமான வாழ்க்கை இடர்ப்பாடுகளோடும் அலைந்துள்ள ஓர் எழுத்தாளன், மலையாளத்தில், டவுரைப் போலும் இன்னொருவர் இலர்! இளமையில் திளைத்திருந்த காலகட்டத்தில் ஒரு பத்துவருஷக்காலம் அவர் திரிசங்குசொர்க்க நிலையில் அலைந்து திரிந்துள்ளார்- எத்தனையோ ல்ே ஷங்களில், உருவங்களில், மனோ நிலைகளில், ஹோட்டல் வேலைக்காரன், கப்பல் கூலியாள், தெரு- மாயவித்தைக்காரன், பத்திரிகை விற் பவன், பழ வியாபாரி, சமையற் காரன், கம்பெளண்டர் , ஈத்தி யாசி- என்றிப்படிப் பற்பல வேஷங்கள்!
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தத் தேச சஞ்சாரம், இந்தியாவுக்குள்ளானதாக மட் டும் அமைந்துவிடவில்லை. அரேபியாவிலும் ஆப்பிரிக்க நாடு களிலும்கூட அந்த ஊர்சுற்றுகை வியாபித்திருந்தது. கலக்கம் மிகுந்த அப்பயணங்கள் பரிசளித்தவைதாம், பஷீர் உரையாடிய எழுதப்படாக் கதைகளுள் அதிகமாக இருந்தவையாகும்.
அக்கதை 1ளை நூலாக்கும் முயற்சி எதுவும் பெரிதாக எடுக்கபபட்டதாகத் தெரியவில்லை. எனினும் அவ்வகையில் ஒரு முயற்சியை மேற்கொண்டவர் என் நண்பர் ஹைதர் அலீ டாட்டாபுரம் ஆவார். கதை எழுதக்கூடியவரான ஹைதர் அலீ ஒரு மாயவித்தைக்காரரும்கூட. அவரோடு பவுர் ஈ டு பா டு கொள்ளக் காரணமும் அதே மாய வித்தைதான். அவ்வுறவு வளர்த்த நட்புக்கிடையில் டஷர் கூறிய சில கதைகள், "சுல்தான் கூறிய கதைகள்’ என்ற பேரில் திரட்டப்பட்டும் உள்ளன. அவை யும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறிய சதைகள்தாம். பஷீரது வாய்மொழிக் கதைகளின் ஒரே திரட்டு இதுவாகமட்டுமே இருக் d6) fi ið
அதில் ஒன்றுதான் பஷீர் மெஜிக்காரனாகிய கதை பல வருஷங்களுக்கு முன்பு அவர் வேலை இல்லாமல் பம்பாய் நகரில் அலைந்து திரித்த காலம். வேலைக்காக அவர் மிதியாத வாசல் இல்லை. அநேக நாட்கள் பட்டினியாகவே இருப்பார். காலையில் குழாயடியில் முகம் கழுவி வயிறு நிறையத் தண்ணிரும் குடித்து வெளியிறங்குவார்.
அப்படி அலைந்து திரிந்த பவுர் , ஜ"ஹ"கு கடற்பக்கத்தை ஒருநாள் அடைந்தபோது, அங்கே ஒரு மாயவித்தைக்காரன் தன் மாயா ஜாலங்களைக் காட்டிக்கொண்டிருந்தான். மாய வித்தை யும் மருந்து விற்பனையும் ஒன்றாக நடந்தன. வித்தைக்காரனின் முன்னாலிருந்த கூட்டத்தினருள் ஒருவராகி இவரும் நின்றார். ஹிந்தியிலான நீண்ட பிரசங்கம் அவனுடையது!
சிறிது நேரம் வித்தைகள் காட்டியபிறகு, அவன் ஒருவகை மந்திரத் தாயத்தை எடுத்து ஜனங்களுக்கிடையில் விற் கத் தொடங்கினான். அத்தாயத்தைத் தரித்தால் ஜின், ஷைத்தான். பேய், பிசாசு- எதுவுமே நெருங்காது! இது பாத்திரமல்ல, எந்த அச்சத்துக்கும் அல்ல்த அணிந்து எந்த பயனத்தினூடே யும் எந்த அர்த் தராத்திரியிலும் நடக்சவும் செய்யலாம்!
சிலர் தாயத்து வாங்கினார்கள். முடிவில் ஜனச் சுட்டம் பிரிந்து போனது. பஷீர் மட்டும் வித்தைக்கிாரன் முன்பு மீதப் ! அவன் அவரிடம் ஹிந்தியில் பலப்பல வினவினான், ஹிந்தி யிலும் மலையாளத்திலுமாக அவர் அவற்றுள் பலவற்றுக்கு ! நு மொழி சொன்னார். அட்போது வித்தைக் காரன் உன முய டன் ல
புரட்டுங்கள் , தொடரலாம்
முகில் 1 al

Page 6
ஆறு மாதமாகியும் ச வூ தி போன கணவரிடமிருந்து பணமும் இல்லை; கடிதமும் இல்லை.
இனி எதிர்பார்த்தது போதும் என்ற கோபக் கவலையுடன், தனக்கு ஏற்கனவே அறிமுகமான ரகுவை நினைத்துக்கொண்டாள் சஹானா, கடிதம் ஒன்றின் மூலம் சந்திக்கவும் தயாரானாள். -
இல்
அழகுக்கோ அறிவுக்கோ வச திக்கோ பஞ்சமற்ற வாலிபன் ரகு. சஹானாவின் வீட்டிலிருந்து சில வீடுகள் கழித்தாற்போல் அவன் வீடு. சஹானாவின் கணவரோடு ஆபீஸில் வேலை பார்த்தவன். இப்போது அதே ஆபீஸில் மேனே ஜர், பத்துக்குப் பிறகுதான் வீட் டிலிருந்து போவான். அதற்குள்"..என் நிலை!..நாலு வயசு மகன் மாத்திரம்தான். என்றா லும். கணவருக்கு இது  ெத ரிய வராது!..எப்படியாவது ரகு ஆபீ ஸ்"க்குப் போகமுந்தி இந்த லெட், டரக் குடுத்திடணும்.
ரகுவின் வீடு நோக்கி ந ட ந் தாள் சஹானா .
*.ஒரு வேளை ரகு கைவிரித் தால்?..
நடந்தாள் கடிதத்துடன், ரகுவின் வீடு. மனக்குழப்பத்துடன் வெளியில் நின்றாள்.
"..என்னடா , பொறுமையில் லாத வெண்ணாயிருக்கிறாளே என்றுகூட ரகு நினைக்கக்கூடும்! என்ன செய்வது? எப்படி இரு ந் தாலும் புருஷ னில்லாது ஆறுமாத
காலம் இருக்கிற பெண். எநத
முகில் 1
 

வசதியுமில்லாம தனியா எப்பிடி..இது எனக்கு மிட்டுத் தானா?.இதொண்ணும் பாடிமில்லியே!.
கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தாள் சஹானர். ரகு இதற்கு உடனயே ஒரு பதில் தருவாரா, இல்ல.?"
தயக்கம் தொடர்ந்தது. "கட்டியவருக்குச் செய்யும் முதல் அவமரியாதயோ?. தெரிஞ்ச இவரிடம் வருவதைத் தவிர எனக்கு வேற வழியுமில் லிாே!.வாயால கேட்கவும் வெட்கமா இருக்கு!. சரி, யாருக் குத் தெரியப் போகுது? ஆண்டவனே துணை!."
வீதியை நோக்கிய சஹானா பிரமித்துப் போனாள். "வீட்டில பார்த்தன், இங்க இருக்கிறீங்க?. இதிலொரு கெயழுத்துப் போடுங்க!' என்ற தபாற்காரர் கடிதத்தை ரளி தோடு நீட்டினார்,
உடைத்துப் பார்த்தாள். முப்பத்தாறாயிரம் ரூபாவுக்கான ட்றாஃப்டுடன் கடிதம். ரகுவுக்கான கைமாற்றுக் கடிதம் கசங்கியது. திரும்பி நடந் தாள். இன்னும் ஒர் ஆறு மாதம் சென்றாலும் பரவாயில்லைகணவனின் அடுத்த கடிதத்துக்கு! ரகுவும் வேண்டாம்.
கிண்ணியா இர்பான் ★ ★ ★ விற் க ம |ா ட் டே ன் !
கட்டுப்பணம் பெற்றுக்கொண்டு ஆணையிட்டாள் அத்தை. பொட்டு வைத்தான் அத்தான். வேலி போடும் தாலிகூட என்
அப்பன் வீட்டுச் சொத்து! பெற்றுவளர்த்த செலவைக்கூடக் கணக்குப்போட்டுப் பேரம்பேசி வாங்கிவிட்ட அத்தை! பணம் கொடுத்து வாங்கிக்கூடச் சொந்தம் கூற முடியாத விந்தை! கடந்துபோகும் காலத்தில் நானும் ஓர் அம்மா : மலர்ந்துவரும் வாழ்வில் நானும் ஒர் அத்தை! என் மகனை வாழவைப்பேன்; வாங்கமாட்டேன் பணக் கற்றை, பெற்றுவளர்த்த கூலி கேட்டு என் தங்க மகனையும் தாய்மையையும் விற்கமாட்டேன் இன்றைய அத்தை மார்போல்!
ஏத்தாலைக்கொலணி றிஸ்வானாஹமீட்
முகில் 1 9

Page 7

மலையாள்ம் 4 தமிழ்
பேபி மேனோன். திருவனந்தபுரம் கண்ணன் மேனோன் கே.வி. ராமபுத்திரன
gj . . . ー。
An
மரணம் எங்கள்முன் நடமிடத் தொடங்கிப் பலநாட்கள் ஆகிவிட்டன. இன்று. அதன் பயங்கரம் குறைந்திருக்கிறது. மரத்துப்போன எங்கள்'மனங்களில் அச்சமும் கவலையும் எந் தச் சலனத்தையிம் சிருஷ்ட்டிக்கவில்லை வெடியேர்சையும் வெடித்தெறியும் தீநாளங்களும் அட்டகாசங்களும் அந்தகாரத் தைத் துளைத்துவரும் ஒலங்களும் எங்கள் ஜீவியத்தில் நித்திய சம்பவங்களாக மாறியுள்ளன. ཆ་
இதிலெல்லாம் எங்களுக்கிப்போது ஒரு புதுமையுமில்லை, நாங்கள் பரஸ்பரம் கதைத்துச் சமாதானப்படுத்திக்கொள்கின் றோம். ஒருநாள் அக்கினிக்கோளம் வாய்பிளந்து நம் எல்லா ரையும் விழுங்கும். அதுவரை 'நாங்கள் ஜீவிக்கலாம். முடிவு நெருங்கியுள்ளதென்ற தெளிவு, எங்களைச் சிறிதும் அலட்டுவ தில்லை. எல்லாமே தீர்மானிக்கப்பட்ட்துபோல் அமைதியான வர்களாகி நாங்கள் வ்ாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
༤ . நினைவின்றி நிலத்தில் கிடக்கும் அம்ருதையை நான் அழைத்தேன். -
'அம்ருதா!.எழும்பு கொஞ்சந் தண்ணி குடி. அவள் அசையவில்லை. நேற்று அந்தியில் நினைவற்று விழுந்தவள். நான் னி என்ன செய்வேன்?.
\, - , சுற்றுப்புறத்தில் எவருமில்லை. எல்லா வாசல்களும் இறுக அடைக்கப்புட்டிருக்கின்றன. தெருக்கள் ஜனமற்றுக் கிடக் கின்றன. பாதையருகிலுள்ள குழாயிலிருந்து வழக்கம்போல் நீர் பிடிப்பதற்கர்க வண்ண்த் துப்பட்டிகள் அணிந்த பெண்பிள் ளைகள், ம்ண் குடங்களோடு வ்ந்திருக்கவில்லை. அரசியல் பேசுவதற்காக அந்தி ம்யங்கும்போது என்றும் என்னிடம் வரக் கூடிய குதிரைவண்டிக்கர்ரன் குலத்வீபனை ஒரு வாரமாகக் காணவில்லை. . . .
குண்டுவெடிப்பில் காய்ம்பட்ட அவன் குதிரை தெரு விற் கிடந்து துடித்துச் செத்தது. கழுகுகள் வட்டமிட்டுப் பறந் தன. துர்நாற்றம் சகிக்க முடியர் திருந்தபோது பட்டாளத்து ஜீப் வந்து அதை எடுத்துப் போனது, குலத்வீபனின் அம்மா ஜன்னல் அருகே வந்து அன்றிரவு முழுவதும் ஒப்பாரி வைத் தாள.
முகில் 1 . 11

Page 8
"அமிர்தசரசிலிருந்து கொண்டாத்த என்ட குதிர ஹிந் துவோ ஸ்பீய்க்கோ முஸல்மானோ இல்ல! அப்பிடியிருந்தும் என்ப. அன்னதாதாவான அத நீங்க எதுக்கு சுட்டெரிச்சீங்க?" அவர்களுடைய ஒலம் நிசப்தத்தில் கரைந்து சலந்தது அம்ருதை தேம்பினாள். சுயநினைவு தெளியவில்லை. அவளைக் கடுமையாக எதுவோ பாதித்திருக்கிறது. நாணினி என்ன செய்வேன்?..
தெருவின் மறுபுறம் கடந்தால் வலப்பக்கமாக முதலா வது காணப்படுவது டாக்டர் கோவிந்தனின் வீடாகும். கெட் டிக்காரரெனப் பேர் பெற்ற வைத்தியர், உணர்ச்சிகள் விவே கத்திற்கு வழிமாற்றிக்கொடுத்த ஆரம்ப நாட்களில், டாக்ட ரின் வீட்டுக்கு நேரே ஏற்பட்ட கலவரத்தில் மூன்று உயிர்கள் மாய்ந்தன. அம்மாவும் மனைவியும் அன்பின் சிறிய புத்திரியும் நிணம் அணிந்த அசைவற்றவராகக் கிடந்தார்கள். அவர் களைக் கண்டபோது, யாருடனென்றில்லாது டாக்டர் வினவி sarrmrri :-
* ! உங்களுடைய காயங்களைக் காயவைத்த என்னிடம் நீங்கள் ஏன் இந்தக் குரூரத்தைக் காட்டினீர்கள்?...'
சிலநாட்கள் வரை பைத்தியமாகிக் கிடந்த டாக்டர் புலம்பினார். துக்கம் விசாரிக்கவும் உபதேசிக்கவுமாக சாத் நான்கள் ஓடிவந்தன.
"சகோதரமே தாங்க இதுக்குப் பழிக்குப்பழி கேட் கணும்!'"
துக்கத்தை வலிந்தடக்கி டாக்டர் கூறினார்:- 'தயவுசெய்து நீங்க என்னயப் பைத்தியக்காரனாக் காதீங்க!. இங்கருந்து போய்ருங்க!.
அவர்கள் மறுபடியும் எரிதீயில் எண்ணெய் ஊற்றப் பார்த்தார்கள். ஆனால் டாக்டர் பணியவில்லை. - "பிரிவுபட்ட காலத்ல நாங்க இங்க கால்நடையாத் தான் வந்தோம். எங்களுக்கிந்தப் பட்டணம் அபயந் தந்தது. இங்க குருத்வாரத்ல நாங்க் இருந்தோம். நீங்க எங்களுக்குக் கம்பிளி உடுப்புகளுஞ் சாப்பாடுந் தந்தீங்க. நான் படிச்சேன். நமக்கிப்ப மறுபடியும் பழைய பைத்தியம் உண்டாகியிருக்கு!. e is o a வேணாம்!..நீங்க இதத் தூண்டி எரிக்காதீங்க. ' இந்த எதிர்த் தாக்குதலைப் பெற்றுப் பாதுகாப்புக் கழகத்தவர்கள் டாக்டரின் வீடு விட்டிறங்கினார்கள். ஆனால், விஷம் கலந்த கதைகளை அவர்கள் வெளியிட்டார்கள்,
அச்சப்படுத்தும் நிசப்தம் பட்டணத்தை விழங்கியிருந் தது. பட்டாளத்தாரின் காலடி ஓசை, அவர்களுடைய பிரச்ன் னத்தை எடுத்துக் கூறியது. ஜன்னல் பிளவுகளைப் பாதி திறந்து
ாண்
முகில் 1

நான் தெருவைப் பார்த்தேன். தெரு உறங்கிக் கிடந்தது. எதிர்ப்பக்கமிருந்த கேதார் வீட்டின் முதலாம் மாடியில் ஜன் னலைத் திறந்து கண்வர் முகம் காட்டினார்.
'அம்ருதைக்கெப்பிடி இருக்கு?" "அவ இதுவரைக்கும்.' சொல்லி முடிக்குமுன்பே, தெருவில் பாய்ந்து வந்து ஜீப்பை நிறுத்திக் குதித்திறங்கிய கறுத்த, தடித்த பட்டாளத்து உத்தியோகஸ்த்தன், எரிச்சல்காரனாகி என்னைப் பார்த்தான்.
"மூடுபடா 1 ஜன்னல மூடு!' ஜன்னல்களை உடனடியாக மூடி நாங்கள் அ  ைற களுக்குள் இழுபட்டோம்.
.அம்ரு தை தேம்பினாள் ܗܝ
டாக்டர் கோவிந்தனிடம் போனால் ஏதாவது மருந்து கிடைக்கும். அச்சப்பட்டுக் கடமைகளை மறந்து இதற்குள்ளே ஒரு கோழையைப்போல் ஒளிந்திருந்து என்ன நடப்பு? எதுவும் வரட்டுமென்று நான் மெதுவாக ஜன்னல் பிளவுகளை மீண் டும் திறந்தேன்.
பட்டாளத்து ஜீப் அங்கேயே கிடந்தது. நான் உத்தி யோகஸ்த்தனின் கண்களில் பட்டேன். அவன் கைத்துப்பாக் கியை எனக்கு நேராக நீட்டி அலறினான்:- "உனக்கு வாழணும்னு இருக்கா?" நான் கைகூப்பி விண்ணப்பித்தேன்: 'எனக்குக் கருண காட்டனும், எசமானே! எ ன் ட சகோதரி நினைவில்லாம இங்க கிடக்கிறா. என்னய ஒரு டாக் டர் கிட்ட போக அனுமதிக்காட்டிப்போனா அவ செத்துருவா!
பட்டாள உத்தியோகஸ்த்தனுக்கு என்மீது இரக்கம் தோன்றியது.
* உன்ட சகோதரிக்கென்னா?' "
நான் கைகூப்பித் தாழ்மையுடன் சொன்னேன்:-
நேத்து ராத்திரிச் சம்பவங்களுக்குப் பிறகு அவ நினை வில்லாம கிடக்கிறா!...”*
அகலம் குறைந்த பாதையில் நீட்டுவாக்கிலும் குறுக்கு வாக்கிலுமாக நடந்துவிட்டு எனக்கு நேராக வந்துநின்று வின வினான் அவன்,
* உன்ட பேரென்னா ???
நான் பெயரைச் சொன்னேன்.
** அப்து நீ மெட்ராஸ்க்காரனில்லியா!'
முகில் 1 3

Page 9
“ “guorr !'' **உனக்கு இங்கென்னா வேல?’’ * "நான் பாங்க்ல குமஸ்த்தா, ஸ்ர் !’’ ""சரி, போ! பத்து நிமிஷத்ல திரும்பி வரணும்! " வாசலைத் தாண்டித் தெருவிலிறங்கி டாக்டர் வீட்டை இலக்கு வைத்து நான் ஒடினேன். ஒரு ராட்சஸ்னைப்போல் தெரு மயங்கிக் கிடந்தது. இங்கே வாழ்க்கை உடனடிச் சமீப காலத்தில் துளிர்க்குமென்று தோன்றவில்லை .
டாக்டர் வீடு மூடிக்கிடந்தது. டாக்டர் வீட்டில் இல் லையென்று நிலைக்கருகில் போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. நான் இருண்டுபோய் வீடு திரும்பினேன். ராதையை ஊரில் விட்டுவிட்டுத் திரும்பும்போது அவள் சொன்ன வார்த்தைகள் திடீரென என் மனதில் தோன்றின. ' த ய வு
 

செய்து ஊரடங்குச் சட்டம் போடப்பட்ட காலத்தில் வெளி யிறங்க வேண்டாம். எவருடனும் அரசியல் பேசிச் சண்டை போட வேண்டாம், அத்தானுக்கு இருநேரமும் சப்பாத்தியும் ஸப்ஜியும் செய்து கொடுக்கவேண்டுமென்று நான் அம்ருதை யிடம் சொல்வியிருக்கிறேன். அப்புறம், மதன்லால் வழக்கம் போல் விடியலில் எருமையுடன் தெரு வந்து பால் கற ந் து தருவான். குழப்பம் நின்று அங்கே வந்து எனக்கு அத் த T னோடு வசிக்க முடியுமென்று தோன்றவில்லை. அம்மாவுக்குக் கடும் வருத்தமாகிப் படுத்த படுக்கை என்று ஊருக்கு வர மாற் றலுக்காக எழுதிக் கொடுங்கள் . தினசரியும் கிடைக்கிற அவள் கடிதங்களில் இவற்றையெல்லாம் திருப்பித் திருப்பி எழுதுகிறாள். மாற்றலுக்காக இதுவரையும் நான் எழுதிக் கொடுக்கவில்லை. பயங்கரவாதிகளுக்கு அஞ் சி யாருமே இடமாற்றம் பெற்றுப் போகக்கூடாது என்றுதான் தீர்மாணித்திருக்கின்றேன். இம்மண்ணில் இருந்துகொண்டுதான் போரிட்டு அவர்களைத் தோற்கடிக்க வேண்டும்!
என் மனது துடிக்கத் தொடங்கியது. நேரம் அந்தி யைத் தொட்டுக்கொண்டிருத்தது . நான் அம்ருதைக்காக என்ன செய்வது? அவளுக்கோ இதுவரை சுயநினைவும் விழவில்லை. எங்கள் வீடுகளை வேறுபடுத்துவது ஒரு சுவர் மாத்திரமே எப்போதும் திறந்துவிடும் ஒரு வாசல் உள்ள சுவர். ஒருவீட் டின் அங்கத்தவர்கள் போல் நாங்கள் வாழ்ந்திருந்தோம். ராதை யும் அம்ருதையும் உயிர்த்தோழிகளாக இருந்தார்கள். குழப்பம் வெடித்த அன்று, நெருக்கடியான கடைத்தெருவுக்குச் சமீபமாகக் கூடிய கூட்டத்தில், அம்ருதையின் கணவன் உதம்
ஸிங் பிரகடனப்படுத்தினான்-- 'பாரதம் நம் மாதா ; பஞ்சாப் மாதாவின் ஹிருதயம்! பஞ் சாபை வெட்டி வேறுபடுத்துவதற்கு நாம் சம்மதிக்கக் கூடாது! " சில நிமிஷங்களுக்கிடையில் கூட்டத்திலிருந்து யா ரோ தொடர்ந்து சுட்டார்கள். கறுத் துத் தடித்த ஆஜானுபாகுவான உதம்ஸிங், பின்புறமாகச் சரிந்து வீழ்ந்தான்; அவன் மெது வாகச் சொன்னான்:- 'நான் போறேன் சகோதரங்களே!..நீங்க..இவன்கள சும்மா விட்றாதீங்க!. 9 அவன் கண்கள் நித்தியமாக மூடிப்போயின? பட்டணம் முழுமையாக ஹரித்தால் அனுஷ்ட்டித்தது. சிவப் புப் பட்டால் மூடப்பட்ட பூதவுடலைச் சுமந்து ஒல ஊர்வலம் நடந்தது. நாட்டுக் குண்டுகள் மீண்டும் வந்து வீழ்ந்தன. பட் டணம் இரத்தக் களமாக மாறியது.
தொடர்ச்சி:- 17ல்
pão 1 15

Page 10
களைக் கண்டுபிடிப்பதாயிருந்தது. அம்ருதையின் வீட்டையும் அலசினார்கள். பரம்ஜித்தைப் பிடித்துக் கைவிலங்கிட்டார்கள். அம்ருதை கிடந்து கதறினாள். "என்ட மகன விடுங்கோ!.அவன் நிரபராதி! தயவுசெய்து அவன விடுங்கோ!. - அக்கம்பக்கத்தில் கூடியவர்கள் சொன்னார்கள்:- 'அந்தத் துஷ்ட்டன் பல்பீர்சிங்கின்ட வேலதான் இது! அத்ருத்திக்கப்புரத்திலிருந்து கஞ்சா கடத்ற அந்த ராஜத்துரோ கியோட வேல! அவனுக்கு ரெண்டு முகம்! பயங்கரவாதிகள் டயும் பொலீஸ்டயும் ஒத்துக்காரன் அவன்! சீக்கிய மதத்துக்கே அவமானம் அவன்! ... ' " பல்பீர் சிங்கின் கல்லூரியில்தான் பரம்ஜித் படித்துக்கொண்டிருந் தான். வசதிப்பணத்தைக் குறைக்கவேண்டுமென்று மாணவர் கள் விண்ணப்பித்துப் படிப்பை இடைநிறுத்தினார்கள். பரம் ஜித்தாக இருந்தான் தலைவன், பரம்ஜித்தை அகப்படுத்துவதாக பல்பீர்சிங் பிரகடனப்படுத்தி இருந்தான் பரம்ஜித் பயங்கரவாதிகளை வெறுத்தான். பயங்கரவாதிகள் அவனுடைய தலைக் காய்க் கண் வைத்திருந்தார்கள் கள்ளக் கடத்தல்காரனான பல்பீர் சிங்கின் சொல் கேட்டு அவனைப் பட்டாளத்தார் பிடித்தார்கள். எதிராளிகளை பல்பீர்சிங் தண் டிப்பது இப்படித்தான். அவனுடைய உபதேசத்தைத்தான் அதி காரிகள் செவியேற்பார்கள். ஊர் காண வரும் மந்திரிமார்கள் அவன் வீட்டில் விருந்துண்டு உறங்குவார் கள். அவன் அரச சிநே கிதனும் உத்தமக் குடிமகனும் என்று கூறி அவர்கள் அவனை வாழ்த்துவார்கள்
அம்ருதை தேம்பினாள்.
** சகோதரா நாணினி யாருக்குவேண்டி வாழ்றது? **
நான் சமாதானப்படுத்தினேன்:- *.வேண்டாம் சகோ தரி! கட்டுப்பாட்ட கைவிடாதே எதயாவது சாப்பிடு. ዓ፡ நல்லபடியாக் கொஞ்சங் காங்கு...நாளைக்கு நாம காரியங்கள ஆலோசிப்போம். 勢 多
திடீரென்றுதான் கேட்டது. கதவில் தட்டப்படுவது, தொடர்ந்து ஒரே அட்டகாசமாக இருந்தது,
4" கதவத் திற!'
நான் வினவினேன்:- 'யார்?*
*உன்ட தந்தை! நாயே, கதவத் திறக்னல்லியா சொன் avgif? * *
6 ழகில் 4

15 ஆம் பக்கத் தொடர்ச்சி
அம்ருதை என்ன ஷோ சொன்னாள். நான் அருகே ஓடிப்போனேன். அவள் உதடுசள் நடுங்கிக்கொண்டிருந்தன.
**தண்ணி 1.தண்.ணி!...”* நான் வாயில் தண்ணீர் ஊற்றினேன். முகத்தில் நீர் தெளித்தேன். அவள் கண் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். மெதுவாக எழுந்திருந்து குமுறி அழுதாள்.
‘’சகோதரரி 1.அவன்கள் என்ட மகனக் கசாப்புச் செய் வானுகளோ?..”* ܗ அம்ருதையைச் சமாதானட்படுத்த என்னிடம் வார்த் தைகள் இருக்கவில்லை, பாவம், நடுக்கத்திலிருந்து பெண் தெளிவு பெற்றிருக்கவில்லை, அவள் தீனமாக என்னைப் பார்த் தாள்.
'இந்தப் பக்கத்திலிருந்து புடிச்சிக்கிட்டுப் போன வுங்க யாருமே இதுவரைக்குந் திரும்பி வரல்ல! மோதல்கள்ல செத் தவுங்க பேரு பேப்பர் ல வர்றப்பத்தான் அவுங்க செத்ததா நாம அறியக் கூடியதா இருக்கு!...”*
நான் இடையிட்டுக் கூறினேன். *"மனஸ்லருந்து செட்ட நினைவுசள களஞ்செறி, சகோ
தரி!.
அம்ருதை விசும்பினாள். * "பரம்ஜித்தோட கதியும் அதுதான் ஆகுமோ?" மிகவும் பாடுபட்டு அவ்விஷயத்திலிருந்து நான் அம் ருதையை நிசழ்காலத்துக்குக் கொண்டுவந்தேன். நேற்று மாலை யில் திடீரெனப் பட்டணத்தை வளைத்தது பட் டாளம். அவர் சளின் இலச்கு, பயங்கரவாதிகளின் மறைவிடங்
16ல் தொடர்ந்து 18க்கு வருவதில் சிரம முண்டா?
(up a G n) !
ர..பீக்கா ஜெலில்
தீவெங்கும் செழிப்புற நாட்டுநலம் பயப்பதாய் வந்திடுவாய் கொஞ்சிடவே ஆசிரியக் கைவண்ணத்தில் மகிழ்வுடனே வரவேற்க! வீசிடுவாய் தென்றலாய் மாணவர்க்கு நண்பனாய் ஆசிசுநி வரவேற்கி
வானம்நின்றும் கீழிறங்கித் கவிஞர்க்குக் கைநூலாய்
Raio 1 *** 7

Page 11
அதிகாரத்தின் கடும் சப்தம். அல்லது பயங்கரவாதி களோ?.நான் செய்வதறியாது நின்றேன். இவ்விடம் இன் னும் இரத்தக்களறியாகுமோ?. ぶ
யாரோ கதவை எட்டி உதைத்தார்கள். கதவு உடைந்து என் முன் வந்து விழுந்தது.
கைத்துப்பாக்கி நீட்டிப் பொலிஸ் உத்தியோகஸ்த்த னும் பின்னால், உருக்குத் தொப்பியணித்த பொலிஸ்க்காரர் களும். அவர்கள் ஓடிவந்து அறைக்குள் நுழைந்தார்கள்.
"எங்கே அம்ருத் கெளர்?’’ பொலிஸ் மேதாவி அலறினான். ‘எங்கே அவள்?’’ நான் எதுவும் சொல்லவில்லை. "நாய் மகனே! உன்னயெல்லாம் நாங்க வழிக்குக் கொண்டு வர்றோம்! "
'தயவுசெய்து என்ன விஷயம்னு சொல்லுங்க!'" பொலிஸ் உத்தியோகஸ்த்தன் தன் கைத்துப்பாக்கியை என் கழுத்தருகில் பிடித்தான்.
‘எங்க அதிகாரத்தக் கேள்வி கேட்கிறியா?" அவன் திரும்பிப் பார்த்து, நிலத்தில் கிடந்திருந்த அம்ருதையைச் சுட்டிக்காட்டிப் பொலிஸ்க்காரர்களிடம் கட் டளையிட்டான்:-
'இவள ஜீப்ல ஏத்து!" பொலிஸ்க்காரர்கள் அம்ருதையை இழுத்துப்போய் ஜீப்பில் ஏற்றும்போது அவள் சொல்லிக்கொண்டிருந்தாள் :
'எனக்கினி ஒரு நிமிஷமாவது வாழணும்னு இல்ல! அந்தத் தோக்கால என்னய சுட்டுக் கொல்லு! எதுக்காக என் னய அங்க கொண்டுபோற?.'
எது வந்தாலும் பரவாயில்லை, இதை வினவாமல் விடக்கூடாதென்று நான் தீர்மானித்தேன். .
‘'எதுக்காக ஒண்ணும் அறியாத இந்த அப்பாவிப் பெண்ண நீங்க கஸ்ட்டடியில எடுக்கிறீங்க?"
பொலிஸ் ஆஃபீஸர் பற்களை நெரித்து என் மு ன் குதித்தார்.
‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட்த்தோட வியாபகம் எவ்வளவுன்னு உனக்குத் தெரியுமா? வேணும்னா நாங்க உன் னயும் அரஸ்ட் 1ண்ணலாம்! ஆனா நாங்க அதச் செய்ய மாட் டோம் ! நீ ஒரு ஹிந்து இல் லியா!. p.
18 முகில் 1

ஜீட்டை நோக்கிப் பொலிஸ்ச்காரர்சள் ந ட க் கத் தொடக்கினார்கள்.
நான் எல்லாச் சக்தியையும் திரட்டி முடிந்தளவு உச் சஸ்த்தாயியில் கூவினேன்:-
* 'இல்ல ஸாப்! நான் ஹிந்து இல்ல! உங்கள் ட்போலவே ஒரு இந்தியாக் சாரன்! இந்த ப புண் ணிய பூமியில பிறந்ததில பெருமப்படுத ஒரு பாரதத்தான்!'"
பொலிஸ் உத்தியோகஸ்த்தன் இகழ்வுணர்ச்சியில் சிரித் துக்கொண்டே ஜீப்பில் ஏறி இருந்தான்:-
**கொண்டுபோடா நாயே, உன்ட ஒரு வேதாந்தம்! "
Niz 逃
மனிதரை அணைக்கும் மாமறை
மனிதன் இறைவன் பிரதிநிதிஎனும்
மதிப்பைத் தந்தது குர்ஆன் மனிதனுக் காய்வுத் திறனைவளர்க்கும்
மார்க்கம் தந்தது குர்ஆன் பயணம் செய்திறை படைப்பற்புதத்தைப்
பார்க்கச் சொல்வது குர்ஆன் பயமில் லாது பகுத்தறிவைப்பயன்
படுத்தச் சொல்வது குர்ஆன் வருத்தும் நோய்க்கு மருந்தாய்அமைந்து
வலிமை சேர்ப்பது குர்ஆன் உறுத்தும் உலகப் பிரச்சினைதீர்க்கும்
உயர்வழி தரும்திருக் குர்ஆன் சாதிமதம் குலபேதம் கடந்தொளிர்
சாத்வீக மறை குர்ஆன் நீதி மதித்துயர் நேர்வழிஉழைப்பவர்
நிறைவுக் கொளிதரும் குர்ஆன் மனிதனை மனிதன் அடிமைகொளும்நிலை
மாற்றி அமைத்தது குர்ஆன் மனிதனைச் சமத்துவ மாண்பளித்தணைக்கும்
மாமறை தான் திருக் குர்ஆன்
* கவிமணி எம்.வலி.எம். ஸ"பைர் *
முகில் 1

Page 12
சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள்
1994 டிசம்பர் 28 முதல் 1995 டிசம்ப்ர் 28 வரை சினிமா நூற்றாண்டு விழா உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வரு கிறது. இலங்கையிலும் இது தொடர்பாக ஒரு விழா ஜூலை மாத முற்பகுதியில் நடைபெற்றது. :
*சிமைட்டோகிராப்' என்ற கருவியை இரண்டு பிரெஞ்சு சகோ
கே. எ ஸ். சி வ குமா ர ன்
தரர்கள், ஒகஸ்டே (1862-1954), லூயி (1864-1948) க ண் டு பிடித்தனர். இந்தக் கருவிமூலம், முதல் தடவையாக சினிமா என்னும் “சலனப் படிமம் உருவாகியது. லுமியே என்ற இந்த சகோதரர்கள், 1895 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி, பாரிஸிலுள்ள ஓர் இந்தியச் சிற்றுண்டிச்சாலையில் முதல் தடவையாகத் திரையில் ஒரு சலனக் காட்சி காட்டப்பட்டதும் சினிமா வரலாறு ஆரம்பிக்கப்பட்டது. ரயில் வண்டி ஒன்று ரயில் நிலையத்தை நோக்கி வரும் காட்சியே அங்குக் கா ட் டப்பட்டது.
லுமியே சகோதரர்கள் இந்தக் கருவியைக் கண்டு பிடிக்க, முன் னோடியாகச் சிலர் உழைத்தமையையும் நாம் மறத்தலாகாது. இன்று சினிமா ‘ஏழாவது கலை"யாகக் கருதப்படுகிறது.
சினிமாவுக்கென ஒரு வரலாறு இருப்பதுபோல, சினிமா விமர் சனத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அகன்ற திரைக்கும் சின்னத் திரைக்குமாக எடுக்கப்படும் திரைப்படங்களின் மதிப் பீட்டு அணுகுமுறையும் காலத்திற்குக் காலம் மாறுபட்டு வந் திருக்கிறது. ஒளி, நிழல், அசையும் படிமங்கள், ஒலி- இவற்றின் கலாரீதியான நிர்மாணம் சினிமா என்பர். கடந்த 30 ஆண்
t
20 முகில் 1
 

டுசளாக சினிமாவும் ஒரு சலை வடிவந்தான் என்று கெளர விக்கப்படும் அளவிற்கு, அதன் தரம் உயர்ந்து வந்திருக்கிறது என்பர் விமர்சகர்கள்.
பேலை நாடுகளி லும் ஆசிய நாடு சளிலும் சினிமா வைப் பல் கலைக்கழக பட்ட ஆய்வுக்கு உட்படுத்தும் ஒரு நிலைக்கு நாம் வந்துள்ளோம். பல நூற்றுக்கி .ை க்கான நூல்கள் பல மொழி களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வு நூ ல் களும் ஆராய்ச்சிக் கிட்டுரைகளும் விமர்சனங்களும் பிரமிக்கத் தக்கவகையில் இருக்கின்றன.
இத்தியாவிலுள்ள பூணே நகரிலே திரைப்பட | தொலைக்காட்சிப் பயிற்சி நிலையம் இருக்கிறது. அங்கு ஒரு பிரமாண்டமான நூலகமும் இருக்கிறது. அத்தனையும் சனிமா தொடர்பான அச்சிலமைந்த ஆய்வுகள். திரைப்படச் சுவடிகள் நிலையத்திலும் படங்களுடன் நூல்கள், சஞ்சிகைகளும் இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டில் 'திரைப்பட விமர்சனப் பயிற்சிக்காக நான் அங்கு சென்றபொழுது, உலகத் திரைப்படங்கள ஒரு இரு நுறைப் பார்த்துப் பயனடையவும் சில நூல்கள், ஆய்வுகளைப் படிக் கவும் வாய்ப்புக் கிட்டியது.
சம்பிரதாயமான முறையில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து விமர்சனங்களை எழுதியும் ஒலிபரப்பியும் வந்த எனக்கு இந் தப் பயிற்சி புதுமாதிரியான அணுகுமுறைகளை ஏற்படுத்தித் தந்தது. அந்த முறைகளை நான் பிரயோகிக்கின்றேனா எ ன் பது வேறு விஷயம்.
நாடகம், அரங்கியல், ஓவியம், நாட்டியம், கட்டிடக்கலை, இசை, கவிதை, புனைகதை, தத்துவம், கலை- இலக்கியக் கொள்கைகள், சமூகவியல், உளவியல் போன்ற துறைகளில் ஒரளவாகுதல் பயிற்சி பெற்றவர்களே, அண்மைக்காலத் தலை சிறந்த உலகக் கலைத்துவப் படங்களைப் புரிந்து அ ள விட முடியும் என்ற உண்மை தெரியவந்துள்ளது. அதற்காகவே அடிப்படைப் பட்டதாரக் கல்வியைப் பெற்ற ஆய்வறிவாளர் களுக்கு முதலிடம் கொடுத்துத் திரைப்பட விமர்சனப் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலக நோக்கு விசாலமடையவும் புத்தறிவு பரவலாகப் பி ர யோகிக்கப்படவும் உள்ள ஒரு நிலையில் சினிமாவை அணுகும் முறை மேலும் நவீனத்துவம் பெறத் தொடங்கியது. ஜனரஞ்சகக் கலாசாரம், பிரச்சினைகளுக்கான புறக்காரணங் கள் ஆகியன பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து, திரைப்பட விமர்சனம் புதுப் பரிணாமம் கொள்ளத் தொடங்கியதெனலாம்.
சினிமாவை ஓர் இழிவான பார்வையில் அணுகுவதை விடுத்து
முகில் 21

Page 13
அதனை (ஜனரஞ்சகமானதோ கலைத்துவமானதோ)ப் பிறி தொரு கலைவடிவாகப் பார்க்கும் பார்வை கலை ஏடுகளில் பிரதிபலிக்கத் தொடங்கியது. ஜனரஞ்சக சினிமாதானே என்று வணிக நோக்குள்ள பட ங் களை ஒதுக்கித் தள்ளாமல், அவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தும் பக்குவம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. படிமங் கள், காட்சிப் பிரமாணங்களை அர்த்தம் புரிந்து விளங்கப்படுத் தும் பண்பு இக்கால விமர்சனத்தில் குறிப்பிடத்தக்க அம் சம் எனலாம், கலை, இலக்கிய விர்சனங்கள் அணுகுமுறை காலத்திற்குக் காலம் மாறுபட்டு விரிவடைவதுபோல், திரைப்பட விமர்சன அணுகு முறைகளும் மாறுபட்டு வருகின்றன.
7 ஆம் பக்கத் தொடர்ச்சி- இருளும் ஒளியும்
மலையாளத்தில் ஆக்கினான். பஷிரின் விபரங்களை அவன் கேட் டான். பட்டியினதும் பரிவட்டத்தினதும் விபரங்களை அறிந்த போது, ஹோட்டலிலிருந்து பவுருக்கு உணவு வாங்கிக் கோடுத் தான்.
பிறகு அவன் பஷீரைத் தன் உதவியாளராக நியமிக்க வும் செய்தான்.
அடுத்த நாள்முதல் அவர்கள் இருவரும் சேர்ந்து ஜ"ஹஜி கடற்கரையில் ஜால வித்தைகள் காட்டத் தொடங்கினார்கள். மனோதத்துவ சாஸ்த்திரத்தில் டெலிபதி எனப்படும் ஒருவகை நிகழ்ச்சியாக இருந்தது அது.
ஜனங்களின் முன்னிலையில், பஷீரை ஹிப்னாட்டிஸம் செய்து உறங்கவைப்பான் வித்தைக்காரன். அதன்பின் அவர் முகத்தை நாலைந்து போர்வைகளால் மூடுவான்.
தொடர்ந்து ஆசான், யாராவது பார்வையாளர் ஒருவ ரின் ஜேபியிலிருந்து ஏதாவதொரு பொருளை எடுத்து அது என்னவென்று பஷீரிடம் வினவுவான். உடனே சிஷ்யன் என்ன பொருளென்று சரியாகக் கூறுவார். பேனை, பர்ஸ், கண்ணாடி, கைக்கடிகாரம் , ரூபா- இப்படி ஆசான் எதையெடுத்தாலும் சிஷ்யன் அச்சொட்டாக அதைக் கூறுவார். அவை ஒவ்வொன் றினது நிறத்தை வினவினால் அதற்கும் சிஷ்யன் தவறாது மறுமொழி கொடுப்பார். இதோடிணைந்து மந்திரத் தாய்த் தின் விற்பனையும் பெருகி வந்தது.
ஆனால் அதிக நாள் பலர் இத்தொழிலில் நிற்கவில்லை. காரணம், அது மாபெரும் வஞ்சனையாக இருந்தமையே. தான் எடுக்கப்போகும் பொருட்களின் பட்டியலை நேரத்துடனேயே
22 முகில் 1

சிஷ்யனுக்கு ஆசான் சொல்லிக்கொடுத்துவிடுவான்! தொடக் கத்தில் பேனை, இரண்டாவது பர்ஸ், மூன்றாவது கண்ணாடி நான்காவது கைக்கடிகாரம். அதேபோல் நிறம் வினவும்போது அதை அறியும் வண்ணம் பிரத்தியேகமான ஒரு சப்தத்தையும் ஆசான் ஒலிப்பதாக இருந்தது. ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு பிரத்தியேகத் தொனி! இவற்றுக்கான ஒத்திகை முதல்நாளே நடத்தப்பட்டிருக்கும்!
இதில் தாயத்தும் மகா வஞ்சனையாக இருந்தது. ஈயக் கடதாசியில் உமிக்கரியைத் தூளாக்கி நிரப்பியே தாயத்துச் செய்யப்படும். 'தாயத்து விற்கு : போது பக்திமான்களைப் பிரி யப்படுத்துவதற்காகத் தெய்வங்களின் பெயர் சளை ஆசானும் சிஷ்யரும் கூவியழைத்துக்கொண்டிருப்பார்கள்!
எல்லாமே வஞ்சனைய க இருந்த காரணத்தால்தான் பவுர் ஜாலவித்தைக்காரனிடமிருந்து விடை பெற்றார்.
"மெஜிக் ஒரு கலை என்ற நிலையில் எனக்கு அது இஷ் டமே. ஆனால் அதைக்கொண்டு வறிய ஜனங்களை ஏமாற்று வது அதர்மம் !" என்பதே பஷிரின் உபதேசமாயிருந்தது.
மூப்பும் சுகக்சேடும் பெரிதாய்ச் சூழ்ந்திருந்தமையால் ஒருசில வருஷங்களுக்கு முன்பாகவே வைக்கம் முஹம்மது பவீர் என்ற எழுத்தாளனின் தூரிகையில் மை வற்றியது என்று சொல் வதுவே சரி, இரண்டு வருங்களுக்கு முன்பு (1992) இலக்கியத் துக்குரிய முட்டத்துவர்க்கி அவார் டை பஷீருக்கு அளிப்பதற் காகக் கோழிக்கோட்டில் நடத்தப்பட்ட வைபவத்தில், பத் திரிகைத் துறைக்குரிய முட்டத்துவர்க்கி அவார்டைப் பெறும் பொருட்டு நானும் பங்கெடுத்திருந்தேன். தடைப்படாமல் உரை யாடுவதற்குக்கூட இயலாதவிதம் பலவீனராக இருந்தார் அவர் அப்படியிருந்தும் அவர் என்னோடு சிறுசிறு விஷயங்களையெல் லாம் கதைத்துக்கொண்டிருந்தார்.
கதை எழுதியவர் என்ற நிலையில் பவுருக்கு இந்தியக் கதை இலக்கியத்திலுள்ள ஸ்தானம் உன்னதமானது. வாழ்க்கை அநுபவங்களென்னும் பாத்திரத்திலிருந்து எடுத்த ஒசைக் கதை கள் கூறி நூற்றுக் கணக்கில் பரிச்சயக்காரர்களை சந்தோஷப் படுத்திய உரையாடல் வெற்றி வீரன் என்ற பதவிக்குச் சமமா கக்கூடிய வேறொருவர் இந்திய இலக்கியது தில் இருப்பாரென்று எனக்குத் தோன்றவில்லை.
大 @ Δ . O ★ தளரவேண்டியதில்லை. கவிதை, கட்டுரை, சிறுகதை என்பவற் றுள் நல்லவற்றைத் தேடிப் படியுங்கள். பயிற்சி பெறுங்கள் பிறகு படையுங்கள். எமக்கு அனுப்புங்கள். முகில் , அநேக 1ாக நல்ல ஆக்கங்களை உள்ளடக்கவே விரும்புகிறது. சந்தா தாரர்களின் நல்ல ஆக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்போம்.
முகில் 1 2 3

Page 14
நன்ை
மினுவாங்கொட நுவைதா மதீன்
உண்மை பேசடா - தம்பி உண்மை பேசடா நன்மை செய்யடா - தம்பி நட்பு வையடா
பெற்ற வர்களைத் - தம் பேணி நடவடா
பற்று வையடா - தம்பி 1, படித்துத் தேறடிா, \
ஏழைக் குதவடா ஏழைக்குதவடா வேளை வருகை
ஏரு முபனிரைத் ཅ་རྗེ་སྐད་
ஏற்றி ழகிழடா பார் த்திடத் - தம்பி
u II fio Mar i Ll II
s
))
ஒற்று மைதன்ைத்
ஓங்கச் செய்யபுா
வேற்றுமைதனைத் தம்பி \
வெட்டிக் கழி l" \
f
vi \
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொப்பனத் துயில்
இமை மூடிக்குள்
&56 (537 விட்டபடி மேயும்! சிலிர்த்தும்
சினுங்கியும் کرد، ஒர் தவிப்பினுாடே ஓடி விளையாடும்விபத்து நேரப்போகிற விபரம் தெரியாமல் Y, அந்த \ வெள்ளை முயல் பாதையைத் துள்ளிக் கடக்கும் வசத்தைப் போல
ழித் தொட்டிலில்
புழுக்கம்தீ புரண்டு பராக்குட் நேரம் ()
பசி எடுக் \ கனவு மழலை வழி இருக் பணித்திருக்கும்!
y
-l. ومسال சமத்
A இருக்கும் வரை வணின் அடிமை ! | o! பெற்றதனால் காலமெல்லாம் பிள்ளைகளுக்கு
பெற்றுக் காத்த தனா போகும் வரை பெற்றோ ருக்கு ஆடிை
காளையவனின்
வீழ்ந்ததனா عحستع 献 9/9 GO) to காதல் ந்தவளுக்கும் ஆழும்போதிெரி்லாம் . . .سر است வந்தவளின்
அடிம்ை! ாழும் வரை
கைப்பிடித்ததனி \ ❖ዏ UTஆயா அடிம்ை! நெ $Âಡ@ தறித்தல் த்தின் நிலை?
一一へノ வாரிசுக்கும்
"9ރް__تح~-ދ
༄།
> ·
முகில் 1 2S

Page 15
அவனது அண்ணனை எதிர்பாராத முறையில் ܝ ܢ . நேற்றுக் கொழும்பில் கண்டேன். (ஜனநெரிசல் என்பதைக் கொழும்பு என்றேன்.) கண்கள் மல்லாட, அவரைப் பார்த்த சிரிப்பில் நெருங்கினேன். - - - - - -
அதிகமாக அடிபட்டிருந்தார். )LՈfr 6ն : * يته டரா!..' என்றார். மரத்துப்போன சாவதானம்; அலட்சி யம்: பட்டறிந்த வெறுப்பு. ፹
w சிரித்த என் வாய் துவண்டு, மீண் டும் ஒலியெழுப்பத் திறக்குமுன்பாக- ..
− · 'உயிரோட இரு க் ற வரைக்குந்தர்ங் கூட்டாளி செத்துப்போனா எல்லாம் முடிஞ் சிறிச்சி, இல்லியா மாஸ்ட்டர்?’’
வியர்வையிலும் நான் உறைந்து போனேன். W,
மீண் டு ம் உருகுவதற்கு முன்பாகக் கொழும்பில் கலந்து அவர் முன்னர் போலுமே தொலைந்து போனார். அன்றிரவு மனைவியிடம் இவ்வளவையும் சொல்லி முடித்தபோது, சுமார் மூன்றுமணிநேர இதயம் கண்கள் வழியே வெளியேறி யது.
விதி, என்னை வித்தியாசமாகக் காட்டிவிட்டது. அது சிரித், திருக்கலாம். இல்லாவிட்டால் நான் ஏன் அழுதிருக்கிறேன்?. ஏறக்குறையப் பன்னிரண்டு மணிநேரத்து நெஞ்சக்கொதிப்பு. ஆனாலும், இந்த வைகறையில் என் மனம் தெளிந்திருக்கிறது. நனவின் நெஞ்சக் கொதிப்பை, ஒரு சிறிய நித்திரை, ஒய்வு, ஆத்மீக நனவிலி நிலை அமரணிய அமைதியாக மாற்றிவிட்டது. அவனது அண்ணன் என்னைக் குறித்து அப்படியே நினைத்துக் கொண்டிருக்கட்டும். பாதகம் எனக்கில்லை.
அ ல் அ ஸ9 ம த்
பழனியாண்டி செத்துப்போய் ஏழு வருஷ ங் களுக்கு மேலாகிறது. ر مُہ : : ..."۔-
வாழ்வு வண்டியில் என்னோடு, ப தி னைந்து ஸ்ட்டேஷன்களுக்கு மே லா. க வழித்துணையான நீ, நான் வறுமைத் துயிலில் வளர்ந்திருந்தபோது, என்னை எழுப்பாமலேயே போய்விட்டாயா?
26 முகில் 1


Page 16
நண்பர்கள் என்ற போர்வையில், நூற்றுக் கணக்கானவர்கள் என்னை நெருங்கக் கணக்குக் காட்டுவார் கள். பால்யம், பள்ளி, தொழில்கள், தற்காலம் என அவர் கள். கலண்டர்த் தாள்கள் மாதிரியானவர்கள். ஆனா ல் நானென் நெஞ்சை நெருக்கிக் கணித்தால், பழனியாண்டியைத் தவிர யாருமே இல்லை எனக்கு நண்பனாக. என் பிறப்புச் சான்றிதழ் போல ஒட்டிக்கொண்டவன் அவன். அவனும் செத் துப்போனான்- எண்பதுகளில் எரிந்த ஒரு விபத்தில் போல.
தனியேதான் பிறக்கிறோம்; தனியேதான் சாகி றோம். ஆனால் சேர்ந்துதான் வாழவேண்டி இருக்கிறது. தேவ்ை வருகிறது; சொல்லாமலே சேர்கிறோம். தேவை முடிகிறது; விலகியும் கொள்கிறோம். அல்லது விலக்கப்படுகிறோம். பிற கெப்போதாவது கண்டுகொண்டால், கட்டிப்பிடித்தோ கண் கலங்கியோ பழையனவற்றை ஒரு தமாஷாவாக மீட்டோ சாப் பிட்டோ குடித்தோ குடும்பங்களைப் பரஸ்பரம் விசாரித்தோ விடை கொடுக்கிறோம், இயல்பாகவே மறந்தும் விடுகிறோம். வேண்டுமானால் மீண்டும் சந்திக்கும் வரை.
இவர்களைப்போய் நண்பர்கள் எனலாம! ? - - - - வேறு வார்த்தை வேண்டும். அறிமு சமானவர்? தெரி த வர்? ம1 ஜிக் கட்டா வி? ஊர்க்க 11:ச் பழம் பக்கத்து வீட்ட ? ? கிளாஸ்மேட்? பெட்ஜ்மேட்? றுரம்மேட்? பூரீ லங்காமேட்?. ஆனால் நண்பன் என்ற பதத்துக்கே எனக்குப் படிமமாக இருந்தவன் பழனியாண்டி ஒருத்தன்தான்.
என் கவிக் குழந்தைகளைத் தாலாட்டிய் உன் கைத்தொட்டிலை எங்கே ஒளித்தாய்?
தேவையை எவன் கேளாமலேயே பூர்த்தி செய் கிறானோ அவனே நண்பன் என்றார் வள்ளுவனார். அப்படி இல்லாதான் பகைவனும் அல்லன்! ஏனென்றால் அவனோடு சிரிப்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். ஆனால் நானும் பழனி யாண்டியும் சிரித்துக்கொண்டவர்கள் அல்ல. ஏதோ வகைகளி லெல்லாம் நான் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவை எவையென்று எனக்கே தெரியாததைப் போல, எனக்காக அவன் பூர்த்தி செய்தவை எவையெவை என்று அவனுக்கும் தெரிந்திருக்காது. ஒருவேளை சாகுமுன் தெரிந்துகொண்டானோ என்னமோ !
அவன் எதையுமே இழக்கவில்லை. என்றாலும், எல்லாவற்றையுமே எனக்கு ஈந்தான்! அதனால்தான் அ 1ெ ன் என் நண்பனாக நிற்கிறான்!
கூடவே எனக்குள் ஒரு 11:11pi உணடு:- நான் பாதி இறந்து போனேனா?.
28 . :1 لأنه قد ز

என் சிகரெட்டின் பாதிப்புற்றைப் பறித் துப் பதித்தவனே! உனக்கே தடா சாவுநான் வாழும் வரையில்? என்னைப்போல் பழனியாண்டியும் ஒரு பெருங் காட்டுப் பிறப்புத்தான். பிரம்மாவும் யமனும் வெள்ளைக் கார னது கையில் பிடிபட்டதால், நான் றபர்க் காட்டில் பி ற ந் தேன்; அவன் தேயிலைக் காட்டில் பிறந்தான்: விஷ்ணுவும் வெள்ளையன் பிடியில்தான்; ஆனால் அவன் பிரித்தானியாவி லேயே தங்கிவிட்டான்.
பழனியாண்டிலய நான் அடைந்த சந்தர்ப்பம் ஒரு நெம்புகோல் என்று அறிந்து கொள்ள எனக்கு ஒரு வருஷம் பிடித்தது! முடன் முடன்; நான் மகா மூடன்! முந் நூற்றுச் சொச்ச நாட்களைப் பாழாக்கிவிட்டேனே!. என்னுடைய பாழாய்ப்போன எக்ஸிடன்ட் மைன்டட்னஸ் 1.
றபரில் பிறந்து வளர்ந்து படித்துவிட்டு, முதன் முறையாகத் தேயிலையின் ஒரத்துக்குப் போயிருந்தேன். பத் திருபது கடைகள் : தனியார் கல்லூரி. எழுபது அப்போது. என்னோடு மூன்றே வாத்திகள். தாண்டவராயன்; அறுபது ரூபாய்; உண்ணாஸ்கிரி மேல் டிவிஷன். கமலா சிங்களம்: நாற்பது ரூபாய்; வெஹிகல நாடு, தங்கராசு நாடார் பா ட சாலையின் வசூல்கர்த்தா பொறுப்பாளி
எழுபத்தொன்றில் தாண்டவராயன் வட ஆற் காட்டு வாசியாகக் கடல் தாண்டினார். இடம் நிரப்ப வந்த வன்தான் பழனியாண்டி.
அவனைக் கூட்டி வருமுன், அவனைப்பற்றி என்னிடம் தாராளமாகப் புகழ்ந்திருந்தார் தங்கராசு நாடார். கொடுக்கவிருக்கும் அறுபதைக் கை, வாய் கூசாமல் வாங்கிக் கொள்ளும் பொடியன் என்றார். எந்தக் கழுத்து இறுகலிலும் தான் வாங்குவது நாற்பதுதான் என்று கமலாவிடம் அடித்துக் கூறுவான் என்றும் சத்தியம் செய்தார்- சிலோன் முருகன் மீது. பிள்ளைகள் அவனுக்கு அடங்கி நடக்கு மென்று என் நெஞ்சில் தடவினார். "அவனுடைய தோட்டத்திலிருந்தும் புதிதாகப் பிள்ளைகள் வரலாமென்று வசூலும் பார்த்தார்.
அவனும் வந்து சேர்ந்தான்- ஒரு பிரகாசமான காலைப்பொழுதில் அமாவாசை மாதிரி. நாடாரின் உறு தி மொழிகளை நினைத்து, அதே கையோடு அவனையும் பார்த்த போது எனக்குத் திகிலேற்பட்டது.
அவனுடைய சம்பள றாத்தலில், நான்கடி எலும் பில், தலைக்கு அல்லது உடலுக்கு அல்லது இரண்டுக் குமே சரி அள்ளிப் பூசிக்கொண்டு, நீர்பாவும் கண்களும் அசட் டுப் பற்களுமாகப் பழனியாண்டி வாத்தியார் வந்து என் மேசைக்
29 - 1 لأوتي )

Page 17
கப்பால் நின்றான். காதுகளின்மேல், துண்டுபீடி வைத்த தழும்பு கூட இருப்பதாக எனக்குள் ஐதீகம். அவன் சிரிக்கக் கூடாது. கோபமாகவே இருக்கலாம் என்ற நமைச்சல் வேறு. அவனது டச்சுக் காலத்துச் சுவர்க்கடிகாரமும் ராஜராஜசோழனின் பாதக் குறடுகளும் என்னை மாணவர்களுக்குக் கண்கொடுக்கப் பின் னிழுத்தன.
கரி விளையும் உன்னுடல் வைரச்சுரங்கம்
என்றல்லவா வரித் திருந்தேன்! வெண்
பஞ்ச் என நிரூபிக்க, இப்படியும் ஒரு
பரீட்சையா?
எனக்குள் அன்று ஏற்பட்ட இந்த இழிவான வேத னையைக் காலம் அருமையாக மாற்றிவிட்டது.
தாண்டவராயன் போய்ச் சம்பாதித்ததில் பங்கு கேட்கப் போனது மாதிரி, எழுபத்திரண்டில் தங்கராசு நாடாரும் போய்விட்டார்.
புடைவைக் கடையைக் கிழித்து மிட்டாய்க் கடையும் மிட்டாய்க் கடையைத் தின்று இட்டிலிக் கடையும் இட்டிலிக் கடையைக் கல்லாக்கிவிட்டுப் போட்டோ இஸ்ட்டூடி யோவும் போட்டுப் பாஸ்போர்ட்காரர்களுக்கெல்லாம்  ைக புகையாய்ப் படமெடுத்துக் கடைசியில் அவர்கள் செலவிலேயே தானுமொன்றைப் பிடித்துப் போய்ச் சேர்ந்துவிட்டார் அவர். இந்தியாவுக்குப் போன மலைநாட்டார்களின் எதிர்காலம்பற்றிய ஆரூடமாகவே இவரது புகைப்படங்கள் அப் போது விளங்கின. இதனால் நானும் பழனியாண்டியும் அவரி டத்தில் ஒரு படம் பிடித்துக் கொள்ளாமல்போன வேதனை இன்னும் நெருடுகிறது.
கல்லூரியும் இதற்குள் பள்ளிக்குடமாகிவிட் டது. கத்தலுக்கும் வத்தலுக்கும் நாங்கள் மூன்று பேர்தான். வசூல் மாணவர்களின் தொகையோ, எங்கள் கண்ணிரைத் துடைக்கும் கைக்குட்டை சைவில்! எங்களின் வாழ்க்கையே, எங்களை மட்டும் அங்கே கிடத்திவிட்டு இந்தியா போனது போன்ற பிரமை,
அந்தக் காலகட்டம்தான் பழனியாண்டியைப் பழனியாண்டவராக ஆக்கியது.
துன்பங்களில் சிரிக்கப் பழக்கினான். சிரிப்பு களில் சிந்திக்கவைத்தான். மரணப் படுக்கைகளைக் கூட அமர ஒத்தடங்களாக்கினான். ஆகா! அந்தச் சூழலுக்கே போய் வாழ லாம்போல் தோன்றுகிறதே! .வறுமைதான் மாபெரும் செல் வம் என்பதை , அவனைப்போல் யாரு1ே) எனக்கு உணர்த்திய தாக நினைவில்லையே!.
3 O !jāti

அந்தக் குரூபத்துக்குள் எத்தகைய தி வ் ய சொரூபங்கள் குடிகொண்டிருந்தன!.
அழுக்கடைந்த ஒரு கிராமத்தில் நாங்கள் தோட்டிகளாக வாழ்ந்தோம். துப்புரவா கவே மனங்களை வைத்திருக்கச் சபதம் எடுத்தோம். என்னிடம் மாத்திரமே சப தத்தைச் சாட்டிவிட்டாயே! ஃபீஸ் வசூலிக்க அவனே தோட்டம் தோட் டமாக அலைவான். யாராவது ஐந்தாறு நாள்கள் வராவிட் டால் என்ன, ஏனென்று அங்கே போய் நிற்பான். புதிய பிள் ளைகளுக்காகப் பெற்றார்களின் பின்னே ஓடுவான்.
தங்கராசு நாடார் கல்லாக்கிய இட் டி லி க் கடையை, அவரது அண்ணன் தவனாவதி அகலிகா டீறுfம்" ஆக்கியிருந்தார். அங்கே என் கணக்கு, வழக்குக்குப் போ க வேண்டிய நிலை. நானாகவே ஏட்டுச் சகவாசத்தை நிறுத்தி இருந்தேன். பழனியாண்டியின் அண்ணனுக்கு அங்கே கணக் கிருந்தது. அந்தக் கணக்கில், பழம்பெருமை பேசும் பருப்பு வடைகளும் வற்றாத ஜீவநதியாய் ஒடும் வட்டக்காய்ச் சா ம் பாரும் மகா வலிக்கு நிறமீந்த மஞ்சள் டீக்களும் எனக்களிப்பான் இவன். தவனாவதி நாடார் தன் சொட்டையைச் சொரியும் காலங்களில், வீட்டிலிருந்து வரும்போதே பலாவையோ கிழங் கையோ அவித்துக்கொண்டு வருவான். அல்லது, மாலையில் என்னையும் வீட்டுக்கே கொண்டுபோவான்.
முகில் 1 3.

Page 18
சரஸ்வதி பூஜை, கதம்ப விழா, ஏதாவது தோட்டத்தில் விழா. இவன் சம்பூர்ணமாகத் தலையில் கொட் டிக்கொள்வான். ஹார்மோனியம், புல்லாங்குழல், தபேலா, டோலக் , மெட்லின் என்று எங்கெங்கிருந்தோ கொண்டுவரு வான். அத்தனையையும் கையாள்வான். எனக்கும் பாடம் தரு வான். ராத்திரி இரண்டு மூன்று மணிவரைக்கும் பாடிப்பாடித் தட்டுவான். பிறகேது எனக்குச் சோகம்?
உன் சங்கீத விரல்களின் ஸ்ப்பரிசமில்லை; என் மகிழ்ச்சி வாத்தியங்களில் தூசு ! எனக்கப்போது மூன்று பிஞ்சுகள். நாலுபேரும் மாமா வீட்டில். மூன்று அல்லது நாலு வாரங்களுக்கொருதரம் தான் பஸ் பிடிப்பேன். சில சமயங்களில் தவிப்பேன். யா ர் கழுத்தைப் பிடித்தாவது ஐந்தோ பத்தோ கொணர்ந்து கொட் டுவான். "ஏதுடாப்பா?" என்றால் சிரிப்பான். ஒன்றும் கிடைக் காவிட்டால் வீட்டுக்குக் கூட்டிப்போவான். அன்றிரவு அந்த முழு லயத்தையும் துரங்க விடமாட்டான். டோலக்கை உருட்டிச் செளந்தரராஜன் சமேதனாக எங்கள் வறுமைச் செல்வத்தைப் LufTrn Qanunt Gör.
என் சாரம் கிழிந்து தொங்கும். இவன்தான் பெச் போடுவது, சாரத்தை நூலே கிழிக்கும் நிலை வந்தால் தன் கிழிசலை எனக்குக் கட்டிவிடுவான்.
உன் வேஷ்ட்டியால் என்னைப் போர்த்து விட்டுக் கெள பீனத்துடன் துயின்றவனே! உனக்கொரு கோடி இடக்கூடக் கொடுத்து வைக்கவில்லையே! . எல்லாமே ஒரு கனவுலோகத்துக் கதையோ? a 8 . அந்தக் கனவை நான்தானா கண்டது?.
இல்லை! அவை நடப்புத் தான். அவனும் நா னு ம் சாட்சி! அவனிப்போதில்லை; நானிருக்கிறேன்- அவனுக்குமாக. உண்பதற்கும் கையாலாகாமலிருந்த அந் த க் காலமும் எங்கள் வரலாற்றோடு இணைந்துகொண்டது. தீ வி லேயே அதி க ம் பாதிக்கப்பட்டும் ஸ்த்தாபிதமானவர்களில் நானும் ஒருவன். ஸ்த்தாபித்தவன் பழனியாண்டி.
காலையும் பகலும்தான் எ ன் பிரச்சினைப் பொழுதுகள் . சீனா தானா முதலாளிக்கு ஏழு பிள்ளைகள். டியூஷன் என்னிடம். அதற்குரிய ஃபீஸ் - இரவுச் சாப்பாடு மற்றும்படி அங்கே சாப்பாடில்லை. மூன்று தேனிர்க் கடைகள், அநேகமாக ஷோக்கேஸ் வியாபார நிலையங்கள் மாதிரித்தான். அவித்து விற்கக் காட்டில் கூட றபர் மரவள்ளி இல்லாத சுத்தம், 37ல் தொடரும்
32 ܫ முகில் 1

சி ற கொ டி ந் த ப ற  ைவ க ள் தோப்பூரான் நாவலீர் முகமட் இர்ஷாத்
நாற்றிசையும் போர்க்கொடிகள் நலம்கேட்டுப் பறந்திடவே பார்த்த விழி நீர் சிந்தும் பரிதாபக் கோலங்கள் நம்மண்ணைக் காத்திடுவோம் நானிலத்தை மீட்டிடுவோம் நாடெங்கும் அறைகூவல் நாற்படையில் சேருமென்று உயிரதனை அர்ப்பணித்தோர் கால்பதித்தார் போர்முனையில் நிலம்சா யும் உயிர்களுடன் நிமிர்ந்துநின்று போர்தொடுக்க இளைஞர்களின் உடலெங்கும் உதிரவெறி படிந்தாலும் உறவென்ற கூண்டினிலே பாசந்தான் விட்டிடுமோ போனம :ன் ஜயசிங்ஹ \போர்முனையில் இறந்தசெய்தி கேட்டகனம் துடித்தாளே வீரத்தாய் மாலினியும் வீடெங்கும் மக்கள் திரள் ஒலங்கள் ஓயவில்லை ஆறுதல்தான் கூறிடவே ஆயிஷா வும் போனாளே மாலினியின் துயர் கண்டு மனங்கலங்கிப் போனாலும் நாட்டுக்காய்த் தன் மகனை அனுப்பவென முடிவெடுத்தாள் அன்னைமடி காக்கம கன் அக் கடும்ட ஈழத்த கன் அஹமதுவும் புறப்பட்டான் ஆயிஷாவின் ஆசியுடன் வடபகுதி போனமகன் வரவில்லை பலமாதம் அவன்செய்தி கேளாது அன்புத்தாய் கலங்குகிறாள் இதுபோன்றே எத்தனையோ சிறகொடிந்த பறவைகள்தாம் சிந்தனையில் மூழ்கிநிதம் சிந்துதம்மா கண்ணிரை
போ ர் (  ைவ) நி  ைன வு க ள் ஏறாவூர் எஸ்.ஏ. ஹில்மி ஹஸன்
சாட்சியில்லாத அந்த ராத்திரி. என் மனமெல்லாம் உன்னை நிறைத்து. நாம் போர்வைக்குள் தொடங்கிய முதல் யுத்தம் முற்றுப்பெறுவதற்குள் ரவை முழக்கங்களாலும் ஷெல் மழைகளாலும் செயலிழந்துபோன உன் ஸ்பரிச இழைகளெங்கும் உயிரைத் தேடி.
இன்னும் உறக்கங்களைத் தொலைத்துவிட்டு ஊtை) நினைவுகளுடன். -
முகில் 1 33

Page 19
இனிய சோதரா ! இலட்சியத்தில் சற்று நில் வெற்றி பெற நிதானம் கொள் உறுதி கொண்டு விட்டுக் கொடு; முன்னேறு! வீழ்ந்துவிடாதே! வாலிப நெஞ்சமே! அன்பாய் இரு; வருந்தாதே! அடிமை ஆகாதே! இன்றுனைத் விவேகமாய்ச் செயற்படு; தழுவிக்கொள்ளும் விக்வாசமாய் நட தோல்விகள்தாம் நம்பி நடவாதே! நாளைய உன் துன்பத்தை எதிர்கொள்; வாழ்வின் துவண்டுவிடாதே! வசந்த வரலாற்றின் சோதரா! ஆரம்ப அத்திவாரங்கள். கடினமான பான்தயிலும் இனிய சோதரா ! காலிடறி விழுந்தாலும் துன்பத்தை எதிர்கொள்! கஷ்டங்கள் நஷ்டங்கள் • துவண்டுவிடாதே!
தொடர ந்தாலும் முன்னேறு!
李芸、 - \\6 رکھیجتاً کم
ரத்தச் சுனைகளாய்ப் பீறிட்டுப் பாயும்
கொஞ்சி விளையாடும்
பிஞ்சுக் கரங்களிலும்
இன்று இப்போது விளையாட்டுப் பொருட்களாப் தென்றலும் நெஞ்சம் கொல்லும் தினந்தினம்
துப்பாக்கிகள் ! புயலாய் மாறும் !
வாக்குறுதிகள் இயற்கையைக்கூட வலுவிழந்து போனதால் இன்று மனிதம் நேசிக்க முடிவதில்லைமண்ணுக்குள் புதைந்து சமாதானப் புறாக்கள் போர் முனைகள் - --சிறகொடிக்கப்படுவதால் 1
34
 
 
 
 
 
 
 

V 强 نسا
of ris is , ,
மு. கடாபி, நிக்கவெவ, ஹொரவபொத்தான.
மின்னல் எப்படி ஏற்படுகிறது?
பதில்:- உங்கள் வினாவுக்குரிய விடை இதைக் கண்டவுடன் '
உங்களுக்கு ஏற்பட்டதே ஒர் உணர்வு, அவ்வாறுதான் மின்னலும், சுத்தியலா மாலையா?
எம்.என். சவீர், முனைச்சேனை 4, கிண்ணியா.
நாட்டின் சமாதான சக்தியைக் கொண்டு வருபவர் uifTsj?
பதில்:- நாம்தாம்.
மு.நி. சலித், முனைச்சேனை 4, கிண்ணியா.
நம் நாட்டின் சமாதானத்தை யார் குழப்புகிறார்கள்?
பதில்:- நாம்தாம். ܥܢܡ܌
எம்.எஸ்.எம். கைஸ், குட்டிக்கராச்சி, கிண்ணியா 5.
தங்கள் "முகில் ஏட்டின் முக்கிய குறிக்கோள்?
பதில்:- மத்துகம கலைமகன் பைரூஸ் சொல்கிறார்:-
முன்னேற்றக் கிளையில்!
றவலிக்கா ஜெலில், மக்கொன,
` @(ዐj மாணவனுக்குக் கல்வியின் உயிர்நாடி எது?
பதில்:- ஞாபக சக்திதான்.
முகில் 1 35

Page 20
இலக்கியத் ஜவாத் மரைக்கார் திருட்டு
"இலக்கியத் திருட்டு" என்ற குற்றச்சாட்டு, டல எழுத் தாளர்கள் மீது சுமத்தப்படுவது சகஜமாகிவிட்டது. திருட்டுச் சங்கதிகள் இலக்கிய உலகில் இடம்பெறுவது புதுமையானதோ நம் நாட்டுக்கு மட்டும் உரித்தானதோ அன்று. சர்வதேசப் புகழ்பெற்ற பல எழுத்தாளர்கள் இத்தகைய கண்டனக் கணை களுக்கு இரையாகித் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். மகா வி ஷேக்ஸ்பியரின் படைப்புகளுள் பல, அவருக்கு முன்னைய காலத தவரான Chosar என்பவரின் படைப்புகளிலிருந்து திருடப்பட் டவை என்றுகூடக் குற்றச்சாட்டுண்டு.
ஓர் எழுத்தாளன், தன் படைப்பை வெளியிடும்போது, பல்வேறு விமர்சனங்களையும் எதிர்நோக்குகின்றான். படைப் பின் தரம் பற்றிய திறனாய்வை மட்டுமன்றித் தன் சொந்த வாழ்க்கைகூட விமர்சிக்கப்படுவதைக் காண்கிறான். எனவே தன் படைப்பு சுயமானதா எ ன் று புடம்போடப்படுவதைச் சமாளிக்க வேண்டியது அவன் கடமையாகிவிடுகின்றது.
ஒரு படைப்பு, ஏதாவதொரு விதத்தில், இன்னொருவ ரின் படைப்பிலுள்ள உருவத்தையோ உத்தியையோ படிமத் தையோ ஒத்ததாக இருக்லாம். இதன் காரணமாக, 'அவரின் இன்ன ஆக்கத்திலுள்ள இன்ன அம்சத்தை இவர் திருடிவிட் டார்!’ என்று அறுவைசிகிச்சை நடத்திக் கிளறிப் பார்ப்பது சிலருக்குத் தொழிலாகவே மாறிவிட்டது.
ஒருவரின் சுயமான சிருஷ்டி, தற்செயலான நிகழ்வாக இன்னொருவருடைய சிருஷ்டியின் ஏதாவதோர் அம்சத்தை ஒத் ததாக இருக்கலாம். உண்மையில், முன்னையவரின் ஆக்கத்தை மற்றவர் படித்தோ கேள்விப்பட்டோ இராத நிலையிற்கூட இந்த ஒற்றுமை படைப்புகளுக்கிடையில் ஏற்பட்டிருக்கக்கூடும்,
இத்தகைய நிலையிலும் ஒருவர் இலக்கியத் திருட்டுப் பட்டம் பெறுவது என்றால், அது துரதிருஷ்டவசமானது மட் டுமல்ல, அபத்தமானதும் கூட!
அப்படியானால், இவ்வாறு ஒத்த தன்மையுள்ள படைப் புக்களுக்கெல்லாம், ஏதாவது நொண்டிச் சமாதானம் கூறி , இலக்கிய அங்கீகாரம் வழங்கிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? இவ்வாறு வழங்கிக்கொண்டே போனால், இ லக் கி ய
உலகில் போலிகள் மலிந்துவிட மாட்டாவா?
புரட்டுங்கள்
36

32ஆம் பக்கத் தொடர்ச்சி
இவன் எதையாவது சுமந்துவருவான்- காலைக் கும் பகலுக்குமாக. சோள ரொட்டியானால், சோளம் அரைக் கால், சோளத்தோல் அரைக்கால், கீரை முக்கால். அல்லது பலாப்பிஞ்சு முக்கால்.
என்னதான் ஒரு வடையும் ஒரு பிளேன்டீயும் என்ற ரீதியில் நாங்கள் கத்தப் பழகியிருந்தாலும் (அதற்குமேல் வக்கில்லை!) அந்தக் காலத்தில் தொட்டாற்சிணுங்கி மாதிரிப் பசிக்கும்!
ஒரே ஒரு பேக்கரி, அந்தப் பசிக்காலத்தில் ۔۔ அது பேன்கடியாக இருந்தது. அதியதிகாலை மூன்று மணியிலி ருந்தே கியூ. ஐந்து மணிக்குள் இருநூறு பேர். ஐந்தரைக்குப் பான் விநியோகம். எழுபத்தைந்தே றாத்தல் மாலையில் நூற் றிருபத்தைந்து றாத்தல். ஜே-யார்!’ என்று நீட்டக் கி யூ ! பழனியாண்டி அங்கே நிச்சயம் நிற்பான். ஒருநேரம் செருகி வைத்த ஆப்பாக; இன்னொருநேரம் சேமனிலைத் தண்ணிராக, எப்படியோ, ஒரு றாத்தல் பானைச் சுடச்சுடக் கை மாற்றிய வாறே, களவெடுத்து ஓடுபவனைப்போலப் பாடசாலைப் பள் ளத்துக்கு ஓடி வருவான். பானின் பேக்கரித்துவம், எங்கள் பள் ளிக்குடத்துச் சுவர்கள் மாதிரித் துண்டு துண்டாக ஒழுகும்!
'ஒரு துண்டு தின்னுங்க!" என்பான். "நீயுந் தின்னு!" என்பேன். 'நாந் தின்னுட்டேன்!” என்பான்- சிவாஜி யிடம் எஸ்ஸெஸ் ராஜேந்திரன் மாதிரி.
நானொன்றும் சிவாஜியாக இல்லாததால் கண் ணிரும் வராது. ஆனால் மாங்காயில் சொட்டும்.
,- கால் றாத்தலை விழுங்கிவிட்டு மீதியை அவ ஒனுடனே அனுப்பி வைப்பேன்.
இவற்றையெல்லாம் நினைக்கும்போது இவன் செத்துவிட்டானென்று என்னால் எப்படி நம்ப முடிகிறது?
கேவையைப் பூர்த்தி செய்பவன் நண்பன், பழ னியாண்டி என் நண்பன். ஆனால் நாணிவனுக்கு எப்படி நண் பனானேன்? அவனது எந்தத் தேவையைப் பூர்த்தி செய்தேன்?
6) ஆர். இஸ்ஸத் பீஹானா, சாய்ந்த மருது.
நான் அவசரமாய்க் குழந்தையாக மாறவேண்டும்! பதில்:- அடம் பிடியுங்கள். விஷயம் சரிவந்தால் நீங்கள் குழந்
தைதான். சரிவரவில்லையா? மீண்டும் மீண்டும் அடம் தானே தவிரக் குழந்தையாக வேறு வழியே இல்லை
37

Page 21
கவிதைச்சரம்
வானொலி- முஸ்லிம் சேவையில் நான் காண்டு களாக ஒலிபரப்பப்பட்ட, நம் நாட்டு இளம் த்லைமுறையினர் சுமார் 500 கவிஞர் : எரின் i கவிதைத் தொகுப்பான 'கவிதைச்சரம் நூலின் அச்சு வேலைகள், பொருளாதாரம் காரண மாகத் தடைப்பட்டுள்ளன. பிரதிக்குரிய முன் பணம் அனுப்பாதிருக்கும் கவிஞர்கள், உட னடியாக அனுப்பி உங்களுக்கு நீங்களே உதவ *வும். விளம்பரம் போன்ற மேலதிக உதவி களைச் செய்ய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும். -அல் அஸ விமத்
T
ir” என் வறுமைக்கேற்ற பார்ங்கின்ஸ் அனறும் சுமந்திருக்கிறான். என் நர்த்தகி சில தசைகளில் பாடசாலைக் கேகூட ஆஜராகிவிடுவாள். இவரக் கெடுக்றது நீதான்' என்று அவனில் பாய்ந்து பிடுங்கியும் இருக்கிறாள நீர் பாவும் கண்க ளின் வேதனைச் சிரிப்போடு இவன் என்னைப் பார்ப்பான்; அரை மணித்தியாலத்தில் சம்பாதித்து வந்து எங்கள் இருவரை யும் வண்டியேற்றிவிடுவான்!
எ ன் நினைவுகளுக்கேற்ற பகிடிகளைப் பொறுத்துச் சிரித்துப் புழுங்கி, தட்டுக்கள் என்ற பெயரில் தன் முதுகில் ஏராளமான என் இடிகளைத் தாங்கி.
என் மகிழ்ச்சி, உன் மார்பிலும் முது கி லும் தழுவிய வேகத்திலா உன் மாம்பழம் வெடித்தது? சரஸ்வதி தேவியின் தாடகா நர்த்தனமும் என் குடும்ப நர்த்தகியின் மடமைத் தேவியமும் அவ்வூரிலிருந்து அஞ்ஞாதவாசத்தைப் போதித்தன. கற்றுத் தேறி, என் சீடப் பிள்ளை கிட்ணசாமியுடன் கொழும்புக்குப் புறப்பட்டேன்- அவ னைக் கிட்டினவன் சாமியாராவான் என்றறியாமல்.
என் தலையிற் கிடந்த பள்ளிக்கொடச் சி தி லத்தைப் பழனியாண்டித் தலையில் வழித்து வைத்தேன்.
பாடசாலை பெஞ்சைவிட்டு, அன்று நான் கிட் ணசாமியின் சந்தைக் கடைப் பல கை வீட்டுக்கு வந்தபோது பழ னியாண்டி இடப்பக்கமாகவே இருந்தான். ஒரு கிழிந்த டவல், இரண்டு தையல் தாங்கிய பழனியாண்டியின் கோடுபோட்ட சாரம், உடுத்தியிருந்த உடை. தவனாவதி நாடாரின் ஷோக்
as முகில் 1

கேஸுக்குள் புகுந்து, ஒரு மகாவலியை இரண்டுபேரும் பங்கிட் டோம். என் கணக்குகளை எல்லாம் நாடார் அவனிடம் ஒப் படைத்த பிறகு வழிவிட்டார். வெளியே வந்தோம். முட்டைக் கண் அடைக்கலம் எப்போதோ விட்டுப்போன பெட்டிக் கடை யில் பண்டாமகன் நின்றிருந்தான். அங்கே நின்றான் பழனி யாண்டி. எல்லாப் பைகளுக்குள்ளும் புகுந்து பதினொரு சதங் களைச் சேர்த்தான். திfறோசுக்கு இன்னும் இரண்டு ச த மி தேவை. அதிர்ஷ்ட்டவசமாக அதே தொகை என்னிடமிருந்தது! வாங்கித் தந்தான். பற்றினேன். கிட்ணசாமி யின் பலகைவிடு வந்தது. சிகரெட்டைப் பழனியாண்டியிடம் கொடுக்க, பஸ்ஸ"ம் வந்தது,
அவன் எனனைவிடக் கோழை என்பது ப ஸ் ஸ" க்கு எப்படித் தெரியும்? எனக்கே அப்போதுதானே புரி ந்
எனக்கும் ஒரு நண்பனிருந்து 5F it is GLn 6T657 பதற்காகத்தானா நான் அந்த ஊருக்குப் போனேன்?. •••••
SE0S q SSSMSSSLSSSSSSASALLLSqSSJSSSS m r
w ۔۔۔ --س ٠۔
-छ
நிறை ஆண்டுச் சந்தாதாரர்களுக்கிடையிலான
该霍
அடுத்த இதழில் விபரங்கள்
கவிதை'சிறுகதைப் போட்டிகள்
పి-డా:'7:బx --a •=-- -- --- د گیتس ساقه مه، حس--
இருபது வருஷங்களுக்குமுன் நடந்தவை இவை கொழும்புக்கு வந்து பல மாற்றங்கள். என் மனைவி மாஜியா னாள். மறு கல்யாணம் நடந்தது. அவள் பெற்ற என் மக்க ளைச் சுவீகரித்துக்கொண்டேன். எல்லாம் இவன் தலைமையில் தான்! VK. அவனும் பாடசாலையை அரசாங்கப்படுத்தி னான். காதல் கல்யாணம் செய்தான். மட்டக்களப்புக்கு ட்றெய் னிங் போனான். றா கலைக்குப் படிப்பிக்கப் போனான். மூன்று வாரிசுகளுக்கு உயிலெழுத வேண்டியவனுமானான்.
எங்களுக்குள் அன்று முதல் சாகும்வரை அந் காங்கங்கள் அதிகம். இருவரும் எழுதிக்கொள்வோம். வ ச தி கிடைத்தபோதெல்லாம் ஓடி வருவான். என் மழலைகளுக்கு அவனுடைய பெயர் விநோதமானது. 'பல்லாண்டு மாமா" என்றாலும் சிரிப்பான்; சிறிது திருத்திப் *டலயாண்டி மாமா ? (ான்று சொல்ல வைத்தாலும் சிரிப்பான். விசாரித்து விசாரித் துச் சிரிப்பான்.
t வில் 39

Page 22
எம்.வி. குமார், தலவாக்கொல்லை.
இந்த அரசைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- இந்த அரசினைச் சுற்றி வந்தால் பிள்ளை பிறக்காத பெண்களுக்கும் பிள்ளை பிறக்குமாம். சிலவேளை ஏதாவது மூலிகைச் சமாச்சாரமாக இருந்து பிறக்கலாம். இதற்காகப் புருஷ னைக் கைவிட்டு அரசினையே சுற்றிக்கொண்டிருந்தால் பிள்ளை கிடைக்குமோ?..சரி, போகட்டும். இதே அரசின் கீழிருந்துதான் சித்தார்த்தர் உலக சம்சாரத்தையே விட்டுத் தள்ளினார்! இப்போது நீங்களும் நினையுங்கள், இந்த அர சி னால் குடும்பம் உருவாகுமா உருவான குடும்பம் அழியுமா?
பழைய பழக்கம் மாறாமல் தேயிலை, பலாக் காய் என்றெல்லாம் சுமந்து வருவான். கொண்டுவந்த பணத் தையெல்லாம் என் பிள்ளைகளுக்காகக் கொட்டிவிட்டுக் கடை சியில் என் பர்ஸைப் பொறுக்கிக்கொண்டு போவான்- அ வ னுக்கு இதுதான் பிறந்த வீடு என்று யாரோ சொன்ன மாதிரி! பல்லாண்டு மாமாவாய் எ ன் பாலருக் கிருந்தவன் சில்லாண்டு ம!1ாவாய்ச் சென்
ாதெப்படி? எண்பத்து மூன்று நெருப்புக்குப் முன்புதான் அவன் கடைசியாக என்னிடம் வந்தது. ஏதோ ஒரு குருட்டுத் திருப்திக்காக, இறுதி தெரியாத ஒரு சூட்சுமத்தில் பணியன், சஸ், கம்மீசு, கால்சட்டை, சப்பாத்து, மேஸ், பிள்ளைகளுக்கு உடுப்பு என்று, அவன் வேண்டாம் வேண்டாமென்று கதறக் (5 ftD. . . . . . . . .
ஐயோ, அவையே கோடியாகினவா?. கலவரம் வந்தது. என் கதையும் படுத்தது. ஏழெட்டு மாதங்களாகக் கடிதமில்லை.
மணிக்கு ஐந்து ஃபுள்ஸ்க்கேப் வீதம் கதை எழுதுவேன்; ஆனால் ஆறு மாசத்துக்கும் ஒருபக்கக் கடிதம் எழுத முடியாது.
அவன் எனக்கு நேர்மாறு. ஒவ்வொரு கடித மும் பத்துப் பக்கமாவது இருக்கும். நான் ஒன்றை எழுதிவிட் டாலோ, தொலைபேசி மறுமொழி மாதிரி மறுமொழி வந்து விடும். ஏழெட்டு மாதமாக ஒன்றுமே இல்லாததில் பலதும் பத் துமாக நினைவுகள். இவள் ஊருலகத்தைக் காட்டினாள். அப் படி எதுவும் நடந்திருக்காதென்று நான் பிடிவாதித்தாலும், ஒன்றை எழுதத் துணியாத அச்சம்; நடுக்கம்.
இந்தக் காலத்திலே என் வீழ்ச்பிென் வேதனை வீட்டை அரித்துக்கொண்டிருந்தது. ஒட்டிக்கொண்டிருந்தவை
46) ་་ ་ w முகில் 1

என் தோல்கள் அல்ல, வெண்காயத் தேர்ல்கள் என்பதை உணர்ந்த சாணக்யம், அந்தத் தோல்களை இன்னும் உ ரிக் க வேண்டி ஒரு கவிதை எழுதினேன்; பிரசுரமாகிற்று. பழனியாண் டியிடமிருந்து கடிதக் கட்டுரை வந்தது!
"என்னையும் அந்த வரிசையில் சேர்த்துவிட் டீர்களா?' என்று மல்கியிருந்தான்.
கலவரத்தில், தங்கியிருந்த அறைக்கும் தீ. சக ஆசிரியர் எரிந்துபோனார். இவன், அடையாள அட்டையை எரியவிட்டுத் தப்பித்துவிட்டான். குடும்பம் மாமா வீட்டில், அண்ணா, அப்பள் எல்லாருமே மட்டக்களப்பில் தஞ்சம். அடை யாள அட்டை இல்லாமல் எட்டு மாதமாகச் சம்பளம் கிடைக் கவில்லை.
‘இன்னும் இரண்டொரு மாசத்தில் சம்பளம் கிடைத்துவிடும். சம்பளத்தோடு அங்குதான் வருவேன். நீங்கள் மனம் தள வேண்டாம். என்று தன் பழைய புத்தியைக் காட்டியிருந்தான்.
பெருமூச்சுக் கடிதம் எழுதினேன். இர ண் டு மாதமாகப் பழையபடியும் கடிதமில்லை.
கநேஷ் என் கொழும்புச் சகோதரர். அலாதி மனிதர்; அவர்தான் ஒருமாலையில் வந்து கேதம் சொன்னார்
‘'ஸார்! பளனியாண்டி, ஒங்க கூட்டாளியத் தெரியுமா?" என்றார். நான் விழித்தேன். "அவரப் பத் தி
C. "'என்னாது' * 2 போன மாசந் தினபதி
سمص*سی بھی کو
& பாத்தீங்களா?' '
, , sy
`လှီ၊ //? f எனக்கு எதுவுமே அத்துப்
ཊི་ལ་རི་ ( படியாகாதபோதே
྾ཐོ། ༄། ། "அவரு செத்துப் போய்ட்
N L-fr frn b GM) fríi“? ' '
ஒரு சனிப்பகலில், ப 1 ட சாலை மயானத்தில், கிரிக் கட் சிலுவையாடிக்கொண் டிருந்தபோது, மாரடைத்து
நாட்டையே கெடுத்துக்கொண்டிருக்கும் விக்கெட்டின் அழிச்சாட்டத்துக்கு உ ன் மிறைவும் ஒரு செஞ்சுரிதான்.
ழகில் 1 al

Page 23
நான் பிரயோசனமில்லாது அழுதேன். மனைவி வயசுவந்த பிள்ளைகள் டீவீயை நிறுத்தித் திரையிட்டார்கள்
பாடசாலை அதிபருக்கு விபரம்கேட்டு எழுதி னேன். ஒரு மாதம் கழித்து உருக்கமாக எழுதியிருந்தார். குடும் பத்தாரின் விலாஸம் அதிலில்லை. மறுபடியும் எழுதினேன். மறு மொழி இல்லை. அங்கிருந்துதான் விதி சிரிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். -
அவன் செத்துப்போனான். ஆனால், "நா ன் வருவேன்" என்ற கடிதம் என்னிடம் இருக்கிறதே!
ΔV.Δ இந்த நிலையில்தான் அவனது அண்ணனை நேற்றுக் கொழும்பில் கண்டேன்.
அவர் அப்படிப் பேசிவிட்டுத் தொலைந்து Gunt Grrr rio.
ஆனாலும் இந்த வைகறையில் என் ம ன ம் தெளிந்திருக்கிறது,
அவர் சொன்னது சரிதான். தத்துவமாகச் சொல்லவேண்டியதைக் கொஞ்சம் தண்டுமுண்டுத் தனமாகச் சொல்லிவிட்டார். 1.
பழனியாண்டிதான் என் நண்பன். உ ல கி ல் வேறு நண்பனே இல்லை. அவனே போய் ஒதுங்கிவிட்டான்! பிறகு யாரிடம் போய் நான் நட்புக் கொண்டாடுவது? செத் துப்போனால் எல்லாமே முடிந்ததுதான்!
பழனியாண்டியின் யாருமே என் நண்டப்னா கி விடும் யோக்கியதைக்கு ஆளாக முடியாது.
அண்ணனிடமே அன்று போயிருந்தால்கூட, இப்படித்தான் சொல்லியிருப்பார்:-
** என்னா மாஸ்ட்டர் செய்யிறது!. p5 IT LD குடுத்து வச்சது அவ்வளவுதான்!. நீங்களே இப்புடி அளுதா எப்புடிங்க?...
########################
ع
ச ந் தா செ லுத்து ங் கள் ,
ச ஞ் சி  ைக சே க ரி யுங் கள் !
※※※※※※※※※※擦淡淡淡淡淡※※鯊採密※
:
Հգ
食亨 }}

ށހ - ܚܢܢ ܐܝܠ^ いくン பசியின் ருசியைப் பள்ளிப் பாடமாக்கிக் கற்றுத் தந்திடும் பொறுப்புள்ள ஆசான். வயிற்று மேடையில் பட்டினிப் பேய்கள் சேர்ந்து நடாத்தும் பட்டி மன்றத்தின் ஆயுட் காலத் தலைவன். பள்ளிப் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வோடு கடுமையாகப் போராடும் கல்மனப் பகைவன். கல்வியைத் துறந்து தொழில் பார்
என்ற உத்தரவை பிரகடனம் செய்யும் முதல் அமைச்சர். சமையற் பண்டங்களுக்கு பட்ஜட் தயாரித்துச் சாப்பாட்டு நேரங்களை மாற்றி அமைக்கும் பொருளாதார நிபுணன். நலிந்த உடலில் தொற்றவரும் நோய் விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் விகவாசமான சிப்பந்தி,
r"
ಶ)
le
விடை கொடுக்க விரும்பாமல் நிரந்தரமாய் வதிவதற்கு பிரஜா உரிமை வழங்கும் செங்கோலரசன்' பணக்காரன் பங்கு கேட்காத ஏழைக்கே உரித்தான அசையாச் சொத்து. குடும்பச் சோலைக்குள் பிரச்சினைப் பிரிவுகளைத் தினந்தினம் ஏற்படுத்தும் உலக வல்லரசின் வாரிசுப் பொக்கிஷம். மனக் களனியில் விரக்தி வரட்சியை விரைவில் உண்டாக்கும் கோடைச் சூரியன். இரத்த பாசங்களைத் திரும்பிப் பாராது ஒடச் செய்யும் இன்னொரு ஜப்பானிய நாகசாக்கி பூமி. கன்னிக் கருமுகில்கள்
காலந்தோறும் கொட்டும்
கண்ணீர் மழையில் ஆனந்தம் காணும் அரக்கப் பேர்வழி,
கில்
43
ஹ னு னா

Page 24
36 ஆம் பக்கத் தொடர்ச்சி-இலக்கியத்திருட்டு
இலக்கியத் திருட்டை எவ்விதத்திலும் நாம் அனுமதிக்க முடியாது. இலக்கியப் போலிகளை நாம் இனங்காட்டியேயாக வேண்டும். அதே வேளை, சுயசிருஷ்டிகளுக்கு இலக்கியத்திருட் டுப் பட்டம் சூட்டிவிட எடுக்கப்படும் முயற்சிகளையும் நாம் அனுமதிக்க முடியாது. எனவே, இலக்கியத் திருட்டுப்பற்றி விரிவாகவே ஆராய்வது, படைப்புக்களின் அசலையும் நக?ை யும் சரியாக இனங்காண உதவும்.
புதுக்கவிதை என்ற ஊடகத்தை அழியாச் சுவடுகளாக ஆக்கிவைத்த "வானம்பாடி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு கவி ஞர், சில வருடங்களுக்கு முன்பு ஒரு கவிதை எழுதினார். அந் தக் கவிதை :-
எங்கள்மீது சாம்பலைத் துாவாதீர்! நாங்கள் நெருப்புக் கோழிகள்! இக்கவிதை வெளிவந்த சில காலத்தின் பின்னர் , ந ம் நாட்டுக் கவிஞர் ஒருவர் எழுதிய கவிதை ஒன்று ஒரு பத்திரி கையில் பிரசுரமானது:-
எங்கள்மீது கொதிநீரையூற்றாதீர்! நாங்கள் பச்சைத்தண்ணீர்ச் சாதிகள்!
இந்த இரு கவிதைகளையும் சுட்டிக் காட்டி, நம் நாட்டு இலக்கிய ஏடொன்று எழுதியதும், பிந்திய கவிதையை எழுதிய கவிஞர் அக்கவிதை தனது சுயசிருஷ்டியே எனப் பதிலெழுதிய தும் பழைய சங்கதிகளாகிவிட்டன. உண்மையில், இரு கவிதை களையும் ஒருங்கே வாசிப்பவர் மூக்கில் விரலை வைத்துச் சிந் திப்பதில் வியப்பேயில்லை. இதேவேளை இன்னொரு கவிதையும் தமிழகத்திலிருந்து வெளியாகியது. அதனை எழுதியவரும் சாமான்யமானவரல்ல; "வானம்பாடி" இயக்கத்தின் மூலபிதாக் களில் ஒருவர். அவரின் கவிதையை நாம் முதலில் கூறிய கவி தையுடன் ஒப்புநோக்கும்போது நம் வியப்பு இன்னும் பலமடங் காகும:-
எங்கள் மீது பார்வையைத் திருப்பாதீர்! மூடிவிடுங்கள் மூன்றாவது கண்ணை! எங்கள் தலைகள் மணலுக்குள். நாங்கள். நாங்கள்.
நெருப்புக் கோழிகள்!
இன்னுமிரு கவிதைகளைப் பt fப்போம். நம்நாட்டுக் கவிஞ ரொருவரின் ஆக்கம் இது தமிழக ஏட்டில் வெளிவந்தது.
44 முகில் 1

பழம் கிடைக்குமென மரத்தின் கீழ் காத்திருந்தோம். நச்சுப் புழுக்களால் கடியுண்டு. தொடர்ந்து
காய்களே வீழ்வதால் மரம் ஏறிக் கணிபறிக்கக் கிளம்பிவிட்டோம்!
மற்றக் கவிதை தமிழக எழுத்தாளர் ஒருவருடையது:- ;மந்திரம் சொன்னோம் ܗܝ
மாங்காய் விழவில்லை.
எடுப்போம் கல்லை; எறிந்து வீழ்த்துவோம்! அடைய முடியாத ஒன்றைப் பலாத்காரமாகப் பறித் தெடுக்க வேண்டும் என்ற ஒரே கருத்தைத் தொனிப்பொருளா கக்கொண்டே இரு கவிதைகளும் ஆக்கப்பட்டுள்ளன. இரண்டி லும் மரத்திலுள்ள காயைப் பறிப்பதே எடுத்தாளப்பட்டுள் ளது. முதலாவது கவிதையின் தலைப்பு ‘சுதந்திரம்" என்றும் இரண்டாவதில் ‘செய்" என்றும் இருந்தாலும், இரண்டும் ஒரே விஷயத்தையே சுட்டுகின்றன என்பது எளிதில் விளங்கக் கூடி யதே.
பிரபல கவிஞரான ‘மகாகவி' எழுதிய பின்வரும் கவிதை யடிகள், வாசித்தவர் மனத்திலிருந்து எளிதில் நீங்காத் தன்மை கொண்டவை:-
சிறுநண்டு மணல்மீது படமொன்று கீறும் சிலவேளை அதைவந்து கடல்கொண்டு போகும்.
இக்கவிதை வெளிவந்த சில வருடங்களின் பின், த மிழ்
நாட்டுச் சஞ்சிகை ஒன்றில் இடம்பெற்ற ஒரு புதுக்கவிதை இது:- கரையிலே நண்டுகள் எல்லாம் வந்து வந்து காவிய வரலாறு எழுதிப் போயிற்று. அந்நண்டுகளின் தாயான . ܥ கடலின் கரங்களோ அவற்றை جصی ஒன்றுகூட மிஞ்சவிடாமலும் தம் குழந்தைகள் எழுதியவைதாம் என்பதை எண்ணிப் பாராமலும் உடனுக்குடன் வந்து அழித்துப் போயிற்று.
முகில் 45

Page 25
உண்மையில், "மகாகவி'யின் கவிதைக்குரிய பொருளை அப்படியே இரண்டாவது கவிதை வரிக்கு வரி விரித்துரைக்கி றது. ஆனால் இரண்டாம் கவிதையை எழுதியவர் "மகாகவி' யின் கவிதையை வாசித்திருப்பாரா? ஏனென்றால் "மகாகவி' யைப்பற்றித் தமிழ்நாட்டுப் பிரபல கவிஞர்களே நன்கு அறி யாத நாட்களில் வெளிவந்தது இது.
மிகுதி அடுத்த இதழில்
புத்தளப்பூவை
அந்தி வானமகளின் வெஞ்சினமோ? கன்னக்கதுப்புகள் மெல்லச் ம்ாந்தரின் சிவந்ததேனோ? குறுகிய மனப்பான்மையால் காலிமுகத்திடலில் தினமும் உருளும் குடைக்கேடயங்களின் கீழ் மனிதத் தலைசளுக்காக நடக்கும் அழுகின்றாளா? யுத்தங்களைக் கண்டு மனிதனை மனிதன் நாணுகின்றாளா? விழுங்கி ஏப்பமிடுகின்ற சூரியக் காதலன் : வேடிக்கை மனிதரையும் பிரியாவிடை பெறும்போது - விந்தை மாந்தரையும் மெல்லக் கிள்ளினானா? கண்டு தினந்தினம் م மெல்ல நகைக்கின்றாளா ? Lurt Guj FT jh 95 GOLé (356ait - அந்தி வானமகளின் மூழ்கியழியும் - கன்னக் கதுப்புக்கள்
பார்மீது கொண்ட மே விச் சிவந்ததேனோ?
46 شتستستسنتسنسسش سسنس سنت ܚܵܒܘܫܡܝ̈ܟ̇ܐ முகில் 1
 
 


Page 26
கல்பிட்டித் துறைமுகத்தில் நீண்ட கியூ வரிசை. அவன் குடும்பமும் இடையில். நேற்றே டிக்கட் எடுத்தாகிவிட்டது. ஏற வேண்டும்; மன்னார் போகவேண்டும்.
அப்போது வந்தது வியர்வையையும் உறையவைத்த அந்த அறிவிப்பு.
大 இனி மூட்டையைக் கட்ட வேண்டியதுதான்! பிறந்த மண்ணுக்கு மீண்டும் போவதை எண்ணிய வேளை களிலெல்லாம் அளவு கடந்த உற்சாகம் கரை புரண்டு ஓடி னாலும்கூட இதயத்தின் ஒரு மூலையில் சின்ன ஒரு நெருடலும். நான்கரை ஆண்டுக்கால நட்பையும் பழகிய இடத்தையும் சின்னஞ்சிறு குடிசையையும் கிணற்றடியையும் விட்டுவிட்டு எப் படிப் பிரிவது?. கவலைதான்.
ஆனால் பிரிந்துதான் ஆகவேண்டும்! சொந்த ஊருக்குச் செல்லப் போகிறோம், பிட்டுப்பிசைந்து விளையாடி மகிழ்ந்த முற்றத்து மண்ணில் உருண்டு புரளப் போகிறோம், வாப்பாவின் உழைப்பில் கட்டப்பட்ட சொந்த வீட்டில் கும்மாளமடிக்கப்போகிறோம், சொந்தக் கிணற்றடியில் குளிக்கப்போ கிறோம், ஆசை ஆசையாக வளர்த்த நெல்லி மரத்தின்மேல் ஏறி அதில் கொத்துக் கொத்தாய்க் காய்த்துக் குலுங்கும் நெல்லிக் கணிகளை அள்ளி அப்படியே வாய்க்குள் போட்டுக் குதப்பப் போகிறோம் என்பதை எல்லாம் எ ன் ணுந்தோறும் இன்பத் தேன் வந்து.
அந்த மலையாளத்துக் குஞ்சு மாயன் குட்டி டீக்கடைக் கொத்துரொட்டியின் கமகம வாசனை இப்போதே மூக்கைத் துளைக்கிறது! ரொட்டி கொத்தும் இளையராஜாவின் ட்றம்ஸ் மியூஸிக் காதுகளினுள்ளே புகுந்து விளையாடுகிறது!
தள்ளுவண்டியிலே ஆவி பறக்கப் பறக்கப் பட்டாணிக் கட லையை அவித்துத் தள்ளித் துளைக்கும் வாசத்துடன் தள்ளிக் கொண்டு வரும் அந்த டேவிட் இப்போது நெஞ்சின் நினை 665) a 356T fift,.........
டேவிட்டிடம் வாங்குவதா சஞ்சிக் காக்காவிடம் வாங்கு வதா என்ற மனப்போராட்டத்துடன், யார் அதிகம் கடலை தருகிறார்களோ அவரிடமே வாங்குவது என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ளும் அந்தப் பசிய நினைவுகள்.
ஒழுங்காகக் கட்டப்பட்ட அந்தச் சின்னஞ் சிறிய வீட்டின் முன்னால் அமைந்திருக்கும் அகன்ற, ஆழமற்ற, வரண்ட, சிறு கமத்தில் மழைக்காலத்தில், தேங்கிநிற்கும் நீர் மீது உல்லாச மாய்ச் சுற்றிச் சுற்றிச் சிறகடித்து வலம் வரும் வாத்துக்கூட் டம் கண்ணில் இன்னும் சுற்றிக்கொண்டே.
48 முகில் 1

இப்ப்ோதும் அப்ப்டியே இருக்குமர் என்கிற ர்க்கம், எதிர் ப்ார்ப்பு, ஆவல். நெஞ்சில் முட்டி மோதித் தத்தளிக்க.
அருள் நோன்ன் யும் யாழ்பகவானையும் தியாகராஜாவையும் ஜேம்ஸையும் கண்ேஷையும் மெற்றில்டாவையும் பொன்மல் ர்ை யும் பாக்கியத்ண்த்யும் மீண்டும் பார்க்கப் போகிறோம் என்ற் பரபர்ப்பு மறுப்க்கம் உந்தித் தள்ள்.
குன்றும் குழியுமர்ன் அந்த நெடுஞ்சர்லையில் குடியிருப்பி லிருந்து பெரிய டை நோக்கி, மீன் வாங்குவதற்காக சைக்கி கபர்க ஓடிவந்து சறுக்கிக் கீழே விழுந்து முழங்காலைத் தேய்த்துக்கொண்டு இர்த்தம் ஒழுக ஒழுக எழுந்து நி ன் ற் அந்தச் சம்பவங்கள்! திட்டுத் திட்டாப் உருண்டு திரண்டு புக்ை மூட்டமாய், மயிர்ச் சுருளாய்.
༧ ༦༠ ད་ན་ry,, , ༣ །ང་ཉ་ /* - , is . . . . . ششمین
க  ைல் வர் தி க் லீ ல்
அல் அஸ்ஹரையும் புனித் ச்வேரியாரையும் ஹோ லி ஃபெமிலி கொன்வன்டையும் சித்திவிநாயகரையும் மீண் டு ம் பார்க்கப் போகிறோமே என்ற மன் நெகிழ்ச்சியில், அங்குப் பிள்ளைகளின் த்ொகை எவ்வள்வோ ஆசிரியர்கள் இருக்கிறர்ர் கள்ோ நமது நண்பர்கள் இன்னும் கற்பிக்கின்றார்களோ என்ற புள்ளிவிடர்ங்கள் தேடித் தேடிப் புலன்கள் காய்த்துப்போகின் Ꮑ0 ᎧᏈᎢ ... .. .
வீட்டுக்கு வெகு அண்மையிலுள்ள கடற்கரையின் பொரு பொருவ்ென்ற குறுமணலில் வளர்ந்து மதாளித்துச் செழித்துக் குடை விரித்துள்ள உடை மரங்கள்; அவற்றின் டானா வடிவி லான வெள்ளை வெளேரென்ற உறுதிமிக்க முள்; ஆடுகளின் ஆவலைத் தூண்டுகின்ற மணிமணியான சின்னஞ்சிறிய இலை கள்; தொங்கட்டான் போன்ற வட்ட வடிவமான காய்கள் ! .நெஞ்சில் வந்து முட்டிமுட்டிக் கிச்சுக்கிச்சு மூட்டுகின் /)ன. மரத்தினடியில் மணலில் புதையுண்டு வள்ர்ந்திருக்கும் கறுத்த மென்தோலுடன் கொழுத்த மகக்குட்டிபோல் காணப் படும் அல்லைக் கிழங்குகள், பச்சரிசி நிறமும் அமிர்த ருசியும் நாக்கைச் சப்புக்கொட்ட வைக்கின்றன! மயிலின் கொண்டை போன்ற் வண்ண்ப் பூக்களை உடைய கொட்டிக் கிழங்கும் புளிச்சிான் கீரையும் செருப்படிக் கீ ையும் வேrெங்குதான்
(கில் 1 49

Page 27
தனிக்காட்டு ராஜாக்கள் பாலைப்பழம், சூவப்பழம், வீரப் பழங்களெல்லாம் நாக்கில் ஜலத்தை வரவழைக்கின்றனவே!
குற்றுயிரும் குலையுயிருமாய்த் துடிக்கத் துடிக்க வாப்ப? கொணடுவரும் ஒரா, மணலை, கச, பாலை மீன்களைச் சட டியில் போட்டுச் சமைத்து ஆவி பறக்கப் பறக்க உ? இ9° போது ஏற்படும் சுகானுபவம், ஆகா!-
கட்டாவையும் பாரையையும் மஸ்கத்துத் துண்டுபோல்
வெட்டி எடுத்து உறைக்க உறைக்க உம்மா சமைத்துத் தருவாளே, நாசியைத் துளைக்கும் நறுமணத்தோடு நறுநறுவென்றிருக்கும் அ ந் தக் கருவாட்டுப் பொரியல், வாப்போய்!.
மன்னாரே மணக்கிறது!. உம்மா கண்ணிடுக்கின் நீர்த் திவலையாகக் கரைந்து. பவளக்கூர் நாரைப் பனங் கிழங்கின் நாசிதுளைக்கும் நறுமணமும் ருசியும் சொல் லக்கூடியனவா, என்ன !
கடக் என்று ஒடியும் ಫ್ಲಿ?
சீவல் ஒடியலுடன் போட்டி
போட வேறு என்ன உணவு 1_AA வகைதான் இருக்கிறது? . . இதையெல்லாம் தின்னப் ”/ போகிறோமா? வாய் சப்புக் 4, கொட்டுகிறதே!. . . .حميسيسي * * *
குட்டி முயலின் குளிர் இறைச்சியும் ரெக்குத் சதைப்பிடிப்பும் நாக்கிலே ஜலம் ஊற வைகின்ற
இவற்றையெல்லாம் மீண்டும் அனுபவிப்பதற்காவது.
கல்பிட்டிப் பெரிய பள்ளிவாசலின் 'பாங் "கோசை அவன் சிந்தனையைக் குலைக்கிறது. நூலறுந்த பட்டமாகச் சிந்தனையைத் தொலைதூரம் அனுப்பிவிட்டு, இஷாத் தொழு கைக்காக எழும்புகிறான்.
பள்ளியை நோக்கி அவன் பாதச்சுவடுகள் . ஆயினும் பாழும் சிந்தனைப் பட்டம் மீண்டும் அவன் தோளில் தொற்
5) முகில் 1
 
 

மன்னாரிலும் பாங்கின் ஒலி கேட்குமா? கேட்பதாகப் பலரும் கூறினார்கள். மூன்று வருடங்களின் பின் ‘அதான்' ஒலி முப்பத்தாறில் மூன்று பள்ளிகளில் கேட்கிறதாம்.
அங்கு, ஒன்றரை வருடத்துக்கு முன் ஹெளள்கள் காய்ந் துதான் கிடந்தன. பள்ளிவாசல்கள் பாழடைந்துதான் கிடந் தன. உள்ளே ஆந்தையும் வெளவாலும் அடைக்கலம் தேடின. கூரையையும் உடைத்துக்கொண்டு மேலெழுந்த மரங்கள், பற் றைகளின் அடியில் வாசஸ்தலங்களை அமைத்துக்கொண்டன பாம்புகளும் தேள்களும் பெருச்சாளிகளும். இப்போது ஒழிக்கப் பட்டுவிட்டதா சக் கேள்வி- பர் ஸ்ரியைவிட்டு.
தக்பீர் சட்டியபோதும் சிந்தனைக் கரங்கள் அவன் கழுத்தைப் பலமாய் நெரிக்கன்றன. மூச்சுத் திணறுகிறது. ஒரு வாறு சுதாரித்துக்கொண்டு தொழு கையை முடித்துக்கொள்கி றான். குடிலுக்கு விரைகிறான்.
வீ. செல்லத்துரை, தேகம, கெக்கிராவ.
வைரமுத்துவைக் கவிஞர் இல்லை என்கிறார்களே
பதில்:- வைரமுத்து க விஞர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கவியரசு, அப்படி, இப்படி என்கிறார்களே, அதைத்தான் ஒத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் இவர் தன் பாடல்கள் பற்றி அதிகமாகவே அ ல ம் பு வதுதான். இன்னோர் உதாரணத்தையும் கூறலாம்:- அவரது சினிமாப் பாடலான ஒட்டகத்தைக் கட் டிக்கோ', அவரது கற்பனை 'புளூ அளவுக்கு அசிங் கமான தென்ற பொதுமக்கள் அபிப்பிராயம் வ  ைர கொண்டுவந்து விட்டுவிட்டது. ஒரு பேட்டியில் அ து குறித்து அவர் குறிப்பிட்டபோது, ஒட்டகங்கள் கிடைக் காததால் அக்காட்சி குதிரைகளை வைத்து எடுக்கப் பட்டதாகவும் அதனால் தன் அர்த்தம் தனக்கே எதி ராக மாறிவிட்டதாகவும் தப்பிக்கப் பார்த்தார்! இது ஏதோ சினிமா எடுக்கப்போய் டிவீப் படமெடுத்த கதை மாதிரி இல்லை? சரி, காதில் பூ வைப்பதுதான் இன்றைய சினிமா . ஆனால் ஒரு கவிஞனுமா!. ஒட்டும் அகம், அதாவது ஒட்டிப்போகக்கூடிய இதய முள்ளவனைக் கட்டிக்கொள் என்பதுவே என் கருத்து என்று இவர் கூறியிருந்தாரானால் இவரைக் கவியரசர் என்று ஒத்துக்கொள்ளலாம் அல்லவா? அதிகம் அலம் புபவர்களிடமிருந்து, தெரியாத்தனமாக ஒண்டவந்த கவித்துவம் ஒடிப்போகத்தான் முயற்சி செய்யும் ! உங் கள் வினா என்னையும் அலம்பவைத்துவிட்டதே!.
முகில் 1 5

Page 28
மீண்டும் சிந்தனைச் சக்கரம். நான்கு குழந்தைகள், மனைவி, மாமா, 1ாமி, முடக்குவசி தீத்தால் நடமாட வக்கற்ற மாமியின் தங்கை. இத்தனை அங் கத்தவரோடு கணவனால் கைவிடப்பட்ட தங்கையையும் அவச் ளது இரண்டு குழந்தைகளையும்கூடப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு. ஒரு ஸ்தாபனத்தில் வேலை பார்த்துவந்தான்= மன்னாரில். யாரிடமும் பல்லிளிக்காமல், காலைக் கையைப் பிடிக்காமல் காலம் தள்ள முடிந்திருந்தது.
மன்னாரிலிருந்து விரட்டப்பட்டபோது மாற்றுடுப்புகளை மட்டும் சுமந்தபடி காரண வாதிகளையும் கடவுளையும் திட்டிக் கொண்டு பள்ளிமுனைக் கடலில் படகேறிய பதின்மூன்று அங் * கத்தவர் குழுவுக்குக் கடல் அநுபவம் இன்மையால் பட்டபாடும் பதட்டமும் பரிதவிப்பும். குஞ்சு குறுமான்கள் சில வாந்தி எடுத்தன. சில மயக்கம்டோட்டு விழுந்தன. ஆளுயர் அ  ைலீ எழுந்தபோதெல்லாம் அடிவயிற்றில் சுளிர்க் குளிர்! படகின் ஒரு முனை தண்ணிருக்குள் உராய்ந்து எழும்போதெல்லாம் ஈரற் குலை கருகும் !
பறிகொடுத்த ரேடியோ, 12 இஞ்ச் டீவீ, அலுமாரி, மேசை கதிரைகள், தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாம் ஆவி வடிவில் வந்து அவனை அலைக்கழித்தன. கெட்டுப்போன கழு  ைத நின்று உரசுகின்ற குட்டிச்சுவர் போன்று காட்சியளிக்கும் அவ னது கூரையற்ற, யன்னல்- கதவுகளற்ற சிறிய வீடு இப்போதுச் பேயாய் மாறிப் பயமுறுத்த ஆரம்பித்தது. V.
ஆயினும் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லையென்று திடசங் கற்பம் பூண்டுகொண்டான். இனி இங்கு வாழமுடியாது! இன் னுமின்னும் துன்பங்களையும் துயரங்களையும் அணுவணுவாக அனுபவித்து இரத்தக் கண்ணிர் சிந்திக்கொண்டிருக்க முடியாது. ஒருநாள் பட்டினியும் ஒருநாள் கால்வயிறுமாகக் காலந்தள்ளிக் கொண்டிருக்க முடியாது. பிச்சைக்காரனிலும் கேவலமாக, நலிந்து நாயாக, வாலிருந்தால் கூனிக் குறுகி அதைத் தன் காலிடுக்கில் நுழைத்துக்கொண்டு வாழ முடியாது!.
ஊருக்குத் திரும்புவோம். எவ்வளவு பயங்கரமென்றாலும் அங்குச் செல்வோம். சொந்த வீட்டில் குடியமர்வோம். கூழோ கஞ்சியோ குடித்துவிட்டுச் சுருண்டு படுப்போம். நாலரை வரு டங்களாக இங்கே பட்ட அவதி போதும். எல்லாவற்றுக்கும் மேலாக அகதிக்காண்டை என்கிற அவச்சொல்!
நினைக்குந்தோறும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல் தோன்றும். ஆனால் சாவதுவுமில்லை;  ைத ரிய ம் போதாது!
அப்படிப்பட்ட வனுக்கு இந்தத் தைரியம் வந்தது ஆச்சரி: 10ான விஷ11ந் தான். ஆனால் வந் துவிட்டது துணிவு! வாழ்வா
52

சாவா என்ற ஜீவ-மரண ட் போராட்டத்தில் வாழ்வோ Frt Gart அது இங்கல்ல, சொந்த மண்ணில்தான்!
மனைவியிடம் ஆலோசனை சேட்டான். சம்மதித்தாள். அதன் விளைவுதான்இந்தத் தீர்மானம்.
大 கல்பிட்டித் துறைமுகத்தில் நீண்ட கியூ வரிசை. அவன் குடும்பமும் இடையில். நேற்றே டிக்கட் எடுத்தாகிவிட்டது. ஏற வேண்டும்; மன்னார் போக வேண்டும்.
அப்ப்ோது வந்தது வியர்வையையும் உறையவைத்த அந்த அறிவிப்பு:-
''... . . . மன்னார்ப் பிரதேசத்தில் கடும் சண்டை நடை பெறுவதனால் கப்பல் சேவை கால வரையறையின்றி நிறுத்
தப்பட்டுள்ளது. 9
大●大
ஒத் தி  ைச ! 大 கவிஞர் ஏ. இக்பால் *
அக்கரையில் கேட்கும் அலறல் குரல்வகைகள் ہیگل نہنگ துக்குணியும் இனிமையில்லை தூரத்து அழுகுரல் தள்1. கழுதையன்றி காட்டெருமை கூடிக் குரல்கொடுக்கும் செழுமையிலாக் குரல்குழப்பம்! கட்டுக் கடங்காமல் காட்டாறு போலெழுந்து எட்டுத் திசையும் கரைபுரண்டு எழுந்து ஒலிபெருக்கும். காட்டுப் பன்றி எருமைக் கடாவை வீட்டுக் கழைத்த வேடிக்கை! நாட்டுக் கழுதைக்கு வண்ணான் தலைமையிலா நாட்களிவை! சோம்பல் சொறிச்சல்! ஒற்றுமைக் குரல் அழிந்து பிசகி ஒத்திசையில் எழவில்லை! ஒவ்வொன்றும் தற்போக்கு: ஒழுங்கில்லை உணர்i a Ni இனிமைக் குரல்தான் இவர்களுக்கில்லை. د . * ་ 7/ ஒருமனதாய் ஒத்திசைத்தால் இனிமை)ஒழுந்தியூத்த C ܠܡܶܗ . குரல்பற்றி நமக்கேன் கவலை? () Odd 臀 குரல் கூட்டாய் ஒத்திசைத்தால் K_x^ーヤ . இனிமை பெறும் ஓர்மை உறும் " ;
A
முகில் 1 53

Page 29
14 ஆம் ஆண்டுச்சிறப்பிதழ்
குன் றின்
கு ர ல்
மலையகத்திலிருந்து, 14 ஆண்டுகளாக ஒரு தமிழேடு வெளிவருகிறதென்றால் அதையிட்டு மகிழாத - இலக்கிய நெஞ்சங்கள் இருக்க முடியாது. அந்தனி ஜீவாவை ஆசிரியராகக்கொண்டு, தோட்டப் பிரதேசங்கட்கான கூட்டுச் செயலக வெளியீடாகக் "குன்றின் குரல் 14 ஆம் ஆண்டுச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது.
கொட்டாரமுல்லை யூ.எம். பாரூக் அவர்களின் புகைப்படம் குன்றின் பிரகாசமாகச் சஞ்சிகை முகத்தை அலங்கரிக்கிறது. துணுக்குகளையும் கவிதையென்றால் இடம்பெறும் 12 கவிதைகளுள் மல்லிகை சி. குமாரின் படைப்பே கவிதையாகத் தேறுகிறது. பின்னட்டைத் தஸ்லிமா நஸ்ரீனின் கவிதை எடுத்துக்கொண்ட பொருளுக்கே முரணாகி (இறுதிப்பாரா) கைவிட்டுப்போகின்றது. க.ப.லி. யும் அவசரப்பட்டுவிட்டார்.
ஏனையவை வெறும் வசனக்கோவைகளாகிக் கவனத்தை ஈர்க்கச் சக்தியற்றுவிட்டன : கட்டுரைகளுள், மாத்தளை கெளதமனின் பத்திரிகைத்துறை முன்னோடிகள், − அந்தனி ஜீவாவின் பெரியார் பி.டி. ராஜன், இர. சிவலிங்கத்தின் இன்றையத் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் படும்பாடு, முனைவர் அ. அறிவுநம்பியின் கரகாட்டம் என்பவை சிறப்பாக அமைந்துள்ளன : பல முக்கிய தகவல்களைத் தருகின்றன. நாடின் கோர்டிமெரின் அருமையான கட்டுரைக்கு மொழிபெயர்ப்பு வாய்ப்பாக அமையவில்லை.
இம்மலரில் ஒரு சிறுகதையாவது இடம்பெறாமை
பெரும் ஏமாற்றமே.
54 -- - - - - (si 1
 

சி பன்னீர் செல்வனின் துறவியின் காதல், சிறுகதைத் தடத்திலிருந்து விலகியும் குறுநாவலின் சுயத்தை எட்டிப் பிடியாமலும் எனிப்படி ஆனது? -
இப்படிக்கு, அகதி, சகலர்க்கும் ஆண்டாண்டுக் காலமாகத் தெரிந்த மேல்வாரி விஷயங்களையே சோம்பல்தனமாகக் கூறிக் கதையாகவும் இல்லாமல் விபரக்கொத்தாகவும் இல்லாமல்.
சிறப்புமலர் வெளியிடுவதென்பது இலேசான காரியமல்ல. நிறையச் சேகரிக்க வேண்டும். 10ல்லிகையை நினைவுகூராதிருக்க இயலவில்லை.
மலையகச் சிறப்பிதழென்று சொல்லும்போது கவிதைப்பகுதியில் குறிஞ்சித் தென்னவன், சு. முரளிதரன், தமிழோவியன், காந்தி, மலைத்தம்பி, கோமஸ் போன்றோரையும் சிறுகதைப் பகுதியில் தெளிவத்தை ஜோசப், மலரன்பன், வடிவேலன், மல்லிகை குமார், சிவலிங்கம் போன்றோரையும் அதன் ஆசிரியர் விட்டுவிடுவது அல்லது இவர்கள் இதழாசிரியரை விட்டுவிடுவது இலக்கியத்துக்கு ஆரோக்கியமானதல்ல. பல இடர்ப்பாடுகளை ஆசிரியர் அனுபவித்திருக்கலாம். அதனால்தான்போலும் இதில் மறுபிரசுரங்கள் அதிகமாகிவிட்டன. எப்படியும் இதழைக் கொண்டுவந்துவிட்ட ஆசிரியருக்கும் நிர்வாகத்தினருக்கும் துணிச்சல் அதிகமே, எழுத்துப் பிழைகள் குறைந்து காத்திரமான குன்றின் குரல்கள் ஒலிக்க இடமுண்டு.
நூல் விமர்சனம் வேண்டுவோர்
நூலின் இரு பிரதிகளை
لازn|tiة اnulti Lھی ہو۔
S SqqSSqSSSMSMSMSMSASMqSMSMSBLLLLSLqiSAMSLLSLLLLLL HBLS SS SSSSSSS qqq qqS ASS A qq S LSAAS
முகில் 55

Page 30

இன்னும் இரண்டொரு சூரியன் இருந்தால்தான் கட்டுப் 114 A குL என்று பட்டது அவனுக்கு.
எலும்பைக் குடையும் நுவரெலியாவின் குளிருக்கு, இந்த ஒரு சூரியன் போதாதுதான்.
டார்வினின் நண்பரும் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஏர்னஸ்ட் ஹெகல் என்பார் , உளச்சோர்வோ உடல் சோர்வோ உள்ளவர்களுக்கு இது ஒரு மெக்கா என்று வர்ணித்த அதே நுவரெலியாதான்.
இவனுக்கு இரண்டு சோர்வுமே சேர்ந்தாற்போல் வந்திருக் கின்றன.
நிற்க முடியவில்லை; வெடவெடக்கிறது. நடக்க மு டிய வில்லை; நடுங்குகிறது. உட்கார முடியவில்லை; ஊசியாய்க்
குத்துகிறது!...இப்படியும் ஒரு குளிரா ! இப்படியும் ஒரு gpag ni !
தெளி வ த்  ைத ஜோ சப்
காற்றின் குளிர், மயிர்க்கால்கள் ஊடாகத் தோலுக்குள் நுழைந்து, தசைகளுக்குள் வியாபித்து, ஒவ்வொன்று ஒவ்வொன் றாய் எலும்புகளைத் தேடித் தேடி எண்ணிச் சுற்றிச் சுற்றி உடல் ஜில்லிட்டு விரைத்துப் போகிறது.
இதே மாதத்தில் மூன்றாவது தடவை இது.
அம்மாவைப் பார்க்கப் போக வேண்டும் என்னும் பே ச் செழுந்தபோதே லயத்துக்கு வழி மாட்டோம் என்று மக்கார் பண்ணினார்கள் மனைவியும் மகளும். அவனுக்கும் நியாய மாகவேதான் பட்டது!
நுவரெலியாவிலிருந்து பதினெட்டு- இருபது மைல் தொலை விலுள்ள அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு வாடகைக்கு ஒரு கார் பிடித்துக்கொண்டுதான் போக வேண்டும். பஸ்ஸிலும் போகலாம்தான். ஆனால் நுவரெலியா பஸ் ஸ்டாண்டில் பஸ் எறுவதென்பது ஒரு சர்க்கஸ் விளையாட்டு மாதிரி. ஸ்டாண்டை நோக்கி ஓடி வரும்போதே பஸ்ஸில் ஏறும் சாகஸம் தெரிந்திருக்க வேண்டும். அடித்துப் பிடித்து முட்டி மோதிக்கொண்டு ஏறத் தைர் யம் வேண்டும். விழாமல், கால் செருப்பை அறுத்துக் கொள்ளாமல் பாய்ந்து தொற்றிக்கொள்ளும் லாகவம் தெரிய வேண்டும். குடையைக் கண்டதும் மிரளும் பசுமாடுபோல் கூட் ட த்தைக் கண்டாலே மிரளும் இதுகளுடன் எப்படி பஸ் எறு এu rT বা 2
கில் 1 7

Page 31
  

Page 32
கொழுந்து மடுவத்துக்கு இந்தப் பக்கமாக இரண்டு தே? லைச் செடிகளின் இடைவெளிக்குள் ஒரு குறுக்குப்பாதை இறங் குகிறது. படிகள் கட்டப்பட்டுக் கல் பெயர்ந்து, பல் விழுந்த எகிறுபோல்.
அதன் வழியாகக் கீழே இறங்க வேண்டும். நின்று நெளிந்து ஒடிந்து திரும்பி இரு நூற்றறுபது படிகள் இறங்கிவிட்டால், அம்மா இருக்கும் லயம் வந்துவிடும்.
அது எப்படி அவ்வளவு கரெக்டாக இரு நூற்றறுபது ப tr கள் என்று கேட்கத் தோன்றுகிறதா? பள்ளி நாட்களில் தின சரி இரண்டு தடவை ஏறி இறங்கிய படிக்கட்டாயிற்றே! இறங்கி ஒடும்போது முதல் நாலைந்து படிகளை விட்டுவிட்டு எண்ணத் தொடங்கினாலோ அல்லது கடைசி நாலைந்து படிகள் வரும் போது எண்ணுவதை எதேச்சையாக விட்டுவிட்டாலோ, க ல் லுக்குக் கல் கால்வைத்து ஒடும்போது எண்ணி எண்ணி ஓடிய படிகள்தான். பழக்கம் தான். இரு நூற்றறுபதுக்குக் கூ டு மே தவிரக் குறையாது.
சப்பாத்தின் உயர் குதி கல்லிடையில் சிக்கிக் கால் புரண்டு சுளுக்கிக்கொண்ட அனுபவங்களால் கழற்றிக் கையில் தூக்கிக் கொண்டு மனைவியும் மகளும் அவன் பின்னால் இறங்கு Gni Ti 956T.
இம்முறை உலகக் கிண்ணக் கிரிக்சட் போட்டியில் எந்த நாடு வெல்லும் என்ற கேள்வியைவிட, பாக்கிஸ்தான் தோற்றுவிடுமோ என்ற ஐயமும் கலக்கமுமே பாக்கிஸ் தான் அபிமானிகளைப் பாடாய்ப்படுத்துகிறது. நமது நாட்டிலும், ஏன், இந்தியாவிலும் கூடப் டாக்கிஸ்தான் அபிமானிகள் கணிசமானோர் இருக்கத்தான் செய்கின் றனர். தற்போதைய பாக்கிஸ்தான் அணி உலகிலேயே மிகச் சிறந்த ஒர் அணியாகும். அணியின் ப்ளஸ் பொய்ண்ட், வேகப்பந்து வீச்சாளர்கள் தான் (வளமீம், வக்கர்), சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் உளர் (இன்ஸ்மாம், ஸலீம் மாலிக், ஸயீட் அன்வர், மன்ஸஒர் இலாஹி). விக்கட் காப்பாளரும் சிறப்பானவரே. ஆயினும் உலகப் போட்டியில் தோற்றுவிடுமோ என்ற அச்ச உணர்வுக்குச் சில 91 ரணங்களும் கூறப்படுகின்றன இம்ரான்கான் போல் அற்புதமாசத் திட்டமிட்டு, வியூ
60 { მ «ზი 1.

அவர்களின் முகத்தைப் பார்த்துக் கண்களைச் சந்திக்கும் தைர்யம் அப்போது அவனுக்கிருப்பதில்லை.
ஒருவிதமாக இறங்கிப் போய்விட்டாயிற்று! கோவிலடியில் கார் நிற்கும்போதே கீழே லயத்தில் பக்கத் துக் காம்பிராக் காமாட்சி, 'பெரியதம்பி வருறாப்புல இருக் கேம்மா?. என்று விசாரிக்கத் தொடங்கியிருப்பாள்.
வாசல்வரை வந்து பூவரச மரத்தடியில் அம்மா நிற்பார் '5 వ7. தம்பியின் பிள்ளைகள் பின்னால் நிற்கும். தம்பி பட்டி யில் இருப்பான்- ஏதாவது தோண்டிக்கொண்டு.
'பாத்து, டாத்துப்டா!. டாத மாதிரியா இருக்கு?. அடமழயில மண்னெல்லாம் அரிச்சிக்கிட்டுப் போயிறுச்சி!. பொந்துக்குள்ளாற ஏதுங் கால விட்டுக்குறாம!...' என்று குரல் கொடுத்தபடி இரு கைகளையும் நீட்டிக்கொண்டு அவர் களை வரவேற்கும் அம்மா.
வயதால் பாதியும் குளிரால் மீதியுமாகச் சுருங்கித் தொங் கும் தோல்களுடன் அந்த முகம், அந்தக் கைகள்!.
அள்ளி அணைத்துக்கொள்ளும் அந்தக் கைகளின் சில்லிர்ப்பு இவனுடலுடன் இழைய, அப்படியே அலாக்காக அம்மாவைத்
கம் அமைத்து வழி நடத்தக்கூடிய தலைவன் இன்மை: டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கும் 'ஒட்ட இயந்திரம்' ஜாவிட் மியன் டாட் அணியிலிருந்து நீக்கப்பட்டமை; ஃபீல்டிங் கில் உள்ள பலவீனம். இதனடிப்படையில் உலகக் கிண் ணத்தை மீண்டும் கைட் பற்றுமா என்ற ஐயம் எழுந் துள்ளதில் நியாயம் இல்லாமல் இல்லை. முதலாம், இரண்டாம் உலகப் போட்டிகளை :ேற்கிந் தியா வென்றது. மூன்றாவது உலகக் கிண்ணத்தை இந்தியா சுவீகரித்தது. நான்காவது உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றது. ஐந்தாவதை வெகு சாமர்த் தியமாகப் பாக்கிஸ்தான் பறித்துக் கொண்டது எனவே இம்முறையும் ஓர் ஆசிய நாடு இக்கிண்ணத் தைக் கைப்பற்றக்கூடிய சாத்தியக் கூறுகளை வி  ைள யாட்டுலகம் அலசிக்கொண்டிருக்கிறது"
- 6 l
முகில் 1

Page 33
தூக்கி, ஒரு சுற்றுச் சுற்றி உள்ளே நுழைந்துவிடுவான்.
பின்னால் நிற்கும் சின்ன துகள் பேந்தப் பேந்த முழிக்குக் 'விடுப்பா விடு!..நான் புள்ள பக் கொஞ்சனும்!' என்று தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே திரும்புகையில் மருமக ளும் கொழும்புப் பேத்தியும் லயத்துக்குள் நுழைவர்கள்.
மரும சளின் நெற்றியில் கைகளை வைத்துக் கன்னம் வழி தாவாய் வரை உருவி நெற்றிப் பொட்டில் விரல்களை நெரித் துப் படபடவென்று முறித்துக்கொண்டு. ‘பாத்திய r எவ்வளவு திருஷ்டி என் செல்லத்துக்கு!! என்றNடி, துணி ளை இழுத்துக் கொடியில் போட்டுவிட்டு 'நாற்காலியை இழுத்துப் போ ட் டு 'இரும்மா!' என்பார்கள். கொழும்புப் பேக் இபின் ஆப்பிள் கன்னங்களைத் தனது கைக்குள் அடக்கி அப்படியே இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்வார்கள். பேத்தி, 'ஹஉய்ய்! என்று கத்துவர்ள். ‘பாட்டி கை குளிருதாம்மா?’ என்பார் கள் சிரித்தபடி, ""குத்துது!" என்பாள் பேத்தி. نو له ) . ٦
அவனும் மகளும் கட்டிலில் அமர்ந்துகொள்வார்கள். அம்மா இருவருக்கும் நடுவில் படத்துக்கு அமர்வதுபோல் அமர்ந்து கொள்வார்கள். .
. தம்பியின் மனைவி ஆவி பறக்கப் பறக்கத் தேனீர் கிளாஸ் களுடன் வந்து.நிற்பாள். h− ` 7 ܢ ܢ
‘'தேத்தண்ணி குடிப்பியாம்மா?" என்று கிளாஸை எடுத்து நீட்டுவார் அம்மா பேத்தியிடம். V−
'ம்!'" என்றபடி கிளாஸை வாங்கிக்கொள்வாள் பேத்தி. "காலையில் தேத்தண்ணி குடிக்க மாட்டோம், கோப்பிதான்" என்பது போன்ற பாட்டிக்கு அசெளகரியம் ஏற்படுத்தும் பேச் சுக்கள் கூடாது என்று சின்னவளுக்குச் சொல்லிக் கொடுத்து வைத்திருக்கின்றான். எது எது என்பதெல்லாம் அந்தச் சிறிசுக்கு எப்படித் தெரியும்? ஆகவே எல்லாவற்றிற்கும் ‘ய்‘ தான்!
'அம்மா, டீ!’’ என்றவாறு அம்மாவிடம் மகள் எழுந்து செல்வதன் அர்த்தம், "எனக்கு டீ வேண்ாம்!' என்பதுதான்! ‘ட்றிங் லிட்ள்; வெரி கோல்ட் ; (3 it?' எ ன் ற L டி கிளாஸை வாங்கி மகளுக்குப் பருக்கத் தொடங்குவாள் தாய்" 'நீ குடிம்மா ; நான் குடுக்கிறேன் பாப்பாவு க!' என்ற வாறு அம்மா கட்டிலை விட்டிறங்குவார்கள்.
'எல்லாம் ஆயும் மகளும் பாத்துக்கிறுங்க; நீங்க இருங்க!'" என்று, தான் பாதி குடித்த கிளாஸை அம்மாவின் வா யி ல் வைத்து மெதுவாகச் சாய்ப்பர்ன் அவன்.
'நீ குடிப்பா!' என்றாலும் அம்மாவின் தொண்டைக்குள் அது ஜீவாம்ருதமாய் இறங்கும் , கண்கள் படபடத்துக் கசியும் புருவத்துக்கும் தெரியாமல்.
62 முகில் 1

வேரும் மண்ணுமாய் நாலைந்து நோக்சல் கிழங்குடன்
வந்து நிற்பான் தம்பி.
தோட்டத்தில் அவனுக்கு கப்பர் வைஸர் வேலை கொடுத்
திருக்கின்றார் துரை! ஒரு வருஷம் போல் ஆகிறது அரைக் கால் சட்டை, சப்பாத்து, மேஸ் போட்டு. அதுவரை கையில் கத்தி யும் தோளில் பண்வெட்டியும் தான். அவன் மனைவி தோட் டத்தில் வேலை. பழைய மலையே. மட்டக் கொழுந்தோகொழுந்துதான்.
கட்ட்ைவிரல் நுனியும் ஆள்காட்டி விர லோரங்களும் வரி யrய்த் தேயிலைக் சாட்டையுடன் கறு புக் கறுப்பாய்க் \கோடு பாய்ந்து கிடப்பதெல்லாம் கொழுந்தாய்வின் முத்திரைகள் பெரியண்ணன் சம்சாரம் வந்தால் அந்தப் பளிங்கு விரல்கள் தான் இவளை முதலில் கவர்வது. அக்காவின் மோதிரம்கூட அந்த விரலால்தான் பெருமை அடைவதாக எண்ணிக்கொள் வாள்!
நோக்கல் கிழங்கை வேருடன் பார்த்தே இராத மகளுக்கு ஒரே வியப்பு கண் விரிய நிற்பாள்!
‘'வேர வெட்டி வீசுங்க! இல்லாட்டி மண்ண அலசிக்கிட்டு வாங்க!' என்று மனைவியும் 'சோழியத் தொறந்து உட்றா தப்பா! கோணக்சொண்ட சேவல சுத்தம் பண்ணிக் குடுத்துறு!" என்று அம்மாவும் அவனுக்கு உத்தரவிடுவார்கள்.
இருவருக்குமே தலையை ஆட்டிவிட்டு அண்ணனைப் பார்ப் பான் தம்பி.
'ராத் தங்கிட்டு நாளைக்கிப் போங்களேன்? ஆள் நெருங்கி என்னர் ஆயிறப் போவுது?. மன சிருந்தா எடமா இரு க் காது!....கார்க்காரன நாளைக்கி வான்னு அனுப்பிட்டு வரவா?. -அண்ணன் குடும்பத்தை ஒரு இரவு தங்களுடன் தங்கவைத்துக்கொள்ளும் ஆசை அவன் முகத்தில் ஆடும்.
، ابن حس بسیار
முகில் 1. 63

Page 34
அம்மாவுடன் த ங் கி இரவைக் கழிக்க அண்ணனுக்கு: ஆசைதான். ஆனாலும் இருக்கும் அந்த ஒரே காம்பிராவில் படுக்க, எழுந்திருக்க, காலையில் வெளியே தெருவே போகஎங்கே வசதி இருக்கிறது? . . . . -: -
லயத்தின் முன் லைசன் கல்லில் நின்றுதன் உல் துலக்கி முகம் கழுவ வேண்டும். முழு லயமுமே நி ன் று வேடிக்கை பார்க்கும். இல்லாவிட்டால் பட்டிப் பக்கம் டே ய்விட வேண் டும்.
முழு லயத்துக்குமே இருப்பது இரண்டே மலசல கூடங்கள் . அதுவும் தேயிலைக்குள்ளே டோக வேண்டு - கையில் +ெம் பு டனோ கைவாளியுடனோ ! ...
கொழும்பிலேயே பழகிவிட்ட மனைவி மக்களுடன் இதெல் லாம் பெரும் சிரமம். ஆகவே தான் மனதைக் கடித்துக்கொண்டு வந்த அன்றே கிளம்பிவிடுவான்! ” . . . . . " . . தனியாக வந்தால் தங்கிவிட்டே செல்வான். அவன் புரண் டெழுந்த மண் அது!
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் தம்பியைப் பார்த்து ஒருவகை ஏமாற்றத்துடன் கூறுவான், 'இல்ல ராசு! கார்க்காரன நாலு மணிபோல வான்னு சொல்வி அனுப்பீட், டுத்தான் வந்தேன்.’’ என்று.
'அம்மி அரைக்கிற சத்தங்கேக்குது என்னா அரைபடுது?" GT Gör 4 ur 6ör.
'நீ சும்மா இரேன்; கொச்சிக்கா அரைக்கிறா உன் கொழுந் தியா!' என்று கூறியபடி அம்மா தேனீர் கிளாஸ்களை எடுத் துக்கொண்டு அடுப்படியை நோக்கி நடப்பார்கள்.
அந்த வயதிலும் அந்தக் குளிரிலும் அம்மா சிட்டைப்போல் பறப்பதாகத் தெரியும் அவனுக்கு. உழைத்து உரமேறிய உடல் . சீக்கிற்கோ தளர்வுக்கோ அது இடமளிக் காது. அவனுடைய வருகையும் அவளுக்கு ஒரு புதுத் தென் பைக் கொடுக்கிறது. உடலிலே ஒரு இளமை, நடையிலே ஒரு துள்ள ல்!
தம்பி மனைவியைக் கொழுந்தியாள் என்றழைக்கும் உறவு முறையின் உரிமை, குழம்பாக்கக் கொச்சிக் காய் அரைபடும் அம்மிச் சத்தம்- இத்தியாதிகளைக் கேட்க இங்கு வரவேண்டும்! கொழும்பில் யார் அம்மியில் அரைக் கிறார் கள்? மசாலாத் தூள்தானே!
*" என்னாப்பா, அப்பிடியே உக்காந்துட்டா எப்புடி?.. 》沙 என்று மனைவியைக் கிளப்புவான். மகள் இன்னும் அம்மாவின் மடியிலிருந்து எழவில்லை!
கூரையில் செருகியிருத்த தீட்டுக்கட் டையும் சத்தியுமாகத் தம்பி தோட்டத்துக்குள் சென்றுவிடுவான். கோழி கறேயுறே
64

என்று கூக்குரலிடும் ,
மனைவியையும் மகளையும் கூட்டிக்கொண்டு அவ னு ம் தோட்டத்துக்குள் செல்வான். தம்பியின் சின்னது இரண்டும் அக்காவின் கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் நடக்கும். அம்மாவின் மடியில் அவனும் அவன் மடியில் அம்மாவுமாக ஆனந்தமாய்ப் பொழுதைப் போக்கிவிடுவான் அவன்.
ஆனால் மனைவியும் மகளும் எத்தனை நேரம் அதற்குள் ளேயே அமர்ந்திருப்பார்கள்?
லயத்துக்கும் காய்கறித் தோட்டத்துக்கும் நடுவில் இரு க் கும் வேலியிடம் நிற்கிறது ஒரு மாதுளை மரம். சின்னவனுக் கும் அதற்கும் ஒரு வயசு என்று இறக்குமுன் அப்பா அடிக்கடி
கூறுவதுண்டு. N
கிளை நுனிகளில் சிவப்புச் சிவப்பாய்ச் சின்னச் சின்னப் பூக்களும் குண்டு குண்டாய்க் காய்களுமாய்.
ஒரு காயைத் தொட்டுப் பார்க்கின்றாள் மகள் : தனது மொட்டுக்கள் விரிய ‘மாதுளை!’ என்பாள் தகப்பனைப் பார்த்து,
* புடுங்கித் தின்னும்மா: பூச்சிக்கும் நெஞ்சிச் சளிக்கும் நல் லது!’ என்று உள்ளிருந்து ஓடி வருகிறது அம்மாவின் குரல். தங்களைச் சுற்றியே வலம் வரும் அம்மாவின் அன்பு ப் பார்வை அவனைத் தடுமாறச் செய்கிறது.
அம்மாவுக் கென்று அவன் என்ன செய்திருக்கின்றான்? படித்துப் பாஸாகி உத்தியோகம் தேடிக் காதலித்துக் கல்யா ணம் கட்டிக் குழந்தை பெற்று.

Page 35
என் மகன் இப்படி இப்படி இருக்கின்றான் 7 ஈறு கூறிச் கூறிப் பெருமைப்படும் நெஞ்சம் அது! எனக்கு மன்ன செய் தாய் என்று எதிர் பார்க்கும் நெஞ்சமல்ல. இப்படி ஒரு நாள் வருவதுவும் 'இனி எப்பப்பா?..' என்னும் கேள்வியுடன் வி.ை பெறுவதுவும்தான் அவன் செய்வது!
இந்த வருகை தான் அந்தத் தாயுள்ளத்தை எப்படி ஆட் கொண்டுவிடுகிறது!
அம்மாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்னும் உறு த் தலில் ஒரு தடவை கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு போன பன் தன்னுடன் வைத்துக்கொள்ள !
இந்தக் குளிருக்கும் கொழும்பின் சூட்டிற் கும் அம்மா திண் டாடிப் போனார்கள். பட்டியில்லை, மா டில்லை, சுற்றிவரத் தோட்டமில்லை, பிடுங்கிச் சமைக்கக் காய் நறியில்லை! அம்மா வுக்கு ஒரு நாள் போவது ஒரு மாதம்போல் தெரிகிறது.
மகன் வீட்டில் மாட்டிறைச்சி ஆக்குகின்றார்கள். கொழும் பில் இதெல்லாம் சகஜம்; சாதாரணம். ஆனால் அம்மாவுக்கு. ''...... எனக்கு. தனியா. *’ என்றார்கள் மகனிடம் ஒரு நாள்.
'உங்களுக்கு அதெல்லாம் இல்லே தனியாத்தான்!” என்று தொடங்கிய மகனிடம் மெதுவாகக் கூறினார்கள் - 'தனியா ஒரு கோப்பயும் ஆப்பயும்பா !. நீங்க பாவிக்ற ஆப்ப, கரண்டி 6T6)6) sT LD... ... ... y
மருமகளிடம் அம்மா மூச்சு விடமாட்டார்கள். "வாம்மா, இரும்மா’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள்; "வாங்க, இருங்க” தான். மருமகள் அம்மாவுக்கு ஒரு மகாராணி மாதிரி !
பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு பத்து நாள் இருந்தார் கள்; அவ்வளவுதான்!
தான் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டும் என்பதைத் தவிரப் பிள்ளைகள் தனக்குச் செய்யவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இல்லாதவள் தாய்! x -
நம்மைச் சுற்றி ஆயிரம்பேர் இருக்கலாம். அன்பைச் சொரி யலாம். ஆனால் யாருமே அம்மாவாக முடியாது! அம் ம 7 அம்மாதான்! М
மாதுளை மரத்தைத் தாண்டிப் பட்டியில் மாடுகளிடம் நின்று பயந்து பயந்து தொடும் மனைவி. மகளைக் கேலியா கப் பார்த்துப் பசுவின் மடியில் கை வைத்துக் காம்பை இழுத் துப் பாலைப் பீய்ச்சிக்காட்டிப் பெருமைப்பட்டுக்கொண்டு கீழே நடப்பான்.

CS), (),
;レa へと3い
மடியில் கை பட்டதும் ப சு சிலிர்த்துக் வேடிக்கை பார்த்து நிற்கும் மகள், உடலைக் கூனி வாலை உயர்த்தி அது தடதடவென்று பெய்ய ஆரம்பித்ததும் காலைத் துடைத்தபடி ஓடி வந்துவிடுவாள்!
பட்டிக்குக் கீழே ஒரு நீரோடை, தண்ணீர்க் கான் அருகே தம்பி ராசு கோழி வெட்டிக்கொண்டிருப்பான். அவன் தலைக்கு மேலாகப் பலாமரத்தில் முற்றாத காய்களின்மேல் தாவித்தாவிப் பாய்ந்து, பழுத்திருக்கிறதா என்று வாசனை பிடிக்கிறது அணிற் கூட்டம்.
'அணில் பழம் தேடுது, பாத்தியா!' என்று மகளுக்குக் காட்டுவான்.
தம்பி கோழி வெட்டும் லாகவத்தை ரசித்துக்கொண்டு நிற்பாள் மனைவி - . . . .
ஏதோ வாசம் மூக்கைத் துளைக்கிறது. நுனி மூக்கு விரிந்து வாசனைக் காற்றை மாற்றிக்கொள்கிறது. அன்னாசி ஒண்ணு பழுத்திரிச்சி. கொஞ்சம் இலை சரு' ۔۔۔۔۔ கெல்லாம் போட்டு மூடித்தான் வச்சேன்! காக்கா சனியனுக உடுமா! கொத்தியிருக்கும்; அதுதாங் கமக மக்கு து! ..." என்று கோழியை அப்படியே வைத்துவிட்டுத் தம்பி எ மு த் து போய் அன்னாசிப் பழத்தை ஒடித்து எடுத்து வந்து நீட்டுவான். மகள் வாங்கிக் கொள்வாள். கொண்டைக்குக் கீழே லேசா கக் கொத்தியிருக்கிறது காகம். வாசனை தாங்கமுடியவில்லை. ‘வெட்டித் தர்றேன் பொறகு,’’ என்றபடி கோழி வெட் டுவதில் குந்திக்கொள்வான் தம்பி.
67

Page 36
நீரோடையின் இருமருங்கிலும் கரும்பு செழித்து நிற்கிறது. கரும்போலையின் அடிப்பக்கம் கறுப்புக் கறுப்பாய் ஆடியாடி அமர்ந்திருச்கும் அழகான பூச்சிகள் இலை ஆடியதும் பறந்து மறுபடியும் அதேபோல் அமரும் காட்சி கண் கொள்ளாதது. மனைவிக்கும் மகளுக்கும் கரும்பை ஆட்டி ஆட்டிக் காட் டிக்கொண்டிருப்பான் அவன்.
இப்படி ஒவ்வொன்றையும் வியப்புறும் வண்ணம் காட் டி அவர்களின் ஆயாசத்தை, தனிமையை, இட வித்தியாசத்தை விரட்டிப் பொழுதைக் கழித்துவிடும் எண்ணம் அல் டையது. 'அண்ணிக்கும் மகளுக்கும் வேடிக்க காட்டுறியா, வே ல நடக்கு தா? அரக்கப் பறக்க அள்ளிப் போட்டுக்கிட்டு அனுப்பத் தான் வேண்டி வரும்! சுருக்கா கொண்டாந்து குடு!" என்று இளைய மகனை எச்சரித்த அம்மாவின் குரல், 'கரும்போல யத் தடவிப் பாக்க வேணாம்னு அம்மா கிட்ட சொல்லும்மா! வெட் டுறது தெரியாம வெட்டிப்புடும் 1. ‘’ என்று பேத்திக்கும் எச்சரிக்கை விடுக்கிறது.
கரும்பிடமிருந்து விலகி நின்றுகொள் வாள் மருமகள்! "அதே பஞ்சு மாதிரி வெரல்! அறுத்தாலும் ஆழமாத்தான் அறுத்துப்புடும் !" என்று ஒத்தூதும் தம்பி மனைவியின் குரல். அம்மா நீரோடை அருகே வந்துவிடுவார்கள். 'இதறுதி பாத்தது போதும், இனிப் பெறகு பாக்கலாம்; வாங்க தேத் தண்ணி குடிக்க!. p
'இப்பத்தானே குடிச்சோம்?" − "அது வெறுந் தேத்தண்ணிதானே, காலையாகாரம் ஏதுஞ் சாப்புடுறதில்லியா! சுடச்சுட உப்புமா கெளறியிருக்கேன். ஆறிப்போயிறும், வாங்க!' என்று மருமகளையும் பேத்தியை யும் அழைப்பாள். பேத்தியிடமிருந்து வாங்கும் அன்னாசிப் பழத்தைக் கீழே வைப்பாள்- ‘பச்சப் புள்ள கையில இ த த் தூக்கிக் குடுத்தா எம்மாந் நேரம் வச்சிருக்கும்!" என்றபடி" 'நீ வல்லையா சாப்புட?' என்று தம்பியைக் சேட்பான் Palait.
'இதோ முடிஞ்சிறிச்சி! நீங்க நடங்க் த ர ன் வந்துடு றேன்!” என்பான் தம்பி.
எட்டி நாலைந்து வாழை இலை நுணிகளை நறுக்கிக்கொள் 6ll Triásgi gyblont.
அவனால் நம்ப முடியவில்லை! அதற்குள் அம்பா எ ன் னென்ன செய்கின்றார்கள்! அந்தக் கைகளுக்குள் என்ன மாயை இருக்கிறது! -
68 முகில் 1

தாயுடன் அறுசுவை போம் என்று சொன்னவன் சும்மாவா சொல்லி வைத்திருப்பான்?
இன்னும் காய்கறித் தோட்டம் காட்ட வேண் டும் கொண்டை நாரான் மரம், பனைபோல் உயர்ந்து நிற் கும் கறி வேப்பிலை மரம், சேனையில் நிற்கும் கொய்யா மரங்கள்
அத்தனையும் பார்த்து, பறித்து, மென்று, துப்பி முடிய நேரம் சரியாகிவிடும். பிறகு நடந்த களைப்பு நீங்கக் கொஞ் சம் உட்காரப் பகல் சாப்பாடு. விருந்தேதான்!
சாப்பிட்டு முடித்துக் களைப்பாறி அவசர அவசரமாகத் தேனீர் தயாரித்து அதையும் குடித்து ரெடியாகியதும் ம  ைல போல் நிற்கும் படியேறும் படலம் இருநூற்றறுபது படிகளை ஏறி முடிப்பதென்றால்.
சாப்பிட்ட விருந்துச் சாப்பாடு, குடித்த தேனீர் அத் த னையும் எங்கேயென்று போய்விடும்!
கார்க்காரன் வந்து ஹோர்ன் அடித்துக்கொண்டு நிற்பான்.
இதுதான் ஆண்டுக்கு இரண்டு தடவை அல்லது மூ ன் று தடவை நடக்கும் அம்மா தரிசனம்; பழைய கதை.
அப்போதெல்லாம் அவ்வளவாகத் தோன்றுவது கிடையாது. முழுமுதற் காரணமே அம்மா! அம்மாவின் பராமரிப்பு! தங்க ளைச் சுற்றிச் சுற்றி வந்து நிற்கும் அம்மாவின் அன்புவட்டம்!
இப்போது அம்மா படுக்கையில். ஒரு பழந்துணிபோல் கட் டிலின் ஒரு மூலையில் கிடக்கின்றார்கள்.
கையில் ஆட்ட ஒட்டமில்லை. கால்களில் ஒரு அசைவில்லை. உடலில் ஒன்றுமே இல்லை!

Page 37
சீக்கிற்கோ தளர்ச்சிக்கோ இடம் கொடாத, உழைத்து உர மேறிய உடல் என்று அவனே பெருமைப்பட்ட உடல் தாலி" இப்படிக் கசங்கி, நொடிந்து, நைந்துபோய் நார் நாராய்அவனையும் மருமகளையும் பேத்தியையும் கண்டதும் அந் தக் கண்களிலே ஒரு ஒளி உதட்டிலே ஒரு சிரிப்பின் நெளிவு! அவ்வளவுதான். 'வந்துட்டியாப்பா ! என்னும் மனத்திருப்தி!
கைகள் போர் வைக்குள் நடுங்குவதுபோல் ஒரு துடிப்பு கம்பளிக்குள் கையை விட்டு அம்மாவின் கைகளைப் பற்றிப் பிடித்தான். மனைவியினதும் மகளினதும் கைகளையும் உணர் வற்றுச் சோர்ந்து கிடக்கும் அந்தக் கைகளுடன் சேர்த்துப் பின் எடுத்து விட்டான்.
இந்த மாதத்திலேயே இது இரண்டாவது வருகை. இரண்டு தடவையும் தம்பிதான் தந்தி கொடுத்திருந்தான்.
* அம்மாவை நம்ப ஏலா திருக்கிறது. உடனே வரவும்." அம்மாவைப் பா ர் த் த டாக்டர்கூட, *ஆஸ்பத்திரி அது இதெல்லாம் வேண்டாம்! மிஞ்சிமிஞ்சிப் போனா ரெண்டு மூணு நாள் தாங்கும்! எதுக்கு ஆஸ்பத்திரியில சாக விடணும்? ஆண்டு அநுபவிச்ச வீட் டு லயே இருக்கட்டும்! “ என்று சொல்லிவிட்டார் 1
அம்மாவுக்கும் எ மு ப து பிந்திவிட்டதுதானே!.
அம்மா கண்களை மூடிக் கொண்டதும் வெளியே வந்து அவர்கள் நின்று கொண்டார் அம்மா எழுந்து நட AD fா டாத அந்தச் சின்னக் காம்பி ராவை அவனால் கற்ப  ைன செய்யக்கூட முடியவில்லை.
அம்மா சுற்றுமுற்றும் பார்த்து விழித்தார்களாம். வாயே! திறக்காத அவர்கள், 'அண்ணன் வரலையா?. எ ன் று மெதுவாகக் கேட்டார்களாம். பயந்துபோன தம்பி என்ன செய் வான்? தந்தி அடித்திருக்கின்றான்!
இருங்கம்மா, என்று அம்மா இஸ்தோப்பில் இழுத்துப் போட்டு மகாராணி மருமகளை அமரச் சொல்லும் அந்த நா ற் காலியில் ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. பச்சை அரிசி, உறைந்து
70 முகில் 1
 

கட்டியாகிவிட்ட ஒரு போத்தல் தேங்காயெண்ணை, ஊதுபத்தி மஞ்சள்- இத்தியாதிகள் ரெடியாக இருக்கின்றன. அறுபதாம் பச்சைக் கொப்புகள் லோட்டாத் தண்ணீரில் தல்ையாட்டிக் கொண்டிருக்கின்றன.
மகன்களால் என்ன செய்துவிட முடியும்- இப்படித் தயா ராய் வைத்துக்கொண்டு சோகம் காட்டும் முகங்களுடன் சு ற் றிவந்து நிற்பதைத் தவிர?
மூத்தவன்பாடு தர்மசங்கடமாக இருக்கிறது. எ வ் வ ள வு நேரம் என்று இருக்க முடியும்?
நான் போகட்டா என்று எப்படிக் கேட்க முடியும்?. மனைவி மாதுளை மரத்தடியில். மகள் பாட்டியின் கால்மாட் டில்.சீக்கிரம் செத்துப் போம்மா என்று அம்மாவின் காதுக்குள் சொல்லவா முடியும்?
சென்ற முறையும் இப்படித்தான். இருந்திருந்து பார்த்து விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள்.
ஏழெட்டு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக வந்தி ருக்கின்றான் குடும்பத்துடன், கோச்சுக்காரனும் பஸ்காரனும் இவனைக் கடனாளியாக்குகின்றனர்.
அண்ணன் தம்பியையும் தம்பி அண்ணனையும் பார்ப்பது வும் திரும்பிக் கொள்வதுவுமாக.
'.இந்த முறை. அம்மா. ஏமாத்த மாட்டாங்க!. என்று திக்கித் தடுமாறிக் கூறுகின்றான் தம்பி.
அண்ணன் குடும்பத்தை அனாவசியமாக அசெளகர்யத்துக் குள்ளாக்கிவிடுகின்றோமோ என்னும் ஒரு குற்ற உணர்வு தம் பிக்கு.
தம்பியின் வாயைத் தனது விரலால் மூடுகின்றான் தமை ህ.16är.
'டாடி, டாடி! பாட்டி எழும்புது!’’ என்று க த் தி க் கொண்டே வெளியே ஒடி வந்தாள் மகள்.
எல்லாரும் உள்ளே ஒடி வந்து சுற்றி நின்றார்கள். அசையாமல் கிடந்த அம்மாவின் கை, ஒட்டை ந கங் க "ளுடன் கம்பளிக்கு வெளியே எழுந்து நிற்கிறது. வாயைக் குவித் துக் காட்டுகின்றார்கள் அம்மா .
'பாலூத்தச் சொல்லுங்க! மூத்த மகந்தானே? " என்கி றது கூட்டத்துக்குள் இருந்து ஒரு கிழக் குரல்.
' ' ... த.தண் ணி.’’ என்ற சத்தம் வருகிறது அம்மா வின் குழிந்த வாயிலிருந்து!
வெதுவெதுப்பான சூட்டுடன் வெள்ளித் தம்ளரில் த ன்
னிர் வருகிறது.
முல்ெ 1 - 7

Page 38
  

Page 39
கேர்னSழி
சிங்களவர் மீதும் சிங்கள மொழி மீதும் சிலருக்கு, கோபமாக இருந்தாலும்கூட, சிங்கள டெலி நாடகங்கள் பார்க் கும் விடயத்தில் இவர்கள் கோபதாபங்களை மறந்து ந ல் ல நண்பர்களாக மாறிவிடுகிறார்கள்.
பாஷை விளங்கினால்தான் என்ன, விளங்காவிட்டால் தான் என்ன காரணம் இருக்கிறது.
சிங்களத் தொலைக்காட்சி நாடகங்கள், அதியுயர் சினி மாவுக்கு நிகராக இருக்கின்றன. சில நேரங்களில் ஒரே கரு வாக இருந்தாலும்கூடக் கலையம்சம், நடிப்பு, படப்பிடிப்பு, படட்தொகுப்பு இயக்கம் மற்றும் த்ொழில் நுட்பங்கள் அனைத் துமே சிறப்பாக இருப்பதனால், மொழி தெரியாதவர்களாலும் இவற்றை ரசிக்க முடிகிறது. சில வேளைகளில் அந்த ஸ்லோ மோஷன் போன்ற இயக்கம் எரிச்சல் தந்தாலும்.
இந்த அளவுக்குத் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங் கள் இல்லையே என்ற அங்கலாய்ப்பு, மனக்குறை, ஏக்கம், ஆத் திரம் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் விஸ்வரூபமே.
தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் அன்சஹிக்கபிளாக இருப்பதாலும் தொலையளவு டனத்தை விழுங்குவதாலும் பலரும் தொலைக் காட்சி நாடகங்களை விட்டுவிட்டுத் தமிழகத் திலிருந்து வெகு சீப்பாகச் சில தொடர்களையும் பாடல் காட் சிசளையும் ஹாஸ்யம் என்ற பெயரில் சில துரவு கணங்களையும் ஒளிபரப்பி ரசிகர்களை மகிழ்விப்பதாகக் கூறுகிறார்கள்.
74. முகில்

இதையிட்டு விசனமடைந்துள்ள கலை, இலக்கிய ஆர்வலர் களும் டைரக்டர் முதலாய தொழில்நுட்டவியலாளர்களும் தொலைக்காட்சி நிர்வாகத்தையே சாடுகின்றனர்.
தமிழ்க் கலைகள் வளர இவர்கள் முட்டுக்கட்டை! மாற் றாந்தாய் மனப்பான்மை!" என்ற கோஷங்களும் ஆக்ரோஷ மாக எழுந்து நடமாடுகின்றன. -
தொலைக் காட்சி நிர்வாகம் வேறுவிதமாகக் கூறுகிறது:- 'நல்ல நாடகங்களைத் தயாரித்துக்கொண்டு வாருங்கள். நாங்கள் ஒளி ப்ரப்புகிறோம். '
இதில் இரண்டு பிரச்சினைகள். நல்ல நாடகம் என்பதன் வரைவிலக்கணம் என்ன? தயாரிக்கப் பணம்? * எம்மிடம் பணமில்லை; நீங்களே தயாரியுங்கள்,' என்று தொலைக் காட்சி நிர்வாகத்திடம் கூறினால்சட்டி சுட்டதடா! கை விட்டதடா !! நாடகம் தயாரிக்க முதலில் பணம் வேண்டும். நல்ல கதை யும் திறமையான நடிகர்களும் வேண்டும்.
வட்டிக் கடை நுழைந்தும் வடிசட்டி ஒரு கதை தேர்ந்தும் நாடகமொன்றைத் தயாரித்துக்கொண்டு வந்தால், தொலைக் காட்சி நிர்வாகம் அதை முழுமையாகப் பார்ப்பதற்கு மு ன் னேயே கண்களை வேறு காட்சிகளுக்கு இரையாக்கிவிடுகிறது! தட்டிக் குத்திக் கிள்ளிக் கிண்டி அவர்கள் கண்களைத் திருப்பினாலும்
'நாடகம். பர. பர. பரவாயில்லை!. ஒரு ஸ்பொன்ஸர் பிடித்துக்கொண்டு வாருங்கள்!'
இனி, ' எங்கே தேடுவேன்? ஸ்பொன்ஸ் ரை எங்கே தேடு வேன்? ? ?
அப்படியும் தேடி ஒருவரைக் கடத்தி வந்து டெலி ட் றா மாவைப் போட்டுக் காட்டினால், அவர் தேசபக்தியுடன் பேசு auтї:— -
" ..நாடகம். மெட்றாஸ் ஸ்டேண்டர் டில இல்ல!. சிங்கள ட்றாமா மாதிரியும் இல்ல! எங்களுக்கேன் ஸார் வீண் ரிஸ்க்கு? ஒரு (மூணாந்தர) தமுள் சினிமாவையோ ஒரு மெட் றாஸ் டெலி ட்றாமாவையோ சீப் ரேட்டுக்கு வாங்கி ஒளிபரப் பினா காசும் மிச்சம்; கடைக்கும் நல்ல விளம்பரம்! ...'
இதுதான் இன்றையத் தமிழ்த் தெ" லை க், ட்சி நட்ட சங் களின் சோகக் கதை !
முகில் 1 75

Page 40
ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள் தயாரித்த ஒரு டெ லி ட்றாமா பல வருடங்களாக ஸ்பொன்ஸர் இல்லாமல் தவிப்ப தாகக் கேள்வி. ரூபவாஹினியில் கேமராமேனாகப் பணியாற் றிய முஹம்மது ஹ" ஸைனும் இலங்கை வானொலி அஷ்ரஃப் கானும் சேர்ந்து, சில வருடங்களுக்கு முன்னர் அற்புதமான சில ஓரங்க நாடகங்களைத் தந்தார்கள். என் மாயமோ ஏது நடந்ததோ! இப்போது அவை கனவாய், கற்.னையாய், வெண் முகிலாய்...!
ந வீ ன வ ர ம்
புல்வெட்டித்துறைப்புலவர்
நாயகனே! நேற்றுவரை நாஸ்த்திகனாய் நானிருந்தேன். கோடானு கோடியாண்டாய்க் கோளுயரம் வளர்த்துவைத்த தத்துவத்துப் பெட்டகத்தைத் தலைதெறித்துத் தகர்த்தெரித்து நாசம் புரிகின்ற நாஸ்த்திகனாய் நானிருந்தேன். இன்றோ, இறையவனே! எனைப்பற்றி நீயறிவாய். பாவத்தினும் மூத்த பலிநரகை நம்புகின்ற பாதி ஆஸ்த்திகனாய்ப் பரிணமித்த இலங்கையன் நான். சொர்க்கமல்ல நரகைச் சுவைக்க நடமாடும் பக்குவத்தைக் கொண்ட பயணத்தின் இடையினன் நான் ! பறையுருவிச் செவியுருக்கப் பழுப்பிரும்பு துடிதுடிக்கும் கொலை நரகை, ஆண்டவனே! கொடுத்தாலும் ஏற்கின்றேன். மோதகத்துப் பெண்டுகளின் முன்புறமும் பின்புறமும் சந்திக்கும் வரைநெருக்கிச் சகலகலா உறுப்பினையும் அரிந்துண்டே ஏப்பமிடும் ஐயறிவுக் காடையர்கள் அடர்ந்த நர கைநீ அளித்தாலும் ஏற்கின்றேன். பறித்துக் கிழித்த பருத்தியுடை நார்நாராய்த் தொங்கித் துவளும் து:பரம்போல் பாலருத்தித் தாய்வளர்த்த மேனிச் சதையொழுகத் திணிக்கின்ற பேய்த்தேர்க்குள் வதைத்தென்னைப் பிணநரகில் எறிந்தாலும் இறையேயுன் தீர்ப்பதனை ஏற்கின்றேன் மகிழ்வுடனே, புகுந்தால் வெளியேறப் பொந்தில்லா அந்நரகில் விஷ வாய்வைக் கும்பித் தென் வினைதீரும் வரை கரைய, அவிந்துருக, ஆவியாக, அவியவுமே விரும்புகின்றேன். ஆனாலும் இறையவனே! அழகொழுகும் இத்தீவில் பெண்டுபிள்ளை சகிதமாகப் பிரயாணம் செய்தற் காய்த் தனியார்தம் வண்டிக்குள் தவறியுமே நானேற வாராதோர் சந்தர்ப்பம் வர மீவாய், வரமீவாய்!
6 முகில் 1


Page 41
*ලෝඕ;ll, les
A.
SPRINC
MAANUFA
OO
,
J. S.T.
MAHIH

9amplineals {rg
AE BEZA
WORKS
ActURERS OF
SPRINGS
MARY S RCA
"A (AE, RAĆA Mf{