கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1981.07-09

Page 1
பிரத்தியேக குண வேறுபாடுகள்
*
அபிவிருத்திச் சபைகள் சட்டம்
உலக உணவுப் பிரச்சனை
a una ாழ்க்கைச் சூ ழலியல்
மனித உடலும் தொழிற்பாடும் (6)
 
 

물, புரட்டாசி
1981
Í
தொகுதி 9 இலக்கம் 3.
*
ஊற்று நிறுவ னம்
பிரசுர அலுவலகம் 215 கொழும்பு விதி கண்டி ܓ
தலைமை-அலுவலகம் மாரியம்மன் விதி
திருநெல்வேலி - யாழ்ப்பாணம்

Page 2
.
CORU - Science Magazine
IN THIS ISSUE
Article
Indu vidual differences Ecology - An introduction Development council law
Sea waves - 2 World food problems & solutions
Human body and function - 6 Reproductive system
A.
OOTRU OR
Chairman Prof. T. Jogaratnam
Secretary: Dr. K. Krishnananthasivam
President - Supervisory Board; Mr. N.
Chief Editor: Dr. V. Pavanasasivam
Editorial Board:
Dr. K. Krishnanantha Sivam Mr. A. Sivarajah Prof. V. Paramesh Waran Mr. S. Srikantha Mr. R. Mathawan Dr. A. Balachandran
Editorial Associates:
Dr. M. Sivastambareasan Dr. S. Ariyaratnam
Publishers:
Administrative Editor.
OOTRU ORGAINSATON
Publication Office;
215, Colombo Street, Kandy.
 
 
 
 

in Tamil July-Sept. Vol. 9 No. 3
Author Miss. Gayathri Nadarajah Mr. Raja Srikanthan Mr. K. Navaratnam
D. S. Srikanthan
Vir. Satch i Srikantha
Dr. (Miss.) Malika Indrapi
GANSATION
Vice Chairmam . Prof. A. Thurairajah
Prof. N. Sree harat
Treasurer : Dr. N. Nadesan
Vanicka (daik kadar
Administrative Editor : Dr. R. Si vakanesan
Dr. P. T. Jeyawickramarajah Dr. R. Mahalinga lyer * Prof. N. Sree haran
Mr. N. Sayalolibavan Mr. K. Navaratnam
Mr. K. Thangarajah
Corespondence:
Articles - Chief Editor Others - Administrative Editor.
Head Office:
Mariam man Lane, Thirunelvely, Jafna. .."

Page 3
ஊற்று
தொகுதி 9 ஆடி புரட்ட
பிரதம ஆசிரியர் :
வே. பாவநாசசிவம், B. Sc., M. Sc.
M. S., Ph. D.
நிர்வாக ஆசிரியர் : ★
இ. சிவகணேசன், B.V.Sc., Ph. D. ஆசிரியர் குழு
க. கிருஷ்ணுனந்தசிவம், B.V. Sc., M. Sc.
gaugiraft, B. A., M. A.
பரமேஸ்வரன், B. Sc., M.Sc., Ph.D) GajasJ söt, M.B.B.S., M.D., M.R.O.P.,
ஒறிகாந்தா, B.Sc.M.Sc. ந. சயலொளிபவான் ஆர். மாதவன், B Sc.
.. အရေခွံ့မiခ၈နှံ့အ#f6fing-r., M.B.B.S., M.E., | *
parts Silas puff, B.Sc. Ph. D.
Ph. D.
க. நவரத்தினம், B, A, ★
ஆ. பாலச்சந்திரன், B.V. Sc.
இணைப்புக் குழு
மு. சிவசிதம்பரஈசன், B.V. Sc.
சே. அரியரத்தினம், B. D. S.
க. தங்கராசா, B.Sc., M.Sc. தொகுப்பாசிரியர்
க. நவரத்தினம், B. A.
ஆ. பாலச்சந்திரன், B. V.Sc.,
இச் சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைகளு
பொறுப்பாவார்.
ஆண்டுச் சந்தா ரூபா 12/- (தபாற் தனிப் பிரதி : ரூபா 3/- தபாற் ெ
தொடர்பு :
கட்டுரை பிரதம ஆசிரியர் ஏனையவை நிர்வாக ஆசிரியர்
 
 

مراد ہے). اگر
றிஞர் தம் இதய ஓடை ஆழநீர் ன்னை மொண்டு செறிதரும் மக்கள்
ண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப்
தியதோர் உலகம் செய்வோம்.
தி 1981 இலக்கம் : 3
பிரத்தியேக குண வேறுபாடுகள் செல்வி. காயத்திரி நடராஜா
உயிரின வாழ்க்கைச் சூழலியல் 臺 ஓர் அறிமுகம்
ராஜ பூரீகாந்தன்
அபிவிருத்திச் சபைகள் சட்டம் க. நவரத்தினம் -
gsL_an0%n) agair --2 2. எஸ். கிறீகாந்தன்
@_@ö உணவுப் பிரச்சனையும் 6 அதன் தீர்வு வழிகளும்
சச்சி சிறீகாந்தா
மனித உடலும் தொழிற்பாடும் 6 செல்வி. மல்லிகா இந்திரன் இலங்கையின் நிர்வாக அதிகார முள்ள ஜனதிபதி 24 gFITOTITLD 2&
க்கு கட்டுரை ஆசிரியர்களே முற்றிலும்
செலவுட்பட) ஈலவு சதம் 60.
ஊற்று நிறுவனம் :
பிரசுர அலுவலகம்,
215, கொழும்பு வீதி,
கண்டி

Page 4
* பிறநாட்டு 驻 தமிழ்மொழியி
ஊற்று என்று அறி
நல் வி
நாமும்
" ፴፰
உரிமை த.
 
 
 

ல்லறிஞர் சாஸ்திரங்கள்
பெயர்த்தல் வேண்டும் ” என்ற கனவை நனவாக்கும் மற்றுக்கு ஆதரவு என்றும்
醬
外 ானியா ஸ்ரோர்ஸ் டி வீதி, கிளிநொச்சி
Ng. (33. ELBI Gottisi ளை
7ம் நிலைத்து நின்று வுப் பசிக்கு ருந்தாகட்டும் வாழ்த்துகிறுேம்
A. V7
ன் றில் ரந்தன்
ஜீவரட்ன ம்

Page 5
ஊற்று 10 (1981)
பிரத்தியேக குண வேறுபாடு
குழந்தைகள் பிறந்து ஒருசில மாதங் களிலேயே அவர்களுக்கிடையிலுள்ள மனுே பாவத்திலுள்ள வேறுபாடுகளை நாம் இல குவில் உணரக்கூடியதாகவுள்ளது. உதாரண LDT55 அமைதியான குழந்தைகளையும், துடிப்புமிக்க குழந்தைகளையும் வேறுபடுத்தி
யறிதல் சாத்தியமாகும். இத்தகைய வேறு
பாடுகளை வயது கூடியபின்பு திட்டமாகக் கூறலாம். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த பிள்ளைகளாயினும் அவர்களிடத்தில் குண நல வித்தியாசங்களை ஆரம்பத்திலிருந்தே காணக்கூடியதாக இருக்கின்றது. எவ்வளவு தான் அனுபவங்களினுல் ஒரு தனி மனித னின் குணவியல்புகள் பாதிக்கப்படினும், அதற்கு ஒரு அடிப்படை (base) அவன் பிறந்தது முதலில் இருந்துகொண்டுவருகி Digil.
தற்காலக் கொள்கைகளின்படி, மனித னுெருவனுக்கிருக்கும் ம ன நிலை யானது, குறிப்பிட சில சுரப்பிகளில் பெருமள விற்குத் தங்கியுள்ளது என்பதற்கு ஆதா
ரங்கள் உண்டு. தைரொயிட் சுரப்பி, கேட
யச்சுரப்பி, இலிங்கச் சுரப்பிகள் போன் றவை சுரக்கும் ஒமோன்கள் (hormones) குருதியுடன் கலக்கின்றன. இவை உடம் பின் வளர்ச் சி, வெளிப்புறத்தோற்றம் மனநிலை போன்றவற்றைக் கட்டுப்படுத்து கின்றன. அத்துடன் பருமனுய் உள்ளவர் கள் கூடியளவு அமைதியாகவும், பிரச்சனை களைச் சுலபமான தீர்வுகளுடன் அணுகுப வர்களாயும் அதேநேரத்தில் மெலிதாக இருப்பவர்கள் சுறுசுறுப்பும், சிக்கல்களை வளர்க்கும் இயல்புள்ளவர்களாய் இருப்பார்
கள் என காலாகாலமாய், இருந்துவரும்
12 பேரின்பநாயகம் வீதி, யாழ்ப்பாணம்
တ္ဝါ

செல்வி, காயத்திரி நடராஜா :
பிப்பிராயங்களுக்குப் போதிய ஆதாரங் இருப்பதாக அறியப்படுகிறது. ஆணுல் றுவர்களின் உளவியல்புகளை வெளித் நாற்றத்தைக்கொண்டு ஆராயமுற்படுவ ல் ஏற்படும் வழுக்கள் கூடிய ஆழமுள்
(ესტ}(მე), 1 -
5Gavgör (Galen) GT Görlustri L 30 A.D மனித உளவியல்பிலுள்ள வறுபாடுகளை வகுப்பாக்கம் செய்திருக்கி ர். இதற்கு ஆதாரமாய் சரிரசாஸ்திரத் தயே பயன்படுத்தியிருக்கிருர் குருதிச் ற்ருேட்டத்தால், பித்தச்சுரப்பிகளால், ற்படும் மாற்றங்களை வைத்துக்கொண்டு னநிலைகளை விளக்க முற்பட்டிருக்கிருர், தாரணமாக இரு எல்லைகளினுல் உள யல்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.
(a) ஸ்திரமான மனுேநிலையும் ஸ்திர
மற்ற மனுேநிலையும். (b) துடிப்புள்ள மீனுேபா மும் அமைதி
யான மனுேபாவமும், (c) உணர்ச்சிகளை வெளிக்காட்டும் (extowert) மனுேபாவமும் உணர்ச்சி žT epiglosopiegli (Introvert) மனுேபாவமும் |ப்படியாக. எல்லா மனிதர்களும் ச்சயமாக ஏதாவது ஒரு பிரிவைச் சேர்ந் வர்கள் எனக் கூறமுடியாது. ஆணு ல் ந்த இரு எல்லைகளையும்  ைவத் துக் காண்டு ஒருவரிலிருக்கும் இவ்வியல்புகளின் தங்களை எடைபோடலாம்.
(c) gav upgavrraugi GJ GOD 5 (extrovert) தைச்சேர்ந்தவர்கள் சுறுசுறுப்பான எல்

Page 6
ஊற்று : 1982( 3-1,و)
லோரிடமும், பழகும் தன்நம்பிக்கை நிறை தவர்கள். இவர்கள் தங்களிடம் ஏற்படும் தாக்கங்களை இலகுவில் வெளிக் காட்டுபவர் கள், கோபமேற்படும்போது சண்டை, ச சரவுகளிலீடுபடும் ரக up ம் இதுவாகும் ஆணுல் இதற்கு நேரெதிராக உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல், எப்படி பட்ட சூழ்நிலையானுலும் நிதானமுள்ளவர் ளாக மற்றவர்களிடமிருந்து கவனம் புகழ்ச்சி என்பவற்றை எதிர்பாராமல் இயர் கும் வர்க்கம் அடுத்தவகையைச் சார்ந்தது (Introvert) இவர்கள் தங்களுடைய முயற் கள், வெற்றிகள் மற்றவரால் உணரப்படும் வரைக்கும் அதனை விளம்பரப்படுத்தமாட் டார்கள். ஒரு வாழ்க்கைக்கு இரு பிரிவில் ருந்தும் சமமானபங்கே வேண்டப்படுவது னுல் இவ் விருவகையிலும் உயர்வு, தாழ்வு இருப்பதாகக் கூறமுடியாது.
இதைவிட, இன்னுெரு விதத்தாலும் நா. வேறுபாடுகளைக் காணலாம். விடாமுயற்சி யின் அடிப்படையில் மனிதர்களின் மஞே நிலைகளே இருவகைகளாக, எல்லைகளா வேறுபடுத்தலாம். விடாமுயற்சியானது நரம்புத்தொகுதியுடன் சம்பந்தமான ஒரு தொகுப்பு எனக்கொள்ளப்படுகிறது. இதன் காரணத்தால்தான் சில மனிதர்கள், எல்லா வித பயனையும் நுகர்ந்தபின்பும் ஒரு நிகழ் சியில் தொடர்ந்து தவிர்க்க முடியாமல் ஈ படுகின்றனர். விடாமுயற்சியின் அளை Score of Perseverance) filii Lorr Goof'Lugdögg பின்வரும் பயிற்சியினை மேற்கொள் வேண்டும்.
(a) SSSS. என மிக வேகத்துடன் 3 செக்கன்களுக்கு எழுதி, பின் நிறுத்த வேண்டும் ( ஒரு நி டத்திற்கு)
 
 
 
 

(b) அடுத்து ZZZZ. என மிக வேக மாக 30 செக்கன்களுக்கு எழுத வேண்டும். நிறுத்துக.
() () ஐயும் (b) ஐயும் திரும்பவும் 2 நிமிடத்திற்கு எழுத வேண்டும்.
(d) Szsz. என தொடர்ந்து விடாமல் 2 நிமிடங்களிற்கு எழுதவேண்டும் (d) ஐ செய்யும்போது முதலில் s களையும் பின்பு Z களையும் நிரப்பக் கூடாது. வலமிருந்து இடமாகச் செல்லக்கூடாது.)
விடாமுயற்சிச் சுட்டியானது பரிசோதனை (c)இல் எழுதப்பட்ட மொத்த எழுத்து களின் எண்ணிக்கையிலிருந்து பரிசோதனை (d)இல் எழுதப்பட்ட மொத்த எழுத்துக் களின் எண்ணிக்கையைக் கழித்துவருவது ஆகும். இவ் வெண்ணிக்கை கூடுதலாக உள்ளவர்கள் மற்றவர்களிலும் பார்க்கக் கூடிய விடாமுயற்சி யுள்ளவர்கள்.
இதைவிட கேள்விக்கொத்து முறைமூலமும் விடாமுயற்சி வீதத்தை ஒப்பிடலாம். கூடிய சுட்டி, பெரும்பாலாகச் சாதகமான விடை கொடுப்பவர்களுக்கே அளிக்கப்படு கிறது.
ஒரு ராகத்தையோ, பாடலையோ கேட்டவுடன் அது திரும்பவும், திரும்பவும் உங்கள் மனதில் ஒலிக்
2. நீங்கள் புகையிரதத்தில் அல்லது
கப்பலில் பிரயாணம்செய்தபின்பு பிர யாணம் முடிந்த பின்னும் அதேவித உணர்ச்சிகளை அனுபவிக்கிறீர்களா?
3. ஒருநாளில் ஆரம்பத்தில் ஏதாவது மனதிலேற்படும் சிறு குழப்பம் முழு நாளிற்கும் உங்களைப் பாதிக்கின்றதா?

Page 7
ஊற்று: 9 -3 (1981)
4. சிலவேளைகளில் ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கும்போது திடீ ரென்று ஏன் இதை ஆரம்பித்தேன் என்பதை மறந்துவிடுகிறீர்களா? ஏதாவது ஒரு காரியத்தில் தீர்க்க மாக ஈடுபட்டிருக்கும்போது சூழலில் ஏற்படும் மாறுதல்களை மறந்து விடு
○7けgarrfr? இத்தகைய கேள்விக்கொத்து ஆரம்பத் தில் Lankes என்பவரால் தொகுக்கப்பட் L-5,
5
ܵ 半
ஊற்று சஞ்சிகை
என்றும் நீ ک
ஆர்த
கண்டி வீதி, 336f6)

மனுேதத்துவவியலாளர்கள் கூடுதலாகப் புத்திக்கூர்மை வேறுபாடுகளையே பயன் படுத்தி வருகின்றனர். ஏனெனில் புத்திக் கூர்மையை நுட்பமாக அளப்பதற்குரிய வசதிகளும், கருவிகளும் ஏராளமாகவுண்டு. இதனுல் மனநிலைகளிலேற்படும் மாற்றங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வளர்ந்துவரும் மனுேபாவமே ஒவ்வொருவரினதும் தனிப் பட்ட சுபாவத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சம் என்பதை மறுக்கமுடியாது.
半
ஆலத்து நின்று அறிவொளி பரப்பட்டும்
றுதுணைக் கரங்கள்
16696)Ս চাওঁ97.
கிளை 'தேவீஸ்'
கண்டி வீதி, கிளிநொச்சி.

Page 8
ஊற்று 9 3-7 1981
உயிரின வாழ்க்கைச் சூழ
உயிரினங்களுக்கும் அ வை வாழு சூழலுக்குமிடையிலுள்ள பரஸ்பர உற6 ளேயும், தொடர்புகளையும் பற்றிக் கூறு விஞ்ஞானத் துறையே Ecology உயிரி வாழ்க்கைச் சூழ லி யலாகும். Ecolo என்ற ஆங்கில வார்த்தை 'எஸிகொஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெற பட்டது. இதன் பொருள் வசிப்பிட அல்லது குடும்ப அமைப்பு என்பதாகும் Ecology என்ற ஆங்கிலப் பதத்திற்கு துறைபோந்த மொழியியலறிஞர் குழு னுல் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலை கழக "ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ் யம் - 1965 'உயிரின வாழ்க்கைக் கு லியல்' என்ற தமிழ் வடிவத்தைத் த துள்ளது.
புகழ்பெற்ற உயிரியல் நிபுணரா ஏனஸ்ற் ஹெய்க்கல் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்குமிடையிலுள்ள உற முறைகளையும், தொடர்புகளையும் பற்றி கூறும் விஞ்ஞானத் துறையினை 1869ஆண்டில் ஆரம்பித்து வைத்தார். ஆணு அவர்காலத்தில் இத்துறை தனித்துவமா தோர் துறையாக இருக்கவில்லை. அத் டன் அதிக முக்கியத்துவத்தையும் பெ றிருக்கவில்லை.
இவரைத் தொடர்ந்து இருபதா நூற்றுண்டின் முற்பகுதியில் தாவரவியல் விலங்கியல், பூகர்ப்ப இரசாயனவியல் மண்ணியல், புவியியல் ஆகிய விஞ்ஞான துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உயிரின
இ ருசியா தூதராயயம், கொழும்பு,
 

லியல் - ஓர் அறிமுகம்
ராஜ ரீகாந்தன் *
களுக்கும். அவைவாழும் சூழலுக்குமிடை யிலுள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ந் தார்கள்.
இருபதாம் நூற்றண்டில் சூ ழ ல் மீதான மனிதச் செயற்பாடுகளின் செ ல் வாக்குப் பெருமளவில் அதிகரித்த போது உயிரின வாழ்க்கைச் சூழலியலின் முக்கியத் துவமும் அதிகரித்தது.
இயற்கை ஏற்படுத்தும் மாற்றங்களி னுலும், பொருளாதாரச் செயற்பாடுகளின் விளைவுகளினுலும் குறிப்பாகக் கைத்தொழி லுற்பத்தியின் அசுர வளர்ச்சி வேகத்தின லும் வளிமண்டலம், சமுத்திரங்கள், நிலப்
பரப்பிலுள்ள நீர்நிலைகள் என்பவை அசுத்
தமடைதல், புவியின் இயற்கையான தாவ ரப் போர்வை அழிதல், பலவகையான விலங்குகள், பறவையினங்கள் அழிந்து போதல், கடல்அரிப்பு, இரசாயன உரமூட் டலினுல் நிலத்தின் தன்மைகள் மாற்ற மடைதல், செயற்கைக் காரணிகளினுல் நிலத்தினடியிலுள்ள நன்னீரோட்டங்கள் வற்றுதல் அல்லது உவர்ப்படைதல் ஆகிய செயற்பாடுகள் யாவும் சூழல்பற்றிய பிரச் சனைகளின்பால் சாதாரண மக்களினதும், புகழ்பெற்ற விஞ்ஞானிகளினதும் கவன த்தை ஈர்ப்பதுடன் உயிரின வாழ்க்கைச் சூழலியலின் துரித வளர்ச்சிக்கும் பிரதான பங்களிப்பை நல்குகின்றன.
இப்பிரச்சனைகளுக்கும். இவற்றுடன் தொடர்புபட்ட ஏனைய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கு அடிப்படைச் சிக்கல் கள் பலவற்றை விடுவிக்க வேண்டியுள்ளது.

Page 9
ஊற்று: 9 3-7 1981
மனிதன் உட்பட உயிர் வாழ்வனவற்றிற் கும், அவற்றின் சூழ்நிலைக்குமிடையிலுள்ள தொடர்புகளைத் தெளிவாக ஆராய்ந்து கற்பதற்கு விலங்கியல், தாவரவியல், புவி யியல், மண்ணியல், பூகர்ப்ப பெளதீக வியல், பூகர்ப்ப இரசாயனவியல், பொறியி யல் ஆகிய விஞ்ஞானத் துறைகளுடன் பொருளியலில் இருந்தும் தகவல்களைப் பெறவேண்டியுள்ளது. உயிரினச் சூழலி பல்பற்றிய தெளிவான ஆய்விற்கு மேற் குறிப்பிட்ட விஞ்ஞானத் துறைகளின் நிபு ணர்களினது குழுச் செயற்பாடு மிக்க அவ சியமாகவும், பயன்தரத் தக்கதாகவும் உள் ளது. இக்குழுச் செயற்பாடு இலகுவான தொன்றல்ல. ஆயினும் விஞ்ஞான வளர்ச் சியடைந்த பலநாடுகள் இத்துறையில் காலடி யெடுத்து வைக்க ஆரம்பித்துள்ளன.
I
உயிரின வாழ்க்கைச் சூழலியலின் பாரிய பொது எண்ணக்கரு உயிரின வாழ்க் ნეგ) ტექt சூழலியல் வழிமுறையேயாகும். ( Ecosystem ) உயிரினங்கள் அவைவாழும் சூழலிற் தங்கியிருக்கும் த ன்  ைம யி னே யும் சூழல் அங்கு வாழும் உயிரினங்கள்மீது தங்கியிருக்கும் தன்மையினையும், உயிரினங் கள் சூழல்மீது கொண்டுள்ள செல்வாக் கின் பலத்தையும், சூழல் உயிரினங்கள் மீது கொண்டுள்ள செல்வாக்கின் பலத்தை யும் பற்றி விபரிப்பதே உயிரின வாழ்க் கைச் சூழலியல் வழிமுறையாகும்.
உயிரின வாழ்க்கைச் சூழலியல் வழி முறையை மேலும் தெளிவாக அறிந்து
கொள்வதற்கு உயிரினப் பூகர்ப்பவியற்
Jg5ůLITIů6'' ( Biogeocenosis ) "Jestřů L Jaquiflu u jib Lejl u unr uiugall'' ( Geobiocenosis ) ஆகியன பெரிதும் உதவுகின்றன.
உயிரினங்களின் ஒவ்வொரு குழுவும் ஏனைய உயிரினக் குழுக்களுடனும், சூழல் மூலகங்களுடனும் எண்ணிறந்த தொடர்பு

ளேக் கொண்டுள்ளது. உயிரின வாழ்க் கச் சூழலியல் முறையினைப் புரிந்துகொள் நம்போது மிகப் பரவலான அல்லது மட் ப்படுத்தப்பட்ட உள்ளுறவுகளை அல்லது வறுபாடுகளே இனங்காண முடிகிறது.இச் சயற்பாடு உயிரின வாழ்க்கைச் சூழலியல் ழிமுறையின் பருமனைத் தீர்மானிப்பது ன், அது உள்ளடக்கும் பிரிவுகளின் எண் ரிக்கையினையும் தீர்மானிக்கிறது. a» սի ன வாழ்க்கைச் சூழலியல் வழிமுறை சில பாது இயற்கை எல்லைகளை மிகத்தெளி ாக வரையறை செய்வதையும் நாம் மன ற் கொள்ள வேண்டியுள்ளது. நீரில் ல்லது சிறு தீவுகளில் வாழும் பூரண ஜீவி ளே, அவற்றின் ஓரியல்புத் தன்மைகளை வற்றிற்கு உதாரணமாகக் கொள்ளலாம். வ்வாறுனபோது உயிரினவாழ்க்கைச் சூழ யல் வழிமுறையின் எல்லைகளும், அதன் ட்பிரிவுகளும் எளிமையானவையாக உள்
6ዃT .
இத்துறையில் ஈடுபட்டுள்ள ஆய்வா ர்கள் உயிரினங்கள் வாழும் சகல துறைக யும், அதாவது வளிமண்டலத்துறை, யற்துறை, கற்பாரியற்துறை, மண்ணி ற்துறை ஆகியவற்றைப் பூரணமாக ஆரா ம் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிருர்கள்.
| 2 îflatărât சூழலியற்துறையில் வழி ண்டலத்திலும், சமுத்திரங்களிலும், நீர் லகளிலும், நிலத்திலும், கற்பாறைகளி ம், தமது செல்வாக்கைப் பிரயோகிக் ன்றன. இவையாவும் பின்னர் உயிரினங் மீது தமது செல்வாக்கைப் பிரயோ கின்றன. எனவே உயிரின வாழ்க்கைச் ழலியல் உயிரியற்துறைப் பரிணுமத்தின் டிவங்களையும் உள்ளடக்க வேண்டியதாக ஸ்ளது.

Page 10
அவற்று 9 மே 1981
வளிமண்டலத்தில் ஏற்படும் பெ மாற்றங்கள்பற்றிய தகவல்கள் உல ணுமுள்ள 10,000ற்கு மதிகமான வ அவதான நிலையங்களிலிருந்தும், வின் களிலிருந்தும் பெறப்படுகின்றன. மண்டல அமுக்கம், முகில்கள், காற். புயல்கள், மழைவீழ்ச்சி, பனிவீழ்ச்சி யாவும் உயிரின வாழ்க்கைச் சூழலி நேரடியான தாக்கத்தை ஏற்படுத் றன. சூரியக் கதிர்வீச்சும், பால் ெ லேற்படும் மாற்றங்களுங்கூட இவ்வு தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. பற்றிய தகவல்களைப் பெறுவதற்குச் திரவியல் ஆராய்ச்சி நிலையங்களும் படுத்தப்படுகின்றன. காலநிலை அவ: புக் கப்பல்கள் பயன்மிகு தகவல்க! வற்றைத் தருகின்றன.
இவற்றைவிட மானுடச் செய களும் உயிரினவாழ்க்கைச் சூ ழ லி நேரடியான தாக்கத்தை ஏற்படுத் றன. இச்செயற்பாடுகளை மூன்று பி பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
ஒன்று வாகனங்களின் எண்ணி அதிகரிப்பு. மிகப் பெரும்பாலான னங்கள் எரிபொருட்களையே உபே கின்றன. முற்ருத்தகனமடையாத யில் இவை வெளிப்படுத்தும் வா யாவும் உயிரினங்களுக்குக் கேடுவிளை சிபியனவாகவும், வளிமண்டலத்தை தப்படுத்துவனவாகவும் உள்ளன.
இரண்டு நிலங்கள் செயற்ை சாயன உரங்களாலும், இரசாயனச் கொல்லிகளாலும் மாசடைகின்றன. துடன் இவை நீருக்கடியிலான நீரே களையும் ஓரளவில் பாதிக்கின்றன.
மூன்று: தொழிற்சாலைக் கழ பெரும்பாலும் ஆறுகளிலேயே ெ
6

ளதிக தெங்க
所ga)産。 வளி றுகள், ஆகிய
துகின்
1.ΠΟ. σ07
சமுத் LULUGör தானிப் չի լI67)
ற்பாடு
ந்துகின் ரதTன
Q川Tö。
போதிக் நிலை யுக்கள் விக்கத்
அசுத்
க இர ; g:.2%yr
அத் PL i
மிவுகள் r.
*
படுகின்றன. இந்த ஆறுகள் கொணரும் கழிவுகளாலும், கப்பல்கள் வெளியேற்றும் கேடுவிளைவிக்கவல்ல பொருட்களினலும் பொதுவாகச் சமுத்திரங்களும், குறிப்பாக உள்நாட்டுக் கடல்களும் அசுத்தமடைகின் Ո96ծr:
நவீன யுத்தக் கருவிகள், ஆயுதங்கள் என்பவற்றின் பரிசோதனைகள், இவற்றின் உபயோகங்கள் என்பன உயிரின வாழ்க் கைச் சூழலியலிற்குப் பெருங்கேடு விளை விப்பனவாக உள்ளன.
பொருளாதாரச் செயற்பாடுகளினுல் பெறுமதியான எண்ணிறந்த பொருட்கள் அடிக்கடி வானுக்குத் தள்ளப்படுகின்றன. மிக்க பெறுமதியான அரிய உலோகங்கள் வழக்கமான எரிபொருட் தகனத்தின் போது இழக்கப்படுகின்றன. gr Gör Ga」 அசுத்தமடைவதிலிருந்து உயிரின வாழ்க் கைச் சூழலைப் பாதுகாப்பதென்பது இயற் கைவளங்களை விவேகமாகப் பாவிப்பதுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது.
இப்பிரச்சனைகளுக்கான தீர் வினை க் காண்பது மிகக் கடினமானதே. உதார ணமாக காற்றில் கலக்கும் சல்பர்டை ஒட் சைட் நீண்டதூரங்களுக்குச் செல்லக்கூடிய தோடு சூழலையும் மோசமாகப் பாதிக்கவல்ல தாகவும் இருக்கிறது. கைத்தொழில் நாடுகளிலும், இவற்றின் அய லி லு ள் ள நாடுகளிலும் இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. எல்லைகளிடப்படாத உயிரின வாழ்க்கைச் சூழல் அசுத்தமாக்கப்படுவதற் கெதிராகப் போராடுவதற்குச் சர்வதேச ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும்.
உயிரினவாழ்க்கைச் சூழலியல் மேம் பாட்டில் தாவரங்களின் பங்கு மகத்தா னது வளிமண்டல வாயுக்களின் சமநிலை யைப் பேணுவது, மழைவீழ்ச்சியை ஒழுங் காக ஏற்படுத்துவது, இயற்கையின் பாதிப்
புக் களிலிருந்து நிலத்தைப் பாதுகாப்பது

Page 11
expg: 9 3-7 夏931
எண்ணிறந்த வழி களி ல் விலங்கினங்க ளுக்கு ( மனிதனுட்பட) ஆதாரமாயிருப் பது உட்பட இன்னும்பல செயற்பாடுகளை தாவரங்கள் ஆற்றுகின்றன. ஆண்டு தோறும் 20 மில்லியன் ஹெக்டர் காடுகள் அழிக்கப்படுகின்றன. இது சுவீடனின் நிலப்பரப்பில் பாதிக்குச் சமனுகும். இந் நிலை தொடருமாயின் இன்னும் 150 ஆண் டுகளில் உலகிலுள்ள காடுகள் முற்ரு க அழிக்கப்பட்டுவிடும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உல
கிலுள்ள வாசகர்களுக்கும், எழுத்தாளர்க ளுக்கும், கைத்தொழிற் துறையினருக்கும் 40 மில்லியன் தொன் கடதாசி போது மானதாக இருந்தது. இன்ருே 500 மில்லி யன் தொன் கடதாசி உற்பத்திகூட இவர்
உசாத்துணை நூல்கள்
1. R. B. Cattell - Your mind and mine.
ULIMIT 35
சூழலி நன்கு யத்து
GOTLD ஆண் நாடுக
LL(60{{ئي
LIGODI ஞானி
காட்டி
காலத் ჭ; 6ზუჩჭ
2. A. G. Hughes & E. H. Hughes - Learning an
அன்பளிப்புப் பொருட்கள், கைக்கடிகாரம்,
3. John Mclsh, Wayne Matheson & James Park-E
ஊற்று சஞ்சிகை என்றும்
அறிவொளி பரப்பிட எம
% 列
Kandy Ro: KILA NOCHO
றே
!2Hك
மற்றும் எவர்சில்வர் பொருட்கள்
 
 

தேவையைப் பூர்த்தி செய்ய முடி ாக உள்ளது.
இவை யாவும் உயிரினவாழ்க்கைச் பலின் சமகால முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றன. இம்முக்கி வத்தை உணர்ந்த சர்வதேச ஸ்தா கிய ஐக்கிய நாடுகள் சபை 1977-ம் டில் 'யுனெப்பை (UNEP) ஐக்கிய ளின் சூழற்பாதுகாப்புச் செயற்திட்ட ப்பினை உருவாக்கியது. உலகிலுள்ள டுகள் குறிப்பாக இந்நாடுகளின் விஞ் கள் இத்துறையில் அதிக ஆர்வம் வருகிருர்கள். கடந்த ஒரு தஸாப்த தில் உயிரினவாழ்க்கைச் சூழலியல் மான வளர்ச்சியினை அடைந்துள்ளது.
Teaching (1947). Psychology of the learning group (1974)
நிலைத்து நின்று து நல்லாசிகள்
d HII.
GUIT, குசாதனப் பொருட்கள், விற்பனையாளாகள்.

Page 12
ஊற்று 98 8-12 1981
அபிவிருத்திச் சபைகள்
அபிவிருத்தியைத் துரிதப்படுத் நோக்கங்களுக்காக அபிவிருத்திச் சபை யும், அபிவிருத்திச் சபைகளின் நிறை( றுக் குழுக்களையும் அமைத்து, இச்சம் ளினதும், இச்சபைகள் தொடர்பாக வட்ட அமைச்சர்களினதும் தத்துவங் யும், கடமைகளையும், பணிகளையும் கு துரைப்பதற்கும், அவற்றுடன் சம்ப பட்ட சகல கருமங்களுக்கும் ஏற்பாடு வதற்குமான ஒரு சட்டமே அபிவிரு சபைகள் சட்டமாகும். இது '198 ஆண்டின் 35-ம் இலக்க அபிவிரு சபைகள் சட்டம்' என்ற சுருக்கப் ரால் குறிப்பிடப்படும். மாவட்ட படையிலான துரித பொருளாதார விருத்தியே அபிவிருத்திச் சபைகளின் தான குறிக்கோளாகும். இக்குறிக் ளினை அபிவிருத்திச் சபைகள் எவ் அடைந்து கொள்ள இருக்கின்றன பதை விளங்கிக் கொள்வதற்கு அபிவி திச் சபைகள் சட்டம் பற்றிய தெளிவு சியம் இத்தேவையினைப் பூர்த்தி செ வகையில் அபிவிருத்திச் சபைகள் சட் தின் முக்கிய அம்சங்களை இங்கு சுருக் கத் தருகின்ருேம்.
அபிவிருத்திச்சபைகளின் அயை
ஒவ்வொரு நிர்வாக மாவட்டத் மென ஒர் அபிவிருத்திச் சபை அை வேண்டும் என்றும், அவ்வாறு அமை பட்ட கைகென ஒரு பெயரைக் கு தொதுக்கி அச்சபை கொண்டிருக்க ே டியதான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப் களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்ப வேண்டும் என்றும் சட்டத்தின் @ டாம் சரத்து கூறுகின்றது.
ತೌ Söz ரேஷ்டி பாடசாவே, கண்

3Fi"LiD
三A。 リーあ *ュー。
தும்
வேற்
Ծ)t-Jéh
i *றித் Sgll OGEM) த்திச் 0-th த்திச் டெய அடிப்
լ ից Gigiri
ՀIITU)
նպւք L5
DUL
துக்கு மதல் த்தப் ஏறித் ଛାgor
நிதல் ரண்
க. நவரத்தினம் B.A (Hons)
இங்கு நிர்வாக மாவட்டம் என்ற பெய்ரில் தேர்தல் மாவட்டமே குறிப்பிடப் படுகின்றது. இதன்படி ஒரு நிர்வாக மாவட்டம் ஒரு தேர்தல் மாவட்டமாக இருந்தால் அதற்கென ஒரு அபிவிருத்திச் சபை நிறுவப்படலாம். ஒன்றுக்கு மேற்
பட்ட பல நிர்வாக மாவட்டங்கள் ஒரு
தேர்தல் மாவட்டத்துக்குள் இணைக்கப் படும்போது அவற்றிற்கென ஒரு அபிவிருத் திச்சபை நிறுவப்படலாம். ஒரு நிர்வாக மாவட்டம் பல தேர்தல் மாவட்டங்களைக் கொண்டிருக்குமாயின் அந்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொன்முகப் பல அபிவிருத்திச் சபைகள் நிறுவப்படலாம். இது 24 நிர்வாக மாவட்டத்துக்கும் 24 அபிவிருத்திச் சபைகளை அமைக்கும் திட் டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒர் ஏற்பாடு எனக் கூறலாம்.
ஒரு அபிவிருத்திச் சபையில் தேர்ந் தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர் இடம்பெற வேண்டும் என்பதை இச் சட்டம் வரையறுத்துக் கூறவில்லை. ஆயி னும் குறிப்பிட்ட ஒரு அபிவிருத்திச்சபை எந்த மாவட்டத்துக்கென அமைக்கப்படு கின்றதோ அந்த மாவட்டத்துக்கெனத் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற அங் கத்தவர்களின் எண்ணிக்கையை விட அது குறைவாக இருத்தல் வேண்டும் எனக் கூறப்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்துக்கெனத் தேர்ந்தெடுக்கப்ப டும் பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண் ணிைக்கை மூன்றுக்குக் குறைவானதாக இரு க்குமாயின் அத்தகைய பாராளுமன்ற அங் கத்தவர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் ஐந்துக்குக் குறையாமல் இருக் இக் கூடியவாறு உறுப்பினர்களின் எண்ணிக்

Page 13
ஆற்று 9 மே 1981
கையை ஜஞதிபதி குறிப்பி டுவார். இவ்
வாருன சந்தர்ப்பங்களில் அம்மாவட்டத் துக்கெனத் தேர்ந்தெடுக்கப்படும் பாராளு மன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கையை விட அபிவிருத்திச்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக் கையை ஜனுதிபதி குறிப்பிடலாம்.
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துக்கான அபிவிருத்திச்சபையில் அந்த மாவட்டத் தின் பாராளுமன்ற அங்கத்தவர்களும், அபிவிருத்திச் சபைகளுக்கென மக்களால் தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்களும் உறுப்பினர்களாக" இடம்பெறுவர். இவர் களுள் பாராளுமன்ற அங்கத்தவர்கள் "பதவி வழிவந்த உறுப்பினர்கள்' என் றும் அபிவிருத்திச் சபைகளுக்கென மக்க ளால் தெரிவு செய்யப்படுவோர் 'தேர்ந் தெடுக்கப்படும் உறுப்பினர்கள்' என்றும் அழைக்கப்படுவர். -
பதவி வழிவந்த உறுப்பினர்கள்என்ற வகையில் பாராளுமன்ற அங்கத்தவர்களா யுள்ள அமைச்சர்களும் அபிவிருத்திச் சபை யில் இடம் பெறுவர். ஆயினும் முதல் மைச்சரும், உள்ளூராட்சி அமைச்சரும் அபிவிருத்திச் சபையில் இடம்பெற மாட் டார்கள். இவர்களுக்குப் பதிலாகப் பாரா ளுமன்ற அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்குத் தகுதி உடைய எவரேனும் இருவரை ஜனுதிபதி நியமிப்பார் முதல மைச்சரும் உள்ளூராட்சி அமைச்சரும் ஒரு
வராக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவருக்
குப் பதிலாக ஒருவரே ஜனதிபதியால் அபி
விருத்திச் சபைக்கென நியமிக்கப்படுவார்.
அபிவிருத்திச் சபைகளுக்கெனத் தேர் ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக் காலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் திக
தியில் இருந்து 4 ஆண்டுகளாக இருக்கும்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஒருவருட காலத்
وسيسوع
C.
历
ତ!

5ால் நீடிப்பதற்கு உள்ளூராட்சி அமைச்ச நக்கு அதிகாரம் உண்டு. எனவே உள்ளு ாட்சி அமைச்சரின் திருப்தியையும் தன் திப்பையும் சம்பாதித்துக் கொள்ளக்கூடி வாறு உறுப்பினர்கள் செயற்பட இவ்விதி பழி வகுக்கின்றது.
சபையின் முன் அனுமதியின்றி, தொடர்ந்து மூன்றுமாதகாலப் பகுதிக் ான சபையின் பொதுக் கூட்டங்களுக்குச் முகமளிக்கத் தவறுகின்ற அபிவிருத்திச் பை உறுப்பினர் எவரும் அதன் காரண மாகப் பதவி இழந்தவராகக் கணிக்கப்படு வார். இவ்வாறு பதவி இழப்பவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பின் அவரது இடத்துக்கென ஒருமாத காலத் துக்குள் இன்னுெருவரது பெயரைக் குறிப் பிடும்படி அவரது அரசியற் * Ga:Gair Gaul
ாளரை அல்லது சுயேச்சைக் குழுவின் தலைவரைத் தேர்தல் ஆணையாளர் பணிப் பார். கட்சியின் செயலாளர் அல்லது ஈயேச்சைக் குழுவின் தலைவர் இப்பணிப் புக்கு இணங்கி ஒழுகத் தவறும் பட்சத்தில் பாராளுமன்ற அங்கத்தவராகப் பதவி வகிப்பதற்கான தகுதிகள் வாய்ந்த ஒரு வரை அந்த வெற்றிடத்திற்கென ஜனுதி பதி நியமனம் செய்வார். மேற்கூறப்பட்ட வாறு அல்லது பதவி விலகுவதால் அல்லது இறந்து போவதால் அபிவிருத்திச்சபை உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடமா குமேயானுல் புதிய உறுப்பினர் அவருக்கு முன் இருந்தவரது பதவிக்காலத்தின் முடி ருத எஞ்சியுள்ள காலப்பகுதிக்குப் பதவி வகித்தல் வேண்டும்.
அபிவிருத்திச்சபை ஒன்றின் தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிவகிக் காதொழியும்போது, நிறைவேற்றுக்குழு, அபிவிருத்திச்சபையின் தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பொறுப்பேற் கும். நிறைவேற்றுக்குழுவும் கலைக்கப்படுமி உத்து மாவட்ட அமைச்சரே இப் பொறுப்

Page 14
1981: 22 كغ . في رفع شريفيج
புக்களைக் கையேற்பாரே அன்றிச் சபையின் வேறெந்த உறுப்பினரும் அல்ல. இவ்வாறே
பாராளுமன்றம் கலைக்கப்படும்போதும் பதவிவழிவந்த உறுப்பினர்கள் அபிவிருத்திச் சபையொன்றில் பணிபுரியாதொழிதல்
வேண்டும். அடுத்த பொதுத்தேர்தல் முடி யும்வரை இவர்களது பணிகளை நிறைவேற் றுக்குழு செய்துமுடிக்கும். நிறைவேற்றுக் குழுவும் கலைக்கப்படுமாயின் மாவட்ட அமைச்சரேயன்றி சபையின் வேறெந்த உறுப்பினரும் இவற்றைச் செய்தலாகாது.
ஒர் அபிவிருத்திச் சபையானது ஒவ் வொரு ஆண்டிலும் ஆகக் குறைந்தது 12 பொதுக்கூட்டங்களையாவது நடாத்துதல் வேண்டும். எல்லாக் கூட்டங்களுக்கும் சபையின் தலைவரோ அல்லது அவர் இல் லாதவிடத்து சமுகமளித்திருக்கும் உறுப்பி னர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இன் னுெரு உறுப்பினரோ தலைமைதாங்குதல் வேண்டும்.
அபிவிருத்திச் Sousafisi கடமைகளும் பணிகளும்
இச்சட்டத்தின் மிகமுக்கிய பகுதிக ளுள் ஒன்றுகிய அபிவிருத்திச் சபைகளின் பணிகள்பற்றி பதினேழாவது சரத்துக் கூறு கிறது. அபிவிருத்திச் சபை ஒன்றின் பணி கள் பின்வருவனவற்றை உள்ளடக்குதல் வேண்டும்.
(அ) நிறைவேற்றுக்குழுவினுல் சபைக் குச் சமர்ப்பிக்கப்படும் ஆண்டு அபிவிருத்திச் செயல்முறைத்திட் டத்தை அங்கீகரித்தல் (ஆ) நிறைவேற்றுக்குழுவின் ಮೀL-T* அத்தகைய செயல்முறைத் திட் டத்தை செயற்படுத்தல்,
(இ) துணை விதிகளை ஆக்குதல்
0.

வருவாய்களை அபிவி ருத்தி நோக்கங்களுக்காக முத லீடு செய்தல்.
(உ) இச்சட்டத்துக்கான முதலாம்
அட்டவணையில் உள்ளடக்கப்ட டாத ஏதேனும் விடயம் தொடர் பாக அபிவிருத்தித் திட்டம் ஒன் றினேத் தயாரித்தலும் அத்தகைய திட்டத்தினை அமைச்சரின் சம்ம தத்துடன் தோதான அமைச்ச ருக்கு அவரது அங்கீகாரத்துக்கெ
சமர்ப்பித்தலுமாகும்.
இங்கு முதலாம் அட்டவணை எனக் குறிப்பிடப்பட்டது பின்வரும் 15 துறை களே உள்ளடக்கும். அவையாவன: கமநலச் சேவைகள், கமத்தொழில், விலங்கு வேளா ண்மை, கூட்டுறவு அபிவிருத்தி, கலாச்சார அலுவல்கள், கல்வி, வேலைவாய்ப்பு, கடற் ருெழில், உணவு, சுகாதாரச் சேவைகள், விடமைப்பு, நீர்ப்பாசன வேலைகள், காெை பயன்பாடும் காணி நிருணயமும், கிராம அபிவிருத்தி, சிறுகைத்தொழில்களும் நடுத் திர அளவுக் கைத்தொழில்களுமாகும். இதில் அமைச்சர் என்று உள்ளூராட்சிக் குப் பொறுப்பான அமைச்சரும், தோதான அமைச்சரென்று அபிவிருத்திச் சபையினுல் தயாரிக்கப்படும் திட்டம் ஒன்று எந்த அ  ைமச் சுட ன் சம்பந்தப்படுகின்றதோ அந்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச் சரும் குறிப்பிடப்படுகிறர்கள்.
சட்டத்தின் 17-ம் சரத்தில் கூறப்பட் டுள்ளதன்படி மேற்சொல்லப்பட்டுள்ள 15 துறைகள் தொடர்பான ஆண்டு அபிவி ருத்தித் திட்டத்தினைத் தயாரிக்கும் உரிமை ஓர் அபிவிருத்திச் சபைக்குக் கிடையாது. நிறைவேற்றுக் குழுவினுல் சமர்ப்பிக்கப்ப டும் அத்தகைய அபிவிருத்திச் செயல்முறைத் திட்டம் ஒன்றினை அங்கீகரித்தலும் செயற் படுத்தலுமே சபைக்கென வழங்கப்பட்டு ள்ள பணிகளாகும்.

Page 15
esnega 9: 8-12 1981
அவசியம் ஏற்படுமிடத்து ஒவ்வோர் அபிவிருத்திச் சபையும் துண்ைவிதிகளைக் காலத்துக்குக் காலம் ஆக்கலாம். ஆக்கப் பட்டிருக்கும் துணைவிதிகளை ஒழிக்கலாம் அல்லது திருத்தலாம். ஆனல் சபை ஒன்றி னுல் ஆக்கப்படும் துணைவிதிகள் பாராளு மன்றத்தினுல் உறுதிப்படுத்தப்பட்டு அவ் வாருண் உறுதிப்படுத்தல் அரசாங்க வர்த்த DIT Göflu 1976) GoGuaiflu,LLLLJLL பின்னரே துணைவிதிகள் செல்லுபடியாகும்.
எந்த நிர்வாக மாவட்டத்துக்கென ஒர் அபிவிருத்திச்சன்ப அமைக்கப்படுகின் றதோ அந்த நிர்வாக மாவட்டத்துள் அமைந்திருக்கும் மாநகர அல்லது நகர சபைகளுக்கெனக் குறித்தொதுக்கப்பட்ட சில கடமைகளையும் பணிகளையும் அபிவி ருத்திச் சபை செய்தலாகாது என இச் சட்டத்தின் 18-ம் சரத்து வலியுறுத்துகின் றது. ஆணுல் அந்த மாவட்டத்தில் அமைந் திருக்கக்கூடிய பட்டின சபைகள் கிராமச
ஊற்று நிறுவனத்தின் ஆதரவும் நச்
N
AGRICOLA
SALES, SERVICE AN OE AGRICULTURE
KANDY ROAD, K|LINOCH CHi,
 

பைகளின் தத்துவங்களையும், கடமைகளை யும், பணிகளையும் அபிவிருத்திச்சபை பிர யோகித்தலும், புரிதலும், நிறைவேற்றுத லும் வேண்டும்.
பட்டினசபைகள் கிராமசபைகளது தத்துவங்கள், பணிகள், கடமைகள் அனைத் தையும் தன்னகத்தே கொண்டுள்ள அபிவி ருத்திச் சபையானது மாநகர சபைகள், நகர சபைகளின் குறிப்பிட்ட சில பொறுப் புக்கள் மீது கைவைத்தலாகாது எனத் தடுக்கப்பட்டுள்ளது. என்வே உள்ளூராட் சித்துறையில் இடம்பெற்று வந்துள்ள கிராமசபைகள், பட்டினசபைகள் என்பவ ற்றிற்கும் நகரசபைகள், மாநகரசபைகள் என்பவற்றிற்கும் இடைப்பட்ட தத்துவங் களையும், கடமைகளையும், பணிகளையும் கொண்ட சபைகளாகவே இந்த அபிவிருத்திச் சபைகள் அமையும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
(தொடரும்
ன் ஆக்கப்பணிக்கு ல்லாசிகளும்
NGINIËRS D MANUFACTORS | IMPL ΜΕΝΤ

Page 16
(1983) arg)gs 9 i2-13وه
SBSLGN25) JAG GT - 2
வற்றுப் பெருக்குகளும் அதிர்வினுல் உண்டாகும்
கீ7ற்றினுல் கடலில் அலைகள் உண்டாகு விதத்தையும், அவ்வாறு உண்டாகு அலைகளின் இயல்புகளையும் முன்னைய இ ழில் ஆராய்ந்தோம். இக்கட்டுரையில் வ றுப்பெருக்குகள், அதிர்வினுல் உண்டாகு அலைகள் பற்றி ஆராய்வோம்.
வற்றுப்பெருக்கு
எல்லாக்கடற்கரைகளிலும் ஏற்படும் நீரில் ஒழுங்கான எழுச்சி விழுதல்கள் வற்று பெருக்கு என்று சொல்லப்படும், சமுத்தி ஆராய்ச்சியாளர் பொதுவாக ஆராயும் அை களில் மிகவும் நீளமானது வற்றுப் பெரு காகும். இதன் அலைநீளம் பூமியின் பரிதி யின் அரைப்பங்கிற்குச் சமன். இதன் ஆவர்த்தனம் அண்ணளவாக 12 மணித்தி யாலம் 35 நிமிடங்கள். (வழக்கமாக அடு தடுத்து வரும் இருஅலைகளின் உச்சி அ3 லது ஏதாவது அலைமேலுள்ள ஒத்த புள்ள கள் ஒரு நிலையான புள்ளியைக் கடக் எடுக்கும் நேர இடைவெளி ஆவர்த்தனம் எனப்படும். வற்று ப் பெ ரு க் கு க ளே பொறுத்தவரையில் கடற்கரையிலுள்ள நீர் அதிகூடிய உயரத்தை அடைய எடுக்குப் நேரஇடைவெளியை அதன் ஆவர்த்தனப் எனலாம்.) இவ்வலையின் உச்சி பெருக்கு எனவும், தாழிவற்று எனவும் அழைக்கம் படும். அலேயின் உயரம் வற்றுப்பெருக்கின் வீச்சம் எனப்படும். இது அளக்கப்படும் இடங்களிலுள்ள கடற்கரையினது உருவி
6 விரிவுரையாளர், பொறியியற் பீடம், வேரது
鬣多
 

அலைகளும்
S. Sisir is sir, B.Sc., Ph. D.
அமைப்பில் தங்கியிருப்பதால், இடத்திற் கிடம் இது பெருமளவில் மாறுபடும்.
பூமியின் நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு மேல் சூரிய - சந்திரனின் ஈர்ப்புக் கவர்ச்சி வற் றுப்பெருக்கிற்குக் காரணமாகின்றது, நியூற் றனின் விதியிலிருந்து இருபொருட்களுக் கிடையிலான கவர்ச்சிவிசை அவற்றிற் கிடையிலான தூரத்தின் நேர்மாறு வர்க் கத்துடன் மாறுபடுகின்றது என அறிவோம். பூமிக்கும் சூரியனுக்கும், பூமிக்கும் சந்திர அக்கும் இடையிலுள்ள தூரங்கள் முறையே 93,000,000, 289,000 மைல்கள் ஆகும். சூரியனின் மிகப்பெரிய திணிவானது அத அடைய தூரம் அதிகமாயிருந்தாலும், பூமியின்மீது சந்திரனிலும் பார்க்க கூடிய கவர்ச்சியை உண்டாக்குகின்றது. பூமிமீது சூரியனின் ஈர்ப்புக்கவர்ச்சி, சந்திரனது ஈர்ப்புக் கவர்ச்சியிலும் பார்க்க அண்ணள வாக 150 மடங்கு பெரியது. இருப்பினும் வற்றுப்பெருக்குக்கான முதன்மையான ஏது சந்திரனுகும். இது ஏன்? மொத்தக்கவர்ச் சியைவிட பூமியின் வேறு வேறு பகுதியி லுள்ள நீர்த்துணிக்கைகளின் மீது ஸ் ள கவர்ச்சிகளின் வித்தியாசமே மிக முக்கிய மென்பது இதற்கான விடையாகும். >912( ח"
வது, சந்திரன் பூமிக்கு அண்மையில் இருப்
பதால் (சராசரியாக 239,000 மைல்) பூமி யின் ஒருபக்கத்தின் மேலுள்ள கவர்ச்சி, மறுபக்கத்தின் மேலுள்ள கவர்ச்சியிலும் மிகவும் வேறுபட்டதாகும்.
4&# &ఖ్తాణిశ్యజెఫ్

Page 17
ஊற்று: 9 12-15 (1981)
சந்திர2ன நோக்கியிருக்கும் பூமியின்
பக்க த் தி லி ரு க் கு ம் நீர் பூமியின்
மையத்திலும் பார்க்க 4000 மைல் அண் மையிலுள்ளது. பூமியின் எதிர்ப்பக்கத்தி லிருக்கும் நீர் பூமியின் மையத்திலும் பார்க்க 4000 மைல் கூடியதுரத்தில் இருக்கின்றது. பூமியிலிருந்து சூரியன் 930 இலட்சம் மைல் தூரத்திலிருப்பதால் 4000 மைல் இந்தப் பக்கமோ, அந்தப்பக்கமோ மிகச் சிறிதளவு வித்தியாசத்தையே கவர்ச்சியில் ஏற்படுத் தும். ஆகவே சூரியனது ஈர்ப்புவிசை மிக வும் பெரிதாயினும் அது பூமியின் ஒருபக் கத்திலிருந்து, மறுபக்கத்திற்கு பெரியளவில் மாறுவதில்லை. இதனுல் வற்றுப்பெருக்கை உண்டாக்குவதில் சந்திரன் முக்கிய பங்ஜென வகிக்கின்றது. சூரிய வற்றுப்பெருக்கானது சிறிதாயினும், ச ந் திர வற்றுப்பெருக் கைக் கூட்டிக்குறைக்கும் முறை யி னு ல் முக்கியமாகின்றது.
GBకి "" S
۔۔۔ ستے سے ତି) அராசை" 嵩( 26اگ
ދާތީ މީ
இறுதி ல்ே வட்டம்
۔۔۔۔۔۔
| 21 میں படம் பூமி-சூரிய-சந்திரதொகுதி
ஒரு சந்திர மாதத்தில் பூமி-சூரியசந்திர தொகுதியில் சந்திரன் நிலைகொள் ளும் நான்கு கால்வட்ட நிலைகளே படம் 1 காட்டுகிறது. பெளர்ணமி, | ԶԼDIT6MIT605காலங்களில் சந்திர சூரியனின் வற்றுப் பெருக்கையுண்டாக்கும் தாக்கங்கள் ஒன்றை யொன்று உறுதிப்படுத்துகின்றன. இக்கா லங்களில் கடல்நீர் மட்டம் வழக்கத்திலும் பார்க்கக் கூடிய உயரத்திற்கு எழுந்து, குறைந்த உயரத்திற்கு விழுகின்றது. இது
கக் குறி
リ_○ வழி நிவா (fau
 
 

ாப்பெருக்கு என அழைக்கப்படும். இது ண்டு, மூன்று நாட்களுக்கு நீடிப்பதுடன் வாரத்திற்கொருமுறை நடைபெறும், ற்குமாருக, முதல் இறுதிக் கால்வட் களில் சூரிய சந்திரனது தாக்கங்கள் றிற்கொன்று எதிராக இருப்பதுடன், றுப்பெருக்குத் தளும்பல் குறைந்த அள லயே நடைபெறும் இது இடையுலா று எனப்படும்.
திர்வினுல் உண்டாகும் அலைகள்
நீாப்பரப்பொன்றிற்குச் சடுதியாக விசை ான்றைப் பிரயோகிப்பதனுலும் அலைகள் ாடாகின்றன. உதாரணமாக குளமொன்
எறியப்படும் கல்லொன்று வட்ட வடி
அலைகளே உண்டாக்குகின்றது. இதே ாவை மிகவும் பெரிய அளவில் சமுத் த்தில் பூகம்பம், எரிமலைக் குமுறல், சரிவு அல்லது அணுகுண்டு வெடித்தல் டாக்குகின்றது. இவ்வாருன நிகழ்ச்சி லிருந்து உண்டாகி, விலகும் அலைகள் ருந்தொகையான சக்தியைக் கொண் ப்பதுடன், மிக வேகமாக நகருகின்றன. ன் விளைவாக இவை குடிசனமுள்ள ற்கரைகளே எதிர் கொள்ளும் போ து நமளவு சேதத்தை உண்டுபண்ணுகின் இவ்வாறு அதிர்வினுல் ஏற்படும் அலே
சுனுமி (Sunami) என்னும் யப்பானிய ல்லினுல் அழைக்கப்படும்.
பூகம்ப கடலலைகள் புவியதிர்வினுல் டாகின்றன. புவியதிர்வுகள் பல்வேறு நியில் பூகம்ப கடலலைகளை உண்டாக் கூடியன. இவற்றில் இரண்டுவகை கீழே ப்பிடப்பட்டுள்ளது. முத லா வ தி ல், பினடியிலுள்ள பாறை, ஒரு சாய்தளம் பாக திடீரென உடைதலால், இழுவை ரணம் பெறும் ஒரு எளிய குறை t) பூகம்ப அலையுண்டாக ஏதுவாகின்
13

Page 18
இவற்று 9 12:15 (1981) -
படம் 2 பாறையிலுள்ள குறையிஞ (fault) சுனுமியொன்று உருவாத
இப்படியான குறையொன்று நீ போது, பெரிய பாறைத் திணிவுகள் ரெனக் கீழே விழுந்து அதன்மேல் மட்டம் வரை நீண்டுள்ள நீர்நிர
இல்லாமல் டோகின்றது (பட திரும்பவும் சராசரி கடல்மட்ட அடையும் பொருட்டு, நீர்ப்பரப்பு ே கீழும் ஊசலாடி அலைகள் தொடரை அ கின்றது. கடலினடியில் இருக்கும் 星川 நெருக்கலினுல் உடைந்தால், ஒரு பக் விருக்கும் LITT GOD. மற்றப்பக்கத்திலி தன் மேலெழும்பி நீர் நிரலை மேலுய
Lj Li) 3. கற்ருடலிலுள்ள புவியதிர்வி ஏற்படும் மண்சரிவினுல் சுனுமியொன் உருவாதல்
4
 
 

ஒல்
கழும் Sto
5 | 6) -
லுக்கு tih 2) த்தை மலும் அப்பு
கத்தி ருப்ப
T55
கின்றது. ஆனல் விளைவு முன்போலத்தான் சுனுமியொன்று உண்டாகுகின்றது. இரண் டாவதுவகை புவியதிர்வினுல் ஏற்படும் மண் சரிவினுல் ஏற்படும் பூகம்ப கடலலைகளாகும்.
இதைப் படம் 3 காட்டுகிறது.
இவ்வாறு உண்டாகும் அலைகள் மிகவும் நீளமானதும், உயரம் குறைந்ததுமாகும். அவற்றின் ஆவர்த்தனம் ஆயிரக்கணக்கான செக்கன்களாயும், நீளம் சுமார் 150 மைல் களாயும், அவற்றின் உயரம் ஆழ்கடலில் ஒன்று அல்லது இரண்டு அடியுமாயிருக்கும். அலேயின் முகப்பு கண்ணுக்குத் தென் படாததுடன், கடலில் பிரயாணஞ் செய்
யும் கப்பல்களுக்கும் இவை தெரிவதில்லை.
அலேநீளம் மிகவும் நீளமான தால்,
ஆழம்கூடிய கடலிலும் இவை ஆழமில் நிரலேகள் போலவே நகருகின்றன, பசுபிக்
சமுத்திரத்தின் சராசரி ஆழத்தை 15000
அடியென எடுத்துக்கொண்டால், இதில் இவ்வலைகள் நகரும் வேகம் அண்ணளவாக 472 மைல்/மணி ஆகும். அதிர்ஷ்டவசமாக பசுபிக்சமுத்திரம் மிகப் பெரிதாக இருப்ப
தால் எதிர்வரும் பூகம்ப அலைகள் பற்றி
கடலோரங்களில் வசிக்கும் மக்களுக்கு முன்
கூட்டியே எச்சரிக்கக் கூடியதாக உள்ளது.
ஆழ்கடலில் எவ்வித கெடுதலையும் உண்டு
பண்ணுத இவ்வலைகள் கடற் கரை யை
நெருங்க தம் குணவியல்புகளை முற்றுக மாற்றுகின்றன. கடலடியின் சமவுயரக்
கோட்டு வடிவத்தினதும், கடற்கரையின்
GEpso
உருவமைப்பினதும் ஆதிக்கம் ஆழ்கடலின் இச்சிறு அலைகளேப் பயங்கரப் பிசாசுகளாக உருமாற்றுகின்றது.
கடலினடியில் புவியதிர்வினுல் உண்டா கும் அலைகள் அவை எதிர்கொள்ளும்
கடற்கரைகளில் உண்டுபண்ணும் பயங்கர
சேதங்களால் சுனுமி எச்சரிப்புத் தொகுதி யொன்று அமெரிக்காவில் (U. S. Coast and
ேேodetic Survey) உருவாக்க ப் பட்டது.
இது பின்வருமாறு செயற்படுகிறது. பசு

Page 19
ஆஊற்று 9 12-15 (i93)
பிக் சமுத்திர விளிம்பைச்சுற்றி பிலிப் பைன்ஸ்சிலிருந்து அலாஸ்கா (Philippines to Alaska) வரையும், பேருவிலிருந்து ஜப்பான்
(Peru to Japan) வரையும் உள்ள பத்து புவி
யதிர்வுமானி நிலையங்களுக்கு தன்னியக்க எச்சரிப்புத் தொகுதிகள் பொருத்தப்பட் டுள்ளன. பெரிய புவியதிர்வினுல் உண்டா கும் அதிர்வுகள் இந்நிலையங்களே வந்தடை
யும்போது தன்னியக்க எச்சரிப்புக்கருவிகள்
தொழிற்பட்டு அங்கிருக்கும் அவதானிகளே எச்சரிக்கின்றது. கடல்மட்ட மாற்றங்கள்
பற்றிப் பதியப்படும் தரவுகள் ஹொனலுலு
இல் (Honolulu) இருக்கும் மத்திய நிலேய மொன்றிற்கு அனுப்பப்பட்டு அங்கு அதிர் வலைகளின் பருமன், அவை நகரும் வேகம், திசை என்பன ஆராயப்படுகின்றன. இவற் றிலிருந்து ஆபத்தை எதிர்நோக்கவிருக்கும் கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
வெடித்தலினுல் உண்டாகும்
பெரிய பயங்கர வெடித்தல்களினுலும் சுனுமி உண்டாகலாம். அதிர்ஷ்டவசமாக இப்படியாக அலைகள் உண்டாவது, கடலி னடியில் ஏற்படும் நில அதிர்வினுல் உண் டாகும் அலைகளிலும் பார்க்க மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே நிகழ்கின் /DGO! வெடித்தல்களினுல் உண்டாகும் அலைகளுக்கான சிறந்ததொரு உதாரணம் ஒல்லாந்து கிழக்கிந்திய சுன்டா நீரிணையில்
(Sinnda Straits in Dutch East Indies) a Girar
கிருகற்ருே (Krakato) என்னும் எரிமலை வெடித்தலினுல் ஏற்பட்ட அலைகளாகும். எரிமலைக்குமுறலினுல் தீவின் வடபகுதி முழு வதும் தகர்த்து எறியப்பட்டதுடன், சரா சரியாக கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்திலிருந்த 10 சதுரமைல் நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 900 அடி ஆழமுள்ள பள்ளமாக மாறியது. நான்கு கனமை லுக்கு அதிகமான பாறைகள் வீசி எறியப் பட்டன. பலமைல்களுக்கு கடல் எரிமலையி லிருந்து வெளியேறிய திரவப்படையால் மூடப்பட்டது. நீரிணையில் இரு புதிய தீவு கள் தோன்றியதுடன் அண்மையிலிருந்த வெளிச்ச வீடுகளெல்லாம் தகர்க்கப்பட்டன.
gidi 61 (Լբյ5
விளக்
யிற்று
நீரிணை
(Јаша.
களுக் լյouցից
மேற்பு šāL)
öör L Gg-GüG. லிருந்து ணுள்ளு அத்தி
ਸੁ (உற்ப
LIGO) LIDO லுள்ள ஒரு இ தெளி ଜୟ ଜଗitଘ, நகர்ந்த
L JILL -
g)_GT_ டாகும் இயற்ை இவைக படுகின் Glg:Gvaն, ഉ_nt )
հuլիպմ திறனை
GITT 3T

நிரலொன்று 17 மைல் உயரத்திற்கு து பரம்பியது. இதனுல் நூற்றுக் கான மைல் தூரத்தில் வசித்த மக் நடுப்பகலிலும் வெளிச்சத்திற்காக குகளை உபயோகிக்க வேண்டியதா இதனுலுண்டான அலேகள், இந் யைச் சூழ்ந்துள்ள யாவா, சுமாத்திரா Sumota) கடற்கரைப் பிரதேசங் தப் பெரும் சேதத்தை விளைவித்தது. ாமங்கள் அலைகளினுல் அ ள் விக் ாடு செல்லப்பட்டன. 36000 க்கு பட்ட மக்கள் உயிரிழந்ததுடன் பல களும் நீரில் தாழ்ந்தன. சிலகப்பல் லமைல்கள் நிலத்தைநோக்கிக் காவிச் ப்பட்டன. இவ்வலைகள் நீரிணையி து மேற்குநோக்கி இந்துசமுத்திரத்தி தம், நன்னம்பிக்கை முனையைச்சுற்றி லாந்திச் சமுத்திரத்தினூடாக வடக்கு கியும் பரவின. தென் னு பிரிக் கா த்தி தானத்திலிருந்து 4690 மைல்) (1470) தேசத்து துறைமுகங்களி வற்றுப்பெருக்கு மாணிகள் சுமார் டசின் அலைகள் வந்தடைந்தமையைக் வாகக் காட்டின. இவ்வலைகள் அண் ாக மணிக்கு 400 மைல் வேகத்தில் ததாகக் கணிக்கப்பட்டது.
பகளினுல் உண்டாகும கள்
iப்பரப்பில் கப்பல் செல்லுதல் உட் ஏதாவது குழப்பத்தினுல் அலைகள் ாகின்றன. ஆணுல் கப்பலினுஸ் உண் அலேகள் வேறுவகையானவை, கயான அலைகளைப் போலல்லாமல் ள் வேறு காரணங்களுக்காக ஆராயப் றன. கப்பலொன்றை ஒட்டுதலில் ாகும் சக்தியின் பெரும்பகுதி அலைகளை ாக்குவதில் விரயமாகின்றது. இவ் உண்டாவதைக் குறைக்கும் எந்த கப்பல் இயக்கத்தின் பொறிமுறைத் அதிகரிக்கச் செய்வதுடன் பொரு
முக்கியத்துவமுடையது.
蚤

Page 20
ஊற்று 9 16 19 1981
உலக உணவுப் பிரச்சனை
றவையைக் கண்டான் விமா படைத்தான் - பாயும் மீன்களில் படகி கண்டான் - எதிரொலி கேட்ட வானுெலி படைத்தான்." என்று ஒர் கள் காலத்துக் கவிஞன், இருபதாம் ருண்டு மனிதனின் மூளைவளத்தைப் யுள்ளான். இவ்வளவு மூளைவளம் இருந் இன்று இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவ ஒரு பாரிய பிரச்சினையைத் தீர்த்து6ை இன, மத, சாதி, பிரதேச வேறுபாடு ச டாது தங்கள் பங்களிப்பை வழங்கவே யுள்ளது. இப்பிரச்சினைதான் என்ன? அ தீர்வு வழிகள் எவை? என்பதை ஆர வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஒவ்வோர் ஆண்டு கழியும் போ மேலதிகமாக 76 மில்லியன் வாய்கள் 2 வுக்காக ஏங்கும் நிலையில் காலம் கட கொண்டிருக்கிறது. 21ம் நூற் ரு ண் 6 நாம் அண்மிக்கும்போது, தற்போன உலக சனத் தொகை இரட்டிப்படை விடும். இதற்கிடையில் நாம் உணவும் தியை பன்மடங்கு பெருக்கியாக வேண் இல்லாவிடில் எமது வருங்கால சந்ததிக நல்வாழ்வு ஒரு கேள்விக்குறியாகவே அ யப் போகின்றது.
கடந்த எழு பதா ம் தசாப்தத் ஆரம்பப் பகுதியில் ஒரு தொடர்ச்சிய நிரலில் அறுவடைகள் குறைந்ததால், 2 உணவு உற்பத்தி வீதம் வீழ்ச்சியடைந்: அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் வற்றின் பத்திரப்படுத்தி வைக் கப் ப கையிருப்புக்கள் பெரு மள வு குறைந்த எனவே இத்தானியங்களின் விலைகள் உ 5607 * உயிரிரசாயனத்துறை மருத்துவபீடம், பேரா
 

ாயும் அதன் தீர்வு வழிகளும்
சச்சி மரீகாந்தா B.Sc M. Se (Agri) M.Sc
HTL
li jiJ5
IT
து ம்
-
15Ա
*、 இம்.
னேப் பல்கலைக் கழகம்
எதிர்பாராமல் எழும் பட்டினிப் பிரச் சினேயின் கோரப்பிடிகளிலிருந்து தாக்கப் பட்ட நாடுகளை மீட்பதற்கு, மேலதிகமாக உண  ைவ க் கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகள் தம்மிடமுள்ள மிதிக் கையிருப்பை பட்டினி கிடக்கும் நாடுகளுக்கு வழங்கி உதவுகின்றன. ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் மூலமாக இப்பரிமாறல் நிகழ்கிறது. திடீரென ஏற் படும் துரதிருஷ்ட விளைவுகளிலிருந்து பசி , யுற்ற மக்களைப் பாதுகாக்க இம்மாதிரியான உணவுப் பரிமாற்றம் உதவக்கூடும். ஆணுல் இது நிரந்தரமான ஒரு நீண்டகாலத் தீர் வாக இருக்கமுடியாது.
வறிய நாடுகள் தங்களைத் தாங்களே உணவுப் பிரச்சினையிலிருந்து மீட்டுக் கொள் வதற்குரிய வழிவகைகள் ஆராயப்படுதல் இக்காலகட்டத்தில் அவசியமாகின்றது. இச் சந்தர்ப்பத்திலே, பசித்திருக்கும் ஒரு வனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மீன் துண் டைப் போடுவதிலும் பார்க்க, அவனுக்கு மீன்பிடிக்கும் வழியைக் கற்றுக்கொடுப்பது சிறந்ததாகும். எனும் சீன தேசப் பழ மொழியும் நினைவுகூரத் தக்கதே.
வறிய நாடுகளிலேயே சனத்தொகைப் பெருக்கமும் மிகுந்துள்ளது ஆகக்குறைந் தது ஒரு பிள்ளேயாவது தம்மைப் பேணக் கூடும் என்ற நப்பா  ைசயி ல் இவ்வறிய நாடுகளைச் சேர்ந்தோர் பெரிய குடும்பங்களை அமைப்பதிலேயே ஆவல் காட்டுகின்றனர். அத்துடன் இயற்கையும் இங்கே, இனச் சேர்க்கைக்கு துணைநிற்கிறது என்றே கருது லாம். வெப்பவலய வட்டத்துக்குள் விழும் இலத்தின் அமெரிக்கா ஆசியா, ஆபிரிக்கா

Page 21
ஊற்று 9 16-19 1981
போன்ற பகுதிகளிலேயே கூடியளவு சனத் ( தொகைச் செறிவு காணப்படுகிறது. இப் பகுதிகளில் தான் வறுமையும் கோரத் தாண்டவமாடுகிறது. உலக சனத்தொகை விலே பட்டின் ப்ெபோரின் எண்ணிக்கை (1) 400 மில்லியன் அளவில் இருக்கும் என 1977ல் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 200 ஆண்டுகளில் ஏற்பட்ட னி சனத்தொகை வளர்ச்சியை நோக்கும்போது 29 குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், 56 குடியேற்ற முறைகள் கிராமிய்வட்டத்தை பர விட்டு விலகி, நகர்ப்புற வட்டத் தை ன நோக்கி வளர்ந்துள்ளன. இன்று உலகத்தி லுள்ள 180க்கு மேற்பட்ட நகரங்கள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட சனத்தொகை யைக் கொண்டுள்ளன. 1920இல் இப்படிப் (அ பட்ட நகரங்களின் எண்ணிக்கை 20 ஆகவே இருந்தது; 1945இல் 30 ஆகி, 1955இல் 60 ஆகி, 1975 இல் இந்நகரங்களின் எண் ணிைக்கை 130 க்கும் மே லா கி விட்டது. நகர்ப் புறங்களில் எரியும் நியொன் - விளம் பர விளக்குகளில் மயங்கி, விட்டில் பூச்சிக ளாக வந்துவிழும். இக்கால சந்ததியினர், ) ہے தமது அத்தியாவசிய தேவையான உணவை வழங்குவது கிராமிய சூழலே எ ன் ப ைத ( மறந்துவிட்டனர். இதன் விளைவாக, உணவு உற்பத்தி செய்யப்படும் வானம் பார்த்த பூமிகள் பல கைவிடப்பட்ட நிலையில் இன்று காட்சியளிக்கின்றன.
இனி உணவு உற்பத்தியைப் பெருக் கும் வழிவகைகளை நோக்குவோம். இவை பிரதானமாக மூவகைப்படும் எனலாம்.
(1) மேல தி க மாக உள்ள நிலங்களே
விருத்தி செய்தல்,
(2) கூடிய வினைத்திறனுள்ள பொறி
களே, அதாவது இயந்திரங்களைப் பயன்படுத்தல்,
@g=
 
 
 
 
 
 
 

) CLa gelfrg。 தாவரங்களை g Gor னும் பழக்கத்தை மனிதரிடையே ஊக்குவித்தல். மேலதிகமாக உள்ள நிலங் களே விருத்தி செய்தல்: பூமியின் முழுப் பரப்பளவு ஏறக்குறைய 0 மில்லியன் சதுரமைல்களாகும். இத ல் 71% நீரால் ஆனது. மிஞ்சியிருக்கும் %நிலமாகும். அதாவது அண்ணளவாக மில்லியன் சதுரமைல்கள். இந்நிலப் ப்புக்கூட மிகவும் சமமற்ற பெறுமா த்தைக் கொண்டுள்ளது.
நிலப்பரப்பை நான்கு பெரும் Trigg'i Lofgj;g; GOTTLE.
பனி, வெண்படலங்களால் குழப்பட்ட பகுதி - இதன் தரைக்குக் கீழ்ப்படை கள் நிரந்தரமாக உறைந்த நிலையிலுள் ளன. எனவே மிகவும் குளிர்ந்த இந் நிலப்பகுதி 20% நிலப்பரப்பை அடக் குகிறது.
ஆ) பாலைவனப் பகுதி - இது இன்னுெரு 20% நிலப்பரப்பை உள்ளடக்கும்.
) உயர்ந்த மலை ச் சா ர ல் பகுதிஇது மேலுமொரு 20% நிலப்பரப்பை விழுங்குகிறது.
இவை மூன்றும், தற்கால அறிவு வளர்ச்சி நிலையில், உணவுற்பத்திக்குப் பயன்படாத நிலையிலேயே உள்ளன.
மிஞ்சியிருக்கும் நிலப் பரப்பு 40% LDFrg Gar உள்ளது. அதாவது, உண வுற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய நிலை யிலுள்ள நிலப்பரப்பு 22 மில்லியன் சதுரமைல்களே. இப்பரப்பிற்கூட தற் போது 12 சதவீதமே வேளாண்மைக் குப் பயன்படுத்தப் படுகிறது.
மேலும், இதுவரை காலமும் உணவுற் நீதிக்குப் பயன்படுத்தப்படாத நிலப்பரப்

Page 22
ஊற்று 9 18-19 (1981)
புக்களைக் கூட நாம் பயன்படுத்த வழிகள் வகுக் கப்படுவது அவசியம் முக்கி ALPILDĪT ER பாலைவனப் பகுதியிலே, நீரின்மை Ավth gavaծrւoհուպլի மணலும் தாவர வளர்ச்
சிக்குத் தடை நிற்கின்றன. நைல் நதிக்கரை யிலே கட்டப்பட்ட ജൂ ജെ ഖ அணைக்கட்டின் உதவியால் ஈஜிப்த் நாட்டின் வேளாண்மை செய்யக்கூடிய நிலப்பரப்பு, மேலும் மூன்றிலொரு பங்கால் அதிகரிக்கப் பட்டது. நைல்நதியின் நீர்ப்பாய்ச்சல் கட் டுப்படுத்தப்பட்டு பாலேவனப் பகுதியின் 5 மில்லியன் ஹெக்டேர் பரப்  ைப நீர்ப் பாய்ச்சுவதற்கு அனேக்கட்டில் தேக்கப்பட்ட நீர் தற்போது பயன்படுத்தப் படுகின்றது.
(2) கூடிய வினத்திறனுள்ள பொறிகளைப் பயன்படுத்தல்:
பொருளாதார வசதி களில் விதைத்தல், உழுதல், அறு வ ைட செய்தல் போன்றவற்றை பொறி க ளே ப் பயன்படுத்தியே செய்கின்ருர்கள். ஆணுல் հhoug:րաւն Լյու6), இதே அளவுக்கு உலகின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் இன் னும் நடைபெறவில்லை. இன்றும் உலகின் வறிய நாடுகளில் உழவர்கள் உழுவதற்கு எருதையோ குதிரையையோ தான் பயன் படுத்துகிருர்கள். இந் நிலை  ைய மாற்றி, கூடிய வினைத்திறனுள்ள பொறிகளை விவ சாயத்திற்குப் பயன்படுத்துவதால் உணவுற் பத்தியைப் பெருக்கலாம்.
(3) மேலதிகமாக தாவரங்களே உண்ணும் பழக்கத்தை ஊக்குவித்தல்:
உணவுச் சங்கிலியின் கீழ்நிலையிலிருந்து நாம் உண்ண முயன்ருல் (அதாவது by eating lower down the food chain) 2.6007 வுற்பத்தியை மேலதிகமாகக் கூட்டலாம்
18
 

வளமிக்க நாடுகள் குறைந்தளவு வி லங்கு இறைச்சியை உண்டால், கால்நடை விலங் குகளுக்கு உணவாகப் பயன்படும் தானியங் களைக் கொண்டு வறிய நாடுகளிலுள்ள மக் களின் பட்டினி  ையப் போக்க முடியும் எனவே தற்சமயத்தில், உணவுச் சங்கிலியின் ஆரம்பப் படிகளை மனிதன் நேரடியாக உள் ளெடுக்கும் வழிவகைகளே நடைமுறையில் கொண்டுவர எத்தனிப்பது அவசியம்,
ஓர் உணவுச் சங்கிலியை எடுப்போ மாயின், ஒர் இணைப்பிலிருந்து இன்னுெரு இணைப்புக்கு செலுத்தப்படும் சக்தி யின் பெருமளவு பங்கு விரயமாகின்றது. உதார ணத்துக்கு, ஒரு கால்நடை விலங்கு புற் றரையில் மேயும்போது எல்லாப் புற்களையும் அது உண்பதில்லை. ஏறக்குறைய 75 சத வீதம் புற்கள் உள்ளெடுக்கப் படாமல் இறந் தழிகின்றன. இவற்றில் சேமிக்கப்பட்ட உணவுச்சக்தி விண்போகின்றது.
இனிக் கால்நடை விலங்கை எடுப்போ மாயின் அது உள்ளெடுக்கும் உணவின் 5 சத வித சக்தி மட்டுமே எமக்கு இறைச்சியாகப் பயன்படுகிறது. மிகுதி 95% சக்தி யும் விலங்கின் அனுசேபத் தேவைகளுக்கு விரய மாக்கப்படுகிறது.
இனி, நாம் இவ் விலங்கிறைச்சியை உண்ணும்போதும் வி லங் கி ன் பு ர தம் நிறைந்த எல்லாப் பாகங்களையும் உண்ட தில்லை. உதாரணத்துக்கு விலங்கின் மயிர் கள் உகிர்கள், கொம்புகள், இணையங்கள் போன்றவை புரதத்தால் ஆக்கப்பட்டிருப் பினும் இவற்றையெல்லாம் நாம் விலக்கி விட்டு நான்கு அவயவங்களிலுள்ள தசை செறிந்த பாகங்களையே உண்கிருேம்.
எம்மில் பெரும்பாலானுேரை உணவுச் சங்கிலியின் கீழ்ப்படிகளிலிருந்து உண்ணுவ தற்கு (அதாவது நேரடியாக ச த் துள்ள தாவர வகைகளே உண்பதற்கு பழக்குவோ

Page 23
ஆற்று 9 18-19 1981
լքոսիair, தற்போது எமது உண்ணும் முறை கள் மூலம் விரயமாக்கப்படும் பெருமளவு ஊட்டச் சக்தியை மீளப்பெற முடியும்.
இத் தருணத்தில், நாம் கவனத்திற் கொள்ளவேண்டிய தென்னவெனில், புரதச் சத்தை மிகுதியாகக் கொண்ட தாவரங்கள் கூட, (உதாரணத்திற்கு சோயா அவரை, சிறகு அவரை போன்ற அவரையினத் தாவ ரங்கள்) எம்மத்தியில் உள்ளன. இவற்றை இறைச்சிப் பதிலிகளாக, அதாவது, meat Substitutes ஆக நாம் விருத்தி செய்யலாம். காலப் போக்கில் இவை, இறைச்சி உணவு வகைகளே முற்றிலாக மாற்றீடு செய்யக் கூடிய முழுத் தகுதியும் பெற்று விளங்கு கின்றன. -
சோயா அவரை, சிறகு அவரை போன் றவை தமக்கு வேண்டிய நைதரசன் | է 13 - இளயை ஈட்டமுறை மூலம் தாமே பெறக் கூடிய தகைமை பெற்றுள்ளதால், இவற்
举
O9. (3 es s
@
VEM
27/3 Power House Road
| JAFFNA. -

றைப் பயிரிடுவதற்காக நாம் செயற்கை நைதரசன் பசளேயை அதிகளவு உற்பத்தி யாக்கவும் தேவையில்லை. அத்துடன் உயர்ந் தளவு நைதரசன் பசளேயை இயற்கை வட் டத்துக்குள் செலுத்துவதால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும், ஏற்படக்கூடிய பா த க மான சூழலியல் அமுக்கங்களையும் தவிர்க்க
(ԼՔԼԳ646ծՀՄ:
உணவு உற்பத்தியைப் ப்ெருக்கும் வழி களில் ஆய்வுகள் செய்து வரும் விஞ்ஞானிக ளின் கைகளிலேயே உலக உணவுப் பிரச்சி னேயைத் தீர்த்து வைக்கக்கூடிய திறவுகோல் கள் வழங்கப்பட்டுள்ளன எனக் கூறலாம். இத் திறவுகோல்கள் தொழிற்பட மறுப்பின், இந்நூற்றண்டின் இறு தி யி ல் 'அம்மா பசிக்குதே - தாயே பசிக்குதே' என்ற அவ லக் குரல்களையே ஒபாது கேட்கவேண்டிய நிலை ஏற்படும்.
သူး
(0. pl inneals
AKE
19

Page 24
அவற்று 9 20-25 டி) மனித உடலும் தொழிற்பாடும் இனப்பெருக்கத் தொகு
பெண் சூலகத்திலிருந்து உற்பத்தி கும் முட்டைக்கரு ண்விதையிலிருந்து வாகும் விந்துடன் கருக்கட்டுதலின் 6 வாக முளையம் உருவாகின்றது. இம் மு யம் முட் டைக் கருவி லும், விந்தி, காணப்படும் நிறமூர்த்தத்தைப் (chro Some) பொறுத்து ஆணுகவோ அ ன் பெண் ணுக வே 示 விருத்தியடைகின்ற முட்டைக் கரு எப்பொழுதும் X நிற மூ தத்தையே கொண்டிருக்கும். ஆனுல் வி X அல்லது Y நிற மூர்த்தத்தைக் கொன் ருக்கலாம். அதாவது முட்டைக் கருவிலு X நிறமூர்த்தத்துடன் X நிறமூர்த்தமு. விந்து கருக்கட்டினுல் முளையத்தில் ெ ணிைற்குரிய இனப்பெருக்கத் தொகுதி வி தி யாகும். முட்டைக்கருவிலுள்ள X மூர்த்தத்துடன் Y நிறமூர்த்தமுள்ள வி கருக்கட்டினுல் முளையம் ஆண் இனப்டெ கத் தொகுதியை விருத்தியாக்கும். இத பின்வருமாறு விளக்கலாம்.
xx (Cuండి) xy cరీలో
விெ ஒ X x முடைக் கடு) x y (6ă
།
இ உதவி உடற் சுற்றியற்
雾0
 
 
 
 

(6)
செல்வி, மல்லிகா இந்திரன், B,D,S。●
குழந்தை பிறந்தபின் இனப்பெருக்கத்
蠶 தொகுதியில் ஏற்படும் மேலதிக விரு த் தி ஓமோன்களின் (Hormones) ஆதிக்கத்திற்குட் pžT LOմ, லும் இனி பெண் இனப் பெருக்கத்தொகு 00 தியின் அமைப்பைப் பார்ப்போம்.
分立
Digits 20 ܨ a ர்த் பெண் இனப்பெருக்கத் தொகுதி ßg பெண் இனப் பெருக்கத் தொகுதி ஒரு ண்டி சோடி சூலகங்களையும் (Ovaries), ஒருசோடி ஸ்ள சூலகக் கான்களையும் (Fallopian Tubes), ஒரு பி கருப்பையையும் (Uterus), யோனியுறையை பண் யும் (Vagina) கொண்டுள்ளது. இவை ருத் பெண்ணின் இடுப்புக் குழியினுள் (Pelvic நிற Cavity) காணப்படுகின்றன. இவற்றைவிட ந்து வெளிப்புறத்திலிருந்து அவதானிக்கக்கூடிய ருக் பெண் இலிங்க உறுப்பும் (External Genital னப் Organ), முலைச் சுரப்பிகளும் இத்தொகுதி
பினுள் அடங்கும்.
锣)
பறை மருத்துவப் பீடம் பேராதனைப் பல்கலைக் கழகம்,

Page 25
ஊற்று 9 {3), 20-21,
பெண் இனப் பெருக்கத் தொ
சூலகத்தின்
கிராபியின் புடைப்புக்கள் 3 மைய இழையம் 5. புடைப்புக் கலங்கள் 7.
மஞ்சள் சடலம்
 
 
 
 

(1981)
திருத்தம்
1. பலோப்பியன் குழாய்
2. சூலகக் கான்
登 3. சூலகம் .
ཡོད། 4. யோனியுறை
5. கருப்பை
வெட்டுமுகத் தோற்றம்
2. மேற்பட்டை 4. முட்டைக் குழியம் 6. சூல்

Page 26


Page 27
இவற்று 9 20-25 (1981)
இனி சூலகத்தின் அமைப்பை ஆராய் வேரம்
சூலகம்
இது 25 - 5 ச.மீ நீளமும், 15 - 3 ச.மீ அகலமும், 0.6 - 15 ச.மீ தடிப்பமும் உடைய நீள்வட்ட அமைப்பைக் கொண் டுள்ளது. இதுவே பெண்ணில் முட்டைக் கலத்தை உருவாக்குகின்றது.
இதன் அமைப்பைப் பார்த்தால் இது பல நார்த்திரட்டுக்களைக் கொண்ட (Fibre Bundes) மேற்பட்டை (Cortex) யையும் சுற் றுப் புறத்தில் கனவுரு மே லணி யை யும் (Cuboidal Epithelium), @ LDL క్తి 3 G (Medula) குருதிக்குழாய்களையும் கொண்டுள் துெ. மேற்பட்டைப் பகுதியில் முட்டைக் கலங்கள் காணப்படும்.
பிறப்பின்போது ஒவ்வொரு சூலகமும் ஏறக்குறைய மூன்று சோடி முட்டைக் கலங் களேக் கொண்டுள்ளது. ஆனுல் இவை முற்
முக விருத்தியடையாமலும், தொழிற்பா டற்றும் காணப்படும். இவற்றின் மேலதிக விருத்தி பெண் பருவமடைந்த பின்னரே
நடைபெறும் பெண் பருவமடையும் காலம் வரையும் சூலகம் ஈஸ்ட்றஜன் (Oestrogen) எனப்படும் ஒமோனேச் சுரக்கின்றது.
பெண் பருவமடைகையில் கபச்சுரப்பி, FSH (Follicle stimulating Hormone), LH (Luteinizing Hormonie) GT Gör go lib g) (5 ஓமோன்களைச் சுரக்கின்றது. இவற்றின் விளைவால் முட்டைக்கலம் தொடர் ந் து விருத்தியடைகின்றன. அதாவது ஆரம்பத் தில் முட்டைக்கலம் (இது முன்னுேடி முட் டைக் கலம் எனவும் அழைக்கப்படும்) ஒரு கலப்பையால் சூழப்பட்டுள்ளது. இ ைவ புடையக் கலங்கள் (Follicular Cels) என அழைக்கப்படும் FSH, இக் கலங்களில், கலப்பிரிவைத் துரிதப்படுத்துவதுடன் முட் டைக் கலத்தின் பரிமாணத்தையும் கூட்டு கின்றது.
s
 
 
 

முட்டைக் கலம் தனது ஆரம்பப் பரி ாணத்திலிருந்து இரண்டு மடங்காக அதிக க்கையில் சூழவுள்ள கலங்களுக்கிடையில் ரவம் சேர்கின்றது. திரவச் சேர்க்கை திகரிக்கையில் புடையத்தின் பரிமாணமும் திகரிப்பதுடன், முட்டைக்கலம் புடையத் ன் ஒரு புறத்திற்கு தள்ளப்படுகின்றது. |ந்நிலையில் முட்டைக் கலத்தில் ஒரு மடிப் fia (Meiotic Division) (PöpGOLujib 52,1) லுள்ளதால் முட்டைக்கலம் ஒரு ம டி லேயை அடைகின்றது. இவ்வேறுபாடுகள் டைபெறும் அதே வேளையில் இக்கலங்கள் லகத்தின் மேற்பரப்பை நோக்கி அசை டைகின்றன. ஆணுல் ஒரே ஒரு கலமே மற்பரப்பை அடைவதில் வெற்றி பெறு ன்றது. மேற்பரப்பை அண்மிக்கும் முற் 嫣 விருத்தியடைந்த புடைப்பு, கிராபியின் டைப்பு (Gratian Foice) என அழைக்கப் டும். கிராபியின் புடைப்பு குலக மேலணி பைத் தொட்டதும், புடைப்பிலுள்ள முட்  ைடக் கல ம் வயிற்றுக்குழியினுள் விடப் படும். இது ஒவுயுலேஷன் (Ovulation) எனப் படும். இவ்வாறு வெளியேற்றப்பட்ட முட் டைக்கலம் உடனடியாக குலகக் கானினுல் ஏற்கப்படும் எஞ்சியிருக்கும் புடையக் கலங் ள்ே கோப்பஸ் லுட்டியம் (Corpus Luleum) என்னும் அமைப்பை உருவாக்குகின்றன. 25 JGGOp@eggio IgGagar (Progesterone) ானப்படும் ஒமோனேச் சுரக்கின்றது. மேற் பரப்பை அடையாத புடையங்கள் அழிவடை ன்ெறன. இந்நிலையில் இவை அட்றிடிக் Jan Empir (Atretic Follicles) Grof orao pj
LLG.
சூலகக் கானே அடையும் முட்டைக் நலம் (சூல்) கருக்கட்டப்படாவிடின் அது மாதவிடாய் மூலம் யோனியுறையினூடாக வெளியேற்றப்படும் மாதவிடாயின்போது ரற்படும் மாற்றங்கள் பின்னர் ஆராயப் படும். இனி சூலகக் கானின் அமைப்பை ஆராய்வோம்.
2

Page 28
ஊற்று 9 20-23 (981)
சூலகத்தின்
சூலகக் கான்
- இது 12 ச மீ நீளமுடைய ஒரு யாகும். இதன் ஒரு முனை விரிவை புனல் போன்ற அமைப்பைக் கொன் отј. 9 ih ap 2 or ni do 17 3) i (Fimb போன்ற வெளிநீட்டங்களுள்ளன. இ முட்டைக் க லத்  ைத த் தாங்கிப்பிய அதனை குலகக் காணினுள் தள்ளுவதற்கு வுகின்றன. இதன் மறுமுனே கருப்பை டன் இணேக்கப்பட்டுள்ளது. முட்டைக் விந்துவுடன் கருக்கட்டல் குலகக்கானிே நடைபெறுகின்றது. கருக்கட்டப்பட்ட டைக் கலம் பின்னர் கருப்பையை அ கின்றது.
சூலகக் கானின் இழையவியல் .ே 0560), gyL'r LHDTri:555 Táin (Histological Ap. rance) அது தனி கொலம்னர் மே Simple Columnar Epithelium) u alapa மென்சவ்வையும், இரு படைகளில் வரிெ ளாத் தசையையும் கொண்டுள்ளது, இ மேலணி நன்ருக மடிவடைந்து காண கின்றது. இது கருக்கட்டுதலுக்கு உ
யளிக்கின்றது. மேலணிக் கலங்களில் பிசிர்களைக் கொண்டுள்ளன. மற்றைய சுரக்கும் கலங்களாகும். இக்கலங்களின்
多2
 
 

வெட்டுமுகத் தே ாற்றம்
(5եԲIT டந்து எடுள் prae)
@}} ର1 டத்து
°一岛 யினு 56)ւb லயே முட்
13ծ) Լ
தாற்
pcaரிை
|յT6Ծր
இந்த (LG)
5. இஒ
ð),31
22 li
ரம் மாதவிடாப் வட்டத்தின் வெவ்வேறு நிலைகளில் வேறுபடுகின்றது. இது பின்னர் -Չեմruմլնւյնիլի: :
கருப்பை
கருக்கட்டப்பட்ட மு ட் டைக் கல ம் (நுகம்) கருப்பையினுள்ளேயே விருத் தி யடைகின்றது. இளம் பருவத்தில் கருப்பை பேரைக்கரப் வடிவுடையது. இதன் சுவர் வரிகொள்ளாத் தசையினுல் ஆக்கப்பட்டுள் ளது. இதனுள் அகவணி, என்டோமெட் Hub (Endometrium) af 3 Li Li டு ம். மாத விடாயின்போது இது வெளியேற்றப்படு கின்றது. இதன் ஒரு முனை சூலகக்கானே டு ம் மறு மு ன யோனியுறையினுேடும் தொடர்பாயுள்ளது. தாய்மைக் காலத்தில் இதன் கவர்த் தசை எண்ணிக்கையிலும் பரிமாணத்திலும் அதிகரிக்கின்றது. இவ்வதி கரிப்பு பல்வேறு ஓமோன்களின் தாக்கத்தி இல் ஏற்படுகின்றது. இத்தசைகளின் சுருக் 55 Lib (Up@riepavaỊCUB (Foetus) வெளியேற்றத் திற்கு உதவுகின்றது.
கருக்கட்டப்பட்ட முட்டை &(Եւն60Լ யின் மேற்பக்க பின்புறச் சுவரில் Luščajanj படுகின்றது. (Implanted at the upper posterior segment),

Page 29
ஆற்று 9 26-23 1881 யோனியுறை
இது குழாயுருவான அமைப்பையுடை யது. இதன் சுவரும் வரிகொள்ளாத் தசை யினுலும், மேலணியினுலும் ஆக்கப்பட்டுள் ளது. இதன் ஒரு முனை கருப்பையினுடன் தொடர்பாயுள்ளது. மறுமுனை வெளிப்புறத்
திற்குத் திறக்கின்றது. கன்னிப் பெண்களில்
இம்முனையில் ஒரு மென்சவ்வு காணப்படுகின் றது. இது ஹைமன் (Hymen) எனப்படும். புணர்ச்சியின் போதும், முதிர்முளையம் வெளி யேற்றலின் போதும் (Partunition) யோனி யுறை சுவர் விரிந்து கொடுக்கும் இயல்பைக் கொண்டுள்ளது. இதன் மேலணிக்கலங்கள் மா த வி டா ய் வட்டத்தின் வெவ்வேறு அவத்தை நிலைகளில் அகற்றப்படுகின்றது. (Desquamation of the Surface Epithelial Cells). யோனியுறையில் பல்லாயிரக் கணக் கில் பற்றிரியாக்களுள்ளன. இவை மேல ணிக் கலங்களிலுள்ள கிளே க் கோ ச னை த் தாக்கி லக்டிக் அமிலத்தை (Lactic Acid)
உருெ அமில (διμητό
லிருந்
GuIII
உறுப் Gայր":
(UD60) i. Majo: Mino மைடு சிறுநீ GLOGS
UL G 3)l- குறி
இது பதிங்
* ஊற்று மாணவ சமுதாயத்துக்கு
எமது ஆதரவும்
கிளிநொச்சி மாணவர்களின் உய
விஞ்ஞானக் கல் (The Science Educt
கரடிப்போக்குச்
கிளிநொச்சி G. C. B. (O/L) (A/L) (புதிய பு மற்றைய ஏனைய வகுப்பு பட்டதாரி, பயிற்றப்பட்ட ஆசிரியர்க

ாக்குகின்றன. இது யோனியுறைக்கு ச் சூழ்நிலையைக் கொடுக்கின்றது. இது ரியுறைக்கு மற்றைய நுண்ணங்கிகளி து பாதுகாப்பளிக்கின்றது.
னிமுகம்
இது வெளித்தோற்ற பெண் இலிங்க பைக் குறிக்கின்றது. இது இரு சோடி ரி மடல்களைக் கொண்டுள்ளது. இவை Gu G 60 Lost u. Lb DGgfrUT (Labium a), G Gv to uLu Lib GOLDGGB)ITIT (Labium ta) என அழைக்கப்படும். லேபியம் (DDT யோனியுறைத் துவாரத்தையும் வழியையும் உள்ளடக்கும். லேபியம் னுரா உதடுகளைப் போன்ற அமைப்பை யது. இதன் தலைப் பகுதியில் பெண் மூலம் (Citoris) காணப்படுகின்றது. பெண்களில் காணப்படும் ஆண்குறியின் க அமைப்பாகும்.
ஓர் வரப்பிரசாதம் ' ஆசிகளும்
ர்கல்விக்கு வழிகாட்டி வி நிலயம் tion Centre) சந்தி,
6ծ) եքն / பாடத்திட்டங்கள்) க்கள் யாவும் ால் போதிக்கப்படுகின்றன.

Page 30
இவற்று 9 2த்-27 1981
இலங்கையின் நிர்வாக . ܢ
உலகில் ஜனநாயக ஆட்சி நடைபெ நாடுகளிலுள்ள ஜனுதிபதிகளே இருடெ பிரிவுகளுள் அடக்கலாம். ஒருவர் நிர்வி அதிகாரங்களைப் பெருத பெயரளவு வாகியாக விளங்கும் ஜனுதிபதி. இத உதாரணமாக இலங்கையின் முதலா குடியரசின் (1972) ஜனுதிபதியையும், திய ஜனுதிபதியையும் கூறலாம். மற்ற நிர்வாக அதிகாரமுள்ள நாட்டின் பிரத நிர்வாகியாக விளங்கும் ஜனுதிபதி. இத உதாரணமாக இலங்கையின் இரண்டா குடியரசின் (1978) ஜனுதிபதியையும், அ ரிக்க ஜனுதிபதியையும் கூறலாம். 197 ஆண்டுவரை இலங்கையில் நிர்வாக காரமுள்ள ஒரு ஜனதிபதி இருக்கவில் பிரதமரைத் தலைவராகக்கொண்ட மந் சபையே நிர்வாக அதிகாரங்களைக் கெ டிருக்க ஜனுதிபதி வெறும் பெயரளவு வராக மட்டுமே இருந்தார். பிரித்தா மாதிரியிலமைந்த இந்த மந்திரிசபை g-րrր:յց: , முறையே இலங்கை உட்பட அ குடியேற்ற நாடுகள் பலவற்றில் அறிமு படுத்தப்பட்டது. ஆணுல் அந்தநாட் சிறப்பாக இயங்கிய அம்முறை அதிலிரு வேறுபட்ட சமூக பொருளாதார அை பைக் கொண்ட அதன் குடியேற்ற நாடு பலவற்றில் வெற்றிகரமாக இயங்கவில் இதனுல் அக்குடியேற்ற நாடுகள் பல திரம் பெற்ற குறுகிய காலத்தினுள் மந்திரிசபை அரசாங்க முறையிலிருந்து பட்டுத் தமது நாட்டின் சமூக, பொரு தார, அரசியற் சூழ்நிலைகளுக்கு ஏற்ற அரசாங்க முறையை ஏற்படுத்திக் கெ டன. இரண்டாம் உலக மகாயுத்தத்ை
உதவி விரிவுரையாளர் அரசறிவியல் துறை, ே
 
 
 
 
 

தன் 3, . Lg 3) ந்து
தவிர
அதிகாரமுள்ள ஐனுதிபதி
G。 செல்வராசா B.A. Hons, *
தொடர்ந்து சுதந்திரம் பெற்ற மூன்ரும்
உலகைச்சேர்ந்த ஆசிய, ஆபிரிக்க, இலத்
தீன் அமெரிக்க நாடுகள் பல ஏதோ ஒரு வகையான ஜனுதிபதி ஆட்சிமுறையை அல் லது ஊழல் மலிந்த இராணுவ, சிவில் சர் வாதிகார ஆட்சிமுறையை ஏற்படுத்திக் Οιπποδοτι αυτ, இந்தவகையில் சுதந்திர மடைந்து முப்பது ஆண்டுகளின் பின்னர் இலங்கை மந்திரிசபை அரசாங்க முறையி
லிருந்து விடுபட்டு நிர்வாக அதிகாரமுள்ள
ஜனுதிபதி ஒருவரை ஏற்படுத்தி ஒரு புதிய அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது.
ஜனுதிபதி அரசாங்க முறையானது மந்திரிசபை அரசாங்க முறையிலிருந்து முற் றிலும் வேறுபட்ட ஒரு அரசாங்க முறை யாகும். இங்கு தனிநபரான ஜனதிபதியே சகல நிர்வாக அதிகாரங்களுக்கும் பொறுப் பாக இருக்கின்றர். இத்தகைய ஜனதிபதி அரசாங்க முறை முதன் முதலாக அமெரிக் காவிலேயே தோற்றம் பெற்றதோடு அந் நாட்டிலேயே அது சிறந்து விளங்குகின்றது. அங்கு நிர்வாக விவகாரங்கள் தொடர்பாக ஜனுதிபதிக்கு உதவி புரிவதற்கென முக்கிய திணைக்களங்களின் தலைவர்களைக்கொண்ட ஒரு மந்திரிசபை இருக்கின்றது. ஆணுல் அது மந்திரிசபை அரசாங்கமுறை நிலவும்
நாடுகளில் உள்ளதுபோன்று கூட்டுப்பொறுப்
புடைய ஒரு சபையல்ல. அது ஒரு வெறும் ஆலோசனைச்சபை மட்டுமே. ஆனுல் இலங் கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனுதிபதி அரசாங்கமுறை அமெரிக்காவின் ஜனுதிபதி முறையை ஒத்ததல்ல. இலங்கையில் அறி
முகப் படுத்தப்பட்ட அரசாங்கமுறையானது
亦、盔鼩

Page 31
ஊற்று 9 24-27 1981
பிரித்தானியப் பாராளுமன்ற முறையையும் அமெரிக்க ஜனதிபதி முறையையும் ஒன் றிணேத்த வகையில் அமைந்த ஒரு முறை யாகும். இம்முறை 1958-ம் ஆண்டு பிரான் சின் ஜனதிபதியான ஜெனரல் டீ கோல் என்பவரால் அந்நாட்டில் அறிமுகப் படுத் தப்பட்ட முறையை ஒத்ததாகும். இதன லேயே இம்முறை கோலிஸ்ட் அரசாங்க முறை என்று கூறப்படுகிறது.
இலங்கைக்கு ஒரு நிலையான ஜனதிபதி நிர்வாக முறை அவசியம் என்பதை தற் போதைய ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்த் தினு வலியுறுத்திவந்தார். 1977-ம் ஆண் டுப் பொதுத்தேர்தலில் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்ற தை த் தொடர்ந்து அவரது எண்ணம் நிறைவேறி யது. எமது நாட்டின் துரித அபிவிருத் திக்கு நிலையான, செயல் திறன்மிக்க ஒரு நிர்வாகி தேவையென்பதை உணர்ந்து கொண்டதின் விளைவே இப்புதிய ஜனுதிபதி அரசாங்க முறையின் தோற்றம் எனலாம். வளர்ச்சியடைந்து வருகின்ற குறைவிருத்தி நாடொன்றில் சில முக்கிய இலட்சியங்களை அடைந்துகொள்ள அம்முறை உதவியாக அமையும் பொருளாதாரப் பிரச்சனைகளும் அரசியல் குழப்பங்களும் நிறைந்த ஒரு கால கட்டத்தில் ஒரு நாட்டிற்கு மந்திரிசபை முறையைவிட ஜனதிபதி முறையே சிறந் தது என்பதற்குப் பிரித்தானியப் பிரதமர் கள் பிரச்சனையான காலகட்டங்களில் ஜனதி பதி முறைப் போக்குக்களைக் கையாண்டுள்
ளமை எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
எனவே இலங்கையிலும் கடந்த காலத்தில் சிக்கலடைந்த பொருளாதாரப் பிரச்சனை களுக்கும், அரசியல் குழப்பங்களுக்கும், நிர்
வாகச் சீர்கேடுகளுக்கும் தீர்வுகாணவும்:
நாட்டின் துரித அபிவிருத்திக்கும் வளர்ச் சிக்கும் வழிகாட்டவும் பொருத்தமான ஒரு முறையாக ஜனதிபதித்துவ அரசாங்கமுறை
அமையுமென்று கூறி அறிமுகப்படுத்தப்பட்
டுள்ளது.
ஊட 4

புதிய அரசியலமைப்பின் 30 வது விதி =ம், 2-ம் உபபிரிவுகளில்;
(1) இலங்கைக் குடியரசிற்கு ஜனதிபதி ஒருவர் இருத்தல்வேண்டும்; அவரே அரசின் தலைவரும், நிர்வாகத்துறை யினதும் அரசாங்கத்தினதும் தலைவ ரும், ஆயுதம்தாங்கிய படைகளின் படைத்தலைவரும் ஆவார்.
(2) குடியரசின் ஜனதிபதி மக்களினல் தேர்ந்தெடுக்க்ப்படுதல் வேண்டும் என்பதுடன், அவர் ஆருண்டுகள் கொண்ட ஒருதவணைக்குப் பதவி வகித்தலும் வேண்டும்.
στ ούτ ό, கூறப்பட்டுள்ளது. இவ் ாறே 1972-ம் ஆண்டு அரசிய மைப்பிலும் ஜனதிபதி அரசின் தலைவராக ம், ஆட்சித்துறையின் தலைவராகவும், ஆயுதம் தாங்கிய படைகளின் படைத்தலைவ ாகவும் இருப்பார் என்று கூறப்பட்டபோ லும் அவர் பெயரளவு தலைவராக இருந்த மையால் இந்த அதிகாரங்களைப் பெற்றி நக்கவில்லை.தற்போதையஜனுதிபதி நிர்வாக அதிகாரமுடைய ஜனதிபதியாதலால் இந்த அதிகாரங்களைப் பெற்றிருக்கின்ருர், அடுத்து இங்கு ஜனதிபதி மக்களால் தெரிவுசெய் பப்படுகின்ருர் முன்பு ஜனதிபதி பிரதம ால் தெரிவுசெய்யப்பட்டு அவரது ஆலோ னைப்படியே செயலாற்றி வந்தார். ஆணுல் புதிய முறையின்கீழ் ஜனதிபதி மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவதோடு அவர்களிடமிருந்து அதிகாரங்களைப் பெற்று அவர்களுக்கே பொறுப்புள்ள வ ரா க வும் விளங்கக் கூடியவகையில் ஏற்பாடுகள் டுரப் பப்பட்டுள்ளன. ஆணுல் தற்போது இலங் கையின் முதலாவது நிர்வாக அதிகாரமுள்ள ஜனதிபதியாகப் பதவிவகித்துக்கொண்டிருக் கும் ஜே.ஆர்.ஜயவர்த்தணு நாட்டு மக்கள் அனைவராலும் தெரிவு செய்யப்பட்ட ஜனதி பதியல்ல. கொழும்பு மேற்கின் பாராளு மன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட
25

Page 32
ஊற்று 9 24-27 1981
அவர் கட்சியின் தலைவர் என்றமுறைய பிரதமராகிப் பின் புதிய அரசியலமைப்பி கீழ் தன்னை ஜனதிபதி ஆக்கிக்கொண்டா எனவே அடுத்துவரும் ஜனதிபதித் ே தலில் (அப்படி ஒருதேர்தல் நடந்தா மக்களால் தெரிவுசெய்யப்படும் ஒருவ நிர்வாக அதிகாரமுள்ள ஜனதிபதிய விளங்குவார்.
ஜனதிபதியின் பதவிக்காலம் -Չեմ)/* டங்கள் என வரையறுக்கப்பட்டுள்ள ஒருவர் இருதடவைகளுக்குமேல் ஜனதிப பதவியை வகிக்கமுடியாது. அமெ ரி 4 ஜனதிபதியின் பதவிக்காலம் நாலு 6 டங்களாகும். அங்கும் இருதடவைகளு மேல் ஒருவர் ஜனதிபதியாக இருக்க யாது.பிரான்சின்ஜனதிபதியின் பதவிக்கா ஏழு வருடங்களாகும். இலங்கையில் ஜன. தித் தேர்தல் நடைபெற்று அடுத்துவருகி பெப்ருவரி நாலாந்திகதி ஒரு ஜனதிபதிய பதவிக்காலம் ஆரம்பமாகும். அமெரிக் வில் போல் எந்தவொரு பிரசையும் இ கையில் ஜனதிபதிப் பதவிக்கு தனிப்ப முறையில் போட்டியிடமுடியாது. ஜ - பதியாகப் போட்டியிடுபவர் ஒரு அங்கீக கப்பட்ட அரசியற்கட்சியி னூடாகவே ே தலில் பங்குகொள்ள முடியும். அமெரிக் வில் ஒரு ஜனதிபதியின் பதவிக்காலத் இடையில் அப்பதவி காலியானல் ஜனதிபதி மிகுதிக்காலத்திற்கு ஜனுதி யாகப் பதவிவகிப்பார். ஆனல் இலங் யில் அவ்வாறு ஒரு உப ஜனதிபதி வாக்கப்படவில்லை. இங்கு அவ்வாறு ஏற் டால் பாராளுமன்றம் தெரிவுசெய்யும் வர் புதிய ஜனதிபதி தெரிவாகும்வ அப்பதவியை வகிப்பார்.
ஜனதிபதியின் அதிகாரங்களை நோக் அவை நிர்வாகத்துறையில் மட்டும சட்டத்துறை, நீதித்துறை என்பவற்றி மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள், ! தப்படைகள் போன்றவற்றிலும் பரவியி பதை அவதானிக்கலாம். நிர்வாகத்து
26
 

M(5
6)ւն και 95
AICU)
PL}- @LD திப ன்ற
ignr
ଗU[$1
'll திை
தர் 595 TTதின்
2 LU
að).5
உடு
ତୁ୦୬
@0')
தின் ன்றி லும் ಇಲ್ಲ! ([5 LJ றை
யை நோக்கின் ஜனதிபதி நிர்வாக அதி காரமுள்ள ஜனுதிபதியாக இருப்பதினுல் அவரது அதிகாரங்கள் முக்கியம் பெறு கின்றன. ஜனதிபதியே நிர்வாகத்துறையின் தலைவராவார். இவரே பிரதமமந் தி ரி. ஏனைய மந்திரிமார், உதவிமந்திரிகள் ஆகி யோரை நியமிப்பதோடு அவர்கள் எந் தெந்த அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக இருக்கவேண்டும் என்பதையும் தீர்மானிக் கின்றர். சில அமைச்சுக்களின் பொறுப் புக்களைத் தனது பொறுப்பில் வைத்திருக் கவும் அவருக்கு அதிகாரம் உண்டு. மந்திரி சபையில் அங்கத்துவம் வகிக்காத மந்திரி களையும் ஜனதிபதி நியமிக்க அதிகாரம் பெற்றுள்ளார். மேலும் மத்திரிமாரின் பிர தான நிர்வாக அதிகாரிகளான செயலா ளர்களையும், மற்றும் உயர் நிர்வாக அதி காரிகளையும் இவரே நியமிக்கின்றர். ஜனுதி பதி மந்திரிசபையின் ஒரு உறுப்பினராக இருப்பதோடு அவரே அதன் தலைவராகவும் விளங்குகின்ருர், ஆணுல் அரசாங் கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆத ரவை இழந்தாலும் ஜனதிபதி தமது பத வியை இராஜினுமாச்செய்யவேண்டியதில்லை. அவர் தனது பழைய மந்திரிசபையைக் கலைத்துவிட்டு அதற்குப்பதிலாக ஒரு புதிய மந்திரிசபையை அமைப்பார். அரசியலமைப் பின் 42(2) வது விதி இதனை உறுதிப்படுத்து கின்றது. அதில் மந்திரிசபையின் ஓர் உறுப் பினரும், அதன் தலைவருமான ஜனுதிபதி மந்திரிசபை கலைக்கப்பட்டபின்னரும் தொ டர்ந்து பதவி வகிப்பார் என்று கூறப்பட் டுள்ளது.
அடுத்து ஜனதிபதியின் சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களை நோக்கின் சட்டத் துறைக்குப் பொறுப்பான பாராளுமன்றத் தின் கூட்டங்களைக் கூட்டவும், இடை நிறுத்தவும், அதனைக் கலைக்கவும் ஜனுதி பதிக்கு அதிகாரமுண்டு. ஆனல் ஒரு பொதுத் தேர்தல் நடைபெற்ற ஒருவருடத்திற்குள் அவர் இரு மு றை பாராளுமன்றத்தைக்

Page 33
ܢ
ஊற்று 9 24-27 1981
கலைக்க முடியாது. பொதுத்தேர்தலின்பின் வர நடைபெறும் முதலாவது அமர்வின் தொடக் மா கத்தில் அரசகொள்கை உரை நிராகரிக்கப் றக் பட்டாலும் ஜனதிபதி பாராளுமன்றத்தை கலைத்தலாகாது. பொதுவாகப் பாராளுமன் றம் இயற்றும் சட்டங்கள் சபாநாயகரின் அங்கீகாரத்தைப் பெற்றதும் சட்டமாகி ($u விடும். ஆனல் மக்கள் தீர்ப்புக்குச் சமர்ப் பிக்கப்படும் சட்டங்களுக்கு ஜனதிபதியே அங்கீகாரமளித்துச் சட்டமாக்க வேண்டும் என்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனுதி பதி சட்டத்துறையாகிய பாராளுமன்றத் gژ தின் உறுப்பினரல்ல. எனவே அவர் அதற் ஆ குப் பொறுப்புச் சொல்லவேண்டிவருமல்ல, கூ
-
நீதித்துறை அதிகாரங்களை நோக்கின் உயர் நீதிமன்றம், அப்பீல் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களின் ஜ நீதிபதிகளை ஜனதிபதியே நியமிக்கின்ருர், மேலும் குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கவும், குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவும் ஜனதிபதிக்கு அதிகாரமுண்டு. இவைதவிர வெளிநாட்டுத் தூதுவர்களை வரவேற்று உபசரிக்கவும்: யுத்தப் பிரகட னம், சமாதானப் பிரகடனம் என்பவற் றைப் பிரகடனப்படுத்தவும்: ஜனதிபதிக்கு அதிகாரமுண்டு. மேலும் ஜனதிபதி ஆயு தப்படைகளின் பிரதான தளபதியாக இருப் பதனல் முப்படைகளுக்கும் தலைமை தாங் கவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் அதி காரமுடையவராவார். இவ்வாருக நாட் டின் சகலதுறைகளிலும் அதிகாரம் பெற்றந
ஊற்று என்றும் நி
மாணவர்களுக்கு
எமது ஆ
கமலினி றேடர்ஸ் கண்டி வீதி
கிளிநொச்சி

ாக விளங்கும் ஜனதிபதி சுயமாகத் தீர் னங்களை எடுத்து அவற்றை நிறைவேற்
கூடியவராக விளங்குகின்ருர்,
இலங்கையின் இரண்டாம் குடியரசு மைப்பைப் பற்றிக் குறிப்பி டு ம் போ து ராசிரியர் ஏ. ஜே. வில்சன் "புதிய அர லமைப்பின் அச்சாணியாக அமைவது திைபதிமுறை' என்றும் 'முழு அமைப் தனி மனிதனுன தெரிவுசெய்யப்பட்ட லவரான ஜனதிபதியின் பலத்திலும், ற்றலிலுமே தங்கியுள்ளது' என்றும் றியுள்ளார். கலாநிதி என். எம். பெரேரா னுதிபதியைப்பற்றிக் கூறும்போது 'குடி சு ஜனதிபதியின் நிலை அமெரிக்காவின் திைபதியின் நிலையை ஒத்ததாகவே இலங் கயிலும் காணப்படுகிறது' என்று கூறி ள்ளார். இவற்றிலிருந்து இலங்கையின் ற்போதைய நிர்வாக அதிகார மு ள் ள திைபதியின் முக்கியத்துவத்தையும், முதன் மயையும் நாம் உணர்ந்து கொள்ளலாம். லங்கையின் இன்றைய ஜனுதிபதி அர ாங்க முறை மரபுமுறை ஜனநாயக முறைக் ம், தற்கால அதிகாரத்துவ ஆட்சிமுறைக் ம் இடைப்பட்ட ஒரு முறையாக விளங்கு றது. எவ்வாருயினும் இந்தப் பிரான்சிய திைபதித்துவ முறை தென்னுசியாவில் ரு சர்வாதிகார ஆட்சிமுறையைத் தோற்று க்காதவரை இலங்கை உலகின் ஜனநாயக
ஒன் ருக விளங்கிவரும்,
லேத்து நின்று
அறிவூட்ட இகள்
Kamalini Traders Kandy Road KILI NOCH C H I

Page 34
ஊற்று: 9 28-29 (1981)
6FTT6 sh
142 வயது 'இளைஞன்'
உலகில் மிக வயது முதிர்ந்தவர்களில் ouTITGO gy, Lairg,6i (Wu yunqing) a மேற்கு சீனுவிலுள்ள ஒரு கிராமத்தில் வ கின்ருர் ஷான்சி மாகாணத்திலுள்ள கு குவாபியா எனும் கிராமத்திலே இவர் க டுபிடிக்கப்பட்டார். இவருக்கு வயது 1 9,565 spg). (New Physical Culture) 6Tg சஞ்சிகையின் சமீபத்திய இதழில் கிடை தகவலின்படி, இவர் இன்னும் சைக்கிள்ஓ கூடியவராகஉள்ளார். இரு வாளிகளில் த ணிர் மொண்டு உச்சிப்பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு கொண்டு செல்கின்ருர் சக் வர்த்தி டாவோகுவாங்கினுடைய ஆட் காலத்தின் 18-வதுஆண்டில், 12-வதுமா தின் 13-வது நாளிலே தான் பிறந்ததாக கூறுகின்ருர், அதாவது வரலாற்றுக் கு பின்படி 1838ம் ஆண்டில்.
ஒரு நாளைக்கு 4-5 மணி நேரமே இ நித்திரை கொள்வாராம். அதுவும் இரு நிலையில் சமீபத்தில் இவரிலே மேற்கொ ளப்பட்ட மருத்துவப்பரிசோதனைகளிலிரு இவருடைய கண்பார்வை, செவிப்புல நாடித்துடிப்பு, குருதிஅமுக்கம் ஆகியன நன்ருகஉள்ளதாகக் கணித்துள்ளனர் தன சவப்பெட்டியைத் தயாரிப்பதற்காக மூன் தடவைகள் மரம் தயாரித்து வைத்திருந்து இருதடவைகள் அவை உக்கிவிட்டதா கூறியுள்ளார்.
இவர் வாழும் கிராமத்திலே வதியும்
வயதுப் பிராயத்தை ஒட்டிய முதியே தமது பெற்றேர்கூட வூ யுன்குவிங் பற் தம்மிடம் கூறியுள்ளதாக அதே சஞ்சிகைச் கூறியுள்ளது இவருடைய முதியவயதை பக்கூடியதற்கு ஆதாரமாக உள்ளது.
கின்னெஸ் உலக சாதனை நூலின்படி போது உலகில் வாழும் மிக வயது முதிர் வராக ஜப்பானிலுள்ள ஷிகேஜியோ இகு (Shigechiyo Izumi) 66Tig, Gairgri, go டைய வயது 115 மட்டுமே!
ஆதாரம் சிலோன் டெய்லி நியூஸ்
1 - 9 - 1980
28
 
 
 

70 Fil
്വി
5th
நற்
தொகுப்பு சிந்த முப்பது வயதிற்குள் சாதனையை (p.556 fressit
எந்தக் காரியத்தை செய்யப் புகினும் 'இன்னும் வயது வரவில்லை' எனத் தட் டிக்கழிக்கும் மனப்பான்மை எம்மில் பல ருக்கு உண்டு விஞ்ஞான உலகிலே சாதனை புரிந்துள்ள பலர் தமது சாதனைகளை உல கிற்கு முன்வைத்தபோது முப்பது வயதைத் தாண்டாத இளைஞர்களாகவே இருந்துள்ள னர். சில உதாரணங்கள் வருமாறு:
1) பளிங்குகளின் அமைப்பை எக்ஸ் - கதிர்
கள் உபயோகித்து ஆய்வு செய்ததற்காக, ஆகக்குறைந்த வயதிலே நோபல் பரிசை பெளதீகத்துறைக்காக வென்றவர் டபிள்யூ. எஸ். பிராக்(Bragg) ஆவர். இவருக்கு வயது 25 மட்டுமே. இப்பரிசை தனது தந்தையா ரான ஹென்றி பிராக்குடன் 1915ம் ஆண் டில் இவர் பகிர்ந்து கொண்டார்.
2) GLJITổi LạTTj (Paul Dirac) “GLITSFjä5) ரன் என்னும் உப அணுத்துணிக்கையைப்
பற்றிய கணிதக் கொள்கையை முன்வைத்த
போது அவருக்கு வயது 26 மட்டுமே.
3) டி. என். ஏ மூலக்கூற்றின் அமைப்பை 1953 இல் முன்வைத்த ஜேம்ஸ்வாட்சன் தன்னுடைய சகாவான பிரான்சிஸ் கிரிக்கு டன் சேர்ந்து நோபல்பரிசு பெற்ற ஆய் வைச் செய்தபோது அவர் 25 வயது இளே ஞரே
4) சாள்ஸ்டார்வின் பீகிள் எனுங்கப்பலிலே
ஏறி இயற்கையை அறிய கலப்பகோஸ் தீவுக்
கூட்டங்களுக்குச் சென்றபோது அவர் வயது 22. இயற்கைத்தேர்வு பற்றிய தனது கொள் கையின் மையக்கருவை உருவாக்கியபோது அவர் 29 வயது இளைஞனுக இருந்தார்.
5) அல்பேர்ட்ஜன்ஸ்டீன் தனது புகழ்பெற்ற
சார்ச்சிக் கொள்கை பற்றிய விளக்கத்தை
உலகிற்கு முன்வைத்தபோது அவருக்கு 26 வயது மட்டுமே.

Page 35
ஊற்று 9 28-29 1981
6) பற்றிரியாக்களிலே மீளச் சேர் க் கை | (Recombinatian) Linó5 56óTG134553LITg யோசுவா லெடர்பேர்க்கின் வயது ஆக 21 மட்டுமே. 7) தைரோயிட்டு ஒமோனின் உயிர்ப்புள்ள கூருண தைரொட்சினை பிரித்தெடுத்தபோது ஈ. சி. கெண்டாலுக்கு வயது 28ஆக இருந்
திது.
★ மதுரை தமிழாராய்ச்சி மாநாட்டில்
அறிவியல் ஆய்வு 7
ஜனவரி 1981இலே மதுரையில் நடை பெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலே மொத்தமாக 221 ஆய்வுக் கட்டுரைகள் உலகின் பல்வேறு பாகங்களிலி ருக்கும் அறிஞர்களால் சமர்ப்பிக்கப்பட்டு ) அரங்கேறின. இவற்றிலே ஒரு டசின் கட்டு ரைகள் அறிவியல் விஞ்ஞானத்துறை சார்ந்த 1 தாக அமைந்தமை பலரால் வரவேற்கப்பட் டது. தமிழையும் ஒரு விஞ்ஞான மொழி 1 யாக்க தமிழறிஞர்கள் முயன்று வருவது இவற்றிலிருந்து தெ எளிவாகின்றது. இம் மாகாநாட்டிலே இடம்பெற்ற விஞ்ஞானம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளின் விபரம் வரு LDT011. கலாநிதி பி. திருஞானசம்பந்தம்
- 'அறிவியல் புரட்சிகள்'
ஊற்று ஐப்பசி - மார்கழி (1981) இ களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள் கின்றன. இவ் விவசாயச் சிறப்பிதழை பாடசா அவசியம் வாங்கவேண்டும். மார்கழி மாதத் கொணர ஆவன செய்கின்ருேம் தனிப் பிரதி பெற சுய விலாசமிட்ட, முத்திரை ஒட்டப்பு மார்கழி மாத நடுப்பகுதியளவில் அனுப்பிவை ଓର
 

கலாநிதி ஜி. ஆர். தாமோதரம்
- 'அறிவியலும் தமிழும்' கலாநிதி லலிதா காமேஸ்வரன்
- 'அணுக்கள் பற்றிய ஆய்வு' கலாநிதி பி சிவலிங்கம்
- "சுற்றுச் சூழல் அறிவியல்' திரு ஆர். கிருபாகரன், ரமணி
- "வருங்கால இயல்' கலாநிதி எஸ். வி. சுப்பிரமணியன்
Tamil treatises on the seience of well
divining பேராசிரியர் என். சேதுரகுநாதன்
- 'அகத்தியர் குழம்பு' பேராசிரியர் புலிப்பாணி
- 'தமிழர் தொன்மையும் அவர்தம் கணிப்புநூல் புலமையும் -ஒர் கணிப் பியல் கண்ணுேட்டம்' கலாநிதி எஸ். சிவசேகரம்
- Line Printing in Tamil டி. பாக்கியமுத்து
– ''Printing and publishing in Tamil' கலாநிதி சாலினி இளந்திரையன் - "தட்டெழுதியின் சீரமைப்பில் உயிர் மெய் எழுத்துக்களின் வடிவங்கள்' 2. வி. கே. தில்லைநாயகம்
- 'A device for the direct electronic recording display, storage retrieval and transmission of information in the Tamil language."
தழில் விவசாயம் சம்பந்தமான கட்டுரை விவசாயிகளுக்கும், விவசாயம் பயிலும் ள பல கட்டுரைகள் இதில் இடம்பெறு ல, பொதுசன சனசமூக நூல் நிலையங்கள் ன் நடுப் பகுதியில் இவ்விதழை வெளிக் *ள் வேண்டுவோர் விண்ணப்பப் பத்திரம் ட்ட காகித உறை ஒன்றினை (6' x 341) குமாறு கேட்கப்படுகின்றனர். ாடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
DR. R. SVAKA NESAN Dept. of Biochemistry Faculty of Medicine PERADENIYA

Page 36
Փ6ոյից: ១ ភាro நிை
சாமுவேல்சன்ஸ் அ
இவர்
உங்களுக்குத் தேவைய உதிரிப் பு விவசாய இரசாய
உடனுக்குடன்
வே. இ
இடு
கிளே லங்கா எரிபொருள் கிளிநொ
தொலைபேசி : 249
270 (வசிப்பிடம்)
 
 
 
 

சிறந்தோங்க றந்த ஆசிகள்
Vy ÖT G.95T tíLIGOf GéLÓLGLL
டி வீதி, நொச்சி.
ான உழவு யந்திரத்தின் ாகங்களையும் னப் பொருட்களையும்
பெற்றுக்கொள்ள
★
ரிநொச்சி
நிரப்பு நிலையம் தீஇ

Page 37
வாசக அன்பர்களே !
இழ்விதழைப் பிரித்துப் பார்த்து முடித் வீர்கள். அடடா எத்தனை விளம்பரங்கள், பிரமுகர்களிடமிருந்து. கிளிநொச்சி மக்கள் ம பலவாருக கேள்விகள் உங்கள் மனதில் எழலாம் மிருந்து எமக்குக் கிடைத்துள்ள பேராதரவுக்கு சஞ்சிகையும் மிகவும் கடமைப்பாடுடையது. இ பாகங்களிலுமிருந்து கிடைக்கவேண்டுமென்பது விஞ்ஞானச் சஞ்சிகை ஒளிபரப்பி அறிவூட்ட மனதிலும் உதிக்கவேண்டும். அந்நோக்கத்திற்கா டோரை இரு கரம் நீட்டி அழைக்கின்ருேம். பெருமக்களும் மற்றையோரும் நிச்சயம் உதவி அடுத்த ஆண்டில் நாம் பிரசுரத்தில் பத்தாவது
கடைசியாக, கிளிநொச்சியிலிருந்து வில் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவப்பீட ம விசேட பாராட்டுக்கள்.
ஜயனுர் றேடர்ஸ் கண்டிவீதி, கிளிநொச்சி.
உங்களுக்குத் தேவையான கிருமி நாசினிகள் உரவகைகள் யாவற்றையும் நம்பிக்கையுடன் தெரிவுசெய்வதற்கு நாடுங்கள்
32T நஷனல் றேடர்ஸ்
முல்லைத்தீவு வீதி, பரந்தன்.
 

தவுடன் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படு அவை யாவும் கிளிநொச்சி வர்த்தகப் நிதியில் ஊற்றுக்கு அவ்வளவு செல்வாக்கா? கிளிநொச்சி வாழ் தமிழன்பர்களிட ஊற்று நிறுவனமும், ஊற்று விஞ்ஞானச் ப்படிப்பட்ட நிதியுதவி இலங்கையின் பல எமது தயவான வேண்டுகோள் ஊற்று வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொருவர் ாக எவரும் பாடுபடலாம். அப்படிப்பட் ஊற்று உங்கள் பத்திரிகை, வர்த்தகப் செய்வார்கள் என எதிர்பார்க்கின்ருேம்.
ஆண்டில் காலடி வைக்கின்ருேம்.
ாம்பரங்கள் சேகரித்த மூன்றுவது ஆண்டு ாணவன் திரு. இ. சிறீதரனுக்கு எமது
- நிர்வாக ஆசிரியர் -
ருசிமிக்க உணவு சிறந்த உபசரிப்பு இரவு பகல் தொடர்ச்சியான சேவை. ஒடர்கள் குறித் த நேரத்தில் கவனிக்கப்படும்.
*#se
சிவாஸ் கடே யாழ்ப்பாண வீதி, கிளிநொச்சி
Lரிமை :
திரு. @。 குலசேகரம்பிள்ளை

Page 38
இ இலங்கை அரசியலைப் ப லண்டன் நகரப் புத்தக அமைப்பின் (1978) பி
LLIFT GöIT.
* மன்னிக்க வேண்
(Periodicals) என்று மிகவும் மர் நன்றி லங்கா காடியன், 15 ஜ
இ நாம் எப்போதும் நன்
வையே உண்கிருேம். தான் எமது உணவு கொ ரும் ஆடு மாடுகள்கூட களை உட்கொள்வதால், றுக் கொள்கின்றன. கா சைப் புல் போன்றவற்ை வும் சிறப்பான உணவுக வாக விளங்குகின்றன.
* ஊற்று சஞ்சி அறிவும6 கிளிநொச்சி கலா
ஆதரவும் 566)
| KALA
Kandy RC
Branch 。
VIJAYA T R A Kandy Road, Kilinochchi.
 

ாடமாகப் பயிலும் மாணவன் ஒருவன் க் கடையொன்றில் இலங்கை அரசியல் தியொன்று கிடைக்குமா எனக் கேட்
熱 டும்; நாங்கள் சஞ்சிகைகள் விற்பனை செய்வதில்லை' யாதையுட்ன் பதில் வந்தது. ଜot. 1981.
து தீட்டித் துப்புரவாக்கப்பட்ட உண ஆல்ை, மிகக்குறைந்தளவு சத்துக்களைத் ாண்டுள்ளது. எங்கள் வீடுகளில் வள தீட்டித் துப்புரவாக்கப்படாத உணவு எங்களைவிடச் சிறந்த உணவுகளைப் பெற் ட்டு மிருகங்களோ புரதம்மிகுந்த பச் ற உண்பதால், வீட்டு மிருகங்களை விட ளப் பெற்று உடல்நல வளமுடையன
தகவல் க. நவம்
கை மேலும் மேலும் ணம் கமழ்ந்திட
றேடர்ஸ் ஸ்தாபனத்தின் சிகளும் என்றென்றும்
TTRADERS
iad, Kilinochchi.
ERS,

Page 39
உள்ளரம்
குர 4
புதுப்பொலிவுடன் ஊற்றினே இம்முறை உங்கள்
சமூக விஞ்ஞான ஊற்றுக்கண்கள் ஒட்டி சமூக விஞ்ஞான ஆர்வலர்கள் சிலர் புறு முடிகின்றது. இவர்களது மனக்குறையும் நிவர்த்தி செய்யும்பொருட்டு இயற்கை விஞ்ஞ ஞானம் தொடர்பான ஆக்கங்களுக்கும் ஊற் கொடுத்திருக்கின்றுேம். இவ்வாறே அறிவியல் கும் ஏற்ப இனிவரும் ஊற்றுக்கள் தொடர்ந்து
ஊற்று உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் டும் என்பதே எங்கள் விருப்பம். இதன்பொ வாசகர்கள், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்ச எப்போதும் எதிர்பார்க்கின்ருேம், 'ஊற்று பி ஒரத்தில் நின்றுகொண்டு வாய்ச்சொல் வீரரா பிடிக்க வாருங்கள்' என்று உரத்த குரலி பலரும் எங்கள் வேண்டுகோளுக்கிணங்க முன்வி உள்ளீடுசெய்து வருகின்றர்கள் அதேவேளை, போடுமா?' என்று எங்களைப் பார்த்துக் கே வேடிக்கை என்னவென்றல், திக்கெட்டும் ஒடிக் கொள்ளவேண்டிய படித்த இளைஞர் சிலரிட குளித்தனமான கேள்விகள் பிறக்கின்றன. : பிறவி எடுத்ததன் நோக்கம் என இவர்கள் 6 ளுக்காக நாம் ஒன்றைமட்டும் செய்யலாம் - ளவுதான்.
" அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர்தன் எண்ணம் செழித்திட ஊற்றிப் பூதியதோர்
பணியில் உண்மை ஆர்வமுடையோர் பங்குபற
இwளுக்குத் தீனி பேர்டினAAாது. அறி
தீனி போடும் என்பது மட்டும் திண்ணம்.

முன் புரண்டோட விடுகின்றுேம். உலர்ந்துகொண்டனவோ !' என்று புறுப்பதை எங்களால் செவிமடுக்க நியாயமானதே. இக் குறையை தான ஆக்கங்களுடன், சமூக விஞ் றில் இம்முறை போதிய இடம் பசிகொண்ட அனைவரது தேவைகளுக்
வெளிவரும்.
மென்மேலும் மெருகூட்டப்படவேண் ருட்டு அறிஞர்கள், ஆசிரியர்கள், 1ள் அனைவரதும் ஒத்துழைப்பை நாம் வாகித்து தடைகளை மீறி ஒடுவதற்கு க நிற்காமல் நேரத்தில் வந்து வடம் ல் உங்களை நாம் கேட்டதுண்டு. பந்து ஊற்றுக்காகத் தமது உழைப்பை துரதிஷ்டவசமாக ** ஊற்று சோறு ட்பவர்களும் இல்லாமலில்லை. இதில் சென்று அறிவைத் தேடித் திரட்டிக் டமிருந்துதான் இவ்வாருன, பித்துக் உண்டுகளித்துறங்குவதுதான் மனிதப் எண்ணுகிறர்கள் போலும், இவர்க - மனதார வருத்தப்படலாம். அவ்வ
னை மொண்டு, செறிதரும் மக்கள் உலகம் செய்யும் ' எங்கள் புனிதப் bறினுல் போதும். ஆற்று நிச்சயமாக வுப்பசி எடுத்தவர்களுக்கே ஊற்று
க. நவம்

Page 40
レエ 。
粤。 .وعضاً -
-
بری۔۔۔۔۔۔۔۔۔۔
صی^سمیچ=^صعبراہیے۔۔۔۔
ஊற்று நிறுவனத்தி தமிழ்ப் பணி என்று எமது நல்லாசிகளையு காத்திருக்கிறுேம்
SWAN
Sivasun ܕ ܢ ܥ ܐ
KILIN
LALTHATR
 
 
 
 

ன் |ւD தொடர ம் ஆதரவையும் வழங்கக்
ADING COMPANY
BUILDING
NOCHCHI.