கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1978.05-06

Page 1
H. @pā岛 நி3 விட்டது
القديمة داون மனித்தியாலங்கள் C б— °
i.e.,
- ~-്യ - اسمیہ۔
பல் நோயைத் தடுப்பது எப் நீரும் விவசாயமும் (2) அனேகள் வேட்கையுற்ற பசுக்களே இன் வளையிகளின் கீழுள்ள பரப் அதிர்வு: எதிரியா? நண்ப சேதனவுறுப்பு இரசாயனம்
சித்த வைத்தியம் (நூல்
 
 

(LD -gశ51
1978
தொகுதி 6 இல: 3
ઈંry.િ ஆப்பதே ந மி: | ஆகப் பிந்தி
சிறந்த நேரம் القلاع الأتى
9. 24- 28 === (ழ் பட்டே
GGush ('w fyrpið
محی سے۔ ---- = | ܒ
-్మ" ----
芯 | * సి سمفاتي
في جيبسبب الم" ا أم. سي
лѣідѣп бол 5і)
புகள் னு?
(3)
விபரப் பட்டியல் )
வில: 2.0DGD

Page 2
NTH
maraaaaaaaaa
Articles
OPINION syans HOW TO PREVENT DENTAL CARIES - W AER AND AGRICULTURE (2) - O AMS line HOW TO DETECT COWS IN HEATA REAS UNDER CURVES Südy VBRATION FOE OR FRIEND'? - ORGANIC CHEMISTRY (3) ■ə TAM İL MEDICINE - A BBLOGRAPHY dap
ODOTRU GDR
President Prof. T. Jogaratnam V Dr. R. Narendran A Mr. II. Ariyaratnam
Secretary:
TreaS14ነ ̇êነ‛
Ordinary Memb3rs to the General Council:
Dr. R. Mahalinga Iyer.
Dr. A. Kandiah,
chief Editor: P. T. Jayawickramarajah M
Administrative Editor: K. Krishnanantl R... Mahalinga Iy
compling Editor: S. V. Parameswaran M
Editorial Board:
w. K. Ganeshalingam Ph D. M.Sc. A. Kandiah M.Sc. Ph.D. V. Manamohan M . B. , B.S. K. K. Navaratnam B.Sc. Agric (Hons)
i Publishers: Administrative Editor
Correspondence: Administrative Editor
"Ootru' Organisati 215, COLOMBO STRE

جو نخحXہ
Authors
S. Selvanayagam Ph. D.
T. Anandamoorthy B. D. S. A . Kandiah Ph. D. U. Mahalinga Iyer B.Sc. (Eng) R. Rajamahendran B. V. Sc. Ph. D. S, Yogachandran Ph. D. R. Mahalinga Iyer Ph. D. S. Sotheeswaran Ph. D.
S. Murugavel B.A. (Hons)
GANISATION
Yice President: Prof. A. Thurairajah
issistant Secretary: Dr. V. Manamohan
Dr. D. J. Gunaratnam, Dr. S. V. Paramswaran,
Dr. V. Neminathan
B. B. S. M. Ed
hasivam M. V., Sc.
ter PhD.
, Sc. Ph. D.
P. Thanikasalam B.Sc.Eng. (Hons)
P. Sothinathan B. Com. (Hons) S. V. Parameswaran M.Sc. Ph.D.
O T'PHONE: 2388 ET, KANDY

Page 3
அறிஞ
ஊற்று :
புதிய
தொகுதி: 6 மே -
பிரதம ஆசிரியர்;
பி, ரி, ஜெயவிக்கிரமராஜா
M.B.,B.S., M.Ed.
நிர்வாக ஆசிரியர்;
க. கிருஷ்ணுநந்தசிவம் M. V. Sc.
இ. மகாலிங்க ஐயர் Ph.D.
ஆசிரியர் குழு
கே கணேசலிங்கம் M. Sc., Ph. D. பி. தணிகாசலம் B. Sc. Eng. (Hons)
g. sbangsu T M.Sc., Ph.D.
, Gs TS5 Tg5 iT B.Com, (Hons)
வ, மஞேமோகன் M. B. B. S.
எஸ். வி. பரமேஸ்வரன் M.Sc.Ph.D.
கே, கே. நவரத்தினம் B. Sc.(Hons)
தொகுப்பாசிரியர்:
ஆண்டுச் சந்தா ரூபாய் 12.00

ருர் தம் இதைய ஓடை ஆழநீர் ன மொண்டு செறி தரும் மக்கள் ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் தோர் உலகம் செய்வோம்.
ஜூன்-1978 24 இல: 3
+ கருத்துரை ... 3
i- Firstly lib ... 8
+ பல்நோயைத் தடுப்பது எப்படி?
தி. ஆனந்தமூர்த்தி ... 9. + நீரும் விவசாயமும்
<器· கந்தையா 12 + அணைகள்
திருமதி, உமாராணி மகாலிங்க ஐயர் 16
+ வேட்கையுற்ற பசுக்களை இனங் காணல்
ஆர். ராஜமகேந்திரன் ... 20 + வளையிகளின் கீழுள்ள பரப்புகள்
சி. யோகச் சந்திரன் ... 27 + அதிர்வு: எதிரியா? நண்பனு?
கலாநிதி. இ. மகாலிங்க ஐயர் . 30 + சேதனவுறுப்பு இரசாயனம் (gル
கலாாதி. சு. சோதீஸ்வரன் . 32 + சித்த வைத்தியம்
(நூல் விபரப் பட்டியல்) ... 36
. பரமேஸ்வரன் MSe, Ph.D.
முகவரி:-
ஊற்று நிறுவனம், 215, கொழும்பு வீதி, கண்டி,

Page 4
СИИith f3eat (2.
YARLTON 82, lst C.
v W Colomr
T'Phone: 2742

mhftment. fтота:
8 s
W
STORES OSS Street,

Page 5
கருத்துரை
தமிழரின் கலாச்ச
‘கலாச்சாரம்' என்பது ஆங்கில அக லும் உளமும்) மேம்படுதல்" என்று பொருள் விளைந்ததே கலாச்சாரம் ஆகும். ஒரு சமூக கள், பயிலும் கலைகள் (ஆடற்கலை, இசைக்க ழிலால் பெறப்பட்ட பொருள்கள் (வீடுகள், சிற்பங்கள், சித்திரத் தேர்கள், பாவனைப்ே வளர்ச்சியையும் பண்பாட்டையும் உணர்த் பொதுவாகக் குறிப்பிடும் பொழுது பல்வே கள் வளர்த்து வந்த கலைகளையே கருதுகின் மொழிபேசும் மக்கள் வளர்த்து வந்த க கண்ட உயர்வு பெரிதென மேலை நாட்டாரு என்ற உலகப் புகழ்பெற்ற கலைக் கூடத்தில் சிறந்த கலையாராய்ச்சியாளர் ஆற்றிய உை தமிழ் மக்களின் பல்வேறு கலைப்படைப்புக்க மட்டுமல்ல, உலகளாவிய புகழையுமுடைய மொழிகளும் பேச்சு மொழிகளும் இந்தியா படிப்படியாக மறைந்த உண்மை சான்று அண்மைக்காலத்தில் ஸ்கந்திநேவிய وفقا له مL ச்சியாளர், ஆகியோர் மேற்கொண்ட ஆ பகுதியில் ஆதியில் வாழ்ந்த மக்கள் திராவிட விடமொழிகளுள் ஒன்ரு:ன தமிழ்மொழி தமிழ் மொழி இத்தகைய தொன்மையும் தொன்ற கும். இத்த மொழியை ஏழு கோ கள். எனினும், தமிழர் சிறுபான்மையே மக் கள் காலப்போக்கில் தமிழ் மொ. அந்தஸ்திலுள்ள பெரும்பான்மையோர் G வருகின்றனர். பிஜித்தீவுகள், மொறி: தள் முதலான பகுதிகளில் வாழும் தமிழர் மொழிகளையும், கலப்பின மொழிகளையும் ( தகைய நாடுகளிலிருந்து வந்த இலரை ே நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மகாந ளிலும் சந்தித்து உரையாடியிருக்கின்றேன். பெயர்களைக் கொண்டவர்களாகவிருப்பதே இப் பகுதிகளில் வந்து குடியேறினர் எ ன் இருக்கின்றனர். ஆனல் அவர்கள் இப்பொழு சமயங்கள் எல்லாம் வேருகவே உள்ளன. இ அம்சங்கள் இன்று நிலைத் திருப்பதற்கு பன் ணமாகும். அதேவேளையில் மேற்கு ஆபிரிக்
(

ாரப் பரிவர்த்தனை
ராதியின் கருத்துப்படி பயிற்சியால் (உட ாபடும். ஒரு சமுகத்தின் செயற்பாட்டால் ாத்தவர் பேசும் மொழி, செய்யும் தொழில் ல, கட்டடக்கலை, உட்பட), செய்யுந் தொ. கோயில்கள், சுவரோவியங்கள், ஆடைகள், பொருள்கள்) ஆகியன யாவும் சமுகத்தின் துவன. திராவிடர் கலைகள் எ ன் று நாம் று மொழிகளைப் பேசும் திராவிட இன மக் ருேம். திராவிட இன மக்களுள்ளும் தமிழ் லைகள் அனந்தம் சிற்பத்துறையில் தமிழன் நம் விதந்து கூறுவர். பிரிட்டிஸ் மியூசியம் தென் இந்தியச் சிற்பக்கலை பற்றித் தலை ரைகளை நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ளும் தமிழ் மொழியும் பாரம்பரியமானவை ன. தமிழ் மொழியோடு தொடர்பான பல வின் பல பாகங்களில் வழங்கி வந்து, படிப் களோடு நிறுவப்பட்டிருக்கின்றது. அல்லா ஆராய்ச்சியாளர், சோவியத் நாட்டு ஆராய் ய்வுகளின்படி சிந்துவெளி நாகரிகம் நிலவிய .ர் என்றும், அவர்கள் பேசிய மொழி திரா சார்பானது எ ன் று ம் நம்பப்படுகின்றது. புகழும் மிக்கதாகவிருப்பது மகிழ்ச்சிக்குரிய டிக்கு மேற்பட்ட மக்கள் இன்று பேசுகிரு ாராக வாழுகின்ற பல நாடுகளில் தமிழ் மியை மறந்தும், அதிகார பூர்வமான பசும் மொழிகளைப் பே சி யு ம் பயின்றும் 0ஸ், தென் ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவு பெரும்பாலும் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய பேசுபவர்களாகக் காணப்படுகின்றனர். இத் காலாலம்பூர், சென்னை ஆகிய நகரங்களில் ாடுகளிலும், பிரித்தானியா போன்ற நாடுக இவர்கள் பெரும்பாலும் மருவிய இந்தியப் ாடு, இந்தியாவிலிருந்து தமது மூதாதையர் ற உணர்வும் ஒரளவுக்கு உடையவர்களாக pது பேசுகின்ற மொழிகள், தழுவிக்கொண்ட }ந்தியப் பண்பாட்டோடு தொடர்பான சில பாட்டின் பழமையான பாரம்பரியமே கார கா போன்ற பகுதிகளிலிருந்து அடிமைகளா
3)

Page 6
கக் கொண்டு செல்லப்பட்டு வட, மத்திய, ே பட்ட கறுத்த இன மக்கள் தாம் பேசிய ஆட் பிய மொழிகளையும் சமயங்களையும் பின்பற தவிர ஏனைய பண்புகளில் ஐரோப்பிய இன.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுக இலங்கை போன்ற நாடுகளிலுள்ள தமிழ் ம மாகத் தமிழ் மொழியையும் இந்து மதப் பணி இருந்தது. முன்னைய தொடர்பு இப்பொ இம்மக்கள் ஓரளவுக்குப் பாதிக்கப்படலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தமி டின் பல பாகங்களிலும் குடியிருப்புக்கள் அ4 ருண்டளவில் தமிழருட் பெரும்பாலானவர் குப் பாகத்திலும் குடியிருப்புக்களை அமை, நூற்ருண்டளவில் தமிழ் மன்னரின் குடையி டையும் வாய்ப்பு ஏற்பட்டது. அதேவேளை களிலும் தென் இந்தியக் கலாச்சாரப் பண்பு
தென்இந்தியா ஈழத்திலிருந்து இருபது மையான காலத்திலிருந்தே தமிழக மக்களு ஆனயும் தொடர்ச்சியாக இருந்து வந்துள் நிலப்பகுதியான வடக்கிலும் கிழக்கிலும் வ கலாச்சாரப்பண்புகள் மிக்குடையோராகக் யுடை பாவனைகள் இன்றைய கேரள நாட்டு ரும் அறிவர் அதேவேளையில் மலே நாட்டு நாட்டுப்பண்புகளையும் பாண்டிய நாட்டுப்ப
தென்இந்திய மக்களது தொடர்பு கார ாரப்பண்புகளும் இக்காலவரை தொடர்ச்சி றது. புவியியல் ரீதியில் இலங்கை அண்மை தொடர்ச்சியான பிணைப்புக்கு வாய்ப்பு ஏற் கட்டடக்கலை, கோயிற் கலை, சிற்பக் கலை, பா anyth வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. ஈழ கற்றுத் தொழில் புரிந்திருக்கின்றனர். சிலர் ந்து தமிழாராய்ச்சிகள் செய்திருக்கின்றன. னகசபைப்பிள்ளை முதலியோர் உட்படப் ட முதுபெரும் புலவரான உ. வே. சாமிநாதை சென்று தமிழாராய்ச்சி செய்து புகழ் பெற்ற ந்த அடிகள், சிவபாதசுந்தரனர், தனிநாய நிதி வி. இராமகிருஷ்ணன் * முதலான அ. னம், தெட்சணமூர்த்தி போன்றவர்களு சைவசித்தாந்தம், தமிழிசை மு த லா ன
* இலங்கைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும் சைவ னன் அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அை (8சர் இராதாகிருஷ்ணன் மெய்யியல் நிலையத்தில் பொன் இவரது சொற்பொழிவுகளேத் தொகுத்து Perspectiges in இப்பொழுது (1978) வெளியிட்டுள்ளது.
(4

தன் அமெரிக்கப் பகுதிகளில் குடியேற்றப் பிரிக்கப் பேச்சு மொழிகளை மறந்து, ஐரோப் }றிவருகின்றனர். இவர்கள் நிறமொன்று த்தவர் என்று கருதப்படக்கூடியவர் ஆவர்?
iளில் குடியேறிய தமிழ் மக்கள், இந்தியா, க்களின் தொடர்ச்சியான பிணைப்புக் காரண iண்பாடுகளையும் பேணிக்கொள்ளும் வாய்ப்பு ழது குறைந்து வருவதனுல் எதிர்காலத்தில்
ழ் மக்கள் இங்கு ஆதிகாலந்தொட்டு நாட் மைத்து வாழ்ந்து வந்தனர் பத்தாம் நூற் கள் இலங்கையின் வட பாகத்திலும் கிழக் த்து வாழத் தொடங்கினர். பதின்மூன்றம் ன் கீழ் தமிழ்மொழியும் பண்பாடும் சிறப்ப பில் சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி கள் காலந்தோறும் பரவிவந்தன.
கல் தொலைவிலிருப்பதனுல் மிகத் தொன் 1டைய தொடர்பும் கலாச்சாரப் பரிவர்த்த ளன. இலங்கையில் தமிழரின் பாரம்பரிய பாழும் மக்கள் இன்றுவரை சேரநாட்டுக் காணப்படுகின்றனர். இவர்களது நடை மக்களது பண்புகளை ஒத்திருப்பதை யாவ ப் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சோழ ண்புகளையும் கொண்டவராக உள்ளனர்.
*ணமாகவே எமது மொழியும் பிற கலாச் Fயான வளர்ச்சியைப் பெற்று வந்திருக்கின் பாக இருந்ததனுல் தமிழ் நாட்டு மக்களின் பட்டது. தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், ரம்பரியத் தொழில் முறைகள் என்பன யா }த்து அறிஞர் பலர் இந்தியா சென்று கல்வி/ நுண்மாண் நுழைபுலமுடையோராகத் திகழ் ர்: "ஆறுமுகநாவலர், தாமோதரம் பிள்ளை, பல மூதறிஞர்களை ஈ ழ ம் தந்திருக்கின்றது. யர் போன்ருர் ஈழத்தறிஞர் காட்டிய வழிச் வராவர் இந்த நூற்ருண்டிலும் விபுலான க அடிகள், சோமசுந்தரத் தம் பிரான், கலா றிஞர்களும் இசைக்கலைஞர் சண்மு கரெத்தி ம் த மிழ் நாடுசென்று தமிழ் மொ ழி
துறைகளில் தமக்குள்ள புலமையையும்
சித்தாந்த அறிஞருமாகிய கலாநிதி வி. இராமகிருஷ் ழப்பை ஏற்று அங்கு சென்று பல்கலைக் கழகத்திலுள்ள விழாச் சிறப்புச் சொற்பொழிவுகள் செய்துள்ளார்கள் | Saipism என்ற தலைப்பில் சென்னைப் பல்சலேக் கழகம்

Page 7
திறமையையும் எடுத்துக் காட்டியுள்ளனர். தமிழ் இலக்கணம், சைவசித்தாந்த ஆரா புக்கள் முதலியன உட்பட பல துறைகளில் வர்த்தனைகள் யாவும் ஆட்சி யா ள ரி ன்
யே நடைபெற்று வந்தன. பிறநாட்டவர்
மொழி இலக்கிய வளர்ச்சிக்கும் கலாச்சார ட இருக்கவில்லை. ஆனல் இந்நாட்டிற்குச் சு: பல்வேறு இனத்தவரின் மொழிகளையும் ப வாய்ப்புக்கள் இருந்தன. வெவ்வேறு சமுக யர், ஐரோப்பியர் ஆகியோரது தனிப்பட்ட களையும் வளர்க்கக்கூடிய வாய்ப்புக்கள் இரு பொருத்தமாக இருக்கவில்லை. சிங்கப்பூர் நாடுகளில் அரசியல்வாதிகள் நுண்ணறிவும் ஞரல் சீனம், தமிழ், மலே, ஆங்கிலம் ஆகி உரிமையும் அளிக்கப்பட்டுள்ளன. அல்லாம வதுமாகிய மலே மொழிக்குத் தேசிய மெ மிகப் பெரும்பான்மையினராகச் சீன மக்கள் மொழி-மத பரஸ்பர நல்லெண்ணமும் அர8 நாடுகள் பின்பற்றுவதற்கு ஏற்றன என்று சு
இந்தியாவும் இலங்கையும் அண்மையாக தொடர்பு இருந்ததனலும் கலாச்ாாரப் பரி ருக்கின்றது. ஆனல் அண்மைக்காலத்தில் லும் குறுகிய நோக்கத்தினலும் இதுவரை க னையில் "கோட்டாவையும் கட்டுப்பாட்டை சர்வதேசக் கலாச்சாரப் பரிவர்த்தனை வெறு கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக இலங்கை நூல்களையோ சஞ்சிகைகளையோ தமிழ் நாட் வாசிக்க முடியவில்லை. குறித்த ஒரு வட்ட-த்வி தமிழ் மக்களின் கலை-இலக்கிய வளர்ச்சிக்கும் வர்கள் என்று வரித்துகொண்டு ஆட்சியினரி காலந்தோறும் வந்து கொண்டிருந்த கலை வைத்தனர் இதனல் தமிழ் நாட்டிலிருந்தும் இயச் சஞ்சிகைளையோ நூல்கலையோ இங்கு இ அதேவேளையில் குறித்த ஒரு கூட்டத்தினர் தாம் வரித்துக் கொண்ட இலட்சியப் போக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வெளிய தகர்களாகவும் மாறிப் பெரும்பணஞ்சம் பாதி நூல்கள், சஞ்சிகைகள், சினிமாப் படங்கள் ( உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர். ஆரா செய்யப்பட்டது. இப்பொழுது தமிழ்நாட் ஞர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் பொ பண்பாட்டு வளர்ச்சி குன்றித் தவித்தனர் என
*உலக நாடுகளுள் மிகக்கூடிய அளவில் ó1 கலை-இலக்கிய நூல்களும் பிறவும் வெளிவரல
(

இவ்வாறு ஆராய்ச்சித் தமிழிலக்கியம் ப்ச்சிகள் , அ க ரா தி க ள், மொழிபெயர்ப் பரிவர்த்தனை இருந்து வந்த து இப்பரி தொடர்பில்லாது தனிப்பட்ட முறையிலே ஆட்சி நிலவிய காலத்தில் தமிழ் மக்களின் ப்பரிவர்த்தனைகளுக்கும் ஏற்ற வாய்ப்புக்கள் தந்திரம் கிடைத்தபின்பு இங்கு வாழுகின்ற ண்பாட்டு அம்சங்களையும் வளர்க்கக்கூடிய த்தவரான சிங்களவர், தமிழர், இஸ்லாமி பண்புகளையும், இணைவான பொதுப்பண்பு ந்தன. ஆனல் அரசியற் சூழ்நிலை இதற்குப் போன்ற, இலங்கையிலும் பார்க்கச் சிறிய தீர்க்கதரிசனமும் உடையவராகவிருந்தத ப நான்கு மொழிகளுக்குச் சம அந்தஸ்தும் • லும், அயல் நாடான மலாயாவில் பேசப்படு ாழி அந்தஸ்தும் வழங்கப்பட்டிருக்கின்றது, வாழும் இந்நாட்டில் நிலவுகின்ற இன, Fயற் சித்தாந்தமும் உலகிலுள்ள பல சிறிய Aறலாம். W
க இருந்ததனலும். பல தூற்ருண்டுகளாகத் வர்த்தனை தொடர்ந்து நடைபெற்று வந்தி குறிப்பிட்ட சிலரின் அரசியல் தூண்டுதலிஞ ாலமும் நிலவிவந்த கலாச்சாரப் பரிவர்த்த பும்’ புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது ம் வியாபாரப் பொருளாகக் கருதப்பட்டது யில் வாழும் தமிழ் மக்கள் சிறந்த இலக்கிய -டிலிருந்து சுதந்திரமான முறையில் பெற்று தைச் சேர்ந்தவர்கள் தாமே ஈழத்தில் வாழும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பொறுப்பான ன் ஆதரவைப்பெற்று தமிழ்நாட்டிலிருந்து )-இலக்கியப்பரிவர்த்தனைக்கு முற்றுப்புள்ளி தமிழர் வாழும் பிற நாடுகளிலிருந்தும் இலக் இறக்குமதி செய்யக்கூடிய நிலை இருக்கவில்லை; ஈழத்தமிழ் மக்களது இலக்கிய தாகத்தை கிற்கு அமையத் தீர்க்கமுயன்றனர். தரமற்ற பிட்டனர். சிலர் இத்துறையில் பெரிய வர்த் தித்தனர். தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த முதலியவற்றைத் தடைசெய்ததுமல்லாமல். ப்சியாளர் ஆகியோரது வருகையும் தடை டிலிருந்து வரவழைக்கப்படும் இசைக்கலை ாழுது ஈழத் தமிழ் மக்கள் எ ந் த அளவுக்குப் ண்பதை உணரமுடிகின்றது.
மிழர் வாழும் தமிழ் நாட்டிலிருந்தே தமிழில் ாம் என்பது எவருக்கும் புலணுகும். இத்த
5)

Page 8
கைய ஒரு வாய்ப்பைத் தமிழர் சிறு தொை ருக்குமேயானல் அது அறியாமையேயாகும் தனத் தொடர்பைத் துண்டிக்கச் சிலர் முனை ளுக்கு முன்பு ஊற்று இதழ் ஒன்றில் கருத்துை நிலையில் இதனை மேலும் வலியுறுத்த வேண்
ஏறத்தாழ இருபது ஆண்டுகள் தமிழக விஜயம் செய்து திரும்பிய அறிஞர் சேர், சிவ கள் ஈண்டுச் சிந்திக்கற்பாலன, ‘தமிழ் நாட பாதின்றன. தமிழ் நாட்டவர் இங்கிருந்து யே" என்று அங்கலாய்த்துக்கொண்ட எழு. ஒவபாதசுந்தரம் அவர்கள் பின்வருமாறு திணற்றுத் தவளைப்போன்று தமது நூல்களை போதும் என்று எண்ணுமல் சென்னையில் பிர எழுத்தாளரின் மொழிநடை இதற்குத் தடை ஈழத்து எழுத்தாளர்கள் தமது படைப்புக்கை உலக இலக்கிய சந்தையில் அவற்றை விற்பனை வில் உலகனைத்தும் வாழும் தமிழ் மக்கள் ( பதில் ஐயமில்லை. சிவபாதசுந்தரம் அவர் தும்பொழுது "இன்று இங்குள்ள எழுத்தா தேவைகளுக்கு ஏற்றவாறு இலக்கியச் சுவை கு இது வேதனைக்குரியது என்றும்." இங்கு ெ
ாசகர்களின் பசியைப் போக்குவதற்குப்
வாசகர்கள் பல்வேறு வகையான மஞே பமான சஞ்சிகைகள், வேறு சிலருக்குப் எடுத்துக்கொண்டால் சில வாசகர்கள் இதி ஐயும் (ஒரே வகையான இரண்டு படங்களில் இல்லாதிருப்பதைக் கண்டுபிடித்தல்) பார் வாங்குகிருர்கள். வேறு சில ர் தொடர்கள் இன்னும் சிலர் பிரயாணக் கட்டுரைகள், கே ரும் பகுதிகள் முதலானவை பற்றிய கட்டுை மக்களின் தாரதம்மியம், கல்வியறிவு, தொ பு முதலானவற்றைப் பொறுத்து ரசனையும் வரையறுத்த போக்கிற்கு அமைய வாசகர்க தவருகும். கோட்டா முறையில்" மக்களைக் கி எழுதப்படும் விஷயங்களை வாசிக்குமாறு வ தில் இறக்குமதியாகும் எல்லாக் குப்பைகளை தில்லை. இலக்கியச் சரக்குகளை இறக்குமதி ெ பாங்கு என்பனவற்றை உணர்ந்தவர்களாக மாக நடந்துகொள்பவர்களாகவும் இருத்தல் ஈழத்தில் சுயமான முறையில் முயன்று (முக லப் பரிசு பெருதவர்கள்) எழுத்துத்துறையி உதவமுடியும்
தமிழ் நாட்டிலிருந்து சஞ்சிகைகள், நூ தவருனது என்ற கருத்தை தமிழ்நாட்டிலிரு
(t

யினராக வாழும் நாடுகள் பயன்படுத்தாதி . தமிழ் நாட்டின் கலை-இலக்கியப் பரிவர்த் rந்தபொழுது இதனைப்பற்றிச் சில ஆண்டுக
ர ஒன்றினை எழுதியிருந்தேன். இன்றைய . டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
த்தில் வாழ்ந்து அண்மையில் இலங்கைக்கு பாதசுந்தரம் அவர்கள் கூறிய சில கருத்துக் ட்டிலிருந்துதான் நூல்கள் இங்கு இறக்குமதி நூல்களை இறக்குமதி செய்கிருர்கள் இல்லை த்தாளர் சிலருக்கு விடையளிக்கு முகமாகச் கூறினர்கள்: 'இலங்கை எழுத்தாளர்கள் த் தமது நாட்டிலேயே பதிப்பித்துவிட்டால் சுரகர்த்தாக்களை நாடவேண்டும். ஈழத்தமிழ் டயாக இருக்கமாட்டாது. இனிமேலாவது ாச் சென்னையில் கொண்டுவந்து பதிப்பித்து க்கு விடவேண்டும்.” திறமான புலமையெ இந்நூல்களை ஏற்றுக் கொள்ளுவார்கள் என் "கள் ஈழத்து எழுத்தாளர் பற்றி மேலும் ளர்கள் அவசரம் அவசரமாகப் பத்திரிகைத் நன்றிய படைப்புக்களைப் படைக்கின்ருர்கள். வளிவரும் நூல்கள், சஞ்சிகைகள் என்பன பாதாது!" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
றபாவங்களைக்கொண்டவர்கள். சிலருக்குப் பிடிக்காது. உதாரணமாகக் குமுதத்தை ல் வெளிவரும் துணுக்குக்களையும் சித்திரங்க ஒன்றிலுள்ள சில அம்சங்கள் மற்றையதில் ‘த்து அனுபவிப்பதற்காக இச்சஞ்சிகையை தைகளைப் படிப்பதற்காக வாங்குகிருள்கள். 5ாயில்கள், ஊர்கள், அபிவிருத்தி பெற்றுவ ரைகளைப் பெரிதும் விரும்பி வாசிக்கின்றனர். ழில் முறைகள், ஓய்வுநேரம், குடும்ட அமை வேறுபடும் எனவே எழுத்தாளர் சிலர் தாம் ள் அமையவேண்டும் என்று எண்ணுவது கட்டுப்படுத்தி ஒரு குறுகிய நோக்கத்திற்காக ாசகர்களைத் தூண்டமுடியாது. அதேநேரத் rயும் வாசகர்கள் வாசிக்கவேண்டும் என்ப சய்பவர்கள் வாசகர்களின் கல்விநிக்ல, மணுே வும், இலக்கியப் பரிவர்த்தனையில் கண்ணிய 9 வேண்டும். அ ப் படி நடந்துகொண்டால் வுரை விமர்சனம் பெற்று சாகித்திய மண்ட ல் உயர்ந்துவரும் க்லைஞர்களுக்குப் பெரிதும்
ல்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வது ந்து வந்த அனுபவம் மிக்க பொதுவுடமை
5)

Page 9
வாதியான கல்யாண் சுந்தரம் அவர்களிட ஜீவா தெரிவித்தபொழுது " அதில் எவ்வித கை மக்களின் தேவைக்காக ஆங்கிலச் சஞ்சி லாம் இறக்குமதி செய்யும் பொழுது தமிழ் தமிழ்ச்சஞ்சிகைகளை இறக்குமதி செய்வதில்
கள். கலை-இலக்கியப் பரிவர்த்தனையில் பழு னையும் கொண்ட தோழர் கல்யாண சுந்தரை
அதேவேளையில், ஈழத்திலிருந்து நூல்க கள் 'இறக்குமதி செய்யாமைக்கு தமிழ்நாட் தையும் சிவபாதசுந்தரம் அவர்கள் குறிப்பி யிலுள்ள பொதுவான நாணய்க் கட்டுப்பாட் தமிழ்ச்சஞ்சிகைகள், நூல்கள் ஆகியன இற ஞல் தரமான தமிழ்ச்சஞ்சிகைகளையோ நூல் கருத்து இல்லை என்றும் அவர்கள் கூறினர்கள் லிருந்து அனுமதி பெற்று வேண்டிய நூல்க முயற்சியை உடனடியாகத் தமிழ் நாட்டு இ அவசியமாகும். கலை-இலக்கியப் பரிவர்த்தனை கலாச்சாரப் பரிவர்த்தனையாயினும் அஃது
முழுமையான நன்மை பயக்கும்.
SL
இலங்கைப்
Q9ith (öhe (ßes G
KANETAN
LEADING HOUSE
IN NI
No. 63-78, K.
JAf
(7

ம் ஈழத்து மல்லிகை ஆசிரியர் டொமினிக் தவறும் இல்லை. பிறநாடுகளிலிருந்து இலங் கைகள், நூல்கள் முதலானவற்றையெல் மக்களின் நலன்கருதி தமிழ் நாட்டிலிருந்து தவறு என்ன இருக்கிறது" என்று கூறினர் த்த அனுபவமும் தெளிவான அரசியற் சிந்த சின் கூற்று மனங்கொளற்பாலது.
ளையோ சஞ்சிகைகளையோ தமிழ்நாட்டவர் .டு வாசகர்கள் பொறுப்பல்ல என்ற கருத் ட்டிருந்தார்கள். இந்தியாவில் நடைமுறை டு விதி காரணமாகவே வெளிநாட்டிலிருந்து க்குமதி செய்யப்படுவதில்லை என்றும், இத களையோ இறக்குமதி செய்யக்கூடாது என்ற ள். இறக்குமதியாளர் இந்தப் பொதுவிதியி ள இறக்குமதி செய்யமுடியும். இதற்கான இலக்கிய வர்த்தகர்கள் செய்துகொள்வது ாயாயினும், எல்லாவற்றையும் உள்ளடக்கிய
இருவழிகளிலும் நடைபெறும்பொழுதே
செல்வநாயகம்,
புவியியல் துறைத் தலைவர்,
பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம்
I TTORET
FOR TEXTILES
DRTH
K. S. ROAD,
NA
)

Page 10
சாளரம்
குழந்தை பார்க்கும்பொழுது
எங்கே பார்க்கின்றன.
பழகிய முகங்களைப் பார்க்கும்போது குழந்தைகள் சிரிப்பதும், அறிமுகமற்ற முகங்களைப் பார்க்கும்போது குழந்தைகள் பயப்படுவதும் எல்லாரும் அறிந்த விஷய மாகும். ஆனல் குழந்தைகள் பார்க்கும் போது எங்கே பார்க்கின்றன என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கி யுள்ளனர்.
டென்வர் பல்கலைக்கழகத்தைசேர்ந்த மாஷால் M ஹெயித் என்பவரும் ஹார் வார்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கல் மூர் என்பவரும், குழந்தைக ளின் பார்வை மற்றய முகங்களில் நிலைப் பதை ஆராய்ந்துள்ளனர். மூன்று தொட க்கம் ஐந்து வாரம் வரை வயதான குழந் தைகள் அநேகமாக முகங்களின் ஒரங்க ஆளப் பார்க்கின்றன. இவர்கள் மற்றய அம்சங்களில் கவனம் செலுத்துவது குறைவு. ஆனல் இதற்கு மாரு க 7 முதல் 9, 11 வாரம் வரை வயதுடைய குழந்தை தள் முகத்தின் மற்றய இடங்களைப் பாரா மல் கண்களை மட்டுமே பார்க்கின்றன. இந்த மாற்றம், முகத்தின் மற்ற இடங்க ளிலும் பார்க்கக் கண் ஒரு அர்த்தமுள்ள பொருளாக குழந்தைகளுக்குத் தோன்ற லாம்.தாய் கதைக்கும் போது அ த ன் கருத்துக்களை கண்ணில் தென்படும் மாற் றங்களால் குழந்தை கண்டுபிடிக்கக்கூடி யதாக இருக்கலாம். இதனலேயே கண்னை உற்றுப் பார்க்கின்றன. இருந்தாலும் இதனைப்பற்றி நிச்சயமாகக் கூறுவதற்கு இன்னும் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்பது இவர்கள் கருத்து.
ás ir g h : Science Today Feb. 78

8)
ஒளியின் வெவ்வேறு நிறங்கள்
ஆகாயம் ஏன் நீலநிறமாயிருக் கின்றது என்று நீங்கள் சிந்தித்ததுண்
டா? அல்லது மண் ஏன் கபில நிறமா
யிருக்கின்றது? புற்கள் ஏன் பச்சை நிறமாயிருக்கின்றன? உண்மையில் இவை நிறமற்றவை என்பதை உங்க ளால் நம்பமுடிகின்றதா? இவற்றின்
மீது விழும் ஒளியை இவை எ ன் ன
மாதிரித் தெறிக்கச் செய்கின்றன என்பதிலேயே இவற்றின் தோற்ற நிறம் தங்கியுள்ளது. உதாரணமாக நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் பேப்பரையே எடுத்தால் இது வெண் ணிறமாகத் தோற்றுவதற்குக் கார ணம் இது தன் மீது விழும் ஒளிமுழு
வதையும் தெறிக்கச் செய்வதே
அதேபோல் எழுத்துக்கள் கறுப்பா கத் தோற்றுவதற்குக் காரணம் அது ஒளியைத் தெறிககச் செய்யா ததே. அதாவ்து பேப்பரால் தெறிக்கப் பட்ட ஒளியில் எழுத்துக்கள் உள்ள இடங்கள் துவாரங்களாக விருக்கும் என்றும் கூறலாம். அத்துடன் இந் தப் பேப்பரை நீங்கள் ஓர் இருட்ட றையினுள் எடுத்துச் சென்ரு ல், நீங் கள் எழுத்துக்களை வாசிக்கமுடியாது ஏனெனில் கறுப்புநிறமானது அதன் பின்னணி வேருெரு மெல்விய நிற
மாக இருந்தால் மட்டுமே பார்க்க
முடியும், ஏனெனில் கறுப்புநிறம்
ஒளியை உறிஞ்சிவிடும் . ஒளியானது. ஏழு நிறங்களைக் கொண்டுள்ளது.
வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு
அலைநீளங்களைக்கொண்டவை. என வுே பொருட்களின் நிறமானது, அப் பொருள் உறிஞ்சும் நிறத்திலும், ! அதன் பின் தெறிக்கச் செய்யும் ஒரு பகுதி ஒளியின் அலை நீளத்திலும் தங் கியுள்ளது. உதாரணமாகப் புல்லா
னது அதன் மீது விழும் ஒளியின் சிவ ப்பு, மஞ்சள், ஊதா நிறங்களையு
டைய அலைநீளங்களை உறிஞ்சிவிடும்.
பச்சை அலைநீளத்தை மட்டும் தெறிக்
கச் செய்கின்றது. இவ்வாறே ஆகா
யமானது நீலநிறத்தைத் தவிர்ந்த
ஏனைய நிறங்களை உறிஞ்சிவிடும். இத ஞல் நீலநிறமாகத்தோன்றுகின்றது. gsтg th: Science Today Dec. 1977

Page 11
பல் நோயைத்
தி. ஆனந்த மூர்த்தி - 1 இலங்கைப் பல்கலைக்கழ
பல நோய்களைப் பற்றி தவழுன அபிப்பிராயங்கள் மக்களிடையே நிலவி வருகின்றன. பல் வியாதிகள் எப்படி உண்டாகின்றன என்பது சம்பந்தமாக சில உண்மைக்குப் புறம்பான விளக்கங் கள் இன்றும் கொடுக்கப்படுகின்றன. அதனல் அவற்றிற்கான சிகிச்சை முறை களைப் பற்றி வேறுபட்ட அபிப்பிராயங் கள் பரவியுள்ளன.
பற்களை பெரிதும் பாதிக்கும் நோய் களாவன, பற் சூத்தையும் (caries) பற் சுற்றிழைய அழற்சியும் (Periodentitis) ஆகும். பற் சூத்தையை மட்டுமே இங்கு ஆராய முற்பட்டுள்ளேன். பற்சூத்தை என்பது பல்லைச் சிதைவுறச் செய்யும் ஒரு வியா தியாகும். பல் மிகவும் கடின மான கல்சியம் கொண்ட சேர்வையால் ஆனது. பல் வெண்மையாகத் தெரிவ தற்குக் காரணம் அதன் வெளியேயுள்ள படையான பல்மிளிரியே (Enamel) ஆகும். இது 98% கல்சியம் கொண்டது. உட லிலேயே மிகவும் கடினமான பகுதி பல் மிளிரியாகும் பற் சூத்தையின் போது மிளிரி சிதைவுறுகின்றது. மிளிரி மட்டு மன்றி அதன் உட்பகுதியான பன் முத லும் (Dentine) பாதிக்கப் படுகின்றது. பற் சூத்தைக்குக் காரணம் நம் கண் ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்கள் தான் என்பது பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். இதற்குக் காரணம் பற் சூத்தையைப் பற்றி ஏற்கனவே சில விளக்கங்கள் நம்மிடையே நிலவுவதே பற் சூத்தையை உண்டாக்குவது புழு அல்லது பூச்சி என்றே நம்புகின்றனர். பல்லே பூச்சி தின்றுவிட்டது அல்லது புழு
அரித்து $விட்டது என்றும் கூறிக்கொள் கின்றனர்N அந்தப் பூச்சியைக் கொன்' ருல் சூத்தை மாறிவிடும் என்றும் அவர்
கள் நம்புகின்றனர். அந்தப் பூச்சியை
(s

தடுப்பது எப்படி? ல் வைத்திய பாடசாலை கம் பேராதனை வளாகம்
கொல்வதாக நம்பி சில சிகிச்சை முறை
களும் கையாளப் படுகின்றன. அவை மிக வேடிக்கையானவை. அவற்றை இங்கே விபரிப்பது உகந்ததல்ல. உ+ம்: கண்டங் கத்தரி விதையை சூடான
இரும்பில் இட்டு வரும் டிகையை உள் எடுத்தலால் புழுக்கள் இறக்கின்றன.
உண்மையில் பல் சூத்தைக்கு கார ணம் என்ன என்பதைச் சற்று விரிவாக ஆராய்வது சாலச்சிறந்தது. நம் எல் லோருடைய வாயின் உள்ளேயும் பற்பல வகையான, கண்ணுக்குப் புலப்படாத, பற்றீரியாக்கள் (bacteria) எனப்படும்
நுண்ணுயிர்கள் எண்ணற்ற அளவில்
காணப்படுகின்றன. இது எமக்கு நோய் விளைவிப்பதில்லை. ஆனல் அவை வள ரும்போது பக்க விளைவாக சில அமிலங் கள் (Acids) உண்டாகின்றன. இவ்வாறு
உண்டாகும் அமிலம் பல் மிளிரியைத்
தாக்குகின்றது. மிளிரியில் உள்ள கல்சி யம் கரைக்கப்படுவதால் மிளிரி சிதை வடைகின்றது. இவ்வாறே பன்முதலும் சிதைவுறுவதனுல் பல்லின் மேற்பரப்பில் குழி உண்டாகிறது. இதனையே நாம் பற் சூத்தை என்கிருேம்.
இப்படியான அமிலத்கை உண்டாக் கும் பற்றீரியா வாயில் எங்கே உள்ளது என்பதனை நாம் அறிந்து அவற்றை நீக்கி விட முயற்சி செய்ய வேண்டும். பற்க ளின் மேற்பரப்பிலும், நாக்கிலும் ஒரு வேள்ளை நிற பசை ப்ோன்ற படிவு இருப் பதை யாவரும் அறிவர். இப்படிவில் பெருமளவில் காணப்படுவது பல்லாயிரக் கணக்கான பற்றீரியாக்கள் ஆகும் பற்
sit fa) 5 (Tooth Brush) Gas Taia G. Ludia
)
விளக்குவதனுல் இந்தப் பசை போன்ற படிவை நீக்க முடியும். நாம் பல் துலக் காது விடுவதால் அல்லது ஒழுங்கற்ற முறையில் விரைவாகத் துலக்குவதால் இப் படிவை அகற்ற முடியாமல் போ

Page 12
கும். இப்படி அகற்றப்படாமல் உள்ள பற்றீரியாக்களே பற் சூத்தையை உண் டாக்குகின்றன.
பல்லின் மேற்பரப்பின் குழி விழுந்த பின்பு மேலும் மேலும் உணவுத் துணிக் கைகள் (Particles) பற் குழியில் தேங்கு கின்றன. இதனல் பற் றீ ரியா க்கள் வளர்ந்து பெருகி அமிலத்தை பெருமள வில் சுரக்கின்றன. பல்லின் பெரும்பகுதி சிதைவடைந்து பல்லின் உயிருள்ள பகுதி யாகிய மச்சை (Pulp)யும் பாதிக்கப்படு கின்றது. இதை தொடர்ந்து பல்வலி யுண்டாகின்றது. பல்வலி தொடங்கிய பின்னர் பல்லை பாதுகாப்பது முடியாத காரியம்.
எனவே பற்சூத்தையைத் தடை செய்ய இரண்டு வழிகள் உண்டு. 1. பற்றீரியாக்களை பல்லின் மேற்பரப்
பில் இருந்து நீக்குவது. 2. மிளிரியின் அரிப்பை எதிர்க்கும் தன்
மையை அதிகரிப்பது.
பல் மிளிரியின் வெளியில் உள்ள படை அமிலத்தால் இலகுவில் , அரிக்கப்பட மாட்டாது. இப்படியான எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க புளோரைட்டு (Fluoride என்ற பதார்த்தம் பயனுள் ளது. நாம் குடிக்கும் நீரில் (11,000,000) பத்து லட்சத்தில் ஒரு பகுதி புளோ ரைட்டு சேர்ப்பதால் பல்மிளிரியின் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கும். இது குழாய் நீர் விநியோகம் உள்ள நகரங்க ளில் சாத்தியமாகும். இதைவிட புளோ ரைட்டு அதிகம் உள்ள குழிகைகளை (Tablets)யும் சிறுவர்களுக்கு கொடுக்க லாம்:
மேலும் பற்களின் மேற்பரப்பில் பூசிவிடக்கூடிய 66 புளோரைட்டுச் சேர்வைகளும் இப்போது தயாரிக்கப்படு ஒன்றன. இவற்றை ஒரு பல் வைத்தி யர் வருடத்திற்கு 3-4 தடவை பற்க ளின் மேற்பரப்பில் பூசி விடுவதால் ல்மிளிரியின் அமிலத்தால் அரிக்கப் படுவதை எதிர்க்கும் தன்மை அதி

கரிக்கின்றது. மேற்கூறிய முறைகளை விட பற்களின் மேற் பரப்பில் உள்ள பற்றீரியாக்களை அகற்றிவிடும் முறையே மிகவும் இலகுவானதும், சிக்கனமானதும் ஆகும் நாம் தினமும் தமது பற்களை பற்துரசிகை கொண்டு குறைந்தது காலை யிலும் இரவில் படுக்கைக்குச் செல்லு முன்னரும் துலக்குவதால் இப் பற்றீ ரியா கொண்ட படிவுகளை அகற்றலாம். இவ்வாறு ஒவ்வொருவரும் தமது பற் களை சூத்தையில் இருந்து பாதுகாக்க முடியும்.
இவ்வாறு செய்யத் தவறின் பல் லின் மேற்பகுதி கருமை நிறமடைந்து பின்னர் குழியுண்டாகும். இதனுல் உண வுத் துண்டுகள் பற்குழியினுள் அடைகின் றன. மேலும் சூத்தை தொடங்குகின் ፱DŠሃ• பல்லில் குழி விழுந்துவிட்டால் நாம் பல்லை 'இழுத்துவிட" வேண்டும் என பலர் கருதுவது தவருனது. இப் படி குழியுண்டாகி உணவு சென்று அடைந்து கொள்வதை அவதானித்த ஒவ்வொருவரும் பல் வைத்தியரை நாடி ஞல் பல்லைப் பாதுகாக்க முடியும். பல் லில் உள்ள குழிகளை இரசாயனச் சேர் வைப் பொருளால் அடைத்து பற்கள் மேலும் சிதைவடையாமல் பாதுகாக்க முடியும். இப்படிச் செய்ய தவறின் அப்பல் மேலும் மேலும் சிதைவடையும
பல்லின் மேற்பரப்பில் குழி விழுத்த பின்பும் அது கவனிக்கப்படாது விடப் படின் அக்குழி அதன் அளவில் பெரிதாகி இறுதியில் ப ல் லி ன் உணர்ச்சியுள்ள மச்சையைத் தாக்குகின்றது. இதனல் பல்வலி ஏற்படுகின்றது. இப் பல்வலி கடுமையாக உள்ளபோது பல் வைத்தி யரை நாடி சிகிச்சை பெறுவது நன்மை பயக்கும். அதை விடுத்து அவ்வலி குறையும் வரை பொறுத்திருப்பது Gé கலை உருவாக்கும். பல்வலி குறைந்து சில வேளைகளில் வலியில்லாத நிலையும் உண்டாகலாம் இதல்ை அதனைப் பொருட்படுத்தாது இருப்போர். பலர், ஆனல் அவர்கள் திடீரென மீண்டும் பல்வலியை அனுபவிக்க வேண்டி ஏற் Lu (Fv mr b. அத்துடன் அந்த பல்லின்
10)

Page 13
வேர் நுணியைச் சுற்றி சீழ்க்கட்டி(AbsceSS) உண்டாகி மிக வேதனையைக் கொடுக் கும். முகத்தில் ஒரு பெரிய வீக்கமும் காணப்படும். இது சீழ் (Pus) கொண். டுள்ள வீக்கமாகும்.
இந்த நிலைக்குத் தள்ளப்பட்ட பின் னரும் பல் சத்திரவைத்தியரை நாடாது வேறு சில கை மருந்துகளைப் பாவித்து அல்லல் படுவோரும் எமது சமுதாயத்தில் இருக்கிருர்கள் என்பது உண்மை. பல் வைத்தியர் அந்தப் பல்லைப் பிரித்தெடுப் பதனல் (exctraction) கழற்றுதல் அல்லது பிடுங்குதல்) நோயை குணப்படுத்த முடி யும் .
இதுவரை பல் வியாதிகளில் சாதா ரணமானதும் எல்லோரையும் பாதிக்கக் கூடியதுமான பற் சூத்தை எப்படி உண்டாகிறது என்றும், அதனைத் தடுப் பது எப்படி என்றும் நாம் ஆராய்ந் தோம். இறுதியாக நாம் எமது பற்களை என்றும் திடமா வைத்திருக்க என்ன வழிமுறைகளே கையாள வேண்டும் என் பதனை சுருக்கமாக அவதானிப்போ மாக. எமது பற்கள் நாம் சிறுபிள்ளை யாக உள்ள போதே நமது வாயில் தோன்றுகின்றன சிறு பிள்ளையாக இருக் கும் காலத்தில் பல இனிப்பு வகைகளை யும் டொபிகளையும் அதிகம் சாப்பிடுவது வழக்கம், இவை பற்களின் மேற்பரப் பில் ஒட்டிக் கொள்கின்றன. சிலவேளை களில் குழந்தைகள் படுக்கைக்கு போக முன்னரும் ஒரு டொபியை சில பெற் Gopi கொடுக்கின்றனர் குழந்தை டொபியை வாயில் வைத்துக்கொண்டு தூங்கும். இவ்வாறு பற்களின் மேல் ஒட்டிக்கொள்ளும் இனிப்புப் பதார்த்தங் களில் பற்றிரியா வளர்ந்து பற்களைத் தாக்கும். அத்துடன் பெற்றேர் தமது

பிள்ளைகளை பற்துரரிகை கொண்டு பல் துலக்குமாறு பணிப்பதில்லை. *
எனவே சிறு வயது முதல் பிள்ளைகள்
தமது பற்களை துலக்க பற் தூரிகை பாவிக்கும் முறைகளை பெற்றேர் கவ
னிக்க வேண்டும். கை விரலால் பல்
துலக்குவதால் பல் வியாதிகளைத் தடுக்க இயலாது. பதிலாக பல் நோய்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. இப்படியாக தூரிகை கொண்டு பல் துலக்குவதால் சூத்தை மட்டுமன்றி முரசு வியாதிகளும் பெருமளவில் குறையும்.
தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் ஆரோக்கியமான பற்களுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு பெற்றேரினதும் மன விருப்பம் ஆகும். அவர்கள் தமது பிள்ளைகளை சிறு வயது
முதல் பற் தூரிகை கொண்டு பல் துலக்
11)
கும்படி செய்ய வேண்டும் இரவில் நித் திரைக்குச் செல்லுமுன்னர் வாயை நன்கு கழுவி அல்லது தூரிகையால் துலக்கிக் கொள்ள பழக்க வேண்டும். படுக்கையில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புப் பண்டங்களை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பல்லில் குழிவிழ ஆரம்பித்தால் தமது பிள்ளைகளை பல் வைத்தியரிடம் கொண்டு சென்று தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் தமது பற்களைச் சுத்தமாக என்றும் வைத்திருப்பதன் மூலம் பல் நோய்கள் அணுகாமல் பாது காக்க முடியும். பல் வைத்தியரிடம் சென்று வருடம் ஓரிரு முறையாவது தமது பற்களை காண்பித்து உரிய சிகிச் சைகளைப் பெறுவது - எமது பற்களின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்.

Page 14
நீரும் விவச மண் - நீர் ெ ஆ கந்தையா, Ph.D, விரிவுரையாளர்
D. திண்ம்ம், திர வம், வாயு Stu FL- பொருட்களைக் கொண்ட ஒரு நுண்துளைத் தொகுதியாகும். நிரம் பா நிலையில் நுண்துளைக்குள் காணப் படும் நீரை நில நீர் என அழைக்கப் படும். தாவர நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மண் நீரே முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மண் நீரின் வகைகள்
எளிய பாகுபாடொன்றின்படி மண் நீரை புவியீர்ப்பு Šíř, நுண்துளை நீர், உறிஞ்சல் நீர் ஆகிய மூன்று வகைகளாக கொள்ளலாம். நிரம்பல் நிலையிலிருக்கும் மண்ணிலிருந்து புவியீர்ப்பு விசையினுல் தானுக வடிந்தோடும் நீர் புவியீர்ப்பு நீர் ஆகும். மேற்பரப்பு இழுவிசையினல் நுண்துளைகளுக்குள் பிடித்து வைக்கப்பட் டிருக்கும் நீர் நுண்துளை நீராகும். Daar கட்டிகளின் மேற்பரப்பில் இறுக்கமாக பட்டு விசைகளிஞல் கட்டுண்டிருக்கும் நீரை உறிஞ்சல் நீர் என அழைக்கப் படும். இந்நீர்களில் தாவரங்களுக்கு உபயோகப்படும் நீர் நுண்துளை நீராகும். ஒரு மண்ணில் நீரின் கொள்ளளவு குறைந்துகொண்டு போ கும் போ து தன் நுண்துளைகளில் நீரைப் பிடித்து வைத்திருக்கும் விசை கூடிக்கொண்டு போகிறது. நீரை மண்ணில் இழுத்து வைத்திருக்கும் விசையை உறிஞ்சல் எனக் கூறுவர். நீர் நிரம்பல் நிலையில் இருக்கும் பொழுது இவ்விசை பூச்சிய மாகும். புவியீர்ப்பு நீர் முற்ருக வடிந்த நி2லயில் நீரின் உறிஞ்சல் விசை 1/ இலிருந்து 1/3 வளியமுக்கத்திற்கு சமனக காணப்படும். இந்நிலையில் இருக்கும் மண் ஒன்றின் நீர்க்கொள்ளளவை வயற் கொள்ளளவு எனக் கூறுவர். Ganu rit as sir நீரை உறிஞ்சுவதனலும், நீர் ஆவியாவ
(l

FT UI (up lb (2) தொடர்புகள் . விவசாய பீடம், பேராதனை வளாகம்
தீனலும் மண்ணின் நீர்க்கொள்ளளவு மேலும் மேலும் குறைத்துபோக நீரின் உறிஞ்சல் விசையும் கூடிக்கொண்டே போகிறது. இவ் உறிஞ்சல் விசை 15 வளியமுக்கத்தை அடையும்போது தாவரங்கள் நீரை இலகுவில் உறிஞ்ச முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலை யில் தாவரங்கள் வாடுவதனல் இந் நீர்க் கொள்ளளவை நிரந்தர வாடற் புள்ளி எனக் கூறுவர். வயற் கொள்ளவி விருந்து நிரந்தர வாடற்புள்ளி வரை இருக்கும் நீரை மொத்த கிடைக்கக் கூடிய நீர் என அழைக்கப்படும். படம் 1-ல் மேற்கூறிய நீர்க்கொள்ளளவு நிலை களும் அவற்றின் உறிஞ்சல் விசை அளவு களும் காட்டப்பட்டிருக்கிறது.
மண் இயல்புகளும் கிடைக்கக்கூடிய நீரும்
விவசாயத்தை பொறுத்தமட்டில் கிடைக்கக்கூடிய நீர் முக்கியமானதொன் ருகும். இதை பல காரணிகள் தாக்கு வதாக காணப்பட்ட பொழுதிலும் இக் காரணிகளில் மண் இயல்புகள் முக்கிய இடம் பெறுகின்றன. மிகவும் முக்கிய மான மண் இயல்புகளில் அமைப்பு (Structure) இழையமைப்பு (Texture), துளை கொள்ளளவு (Porosity) சேதனப் Gurr (05. Gas T air 6T6ft 6 (Orgamic matter Contint) ஆகியன குறிப்பிடத்தக்கன பொதுவாக ஒரு மண்ணில், மணல் விகி தம் கூடும்போது கிடைக்கக்கூடிய நீரின் அளவு குறைகின்றது. அதே நேரத்தில் களியின் கொள்ளளவு கூடும்போது கிடைக்கக்கூடிய நீரின் அளவும் கூடுகி றது. அட்டவனை 1-ல் இஸ்ரேல்சன் (1962-ல்) என்பவர் காட்டியபடி மண்' ணின் இழையமைப்பு எவ்வாறு கிடைக் கக்கூடிய நீரைப் பாதிக்கின்றது என் பதை தெளிவாக காட்டுகிறது.

Page 15
அட்டவணை 1
மண் இழையமைப்பும் கிடை ܚ
இழையமைப்பு வயற்கொள்ளள பிரிவுகள் 66,35 lb
(1) மணல் மண் )69-12 س( (2) மணல் இரு வாட்டி )1014--18ر (3) இருவாட்டி (1822-26) (4) களி இரு வாட்டி )2327-31-س( (5) மண்டி களி } 2 731 -35 سس ( (8) களி )31 35- 39ر
கவனிக்கவும்:- வழமையாக காணப்படும்
பட்டுள்ளது
மண்ணின் அமைப்பு கிடைக்கக்கூடிய நீை அண்மையில் நடாத்தப்பட்ட ஆராய்ச்சி அமைப்பு கொண்ட மண், கூடிய கிடைக் குறைந்த அமைப்பு கொண்ட அல்லது ப கிடைக்கக்கூடிய நீர் உள்ளதாக காணப்ட காரணிகள் கிடைக்கக் கூடிய நீரின் அள நுண்துளை கொள்ளளவும் சேதனப்பொரு பாதிப்பதனுல் கிடைக்கக்கூடிய நீரையும் !
கிடைக்கக்கூடிய நீரை கணிக்கும் முறை
ஒரு மண்ணின் கிடைக்கக் கூடிய நீரை முறை உலர் நிறை விகிதமாகும். இதன்படி கி. நீர் = வயற்கொள்ளளவு - நிரந்தரவா வயற் கொள்ளளவு = வயற்கொள்ளளவில்
மற்ற ஒரு முறை கன அளவு விகிதமாகும். கி. நீர் - (உலர்நிறையின்படி கிடைக்கக்கூ மூன்ருவது முறை நீர் ஆழ முறையாகும் ! கி. நீரின் ஆழம் = கிடைக்கக்கூடிய நீரின் கன
- 00 நீர்ப்பாசன தேவையை கணிப்பதற்கு விவச யையே கையாளுகிறர்கள். நீர்ப்பாசனத்தி நீர்ப்ப்ாசனத்தின் போது மண்ணில் இருக்கு கூடிய நீரிலிருந்து எவ்வளவு குறைந்து இதன்படி
நீர்ப்பாசன மொத்த கிடைக்கக் நீரினளவு " கூடிய நீரினளவு
(l

க்கக்கூடிய நீரும் இஸ்ரேல்சன் (2962)
5. வாடற்புள்ளி கிடைக்க கூடிய
விகிதம் நீர் விகிதம்
(24-6) )45-ر 6-س( (46-8) (68-10) (14 سس-1012) (12 -س-810) " )14-16 12 ( ( 5 1 حس-113 1 ) (18-ب۔ 1416 ) ۔ (17 سس 5 131 ) . (157-19) (1618-20)
வேறுபாடுகள் அடைப்புக்குறிக்குள் காட்டப்
ர பெரும்பாலாக பாதிக்கின்றது என்பதை களின் மூலம் அறியப்படுகிறது. சி ற ந் த கக்கூடிய நீரை கொண்டதாக இருக்கும் ரப்பிய அமைப்பு கொண்டமண் குறைந்த ாடுகிறது. இதிலிருந்து அமைப்பை பாதிக்கும் "வையும் பாதிக்கும் எ ன் பது புலனுகிறது. ட்களின் அளவு ம் முக்கியமாக அமைப்பை பாதிக்கின்றன என கொள்ளலாம்,
மூன்று முறைகளில் கணிக்கலாம் முதலாவது
ாடற்புளி
* ஈர நிறை - மண்ணின் உலர் நிறை
மண்ணின் உலர் நிறை
}யில் そ
Eன் நிறை - மண்ணின் உலர் நிறை
மண்ணின் உலர் நிறை Х 100
இதன்படி
டிய நீர்) X மொத்த அடர்த்தி
இதன்படி
அளவுவிகிதம் X வேர்த்தொகுதியின் ஆழம்
X 100
ாய பொறியியலாளர்கள் மூன்றுவது முறை ன் மூலம் மண்ணிற்கு பாய்ச்சப்படும் நீர் தம் நீர் எந்த அளவில் மொத்த கிடைக்கக் காணப்படுகிறது என்பதில் தங்கியுள்ளது:
நீர்ப்பாசனத்தின் போது மண்ணில் காணப்படும் நீரினளவு
l3ノ

Page 16
A.
O M W6
e
sகாள்ளவுை شکل . له ظــــند
ويovالمده ثمع عوادكيس حا
மண் நீரை அளக்கும் முறைகள்
முக்கியமாக பின்வரும் நான்கு முறைகளில் ஏதாவதொன்றின்படி மண் நீரை அளக்கலாம்; 1) நிறுத்தல் முறை 2) Gusj69605 LD30f{Tënsiometery) ap 60p 3) fair son L. Daioh (Electrical resistan
ce meter) qp60p 4) 6g458urcir 8 cy69 (Neutron probe)
முறை
நிறுத்தல் முறையின்படி ஈரலிப் பாண மாதிரி மண்ணை நிறுத்து பின்
(1.
 
 

Saze
s
தசல் விசை )فاع خاکسامله(
دنیا کمرضندہدہ ہونے خندقrع ہونجتماع
!)
ض rsع عادی Aer1حے
1059C இல் உலர்த்தி உலர்நிறையை கண்டு, நீர்க் கொள்ளளவை உலர் நிறையின் அடிப்படையில் கணிக்கப்படுகி றது. மாதிரி மண் எடுப்பதற்கு தகுந்த முறையை கையாள வேண்டியது மிக
அவசியமாகும், சூழ மாதிரி மண் எடுப்பதற்கு மண் துளை கருவிகள் பாவிக்கப்படுகின்றன பொதுவாக
திருகாணி மண் துளை கருவி நிலமேற் பரப்பின் கீழ் 4 அடி மட்டும் மாதிரி மண் எடுப்பதற்கு பாவிக்கப்படுகின்றது மண்ணை குழப்பாமல் மாதிரி மண் எடுப் பதற்காக கட்டி மண் மாதிரி கருவிகள் (Core Samplers) umr 69ği 85 lʻuluG6) 636ö7 /mpaar.

Page 17
வலுவிசை மானியானது வெற்றிட
மானி அல்லது இரச வமுக்கமானியுடன் தொடுக்கப்பட்ட நீர் நிரப்பிய நுண் நுளே பீங்கான் குடுவையொன்ற கும். இம் மாணியின் குடுவையை குறிப்பிட்ட ஆழத்தில் புதைத்து வைக்கப்படும். மண்ணின் ஈரலிப்பிற்கேற்றபடி இம் மானியிலிருந்து குடுவையினுாடாக நீர் வெளியேறுகிறது: இதன் விளைவாக மாணிக்குள் வெற்றிடம் உண்டாகி வெற்றிடக் கருவி வலுவிசையைக் காட் டுகிறது. ஒரு குறிப்பிட்ட வலுவிசை மண்ணின் குறிப்பிட்ட ஒரு நீர்க்கொள் ளளவை காட்டும். நீரின் கொள்ள ளவைக் காண்பதற்கு வலுவிசை - நீர்க் கொள்ளளவு வரைப்படம் ஒன்று பாவிக் கப்படலாம். இவ்வரைப்படம் ஒரு மண் ணிலிருந்து மற்ற மண்ணுக்கு வேறுபடுவ தால் ஒவ்வொர் மண்ணிற்கும் தனித் தனியான வரைபடம் பாவிக்கப்பட
வேண்டும். வலுவிசை மானி 0.8 வளிய
முக்க உறிஞ்சல் விசை மட்டிலும் தான் முறையாக வேலை செய்யும்
என்பது குறிப்பிடத்தக்கது.
மின்தடைமானி முறையின்படி
மண் நீர் நிலத்திற்குள் புதைக்கப்பட்ட gğ?lʼiaF lib 5su". 49. (Gypsum b1oek) uS? gör Lß?air தடை பெறுமானத்திலிருந்து கணிக்கப் படுகிறது. ஜிப்சம் கட்டி ஒன்று மண் ணில் புதைக்கப்பட்ட பின் இக்கட்டி மண்ணின் ஈரலிப்பு நிலையை அடைகி றது. ஆஸ்கயால் இக்கட்டியின் மின் 560 l to ன் ஈரலிப்பில் தங்கியிருக் கிறது. மண்ணின் ஈரலிப்பு கூட இருக் கும்போது ஜிப்சம் கட்டியின் ஈரலிப்பு
கூடியதாக இருந்து மின்தடை குறை வாக காணப்படுகிறது; இதே போல்

மண் ஈரலிப்பு குறைவாக காணப்படும் போது ஜிப்சம் கட்டியின் மின்தடை கூடியதாக காணப்படுகிறது: siv தடை-மண் ஈரலிப்பு வரைபடம் ஒன் றின் மூலம் மண்ணின் ஈரலிப்பு மின் தடை மானியை உபயோகித்து இலகுவில் காணப்படுகிறது.
நியூத்திரன் மானி முறையின்படி விரைவான நியூத்திரன் கதிர்கள் மண் ணிற்குள் பாய்ச்சப்படுகிறது. இக் கதிர் கள் நீரினல் தெறிக்கப்பட்டு வேகம் குறைந்த நியூத்திரனக மாறுகிறது. எண்ணும் கருவி ஒன்றின் மூலமாக வேகம் குறைந்த நியூத்திரன்கள் கணிக் கப்படுகின்றன. வேகம் குறைந்த நியூத் திரன் தொகையைக் கொண்டு மண்ணின் நீர் கொள்ளளவு, வேகம் குறைந்த நியூத்திரன் எண்ணிக்கை-நீர் கொள்ள ளவு வரைபடம் ஒன்றின் மூலமாகக் காணப்படுகிறது.
மண் நீரின் தொழிற்பாடுகள்
மண் நீர் தாவரத்திற்கு முக்கிய மான ஒன்ரு கும். தாவரங்கள் அவற் றின் வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் தேவையான நீரை மண்ணிலிருந்தே பெறுகின்றன. இம் முக்கிய தொழிலை விட மண் நீர் தாவரங்கள் உப்புக்களை உட்கொள்வதற்கும் அவசியமாயமை கிறது. மேலும் மண்ணில் நீர் அள வுக்கு மிஞ்சிய உப்புக்களை கீழ் கடத்தி செல்வதற்கும், மண்ணின் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் மண் னில் ஏற்படும் இரசாயனத் தர்க்கங்க ளுக்கும் இன்றியமையாத ஒன்ருக விளங்குகிறது. அடுத்த கட்டுரையில் மண் - நீர் - தாவர தொடர்புகளை ஆராய்வோம்.
5)

Page 18
திருமதி. உமாராணி மகாலி
எந்திரவியற்பீடம்,
அ2ணகள் நீரைத் தேக்கி வைப்பதற் குப் பெ ரு ம ள வில் உபயோகப்படு கின்றன மழைவீழ்ச்சி குறைந்த நாடுக ளில், வரட்சியான காலங்களில் ஏற்படும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நீரைத் தேக்கிவைப்பது அவசியமாகிறது. அதாவது வரட்சியான காலங்களில் வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்கு நீர்த் தேக்கங்கள் மிகவும் அவசியமான தொன் ருகும். எனவே விவசாயத்தில் தங்கியி ருக்கும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வரண்ட காலங்களில் வயல் களுக்குப் பயன்படுத்துவதற்கான நீரை, அணைகளினல் தேக்கிவைக்கலாம். அத் துடன் இந்நீர்த்தேக்கங்களின் மூலம் வீட்டுத்தேவைகள், தொழிற்சாலைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யலாம். ஆற் றின் குறுக்கே அணைகட்டி அந்நீரை காந்தமண்டலத்திலுள்ள வேகமாகச் சுழ லும் சுழலிகளின் மீது பாயவிடுவதன் மூலம் மின்சக்தியையும் பெறமுடியும். நாளுக்குநாள் சனத்தொகை அதிகரித் துக் கொண்டே போவதால், நாம் உப யோகிக்கும் நீரின் அளவு அதிகரித்துச் கொண்டே போகின்றது. அத்துடன் விவசாயச் செய்கையும் மகாவலி அபி விருத்திபோன்ற அபிவிருத்தித்திட்டங்க ளால் விஸ்தரிக்கப்படுகின்றது. இதன் காரணமாக நாளுக்கு நாள் அணைகள் அதிகமாகக் கட்டப்படுகின்றன. ஏற்கன வே கட்டப்பட்டுள்ள அணைகளும் விஸ்த ரிக்கப்படுகின்றன. நீண்ட நாட்களுக்குப் பழுதில்லாமல் இருக்கக்கூடிய அணைக ஆள்க் கட்டுவதில் பொறியியலாளர்களும், புவிவரலாற்று வல்லுனர்களும் (Geolog ists) ஈடுபட்டுள்ளனர்.
அணைகளின் அளவு அவை தேக்கி வைக்கவேண்டிய நீரின் அளவு அ ல் ல து
(16

T96T
பிங்கஜயர், போதனுசிரியர், பேராதனை வளாகம்.
வேகமாகப் பாயும் ஆற்றுநீரைத் திருப்ப வேண்டிய அளவில் தங்சியுள்ளது. இவை சிறிய உயரம் குறைந்த மண் அனைமுதல் மிகப்பெரிய கொன் கிரீட்டினல் கட்டப் பட்ட அணைகள் வரை வேறுபடுகின்றன. மின்சக்தி உண்டாக்குவதற்கும், பெரிய ஆறுகளிலிருந்து நீரைச் சேகரித்து வயல் களுக்கு நீரைப் பாய்ச்சுவதற்கும் கொன் கிரீட்டினுல் பெரிய அணைகள் கட்டப்படு
கின்றன. அணைகளில் வெவ்வேறு வகை
கள் உள்ளன. சேகரிக்கப்பட வேண்டிய அல்லது திருப்பப்படவேண்டிய நீ ரி ன் அளவு பெறப்படும் நீரின் அளவு, அந்த இடத்தின் பிரதேசவியல் (Topography), புவிவரலாற்றியல் (Geology) முதலிய பல காரணிகளைப் பொறுத்து எ ந் த வகை யான அணையைக் கட்டலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். மிகவும் பெரிய அணைகள் பார்வைக்கு அழகாக இருக்க முடியாதாகையால், அணைகள் கட்டுவ தற்குப் பொறியியலாளர்களின் திறமை யும் தேவைப்படுகிறது. உலகிலேயே அதி களவு பொருட்களினல் (Materials) கட் டப்பட்ட அணைகள் கரைக்கட்டு அணை s smt T (35 h. (Embankment dams) Go Lort Gör UT TG966y 6ir GMT ( Monrana) Lifeg, f(Missouri ஆற்றுக்குக் குறுக்கேயுள்ள போட்பெக் (Fort Peck) என்னும் அணை உலகிலே மிக 6th d, gueira LegiToofaai (Earth material) கட்டப்பட்டது: இவ்வனைக்கு 125,000,000 567 unri Loair unragist பட்டது இதற்குமாருக உயரமான அணை கள் கொன் கிரீட்டினுல் கட்டப்பட்டுள் ளன. அநேகமாக இவை 600 உயரமா
6, 6) 6.
அணைகளின் வெவ்வேறுவகைகளேப் பின் வகுமாறு குறிப்பிடலாம்:
(1) கரைக்கட்டு அணைகள் (Embankment
dams)

Page 19
a) ஏகவின அணைகள் (Homogenéous) ஒரே சீரான பொருட்களினல் கட் டப்பட்டவை. b) வலையங்களாலான அணைகள்(Zoned dams) வெவ்வேறு விதமான பொ ருட்களினல் கட்டப்பட்டவை. (2) கொன் கிரீட் வில்லனை, கும் மட்ட
py2007 (arch dam, dome dam)
(3) கொள்கிரீட் புவியீர்ப்பணை, புவியீர் 666.2007 (gravity & gravity arch
dam
(4) கொன் கிரீட் தகடு உதை கால் Sy 600 - u%ar (Concrete slab & buttress dams) t
(5) மேற்கூறப்பட்ட அணைகளில் இரண்டு மூன்று விதங்களைச் சேர்த்துக் கட் டப்பட்டவை. .
(1) கரைக்கட்டு அணைகள்
கரைக்கட்டு அணைகள் கட்டுவதற்கு இயற்கையான புனைந்த பொருட்கள் (natural fabricated materials) unt of dist படுகின்றன. அணைகளின் அமைப்பானது கிடைக்கக்கூடிய பொருட்களில் தங்கியுள் ளது. அநேகமான சிறிய அணைகளில் ஒரே மாதிரியான பொருள் அதாவது ஆற்று வண்டல், வானிலைப்பட்ட கிட்ைடப்பாறை (weathered bedrock) egy 6 6v 5 g) undi 5 fö45Gol) (glacial till)பாவிக்கப்படுகின்றன. பெரிய அணைகளில் 2, 3 வகையான பொருட்கள் பாவிக்கலாம் கரைக்கட்டு அணைகள் கட் டும்போது பொருட்களைப்பற்றிய மண் இயக்கவியல் ஆராய்வு (Soil mechanics investigation) அவசியமாகும். வலையங்க ளாலான>அணையில் ஊடுருவ முடியாத Gumi 6a) a (impermeable blanket) gyaivsugy அகணி (core) ஒரு முக்கியமான அம்சமா கும். இது வழக்கமாகக் களிமண்ணுக விருக்கும். களிமண் கிடைக்காதவிடத்து உடைக்கப்பட்டபாறைகள் அல்லது வகைப் படுத்தாத கூழாங்கல் படிவு பாவிக்க
லாம். ஊடுருவ முடியாத படையாக வலியுறுத்திய கொன் கிரீட்(reinforced concrete) untošas 6 Tib. நீர் கசிவதை
(1.

(seepage) தடுப்பதற்கு அணைக்குக்கீழ் வடி
கால்கள் அமைக்கப்படும். இவற்றின்
அத்திவாரம் பலங்குறைந்த ஆற்று வண் டல் முதல் பலங்கூடிய அடையற் பாறை 5 6ir (Sedimentaryrocks) 6n 6oor Gou spy Lu L. லாம். முற்காலத்தில் அரசர்களால் குளங் கள் அபிவிருத்தி செய்யப்பட்டபோது மண் அணைகள் அதிகமாகக் கட்டப்பட்
டன. இப்பொழுதும் ஆற்றுக்கு அல்லது
கடலுக்குக் குறுக்கே பாலம் போன்றவை
கட்டுவதற்கு முன்பு கூடையடையனைகள் (Cofferdams) மண்ணினல் கட்டப்படுகின். றன. இவ்வ்கையான அணைகளில் சில மாதிரிகள் பின் வருமாறு.
(2) கொன்கிரீட் வில், கும்மட்ட அணைகள்
இவை வளைந்த மெல்விய அமைப் பைக் கொண்டவை. இவற்றின் வலியுறு Qurt (156ir (reinforcement) உருக்காகவோ (Steel rod) அல்லது முன் தகைத்தவடமா s (36A T (pre-stressedcables), g)(d si as Gwrth. ஆழமான மெல்லிய இடுக்குகள் (gorges) உள்ள மலைப்பகுதிகளில் இவை கட்டப் படும். வில்லனைகள் இருவகைப்படும். ஒன்று மாறிலியான ஆரையைக் கொண் டது. மற்றது மாறும் ஆரையைக் கொண் L - is கும் மட்ட அணை கிடை, நிலைத் தளங்களில் வளைந்திருக்கும். (curved) இவ் வகையான அணைகளைத் திட்டமிடும்போது (designing) இரு முக்கியமான கோணங் களை (deflections) கவனிக்கவேண்டும். Gunaw (gyalálů Lug Suý Spy Gir GMT (up stream side) நீரமுக்கம், சிலவேளைகளில் அணைக்குக் கீழுள்ள மேலுயர்த்தும் அமுக்கம் (uplift presscre அணையைத் திருப்ப முயலலாம் , Gg ž50ugoj 6irem (reservoir) eggp š4th Gildi) லைத் தட்டையாக்க முயலலாம்.

Page 20
(3) கொன்கிரீட் புவியீர்ப்பு, புவியீர்ப்பு
வில்லணைகள்
கொன் கிரீட் புவியீர்ப்பணையின் அடிப் பாகம் தட்டையானது. அத் துட ன்
தானே நிற்கக்கூடியது. அதாவது அணை விழாமல் இருப்பதற்கு அணையின் புவி யீர்ப்புமையம் போதியளவு கீழேயிருக் கும். மற்றய வகைகளுடன் ஒப்பிடும் போது இந்த அணைக்குக் கூடியளவுகொன் கிரீட் தேவையாகும். போதியளவு பல மான அத்திவாரத்துடன் புவியீர்ப்பனை யானது மற்றய அணைகளிலும் பார்க்கக் கூடியளவு பாதுகாப்பானது இவ்வகை யான அணைகள் கட்டுவதற்கான நிலையத் தை (site) தேர்ந்தெடுக்குமுன்னர் புவிநீரி யல் (Hydrology) பிரதேசவியல், பரப்புக் gyp q 68 6N. IT GAV IT fibgp) js&av (sub-surfaee geologic condition) என்பன பற்றி ஆராய்ச்சி செய்தல் அவசியமாகும். முட்டுகளுக்குக் கிட்ட (abutments) கிடைப்பாறை இருக் கும் ஒருங்கிய பள்ளத் தாக்கு விரும்பத் தக்க நிலையமாகும். எளிய அமைப்பில் மேல்பாகம் தட்டையாகவிருக்கும். பிர தேசவியல் அமைப்பைப்பொறுத்து புவி யீர்ப்பு வில்லணையும் கட்டலாம். சமீபத் தில் மகா வலி அபிவிருத்தியில் கட்டப் பட்ட விக்ரோறியா அணை 1345? நீள மான கொன் கிரீட் புவியீர்ப்பு வில்லனை யாகும். போவத்தன என்னுமிடத்தில் 880" நீளமான கொன் கிரீட் புவியீர்ப் பணை கட்டப்பட்டுள்ளது.
இ.லவடுகம்
(4) கொன்கிரீட் தகடு & உதைகால்
அடையணை
மண் அல்லது கொன்கிரீட் குறைவா
(18
 

கக் கிடைக்குமிடத்தில் இவ்வகையான அணைகளைக்கட்டலாம் வலுப்படுத்திய கொன் கிரீட் தகடு நிமிர் உதைகால் அடைகளால் தாங்கப்பட்டிருக்கும்
தேக்கிகளில் மேலதிகமான நீரை வெளியகற்றுவதற்கு வடிவழிகள் (spilW
ays) கட்டப்படவேண்டும். அணைகளிலி ருந்து வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சுவதற்குத்
தேவையான வசதிகளை அளிக்கவேண்டும்
அதாவது வாய்க் கால்கள் போன்ற உப
sy 60) udvůj s Git (sub-structure) is - L- LVŮ u lவேண்டும். மிகவுயர்ந்த வெள்ளப்பெரு
க்கு ஏற்படும்போது, தேக்கிநிறைந்த பின்
வெளியகற்றப்படவேண்டிய முழு நீரின் அளவிற்கு ஏற்றவாறு வடிவழிகள் திட்ட மிடப்படவேண்டும். இதனுல் அணைகள்
சேதமாவதைத் தடுக்கலாம் வடிவழிக
ளின் அளவு, கட்டப்படவேண்டிய இடம் முதலியன, அணையின் வகை, அளவிலும், பிரதேசவியல், புவிநீரியல் நிலையிலும்
தங்கியுள்ளன. அநேகமாக வடிவழிகள்
அணையின் கீழருவிப் பக்கத்திலும் (down stream side) egyei Gus sy307 u9 sör QQuerfiú பக்கத்திலும் கட்டப்படும்.
மழையினுல் வெள்ளப்பெருக்கு ஏற் படுப்போது அணைகளின் சுவர்கள் உடை ந்துபோகலாம் இவ்வாறு உடைதல் அணைகளின் உ ய ர த் தி ல் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. அணைகள்
உடைவது வெள்ளப்பெருக்கில் தங்கியுள்

Page 21
ளது. அணைகள் வெள்ளத்தினுல் பலவகை களில் உடையலாம். அணைக்கட்டுகளுக்கு மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அணைகள் சேதமடையும். படிப் படியாக நீர் உட்சென்று அரிப்பதால்
குழற்சி (piping) ஏற்படுவதால் அத்திவா
ரம் அல்லது கரைக்கட்டு வழுக்குகின்றது ஆணுல் கரைக்கட்டின் மேல்ருவிப் பக்கத் தில் முழுவது ய் உடைவது குறை வு. தேக்கியிலுள்ள நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டாலொழிய மேலருவிப் பக்கம் சேதமடையாது. குழற்சியினல் அணைகள் சேதமடைவது நீர் ஒழுகுவ தை (leak) பொறுத்துள்ளது. சில அணை களில் தேக்கியில் நீர் முதல்முறை நிரப் பப்பட்டதும் ஒழுக்கு காணப்பட்டது. இல அணைகளில் பலவருடங்களின் பின் னரே ஒழுக்குகள் காணப்பட்டன. சில அணைகளில் மிகவும் சிறிய அளவில் நீர்க்
கசிவாகத்தோன்றிப் பின் படிப்படியாக
அதிகரித்துப் பல வருடங்களின் பின் உடைதல் நிகழ்ந்தது. சில அணைகளில் பெரிய அளவில் ஒழுக்குகள் தோன்றிச் சில மணி நேரங்களில் அல்லது சில நாட் களில் உடைந்தது. அணைகளில் கரைக் சுட்டுகள் கட்டப்படும்போது அவை சரி யான முறையில் இடிக்கப்படாவிடில் (compact) ஒழுக்குத்தோன்றும், கரைக் கட்டுகளுக்கும் அத்திவாரத்துக்குமிடை யில் அல்லது முட்டுகளுக்கிடையில் உள்ள பிணைப்பு ::* இல்லாவிடில் ஒழுக்குத் தே
ன்றலாம். வேறுபாட்டு
(l

@pašas iš SS96iv (ditterential settlement) உண்டாகும் வெடிப்புகளுடாக ஏற்படும் கரைக்கட்டு ஒழுக்குகளும் அபாயமான வை. அணைகளைக் கட்டுவதற்குப் பாவிக் கப்படும் பொருட்கள் தரங்குறைந்தன வாயிருந்தாலும் அனேகள் உடையலாம்.
குழற்சி நிகழ்வது கரைக்கட்டிலுள்ள மண்ணின் தன்மையைப் பொறுத்துள் ளது. அதாவது மண்ணின் நெகிழ்வில் (plasticity) gs. Iš 69 Lu6ir GMT கூடியளவு நெகிழ்வான மண் உதாரணமாகக் களி மண் குறைந்தளவு நெகிழ்வான மண் ணிலும் பார்க்க (உ+ம் மணல்) குழற்சி நிகழ்வதை அதிகளவு தடைசெய்கிறது: அணைக்க்ட்டில் குறுக்காகத் தோன்றும் வெடிப்புகளும் அபாயமானவை. இவற் றினுாடாக நீர்க்கசிவு அதிகமாக நடை பெறும் பூகம்பம் நிகழ்வதாலும் அணை கள் உடைசின்றன. கடும்புயல், மழை காரணமாக மேலருவிச்சாய்வு (upstream slope) பாதிக்கப்படலாம் அல்லது அரிக் கப்படலாம். இதனைத்தடுப்பதற்கு மேல ருவிச் சாய்வலை கண்ட கல்லடுக்கு (rip. rap) அல்லது கொன்கிரீட் படையாகப்
பிரயோகிக்கலாம். அணைகளின் அத்தி
9)
வாரமும் ஒழுங்காகத் திட்டமிடப்படல் வேண்டும் நீண்டகாலத்திற்குச் சேத மடையாமல் இருக்கக்கூடிய அணைகளைக் கட்டுவதில் பொறியலாளர்கள், புவிவ லாற்று வல்லுனர்கள், பாறை இயக்க வியல் வல்லுனர்கள் முக்கிய பொறுப்பை வகிக்கின்றனர்,

Page 22
வேட்கையுற்ற பசுக் (How to defect R. Rajamahendran (B.V.Sc. Ph.D)Dépt.
இலங்கையிலுள்ள தேசிய பசுக்கூட் டத்தில் பெரும்பான்மையான்மையா னவை சுதேச இனச் சிங்களப் பசுக்க ளாகும். பால் உற்பத்தி குறைவான இச் சிங்களப் பசுக்களை ஐரோப்பிய இந்திய வர்க்கங்களுடன் கலப்பின விருத்தி செய்து பால் உற்பத்தியை அதிகரிப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். இக் கலப்பின விருத்தி யை, செயற்கை முறைச் சினைப்படுத்தல் மூலமும் மேற்கொள்ளக்கூடியதாக விருக் கின்றது. ஆகவே இயற்கை மருவுதலும் செயற்கை முறைச் சினைப்படுத்தலும் வேற்றியளிக்க வேண்டுமாயின், பசுவின் வேட்கைக் குறிகள் நன்கு அவதானிக்கப் பட்டு பசுவின் சரியான நேரத்தில் அவை செயல்படுத்தப்படல் வேண்டும்.
பசுவானது பாலியல் விருப்புடன் 2ளயொன்றை நாடி நிற்கின்றது (ஏற் இன்றது) என தெளிவாக வேறுபடுத்தக் கூடிய கால வளவே அதன் காம வேட் கைக் காலம் எனப்படும். இத் தொழிற் பாடானது. ஈஸ்ரிடியோல் ஒமோனினல் திகழ்த்தப்படுவதுடன், இவ்வோமோன னது மைய நரம்புத் தொகுயின் மீது தொழிற்படுவதுடன், காமவேட்கைக் காலம் ஆரம்பிப்பதற்குச் சிறிது முன்ன தாக அதன் சுரப்பளவு அதிகரிக்கத் தொடங்குகின்றது. பசுவின் உண்மை யான காம வேட்கைக் காலமானது. ஏறத்தாள 18 மணித்தியாலங்களாகும். ஒரு ஆராய்ச்சிப்படிப்பின்படி கன்னிநாகு களில் 83%மானவை 10-21 மணித்தி யால வேட்கைக் காலத்தையும், பசுக்க ளில் 93% மானவை 13-27 மணித்தியா லங்கள் வரை நீண்ட வேட்கைக் காலத் தைக் கொண்டிருக்கக் காணப்பட்டன. பசுவில் சூல் கொள்ள யானது (சூலகத்தின் சிதைவினல் முட்டையானது பலோப்பி

களை இனங்காணல்
Cows in Heat) of Animal Husb. Faculty of Agriculture
பின் குழாயினுள் விடுவிக்கப்படல்) உண் மையான வேட்கைக் காலத்தின் இறுதி நிலையிலிருந்து 10 தொடக்கம் 15 மணித் தியாலங்களின் பின்னரே நிகழ்கின்றது. இக் கால வளமானது குறைந்தது 2 மணித்தியாலங்களிலிருந்து கூடியது 26 மணித்தியாலங்கள் வரை வேறுபடலாம். கன்னி நாகுகள் பசுக்களிலும் பார்க்க சுமார் 3 மணித்தியாலங்கள் குறைவான நேரத்தில் சூல் கொள்கின்றன. இரு காம வேட்கைக் காலங்கட்கு இடைப் பட்ட கால வளவு. காமவேட்கைச் சக் கரம் எனப்படுகிறது. இச் சக்கரத்தின் சராசரி நீளம் 21 நாட்கள் எனினும் 80% மான பசுக்களில் இச் சக்கரம் 1723 நாட்கள் வரை வேறுபடுகின்றன.
பசுக்களில் காமவேட்கைக் குறிக்ளை இணங்கானல் மிகக் கடினமாகும். முறையே யோனிமடலிலிருந்தும், கருப் பையிலிருந்தும் வெளியேறும் சீதவளவா னது அதிகரிப்பதுடன், இத் தடிப்புக் குறைந்த சீதமானது யோனிமுகத்தி விருந்து மீள்சக்தி கொண்ட இழைகளாக தொங்கிக் கொண்டிருப்பதைக் காண லாம். யோனி முகமானது சிவந்து காணப்படும். பசுவில் இலகுவாகக் கண் டறியக்கூடிய வேட்கைக் குறிகளானது அதன் தற்பாலியல் நடத்தையுடன் (Homo sexual behaviour) ou (litburray h தொடர்புடையதாகவுள்ளது. இத் தொழிற்பாடானது ஈஸ்ரயின், புரோ யெஸ்ரரோன் என்னுமிரு ஓமோன்களி ஞல் தோற்றுவிக்கப்படுகிறது. பொது வாகக் கன்னி நாகுகள், பசுக்களிலும் பார்க்கத் தெளிவான வேட்கைக் குறி களைக் காட்டுகின்றன. பசுக்கூட்டமொன் றில் மூன்றில் இரண்டு பங்கும் பசுக்களில் காம வேட்கை ஆரம்பமானது படிப்படி யாக நிகழ்வதுடன் சுமார் 24 மணித்தி யாலங்கட்கு நீடித்ததாக இருப்பதுடன்
0)

Page 23
மீதி 1/3 பங்கு பசுக்களில் திடீரென காமவேட்கை ஆரம்பிக்கவும் காணப் பட்டது. வேட்கையினுள் வரும் விலங் குகள் முற்ையே அடிக்கடி அமைதியின் றியும் வாலையுயர்த்தி முறுக்குவதுடன் யோனிமுகத்திலிருந்து வெண்ணிறச் சளி யம் வடிதலையும் காட்டுகின்றது. இவ் வாருன "வேட்கையினுள் வரும் நிலை" கன்னி நாகுகளில் தெளிவாக இனங்கா ணக் கூடியதாக இருக்கின்றது.
உண்மையான வேட்கை நிலையி லுள்ள பசுக்கள் பொதுவாக அமைதி யின்றியிருப்பதுடன், படுத்திருக்கும் நிலை யிலும் பார்க்க நிற்கின்ற நிலையையே பெரிதும் விரும்புவதுடன், அவற்றின் ஊண் அவா, அசையிட்டுண்ணல், பால் விளைச்சல் என்பன பொதுவாகக் குறை வடைகின்றது. இப்பசுவானது முக்கிய மாக பசுக்கூட்டத்திலிருந்து பிரிக்கப் பட்ட நிலையில் அடிக்கடி கதறலாம். வேட்கையிலுள்ள பசுவானது மறு பசுக் களின் மீது ஏற முயன்ருலும் மறு பசுக் கஃா தன் மீது ஏறவிட்டு நிற்கும் நிலையே சிறந்த குறிகாட்டியாகும். வேட்கையி லுள்ள பசுவின் யோனிமுகமானது மறு பசுக்களை தன் மீது ஏறவிட்டு நிற்கும் நிலையே சிறந்த குறிகாட்டியாகும் • வேட்கையிலுள்ள பசுவின் யோனிமுக மானது மறு பசுக்களால் முகரப்படினும் ஒரு ஆராய்ச்சியாளரின் அறிக்கையின் படி வேட்கையிலுள்ள பசுவானது ஒரு போதும் வேறு பசுக்களின் புறஇனப் பெருக்க உறுப்புக்களை முகர மாட்டாது எனக் காட்டப்பட்டுள்ளது. 22. 67 60) pe வேட்கை லயிலுள்ள பசுவானது எப்பொழுதும் அதன் கூட்டாளிகளை விட செறிவான தற்பாலியல் நடத்தை யைக் கொண்டிருப்பதால் இது முக்கிய ஒரு அறிகுறியாகும். சிலர் 18% எனக் கூறினும் ஏறத்தாள 5%மான பசுக்கள் கருக்கோள்ளலின் பின்னரும் கூட வேட் கையைக் காட்டுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அநேகமான பசுக்களிலும் கன்னி நாகு களிலும் வேட்கிையாரம் பித்து சுமார் 40 தொடக்கம் 80 மணித்
(2

தியாலங்களின் பின்னரே யோனிமுகத்தி லிருந்து குருதி கலந்த சளியம் வெளி யேற்றப்படுவதனல், இக் குருதிப் பெருக் கானது கருக்கொள்ளல் நிகழாமையைக் குறிப்பதாக பின் ஏற்படும் இக் குருதிப் பெருக்குநாளைப் பயன்படுத்தி, பசு ஒன் றின் வேட்கையைத் தவறவிட்டமையை அறியலாம். அந் நாளைப் பதிந்து வைத்து, தொடரும் 18-19 நாட்களின் பின் அவதானமாகக் கவனிப்பதால் அதன் அடுத்த வேட்கையைக் கண்டறி 11ου πιb.
பசுக்களில் உண்மை வேட்கை நிலையை அவதர்னித்ததிலிருத்து 12 மணித்தியாலங்களினுள் அவற்றைக்
காளைக்கு விடப்படல் வேண்டும் என்பது ஒரு பொதுவான விதியாகும், பெரும் பாலான பசுக்கள் உண்மை வேட்கை நிலையில் 18 மணித்தியாலங்கள் வரை யில் காணப்படலாம் என்பதைக் கவ னத்தில் கொள்ளல் வேண்டும். சூல் கொள்ளலின்போது கருக்கட்டக்கூடிய நிலேயினை அடையும் வரை, அதாவது ஏறத்தாள 6 மணித்தியாலங்கள் வரை முட்டையானது வளமானதாகக் காணப் படுகிறது. பசுக்கள் சினப்படுத்தலின் பின் சுமார் 24 மணித்தியாலங்கட்கு கருக் கட்டக்கூடிய வல்லமையைக் கொண்டி ருக்கின்றன. உண்மை வேட்கை நிலை யின் ஆரம்பு 9 தொடக்கம் 10 மணித்தி யாலங்களில் சினைப்படுத்தப்படின், முட் டையானது விடுவிக்கப்படுமுன்னர் விந் தானது தகனமாகிச் சிதைவுறுவதால், சராசரியிலும் பார்க்கக் குறைவான கருக்கட்டும் தன்மையே பெறப்படுகிறது. மேலும் உண்மை வேட்கை நிலையின் மிடிவில் இருந்து 6 தொடக்கம், 10 மணித்தியாலங்களின் பின் சினைப்படுத்தி னலும்கூட, முட்டையானது 6 மணித்தி யாலங்களே வளமாகக் காணப்படுவத ஞல் மிண்டும் குறைவான கருக்கட்டலே நடைபெறுகிறது. இதனுல் சிறப்பான கருக்கட்டல் நடைபெறுவதற்கு பசுக்க ளானது உண்மையான வேட்கை நிலை யின் இறுதி 10 மணித்தியாலங்கட்குள்
)

Page 24
அல்லது அந்நிலை முடிவிலிருந்து 6 மணித் தியாலங்கட்குள் சினைப்படுத்தப்படுதல் உகந்ததாகும். எனவே பசுவொன்று முறையே காலையில் உண்மை வேட்கை நிலையில் இருப்பின் மறுநாட் காலையினுள் அது சினைப்படுத்தப்படல் வேண்டும்: எனினும் சில பசுக்களில் சூல் கொள்ள லானது இவ் வழமையான ஒழுங்கு முறையிலிருந்து விலகிக் காணப்படுவ தால் அப்பசுக்களை சிபார்சு செய்யப் பட்ட நேரங்களில் சிண்ப்படுத்தினும் L கருக்கொள்ளல் நடைபெருது
· Gun ang Ta), 935apasu . பசுக்களை வழ மையான நேரத்திலிருந்து 2 அல்லது 3 மணித்தியாலங்கள் முன்னரோ அல்லது பின்னரோ சினைப்படுத்துதல் புத்திசாலித் தனமானது. இதன்போது அவை கருக் கொள்ளின், இப்புதிய விருத்திநேரமானது அப்பசுவிற்கான சரித்திர தாளில் (History Sheet) பதிவு செய்யப்படல் வேண்டும். ஏனெனில் இக் கால ஒழுங்கையே அப் LJó தொடரப்போகும் காமவேட்கைச் கரங்களிலும் பின்பற்றும் என்பதின லாகும்.
பாற்பசுக்களின் பெரும்பான்மை ான வளமற்ற தன்மைக்கு அவற்றின் வேட்கை நிலை சரியான வேளையில் அவதானிக்கப்படாமையே காரணமாக இருப்பதால், ஒரு ஒழுங்கான வேட்கை யக் கண்டறியும் முறை ஆரம்பிக்கப் Lல் வேண்டும். முதற்படியாக எல் பசுக்களையும் அடையாளம் காணு வதற்கு ஏதுவாக காதுத் தகடுகள் அல் லது குறிசுடல் முறையால் அடையாள Lப்படல் வேண்டும். அடுத்து எல்லா சுக்களிற்கும் வேட்கை எதிர்பார்ப்பு அட்டவணை ஒன்றைத் தயார் செய்வது டன், ஒவ்வொரு பசுவின் கன்றீனல் திகதியும் அதனதன் அட்டவணையில் பதிவு செய்யப்படல் வேண்டும். கன்றி னலை அடுத்து வரும் முதல் வேட்கையை அவதானிக்கக்கூடியதாக விருப்பதுடனும் அது ஒழுங்கற்றதாகவும் நலிந்ததாகவும் இருப்பதால், அத்திகதியைப் பதிவு செய்து வைப்பதால், அதிலிருந்து 17

22
தொடக்கம் 23 நாட்களின் பின் அடுத்த வேட்கையை எதிர்பார்க்கலாம். இம் முறையைக் கையாண்டு பசுவை கன்றீன லின் பின் முதல் வேட்கையைக் கண்டு பிடிக்க முடியாவிடின், குருதி கலந்த சளிய வெளியீட்டினை அவதானிப்பதால் அப்பசு அந்நாளிற்கு முதல் நாளோ அல்லது அதற்கு முன்னதாகவோ வேட் கை நிலையில் இருந்ததாகக் கொள்ள லாம். வேட்கையைக் கண்டறியவும், பதிவு செய்வதற்குமென தனியாக ஓர் ஆளே நியமிப்பது சாலச்சிறந்ததாகும். பசுக்கள் அதிலும் இளம் நாகுகள் விருத் தியாக்கலின்போது அமைதியாகக் கை usrat jut-6 வேண்டும். ஏனெனில் விருத்தியாக்கலின் போது வெளிவிடப் படும் ஒட்சிரோசின் ஓமோனின் தொ ழிற்பாட்டை, பசு வானது வெருளும் போது வெளிவிடும் எபினெபிரின் ஒமோ ஞனது நிறுத்துவதால் விந்து கடத்தப் படல் தடைபடுகின்றது, மேலும் எபி நெபிரினின் விளைவுகள் முற்ருக அகற்றப் படும் வரை, கருப்பையின் தொழிற் பாடு மீண்டும் ஆரம்பிக்கப்படமாட் இது வே பதற்றமடைந்த و لكن اسس (வெருண்ட) பசுக்கள் அல்லது. கன்னி நாகுகள் முதல் தடவை சினைப்படுத்த லின் போது அதிகமாகக் கருக்கொள்ளா மைக்குக் காரணமாகும்.
_T 65 - 6o தொழிற்பாட்டிற்கான வன்மையான குறிகளை ஒரு பசு காண் பித்தும், ஆனல் மாலையினுள் அது உண்மையான வேட்கை நிலையினுள் வராவிடின், அடுத்த நாட் காலை அதனை அவதானிப்பதுடன் அழிக்கப்பட்ட குறிகட்காக முழுமையாகப் பரிசோதிக் குக (வாலிலுள்ள மயிர்கள் குலைக்கப் பட்டும் அல்லது பிழையான வழிகளில் சிதைக்கப்பட்டும். பக்கங்களில் காணப் படும் சளியத்தில் சேறு காணப்படல்) ஒரு பிளாஸ்ரிக் குழாய் மூலம் அப்பசு வின் இனப் பெருக்கத் தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து, வேட்கை நடைபெற்றுள்ளதா ானப் பார்ப்பதே, உண்மை வேட்கை
Y パ

Page 25
நிலையை அவதானியாமல் பசுவை எப் போது சினைப்படுத்தப்படல் வேண்டும் என அறிவதற்கான ஒரே ஒரு முறையா கும். குறைந்தது 3 மணித்தியாலங்க ளுக்கு ஒரு தடவையாக ஒரு நாளில் இரண்டு அல்லது 3 தடவைகள் மாதிரி கள் எடுத்து வேட்கையை அவதானிக் குக. ஒரு நாளில் ஒரே ஒரு தடவை
மட்டும் பரிசோதிப்பதால், குறுகிய
உண்மை வேட்கைக் குறிகளைக் காட்டு பனவையையும் நிச்சயமாகத் தவறவிட லாம். டாசுக்களானது பெரிய புல்வெளி களில் மேய்வதைவிட சிறிய வெளிகளில் மேயும் போதே மருவுதல் அடிக்கடி நடைபெறுகின்றது. அதாவது பெரிய புல் வெளிகளில் பசுக்களானது பிரிக்கப் பட்ட சிறிய கூட்டங்களாக மேய்வதும், அவை மருவு தலைவிட உணவுண்பதிலேயே கூடிய கவனத்தைச் செலுத்துவதே காரணமாகும். சூடான கால நிலையில் பசுக்களானது வேட்கையை பகலிலும், இருளுவதற்கு சிறிது முன்பதாகவும் காட்ட முயல்வதுடன், மழை நாளில் மழை நின்றதன் சிறிது பின்னரும், குளிர் கால நிலையில் சூரியன் உதயமாகிய பின் னரும் காட்டுகின்றன,
வேட்கையைக் கண்டுபி ப்பதற்கான உதவிகள்
பசுவினுடைய வேட்கை அறிகுறிக ளுடன் மேலும் வேட்கையைக் கண்டு பிடிக்க உதவியாக முறையே மருவுதலி ணுல் வேட்கையைக் காட்டும் குறிகாட் tgassir (Heat Ε detectors) 5 nr Lig-Lü Ulu jög அடையாளக் as Gloss sir (Chin BallMaskers), விந்து நாண் துண்டிக்கப் பட்ட காளைகள் முதலியனவற்றை உப யோகிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஒரு பசுவானது 2 676) Durrear வேட்கை நிலையிலிருப்பின், அந் நிலையைத் தீர்மா னிக்க உதவியாக மருவுதலினுல் வேட் கையைக் காட்டும் குறிகாட்டியானது 24',4*’ அளவின் துணியாலான அடியை கொண்டிருப்பதுடன் இது ஒரு வெள்ளை நிற பிளாஸ்ரிக் வில்லையுடன் தொடர் பாகக் காணப்படுகிறது. இவ்வில்லையி
(2.

னுள், சிவப்பு சாயத்தைக் கொண்ட ஒரு சிறிய பிளாஸ்ரிக் குழாயானது உள்ளதுடன், மத்திய அமுக்கத்தினுல் சாயமானது மெதுவாக வெளியேறக் கூடியவாறு இக் குழாயானது அமைக் கப்பட்டுள்ளது. குழாயிலிருந்து போது மானளவு சாயமானது வெளியேறியதும் (ஏறத்தாள 4 செக் அமுக்கத்தின் பின்) இது வில்லையின் உட்பக்க மேற்பரப்
பின் மீது பரவி அது பிரகாசமான
சிவப்பு நிறமாக மாறக் காரணமாக இருக்கின்றது இக் குறிகாட்டியானது விசேடமான சீமெந்தினுல், பின் கால்
கட்கு இடையாக, பசுவின் முதுகு எலும்
பிற்கு மேலாக பொருத்தப்பட்டுள்ளது. பசுவானது இன்ஞெரு பசுவின் மருவுத லுக்கு நிற்குமாயின், அதன் கழுத்துப் பகுதி அமுக்கத்தால் போதுமானளவு சாயம் வெளியேறி குறிகாட்டியைச் சிவப்பாக மாற்றுகின்றது. அப்பசுவா னது மருவுதலுக்கு நிற்காவிடின் குறி
காட்டியானது நிறத்தில் மாற்றமடை
யாது. பசுக்களுக்கு இக் குறிகாட்டியை பிரயோகிப்பதனுல் அவை ஒன்ரு கி விடப்பட்டு, ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தரம் நிறமாற்றத்தை அவத்ானிக்க வேண்டும். இம் முறையால் உண்மை வேட்கையின் ஆரம்பத்தைப் போதிய ளவு திருத்தமாகச் சுட்டிக்காட்ட ஏலு மானதாக இருக்கின்றது. இக்குறி காட்டி பாவிப்பதிலுள்ள ஒரு பிரச்சனை யானது என்னவெனில் பசுவானது ஏதா வதோரு இடத்தில் சிறிது நேரத்திற்கு அமூக்கத்திற்குள்ளாக்கப்படினும் இது தொழிற்பாட்டை ஆரம்பிக்கச் செய்ய லாம். இக் குறிகாட்டியைத் தனியான கரட்டியாகக் கொள்ளாது, பசுவானது உண்மை ரவட்கை நிலையில் இருக்கலாம் என கருதலாம்.
நியூசிலாந்து கண்டுபிடிப்பான நாடி பந்து அடையாளக் கருவிகள் (Chin
" , ball maskers), gd, Gior som LD வேட்கையி
அலுள்ள ஒரு பசுவை விந்து நாண துண் டிக்கப்பட்ட ஒரு காளையினல் அடையா ளமிடுவதை அடிப்படையாகக் கொண்
3)

Page 26
டவை: இம் முறையில் ஒரு பெரிய பந்து முனைப் பேணு போல் (Bal point pen) G5 ft|AbuGh halter masker 2-Gö7G). ஒரு காளையானது உண்மை வேட்கையி லுள்ள பசுவை மருவி இறங்குகையில் தன்னியல்பாகவே "பசுவின் பின் முதுகுப் பகுதியில் ஒரு கோட்டை வரைகின்றது. நாடிக்குக் கீழேயுள்ள உலோகத்தின லான தாங்கியானது ஒரு பந்து முனை 60 uuth (Ball bearing) Garraior G6ir 6T 5) - இப்படியான காளை வேட்கையிலுள்ள பசுக்களை அடையாளமிடும்: ஆ ஞ ல் எந்தளவிற்கு அடையாளமிட்டுள்ளது என்பதைக் கொண்டு எந்தப்பசு இக் காளைக்கு எதிர் கொண்டது என்பதை இனங்கண்டு கொள்ளலாம். மருவுதலி ஞல் வேட்கையைக் காட்டும் குறிகாட் டிகளைப் போல் நாடிப்பந்து அடையா ளக் கருவிகள், உண்மை வேட்கையை கண்ணினுல் பார்ப்பதற்கு ஒரு மேலதிக முறையாக மட்டுமே தொழிற்படுகிறது.
வித்து நாண் துண்டிக்கப்பட்ட காளை கள்’ குறியிடும் விலங்குகளாக பெரிய கூட்ட விலங்குகளுடன் சேர்த்து விடப் படுகின்றன. இம் மத மூட்டிக்காளைகள், வேட்கையிலுள்ள பசுக்களை இனங் காண்பதற்கு மிகவும் வினைத்திறனனவை மத மூட்டியதாகத் தெரிவு செய்யப் படும் காளைகள் அதிகரித்த பாலியல் உட்தூண்டல்ைக் கொண்டிருக்க வேண் டும். இப்படியான விலங்குகளை விலங் குக்கூட்டங்களுட்ன் காலையிலும் மாலையி லும் குறைவான நேர வளவிற்கே விடப் படுகின்றன. இவற்றின் பாலியல் உட் தூண்டல் இழக்கப்படாமலிருப்பதற் காக காளைகள் பின் ஒன்றுவிட்டொன் முக மாற்றப்படுகின்றன. பொதுவாக ஒரு காளை யானது பசுவைவிட, உண்மை யாண வேட்கையிலுள்ள பசுவை மிக விரைவாக மருவுகின்றது. விந்து நாண் துண்டிக்கப்படல் ஒரு எளிய செய்முறை யாகும். அதாவது விந்து நாணிலிருந்து ஒரு பகுதி வெட்டியகற்றப்படுகிறது. இக் காளையைப் பசு கட்குத் தொடர்ந்து விடப்படலாம். ஆனல் இதன் சுக்கிலத் தில் விந்து காணப்படமாட்டாது.

காமவேட்கையைக் கட்டுப்படுத்தல்
தற்போது பசுக்களிலும் கன்னிநாகு களிலும் காமவேட்கையைக் கட்டுப் படுத்த அல்லது ஒருமுகப்படுத்துவதற்கு முறைகள் காணப்படுகின்றன. அநேக LD nr 6oT பெண் விலங்குகளில் இவ்வாறு காமவேட்கையைக் கட்டுப்படுத்துவதால் அல்லது ஒருமுகப்படுத்துவதனல் அவை ஒரே நாளில் அல்லது 2 தொடக்கம் 3 நாட்கட்சிடையில் காம வேட்கையை வெளிக்காட்டக்கூடியதாக உள்ளது. மாடுகளில் சூல் கொள்ளலையும், காம வேட்கை நேரத்தையும் கட்டுப்படுத்தும் செறிவான முறைகள் பல செய்முறை, பரிசோதனைப் பிரயோகங்களைக் கொண் டிருக்கின்றன.
காமவ்ேட்கையைக் கட்டுப்படுத்தல் முறையானது முறையே காமவேட்கை அறிகுறிகளை வெளிக்காட்டாத விலங்கு களிலும் வர்த்தக பாற்பசுக்களிலும், இறைச்சியினங்களிலும் பிரயோகிக்கப் படுவதுடன் இப்பரிகரிப்பின் மூலம் வேட்கையிலுள்ள விலங்குகளை, அதன் வேட்கையைப் பற்றிக் கவனத்தில் கொள்வது, பரிகரிப்பைத் திொடர்ந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் அவற்றை வெற்றிகரமாகச் சினைப்படுத் தக்கூடியதாக இருப்பதாகக் காட்டியிருக் கிருர்கள். பசுக்களானது வயல்களி லுள்ளபோது அவற்றின் வேட்கையைத் தணிதல் கஸ்டமானதால் செய்முறை யில் செயற்கைமுறைச் சினைப்படுத்தலை பிரயோகிப்பதஞல் இக் கஷ்டமானது தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் பெரிய பசுக்கூட்டத்தில் காமவேட்கையை ஒரு முகப்படுத்துவனல் பாற்ப சுகளிலும், இறைச்சிமாடுகளிலும், செயற்கைமுறை சினைப்படுத்தலைப் பரந்தளவில் செய்யக் கூடியதாக விருக்கின்றது. அத்துடன் காமவேட்கையை ஒருமுகப்படுத்தலின் முக்கிய காரணம் யாதெனின் இதன் மூலம் கன்றீனல் திகதி வீச்சைக் குறைக் கக்கூடியதாக இருக்கும். இது கன்றீன லுக்கென முறைகள் விதானமிட்டிருக் கும்போதும், சீரான கூட்ட வளரும்,
24)

Page 27
கொழுக்கும் விலங்குகளை முறையே உண வூட்டல், கையாளல் மூலம் வினைத்திறனை அதிகரிக்கக்கூடிய நிலையில் முக்கியமாகும் விசேடமாக இளம் கன்றுகளில், விசேடப் படுத்தப்பட்ட வளர்க்கும், உணவூட்டும் இடங்கள் நோய்களைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்தலிலும் உதவியாக இருக் கின்றன.
நேர்குடல் சுவரினூடாகச் சூலகத் தைக் கையாளுவதனல் மஞ்சட்சடலத்தை
அகற்றுதல், 5 தொடக்கம் 6 நாட்களுக்
குள் காமவேட்கையையும் சூல் கொள்ள
லையும் நடைபெறச் செய்கின்றன. இம் முறையில் சூலகக்கானைச் சுற்றித்தொற் றல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதி கமானதாலும், மஞ்சட்சடலத்தை அகற் றியபின் ம்ேலதிகமாக இரத்தக்கசிவு ஏற்படுவதனலும் தொடர்ந்து இம் முறை பாவிக்கப்படுவதில்லை. காமவேட் கையைக் கட்டுபடுத்துவதற்கு பொது வான முறையாக புரோயெஸ்ரரோனை ஒரு காமவேட்கைச் சக்கரத்திற்கு அதா வது 18-21 நாட்கட்குக் கொடுக்க லாம். இப் பரிகரிப்பு மஞ்சட்சடலத்தின் சாதாரண வாழ்க்கை வட்டத்தில் சிறித ளவு விளைவையேனும் ஏற்படுத்தாது. ஆனல் எல்லாப் பரிகரிப்பு விலங்குகளி லும் மஞ்சட்சடலமானது அழியும் வரை யில் புறப்பிறப்பு புரோயெஸ்ரரோஞ னது வேட்கையினுள் வராது தடுக்கப் Lu 06h எல்லா விலங்குகளும் அவ்வட் டத்தின் புடைப்பு/நிலையையடைந்ததன் tS6ir ಕ್ಲಿಷ್ಡಿ பரிகரிப்பானது முடிவடைகின்றதுடன், பெரும்பான்மை யான விலங்குகளில் இப்பரிகரிப்பு நிறுத் தப்பட்ட்திலிருந்து 2 தொடக்கம் 6 நாட் களின் பின் காமவேட்கைக் காட் டப்படுகின்றன. எனினும் இக் கள் ம வேட்கை ஒருமுகப்படுத்தலில் கருக்கட் டும் தன்மையானது இயற்கை அல்லது செயற்கை மருவுதலை விடக் குறைவான தாகும். ஈஸ்ரஜின் பரிகரிப்பின் மூலம் சாதாரணத்திற்கு ஒப்பான கருக்கட்டல் வீதத்தைப் பெறக்கூடியதாக உள்ளது.
இவ் ஈஸ்ரஜின் பரிகரிப்பானது தொடக்க
நிலையில் சிறிதளவு புரோ யெஸ்ர ரோன்

பரிகரிப்பில் மஞ்சட்சடலத்தின் வாழ்க் கைக் காலத்தைக் குறைக்கின்றது. புரோயெஸ்ரரோணுனது உணவுடனும், குடிக்கும் நீருடனும், தோலுக்குக் கீழாகப் புகுத்துதலாலும், யோனிமடல் கருவிகளினுாடாகவும் கொடுக்கப்பட லாம் எனினும் மாடுகளில் யோனிமடல் கருவிகள் பாவிப்பதே கூடிய வினைத்திற
குறனவை.
புரஸ்ரா கிளான்டின் F2 அல்லது அதை யொத்த செயற்கைத் தொகுப்பு சேர்வைகள் மூலம் விரைவாக இலியூரி யத்துக்குரிய அழிதலை ஏற்படுத்தி காம வேட்கையைக கட்டுப்படுத்தவே அடுத்த முக்கிய அணுகுமுறையாகும். பசுகளில் பொர ஸ்ரா கிளான்டினை வட்டத்தின் 5-ம் நாளுக்கும் 16-ம் நாளுக்கும் இடையில் கொடுப்பதனல், அநேக விலங்குகள் 72 மணித்தியாலங்கட்குள் வேட்கையினுள் கொண்டுவரப்படுகின்றன். வேட்கை யின் பின் 4 அல்லது 5 நாட்கட்குள் இலியூரியத்துக்குரிய பகுப்பை ஏற்படுத்த புர ஸ்ரா கிளான்டின் வினைத்திறனற்றது இதை தவிர்ப்பதற்கு இரட்டை ஊசி ஏற்றல் முறையானது விருத்தியாக்கப் பட்டுள்ளதுடன் இம் முறையான்து எழுந்தமான வட்டத்தைக் கொண்ட கன்னி நாகுகளில் வேட்கையைச் சிறப் பாகக் கட்டுபடுத்தியுள்ளது. வேட்கை யைக் கட்டுபடுத்துதலில் கருக்கட்டும் தன்மையானது சாதாரணமாக இருப்ப தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுகளிலும், கன்னிநா குகளிலும் குறுகிய காலத்திற்கு புரோயெஸ்ர ரோன் பரிகரிப்பும், புர ஸ்ராகிளான்டிங்கின்
இரட்டை ஊசி ஏற்றல் ஆகிய இரண்டும் காமவேட்கை வட்டத்தை ஒருமுகப்படுத் தலில் வினைத்திறஞழனது ஏற்கனவே தீர் மானிக்கப்பட்ட சினப்படுத்தல் நேரமும் வேட்கையைக கவனத்தில் கொள்ளா மை, இவ்விரண்டு பரிசுரிப்பில் எதுவுமே சாதாரண கருக்கட்டும் தன்மையைத் தோற்றுவிக்கின்றன எதிர்காலத்தில் மிக அண்மையில் இவ்விருபரிகரிப்புகளும் வர்த்தக ரீதியில் அநேகமாகப் பெறக் கூடியதாக இருக்கும். வழமையான ஒழுங்கு மூறையில் நாளாந்த காம வேட்கையைத் துணிதலுடன் சம்பந்தப் பட் பிரச்சனைகளை, புதிய கட்டுப்பாட்டு விருத்தியாக்கல் தொழில்நுட்பங்க்ளின் மூலம் நிவர்த்தி செய்யக் கூடியதாக உள் ளது:
5)

Page 28
எப்பொழுது சினேப்படுத்தல்-ச
(6-10 மணித்தியாலங்கள்)
l.
மற்றைய பசுக் களை முகரல்
மற்றைய பசுக்க ளில் ஏற முயற்சி செய்தல்
யோ Gil (up as Lor னது ஈரலிப்பாக,
சிலந்தும்
சிறிது வீங்கியும் காணப்படல்
உண்மையான வேட்ை
(18 மணித்தியாலங்கள்
l.
மற்றைய பசுக் களை ஏறவிட்டு நிற்கும்
அடிக்கடி கத்தும்
பதற்றப்படல் வெருளுதல் மற்றைய பசுக்க ளில் ஏறல்
உணவில் விருப் זחנLILE)6876b LD, L லுற்பத்தி குறை வடைதல
காலையில்
வே முதற் வாக எழல்
இது
யோனி முகம் ஈ ர லிப்பாகவும் சிவந்தும் காணப் Lu - 6ão
தெளிவான சீத வெளியேற்றம் கண்மணி தளரு தல்
உருவம் 1 - சிறப்பான கருக்கட்டலைப் பெ
இறுதி 10 மணித்தியாலங்களு பின் ஆரம்ப 6 மணித்தியாலங்
(2
 

ராசரி பசுவிற்கான “நேர உதவி”
· சிாஷ்டித . |uG స్త్రీ భ85g ریدکےaندG[(
Scmラ曾 ●やりup لونی-ساخت (لنکہ
& 24, 28
. GP -- Sol— . G66ffi GupPovó ୍ୱିଲ୍ମ୍مسس۔۔۔--سسس۔
密 வேட்கையின் பின் முட்டையின் வாழ்க்கை
) (10 மணித்தியாலங்கள்) (6-10 ம்ணித்தியாலங்கள்)
1. நிற்கமாட்டாது (சில படிப்புகளின்
படி முட்டை யின்
2; யோனி முகத்தி வாழ்க்கைகால்ம் 20 லிருந்து தெளி மணித் தி யாலங்கட் வான சீத வெளி குக் கூட எனக் காட் யேற்றம் டப்பட்டுள்ளது.
15 நித்தமும் அவதானிக்க முடி uu nr é
2. வேட்கைக்கால அறிகுறியாக மட்டும்
இருக்கலாம்
3. பசுவானது கருக்கொண்டுள்ளதா அல்லது கருக் கொள்ளத் தவறிவிடு மா என்பதைக் காட்டாது,
றப் பசுக்களை உண்மை வேட்கை நிலயின் க்குள் அல்லது உண்மை வேட்கை நிலைபின் பகளுக்குள் சினைப்படுத்துக:
6)

Page 29
வளையிகளின் கீழு
3. யோகச்சந்திரன் (தலைவர், கவி
*ணிதத்திலே, வளையிகளின் கீழ்
அடைக்கப்ப்டும் பரப்புகளைக் காண்பது முக்கியமானதாகும். உதாரணமாக, pr யோக கணிதத்திலே, ஒரு பொருளின் இயக்கத்தைக் குறிக்கும் வேக-நேர வளை யியை நாம் வரையமுடியுமெனின், குறிப் பிட்ட நேரங்களுக்கிடையே அப்பொருள் தாண்டியுள்ள தூரத்தை இந்நேரங்களுக்
கிடையே வளையியின் கீழுள்ள பரப்பு
குறிக்கும். இப்படியான பல சந்தர்ப்பங் களிலே வளையிகளின் கீழுள்ள பரப்புகளைக் காண்பது அவசியமானதாயிருக்கும்.
ஒரு வளையி நேர்கோடுகளினுல் ஆக் கப்படுகிறதெனின் அது அடைக்கும் பரப்பை எளிய கேத்திரகணித சூத்திரங் களின் மூலம் காணலாம். உதாரணமாக
படம் 1 இலேயுள்ள வளையி ABCDEF இன்
கீழுள்ள பரப்பு CC எனின்
cc = uprüL ABB“A'+LugrüL BCC'B' +uvůli CDD"C" + uprůDEE"Do -- ur L'IL EFF “E”
E"
F
l
i-c
1.
(2.
 
 

ழள்ள பரப்புகள் ணிதத்துறை, பேராதனை வளாகம்)
ABB’Ao Guncirps) a so flasst schr ஆகையால், இவற்றின் பரப்புகளை எளி தாகக் காணலாம். உதாரணமாக,
4 ur LÜL A BB”A” = A”B” (AA” --BB”)
ஒவ்வொரு சரிவகத்தின் பரப்பை யும் கண்டு, இதிலிருந்து C ஐக் காணலாம். ஆனல் பொதுவாக ஒரு வளையியானது நேர்கோடுகளினல் ஆக்கப்பட்டதாக இருக்காது எனவே இப்படியான வளே யிகளின் கீழுள்ள பரப்புகளைக் காண்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
படம் 2 இலே ஒரு வளையியின் பகுதி AB ஆனது காட்டப்பட்டுள்ளது. AB ஆனது x அச்சுக்கு மேலேயுள்ளது என் றும், தொடர்ச்சியானது என்றும் கொள் G36nu trub.
ABஇன் கீழுள்ளபரப்புoc=பரப்புABBA, வளையியின் சமன்பாடு y=f(x) எனவும், OA” = a., OB”=b GT RUT Gayth GTGGuri
e
7)

Page 30
| R- R
2. ー-, &. R/石 s A. P.
熟》
Ο А. G Qa GRr Տr: Q es
lub 3
c விற்கு அண்ணளவாக்கங்களை இரு விதங்களில் காணலாம். படம் 3 இலே காட்டப்பட்டுள்ளது போல் Q1.Q2....Qn-1 என்னும் புள்ளிகள் மூலம் AB ஐ சிறிய பாகங்களாகப் பிரிப்போம், இப்பிரிவை D என எடுத்தால், A’Q1, Q1 Q2,..., QrQrı .Qn-B ஆகிய நீளங்களில் பெரியதை, D இன்நியதி II D I என வரையறுப்போம்.
Q, Q2 ... Qni 86 U L 6ft 6ih as G5 å sin. L mr s y அச்சுக்கு சமாந்தரமாக வரையப்படும் கோடுகள் வளையியை PP),..Pn= இலே சந்திக்கின்றன என்க. இக்கோடுகள் பரப்பு ABB”A”ệpPrPr + 1 Qr + 1 Qrunt cirp um as iš i களாகப் பிரிக்கின்றன. ஒவ்வொரு பாகத் திலும் வளையியின் மிகத் தாழ்ந்த புள்ளியி லிருந்து x அச்சிற்கு சமாந்தரமான கோடு வரைந்து, இப்பாகத்தினுள்ளே ஒரு செவ் வகத்தைப்பெறலாம். zo-5 Tr 6oor LD mras பாகம் PrPr+Qr+Q இனுள்ளே செவ்வ 5úb PrPor+Qr+ Qr 2 6iterg. Lu PrPor+Qr+Qr< VN
பரப்பு PP+ Q+0 ஆகும்:
r-O, 1, . n -1 இற்கு இச்சமனிலிகளை எழுதி கூட்டினல், செவ்வகங்களின் பரப் புகளின் கூட்டுத்தொகை s < பரப்பு cc எனக் காண்கிறுேம். AB இன் எப்பி ரிவு Dஇற்கும் So Soo-Go ub.
l DI ஆனது சிறிதாயின், A"Q,QQ,
(28

.Qn.B ஆகியவை சிறிதாயிருக்கும். என வே பரப்பு PrP"r + 1 Qr + 1Qr-O- D 1 i Ly PrPr+1Qr-1Qr gg, b. எனவே Sஉறு. OCஆகும், இதை I D ->0 போது 8->CCஎனவும் கூறலாம். இங்கு S ஆனது செவ்வகங்களின் பரப்புகளின் கூட்டுத்தொகை ஆதலால், அதைக் காண்
பது எளிதாகும். | D | சிறிதாயிருக்கு
மாறும் ஐத் தெரிவதால், OC இற்கு S. ஓர் அண்ணளவாக்கம் ஆகும்.
Ne
O a" . B”玄
படம் 4
படம் 4 இலே காட்டப்பட்டுள்ளது போல் AB இன் ஒரு பிரிவு Dஐ எடுத்து, முன்புபோல் பரப்பை பல பாகங்களாகப் பிரிப்போம். ஒவ்வொரு பாகத்திலும் வளையியின் மிக உயர்ந்த புள்ளியிலிருந்து Xஅச்சிற்கு சமாந்தரமான கோடுகள் வரை வதன் மூலம் ஒவ்வொரு பாகத்தையும் , கொண்டிருக்கும் ஒரு செவ்வகத்தைப் பெறுகிருேம். இச் செவ்வகங்களின்பரப்பு களின் கூட்டுத்தொகை S ஆயின், S>CC எனக் காண்கிருேம், D ->O Gurrgs S->CC ஆகும். i D | ஐ சிறியதாக எடுப் பதால் OC விற்கு S ஒர் அண்ணளவாக்கம் எனக்காண்கிருேம்: A"B"இன் எப்பிரிவு Dஇற்கும் S< C 

Page 31
மேல் கூட்டுத்தொகைகள் SD இன் ஒரு கீழ் வரைப்பாகவும் உள்ளது:
கீழ்க் கூட்டுத்தொகைகள், மேல் கூட்டுத்தொகைகள் மூல ம் பரப்பைக் காண்பதை பின்வரும் உதாரணத்தின் மூலம் பார்ப்போம் உதாரணம் 1 x=0 இலிருந்து x=a வரை வளையி y=x2 இன் கீழுள்ள பரப்வைக் காண்க
9
O * G' GP 锅 保 ar
1 - LÓ 5
OA” என்பதை n சமபாகங்களாகப்
பிரித்து, y அச்சிற்கு சமாந்தரமாககோடு கள் வரைவோம். இப்பிரிவை D என்க. ஒவ்வொரு பாகத்தின் அகலமும்
S- elemssna
D இற்கான கீழ் கூட்டுத்தொகை SD ஐக்
காண்போம். y=x2 ஆகையால், செவ்வ கங்களின் உயரங்கள் o,h2,(2h)2, . ((n-1)h)?ஆகும். ஆகவே S+O+h . h2+h(2h)2 + ... +
h[(n-1)h]*-AGtb.
உஆகும் ஆகவே b. ஆகும்.
(2.
 

* él Sp= h*[12+22+ ... +(n-1)2յ
n= h || r2
r=1
=h: 6 (n-1)n(2n-1)=
을(--극)
இங்குSr?"-N(N+1)(2N+1)என்பதை
r = 1 6 பாவித்துள்ளோம். o ج . || o; | Dحس- = || D || لیوی ITلاG مهاج-n
- போது n->OC ஆகும். எனவே, l Dl->oபோது s-டி 83 3 ஃ பரப்பு OAA = a* ஆகும்:
-
D இற்கான மேல் கூட்டுத்தொகை s,
9)
ஆனது SD=h. ho+h(2h)?--... --h(nh)2
3. )1+n (n+1) (2n -- ܒܣܒܕ݂
== b (1 + -4 ..Y என்பதன = (1+ i)(2 + 1) /லே த ர ப்
படும். ஆகவே l Dl->0போதும்,S->a3
ཁ་བཏུལ་བ་
எனவே, கீழ்க் கூட்டுத்தொகைகளையோ, மேல் கூட்டுத்தொகைகளையோ உபயோ கித்து தேவையான பரப்பைக் காண G) Th. -
D என்பதை இவ்வுதாரணத்தில் தெரிவு செய்ததைப்போல் எடுப்பது வசதியாயி ருக்கும். - உதாரணம்2.x-oஇலிருந்துX:aவரைவளையி y=x இன் கீழுள்ள பரப்பு a*ஆகுமெனக்
4.
a sful,
(அடுத்த இதழில் தொடரும்)

Page 32
அதிர்வு: எதிரி
கலாநிதி இ. மகா
டேந்த இரு இதழ்களில் அதிர்வின் அடிப்படை இயக்கத்தையும், இயந்திரங் களில் எப்படி அதிர்வுண்டாகின்றன. அவற்றை எப்படி தணிக்கலாம் என்பன பற்றி பார்த்தோம். இவ்விதழில் அதிர்வு மனிதனின் சினேகிதன அல்லது எதிரியா என்பது பற்றி சிறிது பார்ப்போம்.
முதலில் அதிர்வினுல் ஏற்பட்ட அல் லது ஏற்படக்கூடிய சில நாசத்தை விளக் கும் சம்பவங்களை பார்ப்போம். வாஷிங் டன் நகரில் கட்டப்பட்ட தக்கோமா g5 Gertrosv Lutsvub (Tacoma Narrows Bridge) என்னும் ஆடு பாலம் கட்டப்பட்டு சில மாதங்களில் காற்றின் சீரான வேகத்தின் மூலம் உந்தப்பட்டு ஊசலாடி கடைசியில் பாலத்தை தாங்கியுள்ள கம்பிகள் அதிர் வைத்தாங்க முடியாமல் அறுந்து வீழ்ந் தன யுத்தகாலத்தில் இராணுவ வீரர்கள் ஒரே சீரான கதியில் பாலங்களின் மேலா கச் செல்லும்போது பாலத்தின் இயற் கை மீடிறன் இவர்களின் நடைக்கொத்த தால் பரிவு ஏற்பட்டு உடைந்து வீழ்ந்த தாக கதைகள் பலவுண்டு சில சமயங்க ளில் மோட்டார் எஞ்சின்களின் தண்டு, வால்வுவிற்கள், தண்டுகள் திடீரென உடைந்து விழுவதை நாம் பார்த்திருக்கி ருேம். இதுவும் அதிர்வினல் ஏற்படும் விளைவுகளே.
மேலே கூறிய உதாரணங்களும், மற். றும் சாதாரணமாக அதிர்வினுல் ஏற்ப டும் முறிவுகளும் அனேகமாக இரண்டு அடிப்படை செய்கையால் ஏற்படுகின் றன. ஒன்று மீள்தன்மையுள்ள பொரு ளானது இசையவிசையினல் தாக்கப் படும்போது பரிவு ஏற்பட்டு அதனுல் ஏற் படும் விசை அதிகரிப்பால் முறிவு ஏற்ப டும் மற்றது ஒரே சீரான அதிர்வினல் விசை மாறி மாறி தாக் கும் போது இளைப்பு (fatigue) ஏற்பட்டு முறிவு ஏற் படுகின்றது. தக்கோமா பால முறிவு

Nuu T? நண்பனு? லிங்க ஐயர் Ph. D.
முதல்வகையைச் சேர்ந்தது. வால்வு வற்
கள் போன்றவற்றின் முறிவு இரண்டா வது வகையைச் சார்ந்ங்து.
அதிர்வினல் பொருட்கள் Df7 iš gør மில்லாது மனிதனும் பாதிக்கப்படுகிமுன் மனிதனின் உடல் சாதாரணமாக பெரிய இடப்பெயர்ச்சி மாற்றங்களை, அம்மாற்
றங்கள் மிகவும் ஆறுதலாக செயல்படுத்
தப்பட்டால் தாங்கும் வல்லமையுடை "து. உதாரணமாக தூக்கியில்(Lift) ாத் தினை முறை மேலும், கீழும் போய்வந்தா லும் அவ்வளவாக நாம் பாதிக்கப்படுவ தில்லை. ஆனல் அதே தூக்கி மிகவும் வேக மாக மேலும், கீழும் போகும்போது உடல் வலிக்கின்றது. அநேகமான அதிர் வில் வீச்சு மாத்திரம் அவ்வளவு தொந்த ரவு கொடுப்பதில்லை. ஆனல் அதிர்வின் மீடிறன் அதிகரிக்கும்போது வலி, "சகிக்க
முடியாமை போன்றவையும் அதிகரிக்கி
றது. இது மாத்திரமல்லாது சில சமயங் களில் ஒரே சீரான, அதிர்வினல் மனிதன் வெகுநேரம் தாக்கப்பட்டால் அவனின் உள்ளுறுப்புகளுக்கு சேதம் ஏற்படுகின் றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாலு சில்லு உழவு எந்திரத்தை தொடர் ந்து செலுத்தும் சாரதி, நிலத்தில் சீரற்ற நிலையால், வெகுநேரம் அதிர்விற்கு உட் பட்டு, அவனது முதுகெலும்பு பழுதடை கின்றது. இதுபோல், பல உதாரணங்க ளைத் தரலாம். சில சமயங்களில் மேளம், மத்தளம் அடிக்கும்போது சில ரா ல் அதைத் தாங்க முடிவதில்லை இதற்கு கார ணம் மேளம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர் வல்களின் மீடிறன் சிலரின் உள்ளு றுப்புகளின் இயற்கை மீடிறனுக்கு சம்ப
மாக இருப்பதே காரணமாகும். அதிர்
வின் வீச்சம், மீடிறன், இவற்ருல் மனித னின் சகிப்புத்தன்மை ஆகியவற்றை
படம் 1 மூலம் காட்டலாம். இப்படம்
0)

Page 33
o 2o 4o so s 8 حسمت ع 4ط يعطوا ... up
ஒரு சுட்டியாக பாவிக்கலாமே ஒழிய வேறுவிதமாக பாவிக்க இயலாது.
இனி, அதிர்விஞல் ஏற்படும் சில நன் மைகளைப் பார்ப்போம். மேலே கூறிய படி ஓர் மீள் தன்மையுள்ள பொருள் அதன் இயற்கை மீடிறனின் பெறுமதிக்கு பக்கலாக இருக்கும் மீடிறனை உடைய இசையவிசை தாக்கும்போது பரிவு உண் டாகி அப்பொருள் மிகையான வீச்சத் திற்கு "உட்படுகிறது. எனவே இதைப் பாவித்து சில காரியங்களை செய்யலாம். உதாரணமாக, பெரும் தொழிற்சாலைக ளில் ஓர் இடத்திலிருந்து மற்ருேறிடத் திற்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளது. மேற்கூறியபடி ஒர் அ&) யும்பெட்டி சிறிது சாய்வாக வைக்கப் படின் பொருள்கள் ஒர் இடத்திலிருந்து சிறிது சிறிதாக, மீடிற்றுக்கு ஏற்பநகரும் såOT (Vibratory Conveyor) a T6ör Luri. கல் உடைக்கும் இயந்திரங்களிலும் அஓர்
---~~~~~~~~~~~~~~~~~~
ஆசிரியரின் குறிப்பு: இக்கட்டுரை, அதிர் ஆகிய கட்டுரைகளைத் தொடர்ந்து பிர முடியாத காரணங்களினல் த்ொடர்ச்சி பற்றிய கட்டுரைகள் நான் இல் இது மூன்
(3.
 

அதிகமாகப் பயன்படுத்துவது உண்டு இக்கல்லுடைக்கும் (quary)ளில் கற்களை தரப்படுத்துவதற்கு பெரிய அரிதட்டு ளேப் பாவிப்பதுண்டு இவ்வரிதட்டுகளை ஆட்டுவதற்கும் அதிர்வையே பயன்படுத் துவர் இப்படியல்லாமல் வேறு விதமாக இவ்வரிதட்டுகளுக்கு சக்தி வழங்குவது
கவும் கடினமானதாகும்;
சிலசமயங்களில் அதிர்வினல் ஏற்ப டும் விளைவைக் குறைப்பதற்கோ அல்லது நீக்கவோ அதிர்வையே பாவிப்பதுண்டு. உதாரணமாக, உயர் மின்னழுத்தி செலுத்திக் கம்பிகள் (High Voltage transmissisn Lines) go தூண்களுக்குமிடையி லான தூரம் அதிகரிக்கும் போது சிறிது காற்றின் அதிகரிப்பால் பலமாக அலைவ துண்டு. இதனக்குறைப்பதற்காக அதிர் வுறிஞ்சிகளை (absorbers) இத்தூண்களின் பக்கலில் கம்பியில் பொருத்தப்பட்டிருப் பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். gai ay 1965 Shaar (Stockbridge Damper) என்பர்.
இதுவரை அதிர்வினுல் ஏற்படும் நன் மை தீமைகளைப் பார்த்தோம். இக்கட்டு ரையை முடிப்பதற்கு முன்னர் மிக முக்கி யமானதோர் அதிர்வையும் அதன் பிர யோசனத்தையும் பார்ப்போம். உலகில் எல்லாவித அசைவுகளும் ஒரு விதத்தில் அதிர்வுகளே இவ்வதிர்வுகள் உலகில் இல்லையென்றல் நாம் ஒன்றையும் உணர வோ, கேட்கவோ முடியாது நாம் ஓசை எழுப்ப முடிகிறதென்ருல் அது அதிர்வி ஞலேயே மற்றவர்கள் பேசுவதை கேட்க
கின்ற தென்றல் அதுவும் அதிர்வி E. வாழ்விலிருந்து பிரிக்க முடியாததொன்மு கும்
அடுத்து வரும் கடைசிக்கட்டுரையில்
அதிர்வையும் இரைச்சலையும் Ufösú um fl' Gt In th;
வு-ஓர் அறிமுகம் எந்திரங்களின் அதிர்வு } "சுரிக்கப்படவிருந்தது ஆளுனுல் தவிர்க்க யாகப் பிரசுரிக்கமுடியவில்லை. அதிர்வு ருவது அங்கம் என அறியத்தருகிறேன்.
~~~~പ്പെ
r)

Page 34
சேதனவுறுப்பு கலாநிதி சு. சோதீஸ்வரன் சிரே6 இலங்கைப் பல்கலைக் கழ
சமபகுதித் தன்ை
சீமபகுதித்தன்மை, அமைப்புச் சமப{ என இருவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
3.1 அமைப்புச் சமபகுதித் தன்மை: அமை தியாயத்திற் படித்தோம். C2H60 என்ற மூ எனும் இரு வேறு அமைப்புக் குறியீடுகளை ருட்களைக் குறிக்குமெனக் கண்டோம். ஒ அமைப்புக் குறியீடுகளையும் கொண்ட சோ வும் அவற்றின் இயல்புகளை அமைப்புச் ச4 அமைப்புச் சமபகுதியங்களிற் பலவகையுண் சமபகுதியம், இடச் சமபகுதியம், தொழி
3.1.1 சங்கிலி அல்லது கருச் சமபகுதியங்கள் யங்கள் ஒரே மூலக்கூற்றுக் குறியீட்டைக் படும். உ-ம் C4H10 எனும் மூலக்கூற்றுக் கு றேன்களைச் சங்கிலி அல்லது கருச் சமபகு
CH2CH2CH2CH3 (lqu!sbGApo, Go fo CHs ငုH CH3 (2-மீதைற் புரப்பேன்,
Ha
2-மீதைற் புரப்பேனே, ஐசோ - என்பது சம-புயுற்றேன்களினதும் கொதி $ଥି) (Q
31.2 இடச் சம பகுதியங்கள் (Posi சங்கிலியையும் ஒரே விதமான தொழிற் ஆனல் தொழிற்படுத் தொகுதி காபன் ச கும்.
* s - b CH3 CH2 CH a OH (புர CH3 ငုH CH a (Կ,
OH
3.1.3 தொழிற்படுந் தொகுதிச் சமபகு இச் சம பகுதியங்கள் வெவ்வேறு கும். ダ
a-tề CHa O CHà (இரு மீதை: CHCHOH எதனுேல் (
f
V

இரசாயனம்
ஷ்ட இரசாயன விரிவுரையாளர் கம் பேராதன வளாகம்
3)
I LD (lsomerism)
குதித்தன்மை, திண்மச் சமபகுதித்தன்மை le -
ப்புக் குறியீடுகளைப் பற்றி முதலாவது அத் pová s.hay G sólu?G CH3CH2OH, CH3 O CH3 க்கொண்ட இரு வேறு இரசாயனப் பொ ரே மூலக்கூற்றுக் குறியீட்டையும் வெவ்வேறு rவைகளை அமைப்புச் சமன்பகுதியங்களென D பகுதித் தன்மையெனவும் குறிப்பிடலாம் எடு, அவையாவன: சங்கிலி அல்லது கருச் ற்படுந் தொகுதிச் சமபகுதியம்,
(Chain or nuclear Isomers) gé & LDLJ (55. கொண்டிருந்த போதிலும் நீளத்தில் வேறு குறியீட்டைக் கொண்ட பின்வரும் ւյպի தியங்களென அழைக்கலாம்:
. 10C),
கொ. நி.10C)
சம எனப் பொருள்படும். ஆகவே இதனை கா. நி.) வித்தியாசத்தைக் கவனிக்கவும்,
tional Isomers) gap a gGu 695 Ldrar காபன்
தொகு (தொகுதிகளை)யும் கொண்டிருக்கும் ங்கிலியின் வெவ்வேறு இடங்களில் இருக்
ாப்பன் - 1 - ஒல் கொ. 970C) ரப்பன் - 2 - ஒல், கொ. நி. 839C)
தியங்கள்: (Functional Group Isomers) தொழிற்படுந் தொகுதிகளைக் கொண்டிருக்
லீதர், கொ.நி. 56) 2)as T: f5): 78°)
32)

Page 35
3.2. திண்மச் சமபகுதித் தன்மை:
ஒரே அமைப்புக் குறியீட்டைக் கொ இருக்கலாம் இச் சமபகுதியங்களைத் தி யைத் திண்மச்சமபகுதித்தன்மையெனவும் சமபகுதித் தன்மை என இரு வகைத் திண்
3.21. STS (505:556iTavud (Enantiomerism)
- அமைப்புக் குறியீட்டில் கைருல் மைய ருருத்தன்மை கொண்ட சேர்வைகள் இருக் CH3 CH C2 H5
(புயூற்றன் - 2 - ஒ6 OH திரப் புள்ளியிடப்பட்ட காபனணு ஒரு ை வித்தியாசமான கூட்டங்களைக் கொண்டுள் னவும் காபனைச் சுற்றி அமைந்துள்ள கூட் ளில் இருக்குமெனவும் கொண்டு, புயூற்றன் களைப் பின்வருமாறு குறிக்கலாம்.
C - - . . . f = !
3 °r*3 C C ஒர - on ܓ ܐ ܐ
s lo - w 3 தி CCH CHجCHa —
تاجک>
岛1 محصص
இத்திண்மச் சமபகுதியங்கள், ஒன்றின்மேல் ருருக்கள், ஆடிவிம்பச் சமபகுதியங்கள், ை ளால் அழைக்கப்படுகின்றன கிரேக்க ( லிருந்து கைருல் என்ற பதம் பெறப்படுகி றையதன் ஆடிவிம்பமாக இருந்தபோதிலும் துப்போகாது. இதனற்ருன் எதிருருக்கள்
எதிருருக்கள் ஒரே பெளதீக, இரசாய இச் சேர்வைகளைக் கொண்ட கரைசல்கள் சம கோணத்தினூடாக எதிரான திசைகள 2 - ஒலின் திண்ம அமைப்பு, 1, தளமுனைவ திசையிற் (வலப்பக்கம்) திருப்பினல் திண்ப இடப் பக்கம்) திருப்பும், 1 ஐ (+) சேர்ை d (dextrorotatory) G* † 6) a) e76rath II g அல்லது 1 (Iaevorotatory) சேர்வை எனவு படியால் எதிருருக்களை ஒளியியற் சமபகுதி யற்ருக்கம் எனவும் அழைப்பர்.
(3.

ண்ட ஒன்றிற்கு மேற்பட்ட சேர்வைகள் ண்மச்சமபகுதியங்களெனவும் இத்தன்மை அழைப்பர். எதிருத்தன்மை, சிசு-திரான்சு ாமச்சமபகுதித் தன்மைகள் உள்ளன.
ம் (சமச்சீரற்ற காபனணு) இருந்தால் எதி க்கும்.
ல்) என்ற அமைப்புக் குறியீட்டில் நட்சத்
கருல் மையமாகும். அதாவது தான்கு ளது. காபனணுவின் வலுவளவு நான் கெ டங்கள் ஒரு நான்முகியின் நான்கு மூலைக r - 2 - ஒலின் இரு திண்மச் சம பகுதியங்
ாளின் தளத்திற்கு வெளியேவரும் பிணைப்பு
ாளின் தளத்திற்கு உள்ளே செல்லும் பிணைப்பு
ாளின் தளத்திலுள்ள பிணைப்பு
மற்றென்று பொருந்தாதபடியால் எதி கருல் சேர்வைகள் எனப் பல பெயர்க மொழியில் கையைக் குறிக்கும் சொல்வி றது. எமது இரு கைகளும் ஒன்று மற் ஒன்றை மற்றையதன் மேல் வைக்க ஒத்  ைகருல் நேர்வைகள் எனப்படுகின்றன.
ன இயல்புகளைக் கொண்டிருந்தபோதிலும்
தளமுனைவாக்கப்பட்ட ஒளியின் தளத்தை சில் திருப்பும் இயல்புடையன. புயூற்றன் - பாக்கப்பட்ட ஒளியின் தளத்தை மணிமுள் D அமைப்பு II, மணிமுள் எதிர்த்திசையிற் வ, வலஞ்சுழிச் சுழற்சிச் சேர்வை அல்லது (-) சேர்வை, இடஞ்சுழிச் சுழற்சிச் சேர்வை ம் அழைப்பர். ஒளித்தாக்கத்தன்மையுள்ள யங்கள் எனவும் இத்தனிச்சிறப்பை ஒளியி
3)

Page 36
தசைநாரின் இழையிலிருத்து பிரித்தெ
ஒரு வலஞ்சுழிச் சுழற்சியுள்ள சேர்வையாகு புச் சேர்வைகளிற் பல (உ-ம்: பருத்தியிலு சுள்) ஒளியியற்றக்கமுள்ள சேர்வைகளாகு
சம அளவு d, 1 சேர்வைகளைக் கொண் அல்லது (+) - கலவை எனப்படும். இ ஒளியின் தளத்தைத் திருப்பாது (ஏன்?).
3.2.2, சிசு - திரான்சு சமபகுதித்தன்மை
இத்தகைய சமபகுதித்தன்மை இரட்ை வட்டச் சேர்வைகளிலும் காணப்படும், 1
இருவித்தியாசமான சேர்வைகளின் அமை, மிான உருவ அமைப்புக்கள் சிசி, திரான்ச
CH H
>C=CC H Er திரான்சு - 1 - புரோமோ
புரப் -1-ஈன்
சிசு - வடிவத்தில் ஒரே வித அணிக்கள திரான்சு - வடிவத்தில் எதிர்பக்கங்களிலு வடிவங்களிலிருப்பதற்கு இரட்டைப் பிணை இரு ஒரே வித கூட்டம் இணைக்கப்பட்ருக்கக் இல் சிசு, திரான்சு வடிவங்களில்லை வித் களைக் கொண்ட சிசு, திரான்சு சமபகுதிய யங்கள் எனவும் அழைக்கப்பட்டன,
பயிற்சி: 3
1. பின் வரும் சேர்வைகளுக்கு எதிருரு
அவற்றின் வெவ்வேறு உருவ அமைப்
sy) CH3CH2CH (cl) CHICH
2, பின்வரும் சேர்வைகள் a print as a
gy) CH3CH=CHCH
3. பின்வரும் அமைப்புக்குறியீட்டைக் கவ
குறியீட்டிற்கு ஏற்கத்தகு திண்ம சமபகுதி
(3

டுக்கப்பட்ட இலத்திக்கமிலம், CH3CHCO2H
-OH iம். இயற்கையாக விளையும் சேதனவுறுப்
லுள்ள செல்லுலோசு, புரதங்கள், ஓமோன் th.
ட கலவை இரசிமிக்குக் கலவை, dl-கலவை ரசிமிக்குக் கலவை தளமுனைவாக்கப்பட்ட
(Cis-, trans-Isomerism)
டப் பிணைப்பைக் கொண்ட சேர்வைகளிலும் - புரோமோ புரப் - Fair, CH3CH=CHBr, ப்புக் குறியீடாகும். இவ்விரு வித்தியாச * வடிவங்கள் எனப்படும்.
H H
>C=CC 3 Br FG-I-Gprff (Zuor
புரப்-1- ஈன்
ான ஐதரசனணுக்கள் ஒரே பக்கத்திலும், ம் உள்ளன. ஒலிபீன்கள் சிசு, திரான்சு ப்பைக் கொண்ட ஒரு காபனணுவிலேனும் கூடாது உ-ம்: புரப்பீன், CH3CH=CH தியாசமான பெளதீக இரசாயன இயல்பு பங்கள் முன்னர் கேத்திர கணித சமபகுதி
க்கள் இருக்குமா? எதிருருக்களிருந்தால் புக்களைத் தருக,
e) CHCH (OH) COH
வடிவங்களிலிருக்க முடியுமா எனக் கூறுக
3) CH=C(CH) CoH 'sflás: CH.CH=CH-CH-Co.H. Jsi
CH
யங்களைத் தருக
4)

Page 37
திருத்தம் - ஊற்று M
சேதனவுறுப்பு
2.2 3.1 பகுதியில் s
6 5 4 3
CH3 CH2 CH3 scir (3) u Lutt; 3,4 - m 2 - 1 m
அப்பியாசம் (1) பகுதி (iii) சரியான விடை அப்பியாசம் (3) பகுதி (ii) சரியான விடை
9ᏪilᏥ Ꮽest Ꮼer
K. Sivaguruna MAN S
YATIYA
C3

(ARCH - APRIL 1978
*வா.கே.
இரசாயனம்
ண்ட காபன் தொடர் 8 ஆக இருப்பதால் இரு மீதைல் எக்சேன் என இருக்கவேண்டும்,
2,3- இரு மீதைல் பெந்தேன். மீதைல் ஒத்தோ மீதைல் பென்சோ ஏற்று
nplim ents Prom
than & Sons.,
TREET,
NODTTA
5)

Page 38
சி. முருகவேல், நூலக
அண்மைக்காலத்தில் தென்கிழக்க வருகின்ற தேசிய வைத்திய முறைகளை நாடுகளின் அரசினரும் - உலக சுகாதா வனங்களும் முன்வந்துள்ளன. சித்த வேஈருக்கு இந்த கட்டுரைத் தொகுப்ப யோகமானது.
(டாக்டர் கு. சண்முகநாதன் அவர்களின் நன்கொடை
இவ் வைத்திய் முறை எமது நாட்டில் கிறது. இதிலிருந்து இவ் வைத்திய முறை கும் இடையில் இருக்கும் நெருங்கிய தெ அகில உலக செல்வாக்கும், நவீனக் கவ முறையின் பாரபட்சமான போட்டிக்கிடை வருகிறது. இது அதன் உள்ளார்ந்த ஆற்
இவ் வைத்திய முறைக்குத் தோற்றழு அகத்திய முனிவரும் திருமூலரும் முக்கிய வைத்திய மரபு, தமிழ் நாட்டிலும் இல வந்திருக்கிறது. இச் சித்தர்களின் பெயர் னும் சித்தர் பாடல்கள் என வழங்கும் நு தாயுமான சுவாமிகள் சித்தர் கணத்தை, கே
Gurdi), unt guy 6ir 6T (T fit.
திருமூலராலும் அகத்தியராலும் தோ வலுவடைந்த இச் சாஸ்திர மரபு, எமக்கு
ஒன்று, குரு சிஷ்ய வழி; மற்றது ஏடு றல் வாய்ந்த உண்மையான வழி. அது ( நூல்கள் ஆகியவற்றின் ஊடாக வரும் வ
சித்த வைத்திய ஏடுகள் இந்தியாவிலு லும் தனிப்பட்டவர்கள் கையிலும், நூல களும் அப்படியே,
வைத்திய சாஸ்திரத்தில் பொதுவாகவ
யத்தில் சிறப்பாகவும் ஈடுபாடு கொண்ட கையில், பின்வரும் பட்டியல் தயாரிக்கப்
(

வத்தியம் விபரப்பட்டியல்
th, Gupt its her not its b
al
ாசிய நாடுகளில் நடைமுறையில் இருந்து விஞ்ஞான ரீதியாக ஆராய மேற்கூறிய ர ஸ்தாபனம் போன்ற சர்வதேச நிறு வைத்திய ஆராய்ச்சியில் ஈடுபடவிரும்பு ாளர் தருகின்ற பட்டியல் மிகவும் உப
பின் உதவியோடு இப் பட்டியல் பிரசுரமாக வருகிறது)
தமிழ் வைத்தியம் எனவும் வழங்கி வரு க்கும் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக் ாடர்பு விளங்கும். அரசாங்க ஆதரவும், ர்ச்சியும் உடைய மேற்கத்திய வைத்திய யிலும், அது இன்னும் வழக்கில் இருந்து றலின் விளைவாகும்.
p ம், ஆதி இயக்கமும் கொடுத்தவர்களில் மாணவர்கள். இவ்வாறு தோன்றிய இவ் ங்கையிலும் சித்தர்கள்ால் வளர்க்கப்பட்டு *கள் சிலவற்றை. திருமந்திரத்திலும் இன் ால்களிலும் காணக் கூடியதாக இருக்கிறது: *க்கிழார் தொகையடியார்களைப் பாடியது
bறம்பெற்று விளக்கமடைந்து சித்தர்களால் இரு வழிகளால் ஒரளவு கிடைத்துள்ளது. கள் நூல்கள் வழி. முன்னது தான் ஆற்
தெய்வம் விடும் வழி, மற்றது. ஏடுகள் N
ம் இலங்கையிலும், மற்றும் இதர நாடுகளி ங்களிலும் சிதறலாக இருக்கின்றன. நூல்
ம் தமிழ் வைத்தியமாகிய சித்த வைத்தி பர்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக் பட்டுள்ளது.
:6)

Page 39
இப் பொருள் பற்றிய ஆராய்ச்சிக்கு செய்யப்பட்டுள்ளன. என்று கூற முடியாது டுரைகள் எல்லாமே ஒரே தரத்தன என்று முயற்சியாகவே கொள்ளுதல் வேண்டும்,
1 நூலகங்கள், எழுத்துப்பிரதித் தொகுதிக
1.
பியர்ஸன், ஜே டி (PEARSON, Oriental and Asian bibliography; a (கீழைத்தேய, ஆசிய நூல் விவரன 1966. 261 L14.
Oriental manuscript collections in th (பெரிய பிரித்தானியா அயர்லாந்து இலண்டன், ருேயல் ஏசியாட்டிச்
Oriental manuseripts in Europ and l (ஐரோப்பாவிலும் வட அமெரிக்க கள்) அக் ஸ்யூக் (சுவிட்சலாந்து), 1971 555 Lud.
ஸ்ட்டன், எஸ் சி (SUTTON, S A guide to the India office Library
(இந்திய ஆபீஸ் நூலகம், ஒரு வழிக் இலண்டன் எச். எம். எஸ். ஸோ,
ஜனேர்ட், க்ளொஸ் லட்விக் (JA An annoted bibliography of the Cat
(இந்திய கையெழுத்துப் பிரதிகளின் பகுதி 1. வைஸ்பேடன், ஸ்டெய்
2 கையெழுத்துப் பிரதிகள் இந்திய மொழி
6.
QLitari, assò 69uh (TAYL6R Catalogue Raisonnee of Oriental ma Fort St. George. (சென்னை, அர்ச், ஜோர்ஜ் கல்லூரி சென்னை, அர்ச். ஜோர்ஜ் கசற் பிர
போல்மன், எச். ஐ (POLMAN, A census of Indic manuscripts in the (ஐக்கிய அமெரிக்காவிலும் கனடா
கனக்டிக்கட், அமெரிக்க கீழைத்தே
(

உதவக்கூடிய எல்லா நூல்களும் இங்கு பதிவு பதிவு செய்யப்பட்டுள்ள நூல்கள் கட் ம் கூறமுடியாது. இதனை ஒரு தொடக்க
ir uւլգա ல்களின் பட்டியல்
J D). V− n introduction with some reference to Africa ாம்) இலண்டன், குருே ஸ்பி, லொக்வூட்,
e Libraries of Grate Britain and Ireland
நூலகங்களில் கையெழுத்துப் பிரதிகள்) சங்கம், 1954. 90 பக்.
North America. ாவிலும் கீழைத்தேயக் கையெழுத்துப் பிரதி இன்டடொக்குயுமென் டேசன் கம்,
C)
நாட்டி)
1952. 62 Ludi :
ANERT, Klaus Ludwing) alogues of Indian manuscripts, பட்டியல்களின் பட்டியல்) 607 ri, il 965. I 75 Luak.
கள் பொது: பட்டியல்கள்.
William) nuscripts in the Library of the Late College
கையெழுத்துப் பிரதிகள் பட்டியல்) ஸ், 1857-1862 3 கட்டுகள்.
H. J
United States and Canada விலும் இந்திய கையெழுத்துப் பிரதிகள்) iய கலைகள் சங்கம், 1938, 542 பக்.
7)

Page 40
3. கையெழுத்துப் பிரதிகள்: தமிழ்: பட்டியல்
8.
0,
1
12.
குப்புஸ்வாமி ஸா ஸ்திரி, எஸ் தெ A Triennial catalogue collected duri vol. II Part. 2 Tamil, (1913.14 தொடக்கம் 1915-16 வ ளின் பட்டியல் கட்டு 1, பாகம் 2
97.
சாமிநாதையர் நூலகம், சென்னை A descriptive catalogue of Tamil man (உ. வே. சாமிநாதைய்யர் நூலகத்தி பட்டியல்) கட்டு 4, சென்னை, 4, 43 l tu di.
சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்ச, A descriptive catalogue of the Tamil Library. (தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல ணப் பட்டியல்) கட்டு 10 வைத் நாதபிள்ளை, 1964,
நூல்கள்: இந்திய மொழிகள்: பட்டியல்கள்
st GLD 6), T b . 9 (EMENEAU, M A union list of printed Indic texts an (அமெரிக்க நூலகங்களில் உள்ள இ நியுஹேவின், கொனக்டிக்ட், அெ 1935. (மறு பதிப்பு) 540 பக்.
ஸெங்கர், ஜே டிஎச் (ZEŃKER, Bibliatheca orientalis;
(கீழைத் தேய நூற் பட்டியல்) அம் 1966, 675 பக். (1846ல் வெளிவ
5. நூல்கள்: தமிழ்; பட்டியல்கள்.
13.
14.
5.
சண்முகம், எம் தமிழ் நூல் விவரண அட்டவணை, தமிழ் நாடு அரசினர் தமிழ் வளர்ச்
பார்னட், எல் டி போப், ஜியூ A cata-ogue of the Tamil books in t (பிரிட்டிஷ் நூதனசாலை நூலகத்தில் இலண்டன், பிரிட்டிஷ் நூதனசான்
பாக்னட் எல் டி (BARNET, IL
A Supplementary catalogue of the Museum,
(3

ir
5ாகுத்தவர். ng the Triennium 1913-14 to 1915-16;
ரை சேர்க்கப்பட்ட கையெழுத்துப் பிரதிக தழிழ்) சென்னை, அரசாங்க அச்சகம்,
uscripts in U. V. Swaminathaiyar Library. தில் உள்ள தமிழ் கையெழுத்துப பிரதிகளின் உ. வே. சாமிநாதைய்யர் நூலகம் 1962.
ாவூர்
nanuscripts in the Tanjore Sarasvati Mahal
க தமிழ் கையெழுத்துப் பிரதிகளின் விவர தியப் பகுதி 2-ம் பதிப்பு, தஞ்சாவூர், உலக
4 B) d tran lations in American Libraries. ந்திய மூல நூல்களின் ஒன்றிய பட்டியல்) மரிக்கக் கீழைத்தேயக் கலைகள் கழகம்,
J Thy
ஸ்ரர் டாம், ஒரியண்டல் பிரஸ், ந்த நூலின் மறுபதிப்பு)
1867-1900 கட்டு 1, பகுதி 2. சென்னை, சி ஆராய்ச்சி மன்றம் 1962.
(BARNET, L. D. & POPE, G U) he Library of the Britigh Meseun.
உள்ள தமிழ் நூலகங்களின் பட்டியல்) R), 1909. VIII, 590 u ë,
D) Tamil books in the Library of the British
8)

Page 41
6.
(பிரிட் டிஷ் நூதனசாலை நூலகத்தில் நூல்) இலண்டன், பிரிட்டிஷ் நூாத
மர்டஹ, ஜோன் (MURDOCH,
Classified catalogue of Tamil printed (தமிழ் நூலகளின் வகுத்த பட்டியல்)
வர் மு, சண்முகம் (சென்னை) தமிழ் (1865-ம் ஆண்டு; பதிப்பின் மறு பதி
தேசியப் பட்டியல்கள்,
7.
8.
19.
இந்தியத் தேசீய நூற் பட்டியல், கள்
இலங்கை
Books registered under ordinance No (இலங்கையில் அச்சுப்பதிவாகி 188 பெற்ற நூல்களின் இடாப்பு) கொழு
இலங்கைத் தேசீய நூற்பட்டியல், கெ
நூல்கள் கட்டுரைகள் (தமிழில்)
20。
21.
23.
24。
அகத்தியர் (அவர் பெயரில் வழங்கு
2000 (இரண்டாயிரம்) பகுதி-1, உ
ராஜன், தஞ்சாவூர், சரஸ்வதி மஹ (சரஸ்வதி மஹால் வெளியீடு - இல
2000 (இரண்டாயிரம்) பகுதி-2, 3 ராஜன், தஞ்சாவூர், சரஸ்வதி மலு (சரஸ்வதி மஹால் வெளியீடு - இ.
TLSSLS LS L M SGSS LLLSLSSLSLSSLSLL0SSLLS SLMLSSSLLLLSTSLTSzLSLLSL0MSMk kSS LLL SSLSLS SS LLLLLSkLLLkSkkSLLSLLLL
2000 இரண்டாயிரம்) பகுதி-3. கு
கடராஜன், தஞ்சாவூர், சரஸ்வதி
ஐந்து குஸ்திரங்கள். மதுரை, இ. இ திர விலாசம் பிரஸ் , 1938, 118 உள்ளடக்கம்: மனக்கோலட்-200,
வைத்தியத் திரட்டு 81, மனிதக்கிறு
கர்ப முப்பு குறுநூல்; தெட்சனமூ தீட்சுைஷ் 100ம் நாற்பது முக்கோண இராமசாமிக்கோன், (1968) 68
(39

உள்ள தமிழ் நூல்களின் பட்டியல், வழி 5rs naso, 1931. VI, 695 Lui.
John books with introductory notices.
முன்னுரைக் குறிப்புகளுடன் பதிப்பித்த வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், 1968 նւլ) 537 ւս ձ:
பகத்தா, மத்திய ஆய்வு நூலகம். 1958.
1 of 1855. 5 1-ம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் pம்பு, 1885 - பகுதிகள் 1-TV (1885-1905)
ாழும்பு, தேசீய ஆவண மன்றம். 1963.
5வது) m ரையுடன்; பதிப்பித்தவர் எஸ். வெங்கட
T éio, 1 9 58. IV, 1 8, 29 7 Luā.
. 01).
டரையுடன் பதிப்பித்தவர் எஸ். வெங்கட றால், 1958, 3 780 பக். 5a). 82)
றிப்புரையுடன் பதிப்பித்தவர் எஸ். வெங் மஹால், 1963, VIII. 644 பக்.
இராமகுருசாமிக்கோனர், பூரீ இராமச்சத் பக்.
கனகமணி-100, வைத்தியக்கோவை-125, க்கு அல்லது கணிகை-64
oர்த்தி குருமுகம் என்னும் மனேன்மணி பூஜவிதியும் சேர்ந்தது. மதுரை, ஜி. ;
(தொடரும்)

Page 42
பயிற்சி: 3 செய்முறையும் விடையும்
1 அ) இல்லை (ஏனெனில் கைருல் ை ஆ) ஆம் எதிருருக்களின் உருவ
w CHa cH3 - ) کسی ouיר gس Co- COH
ہوا تھ> 2. அ) ஆம். அவற்றின் உருவ அமை
CH H
> C-C < H CH
சிசு
ஆ) இல்ல (ஏனெனில் இரட்டை
இரு ஒரே வித கூட்டத்தைக்
4. 3 盛 3. CHCH=CH-CH-COH
CH
C- ஒரு கைருல் மையம். C = C ஐச் சுற்றி சிசு, திரான்சு நான்கு உருவ அமைக்கள் உண்டு;
சிக ஆ
C
O
2
接号
2
(
4

மயமில்லை)
அமைப்புக்கள் பின்வருமாறு:
ப்புக்கள் பின்வருமாறு:
CH CH
DCs CC H H
girmrevs ப் பிணைப்பைக் கொண்ட ஒரு காபனணு
கொண்டுள்ளது)
சமபகுதித்தன்மை. ஆகவே பின்வரும்
9 &g, -II
0)

Page 43
உள்ளம்

எழுபத்தெட்டாம் ஆண்டின் மூன் ருவது மலரை உங்கள் கைகளில் காண் கின்றீர்கள். இந்த இதழுடன் தனிப் பிரதியின் விலையை ரூபா 2;= ஆக கூட் டியுள்ளோம். ஆனல் எமக்கு தனிப் பிரதியொன்றினைப் பிரசுரிப்பதற்கு ஏற் படும் செலவில் 2/3 பங்கையே நீங்கள் செலுத்துகின்றீர்கள். மிகுதியினை விளம் பரதாரர்களிடமிருந்தும் ஊற்றின் முன் னேற்றத்திற்காக மாதந்தோறும் "வங் $$ 5'L2T355ir' (Bankers Orders) eps) மாக பணம் தந்து உதவி வரும் தமிழ் அபிமானிகளிடமிருந்தும் பெற வேண் டியுள்ளது. இந்த ஆண்டின் ஆறவது இதழ்வரையில் பிரசுரிப்பதில் ஏற்படும் கால தாமதத்தினை தவிர்க்க எமது ஆசி பியர் குழுவினர் முயன்றுவருகின்ற னர். காலதாமதம் ஏற்படினும் இவ் வருடத்தில் ஆறு இதழ்கள் வெளி வரும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரி விக்கிறேம். தற்காலிக இக் காலதாம தத்தை வாசகர்கள் பொறுத்துக்கொள் வார்கள் என நம்புகிறேம்.
- எஸ். வி. பரமேஸ்வரன் M.Sc, Ph.D
(தொகுப்பாசிரியர் )

Page 44
* கூறைச் சேலைகள்
* பட்டு வேட்டிகள்
மங்கள வை1
* நாகரீக ஜவ * அழகிய G)
-
இன்றே விஜய
த. கும 5 r. ரெக்ஸ்
42.44, பெரியகை
அச்சுப்பதிவு: சென்றல் அச்சகம்,

பவங்களுக்கேற்ற
புளிகள்
சேட்வகைகள்
பல்பொட்டம்
சிறுவர் ஆடைகளுக்கும்
ந் செய்யுங்கள்
) J JJF IT LÊ
ரைல்ஸ்
தொலைபேசி: 7034
98. திருகோணமலை வீதி, கண்டி