கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1980.10-12

Page 1
ஊற்று நிறுவனம்
215, கொழும்பு வீதி கண்டி
" . . . . . .
 

:T-ÞGu ->Glu
කháv) : e5. 3-00

Page 2
IN THIS ISSUE
ARTICLES RABIES
SHORT STORIES FROM THE HILL COUNTRY A Look AT THE FACTORs LEADING INTC THE FoRMATION AND DEVELOPMENT OF Towns
HuMAN BoDY AND FUNCTION(3) ABSORPTION OF NUTRIENTS
THREE MoTHERs
PASTURE DEVELOPMENT
ORGANIC CHEMISTRY
UNITED NATIONs oRGANISATION : ORIGINS AND ITS STRUCTURE
BOOK REVIEW
OOTRU ORC President: Prof. T. Jogaratnam
Secretary: Dr. K. Krishnananthasivam
Treasurer: Mr.
Chief Editor: V. Pavan
Administrative Editors: R. Sivaka R. Mahal
Editorial Board : K. Krishi A. Sivara V. Param K. Navar N. Sreeh: S. Srikar N. Sayal R. Matha T. Jayaw
Correspondence: Articles - Others -
Publishers: Administ
215, Colc

AUTHORS - P. Kasinathan
-- Thurai Manoharan
-- Charles Theyasakayam
- Dr. R. Sivakanes an
- Mrs. Thilagavathy Kanapathippillai
- K. K. Nayaratnam
- Dr. S. Sotheeswaran
- S. Selvarajah
- S. Selvarajah
GANIS ATION
Vice President: Prof. A. Thurairajah
Asst. Secretary: Mr. S. Ganesh
I. Ariyaratnam
a sasivam B. Sc., M. Sc., M. S., Ph. D.
nesan B. V. Sc. Ph. D. inga Iyer B. Sc., Ph. D.
nananthasivam B. V. Sc., M. Sc. jab B.A., M.A. eshwaran B. Sc., M.Sc., Ph. D. 'atman B. Sc. aran M. B. B. S., M.D., M. R. C. P., Ph. D. tha B. Sc., M. Sce
olibaVan
Van B.Sc. ickramarajah M. B. B.S., M. Ed.
- Chief Editor — Adm. Editor
rative Editors ombo Street, Kandy.

Page 3
அறிஞர்தம் இ
O DJ செறிதிரும் மக் புதயதோர் &一
தொகுதி 8 ஐப்பசி - மா
பிரதம ஆசிரியர்: W
Gal. IITaipire alb, B.Sc., M.sc., M.s., , Ph. D.
நிர்வாக ஆசிரியர் :
இ: சிவகணேசன், B.V.Sc., Ph.D. இ. மகாலிங்க ஐயர், B.Sc., Ph.D.
ஆசிரியர் குழு:
க; கிருஷ்ணனந்தசிவம், B.V.Sc., M.Sc.
en. 5ñauprint-Jfar, B. A. M. A. 6ra. LupvGuD 6ñeaupr6ärt, B. Sc., M. Sc., Ph. D. க. நவரத்தினம், B.Sc. p5.8föé5U6ār, M. B. B. S., M.D., M. R s: F. 6ö5stg5 m, B.Sc., M. Sc. ந. சயலொளிபவான் esiä Longsaj6är, B. Sc. f. Googueidi propriegT, M.B.B. S., M. Ed.
இவ்விதழ்த் தொகுப்பாசிரியர் :
sy, Saipraft, B. A., M. A.
இணைப்புக்குழு :
மு, சிவசிதம்பரஈசன் B.V.Sc. அ. பாலச்சந்திரன், B.V. Sc. சி. துரைமனேகரன், B.A., M. A. சே அரியரத்தினம், B. D. S. 5. 51šistrstor, B. Sc., M.S.
★ இச் சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைகளுக்கு
ஆண்டுச் சந்தா ரூபா 121

தயஒடை ஆழநீர் தின்னேமொண்டு க்கள்ளண்ணம் செழித்திட ஊற்றிஊற்றிப் லகம் செய்வோம்.
ார்கழி, 1980 இல, 4
பக்கம்
, விலங்கு விசர் நோய் f
பூ, காசிநாதன்
| 2. மலையகச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு 5
துரை மனேகரன் 3. நகரங்களின் தோற்றச்துக்கும் விருத்
திக்குமான காரணிகள் பற்றிய ஒரு
நோக்கு
சாள்ஸ் தேவசகாயம் | 4. மனித உடலும் தொழிற்பாடும் {3}
உணவுச் சத்துக்களின் அகத்துறிஞ்சல் 12 இ, சிவகணேசன்
5. தாயர் மூவர் 6
திருமதி திலகவதி
கணபதிப்பிள்ளை 6. புற்றரை அபிவிருத்தி 8
க. க. நவரத்தினம் 7. சேதனவுறுப்பு இரசாயனம் 墨1
அ. சோதீஸ்வரன் s. ஐக்கிய நாடுகள் சபை
தோற்றமும் கட்டமைப்பும் 24 சி. செல்வராசா
நூல் விமர்சனம் 8
ஸ்ம். எஸ். செல்வராசா
சாளரம் 33
அரங்கு 34
* கட்டுரை ஆசிரியர்களே முற்றிலும் பொறுப்பாவார்.
தொடர்பு
கட்டுரைகள் - பிரதம ஆசிரியர்
ஏனையவை - நிர்வாக ஆசிரியர்
215, கொழும்பு வீதி, கண்டி,

Page 4
KARUNANI"

ல் என்றும் அறிவு ஒளி பரப்ப கிறேம்.
THY 6 CO.

Page 5
ஊற்று 8 14 (1980)
விலங்கு விசர் நோய்
மருத்துவத் துறையில் முன்னேற்ற மடைந்துள்ள இக் காலகட்டத்திலும் உலகநாடுகளிலே சில கொடிய வியாதி களால் இறப்பு ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வியாதிகளில் விலங்கு விசர் நோய் முக்கியமானதாகும். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி, வருடமொன்றிற்கு ஏறத்தாழ 700 பேர் இந் நோயினல் இறக்கின்றர்கள். ஆனலும் இம்மதிப்பீடு உண்மையில் தாழ்ந்ததாகவே கருதப்படுகின்றது. எமது நாட்டிலும் இந்நோயின் பாதிப்பு மிக்க மோசமானநிலையில் உள்ளது. சிறிதளவு சனத்தொகையை ஒப்பீட்டளவில் நமது நாடு கொண்டிருந்த போதிலும் வருட மொன்றிற்கு அண்ணளவில் 200 பேர் இந்நோய்க்கு இரையாவது குறிப்பிடத் தக்கது.
பொதுவாக இந்நோய் எல்லா இளஞ் (5 Gó (505560) uái (Warm Blooded Animals) கொண்ட விலங்குகளையும் தாக்கு கின்றது. இருந்தபோதிலும் நாய், நரி, ஒநாய், பூனை போன்ற சில விலங்குகள் இந்நோய்க்கு அதிக இலக்காகின்றன. பறவையினங்களும், ஊர்வனவும் இந் நோய்க்கு இலக்காதல் குறைந்தளவில் காணப்படுகின்றன. இந்நோய்காவிக ளாக நரி, நாய், பூனை, " வம்பயர் ’ Gaustrarribas6ir (Vampaire Bats)”, Say ausar G F T só durf G6ir (Wıld Roddents) Luršas கொள்கின்றன. நாய், நரி, பூனை போன்ற வற்ருல் ஏற்படும் பரவல் உலகெங்கும் அதிக அளவில் அவதானிக்கப்பட்டுள்ளது. *வம்பயர் வெளவால்களும், வன கொறி உயிர்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பரவலை ஏற்படுத்துகின்றன. வெளவா
3ஆம் வருட கால்நடை வைத்தியம பேராதனைப் பல்கலைக் கழகம்

V ч. காசிநாதன்
லினல் ஏற்படும் பரம்பல் மத்திய அமெரிக் கப் பகுதிகளில் கூடிய அளவில் அவதானிக் கப் பட்டுள்ளது. வம்பயர்களின் தீவிர பறக்கும் திறனும், அத்துடன் நிலத்தில் விரைந்து செயற்படும் திறனும், அது மட்டுமல்ல மனிதன் உட்பட, ஏனைய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விலங்குகளையும் விருந்துவழங்கிகளாக்க் கொண்டிருப்பதால் நோய் பரவலுக்கு அதிக இசைவாக்கத்தைக் கொண்டிருக் கின்றன. நரிகளினல் கிட்டத்தட்ட 1950ஆம் ஆண்டளவில் வடக்கு ஜேர்மனி யில் பெருமளவில் இந்நோய் மாடுகளுக்குப் பரப்பப்பட்டுக் குறிப்பிடத்தக்களவு பொரு ளாதார வீழ்ச்சியொன்றை அப்பகுதியி லுள்ள விவசாயிகளுக்கு ஏற்படுத்தியது:
இந்நோய்க்குக் காரணியான நுண்மம் வைரசு ஆகும். இதனுடைய சிக்கலான கட்டமைப்பு கடந்த தசாப்தத்தில் ஓரளவு அறியப்பட்டது. நோய்க்குக் காரணியான வைரசு கோலுருவானதென்றும் அத்துடன் \றைபோநியூக்கிளிக்கமிலம் (RNA) புரதம், கொழுப்பு, காபோஐதரேற்று ஆகிய வற்றையும் கொண்டது. மேலும் இதில் காணப்படும் றையோநியூக்கிளிக்கமிலத் தின் கட்டமைப்பு சற்று வேறுபட்டது. இதுதவிர இந்நோய்க்குக் காரணியான் வைரசுக்களைச் சார்ந்த வேறு இன வைர did selyub (Rabies related viruses) syster மைக்கால ஆராய்ச்சிகள் மூலம் ஆபிரிக்கப் பகுதிகளிற் கண்டறியப்பட்டுள்ளன. இவ் வைரசுக்கள் முக்கியமாக மூளை, முண்ணுண் ஆகிய மைய நரம்புத் தொகுதியின் பகுதி களிற் பெருக்கமடைந்து அப்பகுதிகளைப் பெரும் அழற்சிக்குள்ளாக்குகின்றன. இவ் வாறு பெருக்கமடைந்த நிலையில் உள்ள
l -

Page 6
போது விலங்கின் உமிழ்நீரிலும் இந்நோய்க் கான வைரசுக்கள் அதிக அளவில் தென் படுகின்றன. மனிதனுக்கு இவ்வைரசின் தொற்றுதல் தொற்று ஏற்பட்ட விலங் கொன்றின் கடித்தலால் (Biting) அல்லது நக்குதலினல் Licking) அல்லது விலங்கு களின் நகங்களால் ஏற்படும் கீறல்களினல் ஏற்படலாம். இவ்வழிகள் தவிர இவ் வைரசு இமையிணைப்பு சீதமென்சவ்வி gpm u-mré5(3aJnr (Conjunctical mucous membrane) அல்லது வாய், குதப்பகுதிகளைச் சூழ்ந்துள்ள சீதமென் சவ்வினூடாகவோ அல்லது வெளிப்புற இனப்பெருக்க அங்கங் solfgst LIT as Garr (External genital organs) பரவலாம். மே லும் அண்மைக்கால ஆராய்ச்சிகளின் பயனுக வளியில் இருந்தும் இந்நோய்க்கான வைரசுக்கள் பரவியிருப் பது அறியப்பட்டுள்ளது. பொதுவாக, த டு ப் பு’ மருந்தாக நலிவாக்கப்பட்ட நோய்க்குக் காரணியான வைரசுக்கள் உடலினுட் செலுத்தப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் இவ் வைரசுக்களின் நலி வாக்கல் குறைந்து காணப்படின் இவை யும் நோயை ஏற்படுத்தக் காரணியாக லாம். இவ்வகையில் ஏற்பட்ட நோய் தடுப்பிற்குப் பின்னன வெறிநாய்க்கடி Gp5nrifi (Post-vaccinal rabies) 6raeg i'yu Gub. மனிதனில் இருந்து மனிதனுக்கு இந்நோய் as Lissiliullai (Person to person transcisஇion) வெகு அருமையாகவே உள்ளது: இருந்தபோதும் ஆய் வு களின் மூலம் வியர்வை, உமிழ்நீர், கண்ணிர் போன்ற சுரப்புகளால் கடத்தப்பட்டிருப்பது அறி பப்பட்டுள்ளது. இந்நோய் பெண்களைக் காட்டிலும் ஏறத்தாழ ஏழுமடங்களவில் அதிகமாக ஆண்களைப் பாதிக்கின்றது; இப்பாலியல் வேறுபாடு மனிதனுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருத்த மானதாகும்.
விலங்கொன்றின் தோலில் கடித்தல் அல்லது பிற காரணிகளால் தொற்று ஏற் பட்டு, அது மைய நரம்புத் தொகுதியைச்
சென்றடைந்து நோய்க்குரிய அறிகுறிக &ளத் தோற்றுவிக்கும் வரையுள்ள காலப்
- ?

பகுதி வைரசுக்களின் பெருக்கக் காலப் LusSI (Incubation period) 6T6IOTÜLu GE b. gáš காலப்பகுதியில் வைரசுக்கள் தோலில் இருந்து தசைக்குச் சென்றடைந்து அங்கு பெருக்கமடைந்து தொடர்ந்து மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தப்பட்டு, அப்பகுதியில் பெரும் அழற்சியை (Inflamation) ஏற்படுத்துகின்றது. வைரசுக்களின் பெருக்கக் காலப்பகுதியும் நோய்க்கான அறிகுறிகளும் பொதுவாக எல்லா இளஞ் சூட்டுக் குருதியைக் கொண்ட விலங்குகளி லும் அடிப்படையில் ஒற்றுமையுள்ளதாகக் காணப்படுகின்றன. இக்காலப் பகுதி மனிதனில் ஏறத்தாழ 9 நாட்கள் தொடக் கம் 1 அல்லது 2 வருடங்கள் வரை மாறு படலாம். அவ்வாறே பிற விலங்குகளிலும் நாட்களில் இருந்து மாதங்கள் வரை வேறு படுகின்றது. கடித்தல் அல்லது நக்குதலின் போது உட்புகுந்த வைரசுக்களின் தொகை, தொற்று ஏற்பட்ட இடத்தின் சார்புநிலை, அதாவது நரம்புகள் செறிந்து காணப் படும் முகப்பகுதியிலா அல்லது முகத்தில் இருந்து தூரக் காணப்படும் கை, கால் போன்ற உறுப்புக்களிலா தொற்று ஏற் பட்டது. கடித்தல் போன்றவற்ருல் ஏற் பட்ட காயங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிவாரணிகளின் தன்மை, வைரசுக்களின் தன்மை, மேலும் பிற வைரசுக்களின் தொற்றல் ஏற்பட்டிருக்கும் நிலைபோன்ற கா ர னி க ளா ல் பெருக்கக்காலப்பகுதி மாறுபடுகின்றது. ம னி தன் தவிர்ந்த பிற விலங்குகளை நோக்குமிடத்து பெருக்கக் காலப்பகுதியானது மேற்கூறிய காரணிகளைவிட, உடலைப் போர்த்தியுள்ள தோலிற் காணப்படும் மயிர்களின் (Wool, fur) தன்மையிலும் தங்கியுள்ளது.
மனிதனிலும் ஏனைய விலங்குகளிலும் இந்நோயினுல் மைய நரம்புத் தொகுதியில் ஏற்படும் அழற்சியை இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம். முதலாவது வகை Furious Rabies. GTGOT' Lu (9th. * g)gi Áss Gayub பயங்கரமானது. இவ்வகைநோயால் பாதிக் கப்பட்ட விலங்கின் அறிகுறிகளை அறிவ தற்கு, இவ்வகை நோயின்போது வைரசுக்

Page 7
கள் மைய நரம்புத் தொகுதியின் எப்பகுதி களைப் பாதிக்கின்றன என்பதை அறிதல் அவசியமாகும். இவ்வகையில் வைரசுக்கள் ep&T sjö g5 GåT GE) Brain Stem), Limbic system, Hypothalamus, Hippocampus, Reticular formation ஆகிய பகுதிகளை அதிக அழற் சிக்குள்ளாக்குகின்றது. இப்பகு தி களி லேயே at TFth, குருதிக்கலன்களின் துவாரபருமனைக் கட்டுப்படுத்தும் மையம் (Vasomotor centre), uosiðgpyud நாவு தொண்டை போன்ற பகுதிகளுக்கு விநி யோகிக்கும் உணர்ச்சி, இயக்க நரம்புக ளின் ஆரம்ப ஸ்தானங்களும் வெப்பநிலைக் கட்டுப்படுத்தும்பகுதி, தன்னட்சி நரம்புத் தொகுதியின கட்டுப்படுத்தல்கள் ஆகியன எல்லாம் இப்பகுதிகளிலேயே காணப்படு கின்றன. வைரசுக்கள் இப்பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்துவதால் மேற்கூறிய தொழிற்பாடுகள் அசாதாரண நிலைக்குள் ளாகி நோய்க்கான அறிகுறிகள் தென்படு கின்றன. இவ்வகை நோயில்தான் சாதா ரணமாக எல்லோராலும் கூறப்படும் நீர் வெறுப்புநோய் (Hydrophobia) அடங்கும். நீர் வெறுப்பிற்கும் மேற்கூறிய பகுதி களின் அசாதாரண தொழிற்பாடே காரணமாகும். நீர் வெறுப்பு நோய் என்பது வெறிநாய்க்கடி நோய்க்குச் சாதாரண மக்களால் கூறப்பட்டபோதிலும் நீர் வெறுப்புநோய் என்பது மருத்துவத்தில் ஒரு பொதுச்சொல்லாகக் கொள்ளப்படு கின்றது,
Op 6ăT L-Imrau g7 6u 69 as Paralytic rabies எனப்படும். இது பொதுவாக மனிதன் மற்றும் விலங்குகளின் குருதியை உண வாக உட்கொள்ளும் வம்பயர் வெளவால் களிஞல் பரப்பப்படுகின்றது. இவ்வகை களில் முண்ணுண், நீள்வளைய மையவிழை யம் ஆகிய மைய நரம்புத் தொகுதியின் பகுதிகளை வைரசுக்கள் பெரும் அழற்சிக் குள்ளாக்குகின்றன. இப்பகுதிகளே உட லின் தசையியக்கங்களைக் கட்டுப்படுத்தும் பகுதிகளாகத் திகழ்கின்றன. எனவே இவ் வகை நோயின் அறிகுறிகளாக தசை இயக்கங்களில் அசாதாரண நிலை காணப் ப்டும்.

பொதுவாக எந்தவொரு நோயையும் கட்டுப்படுத்திக்கொள்வதற்கு நோய் ஏற் பட்டபின் நிவாரணிகளைக் கொடுப்பதிலும் பார்க்க நோய் ஏற்படுமுன் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே சாலச் சிறந்ததாகும். இந்நோயைப்பற்றி ஆய்வு கள்மூலம் சகலவித தகவல்களும் தெரிந் திருந்தபோதிலும் இதைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன: குறிப்பாக நோய்க்கான அறிகுறிகள் காட்டப்படாத காவிகளால் (Symptomless rectors) இந்நோய் கடத்தப்படல், நோய்க் குரிய வைரசுக்களைச் சார்ந்த வேறு இன் Goalpraisehair (Rabies related viruses) பாதிப்பு போன்றன. சில சிக்கல்களாகும். இவ்வாறன சிக்கல்கள் இருப்பினும் பின் வரும் முறைகளால் இந்நோயின் பரவலைத் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். ..
(1) குன்க ஆய்வுகள் (Cave exploring), விலங்குகள் சேர்த்தல் (Animal Collecting), பிற விலங்குகளுடன் சம்பந்தப்பட்ட வேலைகள் (Veteria nary Works) போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மு ற் கூட்டியே தடுப்பு மருந்துகளைக் கொடுத்தல், (2) வெறிநாய்க்கடி நோய் பரவி யிருக்கும் பகுதிகளில் வசிப்பவர் கள் தேவையற்ற வகையில் அப் பகுதிகளில் காணப்படும் வீட்டு அல்லது வன விலங்குகளுடன் தொடர்புகளைத் தவிர்த்தல். (3) காவிகளான நரி, நாய், வம்பயர் வெளவால்கள் போன்றவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துத லும் அவற்றில் நாய் போன்ற வீட்டு விலங்குகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுத்தலும். (4) விலங்குக்கடிகள் ஏதாவது ஏற். பட்டால் அதற்குக் காரணியான விலங்கை இயலுமானவரையில் மிருக வைத்தியரின் உதவியால் வெறிநாய்க்கடி நோய்க் குரிய வைரசுக்களைப் பரிசோதித்தல்

Page 8
(5) வெறிநாய்க்கடி நோய் பரவியுள்ள பகுதிகளில் உள்ள தொற்று ஏற் பட்ட விலங்குகளின் மேய்ச்சல் நிலங்களிற் காணப்படும் மீதிப் புல்களில் அவற்றின் உமிழ்நீர் காணப்படலாம். எனவே அப் பகு தி க ளில் மனிதனும் பிற விலங்குகளும் நடமாடல் தவிர்க் கப்படுதல்
நாணயங்கள்
ஆதியில் பணப்புழக்கம் இருக்கவில்லை. கி. மு. 8ஆம் நூற்ருண்டிலிருந்தே நாண சீனவில் விவசாயப் பொருட்கள் பண்டமா 8 இல் அவர்கள் உருவாக்கிய நாணயங்க உருவகத்திலேயே அமைந்திருந்தன. இே யங்கள் ஆரம்பத்தில் சில குறிப்பிட்ட உ துண்டுகளை நிறுப்பதற்கெனத் தராசு கலி குறிப்பிட்ட நிறையும் உருவமும் கொண்டு நூற்ருண்டு வரையில் வெள்ளி, அல்லது வழங்கப்பட்டன. அதன் பின்னர், துண் உலோகக் கம்பிகள் தயாரிக்கப்பட்டன. உலோகத் துண்டுகள் நாணய்ங்களாக வழ1 ஏற்றுக்கொள்ளலாம் என்பதைக் குறிப்பத இடப்பட்டது. இத்தகைய நாணயம் முத6 ခြိုက္ကံရွှီး ஆசியா மைனரில் லிடியா என
ரொருவர் தாம் தயாரித்த நாணயங்க
யில்லாமற் செய்வதற்காக ஒரே நிறையுள் தமது முத்திரையை இட்டார். இதுவே ே படுகின்றது. இதற்குப் பின்பு, நாணயம் ெ தைப் பொறிக்கும் வழிக்கத்தை ஏற்படு நாணயத்தின் முற்புறத்தில் தங்களது நகர உருவத்தைப் பொறித்தனர். மறுபுறத்தில் தனர். கி. மு. 336 இல் மகா அலெக்சா, யமே, உலகில் முதன்முதல் ஓர் அரசரது நாணயமாகும். இந்தியாவின் மிகப்பை காணப்படவில்லை. சில குறிகளே அவற்றி s மீது படையெடுத்து ஆட்சி புரியத் தொட நடணயங்கள் உருவாசத் தொடங்கின. ெ தயாரிக்கப்பட் நாணயங்களில் எழுத்துக் காலத்தில் பணத்தைச் சேமித்து வைப்பத யங்களை மக்கள் புதைத்து வைத்தனர். வாராய்ச்சிகளின்போது பழைய நான அவை எளிதிற் கெட்டுப் பேர்காதவையா சளுள் மிகச் சிறப்பிடம் பெறுகின்றன. பல மிகச் சிறந்த துணையாக அமைகின்றன.
A

(6) பிறநாடுகளில் இருந்து தருவிக்கப் படும் விலங்குகள் கட்டாயமாக இந்நோய்க்குரிய வைரசுக்களுக் காகப் பரிசோதிக்கப்படுதல், போன்ற சில முக்கியமான தடுப்புமுறை களைக் கையாளலாம். மேலும் இவற்றிற் கான சட்டங்களை அரசு ஏற்படுத்தி இத் தடுப்புமுறைகளைத் தொழிற்படுத்துவது அவசியமானதாகும்.
பண்டமாற்று முறையே நிலவி வந்தது. யங்கள் புழக்கத்துக்கு வரத்தொடங்கின. ாற்று முறைக்குப் பயன்பட்டன. கி. மு. ! ளும் அவர்களது விவசாயக் கருவிகளின் தபோன்று பல்வேறு நாடுகளிலும் நாண ருவங்களைக் கொண்டிருந்தன. உலோகத் ண்டுபிடிக்கப்பட்டபின்னரே, நாணயங்கள் விளங்கத் தொடங்கின. கி. மு. 5ஆம் வெண்கலக் கட்டிகளே நாணயங்களாக டு துண்டாக முறித்து நிறுக்கக் கூடிய அதற்குப் பின்னர் குறிப்பிட்ட நிறையுள்ள ங்கின. அவற்றை நிறுத்துப் பார்க்காமலே 5ற்கு, அவற்றில் ஏதாவது ஒரு முத்திரை ன்முதல் கிரீஸிலும் இந்தியாவிலும் காணப் ன்னுமிடத்தில் கி. மு. 680இல் வணிக ளே நிறுத்துப் பார்க்கவேண்டிய தேவை ளனவாகச் செய்யப்பட்ட நாணயங்களில் மேனட்டின் முதல் நாணயம் என்று கருதப் வளியிடுவோர் தமது நகரத்தின் சின்னத் த்தினர். ஏனெனில் நகரத்தவர் தமது த்துக்குரிய அதிதேவதையான அதினேயின் அத்தேவதையின் உருவத்தையும் பொறித் ந்தரது உருவம் பொறிக்கப்பட்ட நாண
உருவம் பொறித்துத்
ழய நாணயங்களில் அரசரின் உருவம் ற் காணப்படுகின்றன. கிரேக்கர் இந்தியா ங்கியபோதே, அரசரின் உருவம் கொண்ட தாடர்ந்து மேஞட்டிலும் இந்தியாவிலும் கள் பொறிக்கப்படத் தொடங்கின. பழங் 3ற்கு வங்கிகள் இல்லாதமையினுல் நான இதல்ை, தொல்பொருளாய்வாளர் அகழ் யங்களைக் கண்டெடுக்க முடிந்துள்ளது. ாக இருப்பதனுல் பழம் நாகரிகச் சின்னங்; ழைய வரலாற்று ஆய்வுக்கு நாணயங்கள்

Page 9
ஊற்று 8:5-7 (1980)
மலையகச் சிறுகதைகள்
ஒரு மதிப்பீடு
துை
மலையகம் என்பது இன்று வெறும் புவியியல் அர்த்தத்தை மாத்திரம் கற்பிப் பதன்றி, தன்னளவில் தனித்துவமான மக்களின் வாழ்நிலைகளையும், அதற்கு ஆதாரமான பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையையும், அதன் பக்க விளைவுக ளான சிறு முதலாளித்துவத்தையும், சுரண் டல்களையும் புலப்படுத்தி நிற்கின்றது. இவ்வகையில் ஈழத்தின் மற்றைய பிராந்தி தியங்களினின்றும் இப்பிரதேசம் இயல் பாகவே வேறுபட்டுள்ளது. இவ்வடிப்படை யில், மலையகம் தனக்கெனத் தனித்துவ மாக நோக்கும் பிரச்சினைகளையும், அனு பவிக்கும் துயரங்களையும், காணவேண்டும் தீர்வுகளையும் எழுத்தில் ஆக்கவேண்டியது அவசியமே. அத்தகைய முயற்சிகளின் பெறுபேருக மலேயக எழுத்தாளருக்குச் சிறு கதை நன்கு பரிச்சயமான இலக்கிய வடிவ மாகிவிட்டது எனலாம். இதற்கு, நிறுவன ரீதியாக நடைபெற்ற சிறுகதைப் போட்டி களும் காலாக அமைந்தன. இவ்வகையில், இதுவரையில் வெளிவந்த நான்கு தொகுதி களைக் கொண்டு, மலையகச் சிறுகதைகள் பற்றிய பொது மதிப்பீடால் இக்கட்டுரை அமைகின்றது. மலையகச் சிறுகதைகள் பற்றிய உண்மையான கணக்கெடுப்புக்கும், மதிப்பீட்டுக்கும் சிறுகதைத் தொகுதிகள் குறைவாக இருப்பது ஒரு பெருங்குறையே என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய தாகும்.
1971 முதல் 1980 ஏப்ரில் வரையிலே
கதைக்கனிகள், நாமிருக்கும் நாடே, தோட் டக்காட்டினிலே, ஒரு கூடைக் கொழுந்து
உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக் கழகம்

ரராஜா மனேகரன், B, A: (Hons), M. A.
ஆகிய தொகுதிகள் வெளிவந்துள்ளன: ஆயினும், இவை உள்ளடக்கிய கதைகள் இரு தசாப்தங்களில் எழுந்த படைப்புக் களாகும். இவற்றுல் கதைக்கனிகள், தோட்டக்காட்டினிலே ஆகியவை பலரின் ஆக்கங்களைக் கொண்ட தொகுப்புநூல்கள்: முன்னையது நிறுவனரீதியாக நடைபெற்ற மலையகச் சிறுகதைப் போட்டிகளின் பரிசுக் குரிய கதைகளைக் கொண்டது; பதிஞெரு சிறுகதைகள் அடங்கியது. தோட்டக்காட் டினிலே மூன்று எழுத்தாளரின் மும்மூன்று கதைகளைக் கொண்டது. மற்றைய இரு தொகுதிகளும் தனி எழுத்தாளரின் சிறு கதைகளைக் கொண்டன. கதைக்கனிகள் என்ற முதலாவ்து தொகுதி வெளிவந்து ஒன்பது ஆண்டுகால இடைவெளியின் பின்னரே மற்றைய மூன்று தொகுதிகளும் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது: கதைக்கனிகள் வீரகேசரி நிறுவனத்தாலும் தோட்டக்காட்டினிலே மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தாலும், மற்றைய இரண்டும் வைகறை வெளியீட்டினராலும் வெளியிடப்பட்டுள்ளன.
மலையகத்தின் சகல பிரச்சினைகளும் பல்வேறு கோணங்களிற் சிறுகதைகளில் அலசப்பட்டுள்ளன. படைப்பாளிகள் பிரச் சினைகளோடு பரிச்சயப்பட்டவராக இருப் பதஞல், தூரப்பார்வை குறைவாகவும்" ஆழ அகலித்த பார்வை அதிகமாகவும் இயல்பாகவே காணப்படுகிறது. தோட் டத்துரைகள், கங்காணிமார், கண்டக் 'டர்கள், கணக்குப்பிள்ளைகள் முதலானே ரின் சுரண்டல்கள், சிறுமுதலாளித்துவம்,

Page 10
சாதியமைப்பின் கொடூரப்பிடி, இயற்கை பழிவு, மூடத்தனம், உதிரிகளாக்கப்பட்ட நிலையிலேற்படும் சுயநலம், இந்நாட்டில் நிலைகொள்ள முடியாத அவதிநிலை, அத்தி பாரமில்லாக் கல்விச்சூழ்நிலை, முதியோரின் துன்பச்சுமை, தொழிற்சங்கப் போட்டிகள் முதலானவை மனிதாபிமான நோக்குடன் அணுகப்பட்டுள்ளன. இத்தனை துயர் நின்றந்த வாழ்நிலைக்கூடே வாழத் துடிக் கும் மலையக மக்களின் இலட்சியங்கள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், உழைப்பு போன்றவையும் சிறுகதைகளில் நீக்கமற நிறைந்துள்ளன.
சிறுகதைக்கான கதைப்பொருள் மலை பகப் பகைப்புலத்தில் எடுத்துச் சொல்லப் படும்போது, "அதன் உயிர்நிலை கெடாத வாறு படைப்பாளிகள் இயன்றவரை கவனம் செலுத்தியுள்ளனர். மனித உறவு கள்கூடப் பொருளாதார நோக்கிலேயே அமைகின்றன என்பதை தெளிவத்தை ஜோசப் பழம் விழுந்தது கதையில் மலைய கப் பகைப்புலத்தில் யதார்த்தமாகக் காட் டியுள்ளார். மலரன்பனின் உறவுகள் கதை யிலும் இதே நிலைப்பாடே சித்திரிக்கப்படு கின்றது, தாய்க்கிழவி, மூத்தமகன், இளைய மகன், மருமகள் மார் ஆகியோருக்கூடாகப் பொருளாதாரம் என்ற நூலில்தான் உற வுகள் இழைக்கப்படுகின்றன என்ற நிதர் சன உண்மை காட்டப்படுகிறது. தோட்டப் பாடசாலை ஆசிரியரின் சுயநலத்தின்மீது கட்டியெழுப்பப்படும் அத்திபாரமில்லாத மலையகச் சிருரின் கல்விச் சூழ்நிலை தெளி வத்தை ஜோசப்பினுல் சோதனையில் காட் டப்படுகிறது. மாத்தளை வடிவேலன் மலை யகப் பாடசாலைகளின் பின்தங்கியநிலை, அதற்குக் காரணமான ஆசிரியர்கள், மலை யகத் தொழிலாளரின் நாளாந்த வாழ் வோடு ஒட்டிய சோகங்கள் இவற்றின் பின்னணியில் ஒரு சிறுவனின் மனவுணர்வு களை மிக அழகாகப் பிஞ்சு உலகம் கதை யில் வெளிப்படுத்துகிருர், எழுபது வயதில் மூன்றுகல் தொலைவு நடந்து, துரை வளர்க் கும் பன்றிக்காகச் சந்தையில் இறைந்து கிடக்கும் கீரைவகைகள், அழுகிய காய்கறி களை நொண்டி மாட்டோடு போட்டி
- 6

போட்டுச் சாக்கில் கொண்டுபோய்க் கொடுத்துச் சீவிக்கும் பரிதாபத்துக்குரிய கிழவன், தெளிவத்தை ஜோசப்பின் நாமி ருக்கும் நாடே கதையின் நாயகன். 'கடல் போன்ற சீமையில்’ நிலம் வாங்கியிருந்தும் வீடு கட்டியிருந்தும் அவனுல் அனுபவிக்க முடியவில்லை. மு. சிவலிங்கத்தின் இதுவும் ஒருகதை சி. பன்னீர்ச்செல்வத்தின் இலவு காத்த கிளி ஆகியவுைம் நாடற்றவர்க ளாக்கப்பட்ட மக்களின் எதிர்கால ஆவல் களையும் ஏமாற்றங்களையும் சித்திரிக்கின் றன. மலையகத்தில் தோட்ட நிர்வாகத்தின் கீழ் மக்கள் சுரண்டப்படுவதையும் அடக்கு முறைக்காளாக்கப்படுவதையும் த்ெ வி வத்தை ஜோசப்பின் மீன்கள், பெரியகுறி யானை, சலமன் ராஜின் சம்பளநாள், மாத் தளை சோமுவின் லயத்துப் பயல், நாய்கள் மனிதராவதில்லை, பரிபூர்ணனின் ரேம் ஆறு அமைதியாக் ஓடுகிறது முதலானவை காட்டுகின்றன. சிறு முதலாளித்துவம், பொருளாதாரச் சீர்கேடு ஆகியவற்றின் தர்க்கரீதியான விளைவினை தெளிவத்தை ஜோசப்பின் ஒரு தோட்டத்துப்பையன்கள் படம்பார்க்கப் போகிருர்கள், மண்ணைத் தின்று ஆகியவை உணர்த்துகின்றன. நாளெல்லாம் பாடுபட்டுழைக்கும் பாட் டாளி தனது உழைப்பினை அனுபவிக்க முடியாத சமுதாயத்தின் கூைைல "கூனல்" எனற தெளிவத்தை ஜோசப்பின் கதை காட்டுகின்றது.
வர்க்க உணர்வு பற்றிய சிந்தனைகளும் மலையக எழுத்தாளரின் படைப்புக்களில் முனைப்பாகச் சிலவிடங்களில் இணைந்துள் ளன. எம். வாமதேவனின் முடிவு, இன பேதமற்ற வர்க்கநிலைப்பாட்டினை எடுத்துக் காட்ட முனைகிறது. மலரன்பனின் தார் மீகம் கதையில் அஞ்சலைப்பாட்டியின் மணி தாபிமானமும், சிங்களத் தொழிலாளி யின் வர்க்கஉணர்வும் காட்டப்படுகின்றன,
உழைக்கமுடியாத முதியோரின் அல் லற்பட்ட நிலை மாத்தளை வடிவேலனின் கறிவேப்பிலைகள், வெட்டுமரங்கள் ஆகிய கதைகளிற் சித்திரிக்சப்படுகின்றது. முது மையின் கொடுமையும் முதுமையின்மீது

Page 11
பெருந்தோட்டப் பொருளாதாரம் கொண் டிருக்கும் வெறுப்பும் ஆசிரியரால் நன்கு எழுத்தாளப்படுகின்றன.
என். எஸ். எம். ராமையாவின் சில கதைகளில் மலையகத்தொழிலாளரின் எதிர் பார்ப்புகளும், முயற்சிகளும், ஈற்றில் அவர்களின் ஏமாற்றமும் சித்திரிக்கப்படு கின்றன. வேட்கையில் வரும் ரங்கையாக் கிழவன், தான் ஆசைப்பட்ட பெற்ருே மாக்ஸ் விளக்கு வாங்கவேண்டுமென்ற ஆவ லில் பயிர்செய்ய, பெருமழை அவனது எதிர்பார்ப்பைச் சீரழித்துவிடுகிறது. சேனைப் பயிர்ச்செய்கைக்காக ஒன்றரை மைல் தொலைவிலிருந்து நீர் எடுப்பித்த அதே மாணிக்கம், பின்னர் காடு அழிந்தால் மழை வரும் என்ற நம்பிக்கை யில் தனது சேனையைய்ே அழித்துவிடுவதாக மழை என்ற கதை அமைகிறது. உழைப் 96ir தாழ்வாரத்திலேயே presrawuh உட்பட மலையகத் தொழிலாளரின் சகல இயக்கங்களும் இயங்குகின்றன என்பதை இதே ஆசிரியரின் நிறைவு கதை உணர்த்து கின்றது. . . . .
மலையகத்தில் மக்களச் சீர்குலைக்கும் சாதியமைப்பு, மூடவழக்கம், மதுவுக்கு அடிமையான நிலை போன்றவற்றைத் தெளி வத்தை ஜோசப்பின் தீட்டு ரொட்டி, சிலுவை, தங்க-பிரகாஷின் காயம் முதலா னவை காட்டுகின்றன. தொழிற்சங்கப் போட்டி நிலையை இலேசான முறையில் சாரல் நாடனின் கால ஓட்டம் தொட்டுள்
ளது.
தத்துவம் என்பது ஒர் கருத்தாகும். ஒட்டப்படும் சரித்திர வளர்ச்சிப் பின்னணி அந்த மனிதனையும் கொண்டு நாம் உருவாக் விளக்கமும் தான் தத்துவமாகும். "தத்துவ எப்போதோ ஊடுருவிய ஒன்று கலை இல உயிராகும்.
*நீ - உன
- 7

இலட்சியமயப்படுத்தப்பட்ட பாத்தி ரங்களும் மலையகச்சிறுகதைகளில் உலாவு கின்றன. மாத்தளை சோமுவின் அவன் ஒருவனல்ல மாஸ்டர், என். எஸ். எம். ராமையாவின் ஒருகூடைக் கொழுந்து லெட்சுமி, தீக்குளிப்பு ரஞ்சிதம் முதலி யோர் அவ்வகையினர். சோகமே வாழ் வின் நிலைக்கோடாக அமைந்துவிட்டபோதி லும், வாழத்துடிக்கின்ற காமாட்சி போன்ற ஜீவன்களும் மலையகச் சிறுகதை களில் (மாத்தளை வடிவேலனின் புத்தாண்டு புதிதல்ல) இடம் பெறுகின்றனர்.
மலையகத்தில் இடம்பெறும் சுரண் டலும், அடக்குமுறைகளும், அவற்றின் விளைவான அவலமும் நிரந்தரமான சோக வுணர்வையே மக்களிடம் திணித்துள்ளன. இத்தகைய நித்திய சோகவுணர்வின் அடி நிலையிலிருந்தே மலையகச் சிறுகதைப் பாத் திரங்களின் மனுேபாவங்களும், செய்ல் களும் முளைக்கின்றன. இவ் யதார்த்த நிலைச் சித்திரிப்பில் மலையக எழுத்தாளரின் ஆக்கங்கள் பயன்படத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன; செய்து வருகின்றன. அத் தோடு, சொல்லப்படுபவை கலையம்சத் தோடு சொல்லப்படுவது, அவற்றுக்குப் பெறுமானத்தைக் கொடுக்கின்றன. இவ் வகையிற் கடந்த இருபதாண்டு காலச் சிறுகதை வளர்ச்சியிலே தெளிவத்தை ஜோசப், என். எஸ். எம். ராமையா, பரி பூரணன், மாத்தளை வடிவேலன், மலரன் பன், மாத்தளை சோமு ஆகியோரின் பங் களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
மனித வாழ்வின் வளத்தையும், அவனுல் ரியையும் வைத்து, அந்த வளர்ச்சியையும் :கிற ஓர் கருத்தும் அதைப் பற்றிப் பெறும் ம்" என்னும் பதம் கலை இலக்கிய உலகில் க்கியம் உடலாயின் தத்துவம் அவற்றின்
ணர்வூற்றுருவகச் சித்திரத்தில் அகஸ்தியர்

Page 12
amir Abauv 8 : : 8 — 1 1 (I 980)
நகரங்களின் தோற்றத்திற் காரணிகள்பற்றிய ஒரு ே
உலகில் மனிதஞனவன் சுமார் இரண் டரை மில்லியன் ஆண்டுகட்கு மேலாக வாழ்ந்துவருகிருன் எனக் கணிப்பிடப்பட் டுள்ளது. ஆனல் அவன் சுமார் பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்பாகவே ஓர் நிரந்தரமான குடியிருப்பில் வாழத் தொடங்கினன். இக் குடியிருப்புக்களைத் தாபித்தவர்கள் "புதிய sfðsm sV (New Stone Age). SyóveVS) "நியோலித்திக் ' (Neolithic) மக்கள் எனப் படுவர். இதற்கு முன்பு உணவுக்காக விலங்குகளை வேட்டையாடவும், பயிர்க ளைச் சேகரிப்பதற்காகவும் மக்கள் இடத் திற்கிடம் அலைந்து திரிந்தனர். உலகின் முதலாவது விவசாயிகளாக நியோலித்திக் மக்களே விளங்கினர். எனவே இவர்க ளுக்கு உணவைத் தேடி அலையவேண்டிய தேவையிருக்காமையால் கிராமங்களில் குடியிருக்க முற்பட்டனர்.
-கிறிஸ்துவுக்கு முன் சுமார் 3500 ஆண் டளவில், சில நியோலித்திக் கிராமங்கள் சிறு நகரங்களாக விருத்தியுறத் தொடங் கின. முதலாவது நகரம் தோன்றிய காலத்திலிருந்து, பலவித மக்கள், பல நகரங்களை, பல இடங்களில், பல காரணங் களுக்காக நிறுவத்தொடங்கினர். இந் நகரங்கள் அளவிலும், மாதிரியிலும் வேறு பட்டதுடன், பல்வகை பொருளாதார, அரசியல், சமூக அமைப்புக்களைக் கொண் டவைகளாகவும் அமைந்திருந்தன. ஆளுல் எல்லா நிரந்தரக் குடியிருப்புக்களும்நியோலித்திக் கிராமத்திலிருந்து பரிய நகரம்வரை - தோற்றம் பெறவும், விருத்தி யுறவும் நான்கு பிரதான அம்சங்கள் அவ சியமானவை. அவையாவன: (1) தொழில் நுட்ப முன்னேற்றம், (2) சாதகமான
புவியியறதுறை உதவி விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்,
-

கும் விருத்திக்குமான நாக்கு
& risir sic Galsa uni, B. A. (HONS.)
பெளதிகச்சூழல், (3) சமூக அமைப்பு (4) சனத்தொகை வளர்ச்சி.
(1) தொழில்நுட்ப முன்னேற்றம் (Advances
in Technology)
தொழில்நுட்பம் எனும் சொல்லானது, மனிதர் தமது வாழ்க்கை முறையை மாற்றவும், முன்னேற்றவும் உதவுகின்ற கண்டுபிடிப்புக்களைக் குறிக்கின்றது. நகரங் களை உருவாக்க இட்டுச்சென்ற தொழில் நுட்ப முன்னேற்றமாக விவசாய வினைத் திறமை விருத்தி விளங்குகின்றது. நியோ லித்திக் மனிதர் பயிர் வளர்க்கும் முறை யைக் கற்றுக்கொண்டதுடன், கருவிகனை யும் கண்டுபிடித்தமை விவசாய முறைகளை முன்னேற்றச் செய்தது. இவரிகள் விலங்கு களை வளர்த்து, வேலைகள் செய்வித்த துடன், அவற்றை உணவாகவும் பாவித் தனர். பல நியோலித்திக் மனிதருக்கு, இவ்விதமான முன்னேற்றங்கள், அவர்க ளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் மேலதிக உணவை உற்பத்திசெய்யக் கர்லா யிருந்தன. . இத்தகைய மேலதிகமான உணவின் நிமித்தம் சிலர் விவசாயத்தை விட ஏனைய தொழில்களிலும் தம்மை ஈடுபடுத்தினர். சிலர் கூடைகள், ஆடை கள், தோற்பொருட்கள், கருவிகள் அல் லது ஏனைய பொருட்களை உற்பத்திசெய். tւյւծ கைத்திறன் தொழிலாளிகளாக (Craftsmen) மாறினர். ஏனையோர் சுரங் கத்தொழில் செய்பவர்களாக, சக்கிமுக்கிக் கல் (Flint), உலோகம், கற்களை அகழும் தொழிலில் ஈடுபட்டனர். இவ்வாறு படிப் படியாக தொழிற்பிரிவுகளும் ஏற்பட

Page 13
லாயிற்று விவசாயத்தில் ஈடுபடாதவர், தாம் செய்த பொருட்களை, மேலதிக பயிர் களே உற்பத்திசெய்பவருக்குக் கொடுத்து உணவுப் பொருட்களைப் பரிமாறிக்கொண் டனர். காலகட்டத்தில், விவசாயத்தின் தொழில்நுட்பவிருத்தியானது. அதிகமான மக்கள் விவசாயமற்ற தொழிலில் ஈடுபடு வதைக் கட்டுப்படுத்தியது. இம்மக்கள் உலகில் நகரங்களை நிறுவியதுடன், அவற் றைச் சனத்தொகை மிக்கதாகவும் ஆக் கினர்.
தொழில்நுட்ப விருத்தியானது வர
லாற்று ரீதியாக நகர வாழ்க்கை முறை யில் செல்வாக்குச் செலுத்தியுள்ளமையை அவதானிக்கலாம் உதார ண மாக, " 1700ஆம் ஆண்டில் நீராவியந்திர முன் னேற்றமானது, பாரிய அளவு உற்பத்திக் குத் தேவையான சக்தி மூலத்தை மனித னுக்களித்தது. இம் முன்னேற்றத்தின் காரணத்தால் பல நகரங்கள் பாரிய உற் பத்தி நிலையங்களாக மாறின. சில சமயங் களில் கைத்தொழில் விருத்தியானது புதிய நகரங்களுக்கும் வழி வகுத்தது. 1900ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் ஐக்கிய அமெரிக்க உருக்குக் கூட்டுத்தாபன மானது. இந்தியானவில் தனது புதிய ஆலைகளைச் சுற்றி (Gary) 'கரி” எனும் நகரத்தைத் திட்டமிட்டு உருவாக்கியது. 1900 ஆண்டு காலகட்டத்தில், பெரிய நகரங்களைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான "புறநகர்ப் பகுதிகள் " (Suburbs) விருத்தி யடைந்தன. போக்குவரத்துத்துறையின் இரண்டு தொழில்நுட்ப விருத்திகள்மோட்டார் கார், புகையிரத வண்டி - இப் புறநகர்ப்பகுதிகளை இலகுவாக்கவும், சாதகமாக்கவும் உதவியாக விளங்கின. இப்பகுதிகளில் வதிகின்ற மக்கள் நகரங் களுககு வேலைக்குச் செல்லவும், திரும்பி வரவும் இக்கார்களும், புகையிரதங்களும் அவசியமாகவிருந்தன. -
பெளதிகச்சூழல் (Physical Environment)
ஒரு நகரத்தின் பெளதிகச் சூழல் எனுமபோது அதில் அந்நகரத்தின் அமை விடம், காலநிலை நீர் உணவுவகைகள்
- 9

கிடைக்கக்கூடிய தன்ம்ை என்பன அடங்கு கின்றன. நகரங்கள் பலவகைச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளன எனினும், இவற் றின் விருத்தியானது சில குறிப்பிடத்தக்க சாதகமான சூழல் அமைப்புக்களில் தங்கி யுள்ளன. எந்த நகரமும் போதுமான அளவு குடிநீரைக் கொண்டிருக்கவேண்டும்; விவசாயத்தில் தங்கியிருந்த ஆரம்பகாலசி சமூகங்களுக்கு பயிர் வளர்ப்பதற்குப் போதுமான அளவு மழைவீழ்ச்சி தேவைப் பட்டது. பயிர் வளர்ப்பதற்கு நல்ல ரக மண்ணும் அவசியம் என்பதுடன், ஏனைய பயிர்கள் - விலங்குகளும், உணவாகக் கொள்ளக்கூடிய பயிர்களும் (Edible plants) --அருகாமையில் காணப்படலும் உதவி யாக இருக்கும் எனலாம். மிதமான கால நிலையும், ஆடை, இருப்பிடம் முதலியன வற்றிற்கு உபயோகிக்கக்கூடிய கருவிகளைப் பெறக்கூடிய அமைவிடம் அருகில் காணப் படலும் ஏனைய சாதகமான சூழல் அமைப் புக்களாகக் கணிக்கப்படுகின்றன.
ஆரம்பகால மக்கள், உப அயனக் காலநிலையில் அமைந்த நதிப்பள்ளத்தாக்கு கிளில் பல சாதகமான சூழல் அமைப்புக் களைக் கண்டனர். சில ஆரம்பகாலக் கிரா மங்களும், நகரங்களும், மத்திய கிழக்கில் GODL& straňo - gÜSur og 6ňov (Tigris - Euphrates) பள்ளத் தாக்கிலும், எகிப்தில் நைல் பள்ளத்தாக்கிலும், சீனவில் ஹ"வாங்ஹோ (Huwang-Ho) பள்ளத்தாக்கிலும், இந்தியா-பாக்கிஸ்தானில் இந்துப் பள்ளத் -தாக்கிலும் அமைந்து காணப்பட்டன.
நகரங்கள் விருத்தியுற ஏனைய சூழல் அமைப்புக்களும், பல வருட காலகட்டங்க ளுக்கூடாக உதவிபுரிந்துள்ளன. உதாரண மாக, ஏனைய நாட்டு மக்களுடன் வர்த்த கத்தில் ஈடுபட, புராதன காலம்தொட்டு மக்கள் கப்பல்களில் பிரயாணம் செய்து வந்துள்ளனர். பாரிய நீர் அமைப்புக ளுக்கு அருகில் அமைந்து காணப்பட்ட பல நகரங்கள் முக்கியமான வர்த்தக மையங்களாக மாறின, இவற்றில், இஸ் தான்புல், துருக்கி இலண்டன், ' இங்கி லாந்து; சாங்காய், சீன வெனில், இத்

Page 14
தாலி; என்பனவும் அடங்கும். ஐக்கிய அமெரிக்காவில் சிக்காகோவும், கனடா வில் டொறன்டோவும் விருத்தியடைய இவை முக்கியமான நிலங்களுக்கருகில் இருந்ததுடன், முக்கியமான நீர்ப்போக்கு வரத்துப் பாதையில் அமைந்திருந்ததுமே காரணமாகும். இங்கிலாந்தின் மான் செஸ்டர் உட்படப் பல நகரங்கள் முக்கி யத்துவம் வாய்ந்த உற்பத்திமையங்களாக விருத்தியுறுவதற்கு, உற்பத்தித் தொழி லுக்குத் தேவையான கணிப்பொருட்கள் அல்லது ஏனைய மூலப்பொருட்கள் அரு காமையில் அமைந்திருந்தமையே காரண மாகும். சில நகரங்களின் விருத்திக்குக் கால நிலை யும் பிரதான காரணியாக விளங்குகின்றது. புளோரிடாவிலும், தென் மேல் ஐக்கிய அமெரிக்காவிலும் நிலவு கின்ற வெப்பமான, சுகாதாரத்துக்குகந்த காலநிலையானது பல மக்களைக் கவர்ந் திழுப்பதாயமைந்துள்ளது
(3) Feys Jean LDůL (Social Organization)
எந்தவொரு சமூகத்திலும், ஒழுங்கு, அமைதி, பாதுகாப்பு என்பவற்றைப் பேணு வதற்கு மனித நடவடிக்கையில் குறிப் பிட்டதோர் ஒழுங்கு நடவடிக்கை அவசிய மாகிறது. தமது வகுப்பில் அல்லது சமூ கத்தில் உள்ள ஏனையோரைத் துன்புறுத்து வதோ, திருடுவதோ பிழையானதொரு செயல் என்பது நியோலித்திக் காலத்தி லிருந்து பெரும்பாலான மக்களால் அங்கீ கரிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும் தமது புாதுகாப்பும், சொத்துக்களும் மரியாதைக் குரியனவாகக் கணிக்கப்படல் வேண்டும் எனவும், அவை தமது உரிமைகள் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். மொத்த மாக மக்சளுக்குத் தமது சமூகத்தில் சில கடமைகளும காணப்படுகின்றன. உதா ரணமாக ஆண்கள் தமது சமூகத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக அடிக்கடி சண்டையிலீடுபட்டுவந்துள்ளனர்.
ஒரு சமூகத்தில் அல்லது வகுப்பில் ஒழுங்கைப் பேணுவதற்குச் சில ஒழுங்கு ரீதியான அதிகாரம் (Authority) தேவைப்
- 1

படுகிறது.அ மிக அடிப்படைச் சமூக வகுப் பான ஒரு குடும்பத்தை எடுப்பின், தமது பிள்ளைகள்மீது ஆளுமைசெய்யப் பெற்றே ருக்கு அதிகாரம் உள்ளது. நகரங்களே உள்ளடக்கிய பெரிய சமூக வகுப்புக்களில் பிரசைகள் அரசாங்கத்தின் அதிகாரத்தை அங்கீகரிக்கவேண்டும்.
நியோலித்திக் கிராமங்கள் எளிய சிறு சமூக அமைப்புக்களைக் கொண்டிருந்தன: பிள்ளைகள் தமது பெற்ருேருக்கு அடங்கி நடத்ததுடன், மக்களும் ஏனைய ஒவ்வொரு வரின் உரிமைகளை மதித்து நடந்தனர்; ஆனல் இன்றைய அரசாங்க உத்தியோகத் தரைப் போலன்றி, பல கிராமங்களில் ஒரு சில உத்தியோகத்தரே காணப்பட்டனர். அநேகமாக மிகையான உணவைப் பாது காப்பதற்குப் பொறுப்பாக ஒருவன் இருந் ததுடன், வெளியாரின் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு பிரதான பாதுகாப்பு அதிகாரியும் இருந்திருக்கலாம். நகரங்கள் வளர்ச்சியடைந்த போதும், குடும்ப அங்கத்தவரினதும் அயலவர் ஒவ் வொருவருக்கிடையிலுமான கடமைகள் அடிப்படையில் ஒன்முகவே அமைந்திருந் தன. ஆனல் நகரங்களில் ஒழுங்கை நிலை நாட்ட நிர்வாக, சமூக விடயங்களில் அர சாங்கம் பாரிய பங்கை வகித்ததுடன், மக்களுக்குச் சேவை வசதிகளையும் அளிக் கத்தொடங்கின. அரசாங்க உத்தியோகத் தர்களும், வேலையாட்களும் கூட பாரிய அளவில் அதிகரித்தனர். இன்று பல நகரங் களுக்கு மேயர்கள், நகரத்திட்டமிடலாளர் கள், இலிகிதர்கள், கவுண் சிலர்கள், தீய ணைப்புப் படையினர், நகர சுத்தித் தொழி லாளர், சுகாதார உத்தியோகத்தர்கள், காவல்படையினர், ஆசிரியர்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கான அரசாங்க உத்தி யோகத்தர் தேவைப்படுகின்றனர்.
(49 சனத்தொகை வளர்ச்சி: (Population
Growth) நியோலித்திக் காலத்தில் சுமார் பத்து மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்ந்தனர். உலக சனத்தொகையானது கி. பி. 1650ல்
) -

Page 15
500 மில்லியஞகவும், 1970ல், மூன்றரை பில்லியனுக்கதிகமாகவும் வளர்ச்சி பெற் ரன்னது. இந்த "சனத்தொகை வெடிப் urTeux7sy” (Population Explotion) pesas priši களின் எண்ணிக்கையிலும், அளவிலும் அதி கரிப்பை ஏற்படுத்தின.
இன்னும் இரு வித போக்குகளும் *Trnேds) நகர விருத்திக்கு உதவி புரிந்தன. முதலாவது போக்கு- சனத்தொகை நக o mă* (Population Urbanization) rar படுகின்றமை- உலகின் சிறிய பகுதிகளில் மிக் அதிகமாக மக்கள் மையப்படுத்தப் படலைக்குறிக்கின்றது. இப்பகுதிகளே நகரங் களும், அதன் சுற்ருடல் பகுதிகளுமாகும். அடுத்த போக்கு-சனத்தொகை பன்மைப்
*இந்தியாவின் ஏவுகணை 'ரோகி விண்வெளியிலே ஏவுகணையைச் சுற்ற ஆண்டு ஜூலை 8ஆந் திகதி வெற்றி பெ 2 மீற்றர் தொலைவில் உள்ள அரிக்கோட்ட ரோகிணி" ஏவுகணை இப்போ வானவெ இச் சாதனை மூலம், உலக நாடுகளின ருேவது இடத்தைப் பெறுகிறது. தங்கள் சிறியுள்ள மற்றைய நாடுகளாவன:
கிரான்சு (தி35), ஜப்பான் (1970 பெப்ர
உலகில் வழக்கிலுள்ள மொழிகள்
இவ்வலகில்ே 2,500க்கும் மேற்பட்ட ஆகுல் 230 - 250 மொழிகளுக்கு மட்டு இவை மட்டுமே சர்வதேச நிலையிலே ெ மில் வியன் மக்களுக்கும் குறைந்த எண்ை 200 ஆகும். ஆக 13 மொழிகள் மட்டுே டோரால் பேசப்படுகின்றன, இவற்றிலே
அதிகளவு எண்ணிக்கையினரால் பேச சீனமொழி (700 மில்லியன், ஆங்கிலம் (2 உருதும் (200 மில்லியன்), ரஷ்யன் (190 ஸ்பானிஷ் (140 மில்லியன்), போர்த்துக்ே மொழி (100 மில்லியன் , ஜேர்மன் (92 பன்.பிரெஞ்சு (60 மில்லியன்), தமிழ் (55
Y1YYYMN -

Rules) (Population Diversification) ovar படுகின்றமை- பல்வகைக் கலாச்சாரப் பின்னணிகொண்ட மக்கள் நகரம் நோக்கி வருதலைக் குறிக்கின்றது. பல காலகட்டல் களுக்கூடாக பல்வேறு இன, மத, தேசிய மொழி கொண்ட வகுப்புக்கள் நகரங்களில் உட்சேர்க்கப்பட்டன. இத்தகைய மக்கள் கலப்பு "கலாச்சாரப் பரவல்" (Cultural Diffusion), அதாவது பல்வேறு பின்னணி கொண்ட மக்கள் தமது கருத்துக்களைப் பரி மாறிக் கொண்டமை, ஒவ்வொரு வரையும் அறிந்து கொள்ளும் செயல்முறையை ஏற் படுத்தியது. நாகரிகத்தின் அபிவிருத்தியில் "கலாச்சாரப் பரவல் ஆனது இன்று மிகப் பிரதானமான காரணியாக விளங்கு கின்றது எனலாம்.
f'
விடும் முயற்சியிலே இந்தியா, 1980ஆம் ற்றது. சென்னைக்கு வடக்கே 100 கிலோ -ா எனும் இடத்திலிருந்து ஏவப்பட்ட 1ளியிலே உலகைச் சுற்றிவருகிறது.
டயே ஏவுகணைத் துறையிலே 2)f55ur ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணிலே ரஷ்யா (1957). அமெரிக்கா 1958), வரி), சீன (1970 ஏப்ரல்) ஆகியவையே.
r
- மொழிகள் பேச்சுவழக்கிலே புள்ளன. மே எழுத்து வரிவடிவங்கள் இருப்பதால், தாடர்பு சாதனங்களாக உள்ளன. ஒரு *க்கையினரால் பேசப்படும் மொழிகள் ம 50 மில்லியன் மக்களுக்கு மேற்பட் தமிழும் ஒன்று. rப்படும் மொழிகளின் பட்டியல் வருமாறு: 57 மில்லியன்), இந்துஸ்தானி -இந்தியும் மில்லியன்), அரபிக் (கற மில்லியன்), ச மொழி (120 மில்லியன்), ஐப்பானிய பில்லியன்), வங்காள மொழி (70 மில்லி மில்லியன்). தெலுங்கு (55 மில்லியன்.
-சிந்தா

Page 16
ஊற்று 8 12-15 (1990) மனித உடலும் தொழிற்ப உணவுச் சத்துக்களின் அ
உணவின் பெரும் பகுதியான சத்துக் கள், உணவுக் கால்வாய் நொதியங்களின் தாக்கத்தினல் படிப்படியாகச் சமிபாட டைந்து சிறுமூலக்கூறுகளாக்கப்படுவதால் கால்வாய் மேலணிக் கலங்களூடே அகத் துறிஞ்சப்படுகின்றன. இந் நிகழ்ச்சி பெரும் பாலும் சிறுகுடம் பகுதியிலேயே நடை பெறுகின்றது. இரைப்பையிலிருந்து அற்க கோலும், இரும்புச் சத்தும் குறிப்பிடத் தக்க அளவில் அகத்துறிஞ்சப்படுகின்றன. அற்ககோல் உறிஞ்சம்படும் வீதம் இரைப் பையில் உணவுப் பொருட்கள் இல்லாத நிலையில்தான் அதிகளவாகும். ஏனைய பொருட்கள் உள்ள நிலையில் அற்ககோல் உறிஞ்சப்படுவது குறைக்கப்படுகின்றது: எனவேதான் உணவுட்கொள்ளுமுன் மது பானம் (அற்ககோலை வெவ்வேறு செறி வாகக் கொண்டுள்ளது) அருந்தும் பொழுது, அதன் விளைவு குறுகிய நேரத் தில் ஏற்படுகின்றது. இதனை உணர்ந்த மேற்கத்தய நாட்டவர் பெரும்பாலும் உணவின் பின்பே மதுபானம் அருந்துவது வழக்கம். மேலும் உணவின் பின் மது அருந்துவதால், ஒருவர் உட்கொள்ளக் கூடிய மதுவின் அளவு, வெறும் வயிற்றில் அருந்தக்கூடிய அளவிலும் பார்க்கக் குறை வாகவே இருக்கும். ஆனல் எம் நாட்டவ ரிடையே மேற்கூறியவற்றிற்கு எதிரிஸ்ட யான வழக்கங்களே செயற்பாட்டில் இருந்து வருகின்றன.
சிறுகுடற் பகுதியில், உட்கொள்ளப் படும் உணவின் 90 வீதம் உறிஞ்சப்படு கின்றது. அதே வேளையில் நீரும் உறிஞ்சப் படுகின்றது. இருந்தும் பெருங்குடற் பகுதியி
உயிரிரசாயனத்தறை. மருத்துவபீடம் பேராதனை பல்கல்ை கழகம்

ாடும் (3) அகத்துறிஞ்சல்
இ. சிவகணேசன், B. v. Se, Ph. D.
லிருந்தே நீர் அதிகளவில் உறிஞ்சப்படுகின் றது ஆதலால் சிறுகுடலில் திரவ நிலையில் (கூழ் நிலையில்) உள்ள சமிபாட்டுப் பொருட் கள் குடற் குறையை (colon) அடையும் பொழுது கட்டியாக்கப்படுகின்றது. குடலி லிருந்து உறிஞ்சப்படும் பதார்த்தங்கள் இரு வழிகளால் காவப்படுகின்றன. அவை
LITG! GO - سمبر
(1) வாயிஞளங்கள் (Portal veins)
மூலம் ஈரலை அடைந்து பின் குரு திச் (இரத்தச் சுற்றேட்டத்தை அடைகின்றன.
(2) நிணநீர்க் குழாய்கள் (Lacteals) வழியாகச் செல்லும் பதார்த் தங்கள் நிணநீர்ச் சுற்றேட்டம் ” மூலம் இறுதியில் குருதிச் சுற் ருேட்டத்தை அடைகின்றன.
மாப்பொருட்களின் அகத்துறிஞ்சல்
சதையநீர், உமிழ்நீர் ஆகியவற்றில் காணப்படும் cc - அமைலேசின் தாக்கத்தி ஞல் மாப்பொருட்களில் இருந்து, CC-எல்லை டெக்ஸ்ரின், மால்டோரை யோசு, மால் டோசு ஆகியன விளைபொருட்களாகக் கிடைக்கின்றன. இவ் விளைபொருட்கள் குடற் கலங்களை அடைய வேண்டுமென் ருல் மேலும் நீர்ப்பகுப்படைந்து, குளுக்கோசு, பிரக்டோசு, கலக்டோசு போன்ற ஒரு சக்கரைட்டுக்களாவது அவசியம்3
சத்திரசிகிச்சை மூலம் சதையத்தை அகற்றிய பின்பும் மாப்பொருட்களின் அகத்துறிஞ்சல் சாதாரணமாகவே நடக் கின்றது. உமிழ்நீரில் காணப்படும் C-அமை
2

Page 17
லேசின் உதவியிஞலும், இரைப்பை ஐதரோகுளோரிக் அமிலத்திஞலும் மாப் பொருட்களின் நீர்ப்பகுப்பு ஓரளவுக்குச் சாத்தியமானபொழுதும்,குடற் கலங்களின் Tthaas 676 abuse (Brush border) snailor it படும் அமைலேசு தொழிற்பாடு இதற்கு முக்கிய காரணமாகும். இங்கு காணப் படும் நொதியங்கள் காபோஐதரேசு (Carbohydrase) என அழைக்கப்படும்.
நான்கு விதமான காபோஐதரேசு நொதி
அட்டவ காபோஐதரேசுக்களும்(!) அவ
நொதியம் பிரதான த
3-கலக்டோசைடேசு இலக்(
(இலக்டேசு)
c - குளுக்கோசைடேசு மால்டோ(குளுக்கோ அமைலேசு) Faisapprld சுக்ரேசு - cc -- சுக்குரோசு டெக்ஸ்ரினேசு OC -- GL-i
(ட்)ரெகலேசு ()QG
(1) இவை குடல் மேலணிக் கலங்களின் தாரிகை
சிறுகுடற் கலங்களேச் சற்று உற்று நோக்கினல், அக்கலங்களே வெளியே சுற்றி யுள்ள மென்சவ்வில் நீண்ட விரல்களைப் போன்ற நுண் சடைமுளைகள் (Microvili) இருப்பது தெரியும். இதுவே தூரிகை எல்லை என அழைக்கப்படுகின்றது (படம்). இநீ நொதியங்களின் தாக்குகின்ற இடங் கள் (Active site) குடற் கால்வாயை நோக்கியுள்ளதால் அல்கு காணப்படும் பொருட்களுடன் தாக்கத்தில் ஈடுபட வசதியாக அமைந்துள்ளன.
ஒரு சக்கரைட்டுக்கள் உயிர்ப்பான முறையினுல் (Active process) அகத்துறிஞ் சப்படுகின்றன. இக் காவு பொறிமுறை as 6th6) (Transport mechanism) Gentlgiuth (Na+) முக்கிய பங்குகொள்கின்றது. ஒவ் வொரு ஒரு சக்கரைட்டுக்கும் ஒவ்வொரு
1 -س-

பங்கள் மனிதரில் காணப்படுகின்றன அவற்றின் பெயர்கள், தாக்கும் பொருட்ஃ கள், விளைபொருட்கள் என்பன அட்டவணை 1இல் தரப்பட்டுள்ளன; இந் நொதியங் களின் தாக்கத்திற்கு அனுகூலமான ph 60 ஆகும். இவை இடைச் சிறு குடலிலே (Jejenunதான்) பெருமளவில் காணப்படு கின்றன; சுருட்குடல் (leum) பகுதியில் உடற்தொழிலுக்குத் தேவையான அளவில் உண்டு. ஆனல் குடற் குறையில் இவை anT GOTLLU LRT.
2sBIT II ற்றின் தாக்கப் பொருட்களும்
ாக்கப்பொருள் விளைபொருட்கள்
7mr dif குளுக்கோசு
கலக்டோசு
ஒலிகோ குளுக்கோசு நிக்கள்
குளுக்கோசு, urdšGlimts
6) fisi. குளுக்கோசு
லாசு * குளுக்கோசு
எல்லையில் உள்ளன.
காவி (Carrier) உண்டு குளுக்கோசும், கலக்டோசும் பொதுவான காவியைப் பயன்படுத்துகின்றன. பிரக்டோசு காவிக்கு Na+ன் உதவி தேவையில்லை; குளுக்கோசு அகத்துறிஞ்சலே விளக்கும் காவு பொறி முறைகள் படம் 1 மூலம் விளக்கப்பட் டுள்ளன. குளுக்கோசும், Na+னும் ஒரே காவியுடன் இணைந்து தொழிற்படுகின்றன: கலங்களுள் Na+த்தின் செறிவு குறைவாக இருப்பதால் Na+ குடற் கால்வாயிலிருந்து (Ges bajú u939 p6v (Concentration gradient) குடற் கால்வாயிலிருந்து கலங் களே நோக்கி குறைந்தவாறுள்ளது) தானுக உட்செல்லும்போது அதனுடன் இணைந்து குளுக்கோசும் உட்புகுகின்றது: Na+ன் செறிவுப் படித்கிறன் கலங்களிலிருந்து குருதி மயிர்த்துளைக் குழாய்களை நோக்கி எதிர்த்திசையில் இருப்பதால் சக்தியைப். (ATP) uudi (53 Natpib es
3 -

Page 18
னுடன் இணைந்த குளுக்கோசும் அலங்கவி லிருந்து மயிர்த்துளைக் குழாய்களை அடை கின்றன. எனவே அகத்துறிஞ்சலின் பொழுது ATP பயன்படுத்தப்படுவதால் இது உயிர்ப்பான முறை எனக் கணிக்கப் படுகின்றது. ܕܣ
இலக்டேசு, இலக்ரோசை குளுக்கோ சாகவும், கலக்டோசாகவும் நீர்ப் பகுப்புப் செய்கின்றது. பாலில் உள்ள வெல்லம் இலக்ரோசு ஆதலால் சிறு பிள்ளைகளின் சமிபாட்டில் இந் நொதியம் பெரும் பங்கு வகிக்கின்றதுg இருந்தும் உணவூட்டலின் பிேது பால் உணவுகளிலிருந்து குழந்தை களை மற்றைய உணவுகளுக்கு மாற்றும் பொழுது இந் நொதியத்தின் தேவை குறைவதால் படிப்படியாக அற்றுப்போகின் றது. இது பெரும்பாலும் சீன, ஆபிரிக்கா, இத்திய நாட்டவரிடையே நிகழ்கிறது. ஆணுல் பிரித்தானிய நாட்டவரில் இலக் டேசு நொதியம் வயதுவந்தவரிடையே 94 சதவீதத்தினரில் காணப்படுகின்றது. குழந்தைகளில் சிறு வீதத்தினரில் இலக் டேசு நொதியம் பிறக்கும்பொழுதிருந்தே இருப்பதில்லை. இப்படிப்பட்ட குழந்தைக ளில் வயிற்ருேட்டம் பெரும் பிரச்சினை பாகவிருக்கும்:
புரதங்களின் அகத்துறிஞ்சல்:
புரதங்களின் சமிபாட்டின் பொழுது சுயாதீன அமிசேஞ அமிலங்களும், சிறு பெத்தைட்டுக்களும் விளை பொருட்களா கக் கிடைக்கின்றன ; சிறு பெத்தைட்டுச் களே பெருமளவில் காணப்படுகின்றன. இவற்றை அமினே அமிலங்களாகப் பகுப் பதில் குடற்கல தூரிகை எல்லைப் பெட்டி டேசு (Peptidase) நொதியங்கள் ஈடுபடு கின்றன. இப்பகுப்பு, கல மேற்பரப்பிலா, அல்லது கலத்துள் எடுக்கப்பட்ட பின்பா தடைபெறுகின்றது என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். இருந்தும் இவ்விரு முறைக ளாலும் நடைபெறலாமெனப் பலரும் கருது கின்றனர்; அமினே. அமிலங்களின் அகத் துறிஞ்சல், ஒரு சக்கரைட்டுக்களைப்போல உயிர்ப்பான முறை ஆகும் இது Na+லும், சக்தியிலும் (ATP) தங்கியிருக்கின்றது.
- 1

எனினும் கலங்களிலிருந்து குருதி மயிர்த் துளைக் குழாய்களுக்கு அமினே அமிலங்கள் காவப்படுவது Na+த்தில் தங்கியில்&ல. Nat Gofesör D-569GauntG) உள்ளெடுக்கப்படும் அமினே அமிலங்களின் செறிவு கூடிக் கொண்டே போகும்பொழுது, கலங்களின் உள்ளிருந்து மயிர்த்துளைக் குழாய்களை நோக்கி எளிதாக்கப்பட்ட (Facilitated) ஊடுபரவலால், காவிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது.
ஒரு அமினே அமிலச் சேர்வையி லிருந்து அதிவிரைவில் அகத்துறிஞ்சப்படும் அமினே அமிலங்கள் மெத்த யோனின், லியூசின், ஐசோலியூசின், வேலீன் ஆகும். லேசீனின் அகத்துறிஞ்சலே ஆகக் குறைந்த தாகும்; இதன் அகத்துறிஞ்ச்லே ஆர்ஜீனி னும் இரு காபொக்சிலிக் அமினே அமி லங்களும் தடுக்கின்றன.
கொழுப்புக்களின் அகத்துறிஞ்சல் :
கொழுப்புக்கள், முக்கிவிசரைட்டுக் களை முக்கியமாகக் கொண்டுள்ளது. இவற் றின் சமிபாட்டின் போது, ஆலப்பேசின் வியால் சுயாதீன கொழுப்பமிலங்கள், கிளிசரோல், ஒரு கிளிசரைற், இரு கிளிச ரைம் ஆகியன விளைபொருட்களாகக் கிடைக்கின்றன. கொலஸ் திரைல் எஸ்தர் ஐதரலேசுவின் தாக்கத்திஞல், கெள்லஸ்தி ரோலும் சுயாதீன கொழுப்பமிலங்களும் கிடைக்கின்றன.
கிளிசரோலும், பத்து அல்லது பன் னிரண்டு காபனேக்கொண்ட சுயாதீன கொழுப்பமிலங்களும், சுவர்க் கலங்க ளுடே உறிஞ்சப்படடு வாயிஞளங்களில் தோன்றுகிறது. பன்னிரண்டு காபனவிடக் கூடிய கொழுப்பமிலங்கள், ஒரு கிளிசரைற். இரு கிளிசரைற். கொலஸ்திரோல் ஆகி பன பித்த உப்புக்களின் உதவியிஞல் நுண் துணிக்கைகளாக்கப்பட்டு (Micelles) espò கலத்துக்குள் எடுக்கப்படுகின்றன. குடற் கல மென்சவ்வில் காணபபடும் லைப்பேசின் உதவியுடன் இக் கலங்கள் மீண்டும் முக் கிளிசரைட்டைத் தொகுக்கின்றன, கொலஸ்திரோஸ், பொகப்போலிபபீட்,
| -

Page 19
முக்கினிசரைட் ஆகியவற்றிலிருந்து குடற் சுவரில் கைலோமைக்குரோவன் (Chyloiைcron) தொகுக்கப்பட்டு நிணநீர்க் குழாய் esar s-8sirpar. கைலோமைக்குரோன் 05 யா, விட்டத்தையும், 9 5 வீதம் பு
படம் 13 குடல் மேலணிக் கலங்க 2. குடல் கால் வாய் 2. தூற்று 3. கல உள்ளிடம் 4 குருதி
Na† - Geruch அபன்,
- 15
 

தந்தையும் கொண்டுள்ளன: சுயாதீன து பில் உறிஞ்சப்பட்ட கொலஸ்திரோல், நிண நீரில் கொலஸ்திரைல் எஸ்தராகக் காணப் படுவதால் எசுத்தராக்கம் குடற் கலந்து ளிலே நடைபெறுகின்றது.
一ー -گھو
ளுடே குளுக்கோசு காவுகை
அருகு பகுதி துண்துளைக் குழாய்

Page 20
aar/ba 8 : 12-13 (1980)
தாயர் மூவர்
கவிச்சக்கரவர்த்தி", என்று பாராட் டப்படும் கம்பன், படைத்த கம்ப்ராமா பணம் ஒரு "காவியச் சோலை", "இலக்கியப் பொக்கிஷம்", "பல்கலைக்கழகம்” என் றெல்லாம் புசழப்படுகின்றது. இக்காவி யத்திலே கம்பரால் உருவாக்கப்பட்ட இராமனின் தாயர் மூவரையும் பற்றி ஆராய்தல் பெரு விருந்தாகும்.
முதலில் இராமனின் சிற்றன்னையாகிய கைகேகியைப் பார்ப்போம், கைகேகி என் றதுமே, "இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத, கொடுமை நிறைந்த, தன் கண வனுக்கே கூற்றுவஞகவந்து தோன்றிய எம காதகி என்றுதான் எண்ணத் தோன்று கின்றது. இது முற்றிலும் உண்மைதான். எனினும் கூற்றுவனைக் காட்டிலும் கொடுமை நிறைந்த, கொடியாள் கூனி அரங்கில் தோன்றிக் கைகேகியின் மென் மனதை மாற்றுமுன் கைகேகி எப்படி இருந்தாள் என்பதை நாம் சற்றுச் சிந் திக்க வேண்டும்:
அப்போது கைகேகி தசரதன் பெரு விருப்பிற்குப் பாத்திரமானவள். அவரது கண்ணைவிட உயிரைவிட மேலானவள். அழகும், அன்பும், பண்பும் மட்டும் உடை பவள் அல்லள் கைகேகி அறிவும் ஆற்ற லும் வீரமும் மிக்கவள்- அவள் வீரததிற் குக் கிடைத்த பரிசுதான் தசரதனிடம் அவள் வேண்டிப்பெற்ற இரு வரங்கள். இத்தக் கைகேகிதான், இராமன் மீது பெற்ற அன்னையைக் காட்டிலும் மிக்க அன்பு கொண்டு, அவனை வளர்த்து எடுத் தவள் இதஞலன் ருே,
தாய் கையில் வளர்ந்திலன் வளர்ந்தது*
தவத்தால் கேகய மடந்தை'-என்று கூறுகின்றர். கம்பர்
ஆசிரியை, வேம்படி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம்,

திருமதி திலகவதி கணபதிப்பிள்ளை
இராமனது முடிசூட்டுவிழாவிற்காக நகர மாந்தர் நகரை அலங்கரிப்பதைக் கண்ட கூனி, காரணம் அறிந்து, மண்ணு ருண்டையால் தன் கூனல் முதுகின நிமிர்த்திய அவமானத்தை நினைந்து, மனங் கொதித்துப் பழிக்குப் பழிவாங்கும் சமயம் வந்தது என்றெண்ணிக், கைகேகியின் மனதை மாற்றுவதன் மூலம் தன் காரியத் தைச் சாதிக்கநினைந்து, அவளிடம் சென்று "துன்பம் வந்துற்றபோதும் தூங்குகின் ருயே' என்று கைகேகியைத் துயில் எழுப் புகின்ருள். அதற்குக் கைகேகி,
*விராவரும் புவிக்கெலாம் வேதமே யென விராமனைப் பயந்த எற் கிட ருண்டோ?" என வியக்கின்ருள்.
இது கைகேகியின் தாயன்பு, மேலும், இராமன் நாளை மணிமுடி சூடுகின்ருன் என்று கூனி சொன்னதும் "தூயவள் உவகைபோய் மிகச்சுடர்க் கெலாம் நாய கம் அனையதோர் மாலை நல்கினள்". இம்மட்டுமன்றி, இராமன் முடிதரிப்பதால் கைகேகி அடையப்போகும் சிறுமைகளை யெல்லாம் விரிவாகவும், வித்தாரமாகவும் எடுத்துரைத்த கூனியைப் Lutriáb3), *"எனக்கு நல்லையும் அல்லை நீயென்மகன் பரதன் தனக்கு நல்லையு மல்லைத் தருமமே நோக்கினுக்கு நலலையுமல்லை வந்தூழ்வினை தூண்ட மனக்கு நல்லன சொல்வினை மதி யிலா மனத்தோப்' என்று கடிந்து 'போதி என் எதிர் நின்று, நின் புன் பொறி நாவை சேதியா திது பொறுத் தனன்" என் ருள். இப்பகுதிகளில் இராம னின் சிற்றன்னையாகிய கைகேகி அவன்மீது கொண்டிருந்த அன்பின் தி தெற்றென அறி பலாம். இத்தகைய அன்பான தாயைத் தான் தன் கொடிய நாவன்மையால் மாற்றினுள், கூணி

Page 21
"அரக்கர் பாவமும் அல்லவர் இயற் றிய அறமும் துரக்க நல்லருள் துறந்தனள் துரமொழிமடமான் இரக்கமின்மை யன்ருே இன்றிவ் வுலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே" கைகேகியின் மனம் மாறியதற்குரிய கார ணங்கள் இவை. .
அடுத்ததாக இராமபிரான ஈன்ற தாயாகிய கோசலையைப் பார்ப்போம். தன்மகன் இராமன் மணிமுடி புனைந்து, குழைக்கின்ற கவரிவீச, கொற்ற வெண் குடையுடன் தன்னைக் காண விரைந்து வருவான் என்று தழைக்கின்ற உவகை புடன் வழிமேல் விழிவைத்து நின்ற தாய் கோசலைமுன் தமியணுய் இராமன் செல் கின்றன். அப்போது கோசலை,
"புனைந்திலன் மெளலி குஞ்சிமஞ்சனப் புனித நீரால் நனைந்திலன் என்கொல்?," என்று "நெடுமுடிபுனைதற்கு நினைந்த தோர் இடையூறு உண்டோ?" என வினவு கின்ருள். அதற்குசி செம்மல் இராமன், செங்கை கூப்பி, "நின் காதற்றிருமகன் பங்கமில் குணத்தெம்பி பரதனே துங்க மாமுடிசூடுகின்ருன்" என்ருன். அது கேட்ட கோசலை கவலையுறவில்ல்ை, பெற்ற மகனுக்கும், மாற்ருள் மகனுக்கும் வேற் றுமை பாராட்டவில்லை. பரதனைத் தன் மகனினுமேலாக மதிக்கின்ருள், தாயன்பு மிக்க கோசலை. அவள் என்ன கூறுகின்ருள் என்பதைப்பாருங்கள்.
"முறைமை யன்றென்பதொன்றுண்டு மும்மையின் நிறைகு ணத்தவன் நின்னி னும் நல்லனல், குறைவிலன்னெனக் கூறி ஞள்."
நால்வரையும் வேறுபாடின்றி நேசிக் கும் இவளல்லவோதாப் என்று நாம் வியக் கின்ருேம், இத்தகையதாய் மன்னனின் மறுவரத்தைக்கேட்டதும் அதாவது இரா
·

மன் பதிஞன்கு வருடங்கள் வனம் ஏக வேண்டும். என அறிந்ததும் "ஏங்கிஞ ளிளைத்தாள் திகைத்தாள் மனம் வீங்கிஞள் விம்மினுள் விழுந்தாளரோ கன்று பிரிற் துழிக் கறவை யொப்பக் கரைந்து கலங் கும் அவள் தாய்ப்பாசத்தை என்னென்பது?
அடுத்து இலக்குமனைப் பெற்ற சுமித் திரை இராமன்மீது வைத்திருந்த தூய்ம்ை மிக்க அன்பினை நோக்குவோம். இராமன் காடேகும் செய்திகேட்ட சுமித்திரை படி மேற்புரண்டு அழவே இராமபிரான் அவ ளைத் தேற்றினன். அப்பொழுது கைகேகி அனுப்பிய மரவுரியைக் கைக்கொண்டு, இலக்குமணன் தாயை வணங்கி, "இராம பிரானுடன் ஏகும்படி கட்டளையிட்டால் அதுவே துணையாகும்” என்று கூறி நின்றன். அப்போது சுமித்திரை வாயி லாகக் கம்பர் கூறுவன கல்நெஞ்சையும் கரைக்கவைக்கும்.
"ஆகாத தன்ருலுனக் கவ்வள மிவ் வயோத்தி மாகாதல் இராமன் நம்மன்ன வன் வையமீந்தும் போகாவுயிர்த்தாயர் நம் பூங்குழற்சீதை யென்றே ஏகாய் இனி பில்வையின் நிற்றலு மேத மென்ருள்? பின்னும் பகர்வாள் மகனேயிவள் பின்செல் தம்பி என்னும் படியன்று அடியாரினில் ஏவல் செய்தி மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வாவதென்றேல் முன்னம் முடி யென்றனள் வார்விழி சோர நின்ருள்??
இப்பகுதியில் கைகேகிக்கும் சுமித் திரைக்கும் உள்ள வேறுபாடு தெற்றெனப் புலப்படுவதோடு, "இராமன் பின்பு பிறந் தானும் உளனென்னப் பிரியாதான் தளைப் பய்ந்த” சுமித்திரையினது அன்பின் தூய் மையும், சீர் மையும் விளங்குகின்ற தல்லவா? இத்தகைய தாயர் மூவரைப் பெற்ற இராமர் பாக்கியசாலி அல்லவா?

Page 22
stran 8 : 18-20 (1980)
புற்றரை அபிவிருத்தி
சிறுபிள்ளைகளிலிருந்து வயதானவர்கள்
வரை நாளாந்தம் உண்ணும் உணவுக் கூறு
களில் பாலும், பாலுணவுப் பொருட்களும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
பாலானது போசாக்கு செறிந்த ஒரு நிறை
உணவாகும், அத்தியாவசியமான உன, வாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. ஆளுல் பாலுக்கும் பாலுணவுப் பொருட்களுக்கும்
எமது நாட்டில் பற்ருக்குறையும், அரிதா கக் கிடைக்குந் தன்மையும் காணப்படு
கின்றது. இந்நிலைமை எப்படி உருவானது
என்பதை அடிப்படையாகக் கொண்டு
பாலுற்பத்தியை உள்ளூரில் அதிகரிப்
பதற்குத் தேவையான நடவடிக்கைகளை
உடனடியான எடுக்கவேண்டியது இன்றி
யமையாததாகும்.
எமது நாட்டில் பசுக்கள், எருமைகள் என்பனவற்றிலிருந்துதான் கூடுதலான அளவு Luntšo பெற்றுக்கொள்ளப்படு கிள்து. ஆளுல் இதில் பசுக்கள்தான் முது லிடத்தை வகிக்கின்றன. பசுக்களிலிருந்து கறக்கப்படும் மொத்தப் பாலினளவா னது பாலுற்பத்திற்கு உபயோகிக்கப்படும் பசுவர்க்கம் - பசுக்கட்கான வீடமைப்பு வசதிகள் - உணவூட்டல் - பாலுற்பத்தி யுடன் தொடர்புடைய ஏனைய பரிபானன முறைகள் என்பனவற்றுடன் தொடர் புடையதாக உள்ளது. ஆளுல் கால்நடை உணவுத் தட்டுப்பாடு, உயர்விலை என்பன நிலவும் தற்போதைய நிலையில் பசு வளர்ப் புத் தொழிலையும், பசுவொன்றிலிருந்து கறக்கப்படும் பாலினளவையும் கிடைக்கக் கூடிய உணவு நிர்ணயிக்கின்றது என்று கூறுவது பொருத்தமானது. அதாவது பசு வொன்றிலிருந்து கறந்துகொள்ளக்கூடிய பாலினளவானது அதற்கு ஊட்டப்படும்
aagri பொருளாதார, alantas de விவசாய பீடம், பேராதனை
- 18

க. க. நவரத்தினம்
உணவின் அளவிலேயே தங்கி உள்ளது என்று கூறலாம். உள்ளூர்களில் பால் உற் பத்தியினை மேற்கொள்பவர்களினல் அடிக் கடி கூறப்படும் "நேற்று பசுவிற்குப் போதியளவு உணவு ஊட்டப்படவில்லை; அதஞல் இன்று கறக்கப்பட்ட பாலினளவு மிகக் குறைவு " என்னும் கூற்றும் பசு விற்கு ஊட்டப்படும் உணவிற்கும் கறக்கப் படும் பாலிற்கும் நேரடியான தொடர்பு உண்டென்பதை உறுதிப்படுத்துவதுடன், இத் தொடர்பினை உடனடியாகக் கண் டறிந்துகொள்ளலாம் என்பதையும் விளக்கு கின்றது
பாலுற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உணவு வகைகளில் இயற்கையாகவே கிடைக்கும் "புல்" மிகவும் பிரதான மானது. ஏனெனில் புண்ணுக்கு, தவிடு போன்ற செறி உணவுகளின் உயர்விலைகள் பாலுற்பத்திச் செலவினைக் கூட்டி பாற் பண்ணையாளனுக்குரிய இலாபத்தினைக் குறைக்கின்றன. இதனுல் இலாபகரமான தொரு பாற்பண்ணை யொன்றினை உரு வாக்குவதற்குப் புற்றரை அபிவிருத்தி நடைமுறைகளில் கவனம் செலுத்த வேண் டியது அவசியமானதாகும்.
எமது நாட்டில் ஈரவலயம் - இடை வலயம் - உலர்வலயம் என்ற மாறுபட்ட காலநிலை இடங்கள் காணப்படுகின்றன. இவ்விடங்கட்குப் பொருத்தமான, உயரி விளைவினைத் தரக்கூடியதும், சிறந்த போ சாக்குத் தன்மை கொண்டதுமான பல வகைப்பட்ட புல் இனங்கள் காணப்படு கின்றன. ஆனல் இப்புல் இனங்களினது சிறப்பான பயன்பாட்டினைப் பெற்றுக் கொள்ள எமது நாட்டுப் பாற்பண்ணை யாளர்கள் தவறி விடுகின்ருர்கள் என்று
y

Page 23
கூறுவது பொருத்தமானது ஏனெனில் பசுவின் உணவில் புற்களின் முக்கியத்துவம் புற்களினப் பயிரிடல், பரிபாலித்தல் போன்ற நடைமுறைகளுடன் தொடர் புடைய அறிவு பாலுற்பத்தியாளர்கட்குக் குறைவாகவே உள்ளது. இதனுல்தான் போலும் எமது நாட்டில் சிறப்பான பரி பாலன நிலையின்கீழ் உள்ள புற்றரைகள் அரசாங்கக் கால்நடைப் பண்ணைகளுடன் தொடர்புபட்டுள்ளது. Jyá5ágl-6ör klar வளர்ப்பினை மேற்கொள்ள வேண்டுமாயின் செறி உணவு ஊட்டல் இன்றியமையாதது என்ற மனப்பாங்கும் அனேக turreyfus 5 யாளர்களிடையே நிலவுகின்றது. எனவே பசு உணவில் புற்களின் முக்கியத்துவம், புற்றரைகளேத் தாபித்தல், பராமரித்தல் என்பனபற்றி தெளிவான விளக்கத்தைப் பாலுற்பத்தியாளர்கட்குக் குறுகிய காலத் தினுள் அளித்தல் வேண்டும் என்பது தெளி வாகின்றது.
மக்களின் தடைமுறைகளில் விரும்பிய மாற்றங்களை உடனடியாக உருவாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற ஒரு கற்பித்தல் நடைமுறையையே பிரச்சாரம் அல்லது இயக்கம் என்று கூறுகின்ருேம். இக்கற்பித்தல் நடைமுறையினில் கூட்டங் கள், கருத்துரைகள், கலந்துரையாடல்கள், செயல் விளக்கங்கள், பொருட்காட்சிகள், படக்காட்சிகள் போன்ற ஒன்றுக்கு மேற் பட்ட கற்பித்தல் முறைகள் உபயோகிக் கப்படுகின்றன. பிரச்சாரங்கள், நோய் பீடைகளைக் கட்டுப்படுத்தல், புதுப்பயிர் வர்க்கங்களை அறிமுகப்படுத்தல், தேர்தல் கன், வியாபார சம்பந்தமான விளம்பரப் படுத்தல்கள் போன்ற வெவ்வேறு நோக் கங்கட்காகப் பாவிக்கப்படுகின்றன.
புற்றரை அபிவிருத்தியை உருவாக்கு வதற்கும் பிரச்சாரம் அல்லது இயக்கத்தை ஒரு கருவியாக உபயோகிக்கலாம். இத் தகைய இயக்கத்தினுள் பசு உணவில் புற் களின் முக்கியத்துவம் புற்றரைகளைத் தாபித்தல், பராமரித்தல், புற்களில் பசுக் களே மேயவிடல் அல்லது வெட்டி உண வூட்டுதல் மேலதிகமான புற்களைப் பத
-

SLLTST0L S LLLLLLT TTTTTS LLTLTLETCTTTT LLL புற்களைக் கலந்து பயிரிடல், தென்ளே போன்ற பயிர்களுக்கிடையில் இடைப் பயிராகப் புற்களை வளர்த்தல் என்பன வற்றுக்கு முக்கியத்துவம் கெரிடுக்கலாம்
புற்றரை அபிவிருத்தியுடன் தொடர் புடைய இயக்கத்தினுள் புல் வளர்ப்பின் முக்கியத்துவத்தைப் பாலுற்பத்தியாளர் கட்கு வலுப்படுத்தும் நோக்கத்துடன் பின்வருவனவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்துதல் வேணடும்.
* ஏனைய உபடிணவுப் பயிர்களுடன் ஒப்பிட்டு பணவடிப்படையில் வருட மொன்றில் கிடைக்கும் தேறிய லாபத்தினளவு.
* ஏக்கர் ஒன்றிலிருந்து கிடைக்கும் புல் விளைச்சலை உடனடியாகப் பன்மடம் காக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் * தரமான புற்களை உணவூட்டுவதால் பாலுற்பத்தியில் உண்டாகும் அதி கரிப்பு. * புற்களை உணவூட்டுளதால் பாலும் பத்திச் செலவில் உண்டாகும் மாற் றம் என்பன சிலவாகும். எந்த ஒரு உற்பத்தியாளனும் வரவுசெலவு என்ற அடிப்படையைக் கருத்தினில் கொண்டே தன் உற்பத்தி நடைமுறைகளை மேற்கொள்பவனகையினல் மேற் காட்டப் பட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இன்றியமையாதது. இகளுல் உற்பத்தி யாளர்களின் மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளக்கூடியதாக விருக்கும். பொது வாக இத்தகைய இயக்கங்களும் உற்பத்தி யாளர்களின் மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளக்கூடியதாக விருக்கும். பொது வாக இத்தகைய இயக்கங்களும் உற்பத்தி யாளர்களின் மனப்பாங்கினை மாற்றுவதி லேயே முக்கிய கவளம் செலுத்துகின்றன.
புற்றரை அபிவிருத்தி இயக்கத்தினை ஒரு திடடமிடப்பட்ட அடிப்படையில் ஒழுங் காக நடாத்துதல் வேண்டும். எவ்வள விற்கு எவ்வளவு பாலுற்பததியாளர்களைப் புற்றரை அபிவிருத்தியுடன் தொடர்பு
9 -

Page 24
UG55 g if a (up all Li at it as arr di Sadi கொள்ள முடியுமோ அவ்வளவிற்கு ஆர்வ முடையவர்களாக்கிக் கொள்வதவசியம்.
இத்தகைய இயக்கங்களின் வெற்றியானது
எவ்வளவு தூரம் அவ்வியக்கத்தின் நோக் கத்தையும் நடவடிக்கைகளையும் மக்கள் விளங்கிக் கொள்ளுகின்ருர்கள் என்பதி லேயே தங்கி உள்ளது.
திட்டமிடப்பட்ட ஒழுங்கில் மேற் கொள்ளப்பட்டு வரும் புற்றரை அபி
விருத்தி இயக்கத்தின் இறுதி நாளினே ஒரு பெருவிழாவாகக் கொண்டாடுதல் வேண்
டும். இப் பெருவிழாவின்போது இயக்க
மொன்றினை நடைமுறைப்படுத்தியதஞல்
அடையப்பெற்ற பலாபலன்களை விபரமாக
சகலரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகை யில் தெரிவித்துக் கொள்ளுதல் வேண்டும். இப்பலாபலன்களை, புற்றரை அபிவிருத்தி இயக்கத்தை மேற்கொண்டதால் புற்றரை களைத் தாபித்தவர்களின் தொகை, புற் றரைகட்கு அசேதனப் பசளைகளைப் பாவிதி தவர்களின் தொகை, மேலதிகமாகச் சேமிக்கப்பட்ட புற்களின் அளவு, புற்களைக் கலப்புப் பயிராகவும், இடைப்பயிராகவும், பயிரிட்ப்பட்டவர்களின் தொகை, பாலுற் பத்திச் செலவிலுண்டான மாற்றம் என் தனவற்றை அடிப்படையாக வைத்து அளவிடலாம்.
எமது நாட்டில் தற்போது நிலவும் வேலையில்லாத தன்மை, சீரற்ற வருமா னப் பங்கீடு, போசா க்கு க் குறைபாடு போன்றவற்றை நோக்கும்போது, மர தடுகை இயக்கம், மலேரியாத் தடை இயக்
2

கம், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கம் போன்று புற்றரை அபிவிருத்தி இயக்கத் துக்கும் அரசாங் கம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். புற்றரை அபிவிருத்தி இயக்கத்தினுல் உண்டாகும் பலாபலன்கள் தனிப்பட்ட ஒரு பண்ணையாளனுக்கு மட்டு மன்றி தேசிய பொருளாதாரத்துக்கும் தன்மை அளிப்பதாகவே அமையும்.
எனவே புற்றரை அபிவிருத்தி இயக்க மொன்றினை எமது நாட்டில் கட்டாயம் ஆரம்பித்தல் வேண்டும்; இயற்கையாகவே வெவ்வேறு விவசாயக் காலநிலை வலயங்க ளாகப் பிரிந்து காணப்படுகின்ற சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி தனித்தனியாக ஒவ் வொரு வலயத்திலும் இவ்வியக்கத்தை மேற்கொள்வது அவசியம். எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சில இயக்கங்கள் ஓரிரு நாட்கள் அல்லது ஒருசில மணித்தி யாலங்களுடன் முடிவடைந்து விடுகின்றன. அபிவிருத்தியைக் கருத்திவில் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இயக்கங்கள் இத் தகைய நிலையை ஒருபோதும் அடைய விடக்கூடாது. இதை நாம் கருத்தினில் கொள்ளாதுவிடின் இயக்கங்களின் நோக் கத்தை ஒருபோதும் அடைய முடியாது. எனவே வருங்காலத்தில் பாலுற்பத்தி யில் அதிகரிப்பினை ஏற்படுத்துவதற்குப் புற்றரைகளை நம்பகரம்ான மூலவளமாகக் கருதி அதனை விருத்தியாக்குவதற்கான நட வடிக்கைகளை உற்பத்தியாளர்களும் அர சாங்கமும் சேர்ந்து மேற்கொள்வது எப் போதும் சாதகமான விளைவுகளையே உரு வாக்கும்.

Page 25
ஊற்று 8 : 21-23 (1980)
சேதனவுறுப்பு இரசாயன
(i.
ஏமைட்
ஏமைட்டுக்கள் - CONH- தொகுதியை பற்றிக்கு, அரோமற்றிக்குத் தொகுதிகளுடன் முறையே அலிபற்றிக் கேமைட்டுக்கள், அே сатић.
a . b : CH, CONH, அசற்றேமை
(அலிபற்றிக்ே
CHs CO NH Quaircraldi
மூவகை ஏமைட்டுக்கள் 2.OT. 2606ant un
முதலேமைட்டு - RCONH
வழியேமைட்டு - RCONHR
LysebLGu GouDL-G) - RCONR 11-1 தொகுப்புமுறைகள்:
(Jy) அமிலத்தின் அமோனியமுப்பைச்
A b፡ RCO, NH, -> RCONH, + HC (ஆ) அமிலக்குளோரைட்டுக்கள், அமில
சேர்க்க: RCOCl -- 2NH, -> RCON (RCOO + 2NH, -> RCON
RCOCl + R1NH, —> RCON (இ) சயனைட்டுக்களைக் கட்டுப்படுத்தப்
HC RCN -- H, O ——> RCONH, 11-2 இயல்புகள் : W
Guit Guo soup 6DL (HCONH2).5 s. திண்மங்கள். குறைந்த மூலக்கூற்று நில கரையுந்தன்மையுடையவை. இத்தகை நிலைகளையும் கொண்டிருக்கும். இவற் டையே ஐதரசன் பிணைப்புக்கள் ஏற்பட .H-NH-Cs O ... ܘܒܗܼܲ-ܬ݁,H R R சிரேஷ்ட விரிவுரையாளர் இரசாயனத் துறை பேராதனைப் பல்கலைக் கழகம்.
- 2

J. Gas Saitoaysir, B.Sc., Ph. D.
)
டுகள்
ாக் கொண்டிருக்கும். இத்தொகுதி அவி ா இணைக்கப்பட்டிருந்தால் அச்சேர்வைகளே. ராமற்றிக்கேமைட்டுக்கள் எனக் குறிப்பிட
ட்டு; எதனேமைட்டு 456upubl-G)) -டு (அரோமற்றிக்கேமைட்டு)
667.
1R,
(5-fraids:
D நீரிலிகள், எசுத்தர்களை அமோனியாவுடன்
H - ahe NH,Cl H -- RCO, NH,
H -- R.OH
பட்ட அமில நீர்ப்பகுப்பிற்குட்படுத்த
விர்ந்த ஏனைய ஏமைட்டுக்கள் நிறமற்ற
மறயைக் கொண்ட ஏமைட்டுக்கள் நீரில்
ப ஏமைட்டுக்கள் உயர் உருகுநிலை, கொதி
றிற்குக் காரணம் இம்மூலக்கூற்றுக்களி
.க்கூடிய சந்தர்ப்பம் இருப்பதிஞலாகும்.
H-NH-CO
R

Page 26
ஏமைட்டுக்கள் காபனேற்றுத் தொ இதற்குக்காரணம் ஏமைட்டுத் தொகுதி
R-CuO ---> R-C-O
NE, ܬܐNH: இப்பரிவுத்தன்மையிஞற்ருன் ஏ யை தன்மை புடையவையாகத் தொழிற்ப 11.2. 1 ஊக்கிமுன்னிலையில் அல்லது N
பெறப்படும்
Na/CHOH RCONH,--> 1 2 ; 2. 2 gouou"Gë sakir, P,Os, PCls, Po றல் ஏற்பட்டு சயனேச் சேர்வைகள் ெ
-HO RCONH --> R 1 , 2 . 3 நைதரசமிலத்துடன் ஏமைட்டுக் | RCONH, + HNO, -> RCO,H நைதரசமிலத்தை HCINaNO தாக்கத் 1 1 . 2 . 4 Gorm facity D. L-Gir KOH ypsišv Gof படியிறக்கத்தாக்கத்திலீடுபட்டு அமீன்
A RCONH. -- Br, + 4KOH -> இத்தாக்கம் பின்வரும் படிகளின்மூலம்
, Br, ΚΟΙ RCONH -> RCONHBr - - -H
HC
CO2 -- RNH, ത്ത . 2.5 சோடியமைதரொட்சைட்டுக்கை வெளியேற்றப்படும். இத்தாக்கத்தை ஏ படுத்தலாம்
A
RCONH. -- Na OH -> RCO,
H RCO, அரோமற்றிக்கேமைட்டுக்களிலிருந் அமிலப்படுத்தப்பட வெண்திண்மத்ை திரவங்களானபடியால் இம்முறையைப் அலிபற்றிக்கேமைட்டுக்களையும் வித்திய
11.3 ur (NH3CONH,)
சிறுநீரில் (Urine) இருந்து பெறப் சாதாரண மனிதன் தினமும் சிறுநீரில் 3 வோக்லர் (Woher) என்பவர் பொற்ரு *düGubep ayıb Osmalar L- soprara) <
- 22

குதிகளின் பொதுத்தாக்கங்களைத்தராது. தியிலுள்ள பரிவே காரணமாகும்:
மட்டுக்கள் அமீன்களிலும் குறைந்த மூலத் டும். W /CHOH முன்னிலையில் தாழ்த்த அமீள்
RCH, NH, +H.O
C அல்லது SOC) உடன் சூடாக்க நீரகம் பெறப்படும்:
CN கள் அமிலத்தைத்தரும்.
+ N, - H.O
தின் மூலம் பெறலாம். லயில் ஏமைட்டுக்கள் ஒபுமான் (Hofmam). களைத்தரும்.
RNH, + 2KBr - K,CO + 2H,O
நடைபெறும். -
H
-> RCO
Br மறுசீராக்கல்
RN a C se O
ரசலுடன் சூடாக்க அமோனியா வாயு ரமைட்டுக்களைப் பரிசோதிப்பதற்குப் பயன்
Na -- NH3
B
து பெறப்படும் சோடியமுப்பு, RCO, Na. தத்தரும் அநேக அலிபற்றிக்கமிலங்கள். பாவித்து அரோமற்றிக் கேமைட்டுக்களையும் ாசப்படுத்தலாம்.
பட்ட இச்சேர்வை ஒரு ஏமைட்டாகும். 0g யூரியாவை வெளியேற்றுகிருன். 1828ல் *சிய மைசோசயனேற்றையும் அமோனியம், ஆவியாக்கி யூரியாவைப்பெற்ருர்:
-

Page 27
KNCO + (NH), SO, - NH giatur Luara untasi untaatasiu
11 . 3, 1 யூரியாவின் தாக்கங்கள்:
1.
(அ) மெதுவாகச்சூடாக்க யூரியா
பையூரெற் எனப்படும் சேர்ைவ
(NH,), CO as NH + HNC பையூரெற்றின் நீர்க்கரைசலிற்கு பேற்றையும் இட ஒரு உதாநிற பையூரெற்தாக்கமென அழைக் தொகுதியைக் கொண்ட சேர்ை தொகுதியைக் கொண்டிருத்த யளிக்கும்.
(ஆ) நைதரசமிலத்துடன் CO, வெளி
CO(NH,), + 2HNO, -) CO, -
unipa-II
பின்வரும் ஒவ்வொரு தொகுப்பிற்கான (ay) CH, CONH, -> CHNH, (...) CHBr -> CH3CONH, (g) CH3CO, NH, -> CHCH, NH,
A எனப்படும் சேர்வை HCI உடன்
Bயையும் Cயையும் கொடுத்தது. Na சைட்டை வெளியேற்றுகிறது. HNO, z அமைப்பு பின்வருவனவற்றில் யாது ? w
(s CHNHCOCHs () (CH, விடைகள்:
(அ) ஒபுமான் படியிறக்கம் (11.2 4 ஐ.
i drřKCN H+/H,C
நீர்ப்பகுப்
A N
(D) CH3CO, NH -> CH, CONH, -
1) HCl, d>
CHNBCOCH -- --ബ CᏍᎻᏖ
A 2 NaOH
N.
- 2

NCO こ二ー CO(NH,) glunt டுகிறது.
ரமோனியாமூலக் கூற்றென்றை அகற்றி யைத்தரும்
O ---> NH, CONHCONH, augQurb | NaOH asampur F687 *G) ஒரு துளி செப்புச்சல் ச்சேர்வை பெறப்படும். இத்தாக்கத்தை கப்படும். இத்தாக்கத்திற்கு -CONHவகள் விடையளிக்கும். புரதங்கள் இத் லால் பையூரெற்பரிசோதனைக்கு விடை
யேற்றப்படும். 3H,O 十 noN
ஒரு முறையைச் சுருக்கமாகத்தருக:
சூடாக்கிக்காரப்படுத்த இரு சேர்வைகள் HCO நீர்க்கரைசலோடு B காபனீரொட் உடன் C, N ஐ வெளியேற்றுகிறது A யின்
NCOCH (a)). CHCH,N a CHCH
பார்க்க)
D > CHCOH --> CH3CONH t Y
g
CHCONH, of EtOH t --> CH, CHNH,
чн,(( C) - CH3CO2H (B) HNO, NahCo,
CO,
-

Page 28
வாற்று 8 : 24-27 (1980)
ஐக்கிய நாடுகள் சபை தோற்றமும் கட்டமைப்பு
உலக நாடுகளிடையே சிறு சிறு சச் சரவுககள் தொடக்கம் பெரும் யுத்தங்கள் வரை ஏற்பட்டு நடைபெறுவதுண்டு. பெரும் யுத்தங்கள் ஏற்பட்டு உலகில் பேரழிவுகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களி லெல்லாம் அந்த யுத்தங்களும் அழிவுகளும் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் ஏதாவது உண்டா? என்று மக்கள் தலைவர் களும் மக்களும் சிந்திப்பதுண்டு. உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள இரு நாடு களுக்கிடையில் ஏற்படும் யுத்தம் அந்த நாடுகளை மட்டுமன்றி உலக நாடுகள் எல்லாவற்றையுமே பாதிக்கக் கூடும்: 25 TOT 67 DNT & இப்பொழுது மத்திய கிழக் கில் ஈரானுக்கும் ஈராக்கிற்குமிடையில் ஏற்பட்டுள்ள புத்தம் வல்லரசுகளின் தலை யீட்டால் மூன்ருவது உலக யுத்தம் ஒன் றைத் தோற்றுவித்து மீண்டும் ஒரு பேரழிவு ஏற்பட்டுவிடுமா என்ற பயத்தை மக்க ளிடையே ஏற்படுத்தியுள்ளது. எனவே உலக நாடுகளிடையே ஒற்றுமையையும் நட்புற வினையும் ஏற்படுத்தவும் மக்களை யுத்த அபாயத்திலிருந்தும் பயப்பீதியிலிருந்தும் பாதுகாக்கவும் ஓர் சர்வதேச அமைப்புத் தேவை என்று கருதி சர்வதேச சங்கம் (League of Nations) (psayn ib alo) as மகாயுத்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப் பட்டது. உலக சமாதானத்தைப் பேணவும் சமாதானத்தைக் குலைக் த முயலும் நாடுக ளைப் பலத்தினல் அடக்கவும் ஏற்படுத்தப் பட்ட சர்வதேச சங்கம் இரண்டாம் உலக மகாயுத்தம் ஏற்படுவதைத் தடுக்கத் தவறி விட்டது. இரண்டாம் உலக மகா யுத்தம் உலகில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது.
உதவி விரிவுரையாளர் அரசறிவியல் துறை பேராதனைப் பல்கலக் கழகம்

S. Gafia y star, B.A. (Hons)
இத்தகைய பேரழிவு மீண்டும் ஒருமுறை ஏற்படாது தடுப்பதற்கு சர்வதேச சரி கத்தைவிட சக்தியுள்ள ஒரு அமைப்புத் தேவையென்று கருதிச் செயல்பட்டதன் விளைவாகப் பிறந்ததே ஐக்கிய நாடுகள் FGDLu (United Nations Organisation) 676ăr ao சர்வதேச அமைப்பு ஆகும்.
இந்த ஐக்கிய நாடுகள் சபையைத் தோற்றுவிற்பதற்காக 1942ஆம் ஆண்டு அத்திவாரமிடப்பட்டது. இதில் அமெரிக்கா, பிரித்தானியா, ரூசியா, சீன ஆகிய பெரிய சக்திகள் முக்கிய பங்கு கொண்டன. 1942ஆம் ஆண்டு தை மாதம் 1ஆம் திகதி 26 நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட ஐக்கிய நாடுகள் பிர as L607th (United Nations Declaration) வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1943ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்கா, பிரித்தானியா, ரூசியா, சீன ஆகிய நாடுகளின வெளிநாட்டமைச்சர்கள் மொஸ்கோவில் ஒன்றுகூடி சமாதானத்தை யும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கு ஒரு பொதுவான சர்வதேச அமைப்பு அமைக்கப்பட வேண்டுமெனவும், "சமா தானத்தை விரும்பும் நாடுகள் எல்லாம் அதில் அங்கத்துவம் வகிக்க வாய்ப்பு இருக்க வேண்டுமெனவும், அந்த நாடுகள் இறைமைச் சமத்துவம்(Sovereign Equality) உடையவையாக இருக்க வேண்டுமெனவும். வற்புறுத்தி அறிக்கை வெளியிட்டனர். அடுத்து 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை மேலே கூறப்பட்ட நான்கு நாடு
4.-

Page 29
களின் பிரதிநிதிகள் வாசிங்டனில் еец. டம்பர்ட்டன் ஒக்ஸ் திட்டம் (Dunbarton Oaks Proposals) 6Tatrap go slel-bas வகுத்தனர். அதன்படி உலக சமாதானத் தையும் பாதுகாப்பையும் நிலைநாட்டு வதற்கும், அதற்கேற்ற சூழ்நிலையை ஏற் படுத்துவதற்கும் ஒரு புதிய சர்வதேச நிறுவனத்தை நிறுவ வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. எனினும் பிரதிநிதிக ளிடையே இருந்த சில கருத்து வேறுபாடு களை நீக்குவதற்காக 1945ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் ஜனதிபதி ரூஸ்வெல்ட் (Roosevelt), pras off assifei) Leiv சேர்ச்சில் (Winston Churchill), seru 6, Giul-Te66ör (Stalin) 4,9Gaunt if Gaumru “L-IT (Yoltta) என்ற இடத்தில் ஒன்றுகூடி புதிய நிறுவனத் திற்கான அடிப் படை விதிகளே வரைவதற் கென சான் பிரான்சிஸ்கோவில் (SanFrancisco) ஒரு மகாநாட்டைக் கூட்ட வேண்டுமெனத் தீர்மானித்தனர். இதற் கிணங்க 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 51 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஆராய்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்துக்கான அறிக்கையை ஏற்றுக் கொண்டனர். 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி ஐக்கியநாடுகள் சபை தின மாகும். இவ்வாருக 51 நாடுகளுடன் ஆரம்பமான இந்தச் சபையில் இன்று எமது நாடாகிய பூரீலங்கா உட்பட 147 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இவ்வாறு தோன்றிய ஐக்கியநாடுகள் சபையின் அடிப்படை நோக்கங்கள் நான்கு அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
(1) உலக நாடுகளிடையே ஏற்படும் சச்சரவுகளேயும், சண்டைகளையும் சமா தான முறையிலும் கூட்டு முயறசியாலும் தீர்த்து உலகில் சமாதானமும் பாதுகாப் பும் நிலவச்செய்தல்
(2) உலக நாடுகளிடையே As Lt. AD வின் வளர்த்து உலக சமானத்தை உறுதிப் படுத்தல்
(3) உலக நாடுகளின் பொருளாதார, சமூக பண்பாட்டு, மனிதத்துவ பிரச்சினை கன் தொடர்பாக ஏற்படும் சச்சரவுகளைத்
- 2:

தீர்த்தும் அடிப்படை உரிமைகளப் TE காத்தும் நாடுகளிடையே ஒத்துழைப்பை வளர்த்தல்
(4) மேலே கூறப்பட்ட நடவடிக்கை களைச் செய்வதற்கு ஓர் ஒருங்கிணைக்கும் கித்திய நிலையமாக இருந்து செயலாற்றல், இந்த நோக்கங்களை நிறைவேற்றப் பாடுபடும் ஐக்கிய நாடுகள் சபை துணை அமைப்புக்க்ளைக் கொண்டுள்ளது.
66
(1) பொதுப் பேரவை -
General Assembly () பாதுகாப்புச் சபை ட
Security Council (8) பொருளாதார சமூக சபை --
Economic and Social Counci (4) பொறுப்பாண்மைச் சபை -
Trusteeship Council (5) சர்வதேச நீதிமன்றம் -
International Court of Justice
(d) GeFuGvas b – Secretariat என்பவையாகும், W
பொதுப் பேரவை:
இது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத் துவம் வகிக்கும் உறுப்பு நாடுகள் எல்லாம் ஒன்று கூடும் ஒரு சபையாகும். இச்சபை ஒரு வருடத்திற்கு ஒருமுறை கூடுகின்றது. அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும் ஐந்து பிரதிநிதிகள் வரை இச்சபைக்கு அனுப்பலாம். ஆனல் ஒரு நாட்டுக்கு ஒரு வாக்கு மட்டுமே உண்டு. முக்கிய தீர்மானங்களே நிறைவேற்றுவதற்கு முன் றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை. உலக அமைதி, சமாதானம் என்பன தொடர்பான சகல விடயங்கள் பற்றியும் விவாதிக்கவும், படை குறைப்பு பற்றி உலக நாடுகளுக்கு அறிவுரை கூற வும் இச்சபைக்கு உரிமை உண்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்காரியதரிசி யைப் பாதுகாப்புச் சபையின் சம்மதத் துடன் இச்சபையே நியமிக்கிள்றது. பாது காப்புச் சபைக்கு நிரந்தரமற்ற உறுப்பினர்
5 -

Page 30
களைத் தெரிவு செய்வதும் இச்சபையே. இச்சபைக்கு விவாதம் செய்யும் உரிமை
மட்டுமே உண்டு. சட்டமியற்றும் aySð
காரம் விடையாது.
பாதுகாப்புச் சபை
பதினெரு அங்கத்தவரிகளைக் கொண் டது. இதில் அமெரிக்கா, ருசியா, y ffîAê தானியா, பிரான்ஸ், சீன ஆகிய ஐந்து
நாடுகளுக்கு நிரந்தர அங்கத்தினர்கள்
உண்டு.மற்றைய ஆறு நிரந்தரமற்ற அங்கத் தினர்களை இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பொதுப்பேரவை தெரிவு செய்கின்றது. உலக சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் இச் சபையே பொறுப்பாக இருக்கின்றது: உலகில் ஏற்படுகின்ற, எந்த ஒரு சச்சரவு தொடர்பாக விவாதிப்பதற்கும் அவற் றைச் சமாதானமுறையில் தீர்த்துவைப்ப தற்குப் இந்தச் சபைக்கு அதிகாரமுண்டு. சபையின் செயல்முறை தொடர்பான விடயங்களில் குறைந்தது ஏழு உறுப்பு நாடுகளின் வாக்குகள் தேவை மற்றைய விவகாரங்கள் தொடர்பாக ஏழு நாடுக ளின் வாக்குகள் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளையும் சேர்த்துத் தேவைப்படு கின்றது. இச் சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களும் முடிவுகளும் அவற்றின் விகளவான உலக சமாதானமும் பாதுகாப் பும் இதில் அங்கத்துவம் வகிக்கும் நிரந்தர அங்கத்துவ நாடுகளான ஐந்து வல்லரசுக
விலுமே தங்கியுள்ளது. ஏனெனில் நிரந்தர அங்கத்துவ நாடுகளுள் ஒன்று மறுத்தா
லும் எந்த நடவடிக்கையையும் நடை முறைப்படுத்த முடியாது. இது மறுப் urrar (VETO) எனப்படும். வல்லரசுக விடையே நிலவும் சித்தாந்த வேறுபாடு காரணமாக அவை தமது மறுப்பாண்மை யைப் பாவித்துப் பல நடவடிக்கைகளைத் தடைசெய்துவருவதை அவதானிக்க முடி கின்றது. இதனுல் ஒரு வல்லரசு விரும்பாத எந்த ஒரு செயல்யும் மற்ற வல்லரசுகள் ஒன்றுசேர்ந்து நின்ருல் கூட செயற்படுத்த
pau Sávu
2

பொருளாதார சமூக சபை
பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக் கப்படும் 18 உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு மட்டுமே உண்டு. இதன் முக்கிய நோக்கம் உலக நாடுகளின் பொருளாதார, சமூக, சுகாதார தேவைகளேக் கவனித்து இத் துறைகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகப் பாடுபடுவ தாகும். முக்கியமாக வேலையில்லாப் பிரச் சனை, பெண்களின் நிலை, தாய்மாரின் நலன்கள் என்பவற்றைக் கவனிக்கத் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசியா தூரகிழக்குப் பொருளாதாரக் குழு ஐரோப்பிய பொருளாதாரக்குழு, இலத் தீன் அமெரிக்க பொருளாதாரக் குழு என் பன இச்சபையினுல் தனிப்பகுதிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுக்க ளாகும்.
பொறுப்பாண்மைச்சபையின் முக்கிய பணி இரண்டாம் உலக மகா யுத்தத்தில் தோல்வி பண்டந்த நாடுகளிடமிருந்து கைப்பற்றப் பட்ட பிரதேசங்களினதும், ஐக்கிய நாடு கள் சபையின் பொறுப்பில் விடப்பட்ட சுயாட்சிபெருத நாடுகளில் வாழும் மக்க ளினதும் சமூக பொருளாதார அரசியல் நலன்களைக் கவனிப்பதாகும். சுயாட்சி பெருத நாடுகளில் வாழும் மக்களிடையே சுயாட்சிமுறை பற்றிய கருத்துக்களைப் பரப்புவதும் இதன் பணியாகும். இச்சபை மேலே கூறப்பட்ட பகுதிகள் பற்றிய அறிக்கைகளை , ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரூக்கு அனுப்புகின்றது. பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத் துவம் வகிக்கும் ஐந்து வல்லரசுகளும் இப் பொறுப்பாள்மைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்றன.
பதினைந்து நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச நீதிமன்றம் ஐக்கியநாடுகள் சபை யின் உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் எந்த வழக்கையும் விசாரித்துத் தீர்ப்புக் கூறும் அதிகாரமுடையது. இந்த நீதிமன் றத்தின் தீர்ப்புக்களையும் அதிகாரத்தையும்
6

Page 31
அங்கத்துவ நாடுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. அண்மையில் அமெரிக்க பயணக் கைதிகள் விவகாரம் தொடர் பாக சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பினை சரான் ஏற்றுக்கொள்ளாது உதாசீனம் செய்தமை இங்கு அவதானிக்கக் கூடிய தாகும். நாடுகளிடையே ஏற்படும் பிணக்கு களைத் தீர்ப்பது தொடர்பான சட்டப் பிரச்சினைகள் ஏற்படும்போது பொதுப் பேரவையும் பாதுகாப்புச் சபையும் இதன் உதவியை நாடும்.
ஐக்கியநாடுகள் சபையின் சகல நிர் வாக விடயங்களையும் பொதுச் செயலாள ரின் மேற்பார்வையின் கீழ் செய்யப்படும் செயலகம் செய்து வருகின்றது. பாது காப்புச் சபையின் சம்மதத்துடன் பொதுச் சபை பொதுச் செயலாளரை நியமிக் கின்றது. இவரே ஐக்கிய நாடுகள் சபை யின் முக்கிய நிர்வாக உத்தியோகத்த ராவர். இவர் மூன்று ஆண்டுகளுக்குப்

பதவி வகிப்பார் பொதுப் பேரவை, பாதுகாப்புச் சபை, பொருளாதார சமூக சபை, பொறுப்ப்ாண்மைச் சபை ஆகியவற் றின் கூட்டங்களில் பொதுச்செயலாளரி கலந்து கொள்வார். ஐக்கியநாடுகள் சபையின் பணிகள் பற்றிய ஆண்டறிக் கையை ஒவ்வொரு வருடமும் இவரி பொதுச்சபையில் சமர்ப்பிப்பார்.
மேலே கூறப்பட்ட ஆறு துணை நிறு வனங்களைவிட சர்வதேச தொழில் நிறு வனம் (1. L. O,), உணவு விவசாய நிறு வனம் (F. A. O.), ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞானம் கலாச்சார நிறுவனம் (UNESCO),arriai Gaga i)9 idyawawub(IMF), உலக சுகாதார நிறுவனம் (W. H, O), சர்வ தேச அகதிகள் நிறுவனம் (I. R. O), சர்வ தேச வர்த்தக நிறுவனம் போன்ற பல்வேறு தனிச்செயல்களில் சடுபட்டுள்ள நிறுவனங் உளும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைக் கப்பட்டுச் செயலாற்றி வருகின்றன.

Page 32
ஊற்று 8: 28-31 (1980)
நூல் விமர்சனம்
நூல்: இலங்கையின் அரசியல் திட்ட ளை 1833 - 1978 (கோல்புறுரக் ரு ஆசிரியர் அம்பலவாணர் சிவராசா B. A. ()
அரசறிவியல் விரிவுரையாளர், அச்சு: திருமகள் அழுத்தகம், சுன்னுக விலை: ரூபா 12= பக்கங்கள்: 1 - X, 1 - 129
வங்கையின் கல்வி முறையில் சுய மொழி அல்லது தாய்மொழி மூலம் உயர் கல்வி என்ற சிந்தனை பெரும் மாறுதல் களுக்கு அடிப்படையாக அமைந்தது. 1956ஆம் ஆண்டு இலங்கையின் அரசியலில் 90Lit- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமே கல்வித்துறையின்மேற் குறிப்பிட்ட சிந்தனைக்கும், மாறுதல்களுக் கும் முக்கிய காரணமாகும். உயர் கல்வி யில் சிங்களம், தமிழ் ஆகிய சுதேச மொழி கள் மூலம் போதனைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அம்மொழிகளில் நூல்கள் போதியளவில் இல்லாமை பொம் குறை பாடாக இருந்தது. தமிழ்மொழியில் போதியளவு மூல நூல்களோ, மொழி பெயர்ப்பு நூல்களோ வெளியிடப்படுவ தில்லை என்ற குறைபாடு தமிழ்க் கல்வி மான்களாலும், தமிழ் அபிமானிகளாலும் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. இக்குறைபாட்டினைப் போக்கும் முயற்சிகள் மிக அரிதாகவே இடம்பெற்று வருகின்றன. அத்தகைய அரிதான அரிய முயற்சிகளுள் ஒன்றே பேராதனைப் பல்கலைக்கழக அரசறி வியல் விரிவுரையாளரான திரு. அ. சிவ ராசர் அவர்களின் "இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சியும் மாற்றங்களும்" என்ற நூலின் வெளியீடு,
ஒரு நாட்டினுடைய அரசியலையும், அரசாங்க முறையையும் தெளிவாக அறிந்து
உதவி விரிவுரையாளர்

G. செல்வராசா, B. A. (Hons.)
ார்ச்சியும், மாற்றங்களும் முதல் இரண்டாம் குடியரசு வரை) Hons) Ceylon, M. A. (unb) Cananda, பேராதனைப் பல்கலைக்கழகம் ம், ஆவணி, 1980
கொள்வதற்கு அந்த நாட்டினுடைய அரசியல் திட்டம் பற்றிய அறிவு மிகவும் அவசியமானதாகும். அந்த வகையில் இந்த நாட்டின் அரசியல் வரலாற்றையும் தற் போதைய அரசியல், அரசாங்க முறை என்பவற்றையும் இலகுவாகவும், தெளி வாகவும் அறிந்துகொள்ள விரும்பும் ஒரு வருக்கு திரு சிவராசா அவர்களின் நூல் பெருந்துணையாக அமையும் ஆசிரியரி தமது உரையில் கூறியிருப்பது போல : ** இந்நூல் அரசியலை ஒரு பாடமாகக் கற்கும் பல்கலைக்கழகப் புகுமுக மாணவர் களுக்கும், பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்களுக்கும், அரசியல் ஈடுபாடு கொண்ட பிறருக்கும் பயன்பாடாக இருக் கும்" என்பதில் ஐயமில்லை எனினும் அரசறிவியல் பாடத்தில் பரிச்சயமுள்ள வர்களுக்கு இலகுவானதாக இருக்கும் அளவுக்கு அதில் பரிச்சயமில்லாதவர் களுக்கு இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய தாக இந்நூல் இருக்குமென்று கூற முடி யாது. காரணம் இந்நூலின் வசனநடை இலகுதமிழில் அமைந்துள்ள போதிலும் சில சொற்கள் (உ+ம் : சேதன உறுப்புச் கட்டங்கள், பகட்டு விளைவு, பராமுகப் படுத்தியமை என்பன) புரிந்துகொள்ளக் கடினமானவையாக இருப்பதாகும். ஆனல் அரசியல் திட்டம் பற்றிய விடயம் நாவல் இலக்கியம் போல படிப்பதற்கு இலகு
8 - བདག་

Page 33
வானதோ, சுவையானதோ அல்ல என் பதும் இங்கு கூறிவைக்கப்பட வேண்டிய யதாகும். அதுபற்றி அறிந்துகொள்ள ஆர் மும், அமைதியும் கொண்ட ஒரு மனநிலை வேண்டும். அத்தகைய மனநி ைகொண் டோர்க்கு இந்நூல் கடினமானதொன்முக soy60Lotu மாட்டாது என நம்புகிறேன்.
இந்த நூலின் முதலாவது அத்தியாயம் ** அரசியல் திட்டம் இயல்பும் முக்கியத் துவமும் ஒரு விளக்கம்” என்ற தலைப்பினைக் கொண்டுள்ளது. இதில் அரசியல் திட்டம் என்ருல் என்ன? அதன் தன்மை யாது ? அதன் முக்கியத்துவம் எத்தகையது? என் பன போன்ற அம்சங்கள் விளக்கப்பட்டுள் ளது அவ்வாறு விளக்கும்போது ஒரு அரசி பல் திட்டத்தின் உள்ளடக்கம் சட்டரீதி யான விதிகள், சட்டரீதியற்ற விதிகள் என்பவை பற்றிக் கூறி பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ரூசியா, சுவிற்சர் லாந்து, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா போன்ற பல உலக நாடுகளின் அரசியல் திட்டங் களின் உதாரணங்கள் மூலம் அது விளக்கப் பட்டுள்ளது. இவ்வாறே அரசியலமைப்புக் களின் பாகுபாடுகள் பற்றி விளக்கும்போது பல்வேறு மாதிரிகளின் கீழ் பல்வேறு நாடு களின் உதாரணங்கள் எடுத்தக் காட்டப் பட்டுள்ளன; பல்வேறு நாடுகளின் அரசியல் திட்டங்கள் பற்றிய அறிவை ஆசிரியர் பெற்றிருந்ததின் மூலமே இத்தகைய ஒரு ஆய்வு சாத்தியமாகியது இவ்வாறு விளக்க மளிக்கும்போது இடையிடையே ஒன்றன் பின் ஒன்ருக விளுக்களை கூறி பின் அவற் றுக்கு விடையளிக்கும் வகையில் தமது விளக்கங்களைக் கூறியிருக்கும் ஆசிரியரின் தனித்துவமான ஒரு முறை வாசகர்கள் இலகுவாகவும், ஆர்வத்துடனும் கருத்துக் களே அறிந்துகொள்ள உதவும் என்றே கூற வேண்டும். இந்த அத்தியாயத்தில் ஏனைய நாடுகளின் அரசியல் திட்டங்களைவிட பிரித்தானிய அரசியல் திட்டம் பற்றியே அதிகம் விளக்கப்பட்டுள்ளது. அரசில் திட்டம் பற்றிய கருத்தை விளங்கிக் கொள்வதற்கு பிரித்தானியாவின் அரசியல் திட்ட வரலாறு பற்றிய அந்த நீண்ட
- 2

விளக்கம் எந்தளவு பிரயோசனமானது என்பது கேள்விக்குறியாகும்.
இந்த நூலின் இரண்டாம் அத்தியாயம் *இலங்கையின் தேசியஇயக்கத்தில் அரசியல் திட்டவாதிகளின் பங்கு" என்ற விடயம் பற்றிக் கூறுகின்றது. இதில் இலங்கையின் தேசிய இயக்கத்தின் தனித்துவமான தன் மையினை எடுத்துக்காட்டும் ஆசிரியர் அதற் கும் பெளத்த புனருத்தாரணத்துக்கும் கலால் எதிர்ப்பு இயக்கத்துக்கும் இடையி லான தொடர்புகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் ஏனைய ஆசிய நாடுகள் பலவற்றின் தேசிய இயக்கங்களின் தன்மை இங்கும் இருந்ததை வெளிப்படுத்த முயற்சிக்கிருர் பின்னர் இலங்கையின் தேசிய இயக்கத்தில் முன்னணி வகித்த உயர்ந்தோர் குழாம் தேசிய வாதிகள் அரசியல் திட்டவாதிகள் எனப் பிரிந்துநின்று செயற்பட்டதையும் அந்தப் பிளவினத் தமது பிரித்தாளும் தந்திரத்திற்குச் சாதகமாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான தேசா திபதி எவ்வாறு பயன்படுத்திக் கொள் டார் என்பதையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார். இறுதியில் இந்த தேசிய இயக்க வாதிகளின் கோரிக்கைகள், விண் ணப்பங்கள், மனுக்கள் என்பன சமர்ப் பித்து நடத்திய போராட்டத்தின் விளை வாக ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தங்களை பும், அரசியல் மாற்றங்களையும் ஒன்றன் பின் ஒனருக இலக்கமிட்டுக் காட்டி அவர் களுடைய வேறுபட்ட நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். எமது நாட்டின் அரசியல் வளர்ச்சியையும் அரசாங்க முறை யையும் அறிந்து கொள்வதற்கு அரசியல் திட்டம் பற்றிய அறிவு எந்தளவுக்கு முக் கியமோ அந்தளவுக்கு முக்கியமானதாக தேசிய இயக்கம் பற்றிய அறிவும் முக்கிய மானதாக உள்ளது. இத்தேசிய இயக்கத் தின் முயற்சியாலேயே இந்நாட்டுக்குப் பல அரசியற் சீர்திருத்தங்களும், அரசியற் திட் டங்களும் வழங்கப்பட்டன. எனவேதான் தேசிய இயக்கம்பற்றிய ஒரு அத்தி யாயத்தை ஆசிரியர் தமது நூலில் சேர்த் துள்ளார் என நினைக்கிறேன். தேசிய இயக் கத்தில் ஈடுபட்டோர் அரசியல் திட்ட
9 -

Page 34
வாதிகள், தேசிய வாதிகள் எனப் பிரிந் திருந்து மிதவாத தீவிரவாதப் போக்குக ளுடன் செயற்பட்டதை அதன்மூலம் அர சியல் திட்ட சீர்திருத்தங்களும், மாற்றங் களும், வளர்ச்சியும் ஏற்பட்டதை ஆசிரியர் விளக்கும் பாங்கு சிறப்புடையதாகும்.
இந்த நூலின் மூன்ரும் அத்தியாயம் 1833ஆம் ஆண்டு தொடக்கம் 1948ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி இலங் கையின் அரசியல் திட்ட வளர்ச்சி பற்றிக் கூறுகின்றது. இதில் முடிக்குரிய குடி யேற்ற நாட்டந்தஸ்திலிருந்து இலங்கை கோல்புறூக் கமெரன் சீர்திருத்தங்கள் (1833), குறுர-மக்கலம் சீர்திருத்தங்கள் (1910), மானிங் அரசியல் திட்டம் (1921, 1924), டொனமூர் அரசியல் திட்டம் (1931), சோல்பரி அரசியல் திட்டம் (1947) என்பவற்றினூடாகன்வ்வாறு டொமீனியன் அந்தஸ்தைப் பெற்றது என்பதை ஆகிரியர் விளக்கியுள்ளார். அவ்வாறு விளக்கும் போது ஒவ்வொரு அரசியல் சீர்திருத்தங் களிலும், அரசியல் திட்டங்களிலும் இடம் பெற்ற முக்கிய நிறுவனங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது மேலும் இதில் இலங்கையரது பிரதிநிதித்துவமும், அவர்க ளது அதிகாரத்தில் பங்குகொள்ளும் நிக மையும் எவ்வாறு அதிகரித்து வந்துள்ளது என்பதையும்: இலங்கையர் -அதன்மூலம் படிப்படியாகப் பொறுப்பாட்சியை நோக்கி முன்னேறியதையும் ஆசிரியர் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். இந்தக் காலப் பகுதியின் அரசியல் வளர்ச்சி தேசாதிபதி ஆட்சியிலிருந்து, நிர்வாகக்குழு ஆட்சிக்கு மாறி பின்னர் மந்திரிசபை ஆட்சிக்கு உயர்ந்தமை முக்கிய வளர்ச்சிப் படிகளாகக் காட்டப்பட்டுள்ளன.
இந்த நூலின் நான்காம், ஐந்தாம் அத்தியாயங்கள் முறையே இலங்கையின் முதலாம் (1972), இரண்டாம் (1978) குடியரசு அரசியல் திட்டங்கள் பற்றிக் கூறுகின்றன. அதில் முதலில் இந்த இரு அரசியலமைப்புக்களுக்கான பின்னணியும் பின்னர் இரு அரசியலமைப்புக்களின்"
- 3

முக்கிய அம்சங்கள் பற்றிய விளக்கம் களும் கூறப்பட்டுள்ளன. முதலாம் குடியரசு அரசியல் திட்டத்துக்கான பின் னணியில் சோல்பரி அரசியல் இட்டத்தின் குறைபாடுகள் காரணமாக, ஒரு புதிய அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் இறுதி யாக 1970ஆம் ஆண்டில் அம்முயற்சி வெற்றி பெற்றதையும் அதில் சிலர் பங்கு கொள்ளாமல் விட்டத்தையும் கூறியுள் ளார். அடுத்து மக்கள் இறைமை, அரச கொள்கை, தத்துவங்கள், அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும், அரசிய லமைப்பு நீதிமன்றம், தேசிய அரசுப் பேரவை, குடியரசு ஜஞதிபதி, அமைச்ச ரவையும் நிர்வாகமும், பொதுச்சேவை, நீதிச்சேவை, மொழியும் மதமும் போன்ற பிரதான அம்சங்கள்பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன இவ்வாறே 2ஆம் குடி யரசு அரசியலமைப்பிற்கான பின்னணியில் வெஸ்மினிஸ்ரர் முறையிலிருந்து ஜஞதி பதித்துவ முறைக்கு இலங்கை மாற்றப் படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் கருத்துக்களும் அவ்வாறு மாற்றப்பட்டுள் ளமையும் கூறப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த அரசியல் திட்டத்தின் பிரதான அம்சங்களான மக்கள் இறைமை, அரச கொள்கைத் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், குடியரசு ஜஞதிபதி, விகிதா சாரப் பிரதிநிதித்துவம், பாராளுமன்றமும் அமைச்சரவையும், பொதுசேவை, நீதி சேவை, மொழி மதம் பிரஜாவுரிமை என் பன பற்றிய விளக்கங்கள் காணப்படுகின் றன. இந்த விளக்கங்களில் பெருமளவுக்கு அரசியல் திட்டங்கள் பற்றி மற்றைய அர சறிவியல் அறிஞர்கள் கூறிய கருத்துக்களைத் தேவையான இடங்களில் சேர்த்து விளக்க மளிக்கப்பட்டுள்ளமை சிறப்பான ஒரு அம்ச மாகும். ஆணுல் மற்றைய அறிஞர்களின் கருத்துக்களை கூறிய பின்னர் அவை பற்றிய தனது கருத்துக்களை ஆசிரியர் இறுதியில் கூறியிருந்தால இன்னும் சிறப்பாக இருந் திருக்கும். ஆசிரியர் தமது நூலின் நடுநிலை பேணும் பண்பைப் பாதுகாப்பதற்காகத் தமது கருத்துக்களைக் கூருமல் விட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
0 -

Page 35
இந்த நூலில் இறுதி அத்தியாயமான ஆருவது அத்தியாயம் முடிவுரையாக அமைநிதுள்ளது. ஆசிரியர் தமது உரையில் கூறியதுபோல இந்த அத்தியாயம் இலங் கையின் அரசியல் திட்ட வளர்ச்சியினதும் மயற்றங்களினதும் ஒரு மதிப்பீடாக அமைந்துள்ளது. இதில் பல அம்சங்கள் முன்னைய அத்தியாயங்களில் கூறப்பட் டவையாகவேயுள்ளன. எனினும் 1833ஆம் ஆண்டிலிருந்து 1978ஆம் ஆண்டு வரைபி லான காலப்பகுதியில் எவ்வாறு ஆரம் பத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்க ளும், மாற்றங்களும் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவும் மந்த கதியில் இடம் பெற்று பின்னர் படிப்படியாக வேகம் கூடி இறுதிபில் இரு தசாப்தத்திலேயே இரு புதிய அரசியல் திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட்டமையும் அதற்கான தேவை யையும் காரணங்களையும் ஆசிரியர் சிறப் பாக எடுத்துக் க்ாட்டியுள்ளார். முடிவுரை யின் இறுதியில் அரசியல் திட்டங்கள் எத்

தகைய உயர்ந்த இலட்சியங்களைக் கொண் டவையாக இருந்தாலும் அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என் பதே முக்கியமானதாகும் என்று கூறி முடித்துள்ளார். இது புதிய அரசியல் திட்டத்தில் தேசிய மொழி, பிரஜாவுரிமை, அடிப்படை உரிமைகள் போன்ற அத்தி யாயங்களின் கீழ் உயர்நீத இலட்சியங்கள் எழுத்தில் உள்ளபோதிலும் அவை நடை முறையில் முன்னேய அரசியலமைப்பின்கீழ் இருந்த நிலையைவிட எந்தவித முன்னேற்ற மான நிலையையும் ஏற்படுத்தவில்லை என்ற பலரது குறைபாட்டினைப் பிரதிபலிப்பதாக வுள்ளது. எவ்வாருயினும் தாய்மொழி மூலம் உயரிகல்வி கற்பிக்கப்படும் இந் நாளில் திரு சிவராசாவின் இந்நூல் தமிழ் மாணவர்களுக்கு ஒரு வரப்பிர சாதமே. ஆசிரியர் இது போன்று இன்னும் பல நூல்களை வெளியிட வேண்டும் என் பதே எமது எதிர்பார்ப்பு:

Page 36
ஊற்று 81 32-33 (1980)
சாளரம்
இலங்கையிலே கல்வி நிலை :
பாடசாலை விபரம் : 1977ஆம் ஆண்டும் கணக்கெடுப்பின்படி, இலங்கையிலே Quonris sonras 8673 unt&Fmtålavessair Ddrairaar. இவற்றிலே 12ஆம் வகுப்புவரை கொண்ட umrlorabasár 1 191 uol GGuo. J332 umrlசாலைகளில் 1-5ஆம் தரம் மட்டுமே வகுப் புக்கள் நடாத்தப்படுகின்றன. 3807 பாட சா ைகளில் 1-10ஆம் வகுப்புவரை மாணவ மாணவியர் கல்வி பயில்கினறனர். 85சத வீதமான பாடசா9ேகள் கிராமப்புறத் திலும், மிகுதி 15சதவீதப் பாடசாலைகள் நகர்ப்புறத்திலும் பரந்துள்ளன.
ஆசிசியர் விபரம் : 1977ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பிலே, அரசாங்கப் பாடசால களில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண் ணிக்கை வ்ருமாறு 113, 379 மொத்த ஆசிரியர்களின் 1,651 பேர் (14%) உயர் ull-5A5D rasp th Post graduate) Qasrall வர்களாயும், 17,93 பேர் (152%) பட்ட தாரிகளாயும் உள்ளனர். 255 பேர் 10 2%) விஞ்ஞான/கணிதபல்கலைக்கழக டிப்ளோமா பெற்றுள்ளனர் 15,971 பேர் (14*1%) as Gail uul) & (Special Trained) Quibso வர்களாயும், 50,665 பேர் 446%) பயிற்சி (Trained) பெற்றவர்களாயும், 10,840 பேர் (9 5%) தராதரப் பத்திரம்/டிப்ளோமா பெற்றுள்ளவர்களாயும் உள்ளனர். 16.804
ஆசிரியர்கள் (148%) மேற்குறிப்பிட்ட ஒ
வகையிலும் அடங்காதவர்கள் ! -
BSüd: Statistical Profile of Children (Sri Lanka-l977)
அவுஸ்திரேலியாவின் விசித்திர விலங்குகள்: அவுஸ்திரேலியா என்றதும் எமக்கு உடனே நினைவுக்கு வருவது, குட்டியை வயிற்றுப்பையில் வைத்துக்கொண்டுதாவித் திரியும் கங்காரு எனும் மாசூப்பியல்
- 3.

(தொகுப்பு: சிந்தா)
விலக்கே. மாகுப்பியல் விலங்குகளைத் தவிர, இக் கண்டத்தில் வாழும் வேறு சில
விலங்குகளும், அவுஸ்திரேலியாவுக்கே தனித்தன்மை வாய்ந்தவையாக விளங்கு கின்றன.
l.
உலகிலே பெரிய கறையான் பூச்சிகள் அவுஸ்திரேலியாவிலே காணப்படும் மஸ்தோதோ மிஸ் டாவீனியென்சிஸ் (Mastotermes darwiniensis) es lih இக்கறையான்கள் 1 அங்குல நீளத் துக்கு வளரக்கூடியவை.
அவுஸ்திரேலியாவிலுள்ள நாசூதி GESri Lń6ñv L" Gopr GunTig-Gulu (Nasutitermes triodiae) எனும் கறையான் இனப் பூச்சிகள் 4 அடி உயரமுள்ள புற்றுக் களை கட்டியெழுப்புகின்றன.
உலகிலேயே பெரிய எறும்புகளான Gorff6) ganlynir (Myrmecia) 9)6ятub,
அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணப்
படுகின்றது. இது 12 அங்குல நீளத் துக்கு வளர்கினறது.
உலகிலேயே பெரிய மண்புழுவான
மெசாஸ்கோவிடெஸ் அவுஸ்திராலிஸ் (Megascolides australis,) gyay Gyv s ரேலியாவிலேயே காணப்படுகின்றது. இது 12அடி நீளத்துக்கு வளர்கின்றது; * அங்குலம் வரை உடலின் விட்டம் பகுக்கின்றது. அவுஸ்திரேலியாவிலுள்ள பெரிய சிலந் தியின் பெயர் செலனுேடைடஸ் புளூமி Gu6io (Selenotypus plumipes) seb. முற்றும் வளர்ந்த நிலையிலே இதள் உடல் 2 அங்குல நீளத்தை அடையும். இச் சிலந்தி, கோழிக்குஞ்சுகளைக்கூடம் தாக்கி, அவற்றை á567 g9/6ol-al பொந்தினுள் இழுத்துச் செல்வதாக அறியப்படடுள்ளள்ளது,

Page 37
6: உலகிலேயே பெரிய நன்னீர் இருலான அஸ்டகோபசிஸ் கோல்டை(Astacopsi gouldi) தஸ்மேனியாவிலே காணப்படு கின்றது. இது அேடி நீளமுடையது;
7. குவீன்ஸ்லாந்து பிரதேசத்தில் காணப்
படும் நுரையீரல் மீனுன, நியோ GeForfið Gu? 6iv (Neoceratodus), el av667 மிக விசித்திரமான "வாழும் உயிர்ச் சுவடு" (living fossil) என விலங்கியல் அறிஞர்களால் கருதப்படுகின்றது.
வெளிவந்துள்ளது
திரு. அம்பலவாணர் 8
(அரசியல் விரிவுரையாளர், யே இலங்கையின் வளர்ச்சியும்
1883(கோல்புறுக் முதல் - இர G. C. E. (A/L), G. A. Q. -ui மாணவர்களுக்குப் ப
கிடைக்குப
سمي
1. பூபாலசிங்கம் புத்தகசாலை ་ ༤
m இல, 4, பஸ் நிலையம்-யாழ்ப்பாணம்
2. தனலக்குமி புத்தகசாலை
பிரதான வீதி - சுன்னுகம்
5. மகாலக்குமி ட கண்டி வீதி -
- 33
 

இம் மீன் 5 அடி நீளத்துக்கு வளர்ந் து 20 ஆண்டு காலத்துக்கு மேற்பட
av nrgbsèsir Aps: sub Afar & G & GMTvaades
முகமாக, குவின்ஸ்ாைத்திலே, ஒரு
புகையிரத நிலையத்துக்கு இம்மீனுடைய
Quauap (Ceratodus) வைத்துள்
6IrmrrfaBsir.
ஆதாரம்: Sidney Baker srap3a The Ampol Book of Australiana
வாங்கிப் படியுங்கள்! நிவராசா அவர்களின் ராதனைப் பல்கலைக் கழகம்)
அரசியல் திட்ட மாற்றங்களும்
978
ண்டாம் குடியரசு வரை)
கலக்கழக உள்வாரி, வெளிவாரி யன்பாடுடையது. v மிடம்:
3. லங்கா புத்தகசாலை
கொழும்பு வீதி - கண்டி. 4. கலைவாணி புத்தகசாலை
திருகோணமலை வீதி - கண்டி புத்தகசாலை.
சாவகச்சேரி

Page 38
ஊற்று 8:34-36 (1980)
அ ரி பட்டதாரிகளின் தரமும்
கடந்த இரு தசாப்த தமிழ்மொழி கலைப்பட்டதாரிகளின் பிரச்சினைகள்
(ஊற்றின் இந்த இதழில் அரகிகு மிக முக்கியமான பிரச்சினைகள் எழும்போது ஏற்படுத்தும் நோக்கமாகப் பல்வேறு கோண ஆய்வதற்கு களம் அமைத்துக் கொடுப்பே பட்டதாரிகளின் தரமும் தகுதியும் என்ற கலைப்பட்டதாரிகளின் பிரச்சினைகள்பற்றிப் திரு. M. சின்னத்தம்பி அவர்கள் எழுதிய வர்கள், விரிவுரையாளர்கள், பொதுமக்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிருேம்.)
1950ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உயர் கல்வி சுயமொழிகளினூடாகக் கற்பிக்கப் படல் வேண்டுமென்ற தீர்மானம் இலங்கை அரசினுல் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1980ஆம் ஆண்டுகளின் முற் பகுதியில் பல்கலைக்கழக கலைப்பீடங்களில் முதலில் அது நடைமுறைப்படுத்தவும் பட்டது. பின்னர் விஞ்ஞான பீடங்களி லும், மருத்துவ பொறியியல்பீட முதல் வருட மாணவர்களுக்கும் சுய மொழிகளி னுாடாகப் போதனைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஒரு சில வருடங்களில் அம்முயற்சி கைவிடப்பட்டது. விஞ்ஞான பீடங்களி லும் அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆகவே சுயமொழியில் போதனை என்பது இப்போது கலை, சமூக விஞ்ஞான, பீடங் களிலேயே தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது. இதே காலப் பகுதியில் கலைப் பீடங்களுக்கு அநுமதி பெறும் மாணவர் களின் தொகையும் அதிகரித்து வந்தது. இந்த மாற்றங்களினல் கடந்த இரு தசாப் தங்களில் வெளிவந்தகலைப்பட்டதாரிகளின் தரம் குறைந்துள்ளதா ? என்ற ஒரு பிரச் சினை பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
- 34

ங்கு நகுதியும் மூலக்
M. சின்னத்தம்பி
என்ற இப்பகுதியினை ஆரம்பித்துள்ளோம். அவற்றினை ஊற்றில்விமர்சித்துத் தெளிவினை ாங்களிலும் குறிப்பிட்டதொரு பிரச்சினையை த இதன் நோக்கமாகும். இந்த இதழில் விடயம்பற்றிக் குறிப்பாக தமிழ்மொழிமூலக் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் புள்ளார்கள். இதனைத் தொடர்ந்து மாண ர் என்போரிடமிருந்து இது தொடர்பான
தொகுப்பாசிரியர்
இதனுல் 1. தமிழ்மொழிமூலம் கற்ற பட்டதாரி களின் தரம் உண்மையில் குறைத் துள்ளதா ? 2 இதற்கான அடிப்படைக் காரணங்கள்
un 6M 6N ? . 3. இதன் விளைவுகள் யாவை ? என்ற விஞக்களுக்கு விடைகாண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேற்கூறிய மாற்றங்கள் கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளை உள்ளடக் கிய காலப் பகுதியிலேயே ஏற்பட்டன எனக் கொள்ளலாம். 1965ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியோடு ஒப்பிடும் போது இவ்வாண்டின் பின்னர் பட்ட தாரிகள் வேலையின்மை என்ற பிரச்சினை யெழுந்தபோது அது கலைப்பட்டதாரி களையே பெரிதும் பாதித்தது. இதன் விளை வாக விஞ்ஞானக் கல்வி ஒன்றே உண்மை யான கல்வி என்ற நம்பிக்கை சமூகத்தில் தோன்றியதோடு விஞ்ஞானக் கல்வி கற் போரின் எண்ணிக்கையும் படிப்படியாக உயரத் தொடங்கியது. இதனுல் திறமை
-

Page 39
மிக்க மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவு களுக்குத் தெரியப்பட ஏனையோரே கலைப் பிரிவுகளை நாடினர். ஆனல் விஞ்ஞான போதனை இல்லாத கிராமப்புறப் பாட சாலேகளில் இப் பிரச்சினை எழவில்லை. ஆகவே வசதிகள் நிறைந்த நகர்ப்புறப் பாடசாலைகளுக்குச் சென்று விஞ்ஞானக் கல்வி பெற முடியாதோரே கலைப் பிரிவுகளை நாடினர் எனலாம். எனவே தலைப்பட்ட தாரிகளின் தரங் குறைந்துள்ள்து என்ற கருத்து அடிப்படையில் சமூக பொருளா தாரத் தாக்கங்களின் ஒரு விளைவே என லாம். மேலும் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர்கள் கூட வேலை வாய்ப் பின்றி இருந்தத்ளுல் கலேப்பட்டதாரிகளாக விரும்பியோரிற் சிலர் அதனைக் கைவிட்டு விஞ்ஞானக் கல்வியை நாடினர். அல்லது கிடைத்த தொழிலில் அமருவது மேலானது எனக் கருதத் தொடங்கினர்.
சமூக பொருளாதார பின்னணி இவ் வாறமைந்த சூழ்நிலயில் பல்கலைக் கழகங் களுக்குள்ளே காணப்பட்ட சில குறை பாடுகள் இந் நிலைமையை மேலும் மோச மாக்குவதாக அமைந்தன.
பல்கலைக்கழக அனுமதி கோருவோ ரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலை யில் புதிய பல்கலைக்கழகங்கள் பல, போதிய முன்னேற்பாடுகளின்றி திறக்கப்பட்டன. இவற்றுள் பல கலேப்பீடங்களாகவே இருந் தன. உ+ம்: கொழும்பில் 1965இல் ஆரம். பிக்கப்பட்ட கலைப்பீடம், ஆளுல் இவற்றில் பட்டதாரி மாணவர்களுக்குப் போதிய வசதிகள் உண்டா ? என்பது கவனிக்கப்பட வில்லை. பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டது போல கலைப்பாடங்களைப் படிப்பதற்கு கரும்பலகையும் வெண்கட்டியும் போது மானவை என்ற எண்ணமே இதற்குக் காரணமாயிருந்திருக்கலாம். இப்பல்கலைக் கழகங்களில் கற்பிப்பதற்கு தரமும் தகுதி யும் வாய்ந்த ஆசிரியர் உள்ளனரா என் பதும் கவனத்துள் எடுக்கப்படவில்லை: இப் புதிய பீடங்களில் தமிழ்மொழி மூலம் போதனைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இத ஞல் தகுதி பெற்ற ஆசிரியர்களின்றி
aus

மாணவர்கள் பட்ட இடையூறுகள் சொல் லொளு. இப் பீடங்களில் இருந்த ஒரு சில ஆசிரியர்களும் ஒரு பாடத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பாண்டித்தியம் பெற வேண் டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகினர். இந் நில் ஆசிரியருக்கோ மாணவருக்கோ நன்மை யளிப்பதாக அமையவில்லை. போதியளவு ஆசிரியர்கள் இல்லாமை ஒருபுறமிருக்க புதியவர்களே நியமிப்பதும் சாத்தியமாக இருக்கவில்லை. பயிற்சியும் அநுபவமும் மிக்க ஆசிரியர் குறைவாக இருந்தமையால் திறமையான மாணவர்களை உருவாக்க முடியவில்லை. எனவே ஆசிரியர்களாக நிய மனம் பெறக்கூடிய தகுதி வாய்த்தவர் களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இதை ஒரு நச்சு வட்டம் என்றே கூறலாம். போதியளவு திறமையான மாணவர்களின்றிப் போதியளவு ஆசிரியர் களை நியமிக்க முடியவில்லை. போதியளவு ஆசிரியர்களின்றிப் போதனைகள் பின் னடைந்தன. இதுவும் பட்டதாரிகளின் தரம் குறைவடைய காரணமாயிருந்திருக்கலாம்:
பட்டதாரி மாணவர்கள் நிறைய, ஆழமான விடயங்களை வாசிக்க வேண்டியது அவசியம். சமூக விஞ்ஞானத் துறையில் காலத்துக்குக் காலம் வெளிவரும் நூல்கள் சஞ்சிகைகள் என்பவற்றில் ஒரு சிலவற்றை யாவது வாசித்தறியும் தகுதி இல்லாவிட் டால் பட்டப்படிப்புப் பூரணத்தவம் பெ ருது. ஒரு பிரச்சினையைப் பலகோணங்களி லிருந்தும் நோக்கும் தன்மை இதன் மூலமே ஏற்பட முடியும். புதிய நூல்கள் தமிழில் வெளிவருவதில்லை என்பது ஒரு குறை : கிடைக்கும் ஆங்கில நூல்களை வாசித்தறிய ஆங்கில அறிவு போதாமை என்பது மற் றென்று. இதனல் விரிவுரைகளை மனனம் செய்து அப்படியே ஒப்புவிக்கும் ஒரு வழக்கம் மாணவர்களிடையே வளர்ந்து விட்டது. இந்நிலையில் ஆசிரியர்கள் கூறுவதை மான வர்கள் வேதவாக்காகக் கொள்கின்றனரா? என்ற ஐயும் எழுகின்றது. ஆசிரியர்களும் இதனையே விரும்புகின்றனரோ ? என்பதும் தெரியவில்லை. ஆனல் ஆசிரியர்கள் கூறும் கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் வழக் கம் மாணவர்களிடையே அருகி வருகிறது
5 -

Page 40
ஏன் பதகனயே இது தெளிவாக்குகின்றது. இந்நிலை வரவேற்கக் கூடியதொன்றன்று.
14ஆம் 1 சஆம் நூற் ருண்டுகளில் ஐரோப்பிய நாடுகளிலே சமூக மறுமலர்ச் சியைத் தோற்றுவித்தோர் சமூக விஞ் ஞானிகளே. இச்சமூக மறுமலர்ச்சியே அந் நாடுகள் தொடர்ந்து விஞ்ஞானத்துறை யில் முன்னேற்றமடைய உதவின. விஞ் ஞான ரீதியாக முன்னேற்றமடைந்த நாடு களிற்கூடசமூக விஞ்ஞானம் புறக்கணிககப் படவில்லை என்பதை அந் நாடுகளின் கல்வி அமைப்பினை நேர்க்கின் புலணுகும். ஒரு சமூகத்திற்கு விஞ்ஞானிகளும் தொழில் நுட்பவியலாளரும்மட்டும்தான் தேவையா? சமூகப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க் கும் பயிற்சியும் வல்லமையும் இவர்களுக் குண்டா ? சமூகப் பிரச்சினைகள் மேற் கூறியோரின் அறிவிற்கு அப்பாற்பட்டவை யாக இருக்குமாயின் அவற்றைத் தீர்ப் பதற்கு தகுதியுடையோர் யார்? சமூக விஞ்ஞானம் என்பது சமூகத்தின் தொழில் நுட்பம் சாராத ஆளுல் சமூகத்தின் வளர்ச் சிக்கும் அதன் ஐக்கியத்துக்கும் இன்றி யமையாது தேவைப்படும் பல அம்சங்களை அலசி ஆராய்கிறது. இதில் பாண்டியத் தியம் பெற்முேரே சமூக விஞ்ஞானிகள். சமூக முன்னேற்றத்துக்கு இவர்கள் அளிக் கும் பங்கினை அளவிட்டுக் கூற முடியாது. ஆகவே கலே, சமூக விஞ்ஞான பட்டதாரி களின் முக்கியத்துவத்தினை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
தமிழ் மொழிமூலப் பட்டதாரிகளின் தரம் பொதுவாகக் குறைந்துள்ளது என் பதை ஏற்கும்போது அது சிங்களமொழி மூலப் பட்டதாரிகளது தரம் கூடியுள்ளது

ான்பதை எவ்விதத்திலும் குறிக்காது. இருந்தும் மேற்கூறிய கருத்துக்கள் தமிழ் மாணவர்களுக்கும், சமூகத்துக்குமே பெரி தும் பொருந்தும் தலைசிறந்த சத்திர சிகிச்சை நிபுணர்களையும், பொறியிய லாளர்களையும், கணித மேதைகளையும் எமது சமூகம் பெற்றிருக்கிறது, சமீப காலத்திலும் உருவாக்கியிருக்கிறது. என்று பெருமை கொள்ளலாம். ஆனல் கடந்த தலைமுறையினரைத் தவிர ஒரு சிறந்த வரலாற்றியலாளரையோ, வங்கியாள ரையோ, பொருளியலறிஞரையோ, புவியிய லாளரை யோ , தமிழறிஞர்களையோ, கடந்த இரு சகாப்தங்களில் உருவாக்கி யிருக்கிருேமோ என்ருல் இல்லை என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியிருக்கிருேம். ஆனல் சமூகத்தினைக் கூறு போட்டு அதன் வளர்ச்சியினை வழிப்படுத்தும் சமூக விஞ் ஞானிசளும் மிகவும் அவசியமே. துரி அதிர்ஷ்ட வசமாக அண்மைக் காலத்தில் அத்தகையோரை உருவாக்க முடியவில்லை என்ற கச்ப்பான உண்மையினை நாம் ஏற்க வேண்டியுள்ளது.
சமகாலத்தில் சமூக விஞ்ஞானம் புறக் கணிக்கப்படுவதை ஒரு தற்காலிக போக்கு எனக் கருதுவதில் தவறில்லை. இக்கட்டம் கடந்துபோனபின் இதன் முக்கியத்துவம் நிச்சயமாக உணரப்படும். ஆஞல் அது வரை பொறுத்திருப்பின் அது காலங்கடந்த முயற்சியாகவே இருக்கும். தற்போதைய நிலை மாறியே ஆக வேண்டும். இதற்கான பரிகாரங்கள் இது சம்பந்தப்பட்டோரால் மேற்கொள்ளப்பட வேண்டியது தவிர்க்க முடியாத தொன்ருகும்.
36 -

Page 41
சமுதாயமும் பல்கலைக்கழ
அண்மையில் யாழ். பல்கலைக்சழகத்தில் பங்கு ' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு மிருக்கலாம். இக் கருத்தரங்கில் வாசிக்கட் யாவதற்கு ஆவன செய்து கொண்டிருக்கிருே பட்ட சில கருத்துக்களை இங்கே கூறிவைப்
பல் சிலைக்கழகங்கள் மாணவர்கட்குக் க ஆராய்ச்சித் துறையிலும் இயன்றளவு ஈடுட கருத்துப் புதுமையானதன்று - அநேக பல் கின்றது. ஆளும், நடாத்தப்படும் ஆராய் என்பது மிக முக்கியமானது. இன்றைய நி: படும் ஆராய்ச்சிகள் எமது சமுதாயத்தோ பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமானை லாசைகளையும் பிரதிபலிப்பனவாக அமை சிறப்பாக முக்கியத்துவம் அளிக்கப்படவே வரவேற்கப்படவேண்டிய தொன்ருகும். சில அம்சங்கள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டு
மேலும் வெவ்வேறு துறைகளிலான மக்களும் வந்து பெற்றுக்கொள்ளக்கூடிய 6 ரித்து வைக்கும் ஒரு களஞ்சியமாக அமை மாத்திரமன்றி, இத்தகைய அறிவையும் உ வதற்குப் பல்கலைக்கழகம் முயற்சிக்கவேண் முயற்சிக்கு நிதிப் பற்ருக்குறை ஒரு பெரு தினர் இத்திசையிற் சிந்திப்பது போற்றத்
சுயமொழியிற் கல்வி புகட்டுவதனல் ஏ நவீன விஞ்ஞானக் கல்வியைத் தரக்குறைவி மொழியியற் துறையினர் எவ்வகையில் உத களைத் தெரிவித்தமை இன்னேர் சிறப்பம்ச போன்றன அவசியமா இல்லையா என்று த பொருளாதார நிலையில் இவற்றை நாம் எ கொள்ளலாமெனச் சிந்திப்பது சாலச் சிற மொழியை நாம் எமது முன்னேற்றத்திற் பழகுவது அவசியமாகும். இந்த உண்மை தெளிவாகக் காணலாம். மொழி எமக்கு கூடாது. விஞ்ஞான மாணவர்கட்குப் பே மையும், சமூகவியற்துறை மாணவர்கட்குட் ஒரு பெரும் குறையாகும். வருங்காலத் தி மாணவர்கள் சிக்கலாக வளர்ந்து வரும் தேவைகளையும் புரிந்துகொள்ள வேண்டுெ ஒரளவு அறிவு இருக்கவேண்டும் என்பது 6 புதிய பல்கலைக்கழகங்கள் இப்பணியை இதற்கு வெவ்வேறு துறை ஆசிரியர்களின்
அண்மைக் காலத்தில் எம் நாட்டில் ஏற் எமது சமுதாயத்தின் வளர்ச்சியில் குறிப்ப யையும் ஓரளவு மாற்றியுள்ளன. இவ்வுண் தமது கண்ணேட்டத்தை மாற்றி அமைதி யாகும்,

கமும்
* மாறும் சமூகத்தில் பல்கலைக்கழகத்தின்
நடந்தது வாசக நேயர்களுக்கு ஞாபக பட்ட கட்டுரைகள் நூல் வடிவில் வெளி ம். எனினும் இக்கருத்தரங்கிற் தெரிவிக்கப் பது பொருத்தமென நினைக்கின்றேன்;
ல்வி புகட்டுவதோடு மாத்திரம் நிற்காது டவேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இச் கலைக்கழகங்களில் இக்கருத்து நிலவி வரு ச்சிகள் எவ்வசையில் அமைய வேண்டும் லயில் எமது பல்கலைக்கழகங்களில் நடாத்தப் டு இயைந்து, எம் சமுதாயத்தின் சமூக வயாக எம்மக்களின் தேவைகளையும் அபி பவேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கே ண்டும் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டது 0 துறைகளிலே, இந் நோக்கில், எவ்வெவ் மெனவும் சுட்டிக் காட்டப்பட்டது.
அறிவையும் புள்ளி விபரங்களையும் பொது வகையில் பல்கலைக்கழகம் இவற்றைச் சேக ப வேண்டும் என்ற கருத்தைக் கூறியது ண்மைகளையும் மக்களுக்கு வலிந்து பரப்பு டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இம் ந்தடை என்ருலும்கூட, பல்கலைக் கழகத் தக்கதாகும்.
ற்பட்டுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து ன்றி மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்கு வவேண்டும், உதவலாம் என்ற கருத்துக் மாகம், சுயமொழிக்கல்வி, ஆங்கிலக்கல்வி }ர்க்கிப்பதிலும் பார்க்க, இன்றைய சமூக வ்வாறு சிறந்த முறையிற் பயன்படுத்திக் ந்தது. எந்த மொழியாயினும் சரி, அம் கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக்கொள்ளப் யை வளர்ச்சியடைந்த நாடுகளில் நாம் ஒரு சருவி என்பதை நாம் - ம் றந்துவிடக் தியளவு சமூகவியற் கல்வி அறிவு இல்லா போதிய விஞ்ஞான அறிவு இல்லாமையும் லைவர்களாக வாப்போகும் பல்கலைக்கழக ாம ஐ சமுதாயத்தின் தன்மையையும் அதன் மனின் அவர்கட்கு இவ்விரு துறைகளிலும் லியுறுத்தப்பட்டது. வளர்ந்துவரும் எமது நிறைவேற்றப் போதிய சந்தர்ப்பமுண்டு. பரந்த நோக்கு மிக அவசியமாகும்.
பட்ட பொருளாதார அரசியல் மாற்றங்கள் T് பாதிப்பை ஏற்படுத்தி அதன் திசை மையை நன்கு உணர்ந்து பல்கலைக்கழகங்கள் துக்கொள்ளுதல் அவற்றின் தலையாய பணி
பிரதம ஆசிரியர்

Page 42
WAMNMNMNMNNSYNYN
ஊற்று தொடர்ந்தும் த வாழ்த்து
A. R. Sittam
144. MALi BJ COLON
திருமகள் அழுத்தகம்,
/^~~N

மிழில் அறிவு பரப்பிட கிருேம்.
alam & Co.
AN STREET,
MBO 11
MM- MM/n/MAN/n/n/n/n/r/n/n/n/n- VN-N-N/n/r
சுன்னகம் - 3373/9-80