கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1979.05-06

Page 1
உள்ளே.
* பயிர்க் காப்புறுதித் திட்டம்
* சூரியனின் கதிர்களும் அவற்றின்
பிரயோகங்களும்
* மனித உடலும் தொழிற்பாடும்
* மனிதன் என்றெரு விலங்கு
* மனித உடலின் இழையங்கள்
* சேதனவுறுப்பு இரசாயனம்
 

t_A * sh =

Page 2
IN THI
Articles
CROP NSURANCE - A NEED
SOAR RAYS AND ITS USES -
UMAN BODY AND ITS
FINCTIONS
AN ANIMAd CALLBD MAN –
TISSUES OF HUMAN BOD Y -
i ORGANIC CHEMISTRY s
:
:
OOTRU ORI
Administrative Editors: R. Maha! K. Krish
Chief Editor: P. T. Je
Editorial Board: A. Sivar, A. Kandi
S. W. Pa K. K. N. Si Sri Ka
Complying Editor for this issue: S Sri K
Publishers: Administ:
Correspondence Administ

S ISSUE
Authors
M. Sivas 2 ngaran B. A. (Hons)
Mrs. Ui Mahalinga Iyer B.Sc. (Hons) (Eng.)
P. T. Jeyawickrama Rajah M.B.B.S. M. Ed.
S. Sri Kantha B.Sc. (Hons) M.Sc. (Agric.)
N. Sayaloli Bavan
S. Sotheeswaran Ph. D.
GANISATION
linga Iyer Ph, D. nananda Sivam M. V. Sc.
iawickrama Rajah M. B. B. S. M. Ed.
ajah B. A. (Hons,.) M. A. iah M. Se., Ph. D. amesvaran M. Sc, Ph. D. avaratnam B. Sc. Agric (Hons) antha B. Se (Hons) M.Sc. (Agric)
antha
rative Editor
rative Editor "OOTRU’’ Organisation
215, COLOMBO STREET,
KANDY.

Page 3
|ஊற்று :
பிரதம ஆசிரியர்:
G. f. Giggu assiëJ DJ Taq T M. B.1B.S., M.Ed.
நிர்வாக ஆசிரியர்:
இ. மகாலிங்க ஐயர் Ph D.
க. கிருஷ்ணுநந்தசிவம் M. V. Sc.
ஆசிரியர் குழு
on. 36) JTgn B. A. (Hons. ) M. A.
gy & bisu T M. Sc., Ph. D,
er slo. så, uy Gudsiva J sör M. Sc, Pb. 2.
Ga5, 34,56u Jậ596ơI th B. Sc. Agri. (Hons.)
3. gojas Ti55T B.Sc. (Hons) M.Sc. (Agric)
தொகுப்பாசிரியர், ச. பூணீகாந்தா
ஆண்டு சந்தா: ரூபாய் 12-00

றிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் ன்னை மொண்டு செறி தரும் மக்கள் ண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப்
யதோர் உலகம் செய்வோம்
7 4 மே - ஜூன் 1979 ம் இல. 3
★
al
கருத்துரை - 2
ag T6m J b ` v - 3
பயிர்க் காப்புறுதித் திட்டம். முக்கியத்துவமும் தேவையும் - 5 முருகேசு சிவசங்கரம் B. A (Hons)
சூரியனின் கதிர்களும் அவற்றின் பிரயோகங்களும் - 9 திருமதி உ. மகாலிங்க ஐயர், (போதஞசிரியை, பொறியியற் பீடம்
மனித உடலும் தொழிற்பாடும் - 13 பி. ரி. ஜெயவிக்கிரமராஜா,
M. B. B. S., M. EdE
மனிதன் என்ருெரு விலங்கு ബ് 20 ச. பூணிகாந்தா
B. Sc. (Hons.) M. Sc. (Agrig)
மனித உடலின் இழையங்கள் 23 حس நடராஜா, சயலொளிபவன்
சேதனவுறுப்பு இரசாயனம் 27 ܚ கலாநிதி சு. சோதீஸ்வரன்
முகவரி:
ஊற்று நிறுவனம் 215, கொழும்பு விதி: கண்டி

Page 4
கருத்துரை
புத்தர் என்ன நினை
சித்தார்த்தன், ஆசைகளை வென் செய்ததையே போதித்தார்; "வாழும் பே அனைவரையும் அணைத்து அன்புடன் வாழுங்க யின் நிலையற்ற தன்மையை உணருங்கள். பங்களிலும், துன்பங்களிலும் மூழ்கி மூழ்கி அ தருகின்ற நிரந்தரமான நிர்வாண நிலையை இவை பலராலும் பின்பற்றப்பட்டதாலே( இது இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்
இன்று இலங்கையிலே இம்மதத்தை கள் அதனைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபடு னைகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை எ முயற்சி மேற்கொள்ளப்படுமிடத்து, அதனை கையே. w
ஆசையை அடக்கி, அரசபோகத்ை மை நிலையைப் போதித்தவர் புத்தர். அ6 கூறிக்கொள்ளும் அகில இலங்கைப் பெள பெளத்த மதத்தை அரச மதமாக்கும்படி விடுத்துள்ளனர்.
அரசபோகத்தைத் துறந்து புதிய உருவாக்கிய மதத்திற்கு “அரச போகம்"
"பக்த கோடிகளின்" அறியாமையைப் பற்றி
- திரு. ட
வாசகர்களுக்கு:
தவிர்க்க முடியாத காரணங்களால்
வெளிவருவதையிட்டு மனம் வருந்துகிருே
1980ம் ஆண்டிற்குரிய இதழ்களும் தற்பே

Lum fr ?
ர நிலையில் புத்தராகினர். புத்தர், தான் ாது இறைவனின் படைப்புக்களான மக்கள் ள். வாழும் பாதையிலே உலக வாழ்க்கை மாறி மாறி ஏற்படுகின்ற நிலையற்ற இன் றியாமையில் உழலாமல், நிலையான அமைதி
எய்துங்கள்" என்பது அவரது போதனை யே பெளத்த மதம் தோன்றிப் பரவியது.-- னர் இருந்த நிலை.
வளர்ப்பவர்கள் எனக் கூறிக் கொள்பவர் பவரேயாயின், இவ்வரிய மதத்தின் போத ன்பதே தெளிவு. அதே வேளையில் திணிப்பு
மக்கள் வெறுக்கத் தொடங்குவதும் இயற்
தத் துறந்து சென்றே வாழ்க்கையின் உண் வர் போதித்த படியே வழி நடப்பதாகக் த்த காங்கிரசினர். அதிகாரத்தின் மூலம் இன்று ஆளும் கட்சியினரிடம் கோரிக்கை
மதத்தை உருவாக்கிய புத்த பிரான், தான் வழங்கும்படி கேட்கும் இலங்கையிலுள்ள
என்ன நினைப்பார் ?
பத்மநாதன் விவேகானந்தன். B. Sc. (Agric)
காலதாமதமாகி இந்த 'ஊற்று' இதழ்
டிம். 1979ம் ஆண்டின் ஏனைய இதழ்களும்
ாது அச்சில் உள்ளன.
- ஆசிரியர் குழு.

Page 5
JTG|IJsb
உங்களுடைய “ஆபத்து நாட்கள்' (C
"எனக்கு இண்டைக்கு ஒரே களை சரியாயில்லை." "பிளான் எல்லாம் ஒரே அடிக்கடி பலர் பேசிக் கொள்வதை நீங்கள் கள் தம்முடைய உடலின் இயக்க நிலையையே கெடுப்பதில்லை. சமீபகால விஞ்ஞான ஆய்வு
பட்டுள்ளன.
ஒவ்வொருவரின் உடலிலும் மூன்று (biorhythms) தொழிற்படுகின்றன. 60{{9ی( )
(1) 23-நாள் எல்லையுடைய பெளதீக வ
(2) 28-நான் எல்லையுடைய உணர்ச்சி 6
(3) 33 நாள் எல்லையுடைய புத்தி வட்ட
இந்த ஒவ்வொரு வட்டங்களிலும், சரி மற்றப் பாதி நாட்கன் "மைனஸ்'" நாட்களr
உதாரணத்திற்கு,
(1) 23-நாள் பெளதீக வட்டத்திலே, முதல் இவற்றிலே தீவிர உடற் பயிற்சிகள், முயற்சிக வது பாதி 11-112 நாட்களில், நீங்கள் இலகு:
(2) 28-நாள் உணர்ச்சி வட்டத்திலே, முத சுறுப்பாக, உற்சாகத்துடன் முயற்சிகளில் ஈடு களிலே ('மைனஸ்') உங்கள் மனேநிலை திடீ ஏற்படும்,
(3) 33-நாள் புத்தி வட்டத்திலே, முதல் 16தியமுள்ளவர்களாக இருப்பீர்கள். தொடரு ஒப்பீட்டளவில் செயலற்ற மட்டத்திலேயே
( 3

தொகுப்பு: சிந்தா ritical days) 6T6 al?
ப்பாயிருக்குது." இண்டைக்கு "மூட் " அப்செற்-நாள் சரியில்லை." என்றெல்லாம் கேட்டிருப்பீர்கள். இவ்வசனங்களிலே அவர் குறிப்பிடுகிருர்கள் என்பதை நாம் கணக் களிலிருந்து கீழ்வரும் உண்மைகள் அறியப்
வேறுபட்ட உயிர் சீர்ப் பிரமாணங்கள் ) list 6NJFJ
LLib (Physicai cycle)
ul. Lib (emotional cycle)
- b (intelectual cycle)
பாதி நாட்கள் பிளஸ்" நாட்களாகவும், ாகவும் அமைகின்றன.
11-1/2 நாட்களும் "பிளஸ் நாட்கள் - ளுக்கு உடல் இடங்கொடுக்கும். இரண்டா விலே களைப்படைவீர்கள்.
ல் 14 நாட்களில் ("பிளஸ்") நீங்கள் சுறு படுவீர்கன். இரண்டாம் பாதி 14 நாட் ர் திடீரென்று மாற்றமடையும் - சலிப்பு
1/2 நாட்களில் நீங்கள் விழிப்பாக, சாமர்த் ம் 16-1/2 நாட்களில் உங்கள் புத்திநிலை இருக்கும்.
)

Page 6
இம் மூன்று வட்டம்களும், நீங்கள் பிற யாவும் "பிளஸ்" நாட்களுடனேயே ஆரம்பி
ஒவ்வொரு வட்டத்திலும், எந்த நாளி *மைனஸ்” பாகத்துக்கு மாறுகின்றதோ அ தான நாள் (critical day) ஆகும். இந்நாளி தர்ப்பம் உண்டு. பரீட்சைகள், நேர்முகத் ே பலிக்க முடியா நிலை ஏற்படும், போட்டிகள் கின்றன. இரு வட்டங்கள் ஒன்றையொன்று (double zero day) giblu () th gy 55 LDT is unt ஒரு சமயத்தில் மூன்று வட்டங்களும் ஒன்ை (5 ft 6i (triple zero day sysi lu (65 spg). g)5(36. வெளிக் காரணிகளின் ஆதிக்கமும் ஒரளவு இ வர் தீவிர இழப்புக்கு உள்ளாகிருர் . அவர் ஒவ்வொருவருக்கும். (1) சராசரியாக, ஒ தீக" அல்லதுபுத்தி" பூச்சிய நாள் ஏற்படுகி (2) ஒராண்டிலே, சராசரியாக 6 த வருகின்றன
(3) ஒராண்டிற்கு ஒரு தடவை "மூ
மேலதிக தகவல்களுக்கு Science Digest, ே கட்டுரையைப் பாருங்கள். பக். 70-75)
1970களிலே இடம்பெற்ற சில மருத்
(1) இற்றைவரை அதிகளவு குருதியை ஜோசப் எல்மலே என்பவராவர். 1915இல் 78 கலன்கள் 5 பைந்துகள் (மொத்தமாக 6 6nt frfiit.
(2) இற்றை வரை அதிகளவு, குருதி புகுத் 50 வயதுடைய ஹிமோபீலியா நோயால் டில் சிக்காகோ நகரில் இவருக்கு நடந்த இத் குருதி ஏற்றப்பட்டது.
(3) ஆகக் கூடிய நேரம் நீடித்த சத்திரசி கலிபோர்னியா நகரில் 19 வயதுப் பையன்
அல்க்ஸ்னேயும் குழுவினரும் 31 மணி ே செய்தனர்.

த்த நாளில் ஒன்ருகத் தொடங்கியிருக்கும், த்திருக்கும்
ல் அவ்வட்டமானது "பிளஸ்" நிலையிலிருந்து ந்தப் பூச்சிய நாள் (zero day) ஓர் ஆபத் லேயே - உங்களுக்கு விபத்துக்கள் நிகழ சந் தர்வுகளில் உங்கள் முழுத் திறமையை பிரதி சமர்களில் தோல்வி வாய்ப்புக்கள் ஏற்படு குறுக்கிடும் போது, இரட்டைப் பூச்சிய நாள் ரும் "அப்செற்" ஆகும் நாள். இதே போல றயொன்று குறுக்கிடும் போது மூ - பூச்சிய மிக மிக ஆபத்தான நாளாகும். மற்றைய இருக்கும் போது, மூ-பூச்சிய நாளிலேயே ஒரு இறக்கும் சந்தர்ப்பமும் இங்கு ஏற்படலாம். வ்வொரு 6 நாட்களிலும் ஒரு நாள் "பெள AD gil. டவைகள் "இரட்டைப் பூச்சிய நாட்கள்"
பூச்சிய நாள்" இடம்பெறும்.
ம 1976 இதழில் ஏட் நெல்சனுடைய ஆய்வுக்
துவத்துறை உலக சாதனைகள்
தானம் செய்துள்ளவர் பிரான்சைச் சேர்ந்த பிறந்த இவர். 1931 இலிருந்து 1974 வரை 22 பைந்துகள்) குருதியை தானம் செய்துள்
தி ஏற்றப்பட்டவர் வோரன் ஜெய்ரிச் எனும் பீடிக்கப்பட்ட நோயாளியே. 1970ம் ஆண் sய சத்திர சிகிச்சையின் போது 2400 பைந்து
கிச்சை 1972ம் ஆண்டு ஜனவரி 17-18 இலே விக்ரர் சசுவேடாவுக்கு நடந்தது, டாக்டர் ரம் நீடித்த மூளைச் சத்திர சிகிச்சையைச்
as a di);- Guinness Book of World Records
4 )

Page 7
பயிர்க் காப்புறுதித் முக்கியத்துவமும் ே
இலங்கை குறித்து ஒரு நோக்கு
பயிர்க் காப்புறுதி என்பது,
நிச்சயமற்ற ஆபத்துக்கள் நிறைந்த பெருந்தொகை விவசாயிகளை ஒன்று சேர்த்தும், அவர்களுக்கு ஏதாவது ஒரு நட்டம் நேரின் அந்நட்டத்தின் சுமையை அவர்களிடமிருந்து முன்பாகவே திரட் டிய ஒரு "பொது நிதி* 1 மூலம் அவ்விவ சாயிகளிடையே 'பகிர்ந்தளித்தும், விவ சாய ஆபத்துக்களின் நிச்சயமின்மையைக் குறைத் தலை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூகரீதியான திட்டமாகும்- சற்று விளக் கமாகக் கூறின், பயிர்ச் செய்கையிற் பெரும் நட்டம் ஏற்பட்ட பின்னரும் கூட விவசாயத்தைத் தொடர்ந்து மேற்கொள் ளும் வகையில் விவசாயிகளுக்கு நிதிப் பாது காப்பு அளித்தலையே இது குறிக்கின்றது? இங்கு காப்புறுதி செய்யும் ஒவ்வொரு விவசாயியிடமும் பொது நிதியொன்றைத் திரட்டுவதற்காகத் தவணைக்குத் தவணை ஒரு குறிப்பிட்டளவு கட்டணம் அறவிடப் படுகின்றது. இவ்வாறு திரட்டும் பொது நிதியிலிருந்து விவசாயிகளுக்கு ஏற்படும் நீண்ட கால நட்டங்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட்டு அவர்களது வருமானத் துக்கு ஒர் குறைந்த பட்ச ப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. காப்புறுதி செய்கின்ற விவசாயிகள் ஆவர்த்தமான சிறிய செலவு களைச் செய்வதன் மூலம் எதிர்பாராத ஒரு பெரிய நட்டத்துக்கு நட்ட ஈடு பெறும் உரிமையை இங்கு கொள்வனவு செய்கின்றனர். எனவே, நிர்ணயிக்கப் பட்ட சிறு தொகைத் தவணைக் கொடுப் பனவுகளுக்கு ஈடாக விவசாயி தன் நிச்

திட்டம்தவையும்
முருகேசு சிவசங்கரம் B.A. (Hons.) உதவி விரிவுரையாளர், பேராதனை,
சயமின்மைக்கெதிராக ஒரு (560 AD 55 Lut.
சப் பாதுகாப்பை உறுதிப்படுத்த&லயே பயிர்க்காப்புறுதி எனலாம்.
பொருளாதாரத்தில் இத் த கை ய தொ ரு சமூகரீதியான திட்டத்தின் முக் கியத்துவம் என்ன என்ன என்பது பற்றி இலங்கையைச் சிறப்பாகக் குறிப்பிட்டு ஆராய்வதே இச்சிறிய கட்டுரையின் நோக்கமாகும்.
தேவையும் முக்கியத்துவமும்:
இயற்கையுடனன ஒரு பெரும் சூதாட் டம் என்று கருதும் வகையில் பெருமளவு நிச்சயமின்மை விவசாயத்திற் காணப்படு கிறது. வேறு எந்தவொரு தொழில் முயற்சியிலும் இப்பெரியளவிலான நிச்சய மின்மை காணப்படுவதில்லை, ஒரு தொழில் முயற்சியென்ற வகையில் ஏனைய தொழில் கள் எதிர்நோக்கும் எல்லா வகையான சமூக பொருளாதார நிச்சயமின்மை களும் இங்கு காணப்படுகின்றன. அதுவே யன்றி. விவசாயம் ஒரு வாழ்க்கை நெறி யாகவும் அமைவதால் ஆளுக்குரிய நிச்சய மின்மைகளையும் இது கொண்டிருக்கிறது, எல்லாவற்றுக்கும் மேலாக, விவசாயம், ஏனைய முயற்சிகள் போலல்லாது நேரடி யாகவும், தொடர்ச்சியாகவும் இயற்கைச் சக்திகளுடன் தொடர்பு கொண்டுள்ளமை யால் இம்முயற்சி இயற்கையின் விளை வாண நிச்சயமின்மைகளையும் கொண்டுள்
1. “பொது நிதி” என்ற பதம் இங்கு அரசாங்க நிதி என்ற பொருளைக் கொள்ளவில்லை,
5)

Page 8
ளது றே 2 என்ற நிபுணரின் கருத்துப்
படி இவ்வாபத்துக்களும் அவற்றின் விளை வான நிச்சயமின்மைகளும் உடமைக்கு ஏற்படுபவை,ஆளுக்கு உரியவையென இரு வகையில் அமைகின்றன. உடமைக்கு ஏற் படும் ஆபத்துக்கள் இயற்கை சம்பந்தப் பட்டவையாகவும் சமூகரீதியானவையாக வும், பொருளாதார ரீதியானவையாகவும் காணப்படுகின்றன. இயற்கையின் மாற் றங்களினல் ஏற்படும் வரட்சி, வெள்ளம், புயல். நோய், பீடை என்பவை இயற்கை சம்பந்தப்பட்டவை. தீ, களவு வேலை நிறுத்தம். யுத்தம். தொழில் நுட்ப மாற் றங்கள் போன்றவற்றல் ஏற்படுபவை சமூகரீதியான ஆபத்துக்கள். விவசாயப் பொருட்களின் விலை தளம்பலால் ஏற்படும் நட்டங்கள், சமூக, பொருளாதார கார ணிகளால் ஏற்படும் முதலீடுகளின் எதிர் பாராத தேய்வுகள் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலைகளில் எவ்வித உயர்வு மின்றி விவசாயத்திற்கான தேவைகளின் விஜலகளின் விலைகளிற் சடுதியான அதி ரிப்பு ஏற்படுவதால் உண்டாகும் நட்டங் ன் போன்றவற்றைப் பொருளாதஈர ரீதியான ஆபத்துக்கள் என வரையறைப் படுத்தலாம். ஆளுக்குரிய ஆபத்துக்கள் விவசாயிகள் அல்லா தாருக்கு ஏற்படுப வற்றைப் பெருமளவுக்கு ஒத்தனவே. இவ்
வாபத்துக்கள் எல்லாம் சேர்ந்து விவ
சாயத்தை இறுதி வரை முற்றிலும் ஆபத்து நிறைந்த ஒரு முயற்சியாக ஆக்கி விடுகின்றன. அதற்காக விவசாயத்தை விட்டு விலகிக் கொள்ள முடியாது.
gổvaŝaj Fru ஆபத்துக்கள் மூன்று வகை வழிகளில் எதிர் கொள்ளப்படலாம்.
(1) ஆபத்தினின்றும் தப்பித்துக் கொள்வது விவசாயி சாதகமான சுவாத் தியமும் இடவமைவும் உள்ள இடத்துக் குத் தன்னே மாற்றுவதன் மூலம் ஆபத்தி னின்றும் தப்பிக்கொள்ளலாம். ஆனல் அங்கும் நிச்சயமின்மையினின்றும் முற் முகத் தப்பிவிட முடியாது. சனத்தொகை வேகமாக அதிகரிக்கும் போது இது ஒரு ஒடுங்கிய வழியாகவே அமையும்
(6

(2) ஆபத்தைத் தவிர்த்துக் கொள் வது; நவீன விஞ்ஞானமும் தொழில் நுட் பமும் இதற்குப் பெரிதும் உதவுகின்ற
போதிலும் இத்துறைகளிற் பெரும் வளர்ச்
சியடைந்த நாடுகள் கூட இது வரையில் நிச்சயமின்மையை முற்றகத் தவிர்த்ததா கத் தெரியவில்லை. இவ்விரு வழிகளும் அதிகம் பயன்மிக்கனவாகக் காணப்படாத விடத்து இறுதி வழி சிறப்பிடம் பெறுவ தை நோக்கலாம்.
(3) மேற்கண்ட ஆபத்துக்களை ஏற்று அவற்றை எதிர் கொள்ளலே இவ்விறுதி வழியாகும்.
விவசாயத் துறை சார்ந்த சில ஆபத் துக்கள் நடைமுறையில் தவிர்க்கக்கூடிய தன்மை கொண்டனவாயினும் அ  ைவ தவிர்க்கப்படாது ஏற்றுக்கொள்ளப்படுவ தை நாம் அவதானிக்கலாம். ஏனெனில் அவற்றைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் போது ஏற்படும் செலவு அவவாபத்து ஏற்படுத்தும் நட்டத்தை விடக்கூடுதலான பாதிப்பைச் சமூகத்துக்கு ஏற்படுத்து கிறது. எனவே, "சமூகச் செலவு - நன் மை ஆய்வின்' அடிப்படையில் அவ் வாடத்துக்களை ஏற்றுக்கொள்வதே பகுத் தறிவின் பாற்படும்.
அதே சமயம் அவ்வாருன ஆபத்து ஒரு தனிப்பட்டவருக்கு நட்டத்தினை ஏற் படுத்தும் போது அவருக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் எழுகிறது. இது ஆபத்துக்களைத் தனிப்பட சகிக்க முடியாதவரிடமிருந்து ஆபத்தைத் தாங் குவதிற் தேர்ச்சிப் பெற்ற நிறுவனமொன் றுக்கு மாற்றிப் பகிர்வதன் மூலம் நிறை வேற்றப்படுகிறது. நட்டத்துக்குள்ளாகும் விவசாயி பயிர்க்காப்புறுதி செ ய் து கொண்டவராக இருப்பாரேயானுல் அவ ருக்கு ஆபத்துக்கள் வருங்கால் அவற் றைத் தாங்குவதிற் தேர்ச்சிபெற்ற காப் புறுதி முகவர் தானே அவற்றைத் தாங்கி
2. P. K. Ray, "Principles and Practices of Agricultural Insurance'' 1958: Calcutta. p. 10.

Page 9
அவருக்கு நிவாரணம் வழங்குவார்.இதை
வேருேர் வகையிலும் நாம் நோக்கலாம் ,
பயிர்க் காப்புறுதித் திட்டத்தில் ஆபத்து நிறைந்த பல விவசாயிகள் கூட்டுச் சேர்ந்து தொடர்ந் தேர்ச்சியாகப் பல காலம் பங்களிப்புச் செய்து பொது நிதி ஒன்றைத் திரட்டுகின்றனர். அவர்களில் ஒருவருக்கு எதிர்பாராத வொரு நட்டம் ஏ ற் ப டு ம் போ து இப் பொ து நி தி பி னி ன் று ம் அ. வ ரு க் கு நட்ட ஈடு கொடுக்கப்படுகிறது. எனவே, இங்கே தனிப்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட நட்டம், பரஸ்பரம் ஏனைவ விவசாயி களின் பங்களிப்புக்களிடையேயும் நட்டத் துக்குள்ளான விவசாயியின் செழிப்பு வரு டப் பங்களிப்புகளிடையேயும் பகிர்த்து கொள்ளப்படுகிறது. பரஸ்பரத் தன்மை யைப் பேணுவதும் "செழித்த" வருடங் கள் * செழிப்பற்ற" வருடங்களைக் கவ னத்திற் கொள்வதும் தான் எந்தவொரு பயிர்க் காப்புறுதியினதும் பி ர தா ன
கோட்பாடுகளாகும், இ வ் வகை யி ற் பயிர்க் காப்புறுதியின் மூலம் விவசாய ஆபத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு
அதே சமயம் அவை தனிப்பட்ட ஒரு வருக்கு நட்டத்தினை ஏற்படுத்தும் போது அவருக்கு நிவாரணமும் வழங்கப்படு கிறது. ஆபத்தை சந்திப்பதற்குப் பயிர் பண்முகப்படுத்தல் , காப்பொதுக்கங்களே வைத்திருத்தல் உற்பத்தியில், நெகிழ்ச்சித் தன்மையைப் பேணுதல் ஆபத்துக்குக் கழிவீடு செய் த ல் போன்ற பிற வழிகளும் கூறப்பட்டாலும் பயிர் காப் புறுதி அவற்றினின்று வேறுபட்டும் சிறந் தும் காணப்படும். ஏனெனில் மேற்கூறிய
ஏனைய வழிகள் ஒன்றில் உற்பத்தி குறித்த
நிச்சயமின்மையை அல்லது விலை குறித்த நிச்சயமின்மையைக் குறைப்பனவாயமை யப் பயிர்க்காப்புறுதி பொதுவாக இவ்விரு வகை நிச்சயமின்மைகளையும் குறைப்ப தோடன்றி நிறுவனத் தன்மை கொண்ட தாகவும் அமைகிறது. இவ்வகையிலேயே பயிர்க்காப்புறுதித் திட்டத்தின் முக்கியத் துவமும் தேவையும் பொதுவாக நோக்கப் படுகின்றது.
இலங்கையின் பொருளாதாரத்திற்
( 7

பயிர்க்காப்புறுதியின் தேவையும் முக்கியத் துவமும் மூன்று தலைப்புக்களின் கீழ் நோக் கப்படலாம்.
அவை;
(i ) உற்பத்தியைப் பெருக்குதல் (ii) சமூக பொருளாதார நிலைமை
களை முன்னேற்றுதல்
(ii) பயிர் முறிவு காலங்களில் அரசாங் கத்தின் பொறுப்பைக் குறைத்தல் ஆகியனவாகும்.
இலங்கை அடிப்படையில் ஒரு விவ சாய நாடு. அதன் பொருளாதாரத்தின் அடிநாதமாக விளங்குவது விவசாயம், அதிற் பிரதான துறை கிராமிய விவசாயம் நாட்டின் விரைவான பொருளாதார அபி விருத்திக்கு இத்துறையின் வளர்ச்சியும் உற்பத்திப் பெருக்கமும் இன்றியமையாக வை. ஆனல் இலங்கை இதுவரையில் இத் துறையிலே தன்னிறைவு பெறவில்லை. இத் தன்னிறைவை அடைவதற்கு இத் துறை யில், பயிர்ச் செய்கைப் பரப்பளவு விஸ் தரிக்கப்பட வேண்டும்; முதலீடுகள் அதி கரிக்கப்பட வேண்டும்; பயிர்ச் செய்கை முறைகளும் விருத்தியாக்கப்படல் வேண் டும். இத்தேவைகளைக் கருதிப் பயிர்க் காப்புறுதியின் முக்கியத்துவம் எழுகின் றது. தனது உழைப்பையும், மூல வளங் களையும் விவசாயத்திற் செலவிடும் விவ சாயி தன் கடன்களை இறுச்கவும் குடும்ப வாழ்வை நடாத்தவும் விளைச்சலையே முழு மையாக நம்பியிருக்கிருன் : இயற்கை இரங்கினுல் வாழ்வு அன்றேல் தரித்திர நிலை. அறுவடை வீட்டுக்கு வரும் வரை பயிரழிவு சம்பந்தமான பயம் அவனை மிரட்டுகின்றது. காலநிலை பெருமளவுக் குச் சதி செய்கின்றது. சுருங்கக் கூறின் பயிர் முறிவுக்கான வாய்ப்பு இலங்கையில் அதிகமாகவே காணப்படுகின்றது, என வே, பயிர்ச்செய்கையில் ஈடுபட்டால் அது நிச்சயம் பலன் தருமா? இல்லையா? என்ற ஐயப்பாடும் நல்ல முறையில் விளைச் சல் கிடைக்காது போய்க் கை நட்டம் ஏற்பட்டால் அதைத் தாங்க முடியாதே
)

Page 10
என்ற பயமும் விவசாயிக்கு அதிகமாக இருப்பதால் அநேக விவசாயிகள் நிச்சய மற்ற நிலையிலேயே வாழ்கின்றனர். இந் நிலைமை உற்பத்தி முயற்சிக்கான ஆர்வத் தைக் குன்றச் செய்து விடுகிறது; பயிர்ச் செய்கைப் பரப்பளவை விஸ்தரிக்கவோ, விவசாய முதலீட்டைப் பெறுக்கவோ, விருத்தி பெற்ற பயிர்ச் செய்கை முறை களை மேற்கொள்ளவோ ஊக்கக் குறைவை ஏற்படுத்துகின்றது. எனவே உற்பத்தி யைப் பொக்க வேண்டின் நிச்சயமின்மை கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும். பயிர்க் காப்புறுதி திட்டமொன்று நடை முறைப்படுத்தப்பட்டு விவசாயி எதிர் ாகும் ஆபத்துக்கெதிராக ஒரு குறைந் தபட்சப் பாதுகாப்புக்கு உத்தரவாதி ளிக்கப்படுமேயானல், ஆபத்துத் தன் மை கூடிய நிலங்கள் எனக் கருதப்பட்டு இதுவரை செய்கை பண்ணப்படாத நிலங் கள் கூடச் செய்கை பண்ணப்படலாம்: விவசாய முதலீடுகளும் அதிகரிக்கப்பட லாம். விருத்தி பெற்ற பயிர்ச் செய்கை முறைகளை மே ற் கொ ள் வோ ரு க் கு &.山f庙á பாதுகாப்பு வழங்குவதை உறு திப்படுத்துவதன் மூலம் விருத்திப்பெற்ற நவீன முறைகளையும் ஊச்குவிக்கலாம். எனவே, றே கூறியது போன்று, பயிர் க் காப்புறுதியானது பயிர் விளைச்சலை விருத்தி செய்வதனையும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதனையும் G3 f5 ir ši s ud mr x is கொண்டு புதியதும் விருத்தி பெற்றது மான பயிர்ச் செய்கை முறைகளே மேற் கொண்டும் அதிகளவு முதலீடு செய்தும் விவசாய நடவடிக்கைகளிற் துணிச்ச லுடன் இறங்குவதற்குப் பெருமளவு தென்பை விவசாயிகளுக்கு ஊட்டுகின் றது எனலாம்.
அடுத்து இக்காப்புறுதி முயற்சியில் சமூக பொருளாதார நிக் மைகளை குறித்த முககியத்துவம் கவனிக்கத்தக்கது. மொத் தச் சனத் தொகையில் எண்பது சத வீதத் துக்கு மேம்பட்ட மக்கள் தமது ஜீவனே பாயத்துக்கு விவசாயமே தஞ்சம் என வாழ்கின்றனர். எனவே பயிர் முறிவு

பரத்திளவில் மோசமான விலைவுகளைச் சமூகரீதியாக எதிரொலிக்கச் செய்கின் றது. இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில் எதை உற்பத்தி செய்கிருன் என்பதற்காக மட்டுமன்றி எதை வாங்குகிருன் என்பதற் காகவும் விவசாயி முக்கியம் பெறுகின் முன் பயிர் முறிவால் விவசாயியின் கொள்வனவு ஆற்றல் குறைய அது முழுப் பொருளாதாரத்திலும் கணிசமான பாதிப் பை ஏற்படுத்தி விடுகின்றது. நிச்சயமற்ற தன்மை பொருளாதாரத்திற் தோன்றும் விலைகள் உயரும் போக்குக் காணப்படும் அரசாங்கப் பாதிட்டு (வரவு - செலவுத் திட்ட) நிலைமையும் பாதிக்கப்படலாம். பயிர், காப்புறுதி செய்யப்படுமாயின் அது ஒரு குறைந்த பட்சப் பாதுகாப்பை விவ சாயிக்கு வழங்கி. விவசாய வருமானத் தை நிலைப்படுத்தி ஏனைய பொருளாதார நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தும்" காப்புறுதித் திட்டம், காப்புறுதி செய் யப்பட்ட பண்டத்தின் களஞ்சியப்படுத்த லுடன் இணைக்கப்படுமாயின் தீவிர தட் டுப்பாட்டுக் காலங்களிற் கூட நிரம்பலின தும் விலையினதும் நிச்சயமின்மைமைக் குறைத்துப் பொருளாதார உறுதியைப் பேண முடியும்
(மிகுதி அடுத்த இதழில்)
பயிர்க் காப்புறுதித் திட்டத்தினுல் 1962 பெரும் போகத்தின் போது முதற் தடவையாக 58 ஏக். மான வாரி நிலங்கள் அநுராதபுர மாவட்டத்திற் செய்கை பண்ணப்பட்டமை இதற்குச் சான்று,
F. K. Ray. Review of paddy crop Insurance in Ceylon, Sessional Paper I, 1971. р 8. a
* P. K. Ray, "Review of paddy crop lnsurancc in ceylon', Sessional Paper I 1971
Ceylon, p. 8.
8)

Page 11
சூரியனின்
அவற்றின் பி
திருமதி உ. மகாலிங்க ஐயர் (போதன
பூமியின் மீதுள்ள உயிர்கள் அனைத் தும் சூரியனைச் சார்ந்துள்ளன. தற்சமயம் பூமியிலுள்ள சூழ்நிலை உயிர் வாழ்க்கைக் குத் தகுந்ததாக அமைந்துள்ளது. சூரியனது கதிர்வீச்சு ஒரு 13% குறையுமா யின். பூமியின் மேற்பரப்பு முழுவதும் ஒரு மைல் தடிமனன பணியால் மூடப் பட்டுவிடும். கதிர் வீச்சு 30% அதிகரித் த7 ல், பூமியின் உயிரனைத்தும் கருகி அழிந்து போகும் நமது விண்மீனகிய குரியனைப் பற்றிய ஆராய்ச்சியே இக்கால விஞ்ஞானத்தின் அதி சிக்கலான, அதி சுவா ரஸ்யமான பிரச்சனைகளுள் ஒன்று கும், இவ்வாராய்ச்சியின் பயனுகப் பல உண் மைகள் தெரியவந்துள்ளன. சூரியன் இப்போது வீசி வரும் இதே அளவில் தன் ஒளியைச் சென்ற 100 அல்லது 200 கோடி ஆண்டுகளாக விசி வருகிருன், என்று நம்பப்படுகின்றது. சூரியனில் ஒவ் வொரு வினடியும் 564,900,000 தொன் ஐதரசன் 560,000,000 தொன் ஈலியமாக மாற்றப்படுகின்றது, என்றும், 4,000,000 தொன் பொருண்மை சக்தியாக மாறி வெளிவிடப்படுகின்றது ճ7 6ձ: Այւծ விஞ்ஞா னிகள் கணித்துள்ளனர்:
பத்தொன்பதாம் நூற்றண்டு பெள தீக விஞ்ஞானி ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ் வெல்லின் கொள்கையின்படி ஒளி CE5 வகையான மின்காந்தக் கதிர்; ரேடியோ அலைகள், ஒளி, எக்ஸ்ரே முதலிய வெவ் வேறு மின்காந்தக் கதிர்கள் யாவும் ஒளி யின் வேகத்திலேயே செல்கின்றன. வெவ் வேறு வகையான இக்கதிர்களில் ஒரே ஒரு வகைதான் தம் கண்களால் காணக்கூடி யது. இதையே நாம் காணும் ஒளி என் கிருேம். மின்காந்தக் கதிர்கள் யாவும் பல்
(9

கதிர்களும் ரயே ாகங்களும்
சிரியை, பொறியியற்பீடம், பேராதனை)
வேறு வகையான அதிர்வுகளால் அலைவரி சைகளை உண்டுபண்ணியே செல்கின்றன. ஒவ்வொரு வகையான கதிர்களுக்கும் வெவ்வேறு அலைநீளம் உண்டு. அலைநீளம் என்பது ஒர் அலையின் சிகரத்திற்கும் அடுத்த அ லை யி ன் சிகரத்திற்கும் இடையிலுள்ள தூரமாகும். ஒரு குறிப் பிட்ட அளவுக்குள் அடங்கிய அலைநீளம் கொண்ட கதிர்களை காமா கதிர்கள் என் கிருேம் புற ஊதாக் கதிர்களின் ടy fath முற்றிலும் வோழுக இருக்கம். இவ் வாறு அலைநீளங்கள் வெவ்வேருக இருப்ப தால், அவற்றை அளந்து கதிர்களின் 岛G茄 மிையைக் கண்டு பிடிக்கப் பல கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கதிர்கள் ஒரு வினடியில் உண்டுபண் ணும் அலைகளின் எண்ணிக்கைக்கு அதிர்வு 67 Gẩov (f. equency) GT Gör go பெயர்.(அதிர்வுகள்
வே சம்
எண் = 4. ஆகவே குறுகிய அலைநீளமுள்ள கதிரின் அதிர்வெண்: குறை வாகவும் இருக்கும் என்பது புலனுவிறது காணும் ஒளியில் அலைநீளத்திற்கேற்றற் போல் ஒளியின் நிறமும் மாறுபடும், சிவப்பு ஒளியின் அலைநீளம் அதிகமானது. ஊதா ஒளியின் அலைநீளம் குறைவானது. அதிகச் சக்தி வாய்ந்த கதிரின் அலைநீளம் குறைவாகவும். அதன் அதிர்வெண் அதிக மாகவும் உள்ளன. குறைந்த சக்திவாய்ந்த கதிரின் அலைநீளம் அதிகமாகவும் அதன் அதிர்வெண் குறைவாகவும் உள்ளன.
சூரியனின் சில கதிர்கள் 2.- Es forgir ar மாக புற ஊதாக்கதிர்க்ள். அகச்சிவப்புக் *திர்கள் தமது முழு ச் சக்தியுடன் நம் மை வந்த டைத்தால், அவை நமது all-ti, Lib குப் பெருஞ்சேதம் விளைவிக்கும். ஆகுல்ை அதிர்ஷ்டவசமாக அவை பாய்த்து வருகை

Page 12
யில் வழியிலுள்ள துகள்களுடன் மோதி, தம் சக்தியின் ஒரு பாகத்தை இழந்து நீண்ட அலைநீளமுள்ள கதிர்களாக மாற் றப்படுகின்றன. அத்துடன் பூமியின் வாயு மண்டலத்தை அடைந்தவுடன், அங்குள்ள ஏராளமான காற்றணுக்களுடன் மோது வதால், தமது சக்தியின் பெரும்பாகத் தை இழந்து, ஆபத்தில்லாத வடிவத்தில் பூமியை வந்தடைகின்றன. ஆகவே நமது வாயுமண்டலம் தம்மைப் பாதுகாப்பதா லேயே நாம் உயிர் வாழ்கிருேம்.
சூரியனின் கதிர்களைக் கொண்டு நமக்குத் தேவையான சக்தியை உண்டு பண்ணுவதற்கான வழிகளைக் கண்டு பிடிக்க முன்னேற்றமடைந்த நாடுகளில் மட்டுமன்றி, பின்னணியிலுள்ள பல நாடு களும் மும்முரமான பல முயற்சிகளை நடத்தி வருகின்றன. சக்தி என்பது வேலை செய்யும் திறமையாகும் இது வெவ் வேறு வகைகளில் உள்ளது தகுந்த முறை களைக் கொண்டு ஒரு வகையான சக்தியை வேமூெரு வகைச் சக்தியாக மாற்றலாம். உதாரணமாக, ஒரு நீர் வீழ்ச்சியிலுள்ள அல்லது ஒர் அணைக்கட்டில் தேக்கியுள்ள நீரை வேகமாகத் தகடுகளின் மீது பாய வைத்து அத்தகட்டில் பிணைத்துள்ள கம் பிச் சுருள்களை ஒரு காந்த மண்டலத்தில் சுழல வைத்தால்,மின்சாரம் உண்டாகின் றது. நீரில் வேகசக்தி மின்சார சக்தியாக மாற்றப்படுகின்றது. அவ்வாறே நிலக் கரியை எரித்து நீரைக் கொதிக்க வைத்து நீராவியந்திரங்களே ஒட்டுகிருேம். வெப் பச் சக்தி யந்திர சக்தியாக மாற்றப்படு கின்றது. ஒளி, வெப்பம், ஒலி யாவும் வெவ்வேறு வகையான சக்தியாகும். ஒரு 24 மணி நேரத்தில் பூமியின் நிலப்பரப் பின் மீது பாயும் சூரிய சக்தியானது மணி தன் இப்பூமியின் மீது வசித்து வந்த காலம் முழுவதிலும் உபயோகித்த எல் லாவித எரிபொருள்களையும் விட அதிக மானது. ஆகவே சூரிய ஒளியே மிக மலி வான சக்தி மூலம் என்பது தெளிவாகின் றது. சூரியனிலிருந்து. பாயும் சக்தியில் ஒரு மிகச் சிறிய பாகத்தைத் தவிர மீதி யெல்லாம் வீணு கப் போகின்றது. பூமியின்
(

வாயுமண்டலம் பூமிக்குப் பாயும் சூரிய சக்தியில் பாதியைத் தடுத்து விடுகின்றது. பூமியை வந்தடையும் மீதிச் சக்தியில் பெரும் பாகம் சமுத்திரங்களிலும் துருவ மண்டலங்களிலும் விழுந்து வீணுகிறது. தற்சமயம் சூரிய சக்தியைப் பயன்படுத் திக் கொள்ளுவதற்கு மிகப் பெரிய சாத னங்கள். கதிர்களைக் குவிப்பதற்கு பெரிய கண்ணுடிகள் (குழிவாடிகன்) தேவையா யுள்ளன.
குளிர் நாடுகளில் சூரிய சக்தியைக் கொண்டு வீடுகளை வெதுவெதுப்பாக வைத்திருக்கின்றனர். சூரியனிலிருந்து வீசப்படும் கதிர்களில் 80% நாம் காணும் ஒளி. 16% அகச்சிவப்புக் கதிர்கள் (Infra ாed rays), இதுவே வெப்பக் கதிர்கள். 4% lso paug, T is as Sri as gir. (Ultra violet rays) வெப்பக்கதிர்கள் மிக நுண்ணிய அலைகளா லானவை. கண்ணுடியினூடே நுழைந்து எளிதாகச் செல்லக் கூடியன வெப்பம் சேகரிப்போனின் மேற்பாகம் கண்ணுடித் தகட்டால் மூடப்பட்டிருப்பதால், வெப் பக் கதிர்கள் அதனூடே நுழைந்து, உள்ளே வைக்கப்பட்டிருக்கும் கருமை யான பொருள்களின் மீது விழுந்து நீண்ட அலைகளாக மாற்றப்படுகின்றன. இவை களால் எளிதாகக் கண்ணுடியினூடே நுழைந்து செல்ல முடியாது. ஆகையர்ல் அவற்றின் பெரும்பாகம் உள்ளே அடை பட்டுவிடுகின்றது. மேலும் மேலும் வெப் பக்கதிர்கள் பாய்ந்து அடைபட்டு விடுவ தால். அவை வெது வெதுப்பாகிறது.
சூரியநீர் காய்ச்சி ; கறுப்புச் சாயம் பூசப் பெற்ற உலோகக் தகடுகளாலான, அகலமான ஆழமில்லாப் பெட்டிகளின் மேற்பாகத்தைக் கண்ணுடித் தகடுகளால் மூடிக் கூரையின் மீது வைத்தால் சூரிய வெப்பத்தை அவை நன்கு கிரகிக்கும். அதனுள்ளே குழாய்களை வளைந்து வளைந்து செல்லுமாறு அமைத்து அதனூடே தண் ணிரைச் செலுத்தினல், அது சூடேறி வெந்நீராக வெளிவரும். கறுப்புப் பெட் டியின் பக்கங்களிலிருந்து வெப்பம் வெளி
10)

Page 13
பேரு வண்ணம் கம்பளித்துண்டுகளால் மூடிபெட்டியை சுற்றி வைக்க வேண்டும்.
சூரிய உலை : பெரிய குழிவாடிகளைக் கொண்டு சூரிய வெப்பத்தைக் குவித்து மிக அதிகமான வெப்ப நிலையை உண்டு பண்ணுவதால் சூரிய உலையை நிறுவலாம் உலகிலேயே மிகப் பெரிய சூரிய உலை ஆராய்ச்சி நிலையம் பிரஞ்சு பிரனிஸ் மலைத் தொடரிலுள்ள மவுண்ட் லூயி (Mt. Louis) என்னும் சிகரத்தில் அமைக்கப்பெற்றுள் ளது. அங்கு உலசில்ேதுே மிகப் பெரிய நீள்கோள வடிவமான கண்ணுடி பதிக்கப் பட்டுள்ளது. அது 3500 சிறு சதுரக் கண்ணுடித் துண்டுகளானது. அவை ஒவ் வொன்றும் 5' தடிப்பான ஜன்னல் கண் ளூடித்துண்டு. அப்பெரிய கண்ணுடியில் சரியாகப் பதிவதற்கென்று வெகுபக்குவ மாக உருவாக்கப்பட்டவை. இக்கண்ணுடி யிலிருந்து 80° தூரத்திற்கப்பால், 460 சதுப் அடிப்பரப்புள்ள தட்டையான கண் ணுடி ஒன்று நிற்கிறது இதில் 360 கண் ணுடித் துண்டுகள் உள்ளன. இது சூரிய ஒளியைத் திருப்பி, நீள் கோளக் கண்ணுடி யின் மீது விழச் செய்கிறது இக்கண்ணுடி அவ்வெப்பத்தைக் குவித்து, அதிக வெப் பமேறிய சூரிய உலையை உண்டுபண்ணு கின்றது. தட்டையான கண்ணுடியில் பதிக் கப்பட்ட சில சிறு கண்ணுடித் துண்டுகள், சூரிய ஒளியைத் திருப்பி எதிரே வைக்கப் ul Geir 677 LÉir sa) is 6fair (Photo electric (el) மீது விழச் செய்து மின்னுேட்டம் உண்டுபண்ணுகின்றது. இம்மின்னேட் டத்தைக்கொண்டு இயந்திரங்களை இயக்கி சூரியன் இடம் பெயர்ந்து செல்கையில் தட்டையான கண்ணுடியும் சிறிது சுழன்று, சூரியனை எப்போதும் நோக்கிய வண்ணம் நின்று, சூரிய வெப்பத்தை நீள்கோணக் கண்ணுடியின் மீது சதா விழச் செய்கிறது. மனித முயற்சி ஒன்றும் தேவையில்லை. 640 U F வரை வெப்ப நிலையை அடையக் கூடிய இச்சூரிய உலையில் ஒரு வருஷத்தில் 30 நாட்சஞக்கு அதிக வெப்பம். தாங்கக் கூடிய உலோகங்களே வெகு சுத்தமான நிலையில் செய்கின்றனர். மற்ற 335" தாட் களாக விஞ்ஞானிகள், சூரிய சக்தியின்
( 1

தன்மையையும் அதை மக்களுக்குப் பயன் படுத்தும் முறைகளை பற்றிய ஆராய்ச்சி கள் பலவற்றை நடத்தி வருகின்றனர். இவ்விதமான சூரிய உலைகளைக் கொண்டு ஆராயப்படும் ஒரு முக்கியமான பிரச்சனை யாவது, வாணவெளிக் கப்பல்களுக்குத் தேவையான சக்தி - ஜனணிகளை உண்டு பண்ணுவதாகும். சூரிய வெப்பத்தைக் கொண்டு நீரையோ, பாதரசத்தையோ காய்ச்சி ஆவியாக மாற்றி, டர்போ - ஜன 6of 3 at (Turbo generator) glu L6air of Tg th உண்டுபண்ணுவதற்குத் திட்டமிட்டுள்ள னர். ஜனனியைச் சுழலச் செய்த பின்னர். ஆவி குழாய்களின் வழியாகச் சுருங்கும் அறைகளுக்குச் சென்று. அங்கே திரவமாகி மறுபடியும் உபயோகிக்கப்படும்.
ரஷ்யர்கள், சோவியத் ஆர்மீனியப் பிரதேசத்தில் தமது முதலாவது சூரிய நிலையத்தைக் கட்டி, மின்சாரத்தை உற் பத்தி செய்து மக்களுக்கு வழங்கியுள்ள னர். ஆர்மீனியாப் பிரதேசத்தில் வருஷத் தில் மிக அதிகமான நாட்களுக்குச் சூரிய ஒளி கிடைக்கின்றது. பெரிய கண்ணுடி கள் சூரிய் கதிர்களைத் திருப்பி ஒரு பெரிய கொப்பரையிலுள்ள நீரைக் கொதிக்க வைக்கின்றன. நீராவி அங்கிருந்து கழாய் களின் வழியாகச் சென்று 2200 W திற னுள்ள ஜனனியை இயக்குகின்றது. நீர்க் கொப்பரையைச் சுற்றி 1,000 பெரிய கண்ணுடிகள் வைக்கப்பட்டுள்ளன .ஒளி மின் கலன்கள் சூரியனின் போக்கைக் கவ னித்து, அதற்கேற்ருற் போல கண்ணுடி களைத் திருப்பி, சூரிய வெப்பம் சதா கொப்பரையின் மீது குவியுமாறு செய் கின்றன. இத்துடன் கொப்பரையின் சம தளமான பாகத்தின் மீது சூரியக் கதிர் களை நேரடியாகக் குவிப்பதற்கும் ஓர் ஒழுங்கு உள்ளது. இந்நிலையிலிருந்து ஒரு வருஷ க்தில் 25,00,000 யூனிட் மின்சார சக்தி கிடைக்கும்.
பல நாடுகளில் வெவ்வேறு விதமான சூரிய அடுப்புகள் உற்பத்தி செய்யப்படு* கின்றன. ஓரடி குறுக்களவுடைய குழ வாடியைக் கொண்டு ஒரு பத்து நிமிட !
1)

Page 14
தில் நீரைக் கொதி நிலைக்குக் கொண்டு வரலாம். இவ் வகுப்பில் சுலபமாகத் திருப் பக்கூடிய கண்ணுடிகள் உள்ளன. சூரிய னின் போக்குக்கேற்றவாறு கண்ணுடி களைத் திருப்பி, சூரிய கதிர்களை சோடிய உப்பு நிறைந்த டப்பிகளில் செலுத்தி, வெப்பத்தைச் சேமித்து வைத்து, சூரியன் அஸ்தமித்த பிறகும் சமையலுக்குப் பயன் Lu69$g5 G) nr Lh. வேறு மலிவான சூரிய அடுப்புகளில் குழிவாடிகள் சூரிய வெப்பத் தைப் பாத்திரத்தின் மீது நேராகக் குவித்து
சூடு உண்டாக்குகின்றன. இவ் வாடிகளை,
உங்களுக்குத் தெரியுமா ?
* ஒரு சூரிய ஆண்டின் சரியான 48 நிமிடங்கள், 46 செக்கன்கள் ஆகு
X கி. பி. 321ம் ஆண்டிலேயே காலண்டரிலே 7 - நாள் வாரத்தை மு
* தற்போது நமது பாவனையின் ஆண்டு 13வது போப் கிரேகரியால் மு அமைப்பு முறையில், போப் கிரேகரிச் பர் கிளேவியசும், வானவியலரளர் லு இவர்கள் கொண்டு வந்த திருத்த நாட்கள் அகற்றப்பட்டன. 1582ம் தொடர்ந்தது ஒக்டோபர் 15ந் திகதி
நமது கண்ணிர் உவர்ப்பாக உடலின் சில மெல்லிய இழையங்களுச் திக்கு தீங்கை விளைவிக்கும். இக்கட்ப யிருப்பதால், கண்ணிர் உவர்ப்புத்தல்

அவ்வப்பொழுது சூரியனின் போக்குக்கு ஏற்ருற்போல் கைகளால் திருப்பி வைத் துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தின் அடிப்பாகம் கறுப்பாக இருப்பதால் வெப் பத்தை நன்ருக கிரகித்துக் கொள்கின் றன. மிக எளிய சாதனங்களாயினும் இவை வாழ்க்கைக்கு நன்ருக பயன் படுவன.
(அடுத்த இதழில் அகச்சிவப்புக் கதிர் கள், புறவூதாக் கதிர்கள் ஆகியவை பற்றிப் பார்ப்போம்).
ன காலம் 365 நாட்கள், 5 மணிகள், ம்
கொன்ஸ்டான்டைன் சக்கரவர்த்தி,
2தன் முதல் அறிமுகப்படுத்தினர்
Rருக்கும் காலண்டர் முறை 1882-ம் >ன் வைக்கப்பட்டது. இக்காலண்டர் $கு, கணித விற்பன்னர் கிறிஸ்தோ ாய்கி லிரியோ கிரால்டியும் உதவினர் ங்களின்படி, காலண்டரிலிருந்து 10 ஆண்டு ஒக்டோபர் 4ந் திகதியைத்
, இருப்பது எதனல்? தூய நீரானது கு, குறிப்பாக கட்பந்தின் முற்பகு ந்து எந்நேரமும் கழுவப்படவேண்டி ாமை வாய்ந்து விளங்குகிறது.
-புவணு

Page 15
மனித உடலும்
சமிபாட்டுத் தொகுதி !
1$。命。 ஜெயவிக்கிரமராஜ
சமிபாட்டுத் தொகுதியின் அமைப் பிற்கும். தொழிற்பாட்டிற்கும் உள்ள தொடர்புகள் பற்றிய அறிவு 1883ம் ஆண்டில் தான் தெளிவு பெற்றது. அலெக் சிஸ் மார்ட்டின் என்ற கனேடியர் ஒருவர் சுடுபட்டுக் காயமுற்ற பொழுது துப்பாக் கிச் சூடு பின்பகுதியில் இருந்து கோணலா கச் சென்று மார்பெலும்பு. இடது பக்க நுரையீரல் கீழ்ப்பகுதி, மார்பு வயிற் றிடை மென்றகடு (Diaphragm) போன்ற
 

தொழிற்பாடும் (Digestive Systern)
M. B. B. S., M. E.
உறுப்புகளினூடாக
இரைப்பையினைத்
துளைத்துச் சென்றது. சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வில்லியம் போமென்ற் என்ற அறுவை மருத்துவர் இரைப்பையி லும் அதோடு சேர்ந்து உடலின் வெளிப் புறத்திலும் காணப்பட்ட இரண்டரை
அங்குல அளவு கொண்ட
தைத்து அடைக்க முயன்றும்
பெறவில்லை,
பையின் சுவர்கள் வயிற்றுப் வெளிச் சுவர்களோடு நேரடியாகத் திறந்து காணப்பட்டது. வயிற்றுப் பகுதி
யில் காணப்பட்ட
காயத்தை
வெற்றி
இதன் பின்னர் இரைப்
பகுதியின்
இந்தத் து வார ம்
இரைப்பையை நேரடியாக வெளிப்புறத் ** திலிருந்து கண்களினல் பார்க்கவும், உண
. & aվւն
r
(1)
(2)
(3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11) (12) (13) (14) (15) (16) (17) (18) (19)
பொருட்களை குழாய்களினூடாக நேரடியாக வெளியில் இருந்து செலுத்த வுல் வாய்ப்புள்ளதாகக் காணப்பட்டது
கன்னவுமிழ் நீர்ச் சுரப்பி தொண்டை
சிபுகத்தின் கீழுள்ள சுரப்பி
களம் பொதுப் பித்தக் கான் இரைப் பை சதையச்சுரப்பி முன் சிறு குடல் இடைச் சிறுகுடல் குறுக்குக் குடற் குறை இறங்கும் குடற் குறை
சுருட் குடல் நேர் குடல் குதத்திற்குரிய கால்வாய் குதம்
ஈரல்
பித்தப்பை ஏறும் குடற்குறை குடல் வளரி

Page 16
இந்த அரிய சந்தர்ப்பத்தை அறிந்து கொண்ட போமன்ட் நடத்திய ஆராய்ச்சி கள் காட்டிய விடைகள் இன்றும் சமி பாட்டுத் தொகுதியின் தொழிற்பாடு பற்றிய அறிவிற்கு அடிப் படை யாக அமைந்தன.
உடற் கூற்றியல் :
சமிபாட்டுத் தொகுதியின் உடற் கூறு க3ள நோக்கும் பொழுது இதனை ஒரு நீண்ட குழாயாகக் கருதலாம். இந்தக் குழாயானது வாயில் இருந்து ஆரம்பித்து கழுத்து. மார்பு, வயிறு போன்ற பகுதி களினூடாக சென்று இடுப்பை அடைந்து குதத்தில் முடிவடைகின்றது. இந்த பகுதியை ழ்ேவரும் கூறுகளாக உடற் கூற்றியலாளர் வகுத்திருக்கின்றனர்.
ant uit -- ( VMouth) தொண்டை – (Pharynx)
as 67th - (Oesophagus) இரைப்பை - (Stomach) சிறு குடல் Small intestine)
--முன் சிறு கடல் (Duodenum) NGOML- é* சிறுகுடல் (Jejunum) சுருட்குடல் (Ileum)
Guš esi (Largē Intesttne)
குடல் வளரி (Appandix) குருட்டுக் குடல் (Caecum) குடற்குறை (Colon) நேர் குடல் Rectum) (55 i (5 lb (Anal Canal) (55th (Anus)
சமிபாட்டுத் தொகுதியினை தொழிற் பாட்டுடன் சேர்த்து நோக்கும் பொழுது அவற்றுடன் ஒருங்கிணைந்து செயற்படும் துணைச்சுரப்பிகளையும் ச மி பா ட் டு த் தொகுதியின் கூறுகளாகக் கொள்ளுதல் நன்று
துணைச் சுரப்பிகள் (Accessory Glands) (3) வாயினுள் காணப்படும் உமிழ்நீர்ச்
& Túl 9 sair (Salivary Glands) (b) ஈரல், பித்தப் பை (Liver,
Gal Bladedr) (c) estas uuub (Pancrea8)

வாய்ப் பகுதி
மனிதனும் மிருகங்களும் வாழ்வதற்கு உணவு அவசியம். ஆகவே இவை உணவை நோக்கிச் செல்ல வேண்டும். இதனல் தான் வாய்ப் பகுதி விலங்கினத்தில் முன் பகுதியாக அமைந்துள்ளது. வர் ப்க்கு அண்மையில் விசேட உணர்வு உறுப்புக் கள் அமைந்துள்ளன3 கண்கள், காதுகள், மூக்கு நாக்கு போன்ற பார்க்கவும், கேட் கவும், நுகரவும், ருசிக்கவும் வேண்டப் படும் உறுப்புக்கள் வாயினைச் சார்ந்தே காணப்படுவதோடு இந்த புலன்களைக் கட் டுப்படுத்துகின்ற மூளையும் விலங்கினத்தில் முன் பகுதியில் வாயின் அண்மையில் தான் அமையப்பெற்றுள்ளது.
வாயின் உள்பகுதி (9ral Cavity) Gay 6th புறத்தில் கன்னக், உதடு போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. மேலுதட் டிற்கும் கீழ் உதட்டிற்கும் இடையில் வாய் காணப்படுகின்றது. இதனுள் மேற்ருடையெலும்பில் ( Maxilla) 6 famosF யாக மேற்பற்களும் கீழ் தாடையெலும் பில் (Mandible) கீழ்ப்பற்களும் காணப்
படுகின்றன. பற்களுக்கு வெளியே குதிரை
லாடம் வடிவிலான இடைவெளிப் பகுதி pu Galafar u5)ao (Vestibule) 6.767 D asp லாம் பற்களாலும் முரசாலும் குழப் பட்டு இருக்கும் உள்பகுதியே உண்மை யான வாய்ப் பகுதியெனக் கூறப்படுகின் றது. வாய்ப்பகுதியின் கீழ்த் தளத்தில் இருந்து தான் நாக்கு வெளிவருகின்றது. மேல்தளமானது வல்லண்ணம் (Hard Palate) Quod GvGẩor 6oor b (Soft Palate) மெல்லண்ணத்தில் தடுவே தூங்கிக் காணப்படும் உண்ணுக்கு (UVula) ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கின்றது.
- (அ) உதடுகள் (Lips)
மனிதனது உ த டு கள் அசையக் கூடியனவாக இருப்பதோடு பேசுவதற்
கும் உணவை உள்ளே அடைப்பதற்கும்,
14)
நீர்ப்பதார்த்தங்களை உறிஞ்சுவதற்கும் ஏற்றனவாக இருக்கின்றன. உதட்டின் மேற்ருேல் வெளியில் சாதாரண தோலா

Page 17
கவும், உள்பகுதியில் கன்ன உள் பகுதி, தொண்டை போன்ற இடங்களில் காணப் படுவது போன்ற படைப்புள்ள செதில் Gupayaofia u(Stratified Squamous Epitheliun) கொண்டுள்ளது. உதட்டின் சிவத்த பகு தியில் இகுக்கின்ற சீதமென் சவ்வு (Mucous Membrance) LAS) asaj th 2 arri i G வாய்ந்தது. குழந்தைகள் வளர்ந்து கை களை பிரயோகிக்கும் வரையில் அவர் களது முக்கிய உணர்வுப் பகுதியாக
உதடே உதவுகின்றது!
(g) 6557 50Tib (Cheeks)
வா யி ன் பக் க சுவராகவிருக்கும் கன்னம் படையுள்ள செதில் மேல 6in sou (Stratified Squamous opetbelium) உள்ளே கொண்டுள்ளது. கன்னத்தில் மெல்லுவதற்கு வேண்டிய் உதவித் தசை
கள் (accessory muscles) உள்ளன:
இவற்றில் பக்சினேற்றர் (Buccinator) எனப்படும் தசை உணவைப் பற்கள் மெல் லும் பொழுது வெளியேருது அடக்க உதி வுகின்றது.
(g) Lugi) 556ïT (Teeth)
மெல்லும் பொழுது உணவை உள் ளேயடக்கவும், அசைத்துத் திருப்புவதற் கும் உமிழ்நீரைக் கலப்பதற்கும் தாக்கு உதவுகின்றது. தாக்கின் மேற் பகுதி மிகவும் உணர்ச்சியுள்ளதாக இருப்பதால் மீன் எலும்பு போன்றவை தொண்டைக் குள் செல்லாது தடுக்கின்றது. நாக்கு மூன்று வெவ்வேறு கோணங்களில் அமை ந்த தசைகளால் ஆனது இந்த அமைப்பு நாக்கின் அசைவிற்கு மிகவும் ஏதுவாக அமைந்துள்ளது. தாக்கின் மேற்பகுதியில் சுவையரும்புகள் (Taste buds) காணப் படுகின்றன. நாக்கின் முன் 2/3 பகுதி வாய்ப்பகுதியிலும் பின் 1/3 பகுதி தொண்டையிலும் காணப்படுகின்றது.
தொண்டை (Pharynx)
உணவுக் குழா யி ல் சமிபாட்டுத்
தொழிலிற்கும் சுவாசத் தொழிலிற்கும் பொதுவாக அமைந்த பகுதியே தொண் டையாகும், மூக்குத் துவாரங்கள் தடைப்
(1

படும் பொழுது வாயினல் சுவாசத்தை மேற்கொள்ள இப்பகுதி உதவுகின்றது. தொண்டை, மண்டையோட்டின் அடிப் பகுதியில் ஆரம்பித்து கிறிக்கொயிட் கசி u83IT u566är (Cricoid Cartilage) SpudL பும் வரை நீண்டுள்ளது. இதன் கீழே உணவுக்குழாய் 6வது கழுத்து முள்ள ந் தண்டுஎலும்பின் மட்டத்தில் (level) இருந்து ber Lofras (Oesophagus) , G.S áð66ór sos) - இந்த தொண்டை - களச் சந்தி தான் தொண்டையின் மிகவும் ஒடுங்கிய பகுதி யாகவும் விரிவடைய முடியாத பகுதியா கவும் காணப்படுகிறது. ஆகவே இந்தச் சந்தியைத் தாண்டும் எந்தப்பொருளும் உணவுக் குழாயின் ஏனைய பகுதிகளில் தடைப்படுவதில்லை.
இங்கே காணப்படும் தசைகளை ஐந்து
பிரிவுகளாக வகுக்கலாம்.
1 GLD6 accids S (Superiors
Constrictor). 2 நடு சுருக்கி (Middle
Constrictor) 3 8G3gp ifråga (Inferior
Constrictor) இவை மற்றப் பகுதிகளில் காணப்படுவது போன்ற வட்டமான தசைப்படையையும்
4 ஸ்டைலோ பரிஞ்சியஸ் (Stylo
s pharyngeus) 5 ual GLn Luis guai) (Palato
pharyngeus என்ற தசைகள் ஏனைய உணவுக் குழாய் பகுதிகளில் காணப்படும் நீள் பக்கமான தசையையும் குறிக்கும்.
தொண்டையின் முற்பகுதியில் மூ க் கு. வாய், குரல்வளை ஆகிய உறுப்புகளினது து வா ர ங் கள் அமைந்திருக்கின்றன. தொண்டையை மூன்று பகுதிகளாக பிரிக் கலாம். இவையாவன மூக்குத்தொண்டை Nasopharynx) QJT tij ë Gaj Taiva, L (Oropharynx) கு ர ல் வளே த் தொண்டை (Laryngo pharynx). (5th
மூக்குத்தொண்டை - மெல்லணிக்கு மேலா கவும் மூக்குக் குழிகளுக்கு பின்புறமாக
5)

Page 18
வும் இப்பகுதி உள்ளது. இதன் பக்கச் சுவ ரில் காதுக்கான துவாரம் (Auditory meatus) இரு க் கி ன் ற து: இ தன் மேல் பகு தி சீதமென்சவ்வினுல் மூடப்பட்ட எலும்பு ஆகும். இந்த சீக
மென்சவ்வு பின்சுவராக கீழே வந்து
அத்திலசு, அச்சு முள்ளந்தண்டு ஆகிய எலும்புகளுக்கு முற்புறமாக அமைந்துள் ளது; இப்பகுதியில் கீழ்தளம் அசையும் தன்மை கொண்டிருப்பதால் (மெல்லணி கருவு போல முடித் திறக்கும். இதன் மேற் சுவர் பகுதியில் காணப்படும் நிண (Sit இழையங்கள் தொண்டை முளை அல் லது ரொன்சில் (Tonsil) 67 687 U U(6 b. இவை பெரிதாவதால் மூக்கினல் சுவாசிப் தடைப்படலாம், குரலிலும் மாற் றங்கள் ஏற்படலாம்.
வாய்த்தொண்டை:- இப்பகுதியின் பின் புறச் சுவர் மூன்று சுருக்கி (Conictor) தசைகளைக் கொண்டது. உணவு விழுங்கப்படும் பொழுது இப்பகுதி முழு தாக மூடப்படும். மற்றைய வேளையில் வாசிப்பதற்கு ஏதுவாக திறந்த படியி ருக்கும். இதன் முன் பக்கத்தில் அசை யும் தன்மையுடைய பின் நாக்கின் 1/3 பகுதி காணப்படும். இப் பகதி வாயுடன் தொடர்பு கொள்ளும் இடம் பின் வாய்க் குழி அல்லது (Lur 65 (Fouces) srsy
டும் பின் வாய்க்குழியின் இருபக்கங் களிலும் காணப்படும் நிணநீர் இழையங் களை நாம் வெளிப்புறத்தில் இருந்து நேர டியாக வாயினுள் காணலாம். இது
ரொன்சில்' (Tonsi) என கூறப்படும்.
குரல்வளைத்தொண்டை - இப்பகுதி குரல்வ ளையின் மேல்பகுதிக்குப் பின்னகவும், சூழ் ந்தும் காணப்படும். இதன் பின்புறச் சுவ கும் கொன்ஸ்ரிக்டர் தசைகளால் ஆனது. இப்பகுதி குரல்வளை, களம் ஆகியவற் றில் திறக்கின்றது.
உணவுக் குழாயின் அடிப்படை இழைய வியல்
உணவுக்குழாய் முழுவதிலும் மிகவும் அடிப்படையான இழைய அமைப்பை நாம் காணலாம். சாதாணமாக இந்த
( 16

குழாய் நான்கு படைகளாலானது.
(1) நடு மடிப்பு அல்லது மேசன்ரரி (2) நீர்ப்பாயப் போர்வை 13) நீள் பக்கத் தசை
4) வட்டத் தசை 15) உப சீதப் படை
(6) சீத மென்றகட்டுச் தசையி
(7 சுரப்பி கொண்ட சீதப்படை (8) உப சீத நரம்புப் பின்னல் 191 குடற்றசை நரம்புப் பின்னல்
உணவுக் குழாயின் உள்ளே காணப் படும் முதலாவது படை, மேலணி தொடு ப்பு இழையம் ஆகியவற்றைக் கொண் டது. அனேகமாக இப்பகுதியில் சுரக்கும் asov či scir (glandular ce is) a T6ovú u19uh: உணவுக் கழாயின் பகுதிக்கு ஏற்றவாறு பலவகையான தொழிலுக்கு ஏற்ப சுரக் கும் கலங்கள் அமைந்துள்ளன இ த ன்
தொடுப்பிழையத்தில் நிணநீர்க் கலங்க
ளும் காணப்படலாம்:
உள்புறமிருந்து இரண்டாவது படை யில் (சீதமுளிக்கீழ்ப்படை) இரத் த க் குழாய்கள், நிணநீர் இழையங்கள். நரம் புகள் முதலானவை காணிப்படும்.
மூன்முவதாக அமைந்திருக்கும் தசை ப்படை உள்ளே வட்டத் தசையையும் (Circular muscle) Galau GriG3uu sisir As Gnaf

Page 19
club (Longitudinal muscle) Qsr Gior டுள்ளது. உள்தசை உணவுக் குழாயின் விட்டத்தைச் சுருக்கவும் வெளித்தசை குழாயின் நீள் பக்கத்தை ஒடுக்கவும் உதவுவதால் உணவுக் குழாயின் அசைவு கள் தோன்றுகின்றன. வெளியே இருக் கும் நான்காவது படை உள்ளுறுப்புகளுக் astrGoT 3F jibgp 6ólífunr (35 h (Visceral Peritoreum) இந்தச் சுற்றுவிரி நரம்புகள், நிண நீர் இழையங்கள், இரத்தக் குழாய்கள் முதலியவற்றை கொண்டு செ ல் கி ன் ற psGLD qu’ùy Li-6ör (Mesentary) இணை க் கப்பட்டுள்ளது.
smo (Oesophagus)
தொண்டையின் கீழ் தொடர்ந்து ஆரம்பமாகும் இப்பகுதி 10 அங்குல நீளம் கொண்டது. இப்பகுதியில் உணவு சாதாரண புவியீர்ப்பினுலும் சுற்றுச் சுருக்கலையசைவினலும் செல்கின்றது. இந் தக் குழாய் முன்னே) அமைந்த ●6mlfrgrあ குழாய்க்கும் பின் புறத்தில் இருக்கும் முதுகெலும் பிற்கும் இடையில் காணப் படும் கீழே மார்பு வயிற்றிடைமென்ற கட்டினூடாக (Diaphragm) சென்று வயிற்றுப்பகுதியில் இரை ப் பை யாக தொடர்கின்ற்து.
இதன் இழையவியல் பொது அமைப் பில் இருந்து சில வகையில் மாறுபடுகின் றது. இதனுள் மேலணிப் பகுதி, படை யுள்ள செதில்மேலணியினல் ஆனது, இத னைத் தொடரூம் மற்றைய இரைப்பை, சிறு குடல் போன்ற பகுதிகள் கம்ப மேல ணியை (oolumnar) கொண்டுள்ளன இதன் தசைப்படையில் முதலாவது 1/3 Luits 56 a fiss60) ruth (Striated Muscle) கீழ் பாகத்தில் மிருதுவான தசையும் (Smooth Muscle) 9 60 uopšg Gir 6MTGITT -- gas னது வெளிப்படையும் தடிப்புற்று நார்த் தன்மையுடன் தோன்றியுள்ளது. ኍ
gainyl sinu (Stomach) -
உணவுக் குழாயின் மிக விரிந்த பகுதி
யான இரைப்பை சிறுகுடலிற்கு உணவு
செல்ல முன் அதற்கான தங்கிடமாகவே
(17

தொழிலாற்றுகிறது. சமிபாட்டு தொழில் இங்கே சிறிய அளவில் தான் நடக்கின் றது, இரைப்பையை மூன்று பிரிவுகளாக கருதலாம். இரைப்பையின் மார்புப் பாகம் பண்டசு (Fundus) எனவும், நடுப் பாகம் உடல் (Body) எனவும் ஒடுங்கிச்
செல்லும் கீழ் பாகம் படலைக் காவலி
(Pylorus) என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் இழைய அமைப்பில் தசைப் படையில் காணப்படும் வட்டத்தசை நீள் தசை என்ற இரு படைகளை விட நடு வில் கோணலாக செல்லும் வேருெரு தசைப் பிரிவும் காணப்படும். இதன் உள் காணப்படும் உள்படை பாதுகாப்பிற் கான சீதத்தையும் ஐதோ குளோரிக் அமி லத்தையும் சுரக்கின்றது.இதன் சுரப்புபுரத சமிபாட்டிற்கு ஏற்ற பெப்சின் என்ற நொ தியத்தின் தொழிற்பாட்டிற்கு ஏதுவாக இருக்கின்றது. படலைக் காவலி முன் சிறு குடல் சந்தியில் படலையிறுக்கி (yloric Sphinctor) என்ற தசைச் சுற்று காணப்
படுகிறது.
Sgle, Li (Small Intestine)
இப்பகுதி 18 அடி வரை நீளமானது மூன்று பிரிவுகளாக இதனை வகுக்கலாம்
(psăT SF gp 5L6v (Duodenum)
சிறுகுடலின் அகலமான, சிறிய அசை வற்ற பகுதி இதுவாகும். "C" வடிவ மான இதன் நீளம் 10 அங்குலமாகும் இதன் நடுப்பகுதியில் சதயக் கானும் பித்தக் கானும் உணவுக் குழாயினை அடைகின்றன. இதன் இழைய அமைப்பு சாதாரணமான படைகளைக் கொண்டுள் ளது. இங்கே உணவு சதயச் சுரப்பு, பித் தம் ஆகியவற்ருல் தாக்கமுற்று சமிபா டும், உறிஞ்சலும் நடைபெறும். நடுச் சிறு குடல் (Jejunum) கீழ் சிறு குடல் ஆகிய பகுதிகளில் சமிபாடடைந்த உணவு உறிஞ்சப்படுகின்றது. .
Guq5iš5L6iv (farge Intestinie)
பின் சிறு குடல் பெருங்குடல் வர் தடையும் பகுதியில் குருட்டுக்குடலும்.

Page 20
(Caecum) sẽL-& 6)J6ìTrì (Hub (Appendi*) அமைந்துள்ளன. இவை மனிதனில் காண பட்ட பொழுதிலும் தொழிலற்றன வாகவே அமைத்துள்ளன.
பெருங்குடல் பகுதியை சிறு குடலு Lன் ஒப்பிடின் சில வித்தியாசங்களை காணலாம். சிறு குடலை விட இப்பகுதி அகன்று காணப்படும். உறிஞ்சுவதற்கான விரலிகள் இங்கே இல்லை. தசைப்படையில் நீள்தசை சுற்றிவர இல்லாது மூன்று கீறு ராக அமைந்துள்ளது. வெளிப்படையில் பல வளரிகள் கொழுப்புச் சேர்ந்க் சுற்று விரியில் இருக்கின்றன.
நேர் குடல்-குதக் குடல் (Rectum - Anal Canal)
நேர் குடல் என பெயரிடப்பட்டிருப்
யினும் மனிதனில் இப்பகுதி திருவெலும்
Sciar (Sacrum) வளைவுக்கு ஏற்ப வளைந்து ாணப்படும். இதன் தசைப் படையின் நீள்தசை பெருங்குடலிலிருந்து Lổ GiỡI (9 th ஒன்ருகி 5岛血 °吓 காணப்படும். இங்கே நடுமடிப்புகள் இல்லை.இறுதிப் பகுதியான குதக்குடல் மலம் கழிக்காத நேரங்களில் மூடிக் காணப்படும். இங்கே இரு சுருக்கி ssir (Sphinctors) உள்ளேயும் வெளியே யும் இருக்கின்றன. நேர்குடலின் நீண்ட IsibLŮ Lu 5 @ uîáv (Vertical Coloumn) B T - நாளங்கள் உள்ளன: நாளங்கள் விரிந்து இரத்தம் சுரந்து வேதனையுடன் இருக் இன்ற நிலை மூல நோய்" (Haemorrhoids) எனப்படும்.
„sáls.Júlasir(Accessory Gland*) 1) உமிழ்நீர்ச் சுரப்பிகள் (Salvary Glands) கன்ன உமிழ்நீர்ச்சுரப்பி காதுக
ளுக்கு கீழே அமைந்துள்ளது. இதனது
நீளமான குழாய் மேல்வாயினுள் கடை வாய்ப் பகுதியில் திறக்கின்றது. கீழ்த்தா டைச் சுரப்பி கீழ்வாயின் வெட்டும் பற் களுக்கு அருகில் திறபடுகின்றது. நாக்கீ ழுள்ள சுரப்பி நாக்கின் கீழ்ப்பகுதியில் சுரக்கின்றது. இந்த உமிழ்நீர்ச்சுரப்பிக ளினது சுரப்பு, சீதம் நீர்ப்பாயம் முதலி வற்றைக் கொண்டது, நீர்ப்பாயத்தில்

இருக்கின்ற தயலின் (Ptyalin) என்ற.
நொதியம் மாவுப்பொருள் சமிபாட்டை ஆரம்பிக்கின்றது. சமிபாட்டுத் தொழி லோடு சேர்ந்து உணவை ஈரமாக்கி பின்னே தாக்கின் மூலம் தள்ளவும் உமிழ்நீர் தேவையாகும்,
2) нFл6i) (Liver)
வயிற்றின் வலது பக்கத்தில் மார்பு வயிற்றிடை மென்ற கட்டின் கீழ் இதனை காணலாம். எமது உடலின் மிகவும் பெரிதானதும், அனுசேபத்திற்கு முக்கி யதுமானதுமான உறுப்பு ஈரல் எனலாம் இதன் கீழ்ப்பாகத்தில் பித்தப்பை (Gal Bladder) அமைந்துள்ளது. ஈரலிள் கலங் களில் தோன்றும் பித்தம் சிறு குழாய் களினூடாக ஈரல் குழாய்கலின அடைந்து பித்தக் கானுடன் இணைந்து பொது பித்தக் கானக (Common Bileduct)
மு ன் சிறுகுடலை ய டைகின்றது. ச மி
பாட்டைப் பொறுத்த மட்டில் ஈரலின் முக்கிய தொழில் பித்தம் சுரப்பது ஆகும். ஈரலில் சுரக கப்படும் பித்தம் பித்தப் பையில் திண்மப்படுத்தப்படுகின்றது கிளை கஜன் சேமித்தல், குளுக்கோசை தேவைக்கேற்றவாறு வெளியிடல். A, D B. K. B. 12 போன்ற வைட்டமின்களின் சேமித்தல் போன்ற தொழில்களுடன். மாவு, புரதம், கொழுப்பு ஆகியவற்றின் அனுசேபமும் ஈரலில் தான் நடைபெறு கிறது.
gangsud (Pancreas)
இரைப் பையின் பின் படுக்கையில் காணப்படுகின்ற இந்த நீளமான உடல் கூறு பொது அமைப்பில் உமிழ் நீர்ச்சுரப் பிகளையொத்தது. கானற்ற சுரப்பிகளும் (Ductless Glands) G6u Gilë dru t'i 16 gjub சதயத்தில் இருக்கின்றன. கானற்ற சுரப் பான இன்சுலின் மாவுப் பொருள் அனு சேபத்தில் மிகவும் முக்கிய பங்கெடுப்ப தால் இந்த சுரப்பு குறைந்து அல்லது இல் லாது இருக்கும் நேரங்களில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது: சமிபாட்டைப் பொறுத்தவரையில் வெளிச்சுரப்புகள்,

Page 21
சதய கான் மூலம் முன் சிறு குடலை, யடைந்து புரதம். மாவு, கொழுப்பு ஆகியவற்றை தாக்கி சமிக்கச் ச்ெய்கின் றன.
இதனை தலைப்பகுதி, உடல், வால்
எனப் பிரிக்கலாம். தலைப்பகுதி "C" ! போன்ற முன் சிறு குடவின் வளைந்த பகு
“ஊற்றின்’ தூண்களி
பேராசிரியர்: சோ. செல்
தோற்றம், 28 - 5 - 1932 1953-1957 உயர் க்ல்விக்காக பேராதை
சிறப்புப் பட்டதாரியாகப் 1959-1961 பேராதனை இலங்கைப் ப துணை விரிவுரையாளராகப் 1961-1963 இலண்டன் பல்கலைக் கழக School of Economics) Tib படிப்பு-பேராசிரியர் B, H. னகத் திகழ்ந்தவர். 1963-1974 பேராதனைப் பல்கலைக் கழ
விரிவுரையாளராகக் கல்வி 1970-1971 சேவைக் கால ஓய்விலே (Sa 1974-1977 நைஜீரியா - அகமது பெ ". : Bello University) a fies 6oot 1977 ஜூலை இலங்கை பல்கலைக் கழக
புவியியற் பேராசிரியராகட் 1977-1979 யாழ்ப்பாண பல்கலைக் கழ
பேரவை பிரதிநிதியாக, அரிய பணி புரிந்தவர். பிற சமூகப் பணிகள் : பேராதனேப் பல்
பெரும் பொருளாளர் "தமிழியற் கழகம்" எனு யாழ்ப்பாண பல்கலைக் கழ இல்வாழ்க்கை: திருமணம் 1960 துணை
நன்மக்கள் நால்வர் ഥഞDI: 2 8 -- Ꭶ5 - 1 9 7 Ꮽ

தியில் காணப்படும் வால்பகுதி வயிற்றின் இடப்புறத்தில் கல்லீரலின் (Spleen) அண் மையில் அமைந்திருக்கும்.
இதுவரை ஓமிபாட்டுத் தொருதியின் உடற் கூறுகள் ஆராயப்பட்டுள்ளன. அடுத்த இத ழில் சமிபாட்டுத் தொழிற்பாடு பற்றி விரிவாக கூறப்படும்.
ரில் ஒன்று சாய்ந்ததே!
வநாயகம் (1932-1979)
னப் பல்கலைக் கழகம் புகுந்து, புவியியல் பட்டை தீட்டப்பட்டவர். ல்கலைக் கழகத்துப் புவியியல் துறையிலே
பதவி வகித்தவர் த்து பொறியியல் கல்லூரிலே (London . ஏ. கலாநிதிப் பட்டங்களுக்காக மேற் Farmer இனுடைய மதிப்புக்குரிய மாணவ
கத்திலே விரிவுரையாளராக, சிரேஷ்ட ப் பணி புரித்தவர் bbatical leave) garš slav Tšs GoIF são Nv6io ல்லோ பல்கலைக் கழகத்திலே (Ahamadu
யாளராகப் பதவி வகித்தவர் யாழ்ப்பாண வளாகத்திலே முதலாவது பதவி நியமனம். ாத்திலே பேராசிரியராக, துறைத் தலைவ செனற் சபைப் பிரதிநிதியாக பல்துறை
கலைக் கழக இந்து மாணவர் சங்கத்தின்
றும் சமூகவியர் அமைப்பின் ஸ்தாபகர்
இந்து மன்றப் பெருந் தலைவர் af ganrif; 25au mi pá525)

Page 22
மனிதன் என்றெரு
ச. யூனிகாந்தா உதவி விரிவுரையாளர். உயிரிர
சார்ள்ஸ் டாவினுடைய "இயற்கைத் முன் வைக்கப்பட்டு இப்போ 120 ஆ இக்கொள்கையின் தாக்கத்தால், " ஆய்வாளர்கள் அதிகம் கவனம் ெ தொகுப்பே இக்கட்டுரை.
பெயர்: விலங்கியல் அறிஞர்கள் இவ்விலம் கை ஹேமோ சேபியன்ன் (Homo Sapies ns) என அழைப்பர். சாதாரணமாக எல்லோருக்கும் புரியும்படி கூறுவதானல்,
மனிதன் என்பதே இவ்விலங்கின் பெயர்.
தோற்றம்: பூமியில் எந்த ப் பகுதியில்
இவ்விலங்கு முதன்முதலாகத் தோன்றி
யிருக்கவேண்டும் ான்பதில், அறிஞரி
களிடையே அபிப்பிராய பேதம் நிலவு
கிறது. ஆளுல் பெரும்பாலோர் (Leakey
போன்ற அறிஞர்கள்) ஆபிரிக்க கண்டத்தி
லேயே இவ்விலங்கின் ஆதிமூதாதையர்
மார் ஒரு மில்லியன் ஆண்டு காலத்திற்கு
முன்னர் வரழ்ந்திருக்கவேண்டும் எனக்
கருதுகின்றனர். ஆசியாவின் சில பகுதி
ளிலும், இவ்விலங்கின் ஆதி மூதாதை
டிரின் சில பிரிவினர் வாழ்ந்திருப்ப
தாகச் FrÉörgy és 6ír கண்டுபிடிக்கப்பட்டுள்
enesr. Sfi) sfreð மனிதனின் முதலாவது
பிரதிநிதியான குருே மனேன் மனிதன்
(Cro-Mãgnon Man) இன்றைக்கு சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி
யுள்ளான்3
பூமியின் தோற்றத்துடனும், பூமியி லுள்ள மற்றெந்த முதுகென்பற்ற விலங் குகளின் தோற்றத்துடனும் ஒப்பிடு கையில், விலங்கு இராச்சியத்திலேயே இறுதியாகத்தோன்றிய விலங்கு, மணி sG6Jr. (3grašr G15ů9utř (John Napier) எனும் விலங்கியல் அறிஞர், இக் கால நிர்ணயிப்பை ஒப்பீட்டுமுறையில் மிகவுஞ் சுலபமாக பின்வருமாறு விளக்கியுள்ளார்

விலங்கு!
சாயனத்துறை. மருத்துவபீடம். பேராதனை
தேர்வு" பற்றிய கூர்ப்புக் கொள்கை; ண்டுகள் ஆகிவிட்டன. சர்ச்சைக்குரிய
LD
னிதன்” எனும் விலங்கைப் பற்றி
சலுத்தியுள்ளனர். இது பற்றிய சிறு
"பூமியின் தோற்றக் காலத்தை ஓர் ஆண்டாகக் கொள்ளின், பூமியிலுள்ள மற்றைய முதுகென்பற்ற,முதுகென்புள்ள விலங்குகள் யாவும் தோன்றிய பின்னர், அவ்வாண்டு டிசம்பர் மாதம் 31脑 திகதி இரவு 8.45 மணியளவிலேயே, மனிதன் எனும் விலங்கு பூமியில் உருவெடுத்தது,
தோற்றிய விதம் : இவ்விலங்கு தோன்றிய தைப் பற்றி, பல வகை விளக்கங்கள் முன்
20)
car rif கொடுக்கப்பட்டு வந்துள்ளன. மக் களின் மீது சமயத்தின் தாக்கம் அதிகமா யிருந்த காலத்தில், மக்களின் சுய சிந்த னைத் திறனுக்கு இச்சமய நம்பிக்கைகள் ஒரளவுக்கு தடையாயிருந்தன. சர்வ சக்தி வாய்ந்த கடவுளாலேயே, மனிதனின் முதற் பிரதிநிதிகள் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையே மேலோங் கியிருந்தன.
ஆஞல், சார்ள் டார்வின் (Charles Darwin), இற்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், 1859 இலே தனது வரலாற்று முக்சியத்துவம் வாய்ந்த இயற்கைத் தேர்வு பற்றிய கொள்கையை 'Origin of Species" எனும் பெயரில் நூலாக வெளிக் கொணர்ந்தார். தொடர்ந்து இவரே. மனிதனின் தோற்றத்தை ஆரா uù s6gi 1871 3)a), "Decent of Man'" எனும் நூலை வெளிக் கொணர்ந்தார்.
மரங்களில் வ்ாழும் தாவித் திரியும் குரங்குகள் போன்ற மூதாதையரிலிருந்தே மனிதன் தோன்றினுன் எனத் தெளிவாக

Page 23
போதிய சான்றுகளுடன் டார்வின் கூறி ஞர் (‘குரங்கிலிருந்து பிறந்தவன் மணி தன்’ என் ருெரு சினிமாப் பாடல் "துரக் கித் தூக்கி திரைப் படத்தில் இடம் பெற்றது. இது பிழையானது. இப்பாடலை இயற்றிய கவிஞர், டார்வினின் உண்மை யான கருத்தைச் சரியாக விளக்கிக் கொள்ளவில்லைப்போலும் " குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருந்தால், குரங்கு எனும் விலங்கை இப்போ நாம் காண முடியாது. குரங்குகளோடு சீவித்திருந்த ஒரு வகை மூதாதை விலங்ககளே. மனித னின் தோற்றத்துக்கு முன்னுேடிகளாக இருந்தன.) ஆனல், அந்த மூதாதை விலங்குகள் எவை என்பது இன்னும் தெளி வாகத் தெரியப்படவில்லை. இது குறித்து. அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
1960ub g6öörgá) Sir Alister Hardy எனும் அறிஞர், மனிதனின் தோற்றத் திற்கு இன் ரூெரு தர்க்கத்திற்குரிய விளக் கத்தைக் கொடுத்துள்ளார். நீர் வாழ் முசில யூட்டிகளிலிருந்து கடற்கரைப் பகுதி களில் திரிந்து பழகிய விலங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கலாம் என்பதே இது, இவர், இதற்கு கொடுத்த இரு முக்
திய விளக்கங்களாவன :-
நீர் வாழ் முலையூட்டிகளான திமிங் கிலம், டொல் பின் ஆகியவற்றில் தோலுக் குக் கீழே அதிகளவில் கொழுப்பு (Subcu. வneous fat) சேமித்து வைக்கப்பட்டிருக் கும். இது மிதப்புத் தன்மைக்கு ஏற்ற தொரு இசைவாக்கமே. மனிதரிலும், தோலின் கீழ் பொதுவாக கொழுப்புப் படைகள் சேமிக்கப்பட்டுள்ளன, அதுவும் வயிற்றுப் புறப் பகுதியில் (Ventral) இக் கொழுப்புப் படைகள் அதிகமான அள வில் உள்ளன. இது மிகவும் துலக்கமாக பெண்களிலே (மார்பகப் பகுதிகள்,
இடைப் பகுதி, மேற் காற் பகுதிகள்) தெரி
வது கண் கூடு.
2. முகூ யூட்டிகளின் சிறப்பம் சமான மயிர்கள் மனிதனின் உடலில் பல பகு திகளின் குறைக்கப்பட்டுள்ளன. தலைப்ப
(2)

குதியில் மட்டும், மயிர்கள் அடர்த்தியாக இருக்கக் காரணம், சூரிய வெப்பத்தி லிருந்து மனிதனின் தலை யைப் பாது காக்கவே. (அதாவது, நீரினுள் இருக்கும் போது, தலைப்பகுதி மட்டுமே வெளி நீட் டப்பட்டு இருக்கும் எனக் கொள்க.)
இவ்விரு விளக்கங்களும் ஏற் று க் கொள்ளக்கூடியவையே. ஆனல், மனிதன் நீந்துவதற்குப் படித்துப் பழக வேண்டி யுள்ளது. பல சாதிக் குரங்கு களேப் போல அவனுல் இயற்கையாகவே நீரில் நீந்த இயலாது. அத்துடன் தலையைத் தவிர்ந்த ஏனைய சில குறிப்பிட்ட பகுதிகளில் கூட (சனனி யுறுப்பைச் சுற்றியும், அக்குள் u öğ5g5) u98JI Lb -armpit region) LD 4u9 fif 35 6ir அடர்த்தியாக இருப்பதற்குப் போதிய விளக்கத்தை இக் கொள்கை அளிக்க வில்லை.
மனிதனுடைய பிரத்தியேக உயிரியற் சிறப்பியல்புகள்
இந்நூற்றண்டின் பிரபல உயிரிய லறிஞரும், டார்வினுடைய கொள்கைக் குப் பிரச்சாரப் பீரங்கியாக விளங்கிய G33 mr ud 6iv · @ smo iš 6i) 66749 säv (Thomas Huxley ) , பேரனுமாகிய ஜூலியன் ஹக்ஸ்லி (Julian Huxley) egy6), i é56it, 5607 g "The Unique ness of Man'* 6769ị tb {5!T6ốìải, tD 65ỉìg5 Göfì6ằr பிரத்தியேக உயிரியற் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு நிரைப்படுத்தியுள்ளார்.
1. மனிதனை இவ்வுலகில் ஆட்சி செலுத்
தக் கூடிய ஒரு விலங்காக மாற்றியுள்ள
முக்கிய சிறப்பியல்பு. அவனது நினைவில் வைத்திருக்கக் கூடிய ஆற்றலே (conceptual thought). ஆருவது அறிவுக்கு இதுவே வழிகாட்டி.
2. இனப்பெருக்கச் சிறப்பியல்பு: மனித ஆணும் பெண்ணும், எந்தி நேரமும் கூடி, புணரக்கூடிய வல்லமையைப் பெற்றுள்ள னர், மற்ற விலங்குகளில் இந்நிலை சாத் தியமில்லை. ஏனெனில், அநேக விலங்குகள் ஒரு குறிப்பிட்ட இனப்பெருக்க காலத்தி Ga.) Gu (definite breeding reason) sh இனத்தைப் பெருக்கக் கூடியதாக உள் ளன; இக்காலத்திலேயே, அவற்றின்

Page 24
இனப் பெருக்க அங்கங்கள் முழு விருத்தி யடைந்து, தொழிற்படக் கூடிய நிலையில் உள்ளன. அத்துடன், உயர் விலங்குகளில் அவற்றின் இனப்பெருக்க காலத்திற் கூஒன்ருே அல்லது பல இலிங்க வட்டங்கள் செயற்படுகின்றன. ஆகவே, அவ்வட்டத் தில், ஒரு குறிப்பிட்ட கால எல்லையிலேயே ஆணும் பெண்ணும் புணரக்கூடிய நிலையில் உள்ளன. பொதுவிலே இனப்பெருக்க காலமோ அல்லது இலிங்க வட்டமோ அல்லது இரண்டுமோ செயற்படுவதால் மற்ற விலங்குகளின் புணரும் திறன் கட் டுப்படுத்தப்படுகிறது. மனிதனின் மேற் கூறிய இரு காரணிகளும் தொழிற்படுவ தில்லை. மனிதரில், ஆதிவாசிகள் எனக் கருதப்படுவோர் (எஸ்கிமோக்கள் போன் முேர்) சிலரில், ஒரு வகை *இனப்பெருக்க arah (breeding Season) இயங்கி வருவ தாக தெரியவருகிறது. ஆனல். இவற் றின் தொழிற்பாடும் மிகவும் தெளிவற்ற நிலையிலேயே உளது. அத்துடன்; மனத்தில் ாழும் பாலுணர்ச்சி உந்தல் காரணி களுக்கு முன்னல் இவற்றின் தொழிற்பாடு பூஜ்யமே “Man is continually sexed: mals are discontinually sexed’. 6T 6UT 9ë ஒறப்பியல்பை ஜூலியன் ஹக்ஸ்லி இரத் தினச் கருக்கமாகக் கூறியுள்ளார்.
இங்கு, டெஸ் மொண்ட் மொரிஸ் (Desmond Morris) 67gy Lb gyógyit ő, gő யுள்ளதும் நோக்கு தற்குரியது. "எல்லா விலங்குகளிலும் பார்க்கப் பெரிய மூளை யைத் தானே கொண்டுள்ளதாகப் பெரு மைப்படும் மனிதன் எல்லா விலங்குகளி லும் பார்க்கப் பெரிய ஆண்குறியையும் தானே கொண்டுள்ளான் என்பதைத் தான் மறைத்துக் கொண்டு. அந்த * அசிங்கப்பட்டத்தை கொரில்லாவுக்கு கொடுத்து விட்டான்." இக்கூற்றிலும் உண்மை இருக்கவே செய்கிறது.
3. இனப்பெருக்க மாறும் திறன் (Reprodu. tive Variability); மற்றெந்த குறிப்பிட்ட விலங்குகளிலும், அவை வெளிக் கொன ரும் இளஞ் சந்ததியின்ரின் எண்ணிக்கை அளவு, ஓரளவுக்கு மாறிலியாகவே உள்

ளது. அப்படி வேறுபாடு ஏற்படினும், அதுவும் வெளிக்காரணிகளான உணவு வெப்பநிலை ஆகியவற்ருல் ஏற்படுத்தபடுப வையே.
இதற்கு மாருக, மனிதன் பொதுவாக
ஒரு தடவையில் ஒரேயொரு இளஞ் சந்
ததியைத் தோற்றுவிக்கிருன் ஆனல், அவ
னுடைய தோற்றுவிக்கும் வினைத்திறன்
ஒன்றிலிருந்து ஒரு டசினுக்கு மேலாகவும்
வேறுபடும் சில விதிவிலக்குகளில் எண் ணிக்கை இருபதிற்கு மேலாகவும் உயர் கிறது.
4. பின் முதிர்ச்சிக் காலத்தின் எல்லையும்
அதன் முக்கியத்துவமும் (Length and relative importance of his period of post-maturity) சாதாரண மனிதனின் வாழ்க்கை எல் லையானது, இப்போ பத்துக்கும் மேம்பட்ட ஆண்டுகளை இப்பின் முதிர்ச்சிக் காலத்தில் உண்டாக்கு சிறது, எ ல் லா விருத்தி பெற்ற மனித சமூகங்களிலுக், அச்சமு
தாயத்தின் வெவ்வேறு துறைகளில் பெயர்
பெற்ற பெரும்பான்மையான தலைவர்கள் பின் முதிர்ச்சி அடைந்தவர்களாகவும், சாதாரண வாழ்க்கை எல்லையை (70 ஆண் டுகள்) தாண்டக்கூடியவர்களாகவும் உள் ளது இனறு கூட கண்கூடு. உதாரணங் கள் பல உண்டு. மிகச் சில பின்வருமாறு:
வின்ஸ்டன் சேர்ச்சில், பேர்ளுட் ஷா, சார்லி சப்ளின், அல்பேர்ட் சுவைட்சர், அல்பேர்ட் ஐன்ஸ்டீன் மா - சே - துங்,
சூ - என் - லாய், ஹோ - சீ - மிங் -மார் ஷல் டிட்டோ, ராஜாஜி, ஈ, வே. ரா. பெரி பர், டாக்டர் ராதாகிருஷ்ணன் ரவீந் திரநாத் தாகூர், மகாத்மா காந்தி. (79 வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார்) பப் ளோ பிக்காசோ, யெ குடி மெனுஹன், அகதா கிறிஸ்டி, இலங்கையில் கூட, சேர். பொன். இராமநாதன், சா. ஜே. வே. செல்வநாயகம், மார்ட்டின் விக்கிரம சிங்க இப்படிப் பல.
举
22)

Page 25
மனித உடலின்
(நடராஜா சயலொளிட வன்.
எமது உடலானது இழையங்கள் எனப் படும் கலக் கூட்ட அமைப்புக்களா லானது. இவ்விழையங்கள் பல ஒன்ருக கட்டப்பட்டு உறுப்புக்கள் அல்லது அங்கங்கள் எனப் படும் அங்கங்களை உண்டாக்குகின்றன. இவ்வாறுண்டான உறுப்புக்கள் பல ஒரு மித்து தொழிலாற்றுவதால் எமது உடற் தொகுதிகள் உண்டாகின்றன. பல உடற் ருெ குதிகள் ஒன்ரு க ஒர் பூரண அங்கியை ஆக்குகின்றன.
இழையம் என்ருல் என்ன?
ஒரு கலக்கூட்டம் ஒன்றிலுள்ள கலங் கள் எல்லாம் ஒரே மூலவுயிர்ப்படையில் இருந்து உற்பத்தியாவதுடன் அவை ஒரே கட்டமைப்பையும் ஒரே தொழியுைம் கொண்டிருக்குமாயின் அக் கலக் கூட்டம் இழையம் என அழைக்கப்படும். எனவே ஓர் இழையத்தின் கலங்கள் யாவும் பின் வரும் மூன்று அம்சங்களையும் கொண் டிருக்க வேண்டும். −
(1) ஒரே மூலவுயிர்ப்படையில் இருந்து உற்பத்தியாகி இருக்க வேண்டும்.
(2) ஒரே அமைப்பு (3) வேறு தொழில் கூர்ப்பில் இழையங்களின் வரலாறு:
புரட்டோசோவா அங்கிகளில் ஓர் தனிக் கலமே எல்லாத் தொழில்களையும் செய்கின்றது. சிலந்தரேற்ற விலங்குகளில் உடலேயாக்கும் கலங்கள் வெவ்வேறு தொழில்களை சேய்வதற்காக வியத்த மடைந்துள்ளபோதிலும் அவை ஓர் இழை யமாக ஒழுங்காக்கப்படவில்லை. அதாவது இவ்வங்கிகளில் கலவியத்தம் நடைபெற் றுள்ளதே யொழிய இழையவியலுக்குரிய முறையில் வியத்தம் நடைபெறவில்லை. இதன் காரணமாக சீலந் தரேற்று விலங்கு களில் இழையங்கள் காணப்படுவதில்லை;
2
(2
2
س

இழையங்கள்
ம் வருடம் மருத்துவ பீடம்)
முப்படை விலங்குகளிலேயே முதன் முதலாக இழையங்கள் என்னும் அமைப் புக்கள் உண்டாகியுள்ளன. இங்கு வெவ் வேறு தொழில்கட்காக வியத்தமடைந்த கலங்கள் ஒன்ருகக் கட்டப்பட்டு இழையே களையுண்டாக்குகின்றன. இவ்வாறு தோற் றப்பட்டுள்ள இழையங்கள் ஐந்து வகை இழையங்களும் அடிப்படை இழையங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
அவையா%ன:
i ) தொடுப்பிழையங்கள் (ii ) மேலணி இழையங்கள் (iii) நரம்பிழையம் (iv) தசை இழையம் (v ) மூலவுயிர் அல்லது இனப்பெருக்க
இழையங்கள் தொடுப்பிழையங்கள் :-
இவை மூளையத்தினுடைய இடைத் தோற்படையில் இருத்து விருத்தியடை கின்றன. கூர்ப்பில் ஆதியான முப்படை விலங்குகளான உடற்குழியற்ற முப்படை விலங்கு களில் (ஏசிலோமேற்றுகளில் தொடுப்பிழையங்கள் காணப்படுவதில்3ல இதற்குப்பதிலாக இடைத்தோற்படையி லிருந்து விருத்தியடையும் இடைக்கல விழையம் (Mesenchyme) எனப்படும் இழையமே காணப்படுகின்றது; இதுவே இவ்விலங்குகளில் தொடுப்பிழையத்தின் தொழில் செய்கின்றது. உயர் முப்படை விலங்குகளான சீலோமேற்றுக்களில் உடற்குழியுடைய விலங்குகள்) இவ்விடை க்கல இழையமானது தொடுப்பிழையாக விருத்தியடைந்து காணப்படுகின்றது எ ன வே இடைத்தோற்படைக்குரிய இடைக்கல இழையத்தில் இருந்து விருத்தி யடைகின்ற இழையங்களே தொடுப்பிழை யங்கள் என அழைக்கப்படும். தொடுப்பி ழையங்களில் பல வகைகள் உள்ளன. இவை யாவும் சில பொதுவான இயல்பு கண்க் காட்டுகின்றன
り

Page 26
(1) இவை மூள்ை யத்தில் இடைதோற் படைக்குரிய இடைக்கல விழையத்தில் இருந்து விருத்தியடைகின்றன.
(2) தாயம் என அழைக்கப்படும் அடிப் பதார்த்தம் (Ground Substance) ஒன்றில் கலங்கள் தெங்கிய நிலயில் காணப்படு தல்.
(3) தாயமானது திண்ம ஊன்பசை fellatin) 9ảhu II9ẩô காணப்படுதல்,
(4) தாயமானது தொடுப்பிழையக் கலங்களினல் சுரக்கப்படுதல்.
(5) தாயமானது இரண்டு வகையான நார் களைக் கொண்டிருத்தல்
அவையாவன:- (1) மஞ்சள் மீள்சக்தி நார்கள் (2) வெண்ஞர்கள்
தொடுப்பிழையத்தின் வகைகள்:-
எமதுடலில் காணப்படும் தொடுப் பிழையங்கள் மூன்று முக்கிய வகைகளாக டிரிக்கப்பட்டுள்ளன: அவையாவன?"
() உண்மையான தொடுப்பிழையங்
கள்
(2? நார்த் தொகுப்பிழையங்கள்
(3) பாய் பொருட் தொடுப்பிழையங்
கள்
குருதி நிணநீர் ஆகிய இரு இழையங் களும் பாய் பொருட் தொடுப்பிழையங்க ாகும். இவை ஓர் உண் மை யான தொடுப்பிழைய வகையில் இருந்து கில இயல்புகளில் வேறுபடுகின்றன. அவையாவன:-
( . ) இவ்விரு இழையங்களிலும் தாய ானது திண்ம ஊன்பசை நீலையில் காணப் படாமல் திரவ நிலையில் காணப்படுகின்
றது
(2) இவ்விரு இழையங்களிலும் தொடு ப்பிழையத்தின் தாயத்துக்கு சமனன திரவ இழையமானது (Plasma) தொடுப் பிழையக்கலங்கட்குச் சமனன குருதிக்

கலங்களினல் சுரக்கப்படுவதில்லை.
(2) ஒர் உண்மையான தொடுப்பிழைய வகையில் தாயத்தில் மஞ்சள் நார்களும், வெண்ணுர்களும் காணப்படுகின்றன. கசி யிழையம். என் பிழையம்போன்ற வன் கூட் டுத் தொகுப்பிழையங்களில் கொன்றின் (Chondrin) 5 6iv Suu ih ஆகிய படிவுகளினல் நார்கள் மறைக்கப்பட்டிருந்தாலும் ар - 6йт மையில் நார்கள் காணப்படுகின்றன - ஆனல் குருதி. நிணநீர், ஆகிய இரண்டு இழையங்களிலும் தாயமாகிய திரவ இழையமானது ஒரு போதும் நார்களே க் கொண்டிருப்பதில்லை.
குருதி, நிணநீர் ஆகிய இரண்டு இழை யங்களும் மேற்கூறியபடி ஓர் உண்மை as தொடுப்பிழைய வகையில் இருந்து சில வேறுபாடுகளை காட்டுகின்ற போதி லும் இடைத்தோற்படைக்குரிய இடைக் கல இழையத்தில் இருந்து உற்பத்தியாத லாலும் தாயம் எனப்படும் அடிப்பதார்த்
தமாகிய திரவ இழையத்தில் கலங்கள்,
தொங்கிய நிலையில் காணப்படுவதாலும் இவ்விரு இழையங்களும் தொடுப்பிழை யங்களாக கருதப்படுகின்றன.
குருதி இழையம்:-
கூர்ப்பில் குருதி தோன்றிய காரணம் உடற்குழியற்ற முப்படை விலங்கு களில் அகத்தோற்படைக்கும். புறத்தோற் படைக்குமிடையே ஓர் தொடர்ச்சியான படையாக இடைதோற்படை காணப்படு கின்றன எனவே அகத்தோற்படை மேலணியால் அகத்துறிஞ்சப்படும். சமீபா டடைந்த உணவுப் பொருட்கள். நீர்
ஆகியன இத்தொடர்ச்சியான இடைத்
24)
தோற்படைக்கூடாக எல்லா உடல் இழையங்கட்கும் பரவல் முறையில் Diffusion) கடக்தப்படுகின்றன. கூர்ப்பின் பாய் பொருளைக் கொண்ட உடற்குழி யொன்று ஏற்பட்டதன் காரணமாக அகத் தோற்படைமேலணியால் அகத்துறிஞ்சப் படும் சமிபாடடைந்த உணவுப் பொருட் களும். நீரும் உடலின் எல்லாப் பகுதிகட் கும் கடத்தப்பட முடியாத நிலை ஏற்படு

Page 27
கின்றது. இதனே நிவர்த்தி செய்வதற்காக உடற்குழியுடைய விலங்குகளில் ஒர் கடத் தும் தொகுதியின் அவசியம் ஏற்படுகின் றது. இதற்கேற்ப இவ்விலங்குகளில் பாய் பொருள் நிலையிலுள்ள கடத்தும் தொகுதி யொன்று விருத்திஅடைகின்றது, கடத்தும் தொகுதியை ஆக்கும் இப்பாய் பொருளே குருதி ஆகும். சமிபாடடைந்த உண வுப் பொருட்களைக் கடத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட குருதியிழையம் வாயுக்களை கடத்தும் தொழிலையும் N. கழிவுப் பொருட்களைக் கடத்தும் தொழி லையும் செய்கின்றது.
குருதி இழையத்தின் தொழில்கள்:
(1) சமிபாடடைந்த உணவுப் பொருட்
கள் நீர், கணிப் பொருள் அயன்கள். விற்
றமின்கள் ஆகியனவற்றை கடத்துதல்.
(2) சுவாசமேற்பரப்பில் இருந்து உடல்
குருதி இழையத்தின்அமைப்பு:
ച്ച് இழையம் ->மொத்த
குருதி < ゾ
இது மி >- ***.--دووه<
பெரும்பகுதி
அசேதன அய
திரவ இழையம்
ஓமோன்கள்
பிறபொருள்
 

இழையம்கட்கு O2 வையும். உடல் இை யங்களில் இருந்து சுவாச மேற்பரப்புக் களுக்கு CO2 வையும் கடத்துதல்
(3) ஈரலில் உண்டாகும் N கழிவுப் பொருட்களை சிறு நீரகங்கட்குக் கடத்து தல்.
(4) அகஞ்சுரக்கும் சுரப்பிகளால் சுரக் சப்படும் ஓமோன்களை அவை விளைவை ஏற்படுத்தும் உடற்பகுதிகட்குக் கடத்து தல்
(5) இளம் சூட்டுக் குருதி நிலையான விலங்குகளில் (உ+ம்: மூலையூட்டிகள் உடல் வெப்பநிலை சீராக்கத்தில் பங்கு கொள்ளுதல்.
(6) நோய்ககிருமிகளின் தொற்றுத வில் இருந்து உடலை பாதுகாத்தல். இத் தொழில் வெண்குருதிக் கலங்களைப்பற்றி விபரிக்கும் போது விரிவாக கருதப்படும்.
க் கனவளவின் ஏறக்குறைய 55% த்தை
ஆக்குகின்றது
குதி 45% த்தை ஆக்குகின்றது
நீர் (ஏறக்குறைய 90%)
-- --- ucirseir->Na , K , Ca
2- 2Cl , SO ,HPO,
HCCO -> SRu Guar
முக்கியமானவை
N வைக் கொண்டவை ார்த்தங்கள்
N கொண்டிராதவை
எதிரிகள்
5)

Page 28
Nஅற்ற
சேதனப் பதார்த்தங்கள்
Na கொ
சராசரியாக 7 இரு. நிறையுடைய குறைய 270 மி. இலீ. குருதியைக் கொண்டு மனிதனில் (70 கிலோ கிராம் 5-6 இலீ வ6
உங்களுக்குத் தெரியுமா? * இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கு அழைக்கப்படும் கடல், உப்பால் மிை நாம் தாழவே முடியாது! ஆனல் தொடர்ந்து வாழவும் முடியாது!
சமுத்திரங்களிலே நீரின் ஆழமா அளக்கப்படுகிறது. ஒரு பதம் = 6 அ
(2

頃)●fー> ஒகு சர்க்கரைட்வெல்லங்கள்
கொழுப்பமிலங்கள் கிளிசரோல் சில விற்றமின்கள் ஆகியன (உ+ம்) விற்றமின் -
- C
புரதங்கள் (i ) அல்புமின் / குளோபுலின் ண்டவை (iii) பைபிரினேசன்
(iv) y Gor mrgi Gg mrih 16år
ஆகியன முக்கியமானவை
புரதமற்ற பதார்த்தங்கள்
(1) அமினே மிலங்கள்
(2) சில விற்றமின்கள்
Ia i tij 69 h pus76š B
சிக்கல்
ஒர் குழந்தை பிறக்கும் போது அது ஏறக் ள்ளது. ஆனல் சராசரி நிறையுடைய ஓர் ரை குருதி காணப்படுகின்றது.
ம் இடையிலுள்ள (Dead Sea) 6 tor கயாக நிரம்பியிருப்பதால், அந்நீரிலே அந்நீரில் எவ்வகையான உயிரும்
Forg Lugh (fathom) 6 FSIMlub அலகால்
டிகள்
-புவணு
26)

Page 29
சேதனவுறுப்ட
கலாநிதி சு. பேராதனைப் பல்கலைச்
(
காயொட்சிலி
காபொட்சிலிக்கமிலங்கள் - COH ெ
காபொட்சிவிக்கமிலங்கள் கொழுப்பமிலங்
கமிலங்களில் அமிலத் தொகுதி அரோ மற்றிக் டிருக்கும். காபொட்சிலிக் தொகுதியை
இச்சேர்வைகள் காபனேற் சேர்வைகளின் பின்வரும் பரிவமைப்பே காரணமாகும்.
= C - چسسه C-OH -
" م . [l
Ο Օசில காபெ ாட்சிலிக்கமிலங்களின் உதாரணங் HCOH - போமிக்கமிலம் (மெதே
CFCOH - அசற்றிக்கமிலம் (எதே CH CHCO2H - Á GÖMag Gav SF fibróš suÁSaub ( CHCOH - பென்சோயிக்கமிலம்
CH
பரா-தொலுயிக்கமிலம்
COH
9. தொகுப்பு முறைகள்: 9.1.1 அற்ககோல்களே ஒட்சியேற்றல் (7.2
அவிடிகைட்டுக்களை ஒட்சியேற்றல் (8. 9.1.2 கிரிக்குட்டுத்தாக்கி: காபனீரொட்சை
-
(27)

இரசாயனம்
சோதீஸ்வரன்,
க் கழகம் - பேராதனை.
9)
க்கமிலங்கள்
நாகுதியைக் கொண்டிருக்கும். அலி பற்றிக்
களெனவும் அழைக்கப்படும். அரோமற்றிக் கு வட்டத்திற்கு நேரடியாக இணைக்கப்பட்
C -- OH GT SIT ST(p av mr b.
Ο
தாக்கங்களைக் காட்டமாட்டா. இதற்குப்
--
s O H
1456ir
ஞயிக்கமிலம்)
ணுயிக்கமிலம்) புரப்பனுேயிக்கமிலம்)
(பரா.மீதைல் பென்சோயிக்கமிலம்)
A F9 Luftfés) .3 89 u u u mrtf4a)
ட்டுடன் கிரிக்னட்டுத்தாக்கி அமிலத்தைத்

Page 30
9.13
9. 1.4
91.5
9.
RMgX + CO2 --->RCO2M இம்முறைப்படி அலிபற்றிக்கு, அரோ லிருந்து பெறலாம். (6.3 ஐப் பார்க்க
சயனைட்டுக்களிலிருந்து: சயனைட்டுக் பெறப்படும்.
C6H5CEN ------> CH
பீனைல் சயனைட்டு முதல் விளைவுப் பொருளான அமில
பிரீடல் ஃ கிராப்தர் தாக்கம் (Fried
இத்தாக்கமுறைபடி அரோ மற்றிக்க Atciვ ([ჩp CH + CH3COCl -----
பென்சீன் அமில
குளோரைட்டு
pågrib sp AlC
C6H6 - Eaos COCl. LLLL LL LSkLLSLSLLMSSSLLLMLLMBSLSSLSSLLSLSSL
காபொனல் குளோரைட்டு
தொலுயீனிலிருந்து பென்சோயிக்க
முறைப்படிப் பெறலாம்.
Cl2 CHCH ------> C கட்டுப்படுத்ப்பட்ட குளோ J NaoH CHCHCl -------> {
ஒலிபீன்களை ஒட்சியேற்றுவதன் மூலம்
és no T KMnO, CH3CE=CH2. ----------
srpr KMnO4 CH3H5CH=CH--------. ஸ்ரைரின் -

н.о (gX -----> RCO2H
மற்றிக்கு அமிலங்களை கிரிக்னட்டுத்தாக்கியி )
களை நீர்ப்பகுக்க காபோட்சிலிக்கமிலங்கள்
十 H IH2O C=O essassemesmo جنسی CHCO2H
NH
ஏமைட்டைத் தனிப்படுத்துவது கடினம்
el-Crafts reaction) மிலங்களைத் தயாரிக்கலாம். "ற்ற) am-un->- CHCOCH -- HCl
அயடோபோம் தாக்கம் (8.2.4 ஐப் unt rħ šas) -- 3 H IHO --> CH3COCl -----> CH3CO, H
பென்சோயில் குளோரைட்டு
கமிலத்தைத் தொலுயீனிலிருந்து பின்வரும்
NaOH shsCCl3 ----- -> CH3CO2H ரினேற்றம்
IOI, CHCHOH ****aa****** دخسـ C6H5 COH
-> CHCO H + HCO,
--> cohsCoa. H + HCO2H
28)

Page 31
9。盛
9.2.1
9。魯,島
இயல்புகள்
நீர்மூலக்கூறுகளுடன் ஐதரசன் பிணை மெதனேயிக், எதனுேயிக், புரப்பனே! மையையுடையவை. அற்கைல் தொ இயல்பு குறைகிறது.
R-C-9-e-H
-o-H
அமிலத்தன்மை !
காபொட்சிலிக் அமிலங்களின் அமிலத் விக் அன்னயனின் உறுதியிலும் தங்கி
R- - -G qà
O-H
C-6
-o fil-O-
(I)
அற்ககோல்களிலும் காபொட்சிலிக்
காரணம் பரிவுக்கட்டமைப்பு, 1, இல் கொடுக்கக்கூடிய தன்மையுள்ள தஞல எனவே காபொட்சிலிக்கமிலங்கள் N RCO H -- Na --------ج RCC RCOa H + NaOH ---> RCC RCO H -- Na C93 - - -> RC{ NaCO3 உடன் காபனீரொட்சைட்டு மூலமும் தாக்கத்தின் பொழுது வெளி காபொட்சிலிக்கமிலத்தை இனம் கா
அமிலக்குளோரைட்டைத் தருந் தாக்கங்க
போசுபரசு மூக்குளோரைட்டு, பொக
னேற்குளோரைட்டு காபொட்சிலிக்கம்
3RCO H + PCla----> 3 RCO( RCO2 H + PCl5-- ---> RCO RCO2, H . -- SOCla----> RCOC
(2

ப்பை ஏற்படுத்தக் கூடிய தன்மையினுல் பிக் அமிலங்கள் நீரில் இலகுவில் கரையுந்தன் ாகுதியின் பருமன் கூட நீரிற் கரையும்
நீதன்மை, தொகுதி R இலும், காபொட்சி பிருக்கும்
--”ཚa C གཞིས་ཁག་> R-C-o
(5 Ο
Nar--a-Yamam-ul
றுதியுள்ள பரிவமைப்புக்கள்
கமிலங்கள் அமிலத் தன்மையுடையதற்குக்
-- ce - 0 - H இலகுவில் உடைந்து H ஐக் ாகும் sa, NaOH, Na2COa al -687 s Tatsqppy tb: )a. Na -- IH ). Na + Ha O O Na -- COa -- Ha O வெளியேற்றப்படுவதைப் பரிசோதிப்பதன் வரும் "உஸ்: என்னும் சத்தத்தின் மூலமும் ணலாம்:
Bir
ரசு பெந்தா குளோரைட்டு அல்லது தேே லெத்துடன் அமிலக்குளேட்டைத் தரும். C1 -+. H3PO3 1 -- HCl -- POCl l -- HCl -- SO
9.

Page 32
g.. அமில உப்புக்கள்
அமோனியமுப்பைச் சூடாக்க ஏமை
A RicoeNH -------->RCONH2 கல்சியமுப்பைச் சூடாக்கக் கீற்றேன் சோடியமுப்பைச் சோடாச் சுண்ணும் படும். (4.1.1 ஐப் பார்க்க) உப்புக்களை மின்பகுக்க ஐதரோகாபன்
9.2.4 எசுத்தராக்கல்
காபொட்சிலிக்கமிலங்கள், அற்ககோ முன்னிலையில் எசுத்தர்களேத் தரும்
H2SO4
LSLLLSMLLLLLLLLSLLLLLSLLLL SLLLLLLSLLSLLSLLLTLSSLSLMSSLLS
RCO2H + R2 OH <-----
கணிப்பொருளமிலம் (H2SO4) நீரை பக்கமாகத் தள்ளும். இத் தாக்கத்தின்
-. H R3OH R-C-O -- R1C--OH ----
saas as as a ea iasa више ess
ОН OH
R
R—
அமிலக்குளோரைட்டுக்களும் அற்கசே
RicoCl + R2OH ------> R
9 : (ib6کu
மூலக்கூற்று நிறை 208 ஐக் கொண்டது கொண்ட ஐதரோகாபன் A கடும் ஒட்சியே தை மட்டும் தந்தது ஒசோன் பகுப்பின் பெ. CHO மட்டும் கொடுத்தால் A யிள் கட்டை
2. gaji Sadiasida ab, CH, CH CO2H, syafi
. он
இது எங்ங்ணம்? இவ்வமிலம் எத்தனை வடிவ

ட்டுப் பெறப்படும்.
+ HeO கள் பெறப்படும். (8.2.3-ஐப் பார்க்க)
புடன் சூடாக்க ஐதரோகாபன் பெறப்
கள் பெறப்படும். (4.1.3 ஐப் பார்க்க)
ல்கள், பீனேல்களுடன் கணிப்பொருள மில
---> RCG2R2 + H 2O
வெளியேற்றுவதன் மூலம் சமநிலையை முற்
பொறிமுறை நுட்பம் பின் வருமாறு :
-- Rનિ Rးဝု R-i-oh — — — — V R1—C—OH حس
ОН O
--
1. 2O - حئ ---------- س
<---------- R2O C=O H. | 十
ーH R-C e CH
ால்களுடன் எசுத் தர்களைத் தரும்.
CO2R2 + HՇl
1ம். CH ஐ உறுப்பு விகிதக் குறியீட்டைக் 1ற்றத்தின் பொழுது பென்சோயிக்க மிலத் ாழுது பீனைல சற்றலிடிகைட்டை, C6H5CH2 மப்பு யாது?
bறலிடிகைட்டிலிருந்து தொகுக்கப்படலாம்
ங்களிலிருக்கும்? அவை யாவை?
0)

Page 33
5. தொலுயினிலிருந்து பின்வரும் சேர்ை
وCH سلاOي
4 CHI உடன் தொடங்கி (CH3)2C CC
விடைகள் :
l.
பீனைலசற்றலிடிகைட்டை மட்டுந் த Cs his CH (CH ബ CH CH2 C6 H
2. Cf3 CHO + C 3 ---->
கிடு வடிவங்கள் ; #డ్డక్టిక్స్టిక్లో ܐܲܪܹܗ ܆ டு శిద్ది ஐ சம ಆlಣ್ಣ (člgélš čoj
قمع
3. c. Hऽcig 6b’-ई
விதி கிட்டுப்பித்ரல்
Cé HgCH3 los
தார ki-0
Cદ HCHرOH 十 C6 fs Со:
4- CHạI - KGN → CH3CN
ακscoc(ς), E. (cl), -co
ba/NaOH of OH (checoa

stanu 67 i garb Gsmgółft" |
.o-co-(c)
)ஐெ எங்ங்ணம் தொகுப்பீர்?
ந்தபடியால், ஐதரோகாபன் A
岑 学 H%هوب (š3 ii 28- нŽњg ckકુ ; OH
爱
CN Č02 H
به نامه , m i CO2H
I W
をCh
༄ཙོ་
3.
ό
! کلیم یافتہ یہCHgC Naoi, ChچCH
Cs is co, H
C6H5, Co — OC*2. Cs5 ج94لأبيH
古 | /a& CH్కర్నిH
A 2ے د(0R)0% ܖ
• ( ዛተፋ?/ , 器 >سسه"- CH CoCH3
3 CcHg“2 طية
3. ዞኌO

Page 34
(With Best 62 on
BOND IN HOS PITA JAF
3ranches
(l) HOSPITAL
Kottady, JAFFN
(2) . K. S. RC Manohara Theat JAFFNA
(3) K. K. S. RC GUNNAKAM
(3,

2. pliments
STTUTES
L ROAD,
F'NA
ROAD
NA
) AD,
re Junction,
DAD,

Page 35
உள்ளம்
அறிஞர் ஐன்ஸ்டீனி
“அறிவியல் கருத்துக்களே மற்ற மிக மிகக் கடினமான ஒன்று என்பதனை என்று கூறியவர், உலகக் புகழ்பெற்ற விஞ் கள். இம்மாமேதையின் நூற்றண்டு விழா டீனுக்கே இம்முயற்சி கஷ்டமாயிருந்ததெனி டிய வரை இப்பணியைச் செய்து கொண்டிரு
ஊற்றி'ன் இதழ்கள் தொடர்ந்து ருப்ப்தை இச்சஞ்சிகையின் சந்தாதாரர்களு துடன் பல சந்தர்ப்பங்களில் எடுத்து இயம் களுச்கு நாம் செவிசாய்க்கக் கடமைப்பட் உணர முடிந்தும், சில பல தவிர்க்க முடிய நேர காலத்திலே வெளி வருவது தடைபட்(
'ஊற்று" பிரவாகித்து தடைகளை வாய்ச் சொல் வீரராக நிற்காமல், நேரத்தில் அன்பர்கள் அனைவரையும் ஆவலுடன் அை
மேதை ஐன்ஸ்டீன் அவர்களின் நூ யத்தில் அம்மேதை மலர்ந்தருளிய இன்ெ முன் வைப்பது எமது கடமை யாகின்றது. ஒ கண்ட போது, கேட்ட கேள்வி வருமாறு;-
நிருபர்- உங்களுடைய வெற்றிக்குரிய ஐன்ஸ்டீன் :- முயற்சியை X எனக் கொண்டு வெற்றியை a எனக் கொண்
a = x + y -- z
நிருபர் 1- Z அது என்ன? ஐன்ஸ்டீன், பேசாமல் வாயை மூடிக் கொ ' குறைகுடம் தளும்பும், நிறைகுட முதுமொழியை இது நினைவூட்டவில்

ன் அடி பற்றி.
துறையினருக்குப் புரியுமாறு எழுதுவது அம்முயற்சியில் ஈடுபட்ட எவரும் அறிவர்" ஞான மேதை அல்பேர்ட் ஐன்ஸ்டின் அவர் தற்போது கொண்டாடப்படுகிறது, ஐன்ஸ் ல், "ஊற்று': மூலம் எம் சிற்றறிவுக்கு எட் ருக்கும் நாம் எம்மாத்திரம்?
வெளிவருவதில், ஒரு தேக்கநிலை ஏற்பட்டி ரும், அபிமானிகளும் மிகுந்த மனவருத்தத் புகின்றனர். அவர்களின் உள்ளக் கருத்துக் டுள்ளோம். இத்தேக்க நிலையை எம்மால் பாத காரணிகளால் “ஊற்று" இதழ்கள் டு நிற்கிறது.
மீறி ஒடுவதற்கு, ஒரத்தில் நின்று கொண்டு p வந்து ' வடம் பிடிக்க வாருங்கள்' என்று ழக்கிறுேம்.
bருண்டு விழா கொண்டாடப்படும் இச்சம ணுரு முக்கிய கருத்தையும் வாசகர்களுக்கு ஒரு பத்திரிகை நிருபர் ஐன்ஸ்டீனப்பேட்டி
சூத்திரத்தைக் கூறுவீர்களா?
விளையாட்டை y எனக் கொண்டு, “டால்,
ண்டிருப்பதே 7 ! ம் தளும்பாது'! எனும் எமது ) &kay u u mo ?
தொகுப்பாசிரியர்

Page 36
ÓM/tth W3sát
Sf,
W. R. SELL
343, MAIN STR
Phone:-
JeWyeler
GP M
R
சென்றல் அசி
 

A PILLA
EET, MATALE.
0662 - 352
DaWyn BrOker
c
erChant
Compliments
V y
* சகம் - கண்டி