கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் தோட்டப்பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்

Page 1
േഴ്ക>\>ം 纥受 よ写チじ「ZG//スー صاراتصا L
 


Page 2

இலங்கையில் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்
திருமதி சொர்ணவல்லி பத்மநாப ஐய்ர் B. Ed. (Cey.), M. A. (Jaffna)
தமிழியல்
, மத்திய மேற்குத் தெரு, குருநகர், யாழ்ப்பாணம்.

Page 3
Title :
Author :
First Edition : Publishers
Cover Design : Printers :
Cover by Offset :
Offset Printets :
The Plantation Schools in Sri Lanka : Educational Pattern and Problems (Thesis submitted in fulfilment of requirements of the Degree of Master of Arts in Education in the University of Jaffna in 1984.) Mrs. Sornavally Pathmanaba lyer B. Ed. (Cey.), M.A. (Jaffna)
June, 1988
Tamiliyal
6, Central West Road, Gurunagar, Jaffna. Aroopan New Era Publications Ltd. 267, Main Street, Jaffna. (Sri Lanka) Kalaimahal Printograph, 456, Navalar Road, Jaffna, Vijaya Press,
Jaffna.

சமர்ப்பணம்
கல்வித்துறை வளர்ச்சியில் பெரும் பங்களிப்பினைச் செய்த பேராசிரியர் ப. சந்திரசேகரம்
அவர்களுக்கு

Page 4
பதிப்புரை
கல்வியினைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினைக் கொடுத்தல் என்பது எவருக்கும் ஒரு சலுகை யல்ல ; மாருக, அது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்ருகும். எங்காவது கல்வி உரிமை மறுக்கப்படுமானல், சாராம்சத்தில் மனித உரிமை அங்கு மீறப்படுகிறது என்பதே உண்மை:
காலனித்துவ ஆட்சியாளர்கள் தோட்டத் தொழிலாளர்களின் கல்வி உரிமைகளை மறுப் பதை ஒரு கொள்கையிாகக் கடைப்பிடித்தனர் என்பதை, இவ்வாய்வு வெளிப்படுத்துகிறது.
அவர்களைத் தொடர்ந்துவரும் சிங்கள ஆளும் வர்க்கங்களும், தமிழ்த் தோட்டத் தொழிலாளர் களின் கல்வி உரிமைகளைத் திட்டமிட்டே மறுத்து வருகின்றன ; அவர்களைத் தொழிலாளி வர்க்க மாக மட்டுமல்லாது, இனமாகவும் பார்த்தே உரி மைகளை மறுத்து வருகின்றன.
சிங்கள ஆட்சியாளர்களால் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்ட கல்விபற்றிய எந்த வொரு முக்கிய அறிக்கையிலும், தோட்டப் பாடசாலைகள் பற்றிக் குறிப்புக்கள் இல்லை. தோட்டமக்களின் கல்வி உரிமைகளை இவர்கள் மதிக்காதது என்பது, ஒடுக்குமுறை சார்ந்த அம்சங்களில் ஒன்றே, இன்றுவரை நிலவும் இக் கறைபாடுகளே - தோட்டப் பகுதிகளின் பல் வேறு கல்விப்பிரச்சினைகளை - இவ்வாய்வு அம் பலப்படுத்துவது முக்கியமானது.

ஆபிரிக்கக் கறுப்பின மக்களை அடிமைகளாய்க் கொண்டுசென்று, அமெரிக்கத் தோட்டங்களில் குடியேற்றியதை ஒத்ததே, தமிழ்த் தொழிலா ளர்களை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து இங்கு குடியேற்றியமையும். கறுப்பினமக்கள் அமெரிக் காவில் நாடற்ற வர்களாகக் கருதப்படவில்லை : ஆனல், நூற்றைட்பது ஆண்டுகள் கழிந்த பின் னரும், தமிழ்த் தொழிலாளர்கள் இங்கு நாடற். றவர்களாகக் கருதப்படுகின்றனர். எம்மைப் பொறுத்தவரை, தமது இரத்தத்தினலும் வியர் வையினலும் இலங்கையின் தோட்டத்துறைகளை வளப்படுத்திய - இந்நாட்டுப் பொருளாதாரத் தின் முதுகெலும்பாக இயங்கிவரும் - இந்த மக்கள் இந்த நாட்டுக்கே சொந்தமானவர்கள். சில இடங்களில் ஆசிரியர் எதிர்மறையாக வெளிப்படுத்தும், தோட்டத் தொழிலாளர் ஒரு காலத்தில் இந்தியா செல்லவேண்டியவர்கள்" என்ற கருத்துடன், எமக்கு உடன்பாடில்லை. இதைப்போல, தோட்டப்பாடசாலைகளில் யாழ்ப் பாண ஆசிரியர்களின் பங்கு - அவர்கள் பற்றி நிலவும் கசப்புணர்வுகள் - போன்றவை பரிசீலிக் கப்படாததும், குறைபாடாகும்.
இவ்வாறன குறைபாடுகள் சில இருந்த போதிலும், தோட்டத்துறைக் கல்வி பற்றிய பல்கலைக்கழக மட்டத்திலான ஆய்வுநூலேதும் தமிழில் வெளிவந்திராத சூழலில், முன்னேடியாக இதனை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிருேம். *யாழ்ப்பாணத்தவர்" பற்றிய கசப்புணர்வுகள் தோட்டப்பகுதிகளில் இன்றும் நிலவிவரும் சூழ லில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே அப்

Page 5
பிரதேசப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பினை யும் பிரச்சினைகளையும் ஆய்வு செய்திருப்பதும், யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட நிறு வனம் அதனை வெளியிடுவதுங்கூட ஒருவிதத்தில் முக்கியத்துவம் நிறைந்தனதான்.
கல்வி முதுமாணிப் பட்டத்திற்காகச் சமர்ப் பிக்கப்பட்ட இந்த ஆய்வினை நூலாக வெளியிடு வதற்கு அனுமதி அளித்த திருமதி சொர்ணவல்லி பத்மநாப ஐயர் குடும்பத்தினருக்கும், முன்னுரை அளித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வித் துறைத் தலைவர் வ. ஆறுமுகம் அவர்களுக்கும் விசேடமாய் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள் ளோம். நூல் உருவாக்க வேலைகளில் உதவிய ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறு வன நூலகர் திரு. என். செல்வராஜா, முகப்பினை வடிவமைத்த ஓவியர் அரூபன், ஒவ்செற் வேலை களைச் செய்துதந்த திரு. தவம், விஜயா அச்சகத் தினர், ஏனைய அச்சுவேலைகள் அனைத்தையும் செய்த நியூ எரு பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தினர் ஆகியோருக்கும் எமது நன்றிகள். O
தமிழியல் 13-06-83
vi

முன்னுரை
இலங்கையின் கல்வி வரலாற்றில் ஒவ்வொரு கட்டத்திலும் பெருந்தோட்டப் பாடசாலைகளின் வளர்ச்சி பிரச்சினைக்குரியதாக அமைந்திருப்பதைக் காணலாம். ஆங்கிலேயருடைய ஆட்சியின் கீழும் சுதந்திரம் பெற்றதன் பின்னரும், தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு என்ன வகையி லான கல்வி வழங்கப்படவேண்டும், அது எந்த அளவினதாக இருக்கவேண்டும், அதற்கேற்ற நிறு வனங்கள் எவை என்பன வாதத்துக்குரிய விட யங்களாக இருந்து வந்துள்ளன. இவ் வினக் களுக்கு விடைகாணும் முயற்சிகள் வெற்றிபெற் றுள்ளனவா ? பெருந்தோட்டப் பள்ளிக்கூடங்கள் அவற்றிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பங்களிப் பினைச் செவ்வனே நிறைவேற்றுகின்றனவா ? இவற்றுக்கு விடைகாண விழைவது கற்ருேர் மத்தியிலும், மற்றேர் மத்தியிலும் எதிர்பார்க் கப்பட வேண்டிய ஒன்றேயாகும்.
இந்த வகையிலான நிலைமைகளில் பெருந் தோட்டப் பாட சாலைகளின் கல்வி நிலைமை ஆய் வுகளின் கருப்பொருளாக அமைவது இயல்பே யாகும். அத்தகைய ஒரு வெளிப்பாடே அமரர் திருமதி சொர்ணவல்லி பத்மநாப ஐயரின் "இலங்கையில் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல் வியமைப்பும் பிரச்சினைகளும்". அன்னர் மறைந்த பின், இந் நூலைத் தமிழியல்" நிறுவனத்தினர் வெளியிடுகின்றனர். இது பாராட்டப்படவேண்டிய ஒரு செயற்பாடாகும்,
பெருந்தோட்டப் பகுதிகளின் கல்வி நிலைமை, அமைப்பு ஆகியனபற்றிய ஆய்வு முயற்சிகள்

Page 6
எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள் பல. அவற்றை: எதிர்கொண்டு வெளிப்பட்ட முன்னேடி முயற்சி களில் திருமதி பத்மநாப ஐயரின் படைப்பும் ஒன்ருகும். முன்னுேடி முயற்சிகளில் காணப்படக் கூடிய 'திருத்தத்துக்குரிய அம்சங்களை'ப் பெரிது படுத்துவது பொருத்தமற்றதாகும். திருமதி பத்மநாப ஐயர் இவ் வெளியீடு தொடர்பாகச் செயற்பட்ட காலம், தமது நாட்டில் சோதனை மிகுந்த, நெருக்கடிகள் நிறைந்த காலம் என் பதை நினைவில் வைத்துப் பார்க்கும்போது பல விடயங்களைப் புரிந்துகொள்ளலாம்.
அத்தகைய பின்னணியில் மேற்கொள்ளப் பட்ட முயற்சியின் பேருகிய இந் நூல் பெருந் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் கல்வி நிலையைப் பற்றியும், அவர்கள் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகளைப் பற்றியும், யதார்த்த நிலையில் எடுத்துக்காட்டுகின்றது. பிரச்சினைகளை ஆராய்ந்தால் மட்டும் போதாது. அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றிய சிந்தனையும் வேண்டும். ஆசி ரியர் முன்வைக்கும் ஆலோசனைகள் பலருக்குப் *பிடிக்காதவைகளாக" இருக்கலாம். ஆனல், அவை அவருடைய தனித்துவத்துக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
ஒட்டுமொத்தமாகப் பார்ப்பின், இந்நூல் பெருந்தோட்டங்களின் கல்விபற்றி அறிய விழை யும் எவருக்கும் பெரிதும் உதவும் எனலாம். இத் தகைய படைப்புக்கள் எமது நாட்டுக்குத் தேவை.
O
வ. ஆறுமுகம் கல்வித் துறை, யாழ். பல்கலைக்கழகம். 11-6-88
viii

என்னுரை
“கல்வி? மனித உரிமைகளுள் ஒன்று. அது மனிதருக்கு
ஒரு சலுகையன்று; கட்டாய உரிமையாகும். ஆனல் இலங்கை யில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இம் மனிதவுரிமை, ஆரம்ப காலந்தொட்டு மறுக்கப்பட்டு வந்துள்ளது.
1967 ஆம் ஆண்டிலே தேயிலை நூற்ருண்டு விழாவைக் கொண்டாடிய இலங்கை, அதன் பின்னர் பதினேழு வருடங்கள் சென்றும்கூட தோட்டத் தொழிலாளரின் - இலங்கையின் பொரு ளாதாரத்தையே கட்டியெழுப்பிய அப்பாவி மக்களின் - கல்வியில் எள்ளளவேனும் கவனம் செலுத்தாத நிலைமையை, நாம் காணக் கூடியதாகவுள்ளது. அவர்களையோ அல்லது அவர்களின் பிரதி நிதிகளையோ கலந்தாலோசியாது, அரசியற் பிரமுகர்களால் கைச் சாத்திடப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, அவர்களுடைய எதிர் காலம் எங்கே எனத் தெரியாது திரிசங்கு சொர்க்க நிலையிலேயே இருக்கின்றது.
நமது தேசத்தின் பொருளாதார வாழ்வின் உயிர்நாடியாக உள்ள ஒரு துறையில் வேலை செய்யும் இந்திய வம்சாவழியின ரான தோட்டத் தொழிலாளர் - " இலங்கையின் முதலாவது தொழிலாள வர்க்கம்” என்ற கெளரவத்திற்குரிய இவர்கள் - கல் வியறிவு அற்றவர்களாகவும், நாட்டின் ஏனைய மக்களுடன் இணைந்து வாழமுடியாதவர்க "ாகவும் காணப்படுகின்றர்கள்.
மனிதவுரிமைச் சாசனத்தின் பிரகாரம் எந்தவொரு பிரசைக் கும் மத, இன, மொழி வேறுபாடு காரணமாகக் கல்வி மறுக் கப்பட முடியாததொன்று. அந்நிலையில் தோட்டத் தெரழிலா ாேருடைய கல்வியினைச் சீர்திருத்தி வழங்க வேண்டியது, அரசின் (olum"plurg b.
மேலத் தேசங்களில் வாழும் சீமான்களதும், சீமாட்டிகள தும் ஒய்வு நேரப் பானமாக - மாலை நேரத்தை இனியதாகப் போக்குவதற்கான தேனீரை - வழங்குவதற்காக, இலங்கையின் உயர்ந்த மலைகளிலே, ஒடுங்கிய மலைப்பாதைகளிலே கொட்டும் பணியையும் பொருட்படுத்தாது, இரத்தத்தை உறிஞ்சும் அட்டை களின் மத்தியிலே தனது குடும்ப முன்னேற்றத்தையோ எதிர் காலத்தையோ சிறிதளவேனும் சிந்தியாது, அன்ருடக் கூலிக்காக அல்லாடும் தொழிலாளர்களின் வரலாறு, ஒரு நூற்ருண்டைக் கடந்து விட்டது. எனினும் நீண்டகாலப் புறக்கணிப்புக்குள் ளாகிய இவர்கள், தாம் பிறந்த நாட்டிலேயே "நாடற்றேர்" என்ற முத்திரையுடன் வாழுகின்ற நிலைமையைக் காணக்கூடியதா கவுள்ளது.

Page 7
இந்த நிலையிலே இத்துயரந்தோய்ந்த சமூகத்தின் வரலாற் றுப் பின்னணி, இவர்களுக்கான கல்வியமைப்பு, அதன் மாற்றங் கள், கல்விப் பிரச்சினைகள் என்பனபற்றியே பின்வரும் அத்தியா யங்களில் ஆராயப்படவுள்ளது.
இலங்கையிலே கல்வி அறிவிலும், கல்வி வாய்ப்பிலும் மிக வும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மலையக மக்கள். மலையக மக்களின் கல்லாமைக்கும் அரசியல் சமுதாய சூழ்நிலைக்கும் நேரடித் தொடர்புண்டு. கல்லாமை காரணமாக உரிமைகள் பறிக்கப்பட்டபோது செயலற்றவர்களாகவும், இன்று நாடு கடத் தப்படும்போது நிலைதடுமாறியவர்களாகவும் அல்லற்படுபவர்கள் மலையகத் தொழிலாள வர்க்கத்தினர். கல்வித்துறையில் தீண்டப் படாதவர்களாக இன்றும் கருதப்படுபவர்கள் மலையக மக்கள். இந்நிலைக்கான காரணங்களையும், இதன் நிவர்த்திக்கான வழி வகைகளையும் rம் காணல் வேண்டும்.
மலையக மக்கள் இன்று ஏமாற்றத்திற்கும் வஞ்சனைக்கும் ஆளானவர்களாகவும், வறுமையின் நிரந்தரத் தோழர்களாகவும் இருந்து வருகிருர்கள். இன்றைய மலையக மக்களிடையே 40 சத வீதத்தினர் முற்ருகக் கல்வியறிவு இல்லாதவர்கள். அதாவது 10 இலட்சம் மக்களுள் 4 இலட்சம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. தோட்டத் தொழிலாளரிடையே 21 சதவீதமான ஆண்களுக்கும் 60 சதவீதமான பெண்களுக்கும் எழுத வாசிக்கத் தெரியாது. ஆண்களில் 66 சதவீதத்தினருக்கும், பெண் களில் 37 சதவீதத்தினருக்கும் ஆரம்பக்கல்வியறிவு மட்டுமே உண்டு. இவ்வாறு இவர்களுடைய தாழ்ந்த கல்வி நிலைமைக்குக் காரணம் அவர்கள் வாக்குரிமை அற்றவர்களாக இருப்பதேயா கும். இதனுல்தான் மலையகச் சமூகத்தின் வளர்ச்சியில் அரசாங் கம் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. பள்ளிக்கூடங்கள் இன்மை, ஆசிரியர்களின் அக்கறையின்மை என்பனவே மலையக மக்களின் இருண்ட சூழ்நிலைக்குக் காரணமாகும்.
இதுவரை கல்வித் தீண்டாமைக்கு உட்பட்டிருந்த மலையக மக்களுக்கு கல்வியறிவு ஊட்டுவதன்மூலம், அவர்களது அரசியல் பாதுகாப்புக்கும் சமூக வளர்ச்சிக்கும் வழிகோல முடியும், கல்வி வளர்ச்சியின்றி சமுதாய இணக்கமோ, அரசியல் விழிப்புணர்ச் சியோ, மலையக மக்களிடையே ஏற்படமுடியாது. அவர்களது மந்த போக்கையும் மாற்றமுடியாது மலையக மக்களின் முன் னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் அவர்களின் துரித கல்வி வளர்ச்சிக்குத் தொண்டாற்றுதல் இன்றைய தலையாய பணி
யாகும். y
திருமதி சொர்ணவல்லி பத்மநாப ஐயர்
t984

நன்றியுரை
கல்வியியல் முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வொன், றை மேற்கொள்ள நான் விரும் பிய போது, தோட்டத்துறை யின் கல்வியமைப்பைப் பற்றி ஆராயுமாறு எனக் கு அறி வுரை கூறிய கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் ப. சந்திர சேகரம் அவர்களுக்கு முதலில் எனது நன்றி உரியது.
இவ்வாய்வுக் கட்டுரையை எழுதத் தொடங்கிய போது எனக்கு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, திருத்தி உதவிய விரிவுரையா ளர் வ. ஆறுமுகம் அவர்களுக் கும் எனது நன்றி
எனக்குத் தேவையான தக வல்களையும், புள்ளி விபரங் களையும் பெருமளவில் தந்து தவிய மலையகத்தைச் சேர்ந்த பீ. ஏ. காதர் அவர்களுக்கும் எனது நன்றி.
இறுதியாக, இக்கட்டுரை
யைச் சிறந்த முறையில் தட்
டச்சில் பொறித்து உதவிய
திருமதி யோ. முருகானந்தா
அவர்களுக்கும், எனது நன்றி
உரியது.
群984

Page 8
பொருளடக்கம்
2.
பதிப்புரை
முன்னுரை
என்னுரை
நன்றியுரை
அத்தியாயங்கள்
இலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின்
வரலாற்றுப் பின்னணி,
தோட்டக் கல்வியில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு.
தோட்டக் கல்வியில் 凯F< நிறுவனங்களின் தலையீடு
இன்றைய நிலையும் பிரச்சிஜனகளும். தீர்வுக்கான ஆலோசனைகள்.
குறிப்புகள்
உசாத்துணை நூல்கள்
iv
vii
ix
Χί
2.
3.
57
88
97
05

நன்றியுரை
கில்வியியல் முதுமாணிப்
பட்டத்திற்கான ஆய்வொன் றை மேற்கொள்ள நான் விரும் பிய போது, தோட்டத்துறை யின் கல்வியமைப்பைப் பற்றி ஆராயுமாறு எனக் கு அறி வுரை கூறிய கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் ப. சந்திர சேகரம் அவர்களுக்கு முதலில் எனது நன்றி உரியது.
இவ்வாய்வுக் கட்டுரையை எழுதத் தொடங்கிய போது எனக்கு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, திருத்தி உதவிய விரிவுரையா ளர் வ. ஆறுமுகம் அவர்களுக் கும் எனது நன்றி
எனக்குத் தேவையான தக வல்களையும், புள்ளி விபரங் களையும் பெருமளவில் தந்து தவிய மலையகத்தைச் சேர்ந்த பீ. ஏ. காதர் அவர்களுக்கும் எனது நன்றி.
இறுதியாக, இக்கட்டுரை யைச் சிறந்த முறையில் தட் டச்சில் பொறித்து உதவிய திருமதி யோ. முருகானந்தா அவர்களுக்கும், எனது நன்றி உரியது. .
1984

Page 9
பொருளடக்கம்
2.
பதிப்புரை
முன்னுரை
என்னுரை
நன்றியுரை
அத்தியாயங்கள்
இலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின் வரலாற்றுப் பின்னணி,
தோட்டக் கல்வியில் SprSF Frrprfr நிறுவனங்களின் பங்கு.
தோட்டக் கல்வியில் சிரசு நிறுவனங்களின்
தலையீடு:
இன்றைய நிலையும் பிரச்சினைகளும். தீர்வுக்கான ஆலோசனைகள்.
குறிப்புகள்
உசாத்துணை நூல்கள்
iv
vii
ix
Χι
罗及
3.
57
88
97
05

1
இலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின் வரலாற்றுப் பின்னணி
புதியதொரு உலகைக் கட்டியெழுப்பிய கைத்தொழிற்புரட்சி, உலகநாடுகளிடையே ஆதிக்கவெறி கொண்ட வல்லரசுகளையும்,அவற்றின் பயணுகக் குடியேற்ற நாடுகளையும் உருவாக்கியது. கைத்தொழிற்புரட் சியின் விளைவாக, அநேக ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதார நிலையை வளர்த்துச் செல்லவும், உலகநாடுகளிடையே தாம் வல்லரசு என் பதை நிலைநாட்டவும் முயன்றமையும், குடியேற்ற நாடுகளின் உருவாக் கத்திற்கு வழிகாட்டின. ஆசிய, ஆபிரிக்க, அமெரிக்கப் பகுதிகளில் முத லாளித்துவத்தை நிலைநாட்டி,குடியேற்றவாதம் என்ற பெயரிலே, சுரண் டலுக்கும் வழிவகுத்தனர். இதன் விளைவு 18ஆம், 19ஆம் நூற்ருண்டு களின் வரலாற்றிலேயே நாடுகளைக் கைப்பற்றும் நிகழ்ச்சிகள் அழியா இடம் பெற்றன. அபிவிருத்தியடையாத பிரதேசங்களில் தமது முத லாளித்துவக் கொள்கைகளைப் புகுத்திக் கூடிய இலாபம் பெறும்

Page 10
போட்டியிலே ஐக்கிய இராச்சியம் முதலிடம் வகித்தது. போர் வலிமை யற்ற நாடுகளிடையே நவீன போர்க் கருவிகளைக் காட்டி , அந்நாடு களைக் கைப்பற்றிய ஐக்கிய இராச்சியம் தங்கள் நாட்டில் கைத் தொழில் வளர்ச்சியினல் பெற்ற மூலதனத்தை இக் குடியேற்ற நாடு களிடையே முதலிட்டது , மிகக் குறைந்த செலவில் தமக்குத் தேவை யான மூலப்பொருட்களைப் பெற்றதுடன், தங்கள் நாடுகளில் உற் பத்தி செய்கின்ற உற்பத்திப் பொருட்களுக்குச் சந்தையையும் உரு வாக்க முனைந்தது. அபிவிருத்தியடையாத நாடுகளின் சமூக நிலைமை பற்றியோ பொருளாதார வளர்ச்சி பற்றியோ கருத்திற் கொள்ளாது அந்நாடுகளின் பாரம்பரிய விவசாய முறைகள், கைத்தொழில் முதலிய வற்றைச் சிதைவுறச் செய்து, அதன்மேல் தங்கள் வல்லரசுத்தன்மையை நிலைநாட்டுவதே இவற்றின் நோக்கமாக இருந்தது. இக் குடியேற்ற நாடுகளின் பாரம்பரியக் கைத்தொழில், விவசாய அபிவிருத்தி என்பன தடைப்படுத்தப்பட்டு புதிய பொருளாதார அமைப்பு இவர்களால் உரு வாக்கப்பட்டது. இவ்வாறு இவ்வல்லரசுகளினல் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாதார அமைப்பே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாகும். அல்லது பலதரப்பட்ட சுரண்டல் முறைகளின் நவீன கண்டுபிடிப்பே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையாகும். இன்று எத்தேவைக்கும் அந் நிய நாட்டையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பொருளாதார அமைப்பு ; விவசாயக் கைத்தொழில் அபிவிருத்திக்குத் தடையான அமைப்பு இத. இதனை முதன் முதற் கண்டுபிடித்து அறிமுகப்படுத் தியவர்கள் ஆங்கிலேயரே.
கோப்பி, தேயிலை, இறப்பர் என்பன பெருந்தோட்ட ரீதியிலே பயிரிடப்பட்டன. இதற்குத் தேவையான காலநிலையும், மண்வளமும், மலைப்பிரதேசமும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளிடையே நிறைந்து காணப் பட்டன. ஆனல் இவற்றை உருவாக்கிப் புத்துயிர் அளிக்கக்கூடிய ஆற் றல் ஆங்கிலேயரிடமேயிருந்தது. மேற்கு நாடுகளுக்குத் தேவையான மூலப்பொருட்களான இறப்பரும், இனிய மாலைநேரப் பொழுதுபோக்கு நேரங்களிலே, இடம்பெறும் சுவை மிகுந்த பானமாகிய தேயிலையும், இந்நாடுகளிடையே பயிரிடப்பட்டன. இந்நாடுகளின் ஆட்சிப்பொறுப்பு ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கினுள் இருந்தமையும் ஒரு காரண Los TGLD.
இலங்கை, பாரதம், பர்மா, மலாயா , மேற்கிந்தியத் தீவுகள் போன்றவற்றில் இப்பயிர்ச்செய்கைக்குத் தேவையான பெளதிகக் காரணிகளுடன் குறைந்த செலவில் தொழிலாளர்களைப் பெறக்கூடிய வாய்ப்புகளும் இருந்தன. இத்தொழிலாளர்களை எந்தவொரு நாட்டிற் கும் அழைத்துச் செல்லக்கூடிய செல்வாக்கு பிரித்தானியருக்கு இருந்
2

தது. எனவே போதிய ஊதியமின்றி அல்லற்பட்ட இந்தியத் தொழி லாளருக்கு இது ஒரு வரப்பிரசாதமாயிற்று. சமூக, பொருளாதாரச் சீர்கேடுகளால் உள்நாட்டில் தாழ்ந்த நிலையில் இருந்த இந்திய மக் களை ஆங்கிலேயர் ஆசைவார்த்தைகளால் தம் பக்கம் ஈர்த்துக்கொண் டனர். இக்கரைக்கு அக்கரை பச்சை யென்ற பழமொழிக்கொப்பத் தமக்கு எதிரே செழிப்பான எதிர்காலம் ஒன்றுண்டு எனக் கருதி ஆங் கிலேயரின் ஆசைவார்த்தை கட்கு உடன்பட்டனர்.
ஆங்கிலேய ஆட்சியின்கீழ் வரிச்சுமைகள், சுங்கவரி, குத்தகைவரி போன்றவற்ருலும், இந்திய சமூக அமைப்பிலே காணப்பட்ட சுரண் டல் முறைகளாலும் பல்வேறு இன் னல்களுக்குட்பட்டிருந்த இந்திய மக்களுக்கு இயற்கையின் கொடுமைகளான நீர் வசதியின்மை, வரட்சி என்பனவும் ஒன்றுசேரப் பெருந்தோட்டங்களுக்குத் தொழிலாளரா கச் செல்வதற்கு, ஒரளவுக்குத் தூண்டுகோலாயின. இந்நிலையில் இத் தகைய பொருளாதாரச் சீர்கேடுகளின் கடுமையான தாக்குதலை நன்கு பயன்படுத்தி ஆங்கிலேயர் கங்காணி முறையின் மூலம் இந்தியர் களைத் தமது தோட்டங்களில் குடியேறச் செய்தனர். தொழிலாளர் களை இந்தியாவில் இருந்து கொண்டுவருகின்ற முறையே கங்காணி முறையாகும். அடிமை வியாபாரத்தை ஆபிரகாம் லிங்கன் அழித் தொழித்தபோதும் இது ஒரு நவீன அடிமை வியாபாரமாகும். ஆங் கிலேயர் ஆரம்பித்த பெருந் தோட்டங்களுக்கு அவசியமான தொழி லாளர்கள் அந்தந்த நாடுகளில் போதியளவு இன்மையால் - அதாவது இத்தொழில் செய்ய விரும்பாமையால் - இந்தியத் தொழிலாளர்கள் அங்கு வேலை செய்ய அவசியமானர்கள். மிகக்குறைந்த வசதிகளுடன் கீழான வாழ்க்கைத் தரத்துடன் உலகிலேயே குறைந்த கூலியைப் பெறும் தொழிலாளர்களாக இவர்கள் இந்நாடுகளில் பயன்படுத்தப்
பட்டார்கள்.
அ. இலங்கையின் பெருந்தோட்டங்களின் தோற்றம்
பத்தொன்பத7ம் நூற்ருண்டு ஆரம்பத்தில் இலங்கை, பர்மா,
பிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற பிரதேசங்களில் பெருந்
தோட்டங்கள் உருவாகின.
1815ஆம் ஆண்டிலே இலங்கையில் கண்டியரசு, ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டதுடன் இலங்கையில் ஆங்கிலேயராட்சி முழுமை பெற் றது. 1796இல் இலங்கையின் கரையோர மாகாணங்கள் ஆங்கிலேய
3

Page 11
ரால் கைப்பற்றப்பட்ட போதிலும் இலங்கை முழுவதும் ஆங்கிலேய ராதிக்கத்தின் கீழ் வந்தது. 1815 ஆம் ஆண்டு கண்டி கைப் பற்றப் பட்டதன் பின்னரே. எனவே, இலங்கையின் பெருந்தோட்ட அமைப்பு இதன் பின்னரே உருவாகியது.
பிரித்தானிய முதலாளி வர்க்கத்தினர் தங்கள் மூலதனத்தை
இலங்கைத் தோட்டங்களில் முதலிட்ட னர். இதுவரை இலங்கையின் மரபுவழிப் பயிர்ச் செய்கையாகிய விவசாயம், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையினல் மாற்றமடையலாயிற்று. கோப்பியே மு ஆன்முதல் பெருந்தோட்ட ரீதியில் பயிரிடப்பட்டது. ஆரம்ப காலங்களில் டச்சுக் காரர்களால் கோப்பி அறிமுகப்படுத்தப்பட்டபோதும் பெருந்தோட்ட
ரீதியில் கண்டிய உயர் நிலங்களில் பயிரிடப்பட்டது பிரித்தானியர் காலத்திலேயே.
1824ஆம் ஆண்டிலே இலங்கையின் தேசாதிபதியாகப் பதவியேற்ற சேர். எட்வேட் பார்ன்ஸ் முதல் கோப்பித் தோட்டத்தைத் திறந்து வைத்தார். இத்தோட்டம் கம்பளையில் திறக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஆங்கிலேய கிழக்கிந்திய வர்த்தக சங்கமும், ஏனைய தனி யார்களும் தங்கள் முதலை இலங்கைக் கோப்பித் தோட்டங்களில் மதவிட் டனர். எல்லா வகுப்பினரும் (தேசாதிபதி, அவரின் அரசாங்கசபை உறுப் பினர்கள், இராணவ அதிகாரிகள்) இதனைத் தொடர்ந்து கோப்பித் தோட்டங்களைத் திறந்தனர். 1830 ஆம் ஆண்டு தொடங்கி 1880ஆம் ஆண்டுக்கிடையில் 275,000 ஏக்கர் நிலம் பயிரிடப்பட்டதாக அறியக் கூடியதாகவுள்ளது. 1 கம்பளை, புசல்லா வை, ஹேவாஹெட்ட, றம் பொட போன்ற பகுதிகளில் கோப்பித்தோட்டங்கள் தோன்றலாயின. 1830ஆம் ஆண்டு தொடங்கி 1880ஆம் ஆண்டு வரையில் அமோக விளைச்சலை அளித்த கோப்பித் தோட்டங்கள் இதன்பின்னர் ஒருவகை "பங்கசு (Fungus) என்ற இலைநோய் பரவியதன் காரணமாக இல்லா தொழிந்தன . எனவே இந்தப் பகுதிகளில் தேயிலை, இறப்பர் பயிரிடப் பட்டன. இப்பொருட்கள், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்ட ன. தேயி%ல ஈரவலய மலைப்பிரதேசங்களில் கண்டி, நுவரெலியா, பதுளைப் பகுதிகளில் - பயிரிடப்பட்டது. 1973ஆம் ஆண் டிலே 280 ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டது. 2 190 ஆம் ஆண்டிலே 1,250 490 இருத்தல் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. 1910ஆம் ஆண்டிலே 6,441,242 இருத்தலாயிற்று. 3
பெருந்தோட்டப் பயிர்களில் ஒன்மு ன இறப்பர் கேகாலை, களுத்
துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் பயிரிடப்பட்டது. 1898 ஆம்
ஆண்டிலே 705 ஏக்கரில் பயிரிடப்பட்ட இறப்பர், 1915ஆம் ஆண்டிலே
240,000 ஏக்கராக அதிகரித்தது. 4
4.

ஆகவே இக்கோப்பி தேபி%ல, இறப்பர்த் தோட்டங்களில் தொழில் புரியத் தேவையான தொழிலாளரைப் பெறுவது கடினமாக இருந் தது. கோப்பிச் செய்கையைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட காலத்தில் - அதாவது, கோப்பி முற்றிப் பழுத்த காலத்திலேயே - தொழிலாளர் தேவைப்பட்டனர். இவர்களை இலங்கையில் பெறுவது நடைமுறைச் சாத்தியமாகப்படவில்லை. சீனரையும், சிங்களவரையும் பயன்படுத்தியபோதும், நிரந்தரத் தொழிலாளர்களைப் பெறுவது இய லாததொன்முயிற்று. இதனுல் 1830 ஆம் ஆண்டு தொடக்கம் இநதியத் தொழிலாளரை வரவழைத்தனர். இச்செய்கை அன்றுதொட்டு 19ஆம் நூற்று ண்டு ஆரம்பம் வரையில் தொடர்ந்து இடம்பெற்று வந்துள்ளது 6768576) s TLD
தென்னிந்தியத் தொழிலாளர் வருகையில்
ஏற்பட்ட மாற்றம்
19ஆம் நூற்ருண்டிலே இந்தியாவில் தமது ஆட்சி உரிமையை நிலைநாட்டிய ஆங்கிலேயர், 1815ஆம் ஆண்டளவில் முழு இலங்கை யையும் கைப்பற்றியதைத் தொ. ர்ந்து தென்னிந்தியத் தொழிலாளர் வருகையும் இடம் பெறலாயிற்று ஆங்கிலேயராட்சியின் முன்னரே விஜயன் வருகையைத் தொடர்ந்து சோழ அரசரின் படையெடுப்பு, ஆரியர் வருகை, வடமாகாணக் குடியேற்றங்கள் என்பன காரண மாகத் தமிழர் இலங்கையில் குடியேறியிருந்த போதிலும், ஆங்கிலேய ராட்சியின் பின்னரே திட்டமிட்ட வகையில் தொழிலாளராக ஆட்சி யாளரால் கொண்டுவரப்பட்டனர். ஆகவே 1815ஆம் ஆண்டின் பின் னர் கொண்டுவரப்பட்டுக் குடியேறியவர்களே இன்று பல்வேறு பிரச் சினைகளால் சூழப்பட்டவர்களாகவும், அனுதாபத்திற்குரியவர்களாகவும் எவ்வித உரிமையும் இல்லாதவர்களாகவும் உள்ளனர். பெருந்தோட் டச் செய்கையுடன் பாதைகளை அமைக்கவும் துறைமுகங்களில் தொழில் புரியவும், நாட்கூலி பெறுபவர்களாக இலங்கைக்கு வந்தோர் தொகை 1943ஆம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பின்படி 1,600,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது. 5 ஆயினும், இன்று இதில், பெரும்பான்மை யோர் திரும்பிச் சென்று விட்டனர்.
1880ஆம் ஆண்டளவில் தொடங்கிய கோப்பிச் செய்கையுடன் ஆரம்பித்த தொழிலாளர் வருகைக்கு மூலகாரணமானவர்கள், சந் தர்ப்பமளித்தவர்கள் இலங்கையரே என்ருல் மிகையாகாது. அக்காலச் சூழலிலே தோட்டங்களில் வேலை செய்ய சிங்கள மக்களோ, இலங்கைத் தமிழரோ விரும்பவில்லை. அவமானமானதாக, இழிந்த தொழிலாக
5

Page 12
இதனைக் கருதினர். அத்துடன் தமது கிராமத்தை மட்டும் மைய மாகக் கொண்டு தங்கள் குடும்பம், தங்கள் இனம், தங்கள் சுற்றம் என வாழ்ந்த நிலையில் அச்சூழலைவிட மாறுபட்ட சூழலிலே தமது காலத்தைப் போக்க அவர்கள் விரும்பவில்லை. ஆதலால் இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குறைந்க கூலிக்குத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர்.
1893 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத் தொடர்பின் 14ம் விதியின்படி, இந்தியர் வெளியேற்றம் தடைப்பட்டாலும் கோப் பிச் செய்கைக்குத் தொழிலாளர் தேவைப்பட்டதால் இத்தடையை நீக்கி விடடனர். 6
அட்டவணை 1 : 1
குடியேற்ற அதிகரிப்பு
ஆண்டு தொகை
1827 10,000
1847 50,000
1877 146,000
191 457,765
1921 493,944
1931 692,540
1946 665,853
1961 949,684
அட்டவணையின்படி குடியேற்றம் படிப்படியாக அதிகரித்துச் செல் கின்ற போக்கினை இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. ஆயினும் இவர்கள் இங்கு நிரந்தரமாகக் குடியேறி வாழவில்லை. 7
6

தேயிலைத் தோட்டங்களுக்கு முதன் முதலாகத் திரட்டப்பட்டவர் கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப் பாரும், காணி யற்ற தொழிலாளர்களும் ஆவர்; பெரும்பாலானேர் திருநெல்வேலி, தஞ் சாவூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து வந்தவர்களாவர். பிரதான மாக அவர்களின் வறுமைப்பட்ட வாழ்க்கையே அந்நிய நாடொன்றுக்கு அவர்களை விரட்டத் தூண்டுகோலாயிற்று. தோட்ட வேலைக்கு ஆட் களைத் திரட்டியவர்கள். அவ்வக்கிராமங்களில் செல்வாக்குள்ளவர் களாகவேயிருந்தனர். அவர்கள் கங்காணி என அழைக்கப்பட்டனர். இலங்கைக்குக் கொண்டு வருவதற்காக அவர்கள் கிராமத்திலிருந்து ஆட் சளைத் திரட்டினர்கள்.இப்படித் திரட்டப்பட்ட குழுவினர் கங்காணியின் கட்டுப்பாட்டின் கீழேயேயிருந்தனர். தலைமைக் கங்காணிக்குக் கடன் பட்ட தொழிலாளியை அடிப்படையாகக் கொண்ட துண்டுமுறை நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில், தொழிலாளி தனது கிராமத் தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர், தான் பட்ட கடனைத் தீர்க் கவும், தன் பிரயாணச் செலவுக்குமாகவும், கங்காணியிடம் கடன் பெற்றன். இவற்றேடு, இலங்கை வந்தடைந்த புதிய தொழிலாளி, தனது அவசிய தேவைக்கு மீண்டும், மீண்டும் கடன் வாங்குகிறன் . தொழிலாளரைப் பெறவிரும்பும் தோட்டத் துரைமார், தொழிலாளி கங்காணிக்குத் தரவேண்டிய கடன் தொகையைக் கொடுத்து அவர் களைப் பெற முற்படுவர். எந்தப் புதிய முதலாளியும், தொழிலாளரை வேலைக்கு அமர்த்துமுன், பழைய முதலாளியிடமிருந்து துண்டு செலுத்தப்பட வேண்டும். துண்டில் தொழிலாளி செலுத்த வேண்டிய கடன்கள் குறிப்பிடப்பட்டு அவற்றைத் தீர்க்கும் பட்சத்தில் அவர் களைத் தான் விடுவிக்கத் தயாராக இருப்பதாகத் துண்டில் குறிப்பிடப் பட்டிருக்கும். இம்முறை புதியதொரு அடிமை வியாபாரம் எனலாம். 1921ஆம் ஆண்டில் துண்டுமுறை சட்டவிரோதமாக்கப்பட்டது. ஆனல் கங்காணிமுறை தொடர்ந்தும் இருந்து வந்தது. எனவே இலங்கை வந்த தொழிலாளர் கடனிலேயே வாழ்க்கையைத் தொடங்குவதும், கடனிலேயே வாழ்வதும், கடனிலேயே சாவதும் விநோதமானதல்ல.
இம்முறைகளின் மூலம் இங்கே வந்த தொழிலாள வர்க்கத்தினர் குறைந்த ஊதியம், வசதியற்ற இருப்பிடங்கள், சுகவீனம் காரணமா கக் கூட ஒய்வு பெறமுடியாத நிலை என்ற துன்பங்களுக்குள்ளாயினர் இறந்த தொழிலாளரின் உடலைக்கூட அடக்கம் செய்யாது பாதை யோரங்களிலேயே அநாதரவாக விடவேண்டிய நிலையும் இருந்தது. இவ்வாறு பல காரணங்களால் 1841 ஆம் - 1849 ஆம் ஆண்டுகளுக் கிடையில் மொத்தக் குடியேற்றங்களில் 70,000 பேர் அல்லது 25./> பல்வேறு காரணங்களால் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. 8

Page 13
ஆரம்பகாலங்களில் தொழிலாளரின் வருகையும் வெளியேற்றமும் சாதாரணமாகக் காணக்கூடியதாக இருந்தது.
SPLL musIITOT 1 : 2
இந்தியரின் வருகையும் வெளியேற்றமும்
வருடம் s குடியேற்றம் வெளியேற்றம்
1843 - 1850 47,028 19, 693
1851 -- 1860 57, 464 31, 443
1861 - 1870 68, 415 53, 185 1871 - 1880 102, 511 81, 475
1881 - 1890 57, 856 52, 752
057 ,85 484 ,121 1900 ܚܝ 1891
1901 - 1910 95, 324 67,975
917 ,47 388 ,87 1920 -۔ 1911
043 ,67 80 ,106 1930 حسن ، 1921
981 ,54 57,784 1940 -۔ 1931
له 54,994 252 ,47 1950 -س 1941
இவ்வட்டவணையின் படி 9 1880ஆம் ஆண்டின் பின்னர் குடி யேறியோர் தொகை குறையக் காரணம் கோப்பிச் செய்கையின் வீழ்ச் சியே. கோப்பிப் பயிரின் அழிவின் பின்னர், அந்நிலங்களில் தேயிலை பயிரிடப்பட்டது. கோப்பி பறிக்கின்ற காலங்களில் இத்தொழிலாளர்
8

கூடுதலாக வந்தன்ர். இவர்கள் அறுவடை காலங்கள், விதைப்புக் காலங்கள். மற்றும் பொங்கல் போன்ற விசேட நாட்களில் தமது கிரா மங்களுக்குத் திரும்பிச் சென்றனர். தேயிலைத் தோட்டங்கள் திறக் கப்பட்டதன் பின்னர் வெளியேற்றம் குறைவடையலாயிற்று. பல்லா யிரக்கணக்கான மத்திய மலைநாட்டு நிலங்கள், 1897 ஆம் ஆண்டு முடிக்குரிய காணிச் சட்டம் இலக்கம் - 10, 1856ஆம் ஆணடு \கோயிற் காணிச் சட்டம் இலக்கம் - 10, 1897ஆம் ஆண்டு பய00 ற்ற காணிச் சட்டம் ஆகியவற்றின் மூலம் அரசுடைமையாக்கப்பட்டு, பயிர்ச் செய்கைக்குட்படுததப்பட்டன. 1" எனவே 19ஆம் நூற்றண்டு முடிவிலும் 20ஆம் நூற்ருண்டு ஆரம்பத்திலும் நாட்டின மத்திய பகுதிகளில் தேயிலை, பூறப்பர் தோட்டங்கள் உருவாக்க பட்டன காலக்கிரமத்தில் இங்கு வந்து குடியேறிய இந்தியத் தொழிலாளர்கள் இந்தத் தோட்
டங்களுக் கெல்லாம் மிகமலிவாகவும், மிகச்சுலபமாகவும் தமது உழைபபை நல்கினர். ஆரம்பத்தில் சீனர்களைத் தொழிலாளர் களாக அமர்த்திய போதும் அவர்கள் இவ்வேலைக்குத் தகுதி வாய்ந்தவர்களல்லர் எனவும் அதற்காகக் கூடியளவு பணம் செலவிட வேண்டியேற்படும எனவும் கருதினர். இதனல் இம்முயற்சிகள் கைவிடப்பட்டன. ஆரம்புகாலத்தில் மிகச் சிறிய
அளவில் ஆரம்பமான இந்தியத் தொழிலாளர்களின் குடியேற்றம் காலஞ் செல்லச்செல்ல விரிவடைந்து பெருமளவில் நடைபெற்றது. குடிவரவு - குடியகல்வுப் புள்ளிவிபரங்கள். இம்மக்களின் குடிபெயர் வின் தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான தேவையும் இந்தியாவிலே அவர்களுடைய சொநதக் கிராயங்களில் ஏற்பட்ட பஞ்சங்களும், வறுமையும். இலங் கைக்கு வந்து குடியேறுவதை அதிகரிக்கச் செய்தன.
ஆரம்பத்தில் தோட்டங்களில் குடியேற்றமும், வெளியேற்றமும் பின்வரும் முறையில் காணப்பட்டன.
o Llaool 1:3
குடியேற்றத்திற்கும் குடியகல்வுக்குமான s காரணங்கள் ஆண்டுகள் Α l. 1840 1870 سے கோப்பிச் செய்கை ஸ்தாபிதம்;
குடியேற்றம் அதிகரிப்பு. 2, 1871 - 1881 கோப்பியில் திடீர் சுபீட்சநிலை;
வருடந்தோறும் 24,000 தொழிலாளர் குடியேற்றம்.

Page 14
ஆண்டுகள்
3. 1 881 -890 1 سنس கோப்பி வீழ்ச்சி; குடியேற்றம் குறைவு.
4. I 89 1 -1900 - س தேயிலைத் தோட்டங்கள் திறப்பு: குடியேற்றம் அதிகரிப்பு, வருடந் தோறும் 34,000 பேர் குடியேற்றம்"
5. It 90 1 -سس- . I 9 I H குடித்தொகையில் ஏற்பட்ட
இயற்கையான அதிகரிப்புடன், குடியேற்றம் 5% சேர்கின்றது.
6. 1923 - 1928 இறப்பரில் திடீர் சுபீட்சம்; வருடந்
தோறும் 60,000 பேர் குடியேற்றம்
7. 1931 - 1940 பொருளாதார மந்தம்; தொழிலாளர்
வெளியேற்றம்.
8. 1941 - 1945 யுத்தகாலம்; தொழிலாளர் வெளி
யேற்றம். 1942ஆம், 1943ஆம் வருடங்களின்போது குடிப்பெயர்ச்சி யின் மீது இந்தியா விதித்த தடை காரணமாக குடியேற்றம் தடைப் பட்டது. 9. 1947 - 1948 யுத்தத்தின் பின் குடியேற்ற அதிகரிப்பு
1891இன் பின்னர் இங்கு வரவழைக்கப்பட்டோர் நிரந்தரமாக இங்கு குடியேற்றப்பட்டார்கள். காரணமென்னவெனில் தேயிலைச் செய்கைக்கு எப்போதும் வேலை செய்கின்ற தொழிலாளர் தேவை, அதனற்றன் முன்காட்டிய அட்டவணையில் ( பக், 6) குடியேற்றம் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாகவுள்ளது. இவ்வதிகரிப்பின் படி இந்தியக் குடித்தொகையின் வளர்ச்சி பின்வருமாறு (பக். 11) காணப்பட்டது.
எனவே இந்தியத் தொழிலாளர்களதும், அவர்களில் தங்கியுள் ளோரதும் தொகை 1946இல் 665,853 பேரெனக் காணக்கூடியதா கவுள்ளது. அதன்பின் பொடர்ந்து ஏற்பட்ட அதிகரிப்புக்கு, இலங்கை அரசாங்கத்தால் இக்காலப் பகுதிகளில் இயற்றப்பட்ட மருத்துவச் சட்டம் ( 1912), கல்விச் சகாயச் சட்டம் ( 1920 ) தொழிலாளர் சட்டம் ( 1921 ), சம்பளச் சட்டம் (1927), என்பனவும் காரண மாகும். 12
10

ஆண்டு தொகை
1827 10,000
1847 50,000
1877 146,000
1911 457,765
1921 493,944
1931 692,540 1946 . 665,853
1961 949,684 1971 957,785
இங்கு வந்து குடியேறியவர்கள் தம் தாய்நாடாகிய இந்தியாவுக்கு அடிக்கடி சென்று வருதல் சர்வசாதாரண விடயமாக இருந்தது ଗt ଜist பதை மேற்காட்டிய புள்ளி விபரங்களிலிருந்து அறியலாம். இதற்கான வாய்ப்புகளை இருநாட்டு அரசாங்கங்களும் ஏற்படுத்தியிருந்தன. ஆணுல் இந்நிலை ஆரம்பகாலங்களில் காணப்பட்ட வேகத்துடன் பிற்காலத்தில் இடம்பெறவில்லை. காரணம் 1880ஆம் ஆண்டுகளில் வந்த சந்ததியினர் 1936இல் புதிய சந்ததியினராக இருந்தனர். இதன் காரணமாக 20ஆம் நூற்றண்டு ஆரம்பகாலம் தொடக்கம் இந்தியாவுக்குச் சென்று வரும் நிலைமை படிப்படியாகக் குறைந்து, அற்றுப் போகும் நிலைமை கான பட்டது. ஆரம்பத்தில் 2,000 தேயிலைத் தோட்டங்களில் 358,000 பேர் தொழிலாளராகக் குடியமர்த்தப்பட்டனர். இவர்களின் வம்சாவழியில் வந்த சந்ததியினர் தொகை 89.125, 13 இந்நிலையில் இந்தியரின் குடி யேற்றமும், வெளியேற்ற மும் இரு அரசாங்கங்களினதும் முடிவுகளினல் பாதிக்கப்பட்டன. இந்தியாவிலே தோட்டத் தொழிலாளராக இடம்பெ யர்ந்தோரது நிலைபற்றி எழுத்த பொதுசன அபிப்பிராயத்தைத் தொட tர்ந்து, இந்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது. இந்தியாவி மிருந்து இங்கு குடி பெயர்வோர் விபரங்களைக் கணிப்பதற்காக 1857ஆம்
- 11

Page 15
ஆண்டில் 24 குடியேற்றச் சட்டங்கள் இயற்றப்பட்ட ன. 1922 இல் இந்தியக் குடியகல்வுச் சட்டம் இயற்றப்பட்டதன்பின், தொழிலாளரைத் திரட்டு முன் பல நிபந்தனைகளுக்குட்பட வேண்டிய நிலைமையேற்பட் டது. அகில் குடியேற்ற நிதியமும் ஒன்று தொழிலாளர் வேலை செய்ய இயலாத நிலையிலோ அல்லது வயோ திப காலத்திலோ இந்தியாவிற்குத் திருப்பியனுப்ப இந்நிதியம் உபயோகப்படவேண்டும். இதைத் தோட்ட முதலாளிமார் எதிர்த்தனர். பொருளாதார சுபீட்ச நிலவிய காலங் களில் இதனை எதிர்த்த முதலாளிமார் பொருளாதார மந்தத்தின் போது பல தொழிலாளரை இந்தியாவிற்குத் திருப்பியனுப்பினர், எனவே சுதந்திரத்தின் முன்னர் தோட்டத்தொழிலாளர் வருகை தோட் டங்களின் பொருளாதார விருத்தியிலேயே நிர்ணயிக்கப்பட்டது. இதனல் தோட்டத் தொழிலாளர் தமக்கெனத்திட்டவட்டமான எதிர்காலமின்றி அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருந்தனர்.
இ. சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பல மாறுதல்கள் ஏற்பட லாயின. இந்தியக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய பல காரணி கள் உருவெடுத்தன. 20ஆம் நூற்ருண்டின் ஆரம்ப காலங்களிலே பெருந்தோட்டங்களில். இந்தியத் தொழிலாளரே 100 / தொழில் புரிந்தனர். சிங்களவரோ, இலங்கைத் தமிழரோ பெருந்தோட்டங்க ளில் தொழில் புரிய முன் வர வில்லை. அத்துடன் முடிக்குரிய பல காணி கள், பயனற்ற காணிகள் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு பெருந் தோட்டச் செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டபோது ஏராளமான சிங்களவர் நிலமற்ற விவசாயிகளாயினர். இதனல் சுதந்திரத்தின் பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில், தாம் நிலங்களை இழக்க இந்தியத் தொழிலாளரே காரணம் என அரசியல்வாதிகள் சுட்டிக் காட்டிய போதும் அது அநாகரீகமான செயலாகவே இருந்தது. அத்து டன் நிலமற்ற சிங்கள விவசாயிகள் வேலையின்மை போன்ற பல்வேறு இன்னல்களை அடைந்த நிலையில் இவற்றுக்கெல்லாம் காரணம் இந்தி யத் தொழிலான ரே என்ற மனப்பாங்கு அவர்களிடமும் வளர்ந்து வந் தது. இவற்றையெல்லாம் விட இந்தியத் தொழிலாளவர்க்கம் அரசியலில் இடம் பெறும் சூழல் உருவாகியதும் பிரச்சினைகளும் உருவாகத் தொடங்கின. எனவே அரசாங்கம் தென்னிந்தியத் தொழிலாளரின் வருகையைக் கட்டுப்படுத்தப் பல சட்டங்களைக் கொணர்ந்தது வேலை யில்லாப் பிரச்சினையை எதிர்நோக்கிய இலங்கை அரசாங்கம் பல கட் டுப்பாடுகளை விதித்தது. அத்துடன் 1929 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தமும இணையவே, அரசாங்கம் தொழிலாளர் வரு கையைக் கட்டுப்படுத்தத் தீவிரமாக முனைந்தது. . . .
12

1931ஆம் ஆண்டிலே இந்தியத் தொழிலாளர்களான 818,500 பேரில் 692,540 பேர் தோட்டத் தொழிலாளராக இருந்தனர். இவர் களது வருகை 1922 ஆம் ஆண்டிலே இந்திய அரசு கொண்டு வந்த வெளியேற்றத் தடைச் சட்டம், 1939 ஆம் ஆண்டு கொணர்ந்த பயிற் றப்படாத தொழிலாளர் வெளியேற்றத் தடைச் சட்டம் என்பவற் றேடு, 1957 ஆம் ஆண்டு திருச்சி பில் இருந்த இலங்கைக் குடியகல்வுக் காரியாலயத்தை மூடியதும், முற்ருகத் தடை செய்யப்பட்டது. முடி வில் 1964ஆம் ஆண்டு மொத்த இந்தியத் தொகை 925,000 ஆகக் கரிைக்கப்பட்டது.
1928ஆம் ஆண்டு டொனமூர்க் குழுவினரின் கூற்றுப்படி, இந்திய தோட்டத் தொழிலாளரில் 40./* - 50 / வரை நிரந்தரமாக இலங் கையில் வசிப்பவர்கள் என அறியப் பட்டது. இத்தொகை 1938 இல் ஜாக்சன் அறிக்கையின் பிரகாரம் 68/ எனவும் கணிக்கப்பட்டது. 14 சுதந்திரத்தின் பின்னர் மொத்தச் சனத்தொகையில் 10./" எனக் கணிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு சிறிய விகிதமாக இருந்தபோதும் இலங்கையைப் பொறுத்தவரையில் பெரும் பிரச்சினைக்குரிய ஒரு விட யமாயிற்று. இந்தியர் பெருந்தோட்டத்துறையில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் முக்கியம் பெற்று விளங்கினர். எனவே தான் 1931 இல் டொனமூர்ச் சட்டத்தின் மூலம் இவர்களது முக்கியத்துவம் படிப் படியாக குறைக்கப்பட்டது.
1936 ஆம் ஆண்டிலே மொத்த சனத்தொகையில் 36.1 ஆக இருந் தவர்கள். 1939ஆம் ஆண்டு, 19 /, 1941இலே 12 1, 1964இல் 10./. எனக்குறைந்து வந்தனர் டொனமூர் வருகையுடன் சர்வசன வாக் குரிமை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவரிடையே காணப் பட்ட வெறுப்பு உச்சநிலயை அடைந்தது. 21 வயதுக்கு மேற்பட்டோ ரனை வருக்கும் வாக்குரிமை வழங்கப்படின் இந்தியத் G57 - 5 தொழிலாளரும் வாக்குரிமை பெறுவர். இச்செய்கை தம்மைப் பாதிக் குமெனக் கருதினர். 'தன 1947ஆம் ஆண்டுத் தேர்தல் புள்ளி விபரம் எடுத்துக் காட்டிற் று. 1948 ஆம் ஆண்டு, சுதந்திரத்தின் பின் னர் நடைபெற்ற முதலாவது தேர்தலில் 95 தேர்தற்ருெகுதிகளில் 7 இடங்களை இந்திய காங்கிரஸ் பெற்று எதிர்க்கட்சியில் அமர்ந்தது. 95 இடங்களில் 42 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி, மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கவேண் டிய நிர்ப்பந்தபேற்பட்டது. இது அவர்களுக்கோர் பேரிடியாயிற்று. இந்நிலைமை நீடிக்குமாயின் எதிர்காலத்தில் தமக்கு அரசாங்கம் அமைக் கும் சந்தர்ப்பம் நிச்சயமாகக் கிடைக்காது என்பதை ஐக்கிய தேசிய கட்சி உணரலாயிற்று. இவர்களைப் பொறுத்தவரையில் ஒரேயொரு பரி
13

Page 16
காரமே இதற்குண்டு. அதாவது தோட்டத் தொழிலாளரின் பிரசா வுரிமையை நீக்குவதாகும். இந்த அரசியல் முடிவுகளுடன் அப்போது நிலவிய பொருளாதார, சமூக, அரசியல் பிரச்சினைகளையும் ஆதார மாகக் கொண்டு 1948ஆம் ஆண்டுச் சட்டத்துடன் இந்திய மக்களின் குடியுரிமை - பிரசாவுரிமை நீக்கப்பட்டது. 20ஆம் நூற்ருண்டிலே சமூக ரீதியாகக் கொடுக்கப்பட்ட உரிமையைச் சட்டரீதியாக இல்லாமற் செய்கின்ற கொடுமை இலங்கை வரலாற்றில் இடம் பெற்றது.
பிரசாவுரிமை நீக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஒன்பது இலட்சம் மக்கள் இதுவரை அனு பவித்த உரிமையை இழந்தனர். அத்துடன் பிரசாவுரிமைக்கு விண்ணப்பிக்க 1949 ஆம் ஆண்டு கொடுக் கப்பட்ட காலனல்லை 2 வருடமாகும். ஆரம்பத்திலே விண்ணப்பங்கள் அனுப்பாது கால எல்லை முடிவில் 825,000 பேர் இலங்கைப் பிரசா வுரிமைக்காக விண்ணப்பித்தனர். ஆயினும் 1949ஆம் ஆண்டிலே 134,000 பேருக்கே பிரசாவுரிமை கிடைத்தது. 5,000 பேர் இந்தி யப் பிரசைகளாகப் பதியப்பட்டனர். இதனத் தொடர்ந்து விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக இந்திய, இலங்கைப் பிர தமர்களுக்கிடையில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
1953ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற நேரு-சேனநாயகா சம்பாஷணைகளும், 1954 ஜனவரியிலும், ஒக்டோபரிலும் டில்லியில் நடைபெற்ற நேரு-கொத்தலாவலை பேச்சுவார்த்தைகளும் இந்தியத் தொழிலாளரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன் நடாத்தப்பட் டன. ஆனல் இவற்றினுல் எவ்வித முடிவுகளுமேற்படவில்லை. எனவே 1949ஆம் ஆண்டின் பின்னர் - அதாவது 1964இல் மொத்த இலங்கை வாழ் இந்தியரின் தொகையான 1003,269 பேரில் 28,269 பேரே இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருந்தனர். எனவே மிகுதியான 975,000 பேர் நாடற்றவர்கள் என்ற நிலையினை அடைந்தனர்.
நாடற்றவர்களாகிய 975,000 பேர் பற்றிய பிரச்சினைக்கு முடிவு காணவேண்டிய பொறுப்பு இலங்கை அரசியலில் முக்கிய விடயமா யிற்று. ஆனல் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்திய மக்கள் இன்னும் பல நாடுகளில் குடியேறியிருந்தனர். ஆகவே இலங்கையில் வாழ்கின்ற இந்தியர்களை இந்தியா பொறுப்பேற்குமாயின் இச்செயல் ஏனய நாடுகளில் வாழும் இந்தியர்களையும் பாதிக்கக்கூடும். இதனற் முன் இப்பிரச்சினைக்கு உடனடியாக முடிவுகாண முடியாத நிலையில் இந்திய அரசு ஒருவேளை பின்வாங்கியிருக்கலாமென அறியக் கூடிய தாகவுள்ளது. இதன் காரணமாக ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டாலும் இந்தியா 1960ஆம் ஆண்டின் பின்னர் ஒரளவு உறுதியுடன் முடிவுகாண உடன்பட்டது.
14

1964ஆம் ஆண்டிலே பரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தீர்வு காண முற்பட்டபோதும் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குரிய தொழிலாளர்களின் கருத்துக்களையோ, அவர்களின் பிரதிநிதிகளையோ கலந்தாலோசியாது ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரு நாட்டினரும் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கே மதிப்பளித்தனரேயன் றி பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவில்லை. 1964ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி ஆரம்பித்த பேச்சுவார்த்தை 30ஆம் தி நதிவரை தொட ர்ந்து, முடிவுற்றது. இதன்படி 975,000 நாடற்றவர்களில் 525,000 பேருக்கு இந்தியப் பிரசாவுரிமையும் 300,000 பேருக்கு இலங்கைப் பிரசாவுரிமையும் வழங்கப்படுமெனவும் மிகுதி 150,000 பேருக்கான உடன்பாடு பின்னர் ஏற்படுத்தப்படுமெனவும், முடிவு செய்யப் பட்டது. இம்முடிவை நடைமுறைப்படுத்த 15 வருட காலங்கள் செல்லுமெனவும் கூறப்பட்டது. எனவே நாடற்றவர்கள் என்ற நிலை மாறி சகல உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பிரச் சினைகளை அனுபவித்து வருகின்றனர். இந்தியப் பிரசையாகவோ, இலங் கைப் பிரசையாகவோ ஆவதற்குப் பல வருடங்கள் பொறுத்திருக்க வேண்டிய நிலையில், வேலைவாய்ப்புகள், கல்வி வசதிகள் போன்ற சாதாரண மனிதவுரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாமல் 825 000 பேரும் தம் காலத்தைப் போக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது,
1974ஆம் ஆண்டிலே இடம்பெற்ற ரீமாவோ - இந்திரா காந்தி உடன்பாட்டின்படி மிகுதி 150,000 பேர் பற்றித் தீர்மானிக்கப்பட் டது. 75,000 பேருக்கும் இயற்கை அதிகரிப்புடன் சேர்த்து இந்தியப் பிரசாவுரிமையும், மிகுதி 75,000 பேருக்கும் இயற்கை அதிகரிப்புடன் சேர்த்து இலங்கைப் பிரசாவுரிமையும், வழங்கப்படுமெனவும், எனினும் முன்னைய ஒப்பந்தம் முடிவடைந்த பின்னரே இவ்வொப்பத்தம் நடை முறைக்கு வருமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
முன்னைய 1964ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி 15 வருட முடிவில் 345,000 பேருக்கு இந்திப பிரசாவுரிமையும் 160,000 பேருக்கு இலங் கைப் பிரசாவுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மலையகத் தொழிலாளர் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். பல உரிமைகளை இழந்தனர். இக்காலத்தின் பின்னரே இலங்கையரல்லாதோர் நிலம் வைத்திருத்தலைத் தடுக்கும் சட்டங்கள் உருவாகின. வேலைவாய்ப்பு இலங்கையரல்லாதோருக்குக் கட்டுப்படுத் தப்பட்டது. அத்துடன் உயர்கல்வியைத் தொடர்வதிலும் சிக்கலேற் பட்டன. 1945 ஆம் ஆன்டிலே கன்னங்கராவினல் அளிக்கப்பட்ட
15

Page 17
அட்டவணை 1 : 4
மொத்தக்
மாகாணம் நகரம் குடித் தொகை
மத்திய மாகாணம் கண்டி 299,818 மாத்தளை 43,421
நுவரெலியா 256,090
ஊவா மாகாணம் பதுளை 209.747
மொனருகலை 11,095
சப்பிரகமுவா கேகாலை 78,867 Didst 3 இரத்தினபுரி 125,834
ܐܶܚܶ»، ܝ ܙܙܥ̇ܝ ܫ
தென் மாகாணம் காலி 24,927 மாத்தன்ற 23,535
மேல் மாகாணம் Lகொழும்பு 126,911
களுத்துறை 48,607
வடமேல் மாகாணம் குருநாகல்
இந்தியர்
253,707
36,501
221,581
187,727
9,536
58,518
106,334
14,203
17,896
4,78
34,116
6,500 14
17,954
இலவசக் கல்வி, இன்று உயர்கல்வி வரை நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் தோட்டத் தொழிலாளர், கல்விக்கட்டணம், பரீட்சைக்கட் -ணம் செலுத்தியே உயர்கல்வி பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள் ாது. மனிதாபிமானமற்ற முறையிலேயே 1964ஆம், 1974ஆம் ஆண்டு உடன்படிக்கைகள் செயற்பட்டன எனலாம்.
16

இதனைத் தொடர்ந்து 1971ம் ஆண்டுக் குடிமதிப்பின்படி இலங் கையின் மொத்தக் குடித்தொகையான 12,689,900 பேரில் 1,174,000 பேர் தோட்டக்குடிகளாவர். அதில், w
இந்தியத் தமிழர் 951,785.
இந்திய முஸ்லிம் 6,610 இலங்கைத் தமிழர் 7,191
இலங்கை முஸ்லிம் 6,402
சிங்களவர் 122,566
இந்திய வம்சாவழியினர் பெரும்பாலும் மத்திய, சப்பிரகமுவா, ஊவா மாகாணங்களிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றனர். இதனை அட் டவணை 1 : 4 இல் காணலாம்.
1971ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்பின்படி 1911 - 1971 வரையில் மொத்தச் சனத்தொகையை பும், அதில் இந்தியத் தோட்டத் தொழிலாளரின் விகிதத்தையும் அட்டவணை 1 : 5 இல் காணலாம்.
இவர்களுள் பள்ளிக்கூடம் செல்லும் வயதடைந்தோர் தொகை - அதாவது 5 வயது பூர்த்தியானேர் தொகை 220,000 பேராக 1971 இலே கணிக்கப்பட்டுள்ளது. இத்தொகை தொடர்ந்து வரும் ஆண்டு கலரிலே அதிகரிக்கலாம். இதனல், இலங்கைப் பிரசாவுரிமை பெற்ருே? ரும், இந்திய பிரசாவுரிமை பெற்ருேரும், அரசின் நடவடிக்கை கார ணமாக கல்வி பெற முடியாது இரண்டு தோணிகளில் கால் வைத்த நிலையிலேயே காலத்தை வீணே விரயமாக்குகின்ற ஓர் நிலையினை நாம்
காணலாம்.
நவீன உலகிலே, இன்று சமூகங்களிடையே வேறுபாடுகள் பல காணப்படுகின்றன. இதன் பயனக எந்த ஒரு நாட்டினதும், மனித உரிமைப் பிரச்சினை, உள்நாட்டுப் பிரச்சினை என உதாசீனப்படுத்தப் படுவது அறிவீனமே. எனவே ஐக்கிய நாடுகள் சபை உலக சமாதா னத்தை உறுதிப்படுத்த 1948 ஆம் ஆண்டிலே மனித உரிமைப் பிர கடனத்தை ஏற்படுத்தியது. அடிப்படை மனிதவுரிமைகள் மதிக்கப்
17

Page 18
alongs 1 : 5
மொத்தச் சனத்தொகையில் இந்தியரின் விகிதம்
ஆண்டு .. |இ?"|விகிதம்
1911 4,106,400 531,000 12.9
1921 4,488,600 602,700 134
1931 5,306,400 818,500 154
1946 6,657,300 780,600 11.7
1953 8,097.900 974,100 120
1963 10,582,000 1,123,000 116
1971 12,689,900 1,174,000 9e3
(1971 சனத்தொகை மதிப்பு, புள்ளி விபரத் திணைக்களம்)
படும் ஒரு நாட்டிலே உள்நாட்டுப் பூசலோ, வெளிநாட்டுப் போரோ ஏற்படாது என்பது இப்பிரகடனத்தின் எதிர்பார்ப்பாகும். மனித மாண்புகளை சிறப்புறச் செய்யும் சாதனம் கல்வியே. கல்வியே அடிப் படை மனிதவுரிமைகளைப் பெறவும், மதி சகவும், பேணவும், வழங்க வும் வேண்டிய திறனைத் தரவல்லது. கல்வி பெறும் வாய்ப்பும், வச தியும் ஏற்படுத்துவதே மனிதகுல முன்னேற்ற முதலீடாகும் என உலக நாடுகள் இன்று ஏற்றுக் கொண்டுள்ளன. உலக கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு நிறுவனத்தின் செயற்பாட்டை விரைவுபடுத்தி வரும் நோக்கம், கல்வியைக் கருவியாகக் கொண்டு, மனித வாழ்வைப் பாகு பாடற்ற சமத்துவ அடிப்படையில் விருத்தி செய்து “யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பண்பு நிலைக்கு உயர்த்துவதாகும். அடிப் படை மனிதவுரிமைக்குள் கல்வி பற்றிய பகுதி 26ஆவது பிரிவாகும். அங்கத்துவ நாடுகள் தத்தம் நாடுகளில் இதற்கமைய கல்வியை நடை முறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. எனினும் இலங்கையைப்
18

பொறுத்தவரையில் தோட்டத் தொழிலாள வர்க்கம், அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்ருன கல்வியைப் பெற வசதியளிக்கப்பட்டுள் வாதா என்பது கேள்விக்குரியதொரு விடயமே.
ஐ நா. சபையில் 1948ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் பட்டயத்தில் 26ஆம் பிரிவில், பின்வருமாறு குறிப் பி ப்பட்டுள்ளது.
அ. ஒவ்வொருவருக்கும் கல்வி பெற உரிமையுண்டு. ஆரம்ப அல்லது அடிப்படை நிலையிலாவது கல்வி இலவசமா யிருக்க வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயக் கல்வியா யிருத்தல் வேண்டும். தொழில்நுட்பக் கல்வி சிறப்பாகக் கிடைக்கக்கூடியதாகவும், உயர்கல்வியும் திறமை அடிப்ப டையில் கிடைக்கக்கூடியதாகவும் அமைய வேண்டும்.
ஆ. அடிப்படைச் சுதந்திரமும், மனிதவுரிமையும் மதிக்கப்படு வதை வலியுறுத்தக் கூடிய கல்வி, மனித ஆளுமையினை முழுமையாக விருத்தி செய்யத்தக்க வகையில் நெறிப் படுத்தப்பட வேண்டும். கல்வி பரஸ்பர விளக்கத்தையும் நட்பையும், சகிப்புத் தன்மையையும் எல்லா நாடுக ளிடையேயும், இன, சமயக் குழுக்களிடையேயும் உரு வாக்கி ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் பேணும் பணிகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.
இ. பெற்றேர் தமது பிள்ளைகளுக்கு வழங்கப்படவேண்டிய கல்வியைத் தெரிவுசெய்யும் முன்னுரிமை 260யவர்கள்.
மனிதவுரிமைப் பிரகடனத்தின் 26 ஆவது பிரிவில் கூறப்பட் டுள்ள கல்வி தொடர்பான உரிமைகள் இத் தோட்டச் சிருர்களுக்குக் கிடைக்கின்றதா ? கட்டாயக் கல்வி பிரகடனப்படுத்தப்பட்டு, நடை முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றது. 1945 ஆம் ஆண்டின் பின்னர் இலவசக் கல்வி வழங்கப்பட்டு, இன்று உயர் கல்வியை இலவசமாகப் பெறும் வசதி இலங்கை பில் அரிக்கப்பட்டுள்ளது. 1957ஆம் ஆண்டின் பின்னர் தாய் மொழிக் கல்வியும் பெற வசதியளிக்கப்பட்டது. ஆனல் தோட்டப்பகுதிகளில், இவை எவ்வளவுதூரம் நடைமுறைப்படுத்தப் படுகிறது? - 5 வகுப்புகள் வரையுமே கல்வி பெற வசதியுண்டு. அது பும் கட்டாயமல்ல என்றே குறிப்பிடக்கூடியளவுக்கு, பெற்றேரின்
9

Page 19
குழல் காணப்படுகின்றது. உணவு, உடை போன்றவற்றையே பூர்த்தி செய்யமுடியாத நிலை பில் தோட்டக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக் குச் செல்வதை விட தேயி%லத் தோட்டங்களில் வே%ல செய்வதோ. அல்லது வீடுகளிலோ, க.ை களிலோ வே%ல பாட்களாகச் சேருவதோ, உணவுத் தேவையையாவது பூர்த்தி பாக்குமே, GT307š கரு தும் பெற்றேர்கள் கல்வி பற்றி அக்கறை செலுத்த வில்லை
இலவசக் கல்வி என்றபோது அது இலங்கைப் பிரசைகளுக்கு மட் டுமே. இந்திய வம்சாவழியினர் உயர்கல்வி பெறக் கட்டணம் செலு த்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, பண்பாட்டுக் கழகம், எத்த னையோ வகைகளில் உதவியபோதும் கூட, அவ்வுதவிகள் தோட்டச் சிருருக்குக் கிடைப்பது அரிது.
இவ்வாறு வரலாற்று ரீதியில் தனியினமாக, பிரித்துக் காணுகின்ற இந்நிலையில் இவர்களின் கல்வி வரலாறு, தனிவழியிலே, பயனற்றதா கச் செல்வதைக் காணலாம். இதனைப் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாக ஆராய்வோம்.
1800ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டு "கல்வித் தீண்டாமை"யினுல் பாதிக்கப்பட்டுள்ள இவர்களின் கல்வி வர லாறு, மனிதவுரிமைகள் சாசனத்திற்கும் அப்பாற்பட்டதொன்றகவே விளங்குகின்றது எனலாம். O
2n

۶ 2
- தோட்டக் கல்வியில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு
19ஆம் நூற்ருண்டிலே தேயிலைத் தோட்டங்கள் திறக்கப்பட்டதும் ஏராளமான இந்தியப் பிரசைகள் பெருந்தோட்டப் பகுதிகளிலே குடியேறி நிரந்தரமானதொரு குடியிருப்பை உருவாக்கிக் கொண்ட னர். இந்தியத் தொடர்பை முற்ாகக் கைவிட்டு, இலங்கையிலேயே, நாடற்றவர் என்ற முத்திரையோடு, தமக்கென ஒரு தனியமைப்பை உருவாக்கிக் கொண்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் இந் நாட்டிலே பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். இருப்பிட வசதி, மருத்துவ வசதி, போன்றவற்றில் கைவிடப்பட்ட இவர்கள், தமது குழந்தைகளுக்குக் கல்வி வசதியைப் பெறுவது குதிரைக் கொம்பா பிiறு. ஆனல் இக்கல்விப் பிரச்சினை இன்றுவரை முடிவுகாண முடி யாக பிரச்சினையாகத் தொடர்ந்து வருகின்றது. பல குழுக்கள் அமைக்

Page 20
கட்பட்டன பிரித்தானிய தோட்டத்துரைமார்கள் இந்தியக் குடியேற் றத்தை, ஆரம்ப காலங்களில் பல்வேறு வழிகளிலே, தூண்டி வந்தார் கள். இலவச நிலம், இலவச வீடு, வைத்திய வசதி போன்ற நன்மை களைச் செய்வதாகவும் கூறி நிரந்தரமாக இந்தியர்களை குடியேறச் செய்தனர். ஆனல் இவை பேச்சளவில் ஏமாற்றுமொழியாக அமைந் ததே தவிர பலனளிக்கவில்லை. இந்நிலையில் இவர்கள் கல்வி வசதி பெறுவது தடைப்பட்டு வந்தது. பல குழுக்கள் நியமிக்கப்பட்டன அறிக்கைகள் வெளியிடப்பட்டன; வெள்ளை பறிக்கைகள் உருவாக்கப் பட்டன; பாராளுமன்றத்திலே விவாதங்கள் நடைபெற்றன; ஆனல் பலன் பூஜ்யமே.
1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இப்பிரச்சினைகள் ஒரளவு கட்டுப்படுத்தப்பட்டன. குடியேற்றங்கள் உருவாகிய காலம் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த காலம். இலங்கையைப்போல பல நாடுகளின் பொறுப்பை ஏற்கவேண்டிய நிலையில், கல்வியில் கூடிய கவனஞ் செலுத்த முடியவில்லை. ஆனலும் பள்ளிக்கூடங்கள் நிறுவத் தோட்டத்துரைமாருக்கு நிதியுதவி செய்வதில் பின் னிற்கவில்லை. தமது தேவைக்காகத் தொழிலாளரைக் கொணர்ந்த தோட்டத்துரை மார். ஆரம்பக் கல்விப் பொறுப்பைத் தாமேற்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. அரசு, இடைநிலைக் கல்வியில் கூடிய கவனஞ் செலுத் தியது. எனினும் இந்நூற்றண்டுப் பிற்பகுதியில் அரசு சில பள்ளிக் கூடங்களைத் தோட்டப் பிள்ளைகளுக்காக உருவாக்கியது.
1866 ஆம் - 1867 ஆம் ஆண்டு வரையில் தோட்டப்பிள்ளைகளின் கல்வி பற்றி அரசாங்கமோ, தோட்ட நிர்வாகமோ எவ்வித நடவடிக் கைகளும் மேற் கொள்ளவில்லை என்பது, 1867ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் திகதி தொடக்கம் இலங்கையின் தேசாதிபதியாகிய எச். ஜி. ஆர். ருெபின்ஸனின் கூற்று மூலம், உணரக் கூடியதாகவுள்ளது. ருெ பின்ஸன் குடியேற்ற நாட்டுச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கையில், இலங் கையில் தோட்டச் சிருருக்காக சில பள்ளிக்கூடங்களே அமைக்கப் பட்டிருந்தன எனவும், தோட்டத் தொழிலாளர் மதச் சார்பற்ற நிறுவனங்களிடம் கல்வி பெறவில்லை எனவும், சில மாகாணங்களில் மதகுருமாரும் (பாதிரிமார்) தோட்டப் பகுதிகளுக்குச் சென்று (வின - விடை மூலம் கல்வியளிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளதாகவும், அவர் களின் போதனை சிறந்த முடிவைப் பெற்று வந்துள்ளது எனவும் குறிப் பிட்டுள்ளார். 1 இதன் மூலம் அரசோ தோட்ட நிர்வாகமோ தோட்டச் சிருருடைய கல்வியில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ள
22

வில்லை என்பதைத் தெளிவாகக் காணலாம். எனவே ஆரம்பகாலங் ஆளில் மதநிறுவனங்களே தோட்டச் சிருரின் கல்விக்கு உதவின. 1869ஆம் ஆண்டிலே பொதுப் போதனைத் திணைக்களத் தலைவரான ஜே. எஸ். லோஹி வெளியிடட கல்வி பற்றிய அறிக்கையிலே, தோட் டச் சொந்தக்காரரே தம் தொழிலாளரின் பிள்ளைகளின் கல்விக்குப் பொறுப்பெனக் கூறப்பட்டது. ஆனல் இவை ஏட்டளவில் இடம்பெற் ரதே தவிர நடைமுறையில் கடைப்பிடிக்கப் படவில்லை. எனவே தோட்டங்கள் உருவாக்கப்பட்ட காலங்களில் தனியாரும் மதநிறுவ ணங்களும் கல்விக்கூடங்களை நிறுவ முன்வந்தனர். நான்கு வகையான பள்ளிக்கூடங்கள் இப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தன.
(i) தோட்டத் தொழிலாளர்களால் நிறுவப்பட்ட "லைன்" பள்ளிக்கூடங்கள் ; இவை கங்காணிமா ரால் அமைக்கப்பட்டன. தோட்டக் கல்வியின் முன்னேடி இதுவே.
(ii) கிறிஸ்தவ சமயக் குழுக்களால் நிறுவப்பட்ட
பள்ளிக்கூடங்கள்,
(ii) தனியார் நிறுவனங்களால் நிறுவப்பட்ட வை,
(iv) இந்து-பெளத்த மதத்தினரால் நிறுவப்பட்டவை.
இவையே 19ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில் தோட்டக்கல்விக்கு உயிரளித்தன எனலாம்.
அ. "லைன்’ பள்ளிக்கூடங்கள்
தே7ட்டத் தொழிலாளர்களால் அமைக்கப்பட்ட “லைன்" பள்ளிக் கூடங்கள் இருவகைப்பட்டன. ஒன்று, தொழிலாளர்களின் பிள்ளைகளு க்கான பள்ளிக்கூடங்கள். இங்கு இரவு நேரங்களில் கல்வி கற்பிக்கப் பட்டது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்பன வாய்மொழி மூலம் கற்பிக்கப்பட்டதுடன் ஒழுக்கம் பற்றிய கதைகளும் போதிக்கப்பட்டன. இவை பண்டைய திண்ணைப் பள்ளிக்கூடங்களை ஒத்தன. 2 இரண்டாவது வகை, தோட்டக் கங்காணிமார், கணக்கபபிள்ளை போன்ற பணிபுரிந் தோருடைய பிளளைகளுக்கான பள்ளிக்கூடங்கள். இங்கு எண், வாசிட்பு, எழுத்து என்பனவற்றுடன் சிறிதளவு ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. இங்கு கல்வி பெற்ருேர் தொடர்ந்து நகரப் பள்ளிக்கூடங்களில் கல்
23.

Page 21
வியைத் தொடர வசதி அளிக்கப்பட்டது. இவ்விரண்டயும் தவிர விசேட நாட்களில் மட்டும் அண்ணு விமாரால்3 நடாத்தப்பட்ட கூட்டு தாடகங்கள், மற்றும் பெண்பிள்ளைகளுக்குரிய கும்மி, கோலாட் டம் என்பனவும் கல்வி என்ற பெயரில் இடம் பெற்றன. இவை தனிப் பட்ட தோட்டத்தைச் சார்ந்தோரால் நடாத்தப்பட்ட கல்வியமைப் பாகும். 1904ஆம் ஆண்டிலே 898 தோட்டங்கள் இருந்தன எனவும், அங்கு 179 பள்ளிக்கூடங்களிலே 120 பள்ளிக்கூடங்கள் மேற்கூறிய ‘லேன்’ பள்ளிக்கூடங்கள் எனவும், ஏனைய 59 பள்ளிக்கூடங்கள் அரச உதவியுடன் நடந்தன எனவும் அறியலாம். 4 எனினும் இத்தகைய கல்வியமைபபில் கலைத் திட்டத்துக்குரிய பாடங்களை விட சமுதாய ஒற் றுமை, ஒழுக்கம் என்பனவே கற்பிக்கப்பட்டன. அத்துடன் மேல்மட்டத் தொழிலாளர்கள் கல்வி பெற வாய்ப்பிருந்ததே தவிர "கூலிகளாக" இங்கு வந்த தோட்டத் தொழிலாளருக்கு, கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் தடை செய்யப்பட்டிருந்தன. எனினும் இப்பள்ளிக்கூடங் கள் 20ஆம் நூற்றண்டிலும் தொடர்ந்து கல்வியளித்து வந்தன.
ஆ. சமய நிறுவனங்களின் கல்வியமைப்பு
கிறிஸ்தவ சமய நிறுவனங்கள் மத மாற்றத்தை அடிப்படையா கக் கொண்டே கீழைத்தேசங்களை நாடின; அதற்குக் கல்வியைக் கருவி யாகக் கொண்டன. எனவே கல்வியால் தீண்டப்படாது ஒதுக்கி வைக்கப் பட்ட தோட்டங்களிலே பள்ளிக்கூடங்களை அமைக்கச் சமய நிறுவனங்கள் முன்வந்தன.
இவற்றுள் பெப்டிஸ்த சமய நிறுவனமே முதலிடம் பெற்றது. இதன் தலைவரான மதகுரு சீ டோசன் மும்முரமாக ஈடுபட்டார் 5 1842இல் ஒரு புள்ளிக்கூடம் தோட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டு அங்கு கிறிஸ்தவ நூல்கள் வாசிப்பு, சமயப் பிரசுரங்கள், புத்திமதிகள், ஆராதனைகள் என்பனவே இடம் பெற்றன. ஆனுல் 1844ஆம் ஆணை டளவில் இப்பள்ளிக்கூடம் தொடர்ந்து நடைபெற Gf q ui jrTg5 சூழ் நிலை யேற் பட்ட து. 1846ஆம் ஆண்டிலே இன்னுமோர், பள்ளிக்கூடம் பெப்டிஸ்த சமய நிறுவனத்தால் அமைக்கப்பட்ட போதும் நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை. இதேவேளை இந் நிறுவன உறுப்பினர்களும் தோட்டச் சொந்தக்காரர்களுமான, குண்ட சாலையில் இருந்த ஜோர்ஜ் பேர்ட் (George Bird) என்பவரும், "லிண்டுல தோட் ட த்தைச் சேர்ந்த ஃவேர்கியூசன் (Ferguson) என்பவரும் தமது தோட்ட
24

மக்களின் கல்வியில் ஆர்வம் காட்டித் தமது செலவிலேயே பள்ளிக் கூடங்களே அமைத்தனர். 6 எனினும்கூட இச்சமய நிறுவனத்தினர் அமைத்த பள்ளிக்கூடங்கள் தோல்வியடைந்தன. காரணம், சமய போதன பற்றிய அரசின் கொள்கைக்கு இணங்காமல் நன்கொடை பெற முடியாத நிலையில் ஏற்பட்ட நிதித்தட்டுப்பாடு, இப்பள்ளிக் கூடங்கள் தொடர்ந்து நடைபெறத் தடையாயின. எனினும் 1850ஆம் ஆண்டளவில் மாத்தளையில் நிறுவப்பட்ட பெப்டிஸ்த மிசன் பெண் கள் பாடசாலை, இரத்தினபுரியில் நிறுவப்பட்ட ஃவேர்கியூசன் உயர் பாடசாலை (Ferguson High Sch00} இரண்டும் தோட்டப்பகுதியில் இன்றும் நொடர்ந்தும் சேவையாற்றுகின்றன.
1 அங்கிலிக்கன் சமய நிறுவனம்
தோட்டத் தொழிலாளரின் கல்வியில் முன்னின்றுழைத்த ‘தமிழ் கூலி மிசன்" - இன்று *தமிழ் திருச்சபை மிசன்? (Tamil Church Mission) என அழைக்கப்படுகிறது - 1854 இல் அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் 100 வருடங்களில் ஏறத்தாழ 400 தோட்டப் பள்ளிக் கூடங்களை அமைத்துள்ளது. 7 இருவித பள்ளிக்கூடங்கள் அமைக்கப் பட்டன.
அ. சாதாரண தொழிலாளரின் குழந்தைகளுக்கான 'எஸ்டேட் பள்ளிக்கூடங்கள்" என அழைக்கப்படும் பள்ளிக்கூடங்கள். இங்கு அடிப் படைக் கல்வி வழங்கப்பட்டது.
ஆ. உயர்மட்ட உத்தியோகத்தரின் குழந்தைகளுக்காக நகரங் களில் அமைக்கப்பட்டவை. இங்கு எண், எழுத்து, வாசிப்பு என்பவற் றுடன் முழுமையான கலைத்திட்டமும் கற்பிக்கப்பட்டது.
இவ்விரு பள்ளிக்கூடங்களிலும் சமய போதனை முக்கிய இடம் பெற்றதுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் சமய ஆராதனை நடைபெறுமிட மாகவும் விளங்கின.
1872ஆம் ஆண்டிலே பதுளையில் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது. அதேயாண்டில் இப்பள்ளிக்கூடத்தில் 15 இஸ்லாமிய மாணவர்களும், 9 ருேமன் கத்தோலிக்க மாணவர்களும், 17 புரட்டஸ்தாந்தியரும், 9 கேதீன்ஸ் (Heathens) பிரிவினரும் கற்றனர். 8 வாசிப்பு, எண், எழுத்து என்பவற்றுடன் புவியியல், வரலாறு, இலக்கணம் என்பனவும் கற்பிக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து 1867ஆம் ஆண்டிலே பொரளையில்
25

Page 22
(B0rela) பெண்களுக்கான விடுதிப் பள்ளிக்கூடமும், 1875 ஆம் ஆண டிலே ஆண்களுக்கான விடுதிப் பள்ளிக்கூடமும் இச்சமய நிறுவனத் தினரால் அமைக்கப்பட்டன. இவை மலைநாட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர் பிள்ளைகளுக்குக் கல்வியூட்டின. இவ்வாண் 5ள் பள்ளிக்கூடம் பல ஆண்டுகளாகத் தோட்டங்களுக்குத் தேவைப்பட்ட எழுதுவினைஞர். தோட்ட நடத்துநர் (Conductors), 'டீ மேக்கர்’ (Tea - Makers) என்போரை உருவாக்கி உதவின.
பொரளையில் நிறுவப்பட்ட ஆண்கள் பள்ளிக்கூடம், 1923ஆம், ஆண்டிலே கோட்டை கிறிஸ்தவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டு. 1961ஆம் ஆண்டிலே அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. இன்று பூரீ ஜெயவர்த்தனபுர மகாவித்தியாலயம் என வழங்கப்படுகிறது. இதே வருடம் பொரளை பெண்கள் பள்ளிக்கூடமும் கண்டிக்கு இடமாற்றம் பெற்று, மோபிரே கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. இப்பள்ளிக்கூடம் தோட்டங்களின் உயர்மட்ட உத்தியோகத்தர்களுடைய பெண் பிள்ளை களுக்குக் கல்வியளிக்கும், கட்டணம் அறவிடும். தனியார் பள்ளிக்கக் மாக இன்று விளங்குகின்றது. பதுளை ஆண்கள் பள்ளிக்கூடம் ஊவாக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது.
இவற்றையும் விட தோட்டங்களில் தேவாலயங்களுடன் கூடிய சிறு பள்ளிக்கூடங்கள், அரச உதவியுடன் நிறுவப்பட்டன. பொகவந்தல வ சென். மேரிஸ் பள்ளிக்கூடம் இதற்குச் சிறந்த உதாரணமாகும். அங்கி லிக்கன் சமய நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்த் திருச்சபை மிசன் ( T. C. M ) இடைநிலைக் கல்லூரிகளையும் தோட்டப் பகுதிகளில் அமைத்தது. உதாரணமாக பதுளை ஊவாக் கல்லூரி, நாவலப்பிட்டி சென். அன்ரூஸ், வத்துகாமம் புனித திரித்துவக் கல்லூரி என்பவற் றைக் குறிப்பிடலாம். இங்கும்கூட, அன்ருட ஊதியம் பெறும் கூலி யாட்களை விட உயர்மட்டத் தொழிலாளரின் கல்வி பற்றியே, கூடிய கவனம் செலுத்தியுள்ளதைக் காணலாம்.
2. மெதடிஸ்த சமய நிறுவனம்
முதன் முதல் இலங்கைக்கு வந்த மெதடிஸ்த நிறுவனத்தினர் 1814 ஆம் ஆண்டிலே புறக்கோட்டையில் வந்திறங்கினர். ஆயினும் 1836ஆம் ஆண்டிலே கண்டியில் இவர்களது கொள்கைகள் புகுத்தப்பட்டன. 1855ஆம் ஆண்டளவில், பண்டாரவளை, பதுளை, ஆகிய இடங்களில்
26

பள்ளிக்கூடங்களை நிறுவத் தொடங்கினர். இவை தோட்ட மக்களுக்கு பெரிதும் உதவின. இந்நிறுவனத்தினல் "கொன்வென்ட்" என அழைக் கப்பட்ட பள்ளிக்கூடங்கள் பல நிறுவப்பட்டன. -
1899ஆம் ஆண்டிலே முதன் முதல் ஹட்டன் Harton) நகரில் ாரு சிறிய தேவாலயம் கட்டப்பட்டதாக, இம்மதக்குழுவின் 1964ஆம் ஆண்டறிக்கையில் இருந்து அறிய முடிகின்றது. இவ்வாலயம் வார நாட்களில் கல்விக் கூடங்களாகவும் விளங்கியது. மால்பரோ (Martborouge), அலகொல்ல (Alakola) தோட்டங்களில் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டன. ஸ்ரத்டன் (Strthedon), கரோலினத் தோட்டங்களில் 1900 ஆம் ஆண்டளவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் ஆங்கில, சிங்கள பள்ளிக்கூடங்களும் அம்பேகமுவவில் திறக்கப்பட்டன. கம்பளை, நுவரெலியா, நாவலப்பிட்டி, கந்தப்பளை போன்ற இடங்களின் தோட்டங்களிலும் இச்செயல் தொடர்ந்தது. ஐக் கிய இராச்சியத்தில் இருந்து பணஉதவி பெற்று இவை தொடர்ந்து செயலாற்றின.
மெதடிஸ்த மத குழுவினர் 1927ஆம் ஆண்டளவில் வெளியிட்ட அறிக்கையின்படி 23 தோட்டப்பள்ளிக்கூடங்களை இக்குழுவினர் நிர் வகித்துள்ளனர். 1,022 மாணவர்கள் இங்கு கல்வி பெற்றனர். 9 இவை, பின்னர் 1930ஆம் ஆண்டளவிலே சுதேசமொழிச் சபையிடம் (Swabhasa Board)கையளிக்கப்பட்டன. பின்பு 1961ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டன.
3. ஏனைய புரட்டஸ்தாந்திய சமய நிறுவனங்கள்
தோட்டத் தொழிலாளர் கல்வியில் கவனம் செலுத்திய இக் குழுவினர், முதன் முதல் மாத்தளை குளோடா தோட்டத்தில் தமது அலுவலகத்தை அமைத்தனர். எனினும் சிங்கள மக்களிடையே கல்வி யிலும், சமய போதனையிலும் கூடிய கவனம் செலுத்தினர். இவர்க ளால் அமைக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் 1930ம் ஆண்டளவில் பெப் டிஸ்த சமயக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு 1961ம் ஆண்டு அரசி டம் கையளிக்கப்பட்டன.
இவற்றைவிட, ‘செவன்த் டே அட்வென்டிஸ்ற் மிசன்" (Seventh Day Adventist Mission) கண்டிக்கு அண்மையில் மைலாப்பிட்டிய என்ற இடத்தில் பள்ளிக்கூடம் அமைத்தது. விடுதியுடன் கூடிய, கட் டணம் அறவிடப்படும் இப்பள்ளிக்கூடம் செய்கைமுறைக் கல்வியில்
27

Page 23
கூடிய கவனம் செலுத்தியது. ஹட்டன், நுவரெலியாப் பகுதிகளில் லூர்தன் சமயக்குழுவினர் மாலைநேரப் பள்ளிக்கூடங்களை அமைத்த னர். "லவுக்கலை” தோட்டத்தில் நிறுவப்பட்ட இத்தகைய மாலை நேரப் பள்ளிக் கூடங்களில், 50 மாணவர் கல்வி கற்றனர் என அறி யக் கூடியதாகவுள்ளது.
ரோமன் கத்தோலிக்க சமய நிறுவனத்தினலும் தோட்டப்பகுதி களில் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டன. இவர்கள் தோட்டப் பகுதி களோடு நகரங்களிலும் பள்ளிக்கூடங்களே அமைத்தனர்.
சென். ஜோன் பொஸ்கோ ஹட்டன் சென். அந்தனிஸ் - - - தெகியோவிற்ற சென். உருசுலு கொன்வென்ட் - பதுளை கபிரியல் கொன்வென்ட் ~~ ஹட்டன் சென். தோமஸ் கல்லூரி um மாத்தளை
போன்ற பள்ளிக்கூடங்கள் ரோமன் - கத்தோலிக்கரால் அமைக்கப் பட்டன. இவற்றில் கட்டணம் அறவிடப்பட்டமையால் உயர்மட்ட உத்தியோகத்தருடைய பிள்ளைகளே கல்வி பெறமுடிந்தது.
இ. தனியார் நிறுவனங்கள்
திருச்சபை மிசன் போன்றவற்றல் அமைக்கப்பட்ட தோட்டத் தொழிலாளருக்குரிய சில பள்ளிக்கூடங்கள் பின்னர் தனியாரால் நிர்வகிக்கப்பட்டன. 1870ஆம் ஆண்டு ஒரு தனியார் பள்ளிக்கூடம் விடுதியுடன் கூடியதாக விளங்கியது. அரசாங்கத்தால் 1877, 11.03 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானியில்,கண்டியில் சென். ஸ்ரெப்பன் விடுதிப் பள்ளிக்கூடத்தில் தொழிலாளரின் பிள்ளைகளுக்கு ஏற்ற எல்லா வசதிகளுடனும், உணவு இருப்பிட வசதிகளுடனும் கல்வி பெற மாதம் 5 ரூபா எனப் பிரசுரிக்கப்பட்டிருந்தமை, நோக்கற்பாலது. 10 இவற்றைவிடத் தோட்ட மாணவர்களுக்கு உதவும் முகமாக கண்டி யில் அசோகா விடுதி, 1927ஆம் ஆண்டிலே அமைக்கப்பட்டது. இது வும் தனியார் முயற்சியே. இங்கு தோட்ட உயர்மட்ட உத்தியோகத் தருடைய பிள்ளைகள் தங்கி கல்வி பெற்றனர். இதன் நிர் வாகி, கண்டியில் அசோகா வித்தியாலயத்தை அமைத்தார். இங்கு 300 தோட்டப் பிள்ளைகள் கல்வி பெற்றனர். 11 கண்டி திரித்துவக் கல்லூரியில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பேராதனை கிறிஸ்தோபர்
28

பள்ளிக்கூடத்தை அமைத்தார். இதுவும தோட்ட மக்களின் கல்விகளு உதவிய ஒரு பெயர்பெற்ற பள்ளிக்கூடமாகும். இவை பெரும்பாலும் கட்டணம் அறவிடப்படுகின்ற பள்ளிக்கூடங்களாகவே விளங்கின. இந்கு சாதாரண நாட்கூலி பெறும் தேயிலைத் தோட்டத் தொழிலா
எாரின் பிள்ளைகள் கல்வி பெற முடியாமலிருந்தது. -
e. பெளத்த, இந்துப் பள்ளிக்கூடங்கள்
19ஆம் நூற்றண்டிலே கல்விப் பொறுப்பு மதகுழுக்களின் கைகளிலேயே இருந்தது. அரசின் ஆதரவு இம்மதகுழுக்களுக்கு நிரந்தரமாகக் கிடைத்து வந்தது. பல பள்ளிக்கூடங்கள் இச் சமய நிறுவனங்களால் அமைக்கப்பட்டன. பள்ளிக்கூடச் சபை பொதுப் போதனைத் திணைக்களங்களில் திருச்சபை நிறுவனங்கள் பிரதான இடம் வகித்தன. எனவே இவர்களின் கல்வித் தொண்டு, கிறிஸ்தவ மதத்தை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் அரசாங்கம் நன்கொடை முறையைப் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்தும் ஏராளமான பள் ளிக்கூடங்கள் எழலாயின. எனவே இலங்கை மக்களின் கல்விப் பொறுப்பு கிறிஸ்தவ திருச்சபைகளின் கைகளிலேயே ஒப்படைக்கப் பட்டது. கிறிஸ்தவ சமய போதனைகளை எதிர்த்தவர்கள் அநகாரிக தர்மபாலாவும், நல்லைநகர் ஆறுமுகநாவலர் அவர்களுமே. பெளத்த பிரம்மஞான சங்கம் அநகாரிக தர்மபாலாவால் உருவாக்கப்பட்டது. திருச்சபை முறையைப் பின்பற்றி பெளத்தத்தை மீண்டும் புகுத்த அவர் கல்வியைக் கருவியாக்கினர். இதனைத் தொடர்ந்து இந்துக்களும் இந்து மகா சபையை உருவாக்கினர். இதற்கு வழி வகுத்தவர் நல்லைநகர்தந்த நாவலர். இவர்கள் இருவருடைய செயல்கள், தோட்டப் பள்ளிக்கூடங்களையும் உருவாக்க உதவின. அக்காலத்தில் தமிழ், சிங்கள வேறுபாடின்றி அந்நியரை எதிர்க்கும் நோக்குடன் இணைந்து பள்ளிக்கூடங்களை உருவாக்கினர், தோட்டங்களில் இவர் கள் உருவாக்கிய பள்ளிக்கூடங்கள் சிறந்த கல்வி நிலையங்களாக விளங்கின.
ஹட்டன் பூரீபாதக் கல்லூரி, கம்பளை ஜனராஜா கல்லூரி, நாவ லப்பிட்டி அனுருத்தா கல்லூரி, கண்டி தர்மராஜா கல்லூரி, மாத்தளை விஜயாக் கல்லூரி இத்தகையன. ஆரம்பத்தில் இரு மொழிப் பாடசா லைகளாக இவை விளங்கின. இன்று, தமிழ்ப் பிரிவு இங்கிருந்து பிரிக் கப்பட்டு, தனிச் சிங்களப் பள்ளிக்கூடங்களாக இவை விளங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
29

Page 24
இந்து இளைஞர் சங்கத்தினர் சைவபரிபாலன சபையை உருவாக்கி னர். பெரும் செல்வந்தர்கள் இச்சபையில் அங்கத்துவம் வகித்தமையால் சிறந்த பளளிக்கூடங்களை உருவாக்கினர். அவற்றுள் சிலவாக நாவலப் பிட்டி கதிரேசன் கல்லூரி, பதுளை சரஸ்வதி வித்தியாலயம், மாத்தளை பாக்கிய வித்தியாலயம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் இந்து பரிபாலன சபை கதிரேசன் கல்லூரியை நிறுவியது. கே. இராஜலிங்கம் என்பவர் புசல்லாவை சரஸ்வதி வித்தியாலயத்தையும், கே. கந்தசாமி என்பவர் 1 1ாத்தளை பாக்கிய வித்தியாலயம், கந்தசாமி வித்தியாலயம் என்பவற்றையும் அமைத்தனர். பதுளை சரஸ்வதி வித்தியாலயம் சைவப ரிபாலன சபையால் அமைக்கப்பட்டது. இன்று இவை அரசின் பொறுப்பில் கடமையாற்றுகின்றன.
இவற்றைவிட தனியார் நிறுவனங்களும் பள்ளிக்கூடங்களை அமைத்தன. தனியார், சட்டணம் அறவிடும் பள்ளிக்கூடங்களை தோட் டப் பகுதிகளில் நிறுவினர். கண்டி அசோகா வித்தியாலயம், உடுநு வரை மகிந்தாக் கல்லூரி, பலக்கட்டுவ மூர்த்தி கல்வி நிலையம் என் பன இங்கு குறிப்பிடத்தக்கன. பலக்கட்டுவ என்ற இடம் நமுனுகுல என்ற இடத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.
தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இடைநிலைப்பள்ளிக் கூடங்கள், தோட்டங்களிலும், நகரங்களிலும் கூடிய வருமானம் பெறு வோருடைய பிள்ளைகளுக்கே கல்வியூட்டுவனவாயின. கண்டி திரித்து வக் கல்லூரி, சென். அந்தனிஸ், மோபிரே பெண்கள் உயர் பாட சாலை என்பன இவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தன என்றே கூற லாம். இடைத்தர வருமானம் பெறும் மத்தியதர வர்க்கத்தினரின் பிள்ளைகள் ஊவாக் கல்லூரி, பதுளை பெண்கள் கல்லூரியில் கல்வி பெற்றனர். ஆனல், தோட்டத்தில் கொழுந்து பறித்தோ, நாட்சம் பளம் பெற்றே வாழும் ஏழைக்கூலியின் பிள்ளைகள் "லைன்" பாடசாலை களில் கல்வி பெற்றனர்; அல்லது பல மைல்கள் நடந்து சென்று கற் றனர். தாய்மொழிக் கல்வி, இலவசக் கல்வி என்பவற்றைத் தொடர்ந்து கற்போர் தொகை அதிகரிக்கப் பிரச்சினைகளும் உருவாகின.
எனவே மேற்கூறிய விபர அடிப்படையில் நோக்கினல் தோட் டப்பகுதிகளில் போதுமான அளவு பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஆனல் அங்கே வசதியுள்ள பிள்ளைகளுக்கே இடமளிக்கப்பட்டது. எனவே சாதாரண வேலையாட்களின் - தோட்டத் தொழிலாளியின் - பிள்ளை களுக்கு இடமளிக்கப்படவில்லை, காரணம் என்னவெனில் கட்டணம் அறவிடும் இப்பள்ளிக்கூடங்களுக்குக் கட்டணம் செலுத்தும் ஆற்றல், அன்ருடம் உணவுக்கே திண்டாடும் மக்களுக்கில்லை. எனவே "லைன்" பள்ளிக்கூடங்களை விட்டு என்றும் விலக முடியாத நிலைமையை தோட் டச் சிருருக்கு இக்கல்வியமைப்பு ஏற்படுத்தியது எனலாம்.
30

6۔
தோட்டக் கல்வியில் slug, நிறுவனங்களின் தலையீடு
சுதந்திரத்தின் முன்னர்
இலங்கையிலே தமதாட்சியை நிறுவிய பிரித்தானிய இராச்சியம் இலங்கையின் வர்த்தகத்தில் சகலரும் ஈடுபடக்கூடியதான வாய்ப்புகளை அளித்தது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் பெருந்தோட்டங்கள் பல திறக்கப்பட்டன. அங்கு வேலை செய்யக் குறைந்த கூலிப்புடன் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதனல் இந்திய மக்களைப் பல வழிகளில் தூண்டி, அவர்களை உற்சா கப்படுத்தி இலங்கைக்கு அழைத்து வந்தனர். இலவச விளைநிலம், இல வசக்காணி, அதை விட வேறு பல ஆதாயங்கள் என்பவற்றைக் காட் டியே, அவர்களை இங்கு வந்து நிரந்தரமாகக் குடியேறச் செய்தனர். இதனைத் தொடர்ந்து பல பிரச்சினைகள் உருவாகின. அவற்றுள் கல்விப் பிரச்சினையும் ஒன்று. ஆரம்பகாலங்களிலே இந்தியாவிலிருந்து இங்கு

Page 25
வந்த தொழிலாளர்கள் தாம் மட்டுமே தொழில் காரணமாக இலங் கைக்கு வந்தனரேயன்றி, அவர்களுடைய குடும்பங்கள் இந்தியாவிலே யே இருந்து வந்தன. ஆணுல், தேயிலைத் தோட்டங்கள் திறக்கப்பட்ட தைத் தொடர்ந்து அத்தோட்டங்களிலேயே தொழிலாளர் நிரந்தர மாக குடியேறத் தொடங்கினர். இதன் காரணமாக தொழிலாளர் களின் தேவைகள் அதிகரித்ததுடன் அவற்றேடு தொடர்பான பிரச்சி னைகளும் உருவாகத் தொடங்கின. அவற்றுள், தமது குழந்தைகளுக் கான கல்வி வசதிகளைப் பெறமுடியா மையும் ஒன்ருகும். இந்தப் பிரச் சினை இன்றுவரை முடிவு காணமுடியாத நிலையில் காணப்படுகின்றது. அக்காலந் தொட்டு பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டும், கட்ட ளைச் சட்டங்கள் பல உருவாக்கப்பட்டும், வெள்ளையறிக்கைகள் வெளி யிடப்பட்டும் கூட இதற்கான திட்டவட்டமான சிறந்ததொரு கல்வி யமைப்பை உருவாகக முடியாமற் போயிற்று. சுதந்திரத்தின் பின்னரே, இந்திய வம்சாவழியினரின் குழந்தைகள் ஆரம்பக் கல்வியை மட்டு மாவது பெறக்கூடிய வகையில், சர்ச்சைக்குரிய இவ்விடயத்தில் ஒர ளவுக்குத் தீர்வு காணப்பட்டது எனலாம். இந்தியத் தொழிலாளர்களின் குடியேற்றம், ஆங்கிலேயராட்சியின்போதே ஏற்பட்டது. பிரித்தானி யக் குடியேற்ற நாடுகளில் - இலங்கை உட்பட -- சுதேச கல்வியமைப்பு பிரித்தானியக் குடியேற்ற நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பிலேயே, இருந்து வந்தது. ஆனல் இது எவ்வாறு இலங்கையர் அல்லாதோரின் - இந்தியத் தொழிலாளரின் - குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை? இது தனிப்பட்ட முதலாளிமாரின் பொறுப்பிலே விடப்பட்டமைக்குரிய கார ணம் என்ன? என்பன, கேள்விக்குரிய விடயமே. பிரித்தானிய தோட்டத் துரைமார் தமிழ்க் கூலிகளை இலங்கைக்கு அழைத்து வந்தமை தமது சொந்த விருப்பப்படியே. துரைமாரின் விருப்பப்படியே, இந்தியத்` தொழிலாளர்கள் தமது குடும்பங்களுடன் தோட்டங்களில் வந்து குடி யேறினர். இதனுல் இத்தொழிலாளருடைய கல்விக்குத் தோட்டத் துரை மாரே பொறுப்பு. அதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஆயத்தம் செய்வதும் துரைமாரின் பொறுப்பே. இரண்டாம்நிலைக் கல்வி, அரசின் பொறுப்பில் இருந்தபோதிலும் ஆரம்பக் கல்விக்குத் தோட் டத் துரை மாரே பொறுப்பாக இருக்கவேண்டுமெனப், பிரித்தானிய அரசு கருதியது. ஆனல் துரைமாருக்கு நன்கொடை உதவியளிக்க அரசு பொறுப்பாக இருந்தது. இதன் பின்னர் அரசு சில தோட்டப் பள்ளிக்கூடங்களை தோட்டப்பகுதிகளில் அமைத்தாலும் 1866-67ஆம் ஆண்டு வரையில் தோட்டத்துரைமாரோ அரசோ, தோட்டக்கல்வி யில் எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. 1867ஆம் ஆண்டின் இலங் கைத் தேசாதிபதியாகிய எச். ஜி. ஆர். ருெ பின்சனின் கூற்றுப்படி சில
32

பள்ளிக்கூடங்கள் தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்டபோதும், இங்கு மதுசார்பற்ற கற்பித்தல் முறை இடம்பெறவில்லை. சில மாகாணங்க வில் பாதிரிமார்கள் தோட்டக்கல்வியில் அக்கறை செலுத்தியதைக் காணலாம் எனவும், ஆனல் தங்கள் பயிற்சியில் பாதிரிமார் நல்ல பெறு பேற்றைப் பெற்றிருந்தனர் எனவும் அறியக்கூடியதாகவுள்ளது. 1
1903ஆம், 1904ஆம் ஆண்டுகளிலே தோட்டக் கல்வியிலே, அரசோ துரைமாரோ பெரும் அக்கறை காட்.வில்லை. தோட்டத் துரைமார் சில பாடசாலைகளை அமைத்தபோதும், அவை பற்ருக் குறையாகவே காணப்பட்டன. 1904ஆம் ஆண்டில், பொதுப் போத னைத் திணைக்களத்தின் அதிகாரியாகிய எஸ். எம். பரோஸ் (Burrows) என்பவர் குடியேற்ற நாட்டு அதிகாரிக்கு அனுப்பிய புள்ளி விபரப்படி, பின்வரும் விபரங்கள் கிடைக்கப் பெற்றன. 2
அட்டவணை 3 : 1.
1903 ஆம் ஆண்டிலே தோட்டங்கள், பள்ளிக்கூடங்களின் புள்ளிவிபரங்கள்
(1) மொத்தத் தோட்டங்கள் 1,857
(2) இந்தியத் தொழிலாளர் தொகை 406,821
(3) பாடசாலை செல்லும் வயதடைந்த (6 - 12) 25,000
மாணவர் தொகை (4) பதிவுசெய்யப்பட்ட பள்ளிக்கூடங்கள் 43
அவற்றுள்
1. அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் 02
2. தனியார் பள்ளிக்கூடங்கள் 05
3. மத நிறுவனங்களால் நிறுவப்பட்டவை 36
மாணவர் வரவு 1,765
ஆண்கள் 1,598
* ట్వైశ్లో
பெண்கள் 177

Page 26
தமது அறிக்கையில் 1,765 மாணவர்களுள் பெரும்பான்மையி னர் இரண்டாம் வகுப்பிற்குக் கூடச் செல்வதில்லை எனக் கூறியுள்ளார்.3 1904 ஆம் ஆண்டிலே தோட்டத் தொழிலாளருக்கான பள்ளிக் கூடங்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்தது.
அதில் 2 அரசு பள்ளிக்கூடங்கள், 58 உதவி பெறும் பள்ளிக் கூடங்கள், 299 உதவி பெரு த பள்ளிக்கூடங்கள் என 1904ஆம் ஆண் டிற்கான குடியேற்ற நாட்டு அறிக்கையின் மூலம் அறியக் கூடியதாக வுள்ளது என. சட்டோபாத்தியாய தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக் கூற்றுக்களின் மூலம் 1904ஆம் ஆண்டிலே, முன்பிருந்ததை விட தொழிலாளரின் பிள்ளைகளுக்கான கல்வி முன்னேற்றமடைந்து வந் துள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. எனினும், இதனைக் காரணமா கக் கொண்டு சிறந்த கல்வியளிக்கப்பட்டதெனக் கூறமுடியாது. அரச பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது தோட்டப் பள்ளிக்கூடங்கள் தரம் குறைந்தனவாகவே காணப்பட்டன,
ஆரம்ப காலங்களில் பெருந்தோட்டங்களின் சொந்தக்காரராக விளங்கிய ஏ.ஜி எச். வேஸ் (Wace) என்பார், தோட்டப் பிள்ளைகளின் கல்வி பற்றி கூடிய ஆர்வம் காட்டினர். 43 தோட்டங்களில் தமிழ்த் தோட்ட் மாணவருக்கு முறையான கல்வியளிக்கப்படவில்லை. அரச பள்ளிக்கூடங்களுக்கும், தோட்டப் பள்ளிக்கூடங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டன என அவர் குறிப்பிட்டார். அத்துடன் இப்பகுதிகளிலே பள்ளிக்கூடங்கள் பற்றுக்குறையாகக் காணப்பட்டன. வேஸ் 1903ஆம் ஆண்டிலே நடைபெற்ற கிழக்கிந்திய சங்கக் கூட் படத்திலே, இலங்கைக் கல்வியில் தோட்டப் பள்ளிக்கூடங்களுக்கான geco, Gsstifligos' (Education in Ceylon : A Plea For Estate School) 8 என்ற பொருளில் உரையாற்றிய போது, பல விடயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார். இவர் தனது உரையில் பல புதிய திருத்தங்களே, எடுத்துக் காட்டினர். தோட்டப்பகுதியில் வேலை செய்கின்ற சிறுவர் களுக்கு, மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை கல்வி போதிக் கப்பட வேண்டும் எனக் கூறினர். கலைத்திட்டம் பற்றிக் குறிப்பிட் டபோது, தாய்மொழியில் எழுத வாசிக்கத் தெரிந்திருப்பதுடன் கல் விக்காகச் செலவிடும் நேரத்தில் அரைப்பகுதி கணிதத்திற்காகச் செல விடப்பட வேண்டும் அத்துடன் ஆரம்பப் புவியியலும், தேசிய வர லாறும்; சிங்களப் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியில் பெறும் பாடங்களும் இடம் பெற வேண்டும் எனவும், எடுத்துக் காட்டினர். இவர் இலவ சக் கல்வி பற்றிக் கூறினுலும் அதனை உருவாக்கவில்லை. குறிப்பிட்ட
34

தொகைப் பணம், கல்விச் செலவாகப் பிள்ளைகளின் அல்லது பெற் ருே?ரின் சம்பளத்தில் மாதாமாதம் கழிக்கப்படலாம் எனவும் வேஸ் கருதினர்.6 ஆணுல் இவை நடைமுறைப் படுத்தப்பட்டமைக்கு ஆதார மில்லை. ஆங்கிலக் கொம்பனியோ, தோட்டத் துரைமாரோ இப்பிள்ளை களுக்குத் தேவையான அடிப்படை ஆதாரக் கல்வியைக்கூட, அளிக்க முன்வரவில்லை.
1903 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து, தோட்டப் பள்ளிக்கூடங்களுக்கு நன் கொடை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டதென, சட் டோபாத்தியாய தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். 7 நன்கொடை பெறும் தோட்டச் சொந்தக்காரர் பள்ளிக்கூடங்களுக்கு ஏற்ற கட்டிட தளபாட வசதிகள், ஆசிரியர் என்பவற்றிற்குப் பொறுப்பாக இருக்க வேண்டுமென்பதுடன், வரவு இடாப்பு என்பனவும் வைத்திருக்க வேண் டும். அத்துடன் ஜந்தாம் வகுப்புகள் வரை இடம் பெறும் இப்பள்ளிக் கூடங்களுடைய கலைத்திட்டமும், வரையறுக்கப்பட்டிருந்தது. இவற்றுக் குட்பட்ட பள்ளிக்கூடங்களுக்கே நன்கொடை வழங்கப்படும் எனவும் இச்சுற்றறிக்கை எடுத்துக் காட்டிற்று. இதனைத் தோட்டத்துரைமார் விரும்பவில்லை. 8 மூன்று மணி நேரம் கட்டாயம் கல்வியளிக்கப்பட வேண்டும் என்ற கூற்று, எதிர்ப்பி%ன ஏற்படுத்தியது. எனவே, நன் கொடை பெருது துரைமார் தாமாகவே பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வி அளித்து வந்தனர். எனினும் இவை கல்வியில் மாற்றத்தையோ அல்லது எழுச்சியையோ ஏற்படுத்தியது எனக், கூறமுடியாது.
இலங்கையின் புள்ளி விபர அதிகாரியாக நியமிக்கப்பட்ட சேர். பொன்னம்பலம் அருணுசலம் அவர்களின் தலைமையின் கீழ்க் கணக் கெடுக்கப்பட்ட 1901ஆம் ஆண்டு குடிசனமதிப்பு அறிக்கையிலே, கல்வி பற்றிய பல விபரங்கள், குறைபாடுகள் வெளிவந்தன. அருண சலம் அவர்கள் கிராம, ஆரம்பக் கல்வி அரசின் பொறுப்பிலேயே இருக்க வேண்டுமென வற்புறுத்தினர் இந்தியத் தோட்டத் தொழிலாளரின் கல்விக்காக மும்முரமாக வாதாடினர். எனவே, கல்வி பற்றியோ படிப் பறிவு பற்றியோ அல்லது ஏனைய புள்ளி விபரங்களிலோ அவர்களை வேறுபடுத்திக் காட்டாது, இலங்கையரென்ற தொகுப்பினுள்ளே எடுத் துக்காட்டினர்.
பொதுப் போதனைத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 1900 ஆம் ஆண்டிலே இலங்கையில் பள்ளிக்கூடம் செல்லுகின்ற வயதைய
35

Page 27
டைந்த 867,103 மாணவருள் கிட்டத்தட்ட 650,000 மாணவர், ஒருவித கல்வியையும் பெருதோராக இருந்தனர் 9 என்பதை, அருணு சலம் சுட்டிக் காட்டினர். இதற்குக் காரணம், போதுமான பள்ளிக் கூடங்கள் இல்லை என்பதையும் எடுத்துக் காட்டினர்.
1900 ஆம் ஆண்டளவில் பின்வரும் அட்டவணைப்படி பள்ளிக் கூடங்கள் காணப்பட்டன. 10
நன்கொடை தனியார் பெறும் பள்ளிகள் பள்ளிகள்
அரச பள்ளிகள்
பள்ளிக்கூடங்களின் தொகை 500 1,328 2,089
மாணவர் தொகை 48,642 120,751 38,881
எனவே நன்கொடையால் உந்தப்பட்ட தனியாரும், மதநிறு வனங்களுமே பள்ளிக்கூடங்களை அமைத்தன. அத்துடன், 1895ஆம் ஆண்டிலே பொதுப் போதனைத் திணைக்களத் தலைவரான கிறீன் (Green) என்பவரின் ஆலோசனையின்படி, பல ஆங்கிலப் பள்ளிக்கூடங் கள் மூடப்பட்டன. ஆங்கிலக் கல்வியை வழங்குவதில் 11 அரச பள் ளிக்கூடங்களை விடத் தனியார் நிறுவனங்களாலும், மதஸ்தாபனங்க ளாலும் அமைக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் திறமை மிக்கனவாகச் செயலாற்றின என, கிறீன் கருதினர். அத்துடன், அரசாங்கம் சுய மொழிப் பள்ளிக்கூடங்களை அமைப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்பதையும், சுட்டிக்காட்டினர். இதேவேளை சேர். பொன். அருணுசலம் போன்றேரின் விவாதங்களின் பிரதிபலிப்புகள், இங்கி லாந்தின் பாராளுமன்றத்திலே பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. 12 பாராளுமன்ற அங்கத்தவர்கள் குடியேற்றநாட்டுச் செயலாளரிடம்; இலங்கை வாழ் தென்னிந்தியத் தொழிலாளர்களின் கல்வி பற்றி ஆராயப்படவேண்டுமெனக், கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க, இலங்கைத் தேசாதிபதியாகிய சேர். ஹென்றி பிளாக் என்பவர் பொதுப் போதனைத் திணைக்களத் தலைவரான எஸ். எம். பரோஸ் என்பவரின் தலைமையில், தோட்டத் தொழிலாளர் கல்வி பற்றி ஆராயக் குழு ஒன்று அமைத்தார். 18 இவருடைய கூற்றுப்படி, 1903ஆம் ஆண்டிலே 1,857 தோட்டங்களிலே 43 பள்ளிக்கூடங்கள் இருந்தன. இந்த 43
36

பள்ளிக்கூடங்களிலே 2 அரச பொறுப்பிலும் 5 தனியார் நிறுவனங் களிடமும் இருந்து வந்தன. அத்துடன், கல்வி பெறும் தகுதி பெற்ற 25,000 மாணவருள் 1,765 பேரே கல்வி பெற்றனர். இதில் 1,598 பேர் ஆண்கள். பெரும்பாலான மாணவர்கள் இரண்டாம் வகுப்பிற்கு அப்பால் கல்வி பெறவில்லை. 1904ஆம் ஆண்டு இறுதியில், தோட்டப் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை 359. அதில் 2 அரச பள்ளிக்கூடங்கள்; 58 உதவி நன்கொடை பெறுபவை; 299 நன் கொடை பெருதவை 14 1903 ஆம் 1904 ஆம் ஆண்டுகளிலே, முன் பிருந்தவற்றைவிடத் தோட்டப் பிள்ளைகளின் கல்வி பெருமளவு முன் னேற்றம் அடைந்து காணப்பட்டது. திருப்திகரமானதாக இருந்த போதும், இவை போதிய வசதிகளிற்றன எனத் தேசாதிபதியாகிய றிட்ஜ்வே (Ridgeway) கருதிர்ை 15
1904ஆம் ஆண்டு பரோஸ் அறிக்கை
1904ஆம் ஆண்டிலே தோட்டக் கல்வி பற்றி ஆராய முனைந்த புரோஸ் வெளியிட்ட அறிக்கையிலே, பெண் கல்வி பற்றியோ அல்லது ஆங்கிலக் கல்வி பற்றியோ குறிப்பிடவில்லை. தோட்டச் சிரு ருக்குக் கல்வி வசதிகள் பற்ருக் குறையாகக் காணப்பட்டமையால் அவர்களுக்கு அடிப்படைக் கல்வியே - அதாவது சிறிது கணிதமும், எழுத்தும், வாசிப்பும் - போதுமெனக் கருதினர். தோட்டச் சிருர் கையொப்பமிடவும், தாய்மொழியில் எளிமையான வசனங்களை எழு தவும் வாசிக்கவும், நாளாந்த வரவு-செலவுக் கணக்குகள், சம்பள அளவு என்பவற்றை விளங்கும் வகையில் சிறிதளவு கணிதமும் தெரிந்தால் போதும் எனவும் குறிப்பிட்டதோடு ஒரு தோட்டத் தொழிலாளி, தோட் டத்துரைமாருக்கூடாகப் பெற்றுக் கொண்ட ஒழுங்கு, கட்டுப்பாடு என் பவற்றின் மூலம் பெறுகின்ற அனுபவக் கல்வியின் பயனக கங்காணி யாகவோ கணக்குப்பிள்ளையாகவோ உயர்ந்து, பின்னர் தன் குடும்பத் திற்குக் கல்வி வழங்கக் கூடிய நிலையினைப் பெறுவான் எனவும், தனது அறிக்கையிலே பரோஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்வறிக்கையில் கூறப் பட்டுள்ளவற்றைக் கொண்டு, இவர் ஓர் பாரபட்சமான அறிக்கையை வெளியிட்டாரெனலாம்.
இவரது அறிக்கையிலுள்ள,தோட்டத் துரைமார் விரும்பினல் பள். ளிக் கூடங்களுக்குப் பணவுதவியளிக்க அரசாங்கமோ மதநிறுவனமோ முன்வரலாம் என்ற கொள்கையைத், தோட்டத் துரைமார் விரும்ப வில்லை. காரணம், அத்தகைய பள்ளிக்கூடங்களில் மூன்று மணி நேரம்
37

Page 28
கல்வியளிக்கப்பட வேண்டுமென்பதை ஏற்க மறுத்தனர். இந்த விட யத்தில் பெற்ருேரும், தோட்டத் துரைமாரும் ஒரே நோக்கத்தைக் கொண்டிருந்தனர். 3 மணி நேரம் பள்ளிக்கூடங்களில் செ ல விட வேண்டிய நிலைமை காரணமாக குறைந்தளவு தேயிலையே பறிக்கப்பட லாமெனத் துரைமாரும், அதனுல் குறைந்தளவு வேதனமே கிடைக்கு மெனப் பெற்றேரும், கருதினர். 16 எனவே நன்கொடை பெறும் பள் ளிக்கூடங்களை இவர்கள் விரும்பாதது ஆச்சரியமான விடயமல்ல. அத் துடன் ,தோட்டத் துரைமார் நன்கொடை பெற விரும்பினல் மாண வர்கள் கல்வி பெற வசதியான பள்ளிக்கூடங்களை ஒழுங்கு செய்ய வேண்டியதுடன் ஒரு வருடமோ, ஒன்றரை வருடமோ நன்கொடை பெறக் காத்திருக்க வேண்டிய நிலைமையும் ஏறபடும். பரீட்சை நாட் களில் மாணவர் வேலை செய்ய முடியாது. தமிழ் ஆசிரியரும் பற்ருக்
அட்டவணை 3 : 2
தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வி விபரங்கள்
ܚ-ܢ-ܝܚܪ
(1). gFTarif பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும்
தோட்டச் சிருரின் தொகை 21,045
(2) ஆரம்பத்தில் அடிப்படைக் கல்வி
பெற்ற பையன்கள் 7,721
(3) கற்பித்தல் முயற்சிகள் உள்ள
தோட்டங்கள் 409
(4) அண்மையிலுள்ள பள்ளிக்கூடங்களால் • நன்மை பெறக்கூடிய தோட்டங்கள் 119
(5) அண்மையிலுள்ள பள்ளிக்கூடங்களால் s நன்மை பெறமுடியாத தோட்டங்கள் 89
(6) கற்பித்தல் வசதியற்ற தோட்டங்கள் 145
(7) கங்காணிமாரின் குழந்தைகள் கல்வி
பெற வசதியுள்ள தோட்டங்கள் 65

தோறயாக இருந்தனர். இவ்வாறு பல கஷ்டங்களை அனுபவித்தே நன் கொடை பெறவேண்டிய நிலைமை காணப்பட்டதால் பரோஸ் சிபார்சு செய்த முறையைத் தோட்டத் துரைமார் விரும்பவில்லை.
பரோஸ், தோட்டத் தொழிலாளரின் கல்வி பற்றிச் சிபார்சு செய்யும் முன்னர், 1,320 தோட்டங்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி விபரங்களைப் பெற முனைந்தார். ஆனல் அதில் 725 தோட்டங்களே விபரங்களைக் கொடுத் தன. 17
அட்டவணை 3 : 2 இன் விபரங்களைக் கொண்டு, 1904ஆம் ஆண் டளவில் தோட்டக் கல்வியின் நிலைமையைத் தெளிவாக அறியக்கூடி யதாக இருந்தது. எனவே தமிழ்க் குடியேற்றவாதிகளின் கல்வி என் னும் போது லைன் பள்ளிக்கூடங்களே முன்னின்றன. இவ்விபரங்களின் பிற்கூருகவே பரோஸ் அறிக்கை இடம் பெற்றது. இதன் பயணுகவே தோட்டத் தொழிலாளர் தமது பெயரை எழுதவும், சிறிது வாசிக்க வும், அன்ருடத் தேவைக்கேற்ற வகையில் கணிதமும் கற்பிக்கப்பட்டால் போதுமானது எனப் பரோஸ் கருதினர்.
“பரோஸ்"இன் பின்னர் ஜோன் ஹவ்வோட் தோட்டப் பள் ளிக்கூடங்களில் கவனம் செலுத்தினர். தொழிலாளர்களின் பிள்ளை களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்திப் செய்யக்கூடியதாகக் கற்பித் தல் அமைய வேண்டுமென, அவர் கருதினர். அதேவேளை பெற்றேரின் தொழிலைச் செய்யக்கூடியதான முறையில் கற்பித்தல் அமைய வேண் டுமெனவும் கருதினுர்,
பள்ளிக்கூடத்திற்குச் செல்லுகின்ற பிள்ளைகளின் வேலை நேரம் குறிப்பிட்டளவு நேரமாக அமைய வேண்டுமென்றும், அத்துடன் கல் விக்கான முழுச்செலவு அல்லது ஒரு பகுதியானது கூடிய ஊதியம் பெறும் பெற்றேர்களிடம் பெறப்படவேண்டுமெனவும், கருதினர். 18 ஒவ்வொரு மாணவரும் 25 சதம் கட்டணமாகச் செலுத்த வேண்டுமென்ரு?ர். இதனைத் தோட்டத் துரைமார் ஏற்றுக் கொண்டனர். 1904ஆம் ஆண் டிலே “புளும் பீல்ட் மிக்ஸ்ட் (Bloum Field Mixed) தோட்டப் பள் ளிக்கூடத்திலே கற்ற 29 மாணவர்கள் மாதம் 25 சதம் கட்டணமாக செலுத்தியுள்ளனர். 19
1905ஆம் ஆண்டு வேஸ் குழுவின் அறிக்கை :
1905ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி இலங்கை அரசாங்கம், இலங்கையின் ஆரம்பக் கல்வி பற்றி ஆராய ஹேபேர்ட் வேஸ் (Herbert Wace) தலைமையில் குழுவொன்றினை நியமித்தது. 20 இக்குழு
39

Page 29
வில் ஜோன் ஹவாட், டீ.ஈ. ஜெயதிலகா, ஜோசப் கோர்மன், ஜே.என். சேம்பல் ஆகியோரும் இடம் பெற்றனர். 25ஆம் திகதி ஜூலை மாதம் இக்குழு தன்னறிக்கையைச் சமர்ப்பித்தது. இதன் சிபார்சுப்படி அர சாங்க உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் ஆரம்பக் கல்வி அரசின் கட்
டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவை பொதுப் போத னைத் திணைக்களத்தின் கீழ் இயங்கின. 1905ஆம் ஆண்டு ஆரம்பத்தில்
359 பள்ளிக்கூடங்கள் இருந்தன. ( 2 அரசாங்கப் பள்ளிக்கூடங்கள், 58 உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 299 உதவி பெருதவை.) 299 உதவி பெருத பள்ளிக்கூடங்களில் 120 தோட்டங்களில் ஒதுக்கப்பட்ட கட்ட
டங்களிலோ, அறைகளிலோ நடைபெற்றன. மிகுதி 179 பள்ளிக்கூடங் களும் தொழிலாளர் லைன்களில் நடந்தன. எனினும் பலமான அத்தி வாரமுடைய வரவேற்கத்தக்க கல்வியைத் தோட்டத் தொழிலா ளர் பெறமுடியவில்லை. 1905ஆம் ஆண்டிலே இலங்கையின் மொத்த மாண வர் தொகை 7,607. அதில் ஆண்கள் 6,949, பெண்கள் 658 ஆகும். 21
இவ்வாணைக்குழு தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியைப் பற்றிக் கூறும்போது, மாற்றத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாக ளிளங்குகின்றது. ‘நாம் தொழிலாளிக்கு அவன்
மேனிலை அடையக்கூடிய கல்வியை அளிப்போமாயின், அவன் அச்சமு
தாயத்திற்குப் பொருத்தமானவனுக இருக்கமாட்டான்" 22 என, இக்குழு தெரிவித்தது. இந்த மனப்பான்மையை இந்தக்குழுவிடம் மட்டுமல்ல, தோட்டத் தொழிலாளரின் கல்வி பற்றி ஆராயவும், சிபார்சுகளைச் செய்யும் பொருட்டும் இலங்கைக்கு வந்த எல்லா ஆணைக்குழுக்களிடமும் காணக்கூடியதாக இருந்தது. ஆரம்பக் கல்வி
பற்றி ஆராய்ந்த வேஸ் குழு பொருட்கள், படங்கள் என்பவற்றினூ
டாக அளிக்கும் கல்வியையே சிபார்சு செய்தது. புவியியல், வரலாறு போன்றன இடம்பெறவில்லை, கல்விப்பொறுப்பு தோட்டச் சொந்தக் காரர்களிடம் அளிக்கப்பட்ட காரணத்தால், தொழிலாளருக்கு அதிக பட்சமான கல்வியை வழங்கினுல் தமக்கெதிராகச் செயற்படக் கூடு மென அவர்கள் கருதியமையும், இத்தகைய பயனற்ற கல்வியளிக்கப் பட்டமைக்கு ஒரு காரணமாகும்.
கிராமியப் பள்ளிக்கூடக் கட்டளைச் சட்டம் :
19ஆம் நூற்ருண்டிலே தோட்டத் தொழிலாளர் இலங்கைக்கு வந்தபோதும், 1907ஆம் ஆண்டிலேயே கல்வி பற்றிய சட்டங்கள்
40

உருவாக்கப்பட்டன. இந்தியக் குடிவரவுத் தோட்டத் தொழிலாளர் களின் நன்மைகளைக் கவனிக்கும் பொருட்டு அரசாங்கம் 19ஆம், 20ஆம் நூற்ருண்டுகளிலே பல சமுதாயநலத் திட்டங்களைச் சட்ட மாக்கியது. அவற்றுள் கல்விக்காக, 1907ஆம் ஆண்டின் பின்னரே சட்டங்கள் உருவாக்கப்பட்டன. 19ஆம் நூற்ருண்டில் கிறிஸ்தவ சமயக் குழுக்கள் பள்ளிக்கூட முறைமையை உருவாக்கின. எனினும் இந்தியத் தொழிலாளரின் கல்வியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில் ஆல. 1900ஆம் ஆண்டளவிலே 440,000 தோட்டத் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனல் 37 ஆரம்பப் பள்ளிக்கூடங்களே இருந்தன. இவற் றை மதநிறுவனங்களே அமைத்திருந்தன. 23 அவையும் மத நோக்கங் களை நிறைவேற்றும் முகமாகவே அமைக்கப்பட்டிருந்தன.
இதேவேளையில் பிரித்தானியாவின் ஏனைய குடியேற்ற நாடுக ளான பிரித்தானிய கயான (British Guiana), ட்ரினிடாட் (Trinidad) ஆகிய நாடுகளில் குடியேறிய இந்தியர்களுக்கு விரைவான கல்வி வசதி கள் செய்து கொடுக்கப்பட்டதுடன், உள்ளூர்ப் பிள்ளைகளுக்கு அளிக் கப்பட்ட கல்வி வசதிகள் இவர்களுக்கும் அளிக்கப்பட்டன எனவும், அத்துடன் கயானவில் ஆரம்பக் கல்வி இலவசமாக அளிக்கப்பட்டது எனவும், ட்ரினிடாட்டில் முழுக்கல்வியுமே இலவசமாக வழங்கப்பட் டது எனவும் அறியக் கூடியதாகவுள்ளது. 24 இவற்றைச் சுட்டிக் காட்டி, இந்தியப் பிள்ளைகளுக்குக் கல்வி வசதியளிப்பதில் இலங்கை மட்டுமே பின்னிற்கின்றது என்பதைப், பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துக் காட்டினர், 25 -
1907ஆம் ஆண்டின் கிராமப்புறப் பள்ளிக்கூடக் கட்டளைச் சட் டத்தின் மூலம், தோட்டத் தொழிலாளருடைய பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பு தோட்ட மேலதிகாரிக்கு வழங்கப்பட்டது. இச் சட்டப்படி கல்வி வசதிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேல திகாரி மேற்கொள்ளவில்லையாயின் கல்விப் பணிப்பாளர்கள் தாமே அவ்வசதிகளை ஏற்படுத்தி, அதற்கான செலவுகளைத் தோட்ட உரிமை யாளரிடம் அறவிடலாம். இச்சட்டம் இயற்றப்பட்டதன் பின்னர் 1920ஆம் ஆண்டிலே உருவாக்கப்பட்ட கட்டளைச் சட்டத்தில், இதன் சில அம்சங்கள் இடம்பெற்றன. 1931ஆம், 1947ஆம், 1951 ஆம் ஆண்டுகளிலே உருவாக்கப்பட்ட கல்வித் திட்டங்கள் யாவும், 1907ஆம் ஆண்டுக்கல்விச் சட்டத்தின் அடிப்படையிலேயே, தோட்டத் தொழிலா ளரின் கல்வி வசதிகள் பற்றிய விதிகளை உள்ளடக்கியனவாகக் காணப் பட்டன. :
4.

Page 30
1907 ஆம் ஆண்டுக் கல்விச் சட்டம் சிறிது மாற்றங்களுடன் 1908ஆம் ஆண்டுக் கல்விக் கட்டளைச் சட்டத்தின் 5ஆம் பகுதியில் ஆராயப்பட்டது. 28 இதன்படி இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட தோட்டங்கள் இணைந்து பள்ளிக்கூடங்களை அமைக்கலாம் எனக் கூறப்பட்டது. 27 சுயமொழிக் கல்விக்கான ஆயத்தங்களைச் செய்வது தோட்ட உரிமையாளரின் கடமையெனவும், 6 - 12 வய துக்குட்பட்ட ஆண் பிள்ளைகளுக்கும், 6-20 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் கல்வி வசதியளிப்பது தோட்டச் சொந்தக்காரரின் கடமை எனவும் கூறப்பட்டது. அவர்களுக்கு ஏற்ற வகுப்பறையைத் தெரிந்து திருத்திக் கொடுப்பது அவரின் பொறுப்பே. இப்பொறுப் பிலிருந்து தவறின் 6 மாதக் காலக்கெடுவின் பின், பொதுப் போத னைத் திணைக்களம் தேவையான ஆயத்தங்களைச் செய்து, செலவைத் தோட்டச் சொந்தக்காரரிடம் அறவிடலாம் எனவும் குறிப்பிடப்பட்
-gilo 28
இவற்றைவிடத் தோட்டச் சொந்தக்காரர் தோட்டத்திலுள்ள 6 - 10 வயதுக்குட்பட்ட மாணவர் தொகை, கடந்த பன்னிரண்டு மாதங்களாகப் பள்ளிக்கூடத்திற்கு வந்தோர் தொகை, கட்டடம் பற்றிய விபரங்கள் என்பவற்றைப் பொதுப்போதனைத் திணைக் களத் தலைவரிடம் கையளிக்க வேண்டும். அதேபோல ஆசிரியரும் மாணவரின் வயது, பெயர் பற்றிய இடாப்பு முதலியவற்றைக் கையளிக்க வேண்டும். பள்ளிக்கூடப் பரிசோதகர் அடிக்கடி பரிசோ தனை செய்ய வருவார்,
கட்டாயக் கல்வி பற்றி இச்சட்டத்தில் கூறப்பட்டதாவது, ஆரம்பக் கல்வி தோட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டது; ஆனல் மாணவர் வரவு கட்டாயமாக்கப்படவில்லை. இந்நிலை 1920ஆம் ஆண்டு வரை நீடித்தது. 1924 ஆம் ஆண்டிலே வரவு கட்டாயப்படுத்தப்பட்டது:
1907ஆம் ஆண்டுச் சட்டத்தைத் தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டத்தின் 5ஆம் பிரிவில் தோட்டக் கல்வி பற்றி ஆராயப்பட்டது. இச்சட்டம், 1907 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டத் தையே பெரும்பாலும் மீண்டும் எடுத்துக் காட்டியது. எனினும் சில புதிய அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. தோட்டக் கல்வி தோட்டச் சொந்தக்காரரின் பொறுப்பு என்பதுடன், தகுந்த ஆசிரியரை நிய மிப்பதும் அவர்களுடைய பொறுப்பே. அத்துடன் 6 - 10 வயதுக் குட்பட்ட பிள்ளைகளைக் காலை 10 மணிக்கு முன்னர் தோட்டங்களில் வேலை செய்ய விடக்கூடாது; இதனை மீறும் பெற்றேருக்குத் தகுந்த
42

தண்டனை அளிக்கப்படும். தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலா ளர்களின் 6 - 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைப், பெற்ருேர் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பவேண்டும்; இதனை மீறும் பெற்ருேர் அபராதம் செலுத்த வேண்டிய நிலைமையேற்படும். தோட்டச் சொந்தக்காரரோ, ஆசிரியரோ, தமது கடமையைப் புறக்கணித்தால், தகுந்த தண்டனை அளிக்கப்படும். இவை நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பதற்கான சான்றுகளில்லை.
இதனைத் தொடர்ந்து 1931 ஆம் ஆண்டிலே உருவாக்கப்பட்ட கட்டளைச் சட்டம், 1920 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டத்தை மீள ஆராய்ந்தது. எனவே 1931 ஆம் ஆண்டுக் கட்டளைச் சட்டம், 1920 ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்களைப் பிரதிபலிப்பனவாகவே அமைந்தது இச்சட்டத்தின் விசேட அம்சம், சமயக்கல்வி கட்டாய பாடமாக்கப் பட்டது ஆகும். அத்துடன் 1907 ஆம், 1920 ஆம் ஆண்டுகளின் ‘சுய மொழிக் கல்விக்குத் தோட்டச் சொந்தக்காரரே பொறுப்பு" என்ற கருத்து, 1939 ஆம் ஆண்டிலே “சுயமொழிக் கல்வி" என்ற சொற் ருெடர் நீக்கப்பட்டு தோட்டத் தொழிலாளரின் கல்வி என்றளவில் குறைந்தது. இதன் மூலம், ஏனைய பள்ளிக்கூடங்களைப் போன்று தோட் டப் பள்ளிக் கூடங்களிலும் ஆங்கிலக் கல்விக்கு இடம் அளிக்கப்பட் டது. இதன் முன்னர் வாசிப்பு, கணிதம், எழுத்து என்பன சுயமொழி மூலமே கற்பிக்கப்பட்டன. ;
இதனைத் தொடர்ந்து, 1942ஆம் ஆண்டிலே அரசாங்க சபை யில் தோட்டப் பள்ளிக்கூடங்களில் கல்வி பற்றிய விவாதத்தில், பி. எச். அலுவிகார பின்வருமாறு கூறியுள்ளார். *தோட்டப் பள்ளிக் கூடங்களில் சிங்களம் புகுத்தப்படவேண்டும் என்பது பற்றிய பிரச் சினையை, நான் ஏற்கனவே எழுப்பியுள்ளேன். எங்கள் நாட்டில் கணிச மான அளவில் நிரந்தரமாகக் குடியேறியுள்ள அந்நியரின் - இந்தியத் தொழிலாளரின் - பிரச்சினையை நாம் எதிர்நோக்கியுள்ளோம் குறைந்த பட்சம் மொழி ரீதியிலாவது அவர்கள் எவ்வளவு தூரம் இங்குள்ள மக்களோடு தொடர்பினை ஸ்தாபித்துக் கொள்கிருர்களோ, அந்த அளவிற்குச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது நன்மை பயப்பதாகும்.’’ 29 தோட்டப் பள்ளிக்கூடங்களில் சிங்களம் கட்டாய பாடமாக்கப் படவேண்டும் எனவும், தமது சுற்ருடலில் உள்ளவர்களுடன் பூரணமா கப் பங்கு கொள்ளும் வகையில் இப்போதனை அமைய வேண்டும் என வும், அலுவிகார பிரேரணையைக் கொண்டு வந்தார். இதற்கு விடை பகரும் வகையில் அக்காலக் கல்வியமைச்சரான சி, டப்ளியூ. டப்ளியூ. கன்னங்கரா தோட்டச் சொந்தக்காரரே தோட்டக் கல்விக்குப்
43.

Page 31
பொறுப்பு எனவும், அவர்களே இதனைப்பற்றி - அதாவது சிங்களம் போதிப்பதுபற்றித் - தீர்மானிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட போது, பி. எச். அலுவிகார அதனை மறுத்து, அது அரசாங்கத்தின் பொறுப்பே எனக் குறிப்பிட்டார்.30
1944 ஆம் ஆண்டிலே இலவசக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த கன்னங்கரா அறிக்கை, தோட்டப் பள்ளிக்கூடங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அரசாங்க சபையில் எஸ். பி வைத்திலிங்கம் பிரேரணையொன்றைக் கொண்டுவந்தபோது, 'எல்லாத் தோட்டப் பள்ளிக்கூடங்களும் அரசாங்க ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் என்ற வகை யில், தேசிய கல்வித் திட்டத்தில் இடம்பெறும்" எனக் கன்னங்கரா குழுவினல் விடை கூறப்பட்டது. 31அத்துடன் தோட்டக்கல்வி பற்றிய பிரச்சினை தற்பொழுது கைவிடப்பட்டுள்ளது எனக் கன்னங்கரா கூறியமை, ஆச்சரியமானதொன்றே.
1945ஆம் ஆண்டு நடைபெற்ற அரசாங்க சபை விவாதத்திலே பி.எச். அலுவிகார, தோட்டப் பள்ளிக்கூடங்களில் சிங்களம் கட்டாய பாடமாக்கப்பட்டால்தான் இலங்கைச் சமூகத்தவரிடையே ஒரு சுமு கமான தொடர்பினை ஏற்படுத்தலாம் எனச், சுட்டிக் காட்டினர். கன்னங்கரா முதன் முறையாக கல்வி மந்திரியாகப் பதவிஏற்றபோது, இலவசக் கல்வித் திட்டம் இடம் பெற்றது. இது இன, மத, மொழி வேறுபாடின்றி எல்லோரும் கல்வி பெற வாய்ப்புகளை ஏற்படுத்தியது. இது தோட்டச் சிருருக்குச், சிறிதளவு உதவியது. எனினும், நூற்றிரு பத்தைந்து ஆண்டுகளாக ஆங்கிலேய ஆட்சியில் கல்வித் துறையில் ஏற்பட்ட சீர்கேடுகளை ஆராய்ந்து இலவசக் கல்வியைச் சிபார்சுசெய்த இந்த அறிக்கையிலே, தோட்டப் பள்ளிக்கூடங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லாமையும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதொரு, விடயமாகும்.
இதன் பின்னர் 1947ஆம் ஆண்டுச் சட்டம் புதிய சில அம்சங் களை உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. 5 - 10 வயது வரை கட் டாயக் கல்வி என்ற நிலைமை 6 - 16 வயது வரையாக உயர்த்தப் பட்டதுடன், 25க்குக் குறையாத மாணவர் தோட்டப்பகுதியில் இருப்பின் பள்ளிக்கூடங்களை அமைத்துக் கொடுப்பதுடன், தளபாட, கட்டட வசதிகளுடன் தகுதிவாய்ந்த ஆசிரியரும் அவருக்குத் தங்கு மிட வசதியும் அளிப்பது தோட்டச் சொந்தக்காரரின் பொறுப்பே எனவும், குறிப்பிடப்பட்டது. மேலும் பள்ளிக்கூடத்திற்கு விளையாட்டி
44

டமாக ஒரு ஏக்கர் நிலத்தையும் ஒதுக்க வேண்டும் எனவும் குறிப் பிடப்பட்டது. இவையெல்லாம் திட்டங்கள் என்ற முறையில் இடம் பெற்றனவே தவிர, நடைமுறையில் சாத்தியப்படக் கூடியதாக அமை யவில்லை. அதாவது தோட்டப்பகுதியிலே, அன்ருட உணவிற்காகத் தம்மை வருத்திக் கொள்கின்ற நிலையிலே தமது பிள்ளைகளைக் கல்வி பெற அனுப்புவதைவிடத், தோட்டத்தில் கொழுந்தெடுக்க விடுவதே மேலானதெனக் கருதுகின்றதொரு மனப்பான்மையை, நாம் காண Ga)ITLb.
சுதந்திரத்தின் பின்னர்
நான்கு நூற்ருண்டுகளாக அந்நியர் ஆட்சியில் சுய உரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடந்த இலங்கை, 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தன்னுதிக்கமுள்ள சுதந்திர நாடாகப், பிரகடனப்படுத்தப் பட்டது. தன் நாட்டின் சகல அலுவல்களையும் தானே கொண்டு நடாத்த, இலங்கை அரசாங்கத்திற்கு உரிமை கிடைத்தது. இந்த, அடிப்படையிலே கல்வியிலும் கூடிய கவனம் செலுத்தவேண்டிய நிலை யேற்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் 1949ஆம் ஆண்டிலே மக்கள் சபையில் இடம்பெற்றிருந்த ஈ.ஏ.நுகவெல, இத்தோட்டப் பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்பதற்கான அடிப்படை அம்சங்களை 1947ஆம் ஆண்டுக் கல்விச் சட்டம் கொண்டிருந்தது எனக், குறிப்பிட்டார். 32 இதே அமைச்சர் 1951ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, 1951ஆம் -1952ஆம் ஆண்டுகளுக்கிடையில் 150 பள்ளிக்கூடங்களைக் கையேற்பதற்கான ஆயத்தங்களைத் தாம் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 38 1947ஆம்-1961ஆம் ஆண்டுகளுக்கிடையில் 24 தோட்டப் பள்ளிக்கூடங்களே அரசினல் பொறுப்பேற்சப்பட்ட தாகத், தேசியக் கல்விக் குழுவினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது. 34
1947ஆம் ஆண்டின் பின்னர், 1951ஆம் ஆண்டுக் கல்விச் சட் டம் பல புதிய திருத்தங்களைக் கொண்டு வந்தது. 6-10 வயது வரையான கட்டாயக் கல்வி என்ற நிலையில் இருந்து, 5-10 வய தாக உயர்த்தப்பட்டது. 1951ஆம் ஆண்டிலே, 14 வருடங்கள் கட் டாயக் கல்வி வயதாக மாற்றியமைக்கப்பட்டது. இத்துடன் தகுந்த வகுப்பறை, தளபாடங்களுடன் ஆசிரியருக்கான இருப்பிடவசதி, விளை
45

Page 32
யாட்டிடத்திற்கான நிலம் ஒதுக்கீடு செய்தல் என்பனவும் தோட்ட நிர்வாகியின் பொறுப்புகளாக இருந்தன. அத்துடன் இவற்றைக் கைக் கொள்ளாத நிர்வாகி ஒருவர் 500/- ரூபாவை அபராதமாகச் செலுத்த வேண்டுமெனவும், குறிப்பிடப்பட்டது.
1951ஆம் ஆண்டு சட்டத்தின் பிறிதொரு சிறப்பம்சம் மொழி -அதாவது கல்விப் போதன மொழி- பற்றியும் கூடுதலான வரை யறைகள் இடம்பெற்றமையாகும். 15 மாணவர்களுக்கு மேற்பட்டோர் சிங்கள மாணவராகவோ அல்லது தமிழ் மாணவராகவோ இருந்தால், அவர்களின் தாய்மொழியே போதன மொழியாக அமைய வேண்டும்.
இதனைத் தொடர்ந்து சிங்களமே தேசிய மொழியெனப் பிர கடனப்படுத்தப்பட்ட நிலை, 1956ஆம் ஆண்டுத் திட்டத்தில் இடம் பெற்றது. 1947ஆம் 1951ஆம் ஆண்டுத் திட்டங்களைப் போலவே பள்ளிக்கூட நிர்வாகப் பொறுப்பு, ஆசிரியரின் நியமனம், இருப்பிட வசதி, தளபாட வசதி என்பன பற்றிய விடயங்கள் இடம் பெற்றன. 5-14 வயதுவரை கட்டாயக் கல்வி என்பதும் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் தேசியமயமாக்கப்பட்ட செய் கை பிரதான இடம் பெற்றது. இதன் விளைவாக, 1960ஆம் ஆண் டளவில் அரசு பல பள்ளிக்கூடங்களைப் பொறுப்பேற்கத் தொடங்கவே, பள்ளிக்கூடங்கள் அமைக்க தோட்டச் சொந்தக்காரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அரசு பொறுப்பேற்றல் என்னும் போதும், நடைமுறையில் எல் லாப் பள்ளிக்கூடங்களையும் அரசு பொறுப்பேற்கவில்லை. தோட்டப் பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரையில் பல பள்ளிக்கூடங்கள் -அதா வது தளபாட, மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத காரணத்தால் மூடப்பட்டன. இங்குள்ள மாணவர்கள் அண்மையிலுள்ள அரச பள் ளிக்கூடங்களில் கல்வி பெறவேண்டிய நிலையேற்பட்டது. அத்தகைய அண்மைப் பள்ளிக்கூடங்கள் சில, சிங்களத்தையே போதன மொழி யாகக் கொண்டவையாக அமைந்திருந்தன. எனவே மொழிப் பிரச் சினையும் தோட்டச் சிறரின் கல்வியில் தலையிட்டது. அத்துடன் பெரும் பான்மையான தோட்டப் பள்ளிக்கூடங்களில் 5ஆம் வகுப்பு வரையுமே இருந்தன. வாசிப்பு, எழுத்து, எண், பேச்சு, விளையாட்டு என்பன கலைத்திட்டத்தில் இடம் பெற்றன. இவற்றைவிட உடல்நலக்கல்வி சமூகக்கல்வி, தையல் என்பன பயிற்றப்பட்டன. 5ஆம் வகுப்பின் பின்னர், இடைநிலைக்கல்வியைப் பெற அரசு பொறுப்பேற்ற பள்ளிக் கூடங்களுக்குச் செல்லவேண்டிய நிலைமை உருவாகவே, மொழிப்
46

பிரச்சினை பெருந் தடையாயிற்று. 1963ஆம் ஆண்டு தொடக்கம் 1965 ஆம் ஆண்டு வரை கல்வி மந்திரியாக இருந்த பி பி ஜி. கலுகல்ல, 1965ஆம் ஆண்டிலே தோட்டப் பள்ளிக்கூடங்களைக் கையேற்று, அவற்றை ஒரு ஸ்தாபனமாக அமைத்து அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவேண்டுமெனக், கூறினர். 35 இதற்குப் பாராளுமன்ற செயலாளர், 1964ஆம் ஆண்டு தேசியக் கல்வித் திட்டத்தில் தோட் டப் பள்ளிக்கூடங்களின் அமைப்புப் பற்றி ஆராயப்படும் எனக் குறிப் பிட்ட போதும், 96 அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தொடர்ந்தும் பல அரசாங்கத்தாலும் முடிவு காண முடியாத தொரு பெரும் பிரச்சினையாக, இது உருவாகியது. 1965ஆம் ஆண் டிலே 80,000 37 தோட்டத் தொழிலாளருக்குக், கல்வி ஒரு பிரச் சினைக்குரியதொரு விடயமாக இருந்தது.
1954 ஆம் ஆண்டு வெள்ளையறிக்கையில், இக்குழுவின் தலைவர் ஜெயசூரியா, தோட்ட மாணவரின் கல்வி பற்றித் தனிப்பட ஆராய்ந் துள்ளார்; தெளிவான விளக்கத்தையும் அளித்துள்ளார். தாய்மொழிக் கல்வி எனக் குறிப்பிட்டபோதும், தோட்டத் தொழிலாளர் சிங்கள இனத்தவரின் மத்தியிலே வசிக்கின்ற நிலையில் சிங்களமே போதன மொழியாக அமைய வேண்டும் என, இக்குழுவினர் சிபார்சு செய்த னர். பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறிய மக்களுக்கு, ஆங்கிலமே போதனுமொழியாக அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை தமிழில் கற்றவர் கள் தொடர்ந்தும் தமிழில் கல்வியைப் பெறலாம் எனவும், ஆனல் புதிதாகச் சேரும் மாணவர்களுக்குச் சிங்களமே போதனமொழி என அம், ஜெயசூரியா ஆணைக்குழு எடுத்துக் காட்டிற்று. அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறியவர்கள் வேற்று நாட்டவர்கள் என்ற போதிலும்கூட, அங்கு மொழி வேற்றுமை இருக் கவில்லை; ஆங்கிலமே தாய்மொழியாக இருந்தது. இந்நாடுகளுக்கு இங்கிலாந்தில் இருந்தே மக்கள் சென்று குடியேறினர். எனவே அங்கு மொழிப் பிரச்சினை இடம்பெறவில்லை. ஆனல் தென்னிந்தியத் தோட்டத் தொழிலாளரைப் பொறுத்தவரையில், அவர்கள் முற்ருக வேற்றுமொழியைப் பேசுபவர்கள். அந்நிலையில் தாய்மொழியல்லாத சிங்களத்தைப் போதனமொழியாக்க வேண்டும் எனக் குறிப்பிட் டமை, விநோதமான தொன்றே. அத்துடன் சுதந்திரத்தின் பின் னர் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில், அதாவது நிரந்தரமாக இங்கு வசிக்கமுடியாத நி%லயில் - சிங்களத்தைக் கற்க வேண்டுமெ னக் குறிப்பிட்டமை பயனற்றதொன்ருகும். இத் தோட்டத் தொழி
47

Page 33
லாளர் என்ருவது ஒரு நாள் தமது தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள், இந்நிலையில் இவர்கள் இங்கு பெறும் கல்வி இந்தியாவில் பயனற்றதொன்ருகும். எனவே ஜெயசூரியா அவர்களின் அக்கூற்று கவலைக்கிடமானதொன்றே.
1964ஆம் ஆண்டிலே வெளியிடப்பட்ட கல்வி வெள்ளையறிக் கையிலே, எல்லாத் தோட்டப் பள்ளிக்கூடங்களையும் அரசு பொறுப் பேற்று அடிப்படைப் பள்ளிக்கூடங்களாக அமைக்க வேண்டும் எனவும் , அரச கரும மொழியே போதனுமொழியாக அமைய வேண்டுமென வும், கூறப்பட்டது. இந்த அறிக்கையின்படி பள்ளிக்கூடம் சேரும் ஐந்து வயதுத் தோட்டப் பிள்ளைகள் ஏனைய சுதேசிய பிள்ளைகளைப் போல <架ser பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட வேண்டும் எனவும், சிங்களமே போதனுமொழி எனவும் கூறியதுடன், தோட்டப் பள்ளிக்கூடம் என்ற அம்சமே இலங்கையின் கல்வி வரலாற்றில் இக் காலத்தோடு முடிவு பெறும் எனவும், குறிப்பிடப்பட்டது. எத்த னையோ தோட்டத் தொழிலாளர் தாம் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பிப் போவதை விரும்பினர்கள். இந்நிலையில், சிங்கள மொழி மூலம் கல்வி பெற அவர்கள் சிறிதும் விரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் 1965ஆம் ஆண்டிலே பதவியேற்றதும், 1966ஆம் ஆண்டு வெள்ளையறிக்கை வெளியிடப்பட் டது. இதனைத் தொடர்ந்து தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வி தடைப்பட்டது எனலாம். காரணம், தனியார் தோட்டப் பள்ளிக்கூ டங்கள் அமைக்க அனுமதி அளித்ததன் பயனுக இப்பள்ளிக்கூடங்க ளில் கல்வி தடைப்பட்டது,
1945ஆம் ஆண்டிலே இலவசக் கல்வி என்ற சட்டம் உருவாக் கப்பட்டதைத் தொடர்ந்து, தோட்டப் பள்ளிக்கூடங்களும் ஆரம்ப அரச பள்ளிக்கூடங்கள் என்ற தொகுப்பில் அடங்கி, இலவசக் கல்வி உரிமையைப் பெற்றன. 1960ஆம் ஆண்டிலே கல்வி மந்திரி எம்.டீ. பண்டா எஸ்டேட் பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அதற்கான ஆரம்ப வேலைகளைத் தாம் செய்வதாகவும், தோட் டத்துக்கு அண்மையில் உள்ள அரச பள்ளிக்கூடங்களில் இவர்கள் கல்வி பெறலாம் எனவும் குறிப்பிட்டார். சில இடங்களில் - பதுளை போன்ற பகுதிகளில் அரச பள்ளிக்கூடங்களில் தமிழ், சிங்கள போ தனு மொழிகள் மூலம் கல்வியளிக்கப்பட்டதால் பல தோட்ட மாணவர்கள் இப்பள்ளிக்கூடங்களில் கல்வி பெற முடிந்தது. எனவே
48

எல்லாத் தோட்டப் பள்ளிக்கூடங்களையும் அரசு பொறுப்பேற்பது கடினம்; அதற்கு 12 அல்லது 15 இலட்சம் ரூபா பணம் தேவை; அதனல் படிப்படியாக இப்பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்கும் என, எம். டீ. பண்டா குறிப்பிட்டிருந்தார். 40 இதன் பிரகாரம், 900 தோட்டப் பள்ளிக்கூடங்களில் 24 பள்ளிக்கூடங்களை அரசு பொறுப் பேற்றது. 1947ஆம் ஆண்டுக்கும் 1961ஆம் ஆண்டுக்கும் இடையில் இவை பொறுப்பேற்கப்பட்டன. 41 இதன் பின்னர் 1965ஆம் ஆண் டிலே, பி. ஜி பி. கெனமன் (P. G. B. Kenneman) அரச தோட்டப் பள்ளிக்கூடங்களைப் பொறுப்பேற்று, தேசிய கல்வியமைப்பின் கீழ்க் கொண்டு வருவதற்கு தாமதமாவதைப் பற்றி வினவெழுப்பியபோது ஜி. ஜெயசூரியா, இதுபற்றி அரசாங்கம் சிந்தித்துக் கொண்டு இருப் பதாகவும் விரைவில் தகுந்த முடிவு எடுக்கப்படும் எனவும், கூறினுர், 42
இக்காலப்பகுதியில் தோட்டச் சிருரின் கல்வியில், அரச கரும மொழி அறிமுகப்படுத்தப்பட்டமை பிரச்சினையை வளர்த்தது. 1956 ஆம் ஆண்டு அரச கரும மொழிச் சட்டத்தின் பிரகாரம், சிங்களமே அரச மொழியாயிற்று. ஆகவே தோட்டப் பகுதிகளிலும் சிங்க ளமே போதனமொழியாக இடம்பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசாங்க சபையில் மாத்தளை அங்கத்தவர் பி. எச். அலுவிகார,1942 ஆம் ஆண்டு இதனையே எடுத்துக் கூறினர் என்பது முன்னரே குறிப் பிடப்பட்டுள்ளது. ஆனல் 1964ஆம் ஆண்டின் பின்னர் தாய்மொழி யே போதன மொழி என்ற நிலைமையேற்படவே, புல தனித்தனிப் பள் ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. பின்வரும் அட்டவணை 3 :3 இல் சிங் கள, தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் தொகை தரப்பட்டுள்ளன. அதிலி ருந்து, தமிழ் மாணவருக்கான பள்ளிக்கூடங்களின் பற்ருக்குறையை நாம் அறியலாம்.
இவ்வட்டவணையின் பிரகாரம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து போவதையும், சிங்களப் பள்ளிக்கூடங்களின் தொகை அதிகரித்துச் செல்வதையும் காணலாம். இந்த நிலையில், தோட்ட மாணவரின் கல்வி படிப்படியாகப் பெரு மளவு பாதிக்கப்பட்டே வந்துள்ளமையைக் கர்ணலாம். 1942ஆம் ஆண்டிலே பி. எச். அலுவிகார போன்றேரின் கருத்துப்படி, சிங்களமே போதன மொழியாக அமைய வேண்டியதன் முக்கியத்துவம் இக் காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகக் காணப்பட்டது. ஆனலும், தோட்டப் பள்ளிக்கூடங்களின் போதனுமொழி பற்றித் தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென கன்னங்கரா குறிப்
49

Page 34
அட்டவணை 3 3
தமிழ் - சிங்கள பள்ளிக்கூட புள்ளி விபரங்கள்
வருட்ம் தமிழ் மாணவருக்கான சிங்கள மாணவருக்கான பள்ளிக்கூடங்கள் பள்ளிக்கூடங்கள் بسته
1956 884 4,084
1957 88 4,335
1958 879 4,524
959 875 4,664 19-0 874 4 839
1961 873 4,961
1962 873 5,226
1963 -- 5, 552
43
பிட்டமையும் நோக்கற்பாலது. எனினும் பொதுவாக தமிழ் மாண வர்களின் கல்வி, அரசு மொழி மாற்றத்தினுல் பெரும் பாதிப்புக்குட் பட்டது எனலாம்.
1978ஆம் ஆண்டின் புதிய அரசியல் திட்டத்தில் ஜே. ஆர்* ஜெயவர்த்தன அரசாங்கத்தில்தான், இலங்கையில் முதன்முதல் சிங் களத்தைப் போலவே தமிழும் தேசிய மொழியாகப் பிரகடனப்படுத் தப்பட்டது. 44 எனினும்கூட, தோட்டப் பகுதிகளைப் பொறுத்த வரை யில் 5ஆம் வகுப்புடனே தமது கல்வியை நிறுத்திக் கொண்டனர். இதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்த போதிலும், 1960ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் செல்லாத மாணவரின் நிலைமை பற்றி ஆராய்ந்த gap.35 air 91s5.5605 usaitulg (Report of The Committee Of NonSchoo Going (hildren), 'மாற்றுடை கூட இல்லாத நிலையில் பெற் ருேர் எங்ங்ணம் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புவார் கள்? ஏனைய மாணவரினலோ ஆசிரியரினலோ தம் பிள்ளைகள் இக
50

!ழிப்படுவதைப் பெற்றேர் விரும்பாத காரணத்தால், பள்ளிக்கூடங்க ளுக்குச் செல்லாது தடுக்கப்படுகின்றனர்." 45 இந்த ஆய்வின்படி 1958ஆம் ஆண்டிலே, 5 - 14 வயதுக்குட்பட்ட 284,000 தோட்ட மாணவர்களுள் 152,000 பேர் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றனர். 132,000 பேர் பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை. 53% பள்ளிக்கூடத் திற்குச் செல்ல 47% பள்ளிக்கூடத்திற்குச் செல்லவில்லை. 46 இதனைப் பற்றி பிரதிநிதிகள் சபையில் 1960ஆம் ஆண்டு, டப்ளியூ. தகநாயகா, “பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் 53% தோட்ட மாணவர்கள் 900 தோட்டப் பள்ளிக்கூடங்களுக்கே செல்கின்றனர்" எனக் குறிப்பிட் டுள்ளார். அத்துடன் இவை 5ஆம் வகுப்பு வரையுமே கற்பிக்கப்படு கின்ற ஆரம்ப பள்ளிக்கூடங்கள் என்பதையும், இவர் சுட்டிக் காட்டி ஞர். மேலும், “பயிற்றப்படாத ஆசிரியர், குறைந்த சம்பளம், தள பாடப் பற்ருக்குறை, இவையே தோட்டப் பள்ளிக்கூடங்களில் காணப் படுகின்ற நிலைமை. இதனுல் நாம் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. எந்த அரசாங்கமாயினும் தோட்ட மாணவரின் கல்வி பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம்’ எனவும் கூறினர். 47
1960ஆம் ஆண்டிலே அரசு பள்ளிக்கூடங்களைப் பொறுப்பேற்ற மைதான், கல்வியில் அரச தனியுரிமையின் தோற்றுவாய் எனலாம். இதன் பின்னர் இந்திய வம்சாவழி பினருக்கு கல்விக்காக இதுவரை கிடைத்துவந்த சொற்ப வசதிகளும் ஒழிக்கப்பட்டமை தெளிவாகும். முன்பிருந்த ‘பெயர்பெற்ற' பல பள்ளிக்கூடங்கள் அழிக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாகத் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டன. கூடுதலாகக் கவனத்தைக் கவரும் உதாரணம் - அதாவது கல்விக் கான வசதிகள் அழிக்கப்பட்டுள்ளதை - கம்பளை, பதுளைப் பகுதிகளில் காணலாம். மற்றைய பகுதிகளில் ஒரளவு திருப்திகரமாகக் காணப் படுகிறது. கம்பளையில் சென். ஜோசப் கல்லூரி, சென். அன்ரூஸ் கல் லூரி ஆகியவற்றில் முன்னர் தமிழே போதனமொழியாக இருந்தது. இதுவரை இந்திய மக்களுக்கு இருந்த இந்த வசதிகள் நீக்கப்பட்டு, இன்று இப்பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பகுதி அகற்றப்பட்டுள்ளது. இன்று கம்பளையில் ஒரு தமிழ் மகாவித்தியாலயமும் இல்லை. பதுளையில் மெத டிஸ்த பெண்கள் உயர் கல்லூரி, உருசுலு கொன்வென்ட் எனப் பெயர் மாற்றப்பட்டு, இந்தியத் தமிழ் மாணவரும் வேறு இடங்களுக்கு மாற் றப்பட்டனர். சென். பெட்ஸ், ஊவாக் கல்லூரிகளில் - ஆண்களுக் கானவை - உள்ள தமிழ் மாணவர் தொகை தீவிரமாகக் குறைக்கப் பட்டது. சில பெயர்பெற்ற பள்ளிக்கூடங்கள், பெயர் மாற்றத்தினல் தம் செல்வாக்கை இழந்தன.
51

Page 35
அட்டவணை 3 : 4
பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பிரிவு
1. பண்டாரவளை - 1.
2. இரத்தினபுரி - 1.
3. மாத்தளே - 1.
4. நாவலப்பிட்டி l.
2
5. ஹட்டன் - .
சிறிய புஷ்பம்
கன்னியர்மடம்
சென். ஜோசப் கல்லூரி
சென்,லூக்காஸ்
ஃவேர்கியூசன் உயர் பாடசாலை
பி. எம். எஸ்.
சென். தோமஸ்
விஜயா கல்லூரி
கிறிஸ்தவ கல்லூரி
சென். மேரீஸ்
சென். அன்ரூஸ்
சென். கபிரியல்
தமிழ்ப்
தமிழ்ப் பிரிவு இல்லை
12 gh வகுப்பு விஞ்ஞானம் மட்டும்:
6 - 10 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பகுதி
1 - 5ஆம் வகுப்புவரை தமிழ்ப் பகுதி.
5 -
10ஆம் வகுப்புவரை தமிழ்ப் பகுதி.
12 ஆம் வகுப்பு விஞ்ஞானம் மட்டும்.
பகுதி முற்ருக இல்லை.
தமிழ்ப் பகுதி முற்ருக இல்லை.
தமிழ்ப் பகுதி முற்ருக இல்லை.
தமிழ்ப் பகுதி முற்ருக இல்லை.
தமிழ்ப் பகுதி முற்ருக இல்லை.
இவ்விபரங்கள் 1980ஆம் ஆண்டுக்குரியவை; கொழும்பு கல்வித் திணைக் களத்தின் தமிழ்ப் பிரிவில் பெறப்பட்டவை; பிரசுரிக்கப்படாதவை.)
5

இதுவரை தோட்டத் தொழிலாளருக்கு இருந்துவந்த சொற்ப கல்வி வசதிகளையும் குறைக்கின்ற செயலை, முன்பக்கத்தில் காட் டப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களின் நிலைமைகளினுல் உணரலாம்.
இவற்றை நோக்கின் பள்ளிக்கூடங்கள் மீளத் திருத்தியமைக்கப் பட்டமை, தோட்டப் பகுதியைப் பொறுத்த வரையில் கெடுதலாயிற்று. இவ்வாறு வசதிகள் மறுக்கப்பட்டபோதும், தமிழ் மகாவித்தியாலயங் கள் பல நகரங்களில் அமைக்கப்பட்டன. எனினும், 1960ஆம் ஆண்டின் பின்னர் பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்றதன் பயனகச் சமூக முன்னேற்ற உணர்வு, எழுச்சி பெறலாயிற்று. புதிய அபிவிருத்தித் திட்டங்கள், தாம் தமிழர் என்பதை உணர வழி வகுத்தது; அத்துடன் தமிழ் உணர்வைத் தீவிரமாக்கி அதிக தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் தேவை என்ற நிலைமையை, ஏற்படுத்தியது. மூன்று நான்கு சமூகங்கள் வாழுகின்ற சில மாவட்டங்களில், கூடிய வசதிகளைப் பெற வும் முடிந்தது i.
இதேவேளை அரசாங்க சிங்களப் பள்ளிக்கூடங்கள், தோட்டங் களுக்கு அண்மையில் இருந்தமையால் அவற்றில் சேரவிரும்பும் தமிழ் மாணவரை, ஏற்க மறுத்தன ; அல்லது அவர்கள் சிங்களமொழி மூலம் கற்க வேண்டும் எனக் கூறின. ஒருவேளை அவை தமிழ்ப்பள்ளிக் கூடங்களாக மாறி விடுமோ என்றும், தலைமையாசிரியர் பதவி தமிழரி டம் சென்று விடுமோ எனவும் சிறு காரணங்களையும், கூறினர். எனவே, தோட்டச்சிருர் தொடர்ந்தும் தோட்டப் பள்ளிக்கூடங்களி லேயே கல்வி பெற்றனர்.
தோட்டப் பள்ளிக்கூடங்கள் 19ஆம் நூற்றண்டிலே உதவி நன் கொடைத் திட்டத்தின் கீழிருந்தன. தோட்டச் சொந்தக்காரரே தோட்டப் பள்ளிக்கூடங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். கட்டடம், ஆசிரியர், தளபாடம் இவற்றுக்கு இவர்களே பொறுப்பாக இருந்தனர். அரச பரிசோதகர்கள் பரிசோதனை நடத்தி நன்கொடை வழங்கினர். 1952ஆம் ஆண்டுவரை இம்முறை வழக்கிலிருந்தது. 1974ஆம் ஆண் டின் பின்னர், மிகக் குறைந்தளவே நன்கொடை வழங்கப்பட்டது.
நிலச் சீர்திருத்தச் சட்ட த்தின் பிரகாரம் 1974ஆம் ஆண்டிலே எல்லாத் தோட்டங்களும் தேசியமயமாக்கப்படவே, தோட்டப் பள்ளிக்கூடங்களும் அரசுக்கே சொந்தமாயின. இன்று பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை - கைத்தொழில் அமைச்சின் நிர்வாகத்தில் தோட் டப் பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றபோதும், பழைய சொந்தக்கா ரரின் பொறுப்பே கூடுதலாகக் காணப்பட்டது. 1975ஆம் ஆண்டிலே 60 தோட்டப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.
53

Page 36
இதனைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டிலே இடம் பெற்ற இனக்கலவரம், தோட்டப் பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்குத் தடையா னது. அங்கு சென்று போதிக்கத் தகுந்த ஆசிரியர் கிடைப்பது அரிதாயிற்று.
இலங்கைச் சோசலிஷ் சனநாயக குடியரசின் 1979ஆம் ஆண்டுப் புள்ளி விபரத் தொகுப்பில், கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள்.
அட்டவனை 3 :5
தோட்டப் பள்ளிக்கூடங்களில் மாணவர் - ஆசிரியர் தொகை
Gas T's மாணவர் ஆசிரியர் ஆண்டு பள்ளிக்கூடங்கள் தொகை தொகை
தொகை
1975 720 58,64 1, 105
1976 725 50,816 984
1977 694 146,72 1,178
1978 336 26,23C
1980ஆம் ஆண்டு 317 தோட்டப் பள்ளிக்கூடங்கள் அரசினல் பொறுப் பேற்கப்பட்டன. 48 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஜ"ன் மாதத்திற்கு இடையில், அரசு தோட்டப் பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் பொறுப்பேற்றது. 49 1975ஆம் ஆண்டுக் காணிச் சீர் திருத்த நடவடிக்கைகளின் பின்னர் தோட்டப் பள்ளிக்கூடங்களில் ஏற்பட்ட முக்கிய மாற்றம், அவை கல்வித் திணைக்களத்தால் நிர் வகிக்கப்படவெனக் கையேற்கப்பட்டமையாகும். இவற்றைப் படிப்படி யாக அரசு கையேற்கத் திட்டமிட்டதுடன், இதற்கென இரண்டு மில் லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு கையேற்பதற்குச், சில நிபந்தனைகளே இப்பள்ளிக்கூடங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் இருந்தன. இதஞல் பல பள்ளிக்கூடங்கள் கையேற்கப்பட முடியாத நிலை, ஏற்பட்டது. எனினும், இதன் பின்னர் அண்மையில் இப்பள்ளிக்கூடங்களை அரசு கையேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
54

அட்டவணை 3 : 6
1980 ஆம் ஆண்டு பள்ளிக்கூட மதிப்பீட்டின்படி பள்ளிக்கூடங்களின் தொகை
பிரதேசங்கள் ಸ್ಧಿ-ಹೋಗಿ!
1. கண்டி (கிழக்கு) 9 2. கண்டி (மேற்கு) 42 மாத்தளை 18 4. நுவரெலியா 144 5. குருநாகலை 1
6. பண்டாரவளை 7.2 7. இரத்தினபுரி 33 8, t 39
மொத்தம் 358
| |
ஆதாரம் : பள்ளிக்கூட புள்ளிவிபரம் - 1980
இதனைத் தொடர்ந்து புனரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பிளளைகள் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டிய தூரத்தைக் கருத்திற் கொள்ளாது நடவடிக்கைகள் மேற்கொள்ளட்பட்டமையே, இவ்வாறு மூடப்படக் காரணமாயின. தூரம் அதிகரித்த காரணத்தால் பிள்ளைகள் பள்ளிக் கூடம் செல்லாது விட்டனர்.
தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வி தொடர்பான மேலெழுந் தவாரியான அபிவிருத்தித் திட்டங்களைப் பொறுத்த அளவில், முன் னைய திட்டங்கள் "யுனிசெப்” (Unicef) நிறுவன உதவியுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. 1972ஆம் ஆண்டில் தோட்டப் பள்ளிக் கூடங்களுக்கென ஒரு பிரிவு புறம்பாக அமைக்கப்பட்டது. 50 தோட்
55

Page 37
டப் பள்ளிக்கூடங்க%ள அரசு கையேற்கும் வேலையை இலகுவாக்கும் பொருட்டு, தோட்டப் பள்ளிக்கூடங்களை மதிப்பிடும் வேலை இப்பிரி வால் நடாத்தப்பட்டது. இக்காலத்தில், அரசாங்க முகாமையின் கீழ் 9 தோட்டப் பள்ளிக்கூடங்கள் கொண்டு வரப்பட்டன. இந்நடவடிக் கையின் பயணு, 15 ஆசிரியர்கள் அரசாங்கத்தின் கீழ் நியமனம் பெற் முர்கள், 35 பள்ளிக்கூடங்கள் மிகவும் வசதியீனங்களைக் கொண்டன வாக அமைந்தமையினல் அரசு அவற்றைப் பொறுப்பேற்காது, பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திடமும் ஜனதா அபிவிருத்திச் சபை யிடமும் ஒப்படைத்தது.
1981ஆம் ஆண்டின் வெள்ளையறிக்கை, இலங்கையின் கல்விய மைப்பில் பல வழிகளில் மாறுதல்களைப் புகுத்தியது. எனினும் தோட் டப் பள்ளிக்கூடங்கள் பற்றித் தனிப்பட்ட சிபார்சுகள் எதுவும், இவ் வெள்ளையறிக்கையில் இடம் பெறவில்லை. ஒருவேளை இவற்றை ஆரம் பக்கல்வி என்ற தொகுப்பினுள் அடக்கியிருக்கலாம் என, ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறு ‘தோட்டப் பள்ளிக்கூடம்" என்ற அமைப்பு 1980 ஆம் ஆண்டின் பின்னர் மறைந்து, அவையும் ஆரம்பக் கல்வி என்ற தொகுப்பினுள் அடங்கியபோதும் ஹட்டன், பொகவந்தலாவை, தல வாக்கொல்லை பிரதேசங்களில் 18 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. 51 எனவே, சுதந்திரத்தின் முன்னர் ‘கண்துடைப்பு"க்காகவேனும் ஆங் கிலேயர் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டனர் ; ஆணுல் சுதந்திரத் தின் பின்னர், ஆரம் பத்தில் தோட்டத் தொழிலாளர் பெற்று வந்த சிறிதளவு கல்வியும் சீர்குலைந்து வந்தது. எனலாம்.
56

இன்றைய நிலையும் பிரச்சினைகளும்
இலங்கையிலே கல்வியிலும், கல்வி வாய்ப்பிலும் தாழ்ந்த நிலை யில் உள்ளவர்கள் மலையக மக்களே. மலையக மக்களின் கல்லாமைக் கும், அரசியல் சூழ்நிலைக்கும் நேரடியான தொடர்புண்டு. தோட்டத் தொழிலாளர்கள் கல்வித்துறையிலே தீண்டப்படாதவர்களாகக் கரு தப்படுகின்ற காரணத்தால், உரிமைகள் பாதிக்கப்பட்ட போதும் நாடற்றவர்களாக்கப்பட்டபோதும் செயலற்றவர்களாக அல்லற்படுகின் றனா.
1880ஆம் ஆண்டளவிலே இலங்கையின் கோப்பித் தோட்டங் களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் தொழில் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டவர்களுள் பெரும்பாலானேர், கல்வியற்றவர்களா கவே இருந்தனர். இதனுல் இவர்களை எளிதில் ஏமாற்ற முடிந்தது;

Page 38
சுலபமாகச் சுரண்ட முடிந்தது. ஆகவே அவர்களுக்குக் கல்வியறிவு ஊட்டுவதுபற்றி எவரும் கவலைப்படவில்லை. ஒரு ஞாயிறன்று, கோப் பித் தோட்டமொன்றிலேயுள்ள கோப்பிச் சேகரிப்பு நிலையத்திலிருந்து இரைச்சல் கேட்டபோது, தோட்டத்துரையும் அவருடன் இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியாரும் சென்று பார்த்தனர். அப்போது சில தொழி லாளர் ஒன்றுகூடித் தமிழ் பைபிள் வாசிப்பதைக் கண்டார்களாம். அதன் பின்னரே தொழிலாளர் மத்தியில் கிறிஸ்தவர்கள் இருக்கின் முர்கள்; அவர்களுக்கு பைபிள் வாசிக்கின்ற அளவுக்குக் கல்வியறிவும் இருக்கின்றது என்று, கண்டுபிடிக்கப்பட்டது. இக் கண்டுபிடிப்பின் காரணமாக ஆரம்பத்தில் கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளிக்கூடங்களும், 1906 ஆம் ஆண்டின் பின்னர் ஒற்றை ஆசிரியத் தோட்டப் பள்ளிக் கூடங்களும் உருவாகின. படிப்படியாக கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்கள் வளர்ச்சி பெற்றன. தொடர்ந்து நகரங்களில் பெரிய கல்விக்கூடங்கள் தோன்றின. தோட்டப் பள்ளிக்கூடங்களோ அதே நிலையிலேயே இருந் தன. ஏனெனில், அவற்றுக்குப் பொறுப்பாக இருந்த தோட்ட நிர் வாகிகளுக்கு இப்பள்ளிக்கூடங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியமோ, அக்கறையோ, அவகாசமோ இருக்கவில்லை. அதுமட்டு மன்றி, தோட்டச் சிருருக்குக் கல்வியறிவு அதிகம் அவசியமில்லை என்ற கருத்தை வழங்கிய, பரோஸ் போன்ற அரசாங்க கல்வியதிகாரிகளும் இருந்தார்கள். இருபதாம் நூற்றண்டின் ஆரம்ப கட்டத்தில் இத்த கைய நிலை இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனல் ஆச்சரியம் என்னவென் முல், இருபதாம் நூற்ருண்டின் இந்த இறுதிக் காலகட்டத்திற் கூட அதே கருத்துடையவர்கள் இருப்பதுதான்.
தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளைப் பதினன்காம் வயதிலேயே தொழிலாளர்களாகப் பதிந்துவிடும் பழக்கம் இருந்ததி ஞல், ஐந்தாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்கும் வாய்ப்பும், சூழலும் இருக்கவில்லை. ஏழாம் எட்டாம் வகுப்புவரை நகரப் பள்ளிக்கூடங் களில் கற்றவர்களுக்குத் தோட்டங்களில் உத்தியோகத்தர் பதவி கிடைத்ததினலும், கல்வி வளர்ச்சி தடைப்பட்டது. இலவசக் கல்விக் காலம் வரை கல்வி வளர்ச்சி மிகவும் அருகியே காணப்பட்டது. 1945 ஆம் ஆண்டு இலவசக் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்தது. 1949ஆம் ஆண்டு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இலங்கையில், 1950ஆம் ஆண்டுக்கும் 1970ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், கல்வித்துறையில் அபரிமிதமான வளர்ச்சியேற்பட்டது. இக்கால கட் டத்தில், பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்திருந்ததினல்
58

மலையக மக்களின் கல்வியில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படுவதற்கான முயற்சிகள், மேற்கொள்ளப்படவில்லை; மேற்கொள்ளுவார் யாரு மில்லை.
1960ஆம் ஆண்டளவிலே தோட்டப் பள்ளிக்கூடங்களின் சீர் திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1975-76ஆம் ஆண்டுகளில் 250 தோட்டப் பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற் நீறது. 1 மொத்தப் பள்ளிக்கூடங்களில் 1/3 பங்கையே அரசு பொறுப் பேற்றது. ஆனல் கல்வித்தரம் உயரவில்லை. இன்னும் 2/3 பங்கு தோட்டப் பள்ளிக்கூடங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. இவை பற்றிப் பேச்சே இன்றுவரையில்லை. அத்துடன், கடந்த இருபது ஆண்டு களில் ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடமாவது புதிதாக உருவாக்கப்படவில்லை.
ஒரு சில சுவீகரிக்கப்பட்ட பள்ளிக்கூடங்கள் தவிர, நிலச் சீர் திருத்தச் சட்டத்தின் பிரதிபலிப்பாகச் சில பள்ளிக்கூடங்கள் மூடப்
பட்டன.
கண்டியில் எட்டுப் பள்ளிக்கூடங்களும்; களுத்துறை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா போன்ற இடங்களில் ஒவ்வொரு பள்ளிக் கூடங்களும் மூடப்பட்டன. 2 இதனல் ஏறத்தாழ 100,000 மாண வர் பள்ளிக்கூடம் செல்லவில்லை. சுவீகரிக்கப்பட்ட சில பள்ளிக்கூடங் கள் பெற்றேர்கள், பொதுமக்களின் பொருள் உதவியினல் தளபாடங் கள், கட்டடங்கள், ஏனைய வசதிகள் என்பவற்றைப் பெற்றதைத் தவிர அரசாங்கம் மலையகப் பள்ளிக்கூடங்களுக்காகச் செலவிட்ட தொகை மொத்தச் செலவில் 1%க்கும் குறைவானதேயென, இரா. சிவலிங் கம் தனது கட்டுரை ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார். 8 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசின் கல்விச் செலவு 20 கோடியாக இருந்தது; 1978ஆம் ஆண்டில் 80 கோடியாயிற்று. ஆனல் மலையகக் கல்விக்கா கச் செலவிடப்பட்டதொகை அனுமானப்படி, 10 இலட்சத்தில் இருந்து 20 இலட்சமாக அதிகரித்தது.4 ஆகவே, ஏறக்குறைய ஒரு நூற்ருண்டு காலமாக இத் தோட்டத் தொழிலாளரின் கல்வி வரலாறு, இருள் சூழ்ந்ததொன்ருகவே இருந்தது.
இன்று 10 இலட்சம் தோட்ட மக்களுள் 4 இலட்சம் பேருக்கு எழுத, வாசிக்கத் தெரியாது. ஆண்களில் 21%க்கும் பெண்களில் 60%க் கும் எழுத, வாசிக்கத் தெரியாது. ஆண்களில் 66% ஆரம்பக் கல்வி பெற்றவர்கள். பெண்களில் 37% ஆரம்பக் கல்வி பெற்றனர். இலங்கை முழுவதிலும் ஆண்களில் 10%மும் பெண்களில் 10%மும் கல்வியறிவற்
59

Page 39
ருேர். 5 இவற்றை ஒப்பிடும்போது, தோட்டப்பகுதியின் கல்வி பற்றி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. மலையக மக்களின் தாழ்ந்த கல்வி நிலைமைக்கு முக்கிய காரணம், அவர்கள் வாக்குரிமை அற்றவர் களாக இருப்பதுதான். இதனல், மலையக சமூகத்தின் வளர்ச்சியில் அர சாங்கம் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. பள்ளிக்கூடங்கள் இன்மை, ஆசிரியர்கள் இன்மை, ஆசிரியர்கள் இருப்பினும் அவர்களின் அக்கறை யின்மை, இவையே இந்த இருள் சூழ்ந்த நிலைக்குக் காரணங்களாகும்.
1970ஆம் ஆண்டளவில் தோட்டப் பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்கும் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அகில உலகக் குழந்தைகள் நிதி ஸ்தாபனம் இப்பள்ளிக் கூடங்களுக்கான தளபாடங்களை வழங்க முன்வந்தது. ஆனல் இவற்றை தோட்டப் பள்ளிக்கூடங்கள் பெறுவதை விரும்பாத சில நிர்வாக அதி காரிகள், சிறு பள்ளிக்கூட அபிவிருத்தித் திட்டமொன்றைக் கொண்டு வந்து, இவ்வுதவி தோட்டப் பள்ளிக்கூடங்களை இன்றுவரை எட்டாது தடுத்துவிட்டனர்.6 தோட்டப் பள்ளிக்கூடங்களைப் பொறுப்பேற்கும் பணிகள் தாமதப்பட்டாலும், அப்பள்ளிக்கூடங்களில் அரசாங்கப் பாடத்திட்டங்களை உடனடியாகப் புகுத்த வேண்டும் என்று, சென்ற அரசின்போது மந்திரி சபைக்கு ஒர் ஆலோசனை மனு அனுப்பியதை, மந்திரிசபை நிராகரித்தது. ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக ஆறு பல்கலைக்கழகங்களை உருவாக்கிய அரசு, தோட்டப் பள்ளிக்கூடங்களை பொறுப்பேற்கவோ அல்லது போதிய ஆசிரியர்களை நியமிக்கவோ, முன்வரவில்லை. இன்றைய மலையகத்தில், பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பருவத்தில் ஏறக்குறைய ஒரு இலட்சம் சிறுவர்கள், பள்ளிக்கூடம் செல்லாது இருக்கின்றார்கள். 3ஆம், 4ஆம் வகுப்பிலேயே 50%க்கும் மேற்பட்டோர் விலகி விடுகின்றனர். இவற்றினை அடிப்படையாகக் கொண்டு நோக்கின், தோட்டத்துறையில் மிகச் சிறிய அளவிலேயே அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட அம்சங்களுள், கல்வி முக்கியமானது என்பது புலணுகும்.
இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட எல்லா முக்கிய கல்விச் ஒர்திருத்தங்களும், ஒரு சிறிதளவேனும் தோட்டத்துறையை உள்ள டக்கவில்லை.
1948ஆம் ஆண்டிலே இலங்கையில் தோட்டப் பள்ளிக்கூடங்க ளின் எண்ணிக்கை 993. பின்வரும் அட்டவணை, எவ்வாறு இத் தொகை குறைவடைந்து வந்துள்ளது என்பதைக் காட்டுகிறது
60

வருடம் தோட்டப்
கூடங்களின் கொகை
1948 993
1968 968
1971 857
973 − 774.
1974 768
1976 725
1981 639
−
1948ஆம் 1981ஆம் ஆண்டுகளுக்கிடையில், பள்ளிக்கூடங்களின் தொகை குறைந்து செல்வதைக் காணலாம். 1971ஆம் ஆண்டிற்கும் 1981ஆம் ஆண்டிற்கும் இடையில், 218 பள்ளிக்கூடங்கள் மூடப் பட்டன. தற்போதைய அரசாங்கத்திலே 86 பள்ளிக்கூடங்கள் மூடப் Lull-t-60T. 73 பள்ளிக்கூடங்கள் ஆசிரியர் இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டன; 7 இங்கு கற்பித்த ஆசிரியர்கள் பயிற்சிக் கலாசா?லக்குச் சென்ற பின்னர், அவர்களுக்குப் பதிலாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தமிழ்ப் பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரையில் இரு வகையான. பள்ளிக்கூடங்களைக் குறிப்பிடலாம்.
i, மலையக மத்தியதர வகுப்பினருக்கான பள்ளிக்கூடங்கள்.
i. தொழிலாளரின் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள்.
மத்தியதர வகுப்பினருக்கான பள்ளிக்கூடங்கள் மிஷனரிமாரின லும்,தனியாராலும்,சில பெற்றேராலும் அமைக்கப்பட்டன. ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்திலே, 1963ஆம் ஆண்டிலே பள் ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்றல் என்ற பெயரில், பல பள்ளிக் கூடங்கள் சிங்கள மயமாக்கப்பட்டன. ஒரு பள்ளிக்கூடத்தில் எந்த இன மாணவர் கூடுதலாக கல்வி பெறுகின்றனரோ அவர்களது மொழி
61

Page 40
யையே அடிப்படையாகக் கொண்டு, அரசு பொறுப்பேற்றதன் பின்னர் மாற்றம் பெறும் எனக் கூறப்பட்டபோதும், தமிழ் மாணவர்கள் கூடு தலாகப் பயிலும் பல பள்ளிக்கூடங்கள் பிரசாவுரிமையற்றேர் என்ற காரணத்தால் அவர்களைத் தவிர்த்து விட்டு, சிங்களவரோ முஸ்லிம் களோ பெரும்பான்மையாக இருப்பதாக சிங்கள அல்லது முஸ்லிம் பள்ளிக்கூடங்களாக, மாற்றப்பட்டன. இதற்கு முகலை, பதுளை, தல வாக்கொல்லை பகுதிகள் சிறந்த உதாரணங்களாகும். இப்பள்ளிக்கூடங் களிற் சில, தமிழ்ப் பெற்றேரால் அமைக்கப்பட்டவை.
அடுத்த பிரிவு, தோட்டத் தொழிலாளருக்கான பள்ளிக்கூடங் கள். இவை ஒரு அறை, ஒரு ஆசிரியர், 1ஆம் வகுப்புத் தொடக்கம் 5ஆம் வகுப்புவரையான கல்வி வசதி என்பவற்றை உள்ளடக்கின வாகும்; சிறைக்கூடத்தைவிட, மாட்டுத் தொழுவத்தைவிட மோச மானவை. அந்தக் காலத்தில் தோட்ட நிர்வாகிகள், தொழிலாள ருடைய குழந்தைகள் தேயிலைச் செடிகளை மிதித்து நாசப்படுத்திவிடா மல் தடுக்கும் பொருட்டு, கல்விக்கூடம் என்ற பெயரில் அடைத்து வைத்த சிறைக்கூடமே இப்பள்ளிக்கூடங்கள் - 75க்கு மேற்பட்ட மாண வர்களை ஒரு ஆசிரியர் "மேய்க்க” வேண்டிய நிலைமை. உதாரணமாக, 1982ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வலப்பனைத், தேர்தல் தொகுதி யில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி 1 ஆசிரியர் : 5 வகுப்பு கள் கொண்ட பள்ளிக்கூடங்கள், 8 இருந்தன. இங்கு ஒரு ஆசிரியருக் கான மாணவர் வீதம் 113.25 ஆக இருந்தது. 8
1980ஆம் ஆண்டிலே அரசு, 58 பள்ளிக்கூடங்களைவிட ஏனைய வற்றைப் பொறுப்பேற்றது. அவை தேசிய கல்வித்திட்டத்தின் கீழ் இடம்பெற்று, பின்னர் மூடப்பட்டன.
மலையக வெகுஜன இயக்கச் செயலாளர் பி. ஏ. காதர் என்பவ ருடைய ஆய்வின்படி பெறப்பட்ட சில விபரங்களை, நாம் இங்கு எடுத்து நோக்கலாம். இவ்வாய்வு, மலையகத் தமிழர் கூடுதலாக வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
இந்த அட்டவணையின்படி 36.16%மான சிங்கள மக்களுக்கு 49%மான, நல்ல வசதியுடன் கூடிய பள்ளிக்கூட வசதி; அவையும் 10ஆம் வகுப்பு வரையுள்ளன. ஆணுல், குடித்தொகையில் 64%மான தமிழ் மாணவர்களுக்கு 51% பள்ளிக்கூடங்களே; அவையும் 5ஆம் வகுப்பு வரையுள்ள ஆரம்பப் பள்ளிக்கூடங்கள். இதிலிருந்து, தோட்டத் தொழிலாளருடைய கல்வி எங்ஙனம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது
62;

J9H i"L-6huösöo 4 : 1
நுவரெலியா மாவடடத்தின் சனத்தொகைக் கல்வி
umistemu
帕。
昭 E 8
경 •8 is S 雕赛 3 疆藤制 薛盛| s ぼ ゆ s S. s G. S. S. 占 $ s
(9 S C3 a Sfa || S. G5
சிங்களவர் - 187,280
பறங்கியர் - : 602 || عمر
Jčko (8umrtř 924
சிங்களவர் 188,806 | 36.16 43,000 | 50.1 27.1 195 | 48.8
தமிழர் 70,471
இந்தியத் -
தமிழர் 247,131
முஸ்லிம் 14,668
மலாயர் 1,113
தமிழர் 333,383| 63.84| 42,000 | 49.9 | 55.1 205 | 51.2
ஆதாரம் : பி. ஏ. காதரின் ஆய்வு.
என்பதை, நாம் உணரலாம். அத்துடன் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் அதிகமாகவுள்ள நுவரெலியா மாவட்டத்திலே, கல்வித் திணைக்களத் தில், வட்டாரக் கல்வியதிகாரியை விட வேறு ஒரு உயரதிகாரியும் தமிழராக இல்லை; இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை 4 2 ஐ நோக்கினல் புலணுகும். தமிழருக்காக இங்கு 2 வட்டாரக் கல்வியதிகாரி
63

Page 41
களே கடமையாற்றுகின்றனர். நுவரெலியாக் கல்விப் பகுதியை எடுத் துக் கொண்டால் அங்குள்ள 20 எழுதுவினைஞர்களுள், 4 பேரே தமிழர். இவர்களைவிட பணியாள்களில் (Peons) ஒருவர் முஸ்லிம், தோட்டத் தொழிலாளர் ஒருவரும் சுகாதார ஊழியர் (Sanitary Labourer) ஒரு வரும் தமிழராவர். ( ஆதாரம் : அட்டவணை 4 : 2). இந்நிலையில் தோட்டத் தொழிலாளரின் கல்விப் பிரச்சினையைத் தீர்க்க முன்வரக் கூடியவர்கள் கல்வித் திணைக்களத்தில் ஒருவருமில்லை. இத்தகைய நிலை மைக்குக் காரணம், அரசாங்கத்தின் அக்கறையின்மையேயாகும்.
அட்டவண்ை 4 : 2
கல்வித் திணைக்களம் - நுவரெலியா அலுவலர் தரம் உள்ளோர் வெற்றிடங்கள் பதவி
1. பணிப்பாளர் 1 2. பிரதம கல்வி அதிகாரி 3. கல்வி அதிகாரி 2 2 4. வட்டாரக் கல்வி அதிகாரி 5. வட்டாரக் கல்வி அதிகாரி 5
(சிங்களம்) வட்டாரக் கல்வி அதிகாரி 2 ---
(தமிழ்) கல்விச் சேவை (கல்விஅதிகாரி) 6. சிறப்புத்துறை - விஞ்ஞானம் I 7. 9s ஆங்கிலம் t +-r=uk 8. , சங்கீதம் -- 9. 9 நுண்கலை ra O as விவசாயம் -- I. 9 உடற்கல்வி naam 12. வணிகம் mua 13. P கைப்பணி brunn 14. 99 நடனம் vM- 0. l5. 99 மனையியல் Ο 16. வளர்ந்தோர் கல்வி அதிகாரி 02 02 17. அங்கக் குறைபாடுடையோர்
கல்வி அதிகாரி a' -- a- Ol 18 நலன்புரி கல்வி அதிகாரி 0. mana

நிர்வாகப் பிரிவு உள்ளோர் வெற்றிடங்கள்
1. நிர்வாக அதிகாரி O - 2. பிரதம எழுதுவினைஞர் -- 0 3. எழுது வினைஞர் 20
கட்டடப் பகுதி
1. பொறியியலாளர் 2. பாடசாலை வேலைப் பரிசோதகர் 1. 3. எழுதுவினைஞர் 2 I 4. மேற்பார்வையாளர் 6 mnam a
கணக்குப் பகுதி
1. கணக்காளர் auru 0 2. நிதி உதவியாளர் 0. Ol 3. கணக்கு எழுதுவினைஞர் 07
4. சம்பள எழுதுவினைஞர் 12 daun 5. ஆவணக் é5 Turt GTsi Ol nnnnnnn 6. உதவிக் காப்பாளர் 0. • 7. கடன்சபை எழுதுவினைஞர் 01 8. வழங்கல் எழுதுவினைஞர் 02 9. பணியாள் O2 mewn 10. சிற்றுாழியர் 0፲ 03 11. சுகாதார ஊழியர் 0. Men 12. தோட்ட ஊழியர் 0. --- 13. தொலைபேசி இயக்குநர் - --- 14. களஞ்சியப் பொறுப்பாளர் 0. 15. களஞ்சிய உதவியாளர் 0 __^W. 16. சுருக்கெழுத்தாளர் 01. --- 17. தட்டெழுத்தாளர் (சிங்களம்) 03 - 18. தட்டெழுத்தாளர் (ஆங்கிலம்) 0 ܚ ܚ. 19. தட்டெழுத்தாளர் (தமிழ்) O 20. சாரதிகள் 01 O2 21. காவல்காரர்கள் 0. བསམས་ 22. துவிச்சக்கரத் தூதுவர் Зёмнан O 23. புத்தகங் கட்டுநர் Új - 24 கணக்குப் பதிவாளர் 04 - 25. சிருப்பர் w 01
65

Page 42
பி. ஏ. காதர் என்பவரின் ஆய்வின்படி, நுவரெலியா மாவட் டத்தில் வலப்பனை என்ற இடத்தில் 25 பள்ளிக்கூடங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று மகாவித்தியாலயம். இங்குள்ள மொத்த மாணவர் தொகை 4,685 ஆகும். 1 ஆசிரியருக்கு 72 மாணவர்கள். இங்கு உடனடியாக 46 ஆசிரியர்கள் தேவை. இந்த 25 பள்ளிக்கூடங்களுள் 15 பள்ளிக்கூடங்களுக்கு மலசலகூட வசதியில்லை. ஒரு ஆசிரியர் உள்ள பள்ளிக்கூடங்களில், அந்த ஒரு ஆசிரியர் விடுமுறையிற் செல்ல வேண்டு மாயின் பள்ளிக்கூடத்தையே மூட வேண்டிய நிலைமை ஏற்படும். உதா UT GOOTLDTT 5 High Forest Division ug Guadiv s SF fiulurf ஒருவர் மாற்ற லாகிச் சென்ற பின்னர், அந்த வெற்றிடம் இதுவரை வேருெரு ஆசி ரியரால் நிரப்பப்படவில்லை. எனவே இப்பள்ளிக்கூடம் மூடப்பட்டது. (1981இல் நடந்த நிகழ்ச்சி).
16-5-83 மாலை ஆறுமணி வானெலிச் செய்தியில் அமைச்சர் காமினி திசநாயக்கா அவர்களின் கூற்றுப்படி, இலங்கையில் கல்வி அறிவுள்ளோரின் தொகை 82% ஆனல் இது தோட்டத் தொழிலா ளர் மத்தியில் தலைகீழாக உள்ளது. இவர்களில் 80%மானேர் கல்வி யறிவு அற்றேர். தோட்டத்துறையில் 5வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட கல்விவயதில் 66.7 வீதத்தினர் பள்ளிக்கூடம் செல்வ தில்லை. இதில் ஆண்கள் 51.4% பெண்கள் 72.0%த்தினர் (பி. ஏ. காதரின் ஆய்வுப்படி). தோட்டத்துறையில் 38.8%த்தினருக்கு (ஆண் 27.9% பெண் 49.8%) கையெழுத்துக்கூட வைக்கத் தெரி tuft gy.
33.4%த்தினருக்கு (25.6% ஆண்கள்; 41.2% பெண்கள்) கையெழுத்து மாத்திரமே வைக்கத் தெரியும்; எழுத வாசிக்கத் தெரி யாது. எனவே 72.2%த்தினர் கல்வியறிவு அற்ருேர் (நுவரெலியா மாவட்டத்தில் பி. ஏ. காதர் நடத்திய ஆய்வின்படி).
அட்டவணை 4 : 3, 4 : 4 என்பவற்றிலிருந்து தோட்டத்துறையில் 560aflgFL or 6 o'r பகுதியினருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதுடன், பெரும் பகுதியினர் ஆரம்பக் கல்வியை மட்டுமே பெற்றனர் என்பது வும் தெளிவாகின்றது. மலைநாட்டில் இருந்து பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவரின் எண்ணிக்கையோ மிகவும் குறைவானதாகும். 1967ஆம் ஆண்டிலே பல்கலைக்கழக அனுமதியில் இந்தியத் தமிழர் களின் வீதாசாரம் 0.1 வீதமாகும். பத்தாயிரம் பல்கலைக்கழக மான வர்களுள் 25 பேர் மட்டுமே இந்தியத் தமிழர்களாக உள்ளனர்.
66

அட்டவணை 4 :3
கல்வியறிவு - வீதாசாரம்
ஆண் பெண் மொத்தம்
கையெழுத்துப் போடத் | தெரியாதவர்கள் - 22% 57% 39.5%,
ஆரம்பக் கல்வி
3ஆம் வகுப்புவரை 29% 27% 28.49%, 5ஆம் வகுப்புவரை 39.02% 14% 26.5%
இரண்டாம்
நிலைக்கல்வி -
8ம் வகுப்புவரை 9% 2% 5.5% 10ம் வகுப்புவரை .008% .00% .004% 12ம் வகுப்புவரை .00% .00% .00%
(பி. ஏ. காதரின் ஆய்வு)
தோட்டத் துறையில் ஒரு பெண்கூட இதுவரை பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறவில்லை. தோட்டப் பெண்களில் 51.8%த்தினர் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள். 9
மறுபக்கத்திலுள்ள அட்டவணையின் பிரகாரம் கிராம - நக ரங்களுக்கு இடையில் வித்தியாசம் மிக அதிகமானதல்ல. ஆனல் தோட்டப் பகுதியைப் பொறுத்த வரையில் கல்வி மிகவும் கீழ் மட் டத்திலேயே காணப்படுகின்றது. இந்த நிலைமைகள் அண்மையில் மிக வும் மோசமடைந்துள்ளன. பொதுவாகத் தோட்டத்துறையில் 5ஆம் வகுப்பு வரையுமே கல்வி பெறப்படுகின்றது.
61

Page 43
அட்டவணை 4 : 4
கல்வி மட்டங்கள் - வீதாசாரம்
இலங்கை நகரம் Jfr Dub தோட்டம்
பள்ளிக்கூடம்
செல்லாதோர் 17.5 16 5.8 39, 9 2. ஆரம்பக் கல்வி
பெறுவோர் 44。6 37.8 45.4 51.0
3. இடைநிலைக்கல்வி " . . . . . .Y
பெறுவோர் 30.4 37.9 3.7 8.8 4. க. பொ. த.
(சாதாரணம்)
சித்தியடைந்தோர் 6.6 11.0 6.3 1.3 5. க. பொ. த.
(உயர்தரம்)
சித்தியடைந்தோர் 0.9 1.0 0.8 0.0
ெேமாத்தம் 100.0 1000 100.0 1 00.0
Source:- Socio Economic Survey, 1969/70 Parliamentary Report
Oct. 1971. Table - 7. 1
அட்டவணை 4 : 5
பள்ளிக்கூடம் செல்லாதோர்
இலங்கை நகரம் கிராமம் தோட்டம் (ւp(ԼքճաՑIւt;
ஆண் 11.6 7.2 10.4 26.8
பெண் 23.4 157 21.2 5.8
மொத்தம் 17.5 1.4 15.8 38.9
Source : Socio Economic Survey - 169/70
68

அட்ட்வணை 4 : 6
படிப்பறிவு - 10 வயதுக்கு மேல் (%)
இலங்கை நகரம் கிராமம் (35 T. Lo முழுவதும்
82.6 88.7 84.3 61.2
Source:- Socio Economic Survey, 1969/1970
Parliamentary Report 1971 Oct. P. S. Table - 6.0
இவ்வட்டவணைகளின் பிரகாரம் தோட்டத்துறையில் கல்வி எங் வனம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அத்து டன் பள்ளிக்கூடத்தொகையை நோக்கின் அவையும் சிங்களப் பள்ளிக் கூடங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே.
gL-66 4 : 7
தோட்டப் பகுதியின் ஆசிரிய, மாணவ, பள்ளிக்கூடத் தொகை
۔۔۔۔۔ ساہیےـ
வருடம் பள்ளிக்கூடத் மாணவர் ஆசிரியர் ஒரு ஆசிரியருக்குரிய
தொகை தொகை தொகை மாணவர் தொகை
1973 774 74, 376 l, 219 40, 8
1974 770 62, 517 1975 720 58, 6 1 4 1, 105 53、0
1976 725 50, 816 984 52.0
Source:- Socio Economic Survey, 1969/1970. Department of Census
& Statistics - From Economic Review 1980 March.
நுவரேலியா மாவட்டத்தில் 40 தோட்டப் பள்ளிக்கூடங்களில் 10ஆம் வகுப்பு இல்லை. 19 பள்ளிக்கூடங்களில் 8 ஆம் வகுப்புக்கு மேல் இல்லை. 9 பள்ளிக்கூடங்கள் 5ஆம் வகுப்பு வரையும் உள்ளவை. 12
69

Page 44
பள்ளிக்கூடங்கள் நகரங்களுக்கு அண்மையில் இருந்தமை குறிப்பி டத்தக்கது - நகரங்களில் இருந்து ஐந்து மைல் தூரத்திற்குள் இருந் தன. இவ்வாறு தோட்டக் கல்வியானது தனியே பொருளாதாரத் தைப் பொறுத்து குறைவடைந்து செல்லுவதோடு, நகரங்களுக்கும் தோட்டங்களுக்கும் இடையேயுள்ள தூரத்தைப் பொறுத்தும் குறைந்து செல்கின்றது நகரங்களில் இருந்து உள்நோக்கி - தோட்டத்தினை நோக்கிச் - செல்லச் செல்ல கல்விக்கும் மாணவருக்கும் உள்ள தூரமும் அகன்று செல்லுகின்றது. இடைநிலைக் கல்விப் பள்ளிக்கூடங்கள் தோட் டங்களில் இருந்து 10, 15 மைல் தொலைவில் நகரங்களுக்கு அண்மை யில் இருப்பதால், அன்ருட உணவைத்தானும் தேவையான அளவு பெறமுடியாத நிலையில், போக்குவரத்துக்காகச் செலவிடக்கூடிய நிலையில் தோட்டத் தொழிலாளர் இல்லை. ஆகவே நகரத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் தோட்டம் அமைந்துள்ளதோ அதே போல, கல்விக்கும் தொழிலாளருக்கும் இடையேயுள்ள தூரமும் அதிகரித்தே செல்கின்றது.
எனவே இத்தகைய அம்சங்களின் அடிப்படையிலே தோட்டக் கல்வியின் இன்றைய அமைப்பினைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளை அடிப்படைப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எனப் பிரித்து ஆராயலாம். t
பிரச்சினைகள்
பெருந்தோட்டங்களில் தொழிலாளர் எதிர்நோக்கிய பிரச்சினை கள் பல. ஆணுல், அவர்களைப் பெருமளவு பாதித்தது கல்வியமைப்பே. கல்வியுடன் இணைந்த பிரச்சினைகளே பெரும் பிரச்சினைகளாக இருந் தன.
நாம் முன்னர் குறிப்பிட்டதைப் போலத் தோட்டக்கல்வியின் பிரச்சினைக்கான காரணங்களை, இரு பெரும்பிரிவுகளுள் அடக்கலாம். 1. சமூகப் பிரச்சினைகள். 2. அடிப்படைப் பிரச்சினைகள்.
-சமூகப் பிரச்சினைகளுள், தோட்டத் தொழிலாளரின் மனப் பாங்கு, வாழ்க்கை நிலை, வருமானப் பற்ருக்குறை என்பன இடம் பெறுகின்றன. அடிப்படைப் பிரச்சினைகளுள் பள்ளிக்கூடப் பற்றக் குறை, தளபாடப்பற்ருக்குறை, ஆசிரியர் இன்மை, ஆசிரியருக்குரிய வசதி கள் சலுகைகள் இன்மை, இதனேடு இணைந்து ஆசிரியரின் கவனயீனம் என்பனவும் பாதிக்கின்றன. மாணவர்களைப் பொறுத்தவரையில் கல்வி யில் அக்கறையின்மையும், இடைநிறுத்தமும் முக்கிய இடத்தை வகிக்கின்
70

றன. இவற்றின் அடிப்படையில் அரசு எடுத்த முயற்சிகள் பல பய னற்றுப் போனமைக்குக் காரணமாக தொழிலாளர், முதலாளிமார் அல்லது நிர்வாகிகள், அரசின் போக்கு, தேவாலயம், இலங்கை மக் கள், தோட்டத் தொழிலாளர், அவர்களின் தலைவர்கள் போன் ருேரையே கூறவேண்டும்.
இவற்றையெல்லாம்விட நாம் முக்கியமானதாகக் குறிப்பிடும் இன்னுமொரு அம்சம், குறைவிருத்தி நாடுகள் எல்லாவற்றிலுமே காணப்படும் பள்ளிக்கூட இடைநிறுத்தலாகும். இத்தன்மை தோட் டப் பகுதிகளில் கூடுதலாகவே இடம்பெறுகின்றது.
தோட்டத்துறையைப் பொறுத்தவரையில் கல்வியின் ஆரம்பம் தோட்டங்கள் திறக்கப்பட்டதுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு காணப்படுகின்றது. பள்ளிக்கூடங்கள் தோட்ட நிர்வாகங்களாலேயே நடாத்தப்பட்டன. உண்மையாக கல்வி வழங்குவதன்றி, பகல் நேரங் களில் பெற்முேர் வேலைக்குச் செல்லும் காரணத்தால் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு, இப் பள்ளிக்கூடங்களிற்கே உரியதாகக் காணப்பட்டது.
தோட்டப்பகுதிகளில் 'பள்ளிக்கூடம்" எனப் பேயர் பெற்றவை, காற்றுப்புகாத, இடையில் பிரிவுச் சுவர்களற்ற தனியொரு மண்ட பமே. மிகச் சிறந்த பள்ளிக்கூடம் என இவை பெயர் பெற்றன. ஒரு பள்ளிக்கூடம் இவ்வாறுதான் அமைய வேண்டும் எனத் தோட்டங் கள் அமைத்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டே, இன்றும் தோட்டப் பள்ளிக்கூடங்கள் காணப்படுகின்றன. ஏனைய பள்ளிக்கூடங்கள் கோயில்கள், பிள்ளை மடுவம்" என அழைக்கப்படும் பாலர் விடுதிகள், ஸ்டோர் அறைகள் போன்றவற்றுக்கு அருகேயுள்ள அரைச்சுவரினல் ஆக்கப்பட்ட கொட்டில்களில் இயங்குகின்றன. இவை காற்ருேட்டம் என்ற பெயருக்கே இடம் இல்லாதவை; இருட்டான வையாக, நெரிசல் மிக்கனவாகக் காணப்படுகின்றவை. பிள்ளைகளின் - அதுவும் சின்னஞ்சிருரின் சுகாதாரத்திற்கு இவை எவ்வகையிலும் பொருத்தமானவையல்ல. தளபாடங்களும் இதேபோன்ற நிலையில் தான். இருக்கைகள் போதாமையால் பிள்ளைகள் நெருக்கிக்கொண்டு அமருமாறு நிர்ப்பந்திக்கப்படுவதுடன், தரையிலும் அமர்ந்திருக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. கரும்பலகையோ, வெண்கட்டி களோ, அன்றி உலகப்படங்களோ, மற்றும் ஏனைய கட்புலச் செவிப் புல உபகரணங்களோ இங்கில்லை. சில வேளைகளில் வார இறுதி நாட் களில் இப்பள்ளிக்கூடங்கள் சந்தைகளாகவோ, அன்றி ஆடுமாடுகளை அடைக்கின்ற பட்டிகளாகவோ மாறுகின்ற நிலைமையும் இங்குண்டு,
71

Page 45
ஆரம்பக் கல்வி :
தோட்டப் பகுதிகளைப் பொறுத்தவரையில் இவை பண்படுத் தப் படாதனவாக இருக்கின்றன. 1948ஆம் ஆண்டின் பின்னர் எந்த வொரு ஆரம்பப் பள்ளிக்கூடங்களும் புதிதாக அமைக்கப்படவில்லை. 968 தோட்டப் பள்ளிக்கூடங்களில், கல்விபெறும் வயதை அடைந் துள்ள 88, 475 மாண்வர்களுள் 51, 431 மாணவர்கள் கல்வி பெற் றனர் என, 1948ஆம் ஆண்டு நிர்வாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளதாக ஞானமுத்து குறிப்பிட்டுள்ளார். 12 1955ஆம் ஆண்டு இப்பள்ளிக்கூடங்களின் தொகை 891 ஆகக் குறைந்தது. 1972ஆம் ஆண்டு 779 பள்ளிக்கூடங்களே இருந்தன. 771 தமிழ்ப் பள்ளிக்கூடங் களும் 8 சிங்களப் பள்ளிக்கூடங்களும் இவற்றுள் அடங்கின. இதே வேளையில் மாணவர் தொகையும் குறைந்துகொண்டே வந்துள்ள மையைக் காணலாம். 4, 672 தோட்ட மாணவர்கள் 1977ஆம் ஆண்டு கல்வி பெற்றுள்ளனர். 13 பள்ளிக்கூடங்களின் தொகையும், பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் மாணவர் தொகையும் தோட்டத் துறையைப் பொறுத்தவரையில் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்துள்ளன. இவற்றுக்கான காரணங்கள் 1964ஆம், 1974ஆம் ஆண்டு களில் நடைபெற்ற இந்திய - இலங்கை உடன்படிக்கைகளும், அவற்றின் பயனுன இந்தியக் குடியகல்வும்; அதனைத் தொடர்ந்து 1973ஆம் ஆண்டிலே உணவுப் பற்ருக்குறை; இதனைத் தொடர்ந்து அரசு நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தோட்டங்களைப் பொறுப்பேற்ற மையுமாகும். பல பிள்ளைகள் பள்ளிக்கூடங்களிற்குச் செல்வது நிறுத் தப்பட்டு வீடுகள், கடைகளில் வேலைக்கு விடப்பட்டனர். அத்துடன், தோட்டங்களை அரசு பொறுப்பேற்றதுடன் பல பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன; சில, சிங்களப் பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டன.
பல இடங்களிலே தமிழ்ப் பள்ளிக்கூடங்கள், அரசாங்க பள்ளிக் கூடங்கள் இல்லை. முஸ்லிம் மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பிரிவு இருந்தது; குறிப்பிட்டளவு மாணவரே சேர்க்கப்பட்ட னர். ருெபரி (Rabury), பதுளையிலிருந்து 38 மைல் தூரத்திலுள்ள மொனரு கலை, மதுள்சீமா, நமுனுகுல தொடக்கம் பண்டாரவளைவரை யும் ஹொரணையில் இருந்து அளுத்கம வரையும்; கொத்மலை, பொக வத்தை, கம்பளை தொடக்கம் மாத்தளை வடபகுதிவரை தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் இல்லை. 14 உதாரணமாக வெலிமடை தமிழ் மகா வித்தி யாலயம் இரண்டு அரைச்சுவர்க் கட்டடமாகக் காணப்படுகின்றது. அத்துடன் 1937ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பள்ளிக்கூடம் பிரதான வீதிக்கு மிக அண்மையில் உள்ளமையால், வார இறுதி
72

நாட்களில் இங்கு சந்தை கூடுகின்றது. 15 கனிஷ்ட பகுதியும் அரைச் சுவரிலான கட்டடமே. அதுவும் அபாயகரமான நிலையில் ஆற்றுக்கு அண்மையில் அமைந்துள்ளது 1975ஆம் ஆண்டிலே ஏற்பட்ட வெள் ளத்தின் பயணுக தளபாடங்களுடன் வெளியேறவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இங்கு 300 மாணவர்களும் 200 மாணவிகளும் 16 ஆசிரி யர்களும் உள்ளனர். 16
சில இடங்களில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் வேறு சமூக மாண வர் கற்கும் நிலையில், தலைமைப்பதவி தமிழரல்லாதோரிடம் அளிக் கப்பட்ட காரணத்தால், தமிழ் மாணவர் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலைமையைக் காணலாம். உதாரணமாக ஹாலி - எல என்ற இடத் திலுள்ள தமிழ்ப் பள்ளிக்கூடத்தை முஸ்லிம் பள்ளிக்கூடமாக மாற்றி யமையால், இங்கு நாடற்ற பிள்ளைகளுக்கு அனுமதியில்லை.
வெலிமடையைப் பொறுத்தவரையில் தரமான மத்திய மகா வித்தியாலயம் - இலங்கையிலேயே பெயர்பெற்ற பள்ளிக்கூடம் உண்டு. ஆனல் அது சிங்களப் பள்ளிக்கூடம்; அங்கு விஞ்ஞான உபகரண வச தியுண்டு. ஆனல் தமிழ்ப் பிரிவுக்கு இவையில்லை. தோட்டப்பகுதியில் மலை நாட்டிலேயே தமிழ் மாணவர்களுக்கு மத்திய மகாவித்தியால பம் இல்லை. தொழிற்கல்வி வசதியோ, விடுதி வசதியோ இல்லை. தென் மாகாணத்திலும் இந்நிலைமைதான் காணப்படுகின்றது. முழு ஊவா மாகாணத்திலுமே பண்டாரவளை சென். ஜோசப் கல்லூரியில்தான் உயர்தர விஞ்ஞானவகுப்பு உண்டு. இங்கு கல்வி பெற ஹட்டன், நுவரெலியாவிலிருந்துகூட மாணவர் வருகின்றனர். இங்கும் விஞ் ஞான ஆய்வுகூட வசதியில்லை.
சில இருமொழிப் பள்ளிக்கூடங்களிலே, மாலை நேரங்களில் தமிழ் வகுப்பு நடைபெறுகின்றது. இதனுல் விளையாட்டிற்கோ அல்லது வேறு செயற்பாட்டிற்கோ நேரமில்லை. அத்துடன் சிறுவயதினர் நீண்ட தூரங்களில் இருந்து வருவதால் வீட்டிற்குச் செல்ல அதிக நேரம், எடுக்கின்றது. அத்துடன் சில பள்ளிக்கூடங்களிலே, உதாரணமாக சுமண மகாவித்தியாலயம் - தலவாக்கொல்லையில் கீழ் வகுப்பு அறை களே உயர்வகுப்பு மாணவர்கள் உபயோகிக்கக் கொடுக்கப்பட்டுள் ளன. இதல்ை உயரமான மாணவர், கூனிக்குறுகி இருந்து எழுத வேண்டிய நிலைமையும் காணப்படுகின்றது, இந்நிலையிலும் கூட இங்கு 99 சதி வீதத்தினர் தோட்டக் குடிகளே. இங்கு இரு சிங்கள மகாவித் தியாலயங்களும் ஒரு முஸ்லிம் மகாவித்தியாலயமும் உண்டு. 17 எனி Sgitho I 9799)6ão g) rắi i “usSuņ6v Gör GTGvGBL "’uqổv (Middleton Estate) ஒரு தமிழ் மகாவித்தியாலயம் திறக்கப்பட்டுள்ளது.
73

Page 46
1961ஆம் ஆண்டின் பின்னர் புதிய வகையில் தோட்டக் கல்வி பாதிக்கப்பட்டது. இதுவரை நன்றக நடைபெற்றுவந்த பல தமிழ் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு அங்குள்ள தமிழ் மாணவர்கள், வசதி களற்ற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். உதாரணம்ாக பதுளையில் தெமோதரைப் பகுதியில் சென். பீட்ஸ் கல்லூரியில் (St. Bedes College) தமிழ்ப் பகுதி மூடப்பட்டு, அங்குள்ள தமிழ் மாண வர் பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டனர், சைவ பரிபாலன சபையினுல் அமைக்கப்பட்ட இப்பள்ளிக்கூடத்தில் மேலதிக கட்டட வசதியில்லை. இதனல், இடவசதியின்றி மாணவர் திண்டா டும் நிலைமையேற்பட்டுள்ளது. ஊவாக் கல்லூரியில் 1975ஆம் ஆண் டிலே தமிழ்ப் பகுதிகள் முற்ருக மூடப்பட்டன. பதுளை உயர்தரப் பள்ளிக்கூடம், உருசுலு கொன்வென்ட் என்பனவற்றிலிருந்து தமிழ்ப் பகுதி நீக்கப்பட்டது. இப்பள்ளிக்கூடங்கள் முறையே விசாகா வித்தி யாலய, விகார மகாதேவி வித்தியாலய எனப் பெயர் பெற்றுள்ளன
இதே நிலைமையை நாம் மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் காணக்கூடியதாகவுள்ளது. கம்பளை, நாவலப்பிட்டி, மாத்தளை, றக்கு வான ஆகிய பகுதிகளிலும் இவ்வாறே நடைபெற்றது. வத்துகாமம். கிறிஸ்தவ வித்தியாலயத்தில் தமிழ்ப் பகுதியை மூடுவதற்கு எதிராக மக்கள், நீதிமன்றத்தில் தீர்ப்புப் பெற்றனர். தலாத்து ஒயாவில் தமிழ்ப் பெற்றேர்கள், நிலமும் ஏனைய உதவிகளும் செய்து கொடுத்து உதவினர். மாத்தளைப் பகுதியிலும் பி. எம். எஸ். மகளிர் பள்ளிக்கூடம், சென். தோமஸ் கல்லூரி, கிறிஸ்தவ கல்லூரி, விஜயாக் கல்லூரி ஆகியவற் றின் தமிழ்ப்பகுதிகள் மூடப்பட்டன : அல்லது படிப்படியாகக் குறைக் கப்பட்டன. கோட்டைக் கிறிஸ்தவக் கல்லூரியிலும் தமிழ்ப் பகுதி மூடப்பட்டு இன்று ஜெயவர்த்தனபுர எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கும் தோட்டத் தொழிலாளரது குழந்தைகளே கல்வி பெற்று வந்தனர். இவ்வாறு மாணவர் வேறு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப் பட்ட போது கட்டட, தளபாட, விஞ்ஞான ஆய்வுகூட வசதி, ஆசிரி யர் என்பன பற்ருக்குறையாகக் காணப்பட்டன.
இவ்வாறு மூடப்பட்ட பல பள்ளிக்கூடங்கள் தமிழ்ப் பெற்றேரின் உதவியுடன் நிறுவப்பட்டவை. கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியில், அரசு டொறுப்பேற்கும் முன்னர் தமிழ்ப்பகுதி இருந்தது; ஆனல் அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்ப் பிரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட் டது. இந்நிலைமையை நாட்டிலே தோட்டத்துறை சார்ந்த பகுதிக ளில், பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய பல பிரச்சினைகள் அரசு பொறுப்பேற்றதன் பின்னரே இடம்பெற்றன.
74

அண்மையில் தோட்டப் பகுதிகளுக்காக நியமனம் பெற்ற 402 ஆசிரியர்களுள் ஒருவர் தனக்கு நியமனம் வழங்கப்பட்ட பள்ளிக் கூடத்தைக் காணுது திகைத்து, பல தடவைகள் கல்விக் காரியால யத்திற்கும் தோட்டத்திற்கும் திரிந்து, பின்னர் அப்பள்ளிக்கூடம் ஒரு மாட்டுத் தொழுவமாக உருப்பெற்றிருந்ததைக் கண்டு பிடித்தாராம். அதனை மீண்டும் பள்ளிக்கூடமாக மாற்றும் பொறுப்பு ஆசிரியருடை யதே. 19 இதனைச் சுத்தமாக்கிச் சீர்படுத்தித் தரும்படி தோட்ட நிர் வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் கல்வித்திணைக்களமே இதற்குப் பொறுப்பு என்றனர். இவ்வாறு இருசாராரும் மறுக்கவே மாட்டுத் தொழுவத்தைப் பள்ளிக்கூடமாக மாற்றும் பொறுப்பு புதிய ஆசிரிய ரிடம் வந்துசேர்ந்தது. இத்தகைய சீர் கலைந்த நிலைகள் அரசு பொறுப்பேற்ற பின்னரே இடம் பெற்றன. இயங்கிவந்த பல தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன ; சில சிங்களப் பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டன போன்றவை சர்வசாதாரண நிகழ்ச்சியாக இன்றும் நடைபெறுகின்றன.
உயர் கல்வியதிகாரிகளின் மனிதாபிமானமற்ற போக்கும், இத் தோட்டக் கல்வியைப் பெரிதும் பாதிக்கின்றது. உதாரணமாக பண் டாரவளை கல்வி அலுவலக அதிகாரியிடமிருந்து பசறை பள்ளிக்கூட மொன்றின் அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதமொன்றின.இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமாகும். s
6T Gis : U. P. D. / 7098
அதிபர், பசறை தமிழ் மகாவித்தியாலயம்,
usFGoop.
* பசறை தமிழ் மகாவித்தியாலயத்திற்கான
மாணவரை அனுமதித்தல்.
உங்கள் பள்ளிக்கூடத்தில் இடநெருக்கடி காணப்படுவதன் கார ணமாக பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கு தயவுசெய்து பள்ளிக்கூடத்தில் அனுமதி வழங்கவேண்டாம்.
l. தோட்டத்துப் பள்ளிக்கூடங்களில் இருந்து, 6ஆம் தரத் திற்குக் கீழும் மேலும் உள்ள வகுப்புகளுக்கு வருகின்ற சிறுவர்கள் ,
75

Page 47
2. இலங்கைப் பிரசைகளாக இல்லாமல், 6ஆம் தரத்திற்கும் அதற்குமேற்பட்ட வகுப்புகளுக்கும் வருகின்ற சிறுவர் கள்,
3
தங்கள் வீட்டுக்கு அண்மையில் தமிழ்ப் பள்ளிக்கூடங் கள், அதாவது தமிழ்ப் பிரிவுகள் இயங்கும் நிலையில் அனுமதி கோரும் சிறுவர்கள். な
பி. பி. எம். சேனநாயகா A. D. E. UVA ஒப்பம்.
கல்வி அலுவலகம், பண்டாரவளை. 3- 12- 1962
(-gg, Tirth :- Education And Indian Plantation Workers In Sri Lanka - By G. A. Gnanamuthu)
இக்கடிதத்தின் சாராம்சத்தை நோக்கின், தோட்டச் சிறரின் கல்வி எங்ங்ணம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை உணரலாம். சில பள்ளிக்கூடங்கள் அரசு பொறுப்பேற்றதன் பின்னர் சகல வசதிகளைப் பெற்றபோதும் கூட, தமிழ் மாணவர்களுக்கு இட மளிப்பதை விரும்பாது படிப்படியாக ஒவ்வொரு வகுப்புகளாகக் குறைத்துக் கொண்டே வந்து, ஈற்றில் தமிழ்ப் பகுதியையே இல்லா மற் செய்துள்ள நிலைமையையும் நாம் காணலாம். உதாரணமாக மாத்தளைப் பகுதியில் விஜயாக் கல்லூரி, பி. எம். எஸ். மகளிர் கல்லூரி என்பவற்றில் இத்தகைய நிலைமை உள்ளது. இப்பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் தமிழ்ப் பெற்றேரின் உதவி, நன்கொடை என்பவற்றின் அடிப்படையிலேயே உருவாகின என்பதும் மறுக்க முடியாததொன்று.
அடுத்து இங்கு முக்கியமான இன்னுமொரு பிரச்சினை, ஆசிரி யர் பற்ருக்குறை. இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தகுதியற்ற ஆசிரியர்களே இங்கு நியமிக்கப்படுகின்றனர். கஷ்டப் பிர தேசம் என்ற பிரிவுக்குள் தோட்டப் பள்ளிக்கூடங்களையும் அடக்கி யுள்ளனர். வசதியற்ற பள்ளிக்கூடங்கள், தங்குமிட வசதியின்மை, வேலைத்தொல்லை என்பன காரணமாகப் பலர் இப்பிரதேசத்தை விரும்பி ஏற்பதில்லை. இப்பகுதிகளில், க பொ.த. சாதாரணப் பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்திபெற்ருேரே நியமிக்கப்படுகின்றனர்.
76

1958ஆம் ஆண்டிலே தோட்டப் பள்ளிக்கூடங்களில் கற்பித்த 1095 ஆசிரியர்களுள் 9 27 பேர், தராதரப்பத்திரமற்றேர் ; 1963ஆம் ஆண்டிலே, 1197 ஆசிரியர்களுள் 766 பேர் தராதரப்பத்திரமற்றேர்; சிலர் 8ஆம் வகுப்பு சித்தியடைந்தோர். 22 தோட்டப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் பத்து வருட சேவை பூர்த்தியடைந்ததன் பின்னரே, பயிற் சிக் கலாசாலைக்குப் போகலாம். ஆனல் பலர் இதனைப் பயன்படுத்துவ தில்லை. காரணம் படிப்பதற்காக கொடுக்கப்படுகின்ற விடுமுறை காலத்திற்குச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அத்துடன், பயிற்சி பெற் ருேர் மீண்டும் தோட்டப் பள்ளிக்கூடங்களுக்கு வரமாட்டார்கள். தோட்ட நிர்வாகம், பயிற்றப்பட்ட ஆசிரியருக்குரிய சம்பளம் வழங் காததே இதன் காரணமாகும். ஆனல் இன்று ஒரு வாரத்திற்கு 20 மணி நேரம் கற்பித்து 7 வருட சேவையின் பின், பயிற்சிக்கு விண் ணப்பிக்கலாம். அத்துடன், படிப்பிற்கான விடுமுறை (Study Leave) காலத்தில் சம்பளமும் வழங்கப்படுகின்றது.
இன்றைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முழு இலங்கையைப் பொறுத்தவரையில் ஆசிரிய பற்ருக்குறை காணப்பட்டது. பின்வரும் அட்டவணையின்படி தோட்டப் பகுதிகளில் காணப்பட்ட சங்கடமான தொரு நிலைமையைக் காணலாம்.
இலங்கை : ஒரு ஆசிரியருக்குரிய மாணவர் தொகை
l. அரசாங்கப் பள்ளிக்கூடம் m 28
2. தனியார் பள்ளிக்கூடம் 26
3. தனியார் கட்டணம் அறவிடும்
பள்ளிக்கூடம் 24
4. பிரிவேன - 5 5, தோட்டப் பள்ளிக்கூடம் 74 6. ஏனைய பள்ளிக்கூடம் - 19
23
ஏனைய பள்ளிக்கூடங்களைவிடத் தோட்டங்களிலேயே, ஒரு ஆசி ரியருக்குரிய மாணவர் தொகை அதிகம். ஏறத்தாழ 100இற்கும் மேலான மாணவரைக் கற்பிக்க, ஒரு ஆசிரியரே இருப்பார். அதுவும் முதலாம் வகுப்புத் தொடக்கம் 5ஆம் வகுப்புவரை, ஒரு ஆசிரியர் ஒரே
T7

Page 48
நேரத்தில் கற்பிக்க வேண்டிய சூழ்நிலையை, தோட்டங்களில் இன்றும் காணலாம். சிலவேளைகளில் ஒரே பள்ளிக்கூடத்தில் கணவன் - மனைவி இருவரும் ஆசிரியராக கடமையாற்றலாம். எனவே, இருவரும் வராத நிலையில் பள்ளிக்கூடம் இயல்பாகவே மூடப்படும். பயிற்சிக் கல்லூ ரிக்கோ அல்லது தலைமையாசிரியர் கூட்டங்களில் பங்குபற்றவோ ஆசி ரியர் சென்று விட்டால் அன்று விடுமுறை நாளாக, பள்ளிக்கூடம் மூடப்படவேண்டிய நிலையேற்படும். தொண்டர் ஆசிரியர் முறை Loða) யகப் பகுதிகளிலேயே கூடுதலாக நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கும், இதுவொரு காரணமாகும். ஹட்டனில் 30 தொடக்கம் 40 பள் ளிக்கூடங்கள் வரை இவ்வாறு மூடப்பட்டு, பின்னர் தொண்ட ராசிரியரால் நடாத்தப்பட்டன. 24
மலைநாட்டிலே அதிகளவு ஆசிரியரைப் பெறமுடியாமையும் ஒரு குறைபாடாகும். காரணம், ஆரம்பக் கல்வி மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்ற சூழலிலே 8ஆம் வகுப்பிலோ, 9ஆம் வகுப்பிலோ மாணவர் சித்தியடைவது கடினமானதே. அத்துடன் தோட்டப் பகுதிகளில் பொறுப்பேற்க, ஏனைய ஆசிரியர்களும் முன்வருவதில்லை. ஆசிரியர் பற் முக்குறை என்னும்போது, நாம் ஆசிரியர் தொடர்பான ஏனைய பிரச் சினைகளையும் இங்கு எடுத்துக் காட்டுவது அவசியம். ஆசிரிய தொழில் என்னும்போது, ஏனைய தொழிலில் ஈடுபட வசதியற்றபோது - அந்த நிலையில் தான் - பலர் ஆசிரியத் தொழிலைத் தெரிவு செய்கின்றனர். மலை யகத்தைப் பொறுத்தவரையில், ஆசிரியர்கள் பொதுவாக வெளியில் இருந்தே வரவேண்டிய நிலைமை, இவர்களுக்குத் தங்குமிட வசதி, தோட்டப்பகுதிகளில் மிகக் குறைவு. அப்படி இருந்தாலும், கூடிய வாடகை செலுத்த வேண்டிய நிலைமையும் ஏற்படுகின்றது. வாழ்க்கைச் செலவைப் பொறுத்தவரையில் மலையகத்தில், உதாரணமாக நுவரெ லியாவை நாம் எடுத்து நோக்கினல் இங்கு அரிசி, தேங்காய், மீன் என்பன இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே இவற்றின் விலை இலங்கையின் ஏனைய பகுதிகளைவிட அதிகமே. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக, காய்கறிகளின் விலையுமதிகம். மேலும் குளிர்ப்பிரதேசம் என்ற காரணத்தால் கம்பளி ஆடைகள், போர்வை கள், மெத்தைகள் அவசிய தேவைகளாகின்றன. எனவே யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களைவிட இங்கு வாழ்க்கைச் செலவு அதிகம். அதோடு போக்குவரத்து வசதிகளும் குறைவு. நகரத்தோடு தொடர்பு மிகக் குறைவு. காலை, மாலை இருநேரமே போக்குவரத்து வசதியுள்ள இடங்களும் உண்டு. அரசாங்கமும் இவற்றைக் 'கஷ்டப் பிரதேசங் கள்” எனவே கணித்துள்ளது, ஆகவே ஆசிரிய பதவியைப் பெற
'T8

விரும்புவோர், குடும்பத்தைப் பிரிந்து ஒரிரு வருடங்கள் இங்கு கட மையாற்றி விட்டுச், சொந்த ஊருக்கு மாற்றம் பெறவே முயலுகின் [Dଟ୪Trt.
இவற்றுக்கெல்லாம், தோட்டப்பகுதி ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் விசேட சலுகைப்பணம் கொடுக்கப்படுவதில்லை. இங்கு கட மையாற்றும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இடமாற் றம் பெறலாம் எனச் சட்டப்படி அறிவிக்கப்பட்டபோதும், அது நடை முறையில் சாத்தியமானதல்ல. உதாரணமாக நுவரெலியாவில் ஒரு ஆசிரியர், தொய்வு நோயினுல் பாதிக்கப்பட்டவர், எத்தனையோ வைத் திய அத்தாட்சிப் பத்திரங்கள் சமர்ப்பித்தும் இடமாற்றம் கிடைக் காத நிலையில் இறக்க நேரிட்டமை, அண்மையில் நடைபெற்றதொரு சம்பவம். அப்படி இதற்கு விதிவிலக்காக யாராவது இடமாற்றம் பெற்றிருந்தால், அதற்குக் காரணம் இலஞ்சமாக இருக்கும்.
அடுத்ததாக மாணவர் பற்றிய பிரச்சினைகளை நோக்குவோ மாயின், தோட்டத் தொழிலாளரைப் பொறுத்த வரையில் கல்வி ஒரு முதலீடல்ல. ஏனைய பகுதிகளில் கல்வியை ஒரு முதலீடாகவே கணிக் கின்றனர். ஆனல் தோட்டத் தொழிலாளரைப் பொறுத்தவரையில் பெற்றேருக்கு இதுவொரு வீண்செலவே. அன்ருட உணவுத் தேவை யையே பூர்த்தி செய்ய முடியாத நிலையில், உடைகளுக்கோ புத்தகங் களுக்கோ செலவிட முடியாது. அத்துடன், அப்படிக் கல்வி பெற்ருல் கூட 5ஆம் வகுப்பிற்குமேல் அதற்கான வாய்ப்பு இல்லை. தோட் டங்களில் பெயர் பதியக் கூடிய வயது வந்தவுடன் அங்கு பெயர் பதி யப்பட்டு வேலை செய்வதே, அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. எனவே கல்வி பற்றி அதிக அக்கறை செலுத்துவதில்லை. இவற்றைவிட நிர்வாகி களும் சிறந்த கல்வியளிப்பதை விரும்பவில்லை. காரணம் அவர்களுடைய தொழில், தோட்டத் தொழிலாளராக இருப்பதற்குக் கல்வி தேவை யானதொன்றல்ல. அத்துடன் இவர்களுக்குச் சிறந்த கல்வியளிக்கப் பட்டால் “சிறந்ததொரு" தொழிலாளி வர்க்கத்தையே இழக்க நேரிடும் என்ற கருத்து நிலவி வந்தமையும், இவர்களுடைய கல்வி யில் அக்கறை செலுத்தாமைக்கு ஒரு காரணமாகலாம். எனவே, தோட்டத் தொழிலாளரின் கல்வி திட்டமிட்டே அழிக்கப்பட்டு வரு கின்றது எனலாம் .
பெண்கல்வியைப் பொறுத்தவரையில் மிகவும் பின்தங்கிய நிலையே காணப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களிலே பெண் தொழி லாளர்களுக்கே கூடிய வேலைவாய்ப்பு உண்டு. பொதுவாக கொழுந்துகள்
79

Page 49
பறிப்பதற்குப் பெண்களே சிறந்தவர்கள். அத்துடன், சிறுவயதிலேயே தாய்மார் வேலைக்குச் செல்லுகின்ற படியால் வீட்டிலே தம்பி தங் கையரைக் கவனிக்கும் பொறுப்பு மூத்த பெண்ணிடத்தே ஒப்படைக் கப்படுவதால், அவளுடைய கல்விக்கு மூடுவிழா நடத்தப்படுகின்றது. *பிள்ளைக் காம்பரா" என்ற பெயரில் உள்ள இடத்தில் கடமையாற்றும் பெண்ணிடத்தில் நம்பிக்கையின்மையால், குழந்தைகளை அங்கு விடு வதை விட வீட்டில் விட்டுச் செல்வதையே தாய்மார் விரும்புகின்ற னர். எனவே 10 வயதுக்கிடையில் பெண்கல்வி முடிவுறும். இதன் பின் னர் தம்பி தங்கையரைப் பார்த்துக் கொள்ளுதல், உணவு தயாரித் தல், புல் வெட்டுதல், வீடுகளில் வேலைக்கு இருத்தல் -இவையே தோட் டப் பெண்களின் நிலைமையாகும். அத்துடன் மரபு ரீதியான கொள் கைகளும் - பெண்களுக்கு கல்வி அவசியமல்ல என்ற கருத்தும் - பெண் கல்வியைத் தடைசெய்கின்றன. கல்வியற்ற 97 சதவீதத் தோட்டப் பெண்களில் 60 சதவீதத்தினருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. 37 வீதத் தினருக்குச், சற்று எழுத்துக்கூட்டி வாசிக்க முடியும் என இரா. சிவலிங்கம் கூறியுள்ளார்.
அடுத்ததாக, இடைநிறுத்தமும் தோட்டப் பகுதிகளில் கல்வி யைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். மூன்ரும் உலக நாடுகளைப் பொறுத்தவரையில், இது ஒரு முக்கிய அம்சம். தோட்டப்பகுதிகளில் ஆரம்பத்தில் பாலர் வகுப்பிற்குச் சேருகின்ற மாணவரின் தொகை மிக அதிகமாக இருந்த போதிலும், இரண்டாம் மூன்றும் தரங்களில் படிப்படியாக குறைந்து வருகின்றது. அத்துடன் மீண்டும் அதே வகுப்பில் மீள அமர்தலும் தோட்டப் பகுதிகளில் மிக அதிகம். ஆணுல், அண்மையில் இலவசப் புத்தகம் விநியோகிக்கப் பட்டதைத் தொடர்ந்து சிறிது முன்னேற்றமான வரவு நிலைமை ஏற்பட்டுள்ளது எனலாம்.
மறுபக்கத்தில் காணப்படுகின்ற அட்டவணை 4 : 8 இன் படி,ஏராள மான மாணவர் தோட்டப்பகுதிகளில் மீளவும் அதேவகுப்பில் கல்வி பெறும் நிலைமையைக் காணக்கூடியதாகவுள்ளது. ஐந்தாம் வகுப்பிற்கு மேல், மாணவர் தொகையும் மிகக் குறைவு. இலங்கை முழுவது டனும், கொழும்புடனும் ஒப்பிடும்போது தோட்ட மாணவரின் கல்வி யின் பாதகமான நிலைமை தெளிவாகின்றது. மேலும் இலங்கையின் ஏனைய பள்ளிக்கூடங்களில் கல்வி பெறும் மாணவர்களது தொகை யைவிட தோட்டப் பள்ளிக்கூடங்களில் கல்விபெறும் மாணவரது தொகை மிகக் குறைவு.
80

அட்டவ ை4 : 8
மீளவமர்தலும் கற்போர் வீதமும் - பிரதேசரீதியில் - 1968
கொழும்பு இலங்கை தோட்டம் மீள - கற். மீள - கற். மீள - கற். வீதம் வீதம் வீதம்
1. 29.9 1.0 31.1 20 410 19.0 2. 14.3 1.0 23.9 43 40.0 . 20.0 3. 16.9 1.5 20.9 4.9 37.0 23.0 4. 13.4 1.8 272 7.8 34.0 26.0 5. 2.6 3.5 13.9 7.0 28.0 270 6. 8.4 3.9 18.4 4.0 un 7. 9.4 4.5 14.2 5.2 m - 8. 9.6 10.7 9.9 10.4 VM
Source :- Dudly Seers Report - Part II 1968
மொத்த மாணவர் தொகை - 1974
தோட்டப் ஏனைய பள்ளிக்கூடங்கள் பள்ளிக்கூடங்கள்
தரம் 1 - 23,131 361,493 2 - i5,248 298,807
3 - 1,115 215, 127 4 - 7,553 320,853
5 - 5,470 273.150.
மொத்தம் 62,517 1469,430
26
(பள்ளிக்கூட புள்ளிவிபரம் - 1974)
8:

Page 50
ஆனல் இலங்கையில் உள்நாட்டுரீதியில் இத்தகைய வேறுபாடுகள் அதிகமாகக் காணப்பட்டாலும், கிழக்கிந்திய நாடுகளில் ஏனைய நாடு களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் நிலைமை ஒரளவு திருப்திகர மானதே.
தோட்டப் பகுதிகளைப் பொறுத்த வரையில், முதலாம் வகுப்பில் கல்வி பெறுவோரில் முழுவிகிதமும் ஐந்தாம் வகுப்பை அடைவதில்லை. இடைநிறுத்தம் தோட்டப்பகுதிகளில் மிக அதிகம். முதலாம் வகுப்பி லுள்ள மாணவர்தொகை 100% ஆயின் அதில் 50வீதத்தினரே ஐந்தாம் வகுப்பைச் சென்றடைகின்றனர். தேசிய ரீதியில், இவ் வீதம் சிறிது கூடுதலாக இருப்பதைக் காணலாம். தோட்டப் பகுதி களில் 10ஆம் வகுப்பில் கல்வி பெறுவோர் 5%த்தினரே. தேசிய ரீதியில் முதலாம் வகுப்பில் கல்வி பெறுவோரில் 12%த்தினர் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கற்கின்றனர். அதிலும் ஆ% த்தினரே பல்கலைக்கழகக் கல்வி பெறுகின்றனர். இச் சிறிதளவு முன்னேற்றம்கூட தோட்டப் பகுதிகளில் கிடைப்பதில்லை.
தோட்டப் பகுதிகளில் இவ்வாறு கல்வி இடைநிறுத்தப்படுவ தற்கு மூன்று காரணங்கள் முக்கியமாகும்.
1. முதலீடல்ல.
2. வறுமை,
3. பெற்றேரின் வசதியின்மை,
பள்ளிக்கூட வசதியின்மை,
ஏனைய பகுதிகளுடன் ஒப்பிட்டால், தோட்டங்களில் கல்வியை ஒரு முதலீடாகக் கொள்வதில்லை. கல்வி தோட்டப் பகுதி மக்களுக்கு முதலீடல்ல. ஆனல் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் கல்வி முதலீடாகவே கருதப்படுகின்றது. வைத்தியத் துறையிலோ, பொறியியற்றுறையிலோ கல்வி பெற்ருல் கூடிய வாழ்க்கை வசதிகளைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு, இவர்களிடம் உண்டு ; அதற்கான வசதிகளும் தகுதிகளும் உண்டு. ஆனல், மலையக மக்களைப் பொறுத்த வரையில் பிரசாவுரிமை அற்ற நிலையில் உயர் தொழில் பெறத்தக்க கல்வி வாய்ப்பைப் பெறுவது, கடினமானது ; எட்டாக்கனி போன்றது. அதற்காகச் செலவிடும் பணம் திரும்பவும் இலாபத்துடன் கிடைக்கப் போவதில்லை. அத்துடன் அவர்களுடைய தொழிலுக்குக், கல்வி அவசி யமானதல்ல. 1904ஆம் ஆண்டிலே பரோஸ் கூறியது போலத் தமது சம்பளத்தைக் கணக்கிடக்கூடிய அளவு அறிவே போதுமானது. 27
82

இரண்டாவதாக, வறுமை இது மலையகத் தொழிலாளரிடம் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும். அன்ருட உணவிற்கே அவர்களுடைய வருமானம் போதாது. ஒரு குடும்பத்தில் அனைவரும் உழைத்தால்தான்,ஒரு நேர உணவையாவது ஓரளவு வயிருர உண்ணலாம். இந்நிலையில் கொப்பிகள், பென்சில்கள், புத்தகங்கள், உடைகள் வாங்கச் செலவிடமுடியாத நிலைமைகளில் கல்வியை இடை யில் நிறுத்திவிட்டு வேலை தேடிச் செல்கின்றனர்.
வசதியின்மையும் இடைநிறுத்தத்திற்கு இன்னுமொரு காரண மாகும். வசதியின்மை என்னும்போது, பெற்றேரின் வசதியின்மை, பள்ளிக்கூட வசதியின்மை என்பன அடங்கும். பெற்ருேரால் தமது குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க வறுமையும் தடையாக இருந்த போதும், சில தனிப்பட்ட காரணங்களும் உள்ளன. வீட்டு வேலை களைக் கவனிக்க, குழந்தைகளைக் கவனிக்கப் பெற்ருேருக்கு நேரமின் மையால் வீட்டிலே மூத்தபிள்ளை படிப்பை இடைநிறுத்த வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அடுத்து பள்ளிக்கூட வசதியின்மையும் ஒரு காரணமாகும். எத்தனையோ மைல்கள் நடந்து நகரத்திற்குச் சென்று கல்வி பெறவேண்டிய சூழ்நிலையை, இன்றும் மலைநாட்டில் பல இடங்களில் காணலாம். இவை காரணமாகவே, தோட்டத் தொழி லாளரின் பிள்ளைகள் இன்று கல்வியில் பின்தங்கியுள்ளனர். இதுவரை அதாவது இந்த 150 வருடங்களில், 5,000 பேரே மலையகத்தவரில் உத் தியோகம் பார்க்கின்றனர்; அதிலும், கூடுதலாக ஆசிரியராகவே கடமைபுரிகின்றனர். ஏனைய மக்களுக்குக் கொடுக்கப்படுகின்ற வசதிகள் இவர்களுக்கும் கொடுக்கப்பட்டால் சிறந்த அறிவாளிகளாகத் திகழ் வார்கள். உதாரணமாக, 1980ஆம் ஆண்டிலே ஏழு மலையகத் தமிழ் மாணவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு, அங்கு சிறப்புச் சித்தி பெற்றுள்ளனர்.
தோட்டப் பகுதியைப் பொறுத்தவரையில் அன்றுதொட்டு இன்றுவரை, அரசாங்கம் பாரபட்சமாகவே நடந்து வந்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகத் திகழு பவர்கள் இத் தொழிலாளர்கள். ஆனலும், அவர்களை வேண்டாத ஒரு “பிரச்சினை'யாகவே இலங்கை அரசாங்கம் கருதி வருகின்றது. உதா ரணமாக நுவரெலியாவை எடுத்துக்கொண்டோமா கில் இங்கு இந் தியத் தமிழர் கூடுதலாக வசிக்கின்ருர்கள்; செள. தொண்டமான் இங்கிருந்தே தெரியப்பட்டுள்ளார். இங்கு தமிழ்ப் பள்ளிக்கூடங்களும் அதிகம். ஆனல், வட்டாரக் கல்வியதிகாரியைவிட எந்தவொரு தமிழ் உயரதிகாரிகளும் இங்குள்ள கல்வித் திணைக்களத்தில்இல்லை என்பதை,
83

Page 51
அட்டவணை 4 : 2 மூலம் நாம் அறியலாம். இங்கு கடமையாற்றும் 20 எழுதுவினைஞர்களில் 4 பேரே தமிழராவர். இவர்களைவிட பணியாள் களில் (Penns) ஒருவர் முஸ்லிம்; ஏனையோர் தோட்டத்தொழி லாளியும், சுகாதார ஊழியருமேயாகும். 1981ஆம் ஆண்டிலே, அவ் வருடத்திற்குரிய நுவரெலியா மாவட்டத்திற்கான கல்விச் செலவின மாக, 10 மில்லியன் ரூபா கல்வியமைச்சினல் ஒதுக்கப்பட்டது. 28 அதே காலத்தில் அவசரகாலச் சட்டத்தை அமுல் நடத்த அரசுக்கு ஒரு நாளைக்கு, 11 மில்லியன் செலவாயிற்று. ஆனல், நுவரெலியா கல்வி இலாகா 10 மில்லியன் பணத்தில் ஒரு சதத்தையேனும் செல விடாமல் திறைசேரிக்கு திருப்பியனுப்பியுள்ளது. 29 இதற்குக் கார ணம், தமிழரின் கல்வித்தேவையை உணரக்கூடிய ஒருவர்கூட அந்தக் கல்வி இலாகாவில் கடமைபுரியாமையே என்பது, தெளிவாக விளங்கு கின்றது: இதிலிருந்து, அதிகாரிகளின் மனப்பாங்கையும் காழ்ப்புணர்ச் சியையும் காணக்கூடியதாகவும் உள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங் கள் தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் முன்னேற்றத்திற்காக உதவிபுரிய முன் வந்தபோது, இவ்வதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் அவற்றைச் சிங்களப் பள்ளிக்கூடங்களுக்கு வழங்குமாறு வற்புறுத்தினர்கள். இதனல் அந்நிறுவனங்கள் தம்முயற்சிகளைக் கைவிட்டன. தற்போது தலவாக் கொல்லை தமிழ் மகாவித்தியாலயத்திற்கு, இத்தகைய வெளிநாட்டு நிறுவனங்கள் நிதியுதவி வழங்குகின்றன. ஆனல் அதன் அன்பளிப்புக ளையும் சிபார்சுகளையும்கூட, இக் கல்வி இலாகா குறைத்தும் கட்டுப் படுத்தியும் தடைசெய்கிறது.
இவற்றைவிட நாவலப்பிட்டியில் தொட்டலங்க என்ற தோட்டத் தில், 10ஆம் வகுப்பு வரை இருந்துவந்த பள்ளிக்கூடமொன்று மூடப் பட்டது; 7 வருடமாக, மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதிகாரி களும் பாராமுகமாகவே உள்ளனர். அத்துடன், விஞ்ஞானக் கல்விக் கான வசதியும் மிகக் குறைவு. தோட்டப் பகுதிகளைப் பொறுத்த வரையில் அரசாங்கத்தின் திட்டங்கள், மிகப் பெரியன. உலகின் ஏனைய பகுதிகளின் கவனத்தை இத்தோட்டத் தொழிலாளரின் பிரச்சினைகள் கவர்ந்துள்ளமையால், அவர்களை ஏமாற்றும் நோக்குடன் அரசாங்கம் எப்போதும் தனது திட்டங்களை மிகப் பெரியதாகவே விளம்பரப் படுத்தினுலும், அதில் ஒரு சிறிதளவைத்தானும் செய்து முடிப்பதற்கு முன்வருவதில்லை.
ஒரு சமூகத்தின் கல்வி நிலையை அறிந்து கொள்ளும் ஒரு குறி யீடாக, அச்சமூகத்தில் எத்தனை வீதத்தினர் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் என்ற புள்ளிவிபரத்தை எடுத்துக் கொள்ளலாம். பல்
84

கலைக்கழக அனுமதியானது ஒரு சமூகத்திற்கு கிடைத்துள்ள ஆரம்ப, இரண்டாந்தரக் கல்விக்கான சந்தர்ப்பங்களையும் எடுத்துக் காட்டும். ஒரு சமூகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்வோரின் எண்ணிக்கை உயர் வாக இருக்கின்றதெனின், அச்சமூகத்தினருக்குரிய ஆரம்ப இரண்டா ந் தரக் கல்வி வசதிகள் கிடைத்துள்ளன என்பது, பொருள். பின்வரும் அட்டவணை, சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் இனங்களி டையே பல்கலைக்கழக அனுமதி எவ்வாறு அமைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அட்டவ ை4 : 9
இன அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதியும் சனத்தொகையும்
- (வீதாசாரத்தில்)
இனங்கள் சனத் ப்ல்கலைக் சனத் பல்கலைக்
தொகை கழக தொகை கழக
அனுமதி அனுமதி
1950 1950 1967 1967
Rinn w-ma-nen- r
1. சிங்களவர் 69.5 66.6 710 84.1
2. இலங்கைத்
தமிழர் 10.9 | 24.5 | 1 1.0 | 14.1
3. முஸ்லிம்கள் 6.0 1.9 6.7 1.4 4. பறங்கியர் 0.6 5.7 0.4 0.1
5. இந்தியத்
தமிழர் 12.4 1.4 10.6 0.1
6. மற்றையவர்கள் - I - 0.2 0.2
7. மொத்தம் - r ·
-95 rptib : Modern Asian Studies (1974) 6Tait so F (656 GM5u56v Dr. G. Uswatte Aratchi GTpGulu *இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி" என்ற கட்டுரை.

Page 52
' சனத்தொகை அடிப்படையில் மூன்ரும் இடத்தை வகிக்கின்ற இந்தியத் தமிழர், பல்கலைக்கழக அனுமதி என்ற அடிப்படையில் ஏனைய இனத்தவர்களைவிடக் குறைந்த நிலையில், இருக்கின்றனர். அத்துடன் இன்று பல்கலைக்கழக அனுமதியில் ஆண்களுடன் சமனுக விளங்கும் பெண்களிடையே, தோட்டத் துறையில் இருந்து ஒரு பெண்கூடப் பல் கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்படாமை, நோக்கற்பாலது. உழைப் பில் முதலிடம் வகிக்கும் தோட்டப் பெண்களுக்கு, கல்வியறிவுக்கு வசதியில்லை.
இந்நாட்டின் பொருளாதாரத்தில் கூடிய பங்காற்றுபவர்கள் தோட்டத் தொழிலாளர்கள். ஏனைய இனத்தவரைவிட பொருளாதார பங்களிப்பில் முதலிடம் வகிக்கும் தோட்டத் தொழிலாளரின் கல்வி நிலைமை, அடிமட்டத்திலேயே காணப்படுகின்றது. இதற்குப் பல கார ணங்கள் கூறலாம். வறுமை, அறியாமை, கல்வி வசதியின்மை எனக் காரணங்கள் காட்டப்பட்டாலும் தோட்டத் தொழிலாளர்கள் "தோட் டத் தொழிலாளராகவே இருக்க வேண்டும் என்ற அரசின் எதிர் பார்ப்பே, முக்கிய காரணமாகும். இந்த எதிர்பார்ப்பு மாற்றம் அடை யும் வரை, இந்தியத் தமிழரின் கல்வியில் மாற்றம் ஏற்படமுடியாது. எனவே இவர்களுக்கான கல்வியில் சமசந்தர்ப்பமளித்து, ஏனைய இனத் தவருக்குள்ள உரிமைகள் யாவும இவர்களுக்கும் அளிக்கப்பட வேண் டும். அந்நிலையில்தான் இவர்களுடைய அறியாமை அகலும். இவர்க ளின் தாழ்ந்த கல்வி நிலைமைக்குக் காரணமாக விளங்கும் இன்னு மொரு அம்சம், இவர்கள் வாக்குரிமையற்றவர்களாக இருப்பதுதான். இதனல்தான் அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. பள் ளிக்கூடங்கள் இன்மை, ஆசிரியர் இன்மை, ஆசிரியர்கள் இருப்பினும் அக்கறையின்மை என்பவற்றுக்கெல்லாம் வாக்குரிமை இன்மையே அடிப் படையான காரணமாகும்.
எனவே இவற்றின் அடிப்படையில் ஆரம்ப, இடைநிலைக் கல்வி, மூன்ரும் நிலைக்கல்வி என்றவகையில் பிரச்சினைகளைச் சுருக்கமாக நோக் குவோம்.
பிள்ளைக்காம்பராக்கள் - தகுதியற்ற ஆசிரியர்கள், வசதியற்ற கட்டடம், படங்களோ விளையாட்டுப் பொருட்களோ அற்றநிலையில் - மோசமான அமைப்பைக் கொண்டிருந்தன, இடைநிலைக் கல்வி பெற வசதியில்லை. அத்துடன் பல தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூன்ரும் நிலைக்கல்விக்காகத் திறக்கப்பட்டபோதும், அவை பிரசாவுரிமையற்ற மக்களைப் பொறுத்த வரையில் என்றும் மூடப்பட்டேயுள்ளன. இதனை
-86

நீக்க பல தனியார் நிறுவனங்கள் உதவின. அடுத்து பிரசாவுரிமை அற்ருேருக்கு ஆரம்ப, இடைநிலைக் கல்வி வரையுமே இலவசக்கல்வி அளிக்கப்பட்டது. ஆனல் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முடி யாது. அங்கு விரிவுரைகளுக்குக் கட்டணம், பரீட்சைக்குக் கட்டணம் என்பவற்றுக்குத் தோட்ட மாணவர் ஈடுகொடுக்கவேண்டிய நிலைமை இருந்தது. வங்கிக் கடனே, புலமைப் பரிசிலோ கிடைப்பதில்லை. அத் துடன் இந்திய வம்சாவழியினர், புதிய மாகாணரீதியான பல்கலைக் கழக அனுமதியிலும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் பல்கலைக் கழகக் கல்வி பெறமுடிந்தாலும், மேலே தொடர்ந்து கற்பது தடை செய் யப்பட வேண்டியிருந்தது. காரணம், வேலை வாய்ப்பு நிச்சயமின்மை யால் தொழிற்சங்கம் இவர்களுக்கு உதவ விரும்பவில்லை. ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளிலும், இவர்கள் தள்ளியே வைக்கப்பட்டனர்.
சில தோட்ட மாணவர்கள் அதிர்ஷ்டவசமாகக் கல்வித்துறை யில் வெற்றி பெற்றுமுள்ளனர். பொதுவாக கங்காணி, மற்றும் கீழ் மட்ட உத்தியோகத்தரின் பிள்ளைகளே நகரிலுள்ள பெரிய பள்ளிக் கூடங்களில் கல்வி பெற்றனர். தொழிலாளரின் பிள்ளைகள் நடந்து சென்று சிறிய பள்ளிக்கூடங்களில் கல்வி பெற்றனர். சில பிள்ளைகள் தொழிற்சங்கங்கள், நன்னேக்கங் கொண்ட வர்த்தகர்கள், தனியார் உதவி என்பவற்றின் மூலம் கல்வி வசதியைப் பெற்றனர்.
இவர்களில் சிலர் பெரும் பதவிகளையும் வகித்தனர்; பரிசில்கள் பெற்றனர் ; ஆசிரியர்கள், தொழிற்சங்கத்தலைவர் போன்ற பதவிகளை வகித்தனர்;ஒருவர் பூரீலங்காவின் முதல் தொழில் மந்திரியுமாவார். தலை மைக் கங்காணியின் மகனன எல். எம். பெரி சுந்தரம் (M.A. Li. (Cantab) Bar at Law) முதல் அரசாங்க சபை அங்கத்தவர்; தொழில் மந்திரி 1932 - 36 ; செனற்சபை உபதலைவர் 1947 - 52 , 32
சில தொழிலாளரின் பிள்ளைகள் 1945ஆம் ஆண்டின் பின்னர் இலவசக்கல்வி, தாய்மொழிக்கல்வி என்பவற்றைப் பயன்படுத்தி வியா பாரிகளாகவோ, அரசாங்க உத்தியோகத்தராகவோ பதவி பெற்றனர். பல எழுத்தாளர்களும், கவிஞர்களும் மலையக மக்களிடையே தோன் றியுள்ளனர். கற்றதன் பயனக சாதிப் பிரிவினை நீக்கப்பட்டது. பெண் விடுதலை, பெண்ணுக்குச் சமவுரிமை என்பன கற்றதன் பயனுல் ஏற். படத் தொடங்கின.
எனவே தோட்டத் தொழிலாளருடைய கல்வி வளர்ச்சியா னது, ஏனைய இனத்தவர்களுடைய கல்வியைவிடப் பின்தங்கிய நிலை யில், படிப்படியாகச் சிறிதளவே முன்னேறியுள்ளதைக் காணக்கூடியதாக வுள்ளது. அதற்குக் காரணம், நாம் இங்கு எடுத்துக் காட்டிய பிரச் சினைகளே எனின் மிகையாகாது.
87

Page 53
தீர்வுக்கான ஆலோசனைகள்
இன்றைய இருபதாம் நூற்ருண்டிலே, உலகிலுள்ள சமுதாயங்களிற் பல விழிப்படைந்து தங்களின் உரிமைக்காகப் போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ள நிலைமையில் மலையக மக்கள், ஏனைய சமூகங் களுடன் ஒப்பிடும்போது ‘தாம் பின்தள்ளப்பட்டுள்ளோம்" என்ற நிலை மையையே அறியாது வாழ்ந்து கொண்டிருக்கின்ருர்கள். இவ்வாறு மலையக ஆண்களும் பெண்களும் பின்தள்ளப்பட்டுள்ளமைக்கு எத்தனை யோ காரணங்கள் இருந்த போதிலும் மிக முக்கியமானது கல்வியறிவு இன்மையும், சமூகக் கட்டுக்கோப்பும், சமய கலாசாரப் பின்னணிகளு மேயாகும்.
இவ்வாய்வுக் கட்டுரையின் கடந்த அத்தியாயங்களில் தோட்டக் கல்வியமைப்பினையும் அதனேடு தொடர்பான பிரச்சினைகளைப் பற்றியும்

ஆராயப்பட்டது. இறுதியில், அதற்கான தீர்வுகள் இவ்வத்தியாயத் தில் ஆராயப்படுகின்றன.
தோட்டத்துறையினைப் பொறுத்தவரையில் கல்வி முற்ருகக் கைவிடப்பட்டது எனக் கூறமுடியாது. பற்பல பிரச்சினைகளுக்கிடை யிலும் கூட தோட்டத்துறை சார்ந்த மாணவர்கள் சிலர், கல்வித்து றையில் அதிர்ஷ்டவசமாக சில வெற்றிகளைப் பெற்றுள்ளனர். பொது வாக, கங்காணி மற்றும் கீழ்மட்ட உத்தியோகத்தரின் பிள்ளைகளே நகரிலுள்ள பெரிய பள்ளிக்கூடங்களில் கல்வி பெற்றனர். சில தோட் டத்தொழிலாளரின் குழந்தைகள், பல மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றனர். தொழிற்சங்கங்கள், தனியார், நன்னேக்கங் கொண்ட வர்த் தகர்கள் இவர்களின் உதவியுடன் தமது கல்வியறிவைப் பெருக்கிச் சிறப்புப் பெற்றனர். இவர்களில் சிலர் பெரும் பதவிகளை வகித்தனர் என்பதை முன்னரேயே கண்டோம்.
சில தொழிலாளர்களின் பிள்ளைகள் 1945ஆம் ஆண்டின் பின் னர் இலவசக் கல்வி, தாய்மொழிக் கல்வி என்பவற்றைப் பயன்படுத்தி வியாபாரிகளாகவோ அரச உத்தியோகத்தர்களாகவோ பதவி பெற்ற னர். எனினும் கூட, நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல பல பிரச்சினைகளையும் காணக்கூடியதாகவுள்ளது.
ஆரம்ப, இடைநிலை, மூன்ரும்நிலை என்பவற்றைப் பொறுத்தவரையில் தோட்டப்பகுதிகளில் பிரச்சினைகள் அதிகம் என்பதை, நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். இவற்றை நீக்கவோ அல்லது குறைக்கவோ எத் தகைய செயல்முறைகளை நடைமுறைப்படுத்தலாம் என்பதை, இவ்வத் தியாயத்தில் ஆராய்வோம். ஆரம்பக் கல்வி
ஆரம்பக் கல்வியைப் பொறுத்தவரையில், இங்கு அளிக்கப்படும் கல்வி முழுவதும் ஆரம்பக் கல்வியே என்பது தெளிவானதொன்று. அதாவது முதலாம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையு மே இங்கு கல்வியளிக்கப்படுகின்றது, ஆரம்பக் கல்வியில், நாம் - ஆரம்ப முன்னிலைக் கல்வியை - அதாவது தோட்டப்பகுதிகளைப் பொறுத்த வரையில் 'பிள்ளைக்காம்பரா" என்ற பெயரில் குழந்தைகளை “மேய்க் கின்ற" நிலைமையை எடுத்து நோக்குவோமானல், இங்கு பெரும்பா லும், வேலையைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலைமையைக் காண் கின்ருேம். கண்பார்வையற்ற, காதுகேளாத நிலையில், குழந்தைகளைச் சிறந்த முறையில் பராமரிப்பது முடியாததொன்று. எனவே இது நவீன முறைப்படுத்தப்படவேண்டியது அவசியம். படிப்பறிவு மட்டு மன்றி, சிறிதளவு சுகாதார வைத்திய அறிவும் உடையவர்களிடம் ஒப்
80

Page 54
படைக்க வேண்டும். பாடல்கள், கதைகள் என்பன மூலம் அறிவைப் புகட்ட வேண்டும். இவ்வாறு நவீனமான முறையில் இப்பிள்ளைக் காம் பராக்கள் மாற்றப்பட வேண்டும். அதற்கான கட்டடங்கள் முதலில் தூய்மைப்படுத்தப்பட்டு, மண்தரை இடிந்த சுவர்கள் மாற்றப்பட்டு, குடிநீர் வசதி மலசல கூட வசதிகளுடன், புதிய பிள்ளைக் காம்பராக் கள் நிறுவப்பட வேண்டும். s
பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரையில், மனிதவுரிமைகள் சாச னத்தின் பிரகாரம் சகலருக்கும் ஒரே விதமாகப் - பாரபட்சமின்றி - அமைக்கப்படல் வேண்டும். "லைன்" பள்ளிக்கூடங்கள் நீக்கப்பட்டு அதற் குப்பதிலாக, நகரங்களில் ஏனைய பெரும்பான்மை மக்களின் பிள்ளை களுக்கு அமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற பள்ளிக்கூடங்கள், ஒரளவுக் சேனும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடியனவாக விளையாட்டிட வசதிகளுடன், அமைக்கப்பட வேண்டும்.
தளபாடப்பற்ருக்குறை இப்பகுதிகளில் காணப்படுகின்ற மற்று மோர் பிரச்சினையாகும். தரையில் அமர்ந்து கற்கும் நிலை இங்கு சர்வ சாதாரணமானதொன்று ; இந்த நிலைமை மாறவேண்டும், நாட்டில் தேவையற்ற வகையில் எவ்வளவோ பணத்தைச் செலவிடும் அரசாங் கம், அதில் ஒரு சிறு வீதத்தையேனும் தளபாடங்களைக் கொள்வனவு செய்யச் செலவிட்டால், போதுமானதாகும்.
ஆசிரியர் பற்ருக்குறை மற்றுமோர் பிரச்சினையாகும். எழுபதுக் கும் மேற்பட்ட மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைமையைத், தோட்டப்பகுதிகளில் காணலாம். இவற்றைவிட ஒருவரே - தலைமை யாசிரியராக, ஐந்து வகுப்புகளுக்கும் வகுப்பாசிரியராக, கணித ஆசிரி யராக, உடற்கல்வியாசிரியராக, - பல பாத்திரங்களாக மாறவேண்டிய நிலைமையும் இங்குண்டு. ஏதோ ஒரு காரணத்தால் ஆசிரியர் வரமுடி யாவிட்டால் அன்று பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை இத்தகைய நிலை மைகள் முற்ருக நீக்கப்பட வேண்டும்.
ஆசிரிய நியமனத்தைப் பொறுத்தவரையில், தோட்டப்பகுதிக்கு தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஏனைய நகரப்பகுதிகளைவிடக் குறைந்தளவு தகுதியே வேண்டப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஏனைய பகுதிகளில் க. பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் தேவைப்படு கின்றபோது, தோட்டப்பகுதிகளில் க. பொ. த. சாதாரணம் அதுவும் இரு தடவைகளில் ஆறுபாடங்களில் சித்தி அடைந்திருந்தால் போதும் என்ற நிலைமை காணப்படுகின்றது. தற்போது கூட 402 தோட்ட ஆசிரியருக்கான தெரிவு நடைபெற்றது. தோட்டப்பகுதியையே பிறப்
90

பிடமாகக் கொண்டு அங்கேயே கல்வி பெற்றவர்களாக இருக்கவேண் டும் என்பது, ஆசிரியர் தெரிவுக்கான நிபந்தனைகளில் ஒன்று. இது ஒரு வரவேற்கத்தக்க செயலே. காரணம். ஏனைய பிரதேசங்களைச் சேர்ந் தோர் இப்பகுதிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டால், அவர்கள் தாம் எப்போது இங்கிருந்து வெளியேறலாம் என்பதிலேயே கண்ணுங் கருத் துமாக இருப்பர். அண்மையில் ஏற்பட்ட ஜுலைக் கலவரங்களில் தோட் டப் பள்ளிக்கூடங்களில் கற்பித்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டமை காரணமாக, மீண்டும் அங்கு செல்லத் தயங்கியபோது, ஆசிரியர்கள் இன்மையால் பல பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்பட்டன. எனவே, மலைநாட்டினரே ஆசிரியராக நியமிக்கப்பட்டால் இதனை நிவர்த்தி செய்யலாம் என, அரசாங்கம் கருதுகின்றது போலும், அத்துடன் இத்தகைய புதிய ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் அரசாங் கம் முனைந்துள்ளமை, வரவேற்கத்தக்கதே.
பாடத்திட்டங்களைப் பொறுத்தவரையில் ஏனைய பள்ளிக்கூடங் களில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாடத்திட்டமே, இங்கும் நடை முறைப்படுத்தப்படவேண்டும், ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் மூலம் இடைநிலைக் கல்விக்கான மாணவரைத் தெரிவு செய்யும்முறை, இங்கும் இடம்பெற வேண்டும். இதனல் ஒரு சில சிறந்த மாணவர்களாவது கல்வியைத் தொடர வசதியுண்டு. நகரப்பகுதிகளில் விடுதி வசதிக ளுடன் கூடிய பள்ளிக்கூடங்களில் சேர்ந்து கல்விபெற, உதவி வேண்டும்.
இடைநிலைக் கல்வி
இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரையில் மாணவர் 3, 4 மைல்கள் வரை நடந்து நகரங்களுக்குச் சென்று கற்கவேண்டிய நிலை மையை, மாற்றவேண்டும். விஞ்ஞானக் கல்விக்கான பல வசதிகள், இடைநலேக்கல்வியைப் பொறுத்தவரையில் அத்தியாவசிய தேவையாகும். விஞ்ஞானக் கல்விக்கான தளபாட வசதிகளை அரசாங்கம் அமைத்துக் கொடுக்க முன்வரவேண்டும்.
தோட்டக்கல்வியைப் பொறுத்தவரையில் கல்விக்கான வசதிகள் குறைவு, பற்ருக்குறை, தகுதியற்ற ஆசிரியர்கள், ஆரம்பக் கல்விக்கப் பால் கல்விபெற வசதியின்மை, இடைநிறுத்தம், என்பனவே பிரதா னமான பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட நூற் றைம்பதாண்டுகால வரலாற்றையுடைய தோட்டப்பகுதியின் கல்வி வரலாறு, வளர்ச்சியற்றதாக, வரண்டதாகவே காணப்படுகின்ற நிலை மை மாறவேண்டும். இக்காலகட்டத்தில் ஏற்பட்ட பிறிதொரு முக்கிய மாற்றம் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமையாகும். ஆல்ை, இதல்ை தோட்டத் தொழிலாளரின் கல்வியில் எத்தகைய முக்கிய
91

Page 55
மாற்றங்களுமே ஏற்படவில்லை. தோட்டக்கல்வியை தேசிய அமைப்பு டன் ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனல் இதன் விளைவுகளைப் பொறுத்திருந்தே அவதானிக்க வேண்டும்.
உயர் கல்வியைப் பொறுத்த வரையில், 'நாடற்றவர்கள்" என்ற காரணத்தால் உயர்கல்வி மறுக்கப்படும் நிலைமை மாறவேண்டும். தொழில் பெறமுடியாத நிலை காண ப்படுகின்றது. ஏதோ ஒருவகையில் அவர்களும் தொழிற் கல்வி பெற்றிருந்தால், அது அவர்களுக்கு இந்தி யாவுக்குச் சென்றபின்னரும் வேலை வசதியைப் பெற, உதவியாக இருக் கும். இதனுல் உயர்கல்வி, தொழிற் கல்வி என்பன இவர்களுக்கு மறுக் கப்படாமல், ஏனைய இலங்கை மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் இவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும். சனத்தொகை அடிப்படையில் மூன்றும் நிலையில் இருக்கும் இந்தியத் தமிழர், பல்கலைக்கழக அனுமதி என்ற அடிப் படையில் எல்லா இனத்தவரையும் விட மிகக் குறைந்த நிலையில் இருக்கின்றனர். யாருக்குப் பல்கலைக்கழக அனுமதி கிடைக் கின்றது? என்பதைப் பற்றி ஆய்வு செய்த கலாநிதி உஸ்வத்த ஆராச்சி (Dr. Uswate Arachi), இந்தியத் தமிழர்களின் பல்கலைக்கழக அனுமதி மிகக் குறைந்தளவாக இருப்பதால் தனது ஆய்விலிருந்தே அவர்களை நீக்கியுள்ளார். 1 இத்தகைய நிலைமை மாற வேண்டும்.
இடைநிறுத்தம்
தோட்டப்பகுதிகளில் பெருமளவு காணப்படும் இந்த நிலைமை வளர்முக நாடுகளுக்கேயுரிய தனிப்பிரச்சினையாகும். இதற்குப் பல கார ணங்கள் உள. இவை 4ம் அத்தியாயத்தில் எடுத்துக் கூறப்பட்டுள் ளன. இப்பிரச்சினையை முற்ருக இல்லாதொழிக்க வேணடும். இலவ சப் புத்தம், மற்றும் கவர்ச்சிகரமான படங்கள், என்பவற்றின் மூலம் மனதைக் கவரலாம். எத்தனையோ தோட்டச்சிருர் பயிற்சிக் கொப்பி களோ, புத்தகங்களோ வாங்கப் பணமின்றி பள்ளிக்கூடம் செல்லாது விடுகின்ற நிலைமை ஆரம்ப காலத்தில் மிகக் கூடுதலாகக் காணப்பட் டபோதும், இன்று இலவச பாடப்புத்தக விநியோகம் இதனைச் சிறிது குறைத்துள்ளமை வரவேற்கத்தக்கதே. இதனேடு தொடர்பாக வசதி மிக்க தனியார் ஸ்தாபனங்களோ அல்லது அரசோ, இவர்களுக்கு மதிய உணவு, அல்லது பால் என்பவற்றை வழங்க முன்வருமாயின் இடை நிறுத்தம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போய்விடவும் கூடும். தூர இடங்களில் விடுதி வசதிகளை ஏற்படுத்தி உணவு, உடை போன்ற ஏனைய வசதிகளையும் ஏற்படுத்த மதநிறுவனங்களோ அரசாங்கமோ முன்வருமாயின், சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
92

பெற்றேரின் மனப்பாங்கு
தோட்டக்கல்வியின் சீர்குலைவுக்கு - முக்கியமாகப் பெண்கல்வி யின் தாழ்நிலைக்குக் - தோட்டத் தொழிலாளரின் போக்கே பிரதான காரணமாகும். பெண்களுக்குக் கல்வி அவசியமல்ல என்ற மனப்பான் மை அவர்களிடமிருந்து நீங்கவேண்டும். இன்று வளர்முக நாடுகளில் கல்விக்கான வசதிகள் - அதாவது இலவசக் கல்வி, இலவச பாடப் புத்தகங்கள் - அளிக்கப்படுகின்ற நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக் கின்றது. எனவே, இன்று பெற்றேர் கல்விக்காகப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிடவேண்டிய நிலை இல்லை எனவே தோட்டத் தொழி லாளருக்குக் கல்வியின் மகத்துவத்தை எடுத்துக்கூறி, அவர்கள் தமது பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தூண்டவேண்டும். அத் துடன் பெண்கள் ஆண்களை விட அந்தஸ்தில் குறைந்தவர்கள் என்ற மனப்பான்மையும், மறையவேண்டும்
1950ஆம் - 1971ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இலங்கையில் கல்வித்துறையில் அளவுக்கதிகமான வளர்ச்சி காணப்பட்டபோதும், பிரதிநிதித்துவத்தை இழந்த காரணத்தால் தோட்டப்பகுதிகளில் கல்வி வளர்ச்சிக்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என லாம். தோட்டப் பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்றும்கூட கல்வித் தரம் இங்கு உயரவில்லை. அதற்கான முயற்சிகளும் இதுவரை செயற் படுத்தப்படவும் இல்லை. ና
தோட்டமக்களுடைய தாழ்ந்த கல்வி நிலைமைக்குக் காரணம். அவர் கள் வாக்குரிமை அற்றவர்களாக இருப்பதுதான் இதனுல் இவர்களு டைய வளர்ச்சியில் அரசாங்கம் அக்கறை காட்டுவதில்லை. இதனல் தான் பள்ளிக்கூடங்கள் இன்மை, ஆசிரியர் இன்மை, அவர்களின் அக்கறை இன்மை என்பன எல்லாம் ஒன்று சேர்ந்து, இச்சமுதாயத்தையே இருண்ட உலகினுள் தள்ளி விட்டுள்ளன.
1970ஆம் ஆண்டளவில் தோட்டப் பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அகில உலகக் குழந்தைகள் நிதி ஸ்தாபனம் இப்பள்ளிக்கூடங்களுக்கான தளபாடங்களைக் கொடுக்க முன் வந்தபோது, சில நிர்வாக அதிகாரிகளால் அது தடுக்கப்பட்டுவிட்டது என்பதை நாம் முன்னரே எடுத்துக்காட்டினுேம். இத்தகைய சிறுமைகள், இலங்கை அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து மறைய வேண்டும். இன, மத வேறுபாடின்றிச் செயலாற்றக்கூடிய மனத்திண்மையை அவர்கள் பெறவேண்டும்.
9.

Page 56
இன்று மலைநாட்டில், பள்ளிக்கூடம் செல்லும் பருவத்தில் உள்ள மாணவர்களுள் ஒரு இலட்சம் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வ தில்லை. அப்படிச் சென்ருலும்கூட, மூன்ரும் நான்காம் வகுப்புடன் விலகிவிடுகிறர்கள் என்பதை முதல் அத்தியாயத்திலேயே கண்டோம் . இ று க. பொ. த. உயர்தர விஞ்ஞான வகுப்புகள் மலைநாட்டிலேயே இரண்டு பள்ளிக்கூடங்களில் மட்டுமே, நடை பெறுகின்றன. சிங்களப் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப் பிரிவுகள் இயங்கிவருகின்ற நிலையில் அங்கே கல்விப்போதனை வசதிகள் அருகியதாகக் காணப்படுவதுடன், இருசாரா ரிடமும் சுமுகமான உறவுகள் நிலவுவதில்லை; சிங்களவரே நிர்வாகத் தைக் கவனிப்பதால், இத்தகைய இடர்ப்பாடு நிலவுகின்றது. இவை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும்.
மலைநாட்டின் கல்வியமைப்பைப் பொறுத்தவரையில் தீட்டப் படும் அறிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள் என்பன பெருமளவு கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவனபோலக் காணப்பட்ட போதும் அவை, பெயரளவிலே அன்றி நடைமுறையில் முறையாகச் செயற்படுத்தப்படுவதில்லை. செலவிட உத்தேசித்த தொகை மிகப் பெரி தாக இருக்கும்; அதில் காற்பங்குகூடச் செலவிடப்படாத நிலைமையை, நாம் அவதானிக்கலாம். உதாரணமாக, கல்வி அமைச்சின் பிரசுரிக் கப்படாத சில அறிக்கைகள் மூலம், தோட்டப் பள்ளிக்கூடங்களின் அபிவிருத்திக்கான செயற்றிட்டம் பற்றிய சில விபரங்களை நோக் குவோம். 1981 - 1984ஆம் ஆண்டு வரையிலான இத் திட்டத்தில், வெளிநாட்டு உதவியான 10 மில்லியன் இதற்காக ஒதுக் கப்பட்டது. ஆண்டொன்றுக்கு 5 மில்லியன் வீதம் 4 ஆண்டுகளுக்கும் 20மில்லியன் திட்டமிடப்பட்டது. மிகுதி 10 மில்லியன் உள்நாட்டுப் பணமாகவும் கணிக்கப்பட்டது. இவற்றைச் செலவிடுவதன் முக்கிய நோக்கங்கள் கட்டட, தளபாட, புத்தகத் தேவைகளைப் பூர்த்தி செய் வதே எனக் குறிப்பிடப்பட்டது.
நாம் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க :
(i) எஸ்டேட் நிர்வாகத்திலுள்ள பள்ளிக்கூடங்களை அரசு
பொறுப்பேற்பது.
(ii) வகுப்பறை, தளபாட, ஆசிரிய விடுதிகள் போன்ற
வசதிகள் அமைத்தல்.
(iii) தகைமை பெற்ற ஆசிரியர் நியமனம்
94

(iv) இரண்டாம் நிலைக் கல்வி வசதி, விஞ்ஞான வசதி, நூலக,
விளையாட்டிட வசதிகள் அளித்தல்.
போன்ற தீர்மானங்களை அரசாங்கம் எடுத்தது. இவ்வாறு 750 பள் ளிக்கூடங்கள் இந்த 4 ஆண்டுத்திட்டத்தில் இடம் பெற்றன. இதில் 150 பள்ளிக்கூடங்கள் முதற்திட்டத்தில் (1981) இடைநிலைக் கல்வி வசதி பெறும் , மற்றத்திட்டம் 50 பள்ளிக்கூடங்கள் இடைநிலைத் தரம் பெறுவது, 1984 இல் முடிவுறும்.2
இவையே அரசாங்கத்தின் பாரிய திட்டம். ஆல்ை நடைமுறை யில் இதில் எந்தளவு பூர்த்தியாயிற்று என்பது, கேள்விக்குரிய விட யமே.
இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ள பல பிரச்சினைகள் அத்தியா வசியமானவை. ஆனல் திட்டங்களை நடைமுறைப்படுத்த நீண்ட நாட் கள் செல்லுகின்றன. அவை நடைமுறைப்படுத்தப்படவும் முடியாது. எனவே, இதற்கான ஒரு முடிவை அரசாங்கம் விரைவில் மேற்கொள் ளவேண்டும்.
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை இலங்கையின் பொருளாதா ரத்திற்கு இன்றியமையாதது; ஆனல் அதன் உயிர்நாடியாகிய தொழி லாளரின் கல்வி புறக்கணிக்கப்படுகின்றது. இவர்களின் கல்வி உயர்ந் தால், தேசிய பொருளாதாரத்தில் இவர்களின் பங்கு உயரும். எனவே தொகுத்து நோக்கின் :
(i) மிகுதியாகவுள்ள பள்ளிக்கூடங்களை அரசு பொறுப்பேற்க
வேண்டும். (ii) கட்டட, தளபாட ஆசிரிய பற்ருக்குறை நீக்கப்பட
வேண்டும். (iii) ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து இடைநிலை, உயர்
நிலைக் கல்வி பெற வாய்ப்பளிக்க வேண்டும். (iv) பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முட்டுக்கட்டை
கள் இருக்கக் கூடாது. (v) பொதுக்கல்வி, தொழில்நுட்ப, தொழிற்கல்விக்கு முக்
கிய இடமளித்துச் சமசந்தர்ப்பமளிக்க வேண்டும். (vi) அத்துடன்தொண்டராசிரியராகக்கடமைபுரிகின்ற 300க் கும் மேற்பட்டோருக்கு, நிரந்தரப் பதவி வழங்குதல்.
இவற்றையெல்லாம் ஒரளவு மேற்கொண்டால், கல்வியில் ஒரள வுக்காயினும் முன்னேறிய ஒரு சமுதாயத்தை அரசாங்கம் உருவாக் கலாம்.
95
Ο

Page 57
எனவே, மலைநாட்டில் நிலவி வருகின்ற அறியாமை என்ற இரு ளைப் போக்குவதற்கு இத்தகைய திட்டங்கள் மட்டும் போதாது. முதியோ ரிடையே காணப்படுகின்ற அறியாமையை நீக்கவேண்டும். இதற்காக, முதியோர் கல்வித் திட்டங்களை உருவாக்க வேண்டும். இதன்மூலம் கற்றலின் சிறப்பை அவர்களிடையே புகுத்துவதன் மூலம், இளஞ்சந் ததியினருக்கும் பெண்களுக்கும் கல்வியளிக்க அவர்கள் முன்வரக்கூடி யதாக இருக்கும். அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த, மலையகத் தில் கற்றவர்களுக்கு ஆசிரியர் பதவி வழங்கப்படவேண்டும். இதுவரை அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களது அரசியல் பாதுகாப்புக்கும் சமூக வளர்ச்சிக்கும் வழிகாண, கல்வியின்றி முடியாது. எனவே, மலை யகக்கல்வியில் அக்கறைகொண்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்ற வேண் டியது அவசியமாகும்.
இவைமூலம் நாம் அறிவுமிக்க, ஆற்றல்மிக்க, திறமை மிக்க தொழிலாளரை உருவாக்க முடியும்; அதன் பிரதிபலிப்பாக இலங்கை யின் பொருளாதாரமும் வளர்ச்சியுறுமென எதிர்பார்க்கலாம்.
S6

குறிப்புகள் NOTES

Page 58
அத்தியாயம் - 1
1.
10.
12
13.
14.
15.
6.
CHATTOPADHYAYA, H. P. Indians in Sri Lanka, 1979. p. 24.
CENSUS OE CEYLON, 1901 - Vol. 1, Ch. XIX, p. 161.
RAJARATNAM, S. “The Ceylon Tea Industry", The Ceylon Journal of Historical and Social Studies, Vol. 4 (2) : July - Dec., 1961 : p. 187.
CHATTOPADHYAYA, H. P. op. cit, p. 15.
KODIKARA, S. U. Indo - Ceylon Relations since Independence, 1965 : p, 6. h
ஜெயசிங்க, பூரீ. ச. இலங்கை வாழ் இந்தியரின் குடியகல்வு மலையக மக்கள் வெளியீடு, 1969, ப. 9.
மேலது, ப. 10, 11.
GNANAMU THU, G. A. Education and the Indian Plantation Workers in Sri Lanka, p. 10.
KODIKARA, S.U. op. cit, p. 14.
ஜெயசிங்க, பரீ. ச. முற்கூறப்பட்ட, ப. 12.
பொருளியல் நோக்கு, மலர் 5 (12), மார்ச் 1980. ஜெயசிங்க, பரீ ச. முற்கூறப்பட்ட, ப. 12: மேலது. ப. 12.
மேலது, ப. 17.
GNANAMUTHU, G. A. op. cit, pp. 12 - 13.
INTERNATIONAL BILL OF HUMAN RIGHTS, South Asia Publication Article - 26.

அத்தியாயம் - 2
CHATTOPADHYAYA, H. P. Indians in Sri Lanka, p. 171.
GNANAMUTHU, G. A. The Child in the Plantation, 1979. p. 4.
Ibid. p. 4.
WAGE, Herbert (Chairman). Report of the Commission on Elementary Education in Ceylon, p. 11.
GNANAMUTHU, G. A. Education and the Indian Plantation Workers in Sri Lanka, p. 14.
Ibid. p. 16.
GNANAMUTHU, G.A. n, d. op. cit, p. 20.
Ibid. p. 20
Ibid. p. 23.
Ibid. p. 26,
Ibid. p. 26.
அத்தியாயம் - 3
l
CHATTOPADHYAYA, H. P. Indians in Sri Lanka, 1979. p. 171.
BURROWS, S. M. Report on the Question of Education of Indian Labourers employed on Estates in Ceylon, 1905.
bid. CHATTOPADHYAYA, H. P. 1979, op cit, p. 172.

Page 59
6.
10.
1.
12.
13.
14.
5.
6.
17,
18.
9.
20.
2.
23.
100
Ibid. p. 172, Ibid. p. 173.
... bid p. 174.
. Ibid. p. 174.
CENS US OF CEYLON, 1901. Ch. 15.
GNANAMUTHU, G. A. Education and the Indian Plantation Workers in Sri Lanka, n., d. p. 37.
கல்விநூற்றண்டு மலர், பாகம் 2. ப. 569
மேலது, ப. 569.
BURROWS, S. M. op, cit.
| CHATTOPADHYAYA, H. P. op. cit, p. 172.
Ibid. p. 172,
Ibid., p. 177.
lbid., p. 176.
bid. p. 177.
Ibid. p. 177.
WAGE, Herbert (Chairman). Report of the Commission on Elementary Education in Ceylon, 1905. v
CHATTOPADHYAYA, H. P. 1979, op. cit, p. 179. Ibid. P. 180. -
சந்திரசேகரம், சோ. “மலையகத்தில் பாடசாலை செல்லாத 36 2ளகள்' ஊற்று, யூன் 1974, ப. 9- - - -

ه24
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
மேலது. ப. 10.
மேலது, ப. 11.
CHATTOPADHYAYA, H. P. 1979. ор. cit., p. 181.
bid. p. 181
Ibid. p. 181.
JAYASURIYA, J. E. Education in Ceylon. Before and after Independence, 1969. p. 129.
Ibid, p 129.
GNANAMUTHU, G. A. The Child in the Plantation, 1979. p. 7.
HANSARD (H.R.) March 1949: Col. 1423. HANSARD (H. R), August 10, 1951 : Col. 2864.
Final Report of the N. E. C. 1962.
HANSARD (H. R.), May 4, 1965 : Col. 1205.
bid.
JAYASURIYA, J. E. 1969. op. cit, p. 132.
PROPOS ALS FOR A NATIONAL SYSTEM OF EDUCATION, 1964. p. 20.
Ibid. p. 21.
CHATTOPADHYAYA, H. P. 1979. op. cit, p. 192. Ibid. p. 192 HANSARD (H.R.), May 4, 1965 : Coις 1205,
01

Page 60
43.
44.
45.
46.
47.
48.
49.
CHATTOPADHYAYA, H. Ps 1979. op, cit, p. 193, 194.
Ibid. p. 194.
DEPARTMENT OF EDUCATION. Report of the Committee on non school going children, 1960... para 6.
Ibid. Para 5. HANSARD (H. R.), vol. 46 (23) : Col. 4575.
PERFORMANCE, Jan. - Sept., 1980.
PERFORMANCE, Jan. - June, 1981.
அத்தியாயம் - 4
1.
8.
10.
162
சிவலிங்கம், இரா. "மலையகத்தில் கல்வித் தீண்டாமை", குறிஞ்சி மலர், கொழும்பு : இலங்கைப் பல்கலைக்கழகம், 1978.
GNANAMUTHU, G. A. The Child in the Plantation. Colombo: Church of Ceylon, 1979. p. 9.
சிவலிங்கம், இரா. மேற்படி,
மேலது.
மேலது.
மேலது.
மலையக வெகுசன இயக்கச் செயலாளர். பி. ஏ. காதர் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுகள்."
மேலது.
நித்தியானந்தன், மு. “கருகும் மொட்டுகள்’ எழில், பலாலி : ஆசிரிய கலாசாலை வெளியீடு, 1979, ப. 63.
GNANAMUTHU, G. A. Education and the Plantation Workers in: Sri Lanka, . p. 70 - - , , · ·

1.
12.
13.
14.
6.
7.
8.
9.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31,
மேலது, ப. 69
GNANAM UTHU, G. A. The Child in the Plantation. p.9.
Ibid. p. 9.
Ibid. p. 14.
Ibid. p. 15.
Ibid. p. 15.
Ibid. p 15.
lbid., p, 22.
B, A, காதரின் ஆய்வு.
நித்தியானந்தன், மு, மேற்படி, ப. 65,
Ceylon Administration Report, 1958. p. 16.
Administration Report of the Director of Education, Ceylon. 1964. CHATTOPADHYAYA, H. P. Indians in Sri Lanka. p. 198;
B, A, காதரின் ஆய்வு. GNANAMUTHU, G.A. op. cit. p. 71.
Ibid. p. 72.
CHATTOPADHYAYA, H. P. op. cit, p. 175. B. A. காதரின் ஆய்வு.
மேலது.
மேலது.
வாமதேவன், எம். “மலையகத் தமிழர்களின் பொருளாதாரப் பங்களிப்பும் அவர்களது கல்வி நிலைமையும்'. குறிஞ்சி மலர்.
103

Page 61
32. GNANAMUTHU, G A. op. cit, 3 1 12
அத்தியாயம் - 5 . .
1. வாமதேவன், எம். குறிஞ்சி மலர்.
2. வெளியிடப்படாத அரசாங்க அறிக்கை.
04

உசாத்துணை நூல்கள் BIBIOGRAPHY

Page 62
i.
10.
11.
105
BURROWS, S. M. Report on the Question of Education of Indian: Labourers employed on Estates in Ceylon. Ceylon Sessional Papers No. IV of 1905.
CEYLON WORKERS CONGRESS 23rd Covention. Ramanujam Nagar, Hatton, October 22, 25, 1969
...... ... ... 24th Convention, Nuwara Eliya, February 26-27, 1972.
a O 8 & 6 & W 8 P. Congress News: A Fortnightly Newspaper.
CHATTOPADHYAYA, H. P. Indians in Sri Lanka, Calcutta: K. Banerjee, O. P. S. Publishers, n., d.
DEPARTMENT OF EDUCATION. Report of the Committee
on Non School going Children. Ceylon Sessional Papers No. III of 1960,
DEPARTMENT OF IMMIGRATION. Cooly Immigration. Ceylon Sessional Papers No. LXVIII of 1907.
DEPARTMENT OF CENS US AND STATISTICS. The Ceylon
Year Books 1950 to 1980. Colombo: Ceylon Government Printers.
GNANAMUIHU, G. A. The Child in the Plantation, Colombo: Church of Ceylon, 1979.
. ... Education and the Indian Plantation Workers in
Sri Lanka, Colombo: National Christian Council of Sri Lanka, n. d.
JAYASURIYA, J. E. Education in Ceylon before and after Independence, 1939-1968. Colombo, 1969.

2.
3.
A.
5.
6.
18.
20,
21.
22.
23.
24.
...... ... Educational policies and progress during the British rule, Ceylon 1796 - 1948. Colombo 6, n. а.
.............. (Chairman), Inter im Report of the National Education Commission. Ceylon Sessional Papers No.I of 1962.
& 8 c s 8 v s a s Some issues in Ceylon Education. Peradeniya : Associated Educational Publishers, ta. d.
KANNANGARA, C. W. W. Report of the Special Committee on Education, Ceylon Sessional Papers No. XXIV of I943.
KODIKARA, S. U. Indo-Ceylon Relations since Independence. Colombo, 1965. . -
THE LEGISLATIVE COUNCIL, CEYLON. Ceylon Educational Ordinance No. 1 of 1920.
... The Rural School Ordinance No. 8 of 1907.
MINISTRY OF PLAN IMPLEMENTATION. Performance Report-Nuwara Eliya District, 4th Quarter, 1982. Colombo: Ministry of Plan limplementation, Regional Development Division. 1982.
NATESA IYER, K. Indians in Ceylon.
THE PARLlAMENT OF CEYLON, Ceylon Educational Ordinance No. 5 of 1951.
THE STATE COUNCIL. Ceylon Educational Ordinance No. 26 of 1947,
a r s s w & . Ceylon Educational Ordinance No. 31 of 1939.
+ 8 & 8 Report of the Select Committee on Sinhalese and Tamil as Official Languages. Ceylon Sessional Papers
No XXIII of 1946.
107

Page 63
25.
26.
27,
28,
29.
30.
52·
33.
108
SUMATHIPALA, K. H. M. History of Education in Ceylon, 1796 - 1965. Dehiwala: Tisara Prakasakayo, 1968.
WACE, Herbert (Chairman). Report of the Commission on Elementary Education in Ceylon. Ceylon Sessional Papers No. XXVIII of 1905.
எழில், பலாலி: ஆசிரிய கலாசாலை வெளியீடு, 1979. கல்வி, பேராதனை: இலங்கைப் பல்கலைக்கழகம், 1968, இதழ் 4, 5.
கல்வி கலாச்சார அமைச்சு. கல்வி நூற்ருண்டு மலர், கொழும்பு அரசாங்க வெளியீட்டுத்திணைக்களம், 1969,
குறிஞ்சி மலர், கொழும்பு இலங்கைப் பல்கலைக்கழகம், 1978,
சந்திரசேகரம், சோ. “மலையகத்தில் பாடசாலை செல்லாத பிள்ளை கள்", ஊற்று, யூன் 1974.
பொருளியல் நோக்கு, மலர் 5 ( 2): மார்ச் 1980.
ஜெயசிங்க, பரீ. ச. “இலங்கைவாழ் இந்தியரின் டியகல்வு”. மலையக மக்கள் வெளியீடு, 1969.