கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளிப் பாதசரம்

Page 1
(
品
* இலங்கைய
அச்சுப்
பூரீ சண்முகநா
யாழ்ப்ப
 


Page 2

வெள்ளிப் பாதசரம்
( கதைகள் )
இலங்கையர்கோன் "
அச்சுப் பதிவு: பூரீ சண்முகநாத அச்சகம்,
யாழ்ப்பாணம்,

Page 3
முதற்பதிப்பு: 1962 நவம்பர். இரண்டாம் பதிப்பு: 1978 மார்ச்.
பதிப்புரிமை உடையது
alako usur t: 60
பிரதிகள் கிடைக்குமிடம் :
பூரீமதி சிவஞானசுந்தரம்
அஹிம்சா கிரி" அம்மன் வீதி, திருநெல்வேலி வடக்கு, urpuu Tamrud,
(இலங்கை )

சமர்ப்பணம்
என்றும் என் கெஞ்சில் வாழும் என் அருமைக் கணவரின் பாதகமலங்களில் இக்கதாமாலையைச் சமர்ப்பிக்கிறேன்.
--செல்லம்மா,

Page 4

பதிப்புரை
--O-
* இலங்கையர்கோன்" என்ற புனைபெயருடன் தனது பதினெட்டா வது வயதிலேயே எழுத்தாளர் உலகில் காலடி எடுத்து வைத்தார் திரு. ந. சிவஞானசுந்தரம், முதலில் ஈழகேசரிப் பத்திரிகை அவருடைய கதைகளே வெளியிட்டு ஊக்கமளித்தது. பின்னர் கலைமகள் மூலம் பிர பல்யம் அடைந்தார். இத்தொகுதியிலுள்ள முதற் சம்பளம், யாழ்ப் பாடி, சிகிசியா என்னும் கதைகள் கலைமகளில் வெளிவந்தவை அவர் எழுதிய கதைகள் கலைமகள், சூருவளி, மணிக்கொடி, பாரதத் தாய், சக்தி, சரஸ்வதி ஆகிய தென்னிந்தியப் பத்திரிகைகளிலும் - தீனகான், வீரகேசரி, ஈழகேசரி, கலைச்செல்வி, ஈழநாடு, தமிழ் இன்பம் ஆகிய இலங்கைப் பத்திகைகளிலும் வெளிவந்தன. தனது சொந்தக் கற்பனை பிலமைந்த கதைகளே எழுதுவதோடு அவர் நின்றுவிடவில்லே - பிற நாட்டுக் கதைகளையும் மொழிபெயர்த்தார். கிளாரு மிலிச், ஈனுேக் ஆர்டன், விடியாத இரவு, வெறுங்கனவு. அந்த முத்தம், கூத்து, நீலக்கண்கள், குயிலும் ரோஜாவும் என்பன அவர் மொழிபெயர்த்த பிறநாட்டுக் கதைகள். அவர் மொழிபெயர்த்த முதற் காதல் என்ற குவியக் கதையை அலயன்ஸ் கம்பெனியார் வெளியிட்டிருக்கின்றனர்.
ஷேக்ஸ்பியன் நாடகங்கவில் அவருக்கு நிரம்பிய பயிற்சி உண்டு, அவற்றைப் படிக்கும்போதெல்லாம் பழைய தமிழ் நாடகங்கள் அழிந்து போயினவே என்று எண்ணித் துயருற்றிருப்பார். அத்துயரின் விளேவாற் போலும் எத்தனையோ ஒற்றையங்க நாடகங்களையும் தொடர் நாடகங் களேயும் எழுதினர். அவற்றுட் பல இலங்கை வானுெவியில் நடிக்கப் பட்டன. பச்சோந்திகள் லண்டன் கந்தையா, விதானபார் வீட்டில், மில்டர் குகதாஸன் என்னும் நாடகங்கள் மேடைகளிலும் நடிக்கப்பட் டன. மிஸ்டர் குகதாஸன், மாதவி மடந்தை ஆகிய இரு நாடகங் கரும் புத்தகமாய் வெளிவந்தவை. புத்தக வடிவில் வெளிவராதன LCC T TTTYTTLL tTTLLLLLTLLTTTL LLLLLLLTLT SLLLLLLL
u Ö u Airp Garf.

Page 5
இத்துனே சிறந்த தமிழ்ப் பணி ஆற்றிய இலங்கையர்கோன்" தமது சிறு பராயம் முதலாக ஆங்கிலப் பள்ளியிற் படித்தார் - Gods Lidór siQ & GO I J J 2D Ur ŝi sur ĝis Liŭ U9th "Intermediate in Ecoமomics' என்னும் பகையில் தேறிஞர் - கொழும்புச் சட்டக் கல்லூரி யிற் பயின்று வழக்கறிஞர் (Proctor) ஆஞர் - சில ஆண்டுகள் வழக் LLTTTTLT TTTL SS TTT LLSLLTT tTTOTLT TLLLLLLLLL (Divisional Revenue Officer) Grã 89 ih 2. Uł 5 U 5 CD Lu Qi iš வந்தார். அவருடைய நிர்வாகத் திறமையையும் நடுநிலை தவருத பண் ui8a Lqob Lu G05tb LuT JT tʼlq, Gf.
"இலங்கையர்கோன் " ஒர் அருங்கல்விநோதர் - சிறந்த நூல் களப் படிப்பதும் அவற்றில் நயங்கண்டு இன்புறுவதுமே அவருக்குப் பொழுது போக்காயிருந்தன - சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய கவின்கல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகம் சென்ற ஆண்டு நவம்பர் LLLLLL 0S S STTS TTLTTTTTLT ST T TTLLLLL LLLLLLTT T பாற்றி வருகையில், மின்னமல் முழங்காமல் இடிஇடிப்பதுபோல * இலங்கையர்கோன்’ மறைந்தார் என்ற செய்தி எழுத்தாளர்களையும் ரசி கர்களையும் திடுக்கிடச் செய்தது. இன்று 1982-ம் ஆண்டு நவம்பர் மாசம் 15-த் திகதி - அந்த அருங்கல்விநோதர் நம்மை விட்டுப் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய அரும்பணியை நினைவுகூரும் முகமாக அவருடைய கதைகளுள் பதினேந்தினை வெளியிடுகின்ருேம். இதனைத் தமிழுலகம் மனமுவந்து வரவேற்குமென எதிர்பார்க்கிருேம்,
நூல் வடிவில் வெளிவராத கதைகளும் நாடகங்களும் விரைவில் நூல் வடிவம் பெறவேண்டும் என்பதே எங்கள் அபிலாஷை
'' offer Gif' பதிப்பாளர்.
erprð, 15-11-62, சன்னகம். .

கலைமகள் ஆசிரியர் திரு. கி. வா. ஜகந்நாதன் M. A., M. O. L. அவர்கள் எழுதிய
மதிப்பு  ைர
இலங்கை வாழும் எழுத்தாளர்களில் தமிழ் நாட்டின
ருக்கு முதல் முதலில் அறிமுகமானவர்களில் * இலங்கையர் கோனும் " ஒருவர். அதற்குமுன் ஆறுமுகநாவலர் முதலிய பெருமக்கள் தம்முடைய இணையற்ற இலக்கிய சமயத் தொண்டுகளால் இலங்கைக்கும் இந்தியத் தமிழ் நாட்டுக் கும் பாலம்போல நின்று நலம் செய்தார்கள். புதிய படைப் புக்கள் தமிழில் தோன்றி வரும் இக்காலத்தில் 'இலங்கையர் கோன் " போன்ற சிறுகதை எழுத்தாளர்கள் தாய் நாட்டுக் கும் சேய் நாட்டுக்கும் உள்ள உறவைப் பின்னும் வலி வுறச் செய்தார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் தமிழில் முதல் முதலாகச் சிறு கதைகள் தோன்றிப் பத்திரிகைகளில் வெளிவந்தபோது பல சிறு கதைப் படைப்பாளர்களின் பெயர்களைத் தமிழர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். புது முயற்சி மாதலின் அவர்கள் படைப்புகளைப் பாராட்டிஞர்கள். அப் படிப் பாராட்டுப் பெற்றவர்களில் "இலங்கையர்கோனும் " ஒருவர். அக்காலத்தில் வெளியான கதைக் கோவையில்
இலங்கையர்கோன் " கதையும் இடம் பெற்றது.
பிற்காலத்தில் * இலங்கையர்கோன் " நாடகங்களைப்
படைப்பதிலும் ஈடுபட்டார். அவர் அரசாங்க அலுவலில்
இருந்தாலும் எழுத்துத் துறையில் இருந்த காதலை மறக்கா
மல் வளர்த்து வந்தார். அதற்கு அவருடைய எழுத் துக்கள் சான்று.
"

Page 6
இப்போது அவர் அமரர் ஆகிவிட்டார். அவரை நினைப்பதற்கு உறுகருவியாக அவருடைய எழுத்துக்களைத் *தொகுத்து வெளியிடுவது நல்லது. அவருடைய சிறு கதை களைத் தொகுத்து வெளியிடும் இந்த முயற்சியை நான் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.
வாழ்க்கையின் நுட்பமான உணர்ச்சிகளில் நுழைந்து நயம் காணும் ஆற்றல் அன்பர் இலங்கையர்கோனுக்கு உண்டு பழைய சரித்திரத்திலும் இலக்கியங்களிலும் கண்ட செய்திகளை அழகுபடுத்திக் கதையாக்கும் உத்தியிலும் அவர் கைவந்தவர். இந்த இயல்புகளை இப்புத்தகத்தில் உள்ள கதைகள் புலப்படுத்துகின்றன.
மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் உரையாடல் களையும் அப்படிஅப்படியே எடுத்துக் காட்டும் ஆர்வம் உடையவர் இலங்கையர்கோன் என்பதற்கும் இவற்றில் உள்ள பல பகுதிகள் சான்று பகர்கின்றன. அரிய கருத் அதுக்களையும் வருணனைகளையும் விரவச்செய்து எழுதுகிருச்.
"சதா மண்ணைக் கிண்டு பவனுக்கு மண்ணிற் குள் எத்தனையோ ரகஸ்யங்களும் மணங்களும் புதுமை களும் மறை ந் திருக்கும்; ஆணுல் அவைகளை விட மேலான ரகஸ்யங்களும் மணங்களும், புதுமைகளும் வாழ்க் கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றன ஓ ! வாழ்வு எவ்வளவு அற்புதமானது!"
* ஆரூல் என்றுமேதான் நாம் யாரையும் முற்ருக அறிந்து கொண்டோமா ? மென்மையாகப் பேசுகின்ற பொருளாளியைக் கனவான் என்கிருேம். தன் குறைகளை மறைக்க அதிகாரத் தொனியுடன் பேசும் ஒருவன் ஆளப் பிறந்தவன் என்கிருேம், இரண்டொரு பத்திரிகைகளைப்
படித்துவிட்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் மேற்கோள்
கூறுபவனை அறிவாளி என்று கூறுவதற்குக்கூட நாங்கள் தயங்குவதில்லை."

" மற்றவர்களைக் கண்டனம் செய்யும்பொழுது மட்டும் தாங்கள் நன்னடத்தையின் சித்திரங்கள் என்பதுவே அவர் களுடைய நினைப்பு அதுதான் மனித இயற்கைபோலும்!" இத்தகைய மணிமணியான கருத்துக்களை இவர் அங்கங்கே கூறியிருக்கிருர்,
இந்த நாட்டின் கணவன் மண்வி உறவு ஓர் அற்புத மான தெய்வீக உறவு ஆரவாரமற்று ஆழ்கடலின் அமைதி யுடன் விளங்கும் உறவு.
இதனை நன்குணர்ந்த ஆசிரியர் சக்கரவாகம்’ என்ற கதையில் ஒரு தம்பதியைக் காட்டுகிருர், அவர்கள் உற வைப் பற்றி அவர் எழுதியிருப்பது மிகமிக அருமையானது.
" காதல் என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியாது. விவாக ரத்து, கர்ப்பத் தடை முதலியனவற்றைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. ஆணுல் வாழ்க்கை கொடிய வறுமையிலும் செம்மையாய், பிணக்குகள் தடி அடிச்சண்டைகளுக்கிடையிலும் ஆழ்ந்த அநுதாபமும் அன் பும் கொண்டதாய்ப் பூவுலக மோட்சமாய்ப் பரிமளித்தது. நாற்பது வருஷம் - நாற்பது நாள் !"
இத்தகைய உயர்ந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளை எழுத வல்லவர் "இலங்கையர்கோள்" என்பது பெருமைப்படுவதற்குரியது . அவர் எழுத்து a &
's visuba)." கி. வா. ஜகந்நாதன் as dibuarvey Assi - G4F där år, 28. ?- 68 ,
YA

Page 7

5.
பொருளடக்கம்
*景o※>
Gausireniiů u vssruh
-OSI 607
அகுதை மனிதக் குரங்கு தாழை நிழலிலே மரியா மதலேனு ar šis yr ar sh
மேனகை நாடோடி
தாய்
மச்சாள் துறவியின் துறவு முதற் சம்பளம் யாழ்ப்பாடி 636Rafau ar
பக்கம்
11
24
34
45
55
82
69
79
95
102
12
28
135
142

Page 8

வெள்ளிப் பாதச ரம்
தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்த வருடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப் பெட்டி, அடுக்குப் பெட்டி, தையற் பெட்டி, மூடற் பெட்டி, பின்னற் பெட்டி. ஊ | எத்தனை வகை அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் கண்ணும் கருத்துமாய் நின்ற தன் கணவனின் கையில் மெதுவாக நுள்ளி "மாடு தன்பாட்டுக்கு நிற்கட்டும் வாருங்கோ" என்று கெஞ்சினுள்.
அஸ்தமிக்கும் சூரியனின் கடைசிக் கிரணங்கள் பனை மரங்களின் தலைகளை இன்னுந் தடவிக் கொண்டிருந்தன. கிழக்கு அடிவானத்தில் சந்திரள் வெளுக்க ஆரம்பித்தான்.
அன்று வல்லிபுரக் கோவில் கடைசித் திருவிழா. "எவ்வளவு சனம் பாத்தியளே! இதுக்காலை எப்பிடிப் போறது" என்று சொல்லிக் கொண்டே நல்லம்மா தன் கணவனின் அருகில் ஒதுங்கினுள். செல்லையா தன் தோளில் கிடந்த சால்வையை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, "பயப்பிடாமல் என்ணுேடை வா " என்று தன் மனைவியின் கையைப் பற்றினுன்
கோவில் வீதிகளிலும் கடைகளிலும் காணப்பட்டதெல் ாாம் நல்லம்மாவின் மனத்தில் ஒரு குதூகலத்தை உண்டாக் தின; வாய் ஓயாது தன் கணவனுக்கு ஏதோ சொல்லிக் கொண்டே சென்ருள். ஐந்து வயதுச் சிறுமியைப் போல, முழங்கால்கள் தெரியும்படி, தன் ஆடையைத் தூக்கிப் பிடித் ஆக் கொண்டு வீதியைச் சுற்றி ஒரு "கெந்தல்" போட வேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது . செல்லையா மெளனமாகத் தன் மனைவியின் குதூகலத்தில்
Gav a 1

Page 9
= 2; -
மெய்ம்மறந்து, அவள் இழுத்த வழியெல்லாம் போய்க் கொண்டிருந்தான்.
யாழ்ப்பாணத்தின் நீர்வளமற்ற சொற்ப நிலத்தைத் தம் தளராத முயற்சி ஒன்றினுலேயே வளம்படுத்திச் சீவியம் நடத்தும் புதல்வர்களில் அவனும் ஒருவன். இரக்கமற்ற பூமியுடன் தினசரி நடத்தும் போரிஞல் அவனுடைய தசை நார்கள் முறுக்கடைந்து வச்சிரம் போல இருந்தன. மன ஒருமைப்பாட்டிரூல் வாய்மெளனமாகவே இருந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவன் தள் வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொண்டான். அவ ளுடைய கலகலத்த வாயும், விடையில்லாத ஒரு கேள்வியைக் கேட்பதுபோல அவனுடைய பார்வையை முறித்து நோக் கும் அவளுடைய விழிகளும், மார்பின் பாரம் தாங்கமாட் டாதது போல் ஓசியும் நூலிடையும், நிர்மலமாக இருந்த அவனுடைய தனிமை வாழ்வில் ஒரு கிளர்ச்சியை உண்டாக் கின. சதா மண்ணைக் கிண்டுபவனுக்கு மண்ணுக்குள் எத் தனையோ ரகஸ்யங்களும் மணங்களும் புதுமைஞம் மறைந் திருக்கும்; ஆணுல் அவைகளை விட மேலான ரகஸ்யங்களும் மணங்களும் புதுமைகளும் வாழ்க்கையில் எத்தனை மறைந்து கிடக்கின்றன! ஒ! வாழ்வு எவ்வளவு அற்புதமானது! செல்லையா இன்று அணிந்திருக்கும் நாற்பது ரூபா பெறு மதியுள்ள மாறுகரைச் சால்வையை விட இதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? سمیه
கோவிலிலுள்ள சனங்கள் தங்கள் இஷ்டப்படி கூக்குர லிட்டுக் கொண்டிருந்தனர். மூலைகளில் கிடத்தப்பட்டிருத்த கைக்குழந்தைகள் அழுதன. பஞ்சகச்சம் அணிந்த பூசகர் கள் அங்குமிங்கும் ஓடினர். இந்த ஆரவாரங்களுக்கிடை யில் கர்ப்பக்கிருகத்தில் மணிச் சத்தங் கேட்டது. கூப்பிய கைகள் தலைகளுக்கு மேல் உயர்ந்தன. செல்லையா ஒரு தூணருகே கைகளைக் கட்டியபடி சனங்களின் தலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றன். நல்லம்மா அவனருகில் கை கூப்பியபடி மூலஸ்தானத்தை ஒருதரம் பார்ப்பதற்காக அங்

= 3
கும் இங்கும் தலையை அசைத்தாள். எங்கோ தொலைவில் இருளில் சில தீபங்கள் மின்னின. அவைகளின் அருகில் ஒரு தொந்தி பெருத்த பூசகரின் கரும்பட உருவம் கைகளை அசைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. அதற்குப் பின் தல்ை - அதுதானுே வல்லிபுரப்பெருமாள் ?
திருமாலின் திருமண் பிரசாதத்தைப் பெறுவதற்கு ஆர வாரப்பட்ட சனங்கள் ஒரு பக்கத்தில் மேளச்சமா ஆரம்ப மாகவே அவ்விடம் நோக்கி நகர்ந்தனர்.
செல்லையாவும் நல்லம்மாவும் கோவிலை வலம் வந்து வணங்கினர்.
தவிற்காரன்தாளவரிசைகளை மெய்ம்மறந்து பொழிந்து கொண்டிருந்தான். அவனுடைய குடுமி அவிழ்ந்த தலை யோடும் வேறும் ஆயிரந் தலைகள் அசைந்தன. நல்லம்மா வுக்குச் சிரிப்பாகவிருந்தது. தன் கணவனின் உடலோடு
தன் உடலை உராய்ந்து கொண்டு "எல்லோருக்கும் பைத்தி
யம் பாருங்கோ " என்முள். மெளனியான செல்லையா மெளனம் கலைந்து, " போதும் இனி, வாணை வெளியாலை போவம்" என்றன்.
வெளி வீதிகளிலும் தெருக்களிலும் சன சமுத்திரம் அலைமோதிப் புரண்டது. முத்தை யும் வைரத்தையும் பொடியாக்கிச் சிதறிவிட்டது போன்ற அந்த அகன்ற வெண்மணற் பரப்பிலே கன்னித் தாயின் உள்ளத்திலே அன்பு வெள்ளம் பாய்வது போல நிலவு வெள்ளத்தை அள் ளிப் பெருக்கும் முழுச் சந்திரனின் கீழ் இரண்டொரு இரவு களுக்கு வாழ்க்கைப் போரினுல் ஏற்பட்ட அலுப்பைக் கொஞ் சம் தீர்த்துக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து மனிதர்கள் நிரம்பியிருந்தனர்.
சர்பத் கடைக்காரன் பல வர்ணங்கள் கொண்ட போத்
தல்களை ஒரு தடியால் அடித்து ஜலதரங்கம் வாசித்தான். மினுக்கு மினுக்கு என்று எரியும் ஒரு கைவிளக்கின் அருகில்

Page 10
உட்கார்ந்து, பொலிஸ்காரர்களின் காக்கியுடுப்பு எங்காவது தெரிகிறதா என்று கடைக்கண்ரூல் பார்த்தபடி "ஒண்டுக்கு நாலுக்காரன், 'ஓடிவா ஓடிவா - போனுல் கடலைக் காசு வந்தால் தேத்தண்ணிக் காசு " என்று ஒலமிட்டாள்
நல்லம்மாவும் செல்லையாவும் தம்மை அறியாமலே ஒரு வளையற் கடையின் முன்னுல் போய் நின்றனர். விளக் கொளியில் சுடர்விடும் கண்ணுடி வளையல்களின் லாவண்யத் தில் நல்லம்மாவின் மனம் லயித்தது. செல்லையா அவ ளுக்கு ஐந்து ஜதை வளையல்கள் வாங்கிக் கொடுத்தான். ஒரு கண்ணுடிப் பெட்டியில் அழகாக வளைத்து வைக்கப்பட் டிருந்த புது மாதிரியான ஒரு பாதசரம் செல்லையாவின் கண் களை ஈர்த்தது. நெருக்கமாகப் பின்னப்பட்ட வெள்ளி வளை யம் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக் குண்டும் வேல் போன்ற ஒரு தகடும் தொங்கிக் கொண்டிருந்தன. முகப்பில் சிங்க முகம். அது போன்ற ஒரு பாதசரம் அவன் முன் ஒருபோதும் பார்த்ததில்லை. அவன் தன் மனைவி யின் முகத்தைப் பார்த்தான்.
குவளை மலரைப் பழித்த அவளது விழிகள் “காஸ் லைட்” ஒளியில் அகல விரிந்து பளபளத்தன.
அவளிடம் சாதாரணமான காற்சங்கிலிகூட இல்லை. உருண்டையாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அவளுடைய கணைக் கால்களில் இதுபோன்ற ஒரு பாதசரத்தை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை செல்லையாவின் மனத் தில் தோன்றியது இந்த ஆசையோடு வேறு எத்தனையோ ரகஸ்யமான இன்ப நினைவுகள் அவன் உள்ளத்தை மயக் கின. அதை எப்படியும் வாங்கி விட வேண்டும்! அதன் விலை என்னவென்று கடைக்காரனைக் கேட்டான்.
'முப்பத்தைந்து ரூபாய்; வேறு விலை கேட்க வேண் டாம். " செல்லையாவின் மடியில் முப்பத்தொரு ரூபாய்தான்
இருந்தது.
"இருபத்தைந்து தரலாம், சாமானைக்குடுத்துப் போடு"

ܡܩ ܲ5 ܚ
* தம்பி இது நாட்டுப் பெண்டுகள் போடுகிற கால்ச் சங்கிலி அல்ல. ராசாத்தியின் கால்களுக்கேற்றது. இந்தி பாவிலிருந்து ஸ்பெஷலாய் வந்தது. உமக்கு இது சரி வராது ராசா. கடைசி விலை; முப்பது ரூபாய், குடுப்பீரா?
'' መ ሐ] இந்தா .وو
பாதசரங்கள் கைமாறி, அவ்விடத்திலேயே நல்லம்மா வின் பாதங்களில் ஏறின.
வெண்மணலில் கால்கள் புதைய இருவரும் மறுபடி கடைகளைச் சுற்றி வந்தனர். மிச்சமாக இருந்த ஒரு ரூபா யைக் கொண்டு ஒரு தையற் பெட்டியும் வாங்கி, ஆளுக் கொரு சர்பத்தும் குடித்தனர். அடுக்குப் பெட்டி வாங்க aivono,
நல்லம்மாவின் கால்கள் ஓய்ந்துபோயின. 'இனி வாண்டிலடியில் போய்க் கொஞ்ச நேரம் இருந்திட்டு, திரு விழாப் பாத்துக்கொண்டு விடியப் போவம்' என்று இரு வரும் முடிவு செய்தனர். செல்லையா அவளை ஒரு சனக் ரும்பலுக் கூடாகக் கையில் பிடித்து நடத்திக் கொண்டு சென்றன். கும்பல் கழிந்து கொஞ்சம் வெளியான இடத் நிற்கு வந்ததும் நல்லம்மா திடீரென நின்று தன் இடக் கால உயர்த்திக் கையால் தடவிப் பார்த்தாள்.
"ஐயோ காற் சங்கிலியைக் காணேல்லை."
என்ன - வடிவாய்ப் பார்!"
"ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளை கழண்டு
விழுந்திட்டுது."
"கொஞ்சம் கவனமாய் வாறதுக்கென்ன? உனக்கு ஆட்டம் மெத்திப் போச்சு ஊதாரி நாய்"
மறுகணம் செல்லையா தன் நாக்கைக் கடித்துக் கொண் L. Arrir, a

Page 11
سے 6 سن
குண்டூசியால் துளைக்கப்பட்ட றப்பர் பலூண்ப்போல நல்லம்மாவின் உற்சாகம் அப்படியே சம்பளிந்து போய்விட் டது. மூன்று மாத மணவாழ்க்கையில் இதுதான் முதல் தடவையாக இப்படி ஏச்சுக் கேட்கவேண்டி வந்தது. அது வும் அம் பல த் தி ல் கூட்டிக்கொண்டு வத்துவிட்டு.! அவள் மனத்தில் கோபம், அவமானம், துயரம் ஆகிய எல்லா உணர்ச்சிகளும் ஒருங்கே தோன்றின. கண்களில் நீர் மல்கியது.
“போதும் உங்களோடை கோயிலுக்கு வந்த வண்ட வாளம், இனி நடையைக் கட்டுவம்."
செல்லையா ஒருபடி கீழே இறங்கினன். "நல்லம்மா! ஆத்திரத்திலை சொல்லிப் போட்டன், இஞ்சை பார்.”
* வேண்டாம், இப்பவே போகவேணும். வண்டிலைக் கட்டுங்கோ. நீங்கள் வராட்டி நான் தனியக் கால் நிடை யாய்ப் போறன், வழியிலை காறுக்குள்ளை வசுவுக்குள்ன் ஆப்பிட்டு நெரிஞ்சு போறன்."
செல்லையா மறுவார்த்தை பேசாமல் தன் திருக்கல் வண் டியை இழுத்து மாட்டை அவிழ்த்துப் பூட்டினன். அவன் ஆண்மகன், -
மாட்டின் கழுத்தில் கட்டியிருந்த வெண்டயங்களின் தாளத்திற்கு ஏற்பக் கரடுமுரடான தெருவில் வண்டிச் சக்க ரங்கள் கடக், கடக்" என்று சப்தம் செய்தன. யாரோ மண மகன் ஊர்வலம் வருவதற்காக விரித்துவிட்ட நிலபாவாடை போல் வளைந்து கிடந்த தெருவின் இரு மருங்கிலும் நெடிய பனைமரங்கள் மெளனப் பூதங்கள்போல் வரிசையாக நின்று ஆலவட்டம் பிடித்தன. W
செல்லையா நாணயக் கயிற்றை இளக்கிவிட்டு, மாட்டின் கால்களுக்கிடையில் தன் காலை வைத்தான். ரோசம் மிகுந்த அந்த இளங்காளை உன்மத்தம் கொண்டது போல், ஏற் காலைத் தன் ஏரியில் பட்டும் படாமலும் தாங்கிக் கொண்டு

பறந்தது. ஆத்திரத்தில் சிந்தனையில்லாமல் கூறிய வார்த்தைக்கு இவ்வளவு கோபமா? நிலத்தில் வியர்வை சொட்ட, கை கால் வலியினுல் செயலற்றுப் போக, புகையி லைத் தோட்டத்தைக் கிண்டிப் பாடுபட்டவனுக்குத்தான் காசின் அருமை தெரியும் ! அவன் ஆண்பிள்ளை. இரண்டு வார்த்தை பேச உரிமையுண்டு. அதைப் பெண் பொறுத் துக் கொண்டால் என்ன..? கொண்டுவந்த காசெல்லாம் அவளுக்காகத்தானே செலவு செய்தான்...? தனக்கு ஒரு சுருட்டுக்கூட வாங்கிக் கொள்ளவில்லையே.
கால்களை வண்டியின் பின்புறம் தொங்கப் போட்டுக் கொண்டு, வண்டியின் கீழ் ஒடும் தெருவைப் பார்த்தபடி நல்லம்மா சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எவ்வளவு அற்ப asmrifiauuiè !
ஒரு கஷ்டமும் இல்லாமல் திருவிழாப் பார்த்துவிட்டுச் சந்தோஷமாக வந்திருக்கலாமே. எ ல் லாம் அவளு டைய பிழைதான். கணவன் இரண்டு வார்த்தைகள் கடு மையாகச் சொல்லிவிட்டால்தான் என்ன ?
மாடு களைப்பினுல் பலமாக மூச்சு வாங்கியது. நெல்லி யடிச் சந்தியில், ஒரு பூவரச மரத்தின் கீழ்ச் செல்லையா வண் டியை நிற்பாட்டினன். அந்த நடுயாமத்திலும் கோவிலுக் குப் போகிறவர்களுக்காகக் கடைகள் எல்லாம் திறந்து வைக் கப்பட்டிருந்தன. சந்தையில் இரண்டு பெண்கள் அப்பம் சுட்டுக் கொண்டிருந்தனர். தேநீர்க் கடைகளில் தேநீர் கலக்கும் ‘கட கட" என்ற சத்தத்தை விட மற்றெங்கும் ஆழ்ந்த நிசப்தம் குடிகொண்டிருந்தது.
செல்லையா மாட் டி ன் களை தீர அதைத் தடவிக் கொடுத்தபின், ஒரு தேநீர்க்கடை இருந்த பக்கமாகச் சென் முன், அவனுடைய மடியில் ஒரு ஐந்து சதம்தான் இருந்த தென்பது நல்லம்மாவுக்குத் தெரியும். அன்று மத்தியானம் வீட்டில் சாப்பிட்டதுதான். அதன் பிறகு ஒன்று மே இல்லை. "ஐயோ அவருக்கு எவ்வளவு பசியாயிருக்கும்

Page 12
سس۔ 8 --
வாய் திறந்து ஒன்றும் சொல்லாமல் இருக்கிமூரே " என்று அவள் அங்கலாய்த்தாள். அவளுடைய இதயம் இளகிக்
கரைந்தது. தன் கணவனுடைய மனத்தின் பண்பும்
அவன் தன்பால் வைத்துள்ள அன்பின் ஆழமும் அவள் மனத்தில் தெளிவாயிற்று. விவாகம் செய்துகொண்ட புதி தில் ஒருநாள் அவன் கூறிய வசனம் ஒன்றை அவள் ஞாப கப்படுத்திக் கொண்டாள். “பெட்டை உனக்காக வேணு மெண்டால் என்ரை உசிரையும் கொடுத்துவிடுவேன். நீ ஓண்டுக்கும் பயப்பிட வேண்டாம் "
அவளுடைய நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் இருந்தது . கண்கள் பொருமி உவர் நீரைப் பொழிந்தன. தன் கணவனை ஒரு குழந்தை போல் மடியில் வைத்துத் தாலாட்டி அவனுடைய உடலின் ஆயாசத்தையும் மனக் கவலையையும் போக்கவேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.
செல்லையா வாயில் ஒரு சுருட்டுடன் வந்து, மனைவியரு கில் ஒரு வெற்றிலை பாக்குச் சுருளை வைத்துவிட்டு, அவளு டைய முகத்தைப் பார்த்தான். அவளுடைய கண்ணிர் தோய்ந்த முகத்தின் ஒளி அவன் உலுக்கியது. தன்னு டைய நாற்பது ரூபா பெறுமதியுள்ள மாறுகரைச் சால்வை யால் அவளுடைய கண்ணிரைத் துடைக்க வேண்டும் என்று அவன் மனம் அவாவியது.
* என்ன, நல்லம்."
நல்லம்மாவின் கண்ணிர் வடிந்த முகத்தில் நாணம் கலந்த ஒரு புன்னகை அரும்பியது. "ஒண்டுமில்லை,
உங்களுக்குப் பசி இல்லையே? வெளிக்கிடுங்கோவென் கெதியாய் வீட்டை போவம்."
செல்லையா அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான்.
மாட்டின் வெண்டயம் மறுபடியும் பனந்தோப்புகளில் எதி
of statisg......

------ ح - 9 سسے
வல்லை வெளி !
இந்த அகன்ற பூமிப் பரப்பின் மகிமையை அறிந்தது போல இதுகாறும் வேகமாய் ஓடி வந்த மாடு, தன் கதியைக் குறைத்து அடிக்குமேல் அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது.
பேய்க் காற்று "ஹே" என்று சுழன்றடித்தது.
வானம் கவிந்து நாற்புறமும் நிலத்தைக் கவ்விக் கொண்டிருந்தது. வெளியின் நடுவே தேங்கி நின்ற நீரோடை, ஒரு அரக்கனது பிரம்மாண்டமான மார்பில் அணியப்பட்ட மரகதச் சரடுபோல் ஜ்வலிததது வான முகட்டின் உச்சியில் தொங்கிக் கொண்டிருந்த பளிங்குத் தகடுபோன்ற சந்திர தீபம் கீழே விழுந்துவிட எத்தணிப்பது போலக் கனிந்து பிரகாசித்தது.
சின்ன மனிதர்களையும் பெரிய எண்ணங்கள் எண்ணும் படி தூண்டும் இந்த வெளிப் பிரதேசத்தில்தான் மனித ளின் ஜீவநாடி நவநாகரீக முறைகளால் நலிந்து படா மல் இன்னும் அந்தப் பழைய வேகத்தோடு அடித்துக் கொண்டிருக்கிறது.
எங்கோ வெகு தொலை வில் நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்தில் பொட்டிட்டது போன்ற ஒரு ஒளி தோன்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெருவை நோக்கி நகர்ந்து வந்தது. செல்லையா அதைக் கண்டதும் அதை நோக்கிக் காறியுமிழ்ந்தான். நல்லம்மா, "அது ான்ன ?” என்று கேட்டாள்.
ஆரோ மீன்பிடிகாரர் சூள் கொண்டு போகிருன்கள் " ான்று ஒரு பொய் சொல்லி மழுப்பிவிட்டுச் செல்லையா மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினன்.
அந்த வெளிச்சம் தெருவைக் கடந்து வேகமாய் மற் றப் பக்கத்தில் போய் ' பக்" கென்று அவிந்தது.
Glav - 3

Page 13
- 10 -
செல்லையா வின் இடக் கை அவள் மனைவியின் இடையை நோக்கி நகர்ந்தது.
அவனுடைய மனம் வல்லை வெளிபோல் விரிந்தது. மெய்ம்மறந்த ஒரு மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. தன் குரலை எழுப்பி, "ஞானகுமாரி" என்ற தேவகாந்தாரி ராகப் பாட்டைப் பாடிஞன். அவனுக்குப் பசியில்லை, தாகம் இல்லை, தூக்கம் இல்லை. எத்தனை கொள்ளிவாய்ப் பிசாசு கள் சேர்ந்தும் அவன் என்ன செய்துவிட முடியும்?

அ நூ லா
மைந்த தூங்கி விழாதே நல்ல ஸ்வாரஸ்யமான கதை, இலங்காத்வீபத்தை ஆண்டமுதல் அரசியின் காதல்களைப் பற்றியது. ஆகா, "காதல்" என்ற தும் திடீரென்று விழிப்பு வந்துவிட்டதே உனக்கு கேள்.
அநுராதபுர நகரம் கிறிஸ்து பிறப்பதற்குச் சில ஆண் டுகளுக்கு முன்பு.
சந்திரன் பாரபட்சமின்றி எல்லோருக்கும் சமமாகத் தன் வெண்ணிலாவைப் பரப்பினுலும் மனிதர்கள் அதை வெவ்வேறு விதமான உணர்ச்சிகளுடன் ஏற்றுக்கொள் கிருர்கள். நிலவைக் கண்டதும் உன் மனத்தில் கொடி பான்ற அழகிய கன்னிகைகளைப் பற்றிய நினைவு உண் டாகிறது. எனக்கு நித்திரை வருகிறது. நீ இளவல். நான் வயோதிபன்.
அன்று பெளர்ணமி. அந்தப்புரத்து உப்பரிகையில் அரசனின் வரவுக்காகக் கதவடைக்காமல் பார்த்திருந்த அரசியின் மனத்தில் இனிமையும் வேதனையும் கொண்ட காதல் நினைவுகளை அந்தப் பால் நிலவு தோற்றுவித்தது
திதாக அரண்மனைக் காவலுக்கு வந்திருந்த சிவபாலன் ான்ற தமிழ் இளைஞனின் பெண்மை தோய்ந்த யெளவ வனத் தோற்றத்தைத் தியானித்து அடிக்கடி நெடுமூச் செறிந்தாள். அவளுடைய நரம்புகளில் என்றும் இல்லாத றர் இன்பக் கிளர்ச்சி நெளிந்து துடித்தது.
அரண்மனையின் மறு கோ டி யில் தன் பிரத்தியேக அறையில் மதுவெறியில் புரண்டு கொண்டிருந்த அர சகுே புத்த விகாரைகளை அடித்துத் தரைமட்டமாக்கிக் களியாடுவதற்கே இந்த நிலவு ஏற்றது என்று நினைத் தான். ஆணுல் நகரிலோ சுற்றுப்புறங்களிலோ புத்த விகா ரைகள் இல்லை எல்லாம் தகர்த்தெறியப்பட்டு விட்டன. அது அவனுக்குப் பெரிய ஏ மாற்றமாக இருந்தது.

Page 14
* கொண்டு வா இன்னும் ஒரு கிண்ணம்" என்று தயா ராக நின்ற பணிப் பெண்ணை நோக்கி இரைந்தான். நினைத்த மாத்திரத்தில் இடிப்பதற்குப் புத்த விகாரைகள் இல்லாமற் போகவே, போதை ஏறிய அவன் மனம் அர சியை நோக்கித் திரும்பியது.
இந்த அரசனும் அரசியும் அரசுரிமைக்கு எவ்வித உரிமையும் இல்லாமல் வெறும் மிருக பலத்தைக் கொண்டு அரசு கட்டில் ஏறியவர்கள். மகாதீசன் என்ற அரசன் மரணத்தறுவாயில் இருந்த பொழுது கோரநாகன் என்ற உபபடைத்தலைவன் தன்வசம் இருந்த சேனையைக்கொண்டு அரண்மனைக்காவலை மடக்கிச் சிங்காசனத்தைத் தன்வசமாக் கிக் கொண்டான். கோரநாகனும் அவன் மனைவியான அநுலாவும் தேசத்தவரின் விருப்பு வெறுப்பை நோக்காமல் பலவந்தமாகவே அரசனும் அரசியுமாகிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டனர்.
அரசபரம்பரையில் தோன்ருத அவர்களை நாடு ஏற் றுக் கொள்ள மறுத்தது. பொதுஜன அபிப்பிராயத் தலை வர்களான புத்த பிக்குக்கள் அங்கங்கே மக்களிடையே குரோதத்தைப் பரப்பி வந்தனர். அதையறிந்த கோர நாகன் புத்த விகாரைகளை நாசம் செய்து பிக்குகளைச் சித்திரவதை செய்து சிறையிடத் தலைப்பட்டான். இயற் கையாகவே குரூர உள்ளம் படைத்த அவனுக்கு இந்தக் கைங்கரியம் மிக உவப்பாகவே இருந்தது. பிரஜைகளி டையே அரசின்மேல் வெறுப்பு வளர்ந்தது.
மைந்த, மறுபடியும் கண்ணயர்ந்து விட்டாயா ? எழுந் திரு. காதல் இனிமேல்தான் ஆரம்பமாகிறது. இதுவரை யும் கதைக்கு நிலைக்களஞன நிலைமையைச் சொன்னேன்.
அநுலா சிவபாலன் என்ற அரண்மனைக் காவற்கா ரண் நினைந்து உருகினுள் என்று சொன்னேன் அல்லவா? அவளுக்கு அரசனுடைய காதல் இல்லாமல் இல்லை. அரசன் தோற்றத்திலும் உணவிலும் மதுபானம்

۳۔ مسے 13 سست۔
செய்வதிலும் ஓர் அரக்கன் போலிருந்தான். அவனுடைய காதலும் சண்டமாருதம் போல் கொடியதாகவும் வேகமு டையதாகவும் இருந்தது. அதை அவளால் சகிக்க முடியா மல் இருந்தது. சிலசமயம் மனத்தில் சகிக்க முடியாத அரு வருப்பு உண்டாயிற்று. உடல் கூச்சம் கொண்டது. அரச துடைய உக்கிரமான மிருகதாபத்தினுல் களைப்படைந்த அ.துலா மென்மையையும் அழகையும் நாடினுள்.
கோரநாகனுக்கு வாழ்க்கையில் இலட்சியங்கள் மூன்றே : முன்று புத்த பிக்குக்களை இம்சை செய்வது இரண்டா வது மதுபானம் செய்வது; மற்றது, அநுலாவை இடை விடாது "காதலிப்பது". இம்மூன்றிலும் அநுலாவுக்கு அபாரமான வெறுப்பு, மனைவியின் கடமை என்ற திரை மினுள் இதுகாறும் தன் வெறுப்பை ஓரளவு மறைத்து வந்தாள்.
" ஆகா! சிவபாலன் அந்தப்புரக் காவலுக்கு மாற்றிக் கொண்டால்" என்று அவள் சிந்தனைத் தொடர் ஓடியது. அவன் அழகாய் இருந்தான். இளமையாய் இருந்தான். அவளும் இளமையாய் இல்லாவிட்டாலும், அழகாகவே இருந்தாள். அத்துடன் ஸ்திரிசாகசம் இருக்கவே இருக் கிறது. சந்தர்ப்பம் வேண்டும்
தேய்த்து மினுக்கிவிட்ட வெள்ளித் தகடுபோல் சந்தி ரன் நடுவானில் தொங்கிக் கொண்டிருந்தான். மரங்க ளின் தலைகள் மெருகு கொண்டு மென்காற்றில் சலசலத் தன. திடீரென்று அரசன் வரும் அரவம் கேட்டது, அநுலா மங்கிக் கிடந்த தீபத்தைத் தூண்டிவிட்டு, சாள ரத்தை மூடினுள். நிலவு வெளியே நின்றது.
அரசன் தட்டித் தடவிக் கொண்டு வேர் அறுந்த நெடுமரம்போல் மஞ்சத்தில் சாய்ந்தான். மதுநாற்றம் அநுலாவின் குடலைக் குமட்டியது. ஆயினும் அவள் அவனை வழக்கத்திற்குப் புறம்பான உபசாரத்துடன் வரவேற் முள். ‘அரசே, மிகவும் களைப்படைந்திருக்கிறீர்கள். காலை வில் எங்கோ போயிருந்தீர்களே, எப்பொழுது திரும்பி

Page 15
தி அந்தீர்கள்? தங்கள் வரவை எனக்கு அறிவிப்பதற்குக் கூடத் திராணி அற்ற வணு ய் ப் போய் விட்டான் என் அந்தப்புரப் பணியாளன் " என்ருள்.
அரசன் தாடியில் வழிந்திருந்த எச்சிலைக் கையால் துடைத்துககொண்டு, ‘ ஆ, ! எங்கே அந்தப் போக்கிலி? அவனை இப்பொழுதே கட்டியணைத்துக்.என்ன சொன் னேன்? ஆமாம், அவனைச் சிரச்சேதம் செய்துவிடுகிறேன். இன்று, மதுவில் அதிகப் போதையை ஏற்றிவிட்டான் சண் டாளப் பயல். எங்கே அவன்?" என்று உழறிஞன்.
3.
** நாதா, இப்படிச் சாய்ந்து கொள்ளுங்கள். அவள் யாராவது அரண்மனைத் தாகியாருடன் ஸரசமாடப் போயி ருப்பான். வேறு என்ன வேலை அவனுக்கு ??
* ஹ! என்ன சொன்னுய்? இதோ அவனை."
* அதற்காக அவனைத் தண்டிக்க வேண்டா மே " பாவம் அவனை வேறு எங்காவது மாற்றிவிட்டு, அந்தப் புரத்துக்குச் சாதுவும் பணிவுள்ளவனுமான ஒருவண் வைத்து விட்டால் போகிறது".
" சரி சரி சரி சரி. அநூலா. உன் இஷ்டம் என் ராணி யல்லவோ? ஹ ஹா ஹா ஹீா, நாளையே உனக்கு வேறு பணியாள், சிவபாலன் எப்படி ?".
அநுலாவின் முகத்தில் அலட்சிய பாவம் தோன்றியது. *யாராயிருந்தால் என்ன? அடக்கமும் பணிவும் வேண்டும், அவ்வளவுதாள். '
தன் இஷ்டம் இவ்வளவு இலகுவில் நிறைவேறியதைக் கண்டு அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள்.
கோரநாகன் அநுலாவின் மடிமேல் தன் தலையை நகர்த்தி வைத்தான். “தாபம் மேலிட்டது. அநுலமகா தேவி, என்னை மகிழ்வி" என்று கெஞ்சினன்.

- 15 -
அவனுடைய காவிபடிந்த கோரமான பற்களும், வாயின் நாற்றமும் தசை பிதுங்கும் பூதாகாரமான உடலும் அவ ருக்குச் சொல்லொணு வெறுப்பை உண்டாக்கின. இருந் தும் அதை அடக்கிக்கொண்டு அன்றிரவு அவன் விலை மகள் போல் மகிழ்வித்தாள்.
மகனே, ஏன் முகத்தைச் சுழித்துக் கொள்கிருய்? இப்படியான அசுரகாமம் உலகிலே சர்வ சாதாரணம். மணந்த புதிதில் இனிய காதலாய் ஆரம்பித்த உறவு நாளடைவில் இப்படி ராக்கதமாய்ப் போவது பலருடைய அநுபவம். உனக்கு ஒன்றும் தெரியாது நீ இளவல் கனவு காண்பவன், மேலே கேள்.
மேற் கூறிய சம்பவம் நடந்து சில தினங்களுக்குப் பிறகு ஒருநாள் பொழுதுசாய இரண்டு நாழிகைக்கு முன் காலையில் தொலையூருக்குச் சென்ற மன்னன் திரும்பிவர வில்லை, அரண்மனை நிசப்தமாக இருந்தது,
அந்தப் புரத்தில் இருந்த அரசிக்கு இளம் பணிப் பெண்ணின் சேவைகள் கசப்பாக இருந்தன. அவளுடைய ஸ்பரிசம் மென்மையாக இல்லை, அவள் தொடுத்த மாலை கள் அழகாக இல்லை. அவள் சேர்த்த சந்தனக் குழம்பில் வாசனை இல்லை. இப்படி ஒவ்வொன்முகக் குறை கூறி ஈற் றில் 6 போடி, நானே எலலாம் செய்து கொள்கிறேன். போகும் பொழுது வாசலில் சிவபாலன் நின்ருல் அவனை இங்கே வரச் சொல்" என்று கூறி, பணிப் பெண்ணை அனுப்பி விட்டாள். பணிப்பெண் ஆச்சரியப்படவில்லை. சிவபாலன் அந்தப் புரத்தில் அரசியுடன் தனித்திருந்து பேசுவதும் குற்றேவல் புரிவதும் சில தினங்களாகச் சகஜம். அரண்மனைச் சிப்பந்திகள் இதைப் பற்றி ரகஸ்யமாகத் தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டனர்.
சிவபாலன் அந்தப்புரத்துக்குள் நுளைந்த பொழுது அநுலா சாளரத்தின் அருகில் மரங்களின் புறத்தே தாழும் சூரியனைப் பார்த்துக்கொண்டு நின்ருள். சாளரத் தருகே கரும்ப உருவமாகத் தோன்றிய அவள் உடல்

Page 16
- it -
அமைப்பின் லாவண்யத்தைக் கண்டு சிவபாலன் ஒருகணம் திகைத்து நின்றன். விம்மிய மார்பிள் பாரத்தைச் சுமந்து நின்ற இடை முறிந்து விடும்போல் அவ்வளவு மெல்லிய தாக இருந்தது.
அரவம் கேட்டு அதுலா கால் மெட்டிகள் இனிமை யாக அனுங்க அவனை நோக்கித் திரும்பினுள் " ஆ! வந்தாயா? உன்னைக் கண்டபிறகுதான் என் மனத்தில் சிறிது உற்சாகம் ஏற்படுகிறது".
* அம்மணி, நான் பணியாள்." அநுலா குறும் பாகப்புன்னகை செய்தாள். ' பணி யாளுக்கு அழகு இளமை இல்லையோ?" -
சிவபாலன் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டாள். அவ னுடைய நிலையை அறிந்த அநுலா, " அதுசரி; மதுரை யில் பூவாணிச்சிகள் மாலை தொடுக்கும் பாணி என்று பிர மாதமாகப் பேசிக்கொண்டாயே; உன் ஊரும் மதுரை தானே ? இந்தப் பூவைக் கொஞ்சம் தொடேன் " என்று கெஞ்சல் பாவம் தோன்றும்படி கட்டளை செய்தாள்
சிவபாலன் மலர்த்தட்டின் முன் உட்கார்ந்து, அதில் குவித்து வைத்திருந்த பூக்களை கையால் கிளறி விட்டான். வாசன் " கம்" என்று பரவியது. அநுலா அணிந்திருந்த சவ்வாதின் வாசனையும் அதில் விரவி அவன் நெஞ்சில் ஒரு கண நேரத்துக்குச் சொல்லமுடியாத ஒரு தவிப்பை உண்டாக்கியது. அநுலா இலேசாக மஞ்சத்தில் சாய்ந்து தலையைக் கையில் தாங்கிக் கொண்டாள்.
* ஆமாம், அன்று அல்லி ராணியின் கதை சொன் ரூயே. அவள் தன்னத் தனியேதான் ராஜரிகம் செய் தாளா? அர்ஜூனர் அதில் தலையிடவில்லையா?"
சிவபாலன் தன் முகத்தைச் சிறிது நிமிர்த்தி, ‘அர்ஜுன ரைக் காதலர் என்ற அளவில்தான் வைத்துக் கொண் டாள். அவள் தன் ராஜதத்துவத்தில் எள்ளளவும் யாருக்
கும் விட்டுக் கொடுக்கவில்லை. ஆகா, அவளுடைய ஆண்

மின்கீழ்க் குடிகள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார் கா " என்று கூறினுள்,
அநுலா மெளனமானுள், பெண்கள் ராஜரிகம் செய் வதைப்பற்றி அவள் சிந்தனை சென்றது: இலங்கையில் மட்டும் இதுகாறும் பெண் ராஜ்யம் தோன்ற வில் லை.
தான்றினுல்.
சிவபாலன் அவளைக் கடைக் கண்ணுல் கவனித்தான். பிறகு மலர்களை வேகமாக எடுத்து மடித்து நாரில் செரு கிக் கொண்டு, தனக்குத்தானே பேசிக் கொள்பவன் போல, மெதுவாக இலங்கையிலும் ஒரு பெண்மணி சிங்காசனம் ஏறிஞல் கலவரங்கள் ஓய்ந்து நாடு நலம்பெறும் ' என்ருன்.
அநுலா திடுக்கிட்டு, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு " என்ன சொன்னுய்? என்ன சொன் னு ய் ? " எ ன்று
பதறினுள்.
தான் அநுமானித்ததில் பிழை இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சிவபாலன், மிகச்சமாதானமாகவே பதில் சொன்னுன் " அதில் வியப்பு ஒன்றும் இல்லையே! அரசருக்குச் சந்ததி இல்லாததனுல் அவருக்குப் பிறகு தாங்களே செங்கோல் செலுத்தவேண்டி ஏற்பட்டாலும் ஏற்படலாமல்லவா ?"
உருவம் இல்லாத தன் எண்ணங்களைச் சிவபாலன் வார்த்தைகளாக்கிவிட்டது அரசியை வியப்புறச் செய்தது. மனத்தில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. தீபத்தைக் காண்டு கவர்ச்சியும் மருட்சியும் ஒருங்கே அடையும் குழந்தை பால அவள் தடுமாறினுள். சம்பாஷணையின் போக்கை மாற்றிவிட நினைத்து, " அது கிடக்க, அரசர் இன்று ாங்கே போனுர் என்பது உனக்குத் தெரியுமா ?" என்று கேட்டாள்
" தெரியவில்லை, அம்மணி" வெ = 8 -

Page 17
- 18 -
அநுலா மறுபடி மெளனமாக அடிக்கடி நெட்டுயிர்த் தாள். அவளுடைய கைவளைகள் எதற்கோ ஏங்குவன போல் மெல்லென அரற்றின. மங்கும் ஒளியில் சிவபால னின் முகம் மெருகிட்டது போல் ஜ்வலித்தது. அநுலா அவன் இமை கொட்டாமல் நோக்கினுள். நெட்டுயிர்த் தாள். அவளுடைய கண்கள் விரகத்தால் பளபளத்தன.
சிவபாலன் ஒன்றையும் விடாமல் கவனித்து மனத்தில் கொஞ்சம் தைரியத்தை வருவித்துக் கொண்டு, "அம்மணி, தங்களை ஏதோ துயரம் வாட்டுகிறது போல் தெரிகிறது," என்ருன், سس----
அநுலா எழுந்து சிவபாலன் இருந்த இடத்திற்கும் சாளரத்திற்கும் இடையில் நின்று கொண்டாள். கதிரவ னின் கடைசிக் கிரணங்கள் சாளரத்தை விட்டு இன்னும் அகலவில்லை அநுலா மிக மெல்லிய துகிலை அணிந் திருந்தாள். முகத்தில் மந்தகாசமும் துயரமும் கலந்தது போன்ற ஒரு பாவத்தை வருவித்துக் கொண்டு சொன் ஞள்: " ஒவ்வொருவருக்கும் அவரவர் துயரம். மதுரை யில் விட்டு வந்த காதலியைப் பற்றி உனக்குத் துயர். எனக்கு."
* அம்மணி"
* காதல் துயரத்தின் தாய் என்பதை நீ அறியாயோ?" சிவபாலன் பதில் கூறவில்லை. திடீரென்று அவனுக்கு ஆழம் தெரியாத மடுவில் இறங்கி விட்டது போல் பெரும் பயமாக இருந்தது அநுலாவின் குரலில் தோன்றிய ஒரு நடுக்கம், கண்களிலே தோன்றிய குழைவு, தன்னை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அபாயத்தின் முதல் ஸ்பரிசம் போல் அவன் ம ன த்தில் பட்டது. தனியே இருந்து இதைப்பற்றி ஆழ்ந்து யோசனை செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
* அம்மணி, என்னை மன்னியுங்கள் தீபம் ஏற்றும் நேரமாகி விட்டது" என்று சொல்லிப் பதிலை எதிர்பாரா மல் வேகமாக வெளியே செள்மூன். V

- 19 -
அதன் பிறகு அரண்மனையில் தீபங்கள் ஏற வானில் தாரகைகள் முளைத்தன.
அரசன் அரண்மனை அடைந்த பொழுது சந்திரன் உதிக்கும் சமயமாய் விட்டது. அன்று போனகாரியம் ஜய மாகவில்லை. அத்துடன் பிரதான ஊர்கள் சிலவற்றில் அவனுக்கு எதிராகக் கலகங்கள் தோன்றியிருக்கின்றன ான்ற செய்தியும் அன்று கிட்டியிருந்தது. அதனுல் அவன் மனம்குழம்பிச் சினத்துடன் இருந்தான். மறதியை வேண்டி வழக்கம் போல் மது அருந்தத் தலைப்பட்டவன், அன்று கொஞ்சம் அதிகமாகவே அருந்தினுன்
நடு ஜாமத்தில் அவன் அந்தப்புரத்தை அடைந்த பொழுது, கதவு பூட்டிக்கிடந்தது. பல நேரம் கதவில் அறைந்த பிறகுதான் அது திறக்கப்பட்டது, அலங்காரம் எதுவும் இன்றி நித்திரை வழியும் முகத்தோடு காட்சி யளித்த அநுலா தன் வெறுப்பை மறைக்க அன்று எவ் விதமான பிரயத்தனமும் செய்யவில்லை. கடமை என்ற முகமூடியை அன்று விலக்கி விட்டிருந்தாள். " அரசே எனக்கு நிம்மதியே கிடையாதா? சுயமான விருப்பு வெறுப்பு ஒன்றுமே இல்லையா எனக்கு?" என்று கொஞ்சம் கடுமையாகவே கேட்டாள்.
கோரநாகனுக்கு ரெளத்திராகாரமான கோபம் வந்தது தன்னை மறந்து சாதாரணமான குடி வெறியனைப் போல் மானஹறினமான தூஷணை வார்த்தைகளைப் பேசினுள். அரசியின் எண்சாண் உடம்பு எண்சாணுகவே நின்முலும் உள்ளம் கூனிக் குறுகிச் சொல்லொணு மானபங்கப்பட்டு நின்றது ஆணுல் அவளுடைய மெளனமான எதிர்ப்பின் உறுதி மட்டும் தளரவில்லை. அரசன் வெறிகொண்டு உறு மினுள், இரைந்தான், வைதான், குரல் எடுத்துக் கத்தினுன் பலாத்காரம் கூடச் செய்ய எத்தனித்தான். அவ்வளவிற்கும் அநுலா பட்டமரம்போல், சுவாசிக்கும் பிணம்போல் நின் முள் இருதய பூர்வமான வெறுப்பே பெண் வடிவுகொண்டு நிற்பது போல் தோன்றினுள்.

Page 18
அரசன் அந்தப்புரத்தை விட்டு அகன்ருன் ,
மறுநாட் காலை சிறையிலிருந்த மூன்று அரசியற் கைதி களைச் சிரச்சேதம் செய்யும்படி அரசனின் ஆக்ஞை பிறத் தது. அதன் விளைவாக அநுராதபுர நகரிலே ஏற்பட்ட கலகத்தை அரசன் சேனுபலம் கொண்டு ஒருவாறு அடக்கி விட்டான். அவனுடைய குரூரசுபாபம் அன்று உன்மத்த கதியடைந்திருந்தது. -
மைந்த, கோரநாகன் அன்று அநுலாவைச் சிரச்சே தம் செய்யும்படி ஏன் ஆக்ஞை செய்யவில்லை என்று நீ அதிசயிக்கிருய் அல்லவா? அந்த விஞவுக்கு விடை சரித் திர ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. எனக்கும் தெரி யாது. சாரல் அடிக்கிறது. சாரளத்தை மூடிவிடு.
பகல் முழுவதும் சோர்ந்து போய் அந்தப்புரத்துக்குள் அடைபட்டுக்கிடந்த அநுலா, நகரில் கலகம் ஏற்பட்டதைக் கேள்வியுற்றதும் அவசரமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு சிவபாலனை அழைப்பித்தாள். சிவபாலனுக்கு அவளை ஏறிட்டுப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. அநுலா அவன் ஒரு வித அநுதாபத்துடன் நோக்கினுள். அவ னுடைய உடலின் வனப்பு அவள் மனத்திற்கு ஒர் எழுச்சி யைக் கொடுத்தாலும் அவள் முகம் வாட்டமுற்றே இருந்
55. -
" சிவபாலா, திடீரென்று வாழ்க்கை வேம்பாகி ந1ளை என்ற நம்பிக்கை அற்றுப்போய் விட்டால் என்ன செய் 6ጨ!ዘrù ?''
சிவபாலன் அந்தக் கேள்வி தூண்டில்முள் என்பதை உணர்ந்தானுயினும், அதில் தொடுக்கப்பட்டிருந்த இரை யின் கவர்ச்சி அவன் அச்சத்தை வென்றது. “ அம்மணி, அரசியாகிய தாங்கள் அப்படிக் கலங்கக் கூடாது. வேம்பும், கரும்பும் நம் கையிலேயே இருக்கின்றன. துணிந்து கருமத் தில் இறங்கினுல்தான் கரும்பைக் காணமுடியும்" எள்முன்,

سمس 21 سس
அநுலாவுக்கு அவனுடைய வார்த்தைகளின் அர்த்தம் அங்கை நெல்லிக்கனி போல் புலனுயிற்று.
அன்றிரவு அரசனுக்கு வேண்டிய பால், சிற்றுண்டி மூதலியவற்றை அநுலா தன் கையாலேயே சித்தம் செய்
நாள். b நடுயாமம்
அரசன் தன் பிரத்தியேக அறையில் படுத்துக்கொண்டு மஞ்சத்தில் அங்கும் இங்கும் புரண்டுகொண்டிருந்தான், வெளியே, தங்கத் தகட்டில் ரஸம் பாய்ந்தது போல் சந் திரன்ே மறைத்துப் புகார் படர்ந்திருந்தது தொலைவில் நகர் எல்லையில் இருந்து வரும் இணைக் கூகைகளின் உறு மல் நிசப்தமான இரவைக் காலத்துண்டுகளாக வெட்டி வெட்டி வைத்தது.
அரசனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை திடீரென்று அவன் மஞ்சத்தருகில், அநுலா, சர்வாலங்கார பூஷிதையாய், சுகந் நம் கமழ, கைவளை ஏங்க வந்து நின்றது அனைத் திகைப்பில் ஆழ்த்தியது 'நீ யார்?" என்று கேட்கும் நிறுவாயில் கூட இருந்தான் அதற்குள் அநுலா நிலத் தில் மண்டியிட்டு அவன் கைகளை எடுத்துத் தன் கண் களில் ஒத்திக் கொண்டு, " நாதா, இந்தப் பாவிக்கும் மன் ளிப்பு உண்டா ?’ என்று உருகினுள், அரசன் எதிர்ப்பு ாதுவும் இன்றி அவள் விரித்த கண்ணியில் வீழ்ந்து விட் டான். அநுலா, மணந்த அன்றே போல் மோகனமான காதலையும் மதிமயக்கும் அநுராகத்தையும் காட்டி அரச *ளத் திக்பிரமை கொள்ளச் செய்தாள்
சிறிது நேரத்துக்குப் பின் அரசன் அநுலாவைத் தொடர்ந்து அவளுடைய அந்தப்புரத்துக்குச் சென்றன். அங்கே தாயினும் இனிய அன்பு காட்டி, அநுலா அவ றுக்குப் பால், பட்சணம் முதலியவற்றை ஊட்டினுள்.
மறுநாள் காலை, அநுலாவின் மஞ்சத்தில் அரசன் பினமாகக் கிடந்தாள். −

Page 19
سے 222 -ست
அநுலா அவன் நஞ்சூட்டிக் கொன்றுவிட்டாள் சாள் பது சிவபாலன் ஒருவனுக்குத்தான் தெரியும். அநுலா அவ்விரவின் பிற்பாதியைச் சிவபாலனுடன் கழித்திருந் தாள்.
மைந்தா, உன் மனம் வெம்புகிறதா ? ஆகா, சுதந்திர தாகம் எதையும் செய்யத் தூண்டும் சக்தி வாய்ந்தது. அரசாள்வதற்கும் மனம்போனபடி காதல் செய்வதற்கும் அநுலா வுக்குச் சுதத்திரம் வேண்டியிருந்தது. கதை இன்னும் இருக்கிறது கேள்,
ஆணுல் அவள் நினைத்தபடி உடனே அரியணை ஏற முடியவில்லை. இறந்துபோன மகாதீசனுடைய மூத்த மகன் குடதீசன் நாடு வரித்தது. சேனையின் பலமும் அவன்பால் சார்ந்து நின்றது. அநூலாவால் அவன் அரசனுவதைத் தடுக்க முடியவில்லை
சிவபாலனுடைய காதலுக்காகவே அநூலா தன் கண வன்க் கொன்ருள் சான்றும், காதலில் திருப்தி ஏற்பட்டு விட்டால் அவளிடமிருந்து தீங்கு ஒன்றும் வராது என் றும் நம்பி, குடதிசன் அவளை அரண்மனையிலேயே வசிக்க அநுமதித்தான். ஆணுல் புதுமோகப்புயலின் வேகம் ஒர ளவு தணிந்ததன் பின் அநுலா மறுபடி அரசியாவதைப் பற்றிச் சிந்திக்கலுற்ருள். சிவபாலனும் ரகசியமாக அவ ளுடைய ஆசையை மேலும் கிளறி விட்டான். இலங்கை யின் முதல் அரசியாகிச் சரித்திரத்தில் இடம் பெற்றுவிட வேண்டுமென்பது அவளுக்குத் தவிர்க்க முடியாத ஆவ லாகி விட்டது.
ஆகவே, குடதிசன், முடிதரித்து மூன்று வருஷங்கள் பூர்த்தியாவதற்குள், சர்ப்பம் இரண்டாம் முறையாகப் படம் விரித்தது, ஒர் இரவு குடதிசன் விஷமிட்ட உணவை அருந்தி இறந்தான்,
அவனுக்குப் பின் அரசுரிமை கொண்ட அவன் தம்பி குடக்கண்ணதீசன் விரக்தி அடைந்து புத்தபிக்குவாகிப் போய்விட்டான். w

- 23 -
அநுலா சிவபாலனைப் பகிரங்கமாக மணம் செய்து கொண்டு சிங்காசனம் ஏறினுள். ஆரூல் அரசுரிமையில் சிவபாலனுக்கு எவ்விதப் பாத்தியதையும் கொடுக்காமல் தன் கீழ் ஒரு நகர் காவலரூக மட்டும் வைத்துக் கொண் டாள். சிவபாலனுக்கு அது திருப்தி அளிக்கவில்லை. அவன் தன்மேல் கொண்டுள்ள கா தலைப் புணையாகக்கொண்டு செங்கோலையே கவர்ந்து விடக் கருதினுன். அவன் சேனைத் தலைவர்களுடனும் சிற்றரசர்களுடனும் அதிக உறவு கொண்டாடுவதை அநுலா கவனித்தாள்; தன் அபா யத்தை உணர்ந்தாள்.
ஓர் இருள் சூழ்ந்த இரவு; விஷ அரவு மறுபடி சீறி எழுந்தது. மறுநாட் காலை அநுலாவின் மஞ்சத்தில் சிவ பாலன் பிணமாகிக் கிடந்தான்.
அதன் பிறகு அநுலா ஒருவர் பின் ஒருவராக நால் வரை மணம் செய்து, சிவபாலனைக் கொன்ற அதே கார ளத்திற்காக அவர்களையும் ஒவ்வொருவராக நஞ்சூட்டிக் கொன்ருள்.
குழந்தாய், கதை முடிந்தது. என்ன உள் கண்களில் கண்ணிர்? யாருக்காக ? இலங்கைச் சரித்திரத்தையே கறைபடுத்திய அரசிக்காகவா, அல்லது அவள் காதலி குல் உயிர் இழந்த கணவருக்காகவா? ஈற்றில் அநுலா வின் கதி எப்படியாயிற்று என்று அறிய வேண்டுமா ? இத்தகைய கிராதகியை எந்த நாடும் சகித்துக் கொள் ளாது. பிரஜைகளே திரண்டு எழுந்து அவளைச் சிங்கா சனத்தைவிட்டுத் துரத்தி விட்டனர்.
கண்களைத் துடைத்துக் கொள் ' எனக்குத் தூக்கம் வருகிறது. நாளைக்கு வேறு ஒரு கதை சொல்கிறேன்.

Page 20
அ ஞனு  ைத
* புத் " என்ற நரகத்தில் இன்றைய மனிதனுக்கு நம் பிக்கை இல்லை, பிள்ளை இல்லாதவர்களுக்கென்றே ஒரு தனி நரகம் என்ருல், நரகத்திற்கு அதிபதி எவகுே அவன் நரகத்தின் பெரும் பகுதியையே இந்தப் "பாபி" களுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கி வைக்க வேண்டுமே! இந்த வகையைச் சேர்ந்தவர்களின் தொகை எண்ணில் அடங்காது. ஆயிரமாயிரமாக நோன்புகள் நோற்கிருர்கள்; தான தருமங்கள் செய்கிருர்கள்; வைத்தியர்களிடம் ஆலோ சனை கேட்டு மருந்து உண்கிருர்கள்; கத்தி வெட்டுச் சிகிச்சையும் செய்து கொள்கிறர்கள் செயற்கை வழிகளில் பாழ்பட்ட உதரங்களில் கருவேற்ற முயலுகிறர்கள் . ரால் லாம் தம் சந்ததி அழிந்து படாமல் இருப்பதற்காக 1
என்ன மமதை சத்த தி அழிந்து போனுல், ஏதோ பெரும் தீங்கு விழைந்து விடப்போகிறது என்று நினைப் பதற்கு ஒரு தனிமனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் அகன்ற படைப்புத் தொடரில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வணு ?
வழமை போல் என் அலுவலகத்தில் கடுதாசிகளையும் "பைல்"களையும் புரட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பிரதமலிகிதர் அப்பொழுதுதான் அன்று வந்த கடிதங் களைத் தன் குறிப்புக்களுடன் என் பார்வைக்கு அனுப்பி விட்டிருந்தார்.
என் சிறிய அறைக்கு வெளியே குழந்தை அணில்கள் குரலும் குதிப்பும் பழகிக் கொண்டிருந்தன. கடிதங்களில் கண் ஓடவில்லை. குழந்தை அணில்கள் என்ற எண்ணம கோழிக்குஞ்சுகள், நாய்க்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள், பூண்க குட்டிகள் என்று ஓடி மனிதக்குட்டிகளிற் போய்நிலைத்தது. அறை வாசலில் இருந்து விம்மல் விக்கல்களுடனும் கண்ணிருடனும் கலந்த ஒரு பெண் குரல், 'ஐயா , என குழந்தை" என்றது.

- 25 -
சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தேன். என் அலுவ லகத்தில் மனிதர்கள் வந்து தமது கஷ்டங்களைச் சொல்லி அழுவதும் மூக்குச் சிந்துவதும் அவ்வளவு அரிதான சம் பவங்கள் அல்ல, ஆளுல் இதில் ஏதோ சாதாரணம் அல் லாதது இருந்தது. அது முகத்தில் தெரிந்தது, குரலில் தொனித்தது. என் ஊற்றுப் பேணுவை - அது உண்மை யில் மை ஊற்றுகிற பேணுதான் - மேசைமேல் வைத்து விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். உடனே என் நாற் காலியின் சாய்வுப் பகுதியில் பிரம்புப் பின்னலின் தொளை களில் பதுங்கிக் காத்திருந்த மூட்டைப் பூச்சிகளுக்கு என் வீரத் தமிழ் இரத்தம் மணத்து விட்டது. இன்னும் ஒரு பத்து நிமிஷங்களுக்காவது அவைகளுக்கு நல்ல வேட்டை!
* ஏன், என்ன? இதோ இப்படி இந்த நாற்காலியில் அமருங்கள். ஏதோ உங்கள் குழந்தை என்றீர்கள்."
அந்தப் பெண் தன் கையில் இருத்த பையிலிருந்து ஒரு சாணளவு கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களை லேசாக ஒற்றிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள். கண்ணிர் பட்ட இடங்களில் அவள் முகத்தில் பூசியிருந்த வாசனைமா அழிந்திருந்தது நீலிக் கண்ணிர் " என்று முதலில் நினைத்த நான், பவுடர் அணியும் பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று அறிந்ததும் அதனுல் உண் டான என் ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டேன்.
அவள் அழகான, ஆணுல் மலிந்த ஒரு நைலான் ' சேலையும் அதற்கு நிறப் பொருத்தமுடைய ஒரு " சோளி ? ரவிக்கையையும் அணிந்திருந்தாள். ஒரு மணிக்கட்டில் ஒரு அடக்க விலைக் கைக்கடியாரம், மற்ற மணிக்கட்டில் றரு பவுண் அல்லது இமிட்டேஷன் பவுண் காப்பு, காது களில் பிளாஸ்டிக் குண்டலங்கள், கழுத்திலும் மூக்கிலும் மூன்றும் இல்லை எனக்கு ஆச் சரியம் குறையவில்லை. அவள் ஒன்றையும் கவனியாதவள் போலத் தன் கைப் பையை எடுத்து அதில் அடங்கியிருந்த ரகஸ்ய சாதனங்  ாேக் கொண்டு தன்னை அழகு செய்ய எத்தனித்துக்
வெ = 4

Page 21
கொண்டிருந்தாள் - நான் ஒரு வெறும் மனிதன் அவள் முன் ரூல் இருக்கிறேன் என்பதையும் கவனியாமல்
எனக்குச் சிரிப்பு வந்தது பெண்களின் சுய கெளர வம் கெளரவம், என் ஆண்டவனே! அழுத பெண் அலங்காரம் செய்கின்ருள்; கண்ணிர் காய்வதன் முன்!
专 ** இது அலங்காரம் செய்யும் இடம் அல்ல இது ஒரு கந்தோர். இது ஏழைகள் ஆதரவும், உதவியும், சிறிதளவு அன்பும் தேடிவரும் ஒரு ஆலயம் போன்றது. கூறவேண் டிய முறைப்பாடு இருந்தால் உடனே கூறவேண்டும் ஆவன செய்வேன்.'
" என் முதற் குழந்தையை உங்கள் அதிகார எல்லைக் குள் இருக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட பொம்பிளை வளர்த்து வருகிருள். அக் குழந்தையை என் கையில் எடுத்துத் தர வேண்டும் ஐயா !”
அவள் கருதியது, பலாத்காரமாகப் பறித்துத் தர வேண்டும் என்று !
"உங்கள் முறையீடு எதுவென்று விபரமாகச் சொல்
" என் குழந்தை என்றே ஒரு நாள் கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன். அது வேறு ஒரு தேசம். வேறு ஒரு சூழ்நிலை. அங்கே "-
ஆ குதிரையின் முன் வண்டியை இணைக்க முயலும் ஒரு மூடனைப் போல - நான் பின்வருவதை முன்னுல் கூற முயல்கின்றேன்.
மன்னிக்கவும்.
இவை எல்லாம் என் கடமைகளில், ஒரு நாள் ஒரு பொழுது என்பது போல; ஆணுல் இது அடுத்த நாள்.

' سے 27 سست
" என்ன நயிந்தை, உ மக்குச் சொக்குப் பொடி போட்டிட்டாளாம் அந்த - அந்த என்ரை வாயிலை ஏன் வருருது - பாக்க, ஓ ! சொல்லிப் போட்டன் !" அவள் (காபித்தவள் போலப் பேசினுலும் அன்பாகவே, அந்தப் பூரணமான ஆணுல் பொருட்செல்வம் குன்றி ஏழமையடைந் திருந்த இருதயம் எவ்வளவு அன்பைப் பேச்சில் வெளிப் படுத்த முடியுமோ அவ்வளவு அன்  ைபயும் வெளிப் படுத்திறன்.
அவள் பெயர் மாதி.
அவள் தன் காடு வெட்டி 'ச் சேலையின் முந்தானை யால் தன் வயோ திய மார்புகளை மறைப்பதற்குக் குறுக்குக் கட்டாக அணிந்திருந்தாள்.
G Gu, மாதி I'
" என்ரை ஐயாச்சி, உண்மையைச் சொல்ல ஆர் இஞ்சை நேத்து வந்தது நம்மைத் தேடி ."
அவள் கிழக் கண்களிலே திடீரென்று கண்ணிர் மல் கிப் பெருகியது - ஆருக, சேலையின் முந்தானையை எடுக்க முடியாதாகையால், தன் கைகளால் கண்ணிரைத் துடைத் நாள். ஆணுல் துடைக்கத் துடைக்க மீண்டும் பெருகியது.
இரக்கம் என்ற உணர்ச்சி சாதாரணமாக இல்லாத ான் மனத்திலும், ஆழியில் அலை பொங்குவது போல ான் அநுதாப உணர்ச்சி தலை தூக்கியது.
“ стаіт, стаўтят ?”
* தயிந்தை, என்ரை பிள்ளையை எண்ணைக் கிடங்கிலை போட்டு வளத்த பிள்ளையை, நான் கிழவி எண்டாலும், ஒரு குமரியைப் போலை பாடுபட்டு வளத்த பிள்ளையை, என்ரை பிச்சைச் சம்பளக் காசையும் சிலவழிச்சுப் படிக்க
wnauë F sit &mravnu...”

Page 22
سست 238 ســــــــ
எள் மனத்தை என்னவோ செய்தது. த லை யைக் குனிந்து கொண்டேன்.
ஆம், அவள், அரசாங்கத்தார் தரும் தருமப் பணம் பெறுபவள்தான் - பத்து ரூபாய் மாத வீதம் 1
"நயிந்தை, நீர் யோசிக்கிறது எனக்குத் தெரியும். நான் கூலி வேலை செய்து, அதில்லாட்டிப் பிச்சை எடுத்து அந்தப் பொடியின்ரை சீவனையும் என்ரை சீவனையும் காப் பாத்துவன் எண்டதுதானே!"
"நீ கெட்டித்தனமுள்ள ஒரு பெண் !" 1 ஏன் நீரும் ஒரு. என்ரை பிள்ளை என்ஞேடை எப் பவும் இருக்க வேணும். அதுக்கு எனக்கு உதவி செய் யடி, என்ரை துரை !"
இவள் முதலில் அழுத கண்ணிர் உண்மையோ என்று ஒரு கணம் மலைத்தேன். அல்லது இவளுடைய சிரிப்புக் கலந்த பேச்சுத்தான் உண்மையோ? இந்த மாதிரி அந்த முதியவள் என்னுடைய அன்புக்கு முன்னரே பாத்திரமான 6እ}6ኸ!‛ "
என்னுடைய அகங்காரத்தையும் என்னுடைய உத்தி யோக கெளரவத்தையும் நிலைநாட்டி என் முன்னுல் அழுது சிரித்த அந்த ஏழைக்கு சான்னுல் ஆன உதவி செய்ய வேண்டும் என்று என் மனம் மிகவும் பேதலித்தது. அத ணுல் என்னுடைய கற்பனை உலகில் புகுந்து விட்டேன். அணைத்துக் காத்து, பாலூட்டா விட்டாலும் தாலாட்டிச் சீராட்டி, செல்வம் எனப் போற்றித் தன்னுடைய வயோ திப வாழ்வை வாழ்விக்க வந்த தெய்வம் என ஏற்றி வைத்து வளர்த்த ஒரு செல்வனுக்காக இவள் ஏங்குகிருள் என்று நான் நினைத்தேன். இவை எல்லாம் கற்பனை என்று முன் னரே சொல்லிவிட்டேனே! எனக்கோ இந்த மூதாட்டியின் முறையீடு சற்றுமே விளங்கவில்லை. என்னுடைய கீழ் அதி காரியிடம் இதை அனுப்பலாம் என்றல் அதுவும் எனக்கு உடன்பாடாக இல்லை.

அதற்குள் என் காரியாலயத்திலுள்ள பலர் கூடி விட் டனர். என் அறையின் வாசலிலே - ஏதோ ருசிகரமான விாக்கம் நடப்பதாக எண்ணி !
ான் மனம் வேதனைப்பட்டது அந்தக் கிழவிக்காக,
1 சென்று அடுத்த திங்கள் வா" w என்று நாள்
சொன்னேன். - ܖ
அவள் தான் அணிந்திருந்த விலை குறைந்த அந்த
காடு வெட்டி"ச் சேலையின் முத்தானையைச் சிறிதே தளர்த்தி மறுபடிதன் தொங்கும் மார்புகளின் மேல் வரிந்து கொண்டு
.போருள் ܫܡ̈ܫ.
என் மனத்தில் துக்கம் பொங்கியது எத்தன் ஏழை
கள். ஆனல் எத்தனை தாய்மார்கள்.
举 봉
முதல் முறை வந்த அந்த சினிமாக்காரி போன்ற உடை அணிந்த பெண் மறுபடியும் என் முன் உட்கார்ந் திருந்தாள். இன்று அவள் முகத்திலே வாசனைமா மட்டும் அல்ல, கன்னத்துக்குச் சிவப்பும், வாய்க்கு லிப்ஸ்டிக்" சான்று அதனிலும் கோரமான கடுஞ்சிவப்பும் அணிந் திருந்தாள். அவள் தன் கழுத்திலே அணிந்திருந்த வாசண்மா அலங்கோலமாக வரிவரியாக, அவளுடைய வேர்வையின் ஈரம்பட்டு அதன் நிறம் குன்றி வெள்ளை வெளிரெனத் தெரிந்தது. அந்த அழகில்லாத காட்சியைப் பார்க்கும்பொழுது, ' ஏய், உன் கழுத்தைச் சாண் அளவு கைக்குட்டையால் ஒருதரம் துடைத்துக்கொண்டு விடேன்" ான்று சொல்ல எனக்குத் தோன்றியது. ஆளுல் எனக் குச் சிரிப்பது சாத்தியமில்லை. என்னுடைய உத்தியோகப் பரம்பரை என்னுடைய வெளிப்படைச் சிரிப்பைக் கொன்றே விட்டுவிட்டது. எனக்குச் சிரிக்கத் தைரியமில்லை ஏன், சிரிப்பதற்கு ஆண்மையில்லை என்று கூடச் சொல்லிவிட
MN ID

Page 23
- 30 - -
参豹 ஏன்
* அன்று நான் வந்த விஷயம் எப்படியாயிற்று ?"
"எந்த விஷயம்."
* என் மகளின் விஷயம்."
* அதுவா? அதை இன்றே தீர்த்து வைக்கிறேன்!"
அவள் மீண்டும் அழுதாள். அழுதாள் எள்பதென்ன; தன் கண்களை ஒரு சாண் கைக்குட்டையால் ஒற்றிக்கொண் டாள். அவள் உடனே எழுத்து நின்று ஆவேசம் வந்த வள் போலப் பேசினுள்.
14 ஒய் ! நீர் ஒரு உத்தியோககாரன் என்று தேடி வந் தால் எனக்கு ஞாபகம் பேசுகிறீர், என்னுடைய பிள்ளையை இன்று என்னுடைய கையில் ஒப்படைக்க வேண்டும்.”
"அம்மா, அந்தப் பிள்ளை உங்களுக்கு எப்படி வாய்த் தது?"
அது என் பிள்ளை."
எப்படி?"
*ான் பிள்ளை என்று கூறுமிடத்து நீர் திருப்தி அடைய வேண்டும்.'
எனக்குக் கோபம் வந்தது, இந்தச் சினிமாக்காரியின் உதாசீனத்தைச் சகிக்க வேண்டுமா என்று !
* இந்தக் குழந்தை உன்னுடைய திருமணத்தால் பிறந்த குழந்தையானுல் உள் கணவன் இங்கு வந்து நிற்க வேண்டுமே! அவன் அல்லவோ குழந்தைக்காக வாதாட வேண்டும்."
அவள் மீண்டும் அழுதான். அத்துடன் அந்த மூதாட்டி யும் வந்தாள், அவளுடைய ஒக்கலையில் ஒரு ஒன்பது வய

- 31 -
துக் குழந்தை ஒருவன் இருந்தான் என் மனம் மிகவும் சங்கடப்பட்டது, இதை எங்ஙனம் இருவர் மனமும் நோகா மல் தீர்த்து வைக்கலாம் என்று !
அந்த மூதாட்டி சொன்னுள் :- "நயிந்தை, இது என்ரை பிள்ளை. நயிந்தை எண் டாலும் மற்றது சுப்பிறீம் கோட்டு ராசா எண்டாலும், ாள்ரை பிள்ளையைப் பறிச்சு, இந்தப் பொம்பிளையிட்டை குடுக்குற தெண்டால் அப்ப என்ரை உசிர் என்ரை உடம் பிஸ் இருக்கும் எண்டுதான் நயிந்தைக்கு எண்ணமோ ?"
"பெத்தா, யார் அப்படிச் சொன்னுர்கள்? யான் அப் படி ஒருநாளும் சொல்லவில்லை. ஏன் உன்னுடைய பிள்ளை ாாறு கூறுகின்ருய்?"
"நான் பெத்த பிள்ளை இல்லை, நயிந்தை வளர்த்த பிள்ளை இந்தப் பிச்சைச் சம்பளம் பத்து ரூபாவை வைச் சுக் கொண்டு, அதோடை என்ரை பிள்ளைக்கு காற்சட்டை சிப்பாத்து வாங்கிக் குடுத்து, அதை ஒரு ஆளாக்கி விட ாண்டுதான் எண்ணினன் நயிந்தை."
எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. என் மனத்தை மறுபடி என்னவோ செய்தது
"இந்தப்பிள்ளை உண்மையில் யாருடைய வயிற்றில் பிறந்தவன்."
" ஏன் நயிந்தை என்ரை வயித்திலை அல்லது sr ihr Abgr மேனின்ரை வயித்திலை இப்படிப்பிள்ளை பிறக்கப்படாதோ?”
நான் சொன்னேன், "இந்தக் குழந்தையின் சம்ம தத்தை முதலில் கேட்கலாம்," என்று.
f ஓம் ցաir I'
"ஆம், அப்படியே, குழந்தை உன் அம்மாவிடம் வகு ፴gur ?”

Page 24
ー32ー
99 RD als. "ஐயோ, என்ரை குஞ்சு என்னத்துக்கு அழுகிமூர். நான் வளத்த குஞ்சு 1"
அந்த சினிமாக்கரி போன்றவள் மறுபடியும் விம்மி ஞள். என்மனம் அவள்பால் பெரிதும் வயிரம் அடைந் திருந்தாலும் சிறிது இளகிற்று.
“நயிந்தை, உந்த மாய்மாலங்களுக்கு நீர் இளகப் படாது. என்ரை பிள்ளை எனனுேடை எப்பவும் இருக்க வேணும்." அவள் மறுபடி சிரித்தாள். “நயிந்தைக்கு வயது போதாது போலை; அதுதான் இப்பிடி யோசிக்குது." நான் மறுபடி சிரித்தேன். எனக்குச் சிரிப்பதற்கு ஒன் றும் இல்லை. ஆணுல் இது என்னுடைய கடமை.
*நான் யோசிக்கவில்லை, மாதி. ” * நயிந்தைக்கு விளங்கிச்சுதோ ?" ' என்ன மாதி, எனக்கு நீயா என்ரை உத்தியோகத் தைச் சொல்லித் தரப்போருய்?"
" என்ன நயிந்தை சொல்லுகுது ?" * நான் என்னத்தைச் சொல்லுகிறது ? இது உன்ரை பிள்ளை இல்லை - உன்னைப் போன்ற வயோதிப மாதிற்கு இந்த வயதிலே இப்படி ஒரு இளம் வயதுப் பிள்ளை எப் பிடிப் பிறக்கும்? அது உன்ரை பேரப்பிள்ளையும் இல்லை." அந்த நவநாகரீக நங்கை உடனே எழுந்து நின்ருள். அவள் எழுந்த உடன் வாசனை என் முகத்தில் வந்து வீசியது.
* என் பிள்ளை எனக்கு இல்லையோ ?" என்ருள். * உமக்கு இந்த உத்தியோகம் தகாது!"
* அம்மா, ஏன் இவளை உங்கள் மகனென்று கூறிக் கொள்கிறீர்கள்?" Y

- 33 -
"அது நான் உமக்கு எதற்குக் கூறவேண்டும். நீங்கள் தான் நீதி செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டீர்களே !" அவள் வேகமாக எழுந்து நைலான் " ஆடை சிலு சிலுக்க நடந்து விட்டாள்,
நான் கலங்கினேன், மாதி சிரித்தாள்.
"நயிந்தை, என்ன ஒரு மாதிரித்துக்கமாய் இருக்குது. ாள்ரை பிள்ளையை அந்தத் தேவடியாளிட்டைப் பறிச்சுக் குடுக்கேல்லை எண்டது போலை துக்கம்? என்ன நயிந்தை?'
என் மனம் உடனே தெளிவு பெற்றது.
* மாதி என்ன விஷயம் ?"
"என்ன நயிந்தை பாவத்துக்குப் பிள்களப் பெத்தா பரியாரி என்ன செய்யிறது? நான் தான் என்ரை * சீமாட் டிக்கு" ஒரு எதிரி வா, மேனே போவம் இந்தக் கிழட் டுக் கட்டை இருக்கும் வரைக்கும் என்ரை ராசாத்தியை " ஆரேன் கொண்டு போறதெண்டால், எடியே என்ரை ராசாத்தி, உடனை நானும் யமராசாவோடை போடுவன்."
அணிற் குஞ்சுகள்
வெ 5

Page 25
மனிதக் குரங்கு
உதடுகளை மூடிக்கொள்ள முடியாதபடி முன்னுேக்கிய மேற் பல் வரிசை; சிறிய பரிதாபகரமான கண்கள் புரு வங்களே இல்லை என்று சொல்லிவிடலாம், ' குறு தலை அலங்காரம் இலங்கைக்கு வரும் முன்னரேயே பொருனா தார நோக்கம் கருதிக் கால் அங்குலத்துக்கு மேல் நீளாது வெட்டிவிடப்பட்ட தலைமயிர் சிறிய காதுகள்; வறுமை யினுல் இளமையிலேயே நரையும் திரையும் தேங்கிவிட்ட ST60 356.....
ஏன் ? இப்படி அசிங்கமான வர்ணனை செய்வதைவிட அது ஒரு குரங்கு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட லாம், ஆணுல் அப்படிச் சொல்வதற்கு இல்லை. 'அது' ஒரு மனிதன்; கந்தசாமி என்று பெயர். அவன் உண்மை யாகவும் முற்றகவும் அறிந்தவர்களுக்கு அவன் பெயர் " கந்தூஸ் " அல்லது "கந்தா'.
ஆணுல் எ ன்று மே தாள் நாம் யாரையும் முற்ருக அறிந்து கொண்டோமா? மென்மையாகப் பேசுகின்ற பொருளாளியைக் கணவாள் என்கின்முேம், தன் குறைகளை மறக்க அதிகாரத் தொணியுடன் பேசும் ஒருவன ஆளப் பிறந்தவன் என்கின்ருேம். இரண்டொரு பத்திரிகைகளைப் படித்துவிட்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் மேற்கோள் கூறுபவனை அறிவாளி என்று கூறுவதற்குக் கூட நாங்கள் தயங்குவதில்லை. ஆணுல் ‘கந்தூஸ் " அப்படி எல்லாம் இல்லை
நான் அவனை வெகு நாட்களாகவே அறிந்திருக்கு பாக்கியத்தைப் பெற்றிருந்தேன். ஆமாம் பாக்கியம்தாள் பூர்வ புண்ணியத்தின் பயன் என்று கூடக் கூறுவேர் ஏனென்றல் அவனுடைய இருதயம் வைரத்திலும், வைடு யத்திலும் பார்க்க மதிப்பில் உயர்ந்தது. வைரத்தைய வைடூரியத்தையும் எந்தப் பொற் கொல்லனும் எந்த நா

-35
வியாபாரியும் மதிப்பிட்டு அதன் பெறுமதி இத்தனை ரூபா இத்தண் சதம் என்று சொல்லி விடலாம். அவன்அந்தக் குரங்கு முக மனிதனின் இருதயம் அனிச்சம் பூவி லும் மென்மையானது. அது கூட எந்த வரட்டுக் கவி யும் உவமை சொல்லிக் கழித்து விடலாம் - ஒரு கற்பனைப் பெண்ணின் கால்களுக்கு உவமையானது என்று!
ஹ ! பெண்ணின் கால்கள், பாதங்கள்! இவைதானு அனிச்சி மலரின் மென்மைக்கு உவமை ? பெண்ணின் இருதயத்தைக் கூறினுலும் பாதகம் இல்லை. அதுவும் லட் சத்தில் ஒரு பெண். .
米 兴,, 蔡
அந்த லட்சத்திலே ஒருத்தியான ஒரு பெண் என்று நான் நினைத்தேன். கந்தூஸ"ம் அப்படி நினைத்திருக்கக் கூடும். அவள் பெயர் காமசெளந்தரி. சிவகாம செளந் நரி என்பதன் திரிபு. காலப் போக்கில் சிவம் உதிர்ந்து காமமே செளந்தர்யமாய், செளந்தர்யமே காமமாய், காத லாய், கணம் யுகமாய், யுகமே கணமாய். அவை எல் ஸ்ாம் பிறகு நடந்தவை.
கந்தூஸைச் சிறு வயது முதற்கொண்டே நான் அறி 0வன். அவனை மற்ற மாணவர்கள் கொரில்லா என்று கேலி செய்ய நான் அண்ணே என்று அழைத்த காலம் அது, அதற்குக் காரணம் உண்டு கணித ஆசிரியர் உன்மத்தம் கொண்டு - ஆமாம், உன்மத்தம்தான் - பூவ ரசம் கட்டையால் கன்னத்தில் கருணையே இன்றி விளாசி என் கன்னம் பள்ளிக்கூட வாயிலில் பையன்களுக்கு வியா பாரம் பண்ணும் பிட்டுவாணிச்சியம்மை விற்கும், மூன்று ாள் வயது சென்ற கொழுக்கட்டை போலச் செந்நிறம் பாய்ந்து வீங்கிய பொழுதெல்லாம் கந்தூஸ்தான் என் கண்ணி"ரைத் துடைத்துத் தேற்றியவன்.
" இந்த அறுந்துபோன கணக்குப் பாடத்தை வீட்டில் காஞ்சம் படித்துக் கொண்டு வரப் படாது?"

Page 26
" போ, அண்ணே இந்தக் கணக்குப் பாடம் யாருக்கு வேண்டும் ?"
"இலக்கியப் பாடத்தில் நூறு புள்ளி எடுத்தாலும் கணக்குப் பாடத்தில் தொப்பி என்ருல் சோதனையே தொப்பி!"
"வீட்டில் எனக்குக் கணக்குப் பாடம் சொல்லித்த யாரும் இல்லை."
எனக்கு மறுபடி அழுகை
"சீ இதற்கு அழுவார்களா? ஒவ்வொரு நாளும் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் நான் ஒரு மணி நேரப் உனக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தருகிறேன்" என்று கணிதத்தில் நிபுணாஞன அந்தக் 'கொரில்லா " சொன்ன தோடமையாது, மாலை தோறும் என்னை மார்பிள் " விளை யாடவும் விடாமல் பலவந்தமாக -மறித்து வைத்து என குக் கணிதம் ஊட்டுவான்.
ஆணுல், சிலசமயம் என் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு நானும் அவனை ‘ கொரில்லா " என்று பழிப்பதுண்டு. இதற்கு எல்லாம் அவன் கோபம் கொள் வதே கிடையாது. அவன் எதற்கும் யார்மேலும் எந்தச் காலத்திலும் கோபப்பட்டது கிடையாது. அவன் கருணையே வடிவானவன்.
அதன் பிறகு பத்து வருடங்களாக அவன் நான் காணவே இல்லை. சோதனைகளில் எல்லாம் சித்தியடைந்து பட்டங்கள் பெற்று, ஒரு வக்கீல் ஆகிக் கறுத்தக் கோட் அணியும் இளம் பட்டினிப் பட்டாளத்தில் நானும் ஒருவி ஞகச் சேர்ந்து கொண்டிருந்தேன். அச்சமயம் ! ஒரு நாட் காலை முதல் மாஜிஸ் ரேட் கோர்ட்டில் போய் இருந்து அனுபவசாலிகளான மற்றக் கறுத்தக் கோட்ட வர்கள் வழக்குக்கள் நடத்துவதைப் பார்த்துக் கொண்ப ருந்துவிட்டு கோட் பையில் அன்றைய வருவாய் என்று

حسسه 37 س
ரன்றும் இல்லாமல் வீதியை நோக்கி நிலத்தைப் பார்த்த வண்ணம் நடந்து கொண்டிருந்தேன். ஒரு திருப்பத்தில் யாரோ என்மேல் மோதினுர்கள். நான் சிறிது கோபத் துடன் நிமிர்ந்து பார்த்தேன், மறுகணம் "அண்ணே ! நீயா?" என்று அலறியே விட்டேன்.
இளைய பள்ளி நாட்களில் ஒரு அழுக்குப் படிந்த நாலு முழ வேஷ்டி மட்டும் அணிந்திருந்த கந்தூஸ் எனப்படும் கந்தசாமி இப்பொழுது அதேபோல் அழுக்குப்படிந்த மலி வான எட்டு முழ வேஷ்டியும் கிழிந்த ஒரு ஷர்ட்டும் அதற்குமேல் நிறம் மங்கிப்போன ஒரு கோட்டும் அணிந் திருந்தான். அத்துடன் பொருக்கு வெடித்த பாதங்களில் ஒரு சோடி குதிதேய்ந்த அரைச்சப்பாத்து ஆணுல் முக மும் தலையும் அதே பழைய கொரில்லாதான். அவ னுடைய வறுமைக் கோலம் என் மனத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது. அவனது கொரில்லாச் சிரிப்பிலோ பேச் சிலோ சோகமோ கவலையோ இல்லை,
* ஐ சே! நீ. நீங்களா?" என்று தடுமாறிச் சிரித் தான். நீங்கள் வக்கீல் சோதனை பாஸ் பண்ணி இந்த நகரில் தொழில் ஆரம்பித்திருப்பதாகக் கேள்வியுற்று மிக வும் மகிழ்ச்சி அடைந்தேன் !" M
" ஆனல், அண்ணே நீ?"
* ஒரு குமாஸ்தா வேலை தேடித் திரிகிறேன். அதற் குள் சட்டக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடக் குறிப்புக் கள் " டைப் செய்து விற்று வருகிறேன்."
' எவ்வளவு ஊதியம் கிடைக்கிறது ?
* ஏதோ, என் வயிற்றுப் பாட்டையும் பார்த்து என் தம்பியின் பள்ளிக்கூடச் செலவும் கட்டி வருகிறேன்."
"எங்கே குடி இருக்கிருய்?"

Page 27
a 38
"ஒரு விடுதியில் ஒரு சிறிய அறை கிடைத்திருக்கிறது. அதுவே பெரிய பாக்கியம், மாதம் ஐந்து ரூபாதாள் oner - 60o 35.” ”
அவனுடைய மேனியில் காணப்பட்ட சோர்வு எனக் குக் கவலை உண்டாக்கிற்று. ' உள் உணவு?" என்று கேட்டேன்.
* இந்த நகரம் நிறையத்தாள் சோற்றுக் கடைகள், ரொட்டிக் கடைகள், தோசைக் கடைகள் சாத்தனையோ இருக்கின்றனவே!" அவன் சிரித்தான்.
"ஆணுல் நீ என்னுடன் வந்து இருந்து விடேன். ஒரு சிறு வீட்டில் நான் தனியாகவே இருக்கின்றேன். அதில் என் அலுவலகத்தையும் வைத்துக் கொண்டிருக் கிறேன்."
* வேண்டாம், அது உங்களுக்குச் சங்கடமாக இருக் கும், ஆணுல் உங்கள் அலுவலகத்தில் ஏதாவது எழுத்து வேலை, டைப் அடிக்கும் வேலை இருக்கும். அதை வந்து நான் செய்து தருகிறேன். புதிதாக வக்கீல் தொழில் ஆரம் பித்திருக்கும் உங்களுக்கு ஒரு குமாஸ்தா வைத்துச் சம்ப ளம் கொடுக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அதஞல் சம்பளம் எதுவும் இல்லாமலே செய்து தருகி றேன். உங்கள் டைப் அடிக்கும் யந்திரத்தையும் சில சம யம் என் தேவைக்கும் பாவித்துக் கொள்கிறேன்."
ஆ இவள் எவ்வளவு நல்லவன் ! தீயவர்களும் நய வஞ்சகர்களும் வெற்றி கண்டு வாழும் இந்த உலகில், வாழ்வின் இன்னல்களுக்குச் சிறிதும் அஞ்சாத தைரியசாலி யான இந்த மன மாசில்லான் உணவுக்கும் உடைக்கும் கூட இவ்வளவு கஷ்டப்படவேண்டி நேரிட்டதே என்று என் மனம் தாங்கொணு வேதனை அடைந்தது. அதனுல் அவ னைப்போல நானும் சிரிக்க முயன்றேன்.
"அண்ணே, உன் இஷ்டப்படியே செய்து கொள்! அதற்குள் எங்காவது ஒரு அரசாங்கக் காரியாலயத்தில்

ー39ー
உனக்கு ஒரு வேலை தேடித் தர முயல்வேன். ஆணுல் இப்போது என்னுடன் வா, உணவு அருந்துவோம்." -
மறுவாரமே அவனுக்கு மாதம் எண்பது ரூபா சம்ப ாத்தில் ஒரு குமாஸ்தா உத்தியோகம் கிடைத்தது.
அதன் பிறகுதான் அவன் காம செளந்தரியை மணம் செய்து கொண்டான்.
崇 景
* திருமண ஓலையில் அவள் பெயர் சிவகாம செளந்தரி அம்மாள் என்றுதான் கண்டிருந்தது திருமணத்திற்குப் பின் ஒரு நாள் அவன் என்னைத் தன் வீட்டிற்கு மத்தி யான போசனத்திற்கு அழைத்திருந்தான். அப்பொழுது தான் அவள் சிவத்தைத் தவிர்த்துவிட்ட காம செளந்தரி ான்பதைக் கண்டு கொண்டேன். உடல் செளந்தர்யம் ான்னவோ இருந்தது, ஆடையின் செளந்தர்யமும், அணி யின் செளந்தர்யமும், இளமையின் செளந்தர்யமும் இருந் தன. ஆணுல் மனத்தின் செளந்தர்யம் ? அன்பின் செளந் தர்யம்? அவளுடைய செவ்வரி படர்ந்த கண்களின் பார்வை வெட்டும், புன்னகையும் பேச்சும் என் மனத்தில் கேள்விக் குறிகளாய் நிலைத்து நின்றன. தலை குனிந்த படி உணவு அருந்திவிட்டுக் கொரில்லாவிடம் விடைபெற் றுக்கொள்ள முனைந்தேன். அவன் விடவில்லை.
1 செளந்தரம் எப்படி ?”
* யார் செளந்தரம் ?"
"ாள் மனைவி. பதிவுப் பெயர் சிவகாம செளந்தரி வீட்டில் எல்லோரும் செளந்தரம் என்றுதான் அழைப் uTifassir.'
* அதுவா? நான் கவனிக்கவில்லை" என்று மழுப்ப

Page 28
- 40 -
* அழகான பெண். இவள் எனக்கு வாய்க்கக் கூடிய வள் அல்ல; முற்பிறப்பில் நான் செய்து வைத்த புண்ணி யத்தின் பயன். குணம் தங்கக் கம்பி. வீட்டு வேலைகளில் சாமர்த்தியக்காரி, பாருங்கள், வீட்டிற்குச் சமையற்காரனே வேண்டாம் என்று சொல்லி விட்டாள். சமையல் திறத் தில் அவளுடைய கைவண்ணம் இன்று நீங்கள் பார்த் தீர்களே !'
புதுப் பொம்மை கிடைத்த குழந்தை சிரித்துத் தன் பிஞ்சு, உள்ளம் எல்லாம் அதில் பறி கொடுப்பது போல் கந்துர்ஸ"ம் சிரித்தான் இறும்பூ தெய்கினன். J.RDy யில் ஏறி நின்று கொக்கரித்துக் கூவாததுதான். குறை!
அண்ணே உன் மனைவியின் கைவண்ணம் என்ன, அவளுடைய கண் வண்ணத்தையும் கவனித்தேன்" என்று ஒழிப்பு மறைப்பு இல்லாமலே சொல்லிவிட எழுந்த எள் நாவை அடக்கிக் கொண்டு, " அண்ணே, நீ உன் அலு வலகத்துக்குப் போய் விட்டால், இந்தத் தனி வீட்டில் உன் மனைவிக்கு யார் துணை ?" என்று கேட்டேன்.
* அவள் வீர மகள்! அவளுக்கு எதற்குத் துணை ?"
* ஆணுல் நீ கூறுவது போல இவ்வளவு அரிய பண்பு
கள் எல்லாம் வாய்ந்த பெண்ணிற்கு நிறையச் சீதனமும் வாய்த்திருக்க வேண்டுமே !'
" ஆம் 1 ஏதோ இந்த நகரத்தில் ஒரு வீடும், பண மாகப் பத்தாயிரம் ரூபாவும் தருவதாகக் கூறிஞர் இவ ளுடைய தந்தை'
"நொத்தாரிஸ் மூலம் பூரீதன உறுதி எழுதித் தந் தார்களா ?”
" இல்லை, மூன்று மாதங்களுக்குள் எழுதித் தருதாவ கக் கூறியிருக்கிறர்கள். இவளுடைய தந்தை என் காரி யாலயத்தில் வேலை செய்யும் ஒரு சக குமாஸ்தா ! அது வும் அவருடைய ஒரே ஒரு மகள் !"

- 41 -
* எழுதித் தரவில்லையானுல்..?
"ஏன் எழுதித் தரமாட்டார்கள் ? அவர் என் சகபாடி யாயிற்றே"
“ ஆம் - ஆம்! உடனடியாக இது ஒரு கடமையாகக் கருதி எழுதியே தந்து தீர்த்து விடுவார்கள். இது துணி கள் மலிந்த காலம். இந்த மலிவான இந்தியன் டசூர் குட் அணிந்து கொள்வதை விட, இங்கிலாந்தில் இருந்து வரும் டுவிட் துணியில் இரண்டொரு “சூட்" தைத்துக் கொண்டால் நல்லது." என்று சிறிது கோபமாகவே பேசினேன்.
"ஐயா, எனக்கு ஆடம்பரங்கள் விருப்பம் இல்லை, ாஞ்சும் பணம் எல்லாம் என் மனைவியின் ஆடைகளுக்கும், அணிகளுக்கும், அலங்காரங்களுக்கும் என்று நான் தீர் மாணித்து விட்டேன். ஒரு அழகிய பெண் வீட்டில் அலங் காரமாக நடமாடினுல் அதுவே ஒரு பாக்கியம் - ஒரு சம் பத்து என்பது தாங்கள் அறியாததா ?”
எனக்குக் கோபம் வந்தது. என்னுடைய முழு அன் புக்குப் பாத்திரமானவனும், பால் போல் வெள்ளையுள்ளம் படைத்தவனும் ஆகிய கந்தூஸின் மேல் எங்ங்ணம் என்
கோபத்தைக் காண்பிக்கலாம் !
"அண்ணே ! நீ முன்னர் என்னை ? நீ " என்றும் 'அடா என்றும் அழைத்து எனக்குப் பாடம் சொல்லித் தரவில்லையா ? இப்பொழுது நான் வக்கீல், நீ ஒரு அர சாங்க அலுவலகத்தில் சாதாரண குமாஸ்தா என்பதற்காக ான்னை நீங்கள்" "தாங்கள் " என்று ஏன் அழைக்கின் முய்? நான் இப்பொழுதும் உன்மேல் கொண்ட அன்பை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் “நீ " என்று உன்னை அழைக்கின்றேன். வணக்கம். நான் போக வேண்டும்."
அதற்குள் சிவத்தை உதிர்த்து விட்ட காமசெளந்தரி வெற்றிலைத் தட்டு, சிகரட் பாக்கெட் முதலியவற்றுடன்
வெ = 8 •

Page 29
வந்து நின்ருள். என் மனத்தின் இன்னும் அதிகமாகியது.
ரம் கவலை எனக்கு! என்னுடைய வக்கில் தொல் வளர்ந்து கொண்டு வந்தது ?-டம்பு புரட்டி, *வழ்ந்து பிறகு @gM
69.
அவனுக்கு என்னைக்காணுமல் இருக்க முடிய வில்லையோ, ஏதோ அறியேன். இரு நாள் என் *லுவலகத்திற்கு அதே அழுக்கேறிய உடை, சீவாத தலை முதலிய அவனுக்கே

anima 43 -a *
போய் இருந்தாலும், “வாருங்கள் இருங்கள் என்று மற்ற வர்களுக்குச் சொல்வது போல் மரியாதைக்குச் சொல்லி வைத்தேன்.
என்னை உத்தியோக அலுவல் சம்பந்தமாகப் பார்க்க வந்திருந்தவர்களை ஒவ்வொருவராக அனுப்பி வைத்தேன். ஈற்றில் நானும் கந்தூஸ் என்ற கொரில்லாவும் எஞ்சி நின்முேம், அவன் சிரித்தான் ' என்ன, மலை மனிதனைத் தேடி வராவிட்டால் மனிதன் மலையைத் தேடி வருவது தானே!" அவள் சிரிப்பிலே ஏதோ ஒன்று அசம்பா விதமாகப்பட்டது.
"அண்ணே, நீ ஏதாவது கஷ்டத்தில் மாட்டிக் Garruum ?”
* இல்லை, உங்களைப் பார்க்க வருவது ஒரு கஷ்டமா?"
" ஆனல் விஷயத்தைக் கூறு 1"
"ஒன்றும் இல்லை." என்று இழுத்தவன், 'உங் களுக்கு மறைத்து வைத்து என்ன பயன் ! எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிருள்" என்று சிரித்தான். அவனுக்கு ஆனந்தம் தாளவில்லை. 'நீ விவாகம் செய்து இன்னும் ஏழு மாதங்கள் கூடப் பூர்த்தியாகவில்லையே." என்று பதறிவிட்டேன். w
* அதஞல் என்ன ஏழு மாதங்களில் குழந்தைகள் பிறப்பதில்லையா? பிறக்கும்பொழுது குழந்தையின் நிறை ான்ன தெரியுமா? ஒன்பது முத்தல் 1"
ஒன்பது மாதங்கள் நிறைவு பெற்று ஜனனம் ஆகும் குழந்தைகள் கூட ஒன்பது ருத்தல் நிறையுள்ளவையாக இருப்பது துர்லபம், இந்த வளம் இல்லாத நாட்டிலே, எனறு என் எண்ணங்கள் ஓடின.

Page 30
m 44 m
'giframrtfair (psis elit முகத்தைப் போல அழகாக இருக்கின்றதா?”
" என்னை விட்டுத்தான் தள்ளுங்கள். எனக்குச் சிறு வயது முதல் “கொரில்லா" என்றபெயர் நிலைத்துவிட்டதே! ஆனல் என் குழந்தை அதிசுந்தர ரூபலாவண்யன், அவன் எனக்கு மைந்தரூகப் பிறந்ததும் என் பூர்வபுண்யப்லன் " என்று சிரித்தான்
* அட, கொரில்லாவே, மனிதக் குரங்கே, உனக்கு வெண்மையானது எல்லாம் என்றும் பால்தானு?" என்று எனக்குள் மறுகினேன்.

தாழை நிழலிலே
வீற்றிருந்தாள் என்ற வார்த்தைக்கு அரசியாக அல் லது வேறு ஏதோ அதிகாரம் உள்ளவள் அதிகாரம் செலுத்துவதற்காகத் தன் அதிகார பீடத்தில் தன் பணி மக்கள் சூழ உட்கார்ந்திருந்தாள் என்பதுதான் சாதா ரணப் பொருள்.
அமீனு வீற்றிருந்தாள் - இருந்தாள், அதுவும் வெண் மணல் விரித்த கடற்கரையை அடுத்து நிற்கும் தாழை மரங்களுக்குக் கீழ் ஒரு மகாராணியாக வீற்றே இருந்தாள்.
அவள் கொலுவிருக்கையைச் சூழ்ந்து நின்ற் தாழை மரங்கள் அவளைக் காத்து நிற்கும் வேழப் படையினர், மந்திரி பிரதானிகள்.
கந்தலான அவளுடைய ஆடைகளையும் மீறி நின்ற அவளுடைய தனி அழகு ஒன்றுதான் அவளுடைய அணி கள் தாதியர் சேடியர் எல்லாம்.
வயோதிபணுகிய நான் சில சமயம் மாலை வேளைகளில் என் வயிற்றின் பருமனைக் குறைத்துக் கொள்வதற்காகக் கடற்கரை ஓரமாகக் கால் நடையாகச் செல்வதுண்டு.
என்றே ஒரு நாள் கடற்கரை ஓரமாகச் சென்ற போழுது, அமீனு தாழை மரங்களின் கீழ் வெண்மணலில் கொலு விருக்கும் அழகைக் கண்டேன்.
தாழை மரங்களின் மடல்கள் வெண்மணல் அருகில் நின்று அசையும் அழகைப் பலர் அநுபவித்திருக்க மாட் டார்கள். வெண்மணல் அமீனுவின் முகம், தாழை மடல் கள் அவள் கருங்கூந்தல். அவள் தன் கழுவாத கருங் கூந்தலில் சொருகியிருந்த மணமில்லாத வெண்மலர் தாழை மடல்களின் மத்தியில் மிளிரும் இளம் வெண்தாழை முகை,

Page 31
அவள் என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. யுத்தத்துக்குச் சென்ற தன் இளம் காதலனின் வருகையை எதிர்பார்த்து வீற்றிருக்கும் வீரமகள் போல் சமுத்திரத் துடன் போராடி வயிற்றுப் பிழைப்புக்கு மீன் கொண்டு வரச்சென்ற தன் கிழத்தந்தை உமறுநையினுவின் வள்ளம் வருவதை எதிர்பார்த்துத் தாழை நிழலில் வீற்றிருந்தாள்.
இந்த ஏழைச் சிறுமி அரசிபோல் வீற்றிருப்பதைக் கண்டு நான் அவ்விடத்திலேயே நின்று விட்டேன். அவ ளுடைய பெயர் எனக்குத் தெரிந்த தொன்றுதான். கொலு விருந்த கோமகளின் மனத்தைக் குழப்ப வேண்டுமென்று அன்றுகாலை சைத் தான் என்னைத் தூண்டினுணுே என்னவோ ?
d அமீணு | ۔ ۔۔۔۔
அவள் பதிலே கூறவில்லை. அதனுல் சிறிது உரத்து அழைக்க வேண்டி நேரிட்டு விட்டதே என்று நான் மனம் கலங்கினேன். இருந்தும்.
* அமீனு!"
அவள் அசையவில்லை. அவள் அரசி, அக்பர் பாது
ஷாவின் அரண்மனையில் பிறக்க வேண்டியவள் இந்த ஏழைச் செம்படவனின் மகளாய்ப் பிறக்க நேர்ந்து விட்ட துயரத்தை எண்ணிக்கொண்டு அவ்விடத்திலேயே நின் றேன். அருகில் இருந்த குடிசையில் இருந்து அமீணுவின் தாய் குரல் கொடுத்தாள்.
* அமீனு மகள் !"
அமீரூ பதில் கூறவில்லை.
சேனைகளின் அணிவகுப்பைப் பார்வையிடுபவள்போல நீலக்கடல் மேல் புரண்டு அலைமோதும் வெண்ணிற அலை களைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த ஏழைச் சிறுமி-ஆ மன்னிக்க வேண்டும். அந்த அரசி !

- 47 =
"அமீனு வாறியா அல்லாமல் போனுல் கம்புகொண்டு வரவா ?" என்று குடிசையில் இருந்த தாய் மறுபடி குரல் கொடுத்தாள். அமீனு தலையை ஒய்யாரமாக ஒரு தரம் அரசியின் ஆணவத்தோடு அசைத்துக் கொண்டு மறுபடி கடலின் அடிவானத்தைப் பார்ப்பதில் இலயித்து விட்டாள்
* அமீணு வரமாட்டையா?"
வணக்கு ஒண்ணு
* கம்புதான் கேக்குது. உனக்கு இப்ப !"
* வாப்பாடை வள்ளம் இன்னும் வரவில்லை "
அரசிகள் அழுவதில்லை. ஆஞல் அமீனுவின் கண் ளில் சற்றே கண்ணிர்ச்சாயல் படிந்திருந்தது போல் எனக்குப் பட்டது. குறிப்பிட்ட இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேராத போலிக் காதலனை நினைத்து வாடும் அரசியின் ஏக்கம் அதில் தொனித்தது. M Y WM.
" உன்ரை வாப்பாவைக் கடல் விழுங்காது. வந்திடு வார். வாடி இங்கே!" ༄
* ஒண்ணு 1"
அமீனு தாயின் மிரட்டல்களுக்கு அசைந்து கொடுக்க வில்லை. தர்ய் கம்பு கொண்டு அடித்தாலும் கூட அசைய மாட்டாள் என்று எனக்குப் பட்டது. அவள் அரசி
நான் கடல் ஓரமாக நண்டுகள் வளைகளில் புகுந்தும் வெளிவந்தும் அலைகளுடன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நடந்தேன்.
அரசி போலக் கொலுவீற்றிருப்பவள், சாதாரண மனித ணுகிய என்னுடன் இலேசில் பேசுவாளா என்று எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

Page 32
- 48 -
இலங்கையின் கீழ்க்கரையை அடுத்த ஒர் ஊரில் செம் படவர்கள் வாழும் பகுதி இது. தாழை மரங்கள் செறிந்து அடம்பன் கொடி பசேல் எனப் படர்ந்திருந்த கரையில் மெத்தென்ற வெண்மணல் பரப்பியிருந்த விளிம்பை ஒல மிடும் வெண்நுரை தள்ளும் ஆயிரம் நாக்குகளைப் பயங் கரமாய் நீட்டித் தன் பெருவயிற்றுக்குள் விழுங்க எத்த னிப்பது போலச் சில சமயங்களிலும், தாயின் கரங்கள் மெதுவாக அசைந்து மகவைத் தாலாட்டுவது போலச் சில சமயங்களிலும் இந்து மகாசமுத்திரம் தன் எண்ணம் போல் கீழ்கரையுடன் தொடர்பு கொண்டிருந்தது,
மீன்பிடி வள்ளங்கள் தங்கு துறையை நெருங்கிய வுடன் செம்படவர்களினதும், மீன் வாங்கும் வியாபாரி களினதும் குரல் ஒலி கேட்டது. வந்த வள்ளங்கள் கரை யில் தூங்கின, ஈரமான வலைகள் தென்னை மரங்களின் இடையில் தொங்கின. நாய்கள் வெட்டி வீசப்பட்ட மீன் வால்களையும் நீச்சல் இறகுகளையும் மோப்பம் பிடித்து ஒன்றை ஒன்று பார்த்து உறுமின.
நான் கடலில் அடிவானத்தில் வரும் சூரியனையும், எல்லை இல்லாத ஒரு நீலப்பட்டை விரித்துவிட்டது போன்ற கடலின் அழகையும் பார்த்தபடி நின்றேன்.
தொலைவிலே அடிவானத்தில் ஏதோ கூர்மையாக ஒன்று என் கண்ணில் பட்டது. என் அருகில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமீணு ஓடி வந்து நின்ருள்.
அமீன to D
அரசியாகக் கொலு விருந்தவள் இப்பொழுது குழந்தை யாகி மலர்ந்து சிரித்த முகத்துடன் நின்றள்,
* வாப்பா வாருங்க."
"எங்கே ?೦೦
"அங்கே பாருங்க வாப்பாடை வள்ளம் !"

- 49 -
* அது எப்படி உனக்குத் தெரியும்?"
"உங்களுக்கு ஒண்டும் தெரியாது போங்க ! நம்மட வாப்பாட வள்ளம் நமக்குத் தெரியாதா? பழுப்புப் பாய் தெரியலையா ? வாப்பா வந்திட்டாங்க!"
பன்னிரண்டு வயதுச் சிறுமியான அவள் தன் வ்யதுக் குரிய நாணத்தையும் மறந்து அந்த வெண் மணலிலே சீவாத கருங்கூந்தல் காற்றிலே அசைய குதித்து ஆடத் தொடங்கி விட்டாள்.
- (2)
அது அமீனு போன்ற அரசிகள் உலவிவரும் இடம் மட்டும் அல்ல, பளபளக்கும் து விச்சக்கர வண்டிகளில் மாலை வேளைகளில் அந்த வட்டாரத்தின் இளவல்களும் காடையர்களும் முகப் பவுடர் பூசிக் கைலேஞ்சிகளில் தெளித்து விட்ட மலிந்த வாசனைத் தைலம் கமகம என்று மணம் வீச காற்று வாங்கவரும் இடம் கூட !
அவர்கள் அமீனுவை ஓரக் கண்ணுல் பார்த்துக் கொள் வார்கள். அவ்வளவுதான், தாழை மரத்தின் கீழ் அவள் கொலு இருக்கும் கம்பீரமே எவனையும் பயமுறுத்திவிடுமே ! அதற்கு மேலாக உமறு நைகுவின் மேல் அச்சம் அவர்களுக்கு .
உமறு நைஞவின் வாழ்நாளில் அரை நாள் கடலில் கழிந்து விடும். தன் ஒரே மகள் அமீனுவைப் பொறுத்த மட்டில் வற்றுக் கடலின் அமைதியையும் அழகையும் அவ னிடம் காணலாம். அவன் இவளுடைய கைப்பொம்மையோ அல்லது இவள் அவனுடைய கைப்பொம்மையோ என்று பிரித்துக் கூறமுடியாதபடி தந்தைக்கும் மகளுக்கும் இடை யில் உள்ள பாசம் பின்னிப் பிணைத்து நிற்கும். ஆணுல் மனைவி உட்பட மற்ற எவரைக் கண்டாலும் பெருக்கு நேரத் தில் புயலின் ரெளத்திரம் கொண்டு குமுறும் கடல், உமறு
வெ =7

Page 33
-- 50 -س-
தைணு அதனுல் அந்த இளவல்களுக்கு அமீளுவின் அரு கில் செல்லவோ அவளுடன் பேசவோ அச்சம்.
என்ருே ஒருவன் வந்தான் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு, சைக்கிளின் மெழுகிட்டு மினுக்கிவிட்ட மேனி யைப் போல, அவன் மேனியும் தலைமயிரும் கறுப்பாக மின்னின. அத்துடன் சைக்கிளின் வெள்ளிப் பாதங்களைப் போல அவன் பற்களும் மாலையின் மங்கலிலே பளிச்சிட்டன.
காற்றின் திரையும் நீரோட்டமும் மாறிவிட்டபடியால் மீன்பிடி வள்ளங்கள் காலையிற் சென்று மாலையில் திரும் பும் காலம் இது.
அமீனு, ஹ0ர்ணிமாப் பெண்களைப் போன்ற அழகிய அகன்ற் செவ்வரி படர்ந்த கண்களுடன் அதே இடத்தில் அரசிருக்கை 1 முதலில் இவனைக் கூட அவள் கண்ணெடுத் துப் பார்க்கவில்லை. இவன் சைக்கிள் மணியைப் பலமுறை அடித்தான். தன் சேட்டின் கொலறை " மேலே தூக்கி விட்டுக் கொண்டான். தன் சுருண்ட தலைமயிரைக் கோதி விட்டுக் கொண்டான். சில சமயம் தன் கெளரவத்தைக் காட்ட "கோட்டுக் கூட அணிந்து கொண்டு வந்தான். இவன் பெயர் சம்சுதீன். '
அரசியாகிய அமீனு இவற்றிற்கு எல்லாம் அசைந்து விடுவாளா ? ஆணுல் அவளுடைய தந்தையான உமறு நைஞ அசைந்து விட்டாள் போலும் திருமணம் கடிதல் தடந்து விட்டது
மறுமுறை நான் கடற்கரைப் பக்கமாகச் சென்ற பொழுது அமீனுவின் புன்னகை உதய சூரியனின் அழகு போல் என் மனத்தில் பட்டது. அவளுடைய கன்னங்கள் சில கடற்சிப்பிகளிற் காணும் ரோஜா வர்ணம் போல் - வெண் புருக்களின் பாதங்களைப் போல - தமிழ்ப் பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத் திலகம் போல் செந்நிறம் Lu Tillö3569T......"*

ー51ー
( 3 )
அவள் அழகான மெல்லிய பட்டாடையைத் தலைமேல் முக்காடிட்டு அணிந்திருந்தாள். நடுவகிடு எடுத்து வாரிப் பின்னல் மயமாய் இருந்த கருங்கேசத்தில் ஒரு வெண்பூ
அதன் பிறகு அமீனுவை நான் பல நாட்களாகப் பார்க்கவேயில்லை. வழமை போல் உமறு நைகு கடலுக்கும் போவான். அவன் இல்லாத வேளைகளில் அவன் மன்வி அயல் விட்டுப் பெண்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பாள்.
ஆணுல் அமீனு அதிகம் வெளியே வருவதில்லை. அல் லது கணவனுடைய வீட்டில் போய் அடைபட்டு விட் டாளோ? அமீனுவின் அரசிருக்கை இல்லாத தாழை Lori களும் வெண் மணலும் நீலக்கடலும் செக்கர் வானமும் உதிய சூரியனும் எல்லாம் அழகற்றவையாக " மனத் தில் பட்டன தாழை மலர்களின் வாசனைகூட இனிமை யாக இல்லை. 3.
நான் கடற்கரைக்குப் போவதையே நிறுத்திக் கொண் டேன். இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன.
4) . ஏதோ ஒர் எண்ணத்தில் ஒரு நாள் மாலை முந்திய வழமை போல் கடற்கரைக்குச் ன்ெறேன். அன்று என்ன் ஓர் அற்புதம் காத்திருந்தது. போகும் பொழுது தாழை மலர்களின் வாசனை வீசியது வெண்மணல் முத்துப்போல் ஒளிகான்றது. Y
மேற்கே அஸ்தமிக்க ஆயத்தமாகும் சூரியனின் ஒளி கீழ் வானத்தில் நீலக் கடல்களின் மேற்படிந்து செக்கர் வானம் செய்திருந்தது. அழகில்லாமல் இருந்த கடற்கரை இன்று அழகு பெற்றுத் தோன்றுவதேன் என்று நிளேத் துக் கொண்டு நடந்தேன். அமீை அதே பழைய தாழை

Page 34
- 52
மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அப்படியே நின்று விட்டேன். ஆமாம்! உட்கார்ந்துதான் இருந்தாள் - வீற்றிருக்கவில்லை! அவளுடைய கூந்தல் ஏதோ ஒரு மாதிரியாகச் சீவி முடிக்கப்பட்டிருந்தது. ஆணுல் அவளு டைய முகத்தில் முந்திய அரச கம்பீரமும் ஆணவமும் இருக்கவில்லை. அவளுடைய கூந்தலில் தாழை மடல்களில் படர்ந்திருந்த கருமையான அழகில்லை. அதன் மத்தியில் வெள்ளை மலர்கூட இல்லை.
அவளுடைய மடியில் ஒரு குழந்தை கிடந்தான்
கொலுவிருந்த பூமகள் கூனிக் குறுகி உட்கார்ந்திருப் பதைக் கண்டு நான் அவ்விடத்திலேயே நின்று விட்டேன்.
"அமீனr
“ ፵gዚuff !'”
"ஆம், எங்ங்ணம் இருக்கிறப் மகளே !?
* ஏதோ இருக்கேன். "
"உன்னுடைய மடியிற்கிடப்புவன் உன்னுடைய மகளு?"
" ஓம் ஐயா !”
" உன்னுடைய வாழ்வை மலர்வித்த அவனுக்கு அழ கான பெயர்தான் நீ வைத்திருப்பாய் என்று நினைக்கின் றேன். நீ இந்த இடத்தில் ஒரு சக்கரவர்த்தினி போல் இருந்தாய் ! அதனுல் அவனுக்கு அக்பர் என்று பெயர் சூட்டியிருப்பாய் என்று நம்புகின்றேன். நான் உன்னை அக்பர் பாதுவுாவின் மகளாகக் கண்டவன் என் கற்பன் யிலே 1" என்று மேன் மேலும் ஏதேதோ பேசிக் கொண் 455G5 för... ...
அவள் கன்னங்கள் நாணத்தினுல் சிவந்தன. செந் தழலைச் சாருக்கி வர்ணம் கொடுத்தது போல அவள் தரையை நோக்கினுள். அரசிகள் தரையை நோக்குவதில்லை

سے 53 سے
என்பது எனக் குத் தெரிந்துதான் இருந்தது. ஏதோ குழந்தை என்ற எண்ணத்தில் மறுபடியும் நான் அவளி டம் பேசினேன்.
அமீனு 1 என்ன இந்தக் கிழவனிடமா உனக்கு நாணம்? ஆனல் எங்கே உன் கணவன்
அவள் என்னை நிமிர்ந்து நோக்கினுள் ஒரு கண்ம். அவளுடைய செவ்வரி படர்ந்த கண்களிலே தேங்கி நின்ற உணர்ச்சி எதுவென்று என்னுல் அறிந்துகொள்ள மூடிய வில்லை. செந்தாமரையும் கருங்குவளையும் கலந்த ஒருமலர் இருக்குமானுல் அந்த மலரின் இதழ்களிலே நீர் துளிப் பது போலவும் உதய சூரியனைத் திடீரென மறைத்து விட்ட பனிப்படலம் போலவும் அவள் கண்கள் நீர்மல்கின: உடனே பொழிந்தன
அடுத்த கணம் தன்னுடைய முகத்தைத் தன் மகனின் மார்பிலே புதைத்துக் கொண்டு தோள்களும் மார்பும் குலுங்கக் குலுங்க அழுதாள். விம்மி விம்மி, விக்கி விக்கி அழுதாள்.
திடீரென்று சேற்றில் இறக்கிவிட்ட யானைபோல் என் மனம் தாங்கொணு வேதனைப்பட்டது.
அமீன w
அவளுடைய விம்மல் பொருமலைக் காண ஆற்ருது நான் அவ்விடத்தில் நிற்காமல் மெதுவாக நடந்து விட் டேன். சிறிது பொழுது செல்ல நான் மறுபடியும் அவ் விடத்துக்கு வந்தேன். அமீணு கண் தேறியிருந்தாள்.
கருமேகங்கள் குவிந்து குளிர் காற்று வீசியது அவ ளுடைய மகன் அவைகளை எல்லாம் பார்த்து உணர்ந்து சிரித்தான்.
“glio) '
፵፬ሀuff

Page 35
in 54 -
o ritur நடந்தது மகளே?" " என்னுடைய கணவருக்கு கிராம அதிகாரி வேலை கிடைத்து விட்டது."
* அதனுல்."
* என்னை அவருக்கு ஒண்ணுதாம்."
t ஏன் w
“நம்மட வாப்பா கடற்றெழில் செய்கிருர், அப்படிப் பட்டவர் சம்பந்தம் ஆகாதாம். அதனுல் தான் என்னைத் 'தலாக் 'குப் பண்ணித் துரத்தி விட்டார்."
எனக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை; ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் என்று யாரோ சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். ஆனல் இப்படிப்பட்ட சந்தர்ப் பத்தில் கூரியவாள் என்ன செய்யும்? கொடுமைதான் என்ன செய்யும் ? அல்லது மனிதர்களுடைய உந்தியிலே இருந்து எழுந்து உச்சியில் மோதி நெருப்புச் சுவாலையாக வரும் கோபம்தான் என்ன செய்யும் ?
"அமீனு வாப்பாட வள்ளம் வருகிறதா?" என்று அவளைத் தேற்றினேன்.
* ஆம் ஐயா! அதைத்தான் பார்த்துக் கொண்டிருக் கேன். இவனும்தான் பார்த்துக்கொண்டிருக்கான் " என்று மகனுடைய கன்னத்தைக் கிள்ளினுள். அவன் சிரித்தான்.
நான் நடந்து விட்டேன்.
ஆணுல் இதுதான அழகிய தாழை மலர்? அதன் மென்மையான சுகந்தம் எல்லாம் இதுதானு மனிதர்க
ளின் அசுர மூச்சினுல் அழகிய மல்ரும் வாடி, அதன் இனிய வாசனையும் தீர்ந்து போய் விட்டதா, என்ன ?

மரியா மதலேனு
அவள் ஒழுக்கம் தவறியவள். மோகூடிவீட்டை நோக் கிச் செல்லும் மனிதவர்க்கத்தின் ஞானப்பாதையில் குறுக்கே படம் விரித்தாடும் கொடிய விஷசர்ப்பம். ஒன்றுமறியாத ஆண்மகனைத் தன் மாயாசக்தியால் வலிந்து இழுத்து மீட்சியில்லாத காமப் படுகுழியில் வீழ்த்தும் காந்தச் சுழல். அருவருத்து ஒதுக்கப்பட வேண்டிய வாழ்க்கை ரசத்தின் அடிமண்டி. சி
ஆமாம்! அவள் நிலை தவறியவள்தான். ஆஞல் «тяüт ?
அவளுடைய நடத்தையைக் கண்டனம் செய்த சுத்தப் பிரமுகர்களால் இத்தக் கேள்விக்கு மட்டும் விடை கண்டு பிடிக்க முடியவில்லை. தங்களுடைய இருதயத்தின் மேல் கையை வைத்துத் தங்களுடைய மனச் சாட்சிகளைப் பரி சீலனை செய்யவும் அவர்களுக்குத் தைரியமில்லை. மற்றவர் களைக் கண்டனம் செய்யும் பொழுது மட்டும் தாங்கள் நன் னடத்தையின் சித்திரங்கள் என்பதுவே அவர்களுடைய நிாைப்பு. அதுதான் மனித இயற்கை போலும் !
அந்த வார்த்தையின் பூரணமான பொருளில் அவள் ஒரு மானம் வெட்கமற்ற வியபிசாரிதான். தன் உடலைப் பொது உடைமைப் பொருளாகக் கருதுபவள் வெறும் தசை உணர்ச்சியா அல்லது பொருளாசையா? இரண் டும் அல்ல; தன் உடலையும் உயிரையும் ஒன்ருக வைத் துக் காப்பதற்கு அவளுக்குத் தெரிந்த வழி அது ஒன்று தான.
மரியா மதலேணு ஒரு பெரிய கப்பல் வியாபாரியின் மகள். பொருட் செல்வம் அளிக்கக்கூடிய போகங்களை எல் லாம் அவள் அநுபவித்தாள். நாளைக்கு என்ற கவலை கிடையாது அவளுக்கு. அவளுடைய வாழ்க்கைக் கிண் னத்தில் சுவை மிகுந்த மதுரசம் நிரம்பியுள்ளது.

Page 36
- 56 =
குழந்தைப் பருவம் ஓர் இன்பக் கனவுபோல் மறைந் தது. திடீரென்று ஒரு நாள் அவளுடைய தந்தை கடலில் கலம் கவிழ்ந்து மாண்டு போனுள். அவன் தேடி வைத்த செல்வங்களையெல்லாம் தாயாதிகள் கைப்பற்றிக்கொண்ட னர். மரியா தன் இளமையின் முழுமலர்ச்சியில் ஆதரவற்ற அநாதையாக விடப்பட்டாள். சமூக ஏணியின் முதற்படி யில் கர்வத்தோடு நின்ற வள் இப்பொழுது நிலத்தில் கிடந்து துடிக்கிருள். விதியின் கொடிய விளையாட்டு அது.
நாலு திசைகளிலிருந்தும் வாழ்வின் சண்டமாருதங் கள் குமுறிக் கொண்டு வந்தன - வறுமை, தனிமை, சன் மார்க்கம், யெளவனத்தின் தூண்டுதல். அவற்றின் சீறு தல்களை எதிர்த்து ஒரு திசையிலும் அடியெடுத்து வைக்க முடியவில்லை அவளால் நின்ற நிலையிலே பாதாளத்தில் இறங்கிவிட வேண்டியது தான ? a
போகத்தில் வாழ்ந்தவள் மீண்டும் போகத்தை விரும்பி ஞள். உண்பதற்கு ரஸம் மிகுந்த உணவு, அணிவதற்கு ஒய்யாரமான உடைகள், வதிவதற்கு நல்ல வீடு ஆகியவை வேண்டும் அதற்கு என்ன வழி? அவளை மானமாக மணம் செய்து கொள்வதற்கு ஒரு வாலிபனும் முன்வர வில்லை. அழகு மட்டும் இருந்தால் போதுமா, பணப்பை வேண்டாமா ?
வழி தவறிய ஓர் ஆன்மா அலைவது போல, எவ்வ ளவு காலத்திற்குத்தான் " இடம் தேடிக் கொண்டிருக்க முடியும்? கடைசியாகத் தனக்குத் தெரிந்த சுலபமான வழியில் இறங்கி விட்டாள். முதற் பிழை இரண்டாம் பிழைக்கு இடம் கொடுத்தது. சிறு துளிகள் பெருவெள்ள மாகி அவளைப் பிரவாகத்தோடு அடித்துக் கொண்டு போய் விட்டன. பிறகு கழிவிரக்கத்திற்கு இடம் இல்லாமற் போய் விட்டது.
நல்வழிப் போதகர்களின் போதனைகள் அவளுடைய செவிகளில் ஏறவில்லை அவை அர்த்தமற்ற வெறும் வார்த்

- 57 -
தைக் குவியல்கள்தாமே! மோஸஸ் யாத்த சட்டங்களுக் குக் கூட அவள் அஞ்சவில்லை.
ஆஞல் அவளுடைய நெஞ்சத்தின் உள்ளே ஏதோ ஒரு தீனமான குரல் "நீ பாபி" என்று கூறிற்று
எத்தனை நாட்களுக்குத்தான் சட்டத்தின் கழுகு நோக்கத்திற்குத் தப்பி இருக்க முடியும்? ஒரு நாள் அகப்பட்டு விட்டாள்.
அக்காலத்தில் இப்பொழுது இருப்பது போல் நாக ரீகமான சட்டங்கள் கிடையா பல்லுக்குப் பல்லு, ரத்தத் திற்கு ரத்தம் என்று பழிதீர்த்துக் கொள்ளும் சட்டமே வழங்கி வந்தது. مح۔
ஏசுநாதரின் ஞான ஒளி சிறிது சிறிதாகப் பாமர இருளை ஒட்டிக்கொண்டு வந்தது. அவருடைய தேன் பொதிந்த ஞானவாசகங்களை ஏழை ஜனங்கள் ஆவலோடு போற்றி வந்தனர். ஆணுல் அவரை வெறுப்பவர்கள் பல்லாயிரக் கணக்காக இருந்தனர். ராஜாங்கமே அவரைக் கண்டித் தது. அவர் இன்னும் ஒரு " கிராமச் சாமியார்" ஆகவே இருந்தார்.
சில பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து, ஒருநாள் மரியா வைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஏசுநாதர் முன் விட்டார்கள். *1 ஆண்டவனே, இவள் ஒரு வியபிசாரி பாபி: கையும் மெய்யுமாக அகப்பட்டிருக்கின்ருள். மோஸஸ் நிர்மாணித்த சட்டத்தின்படி இவளைச் சந்தியில் நிற்க வைத்துக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். அது தான் வியபிசாரத்திற்குச் சரியான தண்டனை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? என்று கேட்டார்கள்.
அவர்கள் இப்படிக் கேட்டது ஏசுநாதரைத் தங்களு டைய தலைவராகக் கருதியோ அல்லது அவருடைய அபிப் பிராயத்தில் உண்மையான மதிப்பு வைத்தோ அல்ல. அவருடைய நியாயத் தீர்ப்பில் பிழை கண்டு பிடித்து அவ வெ = 8 w

Page 37
- 58 -
ரைத் தாழ்வு படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். அது அவருக்கும் தெரியும். அதனுல்தான் அவர்கள் கூறியதைக் கேளாதவர் போலக் கீழே குளிந்து நிலத்தில் விரலால் ஏதோ கீறிக் கொண்டிருந்தார்.
அவர்கள் இரண்டாம் முறையும் தாங்கள் கூறியதையே திருப்பிக் கூறிஞர்கள்
ஏசுநாதர் அவர்களை நிமிர்ந்து பார்த்து, ! உங்களில் யாரொருவன் தான் ஒரு பாவச் செயலையும் செய்யவில்லை என்று மனமார நினைக்கிருணுே, அவன் முதற்கல்லை அவள் மேல் விட்டெறியட்டும்" என்று கூறிவிட்டு மறுபடியும் கீழே குனிந்து கொண்டார்.
அவர் கூறிய வசனம் இறகு முளைத்த பாணம்போற் சென்று அவர்களுடைய இருதயங்களைத் தாக்கி அவற்றில் நிறைந்திருந்த குப்பைகளை வெளியே வாரி இறைத்தது. அவர்களுடைய பாவங்கள் எல்லாம் அவர்களுடைய கண் களின் முன் விசுவரூபம் எடுத்து நின்றன. நினைக்க முடி யாத கோரக் காட்சிகள் எல்லாம் அம்மத்திர வார்த்தை களின் சக்தியால் தோன்றி மறைந்தன. "
ஆதரவற்ற ஏழைப் பெண்மேல் குற்றம் சாட்டிய மணி தர்கள் தங்களுடைய மனச்சாட்சியே பயங்கரமான வடிவங் கொண்டு தங்களைக் குற்றம் சாட்டுவதை உணர்ந்தார்கள். அவர்களுடைய அங்கங்கள் நடுங்கின. இதுதான் ஆள் மாக்களின் கடைசியான தீர்ப்புதாளோ? பேசாமல் ஒவ் வொருவராக, வைகறையின் ஒளியின் முள்கலையும் இருள் போல, அவ்விடத்தை விட்டு அகன்றர்கள்.
ஏசுநாதர் தலை நிமிர்ந்து பார்த்தார், மரியா தனியே நின்ருள் முடியிழந்த கோபுரம் போல் நிலைகுலைந்து

"பெண்ணே, உன்மேல் பழி சுமத்தியவர்களெல்லாம் சங்கே? ஒருவளுவது உன்னைத் தண்டிக்கவில்லையா?*
* எல்லாரும் போய் விட்டார்கள்." அவளுடைய குர வில் கழிவிரக்கம், வெட்கம், பரிதாபம், கெஞ்சும் பாவம் எல்லாம் நிறைந்திருந்தன. குனிந்த தலை நிமிரவில்லை ஏசுநாதருடைய கருணை ததும்பும் கண்கள், அவளுக்குத் தன் பாவங்களைப் பிரதிபலிக்கும் இருகண்ணுடிகள் போல் தோன்றின.
"நானும் சேர்ந்து உன்மேல் பழிசுமத்த மாட்டேன். நீ உன் வீட்டிற்குப் போ. இனிமேல் பாவம் செய்யாதே" என்று தேன் சொட்டுவது போற் கூறிஞர்.
அந்த வார்த்தைகள் அவளுக்கு என்றுமில்லாத ஒரு நம்பிக்கையையும், மனவுறுதியையும் கொடுத்தன. தன் ஆன்மா பரிசுத்தமாக்கப்பட்டதாக உணர்ந்தாள். அன்று தொட்டுத் தன் வாழ்க்கையிலே ஒரு புதுப்பருவத்தை உண் டாக்கி விடுவதென்ற திடசித்தத்தோடு அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தாள்.
மரியா மதலேணு இப்பொழுது முழுதும் மாறிவிட்டாள் பாவம் நிறைந்திருந்த வாழ்க்கையில் பரிசுத்தம் நிறைந் தது. போதனைகளும் ராஜதண்டனையும் செய்து முடிக்க மாட்டாத ஒன்றை ஏசுநாதருடைய கருணைப் பிரவாகம் ஒரு கணப்பொழுதில் செய்து முடித்துவிட்டது ஏசுநாத ருக்குத் தொண்டு செய்வதிலும், அவருடைய போதன் களைச் சாதனை செய்வதிலும் மரியாவிற்குப் பரமானந்தம்: ஆன்மாவிற்குச் சாந்தி, அவள் அவருடைய உண்மை யான சிஷ்யையாகி விட்டாள்.
அவருடைய பாதங்களைத் தன் கண்ணிரால் மஞ்சன மாட்டித் தன் நீண்ட மெல்லிய கூந்தலால் சுத்தி செய்வ தில் மரியாவிற்கு விவரிக்க முடியாத ஓர் உவகை ஏற்பட் டது. ஏசுநாதரும் அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்

Page 38
na 60 -na
ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு ஆவிநீத்தபின் ஜோஸப் என்ற அவருடைய உத்தம சிஷ்யன் ஒருவன் பைலேட்டிடம் உத்தரவு பெற்று அவருடைய உடன் எடுத்து ஒரு கல்லறையில் அடக்கம் செய்தான். மூன்றம் நாள் வைகறையில் மரியா அக்கல்லறையின் சமீபமா வந்து பார்த்தபொழுது அதன்மூடி நீக்கப்பட்டிருப்பதை கண்டாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. யாராவது யூதநாஸ்திகர்கள் கல்லறையை அசு த்தப்படுத்திப் பிணத்தை அகற்றி விட்டார்களா ?
ஓட்டமாக ஓடி பீட்டரிடமும் இன்னுமொரு சிஷ்யரிட மும் விஷயத்தைத் தெரிவித்தாள். அவர்களும் பிரமிப் படைந்து கல்லறையை நோக்கி விரைந்து வந்தார்கள் கல்லறையின் உள்ளே சென்று பார்த்தபொழுது பிணம் காணப்படவில்லை. பிணம் சுற்றப்பட்டிருந்த துணிகள் மட்டுமே அலங்கோலமாகப் புரண்டு கிடந்தன. அவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை. செயலற்றுத் தங்கள் வீடு களுக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள்.
ஆனல் மரியா மட்டும் அவ்விடத்தில் அழுதுகொண்டே நின்ருள். அழுதுகொண்டே சமாதியிள் உள்ளே நோக்கி ஞள். ஆ1 என்ன ஆச்சரியம் 1 அங்கே ஏசுநாதரின் உடல் கிடந்த இடத்தின் தலைப்புறத்திலும் காற்புறத்திலும் இரண்டு தேவதூதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர் களுடைய உதடுகள் அசைந்தன.
* பெண்ணே ! ஏன் அழுகின்ருய்?"
"என் ஆண்டவனைக் காணவில்லையே? அவரை நான் எங்கே தேடுவேன்?"
இப்படிக் கூறி விட்டுப் பின்புறம் திரும்பினுள். அங்கே ஏசுநாதர் நின்றுகொண்டிருந்தார். ஆஞல் அவளுக்கு அடையாளம் புரியவில்லை. அவரை யாரோ தோட்டக்கா ஏன் என்று நினைத்து, "ஐயா ! என் ஆண்டவன் எங்கே

- 61 -
கொண்டு போய் வைத்திருக்கிறீர் கூறும். நான் அவரை ாடுத்து அடக்கம் செய்கிறேன்" என்று கேட்டாள்.
t Goff ”'
ஆ1 அதே மதுரம் சொட்டும் குரல்தான்; மேரிக்கு அடையாளம் புரிந்து விட்டது.
" என் ஆண்டவனே!" என்ருள், தாயின் குரல் கேட்ட புனிற்றினம் கன்று போல. அவளுக்கு மயிர்க்கூச் செறிந்தது. அவளுடைய அந்தராத்மாவில் இன்பப்புனல் sany LITsärGL-F9us.
ஏகநாதர், "மேரி, என்னைத் தொடாதே. நான் இன். றும் சுவர்க்கத்திலிருக்கும் என் தந்தையிடம் போகவில்லை. ஆம்! அவர் உனக்கும் தந்தைதான். உலகம் எல்லா வற்றுக்குமே தந்தை. நான் இப்பொழுது அங்கேதான் போகிறேன். இதை எல்லாம் நீ என் சிஷ்யர்களிடம் கூறி விடு" என்றர். く
அவர் மறைந்து விட்டார்.
மரியா உன்மத்தம் கொண்டவள் போல் வெறும் வானத்தைப் பார்த்துக் கொண்டு நின்ருள்.

Page 39
مس
சக்கர வாகம்
* வேலுப்பிள்ளை, நாடி நல்லாய் விழுந்து போச்சு: வயதுமோ பின்னிட்ட வயது; இன்னும் இரண்டு மணித்தி பாலத்துக்குள் எல்லாம் முடிந்து போய் விடும் மனத் தைத் தேற்றிக் கொள்."
இந்தக் கொடிய தீர்ப்பைத் தன் இளம் வயதிற்கு உரிய யோசனையின்மையோடு அனுயாசமாக வீசிவிட்டு அதன் விளைவைப் பார்க்க விரும்பாதவன் போல வைத்தியன் சால்வையை உதறித் தோளிற் போட்டுக்கொண்டு வாச லைக் கடந்து வேகமாக நடந்தான். 5
வேலுப்பிள்ளை அசந்து போய்த் திண்ணையிற் சாய்ந் தான்.மனத்தின் உந்துதல் இல்லாமலே அவனுடைய கை அருகிற் கிடந்த காம்புச் சத்தகத்தை எடுத்து யந்திரம் போலப் பனை ஓலைச் சட்டங்களை வார ஆரம்பித்தது. உள்ளே அவள் - அவளுடைய மனைவி - வாங்குக் கட்டி விள்மேல் உடலில் பலம் எல்லாம் குன்றி, முகம் களையிழந்து கண்கள் பஞ்சாடிக் கிடந்தாள். எந்தக் கஷ்டமான வேலையா யினும் பின் வாங்காமல், நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பம்பரம் போலச் சுழன்று கொடுத்த அவளுடைய வரிச் சுத் தேகம் இன்று அசந்து போய்க் கிடந்தது. அவ ளுடைய பிராணன் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருந்தது. அதை அறிந்து கொள்வதற்கு வைத்தி யன் தேவை இல்லை.வேலுப்பிள்ளையின் வீட்டில், அவ னுடைய பாதுகாவலின் கீழ் அவன் மனைவியினுடைய உயிரை யமன் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண் டிருந்தான். யமனுடைய சோரத்தை அறிந்தும் அவன்த் தடுத்து நிறுத்த முடியவில்லை. ܝ
அவளுடைய மக்களும் அறுவர் வாங்குக் கட்டிலைச் சுற்றிவளைத்துக் கொண்டு செயலற்று நின்றனர். அவ ளுக்கு - ஈன்று வளர்த்த அன்னைக்கு - சாவதற்கு உதவி

- 63 -
செய்யத்தான் அவர்களால் முடிந்தது, ஒருத்தி நெஞ்சைத் தடவி விட்டாள்; இன்னுேருத்தி வாயில் பால் வார்த்தாள்.
யார் இருந்து என்ன ?
அடுத்த வீட்டு அன்னமுத்து வண்ணுன் கொண்டு வந்தபடி ஒரு சேலை உடுத்து, கழுத்தில் புதிதாக மினுக் கிய அட்டியலும் கையில் காப்புகளும், எண்ணெய் தேய்த்து வாரி முடித்த கொண்டை முதுகிற் புரள அசைந்து அசைந்து வந்தாள். வேலுப்பிள்ளைக்கு அவளைக் காண ஆத்திரம் வந்தது. " சாக முன்னுக்கே செத்தவீடு கொண் டாட வாருள் இந்தத் தேவடியாள் !"
"அம்மான், மாமிக்கு எப்பிடி?"
" அப்படித்தான் - போய்ப்பார்" என்று அலுத்து விட்டு, வேலுப்பிள்ளை தன் புடலங்காய் போன்ற கால்களை மடக்கி நாடியின் கீழ் வைத்துக் கொண்டு மறுபடி தன் னுள் ஆழ்ந்தான்.
திடீரென்று நாற்பது வருடங்களுக்கு முன் தெய்வானை மணப் பெண்ணுய் முதல் முதல் "தாறு பாய்ச்சி"ச் சேலை உடுத்து மருளும் கருவிழிகளால் அவன்ையும் நிலத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நாணிக்கோணி நின்ற காட்சி அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று முதல் இன்று வரை அவன் அவளாய் அவள் அவனுய் ஒன்று பட்டு, உழைப்பு நிறைந்த ஒரு கஷ்ட ஜீவனத்தின் ஒவ்வொரு அலுவலிலும் சமபங்கு எடுத்துக் கொண்டு வாழ்ந்த வாழ்வு
காதல் என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியாது. விவாகரத்து, கர்ப்பத்தடை முதலியனவற்றைப் பற்றி, அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. ஆளுல் வாழ்க்கை கொடிய வறுமையிலும் செம்மையாய், பிணக்குகள் தடி அடிச்சண்டைகளுக்கிடையிலும் ஆழ்ந்த அநுதாபமும் அன் பும் கொண்டதாய்ப் பூவுல மோட்சமாய்ப் பரிமளித்தது. நாற்பது வருஷம் - நாற்பது நாள்

Page 40
.-- 64 -
" அப்பு ஆச்சிக்கு ஒரு மாதிரிக் கிடக்கு வந்து பாரெணை " என்று அவனுடைய இளைய மகள் பர்வதம் வாசலில் வந்து சொன்னுள்.
"ஐயோ! வந்திட்டுது, முடியப்போகுது” என்று நினைத்துக் கொண்டு வேலுப்பிள்ளை எழுந்து உள்ளே போனன். தெய்வானையின் கால்கள் நேராக நீட்டப்பட்டு கைகள் மார்பின் மேல் பொருத்தப்பட்டிருந்தன. சாவுக்கு ஆயத்தமாய் ! அன்னமுத்தியின் வேலை" என்று அவன் நினைத்தான். செயலற்றுக் கிடக்கும் மனைவியின் உடலை உற்றுப் பார்த்தான்.மூச்சு வேகமாக வந்து கொண் டிருந்தது. கழுத்துக் குழியில் ஏதோ படபடத்தது. "ஐயோ ஐயோ " என்று அவன் உள்ளம் செயலற்று அலறியது மறுகணம் தெய்வீ தெய்வீ என்று கெஞ்சியது.
தெய்வானையின் கண்கள் பாதி மூடியபடி கூரையில் பதிந்திருந்தன. அந்தகாரமான இருட்கடலின் மத்தியில் ாப்பொழுதோ இறந்துபோன அவளுடைய தாயின் முகம் சொல்லொணு இளமையும் அழகும் கொண்டு புன்னகை புரிந்தது. அந்த இருட்கடலைத் தாண்டி அந்த மூகத்தைப் பிடித்து விடவேண்டும் என்று தெய்வானை தவித்தாள். அவளுடைய ஒடுங்குஞ் சிந்தையில் ஏதோ அர்த்தமற்ற வார்த்தைகள் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தன. * ஆச்சி பூச்சி அம்பட்ட வளவில் முள்ளுச் சூப்பி.ஆச்சி பூச்சி"
மூவுலகும் கொள்ளாத ஒரு கருணை தேங்கி நின்ற அன்னையின் முகம் தன்னுடன் ஒரு ஒளி வட்டத்தையும் கொண்டு இருட்கடலைத் தாண்டித் தெய்வானையை நோக்கி வந்து கொண்டிருந்தது. * ஆச்சி பூச்சி அம்பட்டவளவு"
வேலுப்பிள்ளை தனக்குத் தெரிந்த ஒரு திருவாசகத் தைப் பாட ஆரம்பித்தான். மனிதர் சாகும் தறுவாயில் தேவாரம் திருவாசகம் பாடவேண்டும் என்பது அவனுக்கு ஞாபகம் வந்தது.

ー 65ー
"அம்மையே அப்பா." அவனுடைய குரலிலே சிந்த முடியாத ஒரு கண்ணிர்க்கடல் தேங்கி நின்றது,
தெய்வானைக்குத் தன்னை மறந்த ஒரு ஆனந்தம் "ஆச்சி பூச்சி, ஆச்சி பூச்சி." இதோ அன்னை மிக அரு கில் வந்துவிட்டாள் இருட்கடல் மறைந்து முழுவதும் டிரிக்கடலாயது. "ஆச்சி ஆச்சி - என்ரை ஆச்சி" அன்னையின் கண்கள் தெய்வானையை அகன்று மருட்டி அழைத்தன.இதோ.
ஆச்சி 1
"ான்ரை ராசாத்தி போட்டியோ!" என்று வேலுப் பிள்ளை புரண்டழுதான். "ஆச்சி ஆச்சி" என்று மக்கள் கதறினர். அன்னமுத்து தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒப்பாரி வரிசைகளைக் கண்ணிர் இல்லாமல் ராகத்துடன் எடுத்து விட்டாள்.
தெய்வானைக்கு அறிவு தெளிந்தபொழுது திடீரென்று விலங்குகள் தெறித்து, சிறைச்சாலைக் கதவுகள் தகர்ந்து விடுதலை கிடைத்து விட்டது போலத் தெரிந்தது. ஆ! 4 ன்ன விடுதலை ! அவள் தான் நினைத்தபடி மனுேவேக மாக எங்கும் போக முடிந்தது. அவளுடைய உடல் காற் டிகி விட்டதோ ? அல்லது உடலே இல்லையோ? அவ ருக்கு இரவு பகல் தெரியவில்லை. அவளுக்குக் குன்றத இளமையும், வற்ருத ஊக்கமும் எதையும் கிரகித்தறிந்து கொள்ளும் அகன்ற மனமும் வாய்த்து விட்டது போலத் தெரிந்தது. தன்னுள்ளே ஒரு எல்லையற்ற ஆனந்த சுதந் திர உணர்ச்சி ததும்பி வழிந்து கொண்டிருந்தது.
எண்ணரிய யோசனை தூரத்திற்கு அப்பால் பூவுல கில் இருந்து ஒரு தீனமான குரல் அவளுடைய இன்பத்தி ாரிடையில் வந்து புகுந்து அவளுடைய நிம்மதியைக் குலைத் தது, "தெய்வி தெய்வி" என்று அலறும் அந்தக் குரலில் நிறைந்திருந்த நம்பிக்கை இழந்த ஏக்கம் அவளுக்குப் பூவுலக வாசனையை ஊட்டி, பிரிவுத்தாகத்தைத் தோற்று
Gau - 9

Page 41
வித்தது தன்னுடைய கணவன் அதுணையிழந்து நாதியற் றுக் கலங்குகிருன், தன்னை நினைந்து ஏங்குகிறன் என் பது அவளுடைய பரந்த மனத்தில் தெளிவாகப்பட்டது. ஓடிப்போய் அவனை அணைத்துக் கொள்ள வேண்டும் ஈன்று அவள் உள்ளம் துடித்தது. ஆணுல் அவளால் அவன் அணுக முடியவில்லை. அவன் மனித உடற் பிணிப் பிலே கண்டுண்டு கிடந்தான்.
கனவுகளில் மட்டும் அவன் தன்னை அறிந்து கொள் ரூம்படி செய்ய முடிந்தது. ஆளுல் அவைகளினுல் அவ ளுடைய தாகம் அடங்கவில்லை. வைக்கோல் அடைந்த உயிரற்ற கன்றின் உடலைக் கண்டு இரங்கும் பசுப்போல் ஒரு ஊமைத் துயரம் அவளை வாட்டியது. அவன் என்று தன்னுடன் வருவான் என்பதே அவளுக்குச் சதா ܣܦ݂ܝܢusi0. அவனது துணை இன்றி எந்த இன்பமும் நில்லாது என்று அவள் கண்டு கொண்டாள்.
தெய்வான் இறந்த தினத்தில் இருந்து வேலுப்பிள்ஜா வாழ்விலே பிடிப்பை இழந்து விட்டான். ' தெய்வி தெய்வி" என்று உள்ளூர எந்நேரமும் அலறிக்கொண்டிருந்தான். அவளுடன் தான் வாழ்ந்த வாழ்க்கையை முதலிலிருந்து நினைத்து நினைத்து ஏங்குவதே அவனுக்குத் தொழிலாய்ப் போய்விட்டது. "தெய்வி தெய்வி"- இடையிடையே அவ ளைக் கனவிற் கண்டு படிப்படியாக அவன் ஏக்கம் அதி கரித்தது
" அப்பு என்னுேடைவந்து கொஞ்ச நாளேக்கு இரேன் எனக்கும் துணையாய் இருக்கும்; உனக்கும் பிராக்காய் இருக்கும் " என்று அவனுடைய இரண்டாவது மகள் வள்ளியம்மை அழைத்தாள். இடம் மாறினல் ஒரு வேளை அவனுடைய ஏக்கம் குறையலாம் என்று அவள் நினைத் தான,
" வேண்டாம் மேளே, நான் இங்கினைதான் கிடக்கப் போறேன்" என்று அவன் மறுத்து விட்டாள், நாளடை

வில் அவன் எதிலும் பற்று அற்று ஒரு நடைப்பினம் ஆகிவிட்டான்.மூன்று மாத காலத்திற்குள் அவனுடைய அறுபது வயது தொண்ணுாறு வயதாகி விட்டது.
“கிழவன் படுக்கையாய் விழுந்திட்டுது, அதுகும் போகப் போகுது போலை" என்று அன்னமுத்து தன் கணவனுக்குச் சோறு பரிமாறிக்கொண்டே சொன்னுள்.
"ஒமாக்கும். என்ன இருந்தாலும் கிழவனும் கிழவி யும் நல்ல ஒற்றுமையாய் இருந்தவை." என்று பொன் ாம்பலம் இழுத்தாள்.
வேலுப்பிள்ளை பிரக்ஞை இல்லாமல் அதே வாங்குக் கட் டிஸிற் கிடத்தான். அவனுடைய மக்கள் அறுவரும் மீண் டும் வந்து கூடினர். "வாத ஜன்னி - தள்ளாத வயது; இன்றே நாளையோ" என்று வைத்தியன் கையை விரித்து விட்டான். அன்னமுத்து கழற்றி வைத்திருந்த அட்டியலை மினுக்கி அணிந்து கொண்டு வந்து சேர்ந்தாள்.
கனவோ நனவே ஈ என்று சொல்ல முடியாதபடி தெய்வான்யின் உருவம் அவ்வளவு தெளிவாக வேலுப் பிள்ளையின் கண்ணெதிரில் மின்னிக் கொண்டிருந்தது. கன் உடலை அவனுக்கு முதல் முதல் அர்ப்பணம் செய்த பொழுது அவள் முகத்திலும் உடலிலும் காணப்பட்ட சோக - நாண மகிழ்ச்சி இப்பொழுது காணப்பட்டது. கைகளை நீட்டி அவளை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போல் வேலுப்பிள்ளைக்குத் தோன்றியது. அவ றுடைய இடக்கைச் சுட்டு விரல் மட்டும் மெதுவாக ஒரு லயத்திற்கு அசைந்து கொண்டிருந்தது. உடலில் வேறெவ் வித அசைவுமில்லை.
அவனுடைய இளைய மகன் ராமலிங்கம் திருவாசகம் பாடினுன் வள்ளியம்மை திருநீற்றை அள்ளி வேலுப்
Sir2Tsir - நெற்றியிற் பூசினுள்.

Page 42
சட்டென்று வேலுப்பிள்ளையின் கண்ணெதிரில் கோர மான இருள் சூழ்ந்தது. தெய்வானையைக் காணவில்லை. அவன் வாய் விட்டு அலறிஞன்.
*" தெய்வி- ! " என்று, ஒரு பாய்ச்சலில் இருட்கடலைத் தாண்டி விட்டான் !
அவனுடைய பெண் மக்கள் "அப்பூஊ அப்பூஊ என்று அலறினர். அன்னமுத்து சாவதானமாகப் பிணத் தின் கால்களை நீட்டிப் பெருவிரல்களைச் சேர்த்துக் கட்டி விட்டு, ' கண்டியிலே காத்தடிக்க, கைவிளக்கு நூந்த தல்லோ ஒ ஓ ஒ1" என்று ஆரம்பித்தாள்.

மே ன கை
வாலிப வயதின் கனவுகள் நிறைந்த "மன"க்காதல் ஆயின் விசுவாமித்திரர் மனிதர்களின் மத்தியில் வாழ்வதை விடுத்துக் கொடிய கானகத்தை நாடி வந்திருக்க வேண் டியதில்லை. ஆயிரம் மோகினிகளின் மத்தியிலே கணவு கண்டபடி காலத்தைக் கடத்தி விட்டிருக்கலாம். ஆணுல் அவர் வாலிபப் பருவத்தைக் கடந்து பல்லாண்டுகளாய் விட்டன, அவரை வருத்தியது இளமையின் மணக்காதல் அன்று; நடுத்தர வயதின் மனக்கலப்பற்ற கொடிய உடல் வேட்கை: தசையின் பிடுங்கல்.
சகலத்தையும் துறந்த சர்வ வேத விற்பன்னரும் மகா மேதையுமான அவரால் பெண்ணுசை ஒன்றை மட்டும் துறக்க முடியவில்லை. மலரின் இருதயத்திற்குள் கிடந்து குடையும் புழுப்போல் அந்த ஒரே தாபம் எதற்கும் கலங் காத அவருடைய திடசித்தத்தை நிலை குலையச் செய்து கொண்டிருந்தது. நியம நிஷ்டைகள், காடு நாடுகளில் நீண்ட கால் நடைப் பிரயாணம் முதலியன சிறிதும் பிர யோசனப்படவில்லை. உடலில் எவ்வளவுக் கெவ்வளவு பலம் குறைந்ததோ, அவ்வளவுக் கவ்வளவு மனத்தில் இன்ப நினைவு அதிகரித்தது.
வேட்கையைத் திருப்தி செய்து மனத்திற்கு அமைதி தேடிக் கொள்ளலாம் என்றல் அது பகைவனுக்கு அடி பணிந்து இறைஞ்சுவது போல் தோன்றியது. மன்னர் மன்னவனுகிய அவருக்கு எதற்கும் அடிபணிந்து போவ தென்பது சாத்தியமாகவில்லை. வெற்றி அல்லது மரணம் இந்தத் தீர்மானமே அவரை அரும் காணகத்திற்கு இழுத் துச் சென்றது. அங்கு காமத்திற்கு நிலைக்களனுகிய தசை யுடன் வருந்தத் தவம் இயற்றலாஞர்.
விசுவாமித்திரரின் தவத்தை அறிந்து தேவேந்திரன் அயர்ந்து போய் விட்டான். ஒரு சமயம் காமதேனுவைத்

Page 43
தனதாக்கிக் கொள்ள முயன்ற மானிடன், காமதேனு வாசம் செய்யும் தேவுலகையே கவர்ந்து கொள்வதற்குச் செய்யும் பிரயத்தனம்தானே இத்தவம் என்று அங்கலாய்த்தான். கெளதமர் கொடுத்த கொடிய தண்டனையின் நினைவு அவன் மனத்தில் இன்றும் பச்சையாகவே இருந்ததினுல் முனிவர் கள் என்றலே அவனுக்குப் பெரும் பீதி. ஆதலால் பொறி மூண்டு ஜ்வாலை ஆவதற்கு முன் அதை அவித்து விட வேண்டும் என்று அவன் சங்கற்பம் செய்து கொண்
ATVT
தவத்தை அழிப்பதற்கு நாரி மோகத்தைவிடச் சிறந்த படை வேறென்றில்லை என்ற உண்மையை, காமத்தையே தன் வாழ்வின் ஒரு லட்சியமாகக் கொண்டு சுவைத்த காமூகனுண தேவராஜனுக்கு அறிவுறுத்த அமைச்சர் வேண்டியிருக்கவில்லை.
வெளிக்கு ரிஷி பத்தினியே போன்ற தன்மையான சுபாவத்திற்குள் வடவைத் தீ போன்ற காமத்தை மறைத்து வைத்திருப்பவளான மேனகையாலேதான் இந்த நுட்ப மான பணி நிறைவேற வேண்டும் என்று நினைத்தான்.
மேனகை வெளிக்குச் சிறிது அலட்சியமும் அலுப்பும் காட்டியே இந்திரனுடைய கட்டளையை ஏற்றுக் கொண்டா ளாயினும், அந்தரங்கமாக அவள் மனம் பரபரப்படைந் தது. போகப் பித்தர்களான தேவர்களை வீழ்த்துவதுபோல் மானிடர்களே அவ்வளவு இலகுவில் மோக வலையில் வீழ்த்த முடியாதென்பதை அவள் அறிந்திருந்தாள். மேஞள் ஊர் வசி முசுகுந்தச் சக்கரவர்த்தி என்ற மானிடனிடம் பட்ட அவஸ்தை எல்லாம் ஊர்வசியே சொல்ல அவள் கேட் டிருந்தாள். நீறு பூத்த நெருப்புப் போலக் கிடந்த அவ னுடைய ஆசையைப் பூரணமாகச் சுடர்விடச் செய்வதற்கு ஊர்வசி தன் பெண் சக்தி முழுவதையுமே பிரயோகிக்க வேண்டியிருந்தது. ஆணுல், ஈற்றில் அவனிடத்தில் அவள் கண்ட கொள்ளை இன்பத்தின் நினைவு, அவன்ப் பிரித்து பல காலத்திற்குப் பிறகும் அவள் மனத்தை விட்டு

- 7 -
அகன்றதில்லை. அது ஒரு தனி அநுபவம்; ஒரு பூரண Rirja.
அது ஊர்வசியின் அநுபவம். மேனகை இன்னும் மானிடர்களை அறிந்ததில்லை, இந்த விசுவாமித்திரன் எம் படிப்பட்டவனே என்று அவள் அதிசயித்தாள். அச்சமும் விநோத பாவமும் கலந்த ஒரு இன்ப உணர்ச்சி அவள் மனத்திற் குடி கொண்டது. ஆயிரம் அமரர்களின் பொது மகளான அவளுக்குப் புது மணப் பெண்ணின் மனத்தில் தோன்றுவது போலச் சிறிது நாணம் கூட ஏற்பட்டது,
இரவு முழுவதும் தாரகைகள் நடமாடியதனுல் செம் பஞ்சுக் குழம்பு தோய்ந்திருந்த வாணரங்கைத் துடைத் துச் சுத்தம் செய்வான் போல் அருணத் தோட்டி கீழ்த் திசையில் எழுந்தான். வைகறையோடு ஆற்றங் கரைக்குப் போன விசுவாமித்திரர் நீராடிய பிறகு வழியோரம் மலர் பறித்தபடி ஆச்சிரமத்தை நோக்கிக் கம்பீரமாக நடந்து கொண்டிருந்தார். சான்றேர் உள்ளம் போலச் சலனமற்று ஆழமாகப் பாய்ந்து கொண்டிருந்த மகாநதி அவர் மனத் திற்குச் சிறிது அமைதியைக் கொடுத்திருந்தது. விலக்கப் பட்ட கணியை நோக்கிச் சதா தாவிக் குதிக்கும் மனக் குரங் கைத் தடுத்து வைத் திருந்த பிணைப்பைக் கொஞ்சம் தளர்த்திவிடவும் முடிந்தது. வேதமந்திரங்களின் மாதுர்ய வசனங்கள் அவர் கண்டத்தில் எழுந்தன.
திடீரென்று, அவருக்குப் பின் புறத்தே குயில் ஒன்று தீனக் குரல் எழுப்பியது. விசுவாமித்திரர் அதைக் கவ. ணிக்காமல் மேலும் நடந்தார். குயில் மீண்டு உச்சத் தொணியில் அவசரமாகக் கூ வியது, அது தன்னையே அழைப்பது போல அவர் மனத்தில் ஒரு சபலம் தட்டவே தன்னை மறந்து பின் புறமாகத் திரும்பி நோக்கினுர். பூத்துக் குலுங்கும் ஒரு மகிழின் கீழ், வெண்பட்டணிந்து, கருங்கூந்தல் தோழிற் புரள, தெய்வ மயன் கடைந்து நிறுத்திவிட்ட தந்தப் பாவைபோல மேனகை நின்ருள். அவள் இதழ்க் கடையில் ஓர் இள முறுவல், கண்களிலே,

Page 44
ー72ー
ஒரு தாபம் ஒரு அழைப்பு. விசுவாமித்திரருடைய மனம் கல்லாய்ச் சமைந்துபோக, உடல் அவள் நின்றி ருந்த திக்கை நோக்கி அடி எடுத்து வைத்தது. அதற்குள் மேனகை மறைந்து போய் விட்டாள்.
முதல் உன்னிப்பில் அவளை அழைப்பதற்கு எடுத்த குரல் அவர் தொண்டையிலேயே அடங்கிப் போய் விட் டது. முன் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக் கொண் lirif......
யார் இவள்
அவரை இரவு பகல் வருத்தும் கொடிய வேதனையின் உருவெளித் தோற்றமோ இது? அவர் மனத்தில் தோன்றி யிருந்த உற் சா க மும் அமைதியும் கணப் பொழுதில் மறைந்து போயின, நெஞ்சை வக்கிரமாக்கிக் கொண்டு பிரளயகால ருத்திரன்போல் ஆச்சிரமத்தை நோக்கி நடந்
5 Troops
பறித்த மலர்கள் அன்று பாத்திரத்திலேயே கிடந்தன. விசுவாமித்திரர் தன் மன ஓட்டத்தை வேறு வழியில் திருப்பி விடுவதற்கு எவ்வளவோ பிரயத்தனம் செய்து பார்த்தார். வேத மந்திரங்களை வாய் விட்டுப் பாடினுர். வாழ்வின் நிலையாமையை நினைவு கூர்ந்தார். பிரபஞ்சத் தில் கண்காண்ட விந்துரூபத்தையும் கண்காணுத நாதரூபத் தையும் மனத்தில் இருத்த முயன்றர். "நானே கடவுள், ! நானே பிரமம்'. எல்லா எண்ணத் தொடர்களும் ஈற் றில் பெண்" என்ற நினைப்பில் முற்றுப்புள்ளி போட்டு நின்றன, ‘ ஆ, தசையும் நிணமும், என்பும் மயிரும் கொண்ட பெண் உரு ' என்று மனத்தில் அருவருப்பை ஏற்படுத்த முயன்றர். ஏதும் பயன் இல்லை.
அவர் உடல் அனல்போற் கோதித்தது.
அந்தி மயங்கும் வேளை விசுவாமித்திரர் பர்ணசாலை வாசலில் அமர்ந்து ஒரு ஸ்லோகத்தை முணுமுணுத்துக்

- 73 -
கொண்டிருந்தார். லேசாக ஊதிக்கொண்டிருந்த காற்றில் மாலை மலர்களின் வாசனை "கம்" என்று பரவியது. உதிர்ந்த சருகுகள் கலகலத்தன. விசுவாமித்திரர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் தலை நிமிர்ந்தார். எதிரிலே முற்றத்தில் வளைந்த பூங்கொம்பர் ஒன்றைப் பற்றியபடி மேனகை முறுவல் பூத்து நின்ருள். அவளுடைய கருங்கூந்தல் ஸ்நானம் செய்து உலர விட்டதுபோல் காற்றில் பறந்தது. உடலை மலர் மாலைகளால் அலங்கரித்திருந்தாள். இந்தக் காட்சி, விசுவா மித்திரருக்கு முதலில் ரெளத்திர காரமான கோபத்தையே உண்டாக்கியது. அவரை வருத்திய மன்மத தாபம் அதை எதிர்த்துப் போராட முடியாததால் அவர் உள்ளத்தில் தோன்றியிருந்த சுயவெறுப்பு. தன்னுடைய தவலட்சியம் தவறிப் போனதஞல் ஏற்பட்ட ஏமாற்றம் ஆகிய எல்லாம் அந்தக் கணத்தில் தாங்க முடியாத கோபமாக உருவெடுத் தன. உடல் படபடக்க எழுந்து நின்றர். "யாரடி நீ? கிராதகி !" என்று வனம் அதிரும்படி அவர் குரல் எழுந்
55. W
மேனகை அயர்ந்துபோய் விட்டாள். முறுவல் செய்த அவள் உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. நெருப்புச் சித றும் விசுவாமித்திரருடைய எதிர்நோக்கின் முன் அவள் நயனங்கள் தாழ்ந்தன. ஆணுல் அவருடைய ருத்ரரூபமும் பரந்த தோள்களும் அவளை மிகவும் வசீகரித்தன. இதோ, கடைசியாக ஆண்மை சிந்தும் ஒரு ஆடவன் !" என்று அவள் நினைத்துக் கொண்டாள்.
சபித்தாலும் சபிக்கட்டும் என்று மனத்தைத் திடப்படுத் திக்கொண்டு மறுபடி இதழ்களில் புன்னகையையும் முகத் தில் மந்தகாசத்தையும் வருவித்து " ஸ்வாமி, நான் மேனகை " என்ருள்.
"மேனகையா? - தேவதாசி ! உனக்கு இங்கு என்ன Ca2) '
அவருடைய குரலில் முன்னிருந்த கோபம் இல்லை அவளிடத்தில் தோன்றிய அச்சக்குறிகள் அவர் மனத்தைக்
வெசு 10

Page 45
- 74
கொஞ்சம் இளக்கி விட்டிருந்தன. அதை உணர்ந்து கொண்ட மேனகை, அவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள். நாட்டிய மேதையான அவள் இடை அசை விலும், கழுத்தசைவிலும் தோன்றிய நிகரில்லா அழகு அவர் மனத்தை வருத்தியது.
“ தங்களுடைய 'தவமேன்மை'யை அறிந்து தங்களுக் குப் பாதசேவை செய்யலாமென வந்தேன்."
" கிட்ட வராதே, கிட்ட வராதே" என்று பதறிஞர் விசுவாமித்திரர். அவருடைய குரலிலே கோபம் இல்லை. அதற்குப் பதிலாகக் கெஞ்சும் பாவம்தான் சிறிது புலப் لق ساتالا
வெற்றி தனதென்பதை மேனகை நிச்சயமாக அறிந்து கொண்டாள். "தாங்கள் என்னை நிராகரித்தால். என்று சொல்லி முன் வைத்த காலை அதே சிருங்கார ரஸம் செறிந்த அங்க அசைவுகளுடன் பின்னுக்கு எடுத்துக் கொண்டாள். " ஆகா, தூண்டில் மீன்!" என்று நினைத் தாள்.
அதன் பிறகு அவளுக்கு வெகு சுலபமாகவே வெற்றி கிட்டியது கடைசியில், விசுவாமித்திரரே அவளைக் குறை இரக்கும் படியாய் விட்டது.
கன்னிப்பெண், தன் காதற் கனவுகளை மெழுகிய தரை யில் கோலமாக வரைந்து விட்டது போலப் பால் நிலவு மர இலைகளினூடே செறிந்து ஆச்சிரமமுன்றில் எங்கணும் சிதறிக் கிடந்தது. விசுவாமித்திரருடைய மடியில் தலை சாய்த்து மேனகை படுத்திருந்தாள்.
* ஸ்வாமி, உண்மையான தேவ போகம் இன்றே எனக் குக் கிட்டியது. இது என்றும் நிலைத்திருக்க வேண்டுமே."
* மேனகா, சுவர்க்கம் என்று எங்கெல்லாமோ தேடி யலைந்தேன். உடலை வருத்தினேன். இன்று என்

ー75ー
கனவுகளின் சாற்றைப் பிழிந்து சமைத்தது போன்ற எழி லுடன் நீ எங்கிருந்தோ வந்தாய், சுவர்க்கத்தைச் சுமந்து கொண்டு! இனி நான் வேறு சுவர்க்கம் வேண்டேன்."
அன்றிரவு அப்படிக் கழிந்தது.
வசந்த காலம் புரண்டு அருங் கோடையாக மாறியது. காணகத்தில் புற்கள் கருகி, மரங்களின் பசிய இலைசள் உதிர்ந்து சருகுகளாய்க் கலகலத்தன. முதலில் விசுவாமித் திரருக்கு சுவர்க்கத்கிலும் உயர்ந்ததாகத் தோன்றிய வேட் கையும் அதன் திருப்தியும் நாளடைவில் உண்பதும் உறங் குவதும் போலச் சாதாரண மிருக அநுபவமாய் மாறியது. மேனகை ஆயிரம் அணங்குகளின் குண பேதங்களை ஒருங்கே தன்னுள் கொண்டவளாய், நாளொரு தோற்ற மும் பொழுதொரு விநோதமும் காட்டும் ஜகன் மோகன ஸரச காம வல்லியாகத் திகழ்ந்தாலும் விசுவாமித்திர ருடைய மனத்தில் கொஞ்சம் அலுப்புத் தட்ட ஆரம்பித் தது அவளுடைய பாட்டும் கூத்தும்கூட அவருக்குப் பய னற்ற வெறும் பொம்மலாட்டமாகவே தோன்றின. அவ ளுடைய செயல் ஒவ்வொன்றும் - ஏன் அவளுடைய வாழ்க்கை முழுவதுமே - காம இன்பம் ஒன்றையே சுற்றி வட்டமிடுவது போல் அவருக்குத் தோன்றியது. மனத்திற் குக் காம நுகர்ச்சிக்கு மேம்பட்ட, அப்பாற்பட்ட வேறு ஒரு தனி வாழ்வு உண்டு என்பதை அவளால் உணர்ந்து கொள்ளவே முடியவில்லை.
உதறித் தள்ளிவிட்டு வந்த பந்தங்கள் மீண்டும் தன் னைப் பிணிப்பதை அறிந்து விசுவாமித்திரர் கவலையில் ஆழ்ந்தார்.
இதன் மத்தியில் ஒரு நாள் மேனகை தான் கர்ப்பம் உற்றிருப்பதாக அவருக்கு அழிவித்தாள். அவர் அதைக் கேட்டுப் பெரு மகிழ்ச்சி அடைவாரென்பதே அவள் எண் ணம் தன் பிடியிலிருந்து சிறிது சிறிதாக நழுவிச் செல் லும் அவரை இச்செய்தி மறுபடி தன் பால் இழுத்து விடுமென்று அவள் கருதினுள்,

Page 46
سے 76 سے
விசுவாமித்திரர் வாய் திறந்து ஒரு பதிலும் சொல்ல வில்லை. தன் தோளை அணைத்திருந்த அவள் கையை மெல்ல நகர்த்திவிட்டு, ஆற்றங்கரையை நோக்கி நடந் தார். OU
* பெண் மோகம் என்ற சிறையில் அடைபட்டுப் பசி தவிக்கும் துறவியின் மனத்திற்குப் புத்திர பாக்கியம் என்ற இரட்டைத் தாள்ப்பாள் 1 ஐயோ வல்வினையே! . என்று அவர் மனம் செயலறியாது ஓலமிட்டது. ஆண்மை குலைந்தது. −
மாரிகாலம் ஆனபடியால் ஆறு கரை புரண்டு நுரை சிதறிப் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் உன்மத்த கதி அவர் மனத்தை மேலும் கலக்கியது. மண்ணவரையும் விண்ணவரையும் நடுங்க வைத்த அவருடைய தபோபலம் இப்பொழுது எங்கே? வேத வாக்கியங்களைப் பிறப்பித்த அவருடைய பரந்த கல்வியும் - மணப் பண்பும் எங்கே..? ஆற்றங்கரையிலே மனம் இடிந்துபோய் இரவையும் குளி ரையும் பொருட்படுத்தாது விசுவாமித்திரர் உட்கார்ந்து விட்டார்.
வைகறை யாமம் கழித்து ஆச்சிரமத்தை அடைந்த பொழுது மேனகை அவர் விட்டு வந்த இடத்திலேயே பாயலும் இன்றி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் கன்னங்களில் கண்ணிர் வடிந்து உறைந்து வரி செய்திருந்தது. ۔۔۔۔۔
திடீரென்று அவர் மனத்தில் அவள்பால் சொல்லொ ரூத அன்பும் இரக்கமும் ஏற்பட்டன. அவளது தலையை அன்பாக வருடி "மேனகா, - என் குழந்தாய் !" என்ருர், அவள் விழித்து அத்தியந்த ஆவலுடன் அவர் மார்பை அணைத்துக் கொண்டு சிறு குழந்தை போல் தேம்பித் G59 9(p5rir.........
இரு தினங்கள் கழிந்ததும், அவர் மனத்தில் மறுபடி வைரம் ஏறியது. தன் இளகிய நெஞ்சிற்காகத் தன்னையே

س- 77 ست .
கடிந்து கொண்டார். ராஜத் துறவியின் லட்சியத்துக் குக் குறுக்கே வந்து பெண்மையைக் காட்டி மருட்டுவ தற்கு இவள் யார்? மேனகையை அணுகாமல் ஏகாக்ர சிந்தையுடன் ஆற்றங்கரையிலே அதிகமான காலத்தைத் தனிமையில் கழித்து வரத் தலைப்பட்டார்.
ஒரு நாள் உதய காலத்தில் மேனகை சொன்னுள் * ஸ்வாமி, இன்று என் உடலில் வேதனை காணுகிறது. இன்று ஒரு பொழுதிற்காவது தாங்கள் மனமிரங்கி ஆச் சிரமத்தில் தங்கக் கூடாதா?”
விசுவாமித்திரர் பதில் கூருமல் தன் இளகும் மனத்தை இரும்பாக்கிக் கொண்டு ஆற்றங்கரையை நோக்கிப் புறப் பட்டார். பகல் முழுதும் அங்கேயே போக்கினர். பொழுது மரங்களின் புறத்தே சாய்ந்தது. வானத்தில் செவ்வரி படர்த்தது.
திடீரென்று ஆச் சிரமம் இருந்த திக்கில் இருந்து மேனகை தலைவிரி கோலமாய் அலங்கோலமான ஆடைக ளுடன் கையில் ஒரு குழந்தையை ஏந்திக்கொண்டு அவரை நோக்கி ஓடி வந்தாள். தாய்மையும் நாணமும் பொங்கும் முகத்துடன் ' இதோ, உங்கள் - எங்கள் புத்திரி !" என்று கூறி அவர் அமர்ந்திருந்த கல்லின் முன் மண்டியிட்டு, குழந் தையை அவர்பால் இரு கைகளாலும் நீட்டினுள்.
பகைவனைக் கண்டு படம் விரிக்கும் சர்ப்பம் போல் விசுவாமித்திரர் சீறி எழுந்தார். " எட்ட நில்! பாபி 1 துரோகி ! இந்தப் பாவ சின்னத்தை' என் கண்ணினுல் கூடப் பார்க்க மாட்டேன்!"
இந்த வரவேற்பை அவள் ஒரு அளவிற்கு எதிர் பார்த்தே இருந்தாள் எனினும், அவளது தாயுள்ளம் மிக வேதனைப்பட்டு நின்றது. விசுவாமித்திரருடைய உள்ளத் தைக் கொஞ்சம் குத்திச் சித்திரவதை செய்ய வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. அவள் சொன்குள்
aw

Page 47
- 78 m
"தவவேடம் புனைந்த காமுகனே தேனே, மானே காமினி" என்று நச்சி என் உடலை விழைந்த பொழுது இந்த நைஷ்டிகம் எங்கே போயிற்று? ஆண்மகன் - பேடி! மானிடர்கள் எல்லோருமே இப்படி இருந்து விட்டால் பூவுலகம் கடைத்தேறிய படிதான்."
விசுவாமித்திரருக்குக் கோபம் வரவில்லை மேனகை பால் இரக்கமே ஏற்பட்டது. கையில் ஏந்திய சிசுவுடன் நிராதாரமாய் அவள் நின்ற நிலை அவர் மனத்தை உருக் கியது. அவர் சொன்ஞர் : " மேனகா, என் வாழ்வின் இலட்சியங்களை நீ அறியமாட்டாய். நான் துறவி ராஜ போகங்களையே வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளியவன். விதி வசத்தால் மனம் பலவீனம் அடைந்த சமயம் இக் கதிக்கு ஆளானேன். ஆணுல் உன் நிலைமைக்காக மிக மிக வருந்துகிறேன். இனிமேல் நான் உன்னுடன் வாழ முடி யாது. பெண்ணே, உனக்கும் எனக்கும் இடையில் ஏழ் கடல்களும் ஈரேழு லோகங்களுமல்லவா நிற்கின்றன.”
மேனகை இவ்வார்த்தைகளைக் கேட்டுத் துடித்தெழுந் தாள். குழந்தையை விசுவாமித்திரரின் காலடியில் கிடத்தி விட்டு, " எனக்கு என்ன வந்தது. உங்கள் குழந்தையைத் தாலாட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டுமென்று? நான் மானிடப்பெண் அல்லவே; நான் தேவமகள், இன்பமும் கலையுமே என் வாழ்வின் லட்சியங்கள். நான் போகிறேன். ஆகுல் ஸ்வாமி ! தங்கள் அன்பை - அது சொற்ப காலத் தியதாயினும் - என்றும் மறவேன். தாங்கள் என்னை எப் பொழுதாகிலும் நினைத்துக் கொண்டால் அப்பொழுது வந்து தங்களுக்கு இன்ப மூட்டுவது என் பாக்கியம்." என்று கூறி மறைந்து விட்டாள்
விசுவாமித்திரர் நிலத்தில் கிடந்த குழந்தையைக் கூர்ந்து கவனித்தார். தேஜோமயமான பெண் குழந்தை அதை மெளனமாக ஆசீர்வதித்து விட்டுத் தன் தண்டு கமண்டலங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வடதிசை நோக்கிக் புறப்பட்டார்.
பசும்புற்றரையில் கிடந்த குழந்தை கைகளையும் கால் களையும் உதைத்து விறிட்டு அலறியது.

நாடோ டி
கூண்டில் அடைபட்ட கிளிபோல அவளுடைய மனம் தவித்தது. அவளுக்கு ஒரு இடத்தில் இருக்கை கொள்ள வில்லை அடிக்கடி வாசலில் வந்து வெளியே எட்டிப் பார்ப் பதும், உள்ளே போய்க் கயிற்றுக் கட்டிலில் உட்காருவது மாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள் அவர் இன்றைக்கு நல்லாய் வருவாரோ, அல்லது கள்ளுத் தண் ணியைப் போட்டுக்கொண்டு." என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.
சூரியன் அஸ்தமித்து இரண்டு நாழிகைக்கு மேலாகி விட்டது. தன் ஒளி நாயகனைத் தின்றுவிட்ட துர்த்தையை ாதிர்த்துப் பகல்பமாக்கி விடுவது போல், ஆகாயம் நெருப் புக்கக்கும் கோடி நட்சத்திரக் கண்களோடு நெருங் கிப் படர்ந்துவரும் இருளின் மேல் கவிந்து கொண்டிருந்தது. வடகீழ்த் திசையிலிருந்து வீசிய குளிர்காற்றில் இரங் களின் தலைகள் பேய் அலறுவதுபோல் அலறுக்கொண் டிருந்தன. 7 s.
நாகம்மாவின் ஐயம் நீங்கி நிச்சயம் ஏற்பட்டது; : ஒம் ஓம், இன்று எங்கோ கள்ளுக்கடைதான் - இல்லால் பொழுது கருகி இவ்வளவு நேரமாகியும். ள் வேதனையோடு நிச்சயம் செய்து கொண்டாள். வரப் போகும் ஒரு தவிர்க்க முடியாத ஆபத்தை முன்னதாக அறிந்து கலங்கும் ஒரு மனப்பான்மையோடு நாகம்மா வெளிக் கதவைச் சாத்திவிட்டு உள்ளே போய்க் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
மூலையில் முக்காலியின் மேல் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கின் சுடர் போல் அவளுடைய மனமும் அலைந்து கொண்டிருந்தது. அந்தச் சுடர் நான்கு திசைகளிலும் ಶ கொடுத்ததே அன்றி, அவிந்து போய் விட na,

Page 48
- 80 -
சோமசுந்தரனையும் அவளை யும் இப்படி ஒன்ருகச் சேர்த்து முடிபோட்டு வைத்த விதியின் கருத்தை அவள் ஆய்ந்து உணர்ந்துகொள்ள முடியா து தவித்தாள். அவர்கள் இரு வருக்கும் கலியாணம் கூட ஆகவில்லை. ஆணுல் அதற்காக அவள் வருந்தவில்லை. உண்மையில் அவன் அவளுடைய இருதய கமலத்தில் ஒரு தெய்வம் மாதிரி. கலியாணத்தில்தான் - கலியாணச் சடங்கில்தான் என்ன இருக்கிறது ? ஒரு பிராமணன் யாருக்கும் தெரி யாத சில சமஸ்கிருத ஸ்லோகங்களை உச்சரிப்பதினுலும், எரியும் நெருப்புக்கு முன்னுல் இருந்து ஒரு தாலியை ஆண் மகன் பெண்ணின் கழுத்தில் கட்டுவதினுலும் ஏதோ ஆகி விடப்போகிறதா, என்ன ? இயற்கையிலே இல்லாத அள் பும் தாம்பத்திய ஒற்றுமையும் இந்த அர்த்தமற்ற சடங்கினுல் தானு உண்டாகி விடப் போகிறது? இல்லை, இல்லை. அவன் தங்கள் இருவருக்கும் கலியாணச் சடங்கு நடக்கவில்லை என்பதற்காக வருந்தவில்லை,
உலகம் அவளை ' வைப்பாட்டி" என்று கூறிக் கொள் கிறது அதனுல் என்ன? உலகம் அவளுக்கு அல்லது அவனுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டது? மூட 2 Ross då...... V
அவர்கள் இரு வரை யும் பீடித்திருக்கும் வறுமைப் பிணியை நினைந்தும் அவள் வருந்தவில்லை. அவளிட மிருந்த வயல் போதும் உணவளிப்பதற்கு ஆணுல் அவ னுடைய கலை இப்படி எவ்வளவு காலத்திற்கு மங்கிக் கிடக்கப் போகிறது இப்பொழுது இல்லாவிட்டால் இன் னும் சில ஆண்டுகள் கழித்தாவது உலகம் வந்து அவனு டைய கால்களில் விழப்போகிறது. அப்பொழுது செல்வமும் தானுகவே வந்து சேரும்.
அல்லது, அவன் அவளுடைய நாதன் - இப்படி ஒரு தாடோடியாக - வாழ்க்கையில் ஒரு இலட்சியமுமில்லாமல் திரிகிருன் என்பதுதான் அவளுக்குக் கவலையா ? அதுவும் இல்லை. அவள் ஒரு நாடோடியாக இல்லாமல் வேறு எப்

- 81 -
படி இருக்க முடியும்? அவனுக்கு ஊருமில்லைப் பேருமில்லை. அவன் பிறந்ததே ஒரு பணஞ்சோலையில்தானே உலகத் தின் சம்மதமின்றித் தன் இளமையின் ஒலத்திற்குச் செவி சாய்த்து விட்ட யாரோ ஒரு கன்னி, பிறகு அந்த ஒலத் திற்குச் செவி சாய்த்ததின் விளைவைக் கண்டவுடன் நடுங்கி விட்டாள். உலகம் இனி அவளை ஏற்றுக்கொள்ளாது. அவள் ஒரு நச்சுக்கொடி. அவளுக்கு உலகத்தின் தண் டனையை எதிர்த்து நிற்கத் தைரியம் உண்டாகவில்லை. அதனுல் யாரும் அறியாமல் ஊர்க்கோடியில் உள்ள ஒரு பணஞ்சோலையில். அப்படிப் பிறந்த பிள்ளை நாடோடி பாகாமல் வேறு எப்படி ஆகும்? தாயின் மேல் விதிக்க வேண்டிய தண்டனையை உலகம் மகன் மேல் விதித்து விட்டது. அவன் ஒரு நாடோடி, அமாணி, அங்கிடுதத்தி.
வட நூற்கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண் டுணர்ந்தவராகிய சோமசுந்தர சாஸ்திரியார் என்னும் கருணை வள்ளல், பணஞ்சோலையிலே கிடந்த சிசுவை எடுத்து வளர்த்து அதற்குத் தன் பெயரையும் கொடுத்து, அதன் உள்ளத்திலே அறிவுக்கனலையும் மூட்டியிராவிட்டால் சோமசுந்தரம் தெருநாயாகி விட்டிருப்பானே,
அவனுக்குப் பன்னிரண்டு வயதாவதற்கு முன் சோம சுந்தர சாஸ்திரியார் இறந்துபோய் விட்டார். உலகம் அவன் மேல் ஏறி மிதித்தது. ஆணுல் அவள் உள் ாத்திலே மூண்டிருந்த கனல் மட்டும் அவிந்து போய் விடவில்லை. நாளடைவில் அது வளர்ந்து, இப்பொழுது சுவாலையாக மாறியிருந்தது.
இந்தச் சமயத்தில்தான் சோமசுந்தரம் கள்ளரக்கனிடம் சரண் புகுந்தது. அதுதான் நாகம்மாவிற்கும் பெரும் வேதனையாக இருந்தது, " அவருடைய கலை அழிந்துபோய் விடப்போகிறதே..." என்று ஏங்கினுள்.
நாகம்மா உயிர் வாழ்ந்ததே அந்தக் கலைக்காகத்தான், வெசு 11

Page 49
- 82 m
அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை; சங்கிவிப் பின்னல்போல் ஒன்றன் பின் ஒன்ருக வரும் எண்ணங் களில் தன்னை மறந்து இருந்து விட்டாள்.
யாரோ வாசற்கதவை வேகமாகத் திறப்பது போலக் கேட்டது. மறுகணம் சோமசுந்தரம் உள்ளே நுழைந்தாள். அவனுடைய தலை மயிர் பறந்து கிடந்தது. கண்கள் எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. முகம் எல்லாம் வியர்வை,
நாகம்மாவுக்கு ஒரே கிலி, இன்னும் வெறி "ஐயோ-' என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆணுல் அவன் விடவில்லை.
*நாகு, போய் அந்த ஏட்டுக்கட்டையும் எழுத்தாணி யையும் எடுத்துக்கொண்டுவா - சீக்கிரம் " எ ன் மூன் சோமசுந்தரம்.
நாகம்மாவுக்குப் பட் "டென்று எ ல் லாம் விளங்கி விட்டது. இன்று கள்ளுவெறி இல்லை கவிதை வெறி !
அவளுக்கும் வெறி. அவளுடைய கண்களும் உதடு களும் சிரித்தன. முகம் மலர்ந்தது. உள்ளம் பரவசத்தால் பொங்கியது. அவள் உயிர் வாழ்ந்ததே இந்த "கவிதைக் கணத்திற்காகத்தானே !
விரைவாக உள்ளே ஓடிப்போய் ஒரு புது ஏட்டுக் கட்டையும் எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு வந்து எழுதுவதற்குத் தயாராகக் குத்துவிளக்கருகில் உட்கார்ந்து கொண்டாள்.
சோமசுந்தரம் அப்படியே நின்றுகொண்டிருந்தாள் அவனுடைய கண்களில் ஒரு உன்மத்த வெறி. இமை கொட்டாமல் வெளியே தெரியும் கும்மிருட்டைப் பிளந்து பார்த்துக் கொண்டிருத்தான்.
நாகம்மா எழுத்தாணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய கை சிறிது நடுங்கியது.

- 83 an
சோமசுந்தரனுடைய உதடுகள் அசைந்தன. அவனு டைய வாயில் இருந்து சொற்களும் சொற்ருெடர்களும் வெளிவர ஆரம்பித்தன. முதலில் ஒழுங்கில்லாமல் சிதைந் தும் சிதறியும் வெளிவந்த வார்த்தைகள் வர வரச் சமபூமி யில் பாயும் ஆறுபோல் நிற்சலனமாகவும் தொடர்பாகவும் வெளி வந்தன. நாகம்மா ஏட்டைப் பார்த்தபடி கை ஓயா மல் எழுதிக் கொண்டிருந்தாள்.
ஆம், ஆம் அவன் ஒரு கவி.
அவனுடைய கவிதை மிக அற்புதமானது; காட்டையும் கடலையும், மலரையும் மலையையும் சேர்த்து அவைகளின் ஒவ்வொரு அம்சத்தையும், ஒவ்வொரு சொல்லோவியமாக வகுத்துச் சிந்தையை மேல் எழுப்புவது. அவனுடைய கவிதையின் மேதை வர்ணிக்கும் தரத்தன்று. மனித உள்ளத்திலே புயல்களையும் சண்டமாருதங்களையும் தோற் றுவிக்க வல்லன அவனுடைய சொற் சித்திரங்கள்.
அவள் இதயத்திலிருந்து கவி பாடுகிருன், வெறும் நூலறிவில் இருந்து பாடவில்லை அதனுல் அவனுடைய கவிதை யாப்பிலக்கணத்தின் வரம்புகளையும் த கர்த்து எறிந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் போலப் புரண்டு சென்றது. வாயிலிருந்து வெளிவரும் வெறும் வார்த்தை களுக்கு இலக்கண வரம்பு செய்யலாம்; இருதயத்தின் ஆழத்திலிருந்து உற்பத்தியாகும் உணர்ச்சிக்கு இலக் a varib GFiu (pguud r?
நாகம்மா எழுத்தாணியைக் கீழே வைத்து விட்டு விரல் களை மடக்கி நெட்டி முறித்துக் கொண்டாள் பாட்டு முடிந்து விட்டது. ஆணுல் அவளுடைய மனம் அந்தப் பாட்டைத் தோற்றுவித்த மாய உலகத்திலேதான் இன்னும் சஞ்சரித்துக் கொண்டிருந்தது கற்பனை என்னும் படகிலே ரறிக்கொண்டு வாழ்க்கைச் சமுத்திரத்தின் எல்லையைக் காண்பதற்கு முயல்கின்றகு அவன் ஆணுல் பிரயாணம் நீண்டு கொண்டு செல்வது போலும் - எதிர்த்து அடிக் கும் புயலின் வேகம் படகைத் தடுக்கிறதா? இந்த வாழ்க்

Page 50
سسس 84 صست
கையின் அர்த்தம் மனிதனுக்கு என்றுமே புரியப் போவ தில்லையா ? வாழ்க்கை எண்ணமாய், இலட்சியமாய், கற் பண்யாய், கணவாய்ப் போகும் இந்தப் புதிர் - !
திடிரென்று நாகம்மா தன் சுய உணர்விற்கு வந்தாள்.
* ஐயோ, உங்களுக்குப் பசிக்கவில்லையா? நான் பைக் தியக்காரி - "
"ஐயோடி அம்மா, அது இன்றுதான உனக்குத் தெரி யும்? பைத்தியக்காரனுேடு சேர்ந்தவளும் பைத்தியக்காரி தானே 1 இல்லாவிட்டால் உன்னுடைய ஆள் விழுங்கிக் கண்களுக்கும், கொஞ்சும் வாய்க்கும், ஒசியும் இடைக்கும் எத்தனையோ தனவந்தர்களெல்லாம் ரங்கிக் கிடக்க அவர் கள் எல்லோரையும் புறக்கணித்துவிட்டு இரண்டு காக சம்பாதிக்க மாட்டாத இந்தப் பைத்தியக்காரனைக் கட்டிக் கொண்டு அழுவாயா? நீ அரசனுடைய பத்தினியாகிக் சுகிக்க வேண்டியவள் - "
* ஐயையோ, இதெல்லாம் இப்ப யார் கேட்டது? உங் களிலும் பார்க்கச் சிறந்த அரசன் எனக்கு வேறு எங்கே கிடைக்கப் போகிருன்! நான் திறந்த கண்களோடுதானே உங்களிடம் வந்தேன்? நீங்கள் என்னை ஏமாற்றவில்லையே. உங்களுடைய வறுமையையே சுவர்க்க போகமாக நாள் ஏற்றுக் கொள்ளவில்லையா ? காசு கர்சு என்கிறீர்களே காசைத் தேடினுல்தானே காசு வரும். உங்களுடைய பாட்டு ஒவ்வொன்றும் லட்சம் பொன் பெறுமே, பரராசசேகர மகாராசாவிடம் எத்தனை புலவர்கள் வந்து பரிசில் பெற் றுப் போகிறர்கள். நீங்கள் மட்டும் போக மறுக்கிறீர்களே! இணி நாளுவது - "
" வேண்டாம், நீ போக வேண்டாம். நான் என்ன பரிசு பெறவா பாட்டுப் பாடுகிறேன். பாட்டு என் உயி சிலும் ஊறிக்கிடக்கிறது. என் உணர்ச்சிகள் என் இருத யத்தைக் கெளவிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அது எனக்கு வேதனையைக் கொடுக்கிறது. உலகத்திலே நடக்

- 85 -
கும் ஆபாசங்களையும், துரோகங்களையும், ud aflsfsårå பீடித்திருக்கும் அர்த்தமற்ற நம்பிக்கைகளையும், கோட்பாடு கன்யும் காணும் பொழுது என் உள்ளம் குமுறுகிறது; அதஞல் பாடுகிறேன். பாட்டு எனக்குச் சாந்தி அளிக் கிறது."
"என் துரையே, எள் முகத்தைக் கொஞ்சம் பாருங் கள். நீங்கள் பெருமையை விரும்பவில்லை. பொருளை விரும் பவும் இல்லை. ஆணுல் நாள் அவைகளை விரும்புகின்றேன். நீங்கள் மனிதருக்குள் ளே ஒரு மணி. உங்கண் ஒரு அரசனுக - ஒரு வீரரூக - ஒரு வித்வாளுகக் காண்பதற்கு ான் உள்ளம் துடிக்கிறது. உலகம் உங்களுக்கு மரியாதை செய்வதைப் பார்ப்பதற்கு எள் கண்கள் ஆசைப்படுகின் றன. அந்த ஆசைக்குத் தடையாக நீங்கள் நிற்கக் கூடாது. நாள் பெண் -. நாளைக் காலையில் நானே இந்தப் பாட் டைக் கொண்டு போய்ப் பூபால முதலியாரிடம் கொடுத்து அவர் மூலம் அரசனுக்குத் தெரியப்படுத்துகிறேன் -"
நாகம்மாவுடைய வேண்டுகோளை அவனுல் மறுக்க முடியவில்லை. பெண் என்மூல் பேயும் இரங்கும் என்பார் கள். மனிதன் அதுவும் காதலன் இரங்காமல் முடியுமா?
பூபால முதலியார் தம் பேரப்பிள்ளைகளோடு விளையா டிக் கொண்டிருந்தார். அவருடைய மகளின் கட்டளை அது. "அப்பு, இந்தப் பிள்ளைகளைக் கொஞ்சம் உன்னுேடு கூப் பிட்டு வைத்திரு; இங்கே ஒன்றும் செய்ய என்னை விடு குதுகளில்லை" என்று அவள் கூறியிருந்தாள். அதோடு முதுமைக்கும் பாலியத்துக்கும் உறவு அதிகம். கரும்பு தின்னக் கைக் கூலியா."
வெளியே உக்கிரமான வெய்யில் நிலத்தையும் தாவ ரங்களையும் காய்ச்சி வறட்டிக் கொண்டிருந்தது. மாடுகள் கூட பண் மரங்கள் கொடுக்கும் அற்ப நிழலில் படுத் திருந்து அசைபோட்டுக் கொண்டிருந்தன. தென்னுேலைக் கூரையானபடியால் வீட்டினுள்ளே வெப்பம் அவ்வாவாகத்

Page 51
سست 86 سسٹم
தெரியவில்லை. முதலியாருடைய மகள் பாடுபட்டுப் பெண் களுக்கு இயற்கையாகவே உள்ள புனித உணர்ச்சியோடு அழகாக மெழுகியிருந்த திண்ணை குளிர்மையாக இருந்தது.
பூபால முதலியார் ஒரு குணக் குன்று. அவருடைய உள்ளம் குழந்தையினது போலக் கள்ளங் கபடமற்றிருந் தது. மிக விசாலமான பரந்த மனப்பான்மையுடையவர். ஒரு யாழ்ப்பாணத் தமிழரைப் பற்றி அவ்வளவு சொல்வது Gufulu s Trifuu Losiden aur ?
ஆணுல் அவருக்குப் புகழைக் கொடுத்தது அவருடைய தமிழ் அறிவுதான், இலக்கியத் துறையிலும் சமயத் துறை யிலும் அவருடைய கருத்துக்கள் மிக அகன்றவையாக இருந்தன மனித இயற்கைக்கும் பொது அறிவிற்கும் ஏற்ற முறையில் அவர் நூல்களுக்குப் பொருள் கூறுவதில் நிபுணர். சங்க இலக்கியங்களும், ஏனைப் பிற்கால இலக்கி யங்களும் அவர் மூலமாகக் கேட்போருக்கு மிக இலகுவாக வந்தன. தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், சைவத் திருமுறைகள். எல்லாம்,
அதனுல் அவருக்குப் பரராசசேகர மன்னனுடைய சபை யிலே மதிப்பு இருந்தது. அவர் சொல் அம்பலம் ஏறும்.
அவர் தம் பேரப்பிள்ளைகளோடு விளையாடிக் கொண் டிருந்த சமயத்தில்தான் நாகம்மா அங்கு வந்து சேர்ந் தாள். அவளுடைய கையிலே ஒரு ஏட்டுக்கட்டு இருந்தது.
பூபால முதலியார் அவளை "வா பிள்ளை, இப்படி இரு, ஏது இந்தக் கொதிக்கிற வெய்யிலிலே -?" என்று கூறி வரவேற்ருர், நாகம்மா தலையில் போட்டிருந்த தன் முன் தானையை எடுத்து இடுப்பிற் செருகிக் கொண்டு திண்ணை யில் உட்கார்ந்தாள்
பூபால முதலியாருக்கு நாகம்மாவுடைய சரித்திரம் வால் லாம் தெரியும் ஆரூல் அவர் அவளைப் பற்றித் தாழ்மை

ー87ー
பாக எண்ணவில்லே, சமூகத்தின் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத அவளுடைய வீரத்தை மெச்சிஞர்.
" பிள்ளை, உன்னுடைய அவர்பாடு எப்படி ? ரதாவது செய்கிருணு அல்லது சும்மாதான். ?" என்று கேட்டார்.
" அப்டா அதை ஏன் கேட்கிறீர்கள் ? மிக உன்னத மான பாட்டெல்லாம் சதா ஆக்கிக்கொண்டேயிருக்கிருர், ஆளுல் அவைகளைக் கொண்டு போய் அரசனிடம் காட் டிப் பரிசில் ஏதாவது பெறுவதற்கு மறுக்கிறர். இராத் திரிக்கூட " சிற்றுயிரின் தனிமை" என்று ஒரு பாட்டு இயற்றி இருக்கிருர், அதன் மோகன சக்தி என்னை அப் படியே ஒரு அமுக்கு அமுக்கி எடுத்து விட்டது. அந்தப் பாட்டுத்தான் இந்த ஏட்டில் இருப்பது. நான் அவரிடம் பெரிய சண்டை போட்டு எடுத்து வந்திருக்கிறேன். அதை நீங்களாவது தயவு செய்து அரசசபையில் அரங்கேற்றி உதவ வேண்டும்."
"எங்கே அதை இப்படிக் கொடு பார்க்கலாம்." பூபால முதலியாருக்கும் சோமசுந்தரனுடைய பாட்டுக்கள் மேல் அபாரமான பிரியம் இருந்தது. முன்பும் பல தட்வை அவைகளைப் படித்து அனுபவித்திருக்கிறர்.
பூபால முதலியார் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தார். அவர் சொன்னுர், " பாட்டின் தொணியும் பொருளும் மிக நல்லாக இருக்கின்றன அரசன் இதைக் கண்டு புளகாங் சிதம் அடைவானென்பதற்கு ஐயமில்லை ஆணுல் அரச ரிடம் போகுமுன் வித்துவசபையார் இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே . அதுதான் எனக்குக் கவலையாக இருக் கின்றது. இந்தச் சுதந்திரமான பாட்டு நடையை அவர் கள் அனுமதிப்பார்களோ, என்னவோ? வித்துவசபையின் தலைவரான அரசகேசரி பழமை மோகம் கொண்டவர். அதுவும் இப்பொழுது, தன் இரகு வம்சத்தை அரங்கேற் றிய கர்வத்தோடு இருப்பவர் . . ஆயினும் பாதகம் இல்லை நான் என்னுல் கூடியவரை தெண்டித்துப் பார்க்

Page 52
سن- 88 --
கிறேன், நீ போ பிள்ளை, கவலைப்படாதே, நானும் தமிழ்ப் பித்துக் கொண்டவள்தான்."
பரராசசேகர மன்னனுடைய வித்துவ சபையிலே, புல வர்கள் சோமசுந்தரனுடைய " சிற்றுயிரின் தனிமை" என்ற பாட்டை அடி அடியாகவும் சீர் சீரரகவும் அசை அசை யாகவும் பிய்த்துப் பிடுங்கி ஆராய்ந்து கொண்டிருந்தார் &mr.
வித்துவ சபையார் முதலில் அந்த ஏட்டைக் கண் ணெடுத்தும் பார்ப்பதற்குக்கூட மறுத்து விட்டார்கள். * யார் இவன்? இவன் குலம் யாது? பா இயற்றும் திறன் யாண்டுப் பெற்றனன்? யாங்கள் இது காறும் இவன் பெயரைக் கேள்விப்பட்டிலமே! இவனது அட்டிலில் துஞ் சும் அகப்பைத் தண்டும் பாதவிலும் கொல்?" என்றெல் லாம் கேட்டார்கள். முதலிலே அவர்களுக்குச் சோமசுந் தரனிடம் வெறுப்பு ஏற்பட்டு விட்டது பொருமையும்
al,
கடைசியாகப் பூபால முதலியார் வேண்டுகோளுக் கிணங்கி அதைப் படிப்பதற்கு ஒருவாறு ஒப்புக்கொண் டிருந்தார்கள். ஆனல் அவர்களுடைய மனம் குற்றம் காண் பதிலேயே முனைந்து நின்றது.
அரசகேசரி இளவரசர் தலைமை வகித்தார். ஆளுல் அவர் இந்த ஆராய்ச்சியில் மட்டும் தலையிடவில்லை இரகு வம்சம் இயற்றிய ராசப்புலவன் நேற்று முளைத்த - யாரென் றறியத்தகாத - சின்னப் புலவனுடைய அற்பப் பிதற்றலை ஆராய்வதென்ருல் - 1 அந்த வேலையை அவர் மற்றப் புலவர்களிடம் விட்டு விட்டார்.
பூபால முதலியார் தன்னுல் ஆன மட்டும் முயன்று பார்த் தார். இலகுவான இயற்கையான தமிழ் நடையைத்தான் யாரும் விரும்புவார்கள். யாவருக்கும் புரியும்படி எழுது வதே ஒரு தனிக்கலை யாப்பிலக்கண விதிகளெல்லாம் பா இயற்றுவதற்கு முயலும் குழந்தைப் புலவனுக்கு ஒரு வழி

காட்டியாக அமைந்தனவேயன்றி, கைதேர்ந்த புலவனின் சொற்பெருக்கையும் கற்பணு வேகத்தையும் தடை செய்யும் முட்டுக்கட்டைகளல்ல. அதோடு, விஷயத்தின் உயர்விற் கும் அதை வரிசைப்படுத்திக் கூறும் நயற்திற்குமே முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொன்ஞர். ஆணுல் இவை ஒன்றும் புலவர்களுடைய செவிகளில் ஏற வில்லை.
சோமசுந்தரனுடைய பாட்டை எந்தப் பாவில் அல் லது பாவினத்தில் சேர்ப்பதென்றே அவர்களுக்குத் தெரிய வில்லை. வெண்பா, அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா இந்த நான்கு பாவிலும் அது சேரவில்லை. அல்லது பாவினங் கள் ஏதாவதொன்றில் சேருகிற்தென்றல் அதுவும் இல்லை. இவை ஒன்றிலும் சேராதது எப்படி ஒரு பாட்டாகும் என்பது அவர்களுடைய முதற் பிரச்சன்,
எதுகை இல்லை, மோண் இல்லை, தளைசீர் சரியில்லை, துறை பொருத்தமில்லை - இப்படி ஆயிரம் பிழைகள்.
ஆகவே “சிற்றுயிரின் தனிமை" பரிசில் பெறுவதற்கு உரியதல்ல என்பது மட்டும் இல்லை, அது ஒரு நூலாக வெளி வருவதற்கே தகுதியற்றது என்று அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். " பாட்டு இயற்றுவான் புகும் ஒருவன் அப்பாட்டின் இலக்கணங்களைச் செவ்விதிற் பேணி இயற் ருக்கால், அவன் பேதை எனப்படுவணன் ருே ' பிழைபடு மன்ருே தளை பூணும் கையறியாய் பேதை வினை மேற் கொளின் " என்ருர் பொய்யாமொழியாரும். அங்ங்ணம் துணிந்த பேதையின் பாட்டு சான்ருேர் குழாஅத்தில் நகை விளைவிக்கும்." என்று அப்புலவர்கள் தீர்ப்புக் கூறினுர்கள். அத்தீர்ப்பை அரசகேசரியும் ஆமோதித்தார்.
பூபால முதலியார் வாடிப் பதைக்கும் உள்ளத்தோடு அந்த ஏட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இருட்டி விட்டபடியால் மறுநாட்காலை நாகம் மாவுக்குத் தகவல் தெரிவிக்கலாம் னன்று நினைத்தார்.
வெ = 12

Page 53
a 90 m
யாரோ ஒருவன் சோகத்தின் கரியமையினைக் கொண்டு வர்ணம் தீட்டியது போல் வானம் இருண்டு கிடந்தது. அவன் ஏன் அப்படிச் செய்கிருன் ? அவள் உன்மத் தஞ.? பொழுது அஸ்தமித்து இன்னும் அதிக நேரம் ஆகவில்லை. அதற்குள் இவ்வளவு இருள். மழை இருள் இடை இடையே தோன்றிய மின்னல் ஒளி அந்த அந்த காரத்தை இன்னும் ஆழமாக்கியதே ஒழியக் குறைக்க வில்லை
நாகம்மாவுக்குப் பிர கிருதியே தன்மேல் கோபங் கொண்டு தன்னைப் பயமுறுத்தியது போலத் தோன்றியது யாது காரணத்தாலோ, அவளுடைய மனம் மரணத்தைக் குறித்துச் சிந்தித்தது அது எங்கே இந்தக் கோரமான இருளில் ஒழித்துக் கொண்டிருக்கிறதா? குளிர் காற்று சோகத்தையும் ஏக்கத்தையும் அள்ளி வீசி எறிந்தது. நாகம்மா நடுங்கினுள்.
அன்று மாலையிலும் நாகம்மா வீட்டில் தனியே இருந் தாள். சோமசுந்தரம் வெளியே போயிருந்தான், இன் னும் வரவில்லை . வழக்கம் போல் அவளுடைய மனம் அங்க லாய்த்த து * இன்றும் கள்ளு ..." என்று தொடங்கிய ஒரு எண்ணம் ஒரு விதமான குழைவும் இரக் கமும் கலந்த வாஞ்சை உணர்ச்சியினல் தடைபட்டு நின்று விட்டது.
எங்கோ ஒரு புளிய மரத்தில் இருந்து கொண்டு ஒரு ஆந்தை கத்திற்று. இன்னும் ஒரு ஆந்தை அதற்கு விடை அளித்தது. நாகம்மா தன் கைகளில் மோவாயைத் தாங்கிய வண்ணம் கயிற்றுக் கட்டிலின் மேல் சுருண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பயம்.
திடீரென்று அந்த ஓசையற்ற மையிருளைப் பிளந்து கொண்டு 'அம்மா..!" என்று ஒரு அலறல். நாகம்மா திடுக்கிட்டு விட்டாள் அவளுடைய உதிரம் அப்படியே உறைந்து நின்று விட்டது போல். பதறிக்கொண்டு ாழுந்து அவள் வாசலை நோக்கி ஓடினுள்

m 91 a
மறுகண்ம் சோமசுந்தரம் ஓடிவந்து அவளுடைய காலடிகளில் வீழ்ந்தான். " நாகு, பாம்பு திண்டிவிட்டது" என்று முனகினுள்.
நாகம்மாவின் தலை சுழன்றது; என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அவளுடைய அந்தக் கரணங்களெல் ஸ்ாம் அடைபட்டு விட்டது போல். ஒரு இருள்.
அயலவர்கள் பலர் வந்து வாசலில் கூடிவிட்டனர். அவர்களில் சிலர் சேர்ந்து சோமசுந்தரனைப் பிடித்தணைத் துக் கொண்டு போய்க் கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத் தார்கள். அவர்களில் ஒருவன் தன் சால்வையை கிழித்து நோயாளியின் இடது முழங்காலுக்குக்கீழ் வரிந்து கட்டி ஞன். வீட்டில் பெரிய கும்பல் கூடியது. ஒவ்வொரு வனும் தனக்குத் தெரிந்தவாறு பேசினுன் என்ன பாம்பு? புடையணு ? புடையனென்ருல் நாய் புடுங்குவதுபோல் பிடுங்கியிருக்குமே! அல்லது ஒரு வேளை பூச்சி புழுவாய் இருக்குமோ..?
யார் யாரோ விஷ வைத்தியர்கள் எல்லாம் வந்தார் கள் மருந்து கொடுத்தார்கள், மாந்திரீகம் செய்தார்கள். ஒன்றும் பிரயோசனப்படவில்லை. நோயாளியின் உடலில் நீலம் பாய்ந்து விட்டது. பிரக்ஞை அற்று விட்டான்.
நாகம்மா அவனருகே விறைத்துப்போய் உட்கார்ந் திருந்தாள். மூலையில் இருந்த குத்துவிளக்கு மங்கி எரிந் தது. இரவு நீண்டு கொண்டு சென்றது.
வைகறைச் சமயம்தான் சோமசுந்தரனுக்கு மறுபடியும் பிரக்ஞை வந்தது. பூபால முதலியாரும் நாகம்மாவுந்தான் வீட்டில் இருந்தனர். மற்றவர்களெல்லாரும் போய் விட் டார்கள். சோமசுந்தரனுடைய முகத்தில் ஒரு பிரகாசம். அவிந்து விடுமுன் பொங்கும் ஒளிப் பிழம்பு அவனுடைய பேச்சிலே ஒரு தொணி,
' நாகு, ஏன் அழுகிருய்? கண்களேத் துடைத்துக் கொள். நீ அழுவதைப் பார்க்க ள்ளக்குச் சகிக்கவில்லை.

Page 54
ஐயா, நீங்களா ? ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள் இப் படி வந்து கட்டிலில் உட்கார்ந்து கொள்ளுங்கள். நாங்கள் ால்லாரும் ஒன்றுதான். y
பூபால முதலியார் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். அவருக்கு அவனுடைய பேச்சைக் கேட்டதும் நம்பிக்கை பிறந்தது. இவ்வளவு உறுதியாகப் பேசுபவனுக்கு ஏ மரணம். அவன் பிழைத்து விடுவான்.
"ஐயா, என்னுடைய பாட்டைப் பற்றி வித்துவ சபை யார் என்ன தீர்ப்புக் கூறிஞர்கள்? நான் வேண்டாம வேண்டாம் என்று சொல்லவும் கேளாமல் இவள்தானே உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தாள். இவளுக்கு."
* தீர்ப்பு என்ன, தெரிந்ததுதான். பாட்டில் பிழைகள் பல இருக்கின்றனவாம். நடை சரியில்லையாம். விஷயம் கூட அசாத்தியமானதாக இருக்கிறதாம். அது பாட்டே அல்ல என்று கூறி அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வி LTřsr."
" அது எனக்கும் தெரிந்ததுதான். அதற்காக நான் வருந்தவும் இல்லை. காளிதாசனுடைய ஒப்புயர்வற்ற தெய வக் காவியமாகிய இரகுவம்சத்தைச் சுவை நைந்த உயி ஏற்ற வெறும் சொற் குவியலாகத் தமிழில் மொழி பெயர்த்த அரசகேசரியின் சகாக்களிடமிருந்து நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும், பழமை பழமை என்று பிதற்றிக் கண்களை மூடிக் கொண்டு தம் அற்பத் திறமையில் இறு மார்ந்து உட்கார்ந்திருக்கும் இவர்களுக்குப் புதுமையும் முற்போக்கும் எங்கே பிடிக்கப் போகிறது ? திருக்கோவை யாரைப் படித்துவிட்டு அதில் வெட்டவெளிச்சமாயிருக்கும் அழகையும் ஜீவனையும் ஓசையையும் தேனையும் அமுதத் தையும் சுவைத்து உணர அறியாது, அதற்குள் வேறு ஏதோ சித்தாந்தக் கருத்து மறைந்து கிடக்கிறது என்று பாசாங்கு செய்யும் இந்தப் பழமைப் புலிகளா.." சோமசுந்தரனுடைய தொண்டை விக்கியது மூச்சு வேக மாக வர்த் தொடங்கியது. முகம் வெளுறியது.
f

ബ 98 ബ
நாகம்மா அவனுடைய மார்பை வருடினுள். நெஞ்சில் கபம் கரகரத்தது அவன் கண்களை மூடிக்கொண்டான். '
சிறிது நேரத்தில் மறுபடி அவன் மனம் தெளிவடைந் தது. "நாகு. நான் இன்னும் அதிக நேரம் உயிரோ டிருக்கப் போவதில்லை. நீ அழாதே, எல்லாம் நன்மைக் குத்தாள் என்று நினைத்துக்கொள் .'
நாகம்மாவுக்கு அவன் முன்னுெரு நாட் பேசிய வார்த் தைகள் ஞாபகத்துக்கு வந்தன. "மரணம் மனித வாழ்வின் சாஸ்வதமான சம்பத்து. மரணம் என்னும் மாற்றம் இல்லாவிட்டால் வாழ்வு சகிக்க முடியுமா? எல்லையற்ற கொதிக்கும் பாலைவனம் போல் ஆகிவிடுமே I ஐயையோ, மரணமற்ற வாழ்வு வேண்டவே வேண்டாம், இறந்த வனுக்காக அழுவதைப் போல் மடமை வேமூென்றுமிலலை. அவன் விடுதலையடைந்து விட்டான் என்று நினைத்துக் கொண்டாட வேண்டும்." நாகம்மாவின் இருதயத் தில் தைரியம் பொங்கியது. அவனுடைய தலைப்புறத்தில் உட்கார்ந்து கொண்டு அவனுடைய தலையை எடுத்துத் தன் மடிமீது வைத்துக் கொண்டாள்.
சோமசுந்தரன் நாகம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவனுக்காக-உற்றர் உறவினர் வீடு வாசல் ஒன்றும் இல் லாத நாடோடியாகிய அவனுக்காக - தன் வாழ்வையும் பந்துக்களையும் புறக்கணித்து விட்டதுமல்லாமல், அவனுக் காகத் தன் உயிரையும் தியாகம் செய்து விடுவதற்குத் தயாராகி நின்ற அவளிடத்தில், அவன் அந்தக் கணத் தில், தன் தாயையும், சகோதரியையும், மனைவியையும் ஒருங்கு கண்டான். எல்லாம் அவள்தான். அவனுடைய கலை, சுதந்திரம், புதுமை எல்லாம் ! அவன் சொன்னுன் "நாகு ஒரு தெய்வம் " என்று
அவனுடைய கண்கள் இமைகளுக்குள் மறைந்து கொண்டன. மறுபடியும் விக்கல்.
" நாகம்மா, அந்த விபூதியில் கொஞ்சம் எடுத்து நெற் றியில் பூசிவிடு" என்ருர் பூபால முதலியார்.

Page 55
* ஐயோ, வேண்டாம், எனக்கு நம்பிக்கை இல்லை." சோமசுந்தரனுடைய குரல் மிக மெல்லியதாக இருந்தது. வார்த்தைகள் உடைந்து தொடர்பின்றி வெளி வந்தன. " நான் இதுகாறும் ஒரு தெய்வத்தையும் நம்பவில்லை. இந்தக் கடைசித் தருணத்தில் - வேண்டாம் கம்பனும் காளிதாசனும், இளங்கோவனும், திருத்தக்கதேவனும், சாத் தனும், மணிவாசகனும் - இவர்கள்தான் என்னுடைய தெய் வங்கள்; தமிழ்மொழியின் கன்னித்தன்மையிலும், தமிழ்ச் சொல்லின் இசையிலும், தமிழ்ப் பாட்டின் மோகனத் திலும் நான் நம்புகிறேன். இனி வரப்போகும் தமிழின் மறுமலர்ச்சிக்கு வந்தனை செய்கிறேன்..!" i.
அவனுடைய குரல் ஒய்ந்து விட்டது. தலை சாய்ந்து ... ... التي سانا قاله
நாகம்மா அழவில்லை. தன் நா தனுடைய தலையை எடுத்துத் தலையணையில் பக்தி சிரத்தையோடு வைத்தாள். பிறகு பூபால முதலியாரைப் பார்த்துச் சொன்னுள், "உல கம் அவருடைய பெருமையை அறியவில்லை. அவர் மணி தர்களுக்குள்ளே ஒரு மன்னவன். அவர் செய்த பிழை துன்றுதான், தான் பிறக்க வேண்டிய காலத்துக்கு மூன்று நூற்ருண்டுகள் முந்திப் பிறந்து விட்டார் அவ்வளவு தான்."

தா ய்
யூத தேசத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்த பொன்ரியஸ் பைலேட் தன் தீர்ப்பைக் கூறிவிட் டான். மது வெறியால் கொவ்வைப் பழம்போலச் சிவப் பேறி வீங்கிப் போயிருந்த அவனுடைய கண்களிலே கோபப் பொறி பறந்தது “இவனுடைய தலையில் முள்முடி சூட்டிச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள். யூதர்களின் மன்னனும், மன்னன் ஆண்டிப்பயல்’
ாதிரே இருந்த உப்பரிகைகளில் ஆவலோடு காத்து நின்ற யூத ஆலயகர்த்தர்களும், பணக்கார வர்க்கத்தின ரும் தம் பூரிப்பை உள்ளடக்கமாட்டாமல் ஆரவாரம் செய்" தனர். * பைலேட் வாழ்க! ரோமசாம்ராஜ்யம் தழைக்க!" என்று அவர்கள் வாழ்த்திய வாழ்த்தொலி வானளவும் ாழுந்தது. பிறகு தங்களுக்குள் கீழ்க்குரலில் பின்வருமாறு பேசிக்கொண்டனர். ' ஒழிந்தது பீடை 1 பிச்சைக்காரர் களுக்கும், கூலிக்காரர்களுக்கும், ஒட்டகக்காரர்களுக்கும், மீன் பிடிப்பவர்களுக்கும் வரிவசூல் செய்பவர்களுக்கும், திரு டர்களுக்கும் வேசிகளுக்கும், தத்துவஞானம் போதிக்க வந்த இந்தக் கிராமாந்தரத்துப் பக்கிரி தலையெடுத்து விட் டால் சனங்களின் மேலிருக்கும் எங்களுடைய ஆதிக்கத்தின் கதி என்னவாகும்? பிறகு நாங்களும் இந்தப் போகவாழ் வைத் துறந்து ஓடு எடுத்துக்கொண்டு பிச்சைக்குக் கிளம்ப வேண்டியதுதான , அவனைப்போல ரோமர்களின் வாட்க ளின் கூர்மையிலும் பார்க்க அவனுடைய வார்த்தைகளின் இனிமை பயங்கரமானதன்ருே.!"
கீழே, வீதிகளிலும் சதுரங்களிலும் நிறைந்து நின்ற பிச்சைக்காரர்கள் கூலிக்காரர்கள், திருடர்கள், வேசிகள், மீன் பிடிப்பவர்கள், ஒட்டகம் ஒட்டிகள் முதலிய ஏழைச் சனங்களின் பிரலாபம் கடல் அலைகளின் ஒலம் போல எங் கும் பரந்தது. தங்களுடைய துயரமும் பாபமும் தேங்கிய வாழ்க்கைகளில் அன்பையும் இனிமையையும் நம்பிக்கையூை

Page 56
- 96 -
யும் பெய்துவிட்ட அந்த அருள்மலை இன்று செயலற்றுக் குன்றிப்போய் நின்ற காட்சி அவர்களுடைய இருதயங் களைக் கசக்கிப் பிழிந்து விட்டது. சிலர் அந்தப் பரிதா பக் காட்சியைக் காணச் சகியாமல் மெளனமாகக் கண் ணிர் உகுத்தனர்; சிலர் ரோமர்களையும், ஆலயகர்த்தர்களை யும் வைதனர். இன்னும் சிலர், ' தேவனுடைய குமாரன், யூத குலத்தின் மெசையா இன்னும் ஏன் இந்த நிஷ்டூரங் களைச் சகித்துக்கொண்டு வாழா நிற்கிருன். பயங்கர வடி வங்கொண்டு துஷ்டர்களை ஹதம் செய்து எங்களை ரட்சிப் பதற்கு ஏன் காலம் தாழ்த்துகிருன்" என்று நினைத்தார் கள். ஓ ! அவர்களுடைய நம்பிக்கைக்கு எல்லையே இல்லை
கிறிஸ்துநாதர் ரோம யுத்தவீரர்களின் மத்தியில் தலை குணிந்தபடி மெளனமாக நின்ருர், அவருடைய முகத்திலே கோரமான மரணபயம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது
பைலேட்டின் தளகர்த்தன் ஒருவன் - பிசாசின் மனம் படைத்த ஒரு ஜெர்மனியன் திடீரென்று யேசுநாதருடைய கரத்தைப்பற்றி இழுத்தான். அவரைச் சித்திரவதை செய்து கொல்லும் வேலை குரூரத்தின் உருவமான அவனிடம்தாள் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவன் அவருடைய தலையிலே ஒரு முள்முடியை வைத்துப் பலமாக அழுத்திவிட்டு, ' யூதர் களே இதோ உங்கள் மன்னனுக்கு முடி சூட்டுகிறேன், பார்த்து ம்கிழுங்கள் " என்று கூறிப் பிசாசு போலச் சிரித் தான். அவனுடைய பழுப்பு நிறமான கண்கள் எதிரே நின்ற ஜனத்திரளை ஊசிமுனைகள் போல் உறுத்தி நோக் கின.
முள்முடி கவிழ்க்கப்பட்ட தலையில் இருந்து புறப்பட்ட செங்குருதி அருவிகள் நெற்றியிலும் கன்னங்களிலும் ஓடிக் கரிய தாடிக்குட் புகுந்து மறைந்து, பிறகு பாதங்களில் கொட்டின ரோமப் போர்வீரர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த முள்முடியணிந்த தலையிலும் அதன் கீழிருந்த திவ் வியமான முகத்திலும் எச்சிலைக் காறி உமிழ்ந்தார்கள்.

- 97 -
இதோ உங்கள் மன்னனுக்கு வாசனை நீர் அபிஷேகம் " ான்று கொக்கரித்தான் அந்த ஜெர்மனியன்.
இவ்வளவையும் வைத்தவிழி வாங்காமல் பார்த்துக் கொண்டு தூணுேடு தூணுகிச் சமைந்து நின்முள் மேரியேசுவின் தாய்.
அவள் தன் உடல்ை மறைத்து ஒரு நீளமான அங்கி யையும, தலையை மறைத்துச் சதுரமான ஒரு துணியை யும் அணிந்திருந்தாள் வேறு ஆபரணமோ, அலங்கா ரமோ, எதுவும் அவளிடத்திற் காணப்படவில்லை. அவள் டிரு ஏழைத் தச்சனின் மனைவி. ஏழைகளுக்காக மரணத் மதக் கோரும் ஒரு ஏழையின் தாய் !
இந்த முடிவை அவள் ஒரு அளவுக்கு எதிர்பார்த்துத் கான் இருந்தாள். மேய்ப்பவனைத் தொடரும் ஆடுகள் போல எத்தன் ஏழைகள் அவளுடைய மகனைத் தொடர்ந்து ஆறுதல் பெற்றர்கள். ' ஏழைகளே, பாபிகளே எனணி டம வாருங்கள்; நான் உங்களுக்கு ஆறுதல் தருகின்றேன்" ான்று அவர் திரும்பத் திரும்பக் கூறவில்லையா ? தூய வெண்ணிறமான அங்கியை அணிந்த அவருடைய நெடிய தோற்றமும், சாந்தமும் கருணை ததும்பும் முகமும், அவ குடைய வாயில் இருந்து கிளம்பும் வார்த்தைகளின் இனி மையும் அவளுக்கு எவ்வளவு பெருமையையும் பூரிப்பை யும் கொடுத்தன!
ஆணுல், அவர் நாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த ஆலய கர்த்தர்களையும் பணக்கார வர்க்கத்தினரையும் இழிவுபடுத் தித் தூக்கி எறிந்து பேசின பொழுது அவள் நெஞ்சம் கலங்கியது, இதன் விளைவு யாதாகுமோ ? 'மகனே, நீ அபாயமான பாதையில் கால் மிதிக்கின்குய் என் நெஞ் சம் துடிக்குதடா கண்ணே " என்று அவள் எத்தனையோ தரம் அவரை எச்சரித்திருக்கின்றள் ஆணுல் அவர் ஒன் றையும் பொருட்படுத்தவில்லை,
(a - 18

Page 57
- 9 -
aoÁSAðal- soyavegáš5 ges füs ges FTAST yanaw தச்சனுடைய மகன் நாட்டின் முதல்வர்களுக்குச் சவுக்கடி கொடுத்துப் பேசுவதென்மூல் அவரை சன்ற பொழுது கண்ட பெருமையும் மகிழ்ச்சியும் இதற்கு எம்மாத்திரம்.
ஆகுல் இன்று. .
வெளியே இளவெயில் விதிகளிலும் சதுரங்களிலும் வீட்டுக் கூரைகளிலும் படிந்து எல்லாவற்றையும் வெண் ணிறமாக்கிக் கொண்டிருந்தது. சாங்கும் ஒரே மனிதச் குரல். ரழைத் தாய்மார்களின் வரண்ட மூலைகளைக் கவ் விக்கொண்டிருந்த குழந்தைகள் பால் காரூமல் வீரிட்டல Bevr. ... அலை வீசும் சமுத்திரம் போல நெருங்கிவரும் ஜனத்திரளை ரோம வீரர்கள் அதட்டியும், தங்கள் வாள் களைக் காட்டிப் பயமுறுத்தியும் அப்புறப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்
மேரி துரளுேடு சாய்ந்தபடி அசையாமல் நின்மூன். உலகத்தில் உள்ள சோகம் அத்தன்யையும் உருவாக்கி வார்த்து நிறுத்திவிட்ட மொனச் சிலை போல அவள் நின்
vyr.
சில போர்வீரர்கள் சாங்கிருந்தோ ஒரு பிரமாண்டமான மரச்சிலுவையைக் கொண்டு வந்து யெஷிவாவின் தோன் மேல் வைத்தார்கள். அவருடைய நிமிர்ந்த நெடிய தோற் றம் அப்பாரத்தின் கீழ் வன்ந்து குனிந்தது. ஒன்பது வார்கள் பாய்ந்த ஒரு சாட்டையைக் கையிற் பிடித்த ஒரு போர்வீரன் அவர்பின் ஆயத்தமாக நின்மூன். அந்தக் கோரதான ஊர்வலம் கொல்கோதா என்ற குன்றை நோக்கி மெதுவாக நகர்ந்தது. .
முடுக்கி விடப்பட்ட யந்திரம்போல் மேரியும் நகர்த் தாள். . i
சிலுவையின் பாரம் தாங்கமாட்டாமல் யேசுநாதர் அடிக்கடி தள்ளாடித் தயங்கினர். அச்சமயங்களில் அந்த

JLTTTTH LTTL LLTLLLLLLLLS aLLL LLLLLLLTLT LLTLLLLLTTL தோடும் குரூரத்தோடும் அவர் முதுகில விழுந்து தசையை முன்பது பிரிவுகளாக வாரி, ரத்தம் வழிந்தோடச் செய் றது . . பிள்ளுல் தொடர்ந்து வந்த ரழைச் சனங்கள், என்ன கொடுமை இது கேட்பவர் இல்லையா? ஆண் டவனே, இந்த மிருக குலத்தையும் அதர்ம ராஜ்யத்தையும் பூண்டோடு நசித்துப் பொடியாக்கி விடமாட்டீரா?" என்று மூலமிட்டார்கள் சிலர் கோபாவேசம் கொண்டு அருகிற் | ဓါအစ်စရပါ முயன்றனர். ஆணுல் போர்வீரர்களிள் சட்டி ாளும் வாள்களும் விரைந்து தடுக்கவே, அவர்கள் செய லற்றுப் பின்னடைந்தனர்.
கடைசியாகச் சிலுவையின் பாரத்தையும் அடிகளின் நோவையும் தாங்கமாட்டாமல் யேசு நாதர் கைகளையும் முழங்கால்களையும் நிலத்தில் ஊன்றிக் கீழே விழுந்துவிட் டார். சிலுவை அவர் முதுகின மேல் விழுந்தது. அப் பொழுது சைமன் என்ற வர்த்தகள் ஒருவன் ஆவேசத் தோடு போர்வீரர்களின் மத்தியிற் புகுநது தானே அந்தச் சிலுவையைத் தோள்மேற் சுமந்தான். ரத்தவெறிகொண்ட சாட்டை அவன் முதுகிலே இடம் பெற்றது. .
Asri išgy a is araw iuasmhair Gasvaunas qui a yra välis குறைந்து கொண்டே வந்தது. அவர்களுடைய நம்பிக் கையும் தணர்ந்துவிட்டது. தன்னைத் தானே காப்பாற்றிக் dasrirargpurs ega aiv eõpatas2v Taiarp srü பாற்ற முடியும் . தியாகாக்கினியிஞல் தகிக்கப்பட்ட பிறகு தான் மனிதன் அமரகுகிருள் என்று யேசுநாதர் எத்தனை யோதரம் அவர்களுக்கு எடுத்துரைத்திருக்கின்ருர். ஆளுல் அவர்களுக்கு அது புரியவில்லை. இச்சம்பவத்திலே எல்லை LTLTCLLLLL S S TTLTTTTLLLLLLL GG LLTLTTLCHLTTTTTTTT LLTTL கனால் காண முடிந்தது அச்சோக நாடகத்தின் முடிவைச் காணச் சகியாமலே பலர் பாதி வழிவில் திரும்பிச் சென் pew AT, ܀

Page 58
eam i 100 aus
அந்த ஊர்வலத்தின் பின்னணியில் உருவத்தைத் தொடரும் நிழல் போலவும், கன்றைத் தொடரும் தாய்ப் பசு போலவும் மேரி நகர்ந்து வந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் ஒன்றையும் பார்க்காமல் செயலற்று விழித்துக் கொண்டிருந்தன.
கொல்கோதா என்னும் குன்றின் மேல் யேசுநாதரை ச் சிலுவையில் தூக்கி நிறுத்தி, ஆணி அறையும் சமயத்தில், அவ்விடத்தில் ரோமப் போர்வீரர்களும் மேரியும் தளராத நம்பிக்கை கொண்ட சில சிஷ்யர்களும் அன்பர்களுமே நின்று கொண்டிருந்தனர்.
மேரி சிலுவைக்குப் பதினைந்து அல்லது இருபது அடி தூரத்தில் நின்று தன் மகனைக் கண்கொட்டாமல் பார்க் துக் கொண்டிருந்தான்.
யேசுதாதருடைய முகத்தில் இப்பொழுது பயத்திள் சின்னம் எதுவும் காணப்படவிள்லை. அதற்குப் பதிலாக விவரிக்க முடியாத வேதனை கலந்த ஒரு காந்தி குடி கொண்டிருகந்தது - பிரயாணத்தின் முடிவை அடைந்து விட்டது போன்ற ஒரு ஆறுதல், ஒரு அமைதி.
மேரியின் கண்கள் அவருடைய கண்களைக் கெள வி அணைத்துக் கொண்டிருந்தன. செவிப்புலணுகாத ஏதோ ரகஸ்யமான ஒரு சம்பாஷணை அந்த இரண்டு இருதயங் களுக்கும் இடையில் நிகழ்ந்தது போலும்,
திடீரென்று அவர் தம்முடைய நாவையும் உதடுகளை யும் அசைத்து அருந்துவதற்குத் தண்ணிர் வேண்டும் என்று சைகை செய்தார். அவருடைய கண்கள் கெஞ்சின.
அதைக் கண்ட மேரி துடிதுடித்துத் தன் கைகளை அகல விரித்துக் கொண்டு சிலுவையை அணுகுவதற்காகக் காலை எடுத்து வைத்தாள். அவளுடைய கன்னிமை வின் முதற்கணி செயலறியாத குழந்தையாக அவளுடைய மடியிற் கிடந்து கொண்டு நாவையும் உதடுகளையும

em 101 -
அசைத்துப் பதகளிப்போடு அவளுடைய முலைக்காம்பைத் தேய ஞாபகம் முப்பத்தி இரண்டு வருடங்களை மின்வெட்
டுப்போல் கடந்து வந்து அவளுடைய தாய்மை இருதயத் தின் கதவில் அறைந்தது.
"குழந்தாய், என் குழந்தாய் . Frir assoir (36ar * என்று அவளுடைய வாய் மெதுவாக முணுமுணுத்தது. உள்ளே அவளுடைய அத்தராத்மா அதிர்ந்து ஓலமிட்
• • • • • • انهٔ ما
அதற்குள் ஒரு போர்வீரன் பஞ்சில் ஏதோ திரவத்தை நன்த்து அதைத் தன் ஈட்டிமுனையில் வைத்து யேசுநாத ரின் வாயில் திணித்தான்.
மேரி முன்வைத்த காலை பின்னுக்கு எடுத்துக்கொண் L-Tair... ...
வானம் இருண்டு மின்னித் தெறித்தது. பேரிடியும், பேய்க்காற்றும் கலந்து குன்று களில் எதிரொலித்தன. பிணம் திண்பதற்கு வந்திருந்த கழுகுகளும் கூகைகளும் பயங்கரமாக அலறிக்கொண்டு மறைவிடங்களை நோக்கிப் பறந்தனர். .

Page 59
மச் சா ஸ்
ான் எட்டு வயதின் ஆச்சர்யத்தால் அகன்ற கண் களுடன் பார்க்கும் பொழுது இருபது வயது கடந்த ாேன் மைத்துணியைப் போல அழகான பெண் இந்த வையகத் தில் இருக்க முடியாது என்றே தோன்றிற்று
ஹெலன், சீதை கிளியோப்பாற்ரு முதலிய உலகப் பிரசித்தி பெற்ற அழகிகளைப்பற்றி யெல்லாம் அந்த வய திலேயே கேள்வியுற்றிருந்தேன். அவர்கள் எல்லாம் என் மைத்துணியிடம் பிச்சை வாங்க வேண்டும் அல்லது அவர்கள் எல்லாருடைய அழகையும் வேடிக்கை பார்க்கும் ஒரு விதி சேர்த்து சமைத்துவிட்ட ரூபமோ அவள் ! பளிங்குக் கன்னங்களின் மேல் பதறிச் சிறகடிக்கும் கருங் கண் இமைகள். அவைகளின் மேல் குவளையின் கருமை யைச் சாருக்கி வடித்து யாரோ ஒரு அழகுக் கலைஞன் மெல்லியதாக வளைந்து வரைந்து விட்டது போன்ற புரு வங்கள். அவைகளின் மேல் வெண்பிறை துதல் .
நான் மெய்ம் மறந்து அவனையே கண் கொட்டாமல் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தேன். அவள் தன் நீண்ட கருங் கூந்தலை வாரிக் கொண்டிருந்தான். சிப்பின் பற்கள் சிதறிவிடும்படி அத்தனை அடர்த்தியாகவும் இருந்தது அவருடைய கூந்தல்.
*' என்னடா, அப்படிப் பார்க்கிருய்?"
நான் மாங்காய் திருடுகையில் கையுங் களவுமாய்ப் பிடிபட்ட சிறு வன் போல் அலறி அடித்துக் கொண்டு எழுந்து நின்றேன். என் சேப்பில் இருந்த கண்ரூடி " * மாபிள் "கள் அலங்கோலமாகச் சிமெண்ட் நிலத்தில் விழுந்து சிதறின. அத்துடன் என் கனவும் கலக்கமும் sôv,šsaw.
"ஒண்டும் இல்லை."

- 103 -
** Gair awr gyfair sy'n gig Ffrair awr Résiggin&p AOr Affltu . வார்த்துக் கொண்டிருந்தாய்?"
"உம்மை எப்ப் நான் பார்த்தளுள் ? அந்தச் சுவரிலே இருக்கிற பல்வியை அல்லவோ நான் பார்த்துக் கொண் டிகுந்தேன்."
* இல்லை, என்னைத்தாள் நீ பார்த்தாய் ! " * உம்மிலை என்ன கிடக்குது பார்க்கிறதுக்கு ஓகோ, Joyeu udug. Gaur a lubai,5 Gaur Frabat ? '”
* ரன்டா, நான் வடிவில்லையே???
சிறுவருகிய என்னுடன் எதுவும் பேசலாம் என்ற எண்ணம் போலும் அவளுக்கு தான் அழகானவள் என்று அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. அத்துடன் அதைக் குறித்து இறுமாப்பும்.
o Carraio Gavait ar i srair autų odidanou ?” *" எனக்கு அதெல்லாம் தெரியுமே?"
"இந்த வயதிலே சினிமாப்படம் எல்லாம் பார்க்கிருய். நாவல்ஸ் புத்தகம் எல்லாம் படிக்கிருய், இது மட்டும் தெரி பாமல் கிடக்கே உனக்கு? சொல்லு மச்சான்." என்று குழைந்தாள்,
அவள் என்னெத் திடுக்கிட வைத்ததற்காக அவள்மேல் வஞ்சம் தீர்த்துக்கொள்ள முனைந்தேன்.
* அதெல்லாம் என்ன் ரன் கேட்கிறீர்? மச்சாள், என்ரை பெரியண்ணன் இண்டைக்குப் பின்னேரம் வந் திடுவார்; அவரைக் கேளும், நீர் வடிவோ வடிவில்லையோ ாண்டு அவர் நல்லாய்ச் சொல்லுவார்"
" போடா! குரங்கு, சனியன் இனி அடிதாள் வாங் T Jrgain Ffair awr i'r aml- !”

Page 60
- 104 -
அவள் கன்னங்கள் சிவந்தன - நாணம், கோபம், மகிழ்ச்சி எதுவோ நான் அறிந்தேனுே? அவள் தலை சீவிக் கொண்டை போட்டுவிட்டபடியால், கண்ணுடியை நகர்த்திவிட்டு மான் போல் துடித்தெழுந்து நின்ருள். அவள் கையிலே நீளமான தடித்த சீப்பு இருந்தது. நான் சிறிது தூரத்தில் போய் விலகி நின்று கொண்டேன். சிறு வர்களுக்கு இயல்பாக உள்ள சுபாவத்தின்படி அவள் மனத்தை மேலும் கிளறிவிட முனைந்தேன்.
"சும்மா கணக்கு விடாதையும், மச்சாள் ! அண்ணன் இஞ்சை வந்தால் அறைக்கைபோய் ஒளிச்சுக்கொண்டு யன் னற் சீலையை நீக்கி நீக்கிப் பார்க்கிறது எனக்குத் தெரி யாதோ ?"
அவள் திடீரென்று சிரித்து விட்டாள்.
" அட குரங்குக் குட்டி உனக்கு இதெல்லாம் எாப்பிடி யடா தெரியும்? சரி வா, இவ்வளவு நேரமும் மாபிள் அடிச்சுக் களைச்சுப் போனுய், இனி கால் முகம் கழுவிப் போட்டு வந்து சோத்தைத்தின் ! "
அவள் பேச்சை மாற்ற முயன்ருலும் நான் விடவில்லை.
* அதுகும் தெரியும், இன்னும் ஒரு மாதத்தையால், என்ரை அண்ணன் உம்மைக் கலியானம் முடிக்கப் போருர் ாண்டதும் தெரியும் !"
"அட குரங்கே. 1"
அவளுடைய குரலில் கோபம் இல்லை. எல்லை இல்லாத ஒரு குதூகலம்தான் தொணித்தது. தனிக் கறுப்பு வளையல் அணிந்த தன் வெண்ணிறக் கை ஒன்றை மணிக்கட்டுடன் மடித்து தன் துடி இடையில் வைத்துக்கொண்டு என்னைத் தன் அகன்ற கருவிழிகளால் உற்று நெடு நோக்கு நோக் தினுள்.

- 105 -
உண்மையில் என்னைத்தான் நோக்கினுளோ அல்லது தன் மனக் கண் களால் என் முகச் சாயல் கொண் '4 (5.55...... ?
அவள் நோக்கு எனக்குச் சங்கடமாக இருந்தது. ான் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.
* மச்சாள், எனக்குப் பசிக்குது. இப்ப சோறு தாஹிரா by fins......
அவள் மோணம் கலைந்தது.
"வா " என்ருள் அன்புகனிய, "முட்டைப் பொரிய லும் சோறும் தாறன்."
~
அவள் பெயர் கர்ணகை; என் பெயர்.? அது இந்தக் கதைக்குத் தேவையில்லை.
என் அண்ணுவின் பெயர் சண்முகதாஸன். சுருக்க மாக எஸ். தாஸன் என்று வைத்துக் கொண்டிருந்தார். அவர் பீ. ஏ. பாஸ் பண்ணிவிட்டு அடுத்த ஊரில் ஒரு கலாசாலையில் உபாத்திமைத் தொழில் செய்து கொண் டிருந்தார்.
கர்ணகை சிறு வயதிலேயே தாயை இழந்து விட்ட கன்னி தந்தையின் கண்ணுட் கருமணி. அவளுக்காக அவர் மறு விவாகமே வேண்டாம் என்று சொல்லி விட் டார். அவர் என்னுடைய அம்மாவின் ஒரே தமையன் . அவர் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியரா கக் கடமையாற்றி வந்தார். அதிற் கிடைத்த வேதனம் அவர்கள் இருவருக்கும் போதுமானது, தன் மகளுக்கென அதில் மீதம் செய்து பத்தாயிரம் ரூபாய் பணமாக வங்கி யில் போட்டு வைத்திருந்தார். அத்துடன் வீடும் வளவும் சிறிது வயல் நிலமும் அவருக்குச் சொந்தம்,
எல்லாம் தன் மகளுக்கு என்றே வைத்திருந்தார். ாங்கள் வீட்டில் என் அம்மா வைத்ததுதான் சட்டம். என்
வே - 14

Page 61
- 106 m
த்த்தை காசு தேடும் யந்திரம். அவ்வளவுதான். என தாய் எங்கள் வீட்டை ஒரு சிற்றரசி போல ஆட்சி செய்த படியால் சிறு வயதில் எனக்கு என் தந்தையின் அன்பு கிடைக்கவில்லை. dies
அவர் எனக்கு என்றும் தூரத்துப் பச்சை. ஏதோ காற்சட்டை, கோட், டை, சப்பாத்து, தொப்பி முதலியன காலையில் அணிவார். பிறகு மாலையில் வந்து அவை களைக் களைந்து வைத்துவிட்டு ஒரு மலிந்த எட்டுமுழ வேஷ்டியை இரண்டாக மடித்து இடுப்பில் கட்டிக் கொண்டு பத்திரிகை பார்ப்பார். சம்பள நாளன்று தம் கையிற் கிடைத்த பணத்தை என் தாய் கையில் வைத்துவிட்டு, வீட்டு விவகாரம் எதிலும் சிரத்தை இல்லாமலே இருந்து விடுவார். NA
எங்களில் எல்லாமாக எட்டுச் சகோதரர்கள். பெண் கள் அறுவர், ஆண்கள் இருவர். அண்ணன்தான் எல் லாரிலும் மூத்தவர். நான் கடைக்குட்டி இடையில் ஆறு பெண்கள். என் அக்காமார் என் காதுகளைப் பிய்த்து எடுத்து என்னைத் தங்களுடைய சேவகனுக நடத்தினுர்கள், நூற்பந்து வாங்கி வா, ஊசி வாங்கி வா, சட்டைத்துணி வாங்கி வா, அது வாங்கி வா, இது வாங்கி வா என்று எல்லாம் ஏவி என்னை ஒரு அடிமைபோல் நடத்தினுள் 66 roo
அதனுல்தான் நான் என் கர்ணகை மச் சாளிட ம போய் அண்டுவேன்.
ான்னுடைய அண்ணனுக்கும் கர்ணகை மச்சாளுக்கும் கலியாணம் நடக்கப் போகிறதே, அதன் பிறகு அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிடப் போகிருளே என்று பெரிய வர்கள் சொல்லக் கேள்விப்பட்டதும் என் உள்ளமெல் லாம் மகிழ்ச்சியினுல் துள்ளி, என் அக்காமாருக்கு இதனுல் ஒரு பாடம் படிப்பிக்கலாம் என்று எத்தனையோ குழந்தைக் கனவுகள் எல்லாம் கண்டுவிட்டேன்.

سن 107 سے
அதற்கிடையில் என்னுடைய அண்ணன் உபாத்தி மத் தொழிலில் இருந்து ஏதோ ஒரு சோதனை பாஸ் மண்ணி ஓர் அதிகாரப் பதவிக்குப் போய்விட்டார்.
அன்றும் கர்ணகை மச்சாளிடம் ஒடினேன். அவள் அன்று அலுத்துப் போய் வந்த மாமாவுக்குத் தேநீர் தயா த்துக் கொண்டிருந்தாள். நான் அவளருகிற் போய் ஜமர்ந்து கொண்டேன்.
* குடிடா மச்சான், தேத்தண்ணி!" "மச்சாள், உமக்கு ஒரு புதினம் தெரியுமா?"
" அட குடிச்சுப் போட்டு கதையன். இன்குெரு ரஷ் பாக்காரன் சந்திர மண்டலத்திற் போய் சேர்ந்திட்டாகுே அல்லது, அல்லது. என்ன இவ்வளவு அவதிப்படு முெய் ! குடியடா தேத்தண்ணியை ! "
மச்சாள், இந்தப் புதினம் கேள்விப்பட்டிரோ? தெரி பாது போலக் கதைக்கிறீர். என்ரை அண்ணன் பெரிய சோதனை பாஸ்பண்ணிப் போட்டார். அவருக்கு இனிமேல் மாமாவைப் போல வாத்தி வேலை இல்லை ; இனிப் பெரிய கவுண்மேந்து உத்தியோகம்"
" என்னடா சொல்லுகிருய், குரங்கா!"
* இனிமேல் உம்மடை தேத்தண்ணி குடிக்கமாட்டேன். பெரியண்ணன் வந்து உம்மைக் கலியாணம் முடிச்சு எங் கடை வீட்டை கொண்டுவந்த அதன் பிறகு உம்மடை கையாலை ஒரு தேத்தண்ணி தந்தால் குடிப்பன். இப்ப அதெல்லாம் ஏலாது."
" போடா சனி, போடா குரங், போடா மூதே ! இதிலே நிண்டியோ ஏப்பைக் காம்பாலை வாங்கப்போருய்
ar sir awr llaw) L ! ”'
* என்ன மச்சாள், உமக்குச் சந்தோஷமில்லையா?"

Page 62
- 108 -
** Qurur ? "
அவளுடைய மென்மையான கன்னங்கள் மறுபடி திய ரென்று சிவந்தன. அவள் குங்குமம் அணிந்திராவிட்டா லும் பிறைமதியொத்த அந்த நெற்றி குங்குமம் போலச் சிவந்துவிட்டது. அவள் உடனே எழுந்து என் மாமா வான தன் தந்தைக்குத் தேநீரும் பலகாரமும் கொண்டு சென்ருள்.
வெட்கம் சான்னையும் பிய்த்துத் தின்றது. நான் ஓடி விட்டேன்.
ஆஞல் அந்த மணம் நடக்கவில்லை. என் தந்தைக்கு வாய் இல்லை. என் தாய்க்குப் பணமோகம் என் அண்ல) வுக்கு ஆங்கில மோகம், இரக்கமற்ற என் ஆறு அக்காமா குக்கும் அண்ணனுடைய பதவிக்கு ஏற்ற பெண் வேண்டும் என்ற ஒரு மூட எண்ணம். ஆங்கிலப் படிப்பு, பவிசு.
ஒரு நாள் என்னுடைய அப்பா என்னுடைய அம்மா விடம் வாதாடினர். பேசினுர், எல்லாம் முதன் முறையாகத் தான், நான் அறிந்தமட்டில் 1 அவர் அழுதார். என் குடும் பத்தவர் எல்லோருமாகச் சேர்ந்து அவர் வாயை அடக்கி விட்டனர். ஏழு பெண்கள் சேர்ந்து பேசும்பொழுது வயோ திபராகிய ஒரு ஆண் எம்மாத்திரம்?
அன்று நான் என் தந்தைக்காக இரங்கினேன், உடனே கர்ணகை மச்சாளிடம் ஒடினேன். அவள் அன்று குங்குமம் அணிந்திருந்தாள். தள் நீண்ட கூந்தலை வாரி முடிந்து அதிலே மணம் கமழும் மல்லிகையும் அணிந்திருந் தாள். - அது ஒரு தனி அழகு எட்டு வயதுச் சிறுவணுகிய ானக்குக்கூட அந்த அழகு புலப்பட்டது. நான் ஒரு கணம் பிரமித்து நின்றுவிட்டேன்.
யானைத் தந்தத்தால் படைக்கப்பட்ட பதுமைபோல அவள் வீட்டு வாசலிலே நின்முள்; அந்த வீட்டை ஆளும் திருமகள் போல நின்முள், l:

س- 109 س
ஏதோ கூறவென்று ஓடிப்போன நான் மலைத்து நின்று aft".GL-sér.
அவள் அதிகாரமாகவே பேசினுள்.
“ rtirarr l '”
"ஒண்டுமில்லை மச்சாள். '
என்ன என்னவோ கிளிச்சுக் கொட்டுகிறது போலை
ஓடிவாருய் 1 மாமி மச்சாள்மார் எல்லாரும் நல்லாயிருக்
Savr Guor ? ” ’
" ஓம் மச்சாள்!" " என்னடா என்னவோ செத்த வீட்டுக்குச் சொல்ல வந் தவன் போலை ஒரு மாதிரிக் கதைக்கிருய். பொறு மச்சாள் ; இப்ப ஐயா வந்திடுவர். நீயும் அவரோடை இருந்து க்ொழுக்கட்டையும் வடையும் தின்னன்."
* ஒம் மச்சாள்." جمبر ஆனல் நான் சொல்ல வந்ததை எப்படிச் சொல்லு
வேன்? என் நா எழவில்லை. என் குழந்தை மனம் இடிந்து விட்டது.
“எனக்கு வீட்டிலை வேலை கிடக்குது மச்சாள் " என்று அழாக்குறையாகச் சொல்லிவிட்டு எடுத்தேன் ஒட்டம்.
என்னுடைய அண்ணனுக்கு எங்கோ ஓரிடத்தில் கலி பாணம் பேசி முடித்து வைத்துவிட்டாள் அம்மா,
என்னுடைய பிறவூர் மச்சாள் வந்தாள். என்னுடைய குழந்தை மனத்திற்கு அசிங்கத்தின் சின்னமாகவே அவள் தோன்றினுள், கன்னம் கரேலன்று கொழுத்திருந்த முகத் திலே கறுத்தத் தோலை வெள்ளத் தோலாக்க முயலும் பவு டர்ப்பூச்சு, கையிலே விலை உயர்ந்த ஒரு கைக்கடிகாரம், கழுத்திலே ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி, அதிலேதான் தாலியும் கோத்துக் கிடந்தது. பின்னி முடிந்த கூந்தலிலே

Page 63
- 110 -
வைத்துத் தொடுத்த முடிமயிர் புறம்பாகத் தெரிந்தது. அவளுடைய இடையிலே மெலிவோ மென்மையோ இல்லை. உடலிலே அழகில்லை, குரலிலே இனிமை இல்லை. மனத் திலே அன்பில்லை.
எனக்கு உடனே வீட்டைவிட்டு ஓடிவிடவேண்டும் போலத் தோன்றியது.
எங்கே ஒடுவேன் நான் ? .
என் கர்ணகை மச்சாளிடம் ஓடினேன். அவள் என் றும் போலச் சந்தோஷமாகவே இருந்தாள்.
யாரோ ஒரு தெய்வச் சிற்பி தன் வல்லமை எல்லாம் ஒன்ருய்ச் சேர்த்து நன்ரூக அடுக்கிவிட்ட முத்து வரிசையை வளைத்து மாணிக்கக்கரை கட்டிவிட்டது போன்று இருந் தது அவள் புள்னகை.
எதற்கும் கலங்காத வீரத்தமிழ் மகள் போல் என்னைக் கண்டவுடன் அவள் கண்கள் சிரித்தன.
V
"வாடா மச்சான், இஞ்சை வந்து கொஞ்சம் கலியாண வீட்டுப் பலகாரம் சாப்பிடேன் !"
' என்ன மச்சாள், எனக்கெண்டே வச்சிருக்கிறீர் எங் கடை கலியாண வீட்டுப் பலகாரம் எல்லாம் x." என் குரல் தடைபட்டு விம்மி நின்றது.
எனக்கு அழுகை,
" அதிலை என்னடா மச்சான் ? நீ எண்டாலும் என் னைக் கலியாணம் முடிக்கமாட்டியோ?"
பகலெல்லாம் தண்ஞெளியை நல்கிவிட்டு மேல்வானில் அஸ்தமிக்கும் சூரியன் போல் அவள் முகம் செக்கர் படிந்து மங்கியது. மாவலியாறு திடீரென்று பசிய கானகமெல்லாம் பெயர்த்துப் பெருவெள்ளம் கொண்டு பாய்வதுபோல அவ

- 111 -
ளுடைய அழகிய கருங் கண்ணிமைகள் அறுந்து சிதறும்படி கண்ணிர் ஊற்றுப் பாய்ந்து புரண்டு வழிந்தது. ஆ அவள் மறுபுறம் திரும்பிவிட்டாள் !
எடுத்தேன் ஓட்டம் 1 சான் கண்களிலும் கண்ணிராறு ரத்த ஆறு நெருப்பாறு
என்னுடைய தாய் ஒரு நாள் என்னிடம் பேசிளுள், அப்பொழுது எனக்குப் பத்து வயதாகிவிட்டது.
"ஏன் மேனே, நீ உன்ரை மச்சாளிடம் பேசிறயில்லை μΝτιό 7
"ஆர் சொன்னது?"
உள்ரை கொண்ணன்தான் சொல்லுறன்." * எந்த மச்சாள் ? . அதென்ன கேள்வி? ஏன் கொண்ணள்ரை பெண்
சாதிதான். அல்லது வேறேயும் உமக்கொரு மச்சாள் இருக்கோ ? உம்முடை மூஞ்சை எனக்குப் பிடிக்கேல்லை "
"ஓ ! அதுவோ! அவவோடை நான் என்னத்தைப் பேசிறது? அவ தன்பாட்டுக்கு மூத்தக்காவோடை இங்கி லீசையும் பேசிக்கொண்டு திரியிரு. இல்லை, கேக்கிறன் நீங்கள் எண்டாலும் யோசிச்சியளோ அம்மா, எனக்குக் கொஞ்ச இங்கிலீசு படிப்பிச்சு வைக்கவேணும் எண்டு. அது எல்லாம் உங்களுக்குக் கவலை இல்லை. நான் எப்படித் தெரு வழிய திரிஞ்சாலும் உங்களுக்கு என்ன ? அக்காமாருக்கு என்ன? நாள் என்ரை அண்ணன் ரை பெண்சாதி யோடை பேசேல்லை எண்டதுதான் உங்களுக்குக் குறை யாய்ப் போச்சு ! "
ஏன் அவ என்ன உம்மடை பவிசுக்குக் குறைஞ்சு போச்சோ, அல்லது கொப்பற்றை பவிசுக்குக் குறைஞ்சு போச்சோ! அதுதான் நீங்கள் இரண்டு பேரும் அவ வோடை. பேசிறயில்லை ! "

Page 64
- 112 -
"அம்மா, எனக்கு அப்பிடி இங்கிலீசு பேசத் தெரி யாது. சும்மா ஏன் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி ான்னட்டை கதைக்கிறியள் ? என்னை என்பாட்டிற்கு விட் டிட்டால் படிச்சுச்கிடிச்சு ஒரு 'மாதிரி ஆளாய் வந்திடுவன். அதுவும் விருப்பமில்லை யெண்டால் இப்ப சொல்வி விடுங்கோ நான் போறன்."
"எங்கேயோ போகப் போருராம்! " "ஏன் போகப்படாது?"
அதற்குள் என் தாய்க்குக் கோபம் வந்துவிட்டது. அவள் அலறிஞள். குளறிஞள். என் தந்தையைக்கூட ஏசி ஞள், இப்படி என்னை ஒரு தாய் சொல்லை மதிக்காத மகளுக வளர்த்துவிட்டார் என்று ! w
என்னுடைய தாய் மீண்டும் பேசினுள்.
“ டேய் ! பார்த்தியா, உன் ரை மச்சாள் கொண்டு வந்த சீதனத்தை அவளின் ரை நகைப் பெட்டியை நீ எப்பவெண்டாலும் பாத்தியோ? அதுமட்டும் பெறும் ஒரு லட்சம் ரூபாய் ! " M
* இதெல்லாம் என்னத்துக்கு எனக்கு சொல்லுறியள், அம்மா ?" ஆ
"நீயும் அப்பிடி ஒரு பொம்பிளையை முடிக்கவேணு மெண்டதுதான் - உன் ரை காலத்திலே."
* அம்மா நான் சொல்லுறன் எண்டு கோபிக்கவேண் டாம் உங்களுக்குக் காசுதானே தேவை? ஆரூல் என்ரை மச்சாளின் ரை முகத்திலை இருக்கிற வயிரங்களை - வைடூரி யங்களை - மாணிக்கங்களை எந்த நகைப் பெட்டியிலை காண லாம் ? அல்லது அவவின்ரை கையிலை இருக்கிற கறுத்த வளையலுக்குப் போதுமோ இந்த நகையெல்லாம் ..?"
* என்னடா உளறுகிருய்?"

- 113 ur
* அம்மா, நான் உளறவில்லை. நீங்கள் எங்கடை அண் ணன் கர்ணகை மச்சாளை முடிக்கிறது எண்ட சம்ம்தத் தோடை இருந்துபோட்டு, கடைசியாய்ப் போய்க் காசுக் கும் காணிக்கும் நகைக்கும் ஆசைப்பட்டு வடிவும் அள் பும் இல்லாத ஒரு பொம்பிளேயை வீட்டிலே கொண்டு வந்து சேர்த்தியளே!"
எனக்கு மறுபடி அழுகை 1
விம்மி விம்மி அழுதேன். என் கர்னகை மச்சாளின் இயற்கை லக்ஷ்மீகரமும் அழகும் என் அண்ணலுக்கும் இந்த விட்டிற்கும் கிட்டாமல் செய்துவிட்டாளே என் தாய்
T air ag
அதன் விறதான் தாய் இரக்கமற்ற ஒரு தாடகையாகி aftur dhr.
"g Qar syuu 4ut விஷயம்? நீரும் உம்மடை அப்ெ ரோடை சேர்த்தியோ? அப்படி எண்டால் அந்த கர்ண அப் பத்தினியை ஒண்டில் நீர், அல்லது உம்மடை அப்பர் போய்க் கலியாணம் முடுச்சுக் கொண்டு வந்து இந்த வீட் டிலே வைச்சுக் கும்பிடுங்கோ! அவள் என்ரை அண் ணற்றை மேள்! ஆனல் விஷயம் இவ்வளவு தூரம் வரும் எண்டு நான் கனவிலையும் எண்ணாயில்லை ! '
அரக்கி !
எனக்குக் கண்ணிர் மாலைகள் .
6 என்ன அழுகிறீர்? ஹ" ! உம்முடைய மூக்கிலை சளி வடியுது அதைப் போய் துடையடா 1 அதின் பிறகு முகத்தைக் கழுவிப்போட்டு இன்னும் பாக்காத சினிமாப் படம் இருந்தால் அதையும் போய்ப் பார்!"
அப்பொழுது வெளியே ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அது அண்ணனுடையது. -
வே - 15
ത്ത്
2*

Page 65
- 1 ] 4 അ
அம்மா தன் மார்புச் சேலையைச் சரி செய்துகொண்டு அவசரமாகத் தன் தலைமயிரையும் சரி செய்துகொண் L-irdir... • r
அதன் பிறகு எள் அண்ணன் உள்ளே வந்து, * என்ன கூட்டாளி அழுகிறியோ?" என்முர்,
* ஒண்டுமில்லை."
*" என்ன மாபிள் வாங்கக் காசு வேணுமோ?"
* வேண்டாம்."
*இனி, நீ கிறிக்கற் விளையாடிப் ப்ழகவேணும். காரு 'க் குள்ளை இருக்குது பாட்", விக்கட்", "பந்து" எல்லாம் !"
அதற்குள் என் அண்ணனின் மனைவியே வந்துவிட் டாள். அம்மா அவளை விணயமாகப் பற்களைக் காட்டி வர வேற்றள் அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆணுல் பற்களை மட்டும் காட்டத் தெரியும்.
அண்ணன் என் தலையைத் தடவிஞர் அன்பாக !
அண்ணனின் மனைவி தமிழ் பேசுவதில்லை.
தமிழ் தெரிந்திருந்தால்தானே, அந்த இழுமென் மொழியைப் பேசுவதற்கு!
அண்ணனுடன் ஏதோ ஆங்கிலத்திற் பேசினுள் . எனக்கும் அந்த மொழி கொஞ்சம் தெரிந்துதான் இருந்தது.
"யார் மூக்குச் சிந்தி அசிங்கமாக நிற்கும் இந்தப் Rouurit ? ” --
அண்ணன் மெளனம் 1 ,
"யார்? உங்கள் வீட்டு வேலைக்காரப்பையகு? ஏய் (3ri o

س- 115 س--
அதற்குள் என் மூத்த அக்கா குறுக்கிட்டுவிட்டாள் - ஆங்கிலத்தில்
"அது எங்கள் தம்பி 1 ஆக Sarrua air மச்சாள், வாருங்கோ உள்ளே."
அம்மா தன் பற்களைக் காட்டிக் கொண்டு 9i (Arles ால்லோரும் உள்ளே போய்விட்டார்கள்.
அண்ணனுடைய கார்ச் சாரதி ஏதோ ஒரு ur fas Anods கொண்டுவந்து என் கையில் வைத்தான ' )gy 88 வின் தம்பிக்கு உடனே அவரிடம் கொடுக்கவேண்டும்
நான் உடனே அதை மூலக்குள் ாறிந்துவிட்டேன். என் மனம் வேதன்ப்பட்டது.
உடனே என் கர்ணகை மச்சாளிடம் ஓடவேண்டும் போல் எனக்குத் தோன்றியது; ஓடினேன்.
அவள் ஏதோ கண்ணிருக்கள் மூழ்கித் தலைவிரி கோல மாகக் கிடந்து புலம்பிக்கொண்டிருப்பாள் என்ற மனவ் பதற் றத்துடன் ஒடினேன். -- என் கற்பனையினுல் என் as T களில் மல்கிய கண்ணிரைத் துடைத்துக் கொண்டு."
ஆகுல் - ஆனல் . t
அரசகுமாரிகள் அழுவதில்லை. அது அவர்கள் அழ கிற்கும். மேன்மைக்கும் மன வைராக்கியத்திற்கும் ஒரு இழுக் குப் போலும் !
அவளுடைய கண்ணுக்கு மை கன்னத்திற்கு றுாஜ் உதடுகளுககு லிப்ஸ்டிக் எல்லாம் தேவை இல்லை. ஏதோ இறுமாப்பில இவை எல்லாம் அணிந்துகொள்ள வேண்டும் ான்று நினைத்துவிட்டாளோ என்று முதலில் யோசித்தேன்.
அருகில் சென்று பார்த்தேன் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் அவள் முன்னுல் பதறி நின்றேன்.

Page 66
அவள் சிரித்தாள்,
அத்துடன் அமையாது என் உள்ளம் எல்லாம் கூனிக் குறுகி நாணும்படி என் சேட்டைப் பிடித்து இழுத்துவிட் டாள்.
"என்னடா மச்சான், அழுகிருய்?"
*ஒண்டும் இல்லை ! "
* இஞ்சை வா! கொஞ்சம் 'சொக்கிலேட்டுத் தின்: RAJT -r | '''
என்னை அணைத்துக் கொண்டு உள்ளே சென்று எள் கைகள் நிறைய இனிய பண்டங்கள் தந்தாள், محت
இப்பவே எல்லாம் திண்டு முடிக்கவேணும் என்று பணித்தாள்.
தின்றேன்.
இவ்வாவு அன்பும் அழகும் உள்ளவளை என் அண்ண னும் எங்கள் விடும் இழந்துவிட நேரிட்டுவிட்டதே என்று எண்ணினேன். :
சுவைத்து விழுங்கிய 'சொக்கலேட்டு தொண்டையில் சிக்கிக்கொண்டது. அவள் என் தலையில் தட்டினுள் நெஞ் சையும் முதுகையும் தடவினுள். அவள் அன்பு.
மீண்டும் என் கண்களில் முத்துமாலை.
‘என்னடா மச்சான், இப்ப மாபிள் அடிக்கிறதை விட்டுக் கிறிக்கட் அடிக்கத் துவங்கிவிட்டியாம்?"
அதற்குள் எ ள் கண்ணிரைச் சமாளித்துவிட்டேன்
" உமக்கு ஆர் இதெல்லாம் சொன்னது?"

- 117 -
தனிக் கருவண்க்கவின் தந்த தன் வெள்ளை மணிக் கட்டை இடையில் மடக்கி வைத்துக்கொண்டு அவள் என்
ாப் பார்த்தாள்.
* ஒருதரும் இல்லை!" ஆளுல் பெண்கள் எதையும் கணத்தில் கேட்டறிந்து
as ar 6 sir G oôGan ar ffas sir 6 Tain yn a llaw85 July 15 unu (D அந்தச் சிறு வயதில் எனக்கில்லை.
w
என் அம்மாவுக்கு என்ன எண்ணம் வந்ததோ ஒரு நாள் மாலை நாள் புத்தகங்களோடு போராடிக் கொண்டிருக் கும்பொழுது என்னிடம் தனியே வந்து பேசிகுள்.
"என்ன பெரிய படிப்புக் கவலைபோல இருக்குப் பிரபு Ajis f
என்ன அம்மா ?"
"மச்சாளுக்குக் கவியாணமாம்."
* எந்த மச்சாள்?"
"ஏன் உன்ரை மச்சாளுக்குத்தான் ! ?
"எனக்கு எத்தனை மச்சாள்மார் இருக்கினம்: முதலில் அண்ணன் பெண்சாதி -”
"வாயைப் பார், வாயை! என்னட்டை அடி வாங்கப் போருய், கண்டியோ?" W
** எனக்கு ஒண்டுக்கும் பயமில்லை அம்மா! நான்தான் ாப்பவோ வீட்டை விட்டுப் போறன் எண்டு சொல்லிப் போட்டேனே. அற நனைஞ்சவனுக்குக் கூதல் என்ன குளிர் 6 rit ayır
என் கண்களில் கண்ணிர் உப்பாகிக் கரிந்து நின்றது. நான் வேகமாக என் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டி (2ayrir,

Page 67
1- 1 18 m
அம்மா என்னுடைய மேசைமேல் சாய்ந்து நின்று என் தோள் மேல் தன் கையை வைத்தாள். விளக்கின் ஒளியில் அவளுடைய தலையிலுள்ள இடை நரை மயிர்கள் மின்னின. அவள் ஏதோ கலக்கமடைந்தவள் போல மெதுவாகக் கண் ணிர் கலந்த குரலுடன் பேசினுள்.
"நீ கோவிக்கிறது சரியடா மேனே ! உன்ரை கர், னகை மச்சாள் இந்த வீட்டுக்கு வந்திருக்கவேணும்; அந்த நேரம் என்ரை புத்தி மத்திமமாய்ப் போச்சு! அவள் வந் திருந்தால் இந்த வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி. O pe
நான் பொங்கித் துளித்த கண்ணிரை அடக்க முயன்ற படி புத்தகத் கிள் பக்கங்களை ஒரு பைத்தியகாரன் போலப் புரட்டிக்கொண்டிருந்தேன்.
சிறிது அன்பு எத்தனை கண்ணிரை வருவித்துவிடும் என்று வியந்தேன்.
"இப்பொழுது அவளுக்கு வேறை ஒரு கலியாணம் பேசி இன்னும் இரண்டு கிழமையில் கலியாணமாம்! "
எனக்குச் சிரிக்கவேண்டும் போலத் தோன்றியது. ஆரூல், அழுகைதான் வந்தது. புத்தகங்களைத் தள்ளி விட்டு வெளியே ஓடினேன்,
மங்கிய வானத் கிலே மதி. மங்கித் தவழ்ந்தது. தென்ன மரங்களின் தலைகளிலே காற்றின் ஒலம் !
தொலைவிலே இரட்டைக் கூகைகளின் குரல் . மேள வாத்யம் “ஜாம் ஜாம்' என்று ஒலிக்க எங்களுடைய மாமா கூட எழுந்து நடமாடித் திரிகிறர். தன் பொங்கும் வயிற் றுக்கு மேல் ஒரு பட்டுச் சால்வையைக் கட்டிக்கொண்டு ! என்னுடைய அண்ணனும் அவருடைய மனைவியும் அவ ருடைய புது மோட்டார் வண்டியிலே வந்தார்கள்,
என் கர்ணகை மச்சாள் மணவறையிலே வந்து இருந் தாள். அந்த நடுத்தர வயதுள்ள மணவாளனும் அவள்

- 119 =
அருகில் உட்கார்ந்து இருந்தாண் புண்ணியத்தின் அரு கில் பாவம் இருப்பதுபோல, அத்துடன் என்னுடைய அண் ணன் மனைவி தன் கையில் அணிந்திருந்த ஆயிரம் ரூபாய் மணிக்கூடு மின் வெளிச்சத்தில் பளபளக்கும்படியாக என் மச்சாளின் பின்புறமாக நின்றிருந்தாள். உதய சூரியனின் புறத்தே கார்முகில் நிற்பதுபோல, அம்மாவும் நின்றிருந் தாள் தன் நரிப்பார்வையோடு . −
எனக்கு எங்காவது சென்று அழவேண்டும்போல இருந்தது.
மறுநாள் மணப்பெண்ணுகிய என் மச்சாள் ஒரு அறை யில் தனியே இருந்தாள். இணைக் கூறையும் அணிந்து கொண்டு. அவள் அழுதுகொண்டிருப்பாள் ள்னறு அஞ்சி நாள் கிவளியே நினறேன். ஆணுல் அப்படி ஒன் றும் இலலை. என்னைக் கண்டவுடன், "ஏய் மச்சான் " என்று ஏதோ காணுததைக் கண்டுவிட்டதுபோலக் குரல் கொடுத்தாள். நான தயங்கித் தயங்கி உள்ளே சென்றேன்.
அவள் என் வயிறு நிறையும் மட்டும் இனிய பண்டங் கள் உண்ணத் தந்தாள் ள்ள்ணுேடு எத்தனையோ காலம் பழகிய மச்சாளாக இருந்தும் அநத நேரத்தில் அவளுடன் தனியே இருக்க என் மனம் சிறிது துணுக்குற்றது. ஓடி விடலாம் என்று எழந்தேன்.
அவள் விடவில்லை என்னுடைய கையைப் பிடித்து இழுத்து அப்படியே தன் முன்னுல் அமர்த்திக்கொண்டாள்.
ஒரு இடமும் போகயில்லை மச்சாள் சும்மா வெளி யாலை போய் விளையாடப் போறன் ! "
" இரடா மச்சான்! நல்லாய் வயிறு முட்டத் தின் னன்ரா !”
அவளைக் கேலி செய்யவேண்டும் என்று எண்ணி Garcir. w

Page 68
- 120 -
* என்ன மச்சாள், ராத்திரி மணவறையிலை கூறைச்சீலை யும் உடுத்து நகை எல்லாம் போட்டுத் தலையைக் குளிஞ்சு கொண்டு இருந்திரே ! அப்ப இந்த வாய் எல்லாம் எங்கை Gurrës së ? '' ܚ
போடா குரங்கே, சனியன், மூதேசி!"
அவள் கண்கள் பளபளக்கும் வைரத்தில் பதித்துவிட்ட மரகதங்கள் போல் மின்னின. கண்ணிர்.?
ஆகுல் அரசிகள் அழுவதில்லையே!

துறவியின் துறவு
* புத்தங் சரணங் கச்சாமி தம்மங் சரணங் கச்சாமி சங்ங்ங் சரணங் கச்சாமி " பிரதம பிக்கு தர்மபாத தேரோ வின் குரல் தூபத் தட்டிலிருந்து நிர்மலமான ஆகாயத்தை நோக்கி விரியும் அகிற் புகைபோற் சுருண்டு சுருண்டு GGTSTT TTTTTTTTTLLLLLLL LLTTLTT TL LTTTLLLLL L LLLLLLTTTL TLL S யிருந்த மற்றப் பிக்குகளின் உள்ளங்களிலும் அங்கே, * பண " பாராயணம் கேட்க வந்திருந்த பக்தர்களின் உள் ளங்களிலும் மோதி மோதி எதிரொலித்தது.
தேரோவின் கண்டத்திலிருந்து, துறவு வாழ்க்கையின் பூரண சக்தியோடு வெளிவரும் அம்மந்திர வார்த்தைகளின் றசை இன்பத்திற் சிக்குண்டு. வாழ்வின் அல்லை தொல்லை களுக்குள் கிடந்து உழலும் மனிதனது இருதயத்தைப் புறக் களித்துவிட்டு, எங்கோ உலகின் எல்லையில் உள்ள ஒரு தெய்வமணிப் பீடத்தில் கரந்துறையும் சாந்தி என்னும் மோகினிப் பெண், அவ்விரவில் வெளிவந்து நட்மாடுவது போல விளங்கியது அப்பிரதேசம். எங்கும் ஒரே சாந்தி மயம் பெளர்ணமிச் சந்திரன் தன்னலமற்ற ஒரு கொடை வள்ளல்போலத் தன் நிலா அமுதை வாரி வழங்கிக்கொண் டிருந்தான் நட்சத்திரங்கள் கண் சிமிட்டி மையல் செய்தன. நீண்டு வளர்ந்த தென்ன மரங்களிடையே இளந்தென்ற லும் குயில்களும் " சாந்தி’ப் பண் மிழற்றின.
ஆணுல் அப்"பண" ஓதுவார்களில் ஒருவனுய் வீற்றி ருந்த பால பிக்குவாகிய விமலதாசனுடைய இருதயத்தில் மட்டும் சாந்தியின் சாயை சிறிதும் விழவில்லை; அச்சாந்திக் கீதத்தின் அட்சரங்களில் ஒன்ருவது அவன் செவிகிளிற் புகவுமில்லை சாந்தி ! அது எங்கே? சாந்தியை நாடி ாத்தன் மனிதர்கள் அவ்வறப் பள்ளிக்கு வருகின்மூர்கள்! அவர்களுக்கு அது கிட்டுகின்றதா ? அது அவனுக்குத் தெரியாது ஆணுல் இரவு பகல் அவ்வறப் பள்ளியில் வாழ்ந் தும், அறவாசகங்களைக் கேட்டும், அறச் செயல்களைப் புரிந்
(Qu - 16

Page 69
- 122 -
தும் வருகின்ற அவனுக்கு மட்டும் சாந்தி கிட்டவில்ஸ் தாக முற்றவன் கண்களை ஏமாற்றி மறையும் காணல் ஜலம்போல தழுவிக்கொண்டிருந்தது சாந்தி அவனுக்கு
அவனுடைய கவனம் "பண" பாராயணத்திற் செல்ல வில்லை, தினமும் கேட்டுக் கேட்டுக் காதுகளும் அலுத்துப் போய்விட்டன அந்தச் சுவை நைந்த வெறும் வார்த்தை கள் தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண் டான். கண்களை லேசாக மூடி, ஒரு கையைத் தலையின் கீழ் வைத்துப் படுத்திருக்கும் பிரமாண்டமான புத்தரின் சிலை அவன் கண்களிற் பட்டது. அச்சிலையின் நெற்றியில் ஒரு சுருக்கும் இல்லை. கண்களின் கீழ்க் கறுப்பு ரேகை இல்லை! சாந்தி என்னும் தெய்வமோகினி வீற்றிருக்கும் மாளிகை யின் திறவுகோலை ஆக்கிய பொற்கொல்லன் நீதானு? ஆணுல் என்ன பிரயோசனம் ? அப்பால பிக்குவிற்கு அத் திறவுகோலைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியவில்லையே! இப்பிறவியில் சாந்தியின் நிறம் அறியாதவனுக்கு மரணத் தின் மறுபுறத்தில் இருக்கும் நிர்வாண நிலை வெறும் கோடைக் கணவுதானே.
அச்சிலையின் பாதங்களிலும் அருகிலும் மலர்கள் மலை மலையாகக் குவிந்து கிடந்தன வெள்ளை, சிவப்பு மஞ்சள் நீலம் என்ற நிற வேறுபாடும். பெரியது, சிறியது என்ற உருவ வேறுபாடும் இன்றி எல்லாம் ஒண்டடி மண்டடி' யாகப் பிணைந்து கிடந்தன. அம்மசலர்களுக்கு வாய்த்த யோகம் அவர்கள் தம் இனத்தவர்களுடன் கூடிப் பிணைந்து இன்புற்றுக் கிடக்கின்றன. ஆணுல் அவன் மட்டும் தன் இனத்தவர்களைப் பிரிந்து, உலக வாழ்வைத் துறந்து போகங்களைப் புறக்கணித்து. * பிக்கு தன் கண்களை மூடிக்கொண்டான்.
தென்றற் காற்று மலர்களின் மணத்தைச் சுமந்து கொண்டு சாளரத்தின் வழியாகக் குயீர்" என்று உள்ளே பாய்ந்தது. விருப்பற்ற வரண்ட துறவு வாழ்க்கையில் ஏது மணம்? ஏது மலர் ? ஏது நிறம்?

- 123
பிக்கு விமலதாஸன் கூரையில் உள்ள துவாரத்தின் வழி பாக ஆகாயத்தை நோக்கினுள். தண்மதியின் ஒளி தேங் கிய முகம் அவனுடைய கண்களை ஆகர்ஷித்தது. தண்மதி உன் அழகிற்கு இணையான வஸ்து உலகத்தில் என்ன இருக்கிறது? அழகு! தண்மதி 1, மதிமுகம் 1." பிக் குவின் மனம் சுழன்றது. ஆயிரம் அழகு வழியும் "மதி " முகங்கள் அவனுடைய மனத் திரையில் வரிசையாக ஓடி மறைந்தன. மதிமுகங்கள் ம்ட்டும் அல்ல; மின் இடைகள், தளிர்க் கரங்கள், மலர்ப் பாதங்கள். அத்தீவிரமான கற்பனையின் வேகத்தைத் தாங்கமாட்டாது அவள் தன் முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டாள். புறக் கண்களை மூடிக்கொள்ளலாம், ஆளுல் சதா விழிப்புடன் இருக்கும் அகக் கண்களை இப்படி நின்த்த மாத்திரத்தில் மூடிக் கொள்ள முடியுமா?
" நாமோ தஸ பகவதோ தஸ் சமாஸம்பு தஸ்," "பண" Luryrruunuuntuh (ptą ந்துவிட்டது. பிரதம பிக்கு தம் ஆச னத்தை விட்டு எழுந்திருக்கிருர், சபையோர்களும் ஒவ் வொருவராக எழுந்திருக்கின்றனர் கொட்டாவி விடும் சப் தங்களும், கால் சீய்க்கும்" சப்தங்களும், * குசுகுசு" என்ற சம்பாஷணைகளும் இதுகாறும் நிலவியிருந்த அமைதியைக் கலைக்கின்றன. V
பிக்கு விமலதாஸனும். மனத்தொடை அறுந்து திடுக் கிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு எழுந்திருக்கின் றன். பாராயணம் முடிந்துவிட்டது! அவன் இதுகாறும் ாங்கே போயிருந்தான் ?"
பிரதம பிக்கு அவன் நின்றிருந்த பக்கமாக வருகின் மூர் 'விமலதாஸ, ஏது எங்கே போயிருந்தாய்? நான் உன் முகத்தைக் காணவே இல்லேயே "
* இல்லை. ஹாமதுறுவோ, இங்கேதாள் உட்கார்ந்து கொண்டிருந்தேன், பின் வரிசையில் -" " w
" ஆளுல் உன் முகத்தில் கவலைக் குறிகள். ஏன்?"
\

Page 70
- 124 ulகவலைகள்? : ஒன்றுமில்ல."
*உள் முகம்தான் சொல்லுகிறதே. இன்பம் துன்பம் என்ற உணர்ச்சிகள் அற்றவன் பிக்கு, அவனுக்கு ஏ து கவலைகள்? சரி நேரமாகிறது, போய்ப் படுத்துக்கொள் நானும் போகிறேன்." ţ. பிரதம பிக்கு போய் விட்டார். அறுபது வருஷம் தூய துறவு வாழ்க்கையில் பயின்ற அவருக்கு எங்கே தெரியப் போகிறது, ஒரு இளம் இருதயத்தின் துடிதுடிப்பு !
விமலதாஸள் தன் அறைக்குட் சென்றன். அறையின் இரு பக்கத்தில் ஒரு கயிற்றுக் கட்டில் போடப்பட்டிருந்தது. ஒரு மூலையில் அவனுடைய பிக்ஷா பாத்திரம் கிடந்தது விமலதாஸன் தன் காவி மேற்போர்வையைக் கழற்றிக் கொடி யிற் போட்டு விட்டு, தன் அரையில் அணிந்திருந்த காவித் துண்டை நோக்கினுள். சே 1 என்ன அசிங்கம் ! தீவாத் தரக் கைதியின் உடை இதனிலும் மேலானது!
கட்டிலில் சாய்ந்தபடியே, சாரளத்தைத் தன் காலால் தள்ளித் திறந்தான் வெண்ணிலவு உள்ளே பாய்ந்தது. “ அம்மே!" துறவிக்கு ஏன் பெருமூச்சு? அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. فيه
அம்மே 1 இந்த மனக் கொதிப்பிற்கும், இருதய வாரி விற்கும் அம்மேதான் காரணம் உணர்ச்சி உள்ள தாயா அவள்? சுயநலப் புலி 1 இல்லாவிட்டால், பத்து வயது கூடப் பூர்த்தியாகாத ஒரு சிறுவன, நல்லது இது, தீயது இது என்று பகுத்தறியும் பருவம் வராத ஒரு சிறுவன், தலையை மொட்டையடித்துக் காவி உடை அணிவித்து ஒரு பாலபிக்கு ஆக்கத் துணிவாளா? அவன் ஒருவன் பிக்கு ஆகிவிட்டால் அவர்களுடைய குடும்பத்தில் நாலு தலைமுறை களுக்கு நிர்வாண சித்தி கிடைத்துவிடுமாம்! என்ன மூட நம்பிக்கை ? அப்படியே அது உண்மையாக இருந்தாலும், qTM T LTTT L Y LL STL L0E YS YYS LLLkTLtTYT LTLLLLL

- 125 -
ati, б) ући богаћr(9ti ? ஏன் அவள் பெரிய பெரிய உத்தி
யோகங்கள் வகித்துக்கொண்டு மனைவியருடன் சுகமாகக் காலம் கழிக்கும் தமையன்மார்களில் ஒருவன்ப் போல வாழ்தல் ஆகாதோ? என்ன வஞ்சக நெஞ்சம் அவன் தாய்க்கு கடைசிப் பிள்ளைமேல்தான் தாய்க்கு அன்பு அதி கம் என்று சொல்லுவார்கள். ஆகுல் அவனுடைய தாய்-? தாயா அவள்? அரக்கி
ஆணுல் இந்த அரை மரணம் ஏன்? உலக இன்பங் களை ஏன் துறக்கவேண்டும் இந்த இளம் வயதில் ? நல்ல உணவு ஏன் அருந்தக்கூடாது? காதலின்பம்-? சரி சரி, அவனுடைய தாய்க்குத்தான் மதியில்லாமல் போய்விட்டது அவனுக்குமா -?
2
சீது லோயா கடற்கரையை அடுத்துள்ள ஒரு அழகிய சிறு கிராமம். மெல்லென்ற கடற் காற்றும், மெத்தேன்ற வெண் மணலும், உயர்ந்து சடைத்த தென்னைகளும் அவ் ஆருக்கு ஒரு தனிச் சிறப்பைக் கொடுத்தன.
மேற்கூறிய சம்பவம் நடந்த மறுநாட் காலை, ஒன்பது மணி இருக்கும். அவ்வூரின் மத்தியிலுள்ள ஒரு பெரிய மாடி விட்டில் ஒரு கிழவி நடு ஹாலில் உள்ள ஒரு கருங்காலி நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வெற்றிலை பாக்கு இடித் துக் கொண்டிருந்தாள். சோமவதி ஆயினே அறுபத் தைந்து வயதாகியும் இன்னும் உடல் ரசம் கெடாத பேரிளம் - பெண் போலவே இருந்தாள். அப்படி இல்லாவிடில் அப் பெரிய வீட்டில் தனியே இருந்துகோண்டு காலந்தள்ள Փւգ պաT ?
மூத்த பிள்ளைகள் அவளேக் கவனிக்காமல் விட்டால் என்ன ? புருஷன் வைத்துவிட்டுப்போன தென்னந்தோட் டம் இருக்கும் வரையும் அவளுக்கு என்ன குறை? யாரை யும் அண்டிப் பிழைக்கத் தேவுைவில்லை,

Page 71
a 26 m
ஆளுல், கடைசி மகள்மேல்தான் அவளுடைய அன்பு எல்லாம். குலம் உய்யவந்த கொழுந்து என்று நினைத்தாள். அவன் பிக்குவாக இருக்கிறபடியால் தனக்கு நிர்வாண பதவி நிச்சயம் என்று நம்பியிருந்தாள்.
ஏதோ ஞாபகம் வந்தவுடன். மேலே நிமிர்ந்து பார்த் தாள். விமலதாஸனைப் பிக்கு உடையில் எடுத்த படம் சுவ ரில் மாட்டப்பட்டிருந்தது. " மகே, புத்தோ " என்று மனத் தில் தாய்மை பொங்கியது அவளுக்கு
வெளியே கமுக மரத் சில் இருந்துகொண்டு ஒரு காக்கை கறணம் போட்டுக் கத்தியது. மூன்று நாட்களாக இப்பிடித்தான். ஆளுல் சோமவதி ஆமினே அதைக் கவ னிக்கவில்லை ஏன் கவனிக்கப் போகிருள்? " இது என்ன * கரதர காக்கோ" என்று உரத்துக் கூறினுள் காக்காய் கத் தினுல் அவளுக்கு என்ன வரப்போகிறது? மரணமா? சரி வரட்டுமே. கிழ விதானே 1 மகன் இருக்கிருன் ஈமக்கிரியை கள் செய்வதற்கு. அதற்கு அப்புறம் நிர்வாணப் பதவி காத்திருக்கிறது! இதற்காக -? 'டக் டக்.டக்",
"யாரங்கே கதவைத் தட்டுகிறது?" எழுந்து கத வண்டை போய் அதைத் திறந்தாள். "யாரங்-???
மகன் 1 பிக்கு விமலதாஸன் தாய்க்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. பிக்கு வீட்டிற்கு வந்துவிட்டார் வீடு என்ன தவம் செய்ததோ ? பிக்குவை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தாள். விரிந்த கண்களுடன் நிமிர்ந்த தோற் றம் அகன்ற நெற்றி, வளைந்த மூக்கு எல்லாம் அவளுடைய பார்வையில் ஆயிரம் மடங்கு அழகுபெற்றுத் தோன்றின. தாய் ஒருத்தியால்தான் அப்படியான பார்வை பார்க்கமுடி யும். பிக்குவினுடைய நெற்றியை வருடுவதற்குக் கையைக் கொண்டு போளுள். ஆரூல் சட்டென்று கையை இழுத்துக் கொண்டாள். அவன் பிக்குவல்லவா? அவளுடைய மாசு படிந்த கையால் தொடலாமா ?

ー127ー
மறந்துவிட்டாளே பிக்குவின் பாதங்களைத் தண்ணி ராற் கழுவி. பட்டு வஸ்திரத்திரூல் துடைத்து பூக்கொண்டு அர்ச்சிக்க வேண்டுமல்லவா? உடனே வீட்டின் பிள் கட் டிற்கு ஒடிஞள் தண்ணிர் கொண்டுவர.
* அம்மே வேண்டாம்." திரும்பிப் பார்த்தாள் அப் படியே கல்லாய்ச் சமைந்து தின்று விட்டாள் என்ன கோல மிது! பிக்குவினுடைய காவிப் போர்வை அவருடைய கையில் கிடந்தது. கழியும் துறவின் கடைசிக் கந்தல் 1 அவன் சாதாரண சிங்கள வாலிபன் அணியும் உடையே - வெள்ளை வேஷ்டி, சட்டை, சால்வை முதலியனவே இப் பொழுது அணிந்திருந்தான்.
"அனே தெய்யனே 1 மே!" சோமவதி ஆமினேவின் தொண்டை கட்டிக்கொண்டது, தான் கட்டி வைத்திருந்த மானஸிகக் கோட்டைகள் எல்லாம் கணத்தில் தகர்த்து தவிடு பொடியானதை அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுத் தது. அதோடு ஊரார் பழி, அவமானம் - ஐயோ, இனி மற்றவர்களின் முகத்தில் விழிப்பதெப்படி? Y\,
"அம்மே, நான் என் துறவைத் துறந்துவிட்டேன்! என்னைக் கேள்விகள் கேட்க வேண்டாம் அம்மே, உள் தள்ளாத வயதில் உனக்கும் ஒரு துணைவேண்டும் அல் லவா?" பிக்கு கீழே குனிந்து நிலத்தைப் பார்த்தார்.
வெளியே, ஆகாயம் இருண்டது காற்று "ஹோ" என்று ஒலமிட்டது தென்னை மரங்கள் சேயை இழந்து விரிந்த தலையோடு புலம்பும் தாய்போலப் பேரிரைச்சலுடன் அங்கும் இங்கும் அசைந்தன.

Page 72
முதற் சம்பளம்
அன்றிரவு கைவிளக்கை உrதி அணைத்துவிட்டுத் த்ன் கரடுமுரடான பனையோலைப் பாயிற் சாயும்பொழுது பொன் னம்மா எறிந்த பெருமூச்சில் தங்கியிருந்தது அவளுடைய வாழ்வின் தத்துவமெல்லாம் பெருமூச்சு அதுதான்
M
பெருமூச்சுக்களே அவளுடைய வாழ்வின் சாஸ்வதமான ஐசுவரியம். இன்று நேற்று மட்டுமல்ல, அவளுக்கு அறிவு வந்த காலந்தொட்டுப் பெருமூச்சுக்களே அவளுடைய வாழ்க் கையை நிரப்பி வந்திருக்கின்றன. ஒருவேளை அப்பெரு மூச்சுக்கள் அவளுடன் கூடப்பிறந்தனவோ, என்னவோ.
அந்தப் பெருமூச்சோடு கல்ந்து வந்த "அப்பனே முருகா" என்ற வார்த்தைகளில் பொன்னம்மாவைப் பொறுத்தமட்டில் ஒரு விதமான அர்த்தமும் கிடையாது நாத மாத்திரையான வெறும் வார்த்தைகள்தான்
அவளுக்கு முன் அவளுடைய தாய் "அப்பனே முருகா" என்ருள். அதற்குமுன் அவளுடைய பாட்டி, இப்படிப் பரம்பரையாக வந்த பழக்கத்தினுல் பொன்னம்மாவும் அப் பனே முருகா" என்ருளே அன்றி அவளுடைய மனத்தில் அந்த வார்த்தைகள் ஒருவிதமான உணர்ச்சியையும் பெருக்க வில்லை அவைகளை வார்த்தை உருவத்திலிருந்து உணர்ச்சி உருவத்திற்கு மாற்றி அறியவும் அவள் முயலவில்லை ஒரு வேளை இளமையில் தன் வேதனையின் முதற் கடுகடுப்பில் முயன்றிருக்கலாம்
ஆகுல் இப்பொழுது தினமும் உச்சரித்து நாப்பழக்க மாகிவிட்டன அவ்வார்த்தைகள், அவ்வளவுதான்.
அந்த "அப்பனே முருகா"வைப்போல அவளுடைய பெருமூச்சுக்களும் இப்பொழுது அர்த்தமற்றுப் போய்விட் டன. இப்பொழுது அவைகளில் வேதனையின் தொணி இல்லை ஏக்கத்தின் பதைபதைப்பு இல்லை; ஏமாற்றத்தின்

- 129 -
dy Aguadau yā al-Sabah). அவையெல்லாம் PrůGUvedzr LLLLLTTTT STTLLTTLLTTTLLLLLL0 STTT SSSS LLLLLLGL S TLTTTTT போய்விடவில்லை. ஆளுல் பொன்னம்மா அவைகளைப் பொருட்படுத்துவதுதான் மறைந்து போய்விட்டது
TLTTLTLTTLTTTLS TJLLLLSS LTYGLTLTLT TLLLLLTCLL LLLLLLTT வின் ஒவ்வொரு சம்பவத்திலும், வேதனையும் ஏக்கமும் ஏமாற்றமும் இலை மறை காய் போலப் பதுங்கிக் கிடக்கின் TLTL LT TT LTTTTLLLL 00TT LLL LLTT LLTTTLTTLLLLL LTTTTTTTTTLTS LLTTLLL S LLLLLLTT S LLLT LGTTLLLLL இன்றியமையாத ஒரு அம்சம் போலக் கருத ஆரம்பித்து விட்டாள்.
அவளுக்கு அருகிற் படுத்திருந்த அவளுடைய மகன் சின்னராசாவின் மூச்சு ஒழுங்காக வந்துகொண்டிருந்தது. அவன் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான்.
பொன்னம்மாவுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் ஒருதரம் பெருமூச்சு எறிந்தாள். ஐயோ பாவம் சின்ன ராசாவுக்கு இன்னும் பதினுெரு வயதுகூட ஆகவில்லை அதற்குள் பொருள் தேடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாக நேரிட்டுவிட்டது. அவளுேடொத்த மற்றப் பிள்ளைகள் எம் லோரும் தமிழ்ப் படிப்பு முடிந்து இங்கிலீஷ் பள்ளிக்கூடத் திற்குப் போகத்தொடங்கிவிட்டார்கள். அவன் மட்டும் - LLLLLL LLLLLLT LLL0 TTTTLGTS S LTTL LLTLTLL TT TTLT வந்த பலன்.
அவள் ஏதோ சிரமப்பட்டுச் சின்னராசாவைத் தமிழ் மூன்மும் வகுப்புவரை படிக்கவைத்துவிட்டாள். தன் ஒரே குழந்தைக்கு அதாவது செய்யமுடியாவிட்டால் அவள் ஏன் தாய் என்ற முறைமை தாங்கி இருக்கவேண்டும்? தன் மகனை இங்கிலீஷ் படிக்க வைத்து அவன் காலுறை கையுறை போட்டுக் கொண்டு கொழும்புக்குப் போய் உத்தியோகம் பார்க்கவேண்டும் என்றும், அவனுடைய நிழவில் தானும் தன் தள்ளாத வயதில் கொஞ்சம் ஆறியிருக்கலாம் என்றும் ஆசைப்பட்டதுண்டு.
#;

Page 73
خ۔ 430۔ سے
மனிதர் ஆசைப்படுவதுபோல எல்லாம் முடிந்துவிடு கிறதா? ஆசைக்குத்தான் அளவில்லை. மனம் கொண்ட மட்டும் ஆசைப்படலாம், ஆசையில் தேவ இன்பங்களைக் கூடச் சுவைத்துவிடலாம், ஆணுல் நடக்கவேண்டியது நடந்துதான் தீரும். அதை அணுவளவு கூட அசைக்க முடியாது.
ஒருவேளை "அவர் ' உயிரோடிருந்தால் - ஹ9ம் ! அதைக் குறித்து எண்ணி என்ன பிரயோசனம் ? நடந்து போனவைகளைக் குறித்துத் துயரப்பட்டு ஆவது ஒன்று மில்லை.
பொன்னம்மா ஒரு நாள் ஒரு தேர்த் திருவிழாவில், யான் கரும்பு சாப்பிட்டதைப் பார்த்திருக்கிருள். ஒரு முழுக் கரும்பை ஒரு சிரமமுமில்லாமல் நாலாக மடக்கி அந்த யானை தன் அகன்ற வாய்க்குட் போட்டு அதக்கிய தைக் கண்டு அவள் ரொம்ப ஆச்சரியப்பட்டாள் அந்தக் கரும்பில் ஒரு துரும்புகூட வெளியே தெரியவில்லை. யானை யின் கடைவாய் வழியாக வந்த கருப்பஞ்சாறு ஒன்றுதான் யானையின் வாய்க்குள் கரும்பு இருப்பதற்கு அத்தாட்சி ஆமாம்; யானை வாய்க் கரும்பு போனது போனதுதான். அவள் செய்யமுடிந்தது அவ்வளவுதான். சின்னரா சாவை மூன்ரும் வகுப்பிற்குமேற் படிக்கவைக்க அவளால் முடியவில்லை. அதன் பிறகு அவன் வீட்டிற் சும்மா இருப் பதா? சும்மா இருந்தால் "கழிசறைகளுடன் சேர்ந்து கெட் டுப்போய் விடுவான். அதோடு, சாப்பாட்டிற்குத்தான் வழி ஏது? ஆதலால் அவள் தன் மகனைச் சுருட்டுத் தொழிலிற் சேர்த்துவிட முடிவு செய்திருந்தாள். காலுறை கையுறை அணிந்து உத்தியோகம் செய்வதற்குச் சுருட்டுச் சுற்றுவது ஒரு வகையிலும் ஈடாகாதுதான். ஆணுல் என்ன செய்வது?
* நாலு காசெண்டாலும் தம்பி உழைக்கட்டும்" என்று தன் மனத்தைத் திருப்தி செய்து கொண்டாள்.
யாரோ ஒருவன் தெருவழியே 'திரிலோகமும் புகழும் சுந்தரா ce. ee"...... என்று பூநீராகத்தை நீட்டி முழக்

- 131 -
கிக் கொண்டு சென்ருன், சாங்கோ ஒரு வேலியருகில் இருந்துகொண்டு ஒரு புடையன் பாம்பு "க்றொக், க்றொக்" என்று கொறித்தது. பொன்னம்மாவின் உடல் சிறிது நடுங் கியது. "ஐயோ தம்பி நாளைக்கு எப்படித்தான் சுத்துக் குப் போகப்போகுதோ எனக்குத் தெரியாது, முதல் மூத லாய்ப் போகேக்கையே என்ன நடக்குதோ.." என்று வாய் விட்டுக் கூறியபடியே, அவள் தன் போர்வையை இழந்து மூடிக்கொண்டு மறுபுறமாகத் திரும்பிப் படுத்துக் கொண் டாள்.
வைகறை, நாலு மணி நேரம். முதற் கோழி கூவிற்று. பொன்னம்மா திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள் ஐயையோ நேரமாகிவிட்டதே !
* தம்பி, எழும்படா, விடிஞ்சு போச்சு, நீ சுத்துக்குப் போகவேணுமல்லே. ம்..ம், எழும்பு".
சின்னராசா தன் உடம்பை நெளித்து முனகிஞன். சித் திரை மாதத்தில் இரவு பகல் ஓயாமல் வீசும் சோளகக் காற்று உலர்ந்து தொங்கிய பனை ஓலைகளையும் வாழை மரங் களையும், வேலிகளையும் வீட்டுக் கூரைகளையும் அசைத்துப் பெரிய “கலாட்டா " செய்து கொண்டிருந்தது.
அதன் லேசான குளிரில் கால் விரல்கள் மட்டும் வெளியே தெரியும்படி போர்வையை இழுத்து மூடிக் கொண்டு "வைகறைத் துயில் செய்தல் -" ஆ எவ்வளவு இனிமையானது. நித்திரை செய்வதிலும், நினைவிற்கும் கனவிற்கும் இடையில் உள்ள அரைத் தூக்க நிலையில் மனத்தை மாலுமி அற்ற மரக்கலம் போல் இன்பமானநினை அலைகளின் மேல் யதேச்சையாக அலைந்து செல்லவிடுதி" இன்னும் எவ்வளவு இனிமையானது 1 சின்னராசர் இப் பொழுது அந்த நிலையில்தான் இருந்தான்.
தாயாரின் குரல் அவனது தூக்கத்தைக் கலைத்துவிட் டது. மறுபடி குலைந்துபோய் இருத்த போர்வையை இழுத்து மூடிக்கொண்டான். கண் இமைகள் தாமாகவே ஒன்றை ஒன்று கல்வின. ஆஹா, இன்றைக்கு சுருட்டு வேலைக்கா

Page 74
ms 13. --
போகவேண்டும்? அவனும் தாயும் கடைத்தேறுவதற்கு அதுதான் வழிபோலும்
மூன்கும் வகுப்புப் புத்தகத்தில் வரும் துருவண்ப் போல், அவனும் தவவேடம் கொண்டு காட்டிற்குத் தவம் செய்யப் போகின் முன் - தனக்கும் தாய்க்கும் எவருக்கும் சிட்டாத பெரும்பேறு வேண்டி
gdö iš Marčių, gyauauiT aÁGŮ fiš legů ursir? அவள் எங்கோ நின்று கொண்டு காட்டிற்குப் போகும் தன் மகன்க் கண்களில் நீர் சொரியக் கூந்தல் அவிழ்ந்து விழ, வகுந்தி அழைக்கிருள்.
அடே தம்பி, எழும்படா, சான்னடா இப்படி நித்திரை, பொடியங்கள் வந்திடப் போருங்கள். போய் முகத்தைக் கழுவிப் பொட்டுவா."
ádžravTrevr AOšá0 repšg a stříšsrdit. இணிப் படுத்திருப்பதென்பது முடியாத காரியம். ஆச்சி aduerLrir.
Sir Gurfaalau also visis, Uranui (59 gos மூலையில் போட்டுவிட்டு, கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்முன் பொன்னம்மாவும் தன் படுக்கையை விட்டு எழுந்து கைவிளக்கை ஏற்றிருள். பிறகு அருகிற் கிடந்த ஒரு பாதி எரிந்த கருட்டைப் பற்றவைத்துக் கொண்டு. அடுப்பங்கரையை நோக்கிச் சென்முள். அடுப் பைச் சுத்தம் செய்து தெகுப்பு மூட்டிப் பானையில் நீர் கொதிக்க வைப்பதற்குள், சின்னராசாவும் முகம் சுழுவி நெற்றி நிறைய திருநீறும் பூசிக்கொண்டு அடுப்பங்கரைக்கு வந்து சேர்ந்தான். உடனே பொன்னம்மாள் இரவில் தண்ணிர் ஊற்றி வைத்திருந்த பழைய சோற்றை ஒரு பாத் திரத்தில் பழங் கறியோடு போட்டுப் பிசைந்து மகனுக்குத் Avtoš GarOšSrair.
Frpurg ay ng isgui pg satregn Luiari Aapu தேநீரும் முகு துண்டு பாங்கட்டியும் கொடுத்தான். சின்ன

- 133 -
ராசா வயிறு நிறைந்ததும் பலவிதமான அங்க சேஷ்டைக ளோடு ஒரு ஏப்பம் விட்டான்.
"பார்; ஊத்தைக் கந்தன. பறையன் மாதிரி, போடா, போய் தைலாப் பெட்டிக்கை ஒரு வெள்ளை வேட்டியும் Frio வையும் எடுத்து உடுத்துக்கொண்டு வா" என்முள் பொன் auri Dr.
பொழுது புலரும் சமயம், காகங்கள் சமுத்திரம் இருந்த திசையை நோக்கி ஒவ்வொன்முகப் பறந்து கொண்டிருந் தன. பொன்னம்மாவின் விட்டு araraĉio sorg 2855, பையன்கள் கூடி நின்றனர் "ாடே சின்னராசா is ay வில்லையே? "நாங்கள் போருேம் " என்ருன் ஒருவன். “ar Gu anu TAGaur QözaoGuar?" o avaivadir இன்னுெருவன்.
சின்னராசாவுக்குத் தலை சிவிக்கொண்டிருத்த Cuir air எம்மா "கொஞ்சம் பொறுங்கோ, இதோ வந்திட்டான்" என்ருள் உள்ளிருந்தபடியே. தலை சீவி முடிந்த தும் "இத்தா, தம்பி, பத்துச் சதம் தேத்தண்ணி குடிக்கிறதுக்கு வைத்துக்கொள்" என்று மகனிடம் ஒரு நாணயத்தைக் கொடுத்தாள் "சரி மேனே, நேரம் போட்டுது, போ, கவ னமாய் வரவேணும் நீவாறதைப் பார்த்துக் கொண்டிருப் Guair ......”
அவர்கள் சுருட்டுக் கொட்டகையை sjaLayláGuareggi yrauor Darfuu Tadas L-5 கருட்டுக்காரர்களிற் பலர் தங்கள் தங்கள் இடங்களில் அமர்ந்திருந்தார்கள் அவர்கள் ஒவ் வொருவருக்கும் முன்குல் பண் ஒலைப் பாய்களில் ஒவ்வொரு குவியல் புகையிலைத் தூள் இருந்தது. சின்னராசாவைச் சுருட்டுக் கொட்டகை முதலாளி தம் அருகில் வரும்படி சைகை செய்தார். “ டேய் சுட்டாள், நீயும் சுருட்டுத் தொழில் செய்யவா வந்தாய்? அதுதான் நல்லது. உங்கே எல்லாரும் இங்கிலீசைப் படிச்சுப்போட்டு என்ன செய்யி றது? தெருத்தெருவாய் அலையிறதுதான் கண்ட மிச்சம் சரி, நீ போய் அதோ இருக்கிருரே அருந்தர், அவருக்குப் பக்கத்திலே இருந்துகொண்டு அவர் கருட்டிப் GurQai

Page 75
- 134
சுருட்டுக்களை எடுத்து இந்த மஞ்சள் நூலாலை கட்டிப் போட்டு ஒவ்வொண்டாய் அடுக்கி வை. இதுதான் இண் டைக்கு உன்ரை வேலை " போ" என்றர்.
சின்னராசாவிற்கு அன்று வேலையில் அதிக நாட்டம் செல்லவில்லை. அம்மாவின் நினைவு, சோம்பேறித்தனம் முதலியன அவன் கவனத்தை இழுத்தன. அதஞல் பலதரம் புகையிலைக் காம்பினுல் அடியும் படவேண்டி நேரிட்டது ஒவ்வொரு அடியும் " சுள் " என்று தோலைப் பிய்த்துக் கொண்டு போவதுபோல்.
மாலை ஐந்து மணி சமயம் வேலை முடிந்துவிட்டது. சின்னராசாவுக்கு நாற்பது சதம் கிடைத்தது. அவன் அதைத் தன் வேட்டித் தலைப்பில் முடிந்துகொண்டான்.
வீட்டுக்கு வரும்பொழுது நன்ரூக இருட்டிவிட்டது. பொன்னம்மா விளக்கேற்றி வைத்துவிட்டு வாசலில் மகன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு நின்றுள்.
சின்னராசா தாயைக் கண்டதும் அவளைக் கட்டிக் கொண்டு அவளுடைய மார்பில் தன் மூகத்ப்ை புதைத்துக் கொண்டான், * ஆச்சி-" அதற்குமேல் அவளுல் பேச முடியவில்லை, விம்மல் தொண்டையை அடைத்துக் கொண் م التي سا
பொன்னம்மா மெதுவாக அவனுடைய தலையையும் முதுகையும் வருடினுள், " சீ வெட்கங் கெட்டவனே. இதுக் கேன் இப்படி அழுகிருய்? அதெல்லாம் வளரமுன்னுக்கு மாறிவிடும், இஞ்சை பார், நான் பிள்ளைக்குக் கொளுக் கட்டை அவிச்சு வைச்சிருக்கிறேன். போய்க் கால் முகம் கழுவிப்போட்டு ஓடியா, தம்பி எங்கையடா உன்ரை உழைப்பு? எங்கே, முடிச்சை அவிழ் பாப்பம், ஒ ! இஞ்சை றம்பத்தான்.

யாழ்ப்பாடி
அவனுடைய கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இரண்டு ஆழமான பள்ளங்கள் இருந்தன. வாழ்வின் பெரும்பேருண கண்ளுெளியை அவன் இழந்துவிட்டான்.
அவனுடைய முகத்தில் அழகு என்பது சிறிதும் இல்லை. திருமகள் அதை முழுதும் புறக்கணித்திருந்தாள். அது சுடுகாடு போலப் பாழடைந்திருந்தது. முதல் முதலாக அந்த முகத்தைப் பார்ப்பவர்களுடைய மனத்தில் அரு வருப்பு உண்டாகும்.
ஆனல் அவன் தன்னுடைய யாழைக் கையில் எடுத்து விட்டால் இந்த உடற் குறைபாடெல்லாம் கேட்போர் கண் களுக்குத் தோன்ருமல் மறைந்துவிடும். அவர்களுடைய கண்கள் தம்வேலையைச் செய்ய மறுத்துவிடும். செவிகள் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருக்கும்.
யாழ் நரம்புகளின் இயக்கம் ஒலியின் அலைகளாய், நாதக்கடலாய், இசையின் சாகரமாய், இன்பத்தின் பிரளய மாய் முடிவடையும் முடிவென்பதே அதற்கு இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அணுக்களாய் கண்டங்களாய் உலகங்களாய் அண்டங்களாய் பேரண்டங்களாய் முடி வடைகிறதோ அல்லது அப்பாலும் போகின்றதோ? யாருக் குத் தெரியும்?
அவனுடைய கண்களின் முன் எல்லையில்லாத அழகுல கங்கள் திறக்கப்படுகின்றன; அவற்றின் மே ம் பாட்டில் அவன் தன்னை இழந்து விடுகிறன். இப்பொழுது அவன் வயிற்றுச்சோற்றுக்கே அல்லற்படும் யாழ்ப்பாடி அல்ல. அழகின் கொழுந்தாய் விளங்கும் அமரனுே?
யாழோசை உச்சஸ்தாயியை அடைகிறது. அவனும் மேலே போவது போலத் தெரிகிறது; மேலே மேலே.

Page 76
- 136 -
Nasrai uts, says rair atafisii, ossrair சூசி uair, Fiš Alyaür. Surš Afrikassir as rano Gawawrdair Drui மாலையின் மந்திரம், இரவின் அதிசயம்; ஆம் வசந்தத்தின் GDressuri FTRIris Star
uðartó 2úugurar uaru 2-osti soflá • S-fá sjá கொண்டிருக்கும். செவிகளோ சும்மா கேட்டுக்கொண்டி ருக்கும். படித்தவனையும் பாமரன்யும் ஒருங்கே மதிமயங்க வைக்கும் சக்தி வாய்ந்தவை அவன் கீதங்கள்
சங்கீதம் முடிந்ததும் அவன் மறுபடி பழைய குருடன் தான். கேட்டுக்கொண்டிருந்தவர்களும் பழையபடியே கவி இலப்படும் வாழ்க்கைச் சேற்றில் கிடந்து புரளும் அற்ப மணி தர்களாகி விடுவார்கள்.
sy agp an Lu 2AZř Gasairauf, iš SJ raddö soos &rrubi, பெயர்? பெயர் கிடையாது. எல்லோரும் அவனை யாழ்ப் பாடி என்றுதான் அழைத்தார்கள். ஆளுல் அவனுடைய மனைவி மட்டும் அவனை அழைப்பது " குருட்டுப் பிணம் " என்று எந்நேரம் பார்த்தாலும், "குருட்டுப் பிணம், குருட் டுப் பிணம்" தான் அவள் அவனுடைய வாழ்வின் துர்த் தேவதை மாதிரி.
* இரண்டு காக சம்பாதிக்கமாட்டாத குருட்டுப் பிணத் திற்கு இசை என்னத்துக்கு? யாழ் என்னத்துக்கு? ஒரு தெருக்கோடியில் போயிருந்து வாசித்தாலும் யாராவது இரண்டு காசு போடுவார்கள். அதில்லாமல் எந்நேரமும் வீட்டிற்குள் குத்திக்கொண்டு யாழை வைத்துத் தட்டிக் கொண்டிருந்தால் யார் கவனிக்கப் போகிருர்கள்? சீ வெட்கமில்லை. பெண்ணுய்ப் பிறந்தவள் உழைத்து கொடுக்க குந்திக்கொண்டிருந்து சாப்பிடுவதற்கு?" -- இந்த வார்த்தைகள் அவனைத் தினமும் வைகறையில் துயி லெழுப்பும் வாசகங்கள்,
அவன் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்,ை ! அவனுக்குச் சாப்பிட்டாலும் மூன்றுதான் பட்டிவி கிடந்ா

سے 137 سے
லும் ஒன்றுதான். நினைத்த நேரம் அமரர் உலகில் ஏறி அங் குள்ள இன்பங்களைச் சுவைத்துவிட்டு வருவதற்குத்தான் இசையின் பட்டு நூலேணி இருக்கிறதே. துயரம் எங்கே? கவலைகள் ? அவை வெகுதூரத்தில் இருக்கின்றன. அவ ணுக்கு வாழ்க்கை எல்லையில்லாத ஓர் ஆனந்த நிருத்தம்.
எதற்கும் ஓர் எல்லை உண்டு - பொறுமைக்குத்தான்
யாழ்ப்பாடியினுடைய மனைவி வழக்கம்போல அன்றும் தன்னுடைய தூற்றல் திருப்பள்ளியெழுச்சியைப் பாடிளுள் கொஞ்சம் உரமாகவேதான் பாடிருள். ஒருநாளுமில்லாத வாறு அது யாழ்ப்பாடியினுடைய மனத்தில் சுறுக்கென்று தைத்தது விஷம் ஏற்றப்பட்ட ஊசிபோலத் தைத்தது. அவனுக்கே அதன் காரணம் விளங்கவில்லை,
" தொட்டுத் தாவி கட்டிய கணவனென்று கடுகளவுகூட மரியாதை காட்டக்கூடாதா ??? அவன் கூறியது இவ்வளவு தான்,
" உழைத்துப் போடுவது போதாதென்று மரியாதை வேறே வேண்டுமா ? நீ என்ன செய்வாய், பாவம்! நான் கஷ்டப்பட்டுச் சோறு போட நீ சுகமாக இருந்து சாப்பிடு கின்றப். கொழுப்பேறிவிட்டது. பார். இன்று உனக்கு." இன்னும் ஏதேதோ எல்லாம் சொன்னுள்.
அவளுடைய வார்த்தைகளை அவன் பொருட்படுத்த வில்லை. ஒருபொழுதும் பொருட்படுத்தியதில்லையே!
ஆளுல் கடைசியாக இந்த வார்த்தைகளுக்கு ஒரு முடிவு கட்டுவதுபோல வந்தது துடைப்பம்-ஆமாம் அது அதுடைப் பந்தான் - அவனுடைய உணர்ச்சி நரம்புகளைத் தட்டி எழுப்பிவிட்டது. சதா பூரணமாக இருந்த அவனுடைய பொறுமைப் பொக்கிஷம் காலியாகிவிட்டது.
வெ - 18

Page 77
- 138 =
அவனுக்குக் கோபம் வரவில்லை. அது வெகுதூரம் * இனிமேல் இவ்விடத்தில் இருக்கக்கூடாது" என்ற எண் ணந்தான் உண்டாயிற்று. s அழுக்கடைந்த சால்வையை உதறித் தோளிற் போட் டுக் கொண்டான். ஒரு கையால் யாழை மார்போடு அணைத்துக் கொண்டாள். மற்றக் கையில் ஒரு தடியை எடுத்துக் கொண்டு வெளிக் கிளம்பினுன்
எங்கே போவது? அவனுக்கே தெரியாது
ஏதோ வைராக்கியத்தில் போகிறன். வயிற்றில் பசி கடித்தவுடன் திரும்பி வருவான் " என்று மனைவி நினைத் தாள். ஆணுல். அவன் திரும்பி வரவேயில்லை.
அதன் பிறகு அவனை இலங்கையில் பார்க்கிருேம், இந்த வறிய குருடன் எப்படிக் கடலைக் கடந்து இலங்கையை அடைந்தான் என்று யாருக்குமே தெரியாது. "வந்து சேர்ந்தான்" என்று மட்டுந்தான் இலங்கைச் சரித்திரம் கூடச் சொல்லுகிறது.
அக்காலத்தில் இலங்கையின் தலைநகராகிய அநுராத புரத்தில் வாலகம்பா என்னும் சிங்கள மன்னன் செங்கோ லோச்சி வந்தான். h
அவன் ஓர் இசைப் பித்தன் அவனே பெரிய இசை வல்லுநன் அவனுக்கு இசையென்ருல் போதும்; வேமுென் றுமே வேண்டியதில்லை. இசைப் புலவர்கள் வேண்டினல் தன்னையே அர்ப்பணம் செய்துவிடக்கூடிய வள்ளல் அவன். இந்தியா, பர்மா, சீயம் முதலிய தேசங்களிலிருந்தெல்லாம் இசைப் புலவர்கள் அவனை நாடி வந்தார்கள். அவர்களு டைய கான வலையில் சிக்கிய மன்னன் அவர்களுக்கு யானைத் தந்தம், முத்து, ரத்தினங்கள் முதலியவற்றைப் பரிசாக வழங்கினுன்
அந்தக் குருட்டு யாழ்ப்பாடியும் அவ்வரசன் நாடி வத் தான். பரிசில் பெறவா? இல்லை; அது அவனுடைய

as 139 -
நோக்கமன்று. மன்னன் மகிழ்வதைக் கண்டு தாறும் மகிழ வேண்டும்; அதுதான் அவனுடைய ஆசை.
வேத்தவையில் இருந்தவர்களுடைய மனத்தில் யாழ்ப் பாடியைப் பற்றி ஓர் அலட்சியமான நினைவு எழுந்தது. " இந்தக் குருடனுக்கு என்ன இசை தெரியப்போகிறது! இவனைப் பார்த்தால் தெருவில் பிச்சைக்கு யாழ் வாசிக்கும் நாடோடி போலல்லவோ இருக்கின்முன்? யாரிடத்திலா வது சிகூைடி பெற்றுக்கொண்டாணு? இவனுடைய பாமர சங்கீதத்தை, இசைக் கடலைக் கரைகண்ட எங்கள் அரசன் ாங்கே ரசிக்கப் போகிருன்? பொருளாசை பிடித்து விணுக அலைகிருன் ' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
ராஜ குருவின் ஆஞ்ஞைப்படி அரசனுக்கும் அந்தக இறுக்கும் இடையில் ஒரு தடித்த திரை போடப்பட்டது: கண ணரிழந்தவன் முகத்தில் விழித்தால் அரசனுக்கு அதிர்ஷ்டக் குறைவாம்"
திரைக்கு ஒரு பக்கத்தில் யாழ்ப்பாடி யாழைச் சுதி கூட் டித் தயாராக வைத்துக்கொண்டிருந்தான். மற்றப் பக்கத் தில் அரசன் போர்க் கோலத்தோடு தோன்றினன். தனக்கு முன்ஞல் ஒரு வீரன் நிற்பதாக யாழ்ப்பாடி அறிந்து விட் டான். எப்படி? அது அவனைத்தான் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாடி யாழ் நரம்புகளைத் தெறித்தான். அந்த ஸ்வ ரங்களில் ஒரு எழுச்சி, ஒரு மிதப்புக் காணப்பட்டது. காம் பீரியமும் அகங்காரமும் அவற்றில் தொணித்தன. நாதம் மேலே மேலே போகிறது.
'யானைக் கூட்டத்தில் ஆண் சிங்கம் போன்குள் அர சன் அவனுடைய கால்களிற் கட்டிய வீரக் கெண்டை மணியின் ஓசையே பகைவர்களை நடுங்கச் செய்கிறது. அவ னுடைய வெற்றி விறலைக் கேட்டு மருட்சியடைந்து நாலா பக்கமும் சிதறியோடுகிறர்கள். கோடையிடிபோல் முழங்கு

Page 78
som 140 m
கிறது அவனுடையவில் வளையின் நாதம் தீயாயும் சண்ட் மாருதமாயும் பாணங்களைச் சொரிகிருன்,
" சற்றுமுன் படைத் திரளால் நிறைந்திருந்த அமர்க் களம் இப்பொழுது பிணத் திரளாகி நிறைந்து கிடக்கிறது. ரத்தம் ஆறுபோல் ஓடுகிறது நாய்களும் பேய்களும் "நான் முந்தியோ, நீ முந்தியோ" என்று சண்டையிடு கின்றன, அந்த விருந்தை உண்பதற்கு
* அரசனுடைய வெற்றிச் சங்கநாதம் வான்ப் பிளக் கிறது. வீரலட்சுமி அவனைச் சரணடைகிருள்."
யாழொலி ஓய்ந்துவிட்டது. ஆஞல் அவன் எல்லோர் மனத்திலும் எழுப்பிவிட்ட போர்க்களக் காட்சிமட்டும் இன் தும் மறையவில்லை. பித்துப் பிடித்தவர்கள் போல் உட் கார்ந்திருக்கிருர்கள் சபையோர்கள்.
மறுபடியும் அரசன் திரைக்கு அப்பால் தோன்றுகி ரூன் ராணியின் உடையில். யாழ் நரம்புகள் பழையப இயங்குகின்றன. ஆளுல் இம்முறை மென்மையாக-ஆ எவ்வளவு மென்மையாக இருக்கிறது அந்த இசை !
* அன்னத்தின் நடை, மயிவின் ஆடல், கோகில தின் தொனி, சந்திரனின் குளிர்ச்சி, அனிச்ச மலரில் மென்மை-ஆமாம் ! தாமரையின் மலர்ச்சி - இவையெ4 லாம் பிறக்கின்றன அந்த யாழோசையில்.
* அரசி காதல் நோயால் வருந்துகிருளா? நக்ஷத்திரங் கள் மின்னும் எல்லையில்லா வானத்தையும்விட எல்லையற்று இருக்கிறதா அந்தக் காதல் ? நீலக் கடலைவிட ஆழ Le Tours r?
* எத்தனை இரவுகள்தான் காதலனுடைய பிரிவிரூல் இப்படி விரக வேதனைப்படவேண்டும் ? அவனுக்கு இரக்க மென்பது சிறிதுமில்லைப் போலும் சூரியன் ஒரு தினம் உதிக்காவிட்டால் கமலமலரின் மெல்லிதழ்கள் வாடிச் சோர்ந்து போகாவா ?

in 14 a
அதோ, அதோ, அவனுடைய தேரிற் கட்டிய மணி களின் ரசை. மழையில்லாமல் வாடி வதங்கிக் கிடக்கும் நெற்பயிருக்குச் சூல்கொண்ட மேகத்தின் முழக்கம் போலல் avar () nă d90. "
யாழ்ப்பாடி யாழைக் கீழே வைக்கிருன். கரகோஷம் செய்ய கற் குக்க ஒருவரிடமும் சுய அறிவு இல்லை. மது அ1, 1, 1.4 மத்திகள் போல எல்லோரும் மதி மயங்கிக் கிடக் a all
அர சறுக்கு மனம் பூரித்துவிட்டது. அவன் மானசீக மாக அதுபவித்த போர்க்களக் காட்சியும் காதற் காட்சியும் இாபா மும அவன் கண்களின் முன் நிற்கின்றன மானிட உருகல வந்த கந்தர்வணு இவன்!" என்று அதிசயிக்கிருன்.
இலங்கையின் ஒரு பகுதியான மணற்றிடல் " என்ற தீவை யாழ்ப்பாடிக்குப் பரிசிலாக வழங்கினன்.
யாழ்ப்பாடி அதில் தன் இனத்தவர்களைக் கொண்டு வந்து குடியேற்றி, காடுகெடுத்து நாடாக்கிக் குளம்தொட்டு வளம் பெருக்கினன் என்று இலங்கைச் சரித்திரம் கூறுகின்
D5.
அந்த மணற்றிடல்தான் இப்பொழுது யாழ்ப்பாணம் என்று வழங்கப்படுகிறது.

Page 79
சிகிரியா
இருவரும் ஒரே தந்தையிடத்தில் ஜனித்த புத்திரர்கள். ஆணுல் அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இடையில் அமிர்தித்துக்கும் விஷத்துக்கும் இடையில் உள்ள வித்தியா சீம் இருந்தது.
வெள்ளை மனம் என்று சொல்லுவார்களே, அப்படி இருந்தது முகாலனுடைய உள்ளம். சாந்தமும் தயையும் அவனுடன் கூடப் பிறந்த குணங்கள். மன்னுயுரைத் தன்னுயிர்போல மதித்துப் பேணும் கருணை வள்ளல் அவன். அவனுடைய கோமள, ஹிருதயத்தில் பொருமை. அதுவேஷம் முதலிய துர்க்குணங்களுக்கு இடம் இல்லை. ஆனல் அவனுடைய தம்பி காசப்பன் அவனுக்கு முற்றும் மாறனவன். அண்ணனிடத்தில் இருக்கும் ஒவ்வொரு நல்ல அம்சத்துக்கும் நேர்மாருள கெட்ட அம்சம் தம்பி விடத்தில் சரிவரப் பொருந்தியிருந்தது.
தந்தை தத்துசேனனுக்கும் இதன் மர்மம் விளங்க வில்லை. முகாலன் பட்ட மகிஷியின் வயிற்றில் பிறந்தவன் என்பதும் காசப்பன் இரண்டாம் ராணியின் வயிற்றில் பிறந் தவன் என்பதும் உண்மையே. ஆளுல் அதற்காக இவ்வ ளவு வித்தியாசமா !
காசப்பனுடைய துர்க் குணங்களை மூளையிலேயே களைந்துவிடவேண்டுமென்று தந்தையும் எவ்வளவோ UAG பட்டான். போதனைகள் சாதனைகள் எவையும் பயனளிக்க வில்லை. பெரிய தவசீலரும் அறிவாளியுமான மகா விஹா ரைப் பிரதம பிக்கு தன் மற்ற அலுவல்களைக்கூடப் புறக் கணித்துவிட்டுப் புத்தபெருமான் அருளிச் செய்த அறவாச கங்களையும், அவருடைய முற்பிறவிகளின் லீலைகளைக் குறிக் கும் ஜாதகக் கதைகளையும் பிழிந்து எடுத்துக் காசப்பனுக் கென்றே பிரத்தியேகமாகச் செய்த போதனைகள் எத்தனை !

- 143 -
ால்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆயின. தந்தையின் துயரம் மிகுந்தது. காசப்பனே முகாலனுடன் சேர்ந்து பழகவிடுவதே அபாயமாகப்பட்டது; பன்றியுடன் சேர்ந்த கன்றின் கதையாகிவிட்டால் ?
பிள்ளைகள் இல்லாமல் இருந்து விடலாம்; அதஞல் பாதகம் இல்லை, மலடன் என்ற மற்றவர்கள் பழிப்பார்கள். அவ்வளவுதான். ஆளுல் ஒரு துஷ்டப் பிள்ளை பெறுவது . ஐயையோ என்ன தீவினையின் விளைவோ
தத்துசேனனைப் போன்ற ஒரு தர்ம சொரூபிக்கா இப்ப டிப்பட்ட துஷ்டப் பிள்ளை பிறக்கவேண்டும்! அவனுடைய மனம் உழைந்தது குலம் கோத்திரம் இல்லாத பாண்டி நாட்டு வீணர்கள் சிலரின் அக்கிரம ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்த இலங்கையை, அருஞ்சமர் புரிந்து மீண்டும் ஒரு சுதந்திர நாடாக்கி, அது மேன்மை உறுதற்கு வேண்டிய முயற்சிகள் எல்லாம் குறைவறச் செய்தவனல்லவா தத்து சேனன்? இலங்கா தேவியின் பணியே அவனுடைய வாழ்வின் முதற்பணி அன்ருே ?
தமிழர்களின் பாராமுகத்தினுல் சோபை குன்றி மங்கிப் போயிருந்த புத்த சமயத்தை மறுபடி தளிர்த்தோங்கச் செய் வதற்கு அவன் எவ்வளவு பாடுபட்டாள் அவன் கட்டிய விஹாரைகளுக்கும் தூபிகளுக்கும், வட இந்தியாவிலிருந் தும் பர்மாவிலிருந்தும் வருவித்த பிக்குகளைக் கொண்டு அவன் நிறுவிய சங்கங்களுக்கும் ஒரு கணக்கு உண்டா?
அவை ஒருபுறம் இருக்கட்டும் விவசாயியின் ஜீவ நாடியே நாட்டின் ஜீவநாடி என்ற நுண்ணிய உண்மையை உணர்ந்து, விவசாயம் பரவி ஒங்குவதற்காக தத்துசேனன் காலவாவி முதலிய பல ஏரிகளையும் கால்வாய்களையும் நிறுவினுள். இந்த ஒரு சேவைக்காக இலங்கை மக்கள் என்றென்றும் அவனுக்குக் கடமைப்பட்டவர்கள். அவ னுடைய கீர்த்தி இலங்கை மக்களின் உள்ளங்களில் என்றும் அழியாது நின்று நிலவுதற்குக் காலவாவி என்ற அந்த ஒரு சாதனமே போதுமே

Page 80
- 144
இவ்வளவு தொண்டுகளெல்லாம் இயற்றியதன் பலன், இந்தத் துஷ்டப் பிள்ளை 1 “தர்மம் 1 அதெல்லாம் வெறும் பசப்பு வார்த்தை 1" என்றுகூட அவனுடைய மனம் சலிப் படைந்தது.
முகாலன், காசப்பன் ஆகிய இருவரும் வளர்ந்து வாலிய தசையை அடைந்தனர். தத்துசேனனுக்கு முதுமை வந்து எய்தியது. இனி முகாலனுக்கு முடி சூட்டிவிட்டுத் தான் ராஜாங்க அலுவல்களினின்றும் விலகிக் கவலையில்லாமல் மரணத்தை எதிர்நோக்கி இருக்கலாம் என்ற நினைப்பு அவனுக்கு.
இந்த ஏற்பாடு காசப்பனுக்குப் பிடிக்கவில்லை. அவன் நெஞ்சில் பொருமைக் கணல் மூண்டு எரிந்தது. முகாலன் ஏறுகிற சிம்மாசனத்தில் தான் ஏறினுல் ஆகாதோ என்று அவன் வெம்பினுன். அதோடு முகாலனுக்குக் கொடுப்பதற் காகத் தந்தை எங்கோ ஒரு மறைவிடத்தில் திரவியம் சேமித்து வைத்திருக்கிருன் என்றும் யாரோ அவனுக்குத் தகவல் தெரிவித்து விட்டார்கள்.
ஆகவே காசப்பன் தன்மைத்துனனுகிய சேணுதிபதியுடன் சேர்ந்து இவ்விஷயங்களைக் குறித்துச் சதியாலோசனை. செய்தான் பண்டை இராச்சியங்களில் அரசனுடைய பலம் முழுவதும் சேணுதிபதியின் கையிலேயே அடங்கியிருந்தது. சேனதிபதி பகைத்தால், அரசன் கதி அதோ கதிதாள்.
சதியாலோசனையின் விளைவாக ஒருநாள் கா சப்பன் சூழ்ச்சி செய்து தன் கிழத் தந்தையைப் பிடித்துக் காராகிரு கத்தில் அடைத்து விட்டான். தத்துசேனன் இதை எதிர் பார்த்திராதபடியால் அவனுல் இதைத் தடுப்பதற்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. அதோடு சேணுதிபதியானவன் காசப் பனின் சார்பாக இருந்தான் !
முகாலனும் சக்தியற்றவணுகிவிட்டான். தந்தை யை மீட்பதற்கு அவனுக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. ஒரு

- 145 -
வள் தனியாக நின்று என்ன செய்ய முடியும் ? ஆகவே ஒரு படை திரட்டிக் காசப்பனுடைய துராக்கிருதத்துக்கு ஓர் எல்லை தேடுவதற்காக அவன் தென்னிந்தியாவுக்குச் சென்றன்.
அரியிருந்த ஆசனத்தில் நரியிருந்தது என்று ஒரு பழமொழி சொல்வார்களே, அப்படி இருந்தது காசப்ப னுடைய ராஜ்யம் அவன் செய்த கொடுமைகள் அளவிறந் தன. புதுப்புது விதமான வரிகள், தர்மத்திற்கு மாறன தீர்ப்புக்கள் அரசசேவகர்களின் வழிப்பறி, பலவந்தம் முத லிய அநியாயங்கள். இவற்றல் "அப்பப்பா, தமிழ் ராஜ்யம் எவ்வளவோ மேலானது 1" என்று சிங்கள மக்கள் நினைக் கும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது.
காசப்பன் காராகிருகத்தில் அடைபட்டுக் கிடந்த த்த் துவசேனனுக்கு ஓயாத தொந்தரவு கொடுத்துக் கொண்டு வந்தான். அந்தத் திரவியத்தைப் பற்றிய நினைப்பு இன் னும் அவன் மனத்தைவிட்டு அகலவில்லை. அது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்து விடுவதற்காகத் தத்துவசேனனுக்கு அவன் இழைத்த துன்பங்கள் கணக் கற்றவை.
ஒரு நாள் தானே தந்தையைக் கேட்டு அதற்கு ஒரு முடிவு தேடுவது என்று நினைத்துக் காசப்பன் காராகிரு கத்திற்குட் பிரவேசித்தான். அத்தருணத்தில் தத்து வ சேனன் சுவரில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாக ஏக் கம் நிறைந்த கண்களோடு வானத்தைப் பார்த்துக்கொண் டிருந்தான், அவனது உடல் மெலிவுற்று, எலும்புகள் அங்கங்கே வெளிக்காட்டிக்கொண்டிருந்தன கதவு திறந்த அரவத்தைக் கேட்டதும் தன் கண்களை மெதுவாக வாசற் பக்கம் திருப்பி அங்கே புலிபோல மூர்க்கத்தோடு நின்று கொண்டிருந்த காசப்பனைப் பார்த்தான்.
" இதுதான் நான் உனக்குக் கடைசியாகக் கொடுக்கும் தருணம். இப்பொழுதாவது அந்தத் திரவியத்தை ஒளித்து
19 – نهم

Page 81
- 146 -
வைத்திருக்கும் இடத்தைக் கூறிவிடு. இல்லாவிட்டால்." சன்று ஒரு குரூர அர்த்தத்தோடு நிறுத்தினுன் காசப்பன்.
* திரவியம் இருந்தாலல்லவோ கூறமுடியும்? அப்பா, என்னை ஏன் இப்படிச் சித்திரவதை செய்கிருய்? என் ராஜ்யத்தைக் கவர்ந்தாய்; என் சுதந்திரத்தைக் கவர்ந்தாய். அவை எல்லாம் போதாவா ? என் உயிரையும்."
"நீ சொல்வதை நாள் நம்பவில்லை என்று எத்தனை தரம் படித்துப் படித்துச் சொல்வியாகிவிட்டது 1 ம்..ம். வீரூக ஏன் சாவைத் தேடிக்கொள்கிருய்?"
மூர்க்கனும் முதலையும் பிடித்த பிடியை விடா, வாதாடு வதால் என்ன பயன்? தத்துவசேனனுடைய மனத்தில் தான் சிறைபுகுந்த நாள்முதல் ஒரு பெரிய ஆசை இருந்து வந்தது. அந்த ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற தருணம் வாய்த்திருக்கிறது. அதை நழுவவிடக்கூடாது என்று அவன் நினைத்தான்.
* சரி காசப்பா, அந்த இடத்தைத் தெரிவிக்கிறேன் ஆணுல் அதற்கு முன் நான் செய்யவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது"
* என்ன அது ?"
* காலவாவியில் நான் ஒருமுறை-கடைசிமுறை நீராட வேண்டும் அவ்வளவுதான். அதன் பிறகு திரவியம் இருக்கும் இடத்தைக் கூறுகிறேன்."
வேல் தாங்கிய காவலர் இருமருங்கும் வரத் தத்துவ சேனன் காலவாவிக் கரையை அடைந்தான், அதன் நீர் ஸ்படிகம் போலத் தெளிந்து கண்ணுக்கெட்டாத தூரம் வரை பரந்து கிடந்தது. அதைக் கண்டதும் மன்ன னுடைய கண்களில் நீர் நிரம்பியது. அவனுடைய வாழ் வின் பெரிய  ைகங் கரிய மல்லவா அது தன் பிள்ளை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் வளர் அதைப் பார்த்து மகிழும் தந்தைபோல, முன்னெல்லாம்

ബ് 147 =
அது நாளுக்கு நாள் ஆழ்ந்து அகன்று வளர்வதைக் கண்டு பூரிப்படைந்து வந்தவனல்லவா
தத்துவசேனன் தன் மனம் கொண்டமட்டும் அந்த வாவியில் மூழ்கி மூழ்கி ஸ்நானஞ் செய்தாள். அதை விட்டு வெளியேற அவனுக்கு மனம் வரவில்லை, இறப் usb35 ysi nunrony ay aus for T at WT ?
கரையோரத்தில் நின்றவாறு காசப்பன் தந்தையைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தான். ஆணுல் தத்துவ சேனன் வெளியேறுவதாகக் காணவில்லை. காசப்பனுக்கு ஆத்திரம் வந்கது. தந்தையை வெளியே இழுத்து வரும் படி காவலர்க%ா ரவிஞன்.
தத்துவசேனன் அஞ்சவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் சாவது நிச்சயம். அவன் கரையில் நிற்கும் காசப்பன் அலகூழியமாகப் பார்த்தான்.
" அடே பாவி, உனக்குத் திரவியமா வேண்டும்? அற் பப் பதரே! என் திரவியம் எது என்பதை நீ இன்னும் அறிந்துகொள்ளவில்லையா ? இதுதான் என்னுடைய திர வியம் !" என்று கூறி, தத்துவசேனன் தன் இரண்டு கை களாலும் காலவாவியின் தெளிந்த ஜலத்தை அள்ளிக் காசப்பனை நோக்கி வீசிஞன். ** இதுதான் என் திரவியம் சம்பத்து, வாழ்வு எல்லாம் !" என்று கூவினுள்
காசப்பனுடைய கண்கள் நெருப்பைக் கக்கின. தான் செய்வது என்ன என்பதே அவனுக்குத் தெரியவில்லை. அவ்வளவு ரெளத்திரம்
* அடம்பிடித்த கிழவனைக் கொண்டுபோய் உயிரோடு குழிவெட்டிப் புதையுங்கள் !" என்று தன் காவலர்களுக்கு உத்தரவிட்டான்.
அவனுடைய கட்டளை ஓர் அக்ஷரம் பிசகாமல் நிறை
வேற்றப்பட்டது.

Page 82
سه 143 سد
தான் செய்த பாபத்தின் பலனைத் தானே அநுபவித் துத் தீரவேண்டும். இந்த நியதிதான் பிறவிச் சக்கரத் தைக் கொண்டு இயக்கும் சக்தி, அதுவும் பஞ்சமாபாத கங்களுள் தலையாய கொலை என்ருல் அப்பப்பா ! அதன் விளைவுகளை எப்படிக் கூறமுடியும் ?
காசப்பனுடைய வாழ்க்கை கோரமான நரகம் போல் ஆகிவிட்டது. அவன் சுய அறிவோடிருந்த ஒவ்வொரு கணமும், நரகமுள் கொண்டு துளைக்கும் ஒவ்வொரு வேதனை மாதிரி இருந்தது. அவனுடைய மனம் கொதிக் கும் எண்ணெய்க் கொப்பறை போல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவனுடைய மனச்சாட்சியே பயங்கர மான உருவங்கொண்டு அவனைச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது. w Y
அதோடு பிரஜைகளின் வஞ்சத்தின் பயம் வேருெரு புறம், தர்மமே ஒரு வடிவு கொண்டது போன்ற தத்துவ சேன மன்னனை அநியாயமாகக் கொலை செய்த பாபியா தங்களை ஆள்வது என்ற எண்ணம் உதித்தது மக்களுக்கு. அதன் காரணமாக அநுராதபுரத்திலும் மற்றும் பல இடங் களிலும் கலகங்களும் சச்சரவுகளும் தலையெடுத்தன.
இனி, இந்தியாவுக்குப் படை திரட்டுவதற்காகச் சென்ற முகாலன் எந்தக் கணத்தில் திரும்பி வருவான் என்று கூறமுடியாமல் இருந்தது. அவன் மட்டும் வந்துவிட்டால் காசப்பனின் கதி அதோகதிதான். முகாலன் கொண்டு வரும் படையின் பலம் ஒருபுறமிருக்க, பிரஜைகள் எல் லோரும் அவன் பக்கம் சேர்ந்து விடுவார்கள்.
இந்த விஷயங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து காசப்ப றுடைய மனத்தில் பெருந்திகிலை உண்டுபண்ணின. அநு ராதபுரத்தில் வாசம் செய்வதே அபாயமெனப்பட்டது. ஆளுல் அவன் இலங்கையின் அரசன் ஆயிற்றே ராஜ தானியைப் புறக்கணித்துவிட்டு வேறு எங்கே போவது ?

عسے 149 سے
ஆம் ஒரே ஒருவழிதான் இருக்கிறது, ராஜதானிமை அநுராதபுரத்திலிருந்து வேறெங்காவது மாற்றி விட வேண்டியதுதான். கடந்த எண்ணுறு ஆண்டுகளுக்கு மேலாக அநுராதபுரமே இலங்கையின் ராஜதானியாக இருந்திருக்கிறது. புத்தமதம் வளர்ந்ததும், இலங்கை ராஜரிகம் ஓங்கியதும் அங்கே தான். இலங்கையின் பண்டை மேன்மையை உலகோர்க்கு எடுத்துக் காட்டும் விஹாரைகள், தூபிகள், ஆலயங்கள். நந்தவனங்கள், குளங்கள் முதலிய ஞாபகச் சின்னங்களெல்லாம் அங்கே தான் இருக்கின்றன. இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டுப் போக வேண்டியிருப்பது காசப்பனுக்குச் சிறிது மனவேதனையைக் கொடுத்தது. ஆணுல் அவனுடைய உயிரைவிடப் பெரியனவா இவை யெல்லாம்?
ஆகவே, அவன் தன் ராஜதானியைச் சிகிரியா என் றும் சிங்ககிரி மலைக்கு மாற்றினுள். கீழே நின்று பார்த் தால் அந்த மலை ஒரே செங்குத்தாகத் தெரியும். ஒரு பெரிய சமவெளியில் அந்த மலை தனியே ஒய்யாரமாகத் தலையெடுத்து நிற்கின்றது. அந்த மலையின உச்சியில் காசப்பன் தன் மாளிகையை ஆலயம் மதில்கள் முதலிய வற்றை ஸ்தாபித்தான்.
அந்த மலையைப் பார்ப்பவர்களுக்கு, அதன் மேல் கோட்டை கட்டிய காசப்பனுடைய ஒன்றுக்கும் கலங்காத நெஞ்சத்தின் தன்மை தெரியவரும் ஒருவேளை அது பயத் தையே அடிப்படையாகக் கொண்ட தைரியமாக இருக்க லாம். அந்த மலையின் உச்சியை அடைவதற்குக் காசப் பன் ஒரு படிக்கட்டு அமைத்தான். அதன் அமைப்பைக் கண்டு இக்காலத்திய கட்டிட நிபுணர்கள் கூட ஆச்சரி யம் அடைகின்றனர்.
அந்தப் படிக்கட்டு மலை உச்சியை அடையும் இடத்தில் பெரிய சிங்கச் சிலை ஒன்றை அமைத்தான். அதனுல்தான் அந்த மலைக்குச் சிங்ககிரி, சிகிரியா என்ற இரு பெயர்கள் . உண்டாயின. அந்தச் சிங்கத்தின் முன்னங்கால்களுக்

Page 83
است 150 ست
கூடாகச் சென்ருல் கோட்டையின் உட்புறத்தை அடைய லாம். அந்தச் சிங்கத்தின் பாதங்களை இப்பொழுதும் காணலாம்,
மலையின் உச்சியிலே, தன் மாளிகையையும் பூஞ்சோலை களையும் ஜலக்கிரீடை செய்யும் இடங்களையும் அமைத்தான். இவ்வாறு பல தற்காப்பு முறைகளெல்லாம் செய்து முடித்த பின் காசப்பனின் மனம் சிறிது சமாதானம் அடைந்தது. வெளிப் பயம் ஒருவாறு ஓய்ந்துவிட்டாலும், அவனுடைய அந்தரங்க உள்ளம் நீறுபூத்த நெருப்பைப் போல உள்ளே கனன்று கொண்டிருந்தது.
எத்தனையோ நற்கருமங்கள் எல்லாம் செய்து, தன் அந்தராத்மாவில் எரியும் கழிவிரக்கம் என்னும் ஜுவாலை யைத் தணித்துக்கொள்ள முயன்றன்.
அவனுடைய உள்ளம் அழகுணர்ச்சி வயப்பட்டது. நீண்டு படர்ந்திருக்கும் பசும் புற்றரைகளிலும், தொலைவில் ஒய்யாரமாகத் தலைதுாக்கி நிற்கும் மலைத் தொடர்களிலும், சலசலவென்று பண்மிழற்றிப் பாயும் வெள்ளி அருவிகளி லும், மெய்ம் மறந்து மோகனப் பாட்டிசைக்கும் பட்சி ஜாலங் களிலும் அவன் மனம் சஞ்சரித்து மகிழ்வெய்தியது.
அவனை முற்றும் கொள்ளை கொண்ட இந்த அழ குணர்ச்சியின் விளைவாக அவன் இயற்றி வைத்த சின்னம் ஒன்று இப்பொழுதும் அழியாமல் இருக்கிறது. அதை மேல் நாட்டவரும் கீழ் நாட்டவரும் வந்து தரிசித்துப் புகழ்ந்தவண்ணமாகவே இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றும் அந்தச் சின்னம் அதே ஜீவ களையோடு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
அதுதான் சிகிரியா மலைமேல் இருக்கும் சித்திரச் சுவர். அந்தச் சித்திரங்களில் நாம் காணும் அப்ஸர ஸ்திரிகளின் முகங்களில் இன்றும் அதே காதற் களையும் இன்பக் களையும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.

ഞ്ഞ 151 -
இந்தியாவின் வடபாகத்தில் உஜ்ஜயினி வரையில் பரந் திருந்த ஆந்திர ராஜ்யம் கி. பி மூன்ரும் நூற்றண்டளவில் தன் செல்வாக்கை இழந்துவிட்டது. ஆணுல் ஆந்திரர்கள் இயற்றி வைத்த சித்திரச் செல்வங்கள் மட்டும் அழியாமல் இருந்தன. அஜந்தா குகைச் சித்திரங்கள் எல்லாம் ஆந்தி ரர் காலத்தில் உண்டாயினவே. சிகிரியாவில் காணப்படும் சித்திரங்களுக்கும், அஜந்தாக் குகைச் சித்திரங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.
சிகிரியாச் சித்திரங்களை வரைந்தவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. அஜந்தா முதலிய இடங்களுக்குச் சென்று சித்திரக் கலை பயின்று வந்த சிங்களவர்கள் வரைந் தார்களோ, அல்லது இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட சித்திரக்காரர்கள் வரைந்தார்களோ, எவர் என்பதுமட்டும் தெரியவில்லை. அது எப்படியாயினும் சிகிரியாச் சித்திரங் கள் காசப்பனுடைய இருண்ட வாழ்க்கையின் ஓர் ஒளிப் பிழம்பு போல விளங்குகின்றன.
ஒருநாள் திடீரென்று இந்தியாவிற்குச் சென்றிருந்த முகாலன் ஒரு பெரும் படையோடு இலங்கையில் வந்து இறங்கினுன். காசப்பனுடைய சேனை முகாலனை எதிர்த்தது.
ஆணுல் பிரஜைகளின் அநுதாபம் முகாலனுக்கே கிடைத்தது. அதோடு அவனுடைய படையும் மிகத் தேர்ச்சி பெற்றதாக இருந்தது.
அதனுல் காசப்பனுடைய படை சின்னபின்னமாக்கப் பட்டது.
காசப்பனுக்குத் தோல்வியை ஒப்புக்கொண்டு வாழ் வது நல்லதாகக் காணப்படவில்லை. ஆகவே முகாலன் சிகிரியாவை அணுகு முன்னரே அவள் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டான்.
முகாலன் ராஜதானியைப் பழையபடி அநுராதபுரத் துக்கு மாற்றி நல்லரசு புரிந்தான்.
morwrpogress

Page 84
வெளிவந் ቃ நூல்கள்
1.
一司0闰一
மாதவி மடந்தை
மிஸ்டர் குகதாஸன்
முதற் காதல்
வெள்ளிப் பாதசரம்
(நாடகம்)
(நாடகம்)
(கதை)
(கதைகள்)


Page 85