கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாகம் 1985.10-11

Page 1

- -|- -|- __ ( ) . - | –|- |-*o |×-|- - . ( )No. |년■■■·
|-----|-|--
■
妊 sae

Page 2
y
GFxfರ್ವೆ ನಿಜI೧Ira
கொடுங்கோலரின் ஆயுதங்களால் கொல்லப்பட்டவரின் ஆவிகளனைத்தும் பூமி முழுதும், கண்ணறியாமல் சுற்றி நடக்கும், மெல்லிய குரலில் எச்சரிக்கும். புதிய புரட்சி நாளுக்கு Guure- 1674 7 cსეytგ’’
யாழ்ப்பாணம். சுதன்
'தடைகள் இருக்கின்ற்ன.
தகர்க்கச் சொல்லுங்கள்! துயரங்களும் துன்பங்களும் தோன்றக் கூடும். *
அழிக்கச் சொல்லுங்கள்!”
காரைநகர் பரஞ்சோதி :

oạrn șoap& digo -ą, o vớ7an 50.49% (9
·. "·ớ%9
ø og sốę ệệ yło o top van £ 4. stoff-woo
q oqo won tạo 4009 logo 009; @@ pofośn dooon %40 %@wệto ĝ609 50 o ∞ sudo do ọ sẽĝo posv-3
· @ sm 50 49o 9 go osp 19
· ự9%@oy-7 voto
woo ɓo ŋɔɔmɑnnɔtɔ ɖoooooooo
· 49øos@%@%
no e rn,ộ áo quod éệ 0,09% (209 logoro (9
· · ·ņogo?? vo · @@ro
og vrtogo) u ovog po veo@sooo !
:it);
O
оос о
Ο Ο
TỪ
|-ızırısı'esore Isīriogaerīņsốsou-ı urısıụerec) soore@@@ logo?!? ș@ę ko urnų, o qęgnęgoro oặso, o qī£$4. Lorī.IỆrosīrie) qiająŤ Log)
· 19'es@@@ę srogaegri isos) ufersosốso urīgigesong@rafi) so usoqjo
ritegeljo prmesofinė Ø6 so lygosetīgo sodī£ sosuosog) qi@o@Ë
so 11@191ļģ~āno点圈đạorogogo, sĩ qoftog) sono 19 so solo ‘sourii
ĶĒĢ Ģ Ķeiļosog)og usa’q’rno geosiqisiheqi usto 199ụcoșUT · @ ₪ 1993@rı silogo Lo sĩ tạo vrne)govo 1,9 1995. stílus 411,9%) liri(?)‘ođèo ‘ąormes fílo
se ugqo@fessorio) qiaoqi uso 1986) onųosoɛ)1994) ursijosố sĩ199ố
· qi@ggøfteg) fnu dĺžo sąīrīforușele109@1ņog?@th
neurepugęs@@ @o mco uos@orlewe@@@19• Mogorteges@g) snowego
§ 1o 1p goaengoscossos - qi@um solpo@1919 No 1996) quo @@rī1,919 1991ņ970) 1999 s Los paj so uso 1,9±0.5mų9f90)1998) urtersesố 42@@-T -Ħodoljeg số · Reuelgaegro sąsųogo o urnę5 #4 Tusse) soo@so
gereg, Hạ, os los os se os@surie, ko igo 11@g)iĝosĝ af 199 urip loot 771140
fiso ( 19 orą, o úsısı6) leges o lyoo Ɔŋnųorce) qorneo oko o ŋoooooo
se o leosoɛɛg gạorisgs og, og sao uso--ığùng Qū)ẻ sĩąj-To
· • • • • • -ayさy#**
00+:Un@འཨ༡ བྱ༠-|- ss6i - oogsựıæ - enro : ơio 11@ -· ©
- † -3;&## * I - ), ısısologo&

Page 3
வெளியீடுகள் தோற்றம் பெறுவது தவிர்க்கமுடியாதது. அரசிய லில் சிந்தனை முக்கியத்துவம் பெறத் தொடங்கும் காலகட்டமாக இது அமைகின்றது. க.ந்தகால அனுபவங்களிலிருந்து சரியான கருத்துக்களை வெளிக்கொண்டுவரும் போக்கு இன்று உதயமா கின்றது.
இவ்வெளியீடுகள் எங்கிருந்து, யாரால் எத்தகைய அடிப்ப டையில் வெளியிடப்படுகின்றது என்பதனை இங்கு நோக்குவோம்.
1. இன்று நிலவும் சமூக சூழ்நிலையைப் பயன்படுத்தி வர்த்
தக நோக்கிலான செய்திப் பத்திரிகைகள்.
2. தத்தமது இயக்கக் கொள்கைகளும், வரலாற்று விளக்க
மும் கொண்ட வெளியீடுகள். மக்களின் அரசியல் அறிவுத்திறத்தினை உயர்த்த வேண்டு மென்ற வெளியீடுகள்.
3.
r
மொத்தமாகப் பார்க்கும்பொழுது ஒரு நிலைத்தளர்ச்சியின் மத்தியில் கடந்தகாலப் பாதையில் ஏற்பட்ட அதிருப்தியும், மக் கள் மத்தியில் வருங்காலம் பற்றிய அச்சமும் ஒரு சிந்தனைத் தாக் கத்தினைத் தூண்டியுள்ளது. அதன் வெளிப்பாடுகளே பல்வேறு பிரசுரங்களினதும் வெளியீடுகளாகும்.
இத்தகைய பல்வேறு பிரசுரங்களிலும் ஒரு விடயம் தொடர் பாக பல கருத்துகள் வரலாம். இதில் எந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வது? இங்கே தான் பிரச்சனை எழுகிறது. கருத்துகள் எவ் வளவுதான் விஞ்ஞான நோக்கிலான புரட்சிகரமானவையாக இருப்பினும் நடைமுறையில் அவை கடைப்பிடிக்கப்படாவிட்டால் அது சொல்லொன்று செயலொன்ருகவே முடியும். ஆனல் தாகம் ஒன்றை மிகவும் குறிப்பாக சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஆம்! கருத்தியல் ரீதியாக ஏற்படுகின்ற முரண்பாடுகள் கருத்து முரண்பா டுகளேயொழிய பகைமுரண்பாடுகள் அல்ல. எனவே கருத்துக்கள் கருத்துகளாலேயே அணுகப்பட வேண்டும். O
அட்டைப்பட விளக்கம் பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதில் கல்வி மிகவும் சத்திவாய்ந்த காரணியாகும்.
ஐக்கியநாடுகள் உலகப்பெண்கள் மாநாடு, 1985 தொடர் பாக வெளியிடப்பட்ட உலகப் பெண்கள் நிலை பற்றிய அறிக் கையிலிருந்து படமும், வாசகமும் எடுக்கப்பட்டவை.
Lul-Äśáš72s07 62160ppojišĝis 6p6nfluu ii:- , LYNN DUNCOMBE
f

o o o மக்களிடம் செல்வோம் மக்களிடம் கற்றுக்கொள்வோம் மக்களுக்காகப் போராடுவோம்
O மகரிஷி O
தமிழ் பேசும் மக்கள் மீதான சிறீலங்கா இனவெறி அரசின் ஒடுக்குமுறைகள் காட்டுமிராண்டித்தனமான முறையில் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது. போர்நிறுத்தம் என்ற மாயையின் கீழ் சி. ஐ. ஏ., மொசாட் போன்றவற்றினதும், வல்லரசு நாடு களின் ஆயுத உதவிகளுடனும் பலத்தினைப் பெருக்கி தமிழ்மக்களை கொன்ருெழித்து வருகிறது. இதற்கு இணையாக தமிழீழப் போராட் டமானது கூர்மையடைந்த போதிலும் விடுதலையின் பெயரால் இடம்பெறுகின்ற சில விபரீதங்கள் மக்களை டோராட்டத்தில் இணைப்பதற்குப் பதிலாக, அவர்களை போராட்டத்திலிருந்து அந் நியப்படுத்துகின்றது. இந்நிலை தொடருமாயின் எமது போராட் டம் பலவீனமடைந்து, போராட்டத்தினை எதிரியால் இலகுவாய் நசுக்கப்பட வாய்ப்பாகப் போய்விடும். இந்த வரலாற்றுத் துரோ கத்திற்கு நாம் எந்தவித நியாயத்தினையும் கற்பித்துவிட முடியாது.
எமது விடுதலைப் போராட்டத்தின் வெற்றி நீண்டகால மக் கள் யுத்தம் ஒன்றின் மூலமே சாத்தியமானது என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆணுல் நாம் விடுதலையை வென்றெடுப்பதென் பது நடைமுறையில் பரந்துபட்ட மக்கள் திரளின்ரை போராட் டத்துடன் இணைப்பதற்கான நடைமுறை வேலைத்திட்டம்; பரந் துபட்ட மக்களை வெகுஜன எழுச்சியினூடாக போராட்டத்திற்கு எவ்வளவு தூரம் இட்டுச்செல்கிருேம் என்பதிலும் தங்கியுள்ளது. ள் ன வே வரலாறு கற்பிக்கின்ற பாடங்களை படிப்பினையாகக் ெேகாண்டு புரட்சிகரமான ஒரு வேலைத்திட்டத்தின் கீழ்; புரட்சி கரமான ஒரு தலைமையின் கீழ் போராட்டத்தினை முன்னெடுக்க
வேண்டியது அவசியமாகும்.
ரஷ்யாவிலும், சீனவிலும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சிப் பணியின் அடிப்படைக் கோட்பாடுகளில் "மக்கள் திரள் மார்க்கம்" என்பதும் ஒன்ருகும். அதாவது, மக்கள் திரளினருக்கும், கட்சிக் குமிடையில் இயலுமானவரை ஒன்றுக்கொன்று நெருக்கமான "தொடர்புச் செயல்முறையை வளர்த்தெடுத்தல் ஆகும். எமது
தாகம் ... 3

Page 4
போராட்டிடம் மேலும் கூர்மையடையும்போது பரந்துபட்ட மக் கள் திரளினரை முழுமையாகவும் உறுதியுடனும் சார்ந்து நின்று எதிரியையும், எதிர்ப்புரட்சிகர சக்திகளையும் தோற்கடித்து வெற் றியீட்டுவதற்கு மக்களுக்குள்ள உற்சாகத்தை முழுமையாக வெளிக் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது. அக்டோபர் புரட்சியின் போதும், தொடர்ந்து நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் போதும் சோவியத்யூனியனில் கொந்தளித்துக் குமுறிய மக்கள் திரள் போராட்டங்களின் அனுபவம் இவ்வுண்மையை முழுமையாக மெய்ப்பித்தது.
பரந்துபட்ட மக்கள் திரளினரை விடுதலை ஸ்தாபனம் வழி நடத்திச் செல்ல வேண்டுமானல், அது மக்களின் நலன்களுக்கு சேவை புரியவேண்டும். இவ்வழியில் மட்டுமே ஸ்தாபனம் மக்க ளது நடவடிக்கைகளுக்கு வழிகாட்டவும், தனது தவறுகளை திருத் திக்கொள்ளவும் முடியும். மக்களின் நலன்களை சரியாகப் புரிந்து கொண்டு அவர்களுக்கு சேவை செய்யவும், அவர்களது நலன்களை வெளிப்படுத்தவும் முன்னணிப் படையான அமைப்பு தனது நட வடிக்கைகள் அனைத்தையும் மக்கள் மத்தியிலே மேற்கொள்ள வேண்டும். மக்களின் தேவைகளை ஆரம்பமாகக் கொண்டே அவர் களுக்காகச் செய்யப்படும் அனைத்துப் பணிகளும் அமையவேண் டும். ஒருசொட்டுக் கணம்கூட மக்களிடமிருந்து விலகாமலிருப்ப தும், எல்லாச் சமயங்களிலும் மக்களின் நலன்களிலிருந்து தொடங் குவதும் அவசியமாகும். ஆனல், சில சந்தர்ப்பங்களில் மக்கள் மாற்றங்களை விரும்பாதவர்களாயும், அத்தேவை பற்றி அவர்கள் இன்னும் உணராதவர்களாயும், அதை ஏற்படுத்த வேண்டும் என்று உறுதியற்றிருப்பதும் பலமுறை நேர்வதுண்டு. இச்சந்தர்ப் பங்களில் நமது கடமைகள் மூலம் பெரும்பாலான மக்கள் அம் மாற்றத்திற்கான தேவை பற்றிய உணர்வைப் பெற்று அதை நிறைவேற்றுவதற்கான விருப்பும், உறுதியும் கொள்ளும்வரை அம்மாற்றத்தினை நாம் மேற்கொள்ளக்கூடாது. மக்களையும் மீறி நாம் அவ் மாற்றத்தினை மேற்கொள்வோமாயின் மக்கள் திரளி டமிருந்து நாம் அந்நியப்பட்டுக்கொள்வோம்.
“பொதுவுடமையாளர்களாகிய நாம் விதைகளைப் போன்றவர்கள். மக்கள் மண்ணே நிகர்த்தவர்கள். நாம் எங்கெல்லாம் செல்கிருேமோ, அங்கெல்லாம் நாம் மக் களுடன் ஐக்கியமாகி வேர்பிடித்து அவர்களிடையே மலரவேண்டும், எங்கெல்லாம் நமது தோழர்கள் செல் கிருர்களோ, அங்கெல்லாம் அவர்கள் மக்கள் திரளினரு டன் நல்லுறவுகளை உருவாக்க வேண்டும். அவர்களைப்
தாகம் 4

பற்றிய அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் தமது இடையூறுகளைக் கடப்பதற்கு உதவவேண்டும். நாம் மக்கள் திரளினருடன் ஐக்கியப்படவேண்டும். எவ் வளவு அதிகமாக மக்கள் திரளினருடன் நாம் ஐக்கியப் படுகிருேமோ, அவ்வளவுக்கு மிகவும் நல்லது. நாம் மக் கள் திரளினரை ஒன்று திரட்ட அனைத்து முயற்சிகளும் செய்தல் வேண்டும்; மக்கள் படைகளை விரிவுபடுத்த வேண்டும்." (மா. சே. துங்: தெரிவு நூல் - 4.58)
பரந்துபட்ட மக்களுக்கு சேவை செய்வதன் மூலமே நாம் எமது தவறுகளையும் திருத்திக்கொள்ள முடியும். நமது தவறுகளே திருத்திக்கொள்வதற்கும், உண்மையின் பக்கம் நிற்பதற்கும் நாம் எப்போதும் தயாராகவிருக்க வேண்டும், ஏனெனில், தவறுகள் மக் களின் நலன்களுக்கு எதிரானதாகவும்; உண்மைகள் மக்களின் நலன்களுக்கு உரியதாகவும் அமைகின்றது. நாம் ஒவ்வொருவரும் மக்கள் திரளினருக்கு எதிரான நடவடிக்கைகளை செய்யமாட் டோம் என உறுதிகொள்ளவேண்டும். கடும் தவறுகள் இழைப்ப வர்களை நாம் விமர்சிக்க வேண்டும்.
*ஒரு அரசியல் கட்சி தனது சொந்தத் தவறுகள் மீது மேற்கொள்ளும் நிலைப்பாடே, அது எவ்வளவு நேர் மையான கட்சி, அது தனது வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் தனக்குள்ள கடமைகளை நடைமுறையில் எப்படி நிறைவேற்றுகிறது என்பதை மதிப்பிடுவதற்கான மிக முக்கியமான, மிக நிச்சயமான வழிகளில் ஒன்ரு கும். ஒரு தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது அதைச் செய்வதற்குக் காரணமாகவிருந்த நிலமைகளே பகுப்பாய்வு செய்வது, அதை சரிசெய்வதற்கான வழி முறைகளைத் தீர ஆராய்வது - இவையெல்லாம் ஒரு தீவி ரமான கட்சிக்குரிய அடையாளமாகும். தனது கடமை
கள்ை அது இவ்வாறுதான் நிறைவேற்றவேண்டும்.”*
(லெனின்: தொகுப்பு நூல்- 31-57)
நாம் எமது தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டுமானல் எல் லோரிடையையும் விவாதச் சுதந்திரமும், விமர்சனச் சுதந்திரமும் இருக்கவேண்டும். இதற்கு, ஸ்தாபனத்திற்குள் ஜனநாயகம் இருக்கவேண்டும். ஸ்தாபனத்தை வலுவானதாக்க வேண்டுமா ஞல் ஒவ்வொருவரினதும் முயற்சியையும் தூண்ட ஸ்தாபனத்திற் குள் ஜனநாயக மத்தியத்துவத்தை செயற்படுத்த வேண்டும். செய லில் ஒற்றுமை, விமர்சனச் சுதந்திரம் ஆகியவற்றை இணைக்கும்
தாகம் 5

Page 5
கோட்பாடே ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையாகும். ஸ்தாபன உறுப்பினர்கள் ஒன்ருகச் சேர்ந்து திறம்படப் பணி யாற்ற வேண்டுமானல், முழுமையான சுதந்திரமான விவாதத் திற்குப்பிறகு மேற்கொள்ளப்பட்ட கூட்டுமுடிவுகளின் அடிப்படை யில் பெரும்பான்மைக்கு கட்டுப்பட்டு அவர்கள் செயற்பட வேண் டியது அவசியமாகும். உண்மையிலேயே ஜனநாயகத்தை ஸ்தாப ன்த்திற்குள் விரிவுபடுத்தவேண்டின், ஜனநாயகம் பற்றிய கல்வி ஸ்தாபனத்திற்குள் நடாத்தப்படவேண்டும். அப்போதுதான் எம் மால் ஜனநாயக வாழ்வு என்பது பற்றியும், ஜனநாயகத்திற்கும்
மத்தியத்துவத்திற்கும் இடையேயுள்ள உறவு பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
இத்தகைய தன்மைகளைக் கொண்ட ஒரு முன்னணிப்ப்டை இருக்கும் போதுதான் அது மக்களை சரியாக வழிநடாத்தவும்: பெரும்பாலான மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தவும்; அவர் களை சரியான பாதையில் போராட வைக்கவும் முடியும். ஒடுக் கப்படும் மக்கள் திரளினர் மத்தியிலே காணப்படும் எல்லாப் பிரி வினரையும் வென்றெடுத்து ஆதரவு சக்திகளாகத் தி ரட் டி போராட்டத்தை முன்னெடுக்க முன்னணிப்படையாலேயே முடி யும். இத்தகைய ஒரு முன்னணிப்படையால் விடுதலையை வென் றெடுக்கும் இலக்குடன் வழிகாட்டப்படும்போதே மக்கள் போராட் டமானது முழுமை பெறுகிறது. வரலாற்றில் தனக்குரிய பாத்தி ரத்தை உணர்ந்து கொள்கிற உழைக்கும் வர்க்கம், மற்ற ஒடுக் கப்படும் வர்க்கங்களின் முன்னணிப்படையாகத் தன்னை அமைத் துக்கொள்கிறது.
"பொதுவுடமையாளர்கள் இழைக்கும் மிகப்பெரிய, மிக ஆபத்தான தவறுகளில் ஒன்று (பொதுவாக இத்தவறு ஒரு பெரும் புரட்சியின் துவக்கத்தைச் சாதித்துள்ள புரட் சியாளர்களால் செய்யப்படுகிறது), புரட்சியாளர்களால் மட்டுமே புரட்சியை செய்யமுடியும் என்ற கருத்தாகும். அதற்கு மாருக, தீவிரமான புரட்சிச்செயல் அனைத்தும் வெற்றிகரமானதாக இருக்கவேண்டுமானல், உண்மையி லேயே வீரியமும் வளர்ச்சியும் பெற்ற வர்க்கத்தின் முன் னணிப்படை என்ற பாத்திரத்தையே புரட்சியாளர்க ளால் வகிக்கமுடியும் என்ற கருத்தை நாம் புரிந்து கொண்டு, அதைச் செயல்படுத்தவேண்டும். ஒரு முன்ன ணிப்படை, தான் வழி நடாத்துகின்ற மக்களிடமிருந்து தனிமைப்படுவதைத் தவிர்க்கவும், மக்கள்திரள் முழுவ தையும் முன்னேக்கி வழிநடத்தவும் உண்மையிலேயே
தாகம் 6

ஆற்றல் பெற்றிருக்கும் போதுதான், ஒரு முன்னணிப் படை என்ற வகையில் அது தன் கடமையைச் செய்கி றது.* (லெனின் தொகுப்பு நூல்- 33-227)
எனவே, வெற்றிகரமாகப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டுமாயின் முன்னணிப்படையானது உறுதியான - பலமிக்க ஸ்தாபனத்தையும்; சரியான தத்துவார்த்த நெறியையும்; புரட்சி கரமாண தலைமையையும் கொண்டிருப்பதோடு மக்களை ஸ்தாபன ரீதியில் அணிதிரட்டுவதையும்; புரட்சிகர மக்கள் இராணுவத்தை கட்டுவதையும் தனது கடமையாகக் கொண்டிருக்க வேண்டும். மேற் கூறப்பட்ட இரு கடமைகளையும் முன்னணிப்படையானது நிறை வேற்றவேண்டுமானல் அது மக்களிடம் செல்லவேண்டும்!
மக்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்!! மக்களுக்காகப் போராடவேண்டும்!!!
O O O
உலகத்தின் சட்டம் புரட்சி! மனித முன்னேற் றத்தின் ரகசியம் புரட்சி! இதிலே புனிதத்துவச் சங் கிலிகள் பிணைக்கப்படவேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. தனிநபர்களைப் பழிவாங்கும் நோக்க மும் புரட்சி நடவடிக்கையின் அம்சமாகாது. ஏகாதி பத்திய இராணுவத்தின் சிப்பாய்களைப் போன்ற வர்களல்ல நாங்கள். அவர்கள் மனித இயந்திரங் கள். எந்தவித ஈவிரக்கமும் இன்றி கட்டுப்பாடா கக் கொலை செய்வதற்கு மட்டுமே கற்பிக்கப்பட் டவர்கள் அவர்கள். நாங்கள் மனிதனை மதிக்கி ருேம்; மனித உயிர்களை வார்த்தைகளால் விவ ரிக்க முடியாத அளவுக்கு நேசிக்கிருேம்.
நீதிமன்ற விசாரணையில் பகத்சிங்கின் வீரவுரையிலிருந்து
தாகம் 7

Page 6
வரும் நாட்களில்.
இனிவரும் நாட்களின் இரவுகள் தூங்கா இரவுகளாய் நீண்டு கிடக்கும். ஒளியே புகா எந்தச்சி றையிலும் குற்றம் புரிந்தோர் என நிறுத்தப்படுவதை பெருமை எனக் கொள்க! விரல்களில் ஏறிய குண்டூசிகளும் கன்றிச் சிவந்த மேனியின் துன்பமும், இங்கு எமக்கு உயர்வினைத் தரட்டும்.
பிறத்தல், வாழ்தல், இறத்தல் என்ற பேடிமை ஒழிக1 இம்சைகள் மலைபோல் வரினும் எங்கும் எங்கள் கரங்களை உயர்த்தும் திண்ணிய நெஞ்சம் விறைத்து நிமிரவும், *போ’ எனத் தடைகளை விரட்டி அடிக்கவும் போர்க்குணம் கொண்டு ஒரு பாடலைப் பாடுவோம்.
புதிதாய் ஒரு பூமியைப் பெறவும், இருட்டில் வாழ்ந்து ஒளியினைப் பிடிக்கவும் நண்பன் பதித்த சுவட்டின் வழியில் நெடிய பயணம் நீளத் தொடருவோம். பயண வழியின் கடுக்கல்கள் பாரா
- நெடிய பயணம் இனி நாம் தொடர்வோம்.
O ஹம்சத்வனி O

- : rahar ʻ v *a ܨ ܙܳ• * ܢܫܐ ܐܶܢ ܧܽ பெண்ணடிமைத்தனம் 1ற்றியசில் கருத்துகள்
வேைதகி
மனிதகுல வரலாற்றின் ஆரம்பத்தில் பெண்கள் எந்கவித அடக்குமுறையையும் அறியாதவர்களாய் அனுபவியாதவர்களாய் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சரித்திர சமூகவியல் ஆய்வுகள் ஆதா ரம் தருகின்றன. ஆதிசமூகத்தில் ஏற்பட்ட படிப்படியான சமூக வளர்ச்சியும், மாற்றமுமானது பெண்களைப் படிப்படியாக அடி மைப்படுத்தியது என்பதை நாம் வரலாற்றைப் பின்னுேக்கிப் பார்க்கும்போது தெளிய முடிகின்றது.
மனிதன் தோன்றிய ஆரம்பக்கட்டத்தில் நாடோடியாகவே திரிந்தான். சிந்தனை ரீதியான வளர்ச்சி பெற்றிராத அந்நிலை யில் வெறும் காய்கனிகளையே உணவாகக் கொண்டான். பின்னர் மாமிசத்தை உணவாக அவன் பயன்படுத்தத் தொடங்கியதில் இருந்து வேட்டையாடல் அவன் தொழிலானது. இதன்போது இலகுவாக வேட்டையாடுவதற்காகவும், பாதுகாப்புக் கருதியும் மனிதன் சேர்ந்து வாழத் தொடங்கினன்.
இவ்வாறு மனிதன் கூட்டமாக வாழத்தொடங்கிய அக் காலகட்டத்திலும் தாய், தந்தை, சகோதரம, பிள்ளைகள் என்ற வேறுபாடின்றி பாலுறவு நிகழ்ந்தது. சகோதரனும் சகோதரியும் மட்டுமல்ல பெற்றேரும் பிள்ளைகளும் கணவன் மனைவியாக வாழ்ந் தனர். இதனுல் குழந்தைகளுக்குத் தந்தை யார்? என்பதைக் கண்டுபிடிப்பதென்பது முடியாததாகவே இருந்தது. ஆனல் தாயை மட்டும் இனங்கான முடிந்த இச்சமூக முறைமை தாய்வழிச் சமூகம் எனப்பட்டது.
இச்சுமூகத்தில் பெண்கள் மதிப்போடு நடாத்தப்பட்டனர். அவர்களே தலைமை வகித்தனர். பெண்களது தலைமையில் குடும் பம் மட்டுமன்றி வேட்டையாடல், போரிடுதல் போன்றனவும் நடைமுறையில் இருந்தது. இங்கு மனிதன் தனக்குத் தேவையான வற்றை அவ்வப்போது பெற்றுக்கொண்டான், அவனது தேவைக் குத்தக்க உழைப்பில் ஈடுபட்டான். மேலதிகமாக எதையும் அவன் வைத்திருக்கவில்லை. இதனுல் அவனிடம் எவ்வித சொத்துக்களோ, சேமிப்போ இருக்கவில்லை. இப்பொதுவுடமைச் சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சமத்துவமாக உழைத்து, உழைப்பைப் பகிர்ந்து கொண்டனர்.
தாகம் 9

Page 7
காலப்போக்கில் புதிய உற்பத்திக் கருவிகளும், உற்பத்தி முறை களும் கண்டுபிடிக்கப்பட்டதனுல் மனிதன் தனது தேவைக்கதிக மாக பொருட்களை உற்பத்தி செய்யத்தொடங்கினன். வேட்டை யாடலுடன் மந்தை வளர்ப்பு, விவசாயம், உலோகங்களைப் பண் படுத்தல், நெசவுத்தொழில் என்பனவும் மேற்கொள்ளப்பட்டது. மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழத்தொடங்கினன். வீடு, வீட் டுக்குரிய பொருட்கள், அவற்றைப் பராமரித்தல், பாதுகாத்தல் போன்ற பலவும் வேலைகளாயின. உணவுக்காகத் தினம்தினம் பாடுபட வேண்டிய நிலைமாறி, அவர்களிடமிருந்த உடமைகளைப் பேணிக் கவனிப்பதன் மூலம் இருந்த பொருட்களை மேலும் மேலும் பெருக்கி தமது தேவைக்கதிகமாகவே பெற்றுக்கொள்ள முடிந்தது. கால்நடை மந்தைகள் முதலாக பல செல்வங்களும் குடும்பங்க ளின் தனிச்சொத்தாயின.
ஆண், பெண் என்ற பேதமின்றி உழைத்து வந்த சமூகத் தில் தனிச்சொத்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் உழைப்புப் பிரிவின்படி பெண் வீட்டு வேலைகளை மேற்கொண் டாள். கர்ப்பந்தரித்தல் காரணமாகவும், குழந்தைகளைப் பரா மரிக்க வேண்டி இருந்தமையாலும் பெண் வீட்டுக்குரியவளானள். இங்குதான் வேலைப்பிரிவினை காரணமாக பெண் வீட்டுக்குள் இருக் கத் தொடங்கினுள். உணவுப் பொருட்களுக்குரிய புதிய மூலா தாரங்களைப் பெறுவதோடு, கால்நடை போன்ற பலவற்றிற்கும் ஆண் சொந்தக்காரனக இருந்தான். ஆனல் குழந்தைகள் தாயின் சொத்தாகவே கருதப்பட்டது.
ஆணிடம் இருந்த செல்வம் அவனது குழந்தையை இனங் காண முடியாத காரணத்தால் குழந்தைக்கோ, மனைவிக்கோ சேர்வதில்லை. எனினும் ஆண்களிடம் செல்வம் பெருகப்பெருக பெண்களைவிட ஆண்களுக்கு குடும்பத்தில் அந்தஸ்து வலுப்பெற் :றது. அவன் அவ்வந்தஸ்த்தை சாதகமாகப் பயன்படுத்தியதால் தாயுரிமைப்படி இருந்து வந்த வம்சாவளிமுறை தூக்கியெறியப் பட்டது. அன்றைய காலகட்டத்தில் இப்போது நமக்குத் தோன் றுவது போல் அது அவ்வளவு கஷ்டமில்லை. ஏனெனில் இந்தப் புரட்சி - மனிதகுலம் அனுபவித்த மிக நிர்ணயமான புரட்சிகளில் ஒன்ருகும். ஆண்வழி வம்சாவளி முறையும் வாரிசுரிமை முறை யும் அமைக்கப்பட்டது.
எனவே கூட்டாக வாழ்ந்த மனிதர்களிடையே நான், எனது நிலம், எனது மனைவி, எனது சொத்து, அச்சொத்துக்கு வாரிசு என்ற ரீதியில் உரிமை கொண்டாடும் தன்மை ஆரம்பமானதால்
தாம்! 10

பெண்களும் உடமைப்பொருளாயினர். தனது சொத்து தனது இரத்தத்தில் பிறந்த பிள்ளைக்குச் சேரவேண்டும் என்ற எதிர்
பார்ப்பு பின்னர் பெண்ணும் தனக்கு மட்டும் உரியவளாக இருக்க
வேண்டும் என்ற கருத்தைத் தோற்றுவித்தது. பெண்களின் சுதந்
திரப் புணர்ச்சி தடுக்கப்பட்டதுடன் அவர்கள் ஒருவனுக்கு உரிய
வராக்கப்பட்டனர். தனிச்சொத்தின் வடிவில் பெண்ணிடம் கற்பு
ஒழுக்கம் என்பன கட்டாயமாக எதிர்பார்க்கப்பட்டது. பெண்
களை ஆண்கள் தமது சொத்தாகக் கருதியதோடு, அவர்கள் மீது
கட்டுப்பாடுகளை விதிக்கவும் தொடங்கியதால் பெண்கள் மெல்ல
மெல்ல தமதுரிமைகளை இழக்கத் தொடங்கினர்.
தர்யுரிமை தூக்கியெறியப்பட்ட இந்தக்கட்டமே பெண்ணி னம் உலகவரலாற்று ரீதியில் பெற்ற முதற்தோல்வியாகும். அதுவே அடக்குமுறையின் ஆரம்பக்கட்டமாகும். காலப்போக்கில் ஆண்கள் வீட்டிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். பெண் வீட்டிலும் தனதுரிமையை இழந்த நிலையில் பணிவிடை செய்ப வளாணுள். ஆண்களுக்கு காம இச்சையை தீர்ப்பதற்கு உரியவ ளானள். குழந்தைகளைப் பெற்றெடுக்கும் இயந்திரமானள். முழு மையான பொருளாதார அதிகாரத்தையும் ஆண்கள் கைப்பற்றி யதால் எந்த முடிவையும் எடுக்கவோ, மாற்றவோ முடியாது சொல்வதைச் செய்யும் கைப்பொம்மையானள். மனைவியின் விசு வாசத்தை உறுதிப்படுத்துவதற்காக அதாவது குழந்தையின் தகப் பனை இனங்காண்பதற்காக, ஆணின் பரிபூரண அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்பட்டாள். இந்நிலையில் அவள் சமூக, பொரு ளாதார அரசியல் விடயங்களில் பங்கு பற்ற முடியாத நிலையில் நான்கு சுவர்களுக்குள் அடங்கி வாழும் சிந்தனை வளர்ச்சியற்ற நிலையை அடைந்தாள். -
ஆணுதிக்கப் போக்கானது பெண்களை ஒருதார மணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதே தவிர, தாம் பலதார மணம் செய்வதற்கோ விவாகரத்துச் செய்வதற்கோ தடைபோட வில்லை. தொடர்ந்து வந்த சமுதாயத்திலும் பெண்ணடிமைத் தனம் கிளைவிட்டு வளர்ந்து வந்தது. சிசு வதம், பால்யமணம் உடன்கட்டையேறல் போன்ற புதிய புதிய அடக்குமுறைகளுக்கு பெண் முகங்கொடுத்தாள். பெண்ணெண்பவள் கணவனுக்கு அடங்கிவாழ வேண்டியவள், கணவனின் உடமை, கற்பைக் காத் தல் வேண்டும் போன்ற கருத்துகள் காலப்போக்கில் இலக்கிய ரீதியாகவும் வலியுறுத்தப்பட்டது. இலக்கியங்கள் பெண்கள் வாழும் முறைமைகளையும் அவர்களுக்கான விதிகளையும் எடுத்துக்
தாக்ம் 11

Page 8
கதியது. கண்ணகி, சீதை, திரெளபதை போன்ரூேர் தலைசிறந்த உத்தமிகளுக்கு உதாரணமாகக் காட்டப்பட்டனர். கணவன் இறந்தபோது பெண்களை உயிருடன் உடன்கட்டையேற்றுதல், எரிந்த நிலையில் வேதனை தாங்க முடியாமல் ஓட முற்பட்ட பெண்களை மீண்டும் கொண்டுவந்து எரித்தல், பெண்ணுக்குக் கைக்குழந்தை இருந்தபோதும் கூட கணவனுடன் உடன்கட்டை யேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டமை போன்ற பல சம்பவங்கள் இலக்கியங்களில் காட்டப்படுகிறது. பெண்குழந்தைகள் பிறப்ப தையே வெறுத்ததன் காரணமாக பெண்குழந்தைகள் பிறந்த வுடன் கொல்லப்பட்டனர். இன்றும்கூட பெண்குழந்தைகள் பிறப் பதை வெறுப்பது நம்மத்தியில் நிலவுகிறது. பிறந்த குழந்தையின் மூக்கினுள் சாம்பல் அடைவது, சங்கினுள் பாலை ஊற்றி, அதற் குள் ஒரு நெல்லை இட்டுப் பருக்குவது போன்ற முறைகளினல் பெண்குழந்தைகளைக் கொல்லும் முறைகள் இன்றும் சில சமூகங் களில் நிலவி வருவதாக அறியக் கிடக்கிறது.
உலகரீதியாக நோக்குகையில் தாய்வழிச் சமூகத்தின் எச்ச சொச்சங்சள் ஆங்காங்கே காணப்படினும் இன்னும், இன்றும் நம்மிடையே பெண்ணடிமைத்தனம் நிலவி வருகிறது.
தொடரும் O Ο . Ο
"இந்தக் காலத்தில் மகோன்னதமான வார்த்தைகளெல் லாம் ஏராளமாகப் பேசப்படுகின்றன. அவைமிகுந்த அர்த்த புஷ்டியுடன் இருக்கின்றன. அத்துடன் நமக்குச் சொல்லப் படும் எ  ைத யும் மனதில் வாங் கிக் கொள்வதற்காக பெரும் இதயங்களை அகலத் திறந்து வைத்துக்கொண்டிருக் கும் ஏராளமான மக்களும் தோன்றியுள்ளார்கள். மேலும் அவர்கள் எல்லோரும் இளைஞர்கள். எனவே, அவர்களுக்கு விஷயங்களைக் கவனமாகவும், எளிதாகவும் தான் சொல்ல வேண்டும். ஆனல் எவருமே அவர்களிடம் கவனத்தோ டு நடந்து கொள்வதில்லை. அதற்கு மாருகத் தான் எல்லாம் நடக்கின்றது. சூறைக்காற்று வந்துவிட்டது. அது பூமிப்பரப் பிலுள்ள தூசியை ஈல்லாம் தூர்த்துத்துடைத்து அவர்களது இதயங்களுக்குள்ளே கொண்டு கொட்டிக் குவிக்கிறது."
- மக்ஸிம் கோர்க்கி = நன்றி பிரமச்சாரியின் டயறி.
தாகம் 12

விரைவில்
லியூவRக் லிவனேஸ்ா لگ '=rبہ بن
வெய்யில் அடிக்கும் w
பத்தொன்பது வயது மாணவி லியூஸிக் லிஸ்பீனவா புரட்சி
நடந்த 1917-ம் ஆண்டில் மாஸ்கோத் தொழிலாளர்களிடைய்ே
கட்சிப் பிரசாரகியாகப் பணியாற்றினுள். தொழிலாளி இளைஞர்
கழகத்தை ஒழுங்கமைத்தவர்களில் அவளும் ஒருத்தி.
மாஸ்கோவில் அக்டோபர் மாத ஆயுதப் போர்கள் நடந்த நாட்களில் லியூஸிக் ஒய்வு ஒழிவு இல்லாமல் வேலை செய்தாள் இராணுவத் தலைமை அலுவலகத்தில் செய்திகளை ஏற்கும் வேலை செய்தாள், மருத்துவப் படைப்பிரிவுகள் அமைப்பதில் பங்கு கொண்டாள், காயமடைந்தவர்களுக்குக் கட்டுக்கள் போட்டாள், தடையரண்களை வலுப்படுத்துவதற்குப் பஞ்சு மூட்டைகளைச் சுமந்து சென்ருள். ஆனல் தனது வேலை வேண்டியளவு பயனுள் ளதாய் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது.
"சண்டையின் மிக ஆபத்தான இடத்தில், எல்லாவற்றிலும் முன்னல் உள்ள முனைமுகத்தில், வெற்றியை நிர்ணயிக்கும் இடத் தில் இருக்க எனக்கு விருப்பம் உண்டாகிறது' என்று அவள் சொன்னுள்.
அஸ்தோழென்காவில் (தற்போது மெத்ரோஸ்திரோ யெவ்ஸ் காயா வீதி) யூன்கர்களோடு போரிட்டுக் கொண்டிருந்த செங் காவற்படைப் பிரிவுகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கிடி னமான வேலையை மேற்கொண்டாள் அஞ்சா நெஞ்சினளரின் இந்த யுவதி. இரண்டு தடவைகள் அஸ்தோழென்கா போய், தலைமையக உத்தரவைப் போர் நிலையங்களில் சேர்த்துவிட்டு, அங்கிருந்து தகவல்களுடன் மைஸ்க்வரேச்சியே வட்டாரத்துக்குத் திரும்பினுள்.
மூன்ருவது தடவை அஸ்தோழென்கா செல்ல அவள் புறப் பட்டபோது தோழர்கள் அவளைத் தடுத்தார்கள்.
"யூன்கர்கள் உன்னை இதற்குள் கண்டுகொண்டிருப்பார்கள்' என்ருர்கள்,
ஆனல் லியூஸிக் இதனுல் கலங்கவில்லை. அவள் சண்டையின்
மிக அபாயமான இடத்துக்குப் போனுள். ஒரு வீட்டின் ஐந்தா
தாகம் 43

Page 9
வது மாடியில் இயந்திர பீரங்கியை அமைத்துக்கொண்டிருந்த யூன்கர்கள் குண்டு வரிசைகள் சுடத்தொடங்கினர்கள். ஒரு குண்டு தாக்கியதால் லியூஸிக் விழுந்து விட்டாள்.
இது நடந்தது 1917 நவம்பர் 1 (14)ந் தேதி பிற்பகல் ஒரு மணிக்கு. அடுத்தநாள், அதாவது, 1917 நவம்பர் 2 (15)ந் தேதியன்று புரட்சி எதிர்ப்பாளர்களின் படைகள் முறியடிக்கப் பட்டன. மாஸ்கோவில் சோவியத் ஆட்சி நிலைநாட்டப்பட்டு விட் டது. லியூஸிக் லிஸினவா எந்த நோக்கத்துக்காக உயிரை வழங் கினளோ அது வெற்றிவாகை சூடியது!
மாஸ்கோவில் உள்ள மாலயா ஸெர்ப்புஹோவ்ஸ்கயா வீதி யில் 28-ம் எண் வீட்டில்தான் மாணவர் உணவு விடுதி இருந் தது. மைஸ்க்வரேச்சியே வட்டாரத்திலிருந்த போல்ஷிவிக்குகள் அங்குதான் கூடுவது வழக்கம், லியூஸிக் லிஸினவாவின் நினைவுக் காக இந்த வீதிக்கு லியூஸினேவ்ஸ்காயா வீதி என்று பெயரிடப் பட்டிருக்கிறது.
(கீழே அவள் தனது சகோதரி அனயீதாவுக்கு எழுதிய கடி தமொன்றைத் தருகிருேம்.)
9 G3D 97
. அன்பார்ந்த அனயீதா,
மனம் சோர்ந்திருக்கும் போதுதான் நான் வழக்கமாக உனக்கு எழுதுகிறேன். இப்போதும் என் மனம் சோர்ந்திருக்கி றது. ஆயினும், வேலை எனக்கு மிகப்பெரிய மனநிறைவு அளிப் பது, ஆறுதல் அளிக்கும் மருந்து. நான் மிக நிறைய வேலை செய்கிறேன் - பிரசாரம் என்ற அர்த் த த் தி ல் பண்படாத பொருள் என்னுடைய கைகளின் உதவியால் உணர்வுள்ள தொழி லாளியாக உருவாகும்போது, அவனுக்குள் வர்க்கத் தன்னு ணர்வை நான் தூண்டி எழுப்பும்போது. எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது என் ஆற்றல்கள் அதிகரிக்கின்றன. அப் போது நான் உயிருள்ள நபர். என் மனச்சோர்வு அகன்று விடு கிறது. நான் உற்சாகமாக வேலையில் முனைகிறேன். நிறையப் படிக்கவும், வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ளவும் (இது இல்லாவிட்டால் வேலை சரியாக வாய்ப்பதில்லை), என் தோழர்க ளுடன் உல்லாசமாக அளவளாவுவதை விட்டுவிட்டு ஆழ்ந்து கற் கவும் இந்த உணர்வு எனக்கு உதவுகிறது. இரகசிய நடவடிக் கைக் காலத்திலேயே என் வேலை பயன்பட்டது. இப்போது நான் தேர்ச்சி பெற்று விட்டேன். என்னல் இப்போது வேலை செய்ய
தாகம் 14

முடியும் என்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது, தெரி யுமா! 'நமக்கு," போல்ஷிவிக்குகளுக்கு எதிராய் இருக்கும் எல் லோருடனும் நிறையப் போராட வேண்டி இருக்கிறது. இப் போது போய் இரண்டு தொழிற்சாலைகளுக்கு வேண்டிய நூல்க ளின் பட்டியல்கள் தயாரித்து விலைக்கு வாங்குவேன். பின்பு வீட் டுக்கு வந்து சமூக-ஜனநாயகவாதி மாதரின் வகுப்பு வேலையில் ஈடுபடுவேன். அனயீதா, தொழிலாளர்களிடம் எவ்வளவு ஆற் றலும் திறமைகளும் மறைந்திருக்கின்றன. எல்லாக் கல்லூரி மாணவிகளையும் போல நான் மனநெகிழ்ச்சிக்கு ஆளாகி விட் டேன் என்றும் "ஏழைத் தொழிலாளர்கள்’ பற்றிக் கண்களில் நீர் மல்கப் பேசுகிறேன் என்றும் நீ நினைக்கிருய் போலும். இல்லை, எனக்கும் இதற்கும் வெகு தூரம். முன்பே, வேலையில் அவர்களை நான் அறிந்திருந்தேன். இப்போது அவர்களை நன்ருக அறிவேன். தொழிலாளி வர்க்கம் வருங்காலத்தை உரிமையாகப் பெற்றுள்ள வர்க்கம். இப்போதுதான் வளர்ச்சி பெறத் தொடங்கி இருக்கும் வர்க்கம். அதன் ஆற்றல்கள் விழிப்படைந்து வருகின்றன. இந்த வர்க்கத்தின் மேம்பாட்டை அவர்கள் (தொழிலாளர்கள்) பெற் றிருக்கிருர்கள்.
... என்னைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் உறுதி யுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். எனக்குள் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. பரவாயில்லை. இன்னும் நிறைய மாற வேண்டி இருக்கும். இப்போது மிகக் கடுங் குளிரில் வெளியே போக வேண்டும். ஆலங்கட்டிகள் ஜன் னலில் படபடக்கின்றன. கண்ணுடியில் அடித்து ஏக்கமுள்ள, காட்டுத்தனமான, ஆனல் உயிரோட்டம் நிறைந்த பாட்டை இசைக்கின்றன. சாம்பல் நிற வானம் இரங்கத்தக்கதாக, தனி மையானதாகத் தோற்றம் அளிக்கிறது. ஆனல் விரைவில் வெய்யில் அடிக்கும். மொட்டுகள் மலரும். பனிக்காலத்தின் கடைசிச் சுவடு களை வாழ்க்கையே துடைப்பம் போலத் துடைத்து ஒழித்துவிடும். உன்னை ஆரத்தழுவி முத்தம் இடுகிறேன்.
லியூவறிக் நன்றி: புரட்சியில் இளைஞர்கள்
தொடர்புகளுக்கு: செல்வி. எஸ். ரங்கா 3-ம் வருடம் (கலை) யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம்.
தாகம் 45

Page 10
O தொடர் கதைகள்
O மாதங்கி
O
ஒ..! இன்று நாங்கள் தென்றல் தழுவாச் செம்மலர்கள் எம்மைச் கு. யாருமில்லை. இருந்தும்வசந்தத்தின் அழைப்பிற்காய் இன்னெரு பொழுதின் விடியலிற்காய் காலத்தின் வாசலிலே காத்திருக்கின்ருேம்.
அதுவரை
எம் வதனங்களில் சோகப்புருக்கள் அரணமைக்க கார்கால முகிலாய் கண்கள் பனிக்கும். பனிக்கும் நீரும் செந்தூரம் கொள்ளும்.
எம்மனச் சோலையிலே ஆயிரமாயிரம் ஆசைப் பூக்கள் மலரும். மலர்ந்தே அவை ஒவ்வொன்றும் வேதனையின் ஆரமாய் நீளும்,
நாம் காணுமுலகை சமையலறை காட்டிநிற்க எம்மாசைகள் அங்கே சமாதியடையும். நீரோடைப் பூக்கள் போல நித்யமற்றுக் கிடக்கும்.
ஆரோகண அவரோகணத்தில் எம் மூச்சுக்கள் தோன்றியே அஸ்தமனம் கொள்ள எம்மிதயத் தம்பூராவோ சோகச் சுருதிகளை நிசப்தமாய் மீட்டும்.
இக்கோலங்களும் கோடுகளும் பதிந்திருக்கும் எங்களைத் தெரியுமா? நாங்கள் தான். நாங்கள் தான்.
காதற் கண்ணனை காலமெல்லாம் நினைந்தே நினைவு ராகங்களை மீட்டி வாழ்ந்திடும் கண்ணிர் மீராக்கள். பூஞ்சணம் பிடித்த உணவினைப் போல் இருள் கவிந்த இதயத்தினர்க்கு மாலையிட்டதனல் தடமிழந்து போன் தயந்திகள். காதலென்ற போர்வையிலே எம்மை மீட்டிச்சென்ற காதற் கோவலரை
இன்னும்
இன்னும்
மறவாத மாதவியர்.
O O
தாதம் 14

எங்கள் கேள்வியும்
உங்கள் பதிலும்
1. கேள்வி:
“பெண்களை ஆண்கள் போகப்பொருளாகக் கருதுவதை விட பெண்கள் தாம் போகப்பொருட்களே என்பது ாோல் கவர்ச்சி காட்
டுவது அதிகம்." இந்தக்கூற்றுஎந்தளவு தூரம் உண்மையா னது?
பதில்:
S SSL AAAAS SAAASSASASASqTTTAS SAAASSASASASAS AA A SAAS S - - - - - -
இக்கூற்றில் ஒரு தவறுண்டு. பெரும்பாலான பெண்கள்,
ஆண்கள் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஏனெனில்
நிச்சயமாக இதற்கு விதிவிலக்கான ஆண்களும், பெண்க ளும் இருக்கிருர்கள். என்னைப் பொறுத்தவரை இக்கூற் , றுக்கு விதிவிலக்கானவர் தொகை இன்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது.
ஆனல் பெண்களில் தாம் அழகாய் இருக்க வேண் டும் என்பதுடன் கவர்ச்சியாய் இருக்க வேண்டும் என்ப தில் அதிக கவனமுடையோர் உளர். சில பெண்கள் தங் கள் அங்கங்களைக் காட்டுவதன் மூலம் கவர்ச்சியாக இருக் கலாம் என நினைக்கிருர்கள். இவ்வாறு ஆசை காட்டி மோகத்தை வரவழைப்பது அவர்களையே மோசம் செய் வதற்குத்தான் என்பதை அவர்கள் உணர்வதில்லை. தமது அங்க அழகிலும், கவர்ச்சியிலும் ஆண்களை அடிமைப் படுத்துவதாக இவர்கள் நினைப்பதுடன் சரி. சேலைதான் ஒரு பெண்ணிற்குரிய பொருத்தமான ஆடை என்பது தமிழரின் கருத்து. ஆனல் அந்த ஆறுமுழச் சேலையிலே தான் இடையும், மார்பும் பளிச்சிடுகிறது. இதுவே ஆணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு பொருத்தமான ஆடை யென வாதிடுவோரும் உளர். எனவே பெண்களது மனப் பான்மைகள் மாற்றப்படுவதுடன் அவர்கள் பெண்விடுதலை தொடர்பாக சிந்தனை ரீதியாக வளர்க்கப்பட வேண்டும்.
இன்னும் நமது ஆண்கள் சீதனத்துடன் அழகை முக்கி
யப்படுத்துவதனலேயே பெண்கள் தம்மை அலங்கரிக்கிருர் கள். தமது பெண்ணை விலைப்படுத்தும்வரை பெற்றேர்
கூடி அவளின் அழகில் கவனம் செலுத்தவேண்டிய நிலை.
பெரும்பாலான ஆண்கள் பெண்களை ரசிப்பதற்கும், சுவைப்பதற்கும் தான் நாடுகிறர்கள். பெண்களை தெருக்
தாகம் 17

Page 11
களில் நக்கல் பண்ணுவது கூட இதனெரு வடிவ்மே. பெண் பார்ப்பதும் அழகில்லை என விடுவதும், இதனல் பெண்களைப் பெற்ருேர் சுமைதாங்கி எனக் கருதுவதும் வழமையான பல்லவி. பெண்கள் திருமணம் செய்து வாழ் வதுதான் வாழ்க்கையெனக் கூறும் நமது சமுதாய வழக் கில் அழகுடனும், கவர்ச்சியுடனும் இருத்தல் வேண்டும் எனப் பெண்கள் நினைப்பதும் தவிர்க்க முடியாதது. உ+மாக, அழகான பெண்களைச் சீதனமின்றி மண முடித்துள்னனர். S. . .
எனவே எமது சமுதாய மரபுகளும், வழக்கங்களும் மாறும் வரை இவையும் தவிர்க்க முடியாதிருக்கும்.
2. கேள்வி:
ஒரு விடுதலை ஸ்தாபனத்தைச் சேர்ந்த பெண் என்ற வகை யில் “நமது தமிழ்ச் சமூகமும் பெண் விடுதலையும்' பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்?
பதில்: தமிழ்ச் சமூகமும் பெண்விடுதலையும் என்னும் போது இன் னும் பல காலம் சென்ருல்தான் எங்கள் பெண்களிடத்தில் விழிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் அவநம்பிக்கையும் தான் இன்று பலர் மனங்களில் நிறைந்துள்ளது. எமது நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தையே இன்னும் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஆதரிக்கவுமில்லை, அதில் தங்கள் பங்களிப்பை வழங்க முன்வரவுமில்லை. எவ்வ ளவோ பாதிப்புகள் நடந்தும் இன்னும் பொதுமக்கள் முழுமையாக விழிப்படையாமல் இருக்கும்போது தாங் கள் அடக்கப்படவேயில்லை என்று கருதி அடக்குமுறை அதி காரத்தை அன்புக்கட்டளை என்றும் ஆண்டவன் நியதி என்றும் மகிழ்வுடன் பொறுத்து வாழும் பெண்களை விழிப்படையச் செய்ய இன்னும் எவ்வளவு காலம் செல் ayGBuonr?
இந்தக் கவலை மனத்தில் இருந்தாலும் அதற்காக அவர்கள் பாதிப்படைந்து அதன் பின் விழிப்படையட் டும் என்று சோர்ந்து இருக்க நாங்கள் விரும்பவில்லை. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு விட்டோம் என்ப வர்கள் தூங்குபவர்களை எழுப்ப முயற்சிக்க வேண்டுமே யொழிய அவர்கள் இன்னும் தூங்கட்டும் என்று சும்மா இருக்கக்கூடாது. தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்தால்
தாகம் 18

எவ்வளவோ தூரம் பின்னேக்கிச் செல்ல வேண்டும் என்று விளங்கிக் கொண்டவர்கள் சோர்ந்து இருக்க விரும் பமாட்டார்கள். தூங்குபவர்களில் கூட உண்மையாக தூங்குபவர்கள், தூங்குபவர்கள் போல் நடிப்பவர்கள் என்று இரண்டு வகையுண்டு. உண்மையாக தூங்குபவர் களை எழுப்பி விடலாம்- நடிப்பவர்களை எழுப்புவதுதான் கஷ்டம். ஆஞலும் எப்படியும் எல்லோரையும் எழுப்பித் தான் ஆகவேண்டும்.
இன்று எங்கள் தமிழ்ப்பெண்களில் பலர் தாங்கள் தெய்வம் என்ருே பத்தினி என்ருே போற்றப்பட வேண் டும் என்றுதான் விரும்புகிருர்களேயன்றி தாங்கள் பெண் களாக மதிக்கப்படவேண்டும் என்று எண்ணுவதேயில்லை. அதற்கு அவர்கள் மதக்கோட்பாடுகளாலும் முன்னுேர் கள் கூறிச்சென்ற சில தவருன கருத்துக்களாலும் வழி நடத்தப்பட்டமைதான் காரணமாகும். அந்த மாயையை அவர்கள் மனத்திலிருந்து விரட்டியடித்து அவர்களை தங்
களைப் பிறர் பெண்களாகக் கணிக்கவேண்டும் என்ற எண்
ணம் கொண்டவர்களாக மாற்றவேண்டும். அந்த நிலைப் பாட்டுக்கு அவர்கள் வரும்வரை அவர்கள் தேசிய விடு தஃலப் போராட்டத்திலும் சரி பெண்விடுதலைக்கான செயற் பாடுகளிலும் சரி பங்கு கொள்ள முன்வரமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
கேள்வி:
பெண்கள் உரிமைகோரி போராட்டம் நடாத்துவது அநாவசிய மானது. இன்றைய நிலையில் அவர்களுக்கு இருக்கும் உரிமை கள் போதுமானவை. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்:
இன்றைய நிலையில் பெண்கள் தமது உரிமைகளுக்காக போராடுவது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவர்க ளுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படும் போது உண்மையில் பெண்கள் சகல விதங்களிலும் ஆணு திக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக கண வன், மனைவி ஆகிய இருவரும் வேலைக்குப் போகும் ஒரு வீட்டிலே, வேலை முடிந்து வந்ததும் மனைவியே வீட்டு வேலைகள் யாவற்றையும் செய்யவேண்டியுள்ளது. இங்கு மனைவியும் கணவனைப் போல் வேலைக்குப் போகிருள்; அவளுக்கும் சம உரிமை இருக்கின்றதுதானே?
Tதாகம் 19

Page 12
எனப் பேசப்படுமேயொழிய அவளுக்கு வீடடு வேலையி லும் சம உரிமை இருக்கின்றதா எனக் கேட்கப்படுவ தில்லை. எனவே இங்கு வீட்டுவேலை என்பது பெண்க ளுக்கே உரிய ஒரு கடமையாகக் கருதப்படுகிறது. வீட்டு வேலையுடன் சமசம்பளமின்மையும் நோக்குதற்குரியது. சில வேலைகளுக்கு ஆண் 25 ரூபா பெறும்போது அதே யளவு நேரம், அதேயளவு வேலை செய்த பெண் 10 ரூபா அல்லது 15 ரூபா பெறுகிருள். இது மாற்றப்படவேண்டி யதாகும். இன்று ஆண்களை விடப் பெண்களே குடும்பப் பொறுப்பைக் கவனிக்கிருர்கள். ஆண்கள் கைது செய்யப் படல், சுட்டுக்கொல்லப்படுதல், இயக்கங்களுக்கு போதல் போன் சில் காரணங்களால் பெண்கள் தனித்து நின்றே சமாளிக்கிருர்கள். இந்நிலையில் குறைந்த சம்பளம் முழுக் குடும்பத்தையும் பாதிக்கிறது. இவ்வாருகப் பல விடயங் களைப் பெண்கள் போராடிப்பெற வேண்டியுள்ளது. அப்ப டியிருக்கையில் அவர்களுக்குரிய உரிமைகள் போதுமா னவை என்பது தவருண ககுத்தாகும்.
4. கேள்வி:
இன்றைய நடைமுறைகள் தமிழ்மக்களின் எதிர்காலம் பற்றி உங்களுக்கு என்ன நினைப்பைத் தருகிறது?
பதில்: இதற்குத் தமிழ்மக்கள் இன்றைய நடைமுறைக்குத் தள் ளப்பட்டதற்கான அகநிலை, புறநிலைக் காரணிகளை - ஆராய்வதன் அடிப்படையிலேயே ஒரு முடிவைப் பெற வேண்டும். இன்று புறநிலையானது ஏகாதிபத்தியங்களின தும், மேலாதிக்கங்களினதும் சுரண்டல், ஆதிக்கநிலைகளை வலுப்படுத்துவதற்கான செயற்பாடாக உள்ளது. அதே வேளை அகநிலையானது புறநிலைக்குத் துணைபோகின்ற பெரும்பாலான நடவடிக்கைகளையே கொண்டுள்ளது.இவற் றின் காரணமாக இன்று நிலவும் சமுதாய அமைப்பா னது அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி மிக விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது. அதன் இறுதிக்கட்டத்தை அடைந்த பின்பு சமுதாயமானது தொடர்ச்சியாக உயிர் வாழ முடியாமல் புதியதோர் வடிவத்தை எடுக்குமென் பது இயங்கியல் நியதி. அதைத் தோற்றுவிப்பதற்கான சரியான வழிகாட்டலும், நடைமுறையும் அகநிலை, புற நிலைச் சூழ்நிலைகளை எதிர்த்து எப்பொழுது அரங்கிற்கு வருகின்றதோ அப்பொழுது தமிழ் மக்களுக்கு விடிவு 6մՕ5ւb. ܚ
தாகம் 20

செழியனின் கவிதைத் தொகுதி LDJI GODIŤ LI JULI JF16) IS 656
கவிதா O
'உண்மையை மறுப்பவர்களிடம்
கூறுங்கள் எங்கள் மரணம் அது ஒரு முடிவல்ல.
என்று மரணத்துக்கு அப்பாலும் வாழும் சிரஞ்சீவித் தனமான மான கவித்துவக் குரலுடன் செழியனுடைய இரண்டாவது கவி தைத் தொகுப்பான "மரணம் வெளிவந்துள்ளது. அவருடைய முதலாவது தொகுப்பு, "இல்லாமல் போன தோழனுக்கு - என் பதன் மூலமே தமிழ் இலக்கிய உலகின் கவனத்தைத் தம்பால்
ஈர்த்துக் கொண்டவர் கவி செழியன்.
எண்பதுகளுக்குப் பின்னன ஈழத்துத் தமிழ்க் கவிதையின் புதிய பரிமாணங்களின் உருவாக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் மேலும் செழுமை தருவதாக செழியனின் கவிதைகள் அமைகின்றன.
"மரணத்துள் வாழ்வோம்" என்ற அரசியல் கவிதைகளின் தொகு தியைப் படிப்பவர்களுக்கு நமது இளைய, புதிய தலைமுறையின் வேகமும், வீச்சும் கணிசமான அளவுக்கு மனதுள் இறங்கும் என்று சொல்லலாம்.
கையடக்கமான, சிறிய, மிகவும் அழகிய அமைப்புடன் செழிய னின் கவிதைகள் இத்தொகுதியில் அச்சாகியுள்ளன. இவரது "பாடு பொருள்கள் - சிறையிடப்பட்ட எங்களது இரவுகள், அதிகாலைப் பொழுதுகள், முட்களை ஏந்தும் பூக்கள்" மட்டுமல்ல எதுவுமே நிகழாதது போல மினுக்கும் வெள்ளி நட்சத்திரங்க ளும், அசைவற்று நிற்கும் முற்றத்துப் பனைமரமும், சூரியனைக் காணுத இருட்டறைகளும், பசுந்தளிர் நுனியில் மெல்ல வியர்க் (கும் பணித்துளிகளும் கூடத்தான் இவரது பாடுபொருள்களாகின் றன.
ஆனல், செழியனுடைய முக்கியமான அம்சம் இயற்கையை நமது வாழ்வின் பின்னணியிலும், வாழ்வை நமது இயற்கையின் பின்ன
தாகம் 21

Page 13
ணியிலும், மாறிமாறிச் சித்திரிப்பதாகும். இவ்வாறன ஒரு சித் திரிப்பில் வெறுமனே வரட்டுத்தனமாக இயற்கையை மட்டுமே பாடும் ஒரு முனையையும், வெறுமனே வரட்டுத்தனமாக வாழ்க் கையை மட்டும் பாடும் இன்னெரு முனையையும் தூக்கி வீசி விடுகிறர். ஒரு உண்மையான கவிஞனுக்கு இத்தகைய ‘தூக்கி வீசுதல்’ இயல்பான ஒன்றுதான்.
மனித இருப்பை - மனிதனை நம்புகிறவர்கள், செழியன் எழுதுவது Gunrav
‘ஒரு மனிதனின் வருகைக்காக மெளனித்துப் போய்விட்ட அந்த துரதிர்ஷ்ட இருளிலும் பேணுவோடு நம்பிககையுடன் காத்திருப்பார்கள் தான்' இவர்களுக்கு இயற்கை, வாழ்க்கை, கவிதை, அரசியல் என்ற பிரிப்புகள் இல்லை. எல்லாவற்றையுமே மனிதத்தின் விகசிப்பாக வும் மனித இருப்பின் மூலங்களாகவும் பார்ப்பவர்கள்.
இந்த வகையில் செழியன் தன்னை மிகவும் ஆழமாக இனங்காட் டுகிருர், w
அடுத்த முக்கியமான அம்சம் அவருடைய கருத்துநிலையும் அக் கருத்துநிலை, கவிதை எனும் ஊடகத்துடாக வெளிப்படுகிற முறை மையும் ஆகும். விடுதலைப் போராட்டத்தை முன்னேக்கித் தள் ளும் வகையில் கவிதை நெம்புகோலைப் பிரயோகிப்பதுடன் நின்று விடாமல் போராட்டத்தின் பலவீனங்களைக் கூரிய அம்புகளால் தாக்குகிறர்.
முரண்பாடுகள் காரணமாகக் கொல்லப்பட்டு இறந்துபோன நண் பர்களுக்கு எழுதிய "துப்பாக்கி மட்டுமே வைத்திருப்பவர்கள்’ என்ற கவிதை இங்கு முக்கியமானது.
'குறித்துக் கொள்கிருேம் நண்பர்களே சுதந்திரத்திற்காய்ப் போராடி சுதந்திரம் மறுக்கப்பட்ட மனிதர்களின் வரலாற்றை. என்றும்
“புறப்பட்டீர்கள் வேகமாக எப்படியோ தேடிக்கொண்டீர்கள் துப்பாக்கிகள்
தாகம் 22

வெடிகுண்டுகள் தாக்குதல்கள் ஒன்றையுமே மறந்து போய் விடவில்லை அவசரத்தில் ஒன்றை மட்டும், மக்களை மறந்து விட்டீர்கள்’ என்று நிதானமாகவும் தைக்கும் படியும் எழுதுகிருர், இன்னெரு கவிதையில் "அரசியல் இல்லாத துப்பாக்கிகளைக்கண்டு சகிக்க முடியாமல் விட்டுப் பிரிந்து சென்ற ஒரு சினேகிதியை நினைவு கூர்கிருர்,
இத்தகைய விமர்சனங்கள் மிகவும் அவசியமானவை மட்டுமல்ல. போராட்டத்தைத் திசை தெரியாமல் குழப்பி விடும் போக்குக ளுக்கு மிகவும் எதிரான ஆக்கபூர்வமான செயலும் ஆகும்.
செழியனின் கண்டனக்குரல் பேர்லினுக்கு அகதிகளாய்” வெளி யேறுகிறவர்களுக்காகவும், மனித நேயத்தை மறந்தவர்களுக்காக வும் ஒலிக்கிறது.
எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத அநுரதபுரம் படுகொ லைகள் குறித்த செழியனின் கவிதை இங்கு குறிப்பிடப்படவேண் டும். ‘ஒரு சிங்கள நண்பிக்கு" எனும் அக்கவிதை மிகவும் உக்கி ரமாக- அநுரதபுரம் படுகொலைகளைச் சாடுகிறது.
*மனித வேட்டையர்களால் மனித இரத்தங்கள் சிதறி புத்த
தர்மம் புதைகுழிக்குள் அனுப்பப்பட்டபோது" உயிர்காத்து அனுப் பிய சிநேகிதிக்குப் பின்வருமாறு எழுதுகிருர் கவிஞர். ar
*விழிகளில் நீர் சுமந்து r
முடியாமல் என்னைப் பிரிந்து
வழியனுப்பி வைத்த" உன்னையும்
உன்தேசத்து மனிதர்களையும்
இனி எங்ங்ணம்
நான் விழிப்பேன்?
‘எங்கள் தேசத்தில் நிகழ்வது போலவே அவர்கள் வந்தனர். எங்கள் தேசத்தில் நிகழ்வதுபோலவே அவர்கள் கொன்றனர். மனிதப் பண்புகள் மரணம் அடைந்தன"
தாகம் 23

Page 14
இந்த அநியாயங்களை மட்டுமல்ல, எல்லா அநியாயங்களையுமே "மனிதத்துவம் ஒர் நாள் தோற்கடிக்கும்’ என்ற அசையாத நம் பிக்கையையும் கவிஞர் கூடவே வெளிப்படுத்துகிருர். இந்தக் கவி தையை இளவாலை விஜயேந்திரனின் 'சொல்லப்படாத ஒரு செய்தி எனும் கவிதையுடன் (புதுசு- 10, நவம்பர் 1985 இதழ்) ஒரு சேர வாசிப்பது பயன்தரும்.
‘எல்லாளன் தேர் தரித்த சுவடுகளைக் காலம் மூடியது' என்றும் 'மனித நேயம் அற்றுப்போன ஒவ்வொரு நாயையும் வாலிலே கட்டித் தூக்கிலிடுவோம் மண்ணை, மனித2ன விட மேலாகி விட்ட துவக்குகளை வீசியெறிவோம் கடலுக்குள்’ என்றும் "சொல்லப்படாத ஒரு செய்தி எனும் கவிதையில் கவிக்குரல் பலமாகச் சாடுகிறது.
"பிழைகாணில் பொருத உள்ளங்கள் வலிவுட்னும் துணிவுடனும் ஒலிப்பது என்பது எங்களுக்கும் எங்கள் போராட்டத்துக்கும் மிகுந்த நம்பிக்கை தருவதாகும்.
இத்தகைய விமர்சனக் குரல்கள் பலருக்கு எரிச்சல் தருவதாகவும், முகமூடிகளைக் கிழிப்பதாகவும் கூட அமையலாம். போராட்டத் தின் பெயரால் உண்மையும், நீதியும் அதர்மமும் அற்றுப்போ வதை தாம் அனுமதிக்க முடியுமா?
கவிஞர் செழியன் புதைகுழிகளைப் பற்றிக்கூடப் பேசுகிருர். (பெர்லினுக்கு ஒரு கடிதம்) எவ்வாறு பேசாமல் இருக்க முடியும்?
"நெற்றிக் கண்ணைக் காட்டினலும் குற்றம் குற்றமே!’ என்ற நக்கீரனின் ஆளுமை இந்தக் கவிஞர்களிடம் இருப்பதற்காக அவர் களுக்குத் தலைவணங்குகிருேம்.
இக்கவிதைகளை- இத்தகைய கருத்துக்களை, இலகுவாக "மக்களைக் குழப்புவது போராட்டத்தைப் பின்னடையச் செய்வது", "எதி ரிக்குத் துணைபோவது' என்று கொச்சைத்தனமாகக் கூட சிலர் எடுத்துரைக்கக்கூடும். ஆனல் செழியன் எழுதுவதுபோல
'இப்போதெல்லாம் மக்கள் சந்தேகிக்கின்றனர் அடிக்கடி கேள்விகள் கேட்கின்றனர்
தாகம் 24

தமக்குள் நீண்ட நேரம் பேசிக் கொள்கின்றனர்.” அவர்களுக்கு உண்மைகள் தெரியும்; அவர்கள் விட்டுக் கொடுப் பதில்லை; அவர்கள் மந்தைகளும் அல்ல: அவர்களே வரலாற்றின் உந்து சக்தி. இதனைத் தெளிவாகச் செழியன் புரிந்து கொள்வது மட்டுமல்ல, புரியாதவர்களுக்குப் புரியவும் வைக்கிருர்.
"மரணத்தைக் கண்டு நாம் அஞ்சவில்லை ஒரு அநாதைப் பிணமாய் ஒரு அடிமையாய் புதிய எஜமானர்களுக்காக தெருக்களில் மரணிப்பதை நாம் வெறுக்கிருேம்’ இன்றைய நிலையில் இந்த வரிகள் மிகவும் ஆழமான அர்த்தங் களைத் தருவன. எஜமானத்துவம்- எவ்வகையிலிருந்தாலும் மக் கள் திரள் அதனை எதிர்க்கவே செய்யும். இந்த எதிர்ப்பை முனைப் பாக்கும் பணியில் உலகெங்கும் கவிஞர்களும், நாடகாசிரியர்க ளும், கலாச்சாரக் குழுக்களும் இயங்கி வருகின்றன.
இந்நூலின் அட்டை ஒவியத்தைப் பற்றி எழுதாது விடுவது என் பது ஒரு துரோகமாகும். "மரணம்’ என்ற கருத்தை மெல்லிய குறியீட்டுத் தன்மையாக- அதே நேரம் அழகாகப் பதிவு செய் கிறது. இந்தக் கட்டுரையை செழியனுடைய கவிதை வரிகளுட னேயே முடிக்கலாம்:
"அது முன்பு நடந்தது போல இருக்காது எங்கள் மண்னில் ஒரு புதிய வரலாற்றை நானும் நீயும் திட்டித் தீர்த்த அதே சனங்கள்- எங்கள் மக்கள் படைக்கப் போகின்றர்.’
O O O
நாம் சிங்கள முதலாளித்துவ அரசின் அராஜகங்களுக்கு எதிராக மாத்திரம் போராட்டங்களை முன்னெடுத்தால் போதாது, தமிழீழ விடுதலை அமைப்பிலும் புதிதாக உள்நுழைந்து வரும் அராஜகப் போக்குகளுக்கு எதிராகவும் போராட வேண் டும். அராஜகமும் ஒடுக்குமுறையும் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராய் போராட வேண்டும்.
. நன்றி. - புதியதோர் உலகம்
(பக்கம் 363)
தாகம் 25

Page 15
ஒரு பெண்ணின் மரணம்.
ஒரு உண்மைச் சம்பவம் கற்பனை கலந்து இங்கு தரப்படுகிறது.
ரங்கா
வீணு மிகவும் மென்மையானவள். அவளது அன்பான உறவு, அடக்கமான நடத்தை, அதைவிடவும் அவளது அழகு அந்த ஊரில் பலராலும் விமர்சிக்கப்படுவது. ஆம்! வீண எவனுக்கு மனைவியாகிருளோ அவன் அதிர்ஷ்டசாலியெனப் பலரும் பேசிக் கொள்வார்கள். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வீணுவுக்கு லட்சக்கணக்கில் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்ய வசதியி ருக்கவில்லை. ஆனல் அவளது அதிர் ஸ்டமோ, பெற்றேரின் அதிர்ஸ் டமோ அவளைப் பெண்பார்ப்பதற்கு குமார் வந்திருந்தான்.
குமார் அந்த ஊரில் பெரிய பணக்காரன். அளவுக்கு மீறிய பணவசதியானது அவனை நினைத்தபாட்டில் நினைத்தபடி வாழ்வ தற்குத் துணைநின்றது. அவன் தேடிக்கொண்டிருந்ததெல்லாம் ஓர் அழகிய, அடக்கமான பெண்ணை, அவனுக்குப் பிடித்த அத் தன் அம்சமும் வீணுவிடம் காணப்பட்டது. அவன் அவளைத் திருமணம் செய்வதற்கு மிகவும் விரும்பினன். இதன் விளைவு வீணுவுக்கும், அவனுக்கும் பெண்பார்த்து ஓர் சில நாட்களுக்குள் ளேயே மிகவும் விமர்சையாக, மிகவும் சிறப்போடு திருமணம் நடைபெற்றது.
கற்பனைக்கெட்டாத செல்வச் செழிப்பும், சுகபோக வசதியும் வீணுவைச் சூழ்ந்திருந்தது. இளமைப்பருவமும், வாழ்வின் இனிய சுகமும் அவளுக்கு இதமளித்தது. குமாரின் மீது அளவுகடந்த அன்பு வைத்தவளாய், அவனுக்கு வேண்டிய சகல தேவைகளை யும் மனைவிக்குரிய பண்போடு வீணு செய்து வந்தாள். நாளுக்கு நாள் குமார்மீது கொண்ட அன்பு வளர்ந்து வந்தது. வீணு குமாரை ஆழமாக நேசித்தாள். அவனத்தவிர அவளுக்கு உல கம் வேருென்றில்லை.
S. OOO . . . oOO
இன்பவானில் சிறகடித்த தம்பதிகள் மூன்று குழந்தைகளுக் குப் பெற்றேராயினர். மூத்தவன் பாலர் வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தான். மூன்று வயதான இரண்டாவது குழந்தையு டனும், இளையவனுடனும் வீணுவுக்குப் பொழுது போவதே தெரி
தாகம் 26

யாமல் போய்விடும். அவளுக்குக் குழந்தைகள் என்றல்போதும், அந்தளவுக்குப் பிரியம் வைத்திருந்தாள். குமாரும் நேரம் கிடிைக் கும்போது பிள்ளைகளுடன் விளையாடுவான்.
நாட்கள் நகர்ந்தன. குமாருக்கு மூன்று பிள்ளைகளும் போதும் என்ற எண்ணம். கருத்தடை செய்து குழந்தை பெறக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். இறுதியில் அவனே கருத் தடை செய்து கொண்டு வீணுவுடன் அடிக்கடி உடலுறவு வைத்து வந்தான்,
OOO . . . OOO
's வீணு குழந்தைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டிக்கொண்டி ருந்தாள். பிள்ளைகள் துருதுருவென வளரும் வேகமும், அவர் களது செல்லப் பேச்சும், குறும்புத்தனமும் அவளை அடிக்கடி மெய் சிலிர்க்க வைக்கும்.
'வீணு என்ன கடும் யோசனை? குமார் கேட்டான்.
வீனு நாணத்தோடு குழந்தைகளை முத்தமிட்ட வண்ணம் இவ்ையோட விளையாட இன்னெரு பாப்பா பிறக்கப் போருன்?
என மெதுவாகச் சொன்னுள். குமார் திடுக்கிட்டவனுய் மீண் டும் கேட்டான். அவளும் சொன்னுள். குமாருக்குத் தலை சுற்றி யது. அவன் ஒன்றும் புரியாமல் தவித்தான். தனது மனைவியா? தனது வீனுவா? அவனல் ஆரம்பத்தில் நம்பமுடியவில்லை. ஆனல் சந்தேகம் யாரைத்தான் விடுவதுண்டு. குமார் வீணுவை நன்கு அவதானித்தான். வீட்டுக்கு வந்து போகும் ஆண்கள், அவர்களு டன் வீணுவின் நடவடிக்கைகள், வெளியில் உள்ள தொடர்புகள், அவனது ஆய்வுகள் வெற்றியளிக்காத போதும் சந்தேகம் வெறி யானது.
ஒரு நாள். குமார் வீணுவை அடிக்கத் தொடங்கினன். கேட்டுக் கேட்டு அடித்தான், அவள் கத்தினுள், கதறினுள் முடி வில் மயங்கினுள். குமார் அவள் இறந்ததாக நினைத்தானே என் னவோ அவளே தற்கொலை செய்துகொண்ட மாதிரி எல்லா நட வடிக்கைகளும் செய்தான். கடைசியாக அவளே எரிந்து கெத் ததுபோல, எரித்துவிட்டுச் சென்று விட்டான்.
அங்கு எதிர்பாராத விதமாக வந்த வீணுவின் உறவுக்கா ரன் அவளைத் தேடி, இருக்குமிடத்தைப் பிடித்து, ஆஸ்பத்திரியில்
தாகம் 27

Page 16
அனுமதித்தான். இத்தனை அடியிலும், எரிவிலும் கூட அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இறக்கின்ற அந்த இறுதி நேரத்தில் அவள் கதைத்தாள்.
ஏன் இப்படிச் செய்தனி? -
எனக் கேட்டவர்களுக்கு எனக்கு வாழ விருப்பமில்லை.
வீணு சொன்ன பதிலிதுதான். கடைசி நேரத்திலும் கண வனைக் காட்டிக் கொடாமல் இறந்து போனுள்.
வீணுவின் மரணத்திற்கு கர்ப்பம்தான் காரணமென்ற கதை ஊரெங்கும் பரவிற்று. 'கருத்தடை சிகிச்சை செய்து குறிப்பிட்ட சில நாட்கள் முடியமுன்னர் உடலுறவு வைக்க வேண்டாம் என்று நான் சொன்னதை குமார் கேட்க வில் லை. சிகிச்சையைத் தொடர்ந்து உடலுறவு வைத்ததன் விளைவே அவள் தாயானள்." டாக்டர் விளக்கினர். குமார் விளங்கிக்கொண்டானே இல்லையோ மனச்சாட்சி அவனை உறுத்தாமலா விடும்? அவன் தன் தவறை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. உண்மைகளை எவ்வாறெல்லாம் இந்த மனிதர்கள் விழுங்கிக் கொள்கிருர்கள்.
f
அன்பைப் பொழிந்த ஒரு ஜீவனின் குழந்தைகள் அன்பைத் தேடி அநாதைகளாக, அவனுக்கென்ன பணக்காரன், அதுவும் ஆம்பிளை, ஆயிரம் கல்யாணம் கட்டலாம். ஆனல் அந்தக் குழந் கைகளுக்கு அன்பான அதே அம்மா வேண்டும். ஆமாம், ஒரே யொரு அம்மாதான் இருக்கமுடியும். அந்த அம்மாவை மீட்டுக் கொடுக்க உண்மையை விழுங்கிய ஒரு சந்தேக வெறியனுல் எப் படி முடியும்?
தனது தவறையே சிந்திக்காமல் குமார் மனைவியைத் தண் டித்து தன் வெறியைத் தீர்த்துக் கொண்டான். ஆனல் அந்த மழலைகள். அவனது ஆணுதிக்க மனுேபாவம் நமக்குள் எத்த னையோ ஆண்களின் சொத்து. வீணு விசாரணையின்றியே கொல் லப்பட்டாள். ஆனல் அவளது மரணத்தையிட்டு பல விசாரணை கள். குறிப்பாக நமது இயக்கங்கள் வந்தன, போயின. யார் என்ன சொன்னலும் வீணுவின் மரணத்திற்கு நியாயம் கற்பித்து விட முடியாது. ஆனல் இன்னுமொரு வீணு உருவாகாமல் இருப் பதற்கு நமது சமூகத்தை மாற்றவேண்டும். கணவன் என்ற ஒரே காரணத்திற்காக, மனைவி தனக்கேயுரியவள் என்று அவளிடம் உண்மையிருந்தும் ஊமையாக்கிக் கொல்வது எத்தனை கொடூரம்.
தாகம் 28

வீணுவின் படத்தை ஹாலில் தொங்கவிட்டு மாலை போட் டிருந்தார்கள். அவளின் செல்ல மகள் சாரு படத்திற்கு தான் பறித்துவந்த பூவை வைப்பதற்கு மேசையில் ஏறிநின்று எட்டி எட்டிப் பார்க்கிருள். அவளால் முடியாமல் போய்விட்டது. சிணுங் கிக்கொண்டு அழும் அவளைத் தூக்குவதற்கு யாருமில்லை. குமார் பத்திரிகை படித்துக்கொண்டிருக்கிருன். அது எவ்வளவு முக்கிய மான வேலை. தான் செய்த ஒரு கொலை, இன்று மூன்று ஜீவன் களை அநாதையாக்கியதையிட்டு அவன் அலட்டிக்கொள்ளவில்லை. பாவம் தனது கடமைகளில் லயித்துப் போயிருக்கிருன், சாரு மீண்டும் முயற்சித்தாள்.
அம்மா பாட்டி சொல்லுரு நீ சாமிட்ட போயிட்டியாம். நீ என்னுேட விளையாட பாப்பா வருமெண்டு சொன்னது அப்பாக்கு கோபமாம். அப்பா அடிக்க நீ சாமிட்ட ஒடிப்போயிட்டியாம். அம்மா அம்மா, தாத்தா சொன்னர் 'அம்மாதான் சாமியாம், உனக்குப் பூவைக்கட்டாம்.'
சாரு தன்பாட்டில் கதைத்துக்கொண்டிருந்தாள். இந்த மழ லையின் மன ஒலங்கள் மனதைத் தொடுபவை. இது எங்கள் மன தைத் தொடுவதிலோ, அதை நினைத்து நாம் கண்ணிர் சொரிவ திலோ என்ன பிரயோசனம்? இவ்வாறு இனியும் மரணங்கள் நிகழாமல் இருப்பதற்காய் பெண்களுக்கு இப்படியும் ஒரு பரிதாப நிலை ஏற்படாமல் இருப்பதற்காய் உழைக்க வேண்டும் என எண் னிக் கொண்டவளாய், வீணுவின் மரணம் பற்றி விசாரிக்க வந்த பெண் பத்திரிகை நிருபர் சாருவின் கதைகளைக் கேட்டு அவ ளுக்கொரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்று கொண்டிருந்தாள். சாரு தன் சகோதரம் இரண்டையும் அணைத்தபடி டாட்டா காட்டினுள். வீணுவின் நிலை அவள் பிள்ளைகளுக்கு மட்டும் விந்து
விடக்கூடாது என நினைத்தவளாய் அந்தப்பெண் 'டாட்டா' காட்டியவண்ணம் விடைபெற்ருள்.
O O O
எங்கெங்கு போராட்டமுண்டோ அங்கெல்லாம் தியா கம் உண்டு, சாவும் சாதாரண நிகழ்ச்சியாகிறது. ஆனல் நாங்கள் மக்களின் நலன்களையும் மிகப்பெரும்பாலானேரின் துன்பங்களையும் மனதில் வைத்திருக்கிருேம்; நாம் மக்களுக் காக இறக்கும்போது அது மதிப்பு வாய்ந்த இறப்பாகும். இருப்பினும் நாம் அநாவசியமான தியாகங்களைத் தவிர்க்க இயன்றவரை முயலவேண்டும்.
"மக்களுக்காகச் சேவை செய்யுங்கள்'
(1944, செப்டம்பர் 8), தேர்ந்த கட்டுரைகள் பா. 3, ப. 228.
தாகம் 29

Page 17
வாழ்வு ரீதியான அர்த்தத்தினத் தேடி.
இங்கே இன்னெரு உண்மைச் சம்பவம் தரப்படுகிறது, இக்
கதையிலிருந்து நாம் வாழ்வுரீதியான அர்த்தத்தினை நிச்ச யப்படுத்திக்கொள்வோம்.
"கடத்தப்பட்ட தேவநாதன் எங்கே? "தேவநாதனை விடுதலை செய்!” *கடத்தப்பட்ட தேவநாதன் எங்கே?
"தேவநாதனை விடுதலை செய்!”
விண்ணை அதிரும் கோஷங்கள் அந்தச் சந்தியின் நாலாபுறங் களிலும் ஓங்கி ஒலித்தன.
கைகள் உயர்த்திப்பிடித்த வெள்ளை அட்டையில் முழக்க வாசகங்கள்; ஒவ்வொருவரின் சட்டைகளிலும் கறுப்புப்பட்டி. அந்த உச்ச வெய்யிலிலே அவர்கள் புனிதமான நம்பிக்கையோடும் போராடத் தயாராகிவிட்ட ஆத்ம உணர்வோடும் அச்சந்தியில் கூடியிருந்து முழக்கங்களை முரசு கொட்டினர்.
அந்தப் பெருந்திரளான மக்களின் முன்நின்று வலது கையை உயர்த்தி ஆவேசத்துடன் கோஷங்களை முழங்கினன் சிகாமணி. அவனப் பின்பற்றி அங்கு கூடியிருந்த பெண்கள், இளைஞர்கள், தாய்மார்கள், முதியோர்கள், சிறுவர்கள் அனைவருமே பன்மடங்கு உரக்கக் கோஷமிட்டனர்.
சிகாமணி அந்தப் பின்தங்கிய கிராமத்தில் வாழ்கின்ற ஒரு குடும்பஸ்த்தன்; ஒரு தொழிலாளி. நீண்ட முடியும், மெல்லிய தாடி, மீசையும் கொண்ட மெலிந்த உருவம். அந்தக் கிராமத் தில் ஒரளவு படிப்பறிவுள்ளவனும், சிந்திக்கக்கூடியவனுமாவான். தனது இளமைப் பருவத்திலேயே கம்யூனிஸக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தனது நண்பனிடம் மார்க்ஷியம் கற்றவன். "நான் ஒரு கம்யூனிஸ்ட்" என்று பெருமையுடன் அடிக்கடி கூறிக்கொள் e.g.
திடீரென, அச்சந்தியின் தெற்குப் புறத்திலிருந்து ஒரு வெள்ளை வான் மிக வேகமாக வந்து ‘சர்ர்" என பிரேக் அடித்து நின்றது. சந்தியில் கூடியிருந்த அனைவரும் வான் வந்த திசையை
தாகம் 30

நோக்கியவண்ணமிருந்தனர். பலர் அருகிலிருப்பவர்களுடன் ஏதோ தமக்குள் கதைத்துக் கொண்டிருந்தனர். வான் வந்து நின்ற திசையை நோக்கி நடந்தான் சிகாமணி. வானிலிருந்து ஐவர் இறங்கி சனத்திரளை நோக்கி வந்தனர். இருவர் காற்சட்டையும், மூவர் சாரமும் அணிந்திருந்தனர். இருவரின் கைகளிலே நவீன ஆயுதங்கள். ஒருவன் இரு கிறைனட்டை கைகளில் வைத்திருந் 5s'67.
"தேவநாதனை நாங்கள் கடத்தவில்லை!" வானில் வந்தவர்களில் ஒருவன் சொன்னன்.
‘அப்படியானல் தேவநாதன் எங்கே? சிகாமணி உறுதியுடன் கேட்டான். -
‘எமக்குத் தெரியாது’
‘அப்படியானல் நீங்கள் போகலாம்’- கூடிநின்றவர்களில் ஒரு இளைஞன் ஆத்திரப்பட்டுக் கூறினன்.
"நீங்கள் எங்களுக்கெதிராகப் போராட்டம் நடாத்துகிறீர்கள்’
"நாங்கள் அப்பாவி தேவநாதனைக் கடத்தியவர்களுக்கெதிரா கவே போராட்டம் நடாத்துகின்ருேம்!' - சிகாமணி உறுதியோடு சொன்னன்.
அப்போது தேவநாதனின் மனைவி கூடியிருந்தவர்களை விலத் திக்கொண்டுவந்து அவர்களின் காலைப்பிடித்து 'தம்பிமாரே! நீங் களும் சகோதரங்களோட பிறந்தனிங்கதானே. அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர். அவரை என்னட்ட கொண்டுவந்து தந்து மான்ட குங்குமத்தைக் காப்பாற்றுங்கோ ராசா” என அழுதபடி கூறினள். விரித்த தலையும், சோர்ந்த முகத்துடனும் நின்ற அவ வின் சேலைத்தலைப்பைப் பிடித்தபடி இரண்டு குழந்தைகள் அழுத படி நின்றனர். அவள் வயிற்றிலும் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டிருந்தாள்.
‘ஓ. வீட்டுக்குள்ள இருந்த பெம்பிளையளை எல்லாம் கொண் டுவந்து போராட்டமா நடத்திறீயள்! நடாத்துங்கோ; நாங்கள் பிறகு வாறம்’ என தேவநாதனின் மனைவியிடமிருந்து காலை விடுவித்துக்கொண்டு ஒருவன் சொல்லிவிட்டு, வந்த எல்லோரு மாகச் சேர்ந்து வானை நோக்கிச் சென்றனர்.
தாகம் 31

Page 18
*கடத்தப்பட்ட தேவநாதனை விடுதலை செய்!”
"கடத்தப்பட்ட தேவநாதனை விடுதலை செய்!” எனக் கூடி யிருந்தவர்களில் ஒருவன் சொல்ல அவனைத் தொடர்ந்து குழுமி யிருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து உரத்துக் கோஷமிட்டனர்.
வான நோக்கிச் சென்ற இளைஞர்கள் கோபத்தோடு திரும் பிப்பார்த்தனர். சந்தியில் கூடியிருந்தவர்கள் கோஷமிடுவதை நிறுத்தவேயில்லை. உடனே ஒருவன் சனத்திரளை நோக்கி கையிலி ருந்த கிறெனட் ஒன்றை நிலத்தினில் உருட்டி விட்டான்.
வீதியில் உருண்டு வருகின்ற கிறெனட்டைக் கண்டு அங்கி ருந்தவர்கள் சிதறி ஒடத்தொடங்கினர். சிகாமணி பாய்ந்து சென்று உருண்டுவந்த கிறெனட்டை கையிலெடுத்துப் பார்த் தான். அதனை வெடிக்கப்பண்ணுவதற்கான கிளிப் கழட்டப்பட வில்லை. எம்மை பயம்கொள்ளச் செய்வதற்காக பாவிக்கப்பட்ட தந்திரோபாயம் என்பதை உணர்ந்துகொண்ட சிகாமணி எல் லோரையும் அமைதியாக இருக்கும்படி கூறினன். சில இளைஞர் கள் ஆத்திரப்பட்டனர். அவர்களுக்கு விஷயத்தைக் கூறிய சிகா மணி அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு, வானில் வந்த இளைஞர்களைப் பார்த்து "அண்ணே நாங்கள் இதுகளுக்கெல்லாம் பயந்தவர்களில்லை; போராட்டத்திற்கு தயங்கியவர்களுமில்லை; போராட்டம் எங்களுக்கு புது அனுபவமுமில்லை. ஆமிக்காரங்க ளுக்கு எதிராக எப்பிடிப் போராடுகின்ருேமோ அதேபோல தின மும் எங்களைச் சுரண்டுகின்ற முதலாளிகளுக்கெதிராகவும், சாதி வெறியர்களுக்கெதிராகவும் போராடிக்கொண்டுதாணிருக்கிறம். அங்கேயும் அடியும் உதையும் வாங்கிறனுங்கள்; அதுக்காக போராட் டத்திலிருந்து பின்வாங்கமாட்டோம். எங்கட உழைச்சு, உழைச்சு உரமாய்ப்போன இந்தக் கைகள் உந்தக் குண்டுகளை விட சக்தி வாய்ந்தவை என உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லிவிட்டு, கிறெ னட்டை அந்த இளைஞர்களிடம் கொண்டுபோய்க் கொடுத்தான்.
அவர்கள் கிறெனட்டை பெற்றுக்கொண்டு வானில் ஏறி வந்த பாதையால் செல்ல, இங்கே மீண்டும் கோஷங்கள் வான முட் டின.
"அராஜகத்திற்கு அடிபணியோம்!"
*கடத்தப்பட்ட தேவநாதனை விடுதலை செய்!”
o W gg
தாகம் 32

மாலை 5 மணி. காலை ஏழு மணிக்கு அப்பகுதி மக்களால் தொடங்கிய மறியல் போராட்டத்தினை முடித்துவைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அதுவரை அச்சந்தியால் எந்த வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சில பெண் கள் பெரிய வாளிகளில் குளிர்பானம் கரைத்துக்கொண்டிருந்த னர்.
எல்லோர் முகங்களிலும் பெரியதொரு போராட்டத்தினை நடத்தி முடித்த மகிழ்வு. இறுதியில் போராட்டத்தினை முன் னின்று நடாத்திய சிகாமணி ஒரு சில வார்த்தைகள் பேசுவதற் காக எழும்பினன். எல்லோரும் அவனின் பேச்சைக் கேட்பதற் காக அமைதியாக இருந்தனர்.
எல்லோருக்கும் எனது அன்பு வணக்கம்.
இன்று இங்கு நடந்த சம்பவம் உங்களில் சிலருக்கு சோர் வையும், விடுதலையில் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக் கலாம். ஆளுல் அந்தச் சம்பவம் எமக்கொரு உண்மையை கற் பித்திருக்கிறது. எமது விடுதலைக்காக நாங்கள் தான் போராட வேண்டும் என்பதே இந்த உண்மை. எனவே, எவரும் விடுதலை யில் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. விடுதலை என்பது இன்று எமக்கருகில் இல்லாமலிருக்கலாம். ஆனல் நாமெல்லோரும் ஒன் (ரய்ச் சேர்ந்து போராடினல் விடுதலையை அடைய முடியும். எனவே, எங்களுடைய உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் நாமெல்லோரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம்!
மேலும், தேவநாதன் கடத்தப்பட்டு இன்றுடன் பத்து நாட்க எாகியும் கடத்தியவர்களிடமிருந்து எமக்கு எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. ஆம்! தேவநாதனைக் கடத்தியவர்களே "தாம் தேவநாதனைக் கடத்தவில்லை’ என்று கூறும்போது எப்படி எமக்கு அவன் பற்றிய செய்தி கிடைக்க முடியும். விடுதலையின் பெயரால் இடம்பெற்ற இந்த தேவநாதனின் இழப்புக்கு நாம் வாழ்வு ரீதி யான அர்த்தங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். எமது சகோதரி அநாதரவாக விடப்படவில்லை; அவளுக்காக நாங்கள் இருக்கிருேம் இருப்போம்!!
சிகாமணி சிறு உரையைப் பேசி முடித்தான். அவனின் பேச் சைக்கேட்டு எல்லோரும் உறுதியோடும், நம்பிக்கையோடும் அவர் களின் கிராமத்தினை நோக்கிச் செல்கின்றனர்.
தாகம் 33

Page 19
**நெடுநாளாகப் போராடி வந்த தொண்டர்களில் பலர், போரை நிறுத்தியதால், வேலையில்லாமல் வீடுகளுக்குத் திரும் பிச் சென்றனர். அங்கும் அவர்களால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. ஜனங்கள் அவர்களுடைய வீரச்செயல்களேக் கேட்டு அவர்களை மட்டுக்கு மிஞ்சிப்புகழ ஆரம்பித்தனர். இப்புகழுரைகள் அவர்களை மயக்கிவிட்டன. அவர்கள், 'உண்மையில் நாம் மகாவீரர்களே !' என்று பெருமிதங் கொண்டனர். யுத்தகாலத்தில் அமைதியுடனும், ஒழுக்கத் துடனும் வாழ்ந்து வந்த தொண்டர்கள், இப்போது மது வகைகளை மட்டுக்கு மிஞ்சிப் பருக ஆரம்பித்தனர். இது வரை போராட்டங்களைக் கண்டு அஞ்சி ஒதுங்கி வாழ்ந்த வர்கள், இப்பொழுது திடீரென்று சூரர்களைப்போல் முன் வந்து அட்டகாசஞ் செய்தனர். ஆறுமாதகாலம் போராட் டத்தை நிறுத்தியதால், பொதுவாகத் தொண்டர் படை யின் கட்டுப்பாடும், ஒழுக்கமும் குலைந்து வந்தன.
சமாதான காலத்திலும் புதிய தொண்டர்கள் சேர்ந்து வந்தனர். புதிதாய்ச் சேர்ந்தவர்கள் பழைய தொண்டர்க ளுடைய உறுதியும், கட்டுப்பாடுமின்றி, அந்நாள் வரை போராட்டங்களினல் ஏற்பட்ட துன்பங்களை உணராதவ ராய், மீண்டும் போர்வ்ெறி கொண்டு நின்றனர். பல இடங் களிலும் தொண்டர்களுக்குப் பயிற்சிக் கூடங்கள் அமைக் கப்பட்டன. 18, 28 வயதுடைய வாலிபர்கள் தொண்டர் படையில் சேர்ந்து, கையில் ஆயுதங்கள் கிடைத்தவுடன் தாங்களே தேசத்தில் அதிகாரிகள் என்று எண்ணி, வீணன கலகங்களிலும் குழப்பங்களிலும் ஈடுபட்டனர். சுருங்கச் சொன்னுல், தேசமெங்கும் ஒருவகையான அராஜகம் தோன்
றிற்று.
மக்கேல் காலின்ஸ் என்னும் நூலில் இருந்து
(பக்கம் 241-242)
தாகம் 34

தென் வியட்நாமின் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் கலே - இலக்கிய வாழ்வு
ட்ரான் Lq6öt Gurreir (Tran Dinh Van)
(சென்ற இருதுளித் தொடர்ச்சி)
மனிதர்கள் எவ்வாறு மனித மனச்சாட்சியினை இழந்து பயங் ஆரமான மிருகங்களாக மாறிஞர்கள். அதே வேளை மறுபக்கத் தில் தமது உயர்ந்த இலட்சியத்தினல் தூண்டப்பட்ட புரட்சி வாதிகள் பயங்கரமான சித்திரவதைச் சோதனைகளை எவ்வாறு எதிர்த்து நின்றர்கள் என்பவற்றை விபரிக்கும் வகையில் அவரது (The Victor) படைப்பு எமது அறிவுக்கு எட்டிய வரையில் தனித்
துவமானது.
இதுபோலவே ஒவியம் வரைதலும் வளர்ச்சியுற்றது. குண்டு வீச்சின் மத்தியில், காடுகளில், நிலத்திற்கடியிலான மறைவிடங் கவில் ஓவியம் வரைதல் சாத்தியமில்லை என்று ஒருவன் எண்ணி யிருப்பான். இருந்தும், தோற்பைகளை முதுகில் தாங்கியபடி, போராளிகளின் அணிகளுடன் சேர்ந்துகொண்டு, மக்களும் போரா ளிகளும் எங்கெங்கு வேலை செய்கிறர்களோ அல்லது போராடுவி ருர்களோ அங்கு ஓவியர்கள் தமது "ஓவியப் பலகையினை அமைத்து படைப்பில் ஈடுபடுபவர். போராளிகள் அவர்களது உபகரணங் களே எடுத்துச் செல்வதில் உதவுவதோடு, ஓவியப்பணியில் ஈடு பட வசதியான மறைவிடங்களையும் அமைத்துக் கொடுத்தனர். போராளிகளும். அணிகளும் பல சந்தர்ப்பங்களில் தத்தமக்குப் பிடித்தமான ஒவியர்களைத் தெரிந்து வைத்திருப்பதும் உண்டு. ஓவியர்களின் உதவி கொண்டு போராளிகள் ஒவியம் தீட்டப் பயில்வதுமுண்டு. அண்மையில், விடுதலை வெளியீட்டு நிறுவனம் (Liberation Publishing House) Co Tan Long Chan, Le Van Chuong, Huynh Phuong Dong, Thai Ha, Le Hong Hai, Nguyen Van Kiah ஆகிய ஆறு ஓவியர்களின் ஓவியங்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளது. கோட்டுச் சித்திரங்கள், Wate Colour ஓவியங்கள், கிறயோன் ஒவியங்கள், எண்ணெய் ஓவி யங்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஓவியனதும் ஆளுமையை வெளிப்படுத்துகிறது. அதற்கும் மேலாக அவை மக்களது போர்க் குண த்  ைத யும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன. போராட்டத்தில் பங்கு கொண்ட போராளிகள், கெரில்லாக்கள்,
தாகம் 35

Page 20
பெண்கள், சிறுவர்களது முகங்கள் ஒவியங்களில் வியக்கத்தக்க வகையில் உணர்ச்சிகள் விளக்கமானவையாக அமைந்திருந்தன. காதல் கனிவுடன் இயற்கைக் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. நாட்டிலும், மக்களிலும் வாழ்வின் தனித்துவத்தை ஒருவன் உணர் கிருன்.
**தியாகிகள், சான்றேர்கள், செயல்வீரர்களைக் காண வேண் டுமாயின் நீ செய்ய வேண்டியதெல்லாம் உனது வீட்டிற்கு வெளியே செல்வதுதான்’ என எமது எழுத்தாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கெதிரான தென்வியட் நாம் மக்களின் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராளிக ளிடமிருந்து மட்டுமல்லாமல் முழு மக்களினதும் பெரும் செயல் வீரம் தேவைப்படுகிறது என்பது உண்மையே. அன்ருட வாழ் விலே தீரமிக்க செயல்களில் ஈடுபடும், பாராட்டத்தகுந்த சான் ருேரைக் காண எழுத்தாளன் ஒருவன் தன்னைச் சுற்றிலும் பார்க்கவேண்டும். எனவே கருப்பொருளுக்குக் குறைவேயில்லை. சாதாரணமாக மக்கள் தொலைவில் இருக்கும் தமது உறவினருக்கு எழுதிய கடிதம் கூட கிளர்ச்சிமிக்க செய்திகளைத் தரவல்லதாக அமைய முடியும். மறைந்த கணவனுடனன தனது கடைசி நாட் கள் வாழ்க்கைபற்றி நிகுயூயென் வான்ரோறியின் மனைவி கூறிய நினைவுகளானது "தென்வியட்நாமிலிருந்து கடிதங்கள்’ என்ற தலைப் பில் எழுதப்பட்டது. இது பின்னர் சிறந்த இலக்கியப்படைப்பா கக் கணிப்பிடப்பட்டது. ஆறு குழந்தைகளின் தாயும், சிறந்த வொரு கெரில்லாவுமான Ut Tich அல்லது பல கெரில்லா நட வடிக்கைகளில் பங்கு கொண்ட இளம்பெண்ணுன Ta Thi Kich போன்றேரின் வாழ்க்கையினை நோக்குவதன் மூலம் சிறந்தவொரு படைப்புக்கான கருவினைப் பெறலாம். ላ
இங்கு கலை, வாழ்வில் வேரூன்றி நிற்கிறது; வாழ்விலிருந்து தோற்றம் பெறுகிறது; அதன் விளைவாக, அன்ருடப் போராட் டத்தினை வளப்படுத்துகிறது.
Nhado-Bong Trang போரில் அமெரிக்கப் படையணி ஒன் றினை அழித்தொழித்த பிரிவின் தளபதியான Quoc Hanh இரா ணுவக் கலைக்குழுவிற்கு எழுதினர்.
"எமது போராளிகளின் துணிச்சலே எமது வெற்றிக்குக் கார ணம். அதேவேளை, இறந்துபோன எமது மக்களுக்காகப் பழிதீர்க்
தாகம் 36

கவும், எமது நாட்டினை விடுதலை பெறச் செய்யவுமான உறுதி யினை வலுப்படுத்த உதவிய ராணுவக் கலைக்குழுவின் பங்களிப் பும் வெற்றிக்குக் காரணம்.' v
"நாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தபின்னர் பல தர்க்கு தல்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. எமது தோழர்கள் பலர் மேலிடத்தினல் பாராட்டப்பட்டார்கள். பல இராணுவப் பதக்கங்களைப் பெற்ருேம். நாம் உங்களை மறந்து விடவில்லை. உங்களது பாடல்களும், நாடகங்களும், எமது யுத்தத்தில் எம்மை ஊக்குவித்துள்ளன. உங்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள் ளோம்" என்று பல போர்களில் வெற்றியீட்டிய பிரிவு ஒன்றின் பீரங்கிப் படையினன் ஒருவன் கலைக்குழுவிற்கு கடிதம் எழுதினன்.
கலைஞர்களும், எழுத்தாளரும் பெறக்கூடிய உயர்ந்த பரிசு இத்தகைய கடிதங்களே இப்பரிசினை அவர்கள் நிறையவே பெற் றனர். கெரில்லாக்கள், விடுதலை ராணுவப் போராளிகள், ஆயு தங்கள், உணவுகள் மற்றும் தேவையானவற்றை போராளிக ளுக்கு வழங்கும் பிரிவினர், பின்னணியிலிருந்து உதவுபவர்கள் ஆகிய எல்லாச் சாராருமே கலைஞர்களுக்கும் எழுத்தாளருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்து எழுதுவதோடு கருத்துக்க்ளையும் எழுதுவர்.
எதிரியின் முகாம்களைத் தாக்கி வெற்றிகொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த வெற்றியின் நினைவுச்சின்னமாக எதிரி யின் முகாமிலிருந்து ஒரு "கிடார்” வாத்தியம், அல்லது அக்கோ டியன்” வாத்தியம் ஒன்று ஏதாவது ஒன்றினை எடுத்துச் சென்று தமது கலைஞர்களுக்கு அனுப்பிவைக்க மறப்பதில்லை அல்லது தாக் கத்துக்குள்ளான ஹெலிகொப்டர்” “பரசூட்” என்பவற்றின் எஞ் சிய பகுதிகளை இணைத்து இசைக்கருவிகளை அல்லது கலைக்குழுவிற் கான அரங்கப் பொருட்களை உருவாக்குவர். வானெலி மூலமோ அல்லது இரகசிய வெளியீடுகளின் மூலமோ கவிஞர் கியாங் நாம் போன்றேரின் படைப்புகளை அறிந்தபின் பலர் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வந்தடைவதும் உண்டு. படைப்பாளிகளைச் சந் தித்து நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதில் அவர்கள் ஆர்வமா யிருந்தார்கள். −
தாய்நாட்டிற்கான போராட்டத்தினை வலுப்படுத்த எவ்வாறு தனது பேணுவைப் பயன்படுத்தலாம் என்பதை சிறந்தவொரு எழுத்தாளன் அறிவான் என எமது தோழர்களில் ஒருவர் கூறி
தாகம் 37

Page 21
னர். ஒரு நூற் றண் டி ன் முன்னர் பிரெஞ்ச் படைகள் வியட்நாமைக் கைப்பற்ற முற்பட்டபோது, எவ்வாறு Nguyen Dinh Chien போன்ற தலைசிறந்த நாட்டுப்பற்றுடைய அறிஞர் கள், "இலக்கியத்தின் உயர்ந்த நோக்கம் போராட்டத்தின் நோக்கிச் செயலாற்றுவதே என்று கருதினர்களோ, அதுபோலவே இன்றைய கலைஞர்களும் எழுத்தாளர்களும் இந்த உயர்ந்த பாரம் பரியத்தை, எமது திரும்பு கட்டத்தின், புரட்சிகர உள்ளடக்கத் தின் அனைத்து அம்சங்களையும் இணைத்து வளமாக்கி இட்டுச் செல்கிருர்கள்.”*
தேசிய விடுதலை, சுதந்திரம் என்பவற்றிற்கு ஆதரவாகவும், ராசத்துரோகம், அமெரிக்க "டொலர் வழி வியட்நாமின் பொரு ளாதாரத்தை சீர்கெடுத்தலுக்கு எதிராகவும் தென்வியட்நாம் கலை, கலாச்சாரவாதிகள் மிகவும் தெளிவான கலைப்பாட்டினைக் கொண்டிருந்தனர். போராட்டத்தினின்றும் பிறந்த படைப்புகள் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தினைப் பற்றி பெரும் நம்பிக் கையினை அளிக்கின்றன.
O Ο
காற்றேடு காற்றம் . . . .
அப்பு-: “உண்மைகள் மறைக்கப்படும்.
உரிமைகள் மறுக்கப்படும். உயிர்கள் கொல்லப்படும். உடமைகள் பறிக்கப்படும்'
பேரன்: ‘'என்ணென அப்பு புதுசா நாலு வசனம் சொல்
லுருய்?
-9յնւկ:- இல்லையடா மோனே, நானும் முந்தி சோஷலி சம் படிச்சனன் தான். ஆன இப்பத்தே சோஷ லிசத் தத்துவம் வேற போலக் கிடக்கு, நான் சொன்னதுகள் தான் இப்பத்தே சோஷலிசத் தத்துவமாக்கிடக்கு.
as Tasio 3s

ut adň வகுப்பு முதல் பட்டதாரி வகுப்பு வரையிலான சகல புத்தகங்களுக்கும்
வெளியூர், உள்ளுர் சஞ்சிகைகளும், பாடசாலை உபகரணங்களும், பிறந்தநாள் மற்றும் . நானவித வாழ்த்து மடல்கள் αυτόνώ
மொத்தமாகவும் சில்லறையாகவும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
வமது பிரத்ான் விற்பன் நிலயம் பூபால சிங்கம் புத்தகசாலை
2 ۱۶ هما
25). 4, i 1 si faillí, ll! I i II 1 GP itt,
s கிளே நிறுவனங்கள்
212, 214, புத்தக களஞ்சியம் 1-ம் குறுக்குத்தெரு, 3, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம். * Gt Jrraổi : : 24076
,和 નક
ED, 27 y , நவீன சந்தை, புகையிரத நிலையம், யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம்.

Page 22
கொம்பூட்டர் வகுப்புகள் ரேடியோ ரெலிவிசன், வி
விக்ரிக்கல் பை ரிங்
¬ܘ ܒܪ5 ܕ -- ܕ
『_i 1 וול= (היל$ (ניו [
ஆகியவற்றுக்குரிய பயி:
குறைந்த கட்டணத்தில், ! கொள்ள ஒரே நிறுவனம்
JAFFNA
| NST
வீதி, ெ பாழ்ப்பானம், f
ܠܐ 1 ܨ ܬܐ
"நாளுக்கோர் புதுமை நாடுவது உண்மை"
இவற்றை அளிப்பது தா
“சீமா
it i T . . HBl:).. ೧
158 நவின சந்தை, virt të υά ணம்:
... . . . .
போன்: 24)

4|
வீடியோடெக் திருத்தப் பயிற்சிகள்
а в
Ø ථුප් ඵ් ඵ්’’ குறைந்த காலத்தில் சிறந்த முறையில் பெற்றுக்
TECHNICAL | TUTE
ஒள்விபடி 141, கண்டி விதி,
வெட்டி, சாவகச்சேரி
99 T L - டி.
புவி சமுத்திர 面“
திலேயே விதி,
LI JIT Liġi li turi Għar riċi.
போன்: 2441.