கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2011.05

Page 1
፪ዚዐ 2011 ஜ.அல்ஊலா ஜூ அல்ஆகிரா 432
mab: 377 : O 5
SLAMIC Monthly
 

8Goovom ću Soo-duše govo

Page 2
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பயிற்றப்பட்ட ஆரம்ப பாடசாலை ஆசிரியராவதற்கு நீங்கள் தயாரா? IBS alpigi Pre-school Teacher பாடநெறியில் இணைந்து கொள்வதன் மூலம் ஆறு மாதங்களில் 3 விதமான தகைமைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
Target Group Why @ UBS
k School Leavers * Quality Training sk international School Teachers at Value for Money A Those Who Wish to be a A Hands on Experience
Professional Teacher A Job-oriented
it individual attention Approved by: 窓。
City8.
||||||| "EBURGON RXGRASRING" Guilds
Business &IT துறையில் சிறந்த தகைமை ஒன்றைப் பெற்றுக் கொள்ள
FOONDATION ON
BUSNESS ở T
Diploma in Web Design
Diploma in Graphic Design
Diploma in Hardware Engineering
Diploma in Business Management
Diploma in Accounting & Book Keeping 翼 Diploma in English
IELTS - Preparation Course Final Project
மேலும் பல பாடநெறிகள் காணப்படுகின்றன.
உடனடித் தொடர்புகளுக்கு
கொழும்பு:0714271_384 கண்டி: 0772 139 599 நீர்கொழும்பு 0779 777 723
... . . . .
■LQ[芮Qās。翡 Ds နှီးနှံမျိုး PADA
 
 
 
 
 
 
 

இஸ்லாமிய வங்கி மற்றும் நிதியியல் நிறுவனங்களில் வேலை செய்ய விரும்புகிறீர்களா?
நிறுவனம் வழங்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற
GRADUATE DPLOMAN
SLAMC FINANCE
பாடநெறியில் இணைந்து கொண்டு உள்நாடு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய வங்கி,
காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்
Duration: 6 Months
Diploma in Hardware Engineering
தமிழ் மொழி மூலம் குறிப்பிட்டளவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
பதிவுகளுக்கு முந்துங்கள் . . . விரும்பிய நாட்களில் வகுப்புக்கள் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்
கொழும்பில் மட்டும் Duration: 1 Month
இல்லத்தரசிகளுக்கான ஆரம்ப கணணிக் கல்வி
(இன்றைய தொழிநுட்ப BIJ60LDITIB )6)6O6)(53
கணணி பற்றி இணையம் பற்றி அறிந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டயாமாக இருக்கின்றது. இலகுவான விளக்கங்களுடன் இல்லத்தரசிகளுக்காக விசேடமாக
வடிவமைக்கப்பட்ட பாடநெறி இதுவாகும்)
Head Office; #67, Kawdana Road, Dehiwala, Tel:(11)5522188 |5522488 |2729557,
D Fax: (11)2712149 S E-mail: infoGibslanka.com, Web: www.ibslanka.com PUS
Branches: No, 524/M/M, Peradeniya Road, Kandy, Tel: (81) 5636377 No. 464, Main Street, Negombo, Tel; (31) 5677288

Page 3
-->حیرہ) (البر
நல்லறிவுடையோரே! கிஸாஸில் (அநியாயமாக செய்யப்பட்ட குற்றச் செயலுக்கு நியாயமான முறையில் அது போன்றதொரு தண்டனை வழங்குவதில்) உங்களுக்கு வாழ்வுண்டு. (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களைத் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.” (2: 179)
அல்குர்ஆ
இதழ் 05
மே 2011 ஜூஅல்ஊலா-ஐ.அல்ஆகிரா 1432 :
SSN. 1391 - 460X
உள்நாடு தனிப் பிரதி ரூபா 40.00 வருட சந்தா ரூபா 500.00 ஆறு மாதம் ரூபா 300.00
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு சிங்கப்பூர் 100.00
மத்திய கிழக்கு நாடுகள்: 1400.00
இங்கிலாந்து நியூசிலாந்து அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா
15OOOO
ஐக்கிய அமெரிக்க நாடுகள்: 1800.00
藝藝王羲
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு: அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி:0) 2689324 தொலைநகல் (0) 2686030 666,6065656), alhasanath(Ogmail.Com Q60600TLigório WWWalhasanath.net
}
&
较※
 
 

o Giant Ggin
بسم (نانک (رحم
* விளக்கம் பில் திஸாலிஹயாதுன்
វិញ្ច្រាមើ)
விளக்கம்) தூய நோக்குடன் கட்டிய கல்வித் தேடல் சுவனம் செல்ல வழிவகுக்கும்
ee eO eOe OO OO B S y y m L YS SY B O OO m mS
களம் ) நீளும் வாளை விட
சாரும் "நா" கொடியது
. .
ர். இப்போது உங்கள் பக்கம். 12-13
வின்றித் தொடரும் லிபிய புத்தம் 14-15
ព័ទ្ធិ ប៊ិញយការណ៍ថា. 16-18
லாற்றுப் படிப்பினை. 19-21 மை நம்பிக்கையும். 32-34 បំពាំ ២២ធ្នាំ. as-siz
ញញើញ flយព្រួញយ៉ាងពិតបំ វិញ្ញាចារិកាំ. 38-39
மருத்துவத் துறையில். 44-45
@ិញញ់
3O-3
க்கு வராத கதை 議22-25
நனை சாக்குப்போக்குகளா? 嚢26
கைக்குASANT என்ற பெயருக்குine/ce எடுத்து னக் குறிப்பிட்டு அனுப்பவும்
నిఖsభsts (్య లి$$
Sణ్యక్షఖ్య నీళుక్య భ్వీల్ల N

Page 4
இலங்கை தென்கிழ
BBA B-C
தமிழ் 01 ஆங்க
HATTUTTON = NUWARA =
O3 LaTu_nu5GrTaు சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிவாரிப்பட்டப்படிப்பைத் தொடர்வது இறுதி சந்தர்ப்பம் இவ்வருடம் மட
திவுகளுக்கு முந்திக் ெ
மிகக் குறுகிய கா
தொழில்சார் க
ଚୁଁ &#g_ediry ତୋ
Duration: 06 Days Course Fee: 6500/= (
Free JAWA TERNE
: No.23: sautumaca Fe
కూతూళ్లలిగి چھی بیU
కజఖ్సక్టోజ్వణుని ఇల్లా
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2க்கு பல்கலைகழகத்தின்
நில மொழி முலம் ளர்களால் சனி அல்லது ஞாயிறு தினத்தில்
AVTALE E = \VZAVAZUTNYA, RUNEGALA -- PUTTALAM LIYA -- BANDARAvE LA
| III a. aug 65 ani
O777 71 71 29
| 0718 57 07 Og
RESIDENTIAL COURSE வதிவிட பாடநெறி
ENGINEERING Cec Networking
லத்தில் Computer திருத்துனராக
ல்வியென்றை பெற்றுக் கொள்ள
வடிவமைக்கப்பட்ட பாடநெறி
உணவு தங்குமிட வசதி அடங்கலாக)
E-MAIL COURSE

Page 5
முன்மாதிரி முஸ்லிம்க
நமது நாட்டில் ஆ அரசியல் போராட்டம் மத்தியில், நீறுபூத்த நெ( அரசியல் தலைமைகள் இலட்சியம் என்பதுபே
எமது நாட்டின் இ ஆயிரம் ஆண்டுகளுக்கு பகைமைக்குத் தொடர் போவதில்லை” என்பை எமக்குப் போதுமானதா
ஒரு நாடு முன்னேற நேர்மையான ஆட்சிமு: அவர்களின் அரசியல் த சாத்தியமாகாது.
எனவே, ஐக்கியத்தி வேண்டும். யுத்தத்திலே முற்பட்டால் அது ஐக்கி ஐக்கியத்திற்காக குரல்ெ ஆகப்போவது ஒன்றுமி
பான்கிமூன்கள் வர நடவடிக்கைகள் நமது ந நாம் நம்பினால், நம்பை திருகுதாளங்களுக்கு ஒத் முளைத்தவையே அவர் ஆப்கானிஸ்தான், லிபிய
உள்ளன.
மனிதப் படுகொை குழந்தை. ஆனால் தமது போராடிவரும் பலஸ்தீ கொல்லப்பட்டால், அ. விட்டால் முழு உலகை அவர்களது மனித நீதி; தலைவர்களுக்கு நாம் வ தேவையான கொள்கை தலைமைகளின் தாரக ட
இன்று அரசில், அ நிலையில், தமக்குள் 6ெ அரசுக்குள்ளிருந்து செய ஐக்கியமான, நீதியான, அழைத்துச் செல்ல வே என்றாவதொரு நாள் மு மக்களால் போற்றப்படு

ஆசிரியர் கருத்து
சமூகமாக ள் மாறுவதெப்போது?
புதப் போராட்டம் முற்றுப்பெற்று விட்டாலும், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமூகங்கள் நப்பாக பகைமை புகைந்து கொண்டிருந்தாலும், அதனை ஊதிப் பற்றவைத்துக் கொண்டிருப்பதே தமது ால் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
னப் போராட்டம் இன்று நேற்றுத் தோன்றியதல்ல. அது மேலாக இருந்து வரும் ஒன்றே. எனவே, "இந்தப் தும் நீர்பாய்ச்சி வருவதால் ஒன்றும் ஆகிவிடப் த நாம் கற்றுக் கொள்ள இந்த ஆயிரம் ஆண்டு வரலாறே
கும.
) வேண்டுமானால் அங்கு சமாதானம், சமத்துவம், நீதி, றை அவசியம். இவற்றைக் கொண்டுவருவதில் மக்களும் லைமைகளும் ஒன்றுபட்டு உழைக்காதவரை இது
ற்கான கொள்கை போதிக்கப்பட்டு மேலாதிக்கம் பெற பிடிபட்ட கைதிகளாக பிற சமூகங்களை நடத்த யத்துக்கு வேட்டு வைத்து விடும். அதேபோன்று, காடுப்போரை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதாலும்
OGö)).
லாம், பராக் ஒபாமாக்கள் வந்து போகலாம். இவர்களது ாட்டு மக்கள் மீது இரக்கம் கொண்டு நகர்த்தப்படுவதாக ப் போன்ற முட்டாள்கள் இருக்க முடியாது. தங்கள் துவராத தலைமைத்துவங்களை தண்டிப்பதற்காக களது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள். ஈராக், ா என நடைமுறை உதாரணங்கள் இதற்கு சான்றுகளாய்
லகளை அரங்கேற்றிவரும் இஸ்ரேல் அவர்களது செல்லக்
நாட்டையே இழந்து அதனை மீட்பதற்காகப் னர்கள் பயங்கரவாதிகள்! ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் து தவிர்க்க முடியாதது; தமது நாட்டில் ஒன்று நடந்து யுமே அழிக்கப் புறப்பட்டு விடுகிறார்கள். இதுதான் ஒரக்கண் பார்வை. இந்தப் போக்கிரித்தனமான உலகத் பிலை போய்விடாமல், நமது நாட்டைக் கட்டிக் காக்கத் களை வகுத்துச் செயல்படுவதே நமது அரசியல் மந்திரமாக இருத்தல் வேண்டும்.
னைத்து முஸ்லிம் கட்சிகளும் தஞ்சமடைந்திருக்கும் வட்டுக் குத்துக்களை வளர்த்துக் கொள்ளாமல், பல்படும் தீவிரவாத அமைப்புகளை வழிப்படுத்தி, சமத்துவமான ஒர் ஆட்சியை நோக்கி அனைவரையும் ண்டும். இதனால் இன்றில்லா விட்டாலும், |ஸ்லிம் சமூகத்தின் சமாதானப் பணிகள் இந்நாட்டு ம், இன்ஷா அல்லாஹ்!
அல்ஹஸனாத் மே 201
y.&#ఖTw.####gt t43

Page 6
“நல்லறிவுடையோரே! கிஸாஸில் (அநியாயமாக செய்யப்பட்ட குற்றச் செயலுக்கு நியாயமான முறையில் அது போன்றதொரு தண்டனை வழங்குவதில்) உங்களுக்கு வாழ்வுண்டு. (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.” (2: 179)
சமகாலத்தில் மனித உரிமைகள் எனும் வார்த்தை, அசத்தியத்தை நோக்கமாகக் கொண்டு பேசப்படும் சத்தியம் சார்பான வார்த்தைகளில் ஒன்றாக மாறி உள்ளது. இஸ்லாமிய உலகெங்கும் ஷரீஆவின் வரம்புகள் (ஹ"தூத்) நிலைநாட்டப்படும்போதும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதும் இவ்வார்த்தை உலகெங்கும், குறிப்பாக மேற்குலகில் சூடுபிடிக்க ஆரம்பித்து விடுகின்றது. இலங்கை பணிப் பெண் ரிஸானாவுக்கு சஊதி அரேபியாவில் கிஸாஸின் அடிப் படையில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டதும் எழுந்து நின்ற உலகம், இன்னும் உட்காரவில்லை. கண்டனப் பேரலைகளும் எதிர்ப்புக்களும் ஆர்ப்பாட்டங்களும் இன்னும் ஓயவில்லை. சர்வதேச ஊடகங்களில் மீண்டும் இவ்விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் இலங்கை முஸ் லிம்கள் சிலரும் பங்கு கொண்டிருந்தனர். ரிஸானாநபிக் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி அல்லது விடுவிக் கப்பட வேண்டிய நிரபராதி என்பதை விளக்குவதோ விவாதிப்பதோ எமது நோக்கமல்ல. மாறாக, ஷரீஆ வகுத்துள்ள குற்றத் தடுப்பு வரம்புகளுக்கெதிராகக் குரல் கொடுக்கும் அதிகாரம் எவருக்குமில்லை என்பதனை வலியுறுத்துவதே எமது நோக்கமாகும். அவர் தண்டிக் கப்பட வேண்டிய குற்றவாளியாக இருப்பின் அவரை மன்னித்து, விடுவிக்கும் அதிகாரம் தீர்ப்பை வழங்கிய நீதிபதி கையிலோ, நாட்டை ஆளும் மன்னர் கையிலோ இல்லை என்பதை நாம் புரிந்து கொள்வது அவசிய மாகும்.
அது பாதிக்கப்பட்ட குழந்தையின் நெருங்கிய இரத்த
அல்ஹஸனாத் மே 2011
ge.9teereois-ase.9isoft 1432
 
 

உறவுப் பாதுகாவலர்களாகிய PU وئي என்று அழைக்கப் படும் பெற்றோர் கையில் மாத்திரம் உள்ள அதிகாரம் என்பதனை நாம் புரிந்து கொள்வதும் அவசியமாகும். இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களோ கண்டனங்களோ ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை. அவர் விடுவிக் கப்பட வேண்டிய நிரபராதி என்றால் அவரை விடுவிப்ப தற்கு பல வழிமுறைகள் உள்ளன என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது.
“அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் உயிரையும் நியாயமான அடிப்படையிலன்றி நீங்கள் கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப் பட்டு விட்டால், அவருடைய பொறுப்பாளருக்கு (கிஸாஸ் எடுக்கவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம். ஆனால், கொலையி(ன் மூலம் கிஸாஸ் எடுப்பதி)ல் வரம்பு கடந்துவிடக் கூடாது. நிச்ச யமாக (கொலையுண்டவரின் பொறுப்பாளர் நீதியைக் கொண்டு) உதவி செய்யப்பட்டவராவார்.” (17.33)
இம்மாத அல்குர்ஆன் விளக்கத்திற்கான தலைப்பை அரபு மொழி மூலம் தேர்ந்தெடுப்பதற்கான நோக்கம் புனித அல்குர்ஆன் உள்ளடக்கியுள்ள அரபு மொழி அணி இலக்கண அற்புதத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒர் உதாரணத்தின் மூலம் முன்வைப்பதன் ஊடாகப் புனித அல்குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட அரபு மொழியைக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதா கும். ஓர் இடைச் சொல்லோடு இரு பெயர்ச்சொற்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ள “டிே JPLi " ldo கிஸாஸி ஹயாதுன் எனும் பிரயோகம் ஸஇரதுல் பகறாவின் 179ஆம் வசனத்தின் ஒரு பகுதியாகும்.
"கிஸாஸை நிறைவேற்றுவதில் வாழ்வு உண்டு” எனும் அர்த்தத்தைப் பொதிந்துள்ள இச்சிறு வசனத்தில் அனைத்து விதமான குற்றச்செயல்களுக்குமுரிய தண்ட னைகளும் தண்டனை வழங்கப்பட வேண்டிய வழி முறையும் தண்டனை வழங்கப்படுவதற்கான இலக்கும் அற்புதமாகவும் ஆழமாகவும் விளக்கப்பட்டுள்ளமை இவ்வசனத்தில் பொதிந்திருக்கும் மொழிfதியான மிகப் பெரிய அற்புதமாகும். அல்லாஹ"த் தஆலா இவ் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துவதற்காக இரண்டு பெயர்ச்சொற்களை மாத்திரம் பிரயோகித்திருப்பது அறி வுக் கண்களை வியக்கவைக்கும் மிகப் பெரிய அற்புத மாகும்.

Page 7
இவ்விரு அறபுச் சொற்களின் அகராதி ** /القصاص அர்த்தத்தை உற்று நோக்கினால் ஒன்று மற்றொன்றுடன் நேர்மாறான அல்லது எதிர்க் கருத்தைக் கொண்டிருப் பதை அவதானிக்க முடியும். தமிழில் "மரணத்தில் வாழ் வுண்டு' என்று கூறுவதைப் போன்று இது இடம் பெற்றுள்ளது.
எனும் சொல் மரண தண்டனை அல்லது القصاصي பழிவாங்குதல் எனப் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டி ருப்பது பொருத்தமற்றது. U-23 எனும் சொல் (வி எனும் மூலச்சொல்லிலிருந்து பிறந்தது. இதன் அகராதிக் கருத்து, நடந்த சம்பவத்தை அவ்வாறே முன்வைத்தல், அடிச்சுவட்டை அவ்வாறே பின்பற்றல் என்பனவாகும்.
ஷரீஆவில் கிஸாஸ் எனும் சொல்லுக்கு, "அநியாய மாக செய்யப்பட்ட குற்றச் செயலுக்கு நியாயமான முறையில் அது போன்றதொரு தண்டனை வழங்குதல்" என பொருள் கொள்ள முடியும். எனவே, கிஸாஸ் எனும் சொல் கருத்தில் பழிவாங்குதல் எனும் கருத்தில் மொழிபெயர்க்கப்படுவது பிழையானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரபு மொழியில் :ே-ே எனும் சொற்களே பழிவாங்குதல் என்பதைக் குறிக்கும் சொற்களாகும்.
தண்டனை வழங்கும் விடயத்தில் புனித அல்குர் ஆனில் இவ்வாறான சொற்பிரயோகங்கள் எங்கும் இடம்பெறவில்லை. எனவே, பழிவாங்குதல் ஷரீஆவில் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத ஒன்று என்பதையும் கிஸாஸ் மாத்திரமே ஷரீஆவில் அங்கீகரிக்கப்பட்டுள் ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த சொல்லா கிய خياة எனும் சொல்லின் அர்த்தம் வாழ்வு என்பதா கும். எனவே, “டிே Jai ஆ” என்பதன் அர்த்தம் கிஸா ஸில் வாழ்வுண்டு என்பதாகும். கிஸாஸை நிறைவேற்று வதில் குற்றவாளியின் மரணம் உள்ளதே தவிர வாழ்வில் லையே? என எவரும் வினவ வாய்ப்புண்டு. அதற்கான பதிலை பின்வருமாறு விளக்க முடியும்:
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அநியாயமாகக் கொலை செய்ய நாடும்போது, கிஸாஸின் அடிப்படை யில் அவனும் மரணத்தைச் சந்திக்க நேரிடும் என்பது ஞாபகம் வந்தால் கொலை முயற்சியை விட்டுவிட்டு தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பான் என்பது சந்தேகத்துக்கிடமில்லாத ஒன்றாகும். அத்தோடு கிஸாஸ் அமுலில் உள்ள இடங்களில் கொலை செய்வ தற்கு எவருக்கும் துணிச்சல் வராத காரணத்தால் அனை
 
 
 

அல்குர்ஆன் விளக்கம்
வருக்கும் பாதுகாப்பான சூழலில் வாழும் வாய்ப்பு வழங்கப்பட்டு, உயிர்களுக்கான உத்தரவாதம் வழங்கப் படுவதனால் கிஸாஸில் வாழ்வுண்டு என அல்லாஹ"த் தஆலா குறிப்பிட்டிருக்கக் கூடும்.
ஜாஹிலிய்யக் காலத்து அரேபியர் அரபுமொழி அணி இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். அதில் முன்னோடிகளாகவும் இருந்தனர். புனித அல்குர்ஆனில் எனும் வசனம் இறக்கி வைக்கப்படுவ ’3 القعناصري خياة" தற்கு முன்னர்ஜாஹிலிய்யாக் காலத்தில் கூறப்பட்டிருந்த “:ம் ஃபூர்” (கொலை கொலையை மிகவும் தடுக்கவல் லது) எனும் வாக்கியம் அரபிகளை மிகவும் கவர்ந்திருந் தது. குறைந்த எண்ணிக்கையிலான எழுத்துக்களைக் கொண்டுள்ள இவ்வசனம் ஆழமான அர்த்தத்தை உள்ள டக்கிருப்பதனால் இதனை ஒர் அற்புதமான வார்த்தை யாகக் கருதி வந்தனர்.
ஆனால், புனித அல்குர்ஆனில் "في القصاصي خياة " எனும் வசனம் இறக்கி வைக்கப்பட்ட பின்னர் இரண்டுக் குமிடையில் உள்ள வேறுபாட்டை மொழி ரசனையுள்ள அரேபியர் புரிந்து கொண்டனர். அரேபியர் பெருமைப் பட்ட வார்த்தை குர்ஆனிய வசனத்தை விடவும் எழுத்துக் களால் கூடியதாக இருந்த போதிலும் குறுகிய அர்த்தத் தைக் கொண்டதாகவே இருந்தது. குறைந்த எண்ணிக் கையிலான எழுத்துக்களைக் கொண்டுள்ள குர்ஆனிய வசனம் ஆழமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. குர்ஆன் வசனத்தில், காயப்படுத்துவது முதல் கொலைக் குற்றம் வரையிலான எல்லா விதமான குற்றச் செயல் களுக்குமான பரிகாரம் அல்லது தண்டனை பற்றிப் பேசப்பட்டுள்ள அதேவேளை, தண்டனை நிறைவேற்றப் பட வேண்டிய விதமும் வழிமுறையும் கிஸாஸ் எனும் சொல்லில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதாவது, குற்றச்செயலுக்கு பொருத்தமான தண் டனை மாத்திரம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு "கிஸாஸில் வாழ்வுண்டு” என்பதில் கிஸாஸ் நிறைவேற்றப்படுவதன் இலக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான எந்தவோர் அர்த்தத்தையும் அரேபியர்கள் பெருமைப் பட்டு வந்த "கொலை, கொலையை மிகவும் தடுக்க வல் லது” எனும் பிரயோகத்தில் கண்டுகொள்ள முடியாது. எந்தக் கொலை எந்தக் கொலையைத் தடுக்கும் எனும் தெளிவு இதில் இல்லை. தண்டனை வழங்கப்பட வேண் டிய வழிமுறையும் தண்டனைக்கான இலக்கும் இதில் விளக்கப்படவில்லை. ஒருவனுக்காகப் பத்துப் பேரை மாத்திரமல்லாமல் பல்லாயிரக்கணக்கானோரைக் கூட
அல்ஹஸனாத் மே 2011 5. ஜு,அல்லை.ஐ.அல்ஆகிரா 1432

Page 8
அல்குர்ஆன் விளக்கம்
கொன்று குவிப்பதை இது தடுப்பதாக இல்லை. கொலைக் குற்றத்துக்கான பரிகாரம் மட்டுமே இதில் பேசப்பட்டுள்ளது. ஏனைய குற்றச் செயல்களுக்கான பரிகாரம் இதில் இல்லை.
இவ்வாறு இறை வாக்கியத்துக்கும் மனித வார்த் தைகளுக்குமிடையிலான வேறுபாடுகளை இச்சிறு வாக்கியத்தின் ஊடாக நாம் புரிந்து கொள்வதன் மூலம், புனித அல்குர்ஆனின் மொழிரீதியான அற்புதத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த வகை அற்புதத்தைப் புரிந்து கொண்ட இஸ் லாத்தின் பரம விரோதிகளில் ஒருவனாகிய வலீத் பின் முகீரா புனித அல்குர்ஆனை பின்வருமாறு வர்ணிக் கின்றான்:
“நிச்சயமாக அதற்கென தனியான அழகும் இனிமையும் உண்டு. அதன் மேற்பகுதி கனி கொடுக்கக் கூடியதாகவும் அதன் கீழ்ப்பகுதி செழிப்பானதாகவும் உள்ளது. அது உயர்ந்து கொண்டே செல்கின்றது. அதனை எதுவும் மேலோங்கவும் மாட்டாது.”
இது ஈமானின் சுவை உள்ளத்தில் இடம்பிடித்திராத இஸ்லாத்தின் பரம விரோதிகளில் ஒருவனின் சாட்சிய மாகும். ஈமானின் சுவை உள்ளத்தில் இடம்பிடித்த நாம், புனித அல்குர்ஆனில் வலீத் கண்டு கொண்டதைக் கண்டறிந்துள்ளோமா?
நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள வசனத்திற்கு முன் இடம்பெற்றுள்ள வசனத்தில் அல்லா ஹ"த் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
“ஈமான் கொண்டோரே! கிஸாஸ் உங்கள் மீது விதிக் கப்பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு (கொலை செய்த) அவனுக்கு அவனது (சகோதரனாகிய கொலை யுண்டவனின் உறவினர்களால்) ஏதும் மன்னிப்பு வழங் கப்படுமானால், நேர்மையான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) உயிரிட்டுத் தொகையை கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும் நன்றியறித லுடனும் செலுத்திவிடல் வேண்டும். இது உங்கள் இறை வனிடமிருந்து கிடைத்த சலுகையும் கிருபையுமாகும். ஆகவே, இதன் பிறகு (உங்களில்)யார் வரம்பு மீறுகிறாரோ அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.” (2:178)
கிஸாஸின் அடிப்படையில் ஒருவன் தண்டிக்கப்படு வதை நாகரிகமற்ற, காட்டுமிராண்டித்தனமான தண்ட னையாக இன்றைய அறிவியல் உலகம் பார்ப்பது அறிவி யல் உலகை மூடியுள்ள அறியாமையின் வெளிப்பாடா கும். நல்லறிவுடையோரை அழைத்தே அல்லாஹ"த் தஆலா கிஸாஸின் செய்தியை முன்வைத்துள்ளான். அநியாயத்துக்கு நியாயம் வழங்குவது எப்படி காட்டு மிராண்டித்தனமாக ஆக முடியும்? பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயம் வழங்கப்படாவிடின் அது அவர்களைப் பழிவாங்கவேதுரண்டும். அடிமைக்கு சுதந் திரமானவனையும் பெண்ணுக்கு ஆணையும் தாழ்ந்தவ னுக்கு உயர்ந்தவனையும் பழிவாங்கும் மனோநிலையில்
அல்ஹஸனாத் மே 2011
ஜு.அல்ஊலா-ஈர்.அல்ஆகிரா 甘ぶ雲32
 

அரேபியர் இருந்தனர். இது மாத்திரமல்லாமல் கொலை செய்யப்பட்ட ஒருவனுக்காக ஒரு கோத்திரத்தையே அழித்துப் பழிவாங்கும் மனோநிலையில் அரேபியர் வாழ்ந்த ஒரு சூழலிலேயே புனித அல்குர்ஆன் இறக்கி
வைக்கப்பட்டதை நாம் மறந்து விடக்கூடாது.
கிஸாஸ் நிறைவேற்றப்படுவதற்குரிய இறுதி அனுமதி யையும் அங்கீகாரத்தையும் அல்லாஹ"த் தஆலா பாதிக்கப்பட்டவனின் உறவினர்கள் கையிலேயே வைத்துள்ளான். எனவே, அவர்கள் கிஸாஸை நிறை வேற்ற நாடினால் கிஸாஸ் நிறைவேற்றப்படும். உயிரீட் டுத் தொகையைப் )دية( பெற்று மன்னித்துவிட அல்லது எதையும் நஷ்டஈடாகப் பெறாமல் பெருந்தன்மை கொண்டு மன்னித்து விடவும் முடியும். இதுவே நீதிமிக்க நியாயமான தீர்ப்பாகும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட வனின் உறவினரின் உள்ளங்களில் குற்றவாளிக்கெதிராகக் குடிகொண்டுள்ள குரோதமும் வெறுப்பும் முற்றாக அகற்றப்பட்டு, பழிவாங்கும் மனோநிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுகின்றது.
இது ஷரீஆ முன்வைக்கும் கிஸாஸின் மூலம் மாத்திரமே சாத்தியமாகும். இதற்கு மாற்றமாக சமகால உலகில் குற்றவாளிக்கு வழங்கப்படும் பல வருடகால சிறைத் தண்டனை, ஆயுட்கால சிறைத் தண்டனை போன்ற தண்டனைகள் மூலமாக இவ்வாறானதொரு சுமுக நிலையை ஒருபோதும் சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியாது. நல்லறிவுடையோரை அழைத்தே அல்லா ஹ"த் தஅபூலா கிஸாஸைப் பற்றிய தெளிவை முன் வைத்துள்ளான். ஷரீஆ விதித்துள்ள கிஸாஸ் நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான தண்டனை என ஒருவர் கூறுவாராயின் அது அவரது அறியாமையாகும். கிஸாஸ் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிமுகப்படுத்திய புதிதான ஒன் றல்ல என்பது மனித உரிமைகள் எனும் பெயரால் அசத் தியத்தை நிலைநாட்ட நாடுபவர்களுக்குத் தெரியாமல் இருப்பது வியக்கத்தக்க விடயமாகும்.
"அவர்களுக்கு நாம் அ(த்தவ்ராத்)தில், உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கு(ச் SFLDID fT6. f காயங்களாகவும்) நிச்சயமாக கிஸாஸ் வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (கிஸாஸ் வாங்குவதை) மன்னித்து தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த வேதக் கட்டளைப்)படிதீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!? (5: 45)
இங்கு கிஸாஸ் தொடர்பான சட்டங்களை விளக்கு வது எமது நோக்கமல்ல. மாறாக, புனித அல்குர்ஆனில் மொழிரிதியாகக் காணப்படும் கடல் போன்ற அற்புதத் திலிருந்து ஒருதுளியை வாசகர்களுக்காக முன்வைக்கவே முயற்சித்துள்ளோம். புனித அல்குர்ஆன் இறக்கிவைக்கப் பட்ட அரபு மொழியைக் கற்பதற்கு இது ஆர்வத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

Page 9
தூய நோக்குடன் சு சுவனம் செல்ல
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::()
நபி (ஸல்லல்லாஹ0 அலைஹி வஸல்லம்) திருப்திப்படுத்தும் வகையில் தேடப்பட 6ே ஒன்றினை அடைந்து கொள்வதற்காக ஒருவ கூட நுகர மரட்டார்." (முஸ்னத் அஹ்மத், எ
:::::::::::::::::::......:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::()
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி
கல்வித் தேடலின் உன்னத நோக்கத்தை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. கல்வியறிவு இறைவனி லிருந்து ஊற்றெடுக்கிறது. இவ்வுலகில் தோன்றி மறைந்த அறிஞர் பெருமக்கள், விஞ்ஞானிகள், மேதாவிகள், மெஞ்ஞானிகள் அனைவரதும் கல்வியறிவின் விசாலத் தின் தன்மையை அல்லாஹ்வின் அறிவு ஞானத்துடன் ஒப்பிடுகின்றபோது மனித அறிவு என்பது ஒரு துளி நீருக்கு ஒப்பானதாகும்.
“அவனது அறிவில் அவன் நாடிய சொற்ப அளவைத் தவிர அவர்கள் வேறெதையும் சூழ்ந்தறிந்து கொள்ள DIT LITries56ir. ” (2:255)
^ல்லாஹ்வினால் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு துளி அறிவு பாரியதோர் அமானிதமாகும். அதனை அவன் கட்டளையிட்ட பிரகாகரம் தேடுவதும் அதனைப் பிரயோகிப்பதும் அவனுக்கு நாம் செய்கின்ற நன்றிக் கடனாகும். அல்லாஹ் கல்வியறிவின் அடைவு மட் டத்தை உலகத்துடன் வரையறுத்து விடாமல் சுவனத் தாயகம் வரை உயர்த்தி வைத்துள்ளான். அதிலும் அவ னது திருப்தியை சம்பாதித்துக் கொள்ளுதல் அதனது உச்ச நிலையாகும்.
பொதுவாக கல்வியறிவின் உயர் இலக்கு உலகத்துடன்
 

ஹதீஸ் விளக்கம்
X醬
வழிவகுக்கும்
() ()::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வைத் பண்டிய கல்வியறிவை உலகியல் நோக்கம் Iர் தேடினால் அவர் சுவனத்தின் வாடையைக் Uனைனு அபீதாவூத், ஸனனு இப்னிமாஜா)
() ()::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
வரையறுக்கப்படுகிறது. கல்வியறிவைத் தேடி பட்டம் பெற்று, உத்தியோகம் செய்து சமூக அந்தஸ்துடன் வாழு தல் என்பது தணியாத தாகமாக சிறு வயது முதல் மனதில் ஆழப் பதிக்கப்பட்டு வருகிறது. இங்கு இறைவனைத் திருப்திப்படுத்துதல், கல்வியறிவின் ஊடாக சுவனப் பாதையில் கால் பதித்தல் என்பன மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன. தூய நோக்கும் நல்லெண்ணமும் சகல வகையான வணக்க வழிபாடுகளையும் உலக விவகாரங் களையும் நெறிப்படுத்துகின்றன. ஒர் இபாதத் அல்லது ஒரு செயற்பாடு நேர்த்தியானதாகவும் சீரானதாகவும் கச்சிதமானதாகவும் நிறைவடைந்து முழுப் பயனைத் தருவதற்கு தூய நோக்கு இன்றியமையாததாகும்.
பள்ளிவாசலுக்கு வந்து தொழுகையை நிறைவேற்று கின்ற முஸ்லிம் "அல்லாஹ்வுக்காக" என்ற தூய எண் ணத்தை தொழுகை நிறைவடையும் வரை பேணிப் பாது காத்திட முயற்சிக்கின்றான். இந்த சிரேஷ்டமான நிலையை அடைவதற்கு அவன் அமைதியாக நின்று சுஜூது செய்கின்ற இடத்தை நோக்குகின்றான். அவனது சிந்தனையையும் எண்ணங்களையும் குவித்து ஒருமுகப் படுத்த பெரும் சிரத்தை எடுத்துக் கொள்கிறான். இறுதி யில் தரமான தொழுகை ஒன்றை நிறைவேற்றி முடிக்கிறான். இறைவனைத் திருப்திப்படுத்திய மனநிறைவு அவனுக்கு ஏற்படுகிறது. தூய எண்ணத்துக்கு கிடைக்கின்ற பெறுபேறு இதுதான். இத்தகைய தொழுகைகளின்
அல்ஹஸனாத் மே 2011
A. ஐ.இல்ஐைலாத,அல்ஆகிரா 1432

Page 10
எண்ணிக்கை அதிகரிக்கின்றபோது சமூகத்தின் தரம் உயர்ந்து ஆரோக்கியமான மாற்றம் ஏற்படுமல்லவா?
தொழுகையில் ஒரு முஸ்லிம் தூய எண்ணத்தை வர வழைத்துக் கொள்வது போல் ஏனைய எல்லா செயற்பாடு களிலும் முஸ்லிம் இந்த எண்ணத்தைப் பேணிப் பாது காத்து வந்தால் அந்த செயற்பாடுகளிலும் அவன் உயர்ந்த தரத்தை அடைய முடியும். கல்வித் தேடலிலும் தூய எண்ணம் பேணப்படுகின்றபோது கல்வியின் விளைவும் ஆரோக்கியமானதாக அமையும். கல்வித் தேடலில் இறைவனைத் திருப்திப்படுத்துதல் என்பது விரிவான விளக்கத்தை வேண்டி நிற்கின்ற ஒர் அம்சமாகும்.
அதாவது நாம் தேடுகின்ற கல்வி வஹியின் கல்வியாக இருந்தாலும் அல்லது அதன் மீது நிறுவப்படுகின்ற உலகி யல் கலையாக இருந்தாலும் அது எம்மை சுவனப் பாதை நோக்கி நகர்த்த வேண்டும். ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை கல்வியறிவு வளர்த்திட வேண்டும். இஸ் லாமிய கலாசாரத்தைத் தூண்டுவதற்கான அகத்தூண்டு தலை நமது கல்வி தந்திட வேண்டும். மனிதநேயம், சமூ கப்பற்று, சமூகப் பிரக்ஞை போன்ற உயர் விழுமியங்களை கல்வி நமக்குள் வளர்ந்தோங்கச் செய்ய வேண்டும். நமது உள்ளத்தின் ஆழத்தில் இறை நம்பிக்கையையும் இறையச் சத்தையும் அது வளர்த்து பராமரித்திட வேண்டும். நாம் பெறுகின்ற கல்வி சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும். இவ்வாறு கல்வித் தேடலில்துய எண் ணத்தின் பரப்பு விசாலித்துச் செல்கிறது.
இத்தகைய தூய எண்ணத்துடன் கூடிய கல்வித் தேடலே பயனுள்ள கல்வித் தேடலாகும். பயனுள்ள கல்வியையே இறைத் தூதர் இறைவனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். “யா அல்லாஹ்! உன்னிடம் பயனுள்ள அறிவைக் கேட்கிறேன்” என அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஒரு முஸ்லிமின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிய கல்வி பயனற்ற கல்வியாகும்.
"தான் கற்ற கல்வியால் பயனடையாத அழைப்பாளன், நரகப் பெரு நெருப்பின் சொந்தக்காரனாக மாறி விடுவான். நரகில் இருக்கும் அழைப்பாளன் தனது குடல்களை வெளியே எடுத்துக்கையில் பிடித்துக்கொண்டு செக்கில் சுற்றும் மிருகம் போல் சுற்றுவான். அப்போது ஏனைய நரகவாசிகள் அவ னைச் சூழ நின்று கொண்டு நீ உலகில் நன்மையின்பால் அழைப்பு விடுத்தாய், தீமையைத் தடுத்தாய், உனக்கு ஏன் இந்தத்தண்டனை? எனக் கேட்பார்கள். அதற்கவன், உண் மைதான்!நான்நன்மையின்பால் மக்களை அழைத்தேன்; அந்த நன்மையை நான் செய்யவில்லை. தீமையைத் தடுத்தேன்; அதே தீமையை நான் செய்து வந்தேன், என பதிலளிப்பான்” என நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)
ஆம்! இந்த அழைப்பாளன் இவ்வுலகில் வாழ்ந்த காலங் களில் இறைவனைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் அறிவைத் தேடவில்லை. நற்செயலுக்கு வழிவகுக்காத அறிவையே அவன் தேடியுள்ளான். அதுவே பயனற்ற அறிவு. இத்தகைய அறிவிலிருந்து நபி (ஸல்லல்லாஹ"
eൺട്ലണ്ഡങ്ങ് കോ 2む彗 ஐ.அல்ஊலா-ஜு.அல்ஆகிரா 1432

அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனிடம் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள். "யா அல்லாஹ் பயனற்ற அறிவிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.”
வெறுமனே மனிதர்கள் சடவாத இலக்குகளை அடைந்து கொள்கின்ற ஊடகச் சாதனமாக மட்டுமே கல்வியறிவைப் பயன்படுத்துகின்றனர். இவர்களது கல்வித் தேடலுக்கு ஒரு கரையிருக்கின்றது. அதுதான் பதவி, பட்டம், அந்தஸ்து, உழைப்பு, உத்தியோகம், சமூக அங்கீகாரம்! ஆனால், ஒர் இறை விசுவாசியின் கல்வித் தேடல் இவற்றைத் தாண்டி சுவனம் வரை நீண்டு செல்கிறது. அதுவே ஒரு முஃமினின் தணியாத தாகமாக அமைய வேண்டும் என்பது நபி வாக்காகும். ஒரு முஃமின் தனது இறுதி முடிவிடம் சுவனமாக அமையும் வரை கல்வியறிவு எனும் நற்பாக்கியத்தைப் பெற்று விட்ட திருப்தி அவனுக்கு ஏற்படுவதில்லை என நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அத்திர்மிதி)
அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தை முழுமையாகத் தவிர்த்துக் கொண்டு புகழையும் பிரசித்தத் தையும் தற்பெருமையையும் கீர்த்தி நாமத்தையும் இலக் காகக் கொண்டு கல்வித் தேடலில் ஈடுபடுகின்றவர்களும் உலகில் இருக்கின்றனர். இவர்களது இறுதி முடிவிடம் நரகமாக அமையும் என்பதை ஸ"ன்னாவின் ஒளியில் நாம் புரிந்து கொள்ள முடியும். மறுமை நாளில் சமூகப் பணியில் ஈடுபட்ட மூன்று சாராரை அல்லாஹ் நரகில் எறிந்து விடுமாறு மலக்குகளுக்குக் கட்டளையிடுவான். அவர்களில் முதலாமவர் குர்ஆனைக் கற்றுத் தேர்ந்த 'காரிஃ' என தன்னை மக்கள் புகழ வேண்டும் என்பதற் காக குர்ஆனை ஓதிக்காட்டி கற்றுக் கொடுத்த மனிதரா வார். அவ்வாறே அற்பமான தரக் குறைவான வேறு சில நோக்கங்களுக்காக கல்வித் தேடலில் ஈடுபடுகின்றவர்க ளைப் பற்றி நபியவர்கள் இவ்வாறு எச்சரித்தார்கள்.
நபி (ஸல்லல்லாஹ” அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “அறிவீனர்களுடன் தர்க்க வாதம் புரிவதற்கா கவும் அறிஞர் பெருமக்களுடன் போட்டி போடுவதற்காகவும் தன்னை நோக்கி மனிதர்களின் முகங்களை திருப்பும் நோக்குடனும் கல்வி தேடியவனை அல்லாஹற் நரகில் நுழைவித்து விடுவான்." (அத்திர்மிதி)
அறிவீனர்களுடன் தர்க்கம் புரியும் பண்பைப் பிறப்பியல்பாகக் கொண்டவர்கள்தஃவாக் களத்தில் அதி கரித்துள்ளனர். இவர்கள் அல்குர்ஆன் பிரதியின் பக்கங் களைப் புரட்டுவதும் ஹதீஸ் கிரந்தங்களைப் புரட்டி ஆதாரங்களைத் தேடுவதும் தகவல்களையும் தரவுகளை யும் குறிப்பதும் அறிவினர்களைத் தலைகுனிய வைக்கும் நோக்கிலன்றி வேறில்லை. இதன் மூலம் தனது தர்க்கிக் கும் திறனை வெளிக்காட்டிப் பெருமிதம் கொள்கின்றார் கள். இது ஒரு வகையான உள நோயாகும். இவர்களைப் பொறுத்த மட்டில் இது ஒரு விறுவிறுப்பான துறையா கும். தர்க்கிக்க வருமாறு அழைப்பு விடுப்பது இவர்களது பொழுதுபோக்கு அம்சமாகும்.
(39ஆம் பக்கம் பார்க்க)

Page 11
சமூகத்தை நெறிப்படுத்தும் தமது பொறுப்ை
முதாயத்தையோகிராமத்தையோ பித்ன ளைஅங்குஇடம்பெறப்போகின்றபின சீர்கேடுகள்,ஒழுங்கீனங்கள்,கட் உருவாக்குவதில் இத்தகைய
ஸஹீஹ" முஸ்லிமில் பதிவாகியுள்ள இந்த அறிவிப் பைக் கவனமாக வாசியுங்கள். இதனை உஸாமா (ரழியல் லாஹ" அன்ஹ") அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களை ஒரு படையுடன் ஜ"ஹைனா குலத்தைச் சேர்ந்த ஹ"ரைக்கத் கூட்டத் தாரிடம் அனுப்பி வைத்தார்கள். (நாங்கள் அவர்களுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்தோம்) அவர்களில் ஒருவரை நான்தாக்க முயன்றபோது அவர் "avT இலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறினார். எனினும், நான் அவரைத் தாக்கிக் கொன்று விட்டேன். அது என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. நான் இது குறித்து நபி (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கூறிய போது, "லாஇலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகா நீர் அவரைக் கொலை செய்தீர்?" என்று கேட் டார்கள். “ஆயுதத்தைப் பயந்துதான் அவர் அவ்வாறு சொன்னார் அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூறி னேன். அதற்கு அன்னார், "அவர் அதற்காகத்தான் சொன் னார் என்பதை அவரது நெஞ்சைப் பிளந்து பார்த்தீரா?” என்று (கடிந்து) கேட்டார்கள். அந்தக் கேள்வியைத் திரும் பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். எந்தள வுக்கெனில் நான் அன்றைய தினம் இஸ்லாத்தை ஏற்றிருந் தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்குமளவு.
இந்த சம்பவத்தின் அடியாக ஸஅத் பின் அபீவக்காஸ் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் கூறுகிறார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! எந்த முஸ்லிமுடன் நான் இனி போரிடுவதாக இருந்தாலும் இந்த உஸாமா அவருடன் போரிடுகின்ற வரை நான் அவருடன் போரிட மாட்டேன். இதன் பொருள் உஸாமா இனி எந்த முஸ்லி முடனும் போரிட மாட்டார். எனவே, நானும் போரிட மாட்டேன் என்பதாகும்.) அப்போது ஒரு மனிதர் ஸஅது (ரழியல்லாஹ" அன்ஹ" ) அவர்களிடம் "முற்றிலும் (பித்னா எனும்) குழப்பம் நீங்கி அடிபணிதல் அல்லாஹ் வுக்கே என்றாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங் கள்? (8:39) என்று அல்லாஹ் கூறவில்லையா? (எப்படி
 
 
 
 
 
 
 

தஃவா களம்
மீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
நிறைவேற்றமுடியாததலைவர்கள் தங்களது ாவுக்குப்பழக்குகிறார்கள் என்றே பொருள் க்குகள்,பகை உணர்வுகள் தங்கள்,
நீங்கள் போராட்டத்தைக் கைவிட முடியும்?) எனக்
கேட்டார். அதற்கு ஸஅத் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் கடுமையான தொனியில்,
"(ஆம், அல்லாஹ்வுடைய தூதரின் காலத்தில்) 'பித்னா’ எனும் குழப்பம் முற்றாக நீங்கிவிட வேண்டும் என்பதற்காக நாங்கள் (இஸ்லாத்தின் எதிரிகளான, இறை நிராகரிப்பாளர்களுடன்) போரிட்டோம். இன்றோ நீரும் உம் தோழர்களும் (குழப்பம் நீங்குவதற்காகவல்ல) குழப்பம் உருவாக வேண்டும் என்பதற்காகவே போரை விரும்புகிறீர்கள்” என்று கூறினார்கள்.
முஸ்லிம்களுடன் போரிட்டு அவர்களுக்கு மத்தியில் பிளவையும் பிணக்கையும் உருவாக்கி "பித்னாவை' வளர்க்க விரும்புவோர் தமது ஈனச் செயலுக்குக் குர் ஆனை ஆதாரமாக்கிக் கொள்ள முனைகிறார்கள. இத்த கைய குழப்பவாதிகளைத்தான் ஸஅத் இப்னு அபீவக் காஸ் (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்கள் இங்கு கடுமை யாகக் கண்டனம் செய்கிறார்கள்.
“பித்னாவை இல்லாதொழிப்பதற்கு அல்லாஹ்வின் தூதரோடு இணைந்து நாங்கள் போரிட்டோம். அது முஸ்லிம்களோடு அல்ல; முஸ்லிம்களுக்குள் மறைந்திருந்த முனாபிக்குகளுடனும் அல்ல; இஸ்லாத்தைப் பூண்டோடு அழிக்க விரும்பிய யூதர்களுடனும் இஸ்லாத்தை அழிப் பதற்காக குறைஷிக் குலத்தவர்களுடன் ஒன்றிணைந்த நிராகரிப்பாளர்களுடனும் போரிட்டோம். அந்தப் போரின் மூலம் 'பித்னா’ எனும் குழப்பம் முற்றாக நீங்கி அமைதியும் சுபிட்சமும் உருவாகியது. இத்தகைய போராட்டங்களை வலியுறுத்த வந்த குர்ஆன் வசனங் களை முஸ்லிம்களோடு போரிடுவதற்கான ஆதாரமாகக் காட்டும் உம்மைப் போன்றவர்கள் குழப்பத்தை நீக்க வந்தவர்களல்லர். நீங்கள்தான் உண்மையான குழப்ப வாதிகள் என ஸஅத் பின் அபீவக்காஸ் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் ஒரு குழப்பவாதியைப் பார்த்துக் கடுமையாகக் கண்டனம் தெரிவிப்பதே மேற்கண்ட
சம்பவம்.
அல்ஹஸனாத் மே 2011 s“.Sco2sKsor-s“.SisseséFyfi 1432

Page 12
தஃவா களம்
சம்பவத்தைத் தொடர்ந்து படியுங்கள்.
கொலை செய்யப்பட இருந்த இறுதி நேரத்தில் "லா இலாஹ இல்லல்லாஹ் சொன்ன அந்த மனிதன், ஏற்கனவே முஸ்லிம்களோடு கடுமையாகப் போரிட்டு இன்ன இன்ன முஸ்லிம்களையெல்லாம் கொன்று குவித்தான் என உஸாமா (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடம் விளக்கமாகக் கூறினார்கள் எனும் ஒர் அறிவிப்பும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
அவ்வாறிருந்தும், “அந்த லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமா மறுமையில் (உனக்கெதிராக) வந்து விட்டால் நீஎன்ன செய்வாய்?" என நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் உஸாமாவிடம் திருப்பித் திருப்பிக் கேட்டதாகவும் அந்த அறிவிப்பு கூறுகிறது.
முஸ்லிம்களோடு மும்முரமாகப் போரிட்ட ஒர் எதிரியாக இருப்பினும் சரி அவன் "லாஇலாஹ இல்லல் லாஹ் சொன்னதும் மறுகணம் அவனுக்கெதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்தியிருக்க வேண்டும்; நீர் அதனைச் செய்யவில்லை என்றல்லவா அல்லாஹ் வின் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் உஸாமாவைக் கடிந்து கேட்டார்கள்.
"நான் இன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்று உஸாமா (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் எண்ணும் அளவு அந்தக் கண்டனம் கடுமையாக இருந்தது.
இதனை உணர்ந்துதான் ஸஅது (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் இனி எந்த முஸ்லிமுடனும் போராட மாட்டேன் என்றார்கள். ஆனால், இந்த உண்மையை விளங்காத ஒருவர் குழப்பம் நீங்கும் வரை போராடுங் கள் என்று அல்லாஹ் கூறுகின்றானே, போராடினால் என்ன? என்று குர்ஆனைக் கொச்சைப்படுத்துகின்றார். அவருக்கு ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் கடுமையாக பதில் சொன்னார்கள்.
"நாங்கள் குழப்பம் நீங்குவதற்காகத்தான் போரிட் டோம்; நீயோகுழப்பத்தை உருவாக்கப் போரிடுகின்றாய்.”
இன்று முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுகின்றவர்க
ளைப் பாருங்கள். இறுதி நேரத்தில் ஆயுதத்துக்குப் பயந்து இஸ்லாத்தினுள்நுழைந்து கொண்ட முஸ்லிம்களுடனா
O அல்ஹஸனாத்,மே 2011 'ஜு.அல்ஜலா-ஜு.அல்ஆகிரா 1432
 

இவர்கள் போராடுகின்றார்கள்? தனது இறுதி மூச்சை தூக்கு மேடைக்கு சமர்ப்பித்து இஸ்லாம் என்ற பயிருக்கு தனது உயிரையும் உடலையும் உவந்தளித்த, உவந்தளிக்க முற்பட்டவர்களுடனல்லவா இவர்கள் போராட்டத் தைத் துவங்கியிருக்கிறார்கள்!
முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்கள் வாளை உயர்த் திப் போராடுவதற்கு மட்டுமல்ல, நாவை நீட்டிப் போரா டுவதற்கும் தடை விதிக்கிறது இஸ்லாம்.
“முஸ்லிமை ஏசுவது பாவம்; முஸ்லிமோடு போரிடு வது இறை நிராகரிப்பு’ என நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஆம், யார் முஸ்லிம்களுக்கெதிராக தங்களது நாவை நீட்டுகின்றார்களோ அவர்கள் நாளை தங்களது வாளை யும் அவர்களுக்கெதிராக உயர்த்த முடியும். யார் தங்க ளது நாவையே நீட்ட விரும்பவில்லையோ அவர்கள் வாளைத் தொடவும் அஞ்சுவார்கள்.
முஸ்லிம்கள் முஸ்லிம்களாலேயே கொலை செய்யப் பட்ட உதாரணங்கள் எம் மத்தியில் இருக்கின்றனவல் லவா? அந்த உதாரணங்களை சிறிது நோக்குங்கள். அங்கு முஸ்லிம்களுக்கெதிரான வாள்கள் திடீரென உயர்த்தப் படவில்லை என்பதையே நீங்கள் காண்பீர்கள். மாறாக, நாவுகள் தொடர்ச்சியாக நீட்டப்பட்டதன் விளைவே வாள்களும் ஒரு கட்டத்தில் உயர்த்தப்படுவதற்கான காரணமாக அமைந்து விட்டது.
'ஹராத்திற்கு இட்டுச் செல்வதெல்லாம் ஹராம்” என்ற இஸ்லாமிய சட்ட விதியின்படி, நீட்டப்படும் வாள்கள் மட்டுமல்ல; அவற்றை உயர்த்துவதற்குக் காரணமாக அமையும் நீண்ட நாவுகளும் மட்டுப்படுத் தப்படல் வேண்டும்.
இன்னும் சொன்னால் நீண்ட வாள்களைவிட, நீண்ட நாவுகள் ஆபத்தானவை. வாள்கள் வாளாக இருக்கும். நாவுகள்தான் அவற்றைத் தீட்ட வைக்கும். பின்னர்தூக்க வைக்கும்.
முஸ்லிம்களுக்கெதிராக தங்களது நாவுகளை நீட்டியிருக்கும் குழப்பவாதிகளை மக்கள் இனங்காண வேண்டும். முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பம் விளைவிப் பதற்காக அன்று ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரழியல் லாஹ" அன்ஹ")அவர்களிடம் வாள் தூக்கச் சொன்ன

Page 13
வர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு காரணங்களுக்காக இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் வாள் தூக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஒன்று, மார்க்கத்திலுள்ள கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு அதில் காட்டும் மித மிஞ்சிய தீவிரம்.
மற்றையது, தங்களது குறுகிய, தனிப்பட்ட அரசியல் இலாபங்கள்,
இந்த இரு காரணங்களுக்காகவும் முஸ்லிம்கள் மத்தி யில் பிளவை உருவாக்கியிருக்கின்றவர்களைப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைத்தான் தங்களது எதிரிகளாகப் பார்க்கிறார்கள். முஸ்லிம் சமூகத்துக்கு வெளியே இருக்கும் இஸ்லாத்தின் பகைவர்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அமெரிக்க, யூத, ஸியோனிச சக்திகள் அவர்க ளது கண்களுக்குத் தெரிவதேயில்லை. முஸ்லிம்களைத் தான் அவர்கள் போருக்கழைக்கிறார்கள். அதாவது, பகி ரங்க விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாளினால் வெட்ட முடியாதவர்களை தங்களது கூரிய நாவுகளால் வெட்டுவதற்கே இந்தப் பகிரங்க விவாதம்! இத்தகையோருக்கு அவர்களது வாயில் ஒன்றுசேரும் பகை விஷத்தை அடிக்கடி உமிழ்ந்து கொண்டிருப்பதற்கு பகிரங்க விவாதம் தேவைப்படுகிறது.
நீண்ட நாவும் தீராத பகையும் கொண்ட இத்தகை யோர் தங்களது இஸ்லாமிய விரோதச் செயல்களைப் பிழையென உணராதிருக்க முடியாது. அவர்களது உள்ளம் அவர்களது பிழையை அவர்களுக்கு உணர்த் தவே செய்யும். முஸ்லிம் சமூகத்தினுள் பகையையும் குரோதத்தையும் வளர்த்துப் பிளவுகளையும் பிணக்குக ளையும் உருவாக்கி இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் சமூகத்தை இலகுவாக விழுங்கும் வண்ணம் சமூகத்தை நன்றாக மென்று கொடுக்கும் இவர்களது செயலை இஸ்லாமிய உணர்வு கொண்ட எந்த உள்ளமும் சரிகாண மாட்டாது.
எனினும், தங்களது உள்ளத்தின் சாட்சிக்கெதிராக அவர்கள் செயற்படுகிறார்கள். அதற்கான நியாயங்களை யும் அவர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தினுள் பிணக்கையும் பிளவையும் குரோதத்தையும் பகையையும் வளர்ப்பதற்கு அவர்கள் தேடிக் கொண்ட மிக இலகுவான நியாயம்தான் தம்மோடு உடன்படாத வர்களை வழிகேடர்கள், நரகவாதிகள் என்று முத்திரை குத்துவதாகும். அவர்கள் எத்துணை பெரிய அறிஞர்க ளாயினும் சரி, மேதைகளாயினும் சரி.
இதன் மூலம் தாங்கள் பகை வளர்ப்பது முஸ்லிம்களுக் கெதிராகவல்ல; நரகவாதிகளான காபிர்களுக்கெதிரா கவே ஒன்று அவர்கள் தம்மைத் தாமே சமாதானப் படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களுக்கு வாள் தூக்க முடியுமாக இருந்தால் முஸ்லிம் சமூகத்தில் இரத்த ஆறு ஓடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தஃவா களம்
இவ்வாறு 'பித்னா’ எனும் குழப்பத்தை ஒழிப்பதற் கல்ல; வளர்ப்பதற்குப் பாடுபடும் நோக்கில் ஒரு சிலர் செயற்படுகிறார்கள். இந்த இயல்புடைய ஒரு சிலர் முஸ் லிம் சமூகத்தில் கியாம நாள் வரை இருந்து கொண்டே யிருப்பார்கள். அவர்களின் இருப்பு ஒரு பிரச்சினையல்ல. அவர்களை சமூகம் புரிந்து கொள்ளாதிருப்பதும் அவர் களை நெறிப்படுத்தத் திராணியற்றிருப்பதுமே பிரச்சினை யாகும். இத்தகைய குழப்ப சிந்தனையுடையோரை நெறிப்படுத்தாது, வழிப்படுத்தாது அவர்களது போக்கில் விட்டு விடும்போது சமூகம் பின்னோக்கி நகருமே தவிர, நல்ல மாற்றங்களை நோக்கி முன்நகரும் நிலை உருவாகாது.
குழப்ப சிந்தனை கொண்ட இத்தகையோரை நெறிப் படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் முயற்சியில் பிற ஊர் களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது காத்தான்குடி, காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா என்பன இத்தகைய குழப்ப சிந்தனை கொண் டோரை அவ்வப்போது நெறிப்படுத்தி, கட்டுப்படுத்தி ஊரில் குழப்ப நிலை உருவாகாமல் தடுத்து வருகின்றன.
எனினும், பல ஊர்களில் நடப்பது வேறொன்று. அமை தியாகவும் இணக்கமாகவும் அறிவுபூர்வமாகவும் பிறரை மதித்தும் செயற்படுபவர்களைதங்களிடமுள்ள அனைத்து ஆகுமான, ஆகாத வழிமுறைகளைக் கொண்டு தடுக்க முற்படுகின்றார்கள். குழப்ப சிந்தனை கொண்டவர்களை அவர்களது போக்கில் விட்டுவிட்டு வாளாவிருக்கி றார்கள். இத்தகைய பொறுப்பாளர்கள் சமூகத்தை முன் னேற்றப் பாதையில் நகர்த்திச் செல்வார்களா?
சமூகத்தை நெறிப்படுத்தும் தமது பொறுப்பை நிறை வேற்ற முடியாத தலைவர்கள் தங்களது சமுதாயத் தையோ கிராமத்தையோ பித்னாவுக்குப் பழக்குகிறார் கள் என்றே பொருள். நாளை அங்கு இடம்பெறப்போ கின்ற பிணக்குகள், பகை உணர்வுகள், குரோதங்கள், வெறுப்புகள், சீர்கேடுகள், ஒழுங்கீனங்கள், கட்டுப்பாடற்ற நிலைமைகள். அனைத்தையும் உருவாக்குவதில் இத் தகைய தலைவர்களுக்கும் பங்குண்டு. காரணம், இவர் கள் பித்னாவுக்கு மெளன அங்கீகாரம் கொடுத்து விட்டு தங்களது பதவிகளுக்கும் அந்தஸ்துக்கும் இடையூறு வராமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இஸ்லாத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் குழப்பங்களிலிருந்து பாதுகாப் பதற்கு இவர்கள் தங்களது அதிகாரத்தையோ செல்வாக் கையோ சிறிதும் பயன்படுத்தவில்லை.
அத்தகையவர்கள் இஸ்லாத்தின் எழுச்சிக்கு உதவு வதைவிட அதன் வீழ்ச்சிக்கு வழிதிறந்து கொடுக்கிறார் கள். அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களைத் தவிர!
வெற்றிகளால் பெருமை கொள்ளாது. சோதனைக ளாால் உணர்ச்சிவசப்படாது. பாதிப்புக்களால் சினமுறாது. சவால்களால் துவண்டு போகாது. அல் லாஹ்வுடைய பாதையில் தடம்பதித்து உறுதியாக இருக் கிறார்களே, அவர்கள்தான் இறையருள் பெற்றவர்கள்.
அல்ஹஸனாத் மே 2011
a.isogesun-gs.3-isogyrs i432

Page 14
தேசம் கடந்து
"இம்முறை எனது குரல் ஒசையெழுப்புகிறது டமஸ்கஸ் நகரிலிலிருந்து வெளித் திசைக்கெல்லாம் அதன் ஒலி பரவுகிறது எனது பூர்வீக நிலத்திலிருந்து சப்தமெழுப்புகிறது எனது இரத்தநாளங்களும் பச்சைநிறமாகிவிட்டது மீண்டும் எனது குரலுக்கு புதிய சக்தி கிடைத்திருக்கிறது எனது விரல்களெல்லாம் ஒன்றிணைந்து கூட்டமாய் மாறி விட்டன."
-ஸிரிய கவிஞர் நிசார் கப்பானிஇஸ்லாமிய வரலாற்றில் ஷாம் என்றழைக்கப்படும் ஸிரியாவில் மக்கள் அரசுக்கெதிராக கிளர்ந்து எழுவது இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தி. அதிபர் பஷர்
ឃីនៃឆ្នាទឃ្ល និងៃ ៩ ៖
కొణీళుఖఃఖ$$య్యి.న్సీన్స్టిys $4్వల్ల
3
அல்அஸ்தின் அ நகரகங்களில் ச எழுச்சியில் 50இ பட்டதாக ஊட 80க்கும் மேற்ப
கடந்த ஒரு ம பில் இதுவரை 3 டர்னெஷனல் கு மக்களைப் பலிெ கூர்ந்திருக்கிறது. வர்ணிக்கப்பட்ட அழைக்கப்படுகி
மக்களின் தெ ஆம் ஆண்டிலிரு ஒரளவு தளர்வை வாக மட்டும் இல் பதுடன் நீதியான டையத் துவங்கி டாளாரன ரத்வ சுதந்திரம் மக்களு
லெபனான், து என்பவற்றை எல் பிரான்ஸிடமிருந் ஆட்சி மாற்றங்ை வாக்குப் பெற்றுள் லும் நீண்ட காலப கிறது. பாத் கட்சி தொடக்கம் 30 6 மரணத்தைத் தெ ஸிரியாவின் அதி டைய இவர், நா தாகத் தெரிவித்தி
ஸிரியாவில் ள படுகின்றனர். ஸ-o சிறுபான்மை வீஅ முரண்பாடுகள் நீ
இஸ்லாமிய நr ரங்களாக அமைந்: பாசிய, உஸ்மானி கியிருக்கிறது. ஏழா அன்ஹ") அவர்க வாங்கப்பட்டன. ( படை ஷாம் தேசத் ரம் ஆட்சியை நிறு
 
 
 
 
 

ப்போது உங்கள் பக்கம் டு0ே இலிலை
சுக்கெதிராக ஹோம்ஸ், இஸ்ரா, ஹரஸ்டா, டமஸ்கஸ் ஆகிய டந்த வெள்ளிக்கிழமையை அடுத்து இடம்பெற்ற மக்கள் ற்கும் மேற்பட்டோர் அரச படைகளால் கொலை செய்யப் 5ங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில சர்வதேச ஊடகங்கள் டோர் பலியானதாகத் தெரிவிக்கின்றன.
ாத காலமாக ஸிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப் 00க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆம்னஸ்டி இன் றிப்பிட்டிருக்கிறது. 1982இல் ஹமாநகரில் ஆயிரக்கணக்கான படுத்த அஸத் பரம்பரையின் ஆட்சியை இது மீண்டும் நினைவு எகிப்து, டியுனிசியா போராட்டங்கள் "பேஸ்புக் புரட்சி என து போல் ஸிரியப் புரட்சி The Syria Revolution 2011 என Dgel.
ாடரான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஸிரிய அதிபர் 1962 தந்து அமுல்படுத்தப்பட்டுவந்த அவசரகாலச் சட்டத்தினை டயச் செய்திருக்கிறார். எனினும், மக்களின் கோரிக்கை இது ]லை. பஷர் அல்அஸ்தின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என் ா ஜனநாயக ஆட்சியொன்று தேவை என்ற கருத்து வலுவ பிருக்கிறது. ஸிரியாவின் பிரபல மனித உரிமை செயற்பாட் ான் ஸியாதி (Radwan Ziadeh) ஸிரியாவில் இரண்டாவது ருக்கு தேவையாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி, ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், மத்திய தரைக்கடல் லைகளாகக் கொண்ட நாடே ஸிரியா. 1946ஆம் ஆண்டு து சுதந்திரம் பெற்றுக் கொண்ட ஸிரியா, இதுவரை பல்வேறு ளை சந்தித்துள்ளது. லெபனான்,ஈராக் ஆகியவற்றில் செல் ாளது போன்றே தேசியவாத கட்சியான பாத் கட்சி ஸிரியாவி மாக அதிகாரமிக்க கட்சியாக அரசியல் நடத்திக் கொண்டிருக் பின் உறுப்பினரான அல்ஹாபிஸ் அல்அஸத் 1971ஆம் ஆண்டு வருடங்களாக சர்வதிகார ஆட்சி நடத்தி வந்தார். அவரது ாடர்ந்து அவரது மகன் பஷர் அல்அஸத் 2000ஆம் ஆண்டில் பராக பதவி ஏற்றார். மதசார்பற்ற இடதுசாரிக் கொள்கையு ட்டில் பல்வேறு அரசில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவ ருந்தார். ஆனால் எதனையும் செய்யவில்லை.
ஸுன்னிக்கள் 74%ஆகவும் வீஆக்கள் 13% ஆகவும் காணப் ன்னிக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் அரசியலில் ஆக்களின் செல்வாக்கு இருந்து வருவதும் மக்கள் மத்தியில் டிப்பதற்குக் காரணமாகும். ாகரிக வரலாற்றில் ஷாம், டமஸ்கஸ் என்பன முக்கிய கேந்தி திருக்கின்றன. குலபாஉர்ராஷிதீன்கள் உட்பட உமைய, அப் பர்களின் ஆட்சியிலும் கூட ஸிரியா முக்கிய தளமாக இயங் ாம் நூற்றாண்டின் மத்தியில் அதாவது, உமர் (ரழியல்லாஹ" 5ளின் கிலாபத்தில் இஸ்லாத்தின்பால் பல தேசங்கள் உள் இதில் காலித் இப்னு வலீத் அவர்களின் தலைமையில் சென்ற ந்தை கையகப்படுத்தி அங்கு மக்களின் விருப்பத்தின் பிரகா புவியது.

Page 15
இதனைத் தொடர்ந்து அபூஉபைதாஇப்னுல்ஜர்ராஹ், அம்ர் இப்னு ஆஸ், யாஸிர் இப்னு அபீஸுப்யான், முஆ வியா இப்னு அபீஸுப்யான்(ரழியல்லாஹ"அன்ஹ7ம்) ஆகிய நபித் தோழர்கள் உட்பட இரண்டாம் உமர் என வர்ணிக்கப்படும் உமர் இப்னு அப்தில் அஸிஸ் (ரஹ்) ஆகியோரின் நிர்வாகங்களின் கீழ் ஆளப்பட்ட தேசம் ஸிரியா. ஸலாஹ"த்தீன் அய்யூபி ஸிரியாவில் நீண்ட காலம் வாழ்ந்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸின் குடியேற்ற நாடாக நீண்ட காலம் இருந்த தில் ஸிரியாவின் இஸ்லாமிய அடையாளங்கள் சிதைக்கப் பட்டன. இதற்கு மத்தியிலும் அல்இஹ்வானுல் முஸ்லி மூன் இயக்கத்தை எகிப்துக்கு அடுத்ததாக வரவேற்ற நாடு ஸிரியா என்பது சிறப்பாக குறிப்பிட வேண்டியதாகும். இதன் பின்னணியில், இஸ்லாமிய உலகின் பெரும் அறிவு முதுசங்கள், போராளிகள் எனக் கருதப்படும் முஸ்தபா ஸிபாஈ. முஹம்த் மஹ்மூத் ஹாமித், உமர் பஹா அல் ஆமிரி, ஷெய்க் அப்துல் பதாஹ் அபூ குத்தா, முஸ்தபா அஸ்ஸரகா, அலி தன்தாவி, ஹஸன் ஹ"வைதி, ஸஈத் அல்ஹவ்வா, இஸ்ஸ"தீன் அல்கஸ்ஸாம் ஆகியோரை ஈன்றெடுத்த தேசம் ஸிரியா என்பதும் இவ்விடத்தில்
அடையாளப்படுத்தப்பட வேண்டியதாகும்.
1967ஆம் ஆண்டு வளைகுடாவில் ஏற்பட்ட ஆறு நாள் யுத்தத்தின்போது எகிப்துடன்இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக யுத்தம் செய்த ஸிரியா, கோலன் மேட்டு நிலத்தின் பெரும் பகுதியை இஸ்ரேலிடம் இழந்தது. எனினும், தற் போதைய அரசாங்கம் இஸ்ரேலுடன் சில இரகசிய உறவு களைப் பேணி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. 1976 லெபனானில் வெடித்த உள்நாட்டுப் போரின்போது ஸிரியா40 ஆயிரம் பேர்கொண்ட படையொன்றை அனுப் பியது. அப்படையினர் 2005ஆம் ஆண்டுவரை அங்கு நிலை கொண்டிருந்தனர். அப்போதைய லெபனான் பிர தமர் ராபிக் அல்ஹரீரியின் கொலையில் ஸிரியாவிற்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட பின்பே படைகள் வாபஸ் வாங்கப்பட்டன.
அரபுத் தேசியவாதத்துடன் இணைந்து வெளிப்படை யாக அமெரிக்க கூட்டணியை லிரியா விமர்சித்து வந்த போதும், 1990ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா யுத் தத்தின்போது சத்தாமிற்கு எதிராக அமெரிக்க அணியில் இணைந்து கொண்டது.
பாத் கட்சி தனது ஆட்சியை நீடிப்பதற்காக தற்போது பேணிவரும் அரசியல் அமைப்பினை உள்நாட்டு மக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு ஜனநாயக அமைப்புகளும் சாடி வருகின்றன. தற்போது ஸிரியாவில் ஏற்பட்டிருக்கும் மக்களின் எதிர்ப்பலைகளுக்கு பின்வருவன முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன:
1. தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியும் அரசியல் அமைப்பும் 40 வருடங்களுக்கு மேல் நிலைக்கிறது. அதன்படி பாராளுமன்ற தேர்தல்களுக்கான ஆசனங் களில் 50% ஆனவை ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் பாத் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மீதி 50% ஆசனங்களுக்கே தேர்தல் நடைபெறுகிறது. இதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம், அரசியல்

அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியாதுள்ளது.
2. பஷரின் குடும்ப ஆதிக்கம். அரசியலில் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் இவர்களின் செல்வாக்கு ஓங்கியிருக்கிறது. ஸிரியாவில் மட்டுமன்றி, உலகின் பெரும் செல்வந்தர்களுள் ஒருவர் ராமி மஹ்லூப் (Rami Makhlouf). இவர் ஜனாதிபதி பஷர் அல்அஸ தின் மைத்துனர். வங்கி, தொலைத் தொடர்பு, கட்டு மானம், எண்ணெய், வாயு ஏற்றுமதி என்பவற்றில் அதிக பங்குகளைக் கொண்டிருப்பவர்.
ஸிரியாவில் வெளிவரும் ஹ சர்ரதுஸ் ஸிரியா" என்ற சஞ்சிகை, இவருடைய குடும்பம் ஸிரிய பொருளாதார நலன்களில் 50% ஐக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தவிரவும் ஸிரியாவின் Syriatel என்ற தொலைபேசி வலைப்பின்னல் இவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமாகும். Cham Holding என்ற தனியார் கட்டுமான நிறுவனமே லிரியாவில் அரசாங்க மற்றும் தனியார் துறையின் அனைத்து வகை கட்டுமான வேலைகளையும் செயற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாதைகள், ஹோட்டல் வைத்தியசாலைகள் உட்பட சகல கட்டுமானப் பணிக ளையும் நிறைவேற்றும் நிறுவனமாக இது இயங்குகிறது.
மாஹிர் அல்அஸத், இவர் பஷர் அல்அஸதின் சகோ தரர். தற்போது அவரது விசேட ஆலோசகராக கடமை யாற்றி வருகிறார்.
பவாஸ் அக்ராஸ். பஷரின் மனைவியான அஸ்மாவின் தந்தை. அரசாங்கத்தின் பல திணைக்களங்களின் ஆலோ சகராகவும் சிலவற்றில் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.
மேஜர் ஜெனரல் ஆஸிப் ஷவ்கத். இவர் பஷரின் சகோ தரி அல்புஷ்ராவின் கணவர். அரசாங்கத்தின் முக்கிய பத வியில் இருப்பவர். ஈராக்கிய அகதிகளுக்கு உள்நாட்டில் சேகரிக்கப்பட்ட பணத்தை கையாடியமை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த விவகாரம்.
3. பொருளாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி ஸிரியாவில் வேலையற்றோர் தொகை 48%. 2006ஆம் ஆண்டில் 10.3% ஆக இருந்த பணவீக்கம் 2010ஆம் ஆண்டில் 36.11% ஐ எட்டியது.
ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெனஷனல் 2010ஆம் ஆண்டு வெளியிட்ட ஊழல் மற்றும் இலஞ்சம் தரப்படுத் தலில் 180 நாடுகளில்126ஆவது இடத்தில் ஸிரியா உள்ளது.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் வீதமும் ஸிரியா வில் அதிகம்.
4. அரசியல் கைதிகள், இஸ்லாமியவாதிகள், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஊடகவிய லாளர்கள் என ஏராளமானோர் சிறைப்பிடிக்கப்பட் டுள்ளனர். இஹ்வான் அமைப்பின் ஊடக அறிக்கை யின் பிரகாரம், எகிப்துக்கு அடுத்ததாக இஃவான்க ளில் அதிகமானோர் சிறைவைக்கப்பட்டுள்ளது ஸிரியாவில்தான்.
(15ebib Läsabb urfrä585)
sN్యక్తిఖళN$క్తి సిని ?t}}} NN
ూ.తిళుభిక్షిణT-జాతిళుత్సితgrt 1432

Page 16
தேசம் கடந்து
முடிவின்றித் தொடரும்
- மஸ்வறர் ஸகரிய்யா -
Onήό 1 8ஆம் திகதி ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்ஸி லின் அனுமதியுடன் கதாபிக்கு எதிராகத் தொடங்கப் பட்டு, ஒரிரு வாரங்களுள் நிறைவுறும் என்று எதிர்பார்க் கப்பட்ட லிபிய மீதான போர் ஒன்றரை மாதங்களாகியும் சற்றும் தணியாமல் நடந்த வண்ணமுள்ளது. லிபிய பொது மக்களை பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த யுத்தம், இன்று கதாபியின் ஆட்சியைக் கவிழ்த்தல், லிபிய எண்ணெய் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்தல் போன்ற இரு நோக்கங்களின் அடிப்படையில் மட்டுமே தொடர்வது தெளிவு.
லிபியாவில் நடைபெறும் மும்முனைப் போராட்டத் தில் (அரச படை, கிளர்ச்சிக் குழு, நேட்டோ) நாள் தோறும் பல லிபியப் பொதுமக்கள் பலியாகின்றனர்.
அல்ஹஸனாத் மே 2011 A. s
ஐ.அல்லலாஜு.அல்ஆகிரா 1432
 

அரச கட்டிடங்களும் பொதுச் சொத்துக்களும் தினந்தோ றும் சேதமடைந்து வருகின்றன. லிபிய வைத்தியசாலை கள் காயமுற்றோரால் நிரம்பி வழிகின்றன.
ஒபாமா அரசு துவங்கிய இந்த யுத்தத்திற்கு இன்று
நேட்டோ அமைப்புதலைப்பு வகிக்கின்றது. சர்வாதிகார ஆட்சியாளர் கதாபியை ஆட்சிபீடத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே நேட்டோஇத்தாக்குதலில் இறங்கியுள்ளது. நேட்டோ அமைப்பில் 28 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள் ளன. அவற்றில் 14 நாடுகள் லிபியா மீதான தாக்குதலுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் முன்னணி வகிக்கின்றன.
மிஸ்ராடா, அஜ்தபிய்யா போன்ற நகர்களில் சென்ற மாத இறுதியில் தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. இப் பிரதேசங்களிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங் கியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவ ராக உள்ள முஸ்தபா அப்துல் ஜலீல் பிரான்ஸ் அதிபர் நிகலஸ் சார்கோஸியை சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப் பின் விளைவாக, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் மற்றும் இராணுவ உதவி என்பவற்றை வழங்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.
இத்தாலி, கத்தார் போன்ற நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரிட்டன் ஏற்கனவே ஆர்ப் பாட்டக்காரர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. 20 பிரித்தானிய உயரதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் பெங்காளி சென்றுள்ள தாக பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹெக் கருத்துத் தெரிவித்திருந்தார். உத்தியோகபூர்வ தகவல் ஒன்றின்படி, அமெரிக்கா ஏற்கனவே 25 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை ஆர்ப்பாட்டக்காரர் களுக்கு வழங்கியுள்ளது. இதுதவிர இந்த நாடுகள் லிபிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கிய உதவிகள் ஏராளம் ஏராளம்!
அஜ்தபிய்யா, மிஸ்ராடா, பேகா போன்ற நகர்களில்
லிபிய அரசாங்கப் படையினர் முகாமிட்டுள்ள இடங்க ளிலோ அவர்களது பீரங்கிகள் உள்ள இடங்களிலோ

Page 17
மக்கள் நடமாடக் கூடாது என நேட்டோ அமைப்பு தடை விதித்துள்ளது. இப்பிரதேசங்களில் வான் தாக்கு தல்களைத் தீவிரப்படுத்த நேட்டோ நடவடிக்கை எடுத்து வருகின்றது.
லிபிய அரசு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் வச முள்ள மிஸ்ராடாவைக் கைப்பற்றும் நோக்கில் தடை செய்யப்பட்ட CLUSTER (கொத்து) குண்டுகளைப் பயன் படுத்துவதாக நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் Human Right Watch குற்றம் சாட்டியுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவதால் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குற்றச்சாட்டை லிபிய அரசதரப்புப் பேச்சாளர் மூஸா இப்ராஹீம் மறுத் திருந்தார். மறுபுறம், அமெரிக்க பிரித்தானிய பிரான்ஸ் கூட்டு லிபியாவில் 10,000 அடிகளுக்கு மேலிருந்து தாக் கும் விமானங்களை வான் தாக்குதலுக்குப் பயன்படுத்த தீர்மானித்துள்ளன.
ஐ.நா.வின் மார்ச் 18 தீர்மானத்திற்கமைய லிபியாவில் வான்தாக்குதலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள் ளது. நேட்டோவின் தரைப்படை லிபியாவில் நுழைவ தற்கு எதிரான கருத்துக்களே நிலவி வந்தன. நேட்டோ படைகள் லிபியாவில் தொடர்ந்தும் தோல்வியுற்று வரு வதால் தரைப்படையை பயன்படுத்துவது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
மறுபுறம் ஆபிரிக்கக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டக்கா ரர்களையும் லிபிய அரசையும் பேச்சுவார்த்தை மேசைக் குக் கொண்டுவரும் முயற்சியில் கடும் பிரயத்தனம் மேற் கொண்டு வருகின்றது. தென்னாபிரிக்க அதிபர் ஜாகப் சுமா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இரு சாராருக்கு மத்தியிலான இந்த அமைதித் திட்டத்தின் ஏக இலக்காக யுத்த நிறுத்தமே காணப்பட்டது. கதாபி இதற்கு உடன் பட்டபோதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கதாபியை ஆட்சியிலிருந்து அகற்றாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு திட்டத்திற்கும் தாம் உடன்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மத்தியில் லிபிய விவகாரமே மேற்கு சாராத அமைப்புகளின் பேசு பொருளாக மாறியுள்ளது. சீனாவின் சன்ஹாயில் நடந்த ப்ரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் லிபியாவில் நடைபெறும் மேற்கின் அத்துமீறியதாக்குதல்களுக்கெதிராக கண்டனம் தெரிவித்திருந்தனர். ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாக இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென்னாபிரிக்கா என்பன இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கட்டாரில் ஒன்றுகூடிய மத்திய கிழக்கு நாடுக ளின் வெளிவிவகார அமைச்சாகள் லிபிய நிலைவரங்கள் தொடர்பாக பேசியுள்ளதுடன் ஆபிரிக்கக் கூட்டமைப் பின் முயற்சியைப் பாராட்டியும் உள்ளனர்.
லிபியப் பிரச்சினைக்கான தீர்வுகள் ஆபிரிக்காவின் உள்ளிருந்து வருமானால் அதுவே ஏற்கத்தக்கது என்று ரஷ்ய உயரதிகாரிகள் கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு
விடயமாகும்.

தேசம் கடந்து
பஷர். இப்போது (3ஆம் பக்கத் தொடர்)
5. ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க முடியாத நிலை
தொடர்ந்தும் காணப்படுகிறது.
ஸிரியாவின் விவகாரங்களை அமெரிக்கா துர ருந்தே பார்த்து வருகிறது. ஆரம்பத்திலிருந்தே ஈரான், லபனான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஜோர்தான், சஊதி ரேபியா, எகிப்து ஆகிய நாடுகளின் கூட்டணியில் ஸிரி ாவையும் இணைக்கும் பல்வேறு பிரயத்தனங்கள் தால்வியில் நிறைவடைந்தன.
2
9.
G3
அதேவேளை, இப்பிராந்தியத்தில் இயங்கும் ஹமாஸ், ஸ்புல்லாஹ் போன்ற போராட்ட அமைப்புக்களை டுப்படுத்தல், துருக்கியின் எழுச்சியை முடக்குதல், ஈராக்கில் தொடர்ந்து அமெரிக்கப் படைகளை நீடிக்க வைத்தல் உட்பட இஸ்ரேலைப் பாதுகாப்பது வரையிலான ல்வேறு அமெரிக்கத் தேவைகளை விரியாவின் மூலம் டைந்து கொள்ள அமெரிக்காதருணம் பார்த்திருக்கிறது.
விகிலீக்ஸ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், அஸ்தின் ஆட்சியை மாற்றுவதற்கு அமெரிக்கா விரும்பு கிறது. இதற்காக எதிர்த்தரப்பு சக்திகளுக்கு அமெரிக்கா உதவிகளையும் செய்து வருகிறது.
எனவே எகிப்து, டியுனிசியா போன்ற நாடுகளில் ஏற் பட்ட அரசியல் மாற்றத்தை ஸிரியா மக்களும் எதிர்பார்ப் பது நியாயமானது. அதற்கான போராட்டத்தை ஸலா ஹ"த்தீன் அய்யூபியை சுமந்து நீன்ற ஸிரிய தேசம் இன் றில்லாவிட்டாலும் நாைைளயாவது அடைந்து கொள்ளப் போராடும் என்பது திண்ணம்.
மேலதிக விபரங்களுக்கு
origido
ខ័ណ្ណអោរៅភ្នំ និងៃ 201 8 5 శ్రీ,నీళళ్లిళ్లల,నిచ్కుt $432

Page 18
இயக்க வாழ்வு
எனக்கு எல்லாமே நினைவு இருக்கிறது. நாள், கிழ இந்திய வானொலியில் தவழ்ந்து வந்த அறிவிப்பு. “டெ பூட்ஸ் கால் ஒசையுடன் என் வீட்டுக்கு வந்த காக்கிச் சட் மான முகம். அப்போது மின்விசிறிக் காற்றில் அலைபா லாமே என் மனத் திரையில் திரைப்படக் காட்சிகளாக
1975 ஜூன் 26 அன்று இரவு நெருக்கடிநிலை பிரக போதே அதனை எதிர்பார்த்தேன். அரசல் புரசலாக ெ வந்தன. ஜூலை 3ஆம் திகதி ஆர்.எஸ்.எஸ். ஐயும் ஜமாஅ தையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக மத்திய
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. நான் ஜுமுஆ ெ பஸாவலில் இருக்கிற எனது வீட்டில் பெட்டி படுக் அமர்ந்திருந்தேன். வழி மீது விழி வைத்துக் காத்திருந்தே குழந்தைகளும் என்னைச் சுற்றி கவலையோடு அமர்ந்தி திடீரென்று வாசல் முன்பு ஜீப் வந்து நின்றது. காக்கி தயங்கித் தயங்கி வந்தனர்.
"கிளம்புங்கள்! உங்களை சேர்ஸ்டேஷனுக்குக் கூட்டி
“பெட்டி, படுக்கைகளை எடுத்துக் கொள்ளலாமா?”
“வேண்டாம். பிறகு தேவைப்படும்போது தருவித்து அவர்கள் தடுத்து விட்டார்கள்.
நான் மனைவியிடம் சொன்னேன். "என்னைக் கைது ஷனுக்கு அழைத்திருக்கிறார்கள். நான் போகிறேன்.”
அந்த அன்புக்குரியவளின் கண்களில் கண்ணிர் மெ முன்னரேநான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். காத்தி ஸ்டேஷனுக்கு சென்ற பின்புதான் தெரிந்தது. காலை சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. அங்கு ஏற்கனே இஸ்லாமி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வை சூதாட்டத்திலும் கள்ளச் சந்தையிலும் ஈடுபட்டிருந்த க ஒருவரையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஊழியர்' எனச் செ1
அல்ஹஸனாத் மே 20ft
ஜுே.அல்இலாஜூ அல்ஆகிராts32
 
 
 
 

ஜன்சி
மை எல்லாமே. அகில ாக். டொக்..” என்று
டைக்காரரின் குழப்ப ய்ந்த நாள்காட்டி, எல் த் தோன்றி மறையும்.
டனம் செய்யப்பட்ட சய்திகள் சுற்றிச் சுற்றி அத்தே இஸ்லாமி ஹிந்
அரசு அறிவித்தது.
நாழுது முடிந்த பிறகு கைகளோடு தயாராக ன். எனது மனைவியும் கிருந்தார்கள்.
கிச் சட்டைக்காரர்கள்
டி வரச் சொன்னாங்க."
என நான் கேட்டேன்.
க் கொள்ளலாம்” என
செய்வதற்காக ஸ்டே
ாட்டுக்கள் பூப்பதற்கு ருந்தஜீப்பில் ஏறினேன்.
pயிலிருந்தே பொலிஸ் வே நான்கு ஜமாஅத்தே க்கப்பட்டிருந்தார்கள். ாங்கிரஸ் கட்சிக்காரர் ால்லி மடக்கிப் போட்
டிருந்தார்கள். கைதானவர்களில் ஒரே ஒரு ஆர்.எஸ்.எஸ். ஊழியரும் இருந் தார். இத்தனைக்கும் பஸாவலில் அந்த அமைப்பு (ஆர்.எஸ்.எஸ்.) உறுப்பி னர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
அஸருக்குப் பிறகு என்னைப் பார்க்க எனது மனைவி காவல் நிலை யம் வந்தாள். கண்கள் கலங்க, “இனி என்ன செய்வது?" எனக் கேட்டாள்.
நான் சொன்னேன். "பாதிமா! என்னை எப்போது விடுதலை செய் வார்கள் என்பது தெரியாது. சில மாதத் திற்குள் வெளியே வந்துவிடலாம்; அல் லது ஆண்டுக் கணக்கும் ஆகலாம்."
பாதிமா விக்கித்தாள். “அதுவரை நான் என்ன செய்வேன்?" எனக் கேட் டாள்.
நான் அவளுக்கு விளக்கினேன். 'இப்போதாவது சில மாதங்கள் அல் லது சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் திரும்பிவரக்கூடிய வாயப்பிருக்கிறது. மரணத் தூதர் என்னை அழைத்துச் சென்றிருந்தால் நீ என்ன செய்திருப்
Tu?”
பாத்திமா கண்களைத்துடைத்துக் கொண்டு என்னை நெடுநேரம் உற்றுப் பார்த்தாள். பிறகு “அல்லாஹ் பாது காப்பானாக!” எனக் கூறி விடைபெற் றாள். பிறகு ஒரு நாளும் அவள் புகார் சொல்லி எனக்குக் கடிதம் எழுதியது கிடையாது; புலம்பியது கிடையாது. அழகிய பொறுமையுடனும் முழு மனத் திருப்தியுடனும் அந்த நாட்க ளைக் கழித்துவிட்டாள் அவள்.
எங்களது கிளைத் தலைவர் அப் துர் ரஸாக் சாஹிப் அப்போது ஊரில் இருக்கவில்லை செய்தி அறிந்த அடுத்த நாளே பெட்டி படுக்கையுடன் காவல் நிலையம் வந்து விட்டார். மற்றவர்க ளுடன் தம்மையும் கைது செய்யும்படி அதிகாரிகளை வற்புறுத்த ஆரம்பித்து விட்டார். ஆனால், பொலிஸ்காரர் களோ ஜமாஅத் ஊழியர்கள் ஆறு பேர் மீதும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவர் மீதும் மட்டுமே வரண்ட்

Page 19
உத்தரவைத் தயாரித்திருந்தனர். அதனால் எங்களது கிளைத் தலைவரை கைது செய்ய முடியாது என மறுத்து அவரைத் திருப்பி அனுப்பி விட்டனர்.
தொடக்கத்தில் சில நாட்கள் எங்களை அஹமத் நகர் மாவட்ட விஸ்பூர் சிறைச்சாலையில் வைத்திருந்தார்கள். அங்கு ஆர்.எஸ்.எஸ். உட்பட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். இஸ்லாம், முஸ்லிம் குறித்து அவர்களிடமிருந்த பல்வேறு ஐயங்களையும் தவறான கருத்துக்களையும் களைவதற்கு இந்த சிறைவாசம் எங்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமைந்தது.
பொதுவாக அவர்களின் கேள்விகள் முஸ்லிம் தனி யார் சட்டம், பொது சிவில் சட்டம், பலதார மணம், தலாக் ஆகிய பிரச்சினைகளைச் சுற்றியே இருந்தன.
பொது சிவில் சட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கேள்விக்குநாங்கள் அவர்களது இதயத்தைத் தொடக்கூடிய நிகழ்வு ஒன்றை எடுத்துச் சொன்னோம். அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்பு ஜமாஅத் தலைவர் மெளலானா ஷம்ஸ் பீர்ஜாதா தலைமையில் குழுவொன்று ஆர்.எஸ்.எஸ் தலைவரும் சிந்தனையாளருமானகுருகோல் வால்காரைச் சந்தித்தது. பொது சிவில் சட்டம் குறித்து எங்களிடம் விசாரித்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு அவர் அளித்த பதிலைச் சொன்னோம். குருஜி கோல்வால்கர் அளித்த பதில் என்ன தெரியுமா?
"நம்ம தேசத்திற்கு ஒற்றுமை (Unity) தான் தேவையே தவிர, பொதுமை (Uniformity) அல்ல. பொதுமையை விரும் புகிறவர்கள் முட்டாள்கள். ஏனெனில், பொதுமையை விரும்புவதென்பது வர்ணாசிரம அமைப்புக்கு சாவுமணி அடிப்பதாகும்.”
இந்தப் பதிலைக் கேட்டதும் எல்லோருமே வாய டைத்துப் போனார்கள்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு எங்களுக்கு முதல் வகுப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. பூனா சிறைக்குச் செல்கிறீர்களா, நாஸிக் சிறைக்குச் செல்கிறீர்களா என்று எங்களுக்கு சொய்ஸ் கொடுக்கப்பட்டது. பூனா சிறை யைத் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில், நாங்கள் அறிந்த வரை நாஸிக் ஜெயிலில் அழைப்புப் பணிபுரியக்கூடியவர் கள் ஏற்கனவே இருந்தார்கள். ஆனால், பூனா ஜெயிலில் எவரும் இருக்கவில்லை. பூனாவுக்கே போகிறோம் எனச் சொல்லி விட்டோம்.
பூனாவுக்குப் போன பிறகுதான் அங்கு ஏற்கனவே ஷோலாப்பூரைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் இருக்கி றார்கள் என்பது தெரிய வந்தது. ஆக, நாங்கள் எட்டுப் பேரும் அங்கு ஒன்றுசேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தோம்.
வீட்டிலிருந்து மராட்டிப்புத்தகங்களைத் தருவிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அந்தக் காலத்தில் அல்ஹஸ னாத் பதிப்பகம் குர்ஆனின் ஹிந்தி மொழிபெயர்ப்பை வெளியிட்டிருந்தது. அந்த மொழிபெயர்ப்பின் பதினொரு பிரதிகளை மும்பையிலிருந்து தருவித்தேன். அவற்றை சிறைவாசிகளுக்கு படிக்கக் கொடுத்தேன்.

இயக்க வாழ்வு அதற்குள் அங்கிருந்த கைதிகளிடையே நாம் மிக நெருக்கமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டோம். மிகவும் நட்புடன் பழக ஆரம்பித்து விட்டோம். பழைய காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் ரத்தன் சிங்ராஜ" ஒரு முறை என்னிடம் மிகவும் அன்பான குரலில் "என்ன, உங்க ஆளுங்க வந்த பிறகு எந்த மேசையில் பார்த்தாலும் குர்ஆன் மொழிபெயர்ப்புக்கள் இருக்கிறதே..!"
சிரித்துக் கொண்டே ‘இதிலென்ன விசேஷம் ? Common sense இருக்கணும். நீங்களே புரிந்துகொள்வீர் கள்!" என கொமன்ட் அடித்தேன். அந்த அளவுக்கு அவ ரும் நாங்களும் நெருக்கமாகி விட்டிருந்தோம். பின்னர் இந்த ராஜ" மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 பிரசாரத்தின்போது இந்தச் சிறைவாசிகளில் பெரும் பாலானோர் பிரசாரக் கூட்டங்களில் தாராளமாக குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டினார்கள்.
மும்பையில் ஒரு விழா. கிராஃபோர்ட் மார்க்கட்டில் நடந்த அந்த மாபெரும் விழாவில் மெளலானா அப்துல் லாஹ் புகாரி போன்றோரெல்லாம் பேசினார்கள். அந்த விழாவுக்குத் தலைமை வகித்த பேராசிரியர் கனிட்கர் தெரிவித்தது இன்றும் என் செவிகளில் எதிரொலிக்கின்றன.
பேராசியரியர் கனிட்கர் சொன்னார்: "அந்தச் சிறைச் சாலையில் நண்பர் தேஷ்முக் என்னிடம் குர்ஆன் பிரதி யைக் கொடுத்த தருணத்தை என்னால் மறக்கவே முடி யாது. ஏதோ ஒர் இனம்புரியாத மகிழ்ச்சியும் பூரிப்பும் பொங்க இரு கைகளிலும் அந்த இறைவேதத்தை ஏந்திக் கொண்டேன். அன்றிரவு வெகு நேரம் நான் தூங்கவே யில்லை. குர்ஆனின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே இருந்தேன். எனது மனம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தியது. அதற்குப் பிறகு சிறையில் கழித்த நாட்களிலும் விடுதலை யாகி வெளியே வந்த பிறகும் இன்றுவரை குர்ஆனுடன் எனக்குப் பிரிக்க முடியாத உறவு ஏற்பட்டு விட்டது. நான் மட்டும் கைது செய்யப்படாமல், பூனா ஜெயிலில் அடைக் கப்படாமல் இருந்தால் தேஷ்முக் வழியாக எனக்குக் குர் ஆன் கிடைத்திருக்காது."
ஒருமுறை சிறைச்சாலையிலேயே ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்காக ஆதரவுக் கூட்டம் நடந்தது. ஜமாஅத் பிரதிநிதியாக நான் கலந்துகொள்ள இருந்தேன். ஆனால் அந்தக் கூட்டத்தின் அமைப்பாளர் ஒரு ஜனசங் ஆள். அவர், "இது அரசியல் கூட்டம், அதலால் நீங்க வராதீங்க பாய்!” எனச் சொல்லிவிட்டார். அதனால் அந்தக் கூட்டத் துக்கு நாங்கள் யாருமே போகவில்லை. ஆனால் அந்தக் கூட்டத்திலோ அடுத்து தேஷ்முக் பேசுவார் என ஒலி பெருக்கியில் திரும்பத் திரும்ப அறிவித்திருக்கிறார்கள். கூட்டம் முடிந்து வந்தவர்கள், “ஏன் வரவில்லை?” என என்னைக் கேட்டபோது "நான்வரக்கூடாதுஎன்று அண்ணா ஜோஷி தடைவிதித்து விட்டாரே” என உண்மையைச் சொல்லி விட்டேன். அதற்குப் பிறகு பார்க்க வேண் டுமே! அனைத்துக் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர் களும் அண்ணா ஜோஷியை வார்த்தைகளாலேயே வறுத்தெடுத்து விட்டார்கள்.
ஷம்ஸ் பீர்ஜாதாவின் முயற்சிகளால் எங்களுக்கு
அல்ஹஸனாத் மே 2011
క్రిస్తో.నీళుబిళ్లక్షణ-క్రిస్లో,ణిశీభ్కుతut 1432

Page 20
இயக்க வாழ்வு
எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுதலைக்கான ஆணை வந்தது. சிறையிலிருந்த எல்லோரிடமும் நாங்கள் பிரியா விடை பெற்றபோது எல்லோருமே எங்களை ஐயக்கண் கொண்டு பார்த்தார்கள். "இவர்கள் இந்திராகாந்தியின் திட்டங்களை ஏற்றுக் கொண்டார்கள். அதனால்தான் விடு தலை செய்யப்படுகிறார்கள்” என்று ஒருவர் கிசுகிசுத்தார். “இவர்கள் மன்னிப்புக் கேட்டிருக்கக் கூடும்” என்கிற ரீதியில் பற்பல ஐயங்கள், ஊகங்கள்.!
சிறை அலுவலகத்திற்குப் போனபோது அங்கு மேசை யிலேயே Undertaking Form ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஜெயிலர் எங்களை வரவேற்று எதிரே இருந்த நாற்காலி யில் அமரச் செய்தார். தேனீரும் கொடுத்தார். பிறகு ஆளுக் கொரு Undertaking Form கொடுத்து கையெழுத்துப் போட்டுத் தரச் சொன்னார்.
அதைப் பார்த்தபோது எனக்குத்தூக்கி வாரிப் போட் டது. "நான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நாசம் விளை விக்கும் யாதொரு செயலையும் செய்ய மாட்டேன். மக் களின் அடிப்படை வசதிகளுக்குப் பங்கம் விளைவிக்கும் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபட மாட்டேன். நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எமர்ஜென்ஸிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு போராட்டத் திலோ கிளர்ச்சியிலோ என்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டேன்” என்கிற ரீதியில் அந்த விண்ணப்பத்தில் ஏகப் பட்ட வாக்குறுதிகள் இருந்தன.
எனக்குக் கோபம் கோபமாக வந்தது. இத்தகைய விண் ணப்பங்களில் என்னால் கையெழுத்திட முடியாது என மறுத்து விட்டேன். ஜெயிலருக்கோ மலைப்பு. பெரிய பெரிய தலைவர்கள் இந்தப்பட்டியலில் கையெழுத்திட்டு விட்டு “யாரிடமும் சொல்லாதீங்க!” எனக் கோரிக்கை விடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். நீங்கள் ஒன்றும் பெரிய தலைவரும் இல்லையே. பெரிதாக அலட்டிக் கொள்ளாதீர்கள். படிவத்தில் கையெழுத்திட்டு நடை யைக் கட்டுங்கள்!” என்றார் ஜெயிலர் "உங்களையெல்லாம் விடுதலை செய்வதற்கு இந்தப் படிவத்தில் கையெழுத்தி டுவது மிக மிக அவசியம்” என்றும் அவர் சொன்னார்.
நாங்கள் சிறைக்கு வருவதற்கு முன்பு இதில் சொல்லப் பட்டுள்ள எந்தவொரு பாதகச் செயலிலும் ஈடுபட்டது கிடையாது. ஆகவே, இங்கிருந்து போன பிறகு இத்தகைய செயல்களில் ஈடுபட்டு விடுவோமா என்கிற கேள்விக்கே இடமில்லை என அந்தப் படிவத்தில் எழுதி விட்டேன். ஜெயிலருக்கோ கோபம். Undertaking Form - இல் கையெழுத்திட மறுத்தது மட்டுமல்லாமல் அதிலுள்ள நிபந்தனைகளை விமர்சித்து எழுதிவிட்டது அவரை உசுப்பி விட்டது. எங்களை மீண்டும் சிறைக்கு அனுப்பி விட்டார்.
சிறைக்குள் திரும்பவும் வழியிலேயே ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ் எங்களை சந்தித்தார். எங்களைப் பார்த்ததும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். நெடு நேரம் எங்களை இறுக்கமாக ஆரத் தழுவினார். இரவு விருந்துக்கு தமது அறைக்கு வருமாறு அழைத்தார்.
அல்ஹஸனாத், மே 2011
ஐ.அல்ஜீலா-ஜு.ஆல்ஆகிரா 1432
 

ஆனால், நாங்கள் எங்களது அறைக்குத் திரும்பியபோது அங்கு ஒரு பெருங் கூட்டமே திரண்டிருந்தது. அவர்கள் அனைவருடைய கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்தோம். ஜெயிலருக்கும் எங்களுக்கும் நடந்த உரையாடலை சுவையாக விவரித்தோம்.
நாங்கள் அண்டர்டேகிங் படிவத்தில் கையெழுத்திட மறுத்தவிட்ட செய்தி சிறை முழுவதும் காட்டுத்தீ போல பரவி விட்டது. அண்டர்டேகிங் படிவத்தில் என்ன இருந் தது, அதில் கையெழுத்திட மறுத்ததற்குக் காரணம் என்ன? ஆளாளுக்கு ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்து விட்டார் கள். இந்த மும்முரத்தில் தேவரஸின் இரவு விருந்துக்குச் செல்வதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. ஆனால், தேவ ரஸ் எங்களுக்காக ஒம்லட் செய்திருந்தார். தமது நண்பர் களையும் போக விடாமல் ஒரு மணி நேரம் காத்திருந்தார். இந்தத் தகவல் எங்களுக்கு அடுத்த நாள் தெரிய வந்தது.
அதற்கு அடுத்த நாட்களில் இஸ்லாத்தை அறிமுகப்ப டுத்தவும் கேள்விகளுக்கு விடையளிக்கவும் அருமையான வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு குரூப்பைச் சேர்ந்தவர் களும் எங்களை அழைத்தார்கள். எங்களது பேச்சைக் கேட் டார்கள். எங்களிடம் ஐயங்களைக் கேட்டார்கள்.
அடுத்த நாள் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த வழக்கறிஞர் வாலாவல்கர் என்னை தனது அறைக்கு அழைத்தார். சுவை யான பாப்லேட் மீன் வறுவல், பதார்த்தங்களுடன் விருந்து கொடுத்தார். "என்ன நீங்க எங்களையெல்லாம் சிக்கலில் சிக்கவைத்து விட்டீர்களே..!" எனப் புலம்ப ஆரம்பித்து விட்டார். அந்த Undertaking Form இல் இடம்பெற்றுள்ள வாசகங்களை நாங்கள்தான் எழுதிக் கொடுத்தோம். அதில் கையெழுத்திட்டால் போதும், எங்களது ஊழியர்களை விடுதலைசெய்து விடுவார்கள் என்ற எண்ணத்தின் அடிப் படையிலேயேதான் அந்த அண்டர்டேகிங் படிவத்தையே வடிவமைத்துக் கொடுத்தோம். ஆனால், "இப்போது நீங் களும் உங்களது தோழர்களும் அந்தப் படிவத்தில் கையெ ழுத்திட மறுத்துவிட்ட நிலையில் நாங்கள் மட்டும் கைழுெத்திடுவது எங்களது அரசியல் தற்கொலைக்கே இட்டுச் சென்றுவிடும்!” என்றெல்லாம் அவர் சொல்ல ஆரம்பித்து விட்டார்.
கடைசியில் நான்துளிகூட எதிர்பார்க்காத கோரிக்கை ஒன்றை விடுத்தார். “தயவு செய்து அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு விடுங்கள். உங்களது ஜமாஅத் தோழர் களையும் கையெழுத்திடச் செய்யுங்கள், நாங்கள் இந்தச் சிறையிலிருந்து எப்படியாவது விடுதலையாகணும். அதுதான் முக்கியம்” என்றார்.
"நீங்கள் கையெழுத்திட மறுப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது.? இந்திரா காந்தி உங்களைப் பார்த்து பயப் படப் போகிறாரா என்ன?" என்றெல்லாம் கேட்க ஆரம் பித்து விட்டார்.
நான் கொஞ்சம்கூட பிசிறில்லாமல் தெளிவாகச் சொன் னேன்: “இது எங்களது கொள்கை சம்பந்தப்பட்டது. எங் களது கொள்கையின் அடிப்படையில்தான் எங்களால் செயற்பட முடியும். வேண்டுமானால் நீங்களும்கூட
(37eb Läba51b unTräbab)

Page 21
வரலாற்றும் ஓர் அரபுப் பரம்பை
வறல0ாறு ஒரு சமூகத்திற்கு ஏன் அவசியம்? ஒரு சமூகத்தின் அடையாளத்தை தனித்துவப்படுத்திக் காட் டுவது வரலாறாகும். ஒரு சமூகம் ஏனைய சமூகங்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதும் வரலாறுதான். இத் தொடர்புகளை அலசி ஆராயும்போது யார் நண்பர்களாக இருந்தார்கள்? யார் இன்னும் நண்பர்களாக இருக்கிறார்கள்? எதிரிகளாக இருந்தவர்கள் யார்? அவர்கள் இன்னும் எதிரிகளாகவே உள்ளனரா? என்பவற்றைத் தீர்மானிக்கவும் வரலாற்றிலி ருந்து படிப்பினை பெறுவது நிச்சயம் துணைபுரியும்.
முஸ்லிம் சமூகத்தின் எழுச்சி மற்றும், வீழ்ச்சிக்கான காரணிகளை வரலாற்றிலிருந்து மாத்திரமே படித்துக் கொள்ள முடியும். முஸ்லிம்கள் எழுச்சி பெறுவதற்கு அல்குர்ஆனே வழிகாட்டியாக இருந்தது. இன்றுள்ள முஸ்லிம்களிடமும் அல்குர்ஆன் உள்ளது. ஆனால், ஏன் சீர்குலைவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன? மேம்பாட்டைக்கண்டமுஸ்லிம்கள் அல்குர்ஆனை விளங் கிக் கொண்ட விதமே சரியானது. இந்த விளக்கம் மற்றும் அது தோற்றுவித்த முன்னேற்றத்திற்கான காரணிகளைப் புரிந்து கொள்ளவும் அவற்றைப் பயன்படுத்தவும் வரலாறு மாத்திரமே சான்றாக உள்ளது. வீழ்ச்சியடைந்து, இழிவு பட்டவர்களின் பின்னடைவுக்கும் வரலாற்றுக் காரணிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர்ந்து கொள்வ தாயினும் வரலாற்றுப் பாடம் படித்தே ஆக வேண்டும்.
ஒர் இனம் எனும் வகையில் வரலாற்றிலிருந்து சரியா கப்படிப்பினை பெற்றுக் கொண்ட நவீன சமூகம் யூத சமூ கம்தான். கி.பி. 70 தொடக்கம் 1947ஆம் ஆண்டுவரை யூத சமூகம் அனுபவித்த சிறிய, பெரிய சம்பவங்கள் அனைத் தையும் அக்கு வேறு ஆணிவேறாக ஆய்வுகள், மாநாடுகள் மூலம் ஆராய்ந்து அவற்றிலிருந்து படிப்பினைகள் பெற்று அவற்றினடியாகவே நடைமுறைத் தீர்மானங்களை யூத
 

தேசம் கடந்து
r படிப்பிண்ை: ரயின் நவீன கதை
சமூகம் நிறைவேற்றுகிறது.
சிலுவை யுத்தங்களின்போது ஸலாஹ"த்தீன் அய்யூபி எவ்வாறு பலஸ்தீனை வெற்றி கொண்டார்? அவரது பக்கம் காணப்பட்ட பலம்-பலவீனம் என்ன? சிலுவை வீரர்கள் ஏன் முஸ்லிம்களிடத்தில் தோற்றுப் போனார்கள்? அவற் றுக்கான காரணிகள் யாவை? என்பன பற்றிக்கூட மாநாடு களை நடத்தி வரலாற்றுப் பாடங்களை யூதர்கள் வைத் துள்ளனர்.
இனிமேல் ஸலாஹ"த்தீன் அய்யூபி போன்று ஒருவர் தோன்றினாலும்கூட தம்மை தோல்விக்கு இட்டுச்செல்ல முடியாதவாறு, ஏற்படவிருக்கும் அபாயங்களுக்கு யூதர் கள் முற்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்துள்ளனர். இதுபோன்ற எந்த ஆபத்து வந்தாலும் அதனை முளையிலேயே கிள்ளி எறியவே அவர்கள் முயற்சிப்பார்கள்.
1981 ஜூன் 07ஆம் திகதி பக்தாதின் தென்கிழக்கில் அமைந்திருந்த சத்தாமின் அணுஉலைகளை திடீர் தாக் குதல் மூலம் இஸ்ரேல் விமானங்கள் தாக்கியழித்தமை இத்தகைய முன்னேற்பாடுகளில் ஒன்றுதான்.
ஐரோப்பா பலஸ்தீனைக் கைப்பற்றுவதற்கு சுமார் இருநூறு வருடங்கள் அரபிகளுடனும் முஸ்லிம்களுடனும் சிலுவையுத்தங்களில் ஈடுபட்டது. ஸ்பெய்னை ஐரோப்பா கைப்பற்றியபோது பலவந்த மதமாற்றம் இடம்பெற்றது மட்டுமன்றி, முஸ்லிம்கள் வகை தொகையின்றி கொல்லப் பட்டனர். காலனித்துவ ஆட்சியின்போது முஸ்லிம் உல கில் கட்டுக்கடங்காத அட்டூழியங்களைஐரோப்பாகட்ட விழ்த்து விட்டது. கடந்த ஐம்பது வருடங்களில் அமெ ரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன அரபிகள் மற்றும் முஸ்லிம்கள் விடயத்தில் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் அனைவருக்கும் தெளிவானதே.
இல்ஹஸனாத் ஐமே 2011 g సి.నీళుఖళ్లఖ$$ఎss.&ఖనిజీt 1432

Page 22
தேசம் கடந்து
கேடு விளைவிப்பவன் யார்; தீங்கு விளைவிப்பவன் யார் என பிரித்துப் பார்க்க முடியாத நிலைவரம்; நன்மை செய்பவனை நல்லவன் என்று புரிந்துகொள்ள முடியாத சிக்கல். இதுவே இன்று அரபு, முஸ்லிம் ஆட்சியாளர் களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். இதனைவிட பெரிய தண்டனை உலகில் வேறு என்ன இருக்க முடியும்? வரலாற்றுப் பாடம் படிக்காதவர்களை அல்லாஹ் இவ் வாறு சோதிப்பான் என்பது சமூகங்களின் வரலாறுகளை ஆய்வோருக்கு நன்கு புரியும்.
ஐரோப்பாவுக்கும் முஸ்லிம் உலகுக்குமிடையில் எவ் வாறான தொடர்புகள் வரலாற்றில் காணப்பட்டன; அவற் றில் முன்னெச்சரிக்கையான வரலாற்றுப் பாடங்கள் உண்டா என முஸ்லிம்களின் ஆட்சியாளர்கள் எப்போ தாவது சிந்தித்திருப்பார்களா?
தாம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூ கத்தை இதற்கு முன்னர் வெற்றிவாகை சூடி, சிறப்பாக ஆட்சி செய்தவர்களின் வரலாறுகளையாவது ஹ"ஸ்னி முபாரக் கதாபி, பின் அலி போன்றோர் படித்திருப்பார்க ளா? நிச்சயமாக இருக்காது!
முன்மாதிரி
அலி (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்களது ஆட்சியி லிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளாத அரபு ஆட்சி யாளர்களின் வரலாறே நான் கூறப்போவதாகும். ஜமல் யுத்தம் ஆஇஷா (ரழியல்லாஹ" அன்ஹா) தலைமையி லும் ஸிப்பீன் யுத்தம் முஆவியா(ரழியல்லாஹ"அன்ஹ") தலைமையிலும் அலி (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்க ளுக்கு எதிராக இடம்பெற்றவை. இச்சந்தர்ப்பங்களில் அலி (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்களை அவருடன் போர் புரிந்தவர்களுக்கு எதிராகத் துண்டிவிட எவ்வளவோ வெளிச் சக்திகள் எத்தனித்தன. அல்குர்ஆனின் அடியாக எழுந்த "பிக்ஹ்' அறிவைக் கொண்டிருந்த அன்னார் அவர்களுக்குச் சொன்ன பதில்கள், வெளிக்காட்டிய நடத்தைகள் இன்றுள்ள முஸ்லிம் சர்வதிகாரிகள் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டும்.
மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் முஸ்லிமை முஸ்லிமாகவே பார்க்க வேண்டும் என்பதை அலி (ரழி யல்லாஹ"அன்ஹ") உணர்த்தினார்கள். "ஜமல் ஸிப்பீன் யுத்தங்களில் வந்தவர்கள் ஷிர்க் வைத்தவர்களா?" எனக் கேட்கப்பட்டபோது "Sர்க்கிலிருந்து விலகியவர்கள்" என அலி (ரழியல்லாஹ"அன்ஹ") பதில் கூறினார்கள். "அவர்கள் நயவஞ்சகர்களா?"எனக் கேட்கப்பட்டபோது “நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே திக்ர் செய்வார்கள். அவர்கள் அப்படியானவர்களும் அல்லர்” எனக் கூறிய அலி (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள், "அவர்கள் எமது சகோதரர்கள்; ஆனால் ஆட்சிக்கு எதிராக அத்துமீறியவர்கள்” என பதில் கூறினார்கள். முஸ்லிம்களின் எதிரிகளுக்கு முகத்தில் சுடுதண்ணீரைக் கொட்டியது போன்று இப்பதில் அமைந்தது. ஹாஷிமிய்ய ஆட்சி
அரபுலகத்திலிருந்த ஹாஷிமிய்ய ஆட்சியாளர்கள்
அல்ஹஸனாத் மே 2011
2O 声
ஐ.அல்ஜலா-ஜு.அல்ஆகிரா 1432
 
 

இந்த முன்மாதிரியைதுக்கியெறிந்து விட்டே, உஸ்மானிய கிலாபத்தை வீழ்த்த பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸுடன் முதலாம் உலகப் போரில் கைகோர்த்தனர்.
நபிகளாரின் பேரர் ஹஸன் (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்களின் வழிவந்தவர்களே இவர்கள். ஹ"ஸைன் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களின் வழியில் வந்தவர் கள் 'ஸைய்யித்’ எனக் கூறப்படுவது போன்று, ஹஸன் (ரழியல்லாஹ"அன்ஹ") அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஹாஷிமிய்யர்கள் 'ஷரீப்" என அழைக்கப்பட்டனர். கி.பி 967-1201 வரை பல்வேறு ஷரீப் குடும்பங்கள் மேற்கு அரேபிய ஹிஜாஸ் பிரதேசத்தை ஆட்சிசெய்துள்ளன.
மன்னர் ஷரீப் ஹ"ஸைனின் குடும்பத்தினர் கி.பி. 1201-1925 வரை மக்காவை ஆட்சி செய்தனர். 1571ம் ஆண்டில் உஸ்மானிய கிலாபத்தையும் முஸ்லிம்களின் கிலாபத்தாக ஏற்றுக் கொண்டனர். 1916ம் ஆண்டு மக்கா வின் ஷரீப் ஹ"ஸைன், ஹிஜாஸ் மன்னர் எனப் பெயர் பெற்றிருந்த நிலையில் உஸ்மானிய கிலாபத்திற்கு எதிராகப் போராடினார். அரபு நிலப்பரப்புக்களை விடுவிக்க இவர் தலைமையில் இடம்பெற்ற போருக்கு பிரான்ஸும் பிரிட்டிஷ"ம் பூரண ஆதரவு தந்தன.
முதலாம் உலகப் போரில் உஸ்மானிய கிலாபத்தை தோற்கடிக்கும் ஐரோப்பிய முயற்சிக்கு உதவிய மன்னர் ஷரீப் ஹ"ஸைனுக்கு சிரியா தொடக்கம் யெமன் வரை யான பெரும் தனி அரபு சாம்ராஜ்யத்தை' கட்டியெழுப்ப, பிரிட்டனும் பிரான்ஸும் வாக்களித்திருந்தன. இந்த சாம்ராஜ்யக் கனவு காரண்மாக லெபனான், பலஸ்தீன், ஈராக், சிரியா, ஜோர்தான் மற்றும் ஹிஜாஸ் என்பவற்றில் உஸ்மானியர்களை போராடி வீழ்த்தினார்ஷரீப் ஹ"ஸைன் ஜோர்தான் சிம்மாசனத்தில் தனது மகன் அப்துல்லாஹ் வையும் சிரிய, ஈராக் சிம்மாசனத்தில் இரண்டாவது மகன் பைஸலையும் முடிசூட வைத்தார்.
உஸ்மானியர்கள் இந்த அரபு கிலாபத்திலிருந்து வெளி யேறும் வரை காத்திருந்த ஐரோப்பா ஷரீப் ஹ"ஸைனின் பெரும் அரபு சாம்ராஜ்யத்திற்கு (ஐரோப்பாவால் வாக்க ளிக்கப்பட்ட கனவு சாம்ராஜ்யம்) சாவுமனி அடிக்கத் துவங்கியது. ஹிஜாஸ், ஜித்தா, மக்கா அனைத்துமே நவீன சஊதி அரேபியாவின் ஸ்தாபகரான அப்துல் அஸிஸின் கீழ்வந்தன. இவருக்கு எதிராகப் போர்த்தொடுக்க ஷரீப் ஹ"ஸைன் பிரிட்டிஷ், பிரான்ஸ் நண்பர்களை அழைத் தார். ஆனால், பலன் கிடைக்கவில்லை. 1924ல் ஷரீப் ஹ"ஸைன், தனது மகன் அப்துல்லாஹ் பிரிட்டிஷின் அதிகாரத்தின் கீழ் மன்னராக்ப் பதவி வகித்த ஜோர்தா னில் அடைக்கலம் புகுந்தார் என்பதே உண்மை. இங்கு பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒப்புதலுடனேயே அப்துல் லாஹ் ஜோர்தானை ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
அரபிகள் உஸ்மானியர்களைத் துரத்திய பின்னர், பிரிட்டிஷ் இராணுவத்தை அழைத்தே பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தினர். இக்காலப் பகுதியில்தான் பிரிட் டிஷ் தனது இராணுவ ஆதிக்கத்தின் கீழ், முஸ்லிம்களின் பலஸ்தீன பிரதேசங்களில் யூதர்களைக் குடியேற்றிக் கொண்டிருந்தது. பலஸ்தீன் உட்பட எல்லா அரபுப்

Page 23
பிரதேசங்களிலிருந்தும் உஸ்மானியர்கள் வெளியேற்றப் பட்டதற்கான பிரதான நோக்கம் இங்கு தெளிவாகிறது. யூதர்களை ஐரோப்பாவிலிருந்து கொண்டு வந்து பலஸ் தீனில் குடியேற்ற உஸ்மானிய கலீபா இரண்டாம் அப்துல் ஹமீத் ஒருபோதும் சம்மதிக்கவில்லை.
பிரிட்டிஷ் இராணுவத்தையே தனது இராணுவமாகக் கொண்டிருந்த ஜோர்தானின் மன்னர் அப்துல்லாஹ், பலஸ்தீனை எப்படி முஸ்லிம்களுக்கு மீளப்பெற்றுக் கொடுப்பார் என்ற சந்தேகமும் விமர்சனமும் அன்று எழுந்தன. யூதக் குடியேற்றங்களுக்கு எதிராக அன்று போரிட்டுக் கொண்டிருந்த பலஸ்தீன முஜாஹிதுகள் மன்னர் அப்துல்லாஹ்வை 1951 ஜூலை 20இல் குத்ளில் வைத்து சுட்டுக் கொன்றனர். தலால்
அடுத்து அரியணை ஏறுகிறார் அப்துல்லாஹ்வின் மகன் தலால், ஜோர்தானுக்கே உரிய சுதந்திர அரசியல் யாப்பை 1952 ஜனவரியில் அவர் முன்வைத்தார். urTpTnT ளுமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது. பாராளுமன்றத் திற்கு முன்னால் அரசாங்கம் கூட்டாகவும் அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் பெறுப்புக் கூற வேண்டும் என, நேர்மைக்கு முன்மாதிரியான ஓர் அரசியல் யாப்பைதலால் முன்வைத்தார். இன்றும் மக்கள் இந்த அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துங்கள் எனக் கோரி வருகின்றனர்.
தலால் ஒரு வருடம்தான் ஆட்சியில் இருந்தார். 1951 ஜூலை 20 இல் தொடங்கி 1952 ஆகஸ்ட் 11 உடன் அவ ரது ஆட்சி முடிவடைகிறது. திடீரென, தலால் மனநிலை சரியில்லாதவர் என சொல்லப்பட்டு பதவியிறக்கம் செய் யப்படுகிறார். அவரது மகன் இரண்டாம் ஹ"ஸைன் 16 வயதில் மன்னராக பிரகடனம் செய்யப்படுகிறார்.
1952 ஜூன் 16ம் திகதிTime சஞ்சிகை 'மகிழ்ச்சியற்ற மன்னர்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளி யிட்டது.
பாரிசுக்கு செல்லும் வழியில் பாகிஸ்தானிய அமைச்சர் ஒருவரைதலால் சந்திக்கிறார். அவருக்கு மூன்று அன்பளிப் புகளையும் வழங்குகிறார். அவற்றை அவர் கீழ்வருமாறு வர்ணிக்கிறார்: “பிரிட்டிஷ்காரர்களுக்கு சேவை செய்து தனியாக மரணித்துப்போன எனது பாட்டன் ஷரீப் ஹ"ஸைனின் வைரங்கள் பொறிக்கப்பட்ட சட்டைப்பின் (ஊக்கு) இது; பிரிட்டிஷ"க்கு சேவை செய்து அல்அக்ஸா பள்ளிவாசலில் கொல்லப்பட்ட எனது தந்தை அப்துல் லாஹ்வின் தங்கமுலாம் பூசப்பட்ட அல்குர்ஆன் பிரதி இது; மாணிக்கக் கற்கள் பொறிக்கப்பட்ட என்னுடைய கத்தி இது. நானும் பிரிட்டிஷ"க்கு சேவை புரிகின்றேன். என்னுடைய முடிவு என்னவாகுமோ?” என மூன்று அன் பளிப்புகளையும் தலால் வர்ணித்ததை Time சஞ்சிகை வெளியிட்டிருந்தது.
இவருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் புதிரா கவே உள்ளது. 1972ல் அவர் மரணித்த பின்னும் 1991லும் தலாலின் நாட்குறிப்புகள் பத்தகங்களாகப் பதிப்பிக்கப் பட்டன.

தேசம் கடந்து
அரச மாளிகையில் தலாலின் தனிப்பட்ட உதவியாள ராக இருந்த சுப்ஹ"தூகானின் பதவி 1964ம் ஆண்டு முடி வடைகின்றது. அரசி ஸைன் ஷரப் (தலாலின் மனைவி) பிரித்தானிய ஜெனரல் கலூல் பாஷா, மன்னரின் அலு வலகப் பிரிவுத் தலைவர் அப்துர் ரஹ்மான் கலீபா, பல அமைச்சர்கள், மன்னரது விஷேட வைத்தியர் ஷவ்கத் ஸாதி ஆகியோர் தலாலை பதவியிறக்கம் செய்வதில் எவ் வாறு வெற்றிகண்டனர்.எனதுரகான் இந்த நாட்குறிப்புக்கு கொடுத்த மேலதிக விளக்கத்தில் தெரிவித்துள்ளார். பின் னர் மன்னர்தலால் ஜோர்தானின் இர்பித் மனநல வைத்திய சாலைக்கும் பின்னர்கெய்ரோமனநலவைத்தியசாலைக்கும் மாற்றப்பட்ட விதத்தைதூகான் தெளிவுபடுத்தியுள்ளார்.
தலால் வல்லரசுகளுக்கு செவிமடுக்காத பலநிலைப்பாடு கள், சம்பவங்கள் இந்தநூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. பல தடவைகள் வாகன விபத்துக்களிலும் மற்றுமொரு தடவை ஒரு கடற்பயணத்திலும் தான் படுகொலை செய் யப்படவிருந்தும் உயிர்தப்பியதாக தலால் எழுதியுள்ளார். தனது மனைவி ஸைன் ஷரபுக்கு இவற்றில் பாரிய பங்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலாலின் மகன் ஹ"ஸைன் 1999 ஜனவரி வரை மன் னராக இருந்து மரணித்தார். அடுத்து ஆட்சிக்கு வரவேண் டிய தலாலின் இரண்டாவது மகன் ஹஸன் அரியணை ஏற அனுமதிக்கப்படவில்லை. அவரும் தனது சகோதரர் போன்று பலஸ்தீன் விவகாரத்தில் அரபிகளுக்கே அதிகம் சார்புடையவர் என்பதால் 36 வயதே அன்று நிரம்பியிருந்த ஹ"ஸைனின் மகன் இரண்டாம் அப்துல்லாஹ் எவ்வித அனுபவமும் இன்றி ஆட்சிபீடம் ஏற்றப்பட்டு இன்று
வரை மன்னராக உள்ளார்.
சதிவலைகளுக்குள் சுழன்று கொண்டிருக்கும் அரச
குடும்பம் இதுவென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்
கின்றனர்.
பலஸ்தீனுக்குப் பகரமாக.
பலஸ்தீனை யூதர்கள் பிடித்துக் கொண்டால், பலஸ் தீனர்களுக்கு ஒர்நாடு தேவை. ஸியோனிசம் அப்பகரமான நாடாக ஜோர்தானையே சிபாரிசு செய்துள்ளது. தற்போ துள்ள அரபுலகின் ஸ்திரமற்ற நிலைவரத்தைக் கருத்திற் கொண்டு பலஸ்தீனர்களை ஜோர்தானுக்குதுரத்தி விட்டு ஆட்சியாளர் அப்துல்லாஹ்வையும் குடும்பத்தாரையும் அவரது அடிப்படை நாடாகிய ஹிஜாஸ"க்கு விரட்ட வேண்டும் என இஸ்ரேல் வலதுசாரிக் கட்சியான தேசிய ஒன்றியத்தின் செனட் சபை உறுப்பினர் எரீஹ் தாத் அண்மையில் இஸ்ரேல் அரசாங்கத்தைக் கோரியுள்ளார். ஜோர்தானிய அரசு இஸ்ரேலியதுதுவர் டேனிநாபுவை அழைத்து இக்கூற்றுக்கு விளக்கம் கோரியுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள்
உஸ்மானிய கிலாபத்திடம் பிரச்சினைகள் காணப்பட் டது உண்மை. அந்தப் பலவீனங்களைக் களைந்து அதனைப் பலப்படுத்துவதற்கு பதிலாக அதனை வீழ்த்தியதால் அரபிகள் இன்று தமது ஒற்றுமையைக்கூட காப்பாற்ற முடியாமல் போயுள்ளனர்.
(31ஆம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத் மே 2011
2 ஐ.அல்ஜலாகூஜூ.அல்ஆகிரா 1432

Page 24
குர்ஆன், ஹதீன் முக்கியத்துவமும்
00 டாக்டர் மரீனாதாவுறா ரிபாய்
මණ්mpl இஸ்லாமிய சமுதாயம் புறக்கணித்துவரும் ஒரு முக்கிய ஸ"ன்னா அல்குர்ஆன், அல்ஹதீஸ் மஜ்லிஸ" களில் கலந்து கொள்வதாகும். ஸஹரீஹ"ல் புஹாரியில் இரண்டாம் அத்தியாயமான அறிவு' எனும் பகுதியில் இப்படியான மஜ்லிஸ்"களில் கலந்து கொள்வது பற்றிய விளக்கத்தை விரிவாகக் காணலாம்.
எம் அருமை நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் தொடக்கத்தில் ஆண், பெண் இரு சாராருக்கும் ஒன்றாக மஜ்லிஸுகளை நடத்தி வந்தார்கள். ஆயினும், ஆண்களுக்கு இணையாக தமக்கும் வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும் என்று பெண்கள் கேட்டுக் கொண்டதற்கு இணையாக வாரந்தோறும் ஒரு பெண்ணின் வீட்டில் பெண்களைக் கூடச் சொல்லி அவர்களுக்குக் கற்பித்து வந்தார்கள். இவ்விடத்தில் பல விடயங்களைப் பெண்கள் கேட்டறிந்து கொண்டமை பற்றி நாம் ஹதீஸ்களில் காண்கின்றோம்.
மற்றும் ஸஹாபிகளில் சிலர் இக்கருமத்தை தாமே மேற்கொண்டு இப்படியான வகுப்புக்களை நடத்தி வந்தமையையும் பின்னர் தாபிஊன், தபஉத் தாபிஊன்கள் காலத்திலும் இப்பழக்கம் இருந்து வந்துள்ளதையும் இன்னும் மக்கா, மதீனா பள்ளிகளில் இப்பழக்கம் தொடர்ந்தும் கைக்கொள்ளப்பட்டு வந்ததையும் காண்கிறோம்.
ஆம்! முஸ்லிமாக இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது வாரத்துக்கு ஒரு முறை அல்குர்ஆன், அல்ஹதீஸ் வகுப்புக்களில் கலந்து கொள்வது அவசியம். இதற்காக ஒவ்வோர் ஊரிலும் அதன் தேவை, மக்கள் செறிவு என்பவற்றுக்கேற்ப மஹல்லாவாரியாகவோ பிரதேசவாரியாகவோ இப்படியான வகுப்புக்களை ஏற்படுத்துவது சமுதாயத்தின் கடமையாகும். இவை சிறுவர்கள், இளைஞர்கள், வயது வந்தோருக்கு வெவ்வேறாக ஆண், பெண் கலப்பின்றி நடத்தப்படுவது அவசியம். அப்போதுதான் அவ்வப் பிரிவினருக்கு ஆர்வமூட்டக்கூடிய விதத்தில் பாடங்களை
அல்ஹஸனாத் மே 2011
22
ஜு.அல்ஜலா-ஜு.அல்ஆகிரா 1432
 

o LDéjà6Ó6UT856floôT அதன் ஒழுங்குகளும்
அமைக்கலாம்.
நாம் ஏன் இவ்வகுப்புக்களுக்குப் போக வேண்டும்?
இப்போதுதானே Internet, CDகள், ஒலி, ஒளி நாடாக்கள், வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள், சஞ்சிகைகள் என இஸ்லாமிய அறிவு கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றதே? வீட்டில் இருந்தே படித்துக்
கொள்ளலாம் என்றால்;
1.
படிப்போம் படிப்போம் என்று நினைத்துக் கொண்டே இருப்போம். என்னென்னவோ வேலைகள், சாக்குப் போக்குகள் வந்து அலைமோதும்.
அதற்கென ஒரு நேரம் ஒதுக்கி, அதற்கென ஒரு பாடத்திட்டமிட்டு செய்யும்போது எமக்கு திட்ட வட்டமான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
ஒலி நாடாக்கள், வானொலி நிகழ்ச்சிகளில் சொல்லப்படும் விடயங்கள் ஸஹரீஹானவையா எனத் தேடிக் கொள்வது கடினமாக அல்லது இலகுவாக இருந்தாலும், செய்வோம் என்று நினைப்போம் ஆனால் 99% சந்தர்ப்பங்களில் செய்யப்பட மாட்டாது.
சந்தேகங்களை, வினாக்களை அவ்வப்போது ஆங்காங்கே கேட்டுக் கொள்வதற்கு வசதியிராது.
அல்லாஹ"த் தஆலா ஸஇறா அல்அஸ்ரில் ஒருவருக்கொருவர் உண்மையையும் பொறுமையையும் எடுத்துச் சொல்லச் சொல்கிறான். மக்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டு உண்மை தீனை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக் கொள்வது இவ் அல்குர்ஆன் வசனத்தைப் பின்பற்றுவதாகும்.
இப்படியான வகுப்புக்களுக்குப் போகும்போது, கற்ற விடயங்களைப் பின்பற்றுவதற்கு ஆர்வமும் ஊக்கமும் வரும். உதாரணமாக, ஹிஜாப் அணியத் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண் ஹிஜாப் அணிந்த

Page 25
பெண்கள் கூடும் கலகலப்பான மஜ்லிஸில் அடிக்கடி கலந்து கொள்ளும்போது அவர்களைப் போல் ஆடையணிந்து கொள்வதற்குரிய ஊக்கம் அவளிடத்தில் உண்டாகும். இது போலவே பொதுச் சேவைகள், கொடை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை முதலான பண்பாடு களை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்தி ஊக்குவித்து செயற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை அமைத்துத் தரும்.
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள, சமுதாயத்தில் மக்களிடையே மார்க்கத்தை வளர்த்துக் கொள்ள இத்தகைய வகுப்புகள் உதவி செய்யும்.
"எங்கெல்லாம் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ ஒன்று கூடி அல்லாஹ்வையும் அவனுடைய திருத்தூதரின் வழிகாட்டலையும் பற்றிப் பேசுகிறார்களோ அங்கெல்லாம் மலக்குமார்கள் வந்து தமது இறக்கைகளை விரித்துப் பாதுகாக்கிறார்கள்; அவர்களுக்காக துஆச் செய்கிறார்கள். அங்கு அல்லாஹ் சகீனத்தை (அமைதி, சமாதானம்) பொழியச் செய்கிறான். அங்கு வரும் ஒவ்வொருவருடைய காலடியும் அவர்களுக்கு சதகாவாக எழுதப்படும். அங்குள்ளவர்களின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். அங்கிருப்பவர்களைப் பற்றி அல்லாஹ"த்த ஆலா அவர்களை விடச் சிறந்த கூட்டத்தாருடன் (உதாரணமாக: மலக்குகளுடன்) பேசுவான். அவர்களுக்கும் கூலியாக சொர்க்கத்தைக் கொடுப்பான்" போன்றவாறான பல ஹதீஸ்கள் அல்குர்ஆன், அல்ஹதீஸ் மஜ்லிஸுகளின் அருமை, பெருமைகளை பேசிக் கொண்டிருக்கின்றன.
(மிகுதி அடுத்த இதழில், இன்ஷா அல்லாஹற்)
 

அல்ஹஸனாத் மே 2011
ஐ.அல்ஜிலா-ஐ.அல்ஆகிரா 1432
O
=م
ہے۔

Page 26
oñ ηoΛώ விடிந்த காலைப் பொழுதில் தொலைபே: மணியேர்சை வீனத்தின் அமைதியான வாழ்வில் பேரி யாய் ஒலித்தது. ரிசீவரைக் காதில் வைத்த ளினத் அதிர்ந்து போனாள். ஆமாம், அவளது கணவர் ஹமீத் காலமா விட்டார் இதனை அவரின் மகன் அறிவித்திருந்தார் கணவரின் மறைவுச் செய்திளினத்தை உலுக்கியது. அவ6 துடித்தாள். துவண்டாள். அந்த வேதனையை இறை வனைத் தவிர வேறு யார்தான் அறிவார்? எவ்வளவு அன் பாக நேசித்த கணவரின் ஜனாஸாவைப் பார்க்கக்கூ அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை.
இறைவனின் நாட்டமின்றி எதுவுமே நடக்காது என மனதிற்குள் ஆறுதல் கூறிக் கொண்டாள்.
ளினத் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. பெயருக்கேற்றார் போலவே வசீகரமானவள் அமைதியானவளும் கூட ஆனால் அவள் ஒரு விதவை மூன்று சின்னஞ் சிறுசுகள் திடீரென வந்த வயிற்றுவலி அவளது கணவர் ரிஸாவை பலிகொண்டு விட்டது. அப்போது லீனத்தின் வயது முப் தைத் தாண்டியிருந்தது.
ளினத் கஷ்டம் என்பது என்னவென்றே அறியாமல் வளர்க்கப்பட்டிருந்தவள்தான். ஆனால் ரிஸாவின் மறைவு குப் பின்னால் ஏற்பட்ட பல சோதனைகளால் அவள் ஆடி போனாள். இருந்தும்தன் கஷ்டங்களைப் பற்றிதன் பெற்றே ருக்குக்கூட காட்டிக் கொள்ளாமலேயே வாழ்ந்தாள்.
சுமார் நான்கு வருடங்கள் ஓடி மறைந்தன. தன் தங்ை யின்நிலை குறித்துளினத்தின் சகோதரன் கலங்காதநாளே இல்லை. மறுமணம் பற்றிய பேச்சை அவன் எடுக்குட போதெல்லாம் ஸினத் அதைத் தட்டிக் கழித்து விடுவாள்
-8dor(இது ஓர் உண்மைச் சம்பவம்)
காலம் உருண்டோடியது. லீனத் தொழில் விடயமாக பல ஏறி இறங்க வேண்டியநிலை ஏற்பட்டது. இந்த நேரங்களி ரிஸாவின் நினைவு அவளை வாட்டியது. தன் தனிை குறித்துக் கவலைப்பட்டாள். தன் சகோதரனுக்கு ஒ சுமையாகிவிட்டோமே என மனம் உருகினாள்.
அல்ஹஸனாத் மே 2011
ஜ.அல்ஜலா-ஜு.ஆல்ஆகிரா 1432
 
 

தானும் பிள்ளைகளும் எவ்வளவு காலத்துக்கு பெற்றோ ருக்கும் சகோதரனுக்கும் பாரமாக இருப்பது என்ற எண்ணத் தில் தன் சகோதரனின் விருப்பத்திற்கு உடன்பட்டாள். இதன் பயனாக உறவினர் ஒருவர் கொண்டு வந்த வரண்தான் ஹமீத். "ஆதரவற்ற ஒரு வயோதிபர். அன்புள்ளம் கொண்ட ஒரு மனைவியைத் தேடுகின்றார்” என்ற விளம்பரத்தில் உள்ளவரைத் தேடியதன் பயனாக, ஏற்கனவே திருமணம் முடித்து பிள்ளைகளும் உள்ள ஹமீதுக்கு மனைவியானாள். ளினத்தின் பொறுமைக்கும் இறைபக்திக்கும் ஏற்றாற்போல் ஹமீத் அமைந்தமை குறித்து அவள் இறைவனைப் புகழ்ந்தாள். ஹமீதிடம் இருந்த ஒரே ஒரு சொத்து நல்ல
66TD.
லீனத்தினதும் ஹமீதினதும் வாழ்வு தெளிந்த நீரோடை போன்று அமைதியாய் போய்க் கொண்டிருந்தது. காலச் சக்கரம் மிகவேகமாக சுழன்றுகொண்டிருந்தது. ஹமீத்தன் அயராத முயற்சியால் ஒரு தொழிலதிபராய் உருவாகிக் கொண்டிருந்தார்.
ஹமீத் ஆதரவற்றவராக ளினத்திடம் வந்து சேர்ந்தானும் காலப் போக்கில் லீனத் அவருக்குப் பல புத்திமதிகள் கூறி அவரின் பிள்ளைகளுடன் அவரைச் சேர்த்து வைத்தாள். நாட்கள் செல்லச் செல்ல தொழில் விடயமாக சொந்த ஊரான கொழும்பிற்குச் செல்பவர் தனது மகளின் வீட்டிலேயே அதிக

Page 27
நாட்கள் இருக்கத் தொடங்கினார். இருப்பினும் லீனத்தின் அன்பின் நிமித்தம் தொலைபேசியில் உரையாடுவார். மனதிற்குக் கவலையாக இருந்தாலும், அவரை பிள்ளைகளு டன் சேர்த்துவைத்துவிட்டோமே என்ற மகிழ்ச்சிளினத்தைப் பெருமைப்பட வைத்தது.
ஹமீத்ளினத் பற்றிப் பெருமைப்படுவார். நொந்து கிடந்த உள்ளத்திற்கு எவ்வாறு அவள் ஒத்தடம் கொடுத்தாள் என்ப தையும் வாழ்க்கைப்பாதையில்தன்னை எப்படி தூக்கிநிறுத் தினாள் என்பதையும் அவர் நெஞ்சுருக நினைத்துப் பார்ப் பார். ஆனால், லீனத்தின் தூய்மையான உள்ளம் ஹமீதின் பிள்ளைகளுக்குத் தெரியநியாயமில்லை. ஹமீத் தனது மக ளின் வீட்டிலிருந்துளினத்துடன் தொலைபேசியில்உரையா டுவதைக் கூட அவரது மகள் வெறுத்தாள். ஸ்மீனத்தை வேண் டாத ஒருவராக அந்தக் குடும்பம் கருதியது. எச் சந்தர்ப்பத் திலும் இந்த வீட்டு வாசலை ஸ்ரீனத் மிதிக்கக் கூடாது என சட்டம் போட்டார்கள். லீனத் பொறுமையோடிருந்தாள்.
அழிந்துபோகும் உலகின் காற்றினை சுவாசிப்பவர்கள் தானே அவர்களும்! அதை மறந்த நிலையில் அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனாலும், ளினத் தன் உற்சாகமிழந்த உள்ளத்திற்கு உயிர்கொடுத்தாள். இரவுகள் நீண்டதாக இருக் கலாம்; ஆனால், நிரந்தரமாகாது. நிச்சயம் விடியல் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காலத்தைக் கடத்தினாள்.
காலச்சக்கரம் சுழன்றோடியது.திடீரென ஒருநாள் ஹமீத் நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். லீனத் ஹமீதைநன்றாகக் கவனித்து பணிவிடை செய்தாள். ஹமீத் குணமடைந்ததும் தொழில்விடயமாக கொழும்பிற்குச் சென்று வருவதாக கூறிச் சென்றார்.நாட்கள் சென்று கொண்டிருந்தன. அன்று போன ஹமீத்ளினத்தின் இல்லத்திற்கு வரவேயில்லை. பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதால் வர முடியவில்லை என்று மறுத்து விட்டார். ஸினத் அவரைப் போய்ப் பார்ப்ப தற்கும் முடியாத நிலை. ஸினத்துடன் தொலைபேசியில் உரையாடும் போதெல்லாம் "நான் சுகமடைந்ததும் வரு வேன்” என்று ஆறுதல் கூறுவார்.
இப்படியிருக்கும்போது ஒரு நாள் தான் வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்தன்னை வைத்திய சாலையில் வந்து பார்க்கக்கூடாது என்றும் ஹமீத் உத்தர விட்டார். ஹமீதின் பிள்ளைகள் அங்கு சென்று கவனிப்ப தற்கு ஸினத் தடையாக அமைந்து விடுவாள் என்று கருதி னாரோ என்னவோ, அவளை வைத்தியசாலைக்கு வர அனுமதிக்கவேயில்லை. இவையனைத்தையும் தன் கணவருக்காகப் பொறுத்துக் கொண்டாள்.
ஹமீத் வைத்தியசாலையில் இருந்து வந்ததும் தன் மகளின் வீட்டிலேயே இருந்தார். லீனத்தின்மனம்தவித்தது. தன்னுடன் வந்து இருக்கும்படி கெஞ்சினாள். ஸினத் ஹமீ தின்மீது உயிராக இருந்தாலும் ஹமீதின் உள்ளத்தில் இருப்ப தைப் பற்றி அறியாதவளாகவே இருந்தாள்.
இவ்வாறிருக்கும்போதுதான் அந்தத் தொலைபேசி
 

அழைப்பு வந்தது. ஆம், ஹமீத் காலமாகி விட்டார். உலகம் சுற்றுவது போன்ற பிரமை, மைய்யித்தைக் கூடப் போய்ப்
பார்ப்பதற்கு அவரின் பிள்ளைகள் விரும்பவில்லை. கார ணம், அவர்களின் தந்தை இன்னொரு திருமணம் முடித்தது
பற்றி சமூகத்திற்குத் தெரியக் கூடாதாம். அது அவர்களுக்கு கெளரவக் குறைவாம். ஸினத் வேதனையால் துடித்தாள். துவண்டாள். இறுதியாகத் தன் கணவரின் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லையே உயிராக நேசித்ததன் கணவரின் ஜனாஸாவைப் பார்ப்பதற்குக்கூட உரிமையில்லாதவளாகி விட்டதுன்பத்தை அவளால் சகிக்க முடியவில்லை.
இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியும் இல்லை.
மனித இனத்திற்கு உள்ளம் என்ற ஒன்றை அல்லாஹற் கொடுத்துள்ளான். அது சிறப்புற்று விளங்கினால்தான் மற்ற வரின் உள்ளத்தை அது அறியும். ஹமீதின் மகளும் ஒரு பெண்தான். இருந்தும் தனது தந்தையின் மறைவுச் செய்தியைக் கூட ஸினத்திடம் கூறுவதற்கு கூசினாள். வாப் பாவை ஒதுக்கிவைத்திருந்த காலங்களில் கைகொடுத்து, ஒரு நல்ல நிலைக்கு பொண்டு வந்து, வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி தன் பிள்ளைகளுடன் சேர்த்து வைத்தவளைதனது தந்தையின் ஆகுமான மனைவியை, அவளை அவர் இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொண்டார் என்ற ஒரே கார னத்துக்காக ஒதுக்கி வைத்தாள்.
செய்தியறிந்த உறவினர் லீனத்தின் இல்லத்தில் குழுமி னர். அவளின் மனச் சுமை அறியாமல் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார்கள். தனக்கு நடந்த இப்பரிதாப நிலைக்கு உண்மைக் காரணம் என்னவென்று அவளுக்கே புரியாத போது அவளால் என்ன பதிலைத்தான் சொல்ல முடியும்?
லீனத் ஒரு விதவை. ஹமீதும் தன் மனைவியை விவா கரத்துச் செய்து விட்டு தனிமையாகவே வாழ்ந்தவர். இஸ் லாம் விதவைக்கு வாழ்வளிப்பதைத் தடை செய்யவில் லையே! ஆனால் அவரின் பிள்ளைகள் இதனை எதிர்த்தார் கள். இதன் விளைவு தன் கணவரின் மைய்யித்தைப் பார்ப்பதற்கு மனைவிக்கு உரிமை இல்லாமல் போய்விட்டது.
அடுக்கடுக்காய் இரண்டு இத்தாக்கள். எல்லோருக்கும் கிடைக்காது இந்தப் பாக்கியம் என அவள் மனதிற்குள் ஒர் உச்சாடனம். எனக்கு ஏற்பட்ட இப்பரிதாப நிலை வேறு எந்த விதவைப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. அறிவும் இறையச்சமும் பண்பாடுகளும் வெறும் பதர்களாய்ப் பார்க் கப்படும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை அவள் மறந்து விடவில்லை.
லீனத்தின் கண்ணிர் கானல் நீராய்க் கரைந்து கொண்டிருக்கிறது.
விழித்துக் கொண்டே உறங்குகின்றாள் விடியும் நாட்களுக்காய்.
அல்ஹஸனாத் மே 2011
25 ஜூ.அல்ஜலா-ஜு.அல்ஆகிரr 1432

Page 28
ஸ்பானாசுவுைறப் இஸ்லாவறிய்யா வளாகம், புத்தளம்
“தாத்தா புஷ்ராட சிறுநீர் உடுப்புல பட்டிக்கிற, அது நஜீஸ்..."
"ம். தெரியும், அதனாலதான் நான் இப்ப தொழுவுற இல்ல."
"வாப்பா இஷாக்கு அதான் சொல்லப் போற. மஹற்ரிப் தொழப் போங்களே."
“ஆ. மகள். இப்பதான் வேலை முடிஞ்சு வந்த. பிறகு குளிச்சிட்டு இரண்டையும் சேர்த்துத் தொழுவோம்.”
'தம்பி. தொழப் போங்களே. உங்களுக்கு எத்தின வயசாகுது இன்னும் சின்னப்புள்ள நெனப்பா..?”
“அதான் சொல்லிட்டு. போங்களே அவசரமா. தொழாட்டி என்ன பாவண்டு தெரியும்தானே..?”
“சரி. சரி. போறன். இன்னைக்கி இல்ல.நாளையில இருந்து முதல்ல இருந்து தொழுறபோதுமா..?”
"உம்மா. முஹருக்கு அதான் கேட்டுட்டு தொழல்லையா..?”
"நான். அஸருக்குக் கிட்டவாகி தொழுவுற மகள். அப்படின்னா இரண்டையும் ஒரே வுழுவில் தொழலாம்."
இன்னும் சிலர் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்களேன்!
“மகள் நீங்கசொல்றளல்லாம் சரிதான். ஆனாஎனக்குக் கொஞ்சம் கஷ்டம். நீங்க சொல்லிநான் செய்தாஉங்களுக் காக செய்யிறபோல இருக்கும். அதனால எனக்கு எப்ப செய் யனும் என்று தோனுதோ அப்ப செய்யரை பண்ணுற.”
சகோதர சகோதரிகளே..! இந்த பதில்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.?
இவையெல்லாம் நியாயயமான காரணங்களா? அல்லாஹற்இவற்றை ஏற்றுக்கொள்வானா?
தொழுகை என்ற வணக்கத்தை இவர்கள் சாதாரண ஒரு விடயமாகப் பார்க்கிறார்களா? அல்லது தாங்கள் செய்யுப் நாதாந்த வேலைகளில் ஒன்றாகக் கருதுகிறார்களா?
மிஃராஜின்போது அல்லாஹத் த&ஆலா நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு (எமது சமூகத்துக்கு) வழங்கிய அற்புதமான பரிசே தொழுகை எம்மைப் படைத்த அருளாளனுடன் ஐந்து வேளையும்
அல்ஹஸனாத் மே 2011
ஐ.அல்ஊலா-ஜு.அல்ஆகிரா 1432
 

ப்ரேக்டுகளா?
உரையாடும் ஓர் அரிய வாய்ப்பு. இத்தனைக்கும் மேலாக அது இறைவனுக்குநாம் செய்யவேண்டிய கடமையுமாகும். 24 மணி நேரங்களில் எமக்கிருக்கும் அன்றாட வேலை களில் ஒன்றல்ல தொழுகை. அதையும்விடமுக்கியமான ஓர் அமல்
என்ன வேலையாக இருந்தாலும் அதான் கேட்டு விட்டால் இறைவனைத் துதிப்பதற்காக விரையுங்கள்; பின்னரே உங்கள் வேலைகளைப் பற்றி நினையுங்கள்.
அற்ப காரணங்களுக்காக தொழுகையை விட எமக்கு எந்த உரிமையும் இல்லை. உண்மையில் எமதுவாழ்க்கை முழுவதுமே இபாதத்தாக மாற வேண்டும். ஆனால், எமது முழு வாழ்வினும் ஓர் இபாதத்தை மேற்கொள்ள எம்மில் அநேகம் பேருக்கு பொடுபோக்கு. நாம் சிந்தித்துப் பார்க்க (86.60orLITLDIT?
“இறையச்சமுள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்க ளுக்கு திண்ணமாக தொழுகை ஒரு பாரமான செயல் தான்." (2: 45)
தொழுகை எமக்கு பாரமாக அமைந்து விட்டால் நமது நிலை என்ன? இறையச்சம் இல்லாத கூட்டத்தில் அல்லவா நாம் இணைந்து விடுவோம்; அல்லாஹற் பாதுகாப்பானாக!
சகோதர சகோதரிகளே! 'திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கிறது.*
(29: 45)
எம்மைச் சூழ நடப்பவை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். எத்னை தீமைகள்; எத்தனை மானக்கேடான நடத்தைகள் உயிரோட்டமுள்ள தொழுகை இந்த சமூகத்தில் இல்லாததும் இதற்குக் காரணம்தானே!
நான் இப்படியெல்லாம் இல்லை” என்றுநீங்கள் மட்டும் தப்பித்துக் கொண்டால் போதுமா? உங்கள் குடும்பம், அயலார், உறவுகள் மற்றும் எமது சமூகத்தின் செயல்களை &iridisfaisabeomLDIT?
ஒருபோதும் முடியாது. எம்மையும் எம்மைச்சூழவுள்ள இடத்தையும் பாதுகாப்பதில் எமக்கும் பங்கு உண்டு. ஒரு முஃமினுடைய கண்குளிர்ச்சியாக இருக்க வேண்டிய தொழுகையை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருப்போம்.நம்மை மட்டுமன்றி, நமதுகழலையும் சூழலில் உள்ளவர்களையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வோம்.
சத்தியத் தூதினை நித்தியமாய் நாம் ஒவ்வொருவரும் காக்க வேண்டும். இறைவழியில் எம் பயணமும் தொடர வேண்டும், இன்ஷா அல்லாஹற்.

Page 29
STUDy IN...
"LONDON
USA I CANADA / RELAND /
SWEDENT MALAYSIAI INDIA
Ν జx
No Need 4
ELTS <
鹅接羧接 戮矮蕊慈鲨
 
 
 
 
 
 
 
 
 
 

/NEW ZEALAND
SINGAPORE I FRANCE | TALY NORWAY | HOLAND I CYPRUS முன்பு எந்தக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகளினூடாக Sponsor வசதி
பாதேUKயிலுள்ள கம்பனிகளில் ଔଜ୍ଜt[i];
Job) பெற்றுத்தரப்படும்.
தசட்டத்தரணிகளால் Document செய்வதால் விசாக்கள் 100% ப்படுத்தப்படுகிறது இ
நாட்களில்VSAசம்பந்தமான னைத்துவிடயங்களும் செய்து
விசாபெற்றுத்தரப்படும்
※エ
NIUM BUSINESS ACADEMY (MBA)
R.A. De Me Mawatha, Colombo - 03. the Liberty Plaza, Next to Don Karolis)
900 yahoo.com Hasan abandogyahoo.com နူးခွနှီး wnimbacon
இல்ஹலலாத் மே 2011 Sజిల్లిఖtయిక్కాణితునితgt; 432

Page 30
Amaraves
தொடர்புகளுக்கு: எச்.எம். அம்ஜீன் (முகாமையாளர்) (07 அல்ஹாஜ் பிர்தெளஸ் (0773059792) அல்ஹாஜ் றிஸ்வான் (077896153)
ଔଷ୍ଣ୍ଯ எமது மற்றுமொறு கிளை
-ឌឺហ្រ្វ និង 20
జనీళుఖళ్లిఖజ్రజ్యప్తిజీ క్షీణి:32
 
 
 

rivate Limited
இன்னும் பல பெக்கேஜ்களும் உண்டு
308079) Head office
KGI. Dias Place (Purwarama Place)
Colomb012 Sri Lanka. Rel: 0112335657 Fax: 01112437308
email: amjadeemastnell

Page 31
சர்வதேச மொழிகளை கற் 8888828Ꮥ7828Ꮿ8 PPP
இலங்கையில் முதல் முறையாக அத
மொழிகளை கற்பிப்பதற்காக
giro (853 booglou JLDIT60
International Language Cel
அதிநவீன தொழில்நுட்ப வசதி கற்றுக் கொள்வதற்கு வழிவகு Our Courses .
ENGLISH
D Spoken English for Beginners
Spoken English for Professional P. Diploma in English > IELT
OTHER LANGUAGES
6) Japanese 6. Korean GE) A
6 German 6. Russian @ S।
6 Hindi 6) Tami 6 S.
qualified & Experienced Lecture Panel City & Guilds Approved Centre for English
Convenient Class schedule --------------------- AIC Class Rooms separate Classes for Female students Limited students
OR (N
International Language Centre
Colombo E-r
 
 
 
 
 
 
 
 
 

is Certificate in English TS b> ESOL )> SESOL
rabic 6) French 6) Chinese
banish : 69 Italian 6) Dutch
inhala
洽:0114373606 W.W. ice duk
R. A. De Mel Mawatha
lar House of Fashion), Bambalapitiya.
: 011 4373607, 011 4373608
nail: infoOilcedu.lk
இல்ஹஸனாத் மே 2011
ஒ.அல்ஜலா-ஜூ.அல்ஆகிரா 432

Page 32
We are intereste 蠶 It means ou
Certificate in Inter
Certificate in Inte * Online Bank Account
Advance Certificate in
& Forex Trading (Forei 8 MT4 platform
How to Trading with the
COUSEDUation 10hrs C.
eserve your seats or FREE introductory
seminar - Interne Money
அல்ஹஸனாத் மே 2011
27B
అల్లా, శ్రీకుబిళ్లిణప్రోణునిఖీt #32
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 in your SUCCESS because
STRATEGY is Effective et & E-mail
USeFees
ett & E-Commerce Free USA
grannes
Use Fees 4500/-
internet & E-Commerce gn Exchange Trading)
help of Signals, indicators.
Se Fees ( 4500/-
Online Data Entry Job Training k Office Packages sk Web Designing
Accounting OUSe Djation Course Fees 2500/-
te of internet Stucies t Place, Delhiwala, Srilanka. 330 Mob- O 718 348190. BrinstituteCDgmail.com

Page 33
- அக்குறனை வறலிம் இஷாக் -
வறின்ரி 1432க்கான ஜமாஅத்தின் இஜ்திமா செயற்திட்டத்தில் எமது ஊர் அக்குறணையில் இடம் பெற்ற குடும்ப இஜதிமா பல்வேறு செய்திகளையும் அனுபவப் பகிர்வுகளையும் எமக்கு அள்ளித் தந்தது.
இவ்வருட குடும்ப இஜ்திமா ஆண்கள், பெண்கள், சிறார்களை இணைத்ததாக அவர்களுக்கு தனித்தனி யான சிறப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று முடிந்தது, அல்ஹம்துலில்லாஹ். குடும்ப இஜ்திமாவுக்கான கள வேலைத் திட்டமும் ஆரம்பத்தில் இருந்தே ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கென வெவ்வேறாக தனித் தனியே ஆரம்பித்து நடைபெற்றன.
இந்த வேலைத்திட்டங்களோடு களத்திலே இறங்கிய போது சிந்திக்க வைத்த அழகிய சந்தர்ப்பங்களை அல்லாஹ் ஏற்படுத்தித் தந்தான். அவற்றுள் சிலவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சந்திப்பு 1: பெண்கள் பகுதியின் ஊழியர்கள் சிறிய அளவிலான பல்வேறு முன்னோடி நிகழ்ச்சிகளை நடத்தினர். இந் நிகழ்ச்சிகளின்போதெல்லாம் எமது ஊழியர்களின் பல்வேறு ஆளுமைகளும் திறமைகளும் வெளிப்பட்டன.
அதிலே ஒரு சகோதரி ஒரு முன்னோடி நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியதைக் கேள்வியுற்ற அவரது மாமி
Diploman Nursing pharmac
{Pharn
slavas Nursing Pharmacy, Mill,
Ra 毅縱 ogreahy Cursing uncatalist
apakaiera ፊቝ 9/. Lucas AGRA assad saab Pharnracy இவர்களுக்கு kiek-gäl...så samburg ශ්‍රීඝ Cer eagálasúliustb.
SS ta Aatas (aasgeglig 373 Polsaenaey Le
孪线戮
sektiraž, strnrtit a Pharmacy
Élisa Z. Pharmacy a a .sisi.I.s. i. asságb cas 12 korths with 03rorths Fultirnspeartca. Z Medicta Co Practical in well established private hospitals) Medical Reg Madi Ha- Dip, in. Pha
Sinhallows: Erigliefh Nikurging cypril sest. sriti
భజిభజిభజిళ్లభ భళ్ల
பெயர், முகவரி,TP இல, கல்வித்தகைை
s, aakaligat- tJE. Gjispotij: விண்ணப்பம்கண் விண்ணப்பத்தை 16.05.20
2. khukhwing aboggara
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஜ்திமாவுக்கு அழைக்கிறோம்.
cente ..)
/ Science in AV,
licence Capartib isfigh hospital død safrau 'n pany assifs » Asarba Mytisk irrin terugiškaisara
இதிமா சந்திப்புகள்
SSS SSS SSASS SSS SSS S SSS SSS SSBBSSMSMSMSS SSMSSSMSSSSSSS SS SS SS SS SSL -
யார் மட்டற்ற மகிழ்ச்சியில் மறுநாளே பலகாரம் சுட்டு எடுத்துக் கொண்டு வந்து மருமகளைப் பாராட்டியுள்ளார். சந்திப்பு 2 மற்றுமொரு பெண் ஊழியர் இஜதிமா களவேலைகள் அனைத்தின்போதும் தனது மூத்த மகளையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். ஓரிரு நிகழ்ச்சிகளை நடத்தி வீடு வந்த பிறகு, அவரது மூத்த மகள் செய்த கைங்கரியம் அவரை பூரிப்புக்கு ஆளாக்கி யிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆம், அந்த மகள் வீட்டிலுள்ள உம்மம்மா மற்றும் தனது தங்கைமார்களை வட்டமாக அமர்த்திக் கொண்டு பயான் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
இத்தனைக்கும் அந்த மகளுக்கு வயது நான்குதான். சந்திப்பு 3: "குடும்ப இஜ்திமாவுக்கு குடும்பமாக வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தபோது, எனது நெருங்கிய உறவுக்காரர் ஒருவர் "இது பாபுல் பித்னா” (குழப்பத்தின் வாயில்) என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி விட்டார். ஒரு கணம் ஆடிப்போன நான் சுதாகரித்துக் கொண்டு சொன்னேன்:
"திருமணமண்டபத்துக்குநுவரெலியா சுற்றுலாவுக்கு ஷொப்பிங் செய்வதற்கு கண்காட்சிகளுக்கு குடும்பமாகப் போகலாம், வரலாம். அல்லாஹ்வுடையதீனைக் கற்பதற்கு மட்டும் கூட்டாகச் செல்லக் கூடாது! இது அறியாமை. இந்த அறியாமை இருளை நீக்கத்தான் உங்களை இந்த
LTLLLLLTL LLMLMLLLLS LLTTLTLT LTTTLTS måned efests assièm afganisaa ai taria Sabdi asad Gafari 3
A8 WS8A XA ... * MK 4* fiaid tam?
narrisint. anyu (Theory Practical) ::18 Monthis ;Ꮿ8 உஐஆண்9 glish, Sk Tarn عن سيعقضية
fi
AGRA Institute
LLLLLS 00S0LLS LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLS00L0L00LS Tres 78 77 377 397
அல்ஹஸனாத் மே 2011
ஐ.அல்ஜலா-ஐ-அல்ஆகிரா 1432

Page 34
&
*xxxx
ീ
భ
بي ۶8می*
யாரும் அறியாமல் யாவும் செய்யும்
நன்று பெரிது -கொடும் தீதோ அதனிலும் பெரிது!
ஒற்றை விரலசைவில் உலகமே கைப்பிடியுள்!
சென்ற யுகம் அறியாத செய்திறன்கள் ஏராளம் அனைவரும் வாயடைத்திட அதுவே ஆதாரம்
இளையவர் கண் இணையத்தில் கலந்து விட்டால் இரவும் விடிந்துவிடும் உணவும் மறந்து போகும்!
மனதை உருட்டி உருட்டிப் பந்தாடும் மிலேனிய விளையாட்டு
மைதானம்!
பெரிதாய் படித்ததில் - இழிவை
:w:x.
%:::്.
శ్రీ **46% •ళXX8%భళYణ:
we 4%. 38 xxx x . . .
ॐ १४४४४* ***४
総**** xxx xxx
భ%xళ##డ: *
జిభxtrళ *pxళ$ు జge
88.894 &
வீடுவரை இழுத்துவந்த
ஏராளம்
chat தொடர்புகள் குடும்பத்தைச் சிதறடிக்கும் கோழிக் கால்கள்
facebook g6iv logg) இப்லிஸின் இழுப்பில் கைதாகி முகம் கிழிந்து போன எத்தனை முஸ்லிம்கள்?
கணியிருக்க காய்கவரும் இளையவருள்ளம் நல்லதை நன்மையை நாடுமோ தொடருமோ!?
பக்குவமில்லா கைகளில் இணையம் போதைப்பொருள்! வீடு வந்த விலைமகள்!!
கனி தரும் மரங்களென்று
66.5696 கனவு காண்கிறோம்!
- ஜுமானாஹிஜாஸ், அம்பரப்பொல
அல்ஹஸனாத் மே 2011 28
ஐ.அல்ஜிலாகூஜ.அல்ஆகிரா 1432
 
 
 
 
 
 

இனி பச்சைக் O4. பறக்கும்
LujiGOLDuSaot பட்டினமே-உன்னை பாலைவனமாக்கியது யார்?
வரலாற்றின் தொடக்கமே வாழவைத்த உன்னை வனாந்தரமாக்கியது யார்?
முறைதவறிப்பிறந்த இஸ்ரேலின் இம்சையினால் இடிந்து போன என் இதயமே- என் ஒவ்வொரு துடிப்பிலும் ஒலிப்பதுநீதான்!
LD60fig556öT LDSLLDTij புனிதத்தின் புகலிடமாய் பூத்திருந்த இந்த பூந்தோட்டத்தில்-ஏது Lai5LibLILib!
வெடிகுண்டில் கருகிப்போன
எம் கதாநாயகர்கள். ; நொறுங்கிப்போன
எம் வாழ்விடங்கள். கலைந்துபோன எம்உறவுகள்.
9ulůull
உதிரமும் உக்கிப்போன உடல்களும்தான் இன்றைய சேமிப்புகள்!
உடைந்துபோன sinLITUriab6floo ஒட்டுப்போட்ட நம்பிக்கைகள் சிதைந்துபோன சின்னஞ் சிறுசுகளின் சிதைவுகள் கண்ணில் கரைந்துபோயிற்று இரவுகளின் கனவுகள்.
எம்பலஸ்தீன
ിന്തുഖങ്ങിങ്ങ്
கவண் கற்களுக்கு கவசங்களுள் பதுங்கும் கையாலாகாதவர்கள் நீங்கள்
யாசீனின் யதார்த்தத்தில் அய்யாவழின் அறிவியலில் உதித்தவை-இந்த உதயசூரியன்கள்! எம்விடியலை கரங்களால் தடுக்க நினைப்பவர்களுக்கு இது கடைசி எச்சரிக்கை.
வெற்றி ஒன்றும் வேற்றுக் கிரகமல்ல. கிட்டும் தூரம்தான்!
பொறுங்கள் உங்கள்தற்காலிக சந்தோஷங்கள் சகதியாகட்டும் அக்ஸா மட்டுமல்ல ஜெரூஸலத்திலும் இனி பச்சைக் கொடி பறக்கும்!
வீர மரணங்கள் ஒன்றும் விழுப்புண்களல்ல புழுக்கள் வருவதற்கு. விதைகள் அவை மரித்தும் மலரும் விடியலுக்கு
தவறிப்பிறந்த இஸ்ரேலின் தடயம் மறைவதற்கு ஏவுகணைகள் மட்டுமல்ல பலஸ்தீனம்-உங்கள் துஆக்களையும் எதிர்பார்க்கிறது
- டாக்டர் எம்.எம். இக்ராம்
போதனா வைத்தியசாலை, கண்டி
HOTLINE 07/2 2s.

Page 35
சக்கரவர்த்தி ஆகாதே
நெஞ்சமது பஞ்சணையாய் பூமிதனில் குளிர்ந்து தினம் குதுரகலமாய் பரவசத்தோடு துள்ளி ஒடும் புள்ளி மானாய் வாழும் பெண்ணே!
சந்தோஷம்தான் தஞ்சமென சதாவும் நீ எண்ணுவது சத்தியமாய்ச் சொல்கின்றேன் தப்புத்தான் உணர்வாயா?
இன்பம் துன்பம் வாழ்வினிலே இழுபறியாய் இருக்கும்போது பிழையான கூற்றினிலே பிழைத்து நீ வாழ்கின்றாய்- இதை உணர்ந்து நீ திசை மாறிட்டால் தித்திக்கும் உன் வாழ்வு!
இரவைப் பகலாக்கி இனித்திடச் சுவைக்கின்றாய் சக்கரம்போல் இன்பமதில்
சுழன்று சக்கரவர்த்தி ஆகின்றாய்!
ஆக்கமுறு பணி செய்ய ஆராய்ந்து பார்க்காமல் ஆவலுடன் அணுகுவதால் அர்த்தமிங்கு இல்லயடி!
வீணாக விவாதித்து வாயளக்கின்றாய் இதுதான் வாழ்க்கையென நித்தமும் நீ நினைக்கின்றாய் மார்க்கத்தை மறந்து தினம்
மண்ணில் குதிக்கின்றாய்!
உன்னை அறியாமல் எத்தனை பாவங்கள் சொல்ல முடியா அளவுக்கு துயரில்லா உன் வாழ்வு பாவங்களை சுமந்தபடி!
சாட்சிகளேதுமின்றி ஆட்சி புரிகின்றாய் மனச் சாட்சியை மறந்து காட்சி அளிக்கின்றாய்!
அல்லாஹ் ஒருவனையே நெஞ்சிலிடு நித்தமும் நீ அவனது அருட்கொடைகளை அகிலத்தில் பெற்றிடு! அழுக்கான உன் வாழ்வு சுத்தமாய் பிரகாசிக்கும்
- LunTuSlsmom Gopassino, சீனக்கேட்டை
 
 

S
சமுதாயச் சுழலுக்குள் துரும்பாய்ச் சுழல்கையில். உலகச் சாகரத்தில் துளியாய்ச் சங்கமிக்கையில். FLorofiu I 260ortrojesesit சோதிக்கப்படுகின்றன
வாழ்வதற்காக நாம் பிறக்கவில்லை என்ற ழ்க்கைத் தத்துவத் வலிந்துதான்
புதைக்க வேண்டியிருக்கிறது
சில சமயங்களில்
Š
S
Š
Š Š Š S Š 、 S Š S Š ミ Š Š Š Š Š Š Š Š S S Š Š Š Š Š Š Š Š Š Š Š Š Š Š Š S Š S & Š S S Š N 。 Š
நழுவிக் விகாண்டோடும் ஈமானியச் செல்வத்தை இழுத்துப் பிடித் இதயத்தில் goists (366togul தேவையிருக்கிறது
நாலு சுவர்களுக்குள் கட்டப்படும்
தக்வாவின் கோட்டைகள் நாலு பேருக்குமத்தியில் ஆட்டம் காண்பதை உணர முடிகிறது!
சமூகப்புழுதிக்குள் முங்கி எழுகையில் இஸ்லாமிய உணர்வு தன்னை சவால்கள் பல சந்திக்க வருகிறது
சோதனைகளுக்கு மத்தியிலும்
&F6)III6OSSIBSces 860Luh&6outh உள்ளங்கள் உறுதியாய் விரும்புகிறது தளம்பும் ஈமானைத் தக்க வைக்க
GLurlig, 6IIITDICDIn நான் என்ற மமதை வெற்றியைத் தருபவன் அவனென்றறியாத வெறிகொண்ட வேட்கை அனைத்தையும் இந்த உலகம் புதைக்குமானால் &6io6OITsui 2 Goofregoirot தக்வாவின் இதயங்கள் தவிப்புக்குள்ளாகுமா?
- ஏ.ஆர்.எப். ரிஸானா
அல்ஹஸனாத் மே 2011 29
2
ஜு.அல்ஊலா-ஜு.அல்ஆகிரா 1432

Page 36
இஸ்லாம் உயர் தரம்
66ioGorrisu fill eypson அஸ்ள
அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்
அஸ்ஸுன்னாவின் முக்கியத்துவம்
அஸ்ஸுன்னா இஸ்லாத்தின் அடிப்படை சட்ட மூலாதாரங்களுள் அல்குர்ஆனுக்கு அடுத்த நிலையில் வைத்து நோக்கப்படுகின்றது. அது முழு மனித சமூகமும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய நிலையான சட்ட மூலாதார மாகும். அதனை மறுப்பது, புறக்கணிப்பது, அல்குர் ஆன்மாத்திரமே போதுமானது என்று வாதிடுவது முதலா னவை மதமாற்றமாகவே அமைந்துவிடும். அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் அல்லாஹ்வின் வேதவெளிப்பாடுகள் ஆகும். அல்குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட வஹி (வஹி மத்லு), அஸ்ஸுன்னா ஒதிக் காண்பிக்கப்படாத வஹி (வஹி கைரு மத்லு) என்று இரண்டையும் வஹியாகவே அல்குர்ஆன் எமக்கு விளக்கி நிற்கின்றது.
ހ 1 ހ: گہ 2 o ノタ ? イ گرہن سمیہ وما ينطق عن الهوى إن هو إلا وخين يؤخى
“அவர் எதனையும் தன் மனோஇச்சைப் பிரகாரம் பேசு
வது கிடையாது. அவை அனைத்தும் (தூதருக்கு)வஹி யாக அறிவிக்கப்படுகின்றவையே.* அெந்நஜ்ம்: 3-4)
இறுதித்தூதரின் பணி விசாலமானது. இஸ்லாத்தை சர்வதேசத்தன்மை வாய்ந்ததாக மாற்றுகின்ற பொறுப்பை அது சுமந்திருந்தது. மறுமை வரையிலான மனித வாழ்வுக் கான வாழ்வியல் வழிகாட்டல்களை வழங்குகின்ற கடப் பாடும் அதற்கிருந்தது. சாதாரண தனி மனித வாழ்வு முதல் சமூகவியல், பொருளாதாரம், அரசு என விரிந்து செல்லும் மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளுக்கும் நெறிமுறைகளை ஒழுங்குகளை ஆழ விளக்க வேண்டி யிருந்தது.
இறுதித் தூதரின் வாழ்வியல் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் எவ்விதக் குறையுமின்றி வழிகாட்டி நிற்கின்ற நுணுக்கத்தை யார்தான் மறுத்து ரைக்க முடியும்?
இதனால்தான் அல்குர்ஆன் பல்வேறு இடங்களில் இறைத்தூதருக்கு கட்டுப்படுவதன் அவசியத்தையும் அவரது வாழ்வு முன்மாதிரிகளில் பூரணத்துவம்மிக்கது என்பதையும் வலியுறுத்தி நிற்பதை நாம் காண முடிகின்றது.
من يُطلع الرشؤل فقد أطاع الله “எவர் அல்லாஹ்வின் தூதருக்கு முற்றிலும் கட்டுப்
பட்டு நடக்கின்றாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராவார்.” (அந்நிஸா: 80)
அல்ஹஸனாத் மே 2011 ஐ.அல்ஜலா-ஜ.அல்ஆகிரா 1432
3O
 
 

தாரம் என்ற வகையில்
seo - ot
6767/7 லுல் பாரிஸ் (நளிமி), தொடர் 22
மனிதன் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதன் அடை யாளமாக 'அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படுதல்" என்பது துல்லியமாக அல்குர்ஆனில் எடுத்துரைக்கப்பட் டுள்ளது. பார்க்க- (3:32, 132), (64: 12), (33:31)
மனித வாழ்வின் இலக்கு அல்லாஹ்வின் திருப்தியை ஈட்டிக் கொள்வதாகும். அதுதான் மனிதன் பெற்றுக் கொள்கின்ற மகத்தான வெற்றியாகும். அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுதல் என்ற இலட்சியம் ஈடேற வேண் டும் என முயற்சிக்கும் மனிதன் இறைத்தூதரைப் பின்பற் றியாக வேண்டும்.
*(நபியே!) நீர் கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்.” ) ويலு இம்ரான்: 31)
இறைத்தூதர் ஏவுவதை ஏற்றுக் கொள்வதும் அவர் தடுப்பவற்றை முற்றாகத் தவிர்ந்து வாழ வேண்டு மென்பதும் அல்லாஹ்வின் ஏவல். அல்லாஹ்வின் ஏவலை எப்படிப் புறக்கணிக்க முடியும்?
“அல்லாஹ்வின் தூதர் உங்களிடம் கொண்டுவந்த வற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர் உங்கள் விடயத்தில் தடுப்பவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள்." (அல்ஹஷ்ர்:7)
இறைத்தூதருக்கு கட்டுப்பட்டு அவர் வழங்கும் வழிகாட்டலில் சலனங்கள், சங்கடங்கள் இன்றி ஏற்று அமுல்படுத்துவதன் அவசியத்தை தன்மீது சத்தியம் செய்து வலியுறுத்துதை நாம் அவதானிக்க முடியும்.
“உமதிரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் சர்ச்சைகளில் உம்மை நீதிபதியாக நிறுத்தி, அவ்விடயத்தில் நீர் வழங்கும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியுமின்றி முழு மன தோடு ஏற்று பின்பற்றாதவரையில் அவர்கள் விசுவாசிக 6ntires udstil stigssit. ” (அந்நிஸா: 65)
“அல்லாஹ்வும் அவனது தூதரும் யாதொரு விடயத் தில் தீர்ப்புக் கூறினால் அது விடயத்தில் சுயமாக வேறு தீர்மானங்கள் மேற்கொள்வதற்கு எந்தவொரு விசுவாசம் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிகாரம் இல்லை." (அல்அஹ்ஸாப்: 36)
மேற்குறித்த அல்குர்ஆன் வசனங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படுவதையும் அவரைப் பின்பற்றி வாழ் வதன் அவசியத்தையும் மிகத் தெளிவாக விளக்கி நிற்கின் றன. உண்மையில் மனிதன் மனிதனுக்கு அடிமைப்பட்டு வாழ்வது பெருத்த அநியாயமாகும். கொள்கைகள், கோட் பாடுகள், சித்தாந்தங்கள் என்ற பெயரில் மனிதனுக்கு

Page 37
விலங்கிடப்படுவது பெரும் கொடுமையாகும். மனித வாழ்வை உலக வாழ்வுடன் சுருக்கி அவனது மனநிறை வான வாழ்வுக்கு அணைகட்டுவது இழிவாகும்.
மனிதன் தன் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண் டும். அதன் இலக்கைத் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றி அவன் அறிந்து கொள்ள வேண்டும். உலகில் நிகழ்த்தப்படும் அனைத்து அடிமைத்துவ விலங்கு களையும் உடைத்து சுதந்திரப் புருஷர்களுக்கான வாழ் வுக்கான அனைத்து உத்தரவாதங்களும் சுபசோபனங்க ளும் அண்ணலாரின் வாழ்வில் அழகாய் அறிவுபூர்வ
வரலாற்றுப் படிப்பினை. (21ஆம் பக்கத் தொடர்)
அலி (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களின் முன் மாதிரியை ஷரீப் ஹ"ஸைன் பின்பற்றியிருந்தால் பலஸ் தீனுக்கு ஏற்பட்டுள்ள அவலம் நிச்சயம் ஏற்பட்டிருக்காது. உஸ்மானிய துருப்புக்கள் வெளியேறாது போயிருந்தால் இன்று அரபுலகை கட்டுப்படுத்த பாடுபடும் யூத தேசம் பலஸ்தீனில் தோன்றியிருக்கவே வாய்ப்பில்லை. ஷரீப் ஹ"ஸைன் போன்று இன்னும் வெளிசக்திகளில் சார்ந்து நிற்கும் அரபு நாடுகளின் நிலைவரம் எங்கு செல்லும் என் பதைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இன்னும் பலதலால்களை அரபுலகம் சந்திக்க வேண்டி வரும். மக்களை அடக்கி ஒடுக்குவது நாளை மன்ன ருக்கே அபாயத்தைக் கொண்டு வரும். மன்னரைத்துரத்த வெளி வல்லரசு உள்நுழைந்த பின் மன்னரை மக்கள்தானே காப்பாற்ற வேண்டும் ஷெய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி, முஸ்லிம் நாடுகளை கூட்டில் அடைக்கப்பட்ட அறுவைக் கோழிகள் என வர்ணித்துள்ளார். தேவையான நேரம் ஒன்றன் பின் ஒன்றாக பிடித்தது அறுத்து விடலாம். அத னையே இன்று மேற்குலகு செய்து கொண்டிருக்கிறது. பலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா எனதுண்டு துண்டாகிப் போயுள்ள அனைத்தையும் இலகுவாக இரா ணுவத் தாக்குதல்களுக்கு உட்படுத்தியுள்ளது. இப்போ துள்ள அரபு ஆட்சியாளர்கள் ஷரீப் ஹ"ஸைன் போன்றே மேற்குலகின் முழு ஆதரவுடன் தம்மைப் பலப்படுத்த கனவு கண்டு வருகின்றனர்.
சத்தாம், ஹ"ஸ்னி முபாரக், பின் அலி, கதாபி. ஆகி யோருக்கு நேர்ந்த கதியிலிருந்து பாடம் படிக்க இன்னும் நேரம் தேவையா? கதாபி, சத்தாம் போன்றவர்களின் முட்டாள்தனமான முன்யோசனையற்ற முரட்டுத்தனமே மேற்குலக்கு தேவை. அப்பொழுதுதானே லிபியா போன்ற ஒரு நாட்டின் கனரக ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து, வல்லரசுகளின் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு கீழ்படிந்து வாழும் நாடுகளாக அவற்றை ஆக்க முடியும்! ஷரீப் ஹ"ஸைன் உஸ்மானிய கிலாபத்துக்கு எதிராகத் துவக்கிய அரபுத் தேசியவாதம் மிகவும் அபாயகரமான விளைவை இப்போது ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றுமை பெரும் விலைகொடுத்தும் கொள்வனவு செய்யப்பட முடியாத பொருளாக அரபிகளுக்கு மாறி விட்டது. அரபு ஆட்சியாளர்கள் யாரையும் நம்பும் நிலையிலும் இல்லை. அரபு லீக் கூட, ஷரீப் ஹ"ஸைன்

இஸ்லாம் உயர்தரம்
மாய் அமைந்துள்ளன.
“(தூதர்) நல்லவற்றை செய்யுமாறும் தீயவற்றை விடுமாறும் அவர்களுக்கு கட்டளையிடுகிறார். பரிசுத்த மானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி அசுத்தங்களை விலக்குகிறார். அவர்களின் சுமைகளை இறக்கி அவர்கள் மீது இடப்பட்டுள்ள விலங்குகளையும் கழற்றிவிடுகிறார்.” (அல்அஃராப்: 157)
"நிச்சயமாக அல்லாஹ்வின் துரதரிடத்தில் உங்களுக் குரிய (அனைத்அதுக்கும் அழகிய முன்மாதிரி காணப்படு கின்றது.” (அல்அஹ்ஸாப்: 21)
கண்ட தனி அரபு சாம்ராஜ்ய கனவின் பின்னணியில் ஐ.நா. சபையுடன் போட்டி போடும் நோக்கில் உருவாக் கப்பட்டதே. ஆனால் உயிரற்ற ஜடமாக ஒரு நடைமுறைத் தீர்வையும் எடுக்க முடியாமல் அது உள்ளது. அரபுத் தேசி யவாதம் பிளவுகளுக்கு மேல் பிளவுகளையும் பலவீனங் களையுமே தோற்றுவித்துள்ளது. உஸ்மானிய கிலாபத் பலவீனமடைந்திருந்தாலும் அரபு நாடுகளுக்கு ஒரு பாதுகாப்புக் கவசத்தை அது வழங்கியிருந்தது.
அரபிகள் தேடிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு, ஒற்று மைக்கு இஸ்லாம் மாத்திரமே பதிலீடு தரும் என்பதை அரபிகளுக்கு வரலாறு நிரூபித்துள்ளது. ஆனால் அவர்கள் அதனைப் புரிந்து நடைமுறைப்படுத்த எவ்வளவு காலம் எடுக்கும் என்பதே கேள்வி!
கணித, விஞ்ஞான உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம்
Biolgy 3. Chemistry H.M.M. Sakeel (BSc) A. Haider Ali (B.Sc Hons) Mrs. M.H.S. Fasliya (B.Sc) A.S. Ajmeer (B.Sc)
2. Physics 4. Combined Maths
P.M.M. Riswan (B.Sc Hons) S. Manivannan (B.Sc) M.T.M. Sajah (B.Sc)
Š9Hნ0|მfijნ0600f; ല്ക്ക உயர் கல்வி அபிவிருத்திக் குழு
அல்ஹஸனாத் மே 2011 * w 3. ஜு.அல்ஜலா-ஜு.அல்ஆகிரா1432

Page 38
மறுமை நட்
புனர்ஜென்ம
மலையாள மூலம் ஷெ
கேள்வி: இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாடும் இந்து ம வேறுபட்டவையா? வேறுபட்டவை என்றால் இஸ்லாம் அங்கீகரிக்கின்றதா? இல்லையெ
பதில்: மரணத்துடன் மனித வாழ்வு முடிவடைந்து விடுவதில்லை என்ற ஒரேயொரு விடயத்தில் மாத்திரமே மறுமை விசுவாசமும் புனர்ஜென்மக் கோட்பாடும் ஒத்துவருகின்றன.
இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய, இவ்வுல கம் செயற்படும் இடமாகும். விசாரணையும் நீதியும் மரணத்திற்குப் பிறகு மறுஉலகில் நடைபெறும். உலகில் மனிதன் புரிந்த செயல்களின் அடிப்படையிலேயே மறு மையில் அவனுக்கு சன்மானமோ அல்லது தண்ட னையோ வழங்கப்படும்.
மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள ஐம்புலன்களின் அடிப்படையிலும் பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கும் பெளதிகவியலின் அடிப்படையிலும் மறுஉலகம் எப்படி யிருக்கும் என்று விபரிப்பது சாத்தியமில்லை. ஆயினும், இறைவனின் வழிகாட்டல்களின் அடிப்படையில் தூய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மறுமையில் சகல செளபாக் கியங்களும் பெரு வாழ்வும் கிடைக்கும் என்று இஸ்லாம் சொல்லித் தருகின்றது. அதேசமயம், இறைவனை நிரா கரித்து தன்னிச்சையாய் வாழும் பாவிகள் நரகவாசிக ளாக இருப்பர் எனவும் முன்னறிவிப்பு நல்குகிறது.
மரணத்திற்குப் பிறகு சரியான விசாரணைக்கும் நியாயமான நீதித் தீர்ப்புக்கும் பிறகே சன்மானமோ அல்லது தண்டனையோ வழங்கப்படும். இதேவேளை மறுமையில் நடைபெறவுள்ள விசாரணையை உலகில் நடைபெறும் நீதி விசாரணைகளுடன் எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாது.
இறைவனின் நீதி விசாரணையின் மூலம் சன்மான மாக சுவர்க்கம் வழங்கப்பட்டவர், தனது எந்த நற்கருமத் தின் காரணமாக தனக்கு இந்தப் பெரும் பாக்கியம் கிடைத்தது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார். இதேபோல நரக தண்டனை விதிக்கப்பட்ட பாவியும் தனது எந்தக் குற்றச்செயலின் காரணத்தால்தான் தண்ட னைக்கு ஆளாகி உள்ளேன் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்வார். இவ்வாறு நற்செயலுக்கு சன்மான மும் குற்றச் செயலுக்குத் தண்டனையும் வழங்கப்படும் போது அதனை நன்கு விளங்கிய நிலையில் இருப்பது தான் நீதியானது.
அல்ஹஸனாத் மே 2011
32
ஐ.அல்ஜலா-ஜு.அல்ஆகிரா 4432
 
 

bபிக்கையும் O O
5 (SEBITC T(ԵID
காரக்குன்னு தமிழில் ஜே. இஸ்ஹாக் இ
தத்திலுள்ள புனர்ஜென்மக் கோட்பாரும் ஒன்றுக்கொன்று அந்த வேறுபாடு என்ன? புனர்ஜென்மக் கோட்பாட்டை னின் அதற்கான காரணம் என்ன?
ஆயினும், புனர்ஜென்மக் கோட்பாட்டில் மனிதர்க ளுக்கு பூமியிலேயே சன்மானமும் தண்டனையும் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அதுவும் தாம் எந்தக் குற்றம் செய்ததன் காரணத்தால் இவ்வாறு இழி பிறப்பில் பிறந்துள்ளோம் என்றோ அல்லது எந்த நற் செயலின் காரணத்தினால் உயர்குலத்தில் பிறந்துள் ளோம் என்றோ அவருக்குத் தெரிவதில்லை. அப்படி இருக்க, இது எப்படி நீதியானதாக அமைய முடியும்? நற் செயல்புரியாத பாவிநாயாகவோ பன்றியாகவோ அல்லது சூத்திரன் போன்ற தாழ்ந்த ஜாதியிலோ பிறக்கின்றான் என்றும் நற்கருமங்கள் புரிந்தோர் பிராமணன், சத்திரி யன் அல்லது வைணவனாகப் பூமியில் பிறக்கின்றான் என்று புனர்ஜென்மக் கோட்பாடு கூறுகிறது.
இந்த விடயம் சற்று விரிவாகவே விளக்கப்பட வேண்டும்.
1. காரணத்தைத் தெளிவுபடுத்தாமலும் குற்றம் இன்ன தென்று உணர்த்தாமலும் ஒருவனைத் தண்டிப்பது அநீதமானதாகும். தண்டனை வழங்குவது அல்லது சிறையிலடைப்பது அல்லது கொலை செய்வது என்ன குற்றத்துக்காக என்பது தெளிவுபடுத்தப்பட்டதன் பின்பே நடைமுறைப்படுத்த வேண்டியது நீதியின் பாற்பட்டதாகும். விசாரணை, நீதித் தீர்ப்பு ஆகியன நடைபெற்ற பின்பே தண்டனை வழங்கப்படுதல் வேண்டும். ஆயினும், சூத்திரனோ அல்லது பறை யனோ இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதன் பின்பு தாழ்ந்த குலத்தில் பிறப்பிக்கப்பட வில்லை. முற் பிறப்பில் தான் செய்த எந்தத் தீய கரு மத்திற்காக இந்தப் பிறப்பில் தான் தாழ்ந்த குலத்தில் பிறந்துள்ளோம் என்பது அவனுக்கு அறிவிக்கப்பட்டி ருக்க வேண்டும். ஆயினும், அவ்வாறு நடைபெறுவ தில்லை என்பது வெளிச்சம். இதேபோல உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் தாம் செய்த எந்த நற்கருமத் தின் காரணமாக இப்பேறு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதையும் அறிந்திருக்கவில்லை. எனவே, மனிதன் தான் செய்த நற்செயலுக்கு அல்லது தீய செயலுக்கு வழங்கப்படும் வெகுமதியோ தண்டனையோதான் இவ்வுலக வாழ்வு என்று கூறப்படும் புனர்ஜென்மக் கோட்பாடு முற்றிலும் நீதிக்கு முரண்பட்டதாகும்.

Page 39
2. புனர்ஜென்மக் கோட்பாட்டின்படி, பாவியானவன் இரண்டாம் பிறப்பில் கெட்டவனாகவும் அநியாயக் காரனாகவுமே இருப்பான். இத்தகையவர்கள் ஈன வாழ்வு வாழ்வதுடன் அக்கிரமங்களிலும் ஈடுபடுவார் கள். நல்ல செயல்கள் இவர்களிடம் உருவாகக் கூடாது. எனவே, இவர்களது மூன்றாம் பிறப்பு இதைவிட மோசமானதாயிருக்கும். நாலாவது அதை விடவும் மோசமானதாயிருக்கும். இவ்வாறு பாவிகள் ஒவ்வொரு பிறப்பிலும் மேலும் பாவிகளாக மாறுவார்களே தவிர, நல்லவர்களாக மாறும் சாத்தியம் இல்லை. மாத்திர மல்ல, பாவியானவன் மிருகப் பிறப்பெடுத்த பின்பு எவ்வாறு மீண்டும் மனிதனாகப் பிறப்பெடுக்க முடி யும்? புதிதாகப் பிறக்கின்ற மனிதன் இதற்கு முன்பு என்னவாக இருந்தான்? எந்த நல்ல காரியம் புரிந்த தன் காரணத்தால் அவன் மனிதனாக இந்த ஜென்மத் தில் பிறப்பெடுத்தான்? இத்தகைய வினாக்களுக்கு புனர்ஜென்மக் கோட்பாட்டில் பதில் தரப்பட வில்லை.
3. இந்து மத வேதங்களில் எந்த இடத்திலும் புனர்ஜென் மக் கோட்பாடு குறித்து எதுவும் குறிப்பிடப்பட வில்லை. உபநிடதங்கள் எனப்படும் பின்னர் தோன்றிய வற்றிலேயே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
கலாநிதி எஸ். ராதா கிருஷ்ணன் இது குறித்து பின்வருமாறு விளக்குகிறார்:
“அடுத்த உலகில் பிறப்பு மரணங்கள் ஏற்படுகின்றன என்று பிராமணியம் குறிப்பிடுகின்றது. உபநிடதங்கள் வந்த போது இந்த விசுவாசம் புனர்ஜென்ம விசுவாசமாக மாறியுள் ளது." (பாரதியதர்ஷணம்- பாகம் 1, பக்கம்-224, மாத்ருபூமி வெளியீட்டு நிறுவனம், கோழிக்கோடு 1995)
எனவே, வேதங்களில் புனர்ஜென்மக் கோட்பாடு குறிப்பிடப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
4. உப நிடதங்களில்தான் புனர்ஜென்மக் கோட்பாடு பற்றி குறிப்பிடப்படுகின்றது. ஜாதி வேறுபாடுகளை நியாயப்படுத்துவதற்காகவே இது உருவாக்கப்பட் டது என்பது தெளிவு. ஜாதிக் கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் உறுதியாகக் கடைபிடிப்பதற் காக ஏற்படுத்தப்பட்டதென்று எவருக்கும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
புனர்ஜென்மக் கோட்பாடு பற்றிக் குறிப்பிடும் சாந் தோக்கியா உபநிடதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட் டுள்ளது:
"தத்ய இஹரமணிய சரணா அய்யாஸோ ஹ யத்தேரமணியாம் யோனிமாபத்தேர்யன் பிராஹற்மணயோனிம் வாசத்ரியயோனிம் வா வைஷ்யயோனிம் வா அதய இஹகபூயஷரணா அப்யாஸோஹயத்தே கபூயாம் யோனிமாபத்தேய்ரன் ஷவயோனிம் வா ஸ்விக்கரயோனிம் வா சண்டாளயோ னிம் வா" (அத்தியாயம்: 5, காண்டம்: 10 சுலோகம்: 7)

"அவரில் நற்கருமங்கள் செய்பவர்கள் யாரோ அவர் விரைவாக நல்ல தாய் வயிற்றில் சென்று சேருவான். அதாவது பிராமணத் தாய் அல்லது சத்ரியத் தாய் அல்லது வைஷ்ணத் தாயாக இருக்கும்.
இதன் கருத்து:
அதேபோல் அவரில் தீய கருமங்கள் செய்பவர்கள் தீய தாயின் வயிற்றில் சென்று சேருவார்கள். நாயின் வயிற்றில் அல்லது பன்றியின் வயிற்றில் அல்லது மிலேச் சப் பெண் வயிற்றில் சேருவான்."
இத்தகைய நம்பிக்கை உயர் சாதிக்காரர்களிடையே தாங்கள் முற்பிறவியில் நற்கருமங்கள் செய்ததினால்தான் இந்தப் பிறவியில் நல்ல வசதி வாய்ப்புகளைப் பெற்றுள் ளோம் என்ற எண்ணத்தை வளர்க்கின்றது. எனவே, தமக் குக் கிடைத்த அந்தஸ்திற்கு தாங்கள் முற்றிலும் தகுதி வாய்ந்தவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதே வேளை ஜாதி வேறுபாட்டின் காரணத்தால் தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகள் அனைத்தும் முற்பிறப்பில் தாம் செய்த தீய கருமங்களின் விளைவாகும் என்று நம்பு மாறு தாழ்ந்த சாதிக்காரர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார் கள். தாழ்ந்த சாதிக்காரர்கள் நாய், பன்றிக்கு சமமான வர்கள் என்று கேவலப்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு சாதி வேறுபாடுகளினால் ஏற்படும் அத் தனை பாரபட்சங்களையும் கொடுமைகளையும் நியாயப் படுத்தவே புனர்ஜென்ம சித்தாந்தம் பயன்படுத்தப்படு கிறது.
5. "மரணத்திற்குப் பின்பு மனித ஆத்மாக்கள் விலங்குக ளில் சென்று குடிகொள்கின்றன” என்ற பழங்குடி கோத்திர விசுவாசத்தில் நின்றே புனர்ஜென்மக் கோட் பாடு ரூபம் எடுத்தது.
கலாநிதி எஸ். ராதா கிருஷ்ணன் பின்வருமாறு எழுதுகிறார்:
"ஆரியர்களே புனர்ஜென்மக்கோட்பாட்டை உருவாக்கி னர் என்று உறுதியாகச் சொல்ல முடியும். செய்த கருமங் களின் அடிப்படையில் ஆன்மா, ஜென்மம் எடுக்கின்றது என்று அவர்களே இக் கருத்தை முன்வைத்தனர். அதே வேளை, இக் கோட்பாடு மனித ஆன்மாக்கள் மரணத்திற்குப் பின்பு மிருகங்களில் சென்று சேருகின்றன என்ற பழங்குடி நம்பிக்கையிலிருந்து பெறப்பட்டது என்ற விடயத்தையும் மறுப்பதற்கில்லை." (பாரதியதர்ஷணம், பாகம் 1, பக்கம்:13)
6. செமிற்றிக் மதங்களில் போலவே இந்து மதத்தின் வேதங்களும் மறுமைக் கோட்பாட்டைப் பற்றியே
குறிப்பிடுகின்றன.
ருக் வேதத்திலும் சாம வேதத்திலும் அதர்வ வேதத்திலும் மறுமை குறித்துக் குறிப்பிடப்படுகின்றது.
உதாரணமாக, "ராயே அக்னே மஹேத்வாதானாய சமீதிமஹி
அல்ஹஸனாத் மே 2011 ஜு.அல்ஜலா-ஐ.அல்ஆகிரா 1432

Page 40
பரஸ்பரம்
ஈடிஸ்வாஹிமஹேலுரூஷன்தியாவா வேதாத்ராயோ வரூதிவீ (சாம வேதம், ஆக்னேய காண்டம் 1:10:3)
இதன் கருத்து: "எல்லா விருப்பங்களையும் பூரணமாக்குகின்ற இறைவனே! உன்னிடமிருந்து மிகச் சிறந்த சன்மானம் கிடைப்பதற்காக நாங்கள் உன்னைத் திருப்திப்படுத்த விழைகிறோம். நீ எங்களுக்கு வழங்கியுள்ள அறிவுக்காக வும் சமாதானத்திற்காகவும் மறு உலகில் சாந்திக்காகவும் நாங்கள் உன்னைத்துதிக்கிறோம்."
அதர்வ வேதம் மறுமையைப் பற்றிச் சிந்தித்து நற் கருமங்களில் ஈடுபடுமாறு தம்பதிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறது.
வேதங்களைப் போலவே உபநிடதங்களிலும் புராணங்களிலும் மறுமை, சுவர்க்கம், நரகம் குறித்து தாராளமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈஷாவாஸ்ய உபநிடதத்தில் மரணத்திற்குப் பிறகுள்ள நரகத்தைக் குறித்து இப்படி வருகிறது:
“சூரியனில்லாத அந்த உலகில் சகல காரியங்களும் இருளில் மூழ்கியிருக்கும். தனக்குத் தானே அநியாயம் செய்து கொண்ட, அதாவது இறைவனைத் துதிக்காது வாழ்ந்த மனிதர்கள் துன்பம் நிறைந்த அந்த உலகில் சென்று சேருவார்கள்."
கடோபநிடதத்தில் இப்படிக் கூறப்பட்டுள்ளது:
"சொர்க்கலோகத்தில் எந்தப் பயமும் கிடையாது. அங்கே யாரும் மரணமடைய மாட்டார். யாருக்கும் அச்சமில்லை. அங்கு வசிப்பவர்களுக்கு பசி, தாகம், துன்பங்கள் எதுவும் ஏற்படமாட்டா. எல்லாவித இன்பங்களும் அங்கே கிடைக்கும்." (1:1:12)
மனுஸ்மிருதியில் இப்படி வருகிறது: "மறு உலகில் உதவிக்கு தாய், தந்தையர் வரமாட்டார் கள். பிள்ளைகளோ மனைவியோ உறவினர்களோ அங்கே
பயனளிக்க மாட்டார்கள். நன்மை மாத்திரமே அங்கே கை கொடுக்கும்." (4:239)
இன்னுமோர் இடத்தில் இப்படி வருகிறது: “ஒரு மனிதன் பிறப்பதும் இறப்பதும் தனித்தாகும். சுவர்க்கத்தில் சுகம் அனுபவிப்பதுவும் நரகில் தண்டனை அனுபவிப்பதுவும் கூட தனித்தேயாகும்.” (4: 24O) பகவத் கீதையிலும் சுவர்க்கம், நரகம் குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம்.
“ஏ ஜனார்தனே! குல தருமங்களைப் புறக்கணித்து வாழ்ந்த மனிதர்கள் என்றென்றும் நரகில்தான் வாழ்வார்கள் என்பதை நாங்கள் கேட்டு அறிந்து வைத்துள்ளோம்.”
(பிரமத்யாயம் சுலோகம்: 44)
அலஹஸனாத் மே 2011
34
ஜு,அல்ஐலா-ஜூ.அல்ஆகிரா 432
 

த்வீதி யாத்யம் 33ஆம் சுலோகம் இப்படிக் கூறு கிறது:
"என்றாலும் அர்ஜ"னா! நீ இந்த சத்தியத்துக்கான யுத்தத்தில் ஈடுபடாவிட்டால் உனக்கு சுவர்க்கப் பாக்கியம் கிடைக்க மாட்டாது. சத்தியத்தையும் நற்கருமங்களையும் புறக்கணிப்பதன் மூலம் உனக்குப் பாவம் ஏற்படும்."
37 வது சுலோகத்தில் இப்படி வருகிறது: 'குந்தியின் புத்திரனே! எதிரிகள் உன்னைக் கொன்றால் நீ சுவர்க்கத்தை அடைவாய். எதிரிகளை நீ வெற்றி கொண்டால் உனக்கு அரசாட்சி கிடைக்கும். எனவே, எந்த முடிவு வந்தாலும் நீ யுத்தம் செய்வதற்கு எழுந்து வருவாயாக."
மேலே எடுத்துக் காட்டிய விடயங்கள் வேத காலத்திலிருந்தே மறுமை விசுவாசம் இருந்து வந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.
கலாநிதி எஸ். ராதா கிருஷ்ணன் எழுதுகிறார்:
"சொர்க்கம், நரகம் இவை பற்றியுள்ள சில தெளிவான கோட்பாடுகளில் நின்று விலகி நிற்பதற்கும் சிந்தனா சக்தி யுள்ள எவருக்கும் முடியாது. புனர்ஜென்ம சித்தாந்தம் அந்தக் காலத்தில் தூரத்தில் இருந்தது. மரணத்துடன் எல்லாம் முடி வடைந்து விடுவதில்லை என்ற கருத்து வேதத்தைப்போதித்த வர்களுக்கு இருந்தது."
(பாரதியதர்ஷணம், பாகம்: 1, பக்கம் 9)
ராகுல் சாங்கிருத்தியான் எழுதுகிறார்:
"வேதங்களில் ரிஷிகள் இந்த உலகில் இருந்து முற்றி லும் வேறுபட்ட இன்னுமோர் உலகம் இருக்கின்றது என்று விசுவாசித்தனர்.நற்கருமங்கள் செய்தோர் அங்கே செல்வார் கள். அங்கே அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். கீழே உள்ள பாதாளம் இருளடைந்தநரகலோகமாக இருக்கும். அங்கே தீயவர்கள் செல்வார்கள்."
(விஷ்வதர்ஷணங்கள் பக்கம் 552)
எனவே, புனர்ஜென்மக் கோட்பாட்டை இஸ்லாம் நிராகரிப்பது போலவே புராதன புராணங்களும் வேதங்களும் நிராகரிக்கின்றன. சாதி வேறுபாடுகளை நியாயப்படுத்துவதற்காகவே அது புனையப்பட்டது என்பதே சரியானது.
இஸ்லாம் கூறுகின்ற சுவர்க்க, நரக விசுவாசக் கோட்பாடு குறித்து இந்து மத வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது. வேதங்களின் கருத்தும் சத்தியத்தின் வேட்கையும் அதுதான்.
மேலதிக விளக்கத்திற்கு கேரள Dialogue Centre பிரசுரித்த 'புனர்ஜென்மக் கோட்பாடும் மறுமை நம்பிக்கையும்' என்ற நூலைப் பாருங்கள்.

Page 41
தொப்புள் ഭ#G
டாக்டர் முஸ்தபாறயீஸ் சிறுவர் நோய் விஷேட வைத்திய நிபுணர்
தலைவர், சிறுவர் நோய்ப் பிரிவு, ரஜரட்ட பல்கலைக்கழகம்
தாயின் கர்ப்பப்பையில் பத்து மாதங்கள் கச்சிதமாய் வளர்ந்து, கர்ப்பத்திலிருந்து சில சென்ரி மீற்றர் அளவே அகலமான பாதையினூடாக 50cm நீளமும் 34cm அகல மும் 3.5kg நிறையுமுள்ள ஒரு சிசுவை வெளியே கொண்டு வரும் நிகழ்வு ஊசித்துளையினூடாக ஓர் ஒட்டகத்தைக் கொண்டு செல்லும் நிகழ்வு போன்றதுதான். அல்லாஹ் அல்குர்ஆனில் ஸஅரா அபஸ்வில் “பாதையை இலேசாக ஆக்கினோம்" என்று இலேசாக சொல்லிவிட்டபோதும் அந்தப் பாதை இலகுவாக அமைவதற்காக தாயின் வயிற் றில் ஏற்படும் மருத்துவ ரீதியான மாற்றங்கள் பல்வேறு கோணங்களில், பல பக்கங்களில் எழுதப்பட வேண்டிய ஓர் அற்புதச் செயற்பாடாகும்.
இங்கு நான் அதனைச் சொல்ல வரவில்லை. மாறாக, கருப்பையில் பத்து மாதங்கள் காத்திராமல் குறை மாத மாய் கருப்பையில் ஆறு மாதங்களே வாழ்ந்து வெளியே வந்த ஒரு குழந்தையில், கருப்பைக் காலத்தில் தொப்புள் கொடி செய்த வேலையை, செய்ய முனைந்த சேலைன் வயர்களின் பரிதாபக் கதையைப் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பக்கங்களை எழுதுகிறேன்.
இருபத்தாறு வாரங்கள் (ஆறு மாதங்கள்) கர்ப்பமான அந்தப் பெண் பிரசவ வேதனையுடன் லேபர் ரூமில் அனு மதிக்கப்பட்டிருப்பதாகவும் குறைமாதக் குழந்தையைப் பராமரிப்பதற்கான (Incubator) கண்ணாடிப் பெட்டி மற்றும் உபகரணங்ளுடன் வரும்படியும் குழந்தைகள்
 

ஆரோக்கிய சந்திப்பு
"Onaьтфицh வயர்களும்
b6
ஓர் ஆறு மாதக் குழந்தைக்குப்போதுமான Electrolyte இன்னோர் ஆறுமாதக் குழந்தைக்கு போதாமல் இருக்கக்கூடும். எந்தக் குழந்தைக்குஎந்தளவு தேவையென்பது வைத்தியர்களால் அறிய முழயாத ஒரு விடயம். குழந்தைகளுக்கே உரிய பிரத்தியேகமான தொப்புள்கொழயைப் பொறுத்தவரை அந்த அற்புதக் கொடிதான் கருவறைக்குள் இருக்கும் சிசுவுக்குத் தேவையான அளவை மட்டும் அளந்து தாயில் இருந்து பிரித்தெடுத்து அற்புதமாய்
ந்தைக்கு அனுப்பும். குழநதைக்கு அனுபடி 99
-9936îu 96jalogii l înfloîpg (Neonatal Intensive Care Unit-NICU) அழைப்பு வந்தது.
உபகரணங்கள், மருந்துகள் சகிதம் வைத்தியர், தாதியர் உட்பட ஒரு குழு லேபர் வோட்டுக்கு வந்து விட்டது. குறை மாதக் குழந்தைகளில் பலர் அங்கவீனர்களாக வளர் வதை அறிந்திருந்த அந்தத் தாய் அழுத வண்ணமும் அவ ளைச்சூழ நெருக்கமான குடும்ப உறவினர்களானஇரண்டு பெண்களும் கண்கள் கலங்கியவர்களாக நின்றிருந்தனர்.
தாயிடமும் உறவினர்களிடமும் எம்மை அறிமுகம் செய்துவிட்டு குறை மாதக் குழந்தையை வைத்துப் பராம ரிக்கும் "பிளாஸ்ட்ரிக் பையையும் மருந்து வகைகளையும் தயார்செய்து காத்திருக்கிறோம். இதோ இன்னுமோர் அற்புதம் அரங்கேறுகிறது. பாதை இலேசாகிறது. ஊசித் துளையினூடாக ஒட்டகம் வந்துவிட்டது. ஆம், குழந்தை பிறந்து விட்டது! கருப்பையிலிருந்து கழன்றுவிட விரும் பாத அந்தத் தொப்புள்கொடியின் நாடிகள் துடித்துக் கொண்டே இருக்கின்றன.
வெளியே வந்துவிட்ட குழந்தை இனி சுவாசித்தாக வேண்டும். அழுது நுலையீரல்களை ஒட்சிசனால் நிரப்ப வேண்டும். பாவம் அந்தக் குறை மாதக் குழந்தை! அதற்கு அழுவதற்கு சக்தியில்லை. அழுதாலும்கூட அந்த நுரை யீரலை விரிய வைப்பதற்காக நுரையீரல்களே சுரக்கின்ற Surfactant என்ற நொதியமும் அதற்குள் இல்லை. இந்த நிலையில், வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் தொப்புள்கொடியின் கடமை முடிந்து விட்டதால்
அல்ஹஸனாத் மே 2011
35 ஐ.அல்ஜஐலா-ஐம்.அல்ஆகிரா 1432

Page 42
அதனை அவசரமாகக் கத்தரித்து விட்டு கருப்பைக்கு வெளியே உலக வாழ்க்கைக்கு அந்த சிசுவைத் தயார் செய்வதைத் தவிர வேறு வழிகளே இல்லை.
உயிரோடு துடித்துக் கொண்டிருக்கும் தொப்புள் கொடி செய்துவந்த அற்புதத்தை, பாவம் காய்ந்து வரண்டு செத்துப் போன சேலைன் வயர்கள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இயல்பாக விரிய வேண்டிய நுரையீரல்களை பலவந்தமாய் ஊதி விரிய வைத்திட முயற்சி. கருப்பைக் குள் அட்டைபோல் ஒட்டுண்ணியாய் ஒட்டிக் கொண்டி ருந்து தாயின் இரத்தத்தில் இருந்து இலவசமாய்ப் பெற்ற 2.6007goal (Pre digested food) gpigs p560GuuSaud 608T606id சமிபாடடையச் செய்ய சக்தி இல்லாத முதிர்ச்சியடையாத சமிபாட்டுத் தொகுதி, கருப்பையில் பேணப்பட்டு வந்த உடல் வெப்பநிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடி யாத நிலை. இவையெல்லாம் இந்தக் குறைமாதக் குழந் தையைப் பேணிப் பாதுகாப்பதில் நாங்கள் எதிர்நோக் கிய சவால்கள்.
தொப்புள்கொடியைத்துண்டித்துவிட்டு குழந்தையை எம்மிடம் தந்தார் Midwife. அவசரமாய் பிளாஸ்ட்ரிக் பையில் அந்த ஆறு மாத சிசுவை நுழைத்து நுரையீரலை விரிவடையச் செய்யும் முயற்சியில் இறங்கினோம். வாய்க் கூடாக சுவாசப்பைக்குள் ஒரு குழாயை (Endo Tracheal Tube) அனுப்பி சுவாசப்பையை அவசரமாய் ஊதி விரிய வைத்திடும் திரவமான Surfactant ஐ செயற்கையாகச் செலுத்திநுரையீரல்கைள விரிய வைத்தோம். நுரையீரல் கள் ஒரளவு விரிந்து சுவாசம் ஆரம்பமாகி இரத்தத்தில் ஒட்சிசன் கரைய ஆரம்பித்ததும் இதயத் துடிப்பு சீராகியது. 700 கிராம் நிறையுடன் அவசரமாய் வெளி உலகத்திற்கு வந்து சேர்ந்த அந்தச் சிசுவின் வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பமாகி விட்டது.
எழுநூறு கிராம் இளம் மனிதனை தொப்புள் கொடி யில்லாமல் (Life line) வாழவைத்திடும் முயற்சியில், சேலைன் வயர்கள், சுவாசத்தைத் தக்கவைக்கப் பயன்படும் குழாய்கள், அதிநவீன மருத்துவ உபகரணங்கள் புடை சூழ கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த சிசு அதிதீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கி (NICU) நகர்த்தப்பட்டது. கைப் பிடி அளவான கருப்பையில் வாழ்க்கையை ஆரம்பித்த அந்த சிசு இரண்டு மாடிக் கட்டடமானNICU வில் வைத் தியர்கள், தாதிகள், உபகரணங்கள் பராமரிப்பில் இருந்த போதும்கூட, அதன் உயிர் உடலில் ஒட்டியிருக்க விரும் பாமல் வெளியேறத்துடித்துக் கொண்டிருந்தது. எப்படி யாவது அதன் உயிரைத்தக்கவைத்துவிட வேண்டும் என்ற முயற்சிகளும் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தன.
அந்தச் சிசுவைப் பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை கள் ஏராளம். குழந்தை பிறந்து பல மணி நேரங்கள் சென்று
அல்ஹஸனாத் மே 2011
36
ஐ.அல்ஜலா-ஜு.அல்ஆகிரா 432
 

விட்டன. அந்தச் சின்ன இதயம் இயங்க ஆரம்பித்து விட்டது. செயற்கைச் சுவாசமும் கொடுக்கப்பட்டது. சுவாசிப்பதற்கும் இதயம் துடிப்பதற்கும் மற்றும் சிறு நீரகம் போன்ற உடல் உறுப்புக்கள் தமக்கென படைத் தவன் அல்லாஹ் கொடுத்த தொழிலை செய்வதற்கும் சக்தி (Energy) தேவைப்பாடாய் இருக்கிறது.
சாதாரணமாகப் பிறக்கும் பத்து மாதம் நிறைந்த குழந் தைகளில் தாய்ப்பால் அந்த சக்தியை- குளுகோஸைக் கொடுக்கும். ஆனால் துரதிஷ்டம்! இந்தக் குறைமாதக் குழந்தையின் உணவை, அதாவது பாலை சமிபாடடை யச் செய்ய இன்னும் சமிபாட்டுத் தொகுதி முதிர்ச்சிய டையவில்லை. குழந்தை கருப்பையில் இருக்கும்போது சமிபாட்டுத் தொகுதி விருத்தியடைந்து முதிர்ச்சியடை யுமே தவிர, அந்தத் தொகுதி சிசுவினால் பயன்படுத்தப் படுவதில்லை. சிசு வாயினால் உண்பதில்லை. எனவே, அதன் இரைப்பை, குடல் என்பன சிசு கருப்பைக்குள் இருக்கும்வரை அதற்கு அவசியப்படுவதில்லை. ஆனால், அவை பத்து மாதங்களில் வளர்ந்து விருத்தியடைகின் றன. சிசு கருப்பையை விட்டு வெளியேறி வெளி உலகுக்கு வந்ததும் அது அருந்தும் தாய்ப்பாலை சமிபாடடையச் செய்து குழந்தைக்கு சக்தியை வழங்க தயார்படுத்தப் பட்ட நிலையில் அந்த முதிர்ச்சியடைந்த சமிபாட்டுத் தொகுதி இருக்கும்.
இந்த குறை மாதக் குழந்தை கர்ப்பப்பைக்குள் இன் னும் 4 மாதங்கள் தொப்புள்கொடியினால் இணைக்கப் பட்டிருந்திருக்க வேண்டிய நிலையில், துரதிஷ்டவசமாக வெளியே வந்து விட்டதால் அந்த அற்புதமான Life Line தொப்புள்கொடியின் வேலைகளை செயற்கையாக செய்ய முயன்று, இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் அதிநவீன மருத்துவத்தால் செய்ய முடியாமல், சேலைன் வயர்களை நம்பி உயிர் பிரிந்துவிடத் துடிக்கும் அந்த இளம் குழந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கும் வைத்தியர் களின் இயலாமைக்கு தினமும் மரணிக்கும் ஆயிரக்கணக் கான குறைமாதக் குழந்தைகள் சாட்சி!
சிசுவையும் தாயையும் பிணைக்கும் தொப்புள் கொடி, அற்புதமான பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வின் படைப்புகளில் இன்னு மோர் அற்புதம், அந்தக் கொடியில் இருப்பதெல்லாம் மூன்று இரத்தக் குழாய்களும் இரத்தக் குழாய்களை இணைத்து வைக்கும் ஜெலி போன்ற ஒரு பதார்த்தமும்தான். இரண்டு நுரை யீரல்கள், ஓர் ஈரல், சதையி கல்லீரல், சிறுநீரகத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதியின் இரைப்பை, குடல். என்று அனைத்தினது தொழில்களையும் செய்யும் இந்தத் தொப்புள் கொடிக்குள் இருப்பதெல்லாம் இரண்டு நாடிகளும் ஒரு நாளமும்தான் எனும்போது ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா?

Page 43
அந்த இளம் குழந்தைக்கு சக்தியை வழங்குவதற்காக தாய்ப்பாலின் சில துளிகள் கொடுக்கப்பட்டன. சில மணி நேரங்களில், தயார் நிலையில் முதிர்ச்சியடைந்தி ராத இரைப்பையும் குடலும் வீங்க ஆரம்பித்து விட்டன. வயிறு வீங்கிய நிலையில் அந்தச் சிசுவின் இரைப்பையும் Gğ5L-6oyılıb GNFLu Gü57ypğgöl Necrotizing Enterocolitis 6TGöTp பாரதூரமான நோய் அதன் சமிபாட்டுத் தொகுதியில் ஏற் பட்டு விட்டது. பாலூட்டும் முயற்சிகள் கைவிடப்பட்டு சேலைன் வயர்களால் உணவு கொடுக்கப்பட்டது. TPN (Total Parenteral Nutrition) G5ITGB).i.5, Lil' (S. 24 LD600f நேரங்களில் குழந்தையின் இதயத்துடிப்பில் தடுமாற்றம் ஏற்பட்டது. பரிசோதித்துப் பார்க்கிறோம். முடிவு Electrolyte Abnormalities. 935/Tang G3FG0pGv6óT Gnuu urf35GMTTTGv கொடுத்த உணவில் அந்த இளம் சிசுவுக்கு உரிய அளவில் பதார்த்தங்கள் சேர்க்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
துரதிஷ்டம் என்னவென்றால், ஒர் ஆறு மாதக் குழந் தைக்குப் போதுமான Electrolyte இன்னோர் ஆறு மாதக் குழந்தைக்கு போதாமல் இருக்கக் கூடும். எந்தக் குழந் தைக்கு எந்தளவு தேவையென்பது வைத்தியர்களால் அறிய முடியாத ஒரு விடயம். குழந்தைகளுக்கே உரிய பிரத்தி யேகமான தொப்புள்கொடியைப் பொறுத்தவரை அந்த அற்புதக் கொடிதான் கருவறைக்குள் இருக்கும் சிசுவுக் குத் தேவையான அளவை மட்டும் அளந்து தாயில் இருந்து பிரித்தெடுத்து அற்புதமாய் குழந்தைக்கு அனுப்பும். இந்த அற்புதமான தன்னியக்கத் தொழிலை, பாவம் வைத்தியர்களிடமோ சேலைன் வயர்களிடமோ எதிர்பார்க்க முடியுமா?
தொப்புள்கொடியின் வேலையை செய்ய முயன்று தோற்றுப்போன சேலைன் வயர்கள் இணைக்கப்பட்ட நிலையிலேயே அந்நச் சிசுவின் இரைப்பையும் குடலும் வீங்கி வெடித்து விட்டன. வைத்தியர்களின் முயற்சி தோல்வி கண்ட நிலையில், இன்னுமோர் உடல் வைத்தி யர்களின் இயலாமையோடு சேர்ந்து மண்ணால் மூடப்பட்டு விட்டது.
தொப்புள் கொடியின் அற்புதம் அறிய வேண்டுமா? குறைமாதக் குழந்தைகளைப் பராமரிக்கும் NICU வுக்கு வந்து பாருங்கள். பாவம் அந்த இளம் குழந்தைகள் படும் பாடு அதனை வாசிக்கும் நாங்களெல்லாம் சுகதேகிக ளாக இருக்கிறோம். நாங்கள் சேலைன் வயர்களால் உணவூட்டப்படாமல், வைத்தியர்களால் குத்திக் குதறப் படாமல், வைத்தியர்களின் அறியாமையில் இருந்தும் நவீன உபகரணங்களின் ஆதரவுகளிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துத் தந்த அல்லாஹ்வுக்கு நாம் நன்றியுள்ளவர்க ளாய் இருக்க வேண்டாமா?
அதேவேளை, 10 மாதங்கள் நாம் எதுவும் செய்ய சக்தி யற்ற நிலையில் அட்டைபோல் ஒட்டியிருந்த வேளை யில் தனது இரத்தத்திலிருந்து உணவை வடித்தெடுத்து உணவூட்டி, அற்புதமான தொப்புள்கொடியால் இணைப்பை ஏற்படுத்தி நாம் அங்கவீனர்களாக ஆகி விடாமல் எம்மைப் பெற்றெடுத்த தாய்க்கு ஏன் நன்றியுள்ளவர்களாகவும் கருணையுள்ளவர்களாகவும்

ஆரோக்கிய சந்திப்பு
நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள் வதற்கும் அல்லாஹ் அல்குர்ஆனில் இதனை மீண்டும் மீண்டும் கூறுவதன் தாத்பரியத்தை தெரிந்து கொள்வ தற்கும் அந்த அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை வந்து பாருங்கள்.
“எனக்கும் உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக’ என்ற ஸ ஜூரா லுக்மானின் 14 வது வசனத்துக்கும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் “பெற்றோருடன் கருணையுடன் நடந்து கொள்வாயாக" போன்ற வசனங்களுக்கும் தப்ஸிர் தெரிய வேண்டுமாக இருந்தால், அந்த வசனங்களின் அடர்த்தியும் அதன் தாக்கமும் அந்த வசனங்களின்துதும் அற்புதமும் புரிய வேண்டுமாக இருந்தால் குறை மாதக் குழந்தைகளைப் பராமரிக்கும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வந்து பாருங்கள். உங்கள் கண்கள் கசியும்; நீங்கள் உங்கள் தாயோடு கருணையுடன் நடந்து கொள்வீர்கள்.
ಫ್ಲಿಕ್ನೆ: கான என்று எதிர்பார்த்தார்கள் பதற்றமடையவில்லை.
அல்ஹஸனாத் மே 2011
ஜூ.அல்ஜலா-ஜு.அல்ஆகிரா 1432

Page 44
வரலாற்று நீ
B96
- எம்.ஐ.எம். அமீன் (எம்.ஏ), முன்னாள் முதுநிலை
பிரசித்திபெற்ற இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஸெய்யித் ஜமாலுத்தீன் ஆப்கானி அவர்கள் ஒரு பெருங் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார் கள். அப்போது அக் கூட்டத்திற்கு சமுகமளித்திருந்த ஒரு வர் உலக முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணி யாது என்று அவரிடம் கேட்டார். இஸ்லாத்தையும் அதன் அடிப்படைப் போதனைகளையும் நபிகளார் (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களின் அறிவுறுத்தல் களையும் கைவிட்டமைதான் என்று அவர் பதிலளித்தார். அக்கூட்டத்தில் இருந்த மற்றொருவர் ஐரோப்பிய கிறிஸ் தவர்களின் தற்கால எழுச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் யாது என்று வினவினார். அவர்கள் மார்க்கத் தைக் கைவிட்டமைதான் என ஆப்கானி சட்டென்று பதில் கூறினார். இப்பதிலைக் கேட்ட சபையினர் திகைப் படைந்தனர்.
ஒரு காரணி நேர் எதிரான இரண்டு விளைவுகளுக்கு ஏதுவாக இருக்க முடியுமா? சமயத்தைக் கைவிட்டமை தீங்கு விளைவிப்பதாயின், அது இரு சமூகத்தவர்களை யும் பாதித்திருக்க வேண்டாமா? குறித்த ஒரு காரணி ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் மறு சமூகத்தின் வீழ்ச்சிக் கும் எவ்வாறு காரணமாக அமைய முடியும் என்று வினவினர்.
இஸ்லாம் முன்னேற்றத்தைக் கொண்டுதரும் ஒரு மார்க்கம் (ஒரு வாழ்க்கை நெறி). அதனை முஸ்லிம்கள் கைவிட்டதால் முன்னேற்றத்தை இழந்து வீழ்ச்சியடைந் தனர். கிறிஸ்தவம் என்பது ஒரு சமூகவியலும் ஆன்மிக வியலும் மட்டுமே. கிறிஸ்தவர்கள் அதனைக் கைவிட்ட தால் முன்னேற்றமடைந்தனர் என்று பதிலளித்தார். (ggsstulb: gistrigligioupg5 6TCupgu The Early Rise of Islam)
ஸெய்யித் ஜமாலுத்தீன் ஆப்கானி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர். இக்கா லப் பகுதியில் முஸ்லிம்கள் விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவைப் பெறுவதைப் புறக்கணித்திருந்தனர். குர்ஆன், சுன்னா, பிக்ஹ் கலைகளைப் பயில்வதையே பயன்தரும் கல்வியாகக் கருதினர். அதனைப் பயில்வதே கடமை என்று கருதினர். ஏனைய கலைகளைப் பயில்வதால் மறுமைப் பயன் அடைய முடியாது என்று நம்பினர். அதனால் முஸ்லிம் சமூகத்தினர் கடந்த சில நூற்றாண்டுகளாக தம் முன்னோர்கள் வளர்த்த விஞ்ஞானக் கலைகளை, தொழில்
அல்ஹஸனாத் மே 2011 3B
grassioarter-ag.siso Syfy i432

கழ்வுகளின்
6
விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம் -
நுட்ப அறிவைத் தேடுவதனைப் புறக்கணித்தனர். அதனால் அக்கலைகளின்துணையோடு உற்பத்தி செய்ய முடிந்த ஆயுதங்களை அவர்களால் உற்பத்தி செய்ய முடியவில்லை. இராணுவத்தை நவீனமயப்படுத்த முடிய வில்லை. அதனால் நவீனமயப்படுத்தியிருந்த ஐரோப்பிய இராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் போர் முகாம்களில் தோல்வி கண்டனர். அதன் விளைவாக முஸ்லிம் நாடுகளை ஐரோப்பிய நாடுகள் கைப்பற்றிக் கொண்டன. அதன் விளைவாக முஸ்லிம் நாடுகள் அடிமை நாடுகளாயின. அவற்றின் பொருளாதார வளங்களை ஐரோப்பியர் சுரண்டினர். இதனால் முஸ்லிம்களின் முன்னேற்றம் பெரும் தடைக்குள்ளாகியது.
முஸ்லிம்கள் இழந்த இச் சுதந்திரத்தை மீட்டெ டுத்து, முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தி, முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒர் அரசியல்வாதியாகவும் சமய சிந்த னையை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் ஒரு சிறந்த சீர்திருத் தவாதியாகவும் ஜமாத்தின் ஆப்கானி செயற்பட்டார். இத்தகைய ஒரு பின்னணியில்தான் அவர் மேற்குறித்த பதிலை வழங்கினார்.
முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் கைவிட்டதால் முன் னேற்றம் இழந்தனர் என்று அவர் குறிப்பிடுவது ஏன் என் பது பற்றி சிந்திப்பது அவசியமாகும். அவர் வாழ்ந்த கால முஸ்லிம்கள் தொழவில்லையா? நோன்பு நோற்கவில் லையா? ஸதகா வழங்கவில்லையா? நிச்சயமாக அவர்க ளில் பெரும்பாலோர் இன்றிருப்பதுபோல் தொழுதார் கள்; நோன்பு நோற்றார்கள்; ஸ்காத்தும் கொடுத்தார்கள். மெஞ்ஞான வழிமுறைகளையும் பின்பற்றினார்கள். மீலாத் விழா போன்ற சமய சம்பிரதாயங்கள், சடங்குகள் போன் றவற்றையும் பின்பற்றினார்கள். மார்க்கத்தைப் படிக்க அல்அஸ்ஹர், நிஸாமிய்யா போன்ற மத்ரஸாக்களும் இருந்தன. மஸ்ஜித்களும் கட்டப்பட்டன. இவை ஒன்றுக் கும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு குறைபாடும் இருக்கவில்லை. அப்படியானால் தன் சமயத்தை முஸ் லிம்கள் கைவிட்டனர் என்று கூறுவதன் கருத்தென்ன?
இஸ்லாம் வலியுறுத்தும் முஸ்லிம்களுக்கிடையி லான ஐக்கியம் அவர்களிடம் இருக்கவில்லை. "நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமா கிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள் ளுங்கள்." (8: 103)

Page 45
குர்ஆன் சுட்டும் இப்போதனை முஸ்லிம் N களிடையே மருந்துக்கும் இருக்கவில்லை. குலபாஉர் ராஷிதீன்கள் காலத்தில் ஒரு குடை யின் கீழிருந்த சாம்ராஜ்யம் சின்னச் சின்ன நாடுகளாகப் பிரிந்து தமக்கிடையே சண்டை பிடித்துக் கொண்டிருந்தது. "லாஇலாஹ இல்லல் N லாஹ்' என்ற ஒரு கோட்பாட்டைப் பின்பற்றிய முஸ்லிம் சமயத் தலைவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து தமக்கிடையே தர்க்கித்துக் கொண்டிருந் தனர். ஒரு குழுவின் வீழ்ச்சியில் மறு குழு மகிழ்ச்சி
கண்டது.
Š
X
r S
6
மு
c
S.
t
f
ெ
ó
S.
6).
“ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுக்கிடையே யுள்ள பிரிவைக் கொண்டு சந்தோஷமடைந்தனர்” S (23:53) என்ற குர்ஆனிய சுட்டிக்காட்டலுக்கு இணங்க தாம் மட்டுமே சரியானவர்கள்; மற்ற ༄ ெ வர்கள் வழிகெட்டவர்கள் என்று சாடுபவர்களாக (5C இருந்தனர். இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்து GIT வம் அவர்களிடம் இருக்கவில்லை. இஸ்லாம் ༄ விடு விரும்பாத சுயநலம் அவர்களை ஆட்கொண்டி Š நே ருந்தது. குர்ஆன் கட்டளையிட்ட கல்வியின் N କାଁ தேடல் அதன் அசல் வடிவில் அவர்களிடம் இருக் S கவில்லை. தீனுடைய கல்வி, துன்யாவுடைய கல்வி என்று அவர்கள் கல்வியைக் கூறுபோட்டு கின் “ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் கல்வி S δομή கற்பது கடமை" என்ற ஹதீஸுக்கு புது விளக்கம் தீர்க அளித்தனர். Nகை
குர்ஆன், ஹதீஸின்பால் அழைப்பு விடுக்க N மனி வேண்டிய தஃவாக் குழுக்களும் ஒன்றை ஒன்று N தேட பொறாமைக் கண்ணுடன் நோக்கின. தாம் அல் Nநற்ே லாத பிற தஃவாக்குழுக்கள் வழிகேட்டில் உள்ளன Š 66io என்று நிறுவப் பெருமுயற்சி செய்தன. ஷரீஆசட் N அழி டங்களை அமுலாக்குவதாகத் தம் பட்டமடித்த N அரசுகளும் அச்சட்டங்களை அமுல்நடத்த முன் செய்ய வேண்டிய சமூக மாற்றங்களை செய்ய முன்வரவில்லை.
سج
L5)
色
u
இஸ்லாத்துக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்யும் குடிமக்களாக அன்றி, பதவிக்காகவும் பொருளாதார இலாபத்திற்காகவும் சமூகத்தை அந்நிய ஆட்சியாளர்களுக்குக் காட்டிக் கொடுக் கும் குடிமக்களாக இருந்தனர். முஸ்லிம்களிடம் வணக்க வழிபாடுகள் இருந்தும் இஸ்லாமிய சமூக உணர்வும் இஸ்லாத்துக்கான அர்ப்ப ணிப்பும் இல்லாத நிலை இருந்தது. M
இஸ்லாம் முஸ்லிம்களின் மனதில் ஒரு ༽ நம்பிக்கையாக இடம்பெற்றிருந்ததே அல்லாது N ஒரு வாழ்க்கை நெறியாக இருக்கவில்லை. இத னைக் கருத்திற் கொண்டுதான் ஆப்கானி மேற்கு றித்தவாறு கூறியிருக்க முடியும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டு முஸ்லிம்க ளைப் பார்த்து ஆப்கானி கூறிய இக்கூற்றுதற்கால முஸ்லிம்களுக்கும் பொருந்துமா? வாசகர்களே இக் கேள்விக்கு விடைதேடுவது உங்கள் பொறுப்பாகும் N
色
ய
Š
έσλι
றி
685T
6l8ნII6
Dolp
ளு
)
666 இப்னு
ற
G
பேல
(Լpալ
SSS

நோக்குடன். (o8ஆம் பக்கத் தொடர்)
அறிவில் ஆழம்கண்டு அறிவுப் பணி புரியும் பணிவுடைமிக்க ஞர்கள் மீதுள்ள காழ்ப்புணர்வு, தனது தரத்தை அவர்களு ஒப்பிட்டுப் பார்க்கும்போதுள்ள தாழ்வு மனப்பான்மை லானவை அறிஞர்களுடன் போட்டி போடுவதற்கான நுதலை இவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, குறுகிய ப்பான்மை மிக்க இந்தப் பிரகிருதிகள் அங்கொன்றும் கொன்றுமாக மேலோட்டமாக தகவல்களை சேகரம் செய்து "ண்டு அறிஞர் பெருமக்களை சீண்டுவதும் துண்டுப் பிரசுரம் ளியிடுவதும் இவர்களது பணியாக அமைந்து விட்டது.
5ங்களுக்கென்று ஓர் அறிவியல் வட்டத்தை அல்லது ரவாளர் குழுவை உருவாக்கி அவர்களுக்கு ஒரு தலைமையை ங்குவதற்காகக் கற்கின்றவர்கள்கூட இறை திருப்தியை க்காகக் கொண்டவர்களல்ல. எப்போதும் தன்னைச் சூழ ஒரு வை ஈர்த்து வைத்துக் கொள்வதற்காக நூற்களில் கூடுகட்டி 2ந்து அறிவைத் தேடுவது கூட தூய நோக்கத்தை அழித்து கின்ற படுமோசமான பண்பாகும். கல்வித் தேடலில் தூய க்கம் இழக்கப்படுகின்றபோது இறைவனது நற்கூலியும் லாதொழிந்து விடுகிறது.
இப்னு அப்பாஸ் டுரழியல்லாஹ அன்ஹ) அவர்கள் அறிவிக் றார்கள், நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் னார்கள்: “மூன்று நோக்கங்களுக்காக கல்வியறிவைத் தேடா ள். அறிவீனர்களுடன் குதர்க்கவாதம் புரிவதற்காகவும் சட்டக் லவல்லுநர்களுடன்தர்க்கம் புரிவதற்காகவும் உங்களை நோக்கி தர்களின் முகங்களை திருப்புவதற்காகவும் கல்வியறிவைத் ாதீர்கள். உங்களது சொல்லாலும் செயலாலும் அல்லாஹற்வின் பறுகளைப் பெற்றுக் கொள்ள விரும்புங்கள். ஏனெனில், லாஹற்விடமுள்ளவை நிலையானதாகும். அதுதவிர உள்ளவை ந்து விடும்.” (ஜாமிஉபயானில் இல்ம் வ பழ்லுஹ)
ஆகவே, கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் இஸ்லா ஷரீஆ கலாசாலைகளிலும் கல்வி பயிலுகின்ற மாணவர்க சுயமாக கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போரும் எண்ணங்களைத்தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமா துய நோக்கத்தினைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாத்திட ற்சிக்க வேண்டும். அது சற்று சிரமமான விடயம்தான்.
இமாம் சுப்யானுஸ் ஸவ்ரி (ரஹிமஹல்லாஹற்) அவர்கள் 0ார்கள்: "எனது எண்ணத்தை நெறிப்படுத்த நான் மேற் *ண்ட சிரத்தையைவிட அதிகமாக நான் வேறெதற்காகவும் மேற் ண்டதில்லை. ஏனெனில், அவ்வெண்ணம் என்னைப் பொறுத்த b அடிக்கடி மாறிக் கொண்டேயிருந்தது.” (ஹில்யதுல் அவ்லியா)
மேலும் கல்வித் தேடலில் ஈடுபடுகின்றவர்கள் முதலில் நல் ாணம்பற்றிக்கற்றிடவேண்டும். இதுவே முதல் அறிவு யஹற்யா களிர் என்ற அறிஞர் இவ்வாறு கூறுகின்றார்: "நல்லெண் தைக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், அது செயலைவிட தாகும்.” (ஹில்யதுல் அவ்லியா)
ேைவ, கல்வித் தேடலில் தூய நோக்கத்தை தொடர்ந்தும் ரிப் பாதுகாத்து சுவனத்தின் வாடையை நுகர்ந்து கொள்ள
சிப்போமாக!
அல்ஹஸனாத் மே 2011 39 ஜு.அல்ஜீலா-ஜு.அல்ஆகிரா 1432

Page 46
ஜம்இப்யாவின் தேசிய
உம்முல் மலிஹா மாநாட்டு மண்
பாணதுறை (ஏப்ரல்
ஜம்இய்யது தலபதில் இஸ்லா
மிய்யாவருடாந்தம் நடத்திவருகின்ற
தேசிய ஊழியர் முஅஸ்கர் இம்முறை 6ងឆ្នាខ្មែរ சமூக மாற்றம் காத் ளாக கலந்து கொன திரமான பங்களிப்பு எனும் கருப்பொ தினர். ថ្ងៃនៅឆ្នាំ 1600/g, ឆ្នាំ៦ pួយ ឬ 838. ពីឆ្នាំg ಗಾಬ್ಡಿ ಜೀDಖಗ್ರಕ್ರಿಶಿಷರಿ
毅 YmL00SJ0LSTATmTymTLtMLeTTS SS HLmTTTm S ummmmmDLD
பெற்ற இம் முஅஸ்களில் நாடளாவிய
ரீதியில் சுமார் 450 ஊழியர்கள் வுெ கலந்து கொண்டு பயன்பெற்றனர். சமகால இஸ்லாமி முஸ்லிம் சமூகத்தில் லத்தின் எழுச்சிக்கு $1,60056 @ விளக்கினார்.
இந்நிகழ்வில் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ஜாமிஆ நளி மிய்யாகலாபீடத்தின் பிரதிப்பணிப்பா
ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ரஹீத் ஹஜ்ஜல் @း அஷ்ஷெய்க் ஏ.ஸி.ஏ. மஸாஹிர் (நள
 

ஊழியர் மாநாடு 2011
S., 17 சனி-ஞாயிறு)
வெற்றிகரமான சமூக மாற்றம் காத்திரமான பங்களிப்பு எனும் முஅஸ்களின் கருப்பொருள் உரையை ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் ரஷித் ஹஜ்ஜுல் அக்பர் நிகழ்த்தினார்கள். இஸ்லாமிய இயக்க ஊழியனின் ஆளுமைப்பண் ចrogy,១ is 56,662.5 g. 659. Detroni நளீமி) உரைநிகழ்த்தின
உரைகளுக்கிடையே கவிை கள் இஸ்லாமிய கீதங்கள் என்பன ஜம்இயாவின் ஊழியர்களால் அரங்
இ தவிரவும் இலங்கை
எனும் தலைப்பில் விவாத அரங்கு ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கது. இவ்விவாத அரங்குநாடறிந்த அறிவிப்பாளரும்பானதுறை ஜிலன் மத்திய கல்லூரியின் அதிபருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆசிரியர் அவர்க ளால்நடத்திவைக்கப்பட்டமைவி
பர், அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளிமி), மி) ஆகியோர் உரையாற்றுகையில்.

Page 47
நிகழ்வு மேடையில் ஐம்இய்யாவின் நாஸிம் உட்பட கலந்து கொண்ட ஐம்இய்யா!
இஸ்லாமிய கீதம், கவிதை, உடற்பயிற்சி மற்றும் மைதான கலை நிகழ்ச்சிகளின்போது
 

2ம்இய்யாவின் மத்திய சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களில் ஒரு பகுதியினர்

Page 48
1. எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ்
- நீரிலிருந்து (24: 45)
2. தன் சமூகத்தாரிடம் 950 வருடங்கள் மார்க்கப்
பிரசாரம் செய்த இறைத் துரதர் யார்?
- நூஹ் அலைஹிஸ்ஸலாம் (29: 4)
3. நரகில் பாவிகளுக்குரிய உணவு என
அல்குர்ஆன் குறிப்பிடுவது எதனை? - ஸ்க்கூம் எனப்படும் (கள்ளி) மரம் (44: 43) 4. ஸித்ரதுல் முன்தஹா என அல்குர்ஆன்
குறிப்பிடுவது எதனை?
- வானெல்லையிலுள்ள இலந்தை மரத்தை (53: 14)
5. பைதுல் அதீக் என அல்குர்ஆன் குறிப்பிடும் மஸ்ஜித் எது? - புனித கஃபா ஆலயம்
- எம்.பீ. ருமைஸா - பாதிமா ஸ்விறரா மகளிர் அ.க., ஒடிடமாவடி
அரங்கேறும் அனாச்ச
தீனுல் இஸ்லாத்தின் சிரமேற்றிரு. பொன்னான போதனைகளை நம் சமூகம்! மண்ணுள் புதைத்துவிட்டு நவீன ஜாஹிலிய்யத்தின் இஸ்லாமிய வலையில் வீழ்ந்து கமழும் இல் கிடக்கிறது நம் சமூகம்!
காட்சி தருகி இஸ்லாம் விதித்த கடமைகள் நம் சமூகம் எத்தனையோ இருக்க அனாச்சார அவற்றைப் புறம் கலாச்சாரங் தள்ளி விட்டு 靈 மாறியிருப்பு அல்குர்ஆன், õböõõt என்னவென் சொல்லாதவற்றை
அல்ஹஸனாத் மே 2ot
A2
ஐ.அல்ஊலா-ஜு.ஆல்ஆகிரா 432
 
 

எச்சரிக்கை
ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹ" அலைஹி
வஸல்லம்) அவர்கள் தொழுகைக்காக வந்து கொண்டிருந்தபோது ஸஹாபாக்களில் சிலர் சப்தமிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். அப்போது நபியவர்கள், அவர்களைப் பார்த்துப் பின்வருமாறு
கூறினார்கள்:
"நீங்கள் மரணத்தை அதிகம் நினைவு கொள்வீர்களானால் நான் காணக்கூடிய இந்நிலை உங்களுக்கு ஏற்படாது."
ஆகவே, நாம் எந்தநிலையிலும் அல்லாஹற்வை நினைவுகூர்பவர்களாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் பெரும்பாலான நேரங்களில் ஆழ்ந்த சிந்தனையும் கவலையும் உள்ளவராக இருந்து வந்தார்கள். மரண சிந்தனையோடு வாழ்ந்து ஈருலகிலும் நற்பயன் பெறுவோமாக!
- எம்.ஐ.எப். ஷானாஸ் பேகம், வெல்பொதுவெவ.
ட்டர்களாய்
றது!
களையே
GTTur தை பது!
- றிஸ்னா அபூபக்ர், அடீருலுகம

Page 49
சிறந்த செயல்களின்பால் விரைந்து செல்ல சில வழிகள்
1. அல்லாஹ் சுவனத்தில் உங்களுக்கொரு வெகுமதி தயார்படுத்துவதை நீங்கள் விரும்புகிறீர்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "யார் காலை யிலும் மாலையிலும் பள்ளிவாசலை தரிசிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹற் சுவனத்தில் விருந்துபசாரத்தை தயார்படுத்துகின்றான்." (அல்புகாரி, முஸ்லிம்)
2. அல்லாஹ் உங்கள் மீது ஸலவாத் சொல்ல
வேண்டுமென விரும்புகின்றீர்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "யார் என் மீது ஒரு ஸலவாத்சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் சொல்கிறான்." (முஸ்லிம்)
3. சுவனத்தில் உங்களுக்காக ஒரு வீடு கட்டப்பட
வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு முஸ் லிம் தினமும் பர்ளான தொழுகைகள் தவிர அல்லாஹற் வுக்காக பன்னிரண்டு ரகஅபூத் ஸPன்னத் தொழுகிறாரோ அல்லாஹற் அவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்." (முஸ்லிம்)
4. அல்லாஹ்விடம் கேட்கப்படும் துஆக்களுக்கு விடை கிடைக்க வேண்டுமென விரும்புகிறீர்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "ஒரு முஸ்லிம் தன் முஸ்லிமான சகோதரனுக்கு மறைமுகமாக துஆ கேட்கின்றாரோ அவருக்கும் மலக்குமார்கள் அவ்வாறே ஆகுக' என துஆ கேட்கின்றனர்." (முஸ்லிம்)
5. உங்களது சிறு பாவங்கள் மன்னிக்கப்பட வேண்
டும் என விரும்புகிறீர்களா?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒருவர் சுபஹானல்லாஹி வபிஹம்திஹி" என்று ஒரு நாளில் 1OOதடவை கூறுகின்றாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் அவை மன்னிக்கப்படும்."
(முஸ்லிம்) 6. இறை நெருக்கத்தைப் பெற வேண்டுமா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹற்வின் பால் நெருங்குமிடம் தொழுகையில் ஸஜூதாகும். அதில் நீங்கள் இறைவனிடத்தில் துஆக்கேட்பதை அதிகரித்துக் கொள்ளுங்கள்." (முஸ்லிம்)
- மனால் மஷ்றதி, கள்எலிய -
 
 
 
 
 
 

(கடந்த இதழ்போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரம் பக்கம் 50ல் பார்க்கவும்)
உங்கள் விடைகளை மே 25ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.
சிறுைவர் பூங்கா
அல்ஹஸனாத்
77, தெமடகொடவீதி, கொழும்பு-09
அல்ஹஸனாத் மே 2011
- 4@ స్తోతీteుబిళ్లteఖtaజిల్లా,తిieుతిజీకి 432

Page 50
பல் மருத்துவத்து ரு மைல்
இன்று விஞ்ஞானமும் தொழிநுட்பமும் எப்படி வளர்ச்சி கண்டு வருகின்றதோ அதற்கு நிகராக மருத்துவத் துறையும் வளர்ச்சியடைந்து வருகிறது. நமது நாடும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அண்மைக் காலமாக மருத்துவத்துறையில் பல்கலைக்கழகம் நுழையும் முஸ்லிம் மாணவர்களது தொகை அதிகரித்து வருகிறது. அவர்களுள் துறை சார்ந்த நிபுணர்கள் ஆங்காங்கே
உருவாவது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.
அந்த வகையில் பல்மருத்துவத்துறையில் பல்நடுதல்
Dental implant) துறையில் சிறப்புக் கற்கையை (Specialist in Dental implant) (8 Dfb6gstador pg56b இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் டாக்டர் இனாயதுல்லாஹ் இப்ராஹீம் லண்டன் 616 rifless isoa56060&spagigeo (Wariwick University) MSS கற்கைநெறியைப் பூர்த்தி செய்த அவர் லண்டன் Harley Streetégoiret Dental implant Centre&so drils காலம் பணியாற்றி பயிற்சிகளையும் அனுபவங்களையும் பெற்றவர். இவர் தற்போது இல 32A டிக்மன்ட்ஸ் வீதி, கொழும்பு-05 எனும் episofluiso "The Dental & Implant Center Gigold பெயரில் தனியார் மருத்துவ நிலையமொன்றை நடத்தி வருகிறார். Dental implant துறையில் இலங்கையின் முன்னோடியாகத் திகழும் அவருடன் மேற்கொண்ட நேர்காணலை அல்லஹஸனாத் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். 藻、
缀
நேர்காணல்: ஜெம்ஸித் அஸிஸ், வை.எம். இம்தியாஸ்
அல்ஹஸனாத்: உங்களைப் பற்றிய சிறு அறிமுகமொன்
றைத் தர முடியுமா?
டாக்டர் இனாயதுல்லாஹ்: நான் மன்னார், முசலிப் பகுதியின் வேப்பங்குளம் கிராமத்தில் பிறந்தேன். எனது ஆரம்பக் கல்வியை வேப்பங்குளம் மத்திய மகா வித்தியா லயத்தில் கற்றேன். அதன் பிறகு எருக்கலம்பிட்டி ம.ம.வி. இல் தரம் 8 இலிருந்து ஜி.ஸி.ஈ உயர்தரம்வரை கற்றேன். உயர்தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பேராதனைப் பால்கலைக்கழகத்தின் பல் மருத்துவத் துறைக்குத் தெரி வானேன். அங்கு 1998ஆம் ஆண்டு Dental Degreeஐ பூர்த்தி செய்துவிட்டு மாத்தளையில் தனியார் பல் மருத் துவ நிலையமொன்றை சிறிது காலம் நடத்தி வந்தேன்.
அல்ஹஸனாத் மே 2011
జిల్లా,నీళుబిట్టిక్షణ-జూనిమేజిgrt $432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதன் பின்னர் வவுனியாவிலுள்ள அரச வைத்தியசாலை, குருனாகல், ரிதீகம வைத்தியசாலை, கண்டி போதானா வைத்தியசாலைகளில் சிறிது காலம் கடமையாற்றினேன்.
அல்ஹஸனாத். உங்களது பட்ட மேற்படிப்பு தொடர்பாக..?
டாக்டர் இனாயதுல்லாஹ்: கண்டி போதனா வைத் தியசாலையில் முகம், தாடை பிரிவின் சிரேஷ்ட உயர் அதிகாரியாக (O.M.F) பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் பல் மருத்துவத்துறையில்துறைபோகக் கற்று சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் என்னில் ஏற்பட்டது. கார ணம், பெரும்பாலானோர் பற்களை இழந்த நிலையிலேயே சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருகின்றார்கள். இவர் களதுநிலையைக் காணும் போதெல்லாம் எனக்கு இத்துறை யில் ஆழமாகக் கற்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
மட்டுமன்றி வாய், நா போன்ற உறுப்புக்களில் புற்று நோய் ஏற்படுகின்றவர்களுக்கு கதிரியக்க சிகிச்சை (Laser Treatment) அளிக்கின்றபோது பற்களையும் அகற்ற வேண் டிய தேவை ஏற்படுகின்றது. எனவே, வாய்ப் புற்றுநோயி னால் பாதிக்கப்படுகின்றவர்கள் பற்களை முற்றாக இழக்க நேரிடுகிறது.
இவ்வாறு பற்களை இழந்த நோயாளர்களுக்கு மாற்றீ டாக செயற்கைப் பற்கள் பொருத்தப்படுகின்றன. இவ் வாறு பற்கள் பொருத்தப்படுவதுஇலங்கையில் நீண்டகால மாகப் பயன்படுத்தப்படும் ஒருமுறை. பல் கட்டுவதால் நோயாளிகள் பல அசெளகரியங்களை எதிர்கொள்கின்ற னர். சிலபோது கட்டப்பட்ட பற்களிலிருந்துதுர்வாடை வீசுகிறது.
எனவே, கட்டுப்பற்களால் ஏற்படும் அசெளகரியத்தைத் தவிர்த்து பற்சிகிச்சையில் சிறந்ததும் பக்கவிளைவுகளற்ற துமான, உறுதியான ஒரு பற்சிகிச்சையை அளிக்க வேண்

Page 51
டும் என்பது எனது கனவு. ஆனால், அப்போது அந்தள வுக்கு இலங்கையின் மருத்துவத்துறை வளர்ச்சி கண்டிருக் கவில்லை. ஆனால், அப்போது மேலைத்தேய நாடுகள் Dental Implant எனும் பல் நடுதல் முறையை மருத்துவ உல கிற்கு அறிமுகப்படுத்தியிருந்தன. அப்போதே அத்துறை யில் கற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.
அதன் பின்னர் Dental implant மருத்துவ முறையைக் கற்பதற்காக நான் லண்டன் சென்றேன். லண்டன் வொரி 605 Lugig,606 digipsiggai) (University Of Wariwick) Dental Implantதுறையில் MSS கற்கைநெறியைப் பூர்த்தி செய்தேன்.
இத்துறையில் முதுமானிப் பட்டத்தைப் பெற்ற முதல் இலங்கையர் நான் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, ' அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹஸனாத்: Dental Implant முறை பற்றி சுருக்க
மாகச் சொல்ல முடியுமா?
டாக்டர் இனாயதுல்லாஹ்: இன்று சாதாரணமாக செயற்கைப்பல் பொருத்தப்பட்டால் அதனை சர்வசாதா ரணமாக நாவினால்கூட கழற்றி விடலாம். ஆனால் Dental Implant முறை சிகிச்சையானது பல்லை வேரோடு நடுவதைப் போன்றதாகும். அதாவது, நடப்படும் செயற் கைப்பல்லின் வேர்Titanium எனும் உலோகத்தினாலானது. மனிதனுடைய தாடை எலும்பும் இந்த Titanium எனும் உலோகமும் ஒன்றையொன்று ஒத்த இயல்புகளைக் (Bio Compartibity) கொண்டிருப்பதால் Titanium இனால் செய்யப்பட்ட பல்லின் வேரை தாடை எலும்புகளில் நிரந்தரமாகப் பொருத்த முடியும்.
எனவே, டைட்டானியத்தினால் செய்யப்பட்ட பல்லின் வேரை மனிதத் தாடையில் உட்செலுத்தி மனித எலும்புடன் சேர்வதற்கு விட்டுவிட வேண்டும். இரண்டு மாதங்களுக்குப்பின்னர் டைட்டானிய பல்வேரிற்கு மேல் செயற்கையாகச் செய்யப்பட்ட பற்கள் பொருத்தப்படும். இதுதான் Dental Implant பற்சிகிச்சை முறை.
அல்ஹஸனாத்: பல்லை இழந்த சகலருக்கும் இம்முறை
பொருத்தமாக இருக்குமா?
டாக்டர் இனாயதுல்லாஹ்: பொதுவாக 16 வயதி லிருந்து 90 வயதுக்கிடைப்பட்ட எவருக்கும் இம்முறை யின் மூலம் பற் சிகிச்சையளிக்க முடியும். பல் தாடைக ளின் எலும்புகள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் எவருக்கும் இப்பற்களைப் பொருத்திக் கொள்ளலாம்.
அல்ஹஸனாத்: உண்மையான பல்லுக்கும் Implant
முறையினால் நடப்படும் பல்லுக்குமிடையிலான வேறுபாடு என்ன?
டாக்டர் இனாயதுல்லாஹ் : Titanium இனால் செய்யப்பட்ட வேரானது (Screw) உண்மையான பல்லின் வேர் செய்யும் சகல தொழிற்பாடுகளையும் மேற்கொள் ளும். உண்மையான பல்லுக்கு உயிர் உண்டு; Implant முறை பல்லுக்கு உயிர்இல்லை என்ற ஒரே ஒரு வேறுபாடு மாத்திரமே உண்டு என சுருக்கமாகச் சொல்லலாம்.

நேர்காணல்
அல்ஹஸனாத்: இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ள இச் சிகிச்சை முறையினால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட வாய்ப்புள்ளதா?
டாக்டர் இனாயதுல்லாஹ்: பொதுவாக பல்லைக் கழற்றும்போது, பற்துவாரங்களை அடைக்கும்போது எத்தகைய எளிய முறைகள் கையாளப்படுகின்றனவோ அதேபோன்றுதான் implant சிகிச்சையிலும் எளிய முறை களே பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, வலி உணரப் படாமலிருக்க குறித்த பல்லைச் சுற்றியுள்ள பகுதியில் விறைப்பு ஊசி ஏற்றப்பட்ட பின்னர்Titanium இன் மூலம் செய்யப்பட்ட பல்வேர் (Screw) தாடை எலும்பில் செலுத்தப்படும்.
சுகதேகியான ஒருவருக்கு இம்முறையின் மூலம் எவ்வித பக்கவிளைவும் ஏற்பட மாட்டாது. ஆனால், நீரி ழிவு நோய் அல்லது எலும்புடன் தொடர்புபட்ட நோய் கள் இருக்கும் ஒருவருக்கு implant முறை பற்சிகிச்சையி னால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இங்கு ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். ஏனைய பற்சிகிச்சை முறைகளோடு ஒப்பிடும்போது Implant முறையானது 98% பாதுகாப்பான ஒரு பற்சிகிச்சை முறை என்பது மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அல்ஹஸனாத்: அதிக செலவை வேண்டிநிற்கும் ஒரு சிகிச்சை முறையாக இது அமைந்திருப்பதற்கான காரணம் என்ன?
டாக்டர் இனாயதுல்லாஹ்: இலங்கையில் மட்டு மல்ல இச்சிகிச்சை முறை நடைமுறையிலுள்ள சகல நாடுகளிலும்; மேலைத்தேய நாடுகளிலும்கூட Implant சிகிச்சையை மேற்கொள்வதற்கு அதிக செலவு ஏற்படு கிறது. Implant சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பல்வேர் (Screw) டைட்டானியத்தினாலானது. இந்தTitanium தங் கத்தை விட விலை உயர்ந்தது. இதுதான் இச்சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படக் காரணம். காலப்போக்கில் இச்சி கிச்சை முறை வியாபகம் பெறும்போது சிகிச்சைக்கான செலவு குறைவடையும் என எதிர்பார்க்கலாம்.
அல்ஹஸனாத்: Dental implantதுறையில் இந்நாட்டுக்கு நீங்கள் ஒரு முன்னோடி என்ற வகையில் குறிப்பாக பல்மருத்துவத் துறை மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
டாக்டர் இனாயதுல்லாஹ்: பல் மருத்துவத் துறை யில் கல்வி கற்போர் இத்துறையில் துறைபோகக் கற்று துறைசார்ந்த நிபுணர்களாக உருவாக வேண்டும். மட்டு ' மன்றி, மருத்துவ உலகில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட் டுள்ள implant சிகிச்சை முறையை முன்றயாகக் கற்று மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முன்வர வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வேண்டிக் கொள்கின்றேன். மட்டுமன்றி, எமது நாட்டில் தற்போது சிலர் போலி யான, மிகவும் தரம் குறைந்த மூலப் பொருட்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் Implant சிகிச்சையை வழங்கி வருகின்றனர்.
(48&lid Liaisaslib unfaisab)
அல்ஹஸனாத் மே 2011 d 4母 ஜு.அல்ஜலா-ஜு.ஆல்ஆகிரா 1432

Page 52
அருளாளனின்
O இபாதுர்
மூலம்: கலாநிதியூஸுப் அல்கர்ழாவி,த
அல்குர்ஆன், அருளாளனது அடியார்களின் நேர்ப் பண்புகளாக பணிவு, சகிப்புத்தன்மை, இரவு வணக்கம், நரக அச்சம், நடுநிலை, ஏகத்துவ சிந்தனை போன்ற வற்றை எடுத்துக் கூறுகிறது. அவ்வாறே அருளாளனை நேசிக்கும் அடியார்களின் எதிர்மறைப் பண்புகளாக -அவர்களிடம் இருக்கக் கூடாத பண்புகளாக- கொலை, விபசாரம், பொய்ச் சாட்சி. முதலானவற்றை அல்குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது.
அருளாளனின் அடியார்கள், “அல்லாஹ் ஹராமாக் கிய எந்த வோர் உயிரையும் அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள். மேலும், விபசாரத்தில் ஈடுபட மாட் டார்கள். ஆகவே, எவன்இவற்றைச் செய்கின்றானோ அதற் குரிய விளைவை அவன் கண்டு கொள்வான். மறுமை நாளில் அவனுடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும். மேலும் இழிவடைந்தவனாக நரகில் நிரந்தரமாக இருப்பான்.” (ஸஅரதுல் புர்கான்: 88,6 9)
மார்க்கம், உயிர் பகுத்தறிவு, செல்வம், மானம் போன்றவற்றைப் பாதுகாப்பதை இஸ்லாமிய ஷரீஆ நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றைப் பாதுகாக்க முடியாத அல்லது இவற்றுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய அனைத்து செயற்பாடுகளையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. உதாரணமாக, இணைவைப்பு (மார்க்கம்), கொலை (உயிர்), போதைவஸ்துப் பாவனை (பகுத்தறிவு), திருடுதல் (செல்வம்), விபசாரம் (மானம்) போன்ற விட யங்களைக் குறிப்பிட முடியும்.
இந்த வகையில் எந்தவோர் உயிரையும் நியாயமின்றி எந்தவொரு மனிதனும் கொலை செய்வது ஒருபுறமிருக்க, அந்த உயிருக்கு தீங்கு விளைவிப்பதே பெரும் பாவமாகும். நபி(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜிலே மனித சமூகத்துக்கு விட்டுச் சென்ற உப தேசங்களில் பிரதானமான ஒன்றுதான் “மனித உயிரை, மானத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்பதாகும்.
கலிமா சொல்லி ஈமான் கொண்ட ஒரு முஃமின் உட் பட முஸ்லிம்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட திம்மிக்களது உயிர் செல்வம் ஆகியவற்றுக்கு உத்தரவாத மளிக்கப்பட வேண்டும். ஏன், முஸ்லிம்களோடு யுத்தம் செய்து பின்னர் வாபஸ் பெற்று சமாதானம் செய்ய நாடி னால் அவர்கள் மீது அத்துமீறுவதற்கும் எந்தவொரு முஸ் லிமுக்கும் முடியாது எனவும் அல்குர்ஆன் கூறுகின்றது.
“அவர்கள் உங்களோடு யுத்தம் செய்யாது வாபஸ்
அல்ஹஸனாத் மே 2011
ஐ.அல்ஜலா-ஜச.அல்ஆகிரr i432

* அடியார்க
ரஹ்மான்
மிழ்ச்சுருக்கம்: அஷ்கர் அரூஸ் (நளிமி)
பெற்று உங்களிடம் சமாதானம் வேண்டினால் அத்தகை யோர் மீது நீங்கள் அத்துமீற முடியாது என அல்லாஹ் விதியாக்கியுள்ளான்." (அந்நிஸா: 90)
எனினும், மனித சமூகத்தின் ஆரம்பம் தொட்டு நிகழ்ந்து வந்த இந்தப் பாரிய குற்றத்தின் பாரதூரம் பற்றி அல்லாஹ"த் தஆலா பனூ இஸ்ரவேலர்களுக்கு இவ் வாறு தெரிவிக்கிறான்:
“இதன் காரணமாக நாம் பனூ இஸ்ரவேலர்களுக்கு யார் ஓர் உயிரை இன்னோர் உயிருக்குப் பழியாகவோ அல் லது பூமியில் குழப்பம் விளைவித்ததற்கோ அல்லாமல் கொலை செய்கின்றாரோ அவர் அனைத்து மக்களையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். யார் ஓர் உயிரை வாழவைக்கின்றாரோ அவர் அனைத்து மக்களையும் வாழ வைத்தவரைப் போன்றவராவார் என்று விதியாக்கினோம்." (அல்மாஇதா: 32)
இவ்வாறு இருக்க, ஒரு முஸ்லிம் தனது சக முஸ்லிமை எவ்வாறு கொலை செய்ய முடியும்? சிலவேளை தவறுத லாக, எதேச்சையாக ஒரு முஸ்லிம் சக முஸ்லிமைக் கொலைசெய்து விட்டால் அதற்கான பரிகாரத்தையும் இஸ்லாம் குறிப்பிடுகிறது.
01. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு நஷ்டஈடு (தியத்) வழங்குதல், குற்றப்பரிகாரம் (கப்பாராவாக) ஓர் அடிமையை விடுதலை செய்தல்.
02. இதற்கு சக்தி பெறாவிடின் தொடர்ந்து இரு
மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும்.
இன்று இந்த இரண்டாம் வழிமுறையே வசதியாக இலகுவானதாக இருக்கின்றது.
இன்று எதேச்சையாக நடக்கின்ற வகான விபத்துக்க ளில் கொலையாளி நஷ்டஈட்டை (தியத்) மாத்திரம் கொலைப் பாதிப்புக்குட்பட்டோரின் குடும்பத்திற்கு செலுத்துவது போதுமானது எனக் கருதுகின்றான். ஆனால், அது போதாது. அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். இடைநடுவே இரு மாதங்கள் பூர்த்தியாக முன் ஒரு நோன்பையேனும் விட்டு விட் டால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து நோற்றுவர வேண்டும். அப்போதுதான் மனித உயிரின் பெறுமானத்தை அவன் விளங்கிக் கொள்வான். சிலர் மது போதையில் அல்லது பொடுபோக்காக பைத்தியகாரனைப் போல் வாகனத்தை ஒட்டிச் செல்வர். இத்தகைய கொலைகள் நிகழ்ந்தால்

Page 53
அவை தவறுதலாகவன்றி அத்துமீறலாகவே கருதப் படும். அவர்களுக்கான தண்டனை இன்னும் கடுமையா னதாகவே வழங்கப்பட வேண்டும்.
எனவே, ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் அவ னிடம் உலகம் ஒர் ஈயின் இறக்கைக்கும் பெறுமதியற்றது. அவன் பிறருக்கு உபகாரம் செய்யப் பிறந்தவன்; தனக்கு பிறர் உபத்திரம் செய்தாலும் தான் பிறருக்கு உபகாரமே செய்வான் என்பதை இலட்சியமாகக் கொண்டவன்; சத்தியத்திற்காகவன்றி கோபப்படாதவன்; மறுமை சிந்த னையை மனதிற் கொண்டு வாழ்பவன். அவன் எவ்வாறு தன் சகோதரனை வேண்டுமென்று கொலை செய்வான்!?
"யார் ஒரு முஃமினை வேண்டுமென்று கொலை செய்கின்றாரோ அதற்குரிய தண்டனை:
1. நரகம் 2. அதிலே அவன் நிரந்தரமாக இருப்பான் 3. அல்லாஹ் அவன் மீது சினம் கொள்கின்றான். 4. மேலும், அவனை சபிக்கின்றான் 5. அவனுக்கு மகத்தான வேதனையை தயார்படுத்தி
யுள்ளான்." (அந்நிஸா 93)
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் “ஒரு முஸ்லிமைக் கொலை செய்வதைவிட
உலகம் அழிந்து விடுவது அல்லாஹற்விடம் அற்பமானது."
(நஸாஈ, அத்திர்மிதி)
“ஒவ்வொரு முஸ்லிமிற்கும் இன்னொரு முஸ்லிமின் இரத்தம், செல்வம், மானம் அனைத்தும் ஹராம்."
(அஹற்மத், முஸ்லிம்)
இத்தகைய குற்றங்களுள் கொலைக் குற்றத்தின் கொடூரத்தின் காரணமாகவே “நாளை மறுமையில் முதன் முதலாக மக்கள் விசாரிக்கப்படுவது பிரரின் இரத்தத்தை (அநியாயமாக) ஒட்டுவது பற்றியே” என நபி(ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(அல்புகாரி, முஸ்லிம், அத்திர்மிதி)
சில ஸஹாபாக்கள், ஸலபுகள் கொலையாளிக்கு தெளபா கிடையாது எனக் கருதுகின்றார்கள். நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "எல்லாப் பாவங்களையும் அல்லாஹற் மன்னிப்பான். காபிராக மரணித்தவனையும் வேண்டுமென்று ஒரு முஃமினை கொலை செய்தவனை யும் தவிர." (அல்புகாரி)
நிராகரிப்பும் இணைவைப்பும் எவ்வளவு பாரதூர மானதோ அவ்வாறு ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வதும் மிகப் பாரதூரமான குற்றமாகும். கொலையாளி மாத்திரமல்ல, கொலைக்கு உதவிசெய் வோரைப் பற்றியும் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்.

"ஒரு முஃமினை கொலைசெய்வதற்கு பாதி வார்த்தை யைக் கொண்டேனும் உதவிசெய்பவன் தனது இரு கண் களுக்கும் மத்தியில் அல்லாஹற்வின் அருளில் நம்பிக்கையி ழந்தவன் என்று எழுதப்பட்ட நிலையில் அல்லாஹற்வை சந்திப்பான்." (இப்னு மாஜா)
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள் வதை விட்டும் பெரிதும் அஞ்சினார்கள். தன் சமூகம் மீண்டும் ஜாஹிலிய்யத்தை நோக்கி நகர்வதை விட்டும் எச்சரித்தார்கள்.
“எனக்குப் பின் நீங்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்து காபிர்களாக மாறிவிட வேண்டாம்.”
(முத்தபகுன் அலைஹி)
இத்தகைய பண்புகள் குப்ரின் அடையாளம் என இஸ் லாம் கருதுகின்றது. "முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனைக் கொலை செய்வது குப்ராகும்” என நபி (ஸல் லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
ஓர் உயிரை மூன்று நிலைகளிலன்றி கொலை செய்ய முடியாது என இஸ்லாமிய ஷரீஆ கருதுகின்றது.
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) கூறுகின் றார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுளில்லை. நான் அல்லாஹ்வின் தூதர் என சான்றுபகரும் ஒரு முஸ்லிமின் இரத்தத்தை மூன்று நிலைகளிலன்றி ஒட்ட (uplçluftësi.
1. திருமணம் முடித்த விபச்சாரகன்
2. பழிக்குப் பழி- கொலையாளி
3. இஸ்லாத்தை விட்டுப்பிரிந்த முர்தத்” (முத்தபகுன்
அலைஹி)
இங்கும் இஸ்லாம் இத்தகைய குற்றங்களை செய்வோ ருக்கான தண்டனையை தனிநபர்களின் கரங்களிலே கொடுக்கவில்லை. மாறாக இஸ்லாமிய அரசு இஸ்லாமிய நீதிமன்றம், இமாம், வலியுல் அம்ர் போன்றோருக்கே அதிகாரத்தை வழங்கியுள்ளது. திருமணம் முடித்தும் விப சாரத்தில் ஈடுபட்ட ஒருவருக்கான சான்றுகள் நிரூபிக்கப் பட வேண்டும். வேண்டுமென்று திட்டமிட்டு கொலை செய்தமை நிரூபணமாக வேண்டும். மதம் மாறியோனுக்கு மீண்டும் மார்க்கத்திற்கு திரும்ப, பாவமன்னிப்புக் கோர அவகாசம் வழங்கப்பட வேண்டும். அவன் மன்னிப்புக் கோராது அவனால் முஸ்லிம் சமூகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படின் அவனது உயிர் நீதிமன்றத்தின் விசாரணையி னுரடாக தண்டிக்கப்படலாம். எந்தவோர் உயிரும் வீணாக பலியாக்கப்படக் கூடாது.
இவற்றையும் தாண்டி, இஸ்லாம் ஆகுமாக்கியுள்ள யுத்தகளத்தில்கூட, போராட்டத்தில் ஈடுபடாத பெண்கள், சிறுவர்கள், வயது முதிர்ந்தோர் போன்றோரை கொலை செய்யக் கூடாது எனப் போதிக்கின்றது. ஒருமுறை போர்க்
அல்ஹஸனாத் மே 2011
AA ஜு.அல்ஊலா-ஜு.அல்ஆகிரா 1432

Page 54
களத்தில் கொல்லப்பட்டிருந்த சிறுவர்களையும் பெண்க ளையும் கண்ணுற்ற நபி(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல் லம்) அவர்கள் தனது படைவீரர்களை வன்மையாகக் கண் டித்தார்கள் என இப்னு உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ)
இஸ்லாம் மனித வாழ்வை எவ்வளவுதூரம் மதிக்கின் றது என்பதற்கு கருக்கலைப்பைத் தடுத்திருப்பதும் சிசு வாழ்வுரிமையை சட்டபூர்வமாக்கியுள்ளமையும் மிகப் பெரும் சான்றாதாரங்களாகும். தேர்ச்சிமிக்க வைத்திய ஆலோசனையின்படியல்லாமல் எந்தவொரு சிசுவையும் -அது சட்டபூர்வமற்ற முறையில் (விபசாரம்) உருவானா லும் சரி- அழிப்பது மிகப் பெரும் குற்றம் என இஸ்லாம் கருதுகின்றது. இதற்கு காமீதிய்யா எனும் பெண்ணின் வரலாறு சான்று பகர்கின்றது. விபசாரத்தினூடாக கிடைத்த சிசுவைப் பெற்று பால்குடி மறக்கடித்த பின் னரே விபசாரத்துக்குரிய தண்டனையை நபி (ஸல்லல் லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்பெண் மணிக்கு நிறைவேற்றினார்கள்.
ஏன், ஒரு மனிதன்தற்கொலை செய்துகொள்வதையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. உயிர், அது அல்லாஹ் வுக்கே சொந்தமானது. அவன் நாடியபொழுதில் அவ்வு யிரைக் கைப்பற்றுவான். மனிதன்துன்பங்கள், கஷ்டங்கள், சோதனைகளின்போது பொறுமையாக இருக்க வேண்டு மென்பது அடிப்படை இன்று எத்தனையோ பேர் கஷ்ட நிலை, வியாபாரத் தோல்வி, காதல் தோல்வி, பரீட்சைத் தோல்வி போன்ற காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றார்கள். இவையனைத்தும் ஹராம் என்பதை ஹதீஸ்களில் காணலாம்.
“மலையிலிருந்து குதித்து தன்னை மாய்த்துக் கொள்ப வன் நரகிலும் நிரந்தரமாக தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டு வேதனைப்படுவான். நஞ்சருந்திதன்னை மாய்த்துக் கொள் பவன் நரகிலும் நஞ்சருந்திய நிலையில் நிலையாக வேத னைப்படுவான். தன்னை இரும்பால்(கத்தி) குத்திமாய்த்துக் கொள்பவன்நரகிலும் தன்னை அதனால் குத்திக் கொண்டவ
னாக நிரந்தரமாக வேதனையை அனுபவிப்பான்.”
(அல்புகாரி, முஸ்லிம்)
இந்த வகையில் கொலை, தற்கொலை இரண்டும் ஹராம். பிறரின் இரத்தத்தை ஒட்டுவது ஹராம். இவ்வாறு பிறரை நியாயமின்றி கொலை செய்பவனுக்கு தெளபா கிடையாது என சில ஸஹாபாக்கள் கருதுகிறார்கள். ஏனெ னில், ஒரு கொலை மூன்று பகுதிகளுடன் தொடர்புபட் டிருப்பதாக குறிப்பிடுகின்றார்கள்.
1. அல்லாஹ்வின் உரிமையுடனான பகுதி: (இறைவன் வழங்கிய உயிரைக் கொலை செய்தான்) இதனை தெளபாவினூடாக இதயசுத்தியோடு கேட்பதன் மூலம் நீக்கலாம்.
2. கொலை செய்யப்பட்டவனுடைய பகுதி: இவன் நாளை மறுமையில் கொலையாளியை சுட்டிக்காட் டியவனாக வருவான். அப்போது அல்லாஹற் கொலை
அல்ஹஸனாத் மே 2011 48
ஜு.அல்ஊலா-ஐ.அல்ஆகிரா 432

யாளியைப் பார்த்து "உனக்கு நாசமுண்டாகட்டும் எனக்
கூறி நரகில் நுழைவிப்பதாக நபி (ஸல்லல்லாஹ”
அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அத்திர்மிதி, தபரானி)
எனினும், வேறு பலர் கொலையாளிஇதயகத்தியோடு கேட்கும் தெளபாவோடு, கொலைசெய்யப்பட்டோரின் குடும்பத்தாருடைய பொருத்தத்தோடு அல்லாஹ்வும் அவனை மன்னிக்கப் போதுமானவன் எனக் குறிப்பிடு கின்றார்கள். இதுவே பலமான கருத்தாகும்.
எனவே, அல்லாஹ்வின் அருளை யாசிப்பவர்கள் கொலை செய்வது ஒரு புறமிருக்க; கொலைசெய்வதற்கு உதவுவது ஒருபுறமிருக்க; பிற முஸ்லிமுக்கு, சக மனித னுக்கு தான் அச்சுறுத்தலாக வாழ்வதையே பெரும் சுமை யாக எண்ணுவான். ஏன், ஒரு பூனையைக் கட்டிவைத்து உணவு கொடுக்காது சாகடித்த ஒரு பெண் நரகில்நுழைந்த சம்பவத்தினூடாக படிப்பினை பெற்று மனித உயிர்கள் மாத்திரமல்ல பிராணிகளிடமும் அன்பாக நடப்பான். இவர்கள்தான் அருளாளனின் அடியார்கள்; அல்லாஹ்வின் அருளைப் பெற தகுதியானவர்கள்; அல்லாஹ்வின் அரு ளுக்காய் நன்றியோடு வாழும் சுவனலோக மனிதர்கள். இவர்களுக்குத்தான் அல்லாஹ் தயார்படுத்தியுள்ள சுவனலோகம் காத்திருக்கின்றது.
“இத்தகைய பண்புகளைப் பெற்றோர் கஷ்டங்க ளைப் பொறுத்துக் கொண்டதன் காரணமாக மறுமையில் சுவனபதியை பரிசாகப் பெறுவார்கள். அதிலே வாழ்த்துக் களாலும் ஸலாத்தைக் கொண்டும் இவர்கள் வரவேற்கப்ப டுவார்கள். அதிலே இவர்கள் நிரந்தரமாக வசிப்பார்கள். அது எவ்வளவு சிறந்த ஒதுங்குதலம்" (அல்புர்கான். 76)

Page 55
ஏமாறுவோர் இ
BITyao Taosyb
அண்மையில் நடைவபற்ற ஒரு சம்பவ
படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
“ஸேர், ஒரு சம்பவம்” என்று சொல்லத் தொடர்
சுபஹ” நேரம் ஒரு கோல் வந்தது.
“அஸ்ஸலாமு அலைக்கும்.”
"விசால்லுங்க..?
*சுபஹத் தொழுகை முடிந்ததும் ஒரு பயணம்
*சரிவர்றேன்”
சுபஹத்தொழுகை முடிந்ததும் ஆட்டோவைகு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
தலைப்பாகை சால்வை அணிந்த இருவர் பலகாரங்களும் சாம்பிராணி, ஊதுவத்தியும் வை எனக்குத் தோன்றியது. இரண்டு பேரும் வீட்டாரும்:
“எங்கு போக வேணும்?
“பள்ளிவாசலுக்கு.?
பள்ளிவாசலுக்குவகாண்டு போய்விட்டேன்.
“வகாஞ்ச நேரம் தாமதியுங்கள்” என்று கூறிவி பக்கம் சென்று குறிப்பிட்ட ஒரு கபுரடியில் தாம்ப பயபக்தியோடு ஏதோ ஓதி முடித்துவிட்டு ஆட்டோவில்
'ஹஸ்ரத் நீங்கள் விவளி ஊரா? உங்களை இ
“வெளி ஊர்மகன்; இந்த வேலைக்காக வந்ே
*அப்படியா? இது போன்ற ஒரு நடைமுறையை
“மகன், இந்தக் கபுராளியின் நாற்பதாவது ந வைத்து ஓதினால் இவரது ஆத்மா சாந்தியடையும்.
"அப்படியா, எனக்குத் தெரியாதே,”
“எல்லாருக்கும் இது விளங்காது மகன்” என்ற
*மேலும் நான் வாதாட விரும்பவில்லை. இ6 மக்களை ஏமாற்றும் ஒரு கிருத்தியம் என்பதை அறிந் அஹ்மத்.
‘ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுப கையில் இருக்க அறியாமையில் இருப்போரை என்

சிந்திக்க வைத்த சந்திப்பு
ருக்கும் வரை.
ம் வேடிக்கையாகவும் நபிவழியைக் கொச்சைப்
கினார் ஆட்டோசாரதி அஹ்மத்.
BLITTERS (86agguh Guy dipiguq mmr?”
றிப்பிட்டவாசலில் நிறுத்தினேன். வீட்டில்ஏே 4.
இருந்தனர். ஒரு பெரிய தம்பாளத்தில் பழங்களும் பக்கப்பட்டிருந்தன. ஏதோ, நேர்ச்சைக் கடன் போல் தாம்பாளத்தோடு ஆட்டோவில் ஏறினர்.
ட்டு தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு, மையவாடிப் ாளத்தை வைத்து ஊதுவத்தி சாம்பிராணி காட்டி,
ஏறினர்.
தற்கு முன் நான் கண்டதில்லை.”
நாம்.?
இப்பொழுதுதான் பார்க்கிறேன்.”
rள் இன்று. இவருக்குப் பிடித்தமான பண்டங்களை
O
TTT.
தை ஒரு வழிகேவடன்றும் வயிற்றுப் பிழைப்புக்காக துஎனக்குள்வநாந்துவகாண்டேன்”என்றார்ஆட்டோ
வர்களுக்கு இலாபம்தான். குர்ஆனும் நபிவழியும் னவென்று கூறுவது? என்றேன் நான்.
அல்ஹஸனாத் மே 2011
mബ 49 ஜு.அல்ஜலா-ஜஅல்ஆகிரா 1432

Page 56
சிறு விளம்பரம்
d600TLD56060
罗勇 *:
எதிர்பார்க்கின்றார்.
மணமகன் தேவை தொடர்புகளுக்
நுவரெலியா மாவட்டத்தைச் பதுளை மான் சேர்ந்த மார்க்கப்பற்றுள்ள மணமக பிரதேசத்தைச் சே ளுக்கு (வயது 38) மார்க்கப்பற்றுள்ள ?" தரம்வரை க அரசாங்கத் தொழில் அல்லது வியாபா (வயது 33, உயர! ரம் செய்யக்கூடிய 42 வயதுக்குக் றம் நல்லொழுக் குறைந்த மணமகனை அல்லது தக்க கனை அவரின் ெ காரணத்துக்காக விவாகரத்துப் பெற்ற சின்றனi. தகுந்த ஒருவரை குழந்தைகள் இல்லாமல் விவகரத்துப் பெ
இருப்பது விரும்பத்தக்கது) அவரின் இல்லாதோரும் தெ குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக் தொடர்புகளுக்கு: 076368460 / : yawmul.ahir ;'::&& : ”܀܆܆܀3܀-:܆
குருநாகல் மr
பிரதேசத்தைச் சேர்
STS DLG)
காலத்துக்கேற்ற காத்திரமான படைப்புகளை வழா னாத்தின் பங்களிப்பு மகத்தானது. ஏப்ரல் மாத அல்ஹஸன பல படைப்புக்கள் அத்தகையவை. "யானைப் பசிக்கு என் வைத்த அந்தச்சிறுமி” போன்ற கட்டுரைகள் சிந்திக்கத்தூ போன்று ஆன்மிகப் பகுதியில் வெளிவந்த துஆ என்ற கட் தொட்டது.
வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சினைகளு ஏற்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் மனிதன்தன்னைப்ப மறந்து விடுகின்றான். தனக்குத் தான் எல்லாம் வருகின்ற தவிக்கின்றான். பிடரி நரம்பைவிட அருகில் இருக்கும் அ விடுகின்றான். எனவே, எமது தேவைகளை அல்லாஹ் வேண்டும். இதற்கு சிறந்த ஆயுதமாக துஆவைப் பய6 என்ற பல சிறப்பான கருத்துக்களை கட்டுரைஆசிரியர் வி
உண்மையில் மனிதன் இவ்விடயங்கள் பற்றி ஏற்கன லும் பிரச்சினைகளின் போது அவற்றை மறந்து புலம்பத் எதிரிகளின் பலமான அனு ஆயுதங்களை விட சிறந்த ஆ கட்டுரையாளர் முத்தாய்ப்பாக சொல்லியிருப்பது வாசகர்களுக்கு நன்கு புலப்படுத்தியிருக்கும்.
ஹனா, இலங்கைத் தென்கிழக்
அல்ஹஸனாத் மே 2011
ஐ.அல்ஜலா-ஐ.அல்ஆகிரா 1432
 
 
 
 
 
 
 
 

அவரின் சகோதரர்
5: O716511471
ட்டம், வெலிமடை ந்த க.பொ.த. சாதா ற்ற மணமகளுக்கு 5'2") மார்க்கப்பற் 5upcup6irolT LD600TLD பற்றோர் எதிர்பார்க் காரணங்களுக்காக ]ற, குழந்தைகள் ாடர்புகொள்ளலாம்.
5:0724.1397.26
274442 Pgmail.com
வட்டம், நிகவெரடிய 55.286)lugiéOLulu தரம்வரை கற்ற,
ளுக்கு பொருத்த தேவை.
5: O777874.984
குவதில் அல்ஹஸ ாத்தில் வெளிவந்த ான தீர்வு" "சிந்திக்க ண்டுகின்றன. இதே டுரையும் மனதைத்
நம் தேவைகளும் டைத்த இறைவனை து என்று புலம்பித் ல்லாஹ்வை மறந்து ரவிடம் முறையிட Tபடுத்த வேண்டும் ாக்க முயல்கின்றார்.
வே தெரிந்திருந்தா தொடங்குகின்றான். யுதம் துஆவே என துஆவின் பலத்தை
நப்பல்கலைக்கழகம்
ஒேலர் பூங்கா முதல் Aہولیاتی ہے ج
g.es. ergognTGOTT GIBLuesli
அண்ணல் நகர், கிண்ணியா
மே மாத அல்ஹஸனாத் இதழை பரிசாகப் பெறுவோர்
எம.எம்.எப்.ஸமையா
மருதமுனை
எம்.ஆர்.எப். ரிஸ்மினா
கடுகஸ்தோட்டை
6Tib.6rsio. 6noluntern
அம்பாறை
எம்.கே.எப்ஷம்லா களுத்துறை
ஏ.ஆர். அப்னான் பொலன்னறுவை
கே. ரியாஸ் முஹம்மத்
LITGOp6060T
பாத்திமாமுபாரக்
5T616) Strip
றிப்தாமுலப்பர் மீயெல்ல
எம்.இஸட் அஸ்ரிஅஹமத் ஹெம்மாதகம
எம்.ஏ.எம். அனஸ்
கடுகண்ணாவை
குறிப்பு விடைகளைதபால் அட்டையில் (Post Card) 6Tups eigOil 6gs வரவேற்கத்தக்கது.

Page 57
தொழில் வாய்ப்பைப்
ਨ।
தொழில்நுட்பக் கற்கை மிகச் சிறந்த முறையில் வடிவ வளமாக்கக் கூடிய தொழில்நுட்ப பயி நாளை நீங்களும் ஒர்
Air Conditioni Electrical Wiri Auto Electrica | Electronic (TV
Plumbing We
Mobile Ph
புதிய வகுப்புக்க
இப்பயிற்翡 நெறி. 666.86 * தமிழ் மொழிமூலம் நடத்தப்படும்
* கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளைக் கொன
* தேர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த விரிவுரையாளர் தேவையானோருக்கு விடுதிமற்றும் உணவு வசதிகள் செய்துகொடுக்கப்படும்
Coordinotor M.H.M. Muhcalis 0778 329553 O777 412097
ஊகத்பெறத் தகுதியான மாணவர்களுக்கான புலrைiபரிசில் வசதிகள் វិgអ៊ខ្សធំៗផ្សែផ្លែ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற அரிய சந்தர்ப்பம்
நெறி வரலாற்றில் புதிய பரிணாமம் மைக்கப்பட்ட மற்றும் வாழ்க்கையை சிநெறியை தெரிவு செய்யுங்கள்! தாழில்நுட்பவியளாளராகலாம்!
) ryi ep6oiöLJIT-6lj5.356si
ng at Refrigeration ng - Domestic --
Rep. ՈՑ , 6 Months Radio) Repairing Monthly 5,000/-
3 MÅOnths / Monthly 5,000/=
2 Months | S Course Fee 12,000/7
$২২8
ள் 2011 ஜூலை முதல் வாரம் ஆரம்பமாகும். ளை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
irlgji sளை உள்ளடக்கியுள்ளது 100M
ndy -->
* ーエ
கருக்கு (Ganethenna)
MAWANELLAINSTITUTE OF TECHNICAL TRAINING
Udathennawatta, Ganethenne, Hingula. techmaw0gmail.com
O777 42097 || 077 29.9233
ilding / Masonry
one Repairing
Ka
அல்ஹஸனாத் eே 2011
ప్రఖ్యానీsుఖళ్లఖtయ్యి.నీళ్ల్యునికి $432

Page 58
ne Program என்ற தீவிர பயிற்சி நெறியி6ை மூலம் மேற்கூறிய உங்களது இலக்குகளை gi. JOBTRAINING PROGE
3 Hardware Engineering 4 spoken English
அளவையியலும் விஞ்ஞானமும் எம். றொட் இப்பாடத்திற்கமைய முதல் தடவையாக 2011ஆம் ஆண் பூங்கா மாதிரி வினாத்தாள்கள் (விடைகளுடன்) :
விஞ்ஞானம் தரம் 6 அலி உதுமான் அ6 விஞ்ஞானம் தரம் 10 அலி உதுமான் அ விஞ்ஞானம் தரம் 11 அலி உதுமான் அ6 இஸ்லாம் தரம் 6 &lly eligif ரஹ்ம நினைவாற்றலை வளர்த்தல் எம்.எச்.எம். ஹஸ் எமது ஏனை
விபரம் அறிய www.islami ஆகிய இணையதளங்
15 பழகள் ஏறி உள்ளே வரவேண்ழய
GÒGDGD
77, தெமட்கொட வி
TP 0112684.851 0112 Email infoCD islamicbookhouse.ne
ព្រោមឈ្មោះអយ្យិ និង 20៖
ஜூ.அல்ஜல.ஐ.அல்ஆகிரா {ళ్వీస్లో
 
 
 

குறைந்த கட்டணத்தில்
Gigiriras& gases
Managing Director
M. M. M. Riswfwaf O716 22 85 80
醫 體
器 ஒ 鹫 ܪܐ ܢ
こ Brafici Office:
4th miłe post, WAfepparadu. COLLEGE OF C.
EAD OFFICE 43, Udayar's lane, Marikkar street, Puttalarr (3.222 658.32
h6টা soooo pல் பரீட்சை நடத்தப்படும்) Egub 4 2oooo
லி அக்ரம் 135. OO லி அக்ரம் 33o.oo
லி அக்ரம் 39 O.OO
ான் 175. OO
ன் 25O.OO எய நூல்களின்
cbookhouse.net, www.ibh.lk 5606T LIfi606ufiព្រះតំឲ6.
மாழக் கட்டிடத்தில் அமைந்திருக்கும்
தி, கொழும்பு-0909
56.997, Fax 0112688.102 it, Web: W.W. islamicbookhouse.net

Page 59
66oriaDaisui British Cc
மிக வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய கட்டட நிர்மாணத் துறைய படவரைஞர்களுக்கும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுக்குமான வேலை வ காணப்படுகின்றன. கணணி முறைப்படம் வரைதலில் சிறப்புத் தேர்ச்சியும் (Ex CAD) SLLL நிர்மாணத் தொழில் நுட்பங்கள் தொடர்பான அடிப்படை அறிவும் செ ஏராளமான தொழில் வாய்ப்புக்களும் மத்திய கிழக்கிலும் ஏனைய நாடுகளிலும் : வேளை கூடுதல் வருமானமும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் கடற் உயர்கல்வி வாய்ப்புகளையும் தொழில் பயிற்சிப் பாட நெறிகளையும் வழங்கி நிறுவனமான BCAS மாத்திரமே வழங்கும் CAD & BS பாடநெறி உடனடித் ெ உத்தரவாதப்படுத்தும் மேற் குறிக்கப்பட்ட திறண்களைப் பெற்றுத் தருவதோடு ச கொண்ட இரட்டைத் தகைமைகளையும் பெற்றுத் தருகின்றது. CAD பி 85 பாட செய்த மாணவர்கள் அனைவருமே உடனடித் தொழில் வாய்ப்பைப் பெற்று: பெரும்பான்மையானவர்கள் BCAS இன் உதவியுடன் மத்திய கிழக்கில் CA Construction Supervisor, Technical Officers, Junior Quantity Surveyo Assistant ஆகிய தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
British College of 32, Dharm Applied Studies
Colombo o Dehiwela o Kandy oDoha-Qatar I Tel: 08
 
 
 

lege மட்டுமே வழங்கும்
= (குறைந்த படிசம்) மாத வருமானம் வாய்ப்புக்களை உத்தரவாதப்படுத்ததும்
மாத தீவிர பாடநெறி
6io SeoOT600f ாய்ப்புகள் நிறைந்து
lert Kıರ! BCAS Éacör CAD ś BS uml6)'Brýsoud ானடோரகளுககான O O O O AMŽIA O ாணப்படுகின்ற அதே பூர்த்தி செய்கு நாங்கள இப்போது Qatar த 10 வருடங்களாக இல் பிரபல கட்டட நிர்மாண நிறுவனத்தில் வரும் முனனணி பெறுமதியான தொழில் வாய்ப்பினைப் நாழில் வாய்ப்பை பெற்றுள்ளோம். ரூபா.100,000 இற்கும் rவதேச அங்கீகாரம் அதிகமான சம்பளத்துடன்
நறியினைப் பூர்த்தி 1ள அதேே O :" பெற்றுத்தந்கு BCAS இற்கு நாங்கள்
S, Land SurV0yOr எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.
இப்பெறுமதியான வாய்ப்பினைப்
M.றிஸ்வான் - கொழும்பு K.தேவேந்திரன் - மட்டக்களப்பு
A.H.A.ஹசன் - புத்தளம் சியாம் - புல்மோட்டை M.அசாட் - காத்தான்குடி ŞX-X-XX-XX-XX ჯs!XXXXXXX ჯ! s!XXXXXXXX ჯ! s! s!-->ჯჯX-Xჯ2-2 ჯვა ჯაჯა 332.333,2XXXXXXXX_2-x^2 x^238-232-228-2222 * s!22 றிகாஸ் ஜிப்ரி - தெஹிவளை ama Road, Colombo 06,
5O1145, O773 114105
ideniya Road, Kandy.
224731,0772 067070 WWW.bcas.lk

Page 60
Registered as a News Paper in GPO/OD/92/NEWS/2011
Diploma in Hardware Engineering with Networking
Diploma in Network براہیم Administration ల్లోనో Industrial Training in Computer Networking ؟ettaقگی
Diploma in Linux Network Administration & Security
Leading to RHCE & RHCT certifications
Cisco Certifications
CCNA | 640-802 CCNP |
ICND1640-816 ICDN2640-822 Get trained by the experts, Many Of Our students SCOred 1000/1000
Microsoft Certifications MCTS|MCITP MCSA. MCSE
Microsofi Ljubogoše, தோற்றவிருப்போருக்கு GEEL வெகுமதி
Microsoft MWAKA 舞 பரிட்சைக் கட்டணத்தில் இரண்டாம் BLOASSTGI
30% கழிவு (US$ 35 (DLGCD) ujLG03 8.)Asb கொ
(3 வையில் பரிட்சையில் சித்தியடை **osséolo" 562/15 மீளப்பெறுங்கள் கொள் தொை
TURNKEY
T TRAIN IN G. 2eálisabessége Peeleségesé éasáng Email:
 
 
 
 

inted by AJPrints (Pvt) Ltd 44, Station Road, Dehiwala
on the
ல் பட்டப்படிப்பு நிறுவனத்துடன்
7s CE. Microsoft ( fristaatle=F==ł Gyergs sier
REGISTERED
ROMETRIC
Diploma in Multimedia Authoring
We Guide your Creativity to a Professional Destination
Adobe Photoshop Adobe Illustrator Macromedia Flash | CorelDraw Adobe Premier Adobe After Effects | Adobe Audition
Diploma in Web Designing
Your Gateway to the World of Web Designing
Adobe Photoshop Adobe Illustrator Macromedia Flash | CorelDraw HTML JavaScript Macromedia DreamWeaver
Diploma in Web Development
PHP MySQL | Apache Server XML Inquire formany more higher end Courses
s -
TURNKEY 976w'r G gyfla, Glewlw (86.160pxGib? இலங்கையில் Hardware & Network அதிகமான தொழிலாளர்களை உருவாக்கியமை, தொழில் வாய்ப்பு வழங்குனர் பலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ். NetWOrk, CiscO & MicroSoftLITLGBolselbiss GT plung JLólies பரிசோதனைக் கூடம்.
· DGOpp53, 8LLGOrisci gab606). (NO COnditions apply) தனித்தனி மாணவர்களினை அவதானிக்கக்கூடிய விசேட \போதனைக் குழு.
, லோவர் பகதல வீதி,
ரூப்பிட்டி. (கடல் பக்கம்)
„საფLjál: 2-581581, 2-595336, O772-286988
NOW register for
பேராதெனிய வீதி. any COurSe Online G
Giga:081-2265678, 081-4470480 WWW.turnkey.lk
0775-077456
foGturnkey.lk
HoTLINE 07228698