கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1982.10-12

Page 1
அறிஞர் தம் இதய ஒன
தன்னை மொண்டு செறி
எண்ணம் செழித்தி ஊ புதியதோர் உலகம் செ
 
 
 

TT
\\ے
ஐ"* - மார்கழி
1 5ܝܟ` ܐ
. 1982.
"බණ්rෂඹ) இலக்கம் 4

Page 2
  

Page 3
ஊற்று 1 - ஆவணி 1972
எமது நோக்கம்
ஊற்று = அறிவியல் ஏடாக இரு திங்களுக்கோர்மு உலகம் மலர்ந்த முகத்தோடு யில் நின்று கொண்டு எம விரும்புகின்ருேம்.
* மாணவர்கள், சாத் படித்துப் பயன்பெ டுரைகளைத் தமிழி
* தமிழறிந்த அறிவி முடிவுகளை, கட்டு: ஞான மொழியாக திறன் தமிழ் மெ
* தமிழ் மக்களின் அ யத்துவத்தை உண களே அணுகும் (
நாட்டின் பொருள் ஆராயும் பொருட் கொடுத்து விவசா விருத்தி பற்றிய
- கட்சி அரசியலுக்கு தமிழில் தரும் நோக்கத்திலே எங்கிருந்தாலும் அதனை வழி ஊற்று உறுதி கொண்டுள்ள
 

1972ம் ஆண்டு ஊற்று முதலாவது இதழில் அன்று கூறியவை இன்றும் அஃதே.
ட்டின் முதலாவது இதழ் இது அறிவியல் 2ற ஊற்றெடுக்கவிருக்கும் இதனைத் தமிழ் வரவேற்கும் என்பதில் ஐயமில்லை. முதற்படி நோக்கங்கள் சிலவற்றினைக் கூறிவைக்க
நாரண பொது மக்கள், அறிஞர்கள் அனைவரும் றும் வகையில் அறிவியல் தொடர்பான கட் லே தருவது.
யல் விற்பன்னர்களைத் தமிழிலே தம் ஆராய்ச்சி ரைகளே எழுதிடத்தூண்டி தமிழை ஒரு விஞ் வும் வளரச் செய்து எதையும் சொல்லும் ாழிக்கு உண்டென்பதை உறுதியாச்குவது.
|ன்ருட வாழ்க்கையில் விஞ்ஞானத்தின் முக்கி ர்த்துவதோடு; விஞ்ஞான ரீதியிலான சிந்தனை மறைகளே வளர்ப்பது
ாதார வளத்தைப் பெருக்கும் வழி வகைகளை டு அறிவியலாளருக்கு ஒரு களம் அமைத்துக் பம், கைத்தொழில் ஆகிய வற்றின் நவீன அபி அறிஞர்தம் திட்டங்களை வெளிக்கொணருவது.
அப்பால் நின்று, விஞ்ஞான உண்மைகளைத் முதன்மையாகக் கொண்டு அறிவுச்சுனைகள் ப்ெபடுத்தித் தமிழன்னையைப் பசுமைப்படுத்த
37.
ஆசிரியர்

Page 4
ஊற்று
பத்தாவது
güL16
ஆறுமுக நாவலரின் சமய, சமுதாய மனித இனங்கள் - 3 உங்கள் வாழ்வில் நிம்மதி இல்லையா ஐம்பதாண்டு சர்வசன வாக்குரிமை கையின் அரசியல் வளர்ச்சியில் அதன் நகரங்களின் புவியியல் ரீதியான எல்லைவரையறை - யாழ்ப்பாணம் பாரதியாரும் அறிவியலும் புகைத்தலும் அதன் விளைவுகளும் கசநோய் சொற்றுதலிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுவோம் கண்ணதாசனின் திரைப்படப் பாடல் சில விஞ்ஞானக் கருத்துக்கள் - ஒரு ே காலச் சக்கரம் - மறைந்து விட்ட இவ பிராயம் திரும்புமா?-1
பிரதம ஆசிரியர்
இ.
Shaug, Georg in B. V. Sc, Ph. D.
 
 
 
 
 
 

பியல் விஞ்ஞான சஞ்சிகை
ஆண்டு நிறைவிதழ்
4 : மார்கழி இலக்கம் ܚ- ܐ
EURŠ 35 AD
பணிகள் இரா வை, கனகரத்தினம் 1
துளசிராசா 5 P தி. ஆனந்தமூர்த்தி ம், இலங் தாக்கமும் வே, மணிவாசகர் 15
கி, ஆறுமுகம் 22 க. அருணுசலம் 26 பூ, காசிநாதன் 33
ஏ. எல். பரீத் 37 @f(ద్ద) நாக்கு சச்சி மரீகாந்தா 4.
இ. சிவகணேசன் 45
ബ
நிர்வாக ஆசிரியர்
க. கிருஷ்ணுனந்தசிவம் B.V.Sc., M.V.Sc.
ஆசிரியர் குழு
து. ஜெயவிக்கிரமராஜா M.B.B.S. M. Ed. அ. சிவராசா B, A, M. A. ந. சயலொளிபவான் B. D. S. ஆர். மாதவன் B. Sc. க. நவரத்தினம் B, A (Hons) சே. அரியரெத்தினம் B D. S.
இவ்விதழ் தொகுப்பாசிரியர்
இ. சிவகணேசன் B.V. Sc., Ph.D.

Page 5
ஊற்று
JG) billiJ,
1972 ஆண்டு மப்பும் மந்தாரமுமாய் இருந்த இரவினிலே சில இளம் பட்ட தாரிகள் பேராதனைப் பல்கலைக்கழக விடுதி யின் ஓர் அறையில் சந்தித்து உரையாடி யதன் பலனுய், தமிழ் உலகத்தின் மத்தி யில் தமிழில் ஒர் விஞ்ஞான ஏடு "ஊற்று' ஊறத் தொடங்கியது. இன்று அது தனது 10-வது அகவை எய்தி எழில் பொங்கும் வனப்பை எய்தியுள்ளது. இப்பத்து ஆண்டு களை திரும்பிப் பார்க்கிருேம்.
உண்மையான திரிகரண சுத்தியோடு ஊற்றுக்காக உழைத்தவர்கள் ஊற்றின் வளர்ச்சிக்கு தம் ஆதரவையும் ஆசியையும் நல்கியவர்கள் பல்வேறு சிந்தனைகள், நோக் குகள், தேவைப்பாடுகள், எதிர்பார்ப்புகள் இன்னுேரன்ன பல வித அலைப்புகளுக்கு மத் தியில் ஊற்று வெற்றி நடை போட்டு 10-வது ஆண்டு உங்கள் முன் வருகிருள்.
எமது நாடும், குறிப்பாக தமிழ் மக்க ளும் மிகவும் இக்கட்டான திசையறியா நிலையில் உள்ள காலம் 1980 தசாப்தம். 'நல்லன எண்ணல் வேண்டும், எண்ணிய முடிதல் வேண்டும்.” என்ருன் மகாகவி பாரதி.
இச் சிந்தனையினை சமுதாய நோக்கில் விரிவு செய்த பாரதிதாசன்,
அறிஞர் தம் இதைய ஒடை ஆழநீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செய்வோம்
என்று செழுமைக்கும், வழமைக்கும் வழி காட்டினன். இத் தத்துவ அடிச் சுவட்டில் இலங்கை வாழ் தமிழ் அறிஞர் பெருமக் களின் சிந்தனைக் கருவூலங்களை பயன்
 
 
 
 

GGIT
செய்து, தமிழ் அன்னையைப் பசுமை செய் யவும், அவர்தம் வாழ்வு மலர்ச்சி பெற வழியமைக்கவும் ஊற்று நிறுவகம் உருவாக் கப்பட்டுள்ளது.
ஊற்று அறிஞர் பெருமக்களின் சிந்தனை யினுல் வழிநடத்தப்பட்டு, முழுநேர தொண் டர்களினுல் செயலுருவம் கொடுக்கப்பட்டு, தமிழ் மக்களின் கனிவான அரவணைப்பினு லும், அருங்கொடையிலுைம் நாளும் பொழுதும் வளர்ச்சி பெற்று வருகிருள். இவள் வளர்ச்சி திக்கற்று தவிக்கும் தமிழ் இனத்திற்கும், வரண்டு காய்ந்த பிரதேச பொருளாதார அபிவிருத்திக்கும் கலங்கரை விளக்கமென திகழும் என எதிர்பார்க்கி ருேம். இதுவே ஊற்றின் இலட்சியம்.
"தேர், தனி மனிதனுலோ அன்றி ஒரு சிறு கூட்டத்தினராலோ இழுக்க முடியாது. பாரிய பணிக்கு பல்லோர் முயற்சி அவசி யம். பொருளாதார அபிவிருத்திப் பணிச்கு முழுச் சமுதாயமும் ஊற்று நிறுவனத்து ட ன் இணைந்து சங்கமமாகி உழைக்க ஒவ் வொருவரும் பங்களிப்பினை செய்ய அன் போடு அழைக்கிருேம்.
ஊற்றின் வளர்ச்சி
சமுதாயத்தின் வளர்ச்சி ஊற்றின் பெருக்கம்
வர ண் ட பிரதேசத்திற்கு குளிர்ச்சி! ஊற்றின் விளைச்சல்
தமிழ் மக்களுக்கு LUITG) பொங்கல், பாரிய பணிக்கு உங்கள்
அறிவும், உழைப்பும்
உதவட்டும்
க.கிருஷ்ணுணந்த சிவம்
Glaucontani

Page 6
WELL DONE
(Ο) (Ο)
Knowledge, Pl
are more
Political speech
CONFINE YOU
FOR TEN TI
WE ARE PROUD T.
THE Most Up-toVMV I TE MONOTYPE
ST. J.O.S
PHONE: (021) 2230)
 
 
 
 
 
 
 
 
 

F R Ü ·
anning & Advice nportant than
es for Our People.
I'R GQ OG WORK MAE AT TEN YEAR" !! !!
D BE YOUR PRINTERS
A TE PRESS IN NORTH 3 OFFSET FACILITIES
'PHS CATHOL TC PRESS
360, MAN STREET
JAFFNA

Page 7
ஆற்றுச் 10 (4), 2-4 1982
2O)(pdbbs
9F, LU III, ĠU CLP
క్లాడ్లక్ష్
ஈழநாட்டின் சைவசமய வ ர ல | று கிறிஸ்து சகாப்தங்களுக்குள் ஆரம் பித் த போதும், பத்தொன்பதாம் நூற்ருண்டிலே தான் சைவம் பலவகைத் துறைகளிலும்
> பரந்து விரிந்து நிலையான பேற்றைப் பெறு
வதை அவதானிக்க முடிகின்றது. இந்நூற் முண்டிற்கு முன் ஈழத்தில் சைவம் வளர் வதற்குத் தமிழகப் பேரரசுகளின் மன்னர் களான பாண்டியர்களும் சோழர்களும், சிங் கள மன்னர்களும் யாழ்ப்பாண ஆரியச் சக் கரவர்த்திகளும் உழைத்தனர். ஆணுலும், அவர்களின் பணி சுதேசிய சமயப் போட் டிகளாலும், படையெடுப்புக்களாலும் அந் நியர் ஆதிக்கத்தாலும், காலநிலை மாறுபா டுகளாலும் வலுவிழந்து சென்றன. ஆணுல், அவர்கள் விட்டுச் சென்ற பணிகளின் எச் சங்கள் சைவத்தின் ஆதிக்கப் பரம்பலை சுட் டிக் காட்டத் தவறவில்லை. 19-ஆம் நூற் முண்டிலே ஏற்பட்ட சமூக, சமய மறுமலர் ச்சியின் தாக்க ம் ஏனைய காலங்களை விட மாற்றங்களை உடையதாய் பரந்து பட்ட தாய் புதியவழிப் பட்டனவாய் அமைந்து நிலையான இடத்தைப் பெற்றன. இதன் கர்த்தாவாக விளங்கியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் பூரீலபூரீ ஆறுமுகநாவலரே ஆவார்.
ஈழநாட்டிலே தேசிய இனங்களாகத் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்து வந்தனர் வருகின்றனர். அவர்கள் தமது சமூக, சமயப் பாரம்பரியங்களையும், பொரு ளாதார நிலைமைகளையும் மேம்படுத்தத் தனித்தனி இராச்சியங்களாகப் பிரிந்து, இறைமையும் தன்னதிக்கமும் உடைய அரசுகளால் வழி நடத் த ப் பட்ட னர்.
 

தாயப்பணிகள் - 1
இரா. வை. கனகரத்தினம், B.A., M. A. தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக் கழகம்,
1505க்குப் பின் ஐரோப்பியரின் வருகையி ஞல் இரு தேசிய இனங்களின் இறைமைகள் வலுவிழக்கத் தொடங்கின. ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் (1505- 1658) பின்னர் ஒல்லாந்தரும் (1658 - 1878) இலங்கையின் க  ைர யோ ரப் பகுதியை ஆண்டனர். 1879இல் இலங்கையின் கரையோரப் பகு தியைத் தமதாட்சிக்குப்படுத்திய பிரித்தா னியர், 1805இல் இலங்கை முழுவதையும் தம்மாட்சியின் கீழ் க் கொண்டுவந்தனர். ஈழநாட்டை ஆண்ட அந்நியர்கள் பலரும் ஈழத்தில் தன்னுதிக்கமுடைய வலு வா ன ஆட்சியை நிறுவ முயன்றனர். இதனுலே, ஆட்சியை வலுவுடையதாய் நிறுத்துவதற் குச் சமுதாய ஒத்துழைப்பை வேண்டினர். சமுதாய மாற்றத்தைச் சமயத்தின் மூலம் செய்யக் கரு தி னர். தமது சமயத்தோடு தமது பண்பாடும் கலாச்சாரமும் வேரூன் றினுல் ஆட்சி மக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டதாய் அமையும் எனக் கருதினர். * இதனுலே, ஒவ்வோர் ஆட்சியாளரும் தமது நாட்டிலிருந்து செல்வவளமுள்ள மிஷனரி மாரை வரவழைத்தனர். போர்த்துக்கேயர் பிரான்சிஸ்கன் சபை (1543) , யேசு சபை (1602) டொமினிக்கன் சபை (1606) அதஸ் தீனியன் (1606) ஆகிய கிறிஸ்தவ சபைக ளின் வருகையையும் ஒல்லாந்தர், ஒல்லாந்து திருத்த தேவாலய சபை என்ற சபையின் வருகையையும் ஆங்கிலேயர் வெஸ்லியன் மிஷன் (1814) அமெரிக்கன்மிஷன் (1816) சேர்ச்மிஷன் (1818) ஆகிய மிஷனரிகளின் வருகையையும் வரவேற்றனர். போர்த்துக் கேயரும் ஆரம்பத்தில் ஒல்லாந்தரும் சமூக

Page 8
1982 ,یے سt ,(4) - 70 ہزنوی giaن
மாற்றங்களை அடக்கு முறை கொ மறைமுகமாக திரு ச் ச  ைப க ள் மூ: செய்யக் கருதினர். ஒல்லாந்தர் தமத யின் கடைக்கூற்றில் த மது சட்டங் நெகிழ்ச்சியையும் விட்டுக் கொடுக்கும் பான்மையையும் பேணினர். இதனை கொண்டு ஈழத்திற் புதிய சைவசமய மலர்ச்சி முளைவிடத் தொடங்கியது. ம டபுரம் கந்தசுவாமி கோயில் (1782) தீவு நாகேஸ்வரி கோ யி ல் (1782)
ணேச் சிவன் கோயில் (1782) நல்கு கந்தசுவாமி கோயில் (1793) முத ல கோயில்கள் இக் காலத்திற் புத்துயிர் ெ ஆங்கிலேயர் சமயப் பண்பாட்டு மா களேச் செய்வதற்கு அ டக் கு முறை கையாளவில்லை. அ த னே மிஷனரிமா டம் ஒப்படைத்ததோடு, அவர் களு வேண்டிய ஒத்துழைப்புக்களை வேண் பொழுதெல்லாம் அளித்து வந்தனர். கிலேயர் ஆட்சியில் மிஷனரிமார்களின்
நடவடிக்கைகளே ஈழநாட்டுச் சுதே மக்களிடத்துக் குறிப்பாகச் சைவமக்கள் திற் பண் பா ட் டு மாற்றங்களைத் கெதியில் ஏற்படுத்துவதற்கு வழிவகுத்
மிஷனரிமார்களின் ச ம ய ப் பிற வேகத்தின் மு ன் பு ம் அவர்களின் வாய்ப்புக்களுக்கும் சைவசமயிகள் ஈடு டுக்க முடியாது தத்தளித்தனர். இ மாக சமுதா யக் கட்டுக் கோப்பு தனித்து வாழ்ந்த மக்கள் சமூகமேன பாட்டிற்காகத் துரிதமாக சமய மா துக்கு உட்பட்டதோடு, உயர்மட்டத்தி ளோர் உழைப்புக் கருதி சமய மாற் ளேச் செய்யக் கருதினர். மிஷனரிமார்ச சமயப் பிரசார வேகம் சுதேசிய ை களை மதமாற்றம் செய்ததென்பதை சமூக விடுதலையும் ஊதியமுமே சமய றத்தைச் செய்ய வழிவகுத்ததென ெ இதஞலே தான் நாவலருக்கு முன்னுே கச் சுன்னுகம் முத்துக்குமாரக் கவிர ஞானக்கும்மி, யோகமத பரிகாரம் 6 இரண்டு கண்டன நூல்களை எழுதி ே யிடமுனைந்தார்.
爱

ண் டு லமும் rt G.
மனப் அடிக்
LD) Tathu" நபினு
லூர்க்
T 60 பற, ற்றங்
fig6.
க்கு
Ցք է Ր Ա }
இத்தகையதொரு சூழ்நிலையில், செல் வாக்கும் செல்வ வளமும் உள்ள குடும்பத் தில் யாழ்ப்பாணத்து நல்லூரிலே 1822-ம் ஆண்டு மார்கழி 5ஆம் திகதி நா வலர் (ஆறுமுகம்) தோன்றினூர் தமது தமிழ்க் கல்வியினை இருபா லேச் சேணுதிராச முதலி யாரிடமும் சரவணமுத்துப் புலவரிடமும் கற்ருர் ஆங்கிலக் கல்வியை யாழ்ப்பாணம் செபஸ்லியன் மிஷன் கல்லூரியில் (யாழ் மத் திய கல்லூரி) கற்றுத் தேறினுர், சாதாரண சமய வாழ்க்கையை மேற்கொண்டிருந்த நாவலருக்கு அவர் வாழ்ந்த கால கட்டமும் அவர் பயின்ற பள்ளிக்கூடமும் புதிய சிந் தனை வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந் தன. இதனுற் போ லும் ஈழத்துத் தமிழ் அறிஞரான பண்டிதமணி சி. க. அவர்கள் 'பெயரளவில் திருவாவடுதுறை ஆதீன ம் ஆறுமுகநாவலரைத் தந்ததே யாயினும், உண்மையை நோக்குமிடத்துப் பதினு னகு வருடக் கிறிஸ்தவ சூழலே நாவலரை நமக் குத் தந்தது' " எனக் குறிப்பிடுவது இங்கு மனங்கொள்ளத் தக்கதாகும்.
நாவலர் சமகால சமய, சமூக சூழ் நிலைகளைத் தமது பிரசுரங்களிலும் விக்கியா பனங்களிலும் அவ்வப்போது வெளி ப் ப டுத்தி உள்ளார்; அப்பிரசுரங்களிற் பார்ப் பனர், கோயிலாளர், சைவக்குருமார் முத லானுேரின் கையாலாகாத் தன்மைகளையும், அவர்கள் கிறிஸ்தவப் பாதிரிமாரின் பிரசார வேகத்தின் முன் எதிர் நிற்க முடியா து நிற்கும் நிலைமைகளேயும் பாதிரிமார்களின் போலி வேஷங்களையும் சுட்டிக்காட்டியுள் ளார் யாழ்ப்பாணச் சம ய நிலை (1872) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முதலாம் பத்திரிகை (ஆடி, 1875) நல் லூர்க் கந்த சுவாமி கோயில் இரண்டாம் பத்திரிகை (புரட்டாதி, 1875) மித்தியாவாத நிரசனம் (1876) முதலான பிரசுரங்களிலே மேற் கூறிய சமகால நிகழ் வுகளே அறிந்து கொள்ள முடிகின்றது. இப்பிரசுரங்களுக்கு முன்பாக 1834ஆம் ஆண்டு நா வ ல ர் வெளிப்படுத்திய சைவ தூஷணப்பரிகாரம் என்ற நூலில் பாதிரிமார்களின் த ந் தி ர மான பிரசார வேகத்தைப் பின்வருமாறு குறிப்பிடுவார் .

Page 9
ஊற்று 10 (4), 1-4; 1982
"இப்பாதிரிமார்கள் பணச் செருக்கி னுலும், மதிமயக்கத்தினுலும் சற்றுங் கூசாமல் சிவன் கடவுளல்லரென்றும், அவர் பிசாசென்றும் வேதாகமங்கள் பொய் நூலென்றும், சைவ சமயம் துன்மார்க்கமென்றும், 6;).F 6} r† g; 67 அஞ்ஞானிகளென்றும், அவர்கள் பிசா சின் அடிமைகளென்றும் பெருந்தூஷ ஏங்களைப் பேசித் திரிந்து, குருட்டு வழி, மும்மூர்த்தி லக்ஷணம், துரா சார விருத்தாந்த ம் முதலிய பல தூஷணப் புத்தகங்களையும் அச்சிற் பதிப்பித்து பரப் பி சைவ நூல்களி லுண்மையை உணராத சில பேதை களே மயக்கிக் கெடுக்கின்றர்கள். துராபிமானமும் பொருளாசையும் விப ரீத சிந்தனமும் அநீதியுமே நிறைந்த பாதிரிகள் மாணிப்பாய் முதலிய இடங் களிலுள்ள நமது தேவாலயங்களுக்கு இடையூறு செய்யும் படி பல தர ம்
முயன்றுள்ளனர்.' "
(சைவ தூஷண பரிகாரம்)
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத் திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஈழநாட் டிலே சைவத்துக்கு ஏற்பட்ட விளைவுகளைப் பற்றி, ஈழநாட்டின் சைவப் பேரறிஞரான பண்டிதமணி சி. க. அவர்கள் பின்வருமாறு
ஒப்பியல் அடிப்படையில் குறிப்பிடுவார்:
பறங்கியர் ஒல்லாந்தர் காலத்திலே சைவசமயத்திற்கு வந்த வ ரு த் தம் சிரங்கு வருத்தம் போன்றது. அது வெளத்தோல் வருத்தம், உள்ளூரச் சமயம் உயிரைப் பற்றி நின்ற து ஆங்கிலேயர் காலத்திலே சமயத்துக்கு வந்த வருத்தம் கச வருத்தம் போன் நிதி உயிரைக் கொல்லுகிற வருத் தம் அது உட்பகையான வருத்தம். புறப்பகையில் உட் பகை பொல்லா தது.'
(மரகதம்)

இத்தகைய நிலைப்பாட்டிலே, நாவலர் தமது சமயப் பணியை ஆற்ற விழைந்தார். அவர் செல்வவளமுள்ள குடும் பத் தி ல் பிறந்த போதும், அவரே ர் இலட்சிய Կ(56ֆՄT3, 6մո Ք விழைந்தமையால், அவர் இல்வாழ்க்கையில் புகவில்லை. அவர் தமது இலட்சியத்தினைப் பின்வருமாறு Gaaft" | டுத்தினுர்:
த ஏன் னி  ைய நாகயகனிடத்து ଜଏଣ୍ଡ துட்டாயினும் வாங்காது வீடு, விளை நிலம், தோட்டம், ஆபரணம் முதலிய வற்றேடு விவாகஞ் செய்து கொடுக் கும் வழக்கமேயுடையது என் சென்ம தேசமேயாகவும், நான் இல்வாழ்க்கை யிலே புகவில்லை. இவைகளெல்லாவற் றிற்கும் காரணம் சைவசமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல் வியையும் வளர்த்தல் வேண்டுமென்
னும் GLTrrang-Guru Th.
(ஆறுமுகநாவலர் சரித்திரம்)
'நாவலர் பணியினை சைவமும் தமி ழும் என்ற வட்டத்தினுள் அடக்கி விட லாம்" என்பார் இலக்கிய விமர்சகர் ஒரு வர் 9, நாவலர் சைவத்தையும் தமிழையும் தனித்தும் சேர்த்தும் நோக்கினர். நாவலர் மதத்திற் கொண்ட பெரும் ஈடுபாட்டினே மொழியிற் காட்ட முற்படவில்லே மதத்தை வளர்க்க மொழி தானுகவே வளரும் என் பதை உணர்ந்திருந்தார். இதன் அர்த்தம் மொழி வளர்ச்சியில் நாவலர் ஈடுபடவில் லே என்பதல்ல. அவ்வப்போது மொழியினத் தனித்தே நோக்கினர் நாவலரது தமிழ்ப் புலமை என்ற கட்டுரை இதற்கோர் எடுத் துக் காட்டு. "தமிழ் என்பது ஒரு சமயத் தின் பெயரன்று ஒரு பாஷையின் (ଇ l_fluff. ' ' 1, 0) என்பதை நன்கு வற்புறுத்தினர் நாவலர்.
நாவலரின் சமயப் பணியினை பின்வரு மாறு பகுத்து நோக்கலாம்:
அ. பிரசாரம் ஆ, கல்விப்பணி இ. நூலாக்கமும் பதிப்பாசிரியர்
பணியும்

Page 10
ஊற்று 10 (), 1-4 1982
பிரசாரப் பணியினை (அ) பிரசங் (ஆ) புராணபடனம் (இ) கண்டனங். என வகுத்து நோக்கலாம்.
அ. பிரசங்கம் ? பிரசங்கம் என்ற முன் யினைத் தமிழில் சமய நோக்கோடு அற கப்படுத்தியவர்கள் கிறிஸ்தவப் பாதிரிம களே. நாவலர் தமிழில் சைவசமய நே கோடு முதலில் அறிமுகம் செய்து 6ை தார். நாவலர் தமது முதற் பிரசங்கத் வண்ணுர்பண்ணேச் சிவன் கோயிலில் வங்க வருடம் மார்கழி மாதம் வெள் கிழமை தமது கன்னிப் பிரசங்கத்தை ஆ பித்தார். இதுனேத் தொடர்ந்து பி வெள்ளிக்கிழமைகளில் இவ்வாலயத்திலு தமது பாடசாலையிலும் பிர சங்கத் தி நடத்தி வந்தார். இவர் பிரசங்கத்தி பொழுது சிவப்பொலிவுடன் விளங்கி, வுள் வாழ்த்து, சிவபக்தி, தி ரு வி ழ யாக்கை நி ையாமை, சிவதீட்ஷை, மச ரொழுக்கம், பிச்சை எடுத்தல், பசுக்க தல், முதலான விடயங்களைப் பொருளா கொண்டு பிரசங்கித்து வந்தார். இவர இவ்வியக்கத்திற்கு உறுதுணையாக விளங்கி வர்கள் நல்லூர் கார்த்திகேய ஐயர், ச சிவப் பிள்ளை, தில்லைநாதப் பிள்ளை முத6 னுேர்களாவார்கள். நாவலரின் பிரசங்: நல்லூர், வண்ணுர்பண்ணே, Li T6öflLLIT புலோலி, அராலி, முதலான இடங்கள நடைபெற்று வந்தது. இப்பிரசங்கம் கிறி தவ சமயத்தை வைபவங்கள் தோறும் த மனிதனுக நின்று கண்டிப்பதற்கும் சம பிரசங்கங்கள் செய்வதற்கும் மற்றெல்ல சாதனங்களையும் விட சிறந்த பொதுசன தொடர்புச் சாதனமாக நாவலருக்கு விள கியது. நாவலரின் பிர சங்க வன்மை இருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு நா லர் என்ற (1849) பட்டத்தை அளிக்க வ அமைத்ததோடு, அவரின் அருமையை து ழகமெங்கும் தெரிந்து  ெகா ள் வ தற்
 
 

5լի
டுள்
வாய்ப்பாக அமைந்ததெனலாம். நாவலரின் பிரசங்கஞ் சைவமக்களிடத்துச் சமயப் பற் றையும் பக்தியையும் ஆசார ஒழுகலாற்றை யும் வளர்த்துச் சென்றதெனலாம்.
ஆ. புரானபடனம் HTT69 LEl-697Cup60AD ஈழநாட்டின் தனித்துவமான சொத்தாகும். ஈழநாட்டிற் புராணபடனம் எ வ் வா று வளர்ச்சி பெற்றது என்ற ஆய்வுக்கு இங்கு அவசியமில்லை. சேனுதிராச முதலியார், நெல்லேநாத முதலியார், சரவணமுத்துப் புலவர் காலத்தில் ஒரளவு சிறப்புப் பெற்று வந்த புராணபடனம், பிற்காலத்திலே நாவ லராலே உயர்நிலை பெற்றது. பெரிய புரா ணம், கந்தப்புராணம் திருவாதவூரடிகள் புராணம், திருவிளையாடற் புராணம், திருச் செந்தூர் புராணம் முதலானவை இக்காலத் திற் புராணபடனம் செய்யப்பட்டன. நாவ லராலும் அவர் மாணவ பரம்பரையாலும் வண்ணுர்பண்ணை, அராலி, கீரிமலை, புலோலி முதலான இடங்களிலே அமைந்த ஆலயங் களிலே புராண படனம் செய்யப்பட்டது. நாவலர் சுக்கில வருடம் சித்திரை மாதம் (1869) பதிப்பித்து வெளிப்படுத்திய கந்த புராணத்தில் முகவுரையாகத் தரும் "சிவபு ராணபடனவிதி' என்ற கட்டுரை, அவருக் குப் புராணபடனத்தில் இருந்த அருமைக் கும் பத்திச் சிரத்தைக்கும் எடுத்துக் காட் டாக விளங்குகின்றது. புரானபடன முறை கிறிஸ்தவத்திற்கு ஒரு பெ ரு ம் பிரசாரத் தடைக்கல்லாக அமையா விட்டாலும் பண் டைய மரபினைப் பேணிப் புத்துயிர் அளித் தமையும் அத்துறையில் பாமரமக்களையும் கற்ருேரையும் ஈடுபடுத்தி அதனை நிலைநி றுத் திய பெருமையும் நாவலருக்குண்டு. ஒருவகையிலே புராண படனம் புத் துயிர் பெற்றமை ச ம ய வளர்ச்சியின் ஒரு பங் கென்றே கூறுதல் வேண்டும்.
(அடிக்குறிப்பு பக்கம் 10)
(தொடரும்)

Page 11
ஊற்று 10 (4), 5-10 1982
மனித இன
ஆசியாவில் தென்கிழக்கு பிரதேசத்தில்
கண்டு எடுக்கப்பட்ட ஜைகான்டோபித் திகஸ் மெகாந்திரோப்பித்திகஸ் (முறையே அரக்கக் குரங்கு பெரு வான ர ம் என்று பொருள்படும் கிரேக்க சொற்கள்) என்னும் மனிதக் குரங்குகளின் புதைபடி வங்க ள் சென்ற பத்தாண்டுகளில் நிபுணர் களின் கவனத்தை கவர்ந்திருந்தன. இவற்றின் அரைக்கும் பற்களின் நீளம் 22 மி. மீ. இதை கவனத்திற்கு கொண்டு பார்க்கும் பொழுது இந்த குரங்குகளின் உடல் கொரில் லாக் குரங்கை விஞ்சிவிட்டன அல்லது கிட் டத்தட்ட அவற்றை போன்றது எனக் கணிப்பிடலாம்.
ஹாங்காங் நகரில் உள்ள மருந்துக் கடையில் வாங்கிய பற்களில் இருந்து (புதை படிவ விலங்குகளின் பற்கள், எலும்புகள் என்பன அரைத்து சீனுவில் மருந்து க ள்
தயாரிக்கப்படுகின்றன) ஜைகான்டோ பித் திகஸ் இன் 3 அரைக்கும் பற்கள் கேணிக் கர்ஸ்வாட் என்பவரால் தெரிந்தெடுக்கப்பட் டது. இந்தப் பற்களுக்கும் மானிடப் பற் களுக்கும் உள்ள தனித்தனி ஒற்றுமையை கண்டறிந்த வைடன் ரைவற் என்னும் விஞ் ஞானி ஜாவாத் தீவில் கிடைத்த பித்திகாந்தி ரோப்பஸின் மூதாதை என்ற கருத்தை வெளியிட்டார். இடைப்பிராணியாக மெத் திக்காந்தி ரோப்பஸைக் குறிப் பி டு கி ருர், இதன் மூன்று பற்களுடன் கூடிய கீழ்த்தா டைப்பகுதி ஸாங்கிரான் (ஜாவா) என்னும் இடத்தில் 1941-இல் கிடைத்தது. பின்னர் தென்சீன மாநிலங்களில் உள்ள குகையில் ஜைகாண்டோபித்திகளின் எலும்புகளும் வேறு மிருகங்களின் எலும்புகளும் கண்டு எடுக்கப்பட்டபடியால் மாமிசத்தை உண
 
 

ங்கள் (3)
蓟ar争页市每市 மருத்துவ பீடம்
பேராதனைப் பல்கலைக் கழகம்
s
வாக பாவித்துள்ளனர் என்று அறியவந்துள்
հT 3.1-
1856-இல் சென் கோதரன் (பிரான்ஸ்) என்னும் இடத்தில் 2-24 கோடி ஆண்டு களுக்கு முற்பட்ட கீழ் மயோசின் காலப் பகுதிகளில் கணிசமான பெரியமனிதக் குரங் கான திரியோபித்திகஸ்ஸின் நல்ல நிலையில் உள்ள கீழ்தாடை பற்கள் கண்டு எடுக்கப் பட்டன. இக்கண்டு பிடிப்பை பற்றி அறிந்த டாவின் இம்மாதிரி குரங்கு, மனிதனும், ஆபிரிக்கா மனித குரங்கான கொரில்லா வினதும் சிம்பன்சியினதும் பொது மூதாதை என கருதினுர், திரியோபித் திக ஸ்இற்கு நெருங்கிய மனிதக் குரங்கு இனவகைகளில் சில ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் 3-ம் புவிகாலத்தை சேர்ந்த மயே ஈ சீ ன் பிளேயோசீன் படிவுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் கண்டு எடுக்கப்பட்டன. சோவி யத் யூனியனில் உதாப்ணுே என்னும் இடத் தில் குரங்குகளின் எலும்பு மிச் சங்க ள் 1939-இல் கண்டு எடுக்கப்பட்டன. இவற் றிக்கு உதாப்னுேபித்திகஸ் என்று பெயர் இடப்பட்டது.
இத்தாலியில் தக்கானு என்னும் இடத் தில் 1872-இற்கு முன் பற்களும், 1958-இல் முழு எலும்பு கூடு ஒன்றும் அகப்பட்டது. இது ஒரியோ பித்திகஸ் என்று அழைக்கப்பட் டது. இதன் இடுப்பு எலும்பு அகன்று இருப்பதை கொண்டு இது இருகா லா ல் நடந்தது என்று கருதப்படுகிறது. இந்த மனித குரங்கு முன் பிளேயோசீன் கால முன் னுேடி என்று சுவிட்ஸர்லாந்து புதைவடிவ ஆய்வாளர் யோகான் ஹியூர்த் ஸெலர் கருது

Page 12
இவற்று 10 (4), 5-10, 1982
கிழக்கு ஆபிரிக்காவில் கிடைத் (1959-இல்) இன்னும் அதிக அக்க,ை தூண்டின. ஒல் தவாய் கால்வாயில் ஆ விஞ்ஞானிகளான மேரி லீக்கியும் லு லீக்கியும் மிக தொன்மையானதும் இது கண்டு பிடிக்கப்படாததுமான ஸின்ஞ ரோப்பஸ் என்னும் மனிதக் குரங்கின் டையோட்டை கண்டு எடுத்தனர். (ஸி கிழக்கு ஆபிரிக்கா-அரபு மொழி) கூ கற்களால் செய்த எளிய கருவிகள் அ கிடைத்தன. இவை இந்தக் குரங்குக செய்யப்பட்டவை என லீக்கி தம்பதி கருதுகின்றனர். இதன் பின் இத்தம்பதி இன்னும் தொன்மைவாய்ந்த முன்ஸின் திரோப்பஸ் இன் எலும்பு மிச்சங்களை எடுத்தனர். இதை இவர்கள் ஹோ ( ஹ பிலிஸ் அதாவது கைதேர்ந்த மனித என்று அழைத்தனர். L០ភារិទ្ធិ முன்னுேடியுடைய காலம் 18 லட்சத்து ஆயிரம் ஆண்டுகள் என்று றேடியோ க முறையால் நிர்ணயிக்கப்பட்டது. அ மையில் மிகவும் கரடுமுரடான கூழாப் களால் ஆன கருவிகள் கிடைத்தன ( மோ காபிலிஸ் உயர் வளர்ச்சி டெ ஆஸ்திரலோபித்திகஸ் வகையை சார் என அறியப்படுகிறது.
இம் மாதிரிக் குரங்குகளின் இன கள் அந்த காலத்தில் பூமியில் இன்னும் வளவோ அதிகமாக இருந்தன என் சந்தேகம் இல்லை. ஆனுல் மேல் மூன் புவிக்காலத்தின் பின் உயர் வளர்ச்சி ெ இருகால் மனித குரங்கின் எதோ ஒர் இ தற்கால மனித குலத்தை தோற்றுவித ளது. இது ஒரு வழித் தோற்ற கொ6 யை ஆதரிக்கும் விஞ்ஞானிகளின் கரு சார்ல்ஸ் டாவினும் இவ்வாறே கருதி டாவின் ஆராய்ச்சி நூல்கள் வெளி முன்னர் மனித குலம் ஒர் ஆண் ெ மூதாதையில் இருந்து தோன்றி வள தாக ஒரு மூட நம்பிக்கை இருந்தது.
இன அடையாளங்களும் அவை பற் Չեմ 6ւյւն:
உடலின் வெளித்தோற்ற ൈL; மைகளில் வெவ்வேறு நாடுகளில் ம
6

தவை
ID 602 LL
66.1 50). DU 町坊岛 լք:3ծtir @李一 ழாங் ருகே σΤΠ οι) } Այ քի GÖT Ii
5ண்டு 需酋 厅
ਯ இந்த
50
TIL Gö7
GT5 #5/7
கற் ஹோ ש, 9), நிதிது
gór 岳、
ஒருவருக்கு ஒருவர் பெரிதும் வேறுபடுகிறர்
கள், தோல் தலைமயிர் கண்கள் ஆகியவற்
றின் நிறம் மேல் இமை, மூக்கு உதடு ஆகிய வற்றின் வடிவம் ஆகியவை சிறப்பு தன்மை களாகும். இந்த அடையாளங்கள் ஒரே நாட்டு மக்களுக்குள்ளும் வேறுபடுகின்றன. ஆயினும் இந்த அம்சங்களின் அதிகமானவை நிலைத்த வம்ச வழிக்கொண்டவை. எனவே இவற்றை பெற்றிருப்பவர்களை ஒரு குறித்த இனத்தை சேர்ந்தவராக எண்ணுவதற்கு இந்த அடையாளங்கள் உதவுகின்றன.
தோலின் நிறமும் தலைமயிர் விழித் திரை ஆகியவற்றின் நிறமும் மெலனின் என்னும் பழுப்பு நிறப் பொருளின் செறி வைப் பொறுத்தது இது சிறு மணிகளா கவோ, கரைசல் நிலையிலோ கானப்படும், மனிதருக்குள் தலைமயிர் மூன்று வகைகளில் காணப்படும், அலே படிந்தது. சுருட்டை யானது, நேரானது. இவைகளின் முடி முரடாகவோ மென்மையாகவோ இருக்க லாம். வயது வந்தவர்களின் உடலின்மேல் வளரும் மயிர் சிலருக்கு அடர்த் தி யாக இருக்கிறது. சிலருக்கு அனேகமாக முளைப் பதே இல்லே.
பல இன அடையாளங்கள் முக அமைப்பு கூறுகளுடன் தொடர்பாக உள்ளன. எதிரில் இருந்து பார்க்கும் போது உள்ள அதன் வடிவம் கன்ன எலும்புகளின் வளர்ச்சியால் வரையறுக்கப்படுகிறது. கண்களின் வடிவம், மேல் இமைமீதும், சிலவேளைகளில் கீழ் இமை மீதும் உள்ள மடிப்புகளின் தன்மையிலும் அளவிலும் அவற்றுடன் கட்குழி திறக்கும் அளவையும் பொறுத்திருக்கிறது. மூக்கு பொருத்தின் உயரம் மூக்கு தண்டின் வடிவம் மடல்களின் அடிப்பகுதியின் அகலம் மூக்கு துவார நீள அச்சுகளின் போக்கு ஆகியவற் றைப் பொறுத்தே மூக்கின் வடிவம் வேறுபடு கிறது.
உதட்டில் மூன்று பிரிவுகள் உண்டு. தோல் பிரிவு, இடைப்பிரிவு, கோழை பிரிவு (உட்பிரிவு). இனச் சிறப்பு தன்மையை சித் தரிக்க உதட்டின் இடைப்பிரிவு கவன த்

Page 13
鲇 10(4),5一°,°
திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. உதட் டின் வளர்ச்சி வேறுபாடான வை. வை நடுத்தரமானவை பருத்தவைஎன பிரிக்க லாம். தலைகளை மேல் இருந்து பார்வையிடும் போது வெவ்வேறு மனிதர்களின் தலைகள் நீண்டது முதல் உருண்டையானது ଉjଦot வடிவ வேறுபாடுகளைக் கொண்டுள்ள து உடலின் உயரம் (நீளம்) மனிதனின் வயது, பால், வெவ்வேறு பிரதேச மனிதகுழு ஆகிய வற்றில் தங்கியுள்ளது. மனிதகுலம் முழு வதும் சராசரி நீளம் 165 செ. மீ ஆகும். வெவ்வேறு குழுக்களை சேர்ந்த வர் க எளி ன் உயரம் 142 செ. மீ. முதல் 181 செ. மீ. வரையும் காணப்படுகிறது. இவ்வாறு உடல் அமைப்பு சிறப்பு இயல்புகளைக் கொண்டு இனங்களை வேறுபடுத்தலாம்.
வேறு சில நிபுணர்கள் பூகோள வர லாற்று அடிப்படையில் வேறுபடுத்துகின் றனர். நவீன இனப் பிரிவுகளில் மனிதரின் தனித்தனி குழுக்களின் வாழ்விடங்களையும் அவற்றின் தோற்றத்தையும் அ வ ற் றிக் கிடையே உள்ள இனகுழு தோற்ற உறவின் தரத்தையும் கருத்தில் கொண்டுள்ளார்கள். இதன் அடிப்படையில்
நீக்ரோ அவுஸ்திரேலியா வகை அல்லது
ஆபிரிக்கா ஒஷனியா வகை, 2. ஐரோப்பிய வகை அல்லது ஐரோப்பிய
ஆசியா வகை
3. மாங்கோவிய வகை அல்லது ஆசியா
அமரிக்கா வகை
புணுக் என்னும் இ ன பா கு பா டு அறிஞர் இடைக்காலத் தி லும் புதுகற் காலத்திலும் வாழ்ந்த தற்கால ED IT S ii மனித புதைவடிவங்களை கொண்டு அவர்கள் நான்கு இன வழிக் கொடிகளாக பிரிந்திருந் தனர் என்று அவர் கருதினூர்,
(1) வெப்பமண்டல கொடி இதில் ஒரு புறம் ஆபிரிக்கா நீக்கிரோக்களும், நீக்ரிலோ பிக்மிகளும், புஷ்மன்களும் மறுபுறம் மெல் னெசியர்களும், பாப்புவன்களும், நீக்ரிட் டோ பிக்மிகளும் டாஸ்மேனியர்களும் இதை சேர்ந்தவர்களாவர்.

(2) தெற்கு இன வழிக் கொடி இதில் வேடர்கள், குரில் தீவினர்,போலினேசியர்கள், மலாயர்கள், அவுஸ்திரேலியர் ஆகியோர் அடங்குகின்றனர்.
(3) கிழக்கு இன வழிக்கொடி இதில் 16 வகையினர் அடங்குகின்றனர். மங்கோ லிய வகையினரும் பங்கு கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
(4) மேற்கு இன வழிக்கொடி எத்தி யோப்பியர்கள் உள்ளிட்ட பதினுறு ஐரோப் பிய வகையினர் இதில் அடங்கி உள்ளனர்,
சில விஞ்ஞானிகள் இரத்த குழுக்களின் வேறுபாடுகள் பற்றிய விபரங்களே பொறுத்து இனங்களே பிரிக்கலாம் என்று கூறியுள்ளனர். உதாரணமாக பாய்டு (Boyd,1950) என்னும் விஞ்ஞானி குருதியின் A, B, O Rh காரணி களைக் கொண்டு ஐந்து இனங்களை வரையறுத் தார்.
(1) காக்கேஷியாவகை (வெள்ளை) (2) நீக்ரோ (கறுப்பு) (3) மாங்கோலிய வகை (மஞ்சல்) (4) அமெரிக்க இந்திய வகை (5) அவுஸ்திரேலியா வகை
பெரிய மனித இனங்களின் சிறப்புத் தன்மைகள் நீக்ரோ அவுஸ்திரேலியா வகை இனம்:
இவ் இனம் பின்வரும் அடையாளங்களே கொண்டிருக்கும். தோல் மயிர் கண்கள் ஆகி யவற்றில் கருமை நிறம் புரிவடிவாக சுருண்ட அல்லது அலைவடிவ தலே முடி முகத்தின் மேலும் தலையின் மேலும் மிகவும் அருகிய ஆனுல் அடர்த்தியான முகம் தடைப்புறம் ஒரளவு அகன்று இருக் கும், பெரும்பா லோருக்க குறைந்த வளர்ச் சியும் மடல்களில் அகலமும் கொண்ட மூக்கு உத திகள் தடித்தது. மேல் உதடு சற்று விங்கி இருக்கும். வாய்ப்பிளவு அகன் றது. பெரும்பாலானுேருக்கு கால்கள் உட லுடன் ஒப்பிடும் பொழுது நீளமானது. நிற அமைப்பு கருமையானபடியால் நீக்ரோ

Page 14
في 3 و7 و10 س5 والرها) 20 3 ويفرضه
என வழங்கப்பட்டது. இவ் இனம் விரி பரவியுள்ளது என்ருலும் தற் பொ ( கணக்கெடுப்பின் படி 360 கோடி அதா மொத்த எண்ணிக்கையின் 10% இந்த இனத்தின் தலைக்கரு ஆபிரி கண்டத்தில் உள்ளது. இதில் வாழும் ரோக்கள் ஆபிரிக்கர்கள் என அழைக்கம் கிருர்கள். மேற்கு ஆபிரிக்காவில் உள்: களே உண்மை நீக்கிரோக்கள் ಆ( படுகிறார்கள். சூடானில் வசிப்பவர்க இவ்வினத்தவர்களே. இவர்களும் கரு யானவர்கள். புரி சுருள் வடிவ குஜ உயர்ந்த நெற்றி, நேரானது கரும் பான பெரு விழிகள், முகம் ஒப்பு நோக் சிறியது. உயர்ந்த பொருத்தும் ك #9گیjاژ மடல்களும் உள்ளன. மூக்கு தட்டை னேது உதடுகள் தடித்தவை. தாடைப் முன் நீண்டிருக்கும். தலையை மேல் இரு பார்த்தால் நீள்வடிவமாக இருக்கும், ! லுடன் ஒப்பிடும் பொழுது கால்கள்
fÒ stóð Gð) 65 y
அவுஸ்திரேலியாவிலும்ஒஷியானியாவி உள்ளவர்கள் நீக்ரோவை ஒத்திருந்தா அவர்களை நீக்ரோக்களாகு கருதுவதில் இவர்கள் அவுஸ்திரேலியா கண்டத்தின் வாசிகள், கலப்பு அற்ற அவுஸ்திரேலி 1966 இல் கணக்கெடுப்பின்படி நாற்பதி யிரம். ஆங்கிலேயர் 150 ஆண்டு காலத் பல லட்சக்கணக்கான அவுஸ்திரேலியர்க கொன்று ஒழித்துள்ளார்கள். எஞ்சிப் | ଥିତ !!। தவர்களும் முற்றும் வறண்ட பாலைவனப் தேசங்களுக்கு விரட்டப்பட்டார்கள். பெ. பாலான அவுஸ்திரேலியர் பின் வரும் தி மைகளைக் கொண்டுள்ளனர். கரும்பழு அல்லது கபிலக் கறுப்பு தோல், அலை 19கருமயிர், உடம்பின் மேல் அடர்த்தியா மயிர் தாடி மீசை என்பனவும் அடர்த் யாகக் காணப்படும் முகம் குறுகலான தாழ்ந்தது, போதிய அளவு சாய்வா நெற்றி. நன்கு வளர்ச்சியுற்ற புரு வளைவுகள் கரும்பழுப்பு விழிகள் பருத மூக்கும் அகலமான மடல்களும் கொண்ட உதடுகள் தடித்தவை. தாடைகள் சற் நீண்டிருக்கும்.
క్తి

வாக ஐரோப்பிய வகை இனம் ழ து ஐரோப்பிய இனம் வழக்கு மொழியில் வது வெள்ளே இனம் என அழைக்கப்படுகிறது. கும். இது எண்ணிக்கையில் மிகப்பெரியது. க்கா மனித குலத்தின் 53% ஆகும். அமெரிக்கா நீக் வும் அவுஸ்திரேலியாவும் கண்டுபிடிக்கப் படு பட்ட பின்னர் உலகம் முழுவதும் பரவி வர் விட்டனர். இந்த இனத்தின் முக்கிய தப் மையம் ஐரோப்பா ஆசியா, இந்தியாவில் ளும் மட்டும் ஐரோப்பியர் வகையினரான 85 மை கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். இவர் யிர் களின் பொதுப்படை இயல்புகள் பின்வரு
ழுப் மாறு.
ன்ற தோலின் நிறம் வெளுப்பு அல்லது மங்
கிய வெளுப்பு. முகத்தில் ருேஜா நிற அல் குதி பிது சிவப்பு நிற சாயல், தலைமயிர் மென் மையானது. அலை படிந்தது. நிறத்தில் வெளிறியோ கறுத்தோ காண ப் படும். நீள முகம் அதன் அமைப்பு உயரத்தின் நடுப் பகுதியில் அதாவதுமூக்கின் அடிக்கும் உதடு களுக்கும் இடையில் முன் தள்ளி இருக்கும் லும் கன்ன எலும்புகளும் தாடைகளும் குறை வம் வாக புடைத்துள்ளன. மொத்தத்தில் முகம் லே. செங்குத்தானது. தாடை நீட்டம் அற்றது. ஆதி கண்களின் ஓரங்கள் ஒரே மட்டத்தி யர் லுள்ளன. மேல் இமை மடிப்பு குறைந்த சிணு வளர்ச்சி கொண்டது. பெரும்பாலோரின் தில் விழிகள் தவிட்டு நிறம் கொண்டது. மூக்கு ளை குறுகலானது முன்னுேக்கி இருக்கும். மூக்கு pத் துளையிகளின் இடை அனேகமாக அம்பு பிர வடிவமானது. உதடுகள் மெல்லியவை நம் அல்லது நடுத்தரமானது. த லே வடிவ ம் 5ன் ஆளுக்காள் வேறுபடும்.
ந்த ஐரோப்பிய இனத்தை 2 வகையாகப்
பிரிக்கலாம். அவையாவன தி தெற்கு அல்லது இந்திய மத்திய தரைக் து. கடல் கிளே இனம்,
2 வடக்கு அல்லது அட்லாண்டிக்-பால்டிக்
கிளை இனம். து. தோல் மயிர் விழித்திரை ஆகியவற்றின் று நிறம் முதல் கிளைக்கு கருமையாகவும் இரண் டாவது கிளேக்கு வெளிறியும் இருக்கும்.

Page 15
உத்தது: (4),"ச0ை, 1982
ஐரோப்பிய இனத்தின் தெற்கு பிரதி நிதிகளாக இந்தியர்கள்,தாஜிக்குகள்,ஆர்மீனி பர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், இத்தாலியர்கள். ஸ் பாணி யர்கள் ஆகி யோரைக் கூறலாம். அலைபடிந்த தலைமயிர் பழுப்பு கண்கள் தடித்த தண்டுள்ள மூக்கு மாறுபட்ட தலைவடிவம் ஆகியவை இந்த இனத்தின் பொது இயல்பாகும். வடக்கு கிளேயின் பிரதிநிதிகளாக ரு ஷ் ய ர் க ள், பெலோருஷ்யர்கள், போலந்துக்காரர்கள், நார்வேக்காரர்கள், ஜெர்மனியர்கள் ஆங்கி லேயர் ஆகியோரைக் கூறலாம். இவர்க ளின் சிறப்புத் தன்மைகள் வெண்மையான தோல் சணல் நிற அல்லது வெண் பொன் நிற மயிர் சாம்பல் நிற அல்லது இள நீலநிற விழிகள், ஒபபு நோக்கில் நீண்ட மூக்கு
மங்கோலிய வகை இனம்
மாங்கோலிய அல்லது ஆசிய அமெரிக்கா வகை இனம் மஞ்சல் இனம் என்று அழைக் கப்படுகிறது. இது உலக மொத்த மக்கள் தொகையின் 37% இத் தொ  ைக யில்
பாதிக்கு மேல் சீனர்கள் (சுமார் 70 கோடி)
மஞ்சள் இனத்தின் பெரும் பகுதி கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நிலப்பரப்பில் வியாபித்துள்ளது. ஒஷினியாவிலும் அமெ
ரிக்கா கண்டத்திலும் கூட இவ் இனம்
பரவியிருக்கிறது. யக்கூத்தியர்கள், புர்யாத் தியர்கள், துங்கூஸ்கள், சுக்கிகள் துவீன் கள், அல்தாபினர், கில்யாக்குகள் அலேலுத் துக்கள், ஆசிய எஸ்கிமோக்கள் ஆகியோ ரும் இதில் அடங்குவர். இவ்வினத்திற்கு ரிய சிறப்பியல்புகள் பின்வருமாறு:
தோல் மஞ்சள் அல்லது மஞ்சள் பழுப்பு
நிற சாயலுடன் வெளிறியோ அல்லது ஆழ்ந்த நிறம் கொண்டோ இருக்கும்.
அனேகமாக எல்லோருக்கும் தலைமயிர்
நேராகவும் முரடாகவும் விறைப்பாகவும் கருமை நிறத்தோடும் இருக்கும் தாடி மீசைகள் வழக்கமாக காலம் கடந்தே அடர்த்தி இன்றி வளரும், இவ்வினத்தின் பற்பல பிரிவுகளுக்கும் சில இயல்புகள்

வித்தியாசமானவை. உதாரணமாக வட லத்து மாங்கோலிய வகை யின ருக்கு பெரிய முகம் நடுத்தர அளவு முன்னே நீண்டி க்கும். நடுத்தர தாடை நீட்டம், என்ன எலும்புகள் புடைத்து இருப்பதால் முகம் அதிகளவு தட்டையாக இருக்கும். விழிகள் தவிட்டு நிறமானது. கட்குழியின் வெளியோரம் உள் ஒரத்தை விட உயரத் தில் அமைந்திருக்கும். மேல் இமை மடிப்பு நன்கு வளர்ந்திருக்கும். மூக்கு நடுத்தர அளவானது. குறைவாகவே முன் பக்கம் நீண்டிருக்கும் உதடுகள் மெல்லியவை. அல்லது நடுத்தரமானவை. பலருக்கு தலை கள் நடுத்தரமான உருண்டை வடிவானது. இவ்வினம் மூன்று கிளைகளாக பிரிக்கப் பட்டுள்ளது.
வடக்கு மாங்கோலிய வகை கிளை அல்லது ஆசியா கண்டக் கிளே
2 தெற்கு மாங்கோலிய வகை கிளே அல்லது ஆசிய பசுபிக் கிளை
3 அமெரிக்கா இந்தியாக் கிளை
வடக்கு மாங்கோலிய வகைக்கு பிரதி நிதியாக புர்யாத்தியர்களை குறிப்பிடலாம். இவர்களுடைய தோல் மயிர் கண்கள் ஆகியவற்றின் நிறம் அதிக வெளிறலானது. மயிர் எல்லோருக்கும் விறைப்பாக இருப்ப தில்லை. தாடி அனேகமாக முளைப்பதில்லை. உதடுகள் மெல்லியன. முகம் பெரியது தட்டையானது.
தெற்கு மாங்கோலிய கிளைக்கு மலாயர் கள் ஜாவாவாசிகள் ஜோந் தீவுக் கூட்டத் தினரை உதாரணமாகக் கொள்ளலாம். இப்பிரதிநிதிகளின் பெரும்பாலானுேருக்கு தோல் கருமையானது. முகம் அதிகக் குறு கலானது தாழ்ந்தது. உதடுகள் நடுத்தர பருமன், தாடி அடர்த்தியாக இல்லா விட் டாலும் வளர்கிறது. தலைமயிர் சிலருக்கு அலேபடிந்தது.
அமெரிக்கா கிளையினர், குறைவாக வெளித்தோன்றும் மங்கோலிய இயல்புக ளும் அதே நேரத்தில் ஐரோப்பா இனத் இற்கு நெருங்கிய சில சிறப்பு தன்மைகளே
@

Page 16
ஊற்றுக் 0 (அ), 5-10, 1982
யும் கொண்டுள்ளனர். இதனுல் ஜரே இனத்திற்கு நெருங்கியது எனக் ெ லாம். இவ்வினத்தின் சிறப்பு தன் தலே மயிர் வழ கமாக நேராக விை தன்மையாக இருக்கும், கருமை நிறப இருக்கும். தாடி மிகவும் (9 (൧) . வளரும் தோல் மஞ்சள் கலந்து
நிறம் உடையது. விழிகள் ஆழ்ந்து நிறமா வை. முகம் பலருக்கு ೨ ತಿ@ರಿ! பெரும்பாலும் வீங்கியமூக்கு உடையவி
மனித இனங்களின் பொதுச் சி தன்மைகள்
மனித இனங்கள் ஒன்றில் இருந்து வேறுபடுத்தி அறியத் கூடிய சில கள் காணப்பட்டாலும் வெளித்
ஆறுமுகநாவலரின் சமய, 5*
அடிக்குறிப்பு
இன்று முஸ்லீம் மக்களோடு இனங்களாக அங்கீகரிக்கப்பட்டு 2. பூலோக சிங்கம், பொ, தமிழ்
jf
3. திருக்கேதீச்சரம் திரக்குடத் திரு
4 இவ்விரு நூல்களும் பின்னல் ந 5. கணபதிப்பிள்ளை, சி. நாவலர்
6 ஆறுமுகநாவலர், சைவதுரஷண
, 3, 57 ء صلى الله عليه وسلمق 1_Lو 1956
7, கணபதிப்பிள்ளை, இ. மரகதம்,
8. கனகரத்தின உபாத்தியாயர், ே மகள் அழுத்தகம், 1968 . Liğ.
9. சிவத்தம்பி, கா. ஈழத்தில் தம்
10. கைலாசபிள்ளை த. ஆறுமுகநா
பாகம், சென்னை, வித்தியாது
()

Pri ol 9LL றத்தில் ஒன்ருேடு ஒன்று G&Tւrrւյ65ւա ாள்ள னவாகக் காணப்படுகின்றன. 3) ԼՈՑshir ஒவ்வோர் இனமும் உரு அமைப்பியல் றப்புத் உடல் அமைப்பியல் ஆகியவற்றில் ஒரே ாகவும் மாதிரியானவை. பொதுவாக இனங்கள்
டி3 உருவாவதற்கு வாழ்க்கையின் இயற்கை LT (INDL முறையும் சமுதாய பொருளாதார வகையுமே : பாதித்துள்ளன. எனவே தான் மனித
இனங்கள் தங்களுக்குள் கலக்கின்றன. அதா வது புதிய எச்சத்தை உருவாக்கக் கூடியன. மனித குலத்தினதும் அதன் இனங்களுக்கு "Lå இடையே உள்ள வளர்ச்சி போக்கையும் POU L-35 ஒரு மரமாக உருவகப்படுத்தினுல் அதன் பல
கிளைகள் அக்கம் பக்கத்தில் உள் இரவை ஒன்று மட்டும் அல்ல அதிக தூரத்தில் உள்ளவை இயல்பு யும் கூட ஒன்றை ஒன்று நோக்கிச் செல் தோற் கின்றன. தமக்குள் பின்னிப் பிணைகின்றன.
Tண்து ர்கள்.
முதாயப் பணிகள் (பக் 194)
ரஜா உரிமை பெற்ற ஏனைய இனங்களும் தேசிய
ள்ளனர்.
இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள். ாழ்ப்பாணம், கலைவாணி அச்சகம், 1970 பக். 49. மஞ்சனமலர் கொழும்பு, அலாயன் அச்சகம்
1976。 」。。72 ாவலரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், சைவப்பிரகாசயந்திர சாலை.
பரிகாரம், சென்னை, வித்தியாதுபாலன யந்திரசாலை,
夏962。
வே. ஆறுமுகநாவலர் சரித்திரம், சுன்னுகம், திரு
94-95.
ழ் இலக்கியம், சென்னை, அன்ன அச்சகம்
1978 பக் 13
வலர் ப்ெருமானின் பிரபந்தத் திரட்டு, முத்லாம் ாலனயந்திரசாலை. 1954 பக், 87

Page 17
ಙ್ಹಿgo : 10 (4) 11-14, 1988
உங்கள் வாழ்வு
உலகத்தில் தோன்றிய உயிர்கள் யாவும்
வாழ்ந்து ஒரு காலத்தில் மடிகின்றன. எப்போது தோற்றம் உண்டாகின்றதோ ஒருநாள் முடிவும் ஏற்படும் என்பது நியதி யாகின்றது. உயிர்கள் பல்வேறு வடிவங் களில், உருவங்களில், தோன்றுகின்றன. தாவரங்களாகவும் விலங்குகளாகவும் தோற் றம் எடுக்கின்றன. தோன்றியவை வாழ்ந்து சிலகாலத்தின்பின் மடிந்து மண்ணுேடு மண் ணுகின்றன.
மனிதனும் மற்ற வி லங்கு களை ப் போலவே தோன்றி, வாழ்ந்து மடிகின்றன். ஆணுல் மனிதன் தனது மனத்தினுல் வாழும் வாழ்க்கை ஏனைய விலங்குகளைவிட வேறு பட்ட வாழ்க்கையாக அமைகின்றது. மணி தனுக்கு சிந்தணுசக்தி இருப்பதல்ை அவ னுக்கு பகுத்தறிவு எனப்படும் ஆருவது அறிவு உண்டு. இதல்ை மனிதனுடைய அறிவு அவனுடைய வாழ்வை மேம்பட்ட தாக மிளிரச் செய்கிறது.
உண்மையில் சிந்திப்பதற்கு மனம் என்ற சிறந்த கருவியைப் பெற்ற மனிதன் தனது பகுத்தறிவினுல் மற்ற விலங்கு களை விட சிறந்த, அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைக் கத் தவறியும் உள்ளான். இன்றைய உல கில் எத்தனை மனிதர்கள் மக்களாக தோற்
றம் எடுத்தாலும் மாக்களாகவே வாழுகின்
றனர். இப்படியான மக்களினுல் தான் இன்று உலகில் போட்டி பொருமையும் o್ನು ணுல் குழப்பமும் போரும் நடக்கின்றன. இன்றைய மனிதனின் மனத்தில் -96ում:
 
 

பில் நிம்மதி இல்லையா ?
தி ஆனந்த மூர்த்தி B D. S.
மருத்துவப் பீடம் பேராதனை பல்கலைக்கழகம்
மைதியும், இன்பமும் இல்லாமல் காணப் டுகின்றது.
இன்றைய விஞ்ஞான உலகில் மனிதன் த்தனையோ மாற்றங்களை ஏற்படுத்திக் காண்டுள்ளான். ஆணுல் அவனுடைய ாழும் முறையில் மட்டும் எத்தனையோ மாற்றங்கள். மனிதன் அன்று குகைகளிலும் தர்களிலும் மற்ற விலங்குகளுக்கும், மின் லுக்கும், இடிமுழக்கத்திற்கும், மழைக்கும் யல் காற்றிற்கும் அஞ்சி, அஞ்சி எப்படி க்கத்துடன் வாழ்ந்தானுே அப்படியே இன் ம் வாழ்கின்றன். அயல் நாடுகளின் ஆக் ரமிப்பு, அணுக்குண்டின் பயமுறுத்தல், ஆயுத முனையில் கொலே, கொள்ளை, விமா ரக் கடத்தல், சனத்தொகை அதிகரிப்பு உணவு பற்ருக்குறை, போதை வஸ்துக் ளின் பயங்கர பாவனை, இன்னும் எத் னேயோ பயமுறுத்தல்கள். இத்தனை பய மறுத்தல்களும் மனிதனுடைய மனத்தில் மைதியின்மையை ஏற்படுத்துகின்ற ன. ண்மையில் சற்றுநேரம் நம் மனத்தை லையாது நிறுத்தி ஒரு தனியிடத்தில் அமைதி ாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் நாம் ாழும் வாழ்க்கையின் அர்த்தமில்லாத
ன்மை தெள்ளெனப் புலப்படும்.
இன்றைய உலகில் மனிதனின் மனத் ல் அமைதியும் அன்பும் ஆனந்தமும் இல்லை லகத்தில் உள்ள ஆடம்பரப் பொருட்களே எல்லாம் தான் பெற்றுவிட்டால் இன்பமாக ாழலாம் என்று நம்பிக்கை கொள்கிருன், இதனுல் இTைகடல் ஒடியும் திரவியம்

Page 18
堑巫0(4)薰一重4。夏98廖
தேடு' என்று கூறி பணம் சம்பா, அந்நிய நாடுகளுக்குச் சென்று பணத்து வருகின்றன். வியர்வை சிந்தி உழை பணத்துக்கு நிறைய ஆடம்பரப்பொருட் வாங்கி வீட்டில் போடுகின்றன்.
அந்த உலகியற் பொருட்களில் இல் காண முனைகின்றன். அவற்றை நிலை வை என்றும் அவற்றில் நிரந்தரமான பம் உண்டு என்றும் எண்ணி மயங்கு ரூன், அப்பொருட்களில் பழுது ஏ է "Gaյր வருந்துகின்றன். களவெடு பட்டாலோ விசனம் அடைகின்றன். உடம்பே நிலையில்லாதது என்பதனை மறந்து, தனக்கு என்று பல நிலையில் பூரணமற்ற ஆடம்பரப்பொரு ட் க ளே நினைத்து அவற்றில் இன்பம் துய்க்க கின்றன். ஆனல் அவனுக்கு கிடைப்ப துன்பமும், பயமும், கள்வரின் மிரட் காடையரின் அச்சுறுத்தல் அனுெெ உயிருக்கே ஆபத்தாகிறது. சிலர் எவ்ெ பணம் இருந்தும் நிம்மதியின்றி, இ) துரக்கமேயின்றி, என்றும் ஏக்கத்துடன் கின்ருர்கள்.
இதனேயே திருவள்ளுவரும் :
நில்லாதவற்றை நிலையின எண்றுன புல்லறிவாண்மை கடை" என்று அறிவுறுத்துகின்றர்.
இன்னும் மனிதன் அமைதியுடனும் பத்துடனும் வாழ்வது எப்படி ? போ6 பொருட்களை உண்ட தாலா ? அல்லது ெ மகளிரை நாடுதலாலா ? இல்லை இ அங்கேயும் பூரண அமைதியில்லே ம துன்பமே விளையும்,
இன்பம் என்பது உண்மையில் வொரு மனிதனுடைய சொத்தா ஆனந்தம் அவனுடைய உள்ளத்தில் உண்டு, மனிதன் நிலையில்லாத பொ களில் தனது இன்பத்தைக்கான முற்.
12

நிக்க டன் த்த తాడిగా
Tւյմ)
T657 இன் கின்
dias'
தன் யும்
RT35
ாரும்
இன் தைப் பாது
ஒவ் கும்.
மல் நிலையான ஒரு பொருளைப் பற்றி நின் ருல் வாழ்வில் என்றும் ஆனந்தமே.
|ෙකුඹඨ කණ්reir பொருட்கள் எல்லாமே நிலையற்றவை பூரணமற்றவை. ஆனல் இந்த பிரபஞ்சத்தையே படைத்து அதில் நட்சத்திர மண்டலங்களேயெல்லாம் jain-த்த ஒரு மேலான சக்தி மட்டும் நிலையானதும் பூரணமானதும் ஆகும். இந்த உலகத்தை பும், உலகப் பொருட்களையும் உயிர்களையும் படைத்து, நிலைக்கச் செய்வதும் அதே மா பெரும் சத்தியாகும். அந்த சக்தியை நாம் பற்றிக்கொண்டு வாழ்ந்தால் வாழ்வில் கவலை என்பதே கிடையாது. ஆனந்தமும் அமை தியும் பெருகும்.
அந்த மேலான, நிலையான, பூரண மான சக்தியே இறைவன் ஆவன். இந்த சக்திக்கே வெவ்வேறு சமயங்கள் உருவங் களைக் கொடுத்து வழிபடும் முறையைக் காட்டுகின்றன.
இதனேயே திருவள்ளுவரும் : தனக்குவமை இல்லாதான் தாள்
சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
என உணர்த்துகின்ருர்,
அந்த ஒரு மேலான சக்திக்கே வெவ் வேறு உருவங்களே வெவ்வேறு சமயங்கள் போதிக்கின்றன. ஆனல் கடவுள் ஒன்றே.
தெய்வம் பலபல சொல்லி-பகைத் தியை வளர்ப்பவர் மூடர்
உய்வதனைத்திலும் ஒன்ருய்-எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்
என பாரதியார் மதங்களின் பெயரால் மனி தனிடம் ஏற்பட்ட பிரிவை சாடுகின்றர். அந்த ஒரே சக்தி வெவ்வேறு உருவங்களைக் கொடுத்து தமது தெய்வமே மேலானது என வாதாடுகின்றன பல சமயங்கள். இத ணுல் மக்களிடையே பிரிவும் எதிர்ப்பும் ஏற்

Page 19
ஊற்று 10 (4) 11-14, 1982
படுகின்றன. மனிதனுடைய நன்மைக் இாகவே ஏற்படுத்தப்பட்ட சமயங்கள் இன்று மனிதனைக் கூறுபோட்டு அவர்களிடையே வேற்றுமையை வளர்த்து மக்களிடையே போட்டியையும் பூசலையும் உண்டாக்கியுள்
ତitଞ୍ଜନ
அந்த மேலான சக்தி எங்கும் நிறைந் ததும் வடிவம் அற்றதும் ஆகும். எனினும் காலத்திற்குக்காலம் இந்த மேலான சக் தியை மக்களுக்கு உணர்த்தி அவர்களை மீளாத் துன்பத்தில் இருந்து மீட்க அந்த சக்தி மனித உருவில் உலகுக்கு வருகின்றது. கண்ணனும், ராமனும், யேசுவும், புத்த பக வானும், முகமது நபியும் தோன்றி இந்த மேலான சக்தியை உலகுக்கு உணர்த்தி மறைந்தனர் அவர்கள் தோற்றத்தின்பின் புது மார்க்கங்களும் சமயங்களும் ஏற்பட்
GT
எங்கும் நிறைந்த அதேசக்தி எம்முள் ளேயும் உள்ளது. அதுதான் எம்மை எல் லாம் இயங்கச் செய்கின்றது. GTL täiej உள்ளே உள்ள அந்த சக்தியை நாம் காண முடியுமா? எம்முள்ளே நம் பார்வையைச் செலுத்தினுல் நிச்சயமாக நாம் அந்த சக் தியைப் பார்க்க முடியும். எம்முடைய கண் கள் இரண்டும் வெளியேஉள்ள பொருட்களை மட்டுமே பார்க்க உதவும். ஆணுல் உள்ளே பார்க்க இயலாதே. இந்த கண்களால் சடப்பொருளை மட்டுமே காணமுடியும் சக் தியைக் காண இயலாது.
உண்மையில் நமக்கு அகக்கண் ஒன்று உண்டு. ஞானக்கண் என்றும் நெற்றிக்கண் என்றும் இதனையே கூறுகின்ருேம். இந்தக் கண்மூலம் எம்முள்ளே பார்வையைச் செலுத் தினுல் அந்தச் சக்தியை ஜோதியாக உணர (Լուգ պth.
தியானம் செய்வதன்மூலம் நாம் எம் முள்ளே அந்த சக்தியை உணரமுடியும் இந்த சக்தியை எம்முள்ளே உணரும்போது எமக்கு ஒருவித ஆத்மசக்தி உண்டாகிறது.

இதனுல் வாழ்க்கையில் அமைதியும் ஆனந்த மும் உண்டாகிறது. தியானம் செய்துவரும் போது எமது மனநிலையில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. அச்சம் என் பது நீங்குகின்றது, எம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்கள் நம்மை விட்டு அகலு கின்றன. உதாரணமாக புகைத்தல், மது பானம் அருந்துதல் என்பன. உடல் பருமன் அதிகரித்தவர்களின் உடல் நிறையில் குறை வும் ஏற்படுகின்றன. இவையாவும் விஞ் ஞான முறையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படியே தியானமூலம் கடவுளேக்கண்டார். அவர் தனது ஞானத்தை பலருக்கு உணர்த் தினுர், அவர்களில் முக்கியமாகக் குறிப் பிடத் தக்கவர் சுவாமி விவேகானந்தர் ஆவர். இவரும் தியானமூலம் இறைவனைக் ց հիմլ-frri.
இதனுல் ஒரு மேலான ஆத்மீக சக்தி யையும் வசீகரத்தையும் அவர் பெற்ருர், அவருடைய தியானத்தால் இறைவனைக் கண்டு பெற்ற சக்தியால் எமது இந்து சம யத்தையே மேற்கு நாடுகளில் பரப்பினுர், அவருடைய பேச்சைத் தொடங்கும்போது சகோதர சகோதரிகள் என்று விளித்து மேல் நாட்டவரின் மனதைக் கவர்ந்தார்.
அவர் கூறியதுபோல அன்பே இறை வன். எமது இதயத்திலேயே இறைவன் இருக்கிருர் என்ருர் வாழ்கின்ற கடவுள் எமக்குள்ளேயே இருக்கின்ருர் என்றும் உன் கண் முன்னுலேயே தெரிகின்ற உன் சகோ தரனிடம் நீ அன்பு செய்ய முடியாவிட் டால் உன் கண்ணில் தெரியாத கடவுளை எப்படி அன்பு செய்வாய் என்றும் கூறினர்.
அன்பே கடவுள். 22 - Göy 65), LTD uğur göT : அன்பே இறைவன். உண்மையான அன்பு என்ருல் என்ன? நாம் நமது தாய் தந்தை பரிடமும் சகோதர சகோதரிகளிடமும் மனைவி மக்களிடமும் மட்டும் காட்டும் அன்
13

Page 20
ಶಿಮ್ಟಿಸಿ $ 20 (4) 11-4 gpg
பல்ல. உலகில் உள்ள உயிர்கள் அனே லும் இறைவனைக் காணவேண்டும் . வுயிர்களிடத்து காட்டும் பரந்த அன் உண்மையான அன்பாகும். உயிர்களை புறுத்தாமலும் கொல்லாமலும் tվհծո հ) Զணுமலும் நாம் இருக்கவேண்டுமானுல் அ பரந்த அன்டே தேவை.
அன்பும் சிவமும் இரண்டென்பர்
அறிவில அன்பே சிவமாவ தாரும் அறிந்திலர் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே இவமா அமர்ந்திருப்பாரே,
திருமந்திர மேலும் சுவாமி விவேகானந்தர் 1896 ஆண்டு இலண்டன் மாநகரில் பேசிய பொழிவில் " நீ கடவுளை வழிபட கே. லேக் கட்டலாம், அது நல்லதே. 呜@ அதைவிடச் சிறந்ததும், மிகவும் உயர் தும் ஏற்கனவே உள்ளதும் மனிதனுடை A. --Gae) Li T 35ıb ** என்ருர்,
ஊற்று வருட சந்தா (5.Lf7
விரும்புவோர் காசோலேயுடன் முகவரி :
5f 6 IT
26Tipi
ADT
திருநெ
un piu
R

Tri
15 (தபாற் செலவுட்பட), பெற
5 ஆசிரியர்
நிறுவகம் அம்மன் வீதி
| FTG FTTD .
இக்கருத்துக்களையே இன்றும் மேற்கு நாடுகளில் பரப்பி வருகின்ருர் հմո լքեց கொண்டிருக்கின்ற சற்குருவான (3505 Լ03, ராஜ்ஜி. இவரிடம் பலகோடி மக்கள் ஞானம் பெற்று தியானம் செய்து வருகின்றர்கள் எம்முள்ளேயே கடவுள் இருக்கின்ருர் என் றும் அவரை நாம் ஞானக் கண்ணுல் காண
முடியும் என்றும் அதற்காக எப்படி தியா
னம் செய்யவேண்டும் என்பதனையும் காட்
டித் தருகின்ருர்
கவலையற்ற நிம்மதியான பெருவாழ்வு வாழவும் அமைதியுடனும் தூய அன்புடனும் உலகத்தில் வாழ்ந்து தோல்விகளைக் கண்டு துவழாமல் தைரியத்துடனும் கோபமும் அச் சமும் நீங்கி என்றும் இன்புற்றிருக்க தியா னம் ஒன்றே வழியாகும். எம் உள்ளே உள்ள சத் சித் ஆனந்தப் பொருளை நாம் அனுப வித்து ஆனந்தம் கொள்வோமாக,
ԹՅուriւ கொள்ளவேண்டிய

Page 21
ஆற்று 10 (4), 15-21 1982
ஐம்பதாண்டு இலங்கையின் அதன் தாக்
டொனமூர் ஆணைக்குழுவினர் மத் É ULI வர்க்க அரசியல் தலைவர்களின் எதிர்ப் புக்களை அலட்சியம்செய்து துணிவுடனும், தீர்க்கதரிசனத்துடனும், அறிமுகப்படுத்திய முற்போக்கான-முக்கியத்துவம் மிகுந்த-ஜன நாயக அரசியல் சீர்திருத்தமே, 1931இல் இலங்கை பெற்ற சர்வசன வாக்குரிமை என லாம். ஆசியாவின் குடியேற்ற நாடுகளில் முதன் முதலில் சர்வசன வாக்குரிமையைப் பெற்ற பெருமை இலங்கைக்கேயுரியது. மேலும், ஜனநாயக பாரம்பரியங்களுக்குப் புகழ்பெற்ற பிரித்தானியாவில், சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்ட மூன்று ஆண்டு களுக்குள்ளேயே, இலங்கையும் அப்பெரும் பாக்கியத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக் இது சர்வசன வாக்குரிமையின் வெற்றிகர மான ஐம்பதாண்டுப் பூர்த்தியினைக் கடந்த ஆண்டு இலங்கை கொண்டாடியது. சர்வ சன வாக்குரிமையினுல் இலங்கையின் அரசி பல் வளர்ச்சியில் ஏற்பட்ட தாக்கங்களை மதிப்பிட இக்கட்டுரை முற்படுகிறது.
34 வருட பாராளுமன்ற ஆட்சியையும், 50 வருட சர் வ ச ன வாக்குரிமையையும், பூர்த்திசெய்துவிட்ட இலங்கையின் ஜன நாயக அரசியல் அரங்கில், வரவேற்கத்தக்க மாற்றங்களுக்கும்.அபிவிருத்திகளுக்கும் பின் ன்னியாகச் சர்வசன வாக்குரிமை இருந்து வந்துள்ளது. σπουεσα வாக்குரிமையின் பிர ய்ோகத்துட்ன் இணைந்த அம்சங்களாக அர சியல் முதிர்ச்சியும், ஜனநாய்க மரபுகளின் வளர்ச்சியும், படிப்படியாக இடம் பெற்று வந்துள்ளதை அவதானிக்கலாம்.
 

சர்வசன வாக்குரிமையும்,
ன் அரசியல் வளர்ச்சியில் கமும்
வே. மணிவாசகர், B. A. (Hons)
உதவி விரிவுரையாளர், அரசறிவியற்றுறை, பேராதனை.
இலங்கையில் சர்வசன வாக்குரிமையின் தனிமுதன்மையான அரசியல் விளைவினை,
அளிக்கப்பட்டு வரும் வாக்குகளின் சதவீதத் தில் ஏற்பட்டுவரும் துரித வளர்ச்சியினூடாக
அறியமுடிகிறது. 1947 தேர்தலில் பதிவுசெய் யப்பட்ட வாக்குகள் 613 சதவீதமாகும் . இச்சதவீதம் பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்துச் சென்று, 1977 தேர்தலில் 867 சதவீதமாகியது. இது உல கி ன் மிகக் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தி யாவின் 55 சதவீத வாக்களிப்புடனும், அமெரிக்காவின் 60 சதவீத வாக்களிப்புட னும், இங்கிலாந்தின் 75 சதவீத வாக்களிப் புடனும் ஒப் பி டு ம் போது அதிகமானதா கும். இதன்மூலம் இலங்கை வாக்காள சின் அரசியல் ஈடுபாடும், ஜனநாயக ஆர்வ மும் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்துள்
| ongor groմրջյրrլ է :
இலங்கையில் சர்வசன வாக்குரிமை அர சியல் வளர்ச்சியில் ஏற்படுத்திய மற்றேர் தாக்கத்தைக் கட்சிமுறை வளாச்சியூடாக, குறிப்பாக, ஜனநாயக அரசியல் முறையின் இன்றியமையாத முந்நிபந்தனையான இரு கட்சிமுறை வளர்ச்சியூடாகஉய்த்தறியலாம்.
上 இலங்கையில் பல கட்சிகளின் இயக்கத்தை
அவதானிக்க முடியினும் இரு கட்சிகளே,
,தா வ து, ஐக்கிய தேசியக் கட்சியும் ہوئے۔ "பூரீலங்கா சுதந்திரக் கட்சியும், அல்லது அக் கட்சிகள் தலைமை தாங்கும் கூட்டணிகளே,
அரசாங்கங்களை அமைத்து வந்துள்ளன.
இடதுசாரிகளும், இன அடிப்படையிலான கட்சிகளும் கூட்டு மந்திரிசபைகளில் காலத்

Page 22
ஆற்று 10 (த்), 5-21 1982
துக்குக்காலம் இடம் பெற்றபோதும், சாங்கத்தைத் தனித்து அமைக்கும் அ குப் பலம்கொண்ட கட்சிகளாக வளர
வில்லை.
கட்சிமுறை அல்லது இருகட்சி ( யுடன் இணைந்ததாக, மேலும் ஒர் அம். அவதானிக்கப்படல் வேண்டும். அத சுயேச்சை அங்கத்தவர்களின் தெ வீழ் ச் சி யடைந்து வந்துள்ளதேயா 1947 தேர்தலில் 21 சுயேச்சைகள் 6ெ பெற முடிந்தது. இத்தொகை படிப்ப கக் குறைந்துவந்து 1977 தேர்தலில் முகி விட்டது. கட்சியடிப்படையில் அ6 இரு கட்சியடிப்படையில் வாக்கரி, போக்குக்கு இணையாக, சுயேச்சை அங் வர்களை வாக்காளர்கள் நிராகரிக்கும் ே கும் வளர்த்து வந்துள்ளது.
மக்ஸ்வெபர், மொறிஸ் டுவேயர் வர், ஸ்கட்ஸ்நெய்டர் போன்ருேர் சர்வ வாக்குரிமையின் அறிமுகத்துடனேயே ந வெகுஜனக்கட்சிகளின் வளர்ச்சியை அ யாளப்படுத்துகின்றனர். இலங்கை கட்சிமுறை வளர்ச்சியை ஆராய்ந்த அ ரான கல்வின் வூட்வேட் என்பவர் " இ கையின் கட்சிகள் உயர்குழாத்தினரின் ஆ கம் மிகுந்திருந்த ஆரம்பகால நிலை ருந்து விடுபட்டு, மக்கள் நலன்களையும், கத்தன்மைகளையும் பிரதிபலிக்கும் அை புக்களாக மாற்றமடைந்துள்ளன கிருர், அத்தகைய மாற்றத்துக்கான அவ மாகச் சர்வசன வாக்குரிமையே அமைந் என்பதில் ஐயமில்லை.
இலங்கை வாக்காளர்கள் &ո5, լ։ போன்ற குறுகிய நோக்கங்களைக் 5tபரந்து ரீதியில், கட்சியடிப்படையில் ெ களித்து வருவதையும் 1956 தேர் விருந்து தொடர்ச்சியாக அவதானித்து C கிறது. சில காலகட்டங்களில், சில தொ களில் சாதி, மத வேறுபாடுகள் தலது
16.
 

「_g。
15ւն *து, Jirš: தலி
|L குதி
னும், இன்று, பெளத்த மதத்து வர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்தோ ரும், கொய்கம சாதியினர் பெரும்பான்மை
யாக வாழும் தொகுதிகளில் கராவு, துராவ
சாதிகளைச் சேர்ந்தோரும் தெரிவுசெய்யப் படுகின்றனர். மேலும், சாதி வேறுபாடுகள் இறுக்கமடைந்து காணப்படும் நாட்டின் வடபகுதியில் கடந்த தேர்தலில் உயர்ச்ாதி
யினர் பெரும்பான்மையாக வாழும் தொகுதி
யொன்றில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வாக்காளரிடையேயான இத்தகைய மன மாற்றங்களுக்கு, சர்வசன வாக்குரிமையின் தொடர்ச்சியின் வாயிலாக அவர்கள் பெற்று வந்த அரசியல் பயிற்சியே காரணமாகும்.
சாதி, சமய அடிப்படையிலான வாக் களிக்கும் போக்கு அருகிவருகிறது எனும் போது, இயல்பாகவே வலிமைபெறும் மற் ருேர் சிறப்பம்சம் யாதெனில், மக்கள் பொருளாதாரக் காரணிகளுக்கு முக்கிய மளித்து வாக்களிக்கின்றனர் என்பதேயா கும். 1956 இன்பின் உணவு,வேலைவாய்ப்பு,
வாழ்க்கைச் செலவு போன்ற பொருளாதார
விடயங்களே தேர்தல் மேடைகளை அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன. இலங்கையின் அரசியல் 'அரிசி அரசியல்" (Rice Politics) என விமர்சிக்கப்படினும் அவ்வம்சம்கூடப் பொருளியல் அடிப்படை கொண்டதே யென்பது உணரப்படல் வேண்டும்.
இளைஞர்களையும், இராமிய மக்களையும் இருபெரும் அரசியல் சக்திகளாக உருவாக்
கியதன்மூலம், சர்வசன வாக்குரிமை ஏற்
படுத்திய உறுதியான தாக்கத்தை உணர லாம். இலங்கைத் தேர்தல்களில் வெற்றியை நிர்ணயிப்போராக மிதக்கும் வாக்குகளை (Floating Votes) கொண்டுள்ள இளைஞர் களே காணப்படுகின்றனர். ஏனைய வளர் முக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை யில் இளைஞர்களின் தொகை அதிகமாகும்.

Page 23
ٹو&نیy gہلے سے کیq ,(4) 10 نئ gyرہ:قفقٹھ
15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள், இலங்கையின் சனத்தொகை யில் சுமார் 21 சதவீதமாவர். இவர்கள் எதிர்நோக்கும் பாரிய பொருளாதாரப் பிரச் சினையாக வேலையின்மை உள்ளது. அரசியல் களத்துக்குப் புதிதாக அறிமுகமாகின்ற இவர்கள், தமது பிரச்சினைகளுக்கு எக்கட்சி உகந்த பரிகாரத்தை முன்வைக்கிறதோ, அதற்கே தமது வாக்கையும் அளிக்கின்ற னர். இலங்கையில் சமீபகாலத் தேர்தல் முடிவுகள் யாவும், இளைஞர்களின் மிதக்கும் வாக்குகளிஞலேயே தீர்மானிக்கப்பட்டு வந் துள்ளன.
இளைஞர்களின் வாக்குகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பது உண்மையாயினும், தேர்தலின் போக்கை நிர்ணயிக்கும் பிரதான காரணியாக, அபரி மிதமான வாக்குப்பலம் பெற்றுள்ள கிரா மிய மக்களே உள்ளனர். இன்று இலங்கை யில் சுமார் 75 சதவீதத்துக்கு மேற்பட் டோர் இ ரா மிய வாக்காளர்களேயாவர். 1956 தேர்தலுடன் ஒரு சக்தியாக எழுச்சி யடைந்த இவர்கள், தொடர்ந்து அரசியல் அரங்கில் ஆதிக்கம்செலுத்தி வருகின்ருர்கள் சனத் தொகைச்கேற்பப் பிரதிநிதித்துவம் வழங்கும் ஜனநாயகப் பண்பைத் தேர்தல் தொகுதி நிர்ணய ஆண க் குழு க் க ள் தொடர்ந்து அனுசரித்து வந்ததன் காரண மாக, வாக்குப்பலம் நகரங்களிலிருந்து கிரா மங்களை நாடி நகர்ந்து வந்துள்ளது.
இலங்கையில் சர்வசன வாக்குரிமையின் விளைவாக அரசியலில் பிரதேசரீதியான பண்புகளின் ஊடுருவலைக் காணலாம். ஐக் கிய தேசியக்கட்சி மேல்மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம், தென் போன்றவற்றில் அதிக செல் வாக்கைப் பெற்றுள்ளது. பூரீலங்கா சுதந் திரக் கட் இ பின் அதிக செல்வாக்கினைப் பொதுவாகப் பின்தங்கிய இராமிய மக்கள் மிகுந்து, விவசாய மாகாணங்களில் காண
に

முடிகிறது. இடதுசாரிகள் கொழும்பு நகரி லும், கொழும்பிலிருந்து மாத்தறை வரையி லான தென்மேல் கரையோரத்திலும்,தமிழ்க் கட்சிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஆதரவு பெற்றுள்ளன. இதனுல் குறிப்பிட்ட இல மாகாணங்களின் அல்லது பிரதேசங் களின் மக்கள், குறிப்பிட்ட சில கட்சிகளுடன் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள தைக் காணமுடிகிறது.
இத்தகைய பிரதேசரீதியான பண்பினை மேலும் உட்சென்று மாவட்ட அடிப்படை பிலும் நுணுக்கமாக நோக்கமுடியும். g[ ڑھلگfT வது, மாத்தளை, கண்டி, குருநாகல், காலி நுவரேலியா, மொனராகலை, கேகாலை, இரத் தினபுரி என்ற 8 மாவட்டங்களும் ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்லது பூரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ நிரந்தர கோட்டை களாக என்றும் இருந்ததில்லை. இம்மாவட் டங்களில் வாழும் மக்கள் ஒவ்வொரு தேர் தலிலும், இருகட்சிகளில் ஏதாவது ஒன்றை மாறி, மாறி ஆதரித்து வந்துள்ளனர். இலங் கையின் மொத்த வாக்காளரில் 40 சதவீதத் தை இவ்வெட்டு மாவட்டங்களும் கொண் டிருப்பதால், எக்கட்சி இம்மாவட்டங்களைக் கைப்பற்றுகிறதோ, அதுவே அரசாங்கத்தை பும் கைப்பற்றுகிறது என்பதே, அரசியல் அறிஞர்களின் அண்மைக்கால அவதானிப்
Tregió o
ருெபேட் அல்பேட் எனும் அறிஞர் கட்சியும், சமூகமும் எனும் தமது நூலில் பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா எனும் நாடுகளில் தொழிற்கட்ஓ அல்லது இடதுசாரிக்கட்சி ெதாழிலாள வர்க் கத்தினருக்கு அப்பாலிருந்தே பெருமளவு ஆதரவைப் பெறுவதாகக் கூறுகிருர், ! அதாவது, வர்க்க அடிப்படையிலான வாக்க ரிப்பு அந்நாடுகளில் அருகியுள்ளதாகக் தறிப்பிடுகிருர், எனவே, அத்தகைய அம்சம் இலங்கையில் காணப்படின் ஆச்சரியப்படத் தேவையில்லை. வலதுசாரிக் கட்சியான ஐக்
17

Page 24
இவற்று : 40 (2), 5-21, 1982
கிய தேசியக்கட்சிக்குத் தொழிலாள வகு பினரின் பெருமளவு ஆதரவுண்டு. அே போன்று இடதுசாரிக் கட்சிகளும் உயர் ம திய வர்க்கத்தினரிடையே கணிசமான ஆத வைக் கொண்டுள்ளன. சோசலிசக் கட் என்று கூறிக்கொள்ளும் பூரீலங்கா சுதந்தி கட்சியும், கலப்பு ஆதரவைப் பெற்றுள் ஒரு கட்சியாகவே உள்ளது. ஏனைய மேற் நாடுகள் போன்றே இலங்கையிலும் சர்வச வாக்குரிமையின் பிரயோகம் வர்க்க அடி படையிலான அரசியலுக்கு வழிகாட் ఇ్కుు
1931-க்கு முன்பு இலங்கையின் வகு வாரிப் பிரதிநிதித்துவம் வளர்த்துவிட் இனவாதத் தீயை, சர்வசன வாக்குரிை அனைத்துவிடும் என டொனமூர் குழுவின் எதிர்பார்த்தனர். ஆணுல் பின் வந்த அர பல் நிகழ்வுகள், அவர்களின் எதிர்பா புக்கு மாருகவே அமைந்தன. மூன்ரு உலக நாடுகளின் அரசியலில் பரிட்சய மிக்கவரான யேம்ஸ் கொலமன், சர்வச வாக்குரிமையின் அறிமுகம், இந்நாடுகள் இனவாதத்தை வளர்க்கும் மேலதிக கார களுள் ஒன்ருக அமைந்தது 8 என்கிரு இலங்கையின் நவீன இனவாதத்தை மத்தி வகுப்பினரின் தோற்றத்துடன் அடையாடு படுத்தும் வரலாற்று அறிஞரான ஜி. மென்டிஸ், அதன் தீவிரமான கான அடித்தளங்கள், சர்வசன வாக் மையை அடுத்துவந்த 1940 தசாப்தத் லேயே இடப்பட்டன " என்கிருர், இ6 கையின் அரசியலை ஆராய்ந்த அறிஞர்களு ஒருவரான ருெபேட் கேணி, சர்வசன வ குரிமை விஸ்தரிக்கப்பட்டபோதும், அதி ரம் குடியேற்ற நாட்டு ஆட்சியாளர்கள் மிருந்து தெரிவுசெய்யப்பட்ட இலங்ை பிரதிநிதிகளுக்குக் கைமாறியபோதும், தீ இனவுணர்வுகளும், இன அடிப்படையிலா பிரிவுகளும் அரசியலில் பெறும் முக்கிய வம் அதிகரிக்கலாயிற்று 10 என்கிறர்
夏教

இலங்கையில் தேர்தல் முடிவுகளைத் தள்ளிவிட்டு, கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை மட்டும் கவனத்தில் கொள்ளும் போது சர்வசன வாக்குரிமையின் பிரயோ கத்தில் அபூர்வமான உண்மையொன்றைக் காணமுடிகிறது. அதாவது, ஐக்கிய தேசியக் கட்சி 1956 தேர்தலைத் தவிர, மற்றும்படி, தோல்வியுற்ற சந்தர்ப்பங்களிலும் கூட, மொத்த வாக்குகளைப் பொறுத்தவரையில் முன்னணியிலேயே நின்றுள்ளது. இதனுல், சர்வசன வாக்குரிமையின் அரசியல் விளைவு களுள் ஒன்ருக மறைமுகமான ஒரு கட்சி gag:Slášsib * (Indirect One Party Domination) உருவாகியுள்ளது எனலாம். இந்நிலை தொடருமாயின் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலவெற்றி
களே உறுதிப்படுத்தும் எனக் கூறமுடியும்.
சர்வசன வாக்குரிமையினுல் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வின் பிரதான விளை வே, பொது மனிதயுகத்தின் (Common Man Era) தோற்றம் எனலாம். 1956 இல் இப்பொது மனிதயுகம் மலர்ந்ததாகக் கரு தப்படுகிறது. சிறுபான்மையினரான நகர்ப் புற மத்தியவர்க்க உயர் குழாத்தினர்,பெரும் பான்மையோரான கிராமிய மக்கள் மீது செலுத்தும் ஜனநாயக விரோதப் பண்பான அரசியல் ஆதிக்கத்துக்குச் சர்வசன வாக் குரிமை முற்றுப்புள்ளி வைத்துவிடும் என டொனமுர் குழுவினர் கருதியது, கைகூடத் தவறவில்லை. பொதுமனித யுகத்தின் உதயத் துடன், சிங்களப் பிரதேசங்களில், பெளத்த குருமாரும், ஆயுள்வேத வைத்தியர்களும் சுயபாஷா ஆசிரியர்களும்வழிகாட்டும் பாமர மக்கள், எதிர்கால இலங்கை அரசியலில் சக்திவாய்ந்த சமூக மூலமாக மாறலாயினர். தமிழ்ப்பிரதேசங்களில் பொது மனித யுகத் தினை, சாதி வேறுபாடுகளைத் தகர்த்தெறிய வேண்டும் என்ற புரட்சிகரமான சமூக உணர்வின் தீவிர அரசியல் ஊடுருவல் வாயி லாக இனம் காணலாம்.

Page 25
ಇರಾಶಿರಾ : 10 (4), 18-21, ಬಿಳಿಜಿತಿ
சர்வசன வாக்குரிமையினுல் அரசியல் வளர்ச்சியில் ஏற்பட்ட தாக்கங்களை ஆராயும் போது, சர்வசன வாக்குரிமையினுல் விளைந்த சமூக, பொருளாதார முன்னேற்றங்களை மடுப்பிடுவதும், வலியுறுத்துவதும் அவசிய மாகிவிடுகி றது. ஏனெனில் இச்சமூக, பொரு ளாதார மாற்றங்களினுல், அரசியல் வளர்ச்சி வேகமாக முன் தள்ளப்பட்டமை, மறுக்க முடியாத உண்மையாகும். மக்களின் வாக்கு களேப் பெறுவதற்காக, அரசியல் வாதிகள் மக்கள் நலன் பேணும் நடவடிக்கைகளில் ஊக்கமாக ஈடுபடுவர் என டொனமூர் குழு வினர் கருதியமை, பலன் அளிக்கத் தவற வில்லை. 1930-க்கும் 1940கக்கும் இடைப் பட்ட பத்து வருடகாலத்தில் கல்வி, சுகா தாரம், கைத்தொழில், விவசாயம் போன்ற சமூக, பொருளாதாரத்துறைகளில் பிரமிக் கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டதாகக் கருதப் படுகிறது. இலங்கைச் சட்ட சடையின் முத லாவது தலைவரான டி வி. ஜெயதிலகா, 1931-40-க்கிடைப்பட்ட 9 வருட காலத் தில் செய்யப்பட்ட சேவைகள், அதற்கு முந்திய 90 வருடகாலத்தில் செய்யப்பட்ட சேவைகளைவிடப் பலமடங்கு அதிகமான வை ' + ' என ஒருசமயம் குறிப்பிட்டார். சமுதாய நலன்களுக்கு அதிக பணம் செல விடுவதில், ஆசியாவில் முன்னணியில் உள்ள ஒருசில பொதுநல நாடுகளுள் இலங்கையும் ஒன்ருகத் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
1931 இல் டொனமூர் குழுவினர் இலங் கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்க ளுக்கும் சர்வசன வாக்குரிமையை விஸ்த ரித்தபோது, அவர்கள் மலைநாட்டில் பெரும் அரசியல் சக்தியாக விளங்கலாயினர். ஆணுல், 1948-49 பிரசாவுரிமைச் சட்டங்களினுல் அவர்கள் வாக்குரிமையிழந்து அர சி ய ல் அனதைகளாகும் துர்ப்பாக்கியம் சம்பவித் தது. அதன்பின்பு, இந்திய வம்சாவளி மக் களுக்குச் சர்வசன வாக்குரிமையின் கதவுகள் என்றும் அகலத் திறக்கப்பட்டதேயில்லை.

இதனுல் பொதுசன அபிப்பிராயத்திலும், தேர்தல் முடிவுகளிலும் ஜனநாயக விரோ தப் பண்புகள் தலையெடுக்கலாயின. இன்றும் கூட இலங்கைப் பிரசாவுரிமைபெற்ற இந் திய வம்சாவளியினரில், 5 இலட்சம் மக்கள் வாக்குரிமையற்றிருப்பது, சர்வசன வாக்குரி மையினுல் இலங்கை பெற்ற கீர்த்திக்குக் களங்கம் கற்பிக்கும் ஒன்ருகும்
சர்வசன வாக்குரிமையின் முனைப்பற்ற சில அரசியல் விளைவுகளையும் மேலெழுந்த வாரியாக நோக்குவது ஆய்வினைப் பூரணப் படுத்துவதாக அமையும். (1) பூரீலங்கா சுதந்திரக் கட்சி கிராமப்புற மக்களிடையே யும், ஐக்கிய தேசியக் கட்சி நகர்ப்புற மக்க ளிடையேயும், அதிக ஆதரவைப் பெற்றுள் ளன. இதற்கு நாட்டின் தேசிய கலே, கலாச் சாரங்களின் மறுமலர்ச்சியில், பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை விட, அதிக ஆர்வம்காட்டி வந்துள்ளமையே காரணமாகும். (2) தமிழர்கள், முஸ்லிம் கள், இந்திய வம்சாவளியிர்ை போன்ற சிறுபான்மையினங்களின் ஆதரவில் பெரும் பகுதியை ஐக்கிய தேசியக் கட்சியே பெறு கிறது. இதற்கு ஆரம்பம் முதல் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்த கலப்பு அங் கத்துவமும், தேசிய ஒருமைப்பாட்டில் அது காட்டிவந்த ஆர்வமுமே காரணமாகும். (3) நாட்டின் சிங்கள, தமிழ் கிறிஸ்தவர்களி லும் பெரும்பாலோர் ஐக்கிய தேசியக் கட் சிக்கே விசுவாசமாக உள்ளனர். இதற்கு, ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பங்களில் கிறிஸ்த வர்களைத் தலைவர்களாகக் கொண்டிருந்த மையும், பூரீலங்கா சுதந்திரக் கட்சி போன்று பெளத்தமத வளர்ச்சியில் அதிக நாட்டம் காட்டாததுமே காரணமாகும். உயர் மத் திய வர்க்கத்தினரின் ஆதரவில் பெரும்பகுதி யையும் ஐக்கிய தேசியக் கட்சியே பெறு கிறது. இதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆரம் பங்களில் உயர் மத்தியவர்க்கத்தினரால் உரு வாக்கப்பட்டு, அவர்களது நலன்களையும்
9

Page 26
ஊற்று 10 (4), 5-24, 1982
பேணிவந்தமையே காரணமாகும். ஆயி நாட்டின் இரு பிரதான அரசியல் க களின் இலட்சியம், ஒழுங்கமைப்பு என்ட றில் ஏற்பட்டுவரும் தீவிர மாற்றங்களா! தேசிய அரசியல் சந்தித்துவரும் குருவ திருப்பங்களாலும், மேற்கூறிய அம்சங் வலுவிழந்தும், தொடர்ச்சியற்றும் வரு ணுல், அவற்றை நாம் அரசியல் வள யில் சர்வசன வாக்குரிமையின் நிரந்தரப தாக்கங்களாகக் கருதி அழுத்தம்கொடு தேவையில்லை.
இலங்கையில் சர்வசன வாக்குரிமை தொடர்ச்சியானது, பாராளுமன்ற நாயக முறையின் உயிர் வாழ்வுக்கு துணையாக இருந்து வந்துள்ளது. ஆயினு பாராளுமன்ற ஜனநாயக முறையைப் பூ டோடு ஒழிக்கின்ற, அல்லது பலவீனப்படு கின்ற, தேசிய நெருக்கடிகள் பலவற் நாடு தொடர்ச்சியாகக் கண்டே வந் ளது. 1962இல் எத்தனிக்கப்பட்ட இரா வப் புரட்சியும், 1971 இல் இடம்டெ இளைஞர்களின் ஆயுதப்புரட்சியும், 19 1977, 1981 ஆகிய வருடங்களில் கண்ட பயங்கரமான இனக்கலவரங்களு 1970-க்குப் பின் வளர்ச்சியடைந்த வினைக் கோரிக்கையும், நாட்டின் வடட யில் நிலவும் கொந்தளிப்பான அரசியல் மைகளும் அத்தகைய நெருக் டிகள் லாம். பல்லின சமூக அமைப்பும், டெ ளாதார நெருக்கடிகளும், காலனித்து தின் எச்ச சொச்சங்களையும் கொண்ட ரும் உலக நாடாகிய இலங்கையில், சர்வ வாக்குரிமை தளம் அமைக்கும் ஜனநா பாதை மேடு பள்ளங்களைப் பெற்றிருட் தவிர்க்க முடியாததேயாகும்.
தொகுத்துப் பார்க்கும்போதும், ஏ மூன்ரும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு ே கும்போதும், 50 வருட ஆயுள் கொன சர்வசன வாக்குரிமைமூலம், இலங்கை கள் பெற்ற அறிவும், அனுபவமும், பார
β. (...)

னும் Logo
வற் }}յւն,
| sqft.
@ಿ
ਨੂੰ
ஜன் 2-CD }յւն, பூண் த்து
|றை துள்
) ന 5 6, 576) ரும்,
gif குதி
liTCA5 | ଈuë மூன்
{୫Fତot
a
it gif
L
ΠΘ5
மன்ற ஜனநாயக அரசியலுக்கு மெருகேற்றி வந்துள்ளது எனலாம். வாக்களிப்பின் மொத் தச் சதவீதத்தில் தென்படும் உயர்ந்த அள வினுல் உணர்த்தப்படும். வளர்ந்து வரும் வெகுசன அரசியலும், கட்சியடிப்படையில், குறிப்பாக இரு கட்சியடிப்படையில் வாக் களிக்கும் மனுேபாவமும், அதன் மூலம் மாற்றரசாங்க முறைக்குத் தளம் அமைக்கும் உத் தி யும், சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து, பொருளியல் காரணிகளுக்கு முக்கி யமளிக்கும் முற்போக்கு அம்சமும், பொது மனித யுகத்தின் மலர்ச்சியும், இளைஞர்களும், கிராம மக்களும் இரு பிரதான அரசியல் சக்திகளாக எழுச்சி பெற்றமையும், சர்வசன வாக்குரிமையின் அர்த்தம்மிக்க-உறுதியான அரசியல் தாக்கங்களாகும். வாக்களிப்பில் தென்படும் பிரதேச அடிப்படையும், வர்க்க அடிப்படையின்மையும், பெரிதுபடுத்தத் தக்கவையன்று. இருப்பினும் சர்வசன வாக் குரிமையுடன் துரிதமடைந்து வந்த இன வாத அரசியலும், இந்திய வம்சாவளி மக்க ளில் கணிசமான தொகையினர் வாக்குரிமை
பற்றிருப்பதும் நியாயப்படுத்தத் தக்கவை
UGಠTO
இறுதியாக, இலங்கையில் சர்வசன வாக் குரிமையின் தாரதம்மியம்பற்றிய, சில அறி ஞர்களின் கருத்துக்களை முன் வைப்பது
பொருத்தமானதாகும். அமெரிக்க அறிஞ
ரான ருெபேர்ட் கேணி, 5 ஐரோப்பாவுக் கும், வடஅமெரிக்காவுக்கும் அப்பால் பரந்த வாக்குரிமையின் அடிப்படையில் அமைந்த தும், சுதந்திரமானதும், வெளிப்படையான தும், போட்டித்தன்மையானதும். அறிவு பூர்வமானதும், தலையீடுகள் அற்றதுமான தேர்தல் முறையைக் கொண்ட ஒருசில நாடு களுள் இலங்கையும் ஒன்ருகும் எனப் பெரு மைப்பட முடியும் ' 19 என்கிருர், கேணி யின் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் அவுஸ் திரேலிய அறிஞரான யேம்ஸ் யப், "இலங்கை உருவாக்கியுள்ள சிறந்த, வெற்றிகரமான தேர்தல் தொகுதி முறையானது, உலகின்

Page 27
ஊற்று 10 (49, 15-21, 1982
முதன்மைபெற்ற முறைகளில் ஒன்று என் பதில் எவ்வித ஐயமும் இல்லை' 19 என்கி ரூர். இலங்கை அறிஞரான ஏ. ஜே. வில் சனின் கருத்துப்படி, "" இலங்கைத் தேர்தல் தொகுதி நடத்தைகளே ஆராய்வதற்கான சிறப்பானதோர் ஆய்வுகூடமாகும்' 4.
பொதுவாக நோக்கும்போது, பெரும் பாலான மூன்ரும் உலக நாடுகளில், அந்நி யர்கள் அறிமுகப்படுத்திவிட்டுசென்ற பாரா
REFERENCE
1.
2. 3.
S
10.
11.
12.
13.
14.
*Elections, Economics and the Electo Publication, Colombo.) May, 1977, Ibid. Table 7, p.6. *General Election: 1977-Analysis, Ibid, July 1977 p.3 (Emphasis Adde For a discussion of this point see System in Ceylon, Galivin A. Woo dence), 1970 pp 14-15. Ibid, “Conclusion', p.270. Economic Review, op. cit, p. 12 F pattern in the past General Election review pp. 12-15 (Compiled by L. Robert Alford, Party and Society James. S. Coleman, “Conclusion', Ga (eds.), The Politics of the Develop Princeton, 1960) p. 554. For a detailed discussion see G. C and the beginning of communalism’ House, Colombo, 1963) pp. 126-136. “Conclusion', Communalism and La Robert N. Kearney, (Duke Universit. Quoted in S. Namasivayam's Assess The Legislatures of Ceylon (Faber Robert N. Kearney, “Elections, Vol Ceylon (Cornell University Press, 1 James Jupp, Electoral Politics' S (London, 1978) p.193. A. Jayaratnam Wilson, “Introduction State (Cambridge University Press,

ளுமன்ற ஜனநாயக அரசியல் முறையானது தனிக்கட்சி ஆட்சியாகவும், இராணுவ சர் வாதிகாரமாகவும் மாறி வருவதன் மூலம் கேலிக்குரியதாகிவிட்ட இன்றைய நிலையில் இலங்கையில் சர்வசன வாக்குரிமையின் பிர யோகமானது, பாராளுமன்ற ஜனநாயக அரசியல் முறையின் ஸ்திரத்துக்கும், வளர்ச் சிக்கும் அரணுக இருந்து வந்துள்ளது என
ଛା}{T LID },
rate’. Economic Review, (People's Bank
Table 1, p. 5.
Issues Propaganda'. Economic Review,
bd)
Introduction, The Growith of party dward, (Brown University Press, Provi
For more interesting provincial Voting
is see the table appeard in the same
Dias Hewagama) ... (Murray, London 1964) p46.
briel A. Almond and James S. Coleman ing areas, (Princeton University Press
Mendis. The Rise of the Middle Class , Ceylon Today and Yesterday (Lake
Inguage in the Politics of Ceylou y Press, Durham, 1967) p. 137.
ment of the Donoughmore Constitution.
Faber Ltd., London, 1950) p.144. Ling and Campaigns', The Politics of 970, London) p. 132. ri Lanka-Third World Democracy
'', Electoral Politics in an Emergent London, 1975) p.3.
穹及

Page 28
இலற்று: 10 (கி), 22-25, 1982
நகரங்கள்
Ε
கிராமநகரங்களே வேறுபடுத்துகின்ற
யறைகள் மிகவும் சிக்கலான பண் கொண்டனவாகவுள்ளன. கிராமநகர பாட்டினைக் கிராமநகர வாழ்வு அடி யிலும், பொருளாதாரப் பண்புகளை படையாகவைத்தும் வரை செய் 4 பொழுது இரு வேறு பட்ட தன்ன அவதானிக்க முடியுமாயினும் கூட மு வேறுபட்ட தன்மையினை காணமுடி உள்ளது. வளர்ச்சி அடைந்த நா( கிராமநகர வேறுபாடுகள், வளர்ச்சி அ துவரும் நாடுகளைவிட குறைவான து யினைக் கொண்டதாக இருப்பினும், இ பிரதேசங்களிலும் சேவையடிப்படையி முறை ஒழுங்கு காணப்படுகின்ற து யினை முன்வைத்து கிராம நகர வே. களே அடையாளங்காண முடி கி ன் மேலும் உருவவியல் அடிப்படையில் நகர வேறுபாட்டினை அவதானித்தல் பான தொன்ருகவும் உள்ளது. நகர எ பகுதிகள் நகரங்களாக மாறும் பண் பெறக்கூடியனவாகையால் நகர எல் ணயமும் இன்று நகர கிராமிய ஆய்வு முக்கிய இடத்தி ைப் பெற்று வருகின்
கிராம நகர எல்லே வரையறை:
நகரங்களை வரையறுத்தல் நா. நாடு ஒற்றுமையின்றிக் காணப்படுகி சில நாடுகள் குடித்தொகையை ம . அடிப்படையாக வைத்து நகர வரை செய்கின்றன. உதாரணமாக டென் பின்லாந்து, சுவீடன் ஆகியன 250> இனடா 1000> போர்த்துக்கல் 20
 
 

ரின் புவியியல்ரீதியான ரையறை = யாழ்ப்பாணம்
கி.ஆறுமுகம் B, A (Hon) புவியல்துறை
பல்கலைக் கழகம்
யாழ்ப்பாணம்,
} 6)/60)JՄ
வேறு jaõ)
அடிப் கி ன் ற மகளே ற்றன ԱT5յLD திகளில் அடைந் GD இவ்விரு laն ւսւգទាំងក្លា D றுபாடு ID gil. Թյrրrւք Gறப் 6, 2;
ல நிர் புகளில் ன்றன.
ட்டுக்கு ன்றது. * G) th
1669,00 ש
DTáš,
சிகிலி,
002
ஈரான் 5000> கீறீஸ் 10,000> மக்கள் வசிக்கும் குடியிருப்புக்களைக் கொண்ட பகுதி களே நகரங்களாக வரையறை செய்கின்றன. இந்தியாவில் 5000 மேற்பட்ட மக் க ளே க் கொண்டும், 3 பங்கினர் விவசாயமற்ற தொழில்களில் ஈடுபட்டும், சராசரி சதுர மைலுக்கு 1000> ஆகவும் உள்ள குடியி ருப்புக்களையே நகரமாகக் கொள்கின்றனர். உள்ளூராட்சி நிர்வாகப் பிரிவுகளை அடிப் படையாகக் கொண்டு இலங் ைக, ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா போன்ற நாடு களில் நகரங்கள் வரையறை செய்யப்படு கின்றன.
இலங்கையில் நான்கு உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. இவை மாநகர நகர, பட்டின, கிராம சபைகளாகும். 1963-ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டிற்கு முன்னர் மாநகர சபையும், நகர சபையுமே நகரமா கக் கொள்ளப்பட்டது. 1963-ம் ஆண்டிற் குப் பின்னர் பட்டினசபையும் நகர அந்தஸ் தைப் பெற்றது. நிர் வா கப் பிரிவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நகரப்ப குதிகள் விரிவடைவதும், குறைவடைவதும் அரசியல் காரணங்களால் சில பகுதிகளில் அதிக உள்ளூராட்சி மன்றங்களும், சில கிராமசபைகள் நகரங்களாக சிபார்சு செய் யப்பட்டும் வருகின்றன. இந் நகரங்கள் எல் லாம் ஒரேமாதிரியான பண்பைக் கொண் டனவாகவில்லை. நகரங்க ளு க் கிடை யி ல் குடித்தொகை அளவு, அடர்த்தி, சேவை, உருவவியல் போன்றவற்றுக்கிடையில் அதிக
வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்நக
ரங்கள் அளவில் சிறியனவாகவுள்ளதுடன், கொழும்பைத்தவிர ஏனைய நகரங்கள் சேவையடிப்படையிலான நகரங்களாகவுள்

Page 29
ஊற்றும் 10 (4), 22 - 25 1982
என சேவை அடிப்படையில் நகரங்களைப் பார்க்கும் பொழுது பெரிய சிறிய நகரங்க ளென்று அடையாளங்காண முடிகின்றது.
இவ்வாருண் நகரவரையறையானது நகரங்களின் உண்மைத் தன்மையினைப் பிரதி பலிப்பனவாகவில்லை. தற்கால நகரங்களில் மையப்பகுதியில் நெருக் கம் அதிகமாகிக் கொண்டு வருவதினுல் வாழ்விடப் பகுதிக ளும், மற்றும் தொழிற்சாலைகளும் மையத் தைவிட்டு விலகி நகர எல்லைப் பகுதிகளி லும் அதற்கப்பாலும் வளர்ச்சி பெறுகின் றன. இத்தகைய வளர் ச் சி ஒழுங்கான அமைப்பைப் பெறுவதில்லை. நகர எல்லேப் புறத்தில் இது குறிப்பிட்ட திசையில் ஒழுங் கற்ற வளர்ச்சியும், ஏனைய தி  ைசக ளில் வளர்ச்சியில்லாமலும் காணப்படுகின்றன. போக்குவரத்து வசதிகளால் நகரின் மையப் பகுதியில் வேலைசெய்பவர்கள் கூட புறநக ரப் பகுதிகளில் வசித்துக்கொண்டு அன்ரு டம் வந்து போகின்றனர். எல்லேப் புறங்க ளில் நகர மக்கள் வசித்து வருவதாலும், அதற்கப்பாலும் நகரப் பண்புகள் ஒரளவு காணப்படுவதாலும், கிராமப் புறத்திற்கும் நகரப்புறத்திற்கும் இடையே எல்லே நிர்ண யிப்பது கடினமாகவுள்ளது. இந்த எல்லைப் புறங்களில் கிராமப்புற நகரப்புறப் பண்பு கள் ஒன்ருகக் கலந்து விடுகின்றன. இந்து எல்லை எதிலும் சேராத தன் மை  ையப் பெறுகின்றது. இங்கு வசிக்கும் மக்கள் சமூ கத்தாலும் பொருளாதாரத்தாலும் அப்ப குதியைச் சாராதவர்களாகவே இருக்கின்ற னர். இந்நிலையில் புவியியல் ரீதியான எல்லை வரையறை செய்யும் பொழுதே உண்மை யான் நகரப் பிரதேசத்தை அடையாளம் செய்ய முடியும். இத்தகைய வரையறை ஆய்வுகளின் பின்னரே செய்யப்படுவதாகும்.
புவியியல் ரீதியான எல்லேவரையறை:
இபுவியியல்ரீதியான எல்லே வரையறை யான்து புவியியல் அம்சங்களான நிலப்
பயன்பாடு, - குடித்தொகை, நிலப்பெறுமதி - ரி, வாடகை வீடுகளின் அளவு; சேவை,
C.
 
 

ல அம்சங்களைக் கருத்திற்கொண்டு செய் ப்படுவதால் இது ஒரு சிறப்பான நகர வரை றுை முறையாகவுள்ளது. இவ் வரைய் 2றயை எல்லா நாடுகளும் பொதுவான சில மறைகளைப் பின்பற்றி வருகின்றன. வளர்ச் யடைந்த நாடான அமெரிக் காவில் டெற் முயிற் (DETROT) நகரத்தின் புவியியல் ல்லையை வரையறுப்பதற்கு மியேஸ், பீகில் Myers and Beegle) a fairgith gala ம் ஒரு காரணியை அடிப்படையாகவைத்து ஆராய்ந்தார்கள் இவர்கள் இந் நகரத்தில் ராமமல்லாததும், கிராமத்தில் இருந்தும் விவசாயத்தில் ஈடுபடாத மக்களைக்கொண் துமான 30 ச. மைல் நகரப்பகுதியைத் மது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தனர். இப் பகுதியின் மொத்தக் குடித்தொகையில் இருந்து விவசாயத்தில் ஈ டு படுபவர்களைக் ழித்தனர். இவ்வாறு கழித்துவரும் வீதம் 0% உள்ள பகுதியை இந் நகரத்தின் எல் லயாகவும் 35-50 வீதத்திற்கு இடைப் ட்டது நகர எல்லைக்கு அடுத்த பகுதியென 5 g. 5grri (NON- VILLAGE- RURAL NON - FARMPOPULATIONNV-RNF.) இத்தகைய எல்லே நிர்ணயிக்கும முறை சிறப் ான சாக இருந்தாலும் குடித்தொகைப் |ள்ளிவிபரமாக இருப்பதால் முன்னேற்றகர ானதாக இருக்கவில்லை விசேட கணக்கெ ப்ெபுக்கள் செய்யப்படாத நிலையில் இத்து கைய முக்கிய தரவுகள் கிடைக்கப்பெறுதல் குறைவாகும்.
t9örg-rral, sy6ört legör ( BLIZZARD nd ANDERSON): 376örg)Jth (g) 96u(0, Lỗ, பென்சில் வேனியாவில் உள்ள வில்லியம் BJT "| (WILLIAMSPORT) 15 g g ğ Gos:5 ாடுத்து ஆராய்ந்தார்கள். இவர்கள் கிராம கரப் பகுதிகளில் காணப்படும் நிலப் ப -ன் ாட்டையும், சேவைகளின் ஊடுருவல்களை பும் வைத்து நகர எல்லையை வரையறுத்த னர். போஸ்ரெட் (BOUSTEDT) என்பவர் ஜேர்மனிய நகரங்களின் எல்லையை வரைய றுப்பதற்கு சனத்தொகை அடர்த்தி, கட்டி
శ్రీశ్రీ

Page 30
ஊற்று: 20 (4), 22 - 25 1982
டங்களின் தன்மை, வதிவிடங்களின் வட கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம், பன் வீடுகள் என்பவற்றைக்கொண்டு கிராம. எல்லையை வரையறுக்கலாம் என்ருர், ! Lunelão The International Urban Re rch Unit,Town and county Planning ( nization போன்றவற்றின் முறைகளைப் பற்றிப் பாகுபடுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாண நகரம்:
யாழ் நகரமானது 8, 5 ச. மைல் பையும், 1981-ம் ஆண்டின் குடித்தொ மதிப்பீட்டின் படி 1 18215 பேரை கொண்டுள்ளது. இது இலங்கையில் கொ பும் அதனைச் சேர்ந்த உபநகரங்களுக் அடுத்த பெரிய நகரமாகவும் காணப்படு டன், சேவையடிப்படையாகக் கொ வளர்ச்சியடைந்துவரும் நகரமாகவும் ளது. உள்ளூராட்சி நிர்வாக எல்லையே நகர எல்லையாக உள்ளது. இவ் எல்லேட் திக்குள் நிலப் பயன்பாடு மிகச் செறிவ. காணப்படுவதுடன், எல்லைக்கப்பாலும் பகுதிகளில் இத் தன்மையினை அவதான முடிகின்றது.
இந் நகரத்தின் எல்லைப் பகுதியில்
அம்சங்களை அவதானிக்க முடிகின்றது. இ நிலத்தைப் ப யன் படுத்தும் முறை தொடர்ச்சியான மாறுதல்கள் காண கின்றன. விவசாய உற்பத்தி குறைந்து ே கின்றன. மக்கள் தொகை அளவு அடிக் மாற்றமடைந்து வருகின்றது. குடியிருச் வீடுகள் மிக வேகமாகப் பரவிவருகின்ற இங்கு மக்களின் தேவைகள் முழுமை நிறைவேற்றப்படுவதில்லை. சேவையும் மையாக நடைபெறவில்லை. குறித்த சில திகளில் மிக வேகமான வளர்ச்சியும்,
பகுதிகள் மிகக் குறைந்த வளர்ச்சியை உ பனவாகவும் உள்ளன. போ க்குவரத் பாதைகளின் அடர்த்தி அதிகமாகவுள்ள நகரத்திற்கு அதனைச் சுற்றியுள்ள பகு ளில் இருந்து மக்கள் வந்து செல்வதஞ. ஏனைய சேவைத் தொடர்புகளாலும் இ
冕4
 

டவம் OTżsöör
நிகர இந்தி
ՇՏՇ3 =
இந் பகு
7 ஐத்
ரிக்கு
Lf35
பகு இல
T_
துப்
து. ਉਤ ջյւb Li Lj
குதிகளில் நகரசமூக, கலாச்சாரப் பண்பு கள் வேரூன்றியிருக்கின்றன.
இந் நகரத்தின் புவியியல் எல்லையை வரையறுப்பதற்கு முழுமையாக மேலைத்தேச நகரங்களில் கையாண்ட முறையையோ அல் லது கீழைத்தேசங்களில் கையாண்ட @@n) யையோ முழுமையாகப் பின்பற்ற (pg. UIT துள்ளது. இந் நகரம் சிறிய நகரமாகவும், குறைந்த குடித்தொகையும், சேவை யை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது மிக வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நக ரமாகவும் உள்ளது. ஆயினும் வளர்ச்சிய டைந்த நகரங்களில் காணப்படும் தன்மை களான மத்திய வியாபாரவலயம், வாழ்வி டப்பகுதி, போக்குவரத்து வலை ப்பின்னல் அமைப்பு, சேவைவசதிகள், செறிவான நில பயன்பாடு போன்றவற்றை இங்கு அவதா னிக்க முடிகின்றது. எனவே இந் நகரின் புவியியல் எல்லையை நிர்ண யி ப் ப தற்கு மேலேத்தேச கீழைத்தேச முறைகளை அடிப் படையாகக் கொண்டு இதற்கென்ற ஒரு பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. அவையா வன:- (1) நிலப்பயன்பாடு (2) குடித்தொ கை அடர்த்தி (3) விவசாயம், விவசாய மற்ற தொழில்களில் ஈடுபடுவோரின் ୪୬୩ ଗ୍ଧ (4) குடியிருப்பு நிலங்களின் அளவு, வீடுக ளின் அளவு (5) கட்டிடங்களின் தன்மை (8) நில ப் பெறு மதி, (7) வரி, வாடகை (8) சேவைகளின் பரம்பல் (9) போக்குவரத் துவீதிகளின் நெருக்கம்.
மேற்குறிப்பிட்ட அம்சங்களை நகரப்ப குதியில் சிறப்பாகக் காணக்கூடியதாகவுள் ளது. இவை எந்தளவுக்கு உண்மைத்தன்மை யுடையன என்பது பெறப்படும் தரவுகளிலே யே தங்கியுள்ளது. கிராம - நகர எல்லைக் கோடுபற்றிய எல்லை நிர்ணயிப்பதில் எல்லா முறைகளும் சிக்கலான அமைப்பைக்கொண் டிருக்கின்றன என்பது சந்தேகமற்றதாகும். இந் நகரத்தில் பிரதான விதிகள் வளர்த்தி அடைந்து அங்கு வர்த்தக நிலையங்கள்

Page 31
ஊற்று 10 (4) 22-23 1982
வளர்ந்து நகரத்தன்மையைக் காணக்கூடிய தாக இருக்கின்றது. பிரதான வீதிகளைத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்ற வர்த்தக குடியிருப்புப் பகுதிகள் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட அ பி வி ருத் தியால் ஏற்பட்டதாகும். இத்தகைய பிரதான வீதி களுக்கு இடையில் உள்ளாகாத கிராமிய நிலங்கள் வளர்ச்சி குறை ந் தனவாகவும் இருக்கின்றன. இந் நிலையில் கிராமிய நிலங் கள் விவசாயப் பகுதிகளாக இருக்கும். இத் தகைய ஒழுங்கீனம் உண்மையான கிராமிய நகர எல்லையைக் காட்டுகிறது. இது எல்லே நிர்ணயிப்பதில் பிரச்சனையை ஏற்படுத்துகின்
கிராம - நகர விளிம்பு என்பது நகரப் புறத்திற்கும் விவசாயத்தை மேற் கொள் கின்ற கிராமப் புறத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். இத் தன்மையை சிறப்பாக யாழ் நகரத்தில் அவதானிக்கக்கூடியதாக வுள்ளது. இங்கு நகர எல்லைக்கப்பால் வயல் நிலங்கள், தோட்டநிலங்கள், குடியிருப்புக் கள், வெற்றுநிலங்கள் போன்றவற்றை ஆங் காங்கே அவதானிக்க முடிகின்றது. ஆனல் கிராம - நகர விளிம்புப் பகுதிகளில் நிலத் தின் பெறுமதி, வாடகை, மக்கள் செறிவு என்பன அதிகமாகவும் உள்ளது. நகரை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் விவசாயிக ܕ ܢ ளும் ஏனைய தொழிலாளர்களும் நாள்தோ றும் நகரத்திற்கு தமது உற்பத்திப்பொருட் களை விற்பனை செய்வதற்காகவும் அத்தியா வசிய சேவைகளைப் பெறுவதற்காகவும் வந் துபோகின்றனர். இதனுல் இங்கு கிராமநகரப்புறப் பண்புகள் கலந்து காணப்படு கின்றன. நகர எல்லைப் பகுதி களி ல் இவ்வாருன தன்மையைக் காணக்கூடியதாக வுள்ளது. இதனுல் இங்கு கிராம நகர எல்
 
 
 
 
 
 
 
 

லவரையறுத்தல் பிரச்சனைக்குரிய தொன் முகவுள்ளது.
பொதுவாக நோக்கின் கிராம நகர எல்லே வரையறையானது சிக்கலுடைய தொன்முக இருப்பினும் நகர அமைப்புத் திட்டங்களை வகுப்பதன்மூலம் கிராம = நகர எல்லை ஒன்றை வரை யறுக்கலாம். நகர வளர்ச்சிச் சட்டத்தின்மூலம் நகரவளர்ச்சி யைத் தடைசெய்வதால் திட்டமிட்டு நகரங் தளை அமைக்க முடிகின்றது. பெரிய நகரங் கள் உள்ள இடங்களை அடுத்து பகுதிகள் பல உப நகரங்களே உண்டாக்குவதன்மூலம் நகர எல்லேயை ஒரளவு நிரந்தரமாக வைத் திருப்பதுடன் பாதுகாக்கவும் முடியும். இது னுல் நகரப் பகுதிகளில் இடநெருக்கடி நிலப் பெறுமதி, வாடகை, குடி த் தொகை, அடர்த்தி, சுகாதாரச் சீர்கேடுகள் என்ப வற்றை ஒரளவு குறைக்க வாய்ப்பும் ஏற்ப டுகின்றது.
உசாத்துணைப்பட்டியல்: (1) Harold Carter- The study of urbanGeography. pp. 288. 295 2) Murphy
E. Raymond- The American city an urban Geography p.p. 35-50 (3) Mager
M. Harold- Readings in urban Geography pp. 531561 4) Sundaram K.V. - Urban and Regional planning in India pp.48 -67 5) சிவமூர்த்தி அ = குடியிருப்புப் புவியியல்
* t_1ძნ. ჭ0 0 — ჭე 4

Page 32
இவற்று 10 (4, 26-32, 1982
பாரதியும்
நவயுகம் காணவிழைந்த பாரதி எ னும் ஞாயிற்றின் ஒளிக் கதிர்கள் நுழையா துறைகளே இல்லையெனலாம். பாரதியின் சமகாலத்திலே தமிழ் நாட்டில் வாழ்ந் கொண்டிருந்த பெரும்பாலான கவிஞர்க ஓரிரு துறைகளிலேயே கவனம் செலுத்தி கவிதைகள் வடித்தனர். பாரதியின் கவிை களோ நவயுக நிர்மானத்திற்கான வை பில் அரசியல், சமூகம், பொருளாதாரப் பண்பாடு, அறிவியல், சமயம், இலக்கியம் தத்துவம் முதலிய பலதுறைகளையும் ஊ ருவி நிற்கின்றன. கவிதைகளில் மட்டுமன் அவரது பல்வேறுவகைப்பட்ட உரைந!ை ஆக்கங்களிலும் இத்தகைய பண் | ୩ ଥିଣୀ । தெளிவாகக் காணலாம். பாரதியினது கே தைகளின் சிறந்த ଯୋଗtt>$1> it g($ଛି! -3}} { ரது உரைநடை ஆக்கங்கள் அமைந்துள்ளன நவயுக நிர்மாணத்திற்கு வேண்டிய வழி கைகளை வற்புறுத்திய பு ர தி அவற்று அறிவியலின் முக்கியத்துவம், தாழ்வுற் வறுமை மிஞ்சிப் பாழ்பட்டு நின்ற பாரத தின் புனருத்தாரணத்திற்கு அறிவியற்கல் வளர்ச்சியின் இன்றியமையாமை ஆகியவ 69քան விண்டு காட்டியுள்ளமையை ரது ஆக்கங்களிற் கண்டு தெளியலாம். ந பாரதத்தின் வளம்மிக்க எதிர்காலத்திற்கு செல்வச் செழிப்பிற்கும் தேச வி டு த ை தேசிய ஒற்றுமை, தொழிலாளர் முன்னே றம், விவசாய கைத்தொழில் அபிவிருத் கள், சுரங்கத் தொழில் வளர்ச்சி, கனரகய திரத் தொழில் விருத்தி, வணிக முன்னே றம் முதலியன மட்டு ம ன்றி அறிவிய வளர்ச்சியும் மிகமிக இன்றியமையாத
 

அறிவியலும்
s.o (Bosso, M.A., Ph.D.
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
萝
எனக் கருதினர்; தமது ஆக்கங்கள் வாயி லாகச் சிறந்த பொருளாதாரத் திட்டங்களை வகுத்துக் காட்டியுள்ளார். அவற்றுள் அறி
வியல் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்
கள் சிலவற்றைச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டுவதே இச் சிறு கட்டுரையின் நோக்க மாகும். அறிவியல் என்ற பதத்திற்குப் பதிலாக, சாஸ்திரம், நவீன சாஸ்திரம், எலயின்ஸ் என்னும் சொற்களையே பாரதி யார் தமது ஆக்கங்களில் அடிக்கடி பயன் படுத்தியுள்ளார். ஈழத்துப் பேச்சு வழக்கில் சாஸ்திரம் என்றவுடன் பலருக்கும் சோதி டமே ஞாபகத்திற்கு வரும்
இந்தியாவின் பண்டைய சிறப்பியல்பு களையும் கூடவே குறைபாடுகளையும் நிகழ் கால அவலங்களையும் எதிர்கால எழுச்சியை யும் தெளிந்த வரலாற்றுக் கண்ணுேட்டத் துடனும் விசாலப் பார்வையுடனும் தொலே நோக்குடனும் நோக்கிய பாரதியார் நவீன உலகின் ஒப்பற்ற ஞாயிருக விளங்கும் அறி வியலின் இன்றியமையாமையையும் முக்கி யத்துவத்தையும் செவ்வனே உணர்ந்து முனைப்புடன் வலியுறுத்தியுள்ளார். கூர்ந்த மதியும் உலகியல் அறிவும் கொண்டிருந்து T3 பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, யப்பான், ஐக்கிய அமெரிக்கா, முதலிய நாடுகளில் ஏற்பட்டுக்கொண்டிருந்த புரட்சி கர மாறுதல்களையும் வியத்தகு முன்னேற் றங்களையும் அதற்குரிய காரணங்களையும் நன்கு உணர்ந்திருந்தார் என்பது அவரது ஆக்கங்கள் வாயிலாகப் புலப்படுகின்றது. பாரதியாரும் அறிவியலும் என்றவுடன்

Page 33
ஊற்று 10 (4) 26-32, 1982
பலருக்கு அவரது பாடல்கள் சிலவே நினை வுக்கு வரும். எனினும் பாரதியார் Ցո մ. அறிவியல் பற்றிக் கொண்டிருந்த கருத்துக ளேக் கவிதைகளிலும் பார்க்கக் கட்டுரைக ளிலேயே விரி வாக வெளியிட்டுள்ளார். கருத்து விளக்கங்களுக்குக் கவிதையிலும் பார்க்க உரைநடையே சாலவும் உகந்தது என்பதில் ஐயமில்லை.
இந்தியா முழுவதும் - மிகச்சிறு பகுதி கள் தவிர - பிரித்தானியரது ஆதிக்கத்திற் குட்படுமுன்னரே இந்தியாவின் வெவ்வேறு பாகங்களில் நீண்ட காலம் அந்நியராட்சி இடம் பெற்றிருந்தது. அவர்களது ஆட்சியில் இடம்பெருத ஒப்பற்ற நன்மைகள் சில பிரித் தானியராட்சியின்போது ஏற்பட்டன. பிரித் தானியராட்சியினுல் நாடு அடிமைப்பட்டு வறுமையுற்றுத் தத்தளித்தது உண்மையே. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தையும் அவர் களது மொழி, பண்பாட்டுத் திணிப்பையும் சுரண்டற் கொடூரத்தையும் ந ஞ் செ ன வெறுத்துச் சன்னத்த வெறிகொண்டு தாக் கிய பாரதி அவர்களது ஆட்சியினுல் ஏற் பட்ட பெரு நன்மைகள் சிலவற்றை மூடி மறைக்காது ನಿ': புகழ்ந்துள்ளார். அவற்றுள் ஒன்று அறிவியல்என்ற பேரொளி பரவத் தொடங்கியமையே. வேல்ஸ் இள வரசருக்கு நல்லரவு தெரிவித்துப் பாடிய பாடல்களில் அவர் இவற்றைத் தெளிவு படுத்தியுள்ளார். அப்பகுதியில் அறிவியலின் பெருமையைக் குறிப்பிடுமிடத்து,
'.மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான ஒண்பெருங் கதிரின் ஒரிரு கிரணம் என் பாலரின் மீது படுதலுற்றனவே .'
என மேற்குலகின் இருளினே ஒட்டிய ஞான ஒண்பெருங்கதிராக வருணித்துப் புகழ்ந் துள்ளார். இந்திய மக்களிடையே காலம் காலமாக நிலவிவரும் மூடநம்பிக்கைகள், அறியாமை குருட்டுத் தனமான பழைமைப் போக்குகள் முதலியன அகலுவதற்கு அறி

வியலின் ஒளிப்பரம்பல் அத்தியாவசியம் எனக் கருதினர். இதனுலேயே அவர் ஓரி டத்தில், 'ஓயாமல் குளிர்ந்த காற்று வீசு சிறது. பலருக்கு ஜவரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிருர்கள். மிஞ்சியிருக்கும் மூடர் விதிவசம் என்கிருர் கள். ஆமடா! விதிவசம் தான். அறிவில் லாதவர்களுக்கு இன்பமில்லை என்பது ஈசனு டைய விதி. சாஸ்திரம் இல்லாத தேசத்தி லே நோய்கள் விளேவது விதி. என வயிற்றெரிச்சலுடன் கூறியுள்ளமைநோக்கத் தக்கது.
தமது புதிய ஆத்திசூடி"யில் 'கைத் தொழில் போற்று', 'சோதிடந்தனையிகழ்", பணத்தினைப் பெருக்கு, புதியன விரும்பு உலோக நூல் கற்றுணர்', 'வானநூற் L T 0OOT S S M S S பாரதி, மேற்கு நாடுகளில் அறிவியல் மிக வேகமாக வளர்ந்து வருவதனையும் தமிழி லோ ஏனைய இந்திய மொழிகளிலோ அவை வளரவில்லை என்பதையும் உணர்ந்ததுடன் நில்லாது அறிவியற்றுறைகள் சம்பந்தமான நூல்களேத் தாய்மொழியில் வெளியிடல் வேண்டும் அறிவியற்றுறையில் முன்னேற் றம் காணவேண்டும் என அசைக்க (tpLգ யாத தன்னம்பிக்கையை மக்கள் உள்ளத் தே ஏற்படுத்தும் வகையில் வழிவகைகளே யும் காட்டினுர் .
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்ஜ மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவியிகை யோங்கும்.
என்னும் அவரது பாடற்பகுதி உற்றுநோக் கத்தக்கது. பாரதியார் காலத்தில் மட்டு மன்றி இன்றும்கூட நம்மிடையே பலர்
தமிழில் ஒன்றும் இல்லை; தமிழில் ஒன்றும்
塞 7

Page 34
ஊற்ற் 3 10 (4), 26=32 1982
செய்ய இயலாது, என நம்பிக்கை வ கொண்டு ஆங்கில தாசர்களாக நடி திரிவதை அவதானிக்கலாம். அறிவிய றைகள் மேற்கு நாடு களி ல் வேக வளர்ந்து வருவதும் த மிழி லோ ஏ இந்திய மொழிகளிலோ அத் த ை வளர்ச்சி நிலை இல்லை என்பதும் உண்மை ஆயின் அதற்காக அவநம்பிக்கை கொ தனது தாய்மொழியைத் தூற்றுட தனக்குத்தானே அழிவைத்தேடிக் கொ
றன். இத்தகைய அவநம்பிக்கையை
யோடு அகற்றும் வகையிலேயே பாரதி தமது கருத்துகளை வற்புறுத்தியுள்ளா
'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு (3ց-իլն பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண் இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டு எனக் கட்டளையிடுகிறர்.
ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஹ்றி வங்காளம், சமஸ்கிருதம் முதலிய .ெ களிற் பாண்டித்தியம் பெற்றிருந்த மொழிப் புலவஞன பாரதி ஆங்கில .ெ பின் முக்கியத்துவத்தையோ மேற்குல அறிவியல் வளர்ச்சியையோ குறைத்து . பிட்டவரல்லர், ஆயின் ஆங்கி ல தா ளாக நடித்துத் திரிபவர்களேயும், ஆங்கி தின் மூலமாகவே யாவற்றையும் கற் தெளிய வேண்டும்; சுதேச மொழி மூலம் இவற்றைக் கற்க முடியா து வாதிடுபவர்களேயும், தம்மையும் தம் இ தையும் தாழ்வு படுத்தி அவநம்பிக்கை னும் தாழ்வு மனப்பான்மையுடனும் மே தேய மோகம் கொண்டு உழல்பவர்களே "ஆங்கிலம் ஒன்றையே கற்றர். அத ஆக்கையோடு ஆவியும் விற்றர். தாங்க அந் நி யார் ஆஞர்." என்ற நிலை வாழ்பவர்களையுமே பாரதி நஞ்சென வுெ
28

Frii **
6)ւի:
ந்தி, 0ուն
மாழி
Fffಷ್ರ லெத் று த்
}
ଶ୍Tଞ୍ଜି
ilH. —
யும், ற்கு
gó 1றுத்
தார். அறிவியற்றுறைகள் தாய் மொழி" மூலம் கற்பிக்கப்படல் வேண்டும். சுதேச மொழிகளில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட வேண்டும்; அப்பொழுதே அறிவியலின் உன் னதமான வளர்ச்சியைக் காண முடியும், சாதாரண மக்களும் அதன் ஒப்பற்ற பயன் களேப்பெற முடியும் என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் வற்புறுத்திக் காட்டியுள்
ஆசிய நாடுகளுள் ஒர் ஐரோப்பிய நாடாகத் திகழும் யப்பான் நாட்டின் வியத் தகு முன்னேற்றங்களையும் அறிவியல் வளர்ச் சியையும் குறித்துப் பெருமிதத்துடன் விளக் கிச் செல்லும் பாரதியார் அதற்கான கார
ணங்களையும் விண் டு காட்டியுள்ளமை
மனங்கொளத் தக்கது. அவற்றுள் முக்கிய மானவை தாய்மொழி மூலக்கல்வி விருத் தியும் அறிவியல் முன்னேற்றமுமே என விதந்து கூறியுள்ளார். 'லோககுரு 8 என் னும் தமது கட்டுரை ஒன்றிலே இவற்றை விரிவாக விளக்கியுள்ள அவர், மேலும் அக் கட்டுரையிலே, பாரதப் புதல்வனை ஜகதீச சந்திரவள0-0 என்பவர் செய்துள்ள அறிவி யல் ஆராய்ச்சிகள், கண்டு பிடிப்புகள் சாத னேகள், அவை உலகுக்கே முன்னேரடி முயற் சிகளாக விளங்கியமை முதலியன பற்றித் தெளிவுபடுத்தியுள்ளார். பாரதமோ ஏனைய கீழைத்தேய நாடுகளோ தற்பொழுது அறி வியல் வளர்ச்சியிற் பின்தங்கி நிற்கலாம். ஆயின் அவை விரைவில் முன்னேறும் அதற் கேற்ற அடித்தளம் அந்நாடுகளிடம் முற் பட்ட காலத்திலிருந்தே இருந்து வந்துள் ளன என்பதைப் பல இடங்களிலே துலக்கி யுள்ளார். ஜகதீசசந்திரவஸ்" என்பவரது பெருமைகளையும் அறிவியற் சாதனைகளையும் மட்டுமன்றி "உம்பர் வானத்துக் கோளையும் மீனேயும் ஒர்ந்தளந்ததோர் ப ா ஸ் க ர ன் மாட்சியையும் புகழ்ந்துள்ள பாரதியார் ஓரிடத்திலே, 'பாரதபூமி உலகத்தாருக்கு எவ்விதமான ஞானத்தைக் கொடுத்துப் புகழைக் கொள்ளுமென்பதை விளக்குவ

Page 35
স্থািটg : 40 (4), 26 = 38, 1992
தற்கு முன்பாக, சாஸ்திர (ஸயின்ஸ்) வார்த் தை ஒரி ரண் டு சொல்லி முடித்துவிடுகி றேன். சாஸ்திரம் பெரியது. சாஸ்திரம் வலியது. அஷ்டமகா சித்திகளும் சாஸ்திரத் தினுல் ஒருவேளை மனிதனுக்குவசப்படலாம். பூர்வ காலத்தில் பலவகைக் கணித சாஸ்தி ரங்களும் இயற்கை நூல் களும் பாரத நாட்டிலேதான் பிறந்த பின்பு உலகத்தில் பரவியிருப்பதாகச் சரித்திர ஆராய்ச்சியிலே தெரிகிறது. இப்போது ஸயின்ஸ்" பயிற்சி யில் இவ்வளவு தீவிரமாக மேன்மைபெற்று வருகிருேம்; காலக்கிரமத்தில் தலைமை பெறு வோம்." ? என எதிர்காலம் பற்றிய உறுதி யான நம்பிக்கையுடன் கூறியுள்ளமை கூர்ந்து நோக்கத்தக்கது.
1921 ஆம் ஆண்டு பாரதி மறைந்தார் அவர் மறைந்தபின், கடந்த அறுபது ஆண் டுகளுள் அறிவியற்றுறையில் ஏற்பட்ட வியத் தகு முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்பு கள் பிரமிக்கத்தக்கவை. ஆயின் ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன்,
'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்ப தற்கோர் கருவி
செய்வோம்; ” 'நடையும் பறப்புமுனர் வண் டி கள் செய்
ஞாலம்நடுங்கவரும் கப்பல்கள் செய் 86նrrւի:
மந்திரம் கற்போம்வினைத் தந்திரம்கற்போம்;
- சந்திரமண் டலத்தியல் கண்டு தெளிவோம்: சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற் Guirtub.. ' ' + 0
எனத்தீர்க்கதரிசனமாகக் கூறி யுள் ளார். பாரததேசம்" என்ற தலைப்பில் அவர் பாடி யுள்ள பாடல்கள் உற்றுநோக்கத்தக்கவை. பாரதத்திலே செல்வமும் செழிப்பு ம் மே லோங்க வேண்டுமானுல் ஆக்கபூர் வமாக எதை எதைச் செய்யவேண்டும் என ஒழுங்கு

முறையிலே சிறந்ததொரு தேசிய நலத்திட் டத்தையே பாடல்களின் மூலமாகத் தீட்டி யுள்ளார். அத்திட்டங்களுட் பெரும்பகுதி அறிவியல் வளர்ச்சி, அறிவியற் கண்டுபிடிப் புகள் ஆகியவற்றி ன் அத்தியாவசியத்தை வற்புறுத்தும் வகையிலும் பொதுமக்களுக்கு அவற்றின் மீது அபார நம்பிக்கையை ஏற்ப டுத்தும் வண்ணமும் அமைந்துள்ளன.
அறிவியல்பற்றி இத்தகைய கருத்துக்க ளேக் கொண்டிருந்த பாரதி அதனைத் தாய் மொழிமூலம் கற்பிக்கவேண்டும்; தாய்மொ ழியிலே விருத்தியடையச் செய்யவேண்டும் எனப் பலமாக வற்புறுத்தியுள்ளார். அறிவி யலே அந்நிய மொழிமூலம் கற்பதனுல் உருப் படியான நன்மைகள் எவையும் ஏற்ப டா என்பது பாரதியின் முடிவு. இதனுலேயே சுயசரிதை” என் னு ம் பாடற் பகுதி யி ல், 'கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர், பின் கார் கொள்வானிலோர் மீனிலே தேர்ந்தி ଉ}|tit; .............. வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்; வாழுநாட்டிற்பொருள்கெடல் கேட்டிலார் துணியுமாயிரஞ் சாத்திரநாமங் கள் சொல்லு வாரெட்டுணேப்பயன் கண்டி லார் 11 என மனம்நொந்து கூறியுள்ளார்.
தாய்மொழிமூலம் அறிவியலே க்கற்று முன்னேறவேண்டும் என்பதைத் தமது கட்டு ரைகள் பலவற்றிலே ஆங்காங்குவற்புறுத்தி யுள்ளாரேனும் தேசியக்கல்வி (1) தேசீயக் கல்வி (2)?? என்னும் தலைப்பிலமைந்த நீண்ட 35 GD600 Tujuh "The Defects of Tamil Language. A Graduate's Funny Views-Dialoge" (தமிழ்ப் பாஷைக்குள்ள குறைகள்: ஒரு பி. ஏ. பரீட்சை தேறிய பிராமணவாலிபனு டைய எண்ணங்கள்), 8 "லோககுரு", "வருங் காலம்' என்னும் தலைப்புகளில்அமைந்துள்ள கட்டுரைகளும் விதந்து கூற த் த க்க வை. The Defects of Tamil Language, A Graduate's Funny Views-Dialoge, at air a தலைப்பிற் சற்று நீளமாகவும் மிக்க காரசார மாகவும் சுவையாகவும் அமைந்துள்ள சம்பா
29

Page 36
ஊற்று 10 (4, 26 32, 1982
ஷணேப்பகுதி அரிய கருத்துக்களைக் கெ அமைந்துள்ளது. 'தமிழில் ஒன்றுமே இ அறிவியல் உட்பட நவீன கல்வி முறை தமிழிலே கற்பிக்கமுடியாது எல்லாவி கும் ஆங்கிலமொழியே பிரதானம்' என திடுபவர்களின் பிரதிநிதியாகப் பட்ட வாலிபனையும், நவீன கல்விமுறையைச் மொழியிலேயே தாய்மொழியிலேயே சிந்திக்கவேண்டும் வே அறிவியலின் சகலதுறைகளிலான னேற்றத்துக்கும் ஏற்றவழி எ ன வா வர்களின் பிரதிநிதியாகப் புலவரையும் திரங்களாகக்கொண்டு இச் சம்பா அமைக்கப்பட்டுள்ளது. உண்மையிற் Liter Gigir இச்சம்பாஷணையிற் |lly ଢ} ରiff ତtଟ பாத்திரமாக மாறி நின்று அறிவியற்  ையத் தாய்மொழியிற் கற்பிக்கவே 6 தன் அவசியத்தையும் தாய்மொழியில் வியல் வளர்ச்சி ஏற்படவேண்டியதன் றியமையாமையையும் அலசி அலசிக் க யுள்ளார்.
இச்சம்பாஷணையிற் புலவர்கூற்ருக ஒருபகுதி இங்கே நோக்கத்தக்கது. ". இந்நாட்டார் பொதுவாக மிகவும் அ சுருங்கிப் போயி ரு க் கி ரு ர் க ள். இது பாஷை என்ன செய்யும்? நீராவியால் டப்படும் ரயில்வண்டி இந்நாட்டிலே 6 மாயிருக்கிறது. இப்போது பொதுஜன அதற்கு வார்த்தை ஏற்படுத்திக் கொ மலா இருக்கிருர்கள்? மின்சார சக்தி தந்தி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அத தமிழர்கள் வார்த்தையுண்டாக்கிக் கெ வில்லையா? கோவனமில்லாத நிர்வான சத்தாரின் பாஷையிலே, பட்டு அங்க ரத்திற்குப் பெயர்கிடையாதென்ருல் அ அவர்களுடைய பா  ைஷ யி ன் மேல் குற்றமிருக்கிறது? பணியைக்கொண்டு டுத்துவழக்கப்படுத்தினுல், முறையே 6 தைகளுமுண்டாக்கிக் கொள்வார்கள். நாட்டிலே தொழில்வகைப்படும் ஆலே மிகுதியும் ஏற்பட்டால் தமிழ்ப்பாஷை றைக்கே வளர்ந்து போய்விடும்.
- 30

பிரித்தானியர் ஆதிக்கத்தைத் தொடர்ந் தே இந்தியாவிலும் ஈழத்திலும் குரு குல க் கல்வி, சமயக்கல்வி என்னும் குறுகிய நிலைக ளிலிருந்து கல்வித்துறையானது விடு பட்டு அகண்டாகாரமானமுறையில் விசாலிக்கத் தொடங்கிற்று நவீன கல்விமுறை விருத்திய டையலாயிற்று. தேச நலனேயே முழுமூச்சா கக் கொண்டுழைத்த பாரதி இத் த  ைக ய மாற்றங்களே இதய பூர்வமாக வரவேற்றது டன் அமையாது தேசியக்கல்வி வேக மாக வளரவேண்டியதன் அவசியத்தையும் த மது கட்டுரைகள் பலவற்றில் வற்புறுத் தி னு ர். தேசியக்கல்வி என்னும் கட்டு  ைர யிலே தேசியக்கல்வி என்பது யாது? தேசியக்கல்வி வளர்ச்சியின் முக்கியத்துவம், இலவசக்கல்வி கட்டாயக்கல்வி, பெண் கல்வி முதலி ய வ ற் றை விளக்கியபின் அறிவியற் கல் வி யி ன் இன்றியமையாமை, அதனைத் தாய்மொழி மூலம் கற்பிக்கவேண்டியதன் அவசியம் ஆகி பன பற்றியும் தெளிவாகச் சுட்டிக் கா ட் டி புள்ளார். 'தமிழ் நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ்ப் பாஷையைப் பிரதானமாக நாட் டாமல், பெரும்பான்மைக்கல்வி இங்லிஷ் மூல மாக வும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற் படுத்தினுல் அது தேசியம் என்ற பதத்தின் பொருளுக்குமுழுதும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேசபாஷையே பிரதா னம் என்பது தேசியக்கல்வியின் ஆதார க் கொள்கை; இதைமறந்துவிடக்கூடாது.' என வற்புறுத்தியுள்ள பாரதி தொடர் ந் து ஆரம்பப்பாடசாலைகளில் அறிவியற் கல்வி யைத் தாய்மொழிமூலம் கற்பிக்கும் வழி வ கைகளையும் உதாரணங்களுடன் விரிவாக விளக்கிச் செல்கிருர்,
அறிவியற்கல்வியைச் சுதேச மொ ழிக ளிற் கற்பிக்கவேண்டும் என்ற கருத்து வலுப் பெரு திருந்த, சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பப்பாடசாலைகளிலிருந்து பல் கலைக்கழகம்வரை அறிவியலே எவ்வாறு தாய்மொழியிற் கற்பிக்கவேண்டு மென்பதை

Page 37
ஊற்று 10 (4), 26-32, 1982
உதாரணங்களுடனும் ତଚ୍ଛୀ ଜt 3; கங்களுடனும் காட்டியுள்ளார். அவற்றுள் ஒருபகுதி  ையசற்று நீளமாக இருந்தாலும் இங்கு நோக் குதல் இன்றியமையாதது எனலாம். அவரது விளக்கத்தின் ஒரு பகுதி வருமாறு:- "பெள திக சாஸ்திரங்கள் கற்றுக்கொ டு ப் பதில், மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைகளுக்கு மிகவும் சுலபமாக விளங்கும் படி சொல்லிக்கொடுக்கவேண்டும். இயன்ற
இடத்திலெல்லாம் பதார்த் தங்களுக்கு த் தமிழ்ப் பெயர்களையே உபயோகப் படுத் த
வேண்டும். திருஷ்டாந்தமாக, "ஆக்ஸிஜன்" ஹைட்ரஜன் முதலிய பதார்த்தங்களுக்கு
ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங் கப்பட்டி
ருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்கவேண்டும். த மி ழ் ச் சொற்கள் அகப்படாவிட்டால் சமஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தை களுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ், சமஸ் கிருதமொழிகளேயே வழங்குதல் பொரு ந் தும். இந்த இரண்டுபாஷைகளிலும் பெயர் கள் அகப்படாத இடத்தில் இங்லிஷ் பதங்க ளேயே உபயோகப்படுத் த லாம். ஆணு ல், குணங்கள், செயல்கள், நிலைமைகள் - இவற் றுக்கு இங்லிஷ் பதங்களை ஒருபோதும் வழங் கக்கூடாது. பதார்த்தங்களின் பெயா களே மாத்திரமே இங்கிலீஷில் சொல்ல லாம், வேறுவகையால் உணர்த்த இயலாவிடின் -- திருஷ்டாந்தமாக ரஸ்ாயண சாஸ்திரம் கற் பிக்குமிடத்தே
(அ) உலகத்தில் காணப்படும் வ ஸ் து க் க
ளெல்லாம் எழுபதேசொச்சம் மூல ப் பொருள்களாலும் அவற்றி ன் பல் வகைப்பட்டசேர்க்கைகளாலும் சமைந் திருக்கின்றன (திரு ஷ் டாந்தங்களும் சோதனைகளும் காட்டுக.) (ஆ) அந்த மூலப்பதார்த்தங்களில், பொன், வெள்ளி, செம்பு, கந்த கம் இ ைவ போல வழக்கத்திலுள்ள பொருள்கள்
(F}
(ο

இவை க்ரோமியம், தி த் தானியம், யூரோனியம் இவை போல சாதாரண பழக்கத்திலகப்படாதன இவை, கன ரூபமுடையன இவை திரவரூபமுடை u 1657 gað).61; வாயுரூபமுடையணஇவை, இவற்றுள் முக்கியமான மூலபதார்த் தங்களின் குணங்கள் முதலியவற்றை எடுத்துக்காட்டுக. ரஸாயனச்சேர்க்கை, பிரிவு; இவ ற் றின் இயல்புகள் (பரிக்ஷைகளின் POGIN) மாக விளக்குக) இவற்றின் விதிகள்.
ரேடியம், ஹெலியம் முதலிய புதிதா கக் கண்டுபிடிக்கப்பட்ட மூலபதார்த் தங்களின் அற்புத குணங்கள்.
பரமானுக்கள், அணுக்கள், அணுக ணங்கள்-இவற்றின் இயல்பு, குணங் கள், செய்கைகள் முதலியன.'
தமிழ் உரைநடை பாரதியார் காலத் இன்றைய வளர்ச்சி நிலையைப் பெற்றி கவில்லை. தனித்தமிழ் இயக்கவெறியும் ரதியாரை ஆட்டிப்படைக்கவில்லை. பிற ாழிப்பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுது பத்து தொல்காப்பியத்தையும் நன்னுரலே துணைக்கிழுத்து இன்னின்ன எழுத்துக் மொழிக்கு முதலில் வ ரக் கூடாது 靛 சண்டப்பிரசண்டம் செய்துகொண்டு }@lidTyଥି[]; பெயர்ச்சொற்களைச் சித்திரவ செய்து அலங்ாேலப்படுத்த முனைந்த மல்லர். இவற்றை மனதிற் கொண் டு ற்காட்டிய பகுதியை நோக்குதல் வேண் இன்றைய நிலையில் வைத்து நோக்குமி துப் பாரதியாரது கருத்துக்கள் சில முக் த்துவம் குறைந்தனவாகவோ த ர ல ந் ந்தனவாகவோ சிலருக்குத் தென் பட ம் ஆயின் தாய்மொழிமூலமான அறிவி கல்வி வளர்ச்சியோ தே சீயக்கல்வியோ டம் பெருதி, ஏறத்தாழ எழுபது ஆண்டு க்கு முன்னரே அவர் இத்ததைய கருத் களை ஆணித்தரமாக வற் புறுத்தியுள் ர் என்பது மனங்கொள வேண்டிய ஒன்று.

Page 38
ஆற்று 10 (கி): 26-32, 1982
இலங்கையைப் பொறுத்தவரை, பல் க ே கழக மட்டத்தில் 1960 களிலிருந்து கை துறையும் ஏறத்தாழ 1970 களி லி ரு ந் அறிவியலின் பல்வேறு துறைகளும் த மொழிமூலம் கற்பிக்கும் முறை வள ர் ! வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவ
சான்றதாரம்
1. மகாகவி பாரதியார் கவிதைகள் :
罗。 罗曼 勞變 3.
3. 釁 象 数 醇 * 釜
玺。 霹雳 鬱繫 戀 變
5。 霸敦 参多 芳 零
6. 鹦凯 彝* 7. இவ்வகையிற் பாரதியாரது பின்வ
(அ) இளசை மணியன் (தொகுப்பா (ஆ) 萝多 (இ) பாரதியார் கட்டுரைகள்
(ஈ) 多數 易 剔 శ్రీ 8. பாரதியார் கட்டுரைகள்
萝敦 葛 雛 10. மகாகவிபாரதியார் கவிதைகள்: ட
l. 霹雳 12. பாரதியார் கட்டுரைகள்
3. பாரதிதரிசனம் ஆ. பாரதியார் கட்டுரைகள்
易莎 多s 15. பாரதிதரிசனம் 16. பாரதியார் கட்டுரைகள்
7.
霹罗
*影

லக் இதுவரையும் தாய்மொழி மூலக்கல்வி முக் லத் கியத்துவம் பெறவில்லை. பாரதியாரின் கன து வுகளை நனவாக்குவதில் இலங்கையே மு ன் ய் னணியில் நிற்கிறது. அதிலும் ஊற்று" சஞ் ந்து சிகையின் ஒப்பற்ற பணி இவ் வகை யில் ரை விதந்து பாராட்டத்தக்கதாகும்.
சான்ருேர், 1975, L2009 سس ۔ 83 220 تھی ل
颚 3, 209. வசனகவிதை காற்று, Ljš. 249. புதிய ஆத்திசூடி, t_gg; I 722" 773 سس தமிழ்த்தாய், 3, 42.
தமிழ்த்தாய், & தமிழ் L_J55 لاکھ سے 123ھ بڑھ%
ரும்கட்டுரைத் தொகுப்புக்கள் குறிப்பிடத்தக்கன:- சிரியர்) பாரதி தரிசனம் முதலாம் பாகம்,
勢勁 இரண்டாம் பாகம் தத்துவம், 1949. சமூகம், 蟹956。
தத்துவம்,
L5, 12
ாரததேசம், L肪。2巫 சுயசரிதை, ι μ3 - 2 Ι 4 தி சமூகம், பக், 52-94 இரண்டாம் பாகம், 1977, LJ2207 --3 20 منتق
தத்துவம், g_Jپنج H02 120 4. சமூகம், பக், 143-1ஆ6 இரண்டாம் பாகம் Լյ* . 205 2 சமூகம், பக், 56
ورژن 7 ص 71 به ریال

Page 39
ܕ ܒ
وو چgg ,36--33 , (ه) 10 * gibpyھژه
புகைத்தலும்
ਹਲ பிடித்தல் பழக்கம் முதன் முதலில் எங்கு ஆரம்பமாகியது என்பது பற்றிய திட்டவட்டமான முடிபுகள் எதுவும் இல்லை. இருந்தபோதும் 15-ம் நூற்றண்டளவில் மெக் சிகன்ஸ், செவ்விந்தியர்கள் (Red Indians) தென் அமெரிக்க @guff போன்முேரி டையே இப்பழக்கம் பரவலாகக் காணப் பட்டது. பின்பு இப்பழக்கம் படிப்படியாக 15-ம் நூற்றுண்டின் பிற்குதியில் பிய நாடுகளுக்கு பரவியது. உலக நாடுக ளின் பொதுவான பாவனைக்கு புகைத்தல் பழக்கம் உலக மகாயுத்த காலப் பகுதியில் (1914-1918) ജൂ :) . . . . து. மு த லில் Spaniards இனத் தவர்களால் புகையிலே கிஸ்பானியோலா (Hispaniola) Grör D 675) 1930 gr, 25, செய்கை பண்ணப்பட்டது.
புகையிலையும் நிக்கொட்டினும் (Tobacco & Nicotine)
புகையிலைத் தாவரத்தின் தாவரவியல் (6)լյայի நிக்கொட்டியானு ՕՄույր 35 լի ( Nicotiana tobaccum ) стал பிரெஞ்சு நாட்டு தூதுவர் ஒருவரின் (Jean Nicot) பெயரில் இருந்து பெறப்பட்டது. புகையி லேத் தாவரத்தில் காணப்படும் இரசாயன பதார்த்தத்தைப் பகுப்பாய்வுகள் மூலம் 5ë 35 till:PD-G) sig ije, Nicotine எனப் பெயரிடப்பட்டது. மேலும் இதன் காரத் தன்மையான இயல்புகளாலும், அமிலங்களு டன் கார உப்புக்களை விளைவுகளாகக் கொடுப் பதாலும் Alkaloid groups of drugs உடன்
(gr}} է Գիլք), விடின் (ο) 4. Το
அறிய G
t}_f H ფუჭA
罕一@一
amino acid
(Digi -
2. G.
Const
இது தங்கள் அண்ை பதார். |d ଗୋt.
ਹੈ। கார ଈ] @sii''
2,
Լյ60), சத்துட டின் சு ளிலும் உறிஞ்ச நிக்கொ கின்ற| ဒွတ္တီ)၊
 

அவ
தன் விளைவுகளும்
பூ, காசிநாதன் மிருகவைத்திய பீடம்
பேராதனை
se
கப்பட்டது. நிக்கொட்டின் மூலக் கூறு 19. Går (Pyrimidine), மீதையில் பிரொ (Methyl pyrroidine) என்பவற்றைக் ண்டது. நிக்கொட்டின் வேறு தாவரங்
இருப்பதும் பகுப்பாய்வுகள் மூலம் ப்பட்டுள்ளது. நிக்கொட்டின் மெது லங்களால் குறைந்தளவு நச்சுத்தன்மை
Cotenine ஆகமாற்றப்பட்டு மேலும் živi u Galpha-(3-Pyridyl)-8 Methyl | butyric acid ց:56յth 3-Pyridyl acetic ஆகவும் சிறுநீருடன் கழிக்கப்படுகின்
ரசாயன உள்ளடக்கங்கள் (Chemical tuents)
ரெட் புகையில் காணப்படும் பதார்த் மிக சிக்கலான அமைப்புடையவை. அளவில் ஆயிரத்துக்கும் அதிகமான த்தங்கள் புகையில் காணப்படுகின் சிகரெட் புகை ஒரளவு அமிலத் மயானதாகும். மேலும், இதன் அமில இயல்பு பாவிக்கப்படும் புகையிலையின் பில் தங்கியுள்ளது.
நிக்கொட்டின் (Nicoine)
இத்தலின் போது ஆழமான உட்சுவா ன் ஏறத்தாழ 90% ஆன நிக்கொட் வTசப்பையிலும், அதன் பிறபகுதிக காணப்படும் சீதமென்சவ்வுகளால் *ப்படுகின்றது. ச ரா சரியாக 0.2% "ட்டின் ஒரு சிகரெட்டில் காணப்படு எனவே ஒருவன் ஏறத்தாழ 1,5-
醫鬱

Page 40
అతg * 10 (4) చేతి=త్రీ, కోర్జి
3, 5 மில்லி கிராம் நிக்கொட்டினை உள்ெ டுக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.
2.2 புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்த sir (Carcinogenic Substances)
அண்ணளவில் பதினுறுக்கும் அதிகமா புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய பதார் தங்கள் பகுத்தறியப்பட்டுள்ளன. இை மிக மிக சொற்ப அளவில் புகையிலு காணப்படுகின்றன.
2.3 gsorsijior Lassir (Irritants)
இவை பல்வேறு வகையானவை. உத னமாக அமோனியா, எளிதில் ஆவியாகு அமிலங்கள், அல்டிகைட்டுக்கள், கீற்ருே கள், பிரிமிடின்கள், மற்றும் பிற தார் ஒத்த பீனுேல் சேர் பதார்த்தங்களும் கான படுகின்றன. இப் பதார்த்தங்கள் சுவா: பகுதிகளின் சீத மென் சவ்வினை தூண் அதிக அளவு சீதத்தை சுரக்கச் செய்கி றன. ஆணுல் இம் மிகையான சுரத்த வெளியேற்றுவதற்கு சுவாசமேலணிக் கர் களிலுள்ள நுண்மயிர்கள் தாமதிக்கின்ற ஏனெனில் நிக்கொட்டின் நுண்மயிர்கள் அசைவை விரோதிக்கின்றது.
2.4 as ruGoGo Tangi (Carbon mon ide)
ஒரு சிகரெட்டில் இருந்து 3-25 m க னுேரொட்சைட் பெறப்படுகின்றது. இ வும் சிகரெட்டின் தன்மையுடன் மாறு கிறது. சாதாரணமாக எமது குருதி குறைந்தளவு காபனுேரொட்சைட்டு கால படுகின்றது. மிகையான புகைபிடிப்பா களில், இம் மிகையான காபனுேரொட்ை குருதியிலுள்ள ஈமோகுளோ பி னு ட (Haemoglobin) GFTřsög5 காபனுேரெ Gogel FGlorg Baltit Lair (Carbon monox haemoglotin) GTGäTAD SF. LLG Lg5 Tf5 355 ஆக்குகின்றது. 5-10% அளவில் காப ரொட்சைட் ஈமோகுளோபினின் அ புகை பிடிப்பாளர்களின் குருதியில் கா6 படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
霹墨

T UT தம் *ုင္တို႔r
TÉ.
FL
T ide
ଚଞ୍ଚ), ୬ ணுே
GTI
2.5. 95 Tử (Tar)
சிகரெட்டில் இருப்பதை விட புகையில் இருமடங்களவு தார் இருப்பது அறியப்பட் டுள்ளது. அண்ணளவில் 20 மி.கிராம் தார் சுவாசப்பைகளினூடாகச் செல்கி ன் றது, ஆணுல் அங்கு உறிஞ்சப்படும் அளவு குறை வாகவே இருக்கின்றது
2.6 ஆசனிக் சேர்வைகள் (Arsenic Comp
pounds)
இவை மிக சொற்ப அளவில் தான் காணப்பட்ட போதிலும் புற்றுநோயை ஏற்படுத்த இதுவும் ஒரு துணைக்காரணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒகரெட் புகை க்தல் இள வயதில் இறப்பை உலகின் பல பகுதிகளிலும் ஏற் படுத்தியுள்ளது. பொதுவாக புகைத்தலால் Ji QTgúGOU, Liby (3.5Tú (Lung cancer) இருதய நோய்கள் (Coronary heart diseaSes), Chronic bronchitis, emphysema போன்ற நோய்களால் இவ்விறப்பு ஏற்படு கின்றது. ഉച്ചTTഞ്ഥT9, 100,000; இளமை இறப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியுள் ளதை அண்மைய ஆய்வுகள் காட்டுகின் றன. ஒவ்வொரு சிகரெட்புகைக்கப்படுவத ஞல் ஒருவரின் ஆயுளில் 5-15 நிமிடம் குறைக்கப்படுகின்றது. புகைத்தல் நன்கு வியாபித்துப் பரவியுள்ள நாடுகளில் சுவா சப்பை புற்று நோய் இறப்பிற்கு பிரதான காரணியாகின்றது. புகைப்பவர்கள் 5-10 மடங்கு ஏனையோரைக் காட்டிலும் தொண்டை போன்ற பகுதிகளில் புற்று நோய் ஏற்பட வாய்ப்பு கூடியவர்களாகின் மூர்கள் ஆதலால் புகைத்தல் பழக்கத்தைக் கைவிடுவதால் புற்று நோயினின்று D தப்பிக் கொள்ளும் சந்தர்ப்பம் அதிகமாகின்றது. BJ6Trfup 5 BTG453ifiš Coronary heart diseases மிக முன்னணியில் இருக்கும் இளமை யில் இறப்பிற்கு காரணியாகும். புகையில் ஆயிரத்திற்கும் அதிகமான தீங்கு ფიჭ267 იმჭ; கக் கூடிய பதார்த்தங்கள் இருக்கின்றன. புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைக் (ଜ୍tଜୀ।
s

Page 41
ஊற்று 10 (4) 39-36, 1982
ளாதவர்கள் புகை நிறைந்த அறையொன் றில் ஒருமணி நேரம் நின்ருல், அது சாத ரணமாக ஒரு சிகரெட் புகைத்ததன் விளை வுகளை ஏற்படுத்துகின்றது. அண்மைய ஆய் வுகளின்படி இளம் பராயத்தினரிடையே தற் போதுபுகைத்தல் அதிகமாகவுள்ளது. இதற்கு பெற்றேரின் புகைத்தல், மற்றும் குடும்ப அங் கத் தவர்களின் புகைத்தல் நண்பர்க ளின் புகைத்தல், போன்றன காரணமாகின்றன. வளர்முக நாடுகளில் புகைத்தல் நிலைமைக ளேக் கருத்திற் கொள்ளும்போது, அவற் றின் கல்வி மேம்பாட்டினல் புகைத் தில் ஏனைய நாடுகளுடன் ஒப் பி டு கை யி ல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருந் தும் இளவயதுப் பெண்களிடையே அதிக அளவு புகைபிடிக்கும் பழக்கம் பெருகி வரு வது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அண்ணளவில் 1920-1930 அளவில் புகிைத்தல் கொடிய தொற்று நோய்களே விடக் கூடிய விளைவுகளே ஏற்படுத்தகூடிய தென வைத்திய நிபுணர்களால் அறியப்பட் டது. கர்ப்பவதிகள் புகைத்தலை மேற்கொள்வ 5 Tai) grilliura, Lower birth rates, a dig அளவிலான தொடர்ச்சியான கருச் சிதை வுகள் போன்ற சிக்கல்களுக்கு இட்டுச் செல் கின்றது. மேலும் சிகரெட் புகைத்தலின் தீங்கான விளைவுகளே முன்னுள் அமெரிக்க சுகாதார திணைக்களத்தின் செயலாளர் Dr. Joseph A. Califano Lóls, 9 p 5; it at முறையில் புகைத்தல் உண்மையில் தற் கொலைக்கு இட்டுச்செல்கின்றது (Smoking is truly slow motion suicide) GT Gör Gilaörggri. புகைத்தலினல் ஏற்படும் விளைவுகளுக்கு நிக்கொட்டினே பிரதான காரணியாகின் றது. இது இருதயம், குருதிக்கலங்கள், சமி பாட்டுத் தொகுதியின் பகுதிகள், சுவாசப் பையின் பகுதிகள், சிறுநீரகங்கள் என்பவற் றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. நிக்கொடடின் கால் கைகள் போன்ற பிற குருதிக் கலன்களில் சுருக்கத்தை ஏற்படுத்து கின்றது. இதனுல் குருதியமுக்க த்தை க்
 

ட்டி, இதயத் துடிப்பையும், குருதிவெளி
பறல் வீதத்தை யும் (Cardiac Output) பட்டுகின்றது. சமிபாட்டுத் தொகுதியின் து குறிப்பாக முதன் முறை உள்ளெடுக் ம் போது குமட்டல் அருவருப்பு போன் வற்றை ஏற்படுத்துகின்றது. இவ் விளைவு i நிக்கொட்டின் மூளையிலுள்ள Vomiting ntre ஐ தூண்டுவதால் ஏற்படுகின்றது. ரம்பத்தில் உமிழ் நீர்ச் சுரப்பு, சுற்றுச் ருக்கல் அசைவு என்பன அதிகரிக்கின் ன. ஆனல் தொடர்ச்சியான புகைத்த ால் இவை குறைக்கப்படுகின்றன. மேலும் க்கொட்டின் பிற்பக்கக் கலச்சு ர ப் பி "osterior pitu tary) gg g5ITaöo7 Lq. antidiure3 hormone (ADH) # ÜTLÜ JODLuj; gÍTGösTG) ன்றது. இதனுல், வெளியேற்றப்படும் சிறு ரின் அளவு குறைக்கப்படுகின்றது. இக் 30 p8ó5 93 i 67 65 gór (Adrenaline) ரத்தலும் காரணமாகின்றது.
சிகரெட்டில் காணப்படும் புகைக்கப் டாத பகுதி தீங்கு விளைவிக்கக் கூடிய தார்த்தங்களை உறிஞ்சுவதற்காக தயாரிக் ப்பட்டுள்ளது. இதனுல் மக்களி  ைட யே கைத் தல் வீதம் கூட்டப்பட்டுகின்றது. }ப்புகைக்கப்படாத வடிகட்டும் பகுதி முக்கி மாக சிலிக்கா ஜெல் அல்லது activated harcot போன்ற நிக் கொட்டினை உறிஞ்சக் கூடிய பதார்த்தங்களால் ஆக்கப்பட்டது. மலும் புகைத்தலால் ஏற்படும் கெடுதி ான விளைவுகள் பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது.
1. புகைக்கப்படும் புகையிலையின் தரம்
2. புகைக்கப்படும் புகையிலையின் அளவு
3. உள்ளெடுக்கப்படும் புகை யி லை யின்
୯୬ ଗTର{
4. உள்ளெடுக்கப்படும் நேர அளவு
5. வெளிவீசப்படும்மிகுதி சிகரெட்டின் அளவு
密5

Page 42
  

Page 43
ஊற்று 10 (4), 37-40 1982.
கசநோய் (Tuberculosis) மனித குலத்தை வதைத்துவரும் பயங்கரமான தொற்று நோயாகும். சமீபத்திய புள்ளிவிபரங்களே நோக்குமிடத்து, மூன்றுவது உலகநாடுகளில் இதன் ஆதிக்கம் படிப்படியாக வலுவடைந்து வருவது தெளிவாகிறது. உலக சுகாதார angst 16073, Sir World Health Oganisation) அறிக்கைகளின்படி மனிதரிடையே காணப்படும் தொற்று நோய்கள் அனைத்துள் ளும் கசநோயே தீவிரமானதும் அதிமுக்கி யத்துவம் வாய்ந்ததுமாகும் விரும்பியோ விரும்பாமலோ இந்தக் கசப்பான உண்மை யை நாம் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். கசநோய் மனிதனே மாத்திரமன்றி விலங் கினம், பறவைகள், ஊர்வன முதலியனவற் றையுந் தாக்கும் வல்லமையுடையது. ஏற்கன வே குறிப்பிட்டதுபோன்று மூன்றுவது உலக நாடுகளில் இக்கசநோய் பரவலாகக் கானப் பட்டபோதிலும் இலங்கை, டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்நோயி ஞல் பிடிக்கப்படும் மக்கள் தொகை எண் ணிக்கையில் மிகவும் குறைவு குறிப்பாக நமது இலங்கைநாட்டில் மொத்தச் சனத் தொகையின் 1000 ஆயிரம்) பேரில் நோயி ஞல் பாதிக்கப்படுதலுக்கான சந்தர்ப்பம் ஆக 037 சதவீதம் மட்டுமே. அதாவது மூவாயிரம்பேரில் ஒருவர் மட்டுமே நோய்க் குள்ளாவதற்கான சந்தர்ப்பம் உண்டு.
கச நோய்க்குக் கார்னமான கிருமி தூபக்கிள் பசிலசி (Tubercle Bacilus) எனப் படும் நுண்ணிய பற்றிரியா ஆகும். இந்நுண் ணுயிர் கோல் உருவமான து ஒன்று தொடக்
 
 

தொற்றுதலிலிருந்து தைக் காப்பாற்றுவோம்!
L
4-ம் வருடம், மருத்துவ பீடம், பேராதனைப் பல்கலைக் கழகம்,
கம் நான்கு மைக்கிரோ மீட்டர்வரை நீள முடையது. இந்தக் கிருமிகள் அநேகமாக நோய்வாய்ப்பட்ட மனிதர் ஒருவர் மூலமா கவே சுகதேகியொருவரைத் தொற்றிக் கொள்ளுகிறது. சில சந்தர்ப்பங்களில் கச நோய் உள்ள மாட்டிலிருந்தும் கிருமிகள் மனிதரைத் தொற்றிக்கொள்வதும் உண்டு. ஆனுலும் பறவைகள், ஊர்வன என்பனவற்
றின் கிருமிகள் மனிதரைத் தாக்குவதில்லை.
கசநோய் என்றவுடன் அது சுவாசப் பையை மாத்திரம் தாக்கும் நோய் என்று நம்மில் சிலர் நினைப்பதும் உண்டு. அவ்வாறு நினைப்பதிலும் ஒரளவு நியாயம் இருக்கவே செய்கிறது. ஏனெனில் ஏனைய வகைகளை விடவும் சுவாசப்பைக் கசநோயே மனிதரி டையே பொதுவாகவும் பரவலாக வும் காணப்படுவதனுலாகும். ஆணுல் உண்மை பில், இந்தக் கசநோய் நுரையீரலே மாத்திர மின்றி குடல், எலும்பு, தோல், ஈரல், மூளே ஆகியனவற்றையும் தாக்கு ம் தன்மை
இனி, கசநோயாளி யொருவரிடமிருந்து இந்நோய் எவ்வாறு ஒரு சுகதேகியைச் சென் நடைகின்றது எனப் பார்ப்போம். கசநோ பாளி ஒருவர்.அந்நோய்க்கான கிருமிகளை மிக ஆதிகமாகத் தன்னகத்தே கொண்டிருப்பது இயல்பே. அவரது சுவாசப்பையில் ஏற்படும் ஒரிப்பு (Iritation) காரணமாக நோயாளி அடிக்கடி இருமுவதும் தும்முவதுமாகவே இருப்பார். இந்நிலையில் நோய்க்கிருமிகள் நாயாளியின் துப்பலுடன் வெளிவருகின்

Page 44
ஊற்று 10 (4), 87-40, 1982
றன. எச்சிலிலுள்ள நோய்க்கிருமிகள் பி வரும் வழிகளால் சாதாரண சுகதேகியொ வரைச் சென்றடைகின்றன. (1) நோய்க்கிருமிகள் கலந்த காற்றை
தேகியொருவர் சுவாசிக்கலாம். (2) நோயாளியின் கிருமிகள் நிறைந்த து பலின் ஈரத்தன்மை அற்றுப்போக இ கிருமிகள் காற்றுடனும் தூசியுடனு கலந்து சுவாசிக்கப்படலாம். (3) நோயாளியின் சூழலில் அதிகளவு 8 மிகள் தூசிகளுடன் ஒட்டிக்கொண் ருக்கும். இந்நிலையில் இத்தூசிக் தவழும் குழந்தைகளின் கைகளிலே மூக்கிலோ ஒட்டிக்கொள்ள நிை வாய்ப்புண்டாகிறது.
(4) இவற்றைவிட முத்தமிடல், காற்ருே டமற்ற சூழல், நோயாளர் ஒரு பாவித்த பொருட்களைத் தொற்று காது பாவித்தல், கசநோயுள்ள ம டின் பாலேக் காய்ச்சாது குடித்த போன்ற சுகாதாரக்குறைபாடுகள் மூ மும் இந்நோய் விரைவாகப் பரவலா ஒரு குடும்பத்தின் தனியொரு அங்க வர் நோயினுற் பாதிக்கப்படுமிடத் கடைசியில் அவரின் முழுக்குடும்பமு கசநோய்க் குடும்பமாக மாறலா மனித உடலின் குறிப்பிட்ட பகுதிகள் உதாரணமாக நுரையீரலில் இக்கிருமி தொற்றிக்கொண்டால் அங்கு எவ்வாரு மாற்றங்கள் நடைபெறுகின்றன? கசநோ கிருமிகள் உடலிழையங்களைத் தொற். கொண்டதும் இழையங்கள் அவற்றுக்ெ ராகக் கடுமையான எதிர்த்தாக்கத்தை படுத்துகின்றன. இதனையே "அழற்சி எதி giris th?' (Inflammatory Reaction) at a கூறுவோம். இக்குறிப்பிட்ட இழையங் சிவந்து, வீக்கமடைந்து நோவுள்ளதா காணப்படும். தோல் அல்லது சீதச்சவ்வி உள் இழையங்கள் பாதிக்கப்பட்டுப் பு (Ulcer), Subdial G (Abscess) at air Liao 2. டாகின்றன. நமது உடலின் குருதியிலுள்
窦8
 

| Gij
"Ağ றிக் தி ாற்
" մի
தொற்றுநீக்கிகளாகிய பிறபொருளெதிரிகள் இழையங்கட்கிடையே ஒடும் நீர்ப்பாயத்துக் குள்ளிருந்து கிருமிகளைக் கொல்லும் வெண் குருதிச் சிறுதுணிக்கைகள் அமீபா போன்று உருவமாற்றம் பெற்று நோய்க்கிருமிகளே அழிக்கத்துவங்கும். தாக்குண்ட இழையங் கள் நாளடைவில் காசநோய்க்குரிய புடைப் புக்களைக் காட்டத்துவங்கும். இவற்றையே 6 காசநோய்க்குரிய புடைப்புக்கள்' (Tubercle Follicle) என்று அழைக்கப்படும். இத் தொடர்ச்சியான மாற்றங்கள் நடைபெறும் நேரத்தில் மனித உடலிற் காணப்படும் நிணநீர்ச்சுரப்பிகள் நோய்க் கிருமிகளைப் பிடிப்பதற்கு வடிகட்டிகள்போலத் தொழிற் படுகின்றன. அப்போது இந்நிணநீர்ச்சுரப்பி கள் வீக்கமடைகின்றன. ஒருவரின் உடலிற் காணப்படும் எதிர்ப்புச்சக்தியைப்பொறுத்து கசநோய் உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதி யிலிருந்து இன்னுெரு பகுதிக்குப் பரவும் வாய்ப்பு உண்டு. இந்நிகழ்ச்சியை நோய் தொற்றி நாலு தொடக்கம் ஆறு வாரங் கட்குள் எதிர்பார்க்கலாம். மேற்குறிப்பிட்ட பரவல் பின்வரும் வழிகளால் சாத்தியமா கிறது. (1) நேரடியான பரவல் : இங்கு நோய்க் கிருமிகளை விழுங்கிய நிலையிலுள்ள வெண்குருதிச் சிறுதுணிக்கைகளும் தின் குழியங்களும் ஒர் இடத்திலிருந்து இன் னுெரு இடத்தை நாடி நகரும்போது மறைமுகமாக நோய்க்குரிய கிருமி களைக் காவுகின்றன. (2) நோய்க்குரிய கி ரு மிக ள் நிணநீர்த் திரட்டுக்களிலிருந்து நிணநீர்க்கான்க ளுக்குள் விடப்பட்டு நிணநீர்ச்சுற்ருேட் டத்தையடைதல். (3) நிணநீர்ச்சுரப்பிகளிலுள்ள தூபக்கிள் பசிலசுக்கிருமிகள் வெடித்தலின்போது அருகே உள்ள குருதிக்கான்களுள் விடப் பட்டுக் குருதிச்சுற்றேட்டத்தை யடை கின்றன. (4) சுவாசப் பாதையில் காணப்படும் கிரு மிகள், விழுங்குதல் செயன்முறையால் உணவுக்கால்வாயையடைதல்,

Page 45
ஊற்று 10 (கி) 37-40, 1982
மேற்கூறிய பரவல் காரணமாக நுரை யீரலில் உண்டாகக்கூடிய கசநோய் நாளடை வில் குடல், மூளை, ஈரல், மூட்டுக்கள் ஆகி யனவற்றையும் உள்ளடக்கியதாகி விடும். இது ஒரு அபாயகரமான கட்டமேயாகும்.
கசநோயாளியொருவர் சில பொது வான நோய் அறிகுறிகளைக் கொண்டிருப் பார். அவையாவன, பசியின்மை (Loss of Appetite), all-gi) GLD636) (Loss of Weight), Garrass (Anaemia), 56.560 Jungi) வியர்த்தல், தொடர்பான மெல்லிய காய்ச் சல், மூச்சுவிடுதலில் கஷ்டம் என்பனவாகும். கசநோயாளியொருவரின் ஏனைய நோய் அறிகுறிகள் அவரது உடலின் எந்தப்பகுதி தாக்கப்பட்டுள்ளது என்பதிலேயே தங்கி யுள்ளன.
లిg/TU650TLDTతిడ్
சுவாசப்பைக் கசநோயாளி - இருமுதல், இருமுதலுடன் சளி குருதி வெளிவருதல், மூச்சுவிடுதலில் கஷ்டம் குடல் - வயிற்ருேட்டம், உணவு உறிஞ் சற் கோளாறுகள், குடல் அடைப்பு தோல் - சிவப்பு நிற தடிப்புகள் நாக்கு - புண் உண்டாதல்,
ஒரு நோயாளியின் பொதுவான முறை யீடுகளைக் கொண்டோ அல்லது அவரில் காணப்படும் நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டோ மட்டும் கசநோயினே அடை யாளங் கண்டுகொள்ளுதல் முடியாது. நமது வைத்தியசாலைகளில் இதற்கென விசேட வசதிகள் உள்ளன. நுணுக்குக்காட்டிமூலம் துப்பலில் நோய்க்கிருமிகள் உண்டா இல்லை யாவெனப் பரிசோதித்தல், தூபக்கிளின் சோதனை (Tuberculin test), எட்சுக்கதிர் (X-Ray) பரிசோதனை என்பனவே அவை, உலகில் ஆபிரிக்க, இந்திய, ஸ்கொட் லாந்து, அயர்லாந்து மக்களிடையே இந்
@
 

ாய் கூடுதலாகக் காணப்படுகிறது. பல நாயியல் நிபுணர்களின் கூற்றுப்படி, அதி த்துவரும் சனத்தொகைப் பெருக்கமும், தன் உடனிகழ்வுகளாக வரும் வறுமை, பாசாக்குக்குறைவு, முறையற்ற குடியிருப்பு சதிகள், சுற்ருடற் சுகாதாரக் குறைபாடு ள் போன்ற இன்ஞேரன்ன காரணிகள் ந்நோயின் பரம்பலை மிகவும் துரிதப்படுத்து தாகக் கருதப்படுகிறது. இவர்கள் தமது ற்றுக்கு ஆதாரமாக இந்தியா போன்ற ாடுகளை உதாரணமாகக் காட்டுவதும் இங்கு றிப்பிடத்தக்கது. இன்றும்கூட இந்தியா ல் சுமார் 3 லட்சத்துக்குமதிகமான மக் ள் கசநோயாளிகளாகத் தமது வாழ்க்கை ய நடாத்திக்கொண்டிருக்கிருர்களாம்.
ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளில் சநோயின் அட்டகாசம் தற்போது ஒரளவு ட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள் து. இதற்குக் காரணம் திட்டமிடப்பட்ட டுப்பு முறைகளில் அந்நாடுகளின் மக்கள் டிய கவனம் செலுத்துவதேயாகும். ரோப்பிய வட அமெரிக்க நாடுகளில் கச நாயினுல் ஏற்படும் இறப்புவீதம் தற்போது 00,000-க்கு இரண்டு ஆகக் குறைந்திருப் து இதற்குச் சிறந்த அத்தாட்சியாகும்.
உலகமெங்கும் தீவிரமாகப் பரவிவரும் சநோயைக் கட்டுப்படுத்துதலில் அங்கீகரிக் ப்பட்ட தடுப்புமுறைகள் எவ்வாறு தாக் த்தை ஏற்படுத்தலாம் என்று இனி நோக்கு வாம். ஏற்கனவே கூறப்பட்டதுபோன்று சநோயின் இலகுவான தொற்றுதலுக்குக் ாரணியாக அமையும் சில சமூக-பொரு ாதார நிலைகளில் உருப்படியான மாற்றங் ளேயேற்படுத்தல் அவசியம். (ImproveLent in Socio-economic Conditions) றிப்பாகப் போதிய வீட்டுவசதிகளை ஏற் டுத்திக் கொடுத்தல், காற்முேட்டம், சூரிய ளி பெறத்தக்க சுற்ருடல், போசாக்கான ணவு என்பன இவற்றுள்ளடங்கும். அத் |டன் கசநோய் சம்பந்தமான பூரண சுகா ார அறிவைப் பொதுமக்களுக்கு ஊட்டுதல்,
$9

Page 46
ترچatiogy] :10 (4),37 = 40,igھی
பாடசால்ை மட்டத்திலிருந்து பொதுமனிதன் ஈமுகப் பல கருத்தரங்குகளையும், திரைப்படக் காட்சிகளையும் இதனடிப்படையில் ஏற்படுத் திக் கொடுக்கலாம். தசநோயின் கொடுமை யை விளக்கும் ரீதியில் கட்டுரை, சுவரொட் டிப் போட்டிகளை ஏற்பாடு செய்யலாம். பொதுசனத்தொடர்பு சாதனங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுதல் என் பனவும் இதிலடங்கும்.
அடுப்பு முறைகளில் அடுத்தபடியாக அமைவது கசநோயால் தொற்றுண்ட gբԱ5 வரைக் கண்டுபிடித்து அவருக்குச் சிகிச்சை யளிப்பது எவ்வளவு விரைவில் | &&Gյ5frԱյո: ளரைக் கண்டுபிடித்து விடுகிருேமோ அவ் வளவுக்குச் சிகிச்சை முறைகளும் வெற்றி யளிக்கின்றன. அதனைவிட முக்கியம் என் வெனில் நோயின் தொற்றுதலிலிருந்து (1Ք(Ա) சமூகமும், சுற்ருடலும் பாதுகாக்க வழியேற் படுகிறது. இதனைச் செய்வதில் பொதும் கள், சமூக ஸ்தாபனங்கள், சுகாதாரசேவை உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரி களின் பங்கு மகத்தானது கசநோயாளி யொருவரை இக்கட்டுரையின் முன்பந்தி யொன்றில் கூறப்பட்ட வாறு விசேட சோதனைகட்கு உட்படுத்தி அவரது நோயை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. リー நோயைக் கட்டுப்படுத்துதலில் புதிதாக அறி முகப்படுத்தப்பட்ட சில மருந்துவகைகள் வெற்றிகரமான விளைவைக் ಆ.5TLGer: நிரூபிக்கப்பட்டுள்ளன. கசநோயாளியொரு ரக் ஆனிமைப்படுத்திவைத்தல் தடுப்பு முறைகளுள் மிகவும் முக்கிய LP19.JITgib. (Isolation) இதன்மூலம் நோயாளியையும் அவரைச் சூழவுள்ள சுற்ருடலேயும் நோய்க் கிருமிகளின் தொற்றுதலினின்றும் Ling: காக்க முடிகிறது. நோயாளியின் பாத்திரங் கள் வசிப்பிடம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருத்தலும் அவசியூடு நோயாளிக் கெனப் பாவிக்கப்படும் பாத்திரங்கள், உடை ಆr இன்னுேரன்னவற்றை மற்றையோர் பாவியாது தடுத்தல் அவசியமும் அவசரமு மானது காசநோயாளர்கள் கண்ட நின்ற இடங்களிலெல்லாம் துப்புதல் கண்டிப்பாகத்
玺
 

தடுக்கப்படல்வேண்டும். வெற்றிலே போடு தல், புகைத்தல் என்பனவும் இவற்றுள் ளடங்கும்.
கசநோயைக் கட்டுப்படுத்தலில் பி. சி. ஜி. தடைமருந்து கொடுத்தல் (BCG Vaccination) குறிப்பிடத்தக்க பயனைத்தருகிறது. குழந்தை பிறந்து 0-4 கிழமைகட்குள் முதன்முறையாக பி. சி. ஜி. கொடுக்கப் படும். அப் படி க் கொடுபடாதவிடத்து ஐந்து அல்லது ஆறு வயதில் அதாவது குழந் தைகளின் பாடசாலை நுழைவில் கொடுக்கப் படலாம். இரண்டாவது முறையாக பி. சி. ஜி. கொடுபடுவது 10-14 வயது இடை வெளியிலாகும். இந்த இரண்டாவது தடுப்பு மருந்து ஏற்றப்படுதற்கு முன்னர் மான்ரூ பரிசோதனை (Mantoux test) செய்யப்படு வது கட்டாயமானது சுருக்கமாகச் சொன் ணுல் சுகாதாரக்கல்வி, நோயாளர்-பிணி தீர்ப்பாளர்கட்கிடையான ஒத்துழைப்பு சுகாதார வசதிகள், தடுப்பு முறைகளில் காட்டும் ஈடுபாடு ஆகியன கசநோயைத் தடுப்பதில் அடிப்படைப் பாதுகாப்பு அரண் களாக இருக்கின்றன.
இறுதியாக நோக்குமிடத்து, உலகெங் கும் பரவலாகக் காணப்படும் இந்தக் கச நோய் பல இலட்சக்கணக்கான மக்களைக் * கசநோயாளி'களாகப் படுக்கையில்போட் டுள்ளது. இதன்மூலம் அவர்கள் குடும்பத் திலும், சமூகத்திலும் தீண்டத் தகாதவர் களாகவும், வேண்டாதவர்களாகவும் மாறு கின்ருர்கள் உலகின் உழைத்து வாழும் கை களின் எண்ணிக்கையில் விரைவான வீழ்ச்சி யேற்படச் சந்தர்ப்பமேற்படுகிறது. வாழப் பிறந்த மனிதன் கசநோயினுல் கணம் கன மாகச் செத்துக்கொண்டிருப்பதனை அனும திக்கலாமா ? இல்லை, கசநோயின் கோரப் பிடியிலிருந்து மனித சமூகத்தைக் காப்பாற்ற வேண்டுமாயின் கசநோய்த் தடுப்பு இயக்கத் தில் முழுமையான பங்காளிகளாக மாற வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனதும் கடமையாகும். இன்றைய உலகில் இது அவசியமும் அவசரமும் கூட

Page 47
ஊற்று 10 (4), த்1-கீழ் 1982
கண்ணதாசனி
கருத்துக்கள் ---
தமிழ்த் தி  ைர ப் பட உலகு ஐம்ப தாண்டு கால வரலாறு கொண்டது. 1931ம் ஆண்டிலே முதல் தமிழ்த் திரைப்படம் வெளியாயிற்று. முதல் பதினேழு ஆண்டு களே அதன் இளமைப் பருவமெனக் கருதி ல்ை, அண்ணளவாக 1948ம் ஆண்டள விலே தமிழ்த் திரைப்பட உலகு 'மேஜரா' யிற்று அது 'மைனராக இருந்த காலத் திலும், பாடல் கள் ஏராளக் கணக்கில் இடம் பெற்ற ன. அக்காலகட்டத்திலே முதன்மைபெற்ற பாடலாசிரியராக இருந் தவர் பாபநாசம் சிவன் தமிழ்த் திரைப் பட உலகு மேஜரான போது கண்ண தாசன் பாடலெழுதப் புகுந்தார்.
1970இல் வெளியான அவரது திரை இசைப் பாடல்கள் தொகுப்பின் முதல்
தொகுதியிலே, கண்ணதாசன் எழுதியதா
ଉUS$1',
1948இல் நான் பாடல் எழுதத் தொ டங்கினேன். இந்த இருபத்து இரண்டு ஆண்டுகளில் சுமார் 2000 பாடல்கள் எழுதியுள்ளேன். வ ள மா ன தமிழ் gaunts இருந்ததால் பல நேரங்களில் சொற்சிலம்பமும் பயின்றிருக்கின்றேன். எளிய ரசனைக்காக டப்பாங்குத்துகளும் எழுதியிருக்கிறேன் சித்தர் ஞானத்தி லும் இறங்கியிருக்கிறேன் பக்தித்துறைக் கும் படைத்திருக்கிறேன் .'
 
 
 
 

ன் திரைப்படப் நில விஞ்ஞானக்
ஒரு நோக்கு
சச்சி பூரீகாந்தா B. Sc., M. Sc. உணவியல் துறை இலினுேய் பல்கலைக் கழகம் அமெரிக்இர
கண்ணதாசனுடைய பாடல்கள் சினி மாவில் இடம்பெற்ற காலகட்டத்தில் விஞ் ஞானத்துறையிலும் பாரிய முன்னேற்றங் கள் இடம் பெற்றன. அவற்றை கண்ண தாசனின் சில பாடல் க ள் விவரித்தன. மேலும் விஞ்ஞானத் துறையில் சில அடிப் படைக் கருத்துக்களாக, க ரு த ப் படும் கொள்கைகள், விளக்கங்கள் அனுமானங் கள் போன்றவற்றையும் கண்ணதாசன் தனது பாடல்களில் விவரித்துள்ளார். இத் தனேக்கும் அவர் விஞ்ஞானம் படித்தவரல்ல; ஒரு விஞ்ஞானியுமல்ல. அவரே கூறுகிருர், $(Tଓଫି , ,
பள்ளிக்குச் சென்று us ஒர் எழுத்தும் தெரியாது' என்று அவர் ஒரு படிக்காத மேதையாக விளங்கிஞர் என்றே கூறலாம். கண்ணதாசனின் பாடல்களில் விரவியுள்ள சில விஞ்ஞானக் கருத்துக்களை இங்கு நோக்குவோம்.
மேற்புயங்களின் விடுதலை
(Emancipation of Forelimbs)
மனிதன் விலங்கியல் பாகுபாட்டிலே பிறைமேட்ஸ் (Primates) வருணத்தைச் சார்ந்தவன். மனிதனே ஏனைய விலங்குகளி லிருந்து பாகுபடுத்திக் காட்டி, மனிதனு டைய கூர்ப்பியல் முன்னேற்றத்தில் முக் கியபடியாக விளங்கியது: நாற்காலியாக (Qnadruped) GMG iš 55 GJ tågeupg5 T6B5 ULJiříggir இருகாலியாக (Biped) நடக்கத் தொடங்கி
臺麗

Page 48
sy : ಶಿಲಿ (4), 41-44, ಶಿಶಿಜಿ
யதே. மேற்புயங்கள் (Foreinbs) நிலத்தி லிருந்து சுயாதீனமாக எழுப்பப் பட்டவுட னேயே, ஆயுத ங் கள் பாவிப்பதற்குரிய தன்மை சாத்தியமாயிற்று. அத்துடன் இரு வகையான "பிடி'கள்- (1) வலு ப் பி டி (Power grip) (2) u siġar siegħu u suq (Precisior grip) உதயமாயின. 'கை'களின் பாவனையே மனிதனுடைய கூர்ப்பியல் வெற்றி க்கு ஆதாரப்படி எனலாம். இதனைக் கவிஞர்
'ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் - கட்டும் கைகளே ஆண்கள் பெண்கள் மானங் காக்க
= ஆடை தந்த கைகளே சேற்றில் ஒடி நாற்று நட்டு களை
- எடுக்கும் கைகளே பலன் மிகுந்த யந்திரங்கள் படைத்து
- බෝla." L- ගෘහණිණශීබr பாதை போட்டு உலகை ஒன்ருய்
- இணைத்து வைத்த கைகளே! என எளிய வரிகளில் விளக்கியுள்ளார்.
பெற்றேர் பராமரிப்பு (Parental care
மனிதன், பாலூட்டிகள் (Mammalia, வகுப்பைச்சார்ந்தவன். குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் உடற்ருெழிலியல் இயல்பு, கூர். பிலே மிக முன்னேற்றமான ஒரு படியாகும் மனிதனுடைய கூர்ப்பியல் வெற்றிக்கு இன் ஞெரு காரணம், மிகுந்த பெற்ருேர் பராய ரிப்பு நடத்தை உருவாகியதே. பிறந்தவ டனேயே சிறிசு"களை அப்படியே இயற்கை யின் பராமரிப்பில் விட்டுச்செ ல் ல | ம ல் தாயும் தந்தையும் நீண்டகாலத்திற்கு சூழ லின் பாதக விளேவுகளிலிருந்து குழந்தை யைப் பராமரிக்கின்றனர். "தாய்மை"எனும் இந்தத் தூய, உயர்ந்த கூர்ப்பியல் பண்டை கவிஞர், இலகுவாக எடுத்து க் கூறுகிருர் இப்படியாக:
"பண்பு தெரியாத மிருகம் பிறந்தாலும்
பால் தரும் கருணை அது - பிற பசித்த முகம் பார்த்துப் பதறும் நிே பார்த்துப் பழம் தரும் சோலே அது

苏
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண் ணுமல்கொடுக்கின்ற கோவில் அது-தினம் துடிக்கும் உயிர் கண் டு தோளில் இடம்
தந்து அணைக்கின்ற தெய்வம் அது'
மனிதனுடைய வெற்றிப்படிகள்:
சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனுடைய குரங்கு மூதாதை யர்கள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இப்படி யிருந் தும், கடந்த பத்தாயிரம் ஆண்டுக்காலத்தி லேயே மனிதன், விலங்கு வாழ்க்கைமுறை யிலிருந்து விடுபட்டான். தொடர்ந்த
படிகளை, கவிஞர்
“ஆதி மனிதன் கல்லையெடுத்து வேட்டை யாடினுன் அடுத்த மனிதன் காட்டையழித்து நாட் டைக் காட்டினுன்
மற்றும் ஒருவன் மண்ணிலிறங்கி பொன்
னைத் தேடினுன் என விளக்கி விட்டு, இந்த இருபதாம் நூற் ரூண்டிலே ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற் றங்களே,
"நேற்று மனிதன் வானில் தனது தேரை s ஒட்டினுன் இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத் தைத் தேடினுன்' என்று விவரித்தபின்னர்,
'வரும் நாளே மனிதன் ஏழு உலகை ஆளப்போகிருன்” என்று ஆரூடம்கூறுகிருர், இதே கருத்துக் களை யே மேலும் சில LILájsahGšav,
"பறவையைக் கண்டான் - விமான ம் படைத்தான் பாயும் மீன்களில் படகினைக் கண் டா ன் எ தி ரொ லி கே ட் டான் - வானெலி படைத்தான்" என்றும்,
சவானத்தில் ஏறிச் சந்திரமண்டல வாச லேத் தொடலாமா? மாண்டுகிடக்கும் மனிதனின் மேனி மறு படி எழலாமா?

Page 49
ஊற்று 10 (), 14ை4, 1982
என்ருெரு காலம் ஏங்கியதுண்டு - இன்று கிடைத்தது பதில் ஒன்று ஞானம் பிறந்து வானில் பறந்து மீண்டு வந்தான் உயிர் கொண்டு.' என்றும் பாடிக் களிப்படைகிருர், இக் கடைசி வரியிலே ஞானம்" என இவர் விவ ரிப்பது, விஞ்ஞானம்தான் என்பதிலே வேறு பாடு இருக்க முடியாது.
மனிதனுடைய வெற்றிகளுக்குக் கார ணம், விஞ்ஞானிகள், ஆராய்பவர்கள், பரி சோதிப்பவர்களின் அசாத்திய துணிச் ச ல் தான் என்று சொல்லாமலே விளங்கு ம்.
ருேர் கடலுக்குப் பயந்திருந்தால் அவர்கள் புதிய உலகைக் கண்டுபிடித் திருக்க மாட் டார்கள். மற்றும், சோக்கிரட்டீஸ், கலீலி யோ, கொப்பர்ணிக்கஸ், சார்ள்ஸ் டாவின், ரைட் சகோதரர்கள், ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் எதிர்ப்புக்களுக்குப் பயந்து தமது ஆராய்ச்சிகளைக் கை விட்டிருந்தால் விஞ்ஞானம் இந்தளவுக்கு ஏற்றம் கண் டி ருக்குமா என்பது ஐயமே! இக்கருத்தைக் கண்ணதாசன், எளிய வரிகளிலே,
"கடலுக்குப் பயந்தவன் கரையில் நின் ருன்-அதைப் பட கினில் கடந்தவன் உலகைக்கண்டான் பயந்தவன் தனக் கே ப கை பா வா ன் =என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியாவான்." என்றும்,
"கொட்டும் மழையும் இடி வந்தாலும் அச்சம் என்பது கூடாது! பயந்தவனுக்கு நிழலும் பகையே! துணிந் தவனுக்குக் கடலும் சிறிதே' என்றும்,
'நெஞ்சில் துணிவிருந்தால் நிலவு க்கும் போய் வரலாம் உலகம் போகின்ற வேகம் - உருவ மு
இனிமேல் மாறும் நடக்கும் கதைகளைப் பார்த்தால் நமக்கே சிறகுகள் முளேக்கும்." என்றும் பாடினர்.
இது
LJU
நக

ழலும், சூழல் மாற்றங்களின் விளை களும்
மனிதன் பல வெற்றிப்படிகளைத் தான் ப போதிலும் சமீபகாலம் வரை அவன் ாழ்ந்த சூழலிலே மாற்றம் ஏற்படவே ல்லை. இதனைக் கண்ணதாசன்,
'வந்த நாள் முதல் இந்தநாள்வரை
வானம் மாறவில்லை-வான் மதியும் மீனும் கடல் காற்றும்-மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை -மனிதன் மாறிவிட்டான்." எக்கூறுகிருர்,
ஆணுல் சூழலை மனிதன் மாற்ற முனை ன்ருன் சூழல் மாற்றத்தின் ஒரு முக்கிய -, 155 Tau (Täsib (Urbanisation) GT6737 avTiib. ரவாக்கத்தைப் பற்றி, கவிஞர் நான்கு சிகளிலே,
'சிந்திய வேர்வை நிலத்தில் ஓடி சிறுகச் சிறுக ஆருச்சு- அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே நாடு நகரம் ஊராச்சு, '
னப் பாடினர்.
நகரவாக்கத்தின் விளைவுகள் எப்படி iளன? சாதகமான விளைவுகள் பல ஏற் ட்டுள்ளன. அத்துடன், பாதக விளைவு நம் ஏற்படாமலில்லை. ஒரு பட்டிக்காட் ானின் மனநிலையிலிருந்து, நகரத் தி ன்
லங்கோலத்கைக் கவிஞர்,
சிட்டுக்கட்டுக் கணக்காக - இங்கே
வீட்டைக்கட்டி இருக்காக வீட்டைக்கட்டி இருந்தாலும் - சிலர்
ருேட்டுமேலே படுக்காக பட்டணத்துத் தெருக்களிலே- ஆளு நிக்க ஒரு நிழலில்லையே வெட்டவெளி நிலமில்லையே- நெல் லு கொட்ட ஒரு இடமில்லையே' ஈ விபரிக்கிருர், இது உண்மைதானே!

Page 50
鲇:10(4)41一玺,1°
சனத்தொகைப் பெருக்கத்தால் ஏறி படும் விளைவு இது. இதே சனத்தொகை பிரச்சினையையும், இறப்பைப் பற்றியும், கவி ஞர் இன்னுெரு பாடலிலே,
“வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்- இந்: மண்ணில் நமக்கே இடமேது?" எனக்கேள்வி எழுப்புகிருர்,
விவசாயத்தின் மகத்துவம்
சனத்தொகை மிகுந்தால் உணவுப் பஞ்சப் ஏற்படும். உணவுப் பெருக்கம் மனித இனத் தின் பாதுகாப்பிற்கு அத்தியா வ சி யம் எனவே, விவசாயப் பொருளாதாரத்தி6ே தான் "உயிர் இருக்கிறது எனுங் கருத்தை
வயலே நம்பி வாழ்ந்திருந்தா
ଅର୍ଦ୍ଧ ବୋft blDIT-ଜୁଏ பயலே நம்பத் தேவையில்லே சின்னம்ம ஆட்டம் போடும் மனிதனுக்கும் ஆரவ ரம் செய்பவருக்கு கோட்டை கட்டி வாழ்பவர்க்கும்
கண்னம்மா.நெல்லு மூட்டையில் தான் உயிரிருக்கு
எனக் கவிஞர் வலியுறுத்துகிருர்,
ವೌFTಉತ್ತ್ மகத்துவத்தைப் புற கணிக்கும் இளைய சந்ததியினரைப் பார்த் கவிஞர் ஏளனமாக,
ஊற்று வாசகர்களே, ஊற்றில் உங்கள் ஆக்கங்கள் ജൂ. அனுப்புங்கள். பத்திராதிபர் குழுவி பிரசுரிக்கப்படும். கட்டுரைகள், 5 போன்றன வரவேற்கப்படும். க. குறிப்புகள், வேறும் சில தகவ வேண்டிய முகவரி
藝翁

ம் பெற வேண்டுமென்ற ஆவலா? σταρς) ல்ை ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிச்சயம் று துணுக்குகள், விஞ்ஞான முடிபுகள் டுரையாளர்களுக்கும் நாம் தரும் சிறு கள் வேண்டின் தொடர்பு கொள்ள
தேரோட்டம் காரினிலே ரொம்ப திமி ரோடு போறவரே-எங்க ஏரோட்டம் நின்னு போனு-உங்க
C) என்னவாகும்? என நையாண்டியும் செய்கிறர்.
ഴ1ഖഞ]
திரைப்படப் பாடல்களை ஏளனமாக கருதும் பேர்வழிகள் இன்னும் இருக்கிருர் கள். திரைப்படப் பாடல்களின் வரம்புக் குள் நின்று கொண்டும் விஞ்ஞானக் கருத் துக்களை எளிய தமிழில் கூறமுடியும் என இவர்களுக்கு, கண்ணதாசன் எடுத்துக்காட் டியுள்ளார்,
பிற்குறிப்பு
இக் கட்டுரை ஆக்கத்திற்கு பயன்படுத்
தப் பட்ட நூல்
கவிஞர் கண்ணதாசனின், திரை இசைப் பாடல்கள் (முதல் தொகுதி) வானதி பதிப்
45 Lih, G5, GöITż537, 1970; 450 5
கவிஞர் 1971 இலிருந்து 1981 வரை எழுதியுள்ள திரைப்படப் பாடல்கள் இந் நூலிலே இடம்பெறவில்லை.
Dr. R. SVAKA NESAN Dept. of Biochemistry Faculty of Medicine Peradeniya.

Page 51
ご
ஊற்று 10 (4) 28-48 1982
6ਰੰਥ
இளமை
டீன்-எஜ் - ஒவ்வொருவரது காலச்
சக்கரத்திலும் பிரச்சனைகளையும், சுவை
மிகுந்த நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்தும் அதே
வேளையில் பொறுப்புணர்ச்சிகளையும் சேர்த்து உணர்த்தும் ஒரு மிக முக்கியமான இடைக்
காலம் எவர் ஒருவர் வாழ்க்கையிலும் இந்த
டீன்-ஏஜ் வரத்தான் செய்யும், அவ் வேளையில் ஒரு சில ஆண்களும் பெண்களும் இனம்புரியாத ஒரு வித மயக்க நிலைக்கு உட்படுத்தப்பட்டு காம் செய்ய முற்படும் செயல்கள் பிழையானதா சரியானதா என ്ഖൂട്ടിട്ടി' LT്ക്സ് ക്ലൈ 1, 1ങ്ങി:) அற்றவர்களாக வாழ்கின்றனர். இப்படிப் பட்டவர்களால் அவர் தம் பெற்றேர்க ளுக்கு நித்தம் மனக் கவலைகளும், அதனுல் பலவித தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. ஒருவனின் எதிர் காலத்தை நிர்ணயிப்பதில் டீன்-ஏஜ் முக்கிய பங்கு வகிக்கின்ற தென்று கூறினுல் அது மிகையாகாது. பல வித சலனங்களே மனதில் உருவாக்கும் இந் தக் கால இடைவெளிக்குள் எவன் ஒருவன் மிகவும் விழிப்புடனும், தெளிந்த மனத்துட னும், பலத்த மன உறுதியுடனும் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபடுகின்ருனுே
அவ னு க்கு பிரகாசமானதொரு வாழ்வு
சமையுமென்பதில் ஐயமில்லை. டீன்-ஏஜ் காலம் பல முற் போக்குத்தனமான செயல் களைச் செய்வதற்குரிய மன வலிமையை
ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அத்துடன்
தானே சிந்தித்து செயலாற்றும் திறமையை
与
 
 
 
 
 

b ைமறைந்து Gr ப் பிராயம் திரும்புமா
" (3). Gaia, Gayatarsist B.V.Sc., Ph.D.
மருத்துவ பீடம் பேராதனைப் பல்கலைக் கழகம்
ம் வளர்க்கின்றது. ஆனுல் இதை உணரா தார் பலர் இருக்கின்றனர். இந்தத் திற மகள் யாவும் மறைக்கப்படுகின்ற ஒரு மன லேயில் தான், ஒருவன் தன் ஆக்கச் சக்தி ய வேறு பாதைகளில் திசை திருப்பிவிடு ன்முன் சக்திகள் பல வடிவங்களில் இருக் ன்றன. அவற்றை அழிக்கவோ, ஆக்கவோ மடியாது. அது கடவுள் ஒருவரால் தான் மடியும். ஆனல் சக்திகள் ஒரு வடிவத்திலி ந்து மற்றுெரு வடிவத்திற்கு மாறும் தன் ம உடையன, மேற் கூறிய ஆக்கச் சக்தி ம் அப்படித்தான். ஒருவனுக்குள் இருக்கும் ச் சக்தி ஏதோ ஒரு விதத்தில் வெளிப் டுத்தப்படல் வேண்டும். பலர் அதை ஆக் ப் பாதையில் பயன் படுத்துகின்றனர். லர் அதை அழிவுப் பாதையில் செலவிடு ன்றனர். எனவே அந்நிலையில் அவனுக்குத் குந்த முறையில் யோசனைகளும் ஆலோச னகளும் வழங்கப்படல் வேண்டும். அதனுல் ருவனுக்கு சரியான பாதையைத் தெளி ாகக் காட்டும் பட்சத்தில், இடைக் காலம் pடிந்து அடுத்த கட்டத்தில் நுழையும் பொழுது, அவன் தனக்கென்ற ஒரு பாணி யை அமைத்து தனக்கென்றே ஒரு சுவட்டை ம் நிர்ணயித்துக் கொண்டு முன்னேறிப் லவித பயனுள்ள படைப்புக்களை வழங்கு நின்றன்.
டீன்-ஏஜ் எனப்படுகின்ற இந்த ப் ரட்சிக் கால இடைவெளி எந் நிலையைக் தறிப்பிடுகின்றது தெரியுமா? Thireen to
玺事

Page 52
ஊற்ற் 8 20 (4), 45-48 1982
ninteem அதாவது பதின்மூன்று தொடக்
பத்தொன்பது வயது வரை இந்த ஏழுவரு
காலத்திற்குள் ஒவ்வொருவர் வாழ்விலு
பலவிதமான மாற்றங்கள் நிகழ்கின்ற6
அவற்றில் ஒரு சில இன்பமானதாகவும் ஒ
சில துன்பமானதாகவும் அமைந்து விடுகி றன. உதாரணத்திற்கு, ஒரு சிலர் இ நேரத்தில் தம் பெற்ருேரை இழக்க நேர் கின்றனர். அப்படிப்பட்ட ஒரு கட்டத்தி அவன் மனம் இன்னும் பக்குவப்பட ஆரம்பக் கட்டத்தில், இவ்விழப்பு பெர் தொரு மனமாற்றத்தை ஏற்படுத்தக் கூடி வாய்ப்பை உண்டு பண்ணுகின்றது. மேலு அவன் அக் குடும்பத்தில் மூத்தவனுக இருந் விட்டால் மாபெரும் சுமையான வாழ்க்கை சுமை அவன் தோள்களில் சரிகின்ற இதைச் சரிவர உணரமுடியாத அவன் பக் வம் முதிர்ச்சியடையாத மாங்காய் இளை யான நிலையில் பழுக்கும் போது அடைய வெம்பல் நிலையைப் போன்ற நிலைை எய்துகின்றது. இது ஒருவன் தன் வாழ் கையில் எதிர் பார்க்காத விடயமானுலு: அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு தள்ளப்ப டால் அதைச் சமாளிக்கக்கூடிய தைரியத்ை வளர்த்துக் கொள்ளல் மிக அவசியமானது கும். மனத்தைரியம் அல்லது மன உறு என்பது அனுபவம் சொல்லித்தரும் பா மாகும். ஒவ்வொருவர் வாழ்விற்கும் இ முக்கியமான ஒரு கருவியாகும். எந்தவொ விடயத்தையும் ஆரம்பிக்கும் பொழுது மனவுறுதி தேவை. அதே போன்று அவ்வி யத்தில் தோல்வியுற நேரிட்டாலும் மன றுதி கொண்டு அதைச் சமாளித்துவிடலா
இந்த டீன் ஏஜில் பல பிரச்சினேக உருவாகலாம். அவை யாவை? அவற்றிற் தீர்வு உண்டா? இது பெரும் தொல்லையா விடயமாகும். இன்று பல்வேறு நாடுகளிலு கண்களுக்குப் பளிச்சென்று தெரிகின்ற பிர சினைகளில் இதுவும் ஒன்ருகும். உணவு பிரச்சினை, சமாதானப் பிரச்சினே, உரிமை பிரச்சினை, எல்லைப் பிரச்சனை, சாதி மத
46
 
 

h,
途。
பிரச்சினை இப்படியான பலவித பிரச்சனை களுள் டீன் ஏஜ் பிரச்சினையும் ஒன்ருக
ஐக்கியமாகிவிட்டது. பிரச்சினைகள் தீர்க்கப்
படவேண்டியவை. தீர்க்கக் கூடியவை. ஆணு லும் தீர்க்கப்படாமல் இழு பறிப் பட்டுக் கொண்டு செல்கின்றன. பிரச்சினைகள் தீரு வதற்கு அவற்றை ஆராய முற்படும் பொ ழுது தெளிந்த எண்ணமும், கூரிய நோக்கும், பரந்த மனப்பான்மையும் இருப்பது மிகவும் அத்தியாவசியமானவையாகும். இவ் வழிக ளில் பிரச்சினைகள் ஆராயப்படுகின்றனவா என்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும்.
- இனி "டீன் பிரச்சினைகளைப் பற்றி சிறிது ஆராய்வோம். பத்து வ ய தைத் தாண்டி ஒருவன் பதினென்று அல்லது பன்னி ரண்டு வயதடையும் பொழுது அவனது உட லிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை, முகத்தில் மயிர் வளர்தல், குரலில் மாற்றம், வளர்ச்சியில் மாற்றம் என்பன. இம் மாற் றங்கள் யாவும் எமதுடலில் இருக்கும் அகஞ் சுரக்கும் (Endocrine) பொருட்களான ஓர்
மோன் (Hormone) என்பவற்ருல் நிகழ்கின்
றன. இதனுல் தோற்றத்தில் மாற்றமேற்பட அவனுடைய மனப் பக்குவத்திலும் மாற்ற மேற்படுகிறது. எனவே தான் அவன் தன்னு டைய நடை உடை பாவனேகளேயும், தனது சுற்ருடலையும், நண்பர்களேயும் வே ருெ ரு கோணத்திலிருந்து ஆராய்ந்து அதன் பல ணுக அவற்றை மாற்றியமைக்க முயற்சி செய் கின்றன். இம் மாற்றங்கள் யாவும் பெருத்த பணச் செலவை எதிர் பார்த்து நிற்கின்றன. அத்துடன் அவன் எடுக்கும் முடிவுகள் காலப்
போக்கின் தன்மைகளுக்கு ஈடு கொடுக்க
வேண்டியதாகவும் அமைகின்றன. இதற்கு உதாரணம் இந் நூற்ருண்டில் நாம் காணக் கூடியதாகவிருக்கின்ற உடைப் புரட்சியை குறிப்பிடலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உடையலங்கார அமைப்புகளே இன்று நாம் காணமுடியாதவர்களாக இருக்கிருேம். இன்னும் பத்து வருடங்களின் பின் நிலை எப்படியோ? இன்று நவயுக பாணியாக மிளி

Page 53
ஆற்று :10 (*), 45-48, 1982
ரும் மணிஅடிக் காற்சட்டைகளும், "என்னைக் கொஞ்சு", "என்னை நேசி என்று பல வகை யான வாக்கியங்களைத் தாங்கி பவனி வரும் மேலாடைகளும் 1970ம் ஆண்டில் எம் நாட் டில் அரிதாகவிருந்தன. இவை யாவும் எதைப் பிரதிபலிக்கின்றன? மேற்கத்தைய நாட்டவரின் பாவனைகள் எம் நாட்டவரி டையேயும் புகுந்து விட்டதற்கான அறிகுறி கள் தான் இவை. இவை யாவும் நல்லதா? கெட்டதா? மற்றவர் கலாச்சாரங்களை
நாம் பின்பற்றுதல் அவசியமா? இல்லையா?
என்பனபெரும் சர்ச்சைக்குரிய விடயமாகும். இதைப் பற்றிய சர்ச்சைகளும், விவாதங் களும் அடிக்கடி புதினப் பத்திரிகைகளில் வெளி வருவது இப்பிரச்சனையின் ஆழத்தைப் பிரதிபலிக்கின்றது. இருந்தாலும் இதைப் பற்றிய எனது சொந்தக் கருத்தையும் தெரி விக்க விரும்புகின்றேன். ஏனென்ருல் பலர் இப்படிப்பட்ட இக்கட்டான பிரச்சனைகள்
உருவாகும் பொழுது, அதற்கான தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்காமலே சமா
ளித்து விடுகின்றனர். இது தவறு ஒருவன்
தன்னுடைய கருத்துக்களேத் தெரிவிக்கும் பொழுது மற்றவனுக்கும் சமுதாயத்திற் கும் பயப்படத்தேவையில்லே. கருத்துக்கள்
பரிமாறப் படவேண்டியன. பரிசீலனை செய்
யப்படவேண்டியன. பரிசீலனை செய்யப்
பட்ட பின் சரியெனக் கருதின் கடைப்பிடிக் கப்படவேண்டியன. எனவே தான் ஒருவனில் அடங்கிக் கிடக்கும் கருத்துக்கள் எழுத்து வன்மை மூலமும், பேச்சுத் திறமையினூடே
யும் வெளி வருவதற்கு பூரண சுதந்திரம்
வேண்டும். இதை ஒருவரும் மறுக்கப் போவ தில்லை. இப்படியே ஆயிரம் ஆயிரம் கருத் துக்கள் தோன்றி பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால் எமது முன்னேற்றத்திற்
கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடை
யேற்படாது. தற்காலத்து "டீன் ஏஜ்" உடை களைப் பற்றி என் கருத்து யாதெனில், ஒரு நாட்டின் எந்தவொரு பழக்க வழக்கங்களும் அந் நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக் கக் கூடியனவாகவிருத்தல் வேண்டும். அதே

ரத்தில் அந்நிய நாட்டுக் கலாச்சாரத்தின் டுருவல் எமது பண்புகளை மாசு படுத்துவ நன்ருல் அதனை உதறித் தள்ளுவது மிக ம் இன்றியமையாததாகும். மேலும் ଅଶ୍କତିଥି ଭ}} b நாட்டின் பொருளாதார நிலையைப் திக்கக்கூடியதாக அமைவதும் சிறந்ததல்ல எவே நம் பண்டைக் காலக் கோட்பாடு ாயும் வரைவிலக்கணங்களையும் மாற்றிய மக்காதவாறு, அதே நேரத்தில் பொரு தார ரீதியில் நன்மை பயக்கக் கூடிய கவும் மேல் நாட்டுக் கலாச்சாரங்கள் மையுமாகுல், அவற்றைப் புறக்கணிப் ம் மடமைத் தனமாகும். எமது நோக்இ ம் சிறிது முன்னேற்ற அறிகுறிகள் இருப் அவசியமல்லவா? இரண்டாவதாக உடை அணிவது சுற்ருடலின் வெப்பநிலையில் கவும் தங்கியுள்ளது. இலங்கையைப் பொ த்தமட்டில் பருத்தித் துணிகளே சுவாத்தி *திற்கு ஏற்றவை என்று கருதப்படுகின் ஏ. இருந்தும் அவற்றைத் தேரய்த்து, பர்த்தி நேர் சீராக ஆக்குவதில் உள்ள மங்களைத் தவிர்க்க பெரும்பாலானேர் ந்தெட்டிக் துணிவகைகளை பெரிதும் நம்புகின்றனர். இம் மாற்றம் வெகுநாட ாகவே இருந்து வருகின்றன. இருந்தும் தியற்ற குடும்பங்களில் இன்னும் பருத்திப் வைகள் ஆதிக்கம் செலுத்துவதை இன் ம் நாம் காணக்கூடியதாக விருக்கின்றது. து ஒவ்வொருவரது வருமானத்தையும் ாறுத்து வேறுபடுகின்றது. ஆதலால் சுய பற்சி இன்றி பெற்றேரின் பொறுப்பில் நக்கும் எவரும் உடையலங்காரத்திற்காக ாகையான பணத்தை விரயமாக்குவது ந்த காரியமல்ல. ஆண்களில் இளம் வய ரில் பெரும்பாலானுேர் பெண்களைக் கவரு ற்குச் சிறந்த வழி அவர்கள் மனதைக் ரும் விதத்தில் ஆடைகளை மாற்றி மாற்றி Eவது என்று நினைக்கின்றனர். இது முற் லும் தவறு. ஆடைகள் ஒரு காரணமாக  ைமந் தாலும் அது முக்கியமான தல்ல. ண் மகனில் இருக்கும் சுய முயற்சியும், ாழில் நிலேயும், அவன் கல்வி ரீதியில்
藝?

Page 54
ஊற்று 10 (9. 45-48, 1982
பட்டங்களும், சமூ இமைய தன்னை அடக்கி வ வகுத்துக் கொள்ளலுமே (ରu got sଥିt liଣasg கவருவதாக அமைகின்றது. ஆடையலங் ரத்தை அவர்கள் பெரிதும் விருப்புவதில் ஒருவன் தாய் தந்தையரின் பரா ம பிலிருந்து விடுபட்டு தன் சொந்த முயற்சி ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பொழு அதைக் கொண்டு கிடைக்கும் ஊதியத்தி மூலம் பெற்முேரை மனமகிழ்வுறும் அளவு உதவி செய்தபின் மிகுதியாகக் கிடைக் பணத் தை த ன து அபிலாசைகளை பூர்த்தி செய்யுமுகமாக ஆடையலங்கா தில் முடக்குவது கண்டிக்கக் கூடிய வி. மல்ல. உண்மையைக் கூறப் போனுல், ! படி மிஞ்சும் பணத்தில் இன்னுமொரு
* CO-OPER
for all you
ΟυALITY
* OLUR. MOTTO IS
Grams: LAKSHMI". Jaffn
TELE Phone: 22438, 22537 & 22
 
 
 

ܠ ܐ .
يو
தியை நாட்டின் முன்னேற்றத்திற்குச் செல
விடுவது மிகவும் சாலச் சிறந்தது. இதை வாக்கியத்தில் சொல்வது இலகுவாகவிருக் கும். கடைப்பிடிப்தில் சிரமம் இருக்கின்றது. இதுவும் எத்தனையோ விடயங்களில் தங்கி யிருக்கின்றது. ஒருவனின் நாட்டுப்பற்றும்,
அவனுக்கு அந் நாட்டில் இருக்கும் சுதந்திர
மும், சிறந்த ஒருவனுக்கு அவன் தாய்நாட விக்கும் மதிப்பும் இதற்கு முன்னுேடியாகத் திகழ்கின்றன. தான் பிறந்த நாட்டில் தனக் குப் பூரண சுதந்திரம் இல்லாவிட்டால் அந்நாட்டின் முன்னேற்றத்திற்காக தனது திறமைகளே செலவிட எவனுக்குத்தான் ഥഒT് ഖL?
(தொடரும்)
век и се двои в звъв
3
370, Jaffna. JAFF. A.
420, Hospital Road,

Page 55
9) 6T6TD
ബ
எமது உள். பேசவிழைகின்றது டுப் பிரசுர நிறைவினையொட்டிய விே செய்தவை, மலரவிட்ட விசேட இ வாசகர்கள், விளம்பரம் கொடுத்துதல் பண உதவிகள் செய்தவர்கள், ஊற் தவர்கள். ஆம்! எல்லாவற்றையும் ஊற்று அறிவியல் சஞ்சிகை வளர்ச்சி டவர்கள் அனேவரையும் திரும்பத் தி ருேம். அவர்கள் எல்லோருக்கும் எமது வரும்காலங்களிலும் உங்கள் ஆதரவு
கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு
தேரூர்ந்து தெரு முனை வந்த பத்தாண்டூர்ந்து பலர் முன் பல்சுவைக் கட்டுரையாம் மரு இரசாயன, எந்திரவியற் கை இனி சுவைக்க என்ன என்று
மனதிணிக்க நாம் தரும் படை
 

வ. இம் முறை எ ரத் சட இதழ். இதுவ فر BITLif தழ்கள், ஆயிரக்கணக்கான விய வர்த்தகப் பிரமுகர்கள், றுக்கு விடயதானஞ் செய் எண்ணி) பார்க்கின்ருேம். பங்கெடுத்துக் கொண் ரும்ப நினைத்துப் பார்க்கின் பெரியதொரு நன்றி. æä
്കൃഞഖ. அது நிச்சயம் உண்டு.
துபோல் வந்துள்ளோம் த்துவ, விஞ்ஞான த படித்தீர் கேட்டிடாமல் உப்பு கண்டிடுவீர்
- பிரதம ஆசிரியர்
".

Page 56
F356) 965 II.
6. @ LT
கோவில்
166, дѣ!
Printed at St. J
 
 
 

V
1ளிப்புச் சாமான்கள்
பித்தளை, அலுமினிய,
வனப் பொருட்கள்,
உபகரணங்கள்
ற்றும் L6)
ரிகை லிமிரெட்
ங்கேசன்துறை வீதி,
ாழ்ப்பாணம்.
தொலைபேசி: 23837
seph's catholic Press, Jaffna