கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊற்று 1981.10-12

Page 1
* யாழ் குடாநாட்டில் பாசன
* விவசாயச் சந்தைப்படுத்தல்
* திராட்சைப் பழத்திலிருந்து
*
வயற் பயிர்களின் பயிராக்க
ஊற்று நிறுவனம்
பிரசுர அலுவலகம், 215, கொழும்பு வீதி,
: !! கினைபு.
 
 
 

ஐப்பசி- மார்கழி
1981
தொகுதி 9 இலக்கம் 4
நீரின் தரம் பற்றி ஒர் ஆய்வு,
வைன் தயாரித்தல்.
ல் அட்டவனே.
தக்லமை அலுவலகம்:
மாரியம்மன் வீதி, திருநெல்வேலி, யாழப்பாணம்.
5um 3-50

Page 2
оотвu • Science Magazir IN THIS ISSUE
Article
Englisi Version
Naturitional status in Sri integrated Farming Agricultural Marketing Irrigable water in Jaffna Winged Blan Making of wine Y Table on Cultivation of field
OOTRU C
Chairman: Prof. T. Jogaratnam
Secretary: Dr. K. Krishnananthagvi
President - Supervisory Board: Mr. N
Chief Editor: Dr. V. Pavanasasivam
Editorial Board:
Dr. K. Krishnananthasivam Mr. A. Sivarajah Prof. V. Parameshwaran Mr. S. Srikantha Mr. R. Mathawan Dr. A. Balachandran
Editorial Associates:
Dr. M. Sivasitamapresan Dr. S. Ariyaratnam
Publishers:
' . Administrative Editor
OOTRU ORGANISATIgoN Publication Office;
215, Colombo Street, Kandy.

e in Tamil Oct.-Nov. Vol. 9 No. 4
Lanka
Crops
Author
Mrs. Rajeswary Vigneswaramoorthy Mr. R. Mathawan Mr. K. Thangarajah Mr. V. Alvapillai Mr. Raviraj Arulanantham Mr. R. Sri Ranjan Mr. C. Pararajasingham
DRC AN/SATION
im
Vice ĉhairman : Pro. A. Thurairajah Prof. N. Sreeharan
Treášůréf: Dr. N. Nadesan
. Manicka daikkadar
Administrative Editor: Dr.R. Sivakanesa
Dr. P. T. Jeyawickramarajah Dr. R. Mahalinga lyer Prof N. Sreeharan Mr. N. Sayalolibavan Mr. K. Navaratnam
Mr. K. Thangarajah
Correspondence:
Articles - Chief Editor Others - Administrative Editor,
Head Office;
Mariamman Lahe, Thirunelvely, . Jafna.

Page 3
தொகுதி ! 9 ஐப்பசி -
பிரதம ஆசிரியர்:
வே. பாவநாசசிவம், B.Sc., M. Sc.
t M. S. Ph.
நிர்வாக ஆசிரியர்:
9. GaI3Gor:rsăr, B. V. Sc., Ph.D. ஆசிரியர் குழு
Sct sits 50rig5Shilh, B.V.Sc., M.V . GNusld i FyldJagt, M.B.B.S. M. . சிவராஜா, B, A, M. A. . மகாலிங்க ஐயர், B. Sc., Ph.D. .. Li JGudsiushI J6öT, B. Sc., M. Sc., Ph. . 353 J siT, M.B.B.S., M.D., M.R.C Ph.
af. 355mbs (T, B. Sc., M. Sc. 西· சயலொளிபவான், ஆர். மாதவன், B. Sc. க. நவரத்தினம், B. A. (Hons) ஆ. பாலச்சந்திரன், B. V. Sc இணைப்புக் குழு:
(p. 6n 35lbuJFFasir, .B. V. Sc. சே. அரியரத்தினம், B. D. S. க. தங்கராசா, B. Sc., M. Sc.
இச் சஞ்சிகையில் வெளிவரும் கட் பொறுப்பாவார். ஆண்டுச் சந்தா : ரூபா 15/- ( தனிப் பிரதி : ரூபா 3-50 த தொடர்பு :
கட்டுரை : பிரதம ஆசிரியர் ஏனையவை நிர்வாக ஆசிரியர்
 

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு செறிதரும் மக்கள். எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றிப் புதியதோர் உலகம் செய்வோம்.
இலக்கம்:
மார்கழி 1981
* இலங்கையில் போசாக்கு நிலைமை
திருமதி இராசேஸ்வரி D. விக்னேஸ்வரமூர் த்தி
* ஒன்றிணைக்கப்பட்ட வேளாண்மை 3
R, மாதவன் .Sc. E. * விவசாயச் சந்தைப்படுத்தல்
து. ந. சு. கு. தங்கராசா
p |* யாழ் குடாநாட்டில் பாசன நீரின் .P. தரம் பற்றி ஓர் ஆய்வு 11 D. பொ. ஆழ்வாப்பிள்ளை
* சிறகு அவரை 8
றவிராஜ் அருளானந்தம்
大 திராட்சைப் பழத்திலிருந்து
வைன் தயாரித்தல் 24
אל
இரா சிறி றஞ்சன்
வயற் பயிர்களின் பயிராக்கல்
அட்டவணை
டுரைகளுக்கு கட்டுரை ஆசிரியர்களே முற்றிலு ம்
தடாற் செலவுட்பட) பாற் செலவு சதம் 60.
ஊற்று நிறுவனம் :
பிாசுர அலுவலகம்,
215, கொழும்பு வீதி,
கண்டி,

Page 4
ஊற்று : 9, 4 (1981)
சாளரம்
கோழிகளில் காணப்படும வெப்பத் தகைப்பு
கோழிகளைத் தாக்கும் பல்வேறு தகைப்பு காரணிகளில் வெப்பத்தகைப்பின் முக்கி பத்துவத்தை அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகள் துலங்க வைப்பதாய் அமை! துள்ளன.
இலங்கையின் உலர்வலயங்களிலும் ஏனைய வெப்ப வலய நாடுகளிலும் இது ஒரு நடை முறைப் பிரச்சனையாக அமைந்து வருகிறது வெப்பத்தகைப்பினல் பாதிக்கப்பட்ட கோடி களில் 'இறக்கும் வாய்ப்பு’ Susceptibilit fo death) sh.GF5@vmr கக்காணப்பட்டதா முடிவுகள் கூறுகின்றன. பொருள்யல் கதை கில் இவ்வாறன, உற்பத்திக்கு முன்னணி இறப்புகள் " பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தி, இலாபத்திலேயே ஒரு பகுயை ஏப்பம் விட்டுவிடுகின்றன. மேலும் முட்டை பிடும் கோழிகளில் முட்டையிடும் வீதத்தி திலும் இறைச்சிக் கோழிகளின் வளர்ச் வீதத்திலும் இது ஒரு நேரடித்தாக்கத்ை யும் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி அறிக்ை கள் கூறுகின்றன.
தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் கோ! களுக்கு அளிக்கப்படும் உணவு வகைகளே

க்ோழிகளில் வெப்பத்தகைப்பின் தாக்கத்தை
:
நிர்ணயிப்பதாகக் கூறுகின்றனர்.
* மிகையான பொசுபரசு மூலகம் கொண்ட
உணவு அளிக்கப்பட்ட கோழியினங்கள் வெப்பத் த கைப் புக் குக் கூடுதலான எதிர்ப்புத்தன்மை கொண்ட்வையாகக் காணப்பட்டன. குறைந்த கல்சியம் கொண்ட உணவளிக் கப்பட்ட கோழியினங்களிலும் எதிர்ப் புத்தன்மை அதிகரிக்கக் காணப்பட்டது.
காபோவைதரேற்று நீங்கலான உணவ ளித்தலும் சாதகமான பலனையே அளித்
திது. 24 - 48 மணி நேரம் பட்டினி போடுவ தும் இந்தத் தகைப்பின் தாக்கத்தை இழிவாக்கலில் பெரிதும் பயன்படக் காணப்பட்டது.
இவ்வாருக ‘உணவூட்டலில் கவனம்
செலுத்துவது" போன்ற எளிய கையாள்கை
முறைகளாலேயே இப்பாரிய பிரச்சனைக் தி குத் தீர்வு காண இவ்வாராய்ச்சி ஊன்று ா கோலாயமைந்துள்ளது.

Page 5
eabgy: 9 (4), 1-3 (1901)
இலங்கையில் போசாக்கு
每
போசாக்கு நிலமை என்பது உணவுகிடை கும் தன்மை, சூழ்நிலையின் ஆரே கிய தன்மை, வருமானப் பங்கீடு, தொற் நோய்கள், சுகாதாரம், கலாசார நம்பு கைகள் போன்ற பல காரணிகளுட தொடர்புடையதாக உள்ளது. பெரும் லும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உணவு நுகர்வு, நிரம்பல் என்பவற்றிற டையிலான முக்கியத்துவமும் கூறப்படுகி றது. ஏனெனில் புரதச் சத்துக் குறை ஞலும் போசாக்கு நிலமை குறைகின்ற, மேலே கூறப்படுகின்ற காரணிகள் யாள ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன6 யும், மக்களின் வாழ்க்கைக்கு இன்றியன யாதனவாகவும் உள்ளன.
1975/76-ம் ஆண்டில் இலங்கையி போசாக்கு நிலமை பற்றிப் பாடசாலை முற்பட்ட 0-4 வருட வயதுள்ள பிள் களுக்கிடையே செய்யப்பட்ட ஆய்வு ஒ றிலிருந்து இலங்கை மக்களின் போசாக் நிலமை பற்றிய புள்ளிவிபரம் கிடைக் தக்கதாக இருக்கின்றது. அதன்படி 62 வீதம் போசாக்கின்மையால் வாடும் ! கள், தோட்டப் பகுதிகளில் வாழ்கிறர்க 308 வீதம் கிராமப்புறங்களில் வாழ்கி ருர்கள். இலங்கையில் கூடியளவு ம. போசன நிலமையுள்ள பகுதிகளா தோட்டப் பகுதிகள் காணப்படுகின்ற இப்பகுதிகளில் புதிய விவசாய உற்பத் முறைகளைப் புகுத்துவதுடன் போசாக்குள் உணவு வகைகளைப் பற்றிய அறிவை புகுத்துதல் அவசியம்.
率 அபிவிருத்தி உத்தியோகஸ்தர். திட்டமிடல் அ

நிலமை
ருமதி இராஜேஸ்வரி விக்னேஸ்வரமூர்த்தி *
கோமஸ் என்பவரின் விளக்கப்படி இலங்கையிலுள்ள 0-4 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் நிறையைப் பார்க்கும்போது 42வீதத்தினர் போசாக்கின்மையால் மிகவும் நோய்வாய்ப் பட்டவர்களாகவும், வயதுக் கேற்ற நிறை குறைந்தவர்களாகவும் g ளனர். இப்படிப்பட்டவர்கள் சிறுவயதி லேயே நோய்வாய்ப்பட்டு மரணமடைகின் றனர் எனவும் கூறுகின்ருர்,
சுகாதார அமைச்சின் கீழுள்ள அரச
ஆஸ்பத்திரிகளிலிருந்தும், தனி ப்ப ட் -
வைத்திய சாலைகளிலிருந்தும் பெறப்பட்ட புள்ளி விபரப்படி 50 வீதமான மரணங் கள் தொற்று நோய்களினலும், போசாக் கின்மையாலும் நிகழ்ந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இப்போசாக்கின்மையானது குறைந்தளவு உணவு நுகர்வினுலும், குறைந்த சுகாதார, சூழ்நிலை ஆரோக்கிய தன்மையினுலும் ஏற்பட்டுள்ளது - ன்று தெரிய வந்துள்ளது.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் நிறையும் இருக்க வேண்டிய அளவிலும் குறைவாக உள்ளது. இது கர்ப்பத்திலிருக் கும் போதே தாய்க்குக் கிடைக்கும் உண வின் தன்மையையும், அளவினையும் பொறு த்துப் பாதிக்கப்படுகின்றது. கொழும்பு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட ஒரு ஆய் வின்படி 22 வீதமான பிறப்புக்கள் குறை ந்து நிறையுடையனவாக உள்ளன. இவ் வித குறைந்த நிறையுள்ள பிறப்புக்கள் நோய்களை வரச் செய்து சிறு வயதிலே மரணத்தையும் எதிர்நோக்குகின்றன.
முலாக்கல் அமைச்சு, கொழும்பு

Page 6
aearbpy: 9 (4), 1-2 (1981)
1969-70-ம் ஆண்டுகளில் நடத் பட்ட சமூக பொருளாதார ஆய்வு ஒலி லிருந்து 35 வீதமான மக்கள் தங்களுக் தேவையான கலோரி அளவு உணை பெற முடியாதிருக்கிருர்கள் என்பது ெ யவந்தது. அதன் பின்பு 1973-ல் ந தப்பட்ட நுகர்வு நிதி ஆய்வின் பே பெரும்பாலான மக்கள் நுகர்வு செ வேண்டிய 2264 கலோரி அளவு உண குப் பதிலாகச் சுமார் 1936 கலோரி உ வையே நுகர்வு செய்வதாகத் தெரிய துள்ளது.
இலங்கையின் போசாக்கின்மைை குறைப்பதற்குக் கிராமப்புற மக்களு புதிய உற்பத்தி முறைகளையும், போச குள்ள உணவுகள் பற்றிய அறிவை ப ளுக்கும் புகுத்துதல் வேண்டும். இ கான நடவடிக்கையை எடுப்பதற்கு உை விவசாயத் துறையே முக்கிய பங்கு வ தல் வேண்டும். உள்ளூர் உற்பத்திக் அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற மக்கள் வருமான மட்டத்தினை அதிகரித்தல் வே டும். விவசாயம் எனும்போது பணப்ப கள், உணவுப் பயிர்கள் எனும் இருவன பயிர்கள் இடம் பெறும். இதில் உண பயிர்களான தானியங்கள், மிளகர் பருப்புவகை, வெங்காயம், மரக்கறிவ போன்றவற்றைப் பயிரிட வேண் டு இவையே மக்களின் போசாக்கினை உய தும் புரதச் சத்துக்கள் அடங்கியவை கும். விலங்கு வளர்ப்பினை அதிகரித் மூலம், பால்வகை, இறைச்சி போ உணவுப் பொருட்களைப் பெற முடிய மீன்பிடித் தொழிலையும் விருத்தி செய் மூலம் போசாக்குள்ள ஆகார நிரம்ப

தப்
qଏଁ
வந்
யக் க்கு :ITi;
க்க
FáT
1ண்
uri
கப் வுப் rů,
ம். ர்த் யா தல் ன்ற վւն. தல் லைக்
கூட்டலாம். இவ்விதமாகப் பலவிதமான தொழில்களையும் விருத்தி செய்யும்போது உணவுத் தன்னிறைவு ஏற்படும். அப் போதே தேவையான உணவை மக்கள் உட் கொள்ள முடியும். அத்துடன் மிகவும் வறிய நிலையிலுள்ள மக்களுக்கு மானிய
முறைகளையும் குறைந்த விலையில் பொருட்
களையும் நுகர்வு செய்யக் கூடிய வசதிகளை ஏற்படுத்தல் வேண்டும்.
அத்துடன் சுகாதார வசதிகளைச்
செய்வதுடன் நோயாளருக்குச் சத்துள்ள
உணவு வகைகளைப்பற்றிக் கூறுதல் வேண் டும். தொற்று நோய்கள் பரவாதபடி தடைகள் ஏற்படுத்தல், மலசலகூட வசதி கள் பற்றிக் கவனித்தல், குடும்பக் கட்டுப் பாட்டு முறைகளைப் புகுத்துதல் மூலம் பிறப்பு வீதத்தைக் குறைக்க வழிவகை செய்தல் வேண்டும். இவையே தற்போது காணப்படும் பிரதான பிரச்சினைகளாக உள்ளன. அடிக்கடி குழந்தை பிறப்பதன லும் தாய் சேய் போசாக்கு நிலமை பாதிக் கப்படுகின்றது. இதனல் போசாக்கில்லாத சமூகமே வளர்ந்து கொண்டு போகும். இதற்கான நடவடிக்கை எடுத்தல் வேண் டும். கெயர் நிறுவனம் இலவசமாக போசாக்குள்ள உணவுகளைத் தாய்மார்க ளுக்கும், குழந்தைகளுக்கும் 'திரிபோச’ எனும் உணவையும், 'பிஸ்கட்டும் வழங்கி வருகின்றது.
இலங்கை மக்கள் அனுபவிக்கும் மந்த போசன நிலமையை நீக்க அத்தியாவசிய நடவடிக்கை எடுத்தல் மிக மிக அவசிய மானதாகும்.

Page 7
29.jp 9 (4), 3-5 (98)
ஒன்றிணைக்கப்பட்ட வேள
இன்றைய உலகிலே பசி, பட்டினி, ப சம் எத்தனை கொடுமைகள். இை களை நித்தம் கொண்டிருக்கும் ஆசிய நா களில் பிறந்த மக்களைப் பிழைக்க வைக்கு முயற்சியில் எத்தனை வகைப் புரட்சிகளை தான் விஞ்ஞானிகள் காட்டுகின்றர்கள் தாவர, விலங்கு உணவுப் பொருட்களி உற்பத்தியை அதிகரிக்க வழிகாட்டிய g2-63OTayüLU. L9. (Food revolution). 2 L விளைவைத் தரும் இனங்களை அறிமுக படுத்தித் தானியங்களின் விளைச்சலை பெருக்கிய்து பசுமைப்புரட்சி (Green revolu ion). சுதேச பசு இனங்களைத் தரமுயர் திப் பால் உற்பத்தியை அதிகரித்த Gauglas Go)LD LTL'S (White revolution).
இவ்வகைப் புரட்சிகள் எல்லாம் ம டுப்படுத்தப்பட்ட விவசாய மூலதனங்களை கொண்டிருக்கும் சிறு அளவிலான விவச யிகளின் உணவு உற்பத்தியிலே பெருத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்குரி முக்கிய காரணம் இச்சிறு அளவிலான வி சாய முயற்சிகள் விவசாயிகளின் அன்ரு, தேவைகளைச் சமாளிக்கும் அடிப்படையி அமைவதேயாகும். சிறு அளவிலான வி சாயிகளுக்குப் பொருத்தமான விவசா முறையானது அவர்களுக்குத் தொடர்ந் உணவை வழங்க வேண்டும், உணவு சத்தின் பலவகைக் கூறுகளையும் அளிக்க கூடியதாக இருக்க வேண்டும், குடும்பத் லுள்ள சகலருக்கும் உழைப்பையும் ஊ யத்தையும் வழங்கக் கூடியதாக இருக் வேண்டும், காலநிலை மாற்றங்கள், நோ
ஆராய்ச்சி அலுவலகர், சிறு ஏற்றுமதிப்பயிர் ஆ

ாண்மை
R. LIDT5A, 6ðIT, B. Sc (Agric)
பிணித்தாக்கங்கள் முதலிய இடைஞ்சல்க
ளிலிருந்து பாதுகாப்பளிப்பதாக இருக்க வேண்டும்.
Lh இத்தேவைகள் எல்லாவற்றையும் த் திருப்திகரமாக நிறைவேற்றும் வகையில் " அமையக்கூடிய விவசாய முறையாக ஒன் ன் றிணைக்கப்பட்ட வேளாண்மை விளங்கு து கின்றது. பல விவசாய முயற்சிகள் குறித்த ர் இடத்தில், ஒரே காலப்பகுதியில் மேற் ப் கொள்ளப்பட்டு, அதிகரித்த உற்பத்தி, ப் உயர்ந்த ஊதியம், நீடித்த உழைப்பு என் "ே பவற்றைத் தரக்கூடிய ஒரு சிறந்த, சிறு த் அளவிலான விவசாய முயற்சியே ஒன்றி து ணைக்கப்பட்ட வேளாண்மை எனப்படுகின்
றது.
ட் மீன்வளர்ப்புத் துறையில்
ஒன்றிணைப்பு 凸 ஆங்காங்குள்ள குளங்கள், குட்டை கள், நீர்த்தேக்கங்கள் முதலியவற்றைப் வ புனரமைப்புச் செய்து, மீன் வளர்க்கும் - தடாகங்களாக மாற்றுவதன் மூலம் மீன் ல் உற்பத்தியைப் பெருக்குவது மீன்வளர்ப் * புத் துறையின் ஒரு முக்கிய அம்சமாகும். " இவ்வகை நடைமுறைகள் பெரும்பாலும் 歌 சீன, யப்பான், எகிப்து, இந்தோனேசியா * மற்றும் ஐரோப்பாக் கண்டத்தின் சில பகு க் திகள் முதலிய இடங்களில் கையாளப்படு தி கின்றன. தி m
உணவு விவசாய ஸ்தாபனத்தின்
கணிப்பின்படி, தென்கிழக்காசிய நாடுகளில்
நிர்விச்சி நிலயம், மாத்தனே,

Page 8
(1981) تاس 3 (4) 9 : suع
மட்டும் 6-7 மி.கெக்ரர் உபயோகிக்கப்ப டாத உவர் நீர் நிலைகள் உள்ளன என்று அறியப்படுகின்றது. இதில் பத்து வீதம் மட்டும் மீன் வளர்ப்புக்கு உட்படுத்தப்படு மானுல் மேலதிமாக 100 மி.மெற்றிக் தொன் மீன் உற்பத்தியைப் பெறலாம் என்று கூறப்படுகின்றது. இது கிட்டத் தட்ட 6.0 மி.தொன் புரத கூற்றை வழங்க வல்லது. இதன் மூலம் , ஆசியநாடுகளில் நிலவும் புரதப் பற்றக் குறையை சமா ஒளிக்க முடியும் என்பது கண்கூடு.
நெல் வயல்களின் நிலையான நீர்த் தேக்கங்களில், மீன்வளர்ப்பை மேற்கொள் ளும்போது வய்ல்களின் மொத்த உற்பத்தி யையும், வருமானத்தையும் அதிகரிக்கலா மென்று கண்டிருக்கின்றர்கள். இவ்வகை யான அமைப்பு, சிறு அளவிலான பண் ணையாளருக்குப் பொருளாதார அனுகூல முள்ளதாகக் கூறப்படுகின்றது. உணவு
விவசாய ஸ்தாபன ஆய்வொன்றின்படி தென்கிழக்காசிய நாடுகளில் மொத்தம்
35.8 மி.கெக்ரர் பரப்பளவு நெல்வயல் நிலப்பகுதிகள் மீன் வளர்ப்புக்காக உப யோகப்படுத்த வல்லன என அறியப்படு கின்றது. இதில் 30 சதவீதமேனும் மீன் வளர்ப்புக்குட்படுத்தப்படின் ஒரு கெக்ரர் Lர்ப்பில் 100 கி. கிராம் வீதமாக மொத்த ாக 3.5 மி. கி. கிராம் மீனை உற்பத்தி செய்யலாம் என்பது தெளிவாகின்றது.
கால்நடை, மீன், கோழி, uui ஒன்றிணைப்பு
இது சற்று சிக்கலான ஒரு இசைவாக் கeாகும். பல உயிரினங்களுக்கிடையில், ஒன்றுக்கொன்று நன்மை பயக்கக் கூடிய வகையில் ஏற்படும் இந்தச் சேர்க்கையா னது சிறு அளவிலான பண்ணையாளருக்கு அதிகரித்த உற்பத்தியையும், வருமானத் தையும், உழைப்பையும் "தரவல்லது. .

ஒரு கெக்ரர் நெல்வயலில் மீன்வளர்ப் புத் திட்டம் மேற்கொள்வதன் மூலம் 3500 கி.கிராம் நெல் உற்பத்தியைப் பெறுவதுடன் மேலதிகமாக 100-200 கி. கிராம் மீனையும் உற்பத்தி செய்யலாம் என பிலிப்பைன் நாட்டு ஆய்வுகள் காட்டுகின் றன, மீன் வளர்க்கப்படும் நெல்வயல் களின் அகலமாக்கப்பட்ட வரம்புகளில் கத் * தரி, வெண்காயம், தக்காளி, பயத்தை, வாழை முதலியன பயிரிடப்படுவதன்மூலம் உற்பத்தியை மேலும் அதிகரிக்கலாம். வய ல்களை அண்மித்த மேட்டுத் தரையில் கோழி, ஆடு, வாத்து, பன்றி முதலியன வளர்க்கலாம். வயல்களின் நீர்நிலைகள் தரையில் வளர்க்கப்படும் பன்றி வாத்துக் களுக்கு , நீந்து தடாகங்களாகவும் பயன் பெறுகின்றன. இந்தச் சேர்க்கையில் விலங்கு எச்சங்கள் மீனுக்கு உணவாக்கப் படுவதன் மூலம் விலங்குப் புரதமாகவும், தெற் பயிருக்கு எருவாதலின் மூலம் தானிய காபோவைதரேற்முகவும் மாற்றப்படுகின் றன. 20-30 கி.கிராம் பன்றி, கோழி எச்சங்கள் 1 கி.கிராம் மீன் உற்பத்தியைத் தருவதாகவும்; 15-25 பன்றிகள் ஒரு கெக் Trif நீர்நிலையிலுள்ள மீன்களுக்குப் போதிய உணவுப் பொருட்களை வழங்குவ தாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் வயல்களின் மேலதிக நீரா னது அவரை இன மேய்ச்சல் புல் உற்பத்தி யில், நீர்ப்பாசனத்துக்காக உபயோகப்ப டுத்தலாம். புல் திரும்பவும் கால் நடை உணவாகப் பாவிக்கப்படுகின்றது.
இந்நீர் நிலைகளில் புரதச்சத்து நிறை வான தனிக்கல குளோரெலா (Chlorella) எனும் தாவரம் விருத்தி செய்யப்படுவது, விலங்கினங்களின் வளர்ச்சிக்கு அனுகூலமாக அமைகின்றது. குளோரெலா புரதம், கொழுப்பு, விற்றமின்கள், கணிப்பொருட்கள் சழிவான அமைப் புடைய ஒரு தனிக்கலத்

Page 9
ஊற்று 9, (4), 8-5 (1981)
தாவரமாகும். இது பன்றிக்கும், கோழி இனங்களுக்கும் சிறந்த உணவாகின்றது. நீர்த் தாங்கிகளில் பாய்ச்சப்படும் கால்நடை கழிவுகளும், தரை கழுவு நீரும் குளோ ரெலாவின் விருத்திக்கு உதவுகின்றன.
வாத்துக்கள் பங்குகொள்ளும் ஒன்றி ணைக்கப்பட்ட அமைப்பில், நீரின் மேற் பரப்பிலுள்ள உணவை வாத்துக்கள் புசிக்க, அடித்தளத்தில் சேர்க்கப்படும் வாத்துக்களின் எச்சங்களை மீன்கள் உண்கின் றன. 25 கி. கிராம் வாத்து எச்சங்கள் 1 கி. கிராம் மீன் உற்பத்தியில் உணவாகின்றன. ஒரு வாத்து 30-40 நாட்களில் 6 கி. கிராம் எச்சங்களைத் தருகின்றது. இதன் அடிப்படையில் 500 வாத்துக்கள் கொண் டுள்ள ஒரு கெக்ரர் மீன்வளர்ப்பு நிலை யமானது வருடாவருடம் 3500 கி. கிராம் மொத்த உணவுற்பத்தியைத் தருவதாக தாய்வான் நாட்டு ஆய்வு ஒன்று காட்டு கின்றது. ஒரு கெக்ரர் குளத்தில் வளர்க் கப்படும் 500 வாத்துக்கள் வருடாவருடம் 30 தொன் எச்சங்களைத் தோற்றுவிக்கின் றன என்றும் இது 1800 கி. கிராம் மீன் உற்பத்திக்கு போதிய உணவாகின்ற தென்றும் அறியலாம்.
வாத்துக்கள் நீர்நிலைகளின் அடித் தரைப் பகுதியை சதா கிளறிக் கொண்டி ருப்பதும், மண் இளக்கப்படுவதும், அவற் றின் எச்சங்கள் நிலத்தில் சேர்க்கப்படுவ
வதும் அங்கு வளரும் தாவரங்களின் நல்வளர்ச்சிக்கு அனுகூலமாக அமை கின்றன. வாத்துக்களே எச்சங்களைக்
கிளறி அங்கும் இங்கும் பரப்புவதினுல் பசளேயிடல் மனிதப் பிரையாசையின்றி
இலகுவாக்கப்படுகின்நிறது.
வாத்துக்கள், மீன்களினல் உண்ணப் படாத வண்டுகள், குடம்பிகள், பூச்சி
புழுக்கள் முதலியவற்றை புசிப்பதுடன், நீர்களைகளின் பெருக்கத்தையும் கட்டுப் படுத்தி, நெற்பயிரின் விளைச்சலுக்கு உதவு கின்றது.

வாத்துக்கள் தமது ஊட்டலின்போது அதிக உணவை விரயமாக்கின்றன.இதைத் தவிர்க்க வாத்துக்கள் தங்கும் கூடுகள் நீர்நிலைகளின் மேலே கட்டப்படுவதனல், வாத்துக்களினல் விரயமாக்கப்படும் உண் வானது தடாகங்களுக்குள் விழுந்து மீனுக்கு உணவாகப் பயன்படுகின்றது.
இம்முறையிலான விவசாய அமைப் பில் சில பிரதிகூலங்களும் க ர ன ப் படுகின்றன. சாதாரண நீர்நிலை உயிரினங் களுக்கு குந்தகம் விளைவிப்பதுடன் நீரை, மனிதபாவனைக்கு உகந்ததற்றதாக மாற்று கின்றது. நெல் வயல்களில் மீன், தாரா முதலிய விலங்கினங்களின் சேர்க்கை அமை வதினல் நெற்களில் பூச்சித்தாக்கங்கள், நோய்த்தாக்கங்களுக் கெதிராக கிருமிநாசினி வகைகள் விசிறமுடியாத் நிலை தோன்றுகின் றது. வெவ்வேறு சேர்க்கைக்குரிய சமநிலை இசைவாக்கங்கள் பற்றிய அறிவு தெளிவில் லாது முயற்சியை ஆரம்பிப்பின் இறப்பு, நோய்வாய்ப்படுதல் முதலிய பொருளாதார நட்டங்கள் ஏற்பட இடமுண்டு.
இத்துறை வேளாண்மையில் போதியளவு ஆய்வுகள் மேற்கொள்ளப் படவில்லை என்பது ஒரு பெருங் குறையாகும். குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இது பெரும்பாலும் கவனிக்கப்படாது விடப்பட்டுள்ளது. பற்பல சேர்க்கைத்குரிய அமைப்புகள், இசைவாக்கங்கள் முதலியவை பற்றிய அறிவை விருத்தி செய்ய ஒரு கூட்டான ஆராய்வு வேலைகள் மேற் கொள்ளப்படவேண்டும். குறிப்பாக புரதப் பற்றக் குறைவு அதிகம் உள்ள வறிய வளரும் நாடுகளில் பொருளாதாரச் சிக்கனம் மிகுந்த இவ்வகை புரத உற்பத்தி, பெருக்க முறைகள் பிரபலமடையச் செய் வது விவசாய ஆய்வாளர்களின் தலையாய கடமையாகும். இதனல் வளர்ந்துவரும் பொருளாதாரச் சிக்கல்கள் குறைக்கப் பட்டு மனித சமூகம் மேம்பட வாய்ப்புண்டு.

Page 10
உவற்று: 9 (4 8-10 (198)
விவசாயச் சந்தைப்படுத்த
3.
இலங்கையில் சுமார் எண்பது சதவீத மான கிராமப்புற மக்கள் ஏதாவதொரு விதத்தில் விவசாயத் துறையுடன் சம்பந் தப் பட்டுள்ளனர். முழுச் சனத்தொகை யில் 50 வீதமானுேர் நேரடியாக விவசா யத் துறையில் ஈடுபட்டுள்ளனர். அதா வது விவசாய உற்பத்தியாளர்களையும், நுகர்வோர்களையும் உள்ளடக்கிய ஒரு பெரும் பகுதியினரை விவசாயத்துறை கொண்டுள்ளது.
உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட தோட்டங்களில் அல்லது பண்ணைகளில் பருவகால ரீதியாக விவசாயம் செய்யப்படு கின்றது. இந்த விவசாயத்துறை அரசிட மிருந்து மானியத்தையும், உத்தரவாத விலைகளையும் பெற்றுக் கொள்ளுகின்றது. தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய பிர தான விவசாயப் பொருட்களிலிருந்து மட் டும் இலங்கை சுமார் 69 வீதம் அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துக் கொள்ளு கின்றது. ஏனைய வாசனைத் திரவியங்கள் குடிபானங்கள் ஆகியவற்றிலிருந்து 9வீதம் வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்றது.
இலங்கையின் விவசாயிகள் பொரு ளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் முக்கி யமானவர்கள் என்பதற்கு இவை சில கார ணங்களாகும். இலங்கை அரசியல் சுதந் திரமடைந்து முப்பத்திரண்டு ஆண்டுகளா கின்றன. ஆயினும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலுள்ளதைப் போன்று எமது விவ சாயிகள் ஸ்தாபன ரீதியாக ஒன்று திரண்டு தமது சக்தியைப் பலப்படுத்திக் கொள்ள
پلو
உதவிப் பணிப்பாளர், உணவு போசணைக் கொள் திட்டம் செயற்படுத்தல் அமைச்சு, கொழும்பு

西·
Jr. (5. Sisy agri B.Sc. (Agri.), M.Sc. *
வில்லை. இது உண்மையில் ஒரு ருசிகர மான விஷயமாகும். விவசாயிகள் இப்ப டிக் கூட்டாகத் தமது விவசாய நடவடிக் கைகளை மேற்கொண்டால் அவர்களுடைய பேரம் பேசும் சக்தி மேம்பட வாய்ப்புண்டு.
கொள்கை தயாரிப்பாளர்கள், உற்பத்திப்
பொருட்களைச் சந்தைக்காகத் தயார்படுத் துவோர்கள், ஆகியோர் மீதும் தமது செல் வாக்கைச் செலுத்த முடியும். இதன்மூலம் தரகர்களினதும், வியாபாரிகளினதும் கை களில் 'சிக்காமல் தப்பித்துக் கொள்வதற் கும் இது உதவி புரியும்.
இந்த அம்சங்களைக் கருத்தில்கொண்டு விவசாயிகள் அரசின் உதவியையே (Մ)(Ա) மையாக நம்பியிராமல் கூட்டுச் சேர்ந்து சுய உதவி மூலம் எவ்வாறு முன்னேறுவது என்பதை ஓரளவு தெளிவுபடுத்துவதே இத்
தொடர் கட்டுரையின் நோக்கமாகும்.
சர்வதேச ரீதியிலும், உள்நாட்டு ரீதி யிலும், வர்த்தகத்தின் முக்கியத்துவம் அதி கரித்திருப்பதை உணரக்கூடியதாய் இருக் கிறது. எனவே விவசாயிகள் தமது சேம் நலத்திற்கு மிக முக்கியமான விவகாரங்க ளில் தம்மைக் கூடுதலாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு வாய்ப்புக்களைத் தேடுவதும் கூட்டாக இயங்குவதும் முக்கியமானதாகி வருகின்றது. விவசாயிகளின் சனத் தொகையின் அளவைப் பொறுத்த மட்டில் சமுதாயத்தில் விவசாயிகள் பெரும் பகுதி
யினராக இருப்பதால் அது தேசிய மூன்
னேற்றத்துடன் இணைந்து உள்ளது.
கைத் திட்டமிடல் பிரிவு
مسسها

Page 11
ஊற்று: 9 (4) -10 (1981)
விவசாயச் சந்தைப்படுத்தல் என்றல் என்ன ?
பாவனையாளர்களின் தேவைகளை இனம் கண்டு அவற்றை நிறைவேற்றுவதற் கான பிரதான நிர்வாகச் செயல்பாடுகள் தான் சந்தைப்படுத்தல் ஆகும் என பிரித் மானிய சந்தைப்படுத்தல் கழகம் சுருக்க மாக விளக்குகின்றது.
விவசாயச் சந்தைப்படுத்தல் என்பது உற்பத்திப் பொருட்கள் பண்ணையிலிருந்து பாவனையாளர் வரை நடைபெறும் செயல் பாடுகளையும், விவசாய உற்பத்திக்கான பொருட்களைக் கொள்வனவு செய்தலுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளையும் உள் ளடக்கியதாகும்.
சந்தைப் படுத்தலின் நோக்கங்கள்
எவை ?
எந்தவொரு தனிப்பட்ட நிறுவனத்தி னதும் சந்தைப்படுத்தல் நடவடிக்கையின் நோக்கம் சில விசேட பிரயோசனத்தைப் பெறுவதேயாகும். ஒரே விதமான பொரு ட்களுடன் ஒப்பிடுகையில் தனது பொரு ளேயே அதிகமாகக் கொள்வனவு செய்யப் பண்ணவும், அப்பொருட்களுக்கு அதிக விலையைப் பெற்றுக் கொள்ளவும் பாவனை யாளர்களை தன்வசப்படுத்துவதையே சந் தைப்படுத்தல் நடவடிக்க்ை கொண்டுள் ளது. விளம்பரம் செய்தல், உற்பத்திப் பொருளின் தரத்தை உயர்த்துதல்,குறித்த தரத்தைப் பேணுதல், உரிய வகையில் பொருட்களை விநியோகித்தல் ஆகியன மூலம் இதனைச் சாதிக்க முடியும்.
விவசாயிகள் இதனை ஒரு கட்டுப் படுத்தப்பட்ட வகையிலேயே அடையமுடி யும். சந்தைப்படுத்தலில் ஏற்படும் செலவு அதிகரிப்பினுல் ஏற்படும் நன்மை விவசாயி யையே சென்றடைய வேண்டும் என்பதற்

கான ஒரே ஒரு வழி உற்பத்திப் பொரு ளின் தரத்தில் கவனத்தைச் செலுத்துவதே யாகும்.
சந்தைப் படுத்தல் அணுகு முறைகள்
உலக மகாயுத்தங்களின் பின் பஞ்சம் எங்கும் தலைவிரித்தாடியது. அப்போது உணவு உற்பத்தியே வலியுறுத்தப் பட்டது. இதற்குப் பின் மக்கள் ஒரு குறிப்பிட்ட வகையான உணவு உற்பத்தியிலேயே நாட் டத்தைச் செலுத்தினர். ஆயினும் காலா காலத்தில் மாற்றங்களும் ஏற்பட்டன. மக் களுக்கிடையேயும் உணவுத் தெரிவில் வேறுபாடுகள் ஏற்பட்டன. -
நவீன தொழில் நுட்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு உற்பத்தியும் அதிக ரித்து வருகிறது. பாவனையாளர்களின் உணவுப் பழக்கத்திலும் மாற்றம் ஏற்படு கின்றது. அத்துடன் பெண்களும் தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடும் விகிதாசாரம் அதி கரிக்கின்றது. எனவே குறுகிய நேரத்தில் சமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி றது. இத்துடன் அவர்களுடைய குறுகிய ஒய்வு காலத்தையே பயன்படுத்த வேண்டி யுள்ளது. எனவே பாவனையாளர்களின் இவ்வாருன குளுதிசயங்களுக்கேற்ப விவ சாயிகளும் தமது உற்பத்தியை மாற்றிய மைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற் படுகின்றது. எனவே நவீன சமுதாய்த் தில் இருந்து அதிக இலாபத்தைப் பெற விரும்பும் ஒரு தொழில் முயற்சியாளன் சந் தைப்படுத்தலைக் கருப் பொருளாகக் கொண்டு தமது நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். விசேட சந்தைப் படுத்தல் நடவடிக்கைகள் மூலம் பாவனை யாளர்களின் தேவைகளுக்கேற்ற விதத்தில் விவசாய உற்பத்தியை சீராக்க முடியும்.
7

Page 12
இவற்று: 9 (4) 8-10 (1981)
சந்தைப்படுத்தலையும் உற்பத்திை நிறுவனங்களுக்கிடையேயுள்ள ே
சந்தைப் படுத்தலே நோக்காகக் கொண்ட நிறுவனங்களின் அம்சங்கள்
1 .. t_T Gnuðar u JITGITrif தேவைகளுக்கான ld,
வாங்க முக்கியத்துவம்.
2
சந்தைப்படுத்தலில் அதிமுக்கியத் வத்தைப் பெறுவதையும், சந்.ை வாய்ப்புக்களைப் பூரணமாகப் பயன் படுத்திக் கொள்வதையும் நோக்கிம கக் கொள்ளுதல்.
3. புதிய உற்பத்திப் பொருட்களை அ விருத்தி செய்ய முயற்சித்தல்.
4. உற்பத்திச் செலவைப் பார்க்கிலு விற்பனை விலை ஒப்பீட்டளவில் முக் யமானது.
5
தொழில்நுட்ப ஆராய்ச்சிக்குச் ச னை முக்கியத்துவத்தில் சந்தைப் டுத்தல் ஆராய்ச்சி நடத்துதல்.
6
சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியை அ ப்படையாகக் கொண்ட உற்பத்தி திட்டம்,
எனவே மேற்கூறப்பட்ட காரணங் ளின்படி திறந்த நிறுவனப் பொருளாத ரத்தில் ஒப்பீட்டளவில் சந்தைப்படுத்த நிர்வாகத்திற்கு உற்பத்தியை நோக்காக கொண்ட நிறுவனங்களைவிட சந்தைை நோக்காகக் கொண்ட நிறுவனங்களி: அணுகு முறையே விரும்பத் தக்கது எ( லாம். .
8

նպմ0 முறையே நோக்காகக் கொண்டி வறுபாடுகள்
I
உற்பத்தியை நோக்காகக் கொண்ட நிறுவனங்களின் அம்சங்கள்
l.
2
தொழில்நுட்ப செயல் முறையில் பூர் வாங்க அக்கறை கொள்ளுதல்,
தொழில் நுட்பவினைத்திறனை அடை
தலைப் பிரதான குறிக்கோளாகக் கொள்ளுதல்.
எற்கெனவே கிடைத்துள்ள சந்தை வாய்ப்புக்களை நிறைவேற்ற முயற்சி செய்தல்.
விற்பனை விலையிலும் உற்பத்திச் செல வுக்கு ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் அளித்தல்,
ஆராய்ச்சி பெரும்பாலும் தொழில் நுட்ப ரீதியில் இருக்கும். சில சந் தர்ப்பங்களில் மட்டுமே சந்தைவாய் ப்பு ஆராய்ச்சியாக அமையும்.
உள்ளார்ந்த ரீதியாகக் கிடைக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உற்பத்திப் பொருள் அபி விருத்தி செய்தல்,
விவசாயச் சந்தைப்படுத்தலிலுள்ள
சிக்கல்கள்
விவசாயிகளுடன் தொடர்புபட்ட
அதி முக்கிய பிரச்சினைகளாக உள்ளீட்டுச் சாதனங்களைச் சுலபமாகப் பெற்றுக்கொள் வதிலும், உற்பத்தியை விற்பனை செய்வதி
லும் ஏற்படும் வசதியீனங்களும் அடங்கும்.

Page 13
arbuy: 9 (4) 6-10 (1981).
இவற்றை இன்னெரு நோக்கில் கருதினல் விவசாயிகள் தமது மேலதிகமான உற்பத் தியை விவசாயத்துடன் தொடர்பில்லாத பாவனையாளர்கட்கு வழங்குவதில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் எனவும் உற்பத்திப் பொருட்களை உரிய விலையில் உரிய இடத் தில், உரிய நேரத்தில், உரிய வகையில் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் எனவும் கொள்ளலாம். விவசாயச் சந்தைப்படுத்தலின் கூட்டு அம்சங்கள்
விவசாயமும் சந்தைப்படுத்தலும் ஒன்றேடொன்று பின்னிப் பிணைந்ததாகும். விவசாயச் சந்தைப்படுத்தலைக் குறிப்பிடும் போது பின்வரும் குணுதிசயங்களின் கார ணமாகக் குறித்த சில கட்டுப்பாடுகள் இயைபாகவே காணப்படுகின்றன. அவை
fig GT,
1. பண்ணையில் பருவகால உற்பத்தி. 2. விவசாயப் பொருட்களின் சேதமடை
* யும் தன்மை.
3. பெரும்பாலான பண்ணைகள் சிறு சிறு
பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 4. விவசாயமானது இயற்கைச் செயல் பாடாக இருப்புதால் ஒரே மாதிரி யான உற்பத்திப் பொருட்களை உற் பத்தி செய்ய முடியாமை.
இந்தக் கட்டுப்பாடுகளை நாம் மீறிச் செயல்பட வேண்டுமாயின் தரப்படுத்தல் திட்டங்கள், சந்தை தகவல் உபயோகம், குழு ரீதியான நடவடிக்கை ஆகியவற்றின் கீழ் இவை கருத்தில் எடுக்கப்ப்டுகின்றன. தற்கால நிபுணர்களின் கருத்துப்படி பாவ னையாளர்களின் திருப்தியை உத்தரவாதப் படுத்துகின்ற பொழுது மட்டுமே திறந்த சந்தைப் பொருளாதாரத்தில் நீண்டகால இலாபத்தை விவசாய உற்பத்தியாளர்கள் பெறமுடியும் என்பது எடுத்துக்காட்டட பட்டுள்ளது. சந்தைப்படுத்துவோரின் பிர தான பணி பாவனையாளர்களைத் திருப்திட் படுத்தலேயாகும். பாவனையாளர்களைத்
ear-2

திருப்திப்படுத்துவதற்கு விவசாய சந்தைப் படுத்தல் கூட்டு அம்சங்கள் என்று குறிப் பிடப்பட்ட இந்த செயல்பாட்டைத் திறமை யாக உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். தரத்தையும், விசேட நடவடிக்கைக ளையும் உள்ளடக்கியுள்ள விவசாயச் சந். தைப்படுத்தல் கூட்டு அம்சங்களை அட்ட வணை மூலம் விளக்கலாம். (10ம் பக்கம்) பண்ணை முகாமையாளர் சம்பந்தப் பட்ட செலவுகளையும், வரவுகளையும் கணி த்துக் கொள்ளுதல் அவசியம். இதன் அடிப்படையில் விவசாயச் சந்தைப்படுத்த லில் உள்ள கூட்டு அம்சங்கள் ஒவ்வொன் றினதும் ஒப்பீட்டு செலவீனத்தை அவர் முடிவு செய்ய வேண்டும்.
மேலும் விநியோக வழிமுறைகளைத் தெரிவு செய்து கொள்வதும் ஒரு முக்கிய அம்சமாகும்.
பொதுவாகத் தரகர் என்று சொல் லப்படும் தனிப்பட்ட வியாபாரிகளின் ஆதிக்கமுள்ள பங்கு அவதானிக்கப்பட்டுள் ளது. உரிய விநியோக வழிமுறைக்கான மாற்று முறையாகத் தரகர்களின் பங்கு அமைந்துள்ளது. இவர்களுடைய ஏகபோ கத் தன்மையே அவர்களின் ஆதிக்கத்துக்கு பிரதான காரணமாகும்.
விநியோக வழிமுறைகளில் தரகர்க ளின் நடவடிக்கை விவசாயிகளுக்கு ஒரு. இன்றியமையாத சேவையாக அமைகின் றது. இது எப்பொழுதுமே ஒரு உயர்ந்த தொழில் நுட்ட நடவடிக்கையாக் இல்லா விட்டாலும் முகாமைத்துவ நிர்வாகவினைத் திறனைக் கொண்டுள்ளது. இதுவரை இந் தத் தரகர்கள் அளிக்கும் சேவையை வேறு எவராலும் திறம்பட ஆற்ற முடியவில்லை. எனவே விவசாயிகள் தரகர்களின் பிடிக் குள் தொடர்ந்தும் இருந்து வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
எனவே இவற்றைச் சமாளித்துக் கூடிய பலனைப் பெற வேண்டுமானுல் விவ. சாயிகள் தமக்கென ஒரு கூட்டமைப்பை" உருவாக்கிக் கூடிய பயனை அடைய முயற் சிக்க வேண்டும். (தொடரும்)

Page 14
ஊற்று: 9 (4) 6-10 (1981)
f s į
每 树岭
¿j si
! @ ₪ 与3
ওষ্ঠ ভ্র) abv =
saeum3áso
Qinlognúss
؟ں 8EN ENے
[10]
~^  { }
([ھ
恒纪
「Qgコ(gat%
安日月明ggam&그%}/
系)
a - aA O SNGS
运的9巨唱守己T4
区司岛出感ná创
O
 

钊峰增爵8母公
Aー电电月14影n忌4@心由 (G、C&T 정酮例%心9n%言99
*醇醚mỹių}|i}}{90|İGŲás *」ဖွ6ငွှံ့မှ lainn| | | þéouml;%@nļęśc, 、Qagg念ag剧*ā爵登gn
—T唱~~~~,\![T] |~~mem(\|
| 정%9&
·ợģ11%Ų

Page 15
ஊற்று: 9 (4) 11-17 (1981)
யாழ்குடா நாட்டில் பாசன
52(5 நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களுக் கும், குறிப்பாக ஒருசில பகுதிகளில் தனிப்பட்ட, ஆய்வுக்குட்படுத்தக்கூடிய பிரச் சனைகள் இருக்கின்றன. யாழ் குடாநாட் டில் இன்று பாசன நீரின் அளவு தரம் ஆகியவற்றின் எல்லைப்படுத்தப்பட்ட நிலை மையே பெரும் பிரச்சனையாக உள்ளது. இங்கு வர்ழும் மக்களில் ஏறத்தாழ 80% ஆனேர் விவசாயத்தையும், 10% ஆனுேர் மீன்பிடித் தொழிலையும், எஞ்சியோர் இதர தொழில்களையும் செய்து வளர்ந்துவரும் பொருளாதார சிக்கல்களின் ம த் தி யி ல் வாழ்க்கை நடத்துகின்றனர்.
இலங்கையின் வடபாகத்தில் யாழ் குடாநாடு அமைந்துள்ளது. இது 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பை ஒப்பீட்டளவில் சம தரையாகக் கொண்டது. இதில் 60% வாழ் இடங்களாகவும், தற்பொழுது 13% பயிர்ச் செய்கைக் குட்படுத்தப்பட்ட பகுதிகளாக வும், 125% செய்கைபண்ணக்கூடிய பயி ரற்ற நிலமாகவும், தொண்டமானறு உப் பாறு ஆகியவற்றின் படுக்கை 10%உம், 4.5% வீண்தரையாகவும் காணப்படுகிறது. Logot கட்டமைப்பு பொதுவாக கல்சிக் லற்ற சோல் (Calcic Latersol) வகையாகும். குடா நாடு, கிழ்க்குப் பகுதிகளில் கல்சிக் றெட் GvibspGFT Gāv (Calcic Red Latersol) GAGO) 5 uqub, மேற்குப் பகுதிகளில் கல்சிக் யெலோ லற்ற Gay stai (Calcic Yellow Latetsol) 6), 605tlyth, கரையோரப் பகுதிகளையண்டி கல்சிக் மரா ufaðir Gas TuhL57@aTiSi6iv (Calcic Marine Complex) றிகோசோல் (Regosol) என்பவற்றை Այւն கொண்டுள்ளது. வருடம் முழுவதும் சூரிய கதிர்வீச்சின் விளைவாக உயர்வான
விவசாய பொறியியற் பிரிவு பேராதனை வளாகம்.

நீரின் தரம் பற்றி ஒர் ஆய்வு
SqS SASASASiAS LALALS AASAAS LAASMMLLMSMSMSMMCCMSMSMSCCCMeAeSASASASASAS SSASASSSq SSMAMLSSSMS
பொ. ஆழ்வாப்பிள்ளை B. Sc. (Agri) *
சூரிய ஒளிர்செறிவும் பெறமுடியும். அத் துடன் இலங்கையின் வரண்ட பிரதேசத் தில் அமைந்து 50அங். வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைக் கொண்டது. சராசரியாக 02 அங்|நாள் ஆவியாதல் வீதம் உடையது: GunfijuTillii (Surface Water), 560J Sp Šri (Under Ground Water) GTGörluGT அடிப் படை நீர் மூலவளமாக அமைந்து மனித னின் அன்ருட நீர்த் தேவையையும், பாசன நீரின் கேள்வியையும் ஈடுசெய்கின்றது.
மேற்பரப்பு நீர் ஆறு, குளம், வடிகால் மூலமும், தரைகீழ் நீர் ஆழமற்ற ஆழமான கிணறுகள் மூலமும் பெறப்படுகிறது. அநேக மான இடங்களில் தரைகீழ் நீரே நன்னீ ராகக் கிடைக்கிறது. ஆயினும் கரையோ ரப் பகுதிகளிலும், ஆற்றுப் படுக்கைகளின் ஒரங்களிலும் உவர்நீர் காணப்படுகிறது.
குடாநாட்டின் வளத்தை உயர்த்தக் கூடிய வகையில் முக்கிய ஏதுவாகக் கிணறு கள் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 84,000 கிணறுகள் காணப்படுகிறது. இதில் 66,000 கிணறுகள் வீட்டுத்தோட்ட பாவிப்பிற்கு மாத்திரமே பயன்படுகிறது. எஞ்சிய 18,000 கிணறுகள் விவசாய பயிர்களின் பாசன நீர்த்தேவைக்கு உபயோகிக்கப்படுகின்றன. நீர்ப்பாசனம் என்பது தாவரங்க்ளின் தரமான வளர்ச்சிக்குத் தேவையான ஈர லிப்பை ஏற்படுத்த ஒரு குறிப்பிட்ட நோக் கத்துடன் செயற்கையாகத் தரைக்கு நீர் வழங்கல் ஆகும். இது ஆறு, குளம், கிணறு ஆகியவற்றிலிருந்து பெறப்படும். பாசன நீரின் அளவு ஓரளவு தவிர்க்கப்பட்டு, அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இக் கட்டுரை விரையப்படுகிறது.
11

Page 16
ஊற்று: 9 (4) 1-7 (1981)
ஒரு குறிப்பிட்ட சூழலில் நீரியல்வட்ட நீர் அச்சூழலின் இரசாயனச் சேர்க்கைகளு டன் தொடர்புடையதாக அமையும். கரைக் கப்படும் பாறை அல்லது மண்ணின் தன்மை யைப் பொறுத்தும், நீர் எவ்வளவு ஆழத் தில் என்ன வீ 959ổi) Đ67(ĐQ56ìjib (Infiltration Rate) என்பதிலும் கணிப்பொருளின் அளவு தங்கியிருக்கும். க்ைத்தொழிற் கழிவுகள் மாநகரசபைக் கழிவுகள் என்பவற்றின் சேர்க் கையால் ஆறுகளில் நீரின் கணிப்பொருட் செறிவில் தளம்பல்நிலை காணப்படும்.
<鹦奥, குளம், கிணறு ஆகியவற்றில் நேரடியாக மழைநீரின் ஒரு சிறிதளவே படிவு வீழ்ச்சியுறும். அதிகளவு பகுதிநீர் தரை களில் (Catchment Area) சேர்ந்து ஓடுநீராக (Run-off Water) au GLDjöUT L’il நீராக (Sub-Surface Runoff Wate) நிலையான நீர் நிலைகளை வந்தடையும். இவ்வாறன ஒடு நீரில் நீரடிப்பால் கரைக்கப்படும் கணிப் பொருட்களும் கலக்கின்றன. நீர் அசை வால் பெயர்க்கப்படும் மண்டி (Silt) உப்பு என்பவற்றின் செறிவு, கணிப்பொருள்வகை மண்நிலைமை என்பன தாவரத்தின் தன்மை யில் நன்மையான தீமையான விளைவுகளை ஏற்படுத்தும். சில கணிப்பொருட்கள் தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய போசணை களையும், சில தாவர வளர்ச்சியைத் தடுக் கக்கூடிய நச்சு விளைவுகளையும் ஏற்படுத்தக்
கூடியது.
பாசனநீர் உவர் உள்ளதாகக் காணப் படின் இதுவே கூடிய தாக்கத்தைப் Lurfai ஏற்படுத்தக்கூடியதாக அமையும். உவர்ச் செறிவால் பெரிய நிலப்பரப்புகள் உற்பத் தித் தரத்தினை இழப்பதை நாம் அறிவோம். ஆகவே, பாசனத்திற்குப் பயன்படும் தரை கீழ் நீரின் தரம் மிகவும் இன்றியமையாதது.
பாசன நீரின் தரம் என்று குறிப்பிடும் பொழுது அந்நீர் எவ்வகையான பிறபொருட் களை என்ன செறிவில் கொண்டிருக்கிறது
12

என்பதை அறியவேண்டும். அவைகளாவன:
1. மண்டி 2. கரையக்கூடிய உப்பின் செறிவு 3. கரைந்துள்ள சோடியம், கல்சியம்,
மக்னீசியம் என்பவற்றின் நிலைமை. 4. இரு காபனேற்று அயனின் செறிவு. 5. தாவரங்களுக்குப் பாதிப்பை விளை
விக்கக்கூடிய நுண் மூலகங்கள். பர்சன நீர் கொண்டுள்ள முக்கிய நேர யன்களாவன: Na+, K", Ca", Mg"; எதிரயன்களாவன : CO3(, HCO, SO., CIT, NO. பாசன நீரின் தரம் மண்ணினூ டாக நேரடியாகவோ அன்றி மறைமுக மாகவோ தாவர விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தும், 1. மண்டி
மணல் தரைகள் பிடித்துவைத்திருக் கும் நீரின் அளவு குறைவாலும், போசணைப் பதார்த்தங்களின் செறிவு குறைந்துகொண்டு போவதனலும் அவ்விடங்களில் மண்டி படி தல் விரும்பத்தக்கது. இ த ன ல் மண்டி கொண்ட பாசனநீர் (வெள்ளம்) வழங்கப் படின் உற்பத்தித்திறன் அதிகரிக்கமுடியும். ஆனல் மண்ணரிப்புக்குட்பட்ட இடங்களில் மண்டி படிவதனுல் நீர் ஊடுருவல் குறைந்து பாசனத் தடங்கல் ஏற்பட இடமுண்டு. 2. கரையக்கூடிய உப்பளவு:
பாசன நீரில் கரையக்கூடிய உ ப் பு, தாவர வளர்ச்சியில் தாக்கம் கொள்வத ஞல் இதனை அறியவேண்டிய முக்கியத்து வம் உண்டு. இது நீரின் பத்துலட்ச்ம் பகு தியில் எவ்வளவு ப்குதி உண்டு என அள விடப்படும். அலகு ppm. (Parts per Million). மின் கடத்தல்மானி (Electrical Conductivity Meter) மூலமும் கண்டுகொள்ள முடியும். அலகு மைக்கிரோ ஒம்சமீ. ஆகும். M
3. கரைந்துள்ள சோடியம் கல்சியம் மக்னி
சியம் என்பவற்றின் நிலைமை :
பாசன நீரில் சோடியம் அயன் செறிவு
உயர்வாகக் காணப்படின் கால ஒட்டத்தில்

Page 17
ஊற்று: 9 (4) 11-17 (1981)
மண் காரத்தன்மை அதிகரித்து உற்பத்தித் திறன் குறைய வாய்ப்புண்டு. சோடியம்/ மக்னீசியம் கல்சியம் செறிவு விகிதம் பாசன நீரினை மதிப்பிட ஒரு சிறந்த அளவீடாகும்.
ppm Naf23 ppm Ca/A0 -- ppm Mg/12
சாதாரண நிலைமையில் பசான நீரின் இவ்விகிதம் 1:1ஆக இருத்தல் விரும்பத்தக் கது என கெல்லி, பிறவுண் ஆகிய அறிஞர் கள் கூறினர். ༣
4 இரு காபனேற்று அயனின் செறிவு :
இது பாசனநீரில் நேரடியற்ற தாக் கத்தை ஏற்படுத்தும். கல்சியம் மக்னீசியம் ஆகியவற்றின் வீழ்படிவை அதிக ரித்து, சோடியம் செறிவை உயர்த்த இடமுண்டு. Ca** + Na+ -- 2HCO – CaCO3+ Nat
+ CO2 + H2O
எனினும் இரு காபனேற்று அயனின் அதிகரிப்பால் மண்ணின் காரத்தன்மை அதி கரித்து கரிய காரத்தன்மையான மண் (Black Alkali Soil) G5IT airp வாய்ப்புண்டு. இம் மண்ணின் உற்பத்தித்தரம் குறைவாகவே காணப்படும்.
தாவரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நுண்மூலகங்கள் :
மிகச் சிறிதளவாகவே போரன் (Boron) கொண்ட பாசனநீர் அவரைக் குடும்ப வயற் பயிர்களில் தூண்டல்களைக் காட்டியது. எனினும் 2ppm செறிவுடைய போரன் கொண்ட பாசனநீர் பலவகைப்பட்ட தாவ ரங்களில் இலை எரிவையும் (Scorching of Leaves) பழமரங்களில் கடுமையான தாக்கங் களையும் கொடுத்தது.
யாழ் குடாநாட்டில் பாசனநீரின் தரம் என்று குறிப்பிடும்பொழுது முக்கியமாக, பாசன நீரில் காணப்படும் உப்பின் அள வையே கருதுகிருேம். போதுவாகப் பாசன நீரில் குளோறைட்டு அயனின் செறிவே

ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டிய நிலையில் இருக்கிறது. ஏனெனில் பாசனநீரில் கரைந் துள்ள மொத்தத் திண்மப் பதார்த்தத்தில் 21*07% குளோறைட்டு அயன் காணப் படுகிறது. குளோறைட்டு அயன் செறிவின் அடிப்படையில் பாச, நீர் தரம் பிரிக்கப் படும்.
(அ) 0 தொ ட க் கம் 100 ppmவரை மென்னீர் என்றும், இதற்குமேல் வன்னீர் என்றும் குறிப்பிடலாம்.
(ஆ) 0 தொடக்கம் 500 ppmவரை நன் னிர் என்றும், 500 ppm தொடக் கம் 1000 ppm வரை உவர்நீர்என் றும் குறிப்பிடலாம். -
(இ). 0 தொடக்கம் 500 ppm வரை தர மான பாசனநீர்என்றும், 550 ppm தொடக்கம் 1000 ppmவரை தர மற்ற பாசனநீர் என்றும், 1000 ppm தொடக் கம் 2000 ppm வரை பொருத்தமற்ற பாசனநீர் என்றும் குறிப்பிட லாம். எனவே 1000 ppm குளோறைட்டு அயன்செறிவு ஒரு எல்லைப்படுத்தப்பட்ட (Guide Line) நீரின் தரம்என நாம் கொள்ளுலாம். வன்னீராக இருந்து நன்னீராக இருப்பின் தரமான பாசனநீர் என லாம். ஆனல் யாழ் குடாநாட்டில் எல்லாக் கிணறுகளும் வன்னீரையே கொண்டுள்ளது. M
பாசனநீரின் தரம்பற்றி அறிவதற்காக எடுக்கப்பட்டதரவில் ஆள்தொளை க ளின் உயர்வான நீர்மட்டத்தில் உவர்த்தன்மை குறைவாகவும் ஆழத்துடன் கூடிக்கொண் டும் செல்கிறது. கோடை காலங்களில் நீர் Gudgod (Water Table)usair Lidl lib Sp நோக்கிக் செல்வதனல் ஓரளவு உவர்த்தன் மையை நாம் காணமுடியும். சாதாரண மாக விவசாயி ஒருவன் சிறுபோகத்தில் நடப்பட்ட வெங்காயப்பயிரின் தாளின்
13

Page 18
ஊற்று: 9 (4) 11-17 (1981)
(பசிய பகுதிகள்) நுனி கருகுவதை அவதா னிக்க முடியும். இதற்கு உயர்வான சூரிய ஒளிர் செறிவு, கிணறுகள் வற்றிய நிலையை யில் பாசனநீரின் உப்புச்செறிவு உயர்வ என்ற இரு காரணிகளைக் கூறமுடியும். ஆய் வின் விளைவாக நீரில் உவர்த்தன்மை தோன் றல் நிறுவப்பட்டது. ஆனல் பயிரின் நுனி
தொளையின் ஆழம்
காலம் 5 10
ஆடி 1975 I 60 60 ஆவணி 19 5 80 160 தை 1976| 160 60 ஆணி " 1976. 1 70 165 கார்த்திகை 1976 120 130 தை 1977. 160 60 ஆனி 1977 170 170
asa
அ ட் ட வணையில் காட்டப்பட்டப 50 g 1- egyp56á 1975–6 260 ppn 1976-ổv 300 ppm, 1977—ố 420 pp குளோறைட்டு அயன்செறிவு. இதனைச் சற். நோக்கும்பொழுது பாசனநீரின்தரம் குறை தற்கான நிலைமை தோன்றிவிட்டதை எச் ரிக்கின்றது. இந்நிலைமை குறைந்த ஆழ களில் தோன்றக்கூடிய அறிகுறிகள் துெ கின்றன.
இடம் CI-செறிவு H O செறி
. ppm -. ppm திருநெல்வேலி 225 480 புன்னுலைக்கட்டுவன் 1 0 0 | 4 1 0 சண்டிலிப்பாய் 375 500 கந்தரோடை 750 950 சுளிபுரம் 1 1 00 103 வட்டுக்கோட்டை 1000 870 புத்தூர் 150 350 கரணவாய் 350 750
14

கருகலுக்கு இரு காரணிகளும் காரணமா கும். அத்துடன் தரையில் உப்புப் படிதலும் அவதானிக்கப்பட்டது. -
திருநெல்வேலி விவசாய ஆய்வுநிலைய ஆள்தொளையில் பெறப்பட்ட பாசனநீரின் குளோறைட்டு அயன்செறிவு” ppm-இல் காட்டப்படுகிறது.
(நீர்மட்டத்திலிருந்து)
20 30 40 | 50 190 190 230 260 *
190 190 250 300 60 160 180 240 80 180 23 O 300ಣಿ
1 4 0 250 180 350 . 170 90 280 40 190 200 280 - 420
* கவனிக்க
அத்தோடு வெவ்வேறு இடங்களில்
g
1. மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாக
m பாசனநீரின் தரம் குறைவதையே உணரக்
தி கூடியதாக இருக்கின்றது. ஒரு தாவரத்தின்
வ விளைச்சல், மண்ணின் நிலைமை, பயிரின்
*ச பேதம், காலநிலை, பாசனநீர்அளவு, பாசன
ங் முறைஆகிய காரணிகளில் தங்கியிருப்பது
நரி மட்டுமல்லாமல், பாசனநீரின் தரம் என்
பதும் கவனிக்கத்தக்கது.
மிளகாய்
s இன்ன
aj வெங்காயம் s
sgraf grrrrrf stair கால அளவு
விளைவு ஏக் விளை/ஏக் அதி உயரம் (மாதம்)
- , του 10. 16 || 4110ո | > 9 30 7.85 5'7ክ | > 9
2 6.50 42 it 7-8 -سي
70 8 00 st 1" 6 -7 حس
O 80 7 OO 3ካ3ካ 5-6 80 888 2'8" 5ー6 80 8.00 3' 8" 7-8 4 5 9 00 26. ، 5-6--سس

Page 19
ஊற்று 9 (4) 11-17 (198)
பாசன நீரில் குளோறைட்டு அயன் செறிவு கூடிய இடங்களில் நடப்பட்ட பயிர் களின் தரம் ஓரளவு குறைவாக இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது. இதற்குக் குளோறைட்டு அயன்செறிவும் ஒரு காரணி யாகும். எனினும் சில தாவரங்கள் உவர்த் தன்மையைத் தாங்கக்கூடியதாக இருக்கி றது. செம்மணிப் பகுதியில் நடப்பட்ட நெல்வர்க்கம் ஓரளவு உவர் எதிர்ப்பைக் காட்டியது.
உப்பு-ஆற்றுப் படுக்கையை அண்டிய பகுதியில் ஆனிமாதத்தில் பாசனநீர் மாதி ரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டது. அங்கு ஆற்றின் கரையிலிருந்து தூரமான இடங்க ளில் கிணற்றுநீரின் குளோறைட்டு அயன் செறிவு காணப்பட்டது. இது 2300 ppm இலிருந்து 880 ppmவரை வேறுபட்டது. உவர்நீர் சாதாரண தரைக்கு மழைகாலத் தில் பரவுவதே காரணமாகும். இவ்வாறு தொடர்ந்து வருடாவருடம் மழைகாலத் தில் தாக் கப்படும் நிலம் காலப் போக்கில் உவர்த்தன்மை உயர்  ைவ க் காட்டுகிறது. அத்துடன் அங்கு காணப் பட்ட பயிர்களின் பாத்திகளில் உப்புப் படிந்து வெண்ணிறமாகத் தோற்றமளிக்கி றது. மேற்பரப்புப் பாசனம் செய்வதனல் சில குறிப்பான இடங்களில் நாம் தரைக்கு மேலும் உவர்நீர் அளிப்பே செய்கிருேம். இந்நிலைமையை அத் தாவரங்கள் தாங்கி வளர்கின்றன. இக்குறிப்பிட்ட பகுதியில் வாழை, மிளகாய், பூசணி, பீற்றுாட், வெண்டி, புகை யிலை ஆகிய பயிர்களைத் தொடர்ந்து உவர்நீர் தாங்கும் தன்மைக் குப் பழக்கமுடியும் என்பதைக் கூறக்கூடிய தாக இருக்கின்றது, அத்துடன் கிணறுகள் D, E (படத்தில்) என பன நீர்ப்பாசனத் துற்கு பயன்படுத்தப்படாது கைவிடப்பட் டுள்ளது. எனவே சில நன்நிலங்கள் காலப் போக்கில் விடப்படக்கூடிய சாத்தியக்கூறு கள் உண்டு,
(படம் மறுபக்கத்தில்)

மேற்படி ஆய்விலிருந்து எழுந்த முடிவுகளை நாம் கூறக்கூடியதாக இருக்கி AD.g.
1. கரையோரப் பகுதிகளும், ஆற்றுப்படுக் கைக் கரைகளும், காலப்போக்கில் உவர் நீர்ப்பாசனத்தால் உ ற் பத் தித்தரம் குறைந்த தரையைக் கூட்டிக்கொள்ளல்.
2. தரைகீழ் நீரின் பக்கவாட்டான அசை வால் கிணறுகளின் நீரின்தரம் குறைதல்.
3. குறிப்பான சில இடங்களில் மிளகாய் பயிர்களின் அங்குரப்பகுதி அடர்த்தி குறைக்கப்படல்; இதனுல், அ) விரைவாகத் தரை உலர்ந்து வெடித் தல், இதற்காக விவசாயிகள் பாசன இடைவெளியைக் குறைத்து வேர் வளைய உப்புச்செறிவை ஊக்கல்.--
ஆ) களைகள் அதிகளவில் வ ளர் த் து
தரையை மூடல்
இ) விரைவாக இலைச்சுருள் நோய் தோன் றல்-போன்ற தீய விளைவுகள் வருவ தற்கு வழிவகுக்கப் பட்டுள்ளது.
4. பாசன இடைவெளி 4 நாட்கள் கொடுக் கப்பட்டு பாசனம் செய்யப்பட்ட சன்ன வெங்காயம் அறுவடையின் பொழுது "வேர்க் கிழங்கு"களைக் கொடுத்தது. அதாவது குமிழ் உண்டாகவில்லை.
5. எழுபது நாட்களில் விளைவைக் கொடுக் கும் சின்ன வெங்காயம் நன்நீர்பாசனத் தில் (150ppm Cl"செறிவு, பெரும் போகம்) எண்பது நாட்களில் விளைவை யும், உவர்நீர்ப்பாசனத்தில் (250 ppm CT செறிவு, சிறு போகம்) அறுபது நாட் களில் விளைவையும் தந்தது. அத்துடன் பெரும் போகத்தில் உயர்விளைச்சல்யும் சிறுபோகத்தில் குறைவான விளைச்சஆல யும் கொடுத்தது.
5

Page 20
ஊற்று: 9 (4) 11-17 (1981)
Nyuon
s' 3&nuսով: சந்தி : نمی:: A. }>
" . * '29': 'છેgn:૦;'g'
ー。、、、“” 、 S 'తాక్షుడిగా
• و . . . . . . i. 安 . . . . » . م. 4.- : 35. . . . . . k هر
K a f". f یx * x vبہتر ہلاs , く . . . . . * '9 YK
5、女・。 a * A * t. V ",
多 a 4
". જfોઠોદ . y a
، *
x x xع c. K1 p. மரவள்ளி ☆S:
666.T.
, , « vo v * * * ... . . . . . . . . . . . ''''''''
பூசணிவகை ** , , , ' ' ' ' ' " . . . . ༤ ༧ , , -་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ "مه
s a e ....... ''''''''' 意 影 شلحه نام
தரைகீழ் நீரின் ஆதிக்
 
 
 

SUT ủo 1 g. Lö. 0o'
۶Nعسے {ئیsopgn sSل;
சகண்க
Sang Cl செறிவு ppm
A 880
B 400
C 1600
D 1740
E. 2300
கமும் பயிரின் பரம்பலும்

Page 21
ஊற்று: 9 (4) 11-17 (1981)
எனவே மேற்கூறப்பட்ட முடிவுகளை
சற்று அவதானிக்கும் பொழுது எதிர்காலத்
தில்
சில சிக்கல்களைப் பாசனநீர் கொடுக்க
லாம் என்பது திண்ணம். இதற்காக நடை முறைப் படுத்தக்கூடிய சில தீர்வுகளை முன் கூட்டியேநாம் கூறவேண்டியவர்களாவோம்.
l.
3
1 0.
ll.
கடல்நீர் நீரோடையில் வருவதைத் தடுக்க அணைச்சுவர் கட்டப்படல். நீரோடைகளின் க  ைர ப் பகுதிகள் அணைச்சுவரால் எல்லைப்படுத்தப்படல்.
தரிசு நிலங்களில் இயலக்கூடியவரை
நீரைத் தேக்கி, கடலுட் பாயும் நீரைக் கட்டுப்படுத்தல். மறைந்துபோன நீர் த் தேக்கங்கள் புதுப்பிக்கப்படல். தரிசுநிலங்களில் உயர்மரங்களை வளர்த் தல்
கூடியளவு நீர் இறைத்தலைத் தடுத்
தல் (வருடத்தில் ஒரு கிணற்றிலிருந்து
ஒரு ஏக், அடி நீர்வரை இறைத்தல்) இடைவிடாது நீர் இறை த் தலைத் தவிர்த்து, நீர் பம்பும் வீதத்தைக் கட்டுப்படுத்தல்.
ஆள் தொளைகள் செங்குத்தாக துளைப் பதைக் கட்டுப்படுத்தி (கிணறுகளின்
உள்ளிருந்துகூட) 'பக்கப்பாடாகத்
துளைக்க முற்படல். கிணறுகளின் எண்ணிக்கையை அதிக ரிக்க, ஆணுல் ஆள் தொளைகளின் எண் ாணிக்கையைக் குறைக்க. அதாவது விட்டம்கூடிய கிணறுகளே விரும்பத் தக்கது. V நேரடியாக மழைவீழ்ச்சியைப் பயிர்ச் செய்கை நிலங்களுக்கு அனுமதிக்க. அதாவது பயிர்ச் செய்கையை பெரும் போகத்துடன்முன்கூட்டியே (Advanced Cultivation) தொடங்கல். இதனுல் கழு Quổiv Giớ635b(Leaching Rate) dulur Gonuri வலைய உப்பாக்கத்தைத் தடுக்கலாம். மண் தரைக்கு கிப்சம் இடுவதனல் ஊடுபுகவிடும் வீதம் அதிகரித்து உட் பாக்கத்தைத் தடுத்தல்,
ෆිබුෂ් - 3

12. பாசன முறையை மாற்றல். வரம்புசால் முறையைப் (60-65% மட்டும் ஈரப்படுத்தல்) பயன்படுத்துவதனல் பாசனநீர் அளவைக் குறைத்தலுடன், பாசனநீரால் உப்புச் சேர்க்கையைக் குறைத்தல். 13. சரியான 'கழுவல்தேவை' (Leaching
Requirment) அளவான நீர் வழங் க்ல்,
14. உற்பத்தி முறைகளை மாற்றல். 10-12" வரை ஆழமாக உழுதலும், குறை வான எண்ணிக்கை (2-3)உழுதலும், 15. தரைகீழ் நீர் தேவையற்ற விதத்தில் நகரப்புறங்களில் வீணுவதைத் தடுத் தல். a 16. நகரங்களில் வீடுகளின் செறிவு அதி கரிப்பதால், வீடுகளைச்சுற்றி நீர் தேங் காது உடனடியாகக் கான்களில் பாய் கிறது. எனவே நகராக்கத்தைக் கட் டுப்படுத்தல். 17. இதுபற்றிய அறிவுரைகளை விவசாயிக ளுக்கு வழங்கலும், வானெலிமூலம் ஒலிபரப்பலும். 18, சரியான பயிரினத்தைத் தெரிதல்.
(9) 2.Guigiriljub (Salinity Tole- rance) பயிர்களை வளர்த்தல், (ஆ) வரட்சி எ திர்ப்பு (Drought Resistance) பயிர்களை வளர்த்தல். இறுதியாக, எல்லாவகையான தீர். வுகளையும் எல்லா இடங்களிலும் தகுந்த முறையில் கைக்கொள்ள முடியாவிடினும், ஒரளவுக்காவது இம்முறைகளை நடைமுறைப் படுத்தவேண்டும். பாசனநீரின் அளவு தரம் ஆகிய இரு பிரச்சனைகளுக்கும் உடனடித் தீர்வு காணமுடியாதபடியால், தொடர்ந்து பலவகைப்பட்ட தகுதிகளையும் கொண்ட் ஆய்வாளர்களை இப்பகுதியில் ஆய்வுக்குட் படுத்தவேண்டும். இவ்வாருக இதரவழிகளி லும் நாம்கட்டுப்பாடாக நடந்தால், இதுவே வரும்காலுச் சந்ததிகட்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.
17

Page 22
Defið : " 9 (4) 18-23 (98)
சிறகு அவரை
G spisau GMT (Psophocarpus tetragono
(L). D. C.) இலங்கையில், பாரம் மாக வீட்டுத்தோட்டங்களில் வளர் பட்டு வரும் ஒரு இலகுமினேசே பயிரா இது ஆசிய அயன மண்டல நாடுகளில் மரக்கறி உணவாக விரும்பி உண்ணப் வந்துள்ளது. இவ்அவரை ஆண்டின் எ மாதங்களிலும் உள்ளூர்ச் சந்தைகளி விற்கப்படுவதைக் காணலாம். எனி பெரும்போக காலங்களில் பெரும6 உற்பத்தி செய்யப்படுகின்றது. மற்6 மரக்கறி வகைகளுடன் ஒப்பிடும்போது விலை குறைந்ததாயும் நுகர்வோருக்கு தில் கிடைக்கக்கூடியதாயும் உள்
அட்டவனை 1
சிறகவரை வித்துக்கள் (9/10
பேதம் ஈரப்பற்று புரதம்
SLS பேதம் 80 - 160 29 * 8-4 س }
U.P.SGuglib 8' 0 - 200 333-3
S. L. S - இலங்கைப் பேதங்க U. P. S. - utiust நியூகின்? Ffrif,
* உதவி விரிவுரையாளர், பயிர் விஞ்ஞானப்
18

றவிருஜ் அருளானந்தம் B. Sc Agri (Hons). 苓
Obus (இதன் தற்போதைய சந்தைவிலை ரூ. 450
பரிய கிலோ. க்கப் கும். சிறகவரையின் பிரத்தியேக சிறப்பம்
) ஒரு சம் என்னவெனில் மற்றைய மரக்கறிகளைப் பட்டு போலல்லாது, இதன் எல்லாப்பகுதிகளும் ல்லா உண்ணக்கூடியதேயாகும். இதன் இளம் 'gith a 60 puttig, air (Green pods), g)2a56ir, 6.5 னும் துக்கள், வேர்முகிழ்கள் (Root tubers) யாவும் ாவில் புரதம் விற்றமின்கள் நிரம்பிய, ஒர் உண றைய வாகும். இலைகளும், தண்டுகளும் விலங்கு இது உணவாகப் பயன்படுத்தப்படும். சிறகவரை எளி யின் போசணைப்பெறுமதிகள் கீழ்வரும் ளது. அட்டவணைகளில் (1,2) தரப்பட்டுள்ளது.
ரின் அண்ணளவான சேர்க்கை
கி. ஈரநிறை)
காபோவைதரேர் கொழுப்பு தரேற சாம்பல் மீதி நாா -
“5 | I l'0ー23・0 2 I ۰ 8 - 3 69 3* 6-6*1
3* 5-6*1
.3 10-4"이 210 - 373
r
பகலாசாலைப் பேதங்கள்
குதி விவசாய பீடம் பேராதனை பல்கலைக் கிழகம்

Page 23
ஊற்று: 9 (4) 18-25 (1981)
அட்ட்வணை 2
சிறகவரையின் உண்ணக்கூடி
(ஈரநிறை அ | பேதம் ..ே : பதம் உறையங்கள் (Tube
(Tender-Pods)
S. L. S Gug5tb | 1ʻ5 — 3.2 | 2. 3 — ; U. P. S பேதம் 1.3 - 30 39 -
இத்தாவரத்தின் வேர்ச்சிறுகணுக்களில் ஒன்றியவாழியாக வாழும் றைசோபியம் பற்றீறியா நுண்ணுயிர் வளிமண்டல நைதர சன பதிக்கும் தன்மை கொண்டதால் மண்ணே வளம்படுத்தலிலும் உ தவிபுரிகிறது. இப்பயிரானது மற்றைய அயனமண்டல அவரையங்களைவிட அதிகளவிலான வேர்ச் சிறு கணுக்களை உற்பத்தி செய்வதினுல் அதிகளவில் நைதரசன் (N) [gir LDsirri 75150 கி. கி/ஹெ/வருடம்1 பதிக்கவல்லது. அத்துடன் மற் றை ய அவரையங்களை போன்று (சோயா, உழுந்து, பயறு) இதற்கு நைதரசன் உட்பு குத் த ல் (noculation) செய்யவேண்டிய அவசியமும் இல்லை, இத னல் சிறகவரையை, முதல் பயிரிட்டு பின்பு அவ்விடத்தில் வேறுபயிர் செய்வதினுல் அதி களவு உற்பத்தி பெறமுடியும் என அறியப் பட்டுள்ளது.
ஆகவே சிறகவரையானது இலங்கை யில் பெருமளவில் ஒர் தானிய அவரைய மாகவோ அல்லது சிறப்பாக வீட்டுத் தோட் டங்களில் சிறுபண்ணைகளில் ஓர் மரக்கறிப் பயிராகவோ வளர்க்க முற்றிலும் உகந்தது.
தாவரவியல்
சிறகவரையானது, ஓர் ஏறும் பல் லாண்டுப் பூண்டுத் தாவரமாகும். இது சாதாரணமாக கொழுகொம்புகளின் உ தவி

ய பகுதிகளின் புரதச் சேர்க்கை டிப்படையில்; கி/100கி)
rs) இலைகள் ld,
*9 4·6一11·s 丞·5一27
81 47 - 10.2 1-G - 2-9
யுடன் 3 -4 மீற்றர் உயரத்திற்கு வளரும். இதன் வெள்ளை, நீலம் அல்லது ஊதாநிறப் பூக்கள் தன் மகரந்த சேர்க்கைக்கு இசை வடைந்தன. இதன் உறையங்கள் (Pods) 6-35 சமீ. நீளமாயும், 6-20 விதை/உறை யம் கொண்டதாயும் இருக்கும். இதன் வித்துக்கள் (சோயாவிலும் சிறிது பெரியது) வெள்ளை, மஞ்சள், கபிலம், கறுப்பு அல்லது புள்ளி விழுந்ததாய் இருக்கலாம். இது பேதங்களிற்கேற்ப வேறுபடலாம்.
சூழற் தேவைகள்
சிறகவரையானது சிறப்பாக FD՞-9Այ6նr மண்டல பிரதேசநாடுகளில் சிறந்த வளர்ச் சியையும் அதிகவிளைவையும் கொடுக்கும். இலங்கையில் எப்பிரதேசங்களிலும் பயிர் செய்யப்படலாம். நிேலமட்டத்திலிருந்து 6000 வரை) சிறகவரை, குறைந்த வெப்பு நிலையிலும் வளரக்கூடியது. அனேக உள். ளூர் பேதங்கள் ஒளிக்கு அாண்டற்பேற்றைக் காட்டும் தன்மையுடையன. (PhotoSensive) அதாவது இது ஒரு குறுகிய நாட் 5Talgud T5th (Short-Day-Plant. இதனல் இப்பேதங்கள் பெரும்போகத்திலேயே பயிர் செய்யப்படலாம். ஆனல் தற்போது ஆண்டு முழுவதும் பயிர் செய்யக்கூடிய அறிமுகப் படுத்தப்பட்ட வெளியூர்ப் பேதங்கள் விவ சாயிகளுக்கு கிடைக்கக்கூடியதாய் உள்ளது. .
9

Page 24
ssippi 9 (4) 16-25 (1981)
அத்துடன் ஒளிக்கு தூண்டற்பேற்றைக்க L-T5 சில உள்ளூர்பேதங்களும், உ+ SLS-47 தற்போது உள்ளன.
இப்பயிரின் வளர்ச்சிக்காலத்தில் ந: பரம்பலடைந்த மழைவீழ்ச்சி இருத் நன்று. சாதாரணமாக 1500 மி.மீ. ம வீழ்ச்சி போதுமானது. மற்றைய அ மண்டல நாடுகளில் இப் பயிரானது நீ பாசனத்தின் உதவியுடன் சாதகமா பயிர் செய்யப்படுகிறது. நீண்டு பர வேர்த்தொகுதியைக் கொண்ட பல்லால் தாவரமாயிருப்பினும் சிறகவரையா6 தொடர்ந்த வரட்சியை தாங்கும் தன் யற்றது. தற்போது வரண்ட பிரதே களுக்கு உகந்த பேதங்களும் தெரிவு யப்பட்டுள்ளன.
இவ்அவரையானது பல்வேறுப மண்நிலைமைகளின்கீழ் வளரும் தன் யுடையது. மணற்பாங்கான இரு வா அல்லது குறைந்த களிகொண்ட நிலங்க வளரக்கூடியது. அதிகளவில் வேர்ச் கணுக்களை தோற்றுவித்து N, பதிப்பத போசணை குறைந்த மண்நிலைமைகளி வளரக்கூடியது. எனினும், நீர் தேங்கி கும் மண்நிலைமைகளில் மிகக் குறை வளர்ச்சியைக் காட்டும். இப்பயிரின் வலி சிக்கு 55-7pH உகந்தது. சாதாரண இப்பயிர் அதிக ஒளிச்செறிவைத் தா கூடியதாயினும் குறைந்த ஒளிச்செ நிலைமைகளில் உறையத்தின் நீளமும், உறையத்திலிருக்கும் விதைகளின் எண் கையும் அதிகரிக்க காணப்பட்டுள்ள எனினும் அதிக நிழல் அளித்தல் விருட தக்கதல்ல.
பேதங்கள்
தற்போது அனேக உள்ளூர் பே: Gibib ( SLS 1, SLS 3“ SLS 7, SLS 1. SLS 31, SLS 44, SLS 47) egy ólyp5ül. 35LÜLJL -- 3u 35 iš 5 Gbih (UPS 31, UPS
20,

fT L'
ன்கு
ழை
Li $rrւն ாகப்
ண்டு
னது
O
சங்
சய்
தங்க 29, படுத் 32,
UPS 47, UPS 66, UPS 99, UPS 102, UPS 121, CHIMBU, TPT 1. TPT 2, TPT 6, TPT 8, LBNC 1 , LBNC 2,
- THAILAND-D i C 3, C 6, KADE 6/6,
PT 904) இலங்கையின் பலபாகங்களிலும் பயிரிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள் ளது. பல உள்ளூர்ப் பேதங்கள் சிறந்த
வளர்ச்சியையும், விளைவையும் காட்டியுள் ளன. (உ+ம் : SLS 47) எனினும் அறி
முகப்படுத்தப்பட்ட பேதங்களே சிறந்த
வித்து விளைவைக் காட்டுகின்றன. மரக்
கறி உணவாக வளர்க்க உள்ளூர்ப்பேதங்
கள் உகந்தன. தற்போது எமது சூழலுக்
குகந்த உள்ளூர்ப்பேதங்களையும் சிறந்த விளை வைத்தரும் வெளியூர்ப்பே தங்களை யும், கலப்பு பிறப்பாக்கம் செய்து அதிலிருந்து
சிறந்த சந்ததிகளைப் பெறுவதில் விவசாயத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
பயிர்ச்செய்கைக்கு விவசாயிகள் வித் துக்களை விவசாய விரிவாக்க உத்தியோகத்
தர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
நடுகைக்காலம்
இலங்கையில் இது பெரும்போகத்தில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சிறுபோ
கத்தில் நீர்ப்பாசன உதவியுடனும் பயிரி
டப் படலாம். அறிமுகப்படுத் த ப் பட்ட பேதங்கள் ஆண்டுமுழுவதும் நீர்ப்பாசனத்
தின் உதவியுடன் பயிர் செய்யப்படலாம்.
இனப்பெருக்கல்
தற்போது முற்றிலும் வித்துக்களினுல் பயிர் செய்யப்படுகின்றது. இவ்விதைகளின் Gup&ərTAğ 5 gö 3 fT 63) lib (Germination-Period) சாதாரணமாக 14 நாட்களாகும். ஆனல் 24 மணிநேரம் நீரில் ஊறப்போடுவதினல் இக்காலத்தைக் குறைக்கலாம். தற்போது வெட்டுத்துண்டு (Stem-Cuttings) பாவித்து, பதிய முறையினல் பீபிரிடப்படலாம், என அறியப்பட்டுள்ளது,

Page 25
ஊற்று: ) (4) 18-25 (1981)
நிலப்பண்படுத்தல்
நிலத்தை நன்கு கொத்தி அல்லது உழுது அதனுடன் கூட்டெரு அல்லது காய்ந்த மாட்டெருவை (10 கி. கி. / மீ*) நன்கு சேர்க்கவும். நீர் வடியும் தன்மையற்ற நிலைமைகளில் வரம்பு - சால் அமைத்து, வரம்புகளில் நடலாம். போசணை வளம் குறைந்த தரைகளுக்கு பின்வரும் அளவில் N, P. K ஆரம்ப பிரயோகம் அளித்தல் நன்று.
பிரயோக அளவு (கி. கி / ஹெ)
25-50 அமோனியம் சல்பேற் 25-50 அடர் சுப்பர் பொசுபேற் 40-50 மியூறியேற் பொற்றசு
அல்லது நடுகைப் புள்ளிகளில் 03 x0 3 x 03 மீற். குழிகள் வெட்டி அதில் 15 கி. கி கூட்டெரு இட்டு பின் அவற்றில் நடலாம். வரண்ட நிலங்களில் நீரிழப்பைக் குறைக்க மண்ணை அதிகளவில் உழாது நடுகைப் புள்ளிகளைச் சுற்றி மண்ணைப் பதப்படுத்தி நடலாம் மேலும் நீரிழப்பைக் குறைக்க பத்திரக்கலவை (Soil Mulching) இடல்நன்று.
நடுகைமுறை
இது பலவிதங்களில் பயிரிடப்படலாம்.
- வேலி ஒரங்கள் அல்லது வீட்டு எல் லைகளில் 2 மீற். தூர இடைவெளிக ளில்,
- வயல்வரம்புகளில் 2-2.5 மீற். இடை
வெளிகளில்.
- வீட்டு தோட்டங்களில் 60 சமீ x 60
sfuß, 60 g Lß× 90 g-Lß, 1.× 15 Lßö,
1 ×1 Lßb, 1 × 2 Lßö, 15 × 2'5 u8ö, இடைவெளிகளில் வளர்க்கலாம்.

- பெருமளவில் வித்துக்காக வளர்ப்பின் 40 சமீ x 40 சமீ. 25 x 25 சமீ. (150,000 தாவரம் / ஹெ). இடை வெளிகளில் வளர்க்கலாம். இதனல் மிக அதிகளவு விளைவு பெறலாம்.
பயிர் இடைவெளியானது எத்தேவைக் காக உ+ம் : உறையம், வித்து, முகிழ், மூடுபயிர் அல்லது இடைப்பயிராக வளர்க் கப்படுகிறது என்பதில் தங்கியுள்ளது. அறி முகப்படுத்தப்பட்ட பேதங்களின் வளர்ச்சிக் காலம் குறைவானதால் இவற்றி ற் கு நெருக்கமான பயிர் இடைவெளியும், உள் ளூர் பேதங்கள் அதிகநாட்கள் வளர்வதால் இவற்றிற்கு நீண்டபயிர் இடைவெளியும் அளித்தல் நன்று.
ஒவ்வொரு நடுகை புள்ளியிலும் 3-4 விதைகளை, 2-3 சமீ ஆழத்திற்கு நடவும். பின்பு மிக வீரியமாய் வளரும் இரு நாற் றுக்களை விட்டு மற்றையதை அகற்றி விட வும்.
களைகட்டல்
இப்பயிரின் ஆரம்பவளர்ச்சிவீதம் குறை வானதால் இக்காலங்களில் களைகளின் தொல்லை இருத்தல் கூடாது. ஓர் நன்கு பண்படுத்திய விதைமேடை களைகளின் போட்டியை குறைக்கும். சாதாரணமாய் 2-3 களைகட்டல் போதுமானது.
பயிர் ஆதாரம்
இப்பயிருக்கு ஆதாரம் அளிப்பதினல் அதிக வளர்ச்சி வீதத்தையும், விரைவில் பூக்கவும், வேர் முடிச்சுகளை அதிகமாய் உண் டாக்கவும், கூடிய உறையம், வித்து விளை வும் பெறச்செய்யலாம். இதனல் சிறகவ ரையின் வளர்ச்சிக்காலத்தில் ஆதாரம் வழங்குதல் முக்கிய ஒரு பயிர்ச்செய்கை முறையாகும். இவ் ஆதாரம் வசதியான பலவழிகளில் நடப்படலாம். அதாவது கொழுகொம்புகள் பாவித்தோ அல்லது பந் தல் முறையாகவோ ஆதாரம் அளிக்கப் படும்.
21

Page 26
ஊற்று 9 (4) 18-23 (1981)
கொழுகொம்புகள், தனி ஒரு கொழு கொம்பாக அல்லது மூன்று கொழுகொ புகள், முக்கோணவடிவத்திலோ நாட்ட லாம். பந்தல்கள் நிலைக்குத்தாக அல்லது கிட்ையான நிலையில் அமைக்கலாம். அ
1. தனி கொழுகொம்பு 3, முக்கோண பந்தல்
5. கிடையான பந்தல்
வில் செய்யலாம். நட்டு 3 கிழமைகளின்பி இவ்வாதாரங்களை நடலாம். எனினும் த. போது ஆதாரம் தேவையற்ற குட்டையா6 (சோயாஅவரையை ஒத்த) சிறக வ ை இனங்களை தெரிவுசெய்வதிலும், அல்ல!
22
 
 

லது வளரும் மரங்களில் சிறப்பாக "சீமைக் GcupGoa'' (Gliricidia) இப்பில்-இப்பி (Leucenea-leucocephala) aölá LJL- T 67 - து லாம். எல்லா ஆதாரங்களும் 2-2.5 மீற். ல் உயரம்வரை இருப்பின் அறுவடை இலகு
2. இரு கொழுகொம்பு அமைப்புப்பந்தல் 4. நிலைக்குத்தான பந்தல்
6. வேலி அமைப்புப் பந்தல்
ா விகாரம் மூலம் இவ்வகை பேதங்களை உண் ற் டாக்குவதிலும், விஞ்ஞானிகள் கவனம் ா செலுத்துகின்றனர்; ஏனெனில் பெருமளவு பயிர் செய்கைக்கு இவ் ஆதாரம் அளித்தல் ஓர் பிரதிகூலமாய் உள்ளதேயாகும்.

Page 27
ஊற்று: 9 (4) 18-23 (1982)
நோய் பீடைகள்
தற்போது இலங்கையில் யாதுமொரு முக்கிய நோய்பீடைகள் சிறகவரையை தாக்குவதாக அவதானிக்கப்பட வில் லை. எனினும் சில இலை உண்ணும் வண்டுகள், புழுக்கள், வைரசு என்பன தாக்குவதாய் அவதானிக்கப்பட்டுள்ளது.
பல்லினப் பயிர்ச்செய்கை,ஊடு பயிர்ச்செய்கை
சிறகவரையானது, N, பதிக்கும் தன்மை யுடையதால் இதை மற்றப்பயிர்களுடன் சேர்த்து வளர்ப்பதால், பலநன்மைகள் உள. இப்பயிரை சோளம், இறுங்கு, வாழை, கரும்பு என்பவற்றுடன் இடைப்பயிராக வளர்க்கலாம். தென்னையின்கீழ் சிறகவரை யை ஒர் இடைப்பயிராகவும், ஓர் மூடுபயி ர்ாகவும் வளர்க்கலாம். சிறகவரையை மற் றைய அவரையங்களுடன் அல்லது மரக் கறி பயிர்களுடன் பலவினப்பயிர்ச்செய்கை செய்யலாம். இதனல் ஓர் விவசாயி ஒரு குறிப்பிட்டஅளவு நிலத்திலிருந்து அதிகளவு இலாபத்தை பெறலாம்.
சிறகவரையை நெல்வயல்களில் அறு வடையின்பின் வளர்ப்பதால் மண்ணுக்கு N சேர்க்கப்படும். சிறகவரை-வ்த் தாளை, நல்-சிறகவரை-உருளைக்கிழங்கு என்பன ஒரு சுழற்சி பயிர்செய்கையாகவும் செய்ய ' GIT).
அறுவடையும் விளைவும்
சிறகவரையானது சோயா அவரையின் உறையங்களைப்போல், ஒரேநேரத்தில் முற்று வதில்லை. ஆதலால் விளைவு தொடர்ந்து பலமாதங்களுக்குப் பெறலாம். (6 மாதம் வரை) அறுவடைக்காலம், நடுகைக்காலங் களில் தங்கியுள்ளது. புரட்டாசி, ஐப்பசி w மாதங்களில் பயிரிடின் பசிய உறைய அறு வடையானது நட்டு சுமார் 9-10 கிழமை களில் தொடங்கலாம். சாதாரணமாய் மகரந்தச்சேர்க்கை நடந்து 2 கிழமைகளின்

பின் உறையங்களை ஒர் மரக்கறி உணவாக (Green-Vegetable) gegyGu80)L.- Garuüugurrub. இவ்வுறையங்கள் விரைவாக முதிர்வதால் மகரந்த சேர்க்கையடைந்து 3-34 கிழமை களின் பின் கூடியநார் கொண்டும் சுவை குறைந்தும் காணப்படும். மகரந்தச்சேர்க்கை முடிந்து 6 கிழமைகளின் பின் முற்றிய வித் துக்களை அறுவடைசெய்யலாம். எனினும் தற்போது இலங்கையில் இது பெரும்பாலும் மரக்கறி உணவாகவே அறுவடை செய்யப் படுகின்றது. இளம் உறை யங் களை தொடர்ந்து ஆய்வதினுல் விளைவு பல மாதங் களுக்கு பெறப்படலாம். சிறகவரை பல் லாண்டுப் பயிராயினும் தற்போது ஓராண் டுப் பயிராகவே கருதப்பட்டு, விளைவு மிக வும் குறைவடையும் போது, நட்டு 6-8 மாதங்களின் பின் புதிதாக மீண்டும் நடப் படும். விளைவானது பேதங்களிலும், பயிர்ச் செய்கை முறைகளிலும், காலநிலையிலும் தங்கியுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக, விவசாயப் பீடத்தில் நடத்திய பரிசோதனைகளின்படி
S L S 47 —55* 8 m ton / ha T PT 2 -59 - 5 m ton / ha U P S 122-51 · 5 m ton / ha U P S 99-36: 7 m ton / ha uSulu உறைய விளைவையும்
UPS 122 - 3 1 0 1 Kgr / ha
UPS 121 - 287 5 Krg / ha
TPT 2 - 2 703 Kgr / ha
SLS 47 - 2546 Kgr / ha
Thailand-D-— 23 23 Kgr / ha Gígjögl
விளைவையும் காட்டியுள்ளன.
எனினும் உள்ளூர் நிலைமைகளின்கீழ் 17-25 m ton / ha LuśFuu gp60oppuu 6N&MT GMau யும், தானிய அவர்ையமாய் வளர்ப்பின் 1000-2500 Kg |ha வித்து விளைவையும் பெறலாம். சில பேதங்களில் 4000-4500 Kg I ha முகிழ் விளைவை வளர்ச்சிக்காலத் தின் இறுதியில் பெறலாம்,
23

Page 28
ஊற்று: 9 (4) 24-26 (1981)
திராட்சைப் பழத்திலிரு
தற்போது யாழ்ப்பாணத்தில் பயிரிடட் படும் திராட்சைப் பழங்கள் அறுவடை யின் பின் பழமாகவே விற்கப்படுவதனல் அறுவடைக்காலத்தில் விலை பெரும ள வி வீழ்ச்சியடைகின்றதை நாம் அவதானிக்கக் கூடிய ,ாக உள்ளது. இப்படியான அறு வடைக்கால விலைவீழ்ச்சி அநேகமான, இலகு வில் பழுதடையக்கூடிய விவசாய விளை பொருட்களை, உற்பத்தி செய்வோரை கடு மையாகப் பாதிக்கின்றது. ஆகவே தகுந்த பதப்படுத்தல், வைன் தயாரித்தல் போன்ற முறைகளினல் நாம் விளைபொருட்களை பழு தடையாது சேமிப்பதுடன் விலை வீழ்ச்சியி லிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். பழமாகவே விற் பதில் உள்ள மற்றைய பிரச்சனை இவற்றை கொண்டுசெல்வதற்கு உரிய செலவு அதிக மாகும். வைன் தயாரித்தபின்னர் இது செறி வாக்கப்பட்ட விளைபொருள் ஆகையால் கொண்டுசெல்வதற்கு உரிய செலவு குறை வாகவே இருக்கும்.
உலக மொத்த திராட்சைப்பழ உற்பத்தி யான 60 மில்லியன் மெட்றிக் தொன்களில் பெரும்பகுதி உவைன் தயாரிப்புக்கே பயன் படுகின்றது.
வைன் தயாரிப்புக்குகந்த திராட்சைப் பழ
வர்க்கம் எது ?
தயாரிக்கப்படும் வைனின் தரம் முக்கிய மாக பாவிக்கப்படும் பழத்தின் தரத்தி லேயே தங்கியுள்ளது. இலங்கையில் பய ரிடப்படும் முக்கிய இனம் விட்டிஸ் லினிபெரு (Vitis vinifera) இவ்வினத்தில் பலபேதர் களையே நாம் பயிரிடுகிருேம். உதாரணமாக
* விவசாய பீடம், பேராதனைப் பல்கலைக் கழகம்
24

s
ந்து வைன் தயாரித்தல்
இரா. ஜீ ரஞ்சன் 宋
KABUL - agi உண்பதற் CONCORD - G5IraiyGstill ೬:೫ಅ
SEMILLON -- GogFÁSGBarTGT - Gapanlar 5 LITT
ரிப்பதற்குகந்தது
"galog Guái sayil ' ' (Israel black) என்னும் இனமும் பயிரிடப்படுகிறது. இவற் றின் இனிப்புத்தன்மை காரணமாக இவை யும் வைன் தயாரிப்பதற்குப் பயன்படுத் தப்படலாம். w
வைன் என்றல் என்ன ?
வைன் என்பது நன்கு முற்றிப்பழுத்த திராட்சைப் பழங்களை நொதித்தலடையச் செய்யும்போது கிடைக்கும் விளைவாகும், இங்கு நொதித்தலடையச் செய்யும் காரணி மதுவம் ஆகும். நொதித்தல் பழத்தின் தன்மையிலும், சூழல் வெப்ப நிலையிலும் தங்கியுள்ளது. திராட்சைப் பழங்க ளின் வெளித்தோலில் ஒரு மெழுகுப் படலம் உண்டு, இது பழத்தை பாதுகாத்துவைத் திருக்க உதவும். ஆனல் நாம் பழங்களேக் கசக்கிப் பிழிவதன் மூலம் பழச்சாறை காற் றுடன் தொடர்புகொள்ளச் செய்கிருேம். இதனுல் வளியில்உள்ள மதுவம் பழச்சாற்றி னுட் சென்று அதன் தொழிற்பாட்டை ஆரம்பிக்கும். திராட்சைப் பழச்சாற்றில் பெருமளவு குளுக்கோசும் ஓரளவு பழவெல் லமும் உண்டு, நொதித்தலின்போது இது அற்ககோலாவும் (Alcohol) காபனீரொட் சைட்டாகவும் மாற்றப்படும்.
நொதித்தல் அற்ககோல் + CO,
(மதுலம்)
வெல்லம்

Page 29
Sifjgy: 9 (4) 24-26 (1981)
பழச்சாற்றிலுள்ள பழவெல்லம் முடிவடைந் ததும் நொதித்தலும் நின்றுவிடும். இந்த நடைமுறையின்பின்னர் வளைவாகக் கிடைக் கும் திரவ்க்கரைசலில் அற்ககோல் உண்டு. இக்கரைசலை நாம் ஒரு மிகவும் எளிமையான வைன் ஆகக் கருதலாம். இந்தக் கரைசலை பின்னர் வடித்து தெளிவாக்குவதன்மூலம் தூய வைனைப் பெறலாம்.
தரமான வைன் தயாரிப்பது எப்படி ?
ஒரு வைன் தயாரிப்பாளர் பின்வரும் இரு காரணிகளை கருத்தில் கொள்ளவேண் டும்.
(அ) பழச்சாறிலுள்ள 'பழவெல்லத்தின்
அளவு · (ஆ) சாறின் ‘* புளிப்புத்தன்மை ”
[ Tartness )
இல்ெ (9) மிக முக்கியமானது. ஏனெ னில் சாறிலுள்ள பழவெல்லத்தின் அளவே. இறுதி விளைவான வைனிலுள்ள அற்க கோலின் அளவை நிர்ணயிக்கும். சிறந்த வைனில் 10 - 12 % அற் க கோல் இருக்கும். பொதுவான ஒரு நடைமுறை விதியாக 2% பழவெல்லம் உள்ள சாறு 1% அற்ககோலை தருவதாகக் கொள்ளப் படலாம். ஆகவே 11% அற்ககோல் உள்ள வை&னத் தயாரிப்பதற்கு ஆரம்பத்தில் நாம் எடுக்கும் பழச்சாறில் 22% பழவெல்லம் இருக்கவேண்டும். ஆனல் நம் நாட்டில் வளர்க்கும் திராட்சை இனங்களில் இவ்வளவு பழவெல்லம் இருப்ப தி ல் லை. ஆகவே குறையை நிரப்புவதற்காக நாம் சீனியை சாற்றுடன் கலக்கலாம். சீனியிலிள்ள சுக்கு ரோசு எனப்படும் தாழ்த்தப்படாத வெல் லம் திராட்சைப் பழச்சாற்றுடன் கலக்கப் பட்டதும் தானகவே பழவெல்லமாக LonTrib றப்பட்டு விடும்.
திராட்சைப் பழங்களை நன்கு முற்றிய பின் கொடியிலிருந்து பறித்து நன்கு கழுநி
ല-4

வியபின் அவற்றை ஒரு பிளாத்திக்கினலான வாளியினுள் இட்டு நசிக்கவேண்டும். நசிப் பதற்கு சிறு இயந்திரங்கள் உள்ளனவாயி னும் சிறு அளவில் நாம் சுத்தமான இறப்: பர் காலுறைகளை அணிந்துகொண்டு மிதிப் பதன் மூலம் எமது தேவையை பூர்த்தி செய்யலாம். பின்னர் தண்டுகளை அகற்று வதன் மூலம் புளிப்புத் தன்மையை ஒரளவு குறைக்கலாம். வைனின் செந்நிறத்துக்குக் கTரனமான நிறப்பொருள் மணிகள் திராட் சைப் பழத்தின் தோலிலேயே உள்ளது. ஆகவே தோலையும் சேர்த்து நொதிக்கவிடு வதன் மூலம் வைன் செந்நிறமுடையதாக இருக்கும்.
இப்படிப் புளிக்க விடப்பட்ட வைன னது பற்றீரியாக்களினல் பழுதடைவதை தடுப்பதற்கு " மெற்ரு ' என அழைக்கப் படும். " பொட்டாசியம் மெற்ற சல்பைற் றை ' 4 அவுன்ஸ் / 100 இருத்தல் திராட் சைப்பழம் என்ற வீதத்தில் சேர்க்கவேண்
டும்.
நொதித்தலை தொடக்குவதற்கும் நாம் * உலர்த்தப்பட்ட வைன் மதுவத்தை உபயோகிக்கலாம். சாதாரணமாக திராட் சைப்பழங்களில் இந்த மதுவம் இருக்கும். நொதித்தல் ஆரம்பித்தவுடன் திண்மப் பொருட்கள் மேலே மிதக்கும். இவற்ற்ை ஒரு நாளைக்கு இருதடவையேனும் கீழே யுள்ள சாற்றுடன் நன்கு கலந்துவிட வேண் டும். வாயுக்குமிழ்கள் வருவது நின்றதும் நொதித்தல் நடைபெற்று முடிந்து விட்ட தாக கருதப்படவாம்.
இப்படி நொதித்த சாற்றை ஒரு மள் லின் துணியினல் (வடிக்கும் துணி) நன்கு வடித்து சக்கையையும், மதுவத்தையும் அகற்றலாம். வடித்த பண்படுத்தாத வைனை 5 கலன் அளவுள்ள கண்ணுடிச் சர்டிகளில் ரம்ப ஊற்றி அடைத்து வைக்கலாம்.
25

Page 30
ஊற்று: 9 (4) 24-26 (198)
6S வெளியேறத லீறு
uિng) போது
படத்தில் காட்டப்பட்டது போன்ற ஒரு மூடியைப் பயன்படுத்துவதன் மூலம் உள்ளே தொடர்ந்தும் உருவாகும் காபனீரொட் சைட்டு வாயுவை வெளியே அகற்றலாம் வளிமண்டலத்துடன் தொடர்பும் குறை வாக இருக்கும். இம்முடிவினல் வைன் பழு தடையாது பாதுகாக்கப்படும். பாதுகா! பாக * தேக்கரண்டி " மெற்ரு 'வை கலன் வைனுடன் கலக்கலாம்.
பண்படுத்தாத வைனை தெளிவாக்குவது எப்படி ?
முன்பு தயாரித்த கலங்கலான வைஃ இயலுமான அளவு குளிர்ச்சியான சூழலி சேமித்துவைக்கவும். குளிர்சாதன வச கள் இருப்பின் 0°C க்கும் குறைந்த வெப் நிலையில் வைத்தல் விரும்பத் த க் க து குறைந்த வெப்பநிலையில் 3-6 மாதம்வை வைத்திருப்பதனல் கரைசலில் தொங்க நிலையில் காணப்படும் மாசுக்களை படி விடலாம்.
ጳ” இதன் பின்ன்ர் ஒரு இறப்பர் குழாை சாடியினுள் விட்டு மெதுவாக உறிஞ்சி மேற்பகுதியிலுள்ள தெளிவான வைக்
26
 
 

ió
இன்னுமோர் சாடியினுள் போக்கலாம் ISiphon off7. Globagöl'u Gyp60pu?6ü இறப்பர்க் குழாயைப் பயன்படுத்துவத ஞல் அடியில் படிந்துள்ள மண்டி(மாசு) கலங்காமல் இலகுவாக வைனை மாற்ற முடியும்.
இருமுறை மாற்றுவதன்மூலம் சுத் தமானதும், தெளிவானதுமான வை னைப் பெறலாம். இரண்டாம் முறை மாற்றும்போது பற்றீரியாக்களினல் பழுதடையாமல் பாதுகாப்பதற்கு 4 தேக்கரண்டி "மெற்ரு’*வை 5 கலன் வைனுடன் கலக்கலாம். இந்த வைனை உடனடியாக பாவிப்பதற்கும் உபயோ கிக்கலாம். சேமித்துவைக்க வேண்டு மாயின் சுத்தமான சிறிய போத்தல்க ளில் முற்றகநிரப்பி(காற்று குறைவாக இருப்பது நல்லது) த க் கை யி ஞ ல்
அடைத்து மெழுகிட்டு காற்றுப் புகுதலைத்
தடைசெய்யலாம் (Seal). இந்த நிலையில் பல வருடங்களுக்கு சேமித்து வைக்கமுடியும்.
முடிவாக தயாரிக்கப்படும் வைனின் தரம் தயாரிக்கப்பட்ட முறைக்கேற்ப மாறு படும். உலகப்புகழ்பெற்ற வைன் தயாரிக் கும் நகரங்கள் (உதாரணமாக, மார்ஸெ யில்ஸ் துறைமுகம், பிரான்சு) நீண்டகால பயிற்சியின் பின்னரே சிறந்த தரமுடைய வைன்களை உற்பத்தி செய்தன. வைன் தயாரிப்பின் அடிப்படைத் தத்துவங்களை நன்குபுரிந்துகொண்டு நடைமுறையில் வைன் தயாரிக்கும்போது சூழலில் ஏற்படும் வெப்ப நிலை மாற்றம், பழத்தில் உள்ள சீனியின் அளவு ஆகியவற்றை அனுபவ வாயிலாக கட்டுப்படுத்துவதன்மூலம் காலக்கிரமத்தில் நமது நாடும் வைனுக்குப் புகழ்பெற்ற ஒரு இடமாக மாற்றப்படலாம். அத்துடன் அறு வடைக்காலத்தில் ஏற்படும் விலை வீழ்ச்சியி விருந்து எம்மைப் பாதுகாக்கக்கூடியதாக வும் இருக்கும்.
உசாத்துணை நூல்கள் : 1. United States Agricultural Information.
Bulletin No. 410
2. "Grapes Into Wine' By Philip Wagner

Page 31
நீங்கள் மில்க்வைற் : ஆதரவின்
வசதி, வாய்ப்பு, பயன் கருதி வீட்டுத்தோட்டம் விருத்தி ெ
பனை வளம் பெருக்கிப் பயன்
:
பசளைதரும் செடிகள் மரங்க%
இ) ஊர்கள்தோறும் குளங்களை ஆ
ක්‍රි சனசமூக நிலையங்களில் வாசிக் இ பக்திநெறியில் பரம்னைப் பண ஐ எல்லோரும் எல்லோருக்கும் ஞ) வள்ளுவர் நெறியில் வையகம் t −
இ எல்லோரும் யோகாசனம் பய
மில்க்வைற் மேலுறைகளைச்
பரிசில்களைப் பெற்று
மில்க்வைற் சவர்க் 5· பெ. இல, 77
 

யினருக்காகநமரம்நடுக oC) säaiööa EE FOR POSEERITY
黎瑟器颚
* ఫిన్ P икиiевер Morks, vapra.
தயாரிப்பு/க்குத் தரும் r Luuvaðir
மரங்களை நடுதல்.
சய்தல். IG) பெறுதல்.
T உண்டாக்குதல். ழமாக்கி மழை நீரைத் தேக்குதல். க வழி செய்தல் ரிந்து வாழப் பயிற்றுதல். சேவை செய்தல்.
வாழ வழி வகுத்தல்
பில வைத்தல்.
சேகரித்து பெறுமதிவாய்ந்த துக்கொள்ளுங்கள்.
காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்

Page 32
O9th
LEVER BROTHE

Vy
S (Ceylon) LIMITED

Page 33
g) 66)
கிழக்கிலங்கைப் பட்டினமாம் மட்டக்கள்
கப்பட்டு மாணவர்கள் அனுமதிக்கப்பட சாயம் முக்கிய துறையாக அமையவிருக்கி
ஈழத்திருநாட்டின் உணவு உற்பத்தியி செய்துவருகிறது. ஆயினும் இற்றை நாள் மக்கள் வரை செறிய எவ்வித வாய்ப்புப் இப் பிரதேசத்திற்குக் கிட்டவில்லை. ஆரம்ப களை உருவாக்குவதோடு, அறிவியல் உண அதன்பயணுக பிரதேச பொருளாதார வ அமையவேண்டும் என்று ஊற்று எதிர் ப களப்பு வளாகம் சிறந்து வளர்க என
யாழ்ப்பாண பல்கலைக் கழகம் உரு தலைவி, யாழ். பல்கலைக் கழகத்தில் விவ அளித்திருந்தார். இன்றைய அரசாங்கம் யக் குழு, யாழ். பல்கலைக் கழகத்தில் 6 கையளவில் ஏற்றுக்கொண்டது,
இற்றை நாள்வரை அப்பீடம் உருவ கலாம். ஆயினும் இப் பீடம் உருவாக உற்பத்தியில் அக்கறையும், கரிசனையும் உ கொள்ள மாட்டார்கள். எவ்வித சாட் வெறுமை நிறைந்தமையே. நாட்டினது சாய, நீர்வள அபிவிருத்தி ஆகியவைகளை அடிப்படை நிறுவனங்கள் விவசாய பெ
யாழ் பல்கலைக் கழகத்தில் விவசாய வாக்கப்படவேண்டும். இக் கோரிக்கை 6 விடுக்கப்படுகின்றது. இந் நாள்வரை இன டமே. வடபகுதி விவசாய, பொறி இய ரும் அதிமுக்கிய இவ் விடயத்தில் த * பரந்த முறையில் இயங்கி, தொடர்புை டும். இது தொடர்பாக அறிவியலாளர் அதிபர்கள், தொழிலாளர்கள் அனைவரு படைக் கல்வித் தாபனங்களை உருவாக்க விவசாயம் சிறக்க விவசாயபீடம் உருவ பொறிஇயல் பீடம் உருவாகட்டும். உல ஒழிய அடிப்படைத் தாபனங்கள் உருவ

ஊற்று - விவசாய சிறப்பிதழ்
1981.
ாப்பில் ஒரு பல்கலைக்கழக வளாகம் அமைக் ட்டுள்ளனர். இப் பல்கலைக்கழகத்தில் விவ கிறது.
ல் மிக முக்கிய பங்களிப்பினை கிழக்கிலங்ை ர்வரை அறிவியல் ப யன் கள் அடித்தள ம் அல்லது நிறுவன உதவி ஒத்தாசைகள் பிக்கப்பட்ட பல்கலைக்கழக வளாகம் பட்டதாரி ண்மைகள் அடிமட்ட மக்களிடையே பரவி 1ளர்ச்சிக்கு வழி சமைக்கும் ஒரு நிலையமாக ர்ர்ப்பதோடு, எல்லா வகையிலும் மட்டக்
வாழ்த்துகிறது.
வாக்கப்பட்டபொழுது அன்றைய அரசின் சாய பீடம் அமைக்கப்படும் என உறுதி
பொறுப்பேற்றபின், பல்க்லைக்கழக மானி விவசாய பீடம் அமைக்கப்படுவதைக் கொள்
ாகவில்லை. காரணங்கள் எதுவாகவும் இருக் ாமல் இருப்பதை நாட்டின் உணவு விவசாய உடையவர்கள் எச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக் டுக்களும் சாக்குப் போக்குக் காரணங்களும் ம், பிரதேச பொருளாதார, காணி, விவ திட்டமிட்டு அறிவியல் ரீதியில் உருவாக்கும் ாறிஇயல் பீடங்களே.
, பொறிஇயல் பீடங்கள் உடனடியாக உரு விஞ்ஞான தரவுகளின் அடிப்படையிலேயே வ உருவாக்கப்படாமை மிகவும் துர் அதிர்ஷ் ல் அபிவிருத்தியில் அக்கறை உள்ள அனைவ b கருத்தினை பகிரங்கமாக வெளியிட்டு ஒரு டயவர்களை செயற்பாட்டிற்கு இயக்கவேண் கள், மாணவர்கள், விவசாயிகள், தொழில் ம் ஒருமித்து குரல் எழுப்பி இவ்விரு அடிப் உந்து சக்தியாக பர்ணமிக்க வேண்டும். ாகட்டும். கைத்தொழில், நிலம், நீர் சிறக்க ாவுப் பஞ்சம் ஒழிய, தொழில் வறுமை "கட்டும்.
க. கிருஷ்ணுனந்த சிவம், M. V. Sc.
செயலாளர், ஊற்று நிறுவனம்.

Page 34
ஊற்று: 9 (4) (1981)
Jut
(பேதங்கள், வயது 2-ful)
ஸ்தாபித்த
அவரையினப் பயிர்கள் 1. சோயா அவரை
டேவிஸ் 90 நாள் பொசியர் 92 நாள் திருத்தப்பட்ட
பெலிகன் 91 நாள் PB-1 82 stair ஹேர்னன் 130 நாள் பிராக் 90 நாள் T.K. gav. 5.90 psT6ir ஷீ. ஷி. 90 நாள் ஹார்டி 90 நாள் ஜாபிட்டர் 120 நாள்
2. பாசிப்பயறு
MI-1 3 LDmtssub MI-4 2 LDITsh
3. உழுந்து
MI 3 Lorrsb
ரைப் 9 2 மாதம்
4. கெளடபி
பொம்பே கெளf 3மா ஆர்லிங்டன் 3 மாதம் M-35 24 மாதம்
எண்ணெய்ப் பயிர்கள் 5. நிலக்கடலை
A-20 A-92 3-3 unit. MI- 1 ரெட்ஸ்பானிஷ் 3உகண்டா எரெக்ட் 4 LosT.
வரிசையில் வின
வரிசையில் விை
வரிசையில் விை
வரிசையில் விை
வரிசையில் விை

பயிர் உற்பத்தி
இடைவெளி விதைத் தேவை
5.5a56) 30-48cm x 8cm 60-80kg/ha
தத்தல் 30 x 8cm 20 kg/ha.
தத்தல் 30 x 8C 20 kg/ha
தத்தல் 4.5 x 15cin 20 kg/ha
தத்தல் 60X 10cm செடிவகை
கோதுடையாமல் 120 kg/ha. கோதகற்றின் 80-90 kg/ha படர்வகை
கோதகற்றின்
50 kgha

Page 35
(வயற் பயிர்களின் ப
களை கட்டுப்பாடு
நோய்
வஸ்ஸோ-1 இலீ./60 இலீ./ஹெக். printibody. 65%-6kg/60 இலீ. நீர்/ஹெக். GópsTspaår 50%-1 * 36 kg/ 60 இலீ. நீர்/ஹெக்.
விதைத்து 3 கிழமைகளி னதும், 6 கிழமைகளினதும் பின், எல்லாமாக 2 தடவை களைகட்டுக. மேற் கூறிய இரசாயனங்கள் முளைக் கழன் பாவிப்பலை штеђtђ.
சோயா அவரை போல்
சோயா அவரை போல்
சோயா அவரை போல்
லினுாறன் 50% 26kg/180 Sa8. frf/ha ராம்ருெட் 65% 5kg/180 geë. 5risha பிளனவின் 75% 3kg/180 ga8, fisha
சோயா அவ சித்திர வடி (வைரசு நே வித்துக்களா
sfe ஏபிட்டுகள
பரப்பட புகையிலை வ புள்ளி வைர மஞ்சள் சித்
வடிவு
சேர்க்கொள்
இலைப் புள்ள

யிராக்கல் அட்டவணை)
பயிர் பரிபாலனம்
கட்டுப்பாடு Lʻfo0)L-
ரை நோய்வாய்ப்பட்ட இலையுண்ணும் வு நோய் ! தாவரங்களை பிடுங்கி மயிர்க்கொட்டிகள் Tui) அழித்தல். அக்ருேமைசா ஈ ல் சுத்தமான பயிர்ச் ப்படும். செய்கை rல் பயிர் சுழற்சி முறை ப்படும். - ளையப் G
| சோயாஅவரை *"|} சித்திர வடிவு திர நோய் போல். நோய் J
வளையம் சோயா அவரையின் I சோயா அவரை
Uso வைரசு நோய் Guntai
நோய் கட்டுப்பாடுபோல் ளால் ப்படும்) த்திர
நோய் நாய் antita) ப்படும்)
போரா செரசான் வெற் இலை உண்ணும்
நோய் ! 1kg/135-200 இலீ. மயிர்க்கொட்டிகள்
fi/ha
எலி, கறையான்

Page 36
கட்டுப்பாடு
sfinžт
அசொட்றின் 60 " 1kg/30 இலீ. நீர்/ஹெக். அசொட்றின் 60 1kg/30 இலீ. நீர்/ஹெக். தாவரம் 2-3 இலைப் பருவ வயதாயுள்ளபோது பிரயோகிப்பது நன்று.
சோயா அவரை போல்
பத்தியோன்
1kg/180 g)aổ. ịểfi/ha நஞ்சூட்டப்பட்ட இரை
மானுவாரி 1500-س-250 I நீர்ப்பாசனம் 2500 ش-2000
மானவாரி-5
| நீர்ப்பாசனம்
மானவாரி-6 நீர்ப்பாசனம்
மானுவாரி-4 நீர்ப்பாசனம்
மாளுவாரி
1500-2000 நீர்ப்பாசனம் 2000一4000

குறிப்பு
சோயா அவரை பயிர்ச் kg/ஹெக். செய்கையில் விதைக் கழன் W. விந்துகட்கு பற்றீரியா உட் kg/ஹெக். புகுத்தல் அவசியம் இதற்.
காக "நைட்ரஜின் -S" என்ற பற்றீரியா வளர்ப் பைபாவிக்கலாம். சிபாரிக் செய்யப்பட்ட அளவு 0-22kg 54kg வித்துகட்கு போதுமானது.
00kg/ha -1200 kg/ha.
00 kg/ha -1400 kg/ha.
00 kg/ha -1000 kg/ha
நிலக்கடலை 45%
kg/ha. எண்ணெயைக் கொண்
டது. இதில் 30-35%
kg/ha. லினுேலேயிக்கமிலமாகும்.

Page 37
- uuar
Gug5äss6îT, 6uuugi geliťLL)
எள்ளு ଘଟ୍ଟିତ MI-1 வரி M-2 80 நாள்
MI-3
1. சூரியகாந்தி
டேர்க்கி 25 1993 வரி (Turkey) டேர்க்கி 170403 (Turkey) உருகுவே 162454 (Uruguay) கிரே ஸ்டிரைக் (Grey Strike)
நா.
w 4 חם ו . மஞ்சூரியன் (Manchurian)
8. ஆமணக்கு வரி:
.. ap8FTIT (Hazeera)
இல, 1
தானியப் பயிர்கள் 9. சோளம் வரின்
T 48 தாய் கொம்போ
குபியூரிக்கோX Mamamama பிளின்ற் 19 கொம்பு நா.
வெஸ்டோ

பயிர் உற்பத்தி
ஸ்தாபித்தல் இடைவெளி
விதைப்பு சையில் விதைத்தல் 30 x 22cm
விதைப்பு சையில் விதைத்தல் 90 x 15-30Cm
சையில் விதைப்பு V 2-5X2-5m
சையில் விதைத்தல் 75 X 25c

Page 38
விதைத் தேவை
களை கட்டுப்பாடு
2-3 kg/ha 1-1 kg/ha.
உயரமானவற்றுக்கு
8-10kg/ha. குறளானவற்றுக்கு 15kg/ha
2-3kg/ha
15–20kg/ha
டையூரோன் 80%
kg/180 g)68. fŠrilha. ராம்ருெட் 65% 1-2 kg/180 g)63. pỂsử ha
தேவையானபோது கையால் களைகட்டலாம்.
கையால் களைகட்டலாம் 1வது களைக்கட்டல் - விதைத்து 1மாதத்தின் பின், பின்பு 14 மாத இடைவெளியில் 3 முறை களை கட்டவேண்டும்.
சிமசீன்-4kg|180 இலீ./h இது முளைக்கமுன் பாவிக் கப்படும் களை கொல்லிய கும். விதைத்து 4-5 கிழமை
களின் பின்
gituboccipl.-6kg/180kg/h என்ற வீதத்தில் பாவிக்க
படலாம்.

பயிர் பரிபாலனம்
நோய் கட்டுப்பாடு
பங்கசு நோய்- ஏதாவது பங்கசு இலைப் புள்ளி கொல்லியைப் . புயூசேரியம் வாடல் பாவிக்கலாம்.
பற்றீரியா நோய்- பிடுங்கி அழித்தல் பற்றீரியா வாடல்
துரு நோய் ஏதாவது பங்கசு வாடல் நோய் நாசினியை
டெளனி மில்டியூ பாவிக்கலாம். தண்டமுகல்
ஹசீரா இல. 1 இதுவரை நோய் பீடை
ஸ்மட் நோல் ஏதாவது ஒரு இலை வெளிறல் பங்கசு கொல்லியைப்
நோய் பாவிக்கலாம்.

Page 39
fsonL கட்டுப்பாடு
ஏபிட்டுகள், தாவர ஏதாவது பூச்சி நாசினி மூட்டுப்பூச்சிகள், யைப் பாவிக்கலாம். தத்துவெட்டிகள்.
சூரியகாந்தி சந்துப் ஏதாவது பூச்சி நாசினி பூச்சியும் குடம்பியும் யைப் பாவிக்கலாம். பறவைகள்.
பீடைகளால் பாதிக்பட்டதாகத் தெரியவில்லை.
சந்துகுத்தி அசொட்றின் 60%
375 67./90 g)68. Bri:/ha நுவாக்ருேன் 20% 1 kg/90 gas. Si/ha

விளைவு
குறிப்பு
37 LeFdisha
சராசரி விளைச்சல் 720-960kg/ha டேர்க்கி 170430-1765 kg/ha. உருகுவே 162454-1935 kg/ha.
1000-1500kg/ha
850-1 100kg/ha
இலங்கையில் எள்ளைப் பொறுத்தவரை நோய் களும், பீடைகளும் பிரச்சினையற்வவை.
இலங்கையில் சூரியகாந்தி பயிரிடலுக்கு உலர் வலயமே சாலச் சிறந்தது.
ஆமணக்கு வித்தில் 35-50% எண்ணெய் உண்டு. இது உலர் வலயத் திற்கேற்ற மிகச் சிறந்த பயிராகும்.
விதைத்து 85-வது நாளி லிருந்து பறவைகளை விரட்டல் மேற்கொள்ளப் படவேண்டும்.

Page 40
ஊற்று: 9 (4) (1981)
uur பயிர் உற்
(பேதங்கள், வயது உட்பட) ஸ்தாபித்தல்
10, இறுங்கு வரிசையில்
IS 294 1 3- 3 3 LDir. விதைத்தல் தபகல்லை 3-34 மா. மரதன்கடவல்லை-3மா. NK122,NK15,NK222 NK265,NK280,NK300
11. குரக்கன் ഖ് விதைத்
ராகி 958 'தல் prst6 MI வரிசையில் E43 3-5 LDIT. விதைத்தல் MI 301, MI 302
நார்ப் பயிர்கள்
12. பருத்தி வரிசையில்
HC-101, 120 sir. விதைத்தல் அகாலா 1517, 115நா. கோகர்இனம் 105 நா.
13. கெணுப் (Kenaf) ಎಲ್ದಿ d பெரியகுளம் 39- R தைததுல ஹஅரிகஸ்வெல 140 கியூபா 2032 - கெளதமாலா

பத்தி
இடைவெளி
விதைத்தேவை
களைகட்டுப்பாடு
60 x 15 cm
30 x 15 cm
'5-90 x 30 Cn
15X 5 Cn
12-15 kg/ha.
6-8 kg/ha
2 kg/ha.
30-40 kg/ha.
23-27 kg/ha.
ராம்ருெட் 65% 3-6 kg / 1 80 இலீ. நீர் /ha.
1வது களை கட்டல் விதைத்து 15 நாட்களின் பின். 2வது விதைத்து 30 நாட்களின் பின். கையால் களை கட்டலாம்.
விதைத்து 3 கிழமைகளின் பின்னும் 7கிழ மைகளின் பின் னும் களைகட் டல் செய்ய வேண்டியது அவசியம். கொட்டோரான் 2kg/180 ga. நீர்/haபாவிக்க
லாம்.
புருேமெட்றின், டக்தோல்,
CP 31 393
போன்ற களை நாசினிகள் சிறந்த விளைவு களை தந்ததாக காட்டப்பட் டுள்ளது.

Page 41
பயிர் பரிபாலனம்
நோய் கட்டுப்பாடு Lʻf60nL கட்டுப்பு
இலைப்- சந்துகுத்தி அசொட் புள்ளி நோய் பயிர் மீதிகளை 375G/90 செவ்வ. அழித்தல் ఫీ ë6፬) 9. Qffróい57 பயிர் சுழற்சி, நு Ա: ஸ்மட் எதிர்ப்- 1kg/909) நோய் பினங்கள். நீ எரிவந்த வித்துகளை நட பாரதூரமான re
நோய் முன்புதொற்று சேதத்தை
நீக்கல். உண்டாக்கும் பயிர் சுழற்சி. பீடைகள் அவ பயிர் சுகாதா- | தானிக்கப்பட - ரம். வில்லை.
எதிர்ப்பினங்கள். W கபிலநிறப் வித்துகளை
H . தொற்று நீக் நாய கல்
ಕ್ಲಿಕ್ಕಿ?', வித்துப்பரிகர்- காய்துளை அசொட்ற
P| ணம் மேற் புழுக்கள் P" | கொள்ளலாம். | 05இலீ/1 28 கி மெமா இலீ. நீர்/ "ør's 10kg செவின். வித்து அல்லது 1 kg/ha. 100கி.ஈரசெர மூட்டுப்பூச்சி ழுேகர் 40, சான்/8இலீ. கள் 蠶 f/45kgość 95 GT(HCl நீர்/45kgவித்து ஜசிட் பூச்சி- அகாலா இ யினங்கள். மும் எதிர் IITGT69.
பாரதூரமான சேதத்தை உண்டாக்கும் நோய்களும்
பீடைகளும் அவதானிக்கப்படவில்லை.

P விளைவு குறிப்பு T6
ன்ெ 3000-4000 பயிர் 70 நாள் வயதாக உள்ள 60% kg/ha. போதிலிருந்து பற  ைவ களை இலீ. விரட்டல் மேற்கொள்ளப்பட sha. வேண்டும். ஸ்மட் நோய்க்கெதி *ன் ராக வித்துகளை தொற்றுநீக்க 20%. செரசான் என்பதை 10கி/10 8. இலீ.நீர்/10 kg வித்து என்ற /ha. வீதத்தில் பாவிக்கலாம்.
/சேனைகளில், வித்துகளை தொற்றுநீக்க செர 600-900 சான் என்ற பங்கசுகொல்லியை
kg/ha • || LurrajsavsTub. யாழ்ப்பாணத் தில் நீர்ப்பாச னத்தின் கீழ் 2500 kg/ha.
ன்ெ மானுவாரி 60% 150 kg/ha. 80 நீர்ப்பாசனம்la 600 kg/ha.
ாங்
lub, ଶotப்)
1000-2000
kg/ha நார்விளைவை
պւb 400-600
kg/ha வித்து விளைவையும் பெறலாம்,

Page 42
Luur
(பேதங்கள் வயது உட்பட) ஸ்தாபித்தல் இ
14. சணல் வீசிவிதைத்தல் 752
சிந்திவாரா வரிசையில். பெல்ஜியம் 120 விதைத்தல் கொன்போர் 12 நா. M-35 M-18 : 80 porr. S-19
சினிப் பயிர்கள்
15. கரும்பு V. 3-4 கணுக்க- சாலி Co 527 12-13 pmr. (15th, 30-45cm 5TG S-1 13- 14 Lont. நீளமுள்ளது- t கள் Co 775 12-13 Dnt. மான துண்டுக சியா ளாக தண்டு- கப்ப கள் வெட்டி யில் நடப்படும். ஞல்
கிழங்குப் பயிாகள்
16. உருஃாக்கிழங்கு 35-45 lól. 16. | 20
நோட்ஸ்ரேன் விட்டத்துக்கு பருகா மேற்பட்ட GB priřšsnir ; 3 3-س முளைகொண்ட கார்டினல் OfiT, கிழங்குகள் வரி Gl-gs சையில் நடப் ஆர்க்கா LIG6th.
17. மரவள்ளி 2-5cm விட்ட 90 x Mul 0, Mu 22, Mu44 || (ypGirGMT 1 5 - 22 | gox Mu 77 - g360au 5-6 cm நீளமான 120, மாத வயதுள்ளவை. வன்வைர கலப்பினங்களான வெட்டுத் துண்
Muha, Muh&, MuH21 GrøäTuaoar 4-4 மாத வயதுள்6T,
டங்கள் நடு. கைப் பொருட் களாகப் பயன் படும்.

உற்பத்தி
வடவெளி விதைத்தேவை களைகட்டுப்பாடு நோய்
75 cm வித்துக்காக ஆரம்பநிலைக சணல்
வெனில் களில் 1-2 வாடல் 120kg/ha. 5-606 605 F66)- நாருக்காக- யால் களை கட் gil(5 வெனில் டலாம். அந்திர40-60kg/ha. னேஸ்
ல் நடுவ 12-24tonnes/ கையால் அல் ஸ்மட்றல் துண்டு ha லது இரசாயன நோய் தொடர்ச் முறையால் அடிக்'க வைக் செய்யப்பட கட்டை டும். குழி லாம். இரசா குறுகல்
நடுவதா யன முறை நோய் 30cm எனில் டையூ த்தில் ரோன் 3.4kg/ படும். 180-200இலீ.
përf/ha 676ërp வாறு பாவிக்க லாம்.
P 8-2 24 டையூரோன் பிறகூற்று 1 45 لا 80 cm | tonnes/ha. 4kg/180இலீ. வெளிறல்
ff5f1ha.
பக்றீரியா வாடல் இலை
சுருளல்
90 cm |ஒரு ஹெக்டய பயிரிட்டு 3-4 பாரதூர் 120 cm | fai 1936 கிழமைகளின் uu? <120 cm | வெட்டுத்துண் I பின் ஒருமுறை
டங்களைப் பயி களைகட்டல் ரிடலாம். போதுமானது.

Page 43
பயிர் பரிபாலனம்
பற்றீரியா நோய், வைரசு நோய் இவ் விரண்டுக்கும் நோயு ந்ற தாவரங்களைப் பிடுங்கி அழிக்க வேண்டும்.
கட்டுப்பாடு பீடை கட்டுப்பாடு
ஏதாவது பங்கசு சணல் ஏதாவதொரு கொல்லியை பாவிக் சந்துப் பூச்சிநாசினிகலாம். பூச்சி யைப் பாவிக்
95/Ttừ கலாம்.
துளைப்பான்கள்
50 CᏍ | சந்து- பூச்சிகொல்லி Co527, S-1 grairugar குத்தி யொன்றைப் எதிர்ப்பு இனங்களா யானைகள் பாவிக்கலாம். கும். கால்- வேலி அடைத் வைரசுநோய் p560L. 岛(
பொருளை எலி நச்சூட்டப்மணிகட்குவைத்து பட்ட இரை
YA னில், நட்லாம். களைப் பாவித் நோயற்ற நடுகைப் அழிக்கலாம். பொருளைப் பாவித் தல்,
பங்கசுநோய் வெட்டுப் பேதியோய் டைதேன்-எம் 45 புழுக்கள் அல்லது மன்சேற்டி, டைபோ வண்டுகள் அக்ரிலிக் 50ஐ லரான் போன்ற பங் கிழங்கு பாவிக்கலாம் கசு நாசினிகள் விசிற லாம். ಶೆಟ್ಟಿ
ாரமான நோய்களும், பீடைகளும் மரவள்ளிப் பிரைத் தாக்குவது அவதானிக்கப்படவில்லை.

விளைவு
(35մմւ
400 kg/ha.
20 tonnes/ha.
6 tonnes/ha.
10 tonnes/ha.
நா ருக்காக ப் பயிர் செய்யும் போது பொதுவாக வரிசையிலே பயிர் செய்யப்படும்.
Co 527ஐ எங்கும் பயிரிடலாம். S-1 நீர்த்தேங்கலைத் தாங்காது. எனவே ஈரவலயத்தில் வெள் ளப்பெருக்கு ஏற்படாத இடங்க ளில் பயிரிடலாம்.
கிழங்கின் விளைவு தண்டுகளின் எண்ணிக்கையிலும், ஒவ்வொரு தண்டிலும் உண்டாகும் கிழங் கின் எண்ணிக்கையிலும் தங்கி யிருப்பதால், ஒவ்வொரு கிழங்கி லி ரு ந் தும், அதிக தன் கெள் உண்டாகும் போது இறு தி விளைவும் அதிகரிக்கும்.
மாப்பொருளுக்காக பயிர் செய் வதெனில் பயிரிட்டு 8-9 மாதங் களின் பின் அறுவடை செய்ய லாம்.

Page 44
ஊற்று (4) (1981)
பயிர்
(பேதங்கள், வயது உட்பட)
ஸ்தாபித்தல்
18. வற்றளை
வாரியபொல்) 2-3 LDIT நோரின்
FA 1 7 ஜாலியன் ஜுவல் ஜெம் ஜோர்ஜியா ரெட்-4மா
3-4 omr
19. இராசவள்ளி
சிவப்பு அல்லது ஊதா சதை உள்ளவை
இராச கிழங்கு யாழ்ப்பாண ஊதா முரிசி சிவப்பு லேன தன்தில
&-9LDfT
வெள்ளை அல்லது மெல்லிய
மஞ்சள் சதை உடையவை , உலக்கை வள்ளி வல் கிழங்கு கிரி கொண்டொல் 8-9மா முரிசி வெள்ளை
20. இன்னல
ரடஇன்னல உள்ளூர் இன்னல
20-30 சமீ நீளமான வெட்டுத் துண்டங்கள் பாவிக்கப்படும்.
வரிசையில் இவ்வெட்டுத் துண் டங்கள் நடப்படும்
முகிழ்கள், வெட்டுத் துண்டங் கள் சிறுகுமிழ்கள் என்பவை நடுகைப்பொருட்களாகப் பயன் படலாம், பொதுவாக சிறு குமிழ்கள் விரும்பப்படும்,
சாதாரணமுறை- &
15cm வெட்டுத்துண்டுகள் பாவிக்கப்படும்
சுருளிமுறை
225cm நீள சுருட்டப்பட்ட வெட்டுத்துண்டுகள் பாவிக்கப் படும்
கிடையான நடுகை
30cm நீள வெட்டுத்துண்டு கள் மேடையின் குறுக்காக கிடையாக வைக்கப்படும்

யிர் உற்பத்தி
இடைவெளி
விதைத்தேவை
22-30 x 45-60cm
குழிகள்
60 x 60cm குழிகள் 90cm இடைவெனி
யில்
சால்கள்
60cm அகலம் 60cm ஆழம் 22 X 22 x 75cm
7-5cm விட்டமுள்ள குழிகளில் 5cm
ஆழத்தில் 22cm இடைவெளி
வெட்டுத்துண்டுகட்
கிடையே விடப்படும்
25,000-40,000 வெட்டுத்துண்டங்
sair ha V
85-150gm liaop யுள்ள 12,500 சிறு குமிழ்கள் 1ஹெக்டா ருக்குத் தேவை
50-60kg முகிழ்கள் sha
80kg (p5pdigitsha
130kg Gypágþess Git/ha
w களே கட்டுப்பாடு
நட்டு 3கிழம்ைகளின் பின் ஒருமுறை களை கட்டல் செய்வது போதுமானது
டையூரோன் 26kg sha
9 Fibsp;6F6år 3kg/ha
தாவர விதானம் முற்ருகும்வரை 2-3 களைகட்டல்கள் செய் வது நன்று

Page 45
பயிர் பரிபாலனம்
நோய் கட்டுப்பாடு பீடை
தண்டழுகல் ஏதாவதொரு பங்கசு | வேர்உண்ணும் நீள்
au fib(gyðar scab, கொல்லியைப் மூஞ்சி வண்டு சேர்க்கொஸ்போரா பாவிக்கலாம் இலைப்புள்ளிநோய்
8
சேர்க்கொஸ்போரா செப்பு பங்கசு முக்கியமான பீடை இலைப்புள்ளி நோய் கொல்லி 04kg/45 | ள் அவதானிக்கப் முக்கியமானது gaó. fi/ka Lulladia)
பாரதூரமான இலையுண்ணும் நோய்ப் பிரச்சனை
இல்லை
மயிர்கொட்டி

III
Aldrin-30kg/ha
பூச்சி நாசினி பாவிக்கலாம்
கட்டுப்பாடு
விளைவு
* குறிப்பு
10-125 மெகா தொன்ha
sha
6-10 Qasrtair/ha .
பற்றுகோடு வழங் கல் முக்கியமாகும். 3m fer omr67 priši கில் தடிகளை இதற் காகப் பாவிக்கலாம்

Page 46
Luuňr (பேதங்கள் வயது உட்பட)
21.
22.
வாசனதிரவியப் பயிர்கள்
மிளகாய் சந்தக்கா 3-3 Lorr M1 கலப்பு 5 மாதம் (MI-1 M-2) திண்ணவேலி தலப்பு
சின்னவெங்காயம்
யாழ்ப்பான
லோகல் 80-90-س Guavnrif நாட்கள் வேதராணியம்
பம்பாய் வெங்காயம்
பூனசிவப்பு பெரியபெலாரி
இற வெள்ளே
3-4 LDfT.
பயிர் 'உற்பத்தி
ஸ்தாபித்தல்
நாற்றுநடல் சந்தக்கா பேதத்துக்கு நாற்று மேடைக்
காலம் 25 நாட்கள். மற்றைய பேதங்கட்கு நாற்றுமேடைக் காலம் 35-45
நாட்களாகும்
பூடுகள் வரிசையில்
நடப்படும்
நாற்றுநடல் நேரடி நடுகை
இடைவெளி
சந்தக்கா
25cm x 30cm மற்றையவற்றுக் 30 x 90cm 2 நாற்றுக்கள்/
5cmx 60cm ஒரு பூடு/குழி
15x 15cm

சந்தக்கா 8kg/ha மற்றையவை 1 kg/ha
15-17kg/ha. பயிரிடவித்து பயன் Lugair 8-10kg/ha தேவை
8kg/ha
களே கட்டுப்பாடு
நோய்
லசோ
2 இலீ/1 80இலி நீர்/ha
மும்ரொட் 6kg/1808 frřsha . டப்தோல்
10kg/130ga fift/ha
ஏதாவதொரு முளைக்கு
பாவிக்கலாம். (உ-ம்) லோரெக்ஸ், அட்ராசீன்
முன் களைகொல்லியைப்
இலைச்சுருள் நோய் (வைரசு நோய்) சிற்றிலைநோய் (வைரசு நோய்) அந்திரக்னேசு (பங்கசு நோய்)
Geunătessmru Smut (பங்கசு நோய்)
அடி அழுகல் (Damping off)
பூடவழுகல்
Pnrpleplotch i
(பங்கசு நோய்)

Page 47
பயிர் பரிபாலனம்
கட்டுப்பாடு பீடை
சுழற்சிமுறை பயிர்ச்செய்கை வெண் ஈ இவை எதிர்ப்பினம் பாவித்தல் ஏபிட் sðar காவிகளான ஏபிட், திரிப், திரிப் வைர வெண் ஈ என்பனவற்றைக் கட்டுப்படுத்தல், தியோ 2- - - யோன் ஏதாவதொரு பங்கசு கொல்லி urrefá யைப் பாவிக்கலாம். இவற். 300 g கத்தில் 135 g கரைத் ளும், விகிற6 நாள் ܗܐ இரட் 56, 7 நாட்க நாசினி Guu 60 18kg
அன்திரக கோல் பனிப்பூச்சி (Thrips) என்ட் 1flஅவு/9 இலீ நீர்/ha. மயிர்க்கொட்டிகள் 06kg/ கப்டான் 50% firi கரை யும்தூள் sha 30 S. g76ir/9000cm. சேமிப்பின்போது ஏற்படும், பயிர்ச்சுழற்சிமூலமும் பூடை பங் கசு கொல்லியில் நனைத்தல் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
ஏதாவதொரு பங்கசு நாசினி பனிப்பூச்சி என்ட் யைப் பாவிக்கலாம். மயிர் கொட்டிகள் 06kg,

விளைவு குறிப்பு ட்டுப்பாடு
வைரசுநோய் நீர்ப்பாசனத்தின் 1 kg செத்தல் -ண்டாக்கும் கீழ் 1 2 மெற். மிளகாயைப்பெற க்களை கடத் தொன்/ha மான 4—6 kg lupih மன. பொலி வாரியாக 896 kg தேவை. ன், கமிதி sha 1 kgவித்தைப்பெற என்பன 3kg செத்தல் மிள Бајтић. காய் தேவை மில் ஒன்றின் . யும் கந்த
450 கி.யும் வீ. நீரில் து 14-ம் நா 28-ம் நாளும் )rib. 42-ih அளவினை டிப்பாக்குக. ), 84, 1 12-b ளில் பூச்சி யில் முறை 0 G), 900 GQ Lurralėšas.
ரின் 13 - 1 7 Gouno. பெலாரி என்ற 1809)sở đif | QøTsir/ha Gusth 350kg/ha
வித்தை உண்டு பண்னும்
ண்
80 இலி நீர்
11-13 மெ. தொ/ha

Page 48
uer
(ப்ேதங்கள், வயது உட்பட)
Uuo fr
ஸ்தாபித்தல்"
24.
25.
28.
驾参。一
3300་
உள்ளி கெப்பிட்டிபொல தேர்வு' 5 orr . . . ;
இஞ்சி உள்ளூர் பேதம் கவிகட் Gstig
கடுகு ரஹங்கல தேர்வு பியன்ஷென்
கொத்தமல்லி பேதம் 1 Guggiò
|-- பேதம் 1
9- O
மதராஸ் மஞ்சள் கொச்சி - சாயம் செய்ய வெந்தயம் 3-4 Lorr.
நத்சிர்பேர்
5 adm.
- மா
3-3 ubiT
குமிழ்கள் நேரடியாக நடப்படும்.
15x30cmமேனிட களில்நடலாம். சால் வரம்பு முறையில் நடலாம். சாலின் அகலம் 60cm அகலமான வரம்பு
soflá) (90-120cm) நடுவது.
2
குரக்கனுடன் சேர்த்து வளர்க்கும்போது வீசி விைதக்கப்படும். தனிப் பயிராக வளர்க்கை யில் வரிசையில் விதைக் கப்படும்.
வீசி விதைத்தல்
நேரடி விதைத்தல்
நிலக்கீழ் தண்டுகள் நேரடி யாக நடப்படும்.
வரிசையில் விதைத்தல்
வீச்சுமுறை
வரிசையில் விதைத்தல்

உற்பத்தி
இடைவெளி விதைத் தேவை களை கட்டுப்பாடு 10cmx10cm 800-1000 கையால் களைகட்டலாம்
|| kgfHasičþessir
30x 30-45cm 1 1200-1500 கையால் களைகட்டலாம்
kg/Ha Spris
25X30cm 3-4 kg/Ha தேவையாயின்
மேற்கொள்ளலாம்
22x22em | 10-12 kgHa |நாற்றுகள் முளைத்தவுடன்
,உடைக்கப் lub 5öröLL-லும( ی۔
பட்டதில்) தாவரம் நிலத்தை மூட
சிறிது முன் 2ம் களைகட்ட லும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
22x30cm 1120-1859 தேவைப்படும்போது 8cm ஆழத்தில் kg/Ha மேற்கொள்ளலாம்.
22 X 22cm 15-20 k8Ha விதைத்து 2 கிழமையின்
பின்னும் பின்பு பயிர் நிலத்தை மூட சிறிது முன்னும் கையால் களை கட்டலாம்.
30 kg/Ha |தேவை எற்படின் 30X 30cm மேற்கொள்ளலாம்
15-20 kg/Ha

Page 49
பயிர் பரிபாலணம்
LÁóävigg (Mildew) நோய் துரு
ஏதாவதொரு பங்கசு 1 கொல்லியைப்
பாவிக்கலாம்
நோய் கட்டுப்பாடு 565) L. سمعہ
மில்டியூ (Mildew) பனிப் பூச்சி
என்னும் பங்கசு நோய் தாக்கும்
மென்னழுகல் நோய்வாய்ப்படாத பாரதூரமா நடுகைப்பொருள் அவதானிக்க வேர்மிகுலேரியம் பாவித்தல் நோய் சுண்ணும்பு
விசிறலாம்.
மில்டியூ (Midew) ஏதாவது ஒரு வாள் ஈ த பங்கசு கொல்லினியப் (sow fly) ந Lutraigs@btrtti.
வாடல் நோய் செப்பு பங்கசு ஏபிட்டுக்ள் ! நாசினி தெளித்தல் loopers ஏ மில்டியூ (Midew) 5% S பாவித்தல் மயிர்கொட்டி நோய் 27 kg/Ha கள்
பாரதூரமான நோய் பீடைகள் அவதானிக்கப்ப
பாரதூரமா இப்பயிரு
பாரதூரமாகத் தாக்கும் நோய் பீடைகள் இப்பயிருக்

குறிப்பு
விளைவு கட்டுப்பாடு r வு என்ட்ரின் 1.6-2-2 Gid. 6 kg|180 இலீ. G5. Ha
f5i/Ha.
பீடைகள் 9-11 மெ.தொ./Ha படவில்லை.
தாவது ஒரு பூச்சி ாசினியைப் பாவிக் கலாம்
பூச்சி நாசினிகளில் தாவதொன்றைப் பாவிக்கலாம்.
ன பீடைகள் க்கு இல்லை.
@ இல்லை.
400 kg/Ha
grprirgeflufrø;
800 kgj Ha
17- 5 tonnes Ha
300-400 kg/Ha
250-300 kg/Ha
வித்து என்பது உண்மையில் கனி யாகும். எனவே அதை 2 ஆக உடைத்துப்பாவிக்
கலாம்.

Page 50
gir LTUI T உறபதத (பேதங்கள், வயது உட்பட) ஸ்தாபித்தல் இடைெ
போதைவஸ்துப் பயிர் 31. புகையிலை நாற்றுமேடையில் 7 5 Χ 9
வீசி விதைத்தல்
சிகரட் பேதங்கள்
டெகர்ெஸ்ட் வேர்ஜினியா கோல்ட் ஹன்சன் ஸ்பெஷல் வைட்கோல்ட் NC-95 பீடி பேதங்கள் K-49
K-20 S-6 2 سS
{0-سS கங்கான் பேதங்கள்
ஐலண்ட் பிரைட் டரட் சுருட்டு பேதங்கள்
யாழ்ப்பான பேதம் தும்டர தம்பன்கடுவ அனேகமான
பேதங்கள்
89-85 நாட்களில் அறுவடைக்கேற்ற
முதிர்ச்சியடையினும்
சில முதிர்ச்சியடைய 100 நாட்களும் செல்ல லாம்.
6 கிழமையின் பின்
தாற்றுநடப்படும்.

விதைத் தேவை
கலே கட்டுப்பாடு
நோய்
Cn
I 500 x 105cm
நாற்று
மேடைக்கு
1 தேக்கரண்டி
வித்துக்கள்
நாற்று நட்டு 10-12
நாட்களின் பின்
ஒரு தடவையும் பின்பு
2-4 கிழமை இடைவெளியில் 3-2瑟 மாதத்துக்கு களை கட்டவேண்டும். பின்பு
களைகட்டல் அவசியமில்லை
கையால் அல்லது ஏதாவ தொரு இரசாயனகளை கொல்லியால் கஃாகட்ட
ᏍᏄ)ᎥᎢᏧb .
பங்கசு நோய் - அந்திரக்னுேசு - அடியழுக்ல் -
வைரசு நோய் புகையிலே சித்திர
ଈ!! !! ଈ |
இலைச்சுருளல் நோய்
பற்றிரிய நோய் பற்றீரிய வாடல்
நெம்முேடு நோய் வேர் முடிச்சு நோய்

Page 51
uusi funsvari
கட்டுப்பாடு
கட்டுப்பாடு
Ziram பாவிக்கலாம் ஏதாவதொரு பங்கசு
கொல்லி பாவிக்
கலாம். எதிர்ப்பினங்கள்
பாவித்தல் பயிர் சுழற்சி பயிர் சுகாதாரம் தாற்றுமேடையில் தாக்கும் புகையிலை சித்திர வடிவு நோய் போல கட்டுப்படுத்தலாம்.
பயிர் சுழற்சி பயிர் சுகாதாரம் நோய்வாய்ப்பட்ட தாவரத்தைப் பிடுங்கி அழித்தல்
CHBr அல்லğ35I ஷெல் DD.6o Sir Lp
மிடல்
புகையிலை ஏபிட்டு புகையிலை சந்துதத்தி - இலை உண்ணும்
மயிர்கொட் էgւն ւI(ւք
என்ட்ரின், அசோட் ரின் போன்ற பூச்சிநாசினிகளால் கட்டுப்படுத்தலாம்

விளேவு குறிப்பு
;
700 kg 1 இரு. உலர் இலை
உலர் இலை/Ha | யைப் பெற 10 இரு. பெறலாம். பசுமையான இலைகள்
தேவை
os lyg FFISIšsib, B. Sc. (Agric,) Hons.
உதவி விரிவுரையாளர், பயிராக்கவியல் பகுதி, விவசாய பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்.

Page 52
ஊற்று பணிகள் வளர்
சிவன் மாெ
166, (80) JST
உங்களுக்கு அலுமினிய, பித்தளே,
மிகவும் நியாயமான வி

ரிகை லிமிட்
ப்பானம்,
த் தேவையான
எவர்சில்வர் பொருட்களே லயில் பெற்றுக்கொள்ளலாம்