கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1985 (13.1)

Page 1
다.
 ̄ ܒ - ܫܢ ܬܐ ܚܡܫܒܫܒܐ -- ܒ -- ܒ -- ܒܢ- ܚܝܒܪ-ܓܕ=,-
* பசளேகள்
: மீனின் உயிரியல் * சூரியசக்தி
ஹேலியின் .דחה והה
 

1 EEE
தொகுதி 13 இலக்கம்
HSHS SqqSS S S A A S qLA u ee u TSqATe TS SJSAS
1 ܬܐ "آيم
2/><
21
=================="" == ____ ميسيسي حيح حتي يحكي حيحية
裘 பழங்கள்
* * மருந்துச் செடிகள் ல்வெள்ளி
e5ur 500

Page 2
OO7 RU- Science Magazine in Tamil
N THIS ISSUE
k Application of Fertilizers in Agricult
Some Facts (1) Biology of Fish & it's Utilities Solar Energy in Fuel Crisis
:
Some Truths about Fruits
:
Modern Techniques in Palmyrah Dev
Medicinal Plants & Pharmaceutical Ir 1910 ... 1985! Halley’s Comet Again ! Barathi’s View on Halley’s Comet (Th
OOTRU EDITOR
Chief Editor : Dr. R. Sivakanesan
EDITO RIA,
Prof. S. V. Parameswaran. Dr. C. T. Ravirajan. Dr. K. Sukumar. Miss. V. Arasaratnam.
EDITORIAL ASSOCIATE: Mr. S.
Correspondence: Edi OOR
OOTRU ORI Mari Amman Lane, T
Phone:
02
OOTRU ORG
Chairman: Prof. A. Thurairajah
Secretary: Dr. K. Krishnananthasivam
President - Board of Management :
Pr

Vol. 13 No. 1 1985
V. Kathiramalai. W. Venkatesh. S. Anandavijayan. ( P. Tharmalingham. { Dr. K. C. Wernha.
( Prof. K. Balasubramaniam“ "elopment - Dr. S. Mohamadas.
Dr. S. Kandiah.
dustry - Prof. A. Thurairajah.
- AAVI iOomrakethu)
AL COAMAMATTEE
Administrative Editor: Dr. K. Krishnananthasivam Mr. S. Anandavijayan
L BOARD
Dr. P. T. Jayawickramarajab. Dr. N. Sayalolibavan. Mr. K. Navaratnam. Mr. K. Selvarajah.
Balachandra
for, TU
GANISATION shirunelvely, Jafna.
1-22047
GANTATION
Vice Chairman: Prof. V. Tharmaratnam
Mr. S. R. Asirwatham
Treasurer: Dr. N. Nadesan
of A. Thurairajah.

Page 3
பிரதம ஆசிரியர் :
g. SausGangay. B. V. Sc. Ph. D.
நிர்வாக ஆசிரியர் :
க. கிருஷ்ணுனந்தசிவம், B.V.Sc.,M.V.Sc" எஸ். ஆனந்தவிஜயன்
ஆசிரியர் குழு :
6Tsiw. Sin. Up Glosiosaugait.M. Sc. Ph. D. g. ff. Josh JngsiT, B. V. Sc. (Hons) கே. சுகுமார், M. B. B. S.
வசந்தி அரசரத்தினம், B. Sc. (Hons);
v M. Sc. g. GgusfléBDJ T2T, M.B.B.S. M.Ed ந. சயலொளிபவான், B.D.S. GV a5. 50AJ J5SGOTừd, B. A. (Hons) 6. Gossiivnu J (TFT, B. Sc. (Eng)
சட்டுரை தரு கருத்திற்குரிய
தொடர்புகள் :
ஆசிரியர் ஊற்று நிறுவகம், மாரி அம்மன் ஒழுங்கை, திருநெல்வேலி யாழ்ப்பாணம்
 

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செல்வோம்.
இலக்கம்
பயிர்ச் செய்கையில் பசளைப் பிரயோகம்
சில விளக்கங்கள் (1)
வ. கதிரமலை * மீனின் உயிரியலும் அதன்
பயன்பாடுகளும்
வ. வெங்கடேஷ் 6 * எரிபொருள் நெருக்கடியில்
சூரியசக்தி
எஸ். ஆனந்தவிஜயன் 12 * பழவகைகளில் சில உண்மைகள்
ப. தருமலிங்கம்
க. சி. வேர்மா 17 * பனை அபிவிருத்தியில் நவீன
தொழில் நுட்பம்
கே. பாலசுப்பிரமணியம்
சு. மோகனதாஸ்
எஸ். கந்தையா 2. * மருந்துச்செடிகளும்
மருந்தாக்கற்றுறையும்
அ. துரைராஜா 28
* 1910.19851 மீண்டும் ஹேலியின்
வால் வெள்ளி!
을), வி. - 3 O . * பாரதி பார்வையில்
'துரமகேது?" 33
வர் கட்டுரை ஆசிரியரே.
தனிப்பிரதி : ரூபா ஐந்து
ふ (தபாற் செலவு 60 சதம்) ஆண்டுச்சந்தா : ரூபா முப்பது
( தபாற் செலவு உட்பட)

Page 4
திருமணம்
மற்றும்
விசேட வை
* கூறைச் சேலைகள்
* காஞ்சிபுரம் சேலை
-x u"Cs (
மற்
சகலவகை சாறி வகைக திருப்திக்கேற்ப தெ
யாழ். நகரில் முன்
த. குமாரசாமி
42, 44, பெரியகடை,
தொலைபேசி

பவங்களுக்கு
கள்
வேட்டி, சால்வைகள்
றும் ள், றெடிமேட் உடைகள்
ரிவு செய்து கொள்ள
னணி ஸ்தாபனம்
ரெக்ஸ் ரைல்ஸ்
யாழ்ப்பாணம்
à ; 23034

Page 5
ஊற்று: 13 (1) 1-5, 1985
பயிர்ச்செய்கையில் பசளைப்பி சில விளக்கங்கள் (1)
உணவு உற்பத்தியில் முன்னணி வகிக் களில் உரப்பசளைப் பிரயோகம் ஓர் பி விட்டது. அந்நாடுகளில் பெறப்படும் காரணமாக இருக்கின்றது. எமது ந பசளைப்பிரயோகம் சம்பந்தமாக அவசியமானதொன்றகும்.*
நிளாந்தம் பெருகி வரும் சனத் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியும் பெருகா விடில் பல அனர்த்தங்கள் ஏற்படும். உணவுற்பத்தியைப் பெருக்குவதற்கு இரு வழிகள் உண்டு. புதிய நிலங்களைப் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தி, பயிர்செய்யும் நிலப்பரப்பைக் கூட்டுவதன் மூலம் உற்பத் தியை அதிகரிக்கச் செய்தல் ஒரு முறை யாகும். தற்போதுள்ள விவசாய நிலங்க ளில், உக்கிரமான பயிர்ச்செய்கை மூலம் உயர் விளைவைப் பெற்று உற்பத்தியை > அதிகரிக்கச் செய்வது மற்றெருமுறையாகும்
எமது நாட்டைப் பொறுத்த வரை போதியளவு நிலம் இல்லாததினுலும், நீர்ப் பிரச்சினை காரணமாகவும் முன்னைய முறை சாத்தியமில்லையாதலால், உ க் கிர மா ன பயிர்ச்செய்கை முறையிலேயே எமது விவ சாய உற்பத்தி தங்கியுள்ளது. இப்பயிர்ச் செய்கை முறையில் பசளைப் பாவனை ஓர் முக்கிய அம்சமாகும். உயர் விளைச்சலுக் கும் தரமான விளைபொருள் உற்பத்திக் கும் பசளைகளைச் சரியான முறையில், உரிய நேரத்தில் தேவையான அளவு பாவித்தல் மிகவும் அவசியமானதொன்ருகும், பசளைகள் ஏன் தேவைப்படுகின்றன?
மண், நீர், காற்று முதலானவற்றில் இருந்து பயிர்கள் தமது வளர்ச்சிக்கு வேண் டிய பயிர்ப்போசணை ட் பொரு ட் களை
* Gilaustituiti போதனுசிரியர், உதவி விவசாய
1 ميسس

விவசாயம்
யோகம்
வ. கதிரமலை *
கும் நாடுகளின் பயிர்ச்செய்கை முறை ரிக்க முடியாத முக்கிய அம்சமாகி உயர் விளைச்சலுக்கும் இதுவே மூல ாட்டிலும் விவசாயிகளிடையே உரப் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்
பெறுகின்றன. பெரும்பாலான மூலகங்கள் மண்ணில் இருந்தே பயிர்களுக்குக் கிடைக் கின்றன. தொடர்ந்து ஓரிடத்தில் பயிர் செய்யும் போது ஒரு சில வருடங்களில் அம் மண்ணில் காணப்பட்ட பயிர்ப் போச ணைப் பொருட்களின் வளம் குன்றி விடு கின்றது. பயிர்களுக்குத் தேவையான பதி ணுறு முக்கியமான மூலகங்களில் ஒன்று தானும் குறைவு படில், பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைவு குன்றும். அத்து டன் நோய், பூச்சித் தாக்கத்துக்கும் ஏது வாகும்.
பல்வேறு பயிர் வகைகளிலும், உயர் விளைச்சல் தரும் பல புதிய இனங்கள் தற்போது பயிரிடப்படுகின்றன. இவை யாவும் பசளைத் தூண்டற் பேறுடைய இனங் களாகும். தேவையான அளவு பசளைகள் இடப்படாது போனல் எதிர் பார்க்கும் விளைவு கிடைக்காது. எனவே உயர் விளைச் சலைப் பெற்று அதிக வருவாயைப் பெறு வதற்கு பசளைகள் தேவைப்படுகின்றன. பயிர்ப் போசணைப் பொருட்கள்
பெரும்பாலான பயிர் வகைகளுக்கு பதினறு மூலகங்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. இவற்றைப் பயிர்கள் தம்மைச் சூழவுள்ள மண், காற்று, நீர் ஆகியவற்றில் இருந்தும், பசளைகள், மற்றும் தரை, விலங்குக் கழிவுகளான பண்ணை எரு, கூட்டெரு முதலானவற்றில் இருந்தும்
ப் பணிப்பாளர் அலுவலகம், திருநெல்வேலி.

Page 6
ஊற்று: 13 (1) 1-5, 1985
பெறுகின்றன. இவற்றில் ஒன்பது மூலகங் கள் பெருமளவிலும், ஏழு மூலகங்கள் மிகச் சிறியளவிலும் பயிர்களினல் பாவிக்கப்படு கின்றன. -
பெரிய அளவில் தேவைப்படும் பயிர்ப் போசணப் பொருட்கள்:
(பெருமூலகங்கள்) 1. காற்றில் இருந்தும் நீரில் இருந்தும்
கிடைப்பன:-
ஒட்சிசன், காபன், ஐதரன்
2. மண்ணில் இருந்தும், டசளைகளில் இருந்
தும் கிடைப்பன:- நைதரசன், பொஸ்பரஸ், பொட்டாசி யம் (பொட்டாசு),கல்சியம்,மக்னீசியம், கந்தகம்,
சிறிய அளவில் கேவைப்படும் பயிர்ப் போசணைப் பொ ருட்கள்
சுவட்டு மூலகங்கள்)
மண்ணில் இருந்தும், பசளைகளில் இருந் தும் கிடைப்பன:- இரும்பு, செம்பு, நாகம், மங்கனிஸ், மொலிப்டினம், போறன், குளோறின்.
முதன்மை மூலகங்கள்:
நைதரசன், பொஸ்பரஸ், பொட்டாசி யம், ஆகிய மூன்று பயிருணவுகளும் மிகவும்
பயிர் விளைவு நைதரசன் பொஸ்
கி.கி/ஹெக் பரஸ் நெல் . 3000 . 50 ... 11 . 6000 ..., 100 ... 22 .
உருளைக் VN கிழங்கு . 20,000 .. 140 . 17 40,000 ... , 175 ..., 35 வெண்
5Tub ... 35,000 ... 20 ... 22 L86Tastij... 2000 ... 64 ... 6 தக்காழி. 40,000 .. 110 .. 13 . நிலக் கடலை , 1,500 .. 10 5 够 姥 珊 7 .
(-விபரங்கள் தெரியாது) ஆதாரம்9li L-6

கூடுதலாகப் பயிர்களுக்குத் தேவைப்படுவ தால் இவை முதன்மை மூலகங்கள் எனப் படும். பெரும்பாலும் இம் மூன்று மூலகங் களும் தனித் தனியாகவோ, ஒன்றில் இரண்டு அல்லது மூன்று மூலகங்கள் அடங்கிய பச ளைக் கலவைகளாகவோ விற்ப%ன செய்யப் படுகின்றன. உரப் பசளைப் பைகளில் காணப் படும் என். பி. கே (N. P K. ) ஆகிய மூன்று எழுத்துகளும் முறையே நைத ரசன், பொஸ்பரஸ்,பொட்டாசியம் (பொட் டாசு)ஆகியனவற்றைக் குறிக்கும் தாவர, விலங்குக் கழிவுகளில் இருந்து மண்ணுக்குச் சேரும் மூலகங்கள் பயிர்களின் வள்ர்ச்சிக்குப் பெரும்பாலும் போதுமானதாகவுள. எனி னும் இவை தேவைப்படின் கனியுப்புக்க ளாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
பயிர்களில்ை எடுக்கப்படும் போசணைப் பொருட்களின் அளவு:
பயிர்கள் தமது வளர்ச்சிக் காலத்தில் ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் இருந்து எ க்கும் போசணைப் பொருட்களின் அளவு கிலோ கிராமில் கீழே தரப்பட்டுள்ளது. விளைவு கூடக் கூட, பயிர்களினுல் எடுக்கப் படும் பயிருணவுச் சத்துக்களின் அளவும் அதிகரிப்பதை அவதானிக்கவும். அத்துடன் பயிர் வகைகளுக் கேற்பவும் இவற்றின் அளவு வேறுபடுவதையும் அவதானிக்கலாம்.
பொட்டா கல்சியம் மக்னீசியம் கந்தகம்
சியம்
66 ... - ... - ... - ... 133 ... 19 ... 12 ... 10
158 ..., % . 4 a
257 ... 23 1. ܚ=ܚܘ P 16
. 1 ? ? ... -- ... -- . 21 -سست. . . . . س- . .". شست. . . . 4 . . . ... 125 ... - ... 17 ... 54
35 ... 19 ... II is 22
-உலக நிறுவனத்தில் கைநூல்" பணை-1
罗一

Page 7
ஊற்று: 13 (1) 1-5, 1985
பசளைகள் என்றல் என்ன?
பயிர்களின் வளர்ச்சிக்கு வேண்டிய பயிர்ப் போசணைப் பொருட்களை. பயிர்க ளினல் இலகுவில் கிரகிக்கக் கூடியவாறு கொண்டிருக்கும் பொருட்களைப் பசளைகள் எனலாம். இயற்கையாகக் கிடைக்கும் மாட்டெரு கூட்டெரு, பசுந்தாட்பசளை, கோழி எ ரு முதலான தாவர, மிருக பறவைக் கழிவுகள் இயற்கைப் பசளைகள் அல்லது சேதனப் பசளைகள் என்றும், தொழிற்சாலைகளில் இரசயான முறை மூலம் உற்பத்தி செய்யப் படுவன செயற்கைப் பசளை அல்லது இரசயானப் பசளை அல் லது உரப்பசளை என்றும் அழைக்கப்படும்.
இயற்கைப் பசளேகள்:
செயற்கைப் பசளைகளிலும் பார்க்க
இயற்கைப் பசளைகளில் பயிர் உணவுகள்
இயற்கைப் பசளேகளில் உள்ள உணவுச்
LJgår நைதரசன்'% பெ மாட்டெரு . . 0.60 a ஆட்டெரு . . 0.95 s கோழிப் பண்ணைப் பசளை ... ... 1.00 வைக்கோல் . . 0.36 சணல்(பசியது) . 0.75 எருக்கலை (உலர்ந்த). 0.35
அட்டவ
செயற்கைப் பசளைகள் :
செயற்கைப் பசளைகள் யாவும் இரச யான முறையில், தொழிற்சாலைகளில் - தயாரிக்கப்படுகின்றன. இவை குறுணல் வடிவிலும், பளிங்குருவிலும் தூளாகவும், திரவமாகவும் கிடைக்கின்றன. ஒரு முதன்மை மூலசத்தை மாத்திரம் கொண் டுள்ள பசளே, தனிப் பசளை என்றும், ஒன் றுக்கு மேற்பட்ட முதன்மை மூலகத்தைக் கொண்டுள்ளவை பசளைக் கலவை என்றும்
கூறப்படும். இவற்றில் பயிர்ப் போசணைப்

மிகக் குறைவாகவே காணப்படுகின்ற போதி லும் அவை செயற்கைப் பசளைகளை விடச் சிறந்த வேறுசில அம்சங்களைக் கொண்டுள் ளன. அதிக நீரையும், உணவுச் சத்துக்க ளையும், உறிஞ்சி வைத்திருக்கும் இயல்பை மணற்றரைகளுக்கு ஏற்படுத்துவதுடன், கடி னமான களிமண் தரைகளைத் துரர்வை யாக்கி, அம் மண்வகைகளின் நீர் வடிகால் திறனையும் மேம்படுத்துவதனுல் இவை மிகவும் பயனுள்ளன. இவை உணவுச் சத் துக்களை விரைவாக வெளியிடுவதில்லையாத லால் மண் அதிக காலத்திற்கு செழுமையுள் ளதாக ஆருக்கும். எனினும் இயற்கைப் பசளைகள் மாத்திரம் பாவிப்பதன் மூலம் பயிர்களுக்கு வேண்டிய போசாக்கினை வழங்க முடியாது. இயற்கைப் பசளைகள் மாத்திரம் இடுவதாயிருந்தால் ஒரு ஹெக் டர் நிலத்திற்கு குறைந்தது 25-30 தொன் தேவைப்படும்.
சத்துப் பெறுமானங்கள்:
ாஸ்பரசு % பொட்டாசியம் %
0. 15 ... ... 0。45 0.35 - ... ... 1, 00
1, 7 5 ... ... O. 90 0.08 ... ... 7.1 0.12 ... ... 0. 51 0.12 ... 0.36 22 سیسے چھ?gھ1
பொருட்கள் மிகவும் கூடுதலான வீதத்தில் அடங்கியுள்ளதால் பயிர்களுக்கு இவை மிகவும் குறைந்த அளவிலேயே பாவிக்கப் படுகின்றன. சாதாரணமாக ஒரு ஹெக்ட ருக்கு 5 அந்தர் வரை தேவைப்படும். இவை விரைவாக பயிருணவுகளை வெளி விடுவதால், பயிர்களுக்கு இவற்றை இட்ட ஒரு சில நாட்களினல், இவற்றின் பயனைக் காணக் கூடியதாக இருக்கும். இவற்றைக் கையாள்வதில் ஏற்படும் செலவினம் இயற் கைப் பசளையைவிட மிகவும் குறைவாகவும் உள்ளது.
من ?

Page 8
1985 .1-5 (1) 13 ntbpyهه
எமது நாட்டில் கிடைக்கும் உரப்பசளைகள்
நைதரசன் தனிப்பசளைகள்:
1. அமோனியம் சல்பேற்று 2. யூறியா
பொசுபரசு தனிப் பசளைகள்:
1. சாதாரண சுப்பர் பொ. 2. அடர் சுப்பர் பொசுபே
3. பாறைப் பொசுபேற்று
பொட்டாக் தனிப்பசளைகள்:
1. மியூறியேற் ஒவ் பொட்
2. சல்பேற் ஒவ் பொட்டா
கலவைப் பசளைகள்:
1. என். பி. கே. கலவை 2. "வி" கலவை உரம் (V 3. ரி. டி. எம். கலவை உர
என். பி. கே. கலவை உரத்தில் அ நைதரசன், பொசுபரசு, பொட்டாசு, ஆ 8: 1 7 : I 2: 3 : 30 : 1 2; 13 : l I : 6 676ot ይD6ör.
உரப் பசளைகளில் உள்ள உணவுச்சத்துட்
Lisrðar நைதரசன்'%
அமோனியம் சல்பேற்று . 2 I யூறியா ..,...,45—46
FrguG007 சுப்பர் பொசுபேற்று 0 அடர் சுப்பர் பொசுபேற்று O பாறைப் பொசுபேற்று ... O மியூறியேற் ஒவ் பொட்டாசு O சல்பேற் ஒவ் பொட்டாசு . O "வி" கலவை உரம் 4. *வி 1* கலவை உரம் 3
சரி. டி. எம்" கலவை உரம் 30
(-விபரங்கள் அட்ட6

5, Guibo) (Ordinary Super Phosphate) bறு (Concentrated Super Phosphate)
(Rock Phosphate)
„L-f5 (Muriate of Potash) 5 (Sulphate of Photash)
orb (N. P. K. Mixture) . Mixture) . rib (T. D. M.)
நேகம் உண்டு. அவற்றில் அடங்கியுள்ள ஆகியவற்றின் வீதத்தைக் கொண்டு இவை பல்வறுே இலக்கங்களால் அழைக்கப்படுகின்
பெறுமானங்கள்:
பொசுபரசு% பொட்டாசியம்% கந்தகம்%
O O 23
O ... - 0 O
16-20 O 2
46 O O
20-40 O tra
O ás 4 * 60 ...
O 50 ... 18
- 30 x 6 2 rar 3 O ... 10 ... -
O ፭ ፭ ፩ 20 wa
தெரியவில்லை) 3 سے usOOT
f-r

Page 9
ஊற்று 13 (1), 1-5, 1985
அடிக்கட்டுப்பசளை:
பயிர்கள் நாட்டுவதற்கு அல்லது விதைப்பதற்கு முன், நிலம் பண்படுத்தலின் போது இடப்படும் பசளை அடிக்கட்டுப் பசளை எனப்படும். இதில் நைதரசன் பொசுபரசு பொட்டாசியம் ஆகிய மூன்று முதன்மை முலகங்களும் கலவைக்கு ஏற்ப அடங்கியுள்ளன. துரித வேர் வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான பயிர்வளர்ச்சிக்கும் அடிக் கட்டுப் பசளையிடல் மிகவும் அவசியமாகும். மேற்கட்டுப் பசளே:
பயிர் நாட்டியபின் அதன் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் இடப்படும் பசளை கள் மேற்கட்டுப் பசளைகள் எனப்படும். பெரும்பாலும் நைதரசன் தனியாகவும், பொட்டாசுடன் கலந்தும் மேற்கட்டுப்பசளை யாகப் பாவிக்கப்படுகிறது. பழப்பயிர்களுக்கு என். பி. கே கலவைகள் மேற்கட்டாகவும் பாவிக்கப்படுகின்றன.
* நோய் எதிர்ப்பிற்கு பு நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாமல் வைத்தியர்கள் பெரிதும் வெற்றிபெற்றுள்ள நோய்களையும் எதிர்க்கும் ஆற்றலுடனேே இத்தகைய நோய் எதிர்ப்பாற்றலை இயற் குழந்தைகள் பிறந்ததும் புதிய சூழலில் வா பட்டு இறந்துவிடுவதுண்டு. எனினும் தற்ே களையும் பிழைக்கவைக்கும் வழிவகைகளைக் ஏனைய குழந்தைகளைப் போல ஆரோக்கியப தும் வெற்றிபெற் றுள்ளனர்,
எமது என்பு மச்  ைசயி ல் உற்பத்தி படும் குருதியின் கூறே நோய்க்கிருமிகளை எதி சில குழந்தைகளில் இக்கலங்கள் உற்பத்திய இலகுவில் சில நோய்களுக்குள்ளாகின்றனர் வேருெருவருடைய என்பு மச்சையின் ! செலுத்தி இவ் வெண்குழிய உற்பத்தியினை குவானதல்ல. ஏனெனில் குழந்தையின் மச் வாததாகி விடலாம்.
எனவே வைத்தியர்கள் புதிய வகைக் கல monoclonals எனப்படும் இப்புதிய வகைக் என்பு மச்சைப்பகுதியினுள் செலுத்தப்பட்ட ளைப்போல இயல்பாகவே நோய் எதிர்த்தை என்பினுள்ளும் இந்த மொனேகொலோனல் killercells என்றும் வைத்தியர்களால் அழை துவ உலகில் ஒரு வரப்பிரசாதமாகும்.
அமெரிக்காவில் உள்ள ப்ொஸ்டன் நக (culture centre) இக்கலங்கள் உற்பத்தியா

முக்கிய குறிப்பு:-
1.
அடிக்கட்டுப் பசளைகள் மிகவும் முக்கிய மானவை. பயிர் நாட்ட முன்பு இவை மண்ணுடன் கலக்கப்படல் வேண்டும்.
2, பசளைச் சிபாரிசின் படி உரிய அளவில், உரிய நேரத்தில் இடுதல் வேண்டும். 3. பசளை இட்டதும் மண்ணினுள் கிண்டி
மூடிவிடல் வேண்டும். 4. மண்ணில் போதியளவு ஈரம் இல்லா விடில் பசளையிட்டவுடனும் நீர் பாய்ச் சுதல் வேண்டும். 5. உரப்பசளைகளுடன் இயற்கைப் பசளை களையும் இடுதல் சிறந்த பயனைக் கொடுக்கும். 6. மா, தோடை போன்ற மரங்களுக்கு,
மத்தியான நேரம் மரத்தின் நிழல் விழும் தூரம் வரை பசளைகளை மரத்
தினைச் சுற்றி கலந்துவிடல் வேண்டும். ()
தியவகைக் கலங்கள் *
பிறந்த குழந்தைகளைக் குணமாக்குவதில் னர். குழந்தைகள் பிறக்கும்போதே பல ய பிறக்கின்றன. ஆனல் சில குழந்தைகள் கையில் கொண்டிருப்பதில்லை. இத்தகைய ழ்வதற்கேற்ற ஆற்றல் இன்றி நோய்வாய்ப் பாது வைத்தியர்கள் இத்தகைய குழந்தை கண்டுபிடித்துள்ளனர். இக்குழந்தைகளை ாக வாழச்செய்வதில் வைத்தியர்கள் பெரி
யாகின்ற வெண்குழியக்கலங்கள் எனப் நிர்த்துப்போராட வல்லனவாகும். ஆனல் ாவதில்லை. இதனலேயே இக் குழந்தைகள்
பகுதியினை இக்குழந்தைகளின் என்பினுள் செயற்கையாகத் தூண்டுவதென்பது இல சையினுள் இருக்கும் கலங்களுக்கு இது ஒவ்
ங்களைத் தற்போது கண்டறிந்துள்ளனர். கலங்கள் போதியளவு ஒரு குழந்தையின் போது அக் குழந்தை ஏனைய குழந்தைக டயினைக் காட்ட ஆரம்பித்தது. தாயினது கலங்களைச் செலுத்திப் பரீட்சித்துள்ளனர். க்கப்படும் இப் புதிய வகைக்கலங்கள் மருத்
ரில் உள்ள கல வளர்ப்பு நிலையமொன்றில்
கப்படுகின்றன. *
Kirk

Page 10
ஊற்று 13 (1), 6-11, 1985
மீனின் உயிரியல் பற்றிய அதன் பயன்பாடுகளும்
VSS
நாம் வாழும் உலகில் உள்ள எல்லா உயி
ருள்ள, உயிரற்ற தொகுதிகளும் அதன் இயற்கை வளங்களாகவே கருதப்படுகின் றன. இவற்றுள் மனிதத்தொகுதி ஏனைய இயற்கை வளங்களைத் தனது சுயநலத்திற் காக அளவுக்கு மீறி பயன்படுத்துவதால் இவ்வளங்கள் அளிக்கப்படுவதுடன் பல சிக்க லாண்பிரச்சினைகளும் உருவாக்கப்படுகின்றன. இவற்றுள் உயிருள்ள வளங்கள் மீது ஏற்ப டுத்தப்படும் அழிவுகளுள் உணவிற்காக அல் லது பொழுது போக்கிற்காக அல்லது வேறு உபபொருட்களைப் பெறுவதற்காக மீன்கள் அளவிற்கதிகமாகப் பிடிக்கப்படுதலும் அடங் (Ֆ LD,
பொதுவாக இலங்கை போன்ற, கடலி ஞல் சூழப்பட்ட ஒரு தீவில் குறிப்பாக epGörg) s6òT-3D6) - (Contenental Shelf) திட்டுகளைக்கொண்ட யாழ்ப்பாணக் குடா நாட்டினைப் பொறுத்தளவில் கடல்வளம் மிக முக்கியமானதாகும். ஏனெனில் இங்கு நன்னீர் நிலையங்களின் வளமானது அ வே அற்ற தன்மையே காணப்படுகிறது. இப் பிர தேசத்தின் கடல்லவா முக்கியத்துவமானது
1983 ஆம் ஆண்டின் புள்ளிவிபரவியல் தர வுகளிலும் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்
ளது. அவற்றின்படி முழு இலங்கையிலு
முள்ள மீனவர் குடித்தொகையில் 16 சத
வீதத்தினை மட்டுமே கொண்டுள்ள Այո լb
மாவட்டத்தில் 1983இல் 4,8948 ஆொன் மீன்கள் அறுவடையாகியுள்ளன. இது அவ் வாண்டில் இலங்கையின் மொத்த மீன்பிடி
யின் 35 சதவீதமாகும். இதிலிருந்து இப்
me
*உதவி விரிவுரையாளர், விலங்கியல்துறை, t
n- 6 -

கடற்றெழில்
அறிவும்
su Gauk B'$1_5íÞ B.Sc. í Hons)“
பிரதேச மக்களின் பொருளாதாரம் அல் லது தேவையானது பெரிதும் கடல் மீன் வளத்திலேயே தங்கியுள்ளது என்பது தெளி வாகின்றது
ஆதிகாலத்தில் உணவு த் தே வைக் 5 5
மாத்திரம் பிடிக்கப்பட்ட மீன் கள் உல கில் தொடர்ந்து அதிகரித்துவரும் சனத் தொகை காரணமாக அதிகரிக்கும் தேவைக் கேற்பவும் மேலும் ஏற்றுமதி நோக்கங்களுக் காகவும் அண்மைக் காலங்களில் பாரிய அள வுகளில பிடிக்கப்பட்டு வருகின்றன. இத்த கைய செய்முறைகளினல் உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை நன்கு முன் னேறியுள்ளது. இத்தகைய தொடர்ச்சியான பாரிய அளவுகளிலான மீன்பிடிமுறைகளினுல் குறிப்பாக ஏற்றுமதி வியாபார நோக்கத் தி ற் கா க செயற்படுத்தப்படுவனவற்ருல் ஏனைய உயிரினங்களப்போல் கடல் வாழ் மீனினங்களும் அழிந்துபோகின்றன.
எனவே இத்தகைய நிலையை நீடிக்க விடுவதனுல் உணவுக்காக பயன்படுத்தக் கூடிய மீன் இனங்கள் உலகின் எப்பாகத் திலும் அற்றுப்போதல் போன்ற பல பிரச் சனைகள் உ நவாகலாம். மனிதனின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான விலங்குப் புரதத் தினை மிகவும் குறைந்த செலவில் அளிப்பவை மீனினங்களேயாகும். எனவே இயற்கையில் உணஃாக உட்கொள்ளக்கூடிய மீன் இனங் கள் அற்றுப்போதல் மனிதனின் போஷாக் கினை வெகுவாகப்பாதிக்கும். இலங்கையில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்(Medical Research Institute) தினுல் சிபார்சுசெய்யப்பட்
ாழ். பல்கலைக்கழகம்.

Page 11
ஊற்று: 13 (1) 6-11 1985
டபடி தனிமனிதனுெருவன் உட்கொள்ள வேண்டிய மீனின் அளவு நாளொன்றிற்கு 60 கிராம்கள் அல்லது வருடமொன்றிற்கு 48 இருத்தல்கள் ஆகும். ஆல்ை கடற்றெ ழில் அமைச்சின் 1982 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களின்படி சராசரி மனிதன் ஒரு ଗJør வருடமொன்றில் 35.2 இருத்தல் மீனினை மட்டுமே உணவாகக் கொள்கிருன் என அறியப்பட்டுள்ளது. எனவே தனி மனித நுகர்ச்சி மட்டமானது அதிகரிக்கப் பட வேண்டியதொன்ருகவும் உள்ளது. எனி னும் தனிமனித நுகர்ச்சி மட்டத்தினையோ அல்லது போஷா "கு மட்டத்தினையோ உயர்த்து முகமாக வெறுமனே மீன் பிடித் தலைப் பன்மடங்காக்க முயற்சிகளை எடுத்தல் இறுதியில் கடலை ஒரு மீன்களற்ற பாலைவன மாகவும் மாற்றிவிடக்கூடும்.
எனவேதான் குறைந்த முதலீட்டுடன் கூடியளவு போ ஷ க்குள்ள அளவான மீன் களைக் கடலில் இருந்து பெறுவதற்கும், ஏனைய செயற்கையாக உருவாக்கப்பட்ட நன் னிர் நிலைகளில் மீன்களை அறிமுகப்ப டுத்தி அறுவடை செய்வதற்குமான முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவற்றுள்பல இன்று வெற்றிகரமாக நடை முறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. உ+ம் பராக்கிரமசமுத்திரம், மின்னேரியா வாவி ஆகியன. நன்னீர்நிலைகளில் உணவு க்கு பயன்படுத்தப்படும் மீன்கள் வெகுவாக பிடிக்கப்படுகின்றன. இத்தகைய புதிய சூழ் நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அறுவடை செய்யக்கூடிய் அளவிற்கு வளர்ச்சியுறும் தன்மைவாய்ந்த மீன்கள் தேர்ந்தெடுக்கப் படல் அவசியம். இதற்கு அவற்றின் உயிரி யல் பற்றிய அறிவும் மிகவும் அவசியமா கும்.
மறுபுறத்தே கடல்வாழ் மீன்களின் உயிரி யல் பற்றிய அறிவு அவற்றைப் பிடிக்கும் செயன்முறைகளில் ஏற்படுத்தக்கூடிய LDTö றங்களை ஊகிக்கவும் செய்கிறது எனலாம். உதாரணமாக ஒரு குறித்த மீனினம் கட லிலோ அன்றி வரையறுக்கப்பட்ட அல்லது

கட்டுப்படுத்தப்பட்ட உவர் நீர் நிலையிலோ அன்றேல் நன்னீரிலோ இனம்பெருகும் கால மானது அறியப்பட்டிருப்பின் அக்காலங்க ளில் அவற்றினைப் பிடித்தலைத் தவிர்த்துக் கொள்ளலாம். கருங்கக் கூறின் மீன்களின் உயிரியல்பற்றிய அறிவு அவற்றை மனிதன் மிகக்கூடிய வினைத்திறனுடன் நேரடியா கவோ அன்றி மறைமுகமாகவோ பல்வேறு பட்ட தேவைகட்கேற்ப பயன்படுத்தக்கூடிய அறிவினை வளர்க்கிறது.
இங்கு மீன்களின் உயிரியல் என்னும் போது அவற்றின் உணவூட்டல், இடப் பெயர்ச்சி, இனப்பெருக்கம், நடத்தை வாழ் நாள் போன்ற விடயங்களே கருத்திற் கொள்ளப்படுகின்றன. இவற்றி%ன அறிந்து கொள்வதன் மூலமாக இமமீன்கள் எத்த கைய சூழ்நிலைகளுக்கு பொருத்தமானவை, எக்காலங்களில் அறுவடை செய்யப்பட லாம், அறுவடை பின்போது 1 கிராம் உலர் நிறையிலிருந்து பெறக்கூடிய பே ாஷாக் குப் பதார்த்தங்களின் அளவு ஆகியன போன்ற விபரங்களைக் கொள்கைரீதியாகக் கணத்த றிய முடியும்.
பொதுவாக இத்தகைய ஆராய்வுகள் இறந்த மீன்கள், அல்லது சிறிய எண்ணிக் கையில் தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன் களிலேயே மேற்கொள்ளப்படுவதனுல் வெவ் வேறு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் பெருமளவு எண்ணிக் கையில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இறந்த மீன்களைப் பொறுத் தவரையில் ஒரே கடற்பிரதேசத்தில் பயன்படுத்தும் வெவ்வேறு வலைகளில் டிக்கபபடும் மீன் மாதிரிகளைக் கருத்திற் கொள்வது ஈன்று. மேலும் இத்தகைய ஆய்வுகள் வருடம் முழு வதும் மேற் கொள்ளப்படுதல வேணடும். ஒரு வ ரு டத்தில் அவதானிக்கப்பட்ட வற்றை உறுதிசெய்வதற்காக 2முதல் 5வரு டங்கள் வரை இத்த ை! ஆய்வுகளை நீடித் தல் உறுதியான முடிவுகளைப் பெறுவதற்கு
வழிவகுக்கும்.
7

Page 12
ஊற்று: 13 (I)6ー11』。1985
இத்தகைய ஆய்வின் முதற்படியாக நாம் தேர்ந்தெடுக்கும் மீன் இனமானது அடையா ளம் காணப்படல் வேண்டும். அதாவது அத னது உயிரியற்பெயர் அறியப்படல் வேண் டும். மீன்பாகுபாட்டியல் Guys25 TL “g_(Fish keys) 36ir epaud Td, இதனை அறிந்து கொள் ளலாம். இதன் மூலம் அம்மீனைப்பற்றிய பல தகவல்களை உதாரணமாக அது காணப் படும் வெவ்வேறு நாடுகள் சூழல்கள் போன் றவற்றினை அறியமுடிகிறது. அதே சமயம் அவ்வினத்தினச்சேர்ந்த வேருெரு மீனப்பற்றியும் அறிவதற்கு இது உதவும். சுருங்கக்கூறின் இவ்வின மீன்களில் மேற் கொள்ளப்படும் ஆய்வுகளைப்பற்றிய தகவல் களைப் பரிமாற அதனது பாகுபாட்டியல் நிலை உதவுகிறதெனலாம். m
மீன்களின் இனங்காணல் படிமுறைக ளிற்கு பொதுவாக அவற்றின் புற உருவவி யல் அமைப்பே பயன்படுகிறது. அதாவது குறிப்பிட்ட மீனின் உடல்வடிவமைப்பு, அவற் றின் முட்கள், கதிர்களின் பரம்பல், செட்டை களின் நிலை, செதில்கள், பக்கக்கோட்டின் நிலைஉ, தடுகளின் அமைப்பு (வெளித்தள்ளக் கூடியவையா அல்லது பற்களைக் கொண்டுள் ளனவா) உடல்நிறம் மற்றும் பிரத்தியேக கட்டமைப்புக்களும் கருத்திற் கொள்ளப் படுகின்றன. கெளிறு மீன்களின் கீழ் உதட் டிலும் மேல்கீழ் உதட்டிணைப்பிலும் காணப் படும் வெளிநீட்டங்கள் (barbes), கொய் மீனின் முதுகுப்புறச் செட்டையின் பின் புறத்தேயுள்ள வெளிநீட்டம் போன்றவை அவற்றின் பிரத்தியேக இயல்புகளாகும்.
இனமறியப்பட்ட மீனில் அடுத்தகட்ட மாக அதன் உடலின் வெவ்வேறு பகுதிகள் அளக்கப்படுதல் அவசியமாகின்றது. இவை முறையே மொத்த நீளம், கவர் நீளம் நியம நீளம், உடலின் அகலம் தலையின் நீளம், மூஞ்சியின் நீளம்(முதுகின் முன்நீளம்), கண்விட்டம், முதுகுப்புறச் செட்டைகள் இரண்டாயின் அவற்றின் இடைத்தூரம் ஆகியனவாகும். (படம்-1 இவற்றினை விளக்குகிறது.)

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு மீனின தும் உடல்நிறை கணிக்கப்பட்டு பின்னர் வெட்டிப்பரிசோதிப்பிற்குள்ளாக்கப்படும். மீனின் உடல்நிறையானது அனேகமாக அவை அவற்றின் வாழிடத்திலிருந்து அகற் றப்பட்டவுடன் கணிக்கப்படுவதே நன்ரு கும். ஏனெனில் இவை ஆய்வு கூடத்திற்கு போமலின் போன்ற (preservatives) திரவங் களிலோ குளிரூட்டிகளிலோ நற்காப்பாக எடுத்துச் செல்லும்போது அவற்றின் உடல் நீரை உள்ளெடுப்பதனல் அல்லது இழப்ப தனல் நிறையில் வேறுபாடு தோன்றக் கூடும். -
மீன்களினது உடல் நிறையினை நியம நீளத்திற்கு எதிராக ஒரு வரைபில் பிரதியீடு செய்யும்போது ஒரு பரவளைவு பெற்ப்படும். இவ்வரைபில் எந்த நீளவீச்கிற்கு உடல் நிறையில் அதிக அதிகரிப்பு காணப்படுகி றதோ அதற்கு மேற்பட்ட நீளங்களையுடைய மீன்களையே பிடிப்பதனுல் வளர்ச்சியுறக்கூடிய இளம் மீன்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
மேலும் மடக்கைப் பெறுமானங்களில் நீளத்திற்கு எதிராக நிறையைப் பிரதியீடு செய்ய பெறப்படும் சிறந்த வரைபின் இரு படிச் சமன்பாட்டிலுள்ள படித்திறன் பெறு மானம் ஏறத்தாள 3 இற்குச் சமனுக இருப் பின் கீழ்வரும் Fulton's சமன்பாட்டினை ஒவ் வொரு மீனிற்கும் பிரயோகித்து அம்மீனின் நிலையை (Condition) கணிதமுறையாக அறி யலாம்.
K = W
LE இங்கு W - உடல் நிறை
L -உடல் நீளம்
(Standard lenght) , b – LOIT dölgó)
K-Condition factor Fulton's சமன்பாட்டின்படி Kஇன் பெறு
s W மானத்தை k = T ஒவ்வொருமீனிற்
கும் அவற் tწGär

Page 13
ஊற்று 13 (1) 6-11, 1985
(படம் பொதுமைப் பாடடைந்த
Qlitti (Mouth) மூக்குத்துவாரம் (Nostri) 56,or (Eye) - Leyptg. (Operc ullum) முதலாம் முதுகுப்புறச் செட்டை (First Dorsal Fin) செட்டைமுள் (முள்) (Spine) LásáGait G. (Lateral line) இரண்டாம் முதுகுப்புறச்செட்டை (Second Dorsal Fin) செட்டைக் கதிர் (Ray) J Ufa).F (Scute) K GJITțið GDFL LGML- (Caudal Fin) L' é55& Gar l'isol- (Anal Fin)
உடல்நீள இடைவெளிக்கு எதிராக (Stan dard length interval) ovog 19d) 1978ufо செய்யும்போது பெறப்படும் வரைபிலிருந்து எந்த நீளத்தினை உடைய மீன்கள் இனப் பெருக்கத்தில் ஈடுபடுகின்றன என்பதினையும் அறியலாம். அதாவது பெண்மீன்கள் நீரை யும் உணவுப் பொருட்களில் இருந்து பெறப் படும் போஷாக்குப் பொருட்களையும் உட லில் முட்டை உற்பத்திக்குப் பயன்படுத் திப் பின்னர் முட்டைகள் வெளியேற்றப் படும் போது உடல் நிறையில் பெருமாற்
ളും അമ്മ al
 

l) رமுள் மீனின் வரிப்படம்
(5.50p6ir (Anal Spine)
Qa56)5 gir (Scales)
LDrigg QgFl Gol. (Pectoral Fin)
இடுப்புச் செட்டை (Pelvic Fin) G05T@ (yp&T (Barbels)
Lufbd, air (Teeth) I-VII Gudit 55 isotib (Total Length) I-VI souri Satib (Fork Length) I*— —»V is uud isotib (Standard Length) )IV sah) isatib (Head Lengthچ-سهI )II elp655 isotib (Snout Lengthیسے سھI II-III sainoulli (Eye Diameter) VIII உடலின் உயரம் (Heigth of
the Body
றம் ஏற்படுகிறது. இவ்வித்தியாசமானது K பெறுமானத்தில் வெளிக்காட்டப்படுவத னல் இவ் வரைபின் வீழ்ச்சியானது மீனி னது இனப்பெருக்க நீள (Spawning length) இடைவெளி வீச்சத்தைக் குறிக்கும். இதே போன்று ஒவ்வொரு மாதத்திலும் பெறப் பட்ட மாதிரி மீன்களின் சராசரி GoLigoyuDIT னத்தை வரைபில் பிரதியீடு செய்ய பெறப் படும் வீழ்ச்சி இனப்பெருக்க அல்லது சினை Gastoireth (stajaosé (Spawning period) குறிக்கும்.
9 അ

Page 14
apap 13 (1) 6-1l 1985
சூலகத்தில் இருக்கும் முட்டைகளை எண் ணுவதால் அம்மீனின் (Fecundity) பெறப் படும் இதன்போது ஒருசோடி சூலகங்களில் ஒன்றே கருத்திற்கொள்ளப்படும். ஆனல் திருத்தமான இனப்பெருக்க வீதத்தைப் பெறுவதற்கு இம்மீன்களை நீர்த்தடாகங்க ளில் வளர்த்து அவை வெளியேற்றும் முட் டைகளின் எண்ணிக்கையை (Fertility)பெற வேண்டும். இப்பெறுமானம் Fecundity பெறுமானத்திற்கு சமனுயிருக்கத் தேவை யில்லை. ஏனெனில் சில மீன்களில் ஒரு சினை கொள்ளல் காலம் முடிவுற்ற பின்னும் சில முட்டைகள் மீதியாக இருக்க அம்மீன் அடுத்த சினைகொள்ளும் பருவத்தை அடை யும் சிலசமயம் இம் மீதி முட்டைகள் மீள அகத்துறிஞ்சப்படவும் கூடும்.
தொடர்ந்து மீனை வெட்டிப் பரிசோதிப் பிற்கு உள்ளாக்கி முதலில் அதன் குடலை வெளியே எடுத்து அதன் நிறை, நீளம் ஆகி யன குறிக்கப்பட வேண்டும். கு ட லின் நிறையை மொத்த உடல் நிறையிலிருந்து கழிப்பதனல் வழுவற்ற உடல்நிறை பெறப் படும். அதாவது உட்கொள்ளும் உணவி னல் உடல் நிறையில் ஏற்படும்வழு தவிர்க் கப்படும். மேலும் குடல் நீளத்தை உடல், நீளத்துடன் ஒப்பிடும்போது அதன் உண வூட்டல் முறையை ஓரளவு ஊகிக்க முடி யும். உ+ம் Tachysurus venosusgão (3- லின் நீளம் நியமஉடல் நீளத்திலும் ஒன்றரை மடங்கு அதிகம். இது ஊனுண்ணி வகைக் குரிய உணவூட்டலைக் குறிக்கும், அதேசமயம் தாவரபிளாந்தன்களை வடித்துண்ணும் மீன் களில் குடல் நீளம் உடலின் நீளத்திலும் த.6 மடங்கு அதிகமாகக் காணப்படும். உடலின் வடிவமைப்பு, பூக்களின் உள்விளிம்பில் காணப்படும் பூக்கதிர்களின் (Gill rakers) வடிவமைப்பு அவற்றிற்கிடையேயான தூரம் எண்ணிக்கை ஆகியன உணவூட்டல் பற்றிய முடிவுகளைப் பெறஉதவும். இவற்றை உறுதி செய்யும் வகையில் குடலின் உள்ளடக் கங்களை குறிப்பாக இரைப்பையினது உள்ள
un

டக்கங்களை ஆராய்தல் அவசியமாகிறது. இவ் வுள்ளடக்கங்களின் வகைகள், காணப்படும் செறிவுகள் போன்ற தகவல்களிலிருந்து எவ் வகை உணவுப் பொருட்களை இம் மீன்கள் கூடுதலாக உட்கொள்ளுகின்றன என்பதை அறிய முடிகிறது. இதனைமேலும் உறுதிப்ப டுத்த இம் மீன்களை நீர்த்தடா க ங் களி ல் வளர்த்து, அறியப்பட்ட உணவுப் பொருட் களை ஏனைய வற்றைவிட அதிகமாக உட் கொள்கின்றனவா என அறியலாம்.
இதேபோன்று சனனிகளின் முதிர்ச்சியை அவற்றிற் குரித்தான் வெவ்வேறு முதிர்ச்சி நிலைகளுக்கான இயல்புகளைக் கொண்டுள்ள பாகுபாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அறியலாம். மேலும் சனணிகள் சூலக மாயின் அவற்றில் காணப்படும் முட்டைக ளின் எண்ணிக்கை, அவற்றின் முதிர்ச்சி, முதிர்ச்சியின் பரம்பல் ஆகியவற்றைக் கருத் திற்கொண்டு அக்குறிப்பிட்ட மீன் இனத் தின் இனப்பெருக்க நடத்தை பற்றி அறி
u6untub.
மேலேகூறப்பட்ட உடற்ருெழிலியியல் மாற் றங்களைப் போன்று அவற்றின் இரசாயனக் கூறுகளிலும் உடல் வளர்ச்சியுடன் மாற்றங் கள் ஏற்படும். இதனை ஒவ்வொரு மீனின் உட லிலிருந்தும் சிறு மாதிரிகளை எடுத்து (வெவ் வேறு பாகங்களின்) அவற்றின் ஈரத்தன் மை, புரத அளவு, கொழுப்பு அளவு, கணிப் பொருள் அளவு ஆகியனவற்றை நிர்ணயிப் பதஞல் அப்பாகங்களைக் கொண்டுள்ள மீன் களில் இப் பதார்த்தங்களின் அளவு, ஊகிக் கப்படுகின்றது. இவற்றைத் தவிர புரத வகை கள், கொழுப்பு வகைகள், வெவ்வேறு கணிப் பொருட்கள், சுவட்டு மூலகங்கள் ஆகியன வற்றை பகுப்பாய்வு செய்வதனல் மேலும் இரசாயன கட்டமைப்பு பற்றி ஒரு விரிவான அறிவை பெற உதவும். இத்தகைய அறிவு குறிப்பாக மீன்களைக் கொண்டு கால் நடை உணவுதயாரிக்கப்படும் போது மிகவும் அவ சியமாகின்றது. ஏனெனில் இம் மீன்களை
) m.

Page 15
ஊற்று 13 (1) 6-11, 1985
அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொரு ட் களி ல் காணப்படாத போஷக்குப் பொருட்கள் வேறுவகையில் சேர்க்கப்படலாம்.
மேலும் இவ் இரசாயனக் கூறுகள் மீன் களின் முதிர்ச்சியுடனும், உடற்ருெழியியல் மாற்றங்களுடனும் மாறுபடும்.உதாரணமாக கொழுப்பு காணப்படும் வீதம் இனப்பெருக் கத்துடன் அல்லது சினை கொள்ளலுடன் பெருமளவு சம்பந்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ கொழுப்புபடிவுகள் உடலில் காணப்படும் வீதம் குறைதல்சினைகொள்ளலுக்கு மீன்கள் தம்மை ஆயத்தம் செய்வதைக் குறிக்கும். இக் கொழுப்பு படிவுகள மீன்களின் சினை கொள்ளலின் போது மு ட்  ைட க ளு க் கு போஷாக்கு பொருட்களை அளிப்பதாலும், சினைகொள்ளும் பிரதேசங்களை (Spawning grounds) நீந்தி அடையும் போது உணவு உட் கொள்ளாமையால், அதன் அனுசேப தேவைகளுக்கான சத்தியாகவும் பயன்படுத் தப்படுவதாலும், இழக்கப்படுகின்றன. ஏனெ னில் அநேகமான மீன்கள் அவற்றிற்கு சிறப் பான சினைகொள்ளல் பிரதேசங்களைக் கொண்டுள்ளன.
மீன்களின் இரசாயனக் கூறுகளை அறிவ தஞல் சில சமயம் அவை உணவுக்கு பயன்
★
பிரம்பும் தடியும் உபயோகிக்காமல் கோப வெகுமதியையும் எதிர்பாராமல் நமக்கு கற்ப
நூல்களைச் சென்றடைந்தால் உறங்காம
அறிவு கற்பிக்கும். நீங்கள் பெருந்தீங்கு ெ அறியாமையைக் கண்டு நகைக்காமல் கற்பி

பாடவிடிலும், அவற்றின் ஒரு சில இராச யன கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படலாம், ம னி த தேவைகளுக்கு பயன்படுத்தலாம். உ+ம் சுமு க் க ளின் கொழுப்படையிலிருந்து எண்ணெய் பெறப் படுதல் ஆகும். இவற்றைத் தவிர வேறு பல உணவுப் பொருட்கள் அவற்றின் இரசாயன கூறு க ள் காரணமாக உருவாக்கப்பட் டுள்ளன.
இவ்வாருக ஒரு மீன் இனத்தின் உயிரிய லைப் பற்றிய தகவல்களுடன் அதன் வாழ்வி டம் பற்றிய தகவல்களையும் ஒரு மித்துபயன் படுத்தி மனிதனினுல் இயற்கையில் காணப் படும் மீன்களைப் பாதுகாக்கும் அதே சமயம் அவற்றிலிருந்து அதிகூடிய நன்மை யை ப் பெறுவதற்கும், புதிய வாழ்விடங்க ளில் பொருத்தமான மீன்களை அறிமுகப் படுத்தி அதன்மூலம் மீன் உற்பத்தியை அதிகரிப் பதற்கும் முடிகின்றது. இதனுடாக நாட்டின் போஷாக்கு மட்டம் அதிகரிக்கப் படவும் வாய்ப் பேற்படுகின்றது. இவற்றைத் தவிர ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் மீன்களை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதா ரத்தை வெளிநாட்டு நாணயமாற்றை சம் பாதிப்பதன் மூலம் வளர்ச்சியடையச் செய் வதோடல்லாமலும், வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்துகிறது.0
大
மும் குறையும் இல்லாமல் சம்பளத்தையும் விக்கும் சிறந்த ஆசான்கள் நூல்களே.
ல் சோர்வு கொள்ளாமல் அவை நமக்கு சய்தாலும் வசைமொழி கூருமல் உங்கள்
ற்பவையும் நூல்களே.
* றிச்சேட் - டி. பியூறி

Page 16
ஊற்று: 13 (1), 12-15, 1985
எரிபொருள் நெருக்கடியில்
6ளுக்கு நாள் அதிகரித்து வரும் எரி
பொருட் செலவினம் வளர்முக நாடுக ளான மூன்ரும் உலக நாடுகளை வெகு வாகப் பாதித்து வருகிறது. அரபு நாடுக ளில் எண்ணெய் வளம் குறைந்து வருதலும் மறுபுறத்தே உலக நாடுகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து மற்றும் தொழில் துறைகளினுல் மசகு எண்ணெய்க்கு ஏற் பட்டு வரும் கிராக்கியுமே இவ்வித அதிக ரிப்பிற்கான வெளிப்படைக் காரணங்களா (5ts.
அபிவிருத்தியடைந்த நாடுகள் இவ் விலையேற்றம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று அந்நாடுகளிலேயே ஒரளவு பெற் ருேலிய விளை நிலங்கள் காணப்படுதலும் அவை முன்கூட்டியே தேவைக்கதிகமான எண்ணெயினைச் சேமித்து வைத்திருத்தலுமா கும். மற்றது மாற்று எரிபொருட் பாவ னைக்கு அவை தம்மைத் தயார்படுத்திக் கொண்டமையேயாகும். LDfTsÖg) பொருள் எனும் போது அது பெற்றேலி யத்திற்கு இணையானதும் பெருமளவில் சக்தி பெறக் கூடியதுமான கருச்சக்தி (Nuclear Energy) GouGu () is 55th.
ஆனல் வளர்முக நாடுகளைப் பொறுத்த வரை இரண்டுமற்ற நிலையே காணப்படுகி றது. இந் நாடுகளில் எண்ணெய் வளமும் இல்லை. ஆனைவிலை கொண்ட கரு உலைகளை நிறுவுவதற்குப் போதிய பணமும் இல்லை. உதவி அடிப்படையில் அவற்றை நிறுவித்தர செல்வந்த நாடுகள் முன் வந்தாலும் கூட அக்கரு உலைகளினல் ஏற்படக் கூடிய
* ஊற்று நிறுவகம் திருநெல்வேலி

சக்தி
சூரியசக்தி
எஸ். ஆனந்த விஜயன் *
அனர்த்தங்கள் முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கின்றன. ஜப்பானின் ஹிரோஷிமா விலும் நாகசாகியிலும் இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த அணுக்குண்டு அனர்த்தங்களை நாற்பது வருடங்களாகி யும் இந்நாடுகள் மறந்து விடுவதற்கில்லை.
எனவே தான் அணுசக்தி அல்லாத பிரச்சனைகள் குறைந்த வேறு Trif பொருள்களின் மீது இந்த நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. பெற்றேலியப் பாவனையை ஈடுசெய்யக் கூடியதும் விலையில் குறைந்ததும் பிரச்சனைகள் அதிகம் தராதது மான மாற்று எரிபொருள் வளங்களின் மீது சக்தித்துறை அறிஞர்கள் தமது கழுகுப் பார்வையினைச் செலுத்தி வருகின்றனர்.
எது எங்ங்ணமிருப்பினும் ஞாயிற் றுக் கதிரவனின் சக்தியே அனைத்து ஜீவ ராசிகளின் இயக்கத்திற்கும் சக்திவளங்கும் மூலசக்தி என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட விடயம். அதனல் தான் அறிவி யலாளரது பார்வையும் சூரியசத்தியின் மீது திருப்பப்பட்டுள்ளது, இதுபற்றிச் சற்று அறிதல் பொருத்தமே.
பூமியிலுள்ள பச்சைத் தாவரங்களி னலேயே முதன் முதலாக சூரியசக்தியானது பூமியில் நிலைப்படுத்தப்படுகிறது. இத் தாவரங்களின் ஒளித்தொகுப்பு எனும் செயல் முறையின் போது சூரிய ஒளிச் சக்தியானது இரசயான சக்தியாக மாற் றப்பட்டு உணவுப் பதார்த்தங்கள் தயா ரிக்கப்படுகின்றன. இச் செயல் முறையின் போதே பூமியில் உள்ள காபனீரொட் சைட்டும் நீரும் உபயோகிக்கப்படுகின்றன.
R*
-up

Page 17
ஊற்று 13 (1), 12-15 1985
இவ் வண்ண ம் தயாரிக்கப்படுகின்ற. அடிப்படை உணவுப் பொருட்களே பின்னர் ஏனைய விலங்குகளாலும் உட்கொள்ளப் பட்டு அதின் பின்னர் உணவுச் சங்கிலி எனும் சிக்கற் பாதையினூடாக ஏனைய அனைத்து உயிர் வாழ்வனவற்றிற்கும் செல் கின்றன. சூரிய சக்தி இன்றேல் பூமியில் உயிரினம் தோன்றக் கூடிய சாத்தியமே இருந்திராது. இன்று நாம் உபயோகிக்கும் பெற்ருேலியப் பொருட்கள் கூட சூரிய ஒளிச் சக்தியின் விளைவாக உண்டானவை யேயாகும். ஆதியில் நிகழ்ந்த எரிமலைத் தாக்கங்களினல் புவியின் அடிப்பகுதிக்குச் சென்றுவிட்ட தாவரப் பகுதிகளே பலவித மாற்றங்களடைந்து பெற்றேலியமாக மாறி யுள்ளன என்பது அறிஞர் துணிபு.
இத்தகைய சக்தி வாய்ந்த சூரிய ஒளி யினை நேரடியாகவே பயன்படுத்தும் வழி வகைகள் தற்போது அறியப்பட்டுள்ளன. எமது நாட்டிலும் தற்போது சூரிய சக்தி யில் இயங்கும் சூரிய அடுப்பு, கல்குலேட்டர் எனப்படும் கணிப்புக்கருவி போன்றன அறிமுகமாகியுள்ளன. அமெரிக்காவில் இச் சூரிய சாதனங்கன் மிகப் பிரபலம் பெற்று விளங்குகின்றன. சூடாக்கிகள் (Heaters) அடுப்புகள் (Cookers) குளிரூட்டிகள் (Refrigerators), 5Tigilgi afG) 5(56 (AirConditioners) போன்ற சாதனங்கள் பலவும் இச்சூரிய ஒளியிலேயே இயங்குகின்றன. சூரிய ஒளி கிடைக்கும் வேளைகளில் அதனைப் பத்திரப்படுத்திப் பின்னர் ஒளி இல்லாத வேளைகளில் உபயோகிக்கக் கூடியவாறு சேமிக்கும் அமைப்புகளும் உள்ளன.
ஒரு சூரிய வெப்பமாக்கித் தொகுதி வழமையாக ஒரு சேகரிக்கும் பகுதி (collector) காவலிடப்பட்ட சேமிப்புத் 5Ti5 (insulated storage tank) as "G," படுத்தி (controller) மற்றும் பம்பிகள், விசிறிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்

சேகரிக்கும் பகுதியினல் உறிஞ்சப்படும் வெப்பசக்தியானது தொழிற்படும் திரவத் தொகுதிக்குக் கடத்தப்பட்டு அங்கிருந்து வெப்பமாக்கும் தொகுதிக்கு உடனடித் தேவைக்கெனக்காவப்படும், அல்லது சேமிக் கும் தொகுதியில் சேமிக்கப்படும். சேகரிக் கும் பகுதியை அடையும் சக்தியில் 30 தொடக்கம் 50 சத வீதம் வரையான சக்தி யானது இவ்வாருக திரவத்தொகுதிக்கு கடத்தப்படக் கூடியதாயிருக்கும் தொகுதி யொன்றின் சூடாக்கும் திறனனது சேகரிக் கும் திறன், சூரிய வெப்ப மாக் கி நிறுவப்பட்டுள்ள இடத்தின் புவியியல் அமைப்பு மற்றும் பல காரணிகளில் தங்கி யுள்ளது.
as Tibanpit ups of Li (Air Conditioning)
எமது நாடு அயன மண்டலக் கால நிலையினைக் கொண்டிருப்தபனல் இங்கு காற்றுப் பதனிடு கருவிகளுக்குப் பெரும் கிராக்கி உண்டு. ஆனல் தற்போது இக் கருவிகள் பெருமளவு மின்சக்தியைக் கொண்டே இயங்குகின்றன. இதனுல் இக் கருவிகளின் உபயோகம் செலவு மிக்க வொன்முகவே உள்ளது. இக்காரணத் தினலேயே பெரிதும் இவற்றின் பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.
ஆணுல் இன்றே பல நாடுகளில் சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் காற்று பதனிடு கருவிகள் பல அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இக்கருவிகள் எரிபொருளில் இயங்கும். குளிரூட்டிகளை ஒத்தன. இங்கு எரிபொருளுக்குப் பதிலாக சூரியசக்தியின் மூலம் வெப்பம் பெறப்படுகிறது. இக்கருவி களில் திரவத்தொகுதியானது சற்று அதிக வெப்ப நிலைக்கு உயர்த்தப்பட வேண்டி யிருப்பினும் கூட இவை செயல் முறையில் வினைத்திறன் மிக்கவையென நிரூபிக்கப்பட் டுள்ளன. அத்துடன் இவை நீண்ட ஆயுள் உடையவையாகவும் காணப்பட்டுள்ளன
13 as

Page 18
an ibp: 13 (1) 12-15 1985
இவற்றினுடைய ஆரம்ப மூலதன ம் தற்போது மது வழமையான கருவிகளை விடக் கூடுதலானதாக இருக்+லாம். எனி னும் நீண்ட நாட் பாவனையில் எரிபொரு ளின் உயர் விலை, தட்டுப்பாடு, மற்றும் சூழல் LDTFGDL-35 av (Environmental Polution) போன்ற காரணிகளோடு ஒப் பிடுகையில் இக்காவிகளின் உபயோகம் மலிவானதொன்முகவே நடைமுறையில் உள் ளது. மேலும் இவற்றின் விலை நாளடை வில் வர்த் - கப் போடடா போட்டிகளி ணுல் குறையவும் வாய்ப்புண்டு.
(35 fluofsósibg fairs a Ji (Electricity from Sun)
எமது நாடு மிகப் பிரதானமாக தனது மின்சார தேவைகட்கு நீர் மின்சா ரத்தினையே நம்பியுள்ளது. இந்நீர் மின்சார மானது மலை நாட்டில் உற்பத்தியாகும் நீர் வீழ்ச்சிகளின் வ: யிலாகவே பெறப்படு கிறது. நீர் வீழ்ச்சியானது மழையினலேயே ஏற்படுவதனல் இதுவும் சூரிய சக்தியில் தங்கியுள்ள ஒரு செயல் முறையேயாகும்.
எனினும் மின்சக்தியானது சூரியனி லிருந்து நேரடியாகவே பெறப் டலாம் சூரியவெப்ப மாற்றீடு (Solar Thermal Conversion) எனப்படும் முறையினல் மின் சாரத்தினைப் பிறப்பாக்குவதற்குத் தேவை LT607 வெப்பமானது சூரியனிலிருந்து பெறப்படுகிறது. தி றமை யான முறையில் இயக்கப்படுவதற்கு சுழலிப் பிற ப் டா க் கி (Turbo Generators) Søíflóð 2 uri Gøyll_ நிலை தேவைப்படுகிறது. இத்தகைய உயர் வெப்பநிலையானது சூரிய சக்தியினை அல்லது சூரியக் கதிர்களை ஆடிகள், வில்லைகள் போன்றவற்றில்ை குவியப்படுத்தி உலோகக் குழாய்களின் மீது விழச் செய்வதன் மூலம் பெறப்படலாம்.
மேலும் சூரியனனது வெப்ப மாற் lடு முறையைப் போலன்றி சக்தி விரய மின்றி நேரடியாகவே மின்சாரத்தினை ப் பிறப்பாக்கக் கூடியதாயுமுள்ளது. சூரிய ஒளியானது சில நுண்ணுணர்வுடைய இர சயானப் பதார்த்தங்களைத் தாக்கும் போது ஏற்படும் ஒளி மின் விளைவுசளினல் (Photo Electric Effect) göS LÉ)söT6ð! (Lpggloft 6ðIg. உருவாக்கப்படுகிறது. ஒரு மாதிரி சூரியக்
manus

6, 6'lrst 60's (Solar Cell) sylgil 16D ludi) விசேடமாகக் காவலிடப்பட்ட சிலிக்கன் படைகளையுடையது. (இதில் மேல், கீழ் படைகளில் முறையே போறன், பொசுபரசு ஆகியவை மிகச்சிறிய அளவில் சேர்க் கப்பட ல் நன்று) வெளிப்புற இணைப்பு மின்கம்பிகள் இவற்றுடன் தொடுக்கப்பட்டி ருக்கும். இத்தகைய கலங்கள் பல இணைக் கப்பட்டு ஒரு சூரிய மின்தொகுதி (Solar Electric System) யானது உருவாக்கப்படு கிரது. உதாரணமாக இவ்வாறன 40 கலங்+ளை ஒன்ருக இணைத்து 12 உவோற்று அழுத்த மின்சாரம் தரக் கூடிய, மோட் டார் வாகனங்களை இயக்க வல்லதான மின்கலமொன்றினைப் பெறலாம்.
சூரியக் கலங்கள் நாம் பா விக் கும் புகைப்படக்கருவி (Camera) யில் ஒளிச்செறிவினை மதிப்பிட உதவும் ஒளி மா னி களி ல் உபயோகிக்கப்படுகின்றன. மேலும் விண்வெளியில் பவனி வரும் ஆராய்ச்சிக் கடங்களிலும் அவற்றிற்கு மின்சாரம் வளங்குவதற்கு சூரியக்கலங்களே
பாவிக்கப்படுகின்றன.
தற்போது நமது நாட்டில் அறிமுக மாகித் தாராளமாகப் புழக்கத்தில் விடப் பட்டுள்ள சூரிய கணிப்புக்கருவிகள் (Solar Calculators) ஒளி மின் விளைவு எனப்படும் இரசாயனப் பதார்த்தங்களில் ஒளியின் தாக்க விளைவுகளை அடிப்படை யாகக் கொண்ட வையே. விவசாய, கைத்தொழில் முயற்சிகளுக்கு சூரியசக்தி:
மாறிவருகின்ற எரிபொருள் நிலைமை யில் வளர்முக நாடுகளின் கைத்தொழில் விவசாய முயற்சிகள் பலவும் ஞாயிற்றுக் கதிர்வீச்சினை நோக்கித் திசை திருப்பப் பட்டுள்ளன. மிக அதிகளவு எரிபொருட் செலவினம் கைத்தொழில்துறை முயற்சிக ளுக்கே தேவைப்படுகிறது கைத்தொழிலில் பெரும்பகுதியும் உயிர்ச்சுவட்டு எரிபொருள் களான பெற்ருெளிய எரிபொருள்களாகவே த ற் போ து உபயோகிக்கப்படுகின்றன. நீரைச் சூடாக்கி ஓட்டங்களை ஏற்படுத்த வும், நீராவியைப் பிறப்பாக்கவும், உலர்த் தவும், பதனிடலிலும் (Processing) இந்த எரிபொருட்கள் பெரிதும் உபயோகிக்கப்
4 asumo

Page 19
ஊற்று: 13 (1) 12-15 1988
படுகின்றன. எனினும் கூடத் தற்போது சூரிய சக்தித் தொழில் நுட்பம் இத்தேவை கட்கும் பயன்படக் கூடியவாறு அமைககப் பட்டுள்ளது.
பயிர்கள், காட்டு மரஞ்செடிகள் போன் றவற்றின் மீதிகளும் தேவையற்ற பகுகிக ளும் கடற்ருவரங்கள் மற்றும் விலங்கு கழிவுப் பொருட்களும் மிக அதிகளவு சக்தி யினை உற்பத்தி செய்வதற்கேற்ற மூலப் பொருட்களாகும். இத்தகைய சேதனப் பதார்த்தங்கள் யாவும் ஒருங்கே உயிர்த் திணிவு (Bio Mass) என அழைக்கப்படுகின் றன. உணவு, மரம், உடை, மற்றும் இன்னேரன்ன தேவைகளும் கூட இந்த உயிர்த்திணிவின் மூலம் நிறைவேற்றப்படு கின்றன. உலகின் மூன்றிலொரு பங்கு சனத்தொகையினர் இன்றும் கூட தமது எரிபொருட் தேவைக்காக முக்கியமாக விறகிலேயே தங்கியுள்ளனர். ஆனல் தற் போது விஞ்ஞானிகள் இந்த உயிர்த்திணிவில் இருந்து சக்தியினைப் பெறும் தொழில்நுட் பங்கள்ை வகுத்து வருகின்றனர்.
மின்சக்தி எரிபொருட்துறை அமைச்சு, கிராமிய அபிவிருத்தி அமைச்சு, கைத் தொழில் அபிவிருத்திச்சபை போன்றவை கிராமப்புறங்களில் இத்தகைய உயிர்த் திணி விலிருந்து சக்தியினைப்பெறும் முறைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றன. வெளி நாட்டு நிபுணர்களும் கூட இங்கு வந்து இம்முறைகளின் பிரயோகம் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். சற்றுப் புதிதான இம்முறையில் சக்திப் பண்ணைகளை (Energy Farms) அமைப்பது பற்றியும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சக்திப் பிறப்பாக்கிகளுக்குத் தேவையான எரி பொருளானது எளிதாக வளரக் கூடிய பயிர்களை வளர்த்து அவற்றிலிருந்து பெறப் படுகிறது. விரைவில் வளரும் காட்டு மரங் கள் மற்றும் கரும்பு, சோளம் இறுங்கு போன்றவை இத்தகைய சக்திப் பண்ணை
REFERENCES: 1. Solar Energy -United States Depa 2. The Sun - International Commun
gunun

களில் வளர்க்கப்படும். சில ஆய்வுகளின் LJLạ. st-ả) 9/ả)3rr $36ir (Marine Algae) பல விரைவாக வளரும் தன்மை கொண் டிருப்ப்துடன் உயிர்த் திணி வின் மூலவிட மாகவும் விளங்குவது அறியப்பட்டுள்ளது. தற்போது இந்த அல்காக்கள் உணவுப் பதார்த் தங்கள் தயாரிப்பதற்கே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எரித்தல் அல்லது நேரடித் தகனமே உயர்த் திணிவிலிருந்து வெப்பசக்தியை அதிகளவில் பெறக் கூடிய முறையாகவுள்ளது.
இந்த உயிர்த்திணிவிலிருந்து பெறக் கூடிய மற்றுமொரு முக்கிய விளைவு உயிர் வாயு (Bio Gas) வாகும். இந்த உயிர் வாயு தற்போது எமது நாட்டில் மிகப் பிரபல்யம் பெற்று வருகிறது. எரிபொரு ளுக்கும், உரப்பசளைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் இவ்வேளையில் இந்த உயிர் வாயுவின் முக்கியத்துவம் நன்கு உணரப் பட்டு வருகிறது. இந்த உயிர்வாயுவானது எதிர்காலத்தில் சிறந்த எரிபொருளாகவும் இதன் உற்பத்தியில் பக்க வி%ளவாக வரும் சாணக்கூழ் சிறந்த பசளையாகவும் பயன் படுத்தப்படலாம். நகர்ப்பு 1றங்களை விட கிராமப்புறங்களிலேயே இந்த உயிர் வாயு மிகவும் பயனுடையதாகவும், அதிகளவில் உற்பத்தி செய்யக் கூடியதாகவும் இருக் கும். ஒளி பூட்டவும் சமையலுக்கும் நீரி றைக்கவும் இது பயன் படுத்தப்படலாம். மேலதிகமாக குளிரூட்டிகளை இயக்கவும் மின்னழுத்திகளைச் சூடாக்கவும் கூட இவ் வாயு பயன்படக் கூடியது. (இவ் வாயுவின் உற்பத்தியும் பிரயோகங்களும் பற்றி இன் னேர் கட்டுரையில் பின்னர் ஆராய்வோம்)
இதுவரை கூறியவற்றிலிருந்து சூரிய சக்தியானது எமது எரிபொருட் தேவை யினை நிவர்த்தி செய்வதில் பல வழிகளி லும் பபல் ப வதை அறிந்து கொள்ளலாம். இனி இவ்வழிகளை சாதாரண மக்களும் உபயோகப்படுத்தும் வகையில் சிந்திப்பதே பயனுடையதாகும். ()
Háy
tment of Energy Publications. cation Agency of U. S. A.
5 -

Page 20
ஊற்று: 13 (1) 16 1985
அட்டைப்பட விளக்கம் ,
* சூரிய சக்தியில் இயங்கு
குரிய சத்தியால் இயங்கும் சூடாக்கி கள், அடுப்புகள் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றன. சூரிய ஒளியினைப் பெற்று குவியப்படுத்தும் பரவளை வு ஆடிகள் அல்லது உலோகத் தகடுகள் இவற்றில் உபயோகப்படுத்தப் படுகின் றன. எளிதாகக்கிடைக்கும் அலுமீனி யத் தகடுகளையும் ப யன் படுத்தலாம். ஆனல் இது நாளடைவில் பளபளப்பு அற்றுப் போய் விடும். எவர்சில்வர் மிக வும் நல்லது. ஆணுல் விலை அதிகம். தள வாடிகளைத் துண்டுகளாக வாங்கிப் பர வளைவாகப் பொருத்தியும் இவற்றை ஆக்கலாம் படம்-2யிேல் ஒரு 120 ச.மீ விட்டமுள் ஆடி 'L' வடிவ மரச்சட்டத் தில்பொருத்தப்பட்டுஅதன் குவியத்தில் நீர் கொண்ட கொள்கலன், தாங்கியில் வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 20 ச.மீ விட்டமுடைய கேத்தல் ஒன்றில் ஒரு லீட்டர் நீரை 15 நிமிடங்களில் கொதிக்கவைக்க முடியும் எனமதிப்பி டப் பட்டுள்ளது. புது டில்லியிலுள்ள இந்திய தேசிய தொழில் நுட்பக் கழகம் தான் முதலில் இவ்வகையான அடுப்பு களை அறிமுகம் செய்தது.
சிறிய பெட்டி வடிவத்திலும் சூரிய அடுப்புகள் அமைக்கப்படலாம் (படம்
சமயமும் வி
சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்கு மிடையே ஒரு லான நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆணுல் இது வாதிகளுக்கும் கடினமதி படைத்த விஞ்ஞானிகளுக்கும் அது விஞ்ஞானத்திற்கும் சமயத்திற்குமிடையிலானதல் அவர்களது வழிமுறைகள் கூட வேருனவையே. விஞ் கிறது. அது ஆற்றலுடையதாகும். சமயமோ மனிதனு: தாகும். விஞ்ஞானம் பிரதானமாக ஆதாரங்களைக் கெ கூடியது. இவ்விரண்டும் எதிரெதிரானவையல்ல. அவை விஞ்ஞானமானது சமயத்தினை மதியீனம், (
விடாமல் பிடித்து வைத்திருக்கிறது. சமயமோ விஞ்ஞா வாதம், சூனியவாதமென்ற சேறுகளில் வீழ்ந்து விடா
us

ம் இலகு சாதனங்கள் *
-22)ஒரு மரத்தினலான அல்லது உருக் கினலான வெளிப் பெட்டியினுள் கல் வனேசுப்படுத்திய இரும்புத் தகட்டின லான இன்னுெரு பெட்டி படத்தில் உள்ளது போன்று பொருத்தப்படும், உள், வெளிப்பெட்டிகளின் இடையில் மரத்தூள் இடப்படும். உட்புற உலோ கப்பெட்டியின் மேற்பரப்பு கறுப் பு நிறம் பூசப்பட்டிருப்பின் கூ டி ய ளவு சூரிய வெப்பம் (15%) அகத்துறிஞ்சப் படும். உட்புறப் பெட்டியின் சுவர்கள் சரிவாக அமைதல் திறனை மேலும் அதிகரிக்கும் (படம்-2b) கொள்ளலன் களின் அளவு, எண்ணிக்கைக் கே ற் ப பெட்டியின் பரிமாணம் அமையலாம். பெட்டியின் மேல் பாகம் இரு கண்ணு டித் தட்டுகளைக் கொண்ட மூடியினல் காற்றிறுக்கமாக மூடப்படும். இது gicyp55 g/Gli3;&T (PressureCooker) ஒத்திருக்கும். படம்-2d இ ன் ஞெ ரு வகையான சூரிய சூடாக்கியாகும். இது இரு ம் புச் சட்டங்களினலும் கோள ஆடியினைக் கொண்டும் அமைக்கப்படக் கூடியது. ஆடியானது சூரிய னின் திசைக்கேற்ப திருப்பக் கூடியவாறு இரு இடங்களில் பொருத்தப் பட்டுள்ளது இதனது உயரமும் தேவைக்கேற்ப கூட் டிக் குறைக்கப்படலாம்.*
ങ്ക
ஞஞானமும
வித தகராறு காணப்படுகின்றது என்றவொரு பரவ உண்மையன்று. ஒரு வேளை மென்மனதுடைய சமய ைெடயே தகராறு காணப்படலாம்.ஆணுல் உண்மையில் bல. இவ்விருவரதும் உலகங்கள் வெவ்வேருனவை. நஞானம் ஆராய்ச்சி செய்கிறது. அறிவினைக் கொடுக் க்கு விவேகத்தினைக் கொடுக்கிறது இது கட்டுப்பாடான ாண்டது. சமயமோவெனில் பெறுமதி மிக்கலற்றுடன்
ஒன்றையொன்று மிகை நிரப்புவனவாகும். தெளிவின்மை ஆகியவற்றின் பள்ளத்தில் வீழ்ந்து னத்தினை வழக்கத்தில் இல்லாததான பொருள்முதல் மல் தடுத்து வைத்திருக்கிறது.
- மார்ட்டின் லூதர் கிங்
*rsy

Page 21
ஊற்று 13 (1) 17-21, 1985
பழ வகைகளில் சில உண்ை
தொகுப்பு: ப. தருமலிங்கம்*
முந்திரிகை, அப்பிள், மாதுளை போன்ற அதிக விலையுள்ள பழங்கள் கூடிய ஆரோக்கியமுள்ளன. என்ருலும் பப்பா போன்ற மலிவாகக் கிடைக்கக்கூடிய பழங் கள் போஷாக்கில் குறைந்தனவென்றும் கரு தல் தவருகும். உண்மையில் இப்படியான மலிவான பழங்கள் போசாக்கு நிறைந்த உணவாகவும், அத்தியாவசிய விற்றமின் சத்துக்கள், கணிப்பொருள், உப்புக்கள் நிறைந்ததாகவுமுள்ளன.
ஆயுள்வேத விதிப்படி முந்திரிகை வற் றல் மட்டும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உடலால் ஏற்றுக்கொள்வது கடினமாகும்" சுகதேகிகள் மட்டும் சிறிதளவு உண்டால் ஜீரணிக்கும். நோயாளிகள் இதனைத் தவிர்த் தல் நன்று.
1. கொய்யா, பியர்ஸ் போன்றன தோல் விறைப்புள்ளதாக இருந்தபோதும் கையால் பிளக்கக்கூடியன. இருந்து ம் இவற் றைப் பிளக்காது முழுதாகவே உண்ண வேண்டும். இதனுல் நார்ப்பொருட்கள் உள் ளெடுக்கப்பட்டு, அவை மலச்சிக்கலைப் போக்கி மலத்தைத் துப்பரவாக்கின்றன.
2. பழங்கள் உணவுடன் உண்பதிலும் பார்க்கப் பாலுடன் அருந்துவதற்குச் சிறந் தனவர்கும். மரக்கறியுடன் பழம் உண்பது நல்லதல்ல. ஆனல் பழத்தையும், வற்றலை யும் சேர்த்து உண்ணுவதால் பாதகமில்லை. ஏனைய உணவுகளுடன் சேர்க்காமல் பழத்தை மட்டும் தனியாக உண்பதால் கூடிய நன்மையுண்டு. உணவின் பின் பழம்
முகாமையாளர், விவசாயப் பயிற்சி நிலைய * புதுடில்லி
ܗܚ 7 1 ܩܗ aar. - 3

உணவு
மைகள்
தகவல்: கலாநிதி க. சி. வேர்மார்
சாப்பிடுவது வயிற்றை நிறைக்கும் அத் தோடு கவனிக்கக்கூடிய அளவிற்கு நன்மை யையும் சுகத்தையும் காட்டாது.
3. ஒரு நேரத்திற்கு ஒரு இனப்பழத் தையே புசித்தல் நன்று. உதாரணமாக வாழைப்பழமானுல் வேறு பழங்களில்லா மல் வாழைப்பழத்தையே புசித்தல் நன்று.
4. நோயுற்ற காலங்களிலும்,விரதம்முடி வடையும் நேரங்களிலும் பழச்சாற்றைமட் டும் பாவித்தல் நன்று. இதற்கு இப்பழத் தைப் பல துண்டுகளாக வெட்டிப் பிழிந்து வெள்ளைத் துணியால் கிளாசில் வடித் தெடுத்து உடனேயே அருந்துதல்வேண்டும். பிழிந்த சாற்றை இரு நிமிடங்கள்தானும் வைத்திருந்தால் பழுதடைந்து தீங்கிழைக்கும் பொருளாக மாறிவிடும். நோயைச்சிக்கிரம் குணப்படுத்த நோயாளிக்குச் சிபாரிசு செய் யப்பட்ட பழத்தைக் கொடுக்கும்பொழுது வேறு பழங்களைச் சேராது அதே இனப் பழத்தையே கொடுத்தல் வேண்டும்.
5. பழத்தை வெறுவயிற்றில் உண்பதே சிறந்தது. காலையும். மதியமும் பழத்தை அருந்தி மாலையில் மட்டும் சாதாரண உணவை உண்பது சிறந்த முறையாகும். பிரயோசனத்தைக் கருதி காலையிலும் மதியத்திலும், இரவிலும் பழம் உண்பதனை முறையே தங்கம், வெள்ளி, செப்புக்கு ஒப்பிடுவர். இதன் பிரகாரம் காலையில் பழம் அருந்துதல் மிகவும் நன்று.
6. நோயைக் குணப்படுத்தப் ւյքմ, உண்ணும்போது, ஒரு நாளைக்குக் காலை,
ம், திருநெல்வேலி

Page 22
ஊற்று: 13 (1) 17-21, 1985
மதியம், இரவு ஆகிய மூன்று நேரங்களி லுமே உண்ணவேண்டும்
7. நன்கு முதிர்ந்து முற்றிய் பழங்களை அளவோடு உண்ணுதல்வேண்டும். அழுகிய தும் பூச்சி புழுக்களால் பாதிக்கப்பட்ட பழங்களையும் தவிர்த்தல்வேண்டும். அதிக விளைவு கிடைக்கும் காலங்களிலேயே அள வாகப் பழங்களையும் மரக்கறிகளையும் உண் ணல் நன்று. போகமல்லாத காலங்களில் பழங்களை உண்பதனல் சுகத்தையும், மகிழ்ச் சியையும் அவை தரா, எனவே அப்படியான காலங்களில் குறைந்தளவே உபயோகித்தல் வேண்டும். S.
பழங்களும் வ்ற்றல்களும்
நல்ல உடலமைப்புக்கு ஒருவன் சமைக் காத ஒரு இருத்தல் பழம் உண்பது அவ சியமானது. நமது துறவிகளும், ஞானிக ளும் காட்டிலுள்ள வேர், கிழங்கு, பழம் போன்றவற்றை உண்டு சுகதேகியாக நீண்டகாலம் வாழ்ந்தனர். ஆதாம், ஏவாள்கூட பழத்தோப்பிலேயே வாழ்ந்து மோட்சத்தில் இன்பத்தை அனுபவித்ததாக வும், பின் சிறு பிழைக்காகப் பூமிக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறுகின்றனர்,
முன் கூறியதுபோல் பழங்களும் வற் றல்களும் மனிதனின் இயற்கையான உண வாகும். இவற்றுள் மனிதனுக்கு வேண்டிய பிரதான போசாக்குப் பொருட்கள் அடங்கி யுள்ளன. இவை உணவுமட்டுமல்ல நல்ல மருந்தாகவும் உதவுகின்றன. மருந்தை அருந்தும்போது அது கசப்பாகக் காணப் படுகின்றது. ஆனல் பழங்களை அருந்தும் போது அவை ருசியாக இருப்பதுடன் உடம்பின் எல்லாப் பகுதிக்கும் சக்தியை
அளிக்கின்றன. m
பழங்கள் சிறுவர்கட்கும் ஒரு சிறந்த உணவாகும். இவை குழந்தைகளின் நோய் களையும் குணப்படுத்தக்கூடியன. குழந்தை
- 1

கள் இனிப்புவகைகளிலும் பார்க்கப் பழங் களை அதிகம் விரும்புகின்றனர்.
பழங்கள் இனிமையானவை:
சூரியனுக்குக் கீழ் இனிமையான பழங்
கள் முற்றும்பொழுது குளுக்கோசும் ஏனைய போசாக்குப் பொருட்களும் நிறைந்தன வாகக் காணப்படும். சுமாரானளவு நீர் கொழுப்பு, மாச்சத்து, குளுக்கோஸ் ஆகி யன அநேகமாகப் பழங்களில் உண்டு. இவை மனித உடலிற்கு மிக முக்கிய மானவை. ஏனைய வெல்லங்களிலும் பார்க் கப் பழவெல்லம் இனிமையிலும் சீரணித்த லிலும், வீரியமூட்டும் பண்புகளிலும் சிறந் ததுமல்லாமல் உடலின் ஜீவ உறுப்புகளுக்கு பிரத்தியேக சக்தியையும் கொடுக்கின்றது. ஆனல் செயற்கையான சீனி வகைகள் உறுப்புகளுக்கு எரிச்சலைக் கொடுப்பதுமல் லாமல் உடலிற்குத் தீங்கையும் விளைவிக்கும். பழங்களினதும், வற்றல்களினதும் இனிமை உடலுறுப்புகட்கு வீரியத்தைக் கொடுப்பது மல்லாமல் தீங்கெதுவுமளிப்பதில்லை.
பழங்களில் உப்புக்களும், அமிலங்களும்
பழங்களில் இனிமை மட்டுமல்ல அதி களவு உப்புக்களும், அமிலப்பொருட்க ளும்கூட உள. அதிகளவு பொஸ்பரசைக் கொண்டுள்ளதால் அவை மூளைக்கு வலிமை பெருக்குகின்றன. இர த் தம் அசுத் தமடைந்து மெலிவுற்றவர்கட்கு Լմեք உப்பு ஒரு மாற்று மருந்தாகும். கடும் புளிப்பான பழங்கள் யாவும் உடலிற்கு ஒரு போதும் தீங்கில்லாது நல்லவையாகவே
காணப்படுகின்றன.
பழங்களில் இரும் புச்சத்து:
சிவந்த பழங்களில் நியாயமான அளவு பொஸ்பரஸ், இரும்பு, கந்தகம், கல்சியம் போன்ற மூலகங்க ளு ன் டு. இதல்ை வைத் தி யரோ அல்லது gFIT 5/TT6007 மனிதனே இரத்தத்தைச் சுத்திகரிக்கும்
8 as

Page 23
ஊற்று: 13 (1) 17-21, 1985
பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்டு பெரும் பாலான நோய்களைக் குணப்படுத்திக்கொள் ளலாம்.
சிரசிலேற்படும் நோய்களுக்குப் பழங்கள்:
மூளையை விருத்தி செய்யப் பழங்கள் பெரிதும் உதவுகின்றன. விசேடமாக பொஸ்பரஸ் அதிகமாயுள்ள அப்பிள்போன் றன. சஞ்சீவி மருந்தாகத் தொழிற்படுகின்
ዐ96õ፫ •
கண் நோய்களுக்குப் பழங்கள்
பழங்களை உணவில் சேர்த்துக்கொள் ளும்போது மூளைநோய்கள் மாறுகின்றன. புதிதாக நன்கு முதிர்ந்த முந்திரிகை, அப்பிள். வாழை போன்ற பயிர்கள் இதற் குச் சிறந்தன. மேற்படி பழங்கள் இலகு வில் ஜீரணிக்கக்கூடிய உன்னதமான வெல் லத்தைக் கொண்டிருப்பதுடன் பெளதீக சக்தியாக உடன் மாற்றப்பட்டு மூளையின் இழந்த சக்தியை ஈடு செய்து மூளைக்குப் புத்துயிரூட்டுகின்றது.
புதிய நல்ல ரகப் பழங்கள் மூளைக்கும் ஏனைய ஜீவ உறுப்புகட்கும் பலத்தையும் வீரியத்தையும் கொடுப்பதுடன் கண் பார் வையையும் கூர்மையாக்குகின்றன. மூளைப் பலவீனத்தை வாதாம்பருப்பு குணப்படுத் தும். இது மூளையின் உருவத்தை ஒத்தது.
வாய்ப்பகுதி நோய்கட்கு பழங்கள்:
வாயின் துர்நாற்றத்திற்கும், பல்முரசு வியாதிகட்கும் பழங்கள் பலனளிக்கும். மாமிச உணவுகளும், ஏனைய எரிவை ஏற் படுத்தும் உணவுப் பொருட்களும் இரத்த அசுத்தங்களையும், வாய் நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன, பழ உணவு இரத்தத் தைச்சுத்திகரிப்பதுடன் வாயிலுள்ள பற் lரியாக்களையும் அழிக்கின்றது.
m 19 -

மார்பு நோய்கட்குப் பழங்கள்:
புதிய பழங்களும், வற்றல்களும் இரு தயத்தை வலுப்படுத்துவது அனைவரும் அறிந்தவிடயமாகும். இதயக் கோளாறு கட்குமாதுளை, அப்பிள், முந்திரிகைப் பழங்கள் தினமும் அருந்தப்படுகின்றன. இவை மிகவும் சித்தியுள்ள இயற்கையான பரிகாரமாகும்.
வயிற்றுக்கோளாறுகட்குப் பழங்கள்:
உடலில் சமயல் செய்வது வயிருகும் குறுகிய நேரத்தில் ஜீரணிக்கப்படுவதால் ஏனைய உணவுகளை விட வயிறு பழங்களையே விரும்புகின்றது. ஜிரணிக்கும் நேரம் ԼյլքIեյ களைப் பொறுத்து வேறுபடும், சில ܚܐܚܧ னடியாகவும், சில காலம் தாழ்த்தியும் ஜீரணிக்கும் பொதுவாக இவை இலகுவில் ஜீரணிக்கும் தன்மையுடையன. முதிர்ந்த பழங்களை நன்கு மென்று உண்டால் )سیات லில் சிரமமில்லாது ஜிரணிக்கும். பழரசம் சீக்கிரம் ஜீரணிக்கும். பழங்கள் ஜீரணிப்பது சேர்த்துச்சாடயிடும் உணவைப்பொறுத்தது. பலர் இனிப்பான பழங்களையும், புளிப் பான பழங்களையும் சேர்த்து உண்பதும், பழங்களைக் காய்கறிகளுடன் சேர்த்துண்ப தும் தவிர்த்தல் வேண்டும். காலத்திற்கொள் வாத பழங்களையும் முற்ருத பழங்களையும் பழுதடைந்த அல்லது அழுகிய பழங்களை யும் தவிர்த்தல் வேண்டும். இவை நோய் களை ஏற்படுத்துவதுமன்றி செமிபாட்டைச் சீர்குலைத்து உடற்கட்டையும் சிதைக்கின் நிறன், உடலில் அவாமின்மை, அஜீரணம் ஆகியவற்றல் வருந்துபவர்கட்கு 8-10 நாட்களுக்கு இலேசான Lழ உணவைக் கொடுத்துக் குணப்படுத்தலாம்.
குடல் ஒழுங்கீனங்களுக்குப் பழங்கல்:
பல்வேறு நோய்கட்கு மலச்சிக்கல் ஒரு மரபுரிமையானது. இதற்கு நிரந்தர

Page 24
ஊற்று: 18 (1) 17-21, 1985
நிவாரணி உலகிற் கிடையாதபோதும் பழங்கள் இதனைக் குணப்படுத்துகின்றன. அப்பிள், தோடை, பியர்ஸ், வாழை, ஸ்ரோபெரி, ஆகியன இயற்கையாகவே மலமிளகும் தன்மையுடையன. இருந்தும் அத்தி, முந்திரிகை, சீமை, வாதுமை கொடி முந்திரிகை வற்றல், பேரிந்து போன்ற பழங்கள் மலச்சிக்கலை நிரந்தர ாக வேரோடு அகற்றிவிடும் தன்மை யுடையன. இப்பயன் கிடைப்பதற்கு மேற்படி பழ்ங்களை நன்கு மென்று உண்ண வேண்டும். அல்லது இவற்றின் சாற்றைப் போதியளவு பருகுதல் வேண்டும்.
ஈரலிலேற்படும் சிக்கல்களுக்குப் பழம்:
பழங்களில் உப்புகளும், அமிலங்களும் இருப்பதனல் ஈரலின் தொழிற்பாடுகளைச் சீர்திருத்திக் கட்டுப்படுத்துததற்குப் பழங் கள் அதி முக்கிய பங்கெடுக்கின்றன. எக் காரணியாலும் இரத்தச்சோகை ஏற்பட் டாலும் பழங்கள் அகற்றிவிடும். விசேட மா வாழைப்பழம் இரத்தத்தை உற் பத்தி செய்யும் சிறந்த பழமாகும். குழந்தை கட்கு ஏற்படும் இரத்தச் சோகையைப் பழங்கள் போக்கும். தோடம்பழம் இரத்தச் சோகையைக் கண்டிக்கும் ஒரு பழமாகும். இது அழகைக் கொடுப்பதுடன் பலவகை இரத்த எதிரிகளை அழித்துச் சுத்திசெய்கின் றது. இதனல் போதியளவு பழங்களை உண்ணும் பழக்கமுடையவர்கள் மறுவில் லாத (குன்ற) அழகாகவும், கவர்ச்சியான தோற்றமுடையவராகவும் திகழ்வர்.
சிறுநீரக, பித்தப்பை வியாதிகட்குப் பழங்கள்
பழங்கள் சிறுநீர்க் கழிவுகளைத் தாக்கும் தன்மையால் சிறு நீரகத்தைத் துப்பர வாக்குகின்றன. இத்தன்மை லெமன், வகை களிலும், எலுமிச்சைவகைகளிலும் மிகுதி யாகக் காணப்படுகின்றன, இப்பழங்கள் சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்துவதுடன்
isan :

அதன் தொழிற்பாட்டினையும் சீராக்குகின் றன, எனவே நீரிழிவு நோயினல் பாதிக்கப் பட்டு உடல் நலம் குன்றியவர்கள் அத்தி, பேரீந்து போன்ற பழங்களில் மட்டுமே தங்கியிருக்கவேண்டும், மாம்பழம் சிறுநீர கம் போன்ற தோற்றமுடையது. அத்துடன் மாம்பழத்தில் சிறுநீரகத்தை வலுவூட்டும் தன்மை அமைந்துள்ளது. சிறுநீரகத்தில் ஏற்படும் கல், சிறுநீரக பித்தப்பை ஒழுங் கீனங்கட்கு முந்திரிகைப்பழம் சிறந்தது. இரண்டு மூன்று அல்லது சில வேளைகளில் ஆறு இருத்தல் முந்திரிகைப்பழம் தின மும் உண்ணும்படி விதிக்கப்படுகிறது.
ஆண்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு பழம்:
ஆண்களில் மேகநோய்களுக்கு எரிவுத் தன்மையும், நச்சுத்தன்மையும்கொண்ட மருந்துகளையே பாவிக்கின்றனர். எனினும் ஒழுங்காகப் பழம் சாப்பிடுமிடத்து ஆண் உறுப்பிலேற்படும் குறைபாடுகள் நீக்கப்படு கின்றன. அப்பிள், மா, முந்திரிகை, போன்ற பழங்களைப் பால், வெண்ணெய் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணும்பொழுது விரைவாகவும், சிறப்பாகவும் பயன் கிடைக் கின்றது.
பெண்களுக்குஏற்படும் நோய்கட்கு பழங்கள்:
பணக்காரக் குடும்பத்திலுள்ள பெண் கள் சோம்பலாக நேரத்தைக் கழிப்பதா லும் சமிபாட்டுத்தொகுதி தடைப்படு கிறது. இவர்களுக்குப் பல வசதிகளும் இருப்பதனுல் மந்தமடைந்து நன்முக வேலை சுெய்யமுடியாது காணப்படுவர். இவர்களின் ஈரலில் உஷ்ணம் கூடி மலச் சிக்கல் ஏற்படுகின்றது. இதனல் அசெள கரியமும், நடையில் நொண்டும் தன் மையும் ஏற்படுத்துகின்றது. சிலசமயம் இடுப்பு வலியும், தலை விறைப்புமேற்படு. கின்றது. மந்த நிலை ஏற்படும்போது கசப்பு மருந்துகள் குடிக்கமுடியாது கஷ்டப்படுவர்?
0 -a

Page 25
ஊற்று 13 (1) 17-21, 1988
இப்படியானவர்கள் இரண்டு மூன்று ாரங்கட்கு தொடர்ந்து பழிஉண்சி FIT டுெ வருவதனல் குணமடையும் இசி துடன் நிறைய Šíř பருகவேண்டுய். இத னல் சமிபாடு சீரடைந்து கழிவுப்பொருட் கள் வெளியேற்றப்படடு சுகதேகியாக வாழ லாம்.
நரம்புத்தொகுதிக்கேற்ற பழங்கள்
புளிப்பான பழ்ங்கள் நரம்பு வியாதி கஜிளக்குணப்படுத்துவன. அவற்றிற்கு அமிலத் தன்மையான பழங்கள் நன்மை பயக்கும். இவற்றைப் போதியளவு உட்கொண்டால் வாதநோய்களைக் குணப்படுத்தும்,
காய்ச்சலிற்குப் பழங்கள்:
காய்ச்சலிற்குப் பழரசம் விசேடமானது. தோட்டம்பழரசம் ருசியானதும், பசியைத் தூண்டுவதோடு இலகுவில் சீரணிக்கக்கூடிய ஒர் ஒளடதமுமாகும். காய்ச்சலால் தோல் வரண்டு, உஷ்ணமாகி, உதட்டில் தோல் உரியுமிடத்து இது அதிகளவில் உட்கொள்ள வேண்டும். இது காய்ச்சலின் வெப்பத்தைத் தணித்து, தாகத்தைத் தணித்து நோயாளி யின் வேதனையை அகற்றுகின்றது.
இரத்த அசுத்தங்களுக்குப் பழங்கள்:
அமிலத்தன்மையுடைய அல்லது மல மிளக்கும் தன்மையுடைய பழங்கள் இரத் தத்திலுள்ள அசுத்தங்களை நீக்கித் தோல் அழற்சியை நீக்குகின்றன. பெரும்பாலும் மாமிச போசணிகளுக்கு இரத்தம் நச்சுத் தன்மையடைதலேற்படுகின்றது. இதற்குப் பழங்களை உண்பதாலேயே குணப்படுத் தலாம்.
கொழுத்தலிற்குப் பழங்கள்
கொழுத்தல் உண்மையில் ஒர் நோய கும். கொழுத்தவர்கள் மெலிவதற்கு

சுறுசுறுப்பாகவும், வீரியமாகவும் இருப்ப தற்கும், புளிப்பான பழங்களை அதிகளவு உட்கொள்ளல்வேண்டும். தினமும் இரண்டு மூன்று கிளாஸ் லெமன் அல்லது தோடம் பழரசம் பருகுதல்வேண்டும். அல்லது தின மும் இரு லெமன் பழங்களை உண்ணும் பொழுது மேலதிக கொழுப்பை அகற்றி ஒல்லியாக்கி உடற்பலம் ஏற்படும்.
நீண்ட சுகவாழ்வை விரும்புவோர்க்கு:
வழக்கமாகப் பழங்களை நீவிர் உண்டு வந்தால் எதுவிதநோயும் அணுகா. பழப் போசணிைகள் உன்னதமாக வாழ்கிறர்கள். என்பது உலகறிந்த உண்மையாகும். அத் துடன் இளமைமுதல் முதிர்ச்சிவரை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும், சுறு சுறுப்பாகவும், வலுவுடனும் வாழ்கின்ற
6.
பழங்களே உண்பது எப்படி?
இனிமையான பழங்களை அப்படியே உண்பது நன்று, அறுவடை செய்யும்பொ ழுது கூடியபோசாக்கு இருப்பதனல் உட னேயே உண்பது நன்று. உஷ்ணம் பழங்களின் நோய் நீக்கும் தன்மையைக் குறைக்கின்றது. எனவே பச்சையாக உண் பது சிறந்தது. அப்பிள், பியர்ஸ், தோடை முந்திரிகை வற்றல், சீமைவாதுமை, பீச் செஸ், மா போன்ற சாற்றுப்பழங்களை வேகவைப்பது கூடாது. பழங்களை அப் படியே உண்பது சிறந்ததாயினும் விதை களுடனும் ஏனைய செறிவுணவுகளுடனும் அதிகம் உண்ணக்கூடாது. ஜீரணிக்கும் பகுதிக்கு வேலையைக் குறைப்பதற்கு பல் வேறு இனப்பழங்களைக் கலந்து உன்பதனைத் தவிர்க்கவும்.0

Page 26
asirbo 1 3 (1) 22 — 27. 1985
பனே அபிவிருத்தியில் நவீ
அண்மையில் யாழ். பல்கலைக் & இணைந்து நடாத்திய பனைபற்றிய
ஞானரீதியான தகவல்களை இங்கே ( ஒரு பெருந்தோட்டப்பயிராக மாற்றி எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைக நுட்பங்கள் போன்ற விடயங்களி
இவை. * பேராசிரியர் கே. பாலசுப்பிரமணியம்*
பல நூற்றண்டுகளிற்கு முன்னரே பனையினது அருைைமபற்றி உணரப்பட்டி ருந்தது. ஆசிய, ஆபிரிக்கநாடுகளில் பதநீர் வடித்தல், இன்ப்பான நிலையில் பதநீரை பாதுகாத்தல், நொதிக்கச் செய்தல் போன்ற விடயங்களில் விஞ்ஞானமும், பொருத்த மான தொழில்நுட்மும் பயன்படுத்தப் பட்டே வந்துள்ளன இக்காலப்பகுதி யிலேயே சீனவில் வெடிமருந் கம், இந்தியா வில் வ" னசாஸ்திரமும் கூடக்கண்டறியப் பட்டன. எனினும் இச்தகைய விஞ்ஞான தொழில் நுட்பங்களானவை இங்கு மேற் கொண்டு வளர்ச்சியடையவில்லை. மாழுக மேற்கு நாட்டவரால் இங்கிருந்து மெதுவா கத் திருடிச்செல்லப்பட்டன. அத்துடன் எம்மீது ஆதிக்கம் செலுத்தவும் அவையே உபயோகிக்கப்பட்டன.
மேற்கு நாடுகளில் கைத்தொழில் புரட்சியினைத் தொடர்ந்து வந்த பரம்பரை அலகுப்புரட்சியானது (gene revolution) பொருளாதார ரீதியில் எம்மைத் தம்மீது தங்கியிருக்கவே வைத்துள்ளது. எமது நாடு களில் இருந்து தாவரங்சளின் பாரிய மூல வுயிர்க்களஞ்சியங்களானவை (germ plasm stores) மெதுவாகத் திருடிச்செல்லப்பட்டு அவை பின்னர் பிறப்புரிமைப் பொறி
* மருத்துவபீடம், யாழ். பல்கலைக்கழகம்.
- 2.

ஆய்வரங்கு
ன தொ ழில் நுட் it.
ழகமும் பனை அபிவிருத்திச்சபையும் ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்ட விஞ் தாகுத்துத் தருகிறேம். பனையினையும்
அதனே அபிவி ரு ,தி செய்வதற்கு, ா, தேவையான நவீன தொழில் ல் மூவர் தெரிவித்த கருத்துகள்
uudi) (Genetic Engineering) byl Uši 5ěktéž
கொண்டு அந்நாட்டுத் தாவர வருக்கங்களி லும் புகுத்தப்பட்டு புதிய கனிதரு தாவர
வருக்கங்கள் உருவாக்கப்பட்டன இப்புதிய
வருக்கங்கள் குட்டையானவை. அதிக கனி
களைத்தருவன. குறுகிய காலத்தில் பலன் தரு
வன. ஆனல் அவை எளிதில் நோய்களால்
பீடிக்கப்படுவனவும் ஆகும். எனவே இப்
புதிய தாவரவருக்கங்கள் எமது நாடுகளில்
அறிமுகப்படுத்தப்படும் போ து கூடவே
அவற்றிற்க வேண்டிய பீடைநாசினிகளும்
அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைசெய்யப்
படுகின்றன. இவ்வாருக எமக்கு சுதந்திர மானது அளிக்கப்பட்டிாப்பினும்கூட அது
மாமுக மே ற் குல கி ன் பொருளாதார
ஆதிக்கத்திற்குள்ளானதாகவே உள்ளது.
பனையானது எமது வரண்ட பகுதி டிலே மிகச் செழிப்புடன் வளருகிறது. அதற்கு நாம் நீரிறைப்பதோ அன்றிப் பச2ளயிடுவதோ இல்லை. வேறெந்தப்பயிரும் 6 GMTT (pl. ULUFT35 மண்ணில் பனை வளரு கிறது. பனையினது மூலவுயிர் முதலுரு வானது வரட்சிக்கு எதிரான குணம் சத்தினை க் கொண் - து. வேர்களில் உள்ள நைதரசன் பதிக்கும் காரணி (Rhizophere) களும் நைதரசனைப் பதிக்க

Page 27
ஊற்று: 13 (1) 22-27, 1985
லாம். ஒளித்தொகுப்புத்திறனும் இதில் அதிகம். வரட்சி தாங்கும் தன்மை, நைதரசன் பதித்தல், உயர் ஒளித் தொகுப்புத்திறன் ஆகியவற்றின் G3Fri aj கையானது எந்தவொரு தாவரத்திலும் இல்லாதவாறு பனையிலேயே காணப்படு கிறது. இவ்வகையான பிறப்புரிமையியல் வகைகளை மேலும் அபிவிருத்தியடையச் செய்வதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளல் அவசியாமனதாகும். பெற்ருேலியப்பொருட் களின் விலையதிகரிப்போடு உரப்பசளை, பீடை நாசினிகளின் விலைகளும் அதிகரிப் பதஞல் அவற்றில் தங்கியிராத தாவரவருக் கங்களையே நாம் விருத்தி செய்தல்வேண் டும். ஜப்பானில் உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) மூலமாக வளிமண்டல நைதரசன்ைத் தம்மில் பதிக்கவல்ல நெல் வருக்கங்களை உருவாக்க முயற்சிக்கிறர்கள்.
நாம் இன்று நிலம், நீர், பசளைகள், பீடை நாசினிகளில் தங்கியிராத பயிர்களை உருவாக்கும் பரம்பரையலகு ப் புரட்சி (gene revolution)u air upg52 or GT5 if நோக்கியுள்ளோம்.
大
கலாநிதி சு. மோகனதாஸ்
கற்பகதருவான பனை தமிழ் மக்க ளின் வாழ்க்கையோடு தொன்றுதொட்டுப் பின்னிப் பிணை ந் து விளங்குகின்றது. தேயிலை, ரப்பர், தென்ன போன்ற பெருந் தோட்டப் பயிர்களுக்கு அளிக்கப்பட்ட முக் கியத்துவம் போன்று முன்னரே பனைக்கும் அரசாங்க உதவிகள் கிடைத்திருக்குமானல் பஜனவள அபிவிருத்தி இன்று பன்மடங்கு பெருகி இருக்கும்.
*பொது முகாமையாளர், பனை அபிவிரு

பனை, தென்னையில் வரட்சி எதிர்ப்புத் திறனின் உயிரிரசாயனத்தன்மைகள்பற்றிய ஆராய்ச்சிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரட் சிக்குத் தாக்குப்பிடிக்கும் தன்மையுள்ள தென்னைமரங்களின் வேர்களில் graoyu தென்னைகளிலும் பார்க்க 300% அதிக மான அமினுே அமிலம் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.
பனை ஆராய்ச்சி நிலையம். பனை மூலவுயிர் முதலுருபாதுகாப்பு நிலையம் (Palmyrah Germplasm Conservation centre) 55007 Goof? மயப்படுத்தப்பட்ட பனை ஆவண நூல்நிலை uulb (Computerised Palmyrah Documentation centre) G. BITS, ill guittiljS. i2h) uth (Fermentation Research Institute) ஆகியனவற்றை உள்ளடக்கிய ஒரு பனை gy 1525ílub 5Tg53 (Palmyrah Scientific Complex) யானது உடனடியாக அமைக்கப் படுதல் பனையியல் ஆராய்ச்சிகளைச் சிறந்த முறையில் நடாத்த உதவும். இதற்கு தனி யார் துறையினரின் ஒத்துழைப்பும் மிக அவ சியமாகும். W.
★ ★
இந்நாட்டில் 60,650 ஏக்கரில் 11 மில்லியன் பனை மரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத் தில் (கிளிநொச்சி உட்பட) 7 மில்லியன் பனை மரங்களும். மன்னர், முல்லைத்தீவுப் பகுதி*ளில் அடர்த்தியாகவும், திருகோண மலை, புத்தளம், வவுனியா அம்பாந்தோட் டை ஆகிய மாவட்ட ங்களில் குறைந்தளவு பரம்பலைக் கொண்டதாகவும் பனை மரங்கள் காணப்படுகின்றன,
த்திச்சை .
23 -

Page 28
ஊற்று; 13 (1) 22-27 1985
இலங்கையின் பனை
LorsnúLib ஏ யாழ்ப்பாணம் (கிளிநொச்சி حمر
.40 (بالLL-ۓق மன்னர் I5 முல்லைத்தீவு 5 திருகோணமலை புத்தளம் மட்டக்களப்பு வவுனியா அம்பாந்தோட்டை
-
அட்ட
யாழ் மாவட்டத்தி
உதவி அரச அதிபர் பிரிவு Luèsar LD
எண் நெடுந்தீவு/வேலணை 712 ஊர்காவற்றுறை 245 வலி வடக்கு 564 வலி தெற்கு 88 வலி மேற்கு 309 வலி தென் மேற்கு 20 வலி கிழக்கு 5. யாழ்ப்பாணம் 2 நல்லூர் 45 தென்மராட்சி 256 வடமராட்சி தெற்கு மேற்கு 235 வடமராட்சி வடக்கு கிழக்கு 208
3,00'
{2ی
பனையைப் பொறுத்த வரையில் இதர பயிர்வகைகளைப் போல் அல்லாமல் மழை குறைந்த வரண்ட பிரதேசங்களிலும் கடற்கரை ஒரங்களிலும், வளரக்கூடியது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பயன்படுத்தப்படாத தரிசு நிலங்களில் வளர்வதற்குஉகந்தது . வீடுகட்டுதல்போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும் வருடா வருடம் சுமார் ஒரு லட்சம் பனைமரங்கள்

ப்பரம்பல்
'க்கர் பனைமரங்களின் எண்ணிக்கை
000 7,345,800 , 000 3,000,000 ,000 500,000 250 50,000 250 ნ0,000
50 50,000
50 5,000
50 5,000 0, 650 o,005, soo
வணை-4
ல் பனைப்பரம்பல்
ரங்களின் வடலி மரங்களின் ணிக்கை எண்ணிக்கை ,300 91,800 3, 600 41,800 .., 000 144,000 ,800 23,600 !,800 38,800 , 800 60,100 ,900 36,800 , 800 · 600 ' , ፩00 7,000 , 800 89,700 , 800 51,000 ,600 38, 400
ፖ,800 624, 100
ட்டவணை-5
வெட்டப்படுகின்றன. இந்நிலை நீடிக்குமா ஞல் 10 மில்லியன் பனைமரங்களும் மிக விரைவில் அழிந்துபோய்விடும். பன இல் லாதுவிடின் பனைவளமே இல்லாது போய் விடும். எனவே இதற்கு ஈடுசெய்யும் வகையில் வருடந்தோறும் 5 லட்சம் பணம் விதைகளாவது நாட்டி வரவேண் டும், பனம் விதைகள் 60 வீதம் முளைத்
大 ★
24 -

Page 29
ஊற்று: 13 (1) 22-27, 1985
கலாநிதி எஸ். கந்தையா
பனையின் தாவரவியலும் சூழலியலும் என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையில் (கர் தையா 1983) பனை பலகோடி ஆண்டு களாக இயற்கைத் தேர்வினுடாகத் தோன் றியுள்ள பயிராதலால், தற்போதைய சூழ் நிலைக்கேற்ற அதி உன்னத இசைவாக்கங் களைக்கொண்ட தாவரமாக விளங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனல் ஒரு தாவரத்தின் இயற்கை இசைவாக்கங்களில் LG), Lמ T60ht - தாவரப்பிரயோகத்திற்கு ஏற்றவையல்ல. (ஈவன்ஸ். 1975). எமது பயிர் வர்க்கங்கள் தோன்றிய வழியை ஆராய்ந்தோமானல் ஆச்சரியப்படும் மாற் றங்கள் மனித தேர்வு வர்க்க முறைக ளால், பயிர்களில் ஏற்பட்டுள்ளதை அறி வோம். உதாரணமாக, எமது வீட்டுத் தோட்ட கோவாவும், வாழையும் தம் முன்தோன்றிகளிலிருந்து மனிதன் தன் தேவைகளுக்கேற்ப உண்டுபண்ணிய வியப் பூட்டும் மாற்றங்களாகும்,
பயிர் தேர்வு முறைகள் பயிரின் பய னுள்ள அங்க விளைச்சலைப் பொறுத்ததே. ஆகக்கூடிய வளர்ச்சிவீதத்தை பயனுள்ள அங்கத்தில் ஈட்டுவதால் மிகக்கூடிய வருமா னத்தை பெறக்கூடியதாக இருக்கும். உதா ரணமாக பழமரங்கள் பழ விளைச்சலிற்காக வும், தேயிலைச்செடி இலை விளைச்சலிற் காகவும், இறப்பர் பால் விளைச்சலிற்காக வும் தெரிவு செய்யப்படும். பனையைப் பொறுத் த மட் டி ல் மரத்தின் சகல பாகங்களும் உபயோகிக்கப்படலாம் என கருதப்படினும், இவற்றுள் விளைச்சஆல ஊக்குவிக்கும் பனை வர்க்கங்களைப் பெருக் கக்கூடியதாகவே எமது இனப்பெருக்க முயற்சி அமையவேண்டும்.
பனையில், பதனீரே மிகக்கூடிய வரு மானத்தைத் தரவல்ல விளைச்சல் தொகுதி
"தாவரவியற்றுறை, யாழ். Lebswegs
22 e 4 -

யாகும். இன்று மிகக்குறைந்த வீத(< 5%) பனை மரங்களே இதற்கு பயன்படுத்தப் பட்டபோதிலும் பதநீர்ப்பொருட்களா லேயே கூடிய வருமானம் பெறப்படுகின் றது. ஆகவே பனையின் இனப்பெருக்க முயற்சிகள், இலகுவில் இலாபமிக்க முறை யில் பதனீர் பெறக்கூடிய பனைவர்க்கங் களையே பெருக்க முயற்சிக்கவேண்டும்.
இக்குறிக்கோளை தற்பொழுது நாம் விதையிலிருந்து பனையை இனப்பெருக்கும் முறைகளால் அடையமுடியுமா? இன்று மிகக் குறைந்த பனை மரங்களிலிருந்து பதனீர் பெறப்படுவதற்கு முக்கிய காரணம் பனையின் அசாதரணமான உயரமேயாகும். நம் இனப்பெருக்க தேர்வு முறைகள் கூடிய அளவில், பதனீர் சேகரிக்கும் தொழில் முறையை இலகுவாக்கக்கூடிய பண் இனத்தையே பெருக்கும் நோக்கோடு அமையவேண்டும். இந்நோ க்கு டனேயே இலங்கையிலும் அண்டை நாடுகளிலும்
கீழ்க்காணும் இயல்புகளைக்கொண்ட மரங்
களே இனம் காண வேண்டும்.
1. தண்டின் வளர்ச்சிகுன்றிய குட்டை
மரங்கள்.
2. அகால முதிர்வுள்ள குறுகியகாலத்
தில் பூக்கவல்ல இனங்கள்
3. பெருமளவில் தரமான பதனீர்
தரக்கூடிய மரங்கள்.
இத்தேர்வுகளுக்கான நமது ஆய்வு முயற்சிகள் இலங்கையில் மட்டுமல்லாது ஆசியா, ஆபிரிக்கா போன்ற பிரதேசங் களிலும் நடாத்தப்படவேண்டும். இலங் கையில் இதற்கென ஒர் ப?ன “மூலவுயிர் (passy (5 outs' (Germ-plasm Bank)
B....
身岛

Page 30
ஊற்று. 13 (1), 22-27, 1985
நிறுவுதல் இவ்வழியில் ஓர் சிறந்த முயற்சி யாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக மனித னல் பனை பல வகைகளில் உபயோகிக்கப் பட்டு வந்தபோதிலும் சில வருடங்களிற்கு முன்னரே பனை பற்றிய ஆய்வுகள் தொடங் கியுள்ளன. எமது சமுதாயத்தில் வாழும் மூத்த சந்ததியினர் இளம் சந்ததியினரை விட பனையை கூடுதலாக உபயோகித்துள் ளார்கள். இவர்கள் பனையின் இயல்புகளைப் பற்றி அனுபவரீதியில் அறிந்த உண்மைகள் பனைத்தேர்வு முயற்சிகளிற்கு மிகவும் உதவக் கூடியவை இவ்வாருக அனுபவரீதியில் வழி வந்த உண்மைகள் காலதாமதமின்றி சேக ரிக்கப்பட்டு தொகுக்கப்படல் அவசியம்.
சிறந்த சில பண்புகளை கொண்ட பனைகளை, மற்றைய பயிர்விருத்தியில் கையாளும் கலப்பினப் பெருக்க முறையை கையாண்டு மனித தேவைகளை சிறப்பாக வழங்கக்கூடிய ஒர் விசேட பனை வாக்கத் தை உருவாக்கல் சாத்தியமாகுமா? பனை யில் இனப்பெருக்க இயல்புகளை நோக்கும் கால் அதன் 15 தொடக்கம் 20 வருடங் கள்வரை நீடிக்கும் சந்ததி காலத்தோடு, ஈரில்ல இலிங்க (Dioccious-ஆண், பெண் பூக்கள் வெவ்வேறு தாவரங்களில் உண் டாகுதல்) நிலைமையால் தோன்றும் பல் லின நுகவுண்மை இயல்பும் (Heterozy gosity) பனையின் வர்க்க விருத்தி ஆய்வில் பல சிக்கல்களை உண்டுபண்ணும். இவ்வியல் புகள் காரணமாக வித்திலிருந்து தோன்றும் பனை தன் சந்ததியை ஒத்திருப்பது அரிது. ஆகவே பனை விருத்திக்கு மரபுமுறை கலப் பின தேர்வு அல்லாத சில முறைகளை கீழே பரிசீலனை செய்வோம்.
பராமரிப்பு முறைகள்:-
இன்று பனந்தோப்புகளிலிருந்து சேர்க் கப்பட்ட விதைகளிலிருந்தே பனை உண் டாக்சப்படுகின்றது. வித்துக்கள் குறித்த இடத்தில் நாட்டப்பட்ட பின்னர் 15 வருட
sm 2

காலத்தின் பின் பூம்பாளையோடு uár யொன்றை எதிர்பார்க்கின்ருேம். இக்கால இடையில் பனம் கன்றுகளை பராமரிப்பதில் விசேட முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. இச்சூழ்நிலையில் விதைத்த வித்துக்களில் ஒரு பகுதியே பனையாய் வளரும் சாத்தி யம் உண்டு. ஆனல் பனம் கன்றுகள் நாற்று மேடைகளில் வளர்க்கப்பட்டுபின் வேண்டிய இடத்தில் நடப்பட்டால், நாம் விரும்பிய செறிவும், ஒழுங்கு முறைப்படியும் அமையும் பனந்தோட்டங்களை உருவாக்கலாம்.
பனம் கன்றுகளைப் பிடுங்கி நட இய லாது என்னும் நம்பிக்கை பிழையானது. எமது ஆய்வுகளின்படி பனங்கன்றுகள் மற் றைய மரங்களைப்போல் நாற்றுமேடை களில் பல ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படக் கூடியவை எனக்காட்டப்பட்டுள்ளது. நாற்று மேடைகளில் உகந்தபராமரிப்பு முறைகளைக் கையாளுதலால் பனையின் தோற்றத்தை நம் தேவைக்கேற்ப மாற்றமுடியும். இலைக ளின் அடர்த்தி, வேர்களின் செறிவு, மண் ணிர், கனியுப்புக்கள் போன்றவற்றை தக்க முறையில் வேறுபட்டளவுகளில் கையாளு வதன்மூலம் பனையின் உயரத்தையும் பூக்க வேண்டிய காலத்தையும் குறைப்பது சாத் தியமாகும் நீண்ட காலமாக இம்மாதிரி பராமரிப்பு முறைகள் ஜப்பானியரால் ' “ Go) ur GisT FT uiu' ' (Bonsai) விருத்தியில் கையாளப்பட்டுள்ளது. இப்பராமரிப்பு முறையை பனைக்கும் ஓரளவு உபயோ கிக்கலாம்.
இரசாயன முறைகள்:-
பல வருடங்களாக தாவர வளர்ச்சி ஒமோன்களில் செய்த பரிசோதனைகளின் விளைவாக தாவர அமைப்பிலும் வளர்ச்சி யிலும் இவை ஏற்படுத்தக்கூடிய மாற்றங் கள் பல அறியப்பட்டுள்ளன. தாவர வளர்ச்சியில் பங்குபற்றும் தாவரத்தினுள் காணப்படும் ஒமோன்களின் தொழிற்
سسسس 6

Page 31
ஊற்று: 19(1) 22-27 1985
பாட்டை மாற்ற பலவகையான இரசா யனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில ஒமோன் எதிரிகளாகும். இவை தாவரத்தின் உயரத்தைக் குறைக்க வும், விரைவாக பூக்குமியல்பைக் கூட்ட வும் கூடியன. இவ்விரசாயனப் பொருட் கள் பனங்கன்றுகளில் பரிசோதிக்கப்பட் டால் அவற்றின் நாற்றுமேடை வளர்ச்சிக் காலத்தைக் கூட்டலாம் இதனுல் நாற்றுக் கள் மேடையிலேயே அவற்றின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் ஒரு பங்கை முடிக்கக் கூடியதாக விருக்கும். இவ்வாருக முதிர்ந்த நாற்றுக்களை பனந்தோட்டங்களை அமைப் பதற்கு நட்டால் வித்திலிருந்து வளரும் பனை மரங்களிலும் பார்க்க விரைவாகப் பூக்கக்கூடியய பனைகளை நாம் பெறமுடி யும். இவ்வாறு செய்யும் பரிசோதனையின் பெறுபேறுகள் பனையின் இனப்பெருக்க முறைகளில் ஒரு முக்கிய திருப்பத்தை உண்டுபண்ணக்கூடும்.
இழைய வளர்ப்புத் தொழில் நுட்பம்:-
(Tissue Culture Technique)
கடந்த பல வருடங்களாக தாவர உருவவிருத்தி ஆராய்ச்சியில் கையாளப் பட்ட தொழில் முறைகள் தற்போது தெரிவு செய்யப்பட்ட பயிர்களின் இனபபெருக் கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. கலங் கள், இழையங்கள், அங்கங்கள் அல்லது வள மற்ற முளையங்களில் இருந்து முழுத்தாவ ரம் ஒன்றை அதற்கு உகந்த கிருமி அகற் றிய சூழலில் உண்டாக்குதல் இந்நவீன
"ஊற்று'வில் பிரசுரிப்பதற்கென சாயம், கைத்தொழில், பொருளாதா டன்கூடிய, கருத்துகள் பொதிந்த கட்டு ஞானக் கண்டுபிடிப்புகள், துணுக்குக:

வளர்ப்பு முறையின் ஒரு கிளையாகும். இம்மார்க்கமாக தாவரவிருத்தி செய்பவர் கள் மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறந்த இனங்களை விருத்தி செய்ய வழிவகுத்துள் Gottfrig, Gir. (Roy Daver 1973, Jones, 1983.)
இன்று சர்வதேச நிறுவனங்கள் சில இவ்வாய்வு, முறையில் பெருமளவு பணத் தை முதலீடு செய்துள்ளன. இத்தொழில் நுட்ப முறையால பழமரங்களும் காட்சி மரங்களும் தற்பொழுது இனம் பிரிக்கப்படு கின்றன. துர்அதிர்ஷ்ட வசமாக தென்னை பனை போன்ற "பாமே" குடும்பதாவரங் களை பரிசோதனைக் குழாய் வளர்ப்பு முறை களில் கையாளுவது கடினமென அறியப் பட்டுள்ளது. எனினும் முதல் முறையாக (Oil palm) g6of 656) ii' (Uniliver) guig கூடத்தில் உற்பத்தி செய்ய ப்ப ட் டு LDII IT LUTT 6ớổi Malaysia) 1977.g6iv . Birr டப்பட்டது.
30% உயர்விளைவு இத்தாவரங்களி லிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. (Carley etal, 1981), லண்டன் பல்கலைக்கழகம் (Wye College) தென்னை மரத்தை இம் மார்க்கமாக விருத்தி செய்வதில் ஆய்வு 3 37 A lig 6 ağı. (Richard Branton etal 1983). பரிசோதனைக்குழாய் வளர்ப்பு முறையில் பனையின் இனப்பெருக்க மார்க் கங்களும் விருத்தியடையக்கூடும். யாழ் பல் கலைக்கழக ஆய்வு கூடத்தில் இத்தகைய ஆராய்ச்சிக்கான ஆய்வுகூட வசதிகள் விரை வில் கிடைக்கப்பெறவுள்ளன. ()
ത്തബ non
விஞ்ஞானம், தொழில் நுட்பம், விவ ரம் போன்ற துறைகளில் ஆதாரங்களு டுரைகள் வரவேற்கப்படுகின்றன. விஞ் ள் போன்றனவும் அனுப்பப்படலாம்.
- ஆசிரியர் குழு.
7 -

Page 32
ஊற்று 13 (1) 28-29, 1985
மருந்துச் செடிகளும் மருந் யாழ். மருந்துவ சங்கத்தின் வருடாந்தப் பெ பேராசிரியர். அ. துரைராஜா அவர்கள் ஆற்.
நாம் சுய நிறைவு பெற வேண்டுமெனில் எமது நிலத்தினையும், எம்மைச் சூழ வுள்ள கடல் வளத்தினையும் அபிவிருத்தி செய்ய முயற்சிக்க வேண்டும். அபிவிருத்தி யானது விவசாயம், கடற்றெழில், வனங் கள் போன்றவற்றிலும் மேற்கொள்ளப் படல் அவசியமாகும். சாத்தியமான எல்லா வகைத் தொழிற்றுறைகளையும் நாம் அபி விருத்தி செய்ய வேண்டும். கிடைக்கக் கூடிய இயற்கை வளங்களான சுண்ணும்பு, உப்பு, களிமண், மரவகைகள் போன்றவற் றின அடிப்படையாகக் கொண்ட தொழிற் றுறைகளே பிரதானமாக அபிவிருத்தி செய் யக் கூடியனவாகும். நாம் விவசாயம் சார்ந்த துறைகள், கடற்ருெழில் போன்ற வற்றையும் நுகர்வோரை அடிப்படையா கக் கொண்ட துறைகளையும் அபிவிருத்தி செய்தல் அவசியமாகும்.
மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களிலிருந்து மருந்துப் பொருட்க ளைத் தயாரிப்பதும் இத்தகைய முக்கியத் துவம் உடையதாகும். உங்கள் அங்கத்த வர்கள் இத்தகைய முயற்சிகளில் பெரும் பங்களிப்புச் செய்ய முடியும். இத்துறை சம் பந்தமான சில கருத்துக்களை நான் இங்கே விபரிக்க விரும்புகிறேன்.
நமக்கு வழமையான பரம்பரை மருத் துவத்தில் மட்டுமன்றி இம் மருந்துச் செடி கள் பெருமளவிலான மருந்து வகைகளையும் அவற்றின் இடைநிலைப் பதார்த்தங்களையும் உற்பத்தி செய்வதற்கும் கூட மூலப் பொருட்களாக உபயோகிக்கப்படுகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகளில் பாரிய ஆராய்ச்சிகள் இத்துறையில் நடைபெற்

கைத்தொழில்
தாக்கற் றுறையும்
ாதுக்கூட்டத்தில் ஊற்று நிறுவகத் தலைவர்
றிய உரையின் சில பகுதிகள்.
றுள்ளன. இவ் ஆய்வுகள் மருந்துகளினு டைய தொழிற்பாட்டின் உடற்ருெழிலியல் அடிப்படை என்பதனேடு தீவிர சிகிச்சை நிலையச் சோதனைகள், மருந்துகளைப் பத னிடலுக்கான தொழிநுட்ப அபிவிருத்தி என்பவற்றின் மீதும் நடாத்தப்பட்டுள்ளன.
குறை அபிவிருத்தியடைந்த நாட்டிலி ருக்கும் நாம் திறனுள்ள தாவர அடிப் பதார்த்தங்களை உற்பத்தி செய்வதன் பொருட்டு மூன்று பிரதான துறைகளில் கவனஞ் செலுத்துதல் வேண்டும். 1. பெருமளவிலான மருந்துகள் அல்லது அவற்றின் இடைநிலைகளாக உபயோகிப்ப, தற்காக திறனுள்ள தாவர மூலப் பதார்த் தங்களை உற்பத் தி யா க்கு வ தற்கேற்ற தொழில்நுட்ப மாற்றீடு. 2. தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத, திறனுள்ள தாவர அடிப்பதார்த்தங்களை உற்பத்தி செய்வதற்குப் போதுமான அளவு மருத் துவ உபயோகமுள்ள தாவரங்களின் விநி யோகத்தினை உறுதிப்படுத்துதல். 3. தெரிந்த திறனுள்ள அடிப்பதார்த்தங் களைக் கொண்டுள்ளதாக வரையறுக்கப் பட்ட உள்ளூர் தாவர, இனங்கினங்களை அடையாளம் காணுதல்.
தற்போது மருத்துவ உபயோகமுள்ள தாவரங்களிலிருந்து மருந்து வகைகளை உற் பத்தி செய்யும் தொழில்நுட்பமானது அபி விருத்தியடைந்த நாடுகளிலேயே உள்ளது. ஆணுல் அதற்கான தாவர மூலப் பொரு ளானது குறை அபிவிருத்தி நாடுகளிலேயே வளர்க்கப்படுகிறது. அதனையும் அவதா னித்தல் வேண்டும். ஆணுல் இந்த மருந்து
سس- 28

Page 33
aafbp: 13 (1) 28-29, 1985
வகைகள் மீண்டும் குறைவிருத்தி நாடுக ளுக்கே மிகவும் உயர்ந்த விலையில் விற் பனை செய்யப்படுகிறது. உதாரணமாக வட அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப் பாவிலும் குயீனன், குயீனித்தைன், றிசேர் பைன் மற்றும் தொடர்பான அல்கலொ யிட்டுகளானவை குறை அபிவிருத்திய டைந்த நாடுகளில் வளர்க்கப்படும் தாவரங் களிலிருந்தே பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தியா சீன, ஆகிய இரு மூன்ரும் உலக நாடுகளும் தமது தேவைக்கும் ஏற்றுமதிக் குமென பிரித்தெடுப்புகள், சுத்திகரிக்கப் படாத மருந்து வகைகள், இறுதி விளை பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கின்றன.
தாவர மூலப் பதார்த்தங்களிலிருந்து மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வ தற்கு பொருத்தமான தொழில்நுட்ப மாற் lடானது தேவைப்படுகிறது. இது வளர்ச்சி யடைந்த நாடுகளிலிருந்து எமது பிரதேசத் திற்குத் தருவிக்கப்பட வேண்டியுள்ளது. அத்தகைய தொழில்நுட்பத்தினைப் பெற்று
* புகை அடுப்புகளு ஹவாயிலுள்ள மூலவள ஆராய்ச் நாள் முழுவதும், புகையினை வெ செய்யும் பெண்கள் ஒரு நாளில் 20 புகையினை உள்ளெடுக்கிருர்கள் என மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன் ! போன்றவற்றிலேயே தங்கியுள்ள 3 சுகாதார ஸ்தாபனத்தின் சிபார்ச
மாசுபடுத்தப்பட்ட காற்றினையே சிகரெட்டைப்போலவே உயிர்த்திண விடப்படும் புகையிலும் புற்றுநோய்
யுள்ளன.
Developm

எமது மருந்தாக்கற்றுறையினை விருத்தி செய்தல் இயலுமானதாக இருத்தலவசியம். தேவையான அளவிலும், தரத்திலும் தாவர மூலப் பதார்த்தங்கள் ஒழுங்காக விநியோகம் செய்யப்படலவசியம். இது ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. ஒரு தொகையான தாவரங்கள் காடுளில் வளரு கின்றன: ஏனையவை பயிரிடப்பட வேண்டி யுள்ளன. இத்தாவரங்களைப் பயிர் செய் வதற்கும், அறுவடை செய்வதற்கும், களஞ்சியப்படுத்தவும், பதனிடவும் நாம் பொருத்தமான நடைமுறைகளை ஏற்படுத் தல் வேண்டும். எமது பகுதியில் இத் துறையினை விருத்தி செய்வதில் மருத்துவ சங்க அங்கத்தவர்கள் பெரிதும் உதவ முடி யும். மேலும் உங்களிடையே உள்ள ஆராய்ச்சி நோக்குடைய விஞ்ஞானிகளுக்கு எமது பிரதேசத்திலுள்ள இத்தகைய வெவ் வேறு தாவரங்களைப் பற்றி ஆராயவும் அவற்றினது தாவர இரசாயனக் கூறுகளை யும் அவற்றின் குணமாக்கும் ஆற்றல் பற்றி அறியவும் வாய்ப்யினை ஏற்படுத்துவதாக இத் துறை அமையும். ()
ரும் புற்றுநோயும் * சி நிலையமொன்றின் ஆய்வுகளிபன்டி ளிவிடும் அடுப்புகளிலேயே சமையல் பாக்கட் சிகரெட்டுகளுக்குச் சமனன னத் தெரியவந்துள்ளது. குஜராத்தில் நில், அடுப்புகளுக்கு விறகு, சாணம் வீடுகளைச் சேர்ந்த பெண்கள் உலக எல்லையிலும் பார்க்க 100 மடங்கு சுவாசிப்பதாக அறியப்பட்டுள்ளது. lay (Biomass) 6TiGlutasaha96) Gawain விளைவிக்கும் பதார்த்தங்கள் அடங்கி
ent Forum XII (7) 1984
سس- .9

Page 34
ஊற்று 13 (1) 30-32 1985
1910, ... 19851
மீண்டும் ஹேல
seg
இளம் வானியல் விஞ்ஞானியான எட்
LoGitl (g D65 (Edmund Halley) 1682 இல் தீர்க்கதரிசனத்துடன் கூறிய படி அந்த வால் வெள்ளி மீண்டும் 75 ஆண்டுகளின் பின்பு இவ் வருடம் பூமி யில் உள்ளவர்களுக்கு தரிசனம் கொடுக்க விருக்கிறது. இவ் வெள்ளியின் வரவானது கி.மு 240 இலேயே முதன் மு த லி ல் சீனர்களால் பதிவு செய்யப்பட்டதென்ப தும், அவ்வகையில் இம் முறை 29வது தடவையாக இதன் வரவு நிகழவிருக்கிறது என்பதும் காலக் கணிப்புகளாகும். இவ் வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் அடுத்த வருடம் ஜ"ன் மாதம் ai 659 இவ் வெள்ளியின் சஞ்சாரம் பூமிக்கு அண் மையில் இருக்கும்.
ஹேலியின் வால் வெள்ளி (Halley’s Comet) எனப்படும் இந்த வால் நட்சத் திரத்தினை வரவேற்கு முகமாக உலகெங்கி னும் உள்ள விஞ்ஞானிகள் மட்டுமல்லாது அனைத்து துறைசார்ந்தோரும் ஆயத்தங் களைச் செய்யத் தொடங்கி விட்டார்கள். வரவேற்பதற்கு மட்டுமல்ல, அதன் திருஷ்டி யிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள் வதற்கும் பல முனை ஆயத் தங்க ள் செய்ய ப் படுகின் றன ஏ னெ னரில் இந்த வால் வெள்ளி யின் விஜ யத்தினுல் ஏற்படக் கூடிய துர்விளைவு களைத் தடுப்பதற்காக வால்வெள்ளி LOTë 560J J Git (Comet pills), d 60 L 567 alஅமெரிக்காவில் விற்பனையாகின்றனவாம். ஆனல் ஹேலியின் வருகை அவ் வளவு தூரம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமா என்பதும் கேள்விக்குரியதே.
1910ஆம் ஆண்டில் இவ்வெள்ளி பூமிக்கு காட்சியளித்த போது இதனைப்
- 30) –

வானியல்
யின் வால்வெள்ளி
படமாக்க முடிந்ததுட்ன் பலதரப்பட்ட தகவல்களையும் சேகரிக்க முடிந்தது. எனி னும் இல்வ கடம் ஹேலிஸ் பற்றிய பல Hதிய தகவல்களை மிகவும் நுணுக்கமாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. ஏனெனில் இவ்வால் வெள்ளி பற்றிய மேலதிக தகவல்கள் பிர பஞ்சத்தினதும், உயிர்வாழ்வனவற்றினதும் தோற்றம் (Origin) பற்றிய புதிய ஊகங்களை விஞ்ஞானிகளுக்கு அளிக்கக் கூடும்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான NASA, மற்றும் சோவியத் ஒன்றியம், ஐப் பான் ஆகியனவும் ஹேலியினைப்பற்றிய தக வல்களைச் சேகரிக்கும் பொருட்டு பல விண் கலங்களை மண்ணிலிருந்து விண்ணிற்கு ஏவி வருகின்றன. NASAவும் சோவியத்துமே இதில் முன்னிற்கின்றன. இதுவரை கிடைத்த தகவல்களின் படி NASA ஐந்து விண்கலங் களையும் சோவியத் ஒன்றியம் இரு கலங்க 36:17 qub (Vega I&II) güut Gör MTGŠTņ&OT யும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவ னம் (ESA) ஒன்றினையும் இவ்வாராய்ச்சிக ளுக்காகப் பயன்படுத்துகின்றன. இவற்றில் சில முயற்சிகள் கூட்டு முயற்சிகளாகவும் உள்ளன. இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவனத்தின் தலைவரும் பிரபல விஞ்ஞா ஞானியுமான போராசிரியர் சிறில் பொன் னம் பெருமா இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறர். பேராதனைப் பல்கலைக் 7ழக பேராசிரியர். எம். மகேஸ்வரன் இதற் கான இணைப்பாளராகக் கடமையாற்றுகி @? (T.
பார்வைக்கு முன்முனை கூர்மை யடைந் தும் பின்முனை தூரிகைபோலவும் காணப்படு கின்ற இந்த வால் நட்சத்திரம் பல வாயுக் களின் சேர்க்கையினல் ஆனது. இதில் அமோ னியா, மீதேன், காபனீரொட்சைட்டு

Page 35
ஊறறு 13 (1) 30-32, 1985,
தூசுப்படலங்கள் போன்றன உள்ளனவெனக் கருதப்ப்படுகின்றது. சாதாரண வேளைகளில் ஒடுக்கமடைந்து காணப்படும் இவ்வாயுக்கள் நட்சத்திரமானது தனது பாதையில் சூரி யனை அண்மிக்கையில் ஆவியாகின்றன இவ் வேளையிலேயே சூரிய வெளிச்சத்தில் நட் சத்திரமானது பிரகாசமாகத் தெரிகிறது. வாயுக்களின் வெளியேற்றமே இந் நட்சத் திரத்தின் வால்போன்ற அமைப்பிற்கு கார ணமாகும். வாலானது பல லட்சம் மைல் கள் நீளமாகக் காணப்படும். வாலின் திசை எப்போதும் சூரியனுக்கு எதிரான திசையிலேயே காணப் படும். சூரியனி லிருந்து வெளியாகும் அணுத்துகள் காற் góE93) (Solar wind) gg 56ör GJIT GIVIT GOT 5 பின்னுேக்கித் தள்ளப்படுதலே இதற்குக் கார ணமாகும். ஒவ்வொரு தடவையும் இந்த நட் சத்திரமானது சூரியனை கடக்கும் போதும் அதனது சிலமீட்டர் நீளமான மையப் பகுதி ஆவியாகி வெளியேறுகின்றது எனக் கூறப்படுகின்றது. இதனுல் ஹேலியின் நீளம் வரவரக் குறையலாம். எனினும் இது முற் முக அழிந்துவிடும் என்று கூறுவதற்கு மில்லை. ஏனெனில் ஜிபிட்டரின் (வியாழன்) தாக்கத் தினுல் இதனது சமநிலை பாதுகாக்கப் படுவதாகவும் கூறப்படுகிரது. ஹேலியின் கதை
இதன் வரவு கி.மு 240ல் சீனதேசத்துப் பதிவேடுகளில் கு றிப்பிடப்பட்டுள்ளது. அப் போது இதுபற்றிய விபரங்கள் அதிகம் தெரிந் திருக்கவில்லை; கி. மு 164, 88, 12 ஆகிய ஆண்டுகளிலும் இது தென்பட்டிருக்கிறது. கிறிஸ்துவிற்குப் பின்னர் . 66, 837, 1066, 130 1, 1456, 153 I, 1607, 1682, 1758, 1835, 1910 ஆகிய ஆண்டுகளிலும் இவ் வால்வெள்ளி தென்பட்டது. இவ்வாண்டு மீண்டும் தோற்றவிருக்கிறது.
1301இல் ஐரோப்பாவில் இதனை அவதா னித்த ஹியோட்டோ என்ற சித்திரக்கலை ஞன் இதன் படத்தினை கிறிஸ்மஸ் வெள்ளி என்றுவருணித்து வரைந்து காட்டினணும்.
*
ത്ത് 81

பின்னர் 1456இல் தோன் றிய போது ஐரோப்பியர்களான கிறிஸ்தோபர் கொலம் பஸ் லியோனுடோடாவின்சி ஆகிய இருவ ரும் கூட இதனைக்கண்டுகளித்தனராம். எனினும் எட்மன் ஹேலி என்ற இளம் வானியலறிஞரே இதனைப்பற்றி உலகிற்கு எடுத்துரைத்தார். 1682 நவம்பர் 22 காலை 5-30 மணியளவில் ஹேலி இந்நட்சத்திரத் தினை அவதானித்ததோடு இது குழித்து ஐசாக் நியூட்டனுக்கும் தெரியப்படுத்தி ஞர். நியூட்டன் கோடிாமண்டலத்தின் ஈர்ப்பு விசைகள் பற்றிய தமது கொள்கை களை வெளியிடுவதற்கு ஊக்கமும் ஒத்தா சையும் வழங்கியவர் எட்மன் ஹேலியே யாவார்.
இதனது சுழற்சியினை ஆராய்ந்த ஹேலி இந்த நட்சத்திரம் 75 ஆண்டுகளிற்கொரு முறை பூமிக்குத் தரிசனம் கொடுக்கும் என்று கட்டியம் கூறினர். அதேபோன்று 1682க்குப் பின்னர் 1758இல் இந்த நட்சத் திரம் பூமியில் தரிசனமாயிற்று அப்போது ஹேலி உயிருடன் இல்லை. ஹேலியின் கூற்று தீர்க்க தரிசனமாயிற்று அன்றிலிருந்தே இந் நட்சத்திரம் ஹேலியின் வால்வெள்ளி (Halley's Comet) என வழங்கிவருகிறது.
JuJ GOT ID
1910 மே மாதம் 6ம் திகதி பூமி இதன் வால்பகுதியினூடாகச் சென்றது. அப்போது பூமியில் எரிநட்சத்திரத் தூறல் உண்டான தாகத் தெரிகிறது. இபமுறை இந்நட்சத் திரம் தென படுகையில் இரு தடவைகள் பூமியினை அண்மித்துச் செல்லும் என எதிர் பார்க்கப்படுகிறது. முதலில் 1985 நவம்பர் 27 இலும் (பூமியிலிருந்து 9 கோடி 27லட் சம் கி.மீ தொலைவில்) பின்னர் மீண்டும் தனது சொந்த இடத்திற்கு சூரியனிலிருந்து மீளுகையில் 1986 ஏப்பிரல் 11இலும் (பூமி யிலிருந்து 6 கோடி 30 லட்சம் கி. மீட் டர் தொலைவில்) பூமிக்கு மிகஅண்மையில் இது வரும். இத்தினங்களில் இதன் பிரகா

Page 36
ஊற்று 13 (1) 30-32, 1985
சம் அதிகரித்துக் காணப்படும். நவம்பர் பிற்பகுதியில் பைனேகுலரினல் மாலை நேரங் களில் இதனைக் காணலாம். எனினும் வால் அவ்வளவு தெளிவாகத் தெரியாது. டிசம்ப ரில் பிரகாசமானது மெதுவாக அதிகரிக் கும். தெற்கு நோக்கி நகரும். சூரியனை நோக்கிச் செல்லுகையில் இது நாளுக்கு நாள் சூரிய அஸ்தமனத்திற்கு நெருங்கிய வேளைகளில் ரம்மியமாகத் தோன் றும். ஏப்ரல் நடுப்பகுதியில் தென் அரைக்கோளத்தில் உள்ளவர்கட்கு மிக உய ரத்தே காணப்படும். வட அரைக்கோளத் தில் இருப்போருக்கு மிகப் பதிவாகத் தெரியும் அல்லது மறைந்துவிடலாம்.
எனினும் கோள் பாதையில் சூரியனை மிக வும் அண்மித்துச் செல்லும் தினமாகிய 1986 பெப்பிரவரி 9இல் இது மிகவும் பிர காசத்துடன் பிரமிப்பூட்டுவதாகக காணப்ப டுமாம். அப்போது 8கோடியே 55லட் சம் கி. மீட்டர் தொலைவில் இதுஇருக்கும்.
இலங்கையில் ஹே லீ ஸ் வெள்ளியைப் பார்ப்பதற்கு அடுத்தாண்டு ஏப்பிரல் மாதம் உகந்தது என்றும் தேவேந்திர முனைப்பகு தியே இதற்குச் சிறந்த இட மென்றும் இலங்கை அடிப்படைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சிறில் பொன்னம் பெருமா தெரிவித் துள்ளார். மேலும் புவி யின் தென்அரைக் கோளப் பகுதிகளான அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இம்முறை இது மிகத்தெளிவாகக் காட்சி தருமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேலியின் தோற்றவமைப்பு: டா ட் டா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த இந்தியப் பேராசிரியர் கே. எஸ் கிருஸ்ண சுவாமி அண்மையில் இதுபற்றி பேசுகையில் 10 கிலோமீட்டர் விட்டத்தினையுடைய "அழுக்கு உறைபனிப்பந்து" என இதனை வரு ணித்தார். தனது 76 வருடப் பயணப் பாதையில் 74 வருடங்களை இருட்டிலேயே இது கழிக்கிறது. சூரியனுக்கு அண்மையில்
m 32

பயணம்செய்யும் இரு வருடங்களிலேயே இது சுறுசுறுப்படைகிறது. சூரியனைச் சுற்றி பயணம் செய்கையில் அதனது மெல்லிய வெளிப் படையானது வெப்பமடைந்து வாயுநிலையடைகிறது. இந்த வாயுக்களே அதனது வாலினைத் தோற்றுவிக்கின் றன. சூரியனிலிருந்து அப்பாற் செல்லுகை யில் வாயு மூலக்கூறுகள் ஒடுங்கித் திண்மத் துணிக்கைகளாகி விண்வெளியில் மறைகின் றன. சிறுபாகமே பூமியின் மீது விழுகிறது. வெங்காயம் தோலுரிவது போல ஒவ்வொரு தடவை வால்வெள்ளி சூரியனை அண்மிக்கும் போதும் அதனது சிறுபகுதி இழக்கப்படுகி றது என்றும் பேராசிரியர் இராமசுவாமி மேலும் கூறினர்.
1910 இல் தோன்றிய இந்நட்சத்திரத் திரத்தினை வால்வெள்ளி என்று அழைப்பது பிழை என்றும் "தூமகேது என்பதே அதற் குரிய சரியான பதம் என்றும் கூறியதுடன் அது தோன்றும் நேரத்தினையும் மிக நுணுக் கமாகக் கணித்து முன்கூட்டியே வெளியிட் டவர் ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழரே யாவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னுள் கணிதப் போராசிரி யர் அலின் ஏபிரகாம் அம்பலவாணர் என் பவரே அவர். தாமே உருவாக்கிய தூரதி ருஷ்டிக் கண்ணுடி முலமாகவே தமது காரை நகர் வீட்டின் அண்மையிலுள்ள பனந் தோப்பினையும் அதனெதிரேயுள்ள 5tsi) கரையினையும் நிலைக்களமாகக் கொண்டு மட்டுமே அவர் த மது சாதனைக்குரிய ஆராய்ச்சியினை நிகழ்த்தினராம் லண்டனில் a 6irat Royal Astronomical society used) FRAS பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப் பட்ட பேராசிரியரது நாமம் இன்றும் அமெ ரிக்காவின் பிரபல ஹாவாட் பல்கலைக் கழ கத்தின் சர்வதேச வான சாஸ்திரிகளின் பெயர்ப் பலகையில் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது.
குறிப்பு: மகாகவிபாரதியாரும் இதே வால் வெள்ளியினைப் பற்றி அன்று "தூமகேது? என்றே விளித்துக் கவிதை புனைந்துள்ளமை காண்க. ( ) ஆ. வி.

Page 37
மகாகவி பாரதியார் 1910 ہے
பார்வையில் (Halley” இந்த வ
G அறிஞரிய தூமகேது கொண் நோக்கிட்
தினையின் மீதுபனை நின்றங்கு மணிச்சிறு மீன்மிசை வளர்வ கீழ்த்திசை வெள்ளியைக் கே தூமகேதுச் சுடரே வாராய் எண்ணில் பலகோடி யோச% எண்ணிலா மென்மை இய புனைந்த நின்னுெடுவால் டே மண்ணகத் தினையும் வால்ெ ஏழையர்க் கேதும் இடர்செ போதி யென்கின்றர்; புதுை நினைக்குறித் தறிஞர் நிகழ்த்து பாரத நாட்டில் பரவிய எம் நூற்கணம் மறந்துபன் னு உனதியல் அன்னியர் உரை தெரிந்தனம்; எம்முளே ெ வாராய், சுடரே ! வார்த்தை தீயார்க் கெல்லாம் தீமைகள் தொல் புவியதனைத் துயர்க்க போவை என்கின்ருர் பொய் ஆதித் தலைவி யானையின் ப சலித்திடும் தன்மையால், த புவியினைப் புனிதமாப் புனைத விளம்புகின்றனர்; அது மெய் ஆண்டோர் எழுபத் தைந்தி மண்ணநீ அணுகும் வழக் இம்முறை வரவினல் எண்ணி விளையு மென்கின்ருர், மெய்( சித்திகள் பலவும், சிறந்திடு மீட்டும் எம்மிடைநின் வரவி புகலுகின்றனர்; அது பொ
(1974 மார்ச் - ஏப்பிரல் ஊ
حسه

ஆம் ஆண்டு ஹெலியின் வால்வெள்ளி s Comet) மீண்டும் காணப்பட்டது. ால்வெள்ளி (தூமகேது) யைப் பற்றி டம் இருந்து கேட்டுத் தெரிந்து - பாரதியார் பின்வருமாறு அதனை ப் பாடுகிருர்,
ால் ஒளிதரக் ண்மை கொண்டிலகும்
னயெல்லை ன்றதோர் வாயுவால் ாவதென் கின்றர். காடு தீண்டி பாதேநீ மகள் ஆயிரம்
கின் றனரால் மனுேர் றண் டாயின; த்திடக் கேட்டே தளிந்தவர் ஈங்கிலை. நசில கேட்பேன்;
விளைத்துத் ட லாழ்த்திநீ யோ, மெய்யோ ? டிநீ ண்டம் நீ செய்வது ற்கே யென Gurt ; (OurrurGuum ? னில் ஒருமுறை கினை யாயினும், லாப் புதுமைகள் யோ, பொய்யோ ?
ஞானமும் ஞல் விளைவதாப் ய்யோ, மெய்யோ ?
ற்று இதழில் வெளிவந்தது.)
' } --

Page 38
ஊற்று 13 (1), 34, 1985
பொலிடோல் அருந்தியவரு
PAM, அட்ரோபின் சிகிச்சை -
ரத்தியன் அல்லது, பொலிடோல் எனப் படும் பூச்சி கொல்லியானது விவசாயி கள் உட்பட அனேகரின் பரிதாப மரணங் களிற்கு காரணியாக இருந்து வருகிறது. இரு ஈதைல் பரா நைத்திரோ பீனைல் தயோ பொசுபேற்று என்ற இரசாயனப் பெயரினையுடைய இந்த நாசினியினது கொல்லுந்தன்மையானது குருதியில் உள்ள கோலைன் எசுத்தரேசு எனும் நொதியத் தினைச் செயலிழக்கவைப்பதினலேயே ஏற் படு கிற து என அறியப்பட்டுள்ளது. P A M egy 6 6.) 5, 2-19 h. e. Gör அல் டொக்சீம் மீதையோடைட்டு எனப்படும் இரசாயனப் பதார்த்தமே பொலிடோலின் நச்சுத்தன்மையினை அகற்றுவதற்கு வைத்தி யர்களினல் உபயோகப்படுத்தப்படுகிறது PAM ஆனது செயலிழந்து விட்ட கோலைன் எசுத்தரேசுவினை மீளவும் தொழிற்பாடு டையதாக்கும் வலிமையுடையது. (Re-activator)
சிகிச்சையின் போது PAM ஆனது அட் ரோபின் சல்பேற்று விடமுறி எதிர்ப்பூசி சிகிக்சையினைத் தொடர்ந்தே அளிக்கப்படு கிறது. -
சாதாரணமாக 0.3 கிராம் தொடக்கம் 0.6 கிராம் பொலிடோலே உடம்பில் செறிந்து மரணத்தினை விளைவிக்கப் போது மானதாகும். எனினும் இச் சிகிச்சைமுறை யினைக் கொண்டு இதனைவிடப் பத்து மடங்கு அதிகமாக இந்த நாசினியை அருந்தி வரையும் வைத்தியர்களால் உயிர்பிழைக்க வைக்கமுடியும்.
வழமையாக நாசினி அருந்திய சில நிமி டங்களுக்குள் அருந்தியவர் வாந்தியெடுத்த லைத் தொடர்ந்து மயக்கநிலையை அடைகி
- 34

}க்கு
முர். இந்நிலையில் அவர் மிகப்பிரயாசை யுடனேயே மூச்சு விடமுடிவதுடன் கண்க ளும் மேலிழுக்கப்பட்டுப் பஞ்சடைகின்றன. தசைகளும் விறைப்பு நிலையை அடைகின் ᏲᎠᎧᏈᎢ .
இந் நிலையில் உள்ள நபர் ஒருவருக்கு உட னடியாக அட்ரோபின் எதிர்பூசியானது நாளங்களினூடாக தடவைக்கு 2 மில்லி கிராம் வீதம் மொத்தம் 14 மில்லி கிராம் 15 நிமிட நேரத்திற்குள்ளாக முழுவதும் செலுத்தப்படுகிறது. நஞ்சு பரவலைத் தடுக் கும் உடனடிப் பரிகாரமே இதுவாகும் எனி னும் PAM ஆனது தொடர்ந்துவரும் மையநரம்புத்தொகுதி, சுற்றயல் நரம்புத் தொகுதி ஆகியவற்றினது செயலிழப்பு விறைப்புத்தன்மையினக் கட்டுப்படுத்த வல்லது. எனவே 0.5 கிராம் PAM 1% கரைசலானது நாளங்களினூடாக ஸ்தெ. ரோபண்டீன் (Sterofundin) எனப்படும் ஒருவித தைரோட்டுவின் கரைசலுடன் சேர்த்துக்கொடுக்கப்படும்.
இது செலுத்தப்பட்டு பத்து நிமிடங்க ளிற்குள் நஞ்சருந்தியவர் செயற்கைச்சுவா சம் இன்றியே சுவாசிக்கத் தொடங்குவ தோடு நாடித்துடிப்பும் சீரடைகிறது. எனி னும் நஞ்சானது உடலில் தொடர்ந்தும் பரவாதிருக்க இரு மணித்தியாலங்களின் பின்னரும் PAM அதே அளவில் ஏற்றப்படுகி
Oது. ر
இவ்வாருன தொடர் சிகிச்சையினல் பாதிக்கப்பட்டவரது சுவாசம் சீரடைவது டன் மூன்று நாட்களினுள் அவர் வைத்திய சாலையினின்றும் வெளியேறக் கூடியதாக வும் துரித நிவாரணம் ஏற்றப்படுகிறது. குறிப்பு: பொலிடோல் அருந்திய ஒருவ ருக்கு உடனடியாக தேங்காய்ப்பால் அல் துெ பசுப்பாலேனும் பருக்குதல் பயனுள் ளது. ロ - சோதி

Page 39
உள்ளம்
ஊற்று இம்முறை பல சிறப்பம்சங்களுட
பல இடர்கள் மத்தியிலும் நாம் மேற்குலகின் விஞ்ஞான, தொழில் நுட்ப வ களிலிருந்தே பெறப்பட்டன; அவர்களது தங்கள் பலவும் நம் மண்ணிலிருந்தே ஏ பெரும்பாலான அறிவியல் விற்பன்னர்களு அண்மைக்காலம் வரை எஞ்சியிருந்தவர்கள் வகையில், தற்போது உற்பத்தியாகிக்கொண் சொன்னுல் சரி. ஒடிவிட ஆயத்தமே; B என்ற பதம் இன்று மிகவும் முக்கியத்துவம் இக்கட்டானதுமான சூழ்நிலை இது. அபிவி மானதல்ல.
இந்நிலையில் விஞ்ஞான அறிவைத் நிலை எப்படியிருக்கும்? கடந்த பதினைந்தான கலைச்சொற்ருெகுதி (Glossary) கூட நம் ந பகுதியில் விஞ்ஞானத்தில் அரும் பெரும் நிகழ்ந்திருக்கின்றன. சரியான தமிழ்ப்பதங்க டறியாவிட்டால், அவை தொகுக்கப்படாவி இத்தகைய கலைச் சொற்ருெகுதிகளை உருவா னெடுத்து செல்லல் தகும். நேற்றுவரை உருவ தமிழிற்குக் கொண்டுவரும் அரும்பணியினை
ஊற்று தன்பணியினைத் தொடர இ ஆதரவினையும், ஆலோசனைகளையும் வேண்டி வெளிவருவதில் ஏற்பட்டிருக்கும் தேக்கநிலைய கவே பிரவாகிக்கச் செய்ய ஆக்கபூர்வமான தடுத்த இதழ்கள் பல சிறப்பம்சங்களுடன் பார்க்கிறுேம். இவ்விதழ் விலை ஐந்து ரூபாக் என்றே நம்புகின்ருேம்.
ஊற்று 50வது இதழ் சிறப்பம்சர்

டன் வெளிவருகின்றது.
தளர்வின்றி எம் பணி தொடர்கின்ருேம். ளர்ச்சிக்கான கருவூலங்கள் பல கீழைத்தேசங் உற்பத்திப் பொருட்களுக்கான மூலப்பதார்த் ாற்றுமதியாகின்றன; நம்மிடையே இருந்த ம் மேற்குலகிற்கே ஏற்றுமதியாகிவிட்டனர்; கூட நேற்றுக் கப்பலேறிவிட்டனர்; இவ் டிருக்கும் புத்திஜீவிக் கூட்டமும் Ready go! rain drain – epätgrralasair Galaf3u söph பெற்றுவிட்டது. மிகவும் துரதிர்ஷ்டமானதும் ருத்திக்கு இது எவ்விதத்திலும் ஆரோக்கிய
தமிழில் வளர்க்க முற்பட்டிருக்கும் எமது ண்டுகளிற்கு மேலாக விஞ்ஞானத்தில் தமிழ் ாட்டில் வெளிவரவில்லை. ஆனல் இக்காலப் கண்டுபிடிப்புகள், சாதனைகள், மாற்றங்கள் களை ஆங்கிலப் பதங்களிற்கு நிகராகக் கண் ட்டால் நமது முயற்சிகள் முழுமைபெரு. க்கும் பணியினை யாழ். பல்கலைக்கழகமே முன் ான விஞ்ஞானப் பதங்களை ஆங்கிலத்திலிருந்து
இப்பல்கலைக்கழகம் மேற்கொள்ளுமா?
இங்குள்ள அனைத்து துறை சார்ந்தோரினதும் நிற்கிறது. சில காலமாக ஊற்று இதழ்கள் வினைப் போக்கி மீண்டும் இருதிங்கள் ஏடா நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அடுத் காலக்கிரமத்தில் வெளிவருமென்றே எதிர் களானுலும் தரங்கண்டு குணங்கொள்வீர்கள்
ஆசிரியர்
வ்களுடன் விரைவில் வெளிவரும்

Page 40
தரமான பொருட்களே மனி மக்கள் ஸ்தா
நாடுங்க கூட்டுறவுச் சங்கத்தின் உய
பொருட்களும் மக்கள்தே
| மக்களின் ਪr 。 செய்வதேச
இந்நோக்குடன் பின்வரும் பொருட்
* பாடசாலை மானவர்களுக்கான
* பாட நூல்கள்
* கட்டிடப் பொருள் கூட்டுச் * இறக்குமதி செய்யப்பட்
-uf a * உயர்ரக சேட்டிங், * தைத்த ஆடை
* கைத்தறி ஆ * இரும்புச்
it is sugu. * கிருமி * G亚 ★
*
இன்னும் ബ
நல்லனவற்றை நயமான வி என்பதோடு நாட்டுக்கும் ே
என்பதை மறந்து

பிவான விலேயிற்பெற
L I TITLE TEST
། நெல்லியடி றவுச் சங்கத்தை
|TT
வு மக்களின் உயர்வு
இலாபமும் மக்களதே!
。 江、 BURG. Ing நோக்கம்
மக்கள் முன்வைக்கிருேம்
FT EL LIFE JIJIJIJIJiJiJiT
தாபனப் பொருட்கள் ட துணி வகைகள்
சூட்டிங்
ssil
டைகள்
मF।riाधता म,5ता
LīIī நாசினிகள் ந்த காலணிகள் அழகியற் சாதனங்கள்
அறிஞர்களின் * ஒடு, சிமேந்து והוL
லேக்கு வாங்குகிறீர்கள் சவை செய்கிறீர்கள் விடாதீர்கள்.