கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2011.06

Page 1
হf6ী 2011 ஜூ அல்ஆகிர ரஜப் 432 மலர்: 37 இதழ்: 06
WWW ana Sarat, et
SLAMIC MONTHLY
 

الستات السلامية شهرية تصدرها ريماعة الإسلامية للسيريللونية
இஸ்லாத்தின் சுவை தெடுக்கும்
O O DEFTONSTEIGT.
இஸ்லாமிய இலடீசியக் குரல்

Page 2
அக்குறணையில்.
G.C.E. A/L 2013 ༄། Residential Project for
Science & Commerce Stream
(English Medium)
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்.
முற்றாக இரு வருடம் சகல வசதிகளும், பாதுகாப்பும் இஸ்லாமிய சூழலுடன் கூடிய வதிவிடம் (Hostel Facilities).
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைக
விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கு பரிசோதனை கூட (Laboratory) 61353,6i.
மாணவ மாணவிகளுக்கு தமது பாடத்திட்டத்துடன் இஸ்லாமிய, ஒழுக்கவியல் வழிகாட்டல்கள் வழங்கப்ப
பல்கலைக்கழக அனுமதியை உறுதி செய்யும் வகைய G6 (6, 6f 6f (Cut Off Mark) fas6b g60psis மாவட்டத்தில் மாணவர்கள் பதிவு செய்யப்படுவார்கள்.
தகுதி வாய்ந்த, அனுபவம் மிக்க மாணவர்களின் பெறுபேறுகளுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய விரிவுரையாளர்களால் வழிநடாத்தப்படுவார்கள்.
இலங்கையில் புகழ் பெற்ற மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக் கொண்டு தொடர்ச்சியாக கருத்தரங்குகளும் வழிகாட்டல்கலும் நடாத்தப்படும்.
தேவைக்கேற்ப மாணவர்களின் தகுதி மட்டங்களை கண்காணிக்க அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட பரீட்சை முறைகள் கையாளப்படும்.
அரச பாடசாலைகளுடன் இணைந்து செயன்முறைப் பயிற்சிகள் (Practicals) மேற்கொள்ளப்படும்.
மாணவர்களின் சிறந்த இறுதிப்பெறுபேற்றுக்கான முழுப்பொறுப்பையும் எமது கல்வி நிறுவனம் பொறுப்பேற்கும்.
உள்நாட்டு பல்கலைக்கழகங்களிற்கு அனுமதி கிடைக் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் (Scholarship) அடிப்படையிலோ சலுகையின் (Relief) அடிப்படையிலே வெளிநாட்டு பல்பலைக்கழக அனுமதி மற்றும் தொழில் சார் கற்கைகள் (Professional Courses) பெற்றுக் கொடுக்கப்படும்.
சிறந்த முகாமைத்துவம், பல வெளிநாட்டுக் கல்வி
நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றதும், தேசிய ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தாலேயே இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
 
 
 

2oob gañG G.C.E. O/L LuftBODDEFullsi) ஆங்கில மொழி மூலம் தோற்றிய OTGIGuhassigniasng G.C.E.AILana) English Medium pasto
TLGugino
உங்கள் கவனத்திற்கு:
வரையறுக்கப்பட்ட மாணவர்களே அனுமதிக்கப்படுவர். முதற் பதிவுகளை மெற்கொள்ளும் 15 மாணவர்களுக்கு விஷேட கட்டணக் கழிவு வழங்கப்படும்.
ფnaაფეთ விபரங்களுக்கு
காத Course Director: 077-5365352
ABC
Dedicated Couching
AGE BUSINESS COLLEGE
272 A, Main Street, Akurona.

Page 3
"(நபியே!) இறை நம்பிக்கை : 6 - ه معهم கொண்ட ஆடவர்களிடம், அவர்கள் (அல்குர்ஆ தங்கள் பார்வைகளைத் தாழ்த்தி 14-6 (பேணி)க் கொள்ளும்படியும் தங்களு a a u-sa is டைய வெடிகத்தலங்களைப் (அல்ஹதீஸ் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் : கூறும். இதுவே அவர்களுக்கு மிகப் 7-9
பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஷ்ற அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான். :” மேலும் (நபியே!) இறை நம்பிக்கை : U 9:ள கொண்ட பெண்களுக்கும் நீர் கூறும்; : .
அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்தி (பேணி)க் கொள்ளடிரும்." (24:30,31)
மலர்: 37 இதழ்: 06
ஜூன் 2011, ஜூ அல்ஆகிரா - ரஜப் 1432
ISSN: 1391 - 460X
உள்நாடு தனிப் பிரதி: ரூபா 4O.OO 65Leibst:ebut 6O.O.O.O ஆறு மாதம் ரூபா 3OO.OO
வெளிநாடு
இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, érň5ů: 1100.00
மத்திய கிழக்கு நாடுகள் 1400.00
இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா 15OO.OO
ஐக்கிய அமெரிக்க நாடுகள்: 1800.00
O. O. O.
வெளியீடு: : இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி બ્રા
தொடர்புகளுக்கு: w அல்ஹஸனாத் : 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை அது ; தொலைபேசி:01) 2689324, தொலைநகல் :(or) 2686030 : wimw tôiroTS656):alhasanath0gmail.com ; தூவ
60600TLL36|Tib: www.alhasanath.net :
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் குறிப்பிட்
5. Isualti DEMATAGODA ,
 
 
 
 

விளம்பரம் نcoloTouT__میٹر _
விளக்கம்) பித்னாவை தடுப்பது எவ்வாறு? அஷ்ஷெய்க் தாஹிர் எம் நிஹால் (அஸ்ஹரி)
விளக்கம் ) seypabš BLGOLD1um? ஆன்மிகக் களிப்பா?
அஷ்ஷெய்க் எச்.எம். மின்வறாஜ் (இஸ்லாவறி)
ватb இஸ்லாத்தின் சுவை கெடுக்கும் 2 மேலதிக மசாலாக்கள்
உஸ்தாத் ரஷீத் ஹக்சல் அக்பர்
ஆன்,ஹதீஸ் மஜ்லிஸகளின். 22-24
'அந்தளவு தெரியும். 25
ானம் 26-27
தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து னக் குறிப்பிட்டு அனுப்பவும்.
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிராம ரஜப் 1432

Page 4
ໂຽTbug ມີ
ஆங்கில மொழியை அடிப்படையிலிருந்து மு அடிப்படை கணனி அறிவு மற்றும் ஏனைய
கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட விே
குறித்த தொகை மாணவர்களே ே கொள்ளப்படவிருப்பதால் அனுமதிக்கு முந்தி
Duration: 02 Months - 3( (06 Days a Week - 8:30am
தினமும் 02 மணித்தியாலத்துக்கு அதிக
Admission Fee: 2,000/- Course Fe
ஆண், பெண் இருபாலாருக்கும் பாது
SUCCESS is not an option
Learn AIRLINE with a quali உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்
Duration: 2-1/2 Months (Weekdays/W Course Fee: 11,000/=
ரதேச மாணவர்களுக்
LDEN
No.23, Suduhumpola Rd, Tel: 081220 5544, Mobile:
அல்ஹஸனாத் ஜூன் 2011 l m ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432
 
 
 
 
 
 
 

கணனி பயிற்சியுடன் கூடிய திவிட ஆங்கில பாடநெறி
S TRAINING
ழுமையாக கற்றுக் கொள்வதோடு திறன்களையும் விருத்தி செய்து ! ஷட பயிற்சிப் பாசறை.
பாடநெறி ஆரம்ப
3OO6.2O11
சர்த்துக் நிக் கொள்ளுங்கள்
50 Hours to 4:30pm)
மான பேச்சுப் பயிற்சி
эe: 19,500/=
காப்பான தங்குமிட வசதி
DPLOMAN
RINE
fied & Experienced lect
சிறந்த வருமானத்தை ஈட்டித்தரும் வதற்கேற்றவாறான குறுகிய கால பாடநெறி
collec
(Off Peradeniya Rd) Kandy Ο777912597 Ι.07.1803 29 67
77 71 71 29

Page 5
அல்லாஹ்
அல்லாஹுத் த தொழுகையை உவந்த6 பள்ளிவாசல்களே உருவ முடியாது. இபாதத்துக பிரதிபலிக்கிறது.
முஸ்லிம்களில் அதி அல்லாஹ்வைத் தொ தொழுகையின்போது சுவனவாசிகளைச் சந்தி
அரபியில் ஒதுபவர் உள்ளம் அல்லாஹ்வுடன் தன்னை இவ்வாறு அறி
"நான் இணைவை தையும் வணக்க வழிப குவதன் மூலம் முஸ்லி உறுதியளிக்கிறேன்.”
பின்னர் ஸ்லிரா பண்புகளை மகத்துவப் காட்டும் அர்ரஹ்மானே கருணை பொழியும் அ உன் கருணையின்பாற் கோல்களை வழங்கி ெ தேடுவதும் உன்னிடம் பாதையில் எம்மை வழ களின் பாதையுமல்ல;
குனிந்து சிரம்ப அத்தஹிய்யாத்தின்ே காணிக்கையை முன்ை வாழ இருக்கிறாரோ .
இந்த வகையில் இ காலம், நேரம், இடம், களை விட்டும் நீங்கி ஆறுதலாக உரையாடு உண்டாக்குகிறது. உய
இத்தொழுகைை னான். இது இடம்ெ தொழுகைகளை உய வேண்டும். “தொழுை ருப்பது நம் சிந்தனை

வை தொழப்பழகுவோம்
3ஆலா அவனை நினைவுகூர்வதற்காக ஐங்காலத் ரித்தான். இந்தத் தொழுகை இல்லையென்றிருந்தால், ாகியிருக்க முடியாது; பண்பட்ட சமூகமும் பிறந்திருக்க ளில் தொழுகை வகிக்கும் பலமான அந்தஸ்தை இது
கமானோர் தொழுகையைத் தொழுகின்றார்களே தவிர, ழுவதில்லை. அரபு மொழி புரியாத காரணத்தால்
அவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடுவதுமில்லை; ப்பதுமில்லை.
ற்றை விளங்கி, ஆன்மிக உணர்வுடன் தொழும் ஒருவரது ன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது. அவ்வேளை அது முகப்படுத்திக் கொள்கிறது:
ப்பாளர்களுள் ஒருவனல்ல; எனது வாழ்வையும் மரணத் ாடுகளையும் தொழுகையையும் உனக்கே அர்ப்பணமாக் ம்களுள் ஒருவனாக இருக்கிறேன் என வஜ்ஜஹ்து மூலம்
அல்பாதிஹாவிலே இறைவனைப் புகழ்ந்து, அவனது படுத்துகிறான். அனைத்துப் படைப்பினங்கள் மீதும் அன்பு ா! மறுமையில் பிரத்தியேகமாக முஃமின்கள் மீது மாத்திரம் ர்ரஹீமே! நீ நியாயத் தீர்ப்பு நாளை ஏற்படுத்தியிருப்பதே பட்டதுதான். அந்த நாளில்தானே சுவனபதியின் திறவு களரவிக்கிறாய்? நான் வணங்குவது உன்னைத்தான்; உதவி தான். உனது நிஃமத்தைப் பெற்றுக் கொண்டோர் சென்ற பிநடத்துவாயாக. அது நபிமார்களைக் கொலை செய்தவர் அவர்களை இறைவனாகப் பூஜித்தவர்களின் பாதையுமல்ல.
னிவதால் தனது கீழ்ப்படிவை நிரூபிக்கும் அவன், பாது சுவனத்தின் கதவுகளைத் தட்டி, இறைவனுக்கான வத்து, நபியவர்களுக்கும் தான் சுவனத்தில் எவரெவருடன் அந்த நல்லடியார்களுக்கும் ஸலாம் உரைக்கிறார்.
|றைவனை வணங்கும்போது, அதுவும் அகால வேளையில் சூழல் போன்ற சிந்தனையை மட்டுப்படுத்தும் வரையறை தஹஜ்ஜ"த் தொழுகையின்போது அல்லாஹ்வுடன் வது உள்ளத்தில் தூய்மையையும் வாக்கில் உறுதியையும் ரோட்டமான தொழுகை என்பது இதுதான்.
நமக்குப் பரிசாக அல்லாஹ் மிஃராஜின்போது வழங்கி பற்ற ரஜப் மாதத்தில் நாம் இருக்கும் வேளையில் நம் ருள்ளவையாக உருவாக்கிக் கொள்ள நாம் முயற்சிக்க க முஃமின்களின் மிஃராஜ்" என நபியவர்கள் கூறிச் சென்றி குரியது.
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஐ. அல்ஆகிரா - ரஜப் 1432

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
அஷ்ஷெய்க் தாவறிர் அதிபர், கதீஜதுல் குப்ரா மகளிர் O
"(நபியே!) இறை நம்பிக்கை கொண்ட ஆடவர்8 தங்கள் பார்வைகளைத் தாழ்த்தி (பேணி)க் கொள்ளு டைய வெடிகத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்ச அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவனாக இருக்கி
மேலும் (நபியே!) இறை நம்பிக்கை கொண்ட ெ கூறும்; அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்தி எடிடும். தங்களுடய வெடிகத்தலங்களைப் பேணிக்க டும். தங்கள் அழகை வெளியே காடிடாதிருக்கடிடும். அ வெளியே தெரிகின்றவற்றைத் தவிர. மேலும் தங்களு களை அவர்கள் தங்கள் மார்புகள்மீது போடிடுக் கொ:
பொது இடங்களில் பெண்கள்
படுவதை இவர்
முகத்திரை (நிகாப்) அணிவைைத கொள்ளமுடியான தடுக்கும் சட்டமும் தடையை மீறுப நிகாப் அணிந்த வர்களுக்கெதிராக தண்டனை விதிக் இடங்களுக்குச் ( கும் சட்டமும் அண்மையில் பிரான் தேவை என்ன? ஸில் அமுலுக்குக் கொண்டு வரப்பட் வேண்டிய தேவை டது. இதனை மீறி பொது இடங்க விட்டுவிட்டு ஹ ளில் முகத்திரைஅணிந்த பெண்களை டித்து (முகம் திறந் யும் தடைச்சட்டத்தை எதிர்த்து ஆர்ப் இத்தகைய வேண் பாட்டங்களில் ஈடுபட்ட பெண்க ளிலிருந்து பெண்க ளையும் அந்நாட்டுப் பொலிஸார் காத்துக் கொள்ள இழுத்துச் செல்லும் காட்சிகளை சில இஸ்லாமிய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. லிம்கள் பெரும்பா இந்கக் காட்சிகள் முஃமின்களின் சில இ டங்களிலு உள்ளங்களைப் புண்படுத்தவே செய் காரமில்லாத நிை தன. நிகாபுக்கு விதிக்கப்பட்ட தடை சிறுபான்மையினர போன்ற நாடுகளி
உள்ளங்களில் ஏற்படுத்திய காயங்களை விடவும் இக்காட்சிகள் பலரின் உள் ளங்களில் பெரும் காயத்தை ஏற்படுத் தின. காரணம், அந்நிய ஆடவனின் கை முஸ்லிம் பெண்ணின் மேனியில்
அல்ஹஸனாத் ஜூன் 2011 mmബnknചm
4.
ஜு. அல்ஆகிரா. ரஜப் 1432
காரம் பெற முயற் தேவைதானா? எ
இஸ்லாம் வலி பையா, நிகாபை
 

எம் நிவறால் (அஸ்வறரி) ல்லூரி, வடதெனிய, வெலம்பொட
ளிடம், அவர்கள் ம்படியும் தங்களு படியும் நீர் கூறும். பமாக அல்லாவிற ன்றான்.
பண்களுக்கும் நீர் (பேணி)க் கொள் ாத்துக் கொள்ளடீ திலிருந்து தாமாக டைய முந்தானை *ளடீரும்."
(24: 30,31) mm)
களால் சகித்துக் மயாகும். இதனால் பெண்கள் பொது செல்ல வேண்டிய அப்படிச் செல்ல இருந்தால் நிகாபை ஜாபை கடைபி து) சென்றிருந்தால் ாடாத சூழ்நிலைக ள் தங்களைப் பாது முடியுமல்லவா? நாடுகளிலும் முஸ் ன்மையாக வாழும் b நிகாபுக்கு அங்கீ Uயில் முஸ்லிம்கள் கவாழும் பிரான்ஸ் ஸ் நிகாபுக்கு அங்கீ சிப்பது காலத்தின் ா வினவுகின்றனர்.
புறுத்துவது ஹிஜா ா என்பதே இவர்
O
களது கேல்வி. அதாவது, பெண்கள் (நிகாப் அணிந்து) முகத்தை மறைப் பது கடமையா? அல்லது (ஹிஜாபைக் கடைபிடித்து) முகத்தை திறப்பது ஆகுமானதுதானா?
நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத் துக் கொண்டுள்ள வசனம் இறங்கிய காலம் முதல் இன்று வரை இது தொடர்பில் இரு கருத்துக்கள் இருந்து வருவதை எவராலும் மறுத்துவிடமுடி யாது. அதாவது, பெண்கள் முகம் உட் படமுழு உடலையும் அந்நிய ஆடவர் முன்னிலையில் மறைப்பது கடமை என்று ஒரு பிரிவினர் கருதுகின்றனர். பெண்கள் அந்நிய ஆடவர் முன்னி
உட்பட்ட வகையில், மணிக்கட்டு வரையில் கைகளையும் முகத்தையும் திறப்பது ஆகுமானது என்பது மற்றப் பிரிவினரது கருத்தாகும்.
இந்த முரண்பாட்டுக்கான அடிப் படைக் காரணம், பெண்கள் வெளிப் படுத்த ஆகுமாக்கப்பட்ட அழகை குறிப்பதற்காக இவ்வசனத்தில் இடம் பெற்றிருக்கும் டிம் $ெ1 எனும் பிரயோகமாகும். அதாவது பெண்க ளின் அழகில் தாமாக வெளியானதைத் தவிர என்பதற்கானவியாக்கியானத்தை மணிக்கட்டு வரையில் இரு கைகளும் முகமும் தவிர என ஒரு சாரார்விளக்கி உள்ளனர். பெண்கள்முழு உடலையும் மறைக்க வேண்டும் எனும் கருத்தைக் கொண்டுள்ளோர். இங்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் அணிந்திருக்கும் மேலாடையைக் குறிக்கும் அல்லதுதற்செயலாக காற்று போன்றவற்றினால் வெளிப்படும் அழகைக் குறிக்கும் என வியாக்கி

Page 7
யானம் செய்துள்ளனர்.
இவ்விரு பிரிவினரும் தங்கள்
ரிக்கம் பல முன்வைத்துள்ளனர். இது விடயமாக முன்வைக்கப்பட்டுள்ளஆதாரங்களை ஆராய்வது இங்கு எமது நோக்கமல்ல. ஏனெனில், இது விடயமாக பல ஆய் வுகளும் நூல்களும் வெளியிடப்பட் டிருக்கும்நிலையில் ஒரிரு பக்கங்களில் ஒரு தீர்வை முன்வைப்பது பொருத்த மற்றதெனக் கருதுகிறோம். இரு கருத் துக்களையும் மதித்து, மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்களின் கருத்தும் சரியானதாக இருக்கக் கூடும் எனும் அடிப்படையிலேயே இதனை அணுக விரும்புகின்றோம்.
இஸ்லாமிய விழுமியங்கள் மேலோங்கிய, பண்பாடுள்ள தூய சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக் கில் பெண்கள் முகத்தை மறைப்பது கடமை எனும் கருத்தைக் கொண் டுள்ள அறிஞர்களை நாம் பெரிதும் மதிக்கின்றோம். புனித அல்குர்ஆனும் ஸுன்னாவும் முழுமையாகப் பின்பற் றப்பட வேண்டும் என்பதுவே இவர் களது உயரிய நோக்கம் என்பதனால் இவர்களுடன் நாம் முரண்பட்டுக் கொள்வதில் எவ்வித நியாயமும் இல்லை. இதேவேளை பெண்கள் முகத்தை மறைப்பது கடமை எனும் கருத்தை சிலர்ஆயுதமாகவும் இன்னும் சிலர் கேடயமாகவும் பயன்படுத்தி குர்ஆன், ஸுன்னா மஜ்லிஸ்களை தடுப்பதிலும் பெண்கள் மத்ரஸாக்க ளுக்கெதிராக பிரசாரம் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானவர்களுடன் நாம் முரண்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஏனெனில், இவர்கள் குர் ஆன், ஸுன்னாவைத் தடுப்பதற்குகுர் ஆன், ஸுன்னாவையே ஆதாரமாக முன்வைக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளனர். இவர்களது உள் நோக்கம் என்ன என்பதனை அல்லாஹ் ஒருவனே அறிவான். பித்னாவை தடுப்பது இவர்களது நோக்கமாக இருந்தால் அதனை வரவேற்கின்றோம். ஆனால், இவர்கள் ஆரம்பிக்க வேண்டிய இடத் திலிருந்து ஆரம்பிக்கவில்லை என்பத னால் இவர்களுடன் நாம் முரண்படு கிறோம்.
குர்ஆன், ஸுன்னா மஜ்லிஸ்களும்
பெண்கள் அரபு ம னாவுக்குரிய இட கூறமாட்டார். இல் கள் பின்பற்றப்பட கின்ற அரசாங்கட் டியூஷன் சென்டர் இடங்கள் பித்னா ளாக இருக்கலாம். மிய விழுமியங்கை பண்புகளையும் ட மாற்று மத சகோத பணி புரியும் இ இவ்வாறான இட இளம் யுவதிகள் மி கவும் பக்குவமாக டிய தேவையும் அ தனால் பித்னாவை இவ்வாறான இடங் பிக்கப்பட வேண் இடங்களில் முகத் பற்றி பேசப்படn உள்ளது.
"பெண்கள்பித் என பல்லவிபாடுவ தடுத்துவிட முடி! பித்னாவைத் தடுப் பங்களிப்பு மிக மு இதனைப் பற்றியே கத்திற்காக எடுத் வசனங்களும் பேச முகத்திரை அணி பித்னாவுக்கு முற் விட முடியாது. பி தற்கு புனித அல்கு வும் முன்வைக்குட களையும் முழுை பதன் மூலமே பி புள்ளி வைக்க மு.
ஒழுக்க விழும கிய, தூய சமூக தேவையானபோ
 

அல்குர்ஆன் விளக்கம்
த்ரஸாக்களும் பித் ங்கள் என எவரும் ஸ்லாமிய விழுமியங் ாத, அவற்றை மறுக் பாடசாலைகள், கள் போன்ற பொது வுக்குரிய இடங்க காரணம், இஸ்லா }ளயும் அதன் உயர் புரிந்து கொள்ளாத தரர்கள் பரவலாகப் டங்களே இவை. ங்களுக்கு முஸ்லிம் கவும் பாதுகாப்பா வும் செல்ல வேண் வசியமும் இருப்ப த் தடுக்கும் முயற்சி பகளிலிருந்தே ஆரம் ாடும். இவ்வாறான திரையின் அவசியம் தது மர்மமாகவே
னாவுக்குரியவர்கள்" பதினால் பித்னாவை பாது. பெண்களின் பதற்கு ஆண்களின் மக்கியமானதாகும். பநாம் இங்கு விளக் துக் கொண்டுள்ள கின்றன. பெண்கள் வதனால் மாத்திரம் றுப்புள்ளி வைத்து த்னாவைத் தடுப்ப ர்ஆனும் ஸுன்னா b அனைத்துத் தீர்வு மயாக கடைபிடிப் த்னாவுக்கு முற்றுப் gluyth.
யங்கள் மேலோங் உருவாக்கத்திற்குத் தனைகள் ஸஇரதுந்
நூரில் முன்வைக்கப்பட்டுள்ளன. நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள இரு வசனங்களிலும் இதுபற்றியே தெளிவுபடுத்தப்பட்டுள் ளது. ஆண்கள் தமது பார்வையைத் தாழ்த்துவது பித்னாவைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
பொதுவாக உலகெங்கும் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் சிறுபான்மை யாக வாழும் இடங்களில் அனைத்துப் பெண்களும் ஹிஜாபை கடைபிடிப் பார்கள் என ஒருபோதும் எதிர்பார்க் கவே முடியாது. அப்படி எல்லாப் பெண்களும் ஹிஜாபைக் கடைபிடித் தாலும்கூட பித்னா முற்றுப்பெறப் போவதுமில்லை. உள்ளத்தைப் பக்கு வப்படுத்தி, பார்வையைத் தாழ்த்திக் கொள்ளாதவனுக்கு ஹிஜாப்அணிந்த பெண்கூட பித்னாவாக இருக்கக் கூடும். வீதியில் அரை நிர்வாணமாகச் செல்லும் பெண்ணின் பித்னாவை விட வீட்டில் மூடப்பட்ட அறைகளி னுள் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசிகளும் இணையதள வச திகளைக் கொண்டுள்ள கணினிகளும் மிக மோசமான விளைவுகளை சமூ கத்தில் ஏற்படுத்தலாம். பார்வையை கட்டவிழ்த்து விட்டவன் தனது கண் ணுக்கு எங்காவது விருந்தைத் தேடிய வண்ணமே இருப்பான். பெண்ணின் ஆடைகளால் போர்த்தப்பட்ட தொலைவிலுள்ள கழுதைகூட இவ் வாறான உளநோயாளிகளுக்கு பெண் ணாகவே தோற்றமளிக்க முடியும்.
மனிதனின் பால் உணர்வுகளைத் தூண்டுவதில்ஏனைய புலன்களைவிட வும் பார்வைக்கே பெரும் பங்குண்டு என்பதனால் முஃமினான ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லா ஹ"த்தஅலாகட் பிட்டுள்ளன்.
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா - ரஜப் $432

Page 8
அல்குர்ஆன் விளக்கம்
மனிதப் பார்வை இட்டுச்செல்லும் பாரதூரமான விளைவுகள் குறித்து எகிப்தியக் கவிஞர் ஷவ்கி தனது கவிதையில் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்:
"பார்வை, புன்னகை வந்தனம், பேச்சு நேரம் குறிப்பு, சந்திப்பு."
பார்வைகளைத் தாழ்த்தி, கற்பைப் பாதுகாக்குமாறு ஆண், பெண் இரு பாலாருக்கும் அல்லாஹ"த் தஆலா கட்டளையிட்டதன்பின்னரே பெண் கள் தங்களது அழகை மூடி மறைக்கு மாறு கட்டளையிட்டுள்ளான். பித்னா விலிருந்து மனிதன் தன்னைப் பாது காத்துக் கொள்ள இக்கட்டளைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற் றப்படுவது அவசியமாகும். இவற்றில் ஏதாவது ஒன்று புறக்கணிக்கப்படுமா யின் பித்னா தாண்டவமாடிக் கொண்டே இருக்கும். இக்கட்டளை கள் பின்பற்றப்படுவதைப் பொறுத்தோ அல்லது புறக்கணிக்கப்படுவதைப் பொறுத்தோ ஏற்படும் விளைவுகளை நாம் பின்வருமாறு வகைப்படுத்த (plgluylb:
1. ஆண்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்தும் நிலையில் பெண்கள் தமது அழகை மூடி மறைத்தல்.
2. ஆண்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்தும் நிலையில் பெண்கள் தமது அழகை வெளிப்படுத்துதல்.
3. ஆண்கள் தங்கள் பார்வையை தாழ்த்தாத நிலையில் பெண்கள் தமது அழகை மூடி மறைத்தல்.
4. ஆண்கள் தங்கள் பார்வையைத் தாழ்த்தாத நிலையில் பெண்கள் தமது அழகை வெளிப்படுத்துதல்.
இந்நான்கு வகைகளிலும் முதல் வகையை கடைபிடிக்கும் சமூகத்தில் பித்னாவை பூண்டோடு ஒழித்துவிட முடியும் இரண்டாம், மூன்றாம்நிலை காணப்படும்சமூகத்தாரிடையே பித்னா தாக்கம் செலுத்தும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். இதில் நான்காம் நிலை காணப்படும் சமூகத்தாரிடையே பித்னா தாண்ட வமாடி அனாச்சாரங்களும் சமூகச்சீர ழிவுகளும் தலைவிரித்தாடும் நிலை யைத்தான் கண்டுகொள்ள முடியும்.
பார்வை உள்ளத்தின் தூதுவன்
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரான ரஜப் 1432
என்பதனாலும் உ ளின்துதுவன் என் பேணிப் பாதுகா பெரும் பங்குண் நாம் பல ஹதீஸ்க முடியும்.
“ஆதமின் ம தின் குற்றத்தில் ஒரு விட்டது. சந்தேகமி &60DL6 met T. 8560 (தடுக்கப்பட்டுள்ளன காதுகளின் விபசார தைக்) கேட்பதாகுட (தடுக்கப்பட்டுள்ளன கையின் விபசார தைப்) பிடிப்பதாகுட (தடுக்கப்பட்டுள்ளன கும். இதயம் அ ஆசை கொள்கிறது. (விபசாரம் செய்து) அல்லது (விபசாரம் விடுகிறது."
அந்நியப் பெ ரசிப்பதை வழபை வர்கள் தங்கள் ெ டுத்துவதற்கு பல கூறுவார்கள். தற் திடீரெனப் பார் றெல்லாம் சமாளிச் அந்நியப் பெண் பார்வை பட்டு வ நடந்து கொள்ள ( யும் நபி (ஸல்லல் வஸல்லம்) அவர்
24O offeef, பயிலும் ஆயில் ஆங்கில மொ அலுவலக :ெ மேற்பார்வைய ஆகியோருக்க
 
 
 
 
 

ள்ளம் பாலுணர்வுக பதனாலும் கற்பைப் ப்பதில் பார்வைக்கு டு. இக்கருத்தினை ரில் கண்டுகொள்ள
கன் மீது விபசாரத் ந பங்கு எழுதப்பட்டு ன்றி அதை அவன் Tabafleft 6iuafrt plp தைப்) பார்ப்பதாகும். ம் (தடுக்கப்பட்டுள்ள ). நாவின் விபசாரம் தைப்) பேசுவதாகும். b (தடுக்கப்பட்டுள்ள ), காலின் விபசாரம் த நோக்கி)நடப்பதா தை விரும்புகிறது, அதை மறைவுறுப்பு உறுதிப்படுத்துகிறது செய்யாமல்) விட்டு
(முஸ்லிம்)
ண்களைப் பார்த்து Dயாக்கிக் கொண்ட சயலை நியாயப்ப ) காரணங்களைக் செயலாக அல்லது க்க நேர்ந்தது என் கமுயற்சிப்பார்கள். கள் மீது திடீரென
பிட்டால் எவ்வாறு.
வேண்டுமென்பதை லாஹ" அலைஹி கள் தெளிவுபடுத்தி
உள்ளார்கள்.
ஜரீர் (ரழியல்லாஹ" அன்ஹ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (அந்நி யப் பெண்கள் மீது) திடீரென பார்வை படுவது பற்றி நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டேன். “உமதுபார்வையைத்திருப் பிக்கொள்வீராக!" என்று பதில் கூறினார் கள். (முஸ்லிம்)
சகாக்கள் முன்னால் பார்வையைத் தாழ்த்தியும் தனிமையில் இருக்கும் போது தனது பார்வையை கட்டவிழ்த் தும் விடுகின்றவன் ஈமானின் ஒரு பகு தியை இழந்தவனாவான். மனிதர்கள் முன்னிலையில் வெட்கப்படுபவன் அல்லாஹ் முன்னிலையில் வெட்கப் படாவிடின் அது அவனது ஈமானின் குறைபாட்டையும் கோளாறையுமே குறிக்கும். ஏனெனில் "வெட்கம் ஈமா னின் ஒரு கிளையாகும்” என்பது நபி மொழி, ஈமானில் பூரணத்துவத்தை அடைந்த மனிதர்களே தனிமையாக இருக்கும்போதும் தங்கள் பார்வைக ளைத் தாழ்த்தி (பேணி)க் கொள்வார் கள். தொலைக்காட்சி, கணினி, கைய டக்கத் தொலைபேசி போன்ற சாதனங் களின் மூலமாக தடுக்கப்பட்ட காட்சி களைப் பார்த்து ரசிப்பவர்களின் கள் ளத்தனங்கள் எதுவும் அல்லாஹ்வுக் குத் தெரியாமலில்லை.
“கண்களின் கள்ளத்தனங்களை யும் நெஞ்சங்கள் மறைத்து வைத்தி ருப்பவற்றையும் அல்லாஹ் அறிகின் றான்." (40; 19)
ா ஸித்திக்கா கலாபிடம்
கள் விகுதிகளில் தங்கி கல்வி ழா சித்தீக்கா கலாபீடத்தில் ழி தெரிந்த பயிற்றப்பட்ட FuGoTGTi (Secretary) 6fcbg. ாளர் (40 வயதுக்கு மேல்) ான வெற்றிடம் உண்டு.
DI06.6606)
கவல்களுக்கு: 0773950087,0354923509

Page 9
அப்துல்லாஹற் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் டுரழியல்லாத அலைஹி வஸல்லம்) அவர்களிடம் மனிதர் ஒருவர் வந் பைஅத் (விசுவாசப்பிரமாணம்) செய்ய விரும்புகின்றேன் பெற்றுக் கொள்ளவும் விரும்புகின்றேன்" எனக் கூறின ஒருவராவது உயிரோடு இருக்கின்றார்களா?" என் இருக்கின்றார்கள்” என்று அவர் பதிலளித்தார். “அல்லாஹற் என மீண்டும் அண்ணலார் கேட்டார்கள். அதற்கவர் "ஆம்" அவர்களோடு உள்ள உறவை சிறந்த முறையில் பேணிவ வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள்.
9 அஷ்ஷெய்க் எச்.எம்.மி
இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் ஆகியோரது வேறோர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஜிஹாத் செய்வதற்கான அனுமதியைக் கோரினார். “உமது பெற்றோர் உயிருடன் இருக்கின்றார் களா?" என நபியவர்கள் கேட்டார்கள். அவர் "ஆம்" என பதிலளித்தார். "அவ்விருவரின் விவகாரத்தில் சிரத்தை எடுத்துக் கொள்வீராக” என அண்ணலார் பதிலளித் தார்கள்.
உலகம் ஒரு செயற்களம். அது மறுமையின் விளை நிலம். இங்கு மிகவும் பொருத்தமானவற்றையும் மிகச் சிறந்ததையும் விளைவித்தால்தான் மறுமை நாளில் மிகச் சிறந்ததை அறுவடை செய்ய முடியும். அல்லாஹ"த் தஆலா நீங்கள் விரும்பியவாறு செயலாற்றுங்கள் என்று கூறவில்லை. மிகவும் சிறந்ததை செய்யுங்கள் என்றே கூறுகின்றான்.
“உங்களில் மிகச்சிறந்த வகையில் செயல்படுபவர்யார் என்பதை சோதித்து அறிந்து கொள்வதற்காகவே அவன் (அல்லாஹ்) மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்." (ຄບ 9r அல்முல்க்: 02)
 

ஹு அன்ஹ) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்லல்லாஹ" து "ஹிஜ்ரத் மற்றும் ஜிஹாத் செய்வதற்காக உங்களிடம் இதற்கானநற்கூலியை அல்லாஹத்தஅபூலாவிடமிருந்து ாார். அப்போது நபியவர்கள், "உமது பெற்றோர்களில் று கேட்டார்கள். "ஆம்! அவ்விருவரும் உயிருடன் விடம் நற்கூலியைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றீரா?” என்றார். "அப்படியானால்நீர் உமது பெற்றோரிடம் சென்று ருவீராக” என ரஸலுல்லாஹி (ஸல்லல்லாஹ அலைஹி (ஸஹிஹல் புகாரி, ஸஹிஹர முஸ்லிம்)
) 0::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
களிப்பா?
ன்ஹாஜ்(இஸ்லாஹி) 9
ஒரு முஸ்லிம் தனது மனம் விரும்பும் அறச்செயலை செய்வதைவிட காலம் வேண்டிநிற்கின்றவற்றையும் மார்க் கம் முன்னுரிமை கொடுக்குமாறு கட்டளையிடுகின்ற நற் செயல்களையும் செய்வதே அல்லாஹ்விடத்தில் மிகவும் உயர்ந்த நற்கூலியைப் பெற்றுத்தர வல்லது. இதற்கான சிறந்ததொரு வழிகாட்டல் இந்த ஹதீஸில் முன்வைக்கப் படுகின்றது. தீனை நிலைநாட்டும் பணிக்கான வழிமுறை களில் 'ஹிஜ்ரத்” எனும் புலம்பெயர்வும் ஜிஹாத்' எனும் அறப்போராட்டமும் சிரேஷ்டமானவை. இவை உன்ன தமான நற்செயல்கள்; உயர்ந்த நற்கூலியை பெற்றுத்தரக் கூடிய இபாதத்துக்கள். அதாவது, ஹிஜ்ரத் செய்பவரும் அறப்போர் புரிபவரும் பாவமன்னிப்பையும் சுவனத் தாயகத்தையும் பெற்றுக் கொள்வதோடு "ஷஹாதத்' என் னும் பெரும்பாக்கியத்தையும் அடைந்து கொள்கின்றனர்.
“ஹிஜ்ரத் செய்து, தங்களது வீடுகளை விட்டும் வெளியேற்றப்பட்டு, எனது பாதையில் இம்சிக்கப்பட்டு, (எதிரிகளைக்)கொலை செய்து, (எதிரிக ளால்)கொல்லப் படுகின்றார்களே அவர்களது பாவங்களை அழித்து, சதா நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனப் பூஞ்சோலைக ளில் நான் அவர்களை நுழைவித்து விடுவேன். அல்லாஹ்
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432

Page 10
விடமிருந்து நற்கூலியாக இது கிடைக்கப் பெறும். அல் லாஹ்விடம் இருப்பது மிகவும் அழகிய நற்கூலியாகும்.” (ஸ9ரா ஆல இம்ரான்: 195)
இத்தகைய நற்கூலியை ஹிஜ்ரத், ஜிஹாத் மூலம் பெற்றக் கொள்ள அந்த நபித்தோழர் விரும்பினார். இது அவரது சுய விருப்பம். அதுவும் தீய செயலைச்செய்வதற் கான விருப்பமல்ல. ஏனெனில், விபசாரம் செய்வதற்கு நபிகளாரிடம் ஒரு நபித்தோழர் அனுமதி கேட்டு அவரை அண்ணலார் ஆறுதல்படுத்தி நல்வழி காட்டி பிரார்த் தனைபுரிந்த சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், இவர் உயர்ந்த தியாகங்களோடும் அர்ப்பணிப் புக்களோடும் தொடர்புடைய இபாதத்துக்களைச் செய்ய அனுமதி கோரினார். ஆனாலும் ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள், அவர் முன்னுரிமையின் அடிப்படையில் செயலாற்றிட வேண் டிய ஒரு அறச்செயலின்பால் வழிப்படுத்துகின்றார்கள்.
அவரைப் பொறுத்தமட்டில் பெற்றோருக்கு ஆற்றிட வேண்டிய கடமைகள் அவருக்கு இருக்கின்றன. வயது முதிர்ந்த பெற்றோரை விட்டு விட்டு ஹிஜ்ரத் செய்வதால் அல்லது அறப்போராட்டத்திற்காகச் செல்வதால் அவரது பெற்றோர் பரிதாபகரமான நிலைக்குள்ளாகி விடுவர். எனவே, அந்த நபித்தோழரின் நிர்க்கதியான நிலையை அனுசரித்து பெற்றோருக்கு பணிவிடை செய்வதை முதன் மைப்படுத்துமாறு கட்டளையிடுகிறார்கள். அறப்போ ராட்டத்தை விட பெற்றோருடன் உறவைப் பேணுவதை நபிகளார் வலியுறுத்தியமை ஜிஹாத் பர்ளுகிபாயா என்ற நிலையிலாகும். பர்ளு ஐன் என்ற நிலையில் பெற்றோரின் அனுமதி இன்றி போராட்டம் செய்ய வேண்டும் என்பது அல்குர்ஆனும் ஸுன்னாவும் முன்வைக்கின்ற கட்டளை யாகும்.
"பெற்றோர் உயிருடன் இருக்கின்றனரா?" என நபிய வர்கள் கேட்டதன் பின்னர் அவர் "ஆம்" என பதிலளித் தார். பின்னர் "அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளவிரும்புகின்றீரா?" என்று கேட்டபோது அதற்கும் அவர் "ஆம்" என்றார். இறுதியாக பெற்றோருடன் நல்லு றவைப் பேணுமாறு கூறினார்கள். இதிலிருந்து ஒரு பேருண்மையை விளங்கிக் கொள்கிறோம். அதாவது, தான் விரும்பிஏதாவதொரு நற்செயலை புரிவது அபரிமி தமானநற்கூலியைப் பெற்றுத்தரமுடியாது. மாறாக காலம் வேண்டிநிற்கின்ற மிகவும் பொருத்தமான செயலுக்கு அல்லாஹ்விடம் தனியானதொரு பெறுமானம் உண்டு என்பது புலனாகின்றது.
பொதுவாக அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட இபாதத்துகளும் அறச்செயல்களும் அதனை நிறைவேற்று கின்றவர்களுக்கு கிடைக்கவிருக்கின்ற நற்கூலிகளுடன் மட்டும் பிணைக்கப்பட்டவை அல்ல. சமூக நலன்களு டனும் அவை தொடர்புபடுகின்றன. உதாரணமாக, பர்ளானதர்மமாகிய ஸ்காத், ஸுன்னத்தானதர்மமாகிய ஸகாதுல் பித்ர், உழ்ஹிய்யா, அகீகா, வலிமா, கப்பாரா முதலானவை நற்கூலியைப் பெற்றுத்தரக் கூடியவை மட்டுமல்ல; அவை சமூகத்தின் பொருளாதார மேம் பாட்டுடன் தொடர்பானவை. வறுமை ஒழிப்பை
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432
 

பின்புலமாகக் கொண்டவை. இவற்றையும் கருத்திற் கொண்ட நிலையிலேயே அறச் செயல் புரியுமாறு அல்லாஹ்வும் அவனதுதுரதரும் கட்டளையிடுகிறார்கள்.
வெறும் ஆன்மிகக் களிப்பை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல இஸ்லாம் அறிமுகம் செய்யும் இபாதத் துக்கள். மனிதனது சுய விருப்பு மட்டும் இபாதத்தின் தரத்தைத் தீர்மானிக்க முடியாது. அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் விருப்புகளுக்குள் மனிதனது சுய விருப்பு கட்டுப்பட்டிருக்கின்றபோது நிறைவேற்றப்படும் இபாதத்துகளுக்கு மற்றும் நற்செயல்களுக்கு உயர் பெறுமானம் உண்டு.
சமூகத்தளத்தில் நற்செயல்களை அளவுக்கதிகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற செயலார்வம் அதிகரித்தி ருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனாலும், அவை காலம் வேண்டி நிற்கின்ற சமூகத் தேவைகளையும் சமூகக் கடமைகளையும் நிறைவுசெய்கின்ற வகையில் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே, அவை அப்ழலுல் அஃமால்' என்ற தரத்தை அடைய முடியாது. முஸ்லிம் தனிமனிதனின் அறிவுத்தரத்தையும் ஆன்மிக நிலையையும் அவன் வாழுகின்ற சமூகச்சூழலையும் கருத்திற் கொண்டு அல்லாஹ்வின்தூதர் அப்ழலுல் அஃமால்' என்ற மிகவும் சிறந்த நற்செயல்களை வகைப்படுத்தி அவற்றுள் சிலதை முதன்மைப்படுத்தி அதனை நிறைவேற்றுமாறு நபித் தோழர்களுக்கு கட்டளையிடுவார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹ அன்ஹ) அவர்கள் அறிவிக்கிறார்கள் "மிகவும் சிறந்த செயல் எது?” என்று ரஸ்சினுல்லாஹி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் நான் கேட்டேன்; “தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாகும்” என நபியவர்கள் கூறி னார்கள். "பிறகு எது?” என்று கேட்டேன். “பெற்றோருக்கு நற்பணிபுரிதல்” எனநபியவர்கள் கூறினார்கள். "பிறகு எது?” என்று கேட்டேன். “அல்லாஹற்வின் பாதையில் போராடுதல்” என ரஸலிலுல்லாஹி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(ஸஹிஹல் புகாரி, ஸஹிஹமுஸ்லிம்) முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய பர்ளுஜன் என்ற தனிநபர் கட்டாயக் கடமைகளின் எண்ணிக்கை வரை யறுக்கப்பட்டுள்ளது. ஆனால் பர்ளு கிபாயா என்னும் சமூகக் கடமைகள் எண்ணிலடங்காதவை. புதிது புதிதாக மனிதர்களின் தேவைகள் உருவாகும்போது அத்தகைய கடமைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதியளவு மனித வளங்களும் பெளதிக வளங்களும் பிரயோகிக்கப்படல் வேண்டும். போதியளவு வளங்கள் பிரயோகிக்கப்படாதபோது சமூகக் கடமைகள் கிடப்பில் கிடக்கும். அப்போது சமூகம் முழுவதும் பாவியாகும். சமூகக் கடமைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத பட்சத்தில் சமூகப் பிரச்சினைகள் அதிகரிக்கும். சமூகப் பிரச்சினைகள் சமூகத் தீமைகளைத் தோற்றுவிக்கும். ஈற்றில் அந்தச் சமூகம் அல்லாஹ்வின் அருட்பார்வையை விட்டும்தூரம் விலகிச் சென்று குற்றம் புரியும் சமூகமாக மாறிவிடும்.

Page 11
இவ்வகையில் சமூகக் கடமைகள் எத்துணை முக்கி யத்துவம் வாய்ந்தவை என்பது தெளிவாகின்றது. பல வருட காலமாக படுக்கையில் இருக்கின்ற, தீராத நோயி னால் அவதியுறுகின்ற நோயாளியின் முனகல் சப்தம் கேட்கிறது! இயந்திரமாய் சுழன்று வியர்வை முத்துக் களை கொட்டி உழைத்துவிட்டு திடீரென வந்து அரவ ணைத்துக் கொண்ட மாரடைப்பால் வீட்டுக்குள் முடங்கி விட்ட நோயாளியின் முகம் தெரிகிறது! இருதய அறுவை சிகிச்சைக்காக அல்லது சிறுநீரக மாற்றுச்சிகிச்சைக்காகக் காத்துக் கிடக்கின்ற ஒரு நோயாளியின் உயிரைக் காப் பாற்ற வாகனத்தைக் கூலிக்கு அமர்த்தி ஒலிபெருக்கி பூட்டி உரக்கத் தொனி கூட்டி தெருத்தெருவாய் பண வசூலிப் பில் ஈடுபடுகின்ற நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் அவல நிலை மனக் கண் முன் நிழலாடுகிறது.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மனிதர்களின் பரிதா பகரமான நிலை ஒரு புறம் தன் சொந்த வீட்டையே வங்கி என்னும் வட்டிக் கடையில் அடைமானமாக வைத்து விட்டு நடுத்தெருவுக்கு வந்து விட்ட குடும்பங் கள் மறுபுறம் சீதனம் என்னும் சமூகக் கொடுமைக்கு ஆட்பட்டு பணம் சேர்க்க வெளிநாட்டுப் பயணம் மேற் கொண்டு வாழ்விழந்து போன பெண்கள் எத்தனை பேர்! தனது சொந்த தொழில் முயற்சியை வளப்படுத்த மூலத னம் இன்றி கஷ்டப்பட்டு கடனாளியாகி இறுதியில் வங்கு ரோத்துக்காரராக மாறியவர்கள் எத்தனை பேர்! வறு மையின் கோரப்பிடியில் சிக்கி தனது கல்வி வாழ்க் கையை தொலைத்து விட்டு ஊதாரிகளாக அலைந்து திரிவோர் எத்தனை இவ்வாறு முஸ்லிம் சமுதாயத்தின் அவல நிலையை எழுதிக் கொண்டே போகலாம்!
கல்வித்துறையில் காணப்படும் வளப்பற்றாக்குறை. மருத்துவம் சுகாதாரத்துறைகளில் வேர் விட்டு வளர்ந்தி ருக்கும் குறைகள், பலவீனங்கள். இதனால் ஏற்பட்ட உயி ரிழப்புக்கள். பொருளாதாரத் துறையில் நாம் வகித்து வந்த முதல்தர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளத் தெரி யாமல் திணறித் திக்குமுக்காடுகின்ற வர்த்தகர்களின் பரிதாபம். இத்தியாதி பேரவலங்களை சமூகம் சுமந்து கொண்டு வாழ்கிறது. இந்த அவலங்களை முழுமையாக நீக்கி ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கான சமூகக் கடமைகள் குறித்த (பர்ளுகிபாயா) எவ்வித பிரக்ஞையும் இன்றி சுன்னத்தான ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறை வேற்றுவதற்கான ஆன்மிகப் பயண ஏற்பாடுகள் களை கட்டுகின்றன. இதற்கான விளம்பரங்களும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் முகவர் நிலையங்களினால் கச்சித மாக முன்னெடுக்கப்படுகின்றன. இவை அப்ழலுல் அஃமால்' என்ற பட்டியலில் இடம்பெறுமா? நிச்சயமாக இவை வெறும் ஆன்மிகக் களிப்பை மையப்படுத்திய இபாதத்துகள் மட்டுமே!
அல்லாஹ்வின் தூதர் ஒரு மனிதரின் சுய விருப்பத் திற்கும் அவரது ஆன்மிகக் களிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், காலம் வேண்டி நிற்கும் நற்செயலுக்கே அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸில் இருந்து புரிந்து கொள்கி றோம். ஆனால், இன்றைய முஸ்லிம்களோ தமது மார்க்க

ரீதியான உபரியான நற்செயல்கள் மூலம் ஆன்ம திருப் தியை மட்டும் இலக்காகக் கொள்கின்றனர். தங்களது சுன்னத்தான நற்செயல்களை விட சமூகக் கடமைகளை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற அறிவு இவர்களுக்கு இல்லை. இது ஒரு வகையான ஆன்மிக வறுமையே!
ஒருவர் மரணித்தால் அவருக்காக நிறைவேற்றப்படும் தர்மங்கள் கூட நற்கூலியை மட்டும் இலக்காகக் கொண்டு அமைந்து வருகின்றன. எனவே, அவை பாரம்பரியமான மரபுரீதியான தர்மமாக மாறி விடுகின்றன. அதாவது, குர் ஆன் ஷரீபை அல்லதுஸஅராயாஸினை அல்லது மன்ஸில் என்னும் துஆ தொகுப்பை பள்ளிவாசலுக்கு தர்மமாகக் கொடுத்துவிட்டு மனிதர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின் றனர். காலம் வேண்டிநிற்கின்ற சமூகத் தேவைகளை இத்தகைய தர்மங்கள் நிறைவு செய்வதில்லை.
எனவே, நாம் நிறைவேற்றுகின்ற நற்செயல்கள்
நற்கூலி, ஆன்மிகக் களிப்பு, ஆன்ம திருப்தி, சமூக நலன், சமூக மேம்பாடு என்பவற்றை மையப்படுத்தியாக அமைய வேண்டும். அதுவே மிகவும் சிறந்த அமலாகும்.
கருப்பொருள்:
"அறிவியல் உலகை முடியிருக்கும் அறியாமை இருள்”
பெண்களுக்கும் சிறியோருக்கும் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைவரையும் கலந்து பயன் பெறுமாறு அன்போரு அழைக்கின்றோம்.
அஷ்ஷெய்க் ஆர்.எம். சனூன் (நளிபI) O773585536
ஒருங்கிணைப்பு: கொழும்புப் பிராந்தியம்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி 7,தெமடகொடவீதி, கொழும்பு 09
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா. ரகுப் 1432

Page 12
தஃவா களம்
உஸ்தாத் ரவுத் ஹன்ஜில் அக்பர்,
மனைவி: "என்னங்க! ஒற்றையா ஒரு பார்ஸலை மட்டும் வாங்கியிருக்கிறீங்க. நூடில்ஸுக்கு கறி, புளி, மசாலா ஒன்டும் வாங்கலியா?”
கணவன். “இன்னிக்கு ஒங்க கையால கறி, புளி, மசாலான்னு எதுவும் போட்ற வானாம். எல்லாம் சேர்ந்ததா இப்போ ஒரே பார்ஸல்ல அடைச்சி விக்கிறாங்கல்ல. பார்ஸ்லைப் பிரிச்சு அப்படியே ஆக்கிடுங்க. எல்லாம் arfumuíh(6Lib."
இதைப் போன்றுதான் உப்பு, உறைப்பு, மசாலா அனைத்தையும் மேலதிகமாகப் போட்டு மார்க்கத்துக்கு சுவையூட்ட பலர் எத்தனிக்கிறார்கள்- அல்லாஹ் தேவை யான சுவைகள் அனைத்தையும் மார்க்கத்தினுள் அள வாக வைத்து ஒரே பொதியாகத் தந்திருக்கின்றபோது!
அனைத்துச் சுவைகளும் பொருத்தமான அளவில் சேர்க்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். ஆனால், அந்த சுவை சிலருக்குப் போதாமல் இருக்கிறது. இஸ்லாத்தை இஸ்லா மாக முன்வைத்தால் உப்புச் சப்பில்லை என்கிறார்கள். உப்புச்சப்பில்லாத உணவைருசித்து ரசித்து உட்கொள்ள முடியாதல்லவா? அதை நாவில் வைத்து சுவைக்க முடி யாது. கையில் வைத்து பிசைந்து பிசைந்து இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. சிலருக்கு இஸ்லாம் இஸ்லா மாக முன்வைக்கப்படும்போது அது பிசைந்து பிசைந்து இருப்பது போலத் தென்படுகிறது.
எனவே, மேலதிகமாக உப்பு, உறைப்பு மசாலா என்ப வற்றைச் சேர்த்தே அவர்கள் சாப்பிடுகிறார்கள். பிறருக் கும் சாப்பிடக் கொடுக்கிறார்கள்.
அது என்ன மேலதிக மசாலா?
சூடு பறக்கும் விவாதம். கொடூரமான விமர்சனம், அநாமதேய பிரசுரம், அவதூறுகள், அபாண்டங்கள் நிறைந்த பொய்ப் பிரசாரம், பல கருத்துக்களுக்கு இட முள்ள ஒரு மார்க்கப் பிரச்சினையில் ஒரு கருத்தை அளவு கடந்து போற்றி அதை மாத்திரமே சத்தியம் என்றும் ஏனைய கருத்துக்கள் அசத்தியம் என்றும் நிறுவ முயலும் தீவிரம், தனது கருத்தை பிறர் ஏற்கும்வரை தனது உயிரே போனாலும் விட்டுக் கொடுக்காத பிடிவாதம், பிறரை டெலிபோனிலும் நேரடியாகவும் வம்புக்கழைத்து அவர் களது உணர்ச்சிகளைக் கொதிப்படைய வைத்து அவர்கள்
அல்ஹஸனாத் ஜூன் 2011 ] m ஐ. அல்ஆகிரான ரஜப் 1432
 
 

FITGOTEEbi அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி Y A
உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் வார்த்தைகளை இரகசியமாக ஒலிப்பதிவு செய்து தங்களது சகாக்களுக்கு மத்தியில் அதனைப் பரிமாறி மகிழ்ச்சியுறும் கபடத்தனம், தங்களு டன் கருத்து முரண்படுபவர்கள் எங்காவது ஒரிடத்தில் எழுத்திலோ வார்த்தையிலோ சறுக்கும் இடங்களை உன்னிப்பாகத் தேடி அலையும் மோப்பம், நரகத்திற்கு அனுப்பப்பட வேண்டியவர்களின் பட்டியலை உயிர் பிரிவதற்கு முன்னால் தயாரித்து விடலாமா? முடியாமல் போகுமா? எனும் பதட்டம்.
இஸ்லாம் பரவிச் செல்லும் இடமெல்லாம் முந்திச் சென்று அதன் வருகையைத் தடுக்கும் ஷைத்தானிய வியூகம் பகிரங்கமாகவே அறிஞர்களையும் இமாம்களையும் இஸ்லாமிய இயக்கங்களையும் கீறிக் கிழிக்கும் விமர்சனம், அல்லாஹ்வின் இயற்கை மார்க்கத்தை மாசற்ற மனதோடு அமர்ந்து கற்கிறார்களேஅவர்களது உள்ளங்களில் சந்தேகங் களை ஏற்படுத்தி மனம் பேதலிக்க வைத்து இஸ்லாத்திலி ருந்து அவர்களைத்திசைதிருப்பமுயலும்குரூரம் வாழ்க்கை முழுவதையும் மறுசீரமைக்க விரும்பும் இஸ்லாத்தின் விசாலத்தன்மையை வணக்க வழிபாடுகள் சிலவற்றின் உட் பிரிவுகளுக்குள் இழுத்து வந்து முடக்கி ஒருபோதும் அவற் றிலிருந்து சமூகத்தை வெளியேற விடாமல் தடுத்து வைத் திருக்கும் அழுங்குப் பிடி, ஆயிரக்கணக்கான உயிர்கள் பலிகொள்ளப்படும் முஸ்லிம் உம்மத்தின் சர்வதேசஅவ லத்தையோ சீரிய தலைமையில்லாமல் சிதறுண்டு கிடக் கின்ற நம் தேசஅவலத்தையோ எதிர்கொள்ளும் காத்திர மான முயற்சிகள், திட்டங்கள் எதுவுமின்றி பிரிவையும் பிளவையும்தூபமிட்டு வளர்க்கும் அக்கிரமம், உடன்படு வதற்குநூற்றுக்கணக்கான அடிப்படை அம்சங்கள் இருக் கின்றபோது முரண்படுவதற்கென்றே கிளை அம்சங்க ளைத் தூக்கிப் பிடிக்கும் வக்கிரம், எதிரியையும் நண்ப னாக்கும் அன்பைத் தொலைத்து விட்டு நண்பனை எதிரி யாக்கும் குரோதம்.
இவற்றையெல்லாம் கலந்து இஸ்லாத்தையும் அவற் றோடு குழைத்துக் கொடுத்தால்தான் இஸ்லாம் உப்புப் புளியுடன் உறைப்பாக இருக்குமாம். இவை இல்லாமல் இஸ்லாம் முன்வைக்கப்பட்டால் அதில் உப்புச்சப்பில்லை யாம். பிசைந்து பிசைந்து இருக்க வேண்டியதுதானாம்.
இஸ்லாம் இஸ்லாமாக முன்வைக்கப்படும்போது இன்றைய சில அழைப்பாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தோடு அல்லாஹ் சேர்த்து வைத்துள்ள

Page 13
இவர்களுக்கு வணக்க வழிபாடுகளில் புகு அளவு மக்களுடன் உறவாருவதற்குத்தே நல்லொழுக்கங்கள் பற்றியோ எதுவும் தெ அன்பு அனுதாபம் கொண்ட நிலையில் இவ இதன் விளைவாக சமூகத்தின்ப
இயற்கையான பொருத்தமான பக்க விளைவுகளற்ற மனி தனது இயல்புக்குப் பொருந்துகின்ற சுவைகள் போதா தென்று மேற்கூறப்பட்ட மேலதிக மசாலாக்களையும் இஸ்லாத்தோடு கலந்து கொடுக்கின்றனர்.
ஒரு சமையலுக்கு அளவாகச் சேர்க்கப்படுகின்ற மசா லாக்கள்தான் அந்த சமையலை சுவையூட்டுகின்றன. அதிகமானவர்கள் இத்தகைய சமையலை விரும்பி உட்கொள்வார்கள். காரணம் அவர்களது நாவிலோ, உட லிலோ கோளாறுகள் இருப்பதில்லை. எனினும், சிலருக்கு அளவாக சுவையூட்டப்பட்ட உணவுகள் ருசிப்பதில்லை. காரணம் அவர்கள் இயல்பு நிலையில் இருப்பதில்லை. ஒன்றில் அவர்கள் போதையில் இருப்பார்கள், அல்லது காய்ச்சலில் இருப்பார்கள்; அல்லது நீரிழிவு நோயால் சுவை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்க ளுக்கு மேலதிகமாகச் சேர்த்தால்தான் சுவை தட்டும்.
இயல்புநிலை பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் இந் தக் கலவையை சுகதேகிகளுக்குக் கொடுத்தால் எப்படியி ருக்கும்? ஒன்றில் அவர்கள் அதனைச் சாப்பிடமாட்டார் கள். தவறியேனும் சாப்பிட்டால் அவர்களும் இயல்பு நிலை பாதிக்கப்படுவார்கள்.
இஸ்லாமும் இதுபோன்று மேலதிக மசாலாக்களின் கலவையோடு கொடுக்கப்படும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை இன்று தோன்றியிருக்கிறது. இந்த மேலதிக மசா லாக்களில் மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. இந்த மசாலாக்கள் அனைத்தும் ஷைத்தானியத் தயாரிப்புக்கள், இவற்றிக்கு உலகின் எந்த ஹலால் நிறுவனமும் ஹலால் சான்றிதழ் வழங்க மாட்டாது. இன்னும் சொன்னால் பன் றிக் கொழுப்பு அதன் இரத்தம், இறைச்சி போன்றவற்றின் ஹராமிய்யத்"ஐ விட இந்த ஷைத்தானியத் தயாரிப்புக ளின் ஹராம் தன்மை செறிவானது; கனதியானது. இத்த கைய ஹராம்களையெல்லாம் கலந்து தூய இஸ்லாத் தையும் அதன் சுவையையும் மாசுபடுத்தும் எம்மவர்களில் சிலர் வாய்கூசாமல் சொல்கிறார்கள். "நாங்கள்தான் குர் ஆன்சுன்னாவின் சொந்தக்காரார்கள். நாங்கள்தான் அவ் விரண்டையும் பின்பற்றுபவர்கள்; ஏனையோர் வழி கேடர்கள், நரகவாதிகள்” என்று.
ஏன் இஸ்லாத்தை முன்வைப்பதற்கு இப்படியொரு கீழ்த்தரமான வழியை இவர்கள் தெரிவு செய்ய வேண்டும்? இஸ்லாத்தின் அழகையும் அதன் ஆழ அகலத்தையும் அது தன்னகத்தே பொதிந்து வைத்துள்ள அற்புதமான அறிவுக்

தஃவா களம்
த்தப்பட்டுள்ள நூதனங்கள் பற்றித் தெரிந்த தவையான பண்பாடுகள் பற்றியோ நற்குண ரியாது. அதுமட்டுமல்ல, சமூகத்தின்மீது பர்களுக்குப்பிரசாரம் செய்யவும் தெரியாது. லத்த எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள்.
கருவூலங்களையும் மனித வாழ்க்கையை உள்ளத்திலும் உலகத்திலும் மேலோங்கச் செய்வதற்கு அது கற்றுத்தரும் அற்புதமான வழிகாட்டல்களையும் வாழ்வின் ஒவ்வொரு சிறிய, பெரிய விடயத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு அது தரும் இனிமையான உபதேசங்களையும் நுணுக்க மாகவும் தெளிவாகவும் வேறு கலவைகள், அசுத்தங்கள் பட்டு விடாமல் தூய்மையாக முன்வைக்க ஏன் இவர்க ளால் முடியாமல் இருக்கிறது?
காரணத்தை முன்னைய இதழ்களில் விளக்கியிருக்கி றேன்; அது ஒரு நோய். அந்த நோயோடு மற்றொரு பிரச் சினையும் இந்தக் கீழ்த்தரமான வழிமுறையை அவர்கள் தெரிவு செய்வதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இவர்கள் மார்க்கத்தை ஒரு சிறிய எல்லைக்குள் சுருக்கிக் கொள்கிறார்கள். தொழுகை, நோன்பு, ஹஜ், திருமணம், பிறப்பு, இறப்பு போன்றவற்றுடன் தொடர்பான நடை முறைகளில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் அவற்றின் நடைமுறைகளில் புகுந்துள்ள இஸ்லாத்துக்குப்புறம்பான நூதனங்கள் ஆகிய இரண்டு அம்சங்களுக்குள் இவர்கள் இஸ்லாத்தை இழுத்து வந்து சுருக்கி வைத்துள்ளார்கள். கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தை மாத்திரம் முன் வைக்கிறார்கள். அதில் மிதமிஞ்சிய தீவிரத்தைப் பிரயோ கிக்கிறார்கள். நூதனங்களை எதிர்க்கும் விடயங்களில் இறுதித்தீர்ப்பையே வழங்கிநூதனவாதிகளை நரகத்திற்கே அனுப்பி விடுகிறார்கள். இவர்கள் அழைப்பாளர்களாக செயல்படவில்லை. மாறாக நீதிபதிகளாகவே செயல்படு கிறார்கள். இவர்களது பணியை அழைப்பு' என்று கூறுவ தைவிட தீர்ப்பு என்று கூறுவதே பொருத்தமானது.
அதுமட்டுமன்றி தொழுகை நோன்பு, ஹஜ் திருமணம், பிறப்பு, இறப்பு போன்றவற்றின் நடைமுறைகளிலுள்ள கருத்து வேறுபாடுகளையும் அவற்றில் புகுந்துள்ளநூதனங் களையும் இவர்கள் வேறுபடுத்திக்கூடப் பார்ப்பதில்லை. கருத்து வேறுபாடுகளை சிலபோது இவர்கள் "பித்அத்" என்ற வட்டத்திற்குள் கொண்டுபோய் விடுகிறார்கள். ஒருவர் குத்பாப் பிரசங்கம் செய்கிறார். “ஒரு மனிதர் விபசாரத்தில் ஈடுபடுவதை விட குனூத் ஒதுவது பெரும் பாவமாகும்” என்று. இவ்வாறு இவர்களது பார்வையில் பட்ட சில கருத்து வேறுபாடுகளையும்நூதனங்களையும் மாத்திரம் தொகுத்தால் மொத்த இஸ்லாத்தில் அவற்றின் அளவு என்ன விகிதாசாரத்தில் இருக்கும்? 6600ற்கு மேற் பட்ட குர்ஆன் வசனங்களுக்கும் பல பத்தாயிரங்களுக்கு மேற்பட்ட நபிமொழிகளுக்கும் மத்தியில் இவர்கள்
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா - ரகுப் 1432

Page 14
தஃவா களம்
தேடித் தெரிந்து கொண்ட இஸ்லாம் அந்த அளவுதான்.
பரவாயில்லை, கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு எமக்கு இவ்வளவுதான் தெரியும் என்றாவது இவர்கள் நினைக்கிறார்களா? இல்லை. குர்ஆனும் ஸுன் னாவும் தங்களுக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும்; ஏனையோருக்கு பைபிளும் பகவத்கீதையும்தான் தெரியும் என்ற ரீதியில்தான் இவர்களது பிரசாரம் நடைபெறுகிறது.
இவர்களுக்கு வணக்க வழிபாடுகளில் புகுத்தப்பட் டுள்ள நூதனங்கள் பற்றித் தெரிந்த அளவு மக்களுடன் உறவாடுவதற்குத் தேவையான பண்பாடுகள் பற்றியோ நற்குணநல்லொழுக்கங்கள் பற்றியோ எதுவும் தெரியாது. அதுமட்டுமல்ல, சமூகத்தின் மீது அன்பு அனுதாபம் கொண்ட நிலையில் இவர்களுக்குப் பிரசாரம் செய்யவும் தெரியாது. இதன் விளைவாக சமூகத்தின் பலத்த எதிர்ப் புக்கு ஆளாகிறார்கள்.
இவர்களை எதிர்க்கும் மக்களிடமும் தயவு தாட்சண் யம் இருப்பதில்லை. காரணம், அவர்களும் இவர்களைப் போன்று மற்றோர் அறியாமையில் இருக்கிறார்கள். எனவே, இரு தரப்பினரும் ஒருவருக்கெதிராக மற்றவர் கடுமையான விமர்சனத்திலும் மோதலிலும் இறங்கி விடுகின்றனர். பாவங்கள் சங்கிலியாகத் தொடர்கின்றன. விளைவு என்ன தெரியுமா?
வணக்க வழிபாடுகளிலுள்ளநூதனங்களுக்குத் தீர்ப்பு வழங்கப் போனவர்கள் சமூகத்தில் உருவான எதிர்ப்புக் காரணமாக தமக்கென ஒரு வணக்க வழிபாட்டுத் தளத்தை அமைத்துக் கொண்டு ஒதுங்கிப் போகின்றனர். அத்தோடு இவர்களுக்கும் சமூகத்துக்குமிடையிலான உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. வணக்க வழிபாடுகள் மாத்திரமே இஸ்லாம் என்ற அவர் களது எண்ணம் இதனூடாக நிறைவேறுகிறது. உள்ளச்ச முள்ள வணக்க வழிபாடுகள், வாழ்க்கை முழுவதையும் சீராக்கும் வணக்க வழிபாடுகள், முஸ்லிம் சமூகத்தை ஒர் உம்மத்தாக ஒன்றிணைக்கும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் விட்டு விட்டு நூதனங்களற்ற வணக்க வழிபாடுகளை உருவாக்குவதோடு இவர்கள் தங்களது பணியை முடித்துக் கொள்கிறார்கள்.
இஸ்லாத்தின் எல்லையை இவ்வாறு ஒரு சிறிய வட் டத்துக்குள் கொண்டுவந்து தாமும் சமூகத்தை விட்டொ துங்கி அந்த வட்டத்துக்குள் இருக்கின்ற ஒரு சில தலைப் புகளை மாத்திரம் எவ்வளவு காலம்தான் திரும்பத்திரும்ப பேசிக் கொண்டிருக்க முடியும்? அவ்வாறு பேசும்போது ஏற்கனவே எதிர்த்த சமூகம்கூட இப்போது அந்தப் பேச் சுக்களைப் பொருட்படுத்துவதில்லை. தங்களது சடங்கு, சம்பிரதாயங்களைப் பாதுகாத்துக் கொண்டால் போதும் என அவர்களும் இவர்களை விட்டொதுங்கிக் கொள்கி றார்கள்.
இஸ்லாமியப் பணியின் அடைவு இவ்வளவுதானா? அல்லது இஸ்லாமியப் பணி துவங்கிய இடத்திலேயே இவ்வளவு அவசரமாக முடிவடைந்து விடுகிறதா?
அல்ஹஸனாத் ஜூன் 2011
2
ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432

இது இஸ்லாமியப் பணி செல்ல வேண்டிய சரியான திசையல்ல. இத்தகைய அடைவுகள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் வளர்ச்சியைத் தருவதுமல்ல. எனவே, இந்த அணுகுமுறையை மாற்ற வேண்டும் எனப் பலர் அறிவுரை கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்.
எனினும், அந்த அருளுரைகள் இவர்களை மாற்ற வில்லை. மாறாக, தங்களது அணுகுமுறையை இவர்கள் மேலும் மோசமாக்கிக் கொள்கிறார்கள். அணுகுமுறையை மாற்றுமாறு அறிவுரை கூறியவர்களையும் வழிகேடர்கள் என இழித்துரைக்கிறார்கள். தங்களது அணுகுமுறையை தவறான திசை நோக்கி இன்னும் வேகமாக முன்னெடுக் கிறார்கள்.
திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருக்கும் ஒரே மாதிரியான விடயங்கள் சமூகத்தின் கவனத்தை ஈர்க்க மாட்டாதல்லவா? எனவே, அந்தக் குறையை நிவர்த்தி செய்ய இவர்கள் புதிய போகவே சமூகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் தொடர்ந்து வைத்துக்கொள்வதற்காக புதிய விடயங்களைத் தேடலானார்கள். அந்தோ பாவம் புதிய விடயங்கள் இஸ்லாத்தில் எவ்வளவோ இருக்கின்றன. உளத்தூய்மை, பண்பாடுகள், நற்குணங்கள், முஸ்லிமல் லாதவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துக்கூறல், தலைமைத் துவத்தையும் கட்டுப்படும் சமூகமொன்றையும் உருவாக் குவதற்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுதல், பிளவு பட்டுத்தூரமாகி இருக்கின்ற சமூகத்தை நெருக்கமாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்தல். எனப் புதிய விடயங்கள் ஏராளம்!
இஸ்லாத்தின் பரந்த இந்த சமுத்திரத்தினுள் மூழ்கி முத்தெடுப்பதற்குப் பதிலாக அவர்கள் செய்த வேலை என்ன தெரியுமா? நான் ஏற்கனவே கூறியது போல தாம் முன்வைத்த கண்டுபிடித்த இஸ்லாம் தோதாதென அதற்கு மேலும் உறைப்பு, உப்பு, புளி, மசாலா என்பவற்றை சேர்த்ததுதான். இயல்புநிலை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எவராலும் உட்கொள்ள முடியாத ஒரு சமையலாக அவர்கள் இஸ்லாத்தை முன்வைக்கிறார்கள்.
நரக நெருப்பிலிருந்து மனிதனைக் காக்கும் வியாபா ரமல்லவா இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்கான உழைப்பு! அவ்வாறிருக்க, நரகத்திற்கு இட்டுச் செல்லும் வங்கு ரோத்து வியாபாரத்தை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்? நாளை இவர்களால் விமர்சிக்கப்பட்டவர்களும் மானம் பறிக்கப்பட்டவர்களும் மனம் புண்படுத்தப்பட்டவர்க ளும் இவர்களை வழிமறித்து அல்லாஹ்விடம் நீதி கேட் டால் இறுதித் தூதர் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல் லம்) அவர்கள் எச்சரித்த வங்குரோத்துநிலை தமக்கு ஏற் படலாம் என இவர்கள் அஞ்சவில்லையா?
அன்போடு உபதேசிக்கிறோம். இந்த அசிங்கமான அணுகுமுறையை விட்டு விடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்!

Page 15
D GUDstOsGQ
பாகிஸ்தான், முஸ்லிமீ உ
ஏ. அப்துல் மலிக்
முழு முஸ்லிம் உலகிலும் மிகப் பலமான சுதந்திர தனியார் ஊடகத் துறை பாகிஸ்தானில்தான் உள்ளது. முஷர்ரபை அரியணையிலிருந்து இறங் கவைத்த அனைத்துப் பெருமையும் பாகிஸ்தான் சுதந்திர ஊடகத்திற்கே உரியது. இங்கு உஸாமா பின் லாதின் விடயத்திலும் ஒரு தொலைக்காட் சியே மே மாதம் இரண்டாம் திகதி அதிகாலை அப்பொட்டபாதில் (Abbottabad) ஒர் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியிருப்பதை அறி வித்தது. இங்கு ஊடகம் உளவுத்து றையை பின்னுக்குத் தள்ளி விட்டது. இதன்பின்னரே அரசதரப்பு நடவடிக் கைக்குத் தயாராகியதாக பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் ஸல்மான் பவுர் கூறியிருந்தார்.
மே ஐந்தாம் திகதி தனது கெபி | Go GLITi' (Capital Talk) ginagpaignu7lait போது பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சியின் முக்கிய பத்தியா ளரான ஹாமித் மிர், இந்நிகழ்வு தொடர்பாக இவ்வாறு விவரித்தார்:
"அப்பொட்டபாத் சம்பவம் பற்றி அறியக் கிடைத்ததும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ் பாக் பர்வீஸ்கியானி 1.01க்குவிமானப் படைத் தளபதி ராஒ உமர் ஸ"லை மானைத் தொடர்பு கொண்டு பாகிஸ் தான் வான்பரப்பில் அந்நிய விமா னங்கள் தென்படுவதாகவும் உடனடி யாக அவற்றை சுட்டு வீழ்த்துமாறும் கட்டளையிட்டார். விமானப் படைத் தளபதியின் கட்டளையின் பிரகாரம் இராத் தாக்குதல் விமானங்கள் 1.02 இற்கு தமது பணிக்காக புறப்பட்டு 1.20இற்கு குறித்த வான்பரப்பை எட்டியபோது அமெரிக்க விமானங் கள் உஸாமா பின் லாதினின் உட லுடன் ஆப்கானிஸ்தான் சென்று
விட்டன. உத்தியே செய்தி மூலங்கள்
இருபது நிமிட பெரும் அனர்த்த கூறியிருந்தமை கு
அரச தரப்பு ( பாகிஸ்தானிலும் தாக்குதல் மூலம் விடுமோ? பாகிஸ் ஒரு பங்கினை பா என நதீர், நாஜி பே
கேள்விகளுக்கு கைகளில் இல்லை ஊடகங்களில் பல அணு ஆயுதங்கள்
வதற்கு ஜனாதிபதி uSai). The Sunday
பாகிஸ்தானின்
 

|க்குப் பின்
லகம் மற்றும் அல்காஇதா
பாகபூர்வ அறிக்கைகள் வெளிவர முன்னர் ஹமீத் மிர் தனது ஊடாக இச்செய்தியை வெளியிட்டிருந்தார்.”
உங்கள் முந்தியிருந்தால் அப்பொட்டபாத் வான்பரப்பில் மே அரங்கேறியிருக்கும் என வெளியுறவுச் செயலாளர் றிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு ஆபத்து?
சுமார் மூன்று தினங்களுக்கு மெளனம் சாதித்தமை முழு ஆச்சரியத்தைக் கிளப்பி விட்டிருந்தது. இதுபோன்ற ஒரு பாகிஸ்தானின் அணு வசதிகளுக்கும் அபாயம் வந்து தான் மக்கள் தமது வரவு-செலவுத் திட்டத்தில் மூன்றில் துகாப்பிற்காக செலவிட்டும் பாதுகாப்பற்ற சூழ்நிலையா? பான்ற மூத்த பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
க்காரணமுண்டு பாகிஸ்தானின் அணுவசதிகள் பாதுகாப்பான 0 என ஒபாமா நிருவாகத்தை ஆதாரம் காட்டி அமெரிக்க 2 தடவைகள் செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் உள்ள இடங்களுக்கு பரசூட் மூலம் துருப்புக்களை இறக்கு தி ஒபாமா கட்டளையிடவும் வாய்ப்புள்ளது என அண்மை xpress செய்தியும் வெளியிட்டுள்ளது.
rஅணு விவகாரத்தில் எந்த இரகசியத் திட்டமும் கிடையாது
அல்ஹஸனாத் ஜூன் 2011 -ས་───མ་མམ་ཁམས་ཡམས་ཡམས་ཡམས་ཡམས་ཡམས་་ ஜு. அல்ஆகிரா. ரஜப் 1432

Page 16
தேசம் கடந்து
என அமெரிக்கர்கள் பகிரங்கமாகக் கூறிவரும் அதிசயமும் உண்டு. தனது இரத்தத்தால் இது பற்றிய வாக்குறுதியை எழுதித்தரமுடியும் என அமெரிக்க வெளியுறவுகளுக்கான செனட் குழுத் தலைவர் ஜோன் கெரி அண்மையில் இஸ்லாமாபாத்தில் வைத்துக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஒர் உண்மையை மறந்துவிடக் கூடாது. தொண்ணுாறுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் பல நாடுகளாகப் பிரிவதற்கு முன்னரே பிரியப் போகும் சிறிய நாடுகளில் இருந்த அணுஆயுதங்களை இரகசியமாகத் தூக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அதன் பிரகாரம், அவற்றை வெற்றிகரமாக அமெரிக்கா தன் வசப்படுத்தியும் விட்டது. இதேபோன்ற ஓர் இரகசிய இராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களையும் களைய அமெரிக்காவிடம் நிச்சயம் திட்டங்கள் இருக்க வேண்டும் என பொதுவாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எமது அணு வசதிகளைப் பாதுகாக்கவும் அபாயங்க ளைத் தவிர்க்கவும் எம்மிடம் விஷேட கட்டளை, கட்டுப் பாட்டுத் திட்டம் உண்டு; வேறு எவரதும் அனுசரணை தேவையில்லை என திட்டவட்டமாக பாகிஸ்தானிய இராஜதந்திரிகள் பதில் கூறி வருகின்றனர்.
விரல்நுழையுமளவுக்கு இடத்தைக் கொடுத்தால் முழு உடலும்நுழையும் வழிகளைத் தோற்றுவிப்பது அமெரிக் காவின் பொதுவான கொள்கை. இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஜப்பானின் ஒகினாவாதீவை சிலகாலங் களுக்கு வைத்திருப்பதாக அமெரிக்கத்துருப்பினர் ஒப்பந் தம் செய்து கொண்டனர். ஆனால், அங்கிருந்து வெளி யேறவே இல்லை. 1972-2009க்கு இடையில் 5,634 குற்றச் செயல்கள் ஒகினாவில் அமெரிக்கத் துருப்பினரால் இழைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 127 பாலியல் வல்லுற வுகள், 25 கொலைகள், 2,827 திருட்டுச் சம்பவங்களை குறிப்பிட்டுக் கூறலாம்.
பாகிஸ்தான் விவகாரத்திலும், "அதன் இறைமையை மீறி பாகிஸ்தான் எல்லைக்குள் உள்நுழைய மாட்டோம். உங்களது ஒத்துழைப்புடனேயே பாகிஸ்தான் நிலப்பரப் பில் எத்தகைய நடவடிக்கையையும் எடுப்போம்” எனக் கூறிய அமெரிக்கா, கண்ணில் மண்ணைத் தூவி உள் நுழைந்து மே 2 தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
நடந்தது என்ன?
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் கொள்கை, இந்தி யாவின் கிழக்கு எல்லையின் பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆப்கானிஸ்தானின் மேற்கு எல்லைக்கு கொடுத்திருக்கவில்லை. மேற்கு எல்லையில் ராடர்கள் இயங்காத இடங்களூடாக அமெரிக்க உலங்கு வானூர்தி கள் பாகிஸ்தானின் உள்ளே வந்திருக்கலாம். ராடர்களுக்கு தென்படாத வகையில் அதிஉயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள் நுழைந்ததாக அமெரிக்கா கூறுவது பிழை என பாகிஸ்தான்நிபுணர்கள்கூறுகின்றனர். அல்லது ராடர்கள் வைக்கப்படாத மலை இடுக்குகள் வழியாக
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஜு. அல்ஆகிராம ரஜப் 1432

உலங்கு வானூர்திகள் நுழைந்திருக்க முடியும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
மே 2இல், ஆப்கான் எல்லையிலுள்ள சுவாத் பிரதே சத்தின் காலாடாக்கா எனும் வயல் பிரதேசத்தில் தாக்கு தல் நடவடிக்கைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே அமெரிக்க உலங்கு வானூர்திகள் தரையிறங்கி ஒளிந்தி ருந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் பின்னர் தெரிவித்தன.
சிலர் உஸாமா அப்பொட்டபாதில் இருந்ததாக இன் னுமே நம்புகிறார்களில்லை. ஏற்கனவே அவர் கொல்லப் பட்டதான தகவல்கள் 2001ற்குப் பின்னர் மூன்று தட வைகள் வெளியாகி இருந்தன. நான்காவது தடவையும் அவர் கொல்லப்பட்டுள்ளாரா? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவர்களது கருத்துப்படி, உஸாமா பின் லாதின், அவருக்கு இருந்த குடல் மற்றும் கொலஸ்ட் ரோல் நோய்களினால் பல வருடங்களுக்கு முன்னரே மர ணித்திருக்க வேண்டும்.
இரண்டாவது கருத்திற்கு ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாத் தலைமை வகிக்கிறார். அமெரிக்கா உஸாமாவை பல காலங்களாக கைதியாகப் பிடித்து வைத்திருந்தது. மே 2ஆம் திகதி அப்பொட்டபாத்திற்கு கொண்டு வந்து கொலை செய்தது.
மூன்றாவது நிலைப்பாட்டிற்கு முதன்மை ஆதாரமாக தற்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள உஸாமாவின் மனைவிமாரும் பிள்ளைகளும் சான்றாக உள்ளனர். மே 2ஆம் திகதி அப்பெட்டபாதில்தான் அவரை அமெரிக்க விஷேட படையினர் கொலை செய்தனர் என அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
குழப்பம்
இந்தக் குழப்பங்களுக்கு பிரதான காரணம், கொலை
செய்யப்பட்ட உஸாமாவின் புகைப்படம் என அமெ
ரிக்கா வெளியிட்டிருந்த, பழைய ஏற்கனவே தயாரிக்கப் பட்ட போலியான ஒரு புகைப்படமாகும்.
பேரழிவுதரும் ஆயுதங்கள் உண்டு எனப் பொய் சொல்லி புஷ் ஈராக்கைத் தாக்கியது போன்று ஒபாமாவும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒரு பொய்யை இட்டுக் கட்டியுள்ளார் என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
உஸாமாவின் உடல் கடலில் எறியப்பட்டதை ஷெய் குல் அஸ்ஹர் கலாநிதி அஹ்மத் தையிப் வன்மையாகக் கண்டித்துள்ளார். மரணித்தவர் எதிரியாயினும் புதைப் பதே மரணித்தவருக்குக் கொடுக்கும் மரியாதை என இஸ் லாம் தெரிவிப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் இலாபங்களுக்காக சடலங்கள் காணாமல் போவது நீண்டகாலமாக உலகில் இடம்பெற்று வருகிறது. ஜேர்மனியின்ஹிட்லர் இந்தியாவின் சுபாஷ் சந்திரபோஸ் 1967 டிஸம்பரில் விக்டோரியா கடலில் நீந்திக் கொண்டி ருந்தபோது மூழ்கிய அவுஸ்திரேலியப் பிரதமர் எட்வர்ட் ஹோல்ட் ஆகியோரின் உடல்கள் இதுவரை கிடைக்கவே இல்லை.

Page 17
முஸ்லிம் சமூகம் பெரும் பலவீனத்திற்கும் சதிக்கும் உட்பட்டுத் தவிக்கிறது எனக் கூறுவோர். எமது தலைவர் களின் மரணம் எப்படி, ஏன் நடந்தது எனத் தீர்க்கமாகக் கூற முடியாதுள்ளது என ஆதங்கப்படுகின்றனர்.
சஊதி அரேபியாவில் மன்னர் பைஸல் தனது மருமக னால் கொல்லப்பட்டார். இதன் சரியான பின்னணி தெளிவுக்கு வரவில்லை. விமான விபத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியாஉல் ஹக் மரணித்தார். யாளிர் அரபாத் தின் மறைவின் பின்னனியிலும் போதிய தெளிவுகள் வெளி வரவில்லை. பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவியும் முன்னாள் பிரதமருமான பெனாஸிர் பூட்டோவின் கொலைகூட இன்னும் பதிலில்லாமல் தொடர்கிறது.
இடம்பெறும் தகவல் இருட்டடிப்புகளின் பின்ன ணியில் யார் இருந்தார்கள் எனத் தெரியாமல் முஸ்லிம் உம்மத் இன்னும் தடுமாறுகிறது. இப்பலவீனம் நீங்க முஸ்லிம் உம்மத்தின் சுதந்திர ஊடகங்கள் மேற்கு ஊடகங் களின் தரத்திற்கு வேகமாக வளர வேண்டியுள்ளது.
விரிசல்
மே 2ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்று தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு பாகிஸ்தான் உளவு சேவை அமெ ரிக்கத்துருப்பினருடனான தொடர்புகளைத்துண்டித்தி ருந்தது. இதனால் ஆப்கானிஸ்தானுடனான 450 மைல் எல்லையை தனித்து அமெரிக்கப் படையினர் பாதுகாக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். பாக்-அமெ. உறவில் விரிசல் ஆரம்பித்துவிட்டதா? எனும் கேள்விகள் இப்போது எழத் தொடங்கியுள்ளன. உஸாமா பின் லாதினுக்கு எதிரான தாக்குதல் போன்ற ஒன்று பாகிஸ்தான் நிலப்பரப்பில் இனிமேலும் இடம்பெற்றால், தீவிரவாத எதிர்ப்புப் போரில்" அமெரிக்காவுக்கான ஒத்துழைப்புதுண்டிக்கப் படும் எனஇராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வீஸ் கியானி எச்சரித்திருந்தார். பாகிஸ்தானிலிருக்கும் அமெ ரிக்கத்துருப்பினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டு மெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 375 பேரில் இப்போது அங்கு 40 பேர் மாத்திரமே உள்ளனர்.
அமெரிக்க உளவுத் தாபனம் சீ.ஐ.ஏ.-பாகிஸ்தான் உளவுத்தாபனம் ஐ.எஸ்.ஐ இடையே விரிசல்கள் இருந்தே வந்துள்ளன. 2010 நவம்பரில் பாகிஸ்தானில் நியமிக்கப் பட்ட அமெரிக்க உளவுப் பணிப்பாளரின் பெயரை அம் பலப்படுத்தியதாக ஐ.எஸ்.ஐ மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதனை பாகிஸ்தான் மறுத்தது. 2008ம் ஆண்டு தொடக்கம் சுமார் 1700 தடவைகள் ஆளில்லா அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தான் கோத்திரப் பகுதி களில் தாக்குதலை நடத்தியுள்ளன. இவற்றை நிறுத்து மாறு பாகிஸ்தான் கோரி வருகிறது.
2011 ஜனவரியில் சீஐ.ஏ. ஒப்பந்தக்காரரான ரேமன்ட் டேவிஸ் லாஹூரில் இரண்டு பாகிஸ்தானிய இளைஞர் களை சுட்டுக் கொன்றார். இவருக்கு இராஜதந்திரவீஸா வழங்கப்படாததால் இராஜதந்திர விதிவிலக்கு அளிக்க முடியாது என நீதிமன்றம் கூறியது. அமெரிக்கர் இராஜ

தேசம் கடந்து
தந்திர விதிவிலக்கு கோர, அதனை எதிர்த்த வெளிநாட்டு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குறைஷி அமைச்சுப் பதவி யையே விடவேண்டி வந்தது. கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈட்டுப் பணமாக 20 கோடி ரூபா வழங்கப்பட்ட பின்னரே ரேமன்ட் டேவிஸ் விடு விக்கப்பட்டார்.
இப்போது உறவுகள் சரியாகி வருவது போன்று தோன் றினாலும் விரிசல்கள் மேலும் தொடரவே வாய்ப்புண்டு. வியட்னாமில்கண்டதோல்வியையே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கண்டு வருவதை மறுப்பதற்கில்லை. இத் தோல்விக்கான காரணத்தை பாகிஸ்தான்மீது போடஅமெ ரிக்காமுயற்சிப்பதால் மேலும் விரிசல்களே வளரும் ஆப் கானிஸ்தானில் நேட்டோ படையினரின் தோல்வி எம் மீது வரக்கூடாது என பாகிஸ்தான் தகவல்துறை அமைச் சர் பிர்தெளஸ் ஆஷிக் அவான் குறிப்பிட்டுள்ளார்.
அவசர உதவியாக சீனா ஜே.எப். 17 ரக சண்டை விமா னங்கள் ஐம்பதைத் தரவிருப்பதும்; சீனா மற்றும் ரஷ்யா வின் பக்கம் பாகிஸ்தான் நகர்வதும் புலப்படுகிறது. அமெரிக்க சார் நகர்வு எதிர்காலத்தில் மேலும் குறைய வாய்ப்புண்டு. இப்போது லிபியா, எகிப்து, சிரியா என அமெரிக்காவின் நலன்கள் திசைதிரும்பியுள்ளதையும் பாகிஸ்தான் அறியாமலில்லை. கதாபியின் இளம் எண் ணெய் வளங்களின் மீதும் அமெரிக்கா கண்வைத்திருக்க வாய்ப்புண்டு. எப்படியும் விரைவில் ஆப்கானிஸ்தானிலி ருந்து விலகும் எண்ணமே ஒபாமாவுக்கு உண்டு.
உஸாமாமறைந்தாலும்.
உஸாமா பின்லாதின் போன்றோரை அழித்தொழிப்ப தன்மூலம் அமெரிக்காவுக்கு எதிரான அதன் அடாவடித் தனங்களுக்கு எதிரான சிந்தனையைக் களைய முடியுமா? ஹ"ஸ்னி முபாரக் போன்ற சர்வதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, இஸ்ரேலுக்கு ஆயுத பண பலங் களை கொடுத்து, பலஸ்தீனர்கள் கொல்லப்படுவதற்கு அமெரிக்கா பக்க பலமாக செயற்படுகிறது என்றே முழு முஸ்லிம் உம்மாவும் இன்னும் நம்புகிறது. இந்த நம்பிக் கையை எப்படி ஒபாமா கொல்லப் போகிறார்?
உஸாமாவின் கதை வரலாறாக மாறிவிட்டாலும்கூட, இஸ்ரேல் பலஸ்தீனர்களை கொன்றொழித்து தனது இருப்பை எடுத்துக்கொண்டகாலம் முதல் அதற்கு அமெ ரிக்கா வழங்கி வரும் ஆதரவையும் பக்கசார்பையும் முஸ்லிம்கள் வெறுத்தே வருகின்றனர். ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கள், அமெரிக்காவினால் எமக்கு அபாயமே உண்டு என்ற உறுதியான நம்பிக்கை யின்பால் முஸ்லிம்களைத் தள்ளிவிட்டுள்ளன.
அமெரிக்க, இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்க ரிக்க வேண்டும் எனும் சிந்தனை இஸ்லாமிய உலகின் பல மட்டங்களிலும் நிலவுகிறது. இதுபோன்ற சிந்தனை நிச்சயம் உஸாமா போன்றவர்களிடமிருந்தே வந்தது. தொண்ணுாறுகளின் ஆரம்பத்திலேயே அமெரிக்க குடி பானங்களை அவர்நிறுத்திவிட்டதாக செப்டம்பர்11க்கு
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஜு. அல்ஆகிரா. ரஜப் 1432

Page 18
தேசம் கடந்து
முன்னர் இரண்டு தடவைகளும் பின்னர் ஒரு தடவையும் அவரைச் சந்தித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர்ஹாமித் மிர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் அதற்கு ஆதரவுதரும் ஆட்சியாளர் களுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் எனக் கங்கணம் கட்டியிருந்த உஸாமாவின் சிந்தனை கொண்ட குழு அரபுலகில் அஸ்ஸலபிய்யா அல்ஜிஹா திய்யா' என அழைக்கப்படுகிறது. இக்குழுவில் அதிகம் பேர் கதாபி, சதாம் ஹ"ஸைன் போன்றோரின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். மேற்குறிப்பிடப்பட்ட குழு வும் அல்காஇதாவும் ஒருமித்த சிந்தனை கொண்டவை. அரபு ஆட்சியாளர்களுக்கு எதிராக இப்போது இடம் பெறும் ஆயுதமற்ற அமைதி ஆர்ப்பாட்டங்களில் நிச்சயம் இவ்விரு குழுக்களுக்கும் பங்களிப்பு இருப்பதை அரபு புத்திஜீவிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆயுதம் இன்றியும் ஜிஹாத் செய்யமுடியும் என அநீதி ஒரவஞ்சனை, அடக்குமுறை என்வற்றுக்கு எதிரான போர் புதிய வடிவம் எடுத்துள்ளது. எகிப்து, டியுனிசியா, லிபியா மற்றும் சிரியாவில் இப்போது இடம்பெற்றுக் கொண்டி ருக்கும் அமைதிப்புரட்சிகள் உஸாமாவின் சிந்தனையைக் கொண்டுள்ள ஏனைய அமைப்புக்களினது போக்கிலும் ஏற்பட்டுள்ளமாறுதல் எனவும் கொஞ்சமாவதுகூறமுடியும்
அல்காஇதாவின் எதிர்காலம்?
அல்காஇதாவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கருத் துக்கள் வெளிவரஆரம்பித்துள்ளன. இதில் உண்மை உண்டு. உலகில் யூத, கிறிஸ்தவ ஏன், முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் இத்தகைய பிரிவினைகள் ஏற் பட்டே உள்ளன. அதற்கான முதற் காரணம் இரகசியம். மறைந்து மறைந்து செயற்பட்ட ஸ்பெய்னின் அல்மாறா னாவோ, இரகசிய யூதர்கள் போன்ற எத்தனையோ இயக் கங்கள் யூத மதத்தின் கடந்த நான்காயிரம் ஆண்டு வரலாற் றில் குறுகிய காலத்தினுள்ளேயே தமது இருப்பை இழந்துள்ளன.
இஹ்வானுஸ்ஸபா இஸ்லாமிய உலகில் ஒர் அறிவியல் இயக்கமாகவே தோன்றியது. ஆனால், அது பணியாற்றிய விதம் கண்களுக்குப் புலப்படாமலேயே இருந்து வந்தது. இறுதியில் விலாசமின்றி செயலற்றுப் போய் விட்டது.
ஒர் ஆயுத அமைப்புக்குள் எவ்வளவுதான் தூய்மையு டன் செயற்பட்டாலும் அத்தூய்மைக்கு குறுகிய ஆயுளே உண்டு. ஒருவர் காட்டிக் கொடுத்தாலும் போதும், யார் யாரைக் காட்டிக் கொடுப்பாரோ என்ற சந்தேகம் நிச்சயம் எழவே செய்யும்.
அல்காஇதா ஒரு போராட்ட இயக்கம் என்ற வகை யில் இப்போதுள்ள தொடர்பாடல் தொலைத்தொடர்பு சாதனங்களே அதன் இரகசியத்தை இலகுவாக வெளிக் கொணர்ந்து விடும். இப்படி ஒரு கட்டம் சந்தேகத்தை, பிளவை தோற்றுவிக்கச் செய்யும்.
அல்ஹஸனாத் ஜூன் 2011
6 - --- ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432

பெருமளவு நிதியுதவி இந்த இயக்கத்துக்குத் தேவை. சஊதி அரேபியாவைச்சேர்ந்த உஸாமாவுக்கு கிடைத்த இர கசிய நிதி உதவிகள் எகிப்து, ஆப்கானைச் சேர்ந்த தலை வர்களுக்கு கிடைப்பது சந்தேகம். இங்கு நிதி விவகாரத் திலேயே பிளவு தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அரபுலகில் தோன்றியுள்ள அமைதிப் போராட் டங்கள், ஆயுதமின்றியும் கோரிக்கைகளை வென்றெ டுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதால் அல்காஇதா வின் சிந்தனை கொண்டுள்ள பல பிராந்திய அமைப்புகள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து போகும் நிலைவரம் தோன்றியுள்ளது. இஸ்லாமிய உலகின் புகழ் பெற்ற எந்தக் கல்விமானும் இந்த இயக்கத்திற்குப் பின் னால் இல்லை. அமெரிக்காவை பகிரங்கமாக எதிர்த்துப் பேசுவோர்கூட அல்காஇதாவின் ஆயுத வழிமுறையை ஆதரிக்கவில்லை.
அல்இஹ்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற முஸ்லிம் உலகில் பாரிய செல்வாக்குள்ள இஸ் லாமிய இயக்கங்கள் எதுவுமே ஆயுதப் போராட்டத்தை முஸ்லிம் உலகினுள் ஆதரிக்கவே இல்லை. இச்சூழலில் அல்காஇதா போன்ற ஓர் அமைப்புக்கு பத்து வருடங் களுக்கு முன்னர் இருந்த பிரபலம் மற்றும் வரவேற்பு தொடர்வது நிச்சயமில்லை.
இருப்பினும், அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அத்துமீறல்களை எதிர்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அமைப்புதூண்டுதலாகவே இருக்கும் என்பதில் சந்தேக மில்லை என யாஸிர்ஸஆதிரா போன்ற பெரும் எழுத்தா ளர்கள் தெரிவித்துள்ளனர்.
"பயங்கரவாத எதிர்ப்புப் போர் அமெரிக்காவினால் திணிக்கப்பட்டது முதல் இன்று வரை கொலை செய்யப் பட்டவர்களில் முஸ்லிம் பொதுமக்கள் இலட்சக்கணக் கில் அடங்குவர். இதற்கு அமெரிக்கா என்ன பதில் கூறப் போகிறது? இப்போர் மூலம் தான் யார் என்பதையும் தனது நோக்கம் யாது என்பதையும் முஸ்லிம் உலகிற்கும் பொதுமக்களுக்கும் அமெரிக்காவே அம்பலப்படுத்தி யுள்ளது.
செப்டம்பர் 11க்கு முன்னர் திரைமறைவிலிருந்து அமெரிக்கா மேற்கொண்டு வந்த பெரும்பாலான பணிக ளும் நிலைப்பாடுகளும் இப்பொழுதுமுஸ்லிம்களின்கண் முன் வந்துள்ளன. அரபுலகில் இடம்பெறும் புரட்சிக ளின் விளைவுகளை அமெரிக்கா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தான் விரும்பியோரை ஆட்சிக்கு கொண்டு வந்து விடும்; புரட்சியாளர்கள் கவனமாக இருக்க வேண் டும் எனும் எச்சரிக்கை எல்லா அரபு புத்திஜீவிகளினதும் எழுத்துக்களில் தொனிக்கிறது. இஸ்ரேலைக் காப்பாற்று வதற்காக ஒரவஞ்சனை காட்டுவதும் அரபிகளின் எண்ணெய் போன்ற வளங்களில் ஏகபோக ஆதிக்கம் செலுத்த எண்ணுவதும் அமெரிக்கா பற்றிய வெறுப்பை
உச்சத்திற்கே கொண்டு வரும்.

Page 19
42 670/70D/7 UG6 (962D/1265a5 15/7
அமெரிக்காவுக்கும் அதன் நேச அணிகளுக்கும் பெரும் தலைவலியாக இருந்த உஸாமா பின்லாதின், பாகிஸ் தானில் பதுங்கியிருந்தபோது மே மாதம் 2ஆம் திகதி அமெரிக்க இராணு வத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
எனினும், அச்சம்பவம் தொடர்பில் அமெரிக்காவிடுத்த முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளும் ஏற்கனவே உஸாமா பற்றி வெளிவந்துள்ள தக வல்களும் மே 2ஆம் திகதிய சம்பவம் தொடர்பில் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன.
9 உஸாமா பின் லாதின் உயிருடன் பிடிக்கப்பட்டதன் பின்னர் அமெ ரிக்க இராணுவம் அவரைக் கொலை செய்தது. -சனல் 4, பிரித்தானிய தொலைக்காட்சி சேவை
9 பின் லாதினின் இடது கண்ணுக்கு மேலாக இராணுவத்தினர் துப் பாக்கிச் சூடு நடத்தினர்
- பிரித்தானிய ஊடகம்
9 பின் லாதினின் 12 வயது மகள் தனது தகப்பனார் கொலை செய் யப்படுவதை பார்த்துக் கொண்டி ருந்தாள். - பிரித்தானிய ஊடகம்
9 பின் லாதினிடம் ஆயுதம் எதுவும் இருக்கவில்லை - வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜே. கார்னி
இவை மேற்கு ஊடகங்கள் வெளி யிட்ட முன்னுக்குப் பின் முரணான செய்திகள்.
அடுத்த பிரதான சந்தேகம் உஸாமா கொல்லப்பட்டதற்கு ஆதாரமாக, சர்வதேச ஆங்கில ஊடகங்களில் வெளியான புகைப்படம்தான். அது வெளியாகும் வரை, பின் லாதின் மர ணச் செய்தியினை உள்வாங்கியிருந்த சர்வதேச சமூகம், அப் புகைப்படம் போலியானது என்பதைக் கண்டு கொண்டதும் உஸாமா கொலை குறித்த பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பத்துவங்கி யது. அவற்றுள் பின்வரும் கேள்விகள் முக்கியமானவை:
O
செப்டெம்ப ஈடுபட்டதாக பட்டிருந்த உ செய்து உடன லில் எறியவே ரணைக்காக
வைக்காதது ஏ
மிகப் பெருப் கருதப்படும் போது, தாக்கு ளுக்கு எதிர்த்த காயமகsட ஏ
மிகப் பெரும்: தப்படும் ஒருவ அவரின் குடு இரண்டு மூன் வேறு யாருமி
உஸாமா கொ பின் அது கு அமெரிக்க அ டப்படாதது
உஸாமாவின்( குண்டுகள்துை ஒரு புகைப்ப அது போலிய வந்ததும் பிரப கள் அப்பட வாபஸ் வாங்கி
60Tri 2-6vrt pri புகைப்படத்ை
யாது என ஒ ளார். ஏன் இற
இரவில் தாக் போன்று ஒரு துத் தொலைக் பிக்கப்பட்டது கட்டிடத்தின் (குண்டுகள் வெ நெருப்புப்பிள தெரிகிறது. ஆ குப் பின் கட்டி தியிலும் தா: னாலோ ஏற் காண முடியல்
தேடப்பட்டு தீவிரவாதிய

75/76O6D Loup/72
ர் 11 தாக்குதலில் க் குற்றம் சாட்டப் ஸாமாவை கொலை
Gl) 96.3FTLDfT&5 &5 ண்டியது ஏன்? விசா அவரைப் பிடித்து ரன்?
b தீவிரவாதியாகக் ஒருவரைத் தாக்கும் குதல் நடத்தியவர்க நாக்குதலில் ஒரு சிறு ற்படவில்லையா?
தீவிரவாதியாகக் கரு ரின் பாதுகாவலுக்கு ம்பத்தைச் சேர்ந்த iறு பேரைத் தவிர av6Opavu unr?
லை செய்யப்பட்ட றித்த ஆதாரங்கள் அரசினால் வெளியி ஏன்?
முகத்தில்துப்பாக்கிக் ளைத்துள்ளதுபோல் டம் வெளியானது. ானது எனத் தெரிய ல சர்வதேச ஊடகங் த்தை அவசரமாக க் கொண்டன. பின் கொல்லப்பட்ட தை வெளியிட முடி பாமா அறிவித்துள் ந்த முரண்பாடு?
குதல் நடத்தியது வீடியோ அனைத் காட்சிகளிலும் காண் . அந்த வீடியோவில் பல பகுதிகளிலும் படித்ததால் ஏற்படும்) ம்புகள் பற்றி எரிவது பூனால், தாக்குதலுக் டடத்தின் எந்தப் பகு க்குதலாலோ தீயி பட்ட சேதத்தைக் வில்லையே?
வரும் நம்பர் வன்
ான ஒருவர் ஐந்து
தேசம் கடந்து
ای வருடங்களுக்கும் மேலாக ஒரு முக்கிய நகரில் ஒரே இடத்தில் குடும்பத்தினரோடு தங்கியிருந்தி ருக்க வாய்ப்பு உண்டா?
O பின் லாதின் சுடப்படும்போது, நிராயுதபாணியாக இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இன்னொரு செய்தியோ ஒரு பெண்ணைக்கேட யமாக உஸாமா பயன்படுத்தியதால் அவரை உயிரோடு பிடிக்க முடியா மல் சுட நேர்ந்ததாகக் கூறுகிறது. நிராயுதபாணியாக பாதுகாப்புக்கு எவரும் இல்லாமல் இருந்த ஒரு வரை ஏன் உயிரோடு பிடிக்க முடியாது?
எனினும், மே 2ஆம் திகதிக்கு முன் னரே அவர் இறந்து விட்டார் எனத் தெரிவிக்கும் தகவல்களும் உள்ளன. குறிப்பாக, 2003இலேயே பின்லாதின் இறந்துவிட்டதாக பாகிஸ்தானின்முன் னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கூறியிருந்தார்.
ஆனால், இதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு உஸாமாவிடமிருந்து அவ்வப்போது வந்ததாகக் கூறப்பட்ட வீடியோக்கள் வலுச் சேர்த்தன. ஆனால், அவைய னைத்தும் சி.ஐ.ஏ.இனால் தயாரிக்கப் பட்ட போலி வீடியோக்கள் என்று நிரூபிக்கப்பட்டு விட்டன.
அப்படியென்றால் உஸாமா உயி ருடன் இருக்கிறார் என்று அர்த்தமா? இல்லை, அவர் உயிருடன் இருப் பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே தெரிகிறது.
(50ஆம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா. ரஜப் 1432

Page 20
University of
2011 Intak
IDM, your bestchoice
Recorded the a Best pass rate
Why (a) IDM Premier Camp
Experienced and qualified lecture panel.
High quality study pack.
Air conditioned lecture halls with multimedia proj
State of the art lab with high speed internet.
Free Wi-Fizone at the entire premises.
Extra Curricular activities.
Annual Trip, Sports Day & Year end party,
Free M2 Privilege Cord,
for registrations befo
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா- ரஜப் 1432
8
 
 
 
 
 
 
 

Colombo (External Degree)
2 m0uv On (d I(DýM
for sem 1 to sem 6.
gest intake for 2010. for Sernester 1 in 2010
2nts : A/L 3 Passes (in any stream) OR
FIT with O/L (5 Passes including 3'C's)
ଽ;
O777 795 334
rejuly 31st 2011 s
ಜ್ರ

Page 21
அஷ்ஷெய்க் பை பிரபலம் பெற
மஸ்ஹர் ஸகரிய்யா
“இருபதாம், இருபத்தேராம் நூற்றாண்டுகளுக் குப் பொருத்தமான சிந்தனைகளை விதைத்த இரு சிந்த னைச் சிற்பிகளை நாம் இழந்து விட்டோம். எம்முடன் இன்னும் ஒருவரே உயிர் வாழ்கிறார்” என்று அஷ்ஷெய்க் மாலிக் ஜதீதா, அஷ்ஷெய்க் பைஸல் மெளலவி அவர்க ளின் மரணத்தைத் தொடர்ந்து வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மர ணித்த அஷ்ஷெய்க் கஸ்ஸாலி (ரஹிமஹ"ல்லாஹ்) அவர்களை இந்த சிந்தனைக்கு அடித்தளமிட்டவராகக் காட்டும் மாலிக் ஜதீதா, அப்பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்பவர்களாக யூஸுப் அல்கர்ழாவி மற்றும் பைஸல் மெளலவி அவர்களை அறிமுகப் படுத்துகிறார்.
உண்மையில் லெபனானும் அங்குள்ள இஸ்லாமிய அமைப்புக்களும் ஏன், முழு முஸ்லிம் உலகும் ஒரு பெருந் தலைவரை கடந்த மாதம் இழந்த சோகத்தில் மூழ் கியுள்ளன. எழுபது வருடங்கள் உலகில் வாழ்ந்த பைஸல் மெளலவியின் சிந்தனைகள் ஏழு நூற்றாண்டுகளுக்கு நிலைக்கும் வல்லமை பெற்றவை என்பது அறிஞர் பெருமக்களது கருத்தாகும்.
வரலாற்றாய்வாளர்கள் ஜ"னுதுன் மஜ்ஹஇலூன் (அறியப்படாத படையணியினர்) என்றொரு குழுவினரை அறிமுகப்படுத்துகின்றனர். இவர்கள் வாழும்போதும் தம்மை பிரபல்யப்படுத்திக் கொள்ளாது வாழ்ந்தவர்கள். மரணித்த பின்னரும் அதிகம் பிரபலம் ஆகாதவர்கள். தமது பணிகளை அல்லாஹ் மட்டுமே அவதானிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வாழ்ந்தவர்களே இவர்கள்.
 

ஸல் மெளலவி (ரஹ்):
ாத ஓர் ஆளுமை
இந்த வகையில் பைஸல் மெளலவியின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது அதிகம் அறியப் படாத ஓர் அறிஞராக பைஸல் மெளலவி வாழ்ந்துள் ளார். அவரது பெயருடன் இணைக்கப்படும் 'மெளலவி" என்ற அடைமொழிகூட ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பது அவர் மரணித்த பின்னரே தெளிவாகியுள்ளது. லெபனானிலுள்ள ஆன்மிகவாதிகளான மெளலவியா தரீக்காவுடன் இணைந்திருந்தோரே இவ்வாறு அழைக் கப்படுகின்றனர்.
இன்று உலகில் இருக்கின்ற எண்ணற்ற இஸ்லாமிய அமைப்புக்களின் உருவாக்கத்திற்குப் பின்புலமாக இருந்தவர் பைஸல் மெளலவி. சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் தொடர்பான சிந்தனை பைஸல் மெளலவியின் உள்ளத்தில்தான் ஊற்றெடுத்தது என்பது அவரது மரணத்தின் பின்னர் தெளிவான ஓர் உண்மை. ஐரோப்பாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் எதிர்நோக்கு கின்ற பிரச்சினைகளை இனங்கண்ட பைஸல் மெளலவி, அவர்களுக்கு மார்க்கச் சட்டங்களைத் தெளிவுபடுத்திக் கொடுக்கவும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஐரோப்பாவில் ஒரு பிரத்தியேக மஜ்லிஸை அமைக்கத் திட்டமிட்டு அந்தப் பணியைத் திறம்பட செய்து முடித்தார். இவ்விரு அமைப்புகளதும் தலைவராக யூஸுப் அல்கர்ழாவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஐரோப்பாவில் எண்ணற்ற இஸ்லாமிய அறிஞர்கள் உருவாகி மிகச் சிறப்பாக ஐரோப்பிய சூழ லைப் புரிந்து கொண்டு செயற்படுவதனால் அங்கு இஸ் லாம் மிக வேகமாக அறிமுகமாகி வருகிறது. உண்மை யில் இன்றைய ஐரோப்பிய சூழலுக்கான இஸ்லாமிய சிந்தனைகளை வடிவமமைத்துக் கொடுத்த பெருமையும் பைஸல் மெளலவியையே சாரும். ஐரோப்பிய முஸ்லிம் மாணவர் ஒன்றியம், ஐரோப்பிய இஸ்லாமிய அமைப்புக் களின் ஒன்றியம், இஸ்லாமிய கற்கைநெறிகளுக்கான ஐரோப்பிய பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் ஸ்தாபகராக அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத் தக்க ஒரு விடயம். ஐரோப்பாவுக்கானதஃவாவின் அடிப் படைகளை அவரது 'அல்மபாஹிம் அல்அஸாஸிய்யா லித்தஃவா அல்இஸ்லாமிய்யா பீபிலாதில் கர்ப்" என்ற நூலில் விளக்குகிறார்.
1980 வரை லெபனானில் முழு மூச்சுடன் மார்க்கப் பணியில் ஈடுபட்ட அவர், லெபனானை ஒரு முன்மாதிரி இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். இவரது சிந்தனைகள் அதிகாரபீடத்தில் இருந்தவர்களை அச்சுறுத்தவே, 80 களில் நாடு கடந்து
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஐ. அல்ஆகிரா - ரஜப் 1432

Page 22
தேசம் கடந்து
ஐரோப்பியா செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. அவர் ஐரோப்பாவில் தங்கியிருந்த 5 வருடங் களிலேயே இப்பெரும் பணிகளை ஆற்றியுள்ளார்.
ஜமாஆ அல்இஸ்லாமிய்யா லெபனானில் 1964 முதல் இயங்கிவரும் ஓர் இஸ்லாமிய அரசியல் கட்சி. ஜமாஆஅல்இஸ்லாமிய்யாவின் நோக்குகளும் போக்குக ளும் மிகத் தெளிவானவை. லெபனானில் முன்மாதிரி யான ஓர் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்; இவ்வாட்சி லெபனானில் ஆரம்ப காலம் தொட்டு இருந்து வரும் கோத்திர வெறி, மத்ஹப் வெறி, வீஆஸ"ன்னி வேறுபாடுகள், முஸ்லிம்-கிறிஸ்தவர் பிரச்சினை போன்றவற்றைக் களைந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் செயற்படுகிறது. இந்த இஸ்லாமியக் கட்சியுடன் இணைந்து கொள்பவர்கள் தமக்குக் கிடைக் கும் பதவிகள், அந்தஸ்துக்களை தமது தலையில் சுமத்தப் பட்ட பெரும் பொறுப்புக்கள் என்று எண்ணி திறம்பட செயற்படுத்த முற்படுகின்றனர்.
1992 முதல் இக்கட்சியின் பொதுச் செயலாளராக பைஸல் மெளலவி இருந்து வந்துள்ளார். இக்கட்சிக்கான உறுதியான அடிப்படைகளைக் கட்டியெழுப்பிய மாபெ ரும் தலைவராக அவர் கருதப்படுகிறார் என்று தற்போ தைய பொதுச் செயலாளர் இப்றாஹீம் மிஸ்ரி தெரிவித் துள்ளார். 1970-1980 வரையான காலப்பகுதியில் கட்சிக்குள் ஏற்பட்ட சில அபிப்பிராய பேதங்கள் மற்றும் கட்சியை ஒழுங்குபடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக 1970, 1977ஆம் ஆண்டுகளில் இருமுறை உத்தியோகபூர் வமற்ற முறையில் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தொழிற்பட்டுள்ளார். இக்காலப்பகுதியில் இவர் செயலாளராக செயற்பட்ட விடயம் அவரது மரணத்தின் பின்னரே வெளியாகியுள்ளது.
ஒர் இஸ்லாமிய அரசியற் கட்சியின் செயலாளராக பல வருடங்கள் செயற்பட்ட போதிலும் அவர் நேரடி அரசியல் களத்தில் பிரவேசிக்கவில்லை. இஸ்லாமிய அரசியலுக்கான சிந்தனைகளை வடிவமைத்துக் கொடுத் தல், அதனை மேற்பார்வை செய்தல் என்பவற்றுடன் தனது அரசியல் வாழ்வை சுருக்கிக் கொண்டார். அரசி யல் தொடர்பான நேர்காணல்களை ஊடகங்களுக்கு வழங்குவதைக்கூட அவர் தவிர்ந்து கொண்டிருந்தார். மார்க்கமும் அரசியலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு விடயங்களல்ல. வரலாற்றில் எப்போது இவ்விரு துறைகளும் பிரிக்கப்பட்டனவோ அன்றே இஸ்லாத்தின் வீழ்ச்சி ஆரம்பமானது என்ற கருத்துடன் செயற்பட்ட வரே பைஸல் மெளலவி.
லெபனானில் தொன்று தொட்டு நிலவி வந்த கோத்திர வெறி, மத்ஹப் வெறி என்பவற்றை நீக்குவதற்கு பிரதான ஊடகமாக ஜமாஆ அல்இஸ்லாமியை அவர் பயன்படுத்தினார். அதனை ஒரு பொது இயக்கமாகக் காட்சிப்படுத்தி உறுப்பினர்களைப் பயிற்றுவித்தார். கோத்திர அடிப்படையில் எழும் ஆட்சிகளுக்கெதிராக அமைதியாக தனது கருத்துக்களை தெரிவித்தார்.
O அல்ஹஸனாத் ஜூன் 2011 2 ஜு, அல்ஆகிரா - ரஜப் 1432
 
 

1943இல் லெபனான் சுதந்திரம் பெற்றது முதல் 1985 வரையான காலத்திலேயே இங்கு கோத்திர வெறி தலைவிரித்தாடியது.
ஷிஆ-ஸுன்னி பிரச்சினை, முஸ்லிம்-கிறிஸ்தவ மோதல் என்பவற்றுக்கு அரசியல்ரீதியான தீர்வு காண முற்படாமல் சுமுகமான, அனைவரும் இணங்கிச் செல் லும் விதமான இருதரப்பு உறவுகளைக் கட்டியெழுப்பி வலுப்படுத்தினார். இருபது மற்றும் இருபத்து ஓராம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தை உலகின் சிந்தனையாக மாற்றுவதற்கு ஏற்ற பொருத்தமான சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்களில் இஸ்லாத் தின் நடுநிலைச் சிந்தனை, அபிப்பிராய பேதங்களுக்கு மத்தியில் உடன்படும் சிந்தனைகள், ஷரீஆவின் நோக்கங் கள் என்பவையே அதிகம் இடம்பெற்றிருந்தன.
இமாமவர்கள் நடுநிலைமைக் கோட்பாட்டை தனது தஃவாவின் அடிப்படையாகக் கருதி செயற்பட் டுள்ளார்கள், கலந்துரையாடல், பிறர் கருத்தை மதித்தல் போன்ற பண்புகளை தனது தஃவாவுக்கான வழிமுறையா கவும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஒரே நேரத்தில் அவர் பிக்ஹ் அறிஞராகவும் தாஇயாகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்துள்ளார். பலஸ்தீனுக்கான சர்வதேச நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான அடிப் படை சிந்தனையை முன்வைத்து அதனை உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.
இமாமவர்கள் 2008ஆம் ஆண்டு சைப்ரசில் நடைபெற்ற மதங்களுக்கிடையில் நல்லுறவு வளர்க்கும் மாநாட்டில் கலந்து கொண்டதே அவரது கடைசிப் பனியாக இருந்தது. இதன் பின்னர் நோய்வாய்ப்பட்ட அவர் 30 மாதங்கள் படுக்கையில் இருந்தார். மே எட்டாம் திகதி அஸர் நேரம் மரணமடைந்தார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இமாமவர்களது பணிகளில் உலகம் அறிந்தததை விட அறியாத பணிகளே ஏராளம் உள்ளன. இமாமவர் களின் பணிகளைப் பற்றி ஜமாஆவின் தற்போதைய பொதுச் செயலாளர் கூறுகின்ற செய்தி இது:
"நீங்கள் செய்துள்ள பணிகளை எங்களால் கணக் கிடவே முடியாது. எங்களால் கூற முடிந்ததெல்லாம் அபூபக்ர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் கூறிய வார்த்தைகளையே. தனது இரண்டரை வருட காலத்தில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டு மரணத்தை எதிர்நோக்கியபோது,உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் "அபூபக்ரே, உங்களுக்குப் பின்னால் வரும் ஆட்சியாளர்களுக்கு நீங்கள் அதிகம் கஷ்டம் கொடுத்து விட்டீர்கள்." (நீங்கள் விட்ட பணியைத் தொடர வேண்டுமல்லவா?) என்று கூறினார்கள். வ

Page 23
6D66) மறைந்
ஜமாஅத்தே இஸ் ஜமாஅத்தின் அகில இ 6.4.2011 அன்று இவ்வ இலைஹி ராஜிஊன்)
ஜமாஅத்தின் மத்தி குழுக் கூட்டத்தில் கல குறைவைத் தொடர்ந்து மூச்சுவரை இயக்கக் க
உத்திரப் பிரதேச எனும் கிராமத்தில் 01 தந்தையின் பெயர் ரஷ் பள்ளியில் ஆசிரியரா ஜமாஅத்தே இஸ்லாமி ஆகும்வரையில் ஆசிரி
காஜியாபாத் கிை மேற்கு உ.பி. மாநிலத் ஆலோசனைக் குழு ஜமாஅத்தின் பல்வேறு
உருது, ஹிந்தி, ! பெற்றிருந்த மெளலா இஸ்லாமிய இயக்கத்தி ஆற்றியுள்ள சேவைகள் முஸ்லிம் மஜ்லிஸே மு அவர் சேவையாற்றியு பேரவையிலும் அகில கல்விக் குழுவிலும் ஜ
மெளலானா ஷஃ ஹிந்த் அகில இந்தியத் இரங்கலைத் தெரிவித் மிகப் பெரிய வெற்ற இயக்கத்திற்கும் சமூக அவை விலை மதிப்ப
மெளலானா அவ இயக்கத் தோழர்களு அவருடைய நற்செய6 பேற்றையும் தந்தருள
 

телпт өogsыбil முனிஸ் தார்
லாமிஹிந்தின் மூத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவரும் ந்திய ஆலோசகருமான மெளலானா ஷஃபி முனிஸ் அவர்கள் புலகை விட்டுப் பிரிந்தார். (இன்னா லில்லாஹி வஇன்னா
நிய தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய பிரதிநிதிச்சபைக் ந்து கொண்டிருந்த அவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் து வபாத்தானர். அப்போது அவருக்கு வயது 93. தனது இறுதி டமையை ஆற்றிய பெருமகன் அவர்
மாநிலம், முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள குலேரி 1.05.1918ஆம் ஆண்டில் பிறந்தார் ஷஃபி முனிஸ், அவரது ஹ்மத் இலாஹி. தில்லியில் அஜ்மீரி கேட் உயர் நிலைப் கத் தம் பொது வாழ்வைத் தொடங்கிய அவர் 1944இல் ஹிந்தில் இணைந்தார். ஜமாஅத்தில் முழு நேர ஊழியராக யப் பணியைத் தொடர்ந்தார்.
ளத் தலைவர், பிறகு தில்லி கிளைத் தலைவர், தில்லி மற்றும் தலைவர் (பழைய ஆந்திரா), பொதுச் செயலாளர், மத்திய உறுப்பினர், மத்திய பிரதிநிதிச் சபை உறுப்பினர் என று நிலைகளில் பணியாற்றியுள்ளார்.
பாரசீகம், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை ானா அவர்கள், ஜமாஅத் உறுப்பினர்களில் மிக மூத்தவர். திற்கு மட்டுமன்றி, இந்தியாவுக்கும் சமுதாயத்திற்கும் அவர் T மகத்தானவை. இந்திய முஸ்லிம்களின் பொது அமைப்பான முஷாவரத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் |ள்ளார். FDCA எனப்படும் ஜனநாயக சமூக நல்லிணக்கப் ) இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியத்திலும் மார்க்கக் மாஅத்தின் பிரதிநிதியாகத் திறம்படச் செயலாற்றினார்.
பிே முனிஸ் அவர்களின் மறைவுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் மெளலானா ஸெய்யித் ஜலாலுத்தீன் உமரி ஆழ்ந்த துள்ளார். அதில் அவர், 'மெளலானாஅவர்களின் மறைவால் மிடம் ஏற்பட்டுள்ளது. அதை இட்டு நிரப்புவது கடினம். நத்திற்கும் அவர் ஆற்றியுள்ள சேவைகள் எண்ணிலடங்கா. ற்றவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Iர்களின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் க்கும் இறைவன் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக! ஸ்களை இறைவன் ஏற்று, அவருக்கு மன்னிப்பையும் மறுமைப் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி சமரசம்
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஐ. அல்ஆகிரா - ரஜப் 1432

Page 24
0 டாக்டர் மரீனா
குர்ஆன், ஹதீஸ் மஜ்லிசுகளில் கலந்து கொள்ளும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ!
1. திருமணம் முடிக்காத பெண்கள்தம் தாய்தந்தையரி டமும் திருமணம் முடித்த பெண்கள் தம் கணவன்மாரி டமும் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி யான வகுப்புக்களுக்குச் செல்ல கணவனின் அனுமதி தேவையில்லை என இமாம்கள் கருத்துத் தெரிவித்திருந் தாலும் இன்றைய கால சூழ்நிலையில் இதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
2. போகும் நோக்கம் அல்லாஹ்வுக்காக என்றிருக்க வேண்டும். "செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே" எனும் ஹதீஸை நினைவிலிறுத்தி நாம் செல் லும் இப்பயணத்தை ஓர் இபாதாவாகக் கருதி அத்தகைய மனப்பாங்குடன் செல்ல வேண்டும். அங்கு சென்று பாடங் களைப் படிப்பதுடன் வேறு நன்மைகளையும் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. உதாரணமாக, நண்பிகளை சந்திப்பது, ஏதும் பொருட்கள், புத்தகங்கள் வாங்குவது. விற்பது என்பவற்றையும் செய்து கொள்ளலாம்.
3. இப்படியான மஜ்லிஸுகளுக்குப் போகு முன் பல் துலக்கி வுழுச்செய்து சுத்தமாகச் செல்ல வேண்டும். வாய் துர்நாற்றம் மற்றும் வியர்த்திருக்கும் நிலையில் அங்கு செல்வது மற்றவர்களுக்குத் தொந்தரவாக அமையும்.
4. இயன்ற வரை வுழுச் செய்து காலுறை அணிந்து செல்வோமாக இருந்தால் அவ்வப்போதைய தொழுகை நேரம் வரும்போது தொழுது கொள்ள முடியும்.
குர்ஆன், ஹதீஸ் முக்கியத்துவமும் அ
(கடந்த இதழ் தொடர்)
அல்ஹஸனாத் ஜூன் 2011
22 ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432
 
 

தாவறா ரிபாய் 0
5. குறிப்பிட்ட நேரத்திற்கு வகுப்புக்களுக்கு சமுக மளிக்க பழக வேண்டும். தாமதமாக வருவதன் மூலம் பாடத்தின் சில பகுதிகளை இழப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதனால் அவர்களும் பாடத்தின் பகுதிகளை இழக்கிறார்கள். மட்டுமன்றி, முன்சென்ற விடயங்கள் பற்றி விளங்காமல் கேள்விகள் கேட்பதனால் மற்றவர்களுடைய பாடத்திற்கு இடையூ றாகவும் அமைகிறோம்.
6. வகுப்பில் அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பி அவர் களின் இடத்தில் அமர்வதை நபியவர்கள் தடுத்திருக்கி றார்கள். சபையைக் குழப்பிக் கொண்டு நடுவே நடந்து முன் வரிசைகளில் போய் அமர்வதற்கு முயற்சி செய்யக் கூடாது. முன் வந்தவர்கள் இடைவெளி விடாமல் முன் வரிசைகளில் அமர்ந்து கொள்வதன் மூலம் பின்னால் வருபவர்கள் வகுப்பை குழப்பாமல் தடுக்கலாம்.
7.வகுப்பிற்கு வரும்போது பேச்சாளரைப் பார்த்து ஸலாம் சொல்வதையோ, வகுப்பின் நடுவில் இருப்பவர்க ளுக்கு ஸலாம் சொல்வதையோ தவிர்க்க வேண்டும். ஒரு வர் ஸலாம் சொன்னால் பதில் ஸலாம் வார்த்தைகளால் சொல்வது வாஜிபு. எனவே, நிகழ்ச்சி நடத்துபவர் பேச்சை நடுவில் நிறுத்தி பதில் ஸலாம் சொல்ல வேண்டிய கட் டாயத்துக்குள்ளாகிறார். இதனால் அவருடைய பேச்சுத் தொடர் அறுந்து போவது மட்டுமன்றி, கேட்டுக் கொண் டிருப்பவர்களினது கவனமும் கலைகிறது. "கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒருவர் தனக்கருகில் இருக்கும் ஒரு வருக்கு ஸலாம் சொல்வது கூட்டத்திலுள்ள எல்லோருக் கும் ஸலாம் கூறுவது போலாகும். அவர் அதற்குப்
D8666)056fdo குன் ஒழுங்குகளும்

Page 25
பதிலளித்தால் முழுக் கூட்டமும் பதில் சொல்வது போலாகும்” என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
8. வகுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதைக் கவன மாக அவதானித்து அங்குள்ள ஒழுங்குகளைப் பேண வேண்டும். சிலர் இடையிடையே கேள்விகள் கேட்க அனுமதிப்பர். சிலர் சொற்பொழிவு முடிந்த பின் மட்டுமே கேள்வி கேட்க அனுமதிப்பர். சிலர் அல்குர்ஆனின் வச னங்களை பார்வையிடும்படி, தேடிக் கண்டுபிடிக்கும் படி அல்லது ஒதும்படி கேட்டுக் கொள்வார்கள். அப்படி பான வகுப்புக்களுக்குப் போகும்போது சொந்தக் குர் ஆன் பிரதியை எடுத்துக் கொள்வது சிறந்தது. கொப்பி, பேனா ஆகியவற்றையும் கொண்டு செல்வதன் மூலம் மற்றவர்களுக்குத் தொந்தரவளிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். இது ஒரு சாதாரண வகுப்பல்ல. அல்லாஹ்வின் தீனைக் கற்கும் இடம் எனும் மரியாதை எப்போதும் எம் மனதில் இருக்க வேண்டும்.
9. இப்படியான வகுப்புக்களில் கற்றுக் கொள்வதை எழுதி வைப்பது மிகச் சிறந்தது. சிலர் இவற்றை ஒலிப் பதிவு செய்து கொள்வார்கள்; பிறகு கேட்டுக் கொள்ள லாம் என்று. வகுப்பிலும் பராமுகமாயிருப்பார்கள். பிறகு கேட்டுக் கொள்ளவும் மாட்டார்கள். தொன்று தொட்ட காலம் முதல் ஸஹாபாக்களிடையேயும் எழுதிவைக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளதால்தான் இன்னும் நாம் ஹதீஸ்களைப் படித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
வெறுமனே கேட்டுக் கொண்டிருக்கும்போது நம் பார்வை, கேள்வி எனும் இரு புலன்கள்தான் வேலை செய்கின்றன. எழுதும்போது ஸ்பரிசம் என்னும் எழுத் துப் புலனும் நம் ஆறாம் அறிவாகிய உணர்வும் திறம்பட வேலை செய்கின்றன. எவ்வளவுக்கு எவ்வளவு நம் புலன் கள் இச்சந்தர்ப்பத்தில் ஈடுபடுகின்றனவோ அவ்வளவுக்கு அவை நம் மனதில் ஆழப் பதியும். அது மட்டுமல்ல, மறந்துவிட்ட விடயமாக இருப்பினும் எழுதி வைத்திருந் தால் மீட்டிக் கொள்வதும் இலகு. மற்றும் அவ்விட யத்தை மற்றோருக்கு எடுத்துச்செல்லும்போதுகுறிப்பிட்ட குர்ஆன் வசனம், ஹதீஸ் ஆதாரம் அல்லது பேச்சாளர் கூறியமுக்கிய விடய வரிகை கூறிய உதாரணங்கள் யாவற் றையும் நாம் குறிப்பிட்டுக் கூற முடியும். அவ்வாறே ஒரு தலைப்பின் கீழ் பலர் பேசும் விடயங்களையும் குறித்துக் கொள்ளலாம்.
பண்டைய காலத்து இமாம்கள் அவர்களது ஆசிரியர் கள் கூறிய விடயங்களை ஒரு சொல் விடாமல் எழுதிக் கொள்வார்கள். அவர்கள் மற்றோருக்குப் படிப்பிக்கும் போது அதே செயலைச் செய்து காட்டுவார்கள்.
10. கூட்டங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல் லாம் தெரியாதவற்றை, விளங்காதவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். “மதீனாப் பெண்கள் மிகச் சிறந்தவர்கள். ஏனெனில், அவர்கள் கேள்வி கேட்க
 

வெட்கப்படவும் மாட்டார்கள். அச்சப்படவும் மாட் டார்கள்” என நபி (ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்க, நாம் அவர்களது முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டாமா? பேச்சாளரிடம் நேரடியாகக் கேட்க முடியா விட்டால் எழுதிக் கேட்கலாம். அதுவும் முடியாதவிடத்து சபையிலிருக்கும் மற்ற அறிஞர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். “தெரியாதவற்றைத் தெரிந்த வரிடையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்" என அல் லாஹ"த் தஆலா அல்குர்ஆனிலே கூறவில்லையா?
11. ஒரு பேச்சாளர் கூறிவிட்டார். அவர் பிரபல்யமா னவர்; கற்றவர் என்றிருப்பினும் தீன் சம்பந்தப்பட்ட விடயங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அவரிடமோ அல்லது நாமறிந்த மற்ற உலமாக்களிடமோ கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். உலோகாயத விடயங்களாக இருந்தால் தெளிவாக, விரிவாக, சரியாக எல்லா விடயங்களையும் தெரிந்து கொள்ள முனைகிறோம். தீன் சம்பந்தப்பட்ட விடயங் களை மட்டும் ஏதோ எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுகிறோம். இது சரிதானா?
12. கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கடந்த 20வது வருடங்களாக நான் எந்த பயான் நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பின்வருவன போன்ற கேள்விகள் வந்தே தீரும்.
01) வுழுவில்லாமல் குர்ஆனைத் தொடலாமா? 02) அத்தஹரிய்யாத்தில் விரலாட்ட வேண்டுமா? 03) மையித்தின் கையைத் தக்பீரில் வைக்க வேண்டுமா? 04) பெண்கள் மஹ்ரமின்றி ஹஜ்ஜுக்குப் போகலாமா? 05) காது குத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளதா? 06) பெண்கள் முகம் மூடுவது அவசியமா? 07) ஆண்கள் தொழுகைக்குத் தொப்பி போடுவது
அவசியமா? 09) இத்தாவிலிருக்கும் பெண்கள் கண்ணாடி பார்க்க
GOTL DIT?
10) பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குப் போகலாமா?
இந்தக் கேள்விகளை எத்தனை ஆயிரம் முறை எத்தனை ஆயிரம் பேச்சாளர்களிடம் கேட்டிருப்போம்? பேச்சின் தலைப்புக்கள் எதுவாகத்தான் இருந்தாலும் இந்தக் கேள்விகளே திரும்பத் திரும்ப வரும். இந்த விட யங்களுக்குள்ளேயே நம் சமுதாயம் சுற்றிக் கொண்டி ருக்கிறது. இவை யாவும் கருத்து வேறுபாடுகள் உள்ள விடயங்கள். அவற்றை ஒரு முறை கேட்டோம். கருத்து வேறுபாடுகளில் எனது நிலைப்பாடு என்ன என்பதை தீர் மானித்துக் கொண்டு அடுத்த உயர்கட்டத்து அறிவுக்குப் போக முயற்சிக்க வேண்டும்.
பேசப்பட்ட தலைப்பின் கீழ் உண்மையாகவே ஒரு சந்தேகம் இருந்தால் அல்லது அதனை நாம் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம்; அதில் ஏற்படப்
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஐ. அல்ஆகிரா. ரஜப் 1432

Page 26
போகிற பிரச்சினைகள், தடங்கல்கள் என்ன என்ற சிந்தனைப் போக்குடன் கேள்விகள் கேட்க வேண்டும்.
13. பேச்சு நடக்கும்போது அனாவசியமாக அருகிலிருப் பவர்களுடன் கதைக்கக் கூடாது. இது மலக்குகள் அமர்ந் திருக்கும் மஜ்லிஸ் என்பது நினைவிலிருக்க வேண்டும். அவ்வாறு கதைப்பது பேச்சாளருக்கு அவமரியாதை செய்வது மட்டுமல்ல; மற்றவர்களின் கவனத்தையும் கலைக்கக் கூடும்.
14. நிகழ்ச்சியின் இடையே எழுந்துபோக நேர்ந்தால் முடிந்தவரை பேச்சாளரையோ கூட்டத்தையோ இடைஞ்சலூட்டாத வகையில் மெல்ல எழுந்து செல்ல வேண்டும். அப்படிப் போக வேண்டும் என்று முன்கூட் டியே தெரிந்தால் இலகுவில் சலனம் ஏற்படுத்தாத முறையில் எழுந்து செல்லக் கூடியதாக ஒரத்தில் அமர வேண்டும். அவ்வாறே குழந்தைகளுடன் வந்தாலும் அவர்கள் இடையில் அழுதால் இலகுவில் எழுந்து செல்லக் கூடிய இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கும்போது நட்டநடுவில் எழுந்து செல்வது -மிக அவசியமாக இருந்தாலன்றிஅவரை அவமரியாதை செய்வது போலிருக்கக் கூடும். எனவே, இயன்றவரை இடைவேளை, கேள்வி நேரம் இப்படியான நேரத்தில் அல்லது வரும்போது எப்படி அருகில் இருப்பவருக்கு ஸலாம் சொன்னோமோ அப்ப டியே போகும்போதும் ஒருவருக்கு ஸலாம் சொன்னால் அது முழு சபையினருக்கும் ஸலாம் சொன்னதைப்
100% !!!!!!!!!!!!!!မှိ 懿 56x6i, ii.5). 6L6B PRATTICA பயிற்சி அடங்கிய பாடநெறி
COURSES
Diploma in Refrigeration 8 Air Condit
குளிர்சாதனப் பேட்டி, கடும் குளிரூட்டி (Deepfreze
in
&
o > மென்மைக் குளிரூட்டி (oேttle 0ே08r) 3- ܣ > is assigg Water Cooler) 0: > asffy,1äá Window AVc, spilite Alc w
> Package Plant AJC, Centraf Piant A/C, Rs.1,750.
Auto AJC (Basic Knowledge)
Electrical Power
House Wising is tists Electrical Appliances - is a luagoasissil gigi gap iron box, Blender, Washing Machine, O Single Phase, Three phase Wiring System Re:Winding கொயில் கறிறுதல்
Diploma in usap
TV, Radio Repairing
Fre || Partne VON - THUSA OR SUN 10:00-03:00 10:00 - 1:00 22 WEES 2 NSNTS
ஜு. அல்ஆகிரா - ரஜப்
O71-424, 1873 No:1, Perera Lane, Welawate, (1-75675
அல்ஹஸனாத் ஜூன் 2011
1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போன்றாகும். (கவனிக்க: மரணவீட்டிலும் அப்படியே; தனித் தனி ஸலாம் அவசியமில்லை)
15. ஒவ்வொரு குர்ஆன் மஜ்லிஸும் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தை, முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும். அல்லாஹ"த் தஅபூலாவுடன் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு வகுப்பின் பின்னரும் இன்று நான் என்ன கற்றுக் கொண்டேன் என சிந்தித்து மனதில் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். 16. கேட்டவற்றை மறு கூட்டத்திற்கு முன் ஒரு முறையாவது மீட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த பாடம் எதுவாக இருக்கும் என்று தெரிந்தால் அதனையும் படித்துக் கொண்டு செல்வதன் மூலம் வகுப் பும் ஒரு மீட்டலாக அமையும். விளங்காத விடயங்க ளைத் தெளிவுபடுத்த இலகுவாக இருக்கும்.
கூட்டங்கள், வைபவங்கள், விருந்துகள், பயான்கள் எங்கு சென்றாலும் இப்படி நடந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய சட்ட திட்டங்கள் என்ன என்பதைத் தெளி வாகத் தெரிந்து கொண்டு செயல் முறையிலும் செவ் வனே அமுல்படுத்த வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் இஸ்லாமிய அறிவைப் பெறுவதில் இப்படியாக 100% கவனம் செலுத்தினால், இன்ஷாஅல்லாஹ் எதிர்காலம் சிறப்புமிக்க ஒரு சமுதாய மாக அமையும் என்பதில் ஐயமில்லை.
புதிய பிரிவுகள் ஆரம்பம் கொழும்ப கண்டி கிருகோணமலை 1 அக் 4
ಆಕಷ್ರಕ್ಷ್ಶಣ
பல ஆக்கwக்கானhone திருத்துக்களை உருவிக்கிய பிரபலுச்
இலங்கை மூ
:శాూ − ※ Sexftwares Kotas தவறுகளை கண்டுபிடிக்கTroubleshooting ஒழுங்கு முறைகள் spe
藩
க lcRibbonspares மாற்றுதல் ! ஒட்டுதல் போன்ற பயிற்சி (Albrand) em Phonesaxixi psp (sacra), RibbonSide Touch. Etc. um Hotgun í Multumeter í Power supply / U Scieaner. e. KI:Ræti - 慧 ببینی: مهر::: 攀
is. Hardware sassi
Forum pwei, Ångsergsråd (Jumper System) LLLLGLLGGLLLLLLLS LLLLLLLLtLLLLLLL LLLLLLLLS LLLLLL JAF, SE Tool, NS Pro, infinity, Pin Finder, Spiderman, MX-Key.Etc.
lttStC kT LLCCeeTkeTLM S0Sz0S0tTLtS0TT LaLLLLLLLS LLLLL eeeLtLLLLttLLL TTeeLL LLLekLL0 YLLkOe AeektS0 kkkLLTeeL ttttmLmktkekekeekSkeTSOe LLeStS TketttStttStttLLmLL
OMBO e
30
No:80, jurtinia Masjid M.W 22
No. 34.A.J.Medical 器 No. 245, Court Road,
SK ဒွိI|| 0x::Eglis၅ollege ၊ ဒွိ’ | 鲨 No:11, Perera Lane, No.732, Masjid Road, 8 || 29 Coornbo-6 ž5 || Sebenawiyathis. 30
27 S., Coiege Graer Way rcnote_2
29 30
Man SERGE, Akkarapath, 14 , Penyamutia. Trinconale
23 O714241 873 4RAYS HOLINE ö723402243

Page 27
அது “அந்தள இது “இந்தளவு
rešLOT சித்தீக்
சதாரன தரத்தைவிட சற்றுப் பெரியதும் மாநக ரத்தைவிட சற்றுச் சிறியதுமான நகரம் அது. பல வங்கி களினதும் கிளைகள் உள்ள ஒரு நகரம்.
அது ஒரு புதன்கிழமை.
சனக்கூட்டம் அந்த அரச வங்கியிலே குறைவாக இருந்தது. அழகான ஒரு இளம் பெண் சர்வ அலங்காரங் களுடனும் ஒரு நடமாடும் நகைமாளிகையாய் வந்தி ருந்தாள்.
கழற்றி எடுத்தால் அவள் அணிந்திருந்த நகைகளே சாதாரண அளவுள்ள ஒரு பொதியாகி விடும்.
விலையுயர்ந்த சல்வார். பொருத்தமான கைப்பை. ஒரு கையில் தரமான விலையுயர்ந்த கைத் தொலை பேசி. வெய்யிலுக்கு அணியும் கறுப்புக் கண்ணாடியை மிக ஸ்டைலாக தனது ஸ்காபுக்கு மேலால் தலையில் அணிந்திருந்தாள்.
கைப்பையைத் திறந்து தனது சேமிப்புக் கணக்குப் புத்தகத்தை எடுத்தவள் அடையாள அட்டை- பணம் மீளம் பெறும் படிவம் என்பவற்றோடு திரு திருவென்று விழித்தவளாய் ஓர் இளைஞனிடம் சென்றாள்.
கையிலிருந்த சேமிப்புப்புத்தகம் அடையான அட்டை, படிவம் ஆகியவற்றை அவனிடம் கொடுத்து நிரப்பச் செய்தாள். அந்த இளைஞன் பெரும்பான்மை இனத்து இளைஞன்.
அவனுக்கு நன்றி கூறியவளாய் பணத்தை மீளப் பெற் றாள். மிக எடுப்பாக கைப்பை ஸிப்பைத் திறந்து பணத்தை இட்டாள்; பெருமிதத்தோடு வெளியேறினாள்.
அவள் மீளப் பெற்ற பணம் நூற்று ஐம்பது ஆயிரங்கள்.
ஆம், ஒன்றரை இலட்சம் ரூபாய்!
இச்சம்பவம் கதையோ கற்பனையோ அல்ல. முற்றிலும் உண்மை.
சாதாரண படிவத்தை நிரப்ப முடியாத அளவு அறிவு LDL"-L-LDn 2
வங்கிப் படிவத்தில் என்ன ஆய்வுக் கட்டுரையா எழுத வேண்டியிருக்கிறது?
இலங்கையில் நடைமுறையில் உள்ள தமிழ்,
 

வு தெரியும்; ம் தெரியாதா?
ஆங்கிலம், சிங்களம் எந்த மொழியிலும் நிரப்பலாம் தானே? முன் பின் தெரியாத யாரோ ஒருவரிடம் முக்கி யமான ஆவணங்களை முன் யோசனை இல்லாமல் கையளிப்பது எவ்வளவு ஆபத்தானது இது ஆபத்தை நாமே தேடி வாங்கிக் கொள்ளலாமா?
பார்த்தால் அத்தனை வசதிகளோடும் வளத்தோடும் இருக்கும் அந்த இளம் பெண் நினைத்தால் மாதம் ஒரு சிறு தொகையைக் கொடுத்து வீட்டிற்கே ஒரு ஆசிரி யரை வரவழைத்து சிறிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவாயினும் எழுத வாசிக்கக் கற்றுக் கொள்வது இன்றைய காலகட்டத்தில் பெரிய பிரச்சினை இல்லை பல்லவா?
அல்லது உரிய படிவங்களை முன்கூட்டியே வீட்டிற்கு எடுத்துச் சென்று அங்கு யாரிடமாவது கூறி நிரப்பி வந்திருக்கலாமல்லவா?
சிந்தியுங்கள்.
புதிது புதிதாய் வரும் அலங்காரங்களிலே அக்கறை செலுத்தும் நாம்.
அவற்றை அடுக்கடுக்காய் வாங்கிக் குவித்துத் திருப்திப்படும் நாம்.
அவற்றிலேயே பெருமையும் பெருமிதமும் அடை யும் நாம்.
அறிவைப் பெற்றுக் கொள்வதில் ஏன் அக்கறை காட்டுவதில்லை?
இச்சம்பவத்தில் நாம் கண்ட இளம் பெண் ஏதோ ஒரு சில காரணங்களால் இளமையில் எழுத, வாசிக்கக் கற்றுக் கொள்ளமுடியாமல் போயிருக்கலாம். அதற்காக காலம் பூராகவும் அப்படியே இருந்துவிட வேண்டுமா
என்ன?
இளமைப் பருவத்தில் அனுபவிக்க முடியாமற் போன எத்தனையோ விடயங்களை வசதிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும்போது அனுபவிக்க நாம் ஆர்வம் காட்டுவதில்லையா? இவற்றை அடைந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே உழைக்கவில்லையா? இந்த ஆர்வத்தை, இளமையில் விடுபட்டுப்போன அடிப் படைக் கல்வியைக் கற்க நாம் காட்டக் கூடாதா?
சிந்திப்போமா?
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432

Page 28
அல்ஹஸனாத், எங்கள் தேசம் இதழ்களுக்காக எழுதப்பட்ட முப்பது கட்டுரைகளை உள்ளடக்கி தூவானம் வெளிவந்திருக்கிறது. இது "பீனிக்ஸ் பறவை கள்' எனும் அற்புதமான நாவலின் மூலம் இஸ்லாமிய எழுத்துலகில் சிறகடித்துப் பறக்கும் சகோதரி டிொறாவின் இரண்டாவதுநூல்.
ஒரு பெண் படைப்பாளியின் முயற்சியில் வெளி வரும் தூவானம் இஸ்லாமிய பெண்களின் குரலாகவும் ஓங்கி ஒலித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
பெண்களின் நலவுரிமைக்காக உழைப்பவர்கள், உழைக்க இருப்பவர்களுக்கு புத்தூக்கமளிக்கும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
நூலின் முதலாவது கட்டுரை மையப்புள்ளி. அது ஒரு தொடக்கப்புள்ளியைச் சுமந்திருக்கிறது. சமூக மாற்றம் சாத்தியப்பட வேண்டுமானால் பெண்களும் காத்திரமான பங்களிப்பைச் செய்ய வேண்டும்; அதற்கு
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா ரஜப் 1432
 

மலர்தூவ வேண்டும்
ஜெம்ஸித்அஸிஸ்
ஆண்கள்துணை நிற்க வேண்டும் என்பதுதான் அது. பலவீனத்தை இயல்பாகப் பெற்றிருக்கும் பெண்களின் இதயக் கதவைத் தட்டி அவர்களை நிர்வகிப்பது, அவர்களை சாதனையாளர்களாய் வார்த்தெடுப்பது ஆண்களின் பொறுப்பு எனச் சொல்கிறது மையப்புள்ளி.
மேற்குலகின் அழுகுணிச் சிந்தனையினடியாக எழும் பெண் சுதந்திரத்தையும் பெண்ணியல் கோஷத்தையும் மறுதலிக்கும் நூலாசிரியர், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உன்னதமான சுதந்திரத்தைப் பறிக்கும் ஆணாதிக்க கழுகுச் சிந்தனையையும் மாதரின் மகிமையை யதார்த்தபூர்வமாய் ஏற்றுக் கொள்ளாதவர்களின் போக்கையும் போட்டு உடைத்திருக்கிறார் "கத்தியின்றி ரத்தமின்றி” எனும் இரண்டாவது தலைப்பில்,
பெண்கள் வெளிநாடு செல்வதனால் ஏற்படும் அவலம் எத்துணை சோகமானது என்பதை சமூகம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. இது குறித்து சமூகத்தின் சந்து பொந்தெங்கும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், ஆண்கள் வெளிநாடுகளில் வருடக்கணக்காக தொழில் புரிவதால் ஏற்படும் பாதிப்புக்கள், பக்கவிளைவுகள் குறித்து பொதுவாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை. இது குறித்து ஆதங்கப்படும் நூலாசிரியர், "காட்டில் எறித்த நிலாக்கள் தலைப்பில் சமூகத்தின் சிந்தனையைக் கிளறியுள்ளார்.
'சங்கமம்" கட்டுரையில் திருமணத்தின் நோக்கம், துணையைத் தெரிவு செய்கையில் ஏற்படும் சறுக்கல்களின் விளைவு பற்றிச் சொல்லும் நூலாசிரியர், இஸ்லாமிய அடிப்படைகளில் நின்று இல்லறம் சிறக்க ஆலோசனை வழங்கியிருக்கிறார் ரத்தினச் சுருக்கமாக!
பெற்றோரே, மணமக்களே! கொஞ்சம் புருவம் உயர்த்தி வாசித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். உங்களது குடும்பக் கண்ணாடியிலும் ஒளிக்கீற்று பட்டுத் தெறிக்கும், இன்ஷொ அல்லாஹ்.
ஆண்களைப் போன்ற்ே பெண்களும் நாளை மறுமை நாளில் தமது பொறுப்புக்கள் குறித்து

Page 29
அல்லாஹ்வின் சந்நிதானத்தில் பதில் சொல்ல வேண்டும். இஸ்லாம் உலகை ஆளும் சக்தியாக மிளிர வேண்டுமானால் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் உழைக்க வேண்டியது கடமை. சவால்மிக்க சம காலத்தில் அதற்கு எத்தகைய அறிவு அவசியமோ அவற்றைக் கற்பதில் பெண்களும் முடியுமான ஆர்வத்தை செலுத்த வேண்டும்; தேசிய, சர்வதேச விவகாரங்களில் கரிசனை செலுத்த வேண்டும் போன்ற விடயங்களை நமக்குத் தேவைதான்' என்ற கட்டுரை
பேசுகிறது.
பெண்களுக்கு மொழியறிவின் அவசியத்தை "மொழிப்பாலம்" என்ற தலைப்பிலான ஆறாவது கட்டுரை எடுத்தியம்புகிறது.
களை நீக்கி நலம் காப்போம், பேனா பிடி பெண்ணே, நிம்மதி எங்கே, ஆகிய கட்டுரைகளும் அற்புதமான கருத்துக்களைச் சொல்கின்றன. இன்று தலைவிரித்தாடும் சீதனக் கொடுமையின் விளைவு கோரமானது. இதற்கு மூல காரணம் யார் என்ற கேள்விக்கு யதார்த்தமான ஒரு பதிலைச் சொல்கிறது "வேர் உங்கள் கைகளில், சீதனக் கொடுமை அரங்கேறுவதில் ஆண்களுக்கும் பங்கிருக்கிறதென்பது உண்மை. பெண்களுக்கு முக்கிய பங்கிருக்கிறதென்பது அதைவிட உண்மை என்பதே அது.
யதார்த்தத்தில் இதுதான் உண்மை! "மகனுக்குக் கொடுத்த பாலுக்கு பணம் வாங்க நினைத்தால் நீங்கள் தாயே அல்ல. மகனுக்கு கற்பிக்கச் செலவு செய்ததை பெண் வீட்டிலிருந்து பெற்றுக் கொள்ளக் கணக்குப் பார்ப்பவர்கள் பெற்றோர் என்று சொல்ல அருகதையற்றவர்கள்."
இது ஒரு தாயின் நெஞ்சறைக்குள்ளிருந்து பிரவாகித்து ஊற்றெடுத்த கருத்து. அவர்தான் இந்த நூலின் சொந்தக்காரி. எமது சமூகத்தில் தலைவிரித்தாடும் சீதனக் கெடுமையைப் பார்த்து அதன் வலி தாங்க முடியாது பெற்றோரின் உள்ளத்தை உசுப்பும் விதத்தில் சொல்லி வைத்திருக்கிறார் சகோதரி ஷாறா.
"விடியலுக்காகக் காத்திருக்கும் முஸ்லிம் பாடசாலைகள்” கட்டுரையில் முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியிருப்பதற்கான மூலகாரணத்தை முத்தாய்ச் சொல்கிறார்.
கணவன்-மனைவி இணைந்து வாழும் குடும்ப வாழ்வு இனிமை பெற வழிசொல்கிறது 'பரலையா? சோலையா? கட்டுரை.
இத்தொகுப்பில் பெண்களை மையமாகக் கொண்ட கட்டுரைகளே அதிகம். இருந்தாலும், ஆங்காங்கே பொதுவான சமூகப் பிரச்சினைகளைப் பேசும் சில கட்டுரைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. "மர்ஹலிம் அஷ்ரஃப் அவர்களும் இஸ்லாமியக் கனவும்” எனும் கட்டுரை
 

நம் நாட்டு முஸ்லிம் அரசியலின் யதார்த்தத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை இன்று முஸ்லிம் அரசியலில் எல்லாவற்றிற்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது; இஸ்லாத்தையும் இஸ்லாம் சொல்லும் ஒழுக்க மாண்புகளையும் தவிர.
முஸ்லிம் அரசியலில் ஈடுபடும் ஒவ்வொருவரும் இந்தக் கட்டுரையையாவது படித்துப் பாருங்கள். நற்செய்தி கிடைக்கும்.
ஜாமிஆ நளிமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளரும் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞருமான அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளிமி) அவர்கள் இந்நூலுக்கு வழங்கியிருக்கும் அணிந்துரையும் அல்ஹஸனாத், எங்கள் தேசம் இதழ்களின் நிருவாக ஆசிரியர் அஷ்ஷெய்க் ஆர். அப்துல்லாஹ் அஸ்ஸாம் (இஸ்லாஹி) அவர்களின் மதிப்புரையும் இந்நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களின் அணிந்துரை ஒர் அற்புதமான நூல் மதிப்புரையும்கூட அட்டை வடிவமைப்பு, தளக் கோலம் என்பனவும் தூவானத்தை மெருகூட்டுகின்றன.
தூவானம் உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மலர்தூவ வேண்டும். இஸ்லாமிய எழுத்துலகில் கால்பதித்திருக்கும் மாதருக்கு புத்தூக்கமளிக்க வேண்டும். அவர்களும் 21ஆம் நூற்றாண்டின் 'சுப்ப பவராய் தலைநிமிர்ந்து நிற்கும் ஊடகத்துறையில், ஒரு மெகா இஸ்லாமிய ஊடக வலைப்பின்னலுக்கு துணைநிற்க வேண்டும். பெண்கள் மத்தியில் அத்தகைய ஒர் உணர்வையும் தூவானம் ஏற்படுத்தும் என்பது எனது நம்பிக்கை
எளிய மொழிநடையும் இலக்கிய நயமும் சொற்சுருக்கமும் காத்திரமான சிந்தனையும் இந்த நூல் வாசகரின் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொள்ளப் போதுமானவை.
அவ்வகையில், சகோதரி ஷாறாவின் எழுத்துப் பணி மென்மேலும் தொடர வேண்டும்; அவரது காத்திரமான எழுத்துக்களால் சமூகம் பயன் பெற வேண்டும். அவருக்கு அல்லாஹ் துணை நிற்கப் பிரார்த்திப்போம்.
கடைசியாக ஒரு செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சகோதரி ஷாறா போன்ற பெண் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து பெண்களுக்கான தனியான ஓர் இஸ்லாமிய மாத இதழைக் கொண்டு வர முயற்சிப்பார்களாயின் தூவானம் எழுதியதில், வாசித்ததில் பயன் கிடைத்திருக்கிறது என ஆனந்தமடையலாம், இன்ஷா அல்லாஹ்.
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஜு. அல்ஆகிரா. ரஜப் 1432

Page 30
قوة وي) للكلم2
கரப்பான்கள் - --: ۔ -___- جلوہ گیس کے * * * ரசோச்சிய நான் கர்ஜிக்கக் கற்றுக் ? ன்றில் கொண்டபோது dissos 8
கொண்ே நான் பிறந்தபோது : lயாரும் சிரிக்கவில்லை 6 گہ بستر 够,影 என் இரத்தத்
ளிகளின்மேல் என் தாயின் கண்ணர் ெேடிப்பைச் *-9* హెవీ: வைராக்கியத்தையும் பாழடைந்த வாள் வீச்சையும்தான் iளத்தாக்கொன்றில்
வள் எனக்கூட்டினாள் பள்ளத்தாக்கொன்றில் அ g- அவள் புதைந்தபோது நான் அழுதபோது பலர் விதைந்திருந்தனர்
வள் தொ ஹீதி ளென: ள்ே அவளது ஷ 6 ITFO
必 s g >
கல் உடைக்கக் கற்றுக் s * கொண்டாள் எனனையும் அழைத்துக்
கொண்டேயிருந்தது
பருவம் என்னை கரப்பான்கள்
டை மாற்றிக் கொண்ட : స్ట్యోల్లో சிதறியோடிய
சாமப் பொழுதொன்றில்
அரிவாள் பட்டறையில் படுக்கை போட்டுத் தந்தாள்
என் சிவப்பு வார்த்தைகள் அவளுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தன
- மாவனல்லை அன்சப் ட
அல்ஹஸனாத் ஜூன் 2011 க. அல்ஆகிரா. ரஜப் 1432
28
 
 

இரவுக்கும் வழியுள்ளதென்று நிலவு தெரிந்திருப்பின் ஓய்வு வாங்கி மேக விடுதிக்குள் விடுமுறை வாங்கியிருக்கும்
விடியலுக்கு முன் விழித்திருந்த விழியின் அவசரம் கனவொன்றினை கருத்தரிக்கவிடாமல் சூரியனை புகுத்தி விளையாடியிருக்கும்
காலை தரிசனத்தில் பறவைகளின் முத்தம் பிழிந்த எச்சங்களின் மிச்சம் பனித்துளிகளின் மேல் பாயின்றி படுத்துக் கிடக்கும்
பசுமைகளைக் கடித்து விழுங்கும்
பசுக்களின் பிள்ளைக் கன்றுக்கென்ற ஆகாரத்தில்
தொட்டில கலைெரகளிலே
- யாசீன் பாவா ஹுஸைன், பொத்துவில் -
அலாதிப்பிரியம் சில ട്രഖങrbണീങ് கன்றுகளுக்கு.
மொட்டைத்தலையின் சூரியத் தொப்பியினால் ஒளிதெறித்து பக்கத்து வீட்டு ஜன்னனுக்குள் குமரி வேட்டைகள்
சிறகொடிந்திட்ட சின்னமயிலுக்கு பறக்கும் ஆசை பாதியளவுமில்லை பாவம் பாம்புகள் இன்னும் புற்றுக்குள் புலம்பலில்
ஒப்பந்தத்தில் கத்திய தவளை ஒப்பாரியும் ஒப்பற்ற புன்னகையும் ஆனால். மழைக்கால வெள்ளத்தினால் இரவுகளும் மெளனமாகியது
நுளம்பு வலைகளின் சலுகையில் நுளம்புகள் 5ങ്ങബങ്ങാഞ്ഞിരൂ6 தப்புக்களிடம் தப்பித்து குருதிக் கறைகளின் ൺങ്ങബ്രൂണ്
uso JITLeafds6floor ரகளைகளை விழுங்கிட சில மனித எத்தனங்கள் ஏகாந்தமாய் ஏங்கியபடி தொட்டில் கல்லறைகளுக்குள்

Page 31
பொறுக்க வேறும்.!
புறக்கணிக்கப்பட்ட- என் புன்னகைகளுக்காகவும்.
வாழ்க்கை பயணத்தினிடையே- ஒரு இடைவெளியை 2-600rgeon Lib
இப்போது.
காரணங்களற்ற காரியங்கள் நிறம்ப.
ஏதோ ஒரு வலியால்
தொண்டைக்குள் மீன் சிக்கிக் கொண்ட வலியினை மிஞ்சிய ஏதோ ஒரு அவஸ்தை
நெஞ்சுக்குள் தைத்தபடியே
ஏன்?
எதற்காக? வினாக்கள் மட்டும் எச்சக் குன்றுகளாய்
மனம்- ஏதோ கவலை படிந்தபடி
elector FLD666 furti...
ஒதுக்கியாளப்பட்ட சில உண்மைகளுக்காகவும்.
என் மீது தீர்க்கப்பட்ட வேட்டுகளுக்காகவும்.
என் மீது திணிக்கப்பட்ட அபாண்டங்களுக்காகவும்.
LDrból 6Tup5ÚULL--905 வரலாற்றுக்காகவும்.
மனுக் கொடுக்கப் போகிறேன்-நான்!
யாரிடம் மனு? எதற்காக மனு?
கொஞ்சம் பொறுக்க வேனும்.
இறுதிநாளில்- தெரியும் மனுக் கொடுக்கத் தகுதியானவன் “அல்லாஹற்” ஒருவன்தானென்று.
- செம்மண் இப்னு வற்ஸைமா -
&
 
 

C O 906 பெ ாழியும்
Co
இயற்கையின் "சுப்ஹானல்லாஹ்வை வனப்புகள்- இங்கே சுமந்து வரும் இறையருளை இயம்பி சுட்டெரிக்கும் சூரியனும் நிற்கும் "சக்கூரை சாட்சி அனுதினமும் சொல்லும்.! அவனருளை அங்கங்கே பறைசாற்றும் பொழிகின்ற மழைத்
துளியும் தெவிட்டாத பெரும் ரஹ்மத்தைப் பாங்கோசை பொதிந்திருக்கும் தென்றலோடு சங்கமிக்க தொடரும் சிறு மறுகணமே சோதனைகள் மஸ்ஜிதுக்காய் தெளபாவை முண்டியடிக்கும் நினைவூட்டும்.! முஸ்லிம்கள்!
நற்குணமும் நபி பெரியாரோ சிறியாரோ வாழ்வும்- இந் பணக்காரனோ நானிலத்தை பாமரனோ நிறைத்திருக்கும் சந்திக்கும் வேளை சிந்தும் வான்மறையின் சாந்தமிகு ‘ஸலாம்" வாசகங்கள் ஒலிக்கும்! வழிகாட்டும் வல்லோனின் சுவாசிக்கும் தென்றல் சாந்திக்காய்...!
யூனானி மருத்துவபீடத்திலிருந்து தர்கா நகர் எப். நிஷ்றலா
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432

Page 32
STUDY AND work IN.
LONDON
BUSINES5 MGT., IT, ENGINEERIN TRAVEL& TOURISM, BEAUTY OVER 1OO OT
HOTLINE. Abdul H
MILLENNIUM |
MțMNM
ississ AA: E-mail: hasan abdui
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432
 
 

EZ ZEALAND
விசாவுக்கு முன்பு எந்தக் கட்டணமும் &lp6íLLL LDTLLITg5.
மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகளினூடாக Sponsorவசதி செய்து தரப்படும்.
படிக்கும்போதே UKயிலுள்ள கம்பனிகளில் (Part Time Job) GuibogsgsgluGib.
மிகச்சிறந்த சட்டத்தரணிகளால் Document செய்வதால் விசாக்கள் 100% உத்தரவாதப் படுத்தப்படுகிறது.
35 நாட்களில் VSA
சம்பந்தமான அனைத்து ሪ விடயங்களும் செய்து விசா பெற்றுத் தரப்படும்
BUSINESS ACADEMY (MBA)
A CITY CAMPUS
Mel Mawatha, Colombo 03. y P to Don Karolis)
GDyahoo.com, Web: www.milinba.com

Page 33
LDJ600T 6lIGÓ 6lig 6ílt
எம்.எம்.ஏ. பிஸ்தாமி (நளிமி)
உயிர் மூச்சு காலாவதி ஆவதன் ஆருடம்தான் மரணவலி, உலகிலுள்ள அத்தனை மொழிகளைத் துணைக் கழைத்தாலும் அதன் வலியை மொழி பெயர்க்க முடியாது. இரத்த ஓட்டத் தால்துடித்த உறுப்புக்கள் இன்றோடு உறைந்து ஒய்வெடுக்கப் போகின்றன. கடிவாளமிடப்படாத ஆசைகளுக்கு இப்போதுதான் சாவுமனி. மனித வாழ்வின் அந்திமப் பொழுதுகளின் அகச் சுவாசமும் புறச் சுவாசமும் இத்துணை பெறுமதி வாய்ந்ததா என்பதை உணரும் தருணம். இதுவரை இலவசமாகவே நுகர்ந்து வந்த ஒட்சி சனை இப்போது எத்தனை கோடி டொலர் பெறுமதி செலுத்தியும் தரு விக்க முடியாது. சூரிய அஸ்தமனம் இல்லாமலே அவனது உள்ளம் காரி ருளை அப்பிவிடுகிறது. அவன் மர ணிக்கப் போகிறான்.
மரணம் வருவதன் கடைசி அடை யாளம்தான்ஸகராத்வேதனை. அதுவே கடினமான சோதனையாகவும் மாறும் தப்பித்து நழுவ முடியாதபடி அதனது பிடிஇறுக்கமாகவும் நெருக்கமாகவும் அமையும். இது வரைக்கும் அந்நிய மாக இருந்த மலகுல் மெளத் அனுமதி கேளாமலேஅந்நியோன்யமாகநெருங்கி வருகிறார். சொல்லி அழ வார்த்தையும் இல்லை. சோகம் தீர்க்க சொந்தங்க ளாலும் முடியாத நிலை. ஆடி ஓடிக் கழித்த வாழ்வுக்கான முற்றுப்புள்ளி நெருங்குகிறது. எதனை விட்டும் நீ வெருண்டோடிக்கொண்டிருந்தாயோ அந்த மரண வலி உண்மையாகவே வந்து விட்டது. (ஸஅரா அல்காஃப்19) தப்பித்துச் செல்லவே முடியாத வேதனைதான் அது என்கிறது அல் குர்ஆன்.
படைத்தவன் சொன்ன நோக் கத்தை மறந்து பம்பரமாய் சுழன்ற ஆத்மா இன்று அஞ்சி நடுங்குகிறது.
உராய்கின்றன. விழிகள் இரண்டும் ஏதோ பயங்கரமான ஒரு காட்சியை பீதியோடு உற்று நோக்குகின்றன.
தொண்டைக்
ஒய்ந்ததாய் இல் மல் பயணம் செய ளின்மையால் த கிறது. உலகையே களால் ஊன்றிக் வில்லை. உறவுகளு போல ஒய்வின்ற கின்றன. உழைத் கான அந்திமப் ப முடிகிறது. எல்ல யும் போல அவ சுவைத்துப் பார் “அனைத்து உயி சுவைத்தே ஆக ே
"நீவிரண்டோ( உன்னை துரத்தி (குர்ஆன்) அந்த உனது உலக வாழ் உலகிற்கு பிரியா நாள். உறவுகளை மண்ணுக்கு இன வழமை போன்று கவே முடியாது. வாய்; மலக்குல் ளுக்குக் கேட்டn *அவர்களில் ஒ( வந்து விட்டால் இ மீளவும் திருப்பி . மீதம் வைத்து வ களை செய்வேன் றன்று, (தப்பித்து வெற்று வார்த்தை முஃமினூன் 99, 1 லும் பயனளிக்காது னர்தான் எல்லா ,
"உங்களுக்கு நாம் அருளியவற் செய்யுங்கள். அப்ே வான்; மிகக் கிட என்னை கொஞ்ச தர்ல் தான தரும டியார்களோடிரு மாவையும் <罗西仁 விட்டால் பிற்படு

டால்.
குழியின் வரட்சி லை. தடம் புரளா த நாவு வார்த்தைக உம்மாறி தடுமாறு சுற்றி வந்த பாதங் கொள்ளவும் முடிய }க்கு ஏதோ புரிந்தது ப் புலம்பல் பாடு துக் கொடுத்தமைக் ரிசு ஒப்பாரியோடு ா ஆன்மாக்களை ானும் மரணத்தை க்கப் போகிறான். ர்களும் மரணத்தை வண்டும்."
அெல்குர்ஆன்)
டும் மரணம் நிச்சயம் வந்து சந்திக் கும்.* நாள்தான் இது. வின் அந்திம நாள்; விடை சொல்லும் ாப் பிரியும் நாள். ரயாகும் நாள். நீ று இங்கு தாமதிக் கெஞ்சுவாய்; கதறு மெளத்தின் காதுக லும் பயனில்லை. நவருக்கு மரணம் றைவா (உலகிற்கு ) அனுப்பிவிடு. நான் ந்ததில் நற்கருமங் என்பான். அவ்வா க் கொள்வதற்கான) தான் அது.* (அல் 10) எந்த வேண்டுத மரணத்திற்கு முன் அவகாசங்களும்.
ரணம் வரும் முன் றிலிருந்து செலவு பாது அவன் சொல் .டிய தவணைக்கு ம் தாமதிக்கச் செய் பகள் செய்து நல்ல ப்பேன். எந்த ஆன் * தவணை வந்து ந்தவே மாட்டான்.
ஆன்மிகம்
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்ப வற்றை நன்கறியும் ஞானியாக உள்ளான். (ஸஅரா அல்முனாபிசுன்: 8) இந்த நிலைமை வருமுன் மரணத் திற்காய் தயாராக வேண்டும். எமது வரவை முன்னிட்டு மலக்குமாரின் சபைகள் அலங்களிக்கப்படவேண்டும் எம்மை வேகமாக வருமாறு அழைக்க வேண்டும். எம் வரவால் அங்கு நறு மணம் கமழ வேண்டும்.
எமது உடம்பிலிருந்து வரும் துர் வாடையை நுகரமுடியாமல் சபிக்கப் படக் கூடியவர்களாக நாம் மாறக் கூடாது. உறவுகளால் கை விரிக்கப்ப டும் நிலைக்கானாலும் உயிர்ப்புமிக்க உள்ளத்தோடு அவனை சந்திக்க வேண்டும். “அந்நாளில் செல்வமோ குழந்தை குட்டிகளோ எப்பயனும் அளிக்காது. மாசற்ற ஆன்மாக்களுக்கு மட்டுமே விமோசனம் கிடைக்கும்." (அஷ்ஷூரா: 88,89) அப்படியான ஆன்மாக்களை சுமந்தவர்களாக அவனை சந்திப்பதை நோக்காகக் கொண்டு செயற்படவேண்டும் ஷைத் தானிய உணர்வுகள்குருதியில்உறைந்து விடாமல் கவனமாக இருக்க வேண் டும். அவன் எமது பகிரங்கமான விரோதி. எனவே, முடிவு நல்லதாய் மாற அதிகம் பிரார்த்திப்போம்.
"இறைவா எனக்கு சிறந்த முடி வைத் தருமாறு உன்னை நான் பிரார்த்திக்கிறேன்” என நபியவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். நபிவழி பேணி எமது தொழுகைகளின் பின் னும் இந்த துஆவை சேர்த்து மரண வலியை இலகுவாக்கிக் கொள்வோம்.
“tafu 696b6olgip giggi மற்றும் ஷஅபானில் எங்களுக்குபரக்கத் செய்வாயாக ரமழானை அடையும் பாக்கியத்தை எங்களுக்குத்தருவாயாக!” என்று நபி(ஸல்லல்லாஹ0 அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த ரஜப் மாதத்தில் துஆச்
செய்வார்கள்.
அல்ஹஸனாத் ஜூன் 2011 SLSSSLSSSMSSSMSSSLSSS 3. ஐ.அல்ஆகிரா-ரஐப்1432

Page 34
சொர்க்க-நர சுரண்டல் பொ
மலையாள மூலம் ஷெய்க் முவுறம்மது காரக்குன்
தமிழில்: ஜே இஸ்வறாக்
கேள்வி: வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற ஆறுதல்படுத்தி அவர்களின் வேலை6 மதங்கள் செய்கின்றன? பணக்காரவர்ச் நரகக்கதிைகள் எல்லாம்?
மறுமொழி: மதங்களைக் குறித்து தவறாக வளர்த் தெடுக்கப்பட்ட சிந்தனைகள்தான் இவ்வாறான சந்தேகங் கள் தோன்றுவதற்குக்-காரணம். ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கும் ஏழைகளின் மறுமலர்ச்சிக்கும் இருக் கின்ற ஒரேவழிமதத்தைப் பின்பற்றி வாழுவதுதான். இத் தகையபாரதூரமானதவாறானகண்ணோட்டங்கள்வளர் வதற்கு மதத்தை எதிர்ப்பவர்களைப் போலவே முஸ்லிம் களும் காரணமாக அமைந்துவிட்டார்கள். எனவே, முஸ் லிம்களும் இவ்விடயத்தில் குற்றவாளிகளே
சொர்க்க-நரக நம்பிக்கைதான் சகலவித அநியாயங்க ளிலிருந்தும் விடுதலை பெற்றுக் கொடுத்தது. சமத்துவத் தையும் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டியது. புனித குர்ஆன் செல்வம் குறித்து என்ன கோட்பாட்டை முன்வைக்கிறது என்பதை அவதானிக்கும் எவரும் இந்த விடயத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். 1. இஸ்லாமியக் கோட்பாட்டின்படி செல்வம் இறைவ
பூரணஉரிமைகிடையாது. அதனைப்பொறுப்பேற்றவர் என்றநிலையிலுள்ள உரிமை மாத்திரமே உண்டு. அது வும் அவர் எண்ணிய பிரகாரம் எல்லாம் அதனைச் செலவிடமுடியாது. இறைவன் அனுமதித்த பிரகாரம்
சொத்தில் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் பங் குண்டுஎன்றுஅல்குர்ஆன் ஆணித்தரமாக பாறைசாற்று கின்றது. இறைவனின் இக்கட்டளையைப் புறக்கணிப் புது இறைவனை நிராகரிப்பது போன்ற பாரதூரமான குற்றம் என்றும் மார்க்கத்தையே புறக்கணிப்பதற்கு ஒப்பானது என்றும் குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது. ஒருவன்நரகத்தில்துக்கிவீசப்பட்டதற்குக்காரணமாக அமைந்த இரண்டு விடயங்களில் ஒன்று, அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத்தூண்டாமல் இருந்தமை என்று அல்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. மேலும் தன்னுடைய இடக் கரத்தில் செயலேடு கொடுக்கப்படுபவர் கூறுவார்:
"அந்தோ என்னுடைய செயலேடு எனக்குத் தரப்ப
அல்ஹஸனாத் ஜூன் 2011
صsهان n - usaیع نمو.
 
 
 

ந விசுவாசமும் ருளாதாரமும்
ஏழை எளியவர்களுக்கு சுவர்க்கத்தைக் கூறி யைத் தருத்து நிறுத்துகின்ற வேலையைத்தானே கத்தைப் பாதுகாப்பதற்குத்தானே இந்த சுவர்க்க
டாமல் இருந்திருக்கக் கூடாதா? என் கணக்கு என்ன வென்று நான் அறியாமல் இருந்திருக்கக் கூடாதா? அந்தோ (உலகத்தில் வந்த)அந்த மரணமே இறுதியானதாய் இருந் திருக்கக் கூடாதா? இன்று எனது செல்வம் எனக்கு எவ்வி தப் பயனும் அளிக்கவில்லையே! என்னுடைய அதிகாரம் அனைத்தும் முடிந்துபோய் விட்டதே!’ (அப்போது ஆணை பிறக்கும்:)
"பிடியுங்கள்இவனை:இவனுடையகழுத்தில் விலங்கை மாட்டுங்கள். பின்னர் இவனைநரகத்தில் வீசி எறியுங்கள். பின்னர் இவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள். மேன்மையும் உயர்வும் மிக்கவனாகிய அல்லாஹ்வின் மீது இவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான். ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கும்படி தூண்டாமலும் இருந்தான். எனவே, இங்கு அவன் மீது அனுதாபப்படும் எந்த நண்பனும் இல்லை. சீழ் நீரைத் தவிர அவனுக்கு எந்த உணவும் இல்லை;தவறிழைத்தவர்க
ளைத் தவிர வேறெவரும் அதனை அருந்துவதில்லை."
(அல்ஹாக்கா: 25-37)
நரகவாசிகள்தாங்கள் என்ன குற்றம் இழைத்ததற்காக நரகில் வீசப்பட்டனர் எனக் கேட்கப்படும்போது ஏழைக ளுக்கு உணவளிக்காமல் இருந்தமையே என்று பதில் கூறுவார்கள்.
“ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாத்தியத்திற்குப் பகரமாகப் பிணையாக இருக்கிறான்; வலப் பக்கத்தாரைத் தவிர அவர்கள் சுவர்க்கத்தில் இருப்பார்கள். அவர்கள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் “உங்களை நரகத்திற்குக் கொண்டு வந்தது எது?
அதற்கு அவர்கள் கூறுவார்கள்:
“தொழக்கூடியவர்களில் நாங்கள் இருக்கவில்லை. ஏழைகளுக்கு உணவு அளிக்கவில்லை. மேலும் சத்தியத் திற்கு எதிராகப் பேசுபவர்களுடன் நாங்களும் சேர்ந்து அதில் ஈடுபட்டோம். மேலும் கூலி கொடுக்கும்நாளினைப் பொய் என்று கூறி வந்தோம்- அந்த உறுதியான விஷயம் எங்களை வந்தடையும் வரை!” (அல்முத்தஸ்ஸிர்; 38-47)
ப்ரியமுள்ள சகோதரரோ இப்போது கூறுங்கள். இஸ் லாம் கூறும் இந்த மத நம்பிக்கை ஏழைகளின் விமோசன

Page 35
மாக உள்ளதா? அல்லது ஏழைகளுக்கு எதிராகப் பணக் காரர்களுக்கு வக்காலத்து வாங்குகிறதா? பொருளாதார அநீதிகளை ஒழித்துக் கட்டுவதுதான் இந்த மத நம்பிக் கையின் அடிப்படையாக இருக்கிறது என்பதை இப் போது ஏற்றுக் கொள்வீர்களா?
அல்குர்ஆன் மேலும் பேசுகிறது: “உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்
கர்களுக்கும் அவரவருக்குரிய உரிமையை வழங்கி விடும்." (பனூ இஸ்ராயீல்: 26)
வேறு ஓர் இடத்தில் இப்படிக் கூறுகிறது. "மறுமையில் நற்கூலி-தண்டனை கொடுக்கப்படுவ தைப் பொய் என்று கூறுபவனை நீர் பார்த்திருக்கின்றீரா? அவன்தான் அநாதையை விரட்டுகின்றான். மேலும் வறியவர்களுக்கு உணவளிக்கும்படி தூண்டுவதில்லை." (அல்மாஹன் 1-3)
அல்குர்ஆனின் இந்தப் போதனைகளை விசுவாசிக் கின்றவர்கள் எவரும் அநாதைகளை விரட்டுவாரா? ஏழைகளையும் வறியவர்களையும் கவனிக்காமல் விட்டு விடுவாரா? உண்மையான விசுவாசிகள் யாரும் தம்மு டைய மறுமை வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ள மாட் ц —ттїó56іт.
2. செல்வத்தை செலவழிக்காது சேமிப்பவர்களுக்கு மரணத்திற்குப் பின் கொடிய தண்டனை கிடைக்கும் என்று அல்குர்ஆன் எச்சரிக்கிறது. செல்வமானது செல்வந்தர்களிடையே மாத்திரம் சுற்றிவரும் நிலை இருக்கக் கூடாது என்றும் கட்டளையிடுகிறது. மேலும் அளவு கடந்து செல்வத்தை நேசிப்பதையும் கடுமையாகக் கண்டிக்கிறது.
“மேலும் அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கிறான்." அெல்ஆதியாத்:8)
“ஒருபோதும் இல்லை! ஆனால் அநாதையுடன் கண்ணியமாய் நீங்கள் நடந்து கொள்வதில்லை; மேலும் வறியவருக்கு உணவளிக்க ஒருவரை ஒருவர் தூண்டுவது மில்லை. மேலும் வாரிசுச் சொத்துக்களை முழுமையாக நீங்கள் விழுங்கி விடுகின்றீர்கள். மேலும் செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள்."
(அல்பஜ்ர் 17-20) “(மேலும் அந்தச் செல்வம்) தங்களின் இல்லங்களை விட்டும்- சொத்துக்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு உரியதுமாகும்."(அல்ஹஷ்ர்:7) "இறைநம்பிக்கையாளர்களே!வேதம் வழங்கப்பட்ட வர்களைச் சார்ந்தル பெரும்பாலான அறிஞர்களும் துறவிக ளும் மக்களின் பொருள்களை தவறான முறையில் விழுங்குகிறார்கள். மேலும் அவர்களை அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் தடுக்கிறார்கள். எவர்கள் தங் கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவிடாமல் இருக்கி றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது எனும் நற்செய்தியினை நீர் அறிவிப்பீராக! ஒரு நாள் வரும்; அந்நாளில் இதே தங்கமும் வெள்ளியும் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுக

ளிலும் சூடு போடப்படும். இவைதாம் நீங்கள் உங்களுக் காக சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே, நீங் கள் சேகரித்து வைத்திருந்த செல்வத்தைச்சுவையுங்கள்."
(அத்தெளபா: 34-35)
விசுவாசிக்கின்ற எவரும் தமது செல்வத்தை சேகரித்து வைத்துக்கொண்டு அதனைஇறைவனின்வழியில் செலவு செய்யாமல் இருப்பதற்குத் துணிவார்களா? தேவை உடையவர்களுக்கு அவற்றைக் கொடுத்துதவுதன்மூலம் நரகின் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவே முயல்வார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 3. செல்வத்தை செலவழிப்பவர்கள் மாத்திரமே நம்பிக் கையாளர்கள் என்றும் அத்தகையவர்களுக்கே சுவர்க் கம் கிடைக்கும் என்றும் புனித அல்குர்ஆன்நன்மாரா யம் கூறுகிறது. மிகவும் பெரிய புண்ணிய காரியமாக இதனை வர்ணித்து இதற்குப் பன்மடங்கு நற்கூலி இருப்பதாகவும் முன் அறிவிப்புச் செய்கிறது.
“நற்செயல் என்பது உங்களுடையமுகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல மாறாக, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும்; மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாக) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்க ளுக்கும் அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக் கர்களுக்கும் யாசிப்போருக்கும் அடிமைகளைமீட்பதற்கும் வழங்குவதும்; மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து வருவதுமேநற்செயல்களாகும். மேலும் வாக்குறுதிஅளித்தால்தம் வாக்குறுதிகளைநிறைவேற்று பவர்களும் வறுமை மற்றும் துன்பங்களின்போதும் பொறு மையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான் கள் ஆவர். இவர்களே உண்மையானவர்கள் மேலும் இவர்களே இறையச்சமுடையவர்கள்." (அல்பகரா:177)
“ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன் என்று அவன் கூறுகின்றான். யாருமே அவனைப் பார்க்க வில்லை என்று அவன் கருதுகின்றானா? அவனுக்கு நாம் இரு கண்களையும் ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா? மேலும் (நன்மை-தீமையின்)தெளி வான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம் (இல்லையா?) ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையைக் கடந்து செல்லத்துணியவில்லை. கடினமான அந்த மலைப் பாதை எது வென்று உமக்குத் தெரியுமா என்ன? (அதுதான்) ஒருவனை அடிமைத்தளைத்திலி ருந்து விடுவிப்பதாகும்; அல்லது பட்டினி நாளில் உறவி னரான அநாதைகளுக்கோ அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதும் ஆகும்." (அல்பலத் 7-18)
“உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையினை அடைந் திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவு செய்தா லும் திண்ணமாக அல்லாஹ் அதனை நன்கு அறிபவன பக இருக்கின்றான்." ஆெலு இம்ரான்: 92)
இந்தப் புனித வசனங்களை விசுவாசிப்பவர்கள் ஏழை களுக்குச் சேர வேண்டிய செல்வத்தில் உலோபித்தனம் செய்ய மாட்டார். வறியவர்களின் துயர் துடைப்பதில் அவர்கள் முன்னின்று செயற்படுவார்கள் என்பதும் உறுதி
அல்ஹஸனாத்ஜின் 2011 ஜு. அல்ஆகிரா-ரஐப்1432

Page 36
4. இஸ்லாம் சுரண்டல்களின் எல்லா வழிகளையும் அடைத்து விடுகின்றது. சமூகத்தை நாசமாக்கும் தவ றான பொருளாதார வழிமுறைகளைக் கடுமையாகச் சாடுகின்றது. *அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகிறார்கள். அவர்களுக்கு அளந்தோ நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கிறார்கள். திண்னமாக அவர்கள் ஒரு மாபெரும்நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படஇருக்கிறார் கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா? அந்நாளில் அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்று கொண்டிருப்பார்கள்.”
(அல்முதஃப்ஃபிஃபீன்: 1-6) “வட்டி உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல்லாது எழ மாட்டார்கள். அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியேதேயாகும். உண்மையில் அல்லாஹ் வியாபாரத்தை அனுமதிக்கப்பட்டதாகவும் வட்டியைத் தடுக்கப்பட்டதாகவும் ஆக்கியுள்ளான். ஆகவே, எவர்தம் இறைவனிடமிருந்து இந்த அறிவுரை வந்த பிறகு இணி வட்டி வாங்குவதைவிட்டு) விலகிக் கொள்கின்றாரோஅவர் முன்னர் வாங்கியது வாங்கியதுதான். என்றாலும் அவரின் விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. ஆனால், இந்தக் கட்டளை வந்த பிறகு) யாரேனும் இந் தக் குற்றத்தை) மீண்டும் செய்தால் அவர்கள் நரகவாசி களாவார்கள்; அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.? (அல்பகரா:275)
வட்டி பெரும்பாவங்களில் ஒன்றாகும் என்றும் அதனை உண்பவர்கள் நரகவாசிகள் என்றும் இஸ்லாம் கற்றுத் தருகின்றது. சூதாட்டம் போன்ற சமூகச் சுரண் டல்களையும் அது கடுமையாக விலக்கியுள்ளது.
நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “யார் ஏமாற்றுகிறாரோ அவர் எம்மைச்
ர்ந்தவரல்ல." (அஹற்மத், அத்திர்மிதி
"பதுக்கி வைத்தவன் பாவியாவான்.”
(முஸ்லிம், அபூதாவுத்)
“வேலையை வாங்கிக் கொண்டு கூலிகொடுக்காதவர்க ளுடன் அல்லாஹற் மறுமைநாளில் எதிரியாக இருப்பான்.”
(அல்புகாரீ)
இவ்வாறாக முதலாளித்துவ பொருளாதாரத்தின் சகல வாயில்களையும் அடைத்துவிடுகின்றஇஸ்லாம் சரியான
உலோபிகளுக்குமறுமையில்கிடைக்க இருக்கும் கொடிய வேதனையைக் குறித்தும் கடுமையாக எச்சரிக்கின்றது.
“அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். மாறாக அது அவர்களுக்கு மிகவும் கெட்ட தாகும். தமது கஞ்சத்தனத்தின்மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்கள் கழுத்தில் விலங்காகப்பூட்டப்படும். வானங்களும் பூமியும்அல்லாஹ்
அல்ஹஸனாத் ஜூன் 2011
34 — ஐ. அல்ஆகிராம ரஜப் 1432
 

வுக்கே உரித்தானவையாய் இருக்கின்றன. மேலும் நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கிறான்." ஆெலு இம்ரான்: 180) 5. கஷ்டப்படுபவர்களையும் ஏழைகளையும் அவர்கள் அனுபவிக்கும் அதே நிலையில் அப்படியே விட்டு விடுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அந்நிலை யில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கும் அவர் களின் விடுதலைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் போராடுமாறு வற்புறுத்துகிறது இஸ்லாம். அல்குர்ஆன் இப்படிக் கூறுகிறது: “மற்றும் பலவீனமான அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண் கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில் நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ "எங்கள் இறைவனே அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாகக் கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக!” என்று பிரார்த்திக்கின்றார்கள்."
СыЁф6тот: 75) நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “விதவைகளுக்காகவும் ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர்கள் அல்லாஹற்வின் மார்க்கத்தில் அறப்போராட் டம் செய்பவர்கள் போன்றாவார்கள்.” (esolstrf)
மேலும் ஒரு ஹதீஸில் இப்படி வருகிறது: “நரகில் விழுந்து விடுவோமோ என்று எல்லாக் கால்களும் நடுங்கிக் கொண்டிருக்கும் அந்த மறுமை நாளில், ஏழைகளுக்காகப் பாடுபட்டவர்களின் கால்கள் நடுங்காது உறுதியாக இருக்கும்.”
இஸ்லாமிய மார்க்கமும் அது முன்வைக்கின்ற சுவர்க்கநரகக் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் எல்லாவிதச் சுரண்டல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் முடிவு கட்டி பொருளாதாரத்தில் நீதியும் சமத்துவமும் நிலை நாட்டுகின்றன என்பதை இங்கு எடுத்துக்காட்டிய விடயங்கள் தெளிவாக்குகின்றன.
இறை மார்க்கம் ஏழைகளின் விடுதலைக்குரிய ஒரே மார்க்கம் என்பதை, இறைத்தூதர்களை முதலில் ஏற்றுக் கொண்டவர்கள் ஏழைகளும் ஒடுக்கப்பட்டவர்களும் தான் என்ற விடயம் எடுத்துக் காட்டுகிறது. அதேவேளை, இறைத் தூதர்களின் எதிரிகளாக இருந்தவர்கள் பணக் காரர்களும் அதிகாரிகளும் தலைவர்களாக இருந்தவர்க ளும்தான் என்ற விடயமும் இதனை மேலும் தெளிவு படுத்துகிறது.
ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் அலட்சியம் செய்து புறக்கணித்து வாழ்பவர்கள் செல்லும் இடம் நரகம் என்றும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டவர்கள் மாத்திரமே சுவர்க்கம் செல்வார்கள் என்றும் கற்றுத்தருகின்ற சன்மார்க்கம், சுரண்டல் பொரு ளாதாரத்திற்கு முடிவு கட்டுகின்றது என்பதும் அதற்கு எத்தகைய ஆதரவும் நல்குவதில்லை என்பதும் பகல் வெளிச்சம் போன்று தெளிவான ஒன்றாகும்.

Page 37
ஆகாயத்தில் கண்
இருபத்தோராம் நூற்றாண்டின் நவீன மருத்துவம் தொடர்ந்தும் விருத் தியடைந்து மனிதனின் பெளதிகத்தை ஆழ அகலங்களை வேறுபிரித்துக் காட்டுகிறது. இதய மாற்று சத்திர சிகிச்சைகூட இன்று சாதாரண ஒரு விடயமாக ஆகி விட்டது.
இவ்வாறு விருத்தியடைந்து வரும் நவீன மருத்துவத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் விருத்தியடைந்த 905.5/60p.5/rair intensive Care Transport Services. 95ntagi, gigganu சிகிச்சைப் பிரிவொன்றில் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளை இன்னுமோர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யும் முறையே இது. சில பரிசோதனைக ளுக்காக அல்லது சத்திர சிகிச்சை போன்ற (interventions) காரணங்க ளுக்காக இவ்வாறு நோயாளிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
அதிதீவிர சிகி உள்ளவாறே இய முடியாத நோயாள தக்கவைக்கப் பய ventilator, g5ug கும் மருந்து வை மற்றும் உபகரண மாற்றும் இப்படிய ளின்போது பாை அம்பியூலன்ஸ்களு lance) ஆகாயத்தில் Guairoisselsh (Air படுத்தப்படுகின்ற
விருத்தியடை தொடர்ந்தும் விரு இந்தத் துறை எடி னும் வந்து சேரவில் உயிர் காக்கும் சே டில் இல்லாதிருப்
இங்கிலாந்தின் களில் கடமை புரி துறையில் படிப்ப
 

Uglj6OUD6Ou/
டுை கொண்டேன்
கிச்சைப் பிரிவில் Iல்பாக சுவாசிக்க ரிகளை சுவாசத்தை பன்படுத்தப்படும் தை இயக்க வைக் 556ir (inotropes) ங்களோடு சேர்த்து ான இடமாற்றங்க தயில் பயணிக்கும் Lib (Land Ambuபறக்கும் அம்பியூ Ambulance) LuuGär
ந்த நாடுகளில் த்தியடைந்துவரும் து நாட்டிற்கு இன் லை. இப்படியான வைகள் நமது நாட் பது துரதிஷ்டமே. வைத்தியசாலை பும் எனக்கு இந்தத் தற்கும் அனுபவம்
பெறுவதற்கும்சந்தர்ப்பம்கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ். இங்கிலாந்து
O ந்தில்பெற்றுக்கொன் சான்றிதழுடன் நானும் இந்தத்துறை யில் இறங்க ஆரம்பித்தேன். அதிலும் விசேடமாக பூமியின் பாதைகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸ்களை விட ஆகாயத்தில் பயணிக்கும் Air Ambutance இல் நோயாளிகளை அதி தீவிரசத்திர சிகிச்சைப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்வது பெரும் சவா லாக இருந்தபோதும் அதனை செய்து முடித்து திருப்தி காண்பதில் ஒரு சுகம் இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னால் ஹீத்ரோ எயர் எம்பியூலன்ஸ் கம்ப னியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. லண்டனில் அதிதீவிர சிகிச்
பாக சுவாசிக்க முடியாத ஒர் எட்டு வயதுச்சிறுமியை அவளதுகவாசத்தை தக்கவைக்கப் பயன்படுத்தப்படும்

Page 38
வென்ரிலேற்றர் மற்றும் இதயத்தை இயக்கவைக்கும்மருத்துவஉபகரணங்
நாட்டின் அதிதீவிர சிகிச்சைப் பிரி வுக்குஇடமாற்றம் செய்ய வேண்டும். இந்த இடமாற்றத்தைச் செய்யும் அதிதீவிர சிகிச்சைவைத்தியராக வர முடியுமா என்று வினவி வந்ததே அந்த அழைப்பு.
சவால்களை சந்திக்காமல் வாழ்க் கையில் முன்னேற முடியாதல்லவா?
கிறேன்"எனபதிலளித் அந்தச் சிறுமி வைக்கப்பட்டிருக்கும்
ண்டனில்உள் திதீவிரசிகிச்சைட் பிரிவிற்கு வந்து சேர்ந்தேன்.
கட்டார்நாட்டைச்சேர்ந்த அந்த எட்டு வயதுச்சிறுமி இரண்டு மாதங் களுக்கு முன்னர் கட்டாளின் அதிதீ விர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஆகாய ம்பியலன்சில்லன் க்கு வந்ததா
சாதாரணமாகப் பிறந்தஅந்தசிறுமி Myotonia Dystrophica Greip Guntu னால் பிறப்பிலிருந்தே பாதிக்கப்பட் டிருப்பதால்கடந்த இரண்டு வருடங் களக அவளது உடற்தசைகள் மெது மெதுவாய் சக்தியிழந்து செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. இறுதியில் அந் தச் சிறுமி நடக்க முடியாது கட்டி லோடு சங்கமமாகி விட்டாள்.
கடந்த சில மாதங்களாக இந்த நோயின் பாதிப்பு நெஞ்சறைத் தசை களையும் தாக்கத் தொடங்கியபோது அந்த சிறுமியினால் இயல்பாக மூச்சு விடுவதுஇயலாதகாரியமாகஆகிவிட் டது. சுவாசிக்கத் தேவையான நெஞ்ச றைத்தசைகள் செயலிழந்துவிட்டன. இந்த நிலையில் அந்தச் சிறுமியின் சுவாசத்தை பாதுகாப்பதற்காக அவள் வென்ரிலேட்டருடன் இணைக்கப் பட்டு விட்டாள்.
இவ்வாறு செயற்கைச் சுவாச உப கரணங்களுடன் பிணைக்கப்பட்ட வாறே அந்தச் சிறுமியை லண்டனில்
படுத்த முடியுமா என்று பரிசோதித்து சிகிச்சை அளிப்பதற்காக கட்டாரில் இருந்து கொண்டு வந்ததாகச் சொன் னார் அந்த வைத்தியர்.
லண்டனில் இரண்டு மாதங்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஐ.அல்ஆகிரா-ரஐப் 1432
S
Z
பலபரிசோதனைக ஆனால் முடிவுகள் இருக்கவில்லை. வந்த ஜினைப் பாதி order) girl Iglul இப்போதைக்கு எ லண்டனி கையை விரித்த நி மியை மீண்டும் அ இடமாற்றம் செய் தால் ஹீத்ரோ எ நிறுவனம் என்னை
லண்டனின் அ பிரிவில் முதன்மு: யைச்சந்தித்தபோது ருந்த செயற்கைச்சு வயர்களுடனும் இ கச்சுதந்திரம் இல் மருத்துவஉபகரண பிடிக்கப்பட்டிரு போது. அந்த எ எஞ்சியிருக்கும் ( முழுவதும் இந்த னேயே வாழ வே என்ற துர்ப்பாக்கி ணியபோது. பார்த்தபோது எட் மகள் என் கண்மு
அல்லாஹ் எ6 என்னில் சொரிந்தி கள் ஒவ்வொன்றா
துள்ளிவிளையாடு சென்று வருகிறா எனது மகளின் ச பொறுப்பாளன பொறுப்பை வை ளுக்கோ உனது அ இன்னும் முழுை கொள்ளதுகைை யர்களின் கைகளி விடாதே. அந்தப் வைத்துக் கொள். ஆரோக்கியத்திற் எனது மகளின்ஜின் ஏற்படுத்தாத உன தும் அல்ஹம்துலி ளம் சொல்லிக் ெ
உண்மையில் களே! நாமெல்ல வர்கள். குர்ஆன் ( கண்கள் இருந்து
 

ள்செய்யப்பட்டன. ரில் எந்த மாற்றமும் பிறப்பில் இருந்தே Sigub (Genetic disான நோய்களுக்கு, ங்குமே வைத்தியம் லும் வைத்தியர்கள் லையில் அந்தச் சிறு அவளின் நாட்டுக்கு பய வேண்டியிருந்த பார் எம்பியூலன்ஸ்" ன அழைத்தது.
அதிதீவிர சிகிச்சைப் தலில் அந்தச்சிறுமி து அவளைச்சுற்றியி வாசஉபகரணங்கள் இயல்பாகச்சுவாசிக் லாது கட்டிலுடன் ாங்களுக்குள் சிறைப் iப்பதைப் பார்த்த ட்டு வயதுப் பிஞ்சு குறுகிய வாழ்நாள் உபகரணங்களுட வண்டி இருக்குமே ய நிலையை எண் அதனை நேரில் ட்டு வயதான எனது ன் தோன்றினாள்.
னக்களித்த அருள், திருக்கும் பாக்கியங் கஞாபகம் வந்தன. பாகசுவாசிக்கிறாள்; கிறாள்; பாடசாலை ள். யா அல்லாஹ்! சுவாசத்திற்கு நீயே ாய் இரு. அந்தப் த்திய உபகரணங்க ற்புதப் படைப்பை மையாகப் புரிந்து யவிரிக்கும் வைத்தி லேயோ கொடுத்து பொறுப்பை நீயே
நீயே ஷாபி, நீயே குச் சொந்தக்காரன். ன்களில் விகாரத்தை க்கே புகழ் அனைத் பில்லாஹ் என்று உள் காண்டேயிருந்தது.
சகோதர சகோதரி ாம் நன்றி கெட்ட சொல்வது போன்று ம் யதார்த்தத்தைக்
கண்டுகொள்ளதகுருடர்கள்; உள்ளம் இருந்தும் உணர்வு பெறாத காய்ந்து வரண்டுபோனமனிதர்கள். அற்பமான இந்த உலகத்தின் ஆசாபாசங்களில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் நாம் அல் லாஹ் எமக்களித்த அருள்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, அல் லாஹ் பற்றிய உணர்வோடு வாழாமல் நன்றி கெட்டவர்களாய் இருப்பது எத்தகைய துர்ப்பாக்கியம்! இதை உணர்ந்து கொள்ள ஒரு மாரடைப்பு வரும்வரை காத்திருக்க வேண்டுமா? அல்லாஹ்வின் பக்கம் உடனடியாகத் திரும்பி விடுங்கள்.
அந்தச் சிறுமியை லண்டனின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கட்டிலில் இருந்து பாதைகளில் பயணிக்கும் அம்பியூலன்ஸுக்குள் மாற்றினோம். இதற்கு சில மணி நேரங்கள் எடுத்த போதும் பாதிப்புகள் ஏற்படவில்லை. அந்த அம்பியூலன்ஸ்லண்டன்ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிப் பயணித் தது. லண்டனிலிருந்து ஹீத்ரோ வரை செல்லும் நெடுஞ்சாலையில் பய ணிக்கும் பலநூறு வாகனங்களை முந் திக் கொண்டு நீலநிற சைரனோடு அம் பியூலன்ஸ் வேகமாகப் பயணிக்கிறது. அந்தச் சிறுமியின் சுவாசத்தைப் பொறுப்பேற்ற உபகரணங்கள் அவற் றின் தொழிலைச் செய்து கொண்டி ருந்தன. வளிமண்டலத்தில் உள்ள 21% ஒட்சிசன் அதற்குப் போதுமானதாய் இருந்தது. மேலதிக ஒட்சிசன் சிலின் டரில் இருந்தபோதும் அது தேவைப் படவில்லை.
ஹீத்ரோ விமான நிலையத்தின் பின் வழியால் வந்து சேர்ந்தோம். விமான நிலையத்தில் தரைமார்க்க அம்பியூலன்ஸ் ஆகாய மார்க்க அம்பி யூலன்ஸை சந்திக்கிறது. சிறுமி ஆகாய மார்க்க அம்பியூலன்ஸ்"க்கு இடமாற் றப்படுகிறாள். நானும் எனக்கு உதவி யாக வந்த துணை மருத்துவ சேவை யாளர்கள் (Paramedics) இருவரும் சிறுமியோடும் மருத்துவ உபகரணங் களோடும் சேலைன் வயர்களுடனும் விமானத்தில் ஏறினோம். விமானம் லண்டன்ஹீத்ரோவிலிருந்து தோஹா கட்டார் விமான நிலையத்தை வந்த டைய வேண்டும். 6 மணி நேரங்கள் பறக்க வேண்டிய பயணம்.
கட்டார் நோக்கிப் பயணிக்கும்

Page 39
நாம் 30,000 அடிக்கு மேலாகப் பறக் கிறோம் என்று விமானத்தின் கெப்டன் சொல்லிக் கொண்டிருந்தார். சாதார ணமாக எல்லாப் பயணிகள் விமா னத்திலும் இப்படியான அறிவிப்பு களை கெப்டன் செய்வது வழக்கம் என்பதால்அதனைப் பெரிதாக அலட் டிக் கொள்ளாமல் என்னோடு வந்தி ருந்ததுணை மருத்துவ சேவையாளர் களுடன் பேசிய வண்ணம் சிறுமியின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் ஒட்சிசனின் அளவு போன்ற வற்றைத் தொடர்ச்சியாகக் காட்டிக் G5ITaitig-Gojigitb Monitoring Equipment ஐக் கவனித்த வண்ணம் பய ணித்துக் கொண்டிருந்தோம்.
இரண்டு மணி நேரம் பயணித்து விட்டோம். திடீரென Monitoring Equipment இன் அலாரம் அடிக்கத் தொடங்கியது. உற்று நோக்கினோம். சிறுமியின் இரத்தத்தில் ஒட்சிசன் அளவு குறைந்து சிறுமி நீல நிறமாகிக் கொண்டிருந்தாள். தொடர்ந்தும் நீல நிறமாகி விட்டால் இதயத்துடிப்புக் குறையும்; பின்னர் ஒட்சிசன் அளவும் குறையும் அடுத்தது மரணம்தான் என் பதை அறிந்திருந்த நாங்கள்அதிர்ச்சிய டைந்துவிட்டோம் சிறுமியின் இரத்த அழுத்தம் குறையத் தொடங்க எங்க ளில் அதிரினலின் வீச்சும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கத் தொடங்கி ԱՑil.
உடனடியாக சிறுமியை வென்ரி லேற்றரிலிருந்து அகற்றி ஒட்சிசனை அதிகரித்து அழுத்தமும் வழங்கக் கூடிய ஒரு முறையின் (Anesthetic T bag Green Circuit) panLIT5j GJ5mGj தோம். சிறுமியின் இதயத்துடிப்பு மீண்டும் இயல்பு நிலையை அடைந் தது. ஒட்சிசன் அளவும் இரத்த அழுத் தமும் சாதாரண நிலைக்கு வந்தன. இருந்தபோதும் நாங்கள் சிறுமியை இணைத்திருந்த வென்ரிலேற்றர் ஊடாக செயற்கைச் சுவாசத்தைத் தொடர்ந்தும் வழங்கமுடியாமல் இருந் ததால், விமானம் கட்டார் விமான நிலையத்தில் இறங்கும் வரை- சுமார் 4 மணித்தியாலங்கள் அந்த உபகரணம் செய்யும் வேலையை நானும் எனக்கு d56 unts, Quigi Paramedics pub LDrips மாறி செய்து வந்தோம். அந்த விமா னம் கட்டார் விமான நிலையத்தின் தரையைத் தொட்டபோதுதான் அந்
தச் சிறுமியின் சு பிடித்துக் கொன தம் எமக்குள் குை பூமியில் 2 இணைக்கப்பட் ணமாய் இருந்த ஆகாயத்தில் 30 பறக்கும்போது வாய்க்கு ஒட்சிச ஏன்? அதனை அ வின் இன்னுமே பைப் பற்றி நாப் ஆம், பூமியின் அ மையையும் வி "நாம் இப்பூமியை மடியைப் பே லையா? (ஸஉர வசனத்திற்கான அடிக்குமேல் ஆ அல்லாஹ்வை ஞ தச் சிறுமியை எ6 uLungl.
ஸஅரா அந்நட அலில் அர்ழ மிஹி வசனம் இந்தப்பூம் ஒப்பிட்டுக் காட் மானது. பிறந்த ப மடி எவ்வளவு சுக தெரியும். தாயின் சூடான சுகம் ெ பெறுகிறது; அன் றது; நிம்மதியாய் ஒரு குழந்தைக்கு ( கள்தான் இருக்கி வாழ்வதற்கான அ ளையும் ஒருசேர இடம் தாயின் ம
அதுபோலவே கப் படைத்த அல் குழந்தைக்கு த அனைத்து அம்ச தாக இந்தப் பூமி வசப்படுத்தித் தந் பெருமை, அற்பு தில்லை. பூமியி இருந்த அந்தச் ஆகாயத்தில் பிரி இந்தப் பூமியின் புதமும் எனக்குப்
பூமியில் ஒட்சி ஆகாயத்திலும் ஆனால் ஆகாய

வாசத்தைக் கையில் டு வந்ததன் அழுத் றயத் தொடங்கியது. பகரணங்களோடு நிலையில் சாதார அந்தச் சிறுமியில், 00 அடிக்கு மேல் உயிர் பிரியும் தறு ாகுறைந்து சென்றது நிவதற்கு அல்லாஹ் ர் அற்புதப் படைப் அறிய வேண்டும். ற்புதத்தையும் பெரு ாக்கும் வசனமான விரிப்பாக (தாயின் ன்று) ஆக்கவில் அந்நபஃ: )ே என்ற தப்ளிரை 30,000
ாபகப்படுத்திய அந் எனால் மறக்க முடி
ஃவின் "அலம் நஜ் றாதா” என்ற 8வது ைெயதாயின்மடிக்கு டியிருப்பது அற்புத ாலகனுக்கு தாயின் ம் என்பது எமக்குத் மடியில் குழந்தை பறுகிறது; உணவு ாபு, பாசம் பெறுகி உண்டு உறங்குகிறது. வேறு என்ன தேவை கின்றன? குழந்தை னைத்து அம்சங்க ப் பெற்ற ஒரே ஒர் டிதான்.
பூமியை எமக்கா லாஹ"த் தஅலா, "யின் மடிபோல வ்களும் பொதிந்த யை எமக்கு வாழ ருக்கிறான். இதன் ம் எமக்குப் புரிவ ) சாதாரணமாய் நிறுமியின் உயிர், த் துடித்தபோதே பெருமையும் அற் վrfl59:31,
சன் அளவு 21%; 1% வீதம்தான். தில் ஒட்சிசனின்
੬UTਈ ਉL
gGupg55th (Partial Pressure) gapaint Gaga. (Lászlóão thickair; smušSáäv thinair) glgamá) 62 6fistafisir JsyQpš தம் குறைகின்றபோது இரத்தத்தில் ஒட்சிசன் கின் ம் இரத்தத்தில் ஒட்சிசன் குறையு கக் கரையும்போது இதயத் துடிப்பு குறைகிறது; இரத்த அழுத்தமும் குறை கிறது; தொடர்ந்து மரணம் சம்பவிக் கிறது.
சாதாரணமாக நோயற்ற ஒரு மனிதர் விமானத்தில் பறக்கும்போது 5. SyairgiQpish (Partial Pressure) குறைவாக இருந்தபோதும் உடல் ஒரளவு தன்னை சமநிலைப்படுத்த முயற்சிக்கும். இதற்கு ஏதுவாக விமா
(CabinPressure). சிலநேரங்களில்இந்த Cabin Pressure &9ỹeng)uụửbGungxi sfìưDm னத்தின் கூரையில் இருந்து ஒட்சிசன் a cop (Oxygen Mask) of upth. Luusaf
தற்காப்பு ஏற்பாடுகள் விமானத்தில் இருந்தபோதும் சாதாரணமாக அவை அவசியப்படுவதில்லை. ஆனால், நோயுள்ள வேளைகளில் ஒட்சிசனின் அழுத்தக் குறைவு உயிருக்கு ஆபத் தாய் அமைந்து விடும்.
சிந்தித்துப் பாருங்கள்! பூமியில் இருக்கும் பல்லாயிரம் அற்புதமான அம்சங்களில் ஒன்றுதான்ஒட்சிசனின் அழுத்தம் பூமியிலும் ஆகாயத்திலும் ஒட்சிசன் ஒரே அளவில் இருந்தபோ தும்கூட ஆகாயத்தில் ஒட்சிசனின் அழுத்தம் குறைவாக இருப்பதனால் எம்மால் உயிர்வாழமுடியாமல் இருக் கிறது. ஆகாயத்தில் அழுத்தம் குறை கின்றபோது உயிர் உடலை விட்டும் ஒடத் துடிக்கிறது. இந்நிலையில் ஸஆரா அந்நபஃ சொல்லும் 'அலம் நஜ்அலில் அர்ழ மிஹாதா" (பூமியை தாயின் மடியைப் போன்று நாங்கள் ஆக்கித் தரவில்லையா) என்று அல்
னத்தின் அர்த்தம் புரிகிறது அல்லவா?
இந்த வசனத்தின் தப்ஸிரை நிலத் திலிருந்துபடித்தபோது புரியாத அர்த் தம் ஆகாயத்தில் அந்தச் சிறுமியின் உயிரை, சுவாசத்தை கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்தபோது புரியக்கூடியதாய் இருந்தது, அல்ஹம் துலில்லாஹ்.
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஐ. அல்ஆகிரா- ரஜப் 1432

Page 40
வரலாற்று நிகழ்வு
எம்.ஐ.எம். அமீன் (எம்.ஏ) முன்னாள் முதுநிலை வி "மாளிகைகளில் பன்றிக்
LTTobu,56555 sells இருப்பதுே
- முஸ்லிம் ஸ்வயய்னின் சீவலிப்
முஸ்லிம்கள் கி.பி. 711இல் ஸ்பெய்னை கைப்பற்றி ஒரு குடையின்கீழ் முழு நாட்டையும் ஆட்சிசெய்தனர். அக்காலப்பகுதியில் சகல துறைகளிலும் முஸ்லிம் ஸ்பெய்ன்முன்னேற்றம் கண்டுஜரோப்பாவுக்கு ஒளிவிளக் கேற்றியது. முஸ்லிம்ஸ்பெய்னின் பல்கலைக்கழகங்களில் ஆய்வு கூடங்களில் கல்லூரிகளில் பயின்றே கிறிஸ்தவ ஐரோப்பாதன்கண்ணைத்திறந்தது. அவ்வளவு முன்னேற் றம் கண் iஸ்லிம்ஸ்பெய்னின் ம் வர்க்கத்தி ரிடையே ஏற்பட்ட பிளவும் ஒற்றுமையின்மையும் கார ணமாக ஒரே குடையின் கீழ் இருந்த முஸ்லிம் ஸ்பெய்ன் சின்னச் சின்னச் சிற்றரசுகளாக சிதறியது. ஒவ்வொரு சிற்றரசும் மற்றையதுடன் பகைமை பூண்டு பொறாமை கொண்டிருந்தது.
இதனை சிறந்ததொரு வாய்ப்பாகக் கருதிய வடபுலத்து கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் ஒவ்வொரு சிற்றரசாகக் கைப் பற்ற முயற்சித்தனர். பொது எதிரிக்கு முன்பேனும் ஒற்று மைப்படுவதற்கு முஸ்லிம் சிற்றரசுகள் முயற்சிக்காது, ஒன்றின் வீழ்ச்சிகண்டு மற்றைய சிற்றரசு மகிழ்ச்சியடைந் தது. சில சந்தர்ப்பங்களில்முஸ்லிம் சிற்றரசுக்கு உதவுவதற் குப்பதிலாக பொது எதிரிகளுக்கு சில சிற்றரசுகள் உதவி யும்புரிந்தன. இதனால்முஸ்லிம்ஸ்பெய்னின்பலபகுதிகள் கிறிஸ்தவர் வசமாயின. அடுத்து இரையாக வேண்டிய சிற்றரசுகளின் அட்டவனையில் சீவலி சிற்றரசு முதன்மை பெற்றிருந்தது.
சீவலிப்பிரதேசத்தை ஆட்சிசெய்த அல்முஃதமித் சமய அறிவும் சமய ஈடுபாடும் கொண்டவர். தனது பிரதேசத் தில் கிறிஸ்தவ ஆட்சியாளர்கள்தலையிடாது இருப்பதற் காக வருடந்தோறும் அவர்களுக்குத் திறைசெலுத்தி வந் தார். சீவலியைக்கைப்பற்றவிரும்பிய ஆறாம்.அல்போன்ஸ் என்ற கிறிஸ்தவ மன்னன் திறைப்பணத்திற்குப் பதிலாக சீவலியில் உள்ள பாதுகாப்பு அரண்களான கோட்டை கள் அனைத்தையும் உடைத்தெறியுமாறு கேட்டான்.
இக்கோரிக்கைக்கு இணங்குவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று அல்முஃமித் கருதினார். ஆதலால் வட ஆபிரிக்காவில் பலம் பெற்று வளர்ந்துள்ள முராபி தூன் ஆட்சியாளர்களிடம் இராணுவ உதவி கோரினார். இதனை அவரது அரசவைப் பிரமுகர்களில் சிலர் எதிர்த் தனர். பாலைவனப்பிரதேசங்களில் ஆட்சிபுரிந்து கொண் டிருக்கும் முராபிதுரன்கள் வளம்மிக்க ஸ்பெய்னுக்குள் துழைந்தால் திரும்பச் செல்லமாட்டார்கள் சீவலி சிற்றர சைத்தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவர்என்று பயந்த னர். இச்சந்தர்ப்பத்தில்தான்.அல்போன்ஸின்மாளிகையில் பன்றிக் கூட்டத்தை வளர்ப்பதைவிட பாலை நிலத்தில் ஒட்டகைக் கூட்டத்தை மேய்ப்பது மேலானது என்று
3 Ο அல்ஹஸனாத் ஜூன் 2011
ஐ.அல்ஆகிரா-ரஐப்1432

களின் நிழலில்.
ரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம் கூட்டதகுை காப்பதைவிட Dasbou ElDril 1660TTab மலானது"
பிரதேச மன்னன் முஃதமித் -
தன் அரசவைப் பிரமுகர்களுக்கு கூறினார் முஃதமித். இக்கூற்று ஸ்பெய்னில் பழமொழியாக வழங்கப்பெற்று வருவதும் அதன் ஆழமான கருத்தை உணர்த்தப் போது மானது.
தனது கருத்தை எதிர்த்த அரசவைப் பிரமுகர்களுக்கு தான் இத்தகையதொரு தீர்மானத்தை எடுக்க இறைவ னின்திருப்பொருத்தத்தை பெறவேண்டும் என்ற ஆசையே அல்லாது வேறொன்றும் அல்ல என்பதைப் பின்வருமாறு விளக்கினார்:
"நான்இருநிலைகளில்ஒன்றைத் தெரிவுசெய்ய வேண்டி யிருக்கிறேன். இவ்விரண்டில் ஒன்று நிச்சயமற்றது. மற் றொன்று நிச்சயமானது. நான் அல்போன்சுடனோமுராபி தூன் ஆட்சியாளரான யூக்ப் உடனோ செய்துகொள்ளும் உடன்படிக்கையை அவ்விருவருமே நிறைவேற்றவும் முடியும் உதாசீனம் செய்யவும் முடியும். இது நிச்சயமற்ற நிலை. அதனைத் தவிர்த்து நிச்சயமான ஒன்றைத் தெரிவு செய்வதே புத்திசாலித்தனமானது.
முராபிதூன்ஆட்சியாளரான யூசுபை ஆதரித்தால் அது நிச்சயமாக இறைவனின்திருப்திக்கு உரியதாக இருக்கும். மாறாக அல்போன்சைஆதரித்தால் அது அல்லாஹ்வின் கோபத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும். ஆதலால் அல் லாஹ்வின் கோபத்தைத் தவிர்த்து அல்லாஹ்வின் திருப் தியை நிச்சயமாகப் பெற்றுத்தரக்கூடிய செயலை விரும் பியே முராபிதுரன் ஆட்சியாளருக்கு அழைப்பு விடுத் Gscir" 6Taipitri. (gging b: Islam in Andalus By Ahmad Thomson)
அல்முஃதமித் குர்ஆனுடனான தொடர்பும் தெளி வான சிந்தனையும் உடையவராக இருந்தார் என்பதையே இது காட்டுகிறது.
"விசுவாசிகளேநீங்கள் விசுவாசிகளை விட்டுநிராகரிப் போரை (உங்களுக்குப்) பாதுகாவலராக ஆக்கிக் கொள் ளாதீர்கள். * (4:143) என்ற குர்ஆனின் போதனை முஃதமிதின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது.
தற்கால முஸ்லிம் ஆட்சியாளர்களும் இந்நடைமுறை யைப் பின்பற்றுவார்களா? முஸ்லிம்களை கொன்றொழிக் கும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அடிவருடிகளாக நின்று மேன்மையடைய ஒருபோதும் முடியாதென்பதை உணர்வார்களா? நாடுகளைப் பரிபா லிக்கும் ஆட்சியாளர்கள் மட்டுமன்றி, குடும்பத் தலை வர்கள் இயக்கத் தலைவர்கள் என்பவர்களும் இக் குர்
ஆன்ஆயத்தைகருத்தில்எடுப்பார்களா? சற்று சிந்தியுங்கள்!

Page 41
நீங்கள் ஒர் ஆங்கில உங்கள் குழந்தையின் கல்c நவீன கற்றல், கற்பித்தல் மு நீங்கள் ஆசிரியராயின் புதிய கற்பித்த
Diploma in Te
Diploma in Teacher Education who are seeking credentials
or an excel
- Programme Summary
For application forms and
Course C Hill Country international School
MadaWala B Telephone: 081 - 2470216,081 - 24766
 
 
 
 

5S5Tlʼ2U jiʼ
sig
மாழிமூல ஆசிரியராக க்கு உதவக் கூடியதாயாக றையைக் கற்றுக் கொள்ளக்க & நுeபங்களைத் தெரிந்து கொள்ள.
Cher Education
is designed for school leavers to become an English teacher lent mother.
Course Contents
ate of Commencement June 2011
For the free seminar and other detailsplease call rs. Farwin O778744971
ther details, please contact
Dordinator. (Institute of Professional Studies)
azaar, Kandy 0, E-Mail hillcountryint.03Goyahoo.com
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஐ. அல்ஆகிரா. ரஜப் 1432

Page 42
பிரந்தியத.வ
கருப்பொருள்: பொறுப்புக்களுக்கு
ஈமானிய உறவுகளே!
இறை திருப்தியையும் சுவனத்தையும் இலட்சிய மாகக் கொண்டு விழிக்கின்ற எம் ஈமானிய உறவுகளே, எமது சகோதரத்துவ உறவினை பலப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாகதஃவாமுஅஸ்கர்எம்மை எதிர்நோக்கி வருகின்றது.
இள நெஞ்சங்களின் முழு இரத்தத்தையும் சுத்தப் படுத்தி புதுப்பித்து இஸ்லாமிய கொள்கையை சுமந்து செல்ல உணர்வூட்டும் தஃவா முஅஸ்கர் இளமைப் பருவத்தின் சிறந்த பதிவு.
அல்லாஹ்வின்தீன் வாழ்வதற்காக வாழும் இளைஞர் கூட்டம், உறுதியான இலட்சியத்தோடும் இலக்கோடும் கொள்கைக்காக வாழும் இளம் இரத்தங்கள் தமது வாழ்க் தையை இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ளவும் அல்லாஹ் அருளியிருக்கின்ற அருள்ளைக்கொண்டு அவனதுதீனின்வளர்ச்சியில் பங்கா ளிகளாக உருவாகவும் தஃவா களத்தில் அணிதிரள்வோம்! எமது இளைஞர்கள் மேற்கத்தேய கலாசாரத்தின் தாக் கத்தினால் வழிபிறழ்ந்துள்ளனர். அவர்களின் பாதுகாப்பு
ളത്ത
語エリエリエ
நகூன் இன்றுகூடல் நிகழ்வு ஜம்இய்யத்துத் தலபாவின் இவ்வருடத்திற்கான இரண்டாவது விஷேட ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 2011.05.17, 18 ம் திகதிகளில் ஹெம்மாதகம தாருல் ஐதாமில் நடைபெற்றது.
அறிவு, ஆன்மா, திறன் விருத்தி ஆகியவற்றை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு ஒன்று கூடிய இந்நிகழ்வுஅஸ்லம் ஆசிரியர்அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடத்திற்கான ஜம்இப்பாவின் திட்டமிடல், ஆன்மிக அமர்வுகள், G * உட்படவி ட்டு நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றன.
口 அல்ஹஸனாத் ஜூன் 2011
 
 
 
 
 

முஅஸ்கர்-207
Test ຣສອງມ இளைஞன்
கேள்விக்குறியாக உள்ளது. நவீன ஜாஹிலிய்யத்திலிருந்து விடுவித் து உள்ளங்களை மணங்கமழும் உறவாக ஒன்றிணைப்போம்!
ஜம்இய்யத்தின் உறவுகளே! எம்மை இணைக்கின்ற. எமது சிந்தனையைத் தட்டி எழுப்புகின்ற. எமது பாதையையும் எமது பணிகளையும் செப்பனிடுகின்ற. ஒரு களம்தான் தஃவா முஅஸ்கர்.
இளம் இரத்தங்களை- அவர்களது பாதங்களை அல்லாஹ்வின் பாதையில் உறுதிப்படுத்துவதற்கும் வாழ்வில் வீசும் புயல்களுக்கு இரையாகாமல் இஸ்லாம் வாழ்வதற்காக வாழும் இளைஞர்களாக உருவாவதற்கும் பிரார்த்திக்கிறோம்.
உங்களது பயணத்தில், நடைபெறவிருக்கும் தஃவா முஅஸ்கர் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அன்பான கட்டளையை முன்வைக்கிறோம்.
மார்க்கம் பூமியில் வாழட்டும்;
நாம் சுவனத்தில் வாழ்வோம்!
GlbWmss Ulissé Pössist
சிலாபம் பிரதேசத்திற்குட்பட்ட அஸாபீர் மாணவர்களுக்கான முகாம் நிகழ்ச்சியொன்று அண்மையில் மாதம்பை குளக்கரையில் நடைபெற்றது. அஷ்ஷெய்க் றமிஸ் (இஸ்லாஹி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 50 மாணவர்கள் கலந்து கொண்டதோடு அவர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிகள், போட்டி நிகழ்ச்சிகள் உட்பட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Page 43
ஜம்இய்யத்துத் தலபாவின் கொழும்பு கிளையி னால் கடந்த மே 22ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டியில் மட்டக்குளி ஜம்இய்யா கிளையான கொழும்பு டூஸ்கர் அணி வெற்றிபெற்றது.
11 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டி
கொலன்னாவை உமஜிரியமைதானத்தில் நடைபெற்றது.
கெகுணுகொல்லையில் அமைந்துள்ள இர்பா னிய்யா அரபுக் கல்லூரியின் முதலாம் தர மாணவர்
களை வரவேற்கும்நிகழ்வு 25.05.2011ம்திகதிகல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
"வாழ்வில் முன்னேற எட்டுப் பண்புகள்" என்ற தலைப்பில்நடத்தப்பட்ட இந்நிகழ்வின்வளவாளர்களாக இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத் தலைவர் சகோதரர்முன்ஸிப், அஷ்ஷெய்க்ரிழ்வான்(இஸ்லாஹி), அஷ்ஷெய்க் ஷபா (நளிமி), அஷ்ஷெய்க் ரிஸ்மி (நளிமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது உரைகள், போட்டி நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் அரங்கேற் றப்பட்டன.
 

றுப் 6U7ttg
ஜம்இய்யத்துத் தலபாவின் கம்பளை கிளையி னால் கடந்தமே 17ல் ஏற்பாடுசெய்யப்பட்டமென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டியில் தஸ்கரை ஐம்இய்யா கிளை வெற்றி பெற்றது.
கம்பளை ரீக்கோவத்தை மைதானத்தில் இடம பெற்ற இச்சுற்றுப் போட்டியில் ஐந்து அணிகள் பங்கு பற்றின.
6GIOT GhiggleSITILio fisipi
வடமேல் பிராந்திய அஸாபீர் பிரிவு ஆசிரியர்களுக் கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று அண்மையில் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
இஸ்லாஹிய்யா மாணவர்கள் உட்பட24 பிராந்திய ஊழியர்கள் கலந்து கொண்ட இவ்வழிகாட்டல் நிகழ்ச் சியை அஷ்ஷெய்க் றிழ்வான் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் றமீஸ் (இஸ்லாஹி) ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
வரவேற்பு நிகழ்வு
இஸ்லாஹிய்யா முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகடந்த 2011.05.09ஆம் திகதி முதல் 2011.05.12 ஆம் திகதி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கலை, வர்த்தப் பிரிவில் கற்கும் 74 மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின் வளவாளர்களாக அஷ்ஷெய்க் ஹிழ்வான் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் இர்பான் (இஸ்லாஹி), சகோதரர் அஸ்மி ஆகியோர் பங்குபற்றி "வாழ்வில் முன்னேற எட்டுப் பண்புகள்" என்ற கருப்பொருளில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.
நான்கு நாட்களாக நடைபெற்றஇவ்வரவேற்புநிகழ்ச் சியில் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், களவேலைக ளுடன் போட்டி, கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Page 44
(U9ரதுல் ஹஜராத்தி ஒழுக்க ம
அல்லாஹுத் தஆலா ஸிரதுல் ஹண்ராத்தில் முஃமின்களுக்கு சிறந்த ஒழுக்கப் பண்புகளை கற்றுக் கொடுக்கிறான். தப்ளிர் விரிவுரையாளர்கள் இந்த ஸிராவைஸிரதுல் அஹ்லாக்(ஒழுக்கமாண்புகளைப் பற்றி பேசுகின்றளிரா) என்று அழைக்கின்றனர்.
அல்லாஹரத் தஅபூலா முஃமின்களுக்கு கற்றுக் கொடுக்கின்ற ஒழுக்கப் பண்புகள் பின்வருமாறு:
01. ஒரு விடயத்தை அல்லது ஒரு செயலை அல்லாஹற் வுக்கும் அவனுடைய தூதருக்கும் மத்தியல் செயற் படுத்துவதற்கு முந்தாதீர்கள். வாழ்வின் அர்த்தங்கள்
ஒரு தாயிடம் வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால், “வாழ்க்கை என்பது எனது குழந்தையின் புன்னகை” என்பாள்.
ஒரு தேனியி 够,,号 娜 球,● என்ன என்று கேட்டால், அது “பூவும் தேனும்தான்" என்று கூறும்.
மழையிடம் வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்டால், அது “என்னுடைய
வரண்டபூமி” எனப்பதிலளிக்கும்.
ஆரியனிடம் வாழ்க்கை என்றால் என்ன
என்று கேட்டால், அது “என்னை எதிர்பார்த்திருக்கும் இருள்” எனச் சொல்லும்.
இவ் ல்லாஹ் ஒவ் d5 ப்யினத்தையும் ஒரு நோக்கத்திற்காகப் த்திருப் நாம் காண்கிறோம்.
în afarrasi க்கவில்
சக்தி மிகவும் விசாலமானது. அவனுடைய
அல்முஜ்தமஃவிலிருந்து எம்.எஸ். ஸ்வறி, அன்வாருல் உலூம் அ.க
 
 

lâ 6(OUI” ()(ICII
IGoIL56
O2.
O3.
இப்னு அப்பாஸ்டூழி) அவர்கள் “அல்லாஹற்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மத்தியில் முந்தாதீர்கள்" என்ற வசனத்திற்கு “குர்ஆன் ஹதீஸுக்கு மாற்ற மான ஒன்றைக் கூறாதீர்கள்” எனப் பொருள் கூறுகின்றார்கள்.
கெட்டவர் ஒரு செய்தியைச் சொன்னால் தீர விசா ரித்து முடிவு எடுத்தல்.
முஃமினான இருகூட்டத்தாருக்கிடையில் கலவரம் ஏற்பட்டால் அவர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைத்தல்.
O4. ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப்பரிகாசம்
O5.
O6.
O7.
O8.
செய்யக் கூடாது. பல்வேறு மோசமான விளைவு கள் ஏற்பட பரிகாசம் காரணமாக அமைந்து விடுகிறது. எனவே பரிகாசத்தைவிட்டும் ஒவ்வொரு முஸ்லிமும் தவிர்ந்திருக்க வேண்டும்.
பெண்கள் மற்றைய பெண்களை பரிகாசம் செய்யக் கூடாது. ஏனெனில், பரிகாசம் செய்யப்பட்ட பெண்கள் பரிகாசம் செய்த பெண்களை விட சிறந்தவர்களாய் இருக்கக் கூடும்.
மற்றவர்களை குறைகூற வேண்டாம். குறை கூறுபவர்கள் பற்றி அல்லாஹற்இப்படிக் கூறுகிறான். “பிறரைக் குறை கூறி புறம் பேசித்திரியும் ஒவ்வொ ருவருக்கும் கேடுதான்.” (O4)
ஒருவனை பட்டப் பெயர் கொண்டு அழைக்க
தப்பெண்ணம் கொள்வது கூடாது.
. மற்றவர்களுடைய குறைகளைத் துருவித் துருவி
eUnTu u G366dior TL.b.
மற்றவர்களைப் பற்றி புறம் பேச வேண்டாம். புறம் பேசுவது இறந்த மனிதனின் மாமிசத்தை சாப்பிடு வது போன்றதாகும்.
ഗ്രഖ്യbഥl. ജആര്, சிறாஜிய்யா அரபுக் கல்லூரி.

Page 45
சிந்தனைக்கு விருந்து
அச்சிட்ட குர்ஆன் எதையும் சாதித்துவிடாது. அது ஒரு மனிதனாக மாறும் வரை.
- வமளலானா வமளதுரதி (ரஹ்)
வானிலிருந்து இறக்கப்பட்ட நீரைக் கொண்டு மனித மேனி தூய்மையடைகின்றது. ஏன் வானிலிருந்து இறக்கப்பட்ட வஹறியைக் கொண்டு மனித உள்ளங்கள் தூய்மையடைவதில்லை? - இப்னுகளிர் (ரஹ்)
நிலவில்லாத ஓரிரவின் நடுவில் கருமை நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் எறும்பைவிடப் புலப்படாத ஒன்றுதான் முகஸ்துதி - இப்னு அப்பாஸ்(ரழி)
கோனலான கம்பத்தை நட்டி நேரான விம்பத்தை எப்படிப்பெறநினைக்கலாம்? - இமாம்கஸ்ஸாலி(ரஹ்)
தொழுகை என்பது ஆன்மிகக் குளியலறை, குளிய
லறையில் உடலைக் கழுவுவது போல் தொழுகையில் ஆன்மாகழுவப்படுகிறது.
- செய்யித் குதுப் அஷ்ஷஹீத் (ரஹ்)
துெ கடினம், எது எளிது?
எளிது;மற்றவர்களின் குறைகளைக் காண்பது.
கடினம்:தன்னிடமுள்ள குறைகளைஉணர்வது.
எளிது:ஆத்திரத்தில்வார்த்தைகளைவிடுவது.
கடினம்:ஆத்திரத்தில்நாவை அடக்குவது.
எளிது;மற்றவர்களின்தவறைமன்னிப்பது.
கடினம்; மற்றவர்களிடம்மன்னிப்புக் கேட்பது.
எளிது:வெற்றியைகொண்டாடுவது.
கடினம்: தோல்வியை வயருந்தன்மையுடன்ஏற்பது.
எளிது; முன்னேற்றத்தின்வழிகளையோப்பது.
கடினம்: யோசனைகளை செயல்படுத்துவது
- நுவுறா நளிர், புத்தளம் -
 
 
 
 

உங்கள் விடைகளை ஜூன் 25ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவையுங்கள்.
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா- ரஜப் 1432

Page 46
obOPáfiu GlobOTILL
அஷ்ஷெய்க் ஏ.ஸி. அ
பிரதிப் பணிப்பாளர்
கருப்பொருள் இரண்டு சொற்றொடர்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று இலட்சிய வாழ்வு. அடுத்தது இஸ்லாமிய இலக்கியம். முதலில் இலட்சிய வாழ்வு குறித்து நோக்குவோம்.
இலடீசிய வாழ்வு ஒரு விளக்கம்
எப்படியும் வாழலாகாது; இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வாழுகின்ற, வாழ விரும் புகின்ற மனிதனையே நாம் இலட்சியவாதி என்போம். அவரது வாழ்வு இலட்சிய வாழ்வாக மதிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதாயின் உலகம், வாழ்வு, மனிதன் பற்றிய தெளிவான பார்வையைப் பெற்று அந்த அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொண்ட மனிதனே இலட்சியவாதி. அவனது வாழ்வே இலட்சிய
வாழ்க்கை.
மனிதர்களை மூன்று வகைப்படுத்தலாம். ஒரு சாரார் உண்பதற்காகவும் பருகுவதற்காகவும் சிற்றின்பங்களை அனுபவிப்பதற்காகவும் வாழ்பவர்கள். இவர்கள் அறிவீ னர்கள். மற்றொரு சாரார் வாழ்வதற்காக உண்பவர்கள், பருகுபவர்கள். இவர்கள் புத்திசாலிகள். ஆயினும், இவர்க ளும் தாம் எதற்காக வாழ்கிறோம் என்பதனை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் அல்லர். மூன்றாவது சாரார்வாழ் வதற்காக உண்பவர்கள்,பருகுபவர்கள். மட்டுமன்றி, ஏன் வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம் என்பதனையும் அறிந்து அதன் அடிப்படையில் வாழ்பவர்கள். இவர்களே இலட்சியவாதிகள். தமது வாழ்வை அர்த்தமுள்ள வாழ் வாக, இலட்சிய வாழ்வாக அமைத்துக் கொண்டவர்கள்.
பிரபஞ்சம், வாழ்வு, மனிதன் பற்றிய தெளிவுள்ளவர் களே இலட்சியவாதிகளாக இருப்பார்கள். இவை பற்றிய தெளிவற்றவர்கள் பெரும் குழப்பத்தில் இருப்பர். இவர் கள் இலட்சியவாதிகளாக, பிறரை இலட்சிய வாழ்வுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள்.
புலம்பெயர் இலக்கியம் படைத்த அறபு கிறிஸ்தவ கவிஞரான ஈலியா அபூமாழியின் புலம்பலைக் கேளுங்
அல்ஹஸனாத் ஜூன் 2011 44 || −- ஜு, அல்ஆகிரா - ரஜப் 1432
 

Iណ្ណថារិយា I gobbuffiduò
கார் முஹம்மத் (ருளிமி)
ஜாமிஜபூ நளிமிய்யா
கள். அவருடைய ஒரு கவிதையின் தலைப்பு "எனக்குத் தெரியாது” என்பதாகும். இந்தக் கவிதையின் தமிழ் வடிவம் இதுதான்.
“எனக்குத் தெரியாது
நான் வந்தேன்
எங்கிருந்து என்பது எனக்குத் தெரியாது
ஆனாலும் வந்தேன்.
என் முன்னால் ஒரு பாதையைக் கண்டேன் அதில் நடக்கலானேன்
நான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நான் நடந்து கொண்டே இருப்பேன்.
எப்படி வந்தேன்? எனது பாதையை எப்படிக் கண்டேன்? எனக்குத் தெரியாது.
இந்த உலகில் நான் புதியவனா? அல்லது பழையவனா?
நான் சுதந்திரமானவனா? அல்லது விலங்குகள் இடப்பட்ட கைதியா? எனது வாழ்வில் என்னை நான் ஒட்டுகிறேனா? அல்லது நான் ஒட்டப்படுகின்றேனா? இவற்றையெல்லாம் தெரிய வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன் ஆனால் இவை ஒன்றும் எனக்குத் தெரியாது.
எனது பாதை அது நீளமானதா? அல்லது குறுகியதா? இதில் நான் ஏறுகின்றேனா? அல்லது இறங்குகின்றேனா?

Page 47
அல்லது சுரிவாங்கப்படுகின்றேனா? நான் பாதையில் செல்கிறேனா? அல்லதுநானும் பாதையும் நிற்க காலம்தான் ஓடுகிறதா? எனக்குத் தெரியாது.
நான் ஒரு மனிதனாக மாறுவதற்கு முன் எதுவாகவும் இருக்கவில்லைவியா?
அல்லது ஏதாவது ஒன்றாக இருந்தேனா? இந்தப் புதிருக்கு பதிலுண்டா? அல்லது இது என்றும் புதிராகவே இருக்குமா? எனக்குத் தெரியாது.
ஏன் எனக்குத் தெரியாது? அதுவும் எனக்குத் தெரியாது.”
இவ்வாறு நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், நான் எங்கு செல்வேன், நான் இங்கு என்ன செய்ய வேண்டும் என்ற மனித வாழ்க்கையோடு தொடர்பான அடிப்படை வினாக்களுக்குவிடைதெரியாமல்தடுமாறும் எத்தனையோ அறிஞர்களை, கலைஞர்களை, கவிஞர்களை, இலக்கிய வாதிகளைப் பார்க்கிறோம். இத்தகையோர் இலட்சிய வாதிகளாகவோ இலட்சிய வாழ்வுக்கு வழிகாட்டுபவர் களாகவோ திகழ மாட்டார்கள்.
இலக்கியமும் இலடீசியமும்
பொதுவாக இலக்கியம் என்றால் கலை அழகுடன் அழகுணர்ச்சி ததும்ப எழுதப்பட்டவற்றைக் குறிக்கும் என்பார்கள். இந்த வகையில் இஸ்லாமிய இலக்கியம் என் பது இஸ்லாமிய வரையறைகளையும் நெறிமுறைகளையும் பேணி அது சொல்லும் ஆன்மிக, தார்மிக, ஒழுக்க, பண் பாட்டு விழுமியங்களைக் கவனத்திற் கொண்டு உலகம், வாழ்வு, மனிதன் பற்றிய இஸ்லாமிய நோக்கை கலை உணர்வு ததும்ப, தாக்கம் மிக்க வகையில் எழுதப்பட்ட வற்றைக் குறிக்கும் என்று சொல்லலாம். முதலில் இலட் சிய வாழ்வுக்கும் இஸ்லாமிய இலக்கியத்திற்குமிடை யிலான தொடர்பு புரியப்படல் வேண்டும்.
மனிதர்கள் வளமாக வாழ்வதற்குத் துணை புரிவதே இலக்கியம் ஆகும். இலக்கியம் என்ற சொல்லே இவ்வுண் மையை விளக்குகின்றது. இலக்கை காட்டுவது இலக்கியம் மனிதர்கள் எந்த இலக்கை நோக்கி எத்திசையில் பயணிக்க வேண்டும் என்பதைச் சொல்வது இலக்கியம். சிலர் இலக் கியம் என்பதை இலட்சியம் என்பர். மற்றும் சிலர் இலக் கியம் என்ற சொல்லை இலக்கு+இயம் என்று பிரித்து நோக்குவர். சுருங்கக் கூறின், வாழ்வின் இலட்சியத்தைக் காட்டுவது இலக்கியம் ஆகும்.
எனவே, இலட்சியமற்ற படைப்பு இலக்கியம் ஆகாது. எவ்வளவுதான் இனிய செற்றொடர்களைக் கொண்டிருந் தாலும் நல்ல குறிக்கோள்களைக் கொண்டிராத ஆக்கங் கள் உயர் இலக்கியப் படைப்புக்களாக கருதப்படுவ

தில்லை. இது பற்றி அல்லாமா இக்பாலின் பின்வரும் கருத்துக்கள் சிந்தனைக்குரியவை.
"இலட்சியமற்ற கவிதை உயிரற்றது. அதன் வேகம் அணையும் நெருப்பை ஒத்தது. சிறந்த கலைஞன் இயற்கையைப் பயன்படுத்தி தன் இலட்சியத்தை வெளியிடுகிறான்; புது உலகைப்படைக்கின்றான்; புத்து ணர்ச்சி ஊட்டுகின்றான்.
பொருளின் யதார்த்த நிலையை உணராத கலைகலை யன்று. நித்திய வாழ்வு பெறுவதே அனைத்துக்கலைகளின தும் இறுதி இலட்சியமாகும் மூஸாவின் அற்புத ஊன்று கோலின்சக்தியற்றகலைபயனற்றகலையாகும் கலையின் இலட்சியம் மனிதனின் ஆளுமையைக் கட்டியெழுப்பு வதாகும். வாழ்வினை அலங்களிக்காத, அதற்கு இலட் சியம் ஒன்றை வழங்காத கலை கலையன்று."
இலக்கியத்திற்கும் இலட்சியவாழ்வுக்குஇடையிலான தொடர்பை டாக்டர் இலக்குவனார் பின்வருமாறு அருமையாக விளக்குகிறார்:
"இலக்கியத்தின் பொருள் வாழ்வு வாழ்வின் பொருள் இலக்கியம். குறிக்கோளை இயம்புதல் இலக்கியமாகும். வாழ்வின் ஓவியம் இலக்கியமாகும்." 'கலை கலைக்காக" எனும் கொள்கை பொருத்தமான தல்ல. பொழுதுபோக்கிற்காகவும் மக்கள் படித்துச்சுவைப் பதற்காகவுமே இலக்கியம் படைக்கப்பட வேண்டும்; இலக்கியம் என்பது சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். அது எத்தகைய ஆபாசங்களாக இருந்தாலும் சரி, ஒழுக்கக்கேடான நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி. உள்ளதை உள்ளவாறு எடுத்துச் சொல்வதே இலக்கியம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இத்தகையவர்கள் ஆபாசத்திற்கும் அசிங்கத்திற்கும் யதார்த்த இலக்கியம் என்று பெயரும் சூட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு கவிஞனுடைய எழுத்தாளனுடைய aы — 6ошо еурцமறைப்பதல்ல; யதார்த்தமாக உள்ளதை உள்ளவாறு அப் படியே பிரதிபலிப்பதாகும் என்றும் இவர்கள் வாதிடுகி றார்கள். இலக்கியத்தில் உருவம்தான் முக்கியம்; உள்ள டக்கம் அல்ல என்பதும் இவர்களது வாதம். உண்மை யில் இத்தகையோரது எழுத்துக்கள் இலட்சிய வாழ்விற்கு வழியமைப்பதற்குப் பகரமாக மனித சமூகத்தை குட்டிச் சுவராக்குபவையாகவே இருக்கும். அல்லாமா இக்பாலு டைய ஒரு கருத்து இங்கு மேற்கோள்காட்டத்தக்கதாகும். "ஓர் ஒழுக்கங்கெட்ட இலக்கியவாதியினால் சமூகத் திற்கு ஏற்படுகின்ற பேரழிவு ஜெங்கிஸ்கானின் இராணு வத்தால் ஏற்பட்டபேரழிவைவிடப்பயங்கரமானதாகும்." காலத்தால் அழியாத உலகம் போற்றும்இலக்கியங்கள் எல்லாம் மனித வாழ்விற்கு வழிகாட்டிய இலக்கியங்க ளாகும். சங்க இலக்கியங்களில் சிறப்புற்று விளங்கும் புற நானூறை எடுத்துக் கொள்வேம். அதன் பாடல்களிலே அரசியல் முறைகளும் அரசியல் நீதிகளும் சொல்லப்பட் டுள்ளன. மக்கள்வாழவழிகாட்டும்அறிவுரைகளும் சொல் லப்பட்டுள்ளன. அதில் மக்கள் சமுதாயம் ஒன்றுபட்டு
அல்ஹனைத் ஜூன் 2011
一二一匣 gr. eleibegága - gegü 1432

Page 48
இன்பமாக வாழ்வதற்கு வழிகூறும் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
திருக்குறள் கூறும் அறங்கள் பல மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டுபவை. மனித வாழ்விற்குத் தேவையான அரிய கருத்துக்களைச் சொல்வதனால்தான் திருக்குறள் உலகம் போற்றும் இலக்கியமாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகார மும் நல்ல கருத்துக்களை முன்வைக்கும் ஓர் இலக்கியப் படைப்பாகும்.
உலகில் வாழும் மக்கள் பட்டினி கிடத்தல் கூடாது; எல்லா மக்களும் உணவுண்டு இன்புற்று வாழ வேண்டும். அறங்களிலே சிறந்தது பசியால் வாடுவோருக்கு உணவ ளித்துப் பாதுகாப்பதுதான். இக்கொள்கையை வலியுறுத்து கிறது.மணிமேகலை கம்பராமாயணத்தின்மூலக்கொள்கை "அறம் வெல்லும்; பாவம் தோல்வி காணும்” என்பதாகும். மேலே நான் உதாரணங்களாகக் குறிப்பிட்ட இலக்கி யங்கள் சமண மத பெளத்த மத, இந்து மத இலக்கியங்க ளாகும். இவற்றில் இடம்பெற்றுள்ள கருத்துக்களோடு முழுமையான உடன்பாடு இல்லாதபோதும் பொது வான மனித விழுமியங்களைச் சுமந்திருக்கின்றன.
இலக்கைக் காட்டுவதே இலக்கியம். குறிக்கோளைக் கொண்டிராத எழுத்துக்கள் இலக்கியங்களல்ல. குறிக் கோள்களும் நல்லனவாக, மக்களுடைய வாழ்க்கைக்கு துணைசெய்யக் கூடியனவாக இருக்க வேண்டும்.
இனி, இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம் வழிகாட்டும் பாங்கு குறித்து நோக்குவோம்.
இலக்கியம் இலட்சியத்தோடு படைக்கப்பட வேண் டும் எனும் கருத்தை இஸ்லாம் அதிகம் வலிறுத்துகிறது. அல்குர்ஆன் 'கவிஞர்கள்" என்ற தலைப்பிலான அத்தியா யத்தில் இலட்சியமற்ற கவிஞர்களை எவ்வித நோக்கமும் இல்லாமல் வெறும் சொற்களை வைத்து விளையாடுகின்ற கவிஞர்களைக் கண்டிக்கிறது.
"நபியே! இந்தக் கவிஞர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கி லும் தட்டுத் தடுமாறித் திரிவதை நீங்கள் பார்க்கவில் லையா? மேலும் அவர்கள் தாம் செய்யாததையே சொல் கின்றனர்." (26: 225, 226)
எனவே, இலக்கியம் என்பது இலட்சியத்தோடு கூடி யதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
இம்ரஉல் கைஸ் என்றொரு கவிஞன் இருந்தான். இவன் இஸ்லாத்திற்கு முந்தியஜாஹிலிய்யக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிஞன். அழகிய அறபு நடையில் சிறப்பான கவிதை களைப் புனைந்தவன். ஆனால், அவனது கவிதைகளிலே ஆபாசமும் விரசமும் கொட்டிக் கிடந்தன. இதனால்தான் இம்ரஉல் கைஸ் பற்றி உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்களிடம் வினவப்பட்டபோது அவர்கள் பின்வரு
மாறு பதிலளித்தார்கள்.
"அவன் கவிஞர்களுக்கெல்லாம் பெரும் கவிஞன்.
அல்ஹஸனாத் ஜூன் 2011
46 ஜு. அல்ஆகிரா- ரஜப் 1432
 

ஆனால் மக்களைநரகத்திற்கு அழைத்துச்சென்றதலைவன்.” இலடீசிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்
தூய இஸ்லாமிய இலக்கியமே இலட்சிய வாழ்வுக்கு துணைபுரிய வல்லது. ஒருமுஸ்லிமின்படைப்பு என்ற ஒரே காரணத்தினால் ஓர் இலக்கியம் இஸ்லாமிய இலக்கியமா காது. அதாவது, முஸ்லிம் இலக்கியங்கள் எல்லாம் இஸ் லாமிய இலக்கியங்களாக அமையும் என்பதில்லை. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் பேர்தாங்கிகள் படைத்த எத்தனையோஇலக்கியங்கள்ஜாஹிலிய்ய எழுத்துக்களாக இருப்பதைக் காணலாம். சல்மான்ருஷ்தி, தஸ்லிமாநஸ்ரின் போன்றவர்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். உலகப் புகழ்பெற்ற அறபு இலக்கிய மேதைகளான நஜீப் மஹ்பூள், தாஹாஹ"ஸைன் போன்றோரின் எழுத்துக்களில் பெரும் பகுதி இஸ்லாமிய இலக்கியமாகக் கொள்ளத்தக்கவையல்ல.
இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி ஒரு பிழையான அபிப்பிராயம் நிலவுகிறது. இஸ்லாமிய இலக்கியம் என்றால் அது இஸ்லாம் பற்றியும் அதன் நம்பிக்கைகள், கிரியைகள், வணக்க வழிபாடுகள், சட்ட திட்டங்கள் முதலானவை பற்றியும் முஸ்லிம் ஆளுமைகள், வரலாற் றுப்புருஷர்கள் போன்றோர் பற்றியும் மாத்திரமே பேசும் என சிலர் நினைக்கின்றனர். இது உண்மையல்ல.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நின்று உலகம் வாழ்வு மனிதன் பற்றி கலையழகுடன் அழகுணர்ச்சி ததும்ப எழுதப்பட்ட எல்லா ஆக்கங்களும் இஸ்லாமிய இலக்கி யங்கள் என்ற வட்டத்திற்குள் உள்ளடங்கும்.
எனவே, ஓர் இஸ்லாமிய இலக்கியவாதி ஆடும் மயி லையும் குதிக்கும் மானையும் பாய்ந்தோடும் அருவியை யும் பற்றிப் பேசுவார்; காலைக் காட்சியையும் மாலை மாட்சிமையையும் பற்றிப்பாடுவார்; அவர்தான் படைக் கும் இலக்கியத்தில் இயற்கையைப் படம்பிடித்துக் காட் டுவார்; காலத்தின் கோலங்கள் பற்றி, மனித வாழ்வின் போராட்டங்கள் பற்றி பேசுவார்; ஒரு வரலாற்றுநாயகனை வைத்து நாவல்படைப்பார். இவை பற்றியெல்லாம் பேசும் அவருடைய ஆக்கங்கள் இஸ்லாமிய இலக்கியம் என்ற வட்டத்துக்குள் வரும். ஒரேயொரு நிபந்தனை மாத்திரம் பேணப்பட வேண்டும். அவரிடம் சீரிய இஸ்லாமிய நோக்கு இருத்தல் வேண்டும். அவரது கருத்துக்களும் எழுத்துக்களும் அந்நோக்கினடியாய் பிறந்திருக்க வேண்டும்.
மறுபக்கத்தில் ஒரு படைப்பாளி நபியைப் பற்றி அல் லது நபியுடைய ஒரு போராட்டத்தைப் பற்றி அல்லது ஒர் அடிப்படை மார்க்க நம்பிக்கையைப் பற்றிப் பேசு வார். ஆனால், அவரிடம் மேற்குறிப்பிட்ட இஸ்லாமியப் பார்வையும் கண்ணோட்டமும் இல்லாதபோது அவரது படைப்பு ஒர் இஸ்லாமிய இலக்கியமாக கொள்ளப்பட LDITL'll-nigi.
(மீதி அடுத்த இதழில்)

Page 49
இஸ்லாத்தில் கோளாறு எங்கே? அள்ளித்தரும் வாழ்வின்
அலங்கரிக்கும்மு சுமந்
*பிக்ஹ் ஹதீள்
GUITđfLIÑ: 669ë
ona)
நாம் யார்? நமது அடையாளம் என்ன இன்று எமது சமூகம் திசையறியாது ந பொறுப்பு?
ஆம், பதில் சொல்கிறது *கோளாறு எங்கே?” முஸ்லிம் சமூகத்தில் கரிசனையுள்ள ஒ
鲁
இஸ்லாமிக் புக் ஹவுin கிடைக்கு 77, தெமடகொடவீதி, கொழும்பு - 09
tfoDLDuóbč5IÍ (85o6)
தோட வேலை, Ceaning வேலைக்கு ஆள் தேவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6ն՝6Tմիայլի
தாராள சிந்தனையை ஓர் அற்புதமான நூல். சகல அம்சங்களையும் த்தான கருத்துக்களைச் துவெளிவந்திருக்கிறது! துறையினருக்கும் துறையினருக்கும் நளாரின்ஸன்ைனரி முஹம்மத் அல்கஸ்ஸாலி
3OOOO
வரலாற்றில் நாம் ஈட்டிய சாதனைகள் என்ன? ட்டாற்றில் தத்தளிப்பது போன்ற அவல நிலைக்கு யார்
}வ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல்
த ரீடர்புக் ஷொப் 5, ஸ்மித் லேன், மீரானியா ஸ்ரீட், கொழும்பு- 2
We are interested in your SUCCESS because It means or STRATEGY is Effective
Certificate innternet & E-mail
Course Drain 8hrs C.'s Fe3S 1000
Forex Trading(Foreign Exchange Trading) 8 MT4 platform Ke How to Trading with the help of Signais, indicators.
Course Duration (10hrs) €.'
توجہ جو
Online Data Entry job Training Reserve your Seats Office Packages for FREE introductory ik Web Designing seminar. Internet Money i'r Accounting
Co-soo (20hrs}3.5: o 250Y) LLLLLL LLLLLLLGL LLL LLLLLLLL0 LLLLLLLLL No 4 11, Vandevert Pace, Dehiwalia, Srianka.
2 0 1 1 7 30383) i Wlobo: O 7 1 8 348 i 9 (
e-maitrotherinstitute signai.com

Page 50
பண்பாடு
அருளாளனின் இபாதுர்
இறையருளை யாசிக்கும் அருளாளனின் அடியார் களிடம் இருக்கக் கூடாத எதிர்மறைப் பண்புகளுள் இரண்டாம் பண்பாக அல்குர்ஆன் விபசாரத்தைப் பற்றிப் பேசுகிறது.
*அருளாளனின் அடியார்கள் அல்லாஹ் ஹராமாக்கிய எந்தவோர் உயிரையும் அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள். விபசாரத்தில் ஈடுபடவும் மாட்டார்கள். எவன் இவற்றைச் செய்கிறானோ அதற்குரிய விளைவை அவன் கண்டு கொள்வான். மறுமை நாளில் அவன் வேத னையை இரட்டிப்பாக அடைவான். மேலும் இழிவடைந் தவனாக நரகில் நிரந்தரமாக இருப்பான்."
(ஸ9ரதுல் புர்கான்: 88,69)
இஸ்லாம், மார்க்கத்தை இணைவைப்பை விட்டும் பாதுகாத்துள்ளது; உயிரை கொலையை விட்டும் பாது காத்துள்ளது; மானத்தை விபசாரத்தை விட்டும் பாதுகாத் துள்ளது. அருளாளனின் அடியார்கள் விபசாரத்தின்பால் இட்டுச்செல்லும் அம்சங்கள் அனைத்திலிருந்தும் விலகி யிருப்பார்கள். அல்லாஹ் கூறுகின்றான்:
"நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம்."
(அல்இஸ்ரா; 32) எனவேதான்இஸ்லாம் அந்நியப் பெண்களோடு தனித் திருப்பதை பழகுவதைதடுத்திருக்கிறது; இச்சையுடனான பார்வையை ஹராமாக்கியுள்ளது; வெளியலங்காரத்தை தபர்ருஜ்) தடுத்துள்ளது. இவ்வாறு பாவத்தை நோக்கிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் இஸ்லாம் தடுத் துள்ளது. விபசாரத்தின்துதுவன் பார்வை. பார்வை, புன் னகை ஸலாம், பேச்சு நேரம் குறித்த சந்திப்பு விபசாரம் "நபியே! முஃமின்களுக்கு தங்களது பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுமாறும் தங்களது மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கூறுவீராக! அதுவே அவர் களுக்குத் தூய்மையானதாகும். நிச்சயமாக அல்லாஹ் இவர்கள் செய்பவற்றை மிகவும் அறிந்தவனாக இருக்கி றான். நபியே! முஃமினான பெண்களுக்கு தமது பார்வை களைதாழ்த்திக்கொள்ளுமாறும் தமது மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் வெளித்தோற்றத்தைத் தவிர வேறு எந்த அலங்காரத்தையும் வெளிப்படுத்த வேண் டாம் எனவும் தமது நெஞ்சுப்பகுதியை முந்தானையால் மறைத்துக் கொள்ளுமாறும் கூறுவீராக."
(அல்முஃமினூன்: 31) "திருமணம் முடிக்கவசதியற்றோரை அல்லாஹ்தனது மேன்மையைக் கொண்டு வசதியுடையோராக மாற்றும் வரையில் அவர்கள் தமது கற்பைப் பேணிக் கொள்ளட் டும்." (sigfi: 33)
அல்ஹலனாத் ஜூன் 2011
48 து. அல்ஆகிரா - ரஜப் 1432

т еgшпіїa56ії
O O ரஹமான
மிழ்ச்சுருக்கம்: அஷ்கர் அரூஸ் (நளிமி)
எனவே, இஸ்லாம் விபசாரத்தை தடுப்பதற்கு முன்னர் அதன்பால் தூண்டக்கூடிய எல்லாக் காரணிகளையும் தடுத்திருக்கிறது. சமூக சூழலை பாவத்தை விட்டும் வில கிய சூழலாக மாற்ற முயற்சிக்கிறது. ஆரோக்கியமான சூழலில் இத்தகைய துர்நடத்தையில் ஈடுபடும்போதே அவன் மீது தண்டனை விதியாகிறது.
இஸ்லாம் விபசாரத்தைத் தடுத்திருப்பது 'மனித நலன்' கருதியே. இல்லையெனில், மனிதன் தனது மனோ இச் சைக்கு அடிமைப்பட்டவனாக மாறுவான்; மிருகத்தைப் போன்று வாழ்வான். மறுபுறத்தில் பெயர் தெரியாத அசுத் தமான சந்ததிகள் தோன்றும். இதனால் மனித சந்ததியே தூய்மையற்றுப் போகும். ஈமான் என்பது ஒரு முஃமினை இப்பாவச்செயலை விட்டும் பாதுகாக்கப் போதுமானது. ஈமான் என்ற ஆடையை அணிந்தவன் ஒருபோதும் இப் பாவச் செயலில் ஈடுபட மாட்டான்.
“விபசாரகன் விபசாரத்தில் ஈடுபடும்போது முஃமினாக இருக்க மாட்டான்." (முஸ்லிம்)
காரணம், விபசாரம் ஈமானைப் பறித்து விடும்; ஈமான் எனும் ஆடையைக் களைந்து விடும்.
எனவே, ஒரு முஃமின் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டான். மிருகத்தனமாக உலகில் வாழ மாட்டான். சிந்தித்து செயற்படுவான். இன்று ஒருவன் ஈமானோடு வாழ்வது மிகவும் சிரமமாகக் காணப்படுகிறது. பாவத்தை தூண்டக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள், சமூக சூழல்கள், நண்பர்கள் எனதுண்டற் காரணிகள் மலிந்து காணப்படுகின்றன. இன்று "பாலியல் தொழிலாக மாறி விட்டது. குறிப்பாக வளர்முக நாடுகளில் திட்டமிட்டு இத்தகைய தொழில்கள் நுழைக்கப்பட்டுள்ளன. சமூக சீரழிவுக்கு அடிப்படைக் காரணமாக விபசாரம் காணப் படுகிறது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
இஸ்லாம் மனிதனின் பாலியல் உணர்வை மதிக்கின் றது. ஆனால், அதனை விரும்பிய வகையில் நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்கவில்லை. இத்தகைய அனுமதியால் தான் இன்று மேற்குலகில் படுபயங்கர நோய்கள் (உதா ரணமாக எய்ட்ஸ்) பரவியிருப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறே, இஸ்லாம் மனிதனின் பாலியல் உணர்வை அடக்கிக்கொள்ளுமாறும் ஒருபோதும் குறிப்பிடவில்லை. மாறாக, ஆகுமான வழிமுறையில் அதனைத் தீர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றது. இதற்கு திருமணத்தை இஸ்லாம் தூண்டுகிறது.

Page 51
எனவே, இஸ்லாம் அங்கீகரிக்காத ஒரு வழிமுறையி னுரடாக (விபசாரம்) ஒரு முஸ்லிம் தனது பாலியல் உணர் வைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. விபசாரம் ஒரு சமூகத்தில் பரவிவிட்டால் அங்கே இறைதண்டனை விதியாகும் என்பதை நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களின் பின்வரும் ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது:
“முஹாஜிர்களே! ஐந்து பண்புகளை நீங்கள் பெற்றுக் கொள்வதை விட்டும் அல்லாஹற்விடம் பாதுகாப்புத் தேடுகி றேன். அவற்றை அடைந்து விட்டால் நீங்கள் சோதிக்கப்படு வீர்கள். (அவற்றில்ஒன்று)எந்தவொருசமூகத்தில்துர்நடத்தை பகிரங்கமாகப்பரவுகிறதோ அவர்களில் நோய்பரவும். அவர் கள் முன்னைய சமூகம் கண்டிராத நோய்களையெல்லாம் சந்திப்பார்கள்.” (இப்னு மாஜா)
இந்தத்துர்நடத்தை வரலாறு நெடுகிலும் ஆங்காங்கே நடைபெற்று வந்தாலும் அது எப்போது பகிரங்கமாக நடைபெறுகிறதோ, மக்கள் அதனைத் தடுக்காதிருக்கின் றனரோ, அதனைப் பாவமாகக் கருதாமல் சர்வ சாதார ணமாகச்செய்கிறார்களோ அப்பொழுது அங்கே நோய்கள் பரவும். இன்று சட்டபூர்வமற்ற பாலியல் தொடர்பால் இருபத்தெட்டு வகையாக நோய்கள் உருவாகின்றன என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“விபசாரக் குழந்தைகள் அதிகரிக்காத காலமெல்லாம் எனது சமூகம் நன்மையின்பால் இருக்கும். எப்போது விபசாரக் குழந்தை பெருகுகிறதோ அப்போது அல்லாஹற் தனது தண்டனையை பொதுப்படையாக ஏற்படுத்துவான்.” (அஹற்மத்) இன்று சர்வதேச உலகில் 'பாலியல் சுதந்திரம், காதல் சுதந்திரம்'வழங்கியுள்ளநாடுகளிலே அதிக தற்கொலைகள் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பராமரிப்பற்ற குழந்தைகள்சமூகத்திற்கு சுமையாக சமூகவிரோதச்செயல் களுக்கான சாதனமாக இன்று பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு கட்டுப்பாடற்ற சுதந்திரமும் விபசாரமும் பெரிதும் துணைநிற்கின்றன. எனவேதான், இஸ்லாம் விபசாரத்திற்கு மாற்றீடாக திருமணத்தை வலியுறுத்துகின்றது.
"இளைஞர்களே! உங்களில் சக்திவாய்ந்தவர்திருமணம் முடித்துக் கொள்ளட்டும். அது பார்வையைத் தாழ்த்தும்; மர்மஸ்தானத்தைப் பாதுகாக்கும்.”
(அல்புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அத்திர்மிதி, நஸாஇ)
இந்த வகையில், இஸ்லாம் விபசாரத்தைத் தடுத்து திருமணத்தை ஆகுமாக்கியதனூடாக தனிநபரைப் பாது காக்கிறது; குடும்ப உறவைப் பாதுகாக்கிறது; சமூகத்தைப் பாதுகாக்கிறது. எப்போது ஒரு சமூகத்தில் பண்பாட்டியல் மோசடியும் பொருளாதார மோசடியும் பரவுகிறதோ அவர்கள் அல்லாஹ்வின் தண்டனையை எதிர்பார்க்கட் டும். நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர் கள் கூறுகிறார்கள்:

“எந்தவொரு கிராமத்தில் விபசாரமும் (பண்பாட்டியல் மோசடி) வட்டியும் (பொருளாதார மோசடி) தலைதூக்குகி றதோ அவர்கள் இறைதண்டனையைதமக்கு ஆகுமாக்கிக் கொண்டார்கள்.” (elios DITSB)
G ifଭ ஸ்லிமும்தனது கற் O
னத்தைப் பேணிப் பாதுகாப்பது கட்டாயக் கடமையாகும்
"யார் தனது இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ள நாவை யும் தனது இரு தொடைகளுக்கு மத்தியினுள்ள மர்ம உறுப் பையும் பாதுகாப்பதாக எனக்கு உத்தரவாதமளிக்கிறாரோ நான் அவருக்கு சுவனத்தைத் தருவதாக உத்தரவாதமளிக் கிறேன்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அல்புகாரீ)
"ஒரு பெண் ஐவேளை தொழுது, ரமழான் நோன்பு நோற்று, தனது கற்பைப் பாதுகாத்து, தனது கணவனுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறாளே அவளுக்கு நீ விரும்பிய எந்த வொருவாயிலானும் சுவனத்தில்நுழைவாயாக’ என்று சொல் லப்படும்” என நபி (ஸல்லல்லாஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அஹற்மத், தயரானி)
இன்றைய நவீன ஜாஹிலிய்ய சூழலில் இரகசியமா கவும் பரகசியமாகவும் விபசார விடுதிகள் இயங்கி வரு கின்றன. இஸ்லாம் இவற்றை முழுமையாக ஹராமாக்கி யுள்ளது. எப்பொழுதும் ஒருமுஃமின்ஹலாலையே நாட வேண்டும் எனப் போதிக்கிறது. ஹராத்தில் ஈடுபட நிர்ப் பந்திக்கப்பட்டாலும் இறையச்சம்"அவனில் உயிர்த்தெழ வேண்டும் எனக் கூறுகின்றது. நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்:
“அல்லாஹத் த&ஆலா தனது அர்ஷின் நிழலையன்றி வேறு எந்த நிழலும் இல்லாத அந்த நாளில் ஏழு கூட்டத்தா ருக்கு அர்ஷின் நிழலை வழங்குவான். அழகும் அந்தஸ் தும் மிக்க ஒரு பெண் துர்நடத்தைக்காக அழைக்கும் போது நான் அல்லாஹற்வுக்கு அஞ்சுகிறேன் எனக் கூறி விலகும் மனிதனுக்கு." (அல்புகாரி, முஸ்லிம்)
இவ்வாறே இஸ்லாம் மனித இனத்தின் இயல்புக்கே முரணான, விபசாரத்தை விட மோசமான ஓரினச் சேர்க்கையையும் ஹராமாக்கியுள்ளது. இந்தச் செயலை லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது சமூகம் செய்ததா கவும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதாகவும் கூறிஅல்குர்ஆன்எம்மை எச்சரிக்கிறது.நபி(ஸல்லல்லாஹ அலைஹி வஸல் லம்) அவர்கள் இத்தகைய (ஓரினச் சேர்க்கை) பாவத்தை செய்வோரை சபித்தார்கள். மூன்று முறை திருப்பித்திருப்பி சபித்தார்கள். (நஸாஈ)
இத்தகைய லூத் சமூக குற்றச் செயலை செய்வோர் அதற்கு உட்படுவோர் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என நபி(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (ஆபூதாவூத், அத்திர்மிதி, இப்னு மாஜா, பைஹகி, அல்ஹாகிம்) ஏனெனில், இது விபசாரத்தைவிடக் கொடியது. மனித இயல்புக்கே புற நடையானது.
(50ம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத் ஆன் 2011 ஜு. அல்ஆகிராம ரஜப் 1432

Page 52
உஸாமா (7 ஆம் பக்கத் தொடர்.)
அல்காஇதாவும் அவரது மரணத்தை உறுதி செய்கிறது. ஆனால் அவர்எப்போதுஉயிரிழந்தார்என்டதுதான் கேள்வி அவருக்கு நெருக்கமான தரப்புகளில் சிலர் அவர் இயற்கை மரணம் எய்தினார் என்று தெரிவிக்கின்றனர். அவர் கொலஸ்ரோல் ஈரல் அழற்சி மற்றும் குடல் நோய்க ளால் பாதிக்கப்பட்டிருந்தமை பிரபலமான செய்தி. மே 2ஆம் திகதிக்குப் பின்னர், இது தொடர்பில் தொலைக் காட்சிக்குப் பேட்டியளித்த ஒருவர் தான் உஸாமாவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டிருந்ததையும் உறுதிப்படுத்தினார்.
பாகிஸ்தான் முன்னாள் உளவுத் துறைத் தலைவர் ஹமீத் குல்லும் 2003இல் அவர் இறந்துவிட்டதாக (அல் லது கொல்லப்பட்டு விட்டதாக) தெரிவிக்கிறார்.
அப்படியென்றால் நடந்தவை அனைத்தும் நாடகமா? என்றவினாவுக்கானபதிலைஇப்படிஎளிதாகக்கூறிவிடலாம்: ஒபாமாவின் செல்வாக்கு அமெரிக்காவில் சரிந்து வரு
யாக இது இருக்கலாம்; இதற்கு முன்னர் புஷ் பேரழிவு ஆயுதங்களைக் காட்டி ஈராக்கை தாக்கி தனது இமேஜை உயர்த்தியது போல் அமெரிக்கா இத்தகையதொரு நாட கத்தை நடத்தியிருக்கிறது என்கின்றனர் மே 2தாக்குதலை நிராகரிக்கும் தரப்பினர்.
இருந்தபோதும் உஸாமா மே 2இல்அமெரிக்கதாக்குத லில்தான்இறந்தார்என்பதற்கு வலுவான சாட்சியங்களை அளிப்போர்உஸாமாவின் மனைவிமாரும்பிள்ளைகளுமே எனினும் இவர்களும் சுதந்திரமாக சாட்சியளிக்கும் சூழ லில் இல்லை என்பதால் அந்த சாட்சிகளும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன.
உஸாமாவின் குடும்பத்தினரது சாட்சியம் அல்காஇதா அமைப்பு உலாமாவின் இழப்புக்கு பழிவாங்கப் போவ தாக சூளுரைத்துள்ளமை, மே 2க்குப் பின் பாகிஸ்தான்அமெரிக்கா உறவுகளில் ஏற்பட்டிருக்கும் விரிசல் முதலா னவற்றைக் கருத்திற் கொண்டு மே 2ஆம் திகதிய சம்ப வத்தை ஏற்றுக் கொள்ள முனைந்தாலும், அவற்றுக்கு எதி ராக முன்வைக்கப்படும் குறுக்கு விசாரணைகள் நிச்சயம் சந்தேகத்தையே தோற்றுவிக்கின்றன. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
என்ன விலை 645 ஆம் பக்கத் தொடர்.)
ஏனெனில் அல்குர்ஆன்மூன்று வகையானசகோதரத்து வத்தைப்பற்றிப்பேசுகிறது. ஒன்று, இரத்த வழிச்சகோதரத் துவம் உடன்பிறந்த சகோதரர்கள், தந்தை வழிச்சகோதரர் கள் தாய்வழிச்சகோதரர்கள்இவர்களுள் அடங்குவர் இரண் டாவது கொள்கை வழிச் சகோதரத்துவம் "முஃமின்கள் அனைவரும் சகோதரர்கள்” என்று அல்குர்ஆன் அதனை வர்ணிக்கின்றது. உலகத்தில் யாரெல்லாம் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் நுழைந்தார்களோ அவர்கள் எல் லோரும் ஈமானிய சகோதரர்கள். மூன்றாவது, 'உகுவதுல் வதனிய்யா" எனப்படும் மாற்று மதத்தவர்களுடனான சகோதரத்துவ உறவு. இலங்கையைப் பொறுத்தவரை இங்கு நான்கு இனத்தவர்கள் வாழ்கிறார்கள்; அவர்களுட னான நல்லுறவைப் பேணுதல் இந்த சகோதரத்துவ
அல்ஹஸனாத் ஜூன் 2011
} | m 5C ஒ. அல்ஆகிரா- ரஜப் 1432

அருளாளனின் (49 ஆம் பக்கத் தொடர்.)
அவ்வாறே சிறிய "லிவாத்தை விட்டும் நபி (ஸல்லல் லாஹச் அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம்களை எச்சரிக்கின்றார்கள். "தனது மனைவியின் பின்புறத்தால் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவன்." (அஹ்மத் அபூ தாவூத்) இதுவே சிறிய லிவாத் ஆகும். இவையனைத்தும் (விபசாரம், ஒரு பால் உறவு, சிறிய லிவாத்) தெளிவான ஹராம் என்பதில் இரு கருத்துக்கள் இல்லை.
விபசாரத்தில் கொடியது தனது அண்டை வீட்டான்
ஏனெனில், அண்டை வீட்டானின் உறவு பலமானது; அவ னது கண்ணியம் பேணப்பட் வேண்டும்; உதவிஒத்தாசை கள் செய்ய வேண்டிய அண்டை அயலவருக்கு இத்தகைய இழிசெயலைச் செய்வது மாபெரும் துரோகமாகும்.
அடுத்து திருமணம் முடித்தோர் விபசாரத்தில் ஈடுபடு வதும் மிகப் பெரும் கொடூரமாகும். நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் அல்லாஹ் மூன்று மனிதர்களோடு பேச மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைதுாய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையிருக்கின்றது. 1. விபசாரத்தில் ஈடுபட்ட முதியவர் (திருமணம்
முடித்தவர்) 2. பெய்பேசும் அரசன் 3. பெருமையடிக்கும் ஏழை" (முஸ்லிம்)
இத்தகைய பண்புகளை விட்டும் அருளாளனின் அடி யார்கள்தூய்மையானவர்கள். என்றும் மறுமை சிந்தனை யோடு வாழ்பவர்கள். அல்லாஹ்வுக்காக தம்மை அர்ப் பணித்தவர்கள். மனிதர்களுக்கு அநியாயமிழைக்காதவர்கள். பிறரது மானத்தை சூறையாடாதவர்கள். சுவனத்தை தமது இலட்சியமாகக் கொண்டவர்கள்.
உறவில் உள்ளடங்கும்.
குர்ஆன் ஒவ்வொரு நபியினுடைய உம்மத்தினரைப் பற்றிப் பேசும்போதும் அஹஜூகும்" (உங்களுடைய சகோ தரர்) என்ற வார்த்தையைச் சொல்லியிருக்கிறது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பெளத்தனும் ஹிந்துவும் கிறிஸ்தவனும் நமது சகோதரனைப் போன்றவர். இதனைத் தான் அல்குர்ஆன் 'உகுவ்வதுல் வதனிய்யா' என அடை யாளப்படுத்துகிறது.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! நாம் அனைவரும் ஒரு விடயத்தில் தீர்க்கமான முடிவுக்கு வந்தாக வேண்டும். நாம் இந்த நாட்டில் என்னவிலை கொடுத்தாவது ஒற்றுமை யைக் கட்டியெழுப்புவோம். ஒற்றுமையை நிலைநாட்டு வதற்காக அனைத்தையும் குர்பான் செய்வோம். "உன்னு டைய உறவைத் துண்டித்து நடப்பவனோடு நீ சேர்ந்து நடந்து கொள்; உனக்கு அநியாயமிழைப்பவனை நீமன் னித்துவிடு; உனக்குத் தராதவர்களுக்கெல்லாம் கொடுத் துதவு” என்ற நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களது வழிகாட்டல்களை ஏற்று நடப்போம்.
எமது ஆசைகளையும் அனைத்துத் தேவைகளையும்
அறுத்துப் பலியிட்டு இந்த ஒற்றுமையைக் கட்டியெழுப் புவதற்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

Page 53
பத்தே கிரா
“என்ன பொஸ் நீங்க நிறுக்கிறதப் பார்த்தா அந்தப் பேப்பரையும் திண்டாதான் நான் தார காசுக்கு சரியா கும்” கடையே அதிருமளவு ஒரு குரல் ஒலிக்கிறது. குரல் வந்த திசையின் பக்கம் திரும்பிப்பார்க்கிறேன். கண்களில் பொறி பறக்க தராசை நோக்கிய வண்ணம் ஒரு பெரிய வர் நின்றிருந்தார். அந்தப் பெரியவர் எதற்காக கூச்சலிடு கிறார் என்பதைப் பார்க்கும் ஆவலில் தராசின் மீது நோட்டமிடுகிறேன்.
பெரிதாக ஒன்றுமில்லை, அழகாக சுற்றப்பட்ட சுருள் நிரம்பிய சீனியுடன் இலத்திரனியல் தராசின் மீது அமர்த் தப்பட்டிருந்தது. அதன் நிறையாக 1000 கிராம்களை அத் தராசு காட்டிக் கொண்டிருந்தது. "என்ன கையில கொட் டித்தாரன் கொண்டு போவீங்களா?”காசுப் பட்டறையி லிருந்து கடை முதலாளியின் குரல். ஆஹா, காரணம் நன்றாகப் புரிந்து விட்டது.
அதற்குப்பதிலாக "நீங்க என்னகையிலயாவாங்கிட்டு வாரிங்க? அழகாபெக் பண்ணி, குரொஸ்வெய்ட், டெயார் வெய்ட், ரெட் வெய்ட் என்று பிரின்ட் பண்ணிதானே உங்களுக்கிட்ட வருது? நாங்களும் காசு தந்துதானே வாங்குறோம்"என்றவர்காசைவிசிஎறிந்துவிட்டு பொதியை வாங்கிக் கொண்டு வேகமாக வெளியேறுகிறார்.
நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். கூடவேலை செய்யும் இரண்டு மாற்றுமத நண்பர்களுடன் தங்கியிருந்தேன். சமைப்பதற்குத்தேவையானபொருட்களை வாங்கவென சென்றபோதே மேற்படிசம்பவம் நிகழ்ந்தது. இனிமேல் இக்கடையில் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன், வந்ததற்காகப் பொருட்களை வாங்கிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றோம்.
அடுத்தவாரம் பொருட்களின்பட்டியலுடன் வேறொரு
 

சிந்திக்கவைத்த சந்திப்பு
ம் பத்திரிகை
கடைக்குச் சென்றிருந்தோம். நண்பர் பட்டியலை வாசிக்க ஊழியர் ஒருவர் பொருட்களை எடுத்து வைக்கின்றார். தேயிலை 50 கிராம், சீனி. சீனி என்றதும் கடந்த வார சம்பவம் எனது மனத்திரையில் தெரிய ஆரம்பித்தது. எனவே கடைஊழியரைநோட்டம்விடத்தொடங்கினேன்.
ஒரு நாளேட்டின் அரைப் பகுதியை எடுத்து சுருள் அமைத்து அதனுள் தேயிலையை விட்டு தராசின் மீது வைத்து 50 கிராம்நிறையிடுகின்றார். நிறையிட்டு முடிந்த வுடனேயே தேயிலை சுருளை பெற்றுக் கொண்டு குரோ சரி பேக் ஒன்றைத் தருமாறு ஊழியரைப் பணித்தேன். அவரும் தாமதம் இன்றி எடுத்துத் தந்தார். தேயிலையை உறையிலிட்டு மீண்டும் நிறையிடுமாறு அவரிடம் வழங்க தேயிலையின் நிறை 45 கிராம்களாக காட்டியது.
ஆக, ஐந்து கிராம் பத்திரிகையை தேயிலையின் விலை கொடுத்து வாங்க வேண்டும். விளையாட்டாகக் கணக் கிட்டுப் பார்க்கிறேன். ஒரு கிலோ தேயிலை 600 ரூபாய். ஒரு கிலோ பத்திரிகையின் விலை 3 ரூபாய், 15 சதம் பெறுமானம் உள்ள பத்திரிகைக்கு முதலாளி விதிக்கும் விலை 3 ரூபாய். அற்புதமான பகற் கொள்ளை. பத்திரி கைத் தொழிற்சாலை உரிமையாளருக்குக்கூட இந்தளவு இலாபம் கிட்டாது!
இச்சம்பவங்களைத் தொடர்ந்து நான் செல்லும் கடைகளிலெல்லாம் எனது பார்வைதானாகவே தராசின் மீது செல்லும், "அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர் களுக்குக் கேடுதான்” என்பதை அறிந்தவர்கள் நிலை இவ் வாறெனில் அறியாதவர்கள்நிலைஎவ்வாறிருக்கப்போகிறது?
வேறொரு நாள் காசு மாற்றிக் கொள்ளும் நோக்கில் கோழி இறைச்சிக் கடை ஒன்றினுள்நுழைகிறேன். சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர். கடைக்கு முதலாளி, ஊழியர் எல்லாமே அவர்தான். என்னை சற்றுப் பொறுத்தி ருக்குமாறு கூறியவர், கையில் கோழி ஒன்றுடன் வந்து மற்றைய கையில் பத்திரிகை ஒன்றினை எடுத்தார். வழ மைபோல எனது பார்வை தராசை நோக்கி நின்றது. பத்தி ரிகையை தராசில் இட்டதும் பத்து கிராம்களாகக் காட்டியது. உடனே அவர் ஒரு பொத்தானை அழுத்தி நிறையை பூச்சியமாக மாற்றிவிட்டு கோழியை நிறை யிடுகின்றார்.
“யா அல்லாஹ் அவருக்கு பரகத் செய்வாயாக!” அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பிரார்த்தனை எனது அடிமனதில் இருந்து வெளிப்பட்டது. ஏமாற்றுப் பேர்வழிகளுக்குள் ஒரு நல்ல வியாபாரியையேனும் காண முடிந்தது.
பத்தே கிராம் பத்திரிகை ஒரு கூட்டத்தை நரகத்திற் கும் ஒரு சிலரை சுவர்க்கத்தின்பாலும் வழிகாட்டும் அதிசயத்தைப் பார்த்தீர்களா?
- 6660úb6unu- yir-ú
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஜ. அல்ஆகிரா - ரஜப் 1432

Page 54
52
வைத்தியசேவைகை
10 வருடங்களுக்கும் மேற் நிறுவனம் நாடளாவிய
நேர விரயத்தை தவிர்
தொலைபேசியூடான
எந்தவொருசுகாதார பிரச்சினைகள்தொடர்பாகவும் எமதுவைத்திய
ளைகாலை8மணிமுதல்நள்ளிரவு 12மணிவரை தொலைபே
நோய்கள்தொடர்பாக நீங்கள் சந்திக்கவேண்டியவிசேடவைத்தி தனியார்வைத்தியசாலைகள்பற்றிய விபரங்களையும் அறிந்து
தொலைபேசியூடாகவே அவசரநிலைமைகளின்போதுஉரிய வைத்திய ஆலோச
உரையாடிவிளக்கங்கை
GGR வைத்திய நிபு
கொழும்பிலுள்ள பிரபல தனியார்வைத்தியசாலைகளில் (Durd விசேடவைத்திய நிபுணர்களை தொலைபேசியூடாக அல்லது ஈே செய்வதன்மூலமாக முன்கூட்ட
வைத்திய சேவைகளைப் பெறுவதற்காகவெளியூர்களிலிருந்துெ ளும் தங்குவதற்காக குறைந்த செலவில் தங்குமிடவசதிகளை நாட் அதற்குமுன்னரும்பின்னருமானவைத்திய கவன
கொழும்புக்குவைத்திய சேவைகளைப் பெறவருகைதருே போக்குவரத்துவசதிகளைதொலைே
бІШфі бЈбоб வெளிநோயாளர் பிரிவு-எமது நிறுவனத்தில் தொடர்ச்சியாக இயங்கும் வெளிநோயாளர் பிரிவில் உங்களுக்குத்தேவையான
வத்திய ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ளலாம்
வத்திய ஆய்வுகூட பரிசோதனைகள் -அதிநவீன வைத்திய
ய்வுகூடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவைத்திய
பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகள் இந்த சேவைகள் அனைத்தும் கணனிமயப்படுத்தப்பட்டு உங்க நீங்கள் உலகின் எப்பாகத்திலிருந்தாலும் உங்களது தகவல்களை
Neos y S Healthcâre S o l u ti on s
mos Serve to Sawe
139, Sri Saranankara Road, Kalubowila,
Dehiwela Dr.
அல்ஹஸனாத் ஜூன் 2011
ஜு. அல்ஆகிரா - ரஜப் 1432
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EALTHCARE SOLUTONS
எஉங்களுக்கு மிகநெருக்கமாககொண்டுவருகிறது
பட்டதனியார் வைத்திய சேவை அனுபவத்தைக் கொண்ட எமது ரீதியில் தனது சேவையை விஸ்தரிப்பதில் மகிழ்ச்சியடைகிறது
ஏன் இந்த சேவை?
அலைச்சலைத் தவிர்க்க
கொள்வதுடன் மருத்துவபரிே
பெற்றுக்கொள்ளலாம் -------. னைகளுக்காக எமதுவைத்தியநிபுணர்களுடன் நேரடியாக ாப்பெற்றுக்கொள்ளலாம் წ.წ.:.ჭ:%!:%;°.: , , ჯგ.
ர்களை முன்பதிவு செய்தல்
afiS, Lanka Hospital, Nawaloka, Asiri, etc...) SLSoun flujó
மெயில் மூலமாக அல்லது எமதுநிறுவனத்திற்குநேரடியாகவிஜயம் டியே பதிவுசெய்துகொள்ளலாம்
காழும்புக்குவருகைதரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்க bவழங்குகிறோம். அத்துடன்சத்திரசிகிச்சைக்காக வருபவர்களுக்கு ரிப்புகளுடன் கூடிய தங்குமிடவசதிகளும் உண்டு •
ரத்து வசதி வாருக்குவைத்தியசாலைக்கும் தங்குமிடத்துக்குமிை
சிமூலமாகவே ஏற்பாடு செய்யும் வசதி
* பாம்சி-மருந்துப்பொருட்களை அலைச்சலின்றியும் சகாய விலையிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய சகல வசதிகளும் கொண்ட மருந்தகம் * மருத்துவ உடற்பயிற்சி வசதிகள்-நீண்டகால நோயுள்ளவர்க ளுக்கான வைத்திய ஆலோசனைகளுடன் கூடிய உடற்பயிற்சிவச
தகவல்கள் நம்பகமாகவும் இரகசியமாகவும் பேணப்படுவதுடன் நீங்கள் மாத்திரமே பார்வையிடவும் பிரதிகளெடுக்கவும் கூடிய வசதி
ாது வசதி கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இச் சேவைகளை டின் எப்பாகத்திலிருந்தும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
O 1 17 6 633
Emai infoGEneosys.lk, Web: www.neosys.k
Management Dr.I.L.M. Rifas MBBS, MSc, (MedAd) Dr. K.M. Arif MD, MBA (Hosp Ad) W.S.A. Rizwan MBBS, Dip GUM, Dip in Psychology

Page 55
to -- a
எமது ஏ6ை
6fīìLIJih 9Ólu II www.islami
ஆகிய இணையதளங்
15 பழகள் ஏறி உள்ளே வரவேண்ழய
 
 
 
 

to - - -
cbookhouse.net, www.ibh.lk களைப் பார்வையிடுங்கள்.
மாழக் கட்டிடத்தில் அமைந்திருக்கும்
Ba C
ATA it it abspið OO9OO 691.97, Fax: 01126881.02
web: WWW.islamicbOOkhouSe, net
w 3
Duration: 01 Day
} ”مس۔ شیخ433Hir1,{
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஜு. அல்ஆகிராம ரஜப் 1432

Page 56
- அஷ்ஷெய்க் |
நாம் இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நாட்டின் இறைமையைப் பாதுகாத்தவர்களாக வாழ்ந்து வருகிறோம். இந்த நாட்டில் ஆங்கிலேயரும் போர்த்துக் கேயரும் காலடி வைப்பதற்கு முன்னரே அரபு முஸ்லிம் கள் இந்நாட்டிலே வாழ்ந்திருக்கிறார்கள்.
சிங்கள மன்னர்களது காலத்தில் எமது மூதாதையர் மதிக்கப்பட்டார்கள்; அவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்தது. அவர்கள் சிறுபான்மையினராக இருந்தபோ தும் பாரபட்சமின்றிதமது உரிமைகளை, சலுகைகளைப் பெற்றுக் கொண்டார்கள்.
ங்கிலேயரின் அட்சிக் ந்தில் எமதுமுஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் கடைபிடித்த ஒற்றுமை பின்காரணமாக நாட்டின்சட்ட யாப்பில்கூடமுஸ்லிம்க ளுக்கென்று பிரத்தியேகமான சில சட்டங்கள் வகுக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், நாம் இன்று ஒற்றுமையின்றி, எமக்கு மத்தியில் பிளவுபட்டிருக்கின்ற காரணத்தினால் எதையும் சாதிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே பலரின் அயராத முயற்சியின் காரணமாக எமக்கு மத்தியில் ஒற்றுமையை யும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஜம் இப்யதுல் உலமாவின் ஓர் உப கிளையாக ஒத்துழைப்புக் கும் ஒருங்கிணைப்புக்குமான கவுன்சில் உருவாக்கப்பட் டிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
அல்குர்ஆன் ஒற்றுமை பற்றி பல்வேறு இடங்களில், பல உதாரணங்களின் ஊடாக வலியுறுத்தியிருக்கிறது. ஒற்றுமைஎனும் கயிற்றைபலமாகபற்றிப்பிடித்துக்கொள் ளுமாறு அல்லாஹ்கட்டளை பிறப்பித்திருக்கிறான். தண் டனைகளைக் கொண்டு அல்குர்ஆன் எச்சரிக்கை செய் பும்போதும் இது வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
"(நபியே)நீர்கூறும். உங்கள்தலைக்கு மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங் களுக்கு அவன் வேதனையை அனுப்புவதற்கும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலரு டைய கொடுமையை அனுபவிக்கும்படி செய்வதற்கும்
அல்ஹஸனாத் தின் 2011 ஐ.அல்ஆகிரா-ரணுப் 1432
5.
 

கொருத்தும் Կջblացնպնsmin)
முப்தி تسمية
அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கிறான்."
(அல்அன்ஆம்: 65) இங்கு அல்லாஹ"த் தஆலா மூன்று விதத்தில் மனிதர் களை சோதிப்பதாக குறிப்பிடுகிறான். வரலாற்றில், மேலி ருந்து சப்தத்தைக் கொண்டும் காற்று, மழை என்பவற்றைக் கொண்டும் அல்லாஹ் அழித்திருக்கிறான். அவ்வாறே பாதத்துக்கு கீழிலிருந்து சுனாமி, பூகம்பம் என்பவற்றைக் கொண்டும் அல்லாஹ் அழிவை ஏற்படுத்தியிருக்கிறான். இன்னுமொரு வகையான சோதனையையும் அல்லாஹ் கூறுகிறான், அதுதான் முஸ்லிம்கள் குழுக் குழுவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் மோதிக் கொள்வதன் மூலமும் பரஸ்பரம் வீண்குதர்க்கங்களில் ஈடுபட்டும் ஏசிக் கொண் டும்பிளவுபடுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவ தாகும். இதனை ஒரு தண்டனையாக அனுப்புவதற்கு அல்லாஹ் ஆற்றலுள்ளவன்.
அன்புக்குரிய சகோதரர்களே! ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமாக படைக்கப்பட்டிருக்கிறான். அவர்களுக்கு வேறுபட்ட சிந்தனா சக்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. சிந்திக்கும் அளவு ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. ஒருமனி தனின் சிந்தனை ஆற்றல் வெறுமனே அவனது மூளையை வைத்து மதிப்பிடப்படுவதில்லை. காலம், இடம், சந்தர்ப் பங்களுக்கேற்ப சிந்திக்கும் ஆற்றல் வேறுபடுகிறது. அதன டியாக வித்தியாசமான கருத்துக்களும் வேறுபட்ட ஆலோ சனைகளும் அபிப்பிராயங்களும் எழுவது இயல்பாகும்.
இமாம் அபூஹனீபா (ரஹிமஹ"ல்லாஹ்) அவர்கள் பக்தாதில் வாழ்ந்தவர்கள். பலதரப்பட்ட மக்கள் வாழும் இடம்தான் பக்தாத். அவர் ஒர் ஊரில் வாழ்ந்திருந்தாலும் அவரது மத்ஹப் மிக விசாலமான பரப்பைக் கொண்டி ருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைக்கும் அதில் தீர்வு சொல்லப்பட்டிருந்தது.
ஆனால், இமாம் மாலிக் (ரஹிமஹ"ல்லாஹ்) அவர் கள் மதீனாவில் வாழ்ந்தவர்கள். மதீனாவின் சூழலுக் கேற்ப அவரது மத்ஹபும் அமைந்திருந்தது. மதீனாவாசி களின் செயற்பபடுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களது மார்க்கத் தீர்ப்புக்கள் அமைந்திருந்தன.

Page 57
எனவே, ஒரு மனிதனின் சிந்தனைக்கேற்ப அவருடைய கருத்துக்கள் வேறுபடலாம். அது மார்க்க விடயத்தில் மாத்திரமல்ல; எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டா லும் அதில் கருத்து வேறுபாடு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. ஒருவர் கூடும் என்று சொல்வதை மற்றவர் கூடாது என்று சொல்வார்.
கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், அத்தகைய கருத்து வேறுபாடுகளை எப்படி அணுக வேண்டும் என்பதுதான் முக்கியம். இதனைத்தான் ஜம் இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப் புக்குமான கவுன்சில் வலியுறுத்தி வருகிறது. முரண்பாட் டுக்குள் உடன்பாடு காணுதல் தொடர்பில் பல்வேறு அடிப்படைகளைத் தொகுத்து ஒவ்வொரு பள்ளிவாசலி லும் மக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் அவற்றை பதாதைகளாகத் தயாரித்திருக்கிறது ஜம்இய்யதுல் உலமா அது மூன்று மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு நூல்வடிவிலும் வெளிவரஇருக்கிறது, இன்ஷாஅல்லாஹ்.
அல்குர்ஆனைப் பற்றி பேசும்போது இமாம் புகாரி (ரஹிமஹ"ல்லாஹ்) அவர்கள் "நீங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருங்கள். உங்களுடைய உள்ளத்தில் ஒற்றுமை ஏற்படும் வரைக்கும் நீங்கள்குர்ஆனை ஓதிக் கொண்டிருங் கள்; அதைப் படித்துக் கொண்டே இருங்கள். அதில் ஏற் பட்ட கருத்து வேறுபாடு, கருத்து முரண்பாட்டின் கார ணமாக உங்களுக்கு மத்தியில் பிளவும் குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகக்கூடிய ஒரு சூழலைக் கண்டு கொண்டால் குர்ஆன் ஓதுவதை, படிப்பதை விட்டு விட்டு நீங்கள் எழுந்து செல்லுங்கள்” என்ற ஹதீஸைச் சுட் டிக்காட்டுகிறார்கள்.
காரணம், குர்ஆனை ஓதுவதன் மூலம் ஏற்படும் பிளவும் பிரச்சினையும் குர்ஆன் ஓதாமலிருப்பதை விட பாரதூரமானது.
ஒற்றுமையின் முக்கியத்துவம் குறித்து இமாம் ஸஃது (ரஹிமஹ"ல்லாஹ்) அவர்கள் தபகாதுல் குப்ராவில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களை மெளலானா யூசுப் (ரஹிமஹ"ல்லாஹ்) அவர்கள் தனது "ஹயாதுஸ் ஸஹாபா' வில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தவேளையிலும் எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை குறித்துப் பேசினார்கள் என்றால் அதன் முக்கியத்துவம் பற்றி வேறு என்ன சொல்ல இருக்கிறது?
"எனது மரணத்திற்கு பின்பு நீங்கள் எவரும் பிரிந்து விடக்கூடாது" என உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் சொல்கிறார்கள். யார் தைைலவர், யாருக்கு வழிப்படுவது, எவருடைய பேச்சைக் கேட்பது? ஆகிய விடயங்களில் கருத்துவேறுபட்டு பிளவுபட்டு விடக் கூடாது என்பதற்காக ஸஹாபாக்கள் உமர் (ரழியல் லாஹ"அன்ஹ") அவர்களிடம், "நீங்கள் ஒரு கலீபாவை நியமிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார்கள். அப்போது உமர்(ரழியல்லாஹ"அன்ஹ") அவர்கள் சொன்னார்கள்:

g&&lայլն
“எனக்கு இரண்டு தெரிவுகள் இருக்கின்றன. ஒன்று நான் விரும்பினால் உங்களில் ஒருவரை கலிபாவாக நிய மிக்கலாம் அல்லது எவரையும் கலீபாவாக நியமிக்காமல் விட்டுவிடலாம். ஏனெனில் நபி(ஸல்லல்லாஹ"அலைஹி வஸல்லம்) அவர்கள் யாரையும் கலீபாவாக நியமிக்காத நிலையிலேயே மரணித்தார்கள். அவ்வாறே ஒருவரைகலி பாவாக நியமித்துவிட்டு மரணிக்கவும் முடியும். ஏனெ னில், அபூ பக்ர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள் என்னை கலீபாவாக நியமித்துவிட்டே மரணித்தார்கள்.
ஆனால் நான்மூன்றாவது ஒரு வ iš Gaosant ளப் போகிறேன். அதாவது, ஆறு பேரைக் கொண்ட ஒரு ஷஇராவை அமைக்கிறேன். அந்த ஆறு பேரும் சேர்ந்து ஒருவரை அமீராக நியமித்துக் கொள்ளட்டும்.
நீளமான இச்சம்பவத்தின் இறுதியில் உமர் (ரழியல் லாஹ" அன்ஹ") அவர்கள் சொல்கிறார்கள்:
"இந்த ஆறு பேரில் ஐந்து பேர் ஒருவரை அமீராக நிய மிப்பதில் உடன்பட்டு, ஒருவர் மாத்திரம் அதற்கு உடன் படாவிட்டால் நீங்கள்.அவரதுகருத்தைப்புறக்கணியுங்கள். அந்த ஐந்து பேரும் சேர்ந்து யாரைஅமீராகத் தெரிவுசெய் தார்களேஅவருக்கு அவர்கள்பைஅத்செய்யவேண்டும்" எனக் கூறிய உமர் (ரழியல்லாஹ" அன்ஹ") அவர்கள், "அப்படி நிகழாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!" என்றார்கள்.
பின்னர், "ஐந்து பேர் உடன்பட்ட விடயத்தில் முரண் பட்ட அவர் பெரும்பாலானோரது விருப்பத்தின் பிரகா ரம் தெரிவுசெய்யப்படும் கலீபாவை ஏற்க மறுப்பாராக இருந்தால் அதே இடத்தில் அவரைக் கொலை செய்து அதே இடத்தில் அவரது ஜனாஸாத் தொழுகையையும் நிறைவேற்றி அங்கே அவரை நல்லடக்கம் செய்யுங்கள். ஏனெனில், சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப் பட்ட ஒருவர்கொலை செய்யப்படுவதை நான் பொறுத் துக் கொண்டாலும், அவரால் சமூகத்தில் ஏற்படும் பிள வையும் பிரிவினையையும் நான் ஒருபோதும் சகித்துக்
கொள்ள மாட்டேன்."
எனவே, அன்புக்குரிய சகோதரர்களே! நாம் எமது சமூகத்துக்கு மத்தியில் கருத்துக்களைச்சொல்லும்போது நிதானமான, அழகான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்; மிம்பர்மேடைகளிலும் ஏனைய பிரசங்கங்கள் நிகழ்த்தும்போதும் நிதானத்தை இழக்கக் கூடாது. இது ஆலிம்களின், இஸ்லாமிய அழைப்பாளர்களின் பாரிய பொறுப்பு.
அவ்வாறே ஒவ்வோர் ஆலிமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இங்கே காதியானிகள் பற்றிப் பேசப்பட்டது. ஜம்இப்ய துல் உலமா காதியானிகளை இஸ்லாத்தை விட்டு வெளி யேறியவர்கள் என்று தனது நிலைப்பாட்டை முன்வைத் திருக்கிறதே தவிர, அவர்களுடன் யுத்தம் புரியுமாறு, அவர்களுக்குதீங்கிழைக்குமாறு அவர்களின்சொத்துசெல் வங்களைசூறையாடுமாறு ஒருபோதும் O
5ே0ம் பக்கம் பார்க்க)
அல்ஹஸனாத் ஜூன் 2011 - , - - 5 5 e.g. delibag - per 1432

Page 58
旁 18th June 2011
Venue: IBS Campus (Pvt) Lt
No. 67, Kawdana Road, D
s அல்ஹஸனாத் ஜூன் 2011 5 6 ஜு. அல்ஆகிரா- ரஜப் 1432
 
 

inited seats
äVääse FRESSER NOVA ON
077 427,384
REE OF CHARGEL
# 67, Kowding Road, Dehiwala. 戀
www.ihsake.com mig: info@bsinkg.com ***
PIUS (PVT) LIMITED
Limited Sasi avaitäisi RESER NOW ON
t)774271384
a 3 ... شبنم
PUS (PVT). LIMITED. A 67, Kawdana Road, Dehiwala.
www.sankaı.com Emil: info@ibsenkq.com

Page 59
புறம் பேசுத வேண்டிநிற்கு
கடந்த இதழில் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்களால் எழுதப்பட்ட “புறம் பேசுதல்” தொடர்பான ஆக்கம் மிகவும் நன்றாகவும் அதேநேரம் காலத்தின் தேவையாகவும் அமைந்திருந்தது. என்றாலும் ஒரு சில பகுதிகளில் இந்தப் புறம் ஓயாது அலைந்து கொண்டேதான் இருக்கிறது.
“புறம் பேசக் கூடாதுதான்; என்றாலும் ஒரு கதைக் காகச் சொல்கிறேன்.""அல்லாஹ்தான் மன்னிக்க வேண் டும்."இது புறமல்ல; ஏலவே நடைபெற்ற ஒரு சம்பவம் தான்." என்ற பல பரிணாமங்களில் புறம் இன்று லேடஸ்டாகப் பேசப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே.
அன்னை ஆஇஷா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர் கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு முறை நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களிடம் "இவ்வாறு இவ்வா றுள்ள ஸ்பிய்யா உங்களுக்குப் போதும்" என்று கூறி னேன். (ஸ்பிய்யா (ரழியல்லாஹ" அன்ஹா) குள்ளமா னவர் என்று ஆஇஷா (ரழியல்லாஹ" அன்ஹா) அவர் கள் கூறியிருக்கலாம் என அறிவிப்பாளர்கள் கூறுகின் றார்கள்.) உடனே நபி (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்கள் “ஆஇஷாவே நீ மிகப் பெரும் சொல்லைக் கூறிவிட்டாய். அந்தச் சொல் கடல் நீருடன் கலந்து விடும் அளவுக்குள்ள வார்த்தையாகும்” என்றும்
தொப்பு
டாக்டர் முஸ்தபா றயீஸ் அவர்களின் 'தொப்புள் கொடியும் சேலைன் வயரும்’ என்னும் மருத்துவக் குறிப்பை வாசித்தேன். இறைவனின் அற்புதமான, நுட்பமான அமைப்பை எண்ணும்போது அந்த ரஹ்மானின் மாபெரும் சக்தியின் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அதற்காக ஆயிரம் தடவை ஸ"ஜூது செய்தாலும் ஈடாகாது.
கருப்பையில் தொப்புள் கொடியால் போஷிக்கப் படும் குழந்தையை சேலைன் குழாயால் சாதிக்க முடியவில்லை. வல்ல நாயனின் படைப்புக்கு ஒப்பான எதையும் செய்ய இயலாதென்பதை இது நிரூபித்துக் காட்டிவிட்டது.
நான்கு மாதம் கருவில் போஷிக்கப்பட வேண்டிய சிசு ஏதோ காரணமாக முன்பு பிறந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட விளைவுகளை டாக்டர்களின் முயற்சியால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தொப்புள் கொடியையோ அதன் தொழிற்பாட்

தெளபாவை
பெரும் பாவம்
"மற்றொரு மனிதனைப் பற்றிப் பேசுவதை நான் விரும்ப மாட்டேன்” என்றும் கூறினார்கள்.
அறிந்து கொள்ளுங்கள் மார்க்கத்தில் நன்னோக்கத் திற்காக வேறு வழியே இல்லாதபோது புறம் பேசுதல் ஆறு சந்தர்ப்பங்களில் ஆகுமானது.
1. அநீதம் இழைக்கப்படும்போது
2. தீமையைப் புறக்கணிப்பதற்கும் நல்லதின்பால்
கெட்டவனைக் கொண்டு வருவதற்கும்
3. மார்க்கத் தீர்ப்பு வேண்டும்போது
4. தீமை பற்றி முஸ்லிம்களை எச்சரிப்பதும்
அவர்களுக்கு உபதேசிப்பதும்
5. பாவங்களையும் நவீன செயல்களையும்
பகிரங்கமாகச் செய்யும்போது
6. ஒருவரைப் பற்றி அறிமுகம் செய்யும்போது
எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள சலுகைகளை துஷ் பிரயோகம் செய்யாமல் புறம் எனும் பாவத்திலிருந்து தவிர்ந்து சுவனப் பேற்றை அடைவோமாக!
- றிப்னா ஏ. சுபுவறான், அபுக்காகம
ஸ் கொடி
டையோ நாம் சிந்தித்ததில்லை. குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை அறுத்து விடுவது பற்றித்தான் அறிந்துள்ளோம். அதன் செயற்பாட்டை அறியும்போது படைத்த ரப்பைப் புகழாமல் இருப்பது நன்றி கொன்ற செயல் என்றே சொல்ல வேண்டும்.
நாங்கள் பத்து மாதம் கருவில் வளர்ந்து பிறந்துவர்கள். எனவே, தொப்புள் கொடி பற்றி சிந்திக்க முடியவில்லை. இதனை ஞாபகப்படுத்துவதற்காக இறைவன், குறை மாதக் குழந்தைகளின் மூலம் தொப்புள் கொடியின் அற்புதச் செயலைக் கற்பிக்கின்றான் போலும்!
டாக்கடர் றயீஸ் அவர்களின் மருத்துவக் குறிப்பு, இறைவனின் மாபெரும் ரஹ்மத்தின் வெளிப்பாடாக அமைந்திருப்பது ஈமானை உறுதிப்படுத்திக் கொள்ளவும் இறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும் பேருத வியாக அமையும், இன்ஷா அல்லாஹ்.
- சாரனா கையூம்
அல்ஹஸனாத் ஜூன் 2011 ஜு. அல்ஆகிரா-ரஐப்1432

Page 60
சிறு விளம்பரம்
மணமகன் தேவை
சேர்ந்த க.பொ.த. தரம்வரைகற்றமார்க்கப் பற்றுள் மணமகளுக்கு (வயது 35, உயரம் 54) பொருத்தமான, மார்க்கப்பற்றுள்ள மணமகனை அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க் கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0778023595
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த, கண்டி நகரில் அமைந்துள்ள தனி யார் கல்வி நிறுவனமொன்றில் தலைமைஆசிரியையாகக் கடமை யாற்றும் நல்லொழுக்கமும் மார்க் கப்பற்றுமுள்ள பட்டதாரி மணமக ஞக்கு(வயது 30 பொருத்தமான, மார்க்கப்பற்றுள்ள 35 வயதுக்குட் மகனை அவரது குடும் ர் எதிர்பார்க்கின்றனர்.
அல்ஹஸனாத் ஜூன் 2011 圖一一二
ஐ.அல்ஆகிராம ரஜப் 1432
ந்து கொண்டிருக் பாடசாலை ஒன்றில் 86L60DLDLLJITibgDjıib LDI மணமகளுக்கு (6 சாங்க அல்லது தன் புரியும் அல்லது ப தில் கற்றுவிட்டு ெ பார்த்திருக்கும் மr D600TLD856OD60T &6. எதிர்பார்க்கின்றனர் தொடர்புக O7773,79664,
களுத்துறை
சேர்ந்தநல்லொழு பற்றுமுள்ள (வயது ளுக்கு 40 வயதுக் மகனை அல்லதுத காக விவாகரத்துப் அவரின் குடும்பத் கின்றனர். வார 3.3Osg, ShaoT601 மேற்கொள்வது சி தொடர்பு O7f789.7868,
D6DE56 கொழும்பைச் பற்றும் நற்குண வியாபாரம் செய்ய 36) 66iogonflu மனைவியின் அ மணம் செய்துெ றார். படித்த, மா குணமும் உள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும், அரசாங்க effeoduuunrab ார்க்கப்பற்றுள்ள வயது 27) அர ரியார் தொழில் ல்கலைக்கழகத் தாழிலை எதிர் ார்க்கப்பற்றுள்ள பரது பெற்றோர் r.
ளுக்கு: O77998.2594
மாவட்டத்தைச் க்கமும் மார்க்கப் 535) LD600TLD5 85 LILL D600T தக்க காரணத்துக் பெற்ற ஒருவரை தினர் எதிர்பார்க் நாட்களில் பி.ப. ர் தொடர்புகளை றந்தது.
களுக்கு: 0775754684
சேர்ந்த மார்க்கப் முமுள்ள, சொந்த பும் ஆண் (வயது ஷரீஆ முறைப்படி னுமதியுடன் மறு 5ாள்ள விரும்புகி ர்க்கப்பற்றும் நற் D600TLD856OD6IT 6:Sir
07804997
முதல் /சக்குரி/வ:
பாத்திமா பரூஸா
இல23, வீட்டுத் தோட்டம், கற்பிட்டி
...

Page 61
jlólp bloIgl fip6li கீழ்வரும் course களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 1. Diploma in Social Science
(சமூகவியல்) 2. Diploma in Disaster Management
(அனர்த்த முகாமைத்துவம்) 3. Diploma in Psychology (s) 6T65us) 4. Diploma in Library Management
(நூலக முகாமைத்துவம்) 5. Diploma in Human Resourse Manage
(மனிதவள முகாமைத்துவம்) " .مه 6. Diploma in Educational Management
(கல்வி முகாமைத்துவம்.) 7. Diploma in Montessori (sayibu Luftlass606) அனைத்துப் பாடங் ம் தபால் மூலம் கற்பிக்கப்படும், 器 ဝဇ္ဇီမျိုးမြို့ :Pషష్టి କାଁ 6
தட்டணம் 4800.00 (மாதாந்தம் 800.00 ரூபாய்) தபால்
செலவு இலவசம்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள் தொடர்புக்குists999டுgmail.com
; Application Fom, மேலதிக விபரங்கள் பெற கீழ்வரும் கையடக்க
தொலைபேசிக்குபெயர், முகவரியை SMS செய்யுங்கள் அல்லது
தொடர்புகளுக்கு 0713144536
LLLLLLLLLLL LYLLLLL LLLLLLL LLLLLLLLLLL qLLLLLLLrq
LLLLLL 000LL LLLLLLLL0LG GLLLLLLL LLLLLLLLS LLLL LLLLLLLLLLLLLLLSLLLLS LLL LLLLLLLL0LLLL
Full time as aing part time és Agrgi udu) Grus gung- i
:
i
Mobile Pione Repairing Course
Ue are fic pionears it falo fiedad
பாடநெறிக்கான கட்டணம் குமா 60 தை முதல் மாதத்திலேயே
சம்பாதித்துக்கொள்ள முடியுமான ஒரு
investment
RO College of Education i
secticise: g:::::ixer,
105layantha weeresekara Mw, 64, Katugastota Rd, Colombo 10 Kandy
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ßF L!
தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சி 6 மாதங்களில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தொழிநுட்பத்துறை தொழிநுட்பவியலாளராக உங்களால் உருவாக முடியும்.
உங்களது கனவை நனவாக்க
缝影 Adahla Technical Institute
ணைக்குழுவில் (VEC. P030075) பதிவு செய்யப்பட்ட
அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். வெளிநாட்டு, உள்நாட்டு தொழிநுட்பத்துறை அனுபவம் தொண்ட போதனா ஆசிரியர்கள் மூலம்உங்களுக்காகவே
விஷேடமாக வடிவமைக்கப்பட்ட தொழிநுட்பத்துறை பாட
6.
O Refrigeration & Air Conditioning
(gsfirsirgai. Cu pub astfărăfui) Electrical power (fairnshus) Auto Electrical (arsa augi) Q Auto Mobile (arasaub figs (gpap)
)ே குறைந்த கட்டணத்தில் குறுகிய காலத்தில் ஒரு Z
தொழில் துறைக்குள் புகுவதற்கான A Χ வழிகாட்டல்கள் A. )ே தூரஇடங்களிலிருந்து வருபவர்களுக்கு தங்குமிட A Α வசதிகள் செய்து கொடுக்கப்படும். 冷。 A )ே தகைமைகள் அடிப்படையிலன்றி ஆவலுள்ள / * அனைவரும் பாடநெறியை கற்கலாம் oA 91B, Jamiah Neleemiah Road, Chinafort, Beruwaka ΝΑ SY TP:-0777487418, 0777640680, 0347405242 MSA
Af 3
க இஸ்லாமிய புக் ஹவுஸ், 77, தெமடகொடவீதி, கொழும்பு-9 (01268485) இஸ்லாமிய புக் சென்டர். தெமடகொடவீதி, கொழும்பு-9 (014618342) un sioGOTLÂu iš QFGirLň. 04, “Dry), QFárpó LorišEL, LONGINGIršosios),
(0357210270,0776139844,0755138857) ஹிரா புக் ஷொப் கொமியுனிகேஷன், 76, மாதளை வீதி, அக்குரனை. (0814906799, 07600384) தபால் மூலம் தனிப்பிரதி பெறவிரும்புவோருக்கு தபால் செலவு இவைசம்
தொடர்புகளுக்கு
A.C. Jareena Musthafa
120, Bogahawattha Road, Welivia, Kaduwela. (O115020936, 0115050983)
அல்ஹஸனாத் ஜூன் 2011
59 æ. SisoSárn - gi 1432

Page 62
friusci O/L or A/Luigi DiaGuya a * தொழில் தேடும் ஒருவரா? *ஏதாவது ஒரு தொழிலை செய்து கொண்டு இருப்பவரா?
Computer + English ags Lisig, ejab Gaisrairago? * வெளிநாடு செல்வதையே நோக்கமாகக் கொண்டவரா? *ஆங்கிலத்தை அடிப்படையிலிருந்து கற்க ஆசை உள்ளவரா? * சுயமாக கணினித் துறையில் தொழில் செய்ய ஆர்வம் கொண்டவர Job Training Program Greip Esily Luis absusps, 0. மாகங்கள் பயில்வகன் ம் மேற்கூறிய உங்களது இலக் f galgars stigaiGasTsists typguri. JOBTRAINING PROGRAN இல் 0400MAபாடங்கள் உள்ளடங்குகின்றன. அவையாவன :
Ms Office
Graphic Designing
Hardware Enc s
ineering
STUDYINUK
Handled by UK qualified Consultant 8
*Visit & Family V Newzealand can
ELTS score only 4.0 required Financial sponsorship can be arrange k Part time job opportunities
Cheap course fees Admissions from A rated colleges Minimumum Gualification-GCE (OL)
>g= E m al
அல்ஹலனாத் ஜூன் 2011 ஐ.அல்ஆகிரா-ரஐப்1432
6C)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

مههای عمر به
குறைந்த கட்டணத்தில்
魯
蟹
斜
i
*8。
Start 謁 Gajaru ju; n.syiiij
Batch OS June Batch 2 - 2 June Batch 3 - 19 June Batch 4 - 26 June
M.J.M.M. Riswan O716 22 85 80
腔总取窃F貂{
Mohamed Nazam)

Page 63
இலங்கையில் iேtish ே
60,000 தரும் தொழில்
மிகவேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய கட்ட படவரைஞர்களுக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக் காணப்படுகின்றன. கணணி முறைப்படம் வரைதலில் சிறப்புத் தேர்ச்சியும்(E CAD) கட்டடநிர்மாணத் தொழில்நுட்பங்கள் தொடர்பான அடிப்படை அறிவும் ெ ஏராளமான தொழில் வாய்ப்புக்களும் மத்திய கிழக்கிலும் ஏனையாக
வேளை கூடுதல்வருமானமும் உறுதிப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் கட உயர்கல்வி வாய்ப்புகளையும் தொழில்பயிற்சிப் பாடநெறிகளையும் வழங் நிறுவனமான8CAS மாத்திரமே வழங்கும் CAD & BSபாடநெறி உடனடித் உத்தரவாதப்படுத்தும் மேற் குறிக்கப்பட்டதிறண்களைப் பெற்றுத் தருவதோடு கொண்ட இரட்டைத்தகைமைகளையும் பெற்றுத்தருகின்றது. CAD & 8Sபா செய்த மாணவர்கள் அனைவருமே உடனடித் தொழில் வாய்ப்பைப் பெற்று பெரும்பான்மையானவர்கள் BCAS இன் உதவியுடன் மத்திய கிழக்கில் C Construction Supervisor, Technical Officers, Junior Ouantity Survey Assistant ஆகிய தொழில்வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்
N British
College of
z Applied Studies oColombo ODehiwela o Kandy oDoha-Qatar
 
 
 
 
 
 

lege மட்டுமே வழங்கும்
/- (குறைந்த படிசம்) மாத வருமானம் வாய்ப்புக்களை உத்தரவாதப்படுத்தம் 6 மாத தீவிர பாடநெறி 1
வாய்ப்புக்களைப் வலு மாணவர்களில் சில
யில் கணணி வாய்ப்புகள் நிறைந்து
(pert Knowledge in BCAS Gaeir CAD & B5uml6Bösouû காண்போர்களுக்கான 鼎 காணப்படுகின்ற அதே பூர்த்திசெய்கு நாங்கள் இப்போது aெtar ந்த 10 வருடங்களாக இல் பிரபல கட்டட நிர்மாண நிறுவனத்தில் கி வரும் முனனணி பெறுமதியான தொழில் வாய்ப்பினைப் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளோம். ரூபா.100,000 இற்கும் சர்வதேச அங்கீகாரம் அதிகமான சம்பளத்துடன் நெறியினைப் பூர்த்தி இப்பெறுமதியான வாய்ப்பினைப் |ள்ள அதேவேளை O AD Draftsman, பெற்றுத்தந்கு BCAS இற்கு நாங்கள் )rS, land Survoyor எப்போதும் கடமைப்பபடுள்ளோம்.
M.ஹிஸ்வான் - கொழும்பு K.தேவேந்திரன் . மட்டக்களப்பு
A.H.A.ஹசன் - புத்தளம்
சியாம் - புல்மோட்டை M.அசாட் - காத்தான்குடி றிகாஸ் ஜிப்ரி - தெஹிவளை

Page 64
Diploma in Hardware e Engineering with Networking
Diploma in Network Administration
Industrial Training in Computer Networking
Diploma in Linux Network Administration & Security Leading to RHCE & RHCT certifications
Cisco Certifications More Practicals with real Routers, No simulations
CCNA | 640-802 CCNP |
ICND1640-816 ICDN2640-822 Get trained by the experts, Many of Our students SCOred 1000/1000
Microsoft Certifications MCTS|MCITP MCSA. MCSE
Mi080i பரிட்சைக்கு தோற்றவிருப்போருக்கு SL வெகுமதி
Microsoft பரிட்:ைனத்தில் yout 50s",
US$ 35 LDLGCD) uffL608 ĝNGVISIÓ
(US$35 (DLG
FLGo05YUTIGNSS) LITTLE 55366) ::::::::::ALLIGOLA
မြို့ကြီးရှို့မြို့မြိုါ * : 55üGpäissi (S தொலை
504/1, C. TURNKEY தொலை
T TRAIN IN G മലർഗ്ദർ, ീഗ്ഗർ (ഗ്ലൂർഗ്ഗ Email: inf
 
 
 

Printed by AJ Prints (Pvt) Ltd 44, Station Road, Dehiwala
(), M ET HR || {
Diploma in Multimedia Authoring
We Guide your Creativity to a Professional Destination
Adobe Photoshop Adobe Illustrator Macromedia Flash | CorelDraw Adobe Premier Adobe After Effects Adobe Audition
Diploma in Web Designing
Your Gateway to the World of Web Designing
Adobe Photoshop Adobe Illustrator Macromedia Flash | CorelDraw HTML JavaScript Macromedia Dreamweaver
Diploma in Web Development
PHP MySQL | Apache Server XML Inquire for many more higher end COurses
TURNIKEY ஏன் தெரிவு செய்ய வேண்டும்? இலங்கையில் Hardware & Networkஅதிகமான தொழிலாளர்களை
உருவாக்கியமை, 9 தொழில் வாய்ப்பு வழங்குனர் பலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ். e Network, Cisc0 & Microsoft பாடநெறிகளுக்கான உயர்தரமிக்க
பரிசோதனைக் கூடம். 0 மறைமுகக் கட்டணங்கள் இல்லை. (N0 00nditions apply) 9 தனித்தனி மாணவர்களினை அவதானிக்கக்கூடிய விசேட
போதனைக் குழு.
Guâ: 081-2205678, 081-4470480 WWW, turnkey.IK
0775-077456
Gturnkey.lk
bu ancis (N66)6. DL زلللھ వ్లో லோவர் பகதல வீதி, Qasig) இல68D8 நப்பிட்டி. (கடல் பக்கம்) \W- డ్ట్ །ཆདི། / பேசி: 2-581581, 2-595336, ஆறுக்கொள்ளுட/ O772-286988 പ്പ- ԾՈ
} Now register for பராதெனிய வீதி. any COurse Online G
HOTLINE 0772 286 988