கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பு 1974 (1.6)

Page 1
say: 75 சதம்
.
 
 

قاسمبلی
%
N N YN

Page 2

அறிவியல் திங்கள் ஏடு
நூணி; ! 974 i u160l it : 6
"
பதட்புதியt
5%(UL) கதிழைଥୁର୍ତ୍ତୀ
$aಣ್ಣ திேல் பசீர்
956). . . . . . றேடியோக் குயில்கள் கூவுகின்றன! சினிமாச் சோகங்கள் அழுகின்றன ! மின் சித்தனின் மினிக் கட்டுரைகள்.
முத்துக்குளிக்க வாரீகளா? கற்றதஞலாய பயனென்கொல், 30,000 பேரைக் கொல்லாவிடில், தேவன் கோயில் மணியோசை, நல்ல சேதிகள் கூறும் மணியோசை பூத்துக் குலுங்கும் பருவம். லூயியாஸ்டரும் அவரது "புளித்த" ஆய்வுகளும், கால்நடைகளின் தீவனம். ஒன்றும் ஒன்றும் இரண்டு. உன்மேல் ஆசை கொண்டு. ஹாய், ஹோய் பபியாச்சிகே பைசிக்கிள் எக்கக் ! மூளையோ மூளை. கம்பியில்லாத் தந்தி (Wireless) காற்றினிலே வரும் கீதம்.
Sorgutb use.

Page 3
எண்ணம்
உலக சனத்தொகை அதிகரித்து வருகிறது. அத்துடன் சனங்களின் வாழ்க்கைத் தேவைகளும், வசதிகளும் கூடிக் கொண்டு செல்கின்றன. ஆனல் அதே சமயம் உலகிலுள்ள மூல வளங்கள் குறைந்துகொண்டே செல்கின்றன. இந்த மும்முனைத் தாக்குதலுக்கு இன்றைய நாகரீகம் ஈடு கொடுக்கவேண்டியுள்ளது.
கடந்த நூறு வருடங்களாக மூலவளங்கள், இயற்கைச் செல்வங்கள் வரலாறு காணுத வேகத்தில் சுரண்டப்பட்டு வருகின்றன. பாவனையாளர்களின் தேவைகளினல் ஊக்கு விக்கப்பட்ட, புதிய தொழில்நுட்ப உத்திகள் இச் சுரண்ட லைத் துரிதப்படுத்தியுள்ளன. பாவனையாளர்களைத் திணறடிக் கும் பல புதுப்புதுப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின் றன. இந்த யுகத்தை நம்மவர்கள் சிலர் " கலியுகம் " என்று குறிப்பிடுகிருர்கள். இதுபற்றிக் கருத்து வேறுபாடு இருக் கலாம். ஆனல் இந்த நூற்ருண்டை "பாவனையாளர்கள் யுகம் ' என்று விபரித்தால் அது தவருகாது. பாவனையாளர் களின் தேவைகளை மனே தத்துவ ரீதியாகப் பெருக்கிப் புதிய பொருட்களைச் சந்தைப்படுத்தும் விளம்பரக் கலை வளர்ச்சி இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
புள்ளி விபர மதிப்பாளர்கள், நிலவியலாளர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரும் வற்றி வரண்டுவரும் மூல வளங்கள் பற்றிக் கவலை தெரிவித்திருக்கின்றனர். ஏதாவது புதிய தொழில்நுட்ப, விஞ்ஞானப் புரட்சி ஏற்பட்டாலன்றி இன்றைய வாழ்க்கை முறைகள் நாகரீகம் இன்னும் 25 வருடங்களுக்கு நீடிக்குமா என்பது சந்தேகம்.
இதற்குரிய அறிகுறியாக " பற்ருக்குறை யுகம் ?? உலகமெங்கணும் ஆரம்பித்திருக்கிறது. மூலவளங்களைத் தேவைக்கதிகமாகச் சுரண்டுவது மட்டுமல்லாமல், இயற் கைச் சூழலையும் இன்றைய "நாகரீகம் பாதித்து வருகிறது

3
என்று மேற்கத்தைய நாடுகளில் விரயமான வாழ்க்கை முறைகளுக்கு எதிர்ப்புத் தோன்றியுள்ளது.
இயற்கைச் சூழலையும், மூலவளங்களையும் எப்படிப் போற்றி அனுபவிப்பது என்பது பற்றிய அறிவு சிறுவயது முதல் மாணவர்களுக்கு ஊட்டப்படல் நன்று. அப்பொழுது தான் பகட்டான அம்சம் எது, தேவையான அம்சம் எது என்று எமது நாகரீகத்தை அவர்கள் அலசிப்பார்க்க முடியும். வாழ்க்கை முறைகளில் ஏற்படப்போகும் தவிர்க்கமுடியாத மாற்றங்களுக்கு அவர்களைத் தயார்ப்படுத்துவது எங்கள்
கடனுகும்.
- பதிப்பாசிரியர்
y
இலக்கை நோக்கி விரைவது یے “ م۔xtbہا ” இன்றைய தலைமுறையினரின்
இனிய விருப்பம் * அம்பு" வேகம், வீச்சு, ஆழம் கொண்டது ** 9إubبا”” ஈழத்தின் விஞ்ஞான மாத இதழ் “ அம்பு'
இன்றே வாங்குங்கள் *In L(وی » ،
அம்பு எங்கும் கிடைக்கும் சந்தாதாரராகச் சேருங்கள்.
நிர்வாக ஆசிரியர்
* அம்பு"
ஸாஹிருக் கல்லூரி கல்முனை

Page 4
றேடியோக் குயில்கள் கூவுகின்றன; சினிமாச் சோகங்கள் அழுகின்றன!
கலைத்துறைகளில் அதிக ம்
நாட்டம் காட்டாதவர்களில் ஒரு
வித தாழ்வு மனப்பான்மையை வேரூன்றச்செய்து வெற்றியீட்டி யுள்ளனர், எமது சிந்தனைச் செம் மல்கள். இச் சிந்தனையாளர்களின் அகராதிப்படி பண்பாடு அல்லது கலாச்சாரம் என்ருல் "நல்ல " 6FA6of? LomT Lumr rifğ5956Ä) ; ʻʻ p56Ä) 6) ʼʼ புத்தகங்கள் படித்தல்; "நல்ல" பாட்டுக் கேட்டல் என்ற "நன்" முயற்சிகளில் அடங்கும். இலக்கியம் போன்ற துறைகளில் " நல்லது எது?" என்பதில் கருத்து மோதல்கள் உண்டு. நல்ல தைக் கண்டுபிடிக்கப் பல சிக்க லான அளவை முறைகள் விருத்தி செய்யப்படுகின்றன. இந்த நெளிவு - சுளிவு முழுவதையும் அறிவதற்குள் எமது ஆயுள் முடிந்துவிடும்! இன்றைய சூழலில் கலைத்துறைகளில் ஈடுபட்டால் மட்டுந்தான் பண்பாடு வளருமா? என்ற கேள்வி எழுவது நியாய
dont Gorg •
வாழ்க்கையை விளங்குவதற் குக் கலைகள் பயன்படுமாயின் அது நன்று. ஆனல் பரந்து விரிந்த வாழ்க்கையைக் கலைகளுக்கூடா கவேதான் என்ற கட்டாயம் இல்லை. சிலவேளை கலைகளே வாழ்க்கையை விளங்கு வதற்குத் தடையாகவும் அமைய லாம். வாழ்க்கை தரும் பொறுப்பு களிலிருந்து கழருவதற்கும், சமு தாயத்துடன் ஒட்டாமல் ஒதுங்கு
கலை,
தரிசிக்கவேண்டும்
வதற்கும் கலை ஒரு மரியாதை யான போர்வையாகவும் பயன் படுவதுண்டு. " உண்மையான " கலைகள் இப்படி வாழ்க்கையில்
இருந்து பதுங்கியோடப் பயன் படாது என்று நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.
உலகத்தைத் தன்னைப்போல நேசிக்கக்கூடியவன் ஒருவன் வாழ்ந் தால், அவன் காலடி படும் கல்லும், si iki 3al- ஆசிர்வதிக்கப்படுகின் றன. இப்படிப்பட்டவன் சொல்வது, செய்வது எல்லாமே உன்னத கலை களாகப் பரிணமித்து சமுதாயத்திற்கு ஒளியூட்டுகிறது. எனவே தன்னல மற்றவன் கலைகளைப் பயின்ருலும், இல்லாவிட்டாலும் பண் புள் ள வஞகத் திகழ்கிருன் தன்னலம் உள்ளவன் என்னதான் பெரிய கலைகளைக் கரைத்துக் குடித்தாலும் பண்பாடற்றவஞகவே இரு ச் கிருன், கலைகளில் ஈடுபடுவதனுல் மனிதனின் அடிப்படை இயல்புகள் அ தி கம் மாற்றமடைவதாகத் தெரியவில்லை.
குயில் கூவுவதை நேரடியாகக் கேட்டு அனுபவிக்க அலுப்பு: கடல் அலையெறிவதைப் பார்க்க எங்களுக்குப் போரடிக்கிறது; பிச்சைக்காரனின் ஆற்ருமையைப் பார்க்க எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படும்; எனவே அவனைப் பார்த் தாலும் பார்க்காத மாதிரிச் செல் வது நன்று என்றெல்லாம் நாம் கருதித்தானே என்னவோ றேடி

*நெஞ்சோடு
ஜனரஞ்சக அறிவியல் எழுத் துக்கள், நாட்டுப்பாடல், தெருக் கூத்துப் போலவே மக்களுடைய செல்லப்பிள்ளையாக மாறவேண் டும். இந்த "அறிவியல் கட்டுரை' என்ற பெயர் செயற்கையாகவே படுகிறது. ஏதோ சலுகை தருவது போல "* அறிவியல் கட்டுரை என்று நீ எழுதுவதற்குப் பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சம் ஒதுங்கு ' என்று இலக்கிய மேதாவிகள் சொல்வதுபோலிருக் கிறது. இதற்கு அவர்களைக் குறை கூறவும் முடியாது. இன்று இத் துறை வளர்ச்சியுற்றிருக்கவில்லை. இத்துறை நன்கு வளர்ந்தபின்னர் தன்னுற்றலாகவே ** அறிவியல் கட்டுரை " என்ற பெயர் மாறி இத் துறை க்கு அறிவெழுத்துப்
போன்றதொரு தகுந்த பெயர்
வந்துசேரும்.
இலக்கியம் என்றவுடன் நினை
வுக்கு வருவது நாடகம், கவிதை, நாவல் என்பன. இந்நிலை மாறி ஜனரஞ்சக அறிவியற் துறையும் ஒரு சிறப்பான இலக்கிய உருவ மாகக் கூர்தல்வேண்டுமென்பது
யோவில் குயில் கூவுவது மாதிரி இசை இசைப்பதைக் கேட்டும்; நவீன பாணி ஓவியத்தில் பிச்சைக் காரனைப் பார்த்துப் பரிதாபப் பட்டும் ஏதாவதொரு பெரிய கொம்பனுடைய சினிமாவில் கடல் சீறுவதைப் பார்த்தும் பலவித மாகப் பரவசமடைகிருேம்.
இப்படிச் செய்வதிற் பிழை யில்லை. கலைகள் பயில்வது தேவை யில்லை என்ற கட்சியை நான்
(தாளித்து)
நெஞ்சம்!”
எங்களின் ஆசை. தனக்கெனச் சில கட்டுக்கோப்புக்களைக் கரை யாக வகுத்துப் பாயும் ஆருக,
அறிவெழுத்துப் பரிணமம் பெற
வேண்டும்.
அறிவியலை வெளியே விட்டு விட்டு இலக்கியக் கதவைச் சாத்தி ஞல், இலக்கியந்தான் காற்றில்லா மற் புழுங்கவேண்டிவரும்.
தாட்டுப்பாடல் மாதிரி "அரை குறை இலக்கிய அந்தஸ்து எங் களுக்கு மிகவும் பெருமைதரும்: அது போதும். இதற்கு இரு கார ணங்கள் உண்டு. முதலாவது, "பெரிய" இலக்கியம்'படைத்து
மக்களை வெருட்ட நாங்கள் மனதார விரும்பவில்லை. அடுத்த காரணம் உயர ஏறி விழு வதைக் காட்டிலும் மக்களுக்குப் பக்கத்திற் குந்துவது பாதுகாப் ! ו&fr 68Tנ_t
அறிவியலை மக்களுடைய நெஞ்சோ டு உறவாட வைப்பது இத்துறையின் சவால்? இதை நாங்கள் நம்பிக்கையுடன் ஏற்று இருக்கிருேம். டபதிப்பாசிரியர்
நிறுவ முயற்சிக்கவில்லை. ஆணுல் நேரடியாகக் குயில் கூவுவதைக் கேட் டு இரசிப்பதும் நல்ல தல்லவா? வாழ்க்கையை நேரடி யாக அனுபவிப்பதுவும் நன்று.
றேடியோக் குயில்கள் கூவுகின் றன; சினிமாச் சோகங்கள் அழுகின் ன்ேறன; சொல்லின் செல்வர்கள் அச்சடித்த கடதாசியை மேய்ந்து, சொற்களை இரைமீட்கிறர்கள்.

Page 5
SAAALSLALA ASLSSA AMS AAAAA AAAA AAALLL AAAALqLAeS SAALLLALAMqLALqASqqSAAq qALLL AAAALLLAAAAASSAAA AASAAASAAAA سر سب حس
மினிக் கட்டுரைகள் i
AN-ovor AA AA qqSSAAqqeSMLMA AeAMSMSAMAMSLS ASASASAASASSASSASSASSsSA
І. முத்துக்குளிக்க வாரீகளா?
* முத்து சாதாரண சுண்ணும்புக்கல்லின்
Utq subul .
இது தெரிந்தபின்பும் முத்தைப் பெண்கள் விரும்பாமல் விட மாட்டார்கள். வைரம் என்பது கரியின் படிவரூபம் என்பதை அறிந்தபின்பும் அதன் மதிப்பு மங்கையர் மத்தியில் குன்ற வில்லை. முத்து எதற்காக இவ்வளவு மதிப்புப்பெறுகிறது ? கிடைத்தற்கரியது என்பதணுல்! சரி அத்துடன் மாசறு முத்து,
ஒளியுடன் கொஞ்சி விளையாடும்பொழுது ஏற்படும் ஒளிர்வுதரும் காரணமாக அணிகலணுகி அழகிகளை முத்தமிடுகிறது"
|
முத்துச்சிப்பி வளர்க்குந் தொழில் இங்கு விருத்திசெய்ய யப் பான் உதவியளிக்கும்.-செய்தி. இச்செய்தி யின் பின்னணி சுவையானது.
முத்து என்னும் சொல் அருமையான கிடைத்தற்கரிய என்ற பொருள்படும் தொனியில் பாவனைக்கு வந்துள்ளது. "முத் தான முத்தோ, நீ முதுகடலில் ஆணி முத்தோ " என்ற நாட்டுத் தாலாட்டுப் பாட்டு இக் கருத் தைத் தெளிவாக்குகிறது.
முத்து, முத்தம்மா என்ற பெயர்களும் இந்தச் " செல்ல'
முறையாகத்தான் முதலிற் Կtք ծ கத்திற்கு வந்திருக்கின்றன. உள்
கொடுத்துப் போற்றும்பொழுது * முத்து " என்ற Gørn áv3vá
 ைக யா ள லா ம் ! உதாரணம் : கோவலன், கண்ணகியை,
"மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!" என்று புதுமண மோகத் தில் சீராட்டியதாக, சிலப்பதிகாரம் என்னும் ஒரு பழைய மர்ம நாவலில், வண. இளங்கோத் தேரோ வெளுத்து வாங்குகிறர் 1 மணிவாசகர் எத்தனை முறை "முத்து' என்ற சொல்லை,
 

இறைவனைக் கூவியழைக்கப் பயன் படுத்தியிருக்கிருர், எ ன் ப ைத ஆராய்ச்சி செய்பவர்கள் எண்ணு
வதற்கு வீட்டுவிடுவோம். இனி, "முத்தம்” என்பது என்ன. (ஆசிரியர் தணிக்கை) சொல்லா
ராய்ச்சி இத்துடன் நிற்க,
இப் படி ப் பண்டைக்காலந் தொடக்கம் உயர்வாக மதிக்கப் பட்டு வந்த முத்து எதற்காக இப்படி விலை அதிகமாயிருக்கிறது ? ஒரு காரணம் கிடைத்தற்கரியது என்பது ! அத்துடன், LorréFADI முத்து ஒளியுடன் கொஞ்சி விளை யாடும்பொழுது ஒளிச் சிதறல், 6F6f) ši s jiàoy (Scattering, Translusense) ஏற்படுத்திப் பார்ப்பவர் களை மருட்டுகிறது; மலைக்கவைக் கிறது. இதனல் இவை அழகிகளை முத் த மி டு ம் அணிகலன்களாக மாறியதில் வியப்பில்லை. நல்ல முத்தை இந்த ஒளிச்சிதைவு ஒளிக் கசிவு போன்ற பல ஒளியியல் தன்மைகள் கொண்டே மதிப்பிடு வார்கள். இவற்றை மதிப்பிடச் சில ஒளியியற் கருவிகள் விருத்தி செய்யப்பட்டுள்ளன.
முத்து என்ன இரசாயனப் பொருளாலானது? சுண்ணும்புக் கல்லின் படிவ ரூபமே (Crystaline form) முத்து ! வைரம் என்பது படிவ உருக்கொண்ட கரியன்றி வேறில்லை என்று சத்தியஞ்செய்தா லும் பெண்கள் வைரத்தை விரும்புகிருர்கள். எனவே முத்து, கல்சியம் காபனேடின் (Caco s) படிவரூபம் என்பதனல் அதன் மதிப்புக் குறைந்துவிடப்போவது இல்லை. சாதாரண சுண்ணும்புக்
7.
கல், கரி ஆகியவை இவ்வளவு விலையுயர்ந்தனவே என்று மலைப்
பதில் வேலையில்லை. 6 rãiv Gaonr ub அதது, அந்தந்தப் படிவரூபமாய் இருந்தால் மதிப்புத்தான். கல்
லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? அதுபோலத்தான் எ ல் லா ரு ம் மனிதர்கள் என்ருலும் பதவியில் இருந்தால் படிகரூபந்தான் !
முத்துச்சிப்பிகள் இருவகைப் படும். ஒருவகை உவர்நீரில், கடல் Sfi á 6)in (Lp Lð Mcleagrina Vulgaris என்பது. இவற்றிலிருந்து பெறப் படும் முத்துக்களே விலையுயர்ந் தன. இவ்வகைச் சிப்பிகள் பெரும் பாலும் 50 தொடக்கம் 200 அடி வரையிலுள்ள கடலடியில் வாழ் கின்றன. இவை நன்ருகத் திளைக் கும் கடற் சூழல் வளைகுடாக்கள் ஆகும். மிகவும் அருமையான முத்துக்களைத் தருவது, பாரசீக வளைகுடாச் சிப்பிகளாகும். இதற் கடுத்தபடியாக மன்னர் வளை குடாச் சிப்பிகள் தரும் முத்து திறமையானது எனக் கருதப்படு கிறது. மொசம்பிக் கடற்கரை, சன்சிபர் தீவுகளுக்கணித்தாக கரீபியன் கடல், அவுஸ்திரேலியன் கடலில் சில இடங்கள் போன்ற இடங்களிலும் சிப்பிகள் இருந்தா லும் இவை பாரசீக, மன்னர் முத்துக்களைவிட மாற்றுக்குறை வாகவே மதிக்கப்படுகின்றன. கரீபியன முத்துக்கள் பெரிதாக இருந்தாலும், அவ்வளவு பள பளப்பு, ஒளிர்வு இருப்பதில்லை. வருடாவருடம் முத்துக்குளிப்பு நடப்பதில்லை. சிலவேளை 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுகின்றன. இதற்கு க் காரணம், அவ்வளவு விரைவாக

Page 6
8
முத்துச்சிப்பிகள் பிடித்தால் அவை சில வருடங்களில் அழிந்துவிடும். அத்துடன் முத்தின் தரமும் நன்ற யிராது.
இரண்டாவது வகைச் சிப்பி கள் நன்னீரில் வளரும் Unio Margaritifera என்பதாகும். இவை ஸ்கொட்லாந்து அருவிகள் சிலவற் றிலும், மிசிசிப்பி ஆற்றிலும் இருக்கின்றன. இவற்றின் முத்துக் களுக்கு, கடல் முத்துப்போல மதிப்பு இருப்பதில்லை.
முத்துக்கள் எப்படிப் பிறக் கின்றன. முத்துச் சிப்பிகளின் மென்மையாள சவ்வினுள், பிற பொருள் (மணல் கடற் பிராணி களின் ஒடு) நுழைந்துவிட்டால் அவை இந்தப் பிறபொருளுக்கு மேல் கொஞ்சங் கொஞ்சமாகக் கல்சியம் காபனேட் கொண்ட சிதலைச் சுரந்துகொண்டிருக்கும். இதனுல் படைக்குமேல் படையாக இந்தப் பிறபொருள்மேல் முத்து
வளரத் தொடங்குகிறது. பிற பொருள் நன்முகச் சவ்வினுள் நுளைந்துவிட்டால் அந்தப் பிற
பொருளை உள்ளடக்கி ஒரு இளை பத்தினுல் (Tissue) ஆன பையை ஏற்படுத்திவிடுகிறது. பி ன் ன ர் கொஞ்சங்கொஞ்சமாக முத் து இந்தப் பையினுள் விளைகிறது. இப்படியே முத்தைத் தனது ợsisứìg)ỉ 6ir ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வளர்க்கிறது சிப்பி. Qahirulo - 5&g (Tissue) afae)6i ஆன பை (Sac) முத்துத் திரளக் கூடிய அளவை நிர்ணயிப்பதோடு ாப்பவுமே பிற பொருளைப் பிற பொருள் என்ற அளவில் வைத் திருக்கவும் உதவி செய்கிறது
போலும். நன்முகச் சவ்வினுள் Sp s 600i iss) as (Foreign particle) நுழைந்தால் முத்து வட்டுறுப்பாக இருக்கும். சவ்வின் மேற்பரப்பில் நுழைந்தால் அல்லது தசைநார் கள் உள்ள பகுதியில் நுளைந்தால் அமுக்க வித்தியாசங்களினல் முத்து பலவித உருவங்களில் வளரும். இப் படிச் சீரற்ற முத்துக்களை Barague Pearls என்பார்கள். இவற்றிற்கு மதிப்புக் குறைவு. கல்சியம் காப னேட்டைக் கசியச் (Secrete) செய் யும் செல்கள் முத்துச் சிப்பியின் ஒடு (Shell) தயாரிக்கவே சிப்பி க ளு க்கு வாய்த் திருக்கின்றன. என்ருலும், நங்கையரின் விருப்பத் திற்காக அவை சிலவேளை முத்தும் தயாரிக்கின்றன.
முத்துச் சிப்பிகளைப் பிடித்து அவற்றின் சவ்வினுள் பிற துணிக் கையைப் புகுத்திப் பின்னர் அவை களைக் கடலில் விடுவார்கள். மூன்று வருடங்களுக்குப் பின்னர்
அவற்றைச் சேகரித்து முத்து எடுப்பார்கள் யப்பானியர்கள். முத்துச்சிப்பி வளர்க்கும் கலை
யப் பா னில் 1890இல் மிக்கி Gudnt "Gulfr (Mikimoto) 69 6io ஆரம்பிக்கப்பட்டது. என்ருலும், கி. பி. 1300இல் சீனர்கள் இம் முறையினுல் முத்து எடுத்தார்கள் என்று தெரியவருகிறது. இப்படிப் u 'll (upgjigj &&am Cultured Pearls அல்லது வளர்க்கப்பட்ட முத்து என்பார்கள். இன்று யப்பானில் இப்படிப் பண்படுத்திய முத்து எடுக்க 500 சிப்பி விளைச்சல் இடங் கள் உண்டு. இன்று யப்பானியர் இத்துறையில் மிகவும் முன்னேறி

புள்ளனர். புறத்துணிக்கையாக Mother of Pearl SF GM-Gulu s iš கிருர்கள்,
சீனர்கள் சின் ன ஞ் சிறிய உலோகப் புத்தர் சிலையைப் புறத் துணிக்கையாகப் புகுத்தி, அதற்கு மேல் முத்தை விளையவைத்திருந் தனர். மூன்று வருடம் முத்திற் குள் அடைபட்டுக் கிடப்பதைப் பற்றி அகிம்சாமூர்த்தி என்ன எண்ணியிருப்பாரோ தெரியாது!
முத்து அவ்வளவு கடினமான தல்ல. இவை கல்சியம் காபனேட் டிஞல் ஆனபடியால் அமிலம் பட்டவுடன் கரையக்கூடும். இத ஞல் வியர்வையினலும் இவை பாதிக்கப்படலாம். கைத்தொழில் மிகுந்த நகரங்களில் முத்துமாலை அணிந்தால் இப்படியான அமிலச் சிதைவு சிறுகச்சிறுக ஏற்பட்டு முத்து தனது இயல்பான ஒளியியல் தன் மை களை இழக்கவுங்கூடும். அராவுதல், தேய்த்தல் போன்ற வன்முறைச் செயல்களுக்கு முத்து இடங்கொடாது. எனவே முத்துக்
9
கள் கோர்த்த அணிகலன்களே நாளாந்தப் பாவனைக்கு எடுக்கா மல் வைப்பது நலம் !
யப்பானில் முத்துக் குளிப்பு வேலையில் பெண்கள் உற்சாகமாக ஈடுபடுகின்றனர். இது வியப்புக் குரிய விஷயமல்ல. மூச்சையடக்கி ஒரு நிமிடம் கீழிறங்கிச் சிப்பிகளை அள்ளிப் போட்டுக்கொண்டு வெளி யேறி சுவாசிப்பதற்கு மேலுக்கு வருதல்வேண்டும். இப் பொழு தெல்லாம் ஸ்கூபா கவசம் இருப் பதனல் கட்லடியில் இறங்கி ஆறுதலாகப் பொறுக்கிக்கொண்டு வரமுடியும்,
முத்துக்கள் மனிதருக்குத் தேவையோ, இல்லையோ தெரி யாது. ஆனல் எங்களுக்குத் தேவை யான அந்நியச் செலாவணி முத் துத் தொழிலிற் கிடைத்தால் நல்லதுதான். அத்துடன் ஆழ்கடல் மூழ்குவதற்குத் தயாராகவிருக்கும் இளைஞர்களுக்கும் இத் துறை வேலைவாய்ப்பளிக்கலாம். VA
சாங்கியம், பதஞ்சலம், நீந்தத்தெரியும்!"
தொடர்புபடுத்தவும்
பண்டிதர் ஒருவர் கங்கையைத் தாண்டுவதற்கு ஒடத்தில் ஏறிச்
சென்றுகொண்டிருந்தார். நடுவழியில் ஒடக்காரனுடன் பேச்சுக் கொடுத்தார். "உனக்கு வேதாந்தம் தெரியுமா ? என்று வினவிஞர். அதற்கு ஒடக்காரன் ' தெரியாது சாமி" என்ருன். பண்டிதர்
விடவில்லை. * அப்படியானுல் உனக்குச் சாங்கியம் தெரியுமா? "என்றர். அதற்குமவன் அடக்கமாகத் தெரியாதென்று பதிலளிக்க " பதஞ்சலம் தெரியுமா, வேறென்ன தத்துவம் உனக்குத் தெரியும்" எனறவாறு எரிச்சலூட்டிக்கொண்டிருந்தார். ஒடக்காரனும் மெளனமாகவே இருந் தான். கொஞ்சநேரத்தில் புயல் வீசி ஒடம் நீருக்குள் தாழ்வதுபோல் ஆட்டங்கொடுத்தது. அப்பொழுது ஒடக்காரன் பண்டிதரைக் கேட்டான், ! "சாமிக்கு நீந்தத் தெரியுமோ? " அதற்குப் பண்டிதர், என்று தலையசைத்தார். ஒடக்காரன் சொன்னுன் : “ சாமி எனக்குச்
வேதாந்தம் எல்லாம் தெரியாது. - இராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதை
(றேடியோக் குயில்கள் கூவுகின்றன என்ற தலையங்கத்துடன்
தெரியாது
ஆளுல்

Page 7
Η Ο
2. தேவன் கோவில் மணியோசை
கல்ல சேதிகள் கூறும்
நாம் வாழும் ஊர்களின், நகரங்களின், பகைப்புல ஒலிகள் எங்களை அறியாமலே மனத்தில் பதிவு செய்யப்பட்டுவிடுகின்றன. புதிய இடத்திற்குப் பெயர்ந்து சென்ருல் வழமையான பின்னணி ஒசைகள் அல்லது பகைப்புல ஒலி as gir (back ground sounds) géiant தது " ஒரு மாதிரியாக" இருக்கும். அதுவும் பின்னேரத்திலும் முன் இரவிலும் இந்தப் பின்னணி ஓசை வேறுபாடுகளை மனம் மிகைப் படுத்தி அவதிப்படுகிறதுபோலும்! பின்னணி ஓசைகள் நிறைந்த
மணியோசை !
ஒரு சூழலில் மனிதன் வாழ்ந்தால் அவனது மனுேநிலை பாதிக்கப்படும் எனச் சில மனே தத்துவ மருத்து வர்கள் கருதுகிருர்கள்.
ஆகாய விமானம், மோட்டார் வாகனங்கள், இரெயில் வண்டி, றேடியோ போன்ற மெசின் " ஒலிகள் தாங்கள் வாழ்வது இரு பதாம் நூற்ருண்டு எனப் பறை சாற்றுகின்றன என்ருலும் அருகி லிருந்து, தொடர்ந்து நெடுநேர மாகக் கேட்கும்பொழுது இவை எரிச்சலூட்டுவனவாய் இருக்கும்.
* மனம் அமைதியாக ஒன்றியிருக்கும் ஒரு அழகான
மா?லப்பொழுதில், கோவில் மணியோசையை உன்னிப்பாகக் கேட்டிருக்கிறீர்களா? உலோகத்தின் அதிர்வினுல் அயலிலுள்ள காற்றமுக்கம் ஏறியிறங்க எழும் ஒலியலைகள் உள்ளத்தையும்
ஊடுருவுகிறது. இதைத்தான்
* சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி" எனக் குறிப்பிடுகிறர்களா ??
ந க ரத் தி ல் வாழ்பவர்களுக்கு ஒதுக்கமான மலைநாட்டு ஊருக்குச் சென்ருல், அங்கு குடிகொண்ட அமைதியான நிசப்தம், சிலவேளை களிற் தாங்கமுடியாததாகவும் இருக்கும். இதனல் அமைதியான ஓசைப் பின்னணிக்குப் பழக்கப் படும் வரையும் றேடியோவை அலறவிட்டு நிலைமையைச் சமாளிக் கலாம்! அருவிகளுக்கு அருகே வீடு அமைந்தால், அந்தப் பின் னணிச் சலசலப்பு, நிசப்தம் ஏற் படுத்தும் உளைச்சலுக்கு ஒத்தட மாக அமையும். துப்பரவாக எவ் வித பின்னணி ஓசைகளில்லாத
பகைப்புல ஓசைகளில் முதன்மை யானது கோவில் மணியோசை,
மண்ணுலகத்துநல் லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டு வந்தான்
பண்ணிசைத்தவ் வொலிக ளனத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்
நண்ணிவரும் மணிபோசையும், பின்னங்கு
நாய்கள் குலேப்பதுவும்
LLLLLLLLLLLL LLL LLLLLL LLLLLL
-Lunt prg
மற்றைய பின்னணியோசை களை மூழ்கடித்து, கேட்பவர்
களுக்கு இனிமையையும், ஆறுதலை

யும் அளிக்கிறது. ஊர் மக்களின் அடி நாதமாக விளங்கும் மணி யோசை அவர்களின் இதயத்தின் ஆழத்தில் எதிரொலிக்கிறது. மணி FGOD F Fupu நம்பிக்கைகளுடன் தொடர்புபடுவதால் கேட்பதற்கு
னிமையாகவும், அமைதியாகவும்
ஒலிக்கிறது.
இந்து, கிறிஸ்தவ புத்த கோவில்களிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரங்களில், பெரிய காண்டா மணிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. சிறிஸ்தவ தேவாலய மணிகள் பூசைகளை அறிவிப்பதற்கு மட்டு மல்லாமல் சாவு மன வினை போன்ற சமூக நிகழ்ச்சிகளையும் எடுத்தியம்ப பயன்படுதல் மரபா கும். பண்டைய அரசர்கள் தங்கள் அரண்மனை முன்றலிற் காண்டா பணிகளை நிறுவியிருந்தனர். சோழ pair 67 g)16 - அத்தாணி மண்டப வாயிலிலுள்ள காண்டாமணியைக் கொம்பினல் அடித்து நீதிகேட்ட பசுவின் கதையைக் கேட்டிருப்பீர் கள். கன்று தேர்க்காலிடைப்பட்டு நசுங்கி இறந்ததுபற்றி மன்ன னுக்கு முறையீடுசெய்ய மணியடித் A历剑 [...] éir is
மணியோனச சில மைல் வட் டத்திலுள்ள ஊர்கள் எல்லாவற் றிற்கும் கேட்கக்கூடியதாக இருக் கும். இதனல் மணியோசை கேட் கும் சொற்பநேரமாவது கோவி
ss† ஆதிக்கம் ஊ ரெங்கும் கோலோச்சுகிறது! மணிகளில் நாதமெழுப்ப இரு முறைகள்
கையாளப்படுகின்றன. முதலாவது மணியின் நாக்கை இழுத்து மணி யுடன் அடிப்பது. மற்றது மணி யின் முடியில் இருக்கும் கயிற்றி
ஞல் மணியை இழுத்து நாக்கைத் தட்டவைப்பது. ஈழத்து இந்துக் கோவில்களிலுள்ள மணிகள் அவ் வளவு பெரியனவல்ல. எனவே மணியை இழுத்து நாக்கைத் தட்ட வைப்பது இங்கு பெரும்பாலும் கையாளப்படும் முறையாகும். பிர மாண்டமான மணிகளில் இம் முறை வில்லங்கம். எனவே நாக்கை இழுத்து மணியைத் தட்டும் முறை அவற்றிற்குப் பொருந்தும். நடுத் தர மணிகளுக்கு முதல்முறைத" ன்
நல்லது. ஏனெனில் மணியின் சடத்துவம் (Inertia) அடிப்பதில் சீரான நேர இடைவெளியை
உண்டாக்கிக் கண்டபடி அடிபடு வதைக் கட்டுப்படுத்துகிறது.
மணியோசையின் சிறப் பு மணியை வார்க்க எடுத்துக் கொண்ட கவனத்தில் தங்கியிருக் கிறது. இசை பிசகாத ஒசைச் சிறப்புள்ள மணிகளை வார்ப்பதில் தென்னிந்திய ஸ்தபதிகள் கை தேர்ந்தவர்கள். இந்தக் கலை, மரபு
வழிவந்த கலையாகும். ஈழத்திலும்
கோவில் மணிகள் வார்க்கப்படு கின்றனவா என்று தெரியவில்லை. மணி வார்ப்பதற்கு உலோகவியல் ( Metallurgy) நெளிவு, சுளிவுகள் தெரிந்திருக்க வேண்டும். சில குறைந்தபட்ச தொழில்நுட்ப உத்திகளைத் தெரிந்திருக்கவேண் டும். மணிகளின் தொனிகளைக் கட்டுப்படுத்தவும், வார்க்கப்பட்ட பின்பு தொனியைச் சீர்செய்வதற் கும் ஒரளவு ஒலியியல் (Accoustics) அறிவும் அவசியமாகிறது.
அப்படியென்ன ஒலி பியல் மணியோசையில் இருக்கிறதென்று கேட்கத் தோன்றுகிறதா? இங்கி

Page 8
2
லாந்திலுள்ள பல தேவாலயங் களின் மணிகளைப்பற்றி ஆராய்ந் தவர் சீமான் இரெலி (Lord Raleigh) 67 657 g9yb 696657 Göf. இவரின் ஆய்வுகளின்படி, நாதம் எழுப்பும்பொழுது மணியின் வட்ட வடிவான வாய் நீள்வட்டமாக (Ellipse) மாறித் திரும்பவும் வட்ட மாக மாறி அதிர்வுகளை உலோகத்
தில் எழுப்புகிறதாம். இந்த அதிர்வு
கள் அயலிலுள்ள காற்றில் அமுக்க அலைகளை உண்டாக்குகிறது. இவ் அமுக்க வேறுபாடு காற்றினூடாக பரவி ஊர் முழுவதும் கேட்கிறது. வட்டமான வாய், நீள்வட்டமாகி பின்னர் திரும்பவும் வட்டமாக மாற எடுக்கும் நேர இடைவெளி ஆவர்த்தனம் (Period) எனப்படும். ஒரு செக்கனுக்கு எத்தனை தடவை மணியின் வாய் இப்படி வட்டத்தி லிருந்து நீள்வட்டம் சென்று வட் டத்திற்கு மீளும் என்பதை அதிர் வெண் (Freguency) என்று குறிப் பிடுவோம். இந்த அதிர்வுகள் மணியின் அளவு, அமைப்பு, உலோ கத்தின் மீள் இயல்பு (Elasticity) என்பனவற்றில் அடங்கும். ஒவ் வொரு மணிக்கும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் இயல்பாகவே அமை யும். ஒரு அண்ணளவாக செக்க னுக்கு 1000 அதிர்வெண்ணுக இருக்கும்.
மணியின் சுருதி சுத்தம் அதன் சிறப்பாகும். சில மணிகளின் சுருதியில் பிசிறு ஏற்பட்டு விசும் பல் ஒலி எழுப்புவதும் உண்டு. இது எப்படி உண்டாகிறது?
நாக்கு மணியில் அடிக்கும் பொழுது எழும் அதிர்வுகள் ஒரே அதிர்வெண் மட்டும் கொண்டு இருப்பதில்லை. மணிக்கு இயல்பாக
அமைந்த அதிர்வெண் வரிசையில் மணியின் கம்பீர ஒலி அமைய அத்துடன் அவ் அதிர்வெண்ணின் இரண்டு மடங்கான், மூன்று நான்கு மடங்கான பரிவார அதிர்வு களும் ஏற்படுகின்றன. இவற்றை Guofið (og? Gof? (Oventones ) GT6ör gpy அழைக்கிருர்கள். மணியின் பெரிய " டாங் " ஓசையைத் தொடர்ந்து மெல்லிய துணை ஒலிகளும் உண்டா வதை அவதானித்திருப்பீர்கள் என்ன ? அவதானிக்கவில்லையாபரவாயில்லை அடுத்தமுறை மணி அடிக்கும்பொழுது கிட்ட நின்று அவதானியுங்கள்.
மணியின் அமைப்புச் சீராக இல்லாவிடின், மணிக்குரிய அடிப் படை அதிர்வுகளைவிட, கணிச மான அளவு துணை அதிர்வுகளும் நுளைந்துவிடுகின்றன. இவ்வதிர்வு எண்கள் ஒன்றிற்கொன்று அண்மை
யாக அமைந்துவிட்டால், மணிக்கு
விசும்பல் அல்லது அடிப்பு (Beat) ஏற்படுவதுண்டு. சமகாலத்தில் ஒன்றிற்கொன்று அண்மையாக உள்ள அதிர்வெண்களில் ஒலிகள் எழும்பும்பொழுது அடிப்பு விட்டு விட்டுக் கேட்கும். இந்த அடிப்பி ல்ை மணியின் கம்பீர " டாங்" ஒலி தணிந்து மற்றைய துணை ஒலிகளுடன் சேர்ந்து விசும்பல் உண்டாகிறது. இந்த அடிப்பின் ஆவர்த்தனம் அதிர்வெண்களின் வித்தியாசத்திற்கு அமைய இருக் கும். ஒரு சீரான அதிர்வெண்ணில் ஒலிக்கும் " டாங் ' என்ற இயல் பான நாதத்தின் செறிவு இதனல் குறைந்துவிடும்.
மணி அடிக்கும்பொழுது மணி யின் சில குறிப்பிட்ட இடங்கள் அசைவற்ற ஓய்வு நிலையிலிருக்கும்

இத்தகைய இடங்களைக் கணுக்கள் (Nodes) என்று குறிப்பிடுவார்கள். தட்டிய மணியில் கைவைத்தால் அதிர்வை உணர்ந்துகொள்ளலாம். ஆனல் நுண்ணிய கருவிகளின் மூலமாக ஆராய்ந்தால், சில குறிப் பிட்ட இடங்களில் மட்டும் அதிர்வு இல்லாமல் இருக்கும். கணுக்கள், கணு உச்ச நெடுங்கோடுகளும் (Nodal Meridian) agp alli as GZ5 h ( Nodal Circles) Fjög såg ub இடங்களிலமையும். உச்ச நெடுங் கோடாவது மணி வாயிலிருந்து முடிக்குச் செல்லும் கோடுகளா கும், கணுவிட்டங்கள் எனப்படு வன முடியிலிருந்து வாய்வரை குறிப்பிட்ட இடைவெளியில் அமைந்த வட்டங்களாகும். நாக்கு மணியிற் படும் இடத்தைப் பொறுத்து இந்தக் கணுக்கள் அமையும். இத்தகைய கணுக்கள் தவிர மற்றைய இடங்களிற் தொட்டால் மணியின் அதிர்வுக்கு இடைஞ்சல் உண்டாகி மணியின் சத்தம் தணிக்கப்படும். VM
மணியின் தொனி சுத்தமாக இல்லாவிடின், தகுந்த இடங்களில் அராவி தொணியை உயர்த்தலாம்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்த சீமான் றலி, மணியின் கூம்பு" அமைப்புப் பற்றி எதுவித திருத்த முங் கூறவில்லை. மணியின் கூம்பு (Conical) அமைப்பு அதன் நாதத்தை நன்ருகத் திருத்துகிறது என்று ஸ்தபதிகள் நம்புகின்றனர்.
மணி வார்ப்பதற்குரிய உலோ கக் கலவை 75 சத விகிதம் செப் பினலானது. மிகுதி 25 சத விகி தத்திற்கு நாகம் (Zine) கலக்கப் படுகிறது. சிறிய அளவில் வேறு
உலோகங்களும் கலக்கப்படலாம். இந்தக் கலவையை உருகுநிலைக்குக் கொண்டுவந்தபின்பு அச்சுகளில்
ஊற்றவேண்டும்.
அச்சு மணியின் தோற்றத்திற் கமைய மண்ணினுற் செய்யப்படு கிறது. அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடியது மண், அச்சின் +ள்ளுக்கு விசேசமாகத் தயாரிக் கப்பட்ட மெழுகினல் நிரவிச் சீரான அச்சை உண்டாக்குகிறர் கள். இம் மெழுகு குங்கிலியம்,
இ லு ப் பெண் ணை போன்ற
க ல  ைவயை கொதிநிலைக்குக் கொண்டுவந்து தயாரிக்கப்படு கிறது. எனவே மேலுக்கும் உள் ளுக்கும் . மண்ணினுற் செய்த அச்சின் நடுவில் மணிபோன்ற வடிவத்துடன் மெழுகு அச்சிற்குள்
அடைந்துகிடக்கிறது. பின் பு அச் சைச் சுற்றி சூள்மூட்டி எரிக்கிருர்கள். அப் பொழுது
மெழுகு உருகி அதற்குரிய துவா ரங்கள் வழியாக வடிந்துவிடும். எஞ்சுவது உறுதிவாய்ந்த அச்சா கும். இவ் அச்சிற்குள் வெண்கலக் குழம்பு வார்க்கப்படுகிறது. பின் କୋt if ஒரு கிழமை ஆறவிட்டு, அச்சை உடைத்து மணி வார்ப்பை எடுக்கிருர்கள். இதன் பின்ன்ர் மணியைச் சீராக அராவி இழுத் தடிக்கும் கொழுக்கு பூட்டுகிறர் கள். இதன்பின்னர் மணியைத் தொங்கவிடுவதற்கு அச்சுலக்கை யும் பொருத்தப்படுகிறது. நாக்கும்
பொருத்தியபின் மணி பூசை புனஸ்காரங்களுடன் மணிக்கூட் டுக் கோபுரத்துள் ஏற்றப்படு
கிறது.
மணியின் தொனி இனிமை, கம்பீரம் மணியின் அளவையும்

Page 9
14
உலோகத்தின் தன்மையையும் பொறுத்திருக்கிறது. ம ணி யின் அளவுகள் மரபுவழியாக வரை யறுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படிக் குத்திமுறிந்து ஏன் மணி செய்கிறர்கள் ? என்ன செய்வது, உலகத்திற் செய்யப் படும் முயற்சிகள் எல்லாம் எங்க ளு  ைடய அனுமதியுடன்தான் நடைபெறுகின்றனவா ? அவரவர் விரும்பியபடி செய்கிருர்கள். நா க் கள் என்னசெய்வது? பாருங்கள், ஒருத்தன் பல ஆயிரம் செல வழித்து மணி செய்கிருன். இன் ஞெருத்தன் பல லட்சம் செல வழித்துப் படம் எடுக்கிருன். பாவம், மணி செய்பவர்கள்.
விட்டுவிடுங்கள்.
மனம் அமைதியாக ஒன்றியிருக்
கும் ஒரு அழகான மாலைப்பொழுதில் கோவில் மணியோசையை உன்னிப் பாக க் கவனித்திருக்கிறீர்களா ? கூர்மையான உணர்வுள்ள கவிஞர் கள் பலர் மணியோசையைப்பற்றித் தங்கள் பாடல்களில் எடுத்தாண் டிருக்கிருர்கள். உலோகத்தின் அதிர் வினுல் அயலிலுள்ள காற்றின் அமுக்
3.
பவளமல்லிகை போன்ற சில வகைப் பூக்கள் இரவில் பூக்கின் றன.இவற்றிற்கு இரவின் தனிமை யில் மலரும்படி கிசுகிசுப்பது யார் ? காலையில் மலரும் தாமரை போன்ற பூக்களுக்குச் சூரியனின் வரவைக் கட்டியங்கூறி, திருப் பள்ளியெழுச்சி பாடுவது யாராய் இருக்கும்? நேரத்தை அனுசரித்து
கம் ஏறியிறங்குகிறது இதனுல் எழும் ஒலியலைகள் எங்கள் உள்ளத்தையும் ஊடுருவுகின்றன.
இந்த ஒலியின்பத்தை மணிவாச hy,
"சொல்லிய லாதொரு தூமணி
யோசை சுவைதரு மாகாதே"
என்று திருவாசகத்தில் குறிப்பீடு கிருர். 'சொல்லப் பயன்படுத்தாமல், எழுகின்ற தூய மணியோசையின் சுவை" என்பது இவ் வரிகளின் பொருளாகும். மணியோசை எந்தச் சொற்களையும், பயன்படுத்தாமல், உள்ளடக்காமல் ஒலிக்கிறது என்ற லும் மணியடித்து ஓய்ந்தபின்னரும் அதன் கார்வை மட்டும் தேயாமல் மனத்துள் நிறைகிறது. இப்படிப் பட்ட தொரு உணர்வினத்தான் "சத்தத்தினுள்ளே சதாசிவங் காட் டிச் சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவாய் அப்பா லுக் கப்பாலாய்" என்று விநாயகர் அகவலில் குறிப்பிடுகிறர்களா? தெரி யது.
பூத்துக்குலுங்கும் பருவம்
அதற்குத் தகுந்தாற்போல் பூத்துக் குலுங்க எந்தக் கடியாரத்தைப் பூமரங்கள் கட்டியிருக்கின்றன?
இப்படியாக நாளாந்த நேர மாற் றத்தை உணர்ந்து மொட்டாகி, விரியும் பூக்களைப்போலவே, தாவ ரங்கள் கோடை, மாரி, முன்பணி, பின்பணி என்று எல்லாப் பருவ மாற்றங்களைத் "தெரிந்து" அதற்

கேற்பப் பூத்துக் காய்க்கின்றன. சிலவகைப் பழமரங்கள் சில குறிப் பிட்ட மாதங்களிற்தான் பழம் தருகின்றன. யாழ்ப்பாண முருங் கைக் காய்கள் தை, மாசி மாதங் களில் பெருவாரியாகக் கொழும் புக்கு வந்திறங்குகின்றன. இக் காலத்தில் முருங்கைக்காய் விலை சரிகிறது. வைகாசி, ஆனி மாதங் களிற் கறுத்தைக்கொழும்பான் மாம்பழங்கள் பெட்டி, சாக்கு களில் உட்கார்ந்து யாழ்தேவிப் பயணஞ்செய்கின்றன. கறுத்தைக் கொழும்பான் பழங்களை உருசி பார்த்தவர்கள் மற்ற மாதங்களி லும் இவை பெருவாரியாகக்
s
கச்சிதமாக நடைபெறுகின்றன. அங்கு பருவ மாற்றங்களின் வெளிப்பாடு அமர்க்களமாகவே அமையும். இலையுதிர்காலத்தில் பற்றறுக்கும் துறவிபோல பழுத்த இலைகளைச் சொரியும் மரங்கள் மொட்டையாக நட்டுக்கொண்டு நிற்கின்றன. பனி விழும்பொழுது உயிருறைந்து வசந்தத்தின் வரவை நோக்கி ஏங்கிநிற்கின்றன. கொஞ்
சம் கொஞ்சமாகச் சூடேறி இள வேனிற் காலம் வருகிறபொழுது உயிர் சிலிர்த்து, தளிர் எறிந்து ஆவலாகக் காற்றுடன் கலகலக் கின்றன. இப்படியாகக் குளிர் நாடுகளிற் பருவ மாற்றங்கள்
* பருவ மாற்றங்களையும், நேர மாற்றங்களையும் எப்படித் | தாவரங்கள் அறிகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆவல் இல்லையா ? பனி விழும்பொழுது மொட்டை யாக நட்டுக்கொண்டு உயிருறைந்து நிற்கும் மரங்கள் இள வேனிலில் உயிர் சிலிர்த்து, தளிர் எறிந்து காற்றுடன் கல
கலப்பைச் சல்லாபிக்கின்றன."
கிடைக்காதா என்று அங்கலாய்ப் பது உண்டு.
பருவமாற்றச் சுழற்சியில் உற் சாகமாக ஈடுபட்டு, அந்தந்த மாதங்களிற் காய்த்துக்கொட்டும் கனிமரங்கள் u (35 of T 1ši s h பார்த்தா மாதம், திகதி திதிகளை அறிகின்றன. பைடோகுரோம் என்ற நிற மூர்த்தமே இந்தப் பருவமாற்றம், நாளாந்த பகல் - இரவு மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்பத் தாவர இயக்கங் களை ஊக்குவித்தும், கட்டுப்படுத்தி யும் வருகின்றது. வட, தென் துருவங்களுக்கு அண்மையிலுள்ள குளிர்நாடுகளில் பருவமாற்றங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு
தமிழ்ப் படங்கள் மாதிரி ஆர்ப் பாட்டமாகவும், நாடகத்தன்மை யுடனும் நடைபெறுகின்றன. எங் கள் நாட்டில் பருவமாற்றம் அதிக மான புறக்காட்சி வேறுபாடுகளை உண்டாக்காமல் egy LDAFL-ái és Lor கவே நடைபெறுகிறது.
பருவ மாற்றங்களையும், நேர மாற்றங்களையும் தாவரங்கள் எப் படி அறிகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள உங்களுக்குக் கொஞ்சமும் ஆவலில்லையா? சரி, சரி. அப்படியாயின் இராஜராஜ சோழன் திரைப்படத்தை அரசாங் கத் திரைப்படக் கூட்டுத்தாபனம் இங்கு திரையிடப்போகிறது என்ற செய்தி பரவாயில்லையா : மேலே

Page 10
16
வாசித்துக்கொண்டு சென் ரு ல் வேறும் பல உருசிகரமான செய்தி கள் அகப்படும்.
மாற்ற ம் அடையும்பொழுது அதற்கேற்பப் பகல் - இரவு நேரங்களின் அளவும் மாறுதலடைகிறது. பனி யுறை காலத்தில் நீண்ட இரவும், குறுகிய பகலுமாக அமைகிறது. கோடை காலத்தில் நீண்ட பகலும் குறுகிய இரவு மாக மாறுதலடைகிறது. இந்தப் பகல்- இரவு நேர வேறு பாடுகளை எப்படித் துல்லியமாக அளவிட்டு, அ த நீற் கே ந் ப ப் பருவங்களை அறிகின்றன என்ற கேள்வி எழுகிறது. பருவங்களை அறிவதுமட்டுமல்ல அதற்கேற்பத் தங்களது வளர்ச்சியை வரை யறைப்படுத்தி, கட்டுப்படுத்தவும் தாவரங்களால் முடிகிறது. குளிர் நாடுகளிற் பகல - இரவு நேரங் களில் வேறுபாடுகள் மிகுதியாக உண்டு. இங்கிலாந்திற் பனி காலத் தில் பகல் 9 மணித்தியாலத்திற் குக் குறுகுகிறது. இரவு 15 மணித்தியாலமாக நீடிக்கிறது. இதேபோல் வேனிற் காலத்திற் 15 மணித்தியாலப் பகலும், 9 மணித்தியால இரவும் வருகிறது. இதஞற்தான் போலும் அந்த நாடு களில் தாவரங்கள் இயற்கைப் பருவச் சுழற்சியை மிகையாகவே எடுத்துக்காட்டுகிறது. நாட்டில் இந்தப் பகல் - இரவு வேறுபாடு ஒரு மணியளவில் வேறு படுகிறது. இதஞல் இங்குள்ள தாவரங்கள் (ஈழத்திற்கு இயற்கை யான தாவரங்கள்) பருவ மாறு தலை அதிகம் வெளிப்படையாகக் காட்டுவதில்லை.
பருவகாலங்கள்
எ ங் க ள்
எ ல் லாத் தாவரங்களிலும் Søflu6007 fi9psår (Light Sensitive) fap yeri šis iš 5 6ir ( Pigments) உண்டு. இந்த ஒளியுணர்திறன் மூர்த்தத்திற்கு பைடோகுரோம் என்று பெயர். சிலவகைத் தாவ ரங்கள் நாளாந்த இரவு - பகல்
மாற்றங்களின் பாதிப்புக்குட்பட்டு
பகலிலோ, இரவிலோ, பின்னே ரத்திலோ பூக்கின்றன. வேறு சில வகைத் தாவரங்கள் நாளாந்த ஒளி வேறுபாடுகளால் பாதிக்கப் படாமல் கிழமை வேறுபாடுகளைத் தூய்மையாக உணர்ந்து அதற் கேற்ப வளர்ச்சிகளையும், பூத்தல், காய்த்தலையும் கட்டுப்படுத்துகின் றன. கனிமரங்கள் பல மாத இடைவெளியிலுள்ள பகல் - இரவு நேர அளவு வேறு பா டு களை உணர்ந்து அதற்கேற்பக் காய்க் கின்றன. இந்த நிகழ்ச்சிகளை ஒட்டு மொத்தமாகத் தாவரங்களின் SI6lfi goff5568r Ld (Photoperiodism) என்று குறிப்பிடலாம். பைடோ குரோம் என்ற மூர்த்தம் ஒளியை உணரும் திறன் படைத்தது என முன்னர் குறிப்பிட்டோம். ஒளி என்று குறிப்பிடுவது சூரிய ஒளியை யாகும். சூரிய ஒளியானது ஏழு நிறங்கள் கொண்ட கூட்டு ஒளிக் கற்றையாகும். ஏழு நிறங்களாகப் பகுத்தபின் அதை நிறமாலை
(Spectrum) என்று குறிப்பிடலாம்.
இந்த நிறம்ாலையில் ஊதா, நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்பன கண்ணுக்குப் புலப்படுவன. புற ஊதா என்பது கண்ணுக்குப் புலப்படா ஒளிக்
கதிராகும். வெவ்வேறு நிற ஒளிக்
கதிர்களில் பரிசோதனை செய்யப் பட்டபொழுது, சிவப்பு ஒளிக் கதிர்கள்தான் தாவரங்களிற் பண்

வளர்ச்சி, சுழற்சிகளைக் கட்டுப் படுத்துகின்றன என்று தெரியவந் தது. சிவப்பு ஒளிக்கதிர்கள் பூப் பதைக் கட்டுப்படுத்துகிறது, தண்டு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, விதை முளைத்தலைத் தூண்டுகிறது. புறச் சிவப்பு ஒளிக்கதிரில் விதை கள் முளைப்பது தடுக்கப்பட்டது என்றுந் தெரியவந்தது. எனவே சிறிய ஒளிக்கதிர் வித்தியாசமும் தாவரங்களில் மாற்றமுண்டு பண்ண முடியும்.
இவற்றிலிருந்து தா வ ர ங் களின் பருவ மாற்ற ங் களை செயற்கை ஒளியைச் செலுத்து வதனல் கட்டுப்படுத்தலாம். அல் லது மாற்றலாம் எனத் தெளிவா கிறது. குறுகிய இரவுநேரமுள்ள கோடையில் பூக்கும் பார்லியை, குளிர்ப் பருவத்தில் நீண்ட இரவில் சிறிது நேரம் செயற்கையாக வெளிச்சங் கொடுப்பதன்மூலம் குளிர்காலத்திலும் பூக்கச்செய்ய லாம் என விஞ்ஞானிகள் கண்ட னர். ஆனல் இதன் மறுதலை சரிப் படுவதில்லை. அதாவது நீண்ட பகற்பொழுதுள்ள கோடையில் தாவரங்களைச் செயற்கையாக இருட்டிற் கொஞ்சநேரம் வைத்
17
தால் அது எவ்வித மாற்றத்தை யும் உண்டாக்கவில்லை.
பைடோ குரோமைத் தனியா கப் பிரித்து எடுக்கப்பட்டபின்பு
அதை ஒரு நொதியம் (Enzyme)
என்று விஞ்ஞானிகள் கருதுகின்ற னர். இவை ஒளிக்கதிர்களினல் மிகவும் நுட்பமாகப் பாதிக்கப்படு கின்றன. ஒளியின் நிறமாற்றத்தை யும் இவை உணர்ந்துகொள்கின் றன. பைடோகுரோம் பற்றி ஆராய்ச்சிகள் நடந்தவண்ணமிருக் கின்றன. இதுபற்றி மேலும் விளங் கிஞல் ஒருவேளை தாவரங்களின் வளர்ச்சி, பருவ மாற்றங்கள் போன்றவற்றை நன்ருகக் கட்டுப் படுத்தமுடியும். அப்படியாஞல் பூத்தல், காய்த்தல் போன்ற பயன் தரு கட்டங்களில் அவற்றைத் தூண்டிவிடுதல் சாத்தியமாகும். எல்லா மாதங்களிலும் கறுத்தக் கொழும்பான் கிடைக்குமாயின் அதன் மதிப்பும் விழுந்துவிடும். ஆனல் அப்படிச் செய்வதற்குச் செயற்கை வெளிச்சக் கட்டுப்பாட் டிஞல் மட்டும் இதைச் சாதிப்பது மிகுந்த பொருட்செலவான முயற்சியாகும். ... "
4. லூயி பாஸ்டரும் அவரது "புளித்த’ ஆய்வுகளும்.
லூயி பாஸ்டர் (1822-1895) என்ற பிரஞ்சு விஞ்ஞான மேதை தனது ஆற்றலையும், அறிவையும் பிரஞ்சு நாட்டின் பாரம்பரிய
தொழில்களை நவீனப்படுத்துவதிற்
செலவழித்தார். இன்று பாஸ்ட soaosivt". Lumso (Pasteurised milk) என்று நாம் டிப்போக்களில் வாங் கும் பால் பாஸ்டரின் முறையினல்
நுண்ணுயிர்களைக் கொன்ற பின் கிடைக்கும் பாதுகாப்பான பாலா கும். பாஸ்டரின் பெயரால் நுண் ணுயிர்கள் ஆய்வுகளுக்கென்று ஒரு தாபனம் பிரான்ஸ் நாட்டில்
நிறுவப்பட்டு அவரின் பணிகளைத்
தொடர்ந்து செய்துகொண்டு வரு கிறது. பிரஞ்சு மக்களின் உள்ளத் தில் ஒரு உன்னத ஸ்தானத்தை

Page 11
J8
வகிக்கும் பாஸ்டர், தனது நாட் டையும், மக்களையும் நேசித்தார். பிரான்சின் ஒவ்வொரு நகரங்களி லும் இவரது ஞாபகார்த்தமாக று பாஸ்டர் அதாவது பாஸ்டர் தெரு என்று ஒரு சாலைக்குப் பெயர் வைத் திருப் பார்கள். பிரான்சு தேசம் எத்தனையோ பெரிய விஞ்ஞான மேதைகளை உருவாக்கியிருக்கிறது என்ருலும் பாஸ்டரும், மடம் கியூரியும் மட் டுமே தேசிய மரியாதைக்குரிய விஞ்ஞானிகளாகக் கணிக்கப்படு கின்றனர்.
எனத் தெரிந்து அவற்றைக் கட் டுப்படுத்தத் தடுப்பு ஊசி, ஆன்டி செப்ரிக் தைலங்கள், கொதிக்க வைத்து நுண்ணுயிர்களை அழித்தல் (Sterilization ) Gurt Görp u Gavau 6M G5 நுட்பங்களை மருத்துவத்திற் புகுத் தியவர் பாஸ்டர். இதஞல் இன்று பொதுச் சுகாதாரத்தில் உலகம் வியக்கத்தக்க முன்னேற்றமடைந்
துள்ளது. வாந்திபேதி, பிளேக், அம்மை, சின்னமுத்து, டிப்தீரியா, றேபிஸ், இளம்பிள்ளை வாதம்
என்று நூ ற் று க் க ண க் கா ன தொற்றுநோய்களை இன்று கட்டுப்
* பிரான்சு நாட்டின் தேசிய விஞ்ஞானியாக லூயி பாஸ்டர் மதிக்கப்படுகிறர். பிரான்சு நாட்டுப் பாரம்பரிய தொழில்களான உவைன் தயாரித்தல், வெண்ணெய் தயாரித்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், கால்நடை பராமரிப்பு ஆகிய வேளாண்மை சார்ந்த துறைகளை இவரது ஆய்வுகள் நவீனப்படுத்தின. * புளித்துப்" போன ஆராய்ச்சியின் தந்தை பாஸ்டர்! இந்த 'நொதித்தல் ஆய்வு” மூலம் உணவு பதனிடுதல், பொதுச்சுகாதாரம் ஆகிய துறைகளில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படுத்தியவர்."
லூயி பாஸ்டரின் ஆய்வுகள் எல்லாம் நேரடியாக ஒரு குறிப் பிட்ட நடைமுறைப் பிரச்சனை யைத் தீர்க்க நடத்தப்பட்டன. அவருடைய கண்டுபிடிப்புக்கள் இன்று உணவு ப த னி டு த ல், தொற்றுநோய்த் தடுப்பு ஆகிய துறைகளில் முழுவேகத்துடன் பிர யோகிக்கப்படுகின்றன.
பாஸ்டருக்கு முன்பு நுண் ணுயிர்கள் (பக்ரீடியா) பற்றி ஒரு வரும் அறிந்திருக்கவில்லை. அவருக் குப்பின், நுண்ணுயிர் பற்றி ஆரா யும் ஒரு புதிய துறை Bacteriology என்ற பெயருடன் விருத்தியா யிற்று. பல தொற்றுநோய்களுக் கும் நுண்ணுயிர்களே காரணம்
படுத்தி வைத்திருக்கிருேம் என்ருல் அதற்குப் பாஸ்டருக்கு நன்றி சொல்லவேண்டும். இதேபோல உவைன் தயாரிப்பு. கால்நடை நோய் தடுப்பு பட்டுப்பூச்சி வளர்ப்பு உணவு பதனிடுதல் போன்ற வேளாண்மை சார்ந்த தொழில்களின் விருத்தி பாஸ்ட ரின் ஆய்வுகளின் நேரடிப் பலா பலணுகும்.
பிரான்சு நாட்டின் பெயர் போன பாரம்பரிய தொழில் உ  ைவன் த யாரித் த லா கும். உவைன் திராட்சைச் சாற்றைப் புளிக்கவைத்துப் பெறப்படுவது. இந்தப் புளிக்கவைக்கும் அல்லது நொதிக்கும் முறையிலேயே தயிர்

செய்யப்படுகிறது. நொதித்தலை ஆங்கிலத்தில் Fermentation என்று சொல்வார்கள். உவை ஞ) க்கு ம் தொழிலிலுள்ள முக்கிய குறை பாடு, நல்ல உவைனைத் தயாரிக்க வேண்டுமென்ருல் நொதி க்கு ம் அளவைக் கட்டுப்படுத்தவேண் டும். இதற்கு அக்காலத்தில் நொதித்தல் என்ருல் என்ன ? எப் படி அந்த நிகழ்ச்சியைக் கட்டுப் படுத்தலாம் என்று தெரிந்திருக்க வில்லை. நுணுக்கு க்காட்டி மூலம் பாஸ்டர் நொதிக்கும் முறை பற்றி ஆராய்ந்து நொதித்தல் நுண் ணுயிர்களினல் உண்டா கிற து என்று கண்டார். இவற்றைக் கட்டுப்படுத்த வெப்பநிலைக் கட்டுப் பாடு முதலிய பல வழிகள் இருக் கின்றன என்றுங் கண்டார். எனவே நாட்டின் பாரம்பரிய தொழிலை நவீனப்படுத்தியதும் அல்லாமல் நுண்ணுயிர்களைக் கண்டுபிடித்த பெருமையும் இவ ரைச் சாரும்.
பட்டுப்பூச்சித் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டது. நோய் பரவியதால் பட்டுப்பூச்சிகள் இறந் தன. இதுபற்றி ஆராய்ந்த பாஸ் டர், நல்ல முட்டைகளைத் தேர்ந் தெடுத்தல் நோய்க் கட்டுப்பாடு போன்று பட்டுத் தொழிலில் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத் தித் தொழிலைக் காப்பாற்றிஞர்.
19
இதுபோலவே ஐரோப் பிய கால்நடைகளுக்கு ஏற்பட்ட அந் திருக்ஸ் (Anthrax) என்ற கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத் தப் பாஸ்டருக்கு அழைப்பு வந் தது. இந் நோயினுல் பல்லாயிரம் கால்நடைகள் இறந்துபட்டன. இந் நோய்ச்குக் காரணமாயிருந்த நுண்ணுயிரைப் பகுத்து அதைக் கொல்லும் வழியையுங் கண்டறிந் தார்.
பாஸ்டருக்கு முன்பு, விசர் நாய் கடித்தால் கடித்தவருக்கு றே பிஸ் என்ற கொடூர மூளை நோய் வந்து நோயாளி இறப்ப துண்டு. அக்காலத்தில் விசர்நாய்க் கடிக்கு வைத்தியம் செய்வார்கள் கொல்லர்கள் ! கடிவாயில் பழுக் கக் காய்ச்சிய இரும்புத் துண்டைச் செருகுவார்கள். சிவவேளை தீப் புண்ணினல் நோயாளி இறப்பது உண்டு 1 றே பிஸ் நுண்ணுயிரைப் பகுத்தெடுத்து அந்த நோய்க் கிருமியை எதிர்க்கும் சக்தியைத் தோற்றுவிக்கும் ஊசி மருந்தைத் தயாரித்தவர் பாஸ்டர்.
ஒரு மைக்கிரஸ்கோப் அல்லது நுணுக்குக்காட்டி மூலம் இவ்வளவு
பெரிய சாதனைகளை நிகழ்ததிய பாஸ்டரை நாம் வாழ்த்தாமல் இருக்கமுடியாது.
நாடு செழிப்புற்றிருக்கும்பொழுது ஏழையாக இராதே,
அவமானம்.
g5 4ھ
நாடு வறுமையில் நலிந்து பஞ்சப்பட்டிருக்கும்பொழுது செல்வனுக
இராதே, அது அவமானம்.
-கொன் பியூசியஸ்

Page 12
*ஹாய், ஹோய், பபியாச்சிகே பைசிக்கிள்' என்பது ஒரு சிங்கள டைலாப் பாட்டின் வரியாகும். சைக் கிள் பிரபலமாய் வந்த காலத்திற் பெயர் தெரியாத கிராமியக் கவிஞ ரால் இயற்றப்பட்டு இன்றும் மக்க ளால் இசைக்கப்பட்டு வரும் பாடல் இது. மாறிவரும் வாழ்க்கை முறை களை சமூக - பொருளாதாரப் பின் னணியில் படம்பிடித்துக் காட்டும் சித்திரங்கள் பைலாப் பாட்டில் இடம்பெறுவதுண்டு. சிங்கள மக்கள் மத்தியில் "காட்டுப் பாடல்" என்று சொல்லத்தக்களவு பைலா வேர் விட்டிருக்கிறது. மக்களின் கருத்து கள், உணர்ச்சிகளின் எளிமையான வடிகாலாக அமைய தமிழ்பாடல்கள் அவ்வளவு முயற்சிக்கவில்லை. சைக் கிள் பற்றி, தமிழில் குழந்தைப் பாடல்தான் உண்டு.
எரிபொருள் தட்டுப்பாட்டிற்குப் பின்னர் சைக்கிள் மீண்டும் மவுசுக்கு வர எத்தனிக்கிறது. பஸ் கட்டண உயர்வு, கார் வாடகை உயர்வு களுக்குப் பின்னர் மக்கள் பரவலாக சைக்கிள் பயன்படுத்தத் தொடங்கு கின்றனர். இரண்டாவது உலக யுத்த காலத்தில் பிரான்சு நாடு காஜிகளிடம் அகப்பட்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட எரிபொருள் தட்டுப் பாட்டைச் சமாளிக்க மக்கள் பெரு மளவில் சைக்கிள் பயன்படுத்தினர்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் பெல்லாம், கல்லெண்ணெய் வியாபாரிகள், சலவைத் தொழில்
ஹாய், ஹோய் பபியாச்சிகே பைசிக்கிள் எக்கக்
செய்வோர் சைக்கிளைப் பலவிதமாகச் சோடித்து வைத்திருப்பர். முன் மட்காட்டில் உலோக மான், பின் னுக்கு சிவப்புக் கற்கள், றிம் தூசு தட்டக் குஞ்சங்கள், பல மணிகள் என்று சப்பறம் போல் சைக்கிள் சோடிக்கப்படுவதுண்டு. அன்ருடத் தொழிலுக்குத் தேவைப்படுவதால் இப்படி ஆசையோடு 'சாமான் பூட்டி ' வைத்திருப்பதில் அவர்களுக் குப் பெருமை. இன்று இப்படியான சைக்கிள் உற்சாகிகளைக் காணமுடி யாது. ஆளுல் கல்லமுறையில் பராமரிக்கப்படும் ஆஸ்டின கார் களைப் பார்த்தால், சைக்கிள் உற்சாகி களைக் காணுத ஏக்கம் தணியும்.
மேற்கத்திய காகரீகத்துடன் தொடர்புகொண்டபோது, வெள்ளைக் காரர்களிடம் பெற்றுக்கொண்ட சில ஜனரஞ்சகமான மெசின்களுள் சைக்கிள் முதன்மை வகிக்கிறது. இத ஞல் இவற்றைப் பராமரிக்க, சந்திக் குச்சந்திசைக்கிள் கடைகள் தோன்ற லாயின. ஈழத்து மக்களுக்கு மேற் கத்திய காகரீக வசதிகளை உபதே சித்த மெசின்களுள் சைக்கிளும் ஒன்று எனக் குறிப்பிடலாம். அத் துடன் அடிமட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை மக்களிடையே ஊக்கு வித்த பெருமை சைக்கிக்ளச் சாரும், மக்களின் அன்ருட வாழ்க்கைக்கு வேகமூட்டியதும் சைக் கிளா கும். மாடு, வண்டிகள் பொதுவாகவே பாரம் இழுக்கப் பயன்படுத்தப்பட் டன. அத்துடன் திருக்கல் வண்டி யில் செல்லுதல் கரைச்சல் என்ப
 

துடன் ஓரளவு வசதியுள்ளவர் களுக்கே இது கட்டுபடியாயிற்று.
சைக்கிள் 1840ஆம் ஆண்டு, ஸ்கொட்லாந்து தேசத்து கெர்க பற்றிக் மக்மிலன் என்பவரால் பெடல் குதிரை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச் சைக்கிளுச்குச் செயின் இருக்கவில்லை குழந்தைகளின் விளையாட்டுக் கார் போல் பெடலை ஆடுதண்டின்மூல மாக சில்லுக்குத் தொடுத்திருந்தார்.
மனிதன் தனது தசைநார்களின் ஆற்றலினல், இருந்தபடியே தன்னைத் தான் இழுத் துக்கொண்டு செல்லும் மிசின் சைக்கிளாகும். அதாவது பெற்றேல் இல்லாமல் இயங்கக்கூடியது 1 மக் மிலனுக்குப்பின்னர் பிரான்சு காட்டி னர் சிலர் சைக்கிளை விருத்திசெய்ய முயன்றனர். இன்று நாம் காணும் செயின் போட்ட சைக்கிள் றட்ஜ், ஹம்பர் போன்றவர்களின் கை வரிசையாகும். இவற்றை எளிமை யான சைக்கிள் என்று அறிமுகப் படுத்தினர். 1873ஆம் ஆண்டு நான்குபேர் இலண்டனிலிருந்து 690 மைலை, 15 நாட்களில் எளிமையான சைக்கிளில் கடந்தனர். இதன்பின்னர் சைக்கிள் உறுதியாக மக்களின் போக்குவரத்துச் சாதனமாக இடம் பெற்றது. சைக்கிள்களைப் பெருவாரி யாக உற்பத்தி செய்யும் முறைகளும் விருத்திசெய்யப்பட்டன. மக்மிலன்  ைசக் கிளை விருத்திசெய்தாலும்,
சொந்தத்
2.
வியாபார ரீதியாக பலன்பெற்றவர் கள் றலி, றட்ஜ், ஹம்பர் என்போர். ஸ்கொட்லாந்து மக்களுக்கு இது ஒரு பழகிப்போன காரியம். அவர் களில் ஒருவர் தொலைபேசி செய்து அதன் பெருமையை விளக்குவார். வேறு யாராவது அதை வியாபார ரீ தி யா க விருத்திசெய்வார்கள். கடைசியில் அவர்களின் கிளாஸ்கோ மியூசியத்தில் ஒரு தொலைபேசி, ஒரு சைக்கிள் என்று அடுக்கடுக்காக இவை முதலில் செய்யப்பட்டன என்ற பெருமையுடன் கொலு வைக்கப்பட்டிருக்கும்.
இரண்டாவது பொதுத்தேர்த லில் சில வேட்பாளர்கள் சைக்கிளே தமது சின்னமாகத் தேர்ந்தெடுத் தனர். அக்காலத்தில் தெருவில் நிற் கும் ஆலமரங்களில் வழககமாகத் தொங்கும் இளங்கொடி உமல்களே விடப் Luftpuu சைக்கிள்களும் தூக்கிக் கட்டப்பட்டன. சில சைக் கிள்கள் எதிர்த்தரப்பு ஆதரவாளர் களால் இரவோடிரவாக இறக்கப் படுவதுமுண்டு.
முன்பெல்லாம் சைக்கிள்களுக் குத் துவிச்சக்கர வண்டி எனப் பெயர் சூட்டிப பலர் மகிழ்ந்தனர். ஆணுல் இன்று சைக்கிள் நிலைத்து விட்ட பெயராகிவிட்டது.
இச் சிறு கட்டுரை யாராவது ஒருவரைச் சைக்கிள் பற்றி பாட்டுப்
பாட வைக்குமென்ருல் எழுதிய கோக்கம் நிறைவேறியது என மகிழலாம். 0 “ سے{{ b
தனது பிம்பத்தை நீரில் நிலைநாட்டச் சந்திரனுக்கு அவாவில்லை. அந்தப் பிம்பத்தைப் பிடிக்கவேண்டுமென்று குளமும் வில்லங்கப்படுவது கிடையாது. ஒ எவ்வளவு அமைதியாக இருக்கிறது
குளத்துநீர்!
-சென் மொழி

Page 13
வரண்ட வாழ்வை அமுதமாக்கும் நிலத்தடி நீர்-3
- ஆ. நடராசா (பொறியியலாளர், மகாவலி திசைத்திருப்பல் திட்டம்)-
காணி நிலம் வேண்டும்
சென்ற அம்பு இதழில் வட - தாழ் நிலத்தின் நிலவியல், நீர்வள அமைப்பைப்பற்றி விபரிக்கப்பட் ட து
நீர்வளத்தைப் பூரணமாகப் பயன்படுத்த முனையும்பொழுது,
அறியவேண்டும். மக்கள் தொகை யையும் அவர்களுடைய மரபு வழி வந்த வேளாண்மைப் பழக்கவழக் கங்களையும் மனதிற் கொள்ளுதல் வேண்டும். நில வளத் திற்கு ம் சுவாத்தியத்திற்கும் ஏற்ற பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்து, அவ் வகைப் பயிர்களின் நீர்த்தேவை
பட்டு நிலவளத்திற்குகந்த
"நீர்வளம் சேதமாகாமல் செவ்வனே பாவனக்குட்படுத்தப்
பயிர்வகையை
வேளாண்மை
செய்தால் வடமாகாணம் உணவுத் தேவையில் தன்னிறைவு பெறுவது மட்டுமல்லாமல், தேவைக்கு மேலாகவும் உணவு கிடைக்கும் என்று பந்தயம் பிடிப்பேன்! பலர் சிரிப்பார் ஆணுல் சிந்தித்துச் சிலிர்த்தெழும் சிலருக்காகவே எழுதுகிறேன்" என்று நம்பிக்கையூட்டுகிறர் கட்டுரை ஆசிரியர். நம்பிக்கை வரட்சி, நீர் வரட்சியைவிட மோசமாக எம்மைப் பாதிக்கின்றது. எமக்கென வாய்த்த நிலம், தனக்கடியிலுள்ள கற்பாறை, மண்களின் தன்மைகளினுல் நீரைச் சேமிக்கிறது. இந்த நிலநீர்வள இயல்புகளால் எமது இயற்கைக் காட்சிகள், பயிர் பச்சைகள் எல்லாம் உண்டாகின்றன. எமது பொருளாதாரம் வானையும், நிலத்தையும் நம்பிக்கும்பிடுபோடுகின்றது. எனவே, வாழ்க்கையின் ஆணிவேருக்குக் குளிர்ச்சியூட்டும் நில-நீர்வளம் எமக்கு நன்மைதருவதாகுக ! இல்லாவிடினும் நாம் சும்மா விடப்போவதில்லை; நன்மைதரப்பண்ணுவோம் !
- ஆசிரியர் குறிப்பு.
பயன் பெறும் பிரதேசத்தின் பரப்
யையும்
தெரிந்து கொள்ளவேண்
பளவும், அதிற் கமத்தொழிலுக்கு உகந்த நிலப்பரப்பு அப்பரப்பில் ஏற்கனவே வேளாண்மை செய்யப் பட்ட பகுதி என்பனவற்றை மதிப் பீடு செப்யவேண்டும். அப் பிரதே சத்தின் நீர்வளத்தைத் துளைத்து
டும். நிலவளம் என இங்கு குறிப் பிடுவது மண்வாகு அல்லது மண் னின் செழிப்புத்தன்மையாகும். யாழ் ப் பா ன க் + குடாநாட்டில் இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்துடனே வேளாண்மை

23
000‘003'I , 000 oz 1
000 o Ijo IƐ 2 3 ‘8 IgZ8”ぬg 000'009000 og 000 o 2 g62 g og # I0 0.8 % 000 o 00 £000 o ff;000*9.86 g goj; .09 Zoog 000 * 0 0 j; 0 0 0 * #000 o I gZ ỹ8 og09 gozz 000、00g0 0 0 * s;000 o 9 g闵98、阳09 I off 000 * 0 0 g000 o 60 00 ‘08esg'o e0 ỹ8 * I g qaseZanog gjeos@)~ o@sucosoɛɛgẾ943-as - anaog, og hơnto otos@ųjųnn· · * 1991Joops@ņas@@jong, uporționosýgíu)Hņu@g)1Ịso ao giựgs sfî u § © ® on o us lyssning)ąją;usųossung)ą, qÎles 1çogue,gĚqÍárı
(o tsotto iso@Tīriņoș6) voo qo'yeogoșoro qi se um poșHıçıları )
· T @ sepertog)--7.57 (TỪ o power'ı iş919 forms) ș-i lle u9-a qishm uego@@rı gs go § 11ra ‘to plus topų,903 1199 se uønsıdrı no uso @ @ @-7-Trio u r, logo unsaqsi urm
• q htiof) oșơn gorms@sqfuqi se u @ ogjo-a se qe ko ‘q’, Qș@ő feg)o ug ogjo-æ @ę o worm oto)? 415 mn Q& IỆrte u@ (o quaesgì mẹ@19 o 1595 qjhm uego@gț¢ £ € asgs no uqarnegressão @@@@ to tɔn ŋɔ lɔ 1,9 oș@@to) o 1,9 o ry-ita-Tso o 1996) se qismas coqs re[5]
| - 100ogres-n-ıło
o usorgiaeg?goqjaľoogs ų99 rojo) o sĩaeqoko apotņi uđiv; og
· 1,9 o afono unno un 1999 urte ysgf - †
• 1,9 os@@nąf logoqa qooqf-ış • go
*reco--Trīņos Ģē3 se uogog și 7099 H tạo sựeos@gide se score og
o lyoo işi o șog) ș41.gf • I.
qoso us riņi arī ņos ugno
•Isaṁg@rıņoșG) usoe) tạifte uerarı arı与949塔涅塔哈间阳) § 41.gs 1991/qnas Joss 19 ips@song@rı Tako gegn ogro-ı Tako @ qső · Hels
0 3 g ' Z 6 Zol ự Horosło·9. 09 I ’09 I o I (queợgh og 0 & 2 '0293gbebsgsg 0 3 2 * 0 & 6 urnųno forts • e 096 ‘9 I 9416) 1990a og 0 g. I o 689qi logo urısıđi urm • I quos 0$apuys
oặuonto)qızıņus ugi 1960-ırısı 1ợ qoỹ i svogne-i-ziko
sĩ șų (57 goson-Twer, sitno -- re von oqi se us rı sa 6 r. 199 go » ajo qe so -7-Tratarmsmoto (nuo loge ulloro o oqi se 19rısıdrı içe@@degi fillo-arts
· @ 1.gshmsfire af 1991gods) ureg) ilere 1919 qif@ 1993 afges? logo ulloreş) g@ri-ins qø u - -ī n qi rn o so 1ņs-iso-a-n (QĐg) upes ș se u @ @os 109 umų, o oqi sẽ gọormoon too logo-w seus để sẽ · @ af eg se u de -a foșØo af gols saṁg@rıçirminos,

Page 14
&4
இடையிடையே சில கொடிவகைகள்
தென்னை, பனை, மாந்தோட் டம் போன்ற தோப்புக்களிலுள்ள இடைவெளிகளில் இடைநில உப a 600Tay (Inter planted subridiary foodi crips) LuuíñG60 S & G D Espös தாகும். வீடு, வளவுகளிலுள்ள நிலங்களும் நிலத்தடி நீரின் பிர யோகத்தால் பயன்படுத்தப்பட லாம். இவற்றைப்பற்றிய விரி வான ஆய்வை இனிவரும் இதழ் களில் கவனிப்போம்.
பலர் சிரிப்பார்; சிலர் சிந்திப்பார்
வடதாழ் நிலத்தின் பெரும்
பகுதி இன்றும் காடாகவும் குறந் 4560 trurasayub, um buh unt 607 di குடாநாட்டிற்குள் சவர்த்தரவை யாகவும் பயன்பாடின்றி வாழா கிடக்கின்றன. இது தவிர ஏற் கனவே சீர்திருத்தப்பட்ட நில மும், அங்கு இயல்பாக உள்ள நீர் வளமும் சேதமாகாமல் செவ்வனே பாவனைக்கு உட்படுத்தப்பட்டால் இப் பிரதேசம் உணவுத்தேவையில் தன்னிறைவு பெறுவது மட்டுமல் லாமல், நிச்சயமாகத் தேவைக்கு மேலாகவும் உணவு கிடைக்கும் என்று பந்தயம் பிடிப்பேன்! பலர்
சிரிப்பார் - பரவாயில்லை. ஆனல் சிலர் சிந்தித்துச் சிலிர்த்தெழுவார். இந்தச் சிலருக்காகவே இக் கட் டுரைத் தொடர் எழுதப்படுகிறது.
எத்தனையெத்தனை கோடியோ?
வரண்ட பிரதேசத்தின் வடக் குப் பகுதியிலுள்ள சனத்தொகை மதிப்பீட்டை அட்டவணை இரண் டிற் காணலாம். (இது 1971ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டை ஆதாரமாகக்கொண்டது.) இதில் யாழ்ப்பாண மாவட்டம் அதிக சனத்தொகையையும், குறைந்த பரப்பளவு வேளாண்மை செய்யக் கூடிய நிலத்தையும் கொண்ட தாய் இருக்கிறது. மற்றைய வே ளா ன் மை மாவட்டங்கள் இதற்கு எதிர்மாருண தன்மை யைக் காட்டுகின்றன. எனவே யாழ்ப்பாண மாவட்ட முன்னேற் றத்திற்கு தடைபோடும் முக்கிய கா ர னி யா க இத் தன்மை அமைந்துவிட்டது.
ஆகாச கங்கை
அநுரதபுரத்திற்கு மகாவலி நீர் அடுத்த சில ஆண்டுகளிற் கிடைக்கலாம். . புத்தளத்திற்குப்
நம்பிக்கை வரட்சி சமூக வரட்சி ; நிலத்தடிநீர்!
வறளுது, வறளுது 1; பாலைவனம் ஆகிறது! குளப்பள்ள நிலமெல்லாம் பிளந்து கிடக்கிறது! நிலாவரையில் நீர்மட்டம் இறங்கூது இறங்கூது! சுடலைக் குருவி முகட்டிலே அழுகிறது ! நெஞ்சிலே பல்லி அடித்துச் சொல்லுகுது
- "காணிக்கை" கவிதைத்தொகுதி
- தா. இராமலிங்கம்

25
அட்டவணை - 2 மாவட்டம் தற்போதைய 1980ல் ஜனத்தொக்ை
ஜனத்தொகை உத்தேச மதிப்பீடு sunt bhunr 60er uh 704,350 1,000,000 மன்னர் 77,889. 200,000 வவுனியா 95,536 200,000 திரிகோணமலை 19 1889 300,000 புத்தளம் 379,787 500,000
பத்து வருடத்திற் கிடைக்கலாம். திரிகோணமலேக்குத் திண்ணமா கக் கிடைக்கும். ஆஞல் வவுனியா, மன்னர், யாழ்ப்பாணப் பகுதிகள் மகாவலி நீரை நம்பினுல் இலவு காத்த கிளிகளாக ஏமாந்துபோக லாம் ! என்ருலும் கீழ்க்காணும் கணக்கை ஊன்றிக் கவனிப்பவர் கலங்காா ஆகாச கங்கையை
அழைத்துவர முயற்சி செய்வத்ை
விட ஆழ்கிணறுகள் தோண்டிப் பா தா ள கங்கையை மேல் கொணர முயற்சி செய்வார்கள். பகீரதன் போல் பகற் கனவு காணுமல், பம்பு பாக்டரி அமைக்க முயற்சி செய்வார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்ருல் அது எவ்வளவு தான் வில்லங்கம் தந்தபோதிலும் அத் திட்டம் எமக்கு விமோசனம் அளிக்கும் என நாம் நம்பிக்கை கொண்டால் திட்டத்தை நிறை
வேற்ற நிச்சயமான வழிவகைகள் கண்டுபிடிக்கப்படும். இவ்வுண் மையை மனத்திற் கொண்டால் பம்பி செய்ய பாக்டரி ஏற்படுத்து வது சுலபம். பாக்டரி எனக் கூறும் பொழுது பிரமாண்டமான எந் திரங்கள் கொண்ட நவீன பாக் டரியை நான் குறிப்பிடவில்லை. எங்களூர் கொல்லர்,மெக்கானிக்கு களின் அடிமட்ட தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்படும் சின்னஞ்சிறிய ஆளுல் பரவலான பம்பி தயாரிக் கும் திட்டத்தைத்தான் மனதில் கொண்டு இதைச் சொல்கிறேன். இதுபற்றிய விரிவான விளக்கம் பிறிதொரு இதழில் தரப்படும்.
பலர் இந்தக் கட்டுரைத் தொடர் சொல்லும் திட்டங்களைப் பற்றிப் பல்லிசொல்லக்கூடும்.
ஆனல் ஒரு சிலர் இதில் முழு மூச்சாக ஈடுபடுவார்கள் என்பது நிச்சயம்.
சமூகச் சீரமைப்பும் - துரவு புதுப்பித்தலும்
தூர விடக்கூடாது; துரவுகளைத் தோண்டிடுவோம் மண்ணை வளப்படுத்திச் சத்துப் பயிர் விளைப்போம் சத்துப் பயிர் விளைப்போம்; நெத்துப் பரப்பிடுவோம்
- தா. இராமலிங்கம்

Page 15
26
கே. 1967ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்தைப் பாதித்த வெள்ளத் தைப் பற்றி என்ன நினைக்கிறீர் மகுடி யாரே ? ப. எங்கள் "எஞ்சினியர்கள்" பிறதேசத்தில் அணைகட்டு றேர்கள் எ ன் ப  ைத க் காட்டுகிறது.
-சிரித்திரன்
எண்ணிக் கணக்கெடுத்தல்
ஆளுக்கு ஆண்டொன்றிற்கு 320 இருத்தல் அரிசி தேவைப்படு கிறது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஆண்டிற்கு 10 புசல் சாப்பிடும் சாப்பாட்டு இராம்ர் நாம் ஒவ்வொருவரும் ! யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட் டும் 7,000,000 புசல் நெல்லுத் தேவைப்படுகிறது. யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்த்துப் பார்க் கும்பொழுது கீழ்வரும் கணக்கு கள் புலப்படுகின்றன. மொத்த சனத்தொகை 890,000 நெல் வயல்களின் பரப்பளவு
பெரும்போகம் 169,000 ஏக். சிறுபோகம் 26, 000 ஏக்
ஏக்கருக்குச் சராசரியாக 60 புசல் அறுவடை செய்யக்கூடிய தாக இருந்தால் இவ் வயல்களில் 9,700,000 புசல் நெல் விளைவிக் கலாம். வருடத்திய தேவையோ 8,900,000 புசல் மட்டுமேயாகும். எனவே இம் மாவட்டங்கள் தங்கள் தேவைக்கு மேலாகவும் நெல்விளை விக்கலாம். தாவரத்திற்கும் உண்டாம் தாகம்
அடுத்து வடபகுதியிற் பயி ரி டப் படு ம் பயிர் வகைகளில் முக்கியமானவற்றின் தன்மைகள் பற்றி ஆராய்வோம். தற்பொழுது எல்லாவற்றுலும் மிக முக்கியம் ஆனது , நெல். பெரும்பான்மை யான நெல்வகைகள் விதைத்து அறுவடை செய்வதற்கிடையில் குறைந்தது 4 மாதங்கள் தேவைப் படுகிறது. வானம் பாாத்த நெற் செய்கையாயின் 60 அங்குலம் மழை தேவைப்படும். அதுவும் மாதம் முழுவதும் சீராக விட்டு விட்டு மாதம் மும்மாரி என்ற கன க் கி ல் பெய்யவேண்டும். தொடர்ந்து 14 நாட்கள் வரட்சி யைத் தாங்கும் சக்தி நெற் பயிருக்கு இல்லை. நீர்ப்பாச்சனம் ஆயின் ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 5 ஏக்கர் அடிநீர் வேவை. இவற் றைப் பார்க்கும்பொழுது நீர்ப்
-9յնuւգաn ?
கடைத்தீனி வேண்டாம், சத்துணவு உட்கொள்வாய்!
பால் பழங்கள், பணுட்டு, ஒடியற்பிட்டு செவ்வரிசிக் கஞ்சி உயிர்ச் சத்துப் பொருள் யாவும் உண்டி டுறேன் இன்று தொட்டு.
-தா. இராமலிங்கம்

尾
●
ogểuose 1995@segí uasąođì)--
0LYYYL LLLL LLLLLsLLLLL LLL SLLTYTLLLLLLLLLS LLLLLLS LYYSLLLLL YYLLY SL TY0 YK KSLLLL 0K 0LL LLLL KK LLMTY LT YJ S LLLLL KKSLLLLLL LLLLL LLLL L LY SL00S wrote isog)--æ glosses-muoto) oặmpoc),şoog) ipsilogus, quo umızgsடிமுடுகுேærencesspúeseruorer
i og 8) & non so osoɛ,â) son so
•ņ@uas-ı& qs@ışsığı
!bqo也好将耶or子可增心求g。十 so usorși ușș mosgoi dres duresī)ế5 uostko 0 0 1file · ș19 #1quass@fgwsg, og 々"ხდg)七喻g可g- ----quae @sguko 0 1 trọo)do o h 0 gtako ·ş so Iquae @işi o 0 1 qisorgi ugo q Hirmosoɛ ɔdre oștiigi yoqtse g tthko oș (o ç quae @ņık” og IỆ usoņi uș- - șm goeg'...11re 19115 # 1 (po H 0-2-0 g tīko ·ș18 g ș.aeg) gik, og qıloseuriņựgs -宿的曲4299ıssılmfotss@g) - (gọfigsfitsson 1ļoshụsso)qoyo? (oQ場Qg噂5ıssı!infotos@o ɛ - 100 gris-i-Iseo (qī£)-iljoe))a’q’soso? @sofijos go dgi -- maes a ris
o qī uns mos uso �(5) e insegre-i-iko qism ugon (se ipso af nýs ung) recesos)? ựgi aesoqortsko
•qah) legs oorsrwys uș ș a’ qs qa
•qa urig) signs reso qosfîș[5] Hạnko $ $ Oko uogo soos resfîre qì sẽ uo &ượree) &qođi se șes ș.org/seqøgs o giữ le prognoosrooeaeqřoep gori
quo uos Þ -g
ܩܶܟ
in uw legi qio un的qırmıyorținoe) og 역 홍2cm, 的 (77 uzo * s; q ollai g月2窗”。舒 quo uga ç-;49塔哈4图。舒 qi số lươn g-pqøgje) · I upseŭŝuon
qhapus七역nn
~are oqi solumongo-7-7 ușo@ șş eers @& Norings uæ og noe, qeựgnrı qĵojo oqi sẽ giungoại @Ğ sae) 1,907 iso uriņsfile(o) se uere spre soko og oorsidogi o uos qøgngono asalura

Page 16
இயற்கையின் விந்தையான விதை பரப்பும் உத்திகள் சில
--செல்வி சூ சின்னையா -
"பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்
பைங்கிளியார் போற்றி வந்த முள்ளிலவம் பழமே"
இன்றைக்குப் பழு க்கு ம். நாளைக்குப் பழுக்கும் என்று ஒரு இலவம்பழத்தைப் போற்றிப் பாது காத்து வந்த கிளியை ஏமாற்றி விட்டு வெடித்துப் பறந்துவிட்டன அதற்குள்ளிருந்த வி  ைத க ள். காற்றினுற் பரம்பும் விதைகள் இயற்கையிலேயே பெருவாரியாக உண்டாகின்றன. குறிஞ்சா விதை காற்றில் மிதப்பதை அவதானித் திருக்கிருேம். விதையின் நுனியில் பஞ்சாலான மயிர்கள் உண்டு. அதன் அமைப்பு ஆகாயவிமானத் திலிருந்து கீழே குதிக்க உபயோகப் படும் பரகுட் (Parachute) போன் றது. தாவரங்களின் விதைகள் எல்லாம் தாய் மரத்தின் கீழே விழுந்தால் முளைப்பதற்கு நீர், வெளிச்சம், காற்று போன்றவற் றின் நெருக்கடி எழும். அவை களுக்கிடையே போராட்டம் உண் டாகும். அதன் விளைவாக அவ் வகைத் தாவரங்கள் அழிந்து இல்லாமற் போகவுங்கூடும். இவற் றைச் சமாளிப்பதற்குத் தாவரங் கள் பல்வேறு உத்திகளைக் கையாளு கின்றன. அவற்றுள் ஒன்று மேற் கூறிய குறிஞ்சா விதை காற்றில் பரம்பும் முறையாகும். காத்தாடி விதையில் இரண்டு செட்டைகள் உண்டு. காற்றில் உந்தப்பட்டு
-சோமசுந்தரப்புலவர் பாடல்
ஹெலிகாப்டரைப்போல் பறந்து பல மைல்களுக்கப்பால் காற்று நிற்கும்வரை கொண்டு செல்லப் பட்டுக் கீழே விழுந்து முளைக்சின் றது இராவணன் மீசை என்னும் புல்லின் பூந்துணர் கடற்கரையில் உருண்டுருண்டு செல்லும். அப் போது விதைகளைக் கொட்டிக் கொண்டே போகும்.
தெருக்காஞல் நடந்து செல்ப வருக்குக் காலில் நெருஞ்சி முள் தைக்கிறது. "ஐயோ " என்றவர் அதைப் பக்குவமாக எடுத்து வே லியோ ர ம் போட்டுவிட்டுச் செல்கிருர். அது அங்கே கிடந்து முளைக்கிறது. நாமெல்லாம் மாம் பழ த்  ைத ச் சூ ப் பி வி ட் டு க் கொட்டையை விட்டெறிகிருேம் எ ன் ரு ல் மாங்கொட்டையைப் பரப்புகிருேம் என்றே அர்த்தம் காகமொன்று குருவிச்சம் பழத் தைத் தின்ன எத்தனிக்கும்போது அதிலுள்ள பசையினுல் விதை சொண் டி ல் ஒட்டிக்கொள்ளப் பாவம் அந்தக் காகம் பறந்து போய் மரமொன்றில் சிக்காராக இருந்துகொண்டு மரக்கொப்பில் கொட்டையைத் தேய்த்துவிட்டுப் பறந்துபோகிறது. அந்தக் காகம் வண்டென்று எண்ணிக் குண்டு

மணியை ஆவலுடன் தூக்கிக் கொண்டு பின்னர் தனது தவறை உணர்ந்து ஏ மா ற் றத் துட ன் அதைக் கீழே நழுவவிடுகிறது. நாயுருவி போன்ற விதைகள் மாடு, ஆடு போன்ற மேய்ச்சல் மிருகங் களின் தோலில் நைசாகக் கோழு விக்கொண்டு அவற்றின்மேல் அனு மதியில்லாமல் உல்லா சமாக ச் சவாரிசெய்தபின்னர் நிலத்தில் விழுகின்றன. சிலவகைத் தோட் டக் களைகளின் விதைகள் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் ஒட்டிக் கொண்டு வேறு வயல்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.
29
நீர் நிலை களின் கரையில் தென்னமரங்கள் அதிகம் உண்டு. நீரில் விழுந்த தேங்காய் அதன் தும்பிற்குள் அடைபட்ட காற்றி ஞல் இலேசாகி, மிதப்பு விதிக்கு அமைய மிதந்து அலைகளினல் அடிக்கப்பட்டு மறு க  ைர  ைய அடைந்து அங்கே முளைக்கிறது. சில தேங்காய்கள் முளக்குமுன் 2000 மைல்கள் பிரயாணம் செய் கின்றன.
வெடிவலவன் ஒரு துளி நீர் பட்டதும் வெடித்துச் சிதறுகிறது. காசித்தும்பைக்கு ஒரு சிறிய அமுக் கம் போதும் அதை வெடிக்கச் செய்ய.
9 அம்பு" சந்தா விபரம்
வருடத்துக்கு 0-00
Y0LLSMMMSMS SLBSLS MqLASLSMS LSMSMMLMSM SLSkS S SLALLSS qLSqSqASLSS SkSkS SkSkkk LSLS LSLSqTTSLLLLSSSS SLLSLLLAAASS
வருடத்துக்கு 5-00
(இதனை வெட்டி எடுக்கவும்)
சந்தா விண்ணப்பப் படிவம்
· தி sதி ཡབ་མཐོང་ཡས་མས་བཅས་ཐམས་མཁས་མཁས་མཁས་པ་
அம்பு பெயர் : விலாசம் :
இத்துடன் ரூபா. சதம்.
கான காசோலை/காசுக்கட்டளை தபாற்கட்டளை <> Askea»90 abuzx* வருட சந்த்ாவுக்காக அனுப்புகிறேன்.
அனுப்பும் விலாசம் : நிர்வாக ஆசிரியர், "அம்பு, சாகிருக் கல்லூரி, கல்முனை
ஒப்பம்
க்* ^

Page 17
* வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் எத்தனையோ
காலப்போக்கில் மனத்தைவிட்டு அகன்றுவிடுகின்றன. ஆணுல் மின்சக்தியினுல் நினைவுகளை மீண்டும் கிளறிவிடலாம். மூளையின் மேற்பட்டையை மின்வாய் கொண்டு தொட்டபொழுது குழந்
தைப் பிராயத்தில்
நிகழ்ந்து இப்பொழுது நிகழ்ச்சிகளைத் தெளிவாக ஞாபகத்தில் கொண்டுவந்தது."
மறந்த பல
= yèni 3u IT yèn =-
- அ. வயிரவமுர்த்தி, B.Sc.(Cey)-
அறிவின் இருப்பிடம் முளே 'அறிவுடையார் எல்லாம் உடையர், அறிவிலா
என்னுடையரேனும் இலர்.
அறிவு ள் ள வர் எல்லாம் உடையவரென்றும். அறிவில்லா தவர் மற்ற எல்லாம் உடைய வராயிருப்பினும் ஒன்றுமில்லாதவ ராகக் கணிக்கப்படுவாரென்றும் பொய்யா மொழிப் புலவர் கூறு கிருர், உண்மைதான்; இவ்வுலகில் கற்றவர்க்குள்ள பெரு  ைம யும் மதிப்பும் மற்றவர்க்கில்லை. விலங்கு களைப்போன்று உடல் வலிமையால் மட்டும் மனிதன் வல்லமை பெற்ற வனகிவிடடான். மனிதனிடம் மறு விலங்குகளிடம் இல்லாத பகுத்தறிவு என்னும் ஆருவது அறிவு உண்டு. உலகிலே இன்று வியத்தகு அளவில் மனிதன் மேலோங்கியுள்ளான். இவ்வாறு மனிதனின் பெருமைக்கும் மேன்
மைக்கும் காரணமான அறிவு சுடர்விட்டுக் கிளம்பும் இடம் மூளையாகும். மூளை இவ்வாறு
விருத்தியடைந்து இல்லாதிருக்கு மானுல், இன்று பூமியையே ஆக் கிரமித்துக்கொண்டுள்ள மனிதன் என்ற விலங்கு உடல் வலிமை
சிந்தனையும்,
யுள்ள மற்றைய விலங்குகளுடன் போட்டியிடமுடியாமல் எங்கோ ஒரு மூலையில் தள்ளப்பட்டிருக் கலாம் அல்லது அழித்துபோயிருக் கலாம். இம் மூளையின் அபார சக்தியிஞல்தான் மனிதன் விண் ஊர்திகளிற் சென்றும், சந்திரனில் இறங்கியும் தன் சாதனைகளை நிலை நாட்டிஞன். சுருங்கக் கூறின் மனிதன் மனிதனுக இந் நிலையில் வாழ்வதற்குக் காரணம் மூளையே. எனவே இந்த விசித்திரமான அதி முக்கியமான உறுப்பைப்பற்றிச் சிறிது பார்த்தல் சுவையானது.
முளையை ஆராய்கிறது முளை
விஞ்ஞானிகள் எத்தனையோ வியப்புக்களையும், விந்தைகளையுந் துழாவித்துழாவி ஆராய்ந்து அரிய சாகசங்களைப் புரிந்துள்ளார்கள், எனினும் எல்லா ஆராய்ச்சிகட் கும், அறிவுக்கும் காரணகாத்தா வான விந்தையிலும் விந்தையான மூளையைப்பற்றி இற்றை வரை அதிகம் அறிந்தார்களில்லை. மனித மூளையின் இயல்புகளர்ண சுய கற்றறியும் ஆற்ற
லும் ஞாபகசக்தியும் விளங்கிக்
கொள்ளப்படாத புதிர்களாகவே

உள்ளன. இப்போதுதான் சிறிது காலமாக இம் மூளை தன்னைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள் ாது. உலகெங்கும் உள்ள பல ஆய்வுகூடங்களிற் குறிப்பாக மேற் கத்திய நாடுகளில் உளவியலாளர் கள், உயிரியலாளர்கள், பெளதிக வியலாளர்கள், இரசாயனவியலா எார்கள் போன்ருேர் இம் மூளையின் விந்தையான மர்மங்களைத் துப்புத் துலக்குவதில் இறங்கியுள்ளனர்.
ஆராய்ச்சியின் பயன்கள்
இவ்வாராய்ச்சிகள் வெற்றி யளிப்பின் -ஞாபக சக்தி, எண்ணங் கள் உருவாதல், மனிதவுயிர்ப்புத் தன்மை எனபன போன்ற மூளை யின் இயல்புகள் விளங்கப்பெறின் அவற்றின் பயன்கள் அளவிடற்கு அரியனவாகவிருக்கும். மனிதனின் ஞாபக சக்தி, புத் தி நுட்பம் (1ntelligence) போன்றவற்றைச் செயற்கையாகவே அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். மனிதனின் சிந்தனை ஆற்றலைச் செயற்கை முறையில் ஒழுங்குபடுத்தித் திறம் படுத்தலாம். கற்பித்தல் முறை களிற் பெரும் முன்னேற்றங்களைச் செய்யலாம். மனநோய்கள், மூளை சம்பந்தமான நோய்கள் போன்ற வற்ருல் அவதியுறுவோருக்கெல் லாம் திறமையான முறையிற் சிகிச்சை அளிக் கப்படலாம். " விந்தையான, தனக்கென்றுரிய இயல்புகளையெல்லாம் கண்டுபிடிப் பின் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளமாட்டான்" என்று பேராசிரியர் ஸ்கிமிட் (Schmitt) sin gp6(gorf. சிக்கலானது
ஆனல் மிகவும் சிக்கலான மூளையின் ஆராய்ச்சியும் மிகவும்,
மிகவும் சிக்கலானதே. ஒரு மிகவும் திறமையான நவீன எண் கணணி (Computer) கிட்டத்தட்ட 100 கோடி செய்திகளை உள்ளடக்கி  ைவத் து க் கையாளக்கூடியது. ஆனல் மனித மூளை எண்ணிக்கை
யற்ற செய்திகளைச் சேகரித்து வைத்துக் கையாளுந் திறன் மிக்கது. என்னதான் திறமை
படைத்ததென்றலும், எண்கண ணியோ அல்லது வேறு எந்தக் கருவியென்ருலும் மனித மூளை யின் கண்டுபிடிப்புத்தானே. நவீன எண் கணணியைப்போலன்றி மூளை தன்னைத்தானே திருத்தக்கூடியது. சில பகுதி ஏதாவது பழுதடைந்து விட்டால் இன்னெரு பகுதி அவ் வேலையைச் சிலவேளைகளில் தான் ஏற்று நடத்தக்கூடியது. அத்துடன் மூளை எப்போதும் தொடர்ந்து இத யத்தைப்போல் தொழில்புரிகிறது. நம் உடம்பில் இதயம் இரத்தத் தைச் செலுத்தும் ஒரு சாதாரண பம்பியாகவே தொழிற்படுகிறது. ஆனல் மூளையோ, இதயம் உட்பட உடலில் உள்ள எல்லா உறுப்புக் களின் வேலைகளையும் மேற்பார்வை செய்து கட்டுப்படுத்தும் தலைமை யகமாயியங்குகிறது. மனித மூள்ை ஒவ்வொரு கணமும் எத்தனையோ தொழில்களை இச்சை யுடனே அல்லது இச்சையின்றியோ செய் கின்றது. இதயத் துடிப்பு, சுவாச வீதம், உடல் வெப்பநிலை முதலி யன ஒருவித உணர்வுமின்றியே ஒருங்காக மூளையினுல் கட்டுப்படுத் தப்படுகின்றன. ஐம்புலன்களின் ஊடாகவும் வரும் செய்திகளை வாங்கி ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்ப நடவடிக்கைகளையும் மூளை எடுக்கின்றது.

Page 18
32
முனயின் அமைப்பு
மூளை மண்டையோட்டினுள் அமைந்துள்ளது. இளநரைச் சிவப்புநிறமான இவ்வுறுப்பு மனி தனில் கிட்டத்தட்ட 3 இருத்தல் நிறையுடையது. இதன் பிற்கீழ்ப் பகுதியிலிருந்து முண்ணுன் (spinal Cord) கீழ்நோக்கி முள்ளந்தண்டின் ஊடாகச் செல்கிறது. மனித மூளையின் பெரும்பகுதியை ஆக்கிர மித்துக்கொண்டுள்ள பாகம் மூ&ள யம் (Cerebrum) ஆகும். மூளையின் ஆற்றலுக்கெல்லாம் மூளையத்தின் விருத்தியே காரணமாகும். விலங்கு களில் மூளையத்தின் விருத்தி மி வும் குறைவாகவுள்ளது. பறவை கள், சில மீன்கள் போன்றவற்றில் இப் பகுதியே இல்லை. Y - . .
மூளையத்தின் நரை நிறப் பொருளாலான (Grey matter) மேற்பாகம் மூளைய மேற்பட்டை (Cerebral Cortex) arear 6th. இது மனிதனில் மிகவும் 5ւգւն படைந்து பல மடிப்புக்களிஞல் சோனைகளாகப் பிரிவடைந்துள் ளது. இம் மடிப்புக்கள் உள்ளதி ஞல் மூளையின் மேற்பரப்பு அதி கரிக்கின்றது. இதனுற் சிலர் புத்திநுட்பத்திற்கும் (Intelligence) மடிப்புக் களுக்கும் இடையில் தொடர்பிருக்குமெனக் கருதுகிருர் sesir. கற்றறியும் sa ib Déb (657 uas க்தி, புத்திநுட்பம், பகுத்தறியும் இயல்பு போன்ற மனிதனுக்குரிய மேலான இயல்புகளுக்கெல்லாம் மூளைய மேற்பட்டையின் விருத் தியே காரணமாகும்.
மனிதனில் மூளையின் நிறைக்
இம் புத்திநுட்பத்திற்குமிடையில் தொடர்பிருப்பதாகத் தெரிய
வகக்கீழில்
வில்லை. ஏனெனில் குறைந்த pðbmf நிறையுடைய பலர் சிறந்த அறி வாளிகளாக இருத்திருக்கின்ருர் கள், பெண்களின் மூளையில் நிறை யும் ஆண்களின் மூ ளை யின் நிறையைவிடக் குறைந்தது என் பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மூளேயம் இடது வலது பாதி
களாக ஒரு பிளவினுல் ெ
பட்டுள்ளது. ஒவ்வொரு பாதியும் epålruar soré Gsterus (Cerebral hemisphere) 67 softbugstb. இடது அரைப்பாதி உடலில் வலதுபக்க அவயவங்களினதும், வலதுபகுதி உடலின் இடதுபக்க 26. Je šir களினதும் செய்கைகளைக் கட்டுப் படுத்துகிறது. இவ்விருபகுதிகளை 4th aisir fl-outh (Corpus Callosum) ன்ற குறுக்குத் தொடுப்பு இணைக்கிறது. இப் பகுதியை வெட்டி விடின், அம் மனிதன் இரண்டு கைகளையோ அல்லது கால்களை பே ர உபயோகித்துச் செய்யப்படும் வேலைகளைப் էմg) * முடியாமலிருப்பர். உதாரணமாக அவரினல் சைக்கிள் ஓடக் கற்றுக் கொள்ளல் கடினம்.
மூளையத்தின் உட்கீழ்ப்புற மாக உள்ள இலிம்பிக் தொகுதி (Limbic system) ear irágszi கட்டுப்படுத்துகிறது. பரிவகம் அல்லது ஏந்தியின் ஒரு பகுதி ( part of the thalamus), u flau så 8yö (Hypothalamus), இப்போக் *”thur (Hippocampus) போன்ற மூ3ளப் பாகங்களை இத் தொகுதி கொண்டுள்ளது. மூளையினுள் பரி இருந்து கபச்சுரப்பி என்னும் ஓமோன்கள் சுரக்கும் அங் கம் கீழே தொங்கியவண்ணம் உள்

ாது. இதஞல் சுரக்கப்படும்
ஓமோன்கள் உடலின் வளர்ச்சி,
விருத்தி, அனுசேபச்செய்முறை கள் ஆகியவற்றைச் 6o ar fir iš 5 வதற்கு இன்றியமையாதவை.
மூளையின் பிர் பக்கத்தில் (பிட ரிப்பக்கமாக) மூளி (Cerebellum) என்ற அமைப்பு உண்டு. அசைவு களையும், இயைபாக்கங்களையும், சமநிலையையும் கட்டுப் படுத் து வதே இதன் பிரதான தொழிலா கும்.
மூளை யில் நரம்புக்கலங்கள் (Neurons) g)2007 d, 956) li ssir (Gilia) என்னும் இருவகைக் கலங்கள் உண்டு. கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி நரம்புக்கலங்கள் மூளையில் உள்ளனவாம். ஒரு நரம்புக்கலத் திற்கு கிட்டத்தட்ட் 10 என்ற வீதத்தில் இணைக்கலங்கள் உண்டு. இக் கலங்கள் நரம்புக்கலங்களை அந்தந்த இடங்களில் வைத்திருப் பதற்கேற்ற நிரப் பிக்கலங்களாகத் தொழிற்படுகின்றன. த ரம் புக் கலங்கள் ஒன்று ட ஞென்று தொடர்புற்றுச் செயலாற்றும் முறையே மூளையின் விந்தையான தொழிற்பாட்டிற்கெல்லாம் கார ண்மாகும்.
நரம்பியல் விஞ்ஞான
ஆராய்ச்சித் திட்டம் மூளையைப்பற்றிய ஆராய்ச்சி களை தீவிரமாக மேற்கொள்ளு வதற்கென அமெரிக்காவிலுள்ள மசாச்சு செற்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியராக உள்ள டாக்டர் ஸ்கிமிட் என்பவர் 1962இல் நரம்பியல் விஞ்ஞான ஆராய்ச்சித் திட்டம் " என்ற ஒரு
33
திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இத் திட்டத்தில் அங்கம்வகிக்கும் 36 தலைசிறந்த நரம் பி ய ல் ஆராய்ச்சியாளர்களில் 5 பேர் நோபல் பரிசுபெற்றவர்கள். இரசா யனம், பெளதிகம், உயிரியல், உளவியல் போன்ற பலதுறைகளில் தேர்ச்சிபெற்ற இவ் விஞ்ஞானிகள் இப் போது மூளையைப்பற்றிய ஆராய்வில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.
கற்கும் ஆற்றல்
புது விஷயங்கள் கற்கப்படும் போது புதுவிதமான சிக்கல்
வாய்ந்த புரதவகை மூலக்கூறுகள் மூளையினுள் உண்டாக்கப்படுகிற தென விஞ்ஞானிகள் கருதுகிருர் கள். ஹைடெயின் (Hyden) என்ற சுவீடன் நாட்டு விஞ்ஞானி யின் ஆராய்ச்சி இதற்குச் சான்று கூறுகிறது இவர் சில எலிகளைப் பழக்கி பின்னர் அவற்றைக் கொன்று மூளையை ஆராய்ந்தார். புது இயல்புகளை எலிகள் பழக எத்தனிக்கும் தொடக்கக் கட்டத் தில் அவற்றின் மூளையில் சில புரத வகைகள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டதை அவதானித தார். ஆஞல் அவற்றை மேலும் மேலும் ஒரேவிதமாகப் ப்ழக்கிய போது அப் புரதப்பொருட்கள் மேலும் கூடுதலாக உண்டாக்கப் படவில்லை. அதாவது புதிய பழக் கத்தைக் கற்கும்போதுதான் எலி
களின் மூளைகளில் புதிய புரதப்
பதார்த்தங்கள் உண்டாக்கப்பட்
டன. இப் புரதப்பொருட்களின்
செயற்பாட்டினைத் தடுக்கும் பிற பொருளெதிரிகளை எலிகளின் உட லிற் செலுத்தியபோதும் கற்கும்

Page 19
34
ஆற்றல் குறைந்ததை ஹைடெயின் அவதானித்தார். நன்முக ஊட் டப்பட்ட எலிகள் புரதச்சத்துக் குறைந்த எலிகளிலும் பார்க்க மிகவும் இலகுவில் எப் பழக்கங் களை யும் கற்கக்கூடியனவாகக் காணப்பட்டன. மனிதரிலும் கற் கும் ஆற்றலுக்கும் உணவீட்டலிற் கும் இடையில் ஒருவித தொடர்பு பொதுவாகக் காணப்படுகிறது. அதாவது ஏழைக் குடும்பங்களில் இருந்துவரும் புரதச்சத்து மிகவும் குறைவாக உண்ணும் பிள்ளை களின் கற்கும் ஆற்றல் போசாக் குச் சத்துள்ள உணவை உட் கொள்ளும் மற்றைய குடும்பப் பிள்ளைகளினதைவிட மிக வும் குறைவாகக் காணப்படுகிறது.
நீங்காத நினைவுகள்
வாழ்க்கையில் நடைபெறும் சிம்பவங்களில் எத்தனையோ காலப் போக்கில் மனத்தைவிட்டு அகன்று விடுகின்றன. ஆளுல்ை சில நீங்காத நினவுகளாய் நிலைபெற்றுவிடுகின் றன. அனுபவங்களையும் வெவ் வேறு அறிவுகளையும் மூளையில் சேகரித்து வைத்துத் தேவையான போது மீண்டும் நினைவிற்குக் கொண்டுவந்து வெளிப்படுத்தல் என்ற முளையின் இயல்பும் மிகவும் விந்தையானதாகும். மின் சக்தி யினுல் நினைவுகளைக் கிளறிவிடலா மென பென்பீல்ட் (Penfield) என்ற விஞ்ஞானி கூறுகிருர், காக்காய்வலிப்பு நோய் கண்ட ஒரு
நோயாளியின் மூளைய மேற் பட்டையின் ஒரு பகுதியை மின் வாய்கொண்டு தொட்டபோது
அந் நோயாளி தன் குழந்தைப் பராயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை
மிகத் தெளிவாக ஞாபகத்திற் கொண்டுவந்து கூறியதைக் கண்டு அதிசயித்தார். மூளைய மேற்பரப் பின் வெவ்வேறு பகுதிகளை மின் வாயினுல் தொட்டபோது பல காலங்களாக முற்ருக மறந்திருந்த பல சம்பவங்களை அத் நோயாளி நினைவுகூர்ந்ததை அவதானித் தார். இவையும் மேலும் பல சோதனைகளும், மூளையில் மூளைய மேற்பட்டை என்னும் பகுதியே நினைவாற்றலுடன் தொடர்பு உடைய தெனக் காட்டுகிறது. நவீன கம்பியூட்டரில் கொடுக்கப் படும் ஒவ்வொரு செய்தியும் ஒவ் வொரு இலத்திரன் கலத்தினுள் சே க ரித்து வைக்கப்படுகிறது. மாருக மூளையினுள் ஞாபகத்தில் இருக்கவேண்டிய ஒவ்வொரு செய்தியும், தனித்தனி இடங்களிற் சேகரிக்கப்பட்டிராமல், மூளைய மேற்பட்டையின் எல்லாப் பகுதி
யிலும் பரவப்பட்டுள்ள (Deloக calized) நிலையிலுள்ளது எனக் கூறுகிருர்கள். இதனுல் மூளைய
மேற்பட்டையின் ஒரு பகுதியைச் சிதைப்பின் நினைவில் நிறுத்தி வைக்கக்கூடிய தகைமை குறைவு அடையுமேயொழிய தனிப்பட்ட நினைவுகள் அழியமாட்டாது.
மேலும், ஆய்வுகளும் அவ
தானிப்புகளும் ஞாபகங்கள் மூன்றுவகைத்தானவை எனக் காட்டுகின்றன. ஞாபகங்களை
மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்ற கொள்கை ஞாபகம் பற்றிய மூன்று படிக்கொள்கை (A three level theory of memory) Toru G. b. ஆகக் குறைந்த படியிலுள்ள e569)ApaSmT 6) (e5mrLu aSib (Short- term

memory) co, Say Qafiassir agir மாத்திரமே மூளையிற் பதிவு அடைந்து, பின்னர் விரைவில் மறக்கப்பட்டுவிடும். கணத்திற்குக் கணம் எமது ஐம்புலன்களினூடு செல்லும் எத்தனையோ விஷயங் கள் இவ்வகையிலடங்கும். அடுத்த படியிலுள்ள இடைக்கால ஞாப கம் சில நிமிடங்கள் தொடங்கி சில மணித்தியாலங்கள் வரை நினைவில் நிற்கக்கூடியது. உதா ரணமாகப் புதிதாக ஒரு புத்தகம் வாசிப்பின் அதில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் இவ்வாரு கவுே ஞாபகத் தி ல் வைக்கப்படும். சோதனைக்கு முதல்நாள் மட்டும் ஒய்வொழிவில்லாமல் படித்துச் சித்தியெய்தும் மாணவர்களின் ஞாபகம் இதற்கோர் நல்ல உதா ரணம். ஆகவுயர்ந்த படியிலுள் ளது நெடுங்கால ஞாபகம். சில விஷயங்கள் (உதாரணமாகக் கல்வியறிவு) அவற்றின் முக்கியத் துவத்தினுல் நெடுங்காலம் ஞாப கப்படுத்தி வைக்கப்படவேண்டி யனவாகின்றன. ஆளுல் மூளையில் இந் நினைவுகள் நிரந்தரமாகப் பதிவுசெய்யப்பட காலமெடுக்கும். உதாரணமாக ஒரு எலிக்கு ஒரு புதிய பயிற்சியைப் பழக்கியவுடன் மின் அதிர்ச்சியைக் கொடுப்பின், அப் பழக்கம் உடனடியாக மறக் கப்பட்டுவிடும். ஆனல் ஒருநாட் கழித்து அவ்வதிர்ச்சி கொடுக் கப் படின் ஞாபகம் அழிக்கப்பட்டு விடாது. மனிதருக்கும் இது பொருந்தும். -
மூளையின் உணர்ச்சிப் பகுதி Cur6OT Gólub di Gsmr 656 (Limbic
35
system) நெடுங்கால ஞாபகங்களை சேகரித்து வைப்பதிற் பெரும்பங்கு கொள்கிறதென விஞ்ஞானிகள் கருதுகிருர்கள்.
அறிவு மூலக்கூறுகள்
ஞாபகங்கள் யாவும் மூளையில்
ஏதோ ஒரு விதத்தில் - பெரிய
புரதவகை மூலக்கூறுகளின் உதவி யுடன் சேகரித்து வைக்கப்படுகின் றன என்று விஞ்ஞானிகள் கருது கின்றனர். ஆனல் இம் மூலக்கூறு கள் யாவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடலாம் என்று எண்ணுகின் றனர். எனவே ஒரு மனிதனில் இருந்து இன் ஞெருவனுக்கு நினைவு மூலக்கூறுகள் செலுத்தி இலகுவில் அறிவைக் கூட்டலாம் என்று சிலர் கருதுவதை விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளுகிருர்களில்லை
நோய்க்கு மருந்து
நரம்பியல் விஞ்ஞானம் மிக வும், ஆரம்பநிலையிலிருப்பினும் இதுவரை ஏற்பட்ட சில கண்டு பிடிப்புக்கள், மூளை, சம்பந்த மான பல கடுமையான நோய் களுக்கு ச் சிகிச்சையளிப்பதில் பெருமளவில் உதவியுள்ளன. மந்த நோய், காக்காய் வலிப்பு, பாக்கின் சனின் நோய், ஸ்கைசோபிரீனியா மூளை சம்பந்தமான வேறு கடின்
மான நோய்கள் ஆகியவற்றிற்குத்
திறமையான சிகிச்சையளிப்பதில் இதுவரை நடைபெற்ற ஆராய்ச்சி களின் பங்கு மகத்தானது,
(தொடரு ம்)

Page 20
ல கப்
கா ற் றினிலே
சமகால வாழ்வு
வரும் கீதம்!
- தாமரைதின்னி -
பதினைந்து இருபது வருடங் களுக்கு முன்பு எங்கள் கிராமப்புறங் களில் றேடியோ அவ்வளவு பரவ பாவனைக்குட்படுத்தப்பட வில்லை. இதனுற் கல்யாணவீடு, வீடு குடிபுகுதல், திருவிழா போன்ற விழாக்களுக்கு ஒலி பெருக் கி அமைத்துச் சனங்களைக் கூட்டுவது வழக்கம், ஒலிபெருக்கியிற் சில பிர பல பாடல்களைத் திரும்பத் திரும்பப் போட்டு மக்களின் பாராட்டைப் பெறுவர். றேடியோ கேட்டல் ஒரு வாழ்க்கை முறையாக இன்று அமைந்துவிட்டது. தாங்கள் விரும் பும் பாடல்களை காளொன்றிற்குக் கிட்டத்தட்டத் தொடர்ச்சியாகப் 15 மணித்தியாலங்களுக்குப் பல மீட்டர் களிலும் கேட்டு ரசிக்கிறர்கள். கேயர் விருப்பம், மாதர் விருப்பம், தேன்சொட்டு, மீன் முள்ளு, பாட்டும் கதையும், கதையும் பாட்டும், 'அ' வரி 'பு' வரியில் தொடங்கும் பாடல் கள் என்று நிகழ்ச்சிகளுக்குப் பெரிய பெயர்களை இட்டுவிட்டு இசைத் தட்டுக்களைத் தாராளமாகச் சுழல விடுகிறர்கள். அறிவிப்பும் அதற் கேற்றவாறு மெருகுபெறுகிறது.
அந்நாட்களில் "ஒலிபெருக்கி அமைக்கப்படும், கொண்டாட்டம் நான்கு நாட்கள் நடைபெறும், ஆச னம் கம்பளம்' என்று அழைப்பிதழ் களில் பின்குறிப்பு மாதிரிப் போட்டு வாசிப்பவருக்கு நினைவூட்டுவதற் காகவோ என்னவோ இக் குறிப்பை
ஒரு கை சுட்டிக்காட்டுவதுபோல் சிறிய படமும் போடுவது மரபு. இன்று மக்களுக்குச் சேவைசெய்யும் அன்பர்களின் பேச்சைப் பரப்பு
வதற்கு மட்டுமே ஒலிபெருக்கிகள்
அமைக்கப்படுகின்றன !
ஒலிபெருக்கி யுகம் முடிந்ததும் ஓரளவு ஆறுதல்தான். * சந்தோசம் தரும் சவாரி போவோம் சலோச் சலோ ஜில்தியில் போவோம் சலோச்சலோ அந்திப் பொழுதே ஆசை மறைவில் - - அன்பைக் காணுவோம்?? என்ற பாடலை ஒரேநாளில் இருபது முறை கேட்கும்படியாக எனக்குச் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சதிசெய் திருக்கின்றன! இந்தச் சந்தோசச் சவாரியிலிருந்து தப்புவதற்கு ஒரு 6oot bü) சுற்றளவிற்கு அப்பாற் செல்லவேண்டும். அப்படிச் Qas Göta லும் அடுத்த ஊரிலும் " ஐயாசாமி,
ஆமாதி சாமி, கரிக்கொ ம்பிருக்கு வாங்கலையோ? என்று ஏதாவது ஒரு பாடலைப் போட்டு இரசிக்க
வைப்பார்கள்! இன்றெல்லாம் இப் படி ஒட்டுமொத்தமாக ஊரைக் குத்தகைக்கு எடுத்துக் களிப்பூட்டுவ தில்லை. ஆனல் இப்பொழுது தனித் தனியாக வீடுகளில் றேடியோவைப் போட்டுத்தான் இரசிக்கவைப்பார்
SGT,
இன்றைய இசைத்தட்டுகளில் உள்ள பாடல்கள் பெரும்பான்மை
யானவை "காதல் பாடல்கள்

மிகுதி காதலில் தோல்வி ஏற்படும் பொழுது பாடப்படும் தத்துவ முத் துக்கள் அடங்கிய ' விரக்திப் பாடல்கள். இந்தப் பாடல்களிற் பொதுவாக ஆணினத் தின் கொடுமை, பெண்ணினத்தின் தங் திரம் என்பன போன்ற வாழ்க்கைக்கு அவசியமான கருத்துக்கள் வலியுறுத் கப்படுவதுண்டு. பாடல்களின் சொற் செறிவு, நுணுக்கமான வேலைப்பாடு கள் பாராட்டிற்குரியன.
unT sólu u fib ø56ůvon untuar m&ouvu பாடத்திட்டங்களில் இல்லையென்று தெரிந்து இப்பாடல்களில் இக் குறை நிவர்த்திசெய்யப்படுகிறது, வேறு விபரம் வேண்டுவோர் வெள்ளித் திரையைப பார்க்கும்படி அறிவுறுத் கப்படுகின்றனர். சில பாடல்கள் மன்மதக் கலைகளே கடைமுறைப் படுத்தும் அரிய குறிப்புகள் கொண் டவை. எங்கு தொட்டால் எங்கெங்கு குறுகுறுக்கும் என்பது போன்ற விபரங்கள் வரைபடம் இன்றியே சொல்லப்படுகின்றன. ஒட்டக்கூத் தன்பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாழ் ான்று சிலேடையாக, இருகருத்து அமையும்படி பாடும் ஒட்டக்கூத் கரைப் பாராட்டுவதுண்டு. இன்றைய இசைத்தட்டுப் பாடல்கள் திரும்ப
37
வும் எம்மை ஒட்டக்கூத்தரின் சிலேடை காலத்திற்கு இட்டுச்செல் கின்றன.
பள்ளியறைக்குள் வந்த W r.
புள்ளிமயிலே "கொத்தியின் காதல்" என்று ஒரு தொடர்கதை, பேய்க்களக் கதா நாயகர்களாகக் கொண்டது. இது தொடர்ச்சியாகச் சிரித்திரனில் வெளி யானது. இதில் எருமைப்பல்லன் என்னும் பேய் சினிமாமூலம் பாலியற் கல்வியெறும் பெண்ணைச் சுவையாக விமர்சிக்கின்றது. * முதலிரவில் பாட் டுப் பாடச்சொல்லிப் புரிசனைக் கேட்டா ளாம். பாடிக்கொண்டுவளவெல்லாம் ஒடிப் பிடிச்சு விளையாடவேண்டும் என்று கேட்டாளாம். பாவம் அந்த மனிசன். படங்களைப் பார்த்துப் பார்த்து முதலிரவிலை பாட்டுப்பாடி ஓடிப்பிடிச்சு விளையாடுகிறது என்று இந்தப் பொடிச்சி நினைச்சிட்டுது"
ஆண் - பெண் உறவுகளைத் தேவைக்கு அதிகமாக இலட்சியப் படுத்தியும் (தங்கரதம் வந்தது வீதியிலே, தளிர்மேனி.) கொச் சைப்படுத்தியும் (கண்ணு படப் போகுது, கட்டுங்கடி சேலையை) மைக்கிரஸ்கோப் மூலமாகவும், ரெலஸ்கோப்பினுரடாகவும விகாரப் படுத்திக் காட்டுகின்றன இன்றைய சினிமா இசை,
* அம்பு பற்றிய உங்களுடைய கருத்துக்களை ஒளிவு மறைவின்றி எங்களுக்குத் தெரிவியுங்கள். இது
வளர்ச்சிக்கு உதவும்.
கருத்துக்களை நெஞ்சம் " என்னும் பகுதியில் பிரசுரிப்போம்.
கடித முகவரி: நெஞ்சோடு நெஞ்சம், மே/பா. 'அம்பு’ ஆசிரியர், சாகிருக் கல்லூரி, கல்முன
Hees-esse-ss- LAueASLLLTSLLSL LLLLSLLLSuSuSSLLLTSuS LSLSLLSL S LSAASLLALSL L S S LLLLL LLLLLL
அம்பு வாசகர்களுக்கு அறிவிப்பு
சஞ்சிகை தொடக்கம் வாசகர்
அடுத்த இதழ் * நெஞ்சோடு

Page 21
ஒன்றும் ஒன்றும் இரண்டு உன்மேல் ஆசை கொண்டு.
சி. செந்திநாதன் (விரிவுரையாளர், கட்டுபெத்தை வளாகம், இலங்கைப்பல்கலைக் கழகம்
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது அவ்வளவு ஆச்சரியமான கண்டுபிடிப்பல்ல. எ ன் ரு லும் இந்த எளிய கணித அடிப்படை யில் இயங்கும் கம்பியூட்டர்கள் ஆச்சரியமானவை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மனிதன் கண்டுபிடித்த மற்றைய இயந்திரங்களைவிடக் கம்பியூட்டர் assir வேறுபட்ட இயல்புகள் கொண்டவை. இவை கண்டு பிடித்த மனிதனின் மூளையைவிட
போட்டியிடும் பருந்தாகச் சிறு மைப்படுத்துகின்றன. இக் கம்பி யூட்டர்கள். என்ருலும் இக் கம்பி யூட்டர்கள் மிகவும் எளிமையான "மூளை"அமைப்புக் கொண்டவை. உண்மையில் இவை பெருக்கல், பிரித்தல், கூட்டல், கழித்தல் போன்ற அடிப்படைக் கணித விதிகளை மட்டும் கிரகிக்கின்றன. பல விடயங்களில் இவை படு முட்டாள்தனமாகவே செயற்படு கின்றன.
மற்றைய இயந்திரங்களை விட கம்பியூட்டர்கள் வேறுபட்ட இயல்புகள் கொண்டவை. மனித மூளையை விட வேகமாகச்
சில குறிப்பிட்ட துறைகளில், வே சமாகச் செயல்படுகின்றன என்பதோடு மனிதனுடைய ஆளு மைக்கும் அகந்தைக்கும் சவா லாக விளங்குகின்றன.
ஒரே சமயத்தில் எட்டு விஷ யங்களைக் கிரகிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் அஷ்டாவதானிகள் எனப்படுவர். பெரிய பெரிய எண் களைக் கண்ணை மூடித் திறப்பதற் குள் அஞயாசமாகப் பெருக்கிப் பிரிக் கும் சகுந்தலாதேவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அஷ்டாவதானிகளையும்,சகுந்தலா தேவிகளையும் ஆகாயக்கப்பலுடன்
செயல்படுகின்றன; என்பதோடு மனிதனுடைய ஆளுமைக்கும், அகந்தைக்கும் சவாலாக விளங்குகின்றன."
கம்பியூட்டர்கள் பாவனைக்கு வந்த புதிதில் புரோகிராமாளர் கள் இவற்றின் மேல் அளவுக்கதிக மான காதல்கொண்டிருந்தனர். நாளில் பெரும்பகுதியை இவர்கள் இவற்றிற்குச் சொல் கற்பிப்பதி லும் அவற்றுடன் வேறு பல மூளைச் சண்டைகள் போட்டுச் செலவழித்தனர். இவற்றின் பிர மிக்கத்தக்க வேகத்  ைத யும் அகந்தையற்ற வெறும் “ஞாபகத்' தையும் வேறும் பல இயல்புகளை யும் செரிக்கமுடியாமல் திணறி னர். தங்களுடைய மூளையையும், கம்பியூட்டரையும் ஒப்புநோக்கி அவதிப்பட்டனர். நாளடைவில்

கம்பியூட்டர்களின் குறுகிய எல் லச் செயற்பாடு அவற்றை நன்ரு கக் கையாளத்தொடங்கியபிள் தெரிந்தது. இவையும் மற்றைய இயந்திரங்களைப் போல் தான் ாேன்று உணரத் தலைப்பட்டனர். இவ்வுணர்வு ஏற்பட்டதும் கம்பி யூட்டர்களுடன் அவர்களுடைய காதல் குறைந்து உறவுகள் சுமுக மாக்கப்பட்டன. என்ருலும் கம்பி யூட்டர்கள் பற்றிப் பலவிதமான கற்பிதங்களும், புனைகதைகளும் ஏற்பட்டுவிட்டன.
ஆர்தர் கிளாக் என்பவர் விஞ் ஞான வளர்ச்சியின் போக்குகள் பற்றி ஆரூடம் சொல்லும் தீாக்க off. gart Space Odessy 2001 என்னும் அறிவியல் புனைகதையை எழுதியிருக்கிருர். (இக் கதை ஒரு w(soudumsor 860pruL-uom äst ul-35 ) விண்கலம் ஒன்று அண்டவெளியிற் சென்றுகொண் டிருந்தது. (வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பது தெரிந் நதே ! ) அக் கலத்தில் சில விஞ் முநாணிகளும் சென்றுகொண்டிருந் தனர். இக் கலத்தின் சகல இயக் வங்களும் கம்பியூட்டரின் கட்டுப் பாட்டிற்குள் இருந்தன.விஞ்ஞானி களில் இருவரைத் தவிர ஏனை போர் ஆழ்துயிலில், குளிரறையில் எவ்வித இயக்கமுமின்றி வைக்கப் பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களுடைய உடலியக்கங்கள் ஒய்ந்து மெல்லிய நாடித்துடிப்பு,
இதயத்துடிப்பு என்று ஆகக் குறைந்தபட்ச இயக்கத்திலிருந் AS RT. بر
gth (p60.pantu Hibernation ானச் சொல்வார்கள். இந் நிலை
39
யிற் பலகாலம் இருந்தபின்னர், தேவையான சமயம் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படுவர். அப்பொழுது 100 ஆண்டுகளுக்குப் பின்பும் உயிர்வாழும் சாத்தியம் உண்டு. அத்துடன் உணவுப் பிரச் சனையும் தீர்ந்தது. விண்கலம் செல்லும் இடம், நோக்கம் என் பன கம்பியூட்டருக்கு மட்டுந்தான் தெரியும். சமாதி நிலையில் உறங் கும் விஞ்ஞானிகளின் சுவாசம் முதலிய அதி முக்கிய இயக்கங் கள் கம்பியூட்டரின் கட்டுப்பாட் டிற்குள் அடங்கும். அத்துடன் விண்கலத்தின் போக்கும் கம்பி யூட்ட ரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. இப்படியான முறையி ஞல் எத்தனையாண்டுகளானுலும் பயணம் நடைபெறும். இரு விஞ் ஞானிகள் மாறி மாறி விண் கலத்தினுள் சாதாரண இயக்க நிலையிலிருந்தனர். . கம்பியூட்டர் ஆழ்துயிலிருக்கும் விஞ்ஞானிகளைக் கொன்றுவிட்டது. இதையறிந்த விழிப்பாயிருந்த விஞ்ஞானிகள் விண் கலக் கட்டுப்பாட்டைக் கையேற்க முயற்சிக்கின்றனர். இந்தச் செய்கையையும் முன் கூட்டியே எதிர்பார்த்த கம்பியூட் டர் விண்கலத்திற்கு வெளியே ஏதோ சிறிய கோளாறு என்று போ லி யா ன சமிக்ஞையைக் கொடுத்தது. விஞ்ஞானி கள் கோளாறைச் சரிசெய்ய வெளிய்ே சென்றபோது அவர்களை வெளியே விட்டுவிட்டு விண்கலக் கதவை மூட முயற்சிக்கிறது. இப்படிப் பல நிகழ்ச்சிகளுக்குப் பின் விஞ்
ஞானி கம்பியூட்டரின் ஞாபகக் கலங்களைக் கழற்றி அதைக் * கொல்கிருன்."

Page 22
A0
ஈழத்திலும் கம்பியூட்டர் யுகம்
தொடங்கிவிட்டது. இன்று பொறி
யியல் கூட்டுத்தாபனம், பல்கலைக் கழகப் பேராதனை வளாகம், மத் திய வங்கி, காப்புறுதிக் கூட்டுத் தாபனம், புள்ளிவிபரத் திணைக் களம் ஆகிய நிறுவனங்களில் கம்பி யூட்டர்கள் இபங்குகின்றன.
ஈழத்தில் கம்பியூட்டர் பரா மரிப்பு, புரோகிராமிங் போன்ற துறைகளில் அனுபவம் விருத்தி யாகி வருகிறது. அத்துடன் சிக்க லான பொறியியற் பிரச்சனைகளுக் கும், பொருளாதாரப் பிரச்சனை களுக்கும் தீர்வுகாண கம்பியூட்டர் பாவிக்கும் மரபு பரவிவருகிறது. tu - G3: pro fr ŝpr mr uń) mišu, upotnruorĥoŭ! போன்ற துறைகளிற் பயிற்சி பெற்றவர்கட்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு சில காலத் திற்கு முன்பு இருந்தது. (இப் பொழுது எப்படியோ தெரியாது?) எனவே கம்பியூட்டர்கள் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்திருப்பது நல்லது.
ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பது கணித அடிப்படைக் கூட்டல் முறை. ஆதி மனிதன் தனது குடும்பத்தை எண்ணும் பொழுதும், பண்டமாற்றுச் செய் யும்பொழுதும் தேவையின் நிமித்
தம் எண்களைக் கண்டுபிடித்தான்.
நான் என்பது ஒன்று, "நான் - நீ" என்பது இரண்டு " நான் - நீஎமது பிள்ளை " ஒன்பன மூன்று ; என்று எண்ணும் முறை தொடங் கியது. இந்த ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற எளிய கணித அடிப்படையில் தர்ன் கம்பியூட்டர் கள் இயங்குகின்றன. அப்படியா
யின், இவை சிக்கலான கணிதச் சமன்பாட்டை எப்படித் தீர்க்கின றன என யோசிக்கிறீர்களா ? எந்தப் பெரிய சமன்பாடுகள், பிரச்சனைகளையும் கம்பியூட்டர் பல படிகள் கொண்ட எளிய கூட்டல், கழித்தல், பிரித்தல், பெருக்கல் போன்ற பிரச்சனைகளாக உடைக் கின்றது. ஒரு சமன்பாட்டைத தீாக்க பல ஆயிரம் பகுதிகள் கொண்ட சின்னஞ்சிறு படிகளாக உடைத்துப் பின்னர் ஒவ்வொரு படியையும் தானறிந்த கூட்டல் பிரித்தல் முறையில் கடந்து இறுதி யில் பிரச்சனைக்கு விடை தரு கிறது. இதில் விசேடம் என்ன வென்முல் இப்படிப் பகுத்துக் கணக்குப்பண்ண கம்பியூட்டர் எடுக்கும் நேரம் ஆயிரத்தில் ტბ(სნ செக்கணுக இருப்பதே.
கம்பியூட்டர் இன்றேல் நிச்சய மாக மனிதன் சந்திரனில் காலடி எடுத்துவைத்திருக்கமுடியாது. பல சமகாலச் சமன்பாடுகளை உடனுக்
குடன் தீர்த்து அந்த முடிவுகளைக்
கொண்டு விண்கலத்தை வழிநடத் தும் முக்கிய குறிப்புகளை இவை கொடுத்துதவின.
ஒன்று, இரண்டு, மூன்று என்று எல்லா எண்களையும் தனித் தனியாக இனங்கண்டுகொள்ளக் கம்பியூட்டர்களால் முடி யாது. எனவே 1, 0 ஆகிய இரு எண் களை மட்டும் இனங்கண்டு, மற் றைய எல்லா எண்களையும் இவற் றின் அடிப்படையில் அடையாளங் கண்டு கொள்கின்றன. கம்பியூட்
Li soir gaO)5 binary system of
rotation அல்லது இரட்டை எண் முறைக்குறியீடு என்று குறிப்பிடு

வார்கள். உதாரணமாக 4ஐ 100 என்றும் 8ஐ 1000 என்றும் 2ஐ 10 என்றும் இம் முறையில் குறிப் பிடவேண்டும். ஏனெனில் 4 = (2)(2)-- 0--0 8=(2×2〉く2)十ー0-+-0十-0
இப்படியான குறியீட்டில் 1, 0 தவிர வேறு எண்கள் கிடையாது. நாம் படித்துவந்த 2, 3, 4 களில் என்ன பிழையென்று நீங்கள் கேட்கக்கூடும்? 1 ஐயும் 0ஐயும் கம்பியூட்டர்கள் " இல்லை " அல் லது "" ஆம் ' என்ற முறையில் பகுத்தறிகின்றன. உதாரணமாக ஒரு மின் சுற்ருேட்டத்தில் மின் சாரம் பாயும் பொழுது அதை 1 என கம்பியூட்டர் இனங்கண்டு கொள்கிறது. மின்சாரமில்லாமல் வெறுமையான இடைவெளியென் ருல் 0 என்ருகிறது. இதை நடை முறைப்படுத்துவதும் சுலபம். மின் சாரம் பாயும் பொழுது ஏற்படும் காந்தப் புலன்கள் ஞாபக செல் களிற் பதிகின்றன. இது ஞாபக செல்களில் 1 என்று படுகிறது. அதேபோல் மின்சாரமற்ற இடை வெளி 0 என உணரப்படுகிறது. இந்த முறையில் 8ஐ கம்பியூட்டர் 1000 என்று, அதாவது முதல் மின் சர்ர ஒட்டம், அடுத்த மூன்று இடைவெளிக்கும் வெறு  ைம எ ன் று விளங்கிக்கொள்கிறது. நாடித்துடிப்பு போன்று மின்சாரத்
望盘
துடிப்புக் குறிப்பிட்ட இடை வெளிக்கு ஒருமுறை இருக்கும். எனவே துடிப்புள்ள பொழுது ஒன்று, சில கால இடைவெளிக் குப் பின் துடிப்பில்லாவிடின் 0 என ஞாபகக் கலங்கள் விளங்கிக் கொள்கின்றன.
ஞாபகக் கலம் என்பது காந்த இயல்புகொண்ட விசேஷ இரும் புத் துண்டாகும். இவற்றை Corc என்று ஆங்கிலத்தில் அழைப்பார் கள். ஞாபகக்கலங்களின் எண் ணிக்கையே க ம் பி யூ ட் ட ரி ன் அளவை நிர்ணயிக்கிறது. பெரிய கம்பியூட்டர்களில் லட்சம் கலங் கள் உண்டு. ஞாபகக் கலங்களில் சக்திக்கு மீறிய பிரச்சனைக்குத் தீர்வுகாண கம்பியூட்டரை நிர்ப் பந்தித்தால் அது முடிவில்லா சுழற்சி வட்டத்தில் இயங்கி நிற்கா மல் ஒடிக்கொண்டிருக்கும் இந்த GứF60) u Looping 6T 637 å g5 safu ?@ வார்கள். அப்போலோ 11 சேய்க் கலம் சந்திரனில் இறங்கிக்கொண் டிருக்கையில் இப்படி நடைபெற் றது. இதனுற் சந்திரனில் காலடி எடுத்து வைக் கா மற் திரும்ப வேண்டி வருமோ என அச்சம் எழுந்தது. பின்னர் கம்பியூட்ட ரிடம் தேவையான முக்கிய தகவல் களை மட்டும் கேட்டுக்கொண்டு
சில இயக்கங்களை விண்வெளி வீரர்கள் பொறுப்பேற்ற பின் எல். லாம் ஒழுங்காயின. கம்பியூட்ட
ரின் பொறுமைக்கும் எல்லையுண்டு.
அம்பு வாசகர்களுக்கு "அம்பு " இதழுக்குத் தரமான அறிவியற் கட்டுரை
கள் எழுதுங்கள்.
கிராமிய
சிறு கைத்தொழில்
வேளாண்மை, கட்டடக்கலை போன்ற பிரயோக விஞ் ஞானத்துறைகள் அடங்கியவை விரும்பி வரவேற்கப்
படும்.
- ஆசிரியர்.

Page 23
"வாலப் புரட்டும் வால்வெள்ளி'
- சி. கதிர்காமநாதன், B. Sc. --
சூரியனிலிருந்து வெளிப்படும் 267 sit as L-iss (Ultra Violet) & 5 it கள் வால் வெள்ளி ஒன்றின் தலைப் பகுதியிலுள்ள வாயு மூலக் கூறு களிற் பட அம் மூலக் கூறுகள் ஒளிக் கதிர்களைக் கிரகித்துப் பல் வேறு திசைகளிலும் வீசுகின்றன. இதஞல், வால்மீனின் தலைப்பகுதி ஒளிர்வுள்ளதாகின்றது. சூரிய வெப்பத்தால் வீசியெறியப்படும் தூசுத் துணிக்கைகள் (வா ற் பகு தியிலுள்ள),சூரிய ஒளியைச் சிதறதெறிக்கச் செய்து தம் வடிவத்தை
வெளிக்காட்டுகின்றன. இதனல் வால் ஒளிர்வுமிக்கதாகின்றது. எனவே, கதிரவனுக்கண்மையில்
வால் வெள்ளி இருக்கும்போது ஒளி படைத்த தலையும், வா லுமுள்ள வால் வெள்ளி யா க ந ம க்கு த் தோன்றுகின்றது
சூரியனின் கதிர்வீச்சாற்ற லால் வால்வெள்ளியின் தலையில் இருந்து வாலினூடாகத் து துணிக்கைகளும், வாயுக்களும் ഖ് எறியப்படுவதால் ஒவ்வொரு தடவையும் ஒரு வால்மீன் சூரி யனை அண்மிக்கும்போதும் தனது திணிவில் ஏறத்தாள 1/200 பங்கை இழந்துவிடுகிறது. இவ் விழப்பு மிகச் சிறிதாக இருப்பதா லும், தனது பிரயாணத்தின் போது சூரியனிலிருந்து மிகத் தூர இருக்கையிலே வெட்டவெளிபிற் தூசு சள் ஏதுமிருப்பின், அவற்றை யும் தன்னுடன் இழுத்துச்செல்வ தாலும், ஏற்படும் திணிவின் இழப்பை நாம் புறக்கணிக்கலாம். ஆகவே வால்வெள்ளி ஒன்று பல்லாயிரக்கணக்கான த ட  ைவ சூரியனை வலம்வந்த பின்னரே உருத்தெரியாத அளவு சிறியதாக மாறுகின்றது.
ஆடும்வரை ஆட்டம்!
ஆடியபின் ஒட்டம்!
சூரியனுக்கண்மையில் இருக் கையில் பிரகாசமாகத் தோன்
றும் இந்த வால்வெள்ளிகள் சூரி யனை விட்டு விலகிப் பிரபஞ்ச வெளியில் விரையும போது ஒளி இழந்து மறைந்து போகின்றன. இதற்குக் காரணங்கள் இரண்டு. அவையாவன :
(1) படும் சூரிய ஒளியினளவு குறைவதால் அதன் தோற் றத்தில் ஏற்படும் மங்கல். (2) சூரியனிலிருந்து பெறப்படும் வெப்பச் சக்தி குறைவத" ல், தலைப்பகுதியிலுள்ள வாயுக் கள் குளிர்ந்து சுருங்குகின் றன. பின்னர், அதன் பிரயாணத்தின் போது சூரியனிலிருந்து அதிக தொலைவிலுள்ளபோது, அதன் மூலப்டொருட்களின் அடர்த்தி அதிகரித்து அதன் உருவம் மிகவுஞ் சிறுக்கின்றது. இந்நிலையில் வால், தலை என்ற வேறுபாடற்ற - மேகங் கள் போன்ற தோற்றமுள்ள பனிப் படலங்களாகச் சஞ்சரிக்கின்றது"
இறுதியாக ஒரு வார்த்தை சில மாதங்களுக்கு முன்பு சூரியனை அண்மித்த வால்வெள்ளியை அதே கராற் பார்க்கமுடியவில்லை. ஏனே இது எல்லோரும் பார்க்குமளவிற் குத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எனினும், சூரிய னுக்கு எதிராக " வாலைப் புரட் டும் " இந்த வால் வெள்ளியின் மகிமையை இவ்வருடம் க.பொ.த. (உயர்தர) பெளதிகப் பரீட்சை எடுத்த மாணவர்கள் பரீட்சை
மண்டபத்தில் உணர்ந்திருப்பர் 1
(முற்றிற்று)

ஆகாய விமானங்கள் - 5 விமானம் எய்தும் அதியுயர் ஸ்தானம் (INC)
- செல்வன் சி. இளங்கோ, மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை -
கேரான, கிடையான பறத்த லுக்கு விமானமொன்றினது நிறைக் குச் சமஞன உயர்த்து ezágos, நிறையின் அதே தாக்கக்கோட்டின் வழியாக மேனுேக்கித் தாக்கவேண்டு மென்பதை முன்னர் கவனித்தோம். இந்த உயர்த்துவிசை நிறையிலும் பார்க்க அதிகரிக்கும்பொழுது விமா னம் தனது கிடை நிலையினின்றும் விலகி மேலெழும்பும். அதாவது கேரான கிடையான பறத்தலுக்குத் தேவையான உயர்த்துவிசையிலும் கூடிய உயர்த்துவிசையை விமானத் தாற் பெறமுடியுமாயின் அதனல் மேல்நோக்கி ஏறமுடியும்.
கொள்கைப்படி உயர்த்துவிசை யைக் கூட்டுவதற்கு (1) மூக்கை மேலுயர்த்தித் தாக்கக்கோணத்தை அதிகரிக்கலாம் ; (2) வேகத்தைக்
கூட்டலாம். தாக்கக் கோணத்தை
அவதிக் கோணத்திலும் பார்க்க அதிகரிக்கமுடியாது. அத்துடன், அ வ தி க் கோணநிலையிலிருக்கும் போது தடை விசை மிக அதிகமாவ தால் வேகம் குறையும். ஏற்ற வேகத்துடன் இயக்கத்தைச் செப்பஞ் செய்வதால் அதி கூடிய உயர்த்து விசையைப் பெறலாம், -
இந்த அதியுயர் உயர்த்துவிசை
தங்கியிருக்கும் மற்றேர் புறக் காரணி
விமானத்தைச் சூழ்ந்துள்ள காற் றின் அடர்த்தி ஆகும், விமானம் காற்றைக் கீழ்நோக்கித் தள்ளியே தான் மேலெழும்புகின்றது. எனவே,
காற்றின் அடர்த்தி குறைந்தால், கீழ்நோக்கித் தள்ளப்படும் காற்றின் திணிவும் குறையும். இதனுல் விமா னத்திற்குக் கொ டு க் கப் படும் உயர்த்துவிசையும் குறையும். கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லச் செல்லக் காற்றினடர்த்தி உறைகின் றது. எனவே உயர்த்துவிசையும் மேலே செல்லச் செல்லக குறைந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் இதன் பெறுமதி விமானத்தின் நிறைக்குச் சமஞன அளவாகக் குறைந்துவிடும். எனவே, இந்நிலை ஏற்பட்டவுடன் விமானங் தொடர்க் து ஏறமாட்டாது. இக் கிலையிலே, 5ேரான, கிடைமட்டப் பறத்தல் ஏற்படும் இங்ங்லேயிலுள்ள உயர்த்து விசையே அதி கூடிய உயர்த்து விசையாதலால், இதற்கு மேல் விமா னம் எழும்பமாட்டாது. இந்த நேரத் திற் கடல மட்டத்திலிருந்து விமா னத்தின் உயரம் அதன் அதியுயர் தானம் (Ceiling-சீலிங் என படும்.
இவ்வதியுயர் தானத்தை வேறு ஒரு முறையாலும் விளக்கலாம். விமானத்தின் எஞ்சினுற் பெறக் கூடிய வலு, கிடையான பறத்த லுக்கு வேண்டிய வலுவிற்குச் சம குைம்போது அதியுயர் ஸ்தானம் ஏற்படும். விமானத்தின் எஞ்சினுற் பெறக்கூடிய வலு, காற்றின் அடர்த்திகூடிய கடல்மட்டங்களில் மிக அதிகமாகவிருக்கும், மேலே செல்லச் செல்ல இது தொடர்ந்து

Page 24
சின்னச் சின்னப் பார்வைகள்
- நடையர் -
O உடம்பில் ஏற்படும் பல நோய்
களுக்கும் மனத்திற்கும் நெருங் கிய தொடர்பு உண்டு என்பதை அனுபவ ரீதியாக மருத்துவர்கள் உணர்ந்திருக்கின்றனர். சிலவகை யான தொய்வு, தலையிடி, செமி பாட்டு நோய்கள் போன்றவை மனத்தினல் தூண்டப்படுகின்றன. என்ருலும் சமீபகாலம் வரையில் இதுபற்றி அதிகமான ஆய்வுகள் நடைபெறவில்லை.  ைசக் கோ - சோ மற்றிக் நோய்கள் (Psycho somatic diseases) 6T67 g) gullulg. யான நோய்களுக்குப் பெயர். இத் துறையில் ஆய்வுகள் பல நடை பெறுகின்றன. கொலத்திரோல் (Cholotrol) குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இரத்தத்தில் காணப் பட்டால் இதய நோய்கள், இரத்த நாள நோய்கள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் அறிந்திருந் தார்கள். இதுபற்றி நடந்த ஆய்வு
கள் சில சிந்தனைக்குரிய விசயங் களைத் தெரிவிக்கிறது. கொலத் திரோல் அதிகம் உள்ள உணவு களை குரங்குகளுக்கு ஊட்டினர். பின்னர் இவைகளைச் சுமுகமான சீரான சூழலில் வளர்த்தபொழுது கொலொத்திரோல் அவ்வளவு பாரதூரமான விளைவுகளை அவற் றில் உண்டாக்கவில்லை. வழமை யான காலத்திற்குச் சீவித்தன. ஆனல் இக் குரங்குகளைக் கோபம், பயம் போன்ற உணர்வு உச்சங் களுக்கு அடிக்கடி கொண்டு சென்ற பொழுது அவை மிக விரைவில்
இறக்கின்றன 695 கண்ட னர். கோபம், பயம் போன்ற உணர்வு உச்சங்களிற் சஞ்சரித் தால் உயிரை அரிக்கும் சில இர சாயனப் பொருட்கள் சுரப்பது ஊக்குவிக்கப்படுகிறது. இதனல்
உடலிலும் தாக்கம் ஏற்படுகிறது. மன அமைதி உடம்பு வாகிலுள்ள
குறையும். இதே சமயத்தில் கடல் மட்டத்திற் கிடையாகப் பறப்ப தற்கு வேண்டிய வலு குறைவாக இருக்கும். I ஏனெனில் அடர்த்தி கூடிய காற்று கூடிய மேலுதைப்
பைக் கொடுத்து விமானத்தின் நிறையில் 9(b) பங்கை ஈடு செய்து எஞ்சினின் வேலையைச்
சுலபமாச்குகின்றது. ஆனல் மேலே செல்லச் செல்லக் கிடையான பறத் தலுக்கு வேண்டிய வலு அதிகரிக் கும். சுருங்கக்கூறின் கடல்மட்டத்தி லிருந்து மேலே செல்லச்செல்லக் கிடையான பறத்தலுக்கு வேண்டிய
வலு அதிகரிக்கும்; எஞ்சினுற் பெறக் கூடிய வலு குறையும். ஒரு கட்டத் தில் இரண்டு வலுக்களும் சமனுக இருக்கும். இங்ாநிலையிலும் கூடிய உயரத்தை விமானத்தால் அடைய இயலாது. இக் நிலையே அதன அதி
உயர் நிலையாகும்.
பீச்சு விமானங்களில் (jet Planes) எஞ்சினுற் பெறக்கூடிய வலு (காற்றுடன் சம்பந்தமில்லாததால்) உயரத்துடன் பெருமளவு மாறுவது இல்லை. ஆனல் கிடையான பறத்த லுக்கு வேண்டிய வலு மாறுபடும். (தொடரும்)

G3 p5 mr ti உண்டுபண்ணக்கூடிய போக்குகளை ஒரளவுக்காயினும் கட்டுப்படுத்துகிறது எனக் கருதப் படுகிறது.
() உயிரினங்கள் தங்களைச் சுற்றி நுண்மையான ஒளிப் போர் வையை ( Aura) வெளிப்படுத்து கின்றன. மனிதனைச் சுற்றி இப்படி சாம்பல் - நீல ஒளிப் போர்வை தென்படுவதாக உருசிய ஆய்வா ளர் பெரியகோஸ் கண்டுபிடித் திருக்கிருர், ஒளி நிற வடிகள் Colour filters) u uu GT u (SöS) GTG) iš கப்பட்ட ஒளிப்படங்கள் இப் போர்வையின் சில இயல்புகளைத் தெரிவிக்கின்றன. ஒரு செக்கனுக்கு இப் பேர்ர்வை கொஞ்சம் கொஞ்ச மா கப் பிரகாசமாகிக்கொண்டு வருகிறது. பின்னர் வேகமாகவே மங்குகிறது. 3 செக்கனுக்குப் பிறகு மீண்டு பிரகாசமுற்றுக் கொண்டுவந்து மறைகிறது. இப் படி நிமிடத்திற்கு 15-25 தடவை இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை உடம்பிலுள்ள சேதன சக் திப் புலங்களினல் ஏற்படுகின்றன என்று சொல்கிருர்கள். இவ் ஒளிப் போர்வையின் தன்மை மன நிலை யைச் சார்ந்திருக்கலாம் என நம் பப்படுகிறது. ஆட்களைச் சுற்றி மூன்று அடிக்கு இப் போர்வை இருக்கிறதாம்.
0 ஆட்களை ச் சுற்றி ஒளிப்
போர்வை உண்டு எனப் பண் டைய இந்திய, சீன மருத்துவர்கள் நம்பினர். இதை அவர்கள் வெறுங் கண்ணுல் எப்படித் தெரிந்து கொண்டனர் என்னும் கேள்விக்கு நிச்சயமான விடை கிடைப்பது இல்லை. இப் போர்வையின் தன்
45
மையிலிருந்து நோயின் தன்மையை அறியலாமென்றும் சொல்லப்படு கிறது. சித்த வைத்தியம் நிறுவிய, சில முனிவர்கள் நோய்களை அறி வதில் Intutive ஆக செயல்பட்ட னர் என்பது பொதுவானதொரு நம்பிக்கை. காண்பது, கேட்பது போன்ற ஐம்புலன்களைத் தவிர மனிதனுக்கு வேறு புலன் ஏதா
வது உண்டா என்ற கேள்வி பல காலமாகக்
கேட்கப்பட்டுவந்தா லும் ஒரு முடிவும் எடுக்கப்பட வில்லை. ஆருவது புலன் " என்று சிலர் குறிப்பிடுவது மின்னல்போல் பளிச் செனச் சில செய்தியைச் சொல்வதாக நம்பப்படுகிறது. இப் Luqu nt 60T Lutti6) 660) il Psychic அல்லது முன்ருவது கண் என்றும் கூறுவதுண்டு.
இப்படியான சக்தி மனிதனி டம் இல்லை, இருக்கமுடியாது. இது ஏமாற்றுவேலை என் ருெரு கட்சியும், "ஞானக் கண் மனித னுக்கு உண்டாகலாம். இதனல் வருங்காலம் உரைத்தல், விபத்து முதலியன பற்றி முன்கூட்டியே தெரிந்திருத்தல் போன்ற  ைவ சாத்தியமாகிறது என் ருெரு கட்சி யும் பலகாலமாகவே வாதிட்டுக் கொண்டிருக்கின்றன. இங்கு நான் எவ்வித முடிவும் எடுக்க முயற்சிக்க வில்லை. உங்களையும் இதுபற்றி ஒரு முடிவும் எடுக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இக் கட்டுரையில் தரப்பட்ட சில தகவல்கள் ஹோவாட் பொச 607 fř (Dr. Hovard Posner) stsôr69y uh இளம் மருத்துவர் எழுதிய கட் டுரையை அடிப்படை யாக க் கொண்டது. இவர் நியூயோர்க் லிங்கன் வைத்தியசாலையிற் பயிற்சி (Intern) பெறுகிறர் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. -

Page 25
"அப்பா லுக்கு அப்பால்” - 3
- சி. கதிர்காமநாதன், B. Sc. --
கிறிஸ்துவுக்கு 4 நூற்றண்டு கட்கு முன்பு தத்துவ மேதை பிளேட்டோவும் (Plato) அவரது சீடர் அரிஸ்டாட்டிலும் (Aristote) வெளியிட்ட கருத்துக்கள் கிரேக்க தேசத்து அறிவாளிகளாலும், மத குருமார்களாலும் பெரும்பாலும் ஏற் றுக்கொள்ளப்பட்டன. இவர்களது கருத்துப்படி, பூமி நிலைத்த கோள வடிவான கிரகமெனவும், பிரபஞ்சத் தின் (Univeres) மையப்பகுதியில் இது நிலையாக (இயங்காது) இருக் கிறதெனவும், இதனைச் சுற்றியே ஏனைய கோள்களும், சூரியனும், விண்மீன்களும் இயங்குகின்றன எனவும் கொள்ளப்பட்டது. இக் கொள்கை இரண்டாயிரம் ஆண்டுகள் வரை (கொப்பர் நிக்கஸ் என்ற வானியல் விஞ்ஞானி தனது கொள் கையை வெளிவிடும்வரை) எல்லோ ராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
என்ருலும், இக்கொள்கைகளின் படி, சூரியனும், ஏனைய கிரகங்களும் எந்தப் பாதையில் இயங்குகின்றன எனக் கொள்ளப்பட்டனவோ, அக் தப் பாதையினின்றும் சற்றே வில கிச் செல்வதாகக் காணப்பட்டன. அதாவது, அதாவது பூமியை மைய மாகவுடைய வட்டப் பாதைகள் வழியே அவை இயங்கவில்லை இது வானியல் விஞ்ஞானிகட்குச் சற்றுத் தொல்லையளித்துக்கொண்டே இருந் தது. 。 Y
போலந்து நாட்டின் மருத்துவப் பாதிரியார் ஒருவரே முதன்முதலா கப் பூமியும் பிரபஞ்சத்தில் இயங்கு கின்றது - நிலையாக இருக்கவில்லை என்ற கோட்பாட்டைக் கண்டுபிடித்
தார். இவருடைய பெயர் "நிக்கலே யஸ் கொப்பர் நிக்கஸ் ஆகும். இவ ருடைய கருத்துக்களை எல்லோரும் புறக்கணித்தனர். ஒரு வருக்கும் "பூமியே நிலையான பிரபஞ்ச மையம்" என்ற (போலிப்) பெருமையை இலே சில் கைவிட மனமில்லை. கர்வம்
கொண்ட மனித மனங்கள் தாம்
வாழும் பூமியின் தனித்துவத்தைக் குறைக்க ஒப்பவில்லை, ஆளுற்ை கொப் பர் நிக்கஸோ " பூமியும் ஏனைய கோள்களைப்போன்றே சூரிய இன வலம்வருகின்றது' என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துச் கூறிஞர். என்னதான் இவர் விளக்கம் கொடுத் தாலும் இவருடைய கோட்பாடுகளை மக்கள்
பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை.
1572 ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் 11ஆம் திகதி ஆகாயத்தில் ஓர் புதிய விண்மீன் (விண்மீன்கள் குறைந்த ஆகாயத்தின் பிரதேசத் தில் தோன்றியது. இதன் ஒளி வாக அதிகரித்துச் சங்திரனுக்கு அடுத்தபடியான பிரகாசத்தைப் பெற் றது! இரவில் நிழல் விழும்படி செய்த இந்த விண்மீனைப் பகலிலும் கூட ஓரளவு காணக்கூடியதாக இருந்தது! இக்த விண்மீனை கன்கு அவதானித்துவந்த டென் மார் க் தேசத்தவரான டைக்கே ப்ரா ? (Tycho Brahe) GTsiТLouir usu Luguu கொள்கைகளை வெளியிட்டுக் கொப் பர் நிக்கஸின் கருத்துக்களை எதிர்த் துப் பின்னர் தம்முடைய ஆராய்ச் சியை மேலே தொடரஇயலாத நிலை யில் தமது மாணவராகிய கெப்ள ரிடம் ஒப்படைத்தார். (தொடரும்:

விஞ்ஞானத்தின் தந்தை - ஓர்னஸ்ட் ருதர்போட்
- செல்வி சாந்தினி கனகசபை, வேம்படி மகளிர் கல்லூரி -
இன்றைய விஞ்ஞான உலகில் * அணு" என்ற சொல் பெற்றிருக் கும் செல்வாக்கு வேறு எதற்கும் இல்லையென்று திடமாகக் கூற லாம். ஒரு பேச்சுக்குச் சொல்லப் போனல் அடுப்பங்கரையே கதி யென்று இருக்கும் ஒரு பாமரப் பெண்ணுக்குக் கூட, அணு என்ருல் ஒரு பெரிய சக்திவாய்ந்த சிறு பொருள் என்னும் அளவிற்கு இன்று தெரிந்திருக்கின்றது, இவ் அணு விஞ்ஞானத்தைப் பாலூட் டிச் சீராட்டி வளர்த்தவர்களில் முதன்மை வகிப்பவர் ஒர்னஸ்ட் ரு தர்போட் என்பதிற் சந்தேக மில்லை. இரண்டு வருடங்களுக்கு முன் அவரது பிறந்ததினத்தைக் கொண்டாடுவதற்கு விஞ்ஞான உலகமே ஒரு விழா எடுத்தது. இந்நேரத்தில் நாமும் அவரைப் பற்றிச் கிறிது அறிந்துகொள்வது அவசியமாகின்றது.
ஒர்னஸ்ட் ருதர்போட் 1871ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் திகதி நியூசிலாந்து தேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். பன்னிரு பிள்ளைகளில் ஒருவராகிய இவரைக் கூடிய சிரத்தையுடன் வளர்க்க ஏழை விவசாயியான இவரது தந்தையினல் முடியா திருந்தது. சிறு வயதிலேயே படிப்
பிலும் விளையாட்டிலும் இருந்து
ஆர்வத்தைக் கண்ட இவரது ஆசிரி யர், பெளதிகத்திலும், இரசா யனத்திலும் அவரது உற்சாகத் தினத் திருப்பினர். இதன் பயனுக இவர் 1890ஆம் ஆண்டு ஒரு புல
மைப் பரிசில் பெற்று, நான்கு வருடத்தில் உயர் பெளதிகத்தில் உயர் பட்டமும் பெற்ருர், மீண் டும் இவரது ஆராய்ச்சியைத் தொடருவதற்காக இங்கி லா ந் திற்கு அனுப்பப்பட்டார். இவ் வேளையில் பணவசதியின்மையால் இவருக்கு நடைபெறவிருந்த திரு மண ம் ஒத்தி வைக்கப்படவேண் டிய நிலை ஏற்பட்டது.
இவர் இலண்டனில் " கவர்ண் டிஸ்" ஆய்வுகூடத்தில் ஜே. ஜே. தொம்சன் னின் தலைமையிற் தனது ஆய்வை நடாத்தினர். இவர் முதல் தொடங்கிய ஆராய்ச்சி கம்பியில்லாத் தொடாபு பற்றிய தாகும். ஏற்கனவே இதில் வேறு சில ரு ம் ஈடுபட்டிருந்தார்கள். திரும்பவும் இவரது விரோதியான நிதிநிலைமையின் தாக்கத்தினல், இந்த ஆராய்ச்சியின் பயனைப்பெற முடியாது போயிற்று. ஆயினும் oo Lorris, Gastr 6sfoo Gr 6r i su Trdi இதன் உபயோகம் உலகத்திற்குத் தெரியப்ார்டுத்தப்பட்டுவிட்டது.
இதற்கிடையில் ருதர்போட்" தொம் ஸ fை ன் உத வி யு டன் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதன் பயனக தொம்சன் தனது 'இலத் திரன்' என்னும் ஆராய்ச்சிக் கட் டுரையை வெளியிட்டார். அதே நேரத்தில் 1898ஆம் ஆண்டு ருதர் போட் கனடாப் பல்கலைக்கழகத் தலைமைப்பீடத்தில் தொம்சனி ஞல் அமர்த்தப்பட்டார். இதன்

Page 26
48
பின்னர் ஒத்திவைக்கப்பட்ட அவ ரது திருமணம் நடைபெற்றது. இவரது ஆராய்ச்சி திரும்பவும் புதிய மெருகுடன். ஆரம்பமானது. இவரது "அணுப்பிரிப்பு " பற்றிய ஆராய்ச்சி நல்லபலனைக் கொடுத் தது. 1907ஆம் ஆண்டு திரும்பவும் இங்கிலாந்திற்குத் திரும்பினர். அங்கு மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் தலைமைப்பீடத்தில் அமர்த் த ப் பட்டார். அவரது ஆராய்ச்சியின் பெரு வெற்றிக்
காக 1908ஆம் வருடம் இரசா யனத்தில் " நோபல்" பரிசிலும் பெற்றர். அப்போது அவருக்கு
வயது 37 ஆகும்.
முதலாவது உலகயுத்தத்தின் பின்னர் இவரது ஆராய்ச்சி மான் செஸ்டரில் இருந்து கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலைக்கு இவருடனேயே சென்றது. இங்குதான இவர் தன் ஆராய்ச்சியின் முழு வெற்றியை
யும் பெற்றர். அணுவில் இலத் திரன்களுடன், புரோத் தன்களும், நியூத்திரன்களும் இருப்ப  ைத க் கண்டுபிடித்தார். இதன் பயனுக அணுவின் உள் அமைப்பின் முழு வியாபகத்தையும் தன்மைகளை யும் கண்டுபிடித்து உ ல கி ப் பாராட்டுதல்களைத் திரும் பவும் பெற்றர். சூரிய மண்டல அமைப் பைப்போன்று அணுவும் - இலத் திரன், புரேரத்தன் நியூத் திரன் என்பவற்ருல் அமைக்கப் பட்ட ஒரு தொகுதி என்று மிகவும் இலகுவாகத் தெரிய வைத்த பெருமை இவரையே சாரும்.
அளப்பரிய பெருமையுடைய இவர் தாம் ஆற்றிய சேவையின் பின்னா 1937ஆம் ஆண்டு அக் டோபர் மாதம் 19ஆம் திகதி விஞ்ஞான உலகை விட்டு உயிர் நீத்தார்.
இம் முறை பிரித்தானிய
ஏற்படுகிறது.
ஈடுபட்டு வெற்றிகண்டுள்ளனர்.
யாகின்றன.
வேண்டாம் இந்தக் குளோரீன் நாற்றம்!"
நீரை நாம் வழமையாகக் குளோரீனிட்டே சுத்திகரிக்கின்றேம். மக்களுக்கு அவ்வளவு திருப்தியைக் கொடுக்கவில்லை. ஏனெனிற் குளோரீன் மணத்தினுல் அருவருப்பு
அத்துடன் திடமான (Accurate) அளவில் குளோரீன், கலக்கப்படின் மட்டுமே பூரணமாக நீர் சுத்திகரிக்கப்படும். இது சற்றுக். கடினமான காரியம். இக் காரணங்களால் அவர்கள் குளோரினைவிட ஒரு 'நல்ல" சுத்திகரிக்கும் கருவியைக் கண்டுபிடிக்கும்
புறவூதாக் நீரினூடு செலுத்தும்போது நீரிலுள்ள கிருமிகள் கொல்லப்படுகின்றன. கலங்கல் நீராயின் அடையவிட்டபின் சுத்திகரிக்கலாம். (ஏனெனில் ஒளிக்கதிர்கள் கலங்கியுள்ள தூசுத் துகள்களால் சிதறடிக்கப்படும்.) அங்கு இதற்கெனக் குழாயமைப்பில் கருவிகள் செய்யப்பட்டு விற்பனை
ஆதாரம் :
முயற்சியில் கதிர்களைத் தெளிந்த
B. B. C யின் தமிழோசை"


Page 27
Registered as a News Magazine in
------- 다 디 『r TW-시력이 후**그다TT T니다**그』,『"「 "T" "T 활귀** 홈구*TT
* சட புட டிம் அற் மருதனுமடம், கந்தன் கான்ட் பிறேக் ! (ஆங்கிலத் தரம்பற்றி மின்சித்தன் தனது அங்கதபாணியில் எழுதுகிருர்)
* இன்னும் பல சுவையான சிந்தனை விருந்து.
E நியூவேவ் சீரழிவு கிடையாது.
(grå sumɑsjú sağësib, småoù Gōsı'nın, tumosā, uusiioupavirib.)
E.
Edited & Published by Sinnial
behalf of Wahira
O
Press, Tellippa llai.
Kalmulnai.

* * *
* உறங்கும்பொழுது உடுக்கடிக்கும் கனவுகள்
(கனவைப் பற்றிய சுவையான உளவியல் கட்டுரை)
* உலகம் சுற்றிய வாலிபன் போகமுனி ! SLLLS YYCTLS YTS KTTT TTH SLLLLLKK KKSLLLLK LL LLL LLLLL LLL L0LLS
* numaenrı sırtı’homon aurinae innrásaei^ foranae ae in Éir – 4.
Kathirgamanathan of Zahira College,
Science
Union and Printed at Kugan
A. H. Abdul Bazeer.
ecutive Editor: