Page 30
G、回
நிாந்தநாட்களே கிடையாது" " அப்படி நானும் ஸ்விபந்து பிள்' தனது டயரியின் ஒருமுக்குள் பத்திராகாந்திருந்தாது படத்தடுத்து காட்டினான் "நன்படம் இரண்டாமக்ந்திருக்கியூ
" ... in...L.
- ன்றாலும்தான் *ந்தப்பிறந்தநாள் リー այլերհամ, որ երեք ான் நீங்கள் தினத்தார்
பிரகாமா பொது இரவிள்ளப்பாறை இடுக்கிவிந்து לשפל பிரிடிஆர்டுெத்து இவனது இதயத்து மனபெஸ்சில் கிங்பியபோதுதிப்பரிகளை இவன் புதியிருந்தாள்
'பரண்டுர்ரி போன் ான் இதயத்துபெற்றுக்குவா நிறைந்துத்துப்பியது எங்கிருந்தே பெரிந்த பழவேள்ாத்தில் உயிர்த்துச்சிவித்தன்
ஒர்பிரம் என்
எத்தன்ைஇதுக்காப்பார்களின் கொள்வேயினாத்தாண்டி
கற்றதுப்பாக்கிகளின் குண்டுகளுக்குத்தப் Tப்படி பந்தர்ந்தது அப்பப்
HIFIL. JFil LT-LilialLF
அரிமுகமான இரண்டு பேரின் திட்டமிட் நடந்தப் பிடிப் ஆர்புதமானது என்று ன்றுதான்காற்றம்
பண்டநாட்களுக்குப்பிறகு திரும்பிவாபள்ளிான்றுயிட்டானங்கள் இவன் எர்பிருந்தபiபிற்குள் அவருந்திருந்தார் பார்த்தாள் =பாதுமுகத்தில் ஒருவிநதியும் ஒருநாந்தோமும் துயரமும் கயந்திருந்தன் துப் போவிப் டாளும் பேரவள்ள வார்ந்தாள்முட்ட முட் பாய்ந்து புர்டர்ாேன்ே தரபிஸ்தாபனயமுட்டி முட்டிரமர்துசேய்கின்றன
"ான்றாலும் நீங்கள் அப்படி எழுதியிருக்கம் । கரைக்காப்பையா எந்தச் சிானி பிந்தும் கிருந்த மாம்பழங்காம்கிடக்கர்"
இவன் எழுதியிருந்த கடித பரிான அவர் ரா ரட்னாள் "பாய்வில் ன்ன கண்ட போது ஒரு பா தந்தார் பப்படவுயிர்யந்நோக்ாபர் என்று நிர்ாம்
இதள்ாதிபருக்கருத்துக்குள் இன்பந்துபோதாள்
:Liii எழுந்துசென்று நடந்தாள் கடைசிாருட்சி க்
ஏந்தி வன்விடுதிரும்பிதிருத்தாள்
Hi, дін-әлсі பியூத்திய அந்தக்க பங்கள் முந்ந்து பாத்துடள் தவிபட்டில் டாயடிகள்ள் நியாயப்படுத்திக்கொண்டிருந்தது முந்தைக் மடிபிடெரோசிாய்ந்துபோல் தோன்ரிபது கிர்ேரபுக்குச் முரி நின்தும் பிகாபாகத் தோன்ரிது மேசையில் הזשל 65
ஆகஸ்ட் - ஒக்டோபர் :
இரும்பான டாந்தடத்தின் பார்கன்பே ஒப்பிட்டு Jy ill: 77 i இதுை | iii காமம் தானாகள் நியத்தின்ர் ஒரு பாய டுத்துக்குத்தான்கிப்பட்டுவிங்கியிருந்து தடுக்குமாக இருந்து னோப்பிடுவதற்கு இவனது தட்டுக்காம்பூரிய
ந்ைது தப்படுத்தியது.
பெரும்பாச்சியத்திருந்துவந்து பொருங்கிஇந்நாள் ானது இதயத்தின் ஒரு துண்ட்யேறும் எடுத்துப் ப்ெ ாகங்களும் அவர் பரந்து விட்ட கயிருந்த அந்த ஒரே செய்தியும் சோ தொந்து போயிருந்து அப்பப்ாேழுது பும் காட்டுப் புக்காடரி எழுத்தின் பிளக்கு ஒரிஸ்
ந்கிடந்த உறுப்பு:ாதி ஆடிட்டுத்து பார்டு ஸ்டு பொருத்திப்பர்த்தாள் முடியவில்
பருபிய தெரு,ாருயிர்ாதகடு யாருமிப்பது நாற்காவிகள் பயில்ாதார குபுயிருந்ததுருபிய்பட்டத்தின் பந்தியில் சப்பட்ட கல்வெள்ர்ாள் ஏற்பட்டத்தவித்த வெற்றிடத்தில் வள்விழுந்துகிடப்பதுபோல்டனர்ந்தான்
*s O
С8)
Page 31
புலம்பெயர் நிலை என்று இன்று நாங்கள் தமிழில் பேசுகின்ற போது பெரும்பான்மையும் அதனை இலக்கியத்தோடு சார்ந்து பேசுகின்ற ஒரு பண்புதான் சிறு சஞ்சிகை மட்டத்திலே பெரும்பாலும் காணப்படுகிறது. மற்றைய ஊடக மட்டங்களில் இப்புலம்பெயர் வாழ்வு பற்றிய குறிப்புரைகள் அதிகமில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் உண்மையில் புலம்பெயர் நிலை என்று சொல்வது இலக்கியத்தை மாத்திரமல்ல பல்வேறு விடயங்களை உள்ளடக்கியது. மிகப் பாரதூரமான காத்திரமான விடயங்களை அது தன்னகத்தே கொண்டுள்ளது. புலம்பெயர் வாழ்வு என்பது தமிழ்பண்பாட்டில் அல்லது இலங்கைத் தமிழ் பண்பாட்டில் எத்தகைய இடம் பெறுகிறது என்பது ஒரு விடயம். தமிழ் கண்ணோட்ட த்தில் ஒருவர் புலம் பெயர்ந்து வாழ்வது என்பது ஒரு வரவேற்கத்தக்க ஒரு காரியமாக இருக்கவில்லை. சிலப்பதிகாரத்தில் கோவலன் கணினகியுடைய பெற்றோர்களைப் பற்றி சொல்கின்ற போது ஒரு வரி வரும் பதி எழு அறியா பழங்குடி' என்று அதாவது இருக்கின்ற ஊரிலேயே நீண்ட காலமாக வாழ்ந்தவர்கள், அந்த ஊரைவிட்டு போகாதவர்கள் என்ற கருத்து. எங்கள் கிராமங்களில் கூட ஒருவரைப் பற்றி சொல்கின்ற போது அவரைத் தாழ்த்திப் பேச வேண்டுமென்றால் வந்தேறு குடிகள்" என்று சொல்வார்கள். இந்த புலம் பெயர் வாழ்வு என்பது தமிழ் பணிபாட்டில் எல்லாக் காலங்களிலும் போற்றப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. திரைகடல் ஒடியும் திரவியம் தேடு' என்ற கருத்து உண்டேதவிர, அது இந்த மண்ணை உதறிவிட்டு ஒடு என்பது தமிழ் பண்பாட்டில் மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம்.
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
ஆனால் இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை இந்த 5606)60s) படிப்படியாக, அரசியல் பிரச்சினை, அரசியல்
போராட்டங்கள் நடந்ததன் காரணமாக குறிப்பாக ஆங்கிலம் தெரிந்தவர்களின் மத்தியில் இந்நிலைமை மாறத் தொடங்கியது. 1956க்குப் பின் இலங்கையில் தொடர்ந்து வாழ்வதால் தங்கள் வாழ்வில் முன்னேற்றங்களை பெற முடியுமா என்கின்ற பிரச்சினை ஆங்கில புலமையுடைய, கல்விகற்ற, சமூகவாய்ப்புள்ள மக்களிடையே எழத் தொடங்கியது. இதனால் 1956, 60 களில் இலங்கையில் பெரும்பான்மை Professional என்று சொல்லப்படுகின்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள் எழுதுவினைஞர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் வெளியே றுகின்றர். அவர்கள் ஆங்கில மரபு தெரிந்த நாடுகளுக்கு குறிப்பாக பிரித்தானியாவுக்கு சென்றனர். இந்த ஒட்டம் படிப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வந்தது. 1960களின் பிற்கூற்றில் இருந்து சாதாரண நிலையில் உள்ள மக்கள் குறிப்பாக உடல் தொழிலை நம்பி இருப்பவர்களும் வெளிநாடுகளுக்கு உழைப்புக்காக போகின்ற நிலை தொடங்குகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகின்ற நிலை தொடங்குகிறது. இதனால் நிறைய பணம் வரத் தொடங்குகிறது. அந்த பனத்திற்கு அவர்கள் பரிச்சயமாகிறார்கள். அதனால் அவர்களின் சமூக வாழ்க்கை மேல்நிலைப்படுகிறது. அபிலாசைகள் அதிகரிக்கிறது. இதனால் ஒரு சமூக அசைவியக்கம் படிப்படியாக ஏற்படுகிறது. இந்த அசைவியக்கம் ஏற்படுகின்ற காலகட்டத்தில் குறிப்பாக 70, 76களுக்கு பிறகு இம்மக்கள் மத்தியில் ஒரு நெருக்குவாரம் எழத் தொடங்கிறது. அது 84இல்
உச்சம் பெறுகிறது. 83யை நான் சொல்ல மாட்டேன்.
29
Page 32
G子77卒芋回
ஏனென்றால் 83இல் வடக்கு கிழக்கு அல்லாத பகுதியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதே தவிர 84இல்தான் தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கில் இருப்பதே பிரச்சனையாக மாறிற்று. 84 என எடுக்கும் போது உதாரன்னமாக யாழ்ப்பானத்தை எடுத்துக்கொண்டால் மிகத்தெளிவாக இதனை பேசமுடியும் மட்டக்களப்பிலும் இது நடந்தது. யாழ்ப்பாணத்தில் 84க்கு பிறகு, முதலில் வடமராட்சி இராணுவத் தாக்குதலுக்குள்ளாகிறது. வடமாராட்சி பகுதியில் உள்ள மக்கள் பெருந்தொகையானவர்கள் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற நேர்கிறது. அதன் பிறகு வலிகாமத்திலிருந்து மக் களர் வெளியேறு கரின் றனர். இப் போது தென்மராட்சியிலிருந்து மக்கள் வெளியேறி உள்ளனர். இதே போல மட்டக்களப்பு பகுதிகளிலும் ஏற்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். அங்கே இளைஞர்கள் இருப்பது என்பது பெரும் பிரச்சினையாகிறது. இப்படியான சூழலில் இம்மக்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்தல் என்பது பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு மாத்திரமல்லாது வேறுசில நாடுகளுக்கும் போக வேண்டி ஏற்படுகிறது. இதன் அடிப் படையான விடயம் என ன வெனிறால இவ்வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும் எவ்வித புலம் பெயர்விற்கும் தயாரானவர்கள் அல்ல. இவர்கள் உண்மையில் தங்களுடையே கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்து அயற்கிராமத்தில் வாழ்வதற்குக் கூட தங்களை தயார் செய்து கொள்ளாதவர்கள். தங்களுடைய கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையிலுள்ள ஒரு நகர்ப்பகுதியில் வாழ்வதற்கு கூட தங்களை தயார் செய்யாதவர்கள், அப்படியான குடும்பங்களாகச் சேர்ந்தவர்கள். தத்தம் இடங்களில் உள்ள நிலைமை காரணமாக முதலில் ஒருவர் வெளிநாட்டுக்குப் போவார். தன் சசோதார சகோதரிகளை அழைப்பார். பின்னர் தன்குடும்பத்தினரை அழைப்பார். பின்னர் தனது ஊரவர்களை அழைப்பார். அவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் தாங்கள் சென்று தங்கி வாழ்வதற்கான மனத் தயார் நிலை அற்றவர்கள். ஆனால் 60களில் புலம் பெயர்ந்தவர்கள் இதற்கான மனத்தயார் நிலையைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலப் புலமை இருந்தது, தொழில் துறை சார்ந்து அங்கு எப்படி தங்களை நிலை நிறுத்திக் கொள்வது - அதேநேரம் வீடுகளுக்குள் எப்படி தமிழ் பண்பாட்டைப் பேணுவது போன்ற நெளிவு சுழிவுகளை தெரிந்து வைத்திருந்தவர்கள் அவர்கள். 1980களில் போனவர்கள் அப்படியல்ல. பல நாடுகளுக்கும் போகிறார்கள். ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால் அவர்கள் பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிட்சலாந்து, ஸ்கண்டினேவிய நாடுகளான நோர்வே, சுவிடன், டென்மார்க் போன்ற நாடுகளுக்கும் போகிறார்கள். இதைத் தவிர அவர்கள் அமெரிக்காவிலே கனடாவிற்கும் செல்கிறார்கள். ஆங்கில மரபுள்ள நாடுகளுக்குச் செல்வது ஒரு தன்மையாகவும், ஆங்கிலம் அல்லாத நாடுகளுக்கு செல்வது இன்னொரு தன்மையாகவும் தொழிற்படுகிறது.
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
ஆங்கில மரபுள்ள நாடுகளுக்கு இவர்கள் செல்கின்ற போது அந்த நாடுகளில் உள்ள அறிதொழில் ஆறைகளில் வைத்தியர்களாகவும் ஆசிரியர்களாகவும் நியாய துரந்தர்களாகவும் உள்வாங்கப்படுவதற்கான அடிப்படைத் தகைமை அவர்களிடம் இருந்தது, அதனால் தான் போனார்கள். ஆனால் பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சலாந்து, ஜேர்மனிக்கு போனவர்கள் எல்லாம் சற்று வித்தியாச மானவர்கள். அங்கு போனவர்களுக்கு அந்த மொழிகள் தெரியாது. அந்த மொழிப் பண்பாடு தெரியாது. இவர்கள் அந்த நாடுகளில் மேலுக்கு வரக்கூடிய கல்வியைப் பெறி றவர்களுமல ல. இதனால இவர் களிலி பெரும்பாலானோர் அங்கு அடிநிலை அல்லது சற்று மேம்பட்ட ஒரு இடைநிலையின் கீழ்நிலையிலேதான் தங்களை பொருத்திக் கொள்ள முடிகிறது.
இவர்களுடைய குழந்தைகள் அங்கு கல்விகற்று ஒருவேளை மேலிடத்துக்குப் போக முடியுமே தவிர இவர்கள் அங்கு மேல் நிலைக்கு போக முடியாது! இவர்களுடைய பண்பாடு பற்றிய தகவல்களும் கூட அந்தந்த நாட்டவர்களுக்கு மிகச் குறைவு. தமிழர்கள் என்பதேயே அந்நாட்டவர்கள் கேள்விப்பட்டிராமலும் கூட இருக்கலாம். பிரான்ஸை பொறுத்தவரை பாண்டிச்சேரி தொடர்பால் ஒருவேளை தெரிந்திருக்கலாம். சில வேளை இந்தியர்கள் என்று பார்ப்பார்கள். தமிழர் என்று பார்ப்பது மிக குறைவாகவே இருக்கும். இப்படியான சூழ்நிலையில் இவர்களுக்கு குறிப்பாக புதிய நாடுகள் ஒவ்வொன்றிலும் அந்தந்த நாடுகளின் பண்பாடு ஒரு மேலாண்மை உடைய பண்பாடாக இருக்கும். அந்த மேலாண்மையுடைய பண்பாட்டின்கீழ் வாழ ஒப்புக் கொண்டு அதனுடன் இயைந்து வாழவேண்டிய ஒரு நிலை இவர்களுக்கு உள்ளது.
இவர்கள் தங்கள் பண்பாட்டினை மேல்நிலைப்படுத்தவோ, அல்லது தங்கள் பண்பாட்டை மேல் நிலை உடையதாக இருப்பதற்கான வாய்ப்புக்களோ இல்லை. அதுமாத்திரமல்லாமல் இந்த நாடுகளில் எவற்றிலாலாவது வந்தேறு குடிகளாக அல்லது அகதிகளாகச் சென்றவர்க ளுடைய வாழி வு நிலை இனி னுமி சரியாக வரையறுக்கப்படவில்லை. அவர்கள் தமிழர்கள் என்பதற்காகவோ அல்லது வந்தவர்கள் என்பதற்காகவோ எவ்வித விசேட அந்தஸ்த்தும் கொடுக்கப்படவில்லை. இவர்கள் அங்கு இனக்குழும சிறுபான்மையிரனாக (Ethnic Minority) p. 6iostoli. Ethnic Minority என்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. ஐரோப்பிய, மேற்குநாட்டுச் சூழல்களில் 0ேகளில் இருந்து இந்த Eathic, Eathnicity போன்ற விசயங்கள் அடிக்கடி பேசப்படுகின்றதை காண முடிகிறது. ஏனென்றால் இரண்டாவது உலக மகாயுத்தத்திற்கு பின்னர் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி காரணமாக குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் தங்களுக்கு வேண்டிய உடல் தொழிலாளர்களைப் பெறுவதற்கு தங்களுடைய நாட்டில் மாத்திரம் பெற முடியாமல அண்டை அயல் நாடுகளிலிருந்தும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும் உடல் தொழிலாளர்களை பெறும் ஒரு போக்கு வளர்ந்தது. அவர்களுடைய உற்பத்திக்கு இந்த தொழிலாளர்கள் தேவைப் பட்டதன் காரணமாக
-GO
Page 33
ووالي 72-7ة تحG
அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் அவர்களை
புண்படுத்தாதவாறு வைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.
இதனால் தான் அவர்களுக்கு தங்கள் தங்கள் பண்பாடுகளை பேணுகின்ற உரிமை வழங்கப்பட்டது. ஆனால் வந்துள்ள நாட்டினுடைய பண்பாட்டை அவர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஜேர்மனியை எடுத்துக் கொண்டால் துருக்கியர்கள் போனார்கள். கிரேக்கர் சென்றார்கள். இத்தாலியர்கள் சென்றார்கள். பாகிஸ்தானியர்கள் சென்றார்கள். இவர்களையெல்லாம் அங்கு பேணுவதற்கு அவர்கள் Ethnic என்ற சொல்லைப்
பயன்படுத்தினார்கள். இன்னும் விசேடமாக
ஐரோப்பாவில் இருந்தவர்கள் கூட 4. அமெரிக்காவுக்கும் போனார்கள். கிறீஸ், கம்யூனிஸ நாடுகளிலிருந்து
பலர் போனார்கள்.
அங்கு 60களிலிருந்து ஒரு சூழல் ஏற்படுகிறது, Ethnic Minority என்று சொல்பவர்கள் தங்களுடைய பண்பாட்டை பேணுவ தற்கான ஒரு சூழல் உருவாகிறது. அதேவேளை நாட்டின் மேலாதிக் கப் பணி பாட ைட ஏறி றுகி கொண டு வாழ்கிறவர்களாகவும் இவர்கள் உள்வாங்கப் படுகின்றனர். இந்த நாடுகளின் மேலாதிக்கப் பண்பாட்டை ஏற்றுக் கொள்கின்றவர்கள் என்பதில் பல விசயங்கள் உள்ளன. அது வெறும் வார்த்தைகளல்ல, தொழில் முறைகளில் அந்த நாட்டின் மேலாதிக்க பண்பாட்டினை ஏற்றுக் கொள்ளல், வேலை, நேரம், சம்பளம், உடை, மற்றது வாழ்க்கை முறை, வீடு, வசதி போன்றவை பிரதானமாக கல்வி முறை- அதாவது நாட்டுக் கல்வியில் அந்தந்த நாட்டு மொழிகளே முதலாவது மொழியாயிற்று.
நம்மவர்களோ தங்கள் தாய்மொழியே முதன் மொழியாக இருக்கின்ற சூழலிலேயே வளர்ந்தவர்கள். இப்போது தங்கள் தாய் மொழி முதல் மொழியாக இல்லாத சூழலுக்கு புலம் பெயர்கின்றார்கள், இது பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது.
முதலாவதாக இவர்கள் ஒரு புறத்தில் தங்கள் பண்பாட்டைப் பேணலாம். இன்னொரு நிலையில் அந்நாட்டுடன் இணைய வேண்டும். முதலாவது விடயத்தில் சில வாய்ப்புகள் இவர்களுக்கு கிடைக்கின்றன. உதாரணமாக தங்கள் மொழியிலேயே இவர்கள் எழுதலாம். தங்கள் மொழியிலேயே வானொலி நடாத்தலாம். Ethnic Radio என்பது இன்று தமிழ்களுக்குமாத்திரமல்ல. துருக்கியர்களுக்கும் உள்ளது. சேர்பியருக்கும் உள்ளது. பொஸ்னியாவினருக்கும் உள்ளது. இவர்கள் மேலும் தங்களுடைய மதங்களைக் கூட பகிரங்கமாக பின்பற்ற முடியும் இத்தகைய ஒரு பொறுதியுணர்வு ஐரோப்பியாவில் ஏற்பட்டதற்கான காரணம் ஐரோப்பிய முதலாளித் துவத்திற்கு இவர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
ஐரோப்பிய முதலாளித்துத்திற்கு அல்லது மேல்நாட்டு முதலாளித்துவத்திற்கு அடிநிலைத் தொழில்களைச் செய்வதற்கான தொழிலாளர் வளம் இவர்களிடமே உள்ளது. இவர்கள் அங்கு மேலே போவதற்கான சூழல் இதுவரை இல்லை, ஆனால் இவர்கள் வசதியாக வாழ்வதற்கான சூழல் உள்ளது. அதேவேளையில் இன்று மிகப் பெரும்பாலானோர் ஊடகங்களின் வளர்ச்சிகள், போக்குவரத்து வளர்ச்சிகள் காரணமாக தமது பண்பாட்டை, உணவு பழக்கங்களைப் பேணுவதற்கு உதவுகின்றன.
ஆனால் அந்தப் பேணுதல் நமக்குள்தான் நடைபெறுகிறது, நமக்கு வெளியால் இல்லை. நமது உணவு பழக்கங்கள் அவர்களிடம் சென்றடையவில்லை. அவர்கள் அதை
கவனிக்கத்தொடங்கவுமில்லை. இதனை நான் பிரிட்டனில், கனடாவில், ஜேர்மனியில்
பார்த்திருக்கிறேன்.
ஆனால் அவர்களின் வீட்டு வசதி, சுகாதார வசதி, கல்வி வசதி களைப் பொறுத்தவரையில் அந்த நாட்டின் நீரோட்டத்
ጳ துடனி இணைய SX గో Ab» வேண்டும் - இதில்
ØY» Š న్యీ அவர்கள் தமிழர் 令。 இ) களாக இருக்க $ SPS
L.q. uLU FT ğib
தமிழர்களாக க க’ கூ டி ய வருகிறது.
இப் புலம் பெயர்விற் குள்ளானவர்களின் பெரும் பாண்மையானோர் ஏதோ ஒரு காரணத்திற் காக தமிழ் சம்பந்தமான பிரச்சினையால் புலம் பெயர்ந்த வர்கள். அதில் செனி றவர்களில் 75 சதவீதமானவர்கள் இளைஞர்கள். அவர்கள் ஏதோ ஒரு வகையில் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புபட்டு இந்தச் சூழலிலிருந்து விலக வேண்டுமென புலம் பெயர்ந்தவர்கள். அவர்கள் தமிழைப் பொறுத்தவரையில் ஒரு உணர்வு போதமுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆகவே இவர்கள் எழுதித்தான் ஆகவேண்டும். இவர்களுக்கு எழுத்து என்பது கவலையுள்ள ஒரு பெண்ணுக்கு அழுவது போல் - ஒரு வடிகாலாக அமைகிறது. இப்புலம் பெயர் எழுத்துக்கள் வெறும் இலக்கியம் மட்டுமல்ல, அதுவொரு உணர்ச்சி வடிகாலும் கூட.
அவர்கள் அங்கு ஒன்று சேருகின்ற முறைமையினைப் பார்த்தால், இந்த வடிகால்கள் எப்படி ஒடுகிறது என்பதைப்
31
Page 34
وناجي72-1ة تحG
புரிந்து கொள்ளலாம். ஒரு கிராமத்தில் இருந்து போனவர்கள் ஒரு கூட்டம் போடுவார்கள். சிலவேளை அக் கிராமம் மிகப்பெரும் பிரதேசமாக இருந்தால் அக் கிராமத்திலுள்ளவர்களுள் ஒரு அரசாங்கத் திணைக்களத்தில் வேலை செய்த எல்லோரும் ஒரு
கூட்டம் போடுவார்கள். இதனைக் கூட புரிந்து கொள்ளலாம் ஆனால் ஆரம்பப் பாடசாலையின் பழைய மாணவர்கள் என்று கூடுவார்கள் - இது ஒரு மேம்போக்கான விடயமல்ல, இது மிகவும் பாரதூரமான விடயம். எங்களுடைய மனநிலை, உளநிலை சம்பந்தமான விடயம் - இதன் வெளிப்பாடு அடையாங்களைத் தேடுவது ஆகும். எந்த அடையாளத்தில், எந்தத் தடத்தில் நான் மற்றவர்களோடு சமமாக நிற்கிறேன் நான் மற்றவர்களால் பார்க்கப்படத் தக்கவனாக நிற்கிறேன் என்பது தான் இதற்கான உளவியல். இப்படியான சூழலில் மதம் மிக முக்கியமான இடத்தைப் பெறும் - இந்து மதத்தை எடுத்துக் கொணர் டால் இந்து மதம் என்பது உஷ னவலயபிரதேச தட்பவெப்ப நிலைக்கேற்ற வழிபாடுகளைக் கொண்ட மதம். குவைத்துலர்ந்த வேட்டியுடன் சட்டை அணியாமல் வெறும் காலோடு போய் கும்பிட்டு வரும் மதம். பிரான்ஸ், ஜேர்மனி, கனடாவில் ஒரு வீதியில் ஜூன், ஜுலை மாதங்களில் 500,600 பேர் அங்கப்பிரதட்சினை பண்ணுகிறார்கள் என்றால் அந்நாட்டவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஜேர்மனியில், கனடாவில் மே மாதங்களில் நடக்கும் விழாக்களில் சிலம்படி அடிப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு புதினமாக இருக்கும். இந்த மாதிரியன பண்புகள் எல்லாம் அங்கு வெளிவரத் தொடங்குகின்றன. இந்தப் பண்புகளை எல்லாம் அங்கு கொண்டு செல்வது அவ்வாறு சுலபமானதல்ல, ஆகவே நிச்சயமாக இவர்க ளுக்கு அங்கு ஒரு உள்ளூர் மயப்பாடு தேவைப்படுகிறது.
இது இந்துக்களுக்கு மாத்திரம் தான் என்றால் பிரச்சினையல்ல, இது கிறிஸ்தவர்களையும் தாக்குகிறது. மேற்கு நாடுகள் முழுவதும் கிறிஸ்த்தவ பண்பாடு நாகரீகம் தானே, அவர்களுடன் இணைந்து விடலாம் என்றால் அதுவும் இல்லை. பிரான்ஸிலோ, பிரிட்டனிலோ, நோர்வேயிலே உள்ள தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கு தமிழ் குருமார் தமிழில் மதபோதகங்களை செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். இது நடைமுறையிலும் உள்ளது. இந்த மாதிரியான பிரச்சினைகள் உள்ள நேரத்தில்தான் சில அடிப்படையான பிரச்சினைகள் எழுகின்றன. இந்த தமிழ் அடையாளம் என்பதை எவ்வாறு பேணுவது? இது மதத்தினால் வந்த அடையாளம் அல்ல, மொழியினால் வந்த அடையாளம். மொழி அடையாளத்தை எவ்வாறு பேணுவது? நான் முதலில் குறிப்பிட்டது போல் தாய் மொழி முதல் மொழியாக அங்கு இல்லை. இரண்டாவது மொழியாக இருக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. உதாரணமாக பிரிட்டனில் ஒரு பிள்ளை ஜேர்மனை இரண்டாவது மொழியாகப் படிக்குமே தவிர தமிழைப் படிக்கப் போவதில்லை. அப்போது தமிழை மூன்றாவது அல்லது நான்காவது மட்ட கல்வி மொழியாகவே படிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
இதில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த நிலையில் இவர்களின் இங்கேயிருந்த முதல்மொழி அங்கு கல்வி மொழியாக இல்லாது போகின்றபடியால் சிந்தனை மொழியாக இருக்கின்ற நிலைமையையும் இழந்து விடுகிறது. இலங்கையில் தமிழ் எழுச்சியின் ஒரு முக்கியமான பண்பு மொழிவழிக்கல்வி, தாய்மொழிக் கல்வி. இங்கு தமிழ் சிந்தனை மொழியாக அல்லாது போனால் இவர்களின் அகநிலையில் இவர்களுடைய தமிழ் அடையாளம் அடுத்த சந்ததிக்கு பிரச்சினையாக மாறிக் கொண்டுபோகிறது. இந்நிலையில் கொஞ்சக் காலம் போனால் தமிழைப் பற்றிய விடயங்கள் கூட அந்தந்த நாட்டு மொழிகளிலேயே எழுதப்படலாம். இரண்டாம் தலைமுறை தமிழ்க்குழந்தைகளுக்கு இது முக்கியமான பிரச்சினை. இவ்விரண்டாம் தலைமுறை தமிழ்க் குழந்தைகள் இப்போதுதான் சிறுவர்களாக இருக்கின்றனர். ஆனால் இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் தமிழ் அடையாளத்தை எப்படி காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்றால் நடனம், இசை போன்றவை ஊடாக குறிப்பாக பெண்குழந்தைகளிடம் காப்பாற்றப் பார்க்கிறார்கள். இந்த நாணயத்தின் மறுபுறம் என்னவென்றால் இந்த நடனம், இசை என்பதனை ஆங்கில மொழி வழியாகத் தான் படிக்கிறார்கள். ஆடுவதும், பாடுவதும்தான் பரதநாட்டிய முறைமையே தவிர, பாட்டின் கருத்து குழந்தைகளுக்கு ஆங்கிலத்திலேயே தான் சொல்லப்படுகிறது. 举 தமிழ்பண்பாட்டின் அடையாளங்கள் என நாங்கள் கருதுகின்றவற்ற்ை அந்தந்த வேற்று நாட்டு மொழிகள் மூலமே கற்பிக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகின்றது. இதுவொரு இக்கட்டான நிலைமை. இந்த சனசமூகம் அந்த சனசமூகத்துடன் சேரவில்லை என்பதன் கருத்து என்ன? இந்த சனசமூகத்தின் பண்பாடு அந்த சனசமூகத்திற்கு தெரியாது! இந்த சனசமூகத்தின் மொழி, வரலாற்று நாகரீகப் போக்குகள் அந்த சனசமூகத்திற்கு தெரியாது! நாங்கள் எங்களுக்குள் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் பற்றிப் பேசலாம். ஆனால் அவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்ற வாய்ப்பு மிகச்சில நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் சிக்கலானது.
லண்டனுக்கு ஏற்கனவே ஒரு காலனித்துவ பண்பாட்டுப் பாரம்பரியம் உள்ளது. ஐரோப்பிய முதலாளித்துவம் கொடுக்கின்ற Ethnic வாய்ப்புகள் காரணமாய் அங்கு ஒரளவு பிரச்சினை இல்லை. ஆகவே இவர்கள் அங்கு தங்களுக்குத் தாங்கள் தனித்தனி தீவுகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சுவிட்சலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஒரு கலை நிகழ்ச்சி நடக்கிறதென்றால் அவர்களுடைய பாாம்பரியத்தை ஒட்டியே அது நடக்கிறது. அந்தப் பாரம்பரிய முறைமைகளை கருத்திற் கொண்டு எங்களுடைய நாகரீகப் பண்பாடுகளை எங்களுடைய பண்பாட்டு அம்சங்களை எவராவது கருத்திற் கொண்டு அம்மக்களுக்கு அளித்திருக்கிறார்களா? லண்டனில் இது ஒரளவு சாதி தியப் பட்டிருக்கிறது ஏனெனிலி அங்குள்ளவர்களுக்கு ஆசியப் பண்பாடு என்பது தெரியும். அது காலனித்துவ மேலாண்மை பெற்றிருந்த நாடு. இந்தியர்களை ஆட்சி செய்தது.
32
Page 35
او20 rilتی
இந்த நிலையில் இந்த மக்கள் எப்படி தங்களுடைய அடையாளத்தை பேணுவது? முதலாவதாக இப்படியான புலம் பெயர் நிலை வருகின்ற போது இந்த அடையாளங்கள் பேணப்படுவதற்கு மதமொரு பிரதான காரணம். ஏனென்றால் மதம் நம்பிக்கை சார்ந்தது, சடங்கு சார்ந்தது. சடங்குகள், நம்பிக்கைகள், மனிதர்களை விட்டும் மாறுவதில்லை. இதற்கு ஒரு உதாரணம் கரிபியன் தீவுகளில் வாழும் இந்தியர்கள் தங்களுடைய மொழி, பண்பாடு, உடை எல்லாவற்றையும் மறந்தும்
கூட தங்களுடைய சடங்குகளை மறக்கவில்லை. இதனை நாங்கள் அவதானிக்கலாம். சடங்குகள், ஐதீகங்கள் மறக்கப்படுவதில்லை. அதன் வழிபோனால் தமிழ் அடையாளம் பேணப்படுமா என்றால் இல்லை. இந்து மத அடையாளம் பேணப்படலாம், தமிழ் அடையாளம் பேணப்படாது. இந்து அடையாளம் என்றாலும் அதாவது எழுத்தறிவு சார்ந்த இந்து மத அடையாளம் அல்ல. இதில் ஒரு சுவரசியமான உண்மை என்னவென்றால் மத அடையாளங்கள் நாற்று நடவுதான் செய்யப்படுகிறது. இது எவ்வளவு காலம் நின்று பிடிக்கும் எண்பதுதான் கேள்வி?
அரசியல் உணர்வுகளினூடு இவர்களிடைே நெருக்குதல்கள் கூடக்கூட இவர்கள் தமிழ் ஆதரவை வழங்கத் தயாராகின்றனர். இத ళ్ల கருத்தொருமைப்
|
இரண்டாவது நமது மொழியின் மூலம் இதனைச் செய்யலாமா? இதுவொரு சிக்கலான விசயம். இது எவ்வாறு வருகின்றது என்றால் மொழியின் மூலம் செய்வதானது, இதனை ஆராய்பவர்கள், அந்த மொழியின் z Goi 6oo id அறிந்தவர்கள், மொழியியலாளர்கள் , படிக்கின்றவர்களின் உளவியலை அறிந்தவர்கள், அந்தந்த நாட்டுக் கல்வி முறைகளை அறிந்தவர்கள் போன்றவர்களால் செயற்படுத்தப் படுகின்றதா? அங்கே தமிழ் படிப்பிப்பது நிதானமாகச் செய்யப்படல் வேண்டும். எங்களுக்கு முன்னுள்ள ஒரு சவால் தமிழை ஒரு பனர் பாட்டு மொழியாக எவ வாறு பேணுவது என்பதுதான பண்பாட்டு மொழியாகப் பேணுவது என்பது அதனை வீட்டு மொழியாகப் பேணுகின்ற தன்மைன்யையும் உள்ளடக்கும். மற்றைய மொழியை, அந்நாட்டு உத்தியோகபூர்வ மொழியைப் பேசிக் கொண்டு அதே நேரத்தில் வீட்டில் பண்பாட்டுத் தேவைக்காக தமிழைப் பேசுகின்ற ஒரு தன்மையை எவி வாறு வளர் தீது கீ கொள்ளலாமீ ? இது சாத்தியமானதா? இது சாத்தியமானது என்றால் இதனை எவ்வாறு செய்தல் வேண்டும்.
முக்கியமான விடயம் என்னவென்றால் அந்தந்தப் பிள்ளைகள், அந்தந்தக் குடும்பங்கள் அந்தந்த நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப இதனைச் செய்ய வேண்டும். பெற்றோர்களுடைய கரங்களிலேயேதான் இது தங்கியுள்ளது. ஆனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை, தாங்கள் வாழுகின்ற நாட்டினுடைய நியமங்களுக்கு ஏற்ப மேலே வர வேண்டும் என்று விரும்புவார்களே தவிர, தமிழ்ப்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
படிப்பதற்காக மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை விரும்ப மாட்டார்கள். ஆகவே அதற்கேற்ற வகையில் தமிழைப் படிப்பிக்க வேண்டும். மற்றது, அந்த கல்வி முறைக்குள் தலையிடக்கூடிய அறிவுள்ளவர்களாக துரதிஷ்டவசமாக இப் பெற்றோர்கள் இல்லை. ஆனால் ஒன்றில் மாத்திரம் இவர்கள் தலையிடக் கூடியதாகவுள்ளது அதுதான் - 'தமிழை நாங்கள் படித்த மாதிரி எங்களுடைய பிள்ளைகளுக்கும் படிப்பிக்க வேணடும்’ எனிறு சொல் வது இதை மிக முட்டாள்தனம்ான அணுகுமுறை என்று துணிந்து சொல்லாம். இவர்கள் வாழ்ந்த சூழல் வேறு, கல்வி முறை வேறு, இவர்கள் தமிழ் படிக்கச் சென்ற போதே தமிழறிவுடன் இருந்தவர்கள். எழுத வாசிக்கத்தான் பாடசாலைக்குச் சென்றவர்கள் இவர்கள். தமிழ் தெரிகிறது என்பது பாலபோதினியையும் அரிவரிப் புத்தகத்தையும் வாசிப்பது அல்ல, அதில் பேசுவது, அதில் எழுதுவது, அதில் சிந்திப்பது, அதில் விளையாடுவது அந்த நிலைக்கு இந்த முறைமை மாறவேண்டும். இன்னொன்று, குழந்தைக்கு ஐந்து வயதுவரை தமிழ்
பரிச்சயம் கூடுதலாகவும் பாடசாலைக்குச் செல்லத்
L
ப . இவர்களின் அடையாளம் தொடர்பான
அடையாளம் பற்றிய எதற்கும் தங்களுடைய
னால் அங்கு அதிகரித்துச் செல்கின்ற ஒரு
பாடு ஏற்படுகிறது.
தொடங்கியவுடன் அதற்கு தமிழறிவுப் பரிச்சயம் குறைவாகவும் வரத் தொடங்குகிறது. மொழி கற்பித்தலில் உள்ள மிக அடிப்படையான ஒரு கேள்வி, இந்தப் பிள்ளைக்கு தமிழ்மொழி ஏன் தேவைப்படுகிறது? மொழி பேசுவதற்கான தேவை ஏற்படாதுவிடின் எக்காலத்திலும் ஒரு மொழி பேசப்படாது. அப்போது இந்தப் பிள்ளைக்கு தமிழ் எதற்காகத் தேவைப்படுகிறது என்பதனை நாங்கள் முதலில் தீர்மானிக்க வேண்டும்.
வெறுமனே புலம்பெயர் நிலை என்று நாங்கள் பார்க்கின்ற போது இந்தத் தன்மை வருகிறது. இவற்றை நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்ற போது இன்னொரு முக்கியமான மாற்றமும் ஏற்படுகிறது. அதாவது அங்கு ஏற்படுகிற சமூக, உளவியல் மாற்றங்களால் எங்களுடைய ஆடை முறைமை மாறுகிறது. வாழ்க்கை முறைமை மாறுகிறது. அங்குள்ள சீதோசன நிலைகளால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்கப் போகின்ற பிள்ளைகள் பிற பண்பாடுகளுக்கு பரிச்சயமாகி விடுகிறார்கள். அவர்கள் மற்றைய பண்பாடுகளின் அம்சங்களை நன்கு அறிந்தவர்களாக வருகிறார்கள். அந்தப் பண்பாட்டின் நியமங்களுக்கு ஏற்ப அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அந்தப் பண்பாட்டின் நியமங்கள் எங்கள் வீடுகளுக்குள் வருகிறது. இதனால் இரு வேறுபட்ட மனோநிலை வீடுகளில் ஏற்படுகிறது. பெற்றோர்கள் சடங்குகளை, தமிழ் பண்பாட்டை கொண்டவர்களாகவும் பிள்ளைகள் அதை விரும்பாதவர் களாகவும் வளர்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இச்சடங்குகளை விரும்பக் காரணம் இந்தச் சடங்குகள் தான் அவர்களின் சமூக ஒருமைப்பாட்டிற்கான தளமாகும்.
C35פ
Page 36
و7073250ة محG
சீதனப் பிரச்சினை புலம் பெயர் சூழலில் தமிழர்கள் மத்தியில் மிக முக்கியமான பிரச்சினை. ஆனால் அதுபற்றி அவர்கள் அங்கு அதிகம் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அங்கு பணம் முக்கிய பிரச்சினையல்ல, எனக்குத் தெரிந்த ஒருவர் தனது பிள்ளைக்கு வெள்ளிப் பாதசரம் போடாமல் தங்கத்தால் பாதசரம் போட்டதை அங்கு நான் கணிடிருக்கிறேன். ஆனால் அங்கு சமூக உடைவுகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் என்ன நடக்கிறது என்றால், ஆங்கிலம் அல்லாத நாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் குழந்தைகளை இங்கிலாந்து அல்லது கனடாவுக்குப் படிப்பிக்க அனுப்புகிறார்கள். அல்லது இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இப்படியான மிகப் பெருமி பின் புலத்திலேதானி புலம் பெயர் இலக்கியத்தைப் பார்க்க வேண்டும்.
அரசியல் உணர்வுகளினூடு இவர்களிடையே - இவர்களின் அடையாளம் தொடர்பான நெருக்குதல்கள் கூடக்கூட இவர்கள் தமிழ் அடையாளம் பற்றிய எதற்கும் தங்களுடைய ஆதரவை வழங்கத் தயாராகின்றனர். இதனால் அங்கு அதிகரித்துச் செல்கின்ற ஒரு கருத்தொருமைப்பாடு ஏற்படுகிறது. மற்றது இரண்டாம் தலைமுறையினரிடம் நான் கண்ட ஒரு உண்மை - பல்கலைக்கழகத்திற்கு அவர்கள் செல்லும் போது தமிழ் அடையாளத்தை உணர்கின்றனர். அப் பல்கலைக் கழகங்களில் இந்தக் கறுப்பன் எந்த நாட்டைச் சேர்ந்தவன்? இவன் ஏன் மற்றவர்களிலும் பார்க்க வித்தியசமாக இருக்கிறான்? பிரான்ஸில் கல்வி கற்ற அல்ஜீரிய மாணவன்தான் அல்ஜீரியப் போராட்டத்தில் முக்கிய இடம் வசித்தான். 1930களில் இந்தியாவிலேயே சுதந்திர இயக்கம் வளர்வதற்கு முதல் இங்கிலாந்தில் படித்த இந்திய மானவர்கள்தான் முன்னுக்கு நின்றார்கள் கிருஷ்ண மேனன் போன்றவர்கள். இதுவொரு வளர்ந்து செல்கின்ற ஒரு செயற்பாடாக காணப்படுகிறது. இது தவிர்க்க முடியாதது அடையாளம் தொடர்பான தேடலுக்கு இது தேவையானது.
இதற்குள் ஒரு சமூகவியல் உள்ளது. இது வெறும் உணர்வு அல்ல, இந்த சூழலுக்குள்தான் நாங்கள் புலம்பெயர் சூழலில் தமிழைப் பார்க்க வேண்டும். புலம் பெயர் இலக்கியம் வளரும், எழும். இது ஓரளவு தர்க்க ரீதியான வளர்ச்சியும்கூட ஆனால் அது தொடர்ந்து இருக்குமா என்பது கேள்விக்குறி.
புலம் பெயர் இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கு புதிய பரிமாணங்களைத் தந்திருக்கிறது. முன்னர் நாங்கள் அறியாத தளங்களுக்குச் சென்றிருக்கிறோம். மிக நல்லது. அந்த வகையில் அதனுடைய அனுபவங்கள் இதுகாலவரையும் காணப்படாதவை. தமிழ் இலக்கியம் முழுவதற்கும் இது புதிது. ஆனால் அதில் சில இடர்கள் உள்ளன. அவற்றை நாம் மிகத்தெளிவாக உள்வாங்க வேண்டும். இதிலொரு கட்டம் இங்கிருந்து போய் அந்த நினைவுகளோடு அங்கு வாழ்வது. அந்த நாட்டில் வாழுகின்ற போதுதான் வாழுகின்ற நாட்டின் அந்நியத் தன்மை புலனாக புலனாக எங்களுடைய கோயில் குளங்களும், கேணிகளும், மரங்களும், வயல்களும், ஊர்களும் சுவர்க்கங்களாக மாறத் தொடங்குகின்றன.
இதில் அடுத்த கட்டம் வரும், அது வரத்தொடங்கி விட்டது என்றே நினைக்கிறேன். அந்த நாடுகளில்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
வாழுவது பற்றிய பிரச்சினை. ஆரம்ப காலத்தில் இந்தப் புலம்பெயர் சூழலில் அதிக சஞ்சிகைகள் வந்தன. அதிக இலக்கியக் கூட்டங்கள் நடந்தன. இங்கே நடந்த சண்டைகள் அனைத்தும் அங்கும் நடந்தன. ஆனால் இப்போது அவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
புலம்பெயர் இலக்கியம் என்பது நீண்ட வரலாற்றினை யுடையது. பல தேசங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆங்கில மொழியிலேயேதான் எழுதினார்கள். அங்கு புலம் பெயர் இலக்கியமென்பது மிகவும் ஆழ்ந்த பார்வைக்குரிய தாகவுள்ளது. ஆனால் அப் புலம்பெயர் எழுத்துக்களுடன், எழுத்தாளர்களுடன் நமது புலம்பெயர் எழுத்துக்கள், எழுத்தாளர்கள் எங்கே நிற்கின்றார்கள்? இது முக்கியமான வினாவாகும். இதைப் பார்க்க வேண்டிய ஒரு தேவை வரும். இது இன்னும் பார்க்கப்படவில்லை. இத் துறையில் ஈடுபடுபவர்கள் மிகவும் குறைவு. இத்துறையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் செல்வா கனகநாயகம் அவர்கள். இப்படிப் பார்க்கத் தொடங்கும் போதுதான் எமது எழுத்துக்களில் மாற்றம் வரத் தொடங்கும்.
எங்களுடைய வாழ்க்கையிலே காணப்பட்ட சமூக ஒவ்வாமைகளும் அங்கு பேணப்படுகின்றனவா? விதி என்னவென்றால் பேணப்படும். ஏனென்றால் இங்கு வாழ்ந்த வாழ்க்கையை அங்கும் வாழ முற்படுகின்றபோது இங்கேயுள்ள பெறுமானங்கள் அங்கும் தொழிற்படும். ஆனால் இதிலொரு இாட்டை நிலையிருக்கும். கனடாவை உதாரணமாகக் கொண்டு நான் பார்க்கும்போது 1974இல் யாழ்ப்பாணத்தில் வீதிக்கொரு சண்டியன் இருப்பான். இயக்கங்களின் தோற்றங்களின் பின்னும் படைகளின் வருகைகளின் பின்னும் இது முழுதாகக் குறைந்து போய்விட்டது. பதினைந்து, இருபது வருடங்களுக்குப் பிறகு கனடாவுக்குப் போய் பார்த்த போது இந்த நெருக்குவாரங்கள் அங்கு தொடங்கிவிட்டது. பிரான்சில் தொடங்கிவிட்டது. வல்வெட்டித்துறை யாருக்கும் வல்வெட்டியாருக்கும் சண்டை. ஊர்களுக்கு இடையில் சண்டை, சாதியமும், சாதிய எண்னக் கருக்களும் அழிந்துபோய்விடவில்லை. இதற்கான பிரதான காரணங்கள், இங்கேயிருந்து போனவர்கள் எல்லோரும் பிறநாட்டுப் பண்பாட்டிடையே தமிழ் பண்பாட்டினைப் பேணுவதற்கான கல்வித் தகமையை கொண்டவர்களல்ல, அவர்கள் தங்களுடைய அடையாளத்தைத்தான் அங்கே கொண்டுபோகப் பார்க்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் இன்னும் மாறவில்லை.
girfig Ethnic Rights g 6iróngi. Sigs Ethnic Rights உடைய விளைவுகளாக யாழ்ப்பாணத்து தெருக்களை நாங்கள் லண்டனில் பார்க்கலாம், கனடாவில் பார்க்கலாம். இந்த முறைமைகள் காரணமாக இவைகளை ஒரு ஒட்டு மொத்தமாக ஆராய்கின்ற ஒரு போக்கு வரவேண்டும். அதில் புலம் பெயர் இலக்கியம் ஒரு அம்சமாக இருக்கும். சமூக வாழ்க்கை ஒரு அம்சமாக இருக்கும். இந்தப் பின்புலத்தில்தான் இதனை நாங்கள் பார்க்க வேண்டும்.
(ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யப்பட்டு கட்டுரையாக்கப் uււ
Page 37
[09]72ag*7 تعتم کی
தனித்தலைந்து திரிகின்ற ஆண்குருவி
இப்படித் தனித்தலைந்து திரியவர் நான் பிறந்தேன். "
t
பேடுகளுடனான சினேகே பேசிச் சிரித்தின்பம் பெறுதலோ எதுமின்றிப் போயிற்று வாழ்வு
மைனாக்கள் சோடிசேர்ந் ஒன்றின் தலையை மற்ெ றான்று கோதிவிடுகையிலும் வீணே உருகி ஓடிய வாழ்வின் இறுதிநுனியில் நின்று பெருமூச்செறிகிறேன்.
றகுகளைப் பிய்த்தெறியமுனைகின்ற புயற்காற்றில்
எதிர்கொண்டு பிறத்தலுக்கும் தீன் பொறுக்கித்தின்பதற்கும் - இன்னும் நான் நியைவே கற்கவேண்டியுள்ளது.
ஆதலினால்
காலங்கள் போயிற்று.
முன்பொருகாலம் என் மனை அவள் உறவை
முன்னோரின் குலப்
பெண்ணே! : இதற்குள் நீ சிரிக்கிற உன் அழகினை புகழ்பாடித் திரியவும் உயிர் தடவும் உன் பார்வைகளுக் மறந்துதான் போகிறேன்.
இதன் படியே இது வழியே நான் தனித்தலைத்துதிரின்
ஆசி வரதராஜன்
毅
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
நிழல் முறிந்த மரம்
நாங்கள் கடைசியாக எதுபற்றிப் பேசினோம்
。 மதுவில் மிதந்து கொண்டிருக்கும் பனிக்கட்டி பற்றியா? வாழ்வு சிதறிய துகழ்களிலிருந்த கண்களைப் பற்றியா? எனக்கு ஞாபகம் இருக்கிறது
அருள் முடிந்து ஒய்ந்துவிட்டாள் சாமியாடி திட்டுத்திட்டாய் குங்குமம் சிதறிக் கிடக்கிறது வாசல் முழக்க வெற்றிலை வதங்கிப் போயிற்று நரம்புகள் சுருங்கி கரிய புகையில் எதையோ யாசித்தபடி நிற்கிறார்கள் சாமியாடியின் சொற்களில் இறங்கிய எல்லோரும்
•:·:·:· • န္တိမ္ဗိ எனக்கு ஞாபகம் இருக்கிறது தொட்டுப் பார்க்கும் தூரம்கூட இல்லை இருவருக்கும் எனினும் ஒரு தெருவில் அவர்களும் இன்னொன்றில் இவர்களுமாய் நீள்கிறது எமக்கான தூரம்.
நாங்கள் கடைசியாக எதுபற்றிப் பேசினோம் நீ எப்போதும் வெளியே வராத இரவைப் பற்றியா? : இருள் துயர்மிகு இருள்.
O
எளப்போஸ்
G5)
Page 38
சி. ஜெ
61ண்பதுகளில் கூர்மையடைந்த இனமுரண்பாடும்
அது யுத்தமா چې سملاق-ان؟ ---... ... -- கப் பரிணமித்த
జిళ్లభ சமூக வரலாற் றுச் சூழலும் படைப்பாளர்களாகவும், சிந்தனையாளர்க ளாகவும் புதியதொரு தலைமுறையினரைத் தோற்றுவித்தி ருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வரன்முறையான உயர்கல்விப் பாரம்பரியத்தினூடாக வராதவர்கள் என்பதும் ஆழ்ந்த கவனத்திற்குரியது. ஈழத்தமிழரது வாழ்வியலை தகவல் யுகத்திற்கு இட்டுவரும் பிரயத்தனத்தின் பெரும் பகுதி இத்தலைமுறையினரையே சாரும். பாரம்பரிய வேர்களினடியாக நவீன யுகத்தை எதிர்கொள்ளல், சுதேசிய நவீனத்துவத்தை வளர்த்தெடுத்தல் என்பவை இவர்களிடத்தே வலுப்பெற்றிருக்கின்ற பார்வையாகி இருக்கிறது. சமூக இயக்கம் பற்றிய வாதப் பிரதிவாதங்களை பரவலாகவும், ஆழமாகவும் சிறுசஞ்சிகைகளுடாகவும், மாற்றுப் பத்திரிகைகளுடாகவும் நூல்கள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மூலமாகவும், ஆற்றுகைகள், கண்காட்சிகள், களப் பயிற்சிகள் மூலமாகவும் முன்னெடுத்த இத்தலைமுறை, இலத்திரனியல் தொடர்பூடகங்களை ஆளுகை செய்யத் தொடங்கியது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கான புலம்பெயர்வு இதனைச் சாத்தியமாக்கிற்று. இந்த வளர்ச்சிப் போக்கு பூகோள ரீதியாகத் தமிழர்களை ஒன்றிணைப்பதற்கான இணையத்தில் வந்து நிற்பதிலும் கணிசமாகப் பங்களிப்புச் செய்திரு கீகிேறது. ஆங்களிலதி தரினுாடாக LDL (6), GLO உலகைக கண்டுகொண்டிருந்த ஈழத்தமிழர் சமூகத்தை பல்வேறு மொழிகளுடும் உலகைத் தரிசிக் கீ வைத்துக் கொண்டிருப்பதும் இத்தலைமுறையி சிறப்பியல்பாகி இருக்கிறது. భ இந்தப் பின்னணியில் இப்புதிய தலைமுறையினரில் ஒருவரும், படைப்பாளராகவும், சிந்தனையாளராக
விளங்குபவரும், வரன்முறையான உயர்கல்விப்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
பாரம்பரியத்தினூடாக வராத தரப் பின ருடைய பிரதிநிதியு மான ம.நிலாநித னின் *விநாக • h་རྩོམདོ་། དཔེ་ நடனம் ஒவியங்கள் இங்குபிரசுரமாகின்றன. இவ்வோவியங்கள் பற்றிய பின்னணியை நிலாந்தனுடைய கடிதம் மிகத் தெளிவாக விளக்கும் என்பதுடன் அவரது பார்வையின் கூர்மையினையும் நன்கு புலப்படுத்தும்.
தன்னுடைய கடிதத்தில் 'பிள்ளையார்” ஒவியத் தொடரின் வரலாற்றையும், அதன் ஓவிய நோக்கையும், தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் நிலாந்தன், பிறிதொரு கடிதத்தில் பிள்ளையார் ஓவியங்கள் பற்றி எழுதும் போது, 'பிள்ளையார்-ஒவியங்கள் பற்றி ஒரேவரியில் சொல்வதானால், இவைதான் என்னுடைய போர் ஓவியங்கள்’ என்று குறிப்பிடுகின்றார்.
சரி இனிக் கடிதத்தைப் பார்ப்போம்,
92ஆம் ஆண்டளவில் மையினால் பிள்ளையார் செய்தேன். 1.C.R.C. இல் வேலை செய்யும் ஒரு ஒவியரான பிரெஞ்சுக்காரர் (அவர் ஒரு பிள்ளையார் அபிமானி) அதைக் கண்டு ஆசைப்பட்டார். கொடுத்துவிட்டேன். பிறகு 95ல் ஒரு பிள்ளையார் “ஸ்கெச்’ போட்டேன். தொடர்ந்து வரைய வேண்டும் போலிருந்தது. வரையத் தொடங்கினேன். பிறகென்ன நடந்தது என்று எனக்கும் சரியாகத் தெரியாது. ஏதோ ஒன்று எண் கையை தன்னுடையதாக்கிக் கொண்டு விட்டது.
நான் ஒரு முழுநேர ஓவியன் அல்ல. அதற்கான கைப் பயிற்சியும் என்னிடமில்லை உரிய சாதனங்களும் என்னிடமில்லை.
ஒரு விதத்தில் பிள்ளையாரில் தொடங்கி பிள்ளையாரில் பழகி பிள்ளையாரிலேயே தேர்ச்சியும் பெற்றேன் எனலாம். எனக்கே தெரியாது எப்படி அத்தனை ஒவியங்களையும் அத்தனை விரைவாக வரைந்து தள்ளினேன் என்று.
-G6)
திடீரெனப் பிள்ளையார் எனது கைக்குள் புகுந்தார். இரவு
Page 39
772geتی
பகலாகத் தொடர்ந்து வரத்தொடங்கினார். கனவெல்லாம் நிற
வரும். இத்தனைக்கும் என்னைச் சுற்றிலும் மிகக் கொடுமையானெ யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அது “ஃப் போலே காலம். பீரங்கிக் குண்டுகள் குருட்டுத்தனமாகக் கா அலைநீ த கால மீ . எங்கு மீ அகதிகள் ܢg ஒடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த எ நிச்சயமின்மைகளின் மத்தியிலும் அந்த எல்லாத அழிவுக மத்தியிலும் ஏக நிச்சயமாக, அழியாப் பொருளாக பிள்ளைய வந்து கொண்டேயிருந்தார். அவருடைய கருவிகள் கேட்டேன் தந்துவிட்டார். ஆடை அணிகலன்கை கேட்டேன். தந்து விட்டார். வாகனத்தைக் கேட்ே தந்துவிட்டார். கேட்காமலேயே மோகத்தைத் தந்துவிட் இன்னுமெதைக் கேட்டாலும் தந்து விடுவார் எ தோன்றுகிறது, ஆனால். எல்லாவற்றையும் தந்துவிட்ட பிறகும் அவர் பூரணமா நிற்கிறார். இன்னுமின்னும் நெகிழத் தயாராக. இப்படியொரு சுதந்திரம்தானே ஒரு ஓவியனுக்குத் தேை அதோடு எம்மிடமுள்ள மிக ஆதியான ‘செர்றியலிச வடிவ பிள்ளையார்தான். அவ்வளவு அதியற்புதமான சேர்க்கை அ யானை முகத்தையும் மனித உடலையும் இணைக்க தொந்தியை- பிரணவத் தொந்தியை வைத்தார்களே! எ6 அந்த ஆதிச் செறியலிச வடிவத்தை எப்படி இன்னுமின் நவீனமாக்கலாம் எனும் பரிசோதனையாகவும் பிள்ளைய எடுத்தேன்.
மற்றது தத்துவ நோக்கிலானது. புராணங்களின படி பிள்ை உடற்பலத்தில் தங்கியிராத அறிவின் பலத்தில் தங்கியிருக்க ஒரு தெய்வ வடிவம்தான் (மாம்பழத்தை வென்றது, கங்கை விடுதலை செய்தது, ராவணனை ஏமாற்றியது.) இப்பொழுது நினைத்தாலும் புதிராயுள்ளது. நிலாவைச் சுற்றி எல்லாருமே கதிகலங்கி ஓடிக்கொண்டிருக்க நிலாமட அமைதியாக இருந்து வரைந்து கொண்டிருந்தான் அதுவும் சுமார் 75 பிள்ளையார்கள், சிறிய பிள்ளையா பெரிய பிள்ளையார்கள். பல நிறங்களில் பல வடிவங்களில் மூர்த்தங்களில், சரி, நான் ஏன் பிள்ளையாரைத் தெரிந்தெடுத்தேன்? முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று ஒவிய நே நிலையில் மற்றது தத்துவார்த்த நோக்குநிலையில். ஒரு ஓவியனின் நோக்கு நிலையில் - நான் வேறெந்தத் :ெ வடிவிலும் அநுபவித்திராத நெகிழ்ச்சிப் பண்பை பிள்ளையா அநுபவித் தேனி . ஒரு ஓவியனின் எல்லா வை சுதந்திரங்களிற்கும் விட்டுக்கொடுக்கின்ற பூரண நெகிழ்ச்சிநி பிள்ளையாருடையது. பாருங்கள், என்னுடைய பிள்6ை தன்னுடைய ஒரு கொம்பை ஏற்கனவே வியாசரி கொடுத்துவிட்டார். மற்றதை என்னிடம் தந்து விட் இப்பொழுது எனது ஒவியங்களில் கொம்புகளின்றிக் க தருகிறார். இப்பொழுது நாங்கள் இருப்பது தகவல் யுகத்தில். இ *இன்ரநெற் ” வலையமைப்புக்குள் தகவலே சக எனப்படுகிறது. இதன் வளர்ச்சியாக அடுத்த கட்டம் ‘அற சக்தி” என்பதாகவே அமையப்போகிறது. கி.மு. நான் நூற்றாண்டில் வாழ்ந்த சீன ஞானியான ஸண்ஸ் கூறி போல "அறிவே சக்தி” எனும் வளர்ச்சியின் வாசலில் நிற்கிே
கஸ்ட் - ஒக்டோபர் 2000 8 ;2ی
ங்கள்
தாரு
Isfl - ற்றில் தறி
6
ளின்
ரப்பா
ளைக்
6T
டன்.
டார்.
ன்றே
கவே
Offs.
ர்கள்
) L6)
|\ମ୍ପ- ༽e O.
எனவே அறிவுச் சக்தியின் வடிவமாயுள்ள பிள்ளையார்தான் காலத்தின் புதுமைக்கெல்லாம் புதுமையாக நின்று நிலைக்கும் பூரண நெகிழ்ச்சிக்குரியவராகத் தோன்றுகிறார். எனவேதான் *நான்’ பிள்ளையாரில் ஈடுபட்டேன். என்றெழுதும்
நிலாந்தன் ஓவியர் மட்டுமல்ல, கவிஞர்,
நாடகாசிரியர், கேலிச்சித்திரகாரர், அரசியல் பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், ஆய்வாளர், விமரிசகர்
எனப் பல பரிமாணங்களில் இயங்குபவர்
என்பதுடன் சிறந்த பாடகர் குறிப்பிடத்தக்கதும் பலரறியாதது
என்பதும்
Page 40
மீண்டும் சிவத்தம்பியின் சொற்கள் பற்றி 6
மீண்டும் சிவத்தம்பியின் சொற்கள் பற்றி எழுத வேண் தமது நியாயப்பாட்டை இழந்ததாக அவர் கூறுகிறார்.
பின்னரும் அவரால் சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட்டுகழு சண்முகதாசனுக்குச் சிங்கள மக்கள் மத்தியில் தளம்
வெறுமனே சோவியத் சார்புக் கட்சியின் பிரசாரத்தின் சண்முகதாசனுக்குப் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் சிங்களத் தலைவர்களும் அணிதிரண்டது பற்றி அ6 சண்முகதாசனின் தலையிைலான கம்யூனிஸ்ட் கட்சியி: தலைவர்கள் பலரது பேர்களைத் தர இயலும். இன்னு
1ᏭᏮ86Ꮡ கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்ட பின்பு, சண்முகதா வந்த தமிழ் “கம்யூனிஸ்ட்” தலைவர் யாரெனவும் சிவத்த சூழ்ச்சி அன்று பலிக்காவிட்டாலும், 1987க்குப் பிற நடைமுறைப்படுத்த முடிந்தது. இனவாதச் சேற்றில் பாரா பின்னரே தென்னிலங்கையின் பாராளுமன்ற இடதுசாரி அரசி இச்சூழலிலே சண்முகதாசனுடைய தலைமைக்கு எதிர விஜேவீரவுக்கு இலகுவாயிற்று. இனவாத அரசியலில் இனவாதத்தைப் பயன்படுத்த விஜேவீரவுக்கு முடிந்தது. பச்சை இனவாதமாக 1987-89இலும் நமக்குக் கிட்டின. இ மலையக அரசியலில் 'திராவிட இயக்கம்” பற்றி முத்துலிங் எதுவிதமான ஆய்வோ விசாரணையோ இல்லாமல் சிவ 1961 சத்தியாக்கிரகத்தின் தோல்விக்குப் பிறகு தொண்ட நிர்ப்பந்தத்திற்கு தன்னை ஆட்படுத்தியது. மலையகத் ெ முதலாளி செல்வநாயகம் நம்பியது. இளஞ்செழியனின் அ உட்படக் களம் பல கண்ட செம்மல் அவர். மலையகத் மன்ற வகையறாக்களோ நினைவில் நிற்கிற விதமாக நினைவை இல்லாமல் செய்ய எவரும் எதுவும் செய்ய
“ஆயிரக்கணக்கான ஆண்டுகளானாலும் தமிழர் தமிழர் : தான்’ என்பது உண்மையாகவே அவரது நிலைப்பாட் உட்பட கொடுமைகள் பற்றி அண்மைக்காலங்களில் அவர் அவரது மேற்படி கருத்தைச் சற்றே நீட்டின், ஒவ்வெ ஒவ்வொரு பிரதேசத்தவனும் அந்தந்தப் பிரதேசத்தவன் த் வரலாம். எனக்கென்னவோ, ‘சமூக இருப்பு சமூகப் பி. மிகவும் கொச்சையாகவே விளக்கி கொண்டுள்ளார் என்று
சோலைக்கிளியின் கவிதைகள் பற்றி மு.பொன்னம்பலத்தின் சு ஆயினும் அவரது கருத்துக்கள் அப்படியே அலட்சிய விமர்சகர் போல பயனுள்ள ஊக்கி கிடையாது என நிை தளையசிங்கம் தொடர்பாக மு.பொன்னம்பலம் கூறுவனவற் என்பதை நாம் ஒருபுறம் வைப்போம். தளையசிங்கத் சுந்தரராமசாமியுடைய மாக்ஸிய விரோத அரசியல் ஒரு
ஆகளிப்ட் - ஒக்டோபர் 2000
ழுத வேண்டியமைக்கு வருந்துகிறேன்!
- சி. சிவசேகரம
-யமைக்கு வருந்துகிறேன். 1961 தொட்டு இடதுசாரிகள்
அந்த நியாயப்பாட்டை அவர்கள் இழந்து நெடுங்காலமான நடன் நெருக்கமாக ஒட்டியிருக்க முடிந்தது எவ்வாறு?
இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார். வரலாற்றை அடிப்படையில் பார்த்தால் அது சரியாகத் தெரியலாம். ான தொழிற்சங்க சம்மேளனம் மட்டுமன்றிப் பல முக்கியமான ர் அறியாமல் இருக்கலாம். வேண்டுமானால் என்னாற் ர் தலைமைப் பீடத்தில் 1974 வரையும் இருந்த சிங்களத் ம் பிற தகவல்களும் தரமுடியும்.
சன் ஒரு தமிழர் என்பதை வலியுறுத்தும் முறையில் பேசி ம்பி அறியக்கூடும். சண்முகதாசனுக்கு எதிரான இனவாதச் கு விஜேவீரவால் படிப்படியாக அதை வெற்றிகரமாக ளுமன்ற இடதுசாரிகள் 1966ல் ஆழக்காலூன்றிய நிகழ்வுகளின் யலில் பேரினவாதம் வெளிவெளியாக ஆதிக்கம் செலுத்தியது. ாகக் கட்சியிலிருந்த சிங்கள வாலிபர்களைத் திருப்புவது
இறங்கிய பாராளுமன்ற இடதுசாரிகளை விடத் திறமாக இதன் அறுவடைகள் 1971ல் குழப்பமான ஒரு விதமாகவும் ன்றும் ஜே.வியியின் பேரினவாத அரசியலாகத் தொடர்கின்றன.
கம் தனது நூலில் முன்வைத்துள்ள புனைவுகளையெல்லாம் த்தம்பியால் எவ்வாறு ஏற்க முடிகிறது? தமிழரசுக் கட்சி மானுக்கு மாற்றாக யாரையாவது தேடியாக வேண்டிய தாழிலாளர்களை அணிதிரட்ட இளஞ்செழியனைத் தோட்ட ாசியலின் உச்சக்கட்டம் எனலாம். அதன் பின்பு, ஜே.வி.பி ன்ெ உதிரி "திராவிட இயக்கங்கள் எதுவுமே எம்.ஜி.ஆர்.
எதையுமே செய்யாத போது, அவர்களது அரசியலின் வேண்டுமா?
ான், முஸ்லிம்கள் முஸ்லிம்கள் தான், ஸேர்பியர் ஸேர்பியர் ? அது முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டது வளிவெளியாகக் கண்டிக்கத் தயங்குவதன் விளக்கமாகுமா? ரு சாதியினனும் என்றென்னும் அதே சாதியினன் தான், ான் என்று தமிழக ‘தலித்திய பாணியிலான முடிவுகட்கு க்ஞையைத் தீர்மானிக்கிறது’ என்ற வாசகத்தை அவர்
தோன்றுகிறது. ருத்துக்களுடன் நான் இன்றும் அதிகம் உடன்படவில்லை. செய்ய உகந்தவையல்ல. கடுமையான, நேர்மையான க்கிறேன். க்குப் பின்னவர் அவரது தமையனார் என்பது காரணமா துக்குச் சுந்தரராமசாமி வழங்கிய முக்கியத்துவத்திற்கு முக்கிய காரணம் என்பதை நாம் புறக்கணிக்கலாமா?
G8)
Page 41
7ே7ஜ
பிரமிள் தமிழக மாக்ஸிய விரோத இலக்கிய நிறுவனத் அவர் அறிவதற்குள் அவரால் அவர்கட்குப் பயன் இ எவ்வாறு, எங்கிருந்து, எப்போது வருகின்றது என்பது
நுஃமான், சிவத்தம்பி ஆகியோர், மஹாகவி, தளையசிங்கம் ட கேள்விக்கு அதைவிடத் தவறான முறையில் யோகநா நிகழ்வன. நுஃமான், நானறிய மஹாகவி, தளையசிங்கப
1969ல் பொது ஆதரவைப் பெற்ற கந்தன் கருணை நாட அம்பலத்தாடிகளின் கூட்டு முயற்சியில் மூலச் சுவடி மாற் கூத்துவடிவிற் பரவலாக மேடையேறியது. இளைய பரம் ‘புதுவசந்தம்’(தேசிய கலை இலக்கியப்பேரவை வெள்ளி எழுதியுள்ளார். எஸ்.போஸ் படைப்புக்களைச் செம்மைப்படுத்துவது ப அனைத்து உயிரிகளும் ஒருமுறை மட்டுமே உருப்டெ என்று வினாவும் எழுப்பியுள்ளார். நாம் ஏன் சிகையை ஏன் மொழியைக் கற்கிறோம்? எமக்குத் தெரிய எவரு வாக்கிய அமைப்போ ஒரேயடியாக வந்து வாய்ப்பது நேர்மைக்குகுப் புறம்பான காரியங்களல்ல. ‘எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு என்றுசொன்ன வள்ளுவர் கூட சுய தணிக்கையை வற்புறு
வாசிப்புக்கள் பற்றிய உணர்வுடன் பயன்படுத்துவதால் வி
எம்.ஏ. நுஃமான் எழுதியிருப்பது வருந்தக்
“மஹாகவியின் ஆறுகாவியங்கள்’ நூலின் பதிப்புரையாக கலாநிதி எம்.ஏ.நு.மான் அவர்கள் ஆய்வற்ற குறிப்பொன் முயன்றுள்ளார். 1954களில் வீரகேசரியில் “மாதருக்கு மாத்திரம்” பகுதியை சில்லையூர் செல்லராசன் நடத்தினார். அதில் பெண்கள் அவ்விவாதத்தில் ‘மகாகவி’ பங்குகொண்டு ஒரு கள செல்லவராசனும் “மகாலட்சுமி’ எனும் பெயரில் 04.07 சிறந்ததுதான். ’ எனத் தொடங்கும் ஒரு மறுப்பை எ முருகையனுக்கு பின் அழகேஸ்வரி எழுதினார், பின் பரிம எழுதினார். முடிக்கும் போது சில்லையூர் செல்வராசன் சொந்தப் பெயர், விலாசமில்லததால் அவற்றைப் பிரசுரி மகாகவியோ, சில்லையூர் செல்வராசனோ யாருடைய கவின் பிடித்தவர்களல்ல. எனவே இது பற்றி நன்கு ஆராயா. எம்.ஏ.நுஃமான் எழுதியிருப்பது வருந்தக்கூடியதே! என் இப்போது ‘உலகளாவிய தமிழ் இலக்கிய வரலாறு’ எழு ஒன்று கூடியிருப்பது நல்ல சகுனமே! ஆனால், இலங்ை கலக்கின்றனர். அதில் கலந்து கொள்ளும் இவர்களது மலேஷியா போன்ற நாடுகளின் தெரிவாளர்களைத் தயவ ெ செய்ய எத்தனிக்க வேண்டும்.
அறநெறி வழி நின்றே மாற்றுக் கருத்துக்
போாசியர் சிவசேகரம் தமது கடிதத்தில் ‘மு.த.பற்றிய அ பற்றிய NGO, GO அங்கலாய்ப்புக்கள் சில மனதிற்கு நினைத்துத் தான் இன்னமும் அழுகிறார்கள்’ என எழு நாகரீகமற்ற வகையில் இவ்வாறு எழுதுவது போராசிப அதுவும் இறந்தவர்கள் தொடர்பாக கருத்துக் கூறும் ( நினைக்கின்றேன். ஏனெனில் அவர்கள் எழும்பி வந்:
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
நினருக்குப் பயன்பட்ட ஒரு காலம் இருந்தது. அதை ல்லாமலே போய் விட்டது. நமக்கான அங்கீகாரம் ஏன்,
பற்றி நாம் விழிப்புடன் இருப்பது பயனுள்ளது.
ற்றிய மறுவாசிப்புக்களைச் செய்திருக்கிறார்களே என்றவாறான தன் பதில் கூறியுள்ளார். மறுவாசிப்புக்கள் எப்போதும்
விடயங்களில் நிதானமாகவே இருந்து வந்துள்ளார்.
டகச் சுவடி மூன்றாவது மனிதனில் வந்துள்ள சுவடியல்ல. றங்களுக்குட்படுத்தப் பட்டு இசை நாடகமாக வடமோடிக் பரையினர் அறிய அவசியமான விடயம் இது. இதுபற்றிப் விழா மலர், 1999) இதழில் இளைய பத்மநாதன் விரிவாக
bறிச் சேரனை மறுத்துள்ளார். உவமையாக, தானுட்பட்ட றுவதாகவும் கூறி மாற்றி ஒழுங்கமைக்க என்ன தேவை அலங்கரிக்கிறோம்? ஏன் அழகாக ஆடை அணிகிறோம்? க்கும் எல்லா நோத்திலும் மிகபொருத்தமான சொற்களோ அரிது கவனமான சொற் தெரிவும் செம்மைப்படுத்தலும்
பத்துபவர் தான். வார்த்தைகளை அவற்றின் பல்வேறுபட்ட
*ணான விவாதங்கள் தவிர்க்கப்படலாமல்லவா. O
கூடியதே
-ஏ. இக்பால் - ச் சில குறிப்புகள்’ எழுதியுள்ள தழிழ்த்துறைப் போராசியர் ன்றை எழுதி தமிழிலக்கிய வரலாற்றுலகை திசை திருப்ப
பத் - தமது தமக்கையின் மகள் “சுசீலா’ வின் பெயரில் பற்றிய விவாதமொன்றைத் தொடங்கினார். முதலாவது விதை எழுதினார். அக்கவிதைக்கு பதிலாக சில்லையூர் 54இல் 'ஐயா மாகாகவி பெண்ணுக்கு இல்லாண்மை ழுதினார். அதைத் தொடர்ந்து முருகையன் எழுதினார். 2ளா இராஜதுறை எழுதினார், இறுதியாக வி.சி.இராசதுரை * இன்னும் பலர் பல புனை பெயர்களில் எழுதியுள்ளனர், க்க முடியவில்லை என முத்தாய்ப்பு வைத்திருக்கிறார். தையையும் சொந்தமெனச் சொல்லும் கவித்துவத் தரித்திரம் து பதிப்புரையாகச் சில குறிப்புகளில் போராசியர் கலாநிதி னிடம் இந்த பத்திரிகை நறுக்குகள் இருக்கின்றன.
ஐதும் முயற்சியில் உலகக் கலை இலக்கிய வல்லுனர்கள் கயில் பல்கலைக்கழகப் போதனாசிரியர்கள் மட்டுமே இதில் இலக்கிய ஆய்வு முயற்சியின் இடமென்ன? இந்தியா, சய்து உற்று நேக்கி, இலங்கையிலும் அவ்வித ஏற்பாட்டை
- O களை எதிர்கொள்ள வேண்டும்.
- சி.அ.யோதிலிங்கம்
ங்கலாய்ப்புக்களை நோக்கும் போது நீலன் திருச்செல்வம்
வந்தன. ஏனோ தமிழ்மக்கள் குமார்பொன்னம்பலத்தை தியுள்ளார். மாற்றுக்கருத்துக்கள் உள்ளவர்களை பற்றி பர் சிவசேகரம் போன்ற புஸ்மையாளர்களுக்கு நல்லதல்ல. போது எமக்கு பாரியளவு பொறுப்புணர்வு தேவையென்று து அதற்கு பதில் அளிக்கப் போவதில்லை. நாளைக்கு
-G9)
Page 42
6-77లైg(pg
i। ந்து முடிந்தது நம்நாத்திார்செந்துப்போார் மூன்று நாட்கள்ாகர்கேட்டநிர்முகிய படுத்திருந்தர் ஆனது முற்றின் பிட்டது நபாட்டில்ப்ேரிபகுத்துங்க்ருத்ரப்ட் க்
ாற் பெருவிகள் இரண்டும் எனங்கப்பட் தில் அாப் படுத்திந்தார் வெள்ள நிற கேட்புப் பாம்ாட்டம் அரியப்பட்டபடி ■
அர்படுத்திருந்தபிநஒருகாம் ஆர்டருடன்
இருக்கிாேள் ந்தேகத்தை எழுப்புதா
இருந்து பியரிட்டியிருந்த மூன்று பிள்ாபரும்
பரப்பிள்ளைகளுடன் பந்து அவர் சந்நின்று
புதர்கள்ாந்திாரின் இறுதியாள்ர்ந்து
החוזה ווחת, ה, קוון תורה-דת והה, והזזות, והם = תורן וזהה זו שוק
। ।।।।
பாது நாள் தயுமநர்முடிாய் - பெர்ரிருந்து ההש பத்தியரின் பிரிபிந்தது பாக்கியம்தான் முருள் கரித்தாள் டு பந்திரிபிள் திடுக்ரிட்டு பிந்து
। ாடு ਹੀਂ । பூர்
|-
விந்து மானித்துப் והנפוץ, והיהח19 SuKYS S SKSSEMSLSS SLS T LGLSLSYYu uYS STSuD ffoi i Gylfi") yw Gilgi a Gŵyl gryf i, j, w, | iii ாந்தாள் நோர் ஒன்ரா என்று rtir l'ou.
வந்தியாக்கு இது கடசி
பர்சியத்துக்கு இது தெரிந்து
ਜੀ ।੧। தெய்பாப் புருக்கு தெரியம் இல் யாரும் வருக்கு பந்திா ਜੀ டேருநனிப்பேர் போர் என்று சோப்ப விட்டாலும் ட் எாது பாதுக்கு அது தெரிக்
ji. இப்போது-தடந்துதான் து என்று தெரிந்தபோது அவருக்கு நம்பமுடியவில்
பாங்கியத்திற்கு புற்றிப் திரெளன் எளோ ப்ேபது போ இருந்தது அதையும் ஒரு நீண்ட பெருமூர்த்தது.
அது நிதிப்பெருமூச் ஆஸ்து * எர்ரியிருந்து தோன்றும்
எருக்குப்புபவில் ஒருகண்ம் ாள் பிர்ந்ேன்று தெரியாபகப்
ஆார்ட் - ஒக்டோபர் i
விக்னேனப்ரை FTIGT
| iii
iuਜini LKStYu SYSKSS SzYSuJSKSHLL SSuu SSaaaS tt LYSM SSLL リcm cm Eլար: Հրդեն Gill =து-பதிப்பு' து ,|iri| | iii Hi! If yw Y Tyfryw. நாயே தனது அந்ா விபெரிதா ட்யூ டர்ந்த
1 ܐܶlInܛܐܲܒ݂.
ந்திந்த ஆள்ளன்வழியாக பர்சென்ட் கிரந் ர்ொேடிக் ரிடப்பது தெரிந்து படியில் பாதுப் this பார்ந்த கந்திப் பக்ர்ள் பளது ரபின் பிரியின்பேய்ப் இார்ப் பியத் தவிர வேறு திரும் அப்கேட்பவிப்பு பக்கியத்ந்துள்ள ப்ெபள்ெறே புரிபாரின் ப்ேரே போய் பர்ள்
புர்தி , , , , , , ,
। ।।।। கத்துவிட்டாப் த அவர் எப்படி எதிர்கொள்ாள் பிள்ளை En F1, og Foss Is III/Lo. விட்டேன்ான் கோபித்துக்கோள்ாரே' - அரிப்பவே பந்தியாள் டடய புவது பார் ரிபோர்து பிட்டன. கடந்தார்ந்தந்துரு 、) பழரிய = பாது சரிந்து கிடந்த 11 is 琶、山 தன்னியாப்ே பார்தர து
கா: ஆந்திபார்ஆன்டிய ஆள்திரன் ார்ந்தார் பயமும் தாக்கமும் பாது பதிப் 萤、 呜而 、_s உணர்ந்தார் ஒரு பணிநேரத்துக்கு முன்பு நட்புள்டுேத்துர்து பிரிந்துப்பிட் ருடன் இந்தத் தேசம் இப்போது விந்துப்போரிட்டு שAnnars = o ולקחק. הם האחים וד N, קווח 3 לות, ששווקות a,b. என்பே செய்து ஆாதுந்து யார்செய்கியிட்
g)
Page 43
எழுதிய ஏனைய நூல்கள் ஈறாக அவர் தமிழ்தேசியம்
7ே72g
முதவும், அவரது சிந்தனைகளும் இந்த பணிக்கு ஒரு இறுதியாக போராசியர் சிவசேகரம் பற்றிய விடயத்திற் வார்த்தைகளால் மற்றவர்களை அடித்து விழுத்தும் அ நிதானமான ஒரு புலமையாளனாக பார்க்கவே விரும்பு
அதற்காக நான் நிறையவும் மகிழ்ச்சியடைவேன்.
மு.தாவுக்கு வழங்கும் பாத்திரம் நீலன் திரு
மூன்றாவது மனிதன் எட்டாவது இதழில் சிவசேகரம், மு குறிப்பிடும் போது, ‘மு.தயற்றிய அங்கலாய்ப்புகளை நோக் அங்கலாய்ப்புகள் சில மனதிற்கு வந்தன. ஏனோ, தமி இன்னமும் அழுகிறார்கள்’ என்று எழுதியிருந்தார். சில தேவையான நல்ல விடயங்களை மிக இரத்தினச் சு என்றால் தனக்குப் பிடிக்காதவர்களை, தான் வரித்துள்ள அவ்வேளை சில பொருத்தப்பாடுகளைப் பற்றி கவனிக்காமல்
தனக்கு உவப்பானவர்களாகப் பாராட்டுவதும் இவரது
இவரது ‘மூன்றாவது மனிதன்” குறிப்புப்படி, இவர் அப்படியா? மு.த.வின் முதல் சிறுகதையான "தியாகம்’ (18 எழுதிய ஏனைய நூல்கள் ஈறாக அவர் தமிழ்தேசியம் அவரைப் படிப்பவர் எவருக்கும் தெரியும். - அப்படியிருக்ச மு.தவைச் சோடி சேர்த்தார்? ஒருவேளை, பல்கலைக்கழக் அனர்த்தப்படுத்தப் பின்னின்ற, சிவசேகரம் கொண்டாடு திருச்செல்வத்தோடு சோடி சேர்க்கப் போய் தனது பே6ை பெயரை எழுதி விட்டாரோ?
காப்ரியேல் என்கின்ற மனிதர் அற்புதங்கள் நிகழ்த்தக் வந்ததுதான். இதனால் அச்சகங்களில் அற்புதங்கள் நட
ஆனால் அவருடைய மாயாஜால வித்தைகளை அழ தப்பித்து விடலாம் என்றால் முடியவில்லை. வ ஊஞ்சல்களிலிருந்தும் எழுந்து வந்து ஈக்களைக் அச்சகங்களுக்கு மூச்சிறைக்க ஒடிப்போனோம். கைகை புத்தக வெள்ளம் சந்து பொந்துகளும் வீதிகளுலும தரையெல்லாம் நிறப்ப கதையிலிருந்து யாரும் தப் கண்களை இறுக்க மூடிக் கொண்டாலோ காதருகே உ சுயசரிதம்தான்’ என்று ஒவ்வொருவரையும் திருப்தி கன்னிகாஸ்திரீகளைப் போல மயங்கிப் போயிருக்கிறே சமுத்திரத்தை நோக்கிப் போகின்றன. மாயமிக்க அச் சமுத்திரங்களும் மலைகளும் சுரங்க ரயில் பாதைகளும் பூமியின் பரப்பு முழுதுமாக நிரம்புகிற வரை ஓயாது ஒரு நூற்றாண்டுகாலத் தனிமைவாசம் நாவலை எழுத விற்பனையாகியுள்ளது. மூல ஸ்பானிய மொழியில் தெரியவில்லை. புதிய புத்தகம் வருகிறதென்றால் எப்1 தள்ளுவண்டிப் பையன்கள் தெரிவில் பிரதிகளை விற்கிறா மாய்ந்து போகின்றனர். ஏற்கனவே சொல்லப்பட்ட மர6 லட்சம் பிரதிகளுக்கு மேல் போனது.
பற்றி தீர்க்கமான பார்வை கொண்டிருந்தார் என்பது
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
நகுந்த அத்திவாரமாக இருக்கும் என்றே நினைக்கின்றேன். கு வருகின்றேன். தனிப்பட்ட ரீதியில் நான் அவரை ரசியல் வாதியாக பார்க்க விரும்பவில்லை. மாறாக ஒரு கின்றேன். போராசியர் இதனையும் கவனத்தில் எடுத்தால்
ச் செல்வமா?
மு. பொன்னம்பலம்
த.பற்றி இக்பால், மு.பொ ஆகியோர் எழுதியது தொடர்பாக கும் போது, நீலன் திருச்செல்வம் பற்றிய N.G.O., G.O. ழ்ெ மக்கள் குமார் பொன்னம்பலத்தை நினைத்துத்தான்
ருக்கமாகச் சொல்லுவது சிவசேகாத்தின் ட்றேட் மார்க்’
மரபுவழிமார்க்சீயத்துக்கு எதிரானவர்களை எள்ளுவதும் b போவதும் இதனால் சந்தர்ப்பவாத போலி மார்க்ஸிட்டுகளை ட்றேட் மார்க்'தான்!
மு.த.வுக்கு வழங்கும் பாத்திசம்-நீலன் திருச்செல்வம் 57), முதல் நாவல் ‘ஒருதனிவீடு’ ஆகியவற்றோடு அவர் } பற்றி தீர்க்கமான பார்வை கொண்டிருந்தார் என்பது சிவசேகரம் என்ன காரணத்தால் நீலன்திருச்செல்வத்தோடு உபவேந்தர் பதவிக்காய் 1974 தமிழாராய்ச்சி மாநாட்டையே ம் முற்போக்கு மார்க்சியவாதியின் பெயரைத்தான் நீலன் of Qstigs souproi (Slip of the pen) Stulg (p.55-656,or
O
கூடியவர் என்ற சந்தேகம் நெடுங்காலமாக இருந்து டந்த போது காத்திருந்தவர்களாகத் தலையசைத்தோம். றிந்து வைத்திருந்தால் அவற்றின் வசியத்திலிருந்து பசப்பட்டு மரப்பெஞ்சுகளிலிருந்தும் தோட்டத்து காட்டிலும் வேகமாகப் புத்தகங்களை வெளித்தள்ளும் ள நீட்டுவதற்குள் புத்தகங்களும் தாவி வந்தன. கிளம்பிய ாகப் பாய்ந்து மைல் பல தூரத்திலுள்ள வீடுகளின் முடியாத படிக்கு. பார்வை இல்லாமல் இருந்தாலா உரத்துப் பேசும் குரல்கள் கேட்டவாறு. 'உங்களுடைய ப்ெ படுத்துகிற திறன் கொண்டிருக்கும் இவற்றிடம் ாம். எங்களுடைய தேசத்தை நிரப்பிவிட்டு புத்தகங்கள் சகங்களிலிருந்து கிளம்பும் முடிவற்ற புத்தகங்களால் ம் பாலைவனங்களும் அடைபட்டுத் திணறுகிற வரை, என்பதைப் புரிந்து கொள்கிறோம்.
திப் பதினைந்து வருஷங்கள். நாப்பது லட்சம் பிரதிகள் மட்டும். மொழிபெயர்ப்புகளாக எத்தனை விற்பனை பானிய அமெரிக்க தினசரிகளில் செய்தி முதல் பக்கம். ர்கள். பாராட்டுவதற்கு வார்த்தைகள் இன்றி விமர்சகர்கள் ணத்தின் கதை சமீபத்திய நாவலின் முதல் பதிப்பு பத்து
O
-GD
Page 44
கவிதை -01
சின்ன உடுப்புகளும் சிரிப் ட
இன்னும் இருக்கிறது பணிகள்
பழுத்த
ஒலை இணுங்கி
சிறு ஈர்க்கு முறித்து பல்லைக் குத்தி வீசுவது போன்று சொற்ப நேரமல்ல; வாழ்க்கை ஒரு நொடிதான் எனினும்
பெரிய யுகம் கடக்க வேண்டியதும், படிக்க வேண்டியதும் என்று மிக அதிகம்
சின்ன
ஆடைகள் துவைத்து காயவைத்து மடித்து வைத்துப் பின் எடுத்து உன் மகனுக்கு அணிகையிலே அலுத்து வெறுத்துப் போனதென்று சொன்னாய்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
சிரித்துவிட்டேன் அவ்வப்போது பூக்கின்ற மரம்போல இன்றும் மலர்ந்து விட்டேன் என் பல் வெளிச்சம் கண்டு உன் முகப் பருவின் மூக்கு கனிந்திருக்கக்கூடும்
பும்
g_65T கன்னத்தில் சிறு ஈரம்
துடைத்துவிடு مصر எண் நெஞ்சில் உன் பையன் இப்போது துள்ளியதால்வலியில்லை இன்பம் அவன் கழித்த சிறுநீர் என் வாய்க்குள் இனிக்கிறது.
சில சின்ன உடுப்பு வீட்டில் அணிந்து அவன் வளவில் விளையாடும் வெள்ளை சிகப்புகள் கழுவிக் கை நொந்து போன உனக்கு
இந்தச் சிரிப்பே பதிலாக, பதிலுக்குள் நூறு பொருளே பொதியாகி பாரத்தில் நிற்கின்றேன்,
பெறு
O
G2)
Page 45
கவிதை - 02
பஞ்சில் முளைக் கின்ற கூந்தலா
நீ கொஞ்சம் அசைந்து சிறு தலைமயிர்போல் என்மார் உதிர்ந்து கிடந்திருந்தால் கூட அந்த நுளம்பு பறந்திருக்கும்; நசிவதற்கு நியாயமில்லை நீயெங்கே
விழுந்தால் செத்த பிணம்! ஒரு பூப்போல முளைத்தபடி உன் கண்ணிமைக்குள் நா உன் உயிர் இரையும் இரைச்சல் எனக்குக் கேட்பதில்லை
என்ன கனவோடு அந்த உயிர் வந்திருக்கும்! உன் துளிர் மூக்கில் பொன் நிறத்தை ஆராய்ந்து அறிகின்ற ஆவலுடன் நின்றிருந்தால்; பெரிய அநியாயம்; என் கைபட்டு நசிந்ததனால் நிலவோ ஒப்பிட்டு அந் நுளம்பு உன் நிறத்தை குறைந்தது கவிஞனாய் ஆகாதா இசைப் பாடல் எழுத
அதற்குண்டு தகுதி காலத்தால் அழியாத கவிதை செய்யும் தாகத்தால்; உன் குளிர் மூக்கில் குந்தி,
பேனை திறக்கையிலே என் கை பட்டதுவா?
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
பில்’
னிருந்தும்
படுத்துப் படுத்து மெத்தைக்குள் நீஊறி உன் கூந்தலும் முளைக்கிறது; பஞ்சில்! நான் ஒற்றை மீன் இந்தக் கட்டில் கருங்கல்லில், துடிப்பதுவும் தெறிப்பதுவும்: உன் பிடரி முகருவதும்; எப்போதும் முளைத்திருந்து.
O
-G13)
Page 46
وواجي72-7ة محG
61 ஸ்லோரும் எதிர்பார்த்த படியே அது நடந்து
முடிந்தது. நல்லதம்பிவாத்தியார் செத்துப் போனார்.
மூன்று நாட்களாக அறிவுகெட்ட நிலையில் முனகிய படி படுத்திருந்த அவர் முனகலும் முற்றாக நின்று விட்டது.
தலைமாட்டில்பெரியகுத்துவிளக்கு ஏற்றப்பட்டிருக்க,
காற் பெருவிரல்கள் இரண்டும் பிணைக்கப்பட்ட நிலையில் அவர் படுத்திருந்தார். வெள்ளை நிற
வேட்டியும் நாஷனல் சட்டையும் அணியப்பட்டபடி அவர் படுத்திருந்த விதம் ஒரு கணம் அவர் உயிருடன் இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக இருந்தது. வெளிநாட்டிலிருந்த மூன்று பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுடன் வந்து அவரைச் சுற்றி நின்று அழுதார்கள், 51ாத்தியாரின் இறுதிக்கிரியைகள் நடந்து கொண்டிருக்கையில் திக் பிரமை பிடித்தo எ1:க
பாக்கியம் தலைபட்ட ருகே உட்கார்த் திருந்தாள். 鸥
Hவளது கண்கள் 610)தயும் நம்பமுடி:தனவாய் வெறிச்சிட்டிருந்தன. ity
ܐܰܐܪ வாத்திபாரின் உயிர் பிரிந்ததை பாக்கியம்தான் முதலில் dh கவளித்தாள். நடு ராத்திரியில் திடுக்கிட்டு விழித்து ஒன்றுக்குப்பேர்கவென்று லைட்டைப் போட்ட போது - الركي தான் அவளுக்கு வாத்தியாரின் அனுங்கல் : தீ தடம் ر-ہج {
கேட்கவில்லை என்பது உறுத்தியது. கிட்டப்போய் நெஞ்சு அod கிறதா என்று கவனித்துப் பார்த்தீள். அவரது வகைகளும் கல்களும் சில்லிட்டு ருந்தன.
சீவன் போய் கனநேரம் என்று அவளுக்கு விளங்கியது. சுவர் மணிக்கூட்டைப் பாததாள நரம ஒனறரை எனறு காட்டியது.
வாத்தியாருக்கு இது கடைசிப் படுக்கைதான் என்று 31ல்லோருக்கும்ே தெரிந்திருந்தது. பாக்கியத்துக்கும் கூட இது தெரித்து தான் இருந்தது. வெளிநாட்டி ருலிருக்கிற பிள்ளைகளுக்கு மகள் ரெலிபோன் பண்ணிக் கதைத்த தெல்லாம் அவளுக்கு தெரியாமல் இல்லை. யாரும் அவளுக்குவாத்தியார் இன்னும் இரண்டொருநாளிலை போய்வி டுவார் என்று சொல்லா விட்டாலும் கூட அவளது அடி)னதுக்கு அது தெரிந் துதான் இருந்தது. ஆனாலும் இப்போது அது நடந்துதான்விட்டது என்று தெரிந்த போது அவளுக்கு நம்ப முடியவில்லை.
பாக்கியத்திற்கு அடிவயிற்றில் திடீரென எண்னவோ செய்வது போல இருந்தது. அவளையும் மீறி ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது. அது நிம்மதிப்பெருமூச்சா அல்லது அடிவயிற்றிலிருந்து தோன்றும் உணர்வுகளின் வெளியேற்றமா என்று அவளுக்குப்புரியவில்லை. ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
----۰۰۰۰۰ سانتین
எளப்.கே. விக்னேஸ்வரன்
1)dத்தள் அவள் அடி வயிற்றில் தோன்றிய உணர்வு நெஞ்சுக்குத்தாவியது. மூப் கலையும் கலந்த அந்த ஒ வுை திடீரென்று பெரிதாகி ச் சுமுட்டுவது போல இருந்தது. அவளை அறிய:1)லே விம்மலும் கம்பலுபாய்வந்தது. விம்ம விம்மதுக்கம்பெரிதாவதுபோலவும் வாய்விட்டு த வேண்டும் போல அது அதிகரிப்பதாகவும் பட்டது. "ஐயோ என்ரை 91. என்னை விட்டிட்டுப்போயிட்டியேர் என்று அவளது வாய் அரற்றியது. டுத்த கணமே தனது அரற்றல் ஒலி பெரிதாகி வருவதை உணர்த் ச்dத்துடன் அதை அடக்க முயன்றாள் அவள்.
திறந்திருத்த ஜன்னல் வழியாக பளிச்சென்று லைட் எரிகிறவிதி வெறிச்சோடிக் கிடப்பது தெரிந்தது. ப01:பில் மகனும்,
மருமகளும் பிள்ளைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அவர் களது அறைமின் விசிறியின் மெல்லிய
୭୭) ) ] # !!! !!; ஒலியைத் தவிர வேறு
சத்தம் எதுவும் கேட்கவில் 60ல. பாக்கியத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மேலே பே: 1)களை எழுப் பி:ைல் அவர்கள் இதை எப்படி 51 திச் கொள்வர்கள் 2 1940ள $1 பூப் , 31ம் நான் என்னை மீறிக் கத்திவிட்டல் 2 அடி)த அவள் எப்படி எதிர்கொள்கள் ? பிள்ளை களை தேவையில்லாமல் பயப்படுத்தி விட்டேன் 51ண்று கோபித்துக்கொள்வாளோ? அவளை அறியாலே வாத்தியாரின் சி. நடை யை அவளது )}ககள் சரி செப்து விட்டன. கடந்த நாற் த்தைந்து வருடங்களாக Чур கிய கை. அவரது ஈரிந்து கிடந்த தலையை நிமிர்த்தி தலை!னையில் : ரிசெய்ய தன்னிச்சையாகவே முயன்றன. لیہ#bJj Jہر கன்னத்தில் அவளது கைகள் பட்ட போது ஒரு வகையான அந்நியமானதன்மையை அவள் திடீரென உணர்ந்தாள். பயமும் தயக்கமும் அவளது மனதில் தலைநீட்டுவதை அவள் திடுக்கிட்ட வளாய் உணர்ந்தாள். ஒரு சில மணிநேரத்துக்கு முன்பு வரை தட்டிக் கொடுத்தும் த.வியும் பிடித்தும் விட்ட சூடான இந்தத் தேகம் இப்போது விறைத்துப்போப் சில்லிட்டு அந்நியமாகிப் போய் விட்ட த உ1ை) அவளுக்கு 5ான்னவோ செய்தது. அவரது தலையை எரிசெய்கையில்
G4)
Page 47
G-7723
கன்னத்தில் 3)க்கள் பட்ட போதுதுக்கம் குமுறிக்கொண்டுவந்தது. அடக்க முடிய0ல் அழுகை பிரிட்டது. நாலுநாட்களுக்குமுன்னால் வாத்தியார் கண்களில் இருந்துபொலுபொலுவென வழிந்த கண்ணிரை தான்துடைத்துவிட்டது அவள் நினைவுக்கு வந்தது. அவள் த.வத் தடவ அவரது கண்ணிர்வெள்ளமாய் பெருகியது. அவர் விம்பிவிம்மி அழுதார். அவர் வாயிலிருந்து விம்மலும் விசும்பலுமாக அழுகை பொங்குவதை காணப்பொறாதவளாய் அவளும் சேர்ந்து அழுதாள். அழாதேங்கோ. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நாங்கள் கஸ்டப்படப் போறம் என்று அவள் அழுயையூடே சொல்லி அவரை
தேற்றியது இப்போது அவள் நினைவுக்கு வந்தது.
வாத்தியாரை மெளனமாக்கி வெறும் அனுங்கலை மட்டுமே வெளிப்படுத்துகிறவராக முடக்கிவிட்டதாக அவள் உணர்ந்த அந்த சம்பவம் அவள் மனதில் சுமையாகக் கனத்தது. வாத்தியாருக்கு இப்படி ஒருநிலை வருவதை நினைத்துப்பார்க்கையில்மனதில் எழும் ஆவேசமும்கோபமும்கூடவே எழும்கையாலாகாத்தனஉணர்வுமாய் அவள் வெப்பியாரம் அடக்கமுடியாத அழுகையாக வெளிப்பட்டது. கண்ணிர்வடித்து அழுதவாத்திபாருடன்தானும் சேர்ந்து-அழுவதை தவிர வேறெதுவும் அவளுக்கு செய்யத்தோன்றவில்லை. மாடிப்படியில் இருந்து இறங்கி வந்த மகள் இந்த அழுகையைச் சகிக்கமுடியாதவளாய் எரிச்சலுடன் கேட்டாள்.'இப்ப என்ன நடந்து போச்செண்டு அழுது வடிக்கிறியள் மகள் கேட்ட போது பாக்கியம்
தன்னைகத:கரித்துக் கொண்டாள். ஆனால் வாத்தியாரால் அவரது
அழுகையை நிறுத்த முடியவில்லை. எங்கடை தலைவிதிக்கு நாங்கள் அழுகிறம். உனக்கென்னடி செய்யுது என்று சீறினார் வாத்தியார். பலவீனமான உடல் நிலை காரணமாக தளதளத்த அவரது குரல் சுருதிபிறழ்ந்து ஒலித்தது. எரிந்து விழும் வாத்தியாரின் வாயைப் பொத்திபேசாமல் இருங்கோ'என்று சாமாளிக்க முயன்றாள் அவள், ஆனால் வாத்தியாரின் மன ஆவேசம் அடங்கவில்லை. அதிகரிக்கவே செய்தது. பிள்ளைகளைப் பெத்து வயிற்றைக்கட்டி வாயைக் கட்டி நாங்கள் வளர்ந்தது இந்தப் பேச்சைக் கேட்கத்தான் என்று விம்மலும் விக்கலும் கலந்து கரையும் குரலில் ஆவேசமாக கத்தினார் அவர் 'எங்களை எப்பதான் இந்தக் கண்கெட்ட கடவுள் கொண்டு போய் துலைக்கப் போகிறானோ என்று அவர் ஆற்றாமை உச்சத்தில் அரற்றினார்.
அப்பர். தேவையில்லாமல் கத்தி ஊரைக் கூட்டாதேங்கோ. அங்கை பிள்ளைகள் எழும்பிபயந்து அழப்போகுதுகள்
வாத்தியார் அதற்குப் பிறகு ஒன்றும் பேசவில்லை. இது தேவையயில்லாத கத்தலா? நான் தேவையில்லாமல் கத்துகிற ஆளா?. அவர் மனம் அறற்றியது. அதன்பிறகு அவர் மெளனமாக விசும்பியபடி படுத்திருந்தார். பாக்கியம் அவரது நெஞ்சை தடவி விட்டபடி அoபர் துரங்கும் வரை பக்கத்தில் அமர்ந்திருந்தாள். இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் வாய் திறக்காமல் மெளமாகி விட்டவராக கண்களை வெறித்தபடி படுத்திருக்கத் தொடங்கினார். பாக்கியத்துடன் கூட அவர் பேசுவதை விட்டு விட்டார். வெறும் அனுங்கல் ஒலியைத் தவிர அவரிடமிருந்து வேறு சத்தம் எதுவும்
வெளிப்படவில்லை.
இது நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முதலிருந்தே கிட்டத்தட்ட வாத்தியாருக்கு உடம்பு ஏலவில்லை. வீட்டு ஹோலுக்குள் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக உலவிக் கொண்டிருந்தவருக்கு அதைச் செய்வது கூட கடினமாகத் தோன்றியது. ஹோலை அண்டி அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் முடங்கிக்கொள்ளவதை தவிர அதிகமாக ஒன்றும் செய்யமுடியவில்லை. முழங்காலுக்கு கீழ் சக்தி இல்லாமல் போய்விட்டது போல ஒரு உணர்வு பாத்றுமுக்கு
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
தட்டித்தடவி பாக்கியம் கூட வர நடந்து போய்வந்தாலே பெரும் களைப்பாக இருந்தது. அதனால் எழுந்து நடப்பதையே அவர் ஏறக்குறைய நிறுத்திவிட்டிருந்தார். ஆனால் அன்று மாலை பாத்றுமுக்கு போய் விட்டு தட்டுத்தடுமாறி அறையை நோக்கி வரும்போது ஹோலுக்குள் மகளுடன் யாரோ ஒருவன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட போது, அவரது களைப்பையும் இயலாமையையும் மீறிய ஒரு ஆவல்பிறந்தது. அது யாரென்று அறியும் அங்கலாய்ப்பிலிருந்து அவரால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. தன்னுடன் படிப்பித்த வல்லிபுரம் மாஸ்டரும் மகனும் தங்கள் வீட்டுக்கு அருகாக குடியிருக்க வந்திருப்பதாக மகளும் மருமகனும் பேசிக்கொண்டது அவரது காதிலும் விழுந்திருந்தது. அவனாக இருக்குமோ என்ற ஆர்வம் அவனுடன் ஒரிரு வார்த்தைாகளாவது பேசி விட வேண்டும் என்ற ஆசை என்பன அவரை ஹோல்பக்கமாக நடக்க வைத்தன. ஹோலில் மகளுடன்பேசி கொண்டிருந்தவன் சரியா வல்லிபுரம் மாஸ்டரின் மூத்த மகன் கண்ணனைப்போலவே அவர் கண்களுக்குப்பட்டான். அவர்கள் பேசி கொண்டிருக்கும் இடம்வரை தன்னால் நடக்க முடியுமா என்று பயந்த வாத்தியார் ஹோல் வாசலருகில் நின்று ஒரு கையால் பிடித்தபடி, அவர்களைக் கவனமாகப் பார்த்தார். அது கண்ணனேதான். சந்தேகமே இல்லை என்று தோன்றியது அவருக்கு. அவர் தனது ஆவலை கட்டுப்படுத்த முடியாதவராய்ஆருது."என்று கேட்டார்.
அப் 阿... உங்களுக்கு நடக்கேலாதெல்லோ, பிறகேன் இங்காலை வாரிபள்'- வாத்திபாரின் குரலால்திடுக்கிட்டவளாக அவரைப்பார்த்த மகள் தான் கூறினாள். அவளது முகத்தில் ஒருவகையான கோபமும் கண்டிப்பும் தெரிந்தது. தனது வருகை அவளுக்கு எரிச்சலூட்டியிருக்கின்றது என்பதை அவளது பார்வையினூடே புரிந்து கொள்ள முடியாதளவுக்கு அவரது ஆர்வம் அவரைக் குருடாக்கிவிட்டிருந்தது. கேட்ட கேள்விக்கு அவள் சொன்ன பதிலின் -அர்த்தத்தை விளங்கிக் கொள்ளாதவராய் அவர் மீண்டும் கேட்டார். உதாருதுபொடியன். உன்னோடை கதைச்சுக்கொண்டிருக்கிறது
மாஸ்டர் கேள்வியை கேட்டுமுடிக்க முதலே மகள் எழுந்து வந்தாள். அவரது தோள் மூட்டுகளில் பிடித்தாள்.அப்பா அவரை உங்களுக்கு தெரியாது வாங்கோ உள்ளே நடந்து விழுந்திடாதேங்கேர் அவளது குரல் மென்மையாகவும் வெகு சாதாரணமானதாகவும் ஒலித்த போதும் அவளது விரல்கள் அவரது தோள்களை பலமாக அழுத்தித் திருப்பின. அவர் அவரது அறைக்கள் கூட்டிப்போய் இருத்தப்பட்டார்.
'நான் வல்லிபுரத்தின்ரை. ன்று அவர் சொல்ல தொடங்கியதை மகள் தன் கண்களால் அடக்கினாள். மாஸ்டருக்கு அப்போதுதான் விளங்கியது தான்ஹோலுக்குப்போனது மகளுக்குப்பிடிக்கவில்லை என்று. தன்னுடைய பாழாய்போன ஆவல்தன்னைமுட்டாள்தனமாக, அநாகரிகமாக நடத்து கொண்டு விட்டதான குற்றச் சாட்டுக்கு ஆளாகிவிட்டதை அவர் திடுக்கிட்டுப் போய் உணர்ந்தார். மகள் விரல்களால் அழுத்திப் பிடித்த தோள் மூட்டுகள் அவருக்கு இப்போதும் வலித்தன. வாத்தியார் கூனிக் குறுகியவராய் கட்டிலில் சாய்ந்தார். அவரது மனம் தாங்க முடியாத வேதனையால் தவித்தது. வந்திருந்த விருத்தினன் போனதும் மகள் நேரே அவரது அறைக்கு வந்தாள். அப்பா. இப்படி கிழண்டியும் உங்களுக்குவிடுப்புக்குணம் போகேல்லையே. 'என்ரை ஒப்பிசில வேலை செய்யிற அந்தப் பெடியன் இப்ப என்னைப்பற்றிஎன்ன நினைச்சியிருக்கும். ஹோலுக்குள் வந்து கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் 'உதாருது' எண்டு கேட்கியள். உங்களால எங்கடை மானம் மரியாதை எல்லாம்
M f போகுது.
G5o
Page 48
7ே7ஆg
சைக்கிளில் சந்தைக்குப் போய் வந்தார் மள் புத்தம் பற்றி, அரசியல் தீர்வு பற்றி இயக்க சொற்பொழிவுகளுக்குப் போய் வந்தார். யாழ்பாணம் போய் தொா ே அப்போதெல்லாம் அவருக்குகெர்றொரு வீடு இருந்தது அவளர மதிக்கின்ற ஒரு உலகம் இருந்தது. அவர் வாழ்ந்தார். புத்தம் தீவிரம் பெற்ற தற்காலிக அகதி முகாம்களுக்கு போய்த் தங்கினார் மார்னெணிணைக்கும் சவர்க்காரத்திற்குமாக இரு ஆனாலும் அவர் தார் அப்போது வ்ாழ்ந்ததாகவும் தனது
மகளில் ர்ப் பற்ான்பே நொந்து போயிருந்த காத்திாள் டர்ாத்தாக்குநராக நெருக்கிபிட்டது "நன்பப்பிரத்தின் பொன்ாண்டு நினைச்சன்-வாத்தியார் நன்பக்தியத்து
முயன்றார் ஆபருக்கே து இன்விான்குங் தடுபார்து i। °)、 Hட்டினார் ' பி நோக்குள் பந்து நாடுதுண்டு நேர்கிறது பரிபாதசிய கருக்கு | போட்டன்நார்த்துக்கொண்டிருக்க்ேரோக்கபந்து
| iii । । கேள்விதழாக சேர்ந்துபெரும் ஆந்ேதர்படுத்தியது. தள் ਜਿਜ கேள்விகேட்பியிருந்தார் ான்று நினைக்கொள்வது ஆத்திம்பெங்கொண்டுவந்து ஒஒம், நாங்கள் இப்படங்களுக்கு இது ஆக்க Hill
ਜਨੀ | iii
INFLUJI" I " பத்திான்ாபிiார்த்தைகள் துடித்தன ஆால் அர்தன்னை அடர்வியோட்டுமொவார் அதுபேம்-ாநடுங்க வத்தது ஆனது படிமம்ாளிதழஏபட்ட *) சேர்ந்து - நடுமா?
। ।।।। தேவையில்ாபல்பந்து ஆட்டுதுடன் இவர் நிர்ருந்தால் )ரிருப்பர் * * * 、 ó הזזה להחלש, חזה) והן דה ਨਜ அதுவாயிருந்துயர்த்துகள் ஆங்களர் பாய்ந்து חורחהחתולקת חוף கொ செய்தன. அந்த விநாடியுடன் ਨਜ) ாருக்குதன்பதே மரபிக்ாக இருந்தது. ਜ । ॥
। ।।।। விருக்குட் இவ்வளவுக்கு இவளுக்கென்டுநாங்கள்iபுவியத்தட்டுக்கொடுத்து
குபல்லுக்கிப்பு. ாத்தியாக்பெரியவெப்பிரமாக இருந்தது வருக்கு தனது கடுப்ாள் பற்ற பும் விட்டு இங்கு ஒடிந்த நினைக்க TE இருந்தது. அங்கே இந்து ஆர்க் 占山、 ) ார்சிசெத்திந்தாலும் பரபாயில் இந்
பந்திருக்கப்படாது என்று தோன்றியது ஆாள் அந்தப் புத்தி இப்போதுவர் பன்னபிரயோகம் ஒன்றுக்குநீக்கப்போதுக்கே
ாள்வனவு தட்டித்த விநடக்கரிேனன்டியிருக்கு ாத்தியரின் பன்ம் பெளன்ாக கரிவிக்கப்பட்டது. துயரம் நெஞ்சைப்பிப்பதாக இருந்தது. பாக்கியத்து இள்ளமுள்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
நேரங்களில் வாசிக சாலைக்குப் போனார். ங்கள்பற்றி மாலையில் நண்பர்கருடர்பேசிளார்.
பிள்ளைகளுக்கு கடிதம் எழுதினார். சியில் அவர்களுடள் பேசினார்.
அங்கே அவரது ராணியாக பாக்கியம் இருந்தார். அவரது இருப்புக்கு அர்த்தம் இருந்தது. பாது அவர் கண்டங்களை அனுபவித்தார்.
பவுர் கட்டினார். பார்க்காக கியூபில் நின்றார். து இருபத்தைந்து மைல் தூரம் சைக்கிர் ஓடினார்.
காப்பங்களுக்கு அர்த்தம் இருந்ததாகவும் உணர்ந்தார்.
இந்தத்துயத்து-புளுடன்ார்த்தாரம் ஆான *、 =வருக்கு தனது தான் நிவந்து டுரியோ ார்க்கு வந்தா பேபியா இருந்த அன்ாடரிநோத்தி
। g, i-ի նորի -ட்டிப்படத்தத நித்துப் பந்தா யாத்தியாருக்கு
* finitial ) ஆர்க்கு
ਜily in Final 、 । הקו הוחל החוד, דן ויזליד,
ாக்கு வந்து பிதுக்கென்று பார்த"பண்டிர் ਜਾ பாடன் பர் பார்த்துக் கொண்டிருந்த
ாேக்குமோரியது 'பாங்டாப்பிடங்களொம்
-| ה, בהון והאו ו975דש וישב.
** ਜ * | iii பழுத்துயிட்ட பத்திார் பாதுக்கொ ((
| iii ாப்பர் படிப்பிப 4 பேரிவர் "நோ என்
தோடயம் குடிக்கிந்து ஒரு சந்தோபோடகர் ாதியளிர்ந்தோம்.ான்று பிடிபிரிப்பாய்ந்தார் தன்னுடன்
பந்திருந்த நாள்பர்களில் ஒரு ஒடுக்கப்பட்டாதியோவிா சேர்ந்தர் என்பதால் பாவின் இந்தப் பர்பர் பார்த்தம்
| iii தாய்க்காக பள்ளிப்புடேரே ஆயதாடுந்தெரிந்து அவர் பேவில் வாக்கு- ங் சார் பந்த படங்கி போதலில் புருக்கு ஸ்ரர் பெருன்ா ட இருந்தட ஆனால்இன்டன் பகள் நான்ாேர்குள்போது
ார்ப் இஸ்ரீதசெயல்பங்கிள்.ாத்திர்துக்கம் நெரு முட் தவித்துப்போன்ார் பெரியேபோயிருந்த பாக்கியம்வந்தபோது தாய்தல் தாத்தை அடன் முடியபிள் சாப்பிடபஏற்ப இருந்தது நடந்த
பத்து அவரிடம் கொள்முடியமர்விக்கிவிக்கி அழுதா
ਜੀਪਾਨੀ। முடியாத அபூப்பந்து-கன்னர்ஒயா வடிந்தது இப்போது தனது கண்முன்னால் பிரத்துப் ப்ே பெற்றுச் சடாப் படுத்திருக்கும் நாதம்பி பாப்டர் நான்கு ாட்களுக்குமுன் புதுபோதுதுயுத்ததுப் பக்குபண்டுப் னேவில் எழுந்தது நம்பமுடியாத வெறுமையுடனும்
C)
Page 49
7ே7ஆடுது பயத்துடறும் பாது ட்டவை வெந்தபடி இருந்து வருக்கு
ாருடன் தின் அரிங் யாழ்ந்த வாழ்க்க நினைக்கு வந்தது | iii
பதிப்பு பிங் ஒரு பாடதியாக ார்டிப்பான ஆசிரியாக நிர்வாகிய பாயும் iਜਾ।
பதிப்போதுகளைகட்டியிருக்கும் 'ஆதியம்
i। ਜ இாத ஒருங்ாழ்க்ளி ரது டபத்தில் - ஒபார்-பேக்கேற்ப நாதர்ர் என்று அா ாநார்பேர்பில் பிiாழுதுபோக்குப்போது
। ।।।।ਜਜ
| iii எப்பளவு சொத்துள் பினர் அப்போதெல்ாட்டருக்கு இருந்த ' எங்கே அவரது வாரிவிருந்து விழும் ஒப்பொரு
। *、 ।
குர்ாடி வீட்டிவே பாது | iii ட்ரிஜ்குழாயயே । ।।।।
। ।।।।
ਜ । ufuld i for sig nu fig 动、 பந்தது. பாக்கியத்துக்கு துயரப்பொங்கி பந்தது -ன்று அவர் அத =புத்தம் புதிதாக புரிவது ,חש3שפחה பந்தியில் பிந்துநின்றத்தியர் இப்படி ਹੈ। Helio - LILI ĜILI11 tly நீர்ப்பந்திக்கப்பட்ட -
நேர்ந்ந்ெது
நம் இன்னமும் இரண்டுமரவிடஆகவில் இனியும் பருக்கு சொல் இருப்பது ரிய்ேயோள்து தோன்ரிபது பாடியில் படுத்தி | iii
॥
Fiti is list Grif a Fiji II
'ர்ாருள்
リエー_。 58="تفتی; e28־"ל .. ושוחז"ה והיו דו
செய்து V கொண்டுபெரும்புக்குப்போபிள்பாக்கியமும் தாலும் தனியாக எாந்த நான்காளர்டுகள் བད༽༣ ாந்தியார் நாளி ரத்தன் பப்புப் பாருடன்
பரிந்துபூந்து ஆவளிரேலுக்குள் சென்று பாளிடம்
திட்ாரின் முதாப் ராப் பேர் டிாள்ா பே முடியவில் க்நாள் ஒன்று நாங்க இந்து թիրյալ եւ քլորի மி பிள் ஆவார் பேர் நினைத்துப்புே பிறரு முடிக் ாேண்டு ஆம் பிரிட்டது ஆர் பொது Il llllIIIIIII Հայերենիել ங்கினார். ஆனாலும் அந்திப் ஆட்ாந் பர்ரிய நிாவிலும் திருப்பத் திருப்பு
LL
விக்கத்தை ஆண்டும் ஒரே விதமான நினைாள் பக்கு ஈன்று முன்று வந்தன பரிந்துடன் தனிந்து வந்த ாாண்டுகாமும் அவர் ஒப்பிட்டால் இயங்கியதரினத்துப் ாந்தர் ஒப்பு பெற்ற அதிபர்ான்றபோதும் ஒப்பில்ார்ா ரத்து நட்புற்கு டிர்பரும் பார்களுக்கு படம் செர்ரிக்ந்ெதார் நாளியாட்டிப்பெருக்கினார்.
ாக்கில் சந்தைக்குப் போய் வந்தார் மலை நேரங்களின் ாக்குப் போனார் யுத்துப் பற்றி ரசியல் நிர்வு பற்றி, இயக்கங்கள் பற்றி மாபைல் பாருடன் போர் பெற்பொழிகளுக்குப் ே ாய் வந்த பிள்ாக்கு கடிதம் ாழுதிவர் யாழ்பாப் பேய் தொப்ரியில் பாருள் பேரினா அப்போதோ அவருக்குகள்றொருவி இருந்தது -டோவதுராவிாக பங்கியம் இருந்தாள் பாதிக்கின்ற ஒரு இருந்தது அவரது இருப்பும் பந்தம் இருந்து
ார்பந்தர் பந்தம் நிர்விப் .ושש Hait Briוהוחל அனுபவித்தார் தற்காக அதிமும்புருக்குபோய்த்துங்கினார் ni LLANT ா"க்ா யூஸ் நின்றார்
। ○。 இருத்தைந்து பiஅாப்ர்ைக்கள் ஒனம் ஆனாலும் பர்தான் அப்போது வந்ததாகவும் தனது பிள்டங்களுக்கு அர்த்தப் இருந்தாங்டனர்ந்தார் ஒாள் ந்த 呜呜巫、 பெட்ாம் நன்றும் விடாள்தாங்போதுள்ேகள் | - ( )յն (L - YIL İli ர்ோனது
பரப்பிள்களினதும் போட்டபமுமாக இடம்பெயர்ந்தார் Wā、山、 குடியிருந்தார்ாக்கியமும் அவருமாதிநெல்வர்ட்ரோடொத்த ாழிபென்ராந்தர்கள்
i கடிதம் Հալից, հողի, கொக்கு பங்கோ' என்றும் பார்ப் பாரில் இருப்பதாய் தங்களுக்குப்பதியிப்பாள் பத்திார்கள் பொருள் 鲇 (
குனர்டுவிழார் நாங்கர்
। הוח החדת,7 מושון וולף וש
॥ ': #=" + '| பந்து தப்பித்தாதி
அப்பம்
ਜi Lith Esylltir
is a , இந்துள்ள
ਜ பிள்ாள்ாடிநம்ாழுதி । ।।।।
பதிபர்கோழும்புக்கு வந்துசேர்ந்த கட்டுரங்கர் இருப் பார் பரப்பின் கருக்கு பாடம் சொல்பிக் கொடுப்பாட்டாய । l TITI" புர்ப்பா ாேப் ருபா ப்ரது ) ) リリエリ । ட்ரம் リ
Page 50
[وp]7125 تا تمامی
பகுப்புருகனும்ாழும்ாழ்க்கைய-ால்புரிந்துகொள்ள முடியுவிப் ைகாபேயில் அவது டிசமாக புறப்பட்டுப் போர்கள் பாலையில்ாத்துப்போம்வந்துசேர்கிறார் வி முன் இருப்பது அப்துபடுப்பது எப்போதாவது இருந்துவிட்டு பிள்ளைகளுடன் வெளியேபோர்கள் அப்பளவுதான் அவர்களألقيتك ாழ்க்கை முரங்குதங்களதுருகாந்த உபயோகமும் அற்றது மட்டுப்ப, ஒருவகையில் இடைஞ்ாலும் கடந்தான் என்பது
। செய்ய வாந்தியாரால்வேறுபான்தான் செய்யமுடியும் பத்தியாருக்கு எங்கே போவது என்று தெரியi யுவது பொழுதுபோவில் பேரப்பிள்ாரும் ப்ளா
வருடன் நேரத்தைச் செவி விரும்பப் எதாவது தேவைப்பட்டாய்ட்டும் வந்துகேட்பார்கள் பரப்படி பர்களுக்கு ਜਾ। ஒபாமல் ஒவ்வோருவரும் ஒங்கொண்டிருக்கும் ஒரு பகிஸ்தடிரென்று நின்றுபோய்விட்டர்கள் போவத்திாரும் பாக்கியமும் உணர்ந்தார்கள் எவ்வளவு நேரம்தான் இருவரும் மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியும் பாக்கியமும் பபிலுள்ள ஒன்றிரண்டு விடுகளுக்கு போப்பரப்படிக் கொள்டர்கள் பத்திாருங்கு எதுவும் முடியவில்லை. பன்ாருக்கும் ஒட் முடியவில் எல்லோரும் தங்களது காந்தின் முன்னாள் இவருடன்பே நேராதவர்களாக 函 ருந்தாள் கேர்ளும் எப்படி கொழுப்புபிடித்ததோ பிள்ாகள் எல்ம்ாப்பான்ற கேள்விகளுடன் பகளின்ட்டின் முன்விட்டில்குடியிருக்கும் ஒருவர் ஒருநாள் விட்டின் முன் பசவில் காந்துவங்களென்று நின்றாடருடன் பேச்சுக் கொடுத்தர்
பாடமாடாந்தர்: இருந்தளிகள்
Li।।।। தொடங்கியபோது பாடநக்குரியும் சந்தோப்பாக இருந்தது. பேச்சுத்துக்கு ஒரு கிடைத்திருக்கிார்
॥1॥ |äбіьтатддыц.
"டங்கடேவிடும்பேட்டுதக்கும்."
"அது-ப்பநாங்க இருக்கேக்கையேபோட்டுது. ாப்டருக்கு நன்து விடுபத்தி நின்கள் ஒருகனம் நெரு
ஆக்குவாய்ந்துபோயின் "இதொரு தோல்வாத னர் பெயன்மருக்கு அரசியல் ாரியாது டங்க ைடந்த போப் ப்ள கட்டப்படுது. அவர் எந்தியாருக்கப்பரிந்துபோவது நித்துக்கொண்டு பேசியிருக்க *-Պւն, ஆனால் பாத்தியாருக்கு-பது கருத்துடன் ஒத்துப்பேர் முடியவில்ல்ை நீண்டநாட்களுக்குப் பிறகு பொது விடயம் ஒன்ாப்பர்ர்ப்பர் ஈந்தப்பர்கிடந்த ர்த்துடள்
i। --:iնա - Պերրինիուեյ: பாருமே டண்பதாள் எனக்கு துரிய பாபு ஒவ்வொருப்பா ாடுக்கிக் கட்டின் வீதி முப்பது பரும நாங்கள் வாழ்ந்த பீடு ஆால் பாருங்கே இந்த நிாயத்துக்கு பெயர்ஒள குறை வ்ெவிதுசாரியில். リ_aucm_リ品 புருக்காட்டி ப்பிடி M一、ருக்குடுகாந்தி பர்ருங்கே எந்தவியோ ம்ே
ஆகாட் - ஒக்டோபர் 2?
ரோட் யும் தெருவினையும் நிக்ருது'
பிடிக்கதிர்ப்பு |
நடந்திருக்குபோ : சுபத்துக்கு முந்தி ஒருவரும் என்டபிங்கேயே. ப்டியும் நாம் நடத்தினங்கள் தானே. அதுக்குப் பிறகு ஒண்டும் நடந்துக்கு காண்டர் இங்கண்ட நம்பகாம் என்பே நினைக்ரிரியர் ர் ரதே சொல்வயெடுத்தர் ஆாள் அதற்குள் ரிந்துள்இருந்துள் * ந்தம் கேட்டது.
”)。 ஒருங்காந்திட்டுப்போங்கே
| iii விட்டுக்குள்போ ட்டுக்குள் பழந்துப்போதுபர் பாளிடமிருந்து ரிச்சர்ந்த எச்சுத்தான் பெவிப்பட்டது.
njri i II i கொண்டுஒழுங்ாஇருங்கோ-நோவல்ததன் கதைச் இசை இருக்கிறார்களுக்குஇடஞ்சள் குடும்பாதயங்கே
இலைப்பிள்ா அந்நாள்தேர்ாப்போப்-பத்தியாருக்கு ஒரு துே நன்ாய் காந்து விட்டேன்ே என்ற தேர்ந்து ஆா தொடவிடாள்தி பதித்தாள்.'
। இதெல்பத்தையும் ாழ்ப்பாணத்தி விட் ட்ரி பந்திட்டப்ாள் நிகிச் கோள்ளுங்ாே நாளைக்குழட்டுப்புப்ார்டுடங்கள் பிடிச்சிக் கொண்டுபோவாங்கள்ாண்டாப்பாக்குப்கேட்டுக்கும்பே ாங்களுக்குநேரமில்லை சொல்பேட்டன்ாதுர்த்திகள் மிகவும் உறுதியாக இருந்தன.
பாப்டர்திக்பிரவ பிடித்துப்பேய் திாபி உட்ாந்தர் தன் விட்டுபிட்டுவந்தது தனது எட்டயும் ந்ேதையும் ட்டுள்
ਜਨੀ
பறந்தது. ஆயினும் அபேவிய பெள்ளியாகிவிட்ச் மூன்று நாட்களுக்கு பிறகு ஒருநாள் பின்நேயப் । ।।।। அறயில் இருந்தபடி:ேபளிங்திருக்குர்தது.இயறுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார் கொழும்புவர்கள் ஒரு
।ni பன்மட்டும்தான் இந்தடத்தைவிளங்கிக்கொள்ளக்கபுய ஆள் என்று அவருக்கு தெரியும் பயனுடன் பட்டுதான் பணம் பிட்டுப் °)。山、 ஒன்ரிப்போயிருந்த-வருடய புள்ள் நன்னன்ப்பர்ரியாத அடிபடுவது கேடுதிரெதிர்புருக்குந்த பருபன் நாள் பாடம் செபிக்கொன்டிருந்தான்
உங்க ைஅப்பா முன்பிட்டு ரிவர்படுதோன் தோ நோபிள்பது கதைநைசிருக்கிறார்போப்
ਨ। "இங்டர்"டப்படமாா-பாஸ்புதோன் அவங்கான தூக்கிப்
॥ *、。)、
"ாநஆம் நீண்டவடே'
பிநிறைய ஆட்கள் நின்ைடா டான்வனின் இந்தப்ளின்டபிர்க்கதைகதைக்குது.
SLLLTT TTTTTuT u uu uTS S uSuS S SL TT TS TS uuuS L LL LLLLLL
i
G8)
Page 51
G辛77萤回
"இஞ்ர்டபின்போதை விட்டு நிடைப்பா பாயச்சங்கொண்டுப்ா இருக்ார்செஸ்டிங்கே
EJICH 78,7 பண்புப்பா முந்தார்ப்பு க்ரின் பார்த்துகள் பந்திாரின் துகளில் விழுந்தபோது பருக்குட்டில் இன்னொரு புல் க்ரிப் போயிறதென்று புரிந்து புதர்குரிந்து அால் பரந்ததோட முடியவில் போன்யமுடித்துவிட்டு கட்டவில்ார்ந்து கொண்டார் இனிபோருடனும் எதுவும் போவதில்ான்று தனக்குள் முடிவுசெய்துகொங் ர்
in thill
ந்த விட் துறந்து till TTE -ni 、 、 கொள் ஞாயிறு
** படம் வந்திருந்தப் பள்-யர்கள் பற்று ராடி பெண்டிருந்தார் பத்தர் பத்திரிகள் மூழ்கியிருந்தார் எந்திருந்து பெரி பேசிக்ர்ேந்ார்ப்பாாே" என்றுாத்திார்ட்டிக்கட் கேட் என் "எள்ாந்தப்
நிர ஸ்ரீந்திர்கொண்டாள் மகள் தள்ளப்பர்ரிக்கேட்டதற்கு Figura ப்ேபா படித்துவிட்டு அர்கள்ப் பார்த்தும் புன்னாற்றாந்தியர்களின் ஒற்றையான பதிப்புள் ஆள் பர்களுக்கு திமுகப்படுத்த விருப்பப்ா என்ற புரிந்து கொண்டு பர்ம் பேப் பிரித்துப் பக்கத் தொ நீரினர் "எப்பொழுதுபோகுதே." என்று பந்தப்பென்நேரடியாகக் ாந்திரி கேட்டாள்
முந்தை ாேள் பத்தியர் ரத்தில்ாள் இல்பான்று போன்னாள் 一、 *@( ாள்ாளித்துவிட்டாள்ளபேட என்ன ஒரு பாதிரிார்பன் கொழும்பி 晶、 Rւնու, |mili ார்ானத்துக்கு திரும்பி
| iii
இதற்கு பதில் ம்ோள் இருப்பதுதான் நல்லது என்று பட்டது எாந்தியாருக்கு ஒருவர் ருக்கு பீப நம்பியதற்கு நிறர் ாளங்கள் இருக்காம் என்பது பாத்தியாள் துபவம்ான்ன இருந்தாவான்வளவுதான்றாடம் என்றும் அங்கே அவர்ாருக்கு ஒரு பாய் இருந்து ஆயர்களது இருப்புக்கு அர்த்தருக்கிற டாம் பாத்திார்பெதுமாபெருமூர்ாவிட்டர் அப்பாவுக்குக்ாகத்தான்பனப்போபினேகிதிடி கேட்டப் சிந்த இது பெருமூர் பு-ப் பயனித்துக் ர்ேடு,
ஆங்ா போய் என்ன செய்யிது ஒரு பந்தம் கிருத்தம் ான் எடர்ன் ஆர்இயளைப்பார்க்கிய ஒழுங்ான ஆபத்திரி மருந்து இல் அவாந்தும் ஒரு பாப் இல் இருந்தாக்ார்முறைவேற அதும்ரும்பாதிரிாட்ஆர்ட் பள்ளிஇடிக்கு முடியேப்படாதா பா விரும்பின்ப்ட ஆனால்ாேனம்தான் தெரியும் அங்கத்ாதங்கள் பாபோ 凸_f அப்பாக்குபதியாபேதிக்கொள்ாள் பாதுதிலும் ஒரு வித யேம் இருப்பது காந்தியக்கு பிங்கியது எாள் கர்நாட்டகத்தில் நாங்கள் பெறும் காட்சிப்பொருட்கள் ால் இந்த உந்தில் சமமான சுதந்திபா அந்தஸ்துள்ாபர் ாமங்காய்கபந்துகொங்கமுடியாதப் பேசும்போதும்
ஆாப்ட் - إريك قالبلدية
பத்துப்பதிவந்து நடயயோசித்து துருக்குப்பிக்கு இது இருக்குப்பிடிக்கும் என்று காக்குப் போட்டுப் பேகவது நோயில்ாத போபித்தனமான பழமும் பாது தாவது நினைத்து விடுவர்களோ என்றார்ாத்துடனேயோபது ார்யாம்பூங்குரிந்தன்ே இருக்ரிரடிப்புக்ாந்து வாழ்க்கப்படாந்தியாக்கு இந்நடத்துடன் ஒத்துப்
த்தன் முடி לזום ווח" பங்கியத்திடம் இன்த ஒருள் வர் சொன்னார் அன்று ஒரு ானிக்கிழப்ப பரும் பாதுப் பிள்ளைகளும் ட்ேேய நின்றார்ள்ட்டிப்போம்ந்தால் பதிபடப்புக்குழிே ாப்பதாக எர்பர் முடி மட்டியின்றார்ார் ப்பாடு uYKJLSTTTTu TTTTTTTT S uSuSuuSuuTTTTuu YSSTTTTS TT TTTTTTTTTTTTLSL சப்பா லிக்கிராளி பாப் சாப்டூர் என்பது | ||Taun பந்தபிட்ட ார்களோன்று பாக்கு ।
Liflı ப்ருபமுட்டப் LI TALJI TGI, சொன்னார்ந்த ாந்தியார் தடுத்தார் பாக்கியம் டியர்ாங்ா பப்பிட்டு ni Ang nauhin ந்தோத்துக்கோ தவிக்கோ திள் எங்க ைசந்தோத்துக்காகவும் இல் அபின் STSTT SKYYSL STSSSSTTTKMMHS uTYSSYYYTS SSHHH HHSTTHHTu uS
॥1॥ । li
। -யின் தேடித்தாங்கள் பிெர்க் ஆா〔 ார் புரி சார்டு, பிரதர்சிடும்.
ாந்தியார் சொன்னது பாக்யத்துக்கு நொ முட்டந்து ஆயிரம் யார்ந்தர் பார் 1 ன் என்று அறிந்து ( - TFs ாள் ஆவார்பதுபோக்கு தினகிரி ஆர்ாட்டப் பாப்கட்டது. பாப்பீடு பிங்-பாபுக்கு ாப்பாடுகொடுங்குப்பா கொள்ளபோது பாக்யம் இல்
பப்பிடுவர் என்று பிாய்ப்பார்த்தார் | iii குடுங்கோவன் ஒன்று - ਨਾ து இவருக்கு ஒரு கரிபிப்து புத்தசொல் கேள்வந்துவிட்டது எனிக்கிபளிப் சப்பார்ப்ாப்பிடுவதில் என்பது பந்து போர் எந்துக் கரியும் தயார் கோப்பிட்டுவிட் தள் நர தாய் தோடு கோக த்ெதது வேண்டுள்ெறே ஆள்மிடம் பெரியல் இந்து தாய் தன்னர் பரிங்கியிருக்கி என்று வருக்கு ந்திரம் பெரியது சாப்பிட் கப் தரிபிட்டு பூந்தள் ார்பாக்குப் பார்த்தனம் கட்டுது. நாள் பக்கங்கள் ஒரும்பாய்சிங்க்ாம்ாள்ளவாம். நன்ான்ன் செய்யிரள் என்பாங்போ இந்திக்கிள்ஸ்" பக்மியம்தோடொயெடுத்தாள். ஆனால் பாரின் ஆத்திரம் பே அறுபதிக்பி சார் யூரியிட்டு மகள் தோற்ா செய்ய தயார் பாய் தொடர்ந்து ஏரி கோர்டே இருந்தது மருமகனும் பிள்ாரும் பெளளமாக
(iii கென்டிருந்தபோதுதொத்தார்த்தைகள் பக்கித்துக்கும் நன்றாகட்டு து வருந்திருப்பி தினர் இந்துவிட்டிஎேங் ைகாற்றம் பப்பட்டங்கும். ன்ாட்டிவை உளக்கு ஒருபாந்கொள்ேேன்ாடக்கு அப்பாக்குங்குமெண்டு நாள் ஒரு நிசெய்துக்கு எந்தின் தொங்கு தொங்கி இரு நானொவியல் மற்றுங்
if
Page 52
67*gg
தங்களுக்கு தங்களுக்கு பிடிச்ச சமையல் எண்டு வெளிக்கிட்டால் நல்லாத்தான் இருக்கும் எண்டுகத்தினனி. அதுதான் உன்னோடை நான் ஒண்டும் கதைக்கிறேல்லை’கொஞ்சம்திடுக்கிட்டவளாய் மகள் தாயைத் திரும்பிப் பார்த்தாள். "ஓஹோ ?. நீஎனது அம்மாவா? அல்லது போட்டிபோடுகிறயாரியா? என்பது போன்ற பார்வை. பாக்கியம் தொடர்ந்து கத்தினாள். ‘உன்ரை குசினி, உண்ரை சமையல் சாப்பாடு. நாங்கள் இஞ்சை தெண்டத்துக்கு இருக்கிறநாங்கள் கதைக்கேலுமே. அவளுக்கு அழுகை பிரிக் கொண்டுவந்தது. வாத்தியார் தான் அவளை வாயை மூடும் படி உத்தரவிட்டு அடக்கினார். மகளிடம் தான் விரதமிருக்க யோசிச் சதாக சொன்னார். மகள் தொடர்ந்து ஏசிக் கொண்டே இருந்தாள். ‘நான் ஏன் தேவையில்லாமல் இரண்டு மூண்டுகறிஎண்டு யோசிச்சால். இவைக்கு இப்பிடிப் போகுது புத்தி. உங்களுக்கு பிடிக்காட்டி பிடிச்ச பிள்ளைகளோடை போய் இருங்கோ. நானொண்டும் இழுத்துப் பிடிக்ககேல்லை. போனால் தான்
உங்களுக்கு அருமை விளங்கும்.
‘அப்ப நாங்கள் போயிட்டு வாறம், மகளின் சினேகிதி கூறி விடை பெற்றபோது திடுக்கிட்டு இந்த உலகுக்கு வந்த வாத்தியார் எழுந்து நின்று சிரித்தபடி விடைகொடுத்து அனுப்பினார். அவர்கள் போன பிறகு
ஹோலில் இருந்த பொருட்களை சரிசெய்து ஒழுங்குபடுத்தியபடியே மகள் சொன்னாள். ‘அப்பா இப்பிடி ஆரும் விளிற்றெவம் வந்து கதைச்சால், நான் உங்களை அறிமுகப்படுத்திவைக்காட்டி மெல்லம எழும்பி உள்ளே போங்க என்ன? அவையளின்ரை தேவையில்லாத
கதையளை தவிர்க்கலாம்தானே.
அவளுக்கு இந்த விடயத்தை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிச் சொல்கிறாள் என்ற போதும் சொல்கிற விதம் தன்னைப் பாதிக்கக்கூடாதுஎன்பதுதான் அவளது தடுமாற்றத்துக்கு காரணமே ஒழிய முடிவில் அல்ல என்பது வாத்தியாருக்கு புரிந்தது. அந்த உலகில் தங்களுக்கு எந்த இடமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்து போயிற்று. வாத்தியார் எழுந்து உள்ளே போனார். ஹோலுக்குள் இனிப்போவதில்லை. முடிந்தளவுக்கு அதை தவிர்த்துக்கொள்வது என்று முடிவுசெய்தார். அவரது முடிவுக்கு ஏற்றதுபோல்திடீரென்று அவருக்கு இயலாமலும்போய்விட்டது. இந்தச் சம்பவத்துக்குப்பிறகு அவர் ஹோல் பக்கம் போகவே இல்லை. வல்லிபுரம் மாஸ்டரின் மகனோடுகதைக்கப்போன அந்தநாள் வரை.
() () () மாடிப்படியில் மகளின் அறையை நோக்கி நடந்த பாக்கியத்திற்கு மீண்டும் தயக்கமாக இருந்தது. விடியும்வரை பேசாமல் இருந்துவிட்டு காலையில் மகளிடம் சொல்லுவோமா என்று யோசித்து மாடிப்படிகளில் நின்றாள். இந்த இரவில் பிள்ளைகள் எழுந்து கத்திஊன்ரக் கூட்டி. இதெல்லாவற்றையும் அவர்கள் எப்படி யோசிப்பார்களோ . பாக்கியத்திற்கு ஒருபுறம் இப்படி யோசினை ஒடினாலும் மறுபுறம். அங்கே செத்துக்கிடப்பது யார்?நாற்பத்தைந்து வருஷமாக ஒன்றாக வாழ்ந்த புருசன். இவளைப் பெத்து வளர்த்த அப்பா,அதை எப்படி நான்சொல்லாமல் இருப்பது. என்றசிந்தனையும் ஓடியது. மனதை சுதாகரித்துக் கொண்டு கதவைத் தட்டினாள் பாக்கியம் இரண்டு மூன்று முறைதட்டலுக்குப்பிறகு'ஆர் அம்மாவே' என்றபடி கதவை திறந்தாள் மகள். மகளை கண்டதும் அதுவரை அடக்கி வைத்திருந்த அவளது துயரம் எல்லாம் பீறிட்டுப்பாய அப்பாவை ஒருக்கால்போய்ப் பார்பிள்ளை அவள் கிட்டத்தட்ட அலறியே விட்டாள். தடதடவென படிகளில் இறங்கி ஓடிய மகள் அறைக்குள் "ஐயோ அப்பா. அப்பா’ என்று கத்தும் குரல் பலமாக கேட்க பாக்கியம்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
தி)கத்துப் போய் நின்றாள். அவளுக்கு இந்த உலகத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
திக்பிரமை பிடித்தவளாக வாத்தி \ பாரின் கட்டில் அருகே வந்து உட்கார்ந்தாள். அவள் கண் முன்னால் அன்றைய இரவைய டுத்து நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் ஒரு கனவு போலவும்,நம்பமுடியாத்
நிகழ்ச்சிகள் போலவும் தெரிந்தன. அந்த நட்டநடு இரவிலேயே மரும கன் வெளியே. போய் வாத்ததிய்ாரது அலுவலர் க ைள , பார்த்ததை அவள் ஒ ரு வ ை க அதரிச யதி துட ன விளங்கிக் கொள்ள முனை நீ தாள் பிள்ளைகள் வந்து தன்னைக் கட்டிப் பிடித்து கதறி அழுதபோது இந்த உல்கம் இத்தனை - - - - - நாட்களாக எங்கேஒழிந்து போயிருந்தது என்ற கேள்வி அவளுள் எழுத்துக் கொண்டே இருந்தது. அவளுக்கு அழுகை வரவில்லை. வiய்திறந்து பேசமுடியவில்லை. வாத்தியாரின் மறைவில் இவர்கள் இவ்வளவுபேரும் திடீரென்றுவந்து செயற்படும்வேகமும்-அக்கறையும் அவளுக்கு இவர்களெல்லோ ருக்கும் இது ஒரு செளகரியத்தை திருப்தியை தருகிற ஒரு சம்பவமாக போய் விட்டதோ என்று தோன்றியது. அப்பாவும் போன பிறகு அம்மாளை யார் பார்த்துக் கொள்வது என்ற பேச்சு அவளது பிள்ளைகளிடையே அடிபடுவதை அவதானிக்க அவளுக்கு ஒரு வகையான அருவருப்பு உணர்வு bற்படுவதை தவிர்க்க முடியவில்லை. தன்னுடைய எதிர்காலத்தின்
அர்த்தம் என்ன? தான் என்ன செய்வற்காக இனி வாழப்போகிறேன்? எனக்கென்றான ஒரு வாழ்க்கை என்றால் அது என்ன. பிறருடைய வாழ்வின் ஒரு அங்கமாக பெரும்பாலும் ஒரு வேண்டாத அங்கமாக நான் இணைந்துகொள்ளப்போகிறேனா?. பாக்கியத்துக்குதனது உணர்வுகளை பகிர்ந்துகொள்ள இருந்த ஒரே உறவும் போய் விட்டதன் கொடுமை இப்போது மிகவும் ஆழமாக உறுத்தியது. κ. ................................................سیر ........ அப்பாவின் கடமையை முடிந்துவிட்டுவந்த பிள்ளைகள் அம்மாவை தேற்றினார்கள். கவலைப்பட வேண்டாம்,சொன்னார்கள். ‘அம்மா என்னோடை வந்து இரன் கொஞ்ச நாளைக்கு என்று கேட்டார்கள்: பாக்கியம்மெளனமாக இருந்தாள். யாருக்கும் எதுவும் சொல்ல அவள் விரும்பவில்லை. எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளட்டும். சுமையாக மாறிவிட்டபின், யாரால் சுமக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கிற உரிமை மட்டும் அவளுக்கு எப்படி இருக்க முடியும்? யாரால் என்பது போகட்டும், சுமக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு உள்ள உரிமைதான் சுமைக்கு இருக்க முடியுமா?
பாக்கியம் மெளனமானாள். . Ο
-GSO
Page 53
7ே72gடு
ஆங்கிலத்தில் ஆக்க இலக்கியங்களை அடையாளம் ச அறிவுத்துறை சார்ந்த பணியாகும். ஆனால் ஈழத்தமிழர் இருக்கின்றது. ஆங்கிலத்தில் ஆக்க இலக்கிய மரபு பற்றிச் சிந்திக்க *வெண்கலக் குரலோன்’ எனப் பெயர்பெற்ற ஆங்கிலப் டே அல்லது ஆபிரிக்க நாடுகளைப் போல காலனித்துவ முன் இலக்கிய மரபை வளர்த்தெடுப்பது பற்றிச் சிந்தித்ததை அவதானிக்க முடியவில்லை. ஏனெனில் காலனித்துவத் மட்டுப்பாடுகளைக் கொண்டதாக இருந்திருக்கிறது. அத அரசியல் மற்றும் புலமைத்துவ மரபிலும் இனங்கானழு
சுதநீ திர தி திறி குப் பின்னான காலகட் , قتداء، چی په டத்தில் ஈழத்தமிழர் 2swaan ک சமூகத்தை பிரதிநிதித் .
து வ பர் படு த தய arouwlrte
அரசியல்வாதிகளும்,
றிஞர்களும் கால ܗܶܪ a rab S. සූදුසූ *** න් 20^ෙව් பதிலாக தங்கள் P— %ur? --Zara161
சமூகதீத வர்களை ஆளுவதறி கான . அதரி காரத ைத ப் பெறுவ தறி கான சா த ன மா க வே மொழிக் கொள்கையைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். தளை நீக்குவது அவர்களது நோக்கமாக இருக்கவில்ை Education' காலனித்துவ கட்டமைப்பைத் தெளிவா ‘எங்களிடமுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் மக்க சாத்தியமாகக் கூடியதல்ல. தற்போதைக்கு எங்களால் இ
கோடிக் கணக்கான மக்களுக்குட நிறத்தில் இரத்தத்தில் இந் சிந்தனையில் ஆங்கிலே
உருவாக்கினோம்.”
மேற்கூறிய கூற்று ஈழத்த உள்ளது. அதேவேளை ஈழத்தமிழர் சமூகத்தின் எத்தனங்களின் முக்கியத் உள்ளது. ஈழத்தமிழர்
மேற்கொள்ளப்பட்ட 6
உலகை எதி
காலனித்துவ இருந்து வரு
பொதுநலவாய அவர்களுடன உரையாடல் சுதந்திரம் பெற் எங்களது எதி
மொழிக் கொள்
*1975ம் ஆன பதவியேற்றை
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
ாணுவதும், அவற்றை ஒரு மரபாக நிலைநிறுத்துவதும் களது இலக்கிய மரபில் இது கவனிக்கப்படாத பகுதியாகி
முற்பட்டபோது ஒரு முரணணியை உணர முடிந்தது. ச்சாளர்கள் கட்டியாண்ட சமூகத்தில், இந்தியாவைப் போல றைமைகளுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையாக ஆக்க யோ, விழிப்புணர்வு கொண்டு செயற்பட்டிருந்ததையோ திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்ட அனுபவம் ன் தாக்கத்தை சுதந்திரத்திற்குப் பின்னான ஈழத்தமிழர்களது டிகின்றது.
خصات صیفaسی متع نمود یک رخ
- சி.ஜெயசங்கர்
மக்களுடைய மனங்களை காலனித்துவ பிடிப்பில் இருந்து dou. Gstupor, LoiositGoulflgol60Lu Minute on Indian ாக வெளிப்படுத்துகின்றது. அதில் கூறப்பட்டிருப்பதாக, கள் எல்லோருக்கும் கல்வியறிவை ஏற்படுத்த முனைவது இயன்ற அளவுக்கு எங்களுக்கும், எங்களால் ஆளப்படும் ம் இடையே இடைத்தரகர்களாக வியாக்கியானிப்பவர்களாக, தியர்களாகவும் ரசனையில் எண்ணத்தில் ஒழுக்கத்தில் யர்களாகவும் இருக்கக்கூடிய ஒரு வர்க்கத்தினரை
மிழர் சமூகத்தின் உயர்குழாத்தினருக்கும் பொருந்துவதாக ா தேசிய இளைஞர் கொங்கிரஸ் போன்ற இயக்கங்கள் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மேற்கொண்ட துவத்தையும் வரலாற்றில் அடையாளம் காணக் கூடியதாக சமூகத்தின் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ாத்தனங்கள் பலமானவையாக இல்லாது போயினும், இலங்கை அது இடர்பாடுகளை எதிர்கொண்டிருந்ததாலும், சமகால ர்கொள்வதில் மட்டுப்பாடுகளை எதிர்கொண்டிருந்ததாலும், த்ததிற்கு எதிராக இயங்கும் வலுவைக் கொண்டதாகவே
ருகிறது.
ப அமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகம் சிறிதத்றம்பால் ான பிரம மந்திரி பூணுரீமாவோ பண்டார நாயக்காவின் ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறது. அதாவது ற காலகட்டத்தில் இருந்து சுதந்திர தேசம் என்ற வகையில் ர்காலத்தை எதிர்கொள்ளத்தக்க வகையிலான பொருத்தமான 1ளை எங்களிடம் இருக்கவில்லை என்பதே அந்த உண்மை.
ண்டு பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயமாக
த அடுத்து பிரதம மந்திரி பூஞரீமாவோ பண்டார நாயக்கா
Cs
Page 54
وناجي72-7ة تحG அவர்களைக் கொழும்பில் சந்தித்தேன். பொது நலவாய செயலகம் எந்தெந்த வழிகளில் பூனிலங்காவுக்கு உதவலாப்
எண் பது பற்றி பேசினோமீ. உட்னடியானதும் குறிப்பானதுமான அவரது கோரிக்கை ‘ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிப்பதற்கான ஆசிரியர்களை பயிற்றுவிப்பவர்களை எங்களுக்கு அனுப்புங்கள்’ என்பதாகவே இருந்தது.
எனது ஆச்சரியத்தை புரிந்து கொண்ட அவர், 20 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரால் சிங்கள மொழியை வளர்த்தெடுப்பதற்தாக முன்வைக்கப்பட்ட கொள்கைகளை விளக்கி, கொள்கைகள் பெற்ற வெற்றியையும் அதேவேளை இந்நடைமுறையில் ஆங்கிலம் பேசும் உலகில் முத்தாக ஆசியாவில் விளங்கிய பூனிலங்கா ஆங்கிலத்தை இழந்து போனமையையும் பெரும்பர்லான உயர்கல்வி கற்றவர்களிடம் தவிர மற்றவர்களிடம் இரண்டாவது மொழியாகக் கூட ஆங்கிலம் இல்லாது போனமையையும் குறிப்பிட்டார். அபிவிருத்தியே அவரது நோக்கமாக இருந்தது. வயலில் வேலை செய்யும் கமக்காரர் இறக்குமதி செய்யப்படும் உரப்பொதிகளில் காணப்படும் விளக்கங்களை வாசிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். உலகச் சந்தையிலுள்ள உற்பத்தியாளர்கள் சிங்களத்தில் அவற்றை பிரசுரிக்கவும் தயாராக இல்லை. இலங்கை, உலக மொழியாகிய ஆங்கிலத்தின் பலாபலன்களை இழந்து போனது என்று அவர் சொன்னார். அவரது கோரிக்கைகளை ஏற்று உதவியளித்தோம். இலங்கையில் இன்று ஆங்கிலம் இரண்டாவது மொழியாக முன்பை விடவும் சிறப்பாக இயங்குகின்றது என்று நான் நம்புகின்றேன். சமூகவியல் மொழியியலாளரான டேவிற் கிறிஸ்ரல் என்பவர் மேற்படி a soul soa5 isogi 'English as a Global Language' (பக் 102) என்ற புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். காலனித்துவத்தால் கட்டமைக்கப்பட்ட அரசும், கல்வி முறைமையும் சுதேசிய மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதான விளைவுகைைள ஒரு போதும் தரமாட்டாது. ஆங்கிலத்தில் ஆக்க இலக்கியத்தை ஒரு மரபாக அடையாளங் காணுவதில் எதிர்கொள்ளப்படும் இடர்பாடுகளை இதிலிருந்து மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும்.
சி.வி.வேலுப்பிள்ளை, அழகுசுப்பிரமணியம் முதல்
இன்றைய அ.சாந்தன் முதலானோர் -வரையில். ஆங்கிலத்தில் ஆக்க இலக்கியம் படைக்கப்படுகின்ற போதும் அதன் தொடர்ச்சி பேணப்படவில்லை. ஆனால் புத்திஜீவிகள் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள், எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் பல்கலைக்கழக கல்வி முறைமையில் புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் சர்வதேச சஞ்சிகைகளில் ஆங்கிலத்தில் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் அவர்கள் படைப்பாக்க முயற்சிகளில் கவனம் செலுத்துவதாகவோ அல்லது ஈடுபடுவதாகவோ காண முடிவதில்லை. ஏனெனிறால் அதீத கைய படைப்பாக்க முயற்சிகள் எதற்கும் புள்ளிகள் வழங்கும் திட்டம் எதுவும் அங்கு இல்லை. இதற்குப் பின்னால்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
உள் ள காரணமி மிக வு மீ எளிமையானது. கல்வித்திட்டத்தில் படைப்பாற்றலுக்கு சூழல் சார்ந்த சிந்தனைக்கு இடமில்லை. அதுதான் காலனித்துவக் 356,ooi (p60p60.dlso for 9/gélusi. Masks of Condest என்ற கெளி விஸ்வநாதனின் நூல் இந்தியாவில் ஆங்கிலக் கற்கைகளின் தோற்றம், அதன் கொள்கை பற்றிக் கூறுகிறது. அதில் ஆங்கில இலக்கியம் இங்கிலாந்திற்கு அறிமுகமாகுமி மு னினரே இநீ தியாவிலி அறிமுகப் படுத்தப் பட்ட தனி காரணங்கள் விவாதிக்கப்படுகின்றது.
ஆங்கில இலக்கியத்தை பயிலும் இந்தியர்கள், ஐரோப்பியர்கள் மனிதாயுதப் பண்பையும் கிறிஸ்தவ மரபையும் கொணி ட இ லகி கசியங் களை யுமி கொண்டிருப்பவர்கள், இது இந்திய இலக்கியங்கள் எல்லாவற்றிலும் மேலானது என்ற எண்ணம் கொள்வர் என்பதே நோக்கமாகுமி. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இலக்கிய கற்கை என்பது மிகவும் உனி னதமான காலனித் துவக் கட்டமைப்பை வடிவமைக்கின்றது. இது பிரித்தானிய நாகரிகமயமாக்கும் பயணத்தை ஏற்றுக்கொள்ளவைக்கிறது, புளகாங்கித மடையச் செய்கிறது. இத்தகையதொரு காலனித்துவ மயக்கத்துள்ளேயே நாங்கள் இயங்குன்றோம். இதன் நீட்டமாக அமெரிக்க மயமாக்கத்துள் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். காலனித்துவதி தினதும் நவகாலனித்துவத்தினதும் மிகவும் வலுவான ஆயுதமாகக் கல்வி விளங்குகின்றது. சமூகத்தைக் கட்டுப்படுத்தும் மிகவும் வலிமைமிக்க சாதனமாகக் கல்வி விளங்குகின்றது. பூgரீலங்கா ஐம்பது வருடங்களுக்கு முன்பு சுதந்திரம் பெற்றுக் கொண்டாலும், பிரித்தானியக் கல்வி முறைமையின் விழுமியங்களும் வடிவங்களும் மாறாமல் தொடர்ந்தும் இருந்து வருகின்றன.
அந்தோனியோ கிராம்ஸ்கியின் நோக்கில் கல்வி என்பது விரும்பியேற்கும் ஆதிக்கம். இந்த விருப்பத்துடனான ஆதிக்கம் காலனிய மயப்பட்டவர்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கின்றது என்பதினூடாக எய்தப்படுகின்றது. இந்த விரும்பி ஆதிக்கம், காலனித்துவபடுத்தபட்டவர்களுக்கு என்ன கற்பிக்கப்படுகின்றது. எப்படிக் கற்பிக்கப்படுகிறது. ஏகாதிபத்தியத்தின் கருவியாகிய ஆங்கில இலக்கியத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம், அதாவது நிர்வாக சேவையிலும் நீதித்துறையிலும் உள்வாங்கப்படுவதற்கு அது
கல்வி என்பது இன்னொரு வகையான பிரதேச ஆக்கிரமிப்பே ஆகும். காலனித்துவ சக்திகளின் அத்திவாரமாக இது விளங்குகின்றது. சட்டபூர்வ மற்றும் நிர்வாக அலகுகளுக்கு ஊடாக ஆதிக் கதி தை நிலைநாட்டிக் கொள் கரிறது. இப் பொழுது இலக்கியத்திற்கான ஆங்கிலம் என்பதில் இருந்து வர்த்தகத்திற்கான ஆங்கிலம் என்பதாக முக்கித்துவம் இடம்மாறி இருக்கிறது. இந்த மாற்றமே ஆங்கிலம் இல்லையேல் எதிர்காலம் இல்லை என்ற சுலோக உச்சாடனத்திற்கும் இட்டு வந்திருக்கிறது. ஆகையால் ஈழத்தமிழர்களுக்கான ஆங்கிலத்தை இலக்கிய மரபுகளை அடையாளம் காணுவதும் நிலை நிறுத்துவதுமான
-G52)
Page 55
وناجي72-7ة محG
செய்முறையானது ஈழத்தமிழர்களது எண்ணங்களை அல்லது மனங்களை காலனித்துவ தளைகளில் இருந்து விடுவிப்பதற்கான ஒரு அங்கமாகவே காணப்படுகிறது. முல்க்ராஜ்ஆனந்த் சொல்லியது போல, ‘ஒருவருடைய தாய்மொழியின் எதிரொலிகளுக்கு உண்மையாக இருப்பதற்கும் ஆங்கிலத் தாய்மார்களது மடியில் பிறக்காத மக்களது நரம்புகளில் அதிரும் கற்பனா பூர்வமான தொடர் பாடலுக்கும் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.’ (புரண்ட்னலன்: ஜனவரி 12, 1996) தமிழில் திரிசங்கு சொர்க்கம் பற்றிய ஐதீகம் ஒன்று உண்டு. சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையில் காணப்படும் உலகம் இது. திரிசங்கு பச்சை உடம்புடன் சொர்க்கத்திற்கு போக விளைகின்றான். ஆனால் சொர்க்கம் அவனை அவ்வாறு ஏற்க மறுக்கின்றது. திரிசங்கோ பூமிக்கு திரும்ப விரும்புகிறானில்லை. சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையில் அமைந்த அவனுடைய உலகில் இருக்கத் தொடங்குகிறான். இதுதான் திரிசங்கு சொர்க்கம் என் று அழைக்கப்படுகிறது. இத்தகைய உலக வாழ்வு உருவாக்கும் மனநிலை வித்தியாசமானது. அது சுதேசிய ஒழுங்குகளை ஏற்றுக்கொள்ளாது. அதேவேளை காலனித்துவம் நிர்ணயித்துள்ள ஒழுங்குகளை எய்துவதும் நடைமுறைச் சாத்தியமானதாக இருக்காது. இது போலியான ஒரு பாவனை செய்யும் உலகமாகவே காணப்படும் காலனித்துவ ஒழுங்குகளின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக, அதனால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கும். இதன் கல்வி முறைமை மனதில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தும். இந்த அச்ச உணர்வு படைப்பாற்றல் செயற்பாட்டில் ஈடுபடுதற்கு மனத்தடையாக அமைந்து விடுகின்றது.
ஆங்கில இலக்கியத்தில் சிறந்த புலமையும் ஆங்கிலத்தில் ஆக்க இலக்கியத்தைப் படைப்பவர்களுடனும் தமிழிலும் ஆக்க இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டு இருப்பவர்களுடனுமி நாணி மேற் கொண ட கலந்துரையாடல்களில் ஒரு விடயத்தை அவதானிக்க முடிந்தது. அதாவது சில முயற்சிகளுக்குப் பின்பு அவர்கள் ஆங்கிலத்தில் ஆக்க இலக்கிய முயற்சிகளில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அச்ச உணர்வும் அங்கீகாரம் இண்மையுமே இதற்குக் காரணமாகி இருக்கின்றது. நுகுகியின் Decolonizing th mind என்ற நூலில் அவர் கீழ்க்கண்டவாறு குப்ெபிடுகின்றார், எனது நோக்கில் ஆத்மாவை ஃறைப்படுத்துவதில் மொழி மிக முக்கியமான ஊடகமாக தொழிற்படுகின்றது. உடலை அழிக்கும் கருவியாக சன்னம் தொழிற்படுகின்றது. ஆத்மாவை அழிக்கும் கருவியாக மொழி தொழிற்படுகின்றது. (பக் 109)
படைப்பாற்றலுக்கான கற்பனையுடன் ஆக்கத்திறன் மிகுந்த உலகில் நாம் வாழவேண்டுமானால் எங்களது சமூகப் பன்ைபாட்டு பின்புலத்தால் தீர்மானிக்கப்படும் மரபுகளை அடையாளம் காணுவதும் நிலை நிறுத்துவதும் அலசியமாகின்றது. இது அச்சத்தை நீக்கி மனத்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
தடைகளை தகர்த்து நவகாலனித்துவத்தின் சாவால்களை எதிர்கொள்ளும் படைப்பாற்றலுக்கான கற்பனை உடைய மக்களை வெளிக்கொண்டு வருகிறது.
ஈழத்தமிழர்களுடைய சமூக அரசியல் வரலாறும், ஆங்கிலத்தில் ஆக்க இலக்கிய மரபின் வரலாறும் வெளிப்படுத்துகின்ற விடயம் என்னவென்றால் ஆங்கிலத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது அதனை ஆக்கத்திறன் வெளிப்பாட்டிற்கான சாதனமாக இல்லாமல் வர்த்தகத்தில் தொடர்பு கொள் சாதனமாகப் பயன்படுத்துவதில் தங்கியிருக்கிறது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் கடைசி தசாப்தங்களின் தலைமுறையினரின் எண்ணங்களும் நோக்கங்களும் வித்தியாசமானவை. இவர்களும் தாய் மொழிக் கல்வியின் உருவாக்கங்களாயினும் விடுதலைப் போராட்ட அனுபவங்களும், புலம்பெயர் வாழ்வில் அனுவங்களும் புதிய பாதைகளை புதிய சிந்தனைகளை திறந்து விட்டிருக்கிறது.
படைப்பாற்றலுக்கான கற்பனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிந்திப்பது ஈழத்தமிழர்களது இன்றைய புலமைத்துவ மற்றும் படைப்பாற்றல் மரபின் மிக முக்கியமான அம்சமாகும் தங்களது அனுபவங்களையும், உணர்வுகளையும் ஆக்கத்திறன் மிக்க வழிமுறையினூடு வெளிப்படுத்த விரும்புகின்றனர். தங்களது படைப்பாற்றல்களை தங்களது புதிய சூழலில் புத்தாக்கங்களாக, மீளுருவாக்கங்களாக, மொழி பெயர்ப்புக்களாக வெளிப்படுத்துகின்றனர். புலம்பெயர் தமிழர்கள் தங்களது படைப்பாற்றலுக்கான கற்பனையை தாய்மொழியில் மட்டும் வெளிப்படுத்துகின்றார்களாக இருக்கவில்லை. புலம்பெயர் தேசத்து மொழிகளாலும் வெளிப்பாடுகளை நிகழ்த்துகிறார்கள். அவர்கள் புலம்பெயர் தேசத்து படைப்பாக்கங்களை நேரடியாகத் தமிழுக்கு கொணிடுவருவதிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆங்கிலச் சிறு சஞ்சிகையான Third Eye யினுடைய வருகையும் ஆங்கிலத்தில் படைப்பாக்க மரபு பற்றிய சிந்தனையும் மேற்கூறிய போக்கின் பகுதியாகவே கானப்படுகின்றது. மாறாக, ஆங்கில மூலக் கல்வியின் தலைமுறையினரது பங்களிப்பாக அது அமையவில்லை. Experiment and Controvercy in Jaffna English Theatre 676cino goodsufsi) Third Eye fir (p5ouT6 go இதழில் 1993ல் சுரேஸ் கனகராஜா எழுதிய கட்டுரை அதனைத் தெளிவு படுத்த உதவும், கடந்த சில வருடங்களாக ஆங்கில அரங்கு பரீட் சார்த்த மாற்றங்களுக்கு உட்பட்பட்டிருக்கிறது. இங்கு தொடராக மேடையேற்றப்பட்ட நாடகங்கள் (ஜேம்ஸ் தேபரின் *Ostrich gintort) *Accused” 1990h gb60iG gp56ita" 30ம் திகதி மேடையேற்றப்பட்டது. அபிஜித் சேகாரின் “Childs Play” 199lub S-2b6OởG 6O>GNO 19b fil-f556fJLih, 1 993 is ஆன டு யூனி 30 பறி தரிக தரியுமி மேடையேற்றப்பட்டது. அழகு சுப்ரமணியத்தின் சிறு s, GosuutGT * Protessional Mourners' A.J.
G53)
Page 56
بجي72-7ة تمتع
360TsuifaoTT626OTITsi Wake up my beloved 6T65ip பெயரில் 93ம் ஆண்டு, பெப்ரவரியிலும், யூன் 10ம் திகதியும் மேடையேற்றப்பட்டது) ஏற்றுக் கொள்ளப்படுவதில் முரண்பாடுகளையும் சந்திக்க நேர்ந்தது. இப்போக்கில் ஈடுபாடு கொண்டுள்ள பெரும்பாலான பாடசாலை மாணவர்களும் பல்கலைக் கழகதீ தயாரிப்பாளர்களும் சந்தர்ப்பவசமாக வீறுமிக்க தமிழ் நாடக அரங்கு மரபின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக இருந்தார்கள். ஈழத்தமிழர்களது தமிழ் நாடக அரங்கும் அடிப்படையில் பாடசாலை அரங்காக அல்லது கற்கை நெறி அரங்காகவே இருந்தது. இளைய தலைமுறையினரால் ஆங்கில அரங்க மரபையும் தமிழ் அரங்கு மரபையும் இணைக்கக் கூடியதாக இருந்தது. தமிழ் அரங்கு, இப்சன், செக்கோவ், மற்றும் பெக்கெற்றை ஆங்கிலம் வழியாக பெற்றுக் கொண்டதென்பது உண்மையாயினும், நிலமை இப்போது மாறிவிட்டது. ஆங்கில அரங்கு இப்போது உள்ளுர் கருக்களையும் சுதேசிய இசையையும், நடிப்பு மற்றும் நெறியாள்கைத் திறன்களையும் தமிழ் மரபில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. ஆக்கபூர்வமானதும் ஆர்வமூட்டக் கூடியதுமான புதிய பாய்ச்சல்கள் யாழ்ப்பான ஆங்கில அரங்கிற்கு உரியதாகி இருக்கின்றது. இதற்கு மாறாக ஆங்கில இலக்கியதி தில் புலமையாளர்களாக இருப்பவர்கள் தமிழ் மொழியுடனோ அல்லது தமிழ் இலக்கியத்துடனோ பரிச்சியம் அற்றவர்களாக இருப்பதையும் இவர்களது அனுபவப் பரப்பு மட்டுப்படுத்தப் பட்டதாகவுமே காணப்படுகின்றது. ஆனால் பிரெஞ்சிலோ, ஜேர்மனியிலோ நோர்வீஜியனிலோ எழுதுபவர்கள் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்கள் விடுதலைப் போராட்டத்தில் நேரடி அனுபம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். இவை காரணமாக அவர்களது தேவையும் நோக்கமும் வேறுப்பட்டதாக இருக்கின்றது. மரபு ரீதியான எணி னங்களாலி ஆதிக் கமீ செலுத்தப்படுகின்ற சமூகத்தில் புதுமையானது. உணிமையானது. இன்னொரு அர்த்தத்தில் புரட்சிகரமானது. நாங்கள் Third Eye பிரசுரிக்கத் தொடங்கியதுடன் ஆங்கிலத்தில் புத்தாக்கங்களின் மிளுருவாக்கங்கள், மொழிபெயர்ப்புகள், முன்னோடிப் படைப்பாளிகளின் அரிதான பிரசுரங்கள் என்பவற்றுக்கான தேடல்களும் ஆரம்பமாயின. இத்தேடலில் நாங்கள் ஆச்சரியமான அனுபவங்களை பெற்றுக் கொண்டோம். மிகவும் பிடிவாதமாக மீளவு மி எழுத மறுக் குமி எழுத்தாளர்களிடமிருந்தே கையெழுத்துப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டோம் மறுப்பின் அடிப்படைக் காரணம் விரக்தி. இப்போது ஈழத்தமிழர்களது ஆங்கிலத்தில் இலக்கிய மரபுகளை அடையாளம் காணும் நிலைநிறுத்தும் இயக்கத்திற்கு Third Eye உந்துவிசையைக் கொடுத்திருக்கிறது.
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
பேராசியர்கள் செ.கனகநாயம், சுரேஸ் கனகசாஜா, திரு.ஏ.ஜே.கனகரெத்தினா, திரு.எஸ்.ராஜசிங்கம், திரு.கே.சோமசுந்தரம் ஆகியோரது ஆதரவுடனும் அனுசரனையுடனும் தோற்றம் பெற்ற English Forum ஈழத்தமிழர்களது ஆங்கிலத்தில் இலக்கிய மரபுகளை அடையாளம் காணும், நிலைநிறுத்தும் முயற்ச்சிகளைத் தொடங்கி வைப்பதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் உந்துதலாக அமைந்திருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு தற்போது உலகின் பல்வேறு வாசல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்களது நோக்குகளுக்கு பொருத்தமானவற்றை தெரிந்தெடுக்கும் நிலையைப் பெற்றிருக்கிறார்கள். ஈழத்தமிழரது புலமைத்துவ மரபில் இது மிகப்பெரும் மாற்றமாகும். இந்தப் பின்னணியில் ஆங்கிலத்தில் ஆக்க இலக்கிய மரபுகளை அடையாளம் காணுவதும் , நிலை நிறுத்துவதும், ஏனைய மரபுகளுக்குச் சமாந்தரமாக வெகுசனத் தொடர்பூடகங்களால் கட்டமைக்கப் பட்டிருக்கின்ற நிலைமைகளுக்கு மாற்றான பார்வைகளை சர்வதேச சமூகத்தில் முன்வைக்கும் செயற்பாடாகவே அமைகிறது.
எனது கட்டுரையினை மகாத்மா காந்தியின் மேற்கோளுடன், நிறைவு செய்கிறேன். *எனது இல்லம் நான்கு பக்கங்களும் சுவரிடப்படுவதை, எனது ஜன்னல்கள் அடைக்கப் பட்டிருப்பதை நான் விரும்பவில்லை. எல்லாத் தேசங்களினதும் பண்பாடுகள் எனது இல்லத்தினுள் மிகவும் சுதந்திரமாக வீசிச்செல்வதை விரும்புகிறேன். ஆயினும் மற்றொரு அல்லது வேறொரு மனிதருடைய இல்லத்தில் தலையிடுபவராக பிச்சைக்காரராக அல்லது அடிமையாக இருப்பதை மறுக்கிறேன்.
உசாத்துணை நூல்கள்
1. Crystol, David (1997) English as a Global
Language.
2. Viswanathan, Gauri (1989) Masks of Conguest: Literary Study and British rule in India
3. Wa Thiango, Ngugi ( 1 ) Decoloniziing the
mind 4. Macaily Thomas ( ) Minute. On Indian
Education 5. Canagararajah, Sresh, Experimentand
Conrevercy Jaffna English Theatre,Third Eye, First Issuse, 1993
6. Anand, Mulk Raj Frontline, January 12, 1996.
O
-G54)
Page 57
67-72 (og
பெரும்பாலான எல்லா இலக்கியச் சர்ச்சைக்குரிய சொற்களைப் போலவே, யதார்த்த வாதமும் (Realism) மிகவும் நெகிழ்ச்சியுடையது. யாதார்த்த வாதம் என்ற பெயர்ச் சொல் பற்றிய ஒரு ஆர்வமான அம்சம் என்னவெனில், காந்தம் போன்ற இது தனக்கே உரிய எல்லா வகையான பெயரடைகளையும் ஈர்த்து விடுவது தான். அவைகள் குழப்பங்களை மேலும் குழப்பமடைய வைக்கவே உதவுகின்றன.
அத்தகைய ஒரு பெயரடை தான் ‘மாயா' (Magic) எண்பதாகும். மாயா யதார்த்த வாதத்தின் விசேட தோற்றப்பாட்டின் கீழ், Brogues, Margued, சல்மான் ருஷ்டி, Gunter Grass போன்ற வேறுபட்ட எழுத்தாளர்களையும் ஒட்டு மொத்தமாக ஒருவராக நினைக்கப் பண்ணுகிறது. மாயா யதார்த்த வாதம், AbSurd drama (அபத்த நாடகம்) போன்ற இலக்கிய முத்திரைகள் ஏதோ ஒரு வகையில் ஒரு பிழையான வழிகாட்டுதலை ஏற்படுத்துவதாக உள்ளன. ஏனெனில், அவைகளின் அபத்தமான வகையில் (Absurd) பரந்து பட்டு இயங்கும் படைப்பாளிகளுக்கிடையே உள்ள தனித்துவத்தை மங்கச் செய்யும் சாத்தியம் கொண்டிருப்பதோடு அப்படைப்புகள் அவை களு கி கே யான தனித துவ தீ ைத கி கொண்டிருப்பதனால், ஒரு படைப்பை மற்றுமொரு படைப்பொன்றுக்காக ஒருவர் கொள்வதற்கான சாத்தியமும் மிக அரிதாகவே உள்ளது. உதாரணமாக Beckettன் நாடகங்களில் இல்லாத அரசியல் கூறு Genetன் நாடகங்களில் உள்ளது. அதே போன்று மார்குயுஸ் என்பவருடன் சேர்த்து சல்மான் ருஷ்டி Gunter GreSS என்பவர்களை மாயா யதார்த்த வாதிகளாக சில விமர்சகர்களால், வகைப்படுத்தப்பட்டாலும், மார்கியுளப்
$6org. One Hundred ... Years Of Solitude ல் செய்தது போல,
ச ல ம |ா ன "
ரு ஷ" டி யோ , கிறாசோ அதீத இ ய லட் பபி லட்
பயணிப்பதில்லை. மேலும், கிறாசும், ருஷ்டியும் அரசியல்
地
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
அங்கதம் கருதி Fantasy யை உபயோகிக்கிறார்கள். gigs 9iligli. One Hundred Years Of Solitude 6 தவறியுள்ளது போல, தென்படுகிறது.
மாயா யதார்த்த வாதத்தின் பிரதியாக மார்கியுளமின் நாவல் கொள்ளப்படுகிறது மேலும் அதைச் சுற்றி ஒரு முழுதுமான மத அனுசரனை வளர்க்கப்பட்டுள்ளது இது இந்த நூற்றாண்டின் மறுக்க முடியாத காப்பியம் என்பதற்கான விசாரணைக்கு விடை கூற முயலும் யாராவது ஒரு வர் நிர்வாணமாக இரு நீத சக்கரவர்த்தியைச் சுட்டிக்காட்டிய அந்த சிறுவனைப் போல உணரும் நிலைதான் என்று கூறுமளவுக்கு இந்நாவல் பல புகழ் பெற்ற விமர்சகர்களின் கரகோசத்தைப் பெற்றுள்ளது.
மறுக்க முடியாதபடி கதை சொல்லல், என்பது வாசகனின் காலை வாரிவிடுவதற்கு அடிக்கும் அலை போன்றது இாண்டாவது வாசிப்பின் போதுதான், உறுத்தும் சந்தேகங்கள் வேர் கொள்ள வைக்கின்றன. அவசியமற்ற வகையில் இவ்வதீத இயல்பு ஒருவரைக் குழப்ப வேண்டியதுமில்லை.
எல்லா இலக்கியங்களும் மரபு வழிமுறைகளில் தங்கியுள்ளன அதீத இயல்புவாதத்தின் மரபுகளை உபயோகித்துப் படைக்கும் ஒரு தீவிர எழுத்தாளனுக்கு அத்தகைய மரபொன்றை உபயோகப் படுத்துவதற்கு ஆட்சேபனை இல்லை. இங்கு நான் பேய், பயங்கர கதைகளை அல்லது இதுபோன்ற தன்மையான படைப்புகளைக் குறிப்பிடவில்லை. அவைகள் யதார்த்த வாதப்போக்கில் சரியாக இயங்குவதில்லை. வெற்றி பெறும் படைப்புகளில் உயிரை ஊடுருவும் யதார்த்தம் இருக்க வேண்டும். r
g2)6oog565) - Hilary Mantel 656or “Mr. Fludd” 6TGörp நாவலில் அழுத்தி உபயோகிக்கப் பட்ட அதீதவாத இயல்பை நினைத்துப்பார்க்கிறேன். இந்த நாவலில் நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்து போன மனிதனை (Mr.Fludd) மன்ரெல் உயிர்த்தெழச்செய்கிறார். பின்பு ஒரு கொண்வென்ரிலிருந்து புதிதாக மதம் மாற்றப்பட்ட ஒருவனை அதிலிருந்து விடுவித்து ஒரு உணவகத்தில் தங்க வைத்து ஹொட்டல் செலவுகள் யாவற்றையும் செலுத்தி மறைந்து விடுகிறான். தானாகவே விரும்பி தொங்கிக் கொண்டிருக்கும் தனது அவ நம்பிக்கைகள்
-ஏ.ஜே.கனகரட்னா தமிழில் -பொன் கணேஸ்
G55)
Page 58
ووايت 72-7ة محG
கொண்ட நாளாந்த கருமங்ங்களுடன், இங்கே வெற்றி கரமாக அதீத இயல்பு உள் வாங் கப்பட்டு ஜீரணிக்கப்பட்டுள்ளது. அதீத வாத மரபினால், ஒரு ஐரிஸ் கொண்வென்றின் உயிரை அழிக்கும் நாளாந்த செயற்பாட்டை ஈட்டுவதற்கு மன்ரல் அதனை உபயோகப்
படுத்துகிறார்.
6TGö 60d6OT' Goungpuš56u6oor One Hundred Yeas Of
Solititude என்ற நாவலுடனான சிக்கல் எண் னவெனில், மாயா அதீதவாத இயல்புக் கூறு அதன் பற்களுக்கிடையே ஒரு துண்டைக் கவ்விக் கொண்டு ஓடிவிடுவதுதான். இதில் வாசகர் மீதான விளைவு யாதெனில், மாயா (Magic) என்பது ஆகக் குறைந்தது அது யதார்த்த வாதத்தை விழுங்கிவிடுகிறது என பது தானி . வாழி கீ கை வட்டதி ஆகி கு மேறி பட்ட வயதுடைய பாத்திரப் படைப்பு மற்றும் ரெமிடியோக்களின் வருகை போன்ற நிகழ்வுகள், பனானகி கொம்பனியின் வேலை நிறுத்தத்தின் போது முவாயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் கொலை ஒரு இதிகாசத் தொனியை சுவைக்க வைக்கிறது. Jose Arcadio Sirgundo Lopibgpyuh ஒருவர் இரு வரைத தவிர Macondo 6ños, 676) (b Ló இக் கொலை உணர் மை யிலி நிகழ்ந்தது என்று நம்பவில்லை. கொலை ஒரு போதும் நிகழவில்லை எனப் பெருமி பாலுமி முழுச் சமூகத்தையே மூளைச் சலவை
செய்து நம்ப வைக்கும் கம்பனியின்
பிரச்சார இயக்கத்தின் வெற்றியானது, தென் அமெரிக்காவில் பனானா குடியரசுகளில் இயங்கிய வெளிநாட்டு முதலாளித்துவ கம்பனிகளின் SPCD) அரசியல் விதிப்பை சுட்டுவதாக உள்ளது. என ஒருவர் விவாதிக்க முடியும். ஆனால் ஸ்பானிய ஆணாதிக்கத்தை விட எவ்வித நோக்கத்துக்கும் சேவை செய்யாத பாலியல் தீவிரமும் மாயாவாத அதீத இயல்பின் மிகையான ஈடுபாடும் முற் று முழுதான அரசியல் திணிப்பை திசை மாறச் செய்வதும் தவிர்க்க முடியாத நிகழிவாக உள்ளது. கட்டுப்படுத்தும் கருத்தாக்கம் Hispanism -gbsi (g576öapófilog5. அதாவது ஸ்பானி மொழி பேசும் மக்களுக் கானதாக தோன்றுகிறது இதனால் ஆணாதிக்கத்தையும்
மாயா யதார்த் விசேடத்துவத்ை எவ்வாறு. சில
வாசகர் படப்பிடிப்பு இய அலுத்துப் பே அவ்வாறு அ வாசகர்கள்
தன்மைெ மாவீரர்க அசாதா சம்பவங்களைய வேற்று உல. தப்புதல்களுக்க
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
பாலியல் தீவிரத்தையும் இது கொண்டாடுவதாக இருக்கிறது. இந்தக் கருத்தாக்கத்தின் பின் புறப் பக்கம் என்னவெனில் (AutochthonOus) மக்களுக்கும் பெண்களுக்கும் ஒருசொற்பமான பாத்திரப் பங்களிப்பை அளிப்பதாக இருப்பதே இதனை ஈடு செய்வதற்காக கூடிய மாயா சக்திகள் கொண்டவர்களாக நாடோடிகள் (குறிப்பாக Melguicades) உருவாக்கப் பட்டுள்ளனர். அத்துடன் ஸ்பானியப் பெண்ணான ஊர்சுலா இயலபாகவே பெரிய வாழ்க்கை வட்ட்முள்ள வளாக பயங்கரிக்கப்படுகிறாள்.
கீழைத்தேயத்தின் சமனான இலக்கிய LusodLiut, One Hundred Years Solititude இருக்கிறது என ஒருவர் உணரக் கூடியவாறு மேலைத்தேயக்
காற்று எல்லாத் தீவிரத்தன்மை கொணி டதாக இரு கி கிறது . Raymond William för Guriğ6Nofit 35i x(t, Residual culture 676igure பதம ஏற புடையதாகும. மத ம தொடர்பான மாயங்களும் அற்புதமான
அசாதாரண செயலி பாடுகளும் த வாதத்தின் (குறிப்பாக பாலியல் ரீதியான) நிறைந்து த விபரிப்பது காணப்படுகிறது. எங்கிருந்து இது
வேளைகளில் படைக்கப் பட்டிருப்பினும் யதார்த்த
o : வாதம் ஒரு விசேடமான லத்தீன் மத்தியில் அமெரிக்க உற்பத்தி எனவும், இதனை பற்கை 6)தம் வேறு எங்கேனும் மொத்தமாக நாற்று ாயிருக்கலாம். நட்டால், வாடிவிடும் எனவும் இந்த லுத்துப்போன [B fr 6)u 6lა ஒரு வரை உணரப
93FIrg5Fr பண்ணுகிறது.
西 ரணத தமிழ் எழுத்தாளர்கள் (வாசகர்களும்)
காணர்ட சோஸலிஸ் யதார்த்த வாதத்துடனான 6ሻ)6ኽTயும் அவர்களது தெளிவின்மையால், மாயா ரணச் யதார்த்த வாதத்தினால் கடத்தப்படும்
வார் ஆபத்தில் இருக்கிறார்கள் இது
o · எனது அபிப் பிராயத தி ல கததுககான தீவிரத்தன்மையின் சாத்தியக் கூறுகள் ாக அவர்கள் நிறந்து காணப்படும் ஒரு முன்மாதிரி லாம்: (Model) யாகத் தென்படுகிறது.
உதாரணமாக கி. ராஜநாராயணனின் *கோபல்லக் கிராமம்’ இதனைத் தெளிவு படுத்துகிறது. இந்த நாவலில் ஒருங்கே கொண்ட பாரம்பரியமும் யதார்த்தமான நாளாந்த நிகழ்வுகளும் எவி வித களைப் புனர் வினி றி வாசகர்களால் ஏற்றுக் கொள்ள UG-flipor. -glorist. One Hundred Years Solititude of 9ituq globa). இங்கே எழுத்தாளர் விபரிக்கும் தெரிவு செய்யப்பட்ட கரு, அவள் விபரிக்கும் சமீப வங் களிலிருநீ து அதுTர நிறுத்துவதற்கு எவ்வித இடை வெளியும் விட்டு செல்ல வில்லை.
CS6)
Page 59
09]جي72-rت محG
ராஜநாராயணன் தனது அதிசமான பாரம்பரிய கதையை நினைவு கூரும் பொழுது அதனை SP (b. தலைமைதி தாயினி வாய்மொழியாக வெளிப்படுத்துகிறார். அத்தலைமைத் தாய் மிகைப்படுத்திக் கூறுகிறாள் என நினைக்கும் அக்கயாவின் மெளனத்தின் மூலம் இது நேரடியாக எதிர்வினை செய்யப்படுகிறது இந்த எதிர்வினை மிகைப்படுத்தப்பட்ட பொருந்தாத் தன்மை உணர்வு எதுவுமின்றி வாசர்களை ஏற்றுக் கொள்ளுமி சாதி தியதி தை ஏற்படுத்துகிறது.
மாயா யதார்த்த வாதத்தின் விசேடத்துவத்தை விபரிப்பது எவ்வாறு. சில வேளைகளில் வாசகர் மத்தியில் படப்பிடிப்பு இயற்கை வாதம் அலுத்துப் போயிருக்கலாம். அவ்வாறு அலுத்துப்போன வாசகர்கள் அசாதாரனதி தனி மை கொண ட மா வீரர்களை யுமி அசாதாரண ச் சம்பவங்களையும் கொண்ட வேற்று உலகத்துக்கான தப்புதல்களுக்காக அவர்கள் விழையலாம். யாவற்றுக்கும் மேல், நீண்ட காலமாக தொலைந்து போன கலை ஒன்றை இது விபரிக்க விழையலாம் வாசகர்களின் அடி ஆழப்படிவகளை மிகத்திறமையாக மார்குவஸ் தொட்டுள்ளார். புதிய உலகின் ஸ்பானியர்களின் வெற்றியை கொண்டாடும் தமது உண்மைத்துவத்தை சமார்த்தியமாக ஏனையவர்கள் மறைத்துக் கொள்ளும் பொழுது மார்குவஸ் தனது எழுத்தாற்றல் மூலம் சுயத்தை வெளிக்கொண்டு வருகிறார்.
ஒரு படைப்பு சாதாரண யதார்தீத வாதத்துக்கு கட்டுப்படாத ஒருஉலகை உருவாக்கினால் கூட, அது உள்ளார்ந்த கற்பனாவாத அளவியலும் உடன்பாட்டுத் தண்மையும் கொண்டிருத்தல் வேண்டும். இது மார்குவளமிடம் காணப்படாதது. ஆனால் சல்மான் ருஷ்டியின் நடுநிசிக் குழந்தைகள் (Midnight) நாவலில் அப்படி அல்ல இங்கு 15 ஒகளிப்டு 1947க்கு பின்பு பிறக்கும் குழந்தைகள் யாவும் தங்களுக்குள் (opsisodou for Qsili LaLobsoir (Telipathic Communication) GF5 m 6i 6m i Lu - G மிகுதியானவர்கள் கற்பனாவாத அளவையியல் கொண்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.
L6ögb- Third Eye 6th Issue
நூல் விமர்சனத்திற்கு இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்
உயிர் த உருவிரி இயல்பா
6Ն)IT6) 188ԼՈ! உணர்வு
வண்ண உனக்கு காதலுற்று
எத்தனை சிதறிய 6 உன் பிரி விகாரமr
உனது L இராணுவ
6600600T
குரூரமா அவற்றின் கிருஷ்ண
ஒளிப் ெ கோடுகள் 35(5LoUT:
உனது ப தடவித் த தவித்தன ஒவியங்க ஏங்கும் கறுவண்
காலத்தூ
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
தும்பத் ததும்ப பொருளழியும் பும் கோடுகள் சொற்கள ன முறிவுகளும்
ன வளைவுகளும
களின் முடிச்சவிழ்க்கும் ஓவியம்
ங்களைக் கலந்து கலந்து இதமான வண்ணம்காண
லு உழைத்தாய்
கொடூரமாய் இடறியது காலம்? பண்னங்கள் x .
ய முகங்களை
:
ய் வழிய வழிய ாத்திரங்களை ബെമ്പ്രങ്ങഥ கவ்வியது Jás காலணியின் திகிற்சுவடுகள் க் குழம்பெங்கும் விரிந்து ப் பல்லிளித்தன
ன் நெரிசல் இடுக்குகளில்
ா ஜெயந்திப் பாதங்கள் திணறின.
பாட்டும் ஊடுருவாவதை நிலத்தில்
சிதைந்த ஓவியம் சி படரக் கிடக்கிறது.
ாத்திரங்களை
லகின்றன விடாயுற்ற உறவுகள்
sளை வெறித்து வெறித்து 签 முகங்களில்
ணம் தீட்டும் ரிகையின் சிலிர்ப்பொடுங்கா
உமாஜிப்ரான்
Page 60
உரத்துப் பேச ஆழியாள்
80களில் *சொல்லாத சேதிகள்’ என்ற கவிதைத்
தொகுப்பு வெளிக்கொணரப்பட்டதானது, ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகவே கொள்ள வேண்டும். காரணம், ஈழத்தமிழர் மத்தியில் அதிகம் பேசப்படாத, ஆனால் மிக அவசியமாகப் பேசப்பட வேண்டிய பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை உள்ளடக்கிய நூலாகவே இந்நூல் கருதப்பட்டது அ.சங்கரி, சி.சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூறா ஏ.மஜீட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்னம், ஊர்வசி ஆகிய பெண்களின் கவிதைகளை கொண்ட இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய கலாநிதி சித்திரலேகா மெளனகுரு அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். *மனித குலத்தின் அரைப்பகுதியினராகிய தம்மை மனிதம் அற்ற வெறும் யந்திரங்களாகவும், கருவிகளாகவும் கருதும் நிலை மாற வேண்டும் எண்பது இன்றைய பெண் ணிலைவாதப் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாகும். இக் கால கட்டத்தில் நாம் பெண்களுக்கான ஒரு கலை இலக்கிய நெறியை உருவாக குவது முகி கசிய தேவையாகுமி . இப்போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இவற்றின் பின்னணியிலேயே ஆழியாளின் கவிதைத் தொகுதியான "உரத்துப் பேச” பார்க்கப்படவேண்டும். அப்படிப்பார்க்கும் போது “சொல்லாத சேதிகள்’ வெளிவந்ததன் பின்னர், தமிழ் இலக்கிய உலகில் தடம்பதிக்கும் ஒரு முக்கிய கவிதைத் தொகுப்பாக இதைக் கொள்ள வேண்டும். பிரக்ஞை பூர்வமாக பெண்ணிலைவாத நோக்கை கருத்தியல் ரீதியாக அழுத்தும் கவிதைத் தொகுப்பே இது. கருத்து வேறு, உணர்வு ரீதியாக அக்கருத்தை வெளிக்கொணரும் கவிதை வேறு. இந்நிலையில் ஆழியாளின் கவிதைகளின் பெறுமானம் எத்தகையது? இங்கே தான் ஆழியாள் தன்னை ஓர் சிறந்த கவிஞராகவும் வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்பது புலனாகிறது. பெண னிலை வாதமி எண்பது, வெறுமனே ஆண்களுக்கெதிரான வெறுப்பைக் கொட்டுவதோ அல்லது ஆண்கள் இல்லாது பெண்கள் வாழும் ஓர் உலகு பற்றிய கற்பிதமோ அல்ல. மாறாக ஆண் - பெண் என்ற பேதமற்ற, ஆதிக்கம் மேலெழாத அன்பின் இணைவே அது என்பதை ஆழியாள் மிக அற்புதமாகத் தெளிவு படுத்துகிறார். "உரத்துப் பேச தொகுதியின் தடைதாண்டி’ என்ற முதல் கவிதையே இதைத் தெளிவுபடுத்துகிறது. பெண்ணிலைவாத நோக்கின் ஒரு சில கவிதைப் பிரகடனம் என்று (Manifesto) நாம்
இதைக் கொள்ளலாம்.
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
வெளியீடு மறு
71. முதலாவது பிரதான சாலை, இந்திரா நகள் சென்னை 20 வில்ை 3500
நம் நேற்றைய சந்திப்பு கடந்த பின் if,
உன்னை எந்நிமிடமும்
எதிர்கொள்ள
நான தயாராகவே இருக்கிறேன்.
நீயும் நானும் வரையறைகளைக் கடக்க வேண்டும் - நான்,
உன் விவேகத்தோடும் நீ என் வீரியத்தோடும் கடக்க வேண்டும்
எனினும் என் கருவறையை நிறைப்பது உன் குறியல்ல என்ற புரிதலோடு
வா!
ஒன்றாய்க் கடப்போம் நீ என் விவேகத் தோடும் நான் உன் வீரியத் தோடும்.
ஆண் எப்போதுமே பெண்ணைப் போகப் பொருளாக மோகிப்பதும் அதன் அடுத்த கட்டமாக அவளை தன் ஆதிக் கதி திறி குட் படுத்த முயல வது மே பல பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. உண்மையான பால் பேதமற்ற மனித நேயத்திற்கு தடையாக இருக்கிறது. அதனால் தான் ஆழியாள் மிக நாசூக்காகவும் நுட்பமாகவும்
*எனினும் என் கருவறையை நிறைப்பது உன் குறியல்ல என்ற புரிதலோடு
ラ 5
என்று கூறிச் செல்கிறார். இங்கு கையாளப்படும் ‘உன் குறியல்ல" என்ற வார்த்தைப் பிரயோகம் பல அர்த்தம் பொதிந்தது. இவ்வாறே அவர் "நிலுவை’ என்ற கவிதையில் வெளிக்கொணரும் உணர்வலைகள் மட்டுமல்ல அதை வெளிக்கொணரக் கையாளும் கவிதை ஒழுங்குமுறையும் சொற்தேர்வுகளும் தனியானவை. ஆண் களின் பெண் மோகிப்புக்கு இண்னொரு சாட்டையாக விழுகிறது இக்கவிதை: *நீ திருப்பித்தரலாம்
மணிக்கூட்டை
கைவிளக்கை, கத்தரிக்கோலை (கன்னி மீசை வெட்ட நீயாய்க் கேட்டது நினைவு).
உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
Page 61
G-7723
என் காட்டு ரோஜா உணர்வுகளையும் அள்ளியள்ளித் தெளித்து பூப் பூவாய்ப் பரவிய திவலைக் குளிர்ச்சியையும் எப்படி மறுதலிப்பாய்? - எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
கடிதத்திலா?
காகிதப் பெட்டகத்திலா?
இதில் நான் உனக்கிட்ட உதட்டு முத்தங்களையோ நீ எனக்குள் செலுத்திய ஆயிரத் தெட்டுக் கோடி விந்தணுக்களையோ நான் கணக்கில் எடுத்துச்
சேர்க்கவில்லை.
“கோணேஸ்வரிகள்’ என்ற கவிதை மூலம் தமிழ் கவிதைப் பரப்பில் பேசப்படுவதற்கு தயங்கிய விஷயங்கள் பேசப்பட்டன. கோணேஸ்வரிகளுக்கு இருக்கும் இலக்கியப் பெறுமானம் அது பேசப்படாத விஷயங்களைப் பேசியதற்காகவல்ல, அது அவற்றை பேசவைத்த கவிதை முறையினாலேயே முக்கியத்துவம் பெறுகிறது. அதன்
காலத்தின் புன்னகை - சித்தாந்தன் -
-மு.பொன்னம்பலம்
90களினி இறுதிப் பகுதியில் , அடுத் தடுத்து வன்னியிலிருந்து வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் ஈழத்து இலக்கிய ஆர்வலரை வியக்க வைத்துள்ளன. ஒக்ரோபர் 99ல் கருணாகரனின் ‘ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்” கவிதைத் தொகுதி வெளிவந்ததற்குப் பின்னர் முல்லைக்கமலின் "மனமும் மனதின் பாடலும்’ அமரதாஸின் இயல்பினை அவாவுதல்’ சித்தாந்தனின் *காலத்தின் புன்னகை இன்னும் ஏனைய வன்னிக் கவிஞர்களின் தொகுப்பான “ஆனையிறவு’ என்று மளமளவென ஐந்து தொகுப்புகள் வந்துவிட்டன. ஏற்கனவே "ஈழநாடு’ ‘ஈழநாதம்’ ‘வெளிச் சம்’ பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி தம்மைச் செப்பனிட்டுக் கொண்டிருந்த இக்கவிஞர்கள் இப்போது தம் படைப்புகளை தொகுப்புகளாக வெளியிட்டுத்தம் ஆளுமையை நிலை நாட்டியுள்ளனர். தொகுப்புகள் வன்னித் தொகுப்பாக இருந்த போதும் படைப்புகள் முதிர்ச்சியின் எட்டுதலைக் காட்டுவனவாய் உள்ளதே நமது அக்கறைக் குரியதாகும்.
மே மாதம் 2000ல் வெளிவந்துள்ள சித்தாந்தனின் *காலத்தின் புன்னகை’ இத்தகையவற்றில் தனக்குரிய தனித்தன்மையைத் தக்க வைத்தவாறு வெளிவந் திருக்கிறது. ‘தொண்ணுாறுகளின் இறுதிப்பகுதியில் எழுத்தில் இயங்கத்தொடங்கிய சித்தாந்தன் கடந்த மூன்று ஆண்டுகளுள் எழுதிய கவிதைகள் இவை. எழுதத்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2009
பின்னர் இத்தகைய மறைவான விசயங்களை கவிதையின் நிறைவோடு எந்தவித ஆரவாரமும் இன்றிச் சொல்லிச் செல்பராகத் திகழ்பவர் ஆழியாள்தான்.
தமிழ்த் தேசியத்திற்குத் துணை போகும் கூறுகள் கோணேஸ்வரியில் இருத்தல் கண்டு, அது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான புத்தி ஜீவிகளால் அதிகம் பேசப்படாது ஓரங்கட்டப்பட்டது. ஆனால் இங்கே ஆழியாள் “மன்னம்பேரி” என்ற கவிதையின் மூலம் கோணேஸ்வரி போல வன்செயலுக்குள்ளான சிங்களப் பெண்ணான மன்னம் பேரியையும் சேர்த்துக் கொண்டு, பெண்ணிலைவாதப் பரப்பை அகலிக்கிறார். “அருகே கணவன் மூச்சு ஆறிக்கிடக்கிறான்’ என்று இக்கவிதையை முடிக்கும் போது எல்லா ஆண்களிடமும் கோணேஸ்வரிகளுக்கும் மன்னம் பேரிகளுக்கும் நேரும் அவலத்திற்கான வன்முறை அடைக்காக்கப் படுகிறது என்று சொல்லாமல் சொல்லி மீண்டும் பெண்களை போகப் பொருளாகக் காணும் ஆண்களுக்கு “சளார்’ என்று சாட்டை வீசுகிறார். அவரது சாட்டை சுழன்று சுழன்று கவிதை மூலம் அக்கருத்தியலை அழுத்துகிறது. இதன் மூலம் ஒரு வித்தியாசமான கவிதைத் தொகுப்பாய் இது நிற்கிறது. r
வெளியீடு: குலன் வெளியீட்டகம் கோண்டாவில் வடக்கு, கோண்டாவில்.
. யாழ்ப்பாணம்
தொடங்கிய ஆரமி ப நிலையிலேயே தொகுதியாக வெளிவரும் சாத்தியம் ஒரு படைப்பாளிக்கு வாய்த்திருக் கிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மூன்று வருடங்களில் ஈழக் கவிதை
மரபில் தொடர்ச்சியாகவும் அதிலிருந்து முன்னே பாய்வதாகவும் தன்கவிதைகளை எழுதியுள்ளார்” என்று இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள கருணாகரன் கூற்றும் நாம் கூறுவதை வலியுறுத்துகிறது.
இந்நூலில் எழுதவேண்டிய தலைப்புகள்’ என்று மகுடமிட்ட தனது உரையில் கவிஞர் சித்தாந்தன் தன்னைப் பற்றிக் கூறுகையில் “எனது சிறு பிராயத்திலிருந்து ஒரு ஓவியனாகும் கனவே எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தது. கவிஞனாக வந்தது ஒரு விபத்துப் போலவே நடந்தேறியிருக்கிறது. இது சாதாரன விபத்தன்று எனது உணர்வுகள் முழுவதையும் கவித்துவப் படுத்தியிருக்கிறது. எனது ஒவியம் பற்றியதான உணர்வோட்டம் எனது கவிதைகளிலும் ஒளிர்வதை சில இடங்களில் உணரமுடிகின்றது” என்று கூறுகிறார்.
இன்றைய இளங்கலைஞர்களின் துறை ஈடுபாடு அவர்களது கவிதைகளிலும் புதுப்பரிமானத்தைச் சேர்க்கிறது என்றே கூறவேண்டும்.
G59)
Page 62
[09]T"A32ggنه لکه
‘ஓவியம் , ஒளிப் படமி , சிறுகதை போன
கலைத்துறைகளிலும் எனக்கு அதிக ஈடுபாடுகள் உண்டு வெவ்வேறு கலைத்துறைகளிலான எனது ஈடுபாடுக என கி குமி என கவிதை களு கீ குமி 66 சேர்த்திருக்கின்றன’ என்று வன்னிக் கவிஞர் அமரதாஸP தன் ‘இயல்பினை அவாவுதல்’ கவிதைத் தொகுப்பில் கூறியுள்ளவை இங்கு கவனிக்கப்பட வேண்டியவை.
சித்தாந்தனின் ஒவிய ஈடுபாடு அவரது கவிதைகளை ஆக்கரீதியாகப் பாதித்துள்ளது என்பதற்கு இவரது தொகுப்பின் முதல் கவிதையான “அலைகளின் மொழி நல்ல எடுத்துக்காட்டு. துரிகையாலேயே கவிதை எழுதப்பட்ட பாணியில் அக்கவிதை வந்துவிடுகிறது.
‘முளைத்து முளைத்து பெருகிவந்து எழுதி கொண்டிருன்றன அலைகள் தம் சித்திரங்களை. கடல் வெறும் கண்களின் பார்வையில் படுத்திருக்கும் திரவமாகவே தெரியும் அதன் மெளனத்திலும் ஆர்ப்பளிப்பிலும் அர்த்தச் சங்கமிப்புகள் அதிகம் கோடி ஆண்டுகளின் அசைவுறும் தேக்கமாகவே அது பரந்து கிடக்கிறது. நட்சத்திர இரவுகளில் மின்னும்
கடலின் நுரைப் பூக்களில் என் சந்தோசிப்பே நிகழ்ந்து விடுகிறது.
இங்கே கவிஞரின் கடல் பற்றிய கவிதை வார்த்தைகளை கொண்டு ஒவியம் வரைந்த மாதிரி பொலிவுறுகின்றன. தர்மு சிவராமுவின் ஒவிய ஈடுபாடு அவரது, வெட்டப்பட்ட பனித்துண்டுகள் போல் நடுவிநழுவி விழும், “பேச்சு”, ‘மின்னல்’ போன்ற சிறு சிறு படிமக்கவிதைகளுக்கு காரணமாயின. சத்தியஜித்ராயின் இலக்கிய ஈடுபாடு, அவர் திரைப்படங்களில் கவிதைகள் எழுதிக் காட்டின. ஜேமஸ்ஜொய்சின் திரைப்பட ஈடுபாடு அவரது நாவல்களில் நனவோடை உத்தியையும் காட்சிகள் குவிந்து இருள்வதையும் மலர்ந்து வெளிப்படுவதையும் வர்த்தைகளில் எழுதிக் காட்டின.
புலம் பெயர்ந்த எழுத்தாளர்களிடையே முக்கியமான ஒரு சிறுகதை, குறுநாவல் ஆசிரியராக அறியப்பட்டவர் கருணாகரமூர்த்தி. அவருடைய அண்மைய சிறுகதைகளிற் பதினைந்தின் தொகுப்பு இந்த நூல். அடிப்படையில் அவருடைய மொழிநடை எளிமையானதும் தெளிவானதும் எனலாம். மனித வாழ்க்கை பற்றிய அவதானங்களின் பதிவு எனலாம். ஒரு வகையில், புலம் பெயர்ந்த ஈழத்தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களையும் அங்கு அடையாளங் காண முடியும். கருணாகரமூர்த்தி எதையும் வலிந்து சொல்ல முயல்வதாக
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
இவ்வாறே சித்தாந்தன் தன் ஒவிய ஈடுபாட்டைத் தன் முதல் கவிதையிலேயே சித்திரமாக்கியுள்ளார். இதோ அவர் தனது ‘துருவ நட்பு’ கவிதையில் இன்னொரு சித்திரம் வரைகிறார்.
காலம் கல்லாகி
கால் தடக்கிய பொழுதில் நாம் துாக்கியெறியப் பட்டோம் வெவ்வேறு துருவங்களுக்கு என்று காலத்தை ஒவியன் காண்பது போல் ஒரு Object ஆகக் கண்டு அவர் மேலும் தொடர்கிறார்.
வெறுமை மொய்க்கும்
ஒரு வெளியில் நான் மாறுதலில்லாத எண்மனக்கிடங்கில் நினைவுகளின் மழை ஒய்ந்த பின் நுரை துளிர்க்கின்றன உன் ஞாபகங்களை மெளனத்தின் புஸ்பித்தல்களை மீறி ஆரவாரநாட்களை எழுதிச் சுழல்கின்றன அவை. இங்கே கவிஞர் ஞாபங்களை நுரைத்து துளிர்க்க” வைக்கின்ற நேர்த்தியும் இன்மையின் குறியீடான மெளனத்தை ‘புளப்பிக்கவைத்த’ அழகும் ஒவியனின் பார்வையில் முகிழ்ந்த படிமங்களா? எது எவ்வாறாயினும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் யாவற்றிலும் இனந்தெரியாத துயர் - பலவித இழப்புகளினால் நேர்ந்தவையாக இருக்கலாம் - அடைத்து நிற்கிறது. இது சித்தாந்தனின் தொகுதியில் மட்டுமல்ல கருணாகரன், முல்லைக்கமல், அமரதாளப் ஆகிய எல்லாக் கவிஞர்களின் கவிதைகளிலும் இத்துயர் மண்டியிடுகிறது. இத்துயர் வெருங்காவியமாகவே தன்னை வெளிக் கொணாத் துடிக்கிறது போலவே எனக்குப் படுகிறது. நிலாந்தண் எழுதிய புதிய இலக்கிய வகையைச் சேர்ந்த ‘மணி பட்டினங்கள்’ இதை ஒருவகையில் சுமந்து வந்துள்ளது. ஆனால் இதன் திரண்ட உருவம் இன்னொரு பெரும் படைப்புக்காக காத்திருக்கிறது என்றே கூறவேண்டும் வன்னிக் கவிஞர்கள் இதற்கு உருவம் கொடுப்பார்கள் என்றே
நினைக்கிறேன். O
அவர் மீது யாரும் குற்றம் கூற முடியாது. அதே வேளை அவர் சொல்லத் தவறுவன (தவிர்ப்பன வாகவும் இருக்கலாம்) அவரு டைய பார்வை பற்றி நமக்கு நிறையவே சொல்கின்றன. அதற் குட் புகு முனி அவருடைய மொழிநடை பற்றிச் சிறிது சொல்லவேண்டியுள்ளது.
அக்கிரகாரத்து மொழி என்று சொல்லக் கூடிய சொல்லாடல் உட்பட்ட தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளின் மொழி ஈழத்தமிழர்களது உரையாடல்களிலும் கதை சொல்பவரின்
-டு)
Page 63
و77250ة محG
கூற்றிலும் கணிசமானளவு காணப்படுகிறது. இது கவனப்பிசகா அல்லது தமிழகத்து இலக்கியச் சந்ைைதயின் மீதான கவனத்திலானதா என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் மிகவும் தெளிவாகவே கவனப் பிசகானவை என்று கூறக்கூடிய சொற்பிரயோகத்தைப் பல இடங்களிற் காணக் கூடியதாக உள்ளது. உதாரணத்துக்கு “போர்களும் ரணங்களும் கதையில் Bேர்லின் வாசியான கணவன் இடையிடையே ஆங்கிலம் பேசினாலும் தமிழிலேயே பேசுகிற மனைவி, கதையின் இறுதி வாக்கியத்தை முழுதாக ஆங்கிலத்தில் அவிழ்ந்து விடுவதையும் அதில் முதற் சொல் போக மீதியெல்லாம் ரோமன் எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளதையும் சொல்லலாம். இதே கதையில் *.ஜெர்மன் சனங்கள் வேறு நரிக்குறவரைப் பார்த்த மாதிரி எங்களை வேடிக்கை பார்க்குதுகள்’ என்று வருகிறது. நம்மவர்கள் நரிக்குறவர் பற்றித் தமிழகச் சஞ்சிகைகளில் வாசித்ததற்கு மேலாக அறிய மாட்டார்கள். பேச்சு வழக்கில் குறிப்பிடுவது இல்லையெனலாம். இதே கதையில் சுண்டெலி ஒன்றால் “குப்பைவாளியின் உள்ளேயும் வர முடியவில்லை வெளியேயும் போக முடியவில்லை’ என்று வருகிறது. கதாசிரியர் குப்பைவாளிக்கு உள்ளே நின்றாரா என்ற கேள்வி இயல்பாகவே மனதில் எழுந்தது. இதை விட அரேபியன் நைட்ஸ் றோஸ் ஹிப்ஸ் பந்தல்களுடாகப் புகுவது பற்றி எழுதியிருக்கிறார். எனக்குத் தாவரவியல் அறிவு குறைவு என்றாலும் றோஸ் ஹிப்ஸ் என்றால் பொதுப்படக் காட்டு றோஸ் காய்கள் என்று தெரியும். அதற்கான பந்தல் பற்றி எனக்குத் தெரியாது. இது மாதிரி இன்னும் பல. நூற் தலைப்பின் பேருக்குரிய கதையில் ‘பஷன் பழத்தின் தோலைப் போல வாய் சுருங்கி இருந்ததாக எழுதியிருக்கிறார். பேராசிரியர் துரைராஜா சம்பந்தப்பட்ட ஒரு கதை நினைவுக்கு வந்தது. அவருடைய சக விரிவுரையாளர் ஒருவர் ஒரு வகையான "அக்ஸென்ற்றுடன்’ ஆங்கிலம் பேசுவார். ஒரு மாணவர் ஆங்ரைராஜாவிடம் போய் “நீங்களும் வெளியூரில் தானே படித்தீர்கள். அவரிடம் அக்ஸென்ற் இருக்கிறது. உங்களிடம் ஏன் இல்லை?’ என்று கேட்க, அவர் அதிக யோசனையின்றி “நான் இந்த ஊரிலேயே ஆங்கிலம் படித்ததாலாக இருக்கும்’ என்றார். கருணாகரமூர்த்தி ஜேர்மனியில் தான் பஷன் பழத்தைப் பார்த்திருக்கிறார் என நினைக்கிறேன்.
மேற்கூறியவான இடறல்கட்கு காரணம் கதைகளிற்கு அழகு சேர்க்கிற நோக்கிலோ ஜெயமோகன் பாணியில் தனது அறிவின் விசாலத்தைக் காட்டுகிற முனைப்பிலோ கதைக்குள் தகவல்களைப் புகுத்துவது தான் என ஊகிக்கிறேன். எவ்வாறோ, இவை கதையின் சொல் நேர்த்திக்கு ஊறு செய்கின்றன. ஆங்கிலச் சொற்களில் மட்டுமில்லாமல் தமிழ் வழக்கில் உள்ள வடசொற்களிலும் அடிக்கடி கருணாகரமூர்த்திக்குக் கால் இடறுகிறது. இது போக, ஊBான் என்பதை அவர் எப்படியோ எழுத, அது ஊ.பான் என்று எல்லா இடங்களிலும் அமைந்து விட்டது.
முன் குறிப்பிட்டவை அவருடைய எழுத்தின் வீச்சிற்குத் தடையாக உள்ள சில குறைபாடுகள். இவற்றை அவர்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
காலப்போக்கிற் களைவார் என எதிர்பார்க்கலாம். ஆயினும் அவருடைய கதைகளுடு அவருக்கு எட்டுகிற தரிசனங்கள் எவை என நோக்கும் போது, வெறும் நிகழ்வுகளின் பதிவுகள் என்ற நிலையைத் தாண்டி உணர்வுகளை அவர் தொட முயல்கிறார், அதில் வெற்றியும் காண்கிறார் எனலாம். இந்த உணர்வுகட்கு அப்பாலும் அவற்றின் ஆழத்திலும் அவரால் தேட முடிகிறதா என்று பார்த்தால், அவரின் போதாமையை அங்கு காணக் கிடைக்கிறது. இதற்கான வலிய ஆதாரம் “பகையே ஆயினும்’ ஒரே கட்டிடத்தில் குடியிருக்கும் துருக்கியனின் பழக்கவழக்கங்கள் ஈழத்தவர் ஒருவருக்கு பகைமையையும் அருவருப்பையும் ஊட்டுகின்றன. எனினும் அத்துருக்கியரும் குடும்பத்தினரும் தமது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும் போது, ஈழத்தவருக்கு மனது நெகிழ்கிறது. இந்த நெகிழ்வு, இதே கதி ஈழத்தவர்கட்கும் ஏற்படக் கூடியது என்பதுடன் தொடர்புடையது. எனினும் துருக்கியருடைய நடத்தையைப் பற்றி நம்மவர்கட்கிருக்கும் அருவருப்பும் வெறுப்பும் நம்முடைய தனிப்பட்ட, சமூக நடத்தைகள் பற்றி வேறு சமூகத்தவர்கட்கும் இருக்கலாம் என்ற ஞானம் நம்முடையய புலம் பெயர்ந்த படைப்பாளிகளில் எதி தனை பேருகி கு உள் ளது? எனவே கருணாகரமூர்த்தியைக் குறைசொல்லிப் பயனில்லை. ஆயினும் அவர்களுட் பலருடையது போலவே அவருடைய பார்வையும் எங்கோ தடைப்பட்டு நிற்கிறது என்றே தோன்றுகிறது.
வெகு சராசரியானதும் நான் முன்பு சில தடவைகள் கேட்டதுமான ஒரு ஊத்தைப் பகிடியைத் தமிழில் எழுதி *ஆச்சார விமர்சகர்கள், வாசகர்கள் மீது ஒரு தற்காப்புத் தாக்குதலையுமி தொடுத்து விட்டுக் கதையை வெளியிட்டுள்ளார். ‘அமீகோ’ 1970களிலேயே குமுதத்தில் வந்திருக்க வேண்டிய இலக்கியத்தரம் கொண்ட கதை. இதை வெளியிடுவதன் மூலம் கருணாகரமூர்த்தியின் ஆணாதிக்கப் பார்வை பற்றி எனக்குள் எழுகிற சந்தேகங்களை அவர் மேலும் உறுதிப் படுத்தியுள்ளார்.
இத்தனை குறைபாடுகளிடையிலும், குறிப்பிடத்தக்க ஈழத்து, புலம்பெயர்ந்த தமிழ்ச் சிறுகதையாளரிடையே கருணாகரமூர்த்தி ஒருவராக இன்னமும் தொடர்கிறார். இதற்கும் மேலாக உயர்வதற்குச் செய்நேர்த்தி பற்றிய கவனம் மட்டும் போதாது என்றே தோன்றுகிறது. Ο
கவிச்சுடர் அன்பு முகையதின் மணிவிழா மலர்
தென்கிழக்கு ஆய்வு மையம் :
கவிச்சுடர் அன்பு முகையதினின் மணி விழாவைக் கொண்டாடுவதற்கு மிக முக்கிய காரணம் 3 ΗΑ) ζ5 HES) நிகழ்வுகளுடன் அவருடைய இலக்கிய பணிபுயர் பணிகளை பொருத்திப் பார்ப்பதற்கும் அவரை வாழும் போது வாழ்த்துவதற்காகவுமே!
-இக்பால் அலி
-G6D
Page 64
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இளங்கீரன் எண்பதுவும், அவரது நாவல்கள் என்பதுவும் முக்கிய தலைப்புக்கள்.
இளங்கீரனை மூன்று காலகட்டங்களுள் காணலாம்.
1. இளமைக்காலம் : இந்தியா, மலேஷியா, சிங்கப்பூரில் வாழ்ந்திருக்கிறார்.
2. நடுவயதில் மார்க்ளியே எழுத்தாளராத் திகழ்ந்திருக்கின்றார். 3. தொப்பி அணியுடன் வாழ்க்கை வசதி பெற்றிருக்கிறார்.
இம்மூன்று காலகட்டங்களிலும் மனித உணர்வின் மேன்மையைத் தன்னகத்தே கொண்டு மனித நேய எழுத்தாளராகவே வாழ்ந்திருக்கிறார்.
அவரது நாவல்கள் - பைத்தியக்காரி, பொற்கூண்டு, மீண்டும் வந்தாள், மரணக்குழி, ஒரே களைப்பு, காதல் உலகிலே, கலாராணி அழகு ரோஜா, பட்டினித் தோட்டம், நீதிபதி, ஆணும் பெண்ணும், வண்ணக்குமரி, எதிர்பார்த்த இரவு, மனிதனைப்பார் இவை இந்தியாவில் பிரசுரமானவை. இந்நாவல்கள் நாம் நோக்கும் இளங்கீரனைப் பிரதிபலிக்கவில்லை.
இலங்கை வந்த இளங்கீரன் *ஆனந்தன்’ பத்திரிகையில் எழுதிய தென்றலும் புயலும் 1956இல் வெளியானது. தினகரனில் வெளியான புயல் அடங்குமா? சொர்க்கம் எங்கே? இங்கிருந்து எங்கே? காலம் மாறுகிறது, மனிதர்கள், நீதியே நீ கேள், என்பன கட்டுக்கடங்காத - அளவில்லாத வாசகர் கூட்டத்தை ஏற்படுத்தின.
வீரகேசரியில் வெளியான “அவளுக்கு ஒரு வேலை வேண்டும், சிரித்திரனில் வெளியான ‘என்னை அழைத் தாயா’ எனும் நாவல்கள் இளங்கீரனின் இரணி டாவது கால கட்டங்களின் இறுதியில் வெளியானவைகள்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க மூலவேர், தேசாபிமானி, தொழிலாளி, ‘ஜனவேகம்’ பத்திரிகைளின் ஆசிரிய குழுவிலிருந்து மார்க்ஸியம் எழுதியவர். மரகதம்’ எனும் இலக்கிய இதழுக்கு ஆசிரியராக இருந்தார் இளங்கீரன்.
“அவளுக்கு ஒரு வேலை வேண்டும்’ எனும் நாவல் கொழும்புச் சூழலில் வாழும் மத்தியதர வர்க்கத்தின் கடை, இடைநிலைக் குடும்பங்களின் கதை கூறும் உருக்கமான நாவல், கருதி தை உருவாக்கிச் சந்தர்ப்பப் பொருத்தத்துடன் அதன் உண்மைத் தன்மையை இலக்கிய ரீதியில் புலப்படுத்தும் நாவல் என்று இதை வலியுறுத்தலாம்.
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
தேசிய கலை இலக்கியப் பேரவை சவுத் ஏசியன் புக்ஸ், - - - கொழும்பு-11
விலை: ரூபா 25000
കുഖഴ1്ട്ര ട്രൂ
இக்கதை நடைபெறும் காலம் 1966க்கும் 1972க்கும் இடைப் பட்டது. அக்காலம் தாண் பிறிப்போயா, போயா தினங்கள் சனி ஞாயிறு போல் இருந்த காலம். திறிறோஸ் சிக்ரட் காலம், கூப்பன் அரிசி வாங்கும் இறுதிக் காலம். ஒரு ரூபாய்க்கு
கொட்டாஞ்சேனையில் ‘கள்’ குடித்து, ‘ரேஸ்’டும்
சுலர் இயங்கீரர்
சாப்பிட்டு வரக் கூடிய காலம். இவையாவும் அக்கதை மாந்தர்களின் வாழ்க்கையில் அடங்குகின்றன. இக்காலத்தைக் கழித்தவர்கள் அநேகர் இங்கிருக்கிறார்கள். 1973க்குப் பின் பிறந்தவர்கள் இக் காலத்தைப் பெருங்கற்பனையாக எண்ணலாம். -
இந்நாவலின் கதை ஒட்டத்தில் கதைமாந்தர்களது நினைவோட்டத்தை வழிமறித்து ஆசிரியரின் கொள்கைப் பிரகடனம் நுழைவதைப் பல இடங்களில் நீங்கள் வாசித்தறியலாம்.
இந்நாவலில் கற்பனைப் புனைவுகள் குறைவு, யதார்த்தமான பகைப் புலமும், படைப்புகளும் தென்படுவதை நெடுகிலும் காணலாம்.
கதைமாந்தாது உரையாடலில் அல்லது நினைவுகளில் பொதுவுடைமை சார்ந்த கொள்கைகளும் வர்க்கபேத முரண்பாடுகளும் தெளிவு படுகின்றன.
கதைமாந்தர்கள் வார்த்தெடுக்கப்பட்டு வளர்வது இக் கதையில் முக்கியமி. பாதி திர வார்ப்பு குறுநாவலுக்குரியது. இங்கு, அந்த வார்ப்பு நடைபெறுகிறது. அத்துடன் வளர்கிறது. வளரும் போது குறுநாவல் நாவலாகிறதல்லவா?
நாவலின் கருவைச் செம்மைப்படுத்தப் பாத்திரங்களின் எண்ணிக்கையை மிகவும் கவனமாக இளங்கீரன் தீர்மானித்திருக்கிறார். பாத்திரங்களின் இயற்கை இயல்புகளும் இலட்சியப் போக்குகளும் கதாசிரியரை முன்னிறுத்துகிறது. இதனால் தான் போலும் அவருக்குப் பிடித்த நாவலாக இது இடம் பெறுகிறது.
கதைமாந்தர்களை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் விதம், மாந்தர்களின் செயற்பாடுகள், அவர்களது சமூகப் பின்னனி என்பனவற்றை சார்பு நிலையாகவே ஆசிரியர் தருகிறார். தான் சார்ந்த கொள்கையோடு உரசிப்பார்க்கிறார். தம் கருத்தையோ, விருப்பு வெறுப்பையோ காட்டாமல் ஆசிரியர் ஒதுங்கி நின்றிருந்தால் பலதரப்பட்ட கொள்கையாளர்களையும் இந்நாவல் அதிகமாக ஈர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
O
G62)
Page 65
[و0]ra 2Bیتمی
என்.கே.ரகுநாதன் எழுதிய கந்தன் கருணை
நாடகம் குறிப்பாக 60களில் இடம் பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்ட களத்தில் பிரசவித்த ஒரு நாடகமாக திகழ்வதுடன், அப் போராடட் ட உணர்வுகளை சரியான திசை மார் கி கதி தில் இட்டு செல் வறி கான கருவியாகவும் பயன்பட்டுள்ளது. நாடகம் குறிப்பாக தமிழர் சமுதாயத்தில் புரையோடியுள்ள சுரண்டல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் காரணமாக அமைந்த சாதியப்
" ...
பிரச்சினையை, வடபகுதியில் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த ‘கந் தனி ’ கதையை கொணிடு விளக்க முனைகின்றது. இந்நாடகம் எழுதப் பட் டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாகின்ற இக்கால கட்டத்தில் இவை குறித்த மறுமதிப்பீடு செய்தல் சமகால உலகின் தேவையாக உள்ளது. இவ்விடயத்தில் ஒரு விடயம் குறித்து தெளிப்படுத்த வேண டி யுள்ளது. நமது சூழலில் கானப்படுகின்ற சமுதாய மு ர ன பாடுக ைள யு மி , பிரச்சனையையும் இரு முறைகளில் கலை இலக்கிய மாக்கலாம்.
l. சமுதாயப் பிரச்சனை : களையுமி , முரணி பாடு களையுமி , அவற்றினர் அடியாக எழுமி கருங் தோட்டங்களையும் சமூக உறவுகளின் உணர்ச்சிப் பின்புலத்தில் தருவது.
2. சமுதாயப் பிரச்சனைகளை நமது பண்பாட்டு சூழலில் காணப்படும் குறியீடுகள், படிமங்கள், புராண இதிகாச கதைகள் என்பவற்றிள்
மூலமாக தருவது.
எழுத்தாளர் ஒருவர் முதலாவது விடயத்தினை சாதிப்பது சுலபம். ஆனால் இரண்டாவது விடயத்தினை சாதிப்பதற்கு திறமை வேண்டும். உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் தன் வயமாக்கி கொண்ட ஒருவர் அதனை நமது சூழலில் உள்ள குறியீடு, படிமங்கள், புராணக் கதைகளின் ஆதுணை கொண்டு புலப்பதிவு நிலையில் சித்தரித்துக் காட்ட வேண்டும்.
பண்டைய சிந்தனை மரபுகளை கொண்டு கால வடிவமாதல் எனும் கூறிறு, முதலாளிதி ஆவ வ நிலப்பிரபுத்துவ சமூகமைப்பில் சேகரிக்கப்பட்ட பண்பாட்டு மரபுகளை அப்படியே பாதுகாத்து மக்களுக்கு அளிக்க வேண்டும் எனப் பொருள்படாது. இது பற்றி
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
லெனின் விரிவாக விளக்குககின்றார்.
*பாட்டாளி வர்க்கக் கலை பற்றிப் பேசும் போது இதை
நாம் மனதில் கொள்ள வேண்டும். மனிதவர்க்கத்தின் வ. வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவும், அதனை மாற்றக் கூடிய ஆற்றலும் சாத்தியமானால் தான் பாட்டாளி வர்க்கக் கலையை படைக்க முடியும். இக் கலை வானத்திலிருந்து குதிப்பதில் ல. பாட்டாளிவர்க்க கலை நிபுணர்கள் என
அழைத்துக் கொள்பவர்களின் கண்டு பிடிப்பும் அல்ல. அப்படிச் சொல்வது எல்லாம் சுத்த
அபத்தம். பாட்டாளிவர்க்க
கலை என்பது முதலாளியம், நிலப்பிரபுத்துவ அதிகார சமூகம் ஆகியனவற்றில் சேகரிக்கப்பட்ட மனிதகுல அறிவின் தர்க்க ரீதியான வளர்ச்சியாகும்’
பாரமி பரிய மரபு களர் , குறியீடுகள், படிமங்கள் என்பனவற்றினை பாட்டாளி லார்க்க கண்னேட்டத்தின் நிலை நினி நு, ஏற்று அவற்றினை இன்றைய சமூக மாற்ற போராட்டத் தரிறி கான ge ugs is T 95 பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை மாக்ஸியம்
S. எப்போதும் முன்வைத்தே TToT Dái ¶ T கருணை நாடக மு மீ
纖 இத்தகைய பார்வையில் „LAl3505LD. - நின்று நோக்க வேண்டிய
ஒன்றாயிருக்கிறது.
இந்நாடகம் யாழ்பாணத்தில்
ဒိါး’့...-• இடம்பெற்ற சாதி எதிர்ப்பு
76তো மதிவானம் போராட்டத்தினை கந்தனின்
. V. கதையை துணையாகக்
கொண்டு விளக்குகின்றது
என்பதை முன்னர் பார்த்தோம். இவ்வகையில் முருகன் பற்றிய மரபு கதையினை நோக்குவோம்.
பழந்தமிழரின் இலக்கியங்களான சங்க காலத்து நூல்களில் முருகன் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. குறிப்பாக திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை முதலிய நூல்களில் முருகன் ஓர் சிறுதெய்வ வழிப்பாட்டுக்குரிய கடவுளாக வு மீ , திராவிட கடவுளாகவுமி சித்தரிக்கப்பட்டுள்ளார்.
‘கூட்டாக மனிதம் தன் பூர்வீக (Primitive) நிலையில் வேட்டையாடுதல், மிருகங்களை கொல்லுதல் முதலிய செயல்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாயிருந்தன. அது உண்மை. அதே செயல்களை சில வேலைகளில் செய்து பார்த்த போது கூத்து அல்லது ஆட்டம்
Page 66
6*7*72 (og
பிறந்தது. உண்மை வாழ்க்கையில் செய்யும் ஒன்றை அபிநயித்துச் செய்து பார்க்கும் போது மனதிலே எழுச்சியும், துணிவும், களிப்பும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஒருவன் செய்யும் போது அவர்களிடம் மந்திர சக்தியிருப்பதாக புராதன மனிதன் நம்பினான். அதற்கு அஞ்சினான். இந்த அடிப்படையிலேயே புராதன தமிழகத்தில் வேலன் எனும் ஒருவன் தோன்றினான் என நாம் ஊகிக்கலாம். உண்மை நிகழ்ச்சி பொய்மையாக மன நெகிழ்ச்சியுடன் மனிதனாற் செய்யப்படும் பொழுது கலையும் பிறந்து விடுகின்றது. இன்று கூட தாழ்ந்த சாதியினர் என்று கூறப்படுவர்களிற் பலருமி , ஆதித்திராவிடர்கள் எனப்படுவர்களும் வெறியாடுவதைக் காணும் போது பண்டைய வெறியாட்டு வழிபாட்டைப்
பற்றி சிறிது அறிந்து கொள்ளலாம்.
இவ்வகையில் பழந்தமிழரின் சிறுதெய்வ வழிபாடாக போற்றப்பட்ட வேலன் சாதாரண மனிதனில் ஏறிக் குறிசொல்பவனாக பணி டைய இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளான். வேலன் வெறியாட்டு என்பதே வேலன் என்பவனும், குறமகளும், சமானிய மக்களில் தெய்வமேறி ஆடப்படும் கூத்தாக அமைந்து காணப்பட்டது.
பிற்காலத்தில் ஏற்பட்ட ஆரிய நாகரீகத் தாக்கம் காரணமாக வேலன் எனும் கடவுள் கந்தன், சுப்பிரமணியம், ஆறுமுகம், தேவசேனாதிபதி, கார்த்திகேயன் என பல நாமங்களில் புதிய வடிவம் பெறுகின்றான். இந்நிலையில் முன்னைய வழிப்பாட்டு முறைகள் கைவிடப்பட்டு ஆகம முறையிலான சடங்கு முறைகளினால் முருகன் -வழிபடப்படுகின்றான்.
இவ்வாறானறோர் சூழலில் தான் முருகனுக்கு தெய்வானை எனும் எனும் உயர்குலத்தை சார்ந்த பெண் திருமணம் செய்து வைக்கப்படுவதுடன், அவனது முதல் மனைவியான வள்ளி (குறமகள்) பற்றிய கதையும் புதிய உருமாற்றம் அடைகின்றது. தெய்வானையை போல வள்ளியும் திருமாலின் மகள் எனவும், அவள் சிவமுனிவரிடம் தோன்றி வேடர் குலத்தவரிடையே வளர்ந்தவள் எனவும் தெய்வந்தஸ்து கற்பிக்கப்பிடுகின்றது. தெளிவாக நோக்கின் பாமரர் கடவுளான வேலன் அம்மக்களிடமிருந்து பிரிந்தெடுக்கப்பட்டு, உயர்வர்க்க கடவுளாக மாற்றப்படுகின்றான்.
வட இலங்கையில் கந்தன் வழிபாடானது ஆகம முறையிலேயே இடமி பெற்று வருகினிறது. என்.கே.ரகுநாதன் அவர்களும் அத்தகைய ஒரு வழிபாட்டு மரபினை பிணி பற்றியே தமது நாடகதி தினை ஆக்கியிருக்கின்றார். அவர் இக் கதையினை துணையாகக்கொண்டு எவ்வகையில் சமூக மாற்றப் போராட்டத்தினை சித்தரிக்க முனைகின்றார் என்பது சுவாரசியமான வினாவாகின்றது. இது குறித்து நோக்குவதற்கு அக்காலக் கட்ட மக்கள் எழுச்சி பற்றியும், இயக் கமி பறிறியுமி தெரித லீ அவசியமான ஒன்றாகின்றது. “யாழ்பாணத்தில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது 1960களில் புதியதோர் பரிணாமத்தை எட்டியது. இவ்வியக்கமானது கிளைப்பரப்பி, வளர்ந்து
கஸ்ட் - ஒக்டோபர் 2000 ஆ ஒ
வேர் பிடித்த போது பல்வேறு ஆளுமைகளை புத்திஜீவிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என தன் நோக்கி வேகமாய் ஆகர்ஷித்திருந்தது. இதன் விளைவாக தலித் மக்களின் நல் வாழ்வுக் கான போராட் டமானது புதிய உ தி வேக தீ ைத யுமி , உணர்வுகளையும் பெற்றிருந்நது. எதிரி யார்? நண்பன் யார்? என்பதில் தெளிவான நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். தெளிவாக நோக்கின் சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற விஞ ஞான பூர்வமான சமூகதி தளத்துடன் இணைந்திருந்தமை இதன் பலமான அம்சமாகும்.
சாதிய அடக்குமுறைகளினதும், தீண்டாமையினதும் பிரதான மையங்களாக தேனீர் கடைகளும் ஆலயங்களும் காணப் பட்டமையாலி , இநீ நிலையினர்களுள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதனையும், சமத்துவத்தினை நிலைநாட்ட முனைவதையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் முன்னெடுத்தது. இவ்வகையில் ஆலய பிரவேச போராட்டமானது மிக முக்கியமானதோர் விடயமாக காணப்பட்டது. பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாது என்ற மரபு உடைப்பட்டதுடன், சாதிய விடுதலைப் போராட்டத்திற்கான புதிய உத்வேகத்தினையும் மேற்குறித்த செயற்பாடுகள் கொடுத்தன. இவ்வாறானதோர் சூழலில் ஆயலப் பிரவேசப் போராட்டத்தினை மையமாக வைத்து எழுதப்பட்டதே ‘கந்தன் கருணை’ என்ற நாடகமாகும்.
இப்போராட்டத்தினை வெறுமனே ஆலயப் பிரவேசப் பிரச்சினையாக மட்டும் நோக்காமல் சமுதாய பிரச்சனையாக நோக்கியமை இந்நாடகத்தின் சிறப்பான அம்சமாகும். இவ்வம்சத்தினை சரித்திர துரிகை கொண்டு புதிய சித்திரம் வரைகின்ற இவ்வாசிரியர் சித்தரித்துக் காட்டுகின்றார்.
நாடகம் சமகால பிரச்சினைகள் சிலவற்றையும் ஆங்காங்கே வெளிப்படுத்துகின்றது. உதாரணமாக பாரத நாட்டில் நாகர்களின் சுயநிர்ணய உரிமைக் குறித்த போராட்டம், 1958 ஆண்டளவில் வடக்கில் வில்லுாண்டி என்ற மயானத்தில் தாழ்த்தப்பட்டவர் ஒருவரின் பிணத்தை எரித்தற்காக ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திலான உயிர்ப் பலி என்பன குறித்த செய்திகள் இந்நாடகத்தில் இடம் பெறுகின்றன. இப்பண்புகள் யாவும் நாடக ஆசிரியரின் நுண்ணியணர்வு மிகப் பரந்த இதயத்தை எனக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. வேறு வார்த்தையில் கூறுவதாயின் இவரது மனித நேயம் கால நுகர்வோடு விசாலிக்கின்றது. மக்கள் ஒட்டியதாய் கிளைப்பரப்புகின்றது. இவ்வகையில் இந்நாடகமானது ஆந்தைக் கூட்டங்களுக்கும், இருளின் ஆத்மாக்களுக்கும் எதிராக பாவிக்கும் கலை ஆயுதமாக திகழ்கின்றது.
நாடகத்தில் தேவலோகத்தை சித்தரிக்க முற்படுகின்ற போது இங்கு இடம் பெறும் உரையாடல்களை செந்தமிழ் வழக்கிலும், பூலோகத்தில் மனிதர்களிடையே இடம்பெறும் உரையாடலை பேச்சு வழக்கு மொழியில் ஆக்கியிருப்பது நாடகத்திற்கு வளமி சேர்ப்பதாக அமைந்து
காணப்படுகின்றது எனலாம்.
-G4)
Page 67
702 تG
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டங்களில் ஓர் அங்கமான ஆலயப் பிரவேசப் போராட்டத்தினை
கோட்பாடாக விபரிக்க முற்படாமல் அதனை நாம் முன்னர் குறிப்பிட்டது போல நமது பண்பாட்டு சூழலில் காணப்பட்ட கந்தன் பற்றிய கதையினூடாக இதனை விளக்க முற்பட்டுள்ளமை சிறப்பானது. இக்கதையில் சமூகப்பிரச்சனைகளில் ஒன்றான சாதியப்பிரச்சினையை
விளக்க முற்பட்டுள்ளார் இவ்வாசிரியர்.
முற்போக்கு கலைஞர்களின் சிறந்த நாடகங்களில் பொதுப்டையாகவும், கருத்து ரீதியாகவும் அலசப்படும் பிரச்சினைகள் ‘கந்தன் கருணை என்ற இந்நாடகத்தில் குறியீடுகளுக்குள் புகழிடம் தேடாமல், மிகத் துல்லிய மாகவும், கூர்மையாகவும், ஆழமாகவும் சித்தரிக்கப்பட்டு நேரடியாவே மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. வரலற்றுப் பார்வை, அழகியல் அக்கறை, வர்க்கச் சார்பு என்ற வகையில் இந்நாடகம் பட்டைத் தீட்டப்பட்டிருப்பது திடுக்கிட வைக்கும் அளவுக்கு வளம் சேர்ப்பதாக அமைந்து காணப்படுகின்றது. 褒 : : ಜ್ಞ: • நாடகம் பற்றி நோக்கிய போது இது தொடர்பில் காணப்பட்ட சில குறைபாடுகளையும் சுட்டிக் காட்டல் அவசியமானதாகும். சாதியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டங்கள் முனைப்புற்று மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட போது உத்தியோக அந்தஸ்து பொருளாதார மேன்மை பெற்றிருந்த தாழ்த்தப்பட்ட சிலர் அப்போராட்டத்திற்கு எதிரான பார்வை கொண்டவர்க ளாகவே காணப்பட்டனர். ஆலயப்பிரவேசப் போராட்டம் எதற்கு? ஏன் அவர்களின் கோயிலுக்குள் நுழைய வேண்டும்? தேனீர் கடையில் குடிக்காமல் வீட்டில் குடித்தால் தாகம் தீராதா? போன்ற கேலி நையாண்டிகளில் ஈடுப்படுகின்றவர்களாக அவர்கள் காணப்பட்டனர். ஆனால் போராட் டங்களால் ஏறி பட பல வெறி றிகளை அனுபவிப்பவர்களாகவும் இவர்களே இருக்கின்றனர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டல் அவசியமானதாகும். இவ்வாறானதோர் சூழலில் இவ்வகையான மனிதர்கள் பற்றிய பார்வை நாட்கத்தில் இடம் பெறாமை, ஆசிரியரின் வர்க்கப் போட்ட நோக்கிலான குழறு பாட்டினை எமக்கு
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
எடுத்துக்காட்டு கின்றது. தலித் ஒருவர் முதலாளியானால் ? அல்லது தலித் முதலாளியை எந்த வர்க்கத்தினுள் அடக்கு வது என்பன பற்றி தெளிவீனங்களையும் இந்நாடகம் கொண்டுள்ளது.
தவிரவும் 60களில் சாதிய எதிர்ப்பு போராட்டமானது சமூதாயப் பிரச்சினை யாகவும், தேசிய பிரச்சினையாகவும் இருந்தது போலவே தமிழ் இனவிடுதலைப் போரட்டமும் மக்கள் மத்தியில் முனைப்பு பெற்றிருந்தது. ‘பிரதான முரண்பாடு என்பது நாட்டின் சூழலையும், சமூக சக்திகளின் சேர்க்கையையும் பொறுத்து
உள்ளதாகும். எனவே பிரதானமாக உள்ள ஒன்று பிரதானமற்றதாகவும் பிரதானமற்றதாக உள்ள ஒன்று பிரதானமாகவும் மாறுதல்
இயக்கவியலாகும்.” “சமூகத்தை சரியாக கவனிக்கும் மார்க்ஸியவாதி இதை கவனிக்க வேண்டும். இல்லை யெனில் வரலாறு அவன் கையிலிருந்து நழுவிவிடும்.
இடதுசாரி இயக்கமானது தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டத் திணி மறுபக்கமான தமிழ் இனவிடுதலைப் போராட்டத்தினையும் இணைத்திருக்கு மாயின் தமிழ் ஜனநாயக - சக்திகளை தம்பக்கம் ஈர்த்திருக்கலாம். தமிழ் முதலாளித்துவ சக்திகள்தான் இப்போராட்டத்தினை இனவாதத்திற்குள் அமுக்கி சென்றார்கள். தமிழ் இன அடக்கு முறைக்கு எதிரான உணர்வு கொண்டிருந்த தமிழ் ஜனநாயக சக்திகள் இந்த அணியினை நாடவேண்டியவராகினர். இன்று இவ்விடயம். குறித்து இடதுசாரிகள் சுயவிமர்சனப் பார்வை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டத்தின் மூலமாக புதிய உத்வேகத்தினையும், உணர்வினையும் பெற்றிருந்த இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் யாவற்றையும் நிராகரித்துவிட்டு, தமிழ் மக்களின் பிரச்சினைளுக்கு ஆயுதம் ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அமிர்தலிங்கம் போன்ற பிற்போக்கு தலைமைகளே காரணம் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்: ဗွို శః இவ் வகையில் நோக்குகின்ற போது இடதுசாரி அணியினை சார்ந்து நின்ற எழுத்தாளர் என்ற வகையில் என்.கே.ரகுநாதனினி கநீ தனி கருனையிலுமி இக்குறைபாடு காணப்படுகின்றது. தற்காலப் போக்கில் சாதியம் என்பது ஒழிந்து விட்டது எனவும் அது பற்றி பேசுவத்ே அதனை ஊக்குவிக்க முனைவதாக அமைகிறது என்றும் சிலர் கூறுகின்றனர். அண்மையில் வெளியிடப்பட்ட தோழர் எம்.சி.சுப்பிரமணியம் நினைவு மலரில் துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்துக் கிடக்கின்றது. “மரித்துவிடவில்லை’ என்று ஒரு அன்பர் கருத்து தெரிவித் திருக்கின்றார். இவ் வகையான போராட்டங்கள் யாவற்றிலும் சாதியம் என்பது ஒரு போர்க் கால இசைவாக தவிர்க்கப்பட்டே வந்துள்ளது என்பதனை வாலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
G5)
Page 68
6*772ggg)
பக்தி இயக்கம் வீறு கொண்டெழுந்த பல்லவர் காலத்தி
நிலவுடமை வர்க்கம் வணிக வர்க்கத்திற்கு எதிரா போரைத் தொடுத்தது. தாழ்த்தப்பட்ட மக்களை தம்பக்க ஈர்க்கும் பொருட்டு, ‘ ஆவுரித்து தின்றுழகு புலையறோனும். கங்கைவார் சடையர் மீது பக் கொண்டு வீடுபேற்றினை அடையலாம் என குர கொடுத்த நிலவுடமை வர்க்கம் சோழர் காலத்தில் பெரு சம்ராஜியத்தை கட்டியெழுப்பியது. அத்தகைய பேரரசி சாதியம் நிறுவன வடிவம் பெற்று இறுக்கமடைறந்து மக்களை ஒடுக்கியமை இவ்விடயத்தில் நினை6 கூரத்தக்கதாகும்.
சாதியம் என்பது சமுதாய அமைப்பு சார்ந்த பிரச்சினையா இருப்பதுடன், அதனை உருவாக்கும் பொருளாதாரட சார்ந்ததாகவும் உள்ளது. சோஷலிஸ் சமுதாய அமைப்பில் தான் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் முற்றாக அழியும். அவ்வகையில் சாதிய போராட்டம் என்பது வர்க்கப் போராட்டத்தின் ஓர் அங்கமே ஆகும். அத்தகைய போராட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஓர் பணியாவே
தொடர் 68ம் பக்கம் பார்க்க.
திங்கள் மூன்றாவது மனிதன் இதழ்கள் கிடைக்கட்
பெற்றேன். நன்றி. இதழ்களை இங்குள்ள நண்பர்களுக்கு அறிமுகம் (சாத்தியமானளவு) செய்துள்ளேன்.
ஆறாம் திணையில் சிற்றிதழ் வரவுப் பக்கத்தில் பதிவுகுறிப்பு வந்துள்ளது பார்க்கவும். நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்பு கொள்வது ஒரு விதமான பண்பாட்டு உணர்வுக்கு ஆட்பட்டு விட்டது போல் உணர்கிறேன்.
காலி வீதியில் நாம் நடந்து திரிந்து-பேசிக் கொண்டிருந்த மனநிலையை, அவ்வப்போது தொலைபேசியில் உரிமையுடன் பரிமாறிய மனநிலையை மீண்டும் வரவழைகி கிறேன் . அந்த உணர்வுகளுக்குள் உணர்ச்சிக்குள் அமிழ்ந்து வர கொஞ்சம் எடுத்து தொடர்கிறேன். எதையும் கட்டுப்படுத்த முடிய வில்லை. முதலில் நான் நல்ல மனிதன்(ர்)ஆகவே இருக்க விரும்புகிறேன். டே, உனது கரங்களை கட்டிப்பிடித்து. உனது மனைவி, உனது வாழ்க்கை உனது பயணம். யாவும் சிறக்க எனது.? ஏதோ எடுத்துக்கொள். நிற்க நீ தொடர்ந்து இதழ்கள் கொண்டு வருவது மகிழ்ச்சி. இதை பலமுறை நான் உனக்கு வலியுறுத்தி உள்ளேன். நீ யார் என்பது உனது அடையாளம் யாவும் மூன்றாவது மனிதனில் தான் உண்டு. தயவு செய்து இதை மறந்திடாதே. டேய்! நீ நினைக்கிறியா நல்ல எண்ணங்களும் உழைப்பும் மட்டும் உரிய காத்திரமான-வரலாற்றுக்குத் தேவையான-இதழை கொண்டுவர போதும் என்று நினைக்கிறியா? எனினைப் பொறுதீத வரை முடியாது எனிறு நினைக்கிறேன். வேண்டு மானால் எத்தனை இதழ்கள் என்ற கணக்கெடுப்புமாத்திரம் நடத்த முடியும். ஆனால் ஒரு குறித்த காலத்து சமூக சிந்தனை படைப்புத் தள தி தில் அது எதி த கைய விளைவுகளை கொண்டுள்ளது என்பதில் தான் தங்கியுள்ளது.
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
இதற்கு எம்மிடையே தேடலும் கற்றலும் விமர்சன நோக்கும் எப்பவும் இழை யோடும் பொழுது தான் சாத்தியமாகும். நீ இன்றும் வெறும் உணர்ச்சி நிலையில் மட்டும் நிற்கிறாய் போல் தெரிகிறது. இது ஊடக வெறி சார்ந்த விளையாட்டுக்குள் உன்னை இழுத்துச் சென்றுவிடும். பிறகு நிமிர முடியாதவாறு செய்துவிடும்.
நண்பா டேய். நான் இவ்வாறெல்லாம் உனக்கு சொல்வதற்கு உரிமை எடுக்கு மளவிற்கு நீ என்னுள் இருக்கிறாய். அதை நீ புரிந்து கொள்ளவேண்டும். மூன்றாவது மனிதன் தொடர்ந்து வருகிறது, அழகாக இருக்கிறது, சந்தோஷமாக இருக்கிறது, எல்லாமே உண்மை தான். ஆனால் விடயப் பொருட்பரப்பு குறைந்து உனது கேள்விகள், தேடல்கள், கற்றல்கள், தெரிவுகள் யாவும் இன்னும் விசாலிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். மீண்டும் கூறுகிறேன் எத்தனை இதழ்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் வந்த இதழ்கள் ஒரு குறித்த காலத்தின் - சமகாலத்தின்- போக்கை உணர்த்திச் செல்லும்-கடந்து செல்லும் வாயில்களைத் திறந்து விடக்கூடிய முழுச் சாத்தியங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
உதாரணமாக இதழ் 08யைப் பார் சுரா, யோகநாதன் இவர்களின் தெரிவுக்கான கருத்தியல் அரசியல் சமகால முக்கியத்துவம் என்ன எனக்கு புரியவில்லை (ஆனால் நிச்சயம் புரிய வேண்டுனெ எதிர்பார்க்கவும் முடியவில்லை. ஆனால் உன்னிடம் கேட்பதற்கு எனக்கு உரிமை உண்டு என்று கருதுவதால் கேட்கிறேன். அப்படியொன்றும் உரிமை இல்லையாயின் அதனைப் பொருட்படுத்தாதே) உனது நேர்காணல் தொடர்ச்சியில் நீ எதிர்பார்ப்பது, சமகாலத்துக்கு நீ அவற்றின் மூலம் விட்டுச் செல்வது அல்லது எதிர்வினை புரிவது என்ன? ஆமா நீ எப்படி இருக்கிறாய் நான் ஏதோ. நல்ல மாதிரி இருக்க. முயல்கிறேன். போராடுகிறேன். ஆறாந்தினை முதன்மை இணை ஆசிரியர் பதவி வேலை, தமிழக சூழலுடன் உறவாடல் விலத்தி நின்று பார்த்தால். அப்பப்பா அவற்றை விபரிக்க முடியாது. அதைவிடு நேரில் பேசக் கூடியவை அது. நீ தமிழ் இனி 2000இல் கலந்து கொள்கிறாயா?! எவ்வளவோ பேச நினைத்தும் இயலமுடியவில்லை. பின் தொடர்கிறேன். பதில் போடு. அனைத்து நண்பள்களுக்கும் சுகம் கூறு.
- மதுசூதனன் - தமிழகம்.
©
Page 69
6*77లైgg
செ.யோகநாதனின் நேர்காணலில் ஈழத்து கி பறி றிக் கேட்கப்பட்டதற்கு, அவருடைய
கவிதை
பதில் தற்கால ஈழத்துக் கவிதைகளின் போக்கைப் படித்துணர்ந்து கூறிய
கருதிதாக தி தெண் படவில்லை.
இலங்கையிலி எழுதப்படுபவை நடுநிலையான கவிதைகள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, ஈழத்துக் கவிதைகள் தனக்கென்றொரு வழியில் நடை போட்டுச் செல்கின்றன. கடந்த தசாப்தத்தில் பெயர் சொல்லும் Jqஎழுதிய, வெளியிட்ட எத்தனையோ இளையவர்
கவிதைத் தொகுதிகள்
களை உதாரணம் காட்டலாம்.
“மூன்றாவது மன வரவு மிகவும் அ உங்கள் பணிை
செல்ல வேண்டு
母あpー8 கிடை அமைப்பிலும், த, இ அட்டைக்குப் பய நல்லது. எனினு ஒளிப்படங்களைப்
நிறுத்தி விடாதீர்!
வருகின்றன.
ஒவியம் மீது உ
Grmsoopä55s sioui L L LL II
களிடம் கவிதையின் போக்கு குறித்து எழு ப ப ப பட ட கேள்விக்கு மிகச் சரியான பதிலையே அளித கு ள எார் . ‘இந்த முட்டையில் மயிர் பிடுங் கரிப் பார்க்கின்ற தொழில் எனக்கெதற்கு?’ கவிதைகள் அனை தி அது மி
926T66. களில், ‘அம்மா’வில் தெரியும் அழகும் நேர்தி தியும் ‘மறைத்தலின் அழகிற்குள்’ இல்லை. அது போன்றே அட்டைப் பட
சிறப்பாக
ஓவியமும். கையில் பேனாவும், துரிகையும் கிடைத்துவிட்டால் அவர்களின் வக்கிரத்தனங்களை எல்லாம் தீட்டி விடவேண்டுமெனவும் வேலையற்ற கூட்டமொன்று அதை அழகென்றும், நளினமெண் றுமி
உன்னதமென்றும், ஆளுகி கொரு கதைபேசி வளர்க்க வேண்டும். எல்லா தர்மங்களும் உதாசீனமாக்கப்பட்ட உலகில் கலைகளின் தர்மத்தைக் காப்பதற்கு இவை பின நவீன வாததி தரினி செல்வாக்கில் விளைந்தவை என்றால்,
யாருமில்லைத் தான்.
இந்த பின்நவீனத்துவம் தேவை தானா? பண்பாடும், கலாசாரமும் கலைகளிலும் திகழவேண்டுமென்று எதிர்பார்க்க முடியாதா? இத்தகைய படைப்பாளிகளின் நோக்கமென்ன? தேவையென்ன? எதைச் சொல்ல
வருகிறார்க 62
ఫీడ్లనీళ్ల
சிmகை '"
அக்கறையோ அல் கூட ஒளிப்படத்தி இதழ்களும் அட் களைத் தான் பட எனது கவிதைத் குறிப்பை வெளியிட் நன்றி. வெளிவரு இனி ஒரு விரி குறிப்புகளை பிரசு
னெது நேர்கான எழுத் இனைப் புதி த இருக்கிறீர்கள். பி. பிழைகளை உங் வாசகர்களும் திரு 38 மீ பகி கமீ :- "கைலாசநாதனும்
உள்ளன.
என்பது அங்கை 38 மி பிரசுரிக்கப்பட்டு மு
பக கமீ
என்பது பிரசுரிக்கட்
ஆகஸ்ட் - ஒக்டோபர் 2000
நன்’ தொடர்ச்சியான த்தியாவசியமானது. முன்னெடுத்துச்
பஹீமா ஜஹான் மெல் சிரிபுர
த்தது. இதழ்கள் த்திலும் மெருகேறி முறை ஒவியத்தை ன்படுத்தியுள்ள்கள். ம் அட்டையில் பயன்படுத்துவதை ள். நமது சூழலில் ள்ள குறைந்தபட்ச
39ம் பக்கம்:- 2வது வரி, சர்வதேச தமிழ்ப் படைப்பாளிகளது என்பது சர்வதேச, தமிழ்ப் படைப்பாளிகளது 41ம் பக்கம்:- இரண்டாவது பந்தி, 20ம் வரி ஒரு எழுத்தாளனை எடுத்துக் என்போன்ற ஒரு எழுத்தாளன்.
45 பந் 8வது வரி, இருந்தவர் லட்சுமி தான் என்பதோடு, அவர் இன்னும் வாழ்கிறார் என்ற
கொண்டால் என்பது
பக் கமீ :-
வரி சேர்க்கப்பட வேண்டும்.
எனது நேர்காணலை சிறப்பாக
வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றி.
செ.யோகநாதன், கல்கிசை
லது பிரக்ஞையோ ல் இல்லை. பல டையில் ஒவியங் பண்படுத்துகின்றன. தொகுதிக்கான சிறு டிருந்தீர்கள். மிக்க ம் புத்தகங்களுக்கு
Iந்த விமர்சனக்
ரியுங்கள். அமரதாளப் கிளிநொச்சி
ல்ெ சில தவறுகள் துப் பிழைகளை ாளில் திரு தீ தி ர்வரும் கருத்துப் களோடு சேர்ந்து ந்த வேண்டும்.
வரி,
அங்கையனும்’
20வது
பன்கைலாசநாதன். 23 வது வரி, தற் பரிசு பெற்றது பட்டது.
ன ற |ா வ து மனிதன் 8வது இதழ் 国öß_需。* அடட் டைப் பட மி ஆ ண | த க' க ச" சரிநி த ைன ைய த த ரு க ற ஆவ * அழகரிய லோ டு பார்க்கலாமே. என நீங்கள் கூறலாம். அப்படியானால் அந்த அழகியல் பார்வையில், ஆணின் நிர்வானத் தைத் தந்திருக்கலாம். ஏன். ஆண்களின் நிர்வாணத்தை பெண்கள் இரசிப்பதில்லை என்ற தவறான ஒருபக்கச் சார்பான, ஆண் ஒருவனின் சிந்தனை பிறழ்வினாலா இப்படத்தை முகப்பட்டையில் போட்டீர்கள்?
நிர்வாணம் என்பதற்கு விசாலமான பொருள் இருப்பதெனி பது உ ன மையே. இயற்கையை ஒட்டிய கருத்தோடு நிர்வாணம் உன்னதமான கருத்தைத் தந்தாலும். ‘மூன்றாவது மனிதன் என்கிற ஒரு கனதியான சஞ்சிகையில் இதைத் தவிாத்திருந்தால் அது சாலவுமி பொருதீத மாயம் அமைந்திருக்கும்.
என ன வோ
என .கே.ரகுநாதன் அவர்களின்
*கந்தன் கருணை’ நாடகம் 30 வருடங்களின் பின், ஓர் நினை ஆட்டலின் வெளிப்பாடாக, மீண்டும் வெளியிடப் பட்டுள்ளது. அந் நாடகத்தில் வருகிற பஜனைப்பாடல் மிகவும் அற்புதமானது.
G67)
Page 70
G77莹回
டானியல் காலத்து சாதி ஒழிப்பு போராட்டம் டொமினிக்ஜீவா அவர்களின் காலம் இதுவரை மட்டுமாக நீண்டு வருவதென்பது உணர் மைதான். போராட்டக் களங்களின் அசுரப்புயலால் “சாதியம்’ புதைந்து போயுள்ளதே தவிர ஒழிந்து போகவில்லை. ஒழிந்து போக வேண்டிய இலட்சியப் பயணத்திற்கான நினைவூட்டல் வெளிப்பாட்டினி குறியீடாக உங்கள் இந்த மீள் பிரசுரத்தை வரவேற்கிறோம். அடிமேல் அடிஅடித்தால்தான் அம்மி நகருமே அல்லாது, என்று சொல்லுவதாலி நகரப்போவதில்லை நாடகத்தின் இறுதிக் கட்டத்தில் கந்தன் வேலாயுதத்தையே தூக்கித்தந்து போராடு. சொன்ன பிறகு “அகிம்சை மெளனம்
காப்பதே சிறந்தது.
*அடிப் பேணி ’
மட் டு மீ
என்று
செ.யோகநாதனுடைய இலக்கிய பகிர்வு போராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய தமிழ்த் தேசியம் பற்றிய பார்வையின் அலசல் இந்திய நாட்டின் முஆது பெரு எழுதி தாளருமி படைப்பாளருமான சுந்தர ராமசாமி அவர்கள் உள் வாங்கிய உலக இலக்கியங்களின் தாக்கங்கள், சினிமா - ஊடகத்துறைகளினால் ஏற்படுகிற கலாச்சார தாழ்வுகள் என்பவற்றோடு, அவர் ஒரு தனிமனிதனாய் இருந்து, இந்த இலக்கிய உலகை நோக்குகிற தனி மையையுமி நீணர்ட தனது இலக்கியப் பயணத்தில் தான் சந்தித்த சகல நிகழ்வுகளையும் சுவைபடத் தந்துள்ள விடயங்கள் அனைத்தையும் வெளியிட்டிருந்தீர்கள். ஒரு கலைஞன் நிறைய விடயங்கள், மற்றும் ஒரு எழுத்தாளன்
உள் வாங்க வேணி டிய
அவதானிக் க வே ணி டிய நுண்ணியதான விடயங்கள் எல்லாமும் நிறைந்து காணப்பட்டன. மிகவும் தேவையான
அவ்விடயதானங்களில்
ஒன்றை தேடலின் ஊடாகத் தேடி நீங்கள் எம்மிடம் கையளித்துள்ளீர்கள். சேலைக்கிளி அவர்களுடனான சந்திப்பில் அவரின் துணிச்சலான - மனம் திறந்த கருத்துக்கள், முக்கியமானசெவ்வியைத் த நீ தரிரு நீதது. அது போல “மறைத்தலின் அழகு கிழக்கு பூமிக்கே உரித தான மணி வாசனை சொல்லழகுடன் வந்திருந்தது. அச் சிறுகதை நடையினைப் பாராட்டத்தான் வேணடும்.
கவிதையில் ப போன்றதொரு உட்புகுந்தால் னையும் சென்ற இல்லையேல் * குறிப்பிட்ட வா அவி விலக்கிய சென்றடையும்.
து.வீ. ওচ66তম
சமுதாயம் மாற்ற மறு கீ கசின ற த மருள் கசினி ற இடைவெளியின் எளப்போஸ் மூ6 கிடைத்தது. 6 மறைத்தலின்
கிழக் குப் பகு பாரம்பரியத்தை பெண்ணியத்ை அவசரம் கதாசி
கந்தண் கருணை என்.கே.ரகுநாதனி செய்யப்படுகின்ற தாழ்த்தப்பட்ட ப ஒடுக்கப்படும் அவ்வகையில் இந்நாடகம் குறி
சான்றாதாரங்க
1. கேசவன்
மதுரை
2. 632 đ55 6_}TTSE
சென்ை
3. லெனின்
மார்க்ஸி
4 ரகுநாத6 (கையெ
5. - - - - -
7. - - - - -
8. வெகுஜ எதிரான பக்-121
9. கேசவன்
10. ரகுநாதன் முன்குறி
11. st)
மிகச் சி
கஸ்ட் - ஒக்டோபர் 2000 ஆ 9
ாதி நடையினைப் ளிமையான நடை சாதாரண மனித டைய வாய்ப்புண்டு. ரிநிகர்’ போல் ஒரு கர் மட்டத்தையே
வெளிப்பாடும்
திருப்பதி
சபுரம்
த்தை எதிர்கொள்ள
T2 அலி லது , T நீனி ட பின் சேந்தன் -
2ம் 8வது இதழ் ஸ். நஸ்றுதீனின் அழகு சிறுகதை தரி விவசாயப் உணர்த்தியது. 5 அழகுபடுத்தும் ரியருக்கு.
அசிங்கமென அலறுபவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பால் என்பதனை வெள்ளைப் பால் என கட்டியம் கூறுவது அவசியமா? அட்டைப் ந சுறுதி தீனினி மறைத்தலின் அழகு சிறுகதையையும் பாலியல்
பட தீ ைத யுமி
எனப் பார்ப்பவர்கள் சற்று விசாலித்துப் பார்க்க வேண்டும். அம்மா சிறுகதை பிஞ்சு உள்ளங்களில் ஏறி பட ட பிறானி டலாக வெளிப்பட்டுள்ளது. கவியோவனின் கேள்வி என்ற கவிதை பாவத்தினை
மாற்றுக் வாசகர் உணர்வை பகிர்ந்து கொள்ள சிறந்த எனது உறுதிப்பட . வெளிவர வேண்டிய இதழ்களுக்காக எழுதப்படும் குரல்கள் இதழ்களில் பேசப்படுவது பிரசுரிக்கப் படுவது நிச்சயப்படல் வேண்டும்.
பறைகின்றது. குரல்கள்
களம். எண்ணம்
சி. ரேவதன் 666ófluum
பில்.
ன் கந்தன் கருணை நாடகம் இங்கு மறுமதிப்பீடு து. இந்நாடகம் வட Dக்களின் குரலாக அமைகின்ற அதே சமயம் ஏனைய மக்களின் விடுதலைக் சுரண்டலற்றி மனிதத்துவத்தை இலக்காக த்து எழுத வேண்டியுள்ளது
6T -
r.கோ. - தலித் இலக்கியம் சில கட்டுரைகள்
(1998) பக்-2627
பதிக. - பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் -
ன(1966) பக்-13
மதிவானம் - ‘டானியலின் தலித்தியமும் யமும் ஓர் குறிப்பு’ மல்லிகை (இலங்கை) இதழ் 255
ன்.என்.கே. - ‘கந்தன் கருணை’ ழுத்து பிரதி) பக்-06
n — n b — — — — шдѣ—14
SSSSSSSSSSSSSLSSS பக்-14
னன், ‘இராவனா சாதியமும் அதற்கு போராட்டங்களும் யாழ்பாணம்(1989) (விரிவாக விளக்கப்பட்டுள்ளது) கோ. 'அடிமைகள்’ (நாவல்) முன்னுரையில் 1984. ர்.என்.கே. கந்தன் கருணை பிரதியில். ப்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. தி தமது ‘பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் நூலில் ப்பாக ஆராய்ந்துள்ளார்.
மே.கு.நூல் - மேற்கோள் என்.கே.ரகுநாதன்
இலங்கையில்
சாதிய ரீதியாக
கீதமாகவும் ஒலிக்கின்றது. கொண்ட
G68)
Page 71
மனசு குளிர்ந்த
Gigs
L
எஸ்.எல்.எம். ஹனிபா மெயின் வீதி,
ஒட்டமாவடி, தொலைபேசி 065-57201
வாழ்த்துக்கள்
Indir LeoTEDCOOT
OTsug.
Page 72
BOOKS Wo
41, Batticaloa Road, Kalimunai. Tel: 067-20493
கணனிப் புத்தகங்கள், மருத்துவப் புத்த இந்தியப் புத்தகங்கள், பாடசாலைப் புத்த அனைத்து புத்தகங்களும். ஒப்செற் அச்சு வேலை, அச்சு சாதனப் போட்டோ பிரதி காகிதாதிகள் மற்றும் கணனி டைப்செற்றிங். ஒரே கூரையின் கீழ்.
நங்கள். ங்கள்
பொருட்கள்,