கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செகராசசேகர வைத்தியம்

Page 1


Page 2


Page 3

6f5TrSFEGJ GUNGlöglub
பதிப்பாசிரியர்: ஐ. பொன்னையாபிள்ளை
வெளியீடு:
மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், சுகாதார அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம்.

Page 4
செகாசசேகர வைத்தியம்
முதற் பதிப்பாசிரியர்
மீள் பதிப்பு
ஆண்டு
பிரதிகள்
பக்கங்கள்
அட்டைப் படம்
அச்சுப் பதிப்பு
ஐ. பொன்னையாபிள்ளை.
மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், சுகாதார அமைச்சு வ.கி.மா.
2000.
1000.
Xνi + 227.
ச. அ. அருள்பாஸ்கரன்.
பதிப்பகத்திணைக்களம், வ.கி.மா.
SEKARASASEKARA VYTHYAM
FIRST PUBLISHING EDITOR
RE PRINTING
YEAR
COPES
PAGES
COVER DESIGN
PRINTED BY
PONNAHPLLA.
PROVINCIAL DEPT OF INDEGENOUS MEDCNE MINISTRY OF HEALTH N.E.P.
2000.
1000.
Xvi -- 227.
S. A. ARULBASKARAN.
PRINTING DEPARTMENT, N.E.P.

ஆளுநர் உரை
Լ160)լքu l வைத்திய முறைகளையும், மருந்து வகைகளையும் தன்னடக்கிய அழிந்தொழிந்து கொண்டிருக்கும் கிடைக்கரிய விலை மதிக்க முடியாத புத்தகங்களை மீள் பதிப்புச் செய்யும் கைங்கரியம் வரவேற்கத்தக்கது. பாராட்டுதற்குரியது. இந் நூல்கள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஏனையோருக்கும் பயன்படும் முறையில் ஆவன செய்யவேண்டும்.
இவ்வாறே கிடைப்பதற்கரிய ஏனைய புத்தகங்களும் தேடிக் கண்டுபிடித்து அச்சேற வழிவகுக்க வேண்டும். இப் பணியினை வடக்கு - கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மேற்கொண்டிருப்பது சாலப் பொருந்தும்.
ஏ. கே. ஜயவர்த்தனா,
ஆளுநர், வடக்கு - கிழக்கு மாகாணம்.
iii

Page 5
வாழ்த்துரை
சித்த ஆயுள்வேத மருத்துவ சம்பந்தமான நூல்கள் பல இலங்கையில் தோன்றியுள்ளன. அவற்றைப் பல மருத்துவ அறிஞர்கள் பதிப்பித்து வெளியிட்டுமுள்ளனர். அப்படியான நூல்களில் பரராஜசேகரம், செகராஜசேகரம், சொக்கநாதர் தன்வந்திரியம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், அமுதாகரம் என பல வைத்திய நூல்கள் அடக்கம்.
இன்று முன்பு வெளிவந்த பல நூல்கள் கிடைப்பது அரிதாகவுள்ளது. மருத்துவ நூல்களை மீள் பதிப்புச் செய்வதற்குப் பலர் ஆர்வம் காட்டுவதும் குறைவு. இந்த நிலையில் வடகிழக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு, சித்த ஆயுள்வேத யூனாணி மருத்துவ நலன்களைக் கவனிக்க என்று சுதேச மருத்துவத் திணைக்களம் சுகாதார அமைச்சில் உருவாக்கப்பட்டது.
நாட்டில் வாழும் வைத்தியர்கள் வைத்தியர் நலன்புரி சங்கங்கள், ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச்சபை போன்ற அமைப்புக்கள் வைத்திய நூல்களை வெளியிடுமாறு எமக்குக் கோரிக்கை விட்டன. அதன் முக்கியத்துவத்தையும் நன்மையையும் உணர்ந்த நாமும்,
iv

கெளரவ ஆளுநரிடம் வைத்திய நூல்களின் முக்கியத்துவத்தைக் கூறி சம்மதம் பெற்றோம்.
இன்று சில வைத்திய நூல்கள் வடகிழக்கு மாகாண சபையினால் மீள்பதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நல்ல பணிக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த கெளரவ ஆளுநருக்கு நாம் அனைவரும் நன்றி கூறவேண்டும்.
இப்புத்தகங்களை நல்ல முறையில் வெளியிட வேண்டும் என அயராது உழைத்த வடக்கு - கிழக்கு மாகாணசபை சுதேச மருத்துவ பணிப்பாளர் முனைவர் சு.பவானி அவர்களையும் அவருக்குப் பக்கபலமாக நின்ற சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் 6TLDg பாராட்டுதல்கள் உரித்தாகுக.
புத்தகங்களைப் பதிப்பிக்க தமது பழம்பெரும் நூல்களைக் கொடுத்துதவிய வைத்திய கலாநிதி ரீபதிசர்மா அவர்களுக்கும் எமது நன்றிகள்.
புத்தகத்தை அழகுற அமைத்துப் பதிப்பித்த வடகிழக்கு D36T600 பதிப்பகத் திணைக்களத்திற்கும் எமது பாராட்டுதல்கள்.
சித்த ஆயுள்வேத மருத்துவ நூல்களாகிய இம்மருத்துவ நூல்கள் வெளிவருவதற்காக உழைத்த மருத்துவர்கள், மற்றும் அமைப்புக்கள், சுகாதார, சுதேச மருத்துவ ஊழியர்கள் யாவர்க்கும், எனது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.
இதுபோன்று மேலும் பல வைத்திய நூல்களை வெளியிட்டு பழம்பெருமை வாய்ந்த எம் சித்த ஆயுள்வேதத்துறை மென்மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல இறைவன் ஆசி புரிவாராக.
ஜி. கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலாளர், வடக்கு - கிழக்கு மாகாணம். திருகோணமலை.
05.09.2000.

Page 6
කෙටුමපත
මිනිසාගේ පිවිතය පවත්වා ගෙන යාමේ එක් පදනමක් වන්නේ නිරෝගිභාවයයි. ඒ සඳහා ශරීරය සහ මනාව පවත්වා ගත යුතු අතර ආහාර, ව්‍යයායාම මෙන්ම මංෂධ ද රට උපකාරී මේව.
ආදී කාලයේ විසු ඉසිවරයන් සතුව වන මාෂධ පිළිබඳව ඉතා ඉහළ මටටමේ දැණුමක් පැවැතුනද එය කටවහරින් පැවත ආ නිසාත්, පුස්කොළ පොත්වල හෝ සඳහන් වූයේ ඉතා අල්ප වශයෙන් නිසාත් වර්තමානයේ ආයුරීෂවද වෛද්‍ය ක්‍රමය දියුණු මට්ටමකට පැමිණීමට නොහැකි වූ හේතුව ලෙස මම දැකිමි. ආයුර්වේද ඖෂධ කූමය නැගෙනහිර ආසියාතිකයන්ගෙන් පාරම්පරිකව පැවත ආ සරල කූමයක් බව බටහිර රටවල ජෛවද්‍ය වරුන්ගේ මතය වුවද, එය ඉතා උසස් මට්ටමක පවතින ජෛවද්‍ය කුමයකි.
සිද්ධ, ආයුර්වෙද, යුනානි යනුවෙන් ඇති මේ ජෛවද්‍ය කූම අනාගත පරපුර වෙනුවෙන් ආරකෂා කරදීම අපගේ යුතුකමක් වෙ. ආයුර්වෙදය පිළිබඳ ලියවුණු පොත් පත් පවා දුරලභ වූ අවධියක ඒ සම්බන්ධව ලියවුණු පොතක් නැවත මුද්‍රණය කිරීම ආයුර්වේදයේ වර්ධනයට මහගු සේවයක් බව මම හිතමි.
ආර. එම්. එස්. රත්නායක,
ලේකම, සෞඛ්‍ය හා දේශීය වෛද්‍ය අමාතාන්‍යාරාංශ, උතුරු - නැගෙනහිර පළාත, ක්‍රිකුණාමලය.
15.09, 2000.
vi

ஆசிச் செய்தி
ஆரோக்கியம் என்பது மக்களின் வாழ்க்கை முறைக்கான அடித்தளமாகும். உடல், உள ரீதியான ஆரோக்கியம் திருப்தியளிக்கக் கூடியவகையில் சிறப்புப் பெறவேண்டுமானால் மன இயல் போக்குகளுடன் அள்ளுண்டுபோகும் வாழ்க்கை முறையினை தவிர்த்து சகலரும் போற்றும் பக்குவமானதும், உடற்பயிற்சி கொண்டதுமான வாழ்க்கை அமைப்பைப் பேணிக் கொள்வதே ஒரேவழி. இதற்கும் அப்பால் கிடைக்கப் பெறக்கூடிய 岳& வாழ்விற்கான வழித்துணை மருந்து வகைகள்.
பழம்பெரும் ஞானிகளினாலும், சித்தர்களினாலும் பாதுகாக்கப்பட்டு வந்த எமது பாரம்பரிய ஆயுள்வேத மருத்துவமுறையானது வாய்ச்சொல் வழிபடிப்பாகவும்
ஏட்டுச்சுவடிகளில் எழுத்தாகவும் காணப்பட்டமையே அதன் வளர்ச்சி வேகக் குறைக்கான முக்கிய காரணியாக நான் கருதுகின்றேன். ஆயுள்வேத மருத்துவ முறையென்பது கிழக்காசிய மக்களின் வழிமுறை மருத்துவ சிகிச்சையாக தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கும் மேலைத்தேசிய மருத்துவத்துறை சார் நிபுணர்களும் போற்றும் இலகுவான மருத்துவ முறையாகும்.
ஆயுள்வேதம் யூனானி, சித்த மருத்துவம் என்பவைகள் இன்றைய காலகட்டத்தில் நாளைய சந்ததிகளுக்காக பேணிப் பாதுகாத்து வைக்கக் கடமைப்பட்டவர்கள் நாங்களே. எமது அமைச்சினால் அரிதாகக் கிடைக் கப்பெற்ற ஆயுள்வேத LD(55g)6)) நூல்கள் ് பதிப்பு செய்யப்படுவதானது அம்மருத்துவ Ջ-աfr எழுச்சிக்கு நாம் வழங்கும் பாணிக்கையாகவே கருதுகின்றேன்.
ஆர். எம். எஸ். ரத்னாயக்க, செயலாளர், சுகாதார சுதேச மருத்துவ அமைச்சு, வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை.
15.09.2000.
vii

Page 7
வெளியீட்டுரை
கீழைத்தேச மருத்துவமான தமிழ் மருத்துவம் அல்லது சித்த மருத்துவம் மக்களின் ஆரோக்கிய நிலைமை பேணுவதற்கும், ஏற்பட்ட நோய்களை போக்குவதற்கும் பல உண்மைகளை கூறியுள்ளது. முற்காலங்களில் சித்தர்களினால் கூறப்பட்டிருந்த கருத்துக்கள் ஏட்டுச் சுவடிகளிலேயே எழுதப்பட்டிருந்தன.
Lyp60bLDuJPT607 மருத்துவ ஏட்டுச்சுவடிகளை சேகரித்த ஏழாலையை பிறப்பிடமாகக்கொண்ட அமரர் ஐ. பொன்னையா. பிள்ளை அவர்கள் சில அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அந்த நூல்கள் கிடைக்கப்பெறுவது மிகவும் அரிதாகவே உள்ளது.
வடக்கு - கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச மருத்துவ திணைக்களத்தினால், பல ஆணுள்வேத வைத்திய சங்கங்கள், ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச் சபைகள் போன்ற அமைப்புக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க அரிதான சித்த ஆயுள்வேத மருத்துவ நூல்கள் மீள்பதிப்பு செய்யப்படுவதானது மக்களின் இன்றைய தேவையினை அறிந்துகொண்ட ஆரோக்கியமான தொரு செயற்பாடாகும்.
முதற்கட்ட நடவடிக்கையாக திணைக்களத்தினால் மூன்று நூல்கள் மீள்பதிப்புச் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. எமது மக்களுக்கான இப்பணி மேலும் தொடரும். இவ்வரிய பணிக்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
நன்னோக்க அடிப்படையில் இந்நூல்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் எம்மையறியாமல் சில பிழைகள் அல்லது தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் எனவே அதனைக் கவனத்திற்கொள்வோர் மேற்கூறப்பட்டுள்ள விடயத்தைச் சுட்டிக்காண்பித்தால் அடுத்த மீள்பதிப்பு நடவடிக்கைகளின் போது திருத்தங்களை மேற்கொள்ள எமக்கு வசதியாக இருக்கும். எனவே ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் அறிஞர்கள் தமது கருத்துக்களை எமக்கு அவசியம் தெரியப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
டாக்டர். செ. குமாரவேற்பிள்ளை, பணிப்பாளருக்காக, மா. சு. மருத்துவத் திணைக்களம், வடக்கு - கிழக்கு மாகாணம். திருகோணமலை.
15.09.2000.
viii

பதிப்புரை
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத் திணைக்களம் 1989ம் ஆண்டு தாபிக்கப்பட்டதாகும். சுதேச மருத்துவத் துறையென நாம் கூறும்போது அதில் ஆயுள்வேத வைத்தியம், சித்த வைத்தியம், யூனானி வைத்தியம் ஆகியவற்றுடன் இலங்கை நாட்டிற்குரியதான தேசிய பாரம்பரிய வைத்திய முறையும் உள்ளடக்கம். வடக்கு - கிழக்கு மாகாணத்தில் மூன்று இனத்தைச் சார்ந்த மக்களும் வாழ்கின்றனர். சிங்கள மக்கள் ஆயுள்வேத வைத்தியத்தையும், தமிழ் மக்கள் சித்த வைத்தியத்தையும், முஸ்லிம் மக்கள் யூனானி வைத்தியத்தையும் மேலும் சித்த ஆயுள்வேத வைத்திய முறையையும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.
ஒரு வைத்தியத்துறை முன்னேற்றமடைவதற்கு அந்த துறைசாாநத தரமுளள மருநதுகளும அதனை அனுசரித்துக் கையாண்டுவரும் மக்களும்தான் முதலிடத்தை வகிக்கின்றனர். இந்த தரமான மருந்துகள் முற்காலத்தில் ஏட்டுச்சுவடிகளில்தான் எழுதிப் பாதுகாக் கப்பட்டு வந்துள்ளது. பின்னர் அமரர் ஐ. பொன்னையாபிள்ளை போன்ற பெருந்தகைகளினால் அரிதாகக் கிடைக்கக் கூடியதான ஏட்டுச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு தரம்வாய்ந்த நூல்களாக வெளியீடு செய்யப்பட்டது. ஆயினும் பெரும்பாலான நூல்கள் இன்னும் அரிதாகவே உள்ளன. சில பழம்பெரும் வைத்தியர்களின் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷமாகப் போற்றப்படவேண்டிய அரிதான நூல்களாகவே இவைகள் கருதப்படுகின்றன.
மேற்படி நூல்கள் சகல வைத்தியர்களுக்கும் சித்த வைத்தியத்துறை சார்ந்த மாணவர்களுக்கும் கிடைக்கப் பெறல் வேண்டுமென்பதே வடக்கு - கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பிரதான குறிக்கோ ளாகும். அதனை நிறைவேற்றுவதற்கு ஏற்புடையதாக அரிய சித்த மருத்துவ நூல்கள் சிலவற்றை மீள்பதிப்புச் செய்வது என்ற முடிவின் பிரகாரம் அதற்கென 1999ம்
ix

Page 8
செய்வது என்ற முடிவின் பிரகாரம் அதற்கென 1999ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் LDTSSf600 திட்டமிடற் குழுவினால் நிதி ஒதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. முன்னைய மாகாண சுதேசமருத்துவப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி பூ. உரோமகேஸ்வரன் அவர்கள் இவ்விடயத்தில் மிகவும் அக்கறையுடன் மேற்கொள்ள முடியாது போய்விட்டது.
மீள்பதிப்புச் செய்வதற்கான நூல்களை துன்னாலை யைச் சேர்ந்த வைத்தியர் யூரீபதி சர்மா அவர்கள் தந்து உதவியுள்ளார்கள் என்பதனை பெருமையுடனும், நன்றி யுடனும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு.
செகராசசேகர வைத்தியம் என்ற இந்த நூல் அமரர் 3. பொன்னையாபிள்ளை அவர்களினால் முன்னர் அச்சிட்டு வெளியிடப்பட்டது. U6) பிணிகளினது விபரங்களும் அதற்கான சிகிச்சை முறைகளும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறானதொரு நூலை மீள்பதிப்பு செய்வதில் வடக்கு - கிழக்கு மாகாண சபையின் ஆளுனர், பிரதம செயலாளர், திட்டமிடற் செயலாளர், மற்றும் அனைவரும் காண்பித்த ஆதரவானது சித்த வைத்தியப் பெருமக்களினால் என்றுமே நினைவு கூரப்படத்தக்கதொரு விடயமாகும்.
வடக்கு - கிழக்கு மாகாண சுதேச மருத்துவப் பணிப்பாளர் என்ற முறையில் இந்த புத்தகத்தின் மீள்பதிப்பு என்ற அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத் தமைக்காக முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகளைத் தெரியப்படுத்திக்கொள்வதுடன், இந்த நூலை வெளியீடு செய்வதற்காக பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்புகளை வழங்கி உதவியாக இருந்த எனது திணைக்கள உத்தியோகத்தர்கள் சகலருக்கும் மற்றும் வடக்கு - கிழக்கு மாகாண பதிப்பகத் திணைக்கள ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.
பேராசிரியர் சுப்பிரமணியம் பவானி, பணிப்பாளர், மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு - கிழக்கு மாகாணம், திருகோணமலை,

சிவமயம்
முகவுரை
பண்டைக்காலத்திலே யாழ்ப்பாணத்திலிருந்த வைத்திய ஆசிரியர் களால் லோகோபகாரமாக இயற்றிவைக்கப் பெற்ற சிறந்த வைத்திய நுால்களுள் இதுவுமொன்று. இந்நூால் உக்கிரகாண்டம், செளமிய காண்டம் என்னும் இருபிரிவினையுடையது. "உக்கிரகாண்டம்” என்பது சிலபிரதிகளில் குரூரகாண்டம் என்று எழுதப்பட்டிருக்கிறது. செளமியம்சாந்தம் என்னும் பொருட்டு.
இருபாலைச்செட்டியா ரியற்றியதும் எம்மால் அச்சிட்டு வெளியிடப்பெற்றதுமாகிய அமிர்தசாகரம் பதார்த்தசூடாமணி என்னும் இரு பிரிவினையுடைய வைத்திய விளக்கம் என்னும் நூலுக்கும் இதற்கும் சிற்சிலஇடங்களிற் பெரிதும் ஒற்றுமை காணப்படுகின்றது. அதுகொண்டு இவ்வாசிரியன்மார் இருவரும் ஒரேவடமொழி வைத்திய நுாலை ஆதாரமாகக்கொண்டு தத்தம் நுால்களை ஆக்கிக்கொண்டனர் என்று ஊகிக்கலாம்.
இந்நூலாசிரியராகும் சொக்கநாதரென்னும் பெயர்வாய்ந்த சைவக்குருக்கள் மாவிட்டபுரத்தில் வசித்தவர். இவரதுகாலம் இற்றைக்கு ஏறக்குறைய நூறாண்டுகளுக்குமுன் என்ப.
அன்பர்சிலரின் கேள்விப்படி கிடைத்தபிரதிகள் சிலவற்றை ஒப்புநோக்கி இயன்றவரையில் சுத்தமாக இந்நுாலை வெளிப்படுத்தி யிருக்கிறோம். நுாலின் முதலிலே காப்புச்செய்யுள் 2 -t. LILஐந்துசெய்யுட்கள்வரை கிடைத்தபிரதிகளிற் காணப்படவில்லை. இனி அவைகிடைக்குமாயின் அச்சிட்டு நுாலிற் சேர்த்துக்கொள்ளுவோம்.
இவ்வாசிரியர் இயற்றிய நூல்கள் இன்னும் சில உண்டென அறிகிறோம். அவற்றைவைத்திருப்போர் தயைகூர்ந்து அனுப்பிவைப்பராயின் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும்.
யூரீ முக-சித்திரை. ஐ. பொ.
xi

Page 9
சாற்றுகவிகள்
இ.து
சுன்னாகம், காவியபாடசாலைத் தமிழ்த் தலைமையாசிரியரும் வித்துவானும் ஆகிய புன்னாலைக்கட்டுவன்
பிரஹற்மழரீ சி. கணேசையர் அவர்கள்
பூமலி யிலங்கைப் பொற்பார் தீவின் சிரமெனத் திகழுநற் புரம தாய யாழ்ப்பாண மென்னு மெழில்பெறு நாட்டிடை இலங்குசடை முடிமே னலங்கொள்பிறை யணிந்த
xii

கறையார் கண்டத் திறையோ னோருபுடை உமையாண் மேவ நமையாள் குறிப்பொடு வீற்றிருந் தருளு மேற்றஞ் சான்ற நகுலத் தனிவரை யகிலந் துதிப்ப ஒருபால் விளங்க வொருபான் முழங்குதிரைக் கடல்கொண் டொருவேல் காதலத் தேந்தும் செவ்வேண் மயிலிடைத் திகழ்ந்தினி தருளும் கோயில் கொண்ட மாவையம் பதியில் மேவி யிருந்த தேவியற் குருவாம் சொக்க நாதத் தொல்பெரும் புலவன் பொதியத் தருந்தவன் நிதியெனத் தந்த வைத்திய நூலெலா மரபினி னாடி முன்னர்ப் பதார்த்த குணமும் பின்னர் உக்கிரஞ் செளமிய மெனவிரு காண்டமாய்ப் பகுத்துமிகு பிணிகள் தொகுத்தறி விதமும் அறிந்தபின் மருந்து தெரிந்துசெய் விதமும் அருந்து மருந்துக் கனுபா னாதியும் நன்குதந் தொருநுால் தன்வந் திரீயமென் றப்பெயர் புனையூஉ விப்புவி யியற்றினன் அந்நுா றன்னை யமைபல பிரதியிற் சிதலை யாதிச் செந்துசெய் பிழையும் எழுதுவோர் தம்மா லெய்திய பிழையும் பிறவுநனி நுனித்துப் பிழைதெரிந் தறிகுபு மெய்பெறத் திருத்தி மேலவர் மதிப்ப அச்சினி லேற்றி யருளினன் யாரெனின் ஏழாலை யென்று பெயரெய்திய வுரிடை வைத்திய சிகாமணி யாகி மருவிய ஜயம் பிள்ளைமுன் செய்த தவத்தான் முன்வந் துதித்த நன்மா னிக்கம் இலக்கண விலக்கிய மினிதுணர் புலவன் சுத்தாத் துவித சைவசித் தாந்தி சிற்றம் பலவன் நித்தம் புரிநடம் என்று முளந்தனி லொன்றவைத் துணர்பவன் அலக்க ணரின்றி யகிலத் துயிர்கள் தழைக்கப் புர்ந்த பிழைப்பில்செங் கோலுடைப் பரராச சேகரப் பார்த்திபன் பேர்கொள் நுான்முத லாக நுவல்வைத் தியநுால் அச்சிற் பலதந் தருளொ டுதவினோன் நன்னயக் குணம்பல மன்னிய செல்வன் பொன்னைய பிள்ளையென் றிந்நிலம் புகழத் தன்பெயர் வைத்த தகைமை யோனே

Page 10
இது
யாழ்ப்பாணம், பரமேசுவரக்கலாசாலைத் தலைமைத் தமிழாசிரியர்
பிரஹ்மபூரீ நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்கள் இயற்றியது
சிறந்த மானுடம் பிறந்துசெறி பயனா(கு) அறமுத னான்கின் திறனறிந் தீட்டற்கு உடனலன் பேணலு மொருமுறை யாதலின் மருத்துவ நுாலுந் நிருத்தக வுடைத்தென நுனித்துணர் புலவன் தனித்துணர் யோகியன் ஆயுள் வேதத் தாருயிர் வளர்ந்து பாயுஞ்சிந்தைப் பரவைய னமுதென முயற்றுச் சிறிதா வியற்றற் கெளிதாய்ப் பயனுட் பெரிதாப் பகர்பல மருந்தெலாம் ஒருங்குவீற் றிருக்கும் ஒரு நுால் யாத்துத் தன்வந் திரிய மெனும்பெயர் தந்தனன் மாவைப் பதியினன் மாமுரு கிணைக்கே பாவைப் புனைந்து பதம்பெறு பாவலன் மிக்க கேள்விசால் சொக்க நாதன் அத்தகு நுாலை யாய்ந்தாய்ந் தறிந்து கைப்பிழை முதலிய செப்பருங் குறைகளை யோகியர் போல வேகியாங் குணர்ந்து புதுவன புனையாது நிதியிது வென்ன நானில னுவக்கத் தானினி தச்சிற் பகுத்துத் தந்தனன் றுதிக்கெலா முரியோன் சாரங்கனிந்த சைவசித் தாந்தத்(து) ஈரங் கனிந்த வின்றமிழ்ச் சிந்தையன் திருத்தகு தொண்டர் கருத்தொடு நாவினும் பொருந்தி விளையாடும் புண்ணிய வாழ்க்கையன் அகம்புற மருவிய வகலா நோயெலாம் போக்கும் வைத்திய னாக்குந் திருவினன் ஒரே ழாலையா முயர்பதி வாழ்க்கையன் ஆரா வமுதெனு மையம் புகலுமென் மித்திரன் பொன்னைய வித்தக மணியே
xiv

வித்துவான் பிரஹற்ம பூரீ சி. கணேசையர் அவர்கள் மாணாக்கர்களி லொருவராகிய கரணவாய் பண்டிதர்
திரு. செவ்வந்திநாததேசிகர் அவர்கள் இயற்றியது
அயிலேந்துங் கரதலத்துக் குமரவே
ளிருமருங்கு மழகார் மேனிக் குயிலேந்து மொழிமடவா ரிருவருமன்
புடன்மேவக் குலவுந் தோகை மயிலேந்து நிலைமைகொள வமர்ந்தருளு
மாவைநகர் வசிக்குங் கோமான் புயலேந்துங் கொடையாள னிசையேந்து
நடையாளன் புனித்த தோன்றல்
துாக்கமிகுந் தமிழ்ப்புலவன் பலகலையுங்
கற்றுணர்ந்தோன் சொக்க நாதத் தங்குபெயர்க் குருமுனிவ னகத்தியன்சொல்
வயித்தியநுாற் சார்ப தாகப் பொங்குபொருட் குணங்களுடன் பிணியுமதற்
குறுமருந்தும் பொருந்தக் கூறி இங்கொரு நுால் செய்ததன்பேர் தன்வந்தி
ரீயமென விசைத்திட் டானே
அந்நூாலின் பெருமையுட னருமைதனை
மிகநோக்கி யரிதிற் றேர்ந்தே இந்நூலிற் பிழையிலை யென் றெவருமதித்
திடப்பதித்தே யினிதிங் கீந்தான் எந்நுாலு நன்குணர்ந்தோ னேழாலை
யூர்வாச னிணையில் சைவச் செந்நுாலின் வழியொழுகிச் சிவனடியே
சிந்திக்குஞ் சிந்தைத் துாயோன்
மக்களுடற் கூறறிந்து மருந்துதவிப்
பிணியகற்றும் வன்மையாளன் திக்கினிசை நிறுவுமையம் பிள்ளைதவத்
துதித்தமுதற் செல்வப் பாலன் மிக்குயருங் கீர்த்தியினான் பொன்னைய
பிள்ளையென மேவும் பேரான் தக்கவர்கள் புகழ்புலவன் வயித்தியநன்
மணியாகுந் தகைமையோனே
XV

Page 11
உள்ளடக்கம்
வியாதி வரும் வகை
உணவுவகை
நாடிவிதி
வாத பித்த சுரம் பித்த சிலேட்டுமத்தின் குணமும் மருந்தும் வாதசிலேட்டுமத்திற்கு குணமும் மருந்தும் சன்னிவாதசுரத்தின் குணமும் மருந்தும் விஷசுரத்திற் குணமும் மருந்தும் முழுத்தசுரத்தின் குணமும் மருந்தும் தாகசுரத்தின் குணமும் மருந்தும் மந்தபித்தசுரத்தின் குணமும் மருந்தும் அத்திசுரத்தின் குணமும் மருந்தும் ஆமச்சுரத்தின் குணமும் மருந்தும் அத்தி சிலேட்டும சுரத்தின் குணம் பித்தவதிசாரக் குணமும் மருந்தும் முறைவெதுப்பின் குணமும் மருந்தும் சத்தி வெப்பின் மருந்து " சன்னிவிதி சன்னி பதின்மூன்றின் குணமும் மருந்தும் மூலவியாதியின் குணமும் மருந்தும் விக்கலின் குணமும் மருந்தும் சுவாதம் பத்தின் குணமும் மருந்தும் வாதத்தின் குணமும் மருந்தும் கசரோக குணமும் மருந்தும் விக்கலின் குணம்
குட்டரோகம் கரப்பனின் குணமம் மருந்தும் வலியின் குணமும் மருந்தும் உதர ரோகங்கள்
உட்குத்துப் புறவீச்சு நீரிழிவின் குணமும் மருந்தும் முதுகுபிளவையின் குணமும் மருந்தும் பித்தம் நாற்பத்திரண்டின் குணமும்மருந்தும் நன்றியுரை
Xvi
24
24
25
25
26
28
6
73
76
82
37
162
165
72
84
93
200
20
2O8
2O
226

செகராசசேகர வைத்தியம்
செகராசசேகர வைத்தியம்
மணிதங்குவரையுளாதி மன்னுயிர்படைத்தபோது பிணிதங்குவகையுநோயின் பேருடன்குணமுங்காட்டி அணிதங்குமருந்துங்காட்டு மாயுருவேதந்தன்னைக் கணிதங்குவகையால்வேதங் கடந்தமாமுனிவன்செய்தான்
செய்தவர் தமது நூலும் தேர்ந்ததோர்தெரிப்பும்பார்க்கிற் பொய்தவம்புயர்ந்தபெளவம் போலுமிங்கிதனையாய்ந்து வெய்தவநோய்கள்தீர விருத்தவந்தாதியாகக் கொய்தவவொழுங்கிலோதான் கோப்புறச்செப்பலுற்றாம்.
வியாதி வரும்வகை
ஆம்பொருடன்னில்மண்மே லறிவுசேர்மாந்தர்மேலே தேம்புதல்பொருந்துநோய்தான் சேயிழையாலுந்தோன்றும் வாம்பெருங்குற்றமன்றி வான்முறையாலுந்தோன்றும் தாம்பயில்பிழையால்வந்து சார்வதுசாற்றுவோமே
சாற்றியமாதர்மேலே தங்கியகாதலாலு முற்றமாமருத்தீட்டாலு மோய்விலாநடையினாலும் போற்றியதனங்கள்கெட்டுப் போதலினாலுஞ்சேட்டை மாற்றியபழையபொல்லா மலமிவைநிற்கையாலும்.
நின்றகாலங்கடன்னி னிதிகளாலும்பையு ளொன்றவேநாளுமுண்ணு முண்டியிற்பொல்லாங்காலும் மன்றநின்றலைவுசெய்யும் மனமிடைவாலும்போதச் சென்றநிர்ப்பகையினாலுஞ் சீதளந்தன்னினாலும்
தன்றலைச்சுமையினாலுந் தகுமுடற்கடுப்பினாலும் மென்பனிநனைதலாலும் மீனின்முள்ளருந்தலாலும் வன்புவாகனத்திலேறி வருந்துடலலைவினாலும் முன்பயில்நெய்பாலெண்ணெய் முழுக்கிவைவிடுகையாலும்
விடுமுமிமயிர்நெல்லின்வால் விழுங்குகையாலுமன்னம் முடுகவேயருந்திப்பின்னர் முசிவறச்செரியாதாலும் கடுகவண்டோடலாலுங் கனலடிச்சுடுகையாலும் மடுவுறுதண்ணிர்தன்னை மலியவுற்றுண்கையாலும்
உற்றதோருடலிற்சொன்ன வுயர்குணவீனந்தன்னால் முற்றவல்வியாதியெல்லாம் முதிரவேதோன்றும்போது செற்றமாம்வாதபித்த சேத்துமந்தன்னிலொன்றைப் பற்றவேதோன்றுமென்று பகர்ந்தனர்முனிவர்தாமே
முனிவுறுநோயைத்தீர்க்க மூர்த்தமதாகமண்மேல் மனிதனாய்வந்ததெய்வம் வைத்தியன்முறைமைசொல்லில் கணியவாகடமுநாடி களுமறிந்திகயந்தன்னில் பனிவளர்குருவைத்தெய்வ பத்திசெய்பவனுமாகி
பத்தியாய்மருந்துசெய்யிற் பலிப்புளான்சலிப்பிலாதான் சத்தியாங்குணத்திலேதான் சாத்துவிககுணத்தையுள்ளான்

Page 12
செகராசசேகர வைத்தியம்
புத்தியால் மிகுந்தோன்வஞ்சம் பொஞ்சியான்நெஞ்சின்மாயச் சித்தியாமுறுப்பிற்சற்றுஞ் சிதைவிலான்சினமிலாதான்
சினவரியேறுபோலுந் திடமுளானுடைமையுள்ளான் கனமெனவுலகங்காக்குங் கருணைபான்ததித்தசிரான் இனமெனவுலகங்கொள்ளு மேற்றத்தான்தோற்றத்தான்மா மனமதிற்றேய்விலாதான் வைத்தியனென்னலாமே
என்பினாற்காலைநாட்டி யிலங்குகைவளைகள்வைத்து நன்பழுப்பாச்சுப்பூட்டி நரம்பினால்வரிச்சுக்கட்டித் துன்றசைச்சுவரைவைத்துத் தோலினால்வேய்த்தவீட்டில் வன்பிணிபிறப்பைக்காண்பான் வயித்தியனெனலாமாங்கே
ஆங்கவன்றன்பாற்போயங் கதிவழிபாடுசெய்து தாங்கொணர்ந்தினியதுாய தவிசின்மேலிருத்திநீரும் தேங்கமழ்பூவுந்தாளிற் றெய்வமென்றிட்டுப்போற்றிப் பாங்குறவடைகாய்தானும் பணமும்வெள்ளிலையும்வையே.
வைத்துமுன்றிபதூபம் வைத்தியன்றனக்குநல்கி மெய்த்தவவிதிதானென்று மெய்யுணர்குருவைச்சீஷன் கைத்தலங்கொண்டுபோற்றுங் காட்சியாமென்வும்நோயா லெய்த்தவர்வணங்கினோயி னிரண்டிலோர்கூறுபோமே
கூறுதானறிந்துநிற்குங் குணம்பரிகாரிசொல்லப் பாறுநோயென்னவுன்னிப் பணியமுன்னிருந்துபின்னை வீறுசேருடலில்வாதை விளம்புவதியல்புநோக்கி யேறுசீர்வலக்கைபற்றி யியல்வதுபரிகாரிக்கே
இயல்பினிற்றுக்கிப்பின்னை யியங்குநாடிகளைப்பார்த்துச் செயல்வுறுவாதபித்த சேட்டும்தோஷங்கண்டு வியல்பெறுவியாதிதீரா விடில்மெல்லவிட்டுப்போகப் பயமறத்தீருமாகிற் பரிகாரமுண்டென்றோதே
(ზ6)lეუJ.
ஒதுபெலம் பிராயங்கா லங்காயம்வந்
துற்றநால் வகைதனையு முணர்ந்துபின்னைப் பேதமுறும் வியாதிதனிற் பெலமுந்தீர்க்கும்
பெருமையுறு மருந்ததனிற் பெலமுநோக்கித்
தாதமரும் பூங்குழலாய் மருந்துசெய்யிற்
றப்பாது பிணிபலவுஞ் சடத்தைவிட்டு ஆதவனைக் கண்டபனி போலேதீரும்
அறைகுவே னங்காதி பாதந்தானே
அங்காதிபாதம்.
அங்குலந்தொண்ணுாற்றாறா மவரவரர்கைபால்மெய்தா னிங்கிதிற்குறையாதாகு மிறைச்சிநூற்றறுபத்தைந்து பங்கமில்பலமாமென்பர் பார்வைசேரிரண்டுகண்ணுங் கங்குல்போலளகமாதே கழஞ்சிரண்டாகுங்கண்டாய்
கண்ணுறுநாசிமூன்று கழஞ்சுநாற்கழஞ்சுநாக்கு நண்ணுறுகன்னஞ்சேர நாற்கழஞ்சாகுமெய்யி
2
7

செகராசசேகர வைத்தியம்
லுண்ணுறையெலும்பெல்லாம்நூற் றொருபத்தைம்பலமாமென்பர் எண்ணுறுமீரலான தெண்பலமென்னலாமே
என்னுமுப்பலமுமூளை யினிச்சிறுகுடலினிளம் முன்னுமுப்பத்திரண்டு முழஞசலப்பையுஞ்சொல்லில் மன்னுமைம்முழமதாந்தா மரைமொட்டுநட்கமஞ்சு பன்னுநாற்கழஞ்சுபித்தப் பையதாம்பாய்வேற்கண்ணாய்
பாய்ந்தமெய்க்கயமுந்நாழி பருத்தியாளர்க்குச்சோரி ஆய்ந்தநானாழியூறு மருவிநாடுரியநாடி யேய்ந்தவையெழுபத்திரா யிரமிவையெலும்பைப்பின்னித் தேய்ந்ததாளாதியாகச் சிரமுறவியங்குங்காணே.
இயம்பியகுடலுமுனு மென்புநாடிகளுமற்றுஞ் செயம்பெறுசிங்கைநாடன் செகராசசேகரன்றா னுயர்ந்தவாள்வடக்கராக முருட்டியகளத்தின்மீதே அயஞ்சிறிதுளதுதீர அளந்துகண்டறிந்ததாமே.
ஆனவெண்பல்லுநாலெட் டாம்பழுவீரெட்டாங்காண் பாணலாய்முள்ளந்தண்டு பன்னிருகோவையாகும் தானமாமூட்டினோடே தாள்தசைவந்துதாளின் மேனகுகரமுமொக்கும் விரலளவாகத்தானே.
தானரசிலைதோல்போனாற் றங்கியநரம்புபோல வுனுறுமுடம்பதெல்லா மொத்துடனரம்புநிற்குங் கானமாஞ்சிறைபன்னாறு கலந்துமெய்கண்மதாக்கி மானமாமோகநீரு மலங்கிடாதளிப்பதாமே.
மலங்கடைக்குடலைச்சுற்றி மன்னிமுற்சந்துநோக்கி யலம்பெறக்கடிகைமேல தாக்கியேயபானநோக்கும் நலம்பெறுநரம்புதானும் நாபிக்கீழுதரம்பற்றிச் சலம்பையிலூறிவீழ்ந்து தண்டுறநோக்குங்காணே.
நோக்குங்காலெலும்பிரொன்று நுண்கதிரெலும்பிரொன்று கோக்குறக்கலந்தடத்தே குதத்துக்குநடுமூலத்தே ஆக்கமாஞ்சுழினைதோன்றி யாதாரமாறுாடோடிக் காக்குமண்டலத்தூடேகிக் கபாலத்தைச்சூழ்ந்துநிற்கும்.
நிற்குமேயிடையுமற்ற நிகரில்பிங்கலையுமூலம் பற்றியேபாகமேறிப் பயின்றகத்திருக்கைக்கால்போற் சுற்றியேசுழினையூடே தொடர்ந்திடுபுறத்துஞ்சென்று முற்றவெஞ்சுரத்திலேமா முகமெனநாசிமுற்றும்.
நாசமாநரம்போரேழு நவிலிசைக்குருபமாகித் தேசமாநாடியுற்றுச் சிக்கெனமேலேயோடி நீசமாங்கண்டம்புக்கி நிகழ்த்துநாவடியில்நிற்கும் வாசமாங்குழலாயிது வகுத்தகாந்தாரியாமே.
தார்செறிபத்துநாடி தானுமம்மூலத்துற்று நேர்பெறமேலேயோடி நிறைதருகழுத்திலுற்று போர்செறிவிழியினுள்ளே போயிருநயனம்பற்றும் சீர்செறியந்தநாடி சிங்குவென்றுரைசெய்வாயே.
20
2
22
23
24
25
26
27
28
29

Page 13
செகராசசேகர வைத்தியம்
உரைசெயுமூலந்தன்னி லுதித்தெழுநாடிநூறாய் வரையிருவிழியூடோடி மன்னுகைக்குழியிற்புக்கிப் புரையிருகளத்திலோடிப் போயிருசெவியில்முற்றும் விரையலம்புருடன்றானும் மெய்ப்புருடனுந்தானாமே.
தானமாமூலந்தன்னிற் றங்கிடுசூதநாடி யூனமாங்குதத்தேபற்றி யுற்றுறநிற்குமென்க வானசங்கிலியினாடி யவைதொறுமாறியோடு மானனாய்பாய்ந்துநிற்கும் வாம்பரிபோலத்தானே.
பரிந்துவாருளையாநாடி பருந்தசையூடேயோடும் தெரிந்துகூரதுவாநாடி செறிந்துதோலுடேசெல்லும் விரிந்தசங்கினியுஞ்சந்தில் மெல்லியவசைவைப்பற்றும் புரிந்தெழும்புகளிதானும் பொருந்திடுமென்பர்தானே
என்னுநாடிகள்தான்மூல மேயொருவளையமாகப் பின்னியவுறியேபோலப் பெருக்கமேற்பரந்தேயென்றுங் கன்னலாய்காலுந்தோளுங் கழுத்தந்தமுடிச்சோடோத்துத் தன்னிலேநாடிகூடித் தசையென்போடொன்றுமென்னே
என்றதோர்நாடிசேர எழுபத்தீராயிரத்துள் ளொன்றவேயிதனினுள்ளே யுதிரமேயோடிநிற்கும் நின்றநிடென்பினுள்ளே நிற்பதுமூளையாகும் பொன்றவார்தசையினுடு பொருந்துவதருவிதானே
ஏய்ந்தெழுபிராணவாய்வு இலாடத்தினடுவேதோன்றி வாய்ந்தநற்சந்திபுக்கி மன்னியமூலத்தோடி ஒய்ந்திடாஒவ்வகத்தே யுற்றிடைபிங்கலையூடோடித் தோய்ந்ததோர்சிரத்தைப்பற்றித் துண்டத்தூடோடிமீளும்
ஒடுமேபன்னிரண்டென் றுரைத்தவங்குலத்துநீள மீடுறுநாலுமற்றங் கெட்டுமீண்டுள்ளேயேகும் கோடுறுமுலைநன்மாதே கூற்றினுக்குணவதாக நாடுறுபிராணவாயு நாடொறுமியங்குமாமே
ஆகுமோர்கடிகைமுன்னூற் றறுபதுகபாதநாளொன் றேகுமேயிருபத்தோரா யிரத்தநூறுதன்னில் போகுமேமூன்றிலொன்று புறத்துமற்றிரண்டுகூறு மேகுமேமீண்டுமுள்ளே யிறப்பதுஎயிற்றில்மீளும்
மீள்வதுசெய்யாதாகில் மேவியபிராணன்றன்னைத் தோள்பணையனையாய்கேளாய் சுழுனையின்வழியேயோடிக் கோள்செறிமூன்றுகோணக் கோளுந்தனல்கொளுத்திப்பார்க்கில் நீள்வளரொளியையுற்று நின்றிடும்புறத்துப்போகா
போக்கருஞ்சுழுனைபற்றிப் பொருந்தியமூலந்தன்னி லூக்கமாமொவ்வகத்தே யுற்றுநேர்பார்த்தபோது நீக்கமலிருளெல்லாம்போய் நீளொளிதோன்றும்பின்னை வாக்குறவதனுள்ளேதான் மானெறிகாணலாமே
3O
3.
32
33
34
35
36
37
38
39

செகராசசேகர வைத்தியம்
நெறியுறக்கொய்துகொய்து நேசமுற்றுள்ளேயுள்ளே குறியுறப்பையப்பையக் குதத்தையேசுருக்கிமீளும் செறிவுறச்சுழுனைதன்னிற் சீரியவழியூடோடி அறிவுறுமொளியைப்பார்த்தங் கழிவிலாதிருக்குமாமே
இருமைசேர்குதத்தைப்பற்றி யியங்கிடுபிராணன்றானு மருவிநீள்மலங்கள்போக்கி வயங்குதோல்தன்னில்நின்று உருவமெய்பரிசங்காட்டி யுண்டவன்னங்கடன்னைக் கருதியேயுடலுள்ளெங்குங் கரந்திடப்பரப்புங்காணே
பரவியநாடிக்கெல்லாம் பரந்திடிற்சமஞ்சமானம் விரவியநரம்பூடோடி வியானனேயுலாவிநிற்கும் வரமிகுநாகன்றானும் மருவியேநோக்கியற்றும் முரணுறுமுக்கியன்றான் மூரியாயிருப்பனாமே
இருப்பனேகூர்மன்கண்ணி லேநின்றுஇமைப்பன்பின்னைச் சிரிப்பனக்கீசகன்றான் செவ்விதாய்மூக்கினின்று கருத்துறுநினைவுபுந்தி காஞ்சனஞ்சிந்தைசெய்து பொருத்துறுமிதயந்தன்னிற் பொருந்தியேநிற்பனென்னே
என்பிலாத்தனஞ்செயன்றா னியங்கியபிராணன்விட்டுப் புன்புலவாயுவெல்லாம் போகினுந்தான்போகாமல் அன்புசேர்நல்லோர்போல்நின் றழகுடன்வீக்கங்காட்டி மென்புலவுடம்புவெந்தால் வெண்டலைகிழித்துப்போமே
போம்புருஷனுக்குநண்பு பொருந்துமந்திரிதானென்று வாம்பரிபிராணவாய்வு வையகந்தோற்றுவித்துக் கூம்புகைக்கெதிரெலும்பு கூடியவிடத்தேநின்று சோம்புறவிருமலிளை தொடர்புறவளிக்குங்காணே
அளிசெறிபிரபஞ்சன்றா னன்னமூலத்தினுக்குத் தெளிதருபீடமாகிச் சேர்ந்துபின்கரந்துநிற்கும் எளியதோர்கதிர்காலென்பி லிசைவினில்வயினினின்று விழிவுறரோகமெய்யில் மேலுறக்கொழுத்துங்கண்டாய்
வேறு
ஆயவுடல்மெய்க்குருளை யாம்பஞ்சவிந்திரிய மேயவரியன் மிடுக்கானவச்சாணி நேயமுறவிவைதா னிற்கில்வசையாதிருக்குந் தீயவிவைநழுவிற் சேரக்குலையுமே
வேறு
குலைந்திடுங்குய்யத்துக்குங் குதத்துக்கும்நடுவதாக நலந்திகழ்மூலாதாரம் நாற்சதுரங்களாகி மிலைந்திதிலொவ்வுமாகி மேற்றிரிகோணமாகி அலைந்திடுமடம்பம்பூவி னடைவுபோலிருப்பதாமே
மேவியவனிலநாடி மேலுச்சிகன்னம்நாக்குப் பூவியல்நாசிமட்டும் பொருந்திடுஞ்சுபதிட்டானங்
40
4.
42
43
44
45
46
47
48

Page 14
செகராசசேகர வைத்தியம்
காவியல்கரங்கால்நாவிற் கருதுநன்னாலதாகத் தாவியேசிரோபன்னாறுந் தயங்கியதிலிங்கம்மானே
மானனாய்நாவிசக்கிர வாரணவண்டம்பொல ஆனதாயிதனைச்சூழ ஆயிரத்தெட்டுநாடி பீனமாமிதனையெல்லாம் பின்னிவேராகிநிற்கும் தானமாமணிபூரப்பேர் தங்கமாயியங்குமாமே
இயம்பனாகதமிரேழென் பிருவிலாப்புறத்தோடொத்துத் தயங்கிடநடுவுசந்து தளமொத்துநெஞ்சதாகி நயந்தருநினைவுபுந்தி நலந்தனஞ்சிந்தைசேர்ந்து செயந்தருமிதையபற்பஞ் சேர்ந்தினிதிருப்பதாமே
இனியநீர்பொசிவதாகி யிவ்வுயிர்க்குணவுகொள்ளுந் தனியிடமாகிப்பேசுந் தானெழுந்தானமாகி அனிதமாமாவிக்கென்று மாதாரமானதாகும் புனிதமாமிதனைமுன்னோர் புகலுவர்விசுத்தியென்றே
என்பிலாவீணாதண்டி னிறுமாய்நடுவும்நெற்றி வென்பெறவுருக்கிநிற்கும் வெறுக்கையின்வடிவுமாகி மன்பெறாச்சினையும்வெண்டா மரையுமங்கதுவேயாகு மன்புசேர்பராபரைக்கா சனமுமஷ்விடமதாமே
(ში)ყუ]
ஆசனமா மோங்காரந் தன்னையுன்னி
யதிலிருந்து மூலவனல் தன்னைமெள்ள வாசமுறுஞ் சுவதிட்டா னத்தூடோடி
மணிபூரத் தேற்றியனா கத்துள்ளாக்கி நீசமாம் விசுத்திதன்னைக் கடத்திப்பின்னை
நிலைபெறுமாச் சினைதனிலே நிறுத்தும்போது கேசமதுஞ் சிரமதுவே யாகும்பின்னைக்
கிளைப்புவனம் படைத்தபொருள் கிடைத்தல்பாராய்.
வேறு
பாராய்பரஞ்சுடரினுாடேயப் பளிங்கொளிபோல நேராய்நின்றியங்குமது நின்றுநின்னுநாட்கூடி ஓராயொருவடிவா யோங்காரத்துள்ளொளியாய்ப் பேராய்ப்பெருவடிவாய்ப் பெயர்ந்துலகத்திருந்ததுவே
இருக்குங்கருவிதொண்ணுற்றா றென்பரதின்மண்டலமூன் றிருக்கநாடுஞ்சிவமுறையு மிய்லாதாரமாறென்பர் செருக்குண்டாகநின்றியற்றுந் தெய்வம்பலவென்றுரைசெய்வர் மருக்கொண்டழிகொண்டிருளழக மானேயின்தாகந்தானே
தாகந்தவிர்க்கும்நீரன்னந் ததும்பக்கொண்டபோதுபின்னை மேகம்போலுங்குழல்மடவாய் விரையமீளப்பசிப்பதுகேள் ஆகஞ்செருங்குண்டலிதீ யதனைக்கொழுந்துவிடவுதப் பாகஞ்செய்யுமெனவுலகிற் பகர்ந்தார்தெரிந்தபண்டிதரே
49
50
5
52
53
55
56
57

செகராசசேகர வைத்தியம்
சல மலப் பகுப்பு
தெரியவேதண்ணிர்மண்பாத் திரத்தினிற்கரைத்துவைத்தால் வரிசையாய்நீர்மேலாகி மண்ணடிதாழுமாப்போல் சரிகுழல்மாதேகேளாய் சலமலம்பகுக்கும்போதங் குரியதோருதரமூறி யுடம்பதாய்நிற்பதாமே.
நின்றதோராகமெங்கும் நிரம்பியநரம்புதோறும் சென்றதோருதிரந்தன்னைச் செலுத்தியேவாயுநிற்கு மொன்றியேயுதரந்தன்னி லுண்டவன்னங்கடன்னை மன்றநிறாக்கித்தாகம் வளங்குவதங்குதானே.
அங்குதானுடலினுள்ளே யனிலமோடொத்துநிற்கிற் றங்கியவுணவதெல்லாஞ் சமித்திடுமுரோகம்வாராப் பொங்கியசயிலம்போலும் புளதிதத்தனத்துமாதே இங்கிதஞ்சலியாதென்ன வியல்புடனிருக்கலாமே.
இருந்துநீயன்னங்கொள்ளு மியல்புதானுரைக்கக்கேளாய் பொருந்துடல்நாற்கூறாகப் புத்தியாற்கண்டுபின்னை அருந்துநீயிருகூறன்ன மப்பொருகூறுமெய்யை வருந்தியேயொருகூறுந்தான் வறிதிலேகிடக்கநன்றே.
நன்றுதானன்னந்தன்னை நாளுமிவ்வடைவேகொண்டு நின்றுநூறடிநடந்நு நித்திரைச்சயனந்தன்னிற் சென்றுதாம்பூலங்கொண்டு சிறந்தநாற்கடிகைசென்றாற் துன்றுபூங்குழலாரோடே துயில்பவர்க்கில்லைநோயே.
நோயில்லையுதிரநீர்தி நுடங்குடம்பொத்துநிற்கில் ஆயவுஞ்சுகமுண்டாகு மன்னமஷ்வடைவிற்சேருந் தூயமாமதியுண்டதகுந் தொடருடல்மதத்துநெய்க்கும் நாயகமயில்போல்மாதே நலமிகவிளையுந்தானே.
தானுடற்குறுதிசெய்யிற் றழலின்மேலுறுநெய்பால் ஊனுறக்கவரக்காயி னுடலிலையுள்ளதெல்லாம் மானுடற்குடலிற்சார வன்குடல்நிற்பதாகும் கானுறக்கமழுங்கோதை கருங்குழற்கமலமாதே.
உணவுவகை பசுப்பால்
தேனேயாவின்பால்தனக்குச் செய்யும்பத்தியமுடன்சேரும் தானேமேனிதடித்திறுகுந்தாதுவளருந்தளராது ar yr ஊனேசெறிமுத்தோஷம்போம் உயர்கண்ணோதலைநோயும்போம் மானேபழையதாகம்போம் மதமுண்டாகும்வடிவுண்டே.
வெள்ளாட்டிறைச்சி
உண்டாம்வெள்ளாடிலைபலவு முணலாலுடல்தானிறுகுதலால் தண்டார்நன்னிரளவுதனிற் றானேயருந்துந்தன்மையினால் பண்டாரும்வெள்ளாட்டினது பாலுமிறைச்சிகளுமுள்ளே கொண்டால்வாதபித்தம்போம் கோலம்பிறக்குமேனியுமே.
58
59
60
6
62
63
64

Page 15
செகராசசேகர வைத்தியம்
செம்மறி ஆட்டிறைச்சி, மானிறைச்சி.
மேனிபெருத்தசெம்மறிப்பால் மிக்கஇறைச்சியுண்டாக்கால் தேனினிகர்த்தமொழிமடவாய் சிதையுங்கைகால்சோர்ந்துவிடும் மானினிறைச்சியுண்டாக்கால் வளருங்கிரந்திவாதபித்தம் தானிவைமெத்தும்வரண்டிடுமே தாதுங்குரலுங்கீழ்விழுமே
எருமைப்பால்
விழுமேதியின்பால்பித்தத்தை விளைக்குங்கரப்பன்மிகவுண்டாம் எழுமேகண்ணோவுண்டாகு மெனவேமதத்தைவற்றுவிக்கும் மழுமேவியகைச்சிவனேந்து மானைக்கயலைமடவாளை செழுமேதினிமாவடுவுகிரைச் சீறுங்கருங்கட்செய்யிழையே.
சாப்பிட்டபின் உலாவுதல்
இளைபோலுடையாயுண்டியங்கா திருக்கிலுதிரமிடைநிற்கில் விளைவாங்காயம்பலமிவைகள் மிகவுங்குறைந்துவாய்வுமிகும் பிழையாயோடில்மரணமுண்டாம் பெருகுஞ்சயனந்தனிற்கிடக்கில் புழையாருங்கீழ்வயிறுதன்னிற் பொருந்தும்வியாதிபலவுண்டே
வேறு
உண்டுநூறடி ஒக்கமிதித்திடி லண்டர்வானத் தவரிவராமெனக் கொண்டவண்ணங் குலாவுமுடம்பெலாங் கண்டியாமற் கலந்துசெமிக்குமே.
அண்ணார்ந்து நீர்விழுங்கலும் அதிகறிபாவித்தலும்
மிக்கீரை விழுங்கவண்ணார்ந்திடிற் தக்கதாஞ்செவி தான்மிகமந்தமாம் ஒக்கவேகறி யுண்டிடிற்காசமாம் கைக்குமேயிரு கண்ணிலொளிகளே.
கஞ்சியும், பழையபோசனமும்
ஒளியுகந்த உதரத்திலுண்டிவிட் டெளியகஞ்சி யிருமலின்குப்பையாம் பழிசெறியும் பழம்பண்டமுண்டிடி லழிவுறுங்கா ரழகத்தரிவையே.
இளநீர் (வேறு)
அரியபோசனங்கள்செய்த அதற்குப்பின்னிளநீர்கொண்டால் திருகியவாதபித்த சிலேட்டுமம்நாசமாகும் விரிவுசேரனலுந்தீரும் மேனியுமெழிலுண்டாம் வரிசையாய்நோயும்வாரா மலங்களுங்கழன்றுபோமே.

செகராசசேகர வைத்தியம்
மலங்கள் போங்குளிருங்கண்ணும் வசனமுந்தெளிவுண்டாகும் அலம்பெறுகண்ணோய்தீரும் அன்னமேற்றாகங்காட்டும் இலங்குடலிளமையுண்டா மெழும்பிடுமுதரத்தீயும் நலஞ்செறியிளநீர்க்கின்னும் நற்குணம்மிகவுமுண்டே.
தாம்பூ லம் அருந்தல்
குணஞ்சேருந்தாம்பூலம்பகலேயன்னங்
கொள்ளுமுன்னோர்போதுமன்னங்கொண்டபின்பும் கணஞ்சேருமிரவுதுயில்கொள்ளும்போதுங்
கருதுமும்முறைகொளலாங்கதிக்கக்கொண்டால் பணஞ்செருமின்னாளேபாண்டுரோகம்
பற்றுமிருவிழிபுகையும்பல்லும்பாழாம் மணஞ்சேருமுடல்வேற்றுநிறமாம்மாற்ற
மருந்துமில்லைமதுவுண்டார்வசமதாமே.
சந்தனம்
மதுவுறுசந்தனமுடலிற்றினவைத்தீர்க்கும் மாறாதபிரமியத்தைமாற்றுவிக்கும் கதுவியெழுவாதபித்தகபத்தைப்போக்கும்
கமலைதனைப்பொருத்துவிக்குங்களிப்புண்டாக்கும் புதுமைசெறிதாதுவிளைவிக்கும்போதப்
புத்திதருமாங்காரம்புணருவிக்கும் சதுமுகவன்படைத்தசிதளமுண்டாக்குஞ்
சைலதனத்தன்னநடைத்தாமமததே.
பனைப்பண்டம்
மாதேகேள்பனைமரத்தின்புசிப்புக்கொண்டால்
வயதுநிற்கும்மிடுக்குண்டாம்வடிவுக்கீனம் தாதுமிகுஞ்சொறிகரப்பன்மிகுந்துண்டாகுந்
தவனமிகும்வாதமிகத்தானேசேரும் போதமுறுதேங்காயுமதுபோலாகும்
பூசணிக்காய்முழுவாதம்புணுர்ச்சிக்கீனம் காதலேேதீகுே"ே
காமாலைபாண்டுவையுங்கலைக்குந்தானே.
நாடிவிதி
நாடிநடை
அன்னமேகோழியோனான் மயிலெனநடக்கில்வாதம் பின்னையோராமையட்டை பெருகவேநடக்கிற்பித்தம் சொன்னமாமயில்போல்நல்லாய் தொங்கியதவளைநாகம் என்னவேநடக்கிலையென் றியம்பினார்நாடிதானே.
தானமாம்வரதநாடி தான்வலுவாகநிற்கில் ஊனமாமுகரநோய்தா னுலாவியேநிற்குமென்க ஆனதோர்பித்தநாடி யதிகமாய்நிற்குமாகில் கானமாங்குழலாய்வெப்புக் கடினமேசெய்வதாமே.

Page 16
செகராசசேகர வைத்தியம்
செய்தியாயமைந்தோர்நாடி சிக்கியேநிற்குமாகில் உய்வதேயில்லையென்க வுற்றிடுசிரமோடுச்சி கையுளே துடிக்குநாடி கமலையையனையமாதே மெய்யுறுமூளைவெப்பு மேவுகிற்குணத்தைக்கேளாய்.
ஆய்ந்தமூளையிலேவெப்பங் கமைந்துதான்கொதிக்குமாகில் ஏய்ந்ததோராடிக்காற்றி லேறியகொடிபோலேறி ஒய்ந்தகாற்றிடையினின்று உதறியகொடியேபோலத் தோய்ந்தகைநாடிநின்று துடித்திடுந்துடிமருங்கே.
துடியனாயத்திதன்னிற் சுரங்களுமமர்ந்துநிற்கில் படியநின்றோங்கியோங்கிப் பதறிடுந்தசையுள்ளாகில் அடிகரமுழற்றிநாடி யழன்றுதான்புற்றியெங்கும் முடியநின்றிடுங்காற்பித்தம் மோதியேபெருத்துத்தோன்றும்.
தோன்றியதோலில்வெப்புத் தோற்றிநின்றிடுகிற்சற்றே ஊன்றியபித்தநாடி யுரமிலாதோடுமென்க வான்றருசுரங்கடிரில் வலுப்பெறவோடாக்கெண்டை மீன்றனைநிகருங்கண்ணாய் மெத்தெனவோடுங்கண்டாய்.
ஒடியவாதநாடி உவப்புறநல்கியோடில் ஈடுறுவியாதியெல்லா மியல்புடன்மீளாதென்க நாடியேவாதபித்தம் நலம்பெறவிணங்கியோடில் கூடியவியாதிகோபங் கொண்டெழமாட்டாதென்னெ.
என்பதோரையும்பித்து மியங்கிடிலெட்டுநாளில் வன்புசெய்யாமல்வெப்பு மாறிடுமென்றுசொல்வார் நன்புறுவாதமையை நணுகியேபெலத்துநிற்கில் அன்புறுசீவன்போல தண்ணிதென்றருளினாரே.
அருங்கைகால்குடைந்துமெய்யு மளவினிற்கணக்குமாகில் நெருங்கியவாதநாடி நிற்பதென்றறியப்பின்னை வருந்துகைபிடிக்கிற்காய்ந்து வாதநாடியுமேயாகில் பொருந்தியவெய்யவெப்புப் போகநாட்செல்லுந்தானே
சென்றுதான்பிடித்தகைக்குட் சிதறியேபித்தம்நிற்தில் அன்றுபோயடுத்தநாளி லகன்றிடுஞ்சுரங்களெல்லாம் கன்றவேகண்ணில்வெக்கை கதித்திடிற்பித்தநாடி கொன்றிடும்பதறில்நாடி கொல்லநாட்செல்லுந்தானே.
செல்லுமுன்னுதரந்தன்னிற் சென்றுதானுயர்ந்துநிற்கில் பல்லுயிர்புகழும்நாடி பணிந்துறநிற்குங்கண்டாய் மெல்லுறுமிளகுதன்னை மிகவுமுட்கொண்டார்நாடி அல்லுறுகுழலினாளே அமர்ந்திடுபித்தந்தானே.
தான்மிகக்குளிர்ச்சிகொள்ளில் தங்கியநாடிஐயம் ஈன்முகிற்குழலாய்நெய்பால் இறைச்சியுண்டினும்வாதம் தீன்மிகக்கவருங்கோழி தின்றவர்நாடிபித்தம் மானநற்கனியும்பிட்டும் அருந்தினும்வாதமாமே.
10
12

செகராசசேகர வைத்தியம்
வாதநீள்இளநீர்தண்ணிர் வாங்கினோர்நாடிவாதம் போதவேகோபமுள்ளே பொருந்தினோர்நாடிபித்தம் கோதைசேர்குழலார்தம்மைத் கூடினோர்நாடிஜயம் ஈதைமாமுனிவர்சொன்னார் இயல்புடனறிந்துபாரே. 13
இயல்புசேர் ஆண்பாலாகில் இயங்கியவலக்கையாகும் புயல்செறிகுழலாராகில் பொருந்தியஇடக்கையாகும் வயமிலான் இடதுகையை வலக்கரத்தாலேபற்றித் தயவுடன்இடதுகையாற் தான்வலக்கரத்தைப்பற்றே. 4.
கரந்தனைவியாதிதீர்க்கக் கருதியேநெட்டிவாங்கித் தரம்பெறப்பிடித்துநேரே தன்கையாற்றுக்கிப்பார்க்க விரைந்துகைஇழுத்துப்பற்றி விடாவிடில்வாதம்வந்து வரம்பெருவியாதிதன்னை வளர்க்குங்காண்கமலமின்னே. 5
வேறு
மின்னிகர்மருங்கிலாய் விளங்குகாற்றுடன் பின்னியசேடமும் பெலத்துநின்றிடில் உன்னுசஞ்சீவினி உதவிசெய்யினும் அன்னமேமரணமென் றறிந்தமர்ந்திரே. 16
வேரினமொவ்வொன்றரைக் கழஞ்சுகொள்விரும்பி நீருமிருநாழியினில் நீயிடுகவெட்டில் ஓரினியபங்கொழிய உற்றவைகள்வற்றி சீரினியதிற்பலியுந் தேனுடனருந்தே. 17
அருந்திடுகநன்னாரி தூதுவளைவட்டங் கிருந்தசிறுகாஞ்சோன்றி இயங்கிவைகள்வேர்கள் ஒருங்குசேராடாதோடை யுற்றதிரிபலையும் பொருந்திவளர்சுக்குடனின் பூறல்பங்கம்வேரே. 18
பங்கமுறவொன்றிரு கழஞ்சிவைகள்கொண்டே பொங்குமிருநாழிபுனல் போதவதில்விட்டு கொங்குலவுமெட்டிலொரு கூறுகுறுகிற்றேல் திங்களெனுமுப்பினொடு திற்பலியிலுண்ணே. 19
சேட்டுமசுரத்தி லாக்கெண்ணெய்
உண்ணுஞ்சிலேட்டும சுரந்தனக்கு ஒழுங்கேஅரக்கெண்ணெயைச்
சொல்வன் பண்ணும்பசும்பொன்மெழுகுபதின் பலந்தான்தூணிநீரிலிட்டே எண்ணும்படிகாய்ச்சிக்குறுணி என்றாற்சீலைதனிற்பிளிந்து நண்ணுந்தயிர்நீர்எண்ணெயிவை நானாழியையுங்கலந்திடுமே. 20
கலந்தேயரைத்தங்கதினுடனே கரைக்குமருந்துசதகுப்பை சலந்தானிருக்குமதிமதுரஞ் சந்தங்கொண்டமரமஞ்சள் குலஞ்சேரரத்தைஏலமமுக் குராய்வேரிலாமிச்சரேணுகமும் பலஞ்சேர்கடுகுரோகணிசெண் பகப்பூதேவதாரமுமே. 21
11

Page 17
செகராசசேகர வைத்தியம்
தார்சேர்நீர்வள்ளிக்கிழங்கு தயங்குமுத்தற்காசினுடன் நீர்சேரிருவேலியில்வேரும் நிகரிலவங்கம்பெருங்குரும்பை கார்சேர்குழலாய்கழஞ்சரையாய்க் கடிதாயரைத்துக்கரைத்தெரித்துச் சீர்சேர்பதத்தில்வடித்தெடுத்துச் சிரத்தும்வைத்துமாற்றிடுமே 22
சிரத்தும்வைத்தங்குடம்பினுந்தான் செறியப்பூசிநாசிவிடி லுரைத்தசிலேட்மசுரத்தினுட னோங்குபித்தசேட்மசுரம் வரட்சிதானுந்தலைநோவும் வன்மஞ்செய்யும்பழவெதுப்பும் பரத்திலோடிவிடுமெனவே பகர்ந்தார்பாரிலருந்தவரே. 23
அருந்தவர்கோனானதிரிசுடரைநாளும்
அர்ச்சனையேபுரியவகைஅறியாதொன்றும் பொருந்துபிறவிப்பிணியாலழுந்தும்வாதை
போக்கவகையறியாத பொருவில்மாந்தர் திருந்துகுருதெரிசனையாற்பாவமெல்லாந் தீர்ந்தவகையதுபோலச்செவ்விதாக வருந்துமுடலிற்சுரமும்போகுஞ்சேட்டும
மானசுரத்தொடிளைப்பும்மாறிப்போமே. 24
வாத பித்த சுரம்
துணிந்தேதோன்றும்வாதபித்த சுரத்தின்குணங்கேளுடம்புளையும் பணிந்தேகூதல்விடுவதும் பற்றுவதுமாயிருக்கும்பின் திணிந்தேவயிறுகழியுமுடல் திதமாய்வற்றுமுகம்வேர்க்குந் தணிந்துவிடாமல்மிகவெதும்புந் தந்தங்கனக்கும்வாதபித்தம்.
வாதபித்தங்கலந்தசுரம் வாய்கைத்திருக்குந்துவர்த்திருக்குங் கூதலுண்டாமனலுண்டாங் குளிர்விடாமலேவெதும்புந் தாதுசெறியுங்குழல்மடவீர் சரீரமிகநோம்மலசலங்க ளிதுபலகால்விடாதென்றே இசைத்தார்பெரியோரிவைசிலவே. 2
சிலபோதுணர்ச்சிகெட்டிருக்குஞ் சிறுகாலேவாய்தித்திக்கும் பலகாலும்வாய்கசந்திருக்கும் படருள்ளுழலையுளதாகுந் தலைமீதிதற்குப்பரிகாரந் தானேகுடிநீர்தனைச்சொல்லில் அலகார்விழியாயுள்ளிசுக்க தாறுகழஞ்சுதேடுகவே. 3
தேடும்பொரியுஞ்சிறுபயறுந் தேவதாரமுக்கழஞ்சு போடும்புதியஇருநாழிப் புனலிற்காய்ச்சிநாழிசெய்து நாடும்புனலிப்படியேழு நாளுங்காய்ச்சிக்கொடுத்ததற்பின் கோடுசெறியும்விழியாய்முற் குடிநீரடைவுகூறுவமே. 4.
கூறுஞ்சீந்திலறுகழஞ்சு கொத்தமலிமுத்தற்காசு தேறும்வேற்கொம்பறுகழஞ்சு தேவதாரமுடன்கழஞ்சா யூறும்புனலங்கிருநாழி யூற்றியுழக்காகக்காய்ச்சி நீறும்படி திற்பலிப்பொடியை நீயிட்டருந்துநெறிஅறிந்தே. 5
அறிந்தேஇரண்டாங்குடிநீரி னடைவுகேளுந்திற்பலியுஞ் சிறந்தவிளாலோடிலாமிச்சு சீவும்வேர்க்கொம்போரொன்று பிறிந்தகழஞ்சிலிருநாழிப் பெருநீர்விட்டுஉழக்காக்கி உறிஞ்சிவிடுங்காண்திற்பலிதே னுடனேகுடிநீருடன்கலந்தே. 6
12

செகராசசேகர வைத்தியம்
கலங்காதேசெவ்வியங்கடுக்காய் கடுரோசனிசீந்திற்றண்டோ டிலங்காபுரிசேர்பற்படக மிலாமிச்சுடனேமரமஞ்சள் தலங்காணுறுகாஞ்சொறிதேவ தாரஞ்சிறுமூலகஞ்சுக்குப் பலங்காணோரொன்றிருகழஞ்சிற் பயந்தானிரண்டுநாழிவிட்டே.
நாழிதானோருழக்கானால் நறுக்கித்தூயதிற்பலித்தூள் ஆழிமேவாவிந்துப்பு அதிலேகலந்துகொண்டடைவே தாளிவேவுங்குவளைவிழி சையிலம்போலுந்தனமாதே கோழிகூவிவிடிவளவிற் குடித்தேநடித்துக்குலாவிடுமே.
குலவுகீழ்காய்நெல்லிபுடோல் கோட்டஞ்சிறுதேக்குச்சீந்தில் நலசாந்துடனேவேப்பலகு நாகம்பூப்பங்கம்பாளை தலமேவியகாஞ்சொறிதேவ தாரங்குமிழ்முத்தற்காசு
கலனாமுலையாய்பெருங்குரும்பை கடுகுரோசனையோடதிவிடையம்.
அதிகங்கொள்ளாதொருகழஞ்ச தாகக்கொண்டங்கதுதன்னைக் கதிதங்கிருநாழிப்புனலிற் காய்ச்சியுழக்கொன்றானாக்கால் விதிதந்தருளுந்திற்பலிதேன் விட்டேயதனிற்கலந்துகொண்டு மதிகொண்டிதனையிருதரத்தால் வாங்கிப்பருகுமனமுவந்தே.
உவந்தேகொத்தமலிவேற்கொம் புடனேசிறுகாஞ்சொறிமதுரம் சிவந்தேயிருக்குங்கொன்றைத்தோல் சிறுமூலகமுத்தக்காசு நவந்தானானபற்படக நன்னாரியில்வேரிருவேலி யவந்தீர்குதிரைவாலிபுடோ லானதேவதாரமுமே.
தார்சேர்குழலாய்வாளமுள்ளி தயங்குமிலாமிச்சோரொன்று நேராகத்தான்கழஞ்சரையாய் நிறுத்துக்கொண்டங்கிருநாழி சீராய்நீரில்விட்டுழக்காய்ச் செறியக்காய்ச்சித்திற்பலிதேன்
தார்சேரிருள்போய்விடிந்துண்டாற் கலங்கிச்சுரம்போம்கமழ்மொழியே.
வாத பித்த சுரத்திலெண்ணெய்
மொழிசீதேவிசீந்திலுடன் முள்ளிமூலஞ்சிற்றமட்டி யழியாவிருவேலித்தண்டங்கவை யோர்நிறையிற்கொண்டிடித்து ஒழியாநிர்தான்தூணிவிட்டங் கூறிக்காய்ச்சிநாலொன்றாய் பழியாவண்ணங்காய்ந்தபின்பு பரிந்தேகரைக்குமருந்துகொள்ளே.
மருந்தாஞ்சீதேவியில்வேர்சே வகன்பூடுடன்சீந்திற்கிழங்கு கருந்தாளிலாமிச்சிருவேலி கடுரோசனியோடிலவங்கம் இருஞ்சீர்கோட்டமதிமதுரம் ஏலஞ்செவ்வள்ளக்கொடியு முருந்தார்நகையாய்பெருங்குரும்பை முத்தற்காசுதுவற்சிகையே.
சிகைசேர்மயிலேநன்னாரி திற்பலிவேர்க்கொம்போரொன்று மிகையாமூன்றுகழஞ்சுகொண்டு விரும்பியரைத்துக்கரைத்ததிலே வகையேநாழியெண்ணெய்விட்டு வடித்துத்தலையில்விட்டுடம்பிற் தொகையேயூசவாதபித்த சுரம்போமென்றுசொல்லுவரே.
13
O
11
2
13
14
15

Page 18
செகராசசேகர வைத்தியம்
பித்த சிலேட்டுமசுரத்தின் குணமும் மருந்தும்
சொல்லும்பித்தசேட்டுமமாஞ் சுரத்தின்வகைகேளுடல்குளிரும் வெல்லுமூச்சுண்டாயிருக்கு மெத்தவெதும்புமிருமலுண்டாம் வல்லநாவும்வரண்டிருக்கும் மயக்கமுடம்புவற்றாதாம் அல்லலுறவேதான்பிதற்றும் வேர்க்குமாறுமடர்ந்தடர்ந்தே.
அடர்ந்துதலையுந்தூயகழுத் தடியும்விடாமலேவேர்க்கும் துடர்ந்தஇருகண்வெளிறுவிக்குஞ் சொல்லும்பரிகாரங்கேளும் படர்ந்தசுக்குக்கொத்தமல்லி பையநெருக்கிச்சீலைதன்னிற் றடஞ்சேர்விழியாய்கட்டியதைத் தண்ணிரினிலிட்டுக்காய்ச்சே.
காய்ச்சியிறக்கும்போதுபொரி கையாற்போட்டுப்பின்னிறக்கி வாய்த்தமருந்தையிப்படியே வகையாய்க்காய்ச்சிஎள்ளளவுங் கூச்சமறவேகொண்டுபின்முற் குடிநீரடைவுகேள்கிளிபோற் பேச்சும்பவளவதரமொடு பிடிபோல்நடையுமுளமயிலே.
உளங்கொள்சிந்தில்திறிபலையி னுடனேவெட்பாலையினரிசி குளஞ்சேர்கழுநீர்க்கிழங்குடனே கூட்டியோரொன்றொருநிறையாய்த் துளங்கஇடித்துநீரிலிட்டுச்சுவற எரித்தெட்டொன்றாக்கி இளங்கோகனகமுகமுடையா யெட்டுநாளுமிவைகொள்ளே.
இதுதான்கொண்டபின்னிதனுக் கிரண்டாங்குடிநீரடைவதுகேள் முதுவேம்பதனிற்பட்டைபுடோல் முற்றுஞ்சந்தமிருவேலி மதுவார்நளினந்தனில்வளையம் வளர்வெட்பாலையரிசிசுக்கு துவராம்நெல்லிகடுதான்றி கடுகுரோசனையுங்கடிதுகொள்ளே.
கடிதாந்தேவதாரமுத்தக் காசோடிலாமிச்சொருநிறையாய் வடிநீரிருனாழியில்விட்டு வற்றனரித்தெட்டொன்றாக்கிப் படிகாசிடைதேன்மேல்வீசிப் பருகங்கதற்குப்பின்னுமொரு குடிநீரடைவுகேள்சுக்குங் கொத்தமலியுங்கோட்டமுமே.
கோட்டமானவேப்பலகு கோடியாஞ்சீந்தில்மரமஞ்சல் வாட்டமிலாதகறிப்பாலை வளர்தண்டுடனே அதிமதுரம் ஈட்டுஞ்சிறுகாஞ்சோன்றியுடன் இன்பூறலினோடிருகழஞ்சாய் ஈட்டுநீர்தானிருநாழி யிட்டுக்காய்ச்செட்டொன்றெனவே.
ஒன்றாகத்தேனிருகழஞ்சி னுடனேகுடியங்கின்னமுங்கேள் குன்றாமுத்தமுடன்கோட்டங் கொன்றைப்பழத்தோடிலாமிச்சுப் பொன்றாவடலிகச்சோலம் பொருந்துமரமஞ்சலினுடனே நன்றாமிரண்டுகழஞ்சுதண்ணிர் நாளொன்றிற்றேனுடன்பருகே.
பருக்கும்வெட்பாலையிலரிசி பரிசாம்வேற்கொம்பிருவேலி நருக்குந்தான்றிகடுகுநெல்லி நலமாமுத்தற்காசுபுடோல் கருக்குஞ்சந்தமிலாமிச்சு கழஞ்சாய்கிறுத்திங்கிருநாழி இருக்கும்புனலெட்டொன்றாக்கி இடுகொட்பொடியிட்டிவையருந்தே
அருந்துஞ்சீந்தில்வேம்பினல கரிதாமுத்தற்காசுபுடோல் திருந்துஞ்சிறியகாஞ்சொறியாந் தேவகாரம்நன்னாரி வருந்தும்படிதிற்பலிகழஞ்சாய் வாங்கிஇருநாழிப்புனலில் பொருந்தும்படிவிட்டொன்றாக்கிப் போதக்கரச்சும்புகுந்திருந்தே.
14

செகராசசேகர வைத்தியம்
புகுந்துநீயெட்டொன்றாக்கிப் பொடியாங்கண்டசர்க்கரையை மிகுந்திடாமல்சற்றேமேல் விகிக்குடிப்பையாமாகில் உகந்துதீராப்பித்தசிலேட்டும மாஞ்சுரங்கள்மற்றதெல்லாம் அகந்தைமாறிநடுநடுங்கி அகன்றுபோமென்றறைந்தனரே.
வாதசிலேட்டுமசுரத்திற்கு குணமும் மருந்தும்
பேராதிருமும்நாவுலரும் பெருகுஞ்சக்தியுறக்கமுண்டாஞ் சீராயுடலிலுட்கூதல் சிறந்தமலமோடுகிர்வெளிறும் நீரார்மூக்கில்வாய்தன்னில் நீருண்டாகநாட்செல்லுந் தீராவெதுப்புங்கண்வெளிறுந் தீயும்வெயிலும்வேண்டிடுமே.
வேண்டும்பலகாற்கொட்டாவி மெய்யிலுரோமஞ்சிலிர்க்குமிகத் தூண்டுமயக்குந்தெளிவுண்டாந் தொடைக்கீழ்க்கையைச்சொருகுவிக்கும் ஊன்றுங்குடைச்சல்வாதசிலேட் டுமமாஞ்சுரமென்றிதையறிந்து மீண்டுமிரண்டுபட்டினிதான் விட்டுச்செய்யும்படிகேளே. 2
கேளுழுன்றாநாளரிசி கிளர்வேர்க்கொம்புகொட்பயறு மூளும்பொரியிங்கிவைகொண்டு முற்குடினிரிட்டுப்பின்பு நாளும்பெருகஏழுசென்றால் நாடிக்குடினிர்க்கிடுமருந்து நீளுஞ்சீந்தில்மாதளைவேர் நெடிதாமெலியால்வேர்தேடே. 3.
வேறு
தேடுமுத்தக்காசுசுக்குச் சேரவொன்றுமுக்கழஞ் சீடுபெற்றநிரிலிட்ட தெட்டிலொன்றதானபின் னிடுதிற்பலிப்பொடிசெய் நியதிட்டருந்துமே வாடுவித்தவாதசேட் டுமசுரங்கள்மாறுமே. 4.
மாறிலாததேவதார மற்றுஞ்செவ்வியங்கடுகு சீறிடாவுரோசனி திற்பல்மரமங்சலுந் தேறியொன்றிருகழஞ்சு சேருநீரிலெட்டிலொன் றுாறியிந்துதிற்பலியோ டுண்ணநோதலோயுமே. 5
வேறு
ஒயுங்கோட்டம்பெருங்குரும்பையுடனே சந்தம்பேய்முசுட்டை பாயுங்கடுகுரோசனைவேப் பலகுசிறுதேக்கதிவிடைய மேயுஞ்சீந்தில்திற்பலியோ டேநாகம்பூப்பெருங்குமிழ்வேர் தேயுந்தேவதாரநலஞ் சேரும்புடோல்முத்தஞ்சேரே. 6
வேறு
சேர்ந்ததோரொன்று சிறந்தகழஞ்சிரண் டேந்துநீரிலீட் டெட்டிலொன்றானபின் போர்ந்ததிற்பலி போட்டுக்குடித்திடில்
சாந்தமாஞ்சக லசுரமானதே. 7
வேறு
ஆனதேவதாரமுட னடர்ந்தவேர்க்கொம்படர்கொள்ளுப் பானல்போலும்விழியாய்பற் படகம்கொத்தமலிவசம்பு
5

Page 19
செகராசசேகர வைத்தியம்
சீனமிளகுதிற்பலிமுந் திரிகைப்பழமுத்தக்காச தானதோரொன்றிருகழஞ்சு தண்ணிரிரண்டுநாழிவிட்டே.
விட்டுக்காய்ச்சியுழக்கானால் மேவும்பெருங்காயங்கழஞ்சு இட்டுக்குடிப்பீராமாகி லிடரேசெய்தங்குடல்தன்னில் ஒட்டித்திரியும்வாதசிலேட்டும மாஞ்சுரங்களானதெல்லாம முட்டுப்பட்டுத்தடுமாறி முறிந்தேயோடுங்கண்டாயே.
கண்டார்புகழுங்கொடிக்கழல்வேர் கடுக்காய்சீற்தில்வேல்பீற்கோ டுண்டாமிலுப்பைப்பூவேற்கொம் புடனேயாடாதோடையில்வேர் பண்டார்செறியும்பெருங்குமிழ்முந் திரிகைப்பழம்பங்கம்பாளை கொண்டேஒரொன்றிருகழஞ்சு கூட்டியெரித்துக்கொள்ளீரே.
கொள்ளும்புனல்தானிருநாழிக் குள்ளேபோட்டுக்காய்ச்சிப்பின் தெள்ளும்புனல்தானுழக்கானாற் திற்பலியிந்துப்புத்தேனும் விள்ளும்படியேநீர்தான்மேல் விட்டுக்குடிப்பீராமாகி லுள்ளுங்காயும்வாதசிலேட் டுமமாஞ்சுரம்போமுடலைவிட்டே.
சன்னிவாதசுரத்தின் குணமும் மருந்தும்
உடல்சேர்சன்னிவாதசுரத் துண்டாங்குணத்தையுரைத்திடுகில் பிடர்நோந்தலைநோமறிவுகெடும்பிதற் றுமிருமலிளைப்புமிகப் படரும்புண்போலுடல்நோவாம்பருகுந் தண்ணிர்த்தாகமுண்டாம் விடமேபோதவிடாக்கசப்பா மிகவும்வெதும்புமுழலையுண்டே.
உண்டேகழிச்சல்நாவுலரு மோதுமிதற்குவாய்நாசி விண்டேபுண்ணாம்நாக்கறுக்கு மிகுநாமூக்குப்புண்ணாற்றந் தண்டேன்மொழியாய்சத்தியுமாந் தள்ளிப்பரிகாரங்கள்செய்யிற் கண்டேவணங்குமுன்னோன்கண் களிக்கப்பூசைவழங்கிடுமே.
வழங்கும்தெய்வபூசைகளும் மற்றுங்கிரகச்சாந்திகளும் முழங்கும்மறையோர்போசனமும் மொழியும்பலசாந்தியும்பண்ணி துழங்கும்நோய்கeருதற்குத் துயக்குங்குடிநீரடைவுதன்னை கழங்கும்பந்துஞ்சேர்கரத்தாய் கருதிப்புகல்வென்காசினிக்கே.
வேறு காசில்லாப்பொன்னாங் காணிச்சமூலங்கொள் பேசுமாம்பூவும் பிறங்குநிலவேரும் தேசுசெறியுஞ்சிறு பயறுதன்னுடனே மாசில்லாநெய்யு மாயடைவேசுவட்டிடுமே.
வேறு
கூட்டியேகொத்தமல்லி குலவியமணலினோடே போட்டுநீவறுத்துநெல்லும் பொரிந்ததோர்பதமதானால் ஈட்டியவெண்ணெய்போட்டாங் கதிற்தண்ணிர்விட்டிறக்கி காட்டுபற்படகந்தன்னைக் கலந்துநீகுடித்திடாயே.
வேறு
குடித்தபோது கொடியசுரத்தினிற் பிடித்ததாகம் பெருகுமுழலைவந்
16

செகராசசேகர வைத்தியம்
தடித்ததென்னத் தவனமும்மாறிடும் வடித்ததண்ணிர் வகையினிற்கொள்ளுமே. 6
கொண்டுபின்வேலந்தோலைக் குறுகவேநிரிலிட்டு மண்டிடக்கரைத்துக்காய்ச்சி வற்றிநாலொன்றதானால் தண்டிடாமதுரமேலந் தயங்குவேர்க்கொம்பிந்துப்பு விண்டிடுமோதங்கொத்த மிளகுடன்கடுக்காய்கூட்டே. 7
கூட்டியோர்நிறையிற்கொண்டு குலவியபுளியந்தோலி னிட்டியசாற்றினாலே யிடையம்விட்டரைமுன்காய்ந்த காட்டியகியாளத்திட்டுக் காய்ச்சிநீர்திரண்டவாறே யீட்டுநீயிறக்கிநாவி னிசைவுடனடக்கிக்கொள்ளே. 8
அடக்குசேட்டுமங்கள்பித்த மடர்ந்தநெஞ்சிற்றுரப்பு தடக்குநாவரட்சிதண்ணிர்த் தாகமிங்கிவைகடிரு மடக்கிநீயரிசிதன்னை வறுத்துப்பின்நிலவேர்சுக்குச் சடக்கெனநீரிற்சீலை தனிற்கட்டிக்கஞ்சிகாய்ச்சே. 9
காய்ச்சியேகொடுத்துப்பின்னைக் கருதுநாளேழுஞ்சென்றால் நோச்சவேயிரண்டுநேரம் நுவன்றபட்டினிதான்விட்டுத் தீச்சிடுஞ்சன்னிவாத செழுஞ்சுரம்திரும்வண்ண மூச்சுறக்குடிநீர்காய்ச்ச முதற்குடினிரைக்கேளே. O
வேறு
நீர்செறிசிற்றமட்டிசிறு காஞ்சொறிநன்னாரி
நெடிதானபேரமட்டி நிகழ்ந்தஇவைதன்னில்வேர் தார்செறிமுத்தற்காசு வேர்க்கொம்புசீந்திற்
றண்டோரொன்றொருநிரையாய்த் தனித்தனிகொண்டிடித்து வார்புனலங்கிருநாழி வார்த்தெரித்தெட்டொன்றாய்
வற்றியபின்திற்பலித்துாள் வகைவகைவிட்டருந்தின் சூர்செறியுஞ்சன்னிவாத சுரந்தீருமடைவே
சொல்வனிரண்டாங்குடிநீர் துடியிடைவேல்விழியே. 11
வேற்கொம்புதிரிபலைதா மரைவளையங்கோட்டம்
வெட்பாலையரிசிபுடோல் வேப்பீர்க்குச்சந்த மேற்றங்குமிருவேலி கொத்தமல்லிநெய்த
லின்கிழங்குபற்படகம் நிலக்குமிழின்வேராம் பரற்றங்குமுந்திரிகைப் பழமுடனேயிச்சம்
பழந்தேவதாரமுட னிலுப்பைப்பூமுத்தம் ஊற்றங்குகடுகுரோ சனியங்கம்பாளை
யுடன்சிறுகாஞ்சோன்றியிவை ஒன்றிரண்டுகழஞ்சே. 12
வேறு
இருநாழிநீரினிலிட் டெட்டொன்றாய்க்காய்ச்சி கருதாததேன்திற் பலித்துாள்கலந்துண்
அருகாதகெட்ட சுரங்களெல்லாமஞ்சிப் பருகாதமாகப் பறந்துவிடும்பாரே. 13
17

Page 20
செகராசசேகர வைத்தியம்
வேறு
பாராய்கறிப்பாலைத்தண்டு படருங்குதிரைவாலிகுமிழ் சீராய்வேற்கொம்பதிவிடையஞ் சிறுதேக்கொடுகண்டங்காலி நீரார்கோட்டம்பெருங்குரும்பை நிலவேம்பொடுகீழ்காய்நெல்லி வாரார்முலையீர்கொத்தமல்லி வசம்புமதுரமரமஞ்சல் 14
மஞ்சார்குழலாயோரொன்று வாங்கிக்கழஞ்சாகக்கொண்டங் கெஞ்சாதிருநாழிப்புனலி லிட்டேயெட்டொன்றாக்கிப்பின் பஞ்சாரிந்துப்புத்தேன்திற் பலிமேற்பொடியாய்ப்பருகிடுகில் நஞ்சாயெரியுஞ்சுரமிவைதான்நன்னி ரெனவேகுளிர்ந்திடுமே. 15
குளிருங்காக்கணங்கொவ்வை நொச்சிகுலப்பேய்ப்பருத்திசமூலமற்ற வெளிறும்வேலிப்பருத்தியுடன் மிக்கவாதமடக்கிஇலை ஒளிருஞ்சாறொன்றொருநாழி யுள்ளேகரைக்குமருந்தரத்தை தெளியுஞ்சிவனார்வேம்புடனே தேவதாரஞ்செவ்வியமே. 16
சன்னிவாதசுரத்தி லெண்ணெய்
செவ்வியந்தானிலக்குமிழ்வேர் சிறுமூலகமிந்துப்புமிள கெவ்வமில்லாத்திற்பலியோ டிலவங்கம்வெட்பாலரிசி குவ்வுளோரெண்சீதேவி குலவும்வசம்பீசுரமூலி கவ்வையொத்ததகாரைகண்டங் காலிசிவதைவேற்கொம்பே.
கொம்பேவெளுத்தலமுக்கிராய் கூறும்விளால்வாலுளுவையிவை வம்பேசெறியுமரமஞ்சல் வளர்சிற்றமட்டிகருஞ்சீரம் நம்போரொன்றுகழஞ்சுகொண்டு நருக்கியரைத்துக்கரைத்ததிலே நிம்பந்திலமேரண்டஎண்ணெய் நிறையிற்கூட்டியெரித்திடுமே. 2
எரித்தேவடித்துத்தலைதனிலு மிட்டேயுள்ளுங்கொடுத்துநைய முரித்தாய்ப்பண்ணில்வாதசிலேட் டுமமாஞ்சுரத்தினுட்புகுந்து திரித்தேசன்னிபாதசுரந் தீர்க்குமெண்ணெயிதுவென்பார் மரித்தேபோகவேண்டாநீர் வல்லீராகிற்செய்வீரே. 3
விவடிசுரத்திற் குணமும் மருந்தும்
அவஞ்சேர்விஷமாஞ்சுரந்தன்னி லடைவுகேளுங்கைகாயும் நவஞ்சேருங்கால்காயாது நாவும்வரஞமுழற்றுவிக்கு முவந்தபேரைக்காட்டுவிக்கு முய்யேன்பிழையேனெனுந்தலைநேரம் நிவந்தசந்துமொழிகாலும் நெடிதாயோயுமமர்ந்திடுமே.
அமரும்விட்டுவிட்டுழலு மதிகமாகவுள்ளழற்றுந் தமரும்விதனமுறமயக்குந் தானேதெளியுமிதுதனக்குக் கமரும்பொருந்தும்வேப்பந்தோல் கடுக்காய்சீந்தில்புடோல்வேர்க்கொம் பிமருந்தோடைநிலவேம்பிங்கிவை தானோரொன்றிருகழஞ்சே. 2
இருநாழித்தண்ணீர்தனிலே யிட்டேயுழக்காய்க்காய்ச்சிப்பின் பருகீரின்னங்குடினிரைப் பசுரக்கேளும்வேற்கொம்பு தருவாம்வெட்பாலையிலரிசி சந்தங்கொத்தமலிசீந்தில் மருவாரிலாமிச்சுப்படகம் வளராடாதோடையில்வேரே. 3
18

செகராசசேகர வைத்தியம்
வேரோரொன்றுகழஞ்சுகொண்டு விரைவாய்க்கலத்திட்டிவைதன்னை நீரோரிரண்டுநாழிதண்ணீர் நீயிட்டெரித்துஉழக்காக்கிப் பாரோதியசர்க்கரையிலிட்டுப் பருகத்திருமின்னமொன்று காரோவெனுமோதிமத்தாளே கழறக்கேளாய்காதலுற்றே. 4.
உற்றேவெட்பாலையிலரிசி யுடன்பற்படகமதிமதுரஞ் சற்றேவளரும்நிலவேம்பு தானுஞ்சிறுகாஞ்சோன்றியில்வேர் சொற்றேமுத்தக்காசுபுடோல் சொல்லுந்தெற்பைப்புல்லுநெல்லி கற்றோர்புகழுங்கடுதான்றி கண்டங்காலிகோட்டமுமே. 5
கோட்டஞ்சேர்சேவகன்பூடு கொன்றைப்பழங்கடுரோசனியு மீட்டமுடனென்றிருகழஞ்சா மிருனாழித்தண்ணிரிலிட்டு நாட்டமுறவேயுழக்காக்கி நயந்துகுடிப்பீராமாகில் மாட்டுமரியசுரங்களெல்லாம் மாறிப்போமென்றுரைத்தனரே. 6
உரைக்குந்தேவதாரஞ்சுக் குடனேகோட்டம்பற்படகம் விரைத்தங்கியமுத்தக்காசு வேண்டுங்கடுக்காய்மகிழம்வேர் தரைக்குள்ளேழும்வட்டினில்வேருந் தங்குசிறுமூலகஞ்சிறுதேக் கரைக்குஞ்சிறுதிற்பலிவகைக் கொன்றாகக்கழஞ்சுகொள்வாயே 7
வேறு
கொள்ளுந்தண்புனல் கொண்டிருநாழியில் உள்ளநீர்விட் டுழக்கதுவாக்கியே விள்ளிடாமல் விழுங்குவையாகில்மேற் றுள்ளிநின்ற சுரங்கள்விட்டேகுமே. 8
விஷசுரத்துக்கு நெய் வேறு
ஏகுமிதற்குநெய்பண்ணு மியல்பைக்கேளுமின்ாகுமஞ்ச லாகும்நிலவேரறுகழஞ்சோ டரிதாம்வெளுத்தற்பிசினொன்று வாகுபெறவேகழங்சரைத்து வகையிற்பாலும்நெய்தானும் பாகுசேரொவ்வொருனாழி பரிந்தேவார்த்துக்கரைத்திடுமே. 9
வேறு
கரைத்தரைத்துப்பதந்தனிலேவடித்துநேரங்
சுழஞ்சுநெய்தானருந்துவிரேற்கமலமானே வரைத்தடந்தோள்மன்னவர்கள்வணங்குகின்ற
செகராசசேகரன்றான்மனதிலோர்ந்து தரைக்குளவன்றனக்கடங்காச்சத்துருக்க
டங்களைக்காய்ந்திடுவதென்னத்தரணிமீதில் விரைக்குவிஷமவனடக்குவதேபோல
விஷசுரத்தைமாற்றுமிந்தமருந்துபாரே. 10
முழுத்தசுரத்தின் குணமும் மருந்தும் பார்மேல்முழுத்தசுரந்தன்னைப் பகரக்கேளுந்தலைசுழற்றுஞ் சீர்வாய்கைக்கும்பற்கடிக்குஞ் சிவக்கும்விழியுஞ்சிறுநீரும்
19

Page 21
செகராசசேகர வைத்தியம்
நீர்தான்மூக்கில்வருமூறி நிமிற்குஞ்சரீரமுள்ளழற்றுங் கார்சேர்கண்ணிற்பிளையுண்டாங்க வலைமறக்கும்வேர்வெழுமே.
வேர்க்குமுதுகும்வயிறடியும் வீணேபகர்ந்துதலைநோவாம் பார்க்கில்வெறிபோலேமயக்கும்பகர் நாப்புண்ணாஞ்சுவாதமுண்டாஞ் சீர்க்கொளறிவுகெடவேமூர்ச் சிக்குங்குலையப்பிதற்றுமிதற் கேற்குமிளனிருலையிற்சோ றேழுநாளுமவித்துண்ணே.
உண்டேயேழுபட்டினிவிட் டுயர்முற்குடிநீர்வகைசுக்குப் பண்டேமுனிவர்பகரும்பற் படகமிலாமிச்சிருவேலி தண்டேமுத்தற்காசொடுசெஞ் சந்தனமோரொன்றிருகழஞ்சுற் கொண்டேயிருநாழியுமுழக்காய்க் குறுகக்காய்ச்சிக்குடித்திடுமே.
குடிநீரிரண்டாமடைவுதனைக் கூறக்கேளுமிருவேலி படிசேர்நாணற்கடிகைசந்தம் பரும்பேரமட்டிசிற்றமட்டி கொடியாஞ்சிறுகாஞ்சொறிகரும்புங் கூட்டியோரொன்றிருகழஞ்சாய் இடுநிரிருநாழியிலிட்டே எட்டொன்றாக்கியருந்துகவே.
வேறு அருந்துமுந்திரிகைப்பழம்வெப்பமீர்க் கானசந்தமிருவேலிசுக்குடன்
பெருஞ்குரும்பைமரமஞ்சள்நன்னாரி பேராதோரொன்றிருகழஞ்சாகவே பொருந்துநீரிருனாழியாய்க்கொண்டிதிற் போட்டெரித்தெட்டொன்றாகிப்
போதுதான்
வருந்துவோர்கழருந்திடிற்தீர்ந்திடும் மலையில்மாமுனிவாகடஞ்
சொல்லுமே
வேறு
சொல்லுங்கோட்டமதிமதுரந் தூய்முந்திரிகைப்பழஞ்சந்தம் ஒல்லும்வேப்பங்கடிகையத னுடனேகடுகுரோசனியும் வல்லபடியொன்றிருகழஞ்சு வனந்தானிருநாழியும்விட்டே யல்லுளெரித்தெட்டொன்றாக்கி யருந்தத்திருமருஞ்சுரமே.
அருந்தாமரைவளையஞ்சுக்கோ டாடாதோடைநன்னாரி பருந்தாளிருப்பைப்பூச்சிவதை படர்வெப்பிற்குச்செங்கழுநீர் மருந்தாமுரோசனையிருகழஞ்சாய் வனந்தானிருநாழியிலிட்டே யிருந்தாங்கெட்டிலொன்றாக்கி இவைசர்க்கரைதேனுடனுக்ரே
முழுத்தசுரத்திலெண்ணெய்
நுகர்வாய்முழுத்தசுரந்தீரும் நூலாகமத்தின்படிசொல்வ ணிகரசீதேவிசிற்றமட்டி நெடுஞ்சீந்திற்றண்டிவையெல்லாம் பகரோரொன்றுகழஞ்சுகொண்டு பலந்தானெடுத்தங்கிருதூணி நகரார்நீர்விட்டுழக்காக்கி நாலொன்றாக்கிப்பிழிந்துகொள்ளே.
பிழிந்தேசந்தமதிமதுரம் பின்னுமிலாமிச்சிருவேலி மொழிந்தகோட்டஞ்செண்பகப்பூ முற்றுஞ்சீந்தில்நன்னாரி ஒழிந்தநாகம்பூவரத்தை யுடன்சாத்திரபேதிக்கிழங்கு பொழிந்தநீர்த்தாமரைவளையம் புகலுந்தேவதாரமுமே.
20

செகராசசேகர வைத்தியம்
தார்சேரேலமிலவங்கந் தக்கோலமிந்துப்புடனே சூர்சேர்கொடிவள்ளிக்கொடிகைச் சோலமலையினிருவேலி கூர்சேர்முத்தக்காசுசத குப்பையரேணுகமஞ்சிட்டி
யார்சேர்சடையாய்கழஞ்சரையாய் அரைத்துக்கரைத்துக்காய்ச்சிடுமே.10
கரைநெய்யுரியெண்ணெயுநாழி முலைப்பால்கலந்தேயிருநாழி விரையவெரித்துப்பதத்திற்கு வெண்பச்சைப்பூரங்கழஞ்சு மூரையாயிதற்குப்போட்டுவடித் துவந்தேதலையில்வைத்துடம்பிற் புரைவாராப்பூசிக்கழற்றப் போகும்வியாதிபுகலுவமே.
புகலுமுழுத்தசுரம்வரட்சி போகாப்பித்தமுள்ளுழலை இகலும்பழைபவெதுப்பிவைதா னெட்டினுடனேயிரண்டேனனுற திசையும்புகழுஞ்செகராச சேகரனின்செற்றாரெனப்போ பகலுமெனவேவாகடநூ லறிந்தார்புகன்றாரவனியிலே.
தாகசுரத்தின் குணமும் மருந்தும்
உடம்பிற்சேருந்நாகசுரத் துண்டாங்குணத்தைக்கேளுமினித் திடஞ்சேரனல்போலேகாயுந் தீட்டுமுழலையாற்றாமல் கடந்தகால்கைவயிறெரிக்குங் கடிக்குமேல்காலுடம்பழற்றும் கிடந்துபுரளுமெழுந்திருக்குங் கிளர்ந்தநாவும்வரண்டிடுமே.
வரஞம்நாக்குங் கால்கையும் வடவைபோலவேயெரிக்கும் புரளும்பிதற்றுந்தன்வாயாற் போதவூதுமூர்ச்சிக்குந் திரளுமடமானேயுழற்சி செய்யும்வாதைபலவிதற்குத் தாளம்போலக்குளிர்ந்திடச்செங் கழுநீர்ப்பூப்பொட்டாய்க்கட்டே.
கட்டிப்பன்னீர்கஸ்தூரி கதிக்குஞ்சந்தங்கற்பூரம் பொட்டளிகட்டிமுகந்திருக்கப் பொறுக்குந்தவனமுழலைபித்தம் ஒட்டிக்கழுர்ைகஸ்தூரி யுடனேசந்தம்பன்னிரும் பட்டிற்பொதியுங்குங்குமமும் பச்சைக்கற்பூரமுந்தேடே.
தேடியரைத்துக்கரைத்துமண்ணின் சிறந்தகரகத்தினில்வார்த்துக் கோடிமுன்சரகத்தைவைத்துக் கொதித்தநீரைமுகத்துவிடிற்
கூடிநின்றபித்தமுடன் கொடிதாமுழலைபரிதாபம் வாடிமிகுக்கும்படியுழலை ாேண்வா போமேகைகால்முகங்காடி புகட்டிக்கீழுவிகிது தேமேவிளநீர்தனைச்சீவித் தெளியவுற்றிய
பூமேவியவாகடரெல்லாம் புகழுமிறுத்தியாதிதனைக் காமேவியகாரெனுங்குழலீர் கரைத்தேகரத்தாற்குடித்திடுமே.
இடுநீசம்பாப்பச்சரிசி இலங்கக்கிளைந்தகழுநீரில் வடுவேதீரவடித்ததிலே வளர்சந்தேலஞ்சீரகத்தி னொடுபார்புகழ்சாத்திரவேதி யுவக்குங்கோரோசனைகரைத்துக் கொடுசினியினிலுழலைதனைக் குலைக்குந்தாகமத்தினையே.
அத்திமரத்தின்வேரைவெட்டி யதிலேகலசம்வைத்துாறி மெத்தவிழுந்ததண்ணிரில் மிகவுஞ்சீனியதுகொண்டு
21
11
2

Page 22
செகராசசேகர வைத்தியம்
சுத்தவாழைப்பழச்சாற்றில் துலங்கக்கலந்துபருகிடுகில் சித்தமயக்கமுழலைசுரந் தீருஞ்செய்துபாராயே.
பார்மீதிதில்மாறாதாகிற் பகருமிளநீர்மிகக்கொடுத்து நீராஞ்சத்திபண்ணுவித்து நிறையச்சாந்துபன்னீருஞ் சீராயுடம்புதனிற்பூசிச் சிறக்கப்போர்த்துவைத்தாக்கால் போரார்ந்துழலைபரிதாபம் பொருந்துஞ்சுரமும்பொய்விடுமே.
போனவப்பரிகாரங்கள் பொருந்தவேபலதுஞ்செய்தால் தானமுற்றெழுந்ததாப தவனமிக்குழலைதீரு மானமெய்க்குளிரும்போகு மணுகிடும்வாதசன்னி ஈனமுற்றிடாதவண்ண மிதன்குணமறிந்துசெய்யே.
அறியுநாடிகளுந்துாய வணிமுகக்குறியும்வேறாகங்
குறிகளுமந்தமான குணமுஞ்செய்குறியுங்கண்டே
நெறியுடனவைகடன்னை நீக்கியேபேணிக்கொண்டு பிறிவிலாதிருந்துநீதான் பின்பரிகாரஞ்செய்யே.
செய்திடுங்குடிநீர்கேள்முந் திரிகையின்பழம்வேர்க்கொம்பு நெய்தலின்கிழங்குசந்தம் நெடுங்குமிழ்முத்தற்காசு கொய்தசெங்கழுநீரீச்சங் குருகிருவேலிலாமிச் சையமிலிலுப்பைப்பூவோ டதிமதுரமுநீகொள்ளே.
வேறு
கொள்ளுவெள்ளிலொத்திரங் குலாவுதாமரைக்கொடி உள்ளமிதுவந்துதண்ணி ரொக்கவீதுகூட்டியே துள்ளுநீரிரண்டுநாழி சுட்டுழக்கதானபின் நள்ளிராவிடிந்தபோது நாவினாலருந்திடே.
அருந்துகொத்தமல்லிசீந்தி லானகாசுவேப்பமீர்க் கிருந்ததான்றிநெல்லிமே லெழும்புடோலுடன்கடுப் பொருந்துவேர்கழஞ்சிரண்டு பொங்குநாழிநீரிலே வருந்தியிட்டுழக்கதாய் மருந்தருந்தமாறுமே.
மந்தபித்தசுரத்தின் குணமும் மருந்தும்
இனந்தான்மந்தபித்தசுரமென் றுண்டவைதான்செயுங்குணங்கேள் தினந்தான்சற்றேகுளிர்ந்திருக்கும் சிலிர்க்கும்வயிறுங்கழியாது கனந்தான்படவேவெதும்பிவிடுங் கைகால்நடுக்கும்நாபிசுற்ற மனந்தான்சலிக்கவலிக்கமுந்தி வயிறுகழியவகைசெய்யே.
செய்யுங்கடுக்காய்கொத்தமல்லி சிவதைபயறுவேர்க்கொம்பு நையுங்கடுகுரோசனையும் நருக்கிக்காய்ச்சிக்கொடுத்திடுகில் தொய்யும்வயிறுகழியும்பின் தோன்றுங்கோட்டம்வேப்பிற்கோ டுய்யுஞ்சிறுகாஞ்சோன்றிதேக் குடனேயுலர்ந்தநிலைவேம்பே.
நிலந்தான்புகழுமதிமதுரம் நெடிதாமாடாதோடையில்வேர் நலஞ்சேரும்பற்படகமுடன் நல்லமுந்திரிகைப்பழங்கழஞ்சாய்
22
11
12
3

செகராசசேகர வைத்தியம்
சலந்தானிருநாழியிற்காய்ச்சித் தானேயுழக்கிற்சர்க்கரையிட் டுவந்தேகுடிமந்தபித்தசுர மோடுங்கடிதாயுடல்விட்டே.
அத்திசுரத்தின் குணமும் மருந்தும்
அத்திசுரத்தின்குணங்காணி லடைவேதாகமுடல்நடுங்கும் மெத்தவுடலில்விஷம்போடும மிக்கதாகமடங்காது புத்திமயங்கிவிழிதுஞ்சார் புறம்புமுள்ளுமிகவழற்றும் பற்றுந்தணியும்வெச்சணவும் பார்க்கிலதரஞ்சிவந்திடுமே.
மாறுமத்திசுரந்தன்னில் வகையைக்கேளுழுடல்நடுக்குஞ் சீறுமிருக்கும்பசியில்லைத் திருந்தவுறக்கமுண்டாகும் வீறுசேருமுடம்பெற மிகவும்வெதும்புமுற்சாமந் தோறுமவெதும்புநடுங்கிடுமெய் சொல்லினாவும்வரண்டிடுமே.
இடுநீயிதற்குக்குடிநீர்தா னிலங்குகொன்றைத்தோல்சிவதை கடுவேரடைகொட்டைப்பாக்குக் களிப்பாக்கேலங்கற்றாளை வடுவேற்கண்ணாயிவைதன்னில் வனந்தானாழிவார்த்துறிக் கொடுநீயதனிற் திற்பலிமேற் பொடியிட்டிந்தமருந்தரிதே.
அரிதாஞ்சிறுகாஞ்சோன்றிமுத்தற் காசோடேசேவகன்பூடு பொரிபோற்பூக்குமின்பூறல் புடோல்நன்னாரியொருகழஞ்சாய் வருநீரிருநாழியிலிட்டு வற்றக்காய்ச்சியுழக்காக்கிப் பெரிதாமிருள்போய்விடிவளவிற் பிழைக்கவேண்டிற்குடித்திடுமே.
வேறு
பொழிலுலவுந்துளசியிற்சாறிருநாழிக்குட்
பொருந்துமுத்தமாகாணிசிவனார்வேம்பும் கிளுவைநத்தைச்சூரிஎருக்குடனிர்மட்டி
கிளர்பீளைசாறியொடுகீழ்காய்நெல்லி தளமருவுமிருவேலிதானுமின்னுஞ்
சந்தனம்வேர்கொம்பிருசீர்தேவதாரம் அளிமருவுதிற்பலிவெண்காயங்கோட்ட
மதிமதுரஞ்செண்பகப்பூவடைவிற்கொள்ளே.
கொள்ளுகின்றவசம்புவெந்தயமுங்கூட்டிக்
குலவுதிலளண்ணெய்தனிற்கொதிக்கக்காய்ச்சி மெள்ளவேதலைதன்னிற்பொருத்திப்பின்னும்
வேற்கொம்போடிளவென்னிர்விருப்போடுண்கில் வள்ளைநிகர்குளையாரேசுரமோரெட்டும்
மருவுபருந்தாகமெல்லாம்மாறிப்போம்பின் எள்ளளவுந்துயர்புரியுஞ்சுரநில்லாது
என்றிமையோர்புவிமீதிலியம்பினாரே.
ஆமச்சுரத்தின் குணமும் மருந்தும்
ஆமச்சுரத்தின்குணங்கேளு மதிகமாகவேவெதும்பும் சாமந்தோறும்வெதுப்புநிற்குந் தனியேயுறக்கந்தான்வந்து
23

Page 23
செகராசசேகர வைத்தியம்
சேமமாகவுடம்புளையுஞ் சீறுமிருமும்பசியில்லை நாமந்தளருமுடம்போயும் நடுங்கியிருக்கும்நன்னுதலே.
நன்றார்கோட்டமதிமதுரம் நலஞ்சேர்கணிதவேதிகன்னார் குன்றாவேலம்பற்படகம் குளிர்கற்பூரம்செல்தாழை கன்றாலிளநீர்தனிலிட்டுக் காய்ச்சியருந்தவல்லீராய் அன்றேயோடிப்போய்விடுங்கா ணாமச்சுரங்களானதுவே. 2
அத்தி சிலேட்டுமசுரத்தின்குணம்
அத்திசுரத்தின்குணங்கேளும் அறவேவெதுப்புங்கண்சிவக்கும் புத்திகளளும்நெஞ்சுளையும் புறநீர்தானுஞ்சிவந்திருக்கும் மெத்தமயக்கம்போகாது மிகவுமுறக்கந்தானில்லை வற்றியிருக்கும்வயிறழியும் மரணமதற்குத்தப்பாதே.
பித்தவதிசாரக் குணமும் மருந்தும் வேறு
மாறும்பித்தவதிசாரம் வருத்துங்குணத்தைவழுத்தக்கேள் கூறுங்குழியேபலவிதமாய்க் குழையும்வயிறுகழியுமிக வீறும்வயிற்றினடுவேநோம் வேண்டாதுணவுவயிறிரைக்கும் ஊறுந்தண்ணிர்வேண்டுமந்திப்புண்டாஞ் சற்றேவெச்செனவே,
வெச்சென்றிருக்குமிரைப்புண்டாம் மிகுபேன்தலைவிட்டுர்ந்துவரும் அச்சந்தருங்கண்ணாயிதனுக் காகுங்குடிநீரடைவுசொல்வேன் மெச்சுங்கோட்டமதிவிடைய மிருவேலிலாமிச்சரசந்தோல் பச்சென்றிருக்குமாலின்தோல் படகமத்திப்பட்டையுமே. 2
பட்டாங்காகவேரொன்று பதறிக்கழஞ்சாய்நிறுத்ததிலே விட்டாங்கிருநாழிப்புனல்தான் மிகவும்வற்றியுழக்கானால் தொட்டாங்கருந்திலதிசாரந் தொலையுமெனவேதொல்புவியில் கட்டாங்குறவேமாமுனிவர் கருதிறைந்தார்கார்குழலே. 3
காரார்முத்தக்காசுசந்தங் கமழுங்கோட்டநன்னாரி சீரார்சிறுகாஞ்சோன்றியுடன் தேவதாரம்பற்படகம் நீரார்நளினந்தனில்வளையம் நிகழ்வேற்கொம்புதன்னுடனே ஆரார்பங்கம்பாளையுட னசமோதகமுந்தேடுகவே 4
தேடுஞ்சேரவோரொன்று சிறக்குங்கழஞ்சாய்நிறுத்ததிலே ஓடும்புனல்தானிருநாழி யுடனேவிட்டங்குழக்காக்கிப் போடும்புதியஅதிவிடையப் பொடிநீயருந்திற்பித்தசுரம் வாடும்பித்தவதிசார மாறுமுடலும்மயங்காதே. 5
பரிதாபகரம் பித்தசுரம் சகலசுரத்துக்கும் முலைப்பாலெண்ணெய்
வேறு
மங்கையர்பால்நானாழி யிருநாழிபசுப்பால்
வளரிளநீரிருநாழி ஒருநாழியெண்ணெய்
24

செகராசசேகர வைத்தியம்
செங்கைகொடுபிடுங்கும் வேர்சிற்றமட்டி
சீதேவியார்முத்தக்காசு காற்றோட்டிலாமிச்சு
சங்கைபெறுநன்னாரி அமுக்கிராயரத்தை
சதகுப்பைநாகம்பூச் சந்தமகில்கோட்டஞ்
சிங்கைவளர்செகராசு சேகரன்புகலும்
சித்திதருவெண்கார மரமஞ்சள்கொள்ளே.
கொள்ளுமதிமதுரங்கைச் சோலஞ்செவ்வள்ளிக்
கொடியேலங்குரோசணிவேற் கொம்பொடிலவங்கம் விள்ளுமரமஞ்சலுடனே தேவதார
மிகவொவ்வொன்றிருகழஞ்சு வேற்கொம்பைங்கழஞ்சு மெள்ளவரைத்துக்கரைத்துப் பதந்தனிலேவடித்து
மேலுக்கும்பூசித் தலைக்கும்வார்த்திடவே துள்ளுபரிதாபசுரம் விஷசுரஞ்சன்னி
சுரம்பித்தசுரம்சன்னி வாதசுரம்போமே.
முறைவெதுப்பின் குணமும் மருந்தும் வேறு
முறைசேர்குளிருங்குலைப்பெய்து முழுதுந்தாகம்சந்துகள்நோம் நிறையமயிர்க்கூச்சாமிடையும் நெஞ்சும்நோம்கொட்டாவிவிடும் பொறைசேரிதற்குப்பேரமட்டிபொருந்துஞ் சுக்குநிறைகாய்ச்சி மறைசேரிடையாய்பருகுவிரேல் மாறிப்போமிவ்வாதைகளே.
வாதசுரமுங்குலைப்பும்போம் வட்டுச்சீந்தில்நன்னாரி சீதபங்கம்பாளைசந்தஞ் சிறந்தசுக்குப்பற்படகம் போதவாடாதோடையுடன் புனலிலிட்டெட்டொன்றானால் பாதம்பதுமப்பரிநுதலாய் படிந்தேயகலும்முறைச்சுரமே.
சுரஞ்சேர்வெட்பாலையிலரிசி துய்யசீந்தில்பற்படகம் திரஞ்சேர்கண்டங்காலிபுடோல் சிறுகாஞ்சோன்றி நிலவேம்போ டுரஞ்சேர்கோட்டமுத்தக்கா சொன்றுகழஞ்சுகால்புனல்தான் வரஞ்சேர்நாழியிரண்டுழக்காய் வற்றத்திருமுறைவெதுப்பே.
சத்திவெதுப்பின் மருந்து
பருங்கூவளைசேரிருகழஞ்சு பயந்தானிருனாழியில்விட்டங் கிருந்தேபொரிசீலையிற்கட்டி யிட்டேநீர்சுவறக்காய்ச்சி மருந்தாம்பொடியைக்கூழ்போல மசியவரைத்துத்தேன்கலந்து அருந்துவீரேற்சத்திவெதுப் பலைந்தேவிரைவிற்கழன்றிடுமே.
அகஞ்சேர்வில்வவேர்நாழி ஆறுகழஞ்சுநெற்பொரிதான் சுகஞ்சேரிருவேலியினுடனே துய்யவிலாமிச்சொருகழஞ்சாய்
முகந்தாமரையாய்நீரிலிட்டே முறுகக்காய்ச்சித்தேனுடனே சகந்தானறியக்குடித்தேநீ சத்தீேேதீன்'
கெடுத்தார்பெரியவாகைமுள்ளி கிளர்ந்தபெரியமுமிழ்நெருஞ்சி வடுத்தானில்லாக்கூவிளைதான் வளர்சிற்றமட்டிபேரமட்டி
25

Page 24
செகராசசேகர வைத்தியம்
அடுத்தார்புகழும்பாதிரிகண் டங்கத்திரிசிறுவழுதலையும் எடுத்தாருள்ளிவெண்கோட்ட மிவைவேற்கொம்புதிற்பலியே.
திற்பலியுட்னேயிவையெல்லாஞ் சேரக்கூட்டியொருநிறையாய் அப்புனலிருநாழிகள்விட்டே யமரக்காய்ச்சியெட்டொன்றாய்ச் செப்பியகுடிநீர்தனைஆற்றித் தேனிற்கலந்துகுடிக்கவரும் வெப்பிவையெல்லாமுடல்தன்னை விட்டேயோடிவிடுங்காணே.
காணாய்ாட்ாதோடைமுத்தற் காசுசீதேவியில்வேரும் பேணாயிலுப்பைப்பூவிளால் பேரீஞ்சுடனேமுந்திரிகை வாணர்ள்பலிக்குங்கனியிவை தாமரையின்வளையம்பெருங்குரும்பை சேணாருங்கூவிள்ளுசதையுங் சிறுமூலகமுந்தேடுகவே.
தேடுந்தான்றிகடுநெல்லி சிறந்தமிளகுதிற்பலிசுக் கோடும்பெரியநிலவேம்பி னுட்னன்னாரிநறும்பிசினும் நீடுஞ்செவ்வியமதர்வரிசி நிறையுஞ்செங்கழுநீர்க்கிழங்குங் கூடும்பெரிய்அதிவிடையங் கொண்டோர்நிறையிற்கூட்டீரே.
கூட்டிநீரங்கிருநாழி குறுகக்காய்ச்சியுழக்கானால் மிட்டும்வெக்கைதனில்வைத்து மேலேதேனும்விட்டழவி யூட்டுவீரேலெப்பொழுது முடலைநடுக்குங்குளிர்சுரங்கள் காட்டுமயில்போலியல்மடவாய் கடிதாயேங்கலக்கமுற்றே.
கலக்குங்கொத்தமலியிரண்டு கழஞ்சுவேற்கொம்பிருகழஞ்சு நிலத்தில்நாரத்திலைகூட்டி நீருமிரண்டுநாழிவிட்டே பெலக்கக்காய்ச்சியுழக்காக்கிப் பேணியுள்ளேபருகுவிரேல் மலக்கக்குளிர்ந்தசுரத்தையெல்லாம் மாற்றுங்கடியமருந்திதுவே.
மருவும்வேற்கொம்பிருகழஞ்சு வளர்சாறணைவேரொருகழஞ்சு அருகும்பேரமட்டியில்வே ராறுகழஞ்சுவெள்ளுள்ளி பெருகுமிரண்டுகழஞ்சுகொண்டு பெய்யும்புனலங்கிருநாழி, கருகியிட்டேயுழக்கானாற் காய்ந்ததிற்பலிகலந்தருந்தே.
கலந்தேதேவதாரமுத்தற் காசுகண்டங்கத்தரிவேர் உலர்ந்தசுக்குக்குமிழின்வே ருடனேகோட்டஞ்சிறுதேக்கும் மலர்ந்தபடகந்திற்பலியும் வாய்ந்தகடுக்காயோரென்று நலந்தகழஞ்சேநாலிரண்டு நாழிப்புனலிற்புகட்டிடுமே.
புகட்டியுழக்காகக்காய்ச்சிப் புதியதேன்திற்பலிகூட்டி யகட்டினிடைசேரக்குடித்தா லடருங்குளிருஞ்சுரமெல்லாம் வகட்டிற்கடவுளடியார்மேல் வந்தவினைபோவதுபோல பகட்டிப்பின்னுங்கெட்டோடிப் பறக்குமிந்தமருந்தினுக்கே.
சுரவிதி
மன்னியஅசுபதிநாள் வந்துற்றசுரமெட்டாநாள் உன்னியேவிடுதல்செய்யு முற்றதோர்ப்ரனிநாளில் மன்னியசுரமேகொல்லு மகுதன்றிவிடுதலாகும் பன்னியகார்த்திகைநாட் பரிந்திடுஞ்சுரத்தைச்சொல்வாம்.
26
l
2.

செகராசசேகர வைத்தியம்
சொல்லியசுரமோரெட்டில் துணிந்தொருபத்தாநாளில் எல்லையில்விடுதல்செய்யா திருக்கிலோமரணமாகும் ஒல்லையாயுரோகணிநா ஞறுசுரமாறாநாளில் மெல்லிவிரைந்திலெட்டில் விரைந்திடுமென்றுகூறும்.
கூறியமிர்கசீர்டந் தனிற்குடிகொள்சுரந்தான் மாறியேபோம்பத்தாநாள் மற்றுமாதிரையிற்றோன்றி மீறியசுரமஞ்சாநாள் வெதும்பியேகொல்லுமிக்காய் பேறுறுபுனர்பூசத்திற் செறிந்திடுஞ்சுரத்தைப்பேசும்.
பேசியசுரமோரைந்தி லன்றிப்பின்பிரிந்துபோகும் வீசியபூசந்தன்னில் மெய்யுறுசுரமிரண்டில் கூசியேநீங்காதாயிற் குணஞ்செய்யுமெட்டில்மீறில் மூசியேமற்றநாளி லிசசுரமமுனிவாய்க்கொல்லும்
முனிவுடன்மகத்திற்றோன்றி முந்தியசுரமீராறில் நினைவுடனகலாதாகில் நிச்சயம்மற்றநாளில் நனவுடன்நீங்கும்பூரம் நண்ணியசுரமீரைந்தில் தனவுடன்நீங்காதாகிற் றான்பதினேழில்நீங்கும்.
நீங்குமுத்திரத்திற்றோன்றி நீள்சுரமிகக்கொல்லாதால் ஆங்கதுபத்தாநாளி லகன்றிடுமத்தந்தன்னில் ஈங்குறுசுரமெட்டாநா விசையவேபிறப்பதன்றி பாங்குறவிரெட்டாநாட் பண்புறவிடுதலாமே.
ஆகுஞ்சித்திரையில்மோதி யடர்சுரமிருபதாநாட் போகிடுமன்றிவிட்டுப் புறந்தருந்திங்கள்மூன்றில் வாகுறுசோதிநாளி வருசுரமிரண்டோர்பத்தில் சாகினுஞ்சாகாரென்று சாற்றினார்சுரநூல்வல்லோர்.
சுரமுறுவிசாகந்தன்னிற் றோன்றிற்பின்னெட்டாநாளில் உரமுறநீங்காதாகி லொருதிங்கள்தன்னில்நீங்கும் வரமுறுஅனுஷநாளில் வருஞ்சுரமிரண்டோர்பத்தில் தரமுற்றநீங்குங்கேட்டை தனிற்புகுஞ்சுரம்பின்சாற்றும்.
சாற்றியசுரமஞ்சாநாட் டான்பிரிவாகுமன்றி மாற்றியோர்மாதந்தன்னில் மாறிடுமூலந்தன்னில் தோற்றியசுரமொன்பானாட் தொலைந்துயிர்செல்லாதானால் ஏற்றியபத்தாநாளி லிசைந்துபின்னேகுமன்றே.
அன்றியும்பூராடத்தி லணுகியசுரமீர்நான்கில் ஒன்றியும்போகாதாகி லொருதிங்கடன்னிற்போகும் துன்றியேயுத்திராடந் தொடர்சுரமெட்டாநாளில் குன்றியும்போகாதாகிற் கொன்றிடும்பின்புதானே.
பின்புறுதிருவோணத்திற் பிணிகரமெட்டுநாளி லன்புறவிட்டேகாதா லாமொருமாதஞ்சென்றாற் றுன்பறநீங்கும்பின்னைத் துலங்கியஅவிட்டநாளில் வன்புறுசுரமஞ்சாநாள் மாறாதேல்மாறும்பின்னே.
27
O
1

Page 25
செகராசசேகர வைத்தியம்
பின்னியசதயநாளில் பிறந்திடுஞ்சுரமேயானால் தன்னுரமாகக்கொல்லுஞ் சர்ந்திடும்பூரட்டாதி மன்னுமாசுரம்மரிக்கும் வளர்ந்திடும்முருத்ரட்டாதி மின்னுமாசுரமெட்டாநாள் விளங்கிடவிடுஞ்சொன்னோமே.
சொன்மொழிநூலின்மிக்காய்த் தோற்றுரேபதியாநாளில் முன்னுறவருஞ்சுரந்தான் முறையிருநான்குதன்னில் இன்மொழியாளேகொல்லா திருக்கிலோர்நாளிற்பின்னர் வின்மொழியிறுதியாக விரைந்தில்விடுங்கண்டிரே.
பொதுவிதி கலித்துறை
முப்பூரங் கேட்டை யடுப்பாரல் முக்கணன் குன்றுபுட்பா மொப்பறு நாளில் நவமிநான் காறுயர் பன்னிரண்டில் செப்புறு சேய்சனி ஞாயிறு சேர்ந்ததிற் செந்திருவே வெப்பினை யுற்றவர் தான்சாவ ரென்ன விதித்தனரே.
சன்னிவிதி சன்னி பதின்மூன்றின் குணமும் மருந்தும்
அந்தககன்னி
அங்கதாகஞ்சுரந்தாக மதிகதாகம்சிரதாபம் செங்கண்மீதிற்பரிதாபம் தெரியாநயனமழுங்கிவிக்கல் எங்கும்பிரமையுண்நடுக்க லிருமலிவையந்தகனாகும் துங்கசன்னியாகுமிது தோற்றிற்றிராதசாத்தியமே.
அறிந்துமறியாமலும் வயிறதுகழிந்திடு
மரற்றுங்கையைப்புறண்டும் சிறந்தகால்கையுங் குளிர்ந்திடும்பற்களுஞ்
சீரன்றியேகறுக்கும் நிறைந்தநீர்கழியுமதி விசையினொடுதலைமுகம்
நித்தமொத்தேவலிக்குங் குறங்குடன்கையுளைவு மந்தகச்சன்னியின்
குணமிதுகூறினோமே.
மருந்து
ஏராருமிருவேலி வேரோடிலாமிச்சு இனியபற்படகமதுரம் சீராகவருசுக்கி னுடனேசிறந்ததோர்
சிறுதேக்கையுங்கூட்டியே பாரோருரைத்தவிரு நாழிநீரிற்காய்ந்த
பதமுழக்காயிறுத்தே கோரோசனம்முலைப் பாலொடுகொடுத்திடக்
குலையுமந்தகசன்னியே.
திரிபலைகொத்தமல்லி திற்பலிவாய்விளங்கம் மருவிடுமரிசந்தூது வளைகொடிவேலிமுத்தம்
28
13

செகராசசேகர வைத்தியம்
பொருவிடவிடித்துநீரிற் புகட்டியெட்டொன்றாய்வற்றிப் பருகவந்தகமாஞ்சன்னி படியுமென்றறைந்திட்டாரே.
அபின்யாச்சன்னி
வழியேமருவும்முத்தோஷம் மட்டில்லாதமேல்மூச்சு ஒளிசேர்நாக்குத்தம்பமதா யுடல்வேதனையாம்பெலவீனம் விழிகோபமதாய்ப்புகையுமொளிமிகுநித் திரையாய்நினைவழிதல் அளிசேர்குழலாயபின்யாச சன்னியிதுவாமசாத்தியமே.
மருந்து
வாதமடக்கிநிலவேம்பு வசம்புஒமம்வேர்க்கொம்பு பேதமறுதிற்பலிமிளகு பெருஞ்சீர்கருஞ்சீர்பற்படகம் சீதமுறுநீரதனிலிட்டுச் சிறுதியெரித்தெட்டொன்றாக்கிப் போதவீந்தாலயின்யாச சன்னிவீறுபோய்விடுமே.
சந்திகசன்னி
உடலிற்குத்துஞ்சோபமிகு முயர்கண்திறவாவிக்கலுண்டாம் தடமார்சேடம்மிகுதியதாஞ் சாருங்காலில்வலியுண்டாம் திடமேயழிந்துமயக்கமுண்டாந் தேகங்குளிர்ச்சியாயிருக்கும் சடமேலெரிச்சலாமிதுவே சந்திகசன்னிசாத்திகமே.
கண்ணுஞ்சிவந்துபலகாலுங்
கரிக்குமோயாதெழுந்திருக்கும் எண்ணும்போதிலறிவழிந்து
இருக்குஞ்சத்தியதிகமுண்டாம் மண்ணிற்தலையில்வலியுண்டாய்
மயக்குங்கச்சைநிலைமார்புந் தண்ணென்றெழுமிக்குணங்கண்டாற்
சாற்றுஞ்சந்த்கசன்னியிதே.
மருந்து
சீந்திலுடன்தூதுவளைமுத்தக்காசு
சிறியவழுதலையினோடாதோடை வாய்ந்தசிற்றமட்டிபுடோல்பேரமட்டி
மருவுமிலாச்சுகொத்தமல்லிசுக்கு சாய்ந்தகொடிநன்னாரிகடுகுரோணி
சரிநிறையாயெடுத்ததனிற்தண்ணிர்விட்டு காய்ந்தபின்னரருந்திடுகில்சந்த்கசன்னி
கழன்றுடலில்நில்லாமற்கலைந்துபோமே.
முந்திரிகைப்பழம்வசம்புகடுகுரோணி
முத்தற்காசுடன்சுக்குத்தேவதாரம்
சிந்துசாத்தாவாரிகொன்றைப்பட்டை
சிற்றாமுட்டிப்பட்டைநெல்லிதான்றி
உந்துகொடிவேலிநிலவேம்புகொண்டு
ஒருபடிதண்ணீரிலிட்டுநாலொன்றாக்கி
29

Page 26
செகராசசேகர வைத்தியம்
சந்திகமாஞ்சன்னிக்குக்கொடுத்துவந்தால்
தபனன்முன்பணியெனவேசாடிப்போமே.
தாந்திரிகசன்னி
பிதற்றும்நாக்குக்கறுத்திருக்கும் பேசும்நாக்குமுட்போலாம் அதைத்தநாக்கினீரில்லை அதிதாகமதாமுதடுலரும் சிதைத்துக்கழியுங்கண்பருக்கும் தினவாங்கண்ணினிர்ப்பாயும் பதைக்கச்சுவாசமுண்டாகும் படியுந்தாந்த்ரிகசன்னியிதே.
மருந்து
சித்திரமூலம்பாதிரிவேர்செந்தோட்டியின் வேர்பேய்ப்புடல்வேர் ஒத்தநொச்சிவேர்கரிப்பான் உயர்திற்பலிசீரகஞ்சுக்கு முத்தக்காசுசீந்திலிவை முன்போற்குடிநீரிட்டருந்தில் சத்வமானதாந்திரிக சன்னியகலுஞ்சாற்றினமே.
சித்தவிப்பிரமசன்னி
உடம்புகறுத்துநோதலுண்டாம் உடனேவாதபித்தமிகும் திடங்கொள்சித்தப்பிரமையுண்டாம் சேர்ந்தநினைவற்றேபிதற்றும் இடங்கொள்சுவாசம்பேதியுண்டா மிருந்தவிடத்தைவிட்டேகும் தடங்கொள்சித்தவிப்பிரம சன்னியிதுசாத்திகமாமே.
மருந்து
முத்தற்காசுபற்படகம் முந்திரியதனின்கனிசந்தம் சுத்தப்பேரீங்சின்பழமும் தொடர்நன்னாரிதிரிகடுகும் கைத்தகடுக்காய்நிலவேம்பும் கருகிக்குடிநீரிட்டருந்த சித்தவிப்ரமசன்னியது திகைத்தேயகலுஞ்செகமீதே.
சீதாங்கசன்னி
விக்கல்வாந்தியதிசாரம் மிகவேயுடம்பெல்லாம்நோதல் குக்கிச்சரீரங்குளிர்ந்துமயிர்க் கூச்சோடிருமல்நாவெளுத்தல் தக்கவாய்நீரிழிவுதரல் சார்மேல்மூச்சுத்தான்தோன்றல் இக்குமொழியாய்சீதாங்கச் சன்னியிதன்பேரசாத்தியமே.
குளிர்ந்திடுங்காய்ச்சல்மயிர் கூச்சொடுசிலிர்த்திடுதல்
குலவுதண்ணிர்த்தாகமாய்த் தளர்ந்துபசியாமலே தாக்கமாய்மார்பிற் றவிப்பிளைப்புண்டாகியே வளைந்துதலைவலியுமா யணையிற்பொருந்தாது
மன்னுபலவிதகுணமதாய் விளைந்தவிவைசீதாங்க சன்னியென்றேசொல்வர்
மிக்கநூல்வல்லோர்களே.
மருந்து
திப்பலிசித்ரமூலம் செவ்வியம்மிளகுசுக்கு தப்பறுபற்படாகம் சந்தனம்ஏலங்கொட்டம்

செகராசசேகர வைத்தியம்
ஒப்பறுநீரிலிட்டெட் டொன்றெனவெரித்துவாங்கி செப்பமாய்க்கொடுத்தாலுற்ற சீதாங்கசன்னிபோமே.
ஏலமிலவங்கநற் சந்தனமகார்புகா
ரியல்பூசணித்தண்டுடன் தோலுறுசுரைத்தண்டு தூதுவளைவேருடன்
சுக்குமொக்கக்கலந்தே சாலவிருநாழிநீர் வார்த்துழக்காகவே
தான்காய்ச்சியேகுடித்தால் சீலமிகுசீதாங்க சன்னியோடிடிடுமென்று செப்பினோமிப்பொழுதுமே.
கர்ணிகச்சன்னி
நெஞ்சினினோதல்பாடல் நிதம்பிரலாபம்வேர்வை மிஞ்சியசுரஞ்சுவாசம் மிகுதாபமாகமெங்கும் துஞ்சிடச்செவியிரைச்சல் சொல்லுங்கர்னிகத்தில்வீக்கம் வஞ்சகர்னிகமாஞ்சன்னி சாத்திகம்வகுத்ததாமே.
மருந்து
பொன்னாவாரைநிலவேம்பு புதுமால்தேவிதூதளைவேர் நன்னாரியுடனேசெவ்வள்ளி நாயினுருவிழிளகுசுக்கு
மின்னார்வெளிச்சிபிசின்கடுக்காய் வேப்பெண்ணெயிற்போட்டுக்காய்ச்சித்
தின்னோர்கரண்டிகர்னிகசன்னி திசைகெட்டோடுந்தேர்ந்தறியே.
கண்டகுச்சசன்னி
தாகம்பிரமைதலைசுழற்றல் சந்தோஷித்தல்தனுப்போல தேகக்கழுத்துநரம்பிழுத்தல் திகைத்தல்புலம்பல்மூர்ச்சையுறல் சோகவாந்தியிருமல்விக்கல் தொடுத்தமார்புதலைமுதலா மாகமுழுதுநோக்காண லசாத்தியகண்டகுச்சமதே.
மருந்து
கடுகுரோணிவெட்பாலை கடுக்காய்நெல்லிதான்றிக்காய் அடுதிரிகடுகுமஞ்சளுடன் ஆடாதோடைவேரும்பற்
படகமொடுநன்னாரிநொச்சி பாவட்டையுநாலொன்றாக்கிக் கொடுநீகண்டகுச்சசன்னி குறையுமெனவேசுவறினரே.
பிரலாபசன்னி
ஆகம்நடுக்கிப்பீடைமிகுந் தடரும்வாதமேலாடும் தேகமுலர்ந்துமணம்வேறாய்த் திகைக்கும்பிரலாபிக்கையுண்டாம் வேகப்பரிதாபிக்கைமிகும் விறலிந்திரியவெறுப்புண்டாம் தோகையணையாய்பிரலாந் தோன்றுஞ்சன்னிசாத்திகமே.
பலகாலுமருள்கொண்டு சொல்லாதுசொல்லிடப்
பயிலும்படுக்கைதனிலே
கலவாதடிக்கடி யெழுந்தேயிருந்திடுங் கங்குலின்போதுசுரமாங்
31
20
2
22
23

Page 27
செகராசசேகர வைத்தியம்
குலவாதமும்பின்னை யுடனேநகைப்புக்
கொடுத்துழலைதானுமுளதாம்
சிலபாவமென்னுமிது பிரலாபசன்னியின் செய்தியிதறிந்துதெளியே.
மருந்து
வட்டத்திருப்பிநிலவேம்பு வட்டுமுத்தக்காகூசங்கு கொட்டுஞ்சிறுகாஞ்சொறிதிற்பல் கோங்கிலவதனின்பட்டைசிற்றா முட்டிகண்டங்கத்தரிவேர் முறையேகுடிநீர்செய்தருந்தத் தட்டுக்கெட்டுப்பிரலாப சன்னியகலுஞ்சாற்றினரே.
சிறுகாஞ்சோன்றி சிறுதேக்குச்
சிறந்தவட்டத்திருப்பியுடன் உறவேசுக்கு நிலவேம்பு
உவந்தசிறியவழுதலைவேர் அறிவாய்முத்தக் காசுடனே
அளந்துநீரோர்நாழிவிட்டு குறைவாயுழக்காய்க் கொள்வீரால் கூர்பிரலாபக்குணங்கெடுமே.
சீவகசன்னி
உண்மையுரைக்குஞ்சுரமிரும லோதும்பெலவீனமுமாகும் வண்மைநாமுட்போற்கறுக்கும் வந்தேசுவாசம்வளர்ந்தோங்கும் தண்மையானவறிவிலதாய்ச் சாற்றுஞ்செவிமாற்றுரைகேழா எண்மையாஞ்சீவகசன்னி இதன்பேரீதுசாத்தியமே.
மருந்து
சுக்குதிற்பல்வேற்கொம்பு தூயஅரத்தைசிறுதேக்கு கைக்கும்நிலவேம்பகில்வில்வம் கராம்பொடாடாதோடையின்வேர் மிக்ககொத்தமல்லிவிளால் மிகுசீரகம்பற்படகமிட்ட தக்ககுடிநீர்சீவகமாம் சன்னிதன்னைத்தடிந்திடுமே.
ருத்திரசன்னி
பிரலாபித்தல்பரிதாபம் பேசுமிளைப்புமிகுமோகம் அறவேதியக்கங்கண்சுழற்றல் அதிவேதனையோடுன்மத்த முறவேயாகங்கடுத்துளைத லுயருமுருத்ரசன்னியதாம் நறவேதிகழுங்குழல்மாதே நவின்றோமிதுவுமசாத்தியமே.
மருந்து
இலந்தையிலைநன்னாரிசீந்திற்றண்டு
இலாமிச்சுவெட்டிவேர் ஆடாதோடை நலந்தருமுத்தக்காசுபேய்ப்புடோல்பூ
நாகம்சுக்குடன்முசிற்றுமுட்டைகொண்டு
கலந்திடித்தவித்தகுடிநீரினுள்ளே
கருதுமிஞ்சிச்சாறுசமன்கலந்துகொண்டு
32
24
25
26
27
28
29

செகராசசேகர வைத்தியம்
உலர்ந்திடுதிற்பலியும்மேற்பொடியாய்த்துவி
உண்ணிலுருத்திரசன்னிஒதுங்குமன்றே.
புக்கின்நேத்திரசன்னி
வாந்தியசதியறிவழிதல் வசனஞ்சுருங்கல்பிரலாபம் போந்தவிறுமைசுரமேன்மேற் போகாதிருத்தலுடல்நோவு சேர்ந்தசோடையுடற்கீடந் திகழ்சேர்நயனம்விழித்துமிழ்தல் ஆர்ந்தசன்னிபுக்கின்நேத் திரமாம்சாற்றிலசாத்தியமே.
மருந்து
சந்தனம்திற்பல்சுக்குச் சார்ந்திடுமிளகோடேலம் கந்தமார்முத்தற்காசு கவினிருப்பைப்பூத்தூது உந்துபேய்ப்புடல்வேர்நீரிட் டுறுநாலொன்றாக்கியீந்தால் நிந்தையில்லாதுபுக்க நேத்திரசன்னிநீங்கும்.
இரத்தசீவகன்சன்னி
உதிரவாந்தியறிவழித லுற்றவிறுமையதிசாரம் அதிகமூர்ச்சைசுழன்றெழுத லதன்மேல்மூச்சுவயிற்பொருமல் துதிசேருதரசூலைவிக்கல் தோற்றுந்தாகமுடல்நோவு சதிசேரிரத்தசீவகமாஞ் சன்னிமீளாதசாத்தியமே.
மருந்து
கொடிவேலியினோடசுவகெந்தி கொன்றைவில்வம்மாவிலங்கு படியிலெருக்குமயிற்குருந்து பரவுமரத்தைவசம்புசுக்கு
நெடியமாயாக்காய்கடுக்காய் நிலவேர்க்குடிநீரருந்திவரிற் கடியரத்தசீவகமாயக் கருதுஞ்சன்னிகுறைவுறுமே.
பதின்மூன்று சன்னிச் சுருக்கம்
அந்தகன்விக்கலுண்டாம் அபின்யாசம்புகையுமக்கம் சந்திகனசதியாகும் தாந்திரிகன்பிதற்றுமேன்மேல் சிந்தைவேறாகியுள்ளம் திகைக்கும்விப்பிரமசித்தம் உந்துசீதாங்கமாக முடன்குளிர்ந்துறுமிதென்னே.
கர்னிகன்கர்னமூலங் கடுத்திடுங்கண்டகுச்சன் சொன்னவத்தொண்டைவீங்குந் துயர்பிரலாபந்தாகம் உன்னுஞ்சீவகநாவோங்கிக் கறுத்திடுமுருத்ரதாகம் துன்னியவுரமேநோகும் தொன்னூலாலுணர்ந்ததாமே.
புக்குநேத்திரனோகண்ணிற் பொருமிநீர்விழுந்துகாணும் தக்கதாமிரத்தசீவி தானுதிரம்வாயாலே கக்கிடும்பத்துமூன்றாஞ் சன்னியின்குணத்தைக்கண்டு மிக்கதாங்கியாளமாத்ரை விறலுறுதயிலங்கொள்ளே.
30
31
32
33
34
35
36
37
சன்னி பதின்மூன்றிற் பிறிந்தசன்னி பதினெட்டு என்றும் அதிற்
பிறிந்த சன்னிகள்சேர்ந்து முப்பத்தொன்று என்றுஞ் பட்டிருக்கிறது. அச்சன்னிகளை இதன்கீழ்க்காண்க.
33
சொல்லப்

Page 28
செகராசசேகர வைத்தியம்
கிரிசன்னி
நடுநாவில்நீர்த்துவெஞ் சுரமேழிகுத்தே நடக்கவனலதிகமானால் உடலாதியந்தமும் பலகுணமதாகியே
யுறுமன்னமுஞ்சென்றிடாக் கொடிதானதாகமொடு பரிதாபமாகியே குறித்தகைகால்களுடனே தடமார்புகண்டமது மிகவேகுளிர்ந்திடுந்
தக்ககிரிசன்னிதானே.
மருந்து
சீந்தில்பற்படகமொடு வெட்டுவேர்பேய்ப்புடோல்
செய்யசுக்கும்வசம்பும் வாய்ந்தபன்னிருகழஞ் சிடுநாழிநீரதனை
வள்ளிசாகக்காய்ச்சியே காய்ந்தவுடனேயுழக் காயிறுத்தேகொண்டு
கடிதாயருந்திவருகிற் தீர்ந்திடுங்கிரிசன்னி திரிதோஷசன்னியுந்
தேசம்விட்டோடிவிடுமே.
இரத்தக்கடியன்சன்னி
பல்லடிகள்கூசியே யிருகண்சொருகியே
பலபேதமாகியுடனே சொல்லினுங்கிடைகொளா வியல்பாகியேயுற்ற
துயர்கொளுங்கூப்பிடறிவாம் அல்லலறமெத்தசதி யாகவேவந்திடு
மசாத்தியமதென்றுபகரும் நல்லரத்தக்கடிய னாஞ்சன்னியிதுவென்று
நாவலர்க்குநவிலுவாயே.
மருந்து
பூசணித்தண்டுமுத் தற்காசுபேய்ப்புடோல்
பொற்பானகம்பந்திராய் மாசறுக்குஞ்சிறிய வழுதலைநன்னாரியும்
வருசுக்குமக்கறாவும் தேசுற்றபற்படக மொடுகொத்தமல்லியுந்
திகழ்நீரினிந்காய்ச்சியே நேசமாயுட்கொள்ரத் தக்கடியனாஞ்சன்னி
நிச்சயம்மாறிவிடுமே.
அதிகாரகண்டகசன்னி சுளுக்கும்பதைக்கவந் துட்கிவிசைகெடுமிகு
சுரத்தொடுளைவுங்கதிக்கும்
அழுத்தும்மொழித்திறமு நாவும்வரண்டிடு
மனேகருபமாக்குமல்லில்
34

செகராசசேகர வைத்தியம்
செழித்துநீர்மெத்தக் கழிந்திடும்மாறாது
செய்யும்விதனங்கள்பலவாம்
அழுத்திடுந்தரனிதனி லதிகாரகண்டகச் சன்னியென்றிதையறியுமே.
மருந்து
அரத்தைநற்றேவதா ரங்கடுகுரோசனை யமர்ந்தசிறுதேக்கினுடனே தெரித்தநிலவேம்புடன் சிறியவழுதலையின்வேர்
சீராய்விளங்குசுக்கு உரைத்தவிவைபன்னிரு கழஞ்சுஇருநாழிநீர்
உட்புகட்டிக்காய்ச்சியே கரைத்தேயுழக்காய் வடித்தேகுடிக்கிலதி
காரகண்டன்குலையுமே,
கண்குழிவுசன்னிக்குணம்
கண்ணுங்குழிந்தே கறுக்குநாவும்பலுங் காய்ந்துபொடிபட்டிருக்கும் எண்ணுஞ்சுரத்துட னிளைப்புமுண்டாகியே
யினியநித்திரைவராது உண்ணும்படிக்குவினை செய்தாலுமொவ்வா
துரைத்தவிக்குணமிகுவினை பண்ணுமிதுகண்குழிவு சன்னியாமென்னவே
பரிவாயறிந்துகொள்ளே.
மருந்து
மட்டார்கராம்பினொடு வெட்டிவேர்பற்படக
மல்லிகைத்தண்டினுடனே வட்டாலமுகைகண்டங் கத்தரியினொடுசுக்கு
வளர்மிளகுதிற்பலியுடன் ஒட்டாதரோசனையு மொன்றாகவிட்டவித்
துள்ளேகொடுத்துவருகிற் கட்டாயகன்றிடுங் கண்குழிவுசன்னியும்
கைகண்ைடதிதுவுண்மையே.
அறமெலிவுச்சன்னி
நீருங்கடுப்பாய்மிகுதிடமு நிறைந்ததெனவேவலுவுண்டாய் பேருங்கைகால்மிகவுளைவு பெற்றுமுதுகுநெளிப்பாகும் ஆருஞ்சிறந்ததலைவலியு மணலுங்குளிருமுண்டாகும் பாருமிதனைஅறமெலிவு சன்னியெனவேபகர்ந்திடுமே.
மருந்து
பாதிரிகூவிளைமுல்லைபெரியவாகை
பார்முழுதெண்மிளகுசுக்குச்சிற்றமட்டி
ஓதியநன்னாரிவட்டுக்கண்டங்கத்ரி
யுடனேயொரொன்றிரண்டு கழஞ்சுகொண்டு
35

Page 29
செகராசசேகர வைத்தியம்
சீதமுறுதண்ணிரில்விட்டுக்காய்ச்சிச்
சிறப்பாகஇஞ்சிச்சாறுழக்குங்கூட்டி
பேதமுறாதுப்கொண்டால்மெலிவுசன்னி
பின்னையென்னாதுடலைவிட்டுப்பிரிந்துபோமே.
அழிசன்னி
ஒன்றுமரைஞாணளவாய்த்ததும்பிநித்த
முறுமுழலைதாகமிகும்வயிறுசிக்கும் கன்றியநிர்தெளிவாகுஞ்சுரமுண்டாகும்
கண்ணழற்றும்பெருமூச்சுக்காணுங்காலை என்றுமுள்ளபெலமழகுமழியுஞ்சன்னி
யின்குணத்தையடைவாகவியம்புங்காலை நன்றிமிகுபண்டிதர்களறிந்துசொல்வார்
நாள்தோறுமழிசன்னிக்குணமீதென்றே.
மருந்து
நொச்சியிலைபற்படகம்பேரட்டி
நொய்தாகவுலர்த்துபூசணியின்தண்டு பச்சிலைநற்சுக்குத்திப்பலியுங்கூட்டிப்
பரிவாகப்பன்னிரண்டுகழஞ்சுகொண்டு வைச்சதண்ணீரிருநாழியுழக்காய்க்காய்ச்சி
வாய்கொண்டுகுடித்திடவேமாநிலத்தோர் மெச்சிடவேயழிசன்னிக்குணங்களெல்லாம்
மெய்யினைவிட்டகலுமெனவிளம்பும்வேதம்
கண்டகச்சன்னி
அங்கமெங்குமிகுபிணம்போலிருப்பதன்றி
யடிவயிறானதுமெரிந்துகடுப்புண்டாகும் தங்கமுறுமாகாரமுடலிற்செல்லாச்
சாப்பிட்டாலோங்காளந்தானேயாகும் துங்கமுறுசந்துவிலாப்புறமதெல்லாஞ்
சொறிவுண்டாஞ்சுரமாகுஞ்சொல்லுங்காலை பங்கம்போல்மதிவதனமுகத்தினாளே
பார்க்கிலதுகண்டகமாஞ்சன்னிதானே.
மருந்து
செங்கழுநீர்க்கிழங்கினுடன் தாமரையின்வளையஞ்
சிறப்பானபேய்ப்புடோல்தூதுவளையியங்கு தங்குமுத்தக்காசினுடன்சிறியகாஞ்சோன்றி
சாற்றுமதிமதுரநற்சீரகந்தேவதாரம் பங்கயம்போல்மதிவதனமுகத்துமின்னாளே
பகர்ந்திடுபூசணித்தண்டுமிஞ்சியின்சாறும் இங்கிதமாய்நாலொன்றாய்க்காய்ச்சியேயுட்கொண் டிடிற்றீர்ந்திடுங்கண்டகச்சன்னிதானே.
36
O

செகராசசேகர வைத்தியம்
அஸ்வேதகசன்னி
வேராமலிருந்தொருக்கால்மிகவும்வேர்க்கும்
மெத்தசனஞ்செல்லாதுவிரும்பிக்கேட்கும்
பாராமலுடம்பிளைத்தேயுளையும்மேனி
பசிகொள்ளுமிருமலுடனிளைப்புண்டாகும்
நேரானகண்ணதனில்நீருமாகும்
நீசமுடனிக்குணங்களுண்டேயானால்
தீராதஅஸ்வேதசன்னியென்றே
செப்பினார்நெறியறிந்தோர்செகத்தின்மீதே 15
மருந்து
செண்பகங்கொத்தமலிகடுகுரோகணிமாஞ்சில்
செங்கழனியுங்கோட்டமும் தண்பரவவோர்கழஞ்சாகவேயிஞ்சின்
சாறுழக்காயவித்து எண்பரவுதிற்பலியுமேற்பொடியதாகவே
இட்டுமுள்ளேகொடுத்தால் நண்பரவுஅஸ்வேதசன்னியுடலினைவிட்டு
நடுநடுங்கிப்போகுமே. 6
சப்பாணிசன்னி
மிகவேயரற்றியழுதலறியறிவில்லாது வினிலேசத்தமிடுமாம் தகவுடன்கண்களிற்கைகள்கொடுகுத்தியே
தன்சீலையைப்பீறிடும் புகழ்மூலமீதினிற்கையைப்பொருத்திடும் புத்திகெடுமிக்குணந்தான் சகமீதுயாவருமறிந்திடக்கைகொட்டு
சப்பாணிசன்னியறியே. 7
மருந்து
செங்கழனிகொட்டிக்கிழங்குமதுரஞ்சீந்தில் செய்யதாமரைவளையமும் தங்குகுமிழ்பேய்ப்புடோல்வேரிருப்பைப்பூ தயங்குசிறுதேக்கினுடனே அங்கணிருநாழிநீர்விட்டுழக்காய்க்காய்ச்சி
யதில்மிளகுசுக்கினுடனே மங்கையர்முலைப்பாலுடன்திற்பல்மேற்பொடிகொள்
மாறுஞ்சப்பாணிசனியே. 18
பொற்புலவுசந்தனம்பற்படகநன்னாரி
பொருவுமிருவேலிலாமிச்
சிற்பெரியமுந்திரிகைபேரீஞ்சுவேர்க்கொம்பு
மினியவாடாதோடையும்
நற்பெரியபூசணித்தண்டுமுந்நாழிநீர் நாலொன்றதாய்க்காய்ச்சியே
37

Page 30
செகராசசேகர வைத்தியம்
திற்பலிப்பொடியதுமுலைப்பாலுழக்கொடுகொள்
தீருஞ்சுப்பாணிசனியே.
அலட்டுச்சன்னி
கூறிடலட்டுச்சன்னிகோபங்கொள்ளும்
கொடுத்ததண்ணிரன்னமெல்லாங்கொப்பிளிக்கும் வீறுபெறக்கையதனைக்கொட்டியாடும்
விழிசோரவேவிழிக்கும்மெய்யுஞ்சோரும் ஊறுபடஆங்காரத்துடன்சிரிக்கு
முடனுறங்குங்கனவுகொள்ளுமுடம்புமூதும் பாறுபலமிருகங்கள்விழியிற்றோன்றும்
பகரலட்டுச்சன்னியெனப்பகரலாமே.
கையைக்கொட்டியாடுவதும்
கண்கள்சோரவிழிப்பதுவும் மெய்யைப்பலகால்நடுக்குவதும்
வேண்டாதெல்லாம்பிதற்றுவதும் பையச்சிரித்துநடிப்பதுவும்
பாராதெல்லாம்பார்ப்பதுவும் மையைப்பழித்தகுழலாளே
மாறாதெனவேவகுத்தனரே.
மருந்து
வட்டுகிலுப்பைபன்னையொடுகுதிரைவாலி
வளரெலும்பிச்சலரிநொச்சிசாரணைநாவுருவி தொட்டஅரமுறிகறுக்காயுடன்பொக்கணத்தி
தூதுவளைசிவன்வேம்பும்பிலடிக்குருத்து மெட்டார்ந்திடுங்காம ரூபிகண்டங்கோபம்
வேட்டைவாளிக்கூடும்புற்றாம்பழச்சோ றொட்டுவசம்புடன்கையாந்தகரைகொன்றைஉள்ளி
உலவுநிம்பவெண்ணெயில்வெந்துாட்டஅலட்டறுமே
ஏனாதி
திற்பலிநிலவேர்முசிறகினண்டஞ் சீரகமிருவேலிசுக்கு கற்புறுதுத்தந்துரிசுகுக்குடத்தின்
காரமுமொன்றொருகழஞ்சாய் கற்பயில்நிம்பளண்ணெயிலெரித்து
நாவினில்தடவிடிலலட்டு முற்றிடுஞ்சன்னியகன்றிடும்பன்றி
முட்புகைகாட்டிடநன்றே.
விசர்ச்சன்னி
கிடந்துபுரளுமெழுந்திருக்குங்
கேளாதெல்லாமிகக்கேட்கும்
தொடர்ந்துபிடிக்கும்வீறுகொள்ளும்
துப்புமோடுந்துடிதுடிக்கும்
20
2
23

செகராசசேகர வைத்தியம்
அடர்ந்தேசலங்கள்கழிந்திருக்கும்
அங்கம்வெறிக்குமறிவுகெடும்
விடஞ்சேர்விசர்சன்னியின்குணங்கள்
விண்ணோர்புவியில்விளம்பினரே.
மருந்து
விளம்புகருஞ்சீரரத்தையிந்து மிக்கவசம்புசதகுப்பை உளஞ்சேர்கோட்டம்பெருங்குரும்பை
உற்றவெளுத்தல்திற்பலியும் பழங்கோல்மதுரமிலவங்கம்
படர்செவ்வியஞ்சன்னகசாலை வளஞ்சேர்சுக்குப்பரிவாலி
வளர்பீச்சுளாத்திமகிழ்ந்துகொள்ளே
கொள்ளுங்குமிழாடாதோடை
குலவுங்காசீசுரமூலி விள்ளும்வேர்க்கொம்போடுசிவன்
வேம்போரிதட்பங்கயந்தானும் உள்ளகொழுஞ்சிமாவிலங்கை யுறுநன்னாரிகாற்றோட்டி மெள்ள(ச்சீ)தேவிவேர் கூட்டி
மேவும்புனலில்மிகக்காய்ச்சே,
காய்ச்சியிறக்கிப்பிளிந்தெடுத்த
கசாளத்தோரொன்றொருகழஞ்சு கூச்சமறவேசரக்கைநிம்பங்
குலவுமெண்ணெய்தனிற்கொண்டு தீச்சிடாமலெரித்துவடி
செய்துபூசித்தினமருந்த வீச்சும்பித்த்விசர்ச்சன்னி
விடுமென்றறிஞர்விளம்பினரே
மந்தசன்னிக்குணம்
மந்தசன்னியிற்குணங்கேளுறக்கஞ்செய்யும்
மலமுடனேசலம்வெளுக்கும்வாய்நீரூறும் முந்தவன்னங்கொள்ளாதுலைவுபண்ணும்
மூரிநிமிர்ந்துடம்புமுறிக்கும்மேல்காயும் சிந்தைகலங்கிடவயிறுகழியுஞ்சோகஞ்
சேர்ந்துகைகால்குளிருமிகுதியக்கமுண்டா மிந்தவகைகண்ைடால்முன்னோராராய்ந்தே
யியம்பிடுநற்காயமொன்றிசைக்கின்றோமே.
மருந்து
கோரைமணித்தக்காளிகுதிரைவாலி
குருந்துபெருமருந்துநொச்சிபொன்னாங்காணி
சீர்பொருந்துமமிர்தவல்லிதிருமால்தேவி
சிறந்திடுநற்கிலுகிலுப்பைசேவகன்பூ
39
24
25
27
28

Page 31
செகராசசேகர வைத்தியம்
டேர்பொருந்துசங்குபுன்னையுடனின்யூறல்
எய்தியசன்னியநாயனிவைவேர்பின்னும்
தார்பொருந்துஞ்சண்பகப்பூகோட்டமஞ்சள்
தக்கோலமரத்தைநற்சீரந்தானே.
தானமரும்வேற்கொம்புகடுகுமஞ்சள்
தனிமிளகுகடுகுரோசணியுங்கூட்டி ஊனமறுநிம்பவெண்ணெயிற்கொதித்து
உறுதியுடன்சிரத்தினும்வைத்துள்ளேகொள்ளப் பானல்விழிமயிலனையாய்சுரவிகாராம்
பற்றிவருகின்றமந்தசன்னிதானும் கானமருஞ்செடிதேடியோடிப்பின்னும்
கதிர்கண்டதிமிரமெனக்கலைந்துபோமே.
அந்திரசன்னி
கண்கள்கரிக்குந்தலைவலிக்குங்
கடியவுழலைபடப்புரளும் விண்களதிரவெழுந்திருக்கும்
மீளவறிவுகெடுந்தெளிவாம் அண்மேல்வெதும்பும்நெளிமுதுகா
மனுக்கங்கடுப்பாஞ்சேட்டுமமாம் எண்பல்கல்விவாணரிதை
யிசைப்பரந்திரசன்னியென்றே.
மருந்து
கூறுமந்திரசன்னிக்குக் கொடிவேலியின்வேர்வாய்விளங்கம் தேறுஞ்சுக்குத்திற்பலியுந் திகழுமிளகுமோரொன்று மாறுபடாமலரைப்பலங்கொள் வளமாநிfலெட்டென்றாய் வீறுபடவேயெரித்தெடுத்து விரைவாய்க்கொடுக்கில்மீண்டிடுமே.
உடல்மூடுசன்னி
தானஞ்செறியுமுடல்மூடு
சன்னிக்குணங்கேள்கழிச்சலுண்டாம் மானம்பெறுநாப்புண்ணாகும்.
வருமுள்மூச்சுஉடல்துடிக்கும் ஆனநயனந்தனைவிழியா
தன்னமருந்தாத்துயில்பொருந்தா ஊனஞ்செறியும்பல்லிறுக்கி
யுடல்வீங்கிடுமுட்புண்ணாமே.
மருந்து
விடையஞ்சாதிக்காய்வசம்பு மிக்கவோமம்வேர்க்கொம்பு சடைசேர்நொச்சிகான்றைபுன்கு சாற்றும்வேரும்சரிசமனாய்
அடைவாயெட்டொன்றாயவித்து அருந்திலுடல்மூடிடுசன்னி படைசோசிங்கைவேந்தையெதிர் படைபோலஞ்சிப்பறந்திடுமே.
40
29
30
3.
32
33
34

செகராசசேகர வைத்தியம்
அதிகசன்னி
உளம்புவெதும்பும்வயிறுகெடு
முடனேகழியும்பெலன்கேடாம் தளங்கொள்தண்ணிர்த்தாகமுண்டாம் தான்மூர்ச்சிச்கும்மதிமயங்கும் துளங்கமயக்குந்தெளிவுதருந்
துட்டக்குணவீனங்கள்பண்ணும் அழுங்குமளிசேர்குழல்மாதே
அதிகசன்னியென்றறியே.
மருந்து
கடுக்காய்ப்பூநாயுருவிமஞ்சள்
கடியகொடிவேலியின்வேரும் மிடுக்காஞ்சுக்குவசுவாசி
வெட்டிவேர்செஞ்சந்தனமும் தடுக்காமிளகும்நீரிலிட்டுத்
தவறாதெட்டொன்றாய்க்காய்ச்சிக் கொடுக்கிலதிகசன்னியது
கூப்பிட்டோடுங்குறித்தோமே.
நீர்ப்பாட்டுச்சன்னி
பெரியநீர்ப்பாடதுவுடனே பிழையாச்சன்னிகூடுகிலோ கரியபெருங்கண்ணிலைகுத்திக் காதுமந்தங்காட்டுவிக்கும் அரியமேனிகுளிர்ந்தேதா னம்மியகதிதானாகி நெரியக்குணவீனங்கள்செயும் நிறைநீர்பாட்டுக்சன்னியென்னே.
மருந்து
ஆடாதோடைகொடிவேலி அலரிசிறியவழுதலைவேர் பீடார்முக்தக்காசுக்குப் பெரும்பற்படகந்திரிகடுகு நாடாருஞ்சிற்றரத்தையிவை நாலொன்றாக்கியருந்திடுகிற் கூடாநீர்ப்பாட்டுச்சன்னி குலைந்திடுமென்னக்கூறினரே.
அமரிசன்னி
அமரியெனுஞ்சன்னிசெயுங்குணத்தைப்பேசி
லதிகமாய்த்தலைசுழற்றுமசதியுண்டாம் சமரின்மிகுபுயநெளிக்கும்பெலனுமுண்டாஞ்
சாற்றிடுகினிர்சிவந்துகடுத்துவிழும் தமரமிகுங்கைகாலுந்துணுக்கமுண்டாம்
தாகமுடன்தலைவலியுஞ்சாருமென்றார் திமிரதினகரனெனவேயுணரவல்ல
திட்டார்ந்தமறிந்தரியதவத்தினாரே.
மருந்து
வட்டத்துத்திகிலுகிலுப்பை
வாகைமுருங்கைமாவிலங்குப்
41
35
36
37
38
39

Page 32
செகராசசேகர வைத்தியம்
பட்டைபூநாகங்காயம்
படர்செவ்வியம்சந்தனம்முசிற்றின்
முட்டையரைத்துவேப்பநெய்யில்
முறையாய்க்காய்ச்சிச்செம்பதத்தில்
துட்டிடையாகக்கொடுத்துவரிற்
றொலையுமமரிச்சன்னியதே.
வலிசன்னி
மந்தமாய்வயிறுமூதி மசகியேகாய்ச்சலுண்டாய் கந்தமார்வாயும்புண்ணாய்க் கழிந்துதீன்மறந்துமுட்டாய் சொந்தமாய்வலித்துச்சோர்ந்து சோகமாய்க்குளிர்ந்தேயேறி வந்தடர்ந்தமடுசெய்யும் வலிசன்னிவகுக்குங்காலே.
மருந்து
வேம்புசிவன்வேம் புவாய்புனகுவேலிப்பருத்திசூரிசங்கு கூம்புநொச்சிகொடிவேலி குருந்தின்வேரும்முசிற்றுமுட்டை காம்புசெறியுங்கராம்புஇந்து கடுரோகணியுந்திரிகடுகும் தேம்புகுடிநீர்செய்தருந்திற் திகைக்கும்வலியின்சன்னியதே.
விறுமசன்னி
விறுமசன்னிசெய்குணத்தையுரைக்கவேண்டில்
வெகுமூடமாயிருக்கும்மிகவும்பேசாக் கறுவுமிருகண்ணிருளாய்வெளுக்குமேனி
கஞ்சிமறந்தருந்தாகம்மிகவேயுண்ட்ாம் மறுகிமிகுநெஞ்சடைக்கும்மயக்கும்பின்னர்
வாய்குழறிக்கண்டபடிபிதற்றல்செய்யும் சிறுகுமிடைகருகுவிழிமயில்சேர்சாயல்
செறிந்துகாரளகமதுதிகழுமாதே.
LDObig
கோங்கிலகுமாலிலிங்கெருக்கின்பட்டை
கொடிவேலிபுன்குமயிலடிக்குருந்து பாங்குறமுக்கிராய்கண்டங்கத்ரிநொச்சி
பன்னைசங்கின்வேருடன்சுக்கசமதாகம் ஓங்குறுதிற்பலியரத்தைசிறுதேக்கிந்து
உள்ளிமரஞ்சள்வசம்புலுவாச்சந்தம் தேங்கவரைத்துச்சலத்திற்சேர்த்தெட்டொன்றாய்ச்
செய்தருந்தவிறுமசன்னிதிகைக்குமன்றே.
குமரகண்டசன்னி குமரகண்டசன்னிசெயுங்குணத்தைச்செப்பிற் கோலமிகுபல்லதனைநருமிக்கிட்டும்
சமரமிகுகையூதறிப்பரந்துதேடுஞ்
சாற்றிடுகிற்காலுதறியுழற்றல்செய்யும்
42
40
41
42
43
44

செகராசசேகர வைத்தியம்
தமரமிகுகாதடைக்குங்காய்ச்சலுண்டாந்
தன்னைமறந்திடுமயக்கந்தானேசேரும்
திமிரதினகரபிரவையெழில்சேர்சாயற்
சின்னவிடையன்னநடைதிகழுமாதே.
மருந்து
அரத்தைதிரிகடுகுசிறுதேக்குக்கோட்டம்
அவுரிவட்டத்திருப்பிமுத்தக்காசுபன்னை பெருத்தபாதிரிவட்டுப்பெருமருந்து
பேய்ப்புடோல்கான்றைகொடிவேலிவேரும் பொருத்தமுறுமுசிற்றுமுட்டையரவின்கண்டம்
பூநாகமரைத்துநிம்பநெய்யிற்காய்ச்சி வருத்தமுறுகுமரகண்டசன்னியோர்க்கு
மத்திக்கநிலைதளம்பிமாறுமன்றே.
தனுவாதசன்னி
தனுவாதசன்னிசெய்யுங்குணத்தைச்சாற்றில்
தனுப்போலவுடல்வளைந்துமயங்கிச்சோரும் அனுபேதமுடன்மிகவுந்தலைகனக்கும்
அன்னமறந்திருந்துயரமிகுதியுண்டாம் தினபேதமுடனடுக்கும்விறைப்புஞ்சற்றே
சேர்ந்துமிகுந்தருஞ்சோகஞ்செறியலாகும் கனபேதறிகரழகுமயில்நேர்சாயற்
கணைநிகருங்கரியவிழிக்கமலமாதே.
மருந்து
தனுவரதசன்னியெனில்வாதசன்னி
தனக்கறையுங்குடிநீரைத்தானுட்கொண்டு நனிசேருமிரதமரிதாம்லிங்கம்
நாவிகெந்தகம்மனோசிலையினோடே துணிசேருமெலிப்பற்பாஷாணங்காடி
துய்த்தரைத்துச்சீலைதனிற்சுவறப்பூசி இனிதானசுடர்த்தயிலம்வேம்பினெய்யில்
இறக்கிமேலிற்பூசஏங்கிநீங்கும்.
மகரசன்னி
மகரசன்னிசெய்குணத்தைவகையாய்ச்செப்பில்
வயிறிரைத்துப்பொருமியழும்வாய்பேசாது தகரநறும்வாய்நாறுங்காய்ச்சலுண்டாம்
தலைகனத்துமயக்கமிகுந்துவாதிசேரும் பகரமிகுவயிறெரியுங்கைகால்சோர்ந்து
பந்துபோற்சுருட்டிநொந்துசோகமாகும் முகநிலவுபிறைபுருவவிழியம்பின்ப
முற்றியசொல்லன்னநடைக்கமலமின்னே.
43
45
46
47
48
49

Page 33
செகராசசேகர வைத்தியம்
மருந்து
கடுக்காய்நெல்லிப்பருப்புகொம்பு
கடுரோகணியோடேலமுள்ளி மிடுக்காந்திற்பல்கொத்தமல்லி
வில்வம்முல்லைவிழிபுடோல் தடுக்காவெருக்குப்பற்படகந்
தண்ணிரிட்டெட்டொன்றாக்கிக் கொடுக்கமகரசன்னியது
குணமாமென்னக்கூறினரே.
மட்சசன்னி
மட்சசன்னிசெய்குணத்தைவகையாய்ச்சொல்லில்
மந்திப்பாம்காதுகண்ணுமிருளாய்மூடும் உட்குமுடல்கால்மடக்கியுவாதியுண்டாம்
ஓயாமல்வாய்வெருவியலட்டிப்பேசும் முட்குமிழ்நேர்மூக்கிரத்தம்விழுந்தேபாயும்
முடக்கியகைநடுக்கமுறும்முகமும்வேர்க்குங் கட்டுவடுநிகர்மnனேயிக்குணந்தான்
காட்டினார்மட்சசன்னிக்குணமீதென்றே.
மருந்து
முத்தக்காசுபற்படகம் முல்லைகச்சந்திராயெருக்கு சித்திரமூலந்துதுவளை சிறுவழுதலைபேய்ப்புடோல்வட்டுச் சுத்தவேர்சீந்திற்றண்டு சுக்குக்கோட்டம்திரிபலையும் ஒத்தகஷாயமிட்டருந்தில் ஒதுங்கும்மட்சசன்னியதே.
சுகசன்னி
மிகவுமுள்ளுழலையுண்டாம் வெப்புடன்வெயர்வுமாகும் பகரில்நாத்தடக்கிப்பேசும் பதறிடுந்தாகமுண்டாம் நகமதால்நிலம்புறண்டும் நாவினிரற்றிருக்கும் சுகசன்னிக்குணமீதென்று சொல்லினர்முன்னூலாய்ந்தே.
மருந்து
இஞ்சிச்சாறதுகாற்கொத்து இதைமுறித்தெடுத்ததற்கு மிஞ்சாமல்முலைப்பால்விட்டு விளங்கிடுமுசிற்றுமுட்டை
எஞ்சாப்பூநாகந்திற்ப லிவையொவ்வொர்கழஞ்சரைத்துத் துஞ்சாதுசேர்த்தருந்தச் சுகசன்னிதொலைந்துபோமே.
கபாவசன்னி
கோலப்பிடரிதனைத்திருப்பக் கூடாததிகவலிகாணும் சாலத்திமிர்க்குங்கண்சிறுக்கும் தலையிற்காதிலீட்டிகுத்தல்
போலக்குத்தும்வெயர்வயர்வாம்புத் திகெடுக்குந்தினவுண்டாம் கால்கைகாந்தும்நடுக்கமுண்டாம் கபாலச்சன்னிக்குணமிதுவே.
44
50
5
52
53
54

செகராசசேகர வைத்தியம்
மருந்து
வெள்ளுள்ளிவசம்புதிற்பல் வேம்பினெய்தனிலரைத்துக் கொள்தேசிக்காய்ப்ரமாணங் கூறுநாய்வேளைமத்தை விள்பிராய்கரியநொச்சி வேரிவைசமனாய்க்கொண்டு வள்ளிசாயரைத்தெடுத்து மாங்காயினளவாய்ப்போடே.
போட்டுநற்பதமாய்க்காய்ச்சிப் புரையறவடித்துக்காலை மாட்டிடுதலையுடம்பில் மாலையிலரைப்பையிட்டு சூட்டொடுவெந்நீர்தன்னிற் றுாய்மையாய்முழுகினாக்கால் தீட்டிடுகபாலசன்னி திகைத்தகன்றோடுமன்றே.
வெடிசன்னி
காதுக்குள்ளேதிரண்டெழுந்து கனத்துக்குத்திவலியுண்டாய் சேதப்படவேமுகமதனைத் திருப்பிவாயுஞ்சுழித்திடுகில் வேதப்படியேயிக்குணத்தை வெடிசன்னியெனவிளம்பினர்காண் போதப்படியேயிக்குணங்கள் போகச்செய்யும்மருந்துசொல்வாம்.
மருந்து
சொல்லிற்கடுக்காயிந்துப்புத் தூயதிற்பல்சமன்பொடித்து வெல்லுஞ்சதாவேரிச்சாற்றில் விரைந்துதிரிகடிதுளருந்தில் பொல்லாமலமுங்கழியும்பின்பொருந்து மதுரம்வெளிச்சிதிற்பல் நல்லஉள்ளிசெவ்வள்ளி நவில்மால்தேவிதூதளைவேர்.
வேர்நாயுருவிநிலக்குமிழ்வேர் மிளகுநிலவேம்பொடுகான்றை
சேர்பொன்னாவரையின்வேரும் சிதறாவொவ்வோர்பலங்கொண்டு
நேர்கொண்டரைத்துநிம்பநெய்யில் நிதானமாயிட்டுக்காய்ச்சி ஓர்சிறங்கையினளவுட்கொள்ள ஒடும்வெடிசன்னியுமொழிந்தே.
சுரசன்னி
சுரத்தில்மந்தந்தலைக்கணப்புடன்மயக்குஞ்
சுரமொருக்கால்காயுமொருக்கால்மெத்தென்னும் உரத்திடுமெய்ச்சுழற்சியுடன்பார்வைவேறா
முட்டணமாநாடிதனில்நிதானந்தோன்றா வருத்துமிதுசுரசன்னியிதனுக்குள்ளி
வசம்பவுரியுடன்நிலவேரிவைகளெல்லாந் திருத்தமுறுவேப்பநெய்யிற்கொதித்துப்பூசிற்
தினகரன்முன்னிருளெனவேதிருந்தானே.
மருந்து
பாடாருஞ்சுரசன்னிமாறுதற்குப்
படர்மதுரம்திரிகடுகுகடுக்காயோமம்
பீடாரும்வேர்சொல்வேனியங்குமுல்லை
பெருமருந்துபற்படகம்நத்தைச்சூரி
காடாரும்விராலிகுன்றிகுப்பைமேனி
கான்றைமருக்காரைகளப்பன்னைநொச்சி
45
56
57
58
59
61

Page 34
செகராசசேகர வைத்தியம்
ஆடாதோடையுங்கூட்டிக்கியாழமீந்து
அக்கினிசீவனித்தயிலம்பொருத்தநன்றே.
அக்கினிசீவினித்தயிலயம்
நன்னாரிகிலுகிலுப்பைபொன்னாங்காணி
நல்லமுசிற்றண்டமுடன்நிலவேர்கோரை பொன்னார்சீதேவியிருவேலிசீந்தில்
பொற்புறுசேவகன்பூடுமணித்தக்காளி சொன்னார்சன்னிகள்நாயன்குதிரைவாலி
சோதிநத்தைக்சூரியிலாமிச்சுவேரும் மின்னார்சிற்றரத்தைசுக்குக்கொத்தமல்லி
மிக்ககோரோசனைசெண்பகப்பூகோட்டம்
கோடாருமிளகுதிற்பலேலநற்சீர்
கோதிலிலவங்கமோடானைத்திப்பல் காடாருஞ்சரக்குடன்வேர்கழஞ்சுநேராய்
காயவிடித்தெடுத்தரித்துமாவாய்த்தெள்ளி வீடாருநிம்பவெண்ணெய்திலத்திலெண்ணெய் விட்டுநேர்சரிகாய்ச்சியிறக்கிநீரி னுாடாறவைத்துடனேமருந்துதூவி
யுறப்பொருத்தச்சுரசன்னியோடிப்போமே.
முகவாதசன்னி
கண்ணிற்றலையிற்புருவத்திற் காதிற்பல்லிற்குத்துண்டாய்ப் பண்ணிப்பதைக்கமுகந்தன்னைப் பக்கம்பற்றியேதிருகி நண்ணிப்பகரநாத்தடக்கி நாடுங்குணங்களிவைகண்டால் எண்ணிச்சொல்லும்முகவாத விடர்செய்சன்னியிதுவென்றே.
மருந்து
தழுதாளைநாயுருவி தைவேளைவெண்நொச்சி
சங்கோடுவேலிகுப்பை சடையவுரிமருதோன்றி காட்டுமல்லிகைபுன்கு
சண்பகம்மாவிலங்கு மிளகரணைகுமிழ்திருகு கள்ளிநிலவாகையொடு
வெண்சாரணைக்கிழங்கு வெட்பாலைமூலமோ ரொன்றுபத்துப்பலம்
விரவநீரெண்மரக்கால் தளமாகவிட்டாறு படியாயெடுத்ததிற் சதகுப்பையேலமோமம் சடாமாஞ்சிலிஞ்சிதிற் பலிமிளகுசிறுதேக்கு
தாளிசப்பத்ரிசுக்கு வளமார்பெருங்காய மயிலிறகுமோரொன்று
வகையரைப்பலமெடுத்து மருவுவெள்ளாட்டுநீ ரதிலரைத்தேமுன்
வகுத்திடுகியாழத்திடே.
இட்டிடுமதற்குளென் சிற்றாமணக்குபுங் கிருப்பைவேம் பிவைகளின்நெய்
46
62
63
64
65
66

செகராசசேகர வைத்தியம்
இருகொத்துவீதமாய் விட்டுவற்றக்காய்ச்சி யிதைமெழுகுபதம்வடித்துச் சட்டெனக்கஸ்தூரி யோடுபுகையூறலுஞ்
சாதிலிங்கமுமொவ்வொன்று சாரிருகழஞ்செடுத் தேபொடித்திட்டபின் தக்கவெள்ளுள்ளிமுசிறின் முட்டையின்றைலமிவை காற்படியதிற்சேர்த்து
முன்னுகாசிடையருந்தி முறையுடன்மேற்பூச முகவாதசன்னியும் முற்றுபலசன்னிவகையும் திட்டமுறுவலிகளும் திகிலுற்றடங்கியே
செகராசசேகரனெனும் சிங்கையாரியனையெதி ரொன்னார்களென்னவே
திசைகெட்டகன் றுவிடுமே.
சூசிகாசன்னி
உதிரகட்டொழியாதாலு முரோதனமுற்றிட்டாலும் இதமுறுகெற்பம்வீங்கி யிழிந்திடுநெருக்கத்தாலும் பதியுடன்புணர்தலாலும் பலவிதவுலைவினாலும் அதிகவெப்படர்ந்தசன்னி யாமிதுசூசிகாவாம்.
மைந்தரைப்பெற்றபோதில் மழைகுளிர்தண்ணிர்மோரா மிந்தநீர்வகையாற்பல்லை யிறுக்கிடுஞ:சுரமுண்டாகும் நொந்துதான்வயிறுவெப்பு நோக்கியேபிறகேவாங்கும் சுந்தரத்தோளினாளே சூசிகாசன்னிதானே.
மருந்து
சன்னியுஞ்சூசிகாவுந் தவிர்ந்திடஎருக்குவாய்வேர் உன்னியகண்டங்காலி யுயர்கொடிவேலிகுப்பை பன்னியகீரைவேரும் பகரும்வெள்ளுள்ளிஏலம் பொன்னெரிகாய்ச்சிச்சுக்குத் திற்பலிப்பொடிபோட்டுண்ணே.
வெச்சடர்ந்தசன்னி
பூமேற்புரளும்பற்கடிக்கும் புகலும்பேய்போற்கண்சிவக்கும் தாமேநடக்குமுடன்பாடுந் தக்கசோபமிகவாகும் வேமேநெறித்துவிழித்துறுக்கும் மிக்ககளங்கமிடுமார்க்கு மாமேயஞ்சுமிதுவேவெச் சடர்ந்தசன்னியசாத்தியமே.
மருந்து நொச்சியாடாதோடைவில்வம் நுவல்ம்ாவிலங்குகொடிவேலி கச்சந்திராய்முல்லையின்வேருங் கருஞ்சீர்பெருஞ்சீர்திரிகடுகும் மெச்சுமேலம்மதுரம்வாய் விளங்கங்கியாழமிட்டருந்த வெச்சடர்சன்னிமீளுமிதை மீறிலண்டத்தயிலமிடே.
கோழிமுட்டைத்தைலம்
அண்டமவித்துச்செங்கருவை யலர்த்திச்சட்டிதனில்வறுத்துக் கண்டதைலமளவுள்ளி கடியதயிலம்வேப்பெண்ணெய்
47
67
68
69
70
71
72

Page 35
செகராசசேகர வைத்தியம்
உண்டகாயம்பூநாக மொக்கக்கூட்டிக்கரைத்தெரித்துப் புண்டரீகமுகமாதே பூசச்சன்னிபுறம்போமே.
வாதசன்னி
கறுக்கும்விழிக்கும்விசாரமிகுங்
கைகால்கடுப்புமுளதாகும் வெறிக்கும்நடிக்குங்கைகொட்டும்
மெய்யில்வலிப்புமுளதாகும் மறுக்குஞ்சுருண்டுஅசந்துவிழும்
மருவுஞ்சியநோம்மனிதர்தம்மை இறுக்கிப்பார்க்குமிதுவாத
சன்னியென்றேயியம்பினரே.
வாதசன்னியிற்குணங்கேள்விழிகொட்டாது
மலசலம்போறதுமறியார்வரஞம்நாவும்
பேதமுறவறிவுகெடுந்தாகமுண்டாம்
பெருத்தகைகால்வழங்காதுசெவியுங்கேளா
போதமுறவிக்குணங்கள்யாவுங்கண்டால்
பொருந்துமெண்ணெய்வகைகேளுநொச்சிகான்றை
சூதமுடனேருக்குவாய்பால்மிடாங்கி
தூயகளப்பன்னையுவாய்வேருந்தானே.
தேடுநத்தைச்சூரிதிருக்கொன்றைநீலி
செப்பரியமாவிலிங்குசிவனார்வேம்பு ஆடுதின்னாப்பலையுடன்சன்னிநாயன்
அமுக்கிராய்கல்மிரிசுஅரவின்கண்டம் நீடுநாயுருவிசுக்குமிளகரத்தை
நிலத்தினில்வேர்வசம்புகருஞ்சீரமுள்ளிப் பூடுகோட்டம்வெளுத்தல்கராம்புடன்கார்
புகாவரிசிதிற்பலியும்புகழ்ந்துகொள்ளே.
கொள்ளுந்திலத்திலெண்ணெயது கூட்டிவடித்துமேற்பூசத் துள்ளும்வாதசன்னியுடன் தொடர்ந்ததிமிர்வாதச்சன்னி விள்ளுமலட்டுச்சன்னியதும் விழிவாய்தன்னையொருபுறத்திற் றள்ளித்திருகும்முகவாத சன்னிகூடஅகன்றிடுமே.
வாதசன்னிக்குக் குடிநீர்
வேலிப்பருத்திவட் டத்துத்திகொடிவேலி
வேம்பினின்முதியபட்டை விரவிடுமுருங்கைசிவன் வேம்போடாடாதோடை
மேவுநத்தைச்சூரியும் கோலத்துறுங்கிலு கிலுப்பைவட்டொடுமயிற்
குருந்துகாற்றோட்டிதுளசி குப்பையின்மேனியொ டெருக்குக்களபன்னை
கொன்றையிவைவேரொருபிடி தாலப்பூநாகம் முசிற்றண்டமிந்துப்பு சதகுப்பைகடுகுரோணி சந்தனங்கோட்டங் கடுக்காய்வசம்புள்ளி
சார்சிற்றரத்தைமஞ்சள்
48
73
74
75
76
7ך

செகராசசேகர வைத்தியம்
சீலக்கராம்புடன் காயமுங்கூட்டியே செய்தகுடிநீரருந்திற் சேர்வாதசன்னிசெக ராசசேகரனையெதிர் செற்றலர்போலற்றுவிடுமே.
பித்தசன்னி
பித்தசன்னிவயிறுகழியும்பிதற்றும்
பின்னமுறப்பற்கறிக்கும்பேதமாகும் மெத்தவுநீர்த்தாகமுண்டாம்நிலம்பிறண்டும்
விழிபசுக்கும்வாய்நாறுஞ்சுரமுங்காயும் முத்துநிகர்பற்கறுக்குமாடும்பாடும்
மூர்ச்சிக்குமறிவுகெடும்முகமும்வேர்க்கும் இத்தகமைகண்டிடுகில்பித்தசன்னி
எனவறிஞர்புவிமீதிலிசைத்திட்டாரே.
பித்தசன்னிக் குடிநீர்
ஈசனருட்செய்மூலமுட னெழுங்கல்மிரிசுகளப்பன்னை வாசமிகுந்தஉவாய்புங்கு வருமின்பூறல்நாயுருவி வீசிவளராடாதோடை மிளகுகான்றைசிற்றமட்டி ஆசுசெறியும்பேரமட்டி அலரிநொச்சியறைந்தனமே.
அறைவோமுல்லைகற்றாளை அரமுறிநன்னாரிக்கிழங்கு பொறைசேர்சாயம்பரிவாலி பொருந்துசீதேவியில்வேரும் கறைசேர்விழியாய்காற்றோட்டி கான்றையுடனேமுசுமுசுக்கை நிறையாய்வட்டும்மயிற்குருந்தும் நீடுஞ்செங்கத்தாரியுமே.
தார்சேர்குழலாயிவையெல்லாந் தப்பாதேயோர்சரிகொண்டு நேராயிடித்துத்துள்செய்து நிறையவிரண்டுகுறுணிதண்ணிர் ஒரேமரக்காலாய்க்காய்ச்சி யுடனேகுடிக்கக்கொடுப்பீரால் தீராதென்றபித்தசன்னி திகைத்தேயோடுந்தெறிகெட்டே.
தைலம்
மூர்ச்சித்தபித்தசன்னிதனக்குக்கோழி
முட்டையிருபதுமவித்துமுறையேவெள்ளை மேற்பட்டகருவையெல்லாங்கழித்துமஞ்சல்
மேவுகருவைத்தயிலம்விழுத்திக்கொண்டு சீர்ப்பட்டவேம்பிணெண்ணெய்தனிற்கலந்த
செறியுநத்தைச்சூரிதுத்திநிலவேர்தானும் பேர்பெற்றநாயுருவிமுங்கைப்பட்டை
பெருங்காயங்பூநாகம்பின்னுங்கேளே.
கேள்கழற்சிப்பருப்புவசம்புள்ளிகொம்பு
கிளர்குதிரைவாலியுடன்கிட்டங்கூட்டி
சூழவரைத்தெடுத்தெண்ணெய்தனிற்கலந்து
சுவறவெரித்திருபுறமுந்தொய்யப்பூசில்
மீளரிதாம்பித்தசன்னியுடனேவாதம்
மேவுசன்னிசேடசன்னியுடலைவிட்டு
49
78
79
80
8
82
83

Page 36
செகராசசேகர வைத்தியம்
வாளனையவிழிமாதேயகலுமென்றே
வாகடர்கள்மாநிலத்தில்வகுத்தாரன்றே. 84
பித்தசன்னிக்கு எண்ணெய்
பிதற்றும்பித்தசன்னிக்குப்பேசு மெண்ணெய்தனைச்சொல்வேன் மிதத்தகராம்புசெங்கழுநீர் மேவுங்கோட்டமதிமதுரம் விதித்தபெரியதிற்பலியும் விளங்கீராத்தைகொத்தமல்லி அதைத்தகழஞ்சியொன்றுகொள் வீரதற்பின்வேருமறைகுதுமே. 85
அறையுங்சிற்றமட்டியின்வேர் அமுதவல்லிக்கொடிகொன்றை குறையாவெருக்குமயிற்குருந்து குதிரைவாலிநிலக்குமிழும் மறைசேருத்தமாகாணி மருவோரிதட்பங்கயக்கிழங்கு கறைசேர்விழியாய்நன்னாரி களப்பன்னையின்வேருங்கூட்டே. 86
கூட்டுங்கடுகுவசம்புள்ளி கொத்தமல்லிசிறுதேக்கு ஈட்டுமெருக்கம்பாலினுடன் எலுமிச்சம்புளியுஞ்சேர்த்து நீட்டியரைத்துஎள்ளெண்ணெய் நிம்பனண்ணெயேரண்டம் காட்டுமெண்ணெய்தனிற்கொத்தித்துக் கடிதாய்ப்பொருத்தில்விடு
மன்றே. 87
வேறு
புகலுமிலாமிச்சிருவேலி பொய்தீர்திரிபலைதிரிகடுகு அகலும்பூகவிருக்கமுடன் அறையும்வெளுத்தல்வெள்ளுள்ளி திகழும்மதுரம்மரமஞ்சள் சிறுவாலுளுவைசதகுப்பை உகளும்வெட்பாலையினரிசி உரைக்குங்கார்போகரிசியுமே. 88
காவிலுலவுகச்சோலம் கருதுங்கோட்டஞ்செண்பகப்பூ தூவுங்கடுகுகொத்தமல்லி துலங்குமேலமிந்துப்பு தேவதாரஞ்சாதிக்காய் சிறுதேக்குட்ன்க்ம்பிப்பிசினும் தாவுங்கருஞ்சீரகமோமம் சரியாயொன்றீர்கழஞ்சுகொள்ளே. 89
கொள்ளுமெலுமிச்சம்பழநீர் கூட்டிநன்றாயரைத்தெடுத்து அள்ளுஞ்சிற்றாமணக்கெண்ணெ யருவேப்பெண்ணெய்நல்லெண்ணெய் விள்ளும்படியேயொவ்வொன்று விரைவாய்நாழியளந்துவிட்டு கொள்ளும்பதத்தில்வடித்துவைக்கக் குணமாம்பித்தசன்னியுமே. 90
சிலேட்டுமசன்னி
சிரத்தைவலிக்கும்மேல்வெதும்பும் தேகங்கனக்குமறிவழியும் உரத்திற்சளிவந்தடைபடுத்தும் உட்மியக்காறவொண்ணாது உருத்துமூர்க்கமெனப்பார்க்குமோயா திருமும்மெய்வெளுக்கும் வருத்துஞ்சேடசன்னியென வகுத்துமொழிந்தார்வல்லோரே. 91
வல்லவிழியைமேற்சொருகில் வாயால்நுரையும்வந்தொழுகில் சொல்லுமொழிகள்தடுமாறிற் றுய்யகைகால்சோர்ந்திடுகில் பொல்லாச்சளிகள்களகளக்கிற் புகலும்வாயால்நீரொழுகில் சொல்லய்ெமரணமிருபதுநாட் டுலங்கும்பொழுதுட்சோராதே. 92
50

செகராசசேகர வைத்தியம்
மருந்து
கருஞ்சீர்திற்பல்வசம்புசுக்குக் கமழுமரத்தைசெவ்வியமும் வரும்வெண்காரம்சேவல்தனில் மருவுங்காரம்வறுத்திவையை கரும்பின்சாறுதனிற்கரைத்துக் காலைமாலையருந்திடுகில் திருந்துஞ்சேடசன்னியெல்லாந் திடுக்கிட்டோடுஞ்செய்தறியே.
குடிநீர்
அரமுறிநன்னாரிமுத்தங்குதிரைவாலி
அரியசேவன்பூடுமுதியார்கூந்தல் விரவுற்றதுளசியொடுபிரமிகான்றை
வீழியுத்தமாகாணிபெருமருந்து பொருவசம்பேலம்கார்புகாவேற்கொம்பு
புகழ்கோட்டந்திரிபலைவாலுழுவையோடு வருமுசிற்றுமுட்டையிவைகுடிநீராக்கி
வகுத்தருந்தச்சேடசன்னிமாண்டுபோமே.
திரிதோஷசன்னி
மலமானதிறுகியே யறிவுங்குலைந்துசுர
மதுதானுமலிவாகியே தலைமார்புகண்டமிவை மிகவேவெதும்பிமிகு
தலைவலியுமிஞ்சியதரம் பலமாய்வெளுத்திரும லீளையுடனேயுளைவு
படிமேல்மிகுத்துபயமாய்க் குலையாதவையமதி பித்தமுங்காலுடன்
கூடுமிதுதிரிதோஷமே.
ஒப்பொடுகுளிரும் முகமுமேவேர்க்கும்
ஒய்விலாச்சேட்டுமமெடுக்கும் வெப்பொடுமுழங்கால் குளிர்ந்திடுந்தலையும்
மிஞ்சியேவலித்திடுமலமுஞ் சிக்கியேநிற்குங் கைப்புடன்புளிப்புத்
தித்திக்கும்வாயுமேகறுக்கும் செப்புமேபித்தஞ்சேட்டுமவாதஞ்
சேர்ந்திடிற்திரிதோஷமாமே.
மருநது அதிமதுரமிருகழஞ்சு வோக்கொம்பேல மானதோரிருவேலிதிற்பல்மூன்று கதிபெறுசந்தனநாலு கழஞ்சுகூட்டிக்
கதித்தகொத்தமலியுங்காற்பலமேசேர்த்துச் ததிபெறவேநிரிட்டுநாலொன்றாக்கித்
தானருந்தும்போதுதிற்பலித்தூள்போட்டுக் கொதிபெறவைத்துக்கொடுக்கமுத்தோஷத்தாற்
குலவியசன்னிகளெல்லாங்குலைந்துபோமே.
வேறு
துய்யசிறுகாஞ்சோன்றிவட்டத்திருப்பி
தூதுவளைநன்னாரிஆடாதோடை
51
94
95
96
97

Page 37
செகராசசேகர வைத்தியம்
செய்யசிறுவழுதலையுங்கண்டங்கத்ரி
சிறந்தநெல்லிமுள்ளிதிரிகடுகுங்கூட்டி
பையமெள்ளநாலொன்றாய்க்காய்ந்ததக்க
பதமானால்திற்பலிதேனளாவிக்கொள்ள
வையகத்தில்மானிடர்க்குத்திரிதோஷத்தால்
வந்தசன்னியேங்கியேமறைந்துபோமே.
எல்லாச்சன்னிக்கும் ஏனாதி
திருந்துநன்னாரிதான்றி திற்பலிகடுக்காய்சாதி அருந்திடுமிளகுசுக்கு அதிமதுரத்தோடேலம் பொருந்தியகோட்டமுள்ளி பொற்புறுமிருசீரோமம் வருந்தியமுசிற்றினண்டம் வளரும்பூநாகம்இந்து.
இந்துப்புக்கடுகுரோணி இயல்விளால்நிலவேரொன்று சந்திக்கக்கழஞ்சுவாங்கித் தவறாதுஇஞ்சிச்சற்றில் சிந்திக்கவரைத்துக்கூழ்போற் சிறந்திடக்காய்ச்சியுண்ண அந்திக்குஞ்சன்னியெல்லாம் அப்புறமகலுங்காணே.
கண்டத்தினடைப்புத்தொய்வு கடுந்தநாவரட்சிதாகம் மிண்டியசேற்பமுட்டு விறைப்புடனிருமல்வேர்வை கொண்டதோர்திமிர்விறைப்புக் குலவியசுரங்கடானும் அண்டமார்கதிர்முன்கண்ட அப்பனிபோலப்போமே.
காயம்
சிந்துவாரத்தினோடு மயிலடிக்குருந்துவாய்
செப்புசாரணைமுருங்கை திகழ்மாவிலங்கைபரி வாலிமண்வேருடன்
சேவற்காரஞ்சிற்றண்டம் இந்துப்புகார்புகார் வெளுத்தற்பிசின்மிளகு இனியவெள்ளுள்ளிவிடையம் இங்குலிகஞ்சதகுப்பை யுலுவாவசம்பினுட
னெளிதாமரத்தைதிற்பல் பந்தமுற்றிடுகடுகு ரோசனையதுஞ்சமன்
பற்றியிவைநிம்பமதனிற் பட்டையையிடித்துப் பிளிந்தவிச்சாற்றினிற்
பரிவாகவிட்டரைத்து புந்தியாக்காய மாயெரித்துண்டிடிற்
புன்மைசெறிசன்னியெல்லாம் புகழ்மேவுசெகராச சேகரன்றரியலர்கள் போல்மடிந்தோடிவிடுமே.
திரிதோஷசன்னிக்கு நையம்
உழையின்மருப்புஅக்குமணி யுறுகர்ப்பூரமிளகுசுக்கு வளையார்குழலார்முலைப்பாலில் மதித்துநையம்மகிழ்ந்துவிடு
தளையும்வெல்லங்கிரித்தோல் சாற்றும்புனரைப்பழமுடனே விளைவாருங்கோந்தாளங்காய் மிக்கமுலைப்பால்விட்டரையே.
52
98
99
100
O
102
103

செகராசசேகர வைத்தியம்
அரைத்தேசீலைதனிற்றடவி யானநிழலிலுலர்த்திவைத்து உரைத்துமருந்தைவென்னிரி லுள்ளேநையம்விடுவீராய் நிரைத்ததிரிதோஷச்சன்னி நேராயகலுமிம்மருந்தை உரைத்துவென்னீர்தனிற்குடிக்க ஒடுஞ்சன்னிவகைதானே. 04
வெண்பா
தும்பை யிலைச்சாற்றிற் றுய திரிகடுகு தம்ப மெனவரைத்துச் சார்ந்துநையம் பம்பிவிடிற் பற்கிட்டு மூர்க்கப் பதினெட் டெனுஞ்சன்னி சொற்கேட் டிரிந்தோடு மே. O5
சன்னிக்குக் கொதியெண்ணெய்
கான்றையவுரிபரிவாலி காட்டிற்காவிளாயெருக்கு ஆன்றவீழிசாறணையு மரனின்வேம்பாடாதோடை சான்றோர்புகழுந்துத்திவட்டு சாற்றுகம்பந்திராய்வில்வம் தோன்றுங்குத்துக்காலினில்வேர் சொல்லரமுறியுந்தொடர்ந்து
கொள்ளே. 106
கொள்ளுஞ்செழுமலர்க்கொன்றையின்வேர் கூறியபுங்கின்வேர்கொண்டு வெள்ளைப்பன்னற்சாறுரியும் வெண்காரம்வெள்ளுள்ளிசுக்கு உள்ளவசம்புகடுக்காயும் உரியஇருசீர்குங்கிலியம் விள்ளிற்கராம்புகச்சோலம் வெளுத்தற்பிசின்திற்பலிகூட்டே. 107
கூட்டுஞ்கழஞ்சுசாதிலிங்கம்கொள்ளு மெண்ணெய்நறுநெய்யிற் போட்டுவடித்துள்ளும்புறமும் பூசிவிடுவீராமாகில் வாட்டும்மந்தசன்னிபித்தம் வருத்துவாதசேடசன்னி கோட்டுமுலையாயகலுமென்று கூறினார்கள்குவலயத்தே. 108
வேறு
பெருமருந்துகான்றைநொச்சிகுதிரைவாலி
பேசுமயிலடிக்குருந்துசன்னிநாயன் அருமருந்துகிலுகிலுப்பையவுரிலாமிச்
சரிதானதுாதுவளையதனின்வேரும் சரியாய்க்கொள்சரக்குள்ளிசதத்தின்குப்பை
சாற்றுதிற்பலிமிளகுசன்னிநாயன் திருமருந்துவசம்புசுக்குஅரத்தைகொள்ளு
சீராகவிஷ்விரண்டுகழஞ்சுவாங்கே. 109
வாங்கியிடித்தரித்தெடுத்துஇரண்டுதுாளும்
வகுத்தநிம்பனண்ணெய்தனிற்கொதிக்கவைத்து தேங்குசிரத்திற்பொருத்தியுள்ளருந்தில்
மிரேறுமந்தசன்னியதும்மயக்கித் தீங்குதருகபாலசன்னிசேடசன்னி
சேர்ந்துவருபிறவீச்சுச்சன்னியெல்லாம் ஏகியகன்றோடுமெனஆயுள்வேத
மியம்பியதுவாடகநூலினிதிற்றேர்ந்தே. 110
53

Page 38
செகராசசேகர வைத்தியம்
வேறு தூதுவளைகிலுகிலுப்பைபொன்னாங்காணி
தூயபெருமருந்துநொச்சிகுதிரைவாலி மீதுவளர்மாவிலங்காடாதோடை
மிக்கமயிலடிக்குருந்துமணித்தக்காளி மாதுவளர்சிற்றமட்டியமுக்கிராய்வேர்
மருவுநத்தைச்சூரியுவாய்குப்பைமேனி தாதுவளர்நன்னாரியுடனின்யூறல்
தனித்திவையொன்றொருபிடிவேர் சமனாய்க்கூட்டே 11
கூட்டுதிற்பலியரத்தைகராம்போடேலங்
கொத்தமல்லிசிற்றரத்தைசன்னிநாயன் ஈட்டுவசம்புடன்வெளுத்தல்கருஞ்சீர்நற்சி
ரிலவங்கங்கடுகுசிறுதேக்குமொன்றாய் நாட்டுசரக்குடனேவேரிடித்ததுாளும்
நல்லமுசிற்றண்டமுடன்நிலத்தினாகம் காட்டுமிவைநிம்பனண்ணெயிட்டுக்காய்ச்சிக்
கதித்தநல்லகொதிபதத்திற்கலந்துபோடே. 12
போட்டெண்ணெய்தனையிறக்கியாற்றிப்பின்னர்
புத்தியுடன்சிரத்துமுள்ளும்பொருத்துவீரேல் நாட்டுசன்னிபதினெட்டும்விறைப்புக்குத்தி
நடுங்கிவருங்கொடுங்கூதல்கோழையிழை ஈட்டுமிளைப்புடனடைப்புமுட்டுத்தொய்வு
மிடரானகுதிரைவலிகபாலக்குத்துங் கோட்டுதயக்கதிரவன்முன்பனியேபோலக்
குலைந்தகலுமெனவேதங்கூறுமன்றே. 3
பதினெட்டுச்சன்னிக்கும் கொதியெண்ணெய்
கோரைமணித்தக்காளிகுதிரைவாலி
குருந்துபெருமருந்துநொச்சிபொன்னாங்காணி சீர்பொருந்துமமிர்தவல்லிதிருமால்தேவி
சிறந்திடுநற்கிலுகிலுப்பைசேவகன்பூ டேர்பொருந்துசங்குபுன்னையுடனின்யூறல்
எய்தியசன்னிகனாயனிவைவேர்பின்னும் தார்பொருந்துஞ்சண்பகப்பூகோட்டமஞ்சள்
தக்கோலமரத்தைநற்சீரந்தானே. 14
தானமரும்வேர்க்கொம்புகடுகுமஞ்சள்
தனிமிளகுகடுரோணிசமனாய்க்கூட்டி ஊனமறுநிம்பவெண்ணெயிற்கொதித்து
உறுதியுடன்சிரத்தினும்வைத்துள்ளேகொள்ளப் பானல்விழிமயிலனையாய்சுரவிகாரம்
பற்றுபதினெண்சுரத்தின்சன்னியெல்லாம் கானமருஞ்செடிதேடியோடிப்பின்னுங்
கதிர்கண்டதிமிரமெனக்கலைந்துபோமே. 5
வேறு
நாறுகரந்தைநன்னாரி நல்லமிளகுபேரீஞ்சு கூறுஞ்சுக்குமிவையைந்துங் கூட்டிஒவ்வொன்றிருகழஞ்சு
54

செகராசசேகர வைத்தியம்
சாறுங்கெழுமுமுலைப்பாலிற் றானேயரைத்துக்கொதித்தருந்த மீறுஞ்சன்னியகலுமென்றே விரித்துப்புகன்றார்மேதினிக்கே. 16
வேறு
மாவிலங்கைதூதுவளைவளருநீலி
மதித்தபிராய்தைவேளைபால்மிடாங்கி தாவிலங்குசாரணையோடெருக்குக்கான்றை
தயங்குகுப்பைமேனியொடுசன்னிநாயன் ஏவிலங்கீகரமுலிநன்முருங்கை
இயங்குள்ளிவசம்புசுக்குக்கடுக்காய்மல்லி காவிலங்குகடுகரத்தைசதத்தின்குப்பை
கருத்துடனொன்றீர்கழஞ்சுகணக்காய்க்கொள்ளே. 117
கொண்டிடுழக்குச்சாறுநிம்பவெண்ணெய்
குறையாதவ்வளவுவிட்டுச்சாறுவற்றக் கண்டபதமாயிறக்கித்துாளைப்போட்டுக்
கருகாமல்வெந்தபின்புபெருத்துவீரால் வெண்டதிர்ந்துதலையின்மேலேறிக்கொண்ட
விதமானசன்னிவகைசுழற்சிதானும் கண்டபலசன்னியொடுவாதபித்தங்
கதித்தசன்னியின்குணங்களகன்றுபோமே. 118
வேறு
நொச்சிசாரணைதுாது வட்டுவாய்பரிவாலி
நொய்யவாதத்தடக்கி நுவலுமீசுரமூலி யவுரியரமுறியுடன்
நுவன்றவாடர்தோடையும் மெச்சுதுளவஞ்சூரி தூதளையுநாயுருவி வெள்வேல்குறிஞ்சியோடு மேவுசெங்கத்தாரி கல்மிரிசுமுடிதும்பை
மிகுகளப்பன்னையுடனே அச்சமற்றிடுமூக் கறைச்சிகுப்பையின்மேனி
யலர்நந்தியாவட்டமும் ஆனகாற்றோட்டியொடு கான்றைசிவன்வேம்பெருக்
கலைகொடிக்கழற்சியொடெலு மிச்சையின்வேரிவைகள் சரிநிறையெடுத்ததனை
விரவுநாற்படிநீரினில் விட்டொர்படியாய்க்காய்ச்சி யிட்டிடுமருந்துவகை
விரைவுடன்தேடுவாயே. 9
தேடிடுங்கொத்தமலி யசமோதமரிதாரஞ்
சேர்ந்திடுமுசிற்றண்டமும் செப்புமரிதகியிந்து மிக்ககடுரோகணி திகழேலம்வாலுவையும் நீடிடுகராம்புகார் புகாவரிசிதிரிகடுகு
நேர்வசம்புள்ளிநிலவேர் நிறையுமுலுவாமஞ்சள் காமுருகியின்கண்டம்
நிறமானவிந்த்ரகோபம்
55

Page 39
செகராசசேகர வைத்தியம்
நாடுகைத்தகரையின் சாற்றினிலரைத்துநிழல்
நன்றாகவேயுலர்த்தி நற்பூகவிரையளவு உண்டையதுசெய்தபின்
நல்லெண்ணெய்நிம்பவெண்ணெ யோடிவையெரித்துண்டு பூசிவந்திடில்வெச்
சடந்திடுஞ்சன்னியுடனே உற்றபதினெண்வகைச் சன்னிவகைதீருமென்
றோதினார்முனிவர்தானே. 2O
சன்னிக்கு இந்திராணித்தயிலம்
நொச்சிதுளசிகவுள்தும்பை நுவன்றநிலிபரிவாலி மெச்சுமாடாதோடைபன்னை வீழியுடனிசுரமூலி கச்சந்திராய்கஞ்சாங்கோரை கருதுமிவைசாறிருநாழி அச்சமறவேம்புடன்வாத மடக்கியிலைச்சாறிவையுரியே. 12
உரியகான்றைகாற்றோட்டி யுற்றவாடாதோடைபன்னை அரியவேம்புவேர்பலங்கொண் டச்சாற்றிட்டங்கிவையரைத்து எரிவேப்பெண்ணெயெள்ணெண்ணெ யேரண்டெண்ணெயிவைமுறையே உரியோரரைக்கொத்துடன்காற்கொத் துணர்ந்துதேடென்றுரைப்பீரே. 122
உரைத்தவெண்ணெய்யுடன்கலந்து ஒக்கக்காய்ச்சிரோகணியும் தரைக்குள்வசம்புபற்படகஞ்சந்தமிருசீர்பெருங்குரும்பை கரைக்குங்காவிதிரிகடுகு காட்டுவிடையஞ்சிறுமூலம் விரைக்கொளரத்தைகோட்டமஞ்சள்
வெளுத்தலத்தித்திற்பல்கொள்ளே. 23
கொள்ளுமேலமிலவங்கம் குப்பைசிறுதேக்குடன்மாஞ்சி துள்ளுமரவின்கண்டமுடன் துய்யகோபம்வேட்டுவன்மண் தெள்ளிச்சேர்த்துவடித்தளண்ணெய் சிரத்திற்பொருத்தவிடுஞ்சன்னி வள்ளைக்குழையாயிந்திராணி மருவுந்தயிலமிதுவாமே. 24
சன்னிக்கு விஜயசுந்தரிதைலம்
குருந்துநொச்சிபெருமருந்துகான்றைசீந்தில்
கோதிலிலாமிச்சிருவேல்பொன்னாங்காணி மருந்தவுரிசீதேவிமுத்தக்காசு
மருவுநன்னார்கிலுகிலுப்பைமணத்தக்காளி திருந்துநத்தைச்சூரிகுமிழ்குதிரைவாலி
சேவகன்யூடுடன்சன்னிநாயன்வேரும் விரும்பிடுசீரகமிளகுகோட்டமேலம்
வெளுத்தல்திற்பல்வசம்புசன்னிவிரையதாமே. 25
விரைதருசுக்கரத்தையுள்ளிகொத்தமல்லி
விளம்பியசெண்பகமொட்டோடத்தித்திற்பல் உரைதருசிற்றரத்தைசதகுப்பைகாயம்
உயர்கோரோசனைகடுகுரோணியோடு வரைதருநல்முசிற்றுமுட்டைநிலத்தினாகம்
வாய்ந்தசரக்குடன்சரிவேர்த்தூளுங்கூட்டி கரைதருநல்லெண்ணெய்நிம்பவெண்ணெய்நேராய்
காய்ச்சியபின்நீரில்வைத்துமருந்தைத்துவே. 26
56

செகராசசேகர வைத்தியம்
தூவியெண்ணெய்தலையில்வைத்துப்பொருத்தநாளும் துயர்செய்பித்தவாதசன்னிசுரத்தின்சன்னி தாவியுடல்மூடுசன்னிமதத்துச்சன்னி
சாற்றுபித்தசன்னிபலபிதற்றுச்சன்னி மேவுயிரலாபசன்னிமந்தசன்னி
விளம்புசிலேட்டுமசன்னிவேகச்சன்னி வாவுகதிரவனின்முன்பனியேபோல
மாறுமெனவுயர்முனிவர்வகுத்திட்டாரே. 27
பலசன்னிக்குச் சசிமந்திரத்தைலம்
நிலநாகமரைநாழி முசிறண்டமரைநாழி
நிதானமாயோர்சட்டியில் பலனாகநன்றாய் வறுத்திடுபதத்தினிற் பார்த்திதனில்நிம்பவெண்ணெய் நலனாகவரைநாழி விட்டெரித்ததனில்விடு
நற்சரக்குஞ்சொல்லுவாம் பெலனானகாயம் வசம்புநற்கெந்தகம்
பேசரியவெள்ளையுள்ளி. 128
வெளுத்தலோடிரதமிவை யொன்றொருகழஞ்சாக
மெத்தெனப்பொடிசெய்திட்டே அழுத்தவப்பொடியதனை யெண்ணெயிற்றுாவியே
அதிகமாகத்துளாவி முழுத்தபொன்னிறமாக வருபந்தன்னிலே
மூடியேபுகையைவிட்டு விழுப்பமுடனுள்ளுங் கொடுத்தேபொருத்திடில்
விட்டிடும்பலசன்னியே. 29
சன்னிக்கு அக்கினிசீவினித்தைலம்
நன்னாரிகிலுகிலுப்பைபொன்னாங்காணி
நல்லமுசிற்றண்டமுடன்நிலவேர்கோரை பொன்னார்சீதேவியிருவேலிசீந்தில்
பொற்புறுசேவகன்பூடுமணித்தக்காளி சொன்னார்சன்னிகள்நாயன்குதிரைவாலி
சோதிநத்தைச்சூரியிலாமிச்சைவேரும் மின்னார்சிற்றரத்தைசுக்குக்கொத்த்மல்லி
மிக்ககோரோசனைசெண்பகப்பூகோட்டம் 130
கோட்டமுறுமிளகுதிற்பலேலநற்சீர்
கோதிலிலவங்கமோடானைத்திற்பல் காட்டுமிச்சரக்குடன்வேர்கழஞ்சுநேராய்க்
காயவிடித்தெடுத்தரித்துமாவாய்த்தெள்ளி வீட்டிலுறுநிம்பவெண்ணெய்திலத்திலெண்ணெய் விட்டுநேர்சரிகாய்ச்சியிறக்கிநீரில் நாட்டமுடன்வைத்ததனில்மருந்தைத்தூவி
நன்குபொருத்தச்சன்னிநடுங்கிப்போமே. 131
57

Page 40
செகராசசேகர வைத்தியம்
சன்னிக்குக் குழித்தைலம்
மாவிலங்குமுருங்கையுவாய்விளாத்திநொச்சி
மயிலடிக்குருந்தெருக்குவாதங்கொல்லி மேவுமிந்தவேர்களுடன்கருவாப்பட்டை
விளங்கஒவ்வொர்பலங்கொண்டுமயிலின்பீலி தாவுமிருபலங்கொண்டுகாஞ்சிரத்தின்
தக்கபழத்திற்குறுணிதானுங்கொண்டு நீவியேயிவைகளையோர்பாண்டமிட்டு
நிம்பமொடுபுங்கெண்ணெய்நேர்ந்துதேடே 132
தேடுமெண்ணெயொன்றரைப்படியாய்விட்டுச்
செப்பமுடன்மேல்மூடிச்சீலைசெய்து நாடுபாண்டத்தடியிற்றமர்களிட்டு
நற்சட்டிசேர்த்தற்குஞ்சீலைசெய்து கூடுகுழித்தைலமதையிறக்கிக்கொண்டு
கூசாமல்மேலெங்கும்பூசுவீரேல் நீடுசெகராசசேகரன்மாற்றார்போல்
நில்லாமற்பலசன்னிநீங்கிப்போமே 133
சன்னிக்கு அடக்கமெழுப்பி நெய்யும் சூடும்
கடுகுடனிலவேர்தானுமோர்சிறங்கை கடுகவேவறுத்துடன்பொடித்து நடுநெல்லிக்கெந்தம்துரிசுடன்மிளகு
நற்பெருங்காயம்வெள்ளுள்ளி முடுகியவெளுத்தல்சுக்குடன்திற்பல்
முருங்கைவித்தணிஞ்சில்வித்துடனே கொடுகியகற்பூரமுஞ்சமநிறைகொள்
கொட்டையுஞ்சரக்குநேர்பொடித்தே. 34
பொடித்தபின்நிம்பவெண்ணெயைக்காய்ச்சிப்
போட்டவெற்றிலைவெடிபதத்தில் பிடித்துடனிறக்கிநீரில்வைத்தெடுத்துப்
பேறுடன்மருந்ததைத்தூவி எடுத்திடுகோழியண்டமீராறு
ஏதமில்லாதவித்துடைத்து தடுத்திடுமஞ்சட்கருவதைவறுத்துத்
தைலமாய்வரும்பதம்வடித்தே. 135
வடித்தநற்றயிலங்கலந்துடன்பொருத்தி
வலிதெனிற்பிடரியுச்சியினில் நடித்திடுபுறந்தாள்முதுகினிற்சுழியில்
நற்புறங்கையினில்விலாவில் பிடித்திடுங்கதிர்போலிரும்பினைக்காய்ச்சிப்
பேணியேயிலக்கம்போற்சுட்டால் அடுத்திடுசன்னிவலியுடனகன்று
அடக்கமுமெழுந்திடுந்திடனே 136
58

செகராசசேகர வைத்தியம்
சன்னிக்கு சுடர்த்தைலம்
அரிதாரமிரதமுடனடர்மனோசிலைகெந்தி
யமர்சாதிலிங்கமுடனே துரிசோடுசேங்கொட்டைதிரிகடுகுகரியசீர்
துத்தமோடுள்ளிமஞ்சள் விரிவாம்வசம்புசமனிடைகொண்டுவேப்பநெய்
விரவியெரிதைலமதனைச் சிரமீதிடிற்சன்னிசெகராசசேகரன்
செறுனரெனவோடிவிடுமே. 137
சன்னியின் சின்ன எண்ணெய்
பன்னலிலைச்சாறொருமூன்றெருக்கமிலைச்சாறு பகருகிலொன்றாந்தேசிக்கனிச்சாறிர்நாழி, நன்னரெண்ணெய்நாழிசரக்கொன்றையுகாய்நொச்சி
நன்னாரிதுதுகளப்பன்னைபங்கம்பாளை சின்னமுத்தமிருவகையின்மட்டிகலிலின்மிரிசு
சீதேவிதோடையெலுமிச்சவுரிசீது சன்னிநாயன்குதிரைவாலிபெருமருந்து
சாறணையின்பூறலிருவேலிலாமிச்சே 38
மிச்சொடுதிராய்சிவனார்வேம்புநத்தைச்சூரி
மேவுகாற்றோட்டிகுருந்தாமணக்குக்குமிழும் அச்சமிலாக்கிரந்திவட்டமுக்கிராய்வேரும்
அதிமதுரம்விளால்வசம்புஅரத்தைசதைகுப்பை பச்சிலைதாளிசபத்ரிமரமஞ்சளேலம்
பகருதிரிகடுகுதிறிபலைவாலினுளுவை கச்சோலமுள்ளியிருசீரம்வெண்காரங்
கார்புகாரொடுவெளுத்தற்பிசினிந்துப்பாமே. 39
இந்துமுகமாதேவெட்பாலையிலவங்க
மினியகொத்தமலியுலுவாவோமம்நாகம்பூ குந்திருக்கமோடெருக்கம்பூச்சன்னிநாயன்
குலவுசன்னசாலைகடுகுடனேசெவ்வியமும் உந்துசிறுமூலமாயாக்காய்சிறுதேக்கு
ஒதரியதேவதாரோசனியுேர்நிறையாய் முந்தவிட்டேவடித்திடுசன்னியெல்லாம்
முடுகாதுபோகுமெணமுனிவருரைசெய்தார். 140
சன்னி வலி முதலானவைகளுக்குத் திரிபுரசுந்தரிதைலம்
கொடிவேலிமாவிலங்குமுருங்கைகான்றை
கோதில்பெருமருந்தவுரிகுதிரைவாலி தடிமேவுசீந்திலுவாயெருக்குநொச்சி
சன்னிநாயன்தோட்டியசுவகெந்தி பட்டிமேவுகல்மிரிசுநரிவெருட்டி
பகருமயிலடிக்குருந்துபிடியொன்றோர்வேர் கடிமேவுசுக்கரத்தையுள்ளியேலங்
காய்க்குமிளகுடன்கோட்டம்வெளுத்தல்நற்சீர் 141
59

Page 41
செகராசசேகர வைத்தியம்
சீரிலவஞ்சன்னிவிரைவசம்புகாயஞ்
சிற்றரத்தைகொத்தமலிதேவதாரம்
பாரில்சதகுப்பைமஞ்சள்செண்பகப்பூ
பகரிலொன்றிருகழஞ்சுபற்பமாக்கி
தேரில்முசிற்றண்டமுடன்நிலவேர்கூட்டித்
தெளிவெண்ணெய்தனிற்கொதித்துள்ளருந்திவார்க்கில்
நேரில்பலசன்னியுடன்பயித்தியகாசம்
நிறைவிறுமவாய்வுவலிநீங்கிப்போமே.
வசம்பெண்ணெய்
பிள்ளைவசம்புடன்வெள்ளையுள்ளிசரிகலந்து
பேதமறவரைத்ததனைத்திரியினிற்பூசி உள்ளபடிதெளிவெண்ணெய்வார்த்தெரித்ததயில
முடன்சிரசிற்பொருத்தியதனொடுமருந்துசெய்யிற்
கள்ளமுறுசன்னிவலிதிமிர்வாதமயக்கங்
கைகண்ைடவசம்பெண்ணெயதுதலைக்குவார்க்க
மெள்ளவருகதிரவன்றன்முன்பனியேபோல
விட்டகலுமெனமுனிவர்விரித்துரைத்தாரே.
சன்னிக்கு ஏனாதி சஞ்சீவினி
தூதுவளைநன்னாரிவட்டொடுகளப்பன்னை
தூயபுனரைப்பழச்சா றோதுநிலவேருடன்கோழியின்காரமு
முற்றதிற்பலிவசம்பும் தீதில்கடுகொடுமிளகுகரியநற்சீரகந்
திடனரைத்துண்டைசெயதே மீதுடனருந்திவரவேசன்னியெல்லாம்
விரைந்தேபறந்தகலுமே.
சன்னிக்கு அடக்கமெழுப்பிக்குளிகை துத்தந்துரிசுகிருமிசெற்றான் துய்யகோட்டம்நேர்வாளம் மெத்துங்காரவகைநாலு மிக்ககாந்தமரிதாரஞ் சுத்தமதியுப்புடன்வெளுத்தல் சொல்லிலவங்கம்பெருங்காயம் ஒத்தகழஞ்சுசம்பீரத் துள்ளபுளியிலரைத்துருட்டே.
உருட்டிக்குன்றிமணியளவா யோரேகுளிகைதானெடுத்து மருட்டும்பித்தசன்னியெனில் மருவுகுப்பைமேனிச்சார் அருட்டுமந்தசன்னியெனி லானசுக்கோடனல்நீரில் தெருட்டுவாதசன்னியெனில் சிந்துவாரஇலைச்சாறே.
சாறேகுதிரைவலிசன்னி தனக்குப்பகர்மாவிலங்கையின்வேர் கூறேசேடசன்னியெனிற் கோவினெய்யிற்கொடுக்கவிடும் விறேசெய்யுஞ்சன்னியெல்லாம் மீளுமெண்ணெய்பண்ணியிடத் தேறிரிதன்பேரடக்கமதை யெழுப்பியென்றுசெப்பினரே.
சன்னிக்குக்குளிகை
நாவிநாயுருவியப்பிரகம் நவில்வெண்காரந்திற்பலியும் தாவுங்கரியசீரகமுந் தக்ககெந்தமரிதாரம்
60
42
43
144
145
146
147

செகராசசேகர வைத்தியம்
பூவிற்கடுகுசூதமுடன் பொருந்துமிஞ்சிச்சாற்றரைத்து
தூவுங்குன்றியதினிடையாய்ச் சொன்னோங்குளிகைதனையுருட்டே.
உருட்டியுலர்த்துங்குளிகையிலொன் றுடினேமுருங்கைவேரவித்துப் பெருத்தமந்தசன்னிக்குப் பேணிக்கொடுக்கப்பெயர்ந்தோடும் தருக்கும்பித்தசன்னிக்குத் தானேதேசிப்பழத்திலிடு பொருத்தவனுபானத்திலிடப் புறமிட்டோடுஞ்சன்னிகளே.
சன்னிக்கு மாத்திரை
துத்தங் காயங்கோட்டந் தூய மிளகுடனே மெத்துங் கடுக்காய் மிகுநிலவேர்சித்தமுடன் குக்குடத் தின்கார மொருகழஞ்சாய்க் கொண்டிடித்து மிக்க வாடாதோடை மேல்.
மேலிற்சா றோக்கவிவை விட்டரைத்தே யுண்டைசெய்து சீல நிழலிற் செறிந்துலர்த்திக்-கோலஞ்சேர் ஆடா தோடைச்சாற்றி லன்றருந்தச் சன்னியெல்லாம் கூடா தகலுமெனக் கொள்.
சன்னிச்சோதனை
அக்குமணி தேனி லரைத்துநாவிற்றடவி லிக்கருமை யாகி லிதுசன்னி-மிக்க வெளுப்பாகிற் சன்னியல்ல மேகமது போலுங் குழற்பாவாய் நீவிளங்கிக் கொள்.
O - O
மூலவியாதியின் குணமும் மருந்தும்
ஆலமுண்டருள்கண்டனாருரைசெய்தவாயுள்மாமறையில் மூலரோகங்களும்குணங்களுங்குறிகளும்மொழியில் சாலவுள்ளினும்புறத்துமுண்டாம்விதஞ்சாற்றில் மேலுமுள்ளிலோர்நாலும்பின்வெளியினிலைந்தே.
1 முளை, 2 கறணி, 3 ஆழி, 4 கண்டி, 5 குதம்.
ஆன்றமூலமைந்தாம்பிறத்ததன்பெயரறியில் நான்றதோர்முளைகறணியுமாளிநற்கண்டி
தோன்றிடுங்குதமுள்ளைந்தாம்வெளியினிற்றோன்றா தேன்றரோகங்கள்நாலின்பேரியம்புவோமினியே.
1 குதைசிரேட்டம், 2 கண்டம், 3 உதிரமூலம், 4 இழிசலம்,
அணங்கணனாய்குதைசிரேட்டமொன்றேகண்டமொன்று துணங்குநீளுதிரஞ்சொரிமூலமாமொன்று தணந்திடாதிழிசலமொன்றுமாகநால்சாற்றுங் குணங்கள்சாத்தியமசாத்தியமாமதுகுறியே.
அறிந்திடில்முதல்கண்டமுமிழிசலமிரண்டாம் கறண்கொளசிரேட்டியுமிரத்தம்வீழ்மூலமுங்கரையும்
61
48
149
50
151
152

Page 42
செகராசசேகர வைத்தியம்
புறந்தனிலைந்துமூலத்தில்பெசியகுதமும் துறந்துசீழ்விழுமாழியுந்துரிசறாதன்றே.
கறண்கொள்மூலமும்முளையொடுகண்டியாமூன்றும் அறிந்திடிற்குணந்தீர்ந்திடுஞ்சாத்திகமாகும் S. சிறந்துதோன்றிடுகுணங்களுஞ்சிகிச்சைசெய்விதமும் பிறிந்திடாதறிந்துணர்ந்துகொள்பேசுவோம்விதியே.
மேவுமூலமொன்பானுளும்வெளியினில்விளம்பும் பாவையேபிறமூலமோரைந்தையும்பகரில் தாவுமாளியுங்குதமுஞ்சாத்திகமதுதவிரக் கூவுநன்முளைகறண்டிதீர்ந்திடுங்குறியே.
வேறு
மூலமேமுதலதாகும் ரோகங்கள்முழுதுக்கெல்லாம் மூலநோய்முடிவுங்காணான் ரோகத்தின்முதலுங்காணான் மூலநோய்க்கேதுங்க்ாணான் மொழிந்திடிற்றந்தையால் மூலமேமூலரோகம் முன்னுள்ளோரெவர்க்குமrமே.
மாறுகொள்நீரினாலுமிரத்தத்தில்வந்துசேரும் வீறுளகிருமியாலும் மிகுந்தசைசசியலினாலும் மாறிடாச்சுரத்தினாலு மருந்திடுமன்னத்தாலு மூறிடுமூலந்தன்னில் மூலநோயுருத்ததாமே.
முந்தியபிறமூலங்க ளைந்தினில்முளைசேர்மூலம் பைந்தொடிகறணிகண்டி பகருஞ்சாத்திககுணங்கள் சந்துகால்பொருத்துநோவாய்த் தடித்திடும்பவனந்தன்னில் முந்தியமுளையாமூல மின்னமுமுரைக்கக்கேளே.
மூலரோகத்திற்பிரிந்த 21 மூலவகை 1. வாதமூலம்
வாதத்தில்மூலமாகில் வருத்திடுங்குணத்தைக்கேளாய் தாதற்றுஇடுப்புக்கைகால் சந்துதோள்பொருத்துநோவாம் பேதித்துமலம்வரண்டு பிதிர்விடுமிரத்தமேன்மேல் வாதித்தவுதிரம்விம்மி மந்தமுண்டாகுங்காணே
2 பித்தமூலம்
பித்தத்தின்மூலமாகிற் பெருக்கவேகடுத்துநோவாம் ஒத்ததோர்மேனிதானு முலர்ந்துமஞ்சணித்துக்காட்டும் மெத்தவேவெதும்புமாக மயானவாய்விரிந்துமேன்மேல் வற்றிடுந்தாதுதர்னு மக்குணமறிந்துகொள்ளே.
3 சேட்டுமமூலம்
சேற்பனமூலமாகிற் செய்குறியதனைக்கேளாய் வேற்றுடல்பட்டுத்தேகம் வற்றியேவெளுத்துக்காட்டும் தோற்றியஇருமல்வாந்தி துரப்புடனிளைப்புமுண்டாம் சாற்றியமூலத்தூடே சியல்விழுங்குணங்கடானே
62
O

செகராசசேகர வைத்தியம்
வேறு 4 வாதபித்தமூலம்
வாதபித்தமூலமது செய்குணத்தைமானேகேள் ஊதைமிகுந்தேபொருமலுமா யுள்ளங்கால்கையெரிவாகும் ஒதுமசனஞ்செரியாம லுவாந்தியுண்டாமல்முலருந் தாதுவற்றிமுலத்துட் டணல்போலெரியுமக்குணமே,
5 பித்தவாதமூலம்
பித்தவாதமூலமது செய்யுங்குணத்தைப்பேசக்கேள் சுத்தமாய்நீர்மஞ்சலதாம் சுரமும்வாய்வுப்பொருமலுமாய்க் குத்துமுடலெண்சாண்பொருத்துங் குறுக்குமுதுகுந்தண்டுளையும் பற்றுஞ்சுரமும்மலம்வரஞம் இந்தக்குணங்கள்பார்த்தறியே.
6 பித்தசேட்டுமமூலம்
பித்தசேட்மூலமது பேசக்கேளாய்பெய்வளையே வற்றுஞ்சரீரமிருமலுமாய் வயிறுவலிக்கும்நெஞ்செரிக்கும் துற்றுங்கரணாய்மூலத்துட் துரப்பும்வாந்திவேர்வையுமாம் நித்தம்சியல்ரத்தம்வீழு மந்தக்குணத்தைநீயறியே.
7 சேடபித்தமூலம்
சேற்பபித்தமூலமது செய்யுங்குணத்தைச்செப்பக்கேள் தோற்றுங்குதத்தின்புணைவழி யேசியலும்நீருந்தொடர்ந்தோடும் மாற்றமாகஇளைப்பிருமல்- கதித்துத்தாகம்மலம்வரஞம் ஆர்க்கும்நாசம்வருத்துமது இந்தக்குணத்தையறிந்துகொள்ளே.
8. சேடவாதமூலம்
சொல்லுஞ்சேடவாதமது தொந்தித்துரக்குமூலமது புல்லுமூலததுள்மலமும் உலர்ந்துபொருமும்புகைபுகையும் சில்லெனறடைக்குமிருகாதுந் தேகம்வெளுத்துஇருமலுமாம் அல்லையணையகுழலாளே இந்தக்குணங்களாயந்தறியே.
வேறு 9 சேட்டுமசல்மூலம்
அறிந்திடுஞ்சிலேட்டுமத்தி லருஞ்சலமூலமானால் செறிந்திடுமலமுஞ்சிக்கிச் சியலுடனுதிரம்வீழும் பிறிந்திடக்குத்திநோவாம் விம்மிடும்பிறத்தின்சுற்றும் அறிந்திடுமூலந்தானுஞ் சாதிகமென்னலாமே.
10 உள்மூலம் மலத்தையிறுக்கிமந்தித்து வரண்டேயிரத்தம்நிலத்தில்விழும் உலர்த்திவருவதுண்மையிது வுடேவயிறுவலித்திருக்கும். தலத்திற்காணாதுள்மூலம் தசையாய்முளைக்குமபாணத்தில்
பெல்த்தைக்குறைக்கும்வியாகியெனப் பேசியிருப்பார்பெரியோரே.
11 உலர்த்துமூலவாய்வு சுரத்தினாற்காய்ந்துநொந்து அபானவாய்சுருங்கிநாளும் இரத்தமேயெடுத்துக்கைகா லிடுப்புள்ைந்துறுப்புநோவாய்
63
3
14
15
16
17
8
19

Page 43
செகராசசேகர வைத்தியம்
உரத்துறுபெலமுங்குன்றி பூதையுண்டாய்மலத்தை வருத்தமாயுலர்த்துமூல வாயுவின்குணமதாமே,
வெண்பா
வற்றி மலந்தீயும் மந்திக்கும் மேல்வெளுக்கும் சற்று மிரைச்சல் தணியாது - முற்றுமது மூலமாம் வாயுவென முன்னோ ருரைத்தபடி சீலமாயக் காண்பாய் தெளிந்து.
12 அதிசாரகரமூலம்
அன்ன மறுக்கும் அடிவயிறு நொந்துழையும் துன்னு மலமுலருஞ் சோபமாம் - மின்னே குருதிவிழு மந்தங் கொளுமே யதிசார சுரமூல மென்றே சொலு.
13 தோஷதொந்தமூலம்
விருத்தம்
அங்கமுழுதும்பரக்குங்கைகாலோயும்
அதனிடையேவிருவிருத்துக்காந்திக்குத்தும் பங்கமுறவேர்வையுண்டாம்உதரம்விம்மூம் பகரக்கேள்தாகமிகுங்கண்துங்காது சங்கையறக்குருதிவிழுமூலத்தோடே
தழலெனவேகடுத்தெரிந்துமலமுஞ்சிக்கும் துங்கமுறுதோஷதொந்தமூலமென்றே
தொல்லுலகில்முன்னோர்முன்சொன்னதாமே.
உள்மூலம்பிறமூலமிரண்டுமொன்றாந்
தோற்றியதோர்குணமதனையுரைக்கக்கேளாய் உள்மூலமல்லாமற்பிறத்தேயில்லை
பிறமைவந்துறுமதனையோராய்நீயும் உள்மூலங்குண்டலிக்குமுள்ளேயாகும்
ஒதுமதின்கிழங்கதுவேமூலமாகும் உள்மூலமாயொன்றிப்பிறத்திலைந்தே
ஒதுமுளைமூலகுணமுரைக்கக்கேளே.
14 வாதஇரத்தமூலம்
புல்லுமபானத்தூடுகுதத்தின்மீதே
புனைவழியேகவராகநாலைந்தாறாய் கல்லுமிரத்தம்விழுங்கறைநீர்பாயுங்
கண்டிதமாய்மலஞ்சிக்கியுதரம்விம்மும் நல்லியல்பாய்வாழ்தாதுநாசமாகும்
நாவரஞம்வெளுப்புண்டாங்கிறுகிறென்னும் சொல்லிலிதுவாதரத்தமூலமாகுந்
தோன்றிலிதுசாத்திகமாமருந்துசெய்யே.
64
20
2
22
23
24
25

செகராசசேகர வைத்தியம்
15 வாதமூலம்
சொல்லுமானப்பிறத்தின்சுற்றின்பாதி
தோன்றியதுசுரிமுகத்தின்வாயேபோன்று கல்லெனவேகரணாகியிரத்தங்காலுங்
கடுத்துழையுங்கைகால்களோயந்துகாட்டும் மல்லுயருங்கொப்புளத்தின்குழநோவாய்
மலஞ்சிக்கியடிவயிறுகணப்புமாகும் வல்லபமோதிருமிதுவாதமூலம்
மாறுமதுசாத்திகமாம்மண்ணுளோர்க்கே. 26
16 வாதசேற்பனமூலம்
பொருந்தியமூலம்பிறத்திற்கண்டித்தோங்கிப்
புடைத்திடுமேன்மேலுமதுபூணேபோல் இருந்ததனாலிரத்தம்விழுங்கறைநீர்ப்பாயும்
இருகாலுங்கடுத்துளையுமிடுப்புநோவாம் அருந்துமசனஞ்செரியாதுதைவிம்மி
அடிவயிறுவலித்துமலஞ்சிக்கிவீழும் திருந்துகுணம்வாதசேற்பனமாமூலம்
தீருமிதுசீக்கரத்தில்திண்ணந்தானே. 27
17 பித்தவாததொந்தமூலம்
மருவுமபாணப்புரத்தில்மரைப்பூப்போல
மடிந்தெழுந்துவட்டமாய்மலம்வரண்டு பெருகியசீசலம்வழியுமுதிரங்காலும்
பேசுதரம்விம்மிமிகவலியேயுண்டாம் பருகுமசனஞ்செரியாமந்தமான
பதார்த்தமதுவுஞ்சொரியாச்சோபம்பற்றும் அரிவையரேபித்தமதில்வாதந்தொந்த
மானகுணமாய்மொழிசாத்திகமதாமே. 28
18 பித்தசிலேற்பனதொந்தமூலம்
பொன்னனையீர்அபானத்தின்பிறத்தேதள்ளி
புடைபுடைத்துப்பிடிகந்தம்போலநான்று துன்னுதிரள்வடிவாகிக்கழிச்சலுண்டாய்
துரப்பிளைப்புமேல்மூச்சோடிருமலுண்டாய் பின்னுமதுசீயுதிரம்வழிந்துவீழும்
பித்தசேற்பனதொந்தமூலமாகும் முன்னவர்களுரைத்தபெயர்குகமாமூல
மோதிலதுவசாத்தியமாமுணர்ந்துகொள்ளே. 29
இயம்பியமூலத்தினிற்குதஞ்சிரேட்டி
யென்னுமிருமூலகுணமியம்பக்கேளாய்
தயங்கியதோர்வாயுவதுதங்கிச்சிக்கித்
தறுகுமலங்கடுத்துழையுந்தாதுநாசம்
நயம்பெறுசீழிரத்தம்வெளியிற்காணாது
நாவரஞஞ்சோபமதிசாரமாகும்
65

Page 44
செகராசசேகர வைத்தியம்
வயங்குவேல்விழியாளேபித்தசேற்ப
மானதொந்தமூலமசாத்திகமதாமே.
19 கண்டமூலம்
அரம்பையதின்முகைபோலவுள்ளேநின்று
அதன்முளைசற்றேதோன்றிக்கணப்புமாகும் நெருங்குமசனஞ்செரியாமந்தமாகி
நெஞ்செரித்துப்புளித்தேப்பாய்க்கழிச்சலாகும் உரம்பெறவேயிருமலுடனிளைப்புமாகும்
ஒதுபெயரேகண்டமூலமென்றே நிரம்பவுணர்ந்தாருரைத்தார்பித்தமூலம்
நிகத்திலதுஅசாத்திகமாமெனநிகழ்த்தே.
20 இரத்தமூலம்
பொங்கியமூலத்துள்ளேபொரிந்துகாந்திப்
புடைபுடைத்துப்பொருமலுற்றுக்குருதிகாலும் தங்குமலமூதைவிம்முமிடுப்புநோவாஞ்
சந்துகாலுழைந்துவாழ்தாதுநாசம் அங்கமெங்குங்கணப்புண்டாய்வாதம்பற்று
மாமிரத்தமூலமதுசேற்பவாதம் சங்கையுறுசாத்திகமாமருந்துசெய்யத்
தக்கபெரியோருரைத்ததகவிதாமே.
21 சேற்பமூலம்
முற்றுமபானத்துள்ளேமுளைபோலுந்தி
முளைத்துவழும்பெனக்கொடிபோற்சியலும்வீழ்ந்து வற்றியிடுந்தேகமதுவரண்டுநாளும்
மந்தமேபற்றிநிற்குந்தாதுநாசம் துற்றுமலஞ்சிக்கியடிவயிறுமிஞ்சித்
தோன்றுமிரத்தமுஞ்சற்றேதுள்ளியாக சற்றுமிதுதீராதுசேற்பமூலம்
தானுமிதுஅசாத்தியமாம்தகைமையாமே.
மருந்துவகை தாணிச்சாரணைமரற்கிழங்கு சதுரப்பிரண்டையதின்கிழங்கு நாணிப்புளித்தபுளிநடலை நன்றாய்முளைத்தகொடிவேலி பாணிகொண்டுபொடிசெய்து பழமோருடனேபருகிடுகில் ஆணிகொண்டமூலமெல்லாம் அப்போசாந்தமாய்விடுமே. காட்டிற்சேனைபதினாறு கடியவேலியதிற்பாதி நாட்டிற்சுக்குமஷ்வளவு நல்லகனகனதிற்பாதி ஆட்டிப்பிறித்தசர்க்கரையி லரைத்துக்குளைத்துவிழுங்கிடுகில் மூட்டிலெழுந்தமுலமெல்லாம் முறையிட்டோடுஞ்சென்னோமே.
(წი)III]]
காரெள்ளுச்சுக்குக் கடுகுதிற்பலி நேரொக்கக்கொண்டு நிதந்தேனிலுண்ணிடில்
66
30
31
32
33
34
35

செகராசசேகர வைத்தியம்
ஊரொக்கக்கெடுத் துண்டவன்சுற்றம்போல வேரொக்கக்கெடு மூலவியாதியே
மூலத்துக்கு வச்சிரவல்லிச்சூரணம் வேறு
பிரண்டைசாரணைபுளிநடலை பேசுங்கறணைபுணக்கறணை திருந்தும்வேருமாலிவையிற் சேருமூலங்கொடிவேலி முருந்துநகையிர்கடுகுதிற்பல் மூன்றுபலைவெள்ளுள்ளிமஞ்சள் பொருந்துமரிசிவகையாறும் பொருவுங்காந்தஞ்சிறுமூலம்
ஓமம்வசம்புசீரியர்க ளுடனேவிளங்கமுறுமதுரந் தாமஞ்சேருங்குழலாரே தகரங்கோட்டஞ்சண்பகப்பூ ஆமமறுக்குமுரோசனையு மரியசியதைகச்சோலம் நாமுன்புகன்றஅடைவாக நறைகொளரிசிவகைதானே.
தானேகடுகுபெருங்குரும்பை சார்பேரீஞ்சுமுந்திரிகை ஊனேயுறுகோர்சினைபூர முரியமாஞ்சிலசதகுப்பை கானேயுற்றகண்டிலவெண்ணெய் கடகஞ்சிங்கியதிவிடையம் தேனேயறுகுசிவவேம்பு திற்பலிமூலமிவைசமனே.
நேராயடைவேயிடிபொடித்து நேரேசீனியதிற்றுாவி காரேயனையகுழல்மடவீர் கருதுந்தேன்நெய்இஞ்சியுறு நீரேயிவையில்நாற்பதுநாள் நெரமிரண்டுமருந்திடுகில் சீராய்புளிப்புஉப்பிவைகள் சேரநீக்கிக்கொள்வதுவே.
வேறுள்மூலம்பிறமூலம் மிகுந்தவிரைச்சலதிசாரம் ஊறுமிரத்தஞ்சியலொடுக்க ளுண்டாலறாதபுளித்தேப்பம் மீறுங்கடுப்புவயிற்றுழைவு மிகுக்கும்வாய்வுப்பொருமலிவை மாறும்படியேயாராய்ந்து மலையின்முனிவன்வழுத்தியதே.
வேறு
நன்னிலத்தில்வச்ரவல்லிகறணைசேனை
நாடுமரற்புளிநடலைவெருகுசேம்பு துன்னுநிலவாகைவேர்அறுகுமூலம்
சொல்லுமொன்றுபலம்பத்துமுலர்த்தித்துாள்செய்
தின்னுங்கேள்திரிகடுகுதிறிபலைவெள்ளுள்ளி சீரகம்வசம்பரத்தையேலமோமம்
மன்னுசதகுப்பையொடுகுக்கில்கோட்டம்
வாய்விளங்கமியங்குவெந்தயமதாமே.
ஆமேநற்காரமைந்துஉப்புமைந்து
அரியபத்திரிமூன்றுஅரிசியாறு பூமேவுசிவதைகடுரோணிமாஞ்சில்
புகல்மதுரம்(தேவ)தாரமொடுகண்டில்வெண்ணெய்
நாமேசொல்செங்காந்தள்சாதியைந்து
நாடுமுக்கழஞ்சதாய்க்கொள்ளொவ்வொன்று
தாமேநீபொடியாக்கிச்சீனிதானும்
சரிகூட்டிமேல்மருந்துசாற்றக்கேளே.
67
36
37
38
39
40
4.
42
43

Page 45
செகராசசேகர வைத்தியம்
கேளாய்நீசாம்பல்வாழைக்கனிபேரீஞ்சு
சிறந்தமுந்திரிமாதுளங்கனியின்சாறும் வாழாரும்விழியாரேஒன்றாய்க்கூட்டி
மருவிரண்டுநேரம்மண்டலமேகொள்ள தூளாகுமூலமொன்பானோயுமன்றிச்
சொல்லியவாய்வுத்திரட்சிகுன்மஞ்சூலை கோளாருமுதிரநோய்கவிகைகெண்டை
குடகிரிவாய்வாதியனகுலைந்துபோமே. 44
மூலத்துக்கு வச்சிரவல்லி லேகியம்
வச்சிரவல்லிச்சாறுவெருகஞ்சாறு
மரற்சாறுவெள்ளறுகுசேம்பின்சாறு நெச்சகொடுதலைச்சாறுமேனிச்சாறு
நிறைந்தகையான்சராணையில்நிகழ்ந்தசாறு மிச்சமுறாதோர்சமனாய்நாழிகூட்டி
மெல்லியலேயிதன்வேர்கள்விரைந்தெட்டொன்றாய் அச்சமறவிட்டழவிமேலுங்கற்க
மதிமதுரமேலமஞ்சலரத்தையாமே. 45
ஆமேமுற்கயாளத்துக்குரைத்தகற்க
மதனிலொன்றும்வழுவாமலடைவாய்க்கூட்டி மாமோகமுடனிடித்துப்பொடியேசெய்து
வற்றவெரிசுவறியதுபதமேயானால் பூமேவுமதுாகநெய்யுமிஞ்சிச்சாறும்
பொருவுநறுநெய்யிவைகள்பொருந்தவிட்டு காமேவுகுழலாய்மண்டலமேயுண்ணக்
கருதரியமூலமொன்பான்கரைந்துபோமே. 46
மூலத்துக்கு வச்சிரவல்லி வடகம்
மூலமுறுபஞ்சவற்கமுலந்தானும்
முன்னுரைத்தகற்கமதினுடனேகூட்டி சாலவேபிரண்டையின்சாறதனிற்றுவித்
தறுகாமலேவடகம்வில்லைசெய்து மேலுமொருமண்டலங்கொள்புளியுப்பன்றி
மேவரியமூலமொன்பான்நாசமாகும் காலனையவேலவிழியாய்வாயுக்குன்மம்
கனத்தெழுந்தவாயுவெல்லாங்கடுகப்போமே 47
மூலத்துக்கு நந்தாதிகிருதம்
வேறு நத்தைசிப்பியூமசியும் நவி லும்பன்றி வெள்ளாடு இத்தின்தசைகளவித்தநீ ரிதிலேநறு நெய்யிரண்டுபடி முத்தக்காசுநன்னாரி முன்னே கூறுமிலாமிச்சு கொத்தான்கொழிஞ்சிகு றுந்தோட்டி குமரிவேருஞ்சீதேவி 48
சேரச்சமன்கொளெட்டொன்றாய்ச் சேர்க்குங்கற்கந்திரிகடுகு ஆருங்கோட்டமதிமதுர மரியசாதியைந்துடனே
68

செகராசசேகர வைத்தியம்
நாறும்பச்சையதிவிடையம் நாகம்யூசெண்பகப்பூவும் வேர்முப்பத்ரிவிளங்கமுடன் மேலும்மருந்துவிளம்புவன்கேள்.
விளங்குமுந்திரி பேரீந்து விடையமோமங்கற்பூரம் முழங்கும்வினுஞ்சரிகூட்டி முன்பேவடித்துமண்டலங்கொள் கழங்கமறுக்குமூலமொன்பான் கடியகிறானியதிசாரந் துளங்குமிதுவேநந்தாதி கிருதமென்றேசொல்லுகவே
மூலவியாதிக்குக் கருங்கோழிப்பற்பம்
வேறு
கரும்பெட்டைகோழியொன்று தனைப்பிடித்துக்
காலுரோமங்கழிவுகளைந்துபோக்கி திருந்தவேமுன்புரைத்தகிழங்கின்வற்கந்
திரிகடுகுசாதியைந்துசிவதைரோணி பொருந்துமிருசீர்விடையம்ஓமங்காந்தம்
பொரிகாரஞ்சவற்காரம்வெள்ளையுள்ளி கருங்கடுவெந்தயம்விளங்கம்மதுரம்வெட்பால்
காயமுடன்நவசாரங்கழஞ்சுமூன்றே
பொருந்தவேசரக்கிடித்துத் துாளதெல்லாம் போடாமற்கோழியதின்வயிற்றுளிட்டு திருந்தியகாணச்சாறுமுவரிநிரும்
செறியவிட்டுச்சீலையினால்வேடுகட்டி மருங்குறவேமருந்தைவைத்துமேலுமூடி
வற்றவெரியுதறியந்தமருந்தைவாங்கி அருந்திடுவைமண்டலமும்புளியுப்பன்றி
அருங்கழிச்சல்மூலமொன்பானகன்றுபோமே
மூலத்துக்குக் காரம்
கெவுரியுடன் துரிசுதுத்தம்சினக்தாரம்
கிளர்சங்குமுடி தாளஞ்சுண்ணாம்புக்கல் நவையறுசீர்சாரமைந்துகாரந்தானும்
நாட்டிலோருகழஞ்சுகொண்டுஎருக்கம்பாலால் இவையரைத்துவட்டாகவோட்டில்வைத்தே
எரியிட்டு நுணுக்கியதில்வெண்ணெய்கூட்டி குவையுறர முளைமூலமதனின்மீதே
குறித்துவைப்பைபணத்தளவுகூறக்கேளே
வெள்ளெருக்கநாரதனாற்சறடேயாக்கி
விளம்புமந்தமருந்தையதன்மேலேதிற்றி உள்ளகுதமளவுகண்டுமேலேசுற்றி
உறுசரடுமூன்றுநாட்பகிர்ந்துகட்டி நள்ளனையதயிர்சோறுமெழுநாட்கட்டி
நாலுமுளையதுவிழுந்துநாசமானால் கள்ளவிழுங்குழலாளேநறுநெய்விட்டுக்
கைவிரலாற்சுற்றிடுவைகணப்புப்போமே
69
49
50
51
52
53
54

Page 46
செகராசசேகர வைத்தியம்
மூலத்துக்கு அயவெற்றியாதிசூரணம்
சிவதைகடுரோணிதிரிகடு கோடோமம்
சீரிருவாயுப்பைந்துகாரமைந்து கவனமுறுகடுகுவாய்விளங்கத்தோடு
காயமதிவிடையம்வசம்பரத்தைகாந்தம் நவையற்றதிறிபலையுஞ்சரக்கொவ்வொன்று
நாடியதுமுக்கழஞ்சுநயந்துகூட்டி இவையிடித்துப்பொடிசெய்துதேனிற்கொள்ள
இயம்பியிடுமூலமொன்பானேகுங்காணே.
தண்ணிர்மீட்டான்கிழங்குசீந்திற்றண்டு
தாமரைமூலங்காணிதாழைவீழ்து மண்ணாரும்வல்லாரைகையான்கோரை
மானிலத்திற்சிற்றமட்டியிருவேலமிச்சு தண்ணாரும்நன்னாரிகீழ்காய்நெல்லி
சாறொன்றுநாழிவிடுஎண்ணெய்நாழி கண்ணாருமாவின்பாலிளநீரோடு
கலந்திடுவைநெல்லியுடைகனியின்சாறே.
சாற்றக்கேள்கற்கவகைசாதியைந்து
தகரங்குங்குமப்பூவுஞ்சடாமாஞ்சோடு போற்றுமதிமதுரமொடுதேவதாரம்
புனுகுசட்டமநெரியரிசிசினையும்பூவும் ஏற்றரியஏலமிலவங்கங்குப்பை
எழிற்கிளியூறற்ப்ட்டைகழஞ்சிரண்டாய் மாற்றமுறாதோர்சமனாய்நிறுத்துக்கூட்டி
வருந்தியிடிபொடிகரைத்துவற்றக்காய்ச்சே,
காய்ச்சியதுமெழுகுபதங்கண்டவாறே
கடுகவடிமுழுகிடுவைகடியமூலம் தீச்சொறிவுபிறமேகஞ்சருமரோகம்
தீராதஅஸ்திசுரம்வரட்சிதீரும் காய்ச்சலுறுகுளிரீளைநாசமும்
கண்ணோவுநாசிரத்தங்கபாலவாய்வு ஒச்சமுடன்தீருமெனமுன்னோர்கூறும்
உண்மையிதுஆயுள்மறையுரையாமன்றே.
மூலத்துக்கு வெட்டும்பெருமாள்சூரணம் வேறு
மாதுளைகொவ்வையத்தி வளருமாவரையேவில்வம்
தூதுளைபருத்தியீதிற் தோற்றியபிஞ்சுதரனும் போதவேயுலர்த்திநன்றாய் பொடிசெய்தபொடியினோடே ஒதுசீரேலமாஞ்சில் உறுமிலவங்கமாமே.
இலங்குரோசனைகற்பூரம் இனியதோர்முத்தக்காசு நலம்பெறுமதுரந்தாரம் நற்கல்நார்பச்சைஏலம்
70
55
56
57
58
59

செகராசசேகர வைத்தியம்
அலங்கலார்சாதியைந்து யபின்கஞ்சாடவிக்கச்சோலம்
பலம்பெறச்சமனாய்க்கொண்டு யிடிகொடுபகர்தேனுண்ணே.
உண்ணவேமூலமொன்பா னுள்ளுளைகடுப்பினோடு திண்ணமாயிரத்தம்வீழ்தல் சிய்ல்விழுகின்ற்நோயும் மண்ணுளோரெவர்க்கும்மூலம் வருத்திடுங்கடுப்பும்மாறும் அண்ணலாருரைத்தவுண்மை யாயுறுவேதந்தானே
ஆவினெய் மூலகத்தி
நாகமாமூனியுரைத்த நமக்காரிமூன்றினாலே தோகையேகுதத்தின்மேலும் சுழித்திடுமுந்திகிழும் பாகமாய்விரையிரண்டும் பிடரிருபதத்தின்மேலும் மோகியாதறிவுசெய்ய முன்னவர்மொழிந்ததாமே
நெற்றியல்மாலைகாலை நீர்மலவாதைபோக்கும் சுத்தமாய்ப்பின்னிடக்கைத் தற்சனிவிரலேசொல்லில் உற்றதோராவின்நெய்யை யூட்டியேமுலத்துள்ளே குற்றமற்றிடமாய்ச்சுற்றில் மூலநோய்குலைந்துபோமே.
திரண்டதோர்மலமும்போகுஞ் சிக்கியவாய்வுபோகும் அருண்டதோர்மந்தம்போகும் ஆறிடுமருந்துமேற்கும் சுருண்டதோர்வாய்வுதானுஞ் சொல்லிடுகுன்மம்போகும் மருண்டிடாதிதனைச்செய்ய மலைமுனிவகுத்தவாறே.
மூலத்துக்குப் புகைவிட
ஈட்டுமிலாமிச்சம்வேர் புழுங்கற்றவிட்டோடெலிப்புழுக்கை மீட்டுமுரோமமீரவுள்ளி விறகுபருத்தினரிமீது காட்டில்மூலக்குத்துள்ளே கனல்போலெரிவுகடுப்புளைவு மீட்டுமொருநாள்வாராது விரகாயிதனைச்செய்வீரே.
சந்தனம்பச்சைஏலந் தக்கவெள்ளாட்டின்கண்டம் விந்தைசேர்முத்தக்காசு விளாம்பிசின்வெள்வேல்வெட்பால் இந்தனம்பருத்திக்கம்பா லெரியிடும்பொடியேதுவி முந்தியேபுகையைக்காட்டக் குருதியாமூலம்போமே.
குருதிவிரணத்துக்க ஆவிகாட்ட
தலைமயிர்மஞ்ஞைதூவல் தக்கதோர்மேதிக்கோடு சொலியகம்பிளியின்கோழித் தூவலுங்காயஞ்சுக்கு நலிவுறாவசம்புநிம்பம் விதைதனைப்புகையேநாட்டி மெலிவுறாததனைக்காட்ட மூலநோய்விரணம்போமே.
பிரண்டைச்சாறதனில்மேதிச் சாணியைப்பிளிந்துவிட்டு உரம்பெறனரித்துநன்றாய் வளைந்துவையுள்மூலத்துள் புரண்டிடுவாய்வுதானும் போகிடாமலமும்போகும் மருண்டிடாதிதனைச்செய்ய மூலத்துள்மலமும்போமே.
71
60
61
62
63
64
65
66
67
68

Page 47
செகராசசேகர வைத்தியம்
வேறு
கோசலத்திற்புளியிலையைக்கலந்துஒன்றாய்க்
கொதிக்கவைத்துஆவியதுகுதத்தின்மீதே மாசறவேகாட்டிலிவைவாதமூலம்
மருவியிடுவாய்வுக்கள்நாசமாகும் பேசுமிளநீரில்வல்லாரையிட்டு
பின்விரவியவித்தாவிதகையக்காட்டில் வீசமுடன்பித்தநோய்மூலம்போக்கும்
அதில்விழுங்குருதிபோம்விளம்புங்காலே.
குலவியகீழ்காய்நெல்லிகாடிவிட்டுக்
கொதிக்கவெந்தாவியதுகுதத்திற்காட்ட மெலிவுறுசேற்பனரோகமூலம்போகும்
மேவியதோருள்மூலம்விரைந்தேபோம் சலமதில்முட்டைப்பாசிகாடிநீரில்
தானவித்துஆவியினைத்தானேகாட்ட பெலமதுறுதொந்தநோய்மூலமெல்லாந்
தீருமெனப்பெரியோர்முன்பேசினாரே.
மூலத்துக்கு லேகியம் வெண்பா ஒதுங் கவிழ்தும்பை யோடரைத்து அவ்வளவு சாதிக் குழம்பதனிற் சாதித்துப் - போதவே ஆனதனி லேகியமு மாக்கியருந் தக்குருதி சோனைவிழு மாரியும்போஞ் சோல்.
விருத்தம் பிரண்டையுப்புப் பெருகவரைத்துநீ ரிரண்டுமூன்றுநா ளிப்படித்தின்றிடில் சுருணடபூங்குழ லாயதுனனுமூலங்கள வெருண்டுபோமென வேதம்விதித்ததே.
பத்தியம்
காடையுடும்புகவுதாரி கருதுங்கோழியூர்ப்பன்றி பேடைநடையாய்வெள்ளாடும் பேசுமுயலும்வெள்ளெலியும் நாடுர்க்குருவிசிவல்நெய்மீன் நாடியருந்தும்பத்தியங்கள் கூடாவாறுபொருந்துவதுமிவை தங்குணத்தைக்கூறக்கேள்
நெய்பால்தயிர்மோர்மரக்கறியும் நேராயருந்திலருந்தலாம் மையார்குழலாய்வகுத்துரைப்பன் மந்தமானவாதத்தால் எய்யாமூலக்குதந்தோன்றி லியற்றுந்தயிர்மோரிவையாகா ஐயமூலக்குதந்தோன்றி லாவின்நெய்பாலாகுமன்றே.
மந்தமாமூலத்தோர்க்கே மந்தமாமிசங்களாகா வெந்ததோர்பித்தமூலம் மேவிடில்மந்தமேற்கும் தொந்தமாமூலத்தோர்க்கே தொடங்கிடுமொன்றுமேற்கா இந்தநோய்தொந்தங்கண்டே பத்தியமியம்புவாமே.
72
69
70
7.
72
73
74
75

செகராசசேகர வைத்தியம்
தூதளைகறணைசேனை சொல்லியநவமூலங்கள் சூதிலயிரண்டைவற்றல் துவரையின்பருப்புநீருஞ் சாதிவெள்ளாடுபன்றி மூலநோய்தகுதிக்கெல்லாம் மாதவர்முன்புசொன்ன பத்தியமருந்தும்வாறே.
விக்கலின் குணமும் மருந்தும்
அன்னகம், அமழ்கம், கெம்பீரம். மகதி, குத்திரன், ஆக 5.
அக்கரவணிந்தமூர்த்தி யறைந்தவாயுறுவேதத்தின் விக்கலின்பேரசாத்ய சாத்தியமிகுகுணங்கள் தக்கநன்மருந்துசெய்யும் சார்வுறுகொள்கைதானும் ஒக்கவேயுரைக்கமானே யுணர்வினாலுணர்ந்துகொள்ளே.
அன்னகம்அமழ்கம்கெம்பி ரத்தினோடரியகுத்ரன் மன்னியமகதியாகு மைந்தின்பேர்மானேசாத்தியம் முன்னமேயுரைத்தமூன்றும் மொழிந்திடுபின்னிரண்டும் இன்னதுவசாத்திகங்க ளென்றுநீயறிந்திடாயே.
அன்னகம்
சாற்றியபின்னிரண்டுஞ் செயுங்குணஞ்சாற்றவேண்டில் பொற்றியவுணவருந்தும் பொழுதிலும்புரையினாலும் மாற்றருந்தாகந்தாப மதிலங்குநிகழுமாதே தோற்றியவிக்கல்தன்னாற் தோஷமுமில்லைக்காணே.
அமழ்கம்
காதியாயமழ்கஞ்சேருங் காரணமேதோவென்னில் சீதநீரழலினாலும் சினநடையோட்டத்தாலும் வாதையாமாதலாலும் மன்முறுமேக்கத்தாலும் மூதைசேர்விக்கல்தோன்றி லமழ்கமாமொழியுங்காலே.
கெம்பீரம் மொழிந்தகெம்பீரவிக்கல் முற்றிடுங்குணத்தைக்கேளாய் கழிந்திடுமலங்கழிந்த போதிலுங்கலவிப்போதும் மொழிந்திடுமதுவாயுள்ள கறிகளைப்புசிக்கும்போதும் துளங்கவேவிக்கல்தோன்றில் தொந்ததோஷங்களாமே.
நோயுண்டாங் காரணம்
உரைத்திடுசாத்திகத்தி லுற்றிடுமகதிகுத்ரம் வருத்திடுங்காலைதானே தோவெனில்மானிடர்க்குச்
சுரத்தினாற்தோஷந்தன்னால் சொல்லியதிறிதோஷத்தால் இரத்தரோகத்தாலுண்டா மிக்குணமியம்பக்கேளே.
மகதி
இருவிலாவுந்திபற்றி யெதிர்த்துடனோசையாக மருவியகழுத்தின்கீழே குழிவிழவாங்குவிக்கும்
73
76
77
78
79
8O
8
82

Page 48
செகராசசேகர வைத்தியம்
பொருமிடுமூதைமேன்மேற பொங்கிடுஞ்சேற்பமிஞ்சும் மருவியமகதிவிக்கல் வந்திடில்மரணந்தானே.
குத்திரன்
கழுத்துறுதசைநரம்பு மார்பினுங்கண்டமீதும் துளக்கியேநரம்புசுண்டித் துணுக்குறவிக்கலங்கம் பழுத்திடுஞ்சேற்பந்தானும் பழமலஞ்செறிந்துவிம்மும் வழுத்துகுத்திரமாம்விக்கல் வந்திடில்மரணந்தானே.
மருந்து
இக்குணமறிந்துகொண்டு இயற்றிடுசாத்திகங்கள் மிக்கசாத்தியங்கள்கண்டு மீண்டிடுமருந்துகேளாய் சுக்கதிமதுரமேலந் தூயதிற்பலியரத்தை தக்கநற்சாதியைந்தும் தருமசமோதஞ்சிங்கி.
திறிபலைதேறுமாஞ்சில் சீரகம்புனுகுகோட்டம் உறுவதுசமனாய்க்கொண்டு மயிலிறகுடன்சொல்பாதி பொறிபடவறுத்திடித்த பொடிவெருகடிதேனுண்ணச் சறுகியேயோடும்விக்கல் தானெனும்வேதநூலே.
சுரத்திடைவிக்கலாகிற் துய்த்திடுமருந்துகேளாய் அரத்தைதேற்றான்வசம்பு அதிமதுரத்தோடோமம் பரித்தநற்கருடபச்சை கல்மதம்கல்நார்பாணி உரைத்தகற்பூரம்கோரோ சனைசமன்பொடிதேனுண்ணே.
வாயுவில்விக்கலாகி லருந்திடுமருந்துகேளாய் காயமும்வசம்புஞ்சுக்குங் கடுகுவெள்ளுள்ளிகாந்தம் தூயெலாட்சாரந்துத்தம் துரிசுவெண்குந்திருக்கம்
நேயமாய்வசம்பொவ்வொன்று சமன்கொண்டுநெய்தேனுண்ணே.
வேறு நீடுகூவிளை நெற்பொரிசர்க்கரை தேடுதிற்பலி தேனிற்குளைத்துண்ணப் பீடுசெய்யும் பெருவிக்கல்சத்தியை ஓடவோடத் துரத்துமிதுண்மையே.
திற்பலிவிளாம்புளி சேர்மனோசிலை நெற்பொரிபொரித்துத்தேன் நெய்யிற்றின்றிடப் பற்றியவிக்கல்போய்ப் பரமனார்நகை சுற்றியபுரமெனத் தொலைந்துபோகுமே.
அத்தித்திற்பலி அஞ்சாறுநெற்பொரி
தித்திச்சர்க்கரை தேனுள்ளிநெய்யுடன்
மத்தித்தீவிக்கல் மாறாதொழிந்திடில்
இத்தைத்தேனி லிடவுறவாகுமே.
வேறு
சுக்குக்காரம்புவசுவாசி தூயஉலுவாஇலவங்கம் மிக்ககடுக்காய்தான்றிநெல்லி மிகுத்தமதுரமுள்ளிதிற்பல்
74
83
84
85
86
87
88
89
9.

செகராசசேகர வைத்தியம்
தக்ககருஞ்சீரகங்கோட்டந் தனித்திற்பலிசர்க்கரையெல்லாம் ஒக்கத்திருநெற்பொரியினுட னுரியமனோசிலையொருநிறையே.
நிறுத்தமருந்தையிடித்தரித்து நிதானவெருகிற்தேன்கலந்த பொறுத்தெயருந்தியந்திசந்தி புளியோடுப்புக்குறைத்துவரில் செறுத்தேவிக்குஞ்சேட்டுமமுந் தீராச்சத்தியிழைப்பிருமல் மறுத்தேவரட்சிநெஞ்சடைப்பு மாறிவிடுமென்றிடுமவேதம்.
கடுக்காய்மதுரந்தான்றிநெல்லி கருஞ்சீரகநற்சீரகமும் துடுக்காமுலுவாவிலவங்கம் சுக்குக்காராம்புவசுவா மிடுக்காமுள்ளிசாதிக்காய் மிகுநெற்பொரிதிற்பலியேலம் அடுக்காயவித்துத்தேன்கூட்டி யருந்திலறுஞ்சேற்பனவிக்கல்.
விக்கற் சிலேட்டுமக் குணமும்மருந்தும்
அடுத்தடுத்தெடுத்துவிக்கி யதிகழாயடுத்துவாங்கி விடுத்தெடுத்தடைத்துமுட்டாய் விறைத்திடும்பிறகுஞ்சேரும் கொடுத்திடுமன்னஞ்செல்லிற் குத்திடுஞ்சிலநாள்நிற்கும் எடுத்தெடுத்தடுத்துவிக்குஞ் சிலேட்டுமமென்னலாமே.
விக்கலுமெடுத்துவிம்மி விடுத்தடுத்திழுத்துவாங்கி துக்கமாயெடுத்துவிக்கித் துயர்செய்துநெடுநாள்நிற்கும் மிக்கநாளிரவில்மிண்டி மிடுக்கிடும்பிறகுந்தோன்றும் புக்கிடும்தீர்ந்துபோகும் பூதுசேற்பனமீதாமே.
கண்டங்காலிசிறுதேக்குக் கரியமிளகுபச்சிலையும் உண்டங்கிலவங்கத்துடனே உள்ளியேலuமிவையரைத்து தண்டார்புனலெட்டொன்றாக்கித் தானேதேனும்விட்டருந்த வண்டார்குழலாய்குரலரிக்கு மையமகலுமருந்தாமே.
கருவேப்பங்கூர்சிறுதேக்குக் கண்டங்காலிபொரிசீந்தில் உரியகாசுதிற்பலிசுக் குடண்ரிட்டெட்டொன்றாக்கி அரியதெளிதேனுடன்பருக அரிக்குங்காலுமிருமல்களும் வரிபோல்விழியாயகலுமென வகுத்தார்வேதமறிந்தவரே.
வேறு
மாவிலங்கைகருஞ்சூரைசம்பீரம்பொன்
னாவரைசெம்பரத்தையிவைமருவுவேரும் நாவல்பிராய்கயட்டையத்தியிருப்பைப்பட்டை
நல்லவுள்ளியிரண்டுலுவாச்சுக்குக்கெந்தம் மேவுமசமோதமொடுவெளுத்தல்சாதி
விரும்புகருஞ்சீரகங்கற்பூரத்தோடு தாவுகடுரோசனையுமாவின்நெய்யும்
சாரவொருகொத்தாகச்சார்ந்துகொள்ளே.
கொண்டதிலவெண்ணெயொருகொத்தேரண்டங்
குலவுமெண்ணெய்காற்கொத்துக்கூட்டிப்பின்னை
விண்டலஞ்சேரிருப்பையெண்ணெயரைக்கொத்தாக
விட்டெரித்துவடித்திடுநெய்விருப்பினோடு
75
93
94
95
96
97
98
99

Page 49
செகராசசேகர வைத்தியம்
உண்டிடுகில்மந்தாரகாசங்கோழை
ஊரறியவருமீளைகசநோய்தானும் மண்டுசிலேட்டுமகிரந்திவருத்தந்தீர்ந்து
வாழ்வுபெறுமெனவேதம்வகுத்தவாறே.
சுவாதம் பத்தின் குணமும் மருந்தும்
படரொளிக்கயிலைமீதிற் பரம்பொருளாதிகால திடரொளிநந்திக்காந்நா வியம்பியவாயுள்வேதத் தடரொளிச்சுவாதம்பத்தி னடுத்திடுகுணமும்பேரும் சுடரொளியுலகின்மீது அறிந்தவைசொல்லலுற்றாம்.
சொல்லியமுதற்சுவாத முட்டணந்தொகுத்திரண்டாம் புல்லியகிரந்திமூன்றாம் பொருந்தியவிஷமதாகுங் கல்லியபித்தநாலாங் கதித்திடுங்கோழையஞ்சாம் கொல்லியவிளையாறு கொடும்விஷகாசமேழே.
காசமார்சுவாசமெட்டுக் கதித்திடுசேடமென்பர் நேசமார்நவசுவாதம் நிலைத்திடும்வாதமாகும் நாசமார்தெசசுவாதம் நலக்கியசறுவசேடம் பாசமார்சுவாதம்பத்தும் பகர்ந்தனங்குணமுஞ்சொல்வாம்.
1 உட்டணசுவாதம்
இருமிநாவரட்சியுண்டா யிளைபோலிமுத்துத்தொய்வாய் அருவியேமிடறுங்கேரி அடுத்திடுசளியும்வீழா மருவியவன்னந்தானும் மறுத்திடும்மலமுந்தீயும் கருவியுமுலர்ந்துவற்றிக் கதித்திடுஞ்சுவாதமொன்றே.
குடிநீர்
பற்படகம்மரீசம் பகரதிமதுரமிசுக்கு திற்பலிகராம்பரத்தை சீரகங்கழஞ்சோரொன்று பொற்புறஅவித்தொட்டொன்றாய்ப் பொருந்தியகுடிநீர்கொள்ளில் நிற்புறாதிருமல்தொய்வு நிச்சயஞ்சுரமும்போமே.
2 கிரந்திகவாதம்
காயமதுலர்ந்துவற்றிக் கடுத்துடன்கண்ணும்மின்னி மாயமாயிரவிற்காய்ந்து மயக்கியேதொய்வுண்டாகும் தூய்மையாயன்னஞ்செல்லாத் துன்பமாயிருமிவேர்க்கும் தீயதாமீர்சுவாதஞ் செய்குணஞ்செப்புங்காலே.
மருந்து ஆடாதோடைவேர்மிளகு அவித்தேநாலொன்றாக்கியதை ஏடார்குழலாய்குடித்துவரி லிழைப்புத்தொய்வுஇருமல்சுரம்
பீடார்கோழைகாசமுதற் பெரியசுவாதமிவையெல்லாம் கோடார்பருதியெதிர்பணிபோற் குலைந்தேயேகுங்கண்டாயே.
76
OO

செகராசசேகர வைத்தியம்
வேறு கிரந்திசிந்தாமணி
சூதமொருகழஞ்சுகொடிவேலியிருகழஞ்சு
சொன்னதிற்பலியெண்கழஞ்சுகடுக்காயும் ஒதிலிருபதுமிளகுஇந்துப்புக்கழஞ்சு
உரியநற்கீரகமாறுகழஞ்சேலமொன்று கோதிலதிமதுரகாற்கழஞ்சிலவமொன்று
கொண்டிதரங்கெடுத்திஞ்சிச்சாறதனிலரைத்து ஏதமறுதூதளங்காயளவாகத்திரட்டி
இதமானதேன்சீனியதிற்குளிகையருந்தே.
அருந்தியுப்புப்புளிமறந்துபசுப்பால்நெய்கூட்டி
அடுத்தசுறாத்தூதளங்காயிலைமுசுக்கையிலையும் பொருந்தியபத்தியமாகிக்குறுவைநெல்லின்மாவிற்
பொற்புறுநற்சிறுகுறிஞ்சிநீர்க்களியுமருந்தில் திருந்தியமூலக்கிரந்தியிருமலுடன்வரட்சி
தீராதகோழைகுரலடைப்புமிடறரிப்பும் மருந்திதனாற்றிருகையாற்கிரந்திசிந்தாமணியாய்
வகுத்தனர்மாமுனிவரெனவாகடநூலறையும்.
3 விஷமசுவாதம் வற்றிடும்வெளுக்கும்மேனி மயக்கிடுமிருத்தொய்வாம் சுற்றிடுங்கிறுகிறுத்துத் துயரமாய்ச்சுவாதமுண்டாம் சொற்றிடும்மிடறுகேளுஞ் சுரமிகுஞ்சளியும்வீழாப் பற்றிடுஞ்சுவாதமூன்றின் செய்குணம்பகருங்காலே.
மருந்து
பயனுறுதூதளம்பழத்தின்சாறுதானும்
பாவையரேகுறுணியிருநாழிபாலும் நயமுறுநெய்யிருநாழிகலந்துகறகம்
நாகம்பூஅதிமதுரமநாறுங்கோட்டம் செயமூறுபச்சிலையசமோதகமிந்துப்புச் சிறுதேக்குஅதிமதுரந்தேவதாரம் சுயமுறுசுக்கேலம்விளாலொடுலாமிச்சு
கறிப்பாலைஅமூக்கிராய்கருதும்வேரே.
கருதியொன்றுமுக்கழஞ்சாயரைத்துக்கூட்டிக்
கரைத்துநானாளுறிவடித்தபின்னர் விரவியநற்சற்கரையும்பலந்தான்கூட்டி
மிக்ககழஞ்சொருமூன்றுவிரும்பிக்கொண்டால் பரவியதோர்காயாசுவாதத்தோடே
பற்றியவுள்வெக்கைகசரோகம்விக்கல் அரனடியார்க்கிடர்விளைத்தோர்குடியேபோல
அலைவுறுமென்றேமுனிவரறைந்தாரன்றே.
4 பித்தசுவாதம்
கண்ணும்பஞ்சிட்டுமின்னிக் காயமும்வெதும்பிவற்றி எண்ணுறவெளுக்கும்மேனி யிரவினிலிருமலுண்டாம்
77

Page 50
செகராசசேகர வைத்தியம்
உண்ணுநேரன்னஞ்செல்லா துவாந்தியாமுறக்கம்வாரா திண்ணநாலாஞ்சுவாதஞ் செய்குணஞ்செப்புங்காலே.
மருந்து
சாறணைகையாந்தகரைகீழ்காய்நெல்லி
தகவியதுதளைபிரமிபொடுதலையினுடனே கூறுசுழலாவரைவட்டிவைசமூலங்
கொள்கவியங்கிலைமட்டேகுறுகவெட்டி வேறுபடப்பிளிந்தொன்றோருரியாய்ச்சாறு
விட்டதனிற்கடைமருந்துவிளால்வெட்பாலை தேறியதிற்பலிவசம்புமரிசமிங்கு
சீரகமேலங்கடுகுசிறுதேக்கென்றார். 2
ஆர்ந்தபெருங்குரும்பைகொடுவேலிவேரும்
அழகியகோரோசனைசாதிக்காய்தானும் சேர்ந்தவிலவங்கமொன்றோர்கழஞ்சங்கூட்டித் திலதயிலநாழிவிட்டுத்திரளக்காய்ச்சிக் கூர்ந்தபதந்தனில்வடித்தங்குள்ளேகொள்ளக்
கொடியசுவாதத்திருமல்கூடுங்காசஞ் தீர்ந்ததுகண்டந்தனைப்பற்றியநோயெல்லாந்
தெரிவையரேயென்றுமுன்னோர்செப்பினாரே. 3
5 கோழைச்சுவாதம்
வெளுத்திடுஞ்சரீரம்வற்றி வெதும்பிடுமிருமலுண்டாம் கழுத்துடன்முகமும்வேர்த்துக் கடினமாய்க்கண்ணும்மின்னி விழுத்திடுமுறக்கம்வாரா விரைவினாவரண்டுண்செல்லா இழுத்திடுசுவாதமைந்தின் செய்குணமியம்புங்காலே.
மருந்து
கண்டங்காலிதுதுவளை காட்டினியங்குநிலக்குமிழ்வேர் உண்டாம்வட்டின்வேருடனே உரியமிளகினுடன்சுக்கு
தண்டார்கடுக்காய்சிறுதிற்பல தானேயவித்துக்குடித்துவரில் தொண்டார்சுவாதமிளைப்பிருமல் துணிந்தேயகலுங்கண்டாயே. 2
6 ஈழைச்சுவாதம்
வேர்த்திடுமிருமிமுட்டாய் வெளுத்திடுந்தொய்வுண்டாகும் பார்த்திடுங்குறைக்கண்ணோக்கிப் பகர்ந்திடிற்சளியும்வீழா சேர்த்திடுமூலாதாரஞ் சேர்ந்தொருகொடிபோற்றோன்றி கோர்த்திடுஞ்சுவாசமாறின் செயகுணங்கூறுங்காலே.
மருந்து
நன்னாரிகண்டங்காலி நலமுளமுத்தக்காக சொன்னார்வட்டாடாதோடை தூதின்வேர்தானுநேராய் மின்னார்திற்பலிவேர்க்கொம்பு மிளகொடுமதுரம்நெல்லி பொன்னார்சீரகமிரண்டு புகழேலங்கடுக்காய்தான்றி. 2
78

செகராசசேகர வைத்தியம்
தானசமோதமல்லி தகுமீரவுள்ளிசன்னி கானமார்கழஞ்சோரொன்று கடிதுடன்வறுத்துமாவாய் பானமார்பசியதுாதிப் பழத்தினிற்சாறுஆணெய் நனமாகாமற்காய்ச்சி யருந்திடஇளகுந்தொய்வே. 3
7 விஷகாசசுவாதம்
இருத்திடுந்தொய்வுமுட்டா யிருமியேசளியும்வீழா வருத்திடும்வயிறுநாரி வருமிருதாளும்வீங்கும் கருத்துடன்தாகமிஞ்சிக் களைசெயுங்காய்ந்துவேர்க்கும் உருத்திடுமேழ்சுவாதஞ் செய்குணமுரைக்குங்காலே.
மருந்து
தூதுவளைபற்கடகஞ்சீந்தில்சுக்கு
தூயதிற்பல்மல்லிசீரகஞ்சமன்கொள் ஒதியவைஒருநாழிபுனல்லிட்டுறி
உற்றதனைநாலொன்றாய்வற்றக்காய்ச்சி தீதிலிதையிருபொழுதுங்கொள்வீராகிற்
தீயகாயாசேற்பமிருமல்தொய்வு வீதிவருங்கதிரவன்முன்பனியேபோல
விட்டகலுமெனமுனிவர்விளம்பினாரே. 2
8 காசசுவாதம்
நெஞ்சினிற்குத்திநொந்து நின்றதிலிரத்தம்வீழ்ந்து பஞ்சினில்வெளுக்குமேனி பகர்ந்திடிலிருமிக்காயும் கெஞ்சிடக்கழிந்துதொய்வாய்க் கிளர்புறந்தாளும்வீங்கும் அஞ்சிடாதெண்சுவாதம் செய்குணமறையுங்காலே.
மருந்து
கண்டங்காலிதுதுவளை காட்டில்வட்டுநிலக்குமிழ்வேர் துண்டஞ்சேராடாதோடை சுக்குமிளகுகடுக்காயும் மிண்டுநதிற்பல்கொத்தமல்லிமிக்க விவையொன்றொருநிறையாய் கொண்டேயவித்துக்குடித்துவரிற் கொடியசுரந்தொய்விருமலும்போம். 2
9 சுவாதகாசம்
பிள்ளைப்பெற்றமாதருக்குப் பெருத்தசுரமாய்த்தலைவலியாய் உள்ளிலுழலைதவனமுமா யுரத்துக்கழிச்சலுடல்வேர்வாய் மெள்ளத்தொடுத்தவுள்மூச்சாய் விழியிற்றெளிவும்கெட்டிடுகிற் துள்ளித்துடிக்கவுயிர்வாங்கும் சுவாதகாசமொன்பதென்னே. 1
மருந்து
கராம்புமுக்கழஞ்சுவாங்கிக் கதிக்கநீர்நாழிவிட்டு தரம்பெறநாலொன்றாக்கித் தரித்திடுங்குடிநீர்கொள்ளில்
உரம்பெறுசுவாதமுட்டு உட்டணம்வேர்வைகாய்ச்சல் நிரம்பியகழிச்சல்தானும் நிமலன்ார்விடுவிப்பாரே. 2
79

Page 51
செகராசசேகர வைத்தியம்
10 காயாசுவாதம்
மூச்சும்வாங்கிநாவரண்டு மூக்கைமலரச்சுழித்திடுமேற் பேச்சுமுட்டாய்வெயர்வரும்பிப் பெருகுமுழலைதவனமுமாய்க்
காய்ச்சல்கழிச்சல்மெய்வெதுப்புக் கனத்துப்புறந்தளாதைத்திடுகில்
ஆச்சுமரணமுண்டென்னு மரியகாயாசுவாதமிதே.
காயாசுவாதத்துக்கு கராம்புக்குடிநீர்
தூதுவளைகாஞ்சோன்றிகண்டங்காலி
தூயமுத்தற்காசுடனேசீந்திலொன்று தாதுதருமிவைபிடிவேர்பிடுங்கிச்சீவித்
தனியிடித்துத்தண்ணிரும்நாழிவிட்டு மீதுவருங்கராம்புமிருகழஞ்சுகூட்டி
விட்டதண்ணிர்பாதிவற்றிக்குடிப்பீராகில் தீதுதரும்சுரம்வரட்சியிருமல்தொய்வு
தீர்ந்துவிடுமெனமுனிவர்செப்பினாரே.
காயாசுவாதத்திற்கு இந்துவாலேகியம்
நன்னாரிதுதுவளைகண்டங்காலி
நல்லமுத்தக்காசுவட்டுமதுரம்நெல்லி மின்னார்சீரகமிரண்டுகடுக்காய்தான்றி
மிளகுசுக்குச்சன்னிவிரைதேற்றாங்கொட்டை பொன்னார்திற்பலியோமம்நிலவினுப்பு
பொற்புறவொன்றிருகழஞ்சாய்நிறுத்தெடுத்து சொன்னார்பின்னதைவறுத்திடித்துமாவாய்த்
தூவியதைநெய்தேனிற்குழைத்துக்காய்ச்சே.
காச்சுமிந்துவாலேகமருந்தநாளும்
கக்கலெய்ப்புநெஞ்சடைப்புக்காய்சுவாதம் மூச்சிருமலிளைகசவியாதிகாய்ச்சல்
முடுகாதுகிரந்திகண்டமாலைகோழை பேச்சுமுட்டுமேலிளைப்புமிடற்றரிப்புப்
பெருகுசிலேட்டுமமுதலபிணிகளெல்லாம் விச்சுநவரத்னவொளியுகயமிதில்
விளங்கிரவியெதிர்பணிபோல்விட்டுப்போமே.
கசரோகங் காயாசுவாதத்திற்குச் சர்வாகிருதம்
கட்டங்காலிதூதுவளை கறுக்காய்வீழிபெருமருந்து உண்டாமியங்குசிறுகுறிஞ்சி யுடனேசெங்கத்தாரியியார் கொண்டார்கருஞ்சூரின்பூறல் கோதில்சிறுகாஞ்சோன்றியின்வேர் மிண்டார்வேலிப்பருத்தியுடன் மிக்கவேரொன்றொருகழஞ்சே.
ஏற்கும்வீழிபெருமருந்தோ டியல்வாநொச்சிசிறுகுறிஞ்சி ஆர்க்கும்வேலிப்பருத்தியுடன் ஆடாதோடைகுன்றுமணி சீர்க்கும்பிரமியிவைசாறு திடனோரொன்றுஒருநாழி தீர்க்குமதுரமிந்துப்புத் திகழ்வேம்பாடல்சன்னிவிரை.
80

செகராசசேகர வைத்தியம்
விரையார்மிளகுதான்றிநெல்லி மிக்கவரத்தைகச்சோலம் தரைமேலுள்ளவிலவங்கந் தக்கவசம்புசிறுதிற்பல் வரையார்கடுக்காய்சீரியரும் வகுத்தார்சரக்கொன்றொருகழஞ்சாய் உரையார்சரக்கும்வேர்தானு முற்றவிலைச்சாற்றினிலரைத்தே.
அரைத்தேதுரதின்பழச்சாறு மதிகமிரண்டுநாழிவிட்டு கரைத்தேமருந்திற்புங்கின்வேர்ச் சாறுங்கதிக்கவோர்நாழி உரைத்தாரெள்ளுநிம்வெண்ணெ யுற்றவிருப்பைநறுநெய்யும் வரைத்தாரிவைநேர்சரிவிட்டு வகையாய்க்காய்ச்சிவடித்திடுமே.
வடித்தேசர்வாகிருதமதை வகையாயருந்திவருவீரேற் பிடித்தார்கோழைகசம்வரட்சி பெருத்தவிளைகசரோகம் பொடித்தேயிவைகள்பொறிகலங்கிப் பொன்னாாராழியொன்றுடைய கொடித்தேரிரவியெதிர்பணிபோற்குலைந் தேயேகுங்கண்டீரே.
சுவாதத்திற்கு ஏனாதி
தூதுவளைநன்னாரிகண்டங்காலி
தூயவட்டுக்கோரையிந்துப்பசமதாகம் தீதில்சன்னிவிரைமதுரந்தேற்றாங்கொட்டை
சீரகமோரிரண்டுநெல்லிதான்றிதிற்பல் மீதில்மிளகொடுகடுக்காய்வேர்க்கொம்பொன்று
மிக்ககழஞ்சொருநிறையாய்வறுத்திடித்தே ஒதுசரக்குடனேவேர்த்துளொன்றாக்கி
உற்றநறுநெய்தேனிற்குளைத்துச்சேரே.
சேர்த்திடுமிம்மருந்துதனைக்கொதிக்கக்காய்ச்சித் தின்றுவரிற்றொய்விளைப்புக்காயாசேற்பம் கூர்த்தசுரம்நாவரட்சிகோழையிழை
குளிர்வேர்வைதாகமிவைகுலைந்தேயேகும் தீர்த்தவிந்தவேனாதிசுவாதபாணம்
சிவனருளாற்சுவாதமெல்லாந்திருமுண்மை ஆர்த்தஅவமிருத்தெனிலுந்திருந்தீரு
மவகாலங்கட்டசாத்தியமுந்தீரா
வேறு சுவாத நெஞ்சடைப்பிருமலுக்கு
இருசீரகத்தினொடுகொத்தமல்லியேலம்
இதமானதிற்பலியோடாண்பனையின்வெல்லம் வருநேர்சரக்கிருகழஞ்சுவகைவாங்கி
வறுத்தேயிடித்ததனைவள்ளியிலைநிரிற் தருநேர்பசுக்கிருதமுடனேகலந்து
சற்றேகொதிக்கவைத்துடனேயிறக்கி வெருவாமலிருநேரமுங்கொண்டுவரவே
விட்டகலுநெஞ்சடைப்புடனிருமல்தொய்வே.
காயாசுவாதக் குடிநீர்
நிலத்திற்குமிழ்வேர்பற்படகம் நீண்டசிறுதேக்குடன்திற்பல் பெலத்தகொத்தமலியினுடன் பெரியதேவதாரமிவை
81
10
11

Page 52
செகராசசேகர வைத்தியம்
குலைத்தோரளவுகுடிநீராய்க் கூட்டியவித்துக்குடித்துவரில் நலத்தோர்காயாசுவாதமுட்டு நடுங்கும்சுரதாகமும்போமே. 3
காயாசுவாதத்துக்கு நெய்
நீற்றுப்பூசணிப்பழநீர்நாலுநாழி
நிறைகருப்பஞ்சாறிரண்டுநாழிஆன்பால் சாற்றியகையாந்தகரைபொன்னாங்காணி
தாழைவிழுதொடுமுசுக்கைசாத்தாவாரி தேற்றியமுந்திரிகையுடன்சாம்பல்வாழை
செவ்விளநீர்தாமரையின்வளையச்சாறும் நாற்றியவெள்ளிரிக்காய்துதிப்பழத்தின்
நற்சாறுமிவையொன்றோர்நாழிகொள்ளே. 14
வேறு
கொள்ளிருவேலிலாமிச்சுடன்பூளைசாறி
கோதில்கண்டங்காலிசிறுகீரையொடுகோரை நள்ளிருநன்னாரியுடனோரிதட்டாமரைவேர்
நலமாகவொன்றொர்பிடிபிடுங்கியுடரைத்து உள்ளபழச்சாற்றிலைச்சாறொன்றாகச்சேர்த்து
ஊறியபின்பசுநெய்யீர்நாழிவிட்டுக்காய்ச்சி அள்ளுசரக்கதிமதுரங்கோட்டமிலவங்க
மரத்தைகுப்பையிந்துசெவ்வள்ளிசாதிக்காய். 15
சாதிகருஞ்சீரேலம்திற்பலிவெட்பாலை
சாற்றியசெண்பகமொட்டுக்கொந்தமல்லிசந்தம் ஒதியமஞ்சிட்டிவிழாலதிவிடையங்கிராம்பு
உற்றவசுவாசிநெல்லிகண்டில்வெண்ணெய்கடுக்காய் நீதியுடனிவைசரக்குவேரொன்றீர்கழஞ்சாய்
நிறுத்தரைத்தேழுநாளுறிநன்றாய்வடித்து ஆதியானருள்சாந்திமுடித்தபின்னெய்யை
அநுமானஞ்சீனிசற்றேகலந்துநியருந்தே. 6
அருந்திடுநெய்காயாசுவாதமிதிற்றிரும்
அவிகாசங்கோழைகசரோகமுளமாந்தை பொருந்திடுகாயாசேற்பஞ்சுவாதமுடனிளைப்பு
புகலிரத்தரோகமுடனிழைவயிற்றெரிவு வருந்தியிடுமுள்ளுருக்கியுடனுலற்றுச்சூலை
வகுத்தபிணியிவையனைத்தும்மாறியுடனகலும் திருந்துசிவபுண்ணியமுமன்னதானமதுஞ்
செய்தபெரியோர்வினைபோற்றீருவதுநிசமே. 17
வாதத்தின் குணமும் மருந்தும்
ஆரணமறைக்குமெட்டா அருளொளியானமூர்த்தி பூரணமறையாயந்நாட் புகன்றவாயுறுவேதத்தின் சீரணிவாதமெண்பத் தைந்ததின்சிறப்பும்பேரும் ஏரணியுலகின்மீது அறிந்தவையியம்பலுற்றாம்.
82

செகராசசேகர வைத்தியம்
உற்றதோரரைக்கீழ்வாத மோரிருபத்திரண்டு மற்றதோரரைக்குமேலே மதிக்கிலத்துணையதாகும் சொற்றவிவ்வாதத்தின்பேர் சொல்லுங்காலுச்சிவாதம் பற்றியகபாலவாதம் பகாவெய்யோன்வாதமென்ப,
என்னுநேத்திரத்தின்வாத மேதமில்கன்னவாதம் துன்னுமோர்துண்டவாதம் துணிந்திடுதந்தவாதம் மன்னுவோர்முகத்தின்வாதம் மதித்திடுவாயின்வாதம் பன்னுமோர்நாவின்வாதம் பகர்திடுநாடிவாதம்.
நாடியமவுனவாதம் நலிந்துபற்கிட்டுவாதம் நீடியகண்டவாதம் நீள்பிறவீச்சுவாதம் பாடுசேர்பிடரிவாதம் பகர்ந்திடுபுயத்தின்வாதம் தேடுகைமுடக்குவாதற் திரண்டகைநடுக்குவாதம்.
நடுக்கிநெஞ்சடைக்கும்வாதம் நல்கிடுநெஞ்சுவாதம் திடுக்குறுமுதுவாதஞ் சேர்ந்தபாரிசத்தின்வாதம் மிடுக்குறுமீரல்வாதம் மிண்டியகுடலின்வாதம் அடுக்குறுநாரிவாத மரியவுட்குழியின்வாதம்.
வாதைசேர்சந்துவாதம் வருத்திடுகழலின்வாதம் ஊதைசேரண்டவாதம் உறுகழலேறுவாதம் மேதைசேர்தண்டுவாதம் மிடுக்குறுகுறங்குவாதம்
கோதைசேர்துடையின்வாதங் குறித்திடுமுழங்கால்வாதம்.
கால்செறிகணைக்கால்வாதம் கடுத்திடுபிரண்டைவாதம் பால்செறியசலவாதம் பகருமுள்ளடியின்வாதம் வேல்செறிகுதியின்வாதம் விரிசறுவாங்கவாதம் மால்செறிபெரியவாதம் மயக்கிடுஞ்சன்னிவாதம்.
வாதைசேர்கிரந்திவாதம் வருகழற்பக்கவாதம் தீதுசேர்திமிரின்வாதம் திகழ்பிறமேகவாதம் கோதுறஉளையும்வாதம் கொடுகநேரோடும்வாதம் ஒதுமுட்டணத்தின்வாதம் உற்றிடுகோரவாதம்.
கோரநேரேறுவாதம் கொலைசெய்யுமரனவாதம் சேரவேநடுக்குவாதம் செறிந்துடல்சுழலும்வாதம் தீரவேயிறங்குவாதந் திருந்துமெய்சோரும்வாதம் பேரவேவலிக்கும்வாதம் பெருத்தகால்முடக்குவாதம்.
முடக்கிமெய்யுலற்றுவாதம் முதுகுடலசைக்கும்வாதம் நடுக்கிமெய்யுதறும்வாதம் நயக்குமந்தரவாதஞ்சீர் கெடுக்குமேலிசிக்கும்வாதம் கிடத்திமெய்யுழற்றும்வாதம் திடுக்குறவிடிக்கும்வாதம் திடமறப்பதறும்வாதம்.
பதறிநாத்துடிக்கும்வாதம் பகர்ந்திடுமழலின்வாதம் உதறிநேர்சுரத்தின்வாதம் உரத்திடுஞ்சீனிவாதம் குதறிநேர்தமரவாதங் குணக்கிடுந்துண்டுவாதம் சிதறிநேரிடறுவாதம் செறுத்திடுமுண்டைவாதம்.
83

Page 53
செகராசசேகர வைத்தியம்
உண்டுடலுாதும்வாதம் உருத்திரானந்தவாதம் மிண்டுசெய்துணுக்குவாதம் மீறிடுங்கெசத்தின்வாதம் விண்டுசேர்பைத்யவாதம் விடம்படர்காசவாதம் கண்டிடுதனுவின்வாதம் கடும்பிள்ளைவாதமாமே.
ஏய்ந்திடுமெரியின்வாதம் ஏகஅந்தரத்தின்வாதம் ஆய்ந்திடுவாதமெண்பத் தைந்தெனவறையும்வேதம் வாய்ந்திடுமுச்சிநின்று வருபதமிறதாக காய்ந்திடுகன்மத்திடாய்க் கலந்துடல்வருத்துந்தானே.
வருத்தமேமிகுத்துமினண்டி வாதநோயுற்றகாலை பொருத்தமார்செபதானங்கள் பூசனையபிடேகங்கள் திருத்தமாய்ச்செய்துமுற்றித் தினமன்னதானம்பண்ணி கருத்தினாலெண்ணெய்பற்பஞ் செய்யெனக்கழறும்வேதம்.
வாதத்தின்பெயர் முற்றும்
தீதுசேர்வாதத்தின்பேர் செப்பினமினிமேலிப்பாற் கோதுசேர்குணமுமந்தக் குணவழிதைலம்பற்பம் நீதிசேர்புகைகுடோரி நிலைத்திடுபொந்திமற்றும் ஆதியினறைந்தநூலி லறைந்தவையறையலுற்றாம்.
உச்சிவாதம்
தலைகனத்ததிர்ந்துகுத்தித் தடித்திடுமுச்சிநெற்றி நிலைகனத்துரத்துமிண்டி நெடும்பகற்கடினஞ்செய்யும் கொலைகனத்துதிரத்தெங்குங் கொடுங்கணைநிகருங்கண்ணாய் சிலைகனத்ததிருமுச்சி வாதநிதெரிந்துகாணே.
வேறுபாடல்
தலையதுகனத்ததிர்ந்து சாற்றிடுமுச்சிதன்னிற் பெலமிகக்கொதித்துக்குத்திப் பேசருநோவுண்டாகும் உலைவதாய்ப்பிடரிதானு முளைந்துமிக்குவாதியுண்டாம் கொலைபெறுமுச்சிவாதக் குணமிதென்றியம்பலாமே.
மருந்து
எருக்குநொச்சிமாவிலங்கைவாதங்கொல்லி
எலுமிச்சைதோடையுவாய்முத்தக்காசு தருக்குபெருமருந்துவளர்முருங்கைகான்றை
சாற்றுமிவைவேரனைத்தும்பிடுங்கிச்சீவி திருக்குமருந்ததிமதுரமுள்ளிகோட்டம்
சீரகந்திற்பலிமிளகுஅரத்தைஏலம் மருக்குலவுவசம்புலுவாக்கொத்தமல்லி
மஞ்சல்சதகுப்பைசுக்குவெளுத்தல்கூட்டே.
கூட்டுசரக்கொன்றிரண்டுகழஞ்சுவேருங்
குறித்திரட்டியெடுத்தரைத்துக்கசாளமாக்கி
ஈட்டுதெளிவெண்ணெய்கொத்திற்கரைத்துக்காய்ச்சி
இதமாகமூன்றாநாள்வடித்துவார்த்து
84

செகராசசேகர வைத்தியம்
மீட்டுநையம்பண்ணிநன்றாய்முழுகநாளும்
மீளுமுச்சிவாதமுடன்கபாலவாதம்
நாட்டுபிறவிசைவாதங்கபாலசூலை
நடுங்கியகன்றோடுமெனநவின்றாரன்றே.
கபாலவாதம்
சிரத்தினிற்கொதித்துக்குத்திச் செறுத்துடன்கனத்துமிண்டி யுரத்துடன்புருவநெற்றி யுடன்வலித்துவாதியுண்டாஞ் சரத்தினைவடுவைமானைச் சதித்திடுந்தடங்கணல்லாய் பரத்தினிற்கபாலவாத குணமெனப்பகர்ந்தாரன்றே.
கபாலவாதத்துக்கு எண்ணெய்
கோட்டமதிமதுரமுள்ளிநெல்லிதான்றி
கொத்தமல்லிசீரகந்திற்பலிமாயாக்காய் நாட்டமுறுநிலவினுப்புக்கருஞ்சீரேலம்
நற்கடுகுமிளகுமஞ்சள்கராம்புவாசி கூட்டசமோதகமரத்தைமாஞ்சில்குப்பை
குலவசம்புகச்சோலஞ்சந்தஞ்சாதி ஈட்டுசிறுமூலகந்தக்கோலமாஞ்சில
இலவங்கம்வோக்கொம்புசிவந்தசந்தம்.
சந்தமுறுமடவார்தம்முலைப்பால்நாழி
சாற்றுதெங்கின்பழத்தேங்காய்ப்பாலும்நாழி கந்தமுறுசதாபலநற்புளியுநாழி
கதிக்கநல்லெண்ணெய்கொத்திற்கசாளமாக்கி அந்தமுறுமெழுகுபதம்வடித்துநன்றா
யடுத்தடுத்துசிரத்தில்வைத்துமுழுகநாளும் பந்தமுறுகபாலவலிகபாலவாதம்
பகர்ந்திடுநேத்திரவாதம்பறந்துபோமே.
இதரம்மத்திக்க
பொருந்தியஉச்சிவாத புருவத்திற்பிடரிதன்னில் திருந்தியகுடோரியாடித் திகழ்துரிசிதரஞ்சேர்த்து
மருந்துவைமூன்றுநாளும் மத்தித்துப்பொருத்துவீரேல் வருந்தியகபாலவாதம் வசமழிந்தோடுங்காணே.
சூரியவாதம்
தலைகனத்துச்சுழற்றியுடனடுக்கமுண்டாய்ச்
சாற்றிடிலுட்டணவேர்வையதிகயுமாகி நிலைகனத்துநாசடைத்துத்தும்மியூர்ந்து
நீர்விழுந்துஉளைந்துகுத்திவலியுண்டாகும் கலைகனத்தகிரணமதிமுகத்தைவெல்லுங்
கணையெனநல்விழிபடைத்தகமலமின்னே மலைகனத்தகொடுமுடிசேருதயமீது
மருவிடுசூரியவாதம்மகிழ்ந்துகாணே.
85

Page 54
செகராசசேகர வைத்தியம்
வேறு
சூரியவாதந்தோன்றிற் றும்மலுஞ்சலமுமூர்வும் பாரிதாய்த்தலைகனத்துப் பரந்துடலிற்றிவேர்த்து சீரிடாதடைத்துநாசி சீந்திடவலிப்புமுண்டாய் சாரியாய்த்தலைநடுக்குஞ் சாற்றுஞ்சூரியவாதந்தான்.
மருந்து
ஆனதையறிந்துநீயும் அஞ்சிலைநொச்சிவேளை தேனதில்வரிக்கற்றாளை தேட்கடைசிற்றமட்டி ஊனதிலழிஞ்சிலத்தி யுரியதோரமுக்கிராய்வேர் கானதிற்குறிஞ்சிவேருங் கருநொச்சிவேருங்கூட்டே.
கூட்டுநீயேலங்கோட்டங் குளவிந்தமரத்தைகுக்கி லீட்டுசாதிக்காய்நெல்லி யியற்கராம்புடன்கச்சோலம் நாட்டியவசம்புமஞ்சள் நற்பூதவிருக்கமுள்ளி தீட்டுநல்லெண்ணெய்நாழி திகழ்பசுப்பாலுநாழி.
நாளிருநாலுமூறி நாட்டுநற்சரக்கும்வேருந் தூளிதாயரைத்துவிட்டே துகழறுமந்தபாகங் கோளிலாதறவடித்துக் குலவியசிரத்தில்வார்க்க கேளில்சூரியவாதந்தான் கெடிகெடவோடுங்கானே.
நேத்திரவாதம்
கண்ணினிற்கடுத்துக்குத்திக் கலங்கிநீர்சிவந்துவீழ்ந்து நண்ணியமுகமுமூக்கும் நயனமும்புறத்தேவாங்கும் பண்ணிகர்மொழியாயசற்றே பகர்தலைவலியுமுனடாம் எண்ணிநேத்திரவாதத்தின் குணமிதென்றியம்பினாரே.
ஒளிநிறைவிழியிற்குத்தோ டுடன்தலைவலியுண்டாகி வளமிகுகண்பஞ்சாடி மறைந்துநீர்கடுத்துவீழும்
அளிநிறைகுழலாய்பின்னு மம்பகஞ்சுழித்துவாங்கும் குளிருநேத்திரவாதத்தின் குணமிதென்றியம்பினாரே.
எண்ணெய்
தருமருவுநன்னாரிமுத்தத்காசு
தங்குமிருவேலிமுள்ளிசீந்தில்பூலா திருமருசீதேவியோரிதட்சூதின்வேர்
திருந்துமிலாமிச்சுசிற்றமட்டிவேரும் குருமருவுதாமரையின்வளையச்சாறுங்
குலப்பசுப்பாலுடனிளநீர்சாத்தாவாரி கருமருவுமொசுமொசுக்கைபொன்னாங்காணி
கதித்தகையான்றகரைசதாபலத்தின்சாறே.
சாறுபசுப்பாலிளநீர்புளியோர்கொத்துத்
தனிமிளகுமூன்றுபலமவித்ததண்ணிர்
வீறுபசுநெல்லியுடன்கோட்டமேலம்
விளம்பிருசீரகமரத்தைதிற்பல்தான்றி
86

செகராசசேகர வைத்தியம்
தேறுபசுங்கிளியூறல்மலையில்வேலி
செண்பகப்பூசதகுப்பைகராம்புவாசி
கூறுகுண்டுரோசனைகுங்குமப்பூசந்தங்
குலவசமோதகம்சாதிமதுரமாமே.
மதுரசாக்கிவையொன்றோர்கழஞ்சுவாங்கி
மதிக்கவேருடனரைத்துக்கசாளஞ்சேர்த்து அதிரவெள்ளிணெண்ணெய்கொத்துவிட்டுக்காய்ச்சி யதைமெழுகுபதமாகவடித்துவார்த்து முதிரநன்றாய்முழுகிவரிற்றீர்வியாதி
மொழிந்திடுநேத்திரவாதங்கபாலவாதம் பிதிர்கிரந்திகாசமுடன்கபாலங்கண்ணோய்
பிறங்குகதிர்முன்பனிபோற்பிரிந்துபோமே.
கன்னவாதம்
வருந்தவேகாதிற்குத்தி வலித்துடன்திரண்டுவீங்கி பொருந்தவேபிடரிவாங்கிப் போதவேயிரைத்துக்கேளா திருந்திடுமயில்மானம்பு இயல்வடுநிகருங்கண்ணாய் அருந்தியகன்னவாதக் குணமிதென்றறையலாமே.
எண்ணெய்
உரியவெள்ளுள்ளிமஞ்ச ஞகந்திடும்வசம்புசுக்கு கரியசீரகம்வெளுத்தல் கதித்திடுங்கணவாயோடு பெரியதோர்நிம்பவெண்ணெய் பெலத்துநீகொதித்துவார்க்கில் அரியதோர்கன்னவாத மடுத்தகாதிரைப்புப்போமே.
முருங்கைவேர்ச்சாறுநாழி முதிரதிமதுரமேலம் ஒருங்குற்றதிற்பல்வெட்பா லுகந்தசீரகங்கச்சோலம் தருங்கருஞ்சீர்வசம்பு தகரஞ்செண்பகப்பூசுக்கு மருங்குறுதிலநெய்நாழி வார்ததுநீவடித்துவாரே.
வார்த்துடன்றிரியிற்றோய்த்து வளம்பெறச்செலுத்திக்காதில் சேர்த்துடன்முழுகநாளுஞ் செப்பியகாதுவாதம் கூர்த்திடுமிரைப்படைப்புக் குத்துடன்பிடரிவாங்கல் ஆர்த்திடுகதிர்முன்வந்த வரும்பனியெனவேயேகும்.
துண்டவாதம்
மூக்கினைச்சுழித்துவாங்கி மூளையில்வலித்துக்குத்தி நோக்கினுங்கடுத்துநொந்து நுவன்றிடில்நீரும்வீழும் தாக்கியவெயில்வேலம்பு தரித்திடுநயனமின்னே தூக்கியதுண்டவாதக் குணமிதுதுணிந்துகாணே.
எண்ணெய் கொன்றைம்ாவிலங்கைநொச்சி குலவியகாரைவட்டு துன்றிவையனைத்தின்வேருந் துகளிலங்கமேல
மொன்றியமிளகுதிற்ப லுகந்தவெள்ளுள்ளிகோட்டம் நன்றியசுமக்குஞ்சல் நல்லெண்ணெய்நாழிகூட்டே.
87

Page 55
செகராசசேகர வைத்தியம்
கூட்டியோர்நிறையிற்கொண்டு குறித்திடித்தரைத்துநன்றா யீட்டியகசாளமூறி வடித்துவார்த்தியல்பிற்பூசில் நாட்டியதுண்டவாதம் நடுக்கியமுகத்தின்வாதம் காட்டியகதிர்முன்வந்த பனியெனக்கலைந்துபோமே.
தந்தவாதம்
பல்லினிற்கொதித்துக்குத்திப் பரந்துபற்குரையில்வீங்கி சொல்லியவிளமைகன்னிற் றொடங்கியேபல்லுவீழும் வல்லிநேரிடைவேலம்புவரியளிநிகருங்கண்ணாய் புல்லியதந்தவாதக் குணமெனப்புகன்றாரன்றே.
தந்தமதுளைந்துபின்னுந் தானதிற்குத்துமுண்டாய் வந்துபல்லடியிற்கட்டி வதனமூக்கடன்வலித்து கொந்துசேர்குழலினாய்பின் கொதிப்புண்டாய்ப்பல்லும்வீழும் தந்தவாதக்குணந்தா னிதெனச்சாற்றலாமே.
மருந்து
பொருந்தியமிளகுசுக்குப் பொலிவுளகடுக்காய்நெல்லி திருந்தியவாடாதோடை வேருடன்வசம்புதிற்பல் வருந்தியதேனிந்துப்பு வசமுறவரைத்துக்காய்ச்சும் மருந்துபல்வாதத்திற்கு மத்திக்கவகலுந்தானே.
தான்மிளகுடன்வேர்க்கொம்பு தகுபழப்புளிநல்லெள்ளு தீனிலவுப்போடேலஞ் செப்பியபடிநேர்கூட்டிக் கான்மிகவரைத்துநன்றாய்க் கலந்துபல்லடியிற்றேய்கில் ஊன்மிகுதந்தவாத முடன்கன்றோடுங்கானே.
முகவாதம்
மூக்கொருபுறத்தினுற்று முன்னெழுபுருவத்தோடு நாக்கொடுமெயிறுபூட்டி நயனமோர்புறத்துவாங்கி வாக்கொடுமுகமுமாறி வலித்திடுந்தலைநெளிக்கும் தாக்கொடுவிதனைநியுந் தான்முகவாதமென்னே.
இக்குணமிருந்ததென்னி லிதுமுகரோகவாதம் புக்குறவிதற்குநீயும் புகன்றநற்கிரியைகேளு மெய்க்குறஅபாயங்கநெற்றி மெலெழுநரம்பையுன்னித் திக்குறவுதிரந்தன்னைத் திறந்திடத்திருமன்றே.
கொன்றை எண்ணெய் திருக்கொன்றைப்பட்டைமுப்பத் தீர்பலந்திருந்தவெட்டி தருக்கொன்றவிடித்துநன்றாய்த் தண்ணிர்விட்டவித்துமுன்னாள் மருக்கொன்றுகரந்தைவேரும் மருவுகாஞ்சோன்றிவேரும் இருக்கொன்றுகுறிஞ்சாவேரு மியல்புடனிடித்தொன்றாக்கே.
ஆக்கிநன்மிளகுமஞ்ச ளரியதிற்பலிவேர்க்கொம்பு தேக்கிநற்கற்கமொன்றோர் திருந்தநாற்கழஞ்சுவாங்கி
88

செகராசசேகர வைத்தியம்
தாக்குநல்லெண்ணெய்நாழி தனிலரைத்தனைத்துமொன்றாய் நீக்குநற்கசாளத்தூறி நிலைபெறவடித்துவாரே.
வார்த்துடன்பொருந்திநாளும் வருந்தமத்தித்துமூழ்கில் கோர்த்துடனிழுத்துமூக்கு வாய்பல்லுக்கோணவாங்கல் சேர்த்துடன்முகத்தில்வாதம் செப்பியரோகஞ்சன்னி ஆர்த்துடன்கதிர்கண்டஞ்சும் பனியெனவகலுந்தானே.
முகவாதத்திற்குச் சூடு
வழுத்தியபக்கவாத மாறிடாவதனமுற்று இழுத்துறவலிக்குமாகி லிரட்சைசெய்நெற்றிமேலே முழுத்தவர்வகுத்துரைத்தார் ரோமத்தின்மூலஞ்சார அழுத்தவைபொய்க்கண்மட்டுங் கம்பிகாலதனினாலே.
கந்தரப்பக்கந்தன்னிற் கருதுபுள்ளடிதன்னாலே வெந்திடவைப்பாய்பொய்க்கண் மேலுமக்கவர்க்காலாகும் வந்திடும்பிடரின்மேலும் வழுத்துசங்கிலிக்காலாகும் முந்தவேயாயுள்வேதம் மொழிந்திடுமுறைமைதானே.
வாய்வாதம்
அதரமுங்கருகிநொந்து அமுதவாய்கோணிநீரு முதிரவேவிழுந்துமெல்ல முசியாமற்பலகாற்பேசுஞ் சிதரரிமழைக்கணல்லாய் செப்பிடின்முகமும்வேர்க்கும் புதருரைவாய்வாதத்தின் குணமெனப்புகன்றாரன்றே.
மருந்து
திருக்கொன்றைசெங்கத்தாரி திகழுமாவிலங்கைவட்டுத் தருக்கொன்றுமிவைவேருள்ளி சதகுப்பைதேவதாரம்
மருக்கொன்றுமிருசீரேலம் மஞ்சல்வேர்க்கொம்புகோட்டம் இருக்கொன்றுசரக்கும்வேரு மிடித்தரைத்தொன்றாய்ச்சேர்த்தே.
சேர்த்துநல்லெண்ணெய்நாழி திருந்தவேகரைத்துக்காய்ச்சி பார்த்துடன்பதத்தினன்றாய் வடித்துடன்பரிந்துபூசிற் கூர்த்தவாய்வாதங்கோணல் குலவியமுகத்தின்வாதஞ் சீர்த்திடுநாடிவாதஞ் சிதறியேயோடுங்காணே.
நாவாதம்
சுவையறிதருதாலந்தான் துன்றிடவிறைத்துவீங்கி நவையுறத்தடித்துப்பின்னர் நாடிடிலுவாதிசெய்யும் கவையுறுகோட்டில்வாழுங் காரரிபுரையுங்கண்ணாய் அவையுறுநாவாதத்தின் குணமிதென்றறையலாமே.
மருந்து
கருக்கிநற்காரம்போட்டுக் கடுதாசிப்புகையேகாட்டித் தருக்குநற்றுடரிபூலாத் தனிக்கருஞ்சூரைவட்டு
89

Page 56
செகராசசேகர வைத்தியம்
திருக்குநல்லியங்குநன்னார் செங்கத்தார்கண்டங்காலி இருக்குநற்றுாதிவேரு மிலவங்கந்திற்பல்கோட்டம்.
கோட்டுறுமதுரமேலங் கோதில்செவ்வள்ளிமாயா ஈட்டுறுவசம்புசுக்கு இருசீரங்கடுக்காயோமம் காட்டுறுகராம்புவாசி கதித்தசாதிக்காயிந்து கூட்டுறுமரத்தையுள்ளி குறித்தொருகழஞ்சுகொள்ளே.
கொண்டுடனரதிைதுவேருங் குலதிலதயிலம்நாழி மிண்டவோர்கசாளமாக்கி மிடுக்குடன்வடித்துப்பூசி உண்டுடன்முழுகநாளு முற்றவாய்க்கிரந்திபுண்ணோக் கண்டுடன்சிங்குவாதம் கலைந்துடனுலைந்துபோமே.
நாடிவாதம்
நாடியிற்றிரண்டுவீங்கி நலியவேவிறைத்துக்குத்தி ஓடியேயுளைந்துமிண்டி உடன்கொடுநாடிபூட்டும் நீடியகணைமானம்பு நேரயில்வடுநேர்கண்ணாய் தாடிசேர்நாடிவாதஞ் செய்குணஞ்சாற்றுங்காலே.
எண்ணெய்
பெருமருந்துமாவிலங்கைகொன்றைநொச்சி
பெருஞ்சிவதைமுருங்கையுவாயமுக்கிராய்வேர் அருமருந்துகடுகுமஞ்சலுலுவாவேலம்
அசமோதம்வெட்பாலைவசம்பிந்துப்பு தருமருந்துசிறுமூலமுள்ளிசுக்குச்
சதகுப்பையிவைவகைக்குக்கழஞ்சோரொன்றாய் திருமருந்துதிலதயிலநாழிகூட்டித்
திருந்தவரைத்திடுசரக்கும்வேருங்கூட்டே.
கூட்டியொன்றாய்க்காய்ச்சியபின்பசுவின்பாலுங் குறித்திடுநற்சந்தனமுங்குணமாய்விட்டு நாட்டியநன்மெழுகுபதம்வடித்துப்பூசி
நன்றாகப்பொருத்தியுள்ளுமடைசிவார்க்கில் ஈட்டியநன்முகவாதங்கண்டவாத
மியல்வானபிடரிவலிநாடிவாதம் நீட்டியநாவாதமுடன்துண்டவாதம்
நிலையாதுகதிரவன்முன்பனியேபோலும்,
மவுனவாதம் பேச்சில்லைக்காதுங்கேளாப் பெலத்திடுமவுனமாகி மூச்சில்லைப்பசாசுபோல மூர்ச்சையாயிருந்தேசோம்பும் வீச்சில்லையுளைந்துகுத்தி வெகுகுணவீனம்பண்ணும் காச்சில்லைமவுனவாதங் கடுங்குணங்கழறுங்காலே.
மருந்து
குருந்துபுங்குமாவிவிலங்கைகான்றைநொச்சி
கொடிவேலிபெருமருந்துவாதங்கொல்லி
90

செகராசசேகர வைத்தியம்
அருந்துமெலுமிச்சையுவாயெருக்குத்தோடை
யமுக்கிராய்கல்மிரிசுசன்னிநாயன்
திருந்துமிவைவேரனைத்தும்பிடுங்கிச்சீவிச்
சிறக்கவிடித்திடுதுகளாய்ச்சரக்கிந்துப்பு
மருந்துமிளகுள்ளிசுக்குக்கடுக்காயேலம் மருவிருசீர்கடுகுவிளாலரிசியாமே.
அரியமஞ்சல்கொத்தமல்லிதிற்பல்கோட்டம்
அசமோதம்வெளுத்தல்வசம்பரத்தைகாயம் எரியுமஞ்சல்சன்னிவிரைகான்கச்சோலம்
இயலுலுவாவொன்றோர்கழஞ்சிடித்துமாவாய் பெரியநிம்பவெண்ணெய்கொத்திற்கொதியிற்றுவிப் பெலத்தருந்திமுழுகிநையம்பண்ணுவீரேல் விரியுமுகவாதமுடன்மவுனவாதம்
விரைவாதம்பிறவீச்சுவிட்டுப்போமே
பற்கிட்டுவாதம்
விற்கிட்டி விசைத்தாலென்ன விரைத்துடனாடி பூட்டி
சொற்கிட்டிப்பேசொணாது சுறுக்கென ப்பிடரிவாங்கும் கற்கிட்டிவரிந்தாலென்னக் கஞ்சிநீரருந்துதொண்ணாது பற்கிட்டுவாதஞ்செய்யுங் குணமெனப் பகர்ந்தாரன்றே
பல்லதுகிட்டிதாடி விறைத்துப்பின்பிடரிவாங்கி மெல்லவேதலைகனத்து விரைவினிற்பிறவீச்சுண்டாய் வல்லையிற்கஞ்சி தண்ணிர் குடிக்கவாய்திறக்கொணாது சொல்லிறபற்கிட்டுவாதக் குணமெனச்சொல்லலாமே
மருந்து
கச்குநல்லுப்புக்கூட்டிச் சுகிர்தமாய்வறுத்துநன்றாய் ஒக்கவேயரைத்துச்சேர்த்து உடன்பல்லுத்தேய்த்துநாளும் மிக்கவெந்நீரிற்றேய்த்து மிடுக்குடன்மத்திப்பீரால் தொக்கபற்கிட்டுவாதஞ் சுறுதியாயகலுந்தானே
மிக்கமாவிலங்கைகொன்றை மிகுகொடிவேலிநொச்சி தக்கதோர்முருங்கைவேருந் தாரணிச்சிவதைவேரும் ஒக்கவேபிடுங்கிச்சீவி யொருநிறையிடித்தமாவுந் தொக்கநற்கடுக்காய்மஞ்சல் தூயதிற்பலிவேர்க்கொம்பே
கொம்புசேர்மரத்தின்மஞ்சல் கொடுஞ்ச தகுப்பையேலம் நம்புதிற்பலியின்மூலம் நாட்டுவெட்பாலையுள்ளி வம்புசேர்சரக்கிரண்டாய் வாங்கிநல்லெண்ணெய்நாழி அம்புநேர்கண்ணாய்வேரோ டரைத்ததிற்கசாளம்போடே
போட்டதிற்பசுப்பால்சந்தம் பொருந்தவிட்டைஞ்சாநாளில் மீட்டுநீமந்தமாக மிடுக்குறவடித்துப்பூசி நாட்டியசிரத்துமுள்ளு மடைசியேமுழுகநாளு மீட்டுபற்கிட்டுவாத மியல்புடனகலுந்தானே
91

Page 57
செகராசசேகர வைத்தியம்
கண்டவாதம்
வருந்திடக்களுத்துவீங்கி வலித்திளைத்திறுக்கிவிம்மிப் பொருந்திடப்பிடரிவாங்கிப் பொருக்கெனக்குத்துமுண்டாய் அருந்திடவன்னஞ்செல்லா தடைத்துவந்தடைசிநோவா யிருந்திடுங்கண்டவாதஞ் செய்குணமியம்புங்காலே 1
எண்ணெய்
திருந்துநொச்சிமாவிலங்கைவாதங்கொல்லி
சிவதையுவாய்கான்றையெருக்கலையின்வேரும் பொருந்தவிவையொருபிடிவேர்பிடுங்கிச்சீவிப்
போதவிடித்திடுதுகள்நற்சரக்கிந்துப்பு அருந்துமதிமதுரமுள்ளிவசம்புமஞ்சள்
அசமோதம்பெருங்காயந்தேவதாரம் மருந்துலுவாக்கச்சோலமரத்தைகோட்டம்
வருமிருசீரகம்வெளுத்தல்கடுக்காய்கூட்டே. 2
கூட்டியொன்றோர்கழஞ்சுகொண்டரைத்தவேருங்
குறித்ததிலத்தெண்ணெய்கொத்திற்கசாளமூறி காட்டியநாற்றினத்துவடித்துடன்சிரத்தும்
கண்டமுற்றும்பூசியுள்ளுமருந்துவீரேல் ஈட்டுபிறவிசைவாதங்கண்டவாத
மேதமுறுமுகவாதந்துண்டவாதம் நாட்டுசிவதருமநினைந்தன்னதானம்
நல்குமவர்தீவினைபோல்நலிந்துபோமே. 3
பிறவிசைவாதம்
விறைத்துடனடுத்துக்குத்தி வேர்த்துநாத்தடக்கிமிண்டி நிறைத்தபல்லிறுக்கிப்பூட்டி நெஞ்சினில்கபமுங்காட்டிக் குறைத்தங்கம்பிறகேவிசிக் கொண்டுறவணைத்துவாங்கில் அறைத்தநீள்விசைவாதத்தி னவலஞ்செய்குணந்தானிதே.
தானத்தின்குத்துஞ்சற்றே தணிந்துநெஞ்சடைப்புஞ்சீராய் மானத்தில்வேர்வையின்றி மயக்கிடும்பிறவீச்சின்றி ஊனத்தினாடிபூட்டா துரத்துளவிறைப்புமின்றி ஈனத்தின்மூன்றிலேழி லிருந்திடிலிடறுசெய்யா. 2
எண்ணெய்
மன்னுகாற்றோட்டிநொச்சி மருவுமாவிலங்கைகான்றை துன்னுநன்முருங்கைவாத மடக்கிதூயெருக்குத்தோடை பன்னுமீசுரநன்மூலி பகர்ந்திடுமுவாய்நற்புங்கு உன்னுசித்திரத்தின்மூலி யுகந்திடுஞ்சிவதைவேரே. 3
வேரிவைபிடுங்கிச்சீவி வேறிடித்தவித்தவித்தநீருஞ் சீரியவேர்க்கொம்புள்ளி திற்பலிமஞ்சளேலங் கூரியவெளுத்தலிங்கு கோதில்கச்சோலங்கோட்டம் நேரியவிளால்வெட்பாலை நிகழ்வசம்பரத்தைகூட்டே. 4
92

செகராசசேகர வைத்தியம்
கூட்டுநற்கடுகிந்துப்புக் கோதில்லாமரத்தின்மஞ்சல் ஈட்டுநற்றேவதார லியற்சதகுப்பையொன்றோர் காட்டுநற்சரக்கிரண்டு கழஞ்சுநல்லெண்ணெய்நாழி நாட்டுநற்கஷாயத்துாறி நாலுநாட்சென்றபின்னர்,
சந்தநேர்மந்தபாகஞ் சார்ந்திடவடித்துவார்த்து முந்தநேருள்ளுந்தின்று முழுதுடல்பொருத்திக்காய்ச்சில் அந்தநேர்கண்டவாத மதின்பிறவிசையின்வாதம் மந்தநேர்சன்னிவாதம் மாறிவிட்டகன்றுபோமே.
தயிலம்
அரியவிரதம்பெருங்காயம் அடுத்தவசம்புசெயங்கொட்டை உரியதுரிசுவெள்ளுள்ளி யுகந்தகருஞ்சீரரிதாரம் கரியவெளுத்தல்மனோசிலைகற்கார் சேர்நெல்லிக்கெந்தகமும் பெரியகழஞ்சொன்றொருநிறையாய்ப் பேணியரைத்துத்திரிபூசே,
பூசித்தெளிவெண்ணெயிலெரித்துப் பொருந்துதயிலங்காசிடையில் ஆசில்முலைப்பால்தேனிஞ்சியடுத்த சாற்றிற்கலந்தருந்தித் தேசிற்பூசிநசியமிடிற் சேரும்பிறவீச்சுடன்வாதம் காசிறகபாலப்பிறவீச்சுக் கடிதாய்மாறுங்காரிகையே.
முருங்கைவேர்த்தயிலம்
முருங்கைவேர்ச்சாறுசந்த முதிர்ந்ததேன்முலைப்பால்சுக்கு ஒருங்குவெள்ளுள்ளிகாந்த முகந்தவிந்துப்புக்கோட்டந் திருங்குநன்முத்தற்காசு திற்பலியிவையொன்றாக்கி மருங்குறுகுத்துவீச்சில் மத்தித்துக்கொடுக்கப்போமே.
பிடரிவாதம்
பிடரிநொந்துளைந்துகுத்திப் பெயர்ந்திடில்வலித்துமிண்டி இடரினிற்புயத்திற்றொளி லிழுத்துடன்முதுகுநோவாய் தொடரினிற்றலையிற்குத்தித் தொடர்ந்துடன்பிடரிவாங்கும் அடரயில்நிசுருங்கண்ணா யரும்பிடர்வாதமாமே.
எண்ணெய்
மன்னுநொச்சிபெருமருந்துவாதங்கொல்லி
மாவிலங்கையுவாயெருக்குக்கான்றைபுன்கு துன்னுமயிலடிக்குருந்துகொடியின்வேலி
தொடர்சிவதைவேர்சீவியிடித்துமாவாய் பன்னுமுள்ளிபெருங்காயங்கோட்டமஞ்சள்
பகரிருசீரகம்வசம்புகடுகுசுக்கு மின்னுமிலவங்கமரமஞ்சலேலம்
மிளகுமல்லியரத்தைவெட்பாலரிசிuaடிே
அரியசதகுப்பைவிளால்வெளுத்தல்தி 霍座
அடவிக்கச்சோலங்கடுக்காய் தேக்கிந்து
உரியசரக்கொன்றிரண்டுகழஞ்சுவாங்கி
யுவந்திடித்துவேர்த்துாள்நேர்கலந்துசேர்த்துப்
93

Page 58
செகராசசேகர வைத்தியம்
பெரியநிம்பவெண்ணெய்கொத்திற்கொதியிற்றுவிப் பேதமறச்சிரத்துவைத்துஅருந்திப்பூசில்
கரியபிறவிசைவாதம்பிடரிவாதங்
கபால்வலிபிறவீச்சுக்கலைந்துபோமே.
புயவாதம்
திருந்துபொற்புயதிற்கையிற் சேர்ந்திடும்பிடரிவாங்கி வருந்தவேயுளைந்துகுத்தி வசமறவிழுத்திவீங்கும் அருந்துமாவடுமானம்பு வரியயில்நிகர்கண்மின்னே பொருந்தியபுயவாதத்தின் குணமெனப்புகன்றாரன்றே.
எண்ணெய்
குந்துநொச்சிகாற்றோட்டியெருக்குதில்லை
கொடிவேலிமாவிலங்கைமுருங்கைகான்றை திருந்துபுன்குபெருமருந்துவாதங்கொல்லி
சிவதையுவாய்கள்ளியமுக்கிராயின்வேரும் பொருந்துமிவைபிடுங்கிநன் றாயிடித்துப்
போதவதில்நல்லதண்ணிர்குளைத்தவித்து அருந்துதயிர்வளைகாணியிலங்கைநொச்சி
யரியதழுதாழைய்ைந்திலையின்சாறே.
சாறிவையோர்நாழிவேரவித்ததண்ணிர்
சாற்றிலெஸ்ளிலெண்ணெய்கொத்தில்கசாளமாக்கி கூறியநற்பெருங்காயம்வசம்புகோட்டங்
கொத்தமல்லிகடுகுமஞ்சல்கடுக்காயேலம் தேறியநற்சிற்றரத்தைதேவதாரஞ்
செப்புமரமஞ்சல்விளால்வெளுத்தலுள்ளி நாறியசந்தனங்கருஞ்சீர்கராம்புவாசி
நாட்டுசதகுப்பைசுக்குச்சாதிக்காயே.
காய்க்குமிளகிந்திலவங்கடுகுரோணி
கதித்தசிறுதிற்பலிதிற்ப்லியின்மூலம் வாய்க்குமிந்தச்சரக்கிவையோர்கழஞ்சுவாங்கி
வருத்தியரைத்ததனையந்தக்கஷாயஞ்சேர்த்து சாய்க்குமந்தபதம்வடித்துச்சிரசில்வார்த்து
சளிக்கவுள்ளுமருந்தியெண்ணெய்பூசிக்காய்ச்சில் ஏய்க்குமுகவாதமுடன்குத்துவீச்சு
ஏதமுறமுடக்குபுயவாதம்போமே.
கைமுடக்குவாதம்
கரத்தினிலுளைந்துகுத்திக் கடுத்துடன்பிடரிவாங்கி பரத்தினில்விறைத்துவீங்கிப் பரந்துகைமுடக்கிவீழ்த்துஞ் சரத்தினைவடுவைமானைச் சார்ந்தரிபரந்தகண்ணா யுரத்தகைமுடக்குவாதக் குணமெனவுரைக்கலாமே.
கரமதுதனைமுடக்கி விழுத்திடுங்காயும்பின்னர் உரனுறவுளைந்துகுத்தி வீக்கமுமுண்டாமீது
94

செகராசசேகர வைத்தியம்
விரவுகைமுடக்குவாத குணமெனவிளம்பிவைத்தார் திரைமலிகடல்சூழ்பூவிற் றிருந்தியவறிவின்மிக்கோர்.
பூச்சு முருங்கைவேர்ப்பட்டைசற்றே முதிர்ந்தமாவிலங்கம்பட்டை ஒருங்குளகுளிக்குமஞ்ச லுறவரைத்துகந்துபூசில்
மருங்குகைமுடக்குவாதம் மருவியபுயத்தின்வாதம் நெருங்களிகுழலாயிது நிச்சயம்விட்டுப்போமே.
புளியினிற்பொருக்குச்சாம்பல் பூமத்தமிலையின்சாறும் குழியினிற்சுடுகண்ணாம்பு கூட்டிநீயுரைத்துப்பூசில் களிமொய்த்தகையில்வாதங் கலைந்துடனகலுமன்றேல் நளிமொய்த்தமாவிலங்கை யெண்ணெயும்பூசநன்றே.
கைநடுக்குவாதம்
கடுப்புடனுளைந்துகுத்திக் கையின்ைநடுக்கிமேனி துடிப்புன்தலைநடுக்கித் துணிந்தொன்றையெடுக்கின்மிண்டும் வடுப்பிளவனையவுண்கண் வகிர்மதிப்புருவமின்னே யடுப்பிற்கைநடுக்குவாத மகலுதலரிதென்றாரே.
எண்ணெய்
எருக்கின்வேர்ச்சாறெண்ணாழி எலுமிச்சம்புளிநானாழி தருக்கின்மாவிலங்கைநொச்சி தங்கியவாடாதோடை திருக்கின்றபருத்தியொன்றோர் திகழிலைச்சாறுநாழி அருக்கின்வேர்வாதங்கொல்லி அமுக்கிராய்கான்றைவேரே.
வேரிலாமிச்சுபுன்கு விரும்புகல்மிருசின்யூறல் சீருலாநொச்சிகோரை சிறுகுருந்தவுரிவட்டு நேரிலாவிருப்பைதுரது நிலக்குமிழ்சிவனார்வேம்பு காரிலாவிரண்டுமட்டி கழற்கொடிமுருங்கைகூட்டே.
கூட்டிருவேலிகொற்றான் அரமுறிகுறிஞ்சாசேம்பு காட்டுவேர்பிடியொன்றாக நருக்கியேஅவித்தநீரும் காட்டுசீரகமிந்துப்புக் கடுகுடனரத்தையேலம் ஈட்டுநற்கடுக்காயுள்ளி இலவங்கம்மரத்தின்மஞ்சல்.
மஞ்சுசேர்வெளுத்தல்சுக்கு மருவியதேவதாரம் மிஞ்சியகராம்புகோட்டம் மிகுசிறுமூலந்திற்பல் அஞ்சுவேம்பாடல்தேக்கு அதிமதுர்சன்னிநாயன் வஞ்சிநீசரக்கோரொன்று வாங்கியேஅரைத்துக்கொள்ளே.
கொள்ளுநற்சாறிதெல்லாங் கூட்டியொன்றாக்கிகாய்ச்சித் தெள்ளியதிலத்திலெண்ணெய் திருந்தமுன்னாழிவிட்டு உள்ளியவெட்டாநாளில் உவப்புடன்வடித்துவார்க்கில் தள்ளியநடுக்குவாதந் தணிந்துகைநடுக்கும்போமே.
95

Page 59
செகராசசேகர வைத்தியம்
நெஞ்சடைவாதம்
நெஞ்சினிலடைத்துநொந்து நின்றதிற்சேடமுண்டாய் கஞ்சிசோறருந்தில்விக்கிக் கடினமாய்வணசிற்றள்ளி மிஞ்சிடவெடுத்துமுட்டாய் மிகுதியுங்களையுண்டாகும் வஞ்சநெஞ்சடைவாதஞ்செய் குணமெனவகுத்தாரன்றே.
அன்றியுஞ்சரிரநொந்து அன்னமுமறந்தாள்வற்றி யொன்றியசவிகேடுண்டா யுதரமுமெரிந்துாண்செல்லா நன்றிசேராறாந்திங்கள் நல்கியவெட்டாந்திங்கள் வென்றிசேர்பன்னிரண்டில் விதிவழிகாலனென்னே. 2
இக்காதிகிருதம்
கரும்புகண்டங்காலிமுசுமுசுக்கைதுர்தின் காயிலைவேர்கற்பூரவள்ளிச்சாறும் அரும்புகிரந்திகனாயன்பிரமிசீந்தி
லரியமாதுளையுடனேயழகார்முந்த்ரி சுரும்புவிரும்பியபழநீரிலைச்சாறோடு சொன்னபடிபேரீச்சம்பழமுநாழி லிரும்புபசுநெய்நாழிசீனிநாழி
விளம்புபனைவெல்லமுநாற்கழஞ்சுகொள்ளே. 3.
கொள்ளிருசீரகங்கோட்டம்கராம்புவாசி
கொத்தமல்லிதிற்பலியிந்துப்புமாயா விள்ளுமதிமதுரமுள்ளிகடுக்காயேலம்
விளம்பியசிற்றரத்தையிலவங்கமோமம் நள்ளிருசெவ்வள்ளிகைப்புச்சாதிக்காயும்
நாகையுள்ளியொருநாழிநயந்துகூட்டி உள்ளசரக்கோரொன்றுகழஞ்சுவாங்கி
யுவந்தரைத்ததனையொன்றாய்க்கசாளமாக்கே. 4.
ஆக்கியநற்கசாளமதைநாளுங்காய்ச்சி
யாறாம்நாள்மந்தபதமதில்வடித்து தாக்கியதிற்சொன்னகுணந்தனையுஞ்சொல்லி
சாந்திமுடித்தருந்திவரிற்றீர்வியாதி தூக்கியநெஞ்சடைவாதம்காயாசேடம்
துணிந்திடுசேட்டுமகிரந்திவரட்சியிழை தேக்கியமூலக்கிரந்தியுலற்றுசூலை
செப்பியநோய்தினகரன்முன்பணிபோலேகும். 5
எண்ணெய்
திருந்தியபசுவின்பால்நெய் செப்பியமுலைப்பால்சுக்குப் பொருந்துமேரண்டவெண்ணெய் புகழ்தருமெள்ளிணெண்ணெய் வருந்தியொன்றாகக்காய்ச்சி வலியமார்பதனிற்பூச இருந்துநெஞ்சடைக்குவாத மிளகிவிட்டோடுங்காணே. 6
திருந்தியவிலிங்குதூது செப்பியகண்டங்காலி பொருந்தியநன்னார்கோரை பூவிலாமிச்சுவட்டு
96

செகராசசேகர வைத்தியம்
மருந்திருவேலிசிற்ற மட்டிசீதேவிவேரும் அருந்துகர்ப்பூரவள்ளி யவுரிவல்லாரல்கொள்ளே.
கொள்ளியங்கிலைமுசுக்கை குலவியபிரமிவிழி யுள்ளியதுதுகோழி யுகந்திடுகிரந்திநாயன் நள்ளிலையென்றோர்நாழி நல்லெண்ணெய்நாழிகூட்டி தெள்ளியமிளகுகோட்டந் திகழிலவங்கமேலம்,
ஏலுநற்கராம்புவாசி யேதமில்கடுக்காயுள்ளி சாலுநற்சந்தம்மஞ்சல் சாற்றுதிற்பலிகச்சோலம் நாலுசெவ்வள்ளிசுக்கு நாகைவெண்காயமிந்து காலுலாமரத்தின்மஞ்சல் கதித்தசாதிக்காய்கூட்டே.
கூட்டியேகழஞ்சோரொன்றாய்க் கொண்டிடித்தரைத்துவேரு மீட்டியகசாளத்தூறி யியல்புடனாலாநாளில் நாட்டியபதம்வடித்து நற்சிரம்பொருத்திமூழ்கில் நீட்டிநெஞ்சடைக்கும்வாதம் நிலைகுலைந்தோடுங்காணே.
நெஞ்சுவாதம்
நெஞ்சினிலடைத்துக்குத்தி நிலைத்துநொந்துளைந்துவேர்த்து கெஞ்சவேபிறம்புமுள்ளுங் கிட்டியேநெருக்கிமிண்டி அஞ்சவேயடைத்துவிம்மி யதிகமாயுவாதிசெய்யும் வஞ்சநெஞ்சுறுவாதத்தின் குணமெனவுகுத்தாரன்றே.
இலிங்காதிதயிலம்
மருவுமாவிலங்கைநொச்சி மன்னுபூமுருங்கைகான்றை பொருவுசித்திரத்தின்மூலி பொற்புறுசிவதைவேரும் தருவுறுமரத்தின்மஞ்சல் சதகுப்பைகடுக்காயுள்ளி திருவுறுமிருசீரேலந் திற்பலிதேவதாரம்.
தார்செறிவிழால்வெட்பாலை தருவிலங்கமோமம் சீர்செறிவெளுத்தல்கோட்டந் திகழ்கடுகரத்தைமஞ்சல் பார்செறிவசம்புகாயம் பகர்ந்திடுசரக்கோரொன்று ஏர்செறிகழஞ்சுவேரு மிசைத்தவவ்வளவுகொள்ளே.
கொண்டுடனரைத்தபின்னர் குறித்தவெட்டையிலம்நாழி மிண்டியபசுப்பால்சந்தம் விட்டுநீவடித்துவார்த்து உண்டுடலெங்கும்பூசி யுரத்துமத்தித்துக்காய்ச்சில் அண்டியநெஞ்சுவாத மலைந்துலைந்தோடுங்கானே.
பூச்சு மஞ்சல்கடுகுசாளிசுக்கு மருவுமுள்ளிபெருமருந்து அஞ்சுகான்றைநொச்சியின்வே ரரைத்தேகொதித்துப்பூசிவரில் மிஞ்சுமுளைவுகுத்துவலி மிகுத்தேபிடரிவாங்கல்திமிர் நெஞ்சிலடைக்கும்வாதமுதல் நில்லாதகன்றுபோய்விடுமே.
ஒறறு மாவிலிங்கையின்வேர்ப்பட்டை மருவியமுருங்கைப்பட்டை மேவியபழத்தேங்காய்ப்பூ மிகுநொச்சியிலையுங்கூட்டித்
97

Page 60
செகராசசேகர வைத்தியம்
தாவியேயிடித்துக்கட்டித் தனியவித்தொற்றுப்போடில் பாவியநெஞ்சுவாதம் பறந்திரிந்தோடுங்காணே.
முதுகுவாதம்
முதுகினில்விறைத்துக்குத்தி முடக்கதாய்க்கடுத்துவீங்கிக் கதுமெனவுளைந்துமிண்டிக் கடினமாயுவாதிசெய்யும் விதுநிகர்வதனமின்னே விளம்பிடிற்சிலநாணிற்கும் அதிகமாமுதுகுவாதஞ் செய்குணமறையுங்காலே.
எண்ணெய்
பொருவில்மாவிலங்கைகொன்றை புகன்றிடுசிவதைபுங்கு தருவினேர்முருங்கைநொச்சி தனியுவாயெருக்கின்வேரும் மருவுசீரகமவெள்ளுள்ளி மஞ்சலிந்துப்புக்கோட்டம் திருவின்மாமரத்தின்மஞ்சல் திகழ்கடுகரத்தைகாயம்.
காய்க்குநன்மிளகுசுக்குக் கரியசீரகம்வெட்பாலை சாய்க்குமநற்சரக்கும்வேருஞ் சரியெடுத்தரைத்துக்கூட்டி வாய்க்குநல்லெண்ணெய்நாழி வடித்துடன்பொருத்திப்பூசில் தேய்க்குவன்முதுகுவாதம் திறல்குறைந்தோடுங்காணே.
பாரிசவாதம்
ஒருபுசங்கைகால்நாரியுற்றிடுமுகம்வாய்நாக்கு மருவுறவுளைந்துகுத்தி வசமறவிறைத்துச்சோர்ந்து வெருவுறநடுக்கிக்காய்ந்து விழுத்துமோர்பாகந்தன்னைப் பொருவுபாரிசத்தின்வாதஞ் செய்குணம்புகலுங்காலே.
காலுடன்கையும்வீங்கிக் கஞ்சியுமறந்துநாவும் மேலுடன்நடுங்கிமிண்டி மெத்தவேயதிகமாகில் சேலுடனிகலுங்கண்ணாய் செலுத்துநாட்செவ்வைவாரா நாலுடனாறுதிங்கள் நலக்கியேகொல்லுந்தானே.
மாவிலங்கமெண்ணெய்
பன்னுமாவிலங்கைநொச்சி பருங்கொடிவேலிபுன்கு துன்னுகாற்றோட்டிபுன்னை தூயகல்மிரிசுதில்லை மன்னுநன்னாரிதோடை மல்லிகைகுதிரைவாலி உன்னுமாயிலிகுருந்து யுவாயுடன்செங்கத்தாரி.
தார்செறியெருக்குக்கோரை சாயவேர்சதுரக்கள்ளி சீர்செறிவாதங்கொல்லி சிவதைமாமுருங்கைகான்றை கார்செறியாடாதோடை களப்பன்னையெருமைமுல்லை பார்செறியமுக்கிராய்வேர் பகரிருவேலிகொள்ளே.
கோள்ளிலாமிச்சைசெப்பு நெருஞ்சிமுட்குமிழ்குறிஞ்சா வெள்ளிலாவரைமுருக்கு எலுமிச்சைசிவனார்வேம்பு முள்ளிலாமூன்றுமட்டி முதிர்சிறுகுருந்திருப்பை தள்ளிலாதிவையோரொன்று தானரைமரக்கால்கூட்டே.
98

செகராசசேகர வைத்தியம்
கூட்டிடுஞ்சரக்குக்கோட்டம் கோதில்வாலுழுவைதிற்பல் நாட்டுவேம்பாடலுள்ளி நல்லசீரகம்வெட்பாலை, காட்டதிமதுரமேலம் மஞ்சிட்டிகடுக்காய்நெல்லி ஈட்டுநன்மிளகுதான்றி ஏதமில்வசம்பரத்தை. 6
அரத்தநேரிலவமேல மடுத்திடுதாரம்மாஞ்சில் உரத்தநற்கடுகுரோணி யோமமேகொத்தமல்லி நிரைத்தவேர்க்கொம்புதேக்கு நீண்டசெவ்வள்ளிகாயந் திரத்தநற்கடுகுஅத்தித் திற்பலிவிழால்கச்சோலம். 7
ஒலமார்தேவதார முரத்திடுவெளுத்தல்மஞ்சல் சீலமார்கருஞ்சீர்சாளி செண்பகமாவின்பூவும் கோலமார்சதத்திக்குப்பை கொண்டிடுஞ்சரக்கோரொன்று சாலவோர்கழஞ்சுவாங்கித் தானிடித்தரைத்தொன்றாக்கே. 8
ஆக்கிநற்றிலத்திலெண்ணெய் அளந்துமுன்னாழிவிட்டு தாக்கிவேரவித்ததண்ணிர் தானறுநாழிசேர்த்து தேக்கிநற்பசுப்பாலசந்தந் திருந்தவிட்டுறிக்காய்ச்சி நீக்கிநாலிரண்டாம்நாளில் நிச்சயம்வடித்துவாரே. 9
வார்த்துடன்பொருத்திநன்றாய் மத்தித்துப்பூசிக்காய்ச்சி ஆர்த்துடனருந்திமூழ்கி லடுத்தபாரிசத்தின்வாதம் ஏர்த்திடுகிரந்திவாத மேதமார்முடக்குவாதம் சீர்த்திசெய்கதிர்முன்கண்ட பனியெனச்சிதறிப்போமே. 10
ஈரல்வாதம்
வருந்திடவுடலைமேலே வலித்துடன்திரட்டிவாங்கி பொருந்திடவடைத்துஈரற் குலைதனிற்பொறுக்கக்குத்தி அருந்திடவன்னஞ்செல்லா தடுத்திடுமுதுகுநாரி இருந்திடவிறைத்துமிண்டி யேறிடுமீரல்வாதம். 1
எண்ணெய்
மன்னுமாகாணிநொச்சிவாதங்கொல்வி
மாவிலங்கைகான்றைவட்டுக்குதிரைவாலி துன்னுமாயிலிமுருங்கைவாகைபுரிங்கு
தூதுவளைகல்மிரிசுசிவனார்வேம்பு பன்னுமிந்தவேரனைத்தும்பிடுங்கிச்சீவிப்
பரிவாகவிடித்தவித்துநாலாநாளில் சொன்னபடிபிளிந்தெடுத்துவடித்தநீரில்
சுகமானதிலதயிலநாழிவார்த்தே. 2
வார்த்தகசாளத்திலிடுசரக்குக்கோட்டம்
வசம்புசதகுபபையுள்ளிமிளகரத்தை ஏர்த்தமஞ்சல்கடுகேலந்தேவதார
மியல்வானபெருங்காயம்விளால்வெட்பாலை கூர்த்தவிருசீரகம்திற்பலிவேர்க்கொம்பு
கொத்தமல்லிவெளுத்தல்மரமஞ்சலிந்து சீர்த்தசரக்கொன்றிரண்டுகழஞ்சுவாங்கிச்
சிறக்கவிடித்தரைத்ததனைக்கரைத்துக்காய்ச்சி. 3
99

Page 61
செகராசசேகர வைத்தியம்
காய்ச்சியெண்ணெயெட்டாநாள்மந்தபாகங்
கருதிவடித்துடன்பொருத்தியருத்திமூழ்கிற் கூச்சமுறுதுடைவாதங்கபாலவீச்சுக்
குத்துளைவினுடனிரல்வாதஞ்சூலை பாச்சுவலிபடர்வாதகாசம்நெஞ்சிற்
பரந்தகுத்துத்திமிர்வாதமுடக்குவாதம் ஒச்சுகதிரொளிநிறைக்குமுதயபாணு
வுற்றபனியெனவனைத்துமொதுங்கிப்போமே.
குடல்வாதம்
உடலிடையோடிமீண்டு முளைந்துகால்சந்துகைகள் குடலிடைகூப்பிட்டோடிக் குமிறிடுங்குடலிற்றங்கும் கடலிடைத்தரங்கமென்னக் கலக்கிடும்நலக்கிநிற்கும் நடமிடுங்குடல்வாதத்தின் குணமெனநவின்றதாமே.
குடலில்வலிக்குங்காலுளையும் குமிறியுளையும்மந்திக்கும் உடலிலடங்கியோடிநிற்கும் ஒருக்காலன்றிப்புரண்டிருக்கும் கடலிற்றரங்கமதுபோலக் கதிக்குமூடேவாதைசெய்யும் திடலின்பெருத்தவறல்போலச் சிதைக்குங்குடலின்வாதமிதே.
உதரசீவனிஎண்ணெய்
கொன்றைசாறணைசிவதையமுக்கிராய்வேர்
கூறுபெருமருந்துநிலவேம்பேரண்டம் ஒன்றொருவேரொருபலநேர்பிடுங்கிச்சீவி
யொக்கவிடித்தவித்ததண்ணிர்சரக்குக்கோட்டம் நின்றமரமஞ்சல்பெருங்காயந்திற்பல்
நிலவினுப்புக்கடுக்காய்கெந்தகம்வேர்க்கொம்பு நன்றுளசீரகம்வசம்புகருஞ்சீர்மஞ்சல்
நல்லசரக்கொன்றிரண்டுகழஞ்சுவாங்கே.
வாங்கியுள்ளிதனையுரித்தபதினைந்தோடும்
வகுத்தசரக்குடனிடித்துஅரைத்துச்சேர்த்துத் தேங்கியசிற்றாமணக்கெண்ணெய்நாழி
சிறக்கவிட்டுமந்தபதம்வடித்தேயுண்ணிற் தாங்குமுடல்வாதமுடன்கெற்பவாய்வு
தறுகாதுசலவடைப்புக்குன்மஞ்சூலை ஓங்குசிவதருமநினைந்துதவான்செல்வ
மொழிப்பதெனஓடியொளித்தொதுங்குந்தானே.
பற்பம் கெந்தகமிரதமேலங் கேடில்திற்பலிவேர்க்கெம்பு அந்தரைபொடிநற்காந்த மரும்பெருங்காயமுள்ளி இந்தசமோதநற்சீ ரேதமில்மரத்தின்மஞ்சல் முந்திடுமிளகிருஞ்சீர் முக்கழஞ்சொன்றுவாங்கே.
வாங்கியேயிடித்துநன்றாய் வலியநற்றகரைச்சாற்றில் நீங்கிடாதரைத்தெடுத்து நிலவியதேனிலுண்ணில்
100

செகராசசேகர வைத்தியம்
ஓங்கியகுடலில்வாத முற்றிடுங்குன்மஞ்சூலை ஏங்கியேயோடுமென்று முனிவருமியம்பினாரே. 6
நாரிவாதம்
நாரியிற்பிடித்துக்குத்தி நலியவேகொதிப்புமுண்டாய்ப் பாரியவிடுப்புச்சந்து பகர்ந்திடில்மிண்டிப்பூட்டி வீரியநடைகொடாது விறைத்துடல்புண்போல்நோவாம் சீரியநாரிவாதஞ் செய்குணஞ்செப்புங்காலே. 1.
மருந்து
மஞ்சலெண்ணெய்மாலிங்கமெண்ணெய்பூசி
மத்தித்துப்பொருத்தியுள்ளுமருந்திநாளும் விஞ்சுபெருமருந்துநொச்சிவாதங்கொல்லி
விளம்பியமாவிலங்கமிலையவித்துவார்க்கில் மிஞ்சுபிடிப்புளைவுகுத்துவிறைப்புச்சூலை
மிகுத்தபிரமியவாதம்நாரிவாதம் அஞ்சியகன்றோடுமெனவுரைத்தாராயுள்
வேதநிலைதனையறிந்தவறிஞர்தாமே. 2
பச்சரிசிதனிற்றேங்காய்ப்பால்விட்டாக்கிப்
பருத்தவாழைக்குருத்திற்பொதிந்தேயொற்றி நிச்சயமாய்நொச்சியிலைவாட்டிக்கட்டி
நீண்டசிறுகுறிஞ்சியினற்களிசேர்த்துண்ணில் அச்சமறமாறுமதிற்றிராதென்னி
லடுத்தெருக்குப்பிரண்டைசிற்றாமணக்கவித்து உச்சிதமாய்க்குழிவேதுவிடுவீராகில்
ஓடியொளித்திடும்நாரிவாதந்தான்ே. 3
உட்குழிவாதம்
சந்தினுட்குழியிற்குத்திச் சடுதியாய்முடக்கிநொந்தே யுந்தியிற்கடுத்துநாரி யுளைந்திடுமெழும்பொணாது முந்திரவனையகூந்தல் முகிண்முலைக்கமலமினனே அந்தவுட்குழிவாதத்தின் குணமிதென்றுரைத்தாரன்றே. 1.
அன்றியுங்கெர்ப்பமுண்டா யாறினிலேழிலெட்டில் ஒன்றியவுபாதிபண்ணி யுடன்பிள்ளைப்பெற்றால்மீளும் சென்றதில்மிளாதென்னிற் செப்பினார்குளையின்வேது பொன்றமாவிலங்கமெண்ணெய் பூசினுமகலுந்தானே. 2
சந்துவாதம்
சந்தினிற்பொருத்திற்குத்திச் சடுதியாய்விழுத்திவீங்கி நொந்துடன்திரும்பொண்ணாது நுவன்றிடிலுளைந்துவீங்கும் சுந்தரமயினேர்சாயற் றுடியிடைக்கமலமின்னே பந்துநேர்சந்துவாதஞ் செய்குணம்பகருங்காலே. 3
சந்தைப்பற்றிவிடாமனின்று சாய்நேரத்தின்மிகுந்துளைந்து நொந்தப்படியேயாள்வற்றி நோக்கங்கெட்டுத்தாதுப்கி
101

Page 62
செகராசசேகர வைத்தியம்
இந்தப்படியேயிடறுபண்ணு மிதுவுமரிதுமாறாது வந்தப்படியேமயக்கமுறும் வருத்துஞ்சந்துவாதமிதே.
மஞ்சலெண்ணெய்
தூதுவளைமுருங்கைநொச்சிவாதங்கொல்லி தூயமாவிலங்கைகொடிவேலிகான்றை மீதுவளர்பெருமருந்துசிவனார்வேம்பு
மிகுத்தகாவிளைசிவதைசிற்றேரண்டம் தாதுவளர்குருந்தெருக்குத்தனியோரொன்று
சரியிடித்துஅவித்ததண்ணிரதுமுந்நாழி ஒதுபசுமஞ்சளின்சாறதுமுந்நாழி
யுவந்தசரக்கதிமதிமதுரந்தேவதாரம்.
தார்செறிசீரகங்கோட்டமுள்ளிமஞ்சல்
சதகுப்பைபெருங்காயம்விளால்வெட்பாலை சீர்செறிசுக்கரத்தைவசம்பகில்கச்சோலந்
திற்பலிலவங்கமரமஞ்சளேலம் பார்செறிநற்கடுகுலுவாக்கடுகுரோணி
பகர்கடுக்காய்வெளுத்தல்சிறுமூலமிந்து நேர்செறியொன்றிருகழஞ்சுவாங்கிநன்றாய்
நேர்ந்தரைத்ததனில்விடுதேங்காய்நெய்யே.
காய்க்குமெள்ளிணெண்ணெய்சிற்றாமணக்கிணெண்ணெய்
கதிக்கவொன்றோர்நாழிவிட்டுக்கசாளமாக்கி வாய்க்குமதன்வேரவித்ததண்ணிர்ச்சாறு
வகுத்தபடியொன்றாக்கிநாலாநாளில் தீய்க்குமந்தபதம்வடித்துச்சிரத்தும்வார்த்துச்
செப்பியசந்தினும்பூசிமுழுகநாளும் சாய்க்குமழல்வாதமுடன்சந்துவாதந்
தறுகாதுமுடக்குளைவுதணிந்துபோமே.
கழல்வாதம்
சீர்பெறுபீசம்வீங்கித் திறல்விதையுள்ளேவாங்கிச் சோர்புறவடசிக்குத்தித் துயருறவலித்துமிண்டும் கார்புரைக்கூந்தல்மின்னே கழல்வாதகுணந்தானிது தீர்வுறவரியதென்றே செப்பினார்முனிவரானோர்.
ஏரண்டத்தயிலம்
சேருமாவிலங்கைநொச்சிமுருங்கைபுன்கு
திருந்துகாற்றோட்டியுவாயாடாதோடைத் தூரிவையொன்றிருகழஞ்சுமிளகிந்துப்புத்
தூயபெருங்காயமஞ்சல்கடுக்காய்சுக்கு சீரியதிற்பலியிவையொன்றிருகழஞ்சு
செவ்வாலங்கொட்டையைந்துள்ளிமூன்று பாரியசிற்றாமணக்கினெண்ணெய்நாழி
பருத்தகள்ளிப்பால்கழஞ்சுமூன்றுகூட்டே
102

செகராசசேகர வைத்தியம்
கூட்டியபின்வேர்சரக்கரைத்துச்சேர்த்து
குறித்ததினத்தெண்ணெயிற்கசாளமாக்கி காட்டியநாலாநாளில்வடித்தளண்ணெய்
காலமிரண்டினுங்கழஞ்சரயருந்துவீரேல் ஈட்டியதொர்கழல்வாதமண்டவாய்வு
இளகாதகுன்மவலிபக்கவாய்வு நாட்டியமன்றினிற்கதைபொய்த்துரைப்போன்செல்வ
நடுநடுங்கியகல்வதெனநலிந்துபோமே.
அண்டவாதம்
வயிறதுபொருமிக்குத்தி வலித்துவந்தடைசிமிண்டித் துயருறமலசலத்தை மறித்துடன்சோகமாகி அயர்வுறவுளைந்துநாரி யதிகமாய்க்கடுத்துவேர்க்கும் உயர்வுறுமண்டவாதத் தொன்றியகுணந்தானிதே.
மருந்து
சாறணைக்கிழங்கிந்துப்புச் சாற்றுவெள்ளுள்ளிசுக்கு சீறுசித்திரநன்மூலி செம்பொனின்தாரம்வாளம் ஊறியசிற்றேரண்ட வெண்ணெயிலெரித்தேயுண்ணில் கூறியவண்டவாதங் குலைந்துடனகலுந்தானே.
காயம்
முருக்கினிற்பட்டைச்சாறு முதிர்ந்தசாறணையின்சாறு திருக்கிளர்கழற்சிக்கொட்டை சிறந்தவேரண்டவெண்ணெய் மருக்கிளர்பலம்வெள்ளுள்ளி மருவியசுக்குக்கொள்மா உருக்கிளர்காயமாக்கி உணவண்டவாதம்போமே.
கழலேறுவாதம்
அண்டியேவயிற்றினொந்து அடசியேகொழுவிக்குத்தி மிண்டியேவிரையிரண்டும் மேலுறவிழுத்துவாங்கிக் கொண்டுடனுயரவேறிக் குத்தியேமயக்கிச்சோருங் கண்டிடுங்கடியவேகக் கழலேறுவாதமாமே.
கொண்டிடுங்குடலிற்றங்கிக் குறைந்தொருவிரையிற்றோன்றும் அண்டியவிரைதானொன்றை வலித்ததையுடலுள்வாங்கும் பண்டுதானின்றநூலின் படியிலேகுணத்தைச்செய்யும் கண்டுகொள்ளண்டவாதங் கழலேறுவாதமாமே.
எண்ணெய்
வில்வமாவிலங்கைநொச்சி விரைசெறிசிவதைகான்றை கல்லுவாய்வாதங்கொல்லி கருங்கொடிவேலிபுன்கு
சொல்லுமாமுருங்கையோடு தூயதோரிரண்டுமட்டி நல்லதோர்.நெருஞ்சியாடு நல்கியேதின்னாப்பாலை.
103

Page 63
செகராசசேகர வைத்தியம்
பால்செறிபொன்னாங்காணி பகருமீசுரநன்மூலி கால்செறியிவையின்வேர்கள் கலந்திடித்தவித்தநீரில் வால்செறியிளநீர்வெள்ளை யாட்டின்பால்வகுத்தோர்நாழி மால்செறிகள்ளிப்பாலும் மதிக்கவெண்கழஞ்சுகூட்டே.
கூட்டுமாமணக்கிணெண்ணெய் குறித்தொருநாழிசேர்த்து நாட்டுதிற்பலியிந்துப்பு நல்லதிற்பலியின்மூலம் ஈட்டுநன்மிளகுசுக்கு இயல்வுடைதேவதாரம் காட்டுநற்கடுக்காய்மஞ்சல் கடுகுள்ளிவசம்புநற்சீர்.
சீர்பெருங்காயமத்தித் திற்பலிசரக்கோரொன்று தரரிருகழஞ்சுவாங்கித் தனியிடித்தரைத்திட்டுறி ஒரொருநாலுநாளில் வடித்துடனருந்திவந்தால் ஏர்கழலேறுவாத மிரிந்துடனகலுங்காணே.
சூடு
விரையேறுகழல்வாதமிண்டியேறி
மிகுத்திழுத்துவலித்தடைசிமேலேகுத்தி லுரையேறுகாற்சின்னவிரலடுத்த
வுறுமொழியிற்சத்திரத்தாற்சுடுகவின்னும் அரையேறுகழலிரண்டுபுறமுமாகி
லடுத்தவிருபதவிரலில்மொழியிற்சுட்டுக் குரையுேறுகாரமிடிற்பக்கவாய்வு
குறித்தகழல்வாதமுதற்குலைந்துபோமே.
தண்டுவாதம்
தண்டினிற்கடுத்துக்குத்தித் தடியெனவிறைத்துவீங்கிக் கொண்டினிதுளைந்துசிறிக் கோதுறவளைத்துவாங்கும் கண்டினைக்கனியைப்பாகைக் கதித்திடும்வசனமின்னே விண்டிறற்றண்டுவாதக் குணமெனவிளம்பினாரே.
மருந்து பொருந்துநற்படுவன்பத்ரி பொலிவுளபசுவின்வெண்ணெய்
திருந்துநற்சிறியகீரை சேர்த்துடன்பூசமாறும் அருந்துநன்முசுட்டைபாலி லவித்துடனடுக்கமாறும் மருந்துமாவிலங்கமெண்ணெய் பூசவும்மாறிப்போமே.
குறங்குவாதம் நெறித்திடுங்குறங்கினின்று நிலைபெறவுளைந்துகுத்தி செறித்திடுங்கடுத்துவீங்கித் திமிர்த்துடன்பிடித்துநோவாம் வெறித்திடுகமலநேரும் விகCதமுகத்துமின்னே குறித்திடுங்குறங்குவாதஞ் செய்குணங்கூறுங்காலே.
துன்னுமாவிலங்கமெண்ணெய் துகளறப்பூசிக்காய்ச்சி மன்னுநற்றில்லைவீழ்த்தும் மருவியசருகின்வேது
104

செகராசசேகர வைத்தியம்
உன்னுநன்மஞ்சலெண்ணெ யுகந்திடும்வாதவெண்ணெய் பன்னுமிவ்வெண்ணெய்பூசிற் பறந்திடுங்குறங்கின்வாதம்.
எண்ணெய்
பெருமருந்துகொடிவேலிவேம்புநொச்சி
பேரவுரிமுருங்கையெருக்கலைவேர்கான்றை தருமருந்துதழுதாளையமுக்கிராய்வேர்
சாற்றுமிவையனைத்தினும்வேர்பிடுங்கிச்சீவித் திருமருந்துமாவிலங்கமிலையின்சாறும்
திருந்துமதன்வேர்ச்சாறும்பட்டைச்சாறும் அருமருந்தொன்றிவைசாறுமடுமுன்னாழி
அடுத்தவெள்ளிலெண்ணெய்கொத்திற்கசாளங்கூட்டே. 3
கூட்டுகசாளத்திலிடுஞ்சரக்குக்கோட்டம்
கோதில்மிளகுடன்வசம்புவெளுத்தலுள்ளி நாட்டுசதகுப்பைமரமஞ்சல்லவங்கம்
நற்கடுகுசவற்காரம்பெருஞ்சீரேலம் ஈட்டுசுக்குப்பெருங்காயம்கடுகுரோணி
இந்துப்புக்கடுக்காய்திற்பலிகச்சோலங் காட்டுநவற்காரமுடன்சரக்கோரொன்று
கதித்தவிருகழஞ்சுகொண்டரைத்துச்சேர்த்தே.
சேர்த்தமருந்தினைக்கரைத்துக்கசாளத்தூற்றிச்
செப்பியநாற்றினமூறிக்காய்ச்சிநன்றாய் ஏர்த்தமந்தபதம்வடித்துச்சிரத்துமுள்ளு
மிதமாகப்பூசியுடன்முழுகத்திரும் கூர்த்தவுளைவாதமுதற்குறங்குவாதம்
குத்துளைவுதுடைவாதம்முழங்கால்வாதஞ் சீர்த்தபிறவிசைவாதம்முடக்குவாதஞ்
சிதறியகன்றோடுமெனச்செப்புநூலே.
தொடைவாதம்
சோருறக்கவானிற்குத்திச் சுருக்கியேதிமிர்ந்துவீங்கிப் பாருறநடைகொடாது பரந்துடனுளைந்துநோவாம் நேருறுகயலைநேரு நேத்திரவெழிலணங்கே சீருறுதொடைவாதந்தான் செய்குணஞ்சிறந்துகாணே.
மருந்து
நிலத்தினைமெழுகிநன்றாய் நேர்புளிப்பொருக்கைத்தட்டி வலத்தினிலெரித்துவந்த சாம்பரைவழித்தெடுத்து
நலத்தினூமத்தஞ்சாறு நாழிநேர்பிளிந்துபின்னர் குலத்தினிலிரச்சுண்ணாம் பதனையுங்குளைத்துப்பூசே,
பூசியேமுன்றாநாளில் புகழ்குழைவேதுவார்க்கில் வீசியதொடையின்வாதம் விட்டகன்றோடுமன்றேல் வாசுமாவிலங்கமெண்ணெய் வாதராட்சதனையுள்ளே கூசிடாதருந்தியெண்ணெய் பூசவுங்குணமாமன்றே.
105

Page 64
செகராசசேகர வைத்தியம்
முழங்கால்வாதம்
வருந்தவேமுழங்கால்வீங்கி வலித்துநொந்துளைந்துகுத்திப் பொருந்தவேமுடக்கிமிண்டிப் போதவேநடைகொடாது திருந்துவேல்கணைமானம்பு சேலெனமிளிருங்கண்ணாய் இருந்தயர்முழுங்கால்வாதக் குணமிதென்றியம்பினாரே.
மருந்து
ஆருமாவிலங்கமெண்ணெய் அடுத்திடுவாதளண்ணெய் தீரும்நீயூசிக்காய்ச்சிற் றிருந்திடாதென்னிற்கொம்பு
கூரவேகொத்திவைத்துக் குளிகைசேர்த்திதரம்பூசி லோழிமுழங்கால்வாத மிளகிவிட்டோடுந்தானே.
தானத்திற்றிராதென்னிற் றனித்திடுமிதரபற்பு மானத்திற்றிராதென்னி லடுத்திடுமுழங்கால்தன்னில் ஊனத்திற்பொருத்துநாலு உற்றதினாலுசூடு கானத்திற்கூட்டுக்காரம் போடிடக்கலைந்துபோம்ே
கணைக்கால்வாதம்
திருமிகுகணைக்கால்வீங்கித் திமிர்த்துநொந்துளைந்துகுத்தித் தருமிகவிறைத்துமிண்டித் தண்டித்துநடைகொடாது உருமிகுகயல்வேலம்பு உளையெனுநயனமின்னே பொருமிகுகணைக்கால்வாதஞ் செய்குணம்புகலுங்காலே.
மருந்து
பசுவினற்பாலில்நொச்சிப் பசுமிலையவித்துக்கட்டில் வசமதாய்த்தீருமன்றேல் வகுத்தமாவிலங்கமெண்ணெய் அசமறப்பூசிக்காய்ச்சி லகன்றிடுமகலாதென்னில் வசமறக்கொத்திநன்றாய் மத்திக்கத்திருந்தானே.
பிறண்டைவாதம்
பிறண்டையிற்கடுத்துக்குத்திப் பிடித்துறவுளைந்துவீங்கிக் குறண்டியேதிமிர்த்துவாங்கிக் கூச்சமாய்நடைகொடாது மிறண்டியவயில்வாளம்பு மிளிரொளிநயனமின்னே புறண்டியபிறண்டைவாதஞ் செய்குணம்புகலுங்காலே.
மருந்து பொருந்துமாவிலங்கமெண்ணெய் பூசியேதினமுங்காய்ச்சித் திருந்துறுதில்லம்வேதிற் றீர்ந்திடுந்தீராதென்னில் வருந்துறக்கொத்திநன்றாய் வசமுறவிதரம்பூசி லிருந்திடுபிறண்டைவாத மிளகிவிட்டோடுங்காணே.
அசலவாதம்
இருபதந்திமிர்த்துமிண்டி யிருபெருவிரலைவாங்கி உருமிகவுயரவேறி யுற்றிடுங்காசம்போல
வெருவுறநடுக்கிப்பின்னர் மெய்சிலிர்ப்பெறியும்வேர்க்கும் மருவுறக்கிறுகிறுத்து மயக்கிடுங்கோபமுண்டே.
106

செகராசசேகர வைத்தியம்
உண்டின்னுமனேகபேத முயர்குணங்கனவுண்டாகும் மிண்டுடன்வெறிபோற்பேசும் மீளவுமறிவுண்டாகும் கண்டிடுமிந்தவாதங் கடுந்துபின்நெடுநாள்மீளும் கொண்டிடுமசலவாதஞ் செய்குணங்கூறுங்காலே. 2
மருந்து
இக்குணமிருந்தபோதே யியற்றுமுக்கூட்டிலெண்ணெய் மிக்கநற்சன்னிவாத வெண்ணெயும்வார்க்கமீளும் தக்கதோரிவையின்மூழ்கிற் றாணிவைதணியாதென்னில் உக்கமாரிதற்குச்சொன்ன எண்ணெயையுணர்ந்துசெய்யே. 3
வாதராசதைலம
பெருமருந்துகான்றைநொச்சிசிவனார்வேம்பு
பெருஞ்சிவதைமாவிலிங்கணிஞ்சில்நிம்பம் தருமருந்துமுருங்கைதில்லைசெங்கத்தாரி
சாறணைகாக்கணங்கொவ்வையெருக்குத்தான்றி திருமருந்துகிலுகிலுப்பையமுக்கிராய்வேர்
சிங்கிலிவெள்ளறுகுமுள்ளியலரிகள்ளி அருமருந்துகொடிவேலிசிறுகுரட்டை
ஆதளையாடாதோடையவுரிசூரை.
சூருமுத்தமாகாணிகுறிஞ்சா(பூ)மத்தை
சொன்னகருவேம்பிவைவேர்பிடுங்கிச்சீவி ஆருமுற்றகோசலநீரதுமுந்நாழி
யளந்ததண்ணீர்முன்னாழிவிட்டவித்தே சோருமந்தமருந்தைநன்றாய்வண்டுகட்டிச்
சொன்னபடிவெயிலில்வைத்துப்பின்பவித்த சேருமிலைச்சாறுநொச்சிவரதங்கொல்லி
செப்பியகையாந்தகரையாடாதோடை. 2
தோடுலவுகார்த்திகைப்பூக்கொடிசமூலம்
தூயவேலிப்பருத்திசதுரக்கள்ளி கோடுலவுபாவட்டையுடன்பூமத்தை
கொள்ளிவையினிலைச்சாறுமொன்றோர்நாழி பாடுலவுபாண்டமதில்வார்த்துநன்றாய்ப்
பரிந்துவண்டிலவித்துப்பின்வெயிலில்வைத்தே காடுலவுமுசிற்றுமுட்டைபச்சைப்பாம்பு
கட்டெறும்புகோழிமுட்டைபத்துவாங்கே. 3
வாங்கியதிற்பூனாகம்துங்குவெளவால்
வகுத்தகொள்ளிவாலெறும்பீயிதிவைகளெல்லாம் ஒங்குமிலைச்சாற்றில்விட்டவித்தபின்பு
ஓராறுதினம்வெயில்வைத்ததைப்பிளிந்தே தேங்கவந்தக்கசாளமதில்விடுநல்லெண்ணெய்
திகழிலுப்பையாமணக்குப்புன்குவேம்பு வாங்கியெண்ணெயைஞ்சுமந்தக்கியாழஞ்சேர்த்து
மறுபடிவேரவித்ததண்ணீர்வடித்துக்கூட்டே. 4.
கூட்டியதிலிடுகொத்தமலியரத்தை
குலமதுரங்கராம்புவசுவாசியேலம்
107

Page 65
செகராசசேகர வைத்தியம்
நாட்டுமுள்ளிமஞ்சலிலவங்கந்தான்றி
நல்மிளகுவெட்பாலையகில்வேர்க்கொம்பு
காட்டடவிகச்சொலமுலுவாநெல்லி
கடுகுவிளாலரிசிதுத்தம்வசம்புமாஞ்சில்
ஈட்டுமிருசீரகம்வெட்பாலைகுப்பை
இதரஞ்சிற்தேக்குதிற்பல்சிற்றரத்தை.
அருத்துவாலுழுவையிலவங்கம்மாயா
அசமோதங்குங்குமப்பூதேவதாரம் உருத்தகோரோசனைகெந்தகம்மஞ்சிட்டி
யுடன்வெளுத்தல்சண்பகஞ்செவ்வியஞ்செவ்வள்ளி பருத்தவத்திதிற்பலிசாதிக்காயிந்து
பகர்கடுகுரோசனையொன்றிருகழஞ்சு வருத்தமறவாங்கியரைத்துக்கரைத்தே
வடிக்கமுதற்கருங்கோழியிரத்தம்நாழி.
நாழிபழத்தேங்காய்ப்பால்விட்டுக்காய்ச்சி
நல்லமந்தபதம்வடித்துச்சிரத்தும்வார்த்து கோழிலுடல்முழுதுநன்றாய்ப்பொருந்திக்காய்ச்சிக்
குறித்தவெட்டாநாள்முழுகத்தீர்வியாதி கேளில்பெருவாதமுடனசலவாதங்
கெடுமுடக்குவாதமுடன்கிரந்திவாதம் சூழில்பிறவிசைவாதங்குத்துவீச்சு
சூனியம்பேய்பிசாசுமுதற்றொலைந்துபோமே.
உள்ளடிவாதம்
வருந்துறவுள்ளங்காலை வலித்துறவுளைந்துவாங்கிப் பொருந்துறத்திமிர்த்துக்குத்திப் பொருக்கெனவிறைத்துநோவாம் மருந்தினைக்குயிலைப்பாகை மருட்டியவசனமின்னே திருந்துமுள்ளடியின்வாதஞ் செய்குணஞ்செப்புங்காலே.
மருந்து
மாவிலங்கம்பட்டையுடன்முருங்கைப்பட்டை மதிக்கவிடித்தடுக்கநன்றுமாறாதாகிற் றேவிலங்குமாவிலிங்கமெண்ணெய்பூசித்
திகழ்வேதுவிடமாறுந்தீராதென்னிற் கோவிலங்குபுகையூட்டிக்காலைக்கட்டிக்
குறித்திதரபற்பமுண்ணக்குணமாமன்றேற் றாவிலங்குமஞ்சலெண்ணெய்காலிற்பூசித்
தளுக்கிவரத்தணிந்தேகுமடியின்வாதம்
குதிவாதம்
கொதித்திடுங்குதியிற்குத்திக் குமிறிடுங்குத்துநோவாம் மிதித்திடினடைகொட்ாது மிண்டியேதிமிர்த்துவீங்கும் மதித்திடுமயில்வாளம்பு மாவடுநிகருங்கண்ணாய் விதித்திடுங்குதிவாதத்தின் குணமெனவிளம்பினாரே.
108

செகராசசேகர வைத்தியம்
மருந்து
செங்கல்லையெடுத்துநன்றாய்த் தீயெனச்சிவக்கக்காய்ச்சி அங்கெருக்கிலையேழிட்டு அதன்மிசைமிதித்துநாளுந் துங்கமார்பெரியகோடைக் கிழங்கினைச்சுட்டுக்கட்டப் பங்கமார்குதியின்வாதம் பறந்துடனகலுந்தானே.
சறுவாங்கவாதம் குத்திடுங்கடுக்கும்வீங்குங் குமிறிடும்பரந்துநோவாய் ஒத்திடுங்கணக்குமெங்கு முளைந்திடும்விறைத்துவாங்கும் பித்திடுமயக்குஞ்சோரும் பிடித்திடுமெழும்பொணாது கத்திடுங்களையுண்டாகுங் கடுஞ்சறுவாங்கவாதம்.
அங்கமார்பதைத்துநாளு மன்னமுமறந்தாள்வற்றித் துங்கமார்நடைகொடாது துயருறநடுக்கிவீழ்த்துந் தங்கமார்கமலநாணித் தடம்புகும்வதனமின்னே பங்கமாரங்கவாதம் பகர்ந்திடிற்கடினமாமே.
எண்ணெய்
திருந்துளசிமாவிலங்கைசெங்கத்தாரி
திராயலரிகல்மிரிசுசிவனார்வேம்பு பொருத்துமுள்ளிகான்றைநொச்சியாடாதோடை
புன்னைகளப்பன்னைநன்னார்புன்குதோடை யுருத்துசிறுகுறிஞ்சிவில்வம்பங்கம்பாளை
யகத்தியிரண்டுடன்முதிரையமுக்கிராய்வே ருருத்துபெருமருந்துகொடிக்கழற்சியாம்பல்
ஒலுக்கிழங்குபால்முட்ங்கிமுருங்கைதேற்றா. தேற்றுதும்பையாமணக்குக்குருந்துமூலம்
திகழிருப்பைகாலைநந்திசிவதைபாலை ஊற்றுபுழுக்கொல்லிவல்லிக்றணைமட்டி
யுவாயெருக்குநாயுருவிகருவேம்பாயில் ஆற்றுமுருக்கரத்தைகஞ்சாநாயின்வேளை
யனிச்சைமிச்சையொடுவாதமடக்கிமுள்ளி தூற்றுமிலைக்கள்ளியியார்மூக்கிரட்டை
தூதுவளைநிலவேம்புபிரண்டைசார்ணை.
சாறணைகாக்கணங்கொவ்வைகுப்பைமேனி
சாயவேர்குன்றுமணிஎழுமுள்கொட்டி நாறணைசன்னிகள்நாயன்காவிளாய்வேர்
நல்லகொடிவேலியுடன்சிறுகிளாய்வேர் தாறணைமல்லிகையவுரிதனியூமத்தை
சரிபிடுங்கிச்சீவியிடித்தவித்தநீரும் வீறணைமாவிலங்கையுடன்முருங்கைவேரும்
விளம்புபசுமஞ்சளின்சாறொன்றோர்கொத்தே.
கொத்துலவுநொச்சிதழுதாளைமேனி
கோதிலுத்தமாகாணிவெட்பாவட்டை
ஒத்துலவுமிவையினிலைச்சாறோர்நாழி
யுறவவித்தவேர்ச்சாறுமொருமுன்னாழி
109

Page 66
செகராசசேகர வைத்தியம்
முத்துலவுமாமணக்குத்தெங்குபுங்கு
முட்குருந்தினுடனிருப்பையெள்ளுவேம்பு
சித்துலவுமெண்ணெயொன்றோர்நாழிகூட்டிச்
சிறக்கவிட்டுக்கஷாயமதைச்செறியக்காய்ச்சே,
காய்ச்சியதிலிடுசரக்குக்கராம்புவாசி
கார்போகிபெருங்காயம்விழால்வெட்பாலை ஒச்சுமதிமதுரமுள்ளிமிளகுகோட்ட
மோதுமிருசீரகஞ்சாதிக்காயேலம் வீச்சுநெல்லிசெண்பகப்பூதுரிசுதுத்தம்
விளம்பியதிற்பலிமூன்றுவெளுத்தல்மஞ்சல் பூச்சுமிரண்டரத்தைமரமஞ்சல்மாஞ்சில்
புதுவசம்புகச்சோலமுலுவாக்கூட்டே.
கூட்டுகடுக்காய்தான்றிதேவதாரங்
கொத்தமல்லிகடுகுசுக்ககில்தக்கோல மீட்டுபிதிரோசனைகற்கடகசிங்கி
யியவ்வாணபெருமரத்தோல்மலையின்வேலி நாட்டுவெள்ளிலோத்திரங்குங்குமத்தின்பட்டை
நாகம்பூமஞ்சாடிதாளிசபத்ரி காட்டுரோசனைலவங்கங்கோந்தாளங்காய்
கண்டில்வெண்ணெயஞ்சனக்கல்லடவியோலம்.
ஒலமிகுவாலுழுவையடம்பின்கொட்டை
யோதுசதகுப்பையுடன்தகரமொன்றோர் சீலமிகுசரக்கிரண்டுகழஞ்சுவாங்கிச்
சிறக்கவிடித்தரைத்துவிட்டெட்டாநாளிற் சாலமிகுமந்தபதம்வடித்துவார்த்துச்
சரிரமுற்றும்பொருத்தியுள்ளுமருந்திமூழ்கிற் தூலமிகுசறுவாங்கவாதமோடு
துண்டபெருவாதமுதற்றொலைந்துபோமே.
பெரியவாதம்
வருந்திடமுடக்குங்காயும் வசமறவிங்குங்கால்கை யுருத்துடனுளைந்துகுத்தியுவாதியும்பயமுமுண்டாம் கருத்துடனசனஞ்செல்லாக் கடுத்திடுமுறக்கம்வாராப் பெருபதிடும்பெரியவாதஞ் செய்குணமபேசுங்காலே.
பேசிடிற்றடக்கும்நாக்குப் பெருத்திடுங்குளிருஞ்சோர்வும் வீசியேயிழுத்துமிண்டி விறைத்திடுமெழும்பொணாது ஆசிகத்துயரமிஞ்சி யறிவழிந்தயர்வுண்டாங் கூசிடக்களையும்வேர்வுங் குறித்திடிற்கடினமாமே.
மருந்து ஆடுதின்னாப்பாலைநொச்சியிலையோரொன்று
மதனளவுமுள்ளிவசம்பரைத்துக்கூட்டி
நாடுமிளவென்னீரிலுள்ளேகொள்ளில்
நடுங்கியகன்றிடும்பெரியவாதமன்றேற்
1 10

செகராசசேகர வைத்தியம்
காடுறைகையாந்தகரைபசியமஞ்சள்
கதிக்கவிருபலமிடித்திளம்பதத்திற்
கூடுபொட்டளிகட்டியவித்தேயொற்றக்
கொடியபெருவாதமதுகுலைந்துபோமே.
எண்ணெய்
மன்னுகொடிவேலிநொச்சிவாதங்கொல்லி
மாவிலங்கைசிவதைபெருமருந்துகான்றை துன்னுமிந்தவேரனைத்தும்பிடுங்கிச்சீவித்
தொடர்ந்திடித்தவித்ததண்ணீர்சாறுசொல்வாம் உன்னுநொச்சியாடுதின்னாப்பாலைச்சாறு
உரியபசுமஞ்சலெருக்கலைவேர்ச்சாறு மின்னுகையாந்தகரையிலைச்சாறுமற்றும்
விளக்குமெருக்கலைப்பழுத்தற்சாறுமொன்றே.
ஒன்றிவைசாறொருநாழிஎண்ணெய்வேம்பு
ஒதுசிற்றாமணக்கிருப்பையெள்ளுத்தெங்கு நன்றிவையொன்றொருநாழிசரக்குமஞ்சல்
நற்கடுகுபெருங்காயம்விளால்வெட்பாலை துன்றுமிலவங்கமரமஞ்சலேலம்
துலங்குசதகுப்பையுள்ளிவசம்பிந்துப்பு கன்றுசிறுமூலமுடன்தேவதாரங்
கார்போதிகச்சோலங்கடுக்காய்கூட்டே.
கூட்டுமகில்தேவதார்வெளுத்தல்சுக்கு
கொத்தமல்லியிவைசரக்கொன்றிரண்டுவாங்கி மீட்டுமிடித்தரைத்துநல்லகஷாயஞ்சேர்த்து
மிக்கவெண்ணெயெட்டுநாளுறக்காய்ச்சி நாட்டுமந்தபதமதனில்வடித்துவார்த்து
நன்றாகப்பூசியுள்ளுமருந்துவீரேல் காட்டுபெருவாதமுடன்முடக்குவாதங்
கடியசந்துவாதமுதற்கலைந்துபோமே.
பெருவாத சீவினி எண்ணெய்
மன்னுபெருமருந்துநொச்சியெருக்குக்கான்றை
மாவிலங்கைகாற்றோட்டிவாதங்கொல்லி துன்னுநிலக்குமிழ்வாகைசெங்கத்தாரி
தூதுவளையாமணக்குக்குதிரைவாலி மின்னுசிவனார்வேம்புசன்னிநாயன்
மிகுமுருங்கைகருவேம்புசிங்க்லியாயில் தின்னுமெலுமிச்சையுவாயாடாதோடை
சிவதைபுன்குகல்மிரிசோடமுக்கிரார்வேர்.
வேர்முருக்குமாகாணிகண்டங்காலி
வெட்டுவேர்மூன்றுமட்டிகுருந்துமூன்று
சீர்கரம்பைதைவேளையிருப்பைகள்ளி
சிறந்தவட்டுநாரிதில்லைகொடிக்கழற்சி
1

Page 67
செகராசசேகர வைத்தியம்
ஏர்குறிஞ்சிகொடிவேலிபுன்னைபன்னை
எருமைமுல்லையின்பூறல்காக்கணம்வேர்
நேர்பிடுங்கிச்சீவியிடித்தவித்தசாறு
நீண்டவிலைச்சாறுநொச்சியாடாதோடை.
வேறு
தோடுலவுமாகாணியெருக்கலைகல்மிரிசு
தூயமாவிலங்கைதழுதாளைபெருமருந்து நாடுலவுமிலைச்சாறுமொன்றோர்நாழி
நல்லவெண்ணெயாமணக்குக்குருந்துவேம்பு காடுலவுதெங்கிருப்பைபுன்கோரொன்று
கதிக்கவெண்ணெயேழுகொத்திற்கசாளம்போட்டே கோடுலவுசீரகமோர்மூன்றுகோட்டங்
கோதின்மிளகுடன்வெளுத்தல்புகராம்வாசி.
வாசிபெருங்காயமஞ்சல்தேவதாரம்
வசம்புலுவாகொத்தமல்லிவிளால்வெட்பாலை தேசில்மிகுசதகுப்பையவின்வேர்க்கோம்பு
திற்பலிகஸ்தூரிமஞ்சல்சன்னிநாயன் ஆசிலிலவங்கமரமஞ்சளேலம்
அதிமதுரந்துரிசுதுந்தஞ்சாம்பிராணி மாசில்கடுகிரண்டரத்தையத்தித்திற்பல்
மருவுபெருங்குரும்பைகெந்தங்கடுக்காய்கூட்டே.
வேறு
கூட்டுமுள்ளிகற்கடகசிங்கிதிற்பல்மூலம்
குங்குமப்பூதான்றிநெல்லிகடுகுரோசணியும் நாட்டுசிறுமூலமிந்துப்போடுகுக்கில்
நல்லகச்சோலஞ்செவ்வள்ளிசெண்பகப்பூ காட்டுப்பச்சிலைமாஞ்சிலிபீநாறிமிளகு
கார்போகிவாலுளுவைசாளியாவின்பூ ஈட்டுறுமஞ்சிட்டிகுளவிந்தந்தக்கோலம்
இயல்வானவேம்பாடல்வெளுத்தலிவைசரக்கே.
சரக்கிவையொன்றொருகழஞ்சு வாங்கியிடித்தரைத்துச்
சளியாமல்விட்டுறிஎட்டாநாள்வடித்தே பரக்கவைத்துச்சிரமீதுமுள்ளுக்குமருந்திப்
பகர்ந்தவெட்டாநாள்வேதின்முழுகுவீரேல் அரக்குபெருவாதமுடனேமுடக்குவாத
மடுத்தபடர்காசமுடனடர்கிரந்திவாதம் உரக்கநடுக்கியவாதமொடுசன்னிவாத
முற்றதிமிர்வாதமுதலோடியேபோமே.
சன்னிவாதம் கையுங்காலுமொருபக்கங் கனத்துத்திமிர்த்துச்சாவாகி மெய்யுமறவேமெலிந்துவரும் வெதும்பும்நாவுந்தடுமாறும்
செய்யுங்குணத்தைநாடியறி செப்புஞ்சன்னிவாதமென உய்யும்படிக்குவகைகாணோ முணர்ந்தோருரைத்தமொழியாமே.
112

செகராசசேகர வைத்தியம்
மோகித்துமுர்ச்சைபோல மொழியின்றியுறக்கமாகி வேகித்துமயங்கிச்சோர்ந்து விறைத்துடன்கிடந்துழுசிச் சோகித்துக்களையுண்டாகித் துயர்செய்யுமலநீர்சோரும் தாகித்தசன்னிவாதந் தணிந்திடாமரணமன்றே.
அன்றியோர்காலுங்கையு மடுத்துறவிழுத்திச்சாவாய் நின்றிடக்கனத்துமெய்யும் நிலைகெடத்திமிர்த்துச்சோரும் சென்றிடத்தடக்குநாவுந் தீன்மறந்தமர்ந்துகாயும் கொன்றிடுஞ்சன்னிவாதக் கொடுங்குணங்கூறுங்காலே.
கூறினர்சன்னிவாதங் கொன்றிடுமிரண்டாமாதந தேறியதிங்கள்மூன்றில் செறுத்திடாதென்னிலாறில் ஏறியவருஷமொன்றி லன்றெனிலிரண்டதாகும் மீறியசன்னிவாதம் மீளரிதென்றுகாணே.
மருந்து
மன்னுசன்னிவாதகுணமென்றேகண்டால்
மதித்தகெந்தசூரணத்தையுள்ளேகொண்டு சொன்னபடிபத்தியமும்பிடிக்கிலன்றே
துணிந்துசன்னிவாதமதுசோர்ந்தேயேகும் பன்னுமாவிலங்கமெண்ணெய்சிரத்தும்வார்த்துப் பகர்ந்தபடியுள்ளருந்திமேலும்பூசித் துன்னுகுளைவேதினெட்டாநாளில்மூழ்கத்
துணிந்தகலுஞ்சன்னியின்பின்துணிந்தவாதம்.
சன்னிவாதசுரத்திலெண்ணெய்
திருந்துமெருக்கலைமுருங்கைகான்றைநொச்சி திகழவுரிகுருந்துபுன்குபற்படாகம் பொருந்துமிலைக்கள்ளிகொடிவேலிகொற்றான்
புனமுருக்குக்காற்றோட்டிநத்தைச்சூரி மருந்துநிலக்குமிழிருப்பைவாதங்கொல்லி
மல்லிகைசாரணைதுளசிபங்கம்பாளை யருந்துநிலப்பனைகழற்சிமணத்தக்காளி யரமுறியின்பூறலிருமட்டியன்னை.
பன்னுகுறிஞ்சாமுள்ளிகோரைவட்டுப்
பருத்தசிவனார்வேம்புஅமுக்கிராய்வேர் துன்னுமிலாமிச்சையிருவேலிநாவல்
தூதுவளைசிலைமிரிசினொடுவிடத்தல் மன்னுதடிமல்லியுவாயனைத்தின்வேரும்
மதித்தபடியொன்றிரண்டுகழஞ்சுகூட்டி மின்னுமெலுமிச்சையினற்புளிநானாழி
மீறுமெருக்கலைவேரிற்சாறெண்ணாழி.
எண்ணருமாவிலங்கைநொச்சியாடாதோடை
யேதமில்கையாந்தகரைமுதியாள்கூந்தல்
நண்ணியவேலிப்பருத்திவாதங்கொல்லி
நற்பிரமிதுளசிதிராய்வெட்பாவட்டை
13

Page 68
செகராசசேகர வைத்தியம்
கண்ணியநற்பருத்தியியங்கிலைச்சாறொன்றொர்
கதிக்கவொருநாழிவிட்டுக்கசாளமாக்கி
உண்ணியநற்றிலதயிலநாலுகொத்தி
லூறவிடுஞ்சரக்குலுவாவிருசீர்கோட்டம்.
கோடுறுதிற்பலிமிளகுகடுக்காயேலங்
கொத்தமல்லியதிமதுரம்வெளுத்தல்மாயா நாடுறுசுக்கரத்தைவிளால்கடுகுரோணி
நாகம்பூக்கச்சோலமசமதாகம் தோடுறுசெவ்வள்ளியுள்ளிதேவதாரந்
துரிசுசதகுப்பைமரமஞ்சலிந்துப் பாடுறுபச்சிலைதேக்குக்சன்னிநாய
னத்தித்திற்பலிவசம்புசிறியமூலம்.
வேறு
மூலமுறுவேம்பாடலிலவங்கங்காயம்
முசிற்றுமுட்டைசிற்றரத்தைகோழியின்காரம் சீலமுறுவாலுளுவைகுங்கிலியங்கடுகு
சிறந்தபுற்றாம்பழச்சோறுகார்போகியரிசி கோலமுறுசரக்கிவையொன்றிருகழஞ்சுவாங்கிக்
கொண்டசரக்குடன்வேருமரைத்ததிற்கூட்டி ஏலமுறுகசாளமதிலேகரைத்துக்காய்ச்சி
எட்டாநாள்மந்தபதம்வடித்துநீபொருத்தே.
வேறு
பொருந்தியுள்ளுமருந்திமெய்யிற்பூசிக்காய்ச்சிப் போதவிடுமஞ்சனமுநசியந்தானு மருத்தியுறச்செய்துவரச்சன்னிவாத
மடுத்தசுரவாதமுகவாதஞ்சன்னி முருத்திடுமந்தரவாயுகிரந்திவாத
முற்றதிமிர்வாதமுடனடுக்குவாதம் வருத்துசன்னிவாதமொடுசுரத்திற்சன்னி
வருபருதியெதிர்பணிபோல்மாறிப்போமே.
கிரந்திவாதம் பொற்புறுநெஞ்சிற்றோளிற் புயத்தினில்விலாவிற்றுக்கி லற்புறுமுதுகிற்சந்தி லடுத்திடும்பிடரிநாரி விற்புறவளைந்துகுத்தி விறைத்துடன்மயக்கியேறும் செப்புறுகிரந்திவாதஞ் செய்குணஞ்செப்புங்காலே. காலினிலிரவின்மிண்டிக் கடினமாயுளைவுண்டாகி மேலினிற்சொறிந்துமெத்த மிகுந்திடுந்தேமலாகி யோலினில்வயிறுகூப்பிட் டுறமிகப்பொருமியேறும் வாலினிற்கிரந்திவாதஞ் செய்குணம்வகுக்குங்காலே.
எண்ணெய்
திருந்துமாயிலிமுருங்கைசதுரக்கள்ளி
சிவதைகொடிவேலிபுன்கமுக்கிராய்வேர்
114

செகராசசேகர வைத்தியம்
பொருந்துமாவிலங்கைநொச்சிகான்றைதில்லை
புன்னையிருவேலியிலாமிச்சைகோரை
அருந்துகுறிஞ்சாவொடெலுமிச்சைதோடை
யடுத்தபெருமருந்தெருக்குவாதங்கொல்லி
மருந்துசெங்கத்தாரிகுமிழ்குதிரைவாலி
மல்லிகையின்பூறலரமுறிகாற்றோட்டி.
தோடுலவுநன்னாரியாடாதோடை
தூய்களப்பனைநெருஞ்சியிறைமுருக்கு காடுலவுகல்மிரிசுசிவனார்வேம்பு
கதித்தவுவாய்பெருங்குருந்துவேரனைத்தும் பீடுலவவிடித்தவித்தநீர்நானாழி
பிறங்குதிலத்தயிலமிருநாழிசேர்த்து கோடுலவுமதிலேலம்விளால்வெட்பாலை
கோட்டமுள்ளியரத்தையிலவங்கங்கூட்டே.
கூட்டுமிருசீரகம்வேர்க்கொம்புமாயா
குறித்தசமோதகம்வெளுத்தல்தகரம்வெள்ளி நாட்டுநெல்லிவேம்பாடலுழுவைசெவ்யம்
நல்லவசம்பதிமதுரங்கடுரோணி ஈட்டுசதகுப்பைசிறுதேக்குமூல
மியல்வானசெண்பகப்பூகடுகுமாஞ்சில் காட்டுபெருந்திற்பலிமஞ்சிட்டிதான்றி
கச்சோலங்கடுகினுடன்தேவதாரம்.
தார்செறிசிற்றரத்தைகொத்தமலியிந்துப்பு
தனிமிளகுகாயமரமஞ்சல்வெந்தயம் சீர்செறியொன்றிருகழஞ்சாயிடித்தரைத்துச்
சிறந்தகஷாயத்தில்எட்டுநாளுமுறி பேர்செறிசந்தனம்பசுப்பாலுடனேவிட்டுப்
பேதமறுமந்தபதந்தனில்வடித்து கார்செறியுள்ளும்புரத்துமருந்திப்பூசில்
கடுங்கிரந்திவாதமுதற்கலைந்துபோமே.
பற்பம்
கெந்தகமிதரங்காந்தங் கேளரைபொடியோரொன்று முந்தவைங்கழஞ்சுவாங்கி முற்றியகுமரிச்சாற்றில் கந்தமாயரைத்துத்தூளாய்க் கலந்துடன்தேனிற்கொள்ள அந்தமார்கிரந்திவாத மலைந்துவிட்டோடுங்கானே.
அழல்வாதம்
காயமதுளைந்துகுத்திக் கனலெனவெளிவுண்டாகி நாயகமலரைநேரு நடைபெறுமுள்ளங்காலுந் தீயதாமெனவழற்றித் திமிர்க்குமுட்டணமுஞ்செய்யும் வாய்மையாமழல்வாதத்தின் குணமெனவகுத்தாரன்றே.
அன்றியுஞ்சரீரம்வற்றி யதிகமாயுறக்கம்வாரா தோன்றியவேர்வையுண்டா யுவாந்தியுந்துயருஞ்செய்யும்
115

Page 69
செகராசசேகர வைத்தியம்
துன்றியவளைவேலம்பு தூய்வடுநிகருங்கண்ணாய் கன்றியவழல்வாதஞ்செய் குணமெனக்கழறினாரே. 2
எண்ணெய்
திருந்துமமுக்கிராயெருக்குவாதங்கொல்லி
சிவந்தவிலாமிச்சையிருவேலிகோரை பொருந்துசரக்கதிமதுரம்விழால்வெட்பாலை
பொற்புறுவேற்கொம்புசதகுப்பையேலம் அருந்துநெல்லிகச்சோலமிலவங்கோட்ட
மசமோதங்கடுகுதிற்பல்கடுக்காயிந்து மருந்திரண்டுகழஞ்சுகொண்டரைத்துவேரும்
மதிக்குமெள்ளினெண்ணெய்கொத்திற்கஷாயம்போடே.
போட்டதிற்சிற்றாமணக்கினெண்ணெய்நாழி
பொருந்துதெங்கினெண்ணெய்கொத்துப்பசுப்பால்கொத்து நாட்டுகஷாயத்தில்விட்டுக்காய்ச்சியூறி
நாலாநாட்சந்தனம்விட்டதனைக்காய்ச்சிக் கூட்டுமந்தபதம்வடித்துச்சிரத்தில்வார்த்துக் குறித்ததனைமேற்பூசிமுழுகநாளும் கரட்டுமழல்வாதமதுகலங்கியேங்கிக்
கதிர்கண்டபனியெனவேகடந்துபோமே. 2
சற்கரைக்குழம்பு
கருப்பஞ்சாறுடன்நெல்லிப்பழத்தின்சாறுங்
காய்க்குமாதளம்பழத்தின்சாறுந்தேனும் விருப்பஞ்சார்நீற்றுப்பூசணிக்காய்ச்சாறும்
விளம்பிளநீர்பேரீஞ்சின்பழமாவின்நெய் மருப்பஞ்சார்சீனிவெல்லம்பொன்னாங்காணி
மதிக்குமிஞ்சிமுந்திரிகைப்பழத்தின்சாறும் உருப்பஞ்சாரிவையொன்றோர்சாறுநாழி
யுடன்துவைத்துப்பிளிந்தெடுத்துவடித்துச்சேர்த்தே. l
சேர்த்திடுசீரகமுலுவாவிந்துப்பேலந்
திற்பலதிமதுரமுள்ளிகராம்புவாசி ஏர்த்திடிலவங்கநெல்லிசாதிகோட்ட
மேற்கவிருகழஞ்சுகொண்டிடித்தரைத்து சீர்த்திடுமக்கசாளமதிற்கரைத்துக்காய்ச்சித்
திரண்டிடுசற்கரைக்குழம்பையருந்தநாளு மரர்த்திடழல்வாதமுடலெரிப்புக்காய்ச்ச
லகலுமெனவருள்முனிவரறைந்தாரன்றே. 2
பூச்சுமருந்து
நெல்லிக்காய்பசுவின்வெண்ணெய் நிதானமாயரைத்துச்சேர்த்து மெல்லிதாய்க்காலிற்பூச மீளுமக்கினியின்வாதம்
சொல்லியபசுநெய்சிற்றா மணக்கெண்ணெய்துயசந்தம் புல்லிதாயுள்ளங்காலிற் பூசிடப்பொறுக்குமன்றே. 3
1 6

செகராசசேகர வைத்தியம்
அரக்கெண்ணெய்சிரத்தில்வார்க்க அருந்திடிலிஞ்சிநெய்யும் துரக்குநன்முலைப்பாலெண்ணெய் பூசியேதுடைக்கமாறும் சுரக்குநற்பசுவின்பால்நெய் யருந்திடிற்றுயரநீங்கும் கரக்குநீர்ச்சீலைகாலிற் சுற்றிடிற்கலைந்துபோமே.
திமிர்வாதம்
மந்திக்கும்பசியில்லாமல் மலத்தினைவாட்டுங்கால்கை யந்திக்குஞ்சரீரமுற்றும் அதிகமாயத்திமிருண்டாகி யுந்திக்கீழ்க்குடலைமேலே யிழுத்துமிக்குவ்ாதிசெய்யும் வந்திக்கவுளைந்துகுத்தி வருந்திடநடுங்குங்காணே.
கண்டிடுங்கையுங்காலுங் கடுத்துடன்விறைப்புமுண்டாம் மிண்டிடும்வெளுத்துமேனி மிகுதியுமதைப்புண்டாகிக் கொண்டிடுஞ்சோம்பலாக்குங் குளிர்ந்துடன்தலைநோவுண்டாம் அண்டிடுதிமிர்வாதத்தி னருங்குணமறையுங்காலே.
எண்ணெய்
கான்றைநொச்சிபெருமருந்துவாதங்கொல்லி
காற்றோட்டிமாவிலங்கைசிவனார்வேம்பு ஏன்றபன்குமாகாணிசெங்கத்தாரி
எருமைமுல்லைகொடிக்கழற்சியாடாதோடை ஆன்றகுப்பைமேனியியார்கிலுகிலுப்பை
யரமுறிகல்மிரிசுதுளாய்கண்டங்காலி நான்றமுதியாள்கூந்தல்குதிரைவாலி
நாயுருவிதுதுவளைகுருந்தின்வேரே.
வேருலவுநன்னாரிசிவதைவட்டு
வீழிகொடிவேலிகளப்பன்ண்ைவெள்வேல் பாருலவுநிலவேம்புபங்கம்பாளை
பருமுதிரைகோழ்யவரையமுக்கிராய்வேர் சீருலவுநிலவாகைகருவேல்கொற்றான்
திராயவுரிகுறிஞ்சாயுமியங்கின்வேரும் காருலவுகருவேம்புமயிற்குருந்து
கவிழ்தும்பைமுடிதும்பையுடனெருக்கல்.
கல்லைநிகர்காக்கணம்வேர்மால்கிராந்தி
கற்றாழையுவாயாடுதின்னாப்பாலை அல்லைநிகர்வன்னெற்றுச்சிறுகுறட்டை
யறைந்திடும்வேரிவையனைத்துமளவிற்சீவி ஒல்லைநிகரறவவித்திடிக்குஞ்சாறு
உவாய்கருவேல்மாவிலங்கையாடாதோடை கொல்லைநிகர்தழுதாளைசிறுகுரட்டை
கொடிக்கழற்சிகோழ்யவரைசாத்தாவாரி.
வாருலவுதுதுவளைகுப்பைமேனி
வளர்சிவன்வேம்புடனவுரிமால்கிராந்தி
எருலவுமாகாணியெருமைமுல்லை
யியற்றுளசிநிலவேம்புநொச்சிகான்றை
117

Page 70
செகராசசேகர வைத்தியம்
சீருலவுநிலவாகைகல்மிரீசு
திராயுடனற்களப்பன்னைவனநேர்நெற்று
நீருலவுமிவையிலைச்சாறொன்றோர்நாழி
நிலைமுருக்கினிலைச்சாறுமிரண்டுகூட்டே.
வேறு
கூட்டுமிலைச்சாறனைத்தும்வேதினில்விட்டவித்துக்
குறித்திடுமூன்றாநாளிற்பிளிந்ததனைவடித்தே யீட்டுசிற்றாமணக்குநிம்பமிவையுடன்நல்லெண்ணெ
யிதமுறுமூன்றும்நாழியாகவிட்டுக்காய்ச்சி காட்டுநெல்லிகச்சோலங்கடுகுரோசனைமால் கார்போகிபீனாறியக்கராவுள்ளி நாட்டுவெம்பாடல்விளாலுடனுலுவாத்தான்றி
நற்கடுகுகற்கடகசிங்கியுடனேலம்.
ஏலுமிருசீரகந்திற்பலியொடுவேர்க்கொம்பு
இந்தசமோதம்வெளுத்தல்மாயாக்காய்மஞ்சல் சாலுமிளகரத்தைகற்கம்தகுவசம்புமாஞ்சில்
சதகுப்பைவெண்காரஞ்சார்சீனக்காரஞ் சீலமிகுகொத்தமல்லிகராம்புவசுவாசி
சிற்றரத்தைபெருங்காயங்கச்சோலந்துரிசு கோலமிகுவேம்பாடலுழுவையிலவங்கங்
கோதில்சாத்திரவேதிசெய்யசந்தனமே.
சந்தமிகுசிவந்தவள்ளிக்கொடிமுதலாஞ்சரக்குத்
தானிவையொன்றிருகழஞ்சுவாங்கிநன்றாயரைத்தே
கந்தமிகுங்கசாளமதிற்கரைத்துவிட்டுக்காய்ச்சிக்
கருதியெட்டுநாளூறிமந்தபதம்வடித்தே
பந்தமிகுசிரத்துமுள்ளுந்தின்றுமேற்பூசிப்
பரிவாகமுழுகிவரிற்படர்கிரந்திவாதம்
அந்தமிகுந்திமிர்வாதமுடனசலவாத
மருமுடக்குப்பெருவாதமிவையகன்றுபோமே.
பிறமேகவாதம்
கால்தனிற்பிடிக்குங்காயுங் கடுக்குநீர்தலைவலிக்கும் மேல்தனிற்சூலையுண்டாய் வீங்கிடுஞ்சியலும்வீழும் கோல்செறிநாரிதன்னிற் பிடிக்குங்குத்துளைவுமுண்டாம் மால்பிறமேகவாதம் வசமறமுடக்குங்கானே.
வீரமாணிக்கன் எண்ணெய்
பேய்க்கரும்புகருவேம்புயற்படாகம் ,
பேசரியகல்மிரிசுமாவிலங்கை
சாய்க்குநிலக்கொற்றாணுஞ்சமூலங்கூட்டித்
தணக்கினிலையரலியிலைதானுங்கூட்டிக்
காய்க்குமஞ்சற்கடுகுவசம்புள்ளிகோட்டிங்
கராம்புகடனுரையரத்தைசன்னிநாயன்
118

செகராசசேகர வைத்தியம்
தேய்க்குமரமஞ்சல்துத்தந்துரிசுகல்நார் திற்பலிசீரகந்தான்றிதேவதாரம்.
தார்செறிகெந்தகம்வெளுத்தலசமதாகஞ்
சாற்றுபெருங்காயமதிவிடையஞ்சுக்கு சீர்செறிகன்மதமிளகுமதுரமேலம்
செஞ்சந்தம்வாலுழுவைசிட்டிசாதி ஏர்செறியொன்றிருகழஞ்சாயிடித்துமாவா
யிலைத்தூள்வேர்த்தூள்சரியாயெடுத்துச்சேர்த்து கார்செறியேரண்ட்வெண்ணெய்திலத்திலெண்ணெய்
கடுநிம்பவெண்ணெய்காலரைமுக்காலே.
முக்காலென்றளந்தவெண்ணெய்மூன்றுமொன்றாய்
முதிராமற்காய்ச்சிநன்றர்யிறக்கியாற்றி திக்காமல்மருந்தையெர்க்கப்போட்டுப்பின்னர்
சிறக்கவுள்ளுமருந்திந்றபத்தியமுமாகித் தொக்காகவடம்பனிலையவித்தவெந்நீர்
தொகையாகமூழ்கிவரிற்றீர்வியாதி தக்கானபிறமேகவாதஞ்சூலை
தனிமுடக்குக்குத்துளைவுதணிந்துபோமே.
பிறமேகவாதணண்ணெய்
பெருமருந்துநொச்சியியங்கமுக்கிராய்முருங்கை
பெருங்கான்றகொடிவேலிநிலக்குமிழின்வேரும் தருமருந்துதழுதாளைளருக்கலையின்வேருந்
தணக்கரலியிலைகொற்றான்மாவிலங்கைகமூலம் திருமருந்துகல்மிரிசுசமூலமாய்த்தேடித்
திகழ்கருவேப்பிலைசரியாய்நிதானமாய்க்கூட்டி அருமருந்துகடுகுடனேவேர்க்கொம்புமஞ்சல்
அதிமதுரமுள்ளிபெருங்காயமொடுகோட்டம்.
கோட்டமல்திற்பலிவிடையமொடுதேவதாரஞ்
கொத்தமல்லியப்புருவஞ்கெந்திசாதிக்காய் நாட்டமிலாத்துரிசுதுத்தமசமோதம்வெளுத்தல் நல்வசம்புவெண்காரம்கிராம்புவசுவாசி ஈட்டமிலாமஞ்சிட்டிசெஞ்சந்தமிலவ
மிவைசரக்கொன்றிருகழஞ்சிடித்தரித்தமாவுங் காட்டுசிற்றாமணக்குநிம்பமுடனெள்ளிலெண்ணெய்
கதிக்கவொருசரிகூட்டிக்கலந்துநீகாய்ச்சே,
காய்ச்சிநல்லகொதிபதத்திலிறக்கியேநன்றாய்க்
கலந்துசரக்கிலைத்தூள்வேர்த்துாள்களும்போட்டு கூச்சமறச்சிரத்தில்வைத்துள்ளருந்திவந்துநாளும்
குளையடம்பனிலைவேதில்முழுகிவருவீரேல் வீச்சுமுடக்கியவாதம்மிகுமேகவாதம்
விளம்பியசந்திடைவாதம்நாரியின்வாதம் ஒச்சுகதிரவனெதிர்முன்பணியதைப்போல
ஒடியொளித்தொதுங்குமெனவுரைத்தார்களன்தே.
119

Page 71
செகராசசேகர வைத்தியம்
பறங்கிக்கிழங்குப்பற்பம்
அரத்தைசிறுதிற்பலிதிற்பலியின்மூல
மசமோதம்வால்மிளகுவேர்க்கொம்பேலம் உரத்தசதகுப்பையதிமதுரங்கோட்ட
முலுவாநற்சீர்கடுகுபொரிகாரஞ்சீர், பெருத்தகராம்பதிவிடையங்கடுகுரோணி
பேசிலவங்கொத்தமல்லிகறுவாவொன்றோர் திருத்தமுறக்கழஞ்சிரண்டுவாங்கிப்பின்னர்
சீனத்தின்கிழங்குபலந்தெரிந்துவாங்கே.
வாங்கிநன்றாயிடித்தரித்துப்பதனம்பண்ணி
வடிவானதேனில்வெருகடியருந்தி ஓங்கியமண்டலமுப்புப்புளிமறந்து
ஒடுக்கமாயிருந்துவரிற்றீர்வியாதி தாங்கியசந்தினில்வாதம்மேகவாதம்
சடுதிமுடக்கியவாதங்கரப்பன்வாதம் ஏங்கியகன்றோடுமெனவாயுள்வேத
இதமறிந்தமாமுனிவரிசைத்தாரன்றே.
உளைவாதம்
ஒடியுளைந்துதிமிருண்டா யொருக்கால்விடாமல்மிகக்குத்தும்
வாடிக்காயம்வரண்டுவரும் வலுவாய்க்கடுத்துஉளைந்தேறும் தேடிப்புணர்ச்சிதனைச்செலுத்தா சிறுநீர்கருகித்தெளிந்துவரும் நாடிக்கபாலவலிகனப்பு நண்ணுமுளைவாதந்தானே.
DC555)
பெருமருந்துமாவிலங்கைகான்றைநொச்சி
பெருங்குருந்துதளுதாளையாடாதோடை அருள்சிவதைபுன்குஎருக்கலைமுருங்கை
யடுத்தவிவைவேர்த்துாளுமவித்தநீருந் திருவெளுத்தல்வேம்பாடல்வசம்பரத்தை
திற்பலிவேர்க்கொம்புமரமஞ்சல்குப்பை கருமருந்துபெருங்காயமுள்ளிமஞ்சல்
கடுகுவெட்பாலையினரிசிதேவதாரம்.
தார்செறியொன்றிருகழஞ்சிடித்தரைத்துத்
தகுதிலமேரண்டநிம்பவெண்ணெய்தேடிச் சீர்செறிவேரரைத்ததண்ணிர்மருந்துட்சேர்த்துச்
செப்பியமூன்றெண்ணெய்விட்டுக்கசாளமாக்கி ஏர்செறியும்மந்தபதம்வடித்தைந்தாநாள்
இதமாகவுள்ளருந்திமுழுகிப்பூசில் சூர்செறியுமுளைவாதங்கபாலவாதந்
துணிந்தகலுமெனமுனிவர்சொல்லினாரே
நன்னாரிப் பற்பம்
தீராதிருந்தாலுளையுமிடந் திடமாய்க்கொத்திக்கொம்புவைத்துச் சீராயிதரம்மத்திக்கிற் திடனாய்மாறுமுளைவாதம்
120

செகராசசேகர வைத்தியம்
பேரார்நன்னாரிக்கிழங்கும் ப்ெலத்தவிதரமிருகழஞ்சும் ஏராய்வருமாவிலங்கமிலை யிதமாஞ்சாற்றிலரைத்தருந்தே.
அருந்துவாய்நன்னாரிபற்ப மடுத்தேயொருபன்னிருதினமும் இருந்தேயுப்புப்புளிதவிர்த்த இதமாயவபத்தியம்நீக்கில் வருந்தவுளையுமுளைவாதம் மாறாக்குத்துந்திமிர்வாதம் பரிந்தேபற்றுற்றிடுதருமம்பண்ணான் பொருள்போற்பாறிடுமே.
ஓடுவாதம்
ஓடிடுவாதமாகி லுடல்தலைநெஞ்சுசந்து தேடிடுகரங்கள்கால்கள் திடமதாய்ப்பெலக்கவொண்ணா வாடிடுமேனிதானம் வரண்டிடும்நாவும்பல்லு மோடிடுமுடல்கள்தோறு முளைவுடன்குத்துமுண்டே.
எண்ணெய்
கொடிவேலிமாவிலங்கைமுருங்கைகான்றை
கொடிச்சிவதைதழுகாளையெருக்குநொச்சி அடிமேவுவேரனைத்தும்பிடுங்கிச்சீவி
அவித்ததண்ணிர்தனிற்கரைக்குஞ்சரக்குமஞ்சல் கடிமேவுசிறுமூலங்கடுக்காயுள்ளி
கடுகுசதகுப்பைமரமஞ்சளேலம் தடிமேவுசரக்கொன்றீர்கழஞ்சுவாங்கித்
தானரைத்துக்கசாளமதிற்சேர்த்துக்காய்ச்சே,
காச்சியதிற்றிலதயிலம்நாழிவிட்டுக்
கடியசந்தம்பசுப்பால்விட்டெண்ணெய்காய்ச்சி கூச்சமறவுள்ளருந்திவார்த்துப்பூசிக்
குணவேதில்முழுகிவரிற்றீர்வியாதி வீச்சுநடுக்கிடுவாதமோடுவாதம்
விசைவாதமுளைவாதம்முடக்குவாதம் ஒச்சுகதிரவனையெதிர்பணியைப்போலே
ஒடியொளித்திடுமெனநூலுரைத்தவாறே.
உட்டணவாதம்
உட்டனவாதஞ்செய்யு முவாதியையுரைக்கவேண்டிற் றிட்டமாய்மேனிவேர்த்துத் தியங்கவேயனல்போற்காயும் கட்டமாஞ்சரீரந்தானுங் கனத்துடலுளைவுமுண்டாம் வட்டமாமுகத்துநல்லாய் வகுத்தனர்முனிவர்தாமே.
மருநது
கான்றையிலாமிச்சைநொச்சியமுக்கிராய்வேர்
காற்றோட்டிபெருமருந்துமாவிலங்கை ஆன்றஇருவேலிசாரணையின்வேரும்
அளவாகப்பிடுங்கியரைத்திளநீர்தன்னில் ஏன்றவிலைச்சாறுநொச்சிபருத்திச்சாறு
எருக்கலையின்வேரிலைச்சாறுடன்பூச்சாறு நான்றதெங்கின்பழத்தேங்காய்ப்பாலுநாழி நல்லவிலுமிச்சையதின்புளியுநாழி.
121

Page 72
செகராசசேகர வைத்தியம்
நாழியொன்றோரிலைச்சாறுநயந்துகூட்டி
நாட்டுதிலதயிலநிம்பவெண்ணெயொன்றோர் நாழிசதகுப்பையுள்ளிமிளகுதிற்பல்
நற்கருஞ்சீரகம்வசம்புவெளுத்தல்மாஞ்சில் கேழில்சிறுமூலஞ்சிற்றரத்தைதேக்குக்
கிளர்கடுக்காய்மஞ்சலுடன்நெல்லிதான்றி கோழில்சுக்குமஞ்சிட்டியரத்தையிந்து
கொத்தமல்லிகழஞ்சொவ்வொன்றிரண்டுவாங்கே.
வாங்கியரைத்துடன்கரைத்துக்கலந்துகாய்ச்சி
வகுத்தபதமவடித்துடனேசிரத்தில்வார்த்து தேங்கவெண்ணெய்தினம்பொருத்திநாலாநாளிற்
றிருந்தவெந்நீர்தனில்மூழ்கத்தீர்வியாதி ஓங்குமுடடணவாதங்கபாலவாத
முற்றிடுநேத்திரவாதம்மண்டைசூலை நீங்கியகன்றோடுமென்றாராவுள்வேத
நிலமைதனையறிந்துணருந்தவத்தினோரே.
கோரவாதம்
பாரமாஞ்சடமுளைந்து பரிவுடனெரிந்துகுத்தி
சோரவேயகோரமுண்டாய்த் துயருறப்பேதம்பண்ணும் தாரைசேரயிலைவெல்லுந் தடமேறுகண்ணினல்லாய் கோரவாதஞ்செய்கோலக் குணமிதென்றியம்பலாமே.
எண்ணெய்
வாதமடக்கிகாற்றோட்டி வளர்கருநொச்சிகொடிவேலி ஆதண்டையின்வேரரைப்பலங்கொள் அரிதாரங்கெந்தகம்மிளகு சூதம்கிராம்புவெள்ளுள்ளி சுக்குவசம்பொன்றோர்கழஞ்சு வீதம்சேங்கொட்டையும்பத்து விருப்பாயெடுத்தேயரைத்திடுமே.
அரைத்தேவேப்பெண்ணெயிலிட்டு அடுத்தமந்ததபதம்வடித்துப் பொருத்தித்தேய்த்துக்காசிடையாய்ப் பொருந்தஉள்ளுமருந்திவரில் திருத்தப்பசுப்பால்பத்தியமாய்ச் சேராய்கோரவாதமுடன் பெருத்தபலவாதங்களெல்லாம்பின்னிட்டோடிப்போய்விடுமே.
ஏறுவாதம்
ஏறுவாதந்தான்செய்யுங் குணத்தினையியம்பவேண்டில்
ஊறுடனுயரவேறி யுளைந்துகுத்திடுமதன்றி மாறுடன்விறைத்துப்பின்னும் மயக்கிடுமெனநவின்றார்
தேறுமாயுறுவேதத்திற் றேரீந்திடுமறிஞர்தாமே.
எண்ணெய்
குப்பைமேனிதைவேளை குலவுமெருக்கினிலைப்பழுப்பு ஒக்கவோரொன்றரைக்கொத்தா யுவந்தசாறுதான்சேர்த்து கைக்கும்வேம்பினெய்கொத்துக் கருஞ்சீரபினுமோர்கழஞ்சு ஒக்கக்கலந்துமூன்றுதின மூறிமெழுகுபதம்வடித்தே.
122

செகராசசேகர வைத்தியம்
வடித்தேதலையிற்பொருத்தியபின் வருமூன்றாநாள்வெந்நீரில் குடிக்குங்குளிர்ந்தநீர்கலவாக் குணமாய்மூழ்கியுள்ளருந்தில் பிடிக்குமேறுவாதமுதல் பிரியாச்சுழல்வாதந்தானும் துடித்திடாதுகுறையுமென்று சொன்னார்தொன்னூல்வல்லாரே. 3
மரணவாதம்
உதரத்திற்கரந்தொடங்கி யுவாதியுள்மூச்சுமுண்டாய் அதரமுங்கருகிமேலு மற்பமேகனத்துநோகும் திதமிதுமரணவாதந் திருமுனியருளிச்செய்த பதமுறுவேதநூலின் படியிதுபகர்ந்ததாமே. l
எண்ணெய்
பசுவின்பாலெட்டிப்பழத்தின்சார்நாழி
படர்சதுரக்கள்ளிஎருக்கின் இசைவுறுபாலுமரைக்கால்தெங்கின்பால்
இயற்குருந்தெள்ளுடனிருப்பை வசையுமாமணக்குத்தெங்கினெய்யுடனே
மயில்நெய்குக்குடவண்டத்தைலம் நிசமுறுவெள்ளாட்டுத்தசையவித்த
நீரரைநாழியாய்க்கொள்ளே. 2
கொள்ளுவெள்ளாட்டின்பாலுமோர்நாழி
கோட்டிமொடரிதாரமஞ்சள் உள்ளிவாய்விளங்கம்கடுகொடீரரத்தை ஒமம்மஞ்சிட்டிவெட்பாலை விள்ளருமானைத்திற்பலிகடுக்காய்
விழால்பெருங்காயந்திற்பலியும் தெள்ளுதிற்பலிமுலம்பெருங்காயம்
செவ்வியம்வெளுத்தலோர்கழஞ்சே. 3
கழஞ்சிவையெடுத்துவெள்ளாட்டுப்பாலாற்
கசடறவரைத்ததிலிட்டு
உளங்கொடுபதத்தில்வடித்துக்காசிடையாய்
உட்கொண்டுமேலிலும்பூச
துளங்கிடுமரணவாதமோடதிக
தொல்லைசெய்வாதங்களெல்லாம்
களந்தனில்சிங்கைமன்னரையெதிர்த்த
கயவர்போலகன்றொதுங்கிடுமே. 4
நடுக்குவாதம் வெண்பா
நடுக்கஞ் சுழற்சிதிமிர் நாவரட்சி வெப்பு யடுக்க நடுக்கி வசைய-முடுக்கிக் கிடுகிடெனக் கொண்டு கெடியில் விழத்தாட்டும் நடையிடராம் பார்நடுக்கு வாதம்.
123

Page 73
செகராசசேகர வைத்தியம்
உள்ளித்தயிலம்
ஒருபலமுள்ளிவாங்கி யுரித்துடனரைத்துக்கூட்டித் தருபழஞ்சீலைபூசித் தனித்தெளிவெண்ணெய்தோய்த்து வருமொருவிளக்கிற்காய்ச்சி வடித்துநற்றயிலந்தன்னில் திருமிகுமிதரஞ்சேர்த்துத் திருந்தமத்தித்துப்பூசே.
பூசிநற்சிரத்துவைத்துப் பொருந்தவுட்கொடுக்கநாளும் வீசியநடுக்குவாதம் விசைவாதஞ்சன்னிவாதம் கூசியபக்கவாதம் குத்துடனிவைகளெல்லாம் ஆசில்செங்கதிர்முன்கண்ட பணியெனவகன்றுபோமே.
சுழல்வாதம்
நடுக்குற்றுக்கிறுகிறுத்து நயமறவிழுத்திப்பின்னர் திடுக்கிடக்காயமுற்றுஞ் சுழன்றுசீர்பேதம்பண்ணும் தடிப்புறுசிலைநேரங்கைத் தடமதிமுகத்துநல்லாய் துடிப்புறுசுழல்வாதத்தின் துயருறுகுணமீதாமே.
மருந்து காரெள்ளுஆயிற்பட்டை கமழ்திரிபலைவசம்பு சீருளஅரத்தையிந்து செவ்வியம்மதுரங்கோட்டம் நேருஞ்சிற்றாமணக்கின் நெய்யினிற்கலந்துகாய்ச்சி வாருறப்பூசியுண்ணில் வருசுழல்வாதம்போமே.
இறங்குவாதம்
உருத்துடனுயரவேறி யிறங்கிடுமுரைத்ததானம் பெருத்திடவியங்கிப்பின்பு பிடிப்புடன்குத்துமுண்டாம் பருப்பதநீகரிஸ்தானப் பால்மொழிவல்லிநல்லாய் தரிப்பிலாதிறங்குவாதக் குணந்தனைச்சாற்றுங்காலே.
மருந்து
சித்ரமூலம்மாவிலங்கு சிவனார்வேம்புசங்குநொச்சி ஒத்தகொன்றைவெள்ளெருக்கி லுறுவேர்ப்பட்டைஐந்துப்பு இத்தைச்சமனாயிடித்தெடுத்து ரவியில்வைத்துச்சூரணித்து வைத்துதிரிகடியளவருந்தி வழுத்தைந்தெண்ணெயழுத்திடுமே.
ஐந்தெண்ணெய்த் தைலம் தில்லைமுருங்கைமாவிலங்கு சேரும்பட்டைதிற்பலியும் நல்லபெருங்காயம்வசம்புநவில்வெள் ஞள்ளிவேர்க்கொம்பு சொல்லுமைந்தெண்ணெயிற்சேர்த்துத் தூய்தாய்வடித்துப்பூசிடுகில் எல்லைகடந்துவருத்துகின்ற இறங்குவாதம்மறைந்திடுமே.
சோர்வாதம்
சிரத்தினில்வாயுவேறிச் சிக்கித்தின்மறந்தாள்வற்றி கரத்தொடுகாலுஞ்சோருங் கடுநடுக்குடன்சோகிக்கும்
124

செகராசசேகர வைத்தியம்
வரைத்திடுமறிவுதன்னை மயக்கிப்பல்பேதமுண்டாம் தரைப்பெருஞ்சோர்வாதத்தின் குணமெனச்சாற்றுமன்றே.
அன்றியும்வயிறுநாரி யவலமாய்க்குத்திவீழ்த்தி துன்றியகாசம்போலத் துயரமுங்களையுமுண்டாம் கன்றியேகடினம்பண்ணிக் கடுப்புடனெடுநாள்நிற்கும் ஒன்றியசோர்வாதத்தின் குணமெனவோதினாரே.
எண்ணெய்
அரமுறிசிவனார்வேம்பு ஆயிலியுவாய்காற்றோட்டி திரமுறுகுத்துக்காற்சம் மட்டியேதிருந்துநொச்சி உரமுறுபிச்சுளாத்தி யுரத்தகல்மிரிசுவீழி பரமுறுபெருமருந்து பருத்தமாவிலங்கைமூலம்.
மூலமார்கொடிநல்வேலி முதிர்மயிலடிக்குருந்து சீலமார்குறிஞ்சாய்மூலந் திகழ்களப்பன்னைவேரும் கோலமார்பிடியோரொன்று குறித்திடுஞ்சாறுவேளை காலமார்வாதங்கொல்லி காக்கணங்கொவ்வைமேனி.
மேனிமாவிலங்கைச்சாறு மிகுமுருக்கிலையின்சாறு தானிமிர்வேம்பின்பட்டை தருமெருக்கலைவேர்ச்சாறும் பானிமிரிவையோரொன்று பகர்ந்திடிற்சாறுநாழி கானிமிர்நிம்பவெண்ணெய் நாழியிற்கசாளம்போடே.
போட்டதிற்கடுக்காயுள்ளி பொருந்துதிற்பலிகச்சோலம் நாட்டுசெவ்வியங்கராம்பு நற்கடுகரத்தைசுக்கு கூட்டிலவங்கஞ்சாளி குலவசம்புலுவாவிங்கு காட்டினில்மரத்தின்மஞ்சல் கடுமனோசிலைவெளுத்தல்.
தலமிசைமிளகுபூத விருக்கநேர்சன்னிநாயன் நிலமிசைகொத்தமல்லி நீள்சதகுப்பையொன்றோர் குலமிசைகழஞ்சிரண்டு கொண்டுவேருடனரைத்து நலமிசைகாய்ச்சியூறி நற்பதம்வடித்துவாரே.
வார்த்துடன்பொருத்திப்பின்னர் வருத்தந்தீர்குணமுங்கண்டு சேர்த்துடன்வெந்நீர்வைத்துத் திருந்தவேமுழுகநாளும் வேர்த்துடனடுக்குங்குத்து விறைப்புடன்மயக்குச்சோர்வு ஆர்த்துடனிவைகள்விட்டு அடுத்தசோர்வாதம்போமே.
வலிவாதம்
வலியின்வாதத்தின்செய்தி வகையதாயறியவேண்டில் நலியவேகுத்திவாங்கி நடுக்கியேவலிப்புமுண்டாய்
மெலியவேநாடிபூட்டி விறைத்துவெண்ணுரையுந்தள்ளும் கலியையேநிகருங்கண்ணாய் கற்றவருரைத்தாரன்றே.
மருந்து
சூதங்கெந்தகம்வசம்பு சொல்பெருங்காயமுள்ளி சாதிலிங்கம்மரீசம் சரிநிறையெருக்கின்சாற்றால்
125

Page 74
செகராசசேகர வைத்தியம்
போதவேயரைத்துவேம்பின் பொருந்தியநெய்யிற்காய்ச்சி வாதறவடித்துப்பூசில் வலிவாதமடங்கிப்போமே.
கால்முடக்குவாதம்
உறுபதந்தனைமுடக்கி யுவந்தடிவைக்கொண்ணாமல் கறுவுடனுளைந்துகுத்திக் கால்வீங்கிவற்றிநிற்கும் மறுவறுமதிமுகத்து வளர்வல்லிக்கொடியன்னாளே சிறுகுகால்முடக்குவாதஞ் செய்குணமீதுதானே.
குமரிப்பற்பம்
உருக்கரபொடிநற்கெந்தி ஊசிக்காந்தமுஞ்சுக்குஞ்சேர்த் தரைத்திடுகற்றாளஞ்சா றதுவிட்டுநாலுசாமம் விரைத்தரைத்திடுதூள்தேனில் வெருகடியளவுகொள்ள வரைத்தகால்முடக்குவாதம்வயிற்றில் வாய்வெல்லாம்போமே.
உலற்றுவாதம்
உலற்றுவாதந்தான்செய்யு முபாதியையுரைக்குங்காலை அலற்றவேயுளைந்துகுத்தி யதிகமாய்ச்சரீரம்வற்றி பெலத்திடங்குறைந்துநாளிற் பேதமாய்ப்பிடிப்புமுண்டாம் அலைக்கடனிகருங்கண்ணா யறிந்தவருரைத்தாரன்றே.
மருந்து
ஒருபடியாவின்பாலில் ஒருபலம்வெள்ளைப்பூண்டை மருவவிட்டுக்கடைந்து வளர்சாதிகிராம்புசீரம் திரிகடுகக்ராகாரந் திற்பலிமூலமோமம் துருவியபறங்கிப்பட்டை சொல்சாதிபத்ரியாமே.
பத்திரியுடனோரொன்று பலமரைசேர்த்திடித்து அத்துடன்நறுநெய்தேனு மளந்தொருநாழிவிட்டு வைத்துலேகியமாய்க்கிண்டி வளர்நெல்லிக்காய்ப்ரமாணம் ஒத்துமண்டவமருந்தில் உலற்றிடுவாதம்போமே.
அந்தரவாதம்
சந்துகாலுழைந்துகுத்தித் தலத்தினில்மிதிக்கொண்ணாமல் நொந்துகைகால்முடக்கி நோக்கமுங்குறைந்திருண்டு சிந்தையுங்குழம்பியுண்ணுந் தீன்மறந்தலட்டுமுண்டாம் அந்தரவாதஞ்செய்யு மதிகடுங்கிரியையிதே.
பற்பம்
கொடிவேலிமுருங்கைதில்லை குருந்துமாவிலிங்கின்பட்டை படிகாரமொடுவெண்காரம் படர்சீரம்மிளகுசுக்கு
நெடிதானபறங்கிப்பட்டை நிலவுப்புச்சந்தம்ஏலம் பொடியாக்கிநெய்யிலுண்ணப் போகுமந்தரமாம்வாதம்.
126

செகராசசேகர வைத்தியம்
மேலிசிவாதம்
சரீரமுங்கையுங்காலுஞ் சலிப்புறவலித்திழுத்து எரிவுடனுளைவுமுண்டாய் இசித்திடும்நரம்புதன்னை அரியநாத்தடக்கிப்பேசும் அசனமுமருந்தொண்ணாது உரியமேலிசிவாதத்துக் குற்றிடுங்குணமீதாமே.
பூச்சு
தோலினைநீக்கித்தேங்காய்த் தூயகண்திறந்துகள்ளிப் பாலினைவிட்டேயெட்டிப் பருமுழையடித்துச்சுட்டு பாலுறவரைத்துப்பூசிப் பகர்வென்னிர்மூழ்கிவந்தால் மேலிசிவாதமெய்யை விட்டிரிந்தோடுமன்றே.
மெய்யுலற்றுவாதம்
செய்யகைகால்கள்சந்து சிரமுதல்வலித்துலர்ந்து துய்யமேனியுந்திமிர்த்துத் துணுக்குறத்தலைவலித்து கைகால்களசதியுண்டாய்க் கண்களுமிருளுமாகில் மெய்யுலற்றிடுவாதத்தில் விளங்கியகுணங்களென்னெ.
எண்ணெய்
அரிதாரங்கெந்தகஞ்சாதிலிங்கமோமம்
அத்தித்திற்பலிவசம்புகாயமுள்ளி பெரிதானஅரத்தைபொரிகாரஞ்சுக்குப்
பெருஞ்சீரம்வாலுளுவைஅரிசிகோட்டம் சரியாகஒவ்வொன்றோர்கழஞ்சுகொண்டு
சாரணைகாஞ்சிரைமுருங்கைநொச்சிமூலம் உரிதாயொன்றரைப்பலமேகொள்வேப்பெண்ணெய்
ஒருபடியில்வடித்திடப்போமுலற்றுவாதம்.
இடிவாதம்
அடியினிற்கரத்திற்குத்தி அங்கமும்பதறலுண்டாய் துடியிடைகடுத்துநொந்து துணுக்குடன்விறைப்புமுண்டாய் படியினில்மலமிறங்காப் பதறிமெய்த்துடிப்புண்டாகும் இடிவாதக்குணமீதென்ன இயம்பினார்முனிவர்தாமே.
எண்ணெய்
கொடுவேலிகான்றைவேம்பு குலவுமாவிலிங்கின்பட்டை கடுகுள்ளிமரத்தின்மஞ்சள் காயமிந்துப்புஏலம் நெடுமாலின்தாரம்பூரம் நிறையொன்றோர்கழஞ்சுகொண்டு இடுவேம்பினெய்யிற்காய்ச்சி யிடவிடிவாதம்போமே.
பதறுவாதம்
உதறியேகுலைப்பனுண்டாய் உரமுடன்சுரமுங்காய்ந்து சிதறியேமலமும்விழுந்து தீனையும்மறக்கச்செய்து
27

Page 75
செகராசசேகர வைத்தியம்
கதறியேபுலம்பிவெம்பிக் கைகாலுமுளைவுண்டாகும் பதறுவாதக்குணத்தைப் பண்புடன்கண்டிடாயே.
எண்ணெய்
வாதமடக்கிநிலவேம்பு வலியதாழைவிழுதுச்சார் ஒதாமணக்குவேப்பெண்ணெய் ஒன்றோர்படியாயளந்தெடுத்து சாதிலிங்கம்பொன்னரிதாரம் சந்தம்மரிசமொருகழஞ்சு வீதஞ்சேர்த்துவடித்தருந்தில் மீளும்பதறுவாதமதே.
நாத்துடிவாதம்
நாவினிற்றடித்துவீங்கி நடுக்கியேதடக்கிப்பேசித் தாவிநாவெடுக்கொண்ணாமல் தளம்பியேவிறைத்துநோவாம் ஏவினைக்கயலைவாளை யிரிந்துறவிகலுங்கண்ணாய் பாவின்நாத்துடிவாதத்தின் குணமெனப்பகர்ந்தாரன்றே.
குடிநீர்
சீனக்காரமொடுபூரஞ் சிவந்தசந்தந்திரிகடுகு ஆனைத்திற்பல்வசுவாசி அரத்தைகோட்டமிலவங்கம் பூனைவணங்கிஅகத்திதில்லை புங்கின்வேரோர்நிறைகொண்டு பானைநீரிலவித்தருந்தப் படர்நாத்துடிவாதம்போமே.
கழற்பக்கவாதம்
செழுமைசேர்காலுங்கையுந் திருவிழிநாசிதானும் அழலெனவெரிந்துகாய்ந்து அங்கமுமூதலுண்டாய் பழமலஞ்சிக்கிஅங்கம் பதறியேகதறச்செய்யும் கழற்பக்கவாதமென்னக் கற்றவரறைந்தாரன்றே.
எண்ணெய் பெருஞ்சீர்வேலணிஞ்சிலுவாய் பெருமருந்துசிவகரந்தை தருஞ்சீர்மாதளைகாணி தனிச்சடைச்சிசிவன்வேம்பு அருஞ்சீர்கூவிளையினுட னவுரிமுடக்கொற்றானும் கருஞ்சூர்மாவிலிங்கையுடன் கருவேம்புநாயுருவி.
உருத்திடுநாய்வேளைபுல்லா யுயர்வாகைகொடிக்கழற்சி பெருத்திடும்வேரொன்றுபலம் பேணியிடித்தவித்ததண்ணிர் அருத்திநல்லவதிமதுர மரத்தைநெல்லிபெருங்காயம் பொருத்திடுநல்லிருவேலி புகழ்கோட்டங்கருஞ்சீரே.
சீர்த்திடுகோரோசனையுந் திகழ்கடுக்காய்குக்கிலுடன் ஏர்த்திடுநற்சரக்கிவையொன் றிருகழஞ்சுநிறுத்தரைத்துச் சேர்த்திடுவேப்பெண்ணெய்கொத்திற் றிருந்தவடித்துடன்பொருத்திற் பேர்த்தகழற்பக்கத்துப் பெருகிடுவாதம்போமே.
63,
பெருவாதமடக்கிநொச்சி பெருந்தோடைதைவேளை மருவாதகொடிக்கழற்சி மதித்தகவிழ்தும்பையுட்ன்
128

செகராசசேகர் வைத்தியம்
வெருவாதசதாபலத்தின் வேர்முதலொன்றொருபிடிகொண் டொருவாதகுமரிமட லுடன்கொற்றானிலைபிடுங்கே.
ஏய்ந்திடுகற்றாளைகொற்றா னியற்காடிதனிலவித்துக் காய்ந்திடும்வேர்த்தூட்போட்டுக் கடியபுகைவேதுவிடில் ஆய்ந்தகழற்பக்கத்தை யடுத்துவந்தவாதமது பாய்ந்திடுநற்கதிர்காணும் பனியெனவேபறந்திடுமே.
கரவாதம்
சிரமொடுகரங்காலெல்லாந் திரண்டுடலதைப்புண்டாகிப் புரமதுவெளுத்தூண்வேண்டாப் பொருமியேகுத்துண்டாகித் திரமறச்சுரமுங்காயுஞ் சிக்கிடும்மலசலங்கள் சுரமதின்வாதமென்று சொன்னார்முன்னோர்கடாமே.
மருந்து
கான்றைபெருமருந்தெருக்குவாதங்கொல்லி
கடியவுவாய்வெள்ளறுகுஅமுக்கிராய்வேர் ஊறியிவைஒருபலம்வேர்பிடுங்கிச்சீவி
யுறவிடித்தேயரித்தெடுத்தமாகற்காந்தம் ஏன்றபெருங்காயமுள்ளிகராம்புவாசி
யேர்மதுரஞ்சாதிலிங்கமிருசீரேலம் நான்றசமோதகங்கடுக்காயிதரமாயா
நல்லசாத்திரவேதிமிளகுகூட்டே.
கூட்டுதிற்பலியுலுவாவொடுகற்பூரம்
கொத்தமல்லியரிதாரங்கடுகுமஞ்சள் நாட்டுத்தந்துரிசுடன்சீனம்வெளுத்தல்
நற்கோட்டஞ்சாதிக்காயவின்வேர்க்கொம்பு காட்டுசரக்கொருகழஞ்சுவேரின்தூளும்
கலந்திடித்துடன்தேனிற்கருதியுண்ணில் ஈட்டுசுரவாதமுடன்முடக்குவாத
மிடறுசெயுங்குத்துளைவுஇளகிப்போமே.
சீனிவாதம்
மேனியும்விறைத்துவேர்த்து வெதும்பியேயதைப்புமுண்டாய்க் கூனியேகிடக்கச்செய்து குரல்கம்மியண்டம்வீங்கி தேனிகர்சலமும்வீழ்ந்து சிக்கியேகுத்துமுண்டாம் சீனிவாதஞ்செய்கோலத் திறலெனவறைந்திட்டாரே.
உள்ளி எண்ணெய்
சீரியசிற்றாமணக்கினெண்ணெய்நாழி
சிறந்தவுள்ளிமூன்றுபலமுரித்துப்போட்டு
கூரியதாயவித்திறக்கிவடித்தவெண்ணெய் கூடவுண்டுபுளிமறந்துவருவீராகில்
பாரியசீனியின்வாதங்குன்மவாய்வு
பகருமணடவாயுமுதற்பக்கசூலை
129

Page 76
செகராசசேகர வைத்தியம்
எரியசீருதயமிசைமருவுபானு
வெதிர்த்தபணியெனவனைத்துமேசூந்தானே.
தமரவாதம்
அமர்வுறாதுளைந்துகுத்தி அங்கத்திற்கனலுண்டாகி கவரெனச்சலமும்வீழ்ந்து கடுப்புடனெரிப்புமுண்டாய் துவருறநாக்கழன்று தொந்தமந்தங்களுண்டாம் தமரவாதஞ்செய்கோலந் தானெனச்சாற்றினாரே.
எண்ணெய்
முதியதோர்வேம்பிற்பட்டை முப்பலம்தூணிநீரில் புதியதோரமிடாவிலிட்டுப் பொருந்திடுநாழியாக்கி பதியவோர்வசம்பிரண்டு பலமரைத்ததில்வேப்பெண்ணெய் விதியதாய்நாழிவிட்டு விளங்கவேகசாளங்கூட்டே.
கூட்டியேவடித்துப்பின்னர் குலவியசிரத்தில்வைத்து நாட்டியேயுள்ளுந்தின்று நலம்பெறமேலும்பூசி லீட்டியதமரவாத மிசிவாதஞ்சோர்வாதஞ்சீர் நீட்டியபருதிகண்ைட பனியெனநீங்குமன்றே.
துண்டவாதம்
தொண்ட்ையும்வீக்கமுற்றுச் சுரமுடனிருமலுண்டாய் மண்டையுமிடித்துமூளை மயக்கமாம்மலமும்போகாத் துண்டமாயுடம்புவீங்குஞ் சொன்மொழிதடக்கிப்பேசும் பண்டிதர்பகர்ந்தாரித்தைப் படர்துண்டவாதமென்றே.
மருந்து
உள்ளிசீரகம்சுக்குவில்வம்முல்லை
யுறுமூலம்பற்படகம்குடிநீர்கொண்டு எள்ளொடுதெங்கேரண்டமிலுப்பைநெய்யும்
எலுமிச்சம்பழச்சாறும்படியோரொன்று முள்ளிமருக்காரைகொன்றைமாவிலங்கு
முருங்கைகாட்டாமணக்குஅசுவகெந்தி கள்ளிசிவன்வேம்புவெள்ளறுகெருக்குக்
கருங்காலிமூலமொன்றோர்பலமாய்க்கொள்ளே.
கொண்டிடுசுக்கரத்தைதிற்பல்மிளகுமஞ்சள் குங்கிலியம்வெள்ளுள்ளிதேவதாரம் அண்டுமரமஞ்சல்வகைக்கிருகழஞ்சு
அரைத்துவிட்டுக்கலக்கியூமத்தைவிழி மிண்டுறுமாவிலங்குநொச்சிமுசுமுசுக்கை
வேலியின்பருத்திச்சார்நாழிவீதம் மண்டவிட்டுப்பதத்தினிலேவடித்துப்பூச
மருவுதுண்டவாதமதுமாய்ந்துபோமே.
130

செகராசசேகர வைத்தியம்
நேரிடறுவாதம்
சேரிடமறிந்துசெல்லாத் திருகியேநடையுண்டாகும் ஓரிடமிருக்கொண்ணாம லுழற்றியேசுழற்றிநிற்கும் பாரிடங்கால்பாவாது பதறிடுஞ்சரீரமுற்றும் நேரிடறும்வாதத்தின் நிலைமையைஅறிந்துகொள்ளே.
மருந்து
தழுதாளைநொச்சிசதுரக்கள்ளிமுள்ளி
தகுமாவிலிங்கினெடுசிற்றாமணக்கில் எழுசாறோடெட்டிப்பழத்தினிற்சாறு
எள்ளெண்ணெயிவைவகைக்கொருபடியெடுத்து வழுவாமலாவுடன்வெள்ளாட்டுநீரும்
வகைக்கரைப்படிகொள்வசம்புடன்குக்கில் தெளிவாகவொவ்வொருகழஞ்சுகொண்டேநெய்
செய்திடுகில்நேரிடறுவாதமதுதீரும்.
முண்டவாதம் மண்ணையிலிடிப்புண்டாகும் வரண்டிடுஞ்சரீரமுற்றும் அண்டையிலாருஞ்சென்றா லதட்டியேயுரத்துப்பேசும் கொண்டிடும்மூளைவெப்புக் குறுஞ்சுரமுண்டாமென்று முண்டவாதக்குணத்தை மொழிந்தனர்முன்னுஇட்ரே
மருந்து
தருமிருசீரங்கோட்டமுலுவாவோடேலம்
தான்றிநெல்லிவேம்பாடல்சமுத்திராப்பச்சை கருமிளகுவசம்புமஞ்சள்கடுகுசதகுப்பை
கடுக்காய்திற்பலியரத்தைமாஞ்சில்விளாலரிசி வருதகரஞ்சாதிக்காய்செண்பகநாகம்பூ
மாயாவெட்பாலைசெவ்வள்ளிகச்சோலம் அருமதுரங்கராம்புவக்வாசிவேர்க்கொம்பு
அடுத்தசிறுதேக்குவெள்ளுள்ளியிலவங்கம்.
வேறு
இலகியதிற்பலிமுல்மியற்செஞ்சந்தம்
இவையொன்றோர்வகைக்கிரண்டுகழஞ்சுவாங்கி திலகமுறவரைத்தெடுத்துக்கச்ாளஞ்சேர்த்துத்
திலத்திலெண்ணெய்நாழிவிட்டுச்செறியக்காய்ச்சி அலகினெலுமித்தையினற்புளிபோர்கொத்து
மதில்லிஆக்சிசிலிவைக்கில் கலகமுறுமுண்டவாதத்தினோடே
கபாலமுறுவாதமெல்லாங்கலைந்துபோமே.
ஊதுவாதம்
செறிவுறுமூதுவாதஞ் செய்குணஞ்செப்புங்காலை அறிவறவங்கமூதி யழற்றிமேலுளைவுண்டாகும்
131

Page 77
செகராசசேகர வைத்தியம்
பொறிகெடவிறைத்துத்தொய்வாம் பொன்மதிமுகத்துநல்லாய் அறிவினாலுயர்ந்தமேலோ ரறைந்தனரென்றுகொள்ளே.
மருந்து
காயமிந்துள்ளிசுக்குக் கருஞ்சீரம்கடுக்காய்மஞ்சள் தூயவாலுழுவைகோட்டம் தொடர்திறிபலையிந்துப்பு தீயமாவிலிங்கின்பட்டை சேர்த்திடித்தாமணக்கி லாயநெய்யதனிற்காய்ச்சி யருந்துாதுவாதம்போமே. 2
உருத்திரானந்தவாதம்
திருத்தியுற்றானந்திக்குந் தெருத்தொறுமோடுமாடும் கருத்தினினினைத்தவெல்லாங் கழறிடும்வலதுகாலும் பெருடுதிடுமுடக்கமாகும் பேசிடில்நாத்தடக்கும் உருத்திரானந்தவாய்வுக் குறுகுணமீதென்றாரே. l
மருந்து
பேய்க்கரும்பின்சாறுமுசுமுசுக்கைச்சாறு
பெருந்தேசிப்பழச்சாறுபடியொன்றாகும் நாய்த்துளசிமுல்லைவில்வம்வாதங்கொல்லி நறுவிலிதேற்றாநொச்சிதில்லைமூலம் வாய்த்தகடுகரத்தைமதுரங்கடுக்காய்
மாயாக்காய்கோட்டமொன்றீர்கழஞ்சுகொண்டு காய்ததவிருப்பையின்நெய்யோர்படியிலிட்டுக்
கசாயமிட்டேழாநாள்வடித்துக்கொள்ளே. 2
வேறு
கொண்டிடுநெய்யைக் குறித்தரைமண்டலம் உண்டுமேலெங்கு முறவழுத்திடுகில் அண்டியவுருத்தி ரானந்தவாதம் கண்டிடாதோடிக் கலைந்திடுமன்றே. 3
துணுக்குவாதம் நாக்கொடுப்பல்லைக்கிட்டி நடுங்கிமேல்மூச்சுமுண்டாய் வாக்கினாற்பேசவொட்டா வார்த்தையுந்தடக்குண்டாகித்
தாக்கமாய்சடமுளைந்து சந்துநொந்தரற்றலுண்டாய்த் தூக்கமுமதிகமாகிற் துணுக்கிடுவாதமீதே.
மருந்து வேர்க்கொம்பேலஞ்சிற்றரத்தை வேப்பம்பட்டைவெள்ளாறுகு ஆர்க்குமிருசீரகஞ்சீனம் அசுவகெந்திசிவன்வேம்பு வேர்க்கொள்ளெருக்குப்பிரம்புதனில் மேவுங்கிழங்கொன்றரைப்பலமாய்ச் சேர்க்குங்குடிநீரருந்திவரிற் றிருந்துணுக்குவாதமதே. 2
கசவாதம்
சரிரமுமதைத்துக்குத்தித் தளர்ச்சியோடயர்ச்சியுண்டாம் புரிசெயல்தெரிந்திடாமற் பொருமிமேல்மூச்சுமாகிக்
132

செகராசசேகர வைத்தியம்
கரியெனக்காலும்வீங்கிக் கண்சிறுத்துடல்வெளுக்கில் தெரிகசவாதமென்னத் தேர்ந்தவர்செப்பினாரே.
மருந்து
நூறாண்டுக்கிட்டந்தன்னை நுவல்தான்றிக்கரியாற்காய்ச்சி ஆறாமுன்கோசலத்தி லைம்பதுமுறைதோய்த்தத்தை நீறாக்கிப்பலமெடுத்து நெல்லிக்காய்கடுக்காய்தான்றி வாறானமதுரஞ்சுக்கு வளர்கருஞ்சீரமோமம்.
ஒமமோடீரரத்தை உயர்மிளகொடுசாதிக்காய் வாமமார்கராம்புதிற்பல் வசுவாசிகழஞ்சுவீதம் தாமதமறத்தூளாக்கித் தகுதேனிற்குழம்பாய்க்கிண்டிச் சேமமாய்த்தின்றுவந்தால் தீர்ந்திடும்கசமாம்வாதம்.
பைத்தியவாதம்
உயிர்த்திடும்பயமுண்டாகி யுரைத்திடும்பிதற்றியோடும் செயிர்த்திடும்மயக்கியேறித் திமிர்த்திடும்நடுக்கமுண்டாம் அயிர்த்திடுமன்னந்தேடு மழுதிடுமிருந்துசோம்பும் பயித்தியவாதஞ்செய்யுங் குணமெனப்பகர்ந்தாரன்றே.
எண்ணெய்
கொடிவேலிமுருங்கைகொன்றை கோதில்மாவிலங்குநொச்சி கடிமேவுவாதங்கொல்லி காற்றோட்டியுவாயெருக்குத் தடிமேவுபெருமருந்து சாற்றியவமுக்கிராய்வேர் துடிமேவுபிடியொவ்வொன்றின் தூள்நிம்பனண்ணெய்கொத்தே.
கொத்திலவங்கமுள்ளி கோட்டநன்மிளகுமஞ்சல் சுத்தமாரரர்த்தையிங்கு சுக்குநற்சீர்வெளுத்தல் சித்தமார்வசம்புகொத்த மல்லிசிற்றரத்தையேலஞ் சத்தமார்கடுக்காய்சன்னி விரைசதகுப்பைகூட்டே.
கூட்டிநேர்கழஞ்சோரொன்றாய்க் கொதித்துள்ளுமருந்திவார்க்கில் நாட்டியபயித்யவாதம் நடுங்கியசன்னிவாதம் காட்டியகபாலசன்னி கடும்பிறவீச்சுக்காசம் நீட்டியகதிர்முன்கண்ட பனியெனநீங்கிப்போமே.
படர்காசவாதம்
வலிபெறுகாலுங்காயும் வசமறவிழுமோர்பாகம் அலைவுறுஞ்சடமுஞ்சற்றே யதைப்புமுண்டாகிமற்று மொலிபெறுவாயும்நாக்கு மொளிமுகத்துடனேபல்லு முலைபெறுவேற்கணல்லா யொருபுறந்திருகுமன்றே.
அன்றியுந்தலைவலிக்கு மதிற்குத்துமுளைவுமுண்டாய்க் கன்றியசரீரநொந்து கஞ்சிநாள்தொறுமறந்து துன்றியபெலன்குறைக்குந் தொடர்படர்காசவாதம் ஒன்றுபுண்ணியபலத்தா லல்லதுவொழியாதன்றே.
133

Page 78
செகராசசேகர வைத்தியம்
மாவிலங்கம் எண்ணெய்
முருங்கைசிவதைகொடிவேலி முதிர்மாவிலங்கைகான்றையின்வேர் நெருங்கவிவையொன்றொருமரக்கால் நீறாயிடித்தேயவித்ததண்ணீர் ஒருங்குமிலவஞ்சதகுப்பை யோதுகடுக்காய்சிறுமூலம் நருங்குமரத்தைமரமஞ்சல் நலஞ்சேரகில்நற்றேவத்தார்.
தாரார்சரக்கொன்றிருகழஞ்சு தனிநல்லெண்ணெயொருகொத்தில் நேராயரைத்துப்பசுவின்பால் நிகழுஞ்சந்தம்விட்டுறி சீராய்மந்தபதம்வடித்துத் தின்றுபூசிமுழுகிவரில் ஏரார்படர்காசத்தோடே எல்லாவாதங்களும்போமே.
சிறுபிள்ளைவாதம்
உறுபதமொன்றுசேர்ந்து விழுமுடனடைகொடாது சிறுகளைவெதுப்புமுண்டாய்த் தியக்கிமெய்மயக்கிச்சோரும் மறுகவோர்மாதமிண்டி வசமறப்புரிபோற்சுற்றும் சிறுபிள்ளைசோர்வாதத்தின் செய்குணஞ்செப்புங்காலே.
மருந்து
தூதுவளைகாற்றோட்டிமுருங்குகான்றை
தூயமாவிலங்கைநொச்சிவாதங்கொல்லி தாதுவளர்சிவதைகாவிளைவேரொன்று
சரிபிடுங்கிச்சீவியரித்திடித்துமாவாய் கோதிவளர்மிளகேலம்மஞ்சளுள்ளி
கொத்தமல்லிவசம்பரத்தையிருசீர்திற்பல் மோதிவளர்தேவதார்கடுகுசன்னி
மொழிகடுக்காய்சிறுமூலம்விளால்வேர்க்கொம்பே.
வேறு
வேரின்மரமஞ்சள்குப்பையிவையோரொன்று
விளம்பியவேர்சரிநேராயிடித்துத்தூளாய் நேரியநல்லெண்ணெய்தனிற்கொதியிற்றுவி
நிதானமாயுள்ளருந்திப்பூசிவார்க்கில் பாரில்சிறுபிள்ளைதனைவருத்திச்சோரும்
பகர்வாதம்பருத்தசந்திற்பிடிக்கும்வாதம் தேரில்வருகதிரவன்முன்பனியேபோலத்
தீர்ந்துவிடுமெனமுனிவர்செப்பினாரே.
எரிவாதம்
வலிப்புடன்வறுகிக்குத்தி வருஞ்சலமூர்ந்துழைந்து
சலிப்புறத்தீன்மறந்து சரீரத்திலெரிவுண்டாகும்
மலைப்பொலியறலைநேரும் மருங்குழல்வல்லிநல்லாய்
தலைப்பெறுமெரிவாதத்திற் சார்குணஞ்சாற்றினோமே.
மருந்து
எரிவாதங்கண்டதானா லிலந்தையினிலையரைத்துப் பரிவானகாடிதன்னில் பண்புடன்கரைத்துக்கொண்டு
134

செகராசசேகர வைத்தியம்
உரியமத்தாற்கடைந்து உடலெங்கும்பூசிவந்தால் தரியாமலோடுமென்னச் சாற்றினாரறிஞர்தாமே.
அந்தரவாதம்
அந்தரவாதஞ்செய்யுங் குணமிதென்றிறயவேண்டில் அந்தரமாக்கமாக வதிகமாயுயரவேறி வந்துடன்விறைத்துப்பல்லுக் கிட்டிப்பின்மயக்குமென்று சுந்தரமுறுவேதந்தான் சொன்னவாறாகுமன்றே.
տ(ՖհՖl
காட்டெருக்குமாவிலங்குமுருங்கைபுன்கு
கான்றைநொச்சிபெருமருந்துவாதங்கொல்லி ஈட்டமுறவிவைபிடுங்கித்தோலைச்சீவி
இயற்கடுகுமஞ்சளுள்ளிமரிசஞ்சுக்கு நாட்டமுறவொவ்வொன்றோர்பலமெடுத்து நன்றாகவிடித்தரித்துத்தேனிலுண்டு நீட்டுமாவிலங்கெண்ணெய்பூசிக்காய்ச்சில்
நிலைத்தவந்தரவாதம்நீங்கிப்போமே.
பொது
வாதராட்சதன்
இதரமிளகுதில்லம்பா லியல்பாயொன்றோர்முக்கழஞ்சாய் அதிரவெருக்கம்வேர்ச்சாற்றி லரைத்துச்சிறியபயற்றினைப்போல் பிதிரவுருட்டியிரண்டுண்டை பேணியெருக்கம்பழுப்பிலைநீ ருதிரவரைத்துஉள்ளருந்தி லோடும்வாதமெண்பதுமே.
எண்பதுவாதத்திற்கு மேற்குநற்குளிகையென்றே நண்பினாலிதனைவாத ராட்சதனென்றுநல்லோர் பண்பினாலுரைத்தாரிந்தக் குளிகையேநசியம்பண்ணில் விண்விசைவாதஞ்சன்னி விரைவில்விட்டோடுங்கானே.
குழைவேது
ஆட்டுக்காலடம்புதில்லைவாதங்கொல்லி
யாமணக்குக்குருந்துநொச்சியாடாதோடை நாட்டுமாவிலங்கையிலையனைத்துஞ்சேர
நயமாகப்பறித்தவித்துவேதுண்டாக்கி கூட்டுமிந்தவிலைநீரிற்குளிக்கநாளுங்
குணக்கியவாதங்களெல்லாங்குலைந்தேயோடும் மீட்டுமிந்தவேதில்நன்றாய்முழுகுவீரேல்
விட்டகலும்வாதமெல்லாம்விரைந்துதானே.
வாதமாதியநோய்க்கு வரப்பிரசாதி எண்ணெய்
சாந்தணிந்தேவளர்ந் தோங்கிடுங்கூந்தலுறு
தையலேதைலமதனைச்
சார்ந்தவகையினில்வரப் பிரசாதியெண்ணெயைச்
சாற்றிடக்கேளுமயிலே

Page 79
செகராசசேகர வைத்தியம்
காந்திமிகுபுங்கினுந் தெங்கினும்பாலினொடு கைப்பானவேம்பிணெண்ணெய் காசில்முத்தாமணக் கெண்ணெயுடனோரொன்று
கதியாமலோர்நாழியாய் சேர்ந்துஒன்றாகக் கசாளங்கலக்குபின் செங்கழுநீரோடுகோட்டம் திற்பலியின்மூலம் வசம்பொடிருசீரகஞ்
சேரோரொன்றீர்கழஞ்சாய் மாந்தமுறுசாரணைக் கந்தமும்வாளமும்
மணம்வீசுவெண்சந்தமும் வளர்பேரிலங்கையின் பட்டையும்வெட்டிநிறு
வகைக்கோர்கழஞ்சுபத்தே.
வகையாய்நிறுத்தபின் னிருநான்குவெந்தயம்
வாகானஇங்குமூன்று மருவுவெண்காரமொடு பெருகுதிற்பலிஏழு
வழுவிடாதேநிறுத்து தகையாயரைத்துக் கரைத்துநாள்மூன்றினிற்
றக்கபதமாய்வடித்துத் தபனன்முன்னாகவே மூன்றுநாள்முழுதினுந்
தவறாமல்வைத்தெடுத்து பகையானவாதமொர் புறத்திற்றிரண்டிடிற்
பருகுகாற்கழஞ்செண்ணெயைப் பண்டிமேலெங்கணும் மண்டிப்பொருத்தியிடு பகர்நாற்கழஞ்செண்ணெயைத் தொகையானவாதக் கடுப்புத்திமிர்ப்பெனத்
தோன்றுமெண்பதுவாதமுஞ் சொல்லுபெருவயிறுநீர்க் கட்டுமுதல்வெகுநோய்கள்
தொலையுமிதுநிலையறிவையே.
வாதபற்பம்
திற்பலியசமதாகஞ் சீரகங்கொத்தமல்லி பொற்புறுசீனமூலம் பொருந்தியவேர்க்கொம்பொன்றோர் சொற்பெறுபலமாய்க்கொண்டு தூள்செய்துதேனிற்கொள்ளில் நிற்புறாவாதமெல்லாம் நிலைகுலைந்தோடுங்காணே.
வேறு
பெருமருந்தெருக்குக்கான்றை பேருவாய்வாதங்கொல்ல அரியவெள்ளறுகியங்கு அமுக்கிராய்கழஞ்சோர்நாலு உரியவேர்க்கொம்புதிற்ப லுள்ளிநற்கடுகுசந்தம் கரியநன்மிளகுசாதி கராம்பதிமதுரமாமே.
ஏலசமோதமாயா விதரமோடிருசீர்காயம் சாலபின்கடுக்காய்சீனக் கிழங்குமோர்பலம்வெளுத்தல் காலரிதாரமொன்றோர் கழஞ்சிரண்டிடித்துமாவாய் சீலமார்தேனிற்கொள்ளிற் றீர்ந்திடும்வாதமெல்லாம்.

செகராசசேகர வைத்தியம்
கசரோக குணமும் மருந்தும்
வால கசரோகக் குணம்
சீலமார்நெஞ்சுநொந்துகாய்ச்சலுண்டாய்ச்
சியல்பளிங்குக்கல்லுப்போறிறிரண்டுவீழும் கோலமார்தலைவலித்துச்சரீரம்வற்றிக்
கொடியசலமலமறித்துள்ளிருமலுண்டாம் நீலமார்கண்ணிருளாமீளைபோல
நெடிதாகவிழுத்துமுட்டுத்தொய்வுண்டாகும் காலமார்வாலகசரோகஞ்செய்யுங்
கடியகுணமெனமுனிவர்கழறினாரே.
வாலகசரோகம் கிரந்தி கோழைக்கு நெய்
திருந்தியபசுநெய்நாழி சீனிதானொன்றோர்நாழி பொருந்தியகண்டங்காலி தூதின்வேர்போதநாழி அருந்திடுதூதினல்ல பழத்தின்வேரதுவும்நாழி வருந்தியேயரைத்துநன்றாய் வளம்பெறக்குளைத்துச்சேர்த்தே.
சேர்த்ததிற்சரக்குத்திற்பல் சீரகமிவையோரொன்று ஏர்த்தொருபலமாய்வாங்கி யிடித்தரித்துடனேகாய்ச்சிச் சீர்த்திடுமிந்தநெய்யைத் தின்றிடில்வாலரோகம் ஆர்த்திடுகிரந்திகோழை யகன்றிரிந்தோடுங்கானே.
நிலக்குமிழ்நெய்
இருவேலிநன்னாரிமுத்தக்காசு
இயங்குகண்டங்காலிநிலக்குமிழ்சீதேவி தருவேலிதுதுவளைநெருஞ்சில்நாணல்
தங்குநிலப்பனைக்கிழங்குமுல்லைவேரும் கருவேலிவெள்ளரிக்காயிஞ்சிச்சாறு
கடியநீர்வள்ளிமொந்தன்கிழங்குச்சாறும் திருவேலிபேரீஞ்சுமுந்திரிப்பழத்தின்
செப்பியசாரோறாறுநாழிகூட்டே
கூட்டுசரக்கதிமதுரமேலங்கோட்டம்
கோதில்வசுவாசிதிற்பல்கராம்புநெல்லி நாட்டுமரமஞ்சலுடன்கடகசிங்கி
நாகம்பூத்தக்கோலங்கடுக்காய்தான்றி ஈட்டுமிருசீரகஞ்சாதிக்காய்வேதி
யிந்தசமோதகம்வேர்க்கொம்பிலவஞ்செண்பூ காட்டுறுபச்சிலைதாரம்(மஞ்)சிட்டி(தக்)கோலம்
கதிக்கவொன்றோரொருகழஞ்சுகணக்காய்வாங்கே.
வேறு
வாங்கியிடித்திடுசரக்கைப்பசுப்பால்விட்டரைத்து
மற்றநறுநெய்நாழியதிற்கரைத்துக்காய்ச்சி ஓங்கியநாலாநாளில்வடித்ததனையருந்தி
உறப்பூசிமுழுகிவரிற்றீர்த்திடும்வியாதி
137

Page 80
செகராசசேகர வைத்தியம்
தீங்குதருகாசமொடுகசரோகமீளை
தீராதவுழற்றுகசரோகமுளமாந்தை பாங்குதருமிரத்தகசம்பகர்வாலகாசம்
பதறிநடுநடுங்கியுடன்பறந்தகன்றுபோமே.
இரத்தகசரோகம்
வருத்தமுறுசரிரநொந்துகாய்ச்சலாகி
வாதைமிகுமுதிரமாயெடுத்துத்தொய்வாம் உருத்திமிகுநெஞ்சுநொந்துகைகால்சோர்ந்தே
உட்டணமாய்க்களைகளையாய்மயக்கிவேர்க்கும் கருத்தறவேதின்மறந்துமுட்டதாகிக்
காதடைத்தேயிரவுபகலுறக்கம்வாராப் பொருத்தமுறுமிரத்தகசரோகஞ்செய்யும்
பொல்லாதகுணமிதெனப்புகன்றாரன்றே.
மருந்து
ஆடாதோடைமூலபல மடைவேதூற்றினொருபதுக்குக் கோடாநிறையிற்றறித்திடித்துக் கொள்ளும்படிநீர்தூணியிட்டுக் தேடார்பதக்குநீராக்கித் தினமோரைந்துசென்றதற்பின் நாடிவடிக்குநீரதிலே நன்றாய்க்கூட்டுமருந்துவட்டே.
வட்டுக்கண்டங்கத்தரிவேர் வளர்தேட்கடைசுழலாவிரைவேர் கிட்டுமுக்காவிளைபங்கங் கிளருமமுக்கிராய்வேரும் வெட்டுமரத்தைசிறுமூலம் மிளகுசிறுதேக்குடன்தான்றி மட்டுத்தருசீரகமிரண்டும் மருவுங்கறுத்தவிளாலரிசி.
அரியதேவதாரமுடன் அடுத்தவிலவங்கஞ்சந்தம் உரியபேரீச்சங்கனியு முறுமுந்திரிகைப்பழந்தானும் பெரியவிலாமிச்சிருவேலி பிறங்குமேலம்வெட்பாலை விரியுமதுரங்கடகசிங்கி மிக்கமரமஞ்சலுங்கூட்டே.
மிக்கவேரொன்றிருகழஞ்சு விரும்பியரைத்துக்கரைத்ததனில் தக்கஆவின்நெய்நாழி தன்னிற்கரைத்துத்தழல்வெதுப்பி நக்கமெழுகுபதம்வடித்து நாளுமுலற்றுமிளைப்பிருமல் கக்கலீழைகோழையுடன் கசரோகங்களிவைபோமே.
தூதுவளைநெய்
தூதுவளைவேரிலைகாய்பழச்சாறொன்று துவைத்துவடித்திரிரண்டுநாழிகூட்டி மீதுவளர்புல்லாந்திசெங்கத்தாரி
மிக்கநிலப்பனைநாவல்வட்டின்பூறல் தாதுவளர்நன்னாரியிவையோரொன்று
தான்பிடுங்கியிடித்தரைத்துக்கசாளமாக்கி மாதுவளர்பசுநெய்யோர்நாழிவிட்டு
மருவுசரக்கதிமதுரமகிலிந்துப்பே.
இந்துவிழாலரிசியுள்ளிதேவதார
மிருசீர்கற்கடகசிங்கிசிவந்தசந்தம்
138
11
12

செகராசசேகர வைத்தியம்
முந்துதிரிகடுகுலுவாமாஞ்சில்வள்ளி
முதியதிரிபலைகராம்பிவையோரொன்று
தந்தகழஞ்சிரண்டரைத்துக்கரைத்துக்காய்ச்சிச்
சரிமெழுகுபதம்வடித்துள்ளருந்தில்நாளும்
வந்தகசரோகமெட்டும்கோழையேழும்
வருமிரவியெதிர்பணிபோல்மாறிப்போமே.
சந்திர கசரோகம்
வருத்தமுறஇருமிநொந்துகாய்ச்சலுண்டாய் வசமறவேயிடதுபக்கவிலாவிற்குத்தி பொருத்தமுறமேல்மூச்சாய்மிடறுங்கேரிப்
போதவேபிடரிநொந்துமறுவிலாவில் திருத்தமுறநொந்துகுத்திநெஞ்சுநோவாய்த்
திட்டுமுட்டாயடைத்துமிகத்தொய்வுண்டாகும் அருத்தமுறசந்த்ரகசரோகஞ்செய்யும்
அடுத்தகுணமெனமுனிவரருளினாரே.
சீரகநெய்
பெருங்காயமொருகழஞ்சுகோட்டமிருகழஞ்சு
பெருத்தகடுக்காய்மூன்றுவசம்புநாலு தருங்கருஞ்சீரகமைந்துவேர்க்கொம்பாறு
சாற்றியதிற்பலிமுலமேழதாகும் நெருங்காயதிற்பலியெண்கழஞ்சுவாங்கி
நேரியசீரகமொன்பான்கழஞ்சுகூட்டி மருங்காவினறுநெய்யோர்நாழிகாய்ச்சி
மருந்தைவறுத்திடித்தரித்துக்கொதியிறறுவே.
தூவியபின்னிறக்கிநெய்யைத்துளாவியாற்றிச் சுகமாகவுள்ளருந்திவருவீராகிற் தாவியமூலக்கிரந்திகாயாசேடந்
தணியாதசந்த்ரகசரோகமீளை மேவியவெப்பிளைப்பிரத்தக்கடுப்புச்சத்தி
மிடறடைப்பிருமலுடன்சூலைரோகம் தேவுலவுசீரகநெய்யிதனிறிறிருஞ்
செப்பியநோயெனமுனிவரருளினாரே.
பூசணிநெய்
கரும்புநீர்பொன்னாங்காணி கதித்திடுபசுவின்பால்நெய் குரும்பைநீரிளநீரோடு கூழ்ப்பாண்டப்பழத்தின்சாறும் சுரும்பிமிர்மொசுக்கைச்சாறுந் தூதுளம்பழத்தின்சாறும் விரும்பியசாம்பல்வாழை விரிந்திடுபழத்தின்சாறும்.
சாறிவையொன்றோர்நாழி தகுநீற்றுப்பழநீர்நாலு தேறிலாமிச்சுநன்னார் திகழிருவேலிகாலி வீறிலங்கமேலம் விளம்புதிற்பலியரத்தை மாறில்வெட்பாலைகோட்டம் மகிழ்சதகுப்பைநெல்லி.
139
13
14
15
7

Page 81
செகராசசேகர வைத்தியம்
நெல்லிநற்கராம்புவாசி நேரில்கச்சோலம்வள்ளி சொல்லியவிடைமஞ்சிட்டி சோதியிந்துப்புச்சாதி புல்லியமதுரஞ்சந்தம் புகழ்விளால்கொத்தமல்லி வல்லியதகரத்தோடு வகுத்தசெண்பகத்தின்மொட்டே.
மொண்டிடுசரக்கோரொன்று முதிர்கழஞ்சொன்றுவாங்கி மிண்டிடவரைத்திட்டுறி மெழுகினில்வடித்துச்சீனி யுண்டிடுந்தேனுஞ்சற்றே யூற்றிநெய்யுறக்கொள்வீரேல் கொண்டிடுங்கசம்வரட்சி குலப்பிரமேகம்போமே.
சூரியகசம்
இருமியேஇரவுபகற்கடினமாகி
ஏதமுறத்தலைவலித்துக்குளிர்ந்துகாய்ந்து பொருமியேநெஞ்சுநொந்துவிலாவிற்குத்திப்
பூனையைப்போலுறுமியன்னம்வெறுத்துக்கேரும் செருமியேதொய்வுமுண்டாய்த்தாகம்மிஞ்சிச்
சேடமிகும்பழுத்தசளிகஞ்சிபோலாம் தருமியேயிக்குணந்தானேதோவென்னிற்
றங்குசூரியகசத்தின்குணமிதாமே.
மரற்பாகு
தூதுவளைபிரமிமொசுக்கைச்சாறுந்
தூய்பசுப்பால்நெய்சினிமரற்கிழங்கு தாதுவளர்புளிநடலைக்கிழங்கோரொன்று
தனிதுவைத்துப்பிளிந்தெடுத்துச்சரியாய்க்கொண்டு மீதுவளரமதுரங்கோட்டமேலம்
மிளகுசீரகங்கடுக்காய்தான்றியோமம் ஒதுமிலவங்கமிந்துபுலுவாதிற்பல்
உரியகொத்தமலிவேர்க்கொம்புடனோரொன்றே.
ஒன்றியநேர்கழஞ்சுசரக்ககரைத்துக்காய்ச்சி
யுறுமெழுகில்மரற்குழம்பையுறக்கொள்வீரேல் நின்றிருமல்கோழைகசம்வரட்சியிளை
நிலைத்திடுகாயாசேடமிளைப்புத்தொய்வு சென்றிடுமூலக்கிரந்தியுலற்றுச்சூலை
செருமலவரட்சிசிலேட்டுமமிதெல்லாம் இன்றிரவியெதிர்பணிபோற்கலங்கியேகி
யிளகுமெனவருள்முனிவரியம்பினாரே.
கூழ்ப்பாடலேகியம்
நெல்லிக்காய்ச்சாறிளநீரிஞ்சிச்சாறு
நீற்றுப்பூசணிப்பழநீர்கருப்பஞ்சாறு சொல்லியமாதுளம்பழநீர்பொன்னாங்காணி
தூதுவளம்பழச்சாறுவெல்லஞ்சீனி புல்லியதேன்முந்திரிகைக்கனிபேரீஞ்சின்
பொருந்துகனியிவைசாறுசரிநேர்கொண்டு கல்லியசீரகமிரண்டுகடுக்காய்நெல்லி
கராம்புவசுவாசியதிமதுரங்கோட்டம்.
140
19
20
21
23
24

செகராசசேகர வைத்தியம்
கோட்டிலவஞ்சாதியிந்துப்பசமதாகங்
கொத்தமல்லிதிற்பலிவேர்க்கொம்புதான்றி காட்டுலுவாஏலமொன்றோர்கழஞ்சுவாங்கிக்
கடிதரைத்துக்கரைத்துவிட்டுக்கசாளமாக்கி நாட்டியகூழ்ப்பாண்டலேகியமாமீதை
நற்குழம்பாய்க்காய்ச்சியுள்ளேநலமாய்க்கொள்ளில் ஈட்டியதோரிளைப்பிருமல்கோழைகாச
மிலங்குசூரியசகமுமிளகிப்போமே.
காசசகரோகம்
நேசமிகுசரிரமணல்போலேகாய்ந்து
நெஞ்சுநொந்தேஅரிகுரலாய்மிடறுங்கேரும் பாசமிகுநெஞ்சிடித்துப்பதைப்புண்டாகும்
பகலிரவுமிருமிமுட்டாய்க்களையுண்டாகும் வாசமிகுஞ்சளிவரண்டுவீணைபோல
வருத்தியிழுத்திருத்திமிக்ககடினமாகும் காசமிகுங்கசரோகக்குணமீதென்றே
கற்றமுனிவரறிந்துகழறினாரே.
தூதுவளைநெய்
தூதுவளம்பழநாழிநறுநெய்நாழி
துய்யமிளகிந்துப்புக்கடுக்காய்தான்றி மாதுவளர்சிறுதேக்குமதுரம்நெல்லி
வளர்கருஞ்சீர்திற்பலுலுவாநற்சீரம் ஈதுநிறைகொண்டுபதம்வடித்தருந்த
இளைப்பிருமலிழையுடன்கிரந்திகோழை சோதிவளர்தினகரன்முன்னிருளேபோலத்
துணிந்தகலுமெனமுனிவர்சொல்லினாரே.
திற்பலிநெய்
அதிமதுரமேலமிலவங்கஞ்சுக்கு
அசமோதமிருசீரங்கடுக்காயிந்து புதியவெந்தயமிளகுவெளுத்தலொன்று
பொற்புறுதிற்பலியாறுகழஞ்சுவாங்கி பிதிரவிடித்தரித்தெடுத்துமாவாய்த்தெள்ளிப்
பேசுநறுநெய்கொதியிற்றுவிக்கொள்ளில் முதிர்காசசகம்வரட்சியிருமலிளை
முடுகாதுகதிரவன்முன்பணிபோற்போமே.
இக்காதிகிருதம்
ஆடாதோடைநிலக்குமிழ்வேர் அடுத்தகண்டங்காலிவட்டு கோடார்துதுவளையியங்கு கொடிநன்னாரிகளப்பன்னை பீடார்செங்கத்தாரியின்வேர்பிடியோரொன்றுநிறையாக
தோடார்முசுக்கைவெள்ளறுகு தூயபிரமிகொடிதலையே.
கொடிசேர்கையான்தகரையிலை கோதில்பசுப்பால்செவ்விளநீர் படிசேர்கரும்புமுந்திரிகை பகர்பேரீஞ்சின்கனிசீனி
141
25
26
27
28
29

Page 82
செகராசசேகர வைத்தியம்
அடிசேர்துர்தின்பழச்சாறு அருமாதுளைகற்பூரவள்ளி கடிசேர்சாறொன்றொருநாழி கருதும்பசுநெய்யிருநாழி. 30
இருசீரகந்திற்பலிமிளகு ஏலங்கடுக்காயதிமதுரம் தருசீருலுவாஅசமோதந் தான்றிலவங்கங்கொத்தமல்லி வருசீர்நெல்லியரிதாரம் வகையார்செஞ்சுந்தனந்தேக்கு ஒருசீர்வேதியிந்துப்பி னுடனேசரக்கொன்றொருகழஞ்சே, 3.
ஒருங்காயிடித்தேயரைத்தெடுத்தேயூறுங்கசாளமுடன்சேர்த்து மருங்காய்வருநாடொறுங்காய்ச்சி வளமாயதனைப்பதம்வடித்து நெருங்காதிருகாசிடைநேரம் நிதானஞ்சீனிதனிலருந்தில் வருங்காரிழைகாசகசம் வரட்சியிருமலிவைபோமே. 32
விறுத்திக்கசரோகம்
கறுத்திருமித்தலைவலித்துக்காய்ச்சலுண்டாய்க்
கஞ்சிமறந்துழைந்துகுத்திக்கைகால்சோர்ந்து செறுத்துநெற்றிதனிற்குத்திமுகம்வேர்த்துச்
சேடமுறுமிரவிருமலதிகமாகும் மறுத்தயர்ந்துசளிமணத்துச்சரீரம்வற்றி
மயக்கிவெளுத்திடுஞ்சளியும்மலியவிழும் விறுத்திகசரோகஞ்செய்குணமீதென்றே
விளம்பினாரருந்தமிழ்ப்பாவிரும்பினோரே. 33
வெல்லப்பாகு
வெல்லநாழிதேன்நாழி மிகுகூவிளம்வேரொருநாழி சொல்லுங்கோட்டமிலவங்கந் தூயகராம்புவசுவாசி புல்லுங்கடுக்காய்வேர்க்கொம்பு பொருந்துமிருசீரகமேலம் நல்லமிளகுசிறுதிற்பல் நாட்டுமசமோதகம்மதுரம். 34
மதுரமிகுக்குங்குமப்பூ வகுத்தசாதிக்காயிந்துப் பதிரவிவையொன்றிருகழஞ்சு அரைத்துக்கரைத்துக்குழம்பாக்கி பிதிரக்காய்ச்சியந்திசந்தி பேணியருந்திவருவீரால் முதிருமிருமல்வரட்சிகசம் முடுகிவாராதிவைபோமே. 35
வில்வாதிலேகியம்
சீர்செறிகண்டங்காலி திகழ்வில்வமிஞ்சிச்சாறு நீர்செறிகரும்பின்வெல்லம் நிலவியதேனோர்நாழி ஏர்செறிகராம்புவாசி யிலவங்கமேலங்கோட்டம் பார்செறியிருசீரோமம். பகர்மிளகுடனிந்துப்பே. 36
துப்புநேர்மதுரந்தான்றி தூயதிற்பலிவேர்க்கொம்பு செப்புநேர்சரக்கோரொன்று திகழிருகழஞ்சாய்வாங்கு அப்புநேர்சரக்கும்வேரு மரைத்தெடுத்திவையொன்றாக்கி கொப்புநேர்ந்திடுமாதாளம் பழச்சாறோர்நாழிகூட்டே. 37
கூட்டியேகுழம்பாய்க்காய்ச்சிக் குறித்தவில்வாதிலேகியம் நாட்டியகழஞ்சோரொன்றாய் நாடொறுமருந்துவீரேல் ஈட்டியகோழைகாச மிருமலோடிளைமாந்தம் காட்டியகசமுமேங்கிக் கடுகவேகுலைந்துபோமே. 38
142

செகராசசேகர வைத்தியம்
மதுரகசரோகம்
அதிரவேயிருமிநொந்துதொய்வுண்டாகி
அங்கமெலாமனலெனவேயெரிந்துகாய்ந்து முதிரவேசளிவிழுந்துவிலாவுங்குத்தி
முட்டதாய்வாய்கயர்ந்தேயினிப்புண்டாகும் பிதிரவேகளைகளையாய்வேர்வுண்டாகும்
பேதமாயூண்மறந்தேசரீரம்வற்றும் மதுரகசரோகஞ்செய்குணமீதென்றே
மாமுனிவர்வகுத்தபடிமதித்துக்காணே.
வில்வாதிலேகியம்
திருந்துகண்டங்காலிவில்வமாடாதோடை
சிற்றமட்டிதுதுவளைஇயங்கின்வேரும் பொருந்துகையான்தகரைமொசுமொசுக்கைச்சாறும் புகல்தூதின்பழசசாறுமிவையோர்நாழி அருந்துவெல்லந்தேன்பசுநெய்யிவையும்நாழி அதிமதுரந்திற்பலிவேர்க்கொம்புதான்றி மருந்துநெல்லிமிளகிருசீரகமிந்துப்பு
மாயாக்காய்வசுவாசிகராம்புகோட்டம்.
கோட்டிலவமசமோதங்கடுக்காயேலம்
கொத்தமல்லியிவைசரக்கொன்றிரண்டுவாங்கி போட்டிவைநேர்வேர்மாவுமரைத்தொன்றாக்கிப்
புளிப்பதமாய்க்காய்ச்சிவில்வாலேகந்தன்னை நாட்டுமொருநேரமொருகழஞ்சாய்க்கொண்டு நல்லபசுப்பால்நறுநெய்நலந்துகூட்டில் ஈட்டுகசரோகமுளமாந்தையீளை
இருமலெய்ப்புக்கோழைமுதலிளகிப்போமே.
வெல்லப்பாகு
பொற்புறுகண்டங்காலி பொருந்தியஆடாதோடை சொற்பெறுமியங்குவில்வ பத்திரிதுதின்வேரும் நிற்புறுமிவையோரொன்று நிதானமாயிடித்திமாவும் நற்புறுவெல்லம்நாழி நாடுந்தேன்நாழிகூட்டே.
கூட்டிடுகராம்புவாசி குலவதிமதுரமேலம் நாட்டுசீரகமிந்துப்பு நல்லதிற்பலிமாயாக்காய் காட்டியமிளகுதான்றி காய்ச்சியேகுழம்பாய்க்கொள்ளில் ஈட்டியகசம்வரட்சி இருமல்விட்டிளகிப்போமே.
சுக்கில சகரோகம்
அக்கினிபோலெரிந்தருகியிருமலுண்டாய்
அதிகமாய்சளிவிழுந்துசளியும்நாறும்
விக்கினதுபோல்மிடறுமடைத்துக்கேரி
விடும்வயிறுகழிந்துகண்ணுமிருளாய்மூடும்
உக்கினதுபோல்நாறிக்கொதிப்புண்டாகி
உண்டிமறந்துலர்ந்துவற்றித்தொய்வுண்டாகும்
143
39
40
4.
42
43

Page 83
செகராசசேகர வைத்தியம்
சிக்கினசுக்கிலகசத்தின்குணமீதென்றே
செப்பினாரருகலைதேர்செல்வர்தாமே.
கலியாணகிருதம் பேரமல்லிசிற்றமல்லிகூவிளைநன்னாரி
பேய்த்திமிட்டிசாரணைபொன்னாங்காணிசீந்தில் நீர்வள்ளிசிறுநெருஞ்சியமுக்கிராய்விழி
நிலப்பனைசிற்றாமணக்குத்திராய்முத்தக்காசு சீர்தருகொட்டிக்கிழங்கினொடுபங்கம்பாளை
சிறியவழுதலையிவையின்வேரொன்றைம்பலமாம் நாரமொருபதக்குக்கொண்டேநருக்கிவேரும்
நாலுநாளுறியபின்றுாணியளவாக்கே.
ஆக்கியபின்னதிற்கூட்டுமாஞ்சிலதிமதுரம்
அதனுடனேசெங்கழுநீர்க்கிழங்குடனேகோட்டம் தேக்கியமுந்திரிகைசவற்காரமதிவிடையம்
செண்பகப்பூசெவ்வியம்மஞ்சிட்டி *மதுகத்தின் பூக்கிளரேலஞ்சாளியிலவங்கம்நாகம்
பூவுலவுபேரீஞ்சின்கனிதேவதாரம் நோக்கியவெட்பாலைதனிலரிசிதுவற்சிகையும்
நுவலுமத்தித்திற்பலியுந்திரிபலையுங்கூறும்.
கூறரியசிற்றமலிபேரமலிசந்தங்
கோகனகவளையமொடமுக்கிரவுபாலை சாறணைநன்னாரியிருவேலியிலாமிச்சு
சந்தனமோரொன்றுகழஞ்சந்தமொடரைத்தே ஊறுபடமுன்னிடுகசாழமதில்விட்டு
உருவிலிகையம்பளவுநாழிநறுநெய்யைப் பேறுபடவிட்டளவுசாறுபடவைத்துப்
பின்னிடுமருந்தினதுபேர்கள்சிலசொல்வாம்.
சொல்லியபேயன்வாழைக்கிழங்குநீராடா
தோடைமுசுமுசுக்கைமுல்லைசுரந்துபொழியான்பால் நெல்லியுடன்வெள்ளிரிக்காய்பூசணிக்காய்கரும்பு நிறைநிரையாயிருநாழிநேர்சாறுகொண்டு மெல்லவொருகொதியாய்வெவ்வேறுகொதிகாய்ச்சி
வெதும்பியபின்முன்மருந்தினுடனிவையைவிட்டு நல்லபதமாய்ச்சிவடித்தந்தநெய்யை
நாடோறுமிருகழஞ்சுவீதமருந்துவீரே.
வேறு அருந்திருமல்மேல்மூச்சு அடுத்தநடுக்கமிரத்தபித்தம் வருந்தியிளைப்புக்கசரோகம் வரட்சிகாசம்வயிற்றெரிவும் பொருந்துமீளைஉட்காய்ச்சல் போகாவிரத்தவிற்புருதி திருந்துங்காயாசுவாதமுதற் றீர்க்குங்கல்யாணக்கிருதம்.
உலற்றுகசரோகம்
ஒயாவிருமலுள்வரட்சி யுடனேயுச்சந்தலைவலிப்பு
நோயேமிகுந்துமுதுகுவிலா நொந்தேநெஞ்சோடுளைந்துகுத்துந் * இருப்பை
144
44
45
46
47
48
49

செகராசசேகர வைத்தியம்
தூய்தாஞ்சரீரமுலர்ந்துவற்றிச் சுண்டிப்புகைந்துவயிறுவிடும் காயாவுலற்றுகசரோகங் கடினங்கட்டசாத்தியமே. 50
இதற்கோரின்னமொருகுணங்கே ளிளைப்புத்தொய்வாய்மேல்மூச்சாம் அதற்கேதுயரமிகுந்திருக்கு மடுத்தேம்யக்கிக்கிறுகிறுக்கும் முதற்சேரசனமொறுத்துவரும் முகமும்புறந்தாளுடனதைக்கும் பதற்சேர்துடிப்புவெளுப்புண்டாம் பகர்ந்தார்மரணம்பழையோரே. 5
காசம் வாலமந்தாரகாசம்
கண்டமுமுகமுங்காதுங் கரந்துமேல்மூச்சுமுண்டாய்த் துண்டமுந்தினவுபற்றித் தும்மலோடிருமலாகி உண்டியுமொறுத்துலர்ந்து உதரமும்பொருமிமூட்டாங் கொண்டமந்தாரகாசக் குறிகளின்குணமிதாமே.
மருந்து, கற்பம்
தூதுவளைவேரிலைகாய்சமூலமாய்க்கூட்டித்
துணித்துலர்த்தியிடித்தரித்தமாவுமோர்நாழி தாதுறுசீனியுநாழிதிற்பலியுநாழி
சாதிக்காயொருமூன்றுகடுக்காயுமிருபான் தீதறவொன்றாயிடித்துமாவாகத்தெள்ளிச்
னியுடன்குளைத்துநன்றாயச்சீலைதனிற்கட்டி மீதுறுநற்பசுப்பாலுமிருநாழிவிட்டு
மிகுத்தபற்படாகமொருபலம்பாலிற்போட்டே. 2
போட்டதன்பின்பாலதனைசீக்கொடுகட்டிப்
புகலடுப்பில்வைத்ததன்பின்மருந்தைவைத்துமூடி நாட்டமுடன்நெருப்பதனையொருநிரையாயெரித்து
நற்பசுப்பாலரைநாழியிருக்கமருந்திறக்கி மீட்டதனைவெக்கையுடன்பாக்களவுதிரட்டி
வெயிற்படாததையுலர்த்தியேபதனம்பண்ணி கூட்டுமிந்தக்கற்பமதைமண்டலங்கொள்வீரேல்
கோளையீழைமந்தாரகாசமுதற்போமே. 3
வேறு
கண்டங்காலிதுதுவளை கடியவட்டுகறுக்காய்வேர் துண்டஞ்சேர்பொன்னாங்காணி துயசிறுகாஞ்சொறியின்வேர் மிண்டுந்தேற்றாவிரைநூறு மிக்கவிளநீர்தனிலரைத்துக் கொண்டேபசுநெய்யிருநாழி கூட்டும்புனரைப்பழந்திற்பல். 4
உரியவெளுத்தற்பிசின்மிளகு முற்றகடுகுரோசனியும்
பெரியகஸ்தூரியின்மஞ்சள் பேசுங்கடகசிங்கியுடன்
அரியவிவையொன்றிருகழஞ்சா யரைத்துக்காய்ச்சிவடித்துண்ணிற்
கரியவரட்சிமந்தார காசந்தொய்விழையும்போமே. 5 பக்கமந்தாரகாசம்
இக்குணந்தன்னோடொக்க இருமல்மேலெடுப்புமுண்டாய் சிக்கெனநெஞ்சைக்கட்டிச் சிலேட்டுமமிறுகப்பற்றி
45

Page 84
செகராசசேகர வைத்தியம்
மிக்கதோர்வயிறுதானும் மிகுதியாய்ப்பொருமிக்குத்திற் பக்கமந்தாரந்தன்னிற் பற்றியகாசமாமே.
மருந்து
ஏரண்டத்தயிலமுடன்பசுப்பால்நெய்மிளகு
டுேத்ததனிற்சரிகலந்தேழ்தினங்கொள்வீரேல் பேரண்டக்காய்ச்சல்முதலாயிளைப்புத்தொய்வு
பிரிந்தகலுமதனைநிரைகலந்துகாய்ச்சி கர்ரண்ட்வளர்பனையின்வெல்லமுங்கூட்டிக்
கதிக்கருந்திப்பசுப்பால்நெய்காய்ச்சியேகொண்டு நேரண்டவளர்பசுநெய்நிம்பனண்ணெய்
நிரைகாய்ச்சிமுழுகிவரிற்கசகாசம்போமே.
வேறு
சீனக்கிழங்குமிரண்டுபலஞ் செப்பும்வேர்க்கொம்பிரண்டுபலம் தானத்திதரமிருகழஞ்சு சரியாயிடித்துஆரித்தெடுத்து கானத்திருநேரமும்வெருகிற் கலந்தேதேனிற்குளைத்தருந்தில் ஊனத்திருமல்கோழைகச முடன்மந்தாரகாசமும்போம்.
போமேசுறாநெய்பால்கூட்டிப் புதியசுறாவின்கருவாடும் தாமேயருந்திப்பத்தியமுந் தறுகாதுடனேயுண்டுவரிற் தீமேவியதொய்விளைப்புமுட்டுத் தீருமீளைகாசமுடன் தேமேவியசிர்க்கதிரவன்முன் சேர்ந்தபனிபோலகன்றிடுமே.
மந்தாரகாசம்
காதுநாசுகரகரத்துக் கடியதும்மல்மிகவுண்டாம் சோதிபயிலுமுதரமந்தித் தூயநாசிநீர்விழுந்து நீதிபயிலுநெஞ்சடைத்து நெடுகவிளைதான்வாங்கும் மாதேவானமந்தார மறைக்குங்காசவகையாமே.
மருந்து
இருப்பையரப்பொன்றரைப்பலங்கொண்
டிடித்தேதென்னங்கள்ளதனில் விருப்பாயவித்தேயொருசிறங்கை
விடியற்காலங்குடித்துவரில் அரிப்பாயெழுந்துகளைப்புண்டா
மஞ்சேல்நெடுநாட்சுகமிருக்கும் கரிப்பாமீளைநெஞ்சடைப்புக்
கடும்மந்தாரகாசமும்போம்.
வேறு
காக்கணங்கிழங்கிற்சாறு கதிக்கவோரிரண்டுநாழி பூக்கமழ்நிம்பவெண்ணெய் பொருந்தவோர்நாழிவிட்டு தாக்கமழ்வெள்ளையுள்ளி தான்மூன்றுபலம்வசம்ப தேக்கமழ்மிளகுமஞ்சள் திற்பலியரத்தைகாயம்.
146
10
1

செகராசசேகர வைத்தியம்
காய்த்திடுகடுக்காய்நெல்லி கடுகுசீரகமிரண்டு சாய்த்திடுமரத்தைசுக்குத் தானொருகழஞ்சுவாங்கி வாய்ப்புடனெரித்துட்கொண்டு வகைபெறமுழுகுவீரேல் தீய்க்குமந்தாரகாசந் திறல்மண்டைக்கரப்பன்போமே. 13
காசத்திற்கு எண்ணெய்
திற்பலிமிளகுஉள்ளி தேற்றாவின்பழத்தினோடு அற்பநன்னாரிவேரு மருந்துதூதளையின்வேரும் சற்பசுநெய்யுநாழி சரக்குவேரரைத்துநன்றாய் முற்படவடித்துத்தின்று முழுகிடக்காசம்போமே. 14
fo
வேறு
கான்றைநொச்சிபெருமருந்துதோடையெலுமிச்சை
காற்றோட்டிநன்னாரினருக்கலைதூதளைவேர் ஆன்றஉவாய்சிங்கிலியோரிதழின்தாமரைவேர்
அமுக்குரவுகுப்பளைவேர்காக்கணங்கொவ்வையின்வேர் ஈன்றநெல்லிப்பழச்சாறுமிரண்டுநாழியதாம்
இயற்பிரமிமொசுமொசுக்கையொடுகண்டங்காலி ஊன்றியகற்பூரவள்ளியுயர்நாவித்தண்டை
யுடன்சமூலங்கையான்தகரையொன்றோர்நாழி.
நாளிலவங்கச்சோலம்கடுகுரோகணியும்
நல்வசம்புதிற்பலிநற்கடுக்காய்கோட்டம் காளில்கருஞ்சீர்மதுரமாஞ்சிலோமங்
கடியசெஞ்சந்தனத்தினொடுதேவதாரம் தூளில்சதகுப்பைசுக்குக்கராம்புவாசி
தூயரத்தையிருமிளகுகோட்டமேலம் கோளிலிந்துசெண்பகப்பூவிவையோரொன்று
கூட்டுமிருகழஞ்செடுத்தேயரைத்துக்கொள்ளே, 16
கொண்டசரக்குடன்வேருஞ்சாறுமொன்றாய்க்
கூட்டியொருகசாளமிட்டுவற்றக்காய்ச்சி தண்டுசிற்றாமணக்கெண்ணெய்நிம்பனண்ணெய்
சாற்றுதிலத்தெண்ணெயோர்நாழிகூட்டி கண்டிதனைநல்லபதம்வடித்துக்கொண்டு
கதிக்கவேசிரத்தில்வைத்துநசியஞ்செய்தால் மிண்டியமந்தரகாசமீளைகாசம்
மிகுத்தமண்டைக்கரப்பானிருள்காசம்போமே. 7
மந்தாரகாசத்துக்குக் குடிக்கிறமருந்து
மங்கையர்முலைப்பால்தன்னில் மருவுகற்பூரஞ்சுக்கு இங்கிவைகழஞ்சோரொன்று இயல்புடனரைத்துக்கூட்டி அங்கதைமுலைப்பால்தன்னி லடுத்துநாலிருநாட்கொள்ளில் துங்கமந்தாரகாசஞ் சிலேட்டுமந்தொலைந்துபோமே. 8
சிறியவாமணக்கிணெண்ணெய் சேர்த்திடும்பசுப்பால்நேராய் கறியதார்மிளகுஞ்சற்றே பொடிசெய்துள்கலந்துகொள்ளில்
147

Page 85
செகராசசேகர வைத்தியம்
பிறியுமந்தாரகாசம் பிறங்குமாமணக்கமெண்ணெய் செறியவேசிரத்தில்வைத்து முழுகவுந்தீருமன்றே. 19
பாகு
கருப்பஞ்சாறிரண்டுநாழி காற்கொத்துப்பசுவின்நெய்யும் விருப்பஞ்சாரிளநீர்தானும் விட்டிருநாழிகாய்ச்சி உருப்பமார்மிளகுதூளிட் டுடனிவைபாகாய்க்கொள்ளில் இருப்புமந்தாரகாச மிளகிவிட்டோடுங்காணே. 20
உட்டணகாசம்
கரகரத்திருமித்தொய்வாய்க் கடினமாயடைத்துமுட்டாய்ப் பரபரத்துார்ந்துமொய்த்துப் பகர்முகந்தலைகண்நாசு வரவரக்கடினம்பண்ணி வரட்சியாயிழுத்துத்தும்மி இரவினிலதிகம்பண்ணு மிடர்செய்யுட்டணக்ாசம்மே. 2
கடுக்காய்ப்பொடியுமிளகுதிற்பல் கதித்தசினக்காரமுடன் மிடுக்காய்வெள்ளைக்குந்திருக்கம் மேவியிவையொன்றொருபலமாய்த் துடுக்காயிடித்துச்சீலைதனிற் தூய்தாயரித்துச்சேமித்துக் கொடுக்கான்பசுவின்பால்நாழி கோதில்தண்ணிரரைநாழி. 22 நாழிபாலுந்தண்ணிரும் நன்றாய்க்காய்ச்சிக்கற்கண்டும் கேளிப்பசுநெய்யுஞ்சற்றே கெடில்மருந்திற்றுள்தானும் ஊழிப்படிதானொன்றாக்கி யுடனேநாளுங்குடித்துவரில் தாழ்வுற்றீழைமந்தாரம் தனிவிற்புருதியிரத்தமும்போம். 23
பொருந்துமாடாதோடையிலை பொற்பார்துளசியிலைசரியாய் திருந்துமேலஞ்சிறுதிற்பல் சிறந்தநாகையுள்ளியுடன் அருந்துநற்சீரகங்கடுக்காய் அவித்தகுடிநீர்தேன்சீனி மருந்தாய்க்கலந்தேயருந்திடவேமா றுமிரத்தம்எடுப்பதுவே. 24
ஈளைகாசம்
இருமிடுமீளைவந்தா லிரவிலேகடினஞ்செய்யும் உருவிடுங்கண்டங்காது முறக்கிடந்தரித்துமிண்டிச் செருமிடுங்கேரிக்கேரிச் சிலேட்டுமமடைத்துதொய்வாய் மருவிடும்மூன்றுநாளும் வரண்டடைத்திழுத்துமுட்டாம். 25
முட்டதாய்க்களைத்துவேர்த்து மூசிநெஞ்சடைத்துக்குத்தித் திட்டமாய்த்தியங்கிச்சோர்ந்து தீமையாய்த்துயரஞ்செய்யும் கட்டமாம்பனிமழைக்கே கடினநீர்புதைந்தாற்போல நட்டமாமிழைகாசம் நலக்கிடும்தீராதன்றே. 26
மருந்து
வசம்பினைப்பொடித்ததுாளும் வலியபற்படகச்சாறும் துசம்பெறநிம்பவெண்ணெய் தூயதாய்க்கலந்துகொள்ளிற் றசம்பெறுமீழைகாசந் தணிந்திடும்பனையின்வெல்லம் நசம்பெறுமிளகுதூளும் நறுநெய்யில்வெந்துகொள்ளே. 27
148

செகராசசேகர வைத்தியம்
இருப்பையினரைப்பைத்துாளா யேற்றிடுதென்னங்கள்ளில் உருப்பமாயவித்தநீரை உறக்கொள்ளில்முட்டுப்போகும் விருப்பமாமுலைப்பால்தன்னில் வேர்க்கொம்புவெண்கற்பூரம் அருப்பமாயோர்கழஞ்சு அரைத்துடன்குடிக்கநன்றே. 28
அவிகாயசிலேட்டுமம்
இருமலெய்ப்பிளைப்புமுண்டா யிளையுமிகுந்துவாங்கி மருவியவயிறுதானும் மந்தமேபற்றிநிற்கும் உருவழிந்துடம்புவற்றி யுறுதியுங்கெடுமேயாகில் அருகியேயிருமிநிற்கும் அவிகாயசேடமாமே. 29
பெரிய பூசணிநெய்
நீற்றுப்பூசணிப்பழத்தினிரநர்னாழி
நிறைகருப்பஞ்சாறிரண்டுபசுப்பால்நாழி சாற்றியகையான்தகரைபொன்னாங்காணி
தாழைவிழுதொடுமுசுக்கைசாத்தாவாரி தேற்றியமுந்திரிகையுடன்சாம்பல்வாழை
செவ்விளநீர்தாமரையின்வளையச்சாறு நாற்றியவெள்ளரிக்காய்நீரொடுபேரீஞ்சின்
நற்கழச்சாறிவையொன்றோர்நாழிகொள்ளே. 30
கொள்ளிருவேலிலாமிச்சுப்பூழைசாறி
கோதில்கண்டங்காலிசிறுகீரைகோரை நள்ளிருநன்னாரியுடன்ஒரிதட்தாமரைவேர்
நலமாகஒன்றொர்பிடிங்கியுடனரைத்து உள்ளபழச்சாறிலச்சாறொன்றாகச்சேர்த்து
ஊறியபின்பசுநெய்யிருநாழிவிட்டுக்காய்ச்சி அள்ளுசரக்கதிமதுரங்கோட்டமிலவங்கம்
அரத்தைசதகுப்பையிந்துசெவ்வள்ளிசாதி. 3.
சாதிகருஞ்சீரேலந்திற்பலிவெட்பாலை
சாற்றியசண்பகமொட்டுக்கொத்தமல்லிசந்த மோதியமஞ்சிட்டிவளரதிவிடையங்கராம்பு
உற்றவசுவாசிநெல்லிகண்டில்வெண்ணெய்கடுக்காய் நீதியுடனிவைசரக்குஒன்றிரண்டுகழஞ்சு
நிறுத்தரைத்துஎழாநாளுறிநன்றாய்வடித்து ஆதியானருள்சாந்திமுடித்ததின்பின்நெய்யை
யனுபானஞ்சீனிசற்றேகலந்துடனியருந்தே, 32
அருந்திடுநெய்கூழ்ப்பாண்டகிருதமதிற்றீரும்
அவிகாயம்கோழைகசரோகமுளைமாந்தை பொருந்திடுகாயாசேடம்சுவாதமுடனிளைப்பு
புகலிரத்தரோகமுடனிளைவயிற்றெரிவு வருந்திடுமுள்ளுருக்கியுடனேயுலற்றுச்சூலை
வகுத்தபிணியிவையனைத்தும்மாறியுடனகலுந் திருந்துசிவபுண்ணியஞ்செய்தன்னதானங்கள்
செய்தபெரியோர்பிழைபோற்றீர்ந்திடுங்காணே. 33
149

Page 86
செகராசசேகர வைத்தியம்
உளைமாந்தை
இருமிச்சியலுந்தலைவலியும் இறங்காதன்னம்புண்போல பெருகக்குத்திக்குடைந்துளைந்து பிதற்றுமயரில்வாய்வெருவும் உருகிச்சியலுஞ்சிலேட்டுமமு முறக்கமறவேவிழுந்திருக்கு மொருமைப்படவேவருத்தமுறு முளையுமாந்தையெனலாமே.
நெஞ்சுடன்பழுக்கள்பக்க நினைவழிந்திருமிநொந்து பஞ்சிகொள்சுரமுந்தோன்றிப் பழுத்துள்ளேசியலுங்கட்டி அஞ்சவேசளியும்வீழ்ந்து அசனமுமொறுத்துளைந்தால் ஒஞ்சிடாதுண்மைசொன்னோ முளைமாந்தையென்னலாமே.
உளைமாந்தைக்கு மருந்து
குன்றிகுறிஞ்சிமொசுமொசுக்கை கொடிகொள்வேலிப்பருத்தியிலை
நின்றோர்நிலத்திற்குமிழமிலை நீதிபயிலுப்பிலியிலையுஞ் சென்றேபிறக்குஞ்சிற்றமல்லி சேரவரைத்தாவின்பாலில் அன்றேகுடிக்கிலுளைமாந்தை யகன்றேசியல்புண்ணாறிடுமே.
பத்தியமச்சமாகிற் பருவரால்சுறவுநெய்த்தோல் சுத்தமாங்கிஷத்திற்சொல்லிற் றுரந்ததோருடும்புகாடை முத்துவெண்கோழிமுட்டை முருங்கைதுாதளைபொன்காணி புத்தியாயருந்தரோகம் போமிதுவுண்மைதானே.
வெண்பா
வேங்கைமரத் தோலுடனே மென்குறுவை நெல்மாவும் ஆங்கதனைப் பிட்டாக வாக்கியே - பாங்குடனே வெண்ணெயுடன் சேர்த்தருந்த வென்றுளையு மாந்தையதிற் புண்ணுஞ் சீயும்ஓடிப் போம்.
உப்பி லிலையு மொருவிடத்தல் தன்னிலையும் மொப்ப முசுமுசுக்கை முட்கிழுவை - இப்படியே கோவினது பாலிற் குடிகோழை விற்புருதி ஆவிதரு மென்றா ரறிந்து.
காசமுதலானதுக்குத் தீயல்நெய்
நீற்றுப்பூசணிப்பழத்தையரிந்தாநெய்யில்
நிதானமாய்ப்பொரித்திறக்கும்பதத்தினல்ல சாற்றுசீரகஞ்சிறங்கைபொடித்துமாவாய்ச்
சதியாகவிறக்கியுடன்தூவிப்பின்னர் ஆற்றியிருநேரமுங்கொண்டிடுவீராகில்
அவிகாயமிருமல்முட்டுக்கோழைகாசம் மாற்றியொருமண்டலந்தின்றிடுகில்மாறும்
வரட்சிசுரம்வெளுப்புடனுட்காய்ச்சல்பேர்மே.
எண்ணெய்வைக்கும்முறைமை
கோழைகசமுளைமாந்தைகாயாசேற்பங்
கொண்டபிணியின்னதென்றுகண்டபோதே
150
34
37
38
39
40.

செகராசசேகர வைத்தியம்
நாளையென்னாதைஞ்சிலைச்சாறதனிலெண்ணெய்
நல்லமுலைப்பாலெண்ணெய்சந்தனாதி
மீளுமரக்கெண்ணெகளிளிணங்குமெண்ணெய் மிக்கசிரத்தினில்வைத்துக்காய்ச்சிப்பூசி
வேளையதிற்குடிநீர்நெய்குழம்புபாகு
விரும்பியசூரணஞ்செயவும்விளம்புநூலே.
கோழை
இருமிடுந்தலைவலிக்கும் இருபுறவிலாவில்நெஞ்சில் அருவிடுநொந்துகுத்து மனலெனக்குளிர்ந்துகாயுஞ் சருவிடுஞ்சளியும்வீழுந் தாகமுந்தொய்வுமுண்டாம் மருவிடுமன்னஞ்செல்லா மதித்திடிற்கோழையாமே.
வரட்சிக்கோழை
குத்தும்விலாவினெஞ்சதனிற் குமிறிக்கொதித்துச்சுரமுண்டாம் எய்த்தேநடுங்கித்தலைவலிக்கு மிருமிக்குத்தித்தொய்வுண்டாம் பித்தேபிதற்றும்வரண்டுமுட்டாய்ப் பெருத்தேகுளிருமிருமல்மிகுஞ் சித்தேவரட்சிக்கோழையிது செய்யுங்குணங்களறிந்திடுமே.
கிரந்திக்கோழை
தலைவலித்துக்கனத்துநொந்துதடிமன்போலச்
சளிவிழுந்துஇருமிமுண்டாய்த்தணிந்துபின்னும் நிலைபெறவேயிருமியிருவிலாவும்நொந்து
நீருடனேசளிவிழுந்துவரண்டடைத்தே அலைவுறவேயிருமிநொந்துசுகமதாகி
அமர்ந்திருந்துமதன்பிறகுமதிகமாகும் உலைவுறுமூலக்கிரந்திகரப்பன்மிஞ்சி
யுறுங்கோழையெனவேதமுரைக்குமன்றே.
ஒட்டுக்கோழை
வரண்டிடுஞ்சளியும்வீழா வசமறவிருமிக்காயும் குரண்டிடுவிலாவினெஞ்சிற் குத்திடுந்தொய்வுண்டாகும் திரண்டிடுந்தலைக்குத்துண்டாந் தீன்மறந்திடுந்தாகிக்கும் முரண்டருமொட்டுக்கோழை செய்குணமொழியுங்காலே.
நெஞ்சினில்விலாவிற்குத்தி நின்றுநொந்திருமிக்காயும் மிஞ்சிடத்தலைக்குத்துண்டாய் மிடுக்கிடுமிரத்தம்வீழும் கஞ்சியுமறந்துதொய்வாய்க் களைத்திடுந்தாகமுண்டாம் அஞ்சிடுமொட்டுக்கோழை செய்குணமறையுங்காலே.
கோழைச்சுரம்
வருத்திடும்விலாவினெஞ்சில் வசமறக்குத்தித்தொய்வா யிருத்திடுமிரவிற்காயு மிருமிடும்வரட்சியுண்டாம் உருத்திடும்சாய்நேரத்தில் உவாதியாய்க்குளிர்ந்துமுட்டாம் பெருத்திடுங்கோழைசேருஞ் சுரமிதுபேசுங்காலே.
151
2

Page 87
செகராசசேகர வைத்தியம்
கோழைக்கு மிளகுகஞ்சி
அரிசியின்குறுனல்போட்டு அதின்மூழுமிளகும்போட்டு சரிவரக்கரையக்காய்ச்சித் தான்குடித்திடுவீராகில் எரிவுறுசுரமுநீங்கி யிளகிடுஞ்சளியுங்குத்தும் பரிவுறுமிளகின்கஞ்சி பகர்கோழைக்கருந்தநன்றே.
உலுவாக்கஞ்சி
பொற்புறுமுலுவாத்தன்னைப் பொருந்துபொட்டளியாய்க்கட்டி நற்புறக்கஞ்சிக்குள்ளே நாள்தொறும்விட்டுக்காய்ச்சி அற்புறக்குடிப்பீராகி லருவருப்புடனோங்காளம் நிற்புறாதிதனைநீயும் நிதானமாய்க்குடித்துப்பாரே.
கசரோகங் கோழைக்குக் கசரெண்ணெய்
இடர்செயுமியங்கினொடு இன்பூறல்சாரணை
யிதந்தருமாடாதோடையும் படர்கொடித்துதுவளை கக்கரிகையாந்தகரை
பரவிடுநிலக்குமிழின்வேர் அடர்வுறு?வராங்கியொடு சிற்றமலிமாகாணி
யரியபுல்லாந்தியின்வேர் திடர்படுமமுக்கிரவு சீதேவியோரிதட்
செப்பமுதவல்லிகொடியும்.
கொடியழகசெவ்வள்ளி கொத்தமலிநற்சீர்
குணம்பெரியகற்கடகமுந் தடிமதுரநெல்லியொடு திற்பலிகருஞ்சீரம்
சதகுப்பைவேம்பாடலும் கடிசரக்கொன்றொரு கழஞ்சாகவாங்கியே
கலந்தரைத்துடனிறக்கிப் படிதிலத்தெண்ணெய்தனில் விட்டேவடித்தபின்
பரிவுடனருந்துவீரே.
பத்தியம்
அருந்தியரைமண்டலமு மதினுடையபத்திய
மாப்பாலதன்கிருதமும் திருந்துதூதளைகாய் முருங்கையின்பிஞ்சினுஞ்
சேர்த்திடுவறுத்தவுப்பும் பொருந்தவேகொண்டிடிற் பொல்லாதகோழைகச
ரோகமுளைமாந்தையுடனே வருந்துவிற்புருகிமுதல் மாறிவிடுமென்றுமுனி
வாகடமுரைத்ததிதுவே.
கோழை விற்புருதி
இடுப்புடன் முள்ளந்தண்டு இருபுறவிலாக்கள்சந்து
அடுக்கவேகுத்திநொந்து ஐயுடன்வெப்புமுண்டாய் * வராங்கி - :ஞ்சர்
152

செகராசசேகர வைத்தியம்
நடுக்குடன் குளிர்வெதுப்பு நையுமுள்மூச்சுத்தானும் கொடிக்கொளச்சியலேவீழிற் கோழைவிற்புருதிதானே
இந்தநோய்வந்தநாளி லிருமியேசியலுமுண்டாய் வந்துடனாளும்வற்றி மருவிடுங்காசரோக்ம் முந்தவேகாயும்வேர்க்கும் மூச்சுடன்தொய்வுண்டாகும் மந்தமாயத்தரண்டிரத்தம் வருமெனில் மரணமாமே
கோழைவிற்புருதி நெய்
கண்டங்காலிசிற்றமட்டி காட்டிலியங்குசெருப்படிவேர் துண்டஞ்சேருநிலக்குமிழ்வேர் துாதுவளையாடாதோடை மிண்டுஞ்செங்கத்த:வட்டு மிடுக்காஞ்செப்புநெஞ்சியின்லேர் கொண்டங்கொன்றோ ரொருநிறையாய்க் கூட்டித்துாதின்கனி
கொள்ளே
கனியின்சாறுமிருநாழி காராம்பசுவின்நெய்நாழி பணிசேர்பசுவின்பால்நாழி பகரும்கோட்டமிலவங்கம் நனிசேரோமம்மிளகேலம் நற்சீரகந்திற்பலிகடுக்காய் துணிசேர்வேதியரிதாரஞ் சொல்லுந்தான்றியதிமதுரம்
மதுரமிகுமிந்துப்பினுடன் மதிக்குஞ்சுக்குக்கொத்தமல்லி பிதிரவரைத்துக்கசாளமிட்டுப் பேணிவடித்துக்கொள்வீரேல் அதிருங்கோழைவிற்புருகி அடுத்தகசமூச்சிளைப்பினுடன் உதிரமெடுத்தல்உளைமாந்தை யுறுநோய்காசமிவைபோமே.
குடிநீர்
ஆடாதோடைதூதுவளை அடுத்தகண்டங்காலிவட்டு காடார்சிற்றமட்டியின்வேர் காயாநிலத்தின்குமிழ்வேரும் கோடார்திற்பல்வேர்க்கொம்பு கொடியின்மிளகுங்கடுக்க:பும் நாடார்கொத்தமல்லியிவை நருக்கியவித்துக்குடித்திடுமே.
குடிநீர்க்கின்னுஞ்சிறுகுறிஞ்சிக் கொடியுமிலையமொருபிடியாய்க் கடிசேர்மிளகுவேர்க்கொம்பு கடுக்காய்திற்பல்கொத்தமல்லி படிசேர்சிற்றமட்டியின்வேர் பகருந்துதின்வேர்கூட்டிக் கொடியாயவித்துக்குடிப்பீரே ற்கோழைகாசமிவைபோமே.
போமேயின்னுமொருகுடிநீர் புதியவேர்க்கொம்பொடுதிற்பல் ஆமேகடுக்காய்மிளகினுடன் அவித்தேகொடுக்கமிகநன்றே தேமேவியநற்பசுப்பாலுஞ் சிறுமட்டியின்வேர்சிற்றரத்தை காமேவியதுTதிலைமொசுக்கைச்சா றுங்கஞ்சிதனிற்காய்ச்சே,
காச்சியரிசிக்குறுனலிலே காலைதனில்நீர்குடித்துவரில் மூச்சுக்கோழைவிற்புருதி முலைமார்க்குத்துக்குளிர்வெதுப்பு வீச்சுத்தலைநோவுடனிருமல் வேர்வைவரட்சியுடல்நோவு
கூச்சமில்லாப்பிறர்பொருளைக் கொள்வோன்செல்வமெனப்போமே.
ஆடாதோடைசிற்றமட்டி யலர்முட்கான்றைநொச்சிநிம்பங் காடாரியங்குதூதுவளை காய்கும்வட்டுநிலக்குமிழ்வேர்
153
3
7
9
20

Page 88
செகராசசேகர வைத்தியம்
கோடார்கடுக்காய்மிளகுதிற்பல் கோதில்கடுகுவெள்ளுள்ளி நாடார்சுக்குப்பெருங்காயம் நற்சீரகத்தோடிந்துப்பே.
இந்தச்சரக்கினுடன்வேரு மிரண்டுபலமாய்நிறுத்தெடுத்து அந்தப்படியேயரைத்தமருந் ததனைக்காய்ச்சிக்காயபத முந்தக்குடிக்கிற்கோழைகச முதிராக்கோழைவிற்புருதி சிந்தாவிரத்தவிற்புருதி தீருங்காய்ச்சல்தொய்விளைப்பே.
ஆடாதோடைவேரேல மடுத்தமிளகுமிருகழஞ்சு நாடாரிருநாழியினில் நன்றாய்க்காய்ச்சிக்குடித்லுவரில் பீடார்கோழைவிற்புருதி பெருத்தசுரந்தொய்விளைப்பிருமல் கோட்ர்பருதியெதிர்பணிபோற் குலைந்தேயகலுங்கோற்றொடியே.
கண்டங்காலிதுாதுவளை காட்டிலாடாதோடைவட்டு கொண்டநிலத்திற்குமிழ்வேருங் கூட்டிக்கொத்தமல்லியுடன் துண்டஞ்சேர்திற்பலிமிளகு தூயகடுக்காய்வேற்கொம்பு உண்டாங்குடிநீர்தனையவித்துக் குடிக்கிற்கோழையுடன்போமே.
தூதுவளம்பாகு
தூதுவளைவேரிலைகாய்சிற்றமட்டி
துயுமொசுமொசுக்கைகையாந்தகரைச்சாறு தீதில்நறுநெய்நாழிபாலும்நாழி
தித்திக்கும்ஆண்பனையின்வெல்லந்தானும் கோதிலிருசீரகந்திற்பலிவேர்க்கொம்பு
கொத்தமல்லிமிளகுலுவாகடுக்காயோமம் மீதிலதிமதுரமிந்துப்பரியதார
மிக்கவிலவங்கநெல்லிதான்றிகோட்டம்.
கோட்டமுறுமேலமிவைசரக்கோரொன்று
கோதிலிருகழஞ்சுகொண்டுஇடித்துமாவாய் ஈட்டமுறவரைத்தெடுத்துப்பாகாய்க்காய்ச்சி
யிருநேரமந்திசந்தியருந்துவீரேல் நாட்டமுறுகோழைகசங்காய்ச்சலீழை
நடுக்கிளைப்புக்குத்திருமல்வேர்வைமுட்டுப் பாட்டில்வருகதிரவன்முன்பனியேபோலப்
பறந்தகலுமெனமுனிவர்பகர்ந்திட்டாரே.
பெரியதுாதுவளைநெய்
அன்றானதுாதுவளம்பழத்தின்சாறு
அளந்துவிடுநானாழியாநெய்நாழி நன்றானதுதுவளைசெங்கத்தாரி
நன்னாரிவட்டியங்குநல்லின்பூறல் குன்றாதேகைத்தகரையாடாதோடை
குறிஞ்சா"முண்டீரவேர்குலவுமாஞ்சில் ஒன்றாருமதிமதுரங்கோட்டங்குப்பை
யுள்ளியசமோதகமோடுயரிந்துப்பே.
21
22
23
24
25
26
27
* முண்டிர் . ஒர்கீரை
154

செகராசசேகர வைத்தியம்
உப்புடனேகடுகுரோசனைசாதிக்கா
யுவந்தகராம்புடன்வெளுத்தற்பிசின்செவ்வள்ளி செப்பரியதிறிபலைகற்கடகசிங்கி
சீரகமுக்கடுகுடனேதிகழுங்குக்கில் தப்பறுமாயாக்காயுஞ்சரக்கோரொன்று
தான்கழஞ்சாயரைத்துாறிவடித்துட்கொள்ளில் எய்ப்பிருமல்கோழைகசரோகமீழை
இரத்தசளிசுரமுடன்குத்திளகிப்போமே.
மசரோகம்
இருமியேதலைவலித்து இரவினிற்குளிர்ந்துகாயும் கருவியும்வெளுத்துலர்ந்து கண்ணும்பஞ்சிட்டுமின்னி அருவியேயிருமித்தெய்வா யன்னமுமறந்துவேர்க்கும் மருவியேகழியுநாளு மசரோகமாறாதன்றே.
சயரோகம்
அங்கத்திற்பித்தந்தோன்றி யழற்சியுஞ்சுரமுமாகும் மங்குற்றவிருமல்சீறி வருத்திடுமுவாந்திமூச்சாய் கங்குல்சேர்நேரம்வந்து கடினமாய்த்தொய்வுண்டாகும் இங்கிவைசயரோகத்தின் குணமெனவியம்பினாரே, காய்ந்திடுந்தலைவலிக்குங் கடினமாயிருமித்தொய்வாஞ் சாய்ந்திடிற்கிடைகொடாது சளிவரண்டடைத்துக்கேரும் ஒய்ந்திடுமெரியும்மேனி யுழற்றியேசுரமுண்டாகும் மாய்ந்திடுசயரோகத்தின் குணமிதுமாறாதன்றே.
மருந்து
கண்டங்காலிதூதுவளை காட்டிலியங்குசமூலமிவை கொண்டங்கடராடாதோடை கூடுங்கராம்புவேற்கொம்பு துண்டித்திடித்துநாற்கழஞ்சு தூய்தாயவித்துக்குடித்துவரின் மிண்டேசெய்யுஞ்சயரோகம் விட்டேமசரோகமும்போமே.
மாங்கிஷரோகம்
கக்கிடுமிருமிமுட்டாய்க் காய்ந்திடுந்தலைநோவுண்டாம் மிக்கிடுமிடறுகேளும் விழுஞ்சளிமாங்கிஷம்போல் திக்கிடுங்களையுண்டாகுந் தீன்மறந்தோங்காளிக்கும் விக்கிடும்நெஞ்சினோவாம் விஷஞ்செய்மாங்கிஷரோகம்மே.
இந்தாதிகிருதம்
பிரமிதுாதளையியங்குதுளசிகையான்தகரை
பேசுகண்டங்காலிவில்வம்தகரை ஆடாதோடை மருவுபொடுதலைபத்துஞ்சாறுவகைநாழி
மானேநீகாய்ச்சியிடுமருந்துரைக்கக்கேளாய் தரமுறுதிற்பலிமுலந்தசமூலஞ்சந்தஞ்
சாறணையோடிவையனைத்துமிடித்துநாற்பலமாய் உரமுறுநீரினிலவித்துஎட்டிலொன்றாக
ஊறிவடித்திடுமதனிற்பாலிளநீர்நெய்யே.
155

Page 89
செகராசசேகர வைத்தியம்
நேயமுறுமதிமதுரங்கோட்டமொடுசந்தம்
நெரிகாசுகற்பூரமிந்துமுந்திரிகை தூயபேரீஞ்சுபஞ்சதாரை *துவர்ச்சிகையும்
தூமவகில்தன்னுடன்சொல்லுமுப்பத்திரியும் வேயனையதோளினாய்செண்பகப்பூவேலம்
விளாலரிசிகற்கடகசிங்கிகண்டில்வெண்ணெய் சாயவேம்பாடலொடுசார்துரிசுதுத்தம்
சரக்கெல்லாங்கழஞ்செடுத்தரைத்துவெந்துகொள்ளே, 7
வெந்துவடித்திட்டபின்மேற்சீனிதுவி
விடிவேறுமண்டலமவிடாமலுட்கொள்ள வந்தகசரோகமசரோகமுடனிழை
மாங்கிஷரோகஞ்சத்திவிக்கலிழைப்பிருமல் முந்தியெழுகுருதிவிழல்புலால்போலநாறல் மூச்சிரைத்திடுதலகவேர்வினுடனக்கி அந்தவுளைமாந்தையவிகாயசேட்டுமமும்
அடுத்தசயரோகபித்தமுமகன்றிடுமே. 8
கோழை கசம் விற்புருதி சுவாதம் மூலக்கிரந்தி இவைகளுக்குச் சாதிக்காயுறட்டி
அரத்தைசிறுதிற்பலிசாதிக்காய்கோட்டம்
அதிமதுரங்கொத்தமல்லியுலுவாஏலம் உரத்தசுக்குவகவாசிகராம்பிந்துப்பு
ஒமமிலவங்கமிளகசமதாகம் வரத்திருசீரகஞ்சீனிகண்டுவெல்லம்
வகுத்தசர்க்கரைதேன்வாழையின்பழத்தோ டிரத்தமுறுதூதுவளம்பழம்வேரின்மா
விவைசரக்குடனொன்றீர்கழஞ்சுவாங்கே.
வாங்கியதிற்பலிநற்சீரகஞ்சாதிக்காய்
வருதுதின்வேர்மாவும்பலமோரொன்று தேங்கியநற்சீனிவெல்லங்கண்டுதானுந்
திடனாகவகைக்காறுபலமாய்க்கூட்டிப் பாங்கினொடுமிடித்தரைத்துக்குளைத்தொன்றாக்கிப்
பரிவாகவுறட்டிதட்டிப்பதத்திற்கட்டு தூங்கியதேன்சீனிகற்கண்டிற்றின்றாற்
சுவாதமுடன்கிரந்திகசங்கோழைபோமே. 2
மந்தாரகாசம் ஈளை கசம் இவைகளுக்கு கண்டசர்க்கரை உறட்டி தூதுவளைகாயிலைவேர்சமூலங்கூட்டிச்
சுகமாகவெயிலுலர்த்திஇடித்துமாவாய் ஒதிலொருமூன்றுகொத்துடனேகொண்டு
உற்றகண்டுசற்கரையுமுடனேவாங்கித் திதிலிரண்டிறாத்தலிவைசேரக்கொண்டு
திற்பலிசீரகம்பலஞ்சாதிக்காயேலம் பேதமில்சுக்கதிமதுரந்தான்றிகோட்டம்
பெருத்தகடுக்காய்மிளகுஉலுவாக்காந்தம். துவர்ச்சிகை கடுக்காய்ப்பிஞ்சு
156

செகராசசேகர வைத்தியம்
காந்தமசமோதலவங்கராம்புவாசி
கருஞ்சீரிந்துப்புடனேசாதிக்காயும் ஏய்ந்தமனோசிலைதாரமக்கிறாவ
மியல்வானமல்லிசெவ்வள்ளிமாயா போந்திவையொன்றிருகழஞ்சாய்ப்பொடித்தமாவைப்
பொட்டொளியொன்றாய்கட்டிப்பற்படாகம் ஆய்ந்திவைநாற்பலம்பசுப்பால்நாலுநாழி
யதனையொருபானையிட்டுவேடுகட்டி.
கட்டியின்பின்பொட்டளிசெய்மருந்தைவைத்துக் கருஞ்சட்டியால்மூடிக்கடிதவித்து விட்டபாலதுவற்றிப்போனபின்னே
வே.தனாலிறக்கியபின்னதைத்திரட்டி தட்டியேக:பவைத்தருந்திவந்தால்
தறுகாதுகசமீழைகோழைகாசம் முட்டியமந்தாரகசமூச்சுத்தொய்வு
முடுகாதேயிருமலெனமுனிவர்சொன்னார்.
ஈழை மந்தாரகாசத்திற்குச் செய்து கைகண்ட எண்ணெய் (சன்னியாசி மருந்து)
விழியிலையொடுகுறுஞ்சாபெருமருந்துபிரமி
மிக்காடாதோடைநொச்சிமாகாணிகுன்றி ஆழிசெறிதுதளையோடொன்பதிலைச்சாறு
மாகவொன்பதுநாழிநறியநெய்நாழி நாழிவேப்பெண்ணெய்நல்லெண்ணெயும்நாழி
நல்லவிலுப்பெண்ணெயும்நாழியதில்விட்டு வீழிவேர்பெருமருந்துவேர்வேலிப்பருத்தி
வேருடன்தூதளையிங்குகறுக்காயிவேரே.
செங்கத்தாரிகுறிஞ்சாச்சிறியகாஞ்சோன்றி
சிறந்துவளரின்பூறகிறியவழுதலையும் சங்கங்குப்பிகண்டங்கத்ரிநத்தைச்சூரி
தன்னில்வேரிவையொன்றுமுக்கழஞ்சுகொண்டு அங்கதுமுற்கசாளமதிலரைத்துக்கரைத்து
அதிற்கச்சோலங்கடுக்காயிந்துப்புமிளகு மங்காதவதிமதுரஞ்செங்கழுநீர்கோட்டம்
வசம்புசன்னிவெளுத்தல்திற்பலிகருஞ்சீருள்ளி.
கற்கமோரொன்றிரண்டுகழஞ்சுகொண்டேமுற்
கண்டகசாளத்தரைத்துக்கரைத்தேகாய்ச்சி *சர்பாட்சமுடனே *முண்டிரமுங்கூட்டிச்
சாற்றுமெண்ணெயதுவற்றியிருநாழியானால் புக்கவிளம்பதத்திற்றுதளம்பழச்சார்நாழி
புங்கம்பாலுரியீட்டுமெழுகுபதம்வடித்து முக்கழஞ்செண்ணெய்தனைநாளொன்றுக்குண்ண முறிந்துவிடுமீழைமந்தாரகசமன்றே.
* சர்ப்பாட்சம் . ருத்திராட்சம். * முண்டிரம் - ஓர்கிரை.
157

Page 90
செகராசசேகர வைத்தியம்
கோழை கசம் விற்புருதி சுவாத மூலக்கிரந்திக்கு சாதிக்காயுறட்டி
அரத்தைசிறுதிற்பலிசாதிக்காய்கோட்டம்
அதிமதுரங்கொத்தமல்லியுலுவாவேலம் உரத்தசுக்குவசுவாசிகராம்பிந்துப்பு
ஒதுமிலவங்கமிளகசமதாகம் வரத்திருசீரகஞ்சீனிகண்டுவெல்லம்
வகுத்தசர்க்கரைதேனிவாழைவற்றல் இரத்தமுறுதூதுவளம்பழம்வேரின்மா
இவைசரக்குமொன்றிரண்டுகழஞ்சுவாங்கே.
வாங்கியதிற்பலிநற்சீரகஞ்சாதிக்காய்
வருதூதின்வேர்மாவும்பலமாய்க்கொண்டு தேங்கியநற்சீனிவெல்லங்கண்டுதானும்
திடனாகவோரொன்றோரிறாத்தல்கூட்டி பாங்கினோடுமிடித்தரைத்துக்குழம்பொன்றாக்கி பரிவாகவுறட்டிதட்டிப்பதத்திற்கட்டு துரங்கியதேன்சீன்கண்டிற்றின்பீராகில்
சுவாதமுடன்கிரந்திகசங்கோழைபோமே.
வசுவாசிச் சூரணம்
இலவங்கமரமஞ்ச லதிமதுரம்சதகுப்பை
ஏலமுடனற்சிரகம் இயல்வானசிறுநாக மலரினோடுவேற்கொம்பு
எழின்மிளகுதிற்பலிசமன் நலமானவகவாசி யிருபங்குகூட்டியே
நட்புடன்புடமிட்டதுாள் நல்கியேகருகாம லேழுபுடமிட்டபின்
நன்றாயரைத்தெடுத்துக் குலவரிசியூறிட்ட தண்ணிருடன்கொடு
குணமாகவில்லையென்றால் கொடுசினிதன்னுடன் கோழையுடனிளையும்
கொய்துவாங்கும்சுவாசம் வலமோடுஉட்குத்து மேல்மூச்சுஇவையெலாம்
மாதுநல்லாய்மாறுமே வளரெரியின்மீதுற்ற பஞ்சுநிகரென்னவே மறைமுறைவழுத்துமன்றே.
காயாசுவாதம் இருமல் தொய்வுக்கு சூரண சிந்தாமணி
நன்னாரிதூதுவளைகண்டங்காலி
நற்கோரைவட்டுவேர்தான்றிநெல்லி
சொன்னார்திற்பலிமிளகுதேற்றாங்கொட்டை
தூயுநற்சீரகங்கருஞ்சீர்மதுரமேலம்
இன்னாருஞ்சாதிக்காயிந்துவேர்க்கொம்
பெழில்பெருகுமசமதாகங்கடுக்காய்
158

செகராசசேகர வைத்தியம்
பொன்னாருமிலவங்கங்கழஞ்சோரொன்றாய்ப்
பொற்பதமாய்வறுத்திடித்துப்பொடித்துக்கொள்ளே.
பொடித்தமருந்தளவுகற்கண்டுசீனி
போதவிட்டேயரைத்துத்தேனிஞ்சிநெய்யில் பிடித்தவெருகடிநாளுந்தின்பீராகில்
பேசரியதொய்வுமுட்டிருமலிளை வெடித்தமூலக்கிரந்திசுவாதவேர்வை
மேவுகண்டக்கரந்திசிலேட்டுமவரட்சி நடித்தெழுந்தவிளைப்புடனேதொய்வுமுட்டும்
நடுங்கியகன்றிடுமெனவேநவிலும்வேதம்.
காயாசுவாதம் இளைப்பிருமலுக்குக் கைகண்ட லேகியம்
கண்டங்காலிதுதுவளை காட்டிலியங்குசிற்றமட்டி துண்டஞ்சேராடாதோடை சொல்லுமிதன்வேர்பலம்பத்தாட் கொண்டங்கவித்துநீரெடுத்துகோதின் முசுக்கைத்தூதளைக்காய் மினண்டுஞ்சாறொன்றொருநாழி மிக்கபசுநெய்யொருநாழி.
வெல்லஞ்சீனிகற்கண்டு மிகுமாதுளையின்பழச்சாறு நல்லதிற்பல்சீரகமும் நாட்டிலிவையொன்றோர்.பலமாம் சொல்லுமதுரமிந்துப்பு துணித்தேயரைத்துலேகியமாய் மெல்லவருந்தவிளைப்பிருமல விட்டேசுவாதமும்போமே.
இருமலுக்கு முழுப்பழ நெய்
தூதுவளம்பழநாழிநறுநெய்நாழி
துவையாமல்முழுப்பழமாய்ப்போட்டுக்காய்ச்சி தீதறவேவடித்ததின்பின்திற்பல்தாரஞ்
சீரகமிந்துப்பினுடன்பொடித்துத்தூவி ஒதுமிருநேரமுங்காசிடைநெய்கொள்ளி
னுடனிருமல்மிடற்றரிப்புச்சுரம்வரட்சி மீதுறுநற்கதிரவன்முன்பனியேபோல
விட்டகலுயெனமுனிவர்விளம்பினாரே.
கோழை மூலக்கிரந்திக்கு வாலசுந்தரிகிருதம்
நன்னாரிதூதுவளைகண்டங்காலி
நடலைநிலக்குமிழியங்குசெங்கத்தாரி சொன்னாராடாதோடைவட்டின்பூறல்
துகழில்குறிஞ்சாஇவைவேர்சரிநேர்கொண்டு மின்னாரவிடித்தவித்துநீரீர்நாழி
க்கரும்புடன்பிரண்டையாடாதோடை பன்னாருமிவைசாறுமொன்றோர்நாழி
பசுவினெய்பாலுமொருநாழிதேடே.
தேடுமதிமதுரமுடன்கடுக்காய்முப்பான்
திகழ்கோட்டமுள்ளியரிதாரமிந்துப்
போடுசிறுதிற்பல்கற்கண்டோர்பலங்கொண்
டுயர்குக்கில்மாயாக்காய்நெல்லிதான்றி
59

Page 91
செகராசசேகர வைத்தியம்
கூடுசுக்குக்கடகசிங்கிகடுகுரோணி
குலவிருசீர்சாதியிலவங்கம்வள்ளி
நீடுகழஞ்சோரொன்றாய்வடித்துட்கொள்ளில் நில்லாதுகிரந்தியுடன்கோழைதானே.
சத்தி வெப்பு நீர்க்கடுப்பு முதலியவற்றிற்குச் சிற்றமட்டி எண்ணெய்
சிற்றமட்டிவேர்மூன்றுபலமதாகும்
சேர்ந்தபனங்கிழங்கினிற்பீலியுமூன்றாகும் முற்றியகூவிளைமரத்தின்வயிரமுப்பான்
முறித்திடித்துஅவித்துவற்றியெட்டொன்றாக்கி வற்றிமறுபடிபிளிந்துவடித்தநீரில்
வாய்க்கநறுநெய்நாழிவிட்டுக்காய்ச்சிப் பற்றித்தாமரையின்விரைமுத்தக்காசு
பண்பானவேர்க்கொம்புகராம்புகோட்டம்.
கோட்டினதிமதுரஞ்செண்பகப்பூமொட்டுக்
குறையாததிற்பலிநெற்பொரிநாகம்பூ காட்டினருங்கூவிளைநற்பழமும்பிஞ்சுங்
கருதுபலம்நிறுத்தெடுத்துக்கரைத்துக்காய்ச்சி நாட்டியநற்பதம்வடித்துநாளுமுள்ளே
நலத்துடனேயருந்திவரிற்சத்திவெப்பு நீட்டியவோங்காளமுடனுடற்கொதிப்பு
நீர்மறிப்புக்கடுப்பெரிப்புநீங்கிப்போமே.
கிரந்தியிருமலுக்குக் கிரந்திசிந்தாமணிக் குளிகை
சூதமொருகழஞ்சுகொடிவேலியிருகழஞ்சு
சொன்னசிறுதிற்பலியெண்கழஞ்சுகடுக்காயு மோதிலிருபதுமிளகுமிந்துங்கழஞ்சு
உரியநற்சீரகமாறுகழஞ்சேலமொன்று கோதிலதிமதுரமுநாற்கழஞ்சிவையோரொன்று
கொண்டிதரங்கெடுத்திஞ்சிச்சாறுதனிலரைத்து ஏதமறுதூதளங்காயளவாகத்திரட்டி
இதமானதேன்சீனியினிற்குளிகையருந்தே.
அருந்தியுப்புப்புளிமறந்துபசுப்பால்நெய்கூட்டி
அடுத்தசுறாத்துதளங்காயிலைமுசுக்கையிலையும் பொருந்தியபத்தியமாகிக்குறுவைநெல்லின்மாவிற் பொற்புறுநற்சிறுகுறிஞ்சிசேர்கழியுமருந்திற் திருந்தியமூலக்கிரந்தியிருமலுடன்வரட்சி
தீராதகோழைகுரலடைப்புமுதலரிப்பு மருந்திதனாற்றீருகையாற்கிரந்திசிந்தாமணியாய்
வகுத்தனர்மாமுனிவரெனவாகடநூலறையும்.
தடிமன் காய்ந்திடுந்தலைவலிக்குங் கண்டமுமரித்துத்தும்மிச் சாய்ந்திடுமூக்கினீருஞ் சளிவரண்டடைக்கும்நாசி ஓய்ந்திடுசுரமுஞ்சற்றே யுடம்புநொந்துவாதிசெய்யும் வாய்ந்திடுசளியும்வீழும் வருத்திடுந்தடிமனாமே.
160

செகராசசேகர வைத்தியம்
சல்லக்கடுப்பிண்குணம்
கனத்திடுஞ்சரீரநொந்து கடுத்திடுந்தலைநோவுண்டாம் அனத்தினைமறக்குங்காயும் அதிகமாய்வேர்த்துத்தொய்வாம் சினத்திடுமுளைவுண்டாகுந் தியக்கிடுநடுக்கிச்சோரும் தினத்தினிற்செய்யுஞ்சல்லக் கடுப்பெனச்செப்பினாரே.
மருந்து
நொச்சித்துளிரைமிளகுடனே
நொய்தாயரைத்திட்டருந்தநன்றாம் மெச்சிச்சிற்பகுறிஞ்சியிலை
மிக்காங்கஞ்சிகுடிக்கநன்றாம் கொச்சிமுருங்கைத்துளிருடனே
கொவ்வைத்துளிரின்கஞ்சிநன்றாம் பச்சைமிளகையரிசியுடன்
பரிவாய்க்காய்ச்சிக்குடிக்கநன்றே.
பசுப்பாற்கலையந்தனைவெதுப்பிப்
பாலுமிளகுங்குடிக்கநன்றாம் நசிப்பார்பனைவெல்லமுநெய்யும்
நல்லமிளகும்பொரியுநன்றாம் பொசிப்பார்பசுப்பால்சிற்றமட்டி
பொருந்துங்கஞ்சிகுடிக்கநன்றாம் கசிப்பார்குறிஞ்சிக்களியுநன்றாங்
கண்டகுணத்தையறிந்துசெய்யே.
சத்தி இருமலுக்குக் குமரன்வேல்கண்ட லேகியம்
தூதுவளைகாயிலைவேர்பிரமிகையார்ந்தகரை
தூயமொசுமொசுக்கையிவைசாறொன்றோர்நாழி தீதறுமாடாதோடையிலையவித்தநீருந்
தீன்கரும்பின்சாறுமிஞ்சிச்சாறுமிருநாழி கோதில்கண்டிருபலமாந்தேனுழக்குக்கூட்டிக்
குழம்பாகக்காய்ச்சியபின்னேகடுகுகோட்டம் ஒதிருசீரகமுலுவாத்திற்பலிவேர்க்கொம்போ
டுரியமிளகுடன்கடுக்காயிந்துப்போடேலம்.
ஏலமுடன்கராம்புவசுவாசிசாதிக்காய்
ஈரவுள்ளிகொத்தமல்லியுள்ளியதிமதுரம் சீலமுடன்சரக்கொன்றோர்கழஞ்சாகச்சேர்த்துத்
தீர்க்கமாய்மறுபடிகாய்ச்சித்தேன்கற்கண்டிற் காலமிருநேரமிருகழஞ்சாகக்கொள்ளிற்
கக்கலுடனிருமல்சத்திவரட்சியருவருப்புக் கோலவயிற்றெரிப்புரட்டுலுமாறுங்
குமரன்வேல்கண்டலேகியமிதுதானே.
இருமலுக்குச் சிங்காதி சூரணம்
சுக்குமிளகுதிற்பலியுந் துய்யகோட்டமதிமதுரம் தக்ககடுக்காய்நெல்லிக்காய் தான்றிக்காயுஞ்சிறுதேக்கும்
61

Page 92
செகராசசேகர வைத்தியம்
மிக்கசீரமிந்துப்பு மிளிர்கர்க்கடகசிங்கியுடன் ஒக்கச்சிறியவழுதலைவேர் உயர்கீழ்காய்நெல்லியின்வேரே.
வேர்கேள்கண்டங்கத்தரியும் விரும்பிச்சமனாயெடுத்திடித்துப் பார்மேற்சீலைவடிகொண்டு பரிவதாகவெருகடிதுாள் சேர்சீனியினிற்சேர்த்தருந்திற்றி கைக்குமிருமல்வகையெல்லாம் கார்சேர்குழலாய்ஆரியர்கோன் கைகண்டவுள்தமுறையிதுவே.
விக்கலின் குணம் அன்னகம், அமழ்கம், கெம்பீரம், அகதி, குத்திரன் ஆக 5.
அன்னகம்அமழ்கம்கெம்பீ ரத்தினோடகதிகுத்ரன் மன்னியவிக்கலைந்தில் மானேசாத்திகமதாகும் முன்னமேயுரைத்தமூன்றும் மொழிந்திடுபின்னிரண்டும் இன்னலையசாத்திகங்க ளென்றுநீயறிந்திடாயே.
அன்னகம்
சாற்றியவன்னகந்தான் செய்குணஞ்சாற்றவேண்டில் போற்றியவுணவுவருந்தும் பொழுதிலும்புரையினாலும் மாற்றருந்தாகந்தாப மதிலங்குநிகழுமாதே தோற்றியவிக்கல்தன்னாற் தோஷமுமில்லைக்கானே.
அமழ்கம்
காதியோயமழ்கஞ்சேருங் காரணமேதோவென்னில் சீதநீரழலினாலும் சினநடையோட்டத்தாலும் வாதையாமாதலாலும் மனமுறுமேக்கத்தாலு மூதைசேர்விக்கல்தோன்றி லமழ்கமாமொழியுங்காலே.
கெம்பீரம்
மொழிந்தகெம்பீரவிக்கல் முற்றிடுங்குணத்தைக்கேளாய் கழிந்திடுமலங்கழிந்த போதினுங்கலவிப்போதும் பொழிந்திடுமதவாயுள்ள கறிகளைப்புசிக்கும்போதும் துளங்கவேவிக்கல்தோன்றில் தொந்ததோஷங்களாமே.
அசாத்தியம் அகதி
உரைத்திடுமசாத்தியத்தி லுற்றெழுமகதிகுத்திரம் வருத்திடுங்காலைதானே தோவெனில்மானிடர்க்குச் சுரத்தினாற்தோஷந்தன்னால் சொல்லியதிறிதோஷத்தால் இரத்தசோகத்தாலுண்டா மிக்குணமியம்பக்கேளே.
இருவிலாவுந்திபற்றி யெதிர்த்துடனோசையாக மருவியகழுத்தின்கீழே குழிவிழவாங்குவிக்கும் பொருமிடுமூதைமேன்மேற் பொங்கிடுஞ்சேற்பமிஞ்சும் மருவியவகதிவிக்கல் வந்திடில்மரணந்தானே.
162

செகராசசேகர வைத்தியம்
குத்திரம்
கழுத்துறுவிசைநரம்பு மார்பினுங்கண்டமீதும் துளக்கியேநரம்புசுண்டித் துணுக்குறவிக்கலங்கம் பழுத்திடுஞ்சேற்பந்தானும் பழமலஞ்செறிந்துவிம்மும் வழுத்துகுத்திரமாம்விக்கல் வந்திடில்மரணந்தானே.
இக்குணமறிந்துகொண்டு இயற்றிடுசாத்திகங்கள் மிக்கசாத்திகங்கள்கண்டு மீண்டிடுமருந்துகேனாய் சுக்கதிமதுரமேலந் தூயதிற்பலியரத்தை தக்கநற்சாதியைந்துந் தருமசமோதஞ்சிங்கி,
திறிபலைதேற்றாமாஞ்சில் சீரகம்புனுகுகோட்டம் உறுவதுசமனாய்க்கோண்டு உடன்மயிலிறகுசேர்த்து பொறிபடவறுத்திடித்த பொடிவெருகடிதேன்றன்னில் நெறியுடனுண்ணவிக்கல் நீங்குமென்றுரைக்கும்வேதம்.
சுர விக்கலுக்கு
சுரத்திடைவிக்கலாகிற் றுய்த்திடுமருந்துகேளாய் அரத்தைதேற்றான்வசம்பு அதிமதுரத்தோடோமம் பரித்தநற்கருடபச்சை கல்மதம்கல்நார்பாசி உரைத்தகற்பூரங்கோரோ சனைப்டொடிதேனிலுண்ணே.
வாய்வு விக்கலுக்கு
வாயுவில்விக்கலாகி வருந்திடில்மருந்துகேளாய் காயமும்வசம்புஞ்சுக்குங் கடுகுவெள்ளுள்ளிகாந்தம் தூயெவாட்சாரந்துத்தந் துரிசுவெண்குந்திருக்கம் நேயமாய்வசம்பொவ்வொன்று சமன்நெய்தேன்தனிலுண்ணே,
நீடுகூவிளை நெற்பொரிசர்க்கரை தேடுதிற்பலி தேனிற்குளைத்துண்ணப் பீடுசெய்யும் பெருவிக்கல்சத்தியை ஒடவோடத் துரத்துமிதுண்மையே.
திற்பலிவிளாம்புளி சேர்மனோசிலை நெற்பொரிபொரித்துத்தேன் நெய்யிற்றின்றிட பற்றியவிக்கல்போய்ப் பரமனார்நகை சுற்றியபுரமெனத் தொலைந்துபோகுமே.
அத்தித்திற்பலி அஞ்சாறுநெற்பொரி தித்திச்சர்க்கரை தேறுள்ளிநெய்யுடன் மத்தித்தீவிக்கல் மாறாதொழிந்திடில் இத்தைத்தேனி லிடவுறவாகுமே.
சுக்குக்கராம்புவசுவாசி தூயஉலுவாஇலவங்கம் மிக்ககடுக்காய்தான்றிநெல்லி மிகுத்தமதுரமுள்ளிதிற்பல் தக்ககருஞ்சீரகங்கோட்டந் தந்தித்திற்பல்சர்க்கரையும்
ஒக்கச்சேர்நெற்பொரியினுட னுரியமனோசிலையொருநிறையே.
163
10
12

Page 93
செகராசசேகர வைத்தியம்
நிறுத்தருமருந்தையிடித்தரித்து நிதானவெருகிற்தேன்கலந்து பொறுத்தேயருந்தியந்திசந்தி புளியோடுப்புக்குறைத்துவரில் செறுத்தேவிக்குஞ்சேட்டுமமுந் தீராச்சத்தியிளைப்பிருமல் மறுத்தேவரட்சிநெஞ்சடைப்பும்மாறிவிடுமென்றிடும்வேதம்.
விக்கற் சிலேட்டுமம்
அடுத்தடுத்தெடுத்துவிக்கி யதிகமாயடுத்துவாங்கி விடுத்தெடுத்தடைத்துமுட்டாய் விறைத்திடும்பிறகுஞ்சேரும் கொடுத்திடுமன்னஞ்செல்லிற் குத்திடுஞ்சிலநாள்நிற்கும் எடுத்தெடுத்துதறிவிக்குஞ் சிலேட்டுமமென்னலாமே.
கடுக்காய்மதுரந்தான்றிநெல்லி கருஞ்சீரகநற்சீரகமும் துடுக்காமுலுவாவிலவங்கஞ் சுக்குக்காராம்புவசுவாசி மிடுக்காமுள்ளிசாதிக்காய் மிகுநெற்பொரிதிற்பலியேலம் அடுக்காயவித்துத்தேன்கூட்டி யருந்திலறுஞ்சேற்பனவிக்கல்.
பூத சேற்பனம்
விக்கலுமெடுத்துவிம்மி விடுத்தடுத்திழுத்துவாங்கி துக்கமாயடுத்துவிக்கித் துயர்செய்துநெடுநாள்நிற்கும் மிக்கநாளிரவில்மிண்டி மிடுக்கிடும்பிறகுந்தோன்றும் புக்கிடும்தீர்ந்துபோகும் பூதசேற்பனமிதாமே.
கண்டங்காலிசிறுதேக்குக் கரியமிளகுபச்சிலையும் உண்டங்கிலவங்கத்துடனே யுள்ளியேலIவையரைத்து தண்டார்புனலெட்டொன்றாக்கித் தானேயுனலும்விட்டருந்த வண்டார்குழலாய்பூதமெனு மையமகலுமருந்தாமே.
கருவேப்பங்கூர்சிறுதேக்குக் கண்டங்காலிபொரிசீந்தில் உரியகாசுதிற்பலிசுக் குடணிரிட்டெட்டொன்றாக்கி அரியதெளிதேனுடன்பருக அரிக்குமிடற்றினிருமல்களும் வரிபோல்விழியாயகலுமென வகுத்தார்வேதமறிந்தவரே.
மாவிலங்கைகருஞ்சூரைசம்பீரம்பொன்
மயிற்கொன்றைமாதளைசெம்பரத்தைவேரும் நாவல்பிராய்கயட்டையத்தியிருப்பைப்பட்டை
நல்லவுள்ளியிரண்டுலுவாச்சுக்குக்கெந்தம் மேவுமசமோதமொடுவெளுத்தல்சாதி
விருப்புகருஞ்சீரகங்கற்பூரத்தோடு தாவுகடுரோசனையுமாவின்நெய்யும்
சாரவொருகொத்தாகச்சார்ந்துகொள்ளே.
கொண்டதிலவெண்ணெயொருகொத்தேரண்டங்
குலவுமெண்ணெய்காற்கொத்துக்கூட்டிப்பின்னை விண்டலஞ்சேரிருப்பையெண்ணெயரைக்கொத்தாக
விட்டெரித்துவடித்திடுநெய்விருப்பினோடு உண்டிடுகில்மந்தாரகாசங்கோழை
ஊரறியவருமீளைகசநோய்தானும் மண்டுசிலேட்டுமகிரந்திவருந்தத்தீர்ந்து
வாழ்வுபெறுமெனவேதம்வகுத்தவாறே.
164
20
2}
22
23

செகராசசேகர வைத்தியம்
குட்டரோகம்
குட்டரோகங்களெல்லாங் குறித்திடில்மருந்தினாலே திட்டமாய்த்தீராதென்றே செப்பிடுமாயுள்வேதம் இட்டமாய்சிவத்துக்கேற்ற இயன்றபுண்ணியத்தினாலும் துட்டமார்மருந்தினாலுந் துணித்திடுமென்றுசொல்லும்.
வேறு
வெண்குட்டங்கருங்குட்டம் வெடிக்குஞ்செங்குட்டம் புண்குட்டம்சொறிகுட்டம் புள்ளிக்குட்டமும் பண்குட்டம்படர்குட்டம் பஞ்சவர்னமா ரெண்குட்டம்வெடிகுட்டம் யானைக்குட்டமே.
வேறு
குட்டமார்வரட்சிக்குட்டம் குறித்திடுசற்பகுட்டம் திட்டமாரடலைக்குட்டந் தீர்ந்திடாச்சிங்ககுட்டம் நட்டமார்முளையின்குட்டம் நலக்கிடுங்கரப்பன்குட்டம் துட்டமார்மூடுகுட்டந் துயர்செய்யுந்தேமற்குட்டம்,
1 வெண்குட்டம்
காலினிற்கையில்மெய்யில் கணக்கவேவெண்மையாகி மூலமார்தலத்துமெங்கும் முதிர்ந்திடிற்சொறிவுமுண்டாம் வாலிதாய்வெள்ளையாகும் வரவரப்படர்ந்துண்டாகும் கோலமார்வெண்குட்டத்தின் குணமெனச்சொல்லினாரே.
2 கருங்குட்டம்
கறுத்திடுஞ்சரீரமுற்றுங் கடினமாய்த்தினவுண்டாகிச் செறுத்திடுந்தேகமெல்லாந் திமிர்த்திடுங்கறுப்புண்டாகும் உறுத்திடுங்குட்டமாகி யுலர்ந்திடும்வெதும்புமேனி இறுக்கிடுங்கருங்குட்டஞ்செய் குணமெனவியம்பினாரே.
3 செங்குட்டம்
சிவந்திடுந்தடிக்குமேனி தினவுண்டாய்ச்சொறிந்துபுண்ணாய் நவந்தருசரீரமுற்றும் நலிந்திடுமிரத்தம்போலாம் பவந்தருமிரவில்மிண்டிப் பற்குத்துத்தலைநோவுண்டாம் அவந்தருசெங்குட்டத்தின் குணமெனவறைந்தாரன்றே.
4 புண்குட்டம்
புண்ணெனச்சொறியுமேனி பொருக்கெழுந்தடித்துவீங்கும் திண்ணமார்சரீரமுற்றுந் தினவுண்டாயெரிவுண்டாகும்
வண்ணமுமிழந்துநாளும் வருத்தமாய்த்துயருண்டாகும் எண்ணமார்புண்ணின்குட்ட மிடறுசெய்குணமிதாமே.
165

Page 94
செகராசசேகர வைத்தியம்
5 சொறிகுட்டம்
சொறிந்திடுந்தடிக்குமேனி துயர்செய்யுந்தண்ணிர்பாயும் பறிந்திடும்பொருக்கதாகப் பரந்திடுஞ்சரீரமுற்றும் செறிந்திடுமிரவின்மிண்டுஞ் சிலிர்த்திடுங்காய்ச்சலுண்டாம் அறிந்திடுஞ்சொறிகுட்டத்தின் குணமிதென்றறைந்தாரன்றே.
6 புள்ளிக்குட்டம்
புள்ளியாச்சரீரமுற்றும் பொருக்கெழச்சொறிவுண்டாகும் கொள்ளிகொண்டடித்தாற்போலக் குட்டமாய்த்தடிக்கும்மேனி வெள்ளிபோற்கனத்துமிண்டி வீணிபொற்றண்ணிர்பாயும் துள்ளிசேர்புள்ளிக்குட்டஞ் செய்குணஞ்சொல்லுங்காலே.
7 படர்குட்டம்
படர்ந்திடுஞ்சரீரமுற்றும் பரபரத்தூர்ந்துமொய்க்கும் தொடர்ந்திடுஞ்சொறியுமெனி துயர்செயுங்குட்டமாகி ஆடர்ந்திடுமழற்றிவேர்க்கு மரித்திடுங்கடித்தேயூருந் திடந்தரும்படர்குட்டத்தின் செய்குணஞ்செப்பினாரே
8 பஞ்சவர்ணக்குட்டம்
அஞ்சுநேர்நிறமாய்ப்பார்க்கி லவலமாய்க்கடிக்கும்மேனி மிஞ்சிடச்சொறிந்துபுண்ணாய் மிடுக்கிடுங்குட்டமாகி மஞ்சள்போற்சலமும்வீழும் மாறியேவருமாம்பின்பும் வஞ்சமார்பஞ்சவர்ணக் குட்டநீவகுத்துக்காணே.
9 வெடிகுட்டம்
வெடித்திடுஞ்சரீரமுற்றும் விடமெனப்பரந்துமொய்த்துக் கடித்திடுஞ்சொறியுமிண்டிக் கடினமாமிரத்தம்பாயும் போடித்திடுங்குட்டமாகிப் பொறியெழவழன்றுமேனி தடித்திடும்வெடிகுட்டத்தின் குணமிதுசாற்றுங்காலே.
10 ஆனைக்குட்டம்
காதுடன்மூக்குங்கண்ணுங் கையுடன்சரீரமுற்றுந் தீதுடன்சொறிந்துமிண்டித் தினவுடன்கடினமாகிச் சேதமார்குட்டமாகித் திமிர்த்திடுந்தடிக்குமுற்றும் ஒதுபேரானைக்குட்டஞ் செய்குணமுரைக்குங்காலே.
11 வரட்சிக்குட்டம் வரண்டிடுஞ்சரீரமுற்றும் மறுகிமெய்சொறிந்துமிண்டிப் புரண்டிடுந்தண்ணிர்பாயும் பொருக்கெழுமுறக்கம்வாரா திரண்டிடுங்குட்டமாகித் தீமையாயழற்றிச்சோரும் முரண்டரும்வரட்சிக்குட்டஞ் செய்குணமொழியுங்காலே.
12 சற்பகுட்டம்
சற்பத்தின்வடிவுபோல தடித்திடும்புள்ளியாகிப் பொற்புறாத்தினவுண்டாகிப் பொருக்கதாய்த்தேமலாகி
166

செகராசசேகர வைத்தியம்
நிற்புறாத்தசையின்மூல நிலைபெறவெடித்துப்புண்ணா மற்புறாச்சற்பகுட்டஞ் செய்குணமறையுங்காலே.
13 அடலைக்குட்டம்
அடலையிற்சாம்பல்போல வடுத்திடும்பொருக்கதாகி உடலையுமெலித்துச்சோர்ந்து உவாதியாய்ச்சொறிவுமிண்டிக் கடலைநேர்கவலைமிஞ்சிக் கடுத்திடுமுறக்கம்வாரா திடலைநேரடலைக்குட்டஞ் செய்குணஞ்செப்புங்காலே.
14 சிங்கவன்னக்குட்டம்
அங்கத்தில்வெள்ளையாகி யடுத்திடுஞ்சரீரமுற்றும் வங்கத்தின்நிறமாய்வந்து வரவரப்படருநாளுஞ் சிங்கத்தினிறமாய்க்கண்டோர் திடுக்கிடவடிவுண்டாகும் பங்கத்தின்சிங்கவர்னக் குட்டநீபரிவிற்காணே.
15 முளைக்குட்டம்
முளைத்திடும்மேனியெங்கும் முற்றியேவெடித்துப்புண்ணாய்க் களைத்திடுஞ்சொறியும்மேனி கருகிநீர்பொசிந்துபாயும் இளைத்திடுங்குட்டம்போல வேகமாய்த்திமிருண்டாகும் துளைத்திடுமுளையின்குட்டஞ் செய்குணஞ்சொல்லுங்காலே.
18 கரப்பன்குட்டம்
கரப்பனாய்ச்சொறிந்துமிண்டிக் கடினமாய்த்தடித்துப்புண்ணாய் பரப்பதாய்ச்சரீரமுற்றும் படர்ந்திடுங்குட்டமாகி உரப்பதாயுவாதிமிஞ்சி யுறுதுயர்பலவுஞ்செய்யும் துரப்பதாங்கரப்பன்குட்டஞ் செய்குணஞ்சொல்லுங்காலே.
17 தேமற்குட்டம்
தேமலாய்ச்சொறிந்துமெய்யிற் றினவுடனுர்வுண்டாகி காமலரென்னமேனி கருகியேபொருக்கதாகி மாமலர்க்கொடியதென்ன மலரெனப்படருழெங்குந் தூமயர்த்தேமற்குட்டஞ் செய்குணஞ்சொல்லுங்காலே.
18 மூலகுட்டம்
மூலங்கால்சரீரமெங்கும் மொய்ப்புடன்சொறிவுண்டாகி சாலவேபொருக்கதாகித் தடித்திடுந்தண்ணிர்பாயும் கோலமார்மேனிவற்றிக் கொதித்திடும்வெளுப்புண்டாகும் காலனேர்மூலகுட்டஞ் செய்குணங்கருதுங்காலே.
19 குட்டத்திற்கும் கற்பூ ரதயிலம்
எலமுடன்பச்சைவெட்டுச்சந்தனம்நாற்பலமா
மிதமுடையசெம்மணத்திக்கட்டைசிறுகோரை
மூலமிவையிரிரண்டுபலமாகக்கூட்டி
முதுமாஞ்சிலகில்கோட்டங்கச்சோலந்துரிசு
167
18
19
20

Page 95
செகராசசேகர வைத்தியம்
கோலமுறுகற்பூரஞ்சூடனுடன்பச்சை
குணமானதக்கோலமிவையோன்றோர்பலமாம்
நீலமுறுகுந்திருக்கம்பலமூன்றதாக
நெடியகுண்டுரோசனையுமரைப்பலாமய்வாங்கே.
வேறு
வாங்குமிந்தச்சரக்கதெல்லாம்பொடியாய்ச்செய்து
வகுத்தசந்தஞ்செம்மணத்திநறுக்கித்துாளாய்த் தேங்கியநற்றண்ணிரினனையவைத்துத்
திருந்துவியாளக்கொம்பினடக்கிநன்றாய் ஓங்கியநன்மிடாவுடைத்துச்சிராய்த்துாளிட்டு
உடனெடுத்துச்சட்டிதனைக்கிழேவைக்கிற் றுங்குவியாளக்கொம்பினுனியினின்று
துளிவிழுந்ததயிலமதையெடுத்துவைத்தே.
வேறு
வைத்ததைலந்தனிலேண்கழஞ்சிதரங்கெடுத்தே
மறுபடியுந்தயிலமதில்விட்டரைத்துவழித்தே நித்தமுப்புப்புளிமறந்துதைலமதையுண்டு
நிதானமாய்ப்பூசியெட்டுநாட்களுஞ்சென்றே சுத்தவரைப்பெலுமிச்சம்புளியரைத்துத்தேய்த்துத்
தூயபுளியிலையவித்தநீர்மூழ்குவாரேல் எய்த்தகுட்டம்பதினெட்டுமுடலதனைவிட்டு
எழுமெனவேயாயுள்மறையினிதியம்புமன்றே.
வியாளக்கொம்பினளவு
போமின்னம்வியாளக்கொம்பி னளவினைப்புகலவேண்டில் கோமன்னுபன்னீர்க்குப்பிக் குணமதினளவுநீளம் தாமின்னம்மருந்தையிட்டே தனித்துக்கீழ்மேலாய்த்துக்கி தீமன்னுஞ்சட்டியொன்று திட்டமாய்நடுவுடைத்தே.
உடைத்தததினடுவுட்கொம்பைத் திறந்துடன்மருந்தைவைத்து அடைத்துப்பின்விறகுவைத்தே யனலினையெரிக்கநின்று தடைத்துறவெயர்த்துப்பின்பு தயிலமாய்த்துளித்துவீழும் கிடைத்தநற்சட்டியொன்று கீழ்வைத்துஎடுத்துக்கொள்ளே.
எல்லாக் குட்டத்திற்கும் கெந்தகசீவனித்தயிலம்
கெந்தகமிதரந்துத்தங் கிளரரிதாரமோடு வந்திடுந்துரிசோரோன்று வகுத்தநாற்கழஞ்சாய்வாங்கி முந்தவீருள்ளிச்சாறும் முதிர்கோழ்யவரையின்சாறும் கந்தமார்சம்பீரத்தின் கதித்திடுபுளியுங்கொள்ளே.
கொண்டிடுமிவையோரொன்று குறித்துநாற்கொத்தாய்க்கூட்டி உண்டுநல்லெண்ணெய்கொத்து முடன்விட்டுக்கசாளமாக்கி மிண்டுசெங்கொட்டைதானும் மிக்கொருபலம்விட்டுறிக் கண்டுடன்வடித்துக்கொண்டு காசிடைதயிலம்பூசே,
168

செகராசசேகர வைத்தியம்
பூசியேயெட்டுநாளும் பொருவுபத்தியமதாகக் கூசிடாமோருஞ்சோறுங் குடித்திடவீரல்முட்ட பேசிடாதெட்டாநாளிற் பிசறியேதவிடுதன்னாற் காசிலாப்புளியினல்ல விலைகடிதவித்தநீரில்.
மூழ்கியேமோருஞ்சோறுங் குடித்துப்பின்மூன்றுநேரம் நாளுமிவ்வடைவேசெய்து நாளெட்டுச்சென்றபின்பு மீளவுமெண்ணெய்பூசி மிகாமலெட்டாநாள்மூழ்கிற் கோழுறுகரப்பன்குட்டங் குலைந்தகன்றோடுங்காணே.
எல்லாக் குட்டத்திற்கும் புகை
துத்தந்துரிசுபெருங்காயஞ் சுரைக்காய்க்கெந்தமரிதாரம் சுத்தவிதரஞ்செங்கொட்டை தோட்டிகெவுரிபாஷாணம் கைத்தவிருவிநிறுவிஷமுங் கடியபறங்கிப்பாஷாணம் வைத்தவசம்புசாதிலிங்கம் வைச்சநாகம்நேர்வாளம்.
நேரார்கிருமிசத்துருவும் நெல்லிகெந்தம்வேர்க்கொம்பு சீரார்வெள்ளைப்பாஷாணஞ் சிவந்தகுதிரைப்பாஷாணம் காராரியங்குங்கிலியங் கடியசிவந்தபாஷாணம் ஏரார்கல்நார்மனோசிலையு மியல்பாங்கடுக்காய்குந்திருக்கம்.
திருக்காமிருதாரசசிங்கி திற்பல்மிளகுகல்மதமுந் தருக்கார்வெளுத்தல்கடலினுரை சாற்றும்பவளமனோசிலையும் மருக்காரன்னபேதியுள்ளி மஞ்சள்கடுகோடரத்தைவிளால் கருக்கார்சமுத்திராப்பச்சை கருஞ்சீரகநற்சீரகமே.
சீரார்கடுக்காய்காருபுகார் சிறக்கவிவையொன்றிருகழஞ்சாய் நேராய்நிறுத்துச்சீவிநன்றாய் நிதானப்பொடியாய்த்துள்செய்து பாரார்சீலைகடதாசி பகருமிருபத்தொருபொட்டாய் காரார்கூட்டில்மண்கிடங்கிற் காற்றுப்புகைபோகாவண்ணம்.
வண்ணப்புளிவேம்பெருக்கலையின் மருவும்விறகினெருப்பதனிற் றினண்ணந்தெளிவெண்ணெயிற்றோய்த்துத் தினமோரிரண்டுபுகைக்கட்டி பண்ணுமிதரந்துரிசுடனே பகருமுருக்கமிலைச்சாற்றில் எண்ணமறவேமத்தித்து எல்லாப்புண்ணுங்கருகியபின்.
பின்புநீரில்மூழ்கிநன்றாய்ப் பெரியபற்பந்தின்றுவரிற் றுன்பநிங்குங்குட்டமெல்லாந் துணிந்தேயகலுமெனவுரைத்தார் முன்புபோலப்பத்தியமும் முருங்கைப்பிஞ்சுபசுவின்பால் இன்பாயருந்தியதற்கிணங்கு மெண்ணெய்முழுகிவருவீரே.
கருங்குட்ட சூரணபற்பம்
ஏலங்கராம்புவசுவாசிஇந்துப்பிரதஞ்சாதிலிங்கம் கோலமதுரந்தான்றிநெல்லி கோட்டந்துரிசுபெருங்காயஞ்
சாலுமிருசீரகங்கடுக்காய் சாத்திரவேதிசிறுமூலம் வாலின்மிளகுஅரிதாரம் மாயாதிற்பலாபொடியே.
169

Page 96
செகராசசேகர வைத்தியம்
பொடிதான்சுக்குச்சாதிக்காய் பொருந்துமவின்நெந்தகங்கறுவா நெடிதாந்திற்பல்மூலமுடன் நேருங்காந்தமிலவங்கந் துடியார்துத்தங்கற்பூரம் சொல்லுமிளகுகொத்தமல்லி கடிதாஞ்சீனக்கிழங்குபலங் கார்சேரோமமதிவிடையம்.
அதிகமனோசிலைகல்மதமு மடுத்தவுலுவாவிவைசரக்கு புதியதிவையொன்றிருகழஞ்சாய்ப் பொடித்தேமுருக்கினிலைச்சாற்றில் விதியாயிடித்தேயந்திசந்தி வெருகிற்றேன்றிகொள்வீரேல் கதியார்குட்டம்பதினெட்டும் கரப்பன்கிரந்திகடிதறுமே.
சர்வகுட்டதயிலம் இயங்குபுளிமொசுமொசுக்கைகற்பூரவள்ளி
எலுமிச்சம்பழச்சாறுமீரவுள்ளிச்சாறும் தயங்குமிவையோரொன்றுநாலுகொத்துச்சாறாய்த்
தனியிதரம்எண்கழஞ்செடுத்துடன்விட்டு முயங்குமஞ்சள்மிளகுதுத்தந்துரிசுடனேகோட்டம்
முதிரேலம்வசம்புசுக்குக்கடுக்காய்மாயாக்காய் மயங்கிருசீரகமிலவம்திற்பல்வேம்பாடல்
மருந்திரண்டுகழஞ்சுகொண்டு திலத்திலெண்ணெய்
கொத்தே.
கொத்திலெண்ணெய்கசாளமிட்டுக்குறித்தபதம்வடித்தே
கொண்டவெண்ணெய்மேலெங்கும்பூசியெட்டுநாளும் இத்திலரைப்பெலுமிச்சம்புளியுடனேகூட்டி
இதமாகப்புளியமிலையவித்தநீர்மூழ்கில் ஒத்தகுட்டம்பதினெட்டுங்கரப்பனுடன்கிரந்தி
ஒடியகன்றிடுமெனவேயுயராயுள்வேதம் ஒத்தபடியுரைத்ததுநீர்செய்வீரென்று
உரைத்தனர்மாமுனிவரிதையுவந்துசெய்வீர்.
எல்லாக்குட்டத்திற்கும் பேய்ப்பீர்க்குக்கற்பம்
பேய்ப்பிசுக்கம்பிஞ்சுதன்னைப்பிடுங்கிவந்து
பெருவரகுவைக்கல்தனில்வாடச்சுட்டு வாய்க்கதனைப்பிளிந்துகொத்துச்சாறதாக்கி
மகாகாயமெண்கழஞ்சரைத்துக்காய்ச்சி சாய்க்கவுண்டைசெய்துலற்றிப்பதனம்பண்ணிச்
சற்றேவெந்நீருரைத்துக்கொள்ளநாளும் காய்க்கமருங்குட்டமெல்லாங்கலங்கியோடிக் கழலுமெனவாயுள்மறைகழறிற்றன்றே.
குட்டத்திற்குத் தின்னமருந்து
வட்டுவேர்சமூலத்தோடு வகுத்திடும்வெட்டிவேரும் சட்டமார்கடுகுமெள்ளுஞ் சாற்றுகற்கண்டுமொன்றோர் திட்டமாயரைக்கொத்தாகச் செங்கொட்டைநூறுகூட்டி இட்டமாயிடித்துத்தின்ன மாறுமேசூட்டமெல்லாம்.
எல்லாக்குட்டத்திற்கும் பூச எண்ணெய் நல்லெண்ணெய்நாழிதன்னில் நயம்பெறுகள்ளிப்பாலும் சொல்லெருக்கலையின்பாலுந் தொகுத்தொன்றுமுக்காற்கொத்தாம்
70

செகராசசேகர வைத்தியம்
மெல்லியகடுகுமுக்கால் மிளகுரிகராம்புமுக்கால் புல்லியவசம்போடுள்ளி புகழ்கழற்கொடிசமூலம்.
சமூலஞ்செங்கொட்டைதானுஞ் சாந்தெனவரைத்திட்டுறி அமலமாய்வடித்துநன்றா யடுத்தமுத்தினத்துக்கோர்நாள் விமலமாரெண்ணெய்பூசிக் காய்ச்சிவெந்நீரில்மூழ்கிற் றமலமார்குட்டமெல்லாந் தங்கிடாதகலுந்தானே. 2
எல்லாக்குட்டத்திற்கு மெட்டித்தயிலம்
பெருமருந்துசாரணைவெட்பாலைபெருங்காயம்
பெருங்குருந்துவேம்பாடலொடுவட்டத்துத்தி தருமருந்துகொடிவேலிபுனரைபுலிதொடக்கி
சாற்றுசிறுகுருந்துகொடிக்கழற்சிமாலெட்டி யருமருந்துமிளகுபிராயுடனப்பைக்கொவ்வை
யடுத்தபுளிநடலையுவாயொடுசெங்கத்தாரி திருமருந்துசிறுகுறிஞ்சிகாயஞ்செவ்வவரை
திகழுமொடுவடக்கியுடன்காவிளாய்வேரே. 1
வேறு
காவினிற்சிறுகுரட்டை கற்கொவ்வைபால்மிடாங்கி பூவினிற்சிறுவிளாத்தி நிலக்குமிழ்பொடியுவாய்வேர் சீவியேயிதன்வேரெல்லாஞ் செப்பினர்நிதானங்கொண்டு மேவியதேற்றாங்கொட்டை விளம்பினர்நாறதாமே. 2
நூறுகாஞ்சூரங்கொட்டை நுவன்றசெய்கொட்டைநூறு தேறுநேர்வாளங்கொட்டை செப்பினர்நாற்பதென்றே கூறினரணிஞ்சிற்கொட்டை குன்றியின்கொட்டைபத்து ஏறியசிறுகுறட்டைக் கொட்டையுமிருபதாமே. 3
இருதருவிளாத்திவேம்பும் இலவத்தின்பிசினுங்கூட்டி பொருவருவெள்ளையுள்ளி பொற்புறுகடுக்காய்நாற்பான் விரைதtருள்ளிநாற்பான் விளம்பினரிருசீரோமங் கரைதருபலமிரண்டு கல்தம்வச்சநாகம். 4.
நாகமார்கல்நாரோடு நிறுவிஷம்பலமுநாலு வேகமார்நெல்லிக்கெந்தம் விளம்பியவரத்தைகாயம் போகமார்தரத்தின்மஞ்சல் பொருகம்பிப்பிசினுங்கூட்டி மோகமார்துரிசுதானு மொருபலமுரைத்தாரன்றே. 5
அன்றியிம்மருந்தும்வேரு மறைந்திடுங்கொட்டைதானும் நன்றதாயிடித்துத்தூளாய் நலமிகுபொடியோரொன்று ஒன்றொருகொத்தெண்ணெய்க்கு ஒவ்வொருசிறங்கையிட்டு நின்றுநல்லெண்ணெயூறி வடித்துண்ணக்குட்டம்நீங்கும். 6 (இதில் எட்டிக்கொட்டைமுதலிய நஞ்சுப்பதாந்த்தஞ் சேர்ந்திருப் பதால் பசுப்பால், மோர், நெய், மிளகுகஷாயம் பாவித்து வரவேண்டும். முதல் சிறுபிரமாணய்க் கொடுத்து வரவரச் சரீரக் கூறுகண்டு ஏற்றிக் கொடுக்கவேண்டும்.)
171

Page 97
செகராசசேகர வைத்தியம்
கரப்பனின் குணமும் மருந்தும்
நீ திசேர்முனிவர்க்கந்நாள் நிகழ்த்தியகரப்பன்பேதம் ஒ திருபத்துமூன்றென் றுரைத்திடுமாயுள்வேதம் மேதினிமனுடர்தங்கள் வியாதியைவிலக்குதற்குத் தீதிலாவகையாராய்ந்து தெரிந்தவைசெப்பலுற்றாம்.
கரப்பன்வகை
செப்புவாதக்கரப்பன் சேர்வரட்சிக்கரப்பன் வெப்புறும்பெருங்கரப்பன் விறற்றிமிர்வாதமென்னும் கப்புறுகரப்பனோடு கபாலத்திற்சேர்கரப்பன் தப்பறுவிஷபாகத்திற் சார்ந்திடுகரப்பனாமே.
கரப்புறுபுடைகரப்பன் கரந்துகெண்டைக்கரப்பன் துரப்புறுசொறிகரப்பன் தூங்கிடுகரப்பானோடு நிரப்பிவிங்குங்கரப்பன் நீண்டிடுவெடிகரப்பன் அரிப்புறுகரப்பானோடு அடர்காணாக்கடிக்கரப்பன்.
கடித்திடுசெங்கரப்பன் கருதுமூலக்கரப்பன் அடுத்தசுகுணிகரப்பன் அழற்றுகொள்ளிக்கரப்பன் துடித்தகொப்புளக்கரப்பன் தோன்றுகண்டக்கரப்பன் நெடுத்தகற்கரப்பனோடு நீள்பொத்திக்கரப்பானாமே.
ஆகுங்காதிற்கரப்ப னாமிருபத்துமூன்றின் வாகுறுகுணங்களோடு மருவிடுமருந்துஞ்சிங்கைச் சேகராரியகோனான செகராசசேகரன்றன் ஒகைசேர்ந்திடுவதற்கா யுலகினர்க்குரைத்ததாமே.
1 வாதகரப்பன்
உடம்பெலாம்வெதும்பிநொந்து உளைந்துகால்சந்துகைக ளிடங்களிற்சுரந்துவீங்கி யிருந்துபின்னுவாதியாகி முடங்கியேவரண்டுதோன்றி முற்றியேவெடித்துப்புண்ணாம் இடங்கொடாக்கரப்பன்வாத குணமிதென்றியம்பலாமே.
சந்துதாள்மொழிபொருத்துத் தானங்களுளைந்துவீங்கி வந்துதான்புண்போற்காயம் வருந்தியேயிருந்துவாடி நொந்துதான்கனத்துவற்றி நோவுடன்சொறிவுண்டாகும் இந்தநோய்தானும்வாத கரப்பனென்றியம்பலாமே.
இருந்தெழுந்திருக்கும்போது மியற்றுங்கால்கரங்கள்சந்து வருந்திடத்திமிர்த்துவீங்கி வரண்டிடில்வெடித்துப்புண்ணாம் திருந்தியவங்கந்தானும் செயமறப்பொருமுமாகில் வருந்துமிக்குணங்கள்கண்டால் வாதமாங்கரப்பனாமே.
நொந்துகன்றியதலத்தில் நோவுடைபுண்கள்தன்னில் வந்துவல்லாயுதங்கள் வலுவுறத்தைத்தடத்தில் சந்துதாள்மொழிபொருத்துத் தானங்களதிலேயாகில் வந்துதான்தொடுக்குமெய்யில் வாதமாங்கரப்பனாமே.
172

செகராசசேகர வைத்தியம்
கண்ணுந்தூங்கிநடுவுந்தி கனத்துச்சுரந்துவெதும்புமுடல் நண்ணுந்துடையுங்கனதிமிராய் நைந்தேதலையுங்கிறுகிறுக்கும் மண்ணிற்பிறந்தோர்தங்களிடம் வந்தேவருந்தமயக்கிடுகில் எண்ணிவாதகரப்பனென இதுவும்பேசலாமென்றார்.
வீங்குங்குத்தும்மிகவுளையும் விடாமற்றிமிர்த்துவீங்கிநிற்கும் ஏங்கப்புண்ணிற்சலம்விழுத லிதுவுந்தினவுசொறிவுசெய்யும் நீங்கிச்செவ்வேதீராது நெடுநாட்பட்டேமசகிநிற்கும் தேங்கச்சுட்டுப்புகைத்துவிடத் தீரும்வாதகரப்பனிதே.
2 வரட்சிக்கரப்பன்
வாரிச்சொரிந்துவருத்தமுறும் வரட்சிக்கரப்பன்வகைகேளும் ஊருஞ்சொறியும்பரபரத்தேயுடம்பு முலர்ந்தேயதைப்புண்டாம் தீருந்திமிரும்பரந்தேறுந் திடமாய்ச்சாம்பற்பொருக்கேறும் ஆருமொருவர்க்குண்டாகி லசடாய்ப்புலால்போல்நாறுமதே.
கால்தலையுடம்பதெல்லாங் களக்கவேசிறுசிரங்காய்ச் சேலதுகெட்டுவற்றித் தினவுடன்சொறியுமிண்டி மேலுறக்காதுநாசி மிடற்றினுட்கரகரக்கும் மால்தருமடமின்னாளே வரட்சிசேர்கரப்பனாமே.
3 பெருங்கரப்பன்
பெருத்திடுஞ்சொறியுமேனி பேதிக்கத்தடித்துவீங்கி யுருத்திடும்புண்ணாயெங்கு முபாதியாய்த்தண்ணிர்பாயும் எரித்திடும்படுக்கொண்ணாது இரவினிற்குளிர்ந்துகாயும் வருத்திடுங்கடினஞ்செய்யும் வருபெருங்கரப்பனாமே.
4 திமிர்வாதகரப்பன்
தலையுங்கனத்துக்குரலரித்து தறுகாதுடம்புதிமிருண்டா யுலையுங்காலும்வீக்கமுமா யுளையாதிருக்குமுயிர்ப்பற்று மலையுஞ்சடுதிமீளாது வலுவைக்குறைத்துவரண்டுவருங் கொலையுஞ்செய்யுந்திமிர்வாத கொடியகரப்பனெனலாமே.
5 கபாலகரப்பன்
காதுதினவாங்கண்தினவாம் கண்டந்தினவாமுகந்தினவாம் மோதுந்தலைநோஞ்சொறிவுண்டாம் மூக்குத்தினவாய்நீர்பாயும் ஒதும்முழுக்கால்நனைவதனா லொன்றைக்குறித்துச்சிரம்வரளில் சேதமிகவேதலையிடித்துச் சேருங்கபாலக்கரப்பனிதே.
சிரத்தினிற்சொறிந்துகட்டித்திமிர்த்திடுந்தலைநோவுண்டா முரத்திடுமரித்துத்தும்மி யூர்ந்திடுந்தண்ணிர்பாயுஞ் சரத்தனிற்குடையுங்காது சலிப்புறவிரையுமூதும் வருத்திடுங்கபாலமீதில் வந்திடுங்கரப்பனாமே.
அரித்திடும்நாசுகண்ட மடைத்திடும்நீரும்வீழும் எரித்திடுங்கொதிக்கும்மண்டை யிடிப்புடன்பதைப்புமுண்டாம்
173
3
6

Page 98
செகராசசேகர வைத்தியம்
சரித்திடுமீயற்போலச் சஞ்சரித்திடுங்குத்துண்டாம் பரித்திடுங்கபாலமீதிற் படர்ந்திடுங்கரப்பனாமே.
6 விஷபாக கரப்பன்
வீங்கும்வற்றுமொருபக்கம் மேனிவரண்டுவெதும்பிடுங்கண் தூங்குந்தலையுங்கறுத்திருக்குந் துயரமிகுந்துதாகிக்கும் வாங்கிப்பேரமாட்டாது வலுவாயுடலில்விஷம்போலு மேங்கச்கொல்லும்விஷபாக மிதுவேசெய்யுங்குணமாமே.
வீங்கிடுமெரியுமேனி வெதும்பிடும்வெளுப்புண்டாகுந் தூங்கிடுந்தொய்வுமுட்டாய்த் துயர்செயுங்களையுண்டாகும் தாங்கிடுஞ்சரீரம்புண்போற் சலமலங்குறைந்துகாணும் வாங்கிடும்வற்றிவீங்கும் வருவிஷபாகந்தானே.
காலுடன்முகம்பின்னாரி கையுடனொருபாகந்தான் சாலெனவிங்கிவற்றித் தாகித்துத்தொய்வுமுட்டாய்ப் பாலெனவெளுத்துமேனி பழுத்துடன்கடினஞ்செய்யும் வேலெனும்விஷபாகத்தின் குணமெனவிளம்பினாரே.
7 புடைகரப்பன்
புடைத்திடுந்திரண்டுவீங்கிப் பொத்திபோற்குரும்பைபோலாய் உடைத்திடும்வடம்விட்டு உறுதியாய்த்திரண்டுகட்டி அடைத்திடுந்திமிர்த்துவீங்கி யனேகநாட்சென்றுகட்டும் கிடைப்படும்புடைகரப்பன் செய்குணங்கடினமாமே.
8 கெண்டைக்கரப்பன்
கெண்டைக்காலொடுமுழங்காற் கீழுறச்சொறிந்துபுண்ணாய் மிண்டியேகுட்டம்போல் வெடித்திடுந்தண்ணிர்பாயும் கொண்டிடும்பொருக்காகிக் குத்திடுங்கடிக்குமூரும் அண்டிடுங்கொண்டைமீதி லடுத்திடுங்கரப்பனாமே.
9 சொறிகரப்பன்
சொறிந்திடுந்தடிக்குமேனி துயர்செயுந்தண்ணீர்பாயுஞ் செறிந்திடுஞ்சிரங்குபோலத் தினவுடன்கடித்தேயூரும் முறிந்திடுங்குட்டம்போல தொய்த்திடும்பொருக்கதாகும் அறிந்திடுஞ்சோறிகரப்ப னழற்றிடுமெரிவுமுண்டே.
10 தூங்குகரப்பன்
வருந்திடுஞ்சொறிவுண்டாகி வறுகிடுந்துங்கிச்சோரும் பொருந்திடுந்தண்ணிர்பாயும் பொருக்கதாய்க்கறுக்குமேனி இருந்திடுமெரிவுண்டாகு மிரவினிலுறக்கம்வாரா விரிந்துதூங்குங்கரப்ப னிதுவெனவிளம்பினாரே.
11 வீங்குகரப்பன்
வீங்கிடுஞ்சரீரமுற்றும் வெளுத்திடும்முட்டுத்தொய்வாய் தாங்கிடும்புண்போல்மேனி தாகிக்கும்வெதுப்புமுண்டாந்
174
20
2
22
23
24

செகராசசேகர வைத்தியம்
தீங்கிடுஞ்சொறிந்துமுட்டாந் தின்றிடில்வாய்முட்டாகும் வீங்கிடுகரப்பன்செய்யுங் குணமெனவிளம்பினாரே.
12 வெடிகரப்பன்
வெடித்திடுங்கால்கைமிண்டி வேகித்துச்சொறிந்துபுண்ணாய்ப் பொடித்திடுந்தண்ணிர்பாயும் பொருக்கதாய்மாறிமாறிப் பிடித்திடுந்திமிருண்டாகும் பேதிக்கஉழையுங்காலும் கடித்திடும்வெடிகரப்பன் செய்குணங்கழறுங்காலே.
13 அரிகரப்பன்
அரித்திடுஞ்சொறிந்துபுண்ணா யழற்றிடுந்தண்ணீர்பாயு மெரித்திடுமிடித்துக்கல்லி யெடுத்திடுமிரத்தஞ்சாரும் பிரித்திடுந்தசையாய்வீழ்த்தும் பிளந்திடுங்கடினம்பண்ணும் சரித்திடுமரிகரப்பன் செய்குணஞ்சாற்றுங்காலே.
வேறு
காலினிற்கையினிற் களுத்தினில்மார்பினில் நூலிலாண்குறியினி னுவலுந்தானத்தில் சாலவேயளித்துறத் தண்ணிர்பாய்ந்திடும் கோலரிகரப்பன்செய் குணமிதாகுமே.
14 காணாக்கடி விஷகரப்பன்
தடித்திடுந்தண்ணிர்பாயும் தானத்திற்சொறிந்துபுண்ணாய்த் துடித்திடும்கருகிமாறித் துயர்செய்யுங்குட்டம்போல வெடித்திடுந்தினவுண்டாகும் வெளுத்திடுஞ்சரீரமுற்றுங் கடித்திடுமரவால்வண்டாற் கடிவிஷகரப்பனாமே.
15 செங்கரப்பன்
உடம்பெலாஞ்சிவந்துகன்றி யுவாதியாய்த்தடித்துவீங்கித் திடம்பெறநெடுநாட்சென்றாற் சியல்தண்ணிரிரத்தமாகி இடம்பெறுவயிறுகைகா லியற்பழுவிரண்டுசந்தும் விடம்பெறும்செங்கரப்பன் விஷமெனவோடுங்காணே.
16 மூலகரப்பன்
காலினிற்றலையிற்கையிற் கடினமாஞ்சரீரமுற்றும் சாலவேசொறிந்துபுண்ணாயச் சட்டையாயுரிந்துபின்னும் வாலிதாமூலமீதில் வரண்டிடிற்சரீரமுற்றுங் கோலியேதினவுபற்றிக் குட்டமாய்வெடித்துப்புண்ணாம்.
வெடித்திடும்நெடுநாள்மாறி விட்டுப்பின்கடினம்பண்ணிக் கடித்திடுஞ்சொறியுமூருங் கனத்திடுதிமிருண்டாகும் பொடித்திடும்புள்ளியாகிப் பொருமிடுமிருமலுண்டாம் தடித்திடுமூலமீதிற் றங்கியகரப்பனாமே.
175
25
26
27
28
29
30
31
32

Page 99
செகராசசேகர வைத்தியம்
17 அசுகுணிகரப்பன்
தலையினிற்சரிரமெங்குந் தடித்துப்பின்சொறிந்துபுண்ணாய் நிலையினிற்றண்ணிர்பாய்ந்து நின்றதிற்பாணிபோலும் உலையவேவிங்கிவற்றி யுற்றிடுநெடுநாள்நிற்கும் அலைவுறக்கடினஞ்செய்யு மசுகுணிகரப்பனாமே.
18 கொள்ளிதட்டிக்கரப்பன்
கொள்ளிகொண்டடித்தாற்போலக் கொப்பிளித்தியங்குபோலப் புள்ளியாய்ப்பொடித்துமேனி பொருக்கதாய்க்கருகிமாறி வெள்ளிபோல்வெளுத்துப்பின்பு மிடுக்கிட்டுத்தீருமன்றே யொள்ளியகொள்ளிதட்டிக் கரப்பன்செய்யுவாதிகாணே.
19 கொப்புளக்கரப்பன்
சொறிந்துகொப்புளங்கள்கட்டித் தோன்றிடுமெரியும்மேனி பிறிந்திடுஞ்சிலநாட்சென்று பேதிக்கவுடைத்துத்தண்ணிர் பறிந்திடுங்கருகிமாறிப் பற்றறத்தீருங்கண்டீர் செறிந்திடுங்கொப்புளத்திற் சேர்ந்திடுங்கரப்பனாமே.
20 கண்டக்கரப்பன்
கணட்டத்திற்கனத்துவிம்மிக் கரகரத்தரித்துப்புண்ணாய் மினண்டியேகஞ்சிதண்ணிர் விழுங்கிடிற்காதிற்குத்தும் துண்டமுங்கனத்துநொந்து தும்மிடில்மிடற்றினோவாம் கொண்டிடுங்கண்டமீதிற் குறித்திடுங்கரப்பனாமே.
21 கற்கரப்பன்
கல்லெனத்திரண்டுவீங்கிக் கடினமாய்நெடுநாள்நின்று வில்லெனத்திமிர்த்திறுக்கி மிகுதியுமுவாதிசெய்து சில்லெனமருந்தைமீறிச் சினந்திடுஞ்சியலாய்க்கட்டும் புல்லிடுங்கற்கரப்பன் குணமிதுபுகலுங்காலே.
22 பொத்திகரப்பன்
மொத்தியாய்காலிற்கையில் முதிரவேவிக்கமாகி மெத்தியேதிமிருண்டாகி விறைத்திடுமுளைந்துகுத்தும் நித்தியஞ்சோம்பலாகி நின்றிடுநெடுநாளாகக் குத்திரமானபொத்திக் கரப்பனின்குணமிதாமே.
23 காதிற்கரப்பன்
விங்கிடும்வெடித்துப்புண்ணாய் விதனமாய்த்தண்ணிர்பாயுந் தாங்கிடினிரத்தமாகுஞ் சரிந்திடும்வீனிபோலத்
தீங்கிடுஞ்சொறிந்துமிண்டித் தினவதாய்நின்றுமாறும் பாங்கிடுங்காதிற்சேர்ந்து பற்றிடுங்கரப்பனாமே.
176
33
34
35
36
37
38
39

செகராசசேகர வைத்தியம்
சிறுபிள்ளைச் செங்கரப்பனின் குணம்
பிள்ளையுங்கனத்துவீங்கிப் பிரண்டையின்பின்னல்போல உள்ளமுங்கன்றிச்சீறி உடம்பின்னுஞ்சிவந்துகாட்டித்
துள்ளியேகையிற்தங்காத் துணுக்கெனச்சுழலும்பிள்ளை கள்ளமாய்வயிற்றிற்காலிற் கட்டுஞ்செங்கரப்பன்கானே.
மருந்து செங்கத்தாரிபுல்லாந்தி சிறியகிளாய்வேர்செஞ்சந்தம் அங்கப்படியேயரைத்தொன்றாய தனைப்பிளிந்துள்ளுங்கொடுத்து பங்கப்படாதேயம்மருந்து பற்றாய்ப்பூசிவருவீரேல் சங்கத்தமருஞ்செங்கரப்பன் தணிந்தேயகலுங்கண்டீரே. 2
கண்டோங்கொடிமல்லிகையிலையைக் கடிதாய்ப்பிளிந்துள்ளுங்
கொடுத்து மிண்டாதுடனேயூசிடுகில் மீளுமிதுநாங்கைகண்டோம் பண்டார்பஞ்சபாண்டுமுல்லை பகருநாகையுள்ளியுடன் கொண்டேயவித்துக்குடித்துவரிற் கொடியகரப்பன்மாறிடுமே. 3
பாகலிலையுமிளகுடனே பரிவாயரைத்துப்பிளிந்துடனே தாகத்துடனேயருகிவரிற் தணியுஞ்சிவந்தகரப்பனிவை வேகத்துடனேமீறிவரில் விடாமலிந்தமருந்துசெய்யிற் போகத்துறுசெங்கரப்பனிவை பொறுத்தேபோகுங்கண்டீரே. 4
சிறுபிள்ளை செங்கரப்பன் அல்லாத கரப்பன் எல்லாவற்றிற்கும் புகை.
நெல்லியின்கெந்தகஞ் செங்கொட்டையரிதார
நிறுவிஷந்துரிசுதுத்தம் நினைவானசிலைகெவுரி பாஷாணமக்கிறா
நேர்சுரைக்காய்க்கெந்தகம் கல்நார்சிவந்தபா ஷாணமொடுசாதிலிங்
கங்குந்திருக்கமிருவி கருதுவெண்பாஷாண மிவைவற்சநாபியும்
கந்துகத்தினில்வந்திடும் பல்லாணபாஷாண மிதரமுடனோரொன்று
பகரிற்கழஞ்சாகவே பற்றறவிடித்தபொடி நிற்கவிரதத்திலம்
பானதையுருக்குபொடியுந் தெல்லாகவேகட்டி யனலிட்டுப்புகைவிடத்
தீருங்கிரந்திநைசல் சீறியகரப்பனுடன் மீதடர்பிடிப்பறுந் தினகரன்முனிருளதெனவே.
கரப்பனுக்குப் பற்பம் இருள்போலவிரிதரும் பற்பமதியம்பிடுவெ
னினிதுநற்சீரநெல்லி யின்கெந்தகந்துரிசு துத்தமிவையோரொன்று
இருகழஞ்சொடு*கிஞ்சுகம்
* கிஞ்சுகம் - முருக்கு.
77

Page 100
செகராசசேகர வைத்தியம்
பொருள்மேவுபன்னலிலை பூனைக்கழற்சியிலை
போதவொன்றொருபிடியதாய்ப் புகழ்தருமியங்கின்வே ரிவையிடித்திடுதுகள்
பொடித்திடுசரக்கொடிடிபின் சுருள்போலருந்திடி னுடம்பிற்கரோனிதஞ்
சுவைபற்றுதசைபற்றிடும் துன்புறுபறங்கிமிடை வந்திடுகரப்பனுந்
துடைகால்கரத்தடைசலும் மருள்மேவுகுத்துப் பிடிப்புக்கடுப்புளைவு
மாறாதமுறிகிரந்தி வந்தெழுங்கனலியைக் கண்டிடும்பனியென
மடிந்துடன்முறிந்துபோமே.
வேறு பற்பம்
திற்பலிமிளகுசுக்குச் சீரகம்கராம்புவாசி அற்புறுகடுகுரோணி யதிவிடையசமதாகம் பற்றுறுமிளகுசீனப் பாகுடன்கருஞ்சீர்சாதி சொற்பெறுமிவையோரொன்று சோர்ந்திடாவிருகழஞ்சே.
இருகழஞ்சோரொன்ங்ாய்க்கொண் டீருள்ளிச்சாற்றில்நன்றாய் பெருகிடவரைத்துத்தேனிற் பேணியேயருந்துவீரேல் பொருவருங்கிரந்திசூலை பொருந்தியமுடக்குவாதம் மருவருங்கரப்பன்குத்தும் மாறிடுமறிந்துசெய்யே.
வேறு பற்பம்
முருக்கிலைவவ்வுலொட்டி முசுக்கைகாஞ்சோன்றிவீழி தருக்கிளர்பருத்திகையான் தகரைசீர்க்குப்பைமேனி மருக்கிளரியங்குகோழி வரைமறிதீண்டாப்பாலை கருக்குவெற்றிலைகறுத்தக் காக்கணங்கொடிக்கழற்சி.
தருக்குவிட்டுணுகிராந்தி சார்செப்புநெருஞ்சிகுன்றி நெருக்கியபிரமிநல்ல பொடுதலைநேரோரொன்றாய் மருக்கிளர்கராம்புவாசி மாகடுதான்றிசாதி இருட்கிளர்கடுகுநெல்லி யிதரந்திற்பலிகருஞ்சீர்.
சீரகஞ்சாதிலிங்கந் திகழதிமதுரந்துத்தம் கார்மிளகசமதாகங் கடியவெண்குந்திருக்கம் ஏர்துரிசரியின்தார மினத்துக்கொன்றரைக்கழஞ்சாய் சார்புறவிடித்துவாழைப் பழத்தினிற்சார்பாய்க்கொள்ளே.
கொண்டிடிற்கரப்பன்சூலை கொடியமாகிரந்திவாதம் மிண்டியமுறிகிரந்தி வீங்கிடுமுளைவுகுத்து தண்டினிற்கரப்பன்சூலை தணிந்திடாக்கிரந்தியெல்லாம் திண்டிறற்கதிர்முன்கண்ட பனியெனத்தீர்ந்துபோமே.
கரப்பனெல்லாவற்றிற்கும் முட்டிரதச் சூரணம்
சீரகமிதாங்காந்தந் திற்பலிமிளகுகோட்டம் நேரசமோதமேலம் நெல்லிமாயாக்காய்சுக்கு
178

செகராசசேகர வைத்தியம்
கார்தருகராம்புவாசி காரமார்நெல்லிக்கெந்தம் பார்தருசீனப்பாகு பகர்தருதுரிசுதுத்தம்.
துத்தநேரரியின்தாரம் தூயதிமதுரஞ்சாதி வைத்தசாதிலிங்கங்கொத்த மலிமனோசிலையரத்தை உய்த்தசாத்திரத்தின்வேதி யுறுமரபொடிகடுக்காய் சுத்தமாரிலவந்தான்றி தூய்ப்பெருங்காயங்கூட்டி.
கூட்டியொன்றிருகழஞ்சு கோதிலாமுருக்கியங்கு நாட்டியகழல்பருத்தி நல்லிலைமுருங்கைதானு மீட்டியேயிடித்தொன்றாக வினித்திடுந்தேனிற்கொள்ளில் வாட்டியகரப்பன்குட்டம் வாதமார்சூலைபோமே.
கரப்பன் எல்லாவற்றிற்கும் பற்பம்
திற்பலிதிற்பலிமுலங்கராம்புவாசி
திகழும்மனோசிலையிதரங்காந்தங்கோட்டம் நற்புறுசீரகமிளகுகடுக்காயுள்ளி
நலவசமோதகமதுரங்கருஞ்சீரேலம் பொற்புறுசுக்கரிதாரமரத்தைநெல்லி
பொருதுபெருங்காயமிந்துப்பிலவஞ்சாதி அற்புறுகெந்தகமுலுவாதுரிசுதுத்தம்
அக்கிறாமாயாக்காய்சாத்ரவேதி.
வேதிநறுஞ்சாதிலிங்கங்கொத்தமல்லி
விளம்பியநற்கடுகிவையொன்றிருகழஞ்சாய் சாதிநறும்முருங்கையிலைச்சாற்றிற்சேர்த்துத்
தனியிடித்துவெருகடிதேன்தன்னிற்கொள்ளில் ஒதில்முறிகிரந்திகுட்டங்கரப்பன்வாத
முளைவாதங்கிரந்திமிடையுடலிற்புண்ணோத் தீதில்கதிரவனெதிர்முன்பனியேபோலத்
தீர்ந்தகலுமெனமுணிபனிவர்செப்பினாரே.
வாதகரப்பன் எல்லாவற்றிற்கும் கோழியவரைச்சாற்றில் எண்ணெய்
அரிதாரந்துரிசுதுத்தங்கெந்தகமேரிடிதரம்
அடுத்தசரக்கொன்றொருநாற்கழஞ்சுவாங்கிப் பெரிதானவிலுமிச்சம்புளியிரண்டுகொத்துப்
பெருத்துவளர்கோழியவரைச்சாறுமதினளவு கரிதானதிலத்திலெண்ணெய்தானுங்கொத்துக்
கசாளத்தில்நாகையுள்ளிச்சாறுமிருகொத்து உரிதானபதம்வடித்துக்காசளவுட்கொண்டு
உச்சிமுதற்சரீரமெங்குமொருங்குடன்பூசே,
வேறு
பூசியபின்மோரினிற்சோறுள்ளேகொண்டு
புளியமிலையவித்ததண்ணீரரைப்புங்கூட்டி
தேசிக்காய்ப்புளிதவிடுபிசறியெண்ணெய்
தீர்க்கமெழுதினம்பூசிக்கழற்றுவிரேல்
179

Page 101
செகராசசேகர வைத்தியம்
பேசிக்காய்பெருங்கரப்பன்முதலவெல்லாம் பிரிந்தகலும்குட்டமுதற்பெருவியாதி
வீசிக்காய்கிரந்திமுறிகிரந்தியெல்லாம்
விட்டகலுமெனமுனிவர்விளம்பினாரே. 2
வாதகரப்பனுக்குஎண்ணெய்
குருந்தொடுபுன்குநொச்சி கொடிவேலிமுருங்கைகான்றை திருந்துசாரணையாவட்டை திகழ்நிலப்பனைக்கிழங்கும் அருந்துதூதளையினோடு அமுக்கிராயுவாய்வட்டின்வேர் முருந்துபூவாடாதோடை களப்பன்னைஎருக்கோடுள்ளி.
வேறு
உள்ளியிலவங்கமஞ்சல்கடுகுபெருங்காயம்
உவந்தசதகுப்பைகுந்திருக்கமரமஞ்சல் வெள்ளையிந்துசாதிக்காய்வசுவாசிகராம்பு
வெளுத்தலக்கராவரத்தைகார்புகாவரிசி துள்ளியநேர்வாளங்கஸ்தூரிமஞ்சலுலுவா
தூயகையாந்தகரைவேரிவைசமன்கொண்டு எள்ளிணெண்ணெயள்ளுதெளிவெண்ணெயேரண்ட
வெண்ணெயருந்திலுப்பெண்ணெயெலாநிரையிற்கூட்டே.2
கூட்டுசரக்குடன்வேருஞ்சரிகண்டங்கிடித்துக்
குறித்தெடுத்தவெண்ணெய்களைக்கொதிக்கக்காய்ச்சி நாட்டுநல்லகொதிபதத்தில்மருந்தைத்தூவி
நல்லவெண்ணெய்சிரத்துமுள்ளும்பூசிப்பின்னர் ஈட்டுபுளியிலைநீரிலரைப்புக்கூட்டி
இதமாகமுழுகிவரிற்கரப்பன்குட்டம் காட்டுகதிரவனெதிர்முன்பனியேபோலக்
கலைந்தகலுமெனமுனிவர்கழறினாரே. 3
வரட்சிகரப்பானுக்கு எண்ணெய்
தண்ணிர்மீட்டான்கிழங்கதனிற் சாறுதானுநானாழி வண்மைக்குரியவரிக்குமரி யவித்தேபிளிந்துவடித்துநன்றாய் உண்மையுறச்சாறிருநாழி யொன்றாய்விட்டுக்காய்ந்தூறி எண்ணமுறவேநாழியெண்ணெ யிதமாய்விட்டுக்கசாளமிடே.
இட்டமுடனேகொடிவேலி வேருமரைத்திட்டிதமாகத் திட்டமுடனேயெண்கழஞ்சு சிறந்தகருஞ்சீர்வேம்பாடல் மட்டேயரைத்துவடித்தவெண்ணெய் மருவவருந்திமுழுகிவரிற் கெட்டேயோடும்வரட்கரப்பன்கிளருங் கதிர்முன்பணியெனவே. 2
வேறு எண்ணெய்
புங்கங்கொட்டைபசுமஞ்சள் புதியவெள்ளைப்பாஷணம் அங்குச்சொன்னோம்வேம்பாடல் அவுரிச்சாறுநல்லெண்ணெய் பங்கப்படுத்திச்சொறியாதே பதத்தில்வடித்துமேற்பூசித் தங்கிப்பின்னர்வென்னில் முழுகிவரவேதறுகாதே. 1
180

செகராசசேகர வைத்தியம்
கொன்றைதூதுநிலவேம்பு குமிழ்வேர்கறுக்காயாவிரைவேர் சென்றுவணங்காச்சூரியதும் சிவனார்வேம்புகல்மிரிசு ஒன்றுமுத்தமாகாணி யுலவுவட்டுநாயுருவி நன்றேகொள்ளுங்கருஞ்சூரை நன்னாரியங்குதுடர்கூட்டே.
கூட்டியுள்ளிமிளகுமஞ்சல் குலவுமதுரம்வேம்பாடல் நாட்டிற்பயிலும்வெண்கோட்டம் நலஞ்சேர்சென்னகரம்பழமும் ஆட்டங்காணுஞ்சாதிக்கா யதுகொள்கடுக்காய்தான்றிநெல்லி ஈட்டித்துாள்செய்தெள்ளெண்ணெ யிதமாய்க்கொதித்துப்புண்ணிலிடே.
கபாலக்கரப்பானுக்கு எண்ணெய்
நன்னார்முத்தந்துதுவளை நயந்தேசொன்னார்சீதேவி சொன்னோரிதளோர்தாமரையுந் தூயசிவனார்நிலவேம்பும் வன்னேர்நெற்றுங்குப்பைமலை தாங்கிவட்டுச்சாரணைவேர் தன்னேர்சரிகொள்கழஞ்சுகொள்ளுஞ் சாற்றுங்கடையிற்சரக்காமே.
சுக்குமிளகுதிற்பலியுந் தூயகடுக்காயிந்துப்பு தக்ககருஞ்சீர்வசம்புள்ளி சரிசென்னகரம்பழங்கைப்பு மிக்ககடுகுரோசனையும் வெளுத்தற்பிசினோடதிமதுரம் ஒக்கக்கூட்டியெண்ணெயிடி லோடுங்கபாலக்கரப்பனிதே.
கண்டக்கரப்பனுக்கு எண்ணெய்
நன்னார்தூதுபெருமருந்து நற்காற்றோட்டிகான்றைநொச்சி சொன்னாரெருக்குச்சிங்கிலிவேர் தூயவெருக்குஅசுவகெந்தி பன்னார்முத்தக்காசுடனே பகருமிலாமிச்சிருவேலி மின்னார்கண்டங்காலியுவாய் விரிந்தோரிதழின்தாமரையே.
அரிதாங்குப்பிளாய்தோடை யடுத்தவேரொன்றொருநிறையாய் பெரிதாம்வள்ளிமொசுமொசுக்கை பிரமிபருத்திமாகாணி கரிதாநாவித்தண்டையிலை காக்கணங்கொவ்வைதழுதாளை உரிதாமாடாதோடையிலை யொன்றோர்சாறுநாழிகொள்ளே.
கொள்ளுந்திலமேரண்டநிம்பங் கொத்தோரொன்றொள்வொருநாழி துள்ளுமிலவங்கோட்டமுள்ளி தூயமதுரஞ்சுக்கரத்தை உள்ளிவசம்புசதகுப்பை யுகந்தமிளகுதேவ்தார் அள்ளுமிருசீர்கச்சோல மசமோதகந்திற்பலிமாஞ்சில்.
மாயாக்கடுகுரோசணியும் வகுத்தகராம்புவசுவாசி தூயவெளுத்தல்செண்பகப்பூ துடியாரேலம்நாகம்பூ சாயாதொவ்வோர்கழஞ்சுகொண்டு சரியாயரைத்துவடித்தெண்ணெய் வேயமுழுகிவரநாளும் மீளுங்கண்டக்கரப்பனிதே.
கபாலக்கரப்பனுக்கு எண்ணெய்
காக்கணங்கொவ்வைமூலந் தறித்துடன்கதிக்கச்சீவித் தேக்கிடத்துவைத்தநீரும் தெளிவெண்ணெய்தானுநாழி
போக்கிடும்வெள்ளையுள்ளி பொருந்தமுப்பலமுங்கொண்டு தாக்கிடும்வசம்புமஞ்சற் றனிமிளகுலுவாச்சுக்கு.
181

Page 102
செகராசசேகர வைத்தியம்
சுக்கசமோதநெல்லி தூயநற்கராம்புவாசி மிக்கதிற்பலியரத்தை மிகுத்திடுகடுக்காய்தான்றி தக்கசீரேலங்கொத்த மலிசாளியாகழஞ்சாய் ஒக்கவேவடித்துப்பூசில் ஒடும்மண்டைக்கரப்பன்.
செங்கரப்பனுக்கு எண்ணெய்
புங்கம்வேரைத்துருவிநன்றாய்ப் பொடியாய்த்துவைத்துநல்லெண்ணெய் தங்கமாகஒருகொத்துத் தனியேவிட்டுப்பிசைந்ததனேர் துங்கமானவசம்புள்ளி தூயகடுக்காய்மிளகேலஞ் சங்கமானதான்றிநெல்லி சாற்றுமிருசீரகங்கோட்டம்.
கோட்டமில்லாச்செஞ்சந்தங் கோதில்கராம்புவசுவாசி நாட்டுமாயாவிலவங்கம் நல்லகைப்புக்களிப்பாக்கு காட்டில்வள்ளிசிறுதிற்பல் கடியபூதவிருக்கமுடன் கூட்டுமுலுவாக்கொத்தமல்லி குலவுமாஞ்சில்செண்பகப்பூ
பூர்க்குமகில்நாகம்பூவும் பொருந்துஞ்செம்பரத்தையின்பூ கார்க்குஞ்சரக்கொன்றிருகழஞ்சாய்க் கடிதாயிடித்துப்பிசைந்தொன்றாய் சேர்க்குங்கலத்தினுடன்வெயிலிற் றிடனாய்வைத்துப்பதத்தேடுத்து வார்க்குமெண்ணெயுள்ளருந்தி வரச்செங்கரப்பன்மாறிடுமே.
வேறு
செங்கத்தாரிசிறியகிளா சிவந்தபூலாவேருடனே புங்கம்வேர்நற்கருஞ்சூரைபொருந்துமிவைவேரொருநிறையாய் தங்குமிருசீரகங்கோட்டஞ் சாற்றுங்கடுக்காய்செஞ்சந்தம் சங்கமிளகோடீருள்ளி சாதிகராம்புவசுவாசி.
வாசிமாயாக்காயிலவம் வருசெவ்வள்ளிசிறுதிற்பல் பேசுமதுரங்கொத்தமல்லி பெருத்தகைப்புக்தளிப்பாக்கு தூசில்நெல்லிசதகுப்பை தூயவேலஞ்செண்பகப்பூ மாசில்திலவெண்ணெயிற்கொதித்து வார்க்கக்கரப்பன்மடிவுறுமே,
வேறு
கொடிமல்லிகைவேர்தன்னைப்பிடுங்கிக்
கோதில்செஞ்சந்தனம்வசம்பு பொடியாயிடித்துத்தூளாக்கிப்
பொருந்துந்திலவெண்ணெயில்நன்றாய்க் கடிதாய்க்காய்ச்சிக்கொதிபதத்திற்
கலந்தேயிறக்கியுள்ளருந்திற் கெடியாயோடுஞ்செங்கரப்பன்
கேடில்கதிர்முன்பனியெனவே.
கரப்பன் எல்லாவற்றிற்கும் சீவனிகிருதம்
அதிமதுரஞ்செண்பகப்பூகோட்டமேல
மசமோதங்கைப்புலுவாதிற்பல்(செஞ்)சந்தம்
கதியிலவஞ்சாதிநெல்லிகடுக்காய்மாயாக்
களிப்பாக்குக்கொத்தமல்லிவெளுத்தல்(சத)குப்பை
182
3
2

செகராசசேகர வைத்தியம்
பதிமேவுசெவ்வள்ளிகருஞ்சீர்நற்சீர்
பருத்தவலம்புரியிவையொன்றிருகழஞ்சாய்
விதிமேவநறுநெய்தனிற்கொதித்துப்பூசி
விரும்பியுள்ளுமருந்திவரிற்கரப்பன்போமே.
கரப்பனிவைபோகுமதின்புண்ணுமாறும்
கட்டிலிடப்பழுத்துவற்றுமுரப்புந்திரும் உரப்புமதின்கடுப்பெரிப்புமுடனேமாறும்
உட்டணமூலக்கிரந்தியுவாதிதீரும் பருப்பருவாய்வருபடுவன்சிரங்குமாறும்
பற்றுமசுகுணிமூலக்கடுப்புமாறும் நிரப்பமாய்வருபிணிகள்நீக்கலாலே
நிச்சயசிவனிகிருதம்நிகழ்த்தினாரே.
கரப்பனெல்லாவற்றிற்கும் எண்ணெய்
நீர்வள்ளிக்கிழங்குசிறு யுள்ளிடிசமூலம்
நிறைதருகுப்பளைகாட்டுமல்லிகையினிலையும் சீர்பெறிருசீரகம்வசம்புள்ளிதானுஞ்
சிறந்தவெளுத்தற்பிசினுந்திற்பலியுமாகக் கார்மருவுங்குழல்மடவாய்நல்லெண்ணெய்தன்னிற்
கருகாமற்கொதிப்பித்துக்கடுகெனினுஞ்சற்றே ஓர்பொழுதுதடவுகினுங்கரப்பனுள்ளதெல்லாம்
ஊரைவிட்டைங்காதமோடியேபோமே.
வாதகரப்பனிற் கொதியெண்ணெய்
புங்குடனே ஆயில்கொடிவேலிநொச்சி
புகன்றகவிழ்தும்பைபூனைக்கழற்சி தங்குதயிர்வளைகுருந்தெருக்கினோடு
தாவுவட்டுத்துதுவளைகரம்பைமுள்ளி இங்குவாய்முருக்குநிலப்பனைக்கிழங்கு
மியல்வானசாரணைகாற்றோட்டியன்னை அங்கிலைக்கள்ளிவெட்பாவட்டைகான்றை
ஆமணக்கினுடனாடாதோடைகூட்டே.
வேறு
கூட்டியுத்தாமணிகையாந்தகரைசெங்கத்தாரி
கூறுமிவையோரொன்றோர்பிடியதாய்த்தேடி வாட்டுசரக்கேலமிளகுள்ளியொடுமஞ்சல்
வசம்புதுத்தம்துரிசுடனேவசுவாசிஇந்து நாட்டுறுசாதிக்காய்கராம்புநேர்வாளம்
நல்லரத்தைஉலுவாகஸ்தூரிமஞ்சல்சுக்கு நீட்டுகொத்தமல்லியசமோதமிலவங்கம்
நிதானமிருசீரமுமோர்நிறையதாய்த்தேடே.
தேடுவீர்செவ்வள்ளிமரமஞ்சள்காயஞ்
சிற்றரத்தையக்கறாதிற்பலிகுந்திருக்கம்
நாடுரோகணிகோட்டமொடுதேவதாரம்
நற்பூதவிருக்கஞ்சதகுப்பையொன்றோர்கழஞ்சு
183

Page 103
செகராசசேகர வைத்தியம்
நீடுநல்லெண்ணெய்தெளிவெண்ணெய்சிற்றாமணக்கின்
நெய்யுடனிருப்பெண்ணெய்நிறைசரிகலந்து
சாடுவெற்றிலைவெடிபதத்தினிலிறக்கிச்
சரக்குடனேவேர்த்துாளுஞ்சரிகலந்துதூவிப்
பாடுறவேயாற்றிச்சிரத்துமுள்ளும்பூசிப்
பருகிவெந்நீரினிற்பனபாகமூழ்கே.
மூழ்கிடில்வாதபிபிடிப்புமுடக்குளைவுகுத்து
முதிர்வீக்கம்சூலையொடுகரப்பான்கடுப்பு தாழ்வுபெறுபுண்ணுடன்பொத்திக்கரப்பன்
தயங்குகண்டக்கரப்பனசுகுணிக்கரப்பன் மாழ்கிவிடுஞ்சொறிசிரங்கொடுகரப்பன்குட்டம்
வருத்துமிப்பிணிகளெல்லாம்வகையினோடு நீள்சுடரைக்கண்டிட்டபணியதைப்போலே
நிச்சயஞ்சுகமாம்நிகழ்த்திடுங்காலே.
வாதகரப்பனுக்கு வேறு எண்ணெய்
சிறியநிம்பம்புன்குசேருத்தமாகாணி சிந்துவாரங்கன்மிரிசு சீரானகவிஸ்தும்பை தைவேளைசாரணை சிறந்தாயில்கொடிவேலியும் நெறிசெயுந்துதுவளை *கிஞ்சுகமிலைக்கள்ளி
நிலப்பனையுவாய்வட்டுவேர் நேருமாடாதோடை பாவட்டைமரமஞ்சல்
நேரானவேரனைத்துங் குறியவிலவங்கமுளி கடுகுமரிசம்சத
குப்பையும்பெருங்காயமுங் குந்திருக்கங்கார் புகாவரிசிதன்னோடு
குணமானசாதிக்காயும் செறியிஞ்சிவசுவாசி கராம்போடரத்தையும்
சேர்சுத்திநேர்வாளமும் திலநெய்யிலேயெரித் துப்பூசிவரில்வாதஞ்
சேர்கரப்பன்மாறுமே.
வலியின் குணமும் மருந்தும்
அதிமந்தன்மந்தன்மோகன் அதிமோகன்குமரகண்டன் சதிசெய்யும்முசலகண்டன் றன்பெருவலியேகாக்கை கதிசெய்யுங்குரங்கினோடு கரடியேமரணகண்டன் விதிசெய்யுந்தமரகண்டன் விதித்திடுமமரகண்டன்.
கண்டிடுங்குதிரைபூனை கடும்பெருஞ்சூரையென்றே தண்டிடும்வலியினாமஞ் சாற்றினமிவையார்க்கென்னில் அண்டிடுஞ்சிவத்துரோகர்க் கடுக்குமென்றாயுள்வேதம் உண்டெனவறைந்ததுற்ற குணங்களும்மருற்துஞ்சொல்வாம்.
வேறு
பெருத்திடுமுதற்சூலுடைமகளிருக்குப்
பிள்ளைப்பெற்றிடுமதியதனி
* கிஞ்சுகம் - பலாசு.
84

செகராசசேகர வைத்தியம்
லுருத்திடுமிரவின் குதிரையின்வலிவந் துற்றிடும்பிள்ளைப்பெற்றெட்டில்
அருத்திடுமந்த வலிவருமன்றே
லடுத்தசூல்வழிமகளிருக்கும்
வருத்திடும்வலியா மதிமந்தன்வருமால்
மற்றெவர்தமக்கும்வந்தடுக்கும்.
அடுத்திடும்விடலைப் பருவமாமதனி லரும்பெருவலியுடன்காக்கை தொடுத்திடுமுசல கண்டனேமுதலாய்ச்
சொல்லியவலியெல்லாரையுமாங் கடுத்திடுஞ்சூரை மந்தனுங்குரங்குங் கரடியுஞ்சிறுபருவத்தில் விடுத்திடும்வலிவந் தடுத்திடும்பருவம் விளம்பினம்வினைவழிவருமால்.
வலியெனுங்கொடிய கூற்றுவன்வலித்தே
வாங்கிடுங்கொடுமையையுரைக்கில் புலியெனப்பிடித்து மிடறினையிறுக்கிப்
பொருந்தொன்பாண்வாசலுமடைத்து சலித்திடக்கரணம் தத்துவம்பொறிகள் சரீரத்தின்கருவிகள்பதற மெலித்திடுமுடலந் திருகையினெட்போல் விடாதரைத்திழுத்துவாங்கிடுமால்.
1 அதிமந்தவலி
மந்தித்துவயிறுமுதி வலித்துக்கைகுறண்ட்வாங்கி ஆந்தித்துநாடியூட்டியதிகமாய்நுரையுந்தள்ளி தொந்தித்துநடுக்கிமிண்டித் துயருறவுதறிவாங்கி சந்தித்துப்பரக்குங்கண்ணுஞ் சாற்றதிமந்தனாமே.
2 மத்தவலி
கண்ணினைச்சொருகிமேலே கடினமாய்ச்சிமிட்டிமூடி எண்ணமாய்க்கையுங்காலும் இழுத்துடன்குறண்டிவாங்கி திண்னமாஞ்சரீரநெஞ்சுந் திடுக்கிடவிழுத்துத்தொய்வாம் பண்ணிகர்மொழியாயிது பகர்மந்தவலியதாமே.
3 மோகன்வலி
காலினையிழுத்துவாங்கிக் கையினையுதறிவாங்கி மேலினைநடுக்கிவாங்கி வேகித்துவிழித்துப்பார்த்துச் சாலவெண்நுரையுந்தள்ளித் தணிந்தபின்னிழுத்துமூசு மாலிதுமோகன்செய்யு மரும்வலியறிந்துகொள்ளே.
4 அதிமோகன்வலி
மோகிக்கும்நடுக்கமுண்டாம் முறித்தெடுத்துதறிவாங்கி வேகித்துக்கண்ணும்மேலே விழித்துவெண்ணுரையுந்தள்ளிச்
185

Page 104
செகராசசேகர வைத்தியம்
சோகித்துமயங்கியேறித் துயர்செய்யுங்களையுண்டாகுந் தாகிக்குமதிமோகன்செய் வலியெனச்சாற்றினாரே.
5 குமரகண்டவலி
அருந்துகண்டம்விருவிருத்துவாய்நீரூறி
யடுத்தடுத்துவலித்துநுரையனேகந்தள்ளிப் பொருந்திமிண்டிக்கையுதறிக்காலும்நீட்டிப்
போதவொருகடிகைவிட்டுவலித்துவாங்கி வருந்தலிமாறியபின்மூன்றுநாளும்
வசமழிந்துகாலோய்ந்துசரீரநோவாம் திருந்தவிதுகுமரகண்டவலிதான்செய்யுந்
தீமையெனவாயுள்மறைசெப்புமன்றே.
8 முயலகண்டவலி
நடுநடுக்கிப்படபடத்துநாடிபூட்டி
நாக்குழறிவெண்ணுரையும்நலியத்தள்ளிக் கிடுகிடுத்துவிழுத்திமுட்டாய்வலித்துமிண்டிக்
கிடந்துசலமலம்பறியுமறிவில்லாமல் கடகடத்துப்பற்கறித்துக்கடினமாகிக்
களைகளையாய்வேர்த்துடனேமயங்கிச்சோரும் திடுதிடுத்துக்கையுதறிகாலும்வாங்கும்
தீர்ந்துவிடாமுயலகண்டன்செய்யும்வாறே.
7 பெருவலி
உருமெலிந்துகண்பரந்துபூச்சிட்டாப்போ
லுறுத்திமிண்டிக்கண்பரக்கவிழித்துப்பார்க்கும் வருவலிசற்றோருநேரத்தொருக்கால்விட்டு
வசமழிந்தீரைங்கடிகைவந்தேமிளும் தருவலிவிட்டிரண்டுதினஞ்சரீரமெல்லாம்
தன்வசமற்றிருந்துமெள்ளவெறிபோற்பேசும் அருவலிசேர்பெருவலிசெய்குணமீதென்றே
யாயுள்மறையுரைத்தருளுமறிந்துகொள்ளே.
8 காக்கைவலி
வலித்திடுந்திமிருண்டாகி வருந்திடக்கழுத்தைவாங்கி கெலித்துறக்கத்திக்கத்திக் கிடந்துவெண்ணுரையுந்தள்ளி சலித்துறக்கையுங்காலுஞ் சடுதியாயுதறிவாங்கி கலித்திடுமயக்கிச்சோருங் காக்கையின்வலிதான்தீரா.
9 குரங்குவலி
கையினைநடுக்கிமிண்டிக் கடினமாய்க்குண்டவாங்கி மெய்யினையுதறிவேர்த்து விறைத்துடனாடியூட்டி ஐயினையெழுப்பிச்சீறி யடுத்திடுங்குரங்குபோல மையெனச்சரஈைவாதம் வரும்மந்திவலியதாமே.
86
13

செகராசசேகர வைத்தியம்
10 கரடிவலி
குத்திடுங்கைகால்மிண்டிக் குறண்டவேயிழுத்துவாங்கிக் கத்திடுங்கரடிபோலக் கழுத்தையுந்திரும்பவாங்கி ஒத்திடுநாடிபூட்டி யுதறிவெண்ணுரையுந்தள்ளி எய்த்திடுமிவைவல்லூக வலிசெயுமியல்பிதாமே.
11மரணகண்டவலி
அறிந்துவலியெனநினைக்குமுன்னேவந்து
அவலமாய்விழுத்திமிண்டிக்குறண்டவாங்கி மறிந்துதெனவலித்துமுட்டாய்வலித்துச்சோர்ந்து
மாறியொருகடிகைவிட்டுமயக்கிவேர்த்துப் பிறிந்துவலிவிட்டதின்பின்சரீரநொந்து
பேதமாய்க்கடிகைபுரண்டுறக்கம்வாரா செறிந்நிடுமாமரணகண்டவலிதான்செய்யுந்
தீமையெனவாயுள்மறைதெரித்தவாறே.
12 தமரகண்டவலி
நடுக்கிடுமுதறிமிண்டி நாடியைவிறைத்துப்பூட்டித் திடுக்கிடும்பரந்துகண்ணுஞ் சிமிட்டியேவிழித்துநோக்கும் அடுக்குறவிட்டுவிட்டு அடுத்துடன்வலித்துச்சோரும் கெடுக்குறுந்தமரகண்ட வலிசெயுங்கெடியிதாமே.
13 அமரகண்டவலி
உருத்திடும்வாங்கிவாங்கி யுதறிடுங்கையுங்காலும் வருத்திடும்வலித்துமூசி வணிசிலுந்தள்ளித்தள்ளிப் பெருத்திடுமிழுத்துக்குத்திப் பேதிக்கக்குலுக்கிவாங்கிப் பொருத்திடுமமரகண்ட வலியிதுபொல்லாதாமே.
14 குதிரைவலி
காலுங்கரமுங்கண்மூக்குங் கதிக்கத்திருகிவலியுண்டாய் மேலுங்கரந்துகனன்றுநொந்து விடுமைநெஞ்சில்மிகக்கட்டி தோலுந்தசையும்படபடெனத் துடிக்குங்கண்ணுமிவையாத நாலுங்கண்டாற்குதிரைவலி நணுகிற்றெனக்கண்டறிவீரே.
எண்ணிற்சன்னிவாதத்து விதுவுங்குதிரைவலியென்னும் கண்ணிற்புருவங்கறுப்புத்தாங் கரமுங்காலுபொருபக்கம் வெண்ணினுரையுமிகுந்துதள்ளி மிக்வேதிருகிவலியுண்டாய் விண்ணைப்பார்த்துவிழிநிற்கில் மீளாதிதுவுந்திண்ணமிதே.
15. பூனைவலி
குனித்திடுமிவலித்துவாங்கிக் குலுக்கிடுங்கொக்கரிக்கும் நனித்துறக்கொய்துகொய்து நடுக்கிடும்விறைத்துச்சோரும் கனித்திடுங்கையுற்காலும் கத்திடும்பூனைபோல முனித்திடும்வெருகென்றோதும் முதுவலிமொழியுங்காலே.
87
15
2O
21

Page 105
செகராசசேகர வைத்தியம்
18 சூரைவலி
சூர்ந்திடும்வயிற்றைவாங்கிச் சுருட்டிடுஞ்சுழித்துமூசிச் சேர்ந்திடுங்கையுங்காலுந் திடுக்கிடவிழுத்துவீசிச் சோர்ந்திடுமயக்கியேறித் துயர்செய்யுங்கடினம்பண்ணி ஆர்த்திடுஞ்சூரஞ்செய்யு மடுநுரைவலியதாமே.
திரண்டிடும்வயிற்றினேறித் திடுக்கிடவலித்துவாங்கிப் புரண்டிடுங்குத்திமீறிப் பொருமிடுங்கிடந்துமூசி வரண்டிடும்வணசிற்றள்ளும் வருத்திடுமிடுத்துச்சோரும் முரண்டருசூரையென்னும் முழுவலியறையுங்காலே.
வேறு
கன்னிச்சூல்மகளிர்தங்கள் கடுங்கொடும்வினைக்கீடாகிச் சென்மவுற்பத்தியான தினமுதற்பத்தாந்திங்கள் வன்மத்தினிலைத்தமார்பன் வலியதேவதையையேவக் குன்மத்தின்கொடுமையான குதிரையின்வலிவந்தெய்தும்,
மந்தத்திற்றிமிருண்டாகி வலிவருமூன்றாஞ்சாமம் தொந்தித்துவலிக்கத்தானே சோருகிடும்பிள்ளைநெஞ்சில் அந்திக்கப்பிள்ளைசாவா யடுத்திடுமயக்கஞ்சோர்வும் சந்திக்குமுபாயத்தாலே சாபிள்ளைவீழ்த்தப்பாரே.
பிள்ளைதான்விழுந்தபின்பு பெருந்திமிர்விறைப்புமின்றி மெள்ளவேதெளிவுகஞ்சி விழுங்கியேயறிவுண்டாகில் உள்ளநன்மருந்தோடெண்ணெய் உறுதியாய்ச்செய்துபார்க்கக் கள்ளமார்மரணநீங்கிக் காலத்தில்வலியுந்திரும்.
வலியெனுங்கூறுவந்தால் மாதர்கள்தம்மைக்கொல்லும் எலியினைவிடுமோபூனை எதிர்த்துவாய்வைத்தபோது கலியெனும்வலிதான்வந்து கடினமாய்வலிக்குமாகில் நலியவேதைலமெண்ணெய் நசியங்கள்செய்துபாரே.
குடோரி
செய்திடுமருந்தினிற் றிரும்பிடாதெனி லுய்திறமுச்சியிற் குடோரியூன்றியே மெய்யெனுமிரதத்தை மிடுக்கின்மத்திக்க ஒய்யெனுங்குதிரையின் வலிவிட்டோடுமே.
சூடு
இரண்டுகாற்குதிரையின்மே "லிருபெருவிரன்மொழி திரண்டிடுபிடரியிற் சேர்முழங்கையின்மேல் முரண்டிருகையினிற் சுழுக்கின்மேலுற வரண்டிடுதொப்பிளி டுைத்தசானுமேல்.
பிறையெனக்கதிரினைப் பெரிதுகாய்ச்சியே முறையதிற்கட்டபின் னிதரமுக்கழஞ்
88
22
23
24
25
26
27
28
29

செகராசசேகர வைத்தியம்
சிறைதருமொழிப்படி யிரண்டுநேரமும் நிறைதரமத்தித்து நிதானம்பார்க்கிடே. 30
குதிரைவலிக்குக் கொதிஎண்ணெய்
வெண்காயுள்ளிநேர்வாளம் மிகுத்தசுக்குத்திரிகடுகு நண்பார்கடுகுபெருங்காயம் நற்சீரகமும்வெந்தயமும் மண்பார்விளைந்தகெந்தகமும் வசம்புவெளுத்தல்பிசினக்ரா உண்பாரசமோதகந்துரிசி னுடனேகுதிரைவாலிவட்டே. 1
வட்டக்குருந்துதூதுவளை வலியமுருங்கைசாரணைவேர் துட்டக்கொடிவேலியுஞ்சற்றே தூயவாடாதோடைநொச்சி மட்டுக்குலவும்வெள்வேலும் மதிக்கிலிவையொன்றொருநிறையாய் திட்டந்தெளிவெண்ணெயிற்கொதித்துத் தின்னக்குதிரைவலிபோமே. 2
வேறு
உள்ளியிருபலமுரித்தேயரைத்துச்சீலை
யுறப்பூசித்தெளிவெண்ணெய்விளக்கிற்காய்ச்சி மெள்ளவேவடித்தநற்றயிலந்தன்னை
விட்டுமுன்னங்கொதித்தவெண்ணெய்சேர்த்துக் கொள்ளவேயந்திசந்திநல்லதென்று
கூறினரித்தைலமுடன்குளிகைதன்னிற் துள்ளுகோடாகுளிகையருந்தநன்றே
சொல்லுமறையுரைத்தபடிசெய்துகாணே. 3
அஞ்சனம்
சுக்குமிளகுதிற்பலியும் சோமனுப்புவெள்ளுள்ளி தக்ககோந்தாளம்பருப்பும் தறுகாவசம்புமிவைகூட்டி ஒக்கத்தேசிப்பழச்சாற்றி லொன்றாயரைத்தஞ்சனவுண்டை மிக்ககுதிரைவலிமுதல் மீளத்தேசிப்பழத்திலிடே. 1
பூகப்பழமும்பழவறையும் புதியமிளகோடிந்துப்பும் ஆகத்தடங்குமகத்திப்பா லதுவோடொக்கப்பொடிசெய்தே வேகக்குதிரைவலிதனக்கு விடவேயுசிதமெனச்சொன்னார் பாகக்கபாலவலிபூதப் பசாசும்பறந்துபோமேன்றே. 2
காயம்
காயங்காய்ச்சிலரிதாரங் கடியவிரதமிந்துப்பும் பேயின்பிசுக்கினிலைச்சாற்றிற்பேணியரைத்தங்குண்டைசெய்து மரயச்சாராயத்துரைத்து மாண்டார்கண்ணிலிடுவீரால் பேயுந்தீருந்தீராத பிரமவலியுந்தீர்ந்திடுமே. 3
வலியுண்டாகுங் குணம்
சீதத்தின்மந்தந்தோன்றிற் றிமிரத்தின்விறைப்புண்டாகிச் சேதத்தின்பிர்துவியப்புச் தேயுவாய்வாகாசங்கள்
பேதத்திற்குளிர்ந்தொன்றாகிப் பெருத்திடுங்குணங்கம்பிக்க வாதத்திற்சன்னிதோன்றி வலித்திடும்வலியாய்வந்தே.
189

Page 106
செகராசசேகர வைத்தியம்
வலித்துநாவரண்டுமூசி வசமறவிழுத்துமுட்டாய்ச் சலித்திடவறிவுமின்றித் தணிந்திடாமயக்கமாகில் நிலத்தினில்நாகமுள்ளி நெல்லினல்லரிசிகூட்டிப் பலத்தினில்வடித்துக்கஞ்சி பருகெனச்சொல்லும்வேதம்.
வரண்டுநெஞ்சடைத்துக்கட்டி வணசிலுங்களகளத்துத் திரண்டுசேற்பனங்கள்மிஞ்சித் திமிர்த்துநீர்ச்சீலைபோலும் புரண்டிடும்புயங்கம்போலும் நெளிந்துபொய்யுறக்கமாகில் கரண்டருவலியின்பூத காலனென்றறையும்வேதம்.
ஆணிபோற்பதிந்துகண்ணு மழகெழுமுகமுங்குன்றி பாணிபோற்குளிர்ந்துமேனி பசையறத்திமிருண்டாகில் வீணிபோற்கடைவாய்நீரும் விழுந்துலர்திருக்குமென்னில் காணியவலியின்பூத காலனுக்கையமின்றே.
வலிக்குள் விசேஷம்
பெருவலிமுயலகண்டன் பெருத்திடுகுமரகண்டன் உருமெலிமரணகண்ட லுடன்மோகன்கரடிகாக்கை கருமலிகுதிரையோடு கதித்தெழுமமரகண்டன் அருவலித்தமரகண்ட னதிமோகனரசதாமால்.
அவுடதங்கள்
நடுக்குடன்வலித்துமிண்டி நயமறவிறைத்துவேர்க்கில் இடுக்குடனெருக்கம்வேரை யிடித்ததைவறுத்தேயொற்றில் விடுக்குநல்விறைப்புவேர்வை வெப்புடன்வெதுப்புண்டாகும் தடுக்குநல்வேப்பஞ்சாம்ப ரொற்றவுந்தணிந்துபோமே.
வலித்திடிற்சன்னிதோன்றி வாதமும்பதைத்துமிண்டிச் சலித்திடவிறைத்துவேர்த்துத் தான்குளிர்ந்திருக்குமாகில் பலித்திடக்கொள்மாப்போட்டுப் பயமறப்பிடிப்பீராகில் நலித்திடும்வலிவிறைப்பு நடுக்குடன்வேர்வைபோமே.
அடுத்தடுத்துதறிவாங்கி யவலமாயிழுத்துமூசி விடுத்துவெண்ணுரையுந்தள்ளி வேகமுற்றணுங்குமாகில் கடுத்தவேப்பிலையில்நொச்சி யிலைகலந்திடித்தொன்றாக்கி எடுத்துவெச்சோடுகாட்டி யொற்றிடஇளகிப்போமே.
விட்டுவிட்டுதறிவேர்த்து விறைத்திடவலிக்குமாகில் தொட்டமாகாணிநொச்சி தோடைமாவிலங்கைகான்றை இட்டெலுமிச்சைவேம்பி னிலைதுவைத்திடித்துவெக்கை பொட்டதின்வறுத்தேயொற்றப்பொறுத் திடுந்திமிர்விறைப்பே.
வலியெனவறிந்தபோதின் வலிப்பெருங்கொதிப்பிணெண்ணெய் மலிதரவெண்காயுள்ளி வடித்தசிர்த்தயிலந்தானும் நலிதரக்கோழியண்டத் தைலநல்லிரதஞ்சேர்த்துப் பலிதரக்கலந்துட்கொள்ளிற் பறந்திடும்வலிகளெல்லாம்.
எடுத்தெடுத்துதறிவாங்கியிழுத்துடன்குலுக்கிமூசித் தொடுத்துறவிறைத்துவேர்த்துத் தொந்தித்துவலிக்குமாகில்
190

செகராசசேகர வைத்தியம்
கொடுத்திடச்சன்னிவாத சுரத்தெண்ணெயிதரங்கூட்டி விடுத்திடும்வலிகளெல்லா மெனமறைவிளம்புமன்றே.
வாங்கியேயிழுத்துமுசி வரிவிழிபரக்கப்பார்த்து ஓங்கியேநடுங்கிவாங்கி யுதறியேவலிக்குமாகிற் தீங்கில்நாராயணார்செய் தைலத்தைச்சிரத்துமுள்ளும் பாங்கினாலருந்தத்திரு மெனமறைபகர்ந்ததன்றே.
கையினைக்குறண்டவாங்கிக் கடினமாய்வலிக்குமாகில் செய்யநாற்பலவெண்காயந் தினமரைத்துள்ளங்கைகால் மெய்யெனப்பூசிவெள்ளைச் சீலையைவிரைந்துசுற்றி உய்யநிம்பெண்ணெய்வைத்த கலசத்தைக்காய்ச்சியொற்றே.
சூடு
பிறையெனவளைத்துச்செய்த பெரியசத்திரத்தைக்காய்ச்சி நிறைபிடர்முடிச்சின்மேலும் நீண்டகைமுழங்கைமேலும் பொறைதருமுழங்கால்மேலும் பொருந்தவேகுதியின்மேலும் துறைகெழுமிரும்பைக்காய்ச்சிச் சுட்டிடின்வலிகள்போமே.
தொப்புளில்வட்டமாகச் சுட்டுப்பின்னெருக்கம்பாலும் தப்பிலாத்துரிசுதுத்தஞ் சாதித்துப்புண்ணிற்பூசில் வெப்பிலாவலிவிறைப்பு விடுதிமிர்நடுக்கம்வீச்சு ஒப்பிலாதோடுமென்றே யுரைத்திடுமாயுள்வேதம்.
எல்லாவலிக்கும் சினேக பொட்டணம்
மாவிலங்கையெருக்கவுரிமுருங்கைகான்றை
மருவுபெருமருந்துநொச்சிகுதிரைவாலி தேவிலங்குகொடிவேலிவாதங்கொல்லி
சிவகைபுன்குதூதுவளைசன்னிநாயன் கோவிலங்குகள்ளிதில்லைகுருந்துமூன்று
குலவுமுத்தாமணியெலும்பிச்சையோடு காவிலங்குகிலுகிலுப்பையாடாதோடை
கல்மிரிசுபேரமட்டியமுக்கிராய்வேர்.
இருப்பைமுருக்குடனணிஞ்சில்முருங்கைசில்லி
இயல்வேம்புகள்ளிசணல்குருந்துபுன்கு பருப்புமகிழ்கழற்சியெள்ளுமாவிலங்கை
பகர்சிற்றாமணக்குவிரையோர்பலங்கொள் நெருப்பிரதந்துரிசுதுத்தஞ்சன்னிநாயன்
நிகழ்வெளுத்தல்கடுகுகுக்கில்வசம்பரத்தை திருப்புகெந்தம்காயமஞ்சள்மரத்தின்மஞ்சல் தேவதார்சதகுப்பைசுக்குக்கோட்டம். சரக்கிவையொன்றொருபலமாயிடித்தொன்றாக்கிச்
சாற்றுநிம்பனண்ணெய்கொத்தில்வறுத்தேயிட்டு பெருக்கநவசீலைதனில்வைத்தேகட்டி
பேணிநெருப்புறுசட்டிமேற்சட்டிக்குள் தருக்குசட்டிதனிற்றடவிச்சிரத்துமெங்கும்
தப்பாமற்காய்ச்சியொற்றிவருவீராகில்
191

Page 107
செகராசசேகர வைத்தியம்
திருக்குவலிசன்னியுடன்வாதமெல்லாம்
தீர்ந்துவிடும்சினகபொட்டடளிசெய்வீரே. 13
எல்லாவலிக்கும் கொதியெண்ணெய்
எருக்கவுரிதுதுவளைசன்னிநாயன்
இயல்பானபேரமட்டிமணித்தக்காளி தருக்குநொச்சிமாவிலங்கைகுதிரைவாலி
தனிச்சிவதைகொடிவேலிமுருங்கைகான்றை பெருக்குமுத்தமாகாணிகுருந்துமூன்று
பெருமருந்துகிலுகிலுப்பைவாதங்கொல்லி மருக்கொள்புன்குதில்லையுவாயாடாதோடை
வருஞ்சீந்தில்கல்முரிசோடமுக்கிராய்வேர். 4.
குக்கிலுள்ளிகெந்தகநற்றுரிசுகோட்டம்
கொத்தமல்லிவெளுத்தலீரரத்தைகாயம் தக்கவசம்புடன்கடுக்காய்மிளகுகுப்பை
சன்னிமஞ்சல்றேவதார்கடுகுதிற்பல் மிக்கநற்சீரேலIமிலவங்கமஞ்சள்
மிடுக்கானசெண்பகப்பூகழற்பருப்பு தொக்கமகிழ்முருங்கைசில்லுப்பருப்புங்கூட்டிச்
சூதமுடன்சரக்கிவையோர்கழஞ்சுவாங்கே. 15
வாங்கியந்தச்சரக்குடன்வேரிடித்துமாவாய்
வறுத்துமுசிற்றண்டமுடன்நிலவேர்தானும் ஓங்கிவளர்நிம்பவெண்ணெய்கொதியிற்றுாவி
உடனிறக்கிக்கோழியண்டத்தைலஞ்சேர்த்து தாங்கியநற்சிரத்தில்வைத்துமேலும்பூசித்
தைலமுள்ளருந்திக்காதுள்ளும்பூசிற் தீங்குதருவலிகளெல்லாந்திடுக்கிட்டோடித்
தீர்ந்திடுமென்றாயுள்மறைசெப்புமன்றே. 16
கோழிமுட்டைத்தைலம்
கோழியண்டங் குறித்தொருபத்தெட்டு நாழிநீர்விட் டவித்துநருக்கியே
வீழிசெங்கரு விட்டுமருந்துடன் தூளியாக வறுத்துத்துணித்திடே. 17
கருகவெந்திடக் கார்தைலம்வர உருகுமந்தப்பதத்தில்வடித்துடன் பொருவருஞ்சிரம் பூசிமத்தித்திட வெருவியோடும் மிடுக்கும்வலிகளே. 18
கண்ணின்மூக்கினிற் கரதினிற்கண்டத்தில் நண்ணிச்சூடு பிடரிநடுவினின் எண்ணித்தொப்பிளி லெங்கணும்மத்திக்க உண்ணின்றங்க முறங்கிடின்மீளுமே. 19
உறங்கிடாதெனி லுற்றிடும்வேர்வையும் கறங்குகண்ணுங் கறுத்துச்சிவப்பின்றித்
192

செகராசசேகர வைத்தியம்
திறங்கொள்சேற்பந் திரண்டுவரண்டிடில் மறங்கொள்காலன் வலைப்படுந்திண்ணமே. 20
அறிவுமின்றி யயர்ந்துவலித்திடின் நெறியுமின்றியந் நீர்மலஞ்சோர்ந்திடல் பொறியினொன்றும் பொருந்துவதின்றெனில் செறியுங்காலன் வசப்படுந்திண்ணமே. 2
உதர ரோகங்கள் மகோதரம்
1 நீர்க்கோவைமகோதரம்
வீங்கிடும்பொருமிபூதி வெளுத்திடும்பழுக்கும்மேனி துங்கிடுமுறக்கம்வாராத் துயர்செயுந்தாகமுண்டாம் தாங்கிடுவயிறுந்தாழு மண்டமுந்தண்ணிர்பாயும் தேங்குநீர்க்கோவையாகு மகோதரஞ்செய்யுங்காலே.
2 கீழ்மகோதரம்
மார்பிற்கீழ்வயிறுந்தாளும் வலுப்பெறவீங்கிமுட்டாய்ச் சீரற்றுநாவுலர்ந்து செலமலங்குறைந்துதொய்வாய் ஏர்பெற்றவுலகநாளு மிகழ்ந்திடநெடுநாணிற்கும் தீர்வற்றுக்கீழதான மகோதரஞ்செப்புங்காலே. 2
3 வற்றுமகோதரம்
பொருமிடுஞ்செருமியூதிப் பொதியெனவிங்கிவற்றி உருமிடுமுறக்கம்வாரா துள்முட்டாய்த்தொய்வுண்டாகும் வருபெருங்கால்பின்னாரி வருத்தமாய்ப்பிடிப்புண்டாகும் செருமியுள்ளுதிவற்றும் மகோதரஞ்செப்புங்காலே. 3.
4 வாதமகோதரம்
பொருத்துடன்கால்பின்னாரி பொருமியேவயிறுஅண்டம் வருத்திடவிங்கிமுட்டாய் வலஞ்சலங்குறைந்துதொய்வாய் இருத்திடும்பிடிக்குங்கால்கை யிடரதாய்த்திமிருண்டாகும் உருத்திடும்வாதந்தோன்றி யுறுமகோதரமதாமே. 4.
5 பித்தமகோதரம்
பித்தமுங்கொதித்துமிண்டிப் பெருத்திடும்வயிறும்வீங்கி ஒத்திடுஞ்சலமுங்கண்ணு முறுமஞ்சட்பொடிபோலாகிச் சுத்தமாய்க்கிறுகிறுத்துத் துயர்செய்யுமுணவுஞ்செல்லா சித்தமார்பித்தந்தோன்றிச் சேர்மகோதரமதாமே. 5
6 சிலேட்டுமமகோதரம்
உற்றிடும்வயிறுநாரி யுறுபதஞ்சிரசுகண்டம் பெற்றிடும்வீக்கமாகிப் பெலத்திடும்முட்டுத்தொய்வாய்
193

Page 108
செகராசசேகர வைத்தியம்
அற்றிடுமலசலங்க ளதிகமாய்வெளுக்கும்மேனி செற்றிடுஞ்சேற்பனத்திற் சேர்மகோதரமிதாமே.
7 பெருமகோதரம்
மலையெனச்சரீரம்வீங்கி மலஞ்சலங்குறைந்துமுட்டாய் சிலையெனவயிறுங்காலுந் திமிர்த்திடும்நீர்தாகிக்கும் கலையெனவிருமிக்கண்டங் கனத்திடுங்கிடைகொடாது கொலைபெருமகோதரத்தின் குணமெனக்கூறினாரே.
8 கரவாதமகோதரம்
சுரத்தொடுபொருத்தோடண்டந் தொந்தித்துவீங்கிமுட்டா யுரத்திடும்காலும்வீங்கி யுவாதியாயுறக்கம்வாரா இருத்திடுமிரவின்மீண்டு மிடர்செய்யும்நெடுநாள்நிற்கும் வருத்திடுஞ்சுரத்தின்வாத மகோதரம்வகுக்குங்காலே.
9 கெற்பரோக மகோதரம்
கெற்பத்திற்கிரந்திதோன்றிக் கெடுத்திடுவெப்புண்டாகி உற்பத்தியேழிலெட்டி லுவாதியாய்வீங்கிமுட்டாய்ச் சற்பத்தின்விடம்போல்மூடித் தாகிக்குந்தொய்வுமுண்டா கிற்பத்திக்கெற்பரோக மகோதரங்கிளத்துங்காலே.
10 மருத்தீடு மகோதரம்
பெருத்திடும்வீக்கமாகிப் பேதிக்கமுட்டுத்தொய்வாய் உருத்திடுமிருமலுண்டாய் உரத்திடுமிடறுங்கேரும் அருத்திடுமன்னஞ்செல்லா தவலமாய்நெடுநாள்நிற்கும் மருத்திடுமயக்கில்வந்த மகோதரம்வகுக்குங்காலே.
11 சிரங்குமகோதரம்
வெடித்திடுஞ்சிரங்குமாறி வீக்கமுமிகுந்துமுட்டாய் பிடித்திடுமலசலங்கள் குறைந்திடும்பெலத்ததொய்வாய் குடித்திடும்நீர்தாகிக்குங் கொடுமையாயிருந்துதூங்கும் தடித்திடுஞ்சிரங்கின்வாத மகோதரஞ்சதிக்குங்காணே.
12 பாதகமகோதரம்
சாதுவாங்கையுங்காலுங் சடமுகம்வீங்கித்தொய்வாய் மீதுவாய்விழிகள்சோரும் மிகுவருத்தங்கள்சேரும் தாதுடன்கூடிநின்று தனஞ்செயன்தீமையாக்கும் பாதகமகோதரத்தின் பகாந்திடுகுணமிதாமே.
மகோதர பரீட்சை
அங்கமுமடங்கவீங்கி யறலின்மேற்றாகமாகி மங்கியேயுதரந்தன்னில் வாயுவுஞ்சலமுங்கோர்த்து
கங்குல்சேர்நேரமாகிற் கடியதோர்வாதைபண்ணும் அங்கதங்குலமைானே யடுமகோதரமிதாமே.
194
10
12

செகராசசேகர வைத்தியம்
மகோதரம்வந்தபோதில் வாயுவும்நேரேயோடா மகோதரம்வந்தபோதில் வாயுவும்பொருமிக்கொள்ளும் மகோதரம்வந்தபோதில் வயிறுடன்புறந்தாள்வீங்கும் மகோதரம்வந்தபோதில் மலசலம்வரண்டுபோமே.
வரண்டுகண்ைசிவந்துவீங்கில் நாடியுமவகையிலோடா வரண்டுநீர்த்தாகமிஞ்சிப் பசியின்றிவருத்தமாகும் வரண்டுமேல்மூச்சுததொய்வாய் வரவரஅதிகமாகும் வரண்டுமேல்முட்டதாகி வயிறதுபொருமிவேர்க்கும்.
உரமிகுமுள்முட்டாகி யுதரமும்வீங்கித்தொய்வாய் இரவினிற்கடினம்பண்ணி யிருத்திடுமுறக்கம்வாரா சிரமுதலண்டம்வீங்கித் தீன்மறந்திடிற்றிராது மரமெனக்காலும்வீங்கும் மகோதரம்மதித்துக்கானே.
பெருந்திடுங்கரப்பனாகிப் பேதிக்கச்சொறிந்துபுண்ணாய் உருத்திடும்வீங்கிமுட்டா யுளத்தொய்வாயுறக்கம்வாரா வருத்திடுஞ்சலங்குறைந்து வரட்சியாயிருமிமூச்சாய் இருத்துமேல்மகோதரத்தின் இடறுசெய்குணமதாமே.
பரிசமேயறிந்துநாடி பார்த்திடும்பரிசுகேளிர் வரைவுடன்சலமுமுண்டாய் வாயுவுங்கீழேநோக்கிற் றிரமிவைகஞ்சிதண்ணி ரருந்திடிற்றீமையின்றி விரைவுடன்சமிக்குமாகில் விரைந்துநன்மருந்துசெய்யே.
கரப்பனுங்கிரந்திவெப்புங் கதித்திடிற்சலநீர்வற்றிப் புரப்பனவபானன்றானும் பொதியெனவிக்கங்காட்டிப் பரப்பனவாதசேற்ப பித்தமும்பரந்துதோற்றும் சுரப்புநீர்கரப்பதாலே மகோதரமென்றுசொல்லும்.
அறிந்திடற்கரியதாகு மாயுறுவேதத்துண்மை செறிந்ததையுற்றுப்பார்த்துத் தெளிந்ததினுன்ைமைகண்ைடு பிறிந்திடாத்தூலகுழச்ச பேதமுங்கண்டுந்திரா மறிந்திடுமுதரசல்ய வண்மையுங்கண்டுசெய்யே.
பெருவயிறாமைசூலை பெருத்திடுமெகுத்துக்குன்மம் உருமலியுதரதோஷம் உடற்பழுச்சொருகுசூலை யிருபமுச்சேரெகுத்தோ டிடர்தருநிதம்பசூலை
பொருமுநீராமைக்கட்டு பொருந்துகுண்டலத்தின்வாய்வு.
நிரம்பநீராமைக்கட்டு நிறைவுறும்புறநீர்க்கோவை சுதந்தரும்வெப்புப்பார்வை கடியதோரிரத்தகுன்மம் விதந்தருகெற்பசூலை வெடித்திடுமிரத்தசூலை மதந்தருமுதரசல்லிம்யமாற்றரிதென்னும்வேதம்.
1 பெருவயிறு
கருவியுமந்தம்பற்றிக் கடியமேலுடம்பும்வற்றி பெருகியவுதரந்தானும் பெருத்திடபொருமிவிம்மி
மருவியவுண்டிமாறி மலத்தையுமறிக்குமென்னிற் பெருகியவுதரதோஷம் பெருவயிறென்னலாமே.
195

Page 109
செகராசசேகர வைத்தியம்
குடமெனவயிறுமூதிக் குமுழ்துடல்பழுத்துவிம்மி விடமெனத்திட்டுமுட்டாய் விடுஞ்சலமலமும்வற்றி படமெனநெஞ்சுவற்றிப் பகர்புறந்தாளும்வீங்கிற் றிடமிதுபெருவயிற்றின் செய்குணந்தீராதன்றே.
2 பேராமை
வீங்குஞ்சலமுமிக்ககோர்த்து மிகுந்தேபொருமுமுடலெங்கும் வாங்குமுதகந்தனைத்தேடும் மறுத்தேதுயரமிகுந்திருக்கும் தூங்குங்கண்ணும்மேல்மூச்சுஞ் சுவையிற்புளியிற்றாகமிகும் ஏங்கக்கொல்லும்பேராமை யிதுவேசெய்யுங்குணமாமே.
3 நீராமை
ஆமைபோல்வயிறும்வீங்கி யடைசியேயொருமிமுட்டாய் தீமையாயன்னந்தண்ணீர் சென்றிடிற்கடினம்பண்ணும் வாய்மையாயிரவின்மிண்டி வரவரக்கனத்துவிம்மிச் சாய்மைநீராமைதீமை தருந்திடமென்னும்வேதம்.
4 வயிற்றுநீராமைக்கட்டி
மார்பிற்கீழ்வயிறுதானும் வருந்திடவீக்கமாகும் நேர்பெற்றகாயம்வற்றி நிறமதுவெளுத்துநாவி னிர்வற்றித்தண்ணிர்கேட்டு நினைவற்றுப்பலதுந்தேடும் வார்கட்டுமூலையாயிது வயிற்றுநீராமையாமால்.
5 நீராமை
வற்றிடாமருந்தின்மீளா வரவரக்கடினம்பண்ணிப் பற்றிடாபற்றிடாவயிற்றிற்கூர்ம வடிவெனப்பரந்துவீங்கிச் சொற்றிடாத்துயர்முட்டாகித் துளங்கிடப்புறந்தாளுதிற் செற்றிடாநெடுநாட்சென்றாற் செமித்திடுந்தீநீராமை.
உடம்புமுலர்ந்துவரண்டுமி யுதரம்வீங்கிநாவரண்டு தடங்கண்வெளுத்துப்புறந்தாளுந் தடித்துவீங்கித்தாபமுமாய் அடர்ந்தேமூசித்தொய்வுண்டாய் அடங்காதுறக்கம்வாராதேல் மடந்தாயிதுநீராமை வருத்துங்குணங்களெனலாமே.
வெப்புப்பாவை
அப்புங்காற்றுமங்குரித்து அறைபட்டீரலடைபட்டு வெப்புத்தோன்றியடர்ந்தடர்ந்து மிகுந்துவளர்ந்துமேல்வற்றும் எப்போதெவர்க்கும்வராது இடையேயொருவற்குண்டாகும் தப்பார்வெப்புப்பாவையிது தடித்தேவயிறும்பொருமிடுமே.
கெற்பநீராமை
பொற்புறக்கெற்பமாகிப் பொருந்தியநாலாந்திங்கள் அற்பநீர்மறிப்பதாகி யடசிநீரெரிந்துகுத்தி நிற்பநீர்முட்டதாகிப் பொசிந்துநீர்நெடுகநிற்கும் கெற்பநிரானிைலை செய்குணங்கிளத்தினாரே.
196

செகராசசேகர வைத்தியம்
நிதம்பநீராமை
மந்தித்துப்பொருமிக்குத்தி மலஞ்சலமடைத்துமுட்டாய் அந்தித்துஅவலமாகி யதிகமாய்மயக்கிவேர்த்து உந்திக்கீழ்வயிறும்வீங்கி யுரத்திடுமோங்காளிக்கும் நிந்திக்குங்கொலையுஞ்செய்யும் நிதம்பநீராமையாமே.
எகுத்து
உற்றொருமுலையின்கீழே யுன்னியற்குலநால்விட்டு மற்றொருபழுவூடேறி மருவுறக்கணத்துவிம்மி பற்றறவலித்துப்பின்னைப் பையவுண்கெடுத்துச்சேரில் முற்றுமேலிதனையுற்று மூண்டெகுத்தென்றுசொல்லே.
இப்படிமூண்டெகுத்து இருபமுச்சொருகுமாகில் மெய்ப்படுமுயிருங்குன்றி மேனியுமெலிவுசெய்தே மைப்படும்பின்னைவந்து மரணமுமாகுமென்றே செப்புவான்முனிவரன்றே சேர்ந்திதன்செய்கைகண்ைடே.
குடகிரி
கடைக்குடலழுதுகுத்திக் கலந்துகையிடையிற்குத்தி மிடைப்படவலித்துப்பின்னை மிகவுமன்னாபிமேலே புடைத்துடலெரித்துமிண்டிப் புரண்டுடல்மறுகிநோக்கி இடைப்புறநின்றியங்கு மிதுகுடகிரியதென்னே.
குண்டலவாய்வு
கண்டிக்குமுதரந்தன்னிற் கதறிடுங்கூப்பிட்டோடும் விண்டிச்சைவிரும்பித்தின்னில் மேம்படுந்திரண்டுகற்போற் றெண்டித்துச்சிதறிப்பின்னுஞ் சிதைந்துடல்பரந்தடங்கிக் கொண்டுப்போயுடலிற்குத்துங் குண்டலவாய்வுவாமே.
உதரசல்லியங்களென்னும் வியாதிவந்துதரத்துற்றால் புதர்தருமருந்துதானும் புரிதருசாந்திதானும் பதருறுமதனால்மேலாம் பராபரன்விதித்தநூலி னதன்வழிபுண்ணியங்க ளாற்றிடில்நன்மையாமால்.
குழம்பு
குறுணிகோமூத்திரத்திற் குறித்தநேர்வாளம்பத்தைப்
புறணிபோக்கிச்சுத்தித்துப் பூர்த்தியாயரைத்துக்காய்ச்சி உறுகொதிபதத்திற்கக்கு உயர்பத்துக்கடுக்காயோடு
திறமுள்ளிஇருபான்றேடிச்சிதைத் திடித்தெடுத்துக்கொள்ளே,
கொண்டதிலிட்டுக்காய்ச்சிக் குழம்பைப்பன்னைந்துநாட்கு உண்டுவாஒரேநேரம் ஒருபாக்கினளவதாக அண்டியமகோதரங்கள் அடுத்திடுபிறநீர்க்கோவை பண்டுறுகதிரைக்கண்ட பனியெனப்பறந்துபோமே.
197
2

Page 110
செகராசசேகர வைத்தியம்
குமரிபற்பம்
சூதநாலுசிலையிரண்டு தூய்தாங்காந்தநாலிரண்டு தீதார்கெந்தமதற்கிரட்டி சேர்கைச்சோலமதற்கிரட்டி தாதார்குழலாயிவையைந்துஞ் சமனாய்க்குமரிச்சாற்றரைத்து மீதார்புதியகலத்தில்வைத்து மிக்கவெரித்துப்பொடியாக்கே.
பொடியார்குமரிப்பற்பமதைப்புதி தாந்தேனிற்குழைத்தருந்தில் கடிதார்பீலிகைவலிகுன்மம் கழிச்சல்கிராணியுடற்பொருமல் துடியார்பாவைஎரிகுன்மம் தொடர்ந்தவிருமல்காமாலை படியாரிஞ்சிச்சாற்றருந்திற் பறந்தேயேகுங்கண்டாயே.
வேறு குமரிபற்பம்
அரத்தைமுக்கழஞ்சு கெந்தமைங்கழஞ்சு
அரைபொடியதின்கழஞ்சுடனே உரைத்திடுங்காந்த மெண்கழஞ்சதனோ டுற்றிடுமிதரநாற்கழஞ்சாய் விரைத்திடுகுமரிச் சாற்றினிலிதனை
விருப்புடன்சாமமொன்றரைத்தே இரைத்திடும்புதிய கலத்தினிலடக்கி
யெடுத்தொருகலத்தினால்மூடே.
மூடியேவெயிலில் வைத்துவைத்தெடுத்து
மூன்றுநாளிப்படியரைத்தே கூடியமிளகு சுக்கசமோதங்
குலவிந்துதிற்பலியிருசீர் நாடியவுலுவா மரமதின்மஞ்சள்
நற்பெருங்காயமோர்நான்காய் தேடிடுயயிஞ்சிச் சாற்றினிலரைத்துச்
சேர்த்துமுன்மருந்துடனரையே.
அரைத்திடுங்குமரிப் பற்கமாமிதனை
அருந்தேனில்வெருகடிகொடுக்கில் உரைத்திடும்வயிற்று வலிபெருவயிறு
உதரநோய்பீலிகையெகுத்து இரைத்திடும்பொருமல் வலித்திடுங்குன்ம
மீரலினடைப்புடன்குத்துக் கரைத்திடும்பசாசு பேய்மயக்குடனே கதிர்கண்டபனியெனப்போமே.
காந்தசூரணம்
காந்தமரைபொடிவகைக்கிரெண்கழஞ்சு
கற்றாளமடலகட்டிற்பொதிந்துமீள ஆய்ந்தபுதுக்கோற்கலத்திலடக்கிமூடி
அதிகமாயெரித்ததனைப்பற்பமாக்கி ஏய்ந்தபுதுத்தேனதனிலிருபோதுண்டு
இதமானபத்தியமாயிருப்பிராகில் சாய்ந்தகுன்மம்பாண்டுவருஞ்சோகைவிக்கம்
ஈமியாமைவெளுப்பிருமல்தணிந்துபோமே.
198

செகராசசேகர வைத்தியம்
காந்தபற்பம்
இரதமதுகழஞ்சதற்கிரட்டிகாந்தம்
ஏதிலரபொடிபலங்கையானின்சாற்றில் சுரதமறுகெந்தகங்காற்பங்குசேர்த்துத்
துலங்கியமுத்தினமரைத்துவெயிலில்வைத்துச் சரதமறப்பேன்பிடிதேனதிலருந்தித்
தகுநெய்பால்கூட்டுகாமாலைவீக்கம் பொருமலொடுநீராமைவெப்புப்பாவை
போயகலுமெனமுனிவர்புகன்றிட்டாரே.
பேய்க்கொம்மட்டிக்குழம்பு
தேடியகொம்மட்டிக்காயிலைவெள்ளையுள்ளி
சிறந்தசிற்றாமணக்கெண்ணெய்தானுமரைநாழி நீடியதிற்பலியெட்டுக்கழஞ்சுபெருங்காயம்
நிறுத்திரண்டுகழஞ்சிலுப்பையரைப்பிரண்டுகழஞ்சு கூடியரைத்துக்கரைத்துக்குழம்பாகக்காயச்சிக்
குணமாகப்பாக்களவுட்கொண்டுவருவீரேல் வாடியநீராமைவெப்புப்பாவையட்டகுண்மம்
வாதசிலேட்டுமகுன்மம்மகோதரமும்போமே.
வேறு
போவதிதுவொன்றல்லவட்டபீலிகையும்
பொருமலொடுநீர்க்கோவைஎகுத்துத்தானும் நாவரட்சியெப்பிளைப்புபுவாதகாசம்
நடக்கவொண்ணாவிளைப்பிருமலுடன்வெளுப்பு தாவுகொடைபுரிந்ததிகபொசிப்புநல்கிச்
சாற்றுமுப்புப்புளிமறந்தோர்மண்டலங்கொள் மேவுகதிரவனெதிர்த்தபணியைப்பேலே
விட்டகலுமெனமுனிவர்விளம்பினாரே.
புளியிலைக்குழம்பு
அரபொடிகிட்டங்காந்த மருமிளகுடன்வெள்ளுள்ளி விரைகடுகுடன்கடுக்காய் விளம்பொருநிறையாய்வாங்கி யுரைபுளியிலையிற்காடி யுவந்துவிட்டவித்தரைத்து கரைதருமிதைப்பிளிந்து கடைச்சரக்கினையரைத்தே.
வேறு
அரைத்திடுமதையந்நீரிற்கரைத்து
அதனுடனாநெய்விட்டளாவி கரைத்ததைப்புளிபொற்காய்ச்சியேயிறக்கிக்
கையினால்வெருகடியருந்தி உரைத்திடுமுருங்கையிலையுள்ளியரைத்து
உவப்புடன்சீனியுமேற்கி லிரைத்திடுஞ்சுரத்தின்மகோதரம்வீக்க
மெகுத்துநீராமைபற்றுமே.
199
13

Page 111
செகராசசேகர வைத்தியம்
உட்குத்துப் பிறவீச்சுக் குணமும் மருந்தும்
அடுத்தடுத்தெதிர்த்துக்குத்தி யதிகமாய்விறைத்துவேர்த்துப் படுத்தநாத்தடக்கிப்பேசிப் பல்லதுகிட்டிநெஞ்சு மடுக்கவேகட்டிச்சீறி யங்கமும்பிறகேவிசிற் றிடுக்கிடப்பிறவீச்சென்று செப்பலாஞ்செப்பலாமே.
குத்துத்தொடுத்துமூன்றாம்நாட் கொல்லாதிருக்கிலேழாநா ளத்தைத்தப்பிலொன்பதின்மே லறிவித்தடுத்தமருந்துசெய்யில் ஒத்தகுத்துமுரத்துரத்திட் டுள்மூச்சதுவும்மேனோக்கில் செத்தாரிவரேதின்ைனமெனச் தெளிந்தேயுரைக்கலாந்தானே.
நாடியையிறுக்கிப்பூட்டி நரும்பியேவாங்கிவேர்த்து கோடியேகுறண்டவீசிக் குளிர்ந்துடன்விறைத்துமூசி வீடியுள்ளனுங்கக்குத்தி விழிமேல்நோக்குமாகிற் கேடிதுநாட்சென்றேனுங் கிளர்ந்திடுமரணமென்றார்.
பிறவீச்சுக்கு இரததைலம்
இரதம்கெந்தம்வெள்ளுள்ளி யியல்பாந்துரிசுசேங்கொட்டை அரிதாரத்தொடுமனேசிலையு மானகருஞ்சீரொடுவெளுத்தல் சரதமறவொன்றிருகழஞ்சு சாந்தாயரைத்துத்திரிபூசி உரிவேப்பெண்ணெயினிலரைத்து உட்கொண்டுடம்பிற்பூசிடுமே.
இடவேதயிலங்காசிடைகொள் விஞ்சிச்சாறுமுலைப்பால்தே னுடனேயுள்ளுங்கொடுத்துடம்பி லுரக்கத்தடவிக்கழல்கரங்கள் பிடரிநகங்கண்ணிவையினிடப் பிறவீச்சுடனேவலிவாதம் அடைவேதீருமெனவோது மாயுள்வேதமதுதானே.
மருந்து
முசிற்றுமுட்டைபூநாகம் முந்திரிகைப்பழம்பேரீஞ்சு பசுத்தசுக்குமிளகுள்ளி பழகுஞ்சந்தம்பூசணிப்பூ முசித்தகுருந்துமுருங்கைவித்து முதிர்ந்தகலையின்கொம்பதுவும் நசுக்கிக்கொடுக்கின்முலைப்பாலில் நன்றாய்த்தீருமுட்குத்தே.
முருங்கைவேர்ச்சாறுசுக்கு முத்தற்காசுடன்முலைப்பால் நெருங்கியகாந்தமுள்ளி நிலவினிலுப்புத்திற்பல் ஒருங்கியகோட்டஞ்சந்த முடனதிற்றேனுங்கூட்டி மருங்கின்மத்தித்துப்பூசி யுணுடிடில்மாறுங்குத்தே.
மாவிலங்கமெண்ணெயுடனிதரஞ்சேர்த்து மத்தித்துஉள்ளருந்தமாறுங்குத்து தேவினுள்ளித்தைலமுடனிதரஞ்சேர்த்துத்
தின்றிடினுமன்றுவிடுமுட்குத்துத்தான் தீவிலங்குமிதரமதைக்குடோரியாடிச்
சிரத்தினில்மத்தித்திடினுந்திருங்குத்து தாவிலங்குசினகபொட்டுப்பிடிக்கிற்
றானுந்தீந்திடுமெனவேசாற்றும்வேதம்.
200

செகராசசேகர வைத்தியம்
சூடு
பிடரியின்முடிச்சின்மேலே பெருநரம்பிரண்டுஞ்சார அடைவுறுபிறைக்காலாகு மறிவுசெய்குதிக்குமேலே உடையகைமுழங்கைமேலு முற்றவுள்ளங்கால்மேலும் நடையுறுவிரற்பொருத்து நடுவிலும்முதுகிற்றாணும். 6
சுட்டுடனெருக்கம்பாலுந் துரிசுடனிதரஞ்சேர்த்து விட்டுமத்திக்கநாளும் விடுததிடுங்குத்துத்தானும் பொட்டதிலுள்ளிகூடப் பொரித்திடுமரிசிகட்டி யிட்டநீர்பருகச்சொல்லி யிசைத்திடுமாயுள்வேதம். 7
மாவிலங்கம் எண்ணெய்
கொடிவேலிமாவிலங்கைமுருங்கைகான்றை
கொடிச்சிவதையொருமரக்கால்வேரொன்றாக்கி படிமேவுஞ்சதகுப்பைமஞ்சலுள்ளி
பருத்தமரமஞ்சள்தேவதாரஞ்சுக்கு கடிமேவுபெருங்காயம்வெளுத்தலக்றாக்
காரெள்ளிலெண்ணெய்பசுப்பாலோர்கொத்துத் துடிமேவுபதத்தினிலேவடித்துக்கொண்டு
துளங்காதுள்ளருந்திவரத்தனியுங்குத்தே. 3
உட்குத்து நெஞ்சடைப்பன் ஆகியவைகளுக்கு சந்திரசூரியன்குளிகை
அரிதாரஞ்சாதிலிங்கம் அபினுடன்பச்சைநாவி கரியதோர்கராம்புதிற்பல் கடுநிறுவிஷஞ்சாதிக்காய் இருசீரஞ்சுக்குத்தான்றி இரதம்நல்மதுரங்கோட்டம் மருவசுவாசியொன்றோர் வகைகழஞ்சாகக்கொள்ளே.
கொண்டவுமத்தஞ்சாறு குலவுதைவேளைச்சாறு கண்டிடுநொச்சிச்சாறு கரிப்பான்சாறொஷ்வொன்றாலே மிண்டியொவ்வொருநாளாக விரவநால்நாளரைத்துக் குன்றியின்மணியைப்போலக் குளிகைசெய்துலர்த்திக்கொள்ளே, 2
உலர்ந்தபின்சத்தியானால் உயரிஞ்சிச்சாற்றிலீவாய் புலர்ந்தநீர்ப்பாட்டினுக்குப் புகலிளநீரிலீவாய் மலர்ந்தவுட்குத்தினுக்கு வருநிம்பநெய்யிலிவாய் கலந்தநெஞ்சடைப்பணுக்குக் கருதுசிங்கிலியின்பட்டை. 3.
பட்டையும்நெய்க்கோட்டானின் பழத்திலுமீயநன்று அட்டிசெய்சன்னியாகி யடர்பதினெட்டுந்திர ஒட்டியமிளகுசுக்கு உள்ளிநீரதனிலிவாய் முட்டும்மாந்தச்சன்னிக்கு முருங்கைப்பட்டைச்சாற்றிலியே. 4. நீரிழிவின் குணமும் மருந்தும்
நெய்யினைமிகுதிகொள்வார் நிணப்புலாலிறைச்சிதின்பார் ஐயின்ையெழுப்புமோர்பா லதிகமாயருந்திவாழ்வார்
201

Page 112
செகராசசேகர வைத்தியம்
மெய்யினிலெண்ணெய்வாரார் வெயிலிடைநடப்போர்நாளும் தையலார்போகத்தாழ்வார் தமக்குநீரிழிவுண்டாகும்.
வாத சலக்கழிச்சல்
வயிறெரியும்உடம்புவெளுத்தாளும்வற்றும் மதிமறக்கும்நவலருந்தாகமுண்டாம் எயிறுவிழுமிரவுசலந்தானேசோரும்
எழுந்துநடக்கரிதுதுணித்தேதமாகும் கயில்வெயிற்கும்பனிமழைக்குங்கடினமாகுங்
கால்வழிநீர்பெருகுமெத்தக்கவலையாகும் பெயரளிக்கும்நீரிழிவின்குணமீதென்னப்
பேசினாராயுள்மறைபேசினாரே.
ஏதமறவயிறெரியும்வேர்வையுண்டாம்
எழுந்துநடக்கரிதுகண்ணுமின்னிச்சோரும் சீதநீர்மோரிளநீர்தாகமுண்டாம்
தீன்மறக்கும்நாவுலருமுளைவுண்டாகும் சேதமுறநீர்தெளிந்துநுரையில்லாமல்
தியக்கமுறஇரவுபகல்கழிந்தாள்வற்றி வாதைமிகுங்காதடைக்குமுறக்கம்வாரா
வாதசலக்கழிலிதென்றுரைத்தாரன்றே.
இனித்திடும்எறும்பிமெநய்க்கும் இரவிளநீராமென்னக்
குனித்திடச்சலங்கழிந்தே கொதித்துநாவரண்டுதாகம் நனித்துறப்பெலனுங்குன்றி நாவுலர்ந்தயர்ந்துசோரும் பனித்திடுவாதநீர்தான் படுமுயிர்க்காலனாமே.
பித்த சலக்கழிச்சல்
சலஞ்சிவக்கும்வரஞந்தாகமுண்டாம்
சவிகேடாய்நாவரண்டுகாலுமோயுஞ் கலஞ்சுரக்கஇரவுபகல்கழிந்தாள்வற்றி
கஞ்சிமறந்தருந்தமிகுகளையுண்டாகும் நிலஞ்சுரக்கவயிறெரியும்நடுக்கமுண்டாகும்
நீண்டவிழிமஞ்சணித்துக்கிறுதியாகும் நலஞ்சுரக்கவேர்வையுண்டாம்வெதும்பும்மேனி
நலக்கபித்தசலக்கழிச்சல்நவிலுங்காலே.
சேற்பன சலக்கழிச்சல்
வேர்த்திடுங்களையுண்டாகும் வெகுசலங்கழிந்துசோர்வாம் ஆர்த்திடுந்தாகம்மிஞ்சி யனலுறவெளுக்குமேனி ஏர்த்திடுங்கண்பஞ்சாடி எழிலழிந்திடுந்தொய்வுண்டாகும் பார்த்திடுஞ்சேற்பனத்திற் பகர்சலக்கழிச்சலாமே.
வாதசேற்பனக் கழிச்சல்
வாதசேற்பனமிரண்டும் மதிப்பறப்பகைத்துத்தோன்றிச் சேதமாய்ச்சலப்பையூறிச் சிலம்பநின்றுருகிநிராய்ப்
202

செகராசசேகர வைத்தியம்
பேதமார்அவசலந்தான் பெருத்துமாங்கிஷத்தைப்பற்றி ஏதமாய்க்கழியுமாகி லியமனுக்கிடமதாமால். 6
அன்றியுந்தாகமிஞ்சி அன்னமுமொறுத்தாள்வற்றி நின்றதினிரெண்ணாழி நிறைசலங்கழிந்துசோர்ந்தே ஒன்றியவுடலைந்தோற்பை யாமெனவுறங்கியுற்றாற் கொன்றிடுமவசலந்தான் குறித்தவீராறோரெட்டில். 7
இருபதுநாழிநீர்தா னிராப்பகல்கழியுமாகில் வருவதுதாகஞ்சோர்வும் மயக்குடன்திமிர்வரட்சி பொருவதுஎரிவுதொய்வு பொறுத்திடாத்துயரந்துன்பம் தருவதுமலசலத்தின் சேற்பநீர்சடுதிகொல்லும். 8
வேறு
காலெரியும்வயிறெரியுங்கடுக்குங்காலுங்
காதடைக்கும்நாவுலருந்தாகமிஞ்சும் மேலெரியுந்தலைதிமிர்க்கும்வேர்த்துத்தொய்வாம்
வெப்புமிகுந்துழைந்துகுத்தித்திமிர்க்குமேனி நூலெரியும்சலம்வெளிறும்சோர்வுண்டாகும்
நுவலுகிலிரெண்ணாழிசலமுண்டாகும் மூலெரிவினுறுவாதசேறபனந்தான்
முடிக்குமுயிரெனவேதமொழியுமன்றே. 9 .
வேறு
மாம்பழம்பிளிந்ததென்னச் சிலேற்பனக்கழிச்சல்வந்து மேம்படுசலப்பைநின்றே வெப்பித்துக்கொதித்துமெய்யைத் தாம்பிணித்திடுநீராகத் தாகமோடிரெண்ணாழி சேம்படுசேற்பவாத நீரிவைசேர்க்குமன்றே. 10
பொருந்திடுநாபிக்கமலத்தினழல்தான் பொறியெழக்கொதித்து
மேலெல்லா மருந்திடுசலப்பையுள்ளுடலுருக மட்டதாய்ச்சலங்கழிந்திடுகில் வருந்திடுசலமெண்ணாழிநீர்கழியும் மரணமுஞ்சிறிதுநாளஞ்சின் அருந்திடும்வெகுநீரிதுவாதசேற்ப மவலமென்றறைந்திடும்வேதம்.
பிரமேகவெட்டைச் சலக்கழிச்சல்
அரிந்துசலமடிக்கடிபோம்சரீரம்வற்றும்
அன்னமொறுத்திடுமுளைந்துகடுக்குமேனி எரிந்திடுமாதுயர்மிஞ்சிவரஞம்நாவும்
இரவுசலமதிகமிஞ்சிச்சோர்வுண்டாகும் பரிந்துசிலநாட்சென்றுபற்றும்பாடு
படுத்துமிதுபகற்போகந்தன்னாலுண்டாம் பிரிந்துசியல்மோர்மாவாய்ச்சல்த்திலுண்டாம்
பிரமேகவெட்டைசலக்கழிச்சலாமே. - 2
வாதவெட்டைச் சலக்கழிச்சல் உளைந்துநாவரண்டுகுத்தி ஒறுத்தன்னந்தாகமிஞ்சி விளைந்திடுஞ்சலமும்வெப்பும் வெட்டையுங்கழிந்துநாளும்
203

Page 113
செகராசசேகர வைத்தியம்
களைந்திடுஞ்சரீரந்தன்னைக் கதித்திடுசலமுமிஞ்சி அளைந்திடும்வாதவெட்டைச் சலமிதுஅவலந்தானே. 13
இரத்தசலக்கழிச்சல்
உருத்தேவெதும்பித்தாகமுண்டாய் உவாந்திமிகுந்துநாவரஞம் பெருத்தேயிரத்தச்சலக்கலழிச்சல் பெலத்தேகடுத்தங்கடிக்கடிபோம் கருத்தோடன்னமிறங்காது காலுங்கடுத்தேசவிகேடாம் வருத்தாதிரத்தசலக்கழிச்சல்வள மாயறிந்துமருந்துசெய்யே. 4.
இரத்தமாகச்சலங்கழிந்து இதமாமிரத்தமிகுந்திடுகில் உரத்தேமயக்கித்தொய்விளைப்பாயுடனேவேர்த்துக்களையுண்டாம் கருத்துக்கெடுத்தோங்காளமுறுங் கஞ்சிதண்ணிறங்காது பெருத்தஇரத்தச்சலக்கழிச்சல் பிழைப்பதில்லையுரைத்தாரே. 15
வெப்புச் சலக்கழிச்சல்
அப்பின்மேற்றாகமுண்டாயனல்போற்காயும்
அதிகமாய்வெளுத்துடலஞ்சோர்வுண்டாகும் துப்பெனவேசலஞ்சிவந்துகாலுமோயுந் ,
துயரமுடன்கிறுகிறுத்துக்கண்ணும்மின்னி செப்பிலிச்சலமிரவிற்கடினமாகுந்
தீன்மறக்குஞ்சலம்புனலால்மணமேவிசும் வெப்பின்மேல்வந்தசலக்கழிச்சலென்றே
விளம்பினாராயுள்மறைவிளம்பினாரே. 6
பிளவைக்கழிச்சல்
பொற்புறுமேனிவாடிப் பொருமியேபோகமற்றுச் சொற்பெறச்சலங்கழிந்தே துயருடனதிகமாகி கற்பெறும்பிளவைகட்டிக் கடினமாயுவாதிசெய்யும் நிற்புறும்பிளவைக்கட்டு நிலைத்தநீரிழிவதாமே. 17
நீரிழிவுண்டாகும்வகை
கட்டளைஊணில்மிஞ்சில் குறைந்திடில்காலந்தப்பில் விட்டிடுநெய்யும்பாலும் இரசமும்புளிப்புமிஞ்சில் மட்டறுகுழலினார்தன் மயக்கினிலுறுதிசெய்யில் நெட்டுறுகோடைதட்டில் நீரிழிவாகுமென்னே. 18
சலசோதனை
நீரேபேருத்துக்கழிந்துவரின் நீரைநியோர்கலத்தேந்தி மோரெயெனவுந்தயிரெனவும் முற்றிச்சாய்த்தநெய்யெனவும் பாரேநெல்லின்கழுநீர்போற் பகர்மாவதுபோலுறைந்திருக்கில் தீராக்கட்டசாத்தியத்தின் சேற்பசலங்கண்டறிந்துகொள்ளே. 19
சலத்தின்மேற்றிலத்திலெண்ணெய்தனித்துவிட்டாற் றாழ்ந்துமின்னிப்பச்சிலைபோற்றழம்புமாகில்
பெலத்தசலக்கழிச்சலிதுதீராதாகும்
பேதமின்றிமிதந்திருக்கிற்பிழைப்புண்டாகும்
204

செகராசசேகர வைத்தியம்
நலத்தசேற்பனவாதகழிச்சலாகில்
நாள்மூன்றிலெட்டதனில்நாசமாக்கும்
சொலத்தருநீரிழிவுபித்தசேற்பமாகில்
சொல்லில்மதியிரண்டில்மும்மதியாண்டொன்றே. 20
அன்றுகலநாலுகொத்ததியிரெட்டாய்
அதிலேற்றங்கழிந்துசலத்திமொய்த்திட்டால் சென்றதனைக்காய்ச்சில்மேற்பாணியாகிற்
றிரரிதுசெறிந்துபார்பொரிந்துமாவாய் நின்றிடுமேற்றிருமதுகுளம்பால்நெய்யால்
நிறைந்தகயர்க்குடிநீரால்எள்ளிலெண்ணெய் நன்றிரவுபகலருந்தத்தீருமென்றே
நவின்றனர்களாயுள்மறைபயின்றோர்தானே. 21
நோதலர்நீரைப்பார்க்கில் நுண்மைநீர்சிவந்திருக்கில் வாதமாமஞ்சலாகில் வந்திடும்பித்தமென்பர் போதவேவெள்ளையாகில் பொருந்தியசேட்டுமந்தான் சோதனைவேதநூலால் உரைத்தனர்சுரத்தின்கூறு. 22
பாராய்நீரைப்பாண்டத்தேற்றிப் பாங்காயதன்மேல்நல்லெண்ணெய் சீராயொருதுளிவிட்டிடுகிற் சிதறியோடிப்போகாதே நேராய்நின்றுவட்டம்போல் நிலைத்துச்சட்டிவாயெங்கும் சேரநெருங்கிநிற்குமேல் தீருமிதற்குமருந்செய்யே. 23
செய்யவகையிதுதான்கேளிர் சிறந்தநீரிலெண்ணெய்விட்டால் பய்யக்கீழேதாழ்ந்திடினும் பதறியோடிச்சிதறிடினும் மெய்யாய்நீருமெண்ணெயுடன் மிகவேகூடிக்கலந்திடினும் உய்யவகையின்றித்தீரா துத்தமமதமமத்திபமே. 24 குடிநீர்
அத்தியுடனேநாவல்கடலிறாஞ்சி
யதனிரட்டிகொன்றையாவரையின்பட்டை இத்தன்னயுமிராவடுப்பிலுறவைத்து
இதமாகவசனஞ்செய்திருக்கும்போது மைத்தவழுங்குழல்மடவாய்சற்றுச்சற்றே
வடித்துவார்த்தேகுடித்துவருவீராகில் கொத்தவிழும்பரமனார்விதித்தநாளிற்
கொல்வதன்றிநிரிழிவுகொல்லாதென்னே. 25
வேறு
துடரிவிடத்தலுடனாவல் தூயமுசுட்டைகழற்கொழுந்து அடருமாவரந்துளிரும் அலர்பூவல்லிசமன்கொண்டு தடமென்முலையாய்நன்கரைத்துத் தக்கனருமைத்தயிரிலுண்ணக் கிடைநீரிழிவாலணுகிவந்த கிணற்றுாற்றதுவுமடைபடுமே. 26
ஆவரைவேரைப்பிடுங்கி யதனைச்சீவியரைத்துநன்றாய் காவிரவுமெலுமிச்சங் காயளவுமருந்தெடுத்து தேவிரவுமாமணக்க மெண்ணெய்தனிற்றின்றீரால் பூவிரவுசலக்கழிச்சல் நீரிழிவுபொறுத்திடுமே. 27
205

Page 114
செகராசசேகர வைத்தியம்
ஆவரந்துளிர்பூவல்லி அதின்விரைபட்டைவேரும் காவினிற்புளியங்கொட்டை கயர்ப்புறுதேற்றாங்கொட்டை தாவியேயரைத்தொன்றாக்கித் தருபசுவெண்ணெய்கூட்டி மேவியேயருந்துவிரேல் விடுஞ்சலக்கழிச்சலாமே.
சாதிக்காய்கராம்புவசுவாசிகாந்தம்
தகுகைப்புஅசமோதங்கழஞ்சோரொன்று பாதியுடன்சாதிலிங்கமரைக்கழஞ்சு
பகரக்கராநாகமதனிற்பாதி சோதிவிடுமத்தவிரைகாலுங்கூட்டித்
தூய்தாகவிளம்பதத்தில்வறுத்துத்தூள்செய் ஆதியருள்தேனதனிலருந்துவீரேல்
அகன்றுவிடும்நீரிழிவுஅனைத்துந்தானே.
முற்றியநாவற்பட்டை முறித்திடித்தரித்துமாவாய் வற்றிடாக்குளத்துநீரும் வகையெட்டுக்கொத்தாய்விட்டு பற்றியேயவித்திட்டுறிப் பதத்தினிற்பிளிந்தநீரில் உற்றிடுகாந்தம்பத்துக் கழஞ்சரைபொடியோர்பத்தே.
பத்திருகழஞ்சுமொன்றாய்ப் பட்டைநீர்தனிலரைத்து ஒத்ததோர்குழம்பாய்க்காய்ச்சி யுகந்தபாக்களவோர்நேரஞ் சுத்தமாமெருமைதன்னிற் தோற்றிடுந்தயிரிற்கொள்ளில் மெத்துநீர்க்கழிச்சலெல்லாம் விட்டகன்றோடுமென்றார்.
வேறு
கடுக்காய்நெல்லியதிமதுரம் கடலிறாஞ்சிஆவிரைவேர் மிடுக்காஞ்சுக்குநாவலத்தி மிக்கருவேல்செங்கழுநீர் துடுக்காங்கைப்புக்களிப்பாக்குத் தூள்சற்கரையாம்பற்கிழங்கு அடுக்காம்வெள்ளைக்குன்றுமணி யதுவும்மலாக்காச்சந்தனமே.
சந்தமுறுபேரீஞ்சுகனி தனிமுந்திரிகைசார்ந்தகனி முந்தவிவையொன்றொருநிறையாய் முடாவிலவித்துக்குடித்துவரில் தொந்தப்பெருநீர்ச்சலமிரத்தந் தொடருங்கழிச்சல்மேகவெட்டை வந்ததாகம்நாவரட்சி மாறிச்சலமும்மாறிடுமே.
குளிகை
அத்திகருவேல்நாவல்கொன்றை யாவிரைஐந்துசமூலமுடன் சுத்தக்கைப்புங்கல்மதமும் தூயதேற்றாவிரைகாந்தம்
மெத்துபுளியங்கொட்டைகயர் மிடுக்காஞ்சாய்வேர்பூலாவேர் ஒத்தஈச்சம்பாளைதென்னம் பாளைவிரியாதுவந்துகொள்ளே.
கொள்ளுமுருக்கினரபொடியுங் குலவுமெள்ளின்பிண்ணாக்கும் துள்ளுங்கடல்றாஞ்சிப்பட்டை தூயப்புருவஞ்சாத்திரவேதி உள்ளபடியொன்றொருநிறையா யுடனேயிடித்துமாவாக்கி மெள்ளநாவற்பட்டையின்ர் விட்டேகுளைத்திட்டரைத்திடுமே.
அரைத்தகுளிகைதுரதளங்கா யளவாயுருட்டியுலர்த்தியதை உரைத்தசலநீர்ப்பெருக்கறிந்து உடனேயெருமைத்தயிரதனில்
206
28
29
30
3.
32
33
34
35

செகராசசேகர வைத்தியம்
கரைத்தமோரிற்குளிகையுண்ணிற் கடியசலநீரிவைவற்றி விரைத்ததாகநாவரட்சி விட்டேயகலும்வற்றிடுமே. 36
தூள்
ஆவிரையஞ்சுதேடி யதையுவந்திடித்துமாவாய்த் தூவியவெள்ளைச்சீலை துய்தததையரித்துநன்றாய் மேவிடுமெருமைப்பாலை விட்டறக்காய்ச்சித்தோய்த்த தாவிடுந்தயிரிற்றின்னச் சலமதின்கழிச்சல்போமே. 37
ஆவிரைத்துளிரும்பூவு மமர்ந்தபிணணாக்குங்கூட்டி காவில்நல்லெண்ணெய்விட்டுக் கறிகண்டித்தின்னநன்றாம் மேவியவெண்ணெய்பிண்ைணாக் கிவைதினமருந்தநன்றாம் தாவிநற்குருவைநெல்லிற் பிட்டுடன்தயிரும்நன்றாம். 38
குளத்தினிற்றண்ணிர்காய்ச்சிக் குளித்திடகுடிக்கநன்றாம் எழத்தகுசரீரம்வற்றி யிடர்தரத்தாகமுண்டாய் விழத்தகுசலமும்மிஞ்சி விளம்புநாவரண்டுதென்றாற் − களத்தகுகாலனென்றே களறிடுமாயுள்வேதம். 39
முற்றியபொன்ஆவரையின்வேருநாழி
முதிர்ந்தஎள்ளின்பருப்புமொருநாழிகூட்டி பற்றியநெற்கறுப்பினிற்பச்சரிசிநாழி
பதறாமலிடித்தரித்துப்பதனம்பண்ணி சொற்றவெருகடிதேன்நல்லெண்ணெய்கூட்டிச்
சோராமலருந்திவரிற்சலக்கழிச்சல் மற்றுநீரிழிவுவெட்டைச்சலங்களெல்லாம்
மாறுமிதுசெய்துகைகண்டதாமே. 40
ஆவிரைவேர்ப்பட்டைத்துள்தானும்நாழி
அதினழவுநல்லெண்ணெய்தானுங்கூட்டி மேவியரைத்தருந்திவரிற்சலக்கழிச்சல்
விளம்புநீரிழிவுபெரும்பாட்டினோடு தாவுரத்தசூலையகன்றோடுமீது
தப்பாதுகைகண்டமருந்திந்நோய்க்குத் தேவிலங்குமாயுள்மறைசெப்புமுண்மை
செகத்தினியிம்மருந்தைச்செய்துபாரே. 41
நீரிழிவுக்கு வங்கசெந்தூரம்
வங்கத்தைச்சட்டிதனிலேற்றிப்பின்னை
வளர்குமரிவேர்நறுக்கியதனிற்கூட்டி துங்களரிமேலேற்றினரிக்கப்பற்பம்
தோற்றியபின்மிளகுகருவேலம்பட்டை அங்கதனிலிட்டுநாயுருவியாலே
யதைவறுக்கச்செந்தூரமாகுமேகம் பொங்கிவருஞ்சலமனைத்துந்தவிர்க்கும்நோயும்
யோக்குமனுபானமதுபொறுத்துச்செய்யே. 42
207

Page 115
செகராசசேகர வைத்தியம்
வேறு
வங்கத்தைக்கள்ளிப்பாலில் வரிசையாயுருக்கிச்சாய்த்துப் பொங்குற்றபுளியங்கொட்டைத் தோலதைப்பொடியாக்கித் தங்கிட்டுமேலுமிட்டுச் சட்டியினாலுசாமம் செங்கற்போலெரிக்கநல்ல செந்தூரமாகுந்தானே. 43
செந்தூரந்தனையெடுத்துத் திரிபலைசுக்குத்திற்பல் சந்தமாமிளகோடேலம் தகுவகவாசிகூட்டி சிந்தாமலிடித்தரைத்த தூளில்பேன்பிடிசெந்தூரம் பிந்தாமல்வைத்தருந்திற் பெலத்தநீரிழிவுபோமே. 44
பிறமெகநீரிழிவுக்கு வெட்டுமாறன்தூள்
ஏலமயினதிவிடையஞ்சாத்ரவேதி
இருசீரந்திற்பலியோடுசிக்காந்தம் சாலவரைபொடிநெல்லிமுள்ளியோமம்
சாம்ரானிசாதிக்காய்சடைக்கஞ்சாவும் கோலவசுவாசிமதுமத்தங்கொட்டை
கூறுகராம்போரொன்றுகழஞ்செடுத்துக் கூலமோடிடித்தரித்துவென்னிர்தன்னிற்
கொடுத்திடவேதீருநோய்கூறுக்கேளே. 45
வெண்பா
கேட்டாற்கை காலெரிவு கிளர்நீ ரிழிவுமா றாட்டமேல் காலுளைவு மாறிடுமே - தீட்டிடுகில் திட்டமுற வாயூறல் தீரும் பிறமேக வெட்டுமா றன்தூளை வேண்டு. 46
முதுகுபிளவையின் குணமும் மருந்தும்
ஆயுறுவேதமுன்னோர் அறிந்ததின்படியேசொன்ன நோயுறுபிளவைதன்னை நொய்தினிற்றீர்க்கவேண்டில் வாய்மையாய்மருந்துகாரம் மற்றுளபரிகாரங்கள் தூய்மையாய்த்தெளிந்துகண்டு தொகுத்துறுமருந்துசெய்யே.
பெரியபிளவைமுதுகுதன்னிற் பெருக்கப்பணைக்கில்நடுமுதுகில் அருமையதுவும்மாறாது அட்ங்காவுழலையனலுமுண்டாம் உரியபொன்னாவிரையல்லி யுலர்த்திப்புன்ன்ைக்காயளவு அரியஇளநீர்தனிற்கரைத்து அருந்தக்கெடுமல்வுழலையுமே.
முதுகிடைமைதானத்தில் முள்ளந்தண்டதிற்பற்றிப் பதுமராகம்போற்பாரப் பிளவையும்பணைத்தல்கண்டால் மதியுளகருவியாலும் மற்றுளகருவியாலும் விதிமுறைவழியைத்தப்பில் மீள்வதுமரிமைவேண்டாம்.
208

செகராசசேகர வைத்தியம்
வெப்புடன்குத்துமூச்சு விடாதவுள்ளுழலைசோபம் தப்பறுநாவரட்சி தறுகிடுஞ்சலத்தின்வாதை முப்புரதகனம்போன்று முறைமையாய்வந்துதோற்றும் இப்படிக்குணங்களெல்லா மிறப்பதற்கிசைந்ததாமே.
மார்பினிலிரல்தன்னில் வயிற்றினிற்கண்னம்பக்கம் பேர்பெறுமுச்சிபேரும் பிடரியில்முதுகுதோளில் போர்பெறுவிரலிற்றோன்றும் பிளவைகளெல்லாங்கொல்லும் நேர்பெறுகாரணங்கள் நிகழ்த்திடக்கேளுமானே.
இவ்வகைப்பிளவைக்கெல்லா மிணங்கிடுகருவிகாரம் அவ்வகைதப்பில்மோச மடுப்பதுந்திடனேயென்றார் முதுகுப்புறத்திலுறைபோல முள்ளந்தண்டுதனைத்தப்பில் அதுவும்பலகண்ணாகாது ஆனாற்பக்கப்பிளவையிதே
மார்பினிலிரல்தன்னில் வயிற்றினிற்றோன்றுமாகில் பேர்பெறுசிவப்புத்தாழ்வும் பெருத்திடுபிளமைக்காமே உச்சியிற்பிடரிகன்ன முயர்பெறுந்தோளில்மிக்க மிச்சமாம்விரலிற்றோன்றில் வெப்புடன்இருமல்கூதல்,
அத்தனைகுளிர்மிகுந்து அவிட்டுடற்கழிச்சல்சத்தி நித்திரைஒறுத்தல்குத்து நெகிழ்வதற்கரிமைதானே.
மருந்து
இவ்வகைப்பிளவைக்கெல்லா மிணங்கிடுசூதமுதல் வெம்மைசேர்கருவிகாரம் விடுவதுபுத்தியாமே
காரமேதுரிசுத்தம் காட்டுவெண்பாஷாணத்தோ டேரரிதாரந்தானு மிணங்கிடநிறுத்துக்கூட்டே கூட்டியேயெருக்கம்பாலிற் குறித்திடுமிடத்திற்போடே போட்டதோர்மூன்றுநாளிற் பொருந்தியதயிருஞ்சோறும் கொடுத்திடுவெப்புத்திரக் குழப்பிமாவுடனேகாடி அடுத்ததையப்புண்மீதி லணைவுடன்கட்டுமென்றார்.
வேயாதிருக்கிற்பாஷாணம் வேண்டுதுரிசுகாரமுடன் ஓயாதிருக்கணண்ணெயிலே யுரைத்துத்தடவிச்சீலையிலே காய்போலிருக்குங்கட்டதனிற் கணக்கமுடிக்கட்டிடுகில் போயேவிடுந்திராப்பிளவை புவியோரறியச்சொன்னோமே.
எண்ணெய்
செப்பியபுண்ணுக்கெண்ணெய் சிறக்கவேயுரைக்கக்கேளிர் வெப்பறாவரையின்வேரும் மிகுத்தநீர்ப்பூல்வேம்பாடல்
தப்பறுதுடரிவேரும் சாதிக்காய்கராம்புஞ்சேர்த்து ஒப்புறுமெண்ணெயிட்டா லொடுவோடுமென்றார்முன்னோர்.
★ = ★。大
209

Page 116
பித்தத்தின் குணமும் மருந்தும்
பித்தம் நாற்பத்திரண்டின் குணமும மருநதும
1. ஆவேசபித்தம்
சடமும்வெதும்புந்தாகமிஞ்சுஞ் சளியோடிளைப்புமழுற்சியுமாம் திடமாய்வாயிற்புளிப்புறைப்புச் சேரும்மலமுமஞ்சணிக்கும் மடமேயாகிமொழிபேசும் வாக்குக்குழறுங்கூத்தாடும் அடமேசெய்தங்கெழுந்திருக்கும் மாவெசப்பித்தக்குணமே.
ஆவேசபித்தத்திற்கு மருந்து
குணமாம்வில்வம்முல்லையின்வேர் குலவுமேலந்திற்பல்சுக்கு மணமார்கனுவாவாய்விளங்கம் மதுரங்கோட்டஞ்சந்தனமும் துணையாங்கொவ்வையிலைச்சாற்றால் துகளவரைத்தெள்ளெண்
ணெயிட்டு அணைவாய்க்காய்ச்சித்தலையில்வைத்தால் ஆவெசபித்தமற்றிடுமே.
2. ஆமிலபித்தம்
அங்கங்கருகும்விக்கலுறும் ஆவேசம்போற்றலையசைக்கும் தங்குமுண்வுண்டிடிலொருநாட் டரித்துவாந்திசெயும்வாயும் பொங்கும்புளிப்புக்கசப்பாகும் புகலிற்கைகாலசதியுண்டாம் பங்கவயிறுப்பிசமாகும் பகராமிலமாம்பித்தமிதே.
ஆமிலபித்தத்திற்கு மருந்து
சதிசெய்யமிலபித்தமுறில் சம்பீர்ப்புளியில்மிளகுதிற்பல் புதிதாம்மதுரமேலநெல்லுப் பொரிவில்வம்வேர்மான்கொம்பு கெதியாயரைத்துமுலைப்பாலுங் கிளர்சர்க்கரையுஞ்சேர்த்தெரித்து மதியாய்க்குழம்புசெய்தருந்தில் மாறுமென்னவகுத்தனரே.
3. உன்மத்தபித்தம்
மேனியுமிடுக்குமுண்டாம் மிகுந்திடுந்தீபனந்தான் ஏனையோருடன்பேசாதே யிருந்திடுமூமர்போல மானமாயுறக்கம்வாரா வாயினிர்வடிந்துநிற்கும் ஊனமாய்த்தலைகனக்கு முன்மத்தபித்தமாமே.
உண்மத்தபித்தத்திற்கு மருந்து மதுரம்நெல்லிப்பருப்பு மரமஞ்சளொடுமஞ்சிட்டி புதியசீரகமும்பச்சைப் பூரந்திற்பலியின்மூலம் வதிதிரிகடுகுசந்தம் வகைசமனாய்த்துாள்செய்து உதையத்துச்சீனியிற்கொள் ஞன்மத்தபித்தம்போமே.
4 தபனபித்தம்
மதுவருந்தினோன்போலமறதியுண்டாம்
மஞ்சணிக்கும்நாவடியினரம்புதானும்
210

பித்தத்தின் குணமும் மருந்தும்
எதுகேட்டாலும்பேசாப்பிரேதம்போல
விருக்குமடிக்கடிதாகமேற்றமாகும்
பதுமைபோற்சாதமிகவுண்டபின்பு
பகராமல்மவுனமுறும்பிரேதம்போல
விதனமுறச்சடந்துடிக்குமிக்குணங்கள்
மேவினால்தபனபித்தமென்னலாமே.
தபனபித்தத்திற்கு மருந்து
நெற்பொரிபாசிப்பயறுவில்வம்முல்லை
நெல்லிமுள்ளிவேருடனேசீந்திற்றண்டு பற்படகமதிமதுரமேலங்கோட்டம்
பசுவின்பால்கழுதைப்பாலிளநீர்வார்த்து விற்பனமாயரைத்தெள்ளினெண்ணெய்தன்னில் விட்டெரித்துமெழுகுபதந்தனில்வடித்துக் கற்பனைபோலுள்ளருந்திச்சிரம்பொருத்திற்
காணாமற்றவனபித்தங்கடிதிற்போமே.
5 வாதபித்தம்
பேதமுறவேவிழியிருளும் பின்னுமிரைச்சல்புகைச்சலுமாம் போதக்கண்மின்னிச்சுழலும் பொங்கிக்கண்ணிர்ததும்பிநிற்குஞ் சேதமயக்கம்வேர்வைசத்தி சேருமன்னம்வேண்டாது வாதபித்தக்குணமிதென்ன வகுத்தாராயுள்மறையோரே.
வாதபித்தத்திற்கு மருந்து
சீந்தில்கோவைத்தண்டுசிற்றாமுட்டி
செந்தொட்டிமுல்லைவில்வம்சுக்கினோடு சாந்தமுறுசிறுதேக்குக்கடுகுரோணி
சந்தனம்கோட்டம்மிளகுசாதிக்காயும் போந்தசிறுநாகம்பூச்சிற்றரத்தை
பொடித்திஞ்சிச்சாற்றினாலரைத்தெடுத்து வாய்ந்தபசுநெய்யிலிட்டுவடித்தருந்தில்
வாதபித்தமகலுமெனவழுத்தினாரே.
6 வன்னிபித்தம்
கடுமனல்கபாலத்தேறிக் கருகியேயுடல்வெளுத்துத் தடமுறுவயிறுளைந்து சார்ந்தசியுதிரம்வீழ்ந்து இடமுறுமசனஞ்செல்லா தேற்றநாப்புளித்தழன்று மடமுறமயக்கமாகில் வன்னிபித்தந்தானென்னே.
வன்னிபித்தத்திற்கு மருந்து
நெல்லிக்காய்தேசிக்காய்ச்சாறுநாழி
நிறைபசுவின்பால்நாழிநறுநெய்நாழி துல்லபஞ்சேர்முந்திரிபேரீஞ்சின்வற்றல்
தூயவதிமதுரம்வாலுழுவையேலம்
211

Page 117
பித்தத்தின் குணமும் மருந்தும்
நல்லதொருசிரகமுமாஞ்சில்சந்த
நன்னாரிவெட்டிவேர்மிளகுசுக்கு
வல்லமஞ்சிட்டிவகைகழஞ்சாயிட்டு
வடித்துண்ணவன்னிபித்தம்மாறுமென்னே.
7 சேற்பனபித்தம்
உடம்புவெளுத்துநோவுண்டாய் ஒழியாக்கோபமுடன்மயங்கித் தடங்கொளறிவுகேடாகித் தழுவுவிழிகள்பசுமையுற்று அடங்காப்பசியாய்ச்சிரங்கனத்து அங்கங்குளிர்ந்துதும்மலுண்டாம் திடங்கொளிந்தக்குணங்கண்டாற் சேற்பபித்தமெனச்செப்பே.
சேற்பபித்தத்திற்கு மருந்து சீரகம்நெல்லிவற்றல் செண்பகப்பூச்செஞ்சந்தம் ஆரதிமதுரந்தேற்றா அருங்குன்றிமணியின்மூலம்
வாரணிமருதம்பட்டை வளர்ந்திடுசிந்திற்றண்டு சூரணஞ்செய்துட்கொள்ளிற் தொடர்சேற்பபித்தம்போமே.
8 சுரோணிதபித்தம்
உதிரம்வெதும்பித்தேகமெங்கும் ஓயாக்குடைச்சலுண்டாகி அதிரச்சந்துந்தலையும்நோ வாகித்தாகமதிகரித்து முதிரும்வாந்திகோழையுண்டாய் முட்போலமேனிIகக்குத்திப் பிதிரிலுள்ளஞ்சுரோனிதமாம் பித்தமென்றுபிரித்தறியே.
சுரோணிதபித்தத்திற்கு மருந்து
ஆவரைவேரிற்பட்டை அருமிலாமிச்சுக்கோரை மேவிடுமுசுமுசுக்கை மிக்கதோர்பொன்னாங்காணி தாவியமதுரங்கோட்டஞ் சடாமாஞ்சில்சந்தந்தேனிற் தூவுசூரணம்விட்டுண்ணிற் சுரோணிதபித்தம்போமே.
9 விகாரபித்தம்
கண்ணுஞ்சிவந்துதுயிலொழிந்து கலக்கமுண்டாய்க்கசக்கும்வாய் எண்ணமழிந்துபலபேசும் ஏற்றவசனமுண்ணாது பண்ணும்வாந்திவாயூறும் பரவும்மயக்கமரோசிகமாம் வெண்மைநிறமுண்டாம்மேனி விகாரபித்தக்குணமிதுவே.
விகாரபித்தத்திற்கு மருந்து
ஆவரைகீழ்காய்நெல்லிசிற்றாமுட்டி
அருநெல்லியிலவுவேலிப்பருத்தி மேவுமோரிதழ்க்கஞ்சமொடுநன்னாரி
விலாமிச்சுநரிப்பயற்றின்வேரோரொன்று தாவுமிருபலங்கடுக்காய்தேவதாரஞ்
சடாமாஞ்சில்சந்தனமேலம்வகைக்குச் சீவியரைப்பலஞ்சீரஞ்சரிபங்காகுஞ்
சீனிபலஞ்சேர்த்துச்சூரணமேசெய்யே
212

பித்தத்தின் குணமும் மருந்தும்
செய்தருந்தில்விகாரபித்தந்தெறிகெட்டோடும்
சித்தத்தின்பிரமையதுதிகைப்புற்றேகும் பொய்யல்லக்கிறுகிறுப்புவாந்திபோகும்
புரையானவரோசிகமும்புறங்கொடுக்கும் மெய்யாகவாயூறல்கசப்புந்தீரும்
விழிசிவப்புத்துயிலொழிப்புவிலகிப்போகும் கையாட்சியானவிவ்வவுடதத்தைக்
கைநெகிழாதேசெய்தாற்களிப்புண்டாமே.
10 விரணயித்தம்
உடம்புதிமிர்க்குந்தினவெடுக்கும் ஓயாநாடிபடபடக்கும் தடங்கொளிலிங்கஞ்சிவந்திருக்குஞ் சாருந்துயிலவிட்டெழுந்திருக்கும் திடங்கொள்வாய்நீர்மிகவுறுஞ் சேர்நாக்கசக்கும்திடுக்கென்னும் விடங்கொள்விரணமுண்டாகும் விரணபித்தக்குணமிதுவே.
விரணபித்தத்திற்கு மருந்து
சீனக்கிழங்குசிறுகுறிஞ்சி செங்கத்தாரிசங்கின்வேர் காணக்கடகசிங்கிமுத்தங் கராம்புகடுக்காய்சிற்றரத்தை தீனுக்குரியமிளகுலுவாச் சேர்த்துச்சூரணித்ததனைக் *கானக்குறத்திபாலிலுண்ணக் கழலும்பித்தவிரணமதே.
11 உரத்தபித்தவாதம்
மூர்க்கமாஞ்சினமுண்டாமார்ப்பரிக்கும்
முனைந்தடிக்கடிசண்டைமுறையேசெய்யும் தீர்க்கமெதென்றறியாமல்பிதற்றுங்கண்கள்
தியெனவேசிவந்திருக்கும்பேதியாகும் ஆர்க்குமுடம்பூதும்நித்திரைவராது
அறிவற்றுவாய்குழறிஅடாதுபேசும் பார்க்கிலிதுரத்தபித்தவாதமென்று
பண்புடனேயாயுள்மறைபகருமன்றே.
உரத்தபித்தவாதத்திற்கு மருந்து
முந்திரிகைபேரீஞ்சுநெல்லிமுள்ளி
முத்தக்காசேலமிலவங்கமோமம் வெந்தயமக்கறாவிருசீரகஞ்சாதிக்காய்
வெட்டிவேரதிமதுரம்விளங்களுசுக்கு முந்துதாமரைக்கிழங்கோர்பலவிதந்தான்
முறைப்படிகொண்டிடித்துத்தேனதனிலுண்ண வந்துபொருதிடுமுரத்தபித்தவாதம்
மாறுமெனஆயுள்மறைவழுத்துமன்றே.
12 இரத்தபித்தம்
உரமுடனிருமலுண்டாம் உட்குத்துமிரத்தம்வீழும் விரவடிவயிறுவற்றும் வெளுக்கும்வாய்சவுக்களிக்கும்
* கானக்குறத்தி . தேன்.
213

Page 118
பித்தத்தின் குணமும் மருந்தும்
பரவிடுகால்கையோயும் பற்றிடுப்பதுவலிக்கும் பெருமுடல்வற்றுமரத்த பித்தமென்றிதனைச்செப்பே.
இரத்தபித்தத்திற்கு மருந்து
செப்புவேனாவின்பால்படிநாலாகும்
சேர்ந்திடுநெய்யிருபடிவெள்ளறுகுச்சாறு ஒப்புடனோர்படியிலாமிச்சோடேல
முலுவாச்செவ்வியமதுரமொடுமஞ்சிட்டி தப்பாதுசெங்கழுநீர்க்கிழங்கினோடு
தாமரையினவளையமிலவங்கப்பட்டை வெப்புடையகறுவாநன்னாரிமூலம்
விளங்கிடவொவ்வோர்கழஞ்சுமேவிவாங்கே.
வாங்கிச்செவ்விளநீர்விட்டரைத்துச்சேர்த்து
வளமுடனேகாய்ச்சிவடித்திட்டநெய்யைப் பாங்குடனேயுதிரமவர்மூக்குக்காதால்
பாயிலவ்விடத்தாலேசெலுத்தத்தீரும் தேங்குபச்சரிசியின்றன்கழுநீராலே
சிறுகீரைவேரரைத்துத்தேனிற்கொள்ள ஏங்கியேயிரத்தயித்தமுடலைவிட்டு
ஏகுமெனஆயுள்மறையியம்புமன்றே.
13 காசபித்தம்
வாயினித்திடுநீரூறும் வயிறதுடரட்டிச்சத்தி யாயிருமிடும்வெதும்பும் அருஞ்சரீரம்வலிக்கும் மாயமாய்மயக்கங்காணும் மார்பதுவலித்ததைக்கும் காயமேற்றுயரங்காணுங் காசபித்தந்தானென்னே.
காசபித்தத்திற்கு மருந்து
முற்றியசீந்திற்றண்டுபலமீர்பத்து
முதிர்கோவைத்தண்டுடனேவேப்பம்பட்டை சிற்றமட்டிமுள்ளிகோடகமாஞ்சாலை
செந்தொட்டிவகைபலமைவைந்துகொண்டு வற்றநாலொன்றாக்கிநெய்நானாழி
வருமான்பால்சாணிப்பால்கருப்பஞ்சாறு உற்றமுலைப்பால்வகைக்குநாழிவிட்டு
உயர்மதுரம்முந்திரிகைப்பழமுங்கூட்டே
கூட்டுவாய்கடுரோணிமல்லிசந்தங்
குலவுசிறுதேக்குச்சடாமாஞ்சில்மிச்சு நாட்டுவாய்பேரீச்சம்பழம்வேப்பீர்க்கு
நற்கோட்டஞ்சிறுநாகம்பூக்கடுக்காய் தீட்டுவாய்சிற்றரத்தையொடுகற்கண்டு
சேர்த்துவகைக்கரைப்பலமாயரைத்துச்சேர்த்து நீட்டுவாய்பதத்தில்வடித்துள்ளேகொள்ளில்
நிலையாதுகாசபித்தம்நீங்கிப்போமே.
214

பித்தத்தின் குணமும் மருந்தும்
14 சுவாசபித்தம்
கடினமாய்ச்சுவாசம்வாங்குங் கனமாகவயிறுமூதும் உடலதுமிகவலிக்கும் ஊறுமேவாய்நீர்மிக்காய் இடமுடனிருமலுண்டாம் எழுந்திடும்பசியுமில்லைத் துடியிடைமடமின்னாளே சுவாசபித்தந்தானிதே.
சுவாசபித்தத்திற்கு மருந்து
ஆடாதோடைத்தொலிதிற்பலிநற்சீரம்
அரியமுந்திரிகைசிற்றரத்தைமதுரங்கோட்டம் பீடார்கற்றாழைமடல்சீந்திற்றண்டு
பெருகுநிலப்பனைக்கிழங்குசாத்ரபேதி காடாருஞ்சிறுகுறிஞ்சிவேருங்கூட்டிக்
கருதுநெய்தேன்விட்டுலேகியமாய்க்கொள்ள நாடாமல்நிலைகுலைந்துசுவாசபித்தம்
நாசமாமெனவறிஞர்நவின்றிட்டாரே.
15 செம்பித்தம்
செம்பினிற்களிம்புபோலுஞ் சிவப்பாயுஞ்சத்திவீழும் தம்பனமுறும்மலந்தான் சார்ந்திடிற்சிவந்துவீழும் கெம்பிடும்வியர்வைதாகம் கிளர்தலைதிருப்பிநோவாம் வெம்பியேபயமுண்டாகும் மேவுசெம்பித்தமீதே.
செம்பித்தத்திற்கு மருந்து
கற்பூரவள்ளிசம்பீரச்சாறு
கற்றாழைதாழைவிழுததனின்சாறு பொற்பூருகின்றகையான்றகரைச்சாறு
பொருந்துமெள்ளெண்ணெய்படியொன்றுகொண்டு வெற்பூருந்திற்பலிசாதிக்காய்கோட்டம்
விழாலரிசிகுளவிந்தம்மிருசுதேற்றா அற்பூரும்நெய்சேர்த்துஅருந்துவீரேல்
அகலுஞ்செம்பித்தமெனஅறைந்தார்மேலோர்.
16 கரும்பித்தம்
மெய்யுடன்சிரநடுக்கும் விழியுமின்மினிபோலாகும் பையவேகண்ணுறங்கும் படர்கடைக்கண்சிவக்கும் துய்யநாவுருசியோடு தொடர்பசிதானுமின்றாம் எய்திடுங்கருமுவாந்தி யிதுகரும்பித்தமாமே.
கரும்பித்தத்திற்கு மருந்து
பாசிப்பயறுஞ்சீரகமும் பருத்திப்பிஞ்சும்நெற்பொரியும் வீசுமேலம்முல்லைமுள்ளி விலவவேருந்திரிகடுகும்
மாசிக்காயுஞ்சிறுதேக்கும் மல்லிவிடையஞ்சமன்கொண்டு தூசுபடவேயிடித்தேன் றொட்டுண்கரும்பித்தம்போமே.
215

Page 119
பித்தத்தின் குணமும் மருந்தும்
17 கரப்பான்பித்தம்
சரீரமேற்சொறிவுண்டாகித் தடிப்புறுகட்டியுண்டாம் தெரியவேபேதியுண்டாஞ் செருமியேயிழுப்புண்டாகும் இருமிடுங்கால்தள்ளாடு மிடுப்பினில்வலியுண்டாகும் கருதவேதிமிருண்டாகுங் கரப்பானின்பித்தமிதே.
கரப்பான்பித்தத்திற்கு மருந்து
பூவரசுசங்குகருஞ்சூரைமுல்லை
பொருந்துதிரிபலைஅமுக்கிராய்க்கிழங்கு ஆவரைபொற்கொன்றைகிரந்திகளினாயன் அரியகுன்றிமணிபூனைக்காலிபத்திரி தேவதாரம்வெளுத்தல்சிவந்தசந்தம்
சேரவேயொவ்வொன்றோர்பலமாய்க்கொண்டு ஆவலுடன்பொடித்துத்தேனதனிலுண்ண m
அரியகரப்பான்பித்தமகன்றுபோமே.
18 அசீரணபித்தம்
மந்தமாம்பசியாதுகுளிருண்டாகும்
மலமிறுகுந்தலைவலிக்கும்வயிறிரைக்கும் சொந்தமாங்கண்கரித்துநீரும்பாயுஞ்
சொல்லிலடிவயிறுமிகத்தொந்திப்பாகும் பந்தமாயுணவிறங்காக்கைகாலோயும்
பண்பானவாய்புளித்துவாய்நீரூறும் இந்தவகைக்குணங்கடமைக்கண்டபோதே
ஏற்றவசீரணபித்தமென்னலாமே.
அசீரணபித்தத்திற்கு மருந்து
இந்துவசுவாசிமிள கேலங்கராம்புடன்
இருசீரகந்திற்பலி இலவங்கமுயர்சுக்கு மரமஞ்சள்கோட்டமொ
டிலிங்கமொவ்வோர்கழஞ்சு அந்தமுற்றிடவெடுத் துந்துவெச்சோடிட்
டரைத்தெலுமிச்சம்புளியுடன் அரியசாரடைதன்னி லுரியசாகந்தனை
யளந்தொவ்வோர்நாழிவிட்டுப் பந்தமுறவேதிரண் டிடுபதம்வந்தபின்
பருத்தகொட்டைப்பாக்கதின் பரிமாணமாகவே திரிவேளைமண்டலம்
பண்பாயருந்திவரவே சிந்தையதுநொந்திடச் செயுமசீரணபித்த
சேட்டைரணகளமதனிலே செகராசசேகரனை யெதிருமாற்றாரெனத்
திறலறிந்தோடல்நிசமே.
216

பித்தத்தின் குணமும் மருந்தும்
19 அரோசிகபித்தம்
மனமரோசிக்கும்வாந்தி வருங்குடற்புரட்டுண்டாகும் தினமடிநாத்தடிக்குஞ் சிரசினைப்பிறகேவிசும் நனையுநாவுணர்ச்சியற்று நல்லநித்திரையுமற்று அனலுறவதட்டுமீதே அரோசிகபித்தமாமே.
அரோசிகபித்தத்திற்கு மருந்து
தேசிப்புளியோர்நாழிகொண்டு சீனியைந்துபலங்கரைத்து வாசிக்கோழிமுட்டைபத்தை வகையாயுடைத்துக்குழம்பாக்கி நேசித்துண்டுபழரசத்தில் நீள்படிகாரம்போட்டெரித்து ஆசித்துடலிற்சிரசில்வைக்கி லரோசிகபித்தமற்றிடுமே.
20 எரிபித்தம்
அடிதுடையிரண்டுபாதம் அரியகண்ணுள்ளங்கால்கை கடினமாயெரிவுண்டாகுங் காதிரண்டுடனேமூக்குங் கெடியுடன்வரண்டடைக்குங் கிளர்கைகால்முதுகுவாதை படியுங்காற்றதனைவேண்டும் பகரெரிபித்தமிதே.
எரிபித்தத்திற்கு மருந்து
தாழைவிழுதின்சாறுடனே சாத்தாவாரிச்சாறுதென்னம் பாளையதனின்சாறுபசுப் பால்நெய்யோரொன்றொருபடிகொள் கேளுமதுரஞ்செவ்வள்ளி கிராம்புநெல்லிதிரிகடுகு ஏழுஞ்சேர்த்துவடித்தநெய்யால் எரிபித்தம்போமிதுதிடனே.
21 அழற்பித்தம்
இளைமையிற்றலைநரைக்கு மிருகடைக்கண்சிவக்கும் கிளிமொழியாரைநோக்குங் கிளர்ந்தஞானங்கள்பேசும் பழிமொழிபகருந்துற்றும் படிவமுமிகவெளுக்குங் களிகொண்டுபாடுமாடுங் கருதழற்பித்தமீதே.
அழற்பித்தத்திற்கு மருந்து
அரைபொடிகிட்டங்காந்த மருந்தாழைவிழுதினோடு உரைபகர்பசுவின்பால்நெய் யுறுங்கழுதையின்பால்தானும் வரைவொடுபடியேகொண்டு மதுரமஞ்சிட்டியேலம் புரையறுகழஞ்சாய்நெய்செய் புசியழற்பித்தம்போமே.
22 துடிபித்தம்
உடம்பதுமிகத்துடிக்கு முரிசையற்றாலுண்ணாது இடந்தவிர்ந்தோடுஞ்சண்டையிடும் பெண்மேலிச்சைகொள்ளும் கடம்பாண்டுபோற்பச்சென்னுங் கருத்துண்டிமீதுவைக்கும் அடம்பலசெய்யுமீதே யடர்துடிபித்தமாமே.
217

Page 120
பித்தத்தின் குணமும் மருந்தும்
துடிபித்தத்திற்கு மருந்து
முசுமுசுக்கைச்சமூலமதையாலம்பாலில்
முறையொடுவிட்டிடித்தகால்நாழிசாறும் இசைவுடையகழுதைப்பால்நாலுநாழி
ஏற்றகடுக்காய்த்துள்கால்நாழிசேர்த்துப் பசையுறவேதேங்காய்ப்பால்பசுவின்வெண்ணெய் பனங்கட்டிபலமூன்றும்படியக்கூட்டிப் பிசைவுறுலேகியமாகக்கிண்டியுண்ணப்
பிசகாதுதுடிபித்தம்பெயர்ந்துபோமே.
23 விஷபித்தம்
பிணம்போலநிலத்தில்வீழும் பேசிடுந்துறதாக இணங்கிடுமன்னஞ்செல்லா தேற்றவுள்ளடியினின்று கணந்தனிலுச்சிமட்டுங் கடுவிஷம்போலேயேறுஞ் சுணங்குடல்வலியுண்டாகுஞ் சொல்விஷபித்தமீதே.
விஷபித்தத்திற்கு மருந்து
கரிப்பானிஞ்சிபொற்சீந்தில் கருவேம்புடனேமுசுமுசுக்கை விரிப்பாஞ்சாறுபடியொன்று விலாமிச்சேலஞ்சாதிக்காய் தரிப்பாங்கிளியூறற்பட்டை சவாதுபுனுகுசந்தனமும் சரிப்பார்கழஞ்சுசேர்த்தெண்ணெய் தன்னால்விஷபித்தம்போமே.
24 அதிசாரபித்தம்
மதிசோர்ந்துபொருமலுண்டாய் வயிறிரைந்தேவலித்துச் சதியாகப்பேதியுண்டாந் தாகிக்குமீரலெல்லாங் கொதியாகிக்குமிறுஞ்சோகங் கொண்டரோசிகமுமாகும் அதிசாரபித்தமிதென் றறிஞர்களறைந்திட்டாரே.
அதிசாரபித்தத்திற்கு மருந்து
பஞ்சதாரையதிவிடையம் பாசிப்பயறுநற்சீரம் இஞ்சியுலுவாவசமோத மேலஞ்சந்தமிலாமிச்சு மிஞ்சுந்திற்பல்சாதிக்காய் விளங்கங்கழஞ்சுநிறைபொடித்து அஞ்சாத்தேனிலருந்திலதி சாரயித்தமகன்றிடுமே.
25 மூலபித்தம்
சாலவேவயிறிரைந்துபேதியாகுந்
தடுமாறிக்கோபமொழிசாற்றலாகும் மூலத்தில்முளைகாணுந்துடைகடுக்கும்
முன்னுமுடலம்வெளுத்துச்சோபையாகும் தூலஞ்சேர்கண்கரித்துக்குத்துண்டாகுந்
தூக்கமதுமேலிட்டுச்சோம்பல்கொள்ளும் ஞாலமேலிக்குணங்கள்கண்டபோதே
நவிலுவாய்மூலபித்தக்குணமிதென்றே.
218

பித்தத்தின் குணமும் மருந்தும்
மூலபித்தத்திற்கு மருந்து குமரிகொடுப்பைகரிசாலை கூறுங்கீழ்காய்நெல்லிவில்வம் அமரும்முசுக்கைநீர்முள்ளி அத்திகரும்பீருள்ளிகஞ்சாக்
கவருஞ்சாறுகாற்படியில் கருஞ்சீர்திற்பல்குங்கிலியம் , எவரும்புகழுந்திரிபலையோ டேற்றநற்சீரகந்தேடே.
நற்சீர்மிளகோடதிமதுரம் நல்லகோட்டமசமோதம் நெற்சேர்பொரியும்வகைகழஞ்சு நிறைகற்கண்டுஞ்சேர்த்தரைத்து உற்றேதேன்விட்டனல்தன்னி லுறுலேகியமாய்க்கிண்டியுண்ண அற்றேயருணன்முன்பணிபோ லகலும்மூலபித்தமதே.
28 முதிர்பித்தம் அங்கமேற்கொப்புளங்கொண் டடர்ந்திடுஞ்சொறிவுண்டாகும் பங்கமாம்புண்களுண்டாம் படிவமும்மஞ்சணிக்குந் தங்கியேசலமலங்கள் சரீரமும்வாட்டங்கொள்ளும் மங்கியேநடக்கும்நாடி வருமுதிர்பித்தமிதே.
முதிர்பித்தத்திற்கு மருந்து செங்கத்தாரிபூவரசு செறியுமியங்கின்மூலமுடன் பொங்குஞ்சீனக்கிழங்குதுத்தம் பொருந்துந்துரிசுமமுக்கிரவும்
தங்குங்கழற்சியவரையிலை சார்திரிகடுகுஞ்சேர்த்திடித்துத் துங்கத்தேனிலருந்திவரிற் றொலையும்முதிர்பித்தந்தானே.
27 கண்டபித்தம் தொண்டையின்குரல்கணக்குந் தொடர்ந்துகைத்துச்சத்திக்கும் கண்டத்திற்புண்போலாகுங் கழலடிகனப்புண்டாகும்
மண்டிநாவழுவழுத்து வரண்டிடுங்காதிரைக்குங் கொண்டசெம்படையாங்கூந்தல் குறுங்கண்டபித்தமீதே.
கண்டபித்தத்திற்கு மருந்து அரபொடிகீச்சுக்கீட்ட மரியமுந்திரிகைக்கற்கம் விரவதிமதுரந்தேற்றா விரைநெல்லிக்காயோடிஞ்சி பரவிடப்பொடித்துநெய்தேன் பசுவின்பால்விட்டுக்கிண்டி உரியலேகியமாயுண்ண வுறுகண்டபித்தம்போமே.
28 ஓடுபித்தம் அங்கிங்கோடிப்பிதற்று மதியுதாசனமாய்ப்பேசும் தங்கிடும்பற்கடிக்குந் தழலெனக்கண்சிவக்கும் பொங்கிடுங்கண்ணிமைக்கும் புலம்பியேநடனமாடும் வெங்குணமுடனேபார்க்கும் விறலோடுபித்தமீதே.
ஒடுபித்தத்திற்கு மருந்து கரிப்பானிஞ்சிபொற்சீந்தில் கருவேப்பிலைபொடுதலையினிலை வரித்தகொடுப்பைமுசுமுசுக்கை வளர்தேசிக்காய்ப்பழச்சாறு
பரித்தஅபூவின்பாலுடனே பசுவெண்ணெய்காற்படிவீதம் திருத்தமுறவேசேர்த்ததின்பின் தேவதாரம்வெட்டியின்வேர்.
219

Page 121
பித்தத்தின் குணமும் மருந்தும் வேர்கேள்விலாமிச்சம்வேரும் வில்வம்வேர்சாதிக்காயும் ஈர்சந்தனம்பூலாக்கிழங்கு மியல்சேர்கிராம்புகிளியூறல் வார்சேர்முந்திரிகைப்பழமும் வாசவேலம்வகைபலங்கொள் சார்பாய்க்காய்ச்சிவடித்தபின்னர்சவாது புனுகுவிராகனொன்றே
ஒன்றாய்ப்பொடித்திட்டாறியபின் னுறுதானியஞ்சேர்புடத்தில்வைத்துக் குன்றாதெட்டுநாள்விட்டுக் குறிப்பாயெடுத்துச்சிரத்தில்வைத்துத் துன்றாச்சியக்காயரைப்பிற் றோய்ந்துவருகிலோடுபித்தம் நன்றாய்த்தீருமெனவான்றோர் நவிற்றுமுரையைநம்பிடுமே.
29 மூடுபித்தம்
அறிவற்றுக்கிரியைசெய்யு மணிபணிதனையறுத்து மறைவுசெய்திடுமெதிர்த்து வார்த்தைபேசும்வாய்க்குள்ளே குறைவுறுதொனியாய்ப்பேசுங் குறுஞ்செயல்புரியுங்கைகால் முறையுடனன்னமுண்ணா மூடுபித்தந்தானிதுே.
மூடுபித்தத்திற்கு மருந்து
கீழ்காய்நெல்லிநெல்லிக்காய் கிளர்வல்லாரைச்சாற்றினுடன் தாளாப்பசுப்பாலெள்ளெண்ணெய் சம்பீர்ப்புளியோர்படிவீதம் கேளாய்நாலொன்றாய்க்குறுக்கிக் கிளரிருசீரகநற்சந்தம் தூளாய்க்கழஞ்சுநிறையாகச் சூர்ணஞ்செய்துபோட்டிடுமே.
போட்டுநாலுநாளுறிப் பொருந்தமெழுகுபதம்வடித்து நாட்டிச்சிரசில்வைத்ததனை நற்சியக்காயரைப்பிட்டு மீட்டுவெந்நீர்முழுகிவரில் விறல்சேர்மூடுபித்தமது ஒட்டமெடுக்குமெனமேலோ ரோதுமொழிபொய்யாகாதே.
30 நடுக்குபித்தம்
பிடரிநெற்றிகதுப்புடனேமுள்ளந்தண்டும்
பெருக்கவேநடுக்கமொடுகாந்தலாகு இடருடனேவாய்கசந்துவாந்தியாகும்
இடையிடையேதுணுக்கிருமலெழுந்துநிற்கும் தடமுறுவாய்நீரூறிமார்பிலவிழும்
சற்றுமுறக்கம்வாராத்தவித்திருக்கும் திடமகற்றுநடுக்குபித்தமிதுவாமென்னச்
செகமீதிலாயுள்மறைசெப்புமன்றே.
நடுக்குபித்தத்திற்கு மருந்து
முசுமுசுக்கைசம்பீரப்பழத்தினோடு
முடக்கொற்றான்தாழையின்றன்விழுதிற்சாறு உசிதமுறுமாறுமாதத்தின்காடி
ஓரளவாயெடுத்ததிலேயூசிக்காந்தம் விசிதவரபொடிகீச்சுக்கிட்டத்தோடு
விளங்குபலகறைப்பற்பம்விரவியிட்டு வசியமெனக்காற்படியீர்நேரமாக
வாகுடனேபத்துநாளுண்டபின்பே,
220

பித்தத்தின் குணமும் மருந்தும்
உண்டபின்னர்களிமண்ணையெடுத்துவந்து
உச்சிமுதல்உள்ளங்கால்வரையும்பூசி அண்டியமாலையிற்றேசியின்பழத்தில்
ஐயாறைப்பிழிந்து சிரசினிலேதேய்த்து மிண்டுடனேநூறுகுடஞ்சலத்திற்றோய்ந்தால்
விட்டோடுமநடுக்குபித்தமென்னத்தேர்ந்த பண்டிதர்கைகண்டதெனப்பகர்ந்தாரித்தைப்
பரிவுடனேசெய்துபலனடைகுவீரே.
31 கபாலபித்தம்
தலையுங்குளிர்ந்துநடுக்கமுண்டாய்ச் சரீரமெங்குங்கடுப்புண்டாய் நிலையாய்ச்சிரசிற்குத்துண்டாய்நீண்ட வுடம்பும்மஞ்சணிப்பாய்த் துலையாமூக்கினோவுண்டாய்த் தொடுத்துமுகமும்வீக்கமுண்டாய் அலைவாயெழுந்துபடுத்திடுகி லடுத்தகபாலபித்தமிதே.
கபாலபித்தத்திற்கு மருந்து
அபாயமில்லாவெள்ளெண்ணெ யதிற்பசுப்பால்நெல்லிக்காய் தபோதனர்புகழுஞ்சம்பீர் தன்கனிச்சாற்றிற்சீரம் உபாயதிமதுரம்மல்லி உயரிலவங்கஞ்சேர்த்துக் கபாலபித்தந்தனக்குக் கைகண்ைடதயிலஞ்செய்யே.
32 வாந்திபித்தம்
வாய்கைக்கும்வாந்தியுண்டாமீரலுக்குள்
வலியுண்டாமுடம்பெங்குந்திமிருண்டாகும் காயமுற்றுங்கனல்மிகுக்குமரோசகந்தான்
கடிதில்வருந்தேகமதின்வலிமைகுன்றும் நோயுற்றுப்பதைப்புண்டாமுணவருந்தில்
நுண்மையாய்ச்சமிக்காதுமயக்கமுண்டாம் பாய்வுற்றதண்ணிரைமிகவேண்டாது
பகளிலிதைவாந்திபித்தமென்னலாம்ே.
வாந்திபித்தத்திற்கு(மருந்து
எலுமிச்சம்பழச்சாறுபடிதானொன்று
இனிப்பானசீனியதுபலமோரொன்று விலைபெற்றகோழியின்றன்முட்டைதன்னின்
வெண்கருவும்பலமொன்றுவிரவக்காய்ச்சி நிலைபெற்றவேலமுடன்மதுரநற்சீர்
நெற்பொரிநெல்லியின்வற்றல்பலமோரொன்று வலுவுற்றுச்சூரணத்தையிட்டுக்கிண்டி
வைத்தருந்தவாந்திபித்தம்மாறிப்போமே.
33 தாகயித்தம்
அடிவயிற்றிற்பதைப்பா மங்கமுமழல்போற்கானும் நெடியகண்டம்வெயர்க்கும் நீரினைமிகவும்வேண்டும்
221

Page 122
பித்தத்தின் குணமும் மருந்தும்
அடிநாக்குக்களுத்திசிக்கு மதிபுளிப்பினைவிரும்பும் தொடுபண்டத்தாசைகொள்ளுஞ் சொல்தாகபித்தமீதே.
தாகபித்தத்திற்து மருந்து
தேன்றோடைமாதுளைசம்பீர்ப்பழத்தின்
திகழ்சாறுமுந்திரிபேரீஞ்சின்கற்கம் சான்றோர்கள்புகழ்நெல்லிதான்றிமாயா
தக்கோலஞ்சந்தனமோமம்வெட்பாலை நான்றுறுபற்படகமமுக்கிரவுசீந்தில்
நன்னாரிபசுப்பால்நல்லெண்ணெய்சேர்த்து ஊன்றியரைத்துக்கரைத்துவடித்துத்தின்றா
லோடிவிடுந்தாகபித்தமுடலைவிட்டே.
34 விக்கற்பித்தம்
சத்தித்துவிக்கலாகித் தாகித்துத்தவிப்புண்டாகி ஒத்தவாய்நுரையுந்தள்ளி யுறுகைகாலோய்வுண்டாகிச் சித்தமாய்ப்படுக்கொட்டாமல் தேகமும்வெதுப்புண்டாகி மெத்தவுந்தளர்ச்சியாகில் விக்கற்பித்தந்தானென்னே.
விக்கற்பித்தத்திற்கு மருந்து
கோசலம்பசுப்பால்வெள்ளாட்டுநீருங்
கூறதின்பாலுடன்சம்பீர்ப்பழத்தின்சாறு வாசமணத்தக்காளியுடனேயூனை
வணங்கியிஞ்சிச்சாறுமோர்படியேகொண்டு பேசுதேங்காய்நெய்யோடெள்ளினெய்யும்
பெருகவொருபடிசேர்த்துமதுரங்கோட்டம் மாசினெல்லிக்காய்சேர்த்துவடித்துட்கொண்டு
மத்திக்கில்விக்கல்பித்தம்மாண்டுபோமே.
35 கூடியபித்தம்
அதிகமாயிருமலுண்டா யங்கமும்வெளுத்துப்பாண்டாய்க் கொதியுடன்கோழைகட்டிக் குருதியாய்ச்சளியும்வீழும் கதிகொணிர்த்தாகமுண்டாங் கண்பஞ்சுபோல்வெளுப்பாய்ச் சதியுடன்நெஞ்செரிக்கிற் சயபித்தமென்னலாமே.
கூடியபித்தத்திற்கு மருந்து
கர்ப்பூரவள்ளிவெண்காயச்சாறு
கற்கண்டோடிரரத்தைகமழுஞ்சோம்பு பொற்பூருமதிமதுரம்பனங்கற்கண்டு
பூனைவணங்கியினுடனேயுகழ்குறிஞ்சா நற்சீரம்கருஞ்சீரம்சாதிபத்ரி
நாவலத்திப்பட்டைசமன்கொண்டரைத்து வெற்பூருந்தேன்விட்டுப்பாகுசெய்து
விழுங்கினாற்சயபித்தம்மழுங்குமன்றே.
222

பித்தத்தின் குணமும் மருந்தும்
38 திமிர்ப்பித்தம்
காலையில்வாந்தியாகுங் கடியநித்திரையுண்டாகும் கோலமாம்வயிறுமுட்போற் குத்திடுந்திமிருண்டாகும் சாலவேநடைகொடாது சரீரத்திலசதியுண்டாம் சேலைநேர்விழியினாளே திமிர்பித்தமீதென்றாரே.
திமிர்பித்தத்திற்கு மருந்து
சாரணையிஞ்சிதேற்றாச் சாதிக்காய்கடுக்காய்தான்றி ஊரணையுலுவாக்கோட்ட மோமந்திற்பலிவெண்காரம் பூரணைதருமிந்துப்புப் பொரிகாரஞ்சீனக்காரம் சீரணையுறத்தூள்செய்து தின்திமிர்பித்தம்போமே.
37 வலிபித்தம்
தலைவலிக்குஞ்சந்தீரல்வலித்துநோவாந்
தடதடத்தேயுடம்பெங்கும்படபடக்கும் குலைவலிக்கும்மலந்தானும்பச்சையாகுங்
கொடுமையாய்நாவரண்டுதலைகனக்கும் நிலைபெயர்ந்துநடக்கவொட்டாமார்படைக்கும்
நிலைத்தவடிவயிற்றினிலேவலித்துநோவாம் மலைநிகருங்கணதனத்துமடமின்னாளே
வலிபித்தமீதென்வேவழுத்திடாயே.
வலிபித்தத்திற்கு மருந்து எலுமிச்சம்பழச்சாறோடிளநீர்நாழி
இன்பூறலமுக்கிராய்சாதிலிங்கம் பலமுற்றஆவரைதேற்றாநன்னாரி
பாவட்டைசிறுகுறிஞ்சிபலங்கால்கொண்டு நலமுற்றனண்ணெயுடன்கோழிமுட்டை
நாலுடைத்திட்டதைக்குழம்பாகக்காய்ச்சி வலிபித்தமதற்கந்திசந்தியுண்டால்
வயிற்றுவலிமுதலாகமாறிப்போமே
38 சீதபித்தம்
போதப்பிடரிவலியுண்டாம் பொருமிவயிறுப்பிசமாகும் ஏதவாய்நீருப்புறைக்கு மிருமுஞ்சிறுநீர்சிவப்பாகும் மோதியுடம்புகனத்திருக்கும் முனைதேகத்தால்நீர்வடியும் சேதப்படவேசலஞ்சிவக்குஞ் சீதபித்தமிதுவாமே.
சீதபித்தத்திற்கு மருந்து
நாவல்விடத்தலாவாரை நல்லகாரைநறுவிலியின் மேவுபட்டைபலங்கொண்டு வேர்க்கொம்புடனேவெந்தயமுந் தாவுமுள்ளிகடுகுடனே தான்றிதேற்றாவிரைகூட்டி மேவிப்பொடித்திஞ்சிச்சாற்றில் விழுங்கச்சீதபித்தம்போம்.
223

Page 123
பித்தத்தின் குணமும் மருந்தும்
39 கிருமிப்பித்தம்
உடம்புகைகால்கடுப்புண்டாம் ஓயாத்தினவுந்திமிருண்டாம் விடங்கொள்மலத்திற்கிருமிவிழும் வெச்சென்றுடம்புவற்றிவரும் மடங்கிச்சலமும்மலமதுவும் வரஞமதிகநாற்றமுமாம் திடங்கொள்கிருமிப்பித்தமது செய்யுங்குணத்தைத்தேர்ந்தறியே.
கிருமிப்பித்தத்திற்கு மருந்து
ஆடுண்ணாப்பாலையீச்சங்குருத்து
அரியமாதுளம்வேரிற்பட்டைதேற்றாக் கூடுவாய்விளங்கமுடன்நிலத்தின்பாகல்
குறுந்தொட்டிபற்படகங்குந்துருக்கம் தேடுசீனக்காரங்கழஞ்சுவீதஞ்
சேர்த்தரைத்தாமணக்கநெய்யிற்செறியக்காய்ச்சி நாடியருந்திடக்கிருமிப்பித்தமெல்லாம்
நடுநடுங்கியகலுமெனநவின்றிட்டாரே.
40 அசாத்தியபித்தம்
விழலுறுவார்த்தைபேசும் விழிகளுஞ்சிவந்துகாணும் தழலெனவெதும்பும்மேனி சரீரத்திலுணர்ச்சியில்லைப் பழகியவுடைகட்டாது பகரும்வாய்வரஞம்மிக்க அழலுறுதாகமுண்டா மசாத்தியபித்தமிதே.
அசாத்தியபித்தத்திற்கு மருந்து
மகிழம்பட்டை வளர்கருஞ்சீரகம் அகிலொடுமிள கார்மதுரம்நெல்லி வகைசமன்யசு நெய்படியில்வடித் தகசிரத்திட சாத்தியபித்தம்போம்.
41 மார்க்கபித்தம்
வேதாந்தமறிந்தவர்போல்மிகவும்பேசும்
வீறாகஒடும்பின்நிலத்துட்காரும் ஆதாரமற்றார்போற்புலம்பிநிற்கும்
அதட்டியோவாயில்வந்ததெல்லாம்பேசும் திதாகச்சீலைதனைக்கிழித்துப்போடுஞ்
சிரம்பிடரிவலியுண்டாந்தேகம்வாடும் வாதாடும்மனிதருடனிக்குணந்தான்
மார்க்கபித்தமென்னவேவழுத்தும்வேதம்.
மார்க்கபித்தத்திற்கு மருந்து
வில்வவேர்முல்லைவேர்விலாமிச்சம்வேர்
வீழிவேர்பலமிரண்டுவிரைந்திடித்துச்
சொல்சலமெண்ணாழிவிட்டெட்டொன்றாக்கிச்
சுக்குமிளகேலமிலவங்கப்பட்டை
224

பித்தத்தின் குணமும் மருந்தும்
நல்லசீரகஞ்சந்தமதுரங்கோட்டம்
நாகம்பூச்சிற்றரத்தைகழஞ்சரைத்து வல்லவெண்ணெய்படியதனிற்சேர்த்துக்காய்ச்சி
வடித்துண்ணில்மார்க்கபித்தம்மாய்ந்துபோமே.
42 மருத்தீட்டுப்பித்தம்
ஊணுறக்கமின்றியேயுடலமூது
மூக்கமற்றேதேகமிகச்சதியாகும் நாணமூடனேமெளனமாயிருக்கும்
நல்லுணர்வற்றுச்சிந்தைநலிந்துகாணும் கோணலுடன்திடுக்கிடுமிக்குணங்கள்கண்டாற் குறித்திட்டமருந்துவகைகுடலிற்சேர்ந்து காணுகின்றமருத்திட்டுப்பித்தமென்னக்
காசினியிலாயுள்மறைகழறுமன்றே.
மருத்தீட்டுப்பித்தத்திற்கு மருந்து
அவுரிபருத்தியெலுமிச்சை யழிஞ்சில்நொச்சிவேர்பலங்கொள் துவர்சேர்துரிசுமிளகுசுக்குச் சுரையினகுடுகைச்சுட்டகரி தவறாதொன்றோர்கழஞ்சுகொண்டு தப்பாதிடித்துமோரிலுண்ணில் எவருமறியாவாறுமருத் தீட்டுப்பித்தமேகிடுமே.
崇 - 豪 - 崇
225

Page 124
சொக்கநாதர் தன்வந்திரியம்
நன்றியுரை
எமது சித்த - ஆயுள்வேத வைத்திய சம்பந்தமான நூல்கள் பல இலங்கையில் தோன்றி உள்ளன. எமது நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலைக்கும், மக்களுக்குமேற்ப சில தனித்துவங்களை கொண்டு தோன்றியது இயல்பு ஆகும்.
எமது நாட்டில் தோன்றிய நூல்களில் பல கால மாற்றத்தில் அழிந்திட சில நூல்கள் அங்கொன்று, இங்கொன்றாக உயிர் வாழ்ந்தன. கிடைத்த நூல்களும் சரிவர பேணப்படாவிட்டால் காலவோட்டத்தில் அழிந்துவிடும் என உணர்ந்த நல்ல உள்ளங்கள் மருத்துவ சுவடிகளை சேகரித்து பாதுகாத்தன. சிலர் அதனை அச்சு வடிவில் நூல்உரு ஆக்கினர். அப்படி அச்சு வடிவில் வெளியிட்ட நூல்களும் இன்று எமக்கு கிடைப்பது அரிதாயிற்று.
மருத்துவ நூல்களை பதிப்பித்து வெளியிட்டு வைத்தவருள் மருத்துவர் ஐ. பொன்னையாபிள்ளை என்பவர் போற்றத்தக்கவர் ஆவர். இவர் பரராசசேகரம், செகராசசேகரம் மற்றும் சொக்கநாதர் தன்வந்திரியம் போன்ற முக்கிய நூல்களையும் வேறு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவத் திணைக்களம் தாபிக்கப்பட்டதும் அதன் முதலாவது சுதேச மருத்துவ மாகாண பணிப்பாளராக கடமையாற்றியவர் வைத்திய கலாநிதி. பூ உரோமகேஸ்வரன் ஆவார். அவரின் காலத்தில் ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புச் சபையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வைத்தியர்கள் பல கோரிக்கைகள் விட்டனர். அதில் ஒன்று வைத்தியப் புத்தகங்களை மீள் பதிப்புச் செய்து வெளியிடுதல்
226

சொக்கநாதர் தன்வந்திரியம்
வேண்டும் என்பதுமாகும். இதனை கவனத்திலெடுத்த சுதேச மருத்துவத் திணைக்களம் அதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடு களை தொடங்கிவைத்தது.
இதற்கான பலதிட்டங்களைதீட்டி அதற்கான அனுமதியையும் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் இருந்தும் பெற்றதுடன் ஆலோசனையையும் பெற்று புத்தக பதிப்புக்கு என ஒரு குழுவையும் அமைத்து, பணிப்பாளர் அவர்களே அதற்கு தலைமையும் ஆனார்.
இந்த நிலையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பூ உரோமகேஸ்வரன் அவர்களின் பதவிக்காலம் முடிய, புதிய பணிப்பாளராக பேராசிரியர் சுப்பிரமணியம் பவானி அவர்கள் கடமையேற்றார்கள். அவரும் புத்தக மீள் பதிப்பின் முக்கியத்துவம் உணர்ந்து, அதற்காக பாடுபட்டு முதற்கட்டமாக சில புத்தகங்களை மீள்பதிப்புக்கு கொடுத்தார். அதன் பேறாக இன்று சில புத்தகங்கள் எமக்கு கிடைக்கக் கூடியதாக உள்ளது. ஆகவே வைத்தியர்கள் ஆகிய நாம் சுதேச மருத்துவத் திணைக்களத்துக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
இன்று இப் புத்தகங்கள் வெளிவருவதற்கு, சகலவிதத்திலும் உதவியும், அனுமதியும் அளித்த வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.
புத்தகங்கள் வெளிவர சகல உதவிகளும் ஆலோசனைகளும் அளித்து ஊக்கப்படுத்திய தலைமைச் செயலாளர் அவர்கட்கும் நன்றி கூறுகின்றோம்.
புத்தகங்களை வெளியிட நாளிலும் பொழுதிலும் ஊக்கமுடன் உழைத்த சுதேச மருத்துவத் திணைக்கள பணிப்பாளர், சுகாதார அமைச்சு செயலாளர் ஆகியோருக்கும் நன்றி கூறுகின்றோம்.
இன்னும் புத்தக வெளியீட்டில் ஒத்துழைத்த சுதேச மருத்துவத் திணைக்கள ஊழியர்கள், சிறப்புற புத்தகத்தை அச்சிட்டு உதவிய பதிப்பகத் திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் ஆகிய சகலருக்கும் நன்றி கூறுகின்றோம்.
முக்கியமாக புத்தகங்களை பதிப்பிக்க உதவியாக, தமது பழைய
புத்தகங்களை தந்து உதவிய வைத்தியகலாநிதி. ரீபதிசர்மா அவர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி.
இ. தர்மராஜா, D. A. M. S. புத்தக குழு உறுப்பினர். தலைவர், ஆயுள்வேத வைத்திய பாதுகாப்புசபை, திருகோணமலை.
227

Page 125


Page 126


Page 127