கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவிசை 2004.07-08

Page 1


Page 2
நாசாவின் புதிய 1. விண்வெளிக்கப்பல்
',61 க வரினர் வெளி ஆராய்ச்சி நரிறுவனமான IBITSFIT6560IIT6b GP-B (Gravity Probe - B) எனப் பெயரிடப்பட்ட விண்வெளிக் கப்பல் (Spacecraft) ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
(2)g5 Alber Einstein (960)/60oLu I Theory of Relativity (gTijl கொள்கை) சம்பந்தமான உண  ைமத தனர் மை யை ஆராய்வதற்காக விண்வெளிக்கு Vanden berg 6nfluDIT60TLÜL 16ODLg5 தளத்திலிருந்து April 20/2004 அன்று ஏவப் பட்டுள்ளது.
ノ
 
 

விசையின் திசையில்.படைப்பாற்றல் இதழ் - O3 ஆடி - ஆவணி 2OO4
நிர்வாக ஆசிரியர் தி. செல்வமனோகரன்
பிரதம ஆசிரியர் லோ, துஷிகரன்
கணனி வடிவமைப்பு, அச்சு குரு பிறிண்டேர்ஸ், திருநெல்வேலி.
வெளியீடு தூண்டி திருநெல்வேலி.
முகவரி -ಅaಾcರಾತ್ இல, 141, கேணியடி திருநெல்வேலி.
யாழ்ப்பாணம்,
இலங்கை.
உள்ளே.
*மகப்பேற்று மருத்துவத்தில்
ஸ்கானிங் 3۔
*இலத்திரனியல் வர்த்தகம் -5
*சிறுநீரகக் கற்கள் -8
+கிரிகட்டில் -11
* மின்னற் கடத்தி -Is
*நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட
மனவடுவும் சம்பவ
விபரிப்புச் சிகிச்சையும். -17 *சூரியன் FM லோஷனுடனான
நேர்காணல் -23
*உணவும் போசனையும் -26
* உயிருக்கு உலைவைக்கும்
சார்ஸ் -31
*பயன்தரு விலங்கின்
துரோகிகள் -35
*.அன்றும் நோர்வேயின் மத்தியஸ்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஸ்ரேல் சமாதான உடன் படிக்கை -39

Page 3
1)
2) 3)
4)
5)
6)
7)
8)
9)
தகவல் பெட்டகம்
புவியின் கோளப் பரப்பு 510 066 000 Km2
மின்சாரத்தின் தந்தை எனப்படுவர் - மைக்கேல்பரடே
உலக சுகாதார தாபனம் (WHO) அமைக்கப்பட்ட ஆண்டு - 1946
உலகின் கூரை எனப்படுவது - பமீர் முடிச்சு ரஸ்ஸியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் அமெரிக்க விமானம் - U-2 (1960 ம் ஆண்டு) அமெரிக்காவின் தேசியப் பறவை - கழுகு "மூலதனம்" எனும் நூலை உருவாக்கியவர் - கார்ல் மார்க்ஸ்
காந்தி தனது அரசியல் குருவாகக் கருதியவர் . கோபாலகிருஷ்ணகோகலே
அவுஸ்ரேலியா நாட்டின் சின்னமாகக் கருதப்படுவது - ஹங்காறு, மிமோசா.
10) முன், பின் பக்கங்களால் பறக்கக் கூடிய பறவை - ஊங்காராப் பறவை.
SSSSSSSSSSTSSLMS S SMS SLSL
1)
2)
3)
4)
5)
6)
Z)
8)
9)
10) "விசை" அளக்கப் பயன்படும் அலகு எது?
பொது அறிவுப் போட்டி இல-3 அமெரிக்காவின் கைவசம் இருந்த "பேள்" துறைமுகம் மீது ஜப்பான் குண்டுவீசி தாக்குதலை எந்த ஆண்டு நடாத்தியது? ஒலி எதிர் ஒலிப்பதன் மூலம் கடலின் ஆழத்தை கண்டுபிடித்தவர். இவர் அமெரிக்காவிற்கும் பிருத்தானியாவிற்கும் கடல் தந்திக் கம்பி போடுவதற்கும் தந்திப் பொறியியலாளராக இருந்தார். அவர் யார்? ஈரான் நாட்டு மக்கள் பேசும் "மொழி" இன் பெயர் என்ன? "உயிரைக் காக்கும் உலோகம்" எனப்படுபது எது? முதன்மை நிறங்கள் எனப்படுவை எவை? A.N.C எனப்படுவது எது?
இலங்கையில் உள்ள "பொன்னம்பலவாணேச்சரம்" ஆலயம் எதற்குப் பெயர் பெற்றது? ۔
இலங்கையின் தேசிய கீதத்தை அமைத்தவர் யார்?
பிரான்ஸ் நாட்டின் நாணய அலகு எது?
 

மகப்பேற்று மருத்துவத்தில் ஸ்கானிங்
கருவுற்ற தாய்மார் ஸ்கான் முறை முலம் பரிசோதனை செய்து கொள்வது இப்பொழுது வழக்கமாகிவிட்டது. இந்த ஸ்கானிங் முறைக்கு, அல்ராசவுண்ட (Ultra Sound) 6T60TL'Il Gub dislfGuT65 அலைகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த கழியொலி அலைகள், Xகதிர்களைப் போன்று உடலுக்கு ( பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இதனால் " இது கருவுற்ற பெண்களில் பாதுகாப்பான
ஸ்கானிங் பல்வேறு தேவைகளுக் காக செய்யப்பட முடியும், ஆயினும் இலங்கையில் குறிப்பிட்ட சில பயன்பாடுகளே பெறப்படுகின்றன. கருவுற்று (கடைசி மாதவிலக்கு ஏற்பட்டு) ஏறத்தாழ 5 கிழமைகளிலேயே TV Scan எனப்படும் யோனிவழி முறையாக குழந்தை கருப்பையில் உருவாகி இருப்பது கண்டறியப்பட முடியும். இதுவே 6 Juillipsig, GLD6) 6061551 (Trans abdominal Scan) 6i5IT6i Li6Oligoplub போது இன்னமும் ஓரிரு கிழமைகள்
பொறுத்திருக்க வேண்டும்.
கருவுற்ற தாய்மார்கள் ஏறத்தாழ 20 கிழமைகளில் வைத்தியசாலையில் ஸ் கான் பண்ணப்படுவார்கள். இதனால் குழந்தையின் வயது அறியப்படும். இ ன னொ ரு வ  ைக யரி ல சொல்லப் போனால், பிரசவ திகதியை உறுதிப்படுத்த இது உபயோகப்படுகின்றது. இதே ஸ்கான் முறையில் குழந்தை குறைபாடற்ற கருவாக உள்ளதா என அறியமுடியும்.
மீண்டும் ஏறத்தாழ 28 கிழமைகளில் ஸ்கான் பண்ணப்படும் இதன் போது சூல்வித்தக (Placenta) நிலை, குழந்தை வயிற்றில் உள்ள தன்மை (Presentation) sib6fluisit LITuiGLITO6it 9/676 (Liquor Volume) 6T6ituat முக்கியமாக கவனிக்கப்படும்.

Page 4
ஸ்கான் முறைமுலம் குழந்தை ஆணா பெண்ணா என்பதையும் அறியமுடியும். ஆனால் அவ் வகையில் இலங்கையில் எம் கானர் செய்யப்படுவதில்லை. (இது இ இந்தியாவில் சாதாரணமாக செய்யப்படுகிறது.)
கருவுற்ற தாய்மார் மட்டுமன்றி, சாதாரண பென களும் ஸ்ரீ கான முறையில் அவர்களின் நோய்களை அறிந்து கொள்ள முடியும். சூலக கட்டிகள் : (Ovarian Cyst), as(5ú6ou m 電* 離>" 45 L' ug as 6mio ( Fibro i ds ) போன்றன இந்த USS எனப்படும் ஸ்கான் மூலம் அறியப்படுகின்றன.
மலிவானதாகவும், பக்கவிளைவுகள் இல்லாததாகவும், பயன்படுத்த எளிமையானதாகவும் இருப்பதால் இந்த ஸ்கானிங் முறையானது அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.
- கி. குருபரன்,
கொழும்பு மருத்துவபீடம்.
 
 
 
 

இலத்திரனியல் வர்த்தகம்
(E-Commerce) Electronic Commerce
இலத்திரனியல் வர்த்தகம் என்பது ஒரு நவீன வியாபாரத் தந்திரோபாயம். அத்துடன் இது நுகர்வோருக்கு குறைந்த செலவில் தரமான பொருட்கள் சேவைகளை விரைவாக விநியோகம் செய்வதற்கு துணைபுரிகின்றது. இன்றைய காலகட்டத்தில் சில தொலைக்காட்சி 6561TubLITIEijséffsi) in L. Online Purchasing இற்காக அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி காணப்படும். இவை இலத்திரனியல் வர்த்தகம் இலங்கையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை வெளிப்படைய்ாகி புலப்படுத்துகின்றது.
இவ் இலத்திரனியல் வர்த்தக முறைமையின் கீழ் விற்பனையாளர்களும் கொள்வனவாளர்களும் கணனிகளின் துணை கொண்டு வலைப்பின்னல் (Network) முறை ஊடாக தமது கொடுக்கல் வாங்கல்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். வியாபார நிறுவனம் தன்னுடைய விற்பனை பொருட்களை "இன்டர்நெட்" ஊடாக விளம்பரப்படுத்தும் இதனை "இன்டர்நெட்" மூலம் அறிந்த நுகர்வோர் தமது கொள்வனவுக் கட்டளையை வீட்டில் இருந்தவாறே நிறுவன "வெப்சைட்" முகவரிக்கு தமது கணனியில் "ரைப்" செய்து அனுப்புவதன் மூலம் பொருட்களை தாம் வாங்க விரும்புவதை தெரியப் படுத்தலாம். அத்துடன் குறிப்பிட்ட தொகையை வங்கியின் Online Banking வசதியைப் பயன்படுத்தி அனுப்பினால் குறித்த நிறுவன ஊழியர்கள், பொருளை வீட்டுவாசலுக்கு வந்தே விநியோகிப்பர். இங்கு நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்காக வியாபார ஸ்தலத்துக்கோ அல்லது சந்தைக்கோ செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
இலத்திரனியில் வர்த்தகத்தின் இலக்குகளாக நாம் பின்வருவனவற்ை குறிப்பிடலாம்.
1) செலவில் ஏற்படும் குறைவு 2) உற்பத்திக் காலம் குறைக்கப்படல் 3) விரைவானதும் சிறந்ததுமான நுகர்வோர் தொடர்பு ஏற்படுத்தப்படல். 4) காகித வேலைகளை குறைத்தல் 5) இயந்திர மயமாதலை ஊக்குவித்தல்

Page 5
6) பொருட்கள் சேவைகளின் தரம் உயர்த்தப்படல்.
இலத்திரனியல் வர்த்தகம் பிரதானமாக 3 வகைப்படுத்தப்படும். 960D6) lu llT6) 1607.
1) வியாபாரத்துக்கும் நுகர்வோருக்கும் இடையிலான இலத்திரனியல்
6.jgigasib (Business to Consumer e-commerce) (B2C e-com) 2) வியாபாரத்துக்கும் வியாபாரத்துக்கும் இடையிலான (365516 flu I6) 6)ijgig55lb (Business to Business e-commerce)
B2B e-Com) 3) நிறுவனத்திற்கு உள்ளேயான இலத்திரனியல் வர்த்தகம் (Intra organizational e- commerce) (B2E e-Com
Business to Consumers e-Com
B2 C e-Com என்பது வியாபார நிறுவனத்துக்கும் நுகர்வோருக்கும் இடையில் இடம் பெறும் இலத்திரனியல் வர்த்தகம் ஆகும்.
Business to Busines e-com
B2Be-Com என்பது ஓர் வியாபார நிறுவனத்திற்கும் இன்னோர் வியாபார நிறுவனத்திற்கும் இடையில் இடம்பெறுகின்ற இலத்திரனியல் வர்த்தகம் ஆகும். «
Intra Organizational e-com.
BusineSS 2 employee e-Com 676tug5 65u IITLITU piloj6160igglig5tb அந்நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கும் இடையில் இடம் பெறுகின்ற இலத்திரனியல் வர்த்தகம் ஆகும்.
கணிப்பொறி தொழில்நுட்பமும் அதன் பரிமாண வளர்ச்சியான இணையமும் (Internet) வந்ததன் பிற்பாடு வணிகம் மின்வணிகம் (e- Commerce) 9(655-65 Italité07(655F6) (e-Mail) ஆக புதிய பரிமாணம் பெற்றது. இவ்விடத்தில் tfloit 9.Jg (T60,760dlp (E-Governance) 6T6tLig5! பற்றி சிறிது ஆராய்வோம். அதாவது அரசாண்மை கணனித் தொழில்நுட்பத்தினதும் இணையத்தினதும் உதவியுடன் மின் 9|J&IT60,760)ld (Electronic Governance) ஆகியுள்ளது. வணிக செயற்பாடுகள்
 
 
 

இணையத்தினூடாக நடைபெறும் போது மின் வணிகமாகிறது. அதே போல அரசின் செயற்பாடுகள் இணையத்தினூடாக மக்கள் பார்வைக்கு வரும் போது அது மின் அரசாண்மை ஆகிறது.
இலத்திரனியல் வர்த்தகம் என்பதன் கீழ் நாம் M-Commerce என்பது பற்றியும் பார்ப்போம்.
M-Commerce 676i Lug5 Mobile Commerce 676oi) அழைக்கப்படுகிறன்றது. அடிப்படையில் இதுவம் E-Commerce போன்றதுதான். e-Commerce (இ-வணிகம்) முறை இணையத்தில் Desktop Computer வழியாக மேற்கொள்ளப்படும். வணிக முறையாகும். ஆனால் gris M-Commerce gy,601g, Cell-phone ep6 lb Wireless network அமைப்பில் செயற்படுகின்றது. இவ்வாறு Wiless மூலம் நடைபெறுவதனால் எளிதாக எங்கிருந்து வேண்டுமானாலும் Cell phone மூலம் வணிகத்தை மேற்கொள்ளலாம்.
Фрцp6ц6опт - Conelusion
இக்கட்டுரையில் இலத்திரனியல் வர்த்தகம் என்றால் என்ன என்பது பற்றியும் அது எவ்வாறு நடைபெறுகின்றது என்பது பற்றியும் அதன் இலக்குகள் என்ன என்பது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. மேலும் இங்கு நேரடியாக சில ஆங்கிலச் சொற்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் விளக்கத்தில் ஏற்படும் சிக்கலைத் தவிர்ப்பதற்காக ஆகும். அச்சொற்களை நாம் தமிழில் மொழி பெயர்த்து எழுதுவோமாயின் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியாதிருக்கும். இணைய வளர்ச்சியின் மூலம் ஏற்பட்ட MCommerce மற்றும் மின் அரசாண்மை பற்றியும் சிறிதாக இக்கட்டுரையில்
ஆராயப்பட்டுள்ளது.
P. Umashankar
பொது அறிவுப் போட்டி கணிதச் சிக்கல் ஆகிய இரு N
போட்டிகளுக்குமான விடைகள்அனுப்ப வேண்டிய முகவரி
ஆசிரியர், *அறிவிசை? 141, கேணியடி, திருநெல்வேலி.

Page 6
சிறுநீரகக் கற்கள் Renal Stones
மனித உடல் அவரை வித்துருவான இரு சிறுநீரகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவை இடுப்புப் பகுதியில் முதுகின் உட்புறமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சிறுநீரகமும் மில்லியன் கணக்கில் தொழிற்பாட்டுக் கூறுகளை கொண்டுள்ளது. இக் கூறுகள், சிறுநீரகத்திகள் (Nephorns) எனப்படும். மனிதனில், சிறுநீரகம், கழிவகற்றியாக. −
* உடலின் திரவ மற்றும் அயன்சமனிலைகளை பேணும்
அமைப்பாக
* அகஞ்சுரக்கும் தொகுதியாக
* அனுசேபத்தின் பங்காளியாக தொழிற்படுகிறது.
சிறுநீர் தொகுதியின் LIDITÁSf
அதிரினல் சுரப்பிடபூ
வலது சிறுநீரகம்
(Right Kidney) இடது சிறுநீரகம்
(Left Kidney) சிறுநீர்கான் (Unter)
சிறுநீரக நாளம் 7
艇 '.
சிறுநீரக நாடி
சிறுநீர்ப் பை --> < :& (Bladder) :
சிறுநீரகத்தில் அல்லது சிறுநீரக சேர்க்கும் தொகுதியில் உப்புக்கள் படித்து சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. உப்புக்களின் அடிப்படையில் இக்கற்கள் நால்வகைப் படுத்தப்படும்.
* 70 வீதத்திற்கும் அதிகமான கற்கள் கல்சியம் ஒக்சலேற்றினால் ஆனவை. இவை சிலசமயம் கல்சியம் பொஸ்பேற்றுடன
|2SS-, SSI -L=-- 8
 
 
 

இணைந்தும் காணப்படும். இவ்வகைக் கற்கள் வன்மையானவை. சிறுசிறு கூட்டங்களாக காணப்படும் குருதியில் அதிகளவு கல்சியம் காணப்படுவதாலும், சிறுநீர்வழியே அதிகளவு கல்சியம் வெளியேறுவதாலும் இவ்வகைக் கற்கள் தோன்றுகின்றன. நீரிழப்பு காரணமாகவும் இவை தோன்றலாம். மக்னீசியம் அமோனியம் பொஸ்பேற் உப்புக்களால் ஏற்படுத்தப்படும் கற்கள் அடுத்தவகையின. இவை நரைசாம்பல் நிறத்துடன் கூடிய பச்சைக் கற்கள், மென்மையானவை, பெரிய திண்மமாக உருவாகி, மிகப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வகைக்கற்கள் Proteus, Staphylococous எனும் இரு பக்ரீரியாக்களின் தொற்றுதலைத் தொடர்ந்தே ஏற்படுகின்றன. இந்த பக்ரீரியாக்கள் யூரியாவை பகுத்து அமோனியாவை உருவாக்கும் போது தோன்றும் கார ஊடகத்தினாலேயே இங்கு படிவு நிகழ்ந்து கல் உருவாகிறது.
யூரிக் கமிலத்தால் உருவாகும் யூரேற் வகைக்கற்கள், பிறவுன் - மஞ்சள் நிறமுடையவை. சிறுநீர் அமிலத்தன் மையாவதனால் இவ் வகைக் கற்கள் தோன் றும். * Cystin e 67 6oi p அமினோ அமிலத்தின் மிகையான சேர்க்கை
KDNEYS AND SUPRARENAL GLANDS
யால், மஞ்சள் நிற, மெண்மையான கற்கல் உறுவாகின்றன.
சிறுநீரகக்கல் உள்ள ஒருவருக்கு நாரி நோவு இடுப்பு நோவு ஏற்பட்டு - நோவு கீழிறங்கி கவட்டுப்பகுதிக்கு (Groin) செல்லல், சிறுநீருடன் இரத்தம் வெளியேறல், சிறுநீர் வெளியேற்றலின் போது எரிவு என்பன ஏற்படலாம்.
சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுப்பதற்கு, தினமும் போதியளவு நீர் அருந்துதல் அவசியம். சராசரியாக ஒரு நாளுக்கு சிறுநீர் 2-2.5 லிட்டர் வரை வெளியேறுமாறு நீர் உட்கொள்ள வேண்டும். வெப்ப வலயத்தில் வாழ்பவர்களிற்கு, இதை விட
|aప్రాa

Page 7
அதிகளவு நீர் உட்கொள்ளல் அவசியம். சிறுநீரின் நிறம் கடும்மஞ்சளாயிருப்பின், குடிக்கும் நீரின் அளவு போதாது என்பது அர்த்தம். பொதுவாக படுக் கைக்கு போகுமுன்னும்,
ந்து எழும்பிய உடனும், பெரியளவு நீர் அருந்துதல்
கல்சியம், விட்டமின் D கூடிய உணவுகளை அதிகளவு
சேர்க்கக் கூடாது. குடிக்கும் நீர் உப்புக்கள் இல்லாததாக, அல்லது மென்நிராக (SoftWater) இருக்க வேண்டும்.
சிறுநீரகக் கற்கள் உள்ளவருக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
வலியை குறைப்பதற்கு Morphin அல்லது NSAID ர்படுத்தப்படுகின்றன.
அதிகளவுநீர் உட்கொள்ளச் செய்தலும், உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்தலும் சிகிச்சைமுறைகளே. இவற்றால் 0.5 Cm விட்டத்திலும் குறைவான கற்கள் அகன்று விடும். ܟ
சிறுநீரகக்கற்களை அதிர்வலைகள் மூலம் சிறுசிறு துண்டுகளாக உடைத்து சிறுநீர்வழி மூலமாக வெளியேற்றுவதும், (gag, Extra Corporcal Shock Wave Lithotripsy 616il lif) வெளியேறத் தடைப்படும் கற்களை சிறுநீர்வழியில் சந்திர சிகிச்சை (Percutaneous Surgery) Gauigi saipogius Gurg/6/itat (paодр.
ஒளி இழைநார் (Endoscopy) மூலமாகவும் இக்கற்கள்
சிகி கலான கற்கள் சத்தரிரசிகிச்சை மூலம் வெட்டியகற்றப்படுகின்றன. சிறுநீர்ப்பையில் உருவான கற்களையும், சிறுநீரகத்தின் உள் உருவான கற்களையும் (Nephrolithotomy), சிறுநீரக வாயிலில் உருவான கற்களையும் (Pyeolithotomy), சிறுநீர்கானில் உருவான கற்களையும் (Ureterolithotomy.) A6i6 ITO 915sip (plguptb.
சி. சோ. பதந்தன் மருத்துவபீடம்
 

இங்கிலாந்துக்கெதிரான கடைசி டெஸ்டில் 400 ரன்கள் குவித்து சாதனை படைத்தவர் பிறயன் லாரா. ஆனால் அது சுயநலம் +லந்த ஆட்டம் என்று நாகுக் காக சொல லவிட்டார் . ஆஸ்தரிரேலிய அணித தலைவர் பொன டி நi . உடனே ஆ சரிய பத்திரிகைகள் எல்லாம் பொண்டிங்கை 'ஒரு பிடி" பரிடித்த தோடு, லாராவின்இனிங்சையும் நியாயப்படுத்தி இருக்கின்றன.
கிரிக்கட்டில்.
லாராவின் சாதனையில், 3-0 என்கின்ற படுதோல்வி மறைந்து விடுமா, என்பது தான் கேள்வி
இரண்டு நாட்களிலும் 650 ஓட்டங்கள் போதுமானவையாக இருக்க அடுத்த நாட்காலையில், எதிரணியின் விக்கட்டுக்களை சரிக்க வாய்ப்பிருக்க ஏதோ, திருப்திக்காவது 400 ஓட்டங்கள்
தேவைப்பட்டிருக்கலாம்.
ஆனாலும், போட்டி முடிய 12 ஓவர்கள் இருக்கும் நிலையில், மேற்கிந்தியர்கள் 5 விக்கட்டுக்கள் வீழ்த்த வேண்டி இருந்தது. முயன்று பார்த்திருக்கலாம். சாதனையில் க(தி)ளைத்து விட்டார்களோ?
* லாரா 556 பந்துகளில் 400 ஓட்டங்களை பெற்றார் மத்யூ ஹெய்டன் 437 பந்துகளில் 380 ஓட்டங்களை பெற்றார். ஆனால் 1932 ல் நியூஸிலாந்துக்கெதிராக, வாலி கெமண்ட் 398 பந்துகளில் 336 ஓட்டங்களை . . . . . பெற்றிருக்கிறார். » "3 م.
* ஒரு டெஸ்ட் போட்டியில் கூடிய சிக்ஸர்கள் அடித்தவர் யார் தெரியுமா? பாகிஸ்தான் (). ' . பந்துவீச்சாளர் வஸிம் அக்ரம் சிம்பாவேயுடன் 257 நி’ ஓட்டங்கள் குவித்தபோது 12 சிக்ஸர்களை ெ விளாசினார். அவருக்கு அடுத்த இடம் ஹெய்டனுக்கு (11 சிக்ஸர்கள்)
டொன் பிரட்மன் ஒரே நாளில் 309 ரன்கள் அடித்து சாதனை செய்தார். அடுத்த நாள் மேலும் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

Page 8
அப்போது அவரின் வயது 21. மிக இளம்வயதில் முச்சதம் அடித்தவர் அவரே.
1957 ம் ஆண்டு மேற்கிந்தியா வின் சோபர்ஸ் 365 ஓட்டங்கள் அடித்து சாதனை படைத்தார். அவருக்கு அது 17 வது டெஸ்ட் அதற்கு முன் அவர் ஒரு சதம் தானும் பெற்றிருக்க வில்லை. * ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சி யாக 50 ஓட்டங்களை பெற்றவர்களில் முதல் இடம் பாகிஸ்தானின் ஜாவிட் மியாண்டாட்டுக்குத்தான். 1987 ல், அவர் 9 தடவை தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார்.
அவருக்கு அடுத்த படியாக, கிரினிட்ஜ், அன்று ஜோன்ஸ், மார்க்வோ, யுகானா ஆகியோர் 6 தடவை 50க்கு மேல் தொடர்ச்சியாக அடித்திருக்கிறார்கள்.
சி.சோ.பதந்தன்
கணிதச்சிக்கல் - 3
1) A=1, C=3, Z=26 ஐயும் குறிக்கும். இந்த வகையில் எண் இயல்போடு தொடர்புபடுத்தி அடுத்து வரும் ஆங்கில எழுத்தினை காண்க. HG (0), IL (U) PC (-)
2) 01-06-2004 இல் ஒரு கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியோரின் வயதுகளின் கூட்டுத் தொகை 01-06-1994 இல் இருந்த அவர்களது வயதுகளின் கூட்டுத்தொகையின் 40 வருடங்கள் கூடுதலாக இருந்தது. குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை எத்தனை?
3) 16,72, 38,94, 60,1.
2 5 9 14
4. 8 13 19 ?
4)
5) X, Y, Z gálul cyp6így பெலிகளில் 100 சாக்கு அரிசி ஏற்பட்டுள்ளது. லொறி X இல் லொறி Y இலும் பார்க்க 5 சாக்கு அரிசி கூடுதலாக உண்டு. லொறி X இல் லொறி Z இலும் பார்க்க 3 சாக்கு அரிசி கூடுதலாக உண்டு எனின் லொறி Z இல் எத்தனை சாக்கு அரிசி உண்டு?
1
翌エーミエ三 12
 

பாராளுமன்றத்தில் .
இப்பழயும் நடக்கிறது!
ஒரு நாட்டின் தலைநகரை அண்மிய கடற்கரையிலே பழைய கப்பலொன்று தரைதட்டியிருந்தது. அந்தக் கப்பலின் பகுதிகளையும், தளபாடங்களையும் இரவில திருடர்கள் கொணர்டு போய் விடுவார்கள் என்றும் அதைத் தடுக்க
உடனடி "நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்நாட்டுப் பாராளு மன்றத்தல் குரல
எழுப்பப்பட்டது. இந்த விடயம் பற்றி விரிவாக ஆராய்ந்த பாராளுமன்றம் கப்பலைக் காவல் புரிவதற்காக இரவு நேரக் காவலாளி ஒருவனை நியமிப்பது எனத் தீர்மானித்தது.
சிலநாட்களின் பின்னர் பாராளு மன்றத்தில் மீண்டும் இப்பிரச்சனை தலைதுாக்கியது. காவலாளியின் கடமைகள் பற்றி எவ்வித அறிவுறுத்தலும் கொடுக்கப் படாததனால் அவனுடைய பணி சரிவர நிறைவேற்றப்படுவதில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே இதற்கான திட்டமிடல் உத்தியோ கத்தர் ஒருவரும், காலத்துக்குக் காலம் எடுக்கப்பட வேண்டிய மாற்று நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான உததரியோகத்தர் ஒரு வரும் நியமிக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்றம் சிபாரிசு செய்தது இச் சிபாரிசை ஏற்று அரசு அவ்வுத்தி யோகத்தர்களை நியமித்தது.
"இரவுக் காவலாளி தன் பணியைச் சரியாக நிறைவேற்று கின்றானா?" என்ற கேள்வியைப்
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்
களப் பரியதனால ம°னர் டும் பாராளுமன்றம் இவ்விடயம் பற்றி அலசி ஆராய்ந்தது. இறுதியில், இதற்கெனத் தரக் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர் ஒருவரையும் காவலாளியின் வேலை பற்றிய விபரங்களை பதிந்து வைப்பதற்கான உத்தியோகத்தர் ஒருவரையும் நியமிக்குமாறு பாராளுமன்றம் உத்தரவிட்டது.
சில் நாட்களின் பின்னர், மேற் குறித்த உத்தியோகத்தர் களுக்குச் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதனால் அதுபற்றி உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் தனிச் சம்பள பிரிவொன்றை அமைப்பது எனவும் அங்கு செயல் புரிவதற்காக கணக்காளர், கணக்காய்வாளர், சம்பளக் கிளாக் ஆகிய மூன்று உத்தியோகத்தர்களை நியமிப்பது எனவும் தீரமானித்தது.
சில வாரங்களின் பின்னர் இதே விடயம் பற்றிப் பாராளு மன்றத்தில் சர்ச்சை எழுந்தது. "மேற்குறிப்பிட்ட ஊழியர் கூட்டத்தினரை நிர்வகிப்பது யார்?" என்று பலரும் கேள்வி கேட்கலாயி னர். எனவே இதற்காகக் "கப்பல் காப்புத் திணைக்களம்" என்ற பெயரில் ஓர் நிறுவனத்தை ஸ்தாபித்து அதற்கெனப் பணிப்பாளர் ஒருவரை யும், நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரையும், சட்ட ஆலோசகர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்
மீண்டும்

Page 9
என்ற திரமானத்தைப் பாராளு மன்றம்
நிறைவேற்றியது. இதுவும் உடனடியாக
அமுல்படுத்தப்பட்டது. .
வருட இறுதியில் அரசின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப் பட்ட போது கப்பற் திணைக்களத்தின் செலவீனங்கள் அளவுக்கு மீறி அதிகரித்திருப்பதற்காக எதிர்க் கட்சியினர் குற்றஞ்சாட்டினார். இது பற்றி பல மணித்தியாலங்கள் விவாதித்த உறுப்பினர்கள்அத்திணைக்
#*
sкI JAYAvAR DE NAPURA
Korrig
காப்புத்
களத்தின் செலவீனங்களை குறைப் பதற்குச் சிக்கன நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்பதை எடுத்துக்
காட்டினார். எனவே திணைக்களத்தின்
செலவைக் குறைக்கும் முதல் நடவடிக்கையாக இரவு நேரக் காவலாளியைச் சேவையிலிருந்து
நீக்கிவிடுவது எனப் பாராளு மன்றம் திரமானித்தது.
நன்றி - அரும்பு
இலங்கைப் பாராளுமன்றத்தின் தோற்றம்.
/
செய்யப்படுவர்.
கணிதச் சிக்கல் கூப்பனுடன் இணைத்து விடைகள் அனுப்பப்படல் வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள வயதெல்லை கிடையாது.
சரியான விடையை அனுப்பும் ஒருவர் குலுக்கல் மூலம் தெரிவு
> ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
விடைகள் கிடைக்க வேண்டிய இறுதி நாள் ஆவணி 30
 
 

மின்னற் கடத்தி
கந்தையா சந்தைக்கு வெளிக்கிட்ட சகுனம் சரியில்லை இன்றைக்கு வந்திருக்கே புயலோடு மழையொன்று
சந்திவரை வந்துவிட்டோம் சரியாய் ஒர் மைலிருக்கு சங்கத்துத் திண்ணையிலே சற்றே பொறுத்திருப்போம்.
வடிவேலு கண்ணிரண்டும் குருடுபடக் கண்டாயோ மின்னலினை ஏதண்ணை இருந்தாப்போல் இப்படிஓர் மழையின்று காது செவிடுபடக் "கடகடவென" இடி முழக்கம்.
கந்தையா வாஅதிலே போய்நின்று மழைகுறையப் போயிடலாம் ஆ/ அதிலே கட்டிடத்தின் உச்சியிலே கவர்களுடன்
வாய்திறந்த மாதரியாய் இருக்கிறதே, அது என்ன? "முனிசிபல்” கட்டிடத்தில் மூன்றுகவர்க் கம்பிகளேன்.
வடிவேலு ஆறு, குளம் கடல் நீரின் ஆவிகளே எழுந்துசென்று மேலேபோய் ஒடுங்கியதும் முகில்களாய் ஆவனவாம் நீர்த்துளிகள் முகில்களிடை மோதி இயங்குவதால் ஏற்றம் பெறுவதனை அறிவாயா கந்தையா?
கந்தையா
சீப்பைனடுத் தன்றொருநாள் சிக்கராய்த் துடைத்துவைக்க ஓடிவந்த எண்மனைவி உடனேஅச் சீப்பெடுக்க, கடதாசித் துண்டொன்றைக் கவர்ந்தனை வடிவேல், நீ மின்னேற்றம் பெற்றதென அந்நேரம் சொன்னாயே.
வடிவேலு
கீழ்நோக்கி வரும்மின்னல் தரைமீதில் விழுமுன்னர், கிடைக்கின்ற கடத்தியினால் நிலம்போக வழிதேடும் இலட்சம் வோல்ற் மின்சாரம் இலேசன்று அதனாலே மின்னற் கடத்தியினை மேல்அங்கே இணைத்துள்ளார்.

Page 10
கந்தையா
தோட்டத்து வெளியினிலே துலாமிதித்த துரையப்பர் இடிவிழுத்தே இறந்தகதை உனக்கெல்லாம் தெரியாது.
வடிவேலு வெட்ட வெளியினிலும் ஒற்றை மரம்கீழும் மட்டும் இருக்காது குடில்களிலும் குழிகளிலும் ஒட்டி இருப்போர்க்கோ ஒன்றும் பயமில்லை.
கந்தையா மின்னற் கடத்தி அது என்னத்தைச் செய்கிறது என்னத்தாற் செய்தது? என்பதனைச் சொல்வடிவேல்.
வடிவேலு இரண்டு வழிகளிலே உதவுகிற இக்கடத்தி செம்பாலே ஆனகம்பி, தரையிற் புதைத்துளது வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றுமுள மின் சாதனங்கள் புவித்தொடுப்புக் கொண்டனவே நிலத்திலுள்ள மின்னேற்றம் நேராய் எழுந்துசென்று கவர்க்கம்பி நுனிசெறிந்து முகிலினது ஏற்றத்தை எதிர்த்துநின்று போர்புரிந்து நடுநிலையை ஆக்கிவிடும் விழுகின்ற மின்னலினை இலகுவிலே கீழ்க்கடத்தி நிலமடைய வைப்பதனாற் றான் அங்கே நெடுமாடம் நிலைகுலைந்து சீரழிதல் இல்லாது நின்றது.
கந்தையா
றேடியோக் கறகறப்பும் இப்படியே தான், அப்ப நன்மையொன்றும் தாராத நாசமா இம்மின்னல்?
வடிவேலு இத்தனை கொடிய மின்னல் செய்கின்ற நன்மை ஒன்று, பசளையை நமக்குநல்கும் நைதரசன் சேர்வை தம்மைக் காற்றுடன் முயங்க வைத்துக் கொடுத்திடும், அது பின்பாக மழையிலே கலந்துவந்து மண்ணினை அடையுமண்ணே.
கந்தையா கொடியபல் இன்னலுரடே மின்னலின் இந்த நன்மை தொழிலரைப் பிழிந்தெடுக்கும் ஒருபெருந் தனத்திலேயே ஒரு துளி தானஞ்செய்யும் ஒருமுத லாளிபோலும்.
அமரர் இ. சிவானந்தன்
 
 

நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடுவும் சம்பவ விபரிப்புச் சிகிச்சையும்
- கோகீலா பரகேந்திரன்
மாற்றம் அல்லது பிரச்சினை ஒன்றை எதிர் கொள்ளும் போது எமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் எதிர்த்தாக்கம் நெருக்கீடு எனப்படும்.
நெருக்கீடுகளின் வலிமை கருதி அவை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுவதுண்டு.
1. சிறிய நெருக்கீடுகள் . உ+ம் பாடசாலை மாற்றம், உணவுப் பழக்கத்தில் மாற்றம் நித்திரை செய்யும் இட்த்தில் மாற்றம். 2. பாரிய நெருக்கீடுகள் உ+ம் குடும்ப அங்கத்தவர் ஒருவரின் இறப்பு,
வியாபாரத்தில் பெரிய நட்டம்.
3. மனவடுவுக்குரிய நெருக்கீடு
மனவடுவுக்குரிய நெருக்கீட்டை ஏற்படுத்தும் காரணிகளில் வன்முறையும் போரும் முக்கியமானது. உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் விபத்துக்களும், பூமியதிர்ச்சி, சூறாவளி, எரிமலை, பெருவெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களும் கூட மனவடுவுக்குரிய நெருக்கீட்டை ஏற்படுத்தலாம்.
வன்முறைகள்:
வன்முறைகள் மூன்று வகைப்படும்.
1. இரு மனிதருக்கிடையிலான வன்முறைகள்.
உ+ம்: சிறுவர் துஷ் பிரயோகம், இளைஞர் துஷ்பிரயோகம், வீட்டு. வன்முறைகள், முதியோரைத் துன்புறுத்தல், பாலியல் வன்முறைகள்.
2. தனிநபர் தனக்குத் தானே செய்யும் வன்முறை.
உ+ம்: தற்கொலை முயற்சி, சுய தண்டனைகள்.
3. குழுமங்களுக்கு எதிரான வன்முறைகள்:
உ+ம்: போர், இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள்.

Page 11
உலகம் முழுவதிலும் இறப்புகளில் 1000:1 என்ற விகிதத்தில் வன்முறையால் ஏற்படும் இழப்புக்கள் அமைகின்றன.
պֆՖն)։
குறைந்தது ஒரு தரப்பாவது அரச படையைக் கொண்டதும் மற்றைய தரப்பு குறைந்த பட்சம் ஒரு அமைப்பாக இயங்குவதுமான இரு தரப்பினருக்கிடையே தொடர்ந்து நடைபெறுகின்றன. போராயுதங்கள் பாவிக்கப்படுகின்ற முரண்பாடு யுத்தம் எனப்படும்.
பொருளாதார வீழ்ச்சி கல்வித்தர வீழ்ச்சி, மக்களிடையே பாதுகாப்பு உணர்வு குன்றுதல், தனி நபர்களில் அடையாளக்குழப்பம்ஏற்படுதல் ஆகியவை ஒரு நாட்டில் தோன்றப் போது அங்கு யுத்தம் ஏற்படும் நிகழ்தகவு அதிகரிக்கிறது.
உலகில் இன்று நடைபெறும் யுத்தங்கள் பலவற்றையும் உலக
பொருளாதாரக் காரணிகளே தீர்மானிக்கின்றன. உலகில் இன்று நடைபெறும் யுத்தங்களில்,
3% - ஐரோப்பாவிலும் 36% - ஆபிரிக்காவிலும் 32% - ஆசியாவிலும் 23% - மத்திய கிழக்கிலும் 6% - லத்தீன் அமெரிக்காவிலும்
நடைபெறுகிறது. உலகில் இன்று நடை பெறும் யுத்தங்களில் 91% ஆன யுத்தங்கள் :
உள்நாட்டு யுத்தங்களாகவே உள்ளன.
உள்நாட்டு யுத்தங்களின் போது குறிப்பிட்ட குழுவினருக்கு,
மருத்துவ வசதி கிடைக்காமல் செய்தல். உணவு கிடைக்காமல் செய்தல். சரியான செய்திகள் கிடைப்பதைத் தடுத்தல். நித்திரை செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தல். நீர் கிடைக்காது செய்தல்.
சுகாதார வசதிகள் கிடைக்காது செய்தல். போன்ற முறைகள் பொதுவாகக் கையாளப்படுகின்றன.
பின்வரும் சித்திரவாத முறைகள் போர் நடைபெறும் நாடுகளில் பொதுவாக் கையாளப்படுகின்றன.
ஒரே நிலையில் நிறுத்தி அல்லது இருத்தி வைத்தல். உடலில் தொடர்ந்து நீர்த்துளி விழச் செய்தல். அதிக சூட்டில் அல்லது குளிரில் விடுதல். மின் அதிர்ச்சி கொடுத்தல்.
நீரில் அமிழ்த்தல்.
 
 
 

எரிகாயங்களுக்கு உட்படுத்தல், நகங்களில் ஊசி ஏற்றுதல். உடையின்றி இருக்கச் செய்தல். பாலியல் வன்முறைக்கு உட்படுத்தல். பாலியல் வன்முறையை அல்லது சித்திரவதையை பார்க்கவிடல். குடும்ப அங்கத்தவரைக் கொல்லப் போவதாய் அல்லது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் போவதாய் அச்சுறுத்தல். 12. தலையில் அடித்தல்.
பாலியல் வன்முறை உலகெங்கும் ஒரு யுத்த முறையாகக் கையாளப்படுகிறது. ஜப்பானிய வீரர்கள் கொரியாவில் 200,000 பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். உகண்டாவில் 70% ஆன பெண்களு ம் வியட்னாமில் 39% ஆன பெண்களும் இத்தகைய வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். சூடானில் பெண்களுடன் ஆண்களும் வன்முறைக்கு உட்பட்டனர்.
மனவடுவுக்குரியநெருக்கீடு:
மனவடுவுக்குரிய நெருக்கீடு என்பது உயிராபத்தைத் தரவல்ல கடும் காயத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வை அனுபவிப்பது அல்லது நேரே பார்ப்பது ஆகும். அச்சப்பவம் மிகத் தாக்கமானதாக இருப்பதால் குறித்த நபர் பெரும் பயங்கரத்தை அனுபவிப்பதுடன் உதவியற்ற கையறு நிலையில் இருப்பதாக உணர்வார். அத்தகைய ஒரு உளவியல் நிலை சம்பவம் நடைபெற்ற போதும், சம்பாப் நடைபெற்றபின் சிறிது நேரத்திற்கும் காணப்படலாம்.
மனவடுவுக்குரிய நெருக்கீடு (TRAUMA) என்ற சொல் ஒரு கிரேக்கச் சொல்லின் அடியில் இருந்து தோன்றியது. கிரேக்கத்தில் அதன் பொருள் காயம் என்பதாகும்.
மனவடுவுக்குரிய நெருக்கீட்டுச் சம்பவம் நடைபெறும் போது எம்மைத் தப்பி யோடவோ, எதிர்த்துத்தாக்கவோ அல்லது உறைந்து நிற்கவோ உதவுவதற்காக எமது உடலில் பல "அலாரத்துலங்கல்கள்" (Alarm Response) காணப்படும் அவையாவன.
1. வியர்த்தல்.
2. கண்மணி விரிதல்,
3. சுவாசக் குழாய்கள் சுருங்குதல்.
4. சிறுநீர்ப்பை தளர்தல். 5. சமிபாட்டுத் தொகுதியின் வேலைகள் நிறுத்தப்படல். 6. 'என்டோபின்' என்ற பதார்த்தம் சுரக்கப்படுவதால், நோ
தெரியாது போதல். 7. அதிரீனல் சுரப்பியின் தொழிற்பாடு அதிகரித்தல். 8. சதையின் தொழிற்பாடு அதிகரித்தல், மனவடுவுக்குரிய நெருக்கீட்டுச் சம்பவங்கள் மேலே கூறப்பட்டது போன்ற ஆபத்து நிலைத் தூண்டற் பேறுகளை எமது உடலில் ஏற்படுத்தும் அதே சமயத்தில் எமது மூளையிலும் பல நிரந்தர மாற்றங்கள் ஏற்படும்.

Page 12
இதனால் எமது ஞாபக ஆற்றப் பெருமளவு பாதிக்கப்படுகிறது. இச்சமபவங்களை அனுபவித்த சிலர் . "மனவடு" நோயைப் பெறுகின்றனர்.
மனவடு:
ஒருவரை நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடு நோய் உள்ளவராக இனம் காண்பதற்குப் பின்வரும் ஆறு நிபந்தனைகள் " பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
1. மனவடுவுக்குரிய நெருக்கீட்டுச் சம்பவம் ஒன்றையாவது அநுபவித்திருக்க வேண்டும். அந்நேரத்தில் பெரும் பயங்கரத் தையும் உதவியற்ற நிலையையும் உணர்ந்திருக்க வேண்டும்.
2. இப்ப்ோதும் அந்நிகழ்வு பலதடவை மனதில் மீளமீள ஊடுருவி வருத்லும் அந்தச் சந்தர்ப்பத்தை மீள வாழ்வது போன்ற பயங்கரத்தை அனுபவிப்பதும் காணப்பட வேண்டும்.
3. அந்த நிகழ் வோடுசம்பந்தப்பட்ட பொருள்கள், நிறங்கள், இடங்கள், நபர்கள், மணங்கள்,ஒலிகள் போன்றவற்றை இன்னும் தவிர்த்தல் உணர்வுகளுக்குள் செல்ல முடியாது மரத்தநிலையில் காணப்படுதல் வேண்டும்.
4, சூழலில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் அவருக்குள்ளே ஒரு அதிபரமன எழுச்சியை அல்லது பயத்தை ஏற்படுத்தல் வேண்டும்.
5, மேலே கூறப்பட்ட குணங்குறிகள் குறைந்தது ஒரு மாத காலம் நீடித்து இப்போதும் தொடர்ந்து காணப்படுதல் வேண்டும்.
б. அவரது நாளாந்த சமூக வாழ்விலும் தொழில் வாழ்விலும் இக் குணம் குறிகள் தொல்லையைத் தந்து அவரது வினைத் திறனைக் குறைத்திருத்தல் வேண்டும்.
மேலே கூறப்பட்ட அனைத்துக் குணம் குறிகளும் காணப்படும் போது அவர் மனவடு உள்ளவராகக் கருதப்படலாம்.
மனவடுவின் விளைவுகள்:
மனச் சோர்வு, பதகளிப்பு, பீதி, மதுப்பாவனை, போதைவஸ்த்துப்
பாவனை, நடத்தைக் கோளாறுகள் ஆகியன மனவடுவுடன் கூடவரும் உளப் பிரச்சினனைகளாகும்.
மனவடுவைப் பெற்றுக் கொண்ட மனிதர்களின் முளை அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக முளையில் உள்ள "ஹிப்போகம்பஸ்" என்ற பகுதி சிறிதாகிறது. மூளையின் அமிக்டெலா வின் செயற்பாடு அதிகரிக்கின்றது. மூளையில் அபாயத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் பொறுப்பான
 
 

பகுதியே இந்த அமிக்டெலா ஆகும். ஆகவே அந்த நபர் அபாயங்களை எதிர் கொள்ளத் தயாராக்கப்படுகிறார். அதே நேரத்தில் ஞாபகத்திற்குப் பொறுப்பான பகுதி ஹப்போகம்பஸ்" என்பதால் அவரது ஞாபகம் பாதிக்கப்படுகிறது. மனவடு நோயாளர்களில் மூளைய மேற்பட்டையின் முன்பக்த்திற்குரிய 'சிங்குலேற்றின் நரை நிறப் பொருளும் குறைந்து போகிறது. மனவடு நோயாளர்களின் மூளையின் 'ஹிப்போகம்பஸ்" பகுதி MRI ஸ்கானிங்குக்கு உட்படுத்தப்பட்டபோது அங்கு 12% குறைவு காணப்பட்டது.
மனவடுவுக்குரிய சம்பவம் பொதுவாகச் சூடான ஞாபகமாகவே முளையில் சேமித்து வைக்கப்படுகிறது. அதனோடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிறமோ, மணமோ, சுவையோ, ஒலியோ, இடமோ, நேரமோ அல்லது உடற் தொழிலியல் மாற்றமோ மீண்டும் அந்தப் பயவலைப்பின்னல் முழுதும் ஞாபகத்திற்கு வருவதற்குரிய தூண்டி' ஆகலாம். r
பொதுவாக ம ன வ டு ' உள்ள மனிதர்களில் ஏராளமான உறவுச் சிக்கல்கள் தோன்றுகின் றன. குறிப்பாக நெருங்கிய உறவினருடன் மன வடுவுக்குரிய நெருக்கீட்டுச் சம்ப வம் நடை பெற்று 5,6 வருடங்க ளின் பின்னும் 'மனவடு' நோய் தோன்றலாம்.
ம ன வ டு களர் அடிக் கடி விழக்கூடும். அவர் தில் தற் கொலை தோ ன ற லா ம .
உள் ள வர ம ய நுட் கபி களின் மன எண்ணங்கள் அவர்களின்
ஆளுமை அழிந்திருக்கலாம். யதார்த்தத்தை உணர முடியாதிருக்கலாம். மனவடுவுக்குரிய நெருக்கீட்டுச் சம்பவத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை மீண்டும் நினைவுபடுத்த முடியாதிருக்கலாம்.
மனவடுவைக்குணப்படுத்தல்:
மனவடுவுக்குரிய நெருக்கிட்டுச் சம்பவம் ஒன்றை அனுபவித்தவர் கூடச் சிலவேளை மனவடுவுக்கு உட்படலாம். சம்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மனவடு வரும் சந்தர்ப்பம் அதிகரிக்கும் 23 க்கு மேற்பட்ட அத்தகைய சம்பவங்களை ஒருவர் எதிர் கொள்ளும் போது மனவடு வருவது கிட்டத்தட்ட நிச்சயமாகிறது. ஆயினும் மனவடு" என்பது முழுமையாக மாறக் கூடிய ஒரு நோய் நிலை ஆகும். பின்வரும் வழிமுறைகள் பாவிக்கப்படலாம்.
1. சம்பவம் நடைபெற்ற உடனேயே அதனைச் சுருக்கமாக யாரிடமாவது விபரித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளல் (போர் நடைபெறும் சூழலில் இத்தகைய உதவியாளர்களை உடனே கண்டு கொள்வது கடினமாகலாம்.)

Page 13
2. SRI எனப்படும் மருந்து ஓரளவு இதனைக் குணப்படுத்த உதவும் (Seratomin Reactive inhibitors) (guigjub உளமருத்துவ நிபுணர் மட்டுமே மருந்தினைச் சிபாரிசு செய்ய முடியும்)
3. CBT எனப்படும் நடத்தைச் சிகிச்சை செய்யப் படலாம். (இதனை உளவளத்
துணையாளர்கள் செய்ய முடியும்.)
4. குழுச் சிகிச்சையும் செய்யப்படலாம் இதன் போது மனவடுவுக்குட்பட்ட பலர் குழுவாகச் சேர்க்கப்ட்டுக் குழு நிலையில் அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படும். (இம்முறை அதிகமானோருக்குக் குறுகிய நேரத்தில் சிகிச்சை வழங்க உதவும்.)
5. குடும்பச் சிகிச்சை (குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்து உளவளத்
துணையாளர் பொருத்தமான உதவியை வழங்கலாம்.)
6. ஆக்கச் செயற்பாட்டுச் சிகிச்சை (பாதிக்கப்பட்டவர் ஆக்கபூர்வமான கலைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆழப்பதிந்துள்ள உணர்வுகளை வெளிக் கொணரலாம்.)
7. ஹிப்னோசிஸ். (பாதிக்கப்பட்டவர் ஹிப்னோரிக் நித்திரைக்கு உள்ளாக்கப் பட்டுக் குணமடைதல் தொடர்பான ஆலோசனை வழங்கப்படலாம். ஆயிரம் இதனை ஒரு உள மருத்துவ நிபுணரே செய்ய முடியும்.
8. சம்பல விபரிப்புச் சிகிச்சை (NET)
இதுவே மேலே சொல்லப்பட்ட சிகிச்சை முறைகள் அனைத்திலும் சிறந்தது என்று இத்தாலியில் இயங்கும் VIVO குழுவினர் கருதுகின்றனர். இச் சிகிச்சை முறையின் போது சம்பவத்தை மிக நுணுக்கமாக விபரிக்கும்படி பாதிக்கப்பட்டவர் கேட்கப்படுவார். சம்பவத்தின் சூடான புள்ளியில் நினைவின்மை இருக்குமாயின் அதை நினைவுக்குக் கொண்டு வர உதவும் வினாக்கள் உளவளத் துணையாளரால் கேட்கப்படும் ஒரு அமர்வில் பாதிக்கப்பட்டவர், தெரிவித்த விபரங்களை உளவளத்துணையாளர் முழுமையாக எழுதி வந்து அடுத்த அமர்வில் உளவளத்துணை நாடிக்கு வாசித்துக் காட்டுவார். தவறு விடப்பட்ட விடயங்கள் மீண்டும் உளவளத் துணை நாடியால் சொல்லப்படும். இவ்வாறு அமர்வு தோறும் வளர்த்து வரும் 'சம்பவ வபரிப்பு அறிக்கை' நிறைவாகப் பாதிக்கப்பட்டவரிடமே கையளிக்கப்படும்.
எமது பிரதேசங்களில் பலர் இன்று சம்பவ விபரிப்புச் சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ளனர்.
விளக்கப் படங்களும், இணையத்தளத் தகவல்களும் Google.com Dsö 3Gög ......
குமரன், துவழிகரன்.
 
 

நேர்காணல் பகுதி
சூரியன் FM வாமலோஷன் நேர்கண்டவர்: லோ. துஷிகரன்
கடந்த ஜூலை மாதம் சூரியன் FM இன் 6வது ஆண்டு நிறவையடுத்து வான் அலைவரிசையின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பிரவேசித்துள்ளது. சூரியன் FM இன் நிகழ்ச்சிக் கட்டமைப்பும் அதன் செயற்பாடும் பற்றி | அறிவதற்காக சூரியன் குஆ இன் உதவி நிகழ்ச்சி முகாமையாளரும், அறிவிப்பாளருமான A.R.V. லோஷனிடம் கேட்ட போது அவர் தந்த விளக்கம் இங்கேUரசுரமாகிறது.
கேள்வி . வானொலித் துறையின் சூரியன் FM இன் பிரவேசம் பற்றி. கேட்டபோது. ۔۔۔۔۔
பதில் - சூரியன் FM 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவம் பணிப்பாளர் திரு. ரெயப் னோ சசில் வாவினால் ஆரம்பித்து வைக் கப்பட்டது. முதலாவது நிகழ்ச்சி முகாமையாளராக திரு. சி. நடராஜசிவம் நியமிக்கப்பட்டார். தெட்டத்தெளிவான டிஜிட்டல் முறையிலான ஒலிபரப்புடன் புதுமையான நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டு இலகு தமிழில் சினேகபூர்வமாக நேயர்களுடன் பேரபிமானத்தைப் பெற்ற வானொலியாக சூரியன் FM வளர்ந்து வருகிறது.
கேள்வி - தங்கள் சேவையின் விஸ்தரிப்புப் பற்றி.
பதில் - இலங்கையின் தென்பகுதி, மத்தியபகுதி முழுவதும் தெட்டத்தெளிவாகவும், நாடளாவிய ரீதியிலும் ஆரம்பத்தில் இருந்தே ஒலிபரப்பாக்குகினோம். பின்னர் வடக்கு கிழக்கிலும் அலைவரிசை மிகச் சீரமைக்கப்பட்டது. குறிப்பாக திருகோணமலை, வவுனியா, அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், போன்ற பகுதிகளுக்கு சூரியன் FM மேலும் தொழில் நுட்ப ரீதியாக வலுவூட்டப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்திற்கும் வலுவூட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.
கேள்வி - "சூரியனின் செய்திப்பிரிவு" துரித செயற்திறன் கொண்டது என்பது பொதுவான கருத்து இதுபற்றி.
பிரதம செய்தி ஆசிரியர் நடராஜா குருபரன் எம். இந்திரஜித், வி. எஸ். சிகாமணி ஆகியோருடன் இணைத்து அறிவிப்பாளர். எஸ். ரமணன் செய்தி சேவையில் செயலாற்றுகின்றனர். செய்தி சேகரித்தல் தொகுத்தல் என்பன எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் ஆற்றலுடைய சூரியனின் செய்திப்பிரிவு நாட்டில் நடைபெற்ற முக்கியமான பரபரப்பான சம்பவங்களை
| Әу9so».

Page 14
உடனுக்குடனும், உண்மையுடனும் மக்களுக்கு அறிவித்து நாட்டின் முதற்தரமான செய்திப் பிரிவாக நிகழ்கிறது.
விரிவான செய்திகள் நாளொன்றுக்கு 4 தடவையும் மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஒருவரிச் செய்திகளாக செய்திச் சுருக்கமும் இடம் பெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு "சூரியப்பார்வைகள்" நிகழ்ச்சியை வாரச் செய்தியாக கெளரிபாலசிங்கம் வழங்குகிறார். சனிக்கிழமை காலை S.ரமணன் செய்திப்பிரிவோடு இணைந்து நடாத்தும் அரசியல் வாதிகள், விமர்சகர்கள், ஊடகவியலாள்ர்கள் நேரடியாக கலையகத்திற்கு வருகை தந்த கலந்து கொள்ளும் நிகழ்வான "விழுதுகள்" சூரியனின் புதிய அறிமுகம் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த "ஆராச்சிமணி" எனும் நிகழ்ச்சி "மகுடம்" வைத்தது போன்றது. சமூகப் பொறுப்புடன் மக்களின் பிரச்சனைகளை மிகக் கரிசனையுடன் அணுகி அதற்கு நிவாரணத்தை தேடும் வழிமுறைகளை நிகழ்ச்சி மூலமாக கையாளுகிறார் பா. காண்டீபன். கேள்வி: வானொலியில் சினிமா முக்கியப்படுத்தப்படுவது வழமையாகிவிட்டது. "சூரியனின்" இது பற்றியகருத்து. பதில்: அத்தோடு நின்றுவிடாது பல்சுவை அம்சங்களை திட்டமிட்டு வழங்கி வருகிறோம். இரவு நிகழ்ச்சியாக எந்த வானொலியும் அணுகமுடியாத புதுமையான நிகழ்ச்சி "விகடமும் விளையாட்டும்", இதை நான் வழங்கி வருகின்றேன். உலக விளையாட்டு தகவல்கள் அனைத்தும் ஒன்று திரட்டி உடன் வழங்கப்படுகிறது. அதுமட்டு மல்லாமல் "வெற்றி நடைபோடும் விளையாட்டுச் செய்திகள்" பிரபல நிகழ்ச்சி
பகல் மணிமுதல் 3 மணிவரை இடம் பெறும் "அன்புள்ள நண்பரே", "காற்றுவழி நூலகமாக" புத்தகப்பிரியர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்குப் பிடித்தது மப்றுாக் மிகக் கடுமையாக உழைத்து நிகழ்ச்சியை வழங்குகிறார். பட்டி
কিন্তু","ষ্ঠr":১% শী মল্লাপ্লািস্তস্থম্প্ৰস্থঃ
 

மண்டபம் போன்றனவும் இடம் பெறுகிறது. செந்தூரனின் கதை இயக்கத்துக்கு நவநீதனால் தயாரிக்கப்படும் "நான் Plus நான்" திகில் தொடர் நாடகமும் இடம் பெறுகிறது.
நகைச்சுவை நிகழ்ச்சியாக "விகடத்தடாகம்" மப்றூக், தீபன் ஆகியோராலும் "சோக்கான ஜோக்குகள்" நிகழ்ச்சி சி. விமலினாலும் தொகுத்து வழங்கப் படுகிறது.
வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாக "இளமைப் பூங்கா" இடம் பெறுகிறது. சங்கீதா கிருஷ்ணா தொகுத்து வழங்கும் இவ் நிகழ்ச்சி உறவுகளுக்கிடையில் சிறிய உணர்வுகளை பரிமாற்றுகின்றது. இனிய பாடல்களோடு நேயர்களின் சிறிய செய்திகளும் கலந்து ஒலிக்கும்.
கேள்வி - இசைத்துறையில் "சூரியனின்" பங்களிப்பு.
பதில் - உள்ளுர் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்குவிக்கும் அதே வேளை இந்தியக் கலைஞர்களை உள்ளடக்கிய பல இசை நிகழ்ச்சிகளை இலங்கையின் பல பாகங்களிலும் நடாத்தியுள்ளது. பல இலக்கிய வாதிகளையும் விற்பனையாளர்களையும் அழைத்து நாடுபூராகவும் நிகழ்ச்சிகளை நடாத்தியது. இலங்கை இசைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு இசைத்தொகுப்பாக வெளியிட்ட பாடல்களை குறிப்பாக "துளிகள்", "காற்று", "நம்பிக்கை" தொகுப்புக்களை "சூரியன் அறிமுகப்படுத்தியது. புதிய இசைக் குழுக்கள் உருவாகவும் "சூரியன்" வழியமைத்தது.
கேள்வி - நேயர்களுடனான தொடர்பு தராமாக வளர்க்கப்படுகின்றதா.
பதில் - இதற்கு "சூரியன் திட்டமிடல் வரிவாக்கல் பிரிவு" அறிவிப்பாளர்களுக்கும், நேயர்களுக்கும் நேரடித் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. "இசை வாகனம்" ஒன்று இசை நிகழ்ச்சிகளை நடாத்தி நேயர்களைச் சந்திக்கிறது. இதில் A.I.அஷ்ரப், அஜித்குமார், ரஜிவ் திறம்படச் செயல்படுகின்றனர். ...
கேள்வி - பொதுவான நிகழ்ச்சித் தொகுப்புப் பற்றிய உங்கள் கருத்து
பதில் - காலை வியாசா வழங்கும் "அருணோதயம்" சிறப்பானது, பின் சூரிய ராகங்களுடன் பரிசுடன் கூடிய சுவாரசிய நிகழ்ச்சியை நான் வழங்குகின்றேன். பின் "இசைச்சமர்", "மதிய நேர இசை விருந்தும்" நடைபெறும். "வண்ணப் பூமாலை" இல் சினிமா தொடர்பான புதிய தகவல்களை திரை இசைச் சந்தையில் இருந்து அன்றே வெளியிடப்படுபவற்றை நேயர்களுக்கு அன்றே வழங்குவர் குமுதினி ஜெகநாதன், கவிதா ஆகியோர். இப்படியாக பல நிகழ்ச்சிகள் தொடரும்.
அசைக்க முழயாத அலைவரிசை என்ற அடைமொழிக்கு 9Üu ஆய்வுக் கணிப்பு தரப்படுதல் முறையினால் முதற்தர வானொலியாக தெரிவு செய்யப்பட்டுவருகிறதுசூரியன் FM.

Page 15
உணவும் போசணையும்
எந்த ஒரு நாட்டினதும் பூரணத்துவமான அபிவிருத்திக்கு ஆரோக்கியமான மனித வளமும் பிரதான பங்கு வகிக்கின்றது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆரோக்கியமான மனிதவளம் என்பது எவ்வாறு வரையறுக்கப் படுகின்றது என்பதை பார்க்க விழையுமிடத்து, ஓர் நாட்டில் வாழுகின்ற சகல மக்களினதும் எல்லா வளர்ச்சிப் படிநிலைகளும் அவர்களது வயதிற்கே உரித்தான உடல், உள வளர்ச்சியுடன் காணப்படு தல் எனப் பொருள்படுத்தலாம். இங்கே மனிதனின் எல்லா வளர்ச்சிப் படிநிலைகளும் என்பதை விளக்குமிடத்து பிறந்தகுழந்தை, வளரும் சிறுவர், வளர்ந்த இளைஞர், யுவதிகள், வயதுவந்தோர், முதியோர் எனப் பல்வகைப்படுத்தலாம். மனிதனின் இந்த வாழ்க்கை வட்டப் படிநிலைகளின் வரையறையில் முக்கியமாக அவர்களது வயதே செல்வாக்குச் செலுத்துகின்றது. இன்னும் பெணிகளைப் பொறுத்தவரை அவர்களது உடற்தொழிலியல் மாற்றங்களிற்கேற்ப பூப்படைந்த பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார் என மேலும் வகைப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மனித வளத்தின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலைகளும் தமக்கே உரித்தான உடல், உள வளர்ச்சியைப் பெற வேண்டுமாயின் அவர்கள் ஒவ்வொருவரிற்கும் தேவையான போசணை பற்றி மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
GLIrgaogor (Nutrition)
மனிதனிற்கான போசனை என்னுமிடத்து அவனது ஒவ்வொரு வளர்ச்சிப்படி நிலையிலும் உள்ளவர்கள் தமது வயதிற்கும், உடற்தொழியியல் தேவைக்கும் ஏற்ப எல்லா வகையான போசனைச் சத்துக்களையும் போதுமான அளவில் உள்ளடக்கியதான நிறைவான உணவை உள்ளெடுத்தல் எனக் கொள்ளலாம். இங்கு கூறப்பட்ட விடயத்தில் போசணைச் சத்துகள் மற்றும் நிறைவான உணவு என்பவை மேலும் தெரியப்படவேண்டிய பதங்களாகும்.
 
 

Soopa Iror to looro (Balanced diet)
மனிதனின் ஒவ்வொரு உடற்தொழியியல் தேவைக்கும் வெவ்வேறு வகையான போசணைச் சத்துகள் அவசியமாகின்றன. அந்த வகையில் சக்தியை பிறப்பிப்பதற்காக காபோ வைதரேற்றுக்கள், இலிப்பிட்டுக்கள், கலங்களின் கட்டுமானத்திற் காக புரதங்கள், உடலில் நிகழும் சில விசேட இரசாயனத் தாக்கங்களிற்கும் சில உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் அவசியமான உயிர்ச்சத்துக்கள் மற்றும் கனியுப்புக்கள் என்பனவே பிரதான வகைக்குட்படுத்தபட்டுள்ள போசணைச் சத்துகளாகும்.
இனி நிறைவான உணவு என்பதைக் கருதுமிடத்து குறித்த ஒரு வயதில் அல்லது குறித்த ஒரு நிலையிலிருக்கும் மனிதனிற்கு அவசியமான எல்லாப் போசனைச் சத்துக்களையும் குறைவான அளவில் கொண்டிராமலும் அதே வேளை அதிக அளவில் கொண்டிராமலும் இருக்கும் உணவுச் சேர்மானமே நிறைவான உணவாகும். இந்த நிறைவான உணவுத் தேவையானது ஒவ்வொருவரதும் வயதில் மட்டுமன்றி அவர்களது உயரம், நிறை என்பவற்றிலும் தங்கியிருக்கின்றது.
எமது நாட்டினைப் பொறுத்தவரை இந்த நிறைவா உணவு என்னும் விடயத்தில் எம் மக்கள் ஓரளவு சரியான நடைமுறையினையே கைக் கொள்ளுகின்றார்கள் எனினும் சில நாடுகளில் குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் சில இந்த நிறைவான உணவு என்னும் விடயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இன்னும் உள்ளார்கள். இலங்கையில் வாழும் மக்களை எடுத்து நோக்குவோமானால் ஒவ்வொருவரும் நாளொன்றிற்கு மூன்றுவேளை உணவு உள்ளெடுத்தலை மேற்கொள்கின் றார்கள். இது ஒரு வரையறையாக இருந்தாலும் இவர்கள் அனைவரும் தமக்குத் தேவையான நிறைவான உணவை உள்ளெடுக்கின் றார்களா என்பது கேள்விக்குரியதாகும். ஏனெனில் சிலர் உள்ளெடுக்கும் உணவில் அதிகளவு காபோவைதரேற்று - நிறைந்திருக்கும் ஆனால் புரதம் போதயளவு இருக்காது. உதாரணமாக அதிகளவு நெற்சோற்றினையும் குறைந்தளவு மரக்கறியையும் மாத்திரம்
鷺數

Page 16
உண்ணுதல் இன்னும் சிலர் அதிகளவு கொழுப்பு உணவுகளை உள்ளெடுப்பர் அதேவேளை புரதம் அல்லது உயிர்ச்சத்துக்கள் மற்றும் கனியுப்பு விடயத்தில் கவனமெடுக்கத் தவறுகின்றனர்.
எனவே இச்சந்தர்ப்பத்தில் நிறைவான உணவை உள்ளெடுக்காது, அளவிற்கு குறைவான அல்லது அளவிற்கு மீறிய நிலையில் போசனைச் சத்துக்களை உள்ளடக்கிய உணவுகளை அல்லது உணவுச் சேர்மானத்தை உள்ளெடுத்தால் யாது நிகழும் என்பது பற்றி தெரிந்து கொள்ளல் அவசியமாகின்றது.
இட்டக்குறைவு/போசணைக் gopa (Malnutrition)
நிறைவான உணவு உள்ளெடுத்தலினால் ஏற்படும் உடல் தொழியியல் குறைபாடு அல்லது பாதிப்பு ஊட்டக் குறைவு எனலாம். அந்த வகையில் நிறைவான உணவொன்றிலும் அல்லது உணவுச் சேர்மானத்தில் இருக்க வேண்டிய போசணைச் சத்துக்களைவிட குறைவான அளவில் உள்ள உணவை உள்ளெடுத்தலால் ஏற்படும் பாதிப்பை குறைபோசணை (Under - nutrition) எனலாம். பொதுவாக குறைபோசணைக்குரிய பாதிப்புகளாக பின்வரும் உடல் தொழிலியல் மாற்றங்களான Lugaí, LuoyGröup6mö (Marasmus), g56 JITafuuášG3a5fTj Kwashiorkor) பெரி - பெரி (Beri-Beri), முரசுகரைதல் (SWrvy) முதலியவற்ைைற உதராணங்களாகக் கூறலாம்.
அதே வேளை நிறைவான உண்வொன்றில் இருக்க வேண்டிய போசணைச் சத்துக்களின் அளன்வ விட மேலதிகமான அளவில் சத்துகள் இருந்தாலும் அவை மனிதனில் உடல் தொழியியல் செயற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி இறுதியில் பாதிப்புக்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் இவ்வாறு அளவிற்கதிகமான போசணைச் சத்துகளால் ஏற்படும் பிரச்சனை மேற்போசணை (Over - nutrition) எனப்படும். மேற்போசணையின் பாதிப்புக்களிற்கு உதாரணங்களாக சலரோகம், இதய நோய்கள், உடற்பருமன், இதயநோய்கள், உடற்பருமன், பற்சிதைவு, வாதம், முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
இங்கு குறைபோசனையாக இருந்தாலும் சரி மேற்போசணையாக இருந்தாலும் சரி குறித்த வகையான உடற்தொழியியல் மாற்றங்களிற்கு அல்லது பாதிப்புகளிற்கு குறித்த வகைப் போசணைச் சத்துக்களே காரணமாக உள்ளன. உதாரணமாக குறைபோசணை நிமித்தம் ஏற்படும் மரஸ்மஸ்,
 
 
 

குவாசியக்கோர்" போன்ற பாதிப்புக்கள் முக்கியமாக புரதக் குறைபாட்டால் ஏற்படுகின்றன. மேலும் இந்த வகையான குறைபோசனை அதிகளவில் குழந்தைகளையும் சிறுவர்களையுமே பாதிக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இவ்வகைப் பாதிப்புக்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாக இருந்தாலும், சுமார் இருபது வருடங்களிற்கு மேற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு குழந்தைகளும் சிறுவர்களும் ஓரளவு இந்த குறைபோசணையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையில் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து 36.4% சிறுவர்கள் உயரம் குன்றியவர்களாகவும் 18.4% சிறுவர்கள் நலிவுற்றவர்களாகவும் 5.2% சிறுவர்கள் நலிவுற்றவர்களாகவும் 5.2% சிறுவர்கள் இவ்விரண்டையும் கொண்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த அவதானிப்புக்கள் இலங்கையிலும் குறைபோசன பாதிப்பு இருக்கின்றது என்பதை குறித்து நிற்கின்றது. இதே போன்றே நிறைவான உணவில் காணப்படும் ஒவ்வொரு போசணைச் சத்து குறைவாலும் ஒவ்வொரு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அதேவேளை மேற்போசணையை பார்க்குமிடத்து, குறித்த அளவிற்கு மீறிய நிலையில் குருதியில் குளுக்கோசு காணப்படுமிடத்து அது சலரோகத்திற்கு இட்டுச் செல்கின்றது. இன்னும் கொழுப்புகளும், கொலஸ்ரோலும் குருதியில் அளவிற்கு அதிகமாகும் நிலையில் மேற்போசணையின் பாதிப்புகள் அதிகளவில் வயது வந்தவர்களிற்கும் முதியோர்களிற்குமே ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் வயது வந்தோரும் முதியோரும் தமது உணவு உள்ளெடுத்தலில் நிறைவான உணவை கருத்திற் கொள்ளாது நிறைய உணவை உள்ளெடுத்தலிலே அதிக கவனம் எடுக்கின்றார்கள்.
நாமும் நிறைவான உணவும்:
எமது நாட்டினைப் பொறுத்தவரை நிறைவான உணவு உள்ளெடுத்தலில் மக்கள் மிகக் கூடிய கவனமெடுத்தல் அவசியமாகின்றது. குறை వ{ போசனையைக் குறைக்க வேண்டுமாயின் முக்கியமாக குழந்தைகளினதும் சிறுவர் களினதும்டிேபோசணையில் அதரிக கவ்னமெடுத்தல வேண்டும். எம்மில் பெரும் பாலான தாய்மார் பாலூட்டும் தாய்மார் என்னும் வரை யறைக்குள் தம்மை உட்படுத்தி னாலும் தமது குழுந்தைகளிற்கு பாலூட்டத் தவறிவிடுகின்றனர்.

Page 17
எந்த ஒரு குழுந்தைக்கும் குறைந்த பட்சம் அதனது 5 வயது வரையாவது நிறைவான உணவு என்பது தாய்ப்பாலே ஆகும். ஆனால் எத்தனை தாய்மார் இதனைப் பொறுப்புடன் செயற்படுத்துகின்றார்.
எம்மக்களில் பெரும்பாலானோர் தமது உடல் உள வளர்ச்சிக்கு உணவு உள்ளெடுப்பதைத் தவிர்த்து தமது கெளரவத்திற்காகவும் சமுதாயத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்து வதற்காகவுமே தற்போது உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் எமக்கென இருந்து வந்த கலாசாரம், பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் என்பன படிப்படியாக மாறிவருகின்றமையாகும். அந்நிய தேசங்களிற்கு சென்று வருகின்ற எம்மக்கள் அவர்களது உணவுப் பழக்க வழக்கங்களும் இல்லாது எமது உணவுப் பழக்க வழக்கமும் இல்லாது ஒரு விதகலப்பு முறையான உணவுப் பழக்க வழக்கத்தை கைக் கொள்ளுவதனால் நிறைவான உணவை உட்கொள்ளல் என்பது சாத்தியமற்றுப் போகின்றது.
எம்மில் பலர் நிறைய உணவு உட்கொண்டால் நிறைவான உணவு கிடைப்பதாக தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக அளவிற்கதிகமாக குறித்த ஒரு போசணைச் சத்தினை மட்டுமே அதிகம் உள்ளெடுத்து அதன் விளைவால் ஏற்படும் மேற்போசணைப் பாதிப்பால் அவதியுறுகின்றார்கள். அனேகமான வயது வந்தோரில் குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் ஏதாவது ஒரு வியாதியைப் பற்றி எந்நேரமும் கூறக் காணலாம்.
சலரோகம், குருதி அமுக்கம், முட்டுவாதம், நாரிப்பிடிப்பு, உடற்பருமன், இரண்டாம் தடவையும் இதயவலி முதலியன அவ்வகையான அவர்கள் கூறும் வியாதிகள் ஆகும். இவ்வகையான வியாதிகளில் பெரும்பாலனவை தாமாகவே வலிந்து தேடிக்கொண்டவை என்பதை அனேகம் பேர் மறந்துவிடுகிறார்கள். உரிய வயதில் உணவில் கவனம் செலுத்தாது போசணைக் குறைவால் பாதிப்பு ஏற்பட்டதும் தமது உணவுப் பழக்கத்தையும் மாற்றுவது மட்டுமன்றி வைத்திய தேவைக்கும் அதிகம் செலவழிக்கின்றார்கள்.
எனவே தான் அளவான, தேவைக்கு ஏற்ற போசணைச் சத்துகள் அடங்கிய நிறைவான உணவினை உள்ளெடுத்தல் என்பது மனித வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சியிலும் அவசியமாகின்றது. அந்த வகையில் நிறைவான உணவினை அல்லது உணவுச் சேர்மானத்தை எவ்வாறு தெரிவு செய்வது, எவ்வாறு அதனை தயாரிப்பது, அத்துடன் சரியானதொரு உணவுப் பழக்க வழக்கத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது பற்றி அடுத்துவரும் இன்னொரு
இதழினூடாக ஆராய்வோம்.
திரு. சபாரட்ணம் நகுலேஸ்வரன்
உதவி விரிவுரையாளர் விவசாய இரசாயனவியல் துறை, யாழ் - பல்கலைக் கழகம்.
23ste Sax 2 30

உயிருக்கு உலைவைக்கும் சார்ஸ் (SARS)
- வே. சுதாகரன்
இறுதி நேரம் வரை தொலைக்காட்சியை விட்டு நகராதவாறு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகவிறுவிறுப்பாக ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் அமெரிக்கப் படைகள் பாலைவனத்தில் புயற்காற்றை எதிர்கொண்டு ஈராக்மீது போர்தொடுக்க முன்னேறிச் செல்கையில், அனைத்தையும் விஞ்சி உலகில் உள்ள ஒவ்வொருவரினதும் இதயங்களை ஒரு கணம் ஒய்வெடுத்து மீண்டும் இயங்க வைத்தது, உயிர்கொல்லி நோய் சார்ஸ்,
மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாக அறியப்பட்ட எயிட்ஸ் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியதோ அதைவிட மேலான பரபரப்பை ஏற்படுத்திய சார்ஸ் மின்னல் வேகத்தில் உலக நாடுகளில் பரவத் தொடங்கியது. ஈராக் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்குரிய அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவதா அல்லது சார்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதா என செய்வதறியாது திணறியது உலக சுகாதார ஸ்தாபனம், உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலிருந்து SARS தொடர்பான முறைப்பாடுகள் தொலைபேசி வாயிலாக அலறத்தொடங்கின. இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய SARS நோய் பற்றி சற்று விரிவாக ஆராய்ந்து unjiGBunb.
Severe ACute Respiratory Syndrome 616iLIG25 siltiasuditas SARS என அழைக்கப்படுகின்றது.
இது முதன்முதலாக Vetham எனும் நாட்டின் Hano எனும் இடத்தில் 26 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2003 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இருப்பினும் இந்நோய் சீனாவின் Guangdong எனும் நகரத்தில் கார்த்திகை மாதம் 2002 இல் அறியப்பட்ட சளிச்சுரத்துடன் தொடர்புடையது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி பெப்ரவரி 26ஆம் திகதி 2003 இல் இருந்து ஏப்ரல் 9 ஆம் திகதி 2003 வரை 2671 பேர் SARS நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 103 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரவிக்கப்படுகின்றது.
SARS தொடர்பான பல தகவல்கள் ஊகங்களாகவே முற்றுப்புள்ளி வைக்கப்படாத நிலையில் இருந்த போதிலும் நோய்த்தொற்றல் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகம் எதிர்கொள்ள விருந்து பேரளவு உயிரிழப்புக்களை விஞ்ஞானிகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என முழு உலகத்தவர்களுமே ஒன்று சேர்ந்து கட்டுப் படுத்தியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்நோயானது சீனாவில் இருந்து வெளியேறுகின்ற உல்லாசப் பயணிகள், நோய் உள்ள சீனர்கள் தங்குகின்ற விருந்தாளிகள் போன்றோர் மூலமாக பெப்பிரவரிக்கடைசிப் பகுதியில்

Page 18
கொங்கொங்கிற்கும், பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர், வியட்நாம், கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, அயர்லாந்து போன்றவற்றிற்கும் பரவியது. மிகவிரைவாக சுவாசம் முலமாக பரவுகின்ற இந்நோயானது Corona Virus மூலமாக G5mpibgp6nfaisatsu'nun Gumgub v up6øfg5ja56f6ů Human metapneumo virus கிருமியும் கண்டறியப் பட்டுள்ளதால் சில மனிதர்களில் மேற்கூறிய இரு வைரசுகளும் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
1) நோயின் அறிகுறிகள்
38 C யிலும் உயர்வான காய்ச்சல்
வறட்டு இருமல்
முச்செடுப்பதில் கடினம் கதிரியக்கப்படத்தில் சளிச்சுரத்திற்கான மாறுதல்கள்.
:
இவை தவிர தலையிடி, தசைப்பிடிப்பு, பசியின்மை, களைப்பு, தடுமாற்றம், வயிற்றுளைவு போன்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன. நோயின் இறப்பு வீதம் 5% ஆக காணப்படுகின்றது.
2) நோயாளியை இனங்காணல்
1. உள்நாட்டு நோயாளி
மூச்சுவிடுதலிற்காக சிரமப்படும் வியாதியுள்ள ஒருவர் அல்லது கதிரியக்க நெஞ்சுப்படத்தில் மாறுதல் உள்ள நோயாளி ஒருவர் SARS உள்ளவரா என சோதிக்கப்பட வேண்டும். இக்குணங்குறிக்கு வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்குமாயின் அவர் SARS நோயாளியல்லர்.
SARS நோயானது மற்றைய சுவாசநோய்களை அடையாளங் கண்டு பிரித்தெடுப்பதன் மூலமே நோய் நிர்ணயிக்கப்படுகின்றது. நோய் உள்ளவரா என சந்தேகிக்கப்படும், ஆனால் கதிரியக்க நெஞ்சுப்படமாறுதல்கள் இல்லாத ஒருவரை 7 நாட்கள் வைத்திய அவதானத்தில் வைத்திருக்க வேண்டும். நோய் குணமாவதற்கான அறிகுறிகள் தோன்றாவிடின் மீண்டும் நெஞ்சு கதிரயக்கப்படம் எடுத்தல் வேண்டும்.
11. வெளிநாட்டிலிருந்து வருகை தரும் நோயாளிகள்
நோய்கள் காணப்படும் இடத்திலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதகரால் பரிசோதிக்கப்படுவதுடன் அவர்களுக்கு நோய் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தவேண்டும். நோயாளி என சந்தேகிக்கப்படுபவர் மிகக்கவனமாக தக்க பாதுகாப்புகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட வேண்டும்.
3) நோயாளியை பராமரித்தல்
கிராமிய மட்டத்தில் SARS நோயாளிகளின் கவனிப்பு அங்குள்ள
 
 
 

மூலதனங்களில் தங்கியுள்ளது. அடிப்படை வசதிகள் போதுமான வையன்று. எனவே SARS நோயாளிகள் கூடுதலான வசதியுள்ள இடங்களிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு உத்தியோகத்தர் ஒருவரால் 24 மணிநேரமும் கவனிக்கப்பட வேண்டும். நோயாளியை கவனிப்போர் நோய் தொற்றுதலில் இருந்து தம்மை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
4) நோய் தொற்றுதலடைதல்
நோய்க்கான அறிகுறிகளை அதிகளவில் வெளிப்படுத்தும் நோயாளிகளும், கதிரியக்க நெஞ்சுப்படத்தில் நோய்க்கான மாற்றங்களை கொண்ட நோயாளிகளும் மற்றவர்களுக்கு நோய்தொற்றுதலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நோய் தொற்றும் வீதம் நோய்க்கான அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முதலான காலத்தில் குறைவாகும். நோயரும்பு காலம் 2 தொடக்கம் 10 அல்லது 13 நாட்களாகும். நோயானது சுவாச சிறுதுணிக்கைகள் மூலமாக நோயாளியுடன் நெருங்கிப்பழகுவோருக்கு தொற்றுதலடைகின்றது. 25 வயது தொடக்கம் 70 வயதுடையோர் இந்நோய்க்கு கூடுதலாக பாதிப்படைகின்றனர். 16 வயதிற்குட்பட்டோர் குறைந்தளவிலேயே பாதிக்கப்படுகின்றனர்.
5) நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள்
நோயாளியை தனிமைப்படுத்தல் முகமுடி அணிதல் தனிமனித சுகாதார முறைகள் நோயாளயிடமிருந்து கிருமி பரவுதலை தடுத்தல்.
:
நோயாளியின் அறை தனிமைப்படுத்தப்பட வேண்டும். காற்றோட்ட முள்ள, ஆனால் மற்ற அறைகளுடன் தொடர்பற்றதாக இருத்தல் வேண்டும். நோயாளி பாவித்த உடை, முகமூடி என்பவற்றிற்கு வெவ்வேறு இடங்கள் அறையிலே ஒதுக்கப்படவேண்டும். தனிஅறை வசதி இல்லாவிடின் நோயாளியை திரைச்சீலை மூலம் தனிமைப்படுத்தல் வேண்டும். நோயாளியை கையாண்டவுடன் கைகளை கழுவுதல், முகமுடியை மாற்றுதல், உபகரணத்தை தொற்று நீக்கல், ஒவ்வொரு நோயாளிக்கும் ஒவ்வொரு உபகரணம் பாவித்தல் போன்ற தனிமனித சுகாதார முறைகள் பேண்ப்பட வேண்டும். அறைகளில் கதவுகள் மூடப்பட்டு யன்னல் காற்றோட்டம் பொது இடங்களை அடைதல் தடுக்கப்பட வேண்டும். சுவாசச்சிறு துணிக்கைகள் மூலமாக நோய் பரவுவதால் முகமூடி அணிதல் மிகச்சிறந்ததற்காப்பு நடவடிக்கையாகும். நோயாளியை பராமரிப்பவர், சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், பரிசோதனை உத்தியோகத்தர்கள் முகமூடி கட்டாயம் அணிதல் வேண்டும்.
6) நோயினைக் கட்டுப்படுத்தல்
1) இனங்காணல்
2) தனிமைப்படுத்தல் 3) மருந்து வழங்கல்
Oవరాa. ਅ> 今ニシつ 33

Page 19
சிகிச்சை அளித்தல்
x தேவையேற்படும் போது ஒட்சிசன் வழங்குதல்
* சுவாசக் குழாய்களை விரியச் செய்யும் மருந்துகள் வழங்கல்
: Virus இற்கு எதிரான மருந்து வழங்கல் (ஆனால்
பயன் மிகக் குறைவு)
SARS நோய் காரணமாக இறந்த ஒருவரின் உடல் HIV இனால்
பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலை அப்புறப்படுத்தல் போன்றே அப்புறப்படுத்தப்
படவேண்டும்.
எனவே இத்தகைய பரபரப்புக்களை ஏற்படுத்திய SARS நோய்த்
தொற்றலில் இருந்து ஈழத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
நன்றி "இந்து விஞ்ஞானி"
பரீட்சித்துப் பாருங்கள்
618 + 753 + 294° = 816°+ 357 +492 5 3 672 + 159 + 834 = 276°, +951* + 438
/f- 6
7
2
654 + 132 + 879 = 456' + 231 + 978 852 + 174 + 639 = 258 + 461 + 936
T.T. associrser
/
ܢ
சஞ்சிகை தொடர்பான கருத்துக்களும் விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அறிவியல் கட்டுரைகள் துறைசார்ந்த நிபுணர்களிடம் இருந்தும், மாணவர்களிடம் இருந்தும் எதிர்பார்க்கப் படுகின்றது. மருத்துவம், விஞ்ஞானம், வானியல், கணிதவியல், இயற்கை விஞ்ஞானம் வரலாறு. சார்ந்த கட்டுரைகளை கையெழுத்தில், அச்சுத்தாளின் (A4 அளவில்) ஒரு பக்கத்தில் இரு பக்கங்களுக்கு மேற்படாமல் எழுதி அனுப்புதல் வேண்டும். ஒரு புத்தகத்தில் இருந்து பயன்மிக்க கட்டுரையை பிரதி செய்து அனுப்பின், புத்தகத்தின் பெயர், ஆசிரியர் போன்ற விபரங்களுடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். வியப்பூட்டும் விஞ்ஞானத் தகவல்களை துணுக்குகளாகவும் அனுப்பலாம். மாணவர்களின் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
 

கற்பனை உலகிலே.
பயன்தரு விலங்கின் துரோகிகள்
- g5 5LDg P. (5600Taisib (Dip. in. Agriculture)
தென்றல் காற்று நாலாதிசையும் ஜில்லென வீசிக் கொண்டிருந்தது. சானக வண்டுகளெல்லாம் இன்னிசை ஒலி பெருக்கிக் கொண்டிருந்தன. குப்பைத் தொட்டியனருகே தென்றல் காற்றினால் எழும்பிய துர்நாற்றம் முக்கைத் துளைத்துக் கொண்டிருந் தது. இயற்கை அன்னையின் எழிலை இரசித்துக் கொண்டிருந்த எனது சிந்தனை சாணக வண்டுகள் எழுப்பிய திசையை நோக்கிச் செல்லத் தொடங்கியதும், சிந்தனை சிறகு விரித்துப் பறந்து சென்று கற்பனை உலகைச் சென்றடைந்தது. வாரீர் வாரீர் யாவருமே வாரீர், என் இதயபூர்வமான அழைப்பிதழை ஏற்று, எல்லோருமே என் சிந்தனை சென்ற கற்பனை உலகுக்குத் திரண்டு வாருங்கள்.
திறந்த வெளியரங்கு, அரகிலே பல குப்பைத் தொட்டிகள் காட்சி தந்து கொண்டிருந்தன. அதனருகே ஒரு வட்ட மேசை மகாநாடு கூடப்பட்டிருந்தது. அந்த மகாநாட்டிலே திரு. கயரோகம், திரு. உன்மத்தரோகம் ஆகியோரின் தலைமையின் கீழ் ஒரு சிறு குழு கூடப்பட்டிருந்தது. திரு. கயரோகம் அவர்கள் தலைவராகவும், திரு. உன்மத்தரோகம் அவர் உதவித் தலைவராகவும் இருந்து மகா நாட்டை நடத்திக் கொண்டிருந்தனர்.
முதலில் திரு. கயரோகம் அவர்கள் எழுந்து உரை நிகழ்த்தத் தொடங்கி னார். 'உதவித் தலைவர் அவர்களே! மற்றும் இங்கு குழுமியிருக்கும் எமது நண்பர்களே! என் இதயம் கனிந்த வணக்கம். தோழர்களே! நாம் நமக்கு ஏற்பட்டுள்ள இத்தனை களல்டங்களை யும், பொருட் படுத்தாது, இத்தனை
சிக்கல்கட்கும் இடையே, இந்த மகாநாட்டை ஏன் கூடியிருக்கின்றோம். என்பது உங்கள் அனைவர்க்கும் தெரிந்த விடயமாகும். இன்றைய விஞ்ஞான உலகிலே நமக்கு ஏற்பட்டுள்ள இச் சூழ்நிலையிலே, இன்னும் எத்தனை எத்தனையோ கஸ்டங்களும் இன்னல் களும் ஏற்படக் காத்துக் கொண்டிருக் கின்றன. இதே சூழ்நிலையில் நம் அனைவரையும் சூறையாடப் புதுப் புதுத் திட்டங்கள் பல செயல் படுத்தப் படவிருக்கின்றன. என்பதை இங்கு குழுமியிருக்கும் அனைவருமே நன்கறி வீர்கள் என எண்ணுகின்றேன். எனவே இத்தகைய சகித திட்டங்களிலிருந்து நாம் அ ைன வ ரும த ப பரித துக கொள்வதற்குரிய வழிவகைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். எனவே இவ்விடயத்துக்காக உங்கள் அனை வரினதும் ஒத்துழைப்பையும் நாடுகின் றேன்" என்று கூறித் தலைவர் அவர்கள் அமர்ந்து விட்டார்.
அடுத்தபடியாக திரு. உன்மத்த ரோகம் அவர்கள் எழுந்து பேசத் தொடங்கினார். 'மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே எமது குழுவைச் சேர்ந்த நண்பர்களே! அன்பு வணக் கம். நான் இங்கு உங்களுக்குக் கூறவேண்டியவைகளனைத்தையும் திரு.கயரோகம் அவர்கள் கூறிவிட்டார் கள். அவைகள் அனைத்தையும் உற்று நோக்கியிருப்பீர்களென்று எண்ணுகின் றேன். என்னைப் பொறுத்தவரையில் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்
புத்தான் தேவையென்று கருதுகின்
றேன். அதையே நானும் உங்களிடம்
எதிர்பார்க்கிறேன். இன்னும் பலர் தங்கள் தங்கள் கருத்துரைகளை வழங்குவார்கள் என்று நினைக்
இெகிaை

Page 20
கிறேன்" என்று கூறி விடை பெற்றுக் கொண்டார்.
உதவித் தலைவர், அவர்களின் பேச்சு முடிந்ததும், அவர்களது குழுவைச் சேர்ந்தவர்களான திருவா ளர் தொண்டையடைப்பான், திரு. மடியழற்சி, திரு. உண்ணிக்காய்ச்சல், திரு. அடைப்பான், திரு. யோனிஸ் அவர்கள் தங்கள், தங்கள் கருத்துரை களை எடுத்து வழங்கினார்கள்.
இவ்வாறு வட்டமேசை மகாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் டுர். என்ற இரைச்சலுடன் ஒரு நகர் காவலர் வண்டி (பொலிஸ் ஜீப்) வந்து நின்றது. டும், டும். டுமீர். என்ற வெடிச் சத்தம் எங்கும் ஒலி எழுப்பியது. மகா நாட்டில் குழுமியி ருந்த அத்தனை பேரும் ஆளை, ஆள் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார் கள். அவர்கட்குச் செய்வது என்ன வென்றே தெரியவில்லை. எல்லோரும் தம், தம் சுயநினைவையே மறந்து போய் இருந்தனர். இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாது, நகர் காவலர்கள் கூட்டத்தில் குழுமியிருந்த அத்தனை பேரையுமே கைது செய்து விட்டார்கள்.
நகர் காவலர் வண்டி மீண்டும் டுர். என்ற இரைச்சலுடன் காற்றிலும் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசனையுடன் இருந்த திரு. உன்மத்தரோகம் அவர்களும், திருவாளர் கால், வாய் நோய் அவர்களும் வண்டியை விட்டுக் குதித்து விட்டனர். இதனால் இவர்கள் இருவரும் பலத்த காயமடைந்து இறைவன் திருவடியைச் சரணடைந்து விட்டனர். மீதியானவர் அனைவரும் நகர்காவலர்நிலையத்துக் கொண்டு செல்லப்பட்டு கைதிக் கூண்டிலே தள்ளப்பட்டனர். மணி இரவு 9.30 ஆகிவிட்டது, கைதிகள் அனைவருமே நித்திராதேவியின் அரவணைப்பிலே சென்று விட்டனர்.
அடுத்தநாள் காலை விசாரணை நீதிமன்றுக்கு எதிரிகள் அனைவரும் கொண்டு வரப்பட்டு, நீதிபதி முன்னிலையில் கைதிக் கூணர் டினுள்ளே நிறுத்தப்பட்டனர். நீதிஸ் தலம் ஆரம்பமாகி விட்டது. எதிரிகள் சார்பில் வழக்கறிஞர்கள் எவருமே ஆஜராகவில்லை. முதலியார் அவர் கள் வழக்குக் கொப்பியை வாசிக்கத் தொடங்கினார்கள்.
"கனம் மாட்சிமை தங்கிய நீதிபதி அவர்கள் சார்பிலும் இங்கு குழுமிருக் கும் வழக்கறிஞர்கள்
சார்பிலும் இவ் வழக்கை வாசிக்கின் றேன்., என்று கூறி விட்டு வாசித்தார். இவ் வழக்கிலே திரு. கயரோகம் அவர்கள் முதலாவது எதிராயாகவும், திரு. தொண்டை அடைப்பான் அவர்கள் இரண்டாவது எதிரியாகவும், திரு. மடியழற்சி அவர்கள் மூன்றாம் எதிரியாகவும், திரு. உண்ணிக் காய்ச்சல் நர்லாவது எதிரியாகவும்,
திரு. அடைப்பான் ஐந்தாம் எதிரியாகவும், திரு. யோனிஸ் ஆறாவது எதிரியாகவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேற்படி
இவர்கள் ஒவ்வொருவரும் விசாரணை செய்யப்பட்டு நீதிபதி அவர்கள் மனம் உவந்தளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வார்க ளென நம்புகின்றேன்" என்று கூறிவிட்டு தம் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
நீதிபதி- 1ம் எதிரி கயரோகம்
இருக்கிறேன் ஐயா.
நீதிபதி. நீ தானே தலைவர் பதவிக்காக மோகங் கொண்டு, இக் குழுவொன்றை உண்டாக்கி, மகாநாடு
நடத்தினாய். நீ குற்றவாளியா? சுற்றவாளியா?
கயரோகம்:- நான் சுற்றவாளி
839u IIT.
நீதிபதி. நீ ஒரு போதும் சுற்றவாளியல்ல. நீர்தான் குற்றவாளி
 
 

என்பதை ஒப்புக் gab606)u IT?
கயரோகம்:- நான் குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை ஐயா.
நீதிபதி. நீ குற்றவாளி என்பதை நான் நிரூபித்த பின் உமது குற்றத்தை நீ ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நீ மைக்கோ பக்றீறியம், ரீயூபக் குளோசிஸ் பக்றீறியம் ஆகியவற்றால் யோனி வழியாகச் சென்று, பராமரிப்புடைய மாடுகளை மெலியச் செய்து, இடைவிடாத கொடிய இருமலை உண்டாக்கி, நுரையீ ரலையும் பாதிக்கின்றாய். அத்துடன் கழிச்சலையும் பலயினத்தையும் உண்டாக்கி நிணநீர்ச் சுரப்பிகளையும் வீங்கச் செய்கின்றாய். அதுமட்டுமன்றி நீ மனிதரையும் கொடுரமான கொடுமைகளுக்குள்ளாக்கி விடுகின் றாய். எனவே நீ செய்துள்ள குற்றம் ஒவ்வொன்றும் மன்னிக்க முடியாதது. எனவே உம் மைக் கழுத்தில் ரீயூப்பக்கிளின் செய்து, நாட்டை விட்டு வெளியேற்றி விடும்படி கட்டளை யிடுகின்றேன். அவரை உம்மைச் சிறையில் வைக்கும் படி உத்தரவு இடுகின்றேன்.
நீதி. 2ம் எதிரி தொண்டையடைப்பான். எதிரி-இருக்கின்றேன் ஐயர். நீதி-நீகுற்றவாளியா? சுற்றவாளியா?
எதிரி- எதுவானாலும் சரி ஐயா, நீங்கள் தரும் தண்டனையை ஏற்றுக் கொள்வதுதான் என் கடமை ஐயா.
நிதி- நீர் குற்றவாளி என்பதை நிரூபித்தால் சரிதானே. நீர் பாஸ்ர ரில்லா ரிசீடா என்ற பக்றீரியாவினால் தடிமன் மூலம் பரவி, மாடுகளில் காய்ச்சலை உண்டாக்கி கன்ன உமிழ்நீர்ச் சுரப்பு, நாக்கு முதலிய
பாகங்களை வீங்கச் செய்து மூச்சு
கொள்கிறாயா? விடுவதற்குக்
நல்ல
கஷ்டத்தையும் உண்டாக்கி, நெஞ்சையும் பாதிக்கின் றாய் எனவே உம்மை H - S வக்சின் தடுப்பு ஊசியால் கொலை செய்கின் றேன்."
நீதி. 3ம் எதிரி, மடியழற்சி
எதிரி. இருக்கின்றேன் ஐயா?
நீதி-நீகுற்றவாளியா? சுற்றவாளியா?
எதிரி. நான் குற்றவாளியேதான் ஐயா. ஆயினும் நான் ஸ்ரப்பிலோ கோக்கஸ், ஸ்ரெப்பிலோ கோக்கஸ், கோறிணி பக்றீரியம் என்பவற்றால் பால் மூலமாகப் பரவி, பால் மடியை வீங்கச் செய்து, பாலை மஞ்சள் நிறமாக மாற்றி, பால் திரைந்து கட்டியாக்கி விடும்படி செய்து விடுகின்றேன். இப்படியான கஸ்டங் களை பாவம் அறியாத பசுவிற்குக் கொடுக்கும் நான் எப்படி ஐயா? சுற்றவாளி என்று கூறமுடியும். எனவே எனது குற்றத்தை மனப்பூர்வமாக ஏற்று, நீங்கள் விதிக்கும் தண்டனை யையும் ஏற்றுக் கொள்ளத் தாயாராக இருக்கின்றேன்.
நீதி. சரி! நீ செய்த குற்றங்களை நீரே ஏற்றுக் கொண்டு விட்டாய். எனவே உமக்கு ஆயுள்தண்டனை விதிக்கி றேன்.
நீதி-4ம் எதிரி உண்ணிக் காய்ச்சல்,
எதிரி-இருக்கின்றேன் ஐயா. நீதி-நீகுற்றவாளியா? சுற்றவாளியா? எதிரி. நான் சுற்றவாளி ஜயா.
நீதி. சபாஷ் நீ செய்த குற்றங்களை
மறைத்து விட்டு, சுற்றவாளி என்றா கூறுகின்றாய். சரி உமது குற்றங் களை யும் உமக்கு விளக்கிக் கூறுகின்றேன். அதன் பின்னாரவது யோசித்து, உமது குற்றத்தை ஏற்றுக் கொள். நீ புறட்டஸ் சோவா

Page 21
வித்துயிரினால், வுபிலஸ் உண்ணி
மூலமாகப் பரவி, பாவமறியாப் பசுக்களுக்குக் காய்ச்சலை உண் டாக்குவது மட்டுமன்றி, ஈரலை மஞ்சளாக்கி, சலத்தையும் கடும்
மஞ்சளாக்கி, சோகை வியாதியையும் உண்டாக்கி மாட்டை மெலிவடையச் செய்கிறாய். நீ செய்யும் குற்றம் எங்களால் மன்னிக்க முடியாதது. எனவே உம்மை நாடு கடத்துகிறேன்.
நீதி. 5ம் எதிரி அடைப்பான்.
எதிரி. இருக்கின்றேன் ஐயா.
நீதி-நீகுற்றவாளியா? சுற்றவாளியா?
எதிரி. நான் குற்றவாளி என்பதை உணர்ந்துதானே ஐயா, வழக்கறிஞர் கூட வைக்காமல் வழக்குத் தனியே ஆஜாராகியுள்ளேன். நீங்கள் மனம் உவந்தளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா.
நீதி - சரி, நீர் குற்றவாளி என்பதை நான் நிரூபித்துக் காட்டுகின்றேன். நீர் வசிலஸ் அந்திரக்ஸ் என்ற பக்றீரியா
வினால் புல், நீர் என்பவற்றின் முலமாகப் பரவி மாடுகளைத் திடீரென இறக்க வைக்கின்றாய். அதுமட்டு மன்றி, காய்ச்சலை உண்டாக்கி,
கரைகன்று வீசச் செய்து, கன்று இறந்த பின்னர் வாய், முக்கு, குதம் என்பவற்றுாடாக வெளிவரச் செய்கின்றாய். எனவே செய்த குற்றம் எக்காலத்தும், எவராலும் மன்னிக்க முடியாததாகும். எனவே உம்மைத் தூக்கிலிட்டு, 6 ஆழமான கிடங்கில் போட்டு முடி விடும்படி உத்தரவிடுகின்றேன்.
நீதி. 6ம் எதிரி யோனிஸ்
எதிரி-இருக்கின்றேன் ஐயா.
நீதி-நீகுற்றவாளியா? சுற்றவாளியா?
கருநிற இரத்தம் நீ
எதிரி. நான் குற்றவாளியோ, சுற்றவாளியோ என்பதை முன்னமேயே புரிந்தரிருந்தால் இவ் விதமான செயல்களில் ஈடுபட்டிருக்கவே மாட்டேன் ஐயா.
நீதி-வேதாந்தம் பேசுவதை நிறுத்தும், உமது குற்றத்தை நான் நிருபித்த பின் நீர் குற்றவாளியா? சுற்றவாளியா? என்பதைப் புரிந்து கொள்ளும், நீர் மைக்கோ பக்றீரியம் கொள்ளும். நீர் மைக்கோ பக்றீரியம், பாவா பீவக் குளோசிஸ் பக்றீறியம் ஆகியவை களால் நீர். புல் என்பன மூலம் பரவி உணவுக் கால்வாயில் அழற்சி உண்டாக்கி சீதமும், இரத்தமும் சேர்ந்த சுழிச்சலைப் போக வைக்கின் றாய். அதுமட்டுமல்லாமல், சோகை வியாதரியையுமுனர் டாக்கி தேக மெலிவையும் ஏற்படுத்தி விடுகின்றாய். எனவே உம்மை ஸ்ரெப்றோ மைசின் பாவித்து அழித்து விடும் படி கட்டளையிடுகின்றேன்.
இவ்வாறாக ஆறு எதிரிகளும் விசாரணை செய்யப்பட்டு, அவரவர் கள் செய்த தீமைகளுக்கேற்ற தண்டனையைப் பெற்றுக் கொண்டார் கள். விசாரணை நீதி மன்றமும் முடிவடைந்தது.
இத்தனையும் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த எனது சிந்தனை கலைந்து, அயர்ந்து தூங்கி விட்டேன். நித்திரா தேவியும் இறுக அணைத்துக் கொண்டாள். இத்தனை நேரமும் என் சிந்தனைக் கப்பல் சென்ற கற்பனை உலகிற்கு வந்த உங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி.
(யாவும் கற்பனையே)
நன்றி "எழில்?
 
 

.அன்றும் நோர்வேயின் மத்தியஸ்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஸ்ரேல் சமாதான உடன்படிக்கை
13ம் திகதி செப்டம்பர் மாதம் 1993ம் ஆண்டு இரவு 9.00 மணியளவில் (இலங்கை நேரப்படி பி.ப 7.30) அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உலகு எதிர்பாராத விதமாக வரலாற்றுப் புகழ் மிக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
அரபுலகின் மார்பில் பாச்சப்பட்ட "ஏகாதி பத்திய ஈட்டி" என யுத்தகால அரசியல் விமர்சகர்களினால் வர்ணிக்கப்பட்டு வந்த யூத அரசான ஸ்ரேலும், தாயகத்தில் இருந்து துரத்தபட்டு அயல் அரபு நாடுகளில் அகதிகளாக அவல வாழ்க்கையில் இருக்கின்ற பாலஸ்தீன் மக்களின் விடுதலைக்காகப் போராடுகின்ற யாசிர் அரபாதத்தின் பாலஸ்தின விடுதலை இயக்கமும் (PLO), சமாதான உடன்படிக்கை ஒன்றினை கைச்சாத்திட்டது.
அன்றைய அமெரிக்க ஜகாதிபதி பில் கிளிங்டன் தொடக்கவுரையினை நிகழ்த்தினார். இவரைத் தொடர்ந்து இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் பீரகம், PL.O சர்வதேச விவகாரத் தலைவர் மொஹமட் அப்பாசும் உரையாற்றினார். பின் அவர்கள் இருவரும் ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போரிஸ் கிறிஸ்தோபரும் ரஸ்ஸிய வெளியுறவு அமைச்சர் அந்திரோ கொஷ்ரேவும் சாட்சியாளர்களாக கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து PL.O தலைவர் யாசிர் அரபாத் உரையாற்றினார். ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுவதற்காக 19 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க பிற்கு வந்திருந்த யாசிர் அரபாத் அதற்குப் பின்னர் அவ் நிகழ்ச்சிக்கே அமெரிக்காவுக்குள் நுளைந்தார். ஐக்கி நாடுகள் சபையில் அன்று உரையாற்றும் போது "ஒரு கையில் வ் கிளையுடனும் மறு கையில் கைத்துப்பாக்கியுடனும் வந்திருக்கின்றே எனது கையில் உள்ள ஒலிவ் கிளையை விழ விடாதீர்கள் என்று கூறினார. ஆனால் இவ் நிகழ்ச்சிக்கு அப்படி வரவில்லை. இவ் நிகழ்ச்சியை பில் கிளிங்டன் நிறைவு செய்து வைத்தார்.
எதுவித முக்கியத்துவமென கருதப்படாத நோர்வே நாட்டின் உதவியுடன் PL.O வும், இஸ்ரேலும் 14 சுற்று இரகசியப் பேச்சுக்களை நிகழ்த்தின, இப்பேச்சுக்கள் நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோவில் உள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சுக் கட்டிடத்தில் இடம் பெற்றது. அந்த பாக் ரோட்டில் 45ம் இலக்கத்தில் அமைந்திருக்கும் நோர்வே வெளியுறவு அமைச்சுக் கட்டிடத்தில் 20.08.1993 நள்ளிரவு PLO பிரதிநிதிகளும், இஸ்ரேலிய நாட்டுப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நிகழ்த்தினர். இப் பேச்சுவார்த்தையின் போது காசா பள்ளத்தாக்கிலும் மேற்கு ஆற்றங்கரையின் ஜெரிக்கோ நகரிலும் பாலஸ்தரீனர்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நோர்வேக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஷிமோன் பிரசும்,
39.

Page 22
நோர்வே வெளியுறவ அமைச்சர் ஜோகோன் ஜோர்யென் கோல்ஸ்டும் பேச்சுவார்த்தைகளின் போது கலந்து கொண்ட னர். அக் கட்டடத்தை நோர்வே நாட்டின் பொலி ஸார் காவல் செய்தனர். ஒருவருக்கும் இப்படி ஒரு இரகசியப் பேச்சு நடை பெறுகின்றது என்று அறியவில்லை.
பலம் பொருந்திய பல நாடுகள் இஸ்ரேலி னதும், PL.O வினதும் பிரச்சனையை தீர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் யாவும் தோற்றுப் போக நோர்வேயின் முயற்சி அப்போது வெற்றியளித்தது. இன்று வெள்ளை மாளிகையில் யாசிர் அரபாத்தின் படம் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
13.09.1993 அன்று வெள்ளை மாளிகையில் ஒப்பந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் ஐவைந்து நிமிடங்களே உரையாற்றினார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ், ஜிம்மி காட்டர், காங்கிரஸ் உறுப்பினர்கள், இஸ்ரேலியப் பிரதமர் ஜிற்சாக்றாபின், அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுத் துரதவர்கள், அதிகாரிகள், இஸ்ரேலியப் பிரதிநிதிகள் என 3000 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இங்கேயே இஸ்ரேலிய பிரதமர் றாபினும், PL.O தலைவர் யாசிர் அரபாத்தும் முதல் முதலாகச் சிந்தித்து உரையாற்றினர். இதில் 300 படப்பிடிப்பாளர்களும் 3000 பத்திரிகை ஆளர்களும் கலந்து கொண்டனர்.
(உலக வரலாற்றின் முக்கிய தொகுப்பு)
லோ. துவழிகரன்
யாழ். போதனா வைத்தியசாலை
头
条
நோபெல் பரிசு
இவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி "டைனமெட்" எனும் வெடி மருந்து செய்யக் கண்டுபிடித்துப் பெரும் பொருளிட்டியவர். விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் முதலிய துறைகளில் திறமை உடையவருக்கு ஆண்டு தோறும் ஐந்து பரிசுகள் வழங்கும்படி பெரும் செல்வம் விட்டுச் சென்றனர். (1833 - 1946) ーク
 
 
 

Sedna
மிகவும் குளிர்ந்ததும் அதிக தூரத்திலும் விண்வெளி யிலுள்ள பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள் ளனர். இதன் பெயர் "செட்னா" (Sedna) இது ஒரு கிரகமா இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் கிரகம் என்பதற்கான ஒரு தெளிவான வரைவிலக்கணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை.
இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 10500 வருடங்கள் எடுக்கும்.
அண்ணளவாக 2000 Km விட்டமுடையது. பூமியிலிருந்து 10 bilion Km தூரத்திலுள்ளது. இது
சிவந்த நிறமுடையது.
frr:Free yerAyşgFeşper,

Page 23
!溥sae,|× , |- +)歴---- |-(**|-sae iso|- ++.---*----! * : *. ..》 -" 「 |-|-|- "|---------
! !! !!
!
sae)|-|-T
ogystosorių.” , , , ....... (*T - **'', 역 - **** தென்னிலங்கைக் கவிதை'
GLI PIETS, 56, Asya
 
 
 

iyy