கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்

Page 1

பாரம்பரியத் ே

Page 2

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் புறும்பரியத் தேடல்
Traditional Dramas in Vanni Traditional findings by Aruna Selladurai

Page 3
ஆசிரியர் அருணா செல்லத்துரை
ஆசிரியரின் பிற நூல்கள்
"வீடு" தொலைக்காட்சி நாடகமும்/வானொலி நாடகங்களும் "WEEDU" TELE DRAMA / RADIO DRAMAS
"அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள் (வானொலி / தொலைக்காட்சியில் ஒலி / ஒளிபரப்பாகியவை) "ARUNASELLIADURAL YN MELLITYSAI PADALKAL CLIGHT SONGS)
"நந்தி உடையார்" வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் (1996ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு / 1996ம் ஆண்டு "உண்டா" தங்க விருது) "NANTHIUDAYAR' WANN HISTORICAL & TRADITIONALDRAMA (WON 1996 SAHİTHIYA AWARD/WON 1996 "UNDA ABHINANDANA" GOLD AWARD)
"இலங்கையில் தொலைக்காட்சி" வரலாற்றுச் சுவடி (1997ம் ஆண்டு வடகிழக்கு மாகாண இலக்கியப் பரிசு) "TELEVISION IN SRI LANKA" CWON 1997 NORTH EAST LITERARY AWARD)

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
பாரம்பரியத் தேடல்
Traditional Dramas in Wanni Traditional findings by Aruma Selladurai
Aruma Publications A l5/l/l, Manning Town Housing Complex Mangala Road, Colombo- 8 Sri LalInka. ጊጭ : 688466
அருணா வெளியிட்டகம் A 15/1/1, மனிங் ரவுண் வீடமைப்புத் தொகுதி மங்கள வீதி, கொழும்பு - 8 இலங்கை, or : 688466

Page 4

முன்னுரை
பேராசிரியர். சி. மெளனகுரு
எழுபதுகளில் எனக்கு அருணா செல்லத்துரை அறிமுகமாகின்றார். முல்லைத்தீவுக் கூத்தை கொழும்பு வாழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் கலைஞராக.
இலங்கைக் கலைக்கழகத்திலே தலைவராகப் பேராசிரியர் வித்தியானந்தனும், செயலாளராகப் பேராசிரியர் சிவத்தம்பியும் (அப்போத இருவரும் கலாநிதிகள்) கடமை புரிந்த அக்கால கட்டத்தில நான் அதில் செயற்குழு உறுபபினராயிருந்தேன்.1974இல் கலைக்கழகம் நடத்தியநாடக விழாவில் அருணா செல்லத்துரை தயாரித்த முல்லைத்தீவுக் கோவலன் கூத்து இடம் பெறுகிறது. முதன் முதலாக கொழும்பு மக்கள் முல்லைத்தீவுக் கூத்துப் பாணியை அன்று காணுகின்றனர். அக்கூத்து எனக்கும் புதிய அனுபவத்தைத் தந்தது. அத்தோடு அருணா செல்லத்துரையின் அறிமுகத்தையும் தந்தது.
மிகச் சிறப்பாக அந் நிகழ்வைச் செய்தமைக்காக அன்று அவருக்கு ஒரு சான்றிதழும் வழங்கப்பட்டது. அன்று சான்றிதழ்களில் வெற்றி பெற்றோரின் பெயர்களையும் ஏனைய விபரங்களையும் எழுதும் பொறுப்பினை செயற்குழு உறுப்பினருள் வயதிற் குறைந்தவனான என்னிடம் பேராசிரியர் வித்தியானந்தன் ஒப்படைத்திருந்தார்.
அச் சான்றிதழின் ஒளிப்படப் பிரதியை இந்நூலின் 73ம் பக்கத்தில் கண்டபோது நான் வியப்படைந்தேன். 1974ல் அச்சான்றிதழில் அருணா செல்லத்துரையின் பெயரையும் ஏனைய விபரங்களையும் எழுதிய எனக்கு ஏறத்தாழ 26வருடங்களின் பின் இன்று அருணாவின் கூத்துச் சம்பந்தமான நால் ஒன்றுக்கு முன்னுரை எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இருபத்தி ஆறு வருடங்கள் இருவரும் வெவ்வேறு பாதைகளிற் பயணம் செய்தாலும் இந்நூல் மூலம் ஒரு புள்ளியில் மீண்டும் இணைகிறோம். கால

Page 5
ஒட்டத்தில் இத்தகைய பல நிகழ்வுகள் நடைபெறுவது இயல்பு என்பது ஒருபுறமிருக்க, வாழ்க்கை என்பதன் சுவராஸ்யமும் இவைதாம்.
அறுபதுகளில் பேராசிரியர் வித்தியானந்தன் கூத்துக்களைச் செம்மைப் படுத்தி மத்திய தர வர்க்கப் பார்வையாளருக்கு அதனைப் படச்சட்ட : மேடையில் அறிமுகம் செய்தார். பேரலைபோல அவ்வியக்கம் செயற்பட்ட காலகட்டம் அது. தமிழரின் நாடகமரபுகளை மீண்டும் அழுத்தமாகக் கூறிய காலங்கள் அவை.
அவ்வியக்கத்திலே தீவிரபங்கு கொள்ளும் வாய்ப்பு பேராதனைப் பல்கலைக்கழகத்திற் படித்துக் கொண்டிருந்தமையால் எம் போன்ற சிலருக்கு எற்பட்டது. வித்தியானந்தன் பாணி பாடசாலைகளிலும், மன்றங்களிலும் பிரபல்யமாயிற்று. அருணா செல்லத்தரை முல்லைத்தீவுக் கோவலன் கூத்தைப் பெரும்பாலும் அப்பாணியிலேயே தயாரித்திருந்தார்.
வட்டக்களரியில் ஆடப்பட்ட வீரியம் மிக்க கூத்தை படச்சட்ட மேடைக்குள் சுருக்கி அதன் வீரியத்தை வித்தியானந்தன் இல்லாமலாக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பிற்காலங்களில் எழுப்பவும்பட்டது.
முல்லைத்தீவுக் கோவலன் கூத்தை கொழும்பிலே படச்சட்ட மேடையில் அவைக்காற்றி 20 வருடங்களின் பின் முல்லைத்தீவுக் கூத்துப் பாணியில் அமைந்த வேழம்படுத்த வீராங்கனை (ஆனைகட்டிய அரியாத்தை) எனும் கூத்தை வட்டக்களரியில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியரைக் கொண்டு கொழும்பில் மேடையிடுகின்றார்.
ஒருவகையில் நகரப்புறப் பார்வையாளருக்குப் படச்சட்ட மேடை மூலம் அறிமுகமான கூத்தை அதிலிருந்து விடுவித்து மீண்டும் வட்டக் களரியில் அவைக்காற்றி நகரப்புறப் பார்வையாளருக்கு கூத்தின் முழு வீரியத்தையும் அறிமுகம் செய்யும் முயற்சியாக இது அமைகிறது.

இக் கூத்தின் ஒத்திகை ஒன்றினுக்கு என்னையும் அழைத்தருந்தார். சில ஆலோசனைகள் கூறும் வாய்ப்பையும், மாணவர்க்குச் சில பயிற்சிகள் அளிக்கும் வாய்ப்பையும் எனக்குத் தந்தார். பயிற்சியும், ஒத்திகையும் அதிற் பங்கு கொண்ட திறமை மிகுந்த மாணவியரின் ஆடல் பாடல்களும் (முக்கியமாக அருட்செல்வி, தயாளினி) இப்போதும் ஞாபகத்தில் பசுமையாக உள்ளன. அக்கூத்து ஒளிப் பேழையாக வெளியிடவும் பட்டது. கூத்து ஒன்று ஒளிப்பேழையில் வெளியிடப்பட்டது அதுதான் முதற் தடவை என்று நினைக்கிறேன். கடல் கடந்து வாழும் தமிழ் மக்களுக்கும் அக் கூத்தைப் பார்க்கும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டது.
அருணா செல்லத்துரை ஒர் ஊடகவியலாளன் (Media Man) தொழினுட்ப ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி என்பன அவரது பிரதான ஊடகங்கள். வெறும் ஊடகவியலாளராக, தொழினுட்பக்காரராக அவர் இல்லை. அவர் ஒர் எழுத்தாளர், கற்பனைமிக்க ஒரு கலைஞர். நவீன தொழினுட்ப ஊடகங்களுடன் பரிச்சயமான இவர் பாரம்பரியக் கலைகளிலும், (முக்கியமாக கூத்துக் கலையில்) ஈடுபாடு கொண்டவர். இத்தகையதொரு கலவை மிக அபூர்வமானது. இதுவே ஏனைய ஊடக வியலாளரிடமிருந்து அருணாவைப் பிரிக்கும் அம்சமாகும். அத்தோடு அவரது சிறப்பம்சமும் இதுவே.
எழுபதுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற் சேர்ந்த இவர் தயாரிப்பாளராக, வானொலி எழுத்தாளராக, வானொலி நடிகராக, பகுதிநேர அறிவிப்பாளராகக் கடமை புரிந்தார்.
1981 இல் தொலைக்காட்சிப் பயிற்சியினை மேற்கு ஜெர்மனி சென்று பெற்றுக் கொண்டார். 1984 இல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சென்று இப்பயிற்சியில் மேலும் தேர்ச்சி பெற்றார். தம் பயிற்சியினை தான் உழைக்கும் நிறுவனத்திற்குப் பயன்படுத்திய அதே வேளை சக்திமிக்க அவ்வூடகங்களைப் பயன்படுத்தி முல்லைத்தீவுப் பிரதேசக் கலைகளை முக்கியமாக கூத்து, நாடகக் கலைகளை முல்லைத்தீவுக்கும் அப்பால் வாழும் மக்களுக்கும் அறிமுகமாக்கினார். 8

Page 6
இன்றைய தொழினுட்பயகத்தோடு இணைந்து எழாத எதுவும் பின்னடைந்துவிடுகிறது. தொழினுட்பயகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய தொழினுட்ப வளர்ச்சி எம்மைப்பிரமிக்க வைக்கிறது. மனிதர்கள் தொழினுட்பத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடுகின்ற அவலத்தையே காணுகின்றோம். வெறும் தொழினுட்ப வளர்ச்சியோ அதில் நிபுணத்துவமோ மாத்திரம் போதாது. அவ்வளர்ச்சி மனித வாழ்வோடும் மனித பண்பாட்டோடும் பிணைக்கப்பட வேண்டும் என்று அறிஞர் கூறுவர்.
முல்லைத்தீவு மக்கள் கலையினை கலை வேர்களை தொழினுட்பத்துடன் அருணா இணைக்கின்ற பொழுதுதான் தொழினுட்பம் உயிர்ப்பு பெறுகின்றது. முல்லைத்தீவுப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் நந்தி உடையாரை, வானொலியில் நாடகமாக ஒலிபரப்பியமை, நந்தி உடையாரை ஒலிப்பேழையில் (இப்போது இதனை இறுவட்டு என்று அழைக்கின்றனர்) அமைத்தமை, ஆனையை அடக்கிய அரியாத்தையை ஒளிப்பேழைக்குள் அடக்கியமை யாவும் அருணா வெறும் தொழினுட்ப ஊடகவியலாளன் மாத்திரமன்று தொழினுட்பத்தை மனித பண்பாடுகளை, பண்பாட்டின் அடிவேர்களைக் கூறப் பயன்படுத்ததும் பண்பாட்டு ஊடகவியலாளன் என்பதனையே காட்டி நிற்கின்றது.
எழுத்தாளனான அருணா இதுவரை மேடை நாடக நூல், தொலைக்காட்சி நாடக நூல், இலங்கையில் தொலைக்காட்சி வரலாறு பற்றிய நூல் ஆகியவற்றை வெளியிட்டார். இன்று அவர் வன்னிவளநாட்டுக்கலைகள் சம்பந்தமான ஒர் அறிமுக ஆய்வு நூலையும் வெளியிடுகிறார்.
வன்னியின் வரலாறும், வரலாற்றிற்கூடாக அவ்வள நாட்டில் முகிழ்த்தெழுந்த கலைகளும் சிறப்பாக கூத்து, இசை நாடகம், நவீன நாடகக் கலைகளும் அவற்றின் இன்றைய போக்குகளும் இந்நூலிற் கூறப்படுகின்றன. தான் தயாரித்த நாடகங்கள் சம்பந்தமாக ஏனையோர் கூறிய தகவல்களையும் இந்நூலிற் தந்துள்ளார்.
அவை அனைத்தையும் ஒருசேரப் பார்க்கையில் அருணாவின் உழைப்புக் தெரிகிறது. தான் சார்ந்த தொழிலில் தீவிர ஈடுபாட்டுடன் உழைப்பதுதான்

ஒருவருக்குச் சிறப்பும் மகிழ்ச்சியும் தரும் செயலாகும். தன் மகனையும் இத்துறையில் தன்னைவிடத் தேர்ச்சி பெற்றவராக்கும் திட்டத்துடன் ஊடகத்துறையிற் மேல்பயிற்சி பெற லண்டனிலுள்ள சிற்றிஇஸ்லிங்ரன் என்னும் கல்லூரிக்கு அனுப்பியமை தன் துறையில் அவர் வைத்த பக்திக்கான அடையாளம். வன்னியில் இன்று கலை வளர்ப்போர் ஏராளம். வெவ்வேறு முறைகளிலும், திசைகளிலும் வன்னிக் கலைகள் வளர்ந்து கொண்டுவருகின்றன. அவற்றையும், அவை பற்றிய தகவல்களையும் இணைத்திருப்பின் இந்நூல் மேலும் பொலிவு பெற்றிருக்கும். எனினும் அவரின் அயரா உழைப்பினால் வன்னிக் கலைகள் பற்றி அறிமுகம் ஒன்றாயினும் கிடைப்பது வரவேற்பிற்குரியதே.
1994இல் அவரது வீடு தெலைக்காட்சி நாடகமும் வானொலி நாடகங்களும் சம்பந்தமாக எழுதிய கட்டுரை ஒன்றில் அருணா செல்லத்துரையிடம் எழுத்தாளர் தயாரிப்பாளர், நடிகர், தொழினுட்பவல்லுனர் போன்ற பன்முகத்திறமைகள் உள்ளன என்றும் இதுவே அவர் முதலீடு என்றும் இம்முதலீட்டை ஆதாரமாகக் கொண்டு அவர் பெருலாபமீட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். இடைப்பட்ட இந்த ஆறு வருடங்களுக்குள் அவரது முயற்சிகள் சாதனைகள் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. உண்மையில் அவர் அம் முதலீடுகளைக் கொண்டு பணலாபமீட்டாவிடினும் நிறைந்த கலை லாபமீட்டியுள்ளார். மென்மேலும் இம முயற்சிகளில் அவர் ஈடுபட என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
சி. மெளனகுரு நண்கலைத் துறை கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, செங்கலடி. 01-12-2000

Page 7

உட்புகு முன் உங்களுடன் சில விநாடிகள்.
நான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீது கொண்ட பற்றினால் அந்தப் பிரதேசத்தின் சில பாரம்பரியங்களைத் தேடிக் குறித்த/ வைத்துள்ளேன்.இது வன்னிப் பிராந்தியத்தின் பாரம்பரியங்கள் பற்றிய தேடலின் ஆரம்பமேயாகும்.இதுபோன்ற தேடல்முயற்சிகள் பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து இடம்பெற்றால் வன்னிப்பிராந்திய வரலாறுகளும் இலங்கை வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறும் என்பது எனது எண்ணம்.
நீண்ட நாள் முயற்சியின் பின்னர் இந்த நூல் வெளிக் கொணரப்படுகிறது. இதனை ஆரம்பத்தில் ஒரு கட்டுரையாகவே எழுதினேன். பின்னர் அதனை நரல் வடிவில் 67காண்டு வரவேண்டுமென்ற அவாவினால் மேலும் பல தகவல்களைச் சேகரித்தேன். அதற்கு நீண்ட நாட்கள் சென்றுவிட்டன. நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக தேவையான பல தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை என்பதையும் கூறிவைக்க வேண்டும்.
இந்த நரலை வெளியிடுவதில் ஊக்கத்தையும் பல ஆலோசனை களையும், முன்னுரையையும் தந்த பேராசிரியர் சிமெளனகுரு அவர்களுக்கு எனத/ மனமுவந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
நரல் 67வளியிட வேண்டும் என்ற எனது முயற்சிக்கு 47வரி நாட்டிலிருந்து தொலைபேசி மூலம் ஊக்கம் தரும் மகள் ஜானகிக்கும் (ஜானு) மகன் சுஜேனுக்கும், வீட்டிலிருந்து ஆர்வமூட்டும் எனது மனைவி சிவசோதிக்கும் நன்றிகள்.
இனிவாசியுங்கள்.

Page 8

உள்ளே.
வளம்கொழிக்கும் வன்னிநாடு
வன்னிப்பிராந்தியக் கூத்துக்கள்
கோவலன் கூத்துப் பற்றிய பகுப்பாய்வு
கோவலன் கூத்துப் பிரதி
அரங்கக்கலை
வேழம்படுத்த வீராங்கனை
"நந்தி உடையார்
1-20
A
21-45
46-60
61-71
72-77
77-103
104-133

Page 9

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
வளம்கொழிக்கும் வன்னி நாடு
வன்னிநாடு வளர்சோலை நாடு வரியம் மூன்று விளைவுள்ளநாடு கன்னிநாடுகதிர்சோலைநாடு காராளர் வாழும் கன்னியர்நாடு
இது வன்னி வளத்தை எடுத்துக் காட்டும் ஒரு நாட்டார் பாடல். முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும், கிளிநொச்சி மாவட்டத்தின் பகுதியான ஆனையிறவுக்குத் தெற்கேயுள்ள பகுதியையும் உள்ளடக்கியதே தற்போதுள்ள வன்னிப் பிரதேசமாகும். ஆனால், முன்னைய பாடல் ஒன்றில் வன்னியின் எல்லை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுகின்றது.
எல்லை வடக்கில் எழில் யாழ்பரவுகடல் பல்லோர் புகழருவி தெற்கெல்லை - நல்லதிரு கோணமலை கீழ்பால் கேதீச்சரம் மேற்கில் மரணத்திகழ்வன்னிநாடு
இந்தப் பாடலில் வன்னியின் எல்லைகளாக யாழ்ப்பாண ஏரியும், தெற்கே அருவி ஆறும் நுவரகலாவிய மாவட்டமும், கிழக்கே திருகோணமலை மாவட்டமும், மேற்கே மன்னார் மாவட்டமும் அமைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எஸ். நவரத்தினம் என்ற ஆய்வாளரின் கருத்துப்படி வடநாட்டில் யாழ்குடா நாட்டிற்கும் நுவரகலாவிய மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியே வன்னி ஆகும்.
இது வன்னி எனப் பெயர் பெறுமுன் அடங்காப்பற்று என்ற பெயரில் இருந்தது. இப்பிரதேசத்தின் எல்லைகளை ஜே.பி.லூயிஸ் அவர்களும் தமது குறிப்புக்களில் குறித்து வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. லூயிஸ் என்பவருக்கு முன்பு இருந்த கலெக்டர் ரேணர் என்பவரின் கருத்து வன்னிப் பிரதேசம், யாழ்ப்பாணம், அநுராதபுரம் ஆகிய இடங்களில் இருந்த ஆட்சிக்கு அடங்காத பகுதியானபடியால் அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது என்பதாகும்.
1

Page 10
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் வன்னியைப் பற்றிய வரலாறுகளைத் தேடும்போது போர்த்துக்கேய ஒல்லாந்த, ஆங்கிலேயர்களின் ஆட்சிகளின்போது இருந்த அதிகாரிகளின் குறிப்புக்களும், யாழ்ப்பாண வைபவமாலையுமே ஆதாரங்களாக கிடைக்கின்றன. வன்னியைப் பற்றிய வேறு வரலாற்றுச் சான்றுகள் தேடிக் கண்டுபிடிக்கப்படாமை ஒரு பெரும் குறையாகும்.
தமிழ் நாட்டில் இருந்து வந்த வீரவன்னியர்கள் இப்பிரதேசத்தை ஆட்சிசெய்தபடியால் வன்னி என்ற பெயர் வந்ததாக ஜே.பி. லூயிஸ் தெரிவிக்கிறார். வணனியர் என்றால் அக்கினியின்மரபில் உதித்தவர்கள் என்ற பொருள்படுவதும் உண்டு. வனம் சார்ந்த பகுதியானபடியால் வன்னி என அழைக்கப்பட்டது என்பர் ஒருசிலர். எனினும் வன்னியில் விளை நிலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அதற்குத் தேவையான நீர் வசதிகள் குளங்களில் இருந்து பெறப்படுகின்றன. மடுக்கள், மோட்டைகள், கேணிகள், முறிப்புகள் வாய்க்கால்கள் போன்றவை ஏராளமாகக் காணப்படுகின்றன. அத்தோடு பாடல்பெற்ற இரண்டு தலங்களான, திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேஸ்வரமும் வன்னிப்பிரதேசத்திலே அமைந்திருந்தமை இப்பிரதேசம் எவ்வளவு செழிப்புற்றிருந்தது என்பதற்கு சான்றுகளாகும்.
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பொதுவாகக் காணப்படும் நடுகற் சமாதிகளும், மாந்தை, மாமடு எனப்பெயரிய ஊர்களும் வன்னிப்பிரதேசங்கள் உட்பட ஏனைய பிரதேசங்களிலும் ஆங்காங்கே காணப்படுவதால் கிறிஸ்து ஆண்டிற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் வன்னி முதலாம் பிரதேசங்களில் வாழ்ந்து வந்தமை புலனாகின்றது என பேராசிரியர் பூலோகசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழனைச் சுட்டும் பாளி மொழி அடை கொண்ட பெயர்களையுடைய பிராமிச் சாசனங்களும், "வேலு" என்ற பெயர்கொண்ட பிராமிச் சாசனங்களும் வவுனியா உட்பட பல இடங்களில் கிடைத்திருக்கின்றன என்று பேராசிரியர் பூலோகசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
வன்னி எனும் பெயர் தமிழ்நாட்டு ஆவணங்களிலே பதினோராம் நூற்றாண்டு முதல் காணப்படுகின்றது. மேலும் வன்னியர் தோற்றம் பற்றிய மரபுகளும் தமிழ்நாட்டிலே காணப்படுகின்றன. எனவே வன்னி எனும் பெயர் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்ததாகவே கொள்ளத்தக்கது. தமிழகத்திலே வன்னியர் என்பது ஒரு சமூகத்தின்ையும், அதன் தலைவனையும் குறிப்பிடுகின்றன.
ராஜராஜ சோழன் (கி.பி 985 - 1015) காலத்தில் இலங்கை, சோழர் - ஆட்சிக்குட்பட்டிருந்த போது வன்னியர் இலங்கைக்கு வந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக பேராசிரியர் பூலோகசிங்கம் தெரிவிக்கிறார். 12ம்
2

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் நூற்றாண்டிற்குப் பின் மாகோன் படையெடுப்பிற்குப் பின்னர் தான் இலங்கை வரலாற்றிலே ஒரு திருப்பு முனை நிகழ்ந்துள்ளதாக செல்வி தங்கேஸ்வரி, "மாகோன் வரலாறு" என்ற நூலிலே தெரிவிக்கிறார்.
ஆனால் மாகோன் இலங்கைக்கு வருகை தரமுன்னர் வன்னியர்களின் ஆட்சி ஈழத்தில் செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் பெற்றிருந்தன என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். இவர்கள் ஆட்சி, சிங்கள ஆட்சியாளர்களாலும் அக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டமைக்கு சான்றுகள் இருக்கின்றன.
வன்னியர்கள் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு வரை குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தபோதிலும் வன்னிப்பிரதேசம் என நாம் இப்போது அழைப்பது அடங்காப்பற்று என அழைக்கப்பட்ட பிரதேசமாகும். மன்னார் முதல் திருகோணமலை வரை நீண்டு மிகப் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் ஆட்சி செலுத்திய ஏழு வன்னியரசர்களும் அரசர்களுக்குரிய மதிப்புடன் ஆட்சி செய்ததை வரலாறு கூறுகிறது. அவர்கள் பிற்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றோரை எதிர்த்துப் போராடும் அளவிற்கு தீரம் பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.
தற்போதைய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய அடங்காப்பற்றுப் பிரதேசம் அன்று ஏழு வன்னியர்களின் ஆட்சிப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவையாவன. 1. பனங்காமம் 2.முள்ளியவளை 3. கருநாவல்பற்று 4. தென்னமரவடி 5. மேல்பற்று 6, கரிக்கட்டுமூலை 7. செட்டிக்குளப்பற்று என்பனவாம். இந்த ஏழு வன்னிமைப் பற்றுக்களில் பனங்காமம் பற்று அடங்காப்பற்றின் அரைவாசி நிலப்பரப்பைக் கொண்டதாகும். இதனால் அடங்காப்பற்று வன்னியர்களுள், பனங்காமத்து வன்னியன் தலைவனாக மதிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்தப் பகுதியில் ஆட்சி புரிந்த கைலாய வன்னியன் திறைசெலுத்தவில்லை எனவும் கவர்னர் தொடர்ச்சியாக ஒலை அனுப்பிக் கொண்டே இருந்தார் எனவும் சி. நவரத்தினம், "aisi Sofosiri' alsi Sofu Tsio" ("Vanni and the Vanniyar's") 6Tsirp நூலில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் திறைசெலுத்தாது ஆட்சி செய்த கைலை வன்னியன் 1678ல் இறந்த பின் அவனது பேரனான காசியனார் எனும் வன்னியன் டச்சுக் கவர்னருக்கு திறை செலுத்த ஒத்துக்கொண்டான். இந்தச் செய்தியைப் பெரு மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாக அப்போதைய தேசாதிபதி தன் தேசாதிபதிகளுக்கு அறிக்கை செய்துள்ளதை குறிப்புக்கள் மூலம் காணக்கிடக்கின்றது.

Page 11
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
பண்டாரவன்னியன்
இலங்கை ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் பனங்காமத்தை ஆண்ட மன்னன்தான் பண்டாரவன்னியன், இவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.
அந்நியர் ஆட்சியிலும், அடக்கு முறையிலும் வெறுப்புக் கொண்டிருந்த வன்னியர்கள் கண்டி மன்னர்களின் ஒத்துழைப்போடு தமது எதிர்ப்பைத் தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.
அந்த நட்புறவுபண்டாரவன்னியன் காலத்திலும் தொடர்ந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் கடைசிப் பகுதியில் ஆட்சிப் பொறுப்பை பண்டாரவன்னியன் ஏற்றான். ஆங்கிலேயர்கள் முதன்முறையாக கண்டியைக் கைப்பற்ற முனைந்தபோது பண்டாரவன்னியன் தனது படைகளை அனுப்பி கண்டி மன்னனுக்கு உதவி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தப் போரில் பின்வாங்க நேர்ந்த ஆங்கிலேயர்களின் கவனம் வன்னியின் பக்கம் திரும்பியது. வன்னியைக் கைப்பற்றினால் வன்னியர்களை அடக்குவதுடன், கண்டி மன்னர்களுக்கு படையுதவி கிடைப்பதையும் தடை செய்ய முடியும் என்பது அவர்களின் திட்டமாகும்.
இதற்கு உதவியாக ஆங்கிலேயர் கரிக்கட்டு மூலை வன்னியனான காக்கை வன்னியனைத் தமது கைக்குட் போட்டுக்கொண்டு முல்லைத்தீவுப் பிரதேசத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர்.(காக்கை வன்னியன் என்ற பெயர் திரிபுபட்ட பெயராகக் குறிப்பிடப்படுகின்றது. அதனால் காக்கை வன்னியன் என்ற பெயர் கற்பனையானது என்றே கொள்ளலாம். பேராசிரியர் பூலோக சிங்கத்தின் விளக்கம் பின்னால் தரப்படுகின்றது) கோட்டை கட்டப்பட்டதைக் கேள்வியுற்ற பன்டாரவன்னியன் அந்தக் கோட்டையைத் தாக்குவதற்காக தனது படைகளுடன் 1803ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 24ம் திகதி முல்லைத்தீவை நோக்கிச் சென்று தனது தாக்குதலை ஆரம்பித்தான். முல்லைத்தீவுக் கோட்டையிலிருந்த கப்டன் வொண் டிறிபேர்க்கின் படையினர் பின்வாங்கி யாழ்ப்பாணத்திற்கு வள்ளங்கள் மூலம் சென்றதாகவும் 1803ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25ம் திகதி பண்டாரவன்னியன் முல்லைத்தீவுக் கோட்டையைக் கைப்பற்றியதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
இந்தப் போரிலே பண்டாரவன்னியனுக்கு உதவிய காரணத்தினால் குமாரசேகர முதலியாரும் அவருடைய நண்பர்களும் ஆங்கிலேயர்களுக்குத் துரோகமிழைத்த குற்றத்திற்காகக் தூக்கிலிடப்பட்டுகொலை செய்யப்பட்டதாகவும் அந்த இடம் "தூக்குமரத்தடி" என அழைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
4.

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் இதன் பின்னர் ஆங்கிலேயர் பண்டாரவன்னியனை அடக்குவதற்கு பலவித திட்டங்களை தீட்டினார். கடைசியாக மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மூன்று இடங்களில் இருந்து மும்முனைத் தாக்குதலுக்கு ஏற்பாடுகளைச் செய்தனர். திருகோணமலையிலிருந்து கப்ரன் எட்வேட் மட்ஜ் தலைமையிலான படைப்பிரிவும், யாழ்ப்பாணத்திலிருந்த லெப்டினற் ஜோன் ஜூவல் தலமையிலான படைப்பிரிவும், மன்னாரிலிருந்து கப்ரன் வொண் டிறிபேக் தலமையிலான படைப்பிரிவும் வன்னியை நோக்கிச் சென்றன.
மும்முனைத் தாக்குதல் பற்றித் தெரியாத பண்டாரவன்னியன் இருமுனைத் தாக்குதலையே எதிர்பார்த்து, அவற்றை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் படையை எதிர் கொள்வதற்கு மாங்குளத்திற்கு அடுத்த கற்சிலைமடுப்பகுதியில் தயாராய் இருந்தான். அதேவேளை திருகோணமலையில் இருந்து வந்த படைப்பிரிவை எதிர் கொள்வதற்கு குமாரசிங்கன் தலைமையில் படைப்பிரிவொன்று தயாராக இருந்தது. மன்னாரிலிருந்து வொண்டிறிபேர்க் தலைமையில் படையொன்று வருவது கரிக்கட்டுமூலை வன்னியனான காக்கை வன்னியனால் மறைக்கப்பட்டு விட்டது. இதனை அறியாத பண்டாரவன்னியனும் அவனது படையினரும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் படையை எதிர்கொள்வதற்குக் கற்சிலைமடுவில் காத்திருந்த சமயம் மன்னாரிலிருந்து வந்த வொண் டிறிபேர்க்கின் படையினர் எதிர்பாராத விதமாக தாக்குதலை நடத்தினார்கள். 1803ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ம் திகதி அதிகாலை 5 மணிக்கு பண்டாரவன்னியன் நித்திரையிலிருந்த சமயம் தோற்கடிக்கப்பட்டான். பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட வேளையில் கண்டி மன்னனின் முத்திரை பொறிக்கப்பட்ட பீரங்கி ஒன்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட காரணத்தினால், பண்டாரவன்னியனுக்குக் கண்டி மன்னனும் உதவி செய்திருக்க வேண்டுமென வரலாற்றாசிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர். அத்தோடு பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதைக் குறிக்குமுகமாக கற்சிலைமடுவில் "கப்ரன் வொண் டிரிபேர்க் பண்டாரவன்னியனைத் தோற்கடித்தார்,31 ஒக்ரோபர் 1803" என்ற ஆங்கில வாசகம் பொறிக்கப்பட்ட நடுகல் girp ST'LJULg). "Here abouts Van Drieberg defeated Pandara Vanniya,31"Oct 1803." என்று ஆங்கிலத்தில் இதிலே பொறிக்கப்பட்டுள்ளது. பண்டாரவன்னியனுடைய சரித்திரம் அத்தோடு முடிந்துவிடவில்லை. 1803ம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்ட பண்டாரவன்னியன், வன்னியில் மறைந்திருந்து மீண்டும் வன்னியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் 1810ம் ஆண்டு மே மாதத்தில் கண்டியர்களுடன் இணைந்து கிழக்கு மூலை, தெற்கு மூலைப்பகுதிகளில் தனது எதிர்ப்பைத் தெரிவித்தான். இதையே ஆங்கிலேயர் பண்டாரவன்னியன் கிராமங்களை கொள்ளையடித்து சென்றதாக அறிக்கைகளில்

Page 12
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவனது படையில் 14 பேர் மட்டுமே இருந்தனர். இந்தக் கால கட்டத்தில் ஆங்கிலேயர் வவுனியாப் பகுதியில் தீவிர பாதுகாப்பு முறையினை நடைமுறைப்படுத்தினார்.
1810ம் ஆண்டு, செப்ரம்பர் மாதம் பண்டாரவன்னியன் கண்டித் திசாவையின் உதவியுடன் ஆங்கிலேயர் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக மேற்பற்று கிழக்கு கதிர்காமநாயக முதலியார் கலெக்டர் ரேணருக்கு செய்தியனுப்பினார். உடனே யாழ்ப்பாணம், திருகோணமலை, போன்ற இடங்களில் இருந்து படைகள் வன்னிக்கு அனுப்பப்பட்டன. மீண்டும் மும்முனைத் தாக்குதல் இடம்பெற்றது. திருகோணமலையிலிருந்து வந்த படையினரை நல்லநாச்சன் வன்னிச்சியும், மன்னார் எல்லையில் பனங்காமம் பகுதியை பண்டாரவன்னியனின் தங்கை உமாச்சியா வன்னிச்சியும், எதிர்த்துப் போராடினார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த படையினரை பண்டாரவன்னியன் மாங்குளத்திற்கும் முறிகண்டிக்கும் இடையில் உள்ள 18ம் போர் என்னும் இடத்தில் எதிர்கொண்டான். கடுமையான போர் இடம்பெற்றது. மும்முனைத் தாக்குதல் என்றபடியால் பண்டாரவன்னியனின் படையினரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
1811ம் ஆண்டு உடையாவூரில் இடம்பெற்ற கடும் யுத்தத்தில் பண்டாரவன்னியன் படுகாயம் அடைந்தான்.
பண்டாரவன்னியனை அவனது வீரர்கள் பனங்காமத்திற்கு எடுத்துச் சென்றனர். அடுத்த நாள் அந்தவிரனின் ஆவி பிரிந்தது. 34 வயதில் வுன்னியின் மாவீரனாகத் திகழ்ந்த பண்ணடாரவன்னியனின் உயிரிழப்புப் பற்றிக் கேள்விப்பட்ட காதலியார் சம்மளங்குளத்திலிருந்த அவனது காதலி குருவிச்சை நாச்சியாரும், அவனது சகோதரிநல்லநாச்சன் வன்னிச்சியும் கார்த்திகைக் கிழங்கைச் சாப்பிட்டு உயிர் விட்டனர். இந்தக் கற்புடை வீரப்பெண்களின் பூதவுடல்கள் பன்னாடையில் வைக்கப்பட்டு ஒட்டுசுட்டான் நெடுங்கேணிப் பாதையில் உள்ள குருவிச்சை ஆற்றில் விடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண்டாரவன்னியன் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய மாவீரன் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த மாவீரனின் நினைவுச் சின்னங்களாக குமுளனையில் பண்டாரவன்னியன் கிணறும், பண்டாரவன்னியன் வளவும் இருக்கின்றன. அதே போல பண்டாரவன்னியன் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக கற்சிலைமடுவில் உள்ள நடு கல்லும் சாட்சி பகர்ந்த வண்ணம் இருக்கின்றது. ஆங்கிலேயர் தமது வெற்றியை குறிக்க நடுகல் நட்டாலும் வன்னிமக்கள் நடுகல் இருந்த கற்சிலைமடுவில் மணிமண்டபம், வவுனியா நகரிலே பண்டாரவன்னியனுக்குச் சிலை எடுத்துப் பெருமைப் படுத்தியுள்ளனர்.

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் காக்கை வன்னியன் பற்றி பேராசிரியர் பூலோகசிங்கம் விளக்கம் தந்துள்ளார். யாழ்ப்பாண வைபமாலையில் எழுதப்பட்டுள்ள குழப்பமான விடயங்கள் பற்றி பேராசிரியர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார். "யாழ்ப்பாண வைபமாலைக்காரர் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மாதகல் மயில்வாகனப் புலவர்) முதன் முதலாக ஒரு காக்கை வன்னியனை உருவாக்கியிருக்கிறார். இப்பெயர் அண்மைக் காலம் வரை அரசியல் மேடைகளில் கேட்கப்பட்டதொன்று. நம்பிக்கைத் துரோகம் செய்த ஒருவனாகக் காக்கை வன்னியன் வைபவமாலையில் இடம்பெறுகின்றார். எட்டப்பன் போல இதனையும் பொதுப் பெயராக விட்டுவிடலாம். ஆனால் ஒரு இனத்தோடு தொடர்புடைய இப்பெயர் ஆளப்பட்டு வந்தமை விசனிக்கத்தக்கதாகும்.
சங்கிலிக்கும் பரநிருபசிங்கத்திற்கும் இடையே வைபவமாலைக்காரர் தரும் காக்கைவன்னியன் (குலசபாநாதன் பதிப்பு 1953, பக்.66-78) பிரமா படையாத படைப்பு பெற்றோர் இடாத பெயர்.
GaCO (காகோ) என்ற போர்த்துக்கேய மொழிச் சொல்லுக்குக் "கொன்னையன்" என்பது பொருள். போத்துக்கேய வரலாற்றுக் குறிப்புகள் இரண்டு காகோ (GaCO) மாரைக் குறிப்பிடுகின்றன. ஒருவன் புவிராச பண்டாரத்தின் (1582-1591) மாப்பிள்ளையும் தளபதியும் ஆவான், மற்றவன் எதிர்மன்னசிங்கன் (1591-1617) ஆவான். இவன் அரசகேசரியின் சகோதரன். வன்னியன் அல்லாதவனை வன்னியனாக்கி, காகோ (Gaco) என்ற பெயரை "காக்கை" என விளங்கிக் கொண்டு மயில்வாகனப் புலவர் தோற்றுவித்த சிருஷ்டியை என்னவென்று கூறுவது. நல்லூர் சா. ஞானப்பிரகாச சுவாமிகள் யாழ்ப்பாண வைபவ விமர்சனத்திலும் (1928), "The kings of Jaffna during the Portugese of Ceylon History (1920)" 6Tgp bgåJáfiau GT666 6661Tëéfiuluh அறியாதோர் போல நடந்து கொள்பவரை என்னவென்று கூறுவது என்று பேராசிரியர் பூலோகசிங்கம் அவர்கள் அண்மையில் "மருதநிலா" என்ற வடக்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா என்ற மலரிலே எழுதிய கட்டுரையிலே தமது விசனத்தை தெரிவித்துள்ளார்.
10ம் நூற்றாண்டு சோழப் பேரரசு காலத்தில் வன்னியரின் ஆதிக்கம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது என்றால் அதற்கு முன்னர் அடங்காப்பற்றாக இருந்தபோது இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களின் வரலாறுகள் என்னவாயிற்று என்ற கேள்வி எழுவது இயல்பு. இதற்கான சான்றுகளை அறிய வேண்டும் அதற்கு பின்வரும் வழிவகைகள் உதவலாம்.

Page 13
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
புதை பொருள் ஆய்வு
வாய்மொழி வரலாறு
வற்றாப்பளைக் கோயில் வரலாறு
பிரதேசக் கலைகள்
கூத்துக்கள் / நாடகங்கள் பிரதேசத்தில் உள்ள குளங்கள் புராணங்கள் பற்றிய ஆய்வு அரசர்கள் மத்தியில் மக்களுக்கிருந்த முக்கியத்துவம்
புதைபொருள் ஆய்வு:
இலங்கையில் இடைக் காலத்தில் வன்னிச் சிற்றரசுகள் இடம்பெற்ற மாவட்டங்கள் அனைத்திலுமே இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றங்கள் தோன்றியிருந்தன என்று கூறலாம். இக் குடியேற்றங்களில் எல்லாம் இலங்கையின் வேறு பாகங்களைப் போன்று கி.மு.3ம் நூற்றாண்டின் பிராமி எழுத்து அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக அந்த நூற்றாண்டு தொட்டு சாசனங்களும் பொறிக்கப்படலாயின. இன்று வன்னிப் பிரதேசத்தில் கி.மு.3ம் நூற்றாண்டு தொட்டு நவீன காலம் வரை பல சாசனங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலம் பிராமி எழுத்தில் பெரிய புளியங்குளம், வெடுக்குநாறி மலை போன்ற இடங்களில் சாசனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு விசாகன் என்ற தமிழ் வணிகன் பொறித்தவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை கிடைக்கப் பெற்ற சாசனங்களுள் பெரும்பாலான தமிழ்ச் சாசனங்கள் 10ம் 11ம் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனவும் அவற்றுள் சோழர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த சாசனங்கள் பல எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சோழர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த சாசனங்கள் பெரும் பாலும் திரியாயிலிருந்து திருகோணமலைல வரையுள்ள கிழக்கு கரையோரத்தில் காணப்படுகின்றன. அத்துடன் பதவியா கந்தளாய் ஆகிய இடங்களிலும் இவை காணப்படுகின்றன. இந்தச் சாசனங்களில் 11ம் நூற்றாண்டில் அப் பிரதேசத்தில் சிறப்புற்றிருந்த இந்து, பெளத்த கோயில்கள் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. குறிப்பாகத் திருகோணமலையில் இருந்த பெளத்த பள்ளியாகிய ராஜராஜ பெரும் பள்ளியிலே சோழர்கால தமிழ்ச் சாசனங்கள் பல கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
சோழர் ஆட்சிக்குப் பின் 12ம் நூற்றாண்டின் இறுதி வரை வன்னிப் பிரதேசத்தில் தமிழ் வணிக கணங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. இவை வன்னியிலிருந்த இந்துக் கோயில்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் ஆதரவு வழங்கியுள்ளன. தாங்கள் வழங்கிய தானங்கள் பற்றியும் பிற நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் கல்வெட்டுக்களிலே குறித்து வைத்துள்ளனர். இந்தக் கல்வெட்டுக்களில் வீரவலஞ்சியர், நானாதேசியர், திசையாயிரத்தைஞ் நூற்றவர், வீரக்கொடியர் ஆகிய கணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்தக் கணங்கள் இருந்ததற்கான சான்றுகள் பதவியாப் பகுதியில் கிடைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையில் இருக்கும் மணற்கேணி என்ற இடத்தில் வீரக்கொடியாருடைய தமிழ்ச் சாசனம் ஒன்று உண்டு. இதில் அவர்களுக்கு பதினெண்பூமி வீரக்கொடியர் என்ற பெயர் வழங்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
13ம் நூற்றாண்டின் பின்னர் வன்னி அரசர்கள் பல தமிழ் கல்வெட்டுக்களைப் பொறித்திருக்கலாம் ஆனால் அவை ஆய்வுகளின் மூலம் கண்டு பிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப் பிரதேசத்திலுள்ள பழைய கோவில்கள் அனைத்தும் அழிந்து போன காரணத்தால் இக் கல்வெட்டுக்களும் அழிந்து போயிருக்கலாம். ஆனால் வன்னியரசர்களுடைய செப்பேடுகள் இன்னமும் தனியார் சொத்துக்களாக வெளிப்படாமலும் இருக்கலாம். வன்னியர் பற்றிக் கிடைத்த இரண்டு கல்வெட்டுக்களில் ஒன்று காலத்தால் முற்பட்ட கங்குவேலிக் கல்வெட்டு ஆகும். இது கங்குவேலியில் இருக்கும் சிவன் கோவிலிலே இருக்கின்றது. 3 1/2 அடி உயரமுள்ள தூணிலே இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது14ம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது திருகோணமலையில் ஆட்சி நடத்திய வன்னியரசனுக்குரிய கல்வெட்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கல்வெட்டிலே மலையில் வன்னியனார் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றை விட சிலாபப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய நவரத்தின வன்னியனைக் குறிப்பிடும் ஒரு சிங்கள செப்பேடும் கிடைத்ததாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இரண்டாவது கல்வெட்டு வெருகல் என்ற இடத்தில் சித்திர வேலாயுதர் சுவாமி கோயிலின் நான்கு மதில்களை கட்டி உபயம் செய்தவர்களைப் பற்றியது. இதில் கயிலை வன்னியனார் என்ற வன்னியரசன் தெற்கு மதிலைக் கட்டிக் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கயிலை வன்னியன் திருகோணமலையில் ஆட்சி புரிந்த வன்னியரசனாக இருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

Page 14
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இலங்கையில் ஒல்லாந்தர்கள் ஆட்சி புரிந்த வவுனியா முல்லைத்தீவு ஆகிய பகுதிகள் வன்னியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த கயிலாய வன்னியன் பற்றிக் குறிப்பிடும் செப்பேடு ஒன்று கள்ளியங்காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இது கயிலை வன்னியனார் மடதர்ம சாதனப் பட்டையம் என அழைக்கப்படுகின்றது. இது வன்னிமையினால் வழங்கப்பட்ட தானம் ஒன்றினைக் குறிப்பிடுவதனால் அடங்காப்பற்று வன்னிமைகளைப் பற்றிய ஆவணங்களிலே அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்று பேராசிரியர் சி. பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சாசனத்தைப் பற்றி கலாநிதி. கா. இந்திரபாலா, செ. குணசிங்கம் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செப்பேடுகளும், மற்றும் கல்வெட்டுகளும், ஒலைச்சுவடிகளும் தனியார் கைகளில் இருக்கலாம் இவை அனைத்தையும் வெளிக் கொணர்ந்து ஆராய்வதன் மூலம் வன்னியின் வரலாற்றுச் சாசனவியலுக்குப்பங்களிப்பைச் செய்யலாம். இதுபோன்ற ஆய்வுகள் 1974ம் ஆண்டு நடைபெற்ற வன்னிப்பிரதேச தமிழாராய்ச்சிமாநாட்டிலே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. பின்னர் இதுபோன்ற ஆய்வுகள் அதிகமான அளவில் நடத்தப்படவில்லை என்பதையும் நாம் இங்கு குறிப்பிடவேண்டும். இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் இருந்து இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
வன்னிப்பிரதேசத்திலே கண்டுபிடிக்கப்பட்ட பிராமிச் சாசனங்களுள் 54 சாசனங்கள் முக்கியனவை என இந்த ஆராய்ச்சி மாநாட்டிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 51 சாசனங்கள் வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புறத்தில், அனுராதபுர மாவட்ட எல்லைக்கு அண்மையிலுள்ள குன்றுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 35 சாசனங்கள் பெரியபுளியங்குளத்திலும், 12 சாசனங்கள் எருப் பொத்தானையிலும், மகாகச்சக் கோடியில் நான்கு சாசனங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வெடிக் கிணற்றுப் பகுதியில் மூன்று பிரமிச் சாசனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல 1000 க்கும் மேற்பட்ட வன்னிப்பிரமிச் சாசனங்கள் இலங்கை பூராவும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றுள் அனேகமானவற்றை பெளத்த சமயத்துடன் தொடர்புபடுத்தி இலங்கைச் சாசனங்களைப் பதிப்பித்த தொல்பொருள் ஆய்வாளர் பரணவிதான வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் வன்னிப் பிராமிச் சாசனங்கள் பற்றிய பரணவிதானவின் கருத்தை நாம் இறுதியாகக் கொள்ள முடியாது. இவற்றுடன் தமிழ் மொழி மூல ஆய்வுகளையும் சேர்த்துப் பார்க்கும் போதுதான் உண்மை புலப்படும்.
1O

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
வாய்மொழி வரலாறு;-
வன்னிப் பிரதேசத்தில் அதிகமான வரலாறுகளும், கலை கலாசார எச்சங்களும் வாய் வழியாகவே பரவி வந்துள்ளன. இவற்றுள் முக்கியமாக இடப்பெயர்களுக்கான வரலாறுகள், குளங்களுக்கான பெயர்கள், மலைக் குன்றுகளின் காரணப் பெயர்களுக்கான விளக்கங்கள் வாய்வழியாக நீண்டு வந்துள்ளன. தெய்வ வழிபாடுகளுக்குரிய பாரம்பரியங்களும், கோயில் வரலாறுகளும் மிகவும் சுவாரசியம் வாய்ந்தவையாகும். சில கோயில்களில் தீர்த்தமாடுவதற்கான வரலாறுகள் யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல கோயில்களோடு தொடர்புபடுத்தி பேசப்படுவதை நான் கேட்டிருக்கிறேன்.
உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கூழாமுறிப்பு என்ற கிராமத்திற்கு அண்மையில் உள்ள கெருட மடு என்ற இடத்தில் இடம்பெறும் தீர்த்தமாடும் விழா யாழ்ப்பாணத்தில் உள்ள கீரிமலைத் தீர்த்தத்தோடு தொடர்புபடுத்தி கூறுவதைக் கேட்டிருக்கின்றேன். இதுபோல பல தகவல்கள் வாய்வழியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே போல யாழ்ப்பாணம் றோட்டில் முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு சற்று தூரத்தில் இருக்கும் பதினெட்டாம் போர் என்னும் இடத்தில் பண்டாரவன்னியனுக்கும், மூன்று பக்கங்களில் இருந்து வந்த வெளிநாட்டு கூலிப்படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றதாகவும் வாய்வழி வரலாறுகள் கூறுகின்றன. இந்த இடத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் தோல்வி கண்ட பண்டாரவன்னியன் காயங்களுடன் உடையார்கட்டுக்குக் எடுத்துச் செல்லப் பட்டதாகவும் அங்கு உயிரிழந்ததாகவும் வாய்வழிவரலாறுகள் தெரிவிக்கின்றன.
வன்னி வரலாறுகள் பல வாய்வழியாகவே பரவி வந்துள்ளன. இதே போலவே நந்தியுடையார் வரலாறும் வாய் வழியாக வந்த வரலாறாகவே இருந்தது வாய்வழி வரலாற்றுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவை ஒழுங்கமைக்கப்படும் போது வன்னியின் வரலாறு மேலும் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை.
வற்றாப்பளைக் கோயில்:-
கண்ணகி வழிபாடு இலங்கையில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பது ஆய்வுக்குரிய ஒரு விடயமாகவே தற்போதும் இருக்கின்றது. 1ம் கயவாகு மன்னன் (கி.பி.136-183) இவ்வழிபாட்டை இலங்கைக்குகொண்டுவந்தான் என மகாவம்சம் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னர் இலங்கையின் கிழக்குக் பகுதியில் கண்ணகி வழிபாடு இருந்ததாக வரலாற்றாசிரியர்தள்
11

Page 15
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் கூறுகின்றனர். ஈழத்தின் கரையோரப் பகுதிகளின் மேற்கு கரையில் இருந்து முறையே உடப்பு, புங்குடுதீவு, அங்கணாமைக்கடவை, வற்றாப்பளை, சம்பூர் வந்தாறு மூலை செட்டிப்பாளையம், காரைதீவு, பட்டிமேடு, தம்பிலுவில் முதலிய இடங்களில் கண்ணகி அம்மன் ஆலயங்கள் காணப்படுகின்றன. கிழக்கிலங்கையில் மட்டும் சுமார் 25 கண்ணகி அம்மன் ஆலயங்கள் இருப்பதாக கண்கீடுகள் தெரிவிக்கின்றன. அதே போல நாட்டின் உட்பகுதிகளிலும் அம்மன் ஆலயங்கள் என்ற பெயரிலும், பத்தினித் தெய்வம் என்ற பெயரிலும் கண்ணகி வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
கண்ணகி வழிபாடு சேரநாட்டுக் குடிகள் இலங்கையில் குடியேற்றப்பட்டபோது (கி.மு.155-177) இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். எது எப்படியிருந்த போதும் வன்னியின் வரலாற்றிலே வற்றாப்பளைக் கண்ணகியம்மன் வரலாறும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. இந்த வழிபாட்டுடன் தொடர்புடைய இலக்கியங்களாக சிலம்பு கூறல், அம்மன் சிந்து, மழைக்காவியம், வற்றாப்பளைக் கண்ணகியம்மன் வயந்தன், தோத்திரக் காவியம், தோத்திரப் பதிகம், வரலாற்றுச் சிந்து, அம்மானை, கும்மி, பனிச்சையாடிய பாடற் சிந்து, கோவலன் கூத்து முதலானவற்றைக் குறிப்பிடலாம். குளக்கோட்டனுடன் (கி.பி. 593) இலங்கைக்கு வந்த வன்னியர்கள் இந்த கோவிலைத் திருத்தி வழிபாடுகளை முறைப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை மட்டக்களப்பில் உள்ள கண்ணகி வழிபாட்டிற்கும் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் வழிபாட்டிற்கும் நிறைய ஒருமைப்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. இதனால் மட்டக்களப்பில் குடியேறிய கேரள நாட்டவர் கண்ணகி வழிபாட்டை வன்னிக்கும் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்ற கருத்தை பேராசிரியர் இ. பாலசுந்தரம் முன்வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டடத்தில் உள்ள நாச்சிமார் வழிபாடும் அப்பகுதிகலை கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. நாச்சிமார் வழிபாடும் வன்னியர்களின் வருகையோடு வன்னிப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
பிரதேசக் கலைகள்:-
புராதன காலத்தில் அநேகமான கலைகள் யாவும் சமய சடங்குகளாகவே இருந்துள்ளன. பின்னர் இந்தச் சடங்குகளில் சில அவர்கள் செய்யும் தொழிலோடு தொடர்புபடுத்தப்பட்டு தொழிற்கலைகளாக உருமாற்றம் பெற்றன. பொருளாதாரப் பிரச்சினைகளின்றி மக்கள் வாழத் தொடங்கியதும் சில கலைகள் பொழுது போக்கிற்காக மேடையேற்றப்பட்டன.
12

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் இந்த வகையிலேயே வன்னிப் பிரதேசக் கலைகள் வகைப்படுத்தப்பட வேண்டும்.
வன்னிப் பிரதேசத்தின் கலைகள் அனைத்தும் வயலும் வயலோடு சம்பந்தப்பட்டதாகவும் சமயச் சடங்குகளாகவுமே இருந்துள்ளன.
வன்னிப் பிராந்தியக் கலை வடிவங்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
Ol JFL Du_lő= JFLÍÉ(g5356ino 0 தொழில் ரீதியான கலை வடிவங்கள் 0 பொழுதுபோக்குக் கலை வடிவங்கள்
சமயச் சடங்குகள்
காவடி ஆட்டம், அம்மன் ஆட்டம், சிலம்பு கூறல் படிப்பு, புராணப் படிப்பு வேதாள ஆட்டம், பிள்ளையார் கதை படிப்பு, சூரன்போர் மற்றும் தெய்வ நேர்த்திக்காக ஆடப்படும் கூத்துக்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கோவலன் கூத்து, கன்னன் கூத்து, காத்தவராயன் கூத்து, சப்த கன்னிகள் - வாளபீமன் கூத்துக்களையும் குறிப்பிடலாம்.
தொழில் ரீதியான கலைகள்
விவசாய வளமும் கடல் வளமும் சிறப்புற்று விளங்கும் வன்னிவள நாடு ஈழத்தின் முக்கிய உணவுக் களஞ்சியங்களில் ஒன்றாக விளங்கியது. இப்பிரதேசங்களில் முக்கிய தொழிலாக விவசாயமே இருப்பதனால் விவசாயத்தோடு சம்பந்தப்பட்ட பல நாட்டாரியல் கலைகள் இங்கிருக்கின்றன. நாற்று நடும் பாடல்கள், பள்ளுப்பாடல்கள், காவல் பாட்டு, அருவி வெட்டும் பாடல்கள், பரத்தை வெட்டுப் பாடல்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். வன்னிப் பிரதேசத்தில் பாடப்பட்ட பள்ளுப் பாடல்கள் அனைத்தும் விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டவையாகும். விவசாயத்தின் காவல் காலங்களில் அரியாத்தை மீது பாடப்படும் வேலப்பணிக்கன் ஒப்பாரி மிகவும் உணர்ச்சி மயமானது. அறுவடை முடிந்து சூடடித்தபின் விவசாயிகள் தமது சந்தோசத்தை வெளிப்படுத்த இடம்பெறும் கோலாட்டம், கும்மி, போன்ற கலைவடிவங்களையும் தொழில் ரீதியான கலை வடிவங்களுக்குள் அடக்கலாம்.
13

Page 16
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
பொழுது போக்கிற்கான கலை வடிவங்கள்
வன்னிப் பிரதேசத்தின் பொழுதுபோக்குக் கலைகளாகப் பலவற்றைப் பெரியோர்கள் நினைவு கூருவர். இவற்றில் முக்கியமாக, கோலாட்டம், ஊஞ்சல், மகுடி, வேதாள ஆட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். குடமூதல் என்ற கலைவடிவத்தையும் முதியோர் நினைவுக்குக் கொண்டு வந்து குறிப்பிடுவார்கள். ஊஞ்சல், கோலாட்டம் என்பன ஒவ்வொரு வருடமும் சித்திரை வருடப் பிறப்பை அடுத்த வசந்த காலத்தில் ஒன்றுகூடி ஆடும் கலைகளாகும். முள்ளியவளையில் ஆடப்பட்ட மகுடி ஆட்டம் ஒரு நாடகத் தன்மை வாய்ந்ததாகும். இந்தியாவிற்கு இஸ்லாமியர் வியாபார நோக்கத்திற்காக வருண்க தந்த போது, அங்கிருந்த இந்துமத குருமாருக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் இடம்பெற்ற சமயப் போராட்டமே இதன் அடிப்படைக் கருவாகும்.
மகுடி, கோலாட்டம் போன்ற கலைவடிவங்களை மேடையேற்றியும் ஆடியும் வந்தவர்களில் முள்ளியவளையைச் சேர்ந்த கூத்தாடி வேலுப்பிள்ளை (எனது பாட்டனார்)அவரது மகன் வே.கிட்ணபிள்ளை, மருமகன் மு.இராமுப்பிள்ளை பேரன் இ.முருகுப்பிள்ளை அப்புக்குட்டி மயில்வாகனம், கந்தையா மற்றும் பலரும் குறிப்பிடத்தக்கவர்கள். கோலாட்டத்தை அண்மைக்காலம்வரை முள்ளியவளை வே.கிட்ணபிள்ளை, இ.முருகுப்பிள்ளை ஆகியோர் பழக்கிவந்துள்ளனர்.
வேதாள ஆட்டம் என்பது வேதாளங்கள் போல வேடமிட்டு ஆடுவதாகும். கந்த புராணம் படிக்கும் காலங்களில் அப்புராணத்தில் வரும் பார்வதி திருமணம், தெய்வானை திருமணம் ஆகிய பகுதிகளுக்குப் பயன்கூறப்படும்போது அத்திருமண நிகழ்ச்சியை விழாவாகக் கொண்டாடுவது வழக்கம். மாப்பிள்ளை ஊர்வலத்தில் சேனைகளுடன் பூதங்களும் மகிழ்ச்சிப் பெருக்கில் கலந்து ஆடுவதுபோல இந்த ஆட்டம் அமையும். பிரம்பினாலும் கடதாசியினாலும் கட்டியும் ஒட்டியும் உருவாக்கப்பட்ட உயரமான பருத்த ஆண் - பெண் உருவமைப்பைக் கொண்ட வேதாள உடற் கூடுகளுக்குள் நுழைந்து நின்று ஆடுவர். இந்த ஆட்டங்கள் பறைமேளத் தாளக்கட்டிற்கேற்பவே ஆடப்படும். முள்ளியவளை, செம்மலை, தென்னமரவடி போன்ற கிராமங்களில் இந்த ஆட்டக் கலை இருந்து வந்துள்ளது. இவற்றை விட நாட்டுக் கூத்துக்களும், அண்ணாவி மரபு நாடகங்களும் பொழுது போக்குக் கலைகளாக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
14

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கூத்துக்கள் / நாடகங்கள்:
"சோழர் காலத்தில் ஆரியக்கூத்து, தமிழ்க்கூத்து என்ற இரு கூத்து வகைகள் இருந்தன. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் இவ்விருகூத்து வகைகள் பற்றியும் கூறுகிறார். ஆரியக்கூத்து வடநாட்டிற்குரியது. தமிழ்க்கூத்து தமிழ் நாட்டிற்குரியது.
கூத்தாவது கதை தழுவிவரும் ஆட்டமாகும். ஆனால் நாடகம் வசனத்தில் அன்மவது. வடமொழி மரபினடியாக ஆக்கப்பட்ட நாடகத்தையே பண்டு ஆரியக்கூத்து என மக்கள் அழைத்திருக்கலாம். இது வசனத்தால் அமைந்தது. தமிழ்க்கூத்து அவ்வாறன்று. அது ஆடலும் பாடலும் நிறைந்தது. அதாவது கதை தழுவிவரும் ஆட்டமாகும். தமிழ்நாட்டிலே தெற்கத்திப்பாங்கு, வடக்கத்திப்பாங்கு என இரு பிரிவுகளுள் தென்மோடி இன்றும் பாடலுடன் ஆடப்படுவது.
ஈழத்தில் மட்டக்களிப்பில் மாத்திரமே இக்கூத்து தனக்கென சில அவைக்காற்று அம்சங்களையுடையதாயிருக்கிறது. இதற்கென மக்கள் சூழ இருந்து பார்க்கும் வட்டமேடை அமைப்பு உண்டு. மேடை அமைப்புக்குத்தக நான்கு பக்கங்களுக்கும் சென்று மக்களைப் பார்த்து ஆடக்கூடிய சதுரவடிவமான பின்னல் முறையிலமைந்த அலங்கார ஆட்டமுறையுண்டு. இதற்கெனத் தனித்துவமான, கர்நாடக சங்கீதத்தினின்றும் மாறுபட்ட, இசை முறையுண்டு. இவற்றிலே அகவல், வஞ்சி கலிப்பா, கொச்சகம், விருத்தம் முதலான பழைய பா வடிவங்கள் கையாளப்படுகின்றன. ஆரம்பம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், முடிவு என்ற ஒரு முழுமையான நாடக அமைப்புடையதாகவும் இறுதியில் இன்பச்சுவை பயந்து முடிவடைவதாகவும் இந் நாடகங்கள் அமைந்துள்ளன.
தென்மோடிக் கூத்தின் அமைப்பும், அதிற்கையாளப்படும் ஆட்டமுறைகளும், அவைக்காற்று முறைகளும் இன்று கிராமிய மக்களிடையே சென்று செம்மையற்ற வடிவில் இருப்பினும் அக் கூத்தினுள் தெரியும் செழுமையும் தொல்சீர் நெறியின் எச்சசொச்சங்களும் இலகுவிற் புலனாகும். இதில் மேலும் நுணுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சோழப் பேரரசு ஈழத்தில் நிலவிய காலை இக் கூத்துக்கள் ஈழத்திற்கு வந்திருக்கலாம். இங்கு வந்த கூத்துக்கள் பாரம்பரியமாக இங்கு பேணப்பட்டிருக்கலாம்" என்று கலாநிதி மெளனகுரு தெரிவித்துள்ளார்.
15

Page 17
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கோவலன் கூத்து, கன்னன் கூத்து, காத்தவராயன் கூத்து, கர்ணன் கூத்து, வெடியரசன் கூத்து, வாளபீமன் கூத்து, இவற்றுடன் கத்தோலிக்க கூத்துக்களான தேவசகாயம்பிள்ளை, என்டிக் எம்பிதோர், ஞானசெந்தரி, போன்ற கூத்தக்கள் குறிப்பிடத்தக்கவை.
இசை நாடகங்கள் அதிகமாக முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, தண்ணிருற்று, கணுக்கேணி, வட்டுவாகல், சிலவத்தை, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன. இசை நாடகத்துறையில் முக்கியமாக குறிப்பிடக்கூடியவர் முள்ளியவளை சூ. பொன்னையா அண்ணாவியராவர். அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, கிருஷ்ணலீலா, அல்லியர்ச்சுனா, அபிமன்னன் சுந்தரி, மார்க்கண்டேயர், சம்பூர்ண ராமாயணம், பாதுகா பட்டாபிஷேகம், சேரன் செங்குட்டுவன், பாஞ்சாலி சபதம் போன்ற பல இசை நாடகங்களை மேடையேற்றிப் புகழ்பெற்றவர். இதனால் இவரை எல்லோரும் பொன்னையா அண்ணாவியார் என அழைப்பர். இவரின் பிள்ளைகளும் இசைத்துறையில் புகழீட்டியவர்கள். முக்கியமாக இலங்கை வானொலியில் முல்லைச் சகோதரிகள் என்ற பெயரில் மெல்லிசைப் பாடல்களைப் பாடி இப் பிரதேசத்திற்கு பெருமை சேர்த்ததவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதேசத்தில் உள்ள குளங்கள்:-
வன்னிப் பிரதேசத்தில் காணப்படும் குளங்கள் பலவற்றின் பெயர்கள் காரணப் பெயர்களாகவே காணப்படுகின்றன. உதாரணமாக முத்துஜயன் கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக் குளம், கூழாமுறிப்புக் குளம், கட்டுக்கரைக்குளம், அலைகரைக் குளம், குஞ்சுக்குளம் போன்ற குளங்களைக் குறிப்பிடலாம். களிக்காட்டுக்குளம், முறிப்புக் குளம், கீச்சிக்குளம், கனகராயன்குளம், பெரியகுளம், மற்றும் ஊர்ப்பெயர்களோடு இணைந்த பெயர்களையுடைய பல குளங்கள் காணப்படுகின்றன. இந்தக் குளங்களின் பெயர்களில் பல வரலாற்றுத் தகவல்கள் புதைந்துள்ளன. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து வன்னி வரலாற்றின் பெருமைக்கு மேலும் அடித்தளம் அமைத்துக் கொள்ளலாம்.
புராணங்கள் பற்றிய ஆய்வு;-
வன்னிப் பிரதேசத்தில் பலவிதமான புராணங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றன. முக்கியமாக சிலம்புகூறல் இப்பிரதேசத்தின்
16

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் முக்கிய புராணங்களில் ஒன்றாக இருக்கின்றது. வன்னிநாச்சிமார் மான்மியம் என்ற வரலாற்றுப் புராணம் ஏட்டு வடிவிலே இருந்தாலும் 1981ம் ஆண்டு இது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை விட கதிரைமலைப்பள்ளு, வையாபாடல் போன்ற நூல்களிலும வன்னிமையைப் பற்றிய அதிக விபரங்கள் சேர்க்கப்பட்டள்ளன. சிலம்பு கூறல் எனும் புராணம் சிலப்பதிகாரக் கதையை விரித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இது குடாரப்பு வெற்றிவேற்பிள்ளையால் ஏட்டுப்பிரதியாக இயற்றப்பட்டதாகும். வற்றாப்பளைப் பொங்கல் நாட்களில் சிலம்பு கூறல் பாடல் பாடப்படுவது வழக்கமாகும்.
பள்ளுப் பிரபந்தம் முள்ளியவளை அரியகுட்டிப்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டதாகும். இது கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாகச் செல்லும் அடியார்கள் முள்ளியவளையில் இருந்து ஆரம்பிப்பதால் இதற்கு கதிரையப்பர் பள்ளு எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் மத்தியில் உள்ள கருத்தாகும்.
அரசர்கள் மத்தியில் மக்களுக்கிருந்த முக்கியத்துவம்:-
அரசர்களுக்கும் மக்களுக்குமிடையில் இருந்த தொடர்புகளை வரலாற்றுத் தகவல்களைக் கொண்டே தீர்மானிக்க முடியும். இதற்கு இப்பிரதேசம் சார்ந்த நாடக நூல்களை ஆதாரமாக் கொள்ளலாம். வேழம்படுத்த வீராங்கனை ஒளிப்பேழை வெளியீட்டு விழாவில் பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறிய கருத்துக்கள் கவனத்திற்கொள்ளக்கூடியது.
டச்சுக்காலத்தின் முடிவில் வன்னி, யானைகள் பிடிக்கப்படுகின்ற முக்கிய இடமாக திகழ்ந்தது. முக்கியமாக யானை வர்த்தகத்திற்கு மிக முக்கிய பிரதேசமாக வன்னிப் பிரதேசம் திகழ்ந்தது. டச்சுக் கவர்னருடைய நினைவேடுகளை எடுத்துப் பார்ப்போமேயானால் இந்த வன்னிப்பகுதியில் நடைபெற்ற யானை வர்த்தகம் பற்றி விபரமாகக் குறிப்பிட்டிருப்பதை காணலாம். வன்னியர்கள் அதாவது வன்னிப்பகுதி தலைவர்கள் அல்லது பிரதானிகள் டச்சுக்காரர்களுக்குக் கொடுக்கவேண்டிய யானைகளின் கணக்குகளை விபரமாக எழுதியுள்ளார்கள்.
"சில வேளைகளில் யானை கொடுக்கலாம் அலலது யானைக்கு பதிலாகக் காசு கொடுக்கலாம் என்பதற்காக அவர்கள் எழுதிய நினைவேடுகளில் இந்த வன்னியர்களிடம் இருந்து நாலரை யானை வாங்க வேண்டும் என்று கூட குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த அளவுக்கு மிக நுணுக்கமாக அந்த தகவல்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. யானைகளைப் பிடிப்பதற்காகக் குறிப்பாக
17

Page 18
அருணா செல்லத்துரையின் பிராந்தியக் கூத்துக்கள் மலையாளப்பகுதிகளில் இருந்து பணிக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அங்குகொண்டு வந்து வைக்கப்பட்டார்கள். இவர்கள் தான் யானைகளை சென்று பிடித்து வருபவர்கள். யானைகளை பிடிக்கின்ற முறை சிங்களப் பகுதிகளிலும் உண்டு அது "கிறால்" என்று சொல்லப்படுகின்றதை நீங்கள் அறிவீர்கள். மிருகவதை இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காக அதை தற்போது நிறுத்தி விட்டார்கள். இந்தப் பணிக்கர்கள் சென்று மந்திரங்கள் மூலம் யானைகளை வசியம் செய்து பிடித்து விற்பது வழக்கம். இப்படி விற்கப்படுகின்ற யானைகள் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக யாழ்ப்பாண வரலாற்றிலே காணப்படுகின்றது.
இதன் காரணமாக குறிப்பாக வன்னிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வருகின்றபோது பல இடங்களில் உள்ள ஊர்களுக்கு யானைகளோடு சம்பந்தப்பட்ட பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனையிறவு, ஆனைக்கோட்டை, ஆனைவிழுந்தான், ஆனைப்பந்தி இவையெல்லாம் காரணப் பெயர்களாக யானை வியாபாரத்தோடு தொடர்புபடுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். காரைநகர் கப்பல் துறைமுகத்தில் யானைகளை ஏற்றி அனுப்பியதாக வரலாறு கூறுகின்றது. அந்த பாரம்பரியத்திலேதான் குறிப்பாக ஆண்களே செய்து வருகின்ற ஒரு காரியத்தை பெண்ணொருத்தி செய்தாள். அதுவும் வீராங்கனையாகச் செய்தாள் என்பதைக் கூறுவதுதான் இந்தக் கதை.
பொதுவிலே எங்கள் பாரம்பரியத்திலே பெண்கள் தான் ஒப்பாரி பாடுவதாக கூறப்படுகின்றது. இது அந்த முறைகளிலே காணப்பட்ட ஒரு வித்தியாசம். இந்த வகையிலே அரியாத்தை என்கின்ற பெண் நிச்சயமாக நாங்கள் நாட்டாரியல் ஆய்வு முறையிலே சொல்வதாக இருந்தால் அவர் ஒரு பொக்கிஷமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவளுடைய வரலாற்றை காலம் காலமாக மரபுரீதியாகப் பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். அந்த ஒப்பாரி பாடல்களைப்பாடுகின்ற ஒரு மரபு ஒன்றைக் காண முடிகின்றது. இந்த வழமையை முல்லைமோடி என்று சொல்லப்படுகின்ற ஒரு முறைமையிலே ஆடுகின்றார்கள். இந்த முல்லைமோடி என்கின்ற சொல் நாட்டார் வழக்காற்றிலே, நாட்டுக்கூத்து மரபிலே ஒரு முக்கியமானது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பண்டாரவன்னியன் தணியாததாகம் போன்ற நாடகங்கள் வரலாறுகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டு எழுதப்பட்டவையாகும். வேழம்படுத்த வீராங்கனை, நந்தி உடையார் ஆகியன வாய்வழி வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். ஆனால் நான்கு நாடகங்களிலும் வன்னிப் பிரதேசத்தை ஆட்சி செய்த அரசர்களின் வரலாறுகள் அடக்கப்பட்டுள்ளன. இந்த நாடகங்களில் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் மிகவும் நெருங்கி இருப்பதைக் காண முடிகின்றது.
18

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பண்டாரவன்னியன் மற்றும் வேழம்படுத்த வீராங்கனை ஆகிய நாடகங்களில் இந்தப் பிரதேசத்தின் பிரதான தொழில்களில் ஒன்றாவிருந்த யானை பிடித்தல் முக்கியமாகக் காட்டப்படுகின்றது. அதே போல் நந்தி உடையார் நாடகத்தில் விவசாயம் முக்கியமாக எடுத்துக் கூறப்படுகின்றது. வரலாற்று நாடகங்களான பண்டாரவன்னியன் தணியாத தாகம் நாடகங்களில் வன்னி ஆட்சியாளர்களுக்கும், அந்நியர் ஆட்சிக்கும் இடையில் ஏற்பட்ட சுதந்திரப் போராட்டங்கள் விளக்கப்படுகின்றன. இதன் மூலம் அப்பிரதேச மக்களின் இன உணர்வும் பிரதேச ஆர்வமும் வெளிப்படுகிறது.
அக் காலத்தில் ஆட்சியில் இருந்த வெள்ளையர்கள் யானைகளைப் பிடிப்பதற்காக சிற்றரசர்களைப் பயன்படுத்தினார்கள். கூடுதலாக யானை பிடித்துக் கொடுப்பவர்கள் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். பின்னர் வன்னியர்கள் மத்தியில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரிவுகளை தங்களுக்குச் சாதகமாக வைத்துக்கொண்டு வெளிநாட்டவர்கள் ஆட்சியை நடத்தினார்கள்.
இதே வேளை, நந்தி உடையார் நாடகம் ஆட்சியாளர்களுக்கும் உள்ளூர் நிர்வாகிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களையும் எதிர்ப்புணர்வுகளையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
அந்நியர் ஆட்சி:-
இலங்கையில் அந்நியர் ஆட்சி இருக்கும் வரை வன்னிப் பிரதேசமும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாகவே இருந்ததிற்கு அந்நியர் ஆட்சிக் குறிப்புகள் சான்று பகருகின்றன. ஆனால் இடைக்கிடை வன்னியில் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் தமது எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தி வந்துள்ளனர். அநேகமான எதிர்ப்புகள் தோல்வியையே கண்டுள்ளன. அத்துடன் இப்பிரதேசத்திற்குள் சிறிய அளவில் கிறிஸ்தவ சமயமும் பரப்பப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
கல்வி முறை:-
ஆரம்ப காலத்தில் குருகுலவாசக் கல்வி முறை இருந்தமைக்கு ஆதாரங்கள் பல இருக்கின்றன. பின்னர் இலவசக் கல்வி அறிமுகத்தின் மூலம் கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூற முடியாது. இதற்கு இப் பிரதேசம் மற்றைய பிரதேசங்களுடன் குறைவான தொடர்புகளை உடையதாக இருந்தமையே காரணமாகும். இதற்கு முக்கியமாக போக்குவரத்து வசதிகள் குறைந்திருந்ததைக் காரணமாகக் கூறலாம். ஆரம்ப காலத்தில போக்குவரத்திற்காக மாட்டு வண்டில்களே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
19

Page 19
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் இதனால் மற்றப் பிரதேசங்களுடன் உள்ள தொடர்புகள் மிகவும் மந்தமான நிலையிலேயே இடம்பெற்றுள்ளன. இதனால் கல்வி வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் ஏற்பட்டதாக கூற முடியாது.
ஆங்கிலக் கல்வி:-
ஆங்கிலக் கல்விமுறை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரும் இப்பகுதியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதாக சொல்வதற்கில்லை. பண வசதியுள்ளவர்கள் மாத்திரம் தங்களது பிள்ளைகளை ஆங்கிலக் கல்வியில் ஈடுபடுத்தினர். இதனால் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் ஏற்படவில்லை. இதன் காரணத்தால் அண்மைக் காலம் வரை வன்னிப் பிரதேசத்தின் பாரம்பரியங்கள் கலாசாரங்கள் ஆகியவை மாற்றங்களின்றி மிகவும் கவனமாக பேணப்பட்டு வந்துள்ளதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
பொருளாதார மாற்றங்கள்:-
விவசாயத்தையும், யானை பிடித்தலையும் முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தது வன்னிப் பிரதேசம். வன்னிக் காடுகளில் யானைகளின் தொகை குறைந்ததும் மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் மாறியிருந்தது. ஆனால் அண்மைக் காலம் வரை விவசாயச் செய்கை கூட பாரம்பரியச் செய்கையாகவே இருந்து வந்துள்ளது.
உசாத்துணைத் தகவல்கள்:
1. வன்னிநாட்டின் வரலாறு - சில அவதானங்கள் - கட்டுரை
பேராசிரியர். பொ. பூலோகசிங்கம்.
2. புகழ் பூத்த வன்னிமண்ணின் காவலர்கள் - கட்டுரை
முல்லைமணி வே. சுப்பிரமணியம்.
3. அடங்காப்பற்று வன்னிமைகள் (1720 - 1760) கட்டுரை
பேராசிரியர். சி. பத்மநாதன். மாகோன் வரலாறு, செல்வி க. தங்கேஸ்வரி. Vanni and the Vanniyar's. C. Navaratnam. J.P.Lewis "Mannual of Vanni" 1974ல் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வன்னிப்பிரதேச தமிழாரய்ச்சி மாநாட்டுக் கட்டுரைகள்
20

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பாரம்பரியத் தேடல்
வன்னிப் பிரதேசத்திலே பல விதமான வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. வன்னி மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம் பண்பாடு போன்றவற்றைத் தெளிவாகக் குறிப்பிடும் சரித்திரச் சான்றுகள் அதிகம் இல்லை. வன்னி மக்களின் அண்மைக் கால விழிப்புக்கு காரணம் கல்வி, பொருளாதாரம், மத்திய தர வர்க்கத்தின் எழுச்சி போன்றவற்றால் ஏற்பட்டதேயாகும். கல்வியில் ஏற்பட்ட மாற்றத்தால் சிலர் வன்னிப் பிரதேசத்தின் வரலாறுகளைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தனர்.
இது பற்றிப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் பண்டாரவன்னியன் மலரில் (1983) எழுதிய வன்னிப் பிரதேசமும் நாட்டார் பண்பாட்டியலும் என்ற கட்டுரையிலே பின்வருமாறு தெரிவிக்கின்றார்:
"அண்மைக் காலத்திலேயே குறிப்பாக நாடு அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற காலப்பகுதியை அடுத்தே நமது சமூகத்தில் நாட்டார் பண்பாட்டியல் ஆய்வுகள் குறிப்பிடத்தக்க வகையில் நடைபெறத் துவங்கின எனலாம். ஆங்கிலேயர் ஆட்சியிலேயே சமூகவியல் நோக்கில் அமைந்த ஆய்வுகள் நம்மவர்க்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஆயினும் அந்நியர் நம்மைநோக்குவதற்கும் நாம் நம்மை நோக்குவதற்கும் வேறுபாடுகள் உண்டு.
பொதுவில் அந்நியர் கீழைத்தேய சமூகங்களை ஆட்சி செய்த காலத்தில் அச் சமூகங்களை இயன்றவரை சுமூகமாக நிர்வகிப்பதற்கும், அச் சமூகங்களிலே பரம்பரையாக நிலவிவந்த அதிகார முறைமைகளைத் தமக்குச் சாதகமான முறைகளிற் பயன்படுத்துவதற்கும், பயன்படத்தக்க வகையிலேயே மானிடவியல், சமூகவியல், வரலாற்றியல், மொழியியல் முதலிய ஆய்வுத்துறைகளை வளர்த்து வந்தனர். பயனுள்ள பல தரவுகள் பெறப்பட்ட போதும் அடிப்படை நோக்கு குறைபாடுடையதாகவே இருந்தது. ஆங்கிலக் கல்வியின் வழிவரும் நமது இன்றைய ஆய்வாளரும் முற்கூறிய அணுகுமுறைகளிலிருந்து முற்றாக விடுபட்டுள்ளனர் என்று கூறிவிடமுடியாது. எனினும் நாட்டில் ஏற்பட்டு வந்திருக்கும் அரசியல், பொருளாதார, சமூக இயக்கங்களின் விளைவாக ஆய்வுமுறைகளில் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதில் தவறில்லை.
21

Page 20
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் "இலங்கையிலே தமிழ் மக்கள் வாழும் பாரம்பரியப் பிரதேசங்களைப் பற்றி எண்ணும்போதும், பேசும் போதும், தவிர்க்க இயலாதவாறு வன்னிப் பிரதேசம் நினைவிற்கு வரும். பொதுவாகத் தமிழ்ப் பிரதேசம் என்ற வகையில் வன்னி குறிப்பிடப்படுவதாயினும், அதற்குச் சில தனித்துவமான சிறப்பியல்புகள் உண்டென்பதும் மனங்கொள்ள வேண்டியதேயாகும். சமூகங்களை வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களில் பொருளியலும், அதன் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை முறையும், முக்கியமானவை எனக் கொண்டால், வன்னிப்பிரதேசம் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பதிலும், வனத்தின் சூழலில் அமைந்திருப்பதிலும், தனித்தன்மை கொண்டதாய் விளங்குகின்றது.விவசாயத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்புப்பிரதேசமும் மன்னார்ப்பிரதேசமும் ஒப்பிடத்தக்கணவாய் இருப்பினும், வனம் சார்ந்த வாழ்க்கை முறை வன்னிப் பிரதேசத்திற்குப் பிரத்தியேகமான பண்புகளை வழங்கியிருக்கின்றது. முல்லையும் மருதமும் கலந்து முதுபெரும் பூமியாகத் திகழ்வது வன்னி.
"இவ்வடிப்படையான புவியியற் செய்தியையும், அதனால் நிர்ணயிக்கப்பெற்ற வாழ்க்கை முறையையும் கணக்கில் எடுக்கும் பொழுதுதான் நாட்டார் பண்பாட்டு ஆய்விற்கு வன்னிப் பிரதேசம் முக்கியமாய் இருப்பது முனைப்பாகத் தோன்றும். நாட்டார் பண்பாட்டியல் அடிப்படையில் நாடு சம்பந்தமானது. அச் சொற்றொடர் மிகவும் விரிந்த பொருட் பரப்பை உடையது. மொத்தத்தில் வாய்மொழி இலக்கியம், நாட்டார் கலைகள், கைப்பணிகள், நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்கள், ஒழுகலாறுகள், நம்பிக்கைகள், நாட்டு மக்களின் பேச்சு வழக்குகள் முதலியவற்றை அத்தொடர் குறிக்கும். அவற்றுள் வாய்மொழிப்பாடல்களே பெரும்பாலும் முதலிலே பலரது கவனத்தை ஈர்க்கின்றன. நாட்டார் பண்பாட்டியல் வரலாற்றை நோக்குமிடத்து, பொதுவான ஒரு வளர்ச்சிப் போக்கு தெளிவாகும். கலை இலக்கியங்களில் அக்கறையும் ஆர்வமும் கொண்டோர் நாட்டார் பாடல்களையும் இசையையும் சேகரிக்கத் தொடங்குவதே நாட்டார் பண்பாட்டியற் பரிணாமத்தின் முதற்படி நிலை எனலாம். அதற்கேற்ப வன்னிப் பிரதேச நாட்டார் பாடல்கள் ஆராய்ச்சியாளர் சிலரின் கவனத்தைப் பெற்றுள்ளன.
"நாட்டார் பண்பாட்டியல் ஆய்வுகள் உலகின் பல பாகங்களிலும் வளர்ந்து வந்திருக்கும் தன்மையை நோக்குவார்க்கு ஒரு உண்மை புலப்படும். நகரம் கிராமம் என்ற பாகுபாடு முனைப்படையத் தொடங்கிய பின்னரே நாட்டார் வழக்கியல் தனித்த ஒரு ஆய்வுத்துறையாக உருவாகியது. அந்த வகையில் கிராமிய வாழ்க்கையைக் கூடுதலாகப் பெற்று விளங்கி வந்துள்ள வன்னிப் பிரதேசம்
22

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் நாட்டார் பண்பாட்டின் உறைவிடமாகவும் இருந்து வந்துள்ளமை தருக்கத்தின் பாற்படுவதேயாகும். அது விவசாயத்தில் இடையீடின்றி முன்னிலையில் இருந்து வந்திருப்பதைப் போலவே வாய்மொழி இலக்கிய வளத்திலும் தனிச் சிறப்புடன் திகழ்ந்து வந்துள்ளது. உண்மையில் விவசாயம் தழைத்தோங்கும் பிரதேசங்களில் வாழும் உழைக்கும் மக்கள் மத்தியிலேயே வாய்மொழிப் பாடல்கள் விறகுர்ந்த நிலையிற் காணப்படும். உலகப் பொதுவான நியதிக்கு இயையவே வன்னிவள நாட்டிலும் வாய்மொழி இலக்கியம் வாழிப்பாக வளர்ந்து வந்திருக்கிறது"
வன்னி மக்களின் தற்போதைய விழிப்புக்கு மூல காரணம் பிரதேச தனித்துவம் இலக்கிய வளர்ச்சி ஆகியனவாகும். அத்துடன் முல்லை மணி அவர்கள் 1960களில் எழுதிய பண்டார வன்னியன் நாடகமும் ஒன்றாகும் என்றே கூறலாம். இந்த நூல் 1970 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பண்டார வன்னியன் நாடகம் வெளிவருவதற்கு முன்னர் வன்னிப் பாரம்பரியம் நாடோடிக் கதைகளாகவே இருந்துள்ளன. யாழ்ப்பாண வைபவமாலை, வையா பாடல், சிலம்பு கூறல், வேலப்பணிக்கர் ஒப்பாரி, சி.உநடனசபாபதி உடையார் அவர்கள் வெளியிட்ட விசித்திர ஊஞ்சற்பதிகங்கள், கோவில்கள் மீது பாடப்பட்ட பல பதிகங்கள், மற்றும் வெளிநாட்டவர்களின் குறிப்புகள் போன்றவற்றிலேயே வன்னிப் பிரதேசத்தின் இடப்பெயர்கள் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
கலை, கலாசாரம் பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. மனிதனது வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் கலாசாரத்தின் வெளிப்பாடுதான் கலைகள். இந்தக் கலைகள் இயல் இசை நாடகமென மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வண்ணம் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளன. இயல் என்பது தனியான பிரிவாகவும், இசை, நாடகம் என்பன இயல் இசை என்பவற்றை ஒன்று சேர்த்த ஒரு பிரிவாகவும் காணப்படுகிறது. இதில் தமிழ் அரங்கியல் என்பது தமிழ் பண்பாட்டிலேயே ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அவற்றுள் நாட்டியம், நடனம் என்பன செந்நெறிக் கலைகளாகத் தமிழ் மக்களிடையே பரவி வந்துள்ளன. ஆனால், அந்தளவிற்கு நாடகக் கலை ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
இதன் காரணமாகத்தான் நாடகம் பற்றிய வரலாற்றுச்சுவடுகள் தமிழில் அதிகம் பதியப்படவில்லை. ஆனால், அண்மைக் காலங்களில் இத்துறையில் ஒரு விழிப்புணர்வைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழர் பாரம்பரியத்தில் நாடகம் ஒரு வாய்வழி பேணப்பட்ட கலையாகவே இருந்து வந்திருக்கிறது எனலாம். பொதுவாக இவையனைத்தும் நாட்டுக் கூத்து வடிவங்களாகவே
23

Page 21
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இருந்திருக்கின்றன எனக் கூறலாம். இந்த நாட்டுக் கூத்துக்கள் அனைத்தும் பிரதேச ரீதியாக, சமயச் சடங்குகளாகவும், சாதிக் கட்டுப்பாட்டிற்குக் கட்டுப்பட்டவையாகவுமே இருந்திருக்கின்றன.
முல்லையும் மருதமும் இணைந்து காணப்படும் வளமான பிரதேசம் வன்னிப் பிரதேசம். இங்குள்ள கலை, கலாசார மரபுகளை ஆய்வு செய்து குறித்து வைக்க வேண்டுமென்பதே எனது நோக்கம். வன்னிப் பிரதேசத்தில் செழிப்புற்று இருந்த நாட்டுக் கூத்துக்கள், நாடகங்கள் பற்றி சில வரலாற்றுத் தகவல்களைக் குறித்து வைக்கும் நோக்கத்துடன் தேடல் முயற்சிகள் சிலவற்றை இங்கு தர முனைகின்றேன்.
இலங்கையில் ஆடப்பட்டு வரும் கூத்துக்கள் பற்றி பொதுவாக ஆய்வு செய்வது இந்த நூலின் நோக்கமல்ல. இலங்கையின்கூத்து வடிவங்கள் பற்றி கலாநிதி சிமெளனகுரு அவர்கள் “பழையதும் புதியதும் " என்ற நூலாகக் கட்டுரைகள் பலவற்றை ஒன்றிணைத்து வெளியிட்டுள்ளார். இந்த நூலிலே கலாநிதி மெளனகுரு அவர்கள் முல்லைத்தீவு நாட்டுக் கூத்துக்கள் பற்றி குறிப்பிடும்போது 'முல்லைத்தீவில் ஆடப்பட்ட கோவலன் கூத்து 1974ல் அருணா செல்லத்துரையினால் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. நேரச்சுருக்கம், செம்மை என்பனவும் இதிலும் மேற்கொள்ளப்பட்டன. முல்லைத்தீவின் கோவலன் கூத்து தனித்துவமான ஆட்ட முறைகள் கொண்டது. கோவலன் கண்ணகி கதையைக் கிராமிய பாணியில் கூறுகின்றது. கருணன் கருணையும், கோவலன் கூத்தும் இலங்கை கலைக்கழக நாடகக் குழு நடத்திய அகில இலங்கை தமிழ்க் கூத்துப் போட்டியிற் தெரிவுசெய்யப்பட்டு, கொழும்புலும்பினி அரங்கில் நடைபெற்ற நாடக விழாவில் மேடையேறிய கூத்துக்களாகும்.
கலைக்கழக விதிமுறைகளுக்கமைய இவை தயாரிக்கப்பட்டமையினால் இவற்றையும் நாம் வித்தியானந்தன் பாணி வந்த கூத்துக்கள் என அழைப்பதில் தவறில்லை. கோவலன் கூத்து ஏறத்தாழ இதே முறைப்படி 1989 இல் மெற்றாஸ் மெயிலினால் முல்லைத்தீவில் அரங்கேற்றப்பட்டது. இதிற்பட்டதாரி ஆசிரியர்கள், கல்வி உத்தியோகத்தர் பலர் பங்குகொண்டு நடித்தமை குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
திரு வே.கருணாநிதி அவர்கள் ‘தமிழக, ஈழக்கூத்து மரபுகள்’ என்ற நூலிலே இலங்கையிலும் தமிழகத்திலும் இருக்கும் பாரம்பரியங்கள் பற்றி ஒப்பு நோக்கியுள்ளார். இந்த நூலிலே முல்லைத்தீவுப் பிரதேசத்திலும் நாட்டுக் கூத்துக்கள் காணப்பட்டன என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
24

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் முல்லைமணி, பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், செல்லையா மற்றாஸ் மெயில், நா.செல்வரத்தினம் க.தர்மலிங்கம் போன்றோர் தமது கட்டுரைகளிலே முல்லைத்தீவு நாட்டுக் கூத்துக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.
இந்த வகையிலே வன்னிப் பிராந்தியக் கூத்து மரபுகள் மேலும் ஆய்வு செய்யப்படக்கூடியவை என்பது தெளிவாகிறது.
வன்னியின் முக்கியமான கூத்துக்கள்
வன்னிப் பிராந்திய பாரம்பரியக் கூத்துக்களை ஐந்து வகையாக வகைப்படுத்தலாம்.
1. கூத்துக்கள் 2. கிறிஸ்தவக் கூத்துக்கள் 3. சிந்து நடைக் கூத்து 4. இசை நாடகங்கள் 5. வசன நாடகங்கள்
கூத்துக்கள்:-
நாட்டுப் பாடல்களுக்கான ராகமெட்டுக்களுடன், கூடுதலான ஆட்டங்களைக் கொண்டதாக கூத்துக்கள் இருந்துள்ளன.
முக்கியமாக வன்னிப் பிரதேசத்தில் கோவலன் கூத்து, கன்னன் கூத்து, கர்ணன் கூத்து வெடியரசன் கூத்து, வாள பீமன் கூத்து போன்றவற்றைக் குறிப்பிடலாம். கூத்துக்கள் பற்றிய விபரமான ஆய்வுபின்னால் இடம்பெறுகின்றது.
கிறிஸ்தவக் கூத்துகள்:-
கிறிஸ்தவ சமயம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், பாரம்பரியமாக ஆடப்பட்டு வந்த கூத்துகள் பாணியில் கிறிஸ்தவ கதைகள் கூத்துக்களாக ஆடப்பட்டன.
யாழ்ப்பாணத்திலிருந்து அண்ணாவிமார் அழைத்து வரப்பட்டு முல்லைத்தீவு சிலாவத்தை போன்ற இடங்களில் இந்தக் கூத்துக்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. தேவசகாயம்பிள்ளை, என்டிக் எம்பிதோர், ஞான சௌந்தரி, தொண்டி நாடகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை மேடையில் திரைகட்டி நடிக்கப்பட்ட கூத்துக்களாகும்.
25

Page 22
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
சிந்து நடைக் கூத்து:-
அநேகமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பிரபலமாக இருந்த இந்தக் கூத்துப் பாணி வன்னியிலும் பரவியிருந்தது. இதில் முக்கியமாக காத்தவராயன்
கூத்தைக் கூறலாம். இந்தக் கூத்து வேகமான ஆட்டங்களைக் கொண்டதல்ல.
இந்தக் கூத்தும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் வைத்தே ஆடப்பட்டு வந்தது.
இசை நாடகங்கள்:-
வன்னிப் பிரதேசத்தில் இசை நாடக மரபு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது. பல இசை நாடகங்கள் மேடையேற்றப்பட்டதைப் முதியோர் பலர் நினைவுகூருவதை நான் கேட்டிருக்கின்றேன்.
இசை நாடகங்கள் தென்னிந்தியாவில் இருந்து இங்கு பரவியதாகவே தெரிவிக்கப்படுகிறது. ஆனால் வன்னியைப் பொறுத்த வரையில் முள்ளியவளைப் பிரதேசத்தில் இசை நாடகங்கள் கூடுதலாக மேடையேற்றப்பட்டுள்ளன.
சுபத்திரா கல்யாணம், சகுந்தலா அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, கிருஷ்ணலீலா, அல்லியர்ச்சுனை, அபிமன்னன் சுந்தரி, மார்க்கண்டேயர் சம்பூர்ண ராமாயணம், பாதுகாபட்டாபிசேகம், பாஞ்சாலி சபதம் போன்ற இசை நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன.
1939ம் ஆண்டு முள்ளியவளைப் பிரதேசத்தில் ஒரு இசை நாடகத்தைப் பழகு முன்னர் அவர்களினால் எழுதப்பட்ட ஒப்பந்தம் இதற்குச் சான்று பகருகின்றது.
26

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ 列ー 6-3 ?
്ഞു. ഭുകമ് ("?:? ീ,മ്ല
-ജ Ah, 'foാu
A*x ്. ലത്ത* یہ ممبر ?رجہ
༄། 2 ضعة هلامي له منه أمه – 2 كم هذه دعوجی بھیج
,"' + مزج مرش മമ്മ മ7്വ
2 حیح CŠ:JYor M.“ |- కపి a 24.-
كتxحتخ 。 عصرتھوٹے چھ ک> میچونکہ ہ ہجویری ‘جیعتری حالترتی تھی.یہ ہوPaی F" صے سر مقررe83ھ کشتیہ مص V7r Ké`N §ණුෆියුණුංකීර්‍ර්‍ද්‍රිත්‍රීඞ 4 ്? 23 یہ ۔ مشکوہ“مت ? یہ م ص 60رہ:*?
نوعی می v مرجع لاج 2് (' ' * یہ میل ھ> بہتر عصر تھی
ઉ. 62 = ; äS لاً تی ہے "حہ علیے "حرم۔ ہم حقیم تح (علیے ( یم بھا۔ و
zaosa 2\cež ہوۓ تم دعائے بتہ مجھجو عہ ”جمعی سمتیہ مجھے حی رکعترض
”ہہ چکھ سے یہ یمسه .eSaya v" (P محمدح که به بیمه త^ محمدحت -- ఆ دحہ حد ? کہہ ۔ محمے ‘‘محترمرجع نہ ہی لالعہ لايمي مستع2 كي مجموع
്മദ്’ ( (sc് Уз čiš? - o ease
a. ar Ge assee.
ണം്ഞ'''''' 2Me 26 te
s تخیلۓ كجكم مع "مه کعبة طشتره سے تعیمرجء ع2ویکے ( هویهo - پیت ) 4, (കാഴ്ച ര* طه سه ماهٔ سایه نرهایGولا r', ago) a മ്മ ബ് سمح نمونے معیئمریکی ر2 کہ
سمعکے قبح ہجوم مع چ ല്പന کو سرے محموحسین حع حوصۓ مج&?رکہ سچے ۶ ఫ్లో- ہ مجموعے خیخے منضبطی سمجھتے ه یحیی تحت تع 2یه مه ریدی;
27

Page 23
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
2-6-39
இத்தாற் சகலருமறிய இதன் கீழ் கையொப்பம் வைக்கும் பேர்வழிகாறராகிய நாங்கள் முள்ளியவளை குடி
சின்னத்தம்U- சுப்பையா சூரியர் - பொன்னையா ஆறுமுகம் - சின்னத்தம்பரி
ஆகிய இவர்களிடம் நாங்கள் குறித்த ஓர் சாத்திரத்தை பழக எத்தனித்து அதன் பேரால் பேசிய பொருத்தம் ஒரு பிள்ளைக்கு 9பது ஒன்பது ரூபா வீதம் கொடுப்போம் என்றும் அதில் முற்பணம் ஒரு பிள்ளைக்கு 5. ஐந்து ரூபா விகிதம் இப்போ கொடுப்போமென்றும் மிகுதிப் பணத்தை நாடக அரங்கத்தில் அன்று கொடுப்போமென்றும் வாக்குப்பண்ணி இதன் கீழ் 6 ஆறு சத முத்திரையில் எங்கள் கை ஒப்பம் வைக்கிறோம்.
(2-வது) இன்னாடகத்தைப் பழகி ஒப்பேற்றுவதற்கு முன் ஏதும் அசட்டை செய்து அண்ணாடகத்தைப் பழகாமல் விலகிப் போவோமானல் ஒவ்வொரு பிள்ளையும் 18. பதினொட்டு ரூபா வீதம் அபராதம் கொடுப்போம் என்றும் சம்மதித்துக் கொண்டோம்.
(3 - வது) இன்னாடகத்தைப் பழகுவதற்கு மனேச்சராக முள்ளியவளைக் குடி சின்னர் ஆறுமுகம் என்பவரை நியமித்து அவர் சொல் கேட்போமென்றும் அவர் சொல் கீழ்ப்படிந்து நடப்போமென்றும் சம்மதித்துக் கொண்டோம்
சாட்சிகள்:
1.
ஒப்பந்தப் பிரதி தெளிவாக தரப்பட்டுள்ளது. • ♥ Š . ."i • • -• -ኈ
28
 

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இந்த ஒப்பந்தத்தில் நாடக நடிகர்களின் பெற்றோர், அண்ணாவிமார்
மூவருடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதில் நாடகத்தைப் பழகுவதற்கு
ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒன்பது ரூபா பணம் அண்ணாவியாருக்குக்
கொடுப்பதற்கு இணங்கியுள்ளார்கள். நாடகத்தைப் பழகாமல் இடையில் குழப்பும்
பிள்ளையின் பெற்றோர் தண்டப் பணமாக 18 ரூபா செலுத்தவும் இணக்கம்
தெரிவித்துள்ளனர்.
சில இடங்களில் கூத்தைப் பழக்குவதற்கு அண்ணாவிமாருக்கு நெல்லும்
கூலியாக கொடுத்திருப்பதை அண்ணாவிமார் நினைவு கூர்ந்துள்ளனர்.
முள்ளியவளையைச் சேர்ந்த சின்னத்தம்பி சுப்பையா, சூரியர் பொன்னையா,
ஆறுமுகம் சின்னத்தம்பி ஆகியோர் அண்ணாவிமாராக இருந்துள்ளனர்.
இதேபோல கணுக்கேணியில் 1945ம் ஆண்டு சகுந்தலா என்னும்
நாடகத்தை முள்ளியவளை சின்னத்தம்பி சுப்பையா, அண்ணாவியாரிடம்
பழகுவதற்கு ஒப்புக்கொண்டு ரூபா 20 கொடுப்பதற்கு இணங்கியுள்ளனர்.
நாடகத்தை பழகாமல் விலத்துபவர் ரூபா 40 அபராதமாகச் செலுத்துவதற்கும்
ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நாடகங்களைப் பழக்குவதற்கு மனேஜராக ஒருவரையும்
நியமித்துள்ளார்கள். அவரே இந்த நாடகத்தின் நிர்வாகப் பணிகளை நிறைவேற்றுபவராக இருப்பார். நாடக ஆரம்பத்தில் ஒரு தொகைப் பணத்தைக்
கொடுப்பதற்கும், நாடக அரங்கேற்ற தினம் மிகுதிப் பணத்தைக் கொடுப்பதற்கும்
சம்மதம் தெரிவித்து ஆறு சத முத்திரையில் அவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
29

Page 24
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
- p-r- ------ی -%' ܚܚ- ܘܗܝ* -- ہے کہ--ساس
് در ۴ بعد عصیاخ لهاد د معنوى ته ده ته وسصيى چه 3کiه بنی بوده و دوم، ملا روی هوایی و تعی. (لاعیهٔ Sc کار هو یح بفر میرح
p ه میی ·y : Չمیں n : نویہ "??総リ 4 ممبئی 8ڑا aeu ces • . مه خمسة وعرة ويتمتعسته حي ، (ر
- فرهنه و این موقع نیمهکاغذ و غیره ح ;"وفيهޠި ބުئ؟ބު بوچ چکی ہو (oیقہ، شہید ہو یعنی و تکیہ ہی چست دا دا63 ئ ge 64 وه سے 7 جو بخیبرھویم. تة ومن 3هج أهلكفي ©2 ീ. ദ ലീ یہ تھی جبع ہوطےؤنکے فتح عثnمی محہ ں ، ضحتھےP (μο as ) (?N میبیند او، «رازی ضاریه در دء «ع Gنجی میخ یمنی 5 وضع ہوتی نعم اض റ് 2േ '8-(?ം >്. മി.മ ۰ به صد غذاهان ندهی به اوج
i. 2) ஒர் 2 کلف, e Gcنیوججتی ہی عیس خها. خیر ہوتی ہو . مم“ وہ دو ہوے تھے احع 29:2%9A «ضی به . وی بیضایعه ویند» ഠ ഭ് , മഞ്ഞുp ? ہتہ ممکن ہوتی تھیو ہم ضها و خاعی وی قوم محروق و وقه G مسدود 2 می سوره ش ص ض و داری ae9* %sపూరల్డ్ • డా డిలి ఉత్తgSaa
ہیGی۔ @@@@@ .و تېينغ .ரத்இஃ 2 یک ۹ ساض حسین CynG O1 & Son c-lys- en CSPEB& Tobu • CASA طویلیے خھے نہ<2%وجی نہ
ኧ سمY حصے %" , ap G شدہ nشا Ysy of 2. متوقع رہنچا حضص نخعے دہ، 6»وہ بعے تین
ک9 t بھیج کھیۓ وبے り 227. : 2) الأمه ومهم
 
 

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
4-5-45 கறுக்கேணி
1) இதன் கீள் கையொப்பம் வைக்கும் கணுக்கேணி(கிளக்கு) வாசிகளாகிய நாங்கள் முள்ளியவளை குடி சின்னத்தம்பி - சுப்பையா அண்ணாவியாரிடம் சகுந்தலா என்னும் ஓர் நாடகம் பளக எத்தனத்து பேசிய பொருத்தம் ஒரு பிள்ளைக்கு 20 = ரூபா வீதம் பேசிஒப்புக்கொண்டு இதன் கீல் கைச்சாத்திடுகிறோம். இன் நாடகத்தை பளசி ஒப்பேற்றுமுன் ஏதும் பளகாமல் வத்துவோமாகில் ஒரு பிள்ளைக்கு (40=) ரூபா அபராதம் கொடுப்போம் என்று வாக்கு பண்ணி இதன் கீள் 6 சத முத்திரையில் எங்கள் கை ஒப்பம் வைக்கிறோம்.
2) இதர்க்கு மனேச்சராக கணுக்கேணி ஆறுமுகம் வேலுப்பிள்ளை என்பவரை வைத்து அவர் சொல் கேள்போம் என்றும் பேசிய பொருத்தம் தவறாது அவரிடம் செலுத்துவோம் என்றும் வாக்கு பண்ணுகிறோம். பேசிய பொருத்தத்தில் இப்போ ஒரு பிள்ளைக்கு 10 =ரூபா கொடுப்போம் என்றும் மிகுதியை அரங்கத்தில் அன்று கொடுப்போம் என்றும் வாக்குபண்ணுகிறோம்.
சாட்சிகள் 1) சிசெல்லையா 2) த.குமாரசாமரி
ஒப்பந்தப் பிரதி தெளிவாக தரப்பட்டுள்ளது.
31

Page 25
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள இடங்கள் முள்ளியவளை, கணுக்கேணி என்ற இடங்களாகும். இந்த இடங்கள் வையாபாடலில்
இடம்பெற்றுள்ளன.
"முள்ளிமா நகரதனிற் சாண்டா னென்போன்
முறையதனாலரசுபுரிந்திடலு மொய்ம்பார் கள்ளவிழுங்கணுக்கேணி நகரைக் காத்த
காவலவன் வில்லிகுலப் பறைய னென்போ னெள்ளளவு மெவர்தமக்கு மொன்று மீயா
னிருந்தாசை யாண்டிருந்தா னிறைய தாக நள்ளறுசெங்கருவியுடைக் கைய னன்னோர்
நன்மலையிலரசெனவந்தணுகி னானே"
16ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் செகராசசேகர மகராசாவின் சமஸ்தான வித்துவான் வையாபுரி ஐயர் என்பவரால் யாக்கப்பட்ட "இலங்கை மண்டலக் காதை" என்னும் வையாபாடலில் முள்ளிமாநகர் எனக் குறிக்கப்படுவதுமுள்ளியவளை என்னும் இடத்தையேயாகும். வையாபாடல் நூலில் மூன்று இடங்களில் முள்ளிமாநகர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த இடங்கள் எவ்வளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருந்துள்ளன என்பது தெளிவாகின்றது.
இந்த நாடகங்கள் கோயில் கட்டட நிதி சேகரிப்பிற்காகவும், பாடசாலைக் கட்டட நிதிசேகரிப்பிற்காகவுமே மேடையேற்றப்பட்டுள்ளன. 1945ம் ஆண்டு கணேசனாந்தா நடன சபா பாலியர்கள் பழகிய நாடகம் ஒன்று பார்ஸி சகுந்தலா என்னும் பெயரில் தண்ணீரூற்று பிள்ளையார் கோவில் திருப்பணிக்காகக் மேடையேற்றப்பட்டுள்ளது. இந்த நாடகம் பார்ஸி நாடக மரபைச் சேர்ந்ததென இவ்வூர் நாடக ரசிகர்கள் கூறுவர். பார்ஸி, மராத்திய நாடகங்கள் என்பன கொட்டகைகட்டி அரங்கு அமைத்து, பக்கத்திரை முன்திரை தொங்கவிட்டு நடிக்கும் நாடகமாகும் என கலாநிதி மெளனகுரு அவர்கள் பழையதும் புதியதும் என்ற நூலிலே தெரிவித்துள்ளார். பார்ஸி சகுந்தலா நாடகத்திற்காக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.
32

அருணா செல்லத்தரையின் வண்ணிப் பிராந்தியக் கூத்துக்கள்
Sdröjo! -: srLs LDCSrpsai :- j6rso! தண்ணியூற்று பிள்ளையார்கோவில் திருப்பணிக்காக பலபெரியார்களின் வேண்டுகோளுக்கினங்ெ uy &si asawar Frarias sLszarFLur Lu Trotz řassir சொற்பநாட்களில் பரீட்சை செய்த
ஸ்பெஷல் நாடகம் தண்ணியூற்று A, காசிப்பிள்கள அவர்களின் அலங்காரமண்டபத்தில் 12-9.45 புதன்கிழமை இரவு 9.30 மணி தொடக்கம்
பார்ஸிசகுந்தலா
என்னும் சரிதை அ திவிமரி சையாப் கடைபெறும்.
O
ஆ. வேலுப்பிள்ளை . பபூன், செப்படவன். ஆ. சின்னத்துரை . கெய்வேந்திரன்,கண் இசை,
. இசக்கினம் ܗ ேேம்ே ?Bav. ஆறுமுகம் . மேனகை, மத்திரி சி. செல்லத்துரைப்பத்தச் .... assiivsus ßas seg i, (CaFt Luu ai Bar சி. செல்லக்கம்: . முன் துஷ்டியத்தன், சிக்ஷன் வே. கனகசிங்கம் . பின் துஷ்டியக்தன் சு செல்லத்துரைப்பத்தச் . பின் சகுந்தலா சி. ஐயாத்துரைப்பக்தர் . முன் சகுந்தலா S. பொன்னையா ஆச்சாரி . ஆர்மோனியம் S. ocjenЈЕЈТ gogof . மிருதக்கம், டோலக்.
மற்றையோர் சமயோசிதம் ஆட்டகால சட்டத்தை அனுசரிப்பதே முறை. டிக்கற்: 1-ம் வகுப்பு ரூ. 1690 2-ம் வகுப்பு ரூ.4 982ع«
3-ம் வகுப்பு சதம் 325 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு uynn diedis. பஞ்சமச்களுக்குப் பிரத்தியேக இடம் அளிக்கப்படும்.
asihuah LaGaragiasai : புருேப்மைட்டர்: K. சின்னத்தம்பி S. சின்னத்துரை. R. GavusikT diiyGva uoQGsaragôf :
V. K. நவரெத்ரினம். daarvarda dopas, avričuvaurd. - 396
33

Page 26
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் 1946ம் ஆண்டு முள்ளியவளை கலா அபிவிருத்தி சபையினரால் "சுபத்திரா கல்யாணம்" எனும் சரிதை 14 வயதுச்சிறுவர்களுக்குப் பழக்கப்பட்டது. இந்த நாடகத்தை முள்ளியவளை சி.நடனசபாபதி அவர்கள் இயற்றியிருந்தார். சி.சுப்பையா அண்ணாவியார் நாடகத்தைப் பழக்கியிருந்தார்.
நாடகத்துக்கான பக்கவாத்தியக்காரர்களாக வட இலங்கை ஆர்மோனிய வித்துவான் வி.கே.நல்லையா பத்தர் அவர்களும், கே.ரி.கோவிந்தபிள்ளையும், மிருதங்கம், டோலக் போன்ற வாத்தியங்களை வாசிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்ததாகத் துண்டுபிரசுரத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாடகத்தில் நடிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்த (முல்லைமணி) வே.சுப்பிரமணியம் அவர்கள் தகவல் தருகையில் பலவித காரணங்களினால் இந்த இசை நாடகம் மேடையேற்றப்படமுடியாமல் போய்விட்டதாகத் தெரிவித்தார்.
இந்தத் துண்டுப் பிரசுரங்களில் நாம் சில விடயங்களைக் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நாடகங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு அன்றைய நாடகத்தில் பங்குபற்றுவோர் சமயோசிதமான முறையில் பங்குபற்றுவர் என்பதும், ஆட்டகாலச் சட்டத்தை அனுசரிப்பதே முறை என்றும் பிரசுரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாதிக்கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்திருப்பது பஞ்சமர்களுக்குப் பிரத்தியேக இடமளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து தெளிவாகிறது. இத்துண்டுப் பிரசுரங்கள் மூலம் இசை மரபு நாடகங்களைப்பழக்கியவர்களில் முள்ளியவளை சி. சுப்பையா அண்ணாவியார், சூரியர் பொன்னையா அண்ணாவியார், ஆறுமுகம் சின்னத்தம்பி அண்ணாவியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்பது தெரியவருகிறது. இவர்களில் சூரியர் பொன்னையா அண்ணாவியார் அண்மைக்காலம் வரை இசை நாடகங்களைப் பழக்கி மேடையேற்றியவர். இவர் பழக்கிய சில நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. இவர் இலங்கையின் மெல்லிசைப் பாடல்களில் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த முல்லைச் சகோதரிகளின் தகப்பனார் என்பதையும் குறிப்பிடவேண்டும். இவர்களும் அண்மைக்காலம் வரை இசை நாடகங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
34

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
யாழ்ப்பாண நகரமண்டப சின்கள். ரோக்கீஸ் படங்களில் தோற்றும் மின் ஒளி உடைகள் நேரில் துவாரகை பட்டினத்தையும், அஸ்சினுழரி நகரத்தையும். இந்திரப்பிர்ஸ்தத்தையும்
வாருங்கள்! வந்துபாருங்கள்! களிகூருங்க,
முள்ளியவனே கலாபிவிர்த்தி சபையின்பேரால்
66 t rr?
சுபத்திரா கல்யாணம்"னும்: முள்ளியவளை காலைக்கடுத்த பூரீமான் வி. உ. குட்டித்தம்பி உடையார் அவர்களின் *ዩፅ? கடைவனவில் அமைத்திருக்கும் அலங்கார மண்டடத்தில்
2 12:10.46 சனிக்கிழமை இரவு 9-30 மணி தேடம்
ஆ. மு. கனகசபாபதி அவர்களின் ஆதரவில்
ALTLTTAqeLeL 00 ALLLLLL ALLLLL TATALLTLT L SLTLAAL L00LS TLTTT TTTTTTTT
இணயற்ற தந்திரகலக இப்பகுதியில் முன் ஒருபோதும் கேட்டிராத இன்னிசைக்கிதங்கள் களிரச வசனங்கள் தனிப்புகழ் ஐக்டுகள்
எலக்ரிறிக் லேட்டின் கவின்பெறுகாட்சியைக்கான அரும்பெருந் தருணம்
கதைச் சுருக்கம் عـ..
சீர்த்த பாத்திசை சென்ற அர்ச்சுனன் கன் சாதவி சுபத்திசையை அவள் தமையன் பலராமன் திரியோதசதுக்கு ஃவாக கிட்சயம் செய்திருப்பதையறிது கிருஷ்w&னக் காணும்பொருட்டு பிரபாச நீசத் தக்கரையில் தங்கியிருச்சிஜன், அங்கி குச் சுபத்திசையின் மனத்தையும் அறிக்குன், கிருஷ்ணன்க் ல் சனசமூடியாததால நற்கொல்செய்ய ந்ேதளிக்கிமூன். அக் EEEETAT qALAeeTSTT SAMATA ALLTekeeTT TTTMTL0L AAAAA AAAA AAALLLLLL LTA ATALkATTAL TLTTq AAAT TTTLL S AMLTTTM AT சனணியாசியை டிராமங்ாக்கழைப்பித்து சுபத்திவாயைத தொணெெசய்யவும் ஏற்பாடு செய்கிருரன், சகுனியின் சொலவத் கிசியோர்னன் சம்பி மக்வக்கோவடி பூலுகிமூன். பின்னர் டிரியோதான் ஏமாற்றப்பட்டதையும், அச்சுனன் சபத்தி மயை அழைத்துக்கொண்டுபோக கிருஷ்ாைன எாசரலாத் துர்கவைத்துச் செய்த சூட்சிகண்பும் மிகுதிக் கதையையும் சேரிபார்த்து தனக்திப்பீர்களாக.
-நடகம் இயற்றியோன் திரு சி நடனசபாபதி அவர்கள்
தடிகர்கள் se. S-ro Fr - பூண் அர்ச்சான் a. .. c ir - பின் ர்ச்ச்சுனன் GarAta aras7 - syas Fosavss 4F. suaRuorisfa- 74ßb - பின் கிருஷ்ணன் வே, கப்பி மணியம் - முன் தசரதர் a saru9ar st -- Glceir 8 7 Asŵ
'. ” பொ.கணபதிப்பின் - இன் சுபதிசை
* சி. பாலசிங்கம் - sa atay a. عامج مسدويعد m திரெளபதி
CA. 8aws pute — y ar Lusíadaow A. முருகுப்பின்சு Mara مةrcمع மு கவசபதிபபிள் ஃா - லீலா 等, ܫܚܚ و محمد خاتمسفر هم வின், 9gruDasardir ae. Qurutaf? L8 - லோ a. sa Gilgarit - Asyuar சி. இரத்தினசிம்கம் - الس منع a. விருயகமூர்த்தி - சிபுருத
காவாசிகள், பிாமவர், பறையன், இடைச்சென், சமயோசிகம்
«« -4ra Puft- f, aucouud • Rive)8urs LAT TeL TLLLAAAALL TTA ATAAA LS LS 0LAeeTTeL LALLTA TAAATTTALTTT
K. T. Gsm så sati ka Brøs so sí, GL-radi LLL TATkTTS ASAATtTTeT e TMATTtLMLL LLLLLLLALAAL LLTLTLLTLTL zas sy aan ailea TGúue has treh இஃத சமயபேதமின்றி எவர்க்கு மு:சித்தாகும்,
ஆட்டகால சட்டத்தை அதுசரிப்பதே முறை. கவவ்ஸ்மோர் அக்கே சிக்கப்பட மாட்டாது.
சிக்கற் விபரம் திசேவ்ட் ரூபா 4.00 2-ம் வகுப்பு ரூபா 1-50 1-ம் வகுப்பு ரூபா 2-50 3-ம் வகுப்பு சதம் 75 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 3-ம் வகுப்புக்கு மாத்திரம் அரைச்சலார் 35 சதம். இடமுள்ளவரையில்தான் ரிக்கற் கொர்க்கப்படும் பஞ்சமச்களுக்கு பிரத்தியேக இடம் 3-ம் வகுப்புக்கு மசத்திாம் சிக்கற் கொபெடும். நல்வர்- திரு T. செக்லேயர் .ாக்குர்தச் அவர்கள் pఈ శీuaడిణి காசியதசி-திரு M. A. சின்னத் தம்பி அவர்கள் கலாபிவிருத்திச்சபை, } uarai:- ag d, asal ususahaw laviaai
(la bocay dio d?»av, Guduoss, UrgúLfavó,
35

Page 27
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
வசன நாடகங்கள்:-
இசை நாடகங்களில் வசனங்கள் இருந்தாலும், தனியாக வசனங்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்தியாவில் எழுதப்பட்ட நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.இதற்கு 1946ம் ஆண்டு முல்லைத்தீவில் மேடையேற்றப்பட்ட நாட்டவன் நகரவாழ்க்கை அல்லது டாக்டர் ஷங்கர் என்ற சமூக நாடகத்தை உதாரணமாக கொள்ளலாம்.
th சிவமயம்
வருங்கள்! ஆசிதாருங்கள்! தருமமே ஜெயம் வித்தியா தருமமே மேலான தருமம் முல்லேத்தீவுச் சைவ மகா சபையாரால்
நிகழும் வியஞ் ஆவணி மீ 14-ந் உ (30.3.46)
வெள்ளிக்கிழமை இரவு 9.30 தொடக்கம் முல்இலத்தீவுப் பிள்ளையார் கோவிலடியில்
அமைக்கப்பட்டிருக்கும் நாடகமேடையில்
நாட்டவன் நகரவாழ்க்கை அல்லது டக்டர் ஷங்கர் என்னும் சமூகக்கதை நாடகமாக நடிக்கப்படும் அக்தருணம் எம் நோக்கத்தை உவக்கும் அன்பர்கள் சமுகமளித்து இவ்விரவை ஆனந்த நல்லிரவாக்கி அரும்பணிபுரியுமாறு வேண்டப்படுகிருரர்கள்.
ரிக்கற் விபரம்,
நிசவெட் ரூபா 5:00 1-ம் வகுப்பு ரூபா 3-00
2-ம் வகுப்பு ரூபா 2-00 3-ம் வகுப்பு ரூபா 1-00
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 2-ம் 3-ம் வகுப்புகளுக்கு மாத்திசம்
-eisir réara rr.
பெண்களுக்கு 3-ம் வகுப்புக்கு மாத்திரம் பிசக்தியேக இடம். பஞ்சமச்களுக்கு பிசத்தியேக இடம் (8-ம் வகுப்புக்கு மாத்திசம் சிக்கத்
கொடுக்கப்படும்) - (!) இந்த நாடகத்திற் சேரும் பணம் முல்க்லத்தீவுச் சைவப் பாடசாலைக்
கட்டிட நிதிக்கேயாகும். (2) ஆட்டகாலசட்டத்தை அனுசரிப்பதே முறை. (3) “உவண்ல்மோர்’ அக்கேரிக்கப்படமாட்டாது.
(4) இடமுள்ளவரையிற்தான் சீக்கற்கொடுக்கப்படும். s
36

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இதன் பின்னர் பல நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. ஆனால் 1960 களில் வித்தியானந்தாக் கல்லூரியில் முல்லைமணியின் பண்டார வன்னியன் நாடகம் மேடையேற்றப்பட்ட பின்னர் வசன நாடகங்கள் பிரபல்யம் அடையத் தொடங்கின. இதன் பின்னர் அரியான் பொய்கை கை. செல்லத்துரை அவர்களினால் பாஞ்சாலி சபதம், சேரன் செங்குட்டுவன், மார்க்கண்டேயர் போன்ற நாடகங்கள் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன. அனார்கலி, கட்டபொம்மன் போன்ற நாடகங்களில் நடித்த சு. கணபதிப்பிள்ளை, தர்மலிங்கம் ஆசிரியர், கனகசபாபதி (பெண் வேடமேற்று நடிப்பவர்) முல்லைமணி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
வசன நாடகங்கள் வரிசையில் பண்டாரவன்னியன், தணியாத தாகம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றவையாகும்.
வன்னிப் பிரதேசக் கூத்துக்களும், கதைச் சுருக்கங்களும்
வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பொழுது போக்கிற்காகவும், நேர்த்திக் கடனுக்காகவும் ஆடப்பட்டு வந்தவையாகும். சமயச் சடங்குக் கலைகள் என்று குறிப்பிடும்போது இப்பிரதேசத்தின் சமய வழிபாட்டுப் பாரம்பரியத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. வன்னிப், பிரதேசத்தில் சிவன், பிள்ளையார், முருகன், ஐயனார், நாகதம்பிரான் போன்ற தெய்வங்களின் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றன. வன்னிப்பிரதேசத்தின் கரையோரப் பகுதிகளில் அம்மன் வழிபாடு கூடுதலாகக் காணப்படுகின்றது. அம்மன் வழிபாட்டில் கண்ணகை வழிபாடு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. சிலப்பதிகாரக் காலத்தின் பின்னர் பத்தினி வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. கற்புக்கரசியாம் கண்ணகியின் வழிபாடு பத்தினி வழிபாடாகக் கயவாகு மன்னனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது என சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் இந்த வழிபாடு தமிழ்ப் பிரதேசங்களிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றது.
கண்ணகி வழிபாட்டுடன் இணைந்த பல பாரம்பரியக் கதைகள் வன்னிப் பிரதேசத்தில் காணப்படுகின்றன. சோழ நாட்டில் பிறந்து, பாண்டி நாட்டில் செங்கோல் தவறிய மன்னனைப் பழிவாங்கி, மதுரையைத் தீக்கிரையாக்கிய பின்னர் சீற்றம் தணியாத கண்ணகி, தனது கோபத்தின் வெக்கையைத்
37.

Page 28
அருணா செல்லத்துரையின் ଈଶf ଶifii பிராந்தியக் கூத்துக்கள் தணிப்பதற்காகத் தென்திசை நோக்கி வந்தாள் என்பதும் அவள் கரையோரப் பாதை வழியாக கதிர்காமம் சென்றாள் என்பதும் வன்னிப் பிரதேச மக்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.
புதுக்குடியிருப்பு, பொக்கணை, அம்பலவன் பொக்கணை, வட்டுவாகல், வெள்ளாம்முள்ளிவாய்க்கால், வற்றாப்பளை போன்ற கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் அம்மன் கோவில்களும் வழிபாட்டு முறைகளும் இவற்றுக்குச் சான்று பகர்வதாக இருக்கின்றன.
இந்த அம்மன் வழிபாட்டுத் தலங்களுள் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தத் தலம் பத்தாம்பளை என அழைக்கப்பட்டதாகவும் அது மருவி வற்றாப்பளை என மாறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு காரணப் பெயராகவே அமைந்துள்ளது. மதுரையை எரித்த பின்னர் கண்ணகி கதிர்காமம் செல்லும் பாதையில் பத்தாவது தரிப்பிடமாக வைகாசி விசாகத் தினத்தன்று இடைச் சிறுவர்களுக்குக் காட்சி கொடுத்ததாகவும், அவர்கள் பொங்கல் பொங்கிப் படைத்ததாகவும் வாய்வழித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே இந்தத் தலம் பத்தாம்பளை என அழைக்கப்பட்டது என்பது முதியோரின் தகவல்களாகும்.
கண்ணகி வழிபாடு இங்கு பரவத் தொடங்கியதும் பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரவத் தொடங்கின. மக்கள் விதம்விதமான நேர்த்திக் கடன்களை வைத்து அவற்றை நிறைவேற்றிவந்தார்கள். சிலம்புகூறல் படிப்பு, குளிர்த்தி பாடல், கும்மி, கோலாட்டம், வசந்தன் ஆட்டம், கற்பூரச்சட்டி எடுத்தல், கண்குடம் எரித்தல், பால் செம்பு எடுத்தல், காவடி ஆட்டம், செடில் குத்திக் காவடி ஆடல், தீ மிதித்தல் போன்றன நேர்த்திக் கடனைத் தீர்ப்பதற்காக இடம்பெற்ற சமயச் சடங்குகளாகும். கண் வருத்தம், அம்மை, சின்னமுத்து, கொப்புளிப்பான் போன்ற உஷ்ண ரோகங்களால் பாதிக்கப்பட்டபோது அதற்கு மருந்தாகக் கண்ணகை அம்மனுக்கு நேர்த்திக்கடன் வைப்பதையே மருந்தாக இப்பிரதேச மக்கள் நம்பியிருந்தார்கள். இற்றைவரை இந்த வழிபாடு இந்த நம்பிக்கையிலேயே நடைபெறுகின்றது என்று
8-partin.
கோவலன் கூத்து:
வன்னிப் பிரதேசத்தில் காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத காலத்தில் இருந்து சிலம்பு கூறல் எனும் கண்ணகி வரலாற்றைப் படிப்பதும், அதே சரிதத்தைக் கோவலன் கூத்தாக ஆடவும் தொடங்கியிருந்தார்கள். இந்தக் கூத்துக்கூட அவர்களின் ஒரு நேர்த்திக் கடனாகவே அம்மனுக்குச்
38

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கூத்து பண்டைக்காலம் தொடக்கம், முள்ளியவளை. தண்ணிரூற்று, வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு, வட்டுவாகல், மணற்குடியிருப்பு சிலாவத்தை, அளம்பில், செம்மலை, குமுளமுனை போன்ற இடங்களில் ஆடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இக்கிராமங்களில் பரம்பரையாக அண்ணாவிமார் கூத்தைப்பழக்கி, அவ்வூர் அம்மன் கோவில்களில் ஆடுவது வழக்கம். அனேகமாக அம்மனுக்குரிய நாளான திங்கட்கிழமைகளில் கோவில் முன்றலில் வட்டக் களரிகட்டி கூத்து ஆடுவது வழக்கம்.
புதுக்குடியிருப்பில் த.பொன்னம்பலம் அண்ணாவியார் 1926ம் ஆண்டளவில் கோவலன் கூத்தைப் பழக்கி மேடையேற்றியதாக வாய்வழித்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூத்தில் நடித்த பலர் பிற்காலத்தில் அண்ணாவிமார்களாக இருந்துள்ளனர். அவர்களுள் த.குலசேகரம் அண்ணாவியார், வே.சுப்பிரமணியம் அண்ணாவியார், சி.கனகசபாபதி அண்ணாவியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் பிற்காலத்தில் கோவலன் கூத்தில் நடித்தவர்கள் பலர் அண்ணாவிமாராக இருந்து கோவலன் கூத்தைப் பழக்கியுள்ளார்கள், இந்தக்கூத்தைப் பல அண்ணாவிமார் பழக்கி வந்துள்ளனர். எனினும் இக்கூத்தைப் பழக்குவதில் அண்மைக்காலம் வரை பொன்னம்பலம் அண்ணாவியார், சுப்பிரமணியம் அண்ணாவியார் போன்றோர் பிரபல்யமானவர்கள்.
கோவலன் கூத்துக்கதைச் சுருக்கம்
சோழ நாட்டில் பிறந்த கண்ணகி கோவலன் எனும் வணிகனைத் திருமணம் செய்கிறாள். அரசவையில் இடம்பெற்ற நடனத்தின்போதுமாதவி எனும் நாட்டியப் பெண் எறிந்த முத்துமாலை கோவலன் கழுத்தில் விழுகிறது. இதனால் கோவலன் மாதவி மீது கொண்ட மையல் காரணமாக அவளுடன் சென்று வாழ்க்கை நடத்துகிறான். அங்கு தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்த பின்னர் கண்ணகியைத் தேடி வருகிறான். கண்ணகியைத் தேடி வருகிறான். கண்ணகி அவனை ஏற்று, கோவலன் பட்ட கடனைத் தீர்ப்பதற்காகவும், தொழில் செய்யும் நோக்கத்துடனும் பாண்டி நாட்டிற்கு புறப்படுகிறார்கள். இடையில் குறிசொல்லும் பெண்ணொருத்தி இவர்களின் எதிர் காலத்தில் இடம் பெறப்போகும் இடர்களைப் பற்றிக் கூறுகிறாள். மனமொடிந்த தம்பதியினர் தமது பயணத்தை தொடர்கின்றனர்.
பாண்டிநாட்டு எல்லையில் குறப் பெண்களிடம் கண்ணகியை ஒப்படைத்துவிட்டு கோவலன் மட்டும் கண்ணகியின் ஒற்றைச் சிலம்பை விற்று வர மதுரை மாநகர் வருகிறான். அங்கு ஏற்கனவே பாண்டிய மன்னனின் மனைவி
39

Page 29
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் கோப்பெருந்தேவியின் சிலம்பை தொலைத்துவிட்ட பொற்கொல்லன் கோவலனைச் சந்திக்கிறான். கோவலன் கொண்டு வந்த சிலம்பை தந்திரமாகப் பெற்று அரசனிடம் கொண்டு சென்று கோவலனே சிலம்பு திருடிய கள்வன் எனக் கூறுகிறான்.
தீர விசாரித்து அறிவதற்கு பொறுமையில்லாத பாண்டிய மன்னன் கோவலனை யானையால் மிதித்து கொலை செய்யும்படி கட்டளையிடுகிறான். ஆனால் யானைப் பாகனால்அதனைச் செய்ய முடியாமல் திரும்புகின்றான். இதனால் மழுவர்களை அழைத்து கோவலனை இரண்டாகப் பிளக்கும்படி கட்டளையிடுகிறான். கட்டளை நிறைவேற்றப்படுகிறது.
இந்தச் சோக சம்பவத்தை கனவில் கண்ட கண்ணகி துடிதுடித்து மதுரை வருகிறாள். அங்கு கோவலனுக்கு திரும்பவும் உயிரூட்டி உண்மையை அவன் வாயால் கேட்கிறாள். அவமானம் தாங்காத கோவலன் தான் மீண்டும் உயிர் துறக்கப் போவதாக கூற அவன் உயிரை கண்ணகி பிரித்து விடுகிறாள். பின்னர் தனது . கணவனை கள்வனென்று கூறிய பாண்டிய மன்னனை பழிவாங்குவதற்காக அரண்மனை நோக்கி வருகிறாள்.
அரண்மனையில் பாண்டிய மன்னனுக்கும் கண்ணகிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று ஈற்றில் கண்ணகி தனது காற்சிலம்பை உடைத்து அதிலிருந்த நாகமணித் தரிசைக் காட்டி உண்மையை நிரூபிக்கிறாள். தனது பிழையை உணர்ந்த மன்னன் உயிர் துறக்கிறான். மதுரை மாநகரைக் கண்ணகி தனது கோபக் கனலைக் கொண்டு எரிக்கிறாள். கண்ணகியின் கோபக் கனலை அணைக்க குளிர்ச்சி பாடப்படுகிறது. இதனால் கண்ணகியின் கோபம் குறைந்து சாந்தமடைவதாக கூத்தில் காட்டப்படுகிறது. கூத்தின் இறுதியில் மங்களம்பாடி கூத்து நிறைவுபெறுகிறது. இதில் சிலப்பதிகாரத்துடன் ஒவ்வாத சில விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை வரலாற்றின் மீது நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகவும் தெய்வீகத் தன்மையை ஏற்படுத்துவதற்காகவும் புகுத்தப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.
கன்னன் கூத்து
முல்லைத்தீவில் உள்ள வட்டுவாகல் எனும் கடற்கரைக்' கிராமத்தில் இக்கூத்து பழக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. இதன் பிரதி வட்டுவாகல் அண்ணாவியார் செல்லையா ஆறுமுகத்திடம் இருந்தது. இது வடமோடிக்கூத்து வகையைச் சேர்ந்தது. இக்கூத்து 1892ம் ஆண்டு புகழேந்திப்புலவரால் பாடப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவலன் கூத்தில் உள்ள சில பாடல்கள் கன்னன் கூத்தில் வரும் பாடல்களை ஒத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
40

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கன்னன் கூத்தில் போசராசன் கோபத்தோடு பாடும் பாடல்: "அத்தனைக்கும் தத்துவமோடா - என் வீட்டில் வர அத்தனைக்கும் தத்துவமோடா "அத்தனைக்கும் தத்துவமோடா - சித்தமது கெட்டமோடா இக்கணத்தில் உன்னுயிரை கத்தியால் அரிவேனடா -
(அத்தனைக்கும்)
இதேபோல கோவலன் கூத்தில் பாண்டிராசன் கோபத்தோடுபாடும் பாடல் வரிகள்:
"அத்தனைக்கும் தத்துவமோடா - சிலம்பெடுக்க அத்தனைக்கும் தத்துவமோடா” அத்தனைக்கும் தத்துவமோ - மெத்த உன் மகத்துவமோ - அரசனின் சிலம்பெடுக்க எத்தனைகுலம் படைத்தாய்" - (அத்தனைக்கும்)
இப்படி பாடல் வரிகளில் ஒற்றுமை இருப்பது போல ஆட்டத்திலும், பாடும்முறையிலும் பல ஒற்றுமைகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதே போல இப்பிரதேசத்தில் ஆடப்பட்ட லவகுச கூத்துப் பிரதியிலும் பல ஒற்றுமைகள் இருப்பதாக அண்ணாவிமார் கூறியுள்ளார்கள். அனேகமான கூத்துப் பிரதிகள் ஏட்டுப்பிரதிகளாகவே இதுவரையும் இருக்கின்றன.
கன்னன் கூத்துக் கதைச்சுருக்கம்
கன்னன் கூத்தின் கதை இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மிதிலை நகரை "போசராசன்” ஆட்சி செய்து வருகின்றான். அவனது மனைவியின் பெயர் சித்திரவல்லி, இவர்களுக்கு மோகவஞ்சி என்றொருமகள் இருந்தாள். இதே காலத்தில் இலங்கை நாட்டை வீரசேனன் என்னும் அரசன் ஆட்சி செய்து வருகின்றான். அவனுக்கு கன்னன், மாகாயன் என்ற பெயரில் இரண்டு புதல்வர்கள் இருக்கின்றனர். இவர்களுள் கன்னன் மிகவும் அழகும் பலமும் பொருந்தியவன்.
போசராசனின் மகள் மோகவஞ்சி, கதிர்காமக் கந்தனைத் தரிசிப்பதற்காக இலங்கைக்கு வருகின்றாள். அதே நேரம் கதிர்காமம் வந்த கன்னன், மோகவஞ்சியின் அழகைக் கண்டு அவள் மீது மோகங் கொண்டு அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். அவளை எப்படியும் திருமணம் செய்ய உறுதி
41

Page 30
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பூண்ட கன்னன் அவளைத்தேடி ஏழை வயோதிபன் வேடம் பூண்டு மிதிலை நகர் வருகின்றான். அங்கு அவன் மோகவஞ்சியைத் சந்திக்கின்றான். ஆனால் மோகவஞ்சியோ கன்னனின் பரதேசிஉருவத்தைக் கண்டு இவன் அரசகுலத்தைச் சேர்ந்தவனல்ல என்றெண்ணி அவனை பேசித் துரத்தி விடுகின்றாள்.
கடைசியில் கன்னன் கள்ளன் உருவத்தில் வந்து மோகவஞ்சியைக் கடத்தி இலங்கைக்கு கொண்டு வருகின்றான். இலங்கையில் ஒரு காட்டில் வைத்து தனது சுய உருவத்தைக்காட்டி தான் ஒரு அரச குமாரன் என்ற உண்மையை விளக்கி அவளைத் திருமணம் செய்து இனிதே வாழ்கின்றான். அரச வம்சமற்ற ஒரு கள்வனால் தனது மகள் கவர்ந்து செல்லப்பட்டாள் என்ற சேதி கேட்ட போசராசன் கோபமடைகிறான். தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி கன்னனைக் கண்ட இடத்தில் கொலை செய்யும்படி கட்டளை இடுகின்றான்.
இலங்கைக்கு வந்த போசராசனின் படைவீரர்கள் நித்திரை செய்து கொண்டிருந்த கன்னனையும் மோகவஞ்சியையும் காண்கின்றனர். அவர்களைக் கொலை செய்ய விரும்பாமல் கன்னனின் வலது கரத்தை மட்டும் வெட்டி, எடுத்துக் கொண்டு மிதிலை நகர் செல்கின்றனர். வெட்டுண்ட கரத்தை கண்ட கன்னன், கதிர்காமக் கந்தனை நினைந்து அழுது புலம்புகின்றான். கதிர்காமக் கந்தன் நாரதர் வடிவில் வந்து கன்னனின் கையை வளரச் செய்து அவனையும் மோகவஞ்சியையும் மிதிலைக்கு அழைத்துச் சென்று, போசராசனிடம் விபரத்தைக் கூறி கன்னனை மிதிலைக்கு அரசன் ஆக்கிவிடுவதுடன் கதை முடிவடைகின்றது.
வெடியரசன் கூத்து
இந்தக்கூத்தும் கோவலன் கூத்துப் பாணியில் ஆடப்பட்டுள்ளது. இந்தக் கூத்து புதுக்குடியிருப்பு வெள்ளாம் முள்ளிவாய்க்கால் போன்ற கிராமங்களில் ஆடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான பிரதியை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. ஆனால் கூத்தின் கதைச் சுருக்கம் வாய்வழி வரலாறாகவே பெற்றுள்ளேன்.
வெடியரசன் கூத்துக் கதைச் சுருக்கம்
வெடியாசன் என்ற மன்னனிடம் நாக மணிகள் இருந்தன. அதனைப் பெறுவதற்கு மற்றுமொரு மன்னன் அவருடன் போர் நடத்தி அவற்றை பெற்று வருகிறான். இந்த நாகமணிகளே கண்ணகியின் காற்சிலம்பில் வைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. கண்ணகி வரலாற்றை வலுப்படுத்து வதற்காக
42

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
நடத்தப்பட்ட கூத்துக்களில் ஒன்றாகவே நாம் இதனைக் கருதலாம். இந்த வரலாறு கோவலன் கூத்திலும் கூறப்படுகிறது.
வாளபீமன் கூத்து:-
இந்தக் கூத்து கோவலன் கூத்துப் பாணியில் ஆடப்பட்டுள்ளது. வட்டுவாகல் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் ஆடப்பட்டுள்ளது. இந்தக் கூத்தின் பிரதியும் நேரடியாகப் பார்ப்பதற்கு கிடைக்கவில்லை அதனால் கூத்தின் கதைச் சுருக்கத்தை சரியாக சேர்த்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் கூத்துக்கள் ஆடப்பட்ட பிரதேசங்களில் நாச்சிமார் வழிபாடு இருந்திருக்கிறது. நாச்சிமார் என்பவர்கள் கண்ணகியை வழியொட்டி வந்தவர்களாகவே கருதப்படுகின்றனர்.
இதேவேளை, வன்னியர்கள் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தபோது அவர்களின் மனைவிமார் வந்ததாகவும் அவர்கள் நாச்சியார் என அழைக்கப்பட்டதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்களின் கற்புடமை, வீர தீரச் செயல்கள் போன்றன கருத்திற்கெடுத்துக் கொள்ளப்பட்டு அவர்களும் நாச்சிமார் என அழைக்கப்பட்டதாகவும், தெரிய வருகிறது. இவர்கள் வழிபட்ட தலம் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் என்னும் இடத்தில் நாச்சிமார் கோயில் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் இந்தக் கோயிலின் மீது 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கரப்பிள்ளை அருணாசலம் என்பவரால் பாடப்பட்ட 'சப்த கன்னிமார்" தோத்திரம் என்ற கன்னிமார் குறிப்புகளையொட்டி சப்த கன்னிமார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
எது எப்படியிருந்த போதிலும் இப்பகுதியில் கண்ணகி வழிபாடே கூடுதலாக இருந்துள்ளது. இதனால் இந்தக் கூத்தும், கண்ணகி வழிபாட்டோடு ஒட்டியதாகவும், இருக்கலாம் என்பதில் ஐயமில்லை. இந்தக் கூத்திலும் கண்ணகி வணக்கப்பாடல்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இது மகா பாரதத்தில் வரும் பீமன் சம்பந்தப்பட்ட கூத்தென ஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.
லவகுச கூத்து
இந்தக் கூத்தும், முள்ளிவாய்க்கால் புதுக்குடியிருப்புப் பகுதிகளில் ஆடப்பட்டுள்ளது. முள்ளியவளையிலும் ஒரிரு முறை ஆடப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். கோவலன் கூத்துப்பாணியிலேயே ஆடப்பட்ட மற்றுமொரு கூத்து இதுவாகும்.
43

Page 31
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
லவகுச கூத்துக் கதைச் சுருக்கம்
இராமயணத்தில் இராமன் 14 வருடம் காடு சென்று திரும்பி ஆட்சியைப் பொறுப்பேற்றதும் சீதையின் மீது ஏற்பட்ட களங்கத்தைப் போக்க அவளை மீண்டும் காட்டுக்கு அனுப்புகின்றான். அங்கு சீதை லவனைப் பெற்றெடுக்கிறாள். முனிவரின் அருளால் மற்றுமொரு பிள்ளை கிடைக்கிறது. இவர்கள் இருவரும் லவகுச என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இராமனின் புகழ்பாடி அவனைச் சேர்வதே கூத்தாகும். இப்பகுதியில் இராமாயணம் சம்பந்தப்பட்ட கூத்தாக இது ஒன்றே ஆடப்பட்டுள்ளது.
ஞான செளந்தரி (கிறிஸ்தவக் கூத்து)
இது யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட பாணியில் மேடையில் திரை கட்டி ஆடப்படும் கூத்தாகவே ஆடப்பட்டுள்ளது. இந்தக் கூத்துக்கள் கூடுதலாக யாழ்ப்பாணத்து அண்ணாவியார்களால் பழக்கப்பட்டு மேடையேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு அளம்பில், செம்மலை, இரணைப்பாலை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன.
ஞான செளந்தரி கதைச் சுருக்கம்
தர்மராஜன் என்ற அரசனின் மூத்த மனைவியின் மகளான ஞான செளந்தரிக்கு அவளது சிற்றன்னையான லேனாள் என்பவளால் பல வித கஷ்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பின்னர் ஞான செளந்தரி அயல் நாட்டு அரசிளங் குமரனாகிய புலேந்திரனால் காப்பற்றப்பட்டு, அவனுக்கு மனைவியாகிறாள். சிற்றன்னையின் கட்டளைப்படி ஞான செளந்தரியின் கைகள் வெட்டப்பட்டன. தேவ மாதாவின் அருளினால் கைகள் கிடைக்கப் பெற்று இளவரசன் புலேந்திரனுடனும் தனது பிள்ளைகளுடனும் சுகமாக வாழ்வதாக கதை சொல்லப்பட்டுள்ளது.
என்றிக் எம்பிதோர் கூத்து
இது முல்லைத்தீவுப் பகுதியில் ஆடப்பட்டுள்ளது. இதே வேளை
இரணைப்பாலை வலையன் மடப்பகுதியில் தொண்டி என்ற பெயரிலும் கூத்து
ஒன்று ஆடப்பட்டுள்ளது. இந்தக் கூத்து இரணைப்பாலையில் இருக்கும்
44

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் தே.ஹென்றி என்பவரால் பழக்கப்பட்டு மாத்தளன் இரணைப்பாலை அந்தோனியார் கோவில் முன்பாக ஆடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கூத்துக்களின் பெயர்கள் ஆங்கிலச் சொற் பதங்களாக இருப்பதினால் வேறுபடுத்திக் காட்டுவது சிரமமாக உள்ளது.
என்றிக் எம்பிதோர் கூத்துக் கதைச் சுருக்கம்
எம்பறர் ஹென்றி என்ற அரசனின் வாழ்க்கை வரலாறு கூத்தாக ஆடிக் காட்டப்பட்டுள்ளது. இது தமிழில் என்றிக் எம்பதோர் என்ற தமிழ்ப் பதத்தால் அழைக்கப்பட்டுள்ளது. வலையன் மடத்தில் ஆடப்பட்ட தொண்டி என்ற கூத்தும்
இதை யொட்டியதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
காத்தவராயன் கூத்து (சிந்துநடைக் கூத்து)
இந்தக்கூத்தும் அம்மன் கோவில்களில் மேடை கட்டி ஆடுவது வழக்கம். இது ஒரு சிந்து நடைக் கூத்தாகும். இந்தக்கூத்து முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கோவலன் கூத்து ஆடும் பகுதிகளிலும் நெடுங்கேணிப் பகுதியிலும், மற்றும் வவுனியாப்பிரதேசங்களிலும் ஆடப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணப்பிரதேசத்தில் உள்ள மாதனை என்னும் பகுதியைச் சேர்ந்த கலைஞர்களும் இப்பிரதேசத்திற்கு வந்து காத்தான் கூத்தை மேடையேற்றியிருக்கின்றார்கள். இந்தக் கூத்தைப் பழக்கும் அண்ணாவிமார் இப்போதும் இப்பகுதியில் இருக்கிறார்கள்.
இவர்களுள் வற்றாப்பளையில் இருந்த சி. கனகசபாபதி, சி. செல்லத்துரை, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த த. குலசேகரம், த.பொன்னம்பலம் செல்லையா வி.ரி. நடராஜா, அம்பலவன் பொக்கணையைச் சேர்ந்த த. நாகராஜா போன்ற அண்ணாவிமார் குறிப்பிடத்தக்கவர்கள்.
காத்தவராயன் கூத்துக் கதைச் சுருக்கம்
முத்துமாரியம்மனின் மகனான காத்தவராயன் ஆரியப் பூமாலை என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறான். அவளை திருமணம் செய்வதற்கு முத்துமாரி சில நிபந்தனைகளை விதிக்கிறாள். அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற காத்தவராயனும் அவனது தோழன் சின்னானும் படாதபாடுகின்றனர். இறுதியில் சிவனின் அருளால் காத்தவராயன் ஆரியப் பூமாலையை கைப்பிடிக்கிறான்.
45

Page 32
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கோவலன் கூத்துப் பற்றிய பகுப்பாய்வு
வன்னிப் பிரதேசத்தில் ஆடப்பட்ட அனைத்துக் கூத்துக்களும் "கூத்து" என அழைக்கப்பட்டாலும் சில கூத்துக்கள் நாடகப் பாணியில் திரை கட்டப்பட்டு ஆடப்பட்டுள்ளன. நாற்சதுர மேடையில் ஒரு பக்கம் மட்டும் ரசிகர்கள் இருந்து பார்க்கக்கூடிய வகையில் இருந்தவையும் கூத்துக்கள் என அழைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆட்டம் குறைவாகவே காணப்படும்.சில கூத்துக்களில் சிந்து நடைமுறையும்,சில மெதுவான ஆட்ட முறைகளுமே இருந்துள்ளன. மொத்தத்தில் இந்தக் கூத்துக்கள் இசை நாடகப் பாணியை ஒட்டியே இருந்துள்ளன எனக் கூறலாம். அந்த வகையில், காத்தவராயன் கூத்து, கிறிஸ்தவக் கூத்துகள் ஆகியவற்றை நாம் இசை நாடக வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் 1760 ல் கோவலன் நாடகத்தை இயற்றியுள்ளாதாக ஈழத்துத் தமிழ் கவிதைக் களஞ்சியம் (சாகித்திய மண்டல வெளியீடு 1966) என்ற நூலிலே குறிக்கப்பட்டிருப்பதாக திரு. க.சொக்கலிங்கம் அவர்கள் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி என்ற நூலிலே தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நாடகப் பிரதியையும் முல்லைத்தீவுபகுதியில் இருக்கும் நாடகப் பிரதியையும் ஒப்பு நோக்கினால் மட்டுமே ஒற்றுமை வேற்றுமைகளை நாம் தெளிவாகக் கூறமுடியும். ஆனால் 1760 ம் ஆண்டுகளில் கோவலன் நாடகம் இலங்கையில் எழுதப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாகின்றது.
வட்டக்களரி கட்டப்பட்டு சுற்றிவர ரசிகர்கள் இருந்து பார்க்கும் வகையில் விதம் விதமான ஆட்டங்களைக் கொண்ட கூத்துக்களாக ஆடப்பட்டவையாக கோவலன் கூத்து, வெடியரசன் கூத்து, வாளபீமன் கூத்து போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் காலப் போக்கில் கோவலன் கூத்து ஒன்று மட்டுமே வன்னிப்பிரதேசத்தில் தற்போதும் ஆடப்பட்டு வரும் ஒரு கூத்தாக இருக்கின்றது. இதனால் இந்தக் கூத்து வன்னிக்கே உரிய ஒன்றாக குறிப்பிடப்படுகின்றது.
கோவில் நேர்த்திக் கடனுக்காக ஆடப்பட்ட கோவலன் கூத்துக்கும் அண்ணாவி மரபு முறையே பேணப்பட்டு வந்துள்ளது. இசை மரபு நாடகத்தைப் போல இந்தக் கூத்தைப் பழகுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக
46

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் ஏட்டு ஆதாரங்கள் எதுவுமில்லை. என்னோடு கோவலன் கூத்தைக் கொழும்பில் மேடையேற்றுவதற்கு உதவியவரும் பல ஆண்டுகளாக இந்தக் கூத்தைப் பழக்கியவருமான அண்ணாவியார் வே.சுப்பிரமணியம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட தகவல்களே கூடுதலாக இங்கு சேர்க்கப்பட்டுள்ளன.
கன்னன் வடமோடிக்கூத்தும், மற்றும் லவகுச, வாளபீமன் போன்ற கூத்துக்களும் ஒவ்வொரு மரபைச் சார்ந்தவையாகவே இருந்துள்ளன. பக்க வாத்தியக்காரர்களை யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து அழைத்து வந்து இசை நாடகங்களை மேடையேற்றியுள்ளமையும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் தெரிகிறது.
இவற்றையெல்லாம் விட முல்லைத்தீவுப் பிரதேசத்தில் ஆடப்பட்டு வந்த கோவலன் கூத்து ஒரு தனிப்பாணியில் அமைந்துள்ளது. இந்தக் கூத்து முல்லைத்தீவுப் பிரதேசத்தின் பல பகுதிகளில் ஆடப்பட்டு வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள அருவி வெட்டுப் பாடல்கள், பள்ளுப்பாடல்கள். சிலம்பு கூறல் பாடல் மெட்டுக்கள் போன்றவை இந்தக் கூத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கூத்தின் ஆட்ட முறைகளும் மற்றைய கூத்துக்களை விட வேறுபட்டவையாக இருக்கின்றன.
இதுபற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் வேழம்படுத்த விராங்கனை என்ற முல்லைமோடி வட்டக் களரி நாட்டுக்கூத்து ஒளிப்பேழை அறிமுக விழாவில் பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். “முல்லைத்தீவுப் பிரதேசத்திலே கோவலன் நாடகம் ஆடப்படுகின்ற முறை, அந்த ஆட்டத்திலே
முறைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அங்கு நிலவுகின்ற அதாவது முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கடைப்பிடிக்கின்ற முறைமை காரணமாக அங்கு பேணப்பட்ட முறைகள், பிற பிரதேசங்களோடு தொடர்பின்மை காரணமாக அது வித்தியாசமாக காணப்படுகின்றது. ஏனென்றால் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாரம்பரியம் மிக அண்மைக்காலம்வரை பேணப்பட்டுள்ளது"
கோவலன் கூத்து, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, வற்றாப்பளை, கணுக்கேணி, குமுளமுனை, அளம்பில், செம்மலை போன்ற இடங்களில் காலத்திற்குக் காலம் ஆடப்பட்டுள்ளது. இந்தக் கூத்தின் ஆரம்ப காலம்பற்றிய தகவல்கள் இல்லாதபடியால் வாய்வழியாக வந்த விபரங்களையே நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியவர்களாயுள்ளோம்.
வன்னிப்பாரம்பரியக் கூத்துக்கள் வரிசையிலே கோவலன் கூத்து வடிவம் ஆய்வுக்குரியதொன்றாகும். இந்தக் கூத்து கேப்பாபிலவு என்னும் கிராமத்திலேயே முதலில் ஆடப்பட்டதாகப் பெரியோர் தெரிவித்துள்ளனர்.
47

Page 33
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கோவலன் கூத்தைப் பகுப்பாய்வுக்காக பத்துப் பிரிவுகளாகப் பிரிக்காலம்.
பிரதி/அண்ணாவியார் பழக்க முறை/ஒத்திகை பாடல்பாடும் முறை/வசனம் பேசும் முறை நடிப்பு / ஆட்டம்
பக்க வாத்தியங்கள் ஒப்பனை/உடையலங்காரம் மேடையமைப்பு/வட்டக்களரி பின்பற்றப்பட்ட பாரம்பரியம் ரசிகர்களின் பங்களிப்பு கூத்தின் தற்போதைய நிலை.
பிரதியும்/அண்ணாவியாரும்
இந்தக் கூத்தின் மூலப்பிரதி ஏட்டுப் பிரதியாகவே இருக்கின்றது. ஏட்டுப் பிரதிகளில் உள்ள எழுத்துக்களுக்குக் குற்றுக்கள் கிடையாது. இந்தப் பிரதி புதுக்குடியிருப்புவே.பொன்னம்பலம் அண்ணாவியாரிடம் இருந்தது. தற்போது பலர் இதன் பிரதிகளைக் கொப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் பிரதிகளில் கூடுதலான எழுத்துப் பிழைகள் உள்ளன. பாடல்கள் சரியான முறையில் சீர் பிரித்து எழுதப்படாமையினால் பாடல்களின் அர்த்தம் மாறித் தொனிப்பதையும் கவனிக்கக் கூடியதாய் இருக்கின்றது. இந்தப் பிரதிகளை எடுத்து சீர் பிரித்து ஆட்டத்தருக்களுடன் வெளியிட்டால் அது வன்னிப்பிராந்தியத்தின் கலைகளுக்கு மேலும் ஒரு தெம்பூட்டும் முயற்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
முள்ளியவளையோடு நெருங்கிய தொடர்புடையவர்களும் புதுக்குடியிருப்பில் வசித்து வந்தவர்களுமாகிய த. பொன்னம்பலம் அண்ணாவியார், வே.சுப்பிரமணியம் அண்ணாவியார் போன்றோரே அண்மைக்காலம் வரை இந்தக் கூத்தினைப் பழக்கி வந்தவர்களாவர். இவர்கள் சுமார் ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கூத்தினைப் பழக்கி வந்துள்ளார்கள். இவர்களும் ஆரம்பத்தில் இந்தக் கூத்தினை ஆடிய கலைஞர்களேயென்று அவர்கள் வாயாலேயே கூறக் கேட்டிருக்கின்றேன்.
இவர்களிடம் பரம்பரையாகப் பழகி வந்த பலரும் இந்தக் கூத்தினைத் தற்போது பழக்கிவருகிறார்கள். ஆனால் யார் கூத்தைப்பழக்குவதாக இருந்தாலும் அவர்கள் கூத்தைப் பழக்கிய அண்ணாவியாரின் ஆசீர்வாதத்தைப்
48

அருணா செல்லத்தரையின் வண்ணிப் பிராந்தியக் கூத்துக்கள் பெற்றவர்களாகவே இருக்கவேண்டும். அப்படி அவர்கள் பழக்கினாலும் கூத்து அரங்கேற்றப்படும்போது அண்ணாவியாரே வந்து காப்புப் பாடி ஆரம்பிப்பது மரபாகும். கூத்துப் பழகும் நாட்களில் அண்ணாவியார் அந்தக் கிராமத்திற்குச் சென்று தங்கியிருப்பது வழக்கம். அவருக்கான செலவுகள் கூத்தை ஆடுபவர்களும் கூத்தை அரங்கேற்றுவதில் அக்கறையுள்ளவர்களுமே பொறுப்பேற்பர்.
பழக்கமுறை/ஒத்திகை
கோவலன் கூத்து முழுவதும் ஆண்கள் பங்குபற்றும் கூத்தாகும். இது தெய்வ நேர்த்திக்காக ஆடப்பட்டதனால் பெண்களைச் சேர்த்து ஆடுவது தவிர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கூத்தைப் பழக ஆரம்பிக்கும்போது கும்பம் வைத்து, கற்பூரம் கொழுத்தி, தேவாரத்துடன் ஆரம்பிப்பது வழக்கம். வேளாண்மை செய்து அருவி வெட்டி சூடடித்து முடிந்ததும் கூத்தாடும் காலம் ஆரம்பிக்கும். கூத்துக்களுக்கு நடிகர்களைத் தெரிவு செய்தல், "சட்டம் கொடுத்தல்" என அழைக்கப்படும். பாரம்பரியமாக ஆடுபவர்களையும் புதியவர்களையும் அழைத்து அவர்களை ஆடச் சொல்லியும் பாடச் சொல்லியும் பார்த்து அவரவர் தோற்றப்பொருத்தத்திற்கு ஏற்பப்பாத்திரங்கள் கொடுக்கப்படும். அந்தந்தப் பாத்திரங்களுக்கான பாடல்களை ஒலையில் எழுதிக் கொடுப்பது வழக்கம். இந்த ஒலைகள் ஒலைச் சட்டங்கள் என அழைக்கப்படுவது இந்தப் பிரதேச மரபு. அதனாலேயே சட்டம் கொடுத்தல் என அழைக்கப்பட்டது. ஒலையில் எழுதப்பட்ட பாடல்கள் அவ்வூர் பெரியவர் ஒருவரினால் கூத்தாடுவதற்குத் தெரிவு செய்யப்பட்டவரிடம் வழங்கப்படும்.
அண்ணாவியார் கதாபாத்திரங்களுக்குரிய பாடல்களையும், மிதிகளையும், பழக்கத் தொடங்குவார். ஒவ்வொரு இரவும் தவறாமல் கூத்துப் பழக்கம் இரவு பத்து மணி தொடக்கம் இடம் பெறும். சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கூத்துப் பழக்கம் நடைபெறும். கூத்துப் பழகும் நாட்களில் கூத்தர்கள் மச்சம் மாமிசம் சாப்பிடாமல் விரதமிருந்து பழகுவது வழக்கம். முக்கியமாக கண்ணகி பாத்திரத்திற்கு ஆடுபவர்கள் சிலர் கூத்து அரங்கேற்றப்படும் நாட்களில் உபவாசம் இருப்பதையும் காணலாம். கூத்துப் பழக்கங்கள் ஓரளவு முடிந்ததும் சலங்கை அணிதல் இடம்பெறும். இந்த வைபவத்திற்குக் கிராமத்தில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களும் பெரியோர்களும் அழைக்கப்படுவர். இது அதிகமாகப் பகல் நேரத்திலேயே இடம் பெறுவது வழக்கம். உரிய வழிபாடுகள் முடிந்ததும், அண்ணாவியார் சலங்கையை எடுத்து முதலில் ஒருவருக்கு கட்டுவதற்காக *
49

Page 34
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் கொடுப்பார். கூத்தர் அண்ணாவியரின் காலில் விழுந்து வணங்கி தெட்சிணை கொடுத்து சலங்கையை வாங்கி கட்டுவார். சில இடங்களில் அவ்வூர் பெரியவர்களும் காலில் சலங்கையைக் கட்டி விடுவது வழக்கம். காலில் சலங்கை கட்டி ஆடுவது வழக்கமாக ஒரு கிழமையே நடைபெறும். இதன் பின்னர் கூத்து அரங்கேற்றுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னர் வெள்ளுடுப்பு நிகழ்ச்சி இடம்பெறும். அன்றைய தினம் கூத்தர்கள் அனைவரும் வெள்ளை உடுப்புகள் அணிந்து காலில் சலங்கை கட்டி இரவு முழுவதும் கூத்தினை ஆடுவார்கள். அன்றைய தினம் கூத்து அரங்கேற்ற தினத்தன்று இடம் பெறும் அனைத்து சமய ஆசார முறைகளும் கடைப்பிடிக்கப்படும்.
கூத்தைப் பழக்குவதற்கு பொறுப்பாக அப்பகுதியின் பெரியவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். ஒத்திகைக்கு யாராவது வரத் தவறுவார்களேயானால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும். இந்தக் கூத்தை ஆடத் தவறுபவர்களுக்கு தெய்வநிந்தனை கிடைக்கும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தபடியால் எல்லோரும் ஒத்திகைக்கு தவறாது வருவது வழக்கம்.
கூத்தைப் பழக்கி அரங்கேற்றும்வரை அண்ணாவியாரின் செலவுகள், தங்குமிடம், சாப்பாடு, தேனீர் போன்றவற்றைக் கூத்தர்களின் வீடுகளிலேயே வழங்குவது வழக்கம். கூத்துப் பழகும் தினங்களில் கூத்துப் பழகும் இடத்திலும், வீடுகளிலும் தேனீர் தயாரித்து வழங்குவர். இதுகூட மிகவும் சமய ஆசாரமான முறைப்படியே நடைபெறும்.
பாடல் பாடும் முறை/வசனம் பேசும் முறை
கூத்தின் ஆரம்பத்தில் பாடப்படும் காப்பு, தோடயம் என்பன விருத்தங்களாகவே பாடப்படும். விருத்தங்கள் பாடப்படும்போது இடைக்கிடையே மத்தளமும் வாசிப்பார்கள். ஆனால் விருத்தம் பாடும்போது தாளம் இருக்காது. V பாடல் பாடும் முறைகள், காப்பு, தோடயம், சபை விருத்தம், புகுமுக ஆட்டம், ஆட்டத்தரு, சம்பாஷனைத் தரு என பிரிக்கப்பட்டிருக்கின்றன.
கோவலன் கூத்தில் வரும் வசனங்கள் யாவும் ஒருவித ராகத்தோடு மட்டுமே பேசப்படுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விழிக்கும் போது "ஆனால்" என்ற வார்த்தை சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக "ஆனால் கேளும் பெண்ணே" என கணவன் மனைவியை அழைக்கும் போதும், ஆனால் கேளும் நாயகரே" என மனைவி கணவரை அழைக்கும் போதும், அதே போல “ ஆனால் கேளும் அரசே" என அரசரை விழிக்கும் போதும் "ஆனால்" என்ற சொல் பிரயோகிக்கப்படுவது மரபு.
50

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் நடிப்பு/ஆட்டம்
வட்டக்களரியின் ஒரு பக்கத்தில் கிழக்குத் திசையை நோக்கிய வண்ணம் கும்பம் வைத்து குத்துவிளக்கேற்றி, கற்பூரம் கொழுத்திய பின் ஏடு படிப்பவர்கள் படிக்க ஆரம்பிப்பார்கள். அதேவேளையில், களரியின் நடுவில் அண்ணாவியார் தாளம் அல்லது மத்தளத்துடன் நிற்க, பின்பாட்டு பாடுபவர், மத்தளம் வாசிப்பவர் ஆகியோர் அவருடன் நிற்பார்கள். முதலில் காப்புப் பாடி கூத்தை ஆரம்பிப்பர். பின்னர் பாடப்படும் தோடயத்தில் கூத்தின் கதைசொல்லப்படும். வட்டக்களரியின் உள்ளே பாத்திரங்கள் வருமுன்னர் அவர்களைக் களரியின் வாசலில் வெள்ளைத்துணி பிடித்து மறைத்து நின்று அண்ணாவியார் சபை விருத்தம் பாடுவார்.
இதன் பின்னர் புகுமுக ஆட்டத்தருவைப் பாடி, பாத்திரங்களின் ஆட்டத்தையும் ஆரம்பித்து வைப்பார். புகுமுக தருவுக்கு ஆடிய பின்னர் வெள்ளைத்துணி அகற்றப்படும். கூத்தர்கள் ஆடிக்கொண்டே களரியினுள் புகுவர். கூத்தர்கள் உள்ளே வர களரியுள் நிற்பவர்கள் அவர்களுக்கு இடம்விட்டு விலகி நிற்பர். பின்னர் கூத்தர்களின் பின்னே நின்று பாடல்களையும் தருக்களையும் பாட ஆரம்பிப்பர். கூத்தர்கள் பின்நோக்கி ஆடிக்கொண்டு வரும்போது பக்கவாத்தியக் கலைஞர்களும் பின்னோக்கிச் செல்வார்கள். களரியினுள் கதாபாத்திரங்கள் உட்பிரவேசித்ததும் ஆட்டத் தருக்களுக்குச் சுற்றி ஆடுவார்கள். "பின்னர் துணியினால் மறைக்கப்பட்டு வெளியே நின்றபோது பாடிய சபை விருத்தம் போல களரியினுள் வந்ததும் பாடப்படும் ஆட்டத்தருவிலும் கதாபாத்திரம் அறிமுகம் செய்து வைக்கப்படும். உதாரணமாது இந்தக் கூத்தில் முதலில் வரும் கதாபாத்திரம் கட்டியக்காரனாகும்.
அவருக்கான ஆட்டத் தருவில்:- "கட்டியகாரனும் வந்தானே - ஒய்யாரமான கட்டியகாரனும் வந்தானே"
என்று கட்டியக்காரனை அண்ணாவியார் அறிமுகம் செய்து வைப்பார். அரசன் வருகையை அறிவிக்கும் ஒரு கதாபாத்திரம் இதுவாகும்.
கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் போது, அவர்கள் வட்டக்களரியைச் சுற்றி ஆடுவார்கள். பின்னர் கதாபாத்திரங்கள் தோத்திரம் பாடி சபைவிருத்தம் பாடி தமது ஆட்டத்தை ஆரம்பிக்கும். சில சபை விருத்தங்கள் அண்ணாவியாரினாலும் பாடப்படும். கதாபாத்திரங்களை மற்றவர்கள் அறிமுகம்
51

Page 35
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் செய்யும் வழக்கம் மேலை நாடுகளில் ஒரு நவீன நாடக நுட்பமாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதைக் காணும் போதே எமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. ஏனெனில், இந்த நவீன நாடகநுட்பம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் எமது கூத்துக்களில் காணப்பட்டுள்ளமையே ஆகும். இந்தக் கூத்தில் வரு சில பாத்திரங்கள் நீண்ட நேரம் ஆட வேண்டிய தேவை இருப்பதனால், ஒரே பாத்திரத்தை இருவர் ஆடுவது வழக்கம். உதாரணமாக கண்ணகி கோவலன் போன்ற பாத்திரங்கள் முற் கண்ணகி, பிற்கண்ணகி எனவும் முற்கோவலன், பிற்கோவலன் எனவும் பிரித்து ஆடப்படுகின்றன.
பக்கவாத்தியங்கள்
கோவலன் கூத்துக்குப் பக்கவாத்தியங்களாக மத்தளம், கைத்தாளம் ஆகியன உபயோகிக்கப்படும். சில வேளைகளில், இரண்டு மத்தளங்களும் இரண்டு தாளங்களும் பாவிப்பது வழக்கம். இந்த வாத்தியங்களால் ஆடுபவர்கள் உற்சாகமூட்டப்பட்டு ஆடும் வேகத்தை கூட்டி ஆடப்பழகிக் கொண்டார்கள். உதாரணமாக இந்தக் கூத்தின் அதிகமான தாளக்கட்டு கண்ட நடையிலேயே இடம்பெறுகிறது. இதனால், பாடல்களைப் பாடும்போது சுருதியோடு இணைந்து பாட முடியாமல் போவதும் சில வேளைகளில், பாட முடியாமல் கூத்தர்கள் களைத்துப் போவதும் உண்டு.
ஆனால், முற்காலத்தில் கூத்தர்கள் அனைவரும் நன்றாகப் பாடக்கூடியவர்களாக இருந்தபடியால் அவர்கள் பாடும் சுருதியில் பிசகு ஏற்பட்டிருக்க முடியாது. காலப்போக்கில் பாடுபவர்கள் சரியாகப் பாடாமல் விட்டதனால், பாடல்களுக்கான கருத்துக்களும் திரிந்து பிழையான அர்த்தத்தைக் கொடுத்ததையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது.
ஆனால், அண்மைக் காலங்களில் ஆர்மோனியம் வாத்தியம் சேர்க்கப்பட்டிருப்பதால் கூத்தர்கள் சுருதியோடு இணைந்து பாட இது வசதியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
ஒப்பனை/உடையலங்காரம்
இந்தக் கூத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில், ஒப்பனைகள் செய்யப்படுவது வழக்கம். முத்து வெள்ளை எனப்படும் பவுடரைத் தண்ணிரில் குழைத்து முகத்தில் பூசுவார்கள். அதிகமான கதாபாத்திரங்கள் நெற்றியில் விபூதி பூசுவது போல பூசியிருப்பதைக் கவனிக்கக் கூடியதாக
52

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக்கூத்துக்கள் இருக்கும். கதாபாத்திரங்களின் முகங்கள் வெளிச்சத்தில் மினுங்க வேண்டும் என்பதற்காக முகத்தில் (SILVERDUST) வெள்ளித் துகள்களை இலேசாகப் போட்டு விடுவார்கள். இது குறைந்த வெளிச்சத்திலும் அவர்களின் முகம் மினுங்குவதை ரசிகர்கள் காணக்கூடியதாக இருக்கும்.
பெண் கதாபாத்திரங்கள் தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி சேலை உடுத்து ஒட்டியாணம் கட்டி ஆபரணங்கள் அணிந்து, கைப்புசம் கட்டி, வருவார்கள். விசேடமாக அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் கண்ணகியாக நடிப்பவரும் கைப்புசத்தோடுதலையில் முடியும் வைத்திருப்பார்கள். கோவலன் கதையில் வரும் இடைப்பெண்களும் தோழிகளும் நீண்ட பாவாடை சட்டை போட்டு ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிற்கண்ணகியின் ஒப்பனையும், அவர் காளியாக வந்த பின் போடப்படும் ஒப்பனையும் கதக்களி நடன ஒப்பனையை ஒத்ததாக இருக்கும்.
கோவலன் கூத்தில் வரும் அரச கதாபாத்திரங்களின் உடையலங் காரங்கள் சற்றுவித்தியாசமானவை. அரச பாத்திரம் தலையில் முடி, மார்புக் கவசம், கைப்புசம், வங்கி, களுத்து மாலை என்பவற்றை அணிந்து கைகளில் வாளை வைத்திருக்கும். மந்திரி பாத்திரம் கையில் குத்துவாளை வைத்திருக்கும். அரச பாத்திரமேற்போர் வில்லுடுப்பு கட்டியிருப்பர். பிரம்பினால் வளையமாகப் படிமுறைப்படி கரப்புப்போல் கட்டப்பட்டு அதன் மேலே வர்ணச் சேலைகள் கட்டி அதில் பலவிதமான வடிவங்களில் வண்ணக் கடதாசிகளை ஒட்டியிருப்புர். இதுவும் கேரளத்தில் கதக்களிநாட்டியத்தில் உபயோகிப்பதுபோல இருக்கும். அரசர்களின் முடிகள் உயரமாக கோபுர வடிவத்தில் அமைந்திருக்கும் . இதில் அந்தந்த அரசர்களின் இலச்சனைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கும். வேகமான ஆட்டத்தில் ஆடும் கதாபாத்திரங்களான பொற்கொல்லன், நட்டுவன், பெடியன்கள் போன்ற கதாபாத்திரங்கள் பிரம்புவளையம் இல்லாமல் துணியில் வட்டமாகப் படிமுறைப்படி தைத்து வர்ணக் கடதாசிகளை ஒட்டி வைத்திருக்கும் உடுப்புகளை அணிந்து வருவர்.
கட்டியக்காரன் கைத்தடியையும், மழுவர்கள் இரண்டு அகன்ற வாள்களையும், பொற்கொல்லன் சீலையில் முறுக்கப்பட்ட துணியையும், கண்ணகி காளியாக உருவெடுத்துவரும்போது சூலாயுதத்தையும், அரசன் வாளையும் மந்திரி கதாபாத்திரம் குத்துவாளையும் கொண்டு வருவது வழக்கம். பாத்திரங்களின் ஆட்டத்திற்கேற்ப சலங்கைகளும் பெரிது, சிறிது என்ற வகையில்அமைந்திருக்கும். பாண்டிய மன்னன் பெரிய சலங்கைகளைக் காலில் கட்டியிருப்பதையும் பொற்கொல்லன் போன்ற கதாபாத்திரங்கள் சிறிய சலங்கைகள் கட்டியிருப்பதையும் நாம் காணலாம். கூத்தில் வரும் உடையலங்காரங்களை விளக்குவதற்காக இரண்டு படங்கள்.
53

Page 36
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கோவலன் கொலை செய்யப்பட்டதும் கண்ணகி ஒப்பாரி பாடும் காட்சி
அரசவையில் பிற்கண்ணகி, பாண்டிய மன்னன்,
மற்றும் மந்திரி ஆகியோர் தோன்றும் காட்சி
 
 

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
மேடை அமைப்பு/வட்டக்களரி
கோவலன் கூத்திற்கான மேடையமைப்பு வட்டக்களரி என அழைக்கப்படும். ஒன்பது தொடக்கம் 18 அல்லது அதற்கு மேற்பட்ட தடிகளைக் குழிதோண்டி வட்டவடிவமாக நடுவார்கள். 10 அடி உயரமான அந்தத் தடிகள் ஆரம்ப காலத்தில் வெள்ளைத் துணியாலும் பிற்காலத்தில் பலவகையான நிறக்கடதாசிகளாலும் அலங்கரிப்பது வழக்கம். ஒவ்வொரு தடியின் அடிப்பாகத்தில் வாழைக்குற்றிகளை மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் நட்டு வைப்பார்கள்.
அதன் மேல் மண் சட்டிகளை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பந்தம் போல துணியை வைத்து கொளுத்தி விடுவார்கள். ஆரம்பத்தில் தடிகளில் பந்தங்கள் கொழுத்தி வைப்பது வழக்கமாகும். வட்டமாக நாடப்பட்ட ஒவ்வொரு தடியின் மேல் மட்டத்திலும் கயிற்றை இணைத்துக் கட்டி அதில் தோரணங்கள்,மாவிலைகள் தொங்க விடுவர். தடிகள் நடும்போது இடைவெளிகள் ஒரேயளவில் விடப்படும். ஒரு இடைவெளி மட்டும் அகலமாக விடப்பட்டிருக்கும். அந்த இடைவெளியினூடாகவே கூத்தர்கள் வட்டக்களரியினுள் பிரவேசிப்பார்கள்.
இந்த வட்டக்களரி அமைப்புக்குக் காட்டுத்தடிகளும் வாழைக்குற்றிகளும் தோரணமும் மாவிலையுமே தேவையான பொருட்களாகும். இந்த வகையான மேடை அமைப்பினால் வெளிச்ச வசதிகள் குறைவாக இருந்த காலத்தில் ரசிகர்கள் களரியைச் சுற்றி வட்டமாக இருந்து கூத்துப் பார்ப்பது வழக்கம்.
ரசிகர்கள் களரியின் அருகில் இருந்து பார்ப்பதனால், அவர்கள் களரிக்கு உள்ளே வராமல் இருப்பதற்காக அவர்கள் உட்கார்ந்திருக்கும் உயரத்திற்குக் கீழாகவும் கயிறு கட்டிவிடுவார்கள். வட்டமாகக் களரி கட்டப்பட்டிருப்பதனால், இது வட்டக்களரி என அழைக்கப்படும்.
காலப்போக்கில் வெளிச்சத்திற்காகப் பந்தங்களை ஏற்றாமல் காலத்திற்கு ஏற்றவாறு விளக்குகள், லாம்புகள், பெற்றோல்மக்ஸ் போன்றவற்றைப் பாவிக்கத் தொடங்கினார்கள். இந்தக் களரி அமைப்பைக் காட்டுவதற்கு ஒரு வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது.
55

Page 37
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
வட்டக்களரி
56
 

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
பின்பற்றப்பட்ட பாரம்பரியம்
அண்ணாவியாருக்குக் கூத்தர்கள் தட்சணை கொடுத்து அவரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்று கூத்தை ஆரம்பிப்பது வழக்கம். அண்ணாவியார் கூத்தைப் பழக்குவதினால் இதுவும் அண்ணாவி மரபுக் கூத்து என்றே கூறப்பட வேண்டும்.
கோவலன் கூத்திலுள்ள சிறப்பு அம்சம் நாலடித் தாளமும் அதற்கான மிதியுமாகும். நாலடித்தாளத்திற்கான மிதி ஆரம்பத்தில் இரண்டு கால்களையும் ஒன்றாக வைத்த பின்தான் ஆரம்பிக்கும். முதலாவது தாளத்திற்கு வலது காலை முன்னே வைத்தும் இரண்டாவது தாளத்திற்கு அதேகாலை வலது பக்கப்பாட்டிற்குத் தூக்கி வைத்தும் மூன்றாவது தாளத்திற்கு பின் காலை (இடது காலை) முன்னே வைத்தும் நாலாவது தாளத்திற்கு வலது காலை பின்னாலும் எடுத்து வைக்க வேண்டும்.
அதுபோலவே இடது காலையும் இருந்த இடத்தில் மிதித்து முதல் தாளத்தை ஆரம்பித்து ஆடவேண்டும். முதல் நாலடித்தாளத்திற்கு அரைவட்டமும் அடுத்த நாலடித் தாளத்திற்கு மறுபக்கத்தில் அரைவட்டமும் போட்டால், ஒரு முழு வட்டவடிவம் போடுவது போலவே ஆட்டம் அமைகிறது.
இப்படியான தாளக்கட்டு மிதிகள் வேறு எந்தக் கூத்துக்களில் இருக்கின்றன என்பது விபரமாக ஆராயப்பட வேண்டும். தாளம் போடும்போது ஒருதரம் போட்ட பின்னர் இடைவெளி விட்டு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என போடப்பட வேண்டும். முக்கியமாக இந்தத் தாளம் ஆட்டத்தருக்களுக்கே உபயோகிக்கப்படுகிறது.
உதாரணமாக மாதவியாள் தோற்றினாளே என்ற ஆட்டத்தருவுக்கும், மங்களம் பாடும்போது வரும் ஆட்டத்திற்கும் பொற்கொல்லனின் ஆட்டத்திற்கும் இன்னும் பல ஆட்டங்களுக்கும் இந்த நாலடித்தாள முறையே பின்பற்றப்படுகின்றது.
இதுபோன்ற நாலடித்தாள ஆட்டங்கள் மகுடி, வேதாள ஆட்டம், கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இடம்பெறுவதைக் காணலாம். அதேபோல கண்டி மாநகரில் இடம்பெறும் பெரஹர ஊர்வலத்தில் ஆடலர்கள் ஆடும்போதும் இந்த மிதிகளைக் காணலாம்.
57

Page 38
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
4 அடித்த767 மிதிகள்
محمد ظ42 ہے/ے 0
இ,
/ (2) iwe / تک‘‘ یا تھا
ée מי-וru
படம் -ன் முடிவி/ ஐஜிஜ்ஜத்துவது
f /7 கதாட்ட 6/Talaa lag ஆஐஐரஜஆ24ழாவது மத
கோவலன் கூத்தில் இறுதியில் பாடும் குளிர்ச்சிப் பாடல்கள்
இப்பிரதேசத்தில் பாடப்படும் சில மெட்டுக்களை ஞாபகப்படுத்துகின்றன.
உதாரணமாக, வற்றாப்பளைப் பொங்கலையொட்டிப்பாடப்படும் சிலம்புகூறல் பாடல்
மெட்டு, அம்மன் குளிர்ச்சிக்காகப் பாடப்படும் மெட்டாகும். வேலப்பணிக்கர் ஒப்பாரி
மெட்டுக்கள் இந்தக் கூத்தில் வரும் ஒப்பாரி மெட்டை ஒத்ததாகவும் இருக்கிறது.
58

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
ரசிகர்களின் பங்களிப்பு
இந்தக் கூத்தைப் பார்ப்பதற்கு வன்னிப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வண்டில் கட்டி வருவது வழக்கம். தூரப் பிரதேசங்களில் இருந்து பலரும் வருவதால், இரவு எட்டு அல்லது ஒன்பது மணியின் பின்னரே கூத்து ஆரம்பிக்கப்படும். கூத்து பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் வட்டக்களரியைச் சுற்றியிருந்து பார்ப்பதனால், தங்களுடைய ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்த கூத்தர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவது வழக்கம். அன்பளிப்புகள் வழங்குவதைக் கட்டுப்பூராயம் வழங்கல் என்று அழைப்பர்.
உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு நடிகர் பாண்டிய அரசனாக ஆடுவதைக் கண்டுகளிப்புற்ற ரசிகர் தான் வழங்கப்போகும் அன்பளிப்பை களரியினுள் நிற்கும் அண்ணாவியாரிடம் கொடுத்து தனது விருப்பத்தைத் தெரிவிப்பார். ஆட்டத்தை இடைநிறுத்திய அண்ணாவியார்
“முள்ளியவளை வினாசித்தம்பி கணபதிப்பிள்ளை பாண்டியரசனுக்கு ஆடும் சந்தோஷத்திற்காக வற்றாப்பளை பொன்னர் கந்தையா போட்ட கட்டுப்பூராயம் கோடியே கோடி" என கையைத் தூக்கி அறிவிப்பார்.
பக்கப்பாட்டுப் பாடுபவர்'இன்னும் போடுவார்’ என தொடர்ந்து கூறுவார். இந்த நேரத்தில் ரசிகர்கள் கரகோசம் செய்வார்கள். சிலவேளைகளில், கட்டுப்பூராயம் போடுவதில் போட்டி ஏற்பட்டு பலரும் தொடர்ச்சியாக கட்டுப்பூராயம் போடுவதும் உண்டு, களரியினுள் செம்பு ஒன்றை வெள்ளைத் துணியால் மூடிக்கட்டி அதில் துவாரமிட்டு கிடைக்கும் கட்டுப்பூராயங்களை அதில் போடுவது வழக்கம், கூடுதலாகக் கட்டுப்பூராயம் பணமாகவே வழங்கப்படும். இம்முறை கூத்தாடுபவர்களை உற்சாகப்படுத்தி விடுவதனால், அவர்கள் திரும்பவுப் உற்சாகமாகப் பாடல்களைப் பாடியும் ஆடியும் காட்டுவார்கள்.
கூத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் தங்கள் கிராமங்களுக்குக் காட்டுப்பாதை வழியாகத் திரும்பிப்போக முடியாமல் இருப்பதனால், இந்தக் கூத்து விடியும்வரை ஆடும் பாராம்பரியம் ஏற்பட்டிருக்கலாம். சில கதாபாத்திரங்களின் பெயர்களும் அவர்களுடைய உண்மைப் பெயர்களோடு இணைத்து ரசிர்களால் அழைக்கப்படுவது வழக்கமாகி விட்டது. உதாரணமாக, மாதவி நற்குணம், கோவலன் முத்தையா, பாண்டியன் கணபதிப்பிள்ளை. தட்டான் நல்லையா என ரசிகர்கள் அவர்களது உண்மைப் பெயரோடு கதாபாத்திரங்களின் பெயர்களையும் சேர்த்து அழைத்து தமது ரசிப்புத் தன்மையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
59.

Page 39
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
வன்னிப் பாரம்பரியக் கலைகளை வளர்க்க பங்களித்தோர்
வன்னியில் பாரம்பரிய நாடகக் கலைகளை வளர்த்தெடுப்பதற்கு பலரும் தமது பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்கள். இவர்களுள் வே. சுப்பிரமணியம் அண்ணாவியார், பொன்னம்பலம் அண்ணாவியார், சூரியர் பொன்னையா அண்ணாவியார், சி. சுப்பையா அண்ணாவியார் அரியான் பொய்கை கை. செல்லத்துரை, முல்லைமணி வே. சுப்பிரமணியம், மட்ராஸ் மெயில், சு. வெற்றிவேலன், த. தளையராசசிங்கம், போன்றோர் கூத்துக்களை வளர்த்தெடுப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இப் பிரதேசத்தில் இருக்கும் ஏட்டுப் பிரதியில் உள்ள நாட்டுக்கூத்துகள் நூலுருப் பெற வேண்டும் என்பது எனது அவா.
இதற்கு முன்னோடி நடவடிக்கையாக கோவலன் கூத்தின் ஒரு சிறுபகுதியையும் இந்த நூலில் சேர்த்துள்ளேன். நேரச் சுருக்கம் காரணமாக பிரதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூத்தின் ஏட்டுப் பிரதிகள் வட்டக்களரியில் கூத்தாடும்போது, குத்துவிளக்கு வெளிச்சத்தில் வைத்து சரி பிழை பார்த்ததைக் கண்டிருக்கிறேன்.
கோவலன் கூத்தில் முக்கிய கட்டமான பொற்கொல்லன் வருகையுடன் இந்தப் பிரதி ஆரம்பிக்கப்படுகிறது. இப்பகுதிக்குரிய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பானது. கூத்தின் இப்பகுதி அனேகமாக விடிகாலை 2.30 மணியளவில் ஆரம்பிக்கும். நித்திரை தூங்கிக் கொண்டே கூத்தைப் பார்க்கும் ரசிகர்கள் திடுக்கிட்டு கண்ணை அகலத் திறந்து கூத்தைப் பார்க்கும் காட்சி கண்கொள்ளக்
காட்சியாகும்.
60

செல்லத்துரையின் ഖ്ത് பிராந்தியக் கூத் துக் கள்
கோவலன் கூத்து (பிரதி)
(கூத்துக்கள் அனைத்தும் ஆரம்பத்தில் விநாயகரை நினைந்து காப்புப் பாடியே ஆரம்பிப்பது வழக்கம். அதனால் காப்புப் பாடலுடனேயே பிரதி ஆரம்பமாகின்றது)
காப்பு முன்னவனே வேள்விக்கு முன்னம் திணைப்புனம் போம் பின்னவனே வீரகத்திப் பிள்ளையே - மன்னா உன்னைத் துதிப்பதெல்லாம் எளிதோ - எளிதில்லை எழத் துதிப்பதெல்லாம் வரும் வணக்கம்.
(பொற்கொல்லன் வருகை ஆட்டத் தரு)
பொற்கொல்லன் நளினம் தா. தா. கிடதும் தகதரிகிடதக
தா.தா. கிடதும் தகதரிகிடதக (தா.தா) தக்கச்சோம் தீந்ததாகிட தக்கச்சோம் தீந்த தாகிட தக்கச் சோம் தீந்த தாகிட
பாடல் (அண்ணாவியார்)
கற்பைக் குழல் இடுக்கியே கரிபட்டையும் கைபிடித்தே துற்குணமே படைத்த பொன் செய்கின்ற தட்டானும் தோற்றினானே
姫(5: தெய்யதக்கச்சோம் தீந்த தாகிட தெய்ய தக்கச்சோம் தீந்த தாகிட தெய்யதக்கச்சோம் தீந்ததாகிட
(பொற்கொல்லன் ஒயில் நடை)
பாடல் (பாட்டுக்காரர்/அண்ணாவியார் பாட்டு)
ஒரு கையிலே கற்பையும் குழலும் ஒரு கையிலே செப்பும் தராசும்
தரையன் பாண்டி ராசன் வாசலில்
61

Page 40
அருணா செல்லத்துரையின்
பொற்கொல்லன் பாடல்:
፴ው
பாடல்:
தரு:
பாடல்:
வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
தட்டானும் வந்து தோற்றினான் தாம் தாம்கிட தக்கச்சோம் தத்தரிகிட
- (ஒருகையிலே.) மாறனுக்கிவன் மறலியானவன் வணிகனுக்கொரு பிணியதானவன் சூளும் மதுரை சுடவே நெருப்புக் கொள்ளி போலவே தோற்றினான் தாம் தாம் கிட தக்கச்சோம் தத்தரிகிட
- (மாறனுக்கு.)
பொய்யினுக்கொரு புடமைதானவன் புகழில்லாதவோர் கொடிய பாதகன் பையனும் மருகனுடன் வஞ்சிப் பாதகத் தட்டான் தோற்றினானன் தாம்தாம்கிட தக்கச்சோம் தத்தரிகிட தக்கச்சோம் தத்தரிகிட தக்கச்சோம் தத்தரிகிட
கன்னன் மொழி வள்ளியுட காதலன் நீயே எங்களைக் காத்தருள வேண்டுமிப்போ காரணமிதாய்
தக்கச்சோம் தத்தரிகிட தக்கச்சோம் தத்தரிகிட
மன்னவனும் தன்னுடைய மந்திரியுடன் - வெகு சீக்கரமாய் வரச்சொல்லி வார்த்தை உரைத்தான்
தக்கச்சோம் தத்தரிகிடதக்கச்சோம் தத்திரிகிட
என்ன பணி விடைகளோ யானறிகிலேன் - இதற் கேகியே அரண்மனைக்குப் போயே வருவேன் - (தரு)
(பொற்கொல்லன் ஆடிய வண்ணமே வட்டமாய் வர மறுபக்கத்தில் பாண்டி மன்னன் ஆடியபடி வந்து இருவரும் சந்திக்கின்றனர்)
62

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பொற்கொல்லன் சரணம் சரணம் ராசவே. என்னை அழைத்த காரணம் என்னவென்று கூறுவீராக.
பாண்டியன் ஆனால் கேளடா தட்டான், எனது மனையாள் காற்சிலம்பு அரும்பு விட்டுப் போனது. வெகு விரைவில் சமைத்து நான்கு நாட்களுக்குள் தரவேண்டும்.
பொற்கொல்லன். அப்படியே ஆகட்டும் அரசே.
(அரசன் ஆடியபடியே போக பொற்கொல்லனின் சிஷ்யப் பெடியள் ஆடியபடியே பொற்கொல்லன் நிற்கும் பக்கம் வருகிறார்கள்.)
பொற்கொல்லன் அடே வாடா மகனே வஞ்சிப்பத்தா. பாண்டியன் தேவியுடைய சிலம்பு அரும்பொட்டி ஆலச் சுவரிலே உலர வைத்திருக்கிறேன். ஓரிடமும் போகாது பாத்திருங்கடா மக்காள்.
பெடியள். அப்படியே செய்கிறோம் அப்பா. (பொற்கொல்லன் ஆடியபடியே மறுபக்கம் போக பெடியள் அவ்விடம் விட்டு விளையாட மறுபக்கம் போகிறார்கள். தட்டான் திரும்பி வருகிறான். வைத்த இடத்தில் சிலம்பைக் காணாமல் திகைத்து)
பொற்கொல்லன் பாடல்:
இதில் வைச்ச சிலம்பெங்கே போச்சோ - எனக் இனியென்ன முடிவான வினைவந்ததாச்சோ
(இதில்)
இதில் வைச்ச சிலம்பெங்கே - இருந்த பெடியளெங்கே எடுத்தாரோ விளையாட்டில்
கெடுத்தாரோ விடுத்தாரோ பெடியளும் எடுத்திட மாட்டார் - வேறோர் புறத்தாரும் சிலம்பென்று குறித்திட மாட்டார் - பொல்லாத பழியிது சொல்லாமல் முடிந்தது பொடியளால் - இதுவொரு
குடி கேடு வந்தது.
63

Page 41
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
தவணைக்கு நாளையே தரச் சொன்னார் - சிலம்பைத் தப்பாமலே கொண்டு வரச் சொன்னார் தமிழ் மாறன் அறியுமுன் நகர்விட்டுத் துறக்கட்டோ சதி செய்யக் கூடாதென் உயிர் விட்டுத் துறக்கட்டோ
(பொற்கொல்லப் பெடியள் ஆடிக்கொண்டு வரல்)
பொற்கொல்லன்:
பெடியன்:
வாடா மகனே வஞ்சிப்பத்தா இதில் வைச்ச சிலம்பு எங்கேயெடா மகனே
அப்பா நாங்கள் விளையாடப் போய்விட்டோம் நாங்கள் வரும்போது செட்டியார் ஒருவர் சிலம்பு விலை கூறி தட்டாதெருவில் போனாரப்பா.
பொற்கொல்லன்.நான் அவனைப் பார்த்து வருகிறேன், நீங்கள் வீட்டுக்கு
போங்கோ மக்காள்.
(பொற்கொல்லன் ஆடிக்கொண்டு வர கோவலன் ஆடிக்கொண்டே சிலம்புவிற்றல்)
கோவலன் (பாட்டு)
கோவலன்
பொற்கொல்லன்:
விற்க வந்தேன் கொள்ள வாருங்கோ - சிலம்பு தன்னை விலை மதித்தேன் பாங்காய் ஏருங்கோ
(விற்க) பொற்புனைந்த நன் முகத்தாள் நட்புமிகு மாதவிக்கு பொன் கொடுக்க வேணும் இதை நன் விலையதாகவிற்று கண்ணகை பாதத்திலிட்ட வண்ணமாம் சிலம்பிதனை காரிகை மனம் பொருந்தி ஊரிலே வில்லென்று தந்தாள் நாகமணி ஒன்பதுள்ளே வேகமாம் தரிசுபாரும் யோகமுள்ளோர் கொள்வீரானால் ஏகமான லாபமுண்டு
(விற்க)
நாகமணி தரிசு பதித்த சிலம்பு, யாராகுதல் கொள்ளத் தக்கோர் கொள்ளலாம்.
ஒய் . ஒய். காணும் செட்டியாரே எங்காலே வாறிர் காணும் செட்டியாரே. நான் மெத்த நாளாய் காணவில்லை. வாரும்
64

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கோவலன்
பொற்கொல்லன்
கோவலன் :
காணும் செட்டியாரே. இப்போ நான் என்ன உதவி செய்ய வேண்டும் காணும் செட்டியாரே.
வியாபாரமாய் சிலம்பொன்றை விற்க வந்தேன். இதை நல்ல விலைக்கு விற்றுத் தந்தால் உமக்கு நன்மை செய்வேனப்பா.
எங்கே சிலம்பைத் தாரும் பார்ப்போம் காணும் செட்டியாரே. அதோ ராசாவின் மாளிகை வாசல் தெரிகிறது. உத்தரவின்றி ஒருவரும் உட்பிரவேசிக்கக்கூடாது. நான் உள்ளே போய் உத்தரவு பெற்று வந்து தங்களை அழைத்துச் செல்கிறேன். அதுவரையும் இதில் நில்லும் காணும் செட்டியாரே.
அப்படியே ஆகட்டும் அப்பா.
(பொற்கொல்லன் ஆடியபடியே பாண்டியன் அருகில் சென்று)
பொற்கொல்லன் :
பொற்கொல்லன்
(விருத்தம்)
படிபுரக்கும் அரசே உமது மனையாள் கால்சிலம்பை பழுக்கச் செய்து அடிசில் உண்ணப் போனேன் - அதை ஒரு திருடன் கண்டு கடிதெடுத்துப் போனான் நான் அவனைக் கண்டுபிடித்து உபாயமதாய் கணக்க விற்று கோடிபணம் தருவேனென்று கூட்டி வந்தேன் சிலம்பு இதுதானே.
ஆனால் கேளும் அரசே தங்கள் தேவியாரின் சிலம்பை அரும்பொட்டி ஆலச் சுவரில் உலர வைத்தேன். அதனை ஒரு திருடன் எடுத்துப் போனான். நான் அவனை தந்திரமாக கூட்டி வந்தேன். சிலம்பிதுதான் அறிவீராக.
(ஆடிக்கொண்டே கோவலன் இருக்கும் இடம் வருகின்றனர்) பாண்டியன் (பாட்டு): அத்தனைக்கும் தத்துவமோடா - சிலம்பெடுக்க
அத்தனைக்கும் தத்துவமோடா அத்தனைக்கும் தத்துவமோ மெத்த உன் மகத்துவமோ அரசனின் சிலம்பெடுக்க எத்தனை குலம் படித்தாய்
(அத்தனைக்கும்)
65

Page 42
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் கோவலன் (பாட்டு)
சித்தமதில் நம்பிடுமையா - சிலம்பெடுத்த உத்தமனே நானில்லையையா - அரசே இவன் சத்தியமாய் எந்தனை நித்தியக் கள்வனென்றிவன் இத்தினத்தில் சாட்டி வைக்க உத்தமனே நம்பினிரே
பாண்டியன் : (பாட்டு)
பாண்டியனென்றே யுரைத்தாலும் குலம் நடுங்கி ஆண்டவர் என்றே கரைவாரே பலர் புரக்கும் பாருடன் பாதாள கண்கள் ஆருடனே வாளும் -
விண்கள் இரசராசரானோர் இதை ஆருமறிவாரே நம்மை
(பாண்டியன்)
கோவலன்: (பாட்டு)
மாதுகால் சிலம்பு விற்க நான் மதுரை தன்னில் நீதியுடன் வந்தேன் ஆதிசிவனால் உமக்கு தீதுகள் வந்தே முடியும் சூது சொன்ன தட்டான் சொல்லை நீதியதை நம்பவேண்டாம்
UTSTILLIGT: (பாட்டு)
தண்டுமிண்டு செய்து காட்டேனோ - உனதுடலை கண்டதுண்டமாக வெட்டேனோ - அடேகரவா தூக்கி யானை மீதுகட்டி வைக்கிறேன் கேளடா மட்டி சன்னல் பின்னலாய் இடற முன்னே
உன்னைப் போடுகிறேன் பார்
(தண்டுமிண்டு)
பொற்கொல்லன். ஆனால் கேளும் இராசனே இவன் சொல்லுவது முழுவது
பொய்.
பாண்டியன் அப்படியானால் கேளடா பொற் கொல்லா, இச் சிலம்பை என் மனையாளிடம் காட்டி சரியான உண்மையறிந்து இவன் களவெடுத்தது உண்மையானால் எனது பணிவிடைக்குரிய மழுவரை அழைத்து இவன் உடலை இரண்டாய் பிளப்பிப்பாயாக.
66

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
பொற்கொல்லன் அப்படியே ஆகட்டும் அரசே,
(பாண்டிய மன்னன், கோவலன் இருவரும் ஆடிக்கொண்டே போக பொற்கொல்லன் நின்ற இடத்திலேயே ஆடிக் கொண்டு நின்று பாட வேண்டும்.)
பொற்கொல்லன் (பாட்டு)
சொல்லப் போறேனே பொய்யொன்று நான் சொல்லப் போறேனே சொல்லப் போறன் பொய்யை நல்ல முறைமையாய் தூக்கப் போறான் துரை தாக்கப் போறான் என்னை
(சொல்லப் போறனே)
பொய்யினால் ஒர் பாவம் வந்தால் வரட்டுக்கும் பூளியனால் ஒர் பழி நேராதிருக்கட்டும் கைதவறெண்டொரு மெய்யுரையாகவே காட்டி சாட்டிப் பழி மூட்டிப் போட்டால் போதும்
(சொல்லப் போறேனே)
பாண்டியன் தேவியும் தன் சிலம்பென்றாளே பாரக் கரவனை தீரக் கொல்லென்றாளே ஆண்டவனே உன்னைத் தாண்டவனே - என்னை ஐயமில்லை இனி மெய்யை பொய்யாக்குவேன்
(சொல்லப் போறேனே)
பொற்கொல்லன் (வசனம்): ஆனால் கேளும் சபையோர்களே, செட்டியார் வந்தது, சிலம்பை எடுத்தது, அவரைப்பிடித்து அரைச் சணத்தில் பிளந்தது இந்தக் கதையை ஒருவருமே வெளியில் பேசக்கூடாது. பேசினால் அவர்களையும் பிடித்து பிளக்கச் சொன்னார் எங்கள் இராசன்.
(பொற்கொல்லன் ஆடிக் கொண்டே வெளியே போக கண்ணகி ஆடிக் கொண்டே உள்ளே வருகிறாள்)
67

Page 43
அருணா செல்லத்தரையின் noi sfiù பிராந்தியக் கூத்துக்கள்
கண்ணகி (பாட்டு)
வாசல் எங்கே வாசல் எங்கே - அந்த மாபாவிதன் வாசல் எங்கே பூசலிலே மருவலனார் வந்து பொருளளித்தோன் வாசல் எங்கே
(வாசல் எங்கே) வீசு புகழ் செட்டி தன்னை - வந்து வெட்டுவித்தோன் வாசல் எங்கே தேசம் எங்கும் கீர்த்தி பெற்றோன் - அந்தத் தென்னவன்தன் வாசல் எங்கே
(வாசல் எங்கே.) தெட்டியுண்ணும் பொன்னையெல்லாம் - வந்து திருடியுலை தனிலொழித்தோன் கட்டழகு பட்டணமும் - அந்த காலாளும் சேனைகளும் இட்டமுடன் ஆளுகின்ற - அந்த இறையவன் தன் வாசல் எங்கே தட்டான்தன் சொன்ன மொழிதன்னைக் கேட்டோன் தன் வாசல் எங்கே.
கண்ணகி வசனம் (ஆடிக் கொண்டே சென்று) உதாரும் பிள்ளாய்
பாண்டியன் (வசனம்) : நான் தான் பாண்டி இராசன் அறிவாயாக
கண்ணகி (வசனம்): ஆனால் கேளடா பாண்டியனே, நான்தான் சிலம்பு திருடிய கள்வனின் மனைவி. எனது கணவனைக் கொன்ற பழி வாங்க வந்திருக்கிறேன்.
பாண்டியன் (வசனம்): ஆனால் கேளடி பெண்ணே எனது கோட்டை வாசலில்
உத்தரவின்றி வந்து நிற்கும் உனது ஊரென்ன?
பேரென்ன? இந்தச் சிலம்பு உனது கணவனுக்கு கிடைத்த வரலாற்றைக் கூறுவாயாக.
68

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கண்ணகி (பாட்டு):
வாழும் நகர் சொல்லுறன் கேளாய் கூடல்நகர் வாழும்மன்னா வாழும் நகர் சொல்லுறன் கேளாய்
(வாழும் நகர்) வாழும் நகர் சோழ நாடு தானுரையே சோழராசன் வஞ்சை சூரியகுலத்தில் சங்கை பெற்ற செல்வியடா
(வாழும் நகர்)
மைந்தரும் ஒருத்தர் தானடா - மானாகர் பெற்ற பைங்கொடி திருத்தந் தானடா - எனது பெயர் வண்ணமுடனேயுரைக்கில் கண்ணகியென்றே அறிவாய் பெண்ணவர்க்கு நானவரை மண்ணில் மணமே புரிந்தேன்
(வாழும் நகர்)
கண்ணகி(வசனம்): ஆனால் கேளடா பாண்டியா வெடியரசனுடன் எனது
தந்தையார் போர் செய்து வெற்றி பெற்று நாகமணிச் சிலம்பு செய்து எனக்களித்தார். அறிந்து கொள்ளடா மோட்டுத்துரையே.
பாண்டியன்: (பாட்டு)
கண்ணகி:
பாண்டியன்:
கண்ணகி:
பாண்டியன்:
மோடா மோடாவென்று கேடாகப் பேசுறாய் சாடிய நியாயத்தின் காட்சியேதடி
சாடாயங்கவர் சொன்ன சாட்சியே ஏதடா நாடாளும் அரசர்க்கு நல்லதோ மோடா
நல்ல பொற்சிலம்பினை நயம்பெற எடுத்திட்ட கள்வனின் தலைவெட்டி கழுவி விட்டேனே
கள்வரென்றவரை நீ கண்டதோ கேட்டதோ உள்ளதென்னென்றிங்கே உரைசெய்யடா நீ
உரையென்ற பொருளோடு உடனே போய் பிடித்திட்டேன் கரவர்க்குச் சாட்சியேன் கதையென்ன போடி
69

Page 44
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கண்ணகி கரவென்றவரை நீ கண்டதோ கேட்டதோ
பெருமிதச் சபைமுன்னே பேசடா நீயே
பாண்டியன்: பேசத் தட்டான் சொன்னான் பிளந்திட்டேன் சாட்டியால்
கூசாதே ஏசாதே கொடியேனி போடி
கண்ணகி: பூடாகத்தட்டானும் பொற்சிலம்பினை வைத்து
சாடாயங்கவர் தம்மைச் சாட்டினரோடா
பாண்டியன்: சாடாயென் மனைவியும் தனது பொற்சிலம்பென்றாள்
மாட்சியென்றுரைத்திட்ட வகையுறு பெண்ணே
கண்ணகி: வகையென்றெங்கவர் சொன்ன வார்த்தை கேட்டிசைத்தாலும்
இதுவென்று குலத்தானே விளம்பெண்ணாதோடா
பாண்டியன்: விளம்பத் தட்டான் சொன்ன வியளங் கேட்டுரைத்தாலும்
குளம்பாக உண்மையை சுட்டிக் கொண்டேனே
கண்ணகி தட்டானும் பொய் சொன்ன சாட்டியைப் புரட்டியே
பொட்டாக எடுத்ததைப் போட்டொண்ணாதோடா
பாண்டியன்: பூடாகத் தட்டானோர் பொய்யும் சொல்லான் - எந்தன்
நாட்டினில் களவொன்றும் நடவாது பெண்ணே
கண்ணகி (வசனம்): ஆனால் கேளடா பாண்டியா, இதோ பார் இந்தச் சபையோர் முன்னிலையில் இந்தச் சிலம்பை எறிந்து உடைக்கிறேன். முத்துத் தரிசானால் உனது சிலம்பு நாகமணித் தரிசானால் எனது சிலம்பு. நாகமணித் தரிசு தெறித்தால் எனது கணவனைக் கொன்ற பழிவாங்கும் பொருட்டு உன்னையும் உலகையும் அழிப்பேன். இதோ பார். (சிலம்பை எறிந்து உடைக்கிறாள்)
7Ο

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
பாண்டியன் (திகைத்து) ஐயோ நாகமணிச் சிலம்பு.
(எல்லோரும் அப்படியே நிற்க மற்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மங்களம் பாடுகின்றனர்.)
மங்களம்: மங்களமே மங்களமே கரிமாமுகற்கு மங்களமே
சங்கரற்கு மங்களமே சிவதற்பரிக்கு மங்களமே
அறுமுகர்க்கும் மங்களமே தெய்வயானையர்க்கும் மங்களமே
குறமகட்கும் மங்களமே கோவலர்க்கும் மங்களமே
காத்தாருக்கும் மங்களமே எங்கள் கறுப்பருக்கும் மங்களமே
வாய்த்த கருநாதருக்கும் முத்துமாரியர்க்கும் மங்களமே
முத்தருக்கும் வீரபத்திரர்க்கும் காளி முதல்வியர்க்கும்
மங்களமே
சித்தருக்கும் மங்களமே கண்ணகைச் செல்வியர்க்கும்
மங்களமே
காதலுடன் கதைபடிக்கும் எங்கள் கன்னியர்க்கும் மங்களமே
வாழியவே வாழியவே எங்கள் பாவலரும் வாழியவே
வாழியவே வாழியவே எங்கள் பாவலரும் வாழியவே வாழியவே எங்கள் பாவலரும் வாழியவே வாழியவே
ஏட்டுப் பிரதியில் இருந்தவற்றை நேரச் சுருக்கத்திற்காக அரை மணித்தியாலத்திற்கு எழுதித் தந்தவர் முள்ளியவளையில் பாரம்பரியமாக கோவலன் கூத்தை ஆடி வரும் திரு.சுப்பையா வெற்றிவேலன் அவர்கள். பாடல்கள் மறுபிரதி செய்யும்போது சில எழுத்துப் பிழைகளும் இலக்கண கருத்துப் பிழைகளும் ஏற்பட்டிருக்கின்றன. நேரத் தேவைக்காக வசனங்களகம் மாற்றப்பட்டுள்ளன.
71

Page 45
அருணா செல்லத்துரையின் ഖ്ത് பிராந்தியக் கூத்துக்கள்
அரங்கக் கலை
கூத்தின் தற்போதைய நிலை
முல்லைத்தீவு பிரதேச மக்கள் விசேடமாக முள்ளியவளை வாசிகள் இப்பொழுதும் வருடந் தோறும் இந்தக் கூத்தை காட்டு விநாயகர், கண்ணகை அம்மன் கோயில் முன்றல்களில் ஆடி வருகிறார்கள். காலத்திற்குக் காலம் கொழும்பிலும் கண்டியிலும் வேறு இடங்களிலும் இந்தக் கூத்து சிறுசிறு பகுதிகளாக மேடையேற்றப்பட்டிருக்கிறது. 1974 ஆம் ஆண்டு எனது முயற்சியின் காரணமாக சமயாசாரக் கூத்துக்கலையை ஒரு அரங்கக் கலையாக மாற்ற முடிந்தது.
1974 ஆம் ஆண்டு கலைக்கழக நாடகப் போட்டிக்காக அண்ணாவியார் வே.சுப்பிரமணியம் அவர்களின் பழக்கத்தோடு வட்டக்களரியில் ஆடப்பட்ட இந்தக் கூத்தைப் படச்சட்டமேடையில் ஆடுவதற்காக நெறிப்படுத்தினேன். ஆரம்பத்தில், இந்தக் கூத்தைப்படச்சட்டமேடையில் ஆடவேண்டும் என நான் தெரிவித்தபோது, அண்ணாவியார் உட்பட அனைத்துக் கலைஞர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக நான் பல இரவுகள் அவர்களோடு வாதாட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்தக் கூத்தில் பெண் நடிகைகளை நடிக்க வைக்க வேண்டுமென்ற எனது வேண்டுகோள் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டு விட்டது. அதனால், அவர்களைப் பாடகிகளாக மட்டும் சேர்த்துக் கொள்ள முடிந்தது.
வட்டக்களரியில் வட்டமாகச் சுற்றி ஆடி வந்த கலைஞர்களைச் சதுர மேடைக்கு ஆடப்பழக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. இதற்காகச் சதுரமாகக் கோடுகள் கீறி அந்த சதுரங்களில் கலைஞர்களை நிற்க வைத்து ஆடப்பழக்கியபோது, அந்தக் கூத்தின் முன்னோடிகள் பலர் இதற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருந்தாலும், எனது முயற்சியின் காரணமாக இலங்கை கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்ட 1974 ஆம் ஆண்டின் தமிழ் நாடக விழாவில் கோவலன் கூத்து, மரபுவழி நாடகத் தயாரிப்பு அம்சங்களில் மிகச் சிறந்ததெனத் தெரிவு செய்யப்பட்டு ரூபா 500/= பணப் பரிசும் கேடயமும் சான்றிதழும் பெற்றது.
72

அருணா செல்லத்துரையின்
வன்னிப் பிராந்தியக் கூத்து
அகில இலங்கைத் தமிழ் நாடகவிழா -1974
இலங்கைக் கலாசாரப் பேரவையினுல் நடாத்தப்பட்ட
1974 ம் ஆண்டுக்குரி: தமிழ் நாடக விழாவில்
w- signia, as. سپيناTييکې. لای سیمو کی ايوبينهpgH!
4.
LäGET TIL ඉහh:&ශී.ඵ්ෂිණාෂ
-sகுே.இசங்கத்துரை -- - - - - - - - - - - - - - -
G
. இனுல் தயாரிக்கப்பட்ட
*** W SAMMw எனும் தாடகத்திற்குத்தகத்தின்
કઠીક
அம்சங்களில்சிறப்பகப்
- பரிகம் வேடமும்
Atràra asswyns ...ai essaark
டிசம்பர் 5 வியாழன்
DECEMBERS THURSDAY
கோவலன் கூத்து
KOVALAN KooTHTHU
ஈழத்துத் தமிழ்க் ரோமன்களில் நாட்டுக் கூத்து மரயில் LLtLLMuk LLLLLL LMSYLSLGGLL S SAATASTMOk eeSTTLL STLJS கங்கலை கோவலன் கூத்தும் ஒலது. இன்று முலேத்தீனப் OMTLLAL LrTET TLLMMeee GGTTTTCCCLt ttMkLeL பட்டு வரும் கோவலன் கூத்தை அக்கிராமந்து இக்கு?
easáirsoft.
sadüugurt -அருகு செல்லல்துரை ിത്രീധരി --வே. சுப்பிரமணியம் uriKKatif -s, GaGag
த. திலகவதி க. பாசக்தி
நடிகர்கள்
uradores nosiMar தை, கப்பிரமணியம் இராளி கோப்பெருந்தேவி -ன. தவகத்தினம்
Gansusf -ந. குமாரசாமி மத்தி =ds, gజg65 aasa -ஆ. பாலசந்தாம்
urdhr -§. (ിട ട്ട് ബലി wers. Griswa
த. விஞயகமூர்த்தி
73
Kawalan Kooththu is one of the traditiowal folk plays staged in the Ceylon Tail Willage Festivals by successive gcinerations, Today we are viewing the folik dama of "Kövelan Koophthu', as preserved in its old cultur form, by the village of Mulliyawali, un tha Norta-Cuyion District of Mulaitiwu.
Podleeg «~ Aruna Sclathi Awar - W. Subramaniam Traditional director)
Sier es S. Wettivalu
Miss N. hiagarothy Miss K. Paisakhy
Ačit
k Paala - N. Subramaian Queca Kepperuntley - K. Navarainan
kKYalan - N. Kumarasany Minister - K. Thuraisingham
Kansanak - A Balasundaram
Jewcler - M., Thanabalasingham
Jewell's oys - N. Selvajala
N., Wisatyagrannocorthy
ઈ
s

Page 46
அருணா செல்லத்துரையின்
நாடக நிரல்
அருணு செல்லத்துரையின்
கோவலன் கூத்து
மாத்தளே கார்த்திகேசுவின் களங்கம்
சுதுமலே தம்பிராசாவின்
நல்ல தந்த வல்லவன்
பெளகல் அமீரின்
sirësim பெற்ற ராஜா $9 (5
தாயை வளர்த்தார்
தினமும் ט&LDrr 6.30
7
9
டிசம்பர் DECEMBER
வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
DRAMA SCHEDULE
ARUNA SELLATHURA’S KOVALAN BALLET
in TRADITIONAL STY:
MATALE KARTHGESU'S KALANGAM
(BLEMSHED)
SUTHUMALAI THAMBRAJAS
NALLA THANTHA VALLAVAN
(THE BRAVE KING OF NALLUR)
FOWZUL AMEERS PILLAI PETTRA RAJAH
ORU NAYA
VALARTHTHÄR
THE KENGBLESSED WITH CHILDREN ALSO HAD A PET DoG)
6.30 P.M. DALY
இந்தக் கூத்தை முதல் வட்டப் போட்டிக்காக ஒத்திகை பார்ப்பதற்குக் கலாநிதி சு. வித்தியானந்தன் முள்ளியவளை கிராமத்திற்கு வந்திருந்தார். முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இந்தக் கூத்தின் மேடையேற்றம் இடம்பெற்றது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் கருததுத தெரிவிக்கையில், இதுவரை ஆய்வு செய்யப்பட்ட வடமோடி, தென்மோடிக் கூத்துக்களுக்குள் கோவலன் கூத்து அடங்கவில்லை எனவும இரு 9@ புதுமோடியாக இருப்பதாகவும் இந்தக் கலை வடிவம் முல்லைத்தீவுப் பிரதேசத்திற்கே உரித்தான சொத்து என்றும் கூறினார். ●
பேராசிரியர் வித்தியானந்தனின் தொடர்பு ஞாபகமாக அவர் தனது கைப்பட எழுதிய கடிதப்பிரதி இணைக்கப்படுகிறது.
74

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
. Mweru Kaisar a,
3 Lugrrrr
* st/79。
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன், M.A. ஆ. ம. தமிழ்த்துறைத் தக்வச் (ayniii sapasʼu AudÄvasäkA) aii 4sypanub பேராதனை வளாகம்
" * * "سمك 2 وله علي به تم نقل
اندلس له و ابن جر
༦ ཟེའི་ نھ سپاہ پر f ܢ - Q `
* A い〜
5> ܐܢ ܝܕܗ ܐܲܪ ܲܟ ܲܟ݂
பண்டாரவன்னியன்: (நாடகம்)
இந்த வரலாற்றுநாடகம் முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்களினால் 1960ம் ஆண்டு எழுதப்பட்டது. முதலில் வித்தியானந்தாக்கல்லூரி மாணவர்களால் குறுநாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. 1961ல் வவுனியாவில் நடைபெற்ற நாடகப் போட்டியில் முதலிடத்தையும் பின்னர் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாடகப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றது.1968ம் ஆண்டு முழு நாடகமாக்கப்பட்டது. 1970ல் பண்டாரவன்யன் கழகம் இந்த நாடகத்தை நூலுருவாக்கியது. இரண்டாம் பதிப்பு 1972இல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. இதுவரை நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன. நாடக நூலொன்று கூடுதலாக மறுபதிப்புகளாக வெளியிடப்பட்டது பண்டாரவன்னியன் நாடகம் என்றே கூறலாம். இந்த நாடகத்திற்கு இலங்கை கலைக்கழகப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பண்டார வன்னியன் நாடகம் ஆரம்ப காலத்தில் மேடையேற்றப்பட்ட போது நானும் நடித்துள்ளேன்.
75

Page 47
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
பண்டாரவன்னியனாக சு.கணபதிப்பிள்ளை, வெள்ளைக்காரத் துரையாக அருணாசெல்லத்துரை, வெள்ளைக்கார கப்டனாக க.கந்தசாமி, அதிகாரியாக க.தர்மலிங்கம் ஆகியோர் தோன்றும் காட்சிகள்.
76
 
 

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
பண்டாரவன்னியன் கூத்து
பிற்காலத்தில் பண்டாரவன்னியன் நாடகம் கோவலன் கூத்துப்பாணியில் எழுதப்பட்டு ஆட்டக்கூத்தாகப் பலஇடங்களில் மேடையேற்றப்பட்டது. முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்களினால் நாட்டுக்கூத்தாக எழுதப்பட்டு மேடையேற்றப்பட்ட போது பண்டாரவன்னியன் கூத்தும் வன்னிப்பாரம்பரியக் கூத்தாக ஏற்று கொள்ளப்பட்டது எனலாம்.
தணியாததாகம்:
1968ல் கரவைக்கிழார் கந்தசாமி அவர்கள் பனங்காமவன்னிமையின் ஆட்சித்தலைவனாக இருந்த கயிலைவன்னியன் பற்றிய வரலாற்றை "தணியாத தாகம்" என்ற தலைப்பிலே நாடகமாக எழுதியிருந்தார் இந்த நாடகமும் பல இடங்களில் மேடையேற்றப்பட்டதை நாம் குறிப்பிடவேண்டும். பண்டாரவன்னியனும்,தணியாததாகமும் வன்னியின் ஒரு வரலாற்றுத் தேவையை நிறைவு செய்தன என்று கூறலாம்.
வேழம்படுத்த வீராங்கனை :
கோவலன் கூத்துப் பாணியில் வேறு கூத்துக்கள் இந்தப் பிரதேசத்தில் இல்லாமல் இருந்தமை ஒரு குறையாகவே இருந்தது. இந்தப் பாணியில் மற்றுமொரு கூத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் வேலப்பணிக்கர் ஒப்பாரியைத் தேடி எடுத்து அதன் பிரதியை அரியான் பொய்கை கை.செல்லத்துரை அவர்களிடம் ஒப்படைத்தேன். அதை நாட்டுக்கூத்தாக அமைப்பதற்கான கதை வடிவத்தையும் மற்றும் சில ஆலோசனைகளையும் வழங்கினேன். இவற்றை அடிப்படையாகக் கொண்டு அரியான் பொய்கை கை.செல்லத்துரை அவர்கள் வேழம்படுத்த வீராங்கனை என்னும் தலைப்பில் அதனை நாட்டுக்கூத்துப் பிரதியாக்கினார். இந்தப் பிரதியைக் கண்ணுற்ற நண்பர் முல்லையூரான் அதை நூல் வடிவத்தில் வெளிக்கொணர்ந்தார். வேழம்படுத்த வீராங்கனையே முதலில் நூல் வடிவாக வந்த முல்லைமோடியைப் பிரதிபலிக்கும் கூத்தாகும்.
இதனை மேடையேற்றுவதில் பல சிரமங்கள் இருந்தன. இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்குக் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் முன்வந்தனர். பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் தமிழ்த்தின விழாவையொட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் வேழம்படுத்த வீராங்கனையைப் பழகி மேடையேற்றினார்கள். எனது முயற்சியும் மாணவிகளின் முயற்சியும் கல்லூரி அதிபர் ஆசிரியர்களின் ஊக்கமும் ஒன்று சேர்ந்து குறுகிய
לל

Page 48
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் காலத்தில் இந்தக் கூத்தைப் பழக்கி, மேடையேற்றி போட்டிகளில் முதலிடம் பெற்று அகில இலங்கை ரீதியில் பரிசையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.
வவுனியாவில் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற சாகித்திய விழாவில் வேழம்படுத்த வீராங்கனை நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது. அங்கு வந்திருந்த யுக்திய சிங்களப்பத்திரிகையின் நிருபர்களான விஸ்வத், நிசங்க ஆகியோர் தமது பத்திரிகையில் இந்த நாட்டுக்கூத்தைப் பற்றி எழுதியுள்ளனர். யுக்திய பத்திரிகையில் வெளியான பகுதி 'x
යුක්තීය
1903 eodorea08 05 qa 93 පුවත්පතක් වශෙයන් ශ්‍රී ලංකාවේ ලියාපදිංචි කරන ලදී მლა ძვ. 8.00 8 ·
or
LALieAAkAeAkTTS S S HAtLLtLtS SqeYSLALC
ropas: & aarnaasis mó
69g s aš eho x=nడి శిక్ రిజియాబిఎనో తెeరx ܝ seeiberstoeas okado careecatlas : ssade apabsoi oaia5ad pode Rasei - Ovo socci B3 easeockoo č. 8 oОea BG
· පසsepස්වක දීඝය සීහ්දු ආගමිකයක් හඳුන්වන්නේ * seco despesso egz.
“පලා ආවෙමි රුපු තෙද බිඳින්නට
coala» obalea şkowan bakkı ef á afts ess að nakt
ascwtartami gałą Minda eg0 - 6,58 ç7
بي"
as sa across waxwood
gorm a focanx ab asx; Dcs dum só &3 mm đid psóvir aboro 3 ann a câse
века се гове е-ћss
ka
3፬*¥ sSee asasar sssr c-Moo asasa besarstvaewri رسید. یی خواقعیخی ŠJ; zo s.3 šaš»o. 233 saka ādsasks 1
78
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
සිංහල නර්තන කලාව වගේම ඉතා දීර්ඝ ඉතිහාසයක් ඇතී දෙමළ ජාතිකයන්ගේ නර්තන කලාව පෙර දිග පමණක් ෙනා වෙයි. බටහිර පවා ඇගයුමට පාත්‍ර වූවක්. දකුණු ඉන්දියානු පුදේශයන් මුල් කොට ගෙන ඇති වූ භඨත නටනමි සහ කතකලි මින් පුධාන ස්ථානයේ ලා ගිණිය හැකි වෙනව. එයිනුත් දෙමළ ජාතිකයන් වඩාත් පරීහරණය කරන්නේ භරත නාටත්මී සමීපුදාය යි.
මෙම ඉන්දිය දෙමළ ජාතිකයන්ගේ කලාව මී මෙරට දෙමළ ජාතිකයන්ගේ කලාව ලෙසට බොහෝ සිංහල අය හඳුනා ගත්තත් එය එතරම් නිවැරැදී වන්ෂන් තනැහැ. ඒ මොකද, මෙරට දෙමළ ජනයා සතු ව පාරමිපරික ව අn ජන සංස්කෘතියක් සීබෝඩන නිසා, මෙරට දෙමළ ජනයාගේ ජන සංස්කෘතිය එක් රාමුවක් සේ පෙනුණත් එයත් කොටස් හතරකින් සමන්විත වෙනවා. ඒවා නමී, මන්නාරම හා පුත්තලම ප්‍රදේශය අවට ජන සංස්කෘතිය, වන්නි ජන සංස්කෘතිය, යාපා පටුනෙහි ජන සංස්කෘතිය හා උඩරට වතු ආශිත දෙමළ ජාතිකයන්ගේ ජන සංස්කෘතිය යි.
මෙයින් අප අද කව්) කරන්නට අදහස් කරන්නේ වන්නි පුදේශයෙහි පැවතෙන ජන සංස්කෘතිය පිළිබඳ ව යි. වන්නී ප්‍රදේශය යනු වව්නියා, මුලතිවී යන දිස්තික්ක දෙකෙන් ම සමන්විත භූමි පුදේශය ලෙසට සැලකීමට පුළුවන. එහි පවතින අභ්‍යන කැලෑව හේතු කොට ගෙන එහි වෙසෙන ජනතාවගේ වාරිත්‍ර, වාරිත්‍ර, කථා-ධඟ ආදී සියල්ලක් ම ඒ අනුව තිරණය වී තිබෙන බැවි අපට පෙනුණු පැහැදිලි කරුණක්.
වත්ති පුදේශයෙහි රඟ දක්වනු ලබන කුත්තුකල් පිළිබඳ මෙතෙක් ලංකාවේ කලා පර්යේෂණයක හරවත් විදීයට සාකවීප) වී නැහැ. එයට එක් හේතුවක් ව තිබෙනුයේ මෙම පාථමීපරීක ජන උරුමයන්ගේ මුල සොයා ගැනීමට ඇති අපහසුතාව යි.
ඒ කෙසේ වෙතත් චත්ති ප්‍රදේශයේ ජනතාව අදත් තම සංස්කෘතික සංගාකාරකම් එළි දක්වනවා. ඉන් එක් උත්සවයකට පසු ගිය අද විග්වන් සහ මම සහභාගි වූයෙමු. එයින් ලද්දා වූ ආග්වර්යමත් සතුට ඔබ හා බෙදා ගන්නටයි - අප මේ ලිපියෙන් අදහස් කරන්නේ.
වන්නි පුදේශයෙහි ප්‍රධාන වaත්තිය ගොවිතැන යි. එනමි වී වගාව, හේන් වගාව සහ දඩයමයි. අනෙක් සමාජයන් සේ ම වන්නි පුදේශයේ ජනතාවගේත් සංස්කෘතික කියාකාරකමි ඒ ඒ රැකියාවන් සමඟ අතනාන්තයෙන් බැඳුණා. ඒ වගේම, මෙම සුදේශය වැඩි වශයෙන් ඝන කැලෑව සහිත පුදේශයක් වූ බැවින් දරුණු රෝගවලින් පීඩා විඳීමට ඇති හැකියාවත් වැඩි වූවා. පසු ව ඔවුන් මේ ඔස්සේ එම රෝග හිෆියෙන් මිදීම අරමුණු කොට ගෙන දෙවියන් අදහා තම සංස්කෘතික සීයාකාරකමි එළි දක්වන්නට පටන් ගත්තා. මේ නිසා වන්නි ප්‍රදේශයෙහි දක්නට ලැබෙන සැම සංස්කෘතික ෆියාකාරකමක් පාස), දෙවියන්ගේ සමිබන්ධතාව දැකිය හැකි වෙනව. මීට අමතර ව විෂන්දය මුල් කොට ගෙන බිහි වූ සංස්කsතිකාෆ්ග ද දැකිය හැකි යි.
එක් එක් වෘත්තීන් මූලික කොට ගෙන බිහි වූ කලා•ග අතර ප්‍රධාන ස්වානයක් උසුලන්ෂන් මේවා යි.
සාටිටaනඩුමිපාඩල් (ගොයම් පැළ සිටුවීමේ දී ගායනා කරන කවී පද] කාවල්පාඩල් (බෝග වගාවන් මුර කරන විට දී ගායනා කරනු ලබන කවි පදා) කුරුවිජපළඑ (වගාවට එන කුරුල්ලන් පලවා හැරීමට ගායනා කරන කවි පදා) අරුවිජේවටිටුමිපාඩල් (ගොයමි ෂතළන විට ගායනා කරත කවි පද)
මීට අමතරව අස්වැන්න කපා කමතට ෂගතහැවිත් ගොයම් කොළය සකසා අවසන් වූ පසු ව ගායනා කරනු ලබන කුමිමිවීෂකkලාටිටමි අනෙකයි. මෙය රවුමි ව නටමින් ගයමින් ඉදිරීපත් කරන අතර එහි විශේෂත්වය ව ඇත්තේ තල වාදන භාණ්ඩයන්ට වඩා අත් පුඩි වල සහාය ලබා ගෙන එය ඉදිරිපත් කිරීම යි. මෙම අත් පුඩි සංගීතය එම පත තහැඳිමි රඟ දක්වනු ලබන අවස්ථාවේ දී ගම් යායක් පුරා ගලා ගෙත යන අතර, ගමි වැසියන් ද ඊට එකතු විම මෙම නැටුමෙහි විශේෂත්වයක්. මෙම නැටුම ඔබ දැක තිබේ නමි ඒ ගැන විස්තර කිරීමට නොහැකි තරම් මනරමි. එහි පාද වලනයන් සහ අත් පුඩි තාල අතර ඔවුන් පවත්වා ගන්නා) ඒකමිතිය තර්තන කලාවේ සුවිශේෂ අංගයක් ලෙසට අපි සලකමු.
දෙවියන් ඇදහීම මුලික වන කලාපග මෙසේ සඳහන් කළ හැකි යි.
1. කාවඩිආටිටමි {කාවඩි නැටුම)
2, සිලමිබුකුරල්පඩිප්පු (පත්තිනි දෙයියන්ගේ පිවිත කථාව සඳහන් කරමින් නර්තනයෙහි යෙදීම) විශතjදය මූලික කොට ගත් කළා නිර්මාණයන් පහත විලසින් දැක්වීමට හැකි වෙනව.
l. උසන්ජල්පාටිටු (දෙමළ සිංහල අලූත් අවුරුදු සමයේ ගැයෙන ඔන්චිලී ගි) 2. මගුඩ් (අප්‍රියෙල් මස උෂ්ණ කාලයක් නිසාත්, වන්නි ප්‍රදේශය නයි ආදී සර්පයන්ගෙන් ගහත
79

Page 49
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
ප්‍රදේශයක් නිසාත්, එම නයින් වෙනුවෙන් මුදා භටීන සංගීත විශේෂයක්. මෙයට පාවිච්චි කරන්නේ අප සාමානතයෙන් දැක හුරු නයි නටවන තලාවයි.
3. වේදාලඅධිටමි (යක් නැටුමි විශේෂයක්)
4. සමුහ නාඩගමී (සමාජමය නාටකය)
ඉහත කී කලාපග මෙම ප්‍රදේශවල බහුලව තිබුණත් සාමාන්‍ය අධ්‍යපනය එපමණ දුරට එකී පදේශයන්හි වර්ධිත මටිටමකට ෙනා අ) තිසාත්, උතුරු - තzෂඟනහිර දෙමළ බුද්ධිමතුන් තමන්ගේ කලා පර්යේෂණ තම තමන්ගේ ප්‍රදේශ වලට පමණක් සීමා කිරීම නිසාත් මෙම ප්‍රදේශවල පාරමිපරීක ජන කළාව අවර්ධිත තත්ත්වයකට පත් වූ ධව වන්නි කල) සහaදයන්ගේ මූලික අදහස් වෙතවා.
දෑනට ඉතිරී ව තිබෙන ආගමික කලාගයක් ව ඇති කෝවලන් කන්තහි කුත්තු (පත්තිනි දෙයියන්ගේ පිවිත කථාව) සමිපූර්ණ වශයෙන් නර්තනය මූලික කොට ගත් පන කල) අංගයක්. අනෙතුත් කලාඩාංග පරීහානියට පත් වන විට පවා මේ කෝවලන් කන්නාහි කුත්තු පතයා අතර ෙනා) නැසී පැවැතුණේ විශේෂිත කාරණාවක් නිසා.
මේ කෝවලත් කන්නහි තුත්තු රඟ දක්වනු ලබන්නේ බොද්ධ ජනතාවගේ උත්තරීතර ආගමික දිනයක් වන වෙසක් පුර පසළොස්වකද), හින්දු ආගමිකයන් හඳුන්වන්නේ මෙදින ජෛවහායි විසාහමි යනුවෙන්,
එම උත්සවය කරන්න ප්‍රධාන හේතුව පැහැදිලි කළ චත්ති නාටන් පර්යේෂණයෙහි යෙදී සිටින කලාශූරී අරුණා සෙල්ලතුරෙයෝර අප සමඟ මෙසේ කීවේය. ".....හින්දු ආගමික ජනතාවගේ දැඩි විග්වසයක් තිබෙනවා), දෙයියන්ගේ ලෙඩ හැදෙන්නේ අම්මාන් (පත්තිනි දෙයියෝ) කෝපාවිෂ්ට විම නිසා කියලා. ඉති•. ඒ කාලය දරුණු උෂ්ණ කාලයක් වෙනව. ඒ අනුව මේ කාලය අප්‍රියෙල්, මැයි සහ ජූනි කියළ කියන්නට පුළුවන”.
මෙම ජෛවහායි විසාභම් උත්සවය සඳහා මුලතිව් දිස්ත්‍රික්කයේ පිහිටි වටිටුප්පෙළෙ අම්මාන් කෝවිලෙහි දීත 14 ක උපවාසයකින් පසු මෙම උත්සවය උත්කර්ෂවත් අන්දමින් අදත් සිදු කෙරෙනව. උපවාසය අවසන් ව අමීමාන් හට පො•ගල් (කිරීඞත්) උයා සැම දෙනාටම බෙදා දී හැන්දෑ යාමයේ පටන් රැය පහන් වන තුරු මෙම කෝවලන් කන්තහි කුත්තු රඟ දැක්වෙනව.
වටිටුප්පෙලේ අමිමාන් කෝවිලෙහි පවත්වනු ලබන මෙම උත්සවයට උතුරු - නැගෙනහිර සිට දෙමළ ජාතිකයන් අති විශාල සංඛානාවක් පැමිණෙනවා. ඒ බොහෝ අය පැමිණෙන්ෂන් සෑම අවුරුද්දක ම තමන් බාර වෙන දෑ ඔප්පු කිරීමටයි. මෙම වටිටුප්පෙළ කෝවිල පත්තිනි දෙවියන්ගේ ඉතිහාස කථාව සමඟ බද්ධ වූ සිද්ධස්ථානයක්. ඒ නිසා කතරගම වන්දනා ගමෙන් යන බැතිමතුන් ෙබාහෝමයක් නැෙඟනහිර පළාතේ ඇසී මෙම සිද්ධස්ථානය හරහා ගමන් කිරීමට පුරුදු ව සිටිනව,
වන්නී ජන කලාවේ ඇතුළත දෑ
කුත්තු හදාරන්නට කැමති අයට පෙර කල පටන් තද බල නිති රීතිවලට යටත් වීමට සිදු වුණා. එහෙම සීතී රිසී ඇතුළත් ගිවිසුමක් අදාළ පාර්ග්වයන් දෙක වන ගුරුවරයා සහ ගෝලයාගේ දෙමාපියන් අතර අත්සන් කෙරුණ,
නැටුමි ශාස්ත්‍රය හාථ ව පාරම්පරික ව සිටින අත්නාවියර් ළඟට ගොස් අන්නාවියට් සහ ළමයාගේ දෙමාපියන් මේ ගිවිසුම අත්සන් කරනව. මෙම් ගිවිසුම් අත්සන් කිරීම් ශිල්පය අවසානය දක්වා ම ෂමම් ශිෂනය) විධිමත් ව හා ක්‍රමවත් ව තම කලාව පුගුණ කරනා බවට දීමුරුම් දීමක් හා සමාන යි.
ඒ අනුව එකී ශිෂතය) අවුරුදු ගණනක පරිශුමයන් පසු පුවීණ නර්තන ශිල්පියකු ලෙසට තම පුස•ගමය හැකියාවන් එළි දක්වනවා.
අන්තාවියර් පුහුණුව සඳහා තම කණ්ඩායමව තෝරා ගන්නා ශීෂනයන්ගේ දෙමාපියන් විසින් අන්නාවියර්ට කළ යුතු යුතුකම් කොටසක්ද තිබෙනවා. ඉන් ආර්ථික දායකත්වය පුධාන යි. අතීතාවියර් මේ ශිෂනයාට තම ශිල්පය ප්‍රගුණ කර දෙන කාලය ඉතක් අන්නාවියර් ඉඳුම් • සීමූමි, බේත් - හේත් ආදීය දෙමාපියන් විසින් ඔහුට සැපයීය යුතුයි.
මෙහි තවත් කරුණක් වන්නේ, කුත්තුවලට සහභාගී වන්නන් මාගෙ භක්ෂක ඉතා වී සිටීම අත්‍යවශ්‍ය වීම් සී. එමෙන් ම මෙම කුන්තු දෙවියන් වෙනුවෙන් කථනා ක්‍රියාවක් නිසා ගැහැනුන් හට සහභාගි විය නො හැකී.
8O

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
ෙවීදීකා සැකැස්ම
මෙම කුත්තුව රඟ දැක්වීමට සකස් කරන ජෛවීදිකාව වටිටක්කලඊ කියා නමි කර තිබෙනව. මෙම වටිටක්කලරී රංග භූමිය සාමානන් පොළොවෙහි සකස් කරන්නක්. කැලෑ කෝටු 9 සිට 18 දක්වා පුමාණයක් හෝ අවශන නම් පටත් වැඩී පුමාණයක් ගෙන ඒවා පොළොවෙහි සිටුවනවා. පසු ව සුදු ෙරදිවලින් එම කෝටු ඔතා වී සෑම කෝටුවක්ම ලනුවකින් යා කර ගන්නවා. එම ලනුවෙහි ගොක් කොළවලින් සැකසු තෝරනමි සහ අඹ කොළ එකක් හැර එකක් එල්ලනවා. (ෂතjරනම් යනු අප මළගෙවල් සැරසීම සඳහා උපයෝගී කර ගන්නා ගොක් සැරසීල්ලයි) සැම කොටුවකම මූල අඩි භූතක කෙසෙල් කඳක් සිටුවා ඒ මත මැටි හැටිටි තබා පොල් මතල් වත් කොට ගෞරදි කැලී ඒ පොල් තෙලින් පොඟවා සැම භටිටියක්ම ගින්දරෙන් දල්වනව. එම එළියෙහි ආලෝකයෙන් කලාගය පසු දා එළි වන තෙක් රඟ දක්වනවා.
ෙවීග නිරූපණය
ප්‍රධාන පාත්‍රයන් සඳහා කරනු ලබන වේග නිරූපණ බොහෝ සෙයින් ඉන්දියාවේ දක්නට තිබෙන කතකලී නැටුමට සමාන්තර වෙනවා. එනමුත් කතකලිවල තරමි මුහුණේ එතරමී තදින් පාට ආලේපනය කරන්නේ නැහැ. ඉනෙන් උඩ සහ පහළට අඳිනු ලබන ඇඳුම් වගේම, ෆියෙස් පළඳීන ඔටුන්නද මෙම කලාෙගයෙහි ඇඳුමි නිර්මාණයෙහි ඉතා වැදගත් ස්ථානයක් ලබා ගන්නව.
ara&Sed eoded
මුල් කාලීන ව මෙම කුන්තුවට භාවිතා කෙරුණු වාදන භාණ්ඩ අතර මද්දලය සහ තාලම් පටය ප්‍රධානව තිබුණා. පසු කාලීනව භාර්මෝඩියම් තැමති වාදනතාණ්ඩයද පරිහරණය කරනු ලැබුවා.
එමෙන්ම, මෙම කුත්තුවෙහි දක්නට ඇති පා චලනයෙහි අපූරු බවක් දිස් වෙනවා. සාමාන්‍යයෙන් දෙමළ ජාතිකයන්ගේ එනර්තන කලාවේ දක්නට තැති සිව් පාද වලනය මෙයට යොදා ගෙන තිබීම මෙම ජනකලාවේ පොහොසත් ධව කියා
පාත්තක්, වේදීකාවේ පුධාන පා චලනය සිවි පාද ඵලනය වන අතර, එය හතර(ස් ආකාරයකින් වේදීකාව පුරා ගෙන යනු ලබනවා.
කඩුත්තුවෙහි භාවිත සංගීතය වන්ති පුදේශයට ම ආවේනික වූවක්. මේවා අනෙකුත් දෙමළ ජන සංගිතය සමඟ ඉතා කිටීටු සබඳතාවක් භිනුණත්, මන්නාරම, පුත්තලම, යාපනය හෝ උඩරට පාවිචීවී කෙරෙන ජන සංගීතය සමඟ කිසිවිටෙකත් බැඳී පවතින්නේ නැහැ.
වර්තමානය
මෙම කෝවලත් කන්තහි තුත්තුවට අමතරව අද තවත් කුත්තුවක් රඟ දැක්වෙනව. එනමි, වත්ති පත උරුමය පාදක කොට ගත් කලාකරුවෙකු වන අථකැණ සෙල්ලතුගෙර විසින් රචනා කොට නිෂ්පාදනය කළ වේළමීපඩුත්ත වීරාත්කාගෙන (ඇතා මෙල්ල කළ විරවරිය) කුෆ්තුව යි. මෙහි කථාව සඳහා එක් දහස් අටසිය ගණන්වල වන්නි රාජධානියෙහි අභිත තරපතියෙකු වු බණ්ඩාර වන්නියන්ගේ ඉතිහාස කථාව පාදක කොට ගෙන තිබෙනවා. මෙම නාට්‍යය 1993 දී වවුනියාවේ පැවැත්වුණු දෙමළ සාහිතන්‍ය උත්සවයෙහි දී පුර්ම ස්ථානය දීනා ගත් නාට්‍ය බවට පත් Q6).
මෙම ලිපිය සැකසීමේ දී අපට තන් අයුටීන් උපකාරී වූ වවුනියා මත දිසාපති එස්. තිල්ලෙනඩරාජා, වන්නි ජන කලාකරු අරුණා සෙල්ලතුගෝර, පුවින ආචාරීතී ස්ටැනිස්ලෝස් සහ නාගලිංගම් යන මහත්ම මහත්මාවරුනට අපගේ @තා මඳ බෝගහරවය හිමි කොට දීමට කැමැත්තෙමු.
COE :
සීශ‍්‍යන්ත අල්විස්
Orð
විග්වන්
81

Page 50
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் வேழம்படுத்த வீராங்கனை என்ற முல்லைமோடி நாட்டுக்கூத்து வன்னிப் பிரதேச மக்களின் பாரம்பரியத்தில் ஒரு மைல் கல்லாக விளங்கியதுடன் ஒரு விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இதன் பின்னர் வேழம்படுத்த வீராங்கனை என்ற நாட்டுக்கூத்தை ஒளிப்பேழையாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டேன்.
சம்பத் வீடியோ நிறுவனத்தினர் திரு. மாத்தளை கார்த்திகேசு ஆகியோர் எனக்கு அளித்த ஊக்கத்தின் காரணமாக இந்த நாட்டுக்கூத்தை ஒளிப்பேழையாக்கும் முயற்சியில் வெற்றிபெற்றேன். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகளின் ஒத்துழைப்புடன் வேழம்படுத்த வீராங்கனை, முல்லைமோடி வட்டக்களரி நாட்டுக்கூத்து ஒளிப்பேழையாக (வீடியோ கசட்) வெளியிடப்பட்டது. இது இலங்கை வரலாற்றில் முதன் முதலில் ஒளிப்பேழையாக வெளியிடப்பட்ட நாட்டுக்கூத்தாகும்.
மதம் கொண்ட கொம்பன் யானையை மடக்கிப்பிடித்த விரமங்கையின் சரிதம் "வேழம்படுத்த வீராங்கனை"
அருணா செல்லத்துரையின் தயாரிப்பு/நெறியாள்கையில்
பிரதியாக்கம் தமிழ்மணி, அரியான் பொய்கை கை. செல்லத்துரை
s
之
பங்குபற்றுவோர் கொஇராமநாதன் இந்துமகளிர்கல்லூரி Lonteureesty.
y
i
படப்பிடிப்பு gruibasih siðuq-ART
கூத்துப் பழக்கம் / நெறியாள்கை
hA
அருணா செல்லத்துரை
For Audio & Video Production and Advertising Contact AVA (PVT) LTD.
33.5844 Sri Lanka
"முல்லைமோடி வட்டக்களரிநாட்டுக்கூத்து"
82
 

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் இந்த ஒளிப்பேழைக் காட்சியை பார்த்த இலங்கையின் பிரபல விமர்சகரான கே.எஸ்.சிவகுமாரன் த ஒப்சேவர்' பத்திரிகையில் எழுதிய
கருத்துக்களும், பிரபல பத்திரிகையாளரான ஏ.தேவராஜன் ஜலன்ட் பத்திரிகையில் எழுதிய கருத்துக்களும் தரப்பட்டுள்ளன.
TAMIL FOLK PLAY IN VIDEO - BY K.S. SIVAKUMARAN
ARUNA SELLATHURAI, who works for the Sri Lanka
Rupavahini Corporation as a News segment producer, is also an independent researcher of folk plays in his region, which is referred to as Wanni. He hails from Muliyawalai in the Mullaitivu district. Last year (1993) at the
Vavuniya district regional Sahithya festival, he read a valuable paper on
"The folk Plays (Koothu) of the Wanni region.'
83

Page 51
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் Unfortunately in Sri Lanka, most of Tamil scholars, critics and others assume that the Jaffna district is the only source of Tamil culture. This may be due to years long prejudices against other regions of Tamil speaking people. This include the metropolis Colombo. Their outputs are not much regarded or highlighted. For instance, some of them want to be little the role of Swami Vipulananda as the first Tamil literary critic in Sri Lanka. This saint-cum-scholar was born in Karaitivu in the Batticaloa district and not in the Jaffna peninsula. Because of this looking down upon talents and achievements of people from other regions, such people are now actively doing whatever they can irrespective of recognition from the prejudice entrenched northern scholars. For instance, the hill country Tamil speaking people are now putting on record their own contributions to Tamil. The same is true of the Muslims, who speak Tamil.
At the same time there were exceptions like the late Prof.S. Vithiyananthan, who took active interest in promoting Vadamodi Nattukoothu as practised in the Eastern province. This was also due to the fact that this form of Koothu, was different from the Thenmodi Koothu, prevalent in Jaffna. Whether people of the North accept or not, there is a superiority complex borne out of ignorance of some scholars from the Jaffna peninsula. Take for instance the fact that the Northern province includes not only the Jaffna district, but also the districts of Mannar, Vavuniya and Mullaitivu. But the irony is that the output of other districts are dismissed, unless of course, there is a need to satisfy the vested interest. It is a pity, but regardless of this peninsula attitude, richer cultures flourish.
Aruna Sellathurai, in fact, complains that Mounaguru, ironically an academic hailing from Batticaloa, had given insignificant place to him in his book on Sri Lankan folk drama. This is worth noting because the late Prof. S.Vithiyananthan had recognized the uniqueness of the Mullaitivu region folk plays as late as 1974, when Aruna Sellathurai presented it for the Arts Council.

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
This folk and modern playwright who is also an actor and producer has won many prizes at the drams festivals. He joined the SLBC in 1970 as a Program Assistant and later was promoted as a producer. On the radio he has broadcast plays, features and had also been a relief announcer. In 1981, he had training in television productions in Germany and also in 1984, in Malaysia and Singapore. On the TV he presented a series of programs on the fine arts. He also encouraged and brought to light artists who had talents in singing light songs. His telefilm Thiruppangal was considered a different type of TV presentation. He also produced within the studio a three - act telefilm titled Veedu.
His recent book titled Veedu explain in a scientific manner how scripts should be written for the TV. He is also supplying two versions of his script Veedu as a story and as a teleplay. Five radio plays are also included in this book. Although I have not listened to any of these radio plays, I was astonished to find that he has taken unusual themes for his expression of progressive ideas. Even as a written/ word it shows the precision and attention to details which the author cares for. So here is a talented man whose forte remains unrecognized by headstrong "critics'.
His new production on video is called Velam Padutha Veerangan (The woman warrior who made a tusker fall down). This is a folkplay in the Mullaitivu tradition. Students of Ramanathan College, Bambalapitiya played the roles in the play. Despite a few shortcomings - in sound reproduction for instance - it has a videoed choreography of some aspects of folk theatre.
The connoisseurs of art and culture among the Tamil community should patronize this video because it is a valuable document of folk art, meant for the small screen, and it will be ideal for research and comment by prospective scholars in Tamil studies.
The Observer Monday May 9th 1994

Page 52
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
VELAMPAOUTTAVEERANGANA
“Velampadutta Veeranganai' is the tragic story of a village heroine who tamed a wild elephant which roamed the villages of Kumulamunai, Alampil, Chemmalai and Athirayankodu in Mullaitivu and destroyed the agricultural farms of the villagers.
Ariyaththai was the charming devoted wife of Vela Panikkan (the chief of the Panikkans) who was in the service of the palace of the Vannia Chieftain Sinna Vannian. Sinna Vannian ruled the villages of Adankapattu mentioned above prior to the celebrated Pandara Vannian who died a martyr fighting
the Portuguese in the 17th century.
Sinna Vannian was a popular chieftain and the villagers complained to him about the damages caused by the wild elephant. He summoned the
86
 
 

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் Panikkans to audience and beckoned them to trap the wild elephant. The Panikkans who were assembled unanimously said that the valourous Vela Panikkan was the ideal person to execute the Chieftain's order. But the solitary Neela Panikkan was provoked and became uneasy. There was a reason behind his embittered behaviour. He proposed to marry Ariyaththai before her marriage to Vela Panikkan but was turned down by her parents. He harboured a revengeful instinct against Vela Panikkan and Ariyaththai since their marriage through jealousy.
Neela Panikkan scoffed at the idea and ridiculed Vela Panikkan as a coward and suggested Ariyaththai might successfully carry out the order and not Vela Panikkan. There was venom in his suggestion. He believed that Ariyaththai will get killed. Ariyaththai took it up as a challenge. She was a virtuous and highly religious woman. Virtuosity is believed by Tamils to spark super-human or divine powers as in the case of true devotion to God. Kannagi is a well known case. She prayed before God with soul and spirit. She set out to trap the wild elephant. Like a fond child, the elephant obeyed her command and was brought to the Chieftain's palace. The Chieftain who was overjoyed not only at the capture of the elephant but also the courage and divine power of Ariyaththai conferred the honourous title of "Velampadutta Veeranganai" on her. Neela Panikkan became murderously angered. He called his wife Neelakesari and decreed that she should poison Ariyaththai to.death.' When Ariyaththai was taken in procession to honour her, Neelakesari stealthily smeared poison on Ariyaththai's jacket, pretending to embrace her and praise her. Poison penetrated into her body and after a struggle in pain Ariyaththai fell dead. Vela Panikkan who came running on hearing this was shocked with grief and he collapsed and died.This is a true story which has made Ariyaththai a folk heroine.
This story is enacted by the people of Mullaitivu as a folk drama even today. One of the folk drama styles is Mullai modi. This drama is acted in this style, and is set to the old folk form of stage presentation called Vadda
87

Page 53
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் kalari. The script of the drama and lyrics were written by Ariyanpoikai K.Sellathurai. The stage is, a circular one with white canopy surrounded by coconut oil lanterns placed over plantain palm trunks. This drama selected by Ramanathan Hindu Ladies' College, Colombo for the Drama competition in 1993 Tamil Day celebrations won the first place. This is
directed by Aruna Sellathurai.
The cast is provided by the students of Ramanathan Hindu Ladies' College. Arudchelvy Amirthanatharas Ariyaththai, Janaki Sellathuraias Neelakesari, Dhanalini Kathirgamanathan as Vela Panikkan, Dharmini Kathirgamanathan as Neela Panikkan and Prasanthi Arunthavanathan as Sinna Vannian did their part very well. The lyrics were sung by Subajini Saravanabava and Dhushyanthi Navaratnam with contextual flavour. M.S. Selvarajah on the Harmonium and Ratnam Ratnasingam on the Thabela
added vigour to the Drama.
The AVA establishment has artfully documented this as a 45 mts video film. The introduction of the drama and the dramatic format is presented by the many-faceted veteran artist and scholar Sillaiyoor Selvarajan. It is perhaps the first of its type which helps to popularise and preserve the folk story and the folk art. It should be in every home video library. It is an eye-opener to those committed to folk culture. The producers must be congratulated. Let us hope that more of this type will be released. It will be ideal for Khomba Kankariya, Sokkari, Thovil and other dances too.
A. Theva- Rajan.
88

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
வேழம்படுத்த வீராங்கனை ஒளிப்பேழைக்காட்சியைப் பார்த்த பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களும் முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவர்களும் எழுதிய கருத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் சி.சிவசேகரம் முல்லைமோடியில் ஒரு நல்ல கதை
"வட்டக்களரி நாட்டுக்கூத்தொன்றை மேடையொன்றில் நிகழ்த்தி அதை வீடியோவிற் படமெடுத்துக் காட்டினார்கள். இவ்வாறு கூத்துக்குரிய சூழலுக்குப் புறம்பாக முல்லைமோடி வட்டக்களரி நாட்டுக்கூத்து மரபில் அமைந்த வேழம்படுத்த வீராங்கனையை ஒரு காலைப் பொழுதில் நண்பர்கள் சிலருடன் பார்த்தேன். கூத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சிறுபிள்ளைகள் பெற்றோரிடம் மீண்டும் மீண்டும் ஒரே கதையைக் கூறுமாறு கெஞ்சிக் கேட்பது போல, கிராமத்து மக்கள், அலுக்காது சலிக்காது தெரிந்த கதையைத் திரும்பத் திரும்ப தெரிந்த விதமாகவே கூத்திற் காண விரும்புவது கூத்திற்கும் மக்களுக்குமிடையிலான நெருக்கத்தின் புலப்பாடு. கூத்தில் அற்ப சொற்ப விலகல்கள் நேர்ந்தாலும் அவற்றை கவனித்து விமர்சிக்கும் விதமான ரசிப்பு அவர்களுடையது. ஆயினும் புதிய கூத்துக்களையும் அவர்கள் விரும்புகிறார்கள். எனவே புதிய கூத்துக்களுக்கான தேவை இருக்கிறது. -
கூத்து வடிவங்களைப்பற்றிய ஆழமான அறிவும் அவற்றுடனான நெருக்கமுமின்றி அவற்றை புதிய நாடக வடிவங்களுடன் இணைக்க முடியாது. எனவே மரபை நவீனத்துவத்துடன் இணைப்பது பற்றியும், நவீன சமூகத் தேவைகட்கு ஏற்பப் பயன்படுத்துவது பற்றியும் ஆர்வமுடையோர் மரபை நன்கு அறிவது முக்கியமானது. மரபு சார்ந்த எழுத்துப்போலன்றி, மரபுசார்ந்த அவைக்காற்றுக்கலைகள் மீண்டும் மீண்டும் பயிலப்படுவதன் மூலமே அவற்றின் மூலவடிவிற் பேணப்பட இயலும், இசைத்தட்டுத் தொழில்நுட்பம் எவ்வாறு பாரம்பரிய இசைப்பாடல்களை அவற்றின் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு முந்திய இசைப்பு நடைமுறையின் வடிவில் நாம் இன்று அறிவதை இயலுமாக்கினவோ, அவ்வாறே திரைப்படமும், அதைவிட வசதியாக வீடியோவும் காட்சிக்குரிய கலைவடிவங்களை எதிர்காலத்திற்காகப் பேண இயலுமாக்கியுள்ளன. திரைப்படத்தைவிடக் குறைந்த செலவில் வீடியோ சாத்தியமாகையால் வீடியோ அற்ப நிகழ்ச்சிகளையெல்லாம் பதிவு செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அதைச் செய்தி ஊடகமாகவும் தமிழர் பயன்படுத்துகின்றனர். நாட்டுக்கூத்தை வீடியோவிற் பதிய எடுத்துவரப்படும்
89

Page 54
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் முயற்சிகள் மிகவும் போற்றத்தக்கன. எனினும் இவை மேடையிற் திரும்பத்திரும்ப நிகழ்த்தப்படும் கூத்திற்கு மாற்றீடாகி விடமாட்டா.
"அருணா செல்லத்துரை நாட்டுக்கூத்திலும் நாட்டார் இலக்கியத்திலும் மிக அனுபவமும் அறிவும் கொண்டவர். அவரது "வேழம்படுத்த வீராங்கனை" மூலம் அவர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த முயன்றுள்ளார். "சிலம்பு கூறல்" (கோவலன் கதை) போன்று ஓரிரண்டு மரபுவடிவங்கள் மட்டுமே எஞ்சியுள்ள முல்லைமோடியில் "வேழம்படுத்த வீராங்கனை" என்ற வன்னி மண்ணின் மரபுக் கதையைத் தயாரித்தளித்ததின் மூலம் ஒரு மரபுக் கதைக்குப் புதிதாகக் கூத்து வடிவம் தந்துள்ளதோடு முல்லைமோடிக்கூத்தை அதன் மரபு வழியில் எதிர்காலத்திற்காகப் பதிவாக்கியுள்ளார்.
"வேழம்படுத்த வீராங்கனையின்" கதையில் நவீனச் சிந்தனைப்போக்கிற்கு இசைவான இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று தனது தன்மானத்தை வலியுறுத்தும் நோக்கில் அரியாத்தை எனும் பெண் வீரமுடன் யானையை அடக்க முனைவது, (இது ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வடக்கின் இன்றைய நிலையைச் சித்தரிக்கிறது) மற்றது நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட மனைவியின் பிரிவுத் துயரால் கணவன் உடன்கட்டை ஏறுவது. பெண்கள் சமுதாய நிர்ப்பந்தத்தால் உடன்கட்டை ஏறியதிலும் பார்க்க இது மேலான செயலாகும். உடன்கட்டை ஏறுதல் ஒரு வரவேற்கத்தக்க காரியமோ என்பது இன்னொரு பிரச்சனை. இவ்வாறு கற்பின் வலிமை என்ற கருத்தைத் தன் அடிப்படையாகக் கொண்ட இக்கதை ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்துமாறான இரு கருத்துக்களையும் நமக்கு கூறிவிடுகிறது. மந்திர வலிமையாலும், கற்பின் திண்மையாலும் அரியாத்தை யானையை அடக்கினார் என்று கதையில் வலியுறுத்தப்படினும், யானையை எதிர்கொண்ட துணிவும் வீரமும் நாம் மறைமுகமாக உணரக்கூடியன. மனிதர் உலகில் உள்ள காதல், வீரம், கடமை, உணர்வு, தன்மானம் போன்ற நல்லுணர்வுகளுடன் வஞ்சகம், பொறாமை, கோழைத்தனம், போன்ற இழிவான பண்புகளும் இத்துன்பியற்கூத்தின் மூலம் உணர்த்தப்படுகின்றன.
"மேடையமைப்பு எளிமையாகவும் நேர்த்தியாகவும் ஒப்பனை நன்றாகவும் இருந்தன. பரதநாட்டிய மரபிற் பயின்ற காரணத்தாலோ என்னவோ கோபம், வீராவேசம் போன்ற உணர்வுகளைக் காட்டும் இடங்களில் பல சமயம் கை கால்களின் அசைவில் நளினம் இருந்த அளவுக்கு வேகமும் உறுதியும் இருக்கவில்லை. ஆண், பெண் வேடங்களில் வந்த எல்லா நடிகையரும் சொந்தக்குரலிலே பாடி நடித்தது ஒரு சிறப்பம்சமாயினும். ஈழத் தமிழ் பெண் குரல்களில் பரவலாக உள்ளவொரு முக்கியமான குறைபாடு முறையாகப் பயிற்றப்படாத குரல்வளமாகும். இது பற்றி நமது கலைஞர்கள்கூடிய கவனம் காட்ட
90

அருணா செல்லத்தரையின் வண்ணிப் பிராந்தியக் கூத்துக்கள்
வேண்டும். உச்சஸ்தாயிக்குப் போகும் போது நம்மவர்கள் மூக்காற் பாடுவது அதிகம். தமிழ் நாட்டின் சமகாலச் சினிமாப் பெண் குரல்களின் பாதிப்பும் ஆரோக்கியமான ஒன்றல்ல.
முற்குறிப்பிட்ட குறைபாடுகள் மத்தியிலும் வீடியோவில்கூட நன்கு ரசிக்கக்கூடிய விதமாக அமைந்த இக்கூத்தின் தயாரிப்பும் மேடையேற்றமும் ஒலி, ஒளிப்பதிவுகளும் பாராட்டுக்குரியன. இந்த ஒளிப்பேழையின் மூலம் நமது கூத்து வடிவங்கள் பற்றிய புதிய அக்கறை வளர்த்தெடுக்கப்படுமாயின் அதுவே நமது மரபு சார்ந்த கலைகட்கு அதன் தயாரிப்பாளர்களது அதிமுக்கியமான பங்களிப்பாகும்.
பேராசிரியர் சி.சிவசேகரம் 10. 04, 94 தினகரனில் வெளியானது.
ஒளிப்பேழையாக வெளியிடப்படவிருக்கும் முல்லைமோடி நாட்டுக்கூத்து "வேழம்படுத்த வீராங்கனை" - முல்லைமணி
நாட்டுக்கூத்து என அழைக்கப்படும் ஈழத்துத் தமிழ் மரவுவழி நாடகங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், சிலாபம், புத்தளம், மலைநாடு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் இன்றும் ஆடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஆடப்படும் கூத்துக்களிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுண்டு. இவை விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டியவை. மட்டக்களப்பு நாட்டுக் கூத்துக்களை ஆய்வுசெய்தோர், அவற்றை வடமோடி, தென்மோடி என பாகுபாடு செய்துள்ளனர். பிரபலம் அடைந்துவிட்ட இப்பாகுபாட்டினுள்ளே ஈழத்திலுள்ள ஏனைய நாட்டுக்கூத்துக்களையும் அடக்கி விடலாம் என்ற தவறான கருத்தொன்று நிலவுகின்றது.
அரியான் பொய்கை கை, செல்லத்துரை எழுதிய "வேழம்படுத்த வீராங்கனை" என்னும் முல்லைமோடி நாட்டுக்கூத்தை தற்போது இலங்கை ரூபவாஹினியைச் சேர்ந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அருணா செல்லதுரை வீடியோ ஒளிப்பேழையாகத் தயாரித்துள்ளார். இக்கூத்து முன்பு ஐந்து தடவைகள் கொழும்பிலும், வவுனியாவிலும் மேடையேற்றப்பட்டது. கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி உயர்வகுப்பு மாணவிகள் இக் கூத்தில் நடித்துள்ளனர். இக்கூத்தினை நேரடியாகக் கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
இதன் தயாரிப்பாளரும், நெறியாளருமாகிய அருணா செல்லத்துரை முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். முல்லைமோடி நாட்டுக்கூத்தில்
91

Page 55
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பரிச்சயமுள்ளவர். இலங்கை வானொலியிலும், ரூபவாஹினியிலும் பெற்ற நீண்டகால அனுபவம் இக் கூத்தினைத் தயாரிப்பதற்கு உதவியாக இருந்தது என்றே கூறவேண்டும். நகர்ப்புற மாணவர்கள் இக் கூத்தில் பாத்திரமேற்றுள்ளனர். நகர்ப்புற மாணவர்களை நாட்டுக்கூத்துக்குப் பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்.
நாடகக் கதை
வன்னிப் பிரதேசத்தில் மதங்கொண்ட யானையொன்று அட்டகாசம் புரிகிறது. குடிமக்கள் சின்ன வன்னியன் என்னும் மன்னனுக்கு முறையிடுகின்றனர். வன்னியன் ஏழு ஊர்ப்பணிக்கர்களை அழைத்து ஆலோசனை கேட்கிறான். வேலப்பணிக்கன் ஒருவரே யானையை மடக்கிப் பிடிக்கக்கூடியவன் என மன்னனுக்கு ஆலோசனை கூறப்படுகின்றது. வேலப்பணிக்கனுடன் பகைமைபூண்ட நீலப்பணிக்கன், வேலப்பணிக்கனால் இந்த யானையைப் பிடிக்க முடியாது. வேண்டுமானால் வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தையே யானையைப் பிடிக்கவல்லாள் எனக் கேலியாகக் கூறுகின்றான். இதனால் அவமானமும் வேதனையும் அடைந்த வேலப்பணிக்கன் வீடு செல்கிறான். கவலையுற்றிருக்கும் கணவனை அரியாத்தை விசாரிக்கிறாள்.அரச சபையில் நிகழ்ந்ததை வேலப்பணிக்கன் கூறுகின்றான். அரியாத்தை யானை பிடிக்கப்புறப்படுகின்றாள். தன் கற்பின் திண்மையாலும், மந்திர வலிமையினாலும் மதங்கொண்ட யானையைப் பிடித்து வருகிறாள். மன்னன் பலவித உபசாரங்கள் செய்கிறான். பொறாமை கொண்ட நீலப்பணிக்கன் மனைவி நீலகேசியின் உதவியுடன் அரியாத்தையின் பட்டுப்புடவையில் நஞ்சு பூசிவிடுகிறாள். அரியாத்தை இறந்து விடுகிறாள்.
இக் கூத்தில் அரியாத்தையாக வரும் அருட்செல்வி அமிர்தநாதன் பாத்திரத்தின் தன்மையை நன்கு உணர்ந்து நடித்துள்ளார். ஆட்டம், பாடல், முகபாவம் ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளன. நஞ்சூட்டப்பட்ட பின் மரணத்தைத் தழுவுகின்ற கட்டம் பார்வையாளரை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. வேலப்பணிக்கனாக வரும் தனாளினி கதிர்காமநாதன் தனது பாகத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார். இவரின் கம்பீரமான தோற்றம் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது.
அரியாத்தை மரணமடைந்தும் இவரது ஒப்பாரி பார்வையாளர் அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டது. வஞ்சகம், பொறாமை, சூழ்ச்சி ஆகியவற்றின் இருப்பிடமான நீலப்பணிக்கன் என்னும் பாத்திரத்தை தர்மினி
92

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
கதிர்காமநாதன் ஏற்று நடித்துள்ளார். மிகவும் சிக்கலான விறுவிறுப்பான ஆட்டங்களை ஒரளவு வெற்றியுடன் ஆடியுள்ளார். கணவன் நீலப்பணிக்கனின் சூழ்ச்சிக்கு உதவியாக அவன் மனைவி நீலகேசரி திகழ்கிறாள். இப்பாத்திரத்தை ஏற்றிருப்பவர் ஜானகி செல்லத்துரைதுணைப்பாத்திரமாகத் திகழும் இவரது நடிப்பு பிரதான பாத்திரங்களின் குணவியல்புகளைத் துலக்குவதாக அமைந்துள்ளது. அரியாத்தையுடன் மிகவும் அன்னியோன்னியமாகப் பழகி நஞ்சினைப் பட்டாடையில் தடவியபோது இவரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது.
வட்டக்களரி
கிராமப்புறங்களில் கூத்துக்கள் வட்டக்களரியிலேயே ஆடப்படுகின்றன. சுற்றிவர தூண்கள் நடப்பட்டிருக்கும். மேலே துணியால் வெள்ளை கட்டப்பட்டிருக்கும். கூத்தாடும் களரி சற்று உயரமாக இருப்பதற்காக மண்ணினால் உயர்த்தப்பட்டிருக்கும். ஒரு வாசல் இருக்கும் நடிகர்கள் அவ்வாசல் ஊடாக அரங்கிற்கு வந்து போவர். களரியை சுற்றிவர வாழைக்குற்றிகள் நடப்பட்டு அதன் மேல் மண்சட்டிகள் வைக்கப்படும். சட்டியினுள் எரியும் பந்தங்களே கூத்திற்கு ஒளியூட்டுவன. இந்த களரிமுறையை ஒரளவுக்குக் காட்டுவதற்கு அருணா செல்லத்துரை முயன்றுள்ளார்.
பக்கவாத்தியம்
பொதுவாக மத்தளமே கூத்தில் பயன்படுகின்றது. தேர்ச்சி பெற்ற அண்ணாவியார் மத்தளமூலமே பாத்திரங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவர். 'வேழம்படுத்த வீராங்கனையில் சல்லரியே பயன்படுத்தப்படுகின்றது.
"தாதா தெய்தெய்" என்னும் தாளக்கட்டே பாத்திரங்களை இயங்கவைக்கிறது. மத்தளம்/பொருத்தமான முறையில் பயன்படுத்தப்படாதது ஒரு குறைபாடாகும்.
முல்லைமணி வே.சுப்பிரமணியம்
(22.04.1994 வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.)
93

Page 56
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
முல்லைமோடி வட்டக்களரி நாட்டுக்கூத்து ஒளிப்பேழை வெளியீட்டு விழா கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் 25.04.94 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு அப்போதைய இந்து சமய கலாசார அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி.பி.தேவராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் விவித கலாவிநோதன் எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள் நாட்டுக்கூத்துக்கள் - ஒரு ஒப்புநோக்கல் என்ற தலைப்பில் பேசும்போது, வேழம்படுத்த வீராங்கனையின் நாட்டுக்கூத்தில் உள்ள பாடல்களைக் கர்நாடக சங்கீத இசையுடன் ஒப்புநோக்கிப் பேசினார். வேழம்படுத்த வீராங்கனை நாட்டுக்கூத்தில் உள்ள பாடல்கள் அனேகமானவை கர்நாடக சங்கீத ராகங்களை ஒத்திருப்பதைப் பாடி விளக்கினார். இந்த விழாவில் ரூபவாஹினி பொது நிகழ்ச்சிகள் பணிப்பாளர் வங்சநாத விக்கிரம, பத்திரிகையாளர் எட்வின் ஆரியதாச ஆகியோர் சிங்களமொழி நாட்டுக்கூத்துக்களுக்கும் தமிழ்மொழி நாட்டுக்கூத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
வேழம்படுத்த வீராங்கனை ஒளிப்பேழை வெளியீட்டு விழாவிலே பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் ஆற்றிய உரை
"இந்த ஒளிப்பேழை வெளியீட்டு விழா வழக்கமாகச் செய்யப்படுகின்ற வெளியீட்டு விழாக்களிலும் பார்க்க ஒரு கனதியான முறையிலே சென்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அது மிகவும் வரவேற்கத்தக்க அம்சம் என்று நான் கருதுகின்றேன். இது போன்ற வெளியீட்டு வைபவங்கள் நடைபெறும் போது இப்படி மிகவும் கனதியான சூழ்நிலையில் இவை பொதுவாக நடைபெறுவதில்லை என்ற குறிப்போடு இங்கு எனது குறிப்புகள் சிலவற்றை கூற விரும்புகின்றேன்.
"முதலில் வீடியோ கசற் என்ற சொல்லுக்கு ஒளிப்பேழை என்கின்ற சொல்லுமிகவும் பொருத்தமானதாகவும் நன்றாகவும் உள்ளது. இந்த யுகத்தில் நாம் தொடர்பியல் மூலம் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு ஏற்ற முறைகளை தெரிவு செய்ய வேண்டியவர்களாயுள்ளோம். கடந்த ஐம்பது ஆண்டுகளுள் உலகில் மக்களிடையேயுள்ள தொடர்புத்துறைகளில் மிகப்பெரிய புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக சஞ்சிகைகள் தோன்றின. அதேபோன்று திரைப்படம், ரெலிவிசன் போன்ற எத்தனையோ பெரிய
94

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நம்முடைய பண்பாட்டிலும் இவை பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை நமது சமூகத்தில் பல்வேறு நோக்கங்களை மாற்றியும் வைத்துள்ளன. அவ்வாறு நமது சமூகத்தின் பண்பாட்டுக் கையளிப்பு நமது சமூகத்தினுடைய தொடர்பு முறைகளின் வளர்ச்சியின் முக்கிய கட்டமே இந்த வீடியோ கசற் என்று சொல்லப்படுகின்ற அதாவது இது போன்ற ஒளிப்பேழை ஆகும். இது தொலைக்காட்சியினுடைய ஒரு அங்கமாக வளர்ந்து மக்களிடையேயும் திரைப்படம், வானொலி. புகைப்படம் ஆகிய மூன்று அங்கங்களையும் ஒன்றிணைத்து தருகின்ற சமூக ஆவணமாக அதாவது ஒரு Social Document ஆக திகழ்கின்றது. ベ
"குறிப்பாக இங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையினை எடுத்துக் கொண்டால் இன்றைய சூழ்நிலையில் இங்குள்ள தமிழர்கள் மத்தியிலே இந்த ஒளிப்பேழை ஒரு முக்கியமான ஒரு தொடர்புமுறையாக அமைந்து இருப்பதை நாம் காணலாம்.
"குறிப்பாக தமிழர்கள் கடல் கடந்த நாடுகளிலே குடியேறி வாழ்கின்ற இந்த தருணத்தில் இங்கே நடக்கின்ற குடும்ப வைபவங்களையும் அங்கு நடக்கின்ற குடும்ப வைபவங்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் சுபகாரியங்களும், சோக காரியங்களும் ஒரு தொடர்பியல் முறையில் எடுத்துச் செல்லப்பட்டு கையளிக்கப்படுவதை காணலாம். அதனால் தான் இன்று இது ஒரு பண்பாட்டு கையளிப்பு ஆகியுள்ளது. இதனை நாம் எமது அன்றாட வாழ்க்கையில் காணுகின்ற ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக திரைப்படங்களின் வளர்ச்சியை இது பாதித்தாலும் அகன்று வளர்ந்த உலகத்தின் வளர்ச்சியை ஒரு அறையினுள்ளே வைத்து பார்க்கின்ற வசதியை ஏற்படுத்துகின்றது. துரதிருஷ்டவசமாக இந்த தொடர்புச் சாதனங்களையும் தமிழ் மக்களுடைய சமூக வாழ்விலே ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ஆய்வுகள் அதிகமாக இல்லாவிட்டாலும் இவை நமது சமூகத்தில் ஏற்படுத்துகின்ற இடம் பற்றி ஆராய்வதும் இல்லை. அந்தத் துறை நம்மிடையே ஆழமாக பதியவில்லை. திரைப்படம் பற்றிய சில ஆய்வுகள் உள்ளன.
பண்பாட்டு கையளிப்பு என்கின்ற முறையிலே தான் இந்த ஒளிப்பேழையினுடைய தயாரிப்பை நான் பார்க்கின்றேன். ஏனென்றால் ஏறத்தாழ கவனிக்கப்படாது இருக்கின்ற அல்லது புறக்கணிக்கப்பட்டு இருக்கின்ற ஒரு கலை வடிவத்தை கவனத்துக்குள் வராத ஒரு பிரதேசத்திலுள்ளதை அந்தப் பிரதேசத்தினுள் ஒரு அகவழக்காக இருக்கின்றதை இன்று பலரும் அறியத்தக்க ஒரு விடயமாக ஒரு கலைப்பண்டமாக எடுத்துக் காட்டுவதற்கு உதவியுள்ளது இந்த ஒளிப்பேழை. இந்த ஒளிப்பேழையில் குறிப்பிடுகின்ற வரலாறு மிகவும் சுவாரசியமானது. வன்னிவள நாட்டிலே குறிப்பாக முல்லைத்தீவை மையமாகக்
95

Page 57
அருணா செல்லத்தரையின் வண்ணிப் பிராந்தியக் கூத்துக்கள்
கொண்ட பிரதேசத்திலே வரலாற்று முக்கியத்துவமுள்ள விடயங்கள் நிறையக் காணப்படுகின்றன. இந்த பின்னணியிலேதான் இந்த அரியாத்தையின் வரலாறு முக்கியமாகின்றது. இந்த வேழம்படுத்த வீராங்கனை என்கின்ற தலைப்பு அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தலைப்புத்தான். அது அழகான இலக்கிய வடிவமாக்கப்பட்டுள்ளது. இதனுடைய மூலநூல் அது சாதாரணமான மக்களால் பாடப்பட்டது. அதை ஒரு நூல் வடிவமாக பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்து. அதன் பெயர் "வேலப்பணிக்கன் பெண்சாதி அரியாத்தை பேரில் ஒப்பாரி" என்பது.
"அதை மீளப்பிரதி செய்வதற்கு ஒரு ஆசிரியர் எடுத்துள்ள முயற்சி பெருமைக்குரியது. இந்த அரியாத்தையின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. ஏனென்றால் ஏறத்தாழ டச்சுக்காலத்தின் முடிவில் வன்னி, யானைகள் பிடிக்கப்படுகின்ற முக்கிய இடமாக திகழ்ந்தது. முக்கியமாக யானை வர்த்தகத்திற்கு மிக முக்கிய பிரதேசமாக வன்னிப் பிரதேசம் திகழ்ந்தது. டச்சுக் கவர்னருடைய நினைவேடுகளை எடுத்துப் பார்ப்போமேயானால் இந்த வன்னிப் பகுதியில் நடைபெற்ற யானை வர்த்தகம் பற்றி விபரமாகக் குறிப்பிட்டிருப்பதை காணலாம். வன்னியர்கள் அதாவது வன்னிப் பகுதி தலைவர்கள் அல்லது பிரதானிகள் டச்சுக்காரர்களுக்குக் கொடுக்கவேண்டிய யானைகளின் கணக்குகளை விபரமாக எழுதியுள்ளார்கள்.
"சில வேளைகளில் யானை கொடுக்கலாம் அலலது யானைக்கு பதிலாகக் காசு கொடுக்கலாம் என்பதற்காக அவர்கள் எழுதிய நினைவேடுகளில் இந்த வன்னியர்களிடம் இருந்து நாலரை யானை வாங்க வேண்டும் என்று கூட குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த அளவுக்கு மிக நுணுக்கமாக அந்த தகவல்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. யானைகளைப் பிடிப்பதற்காகக் குறிப்பாக மலையாளப்பகுதிகளில் இருந்து பணிக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அங்குகொண்டு வந்து வைக்கப்பட்டார்கள். இவர்கள் தான் யானைகளை சென்று பிடித்து வருபவர்கள். யானைகளை பிடிக்கின்ற முறை சிங்களப் பகுதிகளிலும் உண்டு அது "கிறால்" என்று சொல்லப்படுகின்றதை நீங்கள் அறிவீர்கள். மிருகவதை இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காக அதை தற்போது நிறுத்தி விட்டார்கள்.
இந்தப் பணிக்கர்கள் சென்று மந்திரங்கள் மூலம் யானைகளை வசியம் செய்து பிடித்து விற்பது வழக்கம். இப்படி விற்கப்படுகின்ற யானைகள் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக யாழ்ப்பாண வரலாற்றிலே காணப்படுகின்றது. இதன் காரணமாக குறிப்பாக வன்னிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வருகின்றபோது பல இடங்களில் உள்ள ஊர்களுக்கு யானைகளோடு சம்பந்தப்பட்ட பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனையிறவு, ஆனைக்கோட்டை,
96

அருணா செல்லத்தரையின் வண்ணிப் பிராந்தியக் கூத்துக்கள் ஆனைவிழுந்தான், ஆனைப்பந்தி இவையெல்லாம் காரணப் பெயர்களாக யானை வியாபாரத்தோடு தொடர்புபடுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். காரைநகர் கப்பல் துறைமுகத்தில் யானைகளை ஏற்றி அனுப்பியதாக வரலாறு கூறுகின்றது. அந்த பாரம்பரியத்திலேதான் குறிப்பாக ஆண்களே செய்து வருகின்ற ஒரு காரியத்தை பெண்ணொருத்தி செய்தாள். அதுவும் வீராங்கனையாகச் செய்தாள் என்பதைக் கூறுவதுதான் இந்தக் கதை. பொதுவிலே எங்கள் பாரம்பரியத்திலே பெண்கள் தான் ஒப்பாரி பாடுவதாக கூறப்படுகின்றது. இது அந்த முறைகளிலே காணப்பட்ட ஒரு வித்தியாசம். இந்த வகையிலே அரியாத்தை என்கின்ற பெண் நிச்சயமாக நாங்கள் நாட்டாரியல் ஆய்வுமுறையிலே சொல்வதாக இருந்தால் அவர் ஒரு பொக்கிஷமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவளுடைய வரலாற்றை காலம் காலமாக மரபுரீதியாகப் பாதுகாத்து வந்திருக்கின்றார்கள். அந்த ஒப்பாரி பாடல்களைப் பாடுகின்ற ஒரு மரபு ஒன்றைக் காண முடிகின்றது. இந்த வழமையை முல்லைமோடி என்று சொல்லப்படுகின்ற ஒரு முறைமையிலே ஆடுகின்றார்கள். இந்த முல்லைமோடி என்கின்ற சொல் நாட்டார் வழக்காற்றிலே, நாட்டுக்கூத்து மரபிலே ஒரு முக்கியமானது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
பொதுவாக எடுத்துக் கொண்டால் வடமோடி, தென்மோடி என்கின்ற ரீதியில் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் நாட்டுக் கூத்துகள் காணப்படுகின்றன. சில இடங்களில் அதிகமாக காணப்படும், சில இடங்களில் குறைவாகக் காணப்படும். ஆனால் வடமோடி தென்மோடி என்கின்ற இருபிரிவும் நிச்சயமாக எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இது மிகக்குறைவு என்று சிலர் கருதிக் கொண்டிருந்தார்கள். அண்மையிலே எமது மாணவர் காரை சுந்தரம்பிள்ளை செய்த ஆராய்ச்சிகளின்போது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலே இந்த வடமோடிக் கூத்து மரபு இருக்கின்றதென்பதற்கு ஆதாரமாக இந்த வடமோடிக் கூத்தின் ஆட்ட அமைப்பை, ஆட்டங்கள் பாடல்கள் முதலியன மட்டக்களப்பிலே காணப்படுகின்ற வடமோடிக் கூத்தோடு இணைந்தது என்பதையும் அதேவேளை தென்மோடிப் பாரம்பரியம் ஒன்றும் அங்கே காணப்படுகின்றது போன்று யாழ்ப்பாணப் பகுதிகளிலும் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்குப் பாரம்பரியமாக இருந்த மரபு முறையாகும். ஏனென்றால் இந்தப் பிரிவுகள், இவ்வாறான முறைகள் தமிழ்நாட்டிலே அங்கே வடமோடி, தென்மோடி என்பதிலும் பார்க்க வடபாங்கு, தென்பாங்கு என்று சொல்கின்ற ஒரு மரபு உண்டு. அது தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வந்ததா? என்பது இப்போதும் ஆய்வுக்கு உரிய ஒன்று. இப்போது நாம் வடமோடி, தென்மோடி என்பதற்கான கருத்து வேறுபாடுகள் எமக்கு சரியாகத் தெரியாது என்றே கூறவேண்டும். ஒரு காலகட்டத்தில் கூறினார்கள், வடநாட்டுக் கதைகளை ஆடுவதுதான் வடமோடி என்றும் தென்நாட்டுக் கதைகளை ஆடுவது
97

Page 58
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் தென்மோடி என்றும் கூறப்பட்டதாகக் கூறினார்கள். மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் இந்தியா முழுவதற்கும் உரியதான கதைகளாக கொண்டார்களேயொழிய அதனை ஆரிய திராவிட கதைகளாகப் பிரித்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
மகாபாரதத்தின் கிளைக் கதைகள் வட இந்தியாவிலும் பார்க்க தென்னிந்தியாவில் கூடுதலாக இருந்ததாகத் தெரிய வருகின்றது. அப்படி இருக்கின்ற காரணத்தால் அக்கதைகளை வடமோடி என்று கூற முடியாது. நடந்தவிஷயமென்னவென்றால் இந்த பிரதேசங்கள் ஒவ்வொன்றும் ஒன்று மற்றொன்றில் இருந்து போக்குவரத்துத் தொடர்பின்மை காரணமாக தனித்தனியாக அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய பண்புகளை மிக அதிகமாக வளர்த்து எடுத்திருக்கவேண்டும். இதன் காரணமாக ஓரிடத்திலே காணப்படுகின்ற மோடி முறை அதாவது STYLE சில இடங்களிலே அமுங்கி காணப்படலாம், அல்லது சில இடங்களிலே விரிவாகக் காணப்படலாம். அதற்கு உதாரணமாகக் ஒன்றை கூற விரும்புகின்றேன்.
முல்லைத்தீவுப் பிரதேசத்திலே கோவலன் நாடகம் ஆடப்படுகின்ற முறை, அந்த ஆட்டத்திலே காணப்படுகின்ற அமைப்பு மற்றைய இடங்களில் கோவலன் கதை ஆடப்படுகின்ற முறைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அங்கு நிலவுகின்ற முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்படுகின்ற முறைமை காரணமாக அங்கு பேணப்படும் முறைகள் பிற பிரதேசங்களோடு தொடர்பின்மை காரணமாக அது வித்தியாசமாக காணப்படுகின்றது. ஏனென்றால் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாரம்பரியம் மிக அண்மைக்காலம் வரை பேணப்பட்டுள்ளது. மன்னாரிலே அதன் உட்பகுதிகளிலே அதன் பாரம்பரியங்களில் கிறிஸ்தவ நாட்டார் பாரம்பரியங்கள் வேரூன்றி இருக்கக் காணப்படுகின்றது. அங்கு இந்தப் பாரம்பரியங்கள் இல்லாததாகவே இருக்கின்றது.
இந்த கிறிஸ்தவ நாடகப் பாரம்பரியம் தான் சிங்களத்திலே "நாடகம" என்ற கூத்து முறைக்குக் காலாக அமைந்துள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து கிறிஸ்தவ பாதிரிமார்கள் மன்னாரின் மேற்கு கரையோரத்தில் காணப்படுகின்ற நீண்ட ஒருமைப்பட்ட பிரதேசத்தின் ஊடாக தொழிற்பட்ட போது அங்குள்ள நாடகக் கலைகளைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அதிலே இருந்துதான் "நாடகம" என்ற வடிவம் வந்தது என்பதை பேராசிரியர் சரச்சந்திர எடுத்துக்கூறியுள்ளார். அந்தக் கலையினுடைய மையம் மன்னார். ஆனால், அந்த வடிவம் மற்ற இடங்களிலே வரும்போது உதாரணமாக வாசாப்பு ஒரு வடிவமாகும். இப்படிப் பார்க்கின்றபோது இந்த முல்லைமோடி என்கின்ற மரபு மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால் நாங்கள் இதை மீள ஆராய்ந்து சொல்லிக் கொண்டு போகும் போது இதை எந்த அளவுக்கு வடமோடி தென்மோடி என்கின்ற அடிப்படை பிரிவில்
98

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இருந்து வேறுபடுத்தி ஒரு தனிப்பிரிவாக பார்க்கலாம் என்பது ஒரு சிக்கலான விடயமாகும். ஆனால் நிச்சயமாக ஒன்று தெரிகிறது வடமோடி தென்மோடி என்கின்ற அமைப்பு நிச்சயமாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. அதிலே எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமேயில்லை. இது அண்மைக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ள ஓர் உண்மையாகும்.
"இந்த ஒளிப்பேழை பற்றி நான் கூற விரும்புவது என்னவென்றால் இந்த ஒளிப்பேழையை இன்னொரு கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. நண்பர் ஆரியதாச, நண்பர் விக்கிரம அவர்கள் பேசும் போது இதனுடைய சிறப்புப் பற்றி சொன்னார்கள் இது எமக்கு மிகவும் எழுச்சியையும் திருப்தியையும் தரும் என்றார்கள். ஆனால் இந்த எழுச்சியும் திருப்தியும் போதுமானதா என்ற வினாவை நான் இங்கு கேட்காமல் விடுவதும் சரியானதல்ல. ஏனெனில் இன்று நாம் உள்ள கல்விச் சூழலிலே நாடகமும் கற்கை நெறியாக கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருகின்றது. உயர்தரமாணவர்களுக்கு ஒரு பாடமாக அது மட்டுமல்ல பல்கலைக்கழகத்திலும் கூட பாடமாக அமைந்து இருக்கின்றது. வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களிலும் அது ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகின்றது. இப்படியான ஒரு வளர்ச்சியுள்ள நிலையில் இரண்டு அம்சங்கள் மிக முக்கியமாக காணப்படுகின்றன. ஒன்று கல்வி அரங்கு அதாவது EDUCATION THEATRE அந்த அரங்கினுடைய பூரணமான வளர்ச்சியை துரதிஷ்டவசமாகக் கொழும்பில் உள்ளவர்கள் காண்பதற்கான வாய்ப்புக்கள் அறவே இல்லை என்றே கூறலாம். இருந்தாலும் இந்த வளர்ச்சி முக்கியமாக அங்கு STL5th 6T6örugi Glougouo(360T EXTRA CURRICULAR ACTIVITY 9,595T6)g கற்கை நெறிகளுக்கு அப்பாலான ஒரு விடயமாக இல்லாமல் கற்கை நெறிகளுடன் ஒன்றிய ஒரு INTRA CURRICULAR ACTIVITY ஆக நாங்கள் இப்போது கருதலாம். உதாரணமாக சிங்களத்திலே அவ்வாறு நடக்கின்றது. ADVANCED LEVEL பரீட்சைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதை ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்தச் சூழலில் நாம் இந்தக் குழந்தைகளினுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெருமையாக ஏற்றுக் கொள்ளலாம். பேராசிரியர் வித்தியானந்தன் காலத்திற்குப் பின்னர் இந்த நாட்டுக்கூத்தை மீட்டெடுக்கப்படுகின்ற நோக்கிலே நாட்டுக்கூத்துக்கள், மரபுகள் நிகழ்த்தி காட்டுகின்ற ஒரு மரபு தோன்றியது.
அந்த மரபிலே முக்கியமான மாற்றம் என்னவென்றால் இந்த வட்டக்களரி முறையை அதாவது வட்டக் களரிக்கு உரிய ஒரு அரங்கை இவர்கள் ஒரு மேடை அரங்கமாக மாற்றினார்கள். இவர் மீண்டும் வட்டக்களரி முறைக்கே திரும்பிச் செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதுவும் மிக முக்கியமான விடயமாகும். நண்பர் விக்கிரம அவர்கள் கூறியது போல் நடிப்பவர்களுக்கும்
99

Page 59
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பார்ப்பவர்களுக்கும் இடையே உள்ள உண்மையான உள்ளார்ந்த ஊடாட்டத்தைக் காண வேண்டுமானால் அரங்கினைப் பார்க்க வேண்டும். உலகத்தின் மனிதப் பண்புகளை அதாவது சமூக வளர்ச்சியை வெவ்வேறு முறையான அணுகுமுறைகள் வழியாக அறிந்துகொள்ள வரலாறாக இருக்கலாம்,புவியியலாக இருக்கலாம், நாடக அரங்குகள் மூலம் மனிதனுடைய சமூக வளர்ச்சியைக் காணலாம் என்று சொல்லுகின்ற ஒரு கருத்து நிலவுகின்றது. எங்கெங்கே இந்த வட்டக்களரி முறை சிறப்பாகச் செயல்படுகிறது என்றால், அங்கங்கே மக்களுடைய குழு உணர்வு மிகச் சிறப்பாக காணப்படுகின்றது. அங்கே இந்த மற்றைய அரங்குகள், பார்ப்போர், செய்வோர் என்கின்ற ஒரு பிரிவு அதாவது அவர்கள் நடப்பதில் பங்கில்லாமல் வெறும் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்மை, அந்நியப்பாடு பற்றிப் பேசுவோர் அந்த அந்நியப்பாடு எவ்வாறு வருகிறது என்றால் அதாவது மேடையில் நடப்பதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை நாங்கள் நான்காவது சுவராக இருந்து பார்த்து விட்டுப் போய் விடுகின்றோம் என்கின்ற ஒரு இரசிப்புத்தன்மை. மேல் நாட்டு நாடகங்களில் அது ஒரு முக்கியமான பங்கு. இன்று நேற்று வந்ததல்ல. கி.மு. அரிஸ்டோட்டில் காலம் தொடக்கம் வந்ததென்பது தெரியும். இந்த முறைக்கு எதிராகத்தான் கீழைத்தேய, அது வீதி நாடகமாக இருக்கலாம் அல்லது கதக்களியாக அல்லது தெருக்கூத்தாக இருக்கலாம், அதற்கு எல்லாம் பார்ப்பவர்கள் சுவர்களாக இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அது ஒரு குழும அல்லது COMMUNITYSENSEயை ஏற்படுத்தி உள்ளதை நாம் காணலாம்.
எனவே தான் இந்த நாடகத்தில் இன்னும் சில முதிர்ச்சியுள்ள அதாவது பாத்திரங்களின் உணர்வுகளை உணர்ந்து நடிக்கக்கூடிய அல்லது பாத்திரங்களின் உணர்வுகளோடு இணையக்கூடிய குழுவினைக் கொண்டு இதைச் செய்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். அவ்வாறு செய்ய வேண்டும். ஏனென்றால் இது செய்கின்றபோது இருக்கின்றதைவிட செய்து முடிந்தவுடன் இருக்கின்ற பெறுமதி 95 (5 CULTURAL COMMODITY 98, 95T6...g5 gg (5 CULTURAL REPRODUCTION ஆக, அதாவது, ஒரு பண்பாட்டு மீளாக்கமாக அமைகின்றது.
இதனை பார்த்துச் செய்கின்றபோது இதனை விட கொஞ்சம் நன்றாக செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினால் அதை நாம் கூடாது என்று ஒதுக்கிவிட முடியாது. அப்படி அதை நாம் செய்வது நல்லது. அது காலத்து வளர்ச்சியின் பின்னணியில் முக்கியமான ஒன்றாகும். துரதிஷ்டவசமாக அப்படி ஒன்று கொழும்பில் செய்யப்படக்கூடியதொன்றா என்கின்றது ஒரு மிகவும் சோகமான கேள்விக்குறியே. அதற்கு காரணங்கள் உண்டு. ஒன்று இங்கு வெகுஜனப் பண்பாடு அதாவது MEDIA CULTURE இந்தப் பிரதேசத்தை விழுங்கி விடுகின்ற ஒரு தன்மைக்குப் போய்க்கொண்டிருப்பதை நாம் காணலாம். அது தவிர்க்க முடியாத ஒன்று. திறந்த பொருளாதார கொள்கையை நாம்
1OO

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் கடைப்பிடிப்போமானால் இவைகள் தவிர்க்க முடியாதவையாகும். மறுபுறம் நாங்கள் CLOSE THEATRE ஆகவும் நாம் இருக்க முடியாது. அது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் அவற்றுள்ளும் கூட ஜப்பானில் நடைபெறுவதைப் போன்று அது பெரிய வளமுள்ள கைத்தொழில் நாடு, எவ்வாறு தமக்குரிய முறையை பேணி வருகின்றதோ அதுமாதிரி பேணுவதற்குரிய ஒரு வழிமுறையை நாம் வகுத்தெடுக்க வேண்டும். கொழும்பில் உள்ளவர்களுக்கு ஒரு துர்ப்பாக்கியமான நிலைமை என்னவென்றால் இந்தப் பண்பாட்டு வேர்கள் ஒரு காலத்தில் இங்கு நடப்பதுதான் இலங்கை முழுவதற்கும் பொதுவான விடயங்களாக இருந்தன. அந்த நிலைமை மாறியது ஒரு துர்ப்பாக்கியமான விடயமாகும். அதை நாம் மீட்க வேண்டுமேயானால் வளர்க்கும் பணியை செய்ய வேண்டுமேயானால், நான் நினைக்கின்றேன், நாட்டுப்பாடல்கள், கிராமிய மணங்கமழும் நாட்டுக்கூத்துக்கள் மேடையேற வேண்டும். ஏனென்றால் நம் எல்லோரிடமும் இந்த அடித்தளம் காணப்படுகின்றது.
எனவே தான் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் வெறுமனே Gg5Tysão.Juh (GuTg5sTg). TECHNOLOGY ALONE IS NOT ENOUGH. geg மனித வளத்தோடு மனிதப் பண்பாட்டோடு சேர்க்கப்படவேண்டியது அவசியம். அந்த வகையில் நண்பர் அருணா செல்லத்துரையைப் போற்ற விரும்புவதற்கான காரணம் என்னவென்றால், இதனைக் கொண்டு வந்ததற்காக அல்ல. இதனுடைய சாத்தியப்பாடுகள், இதனால் ஏற்படக்கூடிய நல்ல காரியங்களுக்காக, இதனால் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய சாதனைகளே, முக்கிய காரணம் எனக் கூறி உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்."
(பேராசிரியர் சிவத்தம்பி)
வேழம்படுத்த வீராங்கனை ஒளிப்பேழை வெளியீட்டு விழா கனடா, லண்டன், ஜேர்மன் போன்ற இடங்களிலும் நடைபெற்றது. இதனால் முதன் முதலில் நாட்டுக்கூத்து ஒன்று ஒளிப்பேழை வடிவமாக வெளிநாடுகளிலும் வெளியிட்டு வைக்கப்பட்ட பெருமையை வேழம்படுத்த வீராங்கனை பெற்றுக்கொண்டது. அதற்கான துண்டுப்பிரசுரங்களும் ஆதாரமாக்கப்பட்டுள்ளன.
101

Page 60
அருணா செல்லத்தரையின்
560TL
வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
BFFNAS Sögusíli
இளைய தமிழ் மாணவூர் வழ
6.ISOOSN) డాలా பல்சுவை கதம்ப நிகழ்ச்சிலி
இலங்கையில் வெளியிடப்பட்ட அருணா செல்லத்துரையின்
வேழம்படுத்தவீராங்கனை
சிறுவர்களுக்கான
பேச்சுப் போட்டிகள் |ஆ
SlskSOs 7 வயது முதல் 10 வயது வரை வானுெலி 10 வயது முதல் 13 வயது வரை க3லஞரின் 13 வயது முதல் 15 வயது வரை ஆக்கத்தில்
15 வயது முதல் 18 வயது
நாட்டுக் கூத்து வீடியோ பிரதி வெளியீடு
வரையிலானவர்களுக்கான 1ம், 2ம், 3ம் பரிசுகள் வழங்கப்படும்
ரசிகர்களின் அனுமதிச்சீட்டுக்களுக்கு குறுக்கள் முறையில் பரிசு வழங்கப்படும்
sno OCT. 4, 1994 ChauciTGrf Lorras) 6:30, Logo of
Guth: 755 Okcicle Rc-, Westwiew C.S.S.
(AN ENE)
லண்டன்
"RAGAPRAVAGAMI"
1. “SWARA MADHUR” ;
By students of MR.B.K..CHANDRASHEKHAR
B.R. StuBBA RAO. CANDDADENNESTON, CHARLIEPRCE SUDEEP HAZRA, HAR NATHAN PRAKASH, DARUSHIN NATHAN, HAR HARAN SAHADEVAN, PRIYA BOSE. ROHIT PANKHANA, RAMANATH RAMANAN, TRUYKUMARANTHRLICHELWAM, RAGHRU NANDAKUMLARA RAVI RAMIDAS AHLATHESHWARI GANESHLALDINGAM, MIRS. MAHEISH CHANDRASEGARAM FRANCIS AYAMANNE, T.A. PUSHPARA AH, S. SIVA, HARTAMPU„UMMA AMP. RUPA MANAN, HAMSA VENKATAKRISHNAN
ANKCHAL PRASHER, DORS ARASINKAM CHELLANGANESHALINGAM KABLAN GANESHANKAM
MUKHERJE
MKOYUKH AMBIKACHANDRASEKHAR, SNIDHJA PARAPARAN, SUSHTLAK. THURA, S.C.A. DONGRE, MRS.THIRUM00LAN, WildYA PATIMANABA IIYER,
YASE KOMANTHIYAAGARALA, AYASRI PLLA
FLUTE:RFAN SHAFI (STUD. of curve at:LL) TAR.A: ViSAKAN
2. “NARTHANA KOLAM”: oks.ANANDARAN BALENDRA
(supeNTSOF BRENT TAMIL school REKARAMANATHAN, 'IHANVATANAPAASNCAM, KRUTHIKA PATHMANANIRAN, WUTTHA KRITHIARAN, SRI JANARI SRIKANTHAN, JANANAN SRik ANTHAN, SGANAN NAVARATNAM
INTERVAI,
3. VEDEO CASSETTE LAUNCH: By MRKSITHAMPARANATHAN
ARUNA SELLADRA'S " Vezham Padutha Veerankanai” (Traditional Folk play from SriLanka)
: : : | 4. VATHYA SANGAMAM:
Violin MR.B.K.CHANDRASEKAR
Flute-MRS.RFAN
5. RAGAPRAVAGAM: MR.M.SATHAMOORTHY
ARTTSTES:
VR.M.SVARAJ - Mil RUDANGAM MR.S.STHAMPARA - MORSING MR.S.VISAKAN - TABLA YMRA. VAEN - HARMONYAM
COMPERE; ANANDARAN BALENDRA
SSSSLLLLLSSSTSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
அரியாத்தையாக அருட்செல்வி அமிர்தநாதன்
அண்மைக் காலத்தில் நண்பர் செ. மட்ராஸ் மெயில் அவர்கள் யாழ்ப்பாணத்திலும் வேழம்படுத்த வீராங்கனை நாட்டுக்கூத்தைப் பழக்கி மேடையேற்றி அனேகரின் பாராட்டைப் பெற்றுவருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ر
முல்லைத்தீவுப் பிரதேசத்தில் பண்டாரவன்னியன் நாடகமும் நாட்டுக்கூத்தாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. பண்டுதொட்டு ஆடப்பட்டு வரும் நாட்டுக்கூத்துக்கள் அனைத்தும் புராணக் கதைகளாகவே இருந்துள்ளன. ஆனால், பண்டாரவன்னியன் வீர வரலாறும், கற்புடைப் பெண்ணான வேழம்படுத்த வீராங்கனையின் வரலாறும், நாட்டுக்கூத்தாக ஆடப்பட்டு வருவது இப்பிரதேசத்திற்குரிய சிறப்பாகும். அத்துடன், சமயாசாரக் கூத்துக் கலையாக இருந்த முல்லைத்தீவுப் பிரதேச நாட்டுக் கூத்துக்கள் தற்போது ஒரு அரங்கக் கலையாக மாறிவருகின்றன என்று நாம் கூறலாம். இதனால், முல்லைமோடியில் உள்ள நாட்டுக்கூத்து, அரங்கக்கலையாக இப்பொழுது பல இடங்களிலும் பிரபல்யம் அடைந்து வருகிறது.
103

Page 61
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
"நந்தி உடையார்"
வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம்
முல்லைத்தீவுப்பிரதேச கூத்துக்களின் மரபுகளையும் பாடல்களையும் சில ஆட்டமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு நந்தி உடையார் என்னும் நாடகம் என்னால் எழுதப்பட்டது. இந்த நாடகத்தின் களமாக முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் போன்ற பிரதேசங்கள் இருக்கின்றன.
இந்த நாடகத்தில் முல்லைத்தீவுப் பிரதேச நாட்டுக்கூத்து உடையலங்காரங்கள், பாரம்பரியங்கள் போன்றவை ஓரளவுக்குக் கடைப் பிடிக்கப்பட்டன என்று கூறலாம். இந்த நாடகம் கொழும்பிலும் மேடை யேற்றப்பட்டது.
இந்த நாடகம் 1996ம் ஆண்டு வட கிழக்கு மாகாண சபையினால் நடத்தப்பட இருந்த சாகித்திய விழாவில் மேடையேற்றுவதற்காக எழுதப்பட்டதாகும். ஆனால், இந்த விழா பின்போடப்பட்ட காரணத்தினால் வவுனியா நகர சபை 26.10.96 இல் நடத்திய பெளர்ணமிக் கலை விழாவில் மேடையேற்றப்பட்டது.
கதைச்சுருக்கம்
ஒட்டுசுட்டானில் இருந்து அரசாண்ட முத்தையன் வற்றாப்பளையில் இருந்த நந்தியுடையாரின் மகள் நந்தி மகளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். சோதிடர் ராமலிங்கத்தின் மூலம் நந்தி உடையாரின் மகளை தான் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லி அனுப்புகிறான். தனது மகளை முத்தையனுக்குக் கொடுக்க விரும்பாத நந்தி உடையார் முத்தையனுக்கு எட்டில் செவ்வாய் என்றும் தனது மகளுக்குச் செவ்வாய் தோஷம் இல்லை என்றும் காரணம் கூறி மறுத்துவிடுகிறான்.
முத்தையனுக்கு நந்தி உடையார் மேல் கோபம் ஏற்படுகிறது. முத்தையனின் அரசவையில் ஒருவனாகவும் முத்தையனுக்கு மிகவும் நெருக்கமானவனாகவும் இருக்கும் குட்டி வன்னியன், ஏற்கனவே நந்தி மகளைத் திருமணம செய்ய விரும்பி பெண் கேட்டு மறுத்த காரணத்தால் நந்தி உடையாரைப் பழிவாங்கக் காத்திருக்கிறான். முத்தையனுக்கு நந்தி உடையார் மீது ஏற்பட்ட
104

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் கோபத்திற்கு நெய் வார்ப்பது போல பல காரணங்களைக் கூறி அவரின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறான் குட்டி வன்னியன்.
முத்தையன், குட்டிவன்னியனின் மேற்பார்வையில் பேராற்றை மறித்து பெரும் குளம் கட்டி முத்தையன் கட்டுக்குளம் என அதற்குப் பெயரும் இட்டு அந்தக் குளத்தின் கீழுள்ள வயல் சொந்தக்காரர்களிடம் நீர் வரி அறவிடுகிறான். நந்தி உடையாரின் நந்தி வயல்வெளியும் முத்தையன்கட்டுக் குளத்தின் கீழ் வருகின்றது. ஆனால், குளத்துத் தண்ணிர் அவரது வயலுக்கு நேரடியாகப் பாய்வதில்லை. கசிந்து போகும் நீர் பள்ள நிலமான பள்ளவெளிக்குப் பாய்ந்து நந்திவெளிக்கு செல்வது வழக்கம். இதனால், மானாவாரியாக வயல் செய்யும் நந்தி உடையாரின் வயலுக்கு நீர் பாய்கிறது. அப்படியிருக்க நந்தி உடையாரும் நீர் வரிகட்ட வேண்டும் என்று கட்டளை இடப்படுகிறது. வரிகட்ட நந்தி உடையார் மறுக்கிறார். இதனால் கோபமுற்ற முத்தையன், முத்தையன் கட்டுக்குளத்தில் இருந்து ஒரு சொட்டுத் தண்ணிர் கூட கசிந்து பாய விடாமல் தடுக்கிறான். ஆனால், நந்தி உடையரின் வயலுக்கு கார்த்திகை மாதக் கர்க்கடக ராசியில் பெய்த பெருமழை காரணமாக நீர்ப்பாசனம் கிடைக்கிறது.
நந்தி உடையாரின் வயல் நன்றாக விளைந்தது. பரத்தை போட்டு அருவி வெட்டுகிறார்.உப்பட்டிகள் வயல்வெளியில் நிறைந்திருக்கும் போது குட்டிவன்னியன் முத்தையன் கட்டுக் குளத்தின் கட்டை வெட்டி விடுகிறான். நந்திவெளி முழுவதும் வெள்ளம் பரவி உப்பட்டிகளைப் பெருங்கடலுக்கு அள்ளிக் கொண்டு செல்கிறது. இதைக் கண்ட நந்தி உடையார் வயலுக்குச் சென்று உப்பட்டிகளை அள்ளி வயல் வரம்பில் வைக்க முயல்கிறார். ஆனால், அவரது முயற்சிபலிதமாகாமல் நெஞ்சுவலி காரணமாக அந்த வயல்வெளியிலேயே உயிர் துறக்கிறார். இந்த விபரங்களை அறிந்த நந்தி மகள் முத்தையனின் அரண்மனைக்குச் சென்று அரச அவையில் நீதியை நிலைநாட்டுவதற்காக வாதாடுகிறாள். குட்டி வன்னியனின் சூழ்ச்சி அம்பலமாகிறது. நீதி நிலைநாட்டப்படுகிறது. நந்தி மகள் அரசவையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டாள். இதுவே நந்தி உடையார் நாடகத்தின் கதைச் சுருக்கமாகும்.
நந்தி உடையார் (மேடையில்)
இந்த நாடகம் வவுனியா நகரசபை நடத்திய பெளர்ணமிக் கலை விழாவில் மேடையேற்றப்பட்டபோது வவுனியா கல்வியியல் கல்லூரி மாணவர்களான
செல்லத்துரை பிரணவநாதன், விஜயராமலிங்கம் மனோகரன், கந்தசாமி மகேஸ்வரி, பழனி கமலச்சந்திரன், சிவசுப்பிரமணியம் மதிபாலன், சச்சிதானந்தன்
105

Page 62
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் கிருஷ்ணானந்தம், வல்லிபுரம் முருகதாஸ், கனகரட்னம் நவநீதன், பேரின்பநாதன் ஜயகாந்தன், சின்னையா யூரீ பாலகிருஷ்ணபிள்ளை, மனோகரன் ரவீஸ்வரன், கனகசபாபதி ரணேஷ், தர்மபுத்திரன் தயானந்தன் ஆகியோர் நடித்தனர். இந்த நாடகத்தில் வரும்பாரம்பரிய நடனங்களை வவுனியா பரதஷேத்திர அதிபர் திருமதி துஷ்யந்தி வேலுப்பிள்ளை பழக்கியிருந்தார். இந்தப் பாரம்பரிய நடனங்களில் பிரசன்னா விஜயரத்தினம், மாதவி வீரவாகு, மிதுலினி சேனாதிராசா, சாம்பவி ரகுநாதன், சங்கீதா விபுலஸ்கந்தா, கேசிகா மங்களராஜன், வைதேகி சிவநேசன், நாகநந்தினி அப்பையா, பிரீதா மகேந்திரராஜா, தக்ஷாயினி கதிரவேலு, லோகிதா சிவசுப்பிரமணியம், கலைச்செல்வி, சுலோசினிநவரட்ணம், உதயப்பிரியா கந்தசாமி ஆகியோர் ஆட பாடல்களை சிவரதி சின்னத்துரை, புவனேஸ்வரன் சிவாஜினி, விவேகானந்தன் செல்வரூபி, அருளானந்தம் அருள்மொழி ஆகியோர் UTipucsf.g560Tff.
நந்தி உடையார் (நூல்)
இந்த நாடகம் 1996 ஆம் ஆண்டு நூல் வடிவாகக் கொண்டுவரப்பட்டது. நந்தி உடையார் நூலகவும் ஒலிப்பேழையாகவும், சிடி இசைத்தட்டாகவும் வெளியிடப்பட்டபோது அது பற்றி பல அறிஞர்கள் தந்த கருத்துக்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலுக்கு அரியான் பொய்கை கை.செல்லத்துரை, முல்லைமணி வே.சுப்பிரமணியம், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ்மணி கவிசேகரன், அரியான் பொய்கை கை. செல்லத்துரை அவர்கள் "நந்தி உடையார்", வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் பற்றி எழுதிய விமர்சனம்
“அருணா செல்லத்துரை" அவர்களைப பற்றி நான் அவர்களது இளம் பராயத்திலிருந்து நன்றாக அறிவேன். அவர் நாட்டுப்பற்றும், நற்பண்புகளும். அரும்பெரும் கலையார்வமும் நிறைந்தவர். சுற்றந் தழுவுதல். சூழ்ந்தோர் பேணல் போன்றவற்றோடு பழமையாகிய புதுமைகளை அறிந்தால், அதனை முதியோர் பலரிடத்தும் உசாவி, ஆராய்ந்தறியும், ஆர்வம் மிக்கவர். அவரது ஆர்வத்திற்கு ஏற்ப இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பதவி வகித்தமையும் அவருக்கு அதிக வாய்ப்பானதொன்றாகும். இவைகளைனத்தையும் இவர் உரிய முறையிலே
106

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பயன்படுத்தி இன்று பெருங்கலைஞர்கள் வரிசையிலே சிறந்த ஒருவராகக் கணிக்கக்கூடிய வகையில் கவிஞர், எழுத்தாளன், ஆராய்ச்சியாளன், நாடகத் தயாரிப்பாளன், நெறியாள்கையாளன் என எவராலும் பாராட்டக்கூடிய தகுதியடைந்தமை நாம் பாராட்ட வேண்டிய தொன்றாகும்.
நாடகத்தைப் பாராட்ட வந்த நான், நாடகாசிரியரை முதலில் சிறிது எடுத்துக் கூறிவிட்டேன். அதைச் சிலர் மற்றொன்று விரித்தல் என்ற குற்றமெனக் கூறவும் கூடும். ஆனால் ஆசிரியரின் திறமைக் கேற்பவே நூல்களும் திறம்பட அமையுமாதலின், நூல் முகத்தில் நூலாசிரியரைப் பற்றிக் கூறுவது மரபாகும். மேற்கொண்டு நந்தி உடையார் என்ற நாடக நூலுக்கு வருவோம். சாதிக் கட்டுப்பாடுகளும் அதற்குரிய தொழில்முறைகளும் பழக்க வழக்கங்களும் ஆட்சி அதிகாரங்களும் மிகமிக இறுக்கமாக அமைந்திருந்த காலம் அது. அப்படியான நடைமுறைகளை எல்லாம், நல்லனவோ, கெட்டனவோ என் எண்ணத்திலிருந்து, இந் நாடகம் எடுத்துக் கிழறிச் சிந்தனைக் குள்ளாக்கியது. அச் சிந்தனைச் சிதறல்கள் ஆவனவற்றுட் சில, பின்வருவன.
பெரு நிலப் பரப்பை உடையவர்கள். மாட்டுமந்தை. ஆட்டு மந்தைகளை உடையவர்கள். செல்வம். செல்வாக்குடையவர்கள், ஆட்சி அதிகாரம் படைத்தவர்கள் பெருந்தலைவர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் இடத்துக்கிடம், மணியகாரன் என்றும், நைனார். நாச்சியார் என்றும், கமக்காரன், கமக்காரிச்சியாரென்றும், உடையார், உடைச்சியார் என்றும், போடியாரென்றும், நாயகர், நாயகி எனவும் பல திறப்பட்ட பெயர்களால் அழைக்கப்பட்டனர். இவ்வாறான தகுதியுடையவர்களை முல்லைத்தீவுப் பிரதேசத்தில் 'உடையார்’ என்றேயழைத்தனர். இப்பெயர் அவருக்கு மட்டுமல்ல, அவரது இனசனமாக உள்ளவர்கள் எல்லோருக்கும் பொதுவாக அமைந்திருந்தது. இன்றும் உடையாரென்ற பெயர் சிறுபான்மையாக நிலவுவதைப் பலருமறிவர். அன்றியும் "உடையார்கத்தலை" என்ற ஓர் இனத்தவர்கள் இன்றும் முல்லைத்தீவுப் பகுதியில் வாழ்ந்து வருவது இதற்கோர் சான்றாகும். இதுபோலவே ஆண்டை முதலிய பல பெயர்களைக் கொண்ட பல இனத்தவர்கள் அக் காலத்தில் ஆங்காங்கே வாழ்ந்திருந்தனர், இவற்றுக்கெல்லாம் எழுத்து மூலமான ஆதாரங்கள் இல்லாமையால், செவிவழி யறிவாய் நின்று தேய்ந்திற்றன.
இவ்வாறு மங்கி மறைந்த வரலாறுகள் பல அவற்றுள் பண்டாரவன்னியன்" அரியாத்தை போன்ற வரலாறுகளினாலே சில சில
e
பெரியர்களின் பெயர்களை நாம் காண முடிகிறது. அதுபோலவே "நந்தியுடையார்" என்று வரலாற்றின் மூலம், நந்தியுடையார், நந்திமகள், முத்து ஐயன் வன்னியன்,
107

Page 63
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் குட்டி வன்னியன், பூதன், பூதப்படைகள் என்ற உண்மை வரலாறுகளையும், நந்தி வெளியும் நாம் கண்டறியவும் கேட்டறியவும் வாய்ப்பை உண்டாக்கிய பெருமை அருணா செல்லத்துரையவர்களையே சார்ந்ததாகும். இன்றும் “உடையார்" என்ற சிறப்புப் பெயருக்கு வேறுமோர் காரணமும் உண்டு. யாதெனின் நம்மூர்களில் நடைபெறும் கிராமிய வழிபாட்டு முறையில் கோவில்களில் மடை பரப்பிப் பொங்கிப் பூசை செய்பவர்களைப் பூசாரியார் என்றும், வண்ணக்கர் என்றும் கட்டாடி உடையார் என்றும் சொல்வது மரபு. கட்டாடி உடையார் என்பவர் பொங்கற் பூசை முடிந்ததும் தெய்வீகக் கலை கொண்டு நின்றாடிப் பல நன்மை, தீமைகள், நாட்டுக்கோ, தனிப்பட்ட ஒருவருக்கோ எடுத்துச் சொல்வார். இதனையே“கட்டுச் சொல்லுதல்" என்பதும் இந் நாட்டு வழக்கம். இதனாலேயே இவர்களைக் "கட்டாடி உடையார்" என்று கூறுவர்.
வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவிலில் இன்றும் உடையார் கத்தலையைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக நின்று பரம்பரை, பரம்பரையாகப் பொங்கல் மடை செய்வது நாம் நினைவு கூர வேண்டிய ஒன்றாகும். இந்த முறையிலே எங்கள் நந்தி உடையாரும், கண்ணகையம்மன் கோவில் கட்டாடி உடையாராக இருந்தாரென்பதை அருணா செல்லத்துரையவர்களின் நாடக நூல் 47ம் பக்கத்தில் நந்தியுடையார் கூற்றாக “முத்து ஐயன் வன்னிபத்தை வளந்து நேரும் நேரத்தில் பார்த்தேன். கோயிலடியில் நின்றார். பேசமுடியவில்லை. பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டேன்" என்னும் வசனத்தின மூலமாகச் சுருக்கமான முறையில் எடுத்துக் காட்டியதிலிருந்து நாம் நன்றாக அறிய முடிகிறது.
மேலும் இந்த நாடக நூலில் நாம் காணக்கூடிய பழமைக் காலச் சிறப்பம்சங்கள் ஒன்று உடையார் பரம்பரை. இவர்கள் தம்மிலும் மிகவுயர்ந்த செல்வம் செல்வாக்குடையவர்களாயிருப்பினும், அவர்களே தேடிவந்தபோதும். தங்களுடைய சுற்றத்தை விட்டு வெளியே திருமண உறவு முறைகளைச் செய்ய மறுத்து வாழ்ந்தார்கள். நீதியோடும். தெய்வ நம்பிக்கையோடும். தவறாத கற்பு ஒழுக்கங்களோடும் பெரும்பாலும் வாழ்ந்தனர். ஒருசிலர் காக்கை வன்னியன் குட்டிவன்னியன் போன்ற சுயநல வாதிகள், பல துரோகங்களைச் செய்வதும் அக் காலத்தும் இருந்திருக்கிறது. நந்திமகளின் வீராவேசமும், கற்பின் மகிமையுமே, குட்டி வன்னியனைக் காட்டிக் கொடுத்து. நாடு கடத்தியதுமல்லாமல். முத்து ஐயனின் அரச சபையிலே பிரதம ஆலோசகராகவும் மேன்மைப் படுத்தியது எனலாம். நந்தி உடையாரின் சிறப்பை முன்னிட்டே நந்தி வெளியென்ற பெயரும் நந்திமகள் உடைச்சியாரை நினைவூட்டும் வகையிலே "நந்தினி" "நந்தாதேவி" என்ற பெயர்கள் இன்றும் வழங்குகின்றன வென்றால் மிகையாகது. முத்துஐய வன்னியனின் புகழை எடுத்துக் காட்டுவது முத்து ஐயன் கட்டுக்குளமேயாகும்.
108

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இவற்றை எல்லாம் புதையல் எடுத்தது போலப் புதைந்திருந்த உண்மைகளை எல்லாம் ஆராய்ந்தறிந்து புரட்டி நாடகவடிவில் தந்த அருணா செல்லத்துரை அவர்களின் தொண்டு மென்மேலும் வளர்ச்சியடை வேண்டுமென வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
வணக்கம்
முள்ளியவளை அரியான் பொய்கை 30.03.1997 கை.செல்லத்துரை
(20.04.1997 தினகரன் பத்திரிகையில் இக் கட்டுரை வெளிவந்தது அகவிசேகரன் தமிழ்மணி அரியான்பொய்கை கை. செல்லத்துரை அவர்களே "வேழம் படுத்த விரங்கனை" நாட்டுக் கூத்தை எழுதியவர்)
அருணா செல்லத்துரையின் “நந்தி உடையார்" நாடக விமர்சனம் முல்லைமணி.
வன்னிப் பிரதேசத்தில் நிலவும் கர்ண பரம்பரைக் கதையொன்றை ஆதாரமாகக் கொண்டது. திரு.அருணா செல்லத்துரை எழுதிய'நந்தி உடையார்” என்னும் வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் இதுவரை வேறெவரும் கையாளாத கதைக் கருவை முதல் முறையாக நாடக ஆக்கத்திற்குப் பயன்படுத்தியிருப்பது சிறப்பம்சமாகும்.
குளக்கோட்டன் மரபில் உதித்த முத்துஜயன் வன்னிபத்திற்கும் நந்தி உடையாருக்குமிடையே ஏற்பட்ட தகராறு ஒன்றைத் தனது சூழ்ச்சியினால் பூதாகாரமாக்கிவிடும் குட்டிவன்னியன், பூதன் தலைமையில் பூதங்களைக் கொண்டு குளத்தைக் கட்டுவித்துவிட்டுக் கூலி கொடாமலே வஞ்சனைசெய்து பூதங்களைத் துரத்திவிடும் நிகழ்ச்சி, வன்னி நாட்டார் பாடல்களாகிய குளக்கோட்டன் சிந்து, முருகையன் சிந்து, பண்டிப் பள்ளு, கோலாட்ட கும்மிப் பாடல்கள், ஆற்றைமறித்தான் குளத்தை மறிந்தான் கார்த்திகை மாதத்துக் கர்க்கடகத்தை மறிக்க முடியுமா? என முல்லைத்தீவுப் பிரதேசத்தில் வழங்கி வரும் முதுமொழித் தொடர் - என்பன நாடகக் கதையைப் பின்னுவதற்கு பயன்படுத்தில் நிகழ்ச்சிகளாகும். ج۔ رداء ’’ ۔
109

Page 64
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் கர்ணபரம்பரைக் கதையுடன் கற்பனைச் சம்பவங்களையும் கலந்து கதை அமைக்கப்பட்டுள்ளது. பூதங்கள் காலைக் கஞ்சிக்கு கந்தளாய்க் குளத்தை கட்டின" எனக் கதையொன்று வழங்கிவருகின்றது. இதனையே முத்தையன் கட்டுக் குளம் கட்டும் பணியுடன் தொடர்புபடுத்தியுள்ளார் நாடக ஆசிரியர். குளம் கட்டும் வேலைக்குப் பொறுப்பாக முத்து ஐய வன்னிபத்தின் ஆலோசகரான குட்டிவன்னியன் நியமிக்கப்படுகின்றார். பூதங்கள் பூதன் என்பவனின் தலைமையில் குளத்தைக் கட்டுகின்றன. குட்டிவன்னியனின் தந்திரத்தால் கூலி பெறாமலே ஏமாற்றப்படுகின்றன. இதனால் மனமுடைந்த பூதன் குளத்தில் வீழ்ந்து மரணம் அடைகின்றான்.
நந்தி உடையாரின் மகளான நந்திமகளை வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயத்தில் கண்டு, அவளைத் திருமணம் செய்ய விரும்பிய முத்து ஐயன் மணம் பேசுவதற்காக சோதிடர் இராமலிங்கத்தை நந்தியுடையரிடம் அனுப்புகின்றான். முத்து ஐயனின் ஜாதகத்திலுள்ள குற்றத்தைக் காரணம் காட்டி மறுத்துவிடுகின்றார் நந்தி உடையார் ஏற்கனவே நந்தி மகளைத் திருமணம் செய்ய விரும்பிநந்தி உடையார் மறுத்தமையால் ஏமாற்றமடைந்திருந்த குட்டி வன்னியன் வஞ்சம் தீர்க்கச் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தார் . பெண் கொடுக்க மறுதத்தால் அவமானமும் சினமும் அடைந்திருக்கும் முத்து ஐயனுக்கு மேலும் தூபமிடுவதன் மூலம் வஞ்சம் தீர்ப்பதை குட்டிவன்னியனிடம் காணலாம். நந்தி உடையாரின் வயலுக்கு முத்தைரையன் கட்டுக் குளத்திலிருந்து ஒரு சொட்டு நீரேனும் செல்லாது தடுப்பதில் குட்டிவன்னியன் வெற்றியடைகிறான். ஆற்றையும் குளத்தையும் மறித்தாலும் கார்த்திகை மாதக் கர்க்கடக ராசியில் பெய்யும் பெருமழையை எவராலும் மறிக்க முடியாது என்பது நந்தி உடையாரின் நம்பிக்கையாகும். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. மழைபெய்து நெல் விளைகின்றது பரத்தை முறையில் அருவி வெட்டும் நடைபெறுகின்றது. இதனால் சற்று ஏமாற்றமடைந்தாலும் முத்து ஐயன் வன்னியன் நந்தி உடையாருக்கு எதிராகத் தீமை செய்ய முனையவில்லை ஆனால் குட்டி வன்னியன் முத்து ஐயனுக்குத் தெரியாமலேயே குளத்தை வெட்டி விடுகிறான். இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் நந்தி உடையாரின் நெற்கதிர்களை அள்ளிச் சென்று பெருங்கடலில் சேர்க்கிறது மனம் உடைந்த நந்தி உடையார் திடீரென மரணமடைகிறார்.
நந்திமகள் முத்து ஐயனின் அரசவைக்குச் சென்று நீதிக்காகப் போராடுகின்றாள். குட்டி வன்னியனின் சூழ்ச்சி அம்பலமாகின்றது. அவன் பதவிநீக்கம் செய்யப்படுகின்றான். நந்திமகள் அரசவை ஆலோசகராக நியமிக்கப்படுகின்றாள்.
பதின்மூன்று காட்சிகளைக் கொண்ட இந்த நாடகத்தில் நந்தி உடையார், முத்து ஐயன் வன்னிபம், நந்திமகள் ஆகியோர் பிரதான பாத்திரங்களாவர்.
110

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் குட்டிவன்னியன். சோதிடர், அமைச்சர் ஆகியோர் துணைப் பாத்திரங்கள் பறையறைவோன். பூதன், பூதங்கள் ஆகியவை சிறுபாத்திரங்கள். பிரதான பாத்திரங்கள் முழுமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. வன்னிபத்திற்குக் கீழ் பதவி வகிக்கும் நந்தி உடையார் வன்னிபத்துக்கே சவால் விடும் முறையில் படைக்கப்பட்டுள்ளார். அநீதிக்கு அடிபணிய மறுக்கும் தன்மானமுள்ள ஒரு பாத்திரம் இது. நந்தி மகள் அரசவையில் நீதிகேட்பது பாண்டியன் அரசவையில் கண்ணகி நீதிக்காகப் போராடுவதை ஒத்திருக்கின்றது.
“குட்டி வன்னியரே, எனது கண்களை நன்றாகப் பாரும்" 'வன்னிபமே, இந்தப் பெண்ணின் கண்கள் என்னை நெருப்பாய்த் தீய்க்கின்றன"
அந்தக் கணல் தெறிக்கும் கண்களால் என்னைப் பார்க்காதே, நான் எரிந்து விடுவேன்" என்பன போன்ற வசனங்கள் நந்திமகளின் ஆவேசத்தைக் காட்டுகின்றன.
இயல்பாக நற்பண்புகளும் சேவை மனப்பான்மையும் வாய்ந்த முத்து ஐயன் வன்னிபம் நந்தி உடையார் பெண்தர மறுத்து அவமானப்படுத்தியதால் சினமடைந்தபோதும் நேரடியாகத் தீமைவிளைக்கும் நோக்கம் அற்றவராகவே சித்தரிக்கப்படுகின்றார். குட்டிவன்னியனின் சூழ்ச்சிக்குப் பலியானதால் நீதியினின்றும் பிறழ்ந்தாலும் இறுதியில் திருந்தி விடுகின்றார்.
துணைப்பாத்திரங்களும். சிறுபாத்திரங்களும் பிரதான பாத்திரங்களின் குண இயல்புகளைத் துலக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சிறுபாத்திரமான பூதன், தனது மேற்பார்வையில் குளத்தைக் கட்டி முடித்த பூதங்கள் ஏமாற்றப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனைாய் தனக்குக் கிடைத்த சன்மானத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்துத் தற்கொலை செய்வது அப்பாத்திரத்தின் பண்பினை உயர்த்திக் காட்டுகின்றது. பூதன் குளத்தில் விழுந்து தற்கொலை செய்ததால் முத்தரையன் கட்டுக் குளத்து நீரை நெடுங்காலம் முழுமையாகப் பயன்படுத்த முடியாமற்போகலாம் என்ற அவன் இறுதி வார்த்தை மெய்யாகிப் போய்விட்டது.
ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்புக் குறிப்புகள் இணைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். பல நாடகங்களைத் தயாரித்த அனுபவம் நாடக ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. நாடகத்தை மேடையேற்ற விரும்புவோருக்கு இக்குறிப்புக்கள் பேருதவியாக இருக்கும். சிலகாட்சிகள் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குமேல் மேடையில் நிகழ்த்தக்கூடியதாக இல்லை. அடிக்கடி திரையினை மூடித்திறப்பதனால் பார்வையாளருக்கு அலுப்புத்தட்டவே செய்யும். ஒளியமைப்பைப் பயன்படுத்தி காட்சிகளை இடையீடின்றி நிகழ்த்திக் காட்டுவதன் மூலமே இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
111

Page 65
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் வன்னிப் பிரதேசத்திற்கே உரித்தான நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் வழிபாட்டு முறைகளையும், நீர்ப்பாசன முறைகளையும் நாடகத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்திருப்பது பாராட்டக்கூடிய முயற்சியாகும்.
கருத்து நிலையில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. முத்தரையன் என்பவன் (இதுவே சரியான பெயர்) சோழர் ஆட்சிக்காலத்தில் வடபகுதி நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருந்த ஒரு குறுநிலமன்னன். சோழர் காலத்தில் (993-1070) அடங்காப்பற்றில் வன்னி அரசுகள் எழுச்சி பெற்றதற்குச் சான்றுகள் இல்லை எனவே முத்தரையனை வன்னிபம் எனக் குறிப்பிடுவது பொருத்தமானதா என்பது ஆய்வு செய்யப்படவேண்டியது.
வன்னிப்பிரதேசத்தின் அடையாளமாகத் திகழும் ஆலயங்கள் வழிபாட்டு முறைகள் என்பன, பொருத்தமான முறையில் நாடகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் வழிபாட்டு முறைகளுக்குக் கூடிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர், முள்ளியவளைக் காட்டு விநாயகர், குமுழமுனை கொட்டுக்கிணற்றடிப் பிள்ளையார் என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெய்வங்கள் ஆங்காங்கு குறிப்பிடப்படுகின்றன.
நாடக அமைப்பில் நவீன உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பூதங்கள் குளத்தைக்கட்டும் நிகழ்ச்சி பொருத்தமான பாடல் தருவுடனும் பாடலுடனும் நடைபெறுவதாகக் காட்டப்படுகின்றது. சில காட்சிகள் உரையாடலை விடச் செயற்பாட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. வானொலி, ரூபவாஹினி நாடகத் தயாரிப்பின் செல்வாக்கு நாடகம் முழுவதும் பரவிக் காணப்படுகின்றது. இதனால் மேடை நாடகத்திற்குரிய பண்பு சற்றுக் குறைவாகவே காணப்படுகின்றது. நாடகம் ஒரு அரங்கக் கலை. மேடையில் நிகழ்த்திக் காட்டும்போது கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் விருந்தாக அமைய வேண்டும். காட்சிகள் ஆகக்குறைந்தது பத்து நிமிடமேனும் கொண்டதாக அமைதலே சிறப்புடையது. v
சிறு சிறு குறைபாடுகள் இருந்தபோதும் முழுமையாக நோக்குமிடத்து 'நந்தி உடையார் ஒரு வெற்றிப் படைப்பாகும். இது ஒரு கலைப்படைப்பாக மட்டுமன்றி வரலாற்று ஆவணமாகவும் திகழ்கின்றது. பண்டாரவன்னியன், வேழம்படுத்த வீராங்கனை என்னும் வரலாற்று நாடக வரிசையிலே வைத்தெண்ணக் கூடிய இந்நாடகத்தைப் படைத்தளித்த அருணா செல்லத்துரை அவர்கள் பாராட்டிற்குரியவர் - முல்லைமணி (26-10-1997 தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்தது)
112

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் "நந்தி உடையார்" நாடகம் பற்றி தமிழ்மணி அகளங்கன் எழுதியது
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், செய்தி அறிவிப்பாளராகவும் கடமையாற்றும் அருணா செல்லத்துரை பல மெல்லிசைப் பாடல்களை வானொலியிலும், தொலைக் காட்சியிலும் தந்தவர். அவரது மெல்லிசைப் பாடல்கள் ஒலித்தென்றல் - 1 என்ற ஒலிப்பேழையாகவும், “அருணா செல்லத்துரையின் மெல்லிசைப்பாடல்கள்“ என்ற பெயரில் நூலாகவும் வெளிவந்துள்ளன.
பல வானொலி நாடகங்களையும், தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதியும், இயக்கியும். நடித்தும் உள்ளார். “ வீடு" என்ற நாடகத்தொகுப்பாக அவற்றை வெளியிட்டும் உள்ளார்.
ஆனை கட்டிய அரியாத்தையின் கதையை” வேழம்படுத்த வீராங்கனை" என்ற பெயரில் முல்லைமோடி நாட்டுக் கூத்தாகத் தயாரித்து, வவுனியாவின் பிரதேச இலக்கிய விழாவிலும், கொழும்பில் இந்து கலாசார அமைச்சின் சாகித்திய விழாவிலும். மற்றும் பல இடங்களிலும் மேடையேற்றியதோடு அதனை ஒளிப்பேழையாகவும் வெளியிட்டு வெற்றி கண்டவர்.
1974ல் இலங்கை கலைக் கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் முல்லைத்தீவுப் பிரதேச மரபுவழி வட்டக்களரி நாட்டுக் கூத்தான “ கோவலன் கூத்தை மேடைக்காகத் தயாரித்து மேடையேற்றி முதற்பரிசைப் பெற்றவர். 1992ல் அகில இலங்கை சபரிமலை பூரீசாஸ்தா பீடத்தினால் "கலா விநோதன்" என்ற பட்டம் வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டவர்.
1994ல் இந்து கலாசார சமய அலுவல்கள் திணைக்களத்தினால் “ தொடர்பியல் வித்தகர்" என்ற பட்டம் வழங்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டவர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது படைப்புகளில், வன்னியின் மண்வாசனை மிகுதியாகவே வீசுவதைக் காணலாம். இவரது “ வேழம்படுத்த வீராங்கனையும்" "கோவலன் கூத்தும்" அப்பிரதேசத்தின் பாரம்பரியப் பெருமைகளையும், கலைச் சிறப்புகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் காட்டி நின்றன.
"வேழம்படுத்த வீராங்கனை" என்ற கூத்தின் மூலம் வடமோடி, தென்மோடி என்ற கூத்துவகைகளோடு “முல்லைமோடி" என்ற ஒரு கூத்து
113

Page 66
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் வகையையும் அறிமுகப்படுத்தி வன்னிப்பிரதேசத்தின் பாரம்பரியக் கூத்து ஏனைய பிரதேசக் கூத்துக்களிலிருந்து வேறுபட்டது என்பதை நுட்பமாக காட்டியுள்ளார்.
இத்தகைய சாதனையாளரான அருணா செல்லத்துரையின் “ நந்தி உடையார்" நாடகம் நூலாக வெளிவந்துள்ளது.
வவுனியாவில் நடைபெறவிருந்த வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மேடையேற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்ட இந்நாடகம், அவ்விழா பின் போடப்பட்டதால்,வுவுனியா நகரசபையின் மாதாந்தப் பெளர்ணமிக் கலை விழாவில் மேடையேற்றப்பட்டுப் பெரும் பாராட்டினைப் பெற்றது.
நாடகத் தன்மையும் கூத்துத் தன்மையும் கொண்டமைந்த இந்நாடகம் இப்போது அழகிய நூலாக வெளிவந்துள்ளது.
வன்னிப் பிரதேசத்தைப் பற்றிய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை அவரால் எழுதப்பட்டு நூலின் முன்பகுதியை அலங்கரிக்கின்றது. ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இப்பகுதி அரிய விருந்தாக அமைந்துள்ளது.
நாடகத்தை வாசிக்கும் போதே நாடகம் மனத்திரையில் ஒடிக் கொண்டிருக்கும் உணர்வு தோன்றும்படியாக நாடகம் சுறுசுறுப்பாகவே செல்கிறது. வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கல், காட்டா விநாயகர் கோவில், ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈசுவரர் கோயில் முதலான பிரபலமான கோயில்களும் ஆனைகட்டிய அரியாத்தையின் பெருமையும் ஆங்காங்கு இந்நூலில் பேசப்படுகின்றன.
ஒட்டுசுட்டானில் இருந்து அரசாண்ட முத்தையன், வற்றாப்பளையிலிருந்து அரசாண்ட நந்தி உடையாரின் மகள் நந்தி மகளைத் திருமணஞ் செய்ய விரும்புவதும், அது கைகூடாததால் விளைந்த விபரீதமுமே நந்தி உடையாரின் மூலக்கதையாக இருப்பினும், அதனை அவர் சொல்லியிருக்கும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.
முத்தையன், சோதிடர் இராமலிங்கம் மூலம், நந்தி உடையாரின் மகளைத் தான் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லி அனுப்புகிறான். தனது மகளை முத்தையனுக்கு கொடுக்க விரும்பாத நந்தி உடையார், முத்தையனுக்கு எட்டில் செவ்வாய் என்றும், தனது மகளுக்கு செவ்வாய் தோசம் இல்லை என்றும் காரணம் கூறி மறுத்துவிடுகிறான்.
முத்தையனுக்கு நந்தி உடையார் மேல் கோபம் ஏற்படுகிறது. முத்தையன் சபையில் ஒருவானக, முத்தையனுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருக்கும்
114

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
குட்டி வன்னியன். ஏற்கனவே நந்திமகளைத் தான் திருமணஞ் செய்ய விரும்பிப் பெண்கேட்டு மறுத்த காரணத்தால். அதற்கு பழிவாங்கக் காத்து முத்தையனுக்கு நந்தி உடையார் மேல் ஏற்பட்ட கோபநெருப்புக்கு நெய்வார்த்து மூட்டி விடுகிறான். இவனே பல சூழ்ச்சிகளையும் செய்கிறான்.
முத்தையன், குட்டிவன்னியனின் மேற்பார்வையில் பேராற்றை மறித்துப் பெருங்குளம் கட்டி "முத்தையன்கட்டுக் குளம்" என அதற்குப் பெயருமிட்டு, அக் குளத்தின் கீழுள்ள வயற் சொந்தக்காரரிடம் நீர் வரி அறவிடுகிறான். நந்தி உடையாரின் நந்தி வெளியும் முத்தையன்கட்டுக் குளத்தின் கீழ் வருகின்றது. ஆனால் குளத்துத் தண்ணிர் அவரது வயல்களுக்கு நேரடியாகப் பாய்வதில்லை.
கசிந்து போகும் நீர் பள்ள நிலமான நந்தி வெளிக்குச் செல்வதால் வயல் விளைகிறது. மானாவாரி (வானவாரி) யாகத்தான் அவர் வயல் செய்கிறார். அப்படியிருக்க முத்தையன் நந்தி உடையாரும் நீர் வரி கட்ட வேண்டும் என்று கட்டளையிடுகிறான்.
வரி கட்ட மறுக்கும் நந்தி உடையார் அதற்குச் சொல்லும் காரணம், வன்னியின் மாவீரன் பண்டாரவன்னியனையும், தமிழகத்து வீரபாண்டிய கட்டப் பொம்மனையும் நினைவுக்கு கொண்டு வருகிறது.
"வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் வரி" என்று மார்தட்டிய அம்மாவீரர்கள் போலவே நந்தி உடையாரும் பேசுகிறார்.
“தராத தண்ணீருக்கு யார்தான் வரி கொடுப்பார்கள். மழையையும் வயல்களிலிருந்து கசிந்து வருந் தண்ணிரையும் நம்பியே நான் விவசாயம் செய்கிறேன்" என்று சோதிடர் இராமலிங்கத்திடம் கூறுகிறார் நந்தி உடையார். “குளத்திலிருந்து எந்த வாய்க்கால் மூலமும், வயல்மூலமும் நீர் சிறிதளவும் கசிந்து வராமல் கட்டி விடுவார்களாம் முத்தையனின் ஆட்கள் என்று சோதிடர் கூறுகிறார்.
கோபம் கொண்ட நந்தி உடையார் “ ஆத்தை மறிக்கலாம் குளத்தை மறிக்கலாம். ஆனால் கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தை யாராலும் மறிக்க முடியாது" என்கிறார்.
கார்த்திகை மாதத்தில் கர்க்கடகராசியில் சந்திரன் நிற்கும் காலங்களாகிய புனர்பூசம் 4ம் பாதம், பூசம். ஆயில்யம் ஆகிய நட்சத்திர நாட்களில் பெருமழை பெய்வது வழக்கம். விவசாயிகளின் மிக நம்பிக்கைக்குரிய மழைநாட்கள் அவையே.
இதையே “கார்த்திகை மாதத்துக் கர்க்கடகம் என்று பொதுவாகச் சொல்வர்"
115

Page 67
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் இந்த நந்தி உடையார் நாடகத்தினை மிகச்சிறந்த வயற்பாரம்பரிய நாடகமாக்கி இருப்பதே இப் பழமொழிதான் எனலாம்.
நந்தி உடையாரின் வயல் நன்றாக விளைந்தது. பரத்தை போட்டு அருவி வெட்டி உப்பட்டிகள் கிடக்கும் போது குட்டி வன்னியன் முத்தையன் கட்டுக்குளத்தையே வெட்டி விடுகிறான். நந்தி வெளி முழுவதும் வெள்ளம் பரவி உப்பட்டிகளை அள்ளிக் கொண்டு போக, நந்தியுடையார் வயலிலே சென்று உப்பட்டிகளை அள்ளி வயல் வரம்பிலே போட முயல்கிறார். மனமொடிந்து மரணமடைந்து போகிறார். இந்தக் காட்சி இந்நாடகத்தில் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியாக சிறப்புற அமைந்துள்ளது.
நந்தி மகள் விபரமறிந்து முத்தையனின் அரண்மனை நோக்கி வந்து வாதாடி, குட்டி வன்னியனின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துகிறாள்.
முத்தையன் கட்டுக் குளத்தை, முத்தையன், பூதங்களைக் கொண்டு கட்டுவித்தான் என்ற கர்ண பரம்பரைக் கதையையும், பூதங்களின் தலைவனுக்கு பூதன் வயல்வெளியைப் பரிசாகக் கொடுத்ததையும் பொருத்தமாக காட்டியிருக்கிறார்.
வன்னிப்பிரதேசத்தின் வயல்களில் பாவிக்கப்படும் பல சொற்களை மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தி, வயலுக்குள்ளே வாசகர்களை அழைத்துச் செல்லும் திறம் பெரிதும் பாராட்டத்தக்கது.
இந்நாடகத்தில் கண்ணகையம்மன் விருத்தம், அரிவு வெட்டுப்பாடல், பன்றிப்பள்ளு. முருகையன் சிந்து, கும்மிப்பாடல், கோலாட்டப்பாடல் என வன்னியின் பாரம்பரியப் பாடல்களை மிகவும் தாராளமாகக் கையாண்டுள்ளார்.
வன்னிப் பிரதேசத்தின் வயற் பண்பாட்டுக் கோலங்களையும், மறைந்து போகின்ற நாட்டார் பாடல்களையும், நாடோடிக் கதைகளையும், கலை இலக்கிய வடிவில் சிறிது சிறிதாக வெளிக் கொணரத் துடிக்கும் அருணா செல்லத்துரையின் தவிப்பு இந்த நந்தி உடையாரில் முழுமையாகத் தெரிகிறது.
நாடகம், நாட்டுக்கூத்து, கவிதை, சிறுகதை, நடிப்பு, தொலைக்காட்சி. வானொலித்துறை எனப் பல்துறையிலும் ஆற்றல் பெற்றுள்ள அருணா செல்லத்துரை தனது இவ்வாற்றல்களின் கூட்டுக் கலவையாகவே இந்த நாடகத்தை தந்துள்ளார்.
"தமிழ்மணி" அகளங்கன் 13.04.1997 வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது.
116

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
சாகித்திய மண்டல விருது:
1996 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நந்தியுடையார் நாடக நூலுக்கு 97 ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது.
அரச இலக்கிய விழா - 1997 's
தி.ெ அடுணா செல்லத்துரை
Cடுதிட்ட
wis “ré志担 bl-ewn l-au-"r" in gylis
1906 ჟგut ஆண்டுக்கான
f%rflés துறையில் அாச இலக்கிய விருது வழங்கப்பட்டதென உறுதிப்படுத்துகிறோம்.
تشکیلہ بھی تھی؟
ta·n'as·
3w'Waris i 3-Yaseo i Lst ahi
117

Page 68
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
நந்தி உடையார் (வானொலி நாடகம்)
நந்தி உடையார் நாடகம் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப்பட்டது. இந்த நாடகத்தில் இ.தயானந்தா, ஆர்.விக்டர், கே.சந்திரசேகரன், கமலினி செல்வராஜன், கே.ஜயகிருஷ்ணராஜா, முருகேசு ரவீந்திரன், அருணா செல்லத்துரை வி.ரி. ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். பாடல்களை விவிதகலா வினோதன், எஸ்.கே.பரராஜசிங்கம், திருமதி வனஜா பூரீநிவாசன், கே. ஜெயகிருஷ்ணா, வாசுகி வைரவநாதன், பி. அபர்ணாசுதன், சுதர்ஷிணி பொன்னையா ஆகியோர் பாடியிருந்தனர். இந் நாடகத்தை நெறியாள்கை செய்தவர் அருணா செல்லத்துரை, இராஜபுத்திரன் யோகராஜன் தயாரிப்பு செய்திருந்தார். 26-04-97ல் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
p LGTLIT Gobg5I: UNIDA AWARD
நந்தி உடையார் நாடகப் பிரதி சிறந்த வானொலி நாடகப் பிரதியாகத தெரிவு செய்யப்பட்டு வானொலி, தொலைக்காட்சிக்கான 1996ம் ஆண்டுக்கான உயர் விருதான "உண்டா" (Unda) விருது வழங்கப்பட்டது
Yet another Gold Award goes to a excellent radio drama that reiterates the fact that good deeds will eventually be victorious. The UNDA ABHINANDANA Gold is awarded to the writer of the drama "Nanthy Yudaiyaar" - - - - - - - - - Aruna Selladurai for the excellent Script.
118
 
 

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
நந்தி உடையார்
ஒலிப்பேழை/சீடி இசைத்தட்டு
நந்தி உடையார் வன்னிப் பாரம்பரிய நாடகத்தை ஒலிப்பேழையாகவும் சீடி இசைத் தட்டாகவும் தயாரித்து வெளியிட்டேன். ஒலிப்பேழையாகத் தயாரிக்கப்பட்ட நாடகத்தில் பிரபல அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் நந்தியுடையாராகவும், கமலினி செல்வராஜன் நந்தி மகளாகவும், கே.சந்திரசேகரன் முத்து ஐயனாகவும், ஆர்.விக்டர் குட்டி வன்னியனாகவும், அருணா செல்லத்துரை பூதனாகவும், முருகேசு ரவீந்திரன் சோதிடராகவும், ரி. ராஜேந்திரா அமைச்சராகவும் நடித்திருந்தனர். இதற்கான பாடல்களை விவிதகலா விநோதன் எஸ்.கே.பரராஜசிங்கம், திருமதி வனஜா பூரீநிவாசன் குழுவினர் பாடியுள்ளனர்.
A.V.A.Presents 3 தேசிய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற அருணா செல்லத்துரையின் 'நந்தி உடையார்" வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் பங்குபற்றிபோர்: நந்தி உடையார் : பி.எச். அப்துல் ஹசீட் நந்திமகள் : காவிரி செல்வராசன் முத்துவன்னியன்: கே. சந்திரசேகரன் குட்டிவன்னியன் : ஆர். விக்ரர்
பூதன் அருளா செய்வத்துரை சோதிடர் : முருகேசு ரவிந்திரன் அமைச்சர் : a firrogant குடிமகன் : இராஜபுத்திரன் யோகராஜன்
முரசு அறிவிப்பு : அருணா செல்லத்துரை
ராக் கேரட்னம் பாடியோர்கள் : விவித கலாவிநோதன்-எஸ். கே.பரராஜசிங்கம் வனஜா சிறீனிவாசன் கே. ஜெயகிருஷ்னா ஆர். பி. அபர்னாகதன் வாக்கி எவரவநாதன் aspissaf Qutsi Ogutury தயாரிப்பு" நெறியாள்கை அருணா செல்லத்துரை
E. : »,й f?илийлі ынтығйт айт. 4
" ''' ʻ ʼ '7
119

Page 69
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
A.V.A.Presents Cld 1
NANTHI UDATYAR
Drama (7arrall) Duration 73mts, 35 Sec.)
A.V.A.Presents ()
Tamil Drama
Produced & Di d NANTHI påYAR :::::
A Seidun-i servs- "YYY 78.8 تنجز جة
EET
தயுசிப்பு-தெதியாள்கை: அருணவு செல்லத்துரை
தேயாகித்திய மண்டலப் பரிசுபெற்ற அருனால்ெலத்துரையின் "நத்தி உடையார்" வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம்
தேசிய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற அருணா செல்லத்துரையின்
"நந்தி உடையார்"
6u6ăr6orfod cuarrabudfodau
வரலாற்று நாடகம் glišč
நந்தியுடையார் நாடகமே முதன்முதலில் ஒலிப்பேழையாகவும் சிடி இசைத்தட்டாகவும் வெளியிடப்பட்ட வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகமாகும். இந்த ஒலிப்பேழை சீடி இசைத்தட்டு பற்றி பத்திரிகையாசிரியர் சூரியகுமாரி பஞ்சநாதன், தமிழருவி த. சிவகுமாரன், கந்தையா பூரீ கணேசன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளை இங்கு சேர்த்துள்ளேன்.
நந்தி உடையார் (ஒலிப்பேழை நாடகம்) ஓர் கண்ணோட்டம் - சூரியகுமாரி பஞ்சநாதன்
தேசிய சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற அருணா செல்லத்துரையின் நந்தி உடையார் நாடகம் ஒலிப்பேழையாகவும் சிடி இசைத்தட்டாகவும் அண்மையில் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர்,தயாரிப்பாளர், நடிகர்,தொழில்நுட்ப வல்லுனர் என்ற நான்கு அம்சங்களும் இணையப் பெற்றவர் என கலாநிதி சி.மெளனகுருவினால் விதந்துரைக்கப்பெற்ற வானொலி அறிவிப்பாளரும், ரூபவாஹினி செய்தித் தயாரிப்பாளருமான அருணா செல்லத்துரையினால் எழுத்துருப் பெற்ற வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகமான நந்தி உடையாரின் இன்றைய முக்கியத்துவம் என்ன என்பது முக்கியமான வினாவாகும்.
இருபத்தோராம் நூற்றாண்டின் அண்மிப்பும் சர்வதேசியத்தை நோக்கிய எமது நகர்வும் தவிர்க்க முடியாதவை. இன்று நாம், எமது பாரம்பரிய கலை
12O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இலக்கியங்களையும், வரலாற்றின் சுவடுகளையும் மீளுருவாக்கம் செய்ய பலவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இது இலங்கை வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல நாகரிகத்தையும் பண்பாட்டையும் பேண முனைகின்ற அனைத்து சமூகக் குழுமங்களுக்கும் பொருத்தமானதாகும்.
அவ்வகையில் தமிழ்நாட்டில் வீரபாண்டிய கட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் நாடகமாகவும் திரைப்படமாகவும் பிரசித்தி பெற்றதும் அதே வேளை வரலாற்றுக் கண்கொண்டு நோக்குவோர்க்கு இது ஒரு சமூகப் பதிவாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்திலும், பண்டார வன்னியன் கதை, சங்கிலியன் கதை என்பன வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்துவனவாகும். இதன் தொடர்ச்சியாக வரலாற்றுக் குறிப்புகளின் துணையுடன் வன்னிப்பாரம்பரிய வரலாற்றுநாடகமான நந்திஉடையார் அருணா செல்லத்துரையின் கைவண்ணத்தில் உருவாகி இன்று அவரது தயாரிப்பினுாடாகவும் நெறியாள்கையினூடாகவும் ஒலிப்பேழை, சிடி இசைத்தட்டு வடிவில் வெளி வருகிறது.
தகவல் தொடர்பியலில் ஈமெயில் (EMAIL), இன்டநெற் (INTERNET) என்பவற்றின் வருகை காரணமாக உலகமே ஒரு கிராமமாகக் குறுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பவியலின் அரிய கண்டுபிடிப்புக்களும், அதனடியான தொடர்பாடல்களும், தமிழை எங்கோ ஒரு மூலையில் கொண்டு போய்த் தள்ளிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சி காரணமாக, ஆங்கிலம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டு இன்றுவரை அதுவே சர்வதேச மொழியாக இயங்குகின்றது. அதன் தாக்கமே இன்று ஈமெயில் இலும் இன்டர்நெட்டிலும் நாம் எம்மை இணைத்துக் கொள்ள அல்லது அதன் பயனைப் பெற ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
அதேவேளை இன்று பிரெஞ்சு, அரபு, சீன மொழிகளும் தம்மை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி மேற்படி தொடர்பூடகங்களில் தம்மை நிலைநிறுத்த முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன.
நந்தி உடையாரின் முக்தியத்துவமும், இங்கு தான் முக்கியத்துவப் படுத்தப்படுகின்றது. அதாவது நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கும் தரத்திற்கும் ஏற்ப எமது பாரம்பரிய வரலாற்று நாடகமான நந்தி உடையார் ஒலிப்பேழையாகவும் முக்கியமாக சிடி இசைத்தட்டில் பிரதிபண்ணப்பட்டு வெளியிடுவதானது காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்டமையையே குறிக்கிறது.
121

Page 70
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் இதுவரை ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கியங்களைப் பொறுத்தவரையில் சிடி இசைத்தட்டில் சாதாரண மெல்லிசைப்பாடல்களே வெளிவந்துள்ளன. அருணா செல்லத்துரையின் முயற்சியானது ஒரு வரலாற்று நாடகத்தை சிடி இசைத்தட்டில் வெளிக்கொணர்ந்தமை முதல் முயற்சியாகவும் அதே வேளை இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமானதாகவும் அமைகிறது.
இன்றைய இலங்கையின் யுத்தகளமும், நந்தி உடையார் நாடகம் இடம்பெறுகின்ற முல்லைத்தீவு, புளியங்குளம் என்ற புவியியல் ரீதியான களத்தினை அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறது.
வன்னிப் பிரதேசத்தில் ஆட்சி புரிந்த குறுநில வன்னியர் மற்றும் முத்துஐயன்கட்டுக்குளம் பற்றிய வரலாற்றுச் செய்திகளுடன், வன்னிமக்களது அடிப்படைத் தொழிலான விவசாயமும், அவர்களது பாரம்பரிய வழக்கங்களான திருமண நடைமுறைகள் உதாரணமாகக் குட்டிவன்னியன் நந்தி உடையாரின் மகளான நந்திமகளைப் பெண்கேட்டுச் செல்லுதல், சோதிட நம்பிக்கைகள் அதாவது திருமணப் பொருத்தத்திற்கு செவ்வாய் தோஷம் பார்த்தல், கார்த்திகை மாதத்துக் கர்க்கடகத்தில் மழையை எதிர்பார்த்தல் போன்ற மக்களது அகம், புறம் சார்ந்த நம்பிக்கைகள் நாடக ஓட்டத்தில் வெளிப்படுகின்ற அம்சங்களாகும்.
ஏ.வி.ஏ. யின் மூன்றாவது வெளியீடான நந்தி உடையார் நாடகத்தின் ஒலிப்பேழை சிடி இசைத்தட்டில் பங்குபற்றிய கலைஞர்களில் நந்தி உடையாராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளரான பி.எச். அப்துல் ஹமீட் குறைகூற முடியாத அளவிற்குத் தனது தலைமைப் பாத்திரத்தை வெகு இயல்பாகச் செய்துள்ளார்.
வசன வடிவில் இந்நாடகம் எழுதப்பட்டுள்ளதேயாயினும், நந்தி உடையார் பாத்திரம் மட்டும், சரளமான தமிழில் யதார்த்தமாக எம்முடன் உறவாடுவது போல் இருக்கிறது.
இதற்கான சபாஷ் பி.எச்.அப்துல் ஹமீட்டையே சாரும். அவரது வல்லமையும் அனுபவமும் நந்தி உடையார் பாத்திரம் மூலம் துல்லியமாக வெளிப்பட்டு நிற்கிறது.
சிறந்த வானொலி நடிகையாக ஜனாதிபதி விருது பெற்ற கமலினி செல்வராஜன் நந்திமகள் என்கின்ற பாத்திரத்தைச் செம்மையாகச் செய்துள்ளார். இயல்பாகவே இளமை கொஞ்சும் குரல் கொண்ட கமலினி செல்வராஜன் நந்தி உடையார் காலமானபோது வீரிட்டு அழுத அழுகையும் ஒப்பாரியும் கேட்பவர்களின் மனதை நெகிழவைக்கும் தன்மை கொண்டது. முத்துவன்னியனின் அவையிலே வீரப்பெண்ணின் முழங்கலாக அவரது வார்த்தைகள் வெளி வருகின்றன.
பூதனாகவும், முரசு அறிவிப்பாளனாகவும் குரல்கொடுத்த அருணா செல்லத்துரை பூதன் பாத்திரத்தினூடு ஏமாற்று வஞ்சகத்தினால் பாதிக்கப்பட்ட
122

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் அவல உணர்வுகொண்ட பாத்திர வெளிப்பாட்டிற்கேற்ப அவரது குரலும் இசைந்து போகிறது. சோதிடராக பங்கேற்ற முருகேசு ரவீந்திரன் உளவியல் ரீதியாக மனதில் பதிகின்ற குரலினை இயல்பாகவே பெற்றுள்ளதன் காரணமாக, சோதிடர் என்ற பாத்திரம் அவருக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. அருணா செல்லத்துரை ஒவ்வொருவரது குரலிற்கும் ஏற்ப பாத்திரங்களைத் தெரிவு செய்தமை அவரின் திறமைக்குச் சாட்சியமாகும்.
பழைய வானொலிக் கலைஞரான கே.சந்திரசேகரன் முத்துவன்னியனது பாத்திரத்தை ஒரு மன்னனுக்குரிய செருக்குடனும் அதே வேளை குட்டிவன்னியனது சூழ்ச்சியால் ஏற்பட்ட பழியினை சீர்செய்வதிலும் ஒரு மனிதாபிமான பாத்திரமாகத தனது பங்கினைச் செய்துள்ளார்.
விருதுபெற்ற நாடகக் கலைஞரான ஆர்.விக்ரர் குட்டிவன்னியன் என்ற பாத்திரத்திற்கேற்ப சூழ்ச்சி, அகம்பாவம் என்பவற்றைக் குரலின் மூலமே, வெளிப்படச் செய்துள்ளார். அமைச்சர், குடிமகன் பாத்திரங்களை ஏற்ற வி.ரி.ராஜேந்திரா, இராஜபுத்திரன் யோகராஜன் மற்றும் ஏ.எம்.யேசுரட்ணம் என்போரும் பழுதறத் தமது பங்கு பற்றலினைச் செய்துள்ளனர்.
நந்தி உடையார் நாடகத்திற்குச் சிறந்த ஒலிப்பதிவும், இசையும் மெருகூட்டியுள்ளன. நாட்டார் பாடல்களை இலங்கையின் சிறந்த மெல்லிசைப் பாடகரான எஸ்.கே.பரராஜசிங்கம் மற்றும் ஏனைய வானொலிக் கலைஞர்களான வனஜா சிறீனிவாசன், கே. ஜெயகிருஷ்ணா, ஆர்.பி. அபர்ணாசுதன், வாசுகி வைரவநாதன், சுதர்ஷினி பொன்னையா என்போர் பாடியுள்ளனர். சுருதி விலகாத பாடல்கள் கிராமியச் சூழலுக்கே எம்மை அழைத்துச் செல்கின்றன.
முழுக்க முழுக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி நாடகக் கலைஞர்களாலும், சிறந்த சிரேஷ்ட பகுதிநேர வானொலி அறிவிப்பாளர்களாலும் இவ் ஒலிப்பேழை (CD) இசைத்தட்டுகள் அமைந்துள்ளதால் இதன் தரத்தை நாம் குறைத்து மட்டிட முடியாதுள்ளது.
காலத்தேவை மற்றும் சோடை போகாத கலைஞர்களால் ஆக்கப்பெற்றுள்ள இத்தொகுதியானது இத்துறையில் ஈடுபாடும் ஆற்றலும் உள்ள அருணாசெல்லத்துரையின் தயாரிப்பிலும் நெறியாள்கையினூடும் வெளிவருகின்றமை பாராட்டுதலுக்குரியது.
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி என்ற மஹாகவி பாரதியாரின் வேண்டுதலுக்கு அருணா செல்லத்துரை ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் என்று நம்பலாம். துரியகுமாரி பஞ்சநாதன் 02-01 1998. வீரகேசரி பத்திரிகையில் வெளியானது.
123

Page 71
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் அருணா செல்லத்துரை அவர்களின் "நந்தி உடையார்" (ஒலிப்பேழை வெளியீடு) தமிழருவி த. சிவகுமாரன் பி.ஏ.(ஹொனர்ஸ்)
அண்மைக் காலங்களில் நல்ல பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் வெளியீடுகளுக்கும் களமாக அமைந்து விளங்குவது வவுனியா மாநகரமாகும். இத்தகைய நவீன, பாரம்பரிய தமிழ் இலக்கிய வெளியீடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று அருணா செல்லத்துரை அவர்களின் "நந்தி உடையார்" ஒலிப்பேழை வெளியீடாகும்.
விஞ்ஞானம் வெகு வேகமாக எல்லாத் துறைகளிலும் புதுமை இயற்றி வருகையில் அப்புதிய மாறுதல்களுக்கும், விளைவுகளுக்கும் தமிழ் இலக்கியக் கருவூலங்களும் உட்படுவது வியப்பில்லை. நந்தி உடையார் என்ற வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகத்தை முழுக்க முழுக்கத் தன்பண்பட்ட இலக்கிய உள்ளத்தின் வெளிப்பாடாக, மண் பற்றினைத் தாளாத ஆர்வத்துடன் வெளிப்படுத்துவதாக அருணா செல்லத்துரை அவர்கள் நூல் வடிவில் படைத்து அளித்ததையும், அது இலங்கையில் பெற்றிருக்கக் கூடிய சிறப்பினை அனைவரும் அறிந்தவர்களே. அதற்கு மகுடம் வைப்பதுபோல் அனைத்து இலங்கை சாகித்திய விருது இந்நூலுக்கு கிடைத்திருப்பதும் சிறப்பே ஆகும்.
ஏற்கனவே நூல்வடிவில் வெளியிடப்பட்ட இந்த நாடகம் ஒலிப்பேழையாக சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அதிக நாட்களுக்குப்பின் ஒரு நல்ல இலக்கியச் சந்திப்பாக இவ்விழா அமைந்து கலந்து கொண்டவர்களின் மன நிறைவைச் சம்பாதித்துக் கொண்டது.
"பஞ்ச பூதச் செயல்கள் மெத்த வளருது மேற்கே அந்த மேன்மை தமிழ் மொழிக்கு இல்லை" என்று பாரதி பட்ட ஏக்கத்தை தவிர்ப்பது போல வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமையின் வடிவாக ஒலிப்பேழையாக, சிடி, இசைத்தட்டாக இந் நாடகம் வெளியிடப்பெற்றது. இதனை அன்றைய விழாவில் நாடக ஆசிரியரான அருணா செல்லத்துரை அவர்கள் வரலாற்று ரீதியாக எடுத்துக்கூறியமை அற்புதமாக அமைந்தது.
இச் சிறிய கட்டுரையின் நோக்கம் நந்தி உடையார் நாடகநூல் பற்றிக் குறிப்பிடுவது அல்ல. அது ஏற்கனவே சிறப்புற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. ஆனால், ஒலிப்பேழையாக வடிவம் தாங்கி வருகிறபொழுது இதில் காணப்படுகின்ற சிறப்பு அம்சங்களை சிந்திப்பதே நோக்கமோகும்.
கிட்டத்தட்ட ஒலிப்பேழையின் ஒரு பக்கம் 18,19 நிமிடங்களைக் கொண்டதாக இரண்டு ஒலிப்பேழைகள் 77 நிமிடங்களில் நந்தி உடையார்
124

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் நாடகத்தை அற்புதமாக எம்முடைய செவிப்புலன் வழியாக எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது.
வற்றாப்பளை அம்மனை வாழ்த்தும் பாடலுடன் ஆரம்பித்து அதே கோவிலில் நந்தி மகளை முத்து ஐய வன்னிபம் காணுகின்ற காட்சி வரை முதலாவது ஒலிப்பேழையின் முதல் பக்கம் நிறைவு பெற, அதன் இரண்டாவது பக்கம் நந்தி வயல் வெளியில் களக்காட்சியுடன் ஆரம்பித்து பூதன் முத்து ஐயன் குளத்துள் மரணிப்பது வரை தொடர்கிறது. இரண்டாவது ஒலிப்பேழையின் முதல் பக்கம் நந்தி வயலில் அறுவடை நடைபெறும் காட்சியுடன் ஆரம்பித்து நந்தி உடையார் நந்தி வெளியில் உயிர் பிரிவது வரையும் அதன் இரண்டாவது பக்கத்தில் நந்தி மகள் வழக்குரைத்து வெற்றிபெறும் நிறைவுக்காட்சி இடம்பெறுகின்றது. இவையே ஒலிப்பேழையின் உள்ளடக்கமாகும்.
இவ் ஒலிப்பேழையின் வெளிப்புறம் நந்தி உடையார் நாடக நூலின் முகப்பு அட்டையின் ஒவியத்தைக் கொண்டதாகவும் பின்புறம் இவ் ஒலிப்பேழையில் பங்கு கொண்ட கலைஞர்களின் பெயர் விபரத்துடன் அருணா செல்லத்துரை அவர்களின் உருவப்படமும் இடம்பெற்றுள்ளது பொருத்தமாகவும், அழகாகவும் உள்ளது.
அனுபவமும் பிரபல்யமும் வாய்ந்த வானொலி நாடகக் கலைஞர்கள் இவ் ஒலிப்பேழையில் குரல் தந்தமை மிகப் பெரிய சிறப்பை இவ் ஒலிப்பேழைக்குத் தந்துள்ளது. அருணா செல்லத்துரையின் தொழிற்றுறை சார்ந்த நன்மதிப்பு இக் கலைஞர்களை ஒன்றுபடுத்தியுள்ளது எனலாம். இவ் ஒலிப்பேழையில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய அம்சம் காதுக்கு இனிமையான அற்புதமான இசையமைப்புடன் நல்ல குரல்வளத்துடன் பாடப்பெற்ற பாடல்களாகும். இவற்றை கேட்கின்றபொழுது எழுந்து நின்று துள்ளி ஆடவேண்டும் போல உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இப்பாடல்கள் வெறும் கதையமைப்புகளாக இணைக்கப்பட்டவையல்ல, அருணா செல்லத்துரையின் பண்பட்ட உள்ளத்தையும், சமூக நாட்டுப் பற்றையும் வெளிக் கொணர்வதாக உள்ளது. பூதங்களை வேலை செய்ய அழைக்கும்போது "தாகிட தரிகிடதா" என்ற மெட்டில் "வாடா மச்சான் வாடா" என்ற பாடலில் வரும் "குளத்தைக் கட்டிப்போட்டால் கொற்றவன் வாழ்வான் வாடா வயலுக்குத் தண்ணிர் பாய்ந்தால் விதைத்தவன் வாழ்வான் வாடா" என்ற அடிகள் ஒளவையாரின் "வரப்புயர" என்ற பாடலை நினைவுபடுத்துகின்றது. அதேபோல ஆற்றிலே தண்ணிர் அலைந்து வருமாப்போல் என்ற பாடல், பன்றிப் பள்ளு, என்பவற்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
குட்டி வன்னிபமாக குரல் தந்த விக்ரரின் நடிப்பு அதி உச்சம். நந்தி உடையாராக நடித்த இலங்கைக்குப் புகழ் தேடித்தரும் அப்துல் ஹமீட் அவர்களின் அனுபவமும், ஆற்றலும் இங்கு சிறப்புற வெளிப்படுகின்றது. நந்தி மகளாக குரல்
125

Page 72
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் தந்த கமலினி செல்வராசன் அவர்கள் நந்தி வயலில் தன் தந்தையின் இறுதி நேரத்தில் அவர் பிரிவைத் தாங்காது அரற்றும் காட்சி கேட்பவர் நெஞ்சைப் பிழிகிறது. மற்றைய கலைஞர்களும் சிறப்புறத் தமது பங்கினை ஆற்றி உள்ளார்கள். மிகச் சிறப்பான பிசிறில்லாத ஒலிப்பதிவு குட்டி வன்னிபத்துடன் தகராறுபட்ட பூதன் தற்கொலை செய்யகுளத்தை நோக்கிச் சென்றபடியே பேசுவன, தூரத்தில் மெல்ல மெல்லச் சென்று தேயும்படியாக ஒலிப்பதிவுசெய்யப்பட்டமை மிக இயற்கையாக அமைந்துள்ளமை ஒலிப்பேழையின் சிறப்பாகும்.
ஒரு நல்ல அனுபவம் மிக்க கலைஞராகிய அருணா செல்லத்துரை அவர்களின் இம்முயற்சி சிறப்புற அமைந்துவிட்டது. நூல்வடிவாக ஒலிப்பேழையாக சி.டி. இசைத்தட்டாக வெளிவந்து அமைந்துவிட்டது. நூல்வடிவாக ஒலிப்பேழையாக சி.டி. இசைத்தட்டாக வெளிவந்து விட்ட இந் நாடகம் ஒளிப்பேழையாக வெளிவரும்போது இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு மண்ணின் சிறப்பு அகில உலகுக்கும் எடுத்துக் காட்டப்படும் என்பதில் ஐயமில்லை. அருணா செல்லத்துரை அவர்கட்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.
தமிழருவி. த. சிவகுமாரன். (தினக்குரல் பத்திரிகையில் வெளியானது)
*நந்தி உடையார்" (ஒலிப்பேழையும். பிரதியும்) ஒரு நாடக ஆய்வு - கந்தையா பூநீகணேசன்.
வன்னிப் பாரம்பரிய நாடகம் என மகுடம் சூட்டப்பட்டு எழுத்து வடிவிலும், பின்னர் ஒலிப்பேழையாகவும் வெளியிடப்பட்டுள்ள அருணா செல்லத்துரையின் நந்தி உடையார் நாடகம் பற்றிய ஒரு ஆய்வினை இக்கட்டுரை பிரதிநிலையிலும். ஒலிப்பேழைவடிவிலும் மேற்கொள்ள விளைகிறது.
ஒரு நாடக ஆசிரியன் தனது படைப்பை ஒரு காலத்தின் தேவை உணர்ந்தே படைக்கின்றான். உலகின் மூத்த கலை வடிவங்களில் ஒன்றான நாடகம் தனது செழுமை மிக்க உச்சத்தினை கிரேக்க நாடகங்கள் வாயிலாக கி.மு.5ஆம் நூற்றாண்டிலேயே உலகுக்கு அளித்தது. உலகப் புகழ்பெற்ற நாடக மேதை சோபோக்கிளிஸ் தன் காலகட்ட சூழலை மனித இருப்பை, பண்பாட்டு விழுமியங்களை, மக்கள் நம்பிக்கைகளை, மொழிப் படிமங்களை தனது நாடகங்களுக்கு விரவி எழுத பின்னிற்கவில்லை. கி.பி.16ம் நூற்றாண்டில் தன் முத்திரையைப் பதித்த ஆங்கில நாடகமேதை வில்லியம் சேக்ஸ்பியரும் தனது
126

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் நாடக மூலகங்களை வரலாற்று கதைகளில் இருந்தும், ஐதீகக் கதைகளில் இருந்தும் எடுக்கப் பின்னிற்கவில்லை, இங்கு நம் நாட்டவரான அருணா செல்லத்துரை தான் பிறந்த வாழ்ந்த பிரதேசத்தில் வழங்கிவரும் செவிவழிக்கதையினை ஆய்வு நோக்கில் ஆராய்ந்து , இடங்களின் பெயர்கள், வரலாற்றுத் தகவல்கள், நாட்டார் பாடல்கள் தரும் தரவுகள் என்பவற்றை ஆதாரமாக்கி"நந்தி உடையார்" எனும் நாடகத்தை வன்னிப் பாரம்பரியத்தை சுட்டி நிற்கும் பாத்திரங்களை உருவாக்கிப் படைத்துள்ளார்.
பிரதான நாயகர்களாக இருவரை முன்னிறுத்துகிறார். எனினும் நாடகப் பெயர்கொண்ட பாத்திரமான நந்தி உடையாரைவிடவும் முத்தரையன் எனப்படும் முத்து ஐயன் நாடகம் முழுமையும் தோன்றுகிறார். ஆனாலும் நந்தி உடையாரின் பாத்திரக்கனதி வாசகர் மனங்களில் வியாபிக்கும் வண்ணம் சிருஷ்டிக்கப் பட்டுள்ளது. இது சேக்ஸ்பியரின் யூலியஸ் சீசர்" எவ்வாறு நாடக ஆரம்பத்தில் கொல்லப்பட்டபோதும், நாடக முழுமையும் செல்வாக்கு செலுத்தி நின்றமை காரணமாக அதன் தலைப்பையும் அப்பெயர் ஆட்கொண்டதோ அதேபோல இதுவும் அமைகிறது எனலாம்.
இதனை விடவும் வழமையான வரலாற்று, புராண, இலக்கிய நாடகங்களில் ஒரு நாயகியின் வடிவமைப்பு முக்கியத்துவம் பெறும் நிலையை மாற்றி நாடக இறுதிக்கட்டத்தில் மட்டும் தேவை ஏற்படுமிடத்து தோற்றுவிக்கப்படும் நாயகியாக நந்திமகள் உருவாக்கப்படுகிறாள். அதாவது தந்தை நந்தி உடையார் தனது வயலிலுள்ள உப்பட்டிகளை முத்து ஐயன்கட்டுக் குளத்துநீர் அள்ளிக் கொண்டு செல்வதைப் பொறுக்க முடியாது உயிர் விடும் கட்டத்தில் தோன்றிப் பேசும் நந்தி மகள் (கோயில் காட்சியில் ஏற்கனவே தோன்றினாலும்) நாடக இறுதிக் கட்டத்தில் பாத்திர முழுமை பெறுவது நாடகத்தின் சிறப்பம்சம். வழமையான காதல் காட்சிகளும், ஆடம்பர சொல்லடுக்குகளும், அலங்கார விவாதங்களும் இல்லாமல் இறுதிக் காட்சியில் நீதி கேட்கும் மங்கையாக தோன்றுகிறாள் நந்திமகள், இது சிலப்பதிகாரக் கண்ணகி பாத்திரத்தை நினைவூட்டுவது பாரம்பரியத்தின் தொடர்ச்சி எனலாம்.
ஆயினும் இப்பாத்திர வார்ப்பு வித்தியாசமாக, நவீனத்துவ வாழ்வியல் வேட்கையை சுட்டுமுகமாக ஆக்கத் தன்மையில் வார்க்கப்பட்டுள்ளது. அதாவது முத்து ஐயன் வன்னிபத்தின் சமூகத்தில், குளத்துநீரால் அள்ளுப்பட்ட நெல் உப்பட்டிகள் பற்றியும், அதனால் மனமுடைந்து இறந்த தந்தையின் மரணத்துக்கான நீதியையும் கேட்க வந்த நந்திமகள், உண்மையை உணர்ந்து, குட்டி வன்னிமையின் சூழ்ச்சிக்குத் தக்க தண்டனை வழங்கி, தன்னையும் அரசு ஆலோசகராக இருக்க வேண்டுகோள் விடுக்கும் முத்துஜயன் வன்னிபத்தின் நியாயமான தீர்ப்புக்கு மண்டியிடுபவராகப் படைக்கப்படுகிறாள். இங்கு காதலால் (ஒருதலை) முத்துஐயன்
127

Page 73
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் பாத்திரம் சிதைக்கப்படாது நிமிர்ந்து நிற்பதையும், நாடகம் வாழ்வுக்கு தரும் சிறப்பான செய்தியையும் நாம் கண்டு கொள்கிறோம்.
மனோரதிய நாடகப் பாணியில் கண்டுகொள்ளும் ஒரு வில்லனாகவே குட்டிவன்னிமையைக் கருதினாலும், இங்கு குட்டிவன்னிபம் முத்துஜயனின் பிரதிவிம்பமே, ஏனெனில் இருவரும் குளக்கட்டு வேலைகளில் அக்கறை எடுக்கின்றனர். பெயர் வைக்கும் விடயத்திலும், பூதனின் கணக்குகளை முடிப்பதிலும், நந்தி உடையார் வயலுக்கு நீர் கசியாமல் பார்க்கும் விடயங்களிலும் முடிவு எடுக்கும் பொறுப்பு குட்டி வன்னிமையினால் மேற்கொள்ளப்படுகிறது. முத்துஜயன் சம்மதிக்கின்றான், இதுவே அவனது பாத்திரப்படைப்பு ஒரு வகையில் முத்துஜயனின் இன்னொரு பகுதியாகக் காட்டப்படுகிறது என்பதற்குச் சான்றாகிறது. ஏனெனில் ஒரு மனிதனிடத்தில் நல்ல பக்கமும் உண்டு. ஆனால் இங்கு நல்ல பக்கத்தின் தீர்ப்பு முடிவு ஈற்றில் நிமிர்வதின் மூலம் நாடகம் சமூகத்திற்கு ஆற்றும் பணியைச் செவ்வனே நிறைவேற்றுகின்றது.
நாடக ஓட்டத்தினை உயிர்த்துடிப்புடன் தக்கவைக்கும் பாத்திரங்களாக இருந்த குட்டிவன்னிமை பாத்திரத்துடன், சோதிடர் பாத்திரமும் கதையமைப்புக்கு அழகு சேர்க்கும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. நாடகக் கதையோட்டத்தினைச் செவ்வனே பேண இப்பாத்திரங்கள் உதவுகின்றன. ஆனால் நேரெதிர்த் திசையில் அவை இயங்குகின்றன என்பதும் சுவை சேர்ப்பதாக அமைகிறது. சூழ்ச்சி மற்றும் அநீதிப்போக்கிலும், சுயநலம் மற்றும் பழிவாங்கும் பண்பிலும் அமைக்கப்பட்ட குட்டி வன்னிமையின் நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டி நீதி, நியாயம்,தர்மம் எனப் பேசும் பாத்திரமாக மிளிர்கிறது சோதிடர் பாத்திரம்.
பூதனும் பூதங்களும் பழிவாங்கப்பட்ட பாத்திரங்களாகவே அமைந்து விடுகின்றன. அது யதார்த்த நிலைமையாகும். அதற்குச் சாட்சியாக நிற்கும் பூதன்வெளியும், முத்துஐயன் கட்டுக் குளமும் இன்றுவரை பூரண பயன்பாட்டில் இல்லை என்பது கவனிக்கத்தக்க விடயமாகும். எனினும் பூதன் மற்றும் பூதங்கள் தோன்றும் காட்சி நாடகத்தின் கதியைச் சிக்கெனப் பிடித்து வைத்திருக்கிறது.
“தாகிட தரிகிட தா. தாகிட தரிகிட தா.எனும் தருவுடன் அமைக்கப்பட்ட கவிதை வரிகள் அரசுகளின் அக்கால அரசியலையும், மக்கள் வாழ்வியலையும் படம் பிடிக்கின்றன.
குளத்தைக் கட்டிப் போட்டால் கொற்றவன் வாழ்வான் வாடா வயலுக்குத் தண்ணிபாய்ஞ்சால் விதைத்தவன் வாழ்வான் வாடா"
128

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள்
இந்த வரிகள் ஒளவையின் வரப்புயர' எனும் கவிதையை ஞாபகமூட்டுகின்றன.
வரப்புயர நீர் உயரும் நீர்உயர நெல் உயரும் நெல்லுயரக் குழ உயரும் குடி உயரக் கோன் உயர்வான்"
ஆரம்பக் காட்சிகளிலேயே நாடகப் பதட்டம் தோற்றுவிக்கப்படுகிறது. முதலில் பறைபோடுபவனின் அறிவிப்பிலே முத்துஐயன் ஆரம்பிக்கும் குளக்கட்டு வேலைகளுடன் மக்களை ஒத்துழைக்கும் வண்ணம் வேண்டுகோள் விடப்படுகிறது. சில வேளை இதனை ஒரு ஆட்சியின் மிரட்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து பூதனுக்கும். வன்னிபத்துக்கும் இடையில் இடம்பெறும் உரையாடல்தான் நாடகப்பதட்டத்தினை (Suspense) அதிகரிக்கச் செய்கிறது.
குளக்கட்டு வேலைகளை வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவில் பொங்கலுக்கு முன் முடிக்கக் கட்டளை இடுகிறான் குட்டி வன்னிமை, ஆனால் பூதனோ பூதங்கள் போதிய சாப்பாடில்லாமல் வருந்துவதாகக் கூறிமுதல் முரணைத் தோற்றுவிக்கின்றான். ஆனால் குட்டிவன்னிமை பூதனுக்கு இலஞ்சம் கொடுத்து மடக்கப்பார்க்கிறான். இதனைப்பூதன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவனது நேர்மையைப் பறைசாற்றுகிறது. குளம் கட்டிய பின்னர் பூதன்வெளி வயலைக் கொடுத்த போதும் அதனை மறுத்து, குளத்தில் உயிர்விடுவதும் அப்பாத்திரத்தினை அதன் குணாம்சத்தினை வளர்த்தெடுக்க உதவுகிறது. அத்தோடு பூதங்கள் பட்டை அடித்த வழுக்கும் முதிரை மரங்களை குளத்திலிருந்து எடுக்க உத்தரவிடும் போது அது முடியாமல் காட்டுக்குள் போவதனை "நேர்மை காட்டுக்குப்போகிறது" எனக் குறிப்பதும் ஆசிரியரது கவித்துவசிந்தனையை குறி காட்டுகிறது. "ஒப்படைக்கும் வேலையை முடிக்காது தங்குமிடம் செல்லமாட்டா பூதங்கள்" என்ற மக்கள் நம்பிக்கையும் இங்கு பொருத்தமுற பின்னப்பட்டுள்ளது.
நாடகத்தின் பதட்டம் மேலும் அதிகரிக்கப்படும் இரண்டாம் கட்டம் குளத்துக்குப் பெயர் வைப்பதில் ஏற்படுகிறது. குளம் கட்டும் போதுமாய்க்கப்படும் செடி, கொடி மரங்கள் மற்றும் உயிரினங்கள் காரணமாக குளத்துக்கு தான்தோன்றீஸ்வரன் பெயரை இடச் சொல்கிறார் சோதிடர், ஆனால் மக்கள் விருப்பம் என்று சொல்லி முத்துஜயன் பெயரை வைக்கிறான் குட்டி வன்னிமை. இங்கு இரண்டாம் முடிச்சு - முரண் போடப்படுகிறது. இது ஒரு வகையில் "பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்" எனும்
129

Page 74
அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் சுந்தரர் அடியூடு மேற்கிளம்பும் சைவ சித்தாந்த பண்பு சோதிடர் வாக்குமூலம் எனலாம். இரண்டாம் முரணிலும் குட்டிவன்னிமையின் எண்ணத்துக்கே முத்துஐயன் ஒத்துப் போகிறான்.
நாடகத்தின் உச்சக் கட்ட முரண் இரண்டு விதங்களில் பின்னப்படுகிறது. ஒன்று நந்தி மகளைத் திருமணம் செய்ய முத்துஜயன் முனைவதும் மற்றது அதுசாத்தியமற்றுப் போக, குட்டி வன்னிமையின் தூண்டலால் குளத்து நீர்க் கசிவையும் நந்தி உடையார் அனுபவிக்கக் தடை பிறப்பிப்பதும் என்பனவாகும். இந்த இடத்தில் நந்தி உடையார் கூறும் வார்த்தைகள் அவரது காலத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. உண்மையில் இது மக்களது நம்பிக்கை ஒலி. அதாவது "ஆற்றை மறிக்கலாம், குளத்தை மறிக்கலாம், ஆனால் கார்த்திகை மாதத்து கர்க்கடகத்தன்று பெய்யும் பெருமழையை மறிக்க முடியாது" என்பதாகும்.
நாடக ஆசிரியர் மக்கள் மத்தியில் இன்றும் நிலவி வரும் வாய்மொழி, மரபுமொழி அம்சங்களை நாடகத்தில் தேவை கருதி பயன்படுத்தியுள்ளமை, நாடகத்தின் மொழிச் செழுமையைப் பேண உதவுகின்றது. பழமொழிகள் சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டலாம்.
'அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்" "கெடுகுடி சொற்கேளாது சாகிறவன் மருந்து குடியான்" "சொல்பவன் சொன்னால் கேட்பவனுக்கு மதி எங்கே?"
இவற்றோடு நாட்டார் பாடல்களும் நாடகத்தின் மொழிச் செழுமைக்கு வழிகோலுகின்றன. கண்ணகை அம்மன் விருத்தம், முருகையன் சிந்து, பன்றிப் பள்ளு, ஒப்பாரி என்பன இங்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் நாட்டார் வழக்கில் பெரிதும் பயன்பாட்டில் உள்ள நாட்டார் சொற்றொடர்களையும், நாடகம் முழுமையும் விரவி எழுதப்பட்டிருந்தால் 17ம், 18ம் நூற்றாண்டுத் தமிழை சற்று நுகர்ந்திருக்கலாம். இங்கு மொழியமைப்பை மாற்ற வேண்டும் என்பதல்ல. தராதரத் தமிழ் நடையை நாம் பேண வேண்டிய தேவை உண்டு. ஏனெனில் இந் நாடகத்தினை நவீன வாசகர்கள் வாசிக்க உதவி செய்யும் மொழி நடை அதுவே. எனினும் நாடகத்தின் மணம் 17/18ம் நூற்றாண்டு காலத்து மணமாக வீசுமாறு செய்வதற்கு கூடியளவு மரபுத் தொடர்கள், பதங்கள், மக்கள் வழித் தோன்றல்களாக சில அவசியமான பாத்திரப் படைப்புகளும் அவற்றின் மொழியும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்விடத்தில் பேச்சுத் தமிழ், எழுத்துத்தமிழ் எனும் இரு வழக்குப் பண்பு பற்றி நாம் குறிப்பிடவில்லை. தராதரத் தமிழ் நடையில் கூடியளவு நாட்டார் மரபு மணம் கமழ சொற்பதங்கள், சொற்றொடர்கள் என்பவற்றின் பாவனையே வலியுறுத்தப்படுகின்றது.
130

அருணா செல்லத்தரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் ஒரு அவல நாடகமாகவே எழுதப்பட்டிருக்க கூடிய நாடகம் இது. நந்தி உடையார் வாழ்வைச் சிதைப்பதன் மூலம் நந்தியுடையாரையும் நந்திமகளையும் பழிவாங்கித் தன் நிலையையும் இழந்து அவல நாயகனாக மிளிர்ந்திருக்கக் கூடிய பாத்திரமாக முத்தரையனைச் சித்தரித்திருக்கலாம். ஆனால் நவீன உலகு வேண்டி நிற்பது அதுவல்ல. நவீன உலகம் முழுவதும் போட்டி, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், ஏமாற்று, ஊழல், மோசடி,அவமதிப்பு என்று சிதைந்துள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டோ என்னவோ நற்போக்கில் செல்ல விழையும் தன்மையில் பிரதான பாத்திரங்களைச் சித்தரித்துள்ளார் ஆசிரியர். அந்த வகையில் முத்தரையன் குட்டிவன்னிமையின் சூழ்ச்சி வலையில் இருந்து தன்னை மீட்டு நந்திமகளிடம் மன்னிப்பு கேட்பதும், அவளை மணம் செய்ய விரும்பி நின்ற நிலையை மாற்றி அரசவை ஆலோசகராக்குவதும் அப்பாத்திரத்தின் முழுமைக்கு கட்டியம் கூறுகிறது. அதே வேளையில் தந்தையின் இழப்புக்கும், நெற்களஞ்சிய அழிப்பிற்கும் காரணமானவர்களை நீதி கேட்டபின்பும் பழிவாங்காது, ஆலோசகர் பதவியை ஏற்று நாட்டு வளர்ச்சியில் பங்கெடுப்பதன் மூலம் நந்தி மகள் பாத்திரம் முழுமை பெறுகிறது. சிறிய பாத்திரமானாலும் முக்கிய பாத்திரமாக மிளிரும் சோதிடர் பாத்திரமும், நியாயம் எடுத்துரைத்து சபையை விட்டு வெளியேறி பாத்திரக் கனதி பெறுவதும், நந்திமகளுக்கு உத்வேகம் கொடுத்து முழுமையடைவதும்பாத்திர வளர்ப்பில் நாடக ஆசிரியரின் திறனை மதிப்பீடு செய்ய வைக்கின்றது. இங்கு அமைச்சர் பாத்திரமே ஒரு ஏற்ற இறக்கமற்ற பாத்திரமாக அமைதி அடைகிறது.
நவீனத்துவ தொனியுடன் கூடிய சிந்தனைகளான, ஊழல் ஒழிப்பு, பெண் எழுச்சி, சதிமுயற்சியை வெல்லல், நல்லது நடப்பதற்கு பதவியையும் சபையினையும் துறத்தல், உபரி வருமானத்துக்கு கசிந்து செல்லும் நீருக்கு வரி இல்லை என்பவற்றை நாடகத்தினூடே இழையோட விட்ட ஆசிரியர், பாரம்பரிய நாடகங்களான வீரபாண்டிய கட்டப்பொம்மன் (கருணாநிதி), பண்டாரவன்னியன் (முல்லைமணி), தணியாத தாகம்(கரவை கிழார்) ஆகியவற்றுடன் இளங்கோவின் சிலப்பதிகாரம் ஆகியவற்றை தன் அடிபப்டையாக முன்னே கொண்டாலும், நாடக ஒட்டத்தினையும், முடிவையும், பாத்திர வார்ப்பையும் தனக்கேயுரிய தனித்துவத்துடன் படைத்திருப்பது "நந்தி உடையார்" நாடகம் வெற்றி பெற வழி சமைத்தது எனலாம். ஆயினும் நந்தி உடையார் பாத்திரம் பற்றி தனது ஆய்வின் இறுதியில் நூலாசிரியர் கூறுவதும் கவனிப்புக்குரியது.
131

Page 75
அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் "நந்தி உடையார் அவர்களின் பெயர் சரித்திரக் குறிப்பேடுகளில் தவிர்க்கப்பட்டிருந்தாலும், அம்மன் சிந்துகளில் காணப்படும் நந்திவெளி, நந்திக்கடல் போன்ற காரணப்பெயர்களைக் கொண்டும் வாய்வழித் தகவல்களைக் கொண்டும் நந்தி உடையார் வாழ்ந்திருக்கின்றார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்."
இறுதியாக, இந் நாடக ஒலிப்பேழை வடிவைப் பொறுத்தளவில் செவி வழியே நாடக உரையாடல் செல்ல, கேட்போர் மன அரங்கில் நாயகர்கள் வலம் வருகிறார்கள். குளம் கட்டும் பூதங்கள் பற்றிய கற்பனை "தாகிட தரிகிடதா" வில் நிறைந்திருக்க தாளம் அவர்கள் செயல்களை மனக்கண் முன்னே கொண்டு வருகிறது. பறவைகள் ஒலி குளக்கட்டின் சூழலைக் குறிக்க உரையாடல் நிகழ்த்தும் குரல்களின் கச்சிதத்தில் பாத்திரங்கள் உருப்பெறுகின்றன. அப்துல் ஹமீட் வழங்கும் நந்தி உடையார் பாத்திரம் கனமானதாக இருக்கும் அதே வேளையில் நீருக்கு வரி கட்ட வேணும் என அறியும் போது அவர் குரலில் விசனம் இழையோடுகிறது.
"கர்க்கடகத்து மழையை மறிக்க முடியாது" என்கின்றபோது எழுகின்ற தன்னம்பிக்கை பாத்திரத்தினைப்பொலிவுபெறச் செய்கிறது. இதேபோல் கமலினி செல்வராஜன் சோகமும், சபையில் காட்டும் தீரமும், குரலூடே நன்கு வெளிப்படுகின்றன. சோதிடர் பாத்திரத்தின் நிதானம், குட்டி வன்னிபத்தின் வஞ்சத்தனம், பூதனின் நியாயமான காருண்யமும் நேர்மையும், முத்தரையனின் நிச்சலமான தன்மையும், அமைச்சரின் அமைதியும் குரல்களினூடே தெட்டத் தெளிவாகப்பதியப்பட்டுள்ளன. பாடல்களின் இசைவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குழுப்பாடல்களினூடு மெலிதாக இசைத்து மேலெழும் பெண்ணின் குரல் "சபாஷ்" போட வைக்கிறது. வயல் வேலைக் காட்சிக்குப் பொருத்தமான "பட்டி பெருக வேணும் தம்பிரானே" நாட்டார் பாடலும், கண்ணகையம்மன் கோவிற் பொங்கல்பாட்டும், அருவிவெட்டும் போது பாடப்படும் முருகையன் சிந்தும், பன்றிப் பள்ளும் தருகின்ற நாட்டார் சூழலும், வயல் கட்டு மனோநிலையும், முதற்பாடலான கண்ணகை அம்மன் விருத்தம் பாடப்பட்ட முறைமையில் கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டியதே.
ஒரு வயல்வெளிச் சூழலில் உள்ள கண்ணகை அம்மன் கோவில் முன்னே எம்மை அது கொண்டு செல்லவில்லை. மாறாக ஆரிய முறைப்படி பூசைகள் இடம்பெறும் ஒரு கோயிலில் நின்ற உணர்வே தொற்ற வைக்கப்பட்டது. அதற்குக்
132

அருணா செல்லத்துரையின் வன்னிப் பிராந்தியக் கூத்துக்கள் காரணமாக, கர்நாடக சங்கீத மெட்டினை உபயோகித்தமை அமையலாம். இவ்விடத்தில் நாட்டார் தரு பாடும் முறைமையினை பிரயோகித்திருந்தால் நாம் ஏலவே மொழி நடை பற்றிக் கூறியபடியான மரபுக்கால சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது எமது கணிப்பு.
நிறைவாக, வேர்களோடு பற்றியிருந்த விழுதுகளைச் சர்வதேசமெங்கும் ஒடவிட்டும், மண்ணுள் மடிய விட்டும், பிரதேசங்களில் ஒற்றை அறைச் சூழலில் நெருக்கடியில் நசிய விட்டும் எமது காலம் ஒடும் இக் கட்டத்தில் வேரின் மணம் வீசும் பக்கத் துரும்புவேராக மிளிரும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள இந் நாடகம் எம் மக்கள் வாழ்வினை நிமிர்த்த உதவ வேண்டும். உதவும் எனும் நம்பிக்கையுடன் இவ் ஆய்வு நிறைவு செய்யப்படுகின்றது.
கந்தையா யூரீ கணேசன் "செல்வசக்தி" 61. கந்தசாமி கோயில் விதி வவுனியா, (15.03.1998 ல் தினகரன் பத்திரிகையில் வெளியானது.)
நந்தி உடையார் நாடகத்தின் வளர்ச்சி
நந்திஉடையார் நாடகம் வன்னிப்பிராந்தியநாட்டுக்கூத்துக்கள் அரங்கக்கலை வடிவம் பெற்றதை எடுத்துக் காட்டுகிறது. நந்தியுடையார்நாடகத்தை வெகு விரைவில் நாட்டுக் கூத்தாக எழுதி வெளியிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஏற்கனவே இந்த நாடகத்தின் கதை வில்லுப்பாட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டிய நாடகமாகவும் தயாரிப்பதற்கு உகந்த வடிவமென நாட்டிய விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர்.
133

Page 76
BIBLIOGRAPHICA DA A
Title of the book
Language
Subject
Written by
Copyright
Published by
First Edition
Types used
Number of Pages
Number of Copies
Computer Type Setting :
Printed at
Price
ISBN
TRADITIONALDRAMAS IN VANNI
Tamil
Traditional findings
Aruna Selladurai
Author
Aruna Veliyettaham [[Aruna Publication)
December 2000
12 Point
150
1000
V. Sadagopan, R.Yogathasan, R. Thavarajan
Uni Arts (Pvt) Ltd.
RS. 150.00
ISBN 955-96159-3-9

பதிப்பாசிரியர் : அருணா செல்லத்துரை
ஆசிரியரின் ஏனைய பங்களிப்புகள் CONTRIBUTION BY AUTHOR
6I (Pöbßlöd - "வீடு" தொலைக்காட்சி நாடகமும்/வானொலி நாடகங்களும் "WEEDU" TELE DRAMA / RADIO DRAMAS
"அருணா செல்லத்துரையின் மெல்லிசைப் பாடல்கள் (வானொலி / தொலைக்காட்சியில் ஒலி / ஒளிபரப்பாகியவை) "ARUNA SELILADUIRAIYIN MELLTYSAI PADALKAL CLIGHT SONGS)
"நந்தி உடையார்" வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம் (1996ம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு / 1996ம் ஆண்டு "உண்டா" தங்க விருது) "NANTHIUDAYAR" WANNIHISTORICAL & TRADITIONALDRAMA (WON 1996 SAHITITHIYA AWARD/WON 1996 "UNIDA ABHINANDANA" GOLD AWARD)
"இலங்கையில் தொலைக்காட்சி" வரலாற்றுச் சுவடி (1997ம் ஆண்டு வடகிழக்கு மாகாண இலக்கியப் பரிசு பெற்றது) "TELEVISION IN SRI LANKA' (WON 1997 NORTH EAST LITTERARY AWARD)
"ஒலித்தென்றல் 1" மெல்லிசைப் பாடல்கள் / ஒலிப்பேழை " OLTHENERAL - 1 " LIGHT SONGS AUDIO CASSET'TE
"ஒலித்தென்றல் 2" மெல்லிசைப் பாடல்கள் / ஒலிப்பேழை " OLTHENERAL - 23 " LIGHT SONGS AUDIO CASSE"TE
"நந்தி உடையார்" வன்னிப் பாரம்பரிய வரலாற்று நாடகம்/ஒலிப்பேழை "NANTHIUDAYAR." WANN HISTORICAL & TRADITIONAL DRAMA AUDIO CASSET'TE
r.
"நந்தி உடையார்" வன்னிப் பாரம்பரிய வரலாற்று BITL5th/(CD) இசைத்தட்டு "NANTHIUDAIYAR" WANNI HISTORICAL &e TRADITIONAL DRAMA/COMPACT DISC (CD)
ஒளியில் O O ( )
"வேழம்படுத்த வீராங்கனை" முல்லை மோடி வட்டக்களரி நாட்டுக்கூத்து/ஒளிப்பேழை "VEZAMPADUTHA WEERANKANAI" MULLAI MOODY VADDAKKALARY TRADTIONAL FOLK DRAMA VIDEO CASSETTE

Page 77
olgoசெல்லத்து (રેડર
SN--