கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1978.09-10

Page 1
:
PROPOSED MODIFICATION , `, T ಛಿ:
SALT WATER.EXCLUSION SCHEM . C
TAFF FWF
உடற் பாதுகாப்புப் பொறிமுறை. பன அபிவிருத்தி ஆராய்ச்சி நில யம் நிறுவுதலின் அவசியம் தியக்க மருந்திற்காட்பட்டவர்க எாால் எழும் சட்டமருத்துவப் பிரச் dfa Tasi.
யாழ்ப்பானக் குடாநாட்டின் உவர் நீர் வெளியேற்றுகைத் திட்டம்.
 

செப்டம்பர் -
அக்டோபர்
1978
தொகுதி: 6 இல: s
FRES ATER goy.
睦 நன்னீர்த் தேக்கம்
AT WATER BOLJ Y FÖR FIK HK மீன்பிடிக்கான உவர்நீர்ப் பகுதி ŜALTWRTE # 3ūEW FEC 554L K4 Maiu FAT FE
H பேடி பேக்கிக்கான வர்நீர்ப்பகுதி
PEL HFMFI , Air FcR, pa நெற்பயிற்சிககான நிலமீட்சிப்பகுதி P*éPLISEL Etrið El Luul நீங்கள்புடி ேோக்ஐடக்கா
i Chr HNE கோல்பாடி ஆள்
நீரும் விவசாயமும் (3) மரவள்ளிப் பீடைப் பூச்சி சேதனவுறுப்பு இரசாயனம் 45) இலங்கையின் உல்லாசப் பயணக் கைத்தொழிலும் எதிர்காலமும் 1) சித்த வைத்தியம் (தொடர்ச்சி)
t

Page 2
IN THES
ARTICLES BODY DEFENCE MECHANISMS
ğ ESTABLISHING A PALMYRA
DEVELOPMENT RESEARCH CENTRE
LEGAL PROBLEMS AR I SING FROM NARCOTC ADD CTS
SALT WATER EXPULSION SCHEME FOR THE JAFFNA PENINSULA
WATER AND AGRICULTURE (3)
PATHOGENC NSECTS IN MANOCS (TRANSLATION )
ORGANIC CHEMISTRY (5) TOURIST IN DUSTRY N*SR || LLANKA AND ITS FUTURE (I) TAMIL MEDICINE (3)
A BBIOGRAPHY
OOTRU ORG
President Prof. T. Jogaratnam Secretary : Dr R. Narendran T'reasurer : Mr. II. Ariyaratnam Ordina y Members to the General Council Dr D. J. Gunaratnam Dr R. Maha
Dr. A. Kandiah
*
*
ko
:
*
Chief Editor: P. T. Jayawickramarajah M Administrative Editor: K Krishnananth N. Mahalinga Iy, Gompiting Editor: Dr. Parameswaraiyer A Editorial Board:
Po Thanikasalam B. Sc Eng (Hons) A. Kandiah M. Sc Ph. D. V. Manamohan M. FB., B. S, K. K. Navaratnam B. Sc. Agric (Hons)
Publishers: Administrative Editor Correspondende : Administrative Editor;
“Ootru* Oı 215, COLOMBO S'

S ISSUE
AUTHORS
se Sasikala Ramalingam
ga K. K. Navaratnam
- Dr. N. Saravanapavananthan
- Prof. N. L. Jeyasingam
R. Mathanaharan
Dr. A. Kandiah
- i P. M. Anandasayaman vás Dr. S. Sotheeswaran
Karthigesu Guhapalan
- S. Murugavel
ANISATION
Vice President Prof. A. Thurairajah Assistant Secretary: Dr. V.Manamohan
a
linga Iyer Dr. S. v Parameswaran
IDr. V. Neminathan
B. B. S. M. Ed. asivam M. V. Sc. er Ph D. mbih apathy. M. B. B. S.
P. Ambihapathy M. B. B S P. Sothinathan B. (om (Hons) S V Parameswaran M. Sc. Ph D.
(ganisation ToPhone : 2388 TREET, KANDY.

Page 3
w தன்னை 3)6 6T6T6
一eヤ புதியே
தொகுதி: 6 செப்டம்பர் -
அறிஞ
பிரதம ஆசிரியர்:
பி. ரி. ஜெயவிக்கிரமராஜா
M. B. B. S., M.Ed.
நிர்வாக ஆசிரியர்:
க. கிருஷ்ணு நந்தசிவம் M.V.Sc. g... D ST 6öriżi ess 39 uu ii Ph. D.
ஆசிரியர் குழு
5. 5600fasrar mob B.Sc.Eng.(Hons) Lu. JytbLîles TLug5) M. B. B. S. 52. 5 iš RIMSULU FT M. Sc. , Ph. D. 4. GFTÁSpørsar B. Com, (Hons) Qu. udG69)G3uDT as6ör M. B. B. S. arr6ño.65). Lupo Guro6ño au potesiër M. Sc. Ph. D
கே. கே. நவரத்தினம்
B. Sc Agric (Hons)
தொகுப்பாசிரியர்: பரமேஸ்வர ஐயர்
அம்பிகாபதி M. B, B, S. தலைவர், உடற்கூற்றுத்துறை,
மருத்துவபீடம் , யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
ஆண்டுச் சந்தா ரூபா 12:00

ர் தம் இதைய ஓடை ஆழநீர்
மொண்டு செறி தரும் மக்கள் ாம் செழித்திட ஊற்றி ஊற்றிப் தார் உலகம் செய்வோம்.
ekGur – 1v78 y இல: 5
D
o
o
D
o
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெற்ற துணைவேந்தர் உடற் பாதுகாப்புப் பொறி முறை. செல்வி சசிகலா இராமலிங்கம் பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம் நிறுவுதலின் அவசியம் கே. கே. நவரத்தினம் தியக்க மருந்திற்காட்பட்டவர் களால் எழும் சட்டமருத்துவப்
Sytj. f8T as dňr டாக்டர் என். சரவணபவாநந்தன் யாழ்ப்பாணக் குடாநாட்டின் உவர்நீர் வெளியேற்றுகைத் திட்
டம்
பேராசிரியரி என். ால், ஜெயசிங்கம் ஆர். மதனகரன் நீரும் விவசாயமும் (3) கலாநிதி ஏ. கந்தையா
மரவள்ளிப் பீடைப் பூச்சி
மொழி பெயர்ப்பு
பொ. மா. அனந்தசயனன் சேதனவுறுப்பு இரசாயனம் (5) கலாநிதி சு. சோதீஸ்வரன் இலங்கையின் உல்லாசப் பய ணக் கைத்தொழிலும் எதிர்கால மும் (1) கார்த்திகேசு குகபாலன் சித்த வைத்தியம் (தொடர்ச்சி) நூல் விபரப்பட்டியல்
சாளரம்

Page 4
Now. SNGL
(CONMEBA
you
TR ROUNDWORM
a HOOK
DECIS
COMBANTRI "Unparalleled cure rates in Roundworn * Excellent toleration demonstrated ir venience for the patient and the Phy
single doseefficacy.
DOSAGE
Weight Age
Under 25 lbs up to 2 yrs. 25 - 50 lbs 2 - 9 yrs. .751bS 9 - 13 yrs - ۔ 50 75 - 100 lbs 13 - 17 yrs, 100 - 125 lbs 17 & over.
Over 125 lbs Large Adult
For heavy infestations of Necator
greater than 4,000 eggs per gram twice the dose recommended above f
SUPPLY:- Oral suspension (F mg pyrantel base pe Tablets (Pyrantel P.
antel base), orange Pfizer Limited
688, Galle Road, Ratmalana.

...WITH E DOSE
NIRIN
a PIN WORM
(THREADWORM) WORM
VELY.
N ASSURES
l, Pinworm, Hookworm, alone or together. nearly 1,000 patients. * Maximum conysician. "No staining. "True economical
CHART
Combantrin Combantrin Oral Suspension Number of 50mg/cc Tablets of Number of 125 mg | teaspoons
1 1 12 2 3 1 112 4 2
6 3
Americanus (daily egg excretions , faeces) it may be necessary to use or one to three consecutive days.
Pyrantel Pamoate equivalent to 250 r 5ml) yellow caramel flavoured. amoate equivalent to 125mg. Pyr
coloured, scored.
R Trademark

Page 5
யாழ்ப்பாணப் பல்க
துணை (
தமிழ்ப் பேராசிரியர்
*ஊற்று" கன்னிப் பிரதிக்கு
எதிலும் புதுமைகாணும் உத்திகள் நிறை ழின்பாற் கொண்ட அன்பால் - அறிவால் - திடலாம் என்று "நேற்று - இன்று - நாளை" எமது கன்னிப் பிரதிக்கு. அவரது ஆசியால் இ வீற்றுள்ளான், 'ஊற்று". தமிழன்னை பெற்ற நனவாக்கும் வல்லமை அவரிடமே வழங்கப் ப நல்லெதிர்காலமே அன்னரின் மடியிலே தவழ் பெருவெற்றியுடன் நிறைவேற்றிட- தமிழன் எழங்கிட வேண்டிக்கொள்கிருேம், எல்லாம் வி ஏறு நடைபோடும் வீரனை வெற்றிவாகை சூடி
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் இறவாத புகழுடைய புதுநூல்கள் த மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் திறமான புலமையெனில் வெளிநாட்டே
 

லைக் கழகம் பெற்ற
வேந்தர் 8. வித்தியானந்தன்
5க் கருத்துரை வழங்கியவர்.
ந்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன். தமி அறிவியல் அனைத்தினையும் தாய்மொழியிற் தந் " என்ற தலையங்கத்திற் கருத்துரை வழங்கினர் இன்றும் அவர் முன் வெற்றிவீரனுக ஏறுபோல தரமான துணைவேந்தர் தாம்கண்ட கனவினை ட்டுள்ளது. தமிழின் - தமிழ்க் கலையுலகின் - றெது. அவருக்கே உரித்தான இப் பொறுப்பினை னையின் ஆசியுடன் - சக்திகள் அனைத்தினையும் பல்ல இறைவனை, பெற்றதண் ஏற்றுக்கொண்டு - வாழ்த்துகிருன் "ஊற்று'.
தொகுப்பாசிரியர்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
மிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; சொல்வதிலோர் மகிமை இல்லை;
.ார் அதைவணக்கஞ் செய்தல்வேண்டும்"

Page 6
9 *ஊற்று வாசக
முக்கிய
செறிவு மிகுந்த அறிவியற் மருத்துவ ஆய்வுகள் புவியியற் புதுமைகள் விஞ்ஞான விபரங்கள் கணக்கியற் குணுதிசயங்க விவசாய - கால்நடை விள பொருள்மிகு “கருத்துரை கோளத்திலிருந்து “சாளர
இன்னுேரன்ன சீர்மிகு
கையிற் தாங்கிடப் புதுவருட தனைப் பிந்தாமற் பெற்றிடுவி
ஹிந்து மருத்துவம்
வாழ்வு முறை - வாழும் வகை - இவற்றி 'ஹிந்து மருத்துவம்" என இந்திய உலக சரித்திர டைய இந்திய மருத்துவம் - அறுவை சிகிச்சை இன்றும் பாதுகாத்துப் பேணப்படுகின்றன. தி துவமுறை" என்ற தமது நூலிற் கூறுவதாவ ணங்கள் மனித ரோமத்தினை நீளவாட்டிற் பின் துள்ளார். மனக்கிலேசம் மிகுந்த இந்த அணு தொகை பல்கிப் பெருகிவருகிறது. உடல்நோ நோய்களாகத் தரம் பிரிக்க நேரிட்டுள்ளன. t ஆயுள்வேதம் வகுத்த நிபதியே இது சேதம் வி களையே ஆக்கித்தந்தது ஆயுள் வேதம், ஆயுள் அணுகுகிறது. மாருக, நவீன மருத்துவம் நோ முன்னையது மனிதனைக் குணப்படுத்தும் பின்னை ஆயுள்வேதம் மனித உடலைத் தூய்மைப்படு விஷக்கிருமிகளைக் கொல்வது போலன்றி - மணி வாய்ந்ததாக ஆக்கும் பணியில் ஈடுபடுவதாகுப் யற்றதாக விளங்குகிறது ஹிந்து மருத்துவம், யாரும் பயமின்றி உபயோகிக்கக் கூடியனவாயு தில் விளங்குவதற்கும் இவையே காரணங்கள0
T

நேயர்களுக்கு
|றிவித்தல்
கட்டுரைகள்.
dr
"க்கங்கள்
''” assir
"ம்" தரும் தரமான தேர்வுகள். சஞ்சிகையினைத் தவருது தம்
பரிசென பாங்குடன் சந்தா
州
ரினை எடுத்துரைக்கும் ஆயுள்வேத மருத்துவம் கால பேரறிஞரால் வருணிக்கப்பட்டது, பண்
ஆகியவற்றை எடுத்தியம்பும் நூல்கள் பல ருமதி மானிங் அம்மையார் 'ஆயுள்வேத மருத் து “ஹிந்துக்களின் அறுவை சிகிச்சை உபகர ாக்கக் கூடிய கூர்மை வாய்ந்தன" என வியந் லுயுகத்தில், மனநோய் வாய்ப்பட்டிருப்போர் ப்கள் என வகுக்கப்பட்டிருந்த பல இன்று உள 1 ைநூற்றண்டுகளுக்கு முன்னரே இவ்வாருக 2ளவிக்கும் - பக்க சக்திகள் - அற்ற ஒளஷதங்
வேதம் மனித உடல் மூலமாகவே நோயை ய் மூலமாகவே மனித உடலை அணுகுகிறது ாயது நோயைக் குணப்படுத்தும். த்த முனைகிறது. நவீன மருந்துகள் நேரடியாக ரித சக்தியே கிருமிகளை அழிக்கும் தன்மை ). எனவேதான் நஷ்டம் விளைக்கு பக்க சக்தி இயற்கையாகவே, ஆயுள்வேத ஒளஷதங்கள் ம் பாதுகாப்பானவையாயும் கிராம மட்டத் 山.””
ஷ்வ ஹிந்து பரிஷத் - சிறப்புமலர் 1979

Page 7
உடற் பாதுகாப்பு
செல்வி சசிகலா இராமலிங்கம்.
பDனித வர்க்கத்தின் நீண்டகால சரித் திரத்தை உற்று நோக்கும் போது, நோய்கள் பற்றிய அவனது கண்ணேட்டம் காலத் தோடு மாறத்தான் செய்கிறது. பண்டைய காலத்தில் நோய்சளுக்குத் தெய்வங்களும் துஷ்ட தேவதைகளுல்தான் காரணம் என்ற மூடநம்பிக்கை நிலவிவந்தது. அடுத்து பத் தொன்பதாம் தாற்ருண்டின் நடுப்பகுதியில் அசுத்த வாயுக்களை சுவாசிப்பதே நோய்க ளுக்குக் காரணம் என்ற கருத்து இருந்து வந்தது. அதன்பின் காலரா, தைபொயிட்டு முதலிய நோய்கள் பரவிவந்த காலத்தில் அசுத்த இடங்களில் காணப்படும் மலம் சிறு நீர் என்பவையே தொற்று நோய்களுக்குக் காரணம் என யூகித்த மனிதன், இவற்றில் இருக்கும் உதவியற்ற கண்களுக்குப் புலப் படாத ஏதோ அங்கிகளே காரணம் என முடிவு செய்தான். இவைகள் நுண்ணங்கி கள் என அழைக்கப்பட்டன. நுண்ணங்கிகள் பற்றிய கொள்கையை முதலில் பிரஸ்தாபித் தவர் சேர் லூயி பாஸ்டர் ஆவார்,
நுண்ணங்கிகளை எடுக்கும் போது உடல் முக்கியமாக பக்ரீறியா, வைரசு ஆகியவற் றிற்கே எதிர்ப்புத்தாக்கங்களை ஏற்படுத்து கிறது. எமது உடலின் பலபாகங்களில் பக் ரீறியாக்கள் அதிகளவில் இருப்பினும் அவற் முல் உடலுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படு வதில்லை. எனினும் சில வகைப்பக்ரீறியாக் கள் குறைந்தளவில் இருப்பினும் அவற்றல் உடலுக்குப் பெருந்தீங்குகள் ஏற்படுகின்றன, இதற்குக் காரணம், குறிப்பிட்ட பக்ரீறியாக் களின் சிறப்புச் சுரப்பாகிய தொட்சினகும்.
தொட்சின் மற்றும் உடலுக்குத்தீங்கு விள்ை விக்கும் u9ip J9ig)]66&IT (Foreign Particles) உட்புகவிடாது தடுக்கும். அவற்றின்

ப் பொறிமுறை.
1-ம் வரு டம்-யாழ்-மருத்துவபீடம்
தாக்கங்களை எதிர்க்கும் தன்மையே பாது காப்புப் பொறிமுறையாகும். (Immunity) உடல் அங்கங்களைச் சூழ்ந்திருக்கும் இழை யங்கள், தோல், சீதமென்சவ்வென்பன உட லுக்கு வரையறைவான பரப்பைக் கொடுப் பதால் மட்டுமின்றி பிறஅணுக்கள் உடலுட் புகவிடாது தடுப்பாகவும் உள்ளது. உடலுள் செல்ல எத்தனிக்கும் பிறபொருட்களில் பெரும் பகுதி மூக்கிலுள்ள மயிர்கள், சளி யம் மற்றும் Lysozyme போன்ற பக்ரீறியா எதிர் நொதியங்களால் சிறைப்பிடித்துத் தடுக்கப் படுகின்றன. இவ்வாறு பிடிக்கப் பட்ட பொருள்கள் மூக்கின் வெளிப்புறம் நோக்கி அல்லது தொண்டையை நோக்கி தள்ளப்படும். இவ்வாறு தொண்டைப்பகுதி யில் சேர்வதில் பெரும்பகுதி இருமுவதால் வெளியேற்றப்படும். ஒரு சிறுபகுதி சுவாசத் தின்போது சுவாசப்பைச் சிற்றறையை அடை கின்றன. இச்சிற்றறையில் காணப்படும் பெரும் தின்கலங்கள் பக்ரீறியாவைப் பிடித்து (Engulf) இறக்கச் செய்யும் வாய்க்குழி, உண வுக்கால்வாய், யோனி ஆசியவற்றின் வெளி மேற்பரப்புகளிலும் எதிர்க்கக் கூடியபொறி முறைகள் இருக்கின்றன.
காயத்தின் போது எதிர்க்கும் தன்மை உயிருள்ள இழையத்தின் ஒரு இயல்பாகும். தொற்றுதலடைந்த இழையங்களில்,இரண்டு முக்கிய மாறுதல்கள் நடைபெறுகின்றன:- 1. இழையங்களுக்கு இடையே யு ள்ள வெளிகளில் திரவம் தங்கி வீங்குகிறது
2. குருதிக் கலங்கள் விரிவடைகின்றன.
இதல்ை இழையத்திற்கு குருதி விநியோகம் அதிகரிக்கிறது. வெப்பநிலையும் அதிகரிக்கிறது.
ஆனல் குருதிப்பாய்ச்சல் வேகம் குறைகிறது. குருதிமயிர்க் குழாய்களின் அகவணிக் கலங் கள் வீங்குகின்றன. வீங்கிய கலங்களில் குரு
5)

Page 8
திக்கலங்களும், குருதிச்சிறு தட்டுக்களும் ஒட் டிக் கொள்கின்றன. வெண்குருதிக் குழியங் கள் சுவரினுாடாக் வெளியேறி இழையத் தில் ஒருங்கு கூடும். தொற்றுதலடைந்த இழைய இடைவெளிகளில் இப்பொழுது குரு திப் பாயத்துக்கு ஒத்த, வெண்குருதிக் கலங் களைக் கொண்ட திரவம் இருக்கும். இங் குள்ள பைபிறினுேசன் பைபிறின் நாராக
மாறி தொற்றிய இழையத்தில் பிறபொருள்
மேலும் ஊடுருவாது தடையாகவுள்ளது. வெண்குருதிக் குழியங்களில் எல்லாவகைக் கலங்களும் காணப்படுவதால் அவை தின் குழியச் செயல் முறையால் பக்ரீறியாக்களைப் பிடித்து நொதியங்களால் சமிபாடடையச் செய்யும். s
பிறபொருள் புகுவதால் அதை எதிர்க்க உடல் உருவாக்கும் பதார்த்தம் பிறபொரு ளெதிரிகள் எனப்படும் (Antibody).இவ்வாறு பிறபொருள் எதிரிகளைக் கொண்டிருக்கும் தன்மை நிர்ப்பீடனம் எனப்படும். சில தொற்று நோய்கள் ஏற்படும் போது அந் நோய்க்குக் காரணமான பிறபொருளுக்கு உடல் பிறபொருள் எதிரியை உருவாக்கி வைத்திருக்கும். இதனல் குறிப்பிட்ட அத் நோய் மீண்டும் ஏற்படாது. உடல் நிர்ப்பீட னம் அடைந்துள்ளது. இயற்கையிலேயே
உடலில் உண்டான பிறபொருள் எதிரித்
தொழிற்பாட்டை இயற்கை நிர்ப்பீடனம் என்பர். சிலவேளைகளில் பிறவிலங்குகளில் இருந்து எடுத்த பிறபொருளில் சிறிதளவை உடலில் செலுத்தி பிறபொருளெதிரிகளை உண்டாக்கி நோய்த்தடுப்பு செய்யும் பொறி முறையை செயற்கை நிர்ப்பீடனம் என்பர். குறிப்பிட்ட பிறபொருளுக்கு குறிப்பிட்ட பிறபொருள் எதிரியிருக்கும். அதாவது இவை தனித்துவமானவை (Specific),
ஒரு விலங்கின் ஒரு இழையத்தில் அதே விலங்கின் வேருெரு இழையத்தைப் பொருத் தினல் எதிர்ப்புப் பொறிமுறை காணப்பட மாட்டாது. ஆனல் வேருெரு விலங்கின் இழையத்தைப் பொருத்தினல் உடற் பாது
காப்புப் பொறிமுறைகள் தூண்டப்பட்டு குரு திச் சுற்ருேட்டத்திலும் கலங்களின் தொழிற்
( 6

பாட்டிலும் பல மாறுதல்கள் ஏற்படும். குரு திச் சுற்றேட்டத்தில் பிறபொருளெதிரிகள் உண்டாக்கும் பிறபொருளோடு தாக்கமடை வன -
1.
2.
பிறபொருளெதிரிகள்.
பிறபொருளுக்கு தூண்டுதலடையும். தின்குழியங்கள், பிறபொருளைக்கண்டு பிடிக்கும் தன்மையுள்ள கலங்கள் பிற பொருள் உணர்ச்சியுடைய கலங்கள் எனப்படும் இவை பிறபொருளோடு தொடுகைக்கு வந்ததும் இரண்டு தாக் கங்கள் நடைபெறும்.
கலங்கள் பெருகும். பெருகிய கலங் கள் தனித்தன்மையான உடல் பிற பொருளெதிரிகளை உருவாக்கும் இப் பிறபொருள் எதிரிகள் குருதிச் சுற் ருேட்டத்தில் விடப்படும்.
நிணநீர்க்குழியங்கள் உண்டாகும், அவை பிரத்தியேக தன்மைகளைக் கொண்டிருக்கும்.
இதிலிருந்து நாம் இரண்டுவித எதிர்ப்புத் தாக்கங்களை அவதானிக்கலாம்.
l.
கலத்துடன் சம்பந்தமானது (Cellular
-நிணநீர்க் குழியங்களால் செய்யப் படுவது.
g). Ll. Gofrff (Humoral) - குருதிச் சுற்
ருேட்டம் மூலம் பிறபொருள் எதிரி களால் நடைபெறுவது.
உடலின் மற்றும் பாதுகாப்புப் பொறி
முறைக்கு உடலெங்கும் பரந்திருக்கும் நிண நீர் இழையமும் அது உள்ளடக்கியிருக்கும் நிணநீர்க்கணுக்கள், தைமஸ் சுரப்பி, கல் லீரல் என்பன பெரும் உதவி புரிகின்றன.
ロ ロ ロ ロ

Page 9
பனை Jse ஆராய்ச்சி நிலையம் நி Palmyrah Developm
K. K. Navaratnam, B.Sc. A Faculty of Agricu
6 Ta நாட்டுப் பன்முகப்படுத்தப் டாத பொருளாதார நிலையை மாற்றி அமைத்து தன்முனைப்பான பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்கு கிடைக்கக் கூடிய உற்பத்திச் சாதனங்கள் யாவற்றின தும் பயன்பாட்டு வினைத்திறனைக் கூட்டல் வேண்டும். உள்ளிடுகளான உற்பத்தி சாதன ங்களை விவசாயம், கைத்தொழில் போன்ற உற்பத்தி துறைகளினுள் பாவித்து வெளியீடு களான விளை பொருட்களின் அளவைக் கூட் டிக் கொள்ளலாம். ஆனல் அநேகமான வளர் முக நாடுகளில் விவசாயத்துறையையே முத லில் விருத்தியாக்கக்கூடிய உடனடி வாய்ப்பு கள் காணப்படுகின்றன. எமது நாட்டிலும் விவசாயத்துறையில் உச்ச உற்பத்தியினை உரு வாக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் யாவற்றையும் நடைமுறைப்படுத்துவது மிக வும் இன்றியமையாததாகும்.
வேறுபட்ட விவசாயக் காலநிலை கட்குப் பொருத்தமான வகையில் பரந்த ரீதியில் பொருளாதார முக்கியத்துவமுடைய பயிர் கள் பல காணப்படுகின்றன. முக்கியமாக கைத்தொழில், விவசாயம் என்ற இருஉற்பத் தித் துறைகட்கும் நீண்டகால உயிர்ப்பினை வழங்கக்கூடிய பயிர்களினது பயன்களைப் பெறக்கூடிய வகையில் முயற்சிப்பது தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும்உகந்த தாக விருக்கும். இறப்பர், தென்னை, தேயிலை போன்ற பயிர்களைப் போன்று இலங்கையின் உலர்வலயத்திலும், பிற இடங்களிலும் குறிப் பாக யாழ்ப்பாணம்-வவுனியா-திருகோண மலை - புத்தளம்-அம்பாந்தோட்டை - மன் னர்-முல்லைத்தீவு-மட்டக்களப்பு-வெள்ள வாயா போன்ற இடங்களில் காணப்படுகின்ற

விருத்தி றுவுதலின் அவசியம். ent Research Station
ric (Hons) Assistant Lecturer ture. Peradeniya.
பனையும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிராகவே காணப்படுகின்றது.
பனையினது பொருளாதார முக்கியத்து
வம் அதிலிருந்து கிடைக்கின்ற வேறுபட்ட பயிர்களினது தன்மைகளிலிருந்து உதயமா கின்றது, அவையாவன,
l.
2.
உணவுக் கூறுகளைத் தருகின்றது.
மனிதனிலிருந்து கால்நடைபோன்ற பிராணிகள் வரை உணவைத் தருகின் றது. உதாரணமாக பனம்பழம், பணு ட்டு, ஜாம், சீனி, பனங்கட்டி, கிழங்கு போன்றவற்றை மனிதனுக்கும், பனை ஒலை, பனவெல்லம் தயாரித்த கழிவுகள் என்பனவாக மாடுபோன்ற விலங்குகட் கும் பயன்படுகின்றது.
சிறு குடிசைக் கைத்தொழில்களை உரு
வாக்க உதவுகின்றது.
பனையினது வேரிலிருந்து குருத் தோலை வரையுள்ள பல பொருட்க
ளைக் கொண்டு சிறு குடிசைக் கைத்தொ
ழில்களை உருவாக்கலாம். உதாரணமாக கடகம், பெட்டி, கைக்கூடைகள், கனகு, வெங்காயக்கூடு,தொப்பி போன்ற பன்ன வேலைப் பொருட்களாகவும். கங்கு மட் டையிலிருந்து பெறப்படும் தும்பிலிருந்து தாயாரிக்கக் கூடிய தும்புப்பொருட்களா கவும், பனங்கட்டி, சீனி போன்றவற் றைத் தயாரிப்பதற்கு உதவும் பொருட் களாகவும் பயன்படுத்தக்கூடிய பல விளைவுகளைப் பெறலாம்.
3. மருந்துப் பொருட்களை உருவாக்கலாம்.

Page 10
4. வசிப்பிட வசதிகளை அளிக்கின்றது. உதாரணமாக, மனிதன் கால்நடைகள் போன்ற ஜீவராசிகட்கு தேவையான வீட்டு வசதிகளை உருவாக்கலாம்.
5. மண்ணரிப்பையும் காற்றினது தாக்கத் தையும் குறைக்கின்றது. உதாரணமாக, தென் மாகாணக் கடற்கரைகளில் இந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பக்ன வளர்க்கப்படு கின்றது. - -
6. பயிராக்க நிலங்கட்குச் சேதன பசளை யாகவும், பத்திரக் கலவையிட்டு களைகளைக் கட்டுப்படுத்தவும் உபயோகிக்கப்படுகின்றது.
7. சிறியவர்களிலிருந்து முதியவர்கள் வரை வேலை வாய்ப்புக்களையும் வருமான வாய்ப்புக்களையும் அளிக்கக்கூடியது.
8. வரண்ட பகுதிகளில் குறிப்பாக மணற் தரை, கடற்கரை, சுண்ணும்புத்தரை தேடு வாரற்ற தரைகள் என்ற வேறுபாடின்றி வளரக்கூடியது.
9. குறைந்த மூலதனத்துடன் நிறைந்த பலனைத் தரக்கூடியது,
10. ஏற்றுமதி வாய்ப்புக்களைக் கொண்டது உதாரணமாக, தும்பு ஈர்க்குகள் கைப்பணிப் பொருட்கள், வீட்டுமரம் என்பனவாக ஏற் றுமதி செய்யலாம்.
11. வரிவிதிப்பதன் மூலம் மூலதனச் சேர்க் கைக்கு வாய்ப்பளிக்கலாம். உ-ம் சோலைவரி
12. வருடம் பூராகவும் பயன் தரக்கூடியது.
தை முதல் ஆனி வரை . பதனீர். ஆனி , ஆவணி . . நுங்கு. ஆவணி , ஐப்பசி , . பனம்ப்ழம் ஐப்பசி , மார்கழி , . கிழங்கு.
பருவமற்ற காலங்களில் கங்குமட்டையி லிருந்து தும்பு, பன்னவேலைகட்கான குருத் தோலை என்பவற்றைப் பெற்றுக்கொள்ள லாம்.

13. பல வளர்ச்சிப் படிகளைக் கொண்ட தாயினும் ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் பயனளிக்கக்கூடியது.
உதாரணமாக விதை-> முறிகிழங்கு->நார்க் கிழங்கு-> பீலிப்பருவம் -> நிலவடலி -> கரு க்கு வடலி -> கங்கு வடலி -> பன போன்ற வளர்ச்சி நிலைகளினூடாகப் பயனளிக்கக் கூடி
யது.
8)
14. பயறு . துவரை . உழுந்து முதலிய வற்றினே இடைப்பயிர்களாகப் பனையுடன் வளர்க்கலாம்.
15. நூறு (100) வருடங்கள் வரை பயன் தரக்கூடியது .
மேற்காட்டப்பட்ட பொருளாதார முக் கியத்துவம் வாய்ந்த பனையினது பயன்பாடு நீண்டகாலமாகக் குறைவான நிலையிலேயே இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் அனேகமான பயன்பாடுகள் படிப்படியாகச் சிதைவடைந்து கொண் டும் உள்ளன. பனையிலிருந்து பெற வேண்டிய் பயன்களை முற்ருகப் பெறுவதற்கு ஏறத்தாழ இருநூற்றண்டு காலமாகத் தவறி விட்டோம், இதனல் அளவிட்டு கூறமுடி யாத, மீளப்பெற்றுக் கொள்ளமுடியாத அளவு தேசிய செல்வத்தை இழந்து விட் டோம். இந்நிலையைத் தொடர்ந்து நீடிக்க விடாது பூலோக கற்பக தருவெனக் கூறப் படும் பனையிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய பயன்கள் யாவற்றையும் பெற்று இத னுாடாக தேசிய செல்வத்தில் பனை Goss rester வேண்டிய பங்கினையும் உறுதிப் படுத்தல் வேண்டும். -
தேசிய செல்வத்தில் பனை கொள்ள வேண்டிய பங்கினை விஸ்தரிப்பதற்கு பனை அபிவிருத்தியினது முக்கியத்துவம் பற்றி தேசி யக் கண்கொண்டு நோக்குதல் வேண்டும். தேசிய பொருளாதார முக்கியத்துவம் வாப் ந்த பயிரானது குறுங்கால, நீண்டகால,விளை வுகளையும் நன்மைகளையும் கொண்டதொன் ருகக் கட்டாயம் இருத்தல் அவசியம். பனை யைப் பொறுத்த வரையில் மேற்கூறப்பட்ட

Page 11
இயல்புகள் யாவும் இருந்த போதிலும் இத னது அபிவிருத்திக்கான பூரண ஏற்பாடுகள் ஒன்றும் உருவாக்கப்படவில்லை என்றுதான் கூறலாம். சுருக்கமாகக் கூறின் பனை அபி
விருத்திக்கான ஆரம்ப நடவடிக்கைகளே
காணப்படுகின்றன.
பனையினை அபிவிருத்தி செய்து, பனையி னது பயன்படுதன்மையையும் கூட்டிக்கொள் வதற்கு பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டும்.
1. ஏற்கெனவே உள்ள பனைகளை அழியாது
தடைசெய்தல் வேண்டும்.
2. மீள நடுகையைத் தூண்டுவதுடன் புதிய பயிராக்க நடைமுறைகஃாயும் மே ற் கொள்ளல் வேண்டும்.
3. பனை வள்ர்ப்பவர்கட்குப் பயிராக்க நடை முறைகள் பற்றிய ஆலோசனைகளை வழங் குதல் வேண்டும்,
4. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பனம்
விளைபொருட்களைப் பெறுவதற்காக
சேகரிப்பு-உற்பத்தி நிலையங்களை உரு வா க்கு வது டன் தரக்கட்டுப்பாட்டு முறைகளையும் மேற்கொள்ளல் வேண் டும்.
5. சந்தை வாய்ப்புக்களை உள்ளூர், வெளி யூர், நோக்க ங் களை அடிப்படையாக வைத்து விஸ்தரித்தல் தாபித்தல் வேண் Gltd.
6. பனைக் கைத்தொழில் விருத்திக்கான பூர் வாங்க ஏற்பாடுகளைச் செய்தல் வேண்
டும்.
7. விவசாயிகட்கு உற்பத்தி-பதனிடல்
விற்பனை என்பனவற்றில் போதிய பயிற்
சிகளை அளிப்பதுடன் தேவை யான
உதவி சேவைகளையும் செய்தல்வேண்டும்
8. கடன் வழங்கும் திட்ட மொன்றினைத்
தாபித்தல் வேண்டும்.

9. உத்தரவாத விலைத்திட்டத்தை உருவாக்
குதல் வேண்டும்.
10. ஏற்றுமதி நிலையம் ஒன்றினை உருவாக்
குதல் வேண்டும்.
மேற்காட்டப்பட்ட நடவடிக்கைகள் ஒவ் வொன்றும் நிதியிடல்- நிர்வாகம்- உத்தி யோகத்தர்கள் போன்றவற்றுடன் தொடர் புடையனவாக்க் காணப்படுகின்றது, எனவே இவைகளைச் சீராக மேற்கொள்வதற்கு ஒரு தாபன ஒழுங்கமைப்பினை உருவாக்தி ஒவ் வொரு நடைமுறைகளையும் ஒருங்கிணைப்பது இன்றியமையாததாகும், ஒரு தாபன ஒழுங் கமைப்பின்கீழ் இவைகளை மேற்கொள்ளாது விடின் பக்னச் செல்வத்தை ஒருபோதும் அனு பவிக்க முடியாது. எனவே இத் தா பன
அமைப்பு பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலை
யமாக அமைப்பது மிகவும் பொருத்தமான தொன் ருக விருக்கும்.
பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம் ஒன்றினைத் தா பித் தால் வருங்காலத்தில் ப ைவளர்ப்பவர்கள் உறுதியான நம்மையை அடைவதுடன் அரசாங்கமும் நன்மையடை யும் என்பது திடமாகும். வரண்ட வலயத் தைப் பொறுத்த வரையில் 70,000 ஏக்கர் களில் பனைகள் காணப்படுகின்றன என்று 1961-ம் ஆண்டு கனடா அளவையாளர்களி ஞல் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பனே வளர்ப்பினை சிறு, பெருந்தோட்டங்களாக விஸ்தரிக்கக்கூடிய வாய்ப்புகளும் வரண்ட வலயத்தில் காணப்படுகின்றன. மேலும் வர்த்தக அடிப்படையில் உள்நாட்டு, வெளி நாட்டு வர்த்தக வாய்ப்புக்களையும் கொண்ட தொன்ருகக் காணப்படுகின்றது, எ ன வே பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தை கட்டாயம் நிறுவவேண்டும் என்பது மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இதுவரை காலமும் பனைவளர்ப்பு அபி விருத்தியடையாமல் இருந்ததற்கான முக் கிய காரணம் பனை அபிவிருத்திக்காக ஒரு சபையோ அல்லது வேறுதாபன அமைப்புக் களோ உருவாக்கப்படாபையேயாகும். எமது

Page 12
நாட்டில் இன்று ஏற்றுமதித் துறையினில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் தேயிலை -இறப்பர்-தென்னை போன்ற பயிர்கட்கு தனித்தனியான அபிவிருத்திச் சபைகளும் ஆராய்ச்சி நிலையங்களும் உருவாக்கப்பட்டி ராதுவிடின் தேயிலை-தெங்குப் பொருட்களை யும் இறக்குமதியாக்க வேண்டிய நிலையினுள் நமது நாடு இப்போது இருக்கலாம். பெருந் தோட்டத்துறை பிரபல்யம் அடைந்ததற் கான முக்கியமான கார ண ம் அவை ஒவ் வொன்றுக்கும் சுயாதீனமான முறையில் உற் பத்தி-நிதியிடல்-நிர்வாக நடைமுறைகள் என்பன மேற்கொள்ளப்பட்டதேயாகும்.
பனையினங்களைப் பொறுத்தவ ரை யில் கருப்பி, கருங்குத்தி, செங்குத்தி போன்ற பலவகைப்பட்டவைகள் காணப்படுகின்றன: இவைகள் ஒவ்வொன்றும் கனிகளிடைர்த்தி நிறம், சுவை, களியினடர்த்தி,தும்பினடர்த்தி நீண்டகுலைகள், குலைகளின் அடர்த்தி, என் பனவற்றில் வேறுபட்டு காணப்படுகின்றன. அத்துடன் பலவளர்ச்சி நிலைகளைக் கொண் டதாகவுள்ளதுடன் ஒவ்வொரு நிலையிலும் விளைவுகளைத் தருகின்றன. இப்படிப்பெறப் படுகின்ற விளைவுகள் வேறுபட்ட தரங்களைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. மேற் கூறப்பட்ட இயல்புகளினை அடிப்படையா கக் கொண்டு பனையினது முழுப்பயன் பாட் டையும் பெறுவதற்குமறு பெருந்தோட்டப் பயிர்களைப்போன்று இதற்கும் ஒரு ஆராய்ச்சி நிலையம் உருவாக்கவேண்டியது மிகவும் இன் றியமையாததாகும்.
மேலும் முக்கியமாக சிபார்சு செய்யப் பட்டப் பயிராக்க நடைமுறைகள் எதுவும் பனையைப் பொறுத்த வரையில் கிடையாது அத்துடன் அறுவடை - பதனிடல் - தரப் படுத்தல்-விற்பனை என்பனவற்றினைப் பொறு த்த வரையிலும் எமது சூழ்நிலைகளுடன் பொருந்தக்கூடிய நடைமுறைகள் எதுவும் கிடையாது இவைகளைப்பற்றிய ஆராய்ச்சி களும் இற்றை வரையில் மேற்கொள்ளப் பட வில் லை. ஏற்றுமதியை விஸ்தரிப்பதற் கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட

வில்ல. இக்குறைபாடுகளைத் தீர்த்துக்கொள் வதற்கான ஒரே ஒருவழி பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவதேயாகும்.
இத்தகை ய தொ ரு ஒழுங்கமைப்பினை உருவாக்காது பனங்கட்டித் தொழிற்சாலை களையும், சீனித்தொழிற்சாலைகளையும், தும் புத் தொழில் நிலையம், பன்னவேலை நிலையம் போன்ற கைத்தொழிற் பேட்டைகளையும். நிறுவுவதனல் மட்டும் பனை அபிவிருத்திக் கான வாய்ப்புக்கள் உருவாகிவிடமாட்டாது அத்துடன் என்ன நோக்கங்கட்களாக இத் தொழிற்சாலைகள் உருவாக்கப் படுகின்ற னவோ அவைகளை நீண்ட காலத்தில் அடையமுடியாமல் அல்லது அனுபவிக்க முடியாமல் இருக்கலாம்.
இலங்கையைவிட இந்தியா, பர்மா, தாய்லாந்து, வியட்னம், மலேசியா போன்ற விடங்களில் போராஸ்சஸ் வ்வினேயிலிங் கர்" என்னும் தாவரவியற் பெயரையுடைய பனை வளர்க்கப்படுகின்றது. எமது நாட்டின் தாய்நாடாகிய பாரத நாட்டில் இப்பனை யானது வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக வளர்க்கப்படுகின்றது. பூஜீ வில்லி புத்தூரில் பனை அபிவிருத்தி நிலையம் ஒன் றும் குமாரபுரத்தில் சீனி உற்பத்தி நிலைய மும் தாபிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மாக வருடந்தோறும் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தும்பு ஏற்றுமதிசெய்து அன் னிய செலவாணியையும் பெற்றுக் கொள் கின்றது. இதே போன் ற வாய்ப்புக்களை நாமும் அனுபவித்துக் கொள்ளலாம் என் பதற்கு இவைகளைவிட வேறு ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. எனவே எந்த வித மான ஐயமும் அபாயமும் இல்லாமல் பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தை மிகவும் பொருத்தமான இடத்தினில் நிறுவி பனையி னது அளவிடற்கரிய பயன்களை எமதுநாட்டு மக்களும் நாடும் அனுபவிக்கக்கூடிய வகை யில் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண் டியது அரசினரினது பாரிய கடமையாகும்*
سس۔X--سے
10)

Page 13
ஊற்று (1978), 6, (5) பக். 11-14
தியக்க மருந்திற்காட் சட்ட மருத்துவ
LfTéuñr. oT 6öT 3FTJ
M. B. B. S. (Cey), M. R. C.
சட்ட மருத்துவ நிபு
1Dasfls சமுதாயந் தோன்றிய காலந் தொட்டே தியக்க மருந்துக்களை உபயோ கிக்கும் பழக்கமும் மனிதரிடையே தோன்றி யுள்ளது. தூண்டும், தணிக்கும் அல்லது உள Lorru Sotirou (Hallucinogens) d-67G) பண்ணும் ஏதோ ஒருவகைத் தியக்க மருதி தில்லாமல் த மது வாழ்நாளைக் கடத்திக் கொள்ள முடியாதெனக் கருதும் நிலை ஒரு சிலருள் ஏற்பட்டு வந்துள்ளதாக எண்ண இடமுண்டு. மன நிம்மதியைப் பெறவோ தத்துவார்த்த விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தவோ, சீனமக்கள் அபின் புகைப் பதை நீண்டகாலம் நாடியுள்ளனர். பெரூ விய தேசத் தொழிலாளர் மதிய வேளையில் வெப்பத்தின் கொடுமையைத் தணிப்பதற்கு கஞ்சாவை (மரிகுவான) பயன்படுத்துவர். படிப்பதில் அதிசிரத்தை கொண்டுள்ள மா ன வ ர் தூக்கத்தைக் கலைப்பதற்காக * அம்பெற்றமினை ' உபயோகிப்பதுண்டு? எல். எஸ். டி"யும் மரிகுவாளுவும் விஷய விளக்கத்தைத் தூண்ட உதவுகின்றன என் னும் கொள்கை மாணவர் பலருள் நிலவி யுள்ளது.
தியக்க மருந்திற்கு ஆளானவர்கள் உடல், உளவலிமை இரண்டையும் ஒருங்கே யிழந்து, விபரீதப் பாலுணர்ச்சி, கொலை, தற்கொலை, பாதைவிபத்து போன்ற பல் வகைச் சமூக விரோதச் செயல்களைச் செய் யத் தூண்டப்படுகிருர்கள். அவற்றை உப யோகிப்பவர்கள் மாத்திரம் அல்லாமல் அவ் வகை மருந்துக்களை விற்பதிற் சம்பந்தப்பட் டுள்ளோரும் சமூக விரோதிகள் ஆவர். பல இலட்சம் பெறுமதியான வியாபாரத்தில் ஈடு பட்டிருக்கும் அவர்கள் பெரும் செல்லாக் குடன் விளங்குகிருர்கள் என்பதை எளிதில்
( 1

பட்டவர்களால் எழும் ப் பிரச்சினைகள்
வண0வாநந்தன் P. (U.K.) D. M. J. (Lond) னர், யாழ்ப்பாணம்.
புரிந்து கொள்ளலாம். தங்களுடைய நட வடிக்கைகளை தியக்க மருந்திற்காளான ஒரு வன் தெரிந்துள்ளான் எ ன க் கண் ட தும் அவனை உடனடியாகக் கொலை செய்வதற் கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவர். தங் களுடைய வீட்டிலேயே அவன் இறக்கநேரிட் டால், அவனது உடலை எங்கேனும் எடுத் துச்சென்று அழிப்பார்கள். அவர்கள் பெரும் பாலும் கையாளும் முறைகள் இரண்டு. இஸ் திரிக்கினின் (Shychnine) போன்ற ஒரு நச் சுப்பொருளை தியக்க மருந்துடன் கலந்து ஊட் டுவது ஒன்று. மற்றையது செறிவுமிக அதி கரித்துள்ள தியக்க மருந் தை அவனுக்கு வழங்குவதாகும். பிரேதப்பரிசோதனை மூலம் எவ்வகைப் பொருள் உபயோகிக்கப்பட்டுள் ளதென்பதை நிச்சயிக்க முடியும். மிதமிஞ் சிய மருந்தை உட்கொண்டிருந்தால் குருதி யில் ஒட்சிசன் செறிவுக் குறையும். மூளைக் தொழிற் பாட்டில் வீழ்ச்சியும் தென்படும். **ஹெரோயினை**) சிலசமயங்களில் குயினை னுடன் கலந்து கொடுத்தும் கொலை விளை விப்பதுண்டு. இங்கு குயினனுல் ஏற்படும் அதிபர உணர்ச்சியே மரணத்திற்குக் காரண மாகும். அதிக இரத்தப் பெருக்கால் நுரை யீரல் மாட்டிறைச்சியைப்போல் சென்னிற மடைந்திருக்கும். அந்நிலையை "ஹெரோ யின் நுரையீரல்" எனக்குறிப்பிட்டாலும், அதன் உண்மைக் காரணம் குயினைன்தானெ னக் கருதஇடமுண்டு. மேலும் பாரிய வியாபாரி யொருவர் தனக்கு இடைஞ்சலே உண்டுபண்ணின் வாடிக்கைக்காரனை கொக் கைனுக்குப் பதிலாக சோடியம் தயோ சல் பேற்றைக் கொடுத்துக் கொன்றதாக 1971ல் கொக்" என்பவரும் அவரது சக ஆராய்ச்கி யாளரும் குறிப்பிட்டுள்ளார்கள்.
1 )

Page 14
அம்பெற்றமினுக்கு ஆளான வர் கள் அதை உபயோகிப்பதை நிறுத்த முயலும்
போது பலகாலும் தற்கொலை புரிவதுண்டு.
18.20 வயதுள்ள இருவாலிபர்கள் அம்பெற்ற மின்பழக்கத்தை ஒழிக்கும் முயற்சியில், மித மிஞ்சிய மெதடோன உட்கொண்டு தற் கொலை புரிந்துள்ளார்கள். பிரேதப்பரிசோத னையில் அவர்களின் (சடலம்) பித்தநீர், தசை நார்களில் மெதடோன், அம்பெற்றமின் இரண்டும் காணப்பட்டன.
எல். எஸ். டிக்கு ஆளானவர்களும் தற் கொலை புரிந்து கொள்வதுண்டு, மிதமிஞ்சிய பாபிரேற்றை உட்கொண்டு தற்கொலை புரி வதே பெருவழக்கு. சாதாரணமாக எடுக் கும் அளவிற்குப் பதினைந்து மடங்கு தற் கொலைக்கத் தேவைப்படும். எனினும் குருதி யமுக்கம் குறைந்துள்ளவர்சளும், இருதயத் தொழிற்பாடு குன்றியுள்ளவர்களும் குருதி யில் மருந் தின் அளவு குறிப்பிட்ட மட் '-த்தை அடையமுன்னரே சிலர் &GSunri விழுந்து மரிப்பார்கள். அவர்களின் குருதி யமுக்கம் குறைத்தோ, இதயத்தொழிற்பாடு குன்றியோ இருக்கக்கூடும், பெரும்பாலும் சுவாச மையச் சோர்வு அல்லது காற்றுஉட் புகுவதில் ஏற்பட்டுள்ள தடையே சடுதி மர ணத்திற்கு முக்கிய காரணமாய் அமையும்.
எஸ். எல். டிக்கு ஆளானவர்கள் உயரமான
கட்டடங்களில் இருந்தும் தாங்கள் பாய
முடியுமெனத் தப்பாக தமது வல்லமையைக்
கணிக்கும் மயக்கத்தாலேயே மரணத்திழகு ஏதுவாகிறர்கள். மோபினுக்கு ஆட்பட்டுள் ளவர்களும் மிதம் மிஞ்சிய அளவைத் தற் செயலாக உட்கொள்வதால் இறப்பதுண்டு போதிய ஒட்சிசனின்மை ஊசிமுனை அள விற்கு கண்மணி சுருங்குதல் போன்ற குறி களைப்பிரேதப் பரிசோதனையில் இங்கு அவ தானிக்கலாம். இவ்விதக்காரப் போலிகளைக் கண்டறிவதற்குப் பித்தநீர் பரிசோதனையே அதிசிறந்த சாதனமாகையால், பித்தநீரை சேகரிக்கத்தவறக் கூடாது,
தியக்க மருந்தால் மரணமடைந் தவர் களில் தோன்றும் குறிகள் சிலசமயம் இயற்
( 1

கை யாய் இறந்தவர்களிற் காணப்படுவன போல் இருக்கும். தியக்கமருந்தை ஊசிமுலம் ஏற்றுபவர்கள் தொற்று நீக்காத ஊசியை உபயோகித்தால் ஈரல் அழற்சி, செப்டிஸி மியா போன்ற நோய்கள் உண்டாகலாம்,
ஹெரோயினுக்கு ஆளானவர்களில் மூளைத்
தடுக்கையோடு இதய அகச் சவ்வழற்சியும் சம்பந்தப்பட்டு தோன்றுமென அறிக்கைகள் மூலம் தெரிய வருகின்றது. எனவே ஊசி ஏற்றும் இடங்களான முழங்கை முற்புறம்
போன்றவற்றை நன்கு பரிசோதித்தல் முக் கியம். ஏற்றப்பட்ட ஊ சி மருந்தினலும்,
தொற்று நீக்காமையாலும் ஊசி குற்றிய இடங்களில் சிறுசிறு குருதிப் பெருக்க அடை
யாளங்கள் தோன்றக்கூடும். அத் தழும்பு களைச் சிலர் பச் சை குற்றுவதன் மூ ல ம்
மறைக்கக்கூடும், புரொக்ஸிபின் துர்ப்பிர யோகம் காரணமாய் சுவாசப்பைநாடியில் பிற பொருளால் உண்டாகும் "கிருனியுலோமா?
தோன்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏற்புவலியாலும் மரணம் சம்ப விப்பதுண்டு. பொதடோனுக்கு ஆள்ாணஇரு வர் ஏற்புவலியால் இறந்துள்ளதை கட்டுரை
ஆசிரியர் நேரிற் பார்த்திருக்கிருர்,
பிரேதப் பரிசோதனைக்காக
மாதிரிகளைச் சேகரித்தல்
சிறுநீரைப் பரிசோதிப்பதன் மூலம் மோர்பின், மெதடோன், அம்பெற்றமின், ஹெரோயின் இருப்பதைக் கண்டறியலாம் சிறுநீர் கிடைக்காவிடின் குண்டிக்காய்களைப் பரிசோதிக்க வேண்டும். பித்தநீர்ச்சோதனை மூலமும் மோர்பின் மெதடோன் இருப்பதை அறிந்து கொள்ளலாம். குருதிப் பரிசோதனை மூலம் பாபிற்றேற்றுகள் இருப்பதை எளி தில் கண்டறிந்து, அவற்றின் அளவைபும் கணிக்கலாம். குறிப்பிட்ட தியக்க மருந்து இருப்பதை நுரையீரல், ஈரல், மண்ணிரல் முதலானவற்றைப் பரிசோதனை செய்வதன் மூலம் நிச்சயப்படுத்த முயலல் வேண்டும்.
2)

Page 15
தியக்க மருந்தும், பாதை விபத்தும்
தியக்க மருந்து காரணமாய் ஏற்பட் டுள்ள விபத்துக்களைப் பற்றிய தகவலேதும் கிடைப்பது மிகமிக அரிது. மேலும் பாதை விபத்திற்கும் அதில் சம்பந்தப்பட்டவரின் குருதியில் காணப்பட்ட தியக்க மருந்தின் அளவுக்குமிடையே உள்ள தொடர்பைக் குறிக்கும் விபரத்தைப் பெறுவதோ அதி லும் அரிது.
கஞ்சா.
கஞ்சா குடிப்பதினல் ஏற்படும் பரவச நிலையில் தூரம்-நேரத்தைக் கணிக்கக்கூடிய மதிப்பு பாதிக்கப்பட்டிருப்பதால், அவ்வேளை யில் வாகனத்தைச் செலுத்துதல் அபாய கரமானது. மேலும் அது ஞாபக சக்தியை யும் தாக்குவதால், சாரதி கவனிக்க வேண் டிய முக் கி ய கடமைகளையும் கவனத்தில் கொள்ள அவர் தவறி விடுவார்.
அம்பெற்றமின்.
சுட்டுப்பாடின்றி அம்பெற்றமினை உட் கொண்டால் தீமை விளையுமென்பது பல ரும் அறிந்த உண்மை. அந்நிலையில் வாக னத்தை திறம்படச் செலுத்துவதற்கு ஒன் ருேடு ஒன்று தொடர்பு கொண்டுள்ள செயல்களைக் கவனித்து ஒட்ட அவரால் இய லாது இருக்கும். குடிபோதையில் உண்டா கும் தள்ளாட்டம், கொன்னை தட்டுதல், மதி மயக்கம் போன்ற குறிகள் இங்கும் காணப் படுவதால், அச்சமயம் வாகனம் ஏதும் ஒட் டுதல் தீமையாய் முடியும். ஒரு குற்றம், உட லியற் காரணமாகவோ உளவியற் காரண மாகவோ செய்யப்பட்டு இருந்தாலும், சட்ட மருத்துவப்பிரமாணப்படி அது சமூகத்துரோ கச் செயலாகவே கணிக்கப்படும்.
தியக்க மருந்தும் குற்றம் புரிதலும்.
கஞ்சா:
கஞ்சாவுக்கு ஆளானவர்கள் பல்வகைத் தீச்செயல்களில் ஈடுபடுகிருர்கள்.

1. அவர்கள் மனுேபலத்தை இழப்பதினல் எவ்வித குற்றத்தையும் புரிவதற்கு எளிதில் தூண்டப்படுகிறர்கள். w
2. அது சோம்பலை உண்டுபண்ணுவதால் வேலைசெய்து மானத்துடன் பிழை யாது சில்லறைக் களவுகளில் ஈடுபட்டு சீவனம் நடாத்த ஏவப்படுகிருர்கள், 3. குற்றம் புரியும் மனப்பான்மை உள்ள வர்கள் அதை உபயோகித்தால் மேலும் துணிவடைந்து சமூகவிரோதச் செயல் கள் எதிலும் ஈடுபடத் தயங்குவதில்லை. எனினும் கஞ்சாவுக்கு ஆள்பட்டவர் கள் பெரும்பாலும் சிறுகுற்றங்களையே புரி இருர்கள் பெரும் குற்றங்களில் ஈடுபட்டதற் சான சான்றுகள் இல்லையென்றே கூறலாம். 1968-ல் புத்தளப் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத் தமாயிருக்கும். ஒரு வாலிபன் பத்துப் பதி னெரு வயதுள்ள தனது இரு சகோதரிக3 நித்திரையில் அதிகாலையில் சுட்டுக்கொன் முன். அவ்விருவரிலும் அவனுக்கு அளவு கடந்த அன்பும் ஆசையும் இருந்தது. அத் ஞல் கொலைக்கு காரணம் என்னவாயிருக்கும் என நிச்சயிக்க முடியவில்லை. ஆனல் சம் பவம் நடந்த இரவு ஒரு போத்தல் பியரை யும், சொற்ப சாராயத்தையும் G t;&SLF6ör நடுச்சாமம் வரையில் கஞ்சாவையும் புதைத் துள்ளான். சுட்டதும ""நான் சுட்டுப்போட் டேன்" என்று முதலிலும், அதையடுத்து *நான சுட்டேன்" என்றும் கூறியிருக்கி முன். எனவே அவ ன் மதிமயக்கத்துக்கு ஆளாகித்தான் செய்வது என்ன என்பதை உணர்ந்து கொள்ளும் நிலையிலிருக்கவில்ல் என்பது தெரியவந்தது. கஞ்சா குடித்ததன் பயணுக ஏற்பட்டுள்ள மதிமயக்கத்தாலேயே அதைச் செய்தான் என்றும் பகை காரணம் எதுவும் இல்லை என்றும் கண்டு, திட்டமற்ற கொலை என்ற குற்றத்துகாக 10வருட கடுழி யச் சிறைவாசம் அவனுக்கு அளிக்கப்பட் டது. தியக்க மருந்து காரணமாக ஒருவர் குற்றம் புரிந்து இருந்தாலும், இலங்கைச் சட்டப்படி அவர் குற்றவாளியாகவே கணிக் கப்படுவார்.
3)

Page 16
அம்பெற்றமின்னுக்கு அடிமையானவர் கள் தங்கள் சீவனத்திற்கே உழைக்கமுடிவ தில்லை. அம்மருந்தை வாங்குவதற்கு தேவை யான பணத்தைப்பெற, பொய் பிரட்டில் ஈடுபடுவர். பொதுவாகத் திருடவும் மிதமிஞ் சிய மருந்தை உட்கொண்ட வேளை யில் கொலை புரியவும் தயங்கமாட்டார்கன். சமூக விரோதச் செயல்களில் அம்பெற்றமினைப் பாவிப்பவர் ஒருவர் ஈடுபடுவதற்கு, அவர் அதற்கு எவ்வளவில் அடிமைப் பட்டுள்ளார் என்பதிலும் அவரது வாழ்க்கைச் சூழலுமே காரணங்களாய் அமையும். ஒரிரு குளிகை களை உட்கொள்ளும் ஒருவர் குற்றச் செயல் எதிலும் ஈடுபடாது வாழக்கை நடத்துவார் அதற்கு மாருக தப்பான சூழலில் வாழ்ந்து அம்பெற்றமினுக்கு ஆளானவர் களு டன் கூடிப் பழகும் வாலிபர் ஒருவர் காலகதியில் ஒருபெரும் குற்றவாளியாகவே மாறிக்கொள் ளும் சாத்தியமுண்டு. மருந்துக்கு அடிமைப் பட்டுள்ள ஒருவர் காரணம் எதுவுமின்றி ஒரு அப்பாவியையும் கொலை செய்யத்தயங்க
LDsf --f
இருவருட காலம் அம்பெற்றமினுக்கு ஆள்பட்டுள்ள வாலிபர் ஒருவர் தான்தங்கி யிருந்த தனது நன்பரின் வீட்டில் அவரது
நுண்கிருமிகளைக்
புதுடெல்லியில் நடாத்தப்( படி அங்குள்ள மருத்துவ மனையெ வர், தாதியர் ஆகியோரில் மூன்றி காவுகின்றனர் எனத்தெரியவந்துள் நலிவடைந்த நரம்புக் கலங்ா நரம்புக் கலங்கள் நலிவடை என இதுகாறும் நம்பப்பட்டுவந்த துவ நிபுணர் நரம்புக் கலங்கள் கண்டு பிடித்துள்ளார். இவர்களது கள் மீளஇயங்கத்தடையாயிருக்கும் அகற்றி விடலாம் என்னும் உண் சேதமுற்ற நரம்புக்கலங்களை மீள
(1

குழந்தையை பார்பிரேற்றை ஊசி மூலம் ஏற்றுக் கொன்றதைப் "பவர்' என்பவர் 1974ல் குறிப்பிட்டுள்ளார். குழந்தை ஓயாது அழுது வீட்டிலுள்ளோர் அனைவருக்கும் கொடுத்த தொல்லையை நிறுத்தவே தான் அப்படிச் செய்ததாக எதிரி விளக்கினர். அவரது வாதம் ஏற்கப்படாம்ல் அவர் குற். றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
எல். எஸ். டீ யும் பாரதூரமான குற் றச் செயல்களில் ஈடுபடுத்தும் என்பதை சுட்டிக் காட்டவேண்டும்.
முடிவுரை
தியக்க மருந்து விற்பனையும் பாவனையும் பெருமளவில், முக்கியமாக வாலிபர்களுக் கிடையில், பரந்து வருவதால், சட்டவிரோத மாக அதை வைத்திருப்பதோ, பாவிப்பதோ குற்றமென சட்டமியற்றுவது அதிமுக்கியம் அச்சட்டத்தைச் சரிவர நடைமுறைப்படுத் துவதற்கு நகர்காவலாளர் எவரும் தேவை யென கருதும்பட்சத்தில் சந்தேகப்பட்டுள்ள ஒருவர் தனது குருதியையோ, சலத்தையோ உடனடியாகப் பரிசோதனைக்காக வழங்க வேண்டுமெனவும் அச்சட்டம் வழிவகுப்பது முக்கியம்,
காவும் மருத்துவர் பெற்ற மருத்துவ ஆய்வின் முடிவின் ான்றில் தொழில் செய்யும் மருத்து லொரு பங்கினர் நோய்க்கிருமிகளை ബrg o களைப் பொலிவுறச் செய்யலாம் ந்து விட்டால் அவை மீளஇயங்கர் து. சோவியத் யூனியனிலுள்ள மருத் மீள இயங்கப்படக் கூடியவெனக் ஆய்வின் நிமித்தம் நரம்புக்கலங் காரணியை ஒரு நொதியத்தினல் மை வெளியாகியுள்ளது. இதனல்
இயங்கவைத்தல் இயலும்,
.4)

Page 17
ஊற்று (1978), 6, (5) பக். 15-18
யாழ்ப்பாணக் உவர் நீர் வெளிே (Bografuuử W. L. Gguus
மதனகரன் புவியியற் துை
ஏறத்தாள கடந்த முப்பது வருடங் களாக யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள உவர் நீர் ஏரிகளை நன்னீர்த் தேக்கங்களாக மாற்றுவது சம்பந்தமாகப் பேசப்பட்டும், எழுதப்பட்டும், சில நடவடிக்கைகள் எடுக் கப்பட்டும் வந்துள்ளன. எமது குடாநாடு ஏறத்தாள மொத்தமாக நானுநூறு சதுர மைல் பரப்பளவினைக் கொண்டுள்ளதுடன். இதில் ஏறத்தாள நாற்பது சதுரமைல் பரப்பளவில் இரு கடனீரேரிகளும் அமைந் துள்ளதனை வடமராட்சி வடக்கு, வடமரா ட்சி தெற்கு கடனீரேரியென்றும், தெற்கே அமைந்துள்ளதனை உப்பாறு கடனீரேரி யென்றும் வேறுபடுத்தலாம். இவை தவிர யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும், பிரதான நிலத்திணிவிற்குமிடையே ஏறத்தாளமுப்பது சதுரமைல் பரப்பளவினைக் கொண்டு அமைந் துள்ள கடனீரேரி ஆனையிறவுக் கடனீரேரி யென்றும் அழைக்கப்படுகின்றது: இக்கடனீ ரேரிகள் ஒன்றுடனென்று இனைந்தனவாக இல்லை. இவற்றுள் வடமராட்சிக் கட னி ரேரி (தெற்கு) இதன் கிழக்கு எல்லையாக, பெரியபச்சிலைப்பள்ளி என்ற இடத்திலிருந்து வடக்கு கடனீரேரியுடன் தொண்டமானறு என்னுமிடத்தில் கடலையடைகின்றது.
தெற்கேயமைந்துள்ள உப்பாறு கடனி ரே ரி க பது (Kapathu) நெல்வயல்களில் தாழ்ந்த பகுதிகளிலிருந்து சரசாலை, மட்டு வில், கைதடி, நாவற்குழி பகுதிகளில் இடது புறமாகவும், புத்தூர், கோப்பாய், இரு பாலை, சிவியாதெரு ஆகியபகுதிகளில் வலது புறமாகவும் பரந்தமைந்து யாழ்ப்பாண நக ரின் வெளிப்புறத்திலமைந்துள்ள அரியாலை என்னுமிடத்தில் கடலுடன் இணைகின்றது.
( 1

குடாநாட்டின் யேற்றுகைத் திட்டம்
kas tid. M. A., Ph. D. (Clark) - r B. A Hons (Cey) M. A. D. D. P (Mysore) ற, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
குடாநாட்டிற்கும், பிரதான நிலப்பகுதிக்கு மிடையே அமைந்துள்ள ஆனையிறவுக் கடனி ரேரி இதன் கிழக்குப்பகுதியில் சுண் டி க் குளம் என்னும் இடத்தில் கடலுடன் இணை வதுடன், மேற்காக யாழ்ப்பாணப - கண்டி வீதியினுலும் தனியாக்கப்பட்டுள்ளது. இக் கடனீரேரிகளை நன்னீரேரிகளாக்குவதற்கு நீர்ப்பாசன அண்மச்சு முயற்சிகளையெடுத்த துடன், நன்னீர்த்தேக்கங்களை உருவாககுவ தன் மூலம் தரையின் கீழ் சேரும் நீரின் ஆள்வினை அதிகரிக்கலாமென்றும் இவற்றின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதி கரித்துவரும் குடிநீர்த் தேவையையும்,பயிர்ச் செய்கைக்கான நீர்ப்பாசனத் தேவைன்யயும் பூர்த்தி செய்வதுடன் தரையின் கீழிருந்து மேலதிகமான நீர் வெளியேற்றுகையிஞல் நன்னீர் கிணறுகள் உவர் நீராக மாறி வருவ தனைத் தடுக்கலாமென்றும் நம்பப்பட்டது. இவைதவிர உவர் நீர் ஏரிகளை நன்னீரேரி களாக மாற்றினுல் இவற்றைச் சார்ந்து அமைந்துள்ள. இன்று பயிர்ச்செய்கைக்குத வாத உவர் மண்பகுதியினை நிலமீட்சிசெய்து பயிர்ச்செய்கையின் கீழ் கொண்டுவரலா மென்றும் எண்ணப்பட்டது,
இத்தகைய நோக்கங்களை அடிப்படை யாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இம் முயற்சியில் முன்னேடியாக, இந்த உவர்நீர் ஏரிகள் கடலை இணையுமிடங்களில் தடைகளை அமைத்து இவற்றில் இணைக்கப்படும் கதவு கள் மூலம் இவ்வேரிகளிலிருந்து உவர்நீர் கடலுக்குள் வெளியேறக் கூடியதாகவும், கடல்நீர் இவற்றினுள் உட்புகாதவாறும் நட வடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந் நடவடிக் கைகளின் காரணமாக இக்கடனீரேரிகளுள்
5.)

Page 18
சிறிய அளவில் மீன் பி டி த் தொழில் செய்து சீவனம் நடத் தி ய மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இக் கடனீரேரிகள் கடலையடையு மிடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீர்த்தடைக் கதவுகள் இடையிடையே உடைக்கப்பட்டதஞலும் கடல் நீர் உட்புகுவதஞலும் இத்திட்டத் தினைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன.
இவ்வாறு ஏற்பட்ட பிரச்சனைகளுடன், இத்திட்டத்தில் சில திருத்தங்களையேற் படுத்தி செயற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக் கமாகும், அதாவது ஆரம்பத்தில் இதனைச் செயற்படுத்துவதற்கு ஆதாரமாக குடாநாட் டில் குறுகிய மாரிகாலத்தில் பெய்யும் மழை நீரை இவ்வேரிகளில் சேரவிடுவதன் மூலம் படிப்படியாக இவற்றிலுள்ள உவர்நீர் கட லுக்கு வெளியேறி இவை நன்னீர்த் தேக் கங்களாக மாறிவிடுமென்று எதிர்பார்க்கப் பட்டது. அத்துடன் இரணைமடு குளத்தில் மேலதிக நீரும் இதன் நீரேந்து பிரதேச நீரும் கனகராயன் ஆறுமூலமும் தெராவில் ஆறு, பிறமந்தல் ஆறு, நெத்தலி ஆறு, என் பனவற்றின் நீரும் ஆனையிறவுக் கடனீரேரி யுள் வந்து சேர்வதனல், இதனை ஆறுமைல் நீளமுள்ள ஒருகால்வாயின் மூலம் வட மராட்சிதெற்குக் கடனீரேரியுடன் இணைத்து விடுவதும் ஒருநோக்கமாக இருந்தது. ஆனல் இக்கடனீரேரிகளின் நீர் தாங்கும் பரப்பளவு சிறியனவாக இருப்பதும், குடாநாட்டின் குறைந்தனவான வருட மழைவீழ்ச்சியையும் பருவகரல் நீரோட்டத்தையுமுடைய சிற்ரு றுகளையுமே ஆதாரமாகக்கொண்டு இவற்றை நன்னீரேரிகளாக மாற்றுவதற்கு முயற்சிப் பதும் சாத்தியமான தொன்ருகத் தென்பட வில்லை, அதாவது ஏற்கெனவேயுள்ளதிட்டப் படி இந்த உவர்நீர் ஏரிகளை அதேயளவான நன்னீர்த் தேக்கங்களாக மாற்ற முயற்சிப் பதும், இதற்கான மழைநீர், நீரேந்து பரப்பு என்பனவற்றின் குறைந்த அளவும், மீனவர் களின் பிரச்சனைகளினல் கடல்நீர் உட்புகு தலும் இத்திட்டத்தினை செயற்படுத்துவதில்

பிரச்சனையையும், காலதாமதத்தையும் ஏற் படுத்துவதனல் இது சம்பந்தமாக மாற்று நடவடிக்கைகளை எடுத்தல் அவசியமான தாகும்.
இத்தகைய மாற்று நடவடிக்கைகளுள் பரிசீலனை செய்யத்தக்கதாக இங்கு சிபார்க செய்யப்படுவனவற்றுள் முக்கியமானது இன் றுள்ள கடனீரேரிகளை அதேயளவான நன் னிரேரிகளை அதேயளவான நன்னீர்த் தேக் கங்களாக மாற்றுவதற்குப் பதிலாக சிரியள வான நன்நீர்த்தேக்கங்களாக உருவாக்குவ தாகும்? அதாவது தற்பொழுதுள்ள உவர் நீர் ஏரிகளின் சில ஆழமான பகுதிகள்ை மட் டும் நிரந்தர நன்னீர்த் தேக்கங்களாக உரு வாக்கி, இவற்றுக்கிடைப்பட்ட ஆழமற்ற பகுதிகளை நிலமீட்சி செய்து பயிர்ச்செய்கை யின் கீழ் கொண்டுவரலாம். கடனீரேரிகள் கடலை இணையும் பாகங்களில் மீன்பிடித் தேவைக்கு ஒரு பகுதியையும், உப்பளத் தேவைக்கு இன்னெரு பகுதியையும் ஒதுக்கி விடலாம், அத்துடன் இவ்வாள எடுக்கப் படும் நடவடிக்கைகளினல் சூழலின் சமனக் esá55labar (Ecological Balance) urub Lurra,5) காத்தல் அத்தியாவசியமான தொன்ருகும். எனவே மேற்கூறிய சிபார்சுகளை சற்று விரி வாக ஆராய்தல் பொருத்தமானதாகும்.
முதலாவதாக சிறியஅளவான நன்னீர்த் தேக்கங்களை ஏற்படுத்தும் முயற்சியில் இன் றைய கடனீரேரிகளின் உருவத்தினையும், அமைவினையும் பார்க்கும் பொழுது இதற் காக பல சாத்தியக்கூறுகள் தென்படுகின் றன, அதாவது தற்பொழுது கடனீரேரிக ளாக உள்ள பகுதிகளில் ஆழமான பகுதி களை அடையாளங்கண்டு இவற்றை ஏனைய பகுதிகளிலிருந்து அணைகளாற் பிரித்து நன் னிர்த் தேக்கங்களாக அமைக்கலாம். வட மராட்சி வட கடனீரேரிக்கும் உப்பாறு கடனீரேரிக்குமிடையே இன்று காணப்படு Grup (Kaputhu) Syðs007áš 35 L-G9 இதற்கு ஒரு முன்னேடியாகும், இவ்வகையில் பார்க்கும் பொழுது வடமராட்கி வடக்கு கடனீரேரி யில் தொண்டமானற்றிலிருந்து சாவகச்
16)

Page 19
சேரி - பருத்தித்துறை பிரதான வீதிக்குச் சற்று மேற்காக உள்ள பகுதியில் வடகிழக்கு தென்மேற்காக ஒரு அணையையும், பருத்தித் துறை-கொடிகாமம் வீதிக்குக்கிழக்கே இதே திசையில் இன்ஞெரு அணையையும் அமைத்து இவ்வணைகளுக்கு இடையேயுள்ள பகுதியை நிலமீட்சி செய்து பயிர்ச் செய்கைக்குரிய நிலப்பகுதியாக மாற்றுவதுடன். இதற்கு மேற்காக உள்ள கடனீரேரிப் பகுதியை தொடர்ந்து மீன் பி டி நடவடிக்கைகளுக் குரிய உவர்நீர் ஏரிப்பகுதியாகவும், கிழக்கே யுள்ள கடனிரேசியை நன்னீர்த்தேக்கமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கலாம். இதன் பொருட்டு இத்தெற்கு வடமராட்சி கடனீரேரியை வடமராட்சி வடக்குக் கட னிரேரியுடன் ஒருகால்வாய்மூலம் இணைத்தல் மூலம் உவர்நீரை தொண்டமானறினூடாக கடலுக்கு வெளியேறச் செய்யலாம். இங்கு பரிசீலனை செய்யக்கூடிய இன்னெரு சாத்தி யக்கூறு வடமராட்சி தெற்குக் கடனீரேரியை கிழக்காக ஒரு கால்வான்ய வெட்டி கடலு டன் இணைப்பதன் மூலம் இதன் உவர் நீரை வெளியேறச் செய்வதாகும். இம்முயற் சிக்கு இப்பகுதியின் தரைத்தோற்ற இயல்பு களும் வடிகால் முறைகளும் நன்கு ஆராயப் பட வேண்டும்.
வடமராட்சி வட கடனீரேரிக்கும் உப் பாறு கடனீரேரிக்கு மிடையிலமைந்துள்ள சிறிய உவர் னீரேரியை அதேயளவான ஒரு நன்னீர்த்தேக்கமாக மாற்றலாம். இதுதவிர உப்பாறு கடனீரேரியில் அரியாலையிலிருந்து வடக்காக சிறியளவு சதுரமைல் பரப்பள வினை உவர்நீரேரிகளாக விலக்கி அதற்கப் பாலுள்ள பகுதிகளை அணையொன்றின் மூலம் தடுத்து நிலமீட்சி செய்யலாம். இ த ன ல் செம்மணி உப்பளமும் தொடர்ந்து இயங் கக்கூடியதாயிருக்கும்.
இத்தகைய முயற்சிகளின் மூலம் அமை யும் இறுதிநிலை (End process) ஏறத்தாள ஓர் வடிநில அமைப்பைக் கொண்டதாயிருக் கும். அதாவது குடாநாட்டின் மேற்குப் பகு தியில் வழுக்கையாறு வடிநிலத்தில் இயற்கை யாக ஏற்பட்டுள்ள ஓர் அமைப்பு, இப்

பகுதியில் மனிதமுயற்சியினல் ஏற்படுத்தப் படவேண்டுமென்பதே இங்கு வலியுறுத்தப் படுவதாகும். வழுக்கையாற்றுப்பகுதியும் சில காலங்கட்கு மு ன் பு இக்கடனிரேரிப் பகு தியையொத்த அமைப்பையே கொண்டிருந் திருக்கவேண்டும். பல்வேறு செயல்முறைக களினல் இது இன்றைய வடிநில அமைப்பு உருவத்தையும் பெற்றுள்ளது.
வடமராட்சி, உப்பாறு கடனீரேரிகளை அணைகள் மூலம் துண்டாடி சிறிய நன்னீர்த் தேக்கங்களை ஏற்படுத்துவதுபோன்று ஆனை யிறவுக் கடனீரேரியிலும் யாழ்ப்பாணம்கண்டி பிரதான வீதிக்குக் கிழக்காகவுள்ள சில சதுரமைல் பகுதியை மிகுதிக் கடனீ ரேரியிலிருந்து வடமேற்கு - தென்கிழக்கு அணை ஒன்றினல் பிரித்து நிலமீட்சிசெய்து பயிர்ச்செய்கையின் கீழ்கொண்டுலருவதுடன் மிகுதியை நன்னீர்த்தேக்கமாக மாற்றலாம் • ஆனையிறவுக் கடனீரேரியை இயன்றவரை யில் சிறிதாக்கி நன்னீர்த் தேக்கமாக முயற் சிப்பதே சிறந்ததாகும். ஏனெனில் இதனை நன்னீர்த் தேக்கமாக மாற்றுவதற்கு இதனை யடையும் நீர் இ தன் சிறியளவினதான நீரேந்து பிரதேசத்தினலும், சிற்றறுகளின லும் குறைந்தவையாயிருப்பதுவேயாகும்.
இரண்டாவதாக இங்கு சிபார்சு செய் யப்பட்டு பரிசீலனைக் கெடுக்கப்பட வேண் டிய அம்சம் நிலமீட்சி செய்யப்படும் பாகம் களின் நிலப்பயன்பாடு பற்றியதாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் புவியியல் கார னிகளுக்கிணங்க நடைபெற்றுவரும் நிலப் பயன்பாட்டு முறையையே நிலமீட்சி செய் யப்படும் பாகங்களில் நடைமுறைப் படுத் தல் சிறந்ததாகும். அதாவது இங்கு பயிர்ச் செய்கையின் கீழுள்ள பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகளில் நெற்செய்கையே பிரதான நிலப் பயன்பாட்டு முறையாக இருந்து வந்துள் ளது. சிபார்சு செய்யப்படுகின்ற நிலமீட்சி செய்யப்படும் பாகங்களும் அயல்பகுதிக ளோடு பார்க்கும்பொழுது தாழ்பகுதிகளா கவே அமையும் எனவே நெற்செய்கையை நடைமுறைப்படுத்தினல் நிலமீட்சியிலும்
17)

Page 20
நிலமுயர்த்துதல் போ ன் ற நடவடிக்கை களுக்கு அவசியமேற்படாது. இத்தகைய நிலப்பயன்பாட்டை செயற்படுத்தினுல் வழு க்கையாற்றுத் தலைமுகப் பகுதியில் காணப் படும் வடிநில அமைப்பையொத்த (Basin) தரைத்தோற்றமும், நிலப்பயன்பாட்டுமுறை யும் இப்பகுதியிலும் உருவாகும். இதனுல் சூழலின் சமநிலைத்தன்மை குழப்பமடையு மென்ற வாதத்திற்கு இடமேற்படாது. எனவே இம்முயற்சியின் விளைவாக நெற் செய்கையின் கீழுள்ள நிலப்பரப்பு அதிகரிக் கப் படுவதுடன் நெல்லுற்பத்தியையும் அதி கரிக்க இடமுண்டு.
மூன்ருவதாக இங்கு பரிசீலனைக் கெடுக் கப்படவேண்டிய அ ம் சம் பெருமளவுக்கு இன்றைய திட்டத்தை செயல்படுத்துவதி லேற்பட்ட பிரச்சினைகளையடிப்படையாகக் கொண்டதாகும். தற்பொழுது இக்கடனி ரேரிகளில் அன்ருட சீவனத்திற்காக மீன் பிடி செய்து வாழும் மீனவர்களுக்காக வட ம ரா ட் சிக் கடனிரேரியில் வடபகுதியில் தொண்டமாளுற்றிலிருந்து தெற்காக ஏற் கனவே சிபார்சு செய்யப்பட்ட அணைக்கட்டு வரைக்குமுள்ள பகுதியை உவர்நீர்ப் பகுதி யாகலே விட்டுவிடுவதாகும். எந்த ஒருதிட்
டத்தையும் வெற்றிகரமாகச் செயற்படுத்து
வதற்கு அவ்வப்பகுதி மக்களின் பூரண ஒத் துழைப்பும், ஆதரவும் அத்தியாவசியமான தாகும். ஆகவே மீன்பிடி உரிமைகளை கட னிரேரியின் ஒரு பகுதியில் கொடுப்பதன் மூலம் இப்பகுதிமக்களின் ஒத்தாசையைப் பெறக்கூடியதாயிருக்கும். இதேபோன்று உப்பாறு கடனீரேரியின் தென்பகுதியை உப்பள் உபயோகத்திற்கு ஒதுக்கி விடுவதால் அயற் பகுதிகளின் உப்பு தேவையின் ஒரு
பகுதியையும் பூர்த்தி செய்யலாம். ஆனை
அட்டைப்படம்: இக்கட்டுரை

யிறவுக் கடனீரேரியில் மே ற் காக நடை பெறும் உப்பளவேலைகள் இச்சிபார்சுகளினல் பாதிக்கப்பட வேண்டிய அவசியமேற்படாது எனினும் மேற்கூறிய முறைகளில் சிறி யளவான நீர்த்தேக்கங்களை அமைத்து இடை யிலுள்ள நிலப்பகுதிகளை நிலமீட்சி செய்து பயிர்ச்செய்கையின் கீழ்கொண்டுவருவதற்கு சில முன்னேடியான வெயாய்வு நடவடிக்கை கள் அத்தியாவசியமானவையாகும். அதா வது இப்பொழுதுள்ள கடனீரேரிப் பகுதி களில் ஆழம் கூடியபகுதிகளை அறிந்துகொள் வதற்கேற்ப இக்கடனீரேரிப் பகுதிகளை உள் ளடக்கி விரிவான அடிப்படையில் இதுவரை யில் சமஉயரக் கோடுகள் வரையப்படவில்லை இப்பொழுது எமக்குக் கிடைக்கக் கூடியன வாயிருப்பவற்றுள் குறிப்பிட க் கூ டி யவை நீர்ப்பபசனத் திணைக்களத்தினரின் வேண்டு கோளுக்கிணங்க இலங்கை நிலவள வீட்டுப் பகுதியினரால் தயாரிக்கப்பட்ட பொறியிய லாய்வு அடிப்படையான படங்களே (Engineering Survey Sheets) galib 56 gFLdolu ரக்கோடுகள் ஒரு அடி இடைவெளியில் வரை யப்பட்டுள்ள போதிலும், கடனீரேரிகளில் பலபகுதிகள் இவற்றில் உள்ளடக்கப்படா மையால் கடனீரேரிகளில் ஆழமான பகுதி க%ள அடையாளஞ் செய்வதில் சில பிரச்ச னைகளேற்பட இடமுண்டு. கோடைக்காலப் பகுதியில் கடனீரேரிகளின் ஆழமான பகுதி களிலேயே நீர் தேங்கிநிற்க, ஏஜணய பகுதி சளில் நீர் வற்றிவிடுவதனல் இம்முறையில் இவற்றை இலேசாகக் கண்டுகொள்ளக் கூடி யதாயிருந்தாலும், இத்தகைய grif Lunrifau செயற்திட்டத்தினை மேற்கொள்வதன் முன்பு இதன் பல அம்சங்கள் பற்றி தீர்க்கமான முடிவெடுப்பதற்கு விரிவான வெளியிட ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அத் தியாவசியமானதாகும்.
ம்மந்தமான விளக்கப்படம்.

Page 21
இவற்று (1978), 6, (5) பக். 19-23
நீரும் வி பகுதி-3. பயிர்களி கலாநிதி A. கந்தையா, விவசாய
பயிர்களின் விளைச்சலப் பாதிக்கும் முக் சிய காரணிகளில் நீரும் ஒன்ருகும். பயிர் களின் விளைச்சலுக்கும் அவை பெறக்கூடிய நீருக்கும் உள்ள தொடர்புகள் பல பரிசோத னைகள் மூலம் அறியத்தரப்பட்டுள்ளன. அநேகமான பயிர்களுக்கு நீர்ப்பாவிப்புகளும் அவற்றின் வளர்ச்சி, உலர் பொருள் தயா ரிப்பு, விளைச்சல் ஆகியன நேரடியாக மாறு படுகின்றன. ஒரு தாவரத்தின் ஆவியுயிர்ப்பு பாதிக்கப்படும்போது அதன் வளர்ச்சியும், வி ளைச்சலும்பாதிக்கப்படுகின்றது. ஆவியுயிர்ப்பு விகிதம் பாதிக்கப்படாமல் நீர் அளிப்பதன் மூலம் பயிர்களிலிருந்து உயர்ந்த விளைச்சலைப் பெற்றுக் கொள்ளலாம். பிறிக்ஸ் (1920) என்பவரின் பரிசோதனையின் படி பயிர்களின் ஆவியுயிர்ப்பு கூடிக்கொண்டு போகும்போது அவற்றின் த பாரிக்கப்பட்ட உலர்நிறையும் விளைச்சலும் கூ டி க் கொண்டே போகும் என்பது நன்கு புலனுகின்றது. தயாரிக்கப் பட்ட உலர்நிறைக்கும் ஆவியுயிர்ப்பினல் இழக்கப்பட்ட நீருக்கும் உள்ள விகிதம் ஆவி யுயிர்ப்பு விகிதமாகும், டிவிற் (19581 என் பவரின் படி தயாரிக்கப்பட்ட மொத்த உலர் நிறை, M. மொத்த ஆவியுயிர்ப்புக்கு, W, பின்வருமாறு தொடர்பு கொண்டுள்ளது.
M = bwf E - - - b = Lost sta, E = சுயாதீன நீர் ஆவியாதல். தாவரங்களின் ஆவியுயிர்ப்பை பாதிக்காவண் ணம் நீர் அளிப்பதே நீர்ப்பாசனத்தின் முக் கிய குறிக்கோளாகும்,
ஆவி, ஆவியுயிர்ப்பு. வயல்களில் நீர் பயிர்களிலிருந்து ஆவி யுயிர்ப்பு மூலமாகவும், பயிர்களினதும், நிலத்
தினதும் மேற்பரப்பிலிருந்து ஆவியாதல் மூல மும் இழக்கப்படுகின்றது. மேற்கூறிய
( 1

வசாயமும் ன் நீர்த்தேவைகள் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
மொத்த நீர் இழப்பை ஆவி ஆவியுயிர்ப்பு (Evapotranspiration) 6760Táš si povrř. 5riů பாய்ச்சல் மூலம் அளிக்கப்படும் நீரின் அளவு பயிரின் ஆவி ஆவியுயிர்ப்புக்கு சமனுக இருத் தல் வேண்டும். ஆகையால் பயிர்களின் நீர்த் தேவை ஆவி ஆவியுயிர்ப்புக்குச் சம ஞ கும். பயிர்களின் நீர்த்தேவையை கணிப் பதற்கு அவற்றின் ஆவி ஆவியுயிர்ப்பைக் கணித்தல் முக்கியமாகும். பொதுவாக பயிர் களின் ஆவி ஆவியுயிர்ப்பை பாதிக்கும் கார ணிகளில் காலநிலை முக்கியமான தொன்மு கும். காலநிலை சூரிய கதிர்வீச்சு வெப்பநிலை ஈரப்பதன் காற்றின்வேகம், ஆகியவற்றைக் கொண்டதாகும், காலநிலையைத் தவிர்த்து பயிர்களின் ஆவி ஆவியுயிர்ப்பைப் பாதிக்கும் காரணிகள் மண்ணின் தன்மை, பயிரின் தன்மை, பயிர் பராமரிக்கும் முறை க ள் ஆகியவற்றில் தங்கியுள்ளது.
நிலப்பண்பு ஆவி ஆவியுயிர்ப்பு.
பென்மன்' (19581 என்பவர் நிலத்தை முழுமையாக மூடியதும் நீர் குறைவற்றது மான பச்சை சிறுபயிர் ஒன்றிலிருந்து ஆவி யுயிர்ப்பின் மூலம் இழக்கப்படும் நீரை நிலப் பண்பு ஆவியுயிர்ப்பு என வரைவிலக்கணம் கூறினர். பென்மன் பயிர் நிலத்தை முழு மையாக மூடியபின் அப்பயிரிலிருந்து இழக் கப்படும் ஆவி ஆவியுயிர்ப்பு பயிரினங்களால் பாதிக்கப்படுவதில்லை எனவும், காலநிலைக் கர்ரணிகளாற்ருன் பாதிக்கப்படுகின்றது எனவும் விவாதித்தார். அண்மையில் நடாத் தப்பட்ட பரிசோதனைகளின் படி இவரின் கூற்று முழுமையாக சரியில்லை எனவும் பயி ரினங்களுக்கிடையில் ஆவி ஆவியுயிர்ப்பு மதிப்பிடக்கூடிய அளவிற்கு வித்தியாசப்படு
9)

Page 22
கின்றது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவ்வித்தியாசம் பயிர்களின் உயரம், இலை களின் அழுத்தமின்மை, கதிர்வீச்சை நெறிக் கும் இயல்பு ஆகிய குணங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ளது,
ஆவி ஆவியுயிர்ப்பும் சுயாதீன
ஆவியாதலும் நீரின் மேற்பரப்பிலிருந்து ஆவிமூலம் நீர் இழக்கப்படுவதை சுயாதீன ஆவியாதல் எனக் கூறுவர். சுயாதீன ஆவியாதலும் ஆவி ஆவி யுயிர்ப்பைப்போல் காலநிலைகளினல் பாதிக் கப்பட்ட போதிலும் இவ்விரண்டு முறைக ளின்படி இழக்கப்படும் நீரின் வீதங்கள் வித்தி யாசமாக இருக்கின்றன. பின்வரும் மூன்று காரணங்களினுல் ஆவி ஆவியுயிர்ப்பின் வீதம் சுயாதீன ஆவியாதல் வீதத்திலும் பார்க்க
குறைவாகக் காணப்படுகின்றது.
அ. இரவு நேரங்களில் இலவாய்கள் மூடப்
பட்டிருக்கின்றன.
ஆ. இலை வாயினுாடாக நீராவி போ கும் போது உராய்வு விசை ஏற்படுகின்றது.
இ. தாவரங்களின் இலைகள் நீரின் மேற் பரப்பைவிட அதிகமான சூரியகதிர் வீச் சைத் தெறிக்கின்றன.
நிலைப்பண்பு ஆவி ஆவியுயிர்ப்பை கணிக்கும் முறைகள்.
பின்வரும் முறைகளைக்கொண்டு பயிர் களின் ஆவி ஆவியுயிர்ப்பைக் கணிக்கலாம்.
i வடிகலன்கள் கொண்டு நேரடியாக
அளவிடுதல்.
i காலநிலைச் சூத்திரங்கள்
iii வளியியக்க நெறிமுறைகள். iv věS Guray GFavay நெறிமுறைகள்.
v ஆவி மாணிகள்.
( 2.

மேற்கூறிய முறைகளில் காலநிலைச் குத்திர முறைகளையும் ஆவி மா னி முறைகளையும் ஆராய்வோம்.
தோன் வெயிற் (1948) என்பவர் ஆவி ஆவியுபிர்ப்பை மாதசராசரி வெப்பநிலைக்கு பின்வரும் சமன் பாட்டின் மூலம் தொடர்பு படுத்தினர்.
al
ET= 1.6 (10T/I)
இவற்றில் ET = ஆவி ஆவியுயிர்ப்பு (சத. மீ
T = சராசரி மாத வெப்பநிலை (co) 1 = வருடாந்த உஷ்ணகுறி - காட்டி,
a = ஒரு மாறிலி.
தோள் வெயிற் அவர்களின் சமன்பாடு உலர் வலயங்களிலும் வடஅமெரிக்காப் பகுதி களிலும் மிகவும் சிறந்த முறை யி ல் ஆவி ஆவியுயிர்ப்பை மதிப்பிடக்கூடியதாக இருக் கின்றது. ஆணுல் இவரின் சூத்திரம் உஷ்ண வலயங்களில் சரியாக ஆவி ஆவியுயிர்ப்பை கணிப்பிடுவதில்லை.
பிளானியும், கிறிடிலும் (1950) என்ப வர்களின் சமன்பாடு பரவலாக ஆவி ஆவி யுயிர்ப்பைக் கணிப்பதற்கு உபயோகிக்கப்பது கின்றது. இவர்களின் சமன்பாடு பின்வரு Longy –
u = K (t+p)
100 இவற்றில், u= மாதாந்த ஆவி ஆவியுயிர்ப்பு (அங்) t= மாதாந்த சராசரி வெப்ப நிலை (F)
p= மாதத்தின் பகல்நேர மணி
த்தியால சதவீதம், K= மாத பயிர்க் குணகம்.
மாதப் பயிர்க் குணகம் ஒரு பயிரிலிருந்து மற்றப் பயிரிற்கு மாறுபட்டதாகவும் ஒரு குறிப்பிட்ட பயிருக்கு வளர்ச்சி நிலையைப் பொறுத்து மாறுபடுவதாகவும் கண்டு பிடிக் கப்பட்டுள்ளது.
)

Page 23
ஆவி மானிகள் மூலம் மிகவும் இலகு வாக ஆவி ஆவியுயிர்ப்பை கணிக்க கூடிய
தாக இருக்கின்றது. பலவித ஆவிமானிகள் இன்று பாவனையில் இருக்கின்ற போதிலும் ஐக்கிய அமெரிக்காவின் காலநிலை திணைக் கழத்தின் A-வகுப்பு ஆவிமானி பெரும் பாலும் உபயோகப்படுகின்றது. இவ்வாவி மானி 47 அங்குல விட்டமும் 10 அங்குல ஆழமும் கொண்ட இரும்புத் தகட்டினல் செய்யப்பட்ட ஒர்கலமாகும். இக்கலம் மரத் தினுல் செய்யப்பட்ட ஒர் மேடையில் வைத் திருக்கப்பட்டிருத்தல் வேண்டும். கலத்தின் அடித்தளம் நிலத்திலிருந்து 4 அங்குல உயர தில் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இக் கலத்தினுள் உள்ள நீரின் அளவு கலத்தின் விளிம்பில் இருந்து 2 அங்குலத்திற்குக் கூடா மல் இருத்தல் வேண்டும். இக்கலத்திலிருந்து
இலுப்பள்ளமை.(1976)
பென்மன் முறை mm/LDITsh
தை 72 1 |era 94, 29 பங்குனி I59。25
சித் திரை 126.49
60pahuasmr6 138.25 ஆணி 153,83
*շեւկ- &g ஆவணி 124, 18
புரட்டாசி 4.1. 89 ஐப்பசி, 8.76
கார்த்திகை 84。28 tert- 36.9
(
t
2

ஆவியாகும் நீரின் அளவு கொழுக்கிமானி ஒன்றின் மூலம் அளக்கப்படுகின்றது. பொது வாக இவ் ஆவிமானியிலிருந்து இழக்கப்படும் நீரின் தொகையை 0 8 ஆல் பெருக்குவதன் மூலம் ஆவி ஆவியுயிர்ப்பு கணிக்கப்படுகிறது"
இலங்கையின் உலர்வலயத்கில் மாதா ந்த ஆவி ஆவியுயிர்ப்பு மதிப்பீடுகள்.
DS’ இலுப்பள்ளமை பரிசோதனை நிலை யத்தில் பல பரிசோதனைகளின் படி மாதாந்த ஆவி ஆவியுயிர்ப்பு கணிக்கப்பட்டுள்ளது. இம் மதிப்பீடுகள் பின்வரும் அட்டவணை ஒன்றில் தரப்பட்டுள்ளன.
அட்டவணை 1-உலர்வலயத்தில் மாதா ந்த ஆவிஆவியுயிர்ப்பு வீதங்கள்.
கிறிடில் ஆவிமானி முறை (p6op (mm) (mm)
2.44 `98,07
123. 3 100.87
157,36 182,35 121.17 丑54。42
38.81 6100
134, 89 189.49
- 163.1
II3.56 24.62
113.89 218,54
038. 80.32
95.15 88.55
53 50.82

Page 24
2 6v)f லயத்தில் சிலபயிர்களின் நீர்த் தேவைகள்.
மகா இலுப்பள்ளமவில் நடாத்தப்பட்ட ஆராச்சிகளின்படி பின் வரும் பயிர்களின் பெரும்போக நீர்த்தேவைசளும் சிறுபோக நீர்த்தேவைகளும் அட்டவணை இரண்டில் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணை 2 - சிலபயிர்களின் பெரும் போக சிறுபோக நீர்த்தேவைகள்:-
பெ, போக.சி. பேர்க, t its air நீர்த் தே. நீர்த் தே.
LiS). Li f. t.
நெல் (4 மாதம்) 508 762
மிளகாய் (6 மாதம்) . 762
வெண்காயம் மோதம். 355,6 சோயாஅவரை (60-. 365.8
90நாட் (3 ripub 4 l 12 onrasb... . . . . ... • 614.68
நிலக்கடலை 3. ont ab 8 is a . 386,08
நீர்ப்பாசன நீர்த்தேவைகள்.
தாவரத்திற்கு தேவைப்படும் நீரின் நீர் பாச்சல் மூலம் அளிக்கப்படும் பகுதி யே தாவரதீர் தேவையாகும். இதனளவு தாவர நீர் தேவை-பயன்படு படிவு வீழ்ச்சியாகும். இதிலேயும் வேர்வலயத்தில் பிடித்து வைக் பப்பட்டிருக்கும் நீர் மட்டுமே பயன்படுகின்
Iりgs・
யுனெஸ்கோ ஆய்வு: இன்று உலக முதியோ எழுத வாசிக்க அல்லது சிறு கணிப்பு யற்ற தொகையினரான 800 மில்லிய ஆண்டளவில் 134 கோடி சிறுபராய ருேராக விளங்குவர் என எதிர்பார்க்

3 அடி, 4அடி வரையுள்ள வேர்பிரதே சமே கருத்துக்கெடுத்துக் கொள்ளப்படும். லின்சிலி பிரர்ன்சிஸ் (1972) என்பவர்களின் படி அண்ணளவான முறையில் பயன்படு படிவு விழ்ச்சியை கணிப்பதற்கு ஒருமாதத் தில் பெறப்படும் முதல் 1' மழைவீழ்ச்சி 100 + பயன்பாடு உடையதென்றும், 6" மேற்பட்ட மழைவீழ்ச்சி பூச்சிய பயன்பாட் டையுடையதென்றும் கருத்திற் கெடுக்கப் படுகின்றது. உலர்வலயங்களுக்கு இதன் பயன்பாடு கேள்விக்குரியதாகவுள்ளது.
வயல் வழங்கற் தேவைகள்.
இவற்றை கணிப்பதற்கு தாவர தேவை கள் பயன்படு படிவு வீழச்சி, வழங்களில் ஏற்படும் இழப்புக்கள் பிரச்யாகித்தலில் ஏற்ப் படும் இழப்புக்கள் என்பன கருத்திற்கெடுத் துக்கொள்ளப்படுகின்றன.
Uc — р f spearsaw wi = Ea
Ue=தாவர நீர்தேவை, p = பயன்படு LDPip வீழ்ச்சி. பிறவழிப்படுத்தல் தேவைகள்.
wf Ec
சிலவேளைகளில் நீர் வயலிற்க்கு கொண்டு செல்லப்படுகையில் இழப்புகள் ஆவியுயிர் பாலும் கசிவினலும் ஏற்ப்படுகின்றது. அனேகமாக நீர்பாசன தேவைகள் ஒரு அலகு பரப்பிற்கு எவ்வளவு தேவைஎன கணிக்கப் பட்டு பின் மொத்தபரப்பால் பெருக் கி மொத்ததேவை கணிக்கப்படுகின்றது.
Wr as
தொகையில் மூன்றிலொரு பகுதியினர் கள் செய்ய இயலாதவராயுள்ளனர். கல்வி னில் 60 விகிதம் பெண்களாவர். 1985-ம் த்தினர் பாடசாலை செல்லும் வசதியற். கப்படுகிறது.
22 )

Page 25
ஊற்று (1978), 6, (5) பக். 23-24
மரவள்ளிப் அப்பகோனியா இனம் மெலொெ
அப்பகோனியா இனத்தைச் சார்ந்த வண்டுகள் மரவள்ளியைத் (மனிஹொட் ாஸ்கியுலென்ற கிறன்ற்ஸ்)தாக்குகின்றன e அவதானிக்கப்பட்டுள்ளது. மாத்தளை, அம்பாறை மாவட்டங்களிலிருந்து கிடைக் கும் தகவலின்படி, சென்ற ஆறு மாதங்க ளுள் இவை பெரும் எண்ணிக்கைகளிற் தோன்றியுள்ளன. முதிர் வண்டு மரவள்ளி யின் இலைகளை அழிக்கின்றது; இதன் குடம்பி (மிகச் சிறு குறவணையன் புழு) மரவள்ளியின் இலைகளைத் தாக்குகின்றது.
3. அப்பகோனியாவின் வண்டு 4 ” 4 அங்குல ( 6.0-18.8 மிலி மீட்டர் ) நீள முடைய, நடுந்தர பருப்பமுடையது. இதன் மேலிறக்கைகள் கவசம்போல் கடின(எலிற்ரு) மாக உடம் பின் கடைசிக்கு முன்னதாக வுள்ள சுவாசவாயில் (ஸ்பயிருக்கிள்) வரை நீண்டுள்ளன. இவ்வண்டின் குடம்பியின் உடம்பு அதற்கென உரித்தான பாணியில்
இலங்கையின் பல்வேறு மாவட்டங்களின் தானிக்கப்பட்டுள்ளன.
அப்பகோனியா அக்குவபிலிஸ் கார்ஸ்ச்
9
s
s
s
s
豫穷
9
9
姆舞
Casar Guror6mor es5 rurasño si - கொறியேசி வட் - ஃபெருஜினியா எஃப் - ஃபுல்வோஸிற்ருேசா கிராசிலிஸ் அருே லற்றேலிஸ் அருே - 8) றிடா கார்ர்ச் dbabat நாநா வோல்க் سநிற்நரி வோல்க் புருேலிக்ஸா அருே
( 2

பீடைப் பூச்சி D - கொலியொப்ரெரு லன்தினெ.
வில்டோல் வளைந்து காணப்படும். இதன் தலை செங்கபில நிறமுடையது. ஒளி புகக்கூடிா தன்மையுடைய இதன் உடல் மினு மினுப் புடையது. மண்ணுள் விரைவாக இயங்கித் தாவர வேர்களைத் தாக்கி அழிக்கின்றன. ஆனல் இவற்றை தரையின் மேற்பரப்பில் இட்டால், அவைமிக மெதுவாக தட்டுத்தடு மாறி நகரும். பூரண வளர்ச்சி எ ய் தி ய குடம்பி, கூண்டுப் புழுவாவதற்கு மு ன் பு மண்ணுல் கூடொன்று வனந்து, JyAsg)6ir கூண்டுப்புழுவாகும். வாழ்க்கை வட்டம் சுமார் 1-3 வருடகாலமாகுமெனக் கணிக கப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து வெளியேறும் வண்டு மாவள்ளி இலகளைவிரும்பி உண்ணும் இவ்வண்டுகள் இராக் காலங்களில் மட்டுமே நடமாடும். பகல் வேளைகளில் ஒழித்து ஒய் வாக வாழும். சில சமயங்களில் இவ்வண்டு கள் புல் தண்டுகளைத் தழுவிப் பற்றி இயக் கம் இன்றி இருப்பதை நாம் அவதானிக்க கூடும்.
ல் பின்வரும் அப்பகோனியா இனங்கள் அவ
இலங்கை பில் எங்கும் உள்ளது. - நுவரெலியா மாவட்டத்தில் - கொழும்பு மாவட்டத்தில் அருே -நுவரெலியா மாவட்டத்தில்
அனுராதபுர மாவட்டத்தில் அம்பாறை அனுராதபுரம், பதுளை வவுனியா
காலி மாவட்டத்தில். நுவரெலியா மாவட்டத்தில்
:3)

Page 26
s றவ்கா எவ் o ps ஸொலிடா வேக் Kaasauly
அப்பகோனியா வண்டுகள் ஒளியினல் கவரப்படுகின்றன. ஆகவே ஒளிப்பொறிகள் மூலம் இவற்றைச் சிக்கனமாகக் கட்டுப்படுத் தலாம். உடனடியாக இப்பீடைப் பூச்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாகில் ரிறைக்குளோரஃபோன் (டிப்ரெறெக்ஸ்) அல்
திரு பொ. மா. அனந்தசயனன் அ6
O
தற்போதுள்ள் கொள்கையின்படி திரவ இரும்பாகும். இதை 3,000 மைல் நிக்கல் கலப்புலோக ஒடு (Shell) சூழ் ஓடு திண்மநிலையில் வைக்கப்பட்டுள்ள கம் 200மைல் தடிப்புடைய உலோகங் a 67G. (Rocky Crust)
வண்ணத்துணியுகத்
56TD
எண்ணம்போல்
ஏற்றதோர்
கணேசன்
இல. 63.78, கே.கே, எஸ், றேட், தொல்

மாத்தளை மாவட்டத்தில். கொழும்பு, இரத்தினபுரி மாவட்டங்களில்.
லது காபரிலை(செவின்) தாக்கப்படும் தாவரத் தில் தெளிப்பதோடு மண்ணும் நன்ருக நனை யும்படி தெளிக்கவும். இவ்வாறு செய்வதால் இலையிலுள்ளி வண்டும் நிலத்திலுள்ள குடம் பிகளும் அதிசீக்கிரம் கட்டுப்படுத்தப்படும்.
பர்களால்தமிழாக்கம் செய்யப்பட்டது
இது 1600மைல் விட்டத்தைக்கொண்ட தடிப்புள்ள மிகவும் சூடான இரும்பு த்துள்ளது. அமுக்கம் காரணமாக இவ் து. இவ் ஒட்டைச் சூழ்ந்து 150தொடக் களும் கணிப்பொருட்களும் கலந்த ஒடு
5து ார் வகையனைத்தும்
தேர்ந்தெடுக்க
எழிற்கூடம்
ஸ்ரோர்ஸ்
யாழ்ப்பாணம். Gt_éf) 71 69
( 24 )

Page 27
ஊற்று (1978), 6, (5) பக். 25-31.
சேதனவுறுப்ட கலாநிதி சு. சோதீஸ்வரன் சிே (R 1rrn 6%or Liu
(5
அரோமற்றிக்கு ஐ
அரோமற்றிக்கு ஐதரோகாபன்களின் லியமானது அதிகம் அரோமற்றிக்கு ஐதரோகா யன முறைப்படி பெற்றே லியத்தின் அலிபற் ஐதரோகாபன்களாக மாற்றலாம். பென்சீனும் சேtவைகளுமே பொதுவாக அரோமற்றிக்கு :
பென்சீனின் மூலக்கூற்றுச் சூத்திரம் C6 இதற்கேற்ற நீண்ட சங்கிலித்தொடர் அமைப்ெ
H-Ca
எனினும் பென்சீனின் தாக்கங்களின் அடிப்பை தன்மை இல்லை எனக் கொள்ளலாம். பென்சி வட்டச்சேர்வையென்பதும் ஒலிபீன்களின் த டமைப்பைப் பின்வரும் பரிவுக்கட்டமைப்புக் போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
épov st * سہ: ܕܼܲܬܐ
)FN O ܪܵܐ
S۶
Ia
( 25

இரசாயனம் ரஷ்ட இரசாயன விரிவுரையாளர் ல்கலைக்கழகம்
)
தரோகாபன்கள்.
றந்த மூலப்பொருள் நிலக்கரியாகும். பெற்ருே பன்க2ளக் கொண்டிராத போதிலும் இரசா றிக்கு ஐதரோக்காபன்களை 'அரோமற்றிக்கு அதனை ஒத்த இரசாயனத் தன்மையுடைய ஐதரோகாபன்கள் எனப்படும்.
H6 என்பது C, H பகுப்புமூலம் தெரிகிறது. பொன்று பின்வருமாறு:
H. H.
sC-C-C-C=C-H
H. H. டயில் பென்சீனுக்கு அசற்றலீன் முப்பிணைப்புத் Pனின் இரசாயனத் தன்மைகளின்படிஅதுஒரு ன்மை இல்லாதபடியால் பென்சீனின் கட் 1ளால் (Ia, 1b) குறிப்பிடலாம் என்பதும் தற்
(y. H
b

Page 28
a உம் 1 b உம் கெக்குலேயின் பென்சீ பது வழக்கம். அதாவது பென்சீனின் இயல் இதனை அமைப்பு 1 இனுல் குறிக்கலாம். s காபன் - காபன் பிணைப்பும் இரட்டைப்பிக் பட்ட தன்மையைக் கொண்டிருக்கின்றன. ) ஆறுகாபன் அணுக்களும் ஒரு ஒழுங்கான அறு டும். பென்சீனின் C-C பிணைப்பு நீளம் 1.39A பிணைப்பு நீளம் 1.34A9 ; C-C பிணைப்பு நீள யாவும் ஒரே விதமானவை என்பதை பென்சீன
5.1 பென்சீனின் தாக்கங்கள்
5. 1. u sin. L-ibgšas rŘI S 6îr (Addition Reacti
ஊக்கி முன்னிலையில் பென்சீனுடன் ஆ! சேன் பெறப்படும்.
ஊக்கி C6 H C. H. --3H യ ജ്ഞ അള്ള ഇത്ത
6 ''6 2 d
அமுக்கம் 6. வெப்பநிலை
பென்சீன் ஒசோனுடன் கூட்டற்ருக்கமுற். படும்.
குளோரீனுடன்UV ஒளி முன்னிலையில்- டெ ரீன் அணுக்கள் கூட்டப்பட்டு பென்சீன் எக்ச யாகும், இக்கலவையை, ஆறு சமபகுதியை ே கமக்சீன் எனப்படும் கிருமிநாசினி.
LV
பென்சீன் கார KMnO4 all-Ge. Br2./CC14 1.2 ஐப் பார்க்கவும்). இதிலிருந்து பென்சீனின்
இரட்டைப் பிணைப்புக்களைப் போன்றவையல்ல
குறிப்பு: தொலுயீன், கார, KMnO4 உட மீதையில் தொகுதி ஒட்சியேற்றப்பட்டு ெ
asrg KMn O 4
TTSiS SSLSLSLL TSCS LLLSCSLLLLLSLLLLSLSSLSSLSL
குடாக்கல்

* பரிவுத்தன்மையை இருதலை அம்பினல் குறிப் 1a இற்கும் 1b இற்கும் இடைப்பட்டது. அமைப்பு 1 இன்படி, பென்சீனின் ஒவ்லொரு ணப்பிற்கும் ஒற்றைப் பிணைப்பிற்கும் இடைப் * கதிர் கோணல் அளவீடுகளின்படி பென்சீன் வகோணத்தின் மூலைகளில் அமைந்திருக்கவேண் ° எனத் துணியப்பட்டுள்ளது. (gifts Ly Cs C ாம் 1.54A9) பென்சீனின் C-H பிணைப்புகள் சின் இரசாயனவியல்புகள் காட்டுகின்றன.
Ons)
று ஐதரசனணுக்கள் கூட்டப்பட்டு வட்டஎக்
2
எக்சேன்
வெடிக்கும்தன்மையுள்ள மூஒசனைடு பெறப்
3 ) ಆ ஒசனட்டு பன்சீன் கூட்டற்ருக்கமுறும் போது ஆறு குளோ
ா குளோரைட்டு பெறப்படும். இது ஒரு கலவை சர்வைகளாகப் பிரிக்கலாம். இவற்றுள் ஒன்று
6 பென்சீன் எக்சாக் குளோரைட்டு கலவை
உடனே, நிறநீக்கற்ருக்கத்தைத் தராது, (4.2 ா இரட்டைப் பிணைப்புக்கள் அற்கீன்களின் ) என்பது விளங்கும்.
ன் சூடாக்கப்படும்போது, பக்க ச் சங்கிலி பன்சோயிக்கமிலத்தைத் தரும்.
P H
Is amb
26)

Page 29
5. 1, 2. பிரதியீட்டுத் தாக்கங்கள் (Substi பென்சீன் பல பிரதியீட்டுத் தாக்கங்களிலீ
Cs H + HNO --- C6 H
குடாக்கல் நை SO C6 H + H2 SO ----- - C6
குடாக்கல் Fe
C, H + Cl ----س-------------س« Cم Hپ
6 6 2 சூரிய ஒளியின்மை
நீரற்ற Alcl C, . H. -- RCl ------- C
d 6 சூடாக்கல்
2
fribo AlCl3 C k -- RCOCl -------- - -يسC H
குடாக்கல
C6 H + HCOCl (HCl + CO Dðgšg
இத்தாக்கங்கள் ஒவ்வொன்றிலும் பென்சீனின் தொகுதியொன்றில்ை பிரதியீடு செய்யப்படுவ பலவித அரோமற்றிக்குச் சேர்வைகள் தொகுக் நுட்பங்கள் ஒரே விதமானவை. நைத்திரேற்ற ஆராய்வோம்.
பென்சீனின் நைத்திரேற்றத்தின்போது ஒே உருவாகிறது. பென்சீனின் C-H பிணைப்புக்க ஒரு சான்ருகும். செறி. நைத்திரிக்கமிலம், ெ
னியமயனத் (NO) தரும்
十 ۔۔۔۔ ہن--سے۔- HNO + 2H, SO HO + 2H
بسفه س--سه 44
நைத்திரோனியமயன் பென்சீனுடன் பின்வரும்
+ மந்தமாக + H
C H NO + H. So

tution Reactions) டுபடும். உ-ம்.
NO +H, O (நைத்திரேற்றம்) ந்திரோ பென்சீன்
H SO H + H. O (சல்பனேற்றம்) சல்போனிக்கமிலம்
Cl -- HCl (5GBTTTířG360T sib mph) ாாரா பென்சீன்
S H R -- HCl (Sofiev-Sgrmt" * sy fib6opas
லேற்றம்) ற்கைல் பென்சீன்
COR + HCI (பிரிடல்-கிராப்ட் ஏசைலேற்றம் கீற்ரேன்
நீரற்ற وس- - - - - - - - - - - ( این مس - الالاDل لاله)
குப்பிரசு குளோரைட்டு + நீரற்ற AICl 3
C6 H CHO -- нс1 (கற்றமான் தாக்கம்)
ஐதரசனணு பிறிதொரு அணு அல்  ைது தைக் கவனிக்கலாம். இத்தாக்கங்கள் மூலம் கப்படலாம். இத்தாக்கங்களின் பொறிமுறை த்தின் பொறிமுறை நுட்பத்தை நுணுக்கமாக
ர்ேயொரு ஒர் நைத்திரோ பெறுதி மட்டுமே
ள் யாவும் ஒரே விதமானவையென்பதற்கு இது சறி சல்பூரிக்கமில முன்னிலையில் நைத்திரோ
Massad -- SO + NO
முறைப்படி, தாக்கமுறும். விரைவாக
asser se == grido Ο (ー) Hso 3’؟؟
7 )

Page 30
○
6 5 چــمه ” وهناك
ADaP)
இடைநிலையில் பென்சீன் வட்டம் ஒரு றே திரன் தள்ளும் கூட்டங்கள் (உ+ம்: CH. 1 பென்சீன் சேர்வைகள் இத்தாக்கத்தை ஏவும். p+; (SO3 H; NO2 : CHO;CO2 H; CON இத்தாக்கத்தை மந்தமாக்கும். ஆகவே முன்னை
வும் பின்னையவை ஏவலகற்றும் கூட்டங்கள் எ
ஏவற்படுத்தும் கூட்டத்திற்கு ஒத்தோ, ப கூட்டம் இணைக்கப்பட்டால் இவ் இடைநி3 தொலுயீன், பீனுேல் போன்ற சேர்வைகள் : மாகத் தரும்,
واي .
hSo 令 WANO ao
6) ஆா شکرو
ஒத்ே
(2

No, No وNo
།
ܕܟ
டநிலையின் பரிவுக் கட்டமைப்புகள்.
நர் ஏற்றத்தைப் பெறுகிறது. ஆகவே இலத் NHCOCH, NH OCH ) A&DIOTÅG, Ủul l
இலத்திரனிழுக்கும் கூட்டங்கள் H2 : CN) பென்சீனில் இணைக்கப்பட்டிருப்பின் ாய கூட்டங்கள் ஏவற்படுத்தும் கூட்டங்கள் என “னவும் அழைக்கப்படும்.
ரா இடத்தில் பென்சீன் கருவில் நைத்திரோ,
லகள் உறுதியாகவிருக்கும். இக்காரணத்தால் ஒத்தோ, பரா நைத்திரோ விளைவுகளை அதிக
. Գեց s t," t
M
no
e
Noa
தா நைத்திரோ பரா நைத்திரோ தொலுயீன் தொலுயீன்
8)

Page 31
“OA
fo + গুস্কারে wbies —
 ேேல்ை
ଦୃଢ଼ ? கைத்திரே
நைத்திரோ பென்சீன இங்கனம் நைத்தி ேேன முக்கிய விளைபொருளாகப் பெறப்படும்
No.2
SÒ ઉો - A Nos ہ
கைத்திரே கூபன்லீக்

,守 S. otA
),
NO2 O" ( 92**"nل. 6%n(
ேேறல் ஒ%த்திரோ
பீகுேல்
Iரேற்றம் செய்ய, மெற்ரு நைத்திரோ பென்
ኛ°, ቸ• t
ØYN N ' N
令 N
O. C) ': * IŲ
2.
N.
-ཀྱཆོ༠༡༡ ის02) இடைநிலைகள்
\ NO
மற்ற லர் கைத்திரோ பைன்சீன்
29)

Page 32
மெற்ரு ஈர் நைத்திரோ பென்சீன் ஒத்ே கள் 11 இலும் II இலும் இலத்திரனிழுக்கும் இணைக்கப்பட்டிருத்தலால் இவ்வுறுதியற்ற இ கடினம்
பயிற்சி - 5
1. பெரிக்கு புரோமைட்டு முன்னிலையில் பு
நடக்குந் தாக்கத்தை விபரிக்க,
2. சரியான விடையைக் குறிக்க:
அ. CH ஐ உறுப்பு விகித குறியீடாக 1 பென்சீன், r எதீன், ‘I ெ
3. நீரற்ற AIC1ஐ முன்னிலையில் மீதொட்சி
நனம் தாக்கமுறும்.
வயிற்சி - 5 செய்முறையும் விடையும்,
*
1. F,B、 • 31, X ۴ 8 al es
* ء ۃ
f-ზ“-ბ* + (6) -
ஒத்தோ, பரா விளைபொருள்களைத்தரும் நேரேற்றத்தைப்பெறும் காபனணு இலத்திரனி டிருப்பதால், தாக்கம் மெற்ரு விளைபொருளை(
2 - i)
(3

தா, பரா விளைபொருட்களைத் தரும் இடைநிலை NO2 தொகுதி நேரேற்றமுள்ள காபனுக்கு டை நிலைகள் மூலம் தாக்கம் நடைபெறுவது
ரோமீனுடன் நைத்திரோ பென்சீனச் சூடாக்க
(அனுபவ குத்திரமாக)க் கொண்டது. தாலுயீன் IV 1, 4-இருமீதைல் பென்சீன்
பென்சீன் அசற்றைல் குளோரைட்டுடன் எங்
é.*
NÓ
d G a wo 68چ- Q, J - (Spg:"****
egaeos `6 I ` ቋጨምን“9 “ኣ¢ዓባ . a F. ه e 6 go Mustšo
இடைநிலைகளின் பரிவுக் கட்டமைப்புக்களில் விழுக்கும் நைத்திரோ தொகுதிக்கிணைக்கப்பட் யே அதிகந்தரும்.

Page 33
CH, Co C@ * Ae ce, S
ος M 3
3. (ó) る t s
நைலோன்’ பிறந்த கதை
நைலோன்" என்ற இரசாயனக் கூட் aurf sy 3Dfák srt. figuurTrtå (N. Y.) øy ஆங்கிலேயர். இலண்டனை (Lon.) தலைநக கண்டுபிடித்த இரசாயனப் பொருளுக்குப் கவும் நல்லதொரு உத்தியைக் கையாண்ட நகரங்களின் கருக்கங்களைச் சேர்த்தனர் -

v 6 + ک
AN u )2( ومع هة؟ 宁 C A ce. M
cocia Ae ce, . . . Ao Mo OC وبگاه
co
ܨܠܐܘܘܘܵ
டினைத் தயாரித்தோர் இரு விஞ்ஞானியர் ஒரு மெரிக்காவின் பெருநகரம். இரண்டாமவர் rாகக் கொண்ட இவரது நாடு. இருவரும் பெயர் சூட்டும் பிரச்சினை இலகுவாகத் தீர்க் னர். இருவரது நாட்டின் புகழ்மிக்க இரு NYLON - நைலோன் உதித்தது!

Page 34
இலங்கையின் . கைத்தொழிலும் அ கார்த்திகேசு குபாலன் B, A,
யாழ்ப்பர்னப்
ஒருநாட்டில் உள்ளவர்கள் பிறநாடு களுக்குச் சென்றும் அந்நாட்டுக்குள்ளேயே பிற இடங்களுக்குச் சென்றும் புதியபிரதேசங் கள் எழில்மிகு காட்சிகள் வேறுபட்ட பிர
தேசங்களில் வாழும் மக்களின் பண்பாடு
போன்றவற்றை கண்டு கழிப்பதுடன் புதிய
அனுபவங்கள் அறிவினைப்பெற்றுக் கொள் வதே உல்லாசப் பயணத்தின் முக்கிய நோக் கங்களாக உள்ளது. இத்தகைய நோக்கங் களைப் பிரயானத்தின் மூலம் மறைமுகமா கவோ நேரடியாகவோ உணர்த்துகின்ற படி யால் உலகெங்கும் உலலாசப்பயணத்தை ஒருதொழிலாகக் கருதி அரசுத்துறையும் தனியார் துறையும் முக்கிய கவனமெடுத்து ஊக்கமளித்து வருகின்றனர்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தான் இத்துறை வளர்ந்துள்ளபோதும் அன் மைக் காலங்களில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இத்துறையின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியுள்ளனர். அட்டவனை 1ன் படி 1966ம் ஆண்டு உலகில் முக்கிய மான நாடுகளுக்குச் சென்ற உல்லாசப் பய னிகளின் தொகை பின்வருமாறு,
நாடு பயணிகள் (மில்) e . 355 ஸ்பெயின் 15.8 இற்ருலி 翼品。品 prnreiveňo 8.2 அவுஸ்ரேலியா 70 இலங்கை 0.02 சுவிற்சலாந்து 59 யூகோசெலாவியா 3.4 யூ. கே. 3.2 யு. எஸ். எஸ். ஆர் .. 4 இந்தியா 0.4
(3

ல்லாசப் பயணக்
தன் எதிர்காலமும் Hons (Ceylon) estfayanpur 6tti. பல்கலைக்கழகம்.
2)
கனடாவே உலகில் பெருமளவு உல்லாச பயணிகளை கவரும் நாடாகும் இவர்களில் 70 l க்கு மேற்பட்டோர் U.S. Aயில்இருந்து செல்வார்களாகும். எனினும் U.S. A யின் மொத்த தேசிய வருமானத்தில் 6*/. உல்லா சப் பயணத்தின் மூலம் பெறப்படுகின்றது. சென்ற சில ஆண்டுகளாக அபிவிருத்திய டைந்த நாடுகளில் உல்லாசப் பயணிகள் அபி விருத்தியடைந்து வரும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளைச் சென்றடைவதை உதா ரணமாகக் கொண்டு அறியலாம். எனவே இந்நாடுகளில் அரசு அந்நிய செலவாணியைச் சம்பாதிப்பதன் பொருட்டும் தேசிய வருமா னத்தை பெறும் நோக்கத்துடன் இத்துறை யில் ஒருநல்ல வாய்ப்பினை ஏற்படுத்த தவற வில்லை. 1970-ம் ஆண்டு உலகில் கிடைத்த மொத்த வருமானத்தில் 80*1. மான பங்கு அபிவிருத்தி அடைந்த நாடுக ள் பெற்ற போதும் இவ்விகிதாசாரம் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது. உதாரணமாக இந்தியாவின் வருமானம் உலக வருமானத் தோடு ஒப்பிடும்போது 1970-ல் 0.297). மாக இருந்தது ஆணுல் 1976-ல் 11. மாக அதிக ரித்துள்ளது. இலங்கை உலக வருமாணத்தில் மிகச்சிறிய பங்கையே பெற்ற போது ம் வளர்ச்சி வீதம் அதிகமானதாகும்.
புவியியலும் உல்லாசப் பயணமும்.
உல்லாசப் பயணத்துறையின் நவீன அபி விருத்தி புவியியலாளர்கள் பொருளியலாளர் கள் சமூகவியலாளர்களின் கவனத்தைப் பெரி தும் கவர்ந்துள்ளது. பின்னிருவர்களின் கவ னம் அவர்களது வருகையினுல் பெறப்படும் அந்நியச் செலாவணி சமூகப் பழக்கவழக் கங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக

Page 35
இருக்க புவியியலாளர்களின் கருத்து வேறு பட்டதாக அமைந்து இருக்கின்றது?
நவீன பொருளியலின் ஒழுங்கு பாட் டினை வரையறுக்க முற்படும் போது இயக்க சுற்ருடலையும் குடியிருப்புகள் குடிப்பரம்பல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இருக்கின்றமையால் அவற்ருேடு தொடர் புடைய உல்லாசப் பயணத்தை புவியியல் அடக்கப்படவில்லை எனக் கூறமுடியாது. அதாவது உல்லாசப் பயணிகள் செல்லும் பகுதிகள் அப்பகுதி மக்களின் பண்பாட்டு நிலைமைகள் உல்லாசப் பயனாக் குறையோடு நெருங்கிய கொடர்புடையது. எனவே உல் லாசப் பயிணிகளின் மதிப்புக்கும் திருப்திக் கும் இடையிலான ஈடுபாட்டை பரிசோதிப் பதற்கான ஒரு அடிப்படை பங்கு புவியியலுக் குரியது. அத்துடன் இதன் தோற்றப்பாடு நிலத் தோற்றத்தின் அமைப்பு முறை. பாது காப்பு, உபயோகம் ஆகியவற்றுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. அதாவது இருப்பிடங்கள் கட்டிடங்களை அமைத்தல் நிலத் தோற்றத்தை அழகுபடுத்தல் தேசிய பூங்காக்களை நிறுவுதல் இயற்கைச் சேமிப் புக்களை ஒழுங்குபடுத்திக் காத்தல் போன்ற பல்வேறு அம்சங்களுடன் தொடர்புகொண்ட தாக இருப்பதால் புவியியலுடன் தொடர் புடையதாகின்றது.
இக்கைத்தொழில் உள்நாட்டு சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடையதாகும் ஆகவே இது பொருளாதாரப் புவியியலுக் குட் படுத்தப்பட்டுள்ளது, (Boach) என்பவ ரது கருத்துப்பட பொழுது போக்குடன் தொடர்புடைய சிக்கலான உல்லாசப் பய ணத்துறை பொருளாதரப் புவியியலில் நல்ல கரமான ஆராச்சித்துறையை உண்டாக்கும் ஒன்ருக உள்ளது என்கிருர்.
அத்துடன் சமூக கலாச்சார விளைவுகளை நாடுகளுக்கிடையே ஏற்படுத்திவிடுகின்றது. அரசியல் பிரிவினைக்குள் அகப்பட்டுள்ளள உலக மக்கள் அரசியல் பிரிவினைக்குஞ் அகப்
(3:

பட்டுள்ள உலக மக்கள் கலை கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விளைவுகளை பரஸ்பரம் அறிந்து கொள்ளக் கூடிய நிலைகள் இவ் உல் லாசப் பயணக் கைத்தொழிலையும் பிரித்து ஆராய்வது அழகன்று. உல்லாசப் பயணி வரைவிலக்கணம்
உல்லாசப் பயணம் என்பதற்கு சரியான விளக்கம் அவசியமாகின்றது. 1963ம் ஆண்டு ஐ. நா உல்லாசப் பயணிகள் பிரயாண சம் பந்தமான மகாநாட்டில் கொடுக்கப்பட் டுள்ள விளக்கம் 1968ம் ஆண்டு ஐ. நா. பள்ளிவிபரப் பகுதியிஞல் சிறுமாறுதலுடன் வெளியிடப்பட்டது. அதாவது வருகை தரு பவர் (Visitor) என்பது ஒரு நாட் டு க்கு வருகை தருகின்றவரைக் குறித்து நிற்கின் றவரைக் குறித்து நிற்கின்றது. அதைவிட வருகை தந்த நாட்டினுள் ஊதியம்பெறு கின்ற தொழிலைக் தவிர்ந்த ஏதாவது கார ணத்திற்காக தனது இருப்பிடத்தை அவர் கள் அங்குகொண்டு இருத்தல் வேண்டும்.அத் துடன் வருகைதரும் நாட்டில் 24 மணித்தி யாலங்களுக்கு மேல் தங்குபவர்கள் இவ்வகை க்குள் அடங்கும் என வே இவ்வகைக்குள் அடங்குபவர்களே உல்லாசப் பயணிகள் என வும் இவர்களால் பெறப்படும் வருமானமே உல்லாசப் பிரயாணத்தால் பெறப்படும் வரு மானம் எனவும் கொள்ளலாம்,
இக்கைத்தொழில் சில நோக்கங்களைக் கொண்டமைகின்றது. w 1. சந்தோசமாகக் காலம் கழிப்பதற்கு வரு பவர்கள் ( இதில் தேகாரோக்கியத்தை கருத்திற் கொண்டும்) 2. சர்வதேச மகாநாடுகள் கருத்தரங்கு
களுக்கு வருபவர்கள். 3. வியாபார நோக்கத்தினை கருத்திற்
கொண்டு வருபவர்கள். 4, 24 மணித்தியாலங்களுக்கு குறைவாக இருந்தாலும் கடல் மார்க்கமாக வருப வர்கள் உல்லாசப் பயணிகளாக கருதப்
படுவர் {}
தொடரும்

Page 36
ஊற்று (1978), 6, (5) பக். 34-38
. 74.
75.
76.
77.
78.
79.
80.
8.
82.
83.
84.
85.
86.
சித்த 6ை
ஒரு நூல் வி
சி. முருகவேள், நூலகம் கண்ணப்பர், ஏ. శి*
மனித உறுப்புகளில் மூலிகைகளின் குழு யீடு, 1970, 32 பக்.
கண்ணப்பர், ஏ. ஆர்
நம்நாட்டு மூலிகைகள். வேலூர், 1966
நோயும் மருந்தும். வேலூர், மூலிகைம
புகழ் பெற்ற மூலிகைகள். வேலூர் மூலி
mons = samur amma num= n */
விஷ ஜந்துக்களும் மூலிகைகளும. 2-ம் வெளியீடு, 1969, 18 பக். கண்ணுசாமிப்பிள்ளை, சி சிகிச்சாரத்னதீபம். பகுதி 2 வைத்திய நாயகர் அன் சன்ஸ், 24, 263 பக். கண்ணுசாமிப்பிள்ளை, சி சிகிச்சாரத்னதீபம் என்னும் வைத்திய சன்ஸ் 1957, 4, (4) 315 பக்.
a o s es « X e a «» es vs 4 y se es a es o
சித்த வைத்திய பதார்த்தகுண விளக்கப்
1967 - 68, 2 தொகுதிகள்.
கண்ணுசாமிப்புரம்பரை வைத்தியம். ெ 19? 4, (1), 381 பக்.
கண்ணுசாமியம் என்னும் வைத்திய சே சன்ஸ், 1921, VIII 144 பக். கணபதி ஐயர், எண் கே தமிழ் வைத்தியம், கலைமகள், தொகுதி கந்தசாமி முதலியார், சேதுரங்கபட்டின ஆத்மரட்சாமிர்தம் என்னும் வைத்தியக் பி. இரத்தினநாயகர் அன் சன்ஸ், TV. கந்தசாமி முதலியார், சதுரங்கபட்டின. உணவு மருத்துவம், 3ம் பதிப்பு சென்ை
( 3

வத்தியம் தொடர்ச்கி பரப்பட்டியல் ம், பேராதனை வளாகம்
ணுதிசயங்கள் வேலூர், மூலிகைமணி வெளி
-70, 5 தொகுதிகள்
ணி வெளியீடு. 1968 - 70, 2 தெர்குதிகள்
கைமணி வெளியீடு, 1970. தொகுதி
பதிப்பு, வேலூர், வா. ஆ. மா, மூலிகைமணி
சிந்தாமணி, 5ம் பதிப்பு சென்னை, இரத்தின
நூல். சென்னை, பி. இரத்தினநாயகர் அன்
b. சென்னை இரத்தினநாயகர் அன் சன்ஸ்,
சன்னை, பி. இரத்தினநாயகம் அன் சன்ஸ்,
கரம். சென்னை, பி. இரத்தினநாயகர் அன்
10:55, ஜுலை, 1936, பக், 28 - 34
Tub - Fார சங்கிரகம் பதினெண் சித்தர், சென்னை,
565 .
b. ன, பாரி நிலையம் (1965) XXV 197 பக்,
4)

Page 37
87.
88.
89.
90.
'9 1 .
92.
93.
94,
95.
96.
97.
98.
99.
100.
கந்தையா, என் சித்த ஆயுர்வேத மருந்துகளின் ஆராய் பற்றி வைத்தியர்களின் கருத்து என்ன? ஜ"ன், 1971 (தமிழ் பகுதி) பக். 4-5.
சித்த மருந்துகளின் ஆராய்ச்சிகள். ஆயு 1970 (தமிழ் பகுதி) பக். 10-11.
சித்த திரவிய குண விஞ்ஞானம். ஆயுர் கழி 1939. பக். 43-50.
சித்த திரவிய குண விஞ்ஞானம், ஆயுர்
1970. பக். 54-55,
சித்த திரவிய குண விஞ்ஞானம். ஆயுர்ே (தமிழ் பகுதி) பக். 12-15.
காய சிகிச்சை பற்றிய விளக்கம். ஆயுர்( 1972. (தமிழ் பகுதி) பக். 13-15,
பாம்புக்கடி விஷத்திற்கு நீலகண்டக் குவி ஆயுர்வேத பிரதீபிகை, தொகுதி 2, இல.
தாது வர்க்கமும் இரசமும், ஆயுர்வேத . (தமிழ் பகுதி) பக். 7-11. கருவூரர் நொண்டி வாதகாவியம், 700.
பதிப்பித்தவர் த. குப்புசாமி நாயுடு, 6
1959, 80 பக். *
கருவூரர் தொண்டி - கருவூரர் நொண்டி என்னும் வாத காவி இ. இராமகுருசாமிக்கோனர், பூரீ இராம
கருவூரர் நொண்டி என்னும் வாதகாவிய 4-ம் பதிப்பு, மதுரை இராமச்சந்திரகோ கல்யாணராமன், எஸ் சித்தர் போக மூலிகை விஞ்ஞானம். ெ 84 பக்.
சித்தர் காரசார ரசாயன விஞ்ஞானம். 1969, 2, ХVI, 95, 1 ша. கனகரத்தினம், ஏ கிராணி-கிரகணி ரோகம். ஆயுர்வேத шф. 32—34.
(3

ச்சி எவ்வண்ணம் அமைதல் வேண்டும். இது ஆயுர்வேத பிரதீபிகை, தொகுதி 3 இல.1
ர்வேத பிரதிபிகை, தொகுதி 2, இல, 1 ஜூன்
வேத பிரதீபிகை, தொகுதி 1, இல, 2 மார்
வேத பிரதீபிகை, தொகுதி 1, இல, 4 மார்ச்
வத பிரதீபிகை, தொகுதி 2, இல. 3,டிசெம்.
வேத பிரதீபிகை, தொகுதி 2 இன. 4, மார்ச்
ரிகையும் அதன் அளவில் காணும் மயக்கமும் 2. செப்டெம். 1970 (தமிழ்ப்பகுதி) பக்.7.9
பிரதீபிகை, தொகுதி 3, இல. 3, டிசெம்.1971
ம் பதிப்பு, மதுரை, ஜி. இராமசாமிக்கோஞர்
பம். பதிப்பித்தவர் பாலசாமியர், மதுர்ை,
ச்சந்திர பிரஸ், 1931, 99, 8 பக்.
பம் 700, மூப்பு (?) குஸ்த்திரம் 30 சேர்ந்தது. னர், 1967, 104 பக்.
சன்னை, நாட்டு மருத்துவக் கழகம், 1970 V11
(மருந்துவர்க்கம்) சென்னை, குமரன் பிறஸ்,
பிரதீபிகை, தொகுதி 1, இல, 2 செப். 1969
5)

Page 38
Ol.
02,
03.
04
I 05。
06
07.
ካ08.
109.
10.
111.
12,
113.
A.
1 5.
காசி செட்டி, சைமன் மலை அகராதி. சென்னை, 1844. Lud.
காசிநாதன், கே
சித்த மருத்துவம்; கலைக்களஞ்சியம். ெ குச்சம்மா, (புண் பெயர்)
குடும்ப வைத்தியம். சென்னை, சுதேச
jáš.
குணரத்தின்ம், டி குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்தம். இ படும் கருத்துக்கள். ஆயுர்வேத பிரதீபி பகுதி) பக். 16-21.
குப்புசாமி முதலியார், கே. என சித்த் மருத்துவம். பகுதி 1. சென்னை, ஆ
சித்த வைத்தியத்திரட்டு விளக்கத்துடன்
1957. ii, ii, i 30 duš. குமாரசுவாமி ஆசாரியார், எஸ். ஏ. கி திய ரத்ன வசன பூஷணம். சென்னை, கொங்கணர் சரக்கு வைப்பு 100. பதிப்பித்தவர் கே. வாசுதேவ சாஸ்த்திரி வதி மஹால், 1951.xxi, 27 XXXXiv பக் கோரக்கர் - மலைவளம் என்னும் மலை வாகடம். சுந் கிணங்க, 3-ம் பதிப்பு, மதுரை, ஜி. இரா கைலைநாதன், வடிவேலு ஆயுர்வேதத்தில் குறிப்பிட்ட அக்கினிய மார்ச். 1971. (தமிழ் பகுதி) பக். 7-9 கெளமுதி நூல் 400. பதிப்பித்தவர் த. குப்புசாமி நாயுடு, ம ச்சந்திரப்பிரஸ், 1935, 102 பக். சட்டமுனி நாயனர் நிகண்டு 200: திருவெங்காடு ஆறுமுக ஏ. தீனதயாளு முதலியார், பூீ ஆதிமூல சண்முகசுந்தரம், எஸ் தமிழும் தாவரமும், தென்காசி, (1970
சண்முகநாதன், வி சித்த மருத்துவமும் சித்தரும். ஆயுர்வே 1971. (தமிழ் பகுதி) பக். 10-12. சண்முக முதலியார், கே பச்சிலை மூலிகை அகராதி. சென்னை,
( 3

சன்னை, தொகுதி 4, பக். 642-643.
மித்திரன் புத்தகசாலை, 1957. VI. (1) 272
துபற்றி தமிழ் மருத்துவ நூல்களில் காணப் கை, தொகுதி 2, இல. 3, டிசெம். 1970. (தமிழ்
ஆராய்ச்சியாளர் அச்சகம், 1954. LXXX 545பக்
ா. 2-ம் பதிப்பு. சென்னே, பூரீ ரங்கநாதர்பிரஸ்
ருஷ்ணசுவாமிப்பிள்ளை. பி. ஏ. ஆகியோர் வைத்
மனோஞ்சனி பிரஸ், 1929, 176 பக்.
யும் எஸ். வெங்கடராஜனும், தஞ்சாவூர், சரஸ்
· ·
தரமகாலிங்கம் மேற்கோள் எழுதிய பிரதிக் "மச்சந்திரகோனுர், 1968 138 பக்
ாது?ஆயுர்வேத பிரதீபிகை, தொகுதி 2, இல.4
துரை இ. இராவகுருசாமிக்கோனுர், பூரீ இராம
சுவாமியால் பார்வையிடப்பட்டது. சென்&ன Nub Sürəsi, 1927.- 183 sualk.
), :2), 218 La
த பிரதீபிகை, தொகுதி 11, இல, 4, மார்ச்,
Sepois grab, 1950, 95 i Lua.
6)

Page 39
6.
7.
8.
119.
20.
21.
122.
23.
辽24。
I 25。
26.
சதானந்த சுவாமிகள் சந்தான இரத்தினம், இராமபத்திர ணம் சோதிட பிரகாச பிரஸ், 191 சதானந்தம், பதிப்பாசிரியர் பெரியஞானக்கோவை. GSF 67 år, s சந்திரசேகரம், சி. வ. சித்த மருந்துகள் சிலவற்றின் திரவிய
6. I, l969. it, 57-65. சம்பத், ஜி. எஸ். இந்திய மருத்துவ முறையை உயர்த்தி தொகுதி 87, 5 18, பெரு 1975, լյ: சம்பந்தன், வி வினராஜ தைலம். ஆய்ர்வேத பிரதிபு பகுதி) பக். 14-16. சரபேந்திர வைத்திய முறைகள். சன்னி ரோக சிகிச்சை. பதிப்பித்தவர் ஆகியோர், (தஞ்சாவூர் / சரஸ்வதி மஉ
கர்ப்பிணி பலரோக சிகிச்சை . பதிப்பி கடராஜன் ஆகியோர். தஞ்சாவூர், சரஸ்
குன்ம ரோக சிகிச்சை, பதிப்பித்தவர் ராஜன் ஆகியோர், தஞ்சை சரஸ்வதி
நயன ரோகசிகிச்சை பதிப்பித்தவர் ரி. ஆகியோர். தஞ்சை, சரஸ்வதி மஉறால்
நீரிழிவு சிகிச்சை; பதிப்பித்தவர் கே. ஆகியோர். 2ம் பதிப்பு, (தஞ்சாவூர், ச 288, 14 už.
a 8 so ses
பித்த ரோக சிகிச்சை பதிப்பித்தவர் வி
27.
128.
129.
,5Gurri, தஞ்சை, சரஸ்வதி மஉறால்,
பேதி முறைகளும் அதிசார சிகிச்சைய தஞ்சை, சரஸ்வதி 1ρα (Dπου, 1958. XI
விஷரோக சிகிச்சை; 2ம் பதிப்பு தஞ்சை, ΧΧΙV, ιμά, 22.
* * * * * * * * 8 N e es « » ,
ஜ்வர ரோக சிகிச்சை. பதிப்பித்தவர் என
மஉறால், 1953 (5) 336, 8 பக்.
( 37

சர்மா தமிழில் மொழிபெயர்த்தது. யாழ்ப்பா 7. VI. 76, 4, . w
நீர், ஜி. பதி அன் கோ. 1968.
நிருணயம், ஆயுர்வேத பிரதிப்கை, தொகுதி
5ualif. (சப்டன் பூரீ நிவாசமூர்த்தி) கலைமகள், ii. 27-128.
பிகை, தொகுதி 3, • శ్రీg"తూ 197u. (தமிழ்
வி. ஜி. சந்திரன், திருமதி,
*நளினி சந்திரன் -AOmr6) 1962. 8, VIII, 260
üa.
ந்தவர் கே. வாசுதேவ சாஸ்த்திரி, எஸ். வெங் 15 LDo-pri, 1970. XIV, XXVIII., 26o Lua.
கே. வாசுதேவ சாஸ்த்திரி, எஸ். வெங்கட LDD-pirổ) BAT GV35 üb, 1949. CXVIII, 328 பக்,
எஸ். அமிர்தலிங்கம், ள்ஸ் வெங்கடராஜன் ... 1959. XXXI / 17. 225 68 Lá。
வாசுதேவ சாஸ்த்திரி, எஸ். வெங்கடராஜன் ரஸ்வதி மஉறால்), 1963. 2, XLVIII, ? 1,
ஜி. சந்திரன், திருமதி, நளினி சந்திரன் (1963)? 5 i.
*ம் பதிப்பித்தவர் எஸ்.
வெங்கடராஜன், V, XVI, 400 uá.
சரஸ்வதி மஉறால், 1966, 2, 4, 31, 272.
ஸ். வெங்கடராஜன், தஞ்சை, ச ரஸ் வதி

Page 40
130.
131.
132.
133.
134.
፲ 85 .
I36,
137
38.
39.
140.
கடியரோக உளமாந்தை ரோக சிகிச் தஞ்சை, சரஸ்வதி மஉறால்,1956 II, சரபேந்திர வைத்திய ரத்னவலி. பதிப்பித்தவர் ஏ. கிருஷ்ணசாமி மா LXXXI, 561 Lž. சரவணமுத்துப்பிள்ளை, வீ பதிப்பாசிரிய பெரிய ஞானக்கோவை, சென்னை, பி. இ சாமி, வி. என் விஷக்கடி வைத்தியம். சென்னை, கண்ண சிக்கர் ஞானக்கோவை, பதிப்பித்தவர் எம். வி. வேணுகோபால 1947. (2), 808 பக். சித்தன், ஆரூர் நாட்டு மருந்தும் சித்த வைத்தியமும். ெ சிதம்பரதாணுப்பிள்ளை, எஸ் அகால மரண நூல். சட்டவைத்திய நூ (1968). XIV, 153 Uš.
S SSSSSSSSLSSSSLSSSS S L L L L S L L LLLLLL L SS0 0 LLLLL LLLL SLL L L L0 LLL
ஆட்டின் மருத்துவப் பண்பு சென்னை,
கடி விஷ மருத்துவம். சென்னை; சித்தம
காமாளை நோயும் மருந்தும், சென்னை,
குழந்தை மருத்துவம். சென்னை, சித்தப
செயற்கை உலகின் இன்று விஞ்ஞானம் புதுமைகளைக் காணு
கும் ஜப்பானிய விஞ்ஞானியரின் மருத்துவ மாற்று அறுவை சிகிச்சைகளில் அவசியமா இரசாயனக் கலவையாகும். உதாரணமாக, பட்டு இன்னெருவருக்குப் பொருத்தப் படுமு இதில் இவ்வவயம் நன்கு பாதுகாக்கப் பட் அவயமாற்று அறுவைச் சிகிச்சையின் பூரண பிடித்துள்ள செயற்கை இரத்தம் இப்பணி கண்டுள்ளனர். எனவே இவ்வகையான ெ விலும், மேற்கு ஜெர்மனியிலும் விற்பனைக்

ச; பதிப்பித்தவர் எஸ். வெங்கடராஜன், ХVII, 156 i Jói.
க், தஞ்சை, சரஸ்வதி மஉறால், 1965.
行。 ரத்தினநாயக்கர் அன் சன்ஸ், 1949,
கி பதிப்பகம், 1965. 176 பக்.
ப்பிள்ளை, எம். ஆர். அப்பாத்துரைப்பிள்ளை,
Fன்னை. பாலாஜி பதிப்பகம், (1970) 144 பக்,
ஸ், 2ம் பதிப்பு. சென்னை, சித்தமகுட பிரசுரம்
சித்தமகுட பிரசுரம், 1975, 37 பக்.
குட பிரசுரம், 1974, 26 Lud.
சித்தமகுட பிரசுரம், (1968), WI 38 பக்.
குட பிரசுரம், (1969), XV, 85 Luš;.
ா புதிய படைப்பு றுவதில் முன்னணிக்கு வந்து கொண்டிருக் சாதனை செயற்கை இரத்தமாகும். அவய ாது, அவயக் களஞ்சியக் சலவை. இது ஒரு சிறு நீரs:ம் ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப் எனர் இக்கலவையில் வைத்திருப்பது வழமை டிருக்கும் தன்மையிலேதான் தங்கியுள்ளது வெற்றி. ஜப்பானிய விஞ்ஞானியர் கண்டு யைப் பரிபூரணமாக நிறைவேற்றுவதாகக் பற்கை இரத்தம் மிகவின்ரவில் அமெரிக்கா க் கிடைக்கப்பெறவுள்ளது!
38 )

Page 41
9 TGJID
இருதய நோயைக் கட்டுப்படுத்த " அதிசய ஒளஷதம்.
உலகிலேயே மனித மரணங்களுக்குப் ே கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நவீன மரு களின் நிமித்தம் "அன்ரூறேன்" என்னும் ஏ அதிசயிக்கத்தகு பெறுபேறுகளைக் கொடுத்து உகந்ததெனக் காணப்படும் பட்சத்தில், அ! கப்படலாம் என நம்புகின்றனர். ஏற்கென மொன்று இம்மருந்தினை பெருமளவில் ஆக் பயனக இம்மருந்து மனித உபயோகத்துக்கு
மேலும் மருத்துவ ஆய்வுகள் தொடர் ஒருவரை அடுத்ததொரு இருதயத் தாக்கத் தகைய பாதுகாப்பு நிலத்து நிற்கும்? இன் வரும் ஆய்வுகள் விடைபகருமென எதிர்பா
கடலிலிருந்து கடைந்தெ பல்லாயிரக்கணக்கான கடலில் வாழும் நிறைந்த மருந்து வகைகளைக் கொண்டிருக் ஞானியர் பலர், இது சம்பந்தமாக தீவிர
மனிதனுக்குத் தீங்கிழைக்கும் வைறகக ளுக்கும் எதிராகத் தாக்குதலில் ஈடுபடக்கூ காணப்படுவதாக இப்பொழுது அறியக் கூட பெறப்பட்ட மருந்துகள் பெனிசிலின் போ யம் மிகுந்தனவாகக் காணப்படுகின்றன. புற்றுநோய் இன்னேரன்ன வியாதிகளுக்கெ துகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இவை பரி தப்பட்டு வருகின்றன. எனவே, மனித மரு ஞானியர் & சாகரத்தை வட்டமிடும் நாள் அ
சூரிய வெப்வத்தினுல் சுருட்டுப் பற் ஜப்பானியரின் மற்றுமொரு கண்டுபிடி ரட் லைட்டர், சாதாரணமாக வாயுவினல் இ சூரிய வெளிச்சத்தில் மட்டுமன்றி குழாய் செய்து கொள்ளலாம், மேலதிக மின்னூட்ட களைக் கொண்டுள்ளது. இதில் சிறிய அளவி உண்டு. எனவே மின்னூட்டமின்றியே சில கொண்டுள்ளது. மின்னூட்டம் செய்துகொ நிமிடங்களுக்கு வைத்திருத்தல் வேண்டும்,

அன்ரூறேன்’ எனும்
பெரும் காரணியான இருதயத் தாக்கத்தினைக் }த்துவ விஞ்ஞானியர் மேற்கொண்ட ஆய்வு ாற்கெனவே உபயோகத்திலிருக்கும் மருந்து ள்ளன. இதன் உபயோகம் இருதயநோய்க்கு நனல் மரிப்போர்தொகை பாதியாகக் குறைக் வே அமெரிக்க ஒளஷதக் கூட்டுத்தாபன கிக்கொண்டிருக்கிறது. இவர்களின் ஆய்வின் 3ம் பாதுகாப்பானதெனக்கண்டுள்ளனர்.
ந்து கொண்டேயிருக்கின்றன, ‘அன்ரூறேன் திலிருந்து காப்பாற்றுமா? எதுவரை அத் னுேரன்ன பலவாருன வினுக்களுக்கு நிகழ்ந்து fuJGurt tib.
Science Reporter (1979) 16 (1)
டுக்கப்படும் மருந்துகள்
உயிரினங்களுட் பல, நற்குணதிசயங்கள் கலாம் என நம்பிய நவீன மருத்துவ விஞ் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ளுக்கும், காளான்களுக்கும், பற்றீறியாக்க டிய சக்திகள் நிறைந்த உயிரினங்கள் கடலிற்
டியதாயிருக்கிறது. கடலுயிரினங்களிலிருந்து
ண்ற சக்திமிகு மருந்துகளிலும் பார்க்க வீரி நீரழிவு, இருதயநோய். இரத்த அமுக்கம், திராகச் செயற்படக்கூடிய சக்திமிகு மருந் சோதனை நிலையங்சளில் ஆய்வுசட்குட்படுத்
ந்துத் தேவைகட்கு நவீன மருத்துவ விஞ்
ண்மித்து விட்டதென்றே கூறவேண்டும். Science Reporter (1979) 16, (1)
றவைக்கலாம்.
பு சூரிய வெப்பத்தில் இயங்கக்கூடிய "சிக
யங்கும் இந்த உபகரணம் (காஸ் லைட்டர்) விளக்கு வெளிச்சத்திலும் மின்னூட்டம் த்தைத் தடைசெய்யவும் சீரான அமைப்பு லான "ஸில்வர் ஆக்ஸெடு" பாட்டரியும் மாதங்களுக்கு இயங்கும் தன்மையினையும் ள்ள இதனைச் சூரிய வெளிச்சத்தில் ஐந்து
39 )

Page 42
A/CC
க. பொ. த. உயர்தர இர
G. I.
தற்போது விற்பனைக்கு
கலாநிதி செல் இரசாயனக்
கிடைக்குமிடங்கள்:
பஸ்தியன் புத்தக விற்பனையாள பூரீ லங்கா புத்தக விற்பனையா6 ரத்னு புத்தக விற்பனையாளர், விஜயலட்சுமி புத்தக விற்பனைய கலைவாணி புத்தகசாலை
ஏனைய பிரபல்ய புத்தகசா
மேலும் விற்பனைக்குள்ளது.
அதே ஆசிரியரின்,
பெளதிக இர
 

FTU 6 T ID 6 ர்கட்கு
வெளிவந்துள்ளது.
வரத்தினத்தின்
கணிப்புகள்
rrif, யாழ்நகர்
πή", யாழ்நகர்
மலே வீதி, கொழும்பு
பாளர், srraš) வீதி, கொழும்பு
கண்டி. "லைகளிலும் கிடைக்கும்.
Tu IGOILÎ.

Page 43
O o ) 66)-
புதுப்பொலிவு: 'ஊற்று" பெருக்கெடுக்க ஆர ஏழாவது ஆண்டை அருகுகிறது. நிதிநிலை யினை 'ஊற்று" வாசகநண்பர் நன்கு அறி விலையுயர்ந்திருப்பினும் வாசக நண்பரின் பெருகி வருவதும் பேரானந்தத்துக்குரியே பணித்த அருமையான சேவைகள்--கலை வி யுதவிகள் -அனைத்தும் ஈழம் ஈன்றெடுத்த வளர்க்க ஏதுவாயின. இருந்தும் விகலை ே வைத்த அச்சேற்றும் பணி பல சோதனை வினைகளை விட்டெறிந்து வீறு நடைபோடு அன்பு மேலீட்டினுல் " அறிவியலேடு அகி எனவேதான் புதிய பொலிவுடன் மிளிர்கி வேமுகாதே! தமிழிற் கலைச் சொற்கள்: சங்கம் வளர்த்த
வறுமையுருது. இற்றைக்கு நூற்றைம்பது கிறீன் வைத்தியர், தமிழ்கற்று-தமிழிலே -இலங்கையின் முதல் மருத்துவக் கல்லூ மாக இன்றும் விளங்குகிறது மாணிப்பாய் றிய பெரியார், எமது மொழியின் தொல் வியல் வளர்ந்திட்ட தன்னிகரில்லாத் தமி ஏற்பட்டதன் காரணமெதுவாயிருப்பினும் யுள்ள கலைச் சொல்லகராதி இயற்றிட வ ராதிகளில் காணப்படுவனவற்றில்-வேற்று யையே கருத்திற்கொண்டு தமிழ்ப் பிரயே வியல் வளர்ச்சிக்கு வழங்கும் மாசற்ற ெ ந்து இப்பணியை மேற்கொள்ள அறிவியலா
தனித்தியங்கும் பல்கலைக்கழகம்: நற்றமிழ் வாகிறது. தமிழ்மொழி, தமிழர் கலாசா அடிக்கல் எமது முதற்கண் அறிவியற்கூட கம். எங்கள் சந்ததியர் வந்தனைசெய்து ! களிலிருந்தும் மேலோர் கூறும் அறிவுரைக கப்பெற வேண்டியிருப்பதே எமது கலைக் பார்த்திருக்கும் அருமையான சந்தர்ப்பபே மெத்த மகிழவைக்க வந்திட்டார் வித்திய தட்டிக் கதைத்திட, கருமமே கண்ணுக தமிழ் பெருமக்கள் தமிழன்னையின் அபில வித்தைகள் அனைத்தினையும் அடைய விதி லிற்கிட்டும் - என்றே தமிழ் நெஞ்சங்கள் தொகுப்பாசிரி

"ம்பித்து ஆறு ஆண்டுகள் ஒடிமறைந்து, இன்று நிதமும் நேர்த்தியாயில்லாததால் நேர்ந்த கதி வர். இதன் நிமித்தம் 'ஊற்று" பிரதியின்
பேராதரவு நிலைத்து நிற்பதோடன்றி அது த. "ஊற்றின் தொண்டர் அனைவரும் அர்ப் பிற்பன்னரின் கருணை-வியாபார வேந்தரின் நிதி
ஈடு இணையிலா அறிவியல் ஏட்டினை ஒங் கி 'வறுபாடுகளால் வாசக நண்பரை வின எழுப்ப கள் காட்டி வேதனை தந்தது, இன்னுேரன்ன ம் 'சிரித்திரனை" ஈன்ற சுந்தர், ஈழத்தாயின் லப் புகழேந்திட வைத்திடுவோம் ' என்ருர், கிறது "ஊற்று முன்னே பாயுமே யொழிய
தமிழ்-தேனினும் இனிய தமிழ் - என்றுமே ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க மிஷனில் வந்த யே மருத்துவ நூல்கள் பலவற்றையும் வழங்கி "ரியை நிறுவினர், அவரது இலட்சிய சின்ன மருத்துவமனை. பிறிதோர் கண்டத்திற் தோன் ண்மையினை யறிந்து அறிவியல் ஆக்கினர். அறி ழில்தானே இயங்க மறுக்கும் இன்றைய நிலை - நன்நிலை வேண்டி, எம்மவர்கூடி ஒத்த உரை ாராரோ? இன்றைய கலைச் சொற்களில்-அக மை பலஉள. தமிழ் அறிவியலாளர், நன்மை ாகத்தில் ஒற்றுமை காணுதலே தமிழில் அறி தாண்டாகும். தேவையின் அவசியத்தை உணர் ளர் அனைவரையும் கரங்கூப்பி அழைக்கிருேம்.
அறிஞர் கண்டநெடுநாட் கனவு-இன்று நன ரம், பண்பாடு இத்தியாதி வளர்வதற்கோர் ம்-அதுவே எமது யாழ்ப்பாணப் பல்கலைக் கழ நற்சிந்தனை கூறும் காலம் இது. நாலா பக்கங் ள் அனைத்தினையும் அறிந்து-ஏற்றவாறு அமைக் கோவிலாகும். தமிழன்னை ஆவலுடன் எதிர் இதுவாகும். சந்தர்ட் பத்தினைத் தந்தபோது பானந்தப் பெருந்தகை. பெருமையுடன் மார் * கொண்டு தொண்டு செய்யச் சபதம் பூண்ட ாஷைகளை அடைந்திட வேண்டும் - தமிழில் ந்திட்டவர் வித்தியானந்தன் என்ற புகழ் விரை ர் போற்றுகின்றன.
uff:- Linklf oy(3ıp sivaygufi etbıî85rıtı3

Page 44
KD)ESSE39S)KESKSS)ESSESSESS
பித்தளைப் பாத்திரங்க்ள்
கோவில் உபகரணங்கள்
அன்பளிப்புப் பொருட்கள்
எவசில்வர் பாத்திரங்கள்
வன்டேஜ், ஜனதா தேயிை
பஜாஜ் ஸ்கூட்டர்
முதலியவைகள் பெ
யாகவும் பெறுவதற்
9 சிவன் ெ
86 (166) காங்ே
யாழ்ப்பாணம்.
s
A.
3.
åkƏGÐEIÐIEÐGÐGÐESSAGE
கவின் அச்சக
 

○○米●@ら@@米でら○浄■
Dாத்தமாகவும் சில்லறை
0கு
oரோர்ஸ்
கசன்துறை வீதி,
※※※※※※※※洛圈
ம், யாழ்ப்பானம்.