கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2007.07.15

Page 1


Page 2
மாமன்றப் பொன்விழா சிறப்புப
ឆេវឆេងអ៊ួ ក្រុងទា ភ្លាំ តាវ៉ៅ தம்பதியினர் ឆេងអ៊ួ பிரதித் தலைவர் மங்கள விளக்கேற்றுகிறார்கள். தம்பதியினர் மங்கள் :
திரு. வி. ரி. a. தெய்வநாயகம்பிள்ளை, மாமன்றப் பொருளாளர் திரு வி கந்தசாமியிடமிருந்து சிறப்பு மலர் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.
அமைச்சு செயலாளர் திரு இராமானுஜம் அவர்களிடமிருந்து திரு எம். ஆர். இராஜ்மோகன் சிறப்புமலர் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.
ஆ 器 EL IL- 期
நீதியரசர் கெளரவ எஸ். பூரீஸ்கந்தராஜா அவர்களிடமிருந்து இந்து சமய 8 திருமதி ஞானப்பிரகாசம் சிறப்பு மலர் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். பணிப்பா 

Page 3
@_ சிவமயம்
பஞ்சபுராணங்கள் தேவாரம்
-திருச்சிற்றம்பலம்புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்
றருள் செய்வானமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழை யென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில் பார்க்குந் திருவையாறே.
திருவாசகம் பாருரு வாய பிறப்பற வேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெருமானே
செங்க மலமலர்போல் ஆருரு வாயவென் னாரமுதேயுன்
அடிய வர்தொகை நடுவே ஒருரு வாயநின் திருவருள் காட்டி
என்னையு முய்யக் கொண்டருளே.
திருவிசைப்பா உலகெலாம் தொழவந் தெழுகதிர்ப் பரிதி
ஒன்றுநூறாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ!
அங்ங்னே அழகிதோ, அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண் திங்கள் இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.
திருப்பல்லாண்டு புரந்தரன் மாலயன் பூசலிட் டோலமிட் டின்னும் புகரி லாதாய் இரந்திரந் தழைப்பவென் னுயிராண்ட கோவினுக்
கென்செய வல்ல மென்றுங் கரந்துங்கரவாத கற்பகனாகிக்
கரையில் கருணைக் கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் அண்டர் பிரானும் தொண்டர் தமக்
கதிபனாக்கி “அனைத்து நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடு
வனவும் உனக் காகச் சண்டீசனூமாம் பதந்தந்தோம்” என்றங்
கவர்பொற் தடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக் கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்
-திருச்சிற்றம்லம்
இந்து ஒளி

15.O7.2OO7
O O ) O () ) தொடரும்மக்கள் பணியில் மாமன்றம்
அன்பும் சிவமும் இரண்டென்பர்அறிவிலார் gബ്Jക്രഖ00ബഴ്സ്ത്ര09ഗ്ഗീuന്ന് அன்பேசிவமாவதாரும்அறிந்தபின் அன்பேசிவமானப்அமர்ந்தாரே' திருமந்திரத்தில் திருமூலர் எடுத்துக்கூறிய உயர்தத்துவம் இது. இத்தத்துவத்தின் மேன்மையை உணர்ந்து இறை பணி நின்று எங்கள் மக்களுக்கு அன்பு காட்டி தொண்டுகள் பல ஆற்றி வருகிறோம்; இன்னும் பல செய்ய விரும்புகிறோம்; மேலும் பலசெய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஒன்றென்றிருதெய்வம் உண்டென்றரு உமர்செல்வமெல்லாம் அன்றென்றிருபசித்தோர்முகம்பார் நல்லறமும் நட்பும் മബഗ്ഗബഗ്ഗ0ിമീമ00A
நமக்கிட்ட படி என்றென்றிருமணமே
உனக்குபதேசமரிதே' என்றுரைத்தார் பட்டினத்தார்.
இன்று எங்கள் உடன்பிறப்புகள் பலர் தம் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி, உண்ணுவதற்கு போதிய உணவின்றி, உடுப்பதற்கு தேவையான ஆடைகளின்றி உறங்குவதற்கு உகந்த இடமின்றிதவிக்கிறார்கள்.நாங்களும், எங்ளாலான மட்டும் உதவி வருகிறோம். உதவிகள் மேலும் தொடருவதற்கு நிதிஆதரவும் உதவியும் தேவைப்படுகின்றன. வெளிநாடுகளில் வதியும் எம்மவர் பலர் மேலும் உதவி செய்யலாம்.
ஆலயங்கள் அமைத்து திருக்கோபுரங்கள் எழுப்பி ஆண்டவனை எழுந்தருளச் செய்வதிலும் பார்க்க, எங்கள் உள்ளத்தில் அவனை இருத்திப்பூசித்துஅவனது குழந்தைகளாம் எமது உடன்பிறப்புகளுக்கு உதவ மேலும் முயற்சி செய்வதே இன்றைய எமது கடமை; அதுவே எமது இனத்திற்கு அவசியம் தேவை.
வளராமல் தேங்கிநின்ற அகில இலங்கைஇந்துமாமன்றத் தலைமையகக் கட்டிடத்தை கட்டியெழுப்பி உயர்த்துவதற்கு ஊன்றுகோலாக இருந்த மாமன்ற முன்னாள் தலைவர் அமரர். வே.பாலசுப்பிரமணியம் அவர்களை மீண்டும் நினைவுகூரும் இவ்வேளையில் தலைமையகக் கட்டிடப் பூர்த்தியின் பின் மாமன்றம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற நிம்மதியுடன் எங்கள் பயணத்தைத்தொடருகிறோம்.
“காகம் உறவு கலந்துண்ணக்
கண்டீர்!அகண்டாகாரசிவ போக மெனும்பேரின்ப வெள்ளம்
பொங்கித்ததும்பிப்பூரணமாய் ஏகவுருவாய் கிடக்கு தையோ!
இன்புற்றிடநாம் இனி எடுத்த தேகம் விழுமுன்புசிப்பதற்குச்
சேரவாரும் செகத்தீரே!
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 4
இந்தச் சுடரில்.
பஞ்சபுராணங்கள்
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்
விருந்துவரின் உவக்கும்
மெய்கண்டார் கண்ட தத்துவம்
மஞ்சவனப் பதியமர்ந்த முருகன்
இந்து மதத்தில் நந்திதேவரின் முக்கியத்துவம்
சிறுவர் ஒளி - சிந்தனைக் கதைகள்
மாணவர் ஒளி
அடியவரைக் காத்த அன்புக்கரம்
மங்கையர் ஒளி - நல்ல தாய் தந்தை
பார்வதிக்கு சிவபெருமான் இடப்பாகம்
அளித்த வரலாறு
நந்திக்கொடியின் மகத்துவம்
ஒரு மதீப்பீடு - இந்து நாகரிகம்
மாமன்றப் பொன்விழா மலர் - ஒரு மதிப்பீடு
பொன்விழா மலர் வெளியீட்டு நிகழ்வு
நினைவில் காணும் கட்டிடம் நிலத்தில்
உருப்பெற இறையருள் வேண்டுவோம்
நூறாண்டு நிறைவு கண்ட பெரியார்
மக்கள் போற்றும் இறைபணியாளர்
ỳ.
அடுத்த சுடர் சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி
Ο 1
O3
O4
O5
O7
1O
11
12
13
14
17
19
2O
22
24
26
29
3O
இந்து ஒளி

வாழதது தண்ணளி வளங்கள் மிக்க தாய்த் திருநாடு வாழ்க பண்ணொடு இசை பரப்பும் பைந்தமிழ் நீடுவாழ்க கண்ணுதற் கடவுளிந்த கவின்பெறு சைவம் வாழ்க புண்ணியப் பணிகள் செய்வோர் யாவரும் வாழ்க நன்றே
இந்து ஒளி
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சர்வசித்து வருடம் சித்திரை-ஆனி இதழ் ஆணித்திங்கள் 31° நாள்
17.2O7 ஆசிரியர் குழு :
பேராசிரியர் அ. சண்முகதாஸ் திரு. கந்தையா நீலகண்டன் திரு. க. இராஜபுவூனிஸ்வரன்
திரு. த. மனோகரன்
திரு. கு. பார்த்தீபன் ஒரு பிரதியின் விலை elbum 2OOO வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 8O.OO
வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் A.C. H.C. கட்டிடம் 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மர்வத்தைகொழும்பு-2,
இலங்கை. இணையத்தளம் : http:/www.hinducongress.org மின்னஞ்சல் : adminGhinduCongress.org தொலைபேசி எண் : 2434990, தொலைநகல் : 2344720
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்
ஆக்கியோன்களுடையதே. الصـ
HINDU OLI
Sithirai - Aani ALL CEYLON HINDU CONGRESS 15th July 2007 Editoria Board
Prof. A. Shanmugadas Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. D. Manoharan Mr. G. Partheepan Price : RS. 20.00 per copy Annual Subscription (inland) Rs. 80.00 Annual Subscription (Foreign) U. S. $ 10.00 (including Postage)
ALL CEYLON HNDU CONIGRESS A.C.H.C. Bldg9115, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Website : http://www.hinducongress, org E-Mail: adminGhinducongress.org Telephone No. 2434990, Fax No. 2344720 Next issue : Aadi - Puraddathy
Views expressed in the articles in Hindu Oli are those of the contributors.
2. சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 5
§&&&&&&&&&&&&&&&&&&&&&&&:
நெஞ்சிருக்கும் வை
மாமன்றத் தலைமையகக் கட்டிடத்தைப் பார்க்கும்போது அது, வெறுமனே மாமன்றப் பணிகளை எடுத்துச் சொல்வது மட்டுமல்ல, 3. கட்டிடம் அமைவதற்கு பேருதவியாகவும் துணையாகவு * மிருந்த ஒரு சில வள்ளல் * பெருமக்களையும் என்றென்றும் எங்கள் நினைவலைகளில் மீட்டிக் கொண்டேயிருக்கிறது.
இவர்களுள் முதல்வராகக் ஜ் குறிப்பிடக்கூடியவர் மாமன்றத் தின் முன்னாள் தலைவரான அமரர் வே. பாலசுப்பிரமணியம் அவர் கள் . եւյT լք ւ] Li T 6001 மாவட்டத்திலுள்ள கரவெட்டி ஜ் கிராமத்தில் பிறந்த இவர் * கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் தனது கல்வியை * ஆரம் பரித்து, கொழும் பு
gi ஜ் ஆனந தாக கல்லூரியிலும், * பரின் னர் யாழ் . இந்துக் 9Impir 66. LIITox
கல்லூரியிலும், வட்டுக்கோட்டை தோற்றம்
யாழ்ப்பாணக் கல்லூரியிலும்
a O3,O9, 1931 LJuhsir (B) பூர்த்தி செய்தார்.
அமரர் பாலசுப்பிரமணியம் ஜ் கல்லூரிக் கல்வியினை முடித்துக்கொண்ட பின்னர் * தனியார் நிறுவனங்களில் நிதிதொடர்புடைய g பதவிகளை வகித்து வந்தார். பின்னாளில் அவர் வர்த்தக நிறுவனங்களை அமைத்து நிர்வகித்து i. வந்ததன் மூலம் பிரபல தொழில் அதிபராக ஜ் விளங்கினார். “முயற்சி தன் மெய் வருத்தக் * கூலிதரும்,” என்ற வள்ளுவர் வாக்கிற்கு அமைய உழைப்பால் உயர்ந்த பெருமகன் அவர். தனக்காக - தன் குடும்பத்திற்காக என்றில்லாமல் சமய, சமூக, છે. கல்விப் பணிகளுக்காக வாரிவழங்கிய அவரது ஜ் வள்ளண்மை உயர் நிலையில் வைத்துப் ஜ் போற்றப்படுகிறது என்பது மட்டுமல்லாது, அவை * காலத்தால் அழியாதவையுமாகும். அவரது தொழில் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வசதிகளை வழங்கிக்கொண்டிருப்பதன் மூலம், அவரது சமூக நலப்பணி மேலும் விஸ்தீரணம் * பெற்றுள்ளதை சிறப்பாகக் குறிப்பிடலாம். 3. இவரது சமய சமூகப் பணியின் மகுடமாகக் 3. குறிப்பிடக் கூடியது மாமன்ற தலைமையகக்
密密懿密密密蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊蕊
༼《──────མ་མམ་ཁམ───མ་མཁཡམས་ཡམས་ཡམས་ཡ──────མ
*
இந்து ஒளி
 

38.333333333333333333333333.
ர நினைவிருக்கும்
கட்டிடமாகும் . மாமன் றத் தற்கான காணி கிடைத்திருந்தும், அதன் கட்டிட வேலைகள் ஆர ம ப க க ப பட த வேளையிலேயே மாமன்றத் தலைவராக அவர் பதவியேற்றார். மாமன்றத் திற்கான ஒரு தலைமையகக் கட்டிடம் அமைக்கவேண்டும் என் பதில் அவர் காட்டிய ஆர்வமும் , அவரது துணிச்சலான செயற்பாடுகளும் முழு அளவில் வெற்றிபெற்றன. இன்று கொழும்பு மாநகரில் உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றாக விளங்கும் அகில இலங்கை இந்து மாமன்றத் ğ}560) 6) 60) LD uu &b Lfô , அவரது நினைவை என்றென்றும் மீட் டிக் கொணி டிருக் கிறது என்பது மட்டுமல்ல, அவரது கப்பிரமணியம் பரோபகாரப் பணி பையும்
--
எடுத்துச் சொல்கிறது. மறைவு அமரர் பாலசுப்பிரமணியம் 15.O7. 1992 1986ம் ஆண்டு அக்டோபர் 26ம்
திகதியிலிருந்து மறையும்வரை மாமன்றத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். அவர் சிறிது காலம் சுகநலமற்ற நிலையில் 1992ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'
என்றார் வள்ளுவர் . இத்தகைய பெருமைக்குரியவராக விளங்கி, இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் பிரபல தொழிலதிபராக விளங்கிய போதிலும், சமய சமூகநலப் பணிகளில் அவர் வைத்திருந்த ஆர்வமும் ஈடுபாடும் வெகுவாகப் போற்றத்தக்கது.
இவரது சேவையை மதித்துப் போற்றும் வகையில், மாமன்றம் நன்றிமறவாது ஒவ்வொரு வருடமும் இவரது நினைவு நாளில் நினைவுப் பேருரையை ஏற்பாடுசெய்து நடத்திவருகிறது. இவ் வருடம் (2007) நடக்கும் நினைவுப் பேருரை நிகழ்வு அவரது மறைவின் பதினைந்தாவது வருட நிறைவின் நினைவாக அமைகிறது.
LLLYLL00Y00L00Y
غه
r
g
3.
இதித்து வரும் சித்திரை - ஆணி)

Page 6
ஒன்றிணைந்து 1
(திருமதி யோகேஸ்
பிறவியை பிணி' என்றும் 'பெருங்கடல் என்றும் அது
வேதனை தருவது என்றும் பலவாறு கூறுவார்கள். இன்று நாம் படும் அல்லல்கள் இவ்வுலக வாழ்க்கையைப் பெருந்துன்பம் நிறைந்ததாக எண்ண வைக்கின்றன.
துன்ப துயரங்களை தீர்க்க உதவுமாறு கோரி நாம் எங்கெங்கோ யார் யாரிடமெல்லாமோ செல்கின்றோம். எம் துயர்கடியக் காத்திருக்கும் இறைவனின் அடிதேடிச் சென்று பிரார்த்திக்க இது தருணம் என்பதை மனங்கொள்ள வேண்டும். நாம் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இல்லையென்று கூறமுடியாது. கும்பகர்ணனும் தவமியற்றினான். நித்திய வரத்திற்குப் பதிலாக நித்திரை வரம் கேட்டான். அத்தகைய தவறு செய்கின்றோமோ?
எமது சமய வழிபாட்டில் ஊரும் உலகமும் சிறப்புற வேண்டுமென வேண்டிக் கொள்வது வழமை. உலகம் முழுவதும் செழித்து சிறப்புறவேண்டுமென வேண்டும் சுலோகம் எமக்கு மனதிற்படுவதில்லை. அதற்குப் பல காரணங்கள். அதனை விட்டு விட்டு நாம் தெய்வத்திடம் வேண்டுவதோ எமக்கு வேண்டிய எத்தனையோ விடயங்கள். ஒரு சில மணித்துளிகளேனும் நாம் எல்லோரும் ஒருமித்து ‘உலகம் முழுவதும் மகிழ்வாயிருக்கவேண்டும். அமைதி நிலவ வேண்டும்' என்று வேண்டுதல் செய்ய முற்பட வேண்டும். இதற்கு நல்ல வழி கூட்டுப் பிரார்த்தனைதான்.
கோவில்களில் எத்தனையோ கிரியைகள் திருவிழாக்கள் என பல வழிபாடுகள் நடைபெறுகின்றன. அவையும் எமது நன்மைக்கும் ஆன்ம ஈடேற்றத்திற்குமே. ஆனால் எல்லோர் மனங்களும் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் பிரார்த்திக்கவும் சில நிமிடங்களை ஒதுக்கவேண்டும். அது நித்தமும் நடந்தால் நல்லது.
"கறைமலிகடல்குழ்நாகைக் காரோணங்கோயில் கொண்ட இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே y என்கின்றார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்” என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார். நித்தமும் தொழும் போது அவர் நீள நினைக்கின்றார். ‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது நமச்சிவாயவே' என்று பாடுகின்றார் சம்பந்தப் பெருமான். இவற்றிலிருந்து பக்தியால் கசிந்து கண்ணிர் மல்கி இறைவனை நீள நினைந்து பிரார்த்திக்க வேண்டும் என்பது தெரிகிறதல்லவா?
உறுதியும், உழைப்பும்
நல்ல சிந்தனையே நல்ல
இந்து ஒளி
 

Symig3361JTib
O O வரி சிவப்பிரகாசம்) 狐
இப்படி நாம் மனமுருகிப்பிரார்த்திக்கும்போது இறைவன் எம் உள்ளத்துள் குடிபுகுந்து விடுவான். அவ்வாறு இறைவன் குடிகொண்ட மனத்தினருக்கு எல்லாமே நல்லவையாகும் என தனது கோளறு பதிகத்தில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
கூட்டுப் பிரார்த்தனையின்போது கோளறு பதிகம் போன்ற பதிகங்களை மனமொன்றிப் பாடினால் நம் ஆன்ம ஈடேற்றத்திற்கும் உலக உய்விற்கும் வழிபிறக்கும். மனமொன்றிப் பாடுவதற்கு நாம் பாடும் தேவாரத்தின் பொருள் விளங்குவது அவசியமாகும். என்ன கூறி வழிபடுகிறோமென்று தெளிவின்றி வழிபடுவதைவிட நாம் எதை வேண்டி வழிபடுகிறோம் என்பதைப் புரிந்து கொண்டு வழிபடும்போது மனம் அதில் ஈடுபடவும் ஒரே விடயத்தை எல்லோர் மனங்களும் வேண்டவுங்கூடியதாகிறது. எனவே பாடும் திருமுறைகளின் பொருள் அறிந்த ஒருவர் முதலில் அதனை விளக்கிக் கூறியபின் பிரார்த்தனையில் ஈடுபடுவது பெரும் பயனளிக்கும். இம்முயற்சி எமது சமய அறிவையும் வளர்க்கும்.
இறைவனின் அடியவர்களால் பாடப்பட்ட திருமுறைகளுக்கு ஒரு திவ்விய சக்தி இருக்கின்றது. எல்லாப் பாடல்களையுமே பிரார்த்தனையின்போது பாடலாமென்றாலும் இன்றைய எம் இடர் தீர்க்க வேண்டிப்பாட ஏற்றவையான திருநெடுங்களப் பதிகம், நமச்சிவாயப் பதிகம், கோளறு பதிகம், பஞ்சாக்கரத் திருப்பதிகம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து பாடி வழிபடுவது கூடிய பயன் நல்கும். அப்பர்பெருமான் அருளிய காலபாசத் திருக்குறுந்தொகையின் தேவாரங்கள் இரண்டினைப் பார்ப்போம்.
நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பர்க்குக் கடுக்கக் கல்லவடம் இடுவார்கட்குக் கொடுக்கக் கொள்க எனவுரைப் பார்களை இடுக்கண் செய்யப் பெறீர் இங்கு நீங்குமே
படையும் பாசமும் பற்றிய கையினிர் அடையன்மின் நமது ஈசன் அடியரை விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம் புடைபுகாது நீர்போற்றியே போமினே. இத் தேவாரங்கள், இன்று அஞ்சி நடுங்கும் மனங்கள் பாடிப்பயன் பெறக்கூடியவையல்லவா? இத்தகைய திருமுறைப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து கூட்டுப் பிரார்த்தனை செய்வது அத்தியாவசியமானதாகும். நமது பிரார்தனை இறைவனை எட்டும். அவனருள் எமக்கு நிச்சயம் கிட்டும்.
வெற்றியைத் தரும் (பக்தி) Sì
செயலுக்கு அடிப்படை (பக்தி)
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி

Page 7
LL LALeLLLLLLeeeLLeeeLeeLLLLLLeeeLLLLLLeeLeeeSLSLLLLLLLAMeeJSLeLSAeeLLeLALAALLSLSLeAeeALLeeeLLiLiLeLeLeeLeLiL SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS * SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
* , விருந்துவரி
w1.hr
S செல்வி. செல்வ அ விரிவுன தமிழ்த்துறை, யாழ்
இல்லத்திற்கு வருகின்ற விருந்தினரை முகமலர்ச்சியோடு இன்சொற்களால் வரவேற்று விருந்தோம்புவது தமிழர் பண்பாடு. விருந்தினரை உபசரித்து அவர்களுக்கு உபகாரம் செய்வதுதான் அன்புடைய கணவனும் மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்லறத்தின் முக்கிய நோக்கம் என திருவள்ளுவர் எடுத்துரைத்துள்ளார். பண்டைய நாளில் ஆண்கள் பொருள் ஈட்டுவதாகவும் போர்க் கடமைகளுக்காகவும் வெளிவாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பார்கள். ஆனால் பெண்கள் இல்லத்திற்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில் கருத்தாயிருப்பார்கள். ஆகையால்தான் இல்லத்தில் உரியவர்கள் பெண்கள் ஆகிறார்கள். சமயோசித புத்தி, செயல் திட்டப் பாங்கு, குறிப்பறிந்து செயற்படுதல், தொலைநோக்கு, சூழல் அவதானம் போன்ற பண்பு நலன்களைப் பெண்கள் இயல்பாகவே பெற்றிருந்தனர். இல்லாள், இல்லக் கிழத்தி, மனையாள், மனையாட்டி, மனைவி போன்ற பெயர்கள் பெண்ணானவள் இல்லத்தில் பெற்றிருந்த தலைமைத்துவச் சிறப்பிற்கு தக்க எடுத்துக்காட்டுகள்.
"அறவோர்க் களித்தலும் அந்தன ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்” என்ற சிலப்பதிகார அடிகள் பெண் இல்லத்தில் ஆற்றுகின்ற அறச் செயல்களை விவரித்துள்ளன. ஆண்களை விடப் பெண்களே விருந்தினர்களைப் பேணுகின்ற ஒழுக்கத்தில் நன்கு பயிற்சி உடையவராக இருக்க வேண்டும். பெண்ணின் துணையில்லாமல் ஆணால் விருந்தினரை உபசரிக்க முடியாது. இராவணனால் அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை “விருந்து வந்தபோது என்னுறுமோ என விம்மும்” என இராமபிரானை எண்ணி வருந்துவதாக கம்பர் பாடியுள்ளார். சைவசமயத்தில் விருந்தோம்பல் ஓர் இன்றியமையாத பணியாகக் கருதப்பட்டது. பிறைசூடிய பெருமானின் அடியவர்களை உபசரிப்பதை தம்பிறவிப் பயனாகக் கருதினார்கள்.
"ஓட்டிட்ட பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்” என்னும் சம்பந்தரது திருமயிலைத் திருப்பாசுரம் மேற்குறித்த கருத்துக்கு தக்க சான்றாகும்.
இல்லறத்தோடு இணைந்து சமய நெறி நின்று ஒழுகிய பெண்கள் பலரை இந்து சமய இலக்கியங்கள் பெருமைப்படுத்தி உள்ளன. இவற்றுள் தெய்வப் புலவர் சேக்கிழார் இயற்றிய திருத் தொண்டர் புராணம் கிடைத்தற்கரிய கருவூலங்களுள் ஒன்றாகும். அறுபத்து மூன்று அருளாளர்களின் வாழ்வியல் நெறியை இந்நூல் விளக்குகின்றது. திருத்தொண்டர் புராணம் காட்டுகின்ற ஆண் அடியார்களின் புகழுக்குக் காரணமாக அைைமந்தவர்கள் மனையறத்தின் வேராக நின்ற மகளிர் ஆவார். சமய நெறி நின்ற ஆடவர்க்குத் துணையாக நின்று புகழ்சேர்த்த பெண்களின்
இந்து ஒளி
 
 

LLLLSLLLLSLLALSLTSeSLALeLS SSLLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLSLSSLSLSSLSLSSLSLSJSeALLLLLSSLASAAAqLSLSALSeAiLiLSAYA LLSLSqqqLqLLSLSLSSLLLS SA AS LL LLLLLSAAAAA
RSa LaAAALLSMLYAAALLM LAL AALLLAAAAASSA مخخخخخخخخخح SIKSIKSIKSIKSIKSIKSSSSSSSSSSK
ன் உவக்கும் () பும்பிகை நடராஜா
Juurenti
பல்கலைக்கழகம்,
பணியினை அனைவரும் உணரும் வகையில் சேக்கிழார் சிறப்பித்துள்ளார். அன்பு, சேவை என்ற பண்பு நலன்களை பெண்கள் பேணுகின்ற நிலையினைத் திருத்தொண்டர் புராணம் தெளிவாகக் காட்டுகின்றது. வாழ்க்கைத் துணைநலம் பற்றி வள்ளுவர் கூறும் இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாக திருத்தொண்டர் புராணத்தில் பேசப்படும் பெண்களின் வாழ்வியல் அைைமகின்றது. தாய், சகோதரி, மனைவி என வேறுபட்ட உறவு நிலைகளில் இவர்கள் சமயப்பணி ஆற்றியுள்ளனர்.
மனைவியர் நிலையில் பேசப்படும் பெண்களின் வரிசையில் காரைக்காலம்மையார், மங்கையற்கரசியார், இளையான்குடி மாறனாரின் மனைவி, இயற்பகையாரின் மனைவி, சிறுத்தொண்டரின் மனைவி, திருநீலகண்டரின் மனைவி, திருநீலநக்கரின் மனைவி, அப்பூதியடிகளின் மனைவி, சுந்தரரின் மனைவிமார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இல்லறத்தோடு இறைவழிபாட்டையும் இணைத்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டும் ஆற்றல் மனைவிக்கு இருப்பதை இவர்களின் வரலாறு காட்டுகின்றது.
கிடைத்தற்கரிய கருவூலமாகிய திருத்தொண்டர் புராணத்தில் தொண்டர்கள் சிவப்பேறு பெற்ற விதங்கள் பலவகைப்பட்டன. அவற்றுள் சிவனடியார்களைப் பேணி, வேண்டுவன நல்கி திருவமுது செய்வித்து சிவப்பேறடைந்தவர்கள் பலர் உளர். இவர்களால் காரைக்காலம்மையார் தவிர ஏனையவர்கள் ஆண் அடியார்களாயினும், அடியவர்களுக்கு திருவமுது செய்வித்தற்கு உறுதுணையாக நின்றவர்கள் இவர்களுடைய மனைவிமார்களேயாகும். ஒருவருடைய வயிற்றுப் பசியைப் போக்குதல் முதன்மை அறமாகப் போற்றப்பட்டது. பசித்தவருக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற நல்லறத்தையே பண்டை நூல்கள் வலியுறுத்துகின்றன. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது புறநானூற்றுச் செய்யுள் அடி உணவு இல்லாவிடில் உயிர்வாழ முடியாது. உணவு அளிப்பவர் உயிரைக் கொடுத்தவராகின்றார். பண்டைத் தமிழரின் இக் கொள்கை மணிமேகலையிலும் பின்பற்றப்படுவது காணலாம்.
செவ்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு எனத் திருவள்ளுவரும் விருந்தோம்பல் செய்பவரின் பண்பினையும் பயனையும் விளக்கியுள்ளார். பகலில் மட்டுமன்றி இரவில் வருகின்ற விருந்தினரையும் முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரிக்கும் பெண்மையின் பண்பு நலன்களை சங்க இலக்கியப் பாடல்களால் அறிய முடிகின்றது. வறுமை வந்தபோதும் இல்லத்திற்கு வந்தடைந்த சிவனடியாரை உபசரிக்க வழி தெரியாது வருந்திய கணவனுக்கு வழி சொன்னவர் இளையான் குடி மாறனாரின் மனைவியார். மனையறமும் விருந்தோம்பலும் காலந்தோறும் பெண்களினாலே பேணப்பட்டு வருகின்ற மைக்கு
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 8
மாறனாரின் மனைவி சான்றாக திகழ்கின்றார். இவ்வுலகிற்கு வருகின்ற அடியவர்களை உபசரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை அனைவரும் உணரும் வகையில் இளையான்குடி மாறனாரின் வரலாறு பேசப்படுகின்றது. இளையான்குடிமாறனார் சிவனடியார்களை உபசரித்த திறத்தைச் சேக்கிழார் அழகுற எடுத்துக் காட்டியுள்ளார்.
கொண்டுவந்து மனைப்புகுந்து
குலாவுபாதம் விளக்கியே மண்டு காதலின் ஆதனத்திடை
வைத்தருச்சனை செய்த பின் உண்டிநாலு விதத்திலாறு
சுவைத் திறத்தினில் ஒப்பிலா அண்டர் நாயகர் தொண்டர் இச்சையின் அமுது செய்ய அளித்துள்ளார் இளையான்குடி மாறனார் தமது இல்லத்திற்கு வரும் அடியவர்களின் திருவடிகளைக் கழுவி, அமரச் செய்து, அருச்சனை செய்து, பல்சுவையுள்ள உணவுகளை நடராசப் பெருமானின் அடியவர்கள் விருப்பத்தோடு திருவமுது செய்யும் வண்ணம் வழங்கி வருபவர். அடியவர்களின் திருவுள்ளங்கள் மகிழ்ச்சி அடையும் வண்ணம் திருவருள் செய்த தன்மையினால் அவருடைய நீண்டகாலச் செல்வம் விரைவில் வறுமையடைந்தது. பல்வேறு வழிகளில் செல்வங்கள் அழிந்தபோது மாறனார் உள்ளம் தளரவில்லை. பண்டங்களை விற்றும் பிற இடங்களில் வாங்கியும் வழமைபோல் திருவமுதுசெய்கின்ற திருப்பணியை ஆற்றிவந்தார். ஒருநாள் மாரி காலத்தில் நள்ளிருள் வேளையில் இல்லத்திற்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் வழிவகை தெரியாது வருந்தி நிற்கின்றார் இளையான்குடி மாறனார்.
நமக்கு முன்பிங் குணவிலை யாயினும் இமக்கு லக்கொடி பாகர்க்கினியர் தமக்கு நாம் இன் அடிசில் தகவுற அமைக்கு மாறெங்கனே அணங்கே இல்லத்தில் உண்பதற்குரிய உணவில்லை. ஆயினும் நடராசப் பெருமானுக்கு இனியவரான இந்த விருந்தினருக்கு திருவமுது சமைக்கும் வகை எவ்வாறு என மனைவியாரிடம் கேட்டார். இயல்பாக மாறனாரின் துணைவியார் கொண்டிருந்த சமயோசித புத்தியால் கணவருக்குத் தக்க அறிவுரை கூறி நிற்கின்றார்.
செல்லல் நீங்கப் பகல்வித் தியசெந்நெல் மல்லல் நீர்முளை வாரிக் கொடுவந்தால் வல்லவாறு அமுதாக்கலும் ஆகும் மனைவியார் சொன்னபடி அன்று பகலிலே விதைத்த நெல் மணியை வாரிக் கொண்டு வருகின்றார். விறகுக்காக வீட்டின் கூரையை பிடுங்கி வைக்கின்றார். கறி சமைப்பதற்கு வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்ந்திருந்த குறுங்கீரைகளைப் பறித்துக் கொடுக்கின்றார். அவற்றை அம்மையாரும் விருப்புடன் தமது
『 இறைநம்பிக்கை உள்ளோர்க்கு
பொறுமையும், தன்னடக்கமும்த
இந்து ஒளி

கைப் பழக்கத்தால் பலவகைக் கறியாக்கினார். பின் கணவரோடு இணைந்து இல்லத்திற்கு வந்த அடியவரை அன்புடன் அழைத்து அமுது செய்வித்தார்.
இளையான்குடி மாறநாயனாரின் துணைவியார் அடியார்களுக்கு அமுது படைத்த கணவரின் கொள்கைக்குத் துணைநின்ற மழைநாள் நள்ளிருளில் பிறரிடம் கடன் பெற முடியாத நிலையிலும் தாங்கள் உணவு உண்ணாமல் பட்டினி இருந்த நிலையில் சிவனடியாருக்கு கணவன் உணவு படைக்கத் துணையானார். மதி நலமிக்க நல்ல அமைச்சரைப் போன்று கணவனுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி நின்றார். வறுமையுற்ற காலத்திலும் விருந்து புரந்த அம்மையாரின் மனையற மாண்பு போற்றுதற்குரியது.
இயந்திரக் கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் விருந்தோம்பும் பண்பும் அருகிக் கொண்டு செல்கின்றது. அறிவியல் சாதனங்களின் பெருக்கம், நகர மக்களின் இயந்திர வாழ்க்கை, சுயநல வாழ்வு, பொருளாதாரச் சிக்கல், பொதுநல நாட்டமின்மை, பணம் சேகரிக்கும் ஆர்வம், பிறருக்கு பகிர்ந்தளிக்க விரும்பாத சுருங்கிய மனநிலை, உணவுச் சாலைகளின் பெருக்கம், பெண்கள் வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுதல் போன்ற காரணிகளால் விருந்தோம்பும் பண்பும் குறைவடைந்து வருகின்றது. விருந்தோம்பல் வாழ்வில் தேவையான ஒன்று. எல்லோரும் கூடிப்பகிர்ந்து உண்ணும் பண்பு இல்லையென்றால் மனிதன் இயந்திரமாக மாறிவிடுவான். அகத்தில் அன்பு உணர்வு மறைந்து விடும். பண்பு மிக்கார் பலராய் அணையினும் உண்ப வேண்டி ஒருவர் அணையினும் எண்பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு நண்பு கூர்ந்தமு தூட்டும் நலத்தினார் என்று சேக்கிழார் பாடியுள்ளார். அன்புடன் விருந்து அளிப்பவரையே பண்புடையவர் என்று சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய கருத்துக்களைக் கொண்டுள்ள பண்பாட்டுக் கருவூலமாக திகழ்கின்றது. பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பும் பண்பாட்டைப் பேணி வந்தனர். இவ்விடத்தில்
அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பினள் என்ற பழந்தமிழ் இலக்கியம் நற்றிணையின் பாடலடிகள் மனங்கொள்ளத் தக்கதாகும். மறக்கப்பட்டு வருகின்ற விருந்தோம்பல் பண்பாட்டை இளந்தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. திருத்தொண்டர் புராணத்தில் உயர்ந்த பண்புநலன்கள் அடியவர்களின் வாழ்வியல் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இப்பண்பட்ட கருத்துக்கள் படிப்பவர் உள்ளங்களையும் பண்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
* எதுவும் முடியாததல்ல (பக்தி) Sì
ான் வெற்றியைத் தரும் (பக்தி)
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 9
6Dujaisai LTf
“சிவஞா6
எஸ். துஷ்யந் (அறநெறி,தர்மாசி மட்/மகிழுர்
01. அறிமுகம்
சிவஞானபோதம் சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கினுள் மணிமுடியாய் சிறப்பிற்குரிய முதன்மை நூலாகும். இந்நூலை அருளிச் செய்தவர் மெய்கண்டதேவர். இந்நூல் சோழராட்சியில் கி. பி. 13 ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கூறுவர். சிவஞானபோதம் சைவ சித்தாந்த செந்நெறியை விளக்கும் நூல்களுள் தலையானதும், பொருட்செறிவும், திட்பமும் நுட்பமுமுடைய நூலாகும். இந்நூலை மெய்கண்டார் கண்ட தத்துவம்' எனவும் கூறுவர்.
02. தோற்றம்
ஆகமாந்தம் என்பது சைவசித்தாந்தம் எனும் கருத்திற்கமைய ஆகமங்களின் ஞானபாதம் சைவசித்தாந்த வியலையே பேசுகின்றது. 28 சிவாகமங்களில் ஒன்றான ரௌரவ ஆகமத்தின் 72 ஆவது படலமான பாவ விமோசனப் படலத்தில் 13 ஆம் அத்தியாயமான துவாதச சூத்திரமே வடமொழிச் சிவஞானபோதம் எனத் தோற்றம் பெற்றது. பின்பு இவ்வடமொழிச் சிவஞான போதம் நந்திகேஸ்வரரால் சனற்குமாரருக்கும், சனற்குமாரரால் - சத்தியஞான தரிசனர்க்கும், சத்தியஞான தரிசனரால் பரஞ்சோதி முனிவர்க்கும், பரஞ்சோதி முனிவரால் - மெய்கண்டவருக்கும் உபதேசிக்கப்பட்டதென்றும், பின்பு மெய்கண்டார் அதனைத் தமிழில் 12 சூத்திரங்களாகப் பாடினாரென்பதும் ஐதீகம். இவ்வாறு தமிழிலே பாடப்பட்ட சிவஞானபோதம் வைதிக சித்தாந்தம் என்றும் பெயர் பெறும்.
08. சிவஞானபோதத்தின் அமைப்பும், பொருண்மரபும்
சிவஞானபோதம் 4 இயல்கள், 12 சூத்திரங்கள், 81 வெண்பா பாடல்களையும் கொண்டமைந்துள்ளது. நான்கு இயல்களுக்கும் மூன்று, மூன்று சூத்திரங்கள் வீதம் பன்னிரு சூத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சூத்திரங்கள் ஒவ்வொன்றும் மூன்றடிகள் அல்லது நான்கடிகள் உடையன. சிவஞானபோதத்தின் முதல் ஆறு சூத்திரங்கள் பொது அதிகாரம் எனவும், பின் ஆறுசூத்திரங்களும் உண்மை அதிகாரம் எனவும் அமைக்கப்பட்டுள்ளன. 1) பிரமாணவியல் - 1, 2, 3 சூத்திரங்கள் 2) இலக்கணவியல் - 4, 5 சூெத்திரங்கள் "து அசி" 3) சாதனவியல் - 7, 8, 9 சூத்திரங்கள் 8 4) ಇಂ - 10, 1, : }உண்மை அதிகாரம்
பிரமாணவியல் பொருண்மரபுகள்
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் உண்மைத் தன்மை 1ம், 2ம், 3ம் சூத்திரப் பாடல்களில் விளக்கப்படுகின்றது. முப்பொருள்களில் முதலில் உலகிற்கு முதற் கடவுளாகிய பதி
இந்து ஒளி
 
 
 
 
 

கண்ட தத்துவம்
99 ாபோதம்
BA (Hons) Dip, in Edu. ரிய போதனாசிரியர்) சரஸ்வதிம. வி.
ஒருவர் உள்ளார் என்று அநுமானப் பிரமாணங் கொண்டு உண்மையான பொருள் பதியென நிரூபிக்கப்படுகின்றது. இது 1ம் சூத்திரப் பாடலில் தெரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவன் அவள் அது வெனும் மூவினையின்மையிற் தோன்றியதிதியே ஒடுங்கி மலத்துளதா அந்தம் ஆதி என்மனார் புலவர்' அவன், அவள், அது எனச் சுட்டி அறியப்படுவது பிரபஞ்சம் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று தொழில்களையுடையதால் அது ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டு இருக்கவேண்டும். அவன் அறியப்படாதவனாய் எவ்வகையான மாறுதல் இல்லாத பொருளாய், எல்லா உலகையும் ஒடுக்கி, தோற்றவல்லவனாய் இருத்தல் வேண்டும். அத்தோடு ஆன்மாக்களின் அறியாமையைப் போக்கிஅறிவூட்டவே உலகைப் படைக்கின்ற முதல்வனாக, ஆதார நிமிர்த்த காரணமாக இறைவன் விளங்குகின்றான்.
2ம் சூத்திரப் பாடலில் இறைவன் இவ் உலகைப் படைக்கும் போது ஆன்மாக்களோடும், உலகோடும் ஒன்றாய், வேறாய், உடனாய் நின்று இயக்குவான். ஆன்மாக்கள் புரியும் நல்வினை, தீவினைக்கேற்ப அவற்றுக்குரிய பயனை இறைவனே ஊட்டுகிறான். மக்கள் இறப்பினையும், பிறப்பினையும் எய்யுமாறு தன் சக்தியோடு இணை பிரியாது நிற்கின்றார் என்பதை விளக்குகின்றது.
“அவையே தானே யாயிரு வினையிற்
போக்கு வரவு புளிய வாணையி நீக்கமின்றிநிற்கு மன்றே” பின்வரும் 3ம் சூத்திரப் பாடல் மூலம் 7 வழிமுறைகளில் அனுமானம் பிரமாணம் மூலம் ஆன்மா உண்மையானது என்பது நிரூபிக்கப்பட்டுகின்றது.
“உளதில தென்றலில் உளது எனதுடல் என்றலில்
ஐம்புலன் ஒழுக்கம் அறிதலில் கண்டி உண்டி வினையின்மையிலுணர்த்த வுணர்தலின் மாயா வியந்திரதனுவினுளான்மா” 1. “ஆன்மா இல்லை” என்று கூறுவதைக் கொண்டு உளது. 2. “எனதுடல்” என்பதைக் கொண்டு உடலைவிட
வேறான ஆன்மா உளது. 3. ஐம்புலன்களை விட அறியும் வேறான பொருள் ஆன்மா
உள்து. 4. கனவு நிலையில் அறிவதை நனவில் மாறி அறிவதால் கனவு நிலைக்கு அப்பாற்பட்ட சூக்கும உடலை கடந்த ஆன்மா உளது. 5. உறக்கத்தில் பிராணவாயு உண்டு. ஆனால் உடலில் செயற்பாட்டில் அதுவில்லை. எனவே பிராணவாயு அல்லாத ஆன்மா உண்டு.
சர்வசித்து வருடம் சித்திரை-ஆணி)

Page 10
6. அறிவித்தால் ஒன்றை அறியும் அம்சத்தை ஆன்மா என
உணரலாம். 7. தூல சூக்கும உடலுக்கு வேறாக இருப்பது ஆன்மா உளது.
இலக்கணவியல் பொருள் மரபுகள்
பதி, பசு, பாசம் ஆகிய பொருள்களின் இயல்புகள் 4ம்,5ம்,6ம் சூத்திரப்பாடல்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது. 4ம் சூத்திரப்பாடல் பசுவின் இலக்கணங்களை கூறுகின்றது.
"அந்த கரணமவற்றின் ஒன்று அன்று சந்தித்த ஆன்மா சகமலத் துணராது அமைச்சு அரசு ஏய்ப்ப நின் ஐந்தவத்தை” அந்த கரணங்களினிற்று வேறானது ஆன்மா. அத்துடன் அரசன் அமைச்சரோடு கூடிச் செயற்படுவது போல ஆன்மா அவற்றுடன் கூடிச் செயற்படுகின்றது. ஆதியில் இருந்து ஆன்மா ஆணவத்தோடு கூடியிருப்பதால் அறிவின்றிச் செயற்படுகின்றது. இவ் அறியாமை நீங்க ஆன்மா உடலில் உள்ள கருவிகளோடு இருந்து பிரிந்தும், கனவு, நனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் (சாக்கிரம்,சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியதீதம்) இவ்வாறு ஐந்து நிலைகளிலிருந்தும் வரல் வேண்டும்.
5ம் சூத்திரப் பாடல் பாசத்தின் இலக்கணங்களைக் கூறுகின்றது.
"விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்
களந்தறிந்தறியா வாங்கவை போலத் தாம்தம் முனர்வின்தமியருள் காந்தங் கண்ட பசாசத்தவையே” அந்தகரணத்தினின்றும் வேறாயிருந்த போதிலும் ஆன்மா ஐம்பொறிகளினால் விடயங்களை அறிகின்றது. ஆயினும் அவை தம்மை நோக்கி அறிவதில்லை. தம்மைச் செலுத்தும் உயிரையும் அறிவதில்லை. இவற்றால் இறைவனது திரோண சக்தியையும் அறிய மாட்டாது. காந்தம் அசைவின்றி இருந்து இரும்புத் துண்டுகளைத் தன் ஆற்றலினால் அடக்குவது போல் பாசத்துள் ஆன்மா அடங்குகின்றது என பாசலட்சணம் கூறுகின்றது.
6ம் சூத்திரப் பாடல் பதி இலக்கணவியலைக் கூறுகின்றது. "உணருரு அசத் தெனின் உணராதின்மையின்
இரு திறன் அல்லது சிவசத் தாமென இரண்டு வகையினிசைக்குமன் உலகே’ சிவன் பாச ஞான பசு ஞானங்களால் அறியப்படுவாரென்றால் அவர் அங்ங்ணம் அறியப்படும் அசேதனப் பிரபஞ்சம் போல அழி பொருளாகிய அசத்தாய் முடிவர். எவ்வகையாலும் உணரப்படாத பொருளாவரெனின் அவர் முயற்கோடு. ஆமைமயிர் போலச் சூனியப் பொருளேயாவர். ஆதலால் இவ்விருவியல்புமின்றி ஒருவகையில் பாசஞான, பசுஞானங்களால் அறியப்படாத சிவமாயும், இன்னொரு வகையில் பதிஞானமொன்றினால் அறியப்படும் சத்தாயும் இரு வகையாலும் அவர் சிவசத்தேயாவார்.
சாதனவியல் பொருண்மரபுகள்
மெய்ப்பொருளை ஆன்மா அடையும் நெறி7ம், 8ம், 9ம் சூத்திரப் பாடல்களில் கூறப்படுகின்றது. இதில் ஆன்மாவில் இயல்பு முக்தி, முக்தியடைவதற்கான மார்க்கங்கள் கூறப்பட்டுள்ளன.
7ம் சூத்திரப் பாடல்களில் பதியை அடையும் இன்றியமையாமை கூறப்படுகின்றது.
“யாவையுஞ் குனியஞ் சக்தெதிராகலிற்
சத்தே யறியாதசத்தில் தறியா திருதிறனறிவுள திரண்டலா வான்மா”
இந்து ஒளி

சத்து, அசத்து எனும் இரண்டினுள்ளே சிவ சத்தின் சந்நிதியிலே உணரப்படும் தன்மையாகிய அசத்தெல்லாம் விளங்கமாட்டாது. அது பற்றிச் சூனியம் எனப்படும். சத்தாகிய சிவம் அசத்தாகிய பாசத்தை அறிந்து அநுபவியாது, அசத்தாகிய பாசம் அறிவில்லாத சடமாதலின், சத்தாகிய சிவத்தை அறிந்து அநுபவியாது. பிரபஞ்சத்தையும் சிவத்தையும் அறியும் அறிவொன்றுள்ளது எனின் அதுவே சத்தாகிய சிவமற்ற தன்மையும், அசத்தாகிய பிரபஞ்சமற்ற தன்மையும், இரண்டுமின்றிச் சத்தசத்தாயுள்ள ஆன்மாவாகும்.
8ம் சூத்திரப் பாடலில் ஞானத்தினை உணரும் முறை உணரப்படுகின்றது. இது குருவருளால் ஆன்மாவுக்கு கிடைக்கும் சாதனம் கூறப்படுகின்றது.
"ஜம்புல வேடரி அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டன்னிய மின்மையின் அரன் கழல் செலும்” ஆன்மா பாசத்தில் அழுந்தி இறைவனை உணர்வதற்கான மெய்யுணர்வை பெறாது இருக்கின்றது. ஆன்மாக்களை ஆட்கொள்ள சிவன் குருவாக உருவமெடுத்து அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞானத்தைக் கொடுக்கும் தீட்சை, சரியை, கிரியை வழிபாடுகளையும் போதித்தருள்கின்றான். மேலும் விருப்பு வெறுப்பற்ற இருவினையொப்பால் ஆன்மா உணர்ந்து முதல்வன் திருவடியில் பிறப்பின்றி ஒன்றி இன்புற்று இருக்கும். இதுவே முக்தி நிலை எனவும் கூறப்படுகின்றது. 9ம் சூத்திரப் பாடலில் ஆன்மா பக்குவமடையும் நிலைப்பாடு கூறுப்படுகின்றது.
"ஊனக் கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணிற் சிந்தை நாடி உராத்துணைத் தேர்த் தெனப் பாசமெருவத் தண்ணிழலாம் பதி விதி யெண்ணுமஞ் செழுத்தே’ பாச ஞானத்தாலும், பசு ஞானத்தாலும் அறிய முடியாத பேரின்ப முதல்வனைத் திருவருள் ஞானமாகிய பதி ஞானம் எனப்படும் சிவஞானத்தால் ஒருவன் தன் அறிவின் கண் நாடுதல் வேண்டும். அப்போது பாசம் விடுபடும். இந்நிலையில் இறைவன் தண்ணிய நிழல்போல் தோன்றுவான். அவ்வாறு தோன்றும் இறையுணர்வு தொடர்ந்து நீங்காதிருக்க இறைவனின் திருவைந்தெழுத்தை முறையாக எண்ண வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
பயனியல் பொருண்மரபுகள் 10ம், 11ம், 12ம் சூத்திரங்கள் மெய்ப்பொருளை அடைவதனால் ஏற்படும் பயன் கூறப்படுகின்றது. பாசத்தில் இருந்து நீக்கம் பெறும் ஆன்மாக்கள் சிவப்பேறு பெறும் நிலை, சீவன் முக்தரின் நிலை பற்றியவை கூறப்படுகின்றது.
10ம் சூத்திரம் பாச நீக்கம் பெறும் நிலையைக் கூறுகின்றது. "அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகி இறைபணிநிற்க மலமாயை தன்னொடு வல்வினை இன்றே” இறைவன் ஆன்மாவுக்கு உதவும் உண்மையை அறிந்தபோது ஆன்மாவானது இறைவனது நோக்கத்தை முன்னே வைத்து அதற்கேற்பச் செயற்பட வேண்டும். இதையே “ஏகனாதல்’எனக் குறிப்பிடுகின்றது. இதற்காக இறைவனால் பணிக்கப்பட்ட இறைபணியையும் கடைப்பிடிக்க வேண்டும். ஏகனாதல் மூலம் - ஆணவமலமும், இறைபணி நிற்பதனால் - மாயை, கன்மம் ஆகிய மலங்களும் நீங்குகின்றன.
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 11
11ம் சூத்திரம் சிவப்பேறு எனும் முக்தரின் சிறப்பு நிலை கூறப்படுகின்றது.
“காணும் கண்ணுக்கு காட்டும் உளம் போல் கானா உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரண் கழல் செலுமே” கண்களுக்கு உருவத்தைக் காட்டுவதும் அவற்றோடு ஒன்றித்து நின்று காண்பவனும் ஆன்மாவாகும். அது போல இறைவனுடைய திருவருட் சக்தி ஆன்மாவுடன் உடனாகி நின்று அறிவித்து தானும் அறிந்து வருகின்றது. ஆதலால் ஆன்மாவின் உபகாரியம் என்னவெனில் இறைவனை அன்பின் வடிவமாகக் கொண்டு அவரை ஒருகாலும் மறவாத பரமுக்தி நிலையில் தான்வேறு, இறைவன் வேறு என்று இல்லாது ஒன்றுபட்டு இன்புற வேண்டும்.
12ம் சூத்திரம் சீவன் முக்தர் நிலையினின்று பிறழாது நிற்பதற்குரிய உபாயம் கூறப்பட்டுள்ளது.
“செம்மலர் நோன்றாள் சேர லொட்டா அம்மலங் கழிஇ அன்பரொரு மரிஇ மாலற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரனெனத் தொழுமே” சீவன் முக்தி நிலையடைந்த ஆன்மாக்கள் பிரார்த்த வினை காரணமாக மீண்டும் உலகில் பிறக்கலாம். இதனால் பாசப் பிணைப்பு மீண்டும் தாக்காதவாறு அதற்கான உபாயத்தை சீவன் முக்தர் தேடிக் கொள்ள வேண்டும். சீவன் முக்தன் என்பவன் மும்மலங்களையும் களைபவன் எனப் பொருள்படும். இக்கருத்தையே “செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங் கழிஇ” என்று சூத்திரம் உணர்த்துகின்றது. சீவன் முக்தன் தன்தை மலங்கள் தாக்காதபடி இருக்க சிவ பக்தர்களை எப்பொழுதும் வணங்கி எப்பொழுதும் ஆலயத்தில் இருக்கும் சிவன் எனக் கண்டு வழிபட வேண்டும். 4. சைவசித்தாந்த வளர்ச்சியில் சிவஞான போதத்தின் பங்கு
சிவஞானபோதம் சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கிற்கும் முடிமணியாய் திகழ்வதோடு தொன்றுதொட்டே வடமொழி நூல்களிலும், தென்மொழி நூல்களிலும் பயின்று வந்துள்ளது. சித்தாந்த உண்மைகளை அறிவராட்சிக்கு ஒத்தவாறு திட்ட நுட்பமாய் எடுத்துக் கூறும் தலைசிறந்த சித்தாந்த நூலாதலால் “மெய்கண்டான் நூல் சென்னிற் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிவிக்கலுற்றாம்” என்று அருளினார் அருணந்தி சிவச்சாரியார்.
சிவஞானபோதம்பிரம்மசூத்திரம், உபநிடதம்,வேதம், ஆகமம் போன்றவற்றின் சாரமாகவே விளங்குகின்றது. பிரம சூத்திரம் கூறும் அமைப்பில் சிவஞான போதம் பிரமாண இயல், இலக்கணவியல், சாதனவியல், பயனியல் எனும் நான்கு இயல்களாக அமைந்துள்ளன. இரெளரவாகமத்தின் ஞானாபாதமே சிவஞானபோத பன்னிரு சூத்திரங்களாக விளங்கின. இதனால் ஆகமாந்தம் சைவசித்தாந்தம் எனப் பேசப்படுகின்றது. ஆகமங்களில் சித்தாந்தோ வேதசாரத்வாத்” என்பதில் “சித்தாந்தம் வேதசாரம்” என்றும் கூறப்படுகின்றன. இவ்வாறான சிவஞான போத இயல்புகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் போன்ற தேவார முதலியோரின் தேவாரப் பாடல்களில் தெளிந்து கொள்ளலாம்.
இந்து ஒளி

இந்த விளக்கத்தையொட்டியே வேதம் பகவாகவும், அதிலிருந்து கறந்தபால் ஆகமமாகவும், பாலில் இருந்து கடையப்பட்ட நெய் மூவர் பாடிய தேவாரமாகவும், நெய்யில் இருந்து எழும் சுவை சிவஞானபோதம் என உவமைப்படுத்துவது சித்தாந்த நெறியில் மரபாக உள்ளது. இதை பின்வரும் பாடலில் கண்டு கொள்ளலாம்.
"வேதம் பசு அதன் பால் மெய்யாகமம் நால்வர்
ஒதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதம் மிகு
நெய்யின் உறுசுவையாம் நீள் வெண்ணை மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் திறம்”
பதி, பசு, பாசம் ஆகிய சைவசித்தாந்த கோட்பாடுகளை
தெளிவாக சூத்திரவடிவில் கூறுவது சிவஞானபோதமாகும். இக்கோட்பாடுகளை இன்றுவரை நிலைக்க வழி செய்யும் நூலாகவும் விளங்குகின்றது. அத்தோடு அகச் சந்தான மரபினுாடாக புறச்சந்தான பரம்பரையை சித்தாந்த சைவ நெறியில் உருவாக்கிய நூலாகும். மெய்கண்டாரின் சிவஞான போதத்தைப் பின் பற்றி சகலாகம பண்டிதரெனப்படும் அருணந்தி சிவச்சாரியார் சிவஞான சித்தியார் அத்துடன் இருபா இருபஃது எனும் நூலை அருளினார். அவருடைய சீடராக மறைஞான சம்பந்தர் விளங்கினார். அவருடைய சீடராக உமாபதி சிவாசாரியார் விளங்கி சித்தாந்த நூல்களில் அட்டகங்க ளெனப்படும் சிவப்பிரகாசம், திருவருட்பயன் எனும் சிவஞான போத சார்பு நூல், வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்பவற்றை அருளிச் செய்தார். இவ்வாறு சித்தாந்த சாஸ்திர நூல்களின் வளர்ச்சிக்கும், சித்தாந்த பரம்பரை உருவாக்கத்திற்கும் சிவஞானபோதம் காரணமாக அமைந்தது.
3. சிவஞானபோதமும் உரை நூல்களும்
வடமொழிச் சிவஞானபோதம் இரெளரவ ஆகமத்தில் இருந்து ஆக்கப்பட்டது. இது நந்திகேஸ்வரரால் பரப்பப்பட்டது என்பது ஐதீகமாகும். வடமொழிச் சிவஞானபோதம் விஸ்வேஸ்வர சாஸ்திரிகளால் மொழி பெயர்க்கப்பட்டு சண்முகசுந்தரர் முதலியாரால் பதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பரஞ்சோதி முனிவரால் மெய்கண்டருக்கு உபதேசிக்கப்பட்ட வடமொழிச் சிவஞானபோதத்தை மெய்கண்டார் தமிழில் 12 சூத்திரங்களாகப் பாடினார் என்பது ஐதீகம் ஆகும்.
வடமொழிச் சிவஞான போதத்திற்கு, சிற்றுரை,பேருரை என இரு உரைகள் உண்டு. இதனை சிவாக்கிரகயோகிகள் எழுதினார். சிற்றுரை சிவஞானபோத சங்கிரக வியாக்கியானம் என்றும் பேருரையை சிவாக்கிரம பாடியம் என்றும் அழைத்தனர். இதில் முதலாம் சூத்திரத்திற்கான சிவாக்கிரமம் பாடிய உரை நீர்வேலி சங்கர பண்டிதரின் மகனான சிவப்பிரகாச பண்டிதரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதரால் 1916இல் பதிப்பிக்கப்பட்டது. ஞானப்பிரகாச சுவாமி எழுதிய சிவஞானபோத விருத்தி எனும் உரையும் கைலாசபிள்ளையால் பதிக்கப்பட்டது.
தமிழ் மொழிச் சிவஞானபோதத்திற்கு பாண்டிப் பெருமான் விருத்தியுரை செய்துள்ளார். இதனைப் பழையவுரையென அழைப்பர். சிவஞான சுவாமிகளால் சிற்றுரை, பேருரையென இரு உரைகள் எழுதப்பட்டுள்ளன. பேருரை திராவிட பாடியம் எனவும் சிற்றுரை சிவஞானபோத காண்டிகையுரை எனவும் அழைக்கப்படுகின்றது.
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 12
இவை தவிர து. ஆ நல்லசுவாமிப்பிள்ளை, சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார், கனகராயர் போன்றோர் ஆங்கில மொழியில் பெயர்ப்பும், உரையும் செய்துள்ளனர்.
சிவஞான போதத்திற்கு தமிழில் உரை செய்தவர்களில் காசி செந்திநாதையரின் சிவஞானபோத வசனலங்கார தீபம் என்ற நூல் சிறப்பிடம் பெறுகின்றது. இவர் சிவஞான முனிவரின் உரையைப் பின்பற்றி உரை செய்ததாக இருப்பினும் இவரின் உரை எளிமை, சொற்செறிவு முதலிய தனிப் பண்புகளை கொண்டு விளங்குகின்றது. 08.நிறைவுரை
ஆகமத்தில் பொதிந்துள்ள சைவசித்தாந்த கருத்தை தெளிவாக்கிய நூல் சிவஞானபோதமாகும். சிவஞானபோதத்தின் உள்ளடக்கங்களைத் தெளிந்து கொள்வதன் மூலம் சித்தாந்த சமுத்திரத்தை தெளிந்து கொள்ளும் அமைப்பியலில் அமைந்த நூலாகும். இதனால் சிந்தாந்த சாஸ்த்திரங்களுள் முதன்மை நூலாக சிவஞானபோதம் போற்றப்படுகின்றது. பிற்காலத்தில் சிவஞானபோதத்தை அடியொற்றி வழிநூல், புடைநூல், உரை நூல்கள் தோற்றம் பெற காரணமாக அமைந்தது.
உசாத்துணை நூல்கள் 1. சிவஞானபோதவசனாலங்கார தீபம்
பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா, பதிப்பு-2003. 2. சிறப்புமலர் இரண்டாவது உலக இந்து மாநாடு
இந்து சமய கலாசார அமைச்சு - 2003, 3. இந்துகலைக்களஞ்சியம்(சி-செள}-தொகுதி 6
பேராசிரியர் சி.பத்மநாதன்-2003 4. உலக சைவப்பேரவை மாநாடு சிறப்புமலர்-1995-கொழும்பு 5. சித்தாந்தச் செழும்புதையல்கள்
மு.கந்தையா, இரண்டாம் பதிப்பு-2005, 6. சைவசித்தாந்தம்-எம்.முத்துராமன்,2006, 7. சைவ சமயம் ஓர் அறிமுகம் - ப.அருணாசலம், 2004, 8. சைவசித்தாந்தம்மறுபார்வை
பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா,1998
1N1\/N/N/N
மாமன்றப் லிபான்விழா சிறப்பு மலர் சிங்கப்பூரில் அறிமுக விழா
மாமன்றப் பொன்விழா சிறப்பு மலரின் அறிமுக விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம் திகதியன்று சிங்கப்பூர் பூரீ செண்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற விருக்கிறது. மேற்படி ஆலயத்தின் நிர்வாக சபை செயலாளர் திரு. மயூரதன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இந்த வைபவத்தில் மாமன்றப் பிரதிநிதிகளுடன், நல்லை ஆதீன முதல்வரும் கலந்துகொள்ள விருக்கிறார்.
சிங்கப்பூரில் மாமன்றப் பொன்விழா சிறப்பு மலரின் அறிமுக விழாவை நடத்துவதற்காக சகல ஓங்குகளையும் மாமன்றத்தின் முன்னாள் திட்டமிடல், ஆராய்ச்சி அலுவலர் திரு. பால இந்திரசர்மா செய்து உதவியுள்ளார்.
இந்து ஒளி

மஞ்சவனப் பதியமர்ந்த மாமணியே தஞ்சமென்று உன்னடியே சரணடைந்தோம் வஞ்சமணக் கொடுமைகளைக் களைந்தெறிய நெஞ்சம் நிறை உன்னருளே வேண்டுமய்யா
குஞ்சரத்தின் முகம் கொண்டோன் இளையவனே அஞ்சவரும் தீமைகளை அகற்றிடுவாய் மிஞ்சவரும் உன்னருளால் வேலவனே நெஞ்சமதில் நிம்மதியை நிறைத்திடய்யா
வாஞ்சையுடன் உன்னடியைப் போற்றுகின்றோம் சஞ்சலங்கள் போக்கிட நீ வந்திடுவாய் வெஞ்சமரின் கொடுமைகளை அழித்தொழித்து நெஞ்சமதில் அமைதியையே இருத்திடய்யா
கொக்குவிலில் கோயில் கொண்ட கோமகனே திக்கெங்கும் உன்னருளைப் பரப்பிடுவாய் நெக்குருகி உன்னடியைப் பணிந்து நிற்கும் நெஞ்சங்களில் கருணைமழை பொழிந்திடய்யா
தெய்வானை திருமகளை மணந்தவனே மெய்யடியார் துயர் போக்க வந்திடுவாய் உய்யவழி உன்வழியே என்று நம்பும் உள்ளங்களில் கோயில் கொண்டு அருளிடய்யா
* சிவதாண்டவங்கள்
சிவபெருமான் படைத்தலின்போது ஆடுவது “காளிகா தாண்டவம்' காத்தலின்போது ஆடுவது “சந்தியா தாண்டவம்' அழித்தலின் போது ஆடுவது “சங்காரத் தாண்டவம்' மறைத்தல் செயலின்போது ஆடுவது “திரிபுர தாண்டவம்' அருளல் செயலின் போது ஆடுவது “ஊர்த்துவ தாண்டவம்' (பக்தி)
o சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 13
இந்து மதத்தில் dpitful
பிரம்மபூணி விஸ்வ
சிவனையே முழு முதற் கடவுளாக கொண்ட சைவ (இந்து) சமய வழிபாட்டில் திருநந்தி தேவர் வழிபாடு சிவாகமங்களில் சிறப்பாக பேசப்படுகின்றது. நந்தி தேவர் வழிபாட்டுக்குரிய தியானங்கள் மந்திரங்கள் யாவும் காரணம், காமிகம் முதலிய ஆகமங்களில் சிறப்புடன் கூறப்பட்டுள்ளது. உத்தர காரணத்தில் விருஷப (நந்தி) பிரதிஷ்டை பற்றி மூன்று பிரிவுகளாக, ரூபநிர்மானம், விருஷபலிங்க திரிய சஞ்சாரபலம் (நந்தியின் மூன்று விதஸ்தாபனம்) கும்பாபிஷேக கிரியா விளக்கம் என கூறப்பட்டுள்ளது.
சைவசித்தாந்திகள் நந்தியெம் பெருமானை ஆன்மாவாக உருவகப்படுத்தி ஆணவம் பற்றிய ஆன்மா சிவத்தையடைய முடியாதபடியும் திருவருள் பற்றிய ஆன்மா சிவத்தையடையலாம் என்பதனை கொடியேற்ற விழாவில் (நந்திக் கொடி) காணலாம்.
மேலும் சைவாலய நிர்மாண விதியில் மூவகை ஆலயங்கள், அவையாவன கேவலம், மிஸ்ரம், சங்கீர்ணம் என, கூறப்படுகின்றது. விநாயகர் முதல் சண்டேஸ்வரர் வரை சகல பரிவார தெய்வங்களோடு கூடிய ஆலயம் சங்கீர்ணம் என எனப்படும். குறிப்பாக உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் கோவில்கள் இவ்வமைப்பைச் சேர்ந்தவையாகும். தனித்து சிவன், அம்பாள் மாத்திரம் நந்தியுடன் இருக்கும் கோவில்கள் மிஸ்ரம் எனவும் தனியே லிங்கமும் நந்தியும் உள்ளகோவில் கேவலம் எனவும் அறியப்படும்.
இப்பொழுது நந்திக் கொடி விஷயத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் நந்திவாகனமாக கூறப்படும் நந்தி பல்லவர் காலத்தில் அவர்களது கொடியாக விளங்கியதாக சரித்திரச் சான்றுகள் பகர்கின்றன. அனைத்து சிவாலயங்களிலும் சத்வ குணமுடைய அம்பாள் கோவில்களிலும் மகோற்சவக்
செய்தி O
மட்டக்களப்பு மக்களுக்கு மாப
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலத்தில் நடந்த அன உள்நாட்டிலேயே அகதிகளாக தவித்த நிலையை அறிந்து அகி மா, சீனி, தேயிலை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா உட்பட ! அப்பியாசப் புத்தகங்களையும் அங்கு அனுப்பிவைத்தது. மட் அங்கத்துவ சங்கமான மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்து ஒளி
 
 

நந்தி தேவரின்
ந்துவம்
யாபூஷணம் ģT நாராயணசர்மா
கொடியாக தர்மத்தின் சொரூபமான நந்திக்கொடியேற்றம் நடைபெறுவது இன்றும் கண்கூடு.
ஆயினும் நாடுகளையும் தேவர்களையும், மன்னர்களையும் கொடியினால் அடையாளம் காண்பதுபோல், சைவசமயத்தை காண்பிப்பதற்கு மணிவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி முதற்பாட்டில்,
"ஏற்றுயர் கொடியுடையாய்” எனும் வரி சான்றாக அமைகின்றது.
தோன்றியகாலம் தெரியாத சைவத்தின் கொடியாக நந்திக் கொடியமைவதற்கு மிகப்பெரிய சான்றாக அமைவது பின்வரும் ஆகம சுலோகம் என்றால் மிகையில்லை.
மஹா கும்பாபிஷேக யாகசாலையில் வேதாகம முறையில் பூசிக்கப்பட்ட பிரதான கும்பம் வீதியுலா புறப்படுமுன் சிவாச் சார்யார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேண்டி நிற்கும் பிரார்த்தனையாக இம் மந்திரம் அமைகின்றது. அத்துடன் சிவனின் கொடி. சைவத்தின் கொடி நந்திக் கொடியென நிறுவிநிற்கின்றது.
“தேவ தேவஜகன்னாத
விருஷபத்துவஜ சங்கர உத்திஷ்ட கிருபயாதேவ
கெளர்யா சக மகேஸ்வர”
என்ற மந்திரத்தில் உலகத்தின் முதற் கடவுளாகிய, நந்தி கொடியுடைய சங்கரா என வேண்டப்படுவதால் சிவனின், சைவத்தின் கொடி நந்திக்கொடி என்பது புலனாகின்றது.
எனவே இந்துக்கள் ஆகிய நாமனைவரும் நமது சமயத்தின் சிவசின்னங்கள் போன்று (வீயூதி, உருத்திராஷம்) நந்திக் கொடியேற்றி உய்வோமாக
மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்
மன்றத்தின் நிவாரண உதவிகள்
ர்த்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து லெ இலங்கை இந்து மாமன்றம் நிவாரணப் பொருட்களாக அரிசி, பல உணவுப் பொருட்களுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான ட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஊடாகவும் மாமன்றத்தின் பேரவை ஊடாகவும் மாமன்றத்தின் நிவாரணப் பொருட்கள்
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 14
இது சிறுவர்களுக்கான சிறப்பு இங்கு தருகிறோம். பெற்றே படித்துக் காட்டி அதன் தத்து
சிந்த
எது என்னுடையது?
இறவி ஒருவரிடம் பாடம் கற்க நான்கு சீடர்கள் வந்தனர். எல்லோரிடமும் அவர், “உங்கள் வீட்டிலிருந்து ஒரே ஒரு செம்பு மட்டும் கொண்டு வாருங்கள். மற்ற உபயோகங்களுக்கு ஆசிரமப் பொருள்களையே உபயோகித்துக் கொள்ளலாம்” என்றார். சீடர்கள், சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்கள். துறவிக்கு முதுமை நெருங்கியதும், தனக்குப் பின் ஆசிரமப் பொறுப்பை ஒப்படைக்க, சீடர்கள் நால்வரில் தகுதியானவர் யார் என பரிசோதிக்க விரும்பினார்.
ஒருநாள் அவர்களை அழைத்து, “உங்களது வீட்டிலிருந்து கொண்டு வந்த உங்கள் செம்பை எடுத்து வாருங்கள்” எனக் கட்டளையிட்டார். நால்வரில் மூவர் மட்டும் சென்று தங்கள் அறையில் இருந்த செம்பை எடுத்து வந்து குருவிடம் காட்டினர்.
நான்காவது சீடன் சொன்னான்: “குருவே நான் தங்களிடம் பாடம் கேட்க வந்த சில நாட்களிலேயே நான்', 'எனது' என்ற எண்ணம் போய்விட்டதே ஆகவே என் வீடு என்று எதைச் சொல்வது? அங்கிருந்து எதை எப்படி எடுத்து வருவது?” என்றான். குரு அவனிடமே ஆசிரமப் பொறுப்பை ஒப்படைத்தார்.
எறும்பு கேட்ட வரம்
1ம்புகள் கடித்து மனிதர்கள் உயிர் நீங்கி விடுவதால், அதனை பயத்துடன் அவர்கள் வழிபடுவதைக் கண்ட எறும்பு, தானும் அத்தகைய மதிப்பைப் பெற பகவானை நோக்கி தவமிருந்தது. நேரில் தோன்றிய இறைவனிடம் எறும்பு, “நான் பூஜிக்கும் பெருமானே! நான் கேட்கும் இந்த வரத்தினை மறுக்காமல் கண்டிப்பாக கொடுத்தருள வேண்டும். நான் கடித்துச் சாக வேண்டும்”என்று அவசர அவசரமாகக் கேட்டது.
ஆண்டவனும், "அப்படியே நீ கடித்துச் சாக நான் வரம் தந்தேன்” என்று கூறி மறைந்தார். இராமாயணத்தில் கும்பகர்ணன் தூங்கும் வரம் வேண்டும் என்று தவறுதலாகக் கேட்க வரம்தனை ஆண்டவன் கொடுத்தருளினாரோ, அதே பிரகாரம் தான் கடித்து மற்றவர்கள் சாகவேண்டும்' என்று கேட்பதற்குப் பதிலாக, நான் கடித்து சாக வரம் அருளும்படி இறைவனைக் கேட்டதன் பலனாக, எறும்பு கடித்த உடனே அதனை மனிதர்கள் நசுக்கி சாகடிக்கும்படி நேரிடும் வரம்தான் எறும்பிற்குக் கிட்டியது.
கெட்ட எண்ணங்களும், பொறாமையும் எத்தகையை முடிவிற்குத் தள்ளிவிடும் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறதல்லவா!
இந்து ஒளி
 
 
 

|ப்பகுதி. சிறுவர் சிந்தனைக் கதைகள் சிலவற்றை ார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இக்கதைகளைப் வத்தை விளக்குவது கடன்.
னைக் கதைகள்
எது ஞானம்?
ஒரு ஞானியைப் பார்த்து ஒருவர்,“ஞானத்தில் சிறந்த ஞானம் எது?” என்று கேட்டார்.
“இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தினால் சோர்வடையாமலும் இருப்பதுதான் ஞானம்” என்றார் ஞானி
வந்தவர், விளக்கமாகக் கூறுங்கள் என்று கேட்டார். “இக் கழுதையை காலையிலும், மாலையிலும்பார்த்தால்,உமக்குப்புரியும்” என்றார்.
ஞானி கூறியபடியே அவர் காலையும், மாலையும் கழுதையைக் கவனித்தார்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் போகவே ஞானியிடமே கேட்டார். ஞானி விளக்கினார். “இந்தக் கழுதைக்கு, காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டைகளைச் சுமந்து செல்கிறோமே என்ற வருத்தம் இல்லை; சுத்தம் செய்த துணிகளை மாலையில் சுமந்து வருகிறோமே என்ற மகிழ்ச்சியும் இல்லை. இதைப் பார்த்துத்தான் நான் அத்தகைய ஞானம் பெற்றேன்” என்றார்.
துன்பத்திலும், இன்பத்திலும் துவளாமல் இருப்பதே சிறந்த ஞானம் என்பதை உணர்ந்தார் அந்த நபர்.
கடவுள்
தன்னைக் காணவந்த அன்பர்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார், ஒரு துறவி. “ஞானி, மற்றவர்களின் அனுபவங்களைக் கண்டுதான் பாடம் கற்கிறார். சாதாரண மனிதன், தனக்கு ஏற்படும் அனுபவங்களால் பாடம் கற்கிறான். ஆனால் மூடன், எந்த வகையிலும் பாடம் கற்பதில்லை” என்று கூறினார்.
கூட்டத்திலிருந்த ஒருவர், தனக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்படவும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ளவும் ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுமாறு கேட்டார். சட்டென்று துறவி அவரிடம், “யாராவது உங்களை அடித்தால் உங்களுக்கு உண்டாகும் வலியை பிறருக்குக் காட்ட முடியுமா?” என்று வினவினார். அந்த நபருக்கு ஒன்றும்புரியவில்லை. சிறிது யோசித்தபிறகு துறவியிடமே கேட்டார். “வலியின் உணர்வைப் போலவே கடவுளையும் ஒருவரால் மற்றவருக்குக் காட்ட முடியாது. அதைத் தாமாகவேதான் அனுபவித்துப் புரிந்து கொள்ள முடியும். கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க எந்த நிரூபணமும் தேவையில்லை. அப்படிச் செய்யமுற்பட்டால் அது வீண் முயற்சியே” என்றார் துறவி. கடவுள் இருப்பதை எளிமையாகப் புரிய வைத்த துறவியைப் பணிந்தார் அந்த நபர்.
(நன்றி பக்தி)
12 சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 15
இது மாணவர்களுக்கான ப இம்முறை இடம்பெறுகி மிருந்து தொடர்ந்தும் எதிர்
அடியவை
O eIGOTL சோழ வளநாட்டில் கணமங்கலம் என்னும் ஊர் நீர்வளம் நிலவளம் மிகுந்த இயற்கை அழகு நிரம்பப் பெற்றது. இங்கு எங்கு பார்த்தாலும் வயல் பண்ணைகளும், தாமரைக் காடுகளும், நீலமலர்க் குளங்களுமாகவே காட்சி அளிக்கும்.
இவ்வூரில் தாயனார் என்னும் சிவதொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் வேளாள மரபினர். அம்மரபுக்கே தலைவராகத் திகழும் பெருமை சான்றவர். இவர் இல்வாழ்க்கையில் இணைந்து, அறநெறி பேணி, என்றும் அரனார் திருவடியே தமக்குப் பற்றுக் கோடாகக் கொண்டவர். நாள்தோறும் இவர் சிவபெருமானுக்குச் செந்நெல்லும், செங்கீரையும், மாவடுவும் கொண்டு படைப்பது வழக்கம். எவ்வித இன்னல் இடையூறுகள் வந்தபோதும் இச்செயல் முறையை இவர் தவறாது காத்து வந்தார்.
இவரது தூய அன்பையும், தவறாத பணியையும் உலகத்தார் கண்டு மகிழ இறைவன் திருவுளம் கொண்டார். எனவே இவரிடமிருந்த செல்வமெல்லாம் மறைந்து போகச் செய்தார். ஆனால் தம்மிடமிருந்த செல்வங்களெல்லாம் தீர்ந்த பிறகும் தாயனார் இறைவருக்குச் செய்துவந்த திருப்பணியை விடவில்லை. இதனால் இவருக்குக் கூலிவேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதும் கூலிக்கு நெல்லறுத்து, நல்ல சம்பா நெல்லினால் கிடைத்த அரிசியைச் சமைத்து ஆண்டவர்க்கும் படைத்து வந்தார்.
தாயனாரின் வாழ்வு சோதனை நிறைந்ததாகவே இருந்தது. வரவரச் சம்பா நெல்லும் கிடைப்பது அரிதாயிற்று. எனவேதாயனார் எந்த வயலில் சம்பா நெல் விளைந்துள்ளது என்பதைக் கண்டறிவதில் முதலில் கருத்தைச் செலுத்துவார். பின்னர் அவர்களிடம் சென்று பணியாற்றி அவர்கள் இசைவோடு அதை அறுத்து வந்து இறைவர்க்குப் படைத்து வந்தார். தமக்குக் கூலியாகக் கிடைக்கும் கார்நெல்லைத் தமது உணவுக்குப் பயன்படுத்திக் கொள்வார். இவ்வாறு இவர் நடந்து வரும் நாளில் இறைவனின் விளையாட்டால் அந்தக் கார்நெல்லும் கிடைப்பது அரிதாயிற்று. இறைவனுக்குப் படைக்கும் சம்பா அரிசியைச் சாதமாக்கிக் கொள்ள இவர் விரும்பவில்லை. இறைவருக்குப் படைக்கும் தரமுடைய அரிசிச் சாதத்தைத் தாம் உண்பது தக்கதல்ல என்பது இவரது எண்ணமாக இருக்க வேண்டும்
தாயனார் வாழ்வில் பசியும் பட்டினியும் வந்து சூழ்ந்தன. இப்பட்டினி நாட்களில் தாயனாரது மனைவியார் தம் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திலிருந்து கீரையைப் பறித்துச் சமைத்துத் தம் கணவருக்கு அளித்து வந்தார். இதில் நிறைவு பெற்றுக் கொண்ட தாயனார், இறைவருக்குப் படைப்பதில் கருத்தூன்றிக் குறைவறச் செய்து வந்தார்.
கிடைத்து வந்த கீரையும் பின்னர் கிடையாது போகவே தாயனார் நிலை மிகவும் துன்பத்திலாயிற்று. வெறும் நீரைக் குடித்து நாளைக் கழித்து வந்தார். இந்த நிலையிலும் இறைவன் திருப்பணியை மட்டும் இவர் விடவில்லை.
ஒருநாள் தாயனார் மிக அரிதாகக் கிடைத்தசெந்நெல்லையும் செங்கீரையையும் மாவடுவையும் கூடையில் கொண்டு இறைவருக்குப் படைக்கச் சென்றார். அவரது மனைவியாரும்
(இந்து ஒளி
 

க்கம். வழமைபோல பெரிய புராணக் கதையொன்று, ன்றது. இது போன்ற விஷயங்கள் மாணவர்களிட பார்க்கப்படுகிறது.
ரக் காத்த பெரியபுராணக்
ககைகள்
O 5D
அவரைப் பின் தொடர்ந்து சென்றார். பல நாட்கள் உணவு உண்ணாததால் மிகவும் தளர்ச்சி கொண்டிருந்த தாயனார் நடைபாதையில் தள்ளாடிச் சோர்ந்து விழுந்துவிட்டார். விழுமுன் அவரது மனைவியார் அவரைப் பிடித்தும் கையில் பஞ்ச கவ்வியம் வைத்திருந்ததனால் தக்கவாறு தடுத்து நிறுத்தமுடியாது போயிற்று. தாயனார் கீழே விழவே அவரது கையிலிருந்த கூடைப் பொருட்களும் சிதறி நிலவெடிப்புக்குள் ஆயின. என் செய்வார் தாயனார்!
இந்நிகழ்ச்சியால் மனம் புண்பட்டுப்போன தாயனார், “இறைவருக்குத் திருவமுது படைக்கின்ற பேறு என்னை விட்டு அகன்றது. நான் இனி இருந்து என்ன பயன்?” என்று புலம்பித் தம்மையே தீர்த்துக் கொள்ள முடிவுசெய்தார். தமது கையிலிருந்த அரிவாளை எடுத்துக் கழுத்தில் வைத்து அறுத்துக் கொண்டார். இச்செயல் தம்பிறவித் துன்பத்தையே அவர் அறுத்துக்கொள்பவர் போல் தோன்றியது. என்னே தாயனார் பக்தி அவரது தியாக உணர்வு
இச்செயலை இறைவனார் பொறுப்பாரோ அந்த நேரம் இறைவரின் அற்புதச் செயல் அங்கே நடைபெற்றது. தரையிலிருந்து செங்கரம் ஒன்று தோன்றித் தாயனார் கையைப் பற்றியது. அக்கை வெளித் தோன்றிய போதே அன்படியாராகிய தாயனார் தமக்குக் கொண்டு வந்த மாவடுவைப் பெற்றுக் கொண்டது போல அதைக் கடிக்கின்ற ஓசை “விடேல் விடேல்” எனக் கேட்டது.
தாயனார் இந்நிகழ்ச்சியைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனார். என்றாலும் இது இறைவரின் திருக்காட்சியே என்பதை உணர்ந்து இன்பப் பூரிப்பெய்தினார். அந் நேரத்திலேயே அவரது கழுத்திலிருந்த அரிவாள் பட்டவடு மறைந்தது. அவரது உடலில் வலுவும் வந்து சேர்ந்தது.
இறைவரின் பேரருள் திறனை எண்ணித் தாயனார் இருகரங்களையும் சிரமேற் குவித்து வணங்கி “எம்பெருமானே, அடியேனது அறியாமையை அறிந்தும் நில வெடிப்பிலும் தோன்றி எனக்குப் பேறளித்தீரே! உமாதேவியாரை இடப்பக்கம் கொண்ட எந்தையே திருநீறு துலங்கும் செம்மையான மேனியும் திருகிய சடையுமுடைய தேசுடையீர்! போற்றி! போற்றி!” என்று வாழ்த்தினார்.
இறைவர் உமாதேவியுடன் அவருக்குக் காட்சியளித்து, “நீ செய்த செயல் நன்று, மனைவியாருடன் வந்து எமது உலகில் வாழ்வாயாக!” என்று திருவாய் மலர்ந்தருளி இனிய பேற்றை வழங்கினார்.
அரிவாளால் கழுத்தை அரிய முற்பட்டதால் நாயனார் அரிவாள் நாயனார் என அழைக்கப்பட்டார். இறைவரிடம் நீங்காத அன்பு கொண்டு வறுமையும் துன்பமும் குறுக்கிட்ட காலத்தும் அவர் பணியையே செய்து கொண்டிருந்த நாயனாரை இறைவர் தம் உலகிலேயே இருத்திக் கொண்டார்.
‘கடவுளை நம்பினோர் கைவிடப் படார்’ என்ற உண்மையை
இவரது வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறதல்லவா!
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 16
மங்கையர் ஒளி
சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் சைவ வாழ்வியல் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தரும் ஒரு நல்ல கலைக்களஞ்சியமாகும். அச்செய்திகளை இன்று இணையத்திலே தேடுவது போல உட்புகுந்து தேடுகையில் பல நன்முத்தான கருத்துகள் கிடைக்கின்றன. மனித வாழ்வியலைச் செம்மைப்படுத்த வல்ல அறிவுரைகளாக அவை விளங்குகின்றன. குடும்பம் என்ற வாழ்வியல் கட்டமைப்பைத் தெளிவாக விளக்கும் வரலாறுகள் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வரலாறுகள் காட்டும் வாழ்வியலை இன்றைய மக்களும் அறிவது பயன் தரும்.
சுந்தரர் தொடக்கிய அடியார் வழிபாடு அக்காலத்து மக்கள் மத்தியில் எவ்வாறு இணைந்திருந்தது என்பதைச் சேக்கிழார் தமது நூலிலே மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அடியார் வழிபாடு இறைவனை வழிபடுவது போன்றதே. அப்பூதியடிகளின் வரலாற்றால் சேக்கிழார் இதனை நன்குணர்த்தியுள்ளார். 45 பாடல்களில் சுருக்கமாகப் பாடப்பட்ட அப்பூதியடிகள் வரலாறு மனித வாழ்வியலில் நாம் உணரவேண்டிய முறைமையைத் தெளிவாக விளக்குகிறது.
சைவவாழ்வியலில் 'அன்னதானம்' என வழங்கப்பட்ட 'சோற்றுக் கொடை மிக இன்றியமையாதது. ‘விருந்தோம்பல் என்னும் இல்வாழ்க்கையில் இடம் பெற்ற வழக்கத்தைவிட இது மேலானதாகக் கருதப்பட்டது. வள்ளுவர் விருந்தோம்பலை இல்வாழ்க்கையின் முக்கிய கடமையாக வரையறை செய்துள்ளார்.
“இருந்து ஒம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற்பொருட்டு’ (éው6ff : 80 வேளாண்மை என்பது பிறர்க்கு உதவுதல் எனப் பரிமேலழகர் உரைவிளக்கம் செய்துள்ளார். இன்று வேளாண்மை உழவுத் தொழிலைக் குறிக்கின்றது. இல்வாழ்க்கை நடத்துவோர் விருந்தோம்புவதைக் கடமையாகக் கொள்ளவேண்டும். இக்கடமையைப் பெரிய புராணம் விரிவுபடுத்தியுள்ளது. அப்பூதியடிகள் நாவுக்கரசர் மேல் கொண்ட ஈடுபாட்டினால் தன் வீட்டிலேயுள்ள அளவைகள், நிறைகோல், மக்கள், பசு, எருமை எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசரின் பெயரைச் சார்த்திப் பெயரிடும் வழக்கமுடையராக வாழ்ந்தார். தண்ணிர்ப் பந்தல், மடங்கள் அமைத்து அவற்றிற்கும் நாவுக்கரசர் பெயர்சூட்டி அறங்கள் செய்து வந்தார். இறையடியார் பெயரை எங்கும் எதிலும் பொறிப்பதை ஒரு புதிய வழிபாட்டு மரபாகத் தொடங்கித் தொடர்ந்து செய்துவந்தார்.
அப்பூதியடிகள் வாழும் திங்களூரைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எங்கும் தன் பெயர் பொறித்திருப்பக் கண்டு சொல்லொணா வியப்படைந்தார். வேனிலின் கொடுமை தீர்க்க நிழல் தரும் தண்ணிர் பந்தலை வந்தடைந்தார்.
GGGGడGGGGGGGG లిఁ
(இந்து ஒளி
 

eOMeOM eOM eOM eOM eM eM eMeOM eO eO eOM eOMeOM OeM eO eOO eOeCO eeO eOO S
 ைதாய் தந்தை
Uாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
அங்குள்ளவரிடம் 'திருநாவுக்கரசர்’ என யார் பெயரிட்டாரென வினவினார். அவர்கள் அப்பூதியடிகளின் பணியெனக் கூறினர். திருநாவுக்கரசரும் அப்பூதியடிகளை நேரில் காணவிழைந்து அவர் இல்லம் சென்றார். அடிகள் குடும்பம் இனிய குடும்பம். இரு ஆண் குழந்தைகள். பரிவுடைய இல்லாள். கணவனும் மனைவியும் குழந்தைகளும் திருநாவுக்கரசர் மேல் எல்லையற்ற பக்தி கொண்டவர்கள். நாவுக்கரசர் இத்தகைய வழிபாட்டு நெறியான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் தந்தையும் தாயும் இறக்கத் தமக்கையையும் சைவ வாழ்வியலையும் விட்டு அகன்றவர். மீண்டும் சைவத்தை நாடி வந்தவர். இந்த இனிய குடும்பம் அவரை ஈர்த்தது.
அப்பூதியடிகளிடம் இவ்வாறு தன் பெயரிட்டதற்கான காரணத்தை வினவுகிறார். அப்பூதியடிகள் திருத்தொண்டினால் சமணசமயத்தின் சூழ்ச்சியை வென்ற நாவுக்கரசரின் தொண்டைப் பலரறியவே தாம் எழுதியதாகக் கூறினார். வினாவின் விடை நாவுக்கரசர் ஜயந்தீர்த்தது. விடையளித்தவர் வினவியவரை யாரென அறிந்த போது மிக்க மகிழ்வடைந்தார். நேரில் காணாமல் அவர் பெயர் சூட்டும் செயற்பாட்டால் வழிபட்டவருக்குத் தெய்வ தரிசனம் போல நாவுக்கரசர் வருகை அமைந்தது. மனைவியாருடன் மக்கள் மற்றுமுள்ள சுற்றத்தார் அனைவர் சூழ நாவுக்கரசர் பாதம் விளக்கி மனை சிறப்புற மலர்தூவி விளக்கிய நீரையும் புனைந்த மலரையும் தலையின் மேல் தெளித்து உள்ளம் பூரித்தார். இறைவன் அடியார் நாமம் சாத்திவழிபட்டதால் பெற்ற பேறென மனம் மகிழ்ந்தார்.
அடியவருக்கு அமுதூட்டல் சைவ வாழ்வியலின் முறைமை. அதனை மேற்கொண்டொழுகிய அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைத் தன் மனையில் திருவமுது செய்ய வேண்டுகின்றார். இக்காட்சியைச் சேக்கிழார் வருமாறு பாடியுள்ளார்.
“ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்புடன்
வாசநிறை திருநீற்றுக் காப்பேந்தி மனந்தழைப்பத் தேசம் உய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும் நேசம் உற விண்ணப்பஞ் செய அவரும் அது நேர்ந்தார்.” ஒரு அடியவர் வீட்டிற்கு வந்தால் அவரை எவ்வாறு எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு விருந்தோம்ப வேண்டுமென்பதைச் சேக்கிழார் இப்பாடலில் விளக்கிக் காட்டியுள்ளார். அடியவருக்கு ஆசனம் கொடுத்துப் பாதபூசை செய்து அவரிடம் திருநீறு பெறுவது ஒரு பேறாகக் கருதப்பட்டது. சைவ தேசத்தைத் தொண்டினாலே உய்விக்க வந்த திருநாவுக்கரசர் தமது வீட்டிலே திருவமுது செய்வது இறைவனே வந்து திருவமுது செய்வதற்கு நிகரானது என மனநிறைவு
4、 சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 17
பெறுகிறார். இச்செயல் இல்லறத்திலே முக்கிய கடமையாகக் கூறப்பட்ட விருந்தோம்பலை விட உயர்வான வாழ்வியல் கடமையாகச் சேக்கிழார் உணர்த்தியுள்ளார்.
திருநாவுக்கரசர் உணவருந்த இசைந்ததும் மனைவியாரோடு இணைந்து திருவமுது ஆக்குகின்றார். இறைவன் அருளால் திருநாவுக்கரசருக்கு அமுதூட்டும் நல்வாய்ப்புக் கிடைத்ததென மகிழ்கின்றனர். தூய கறிகளோடு அறுசுவை உணவு ஆக்கிய பின்னர் மக்களில் மூத்தவனான மூத்ததிருநாவுக்கரசை அழைத்து வாழைக்குருத்துக் கொணரும்படி விரைந்து அனுப்புகிறார்.
அவருடைய மகனும் திருநாவுக்கரசருக்குத் திருவமுதுாட்டும் பணியில் பங்கேற்க விரும்பி நின்றான். முழுக்குடும்பமும் இதுநாள் வரை நினைத்துப் பணி செய்த நாவுக்கரசரை நேரில் கண்ட மகிழ்வால் ஒன்றிணைந்திருந்தனர். மூத்தமகனுக்கும் ஒரு பணி தரப்பட்டபோது அவன் தாயையும் தந்தையையும் வாழ்த்து கின்றான். அவன் மனநிலையை ஒரடியால் சேக்கிழார் காட்சிப் படுத்திக் காட்டும் பாங்கு இங்கு உணர்த்தப்பட வேண்டியது.
“நல்லதாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன்.” ‘என்னுடைய நல்ல தாய் தந்தையர்’ என மகன் எண்ணிச் செயற்படுகிறான். அவனுடைய மனத்தில் தாய் தந்தை பற்றிய உயர்வான எண்ணத்தைச் சேக்கிழார் காட்டுகிறார். பெற்றோருடைய வாழ்வியற் கடமைகளில் பங்கேற்க விரும்பும் மகனாக மூத்த திருநாவுக்கரசு விளங்குகிறான். நல்ல தாய் தந்தையரின் குழந்தை வளர்ப்புநிலை இதன் மூலம் புலப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நிலைகளில் தாயும் தந்தையும் அவனுக்கு குருவைப் பற்றி கூறியுள்ளனர். தமது கொடைச் செயற்பாடுகளால் நன்கு உணர்த்தியுள்ளனர். இத்தகைய வாழ்வியலில் அவனுக்கு ஏற்பட்ட அநுபவம் எதையும் ஏற்கும் மனப்பக்குவத்தைத் தந்திருந்தது.
குருத்து வாழையிலையை வெட்டும் போது அவன் கையில் அரவு தீண்டியது. உடனே கையை உதறி விடம் ஏறுமுன் வாழைக் குருத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்றான். அரவு தீண்டியதை யாரிடமும் சொல்லாமல் மறைப்பேன் எனச் செயற்படுகிறான். அதனைக் கூறினால் அடியாருக்கு அமுதூட்டும் பணி காலம் தாழ்த்தப்படும். தன்னால் அது தடைபடக்கூடாது என்ற கொடை மனத்தோடு வீட்டிற்குள் சென்று வாழைக்குருத்தைத் தாயின் கையில் கொடுத்து மயங்கி வீழ்ந்தான்.
அவன் வீழ்ந்த குணங்குறிகண்டு விடத்தால் வீழ்ந்தான்’ என்று தெளிவாக உணர்ந்த நல்லதாயும் தந்தையும் அவனைப் பாயில் சுருட்டி மூடிமறைத்து வைத்துவிட்டு அமுது செய்விப்போம் எனக் கடுமனத்தோடு விறல் உடைத் தொண்டராய்ச் செயற் படுகின்றனர். அடியவருக்கு அமுதுசெய்யும் காலம் தாழ்த்துவதை அவர்கள் மனம் ஏற்கவில்லை. அதனால் பெற்ற மகனின் நிலையையே மறைத்துச் செயற்படுகின்றனர். இங்குபெற்ற மனம் பித்து' என்ற உலகவழக்கை ஏற்காதவர்களாகக் காணப் படுகின்றனர். திருநாவுக்கரசரை அழைத்து முறைப்படி அமுதூட்ட முனைகின்றனர். திருநாவுக்கரசரும் அமுதுண்ணப்போகும்போது குடும்பத்தவருக்கு நீறு சாற்றிட எல்லோரையும் அழைக்கிறார். தந்தையோ எவ்வித மாற்றமும் இன்றி நீறு பெறுகிறார். தாயும் அவ்வாறே பெற்றார். நாவுக்கரசர் மூத்த மகனைக் காட்டும்படி கேட்கத் தந்தை இப்போதிங்கவன் உதவான்’ என்றார். நாவுக்கரசர் அது கேட்டு'அவன் என் செய்தான் மெய்யைக் கூறும் எனப் பணித்தார். தந்தையும் உண்மையைக் கேட்கும் போது
இந்து ஒளி 1

சொல்ல வேண்டும் என்ற ஒழுக்கத்தைப் பேணி நடந்ததைக் கூறினார்.
நாவுக்கரசர் யாவர் இத்தன்மை செய்வார்’ என வியந்து சிறுவன் உடல் கிடக்கும் இடம் சென்று இறைவனை நினைந்து 'ஒன்றுகொலாம்' என்னும் பாவிசைப் பதிகம் பாடினார். விடம் நீங்கி அவன் உயிர்பெற்றெழுந்தான். தந்தையும் தாயும் அன்பர் அமுது செய்தருளுதற்குச் சிறிது இடையூறு இவன் செய்தான்' என மனம் நொந்து நின்றனர். தொண்டின் நெறி வாழ்வோரின் இயல்பை இவர்கள் மூலமாகச் சேக்கிழார் காட்டுகின்றார். அடியவர்க்கு அமுதூட்டல் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. சைவ வாழ்வியலின் முக்கிய தொண்டாக அப்பூதியடிகள் அதைச் செவ்வனே நிறைவேற்ற விரும்புகிறார். அதற்காகத் தன் பற்றுகளையே துறந்துவிடுகின்றார். மூத்தமகனின் இழப்பை அவர் பொருட்படுத்தவில்லை. திருநாவுக்கரசர் என்ற இறைவனின் தொண்டருக்கு அமுதூட்டல் ஒரு உயர்ந்த பணியாக அவருக்குத் தோன்றியது. சேக்கிழார் அப்பூதியடிகளின் அடியார் பக்தி நெறியூடாக சைவவாழ்வியலில் இறை பற்றியிருந்த நம்பிக்கை மிக ஆழமாக வேரூன்றி இருந்ததைக் காட்டுகிறார்.
அந்த நம்பிக்கை வீண்போகாது என்பதைக் குடும்ப நிலையில் வைத்து விளக்கியுள்ளார். மூத்தமகன் விடத்தால் மீண்டுவந்தது அப்பருடைய திருவருள் நிலையை உறுதி செய்வதாக உள்ளது. திருவமுதுாட்டல் அதன் பின்னர் நிறைவாக நடைபெறுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு அமுதூட்டும் போது செய்ய வேண்டிய நடைமுறைகளையும் சேக்கிழார் விளக்கிக் கூறியுள்ளார்.
"புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித்
திகழ்வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி நிகழ்ந்த அக்கதலிநீண்ட குருத்தினை விரித்துநீரால் மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம்பெற மரபின் வைத்தார்.” அமுதூட்டும் இடம் சாணத்தால் தூய்மையாக மெழுகப்பட்டிருக்க வேண்டும். அந்த இடத்தை வெண் சுதையால் கோலமிட்டு அழகுபடுத்தவேண்டும். அதன் பின்னர் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அவ்விடத்தில் குருத்து வாழையிலையின் வெட்டுவாய் வலப்புறமாக விரித்து வைத்து நீர் தெளித்த பின்னரே அமுதைப் பரிமாறவேண்டும். இந்நடைமுறைகள் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகின்றன. வெட்டுவலமாக ஏன் அமைய வேண்டும் என்ற கேள்வியை எழுப்புவோருக்கு இது விளக்கமாக அமைகின்றது. எல்லோரும் ஒன்றாக இருந்து அமுதுண்ணும் மரபையும் நாவுக்கரசர் தொடக்கி வைக்கிறார். இல்லத்தலைவி பரிமாற எல்லோரும் அமுதுண்ணும் காட்சியை சைவப் பண்பாட்டின் கோலமாகச் சேக்கிழார் சொற்களால் வரைந்து காட்டுகிறார்.
“மைந்தரும் மறையோர்தாமும் மருங்கிருந்தமுது செய்யச்
சிந்தை மிக் கில்ல மாதர் திருவமு தெடுத்து நல்கக் கொந்தவிழ் கொன்றை வேணிக் கூத்தனார்.அடியாரோடும் அந்தமிழாளியார் அங்கமுது செய்தருளினாரே.” இது விருந்தோம்பலை விடச் சிறந்த பண்பாக அமைந்துள்ளது. சிவனடியாருடன் வீட்டிலுள்ளவர் சேர்ந்து உணவருந்தும் காட்சி வழிபாட்டால் மக்களிடையே ஏற்பட்டிருந்த சமத்துவ உணர்வைக் காட்டுகிறது. சிவனடியார்கள் யாவரும் சமம் என்ற கோட்பாடுடையவர்கள். கூத்தனார் அடியாரோடு அமுதுசெய்யும்
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 18
பண்பாடு பிற்காலத்தில் அருகிவிட்டது. துறந்தார்க்குத் துணையாக நின்ற இல்வாழ்வான் சிவனடியார்க்கு அமுதூட்டும் நடைமுறையை வள்ளுவரும் விளக்கியுள்ளார். அப்பூதியடிகள் வரலாற்றில் இந்நடைமுறை நிறைவேற்றப்பட்டபோது அமுதூட்டலில் இருந்த தீவிரம் புலப்படுகின்றது.
பெற்ற மகனின் இழப்பையே ஒரு பொருட்டாக எண்ணாமல் செயற்பட்ட நிலையை இன்றைய காலத்தவர் ஒரளவுக்கே விளங்கிக் கொள்ளமுடியும். நாவுக்கரசரது சைவம் காக்கும் பணியை அப்பூதியடிகள் மேலான பணியாக மதித்தார். அதனால் அறப்பணிகள் செய்தபோது தன் பெயரைக் குறிப்பிடாது நாவுக்கரசர் பெயரையே குறிப்பிட்டுச் செய்து வந்தார். தன்னைப் போன்ற இல்லறத்தார் செய்யவேண்டிய பணியை உலகம் உணரச் செய்தார். கடலில் கல்லிலே கட்டி விட்ட போதும், நீற்றறையிலே அடைபட்ட போதும் நாவுக்கரசர் கலங்காமல் இறையருளை எண்ணி நம்பிக்கையோடு செயற்பட்டதை அப்பூதியடிகள் எல்லோரும் அறிய வேண்டுமென நினைத்தார். அதனால் தமது பணியை அவர்பெயர் அறியச் செய்யும் பணியாக ஆக்கினார்.
வழிப்போக்கர்கள் இளைப்பாறிக் களைப்பாறிச் செல்லத் தண்ணிர்ப் பந்தல்களை அமைத்த அப்பூதியடிகள் நாவுக்கரசர் பற்றி அவர்களும் அறிய வைத்தார். மேலும் வழிப்போக்கர்கள் செல்லும் சாலைகள், பயன்படுத்தும் நீர்நிலைகள், தங்கும் சோலைகள் எங்கும் நாவுக்கரசர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டமை அவர்களுக்கு நாவுக்கரசர் பற்றியறிய வாய்ப்பேற்படுத்தியது. தொண்டு என்பது தன் புகழ் பரப்பச் செய்யப்படுவதன்று. பரநலம்பேணிச் செய்யப்படுவதாகும்.
அப்பூதியடிகளின் வரலாற்றால் ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலையும் நன்கு விளக்கப்பட்டுள்ளது. கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற கூட்டு நிலையான வாழ்க்கையில் எல்லோரும் ஒருங்கு இயையுபட்டுச் செயற்படும் வாழ்வியல் ஒன்று சேக்கிழாரால் சுட்டிக் காட்டப்பட்டது. சைவ வாழ்வியலில் ஒரு செயற்பாடு எவ்வாறு எல்லோருடைய பங்களிப்பாலும் நிறைவேற்றப்படுகின்றது என்பதை உணரமுடிகின்றது. மகன் இறப்பைத் தாயும் தந்தையும் சேர்ந்து மறைக்கும் மனப்பக்குவம் பக்தி நெறியால் ஏற்பட்ட உறுதிப்பாட்டைக் காட்டுகின்றது. நாவுக்கரசருடைய
ദ്ബ
O சைவநன்மணிகலா நம்நாட்டு சைவ அறிஞரும் நூலாசிரியருமான, சைவநன்மணி நா. செல்லப்பா அவர்கள் கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தியை அறிந்து அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த வருத்தமடைகிறது.
இவர் அரச சேவையில் செளக்கியப் பரிசோதகராகக் கடமையாற்றியபோது, புலமைப் பரிசில் பெற்று ஜெனிவா சென்று உலக சுகாதார ஸ்தாபனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின் இலங்கை திரும்பி செளக்கிய போதனாசிரியராக பணிபுரிந்தார். 1972ம் ஆண்டில் அரசசேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், ஆன்மீக சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன், பல சமய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவரது சமயப் பணியைப் போற்றும் வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் "சைவநன்மணி” என்ற
இந்து ஒளி

சரீரத்தொண்டு குடும்பநிலையில் எல்லோரும் செய்யக்கூடியதே. ஆனால் கணவன், மனைவி, குழந்தை எல்லோரும் மனமொத்து விருப்புடன் செய்யவேண்டும். அதுவே உண்மையான சைவவாழ்வாகும்.
சைவ வாழ்வியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது. தன் மகன் அரவு தீண்டி இறந்த போதும் கலங்காமல் கணவன் பணியில் துணையாக நின்ற அவருடைய மனவுரம்தான் பக்திநெறியின் அடிப்படை. ஏனைய குடும்பத்து அங்கத்தவர் பக்திநெறியிலே செல்வதற்கு பெண்தான் வழிகாட்டியாகவும் நல்ல துணையாகவும் விளங்குகிறாள். குழந்தை நிலையிலே பக்தி நெறியை உணரத் தாய் தூண்டுதலாக இருக்கிறாள். வாழ்நாள் முழுவதும் அந்நெறியிலே மனிதன் செல்வதற்கு
பெண்ணினுடைய பணியே காரணமாகிறது. சைவவாழ்வியலில் பெண் போற்றப்படுவதற்கு இதுவே காரணம்.
இன்று பக்திநெறியில் செல்வதற்குப் பெண்ணின் பங்களிப்புத் தேவையில்லை என்ற கருத்தும் வலுப் பெற்று வருகின்றது. சமணம், பெளத்தம் போன்ற மதங்கள் பெண்மையை வழிபாட்டில் இணைக்கவில்லை. அவர்கள் தொடர்பால் துன்பமே சேருமென்ற கருத்துடையனவாகும். சைவம் பெண்களை வழிபாட்டில் இணைத்துப் போற்றுகின்றது. வீட்டிலிருந்தே மனிதனை நெறிப்படுத்தும் வழிகளைச் சைவம் கூறுகிறது. பெண் பங்களிப்பு இன்றி எத்தகைய வழிபாட்டு நடைமுறைகளையும் செயற்படுத்த முடியாது. இல்வாழ்வான் வாழ்க்கைத் துணைநலத்தோடு வழிபாட்டுக் கடமைகளைச் செய்யும் மரபு மாறி வருகிறது. பெண்ணின் ஆற்றலை மதிக்கும் பண்புநலம் குறைவடைந்துள்ளது. இந்நிலையில் சேக்கிழார் பதிவுசெய்த நல்ல தாய் தந்தையைப் பற்றிய செய்தியை எல்லோரும் ஒருமுறை படிப்பது நன்று. மேன்மை கொள் சைவநீதியை உலகமெலாம் விளங்கச் செய்யப் பணியாற்றுவர் இதனைப் பரப்பக் கடமைப்பட்டவர்கள். சைவ வாழ்வியலை விரும்பும் மக்கள் இத்தகைய நல்ல தாய் தந்தையராய் வாழும் பேறுபெற்றவர்கள். எதிர்காலத்தில் எமது சமயம் நிலைக்கப் பணிசெய்வோர் அப்பூதியடிகளின் பக்திநெறிச் செல்ல வேண்டும்.
நீதிநா. செல்லப்பா
பட்டத்தையும், உலக சைவப் பேரவை கெளரவ கலாநிதி பட்டத்தையும் அளித்து கெளரவித்திருந்தன. இவர் பல சமய சிந்தாந்த நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவற்றுள் சிவஞானபோதம், திருமந்திரம், திருக்குறள் போன்ற நூல்களை ஒப்பு நோக்கி ஆய்வு ரீதியில் எழுதியிருக்கிறார். கொழும்பில் சைவ சிந்தாந்த வகுப்புகளையும் நடத்தி வந்திருக்கிறார். இவர் அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
அன்னாரது மறைவையிட்டு அவரது குடும்பத்திற்கு மாமன்றம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
(மாமன்றத்தால், செய்திப் பத்திரிகைகள் ஊடாக விடுக்கப்பட்ட அனுதாபச் செய்தி - 09.07.2007)
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 19
Uாள்வதிக்கு சி இடப்பாகம் அ
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையின் முக்கிய ஸ்தல வரலாறாக புராணங்கள் கூறுவது இரண்டு நிகழ்வுகள்.
முதலாவது விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் இடையே உண்டான நான் என்ற அகங்காரத்தை போக்கும் பொருட்டு, சிவபெருமான் அடிமுடிகாணாத ஆனந்தரூபமாக வானுக்கும், பூமிக்கும் இடையே ஜோதிமயமாக நின்ற இடம் திரு வண்ணாமலை என்பதாகும்.
இரண்டாவது வரலாறு, காமாட்சி அம்மையாராகிய பார்வதி தேவியாருக்கு சிவபெருமான் இடபாகம் அளித்த இடமும் திரு வண்ணா மலையே.
திருக்கயிலாயத்தில் ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களை பார்வதி தேவியார் தன் கைகளால் மூடினார். சிவபெருமானின் இருகண்களும் சூரியன், சந்திரன் ஆவர். எனவே, சகல உலகங்களும் இருண்டன. தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், மிருகங்கள் முதலான சகல ஜீவராசிகளும் சோர்ந்து போயின.
பார்வதி தேவியார் தனது தவறை உணர்ந்து இந்த பாவம் நீங்க யாது செய்ய வேண்டும்? என்று சிவபெருமானை வேண்டினார். பூலோகத்தில் காஞ்சியில் உள்ள கம்பை நதிக்கரையில் என்னை நோக்கி தவம் இருந்தால் உன்னுடைய பாவம் போக்கப்பொறுவாய் - என்று சிவபெருமான் கூறினார். அதற்கேற்றவாறு அம்மையும் பூலோகத்தில் காமாட்சி என்ற அவதாரம் கொண்டு காஞ்சிபுரத்தில் கம்பை நதிக்கரையில் இறைவனை நோக்கி ஆழ்ந்த தவமியற்றினார். மணலினால் (பிரித்வி) சிவலிங்கம் பிடித்து பூசித்து தவம் செய்யும் வேளையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததை அறிந்த அம்மை தன் திருக்கரங்கள் கொண்டு சிவலிங்கத்தை தன் மார்போடு கட்டியணைத்து திரும்பி நின்றார். இந்நிகழ்ச்சியால் சிவலிங்கம் காப்பாற்றப்பட்டது.
இறைவன் உடனே மகிழ்ந்து ரிஷப வாகனத்தில் காட்சியளித்து “என் கண்களை மூடிய பாவம் நீங்கப்பெற்றாய்” என்று கூற உடனே பார்வதிதேவியார் (காமாட்சி அம்மன்) உம்மை எப்பொழுதும் பிரியாமல் இருக்க உமது இடப்பாகம் அளிக்க வேண்டும் என்று வேண்டினார்.
“காஞ்சிமாநகரத்தில் இருந்து தென்மேற்கு திசையிலுள்ள அருணை மாநகரமாம் திருவண்ணாமலைக்கு சென்று என்னை நோக்கி தவமிரு, அங்கே உமக்கு இடப்பாகம் அளிப்போம்” எனக்கூறி மறைந்தார்.
காமாட்சி அம்மையார் திருவண்ணாமலையை நோக்கி புறப்பட்டார். பயணம் செல்லும் வழியில் அம்மையார் இளைப்பாற மைந்தனாகிய முருகன் வாழை இலை கொண்டு பந்தல் அமைத்தார். மேலும் அம்மையார் நீராடுவதற்கும் பூஜை செய்வதற்கும் ஏதுவாக ஒரு ஆற்றையும் உருவாக்கினார்.
இந்து ஒளி
 

வபெருமான்
Vý
ளித்த வரலாறு
(குறிப்பு:- திருவண்ணாமலையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் இன்றும் வாழைப் பந்தல் என்ற பெயர் கொண்ட ஊர் உள்ளது. அங்கே சேயாறு எனப்படும் செய்யாறு ஒடிக் கொண்டிருக்கிறது. “தாய்க்காக சேய் அமைத்த ஆறு என்பதால் 'சேயாறு எனப்படுகிறது. இந்தப்புராணத்தை விளக்கும் வகையில் அங்கே ஒரு காமாட்சி அம்மன் ஆலயமும் உள்ளது)
திருவண்ணாமலையை வந்தடைந்த காமாட்சி அம்மன் முதன் முதலாக வடக்கு வீதியில் நுழைந்து, பின்னர் கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு வந்து அமர்ந்தார். அப்போது வியக்கும் வண்ணம் அங்கே காய்ந்த மரங்களும், பூச்செடிகளும் பூத்துக்குலுங்கின. அதன் பின்னர் ஆசிரமம் திரும்பிய கவுதம மகிரிஷி மனைவி அகலிகை, மகன் சுதாமகர் மூலம் காமாட்சிதேவியார் வந்துள்ளதை அறிந்து மகிழ்ந்தார். த
“அடியேன் குடில்நாடி பராசக்தியே வந்தது என் பாக்கியம் என்று பார்வதிதேவியை வணங்கி வரவேற்றுமகிழ்ந்தார். பின்னர், காஞ்சியில் நடந்ததை கவுதமரிடம் கூறிய காமாட்சி அம்மன், திருவண்ணாமலையில் தான் தவமியற்ற ஏற்ற இடம் எது? என்று கேட்டார்.
திருவண்ணாமலைக்கு நேர் கிழக்கு திசையில் தவமிருக்க வேண்டும். ஏனெனில் நேர்கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் மட்டுமே அண்ணாமலையானது ஒரு முகமாக காட்சியளிக்கும் என்ற மகரிஷியின் ஆலோசனையின் பேரில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சற்று அருகிலேயே, மலைக்கு நேர்கிழக்கு திசையில் ஒரு பர்ணசாலை அமைத்து, சப்த மாதர்களையும் புறக்காவலர்களாக வைத்து, வாயில்களை வைரவர் காக்கவும் உட்புறம் விநாயகரும், சுப்பிரமணியரும் காவல் காக்க தனது கடும் தவத்தை பார்வதி தேவியார் துவக்கினார். அந்த நிலையில் நீலகிரியில் சாகாவரம் பெற்ற மகிஷாசுரன் என்ற பெயர் கொண்ட அசுரன் ஒருவன் கொடுஞ்செயல் புரிந்து வந்தான். அவனது அட்டகாசம் தேவலோகம் வரை தொடர்ந்தது.
இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையை அபகரித்து அதன்மீது மகிஷாசுரனும், அவனது மகனும் சவாரி செய்தனர். விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் என்ற பாம்பை கவின்கோலாக்கி அதில் விஷ்ணுவையே கல்லாக வைத்து தூக்கி எறிந்து விளையாடினான். அனுமனின் வாலை பிடித்து சுழற்றி எறிந்து பந்தாடினான். அந்த எருமைகடா தலை கொண்ட மகிஷாசுரனை கண்டு தேவலோகம் நடுங்கியது.
ஆயிரம் பேர் கொண்ட மகிஷாசுரனின் படை பார்வதி தேவியார் தவம் புரியும் திருவண்ணாமலை தபோவனத்திற்கு இரை தேடி வந்தனர். அந்த ஆயிரம் பேரையும் சப்த மாதர்கள் கொன்று விட்டனர். இச் செய்தியை கேள்வியுற்ற மகிஷாசுரன் கோபம் கொண்டு பழிவாங்கும் எண்ணத்துடன் திருவண்ணாமலையை நோக்கி வந்தான்.
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 20
எவராலும் வெல்ல முடியாத சாகாவரம் பெற்ற மகிஷாசுரன் வருகையை அறிந்த பார்வதி தேவியார் முப்பெரும் தேவியரின் ஒருங்கிணைந்த மகாசக்தியாம் துர்க்கா தேவியை பார்த்து வதம் செய்யச் சொல்ல. உத்தரவு பெற்றுப் புறப்பட்டாள் துர்க்கை. துர்க்கை சிங்கவாகனத்தில் ஏறிக்கொண்டு போக அருணை நாயகி என்பவர் முன்னே போகவும், காளி, துந்துமி என்கிற இருவரும் பின்னே போகவும், பார்வதியின் கணங்களும் விரைந்து போகவும், நாய் வாகனத்தில் வயிரவர் போகவும், பிரமி முதலாகிய மாதர் எழுவரும் தங்களது வாகனங்களில் சென்றார்கள்.
துர்க்காதேவியின் சேனைகளுக்கும், மகிஷாசுரனின் சேனைகளுக்கும் கடுமையாக போர் மூண்டது. மகிஷாசுரனுடைய படைகளை கொன்று குவிக்கும் துர்க்கையால் மகிஷாசுரனை கொல்ல இயல் வில்லை! காரணம், அவன் தனது உருவத்தை யானை, சிங்கம் போன்ற உருவங்களாக மாற்றி மீண்டும் தாக்கினான்.
அப்போது துர்க்கைக்கு வானத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. அதில் “மகிஷாசுரனின் உண்மையான தலை எருமைக்கடா தலை, அவன் எருமைக்கடா தலையைக் கொண்டு தாக்க வரும் போது அவனது தலையை வெட்டி காலினால் மிதித்தால் மட்டுமே அவனது உயிர் பிரியும்” என்று ஒலித்தது.
அவ்வாறே அவன் எருமைக் கடா வடிவம் கொண்டு வரும் போது அவனது தலையை வெட்டி வீழ்த்தி தனது காலால் அவனது தலையை மிதித்தாள் துர்க்கை. பின்னர் மகிஷாசுரனின் உயிர் பிரிந்தது.
உயிர்பிரிந்து தலையற்று கிடந்த மகிஷாசுரனுடைய அறுபட்ட கழுத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. “கொடிய அரக்கனுடைய கண்டத்தில் ஒரு சிவலிங்கமா” என்று ஆச்சரியத்துடன் அதனை கொண்டு வந்து பார்வதி தேவியிடம் கொடுத்தாள் துர்க்கை.
தனக்கு மிகவும் பிடித்தமான சிவலிங்கத்தை ஆர்வமுடன் கையில் வாங்கினார் பார்வதி தேவியார்; உடனே தேவியாரின் திருக்கரத்திலேயே ஒட்டிக்கொண்டது அந்த சிவலிங்கம்.
பரமசிவம் தன் கையோடு ஒட்டிக் கொண்டதின் காரணம் என்ன?’ என்று தனது அருகிலிருந்து கவுதம மகரிஷியிடம் ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியுடன் கேட்டார் பார்வதி தேவியார்.
அகத்தியர் முதலான ஐம்பது முனிவர்கள் ஒருமுறை வரமுனி என்ற முனிவரின் ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார்கள். அப்பொழுது ஆழ்ந்த தவத்தில் இருந்த வரமுனி தனது ஆசிரமத்திற்கு வந்த ரிஷிகளை வரவேற்கதவறிவிட்டார். இதனால் அவமானப்பட்டு ஆத்திரமடைந்த முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வரமுனியை எருமைக்கடாவாக இருக்கக்கடவாய் என சபித்து விட்டனர்.
பின்னர், தனது தவறை உணர்ந்து தான் தெரியாமல் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டினார் வரமுனி (மகிஷாசுரன்). ஒருநாள் பசியுடன் காட்டில் அலைந்து திரிந்தபோது மன்னதரிஷி என்ற முனிவர் கையில் லிங்கத்தோடு தவமியற்றிக் கொண்டிருந்தார். அவரை மகிஷாசுரன் அப்படியே எடுத்து விழுங்கிவிட்டான்.
ク தூய சிந்தனையில்லாத பிரார்த் நல்லறிவைப் பெற்று வாழ்ந்தால்
வாழ்வு கிட்டும். (பக்தி)
(இந்து ஒளி

வரமுனி (மகிஷாசுரன்) வயிற்றில் மன்னதரிஷி ஜீரணமாகி விட்டார். ஆனால் மன்னதரிஷியின் கையிலிருந்த சிவலிங்கம் மட்டும் வரமுனியாகிய மகிஷாசுரனுடைய தொண்டையிலேயே (கண்டம்) சிக்கிக்கொண்டது. அந்த லிங்கம் தான் தற்போது பார்வதி தேவியின் கரத்தில் ஒட்டிக்கொண்டுள்ளது.
பல காலமாக மகிஷாசுரனுடைய கண்டத்திலேயே (தொண்டை) சிவலிங்கம் இருந்ததாலும் இதற்கு முன் வரமுனி என்ற சிவனடியாராக இருந்ததாலும், சிவகடாட்சம் என்னும் பதவி கொண்டவராகிறான். ஆகவே அவனை கொன்றதினால் உனக்கு பாவம் நிகழ்ந்தது. அதனால் தான் உமது கரத்தில் சிவலிங்கம் ஒட்டிக்கொண்டது என்று விவரித்தார் கவுதமர்.
“பாவம் தீர என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்ட பார்வதியிடம் அதன் பரிகாரத்தையும் கூறினார் கவுதமர். அதாவது நவதீர்த்தங்களில் நீராடி சிவலிங்க பூஜை செய்தால் பாவம் நீங்கி கையிலுள்ள (ஒட்டியுள்ள) லிங்கமும் விடுபடும்” என்று கூறினார். நவதீர்த்தங்களும் இங்கே வரும்படி செய் என்ற பார்வதியின் கட்டளைக்கிணங்க துர்க்காதேவியார் தன் கையிலுள்ள வாளினால் பூமியை வெட்டி அங்கே கட்கதீர்த்தம் எனப்படுகிற சுனையையும், நல்ல தடாகங்களையும் உருவாக்கினார். துர்க்கையின் கையிலுள்ள கட்கம் என்னும் வாளினால் வெட்டப்பட்ட தீர்த்தம் என்பதால் அது கட்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
அத்தகைய கட்கதீர்த்தத்தின் தடாகத்தில் ஒருமாதம் வரை நீராடிய பின் பார்வதிதேவியார் (காமாட்சி அம்மன்) கரத்திலிருந்து சிவலிங்கம் விடுபட்டது. பின்னர் அதனை கரை மீது பிரதிஷ்டை செய்து பாபவிநாசகர் என்று பெயரிட்டு பூஜித்து வந்தார்.
பின்னர் கார்த்திகை மாதம் பவுணர்மியும் கிருத்திகையும் சேரும் நன்னாளில் மலைமேல் ஒரு பிரகாசம் உண்டாகி “பெண்ணே! இம்மலையை வலமாக நடந்து வா” என்று சொல்லி அக்கணமே மறைந்தது. அவ்வாறே அம்மனும் கிரிவலம் சென்று அதே இடம் வந்தடைந்த போது சிவபெருமான் பார்வதியை அழைத்து தனது மேனியில் இடபாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரராக ஜோதிரூபமாக காட்சியளித்தார்.
இன்றும் கூட கார்த்திகை தீபத் திருநாளில் காமிக ஆகம விதிப்படி கார்த்திகை மாதம் பவுர்ணமியும் கிருத்திகையும் சேரும் நன்னாளில் சரியாக மாலை 6 மணிக்கு அருணாசலேசுவரர் சன்னதியில் கொடிமரத்திற்கு முன்னதாக பூரீஅர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி காட்சியளித்த பின்னரே மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
அந்த தீப தரிசனம் பூரீ அண்ணாமலையாரும், பூரீ உண்ணாமுலை அம்மனும் கலந்த ஜோதி ரூபமாகவே இன்றும் போற்றி வணங்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளை கேட்டு அறிந்தவர்கள்; அறிந்ததை புரிந்து கொண்டவர்கள் அனைவரும் சிவகதியை அடைவார்கள். இந்த வரலாறு திருவண்ணாமலையின் சின்னகடை தெருவில், பிரிவு தெருவான வடக்குவீதியில் உள்ள அருள்மிகு பூரீகாமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில்தான் நடந்துள்ளது என்று புராணச்சான்றுகள் கூறுகின்றன.
நன்றி : மாலை மலர் (01.12.2006)
தனை பலன் ஏதும் தராது (பக்தி) སྒ
இனிமையான
8 சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 21
5,35635)T19.
உலகிலே ஒவ்வொரு நாடும் தமது தனித்துவத்தைப் பேணும் வகையில் தனிக்கொடி அமைத்து அதனைப் பறக்கவிடுவது நீண்டகாலமாகவே நடைமுறையிலுள்ள வழக்கமாகும். தத்தம் நாடுகளில் பொலிந்து விளங்கும் வனப்பையும், வளத்தையும் சித்தரிக்கும் வகையிலான இலச்சினை பொறிக்கப்பட்டதாக அந்தந்த நாட்டுக் கொடிகள் விளங்குகின்றன. அதுவே தேசியக் கொடியாக முக்கியத்துவம் பெறுகின்றது. பண்டைக்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் முறையே வில், புலி, மீன் என்பனவற்றை இலச்சினையாகக் கொண்ட கொடிகளை பறக்கவிட்டு ஆட்சிபுரிந்ததாக சங்ககால இலக்கியங்கள் சான்று பகருகின்றன. இவ்வாறு நாடுகள் மட்டுமல்ல, ஒவ்வொரு மதத்தினரும் அவர்களது தனித்துவத்தையும் சிறப்பையும் பேணும் வகையில் தங்களுக்கே உரித்தான கொடிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாரம்பரியமிக்க சைவசமயத்தின் சின்னமாக நந்திக்கொடி விளங்குகின்றது.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதி சிவபெருமான். முழுமுதற் கடவுளான சிவனுக்குரிய கொடி நந்திக்கொடி என்பதால் அதுவே உலகின் முதற்கொடியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சிவனின் வாகனமும் இடபம் எனப்படும் நந்தியாகும். இது ஒரு சிவசின்னம் என்ற வகையிலும், சைவத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுவதாலும், சிவனுக்குச் செலுத்தப்படும் இறை வணக்கமும், இறையன்பும் மதிப்பும் நந்திக் கொடிக்கும் செலுத்தப்படு இந்துப் பெருமக்களால் போற்றித் துதிக்கப்படுகிறது. "ஏற்றுயர் கொடியுடையான்” என்ற பெருமையும் சிவனுக்கு உண்டு. பன்னிரு திருமுறைப் பாடல் வரிகளில் பக்திச் சுவையுடன் இது சொல்லப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் நடைபெறும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, எவ்வாறு போற்றி மதிப்பளிக்கப்படுகின்றதோ, அதுபோல இந்துமத விழாக்களிலும்
一令一一令一一令一竣一一令一一令一一令一一令一一铃一一令一→一一夺-→一一令一一令一一夺一令一一令一一令一一令一一邻
செய்தி
இந்து நாகரிகம் -
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்பில் இந்து பாடத்திட்டத்திற்கு அமைவான கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்ட இந்து மாமன்றம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் 17ம் மண்டபத்தில் மாமன்றத் தலைவர் வி. கயிலாசபிள்ளை தலைமை திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் சிறப்பு வி கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் (இந்துசமயம்) தி
இந்த வைபவத்தில், துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் வெ காலாண்டிதழான “இந்து ஒளி" சஞ்சிகையின் அறிமுகவுரையை
இந்து ஒளி
 

பின் மகத்துவம்
கசூரியர் )
வைபவங்களிலும் நந்திக்கொடியும் ஏற்றப்படவேண்டியதன் அவசியம் இப்போது உணரப்பட்டுள்ளது மட்டுமன்றி, அவ்விதமாகவே ஏற்றப்பட்டும் போற்றப்பட்டும் வருகிறது.
நீண்டகாலமாகவே நந்திக்கொடியின் மகத்துவமும் பாரம்பரிய சிறப்புகளும் அதன் அத்தியாவசியமும் பலருக்குத் தெரியாமலிருந்து வந்தன. ஏற்கனவே இந்து கலாசார அலுவல்கள் அமைச்சும், திணைக்களமும் நந்திக்கொடிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிவந்ததன் மூலம், அதன் தனித்துவம் பலராலும் அறியப்பட்டது. அண்மைக்காலமாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவரான திரு. சின்னத்துரை தனபாலா தனிமனித முயற்சியாக நந்திக்கொடிகளை இந்துமக்களுக்கும், ஆலயங்கள் இந்துமத நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கும் இலவசமாக வழங்கிவருகிறார். நாடளாவிய ரீதியில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவரது சேவை தொடருகிறது. இத்தகைய ஒரு சிறப்பான கைங்கரியம் பலராலும் பெரிதும் போற்றப்படுகின்றது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 2005ஆம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது நந்திக்கொடியை சகல ஆலயங்களிலும் பறக்கவிடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்பதை தீர்மானமாக நிறைவேற்றியிருப்பதுடன், மாமன்றம் அதனை மேலும் முன்னெடுத்துச் செல்கின்றது.
நமது நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் எங்கெல்லாம் இந்துப்பெருமக்கள் வாழ்ந்துவருகின்றார்களோ, அங்கெல்லாம் நந்திக்கொடிக்கு முக்கியத்துவம் அளித்து பறக்கவிடுவது மட்டுமன்றி, தேவையான காலங்களில் ஏற்றப்படவும் வேண்டும்.
(நன்றி : தினக்குரல் 28.08.2006)
நூல் வெளியீட்டு விழா
5ாகரிகம் பாடத்தை கற்கும் மாணவர்களின் நலன்கருதி, அவர்களது நூலொன்றை “இந்து நாகரிகம்” என்ற பெயரில் அகில இலங்கை
திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் ருந்தினராகக் கலந்து கொண்டார். கல்வி அமைச்சின் சமய விழுமிய ந. சி. இதயராஜா நூலின் ஆய்வுரையை நிகழ்த்தினார். iளி விழாவையொட்டி சிறப்பிதழாக வெளிவந்திருக்கும் மாமன்றக் பராசிரியர் அ. சண்முகதாஸ் நிகழ்த்தினார்.
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 22
ஒரு மதிப்பீடு
6(22/12/72.7%
அகில இலங்கை இந்து மாமன்றம், கல்விப் பொதுத் தராதரப் பத்திர இந்து நாகரிகம் பாடத்திட்டத்திற்கு அமைந்த வகையில் வெளியிட் நூலை, கல்வி அமைச்சு - சமய விழுமிய கல்விப் பிரிவு, உதவிக்கல் திரு. சி. இதயராஜா மதிப்பீடு செய்கிறார்
c26a இலங்கை இந்துமாமன்றத்தினால் கடந்த 17.03.2007 ஆம் திகதி சனிக்கிழமை மாலை, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில், மாமன்றத் தலைவர் திருவாளர் வி. கயிலாசபிள்ளை தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்ட இந்துநாகரிகம் எனும் நூல் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வெளியீடான இந்து ஒளியில் வெளிவந்த, இந்துநாகரிகம் தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து, மாமன்றக் கல்விக்குழு க.பொ.த.(உயர்தர) வகுப்புக்கான பயிலரங்குகளில் இலவசமாக வழங்கிவந்தது. அப்பணியின் விரிவாக மேலும் பல கட்டுரைகள் சேர்க்கப்பட்டு, கல்விக்குழுவின் செயலாளர் திரு. த. மனோகரனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் வெளிவந்துள்ளது.
கோபுரத்துடன் கூடிய அழகான முகப்புப் படத்துடன் 400 பக்கங்களில் கச்சிதமாக நூல் அமைந்துள்ளது. இருபத்தெட்டு கட்டுரையாசிரியர்களின் 68 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. விரிவஞ்சிக் கட்டுரையாளர்களின் பெயர்களைத் தவிர்த்துக் கொள்கின்றேன். இந்துநாகரிகத்தின் தொன்மையும் வரலாறும், இந்துக்களின் கலைமரபு, இந்துசமய தத்துவங்கள், இந்துமத வழிபாட்டு நெறி, இந்துசமூகக் கட்டமைப்பு, இந்துமதத்தில் சீர்திருத்தப்பணிகள் எனும் ஆறுதலைப்புக்களில் கட்டுரைகளை வகுத்து நோக்குதல் நூலினைக் கிரகித்தலுக்கும், மதிப்பிடுதலுக்கும் ஏதுவாய் அமையலாம்.
(அ) இந்துநாகரிகத்தின் தொன்மையும் வரலாறும்:
இந்துநாகரிகத்தின் தொன்மையும் ஆதாரமான நூல்களையும் வரலாற்றுக் கட்டங்களின் போக்கும், இந்தியாவுக்கு வெளியே இந்துநாகரிகத்தின் தாக்கம் பற்றியும் இடம்பெற்ற 14 கட்டுரைகளை இப்பகுதியில் நோக்குவோம்.
சிந்துவெளி நாகரிகம் பற்றி இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சிந்துவெளி பற்றிய புதைபொருள் ஆய்வுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவை பற்றிய ஆய்வு முயற்சிகள், ஆய்வு முடிவினை அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் இடர்ப்படுவதற்கான காரணங்கள் பற்றி அவசியம் குறிப்பிடுதல் வேண்டும். ஏனெனில் சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு நிலவுவதனால் வாசகர்களிடையே நிலவும் குழப்பத்தினை போக்குவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
வேதங்கள், ஆகமங்கள் பற்றி நான்கு கட்டுரைகளில் அவைபற்றி முழுமையாக இல்லாவிட்டாலும் அறிமுகம் என்றவகையில் சிறப்பான கட்டுரைகளாகும். குப்தர், பல்லவர், சோழர், விஜயநகர நாயக்கர் காலம் பற்றிய கட்டுரைகள் மூலம் அக்காலப் பகுதியின் வரலாற்று செய்திகளன்றி
இந்து ஒளி

259
உயர்தர) வகுப்பு மாணவர்களின் டுள்ள “இந்து நாகரிகம்” என்ற விப் பணிப்பாளர் (இந்து சமயம்)
அக்காலப்பகுதியில் இந்துசமயம் பெற்ற முக்கியமான வளர்ச்சிக் கட்டங்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். குப்தர்காலத்தில் இந்துசமய உருவாக்கமும், புராண இதிகாசங்கள், கட்டிடக்கலை, சிற்பக்கலை வளர்ச்சியும், பல்லவர் காலத்தில் பக்தி இயக்கத்தின் எழுச்சியும், சோழர்காலத்தில் சைவசித்தாந்தத்தின் உருவாக்கமும், விஜயநாயக்க காலத்தில் இஸ்லாமிய எழுச்சிக்குப்பின் இந்துசமயத்தின் மீள் உருவாக்கத்திற்கு மட்டங்களின் வரலாற்றுப் பணிகளும் பற்றிய குறிப்புக்களைக் காணமுடிகின்றன.
தென்கிழக்கு ஆசியாவில் இந்துமதம் என்ற கட்டுரை பல அரிய தகவல்களை உள்ளடக்கியதாகும். இலங்கையில் இந்துமதம் என்ற கட்டுரை வாசகரின் எதிர்பார்ப்பினை ஏமாற்றுவதாகவே உள்ளது. எனினும் இலங்கையில் உள்ள சிவத்தலங்கள் பற்றிய இரண்டு கட்டுரைகள் இக்குறையினை போக்குவது போல் அமைந்துள்ளது. குறிப்பாக ஈஸ்வரன் கோயில் கொண்ட திருத்தலங்கள் என்ற கட்டுரை பல தகவல்களை எமக்குத் தருகின்றது.
(ஆ) இந்துக்களின் கலை மரபு:
இந்துக்களின் கோவிற் கட்டிடக்கலை, சிற்பம், ஒவியம், இசை, நடனம் என்பன பற்றி 13 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்துக்களின் கலை மரபுபற்றி பொதுமக்களிடையே பெருமளவில் விழிப்புணர்வு இல்லை என்பது பெரும்பாலானாரின் கருத்தாகும். இவைபற்றி உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கும் போதிய அளவு நூல்கள் தமிழில் இல்லை என்பதும் பெரும் குறைபாடாகும். இவற்றினை ஒரளவாவது போக்கும் முயற்சியில் 70 பக்கங்களில் அடிப்படையான பல தகவல்களையும் விளக்கங்களையும் இப்பகுதியில் படித்துப் பெற முடிகின்றது. மேலும் இப்பகுதியில் விளக்கப்படம் ஒரு கட்டுரைக்கு மட்டுமே உள்ளது. ஏனையவற்றுக்கும் சேர்க்கப்பட்டிருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்த பதிப்பில் இவை சரி செய்யப்படல் வேண்டும்.
(இ) இந்துசமய தத்துவங்கள்:
உபநிடதம், வேதம், பகவத்கீதை, சைவசித்தாந்தம் பற்றிய 13 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தத்துவ நோக்கில் உபநிடதங்கள் கூறும் கருத்துக்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அதே போலவே அத்வைதம், விஷிட்டாத்வைதம் பற்றியும் சங்கரர், இராமானுஜர் பற்றியும் அடிப்படையான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சைவசித்தாந்தம் பற்றிய 5 கட்டுரைகள் மிக விரிவாக ஆராய்கின்றன என்றே குறிப்பிடலாம். அதேவேளை சுருக்கமாகவும், தெளிவாகவும் உள்ளமை விசேட அம்சமாகும். சுருக்கமாகக் கூறின் பல புத்தகங்களைத் தேடி வாசித்துக் குறிப்பெடுத்துக் கிரகிக்க வேண்டியவற்றினை 13 கட்டுரைகள்
0. சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 23
மூலம் அடிப்படை அம்சங்களில் விளக்கம்பெற உதவுகின்றன என்ற வகையில் இக்கட்டுரைகள் முக்கியத்துவமானதே.
(ஈ) இந்துமத வழிபாட்டுநெறி:
புரோணோதிகாசங்கள், அறுவகைச்சமயம், வீரசைவம், வடநாட்டில் பக்திநெறி, ஆலயக் கிரியைகள் எனும் விடயங்கள் பற்றி 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புராணங்கள் எவை என்பதும் அவை குறிப்பிடும் விடயப்பரப்பு பற்றிய விளக்கமும் பல தரத்தவவர்களுக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
சைவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம், வீரசைவம் என்பவற்றின் வழிபாட்டு பின்புலம், அவற்றின் வரலாற்றுப் பின்னணி பற்றி தெளிவாகக் கூறுவது மிகச் சிறப்பான அம்சமாகும். தென்னாட்டில் ஏற்பட்ட பக்திநெறியின் அலை வடநாட்டிலும் பிரதிபலித்து, துளசிதாசர், கபீர்தாசர், மீராபாய், இராமானந்தர் போன்றோரிடம் வெளிப்பட்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பானதாகும். ஆலயங்களில் இடம் பெறும் நித்திய, நைமித்திய கிரியைபற்றிய சுருக்கமான குறிப்புகளும் தத்துவக் கருத்துக்களும் எல்லோரும் புரியும் வகையில் குறிப்பிடப்பட்டமை இன்னொரு சிறப்பெனலாம். (உ) இந்துசமுகக் கட்டமைப்பு:
தர்மசாஸ்திரங்கள், ஒழுக்கவியற் சிந்தனை, ஆச்சிரமக் கோட்பாடு, புருடார்த்தக் கோட்பாடு, புராதன கல்வி முறை, இந்து அரசியற் சிந்தனை, இந்திய பொருளாதாரச் சிந்தனை பற்றிய கட்டுரைகள் 8 இடம் பெற்றுள்ளன.
இந்து சமயத்தில் கட்டுக்கோப்பில்லை, இதனைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பது, இன்று இந்துமதம் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டாகும். ஆனால், ஆரம்பகாலத்தில் இவை மிகவும் கட்டிறுக்கமாக இருந்தவாற்றினை இக்கட்டுரைகள் மூலம் அறிய முடிகின்றது. நவீன கல்வியல் சிந்தனைகள், பொருளியல், அரசியல் கோட்பாடுகள் தோற்றம் பெறுவதற்கு முன்பே அவை பற்றிய புரட்சிகரமான சிந்தனைகளும் அவற்றுடன் கூடிய நடைமுறைகளும் காணப்பட்டமையினை மேலும் இக்கட்டுரைகள் மூலம் அறிய முடிகின்றன. தற்போது இந்துக்களிடம் காணப்படும் வெறுமைக்கு, வரலாற்றுப் பிரஞ்ஞை இன்மை ஒரு காரணமாகலாம். இந்தவகையில் இக்கட்டுரை வாசிக்கும் வாசகர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை தூண்டத்தக்க உந்துசக்தியாக இக்கட்டுரைகள் அமையலாம்.
LiLLLiLLLLLLLiLLLLLLLiLLLLTLLTLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
செய்தி
நினைவுப் பேருரையும், மாணவர்
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பராமரிப்பில் இயங்கிவ விழாவும், வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை நினைவுப் பேரு காலை 10.00 மணிக்கு இரத்மலானை “சக்தி இல்லம்” மண்டபத் மாமன்றத் தலைவர் வி. கயிலாசபிள்ளை தலைமையில் நடந்த பேராசிரியர் திருமதி ஞானா குலேந்திரன் “காரைக்கால் அம்மைய இறுதியில் விடுதி மாணவ, மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும் !
இந்து ஒளி 2

(ஊ) இந்துமத்தில் சீர்த்திருத்தப் பணிகள்:
ஆதீனங்கள், பிரமசமாஜம், நவீன சீர்திருத்த இயக்கம், இராமகிருஷ்ண இயக்கம். பூநீலழரீ ஆறுமுகநாவலர், சுவாமி விபுலானந்தர் உள்ளிட்ட பெரியோர்கள், இலங்கையில் இந்துமத நிறுவனங்கள் பற்றிய கட்டுரைகள் 9 இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் இந்து நிறுவனங்கள் என்ற கட்டுரையில் சைவவித்தியா விருத்திச்சங்கம் போன்ற ஆரம்பகால இயக்கங்களில் இருந்து, இன்றைக்கு நாடளாவிய ரீதியில் பல அரிய சேவைகளைச் செய்து கொண்டிருக்கும் அகில இலங்கை இந்துமாமன்றம் வரையான விடயங்கள் உள்ளடக்கப்பட்டமை மிகச்சிறப்பானதாகும்.
இந்துநாகரிக வரலாற்றில் ஆரம்பத்தில் அவைதீக சமயங்களினதும், பின்னர் இஸ்லாமியர், மேலைத் தேயத்தவர்களின் ஆதிக்கம் நிலவிய காலங்களில் இந்துசமயம் பல நிலையில் சோதனைக்குள்ளாகியது. இந்த வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட நெருக்கடிக்கும் அதை எவ்வாறு எதிர்கொண்டன என்பவற்றினையும் அக்காலகட்ட சமய, சமூக இயக்கங்கள், தனிமனித ஆளுமைகள் பற்றி இக்கட்டுரைகள் பல தகவல்களைத் தருகின்றன. இவ்வாறான ஒருபோக்கு தற்போதும் இலங்கை எதிர்நோக்குவதும் இவ்வாறான வரலாற்றுப் பின்புலம் பற்றிய பார்வை படிப்பினையாக இருக்கும் என்ற வகையில் இக்கட்டுரைகள் வாசகர்களுக்குப் பயனுள்ளவை என நம்பலாம்.
நிறைவுரை
இந்துநாகரிகம்' என்னும் இந்நூலினைத் தொகுத்து நோக்கும் பொழுது, இந்து நாகரிகம் பற்றி அறிய விரும்பும் இந்துக்களுக்கும் ஏனையோருக்கும் ஒரு வழிகாட்டியாக அமைவதோடு, இத்துறையில் பயிலும் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் சிறந்த ஒரு துணை நூலாக அமையும் என்பது எனது திடமான கருத்தாகும்.
நிறைவாக, இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் உள்ளடக்கம் கனதியாக்கப்பட வேண்டும். அடுத்த பதிப்பில் கட்டுரையாசிரியர்கள் இதனைச் செய்தால் நூலின் பெறுமானம் மென்மேலும் அதிகரித்து சகல மட்டங்களிலும் பேசப்படும் நூலாகும் என்பதில் இருகருத்துக்கு இடமில்லை.
LLLLLLLLLLiLLLLLLLLTLLLLLLLLLLLLLTLLTLLLLLLLLLLLLL
விடுதி ஆண்டு நிறைவு விழாவும்
ரும் இரத்மலானை மாணவர் விடுதியின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு ரையும் இவ்வருடம் (2007) ஏப்ரல் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ாரின் மறுபக்கம்” எனும் பொருளில் பேருரையாற்றினார். நிகழ்வின் இடம்பெற்றன.
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 24
Gாமன்றப் பொண்விழா Dooň - 3U மதிப்பீடு)
இறைபணி என்றும் மகிழ்க
கலாநிதி. மனோன்
அகில இலங்கை இந்து மாமன்றம் உலகம் அறிந்த ஒரு சமய நிறுவனம். இந்நிறுவனம் தன் வாழ்வியலையும் வளத்தையும் எடுத்துரைக்க என ஒரு மலரை வெளியிட்டுள்ளது. ஐம்பது ஆண்டுக்காலத்துப் பணிகளை அனைவரும் நன்குணரவேண்டும் என்ற நல் நோக்கத்தோடு'பொன்விழா சிறப்புமலர்' என அதற்குப் பெயர் சூட்டியுள்ளது. மலர் இரண்டு பகுதிகளாகத் தொகுக்கப்பட்டு 'ஆண்டாள் மாலை போலக் கனதியாக உள்ளது. கையில் தூக்கிவைத்து இம்மலரைப் படிக்க முடியாது. புராண ஏடுகளைப் பக்குவமாய் வைத்துப் படிப்பது போலப் பக்தி உணர்வுடன் ஓரிடத்தில் வைத்துப் படிக்கவேண்டிய நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்துஒளி' என்ற பெயரைத் தாங்கிச் சந்தனத்தின் மேல் குங்குமம் வைத்தாற் போல வண்ணத்தில் எண்ணத்தைக் கவரும் தோற்றம், சரவிளக்குகளின் நடுவே இந்து மாமன்றத்தின் கட்டிடத்தைக் காட்டி ‘இறைபணிநிற்க' என்ற இலக்குத் தொடரைப் பொறித்து தில்லைக் கூத்தனின் திருநடனக் காட்சியில் மனிதப் பிறவியின் இலக்கைச் சுட்டும் மலரின் முகப்பு அட்டை, ஒரு பக்திக் கோலமாய் மிளிர்கிறது. இந்த மலரைப்புரட்டிப் படிக்க ஆற்றுப்படுத்துகிறது.
மலரை விரித்தவுடன் வண்ணக் கோலமாய் உள்ளத்தை ஈர்க்கும் இறை உருவங்கள். குடும்பக் கோலமும் அர்த்த நாரீஸ்வரக் கோலமும் மனிதவாழ்வை நெறிப்படுத்தி நிற்கின்றன. நாம் வழிபடும் தெய்வங்களை எல்லாம் ஒரு பார்வையில் தரிசித்து மகிழ்வது, பல கோவில்களை வலம்வரும் உணர்வைத் தருகின்றது. சொந்த மண்ணை விட்டும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் அவர்கள் தலைமுறைகளும் எமது வழிபாட்டு வாழ்வியலைத் தொடர இம்மலர் கையேடாகத் துணை நிற்கும். அறுவகைச் சமய நெறிகளையும் அன்பு நெறிகளையும் உலகம் அறியவும் இம்மலர் நன்கு பயன்படும்.
உள்ளத்திலே பக்தி நெறியால் பசுமை தோன்றும். இக்கருத்தைப் புலப்படுத்தச் சிறப்பு மலரின் உள்ளடக்கம். பசுமையான வயல்போல ஆக்கங்கள். இரண்டு பாகங்களிலும் இணைக்கப்பட்டுள்ளன. இருபாகங்களிலும் 12 பகுதிகள். முதலாவது பாகத்தில் 7 தொகுப்புகள். இரண்டாவது பாகத்தில் 5 தொகுப்புகள். இவ்வமைப்பைப் பற்றி எல்லோரும் அறிய வேண்டும். இறைவணக்கம், ஆசிகளும் வாழ்த்துகளும் என்ற பகுதிகளில் மாமன்றத்தின் வழிபாட்டு மரபு பேணப்பட்டுள்ளது. மூத்த பிள்ளையாரை முதலில் வணங்கிப் பஞ்ச புராணம் பாடி வழிபடும் முன்னோர் கற்பித்த வழிபாட்டின் நினைவு, மலரின் தொகுப்பின் சிறப்புக்கு அணியாகவுள்ளது. ஆசிகளும் வாழ்த்துக்களும் பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளவை எதிர்காலத் தலைமுறைக்காக ஏற்றபடி இணைக்கப்பட்டுள்ளன. தேவஸ்தான நிலையிலும் நிறுவன நிலையிலும் அறங்காவலர் நிலையிலும் நிர்வாக நிலையிலும் நின்று ஆசியும் வாழ்த்தும் நல்கிய
இந்து ஒளி 2

பாய் இருக்க வழி செய்யும்
மணி சண்முகதாஸ்
இறைபணியை உணர்ந்தவர்களின் உரைகள் உள்ளத்தை நிறைவிக்கின்றன. அவர்களின் உருவப்படங்களை இணைத்தமை நேரில் தரிசிக்கும் வாய்ப்பற்ற வாசகர்களுக்கு மனதில் பதிய வைப்பதற்குத் துணை செய்யும்.
மாமன்றத்தின் வரலாற்றுப் பதிவுகள் மிகச்சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் மாமன்றத்தின் வரலாற்றையும் பணியையும் விரிவாகவே கூறியுள்ளார். அகில இலங்கை இந்து மாமன்றம் யாழ்ப்பாணத்தில் என்ன செய்தது என்று வினவும் சேவைநிறுவனப் பணியாளர்களுக்கு ஒருவகையில் இக்கட்டுரை விடையளிக்கும் என்பதில் ஐயமில்லை. தொடர இணைக்கப்பட்டுள்ள யாழ். இந்து மாநாட்டுக் கட்டுரை இருபத்து மூன்றும் இதற்குச் சான்றாக உள்ளன. அத்துடன் மட்டக்களப்பு இந்து மாநாட்டுக்கென எழுதப்பட்ட ஒன்பது கட்டுரைகளும் பிரதேசப் பணியை நிறைவு செய்துள்ளன.
'சங்கங்களும் அவற்றின் பணிகளும்' எனத் தொகுப்பு மகுடமிட்டுத் தொகுக்கப்பட்டுள்ள பதிவுகள் மிகப் பயனுள்ளவை. உதிரியாகக் கிடக்கும் செய்திகளையும் தகவல்களையும் ஒன்று திரட்டித் தந்துள்ளமை வாசகருக்குப் பெரு நன்மை பயக்கும். ஆனால் சுவைமிக்க சோற்றில் ஒரு சிறுபரல் கடிபட்டது போலப் பவளவிழாக் கண்ட திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் பணிகள் பற்றிய பதிவு இடம் பெறாமை நெருடலாகத் தோன்றுகிறது.
மலரில் இரண்டாம் பாகத்தில் பொன்விழாப் போட்டிக் கட்டுரைகளும் சிறப்புக் கட்டுரைகளும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இருப்பத்தெட்டுக் கட்டுரைகளும் வாழ்த்துக் கவிதைகளும் இடம் பெற்றுள்ள. மலரின் இப்பகுதி பிறமொழியாளர்களுக்கு இன்று உலகப் பொது மொழியாக விளங்குகின்ற ஆங்கில மொழியின் மூலம் சில செய்திகளைப் பதிவு செய்யும் நோக்குடையதாயுள்ளது. இந்து சமய வழிபாட்டு நடைமுறைகளையும் வாழ்வியலையும் பிற சமயத்தவர் அறிந்து கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்து மாமன்றத்தின் செயற்பாடுகள் உலகு தழுவியவை என்பதை இதனால் உணரலாம். அத்துடன் பிறமதங்கள் பற்றிய மன்றத்தின் நோக்கத்தை முன்வைக்கும் முயற்சியாகவும் உள்ளது. இது இந்து சமயம் ஏனைய சமயங்களை விடத் தொன்மையானது என்ற கருத்தை விளங்கிக் கொள்வதற்கும் வழிவகுக்கும்.
வாழ்த்துக் கவிதையில் அருட்கவி ஐயா குறிப்பிட்டது போல
"மின்பொலி செஞ்சடையானின் அருளால் இன்னும் மேருவெனப் பணியாற்றி மன்றம் வாழி' மாமன்றத்தின் பணிகள் இன்னும் மலைபோல் உள என்பதையும் இம்மலர்த் தொகுப்பு உய்த்துணர வைக்கின்றது.
அகில இலங்கை இந்து மாமன்றம் ஐம்பது ஆண்டுப் பணிகளால் பெற்ற அனுபவத்தைப் பிற இந்துசமய நிறுவனங்களும் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அவற்றை
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 25
வரலாற்றுப் பதிவுகளாக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் பின்னிற்கின்றன. எதிர் காலத்தில் இத்தகைய இந்துசமய நிறுவனங்களைப் பொறுப்பேற்க வேண்டிய இன்றைய இளம் தலைமுறைக்கு இத்தகைய மலர்கள் பெரிதும் தேவை. ஒரு தொண்டுப் பணியை மனமுவந்து ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெறுவதற்கு இம்மலரைப் படிக்கும் ஆவல் தோன்ற வேண்டும். நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் செயற்பாடுகளை வண்ணப்படங்களிலே பார்க்க வாய்ப்புண்டு. இம்மலர்த் தொகுப்பில் இத்தொழில் நுட்பம் நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மலரின் நிறைவிதழாகத் தோன்றும் நிகழ்வின் நினைவுகள் ஏறக்குறைய 80 பக்கங்களில் வண்ணப்படங்களின் தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கலைவாணியின் எழில் உருவோடு தொடங்கி மாமன்றத்தின் முன்னாள் தலைவர்களின் உருவங்களோடு முடியும் படத்தொகுப்பு மலருக்கு நறுமணம் தருகிறது. மலரைப் படித்து விட்டு மூடும் போது பதினெட்டு திருக்கோவிலின் தோற்றங்கள் தலயாத்திரைக்கு வாசகரைக் கூவி நிற்கின்றன.
米米米光米米光米米米光光米米米米米米米米米
Hindu Oli :
Release of Hind
BOOK LAUNCH: The powerful Hindu organ of Sri Lanka Hindu community, the All Ceylon Hindu Congress, released its golden jubilee commemorative book recently. This special number with two volumes has over 1000 pages and contains 123 well-written and well-accounted Hindu articles as well as research articles. There are 28 English research articles in this book.
This book also classifies important Hindu Associations and their activities, which will be much helpful to those who wish to know Hindu religious activities in this country.
This book will also be helpful to students and researchers who wish to gather authentic information and historical facts with photographs for their research works. These two volumes have documented plenty of valuable information and historical facts under several categories for easy finding. This special number, Hindu Oli, is the firsteverywell-documented Hindu religious book.
The All Ceylon Hindu Congress came into being on February 6, 1955 at a meeting held at the Hindu College
நீரானது உடல் அழுச் இறைவன் மன அழுக்கை
இந்து ஒளி

நிறைவாக பொன்விழாமலர் ஒரு களஞ்சியம். காலத்திற்கேற்பக் களஞ்சியப்படுத்தப்பட்ட செய்திகள். மலர் அமைக்க விரும்புவோருக்கு இம் மலர் ஒரு முன்னோடி. எதிர்கால வாசகர்களுக்கு ஒர் முதுசெம். இந்துமதம் பற்றியறிய விரும்பும் இளந்தலைமுறைக்கு ஒர் உசாத்துணை நூல். வழிபாடு பற்றி ஆராயும் ஆய்வாளர்களுக்குத் தகவற் சுரங்கம். பெயருக்கு ஏற்ப ஒளி காலும் சுடர். இம்மலரை ஆக்கியவர்கள் எல்லோராலும் பாராட்டப்படவேண்டியவர்கள். மலரின் பெறுமதியை மதிப்பிட வாசகரால்தான் முடியும். இங்கு வாசகர் என்ற தகுதிப்பாட்டில் என் கருத்து வைக்கப்படுகிறது.
எமது வழிபாடுசமயமானபோதுஇசைப்பாடல்களைதந்தது மதமான போது கருத்தாய்வுகளையும் தத்துவங்களையும் கொண்டுவந்தது. வாழ்வியலான போது மனிதனைத் தெய்வீக நிலைக்கு உயர்த்தியது. இறைபணி என்றும் மகிழ்வாய் இருக்க வழிசெய்யும் அப்பணியில் அகில இலங்கை இந்து மாமன்றம் எம்மை இணைக்க ஒரு பொன்விழா மலரைத் தந்துள்ளது.
来酉来幂来酉来酉来円来酉来酉来円来哥来来酉来来円来来荃来丐来円来円来汀来来
u religious Book
By: Arul Sathya
Hall, Wellawatta with 146 people who felt the strong need for a National Hindu Association. These Hindus who represented Kovils and religious associations countrywide selected late C. Kumarasamy, former senator, who also functioned as High commissioner to India.
From there onward the Association began a gradual and strong growth to reach its golden jubilee.
Today the All Ceylon Hindu Congress functions in its own six storeyed building standing at Sir Chittampalam A. gardiner Mawatha, Colombo 2.
Now all Hindu organisations and associations in this country look at the ACHC as their parent organisation.
Anyone who wants to know more on Hinduism and its functions in Sri Lanka both in Tamil and English, has only one choice: Go for Hindu Oli special commemorative volumes.
(This Review appeared at page 47 of the "Daily News" of 15th August 2007)
கைப் போக்குகிறது.
போக்குகிறான். (பக்தி)
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 26
மாமன்றத்தின் லிபான்விழா சி
இந்நாட்டின் இந்து நிறுவனங்களினதும் ஆலய அறங்காவலர் சபைகளினதும் கூட்டு நிறுவனமாகவும், இலங்கை வாழ் இந்து மக்களின் உச்ச நிறுவனமாகவும் விளங்கும் அகில இலங்கை இந்து மாமன்றம் 1955 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதியன்று தைப்பூச நன்னாளில் உதயமாகி, கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக சமய, சமூக நல, கல்விப் பணிகளின் ஊடாக இந்நாட்டு இந்து மக்களின் பாராட்டுதலையும் நன்மதிப்பையும் பெற்றுவந்துள்ளது.
இந்து மாமன்றத்தின் பொன்விழாவையொட்டி அனைவருக்கும் பயன்படத்தக்க வகையில் சிறப்பு மலரொன்றை வெளியிடவேண்டும் என்று ஏற்கனவே மாமன்றம் மேற்கொண்ட முயற்சி காலதாமதமானாலும், இப்பொழுது முழுமையானதாக வெற்றிபெற்று காத்திரமானதொரு மலராக மலர்ந்துள்ளது.
மாமன்ற பொன்விழா சிறப்பு மலரின் வெளியீட்டு விழா கடந்த ஜூலை 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பம்பலப்பிட்டி சரஸ் வதி மணி டபத்தில் மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் நடைபெற்றது. அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு வெள்ளவத்தை சம்மாங்கோடு ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூசையைத் தொடர்ந்து, சிறப்பு மலரின் பிரதி அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் வைத்து மங்கள இசை முழங்க மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு காலை 9.30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நல்லை ஆதீன முதல்வர் ஹீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மங்கள விளக்கேற்றி, வேதபாராயணம் ஒதப்பட்டு, இறை வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிவபூரீ பா. சண்முகரத்தின சர்மா, சிவழறி எஸ். நகுலேஸ்வரக் குருக்கள், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி இராஜேஸ்வரானந்தா மகராஜ் ஆகியோர் ஆசியுரைகள் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து மாமன்றத் தலைவர் தலைமையுரையாற்றினார். மாமன்றத்தின் கடந்த கால சமய, சமூக நல சேவைகளைப் பற்றி குறிப்பாக அண்மைக்கால மருத்துவ உதவிகள் சம்பந்தமாகவும் மாமன்றத் தலைவர் தனது உரையின்போது எடுத்துச் சொன்னார். இந்த நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய நீதியரசர் கெளரவ எஸ். ரீஸ்கந்தராஜா, தனது உரையில் மாமன்றம் கடந்த காலத்தில் 6) பரின் னடைவுகளையும் , இன்னல் களையும் எதிர்நோக்கியிருந்தாலும்கூட ஸ்தாபித்தவர்களும் அதன் தொண்டர்களும் ஆற்றிய, ஆற்றிவருகின்ற அரும்பணியினாலே இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது. மாமன்றம் தனது பணிகளில் ஐம்பது ஆண்டு நிறைவின் முக்கிய பணியாக இந்து சமய விடயங்களை ஆவணப்படுத்திய ஒரு நூலாக இந்தச் சிறப்பு மலர் வெளியீடு அமைந்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் வழங்கிய வாழ்த்துரையில் இந்து மாமன்றம் சமயப் பணி மட்டுமல்ல, சமூகத்துடன் ஒன்றிணைந்ததாக எந்தப்பணி தேவையோ அதனை முன்னெடுத்துச் செல்கிறது. ஒரு செயற்பாட்டை ஒரு குழுவாகவிருந்து அர்ப்பணிப்புத் தன்மையுடன் தொடரும்பொழுது வெற்றியைக் காணமுடியும். அந்தவகையில் மாமன்றத்தின் செயற்பாடுகள் ஆலமரமாக வளர்ச்சிபெற்ற நிலையில் தொடருகிறது என்றார். இந்து ஒளி
 

றப்பு மலர் வெளியீடு நிகழ்வு
யாழ் பல்கலைக்கழக பதில் உப வேந்தர் பேராசிரியர் இ. குமாரவடிவேல் வாழ்த்துரை வழங்கும்போது இலங்கைவாழ் இந்து மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற நோக்கில் காலத்தின் தேவையாக இந்து மாமன்றம் உருவாக்கப்பட்டது. இதன் பணிகள் மிகப் பல கொழும்பில் ஒரு தலைமையகம் நிறுவப்பட்டமை, இந்து ஒளி சஞ்சிகை வெளியீடு, சிறுவர் முதியோர் இல்லங்களை அமைத்து பராமரித்துவருதல் நாட்டின் பல பகுதிகளில் சமய சமூக சேவைகள்; யாழ்ப்பாணத்தில் சைவப் பிரசாரகர் பயிற்சி நிலையம் முதலான சேவைகளை ஆரம்பிக்கவிருப்பது, இந்து மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உரிய வகையில் உரிய இடங்களுக்கு எடுத்துச் சொல்லி நிவாரணம் பெற்றுக்கொடுப்பது போன்ற மாமன்றத்தின் பெரும் பணிகளை மதித்துப் போற்றுகிறோம். அத்தகைய சேவைகளின் தொகுப்பாக பல கட்டுரைகளுடன் இந்த சிறப்பு மலர் அமைந்திருக்கிறது என்று சொன்னார்.
தொடர்ந்து கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சி. தில்லை நடராஜா வாழ்த்துரை வழங்கும்போது நம்மிடையே துன்ப துயரங்கள், வேதனைகள் ஒருபக்கம் இருந்தாலும், பல ஆச்சரியங்களும் அற்புதங்களும் ஆனந்தங்களும் நம்மத்தியிலே அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. எங்கள் சமயத்தை அடையாளப்படுத்தக் கூடிய ஒரு சின்னமாக மாமன்றத் தலைமையகக் கட்டிடம் விளங்குகிறது. எங்கள் மக்களுக்கு எங்கு துன்பங்கள் துயரங்கள் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை மாமன்றம் செய்து வருவதை நினைவுகூர விரும்புகிறேன். வெள்ளப்பெருக்கு சூறாவளி, சுனாமி, யுத்த அனர்த்தம் போன்ற எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் மாமன்றத்தின் நிவாரணப் பணிகள் அங்கே நடக்கின்றன. நிதியுதவி, உடைகள், கல்விக்கான உபகரணங்கள் இப்படியாக பல வழிகளில் உதவிவருகின்றது. மாமன்றத்தின் இத்தகைய பணிகளில் ஒன்றாக, காலமெல்லாம் பேணப்படவேண்டிய கனதியான ஆவணமான இந்தப் பொன்விழா சிறப்புமலர் வெளிவந்துள்ளது. இது எங்களதும், நண்பர்கள், உறவினர்கள் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் என்று கூறினார்.
ஜூலை 7 ஆம் திகதியன்று திரு. சி. தில்லைநடராஜாவுக்கு அகவை அறுபது பூர்த்தியானதையொட்டி இலங்கைவாழ் இந்து மக்களுக்கு சிறப்பான சேவையாற்றிவருபவர் என்ற வகையில் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் இந்து மக்களினதும் நண்பர்களினதும் சார்பில் நினைவுச் சின்னமொன்று இந்த வைபவத்தின்போது வழங்கப்பட்டு அவரது துணைவியார் சகிதம் கெளரவிக்கப்பட்டார். நீதியரசர் எஸ். பூரீஸ்கந்தராஜா மேற்படி நினைவுச் சின்னத்தை வழங்கினார்.
நகர அபிவிருத்தி, புனித நகர் பிரதேச அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். இராமானுஜம் வழங்கிய வாழ்த்துரையில் இந்து தலங்கள் அமைந்தருக்கும் பிரதேசங்கள் புனித பூமியாக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படவேண்டும். இதற்கு இந்து மாமன்றம் பெரிதும் துணையாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். முன்னைய காலங்களில் அரசர்களால் இந்து மதம் வளர்ந்தது. இப்போது கோயில்களும், இந்து மத நிறுவனங்களும் சேர்ந்து இந்து மதத்தை வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் மாமன்றத்தின் பணிகளும் சிறப்பாகத் தொடரவேண்டும் என்று தெரிவித்தார்.
4. சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 27
வாழ்த்துரைகளைத் தொடர்ந்து சிறப்பு மலர் வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது. மாமன்றத்தின் கெளரவ உறுப்பினரும் சமூகசேவையாளருமான திரு. திருக்குமார் நடேசன் விழாவின் பிரதம விருந்தினரான நல்லை ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடமிருந்து மலரின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.
நல்லை ஆதீன முதல்வர் தனது உரையின்போது இந்து சமய மக்களாகிய எங்களுக்கு, எங்களுடைய மண்ணிலே இருக்கின்ற அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தரக்கூடிய வகையிலே மாமன்றம் ஐம்பது ஆண்டுகளாக தன்னுடைய சேவையின் ஊடாக எங்களை தலைநிமிர்ந்து வாழ வைத்துக்கொண்டிருக்கும் நிலையில் பொன்விழாவையொட்டிய நினைவாக இந்தச் சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த மங்களகரமான வேளையில் பல்துறை சார்ந்த அறிஞர்களும், பெரியவர்களும் கூடியிருக்கின்ற இந்த அவையில், சமயத்தின் பேரால் சமுதாயத்தை ஒன்றிணைக்கின்றதாக இந்த நிகழ்வு அமைந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இன்றுள்ள போர்க்காலச் சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் பல இந்து ஆலயங்களும், சமய நிறுவனங்களும், மற்றும் ஆலயக் குருமார்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். சிவபூமி எனப்படும் இந்த மண் புனிதமானது. பாடல்பெற்ற வரலாற்றுப் பெருமைவாய்ந்த தலங்களும் ஈஸ்வரங்களும் இங்கு இருக்கின்றன. சில
மாமன்றப் பொன்விழா சிறப்பு
பிரித்தானிய சைவத் (இந்து) திருக்கோயில்கள் ஒன்றியத்தின் பத்தாவது சைவ மாநாடு இலண்டன் விம்பிள்டன் பூரீ கணபதி ஆலயத்திலும், லூசியம் சிவன் கோயிலிலும் ஜூலை 14ம், 15ம் திகதிகளில் ஒன்றியத் தலைவர் வைத்திய கலாநிதி சின்னத்துரை சோமசேகரம் தலைமையில் நடைபெற்றது. நல்லூர் ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பேரூர் ஆதீன முதல்வர் தவத்திரு சாந்தலிங்கம் இராமசாமி அடிகளார், தருமபுர ஆதீனம் பூரீமத் மெளன குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ஆசியுரைகளும் சிறப்புரைகளும் வழங்கினர்.
மேற்படி ஒன்றியத்தின் விசேட அழைப்பின்பேரில் அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன், உபதலைவர் திரு. சின்னத்துரை தனபாலா ஆகியோர் இந்த சைவ மாநாட்டில் கலந்துகொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்வின் மாலை நிகழ்ச்சியில் “இலங்கைவாழ் இந்துமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்” எனும் தலைப்பில் திரு. கந்தையா நீலகண்டன்’ சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். வடகிழக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் சமீபத்தில் இந்து மக்கள் எதிர்நோக்கிய - எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளை எடுத்துவிளக்கி, அகில இலங்கை இந்து மாமன்றமும் ஏனைய இந்து நிறுவனங்களும் செய்துவரும் நிவாரணப் பணிகளையும் எடுத்துரைத்து, இலண்டன் பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம், இலண்டன் பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் என்பன போன்று புலம் பெயர்ந்து
(இந்து ஒளி 2

ஆலயங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் தமது சமயக் கடமைகளையும், வழிபாடுகளையும் ஆற்ற முடியாத நிலையில் இந்து மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலை அகல வேண்டும். ஒரு வழிபாட்டை நிறைவாகச் செய்வதன் ஊடாகவே மனிதன் முழுமை பெறுகிறான். அதற்கெல்லாம் வழிசமைக்க வேண்டிய பாரிய பொறுப்பு இந்து மாமன்றத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு குரல் கொடுக்கின்ற நிறுவனமாக இந்து மாமன்றம் உள்ளது. அத்தகைய அறப் பணிக்கு உதவுவதற்காக மாமன்றத்தைப் பாராட்டிப் போற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நல்லை ஆதீன முதல்வரின் உரையைத் தொடர்ந்து, இரு பாகங்களாக வெளியிடப்பட்ட பொன்விழா சிறப்பு மலரின் ஆய்வுரைகள் இடம்பெற்றன. செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் பாகம் ஒன்றையும், பேராசிரியார் அ. சண்முகதாஸ் பாகம் இரண்டையும் ஆய்வு செய்தார்கள்.
நிகழ்வின் இறுதியில் மாமன்ற உபதலைவர் சிவஞானச் செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் நன்றியுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இரத்மலானை இந்துக் கல்லூரியை மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய போசனமும் வழங்கப்பட்டது.
மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி தொகுத்து வழங்கியிருந்தார்.
மலர் இலண்டனில் அறிமுகம்
வாழும் இந்து மக்களும அவர்களின் நிறுவனங்களும் மேலும் உதவிகளை வழங்கவேண்டும் எனவும் உருக்கமான வேண்டுகோளை விடுத்ததுடன், அகில இலங்கை இந்து மாமன்றப் பொன்விழா சிறப்பு மலரை அறிமுகம் செய்து வைத்து, இந்து மக்களின் குரலாக - இந்து மக்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவிவரும் நிறுவனமாக கடந்த இரு தசாப்தங்களாக அகில இலங்கை இந்து மாமன்றம் செய்துவரும் சமூகநலப் பணிகளையும், மாமன்றம் நடத்தும் விடுதிகளைப் பற்றியும் விபரமாக எடுத்துச் சொன்னார்.
பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்கம் இராமசாமி அடிகளார், தருமபுர ஆதீனம் பூரீமத் மெளன குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் ஆகியோருக்கு இந்து மாமன்றப் பொன்விழா மலர் சிறப்புப் பிரதிகளை திரு. க. நீலகண்டனும் திரு. சி. தனபாலாவும் கையளித்து ஆசிபெற்றனர்.
சைவமாநாடு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிரபல வானொலி அறிவிப்பாளரும் சட்டத்தரணியுமான திரு. விமல் சொக்கநாதன் மாமன்றப் பொன் விழா சிறப்பு மலர் வரலாறு படைக்கும் பொக்கிஷம் என்றும், சரித்திரம் காணாதமுறையில் சிறப்பாக - ஆழமான ஆராய்ச்சிக் கட்டுரைகளுடனும், கவர்ச்சிகரமான அச்சுப் பதிப்புடனும் இரு தொகுதிகளைக் கொண்ட ஒரு கொத்தாக வெளியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு அதனைப் பாராட்டியதுடன், இம்மலர் ஒவ்வொரு இந்துவின் இல்லத்திலும் இருக்கவேண்டிய ஆண்டாண்டு காலமாகப் போற்றிப் பேணப்பட்டு படிக்கக்கூடிய அரிய களஞ்சியம் எனவும் மெச்சினார்.
அ. கனகசூரியர்
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 28
நினைவில் காணும் கட்டி
இறையருள்
06.05.2007 அன்று காலை கொழும்பு விவேகானந்த ஆரம்ப வைபவத்தில் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்
ཧྥུ་ཁ༠
நல்லதொரு கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளோம். விடுபட்டுப் போன விவேகானந்த சபை கட்டிட வேலைகளை விரைவில் முடிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர் சபை உறுப்பினர்கள். சில காலமாக வசதி பற்றாக்குறை சபையை அவதிப்படுத்தி வந்துள்ளது. விரிந்து பரந்து செல்லும் சபையின் உயர் இலட்சியங்களுக்குப்போதிய கட்டிடங்கள் இல்லாமை ஒரு இடராக இருந்து வந்துள்ளது. இதை நிவர்த்தி செய்ய இன்று நடைபெறும் வைபவம் வெற்றியை அளிப்பதாக அமையட்டும் என்று இறைவனை வேண்டி நிற்கின்றேன்.
இந்த உலகுக்கு விவேகானந்தர் அருளிய மிகப்பெரிய ஆத்மீகப் போதனை என்னவெனில் மனிதனை மறந்து கடவுளை ஏத்துதலிலும் பார்க்க மனிதனில் அக் கடவுளைக் கண்டு சேவை செய்வதுதான் உண்மையான சமயம் என்று அவர் கூறியது. இந்துமதச் சமயவாதிகள் என்பவர்கள் மறு உலகக் கனவு காண்போரே என்ற காலம் போய் இவ்வுலகில் மனதால் தொடர்பற்று ஆனால் புலனால் புண்ணிய கைங்கரியங்களில் புரிந்தியங்கி மக்கட் சேவை செய்பவர்களே அவர்கள் என்ற ஒரு தோற்ற மாற்றத்தை ஏற்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர். அவர் 1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் நாள் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரின் விஜயத்தைத் தொடர்ந்து இராமகிருஷ்ண இயக்கப் பணிகள் இந்நாட்டில் வேரூன்றத் தொடங்கின. குருதேவரின் நேர்சீடர் சுவாமி சிவானந்தர். அவரை சுவாமி விவேகானந்தரே தமது வெற்றிகரமான இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து 1897ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இங்கு அனுப்பினார். அவர் கொழும்பில் ஏழு, எட்டு மாதங்கள் தங்கியிருந்து சமயச் சொற்பொழிவுகளையும் முறையாக கீதை வகுப்புகளையும் நடத்தினார். இதன் காரணத்தினால் இங்கு இராமகிருஷ்ண இயக்கப் பணிகள் வேரூன்றுவதற்கு ஏற்ற சூழல் ஸ்தாபிக்கப்பட்டது. சுவாமி அவர்கள் 1902ம் ஆண்டு ஜூலை 4ம் திகதி மகா சமாதியடைய கொழும்பு விவேகானந்த சபை அதே வருடம் ஜுலை மாதம் 13ம் திகதி நிறுவப்பட்டது.
கொழும்பு விவேகானந்த சபை தொடக்க நோக்கங்களிற் சில பின்வருவன: 1) வேத ஆகமங்கள் விதித்தவாறு இந்து சமயத்தைப் பிரசாரம்
செய்தல். 2) சமயச் சொற்பொழிவுகள், சமய வகுப்புகள், சமய
ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தல். 3) சமய தத்துவ நூல்கள் அடங்கிய நூலகத்தை நடத்துதல். 4) சைவசமயாசாரியர் நால்வரின் குருபூஜைகள் மற்றும் திருத்தொண்டர்கள், ஆறுமுகநாவலர் குருபூஜை, சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் முதலானவற்றை ஆண்டு தோறும் கொண்டாடுதல்.
இந்து ஒளி

O O O O பம் நிலத்தில் உருப்பெற வேண்டுவோம்
சபை மண்டபத்தில் நடந்த புதிய கட்டிட அமைப்பு அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு
༠་་ལོ་སྒྱུ
5) தமிழிலக்கணம், இலக்கியம் கற்போர்க்கு வகுப்புக்கள்
நடத்தல். 6) புராணபடனம், கதாபிரசங்கங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு
செய்தல். இன்று மேற்படி நோக்குகள் இன்னும் விரிவாக்கப்பட்டுள்ளன.
சித்தாந்த, வேதாந்த வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. இப்போது சித்தாந்த வகுப்பு மட்டுமே நடக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறை ஒரு காரணம், ஆன வசதிகள் இல்லாமை இன்னொரு காரணம். புதிய கட்டிடம் வந்ததும் இராமகிருஷ்ண இயக்க நடத்துநர்களுடன் அளவளாவி ஆசிரியபற்றாக்குறைக்கு ஆவன செய்யவுள்ளார்கள் சபை நிர்வாகஸ்தர்கள்.
1930ஆம் ஆண்டு தொடக்கம் சைவசமயப் பாடப் பரீட்சை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது விவேகானந்த சபை. தற்பொழுது இந்தப் பரீட்சையை கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருக்கும் மாணவ மாணவிகள் எடுக்க வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஜேர்மனி மாணவ மாணவியர்க்கும் இந்த வசதி செய்து கொடுக்கப்பட இருக்கின்றது என்றறிகிறேன். இப்பேர்ப்பட்ட பரீட்சைகளை வைத்து மாணவ மாணவியரை ஆற்றுப்படுத்த சபை செய்யும் காரியங்களை பெரியவாள் சங்கராச்சாரியர் கூட அவர் உயிருடன் இருந்த காலத்திலே மனமுவந்து பாராட்டியுள்ளார். தென் இந்திய நிறுவனங்கள் செய்ய முடியாததை இலங்கை விவேகானந்த சபை செய்து வருகிறது என்று அப்பொழுது பாராட்டினார்.
இவ்வாறு சபை ஈடுபட்டிருக்கும் பல நிகழ்ச்சிகள் பற்றிக் கூறிக்கொண்டு போகலாம். உங்களிடம் பணத்துக்காக வேண்டுதல் விடுத்த கடிதத்தில் இவை அனைத்தும் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமான சிலவற்றைக் கொண்டு நடத்தவே இந்தப் புதிய கைங்கரியம் இன்று தொடர்ந்து நடைபெறுகிறது. முக்கியமாக பல பழைய நூல்கள் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி சபையிடம் இருந்து வருகின்றன. அவற்றை தகுந்த வாசிகசாலை அமைத்து அதில் பாதுகாப்பாக வைக்கவேண்டியிருப்பதாகக் கூறப்பட்டது. சைவசித்தாந்த ஆய்வு மையமொன்றை உருவாக்கும் எண்ணம் சபையினரிடம் இருந்து வருகிறது. இது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானது. அண்மையில் ஒரு முன்னைய அரசாங்க உயர் அலுவலர் திருகோணேஸ்வரம் பற்றி எழுதியிருந்தார். முன்பு அங்கு புத்த விகாரை ஒன்று இருந்ததாகவும் அதை அகற்றி அண்மைக் காலத்திலேயே கோணேஸ்வர ஆலயம் அமைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
திருக்கோணேஸ்வரத்தில் ஒன்றின் மேல் ஒன்றாய் மூன்று கோயில்கள் இருக்கின்றன. ஆதியில் இருந்த ஆலயம் பாரிய சிவலிங்கம் ஒன்றுடன் கடலுக்கடியில் இருப்பதாகவும், குளக்கோட்டன் காலத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முன்
6 சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 29
கட்டப்பட்ட கோயில் தற்போதைய கோயிலுக்கும் ஆதி ஆலயத்திற்கும் இடையில் இருப்பதாகவும், 1946ம் ஆண்டு சேர் கந்தையா வைத்தியநாதன் போன்றவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன ஆலயமே தற்போதுள்ள ஆலயம் என்றும் சரித்திரவாசிரியர்கள் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல, வசதியடைந்த ஆழ்கடல் நீச்சல் வீரரும் சினிமாப்படத் தயாரிப்பாளருமான மைக் வில்சன் என்பவர் சில காலத்திற்கு முன் திருகோணமலைக் கடலில் ஆய்வுக்கென ஆழ்கடலினுள் சென்ற சமயம் ஏதோ ஒன்றினைப் பார்த்தபின் அவர் தன்னை மறந்து தன்மானங் கெட்டு தலைவன், தாள் நோக்கித் தலைப்பட்டதாகவும் அவர் உலக சுகங்களை விடுத்து இந்து சந்நியாசியாக வந்தார் எனவும் அறிகிறோம். அவர் கண்ட அந்தக் காட்சிகடலின் அடியில் இருக்கும் மிகப்பெரியதொரு லிங்கத்தைத் தரிசித்த காட்சி என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தும் அண்மையில் கட்டிய இந்து ஆலயமே திருக்கோணேஸ்வரம் என்று அறியாத அல்லது அறிந்தும் அறியாதவர் போல் நடிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் பிதற்றல்களை வெளிக்காட்டி உண்மையை நிலை நாட்டுவது இன்று எமது கடமையாகிவிட்டிருக்கிறது.
பலருக்குத் தெரியாதிருக்கலாம் - இமயமலையில் இருக்கும் கைலாச மலையில் இருந்து மேலிருந்து கீழாக ஒரு நேர்க்கோடு இந்தியா இலங்கை ஆகியவற்றைக் காட்டும் பூகோள படத்தில்
புசல்லாவையில் சைவசப
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் பு 15.06.2007 வெள்ளிக்கிழமை புசல்லாவையில் சைவசமய சொற்
இந்நிகழ்விலே நல்லை ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந் கலந்துகொண்டு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். இவ கிரியைகளும் அவற்றின் விளக்கங்களும், சைவசமயத்தில் இன் சிறப்பாகவும் விளக்கினார். இவரைத் தொடர்ந்து அகில இலங்ை செயலாளருமான சிவஞானச் செல்வர் திரு. த. இராஜபுவனிஸ்வ இராமஜெயம் அவர்களும், அகில இலங்கை இந்து மாமன்றப் ே திரு. ஆர். இராஜேந்திரன் அவர்களும் சொற்பொழிவாற்றினார்க
பாடசாலை சிறுவர்களுக்கான சமய நிகழ்ச்சிகள் புசல்லாவை பாடசாலைகளிலும், மாலை வேளையில் புசல்லாவை நகரிலுள்ள ழ இடம் பெற்றது. இந்நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களும், பு கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதனை எமக்கு ஒழுங்கு செய் ஏனைய உறுப்பினர்களுக்கும் புசல்லாவை அமுத சுரபி அறநெ தெரிவித்துக்கொள்வதுடன், இது போன்ற நிகழ்வுகள் எமது விழிப்புணர்வை இங்குள்ள மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு அகில எதிர்பார்ப்புடனும், இவ்வாறான நிகழ்வுகளுக்கு புசல்லாவையில் தருவார்கள் என்பதனையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
சித்தன் குமாரவேல் அதிபர் அமுதசுரபிஅறநெறிபாடசாலை, புசல்லாவ
(இந்து ஒளி 27

வரையப்பட்டால் அந்த நேர்க்கோடு சிதம்பரம் ஊடாகவும் கோணேசர் ஆலயம் ஊடாகவும் சென்று கதிர்காமத்தை அடைகிறது. அதாவது கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் கைலாசமலை, சிதம்பரம், திருக்கோணேஸ்வரம், கதிர்காமம் ஆகியன அமைந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். பல ஆயிரம் ஆண்டுகளாகப் புனிதத் தலமாக வழிபடப்பட்டுவரும் திருகோணேஸ்வரம் பற்றிய சுதந்திரத்தையே மாற்றத் துணிந்துள்ளார்கள் மாசுடை மனங்கொண்ட மனிதர்கள். உண்மையை வெளிக் கொண்டுவர அமைக்கப்படப் போகும் கட்டிடத்தில் சைவசமய ஆய்வு மையம் ஒன்றினை நிறுவி முறையான ஆய்வுகளை மேற்கொள்வது சாலப் பொருந்தும்.
பல இந்துப் பெரியார்கள் கட்டிக்காத்த இந்த சபை, பல ஆத்மீக ஆஜானுபாவர்களும் அறிஞர்களும் வந்திருந்து அளவளாவிச் சென்ற இந்த சபை பல இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் ஆத்ம கலங்களை விளக்கமாக விளக்கி வந்திருக்கும். இந்த சபை விரிந்த பரந்து பலவித நன் நடவடிக்கைகளிலும் ஈடுபட புதிய கட்டிடம் அவசியம் என்பது எமக்குச் சொல்லாமல் புரிகிறது. ஆகவே நினைவினில் கட்டிக்காத்து வரும் நான்கு மாடிக் கட்டிடம் நிலத்திலும் உருப்பெற எல்லோரின் நல்லாசிகளும் நல்லுதவிகளும் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்கி இறைவன் அருள் பெற எல்லோரையும் அன்புடன் வேண்டி அமர்கிறேன்.
மய சொற்பொழிவு நிகழ்வு
சல்லாவை அமுத சுரபி அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் பொழிவு நிகழ்வு இடம்பெற்றது. தர தேசிக ஞானசம்பந்தர் பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ரது சொற்பொழிவிலே சைவ சமயத்தின் முக்கியத்துவம், சமய றைய சமுதாயத்தின் பங்கு என்பவற்றை மிகவும் தெளிவாகவும் க இந்து மாமன்றத்தின் உபதலைவரும், விவேகானந்த சபையின் ரன் அவர்களும், விவேகானந்த சபையின் உபதலைவர் டாக்டர். பராளரும், ஹட்டன் நெஷனல் வங்கியின் முகாமையாளருமான
TT சரஸ்வதி மத்திய கல்லூரி, இந்து தேசிய கல்லூரி ஆகிய இரு கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஒரு சிறப்புச் சொற்பொழிவும் சல்லாவை சைவப் பெருமக்களும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து து கொடுத்த அகில இலங்கை இந்து மாமன்றப் பேராளருக்கும் றி பாடசாலையின் பொறுப்பாசிரியர் என்ற வகையில் நன்றியை பிரதேசத்தில் மீண்டும் ஒழுங்கு செய்வதன் மூலம் சைவசமய இலங்கை இந்து மாமன்றம் என்றும் துணையாக நிற்கும் என்ற உள்ள சைவப் பெருமக்கள் எப்பொழுதும் பூரண ஒத்துழைப்பை
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 30
A MESSAGE, O
(Speech of Justice C. V. Wigneswar Vivekananda Society B
ཧྥུ་ཁ་༠
The Vivekanantha Society which was founded in July 1903 has a hallowed history. Having been established just a week after the demise of Swamy Vivekanantha, this Society has had the fortune to be managed, overlooked and run by many a colossus among the Tamil Hindus of Yesteryears. Some of the names that come to mind are Sir Ponnambalam Ramanathan, Sir Ponnambalam Arunasalam, Dr. Amanathacoomara swamy, Sir Kandiah Vaithyanathan, Justice S. Sirskantharajah and Col. R. Sabanayagam.
Political luminaries an illustrious religious personalities from across the Palk Strait have also visited the portals of this Society. The names include Mahathma Gandhiji, Pandit Jawaharlal Nehru, Dr.S. Radhakrishnan and Swamis of the Ramakrishna Mission such as Swamy Abethanantha and Swamy Ramakrishnanantha, both direct disciples of Ramakrishna Paramahamsa, Swamy Sarvanantha a disciple of Holy mother Saratha Devi and in recent times. Swamy Ranganathanantha. Swamy Sarvanantha had helped in the development of this Society immensely including the resolution of schism in the Society around 1921.
Before the birth of Ramakrishna Mission in Sri Lanka in the year 1930 it was the Colombo Young Hindus Association and the Colombo Vivekanantha Society which helped to carry the message of SriRamakrishna.
It is interesting to note forma book published in Tamil by the Ramakrishna Mission, Colombo 6. authored by P.S. Mani that even while Swamy Vivekanantha was living, societies named “Vivekanantha Society' had been started in India. The Indian Mirror of21.02.1897 stated as follows - "Asociety named Swamy Vivekanantha Society was formed in Thiruchirapallito hail the visit of Swami Vivekanantha.” It is significant that many other areas within the Madras Presidency started such societies almost at the same time. Some of the areas are Vaaniyampaadu in Puthur. Arasampatty. Krishnagiri, Dharmapuri, Kadalur, Thuthukudy and Paarur.
Swamy Vipulanantha in a communication has referred to Colombo Vivekanantha Society as the foremost among all the religious development societies in Ceylon at that time.
I find that a proper chronicle setting out English and Tamil all the information available with illustrations referring to the formation and development of the society has not been undertaken so far. It is high time a sub committee is setup to under
இந்து ஒளி

F BLESSINGS
an in the Religious inauguration of
uilding on 06.05.2007)
take such a task. All available photographs of the personalities who helped to groom the society to its present level from its inception must be printed and published with their biographical sketches.
We are today embarking on yet another useful project to construct a four storied building to house a Hindu Children's Nursery a to conduct classes in Hindu art and crafts. Indian music and most importantly to house and run library protecting, saving and making use of the innumerable books on Hinduism/ Saiva Siththantham and allied fields which books are today housed in makeshift cupboards and elsewhere. The Office Bearers of the Vivekanantha Society are also keen in helping Hindu school dropouts to pursue Courses in vocational training. The new building is to house their classes too. The urgent need to setup a Hindu or Saiva Siththantha Research Centre has been noted by the powers that be and they are desirous of starting this Centre as soon as the construction is complete. There is no doubt that an urgent need to instal such a Centre has arisen since history is presently being distorted and wholly misguiding information is being trotted out by interest groups for selfish, racial and religious reasons, which will promote a completely lopsided view of our history and of the Hindu institutions including ancient Hindu temples in this country.
For example, the finding Buddhistartefacts in the Northern Province has prompted such persons to speak of permanent Sinhala settlements in the Northern Province forgetting Buddhism held sway among the Tamil speaking people in South India and North Ceylon for a couple of centuries. Majority of our Tamil epics like Manimekalai and Silappathikaaram have Buddhistor Jain themes. A Research Center could keep a tab on the erroneous voicing of historical facts putting records straight. If individuals write to the press criticizing such factually distorted articles it would not receive the same recognition as much as a recognized institution embarking on such a venture. It is the duty of the office bearers to make such a centve an institution of recognition.
So I would pray to God Almighty that this Society would grow from strength to strength both in its construction of its logistical infrastructures as well as in its activities to help the regeneration of the Hindu Community in Sri Lanka. I thank You for Your Patient hearing.
Justice C.V.Wigneswaran
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 31
நூறாண்டு நிறைவுகண்ட ெ
மாமன்றத்தின் அங்கத்துவ நிறுவனங்களுள் மட்டக்கள் பராமரிப்பில் இயங்கிவரும் சுவாமி விபுலானந்தர் முதிே சுப்பையா. அகவை நூற்றாண்டு நிறைவுகண்ட இவர் பொறுப்பாளர் திரு.க.நடராஜா தரும் தகவல் இது.
பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்!
அகவை நூறு ஆனாலும் கம்பீரத் தோற்றம்
82um BrüOLIuIIT ஆழிப் பெருங்கடல் அலை உன்னை வாழவைத்து 6Foörpoooog5uur eiloooL IuIET காதிலே கடுக்கண், கண்ணொளியோ LólобT 6lооптоfluШпћ
gur oouT கைத்தடி பிடித்து தத்தி நடை போடுகின்ற
8T &IoLIT வித்தகன் விபுலானந்தனை ஈன்ற காரைதீவு உன் பிறப்பு ஐயா சுப்பையா சிவகுரு சுப்பம்மா மகனாக உதித்தாயே 8uIIT Brüool IuIIT a56.OrasubLOIT asyıh filigiğöönuiu siguLIIT örůGOOLILLIIT இரண்டாயிரத்து இரண்டதனில் எமைநாடி opi55Ir(8u 8guIIT fotoLumr பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்
gum örÚoLuml!
இந்து ஒளி 2.
 

ກທີມrກໍ Яө6505 ай берилл
ாப்பு இந்து இளைஞர் மன்றமும் ஒன்றாகும். இதன் பார் இல்லத்தில் வதியவர்களுள் ஒருவர் திரு. சிவகுரு ரைப் பற்றி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லப்
வித்தகர் விபுலானந்தரை ஈன்றெடுத்த கண்ணகை அம்மன் கொலுவிருந்து அருள் பாலிக்கும் கற்றோர் நிறைந்துவாழ் காரைதீவு மாநகரில் தந்தை சிவகுரு அவர்கட்கும் தாயார் சுப்பம்மா அவர்கட்கும் 1907ம் ஆண்டு ஆவணி மாதம் 8ம் நாள் மகனாக அவதரித்த திரு. சுப்பையா அவர்கள் ஆரம்பக் கல்வியை 5ம் ஆண்டுவரை கற்றுத்தேறி அதன் பின் கமச்செய்கையில் நாட்டம் கொண்டவராக விளங்கினார். தனது இருபத்து ஐந்தாம் வயதில் கனகம்மா என்பாளைக் கைப்பிடித்து தாம்பத்திய வாழ்வில் இணைந்துகொண்ட சுப்பையா அவர்களுக்கு இருபெண்களும் ஒரு ஆணும் மகவாகக் கிடைத்தனர். காலம் இப்படியாக உருண்டோடி வருகின்ற வேளையில் தனது தொன்நூற்று ஐந்தாவது வயதில் பராமரிப்பார் யாருமின்றி 2002ம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் திகதி எமது சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார். அன்றுமுதல் இன்றுவரை இல்ல சட்ட திட்டங்களிற்கு அமைவாகவும், பணிவாகவும், தனது வசீகர புன்சிரிப்பினால் அனைவரையும் கவர்ந்து தனது நாளாந்த கடமைகளை கிரமமாக மேற்கொள்வதுடன், கட்டுப்பாடான உணவுகளையும் அருந்தி வருவதுடன் காத்திரமான உடற் கட்டுடன் இருக்கின்றார். இல்லத்தில் இணைந்த காலம் முதல் பெரிதாக நோய் உற்றிருந்ததைக் காண முடியாது. சில வேளைகளில் பனடோல் மட்டுமே இவரது நிவாரணியாக இருக்கின்றது.
காதிலே கடுக்கண் அணிந்து முகவசிகரத்துடன் இருப்பதையே அவர் விரும்புவார். இவரின் கடுக்கண் அணியும் விருப்பத்தை அறிந்து கொண்ட எமது முன்னாள் பொறுப்பாளரான திரு. த. செல்வநாயகம் அவர்கள் அதனை வாங்கி கொடுத்து நிறைவுசெய்து வைத்தார்கள். 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் எமது இல்லம் கல்லடி கடற்கரைக்கு அருகாமையில் இருந்தமையால் முழுதாகப் பாதிக்கப்பட்டு மூன்று முதியோர்களை இழந்த நிலையிலும் எமது மன்றத் தலைவர் திரு. மு. பவளகாந்தன் அவர்களின் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் பதினேழு முதியோர்கள் காப்பாற்றப்பட்டதில் பெரியார் சிவகுரு சுப்பையா அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ் இல்லத்திற்கு வருகை தருகின்ற அனைவராலும் பேரன்புடன் மதிக்கப்படுகின்ற பெரியார் சிவகுரு சுப்பையா அவர்களுக்கு நூறாவது ஆண்டு விழாவை எடுப்பதில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றமும், சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லமும் பெருமை கொள்கின்றது.
க. நடராஜா
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 32
O O O O மக்கள்போற்றும் இறைபணியாளர்
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சரணாலயங்களை அமைத்தவன் மனிதன். ஆனால், அந்த மனித குலத்திற்கு சரணாலயங்களை அமைத்தவர் சுவாமி விவேகானந்தர். உலகெங்கும் மானுடத்தின் சரணாலயங்களாக விளங்கும் இராமகிருஷ்ண மடங்கள் துன்பத்தில் துவஞம் மனித மனங்களுக்கு அமைதி தந்து அரவணைப்பதிலும், உலகளாவிய ரீதியில் ஆன்மீக பேரொளியை பரவச் செய்வதிலும் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையிலேயே 1929ம் ஆண்டில் இலங்கையிலும் அதன் பணி ஆரம்பமானது. எழுபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றி வருவதன் மூலம் பவளவிழா கண்டுள்ள இராமகிருஷ்ண மடத்தின் இலங்கைக் கிளை கொழும்பு - வெள்ளவத்தையிலும், இதன் மற்றொரு பிரிவாக மட்டக்களப்பு கிளை கல்லடி - உப்போடையிலும் இயங்கி வருகின்றன.
சுவாமி விவேகானந்தர் தொடக்கிவைத்த இந்த அறப்பணிக்கு தலைமை தாங்கி உலகலாவிய ரீதியில் அதனை முன்னெடுத்து நடத்திச் சென்றவர்கள் பலர். அவர்களுள் ஒருவராக சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ் அவர்களையும் குறிப்பிடலாம். இராமகிருஷ்ண மடத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவராக கடந்த பதினாறு வருடகால சிறப்பான சேவையின் ஊடாக இலங்கை மக்களின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்தவர்; மக்களுடன் அன்பாக பழகிவந்தவர் ; நடமாடும் தெய்வமாகப் போற்றப்பட்டவர். அவர் இலங்கையில் தனது பணியை நிறைவு செய்துகொண்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு மாற்றலாகிச் சென்றுள்ளார். சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ் அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் நீண்டகாலமாகவே நெருங்கிய உறவைக் கொண்டிருந்தவர். இவரது சேவையைப் போற்றும் வகையில் மாமன்றம் தனது முகாமைப் பேரவையின் கெளரவ உறுப்பினர்களுள் ஒருவராக நியமனம்செய்து பெருமை தேடிக் கொண்டது. மாமன்றம் தனது தலைமையகத்திலும், கொழும்பு நகரிலும், வவுனியா, மன்னார் மற்றும் மலையகப் பகுதிகளிலும் நடத்தியிருந்த பல சமய வைபவங்களிலும், விழாக்களிலும் சுவாமிஜியும் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி சிறப்பித்து
r
மாமன்றத்தின் அனுதாபம்
திரு. இரா. ச
கடந்த ஏப்ரல் மாதத்தில் காலமான மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினர் தரிரு. இரா. சுந்தரலிங்கம் அவர்களின் மறைவையொட்டி மாமன்றம் செய்திப் பத்திரிகைகள் ஊடாக விடுத்திருந்த அனுதாபச் செய்தி.
மூத்த கல்விமான்களுள் ஒருவரான இரா. சுந்தரலிங்கத்தின் மறைவையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த வருத்தமடைகிறது. இவர் மாமன்றத்தின் முகாமைப் பேரவை உறுப்பினராகவிருந்து மாமன்ற வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதுடன், மாமன்ற கல்விக் குழுவிலும் இணைந்திருந்து அவ்வப்போது காத்திரமான பல ஆலோசனைகளைத் தந்து
ܠܐ
இந்து ஒளி

محمجھے
O O O சுவாமிஆத்மகனானந்தாமகராஜ்
வந்துள்ளார். இது தவிர, ஏனைய பல இந்து நிறுவனங்களும், பாடசாலைகளும் நாடளாவிய ரீதியில் நடத்திய சமய
உரைகளை ஆற்றிவந்துள்ளார்.
இராமகிருஷ்ண மடத்தின் ஊடாக மக்களுக்கான மருத்துவ உதவி, வறிய மாணவர்களுக்கான புலமைப் பரிசில், வன்செயல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படவர்களுக்கான வீடமைப்பு, நலவாழ்வுத் திட்டங்கள், அறநெறிக் கல்வி போன்ற பல்வேறுபட்ட சமூகநலத் திட்டங்களின் மூலமான உதவிகள் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் நல்லமுறையில் சென்றடையச்செய்து, அவர்களது சிறப்பான வாழ்க்கைக்கு பெரிதும் உதவிவந்த ஒருவர் என்ற வகையில் சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ் மக்களது இதயங்களில் என்றென்றும் வைத்துப் போற்றப்படுபவராக விளங்குகிறார். அவரது பிரிவு அவருடன் பழகிய அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ் அவர்களும், இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் புதிய துணைத் தலைவராகப் பதவியேற்றிருக்கும் சுவாமி சர்வருபானந்தா மகராஜ் அவர்களும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி சனிக்கிழமை. மாலை 5.45 மணிமுதல் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நாட்டின் அமைதிக்கும் மக்களின் நிம்மதிக்கும் இறையருள் வேண்டி அகில இலங்கை இந்து மாமன்றம் ஏனைய இந்து நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திய பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மாமன்ற தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் இவ் வைபவம் நடைபெற்றது. இலங்கையில் தனது பணியை நிறைவுசெய்து கொண்ட சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ் கலந்து கொண்ட இறுதி வைபவமாகவே அந்நிகழ்வு அமைந்திருந்தது.
சுவாமி ஆத்மகனானந்தா மகராஜ் அவர்கள், இப்பொழுது சென்னை, மைலாப்பூரிலுள்ள இராமகிருஷ்ணமிஷன் கல்லூரியின் முதல்வராகப் பதவியேற்றுப் பணியாற்றிவருகிறார்.
சுந்தரலிங்கம்
கல்விக் குழுவின் செயற்பாட்டுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் என்பதை என்றுமே மறக்க முடியாது.
வடமாநில கல்விப் பணிப்பாளராகவிருந்து ஆற்றிய அரும்பெரும் சேவைகளுக்கும் மேலாக, இளைப்பாறிய பின்னர் பல சமய, பொதுநல, கல்வி நிறுவனங்களிலும் இணைந்து மறையும் வரையில் அவர் செய்துவந்த ஆக்கபூர்வமான பணிகளின் ஊடாக சமுதாயத்தால் பெரிதும் மதித்துப் போற்றப்பட்டவர்.
அன்னாரது மறைவையிட்டு அவரது குடும்பத்தினருக்கு மாமன்றம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
كم
சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 33
இந்து நாகரிகம் - நூல் வெ6
இறைவணக்கம் செலுத்தப்படுகிறது.
திரு. பொன் வல்லிபுரம், திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களிடமிருந்து சிறப்புப் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.
நூலை தொகுத்து வெளியிடுவதற்கு பெரும் பங்காற்றிய திரு.த. மனோகரன் அவர்களுக்கு திரு. வி. ரி. வி. தெய்வநாயகம்பிள்ளை பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார். அருகே மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன்
இந்து ஒளி
 
 
 

சிறப்பு விருந்தினர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களுக்கு, திருமதி அ. கயிலாசபிள்ளை பொன்னாடை போர்த்திக்
கெளரவிக்கிறார். அருகே திருமதி வ. தவயோகராஜா
தினக்குரல் நிறுவனத்தின் அதிபர் திரு. எஸ்.பி. சாமி அவர்கள் சிறப்புப் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.
நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுள் ஒரு பகுதியினர். க்கழும்: چکے۔ === کچچ . --
சிர்வகித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 34
வைத்திய கலாநிதிக நினைவுப் பேருறை
அமரர் வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை அவர்களது நீ விவேகானந்த சபை தலைவர் திரு. ஏ. ஆர். சுரேந்திரன், அமரர் ஆகியோர் மலர்மாலை அணிவிக்கிறார்கள்.
மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
விடுதி மாணவ, மாணவிக
(இந்து ஒளி
 
 
 

1. வேலாயுதபிள்ளை
" (Oil ... O4. 20O7)
ழற்படத்திற்கு மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை, க. வேலாயுதபிள்ளையின் புதல்வன் திரு. வி. கணேசானந்தன்
ளது பிறந்ததின வைபவம்.
2. சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 35
மாமன்றத்தின் பிரார்த்தை
NSF_
பிரார்த்தனையின்போது கலந்து கொண்டவர்கள்.
புசல்லாவை அமுதசுரபி அறவந Ꭴ15.ᏅᏮ ,
நல்லை ஆதீன முதல்வர் விபூதிப் பிரசாதம் வழங்குகிறார்.
இந்து ஒளி
 
 
 
 
 

ண நிகழ்வு(21. 04, 2007)
பூசை பிரார்த்தனையின்போதுஇந்தியாவுக்கு இடமாற்றலாகிச் செல்லும் சுவாமி ஆத்ம கனானந்தா மகராஜ், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் புதிய
மகராஜ் மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அஜராத்மானந்தா * மகராஜ், மாமன்றப் பொதுச் செயலாளர் ஆகியோருடன் ஏனைய பிரமுகர்கள்.
நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுள் ஒரு பகுதியினர்.
றிப் பாடசாலையில் சமய நிகழ்வு 2OO7)
យោoបំp ខ_Lួcobo fio@TGOTចំ 68606 க. இராஜபுவனிஸ்வரன் சிறப்புரையாற்றுகிறார்.
3 சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 36
11" உலக சைவ மாநாடு (25
உலக சைவப் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த மே மாதம் 2: நடைபெற்ற 1வது உலக சைவ மாநாட்டில் கலந்து கெ வரப்படுவதை முதலாவது படத்தில் காணலாம்.
இரண்டாவது படத்தில் மாநாட்டில் ஆசியுரைகள், சிறப்புரை அடிகள், நல்லை ஆதீன முதல்வர் முநீலழுநீ சோமசுந்தரதே முரீமத் மெளனகுமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள், சிவதெ mmLmumaTT TTmLmMmmmTT kmmLL msmLLT uTTT mmTmeTmTT T
யாழ். மருத்துவ மாணவர்களுக்கு ே
葵リ
多
அண்மையில், யாழ் மருத்துவ மாணவர்களின் வேண்டுகே இயந்திரங்களை கொழும்பிலுள்ள இரு வர்த்தக நிறுவன இலங்கை இந்து மாமன்றம் உதவியிருந்தது. இவற்றை யாழ்
B_600ញ010 Lö_រាំ 550. OffiyTឆ្នា6Lញ៉ាហ្វ្រងំ 65TCôTLT.
மெற்றோபொலிடன் ஏஜென்சீஸ் நிறுவனம் அன்பளிப்பாக பெற்றுக் கொள்வதை முதலாவது படத்தில் காணலாம். 8 வழங்கிய ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஏஜென்சீஸ் நிறுவனத்தின் நிர்வ அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. க 500000Th.
இந்து ஒளி
 
 

a. 藝
5ம் திகதி முதல் 27ம் திகதி வரை சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் ாள்ள வருகை தந்த பிரமுகர்கள் ஊர்வலமாக அழைத்து
கள் வழங்கிய இடமிருந்து வலமாக) தவத்திரு யோகானந்த சிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் ாண்டன் வணக்கத்திற்குரிய அலஸ்ரைர் மக்கிலஷன், உலக பி. கந்தவனம் ஆகியோரைக் காணலாம்.
பாபிடோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு
ܥܡܐ
ாளையடுத்து அவர்களுக்கு போட்டோ பிரதியெடுக்கும் இரு ங்களினது அன்பளிப்பாக பெற்றுக் கொடுப்பதற்கு அகில மருத்துவக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளரும், வைத்திய
வழங்கிய போட்டோபிரதி இயந்திரத்தை டாக்டர் ரவிராஜ் இன்னொரு போட்டோ பிரதி இயந்திரத்தை அன்பளிப்பாக ாக இயக்குநர்களுடன் டாக்டர் எஸ். ரவிராஜ் அவர்களையும், ந்தையா நீலகண்டன் அவர்களையும் இரண்டாவது படத்தில்
a சர்வசித்து வருடம் சித்திரை - ஆணி)

Page 37
மாமன்றப் பொன்விழா சிறப்புப
பம்பலப்பிட்டி முரீமாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து பொன்விழா சிறப்பு மலர் பிரதி சரஸ்வதி மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் வரப்படுகிறது.
பக்திப்பாடல் பாடுகிறார்க
ហ្រ្វព្រ0000 6 அபிநயம
இரத்மலானை விடு
கலை நிக
 
 
 
 

லர் வெளியீடு (O8.07.2007)
- ஈகிள் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.சந்திரா ஜெயரத்ன அவர்கள் மாமன்றத் தலைவரிடமிருந்து பொன்விழா சிறப்பு மலர் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.
று திருமுருகன் அவர்களும் சிறப்பு மலரை ஆய்வுரை செய்வதையும், ர்கள் நன்றியுரை நிகழ்த்துவதையும் காணலாம்.
விடுதி மாணவர்களது ங்கள இசைவிருந்து,
தி மாணவர்களது

Page 38
அமெரிக்கா ஹவாய் குருநாதர் கப்பிரமணியசுவாமிகளின் சிரேஷ்ட
வருகை தந்தபோது, மாமன்றத் தலைவர் மாலை அணிவித்து வ
SITGOOI 6AO|Th.
பிந்திய தகவல்
மாமன்ற சிறப்பு உறுப்பினர் மு. சீன்ை
இந்துமாமன்றம் அனுத
மாமன்றத்தின் முன்னாள் நிர்வாக அலுவலரும் முகா சிறப்பு உறுப்பினரும், துணைச் செயலாளருமான திரு. மு. 10ம் திகதியன்று காலமானார் என்பதை மாமன்றம் ஆ கொள்ளுகின்றது.
சிறந்த சமய பக்தரும் தீவிர சேவையாளருமான மு. மாமன்றத்திற்கு மட்டுமல்ல, அவருடன் நெருங்கிப் பழகி சியையும் அளித்துள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிர்வாக அலுவல ந்து பத்து வருடகாலம் மாமன்றத்தின் வளர்ச்சியில் ம பான அலுவல்களையும் நேர்த்தியாக வழிநடத்தியதன் க உரியவராக விளங்கியவர். மாமன்றத்தின் நிர்வாக அலு முகாமைப் பேரவை சிறப்பு உறுப்பினராக இணைந்து ஆற்றி வந்த சேவைகளையும் உதவிகளையும் சிறப்பாக யாழ் மாவட்டத்தில் பலாலி கிராமத்தைச் சேர்ந்த இவ முகாமையாளராகவிருந்து தனது ஆளுமை, திறமை, நேர் பணிகளையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
திரு. மு. சின்னையா அவர்களது மறைவையிட்டு மாம களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
அணுg
மாமன்றத்தின் அனுதாபம்
அண்மையில் காலமான மாமன்றத்தின் முகாமைப் பேர6 கந்தராஜா அவர்களின் மறைவையிட்டு மாமன்றம் ஆழ்ந்த கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தின் பிரதிநிதிகளு பேரவையில் இணைந்து பெரும் பங்காற்றியவர். மாமன்றத் கூட்டங்களுக்கு மட்டுமல்ல, மாமன்றத்தின் சகல வை தந்து கலந்து கொள்வார்.
திரு. ந. முரீஸ்கந்தராஜாவின் மறைவையிட்டு, அன்னா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
(இந்து ஒளி
 
 
 

மைப் பேரவையின் தற்போதைய சின்னையா 2007 ஆகஸ்ட்மாதம் ழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்
சின்னையாவின் திடீர் மறைவு அகில இலங்கை இந்து ய அனைவருக்கும் மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்
ராக இணைந்து தனது பணியை ஆரம்பித்த இவர், தொடர் ட்டுமல்ல, நிர்வாகம் மற்றும் சமய விவகாரங்கள் தொடர் ாரணமான மாமன்றத்தின் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் லுவலர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும், மாமன்ற துணைச் செயலாளராகப் பதவி வகித்து இறக்கும்வரை ப் போற்றப்படலாம்.
ர் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது மை, சேவைப் பற்றுணர்வின் ஊடாக ஆற்றிய நீண்டகாலப்
ன்றம் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்
தறறறகுறரு
வை உறுப்பினரான திரு. ந. ரீஸ் த வருத்தமடைகிறது.
ள் ஒருவராக மாமன்ற முகாமைப் ந்தின் சகல முகாமைப் பேரவைக் பவங்களிலும் தவறாது வருகை
து குடும்பத்தினருக்கு மாமன்றம்

Page 39
லண்டனில் நடைபெற்ற பிரித்தானிய 6 பத்தாவது சைவ மாநாடும், மாம6 (14.07.2007,
ஆம் S 屬 : قهر FEDERATIowo-giizinDU TEMPLES UK ---
TENTH SAIVA CONFEREE
பத்தாவது சைவமாநாடு
4.07.207815ീ2
:
மாநாடு அரங்கில் ஆதீன முதல்வர்களும் பிரமுகர்களும் காணப்படுகின்றார்கள் இவர் அவர்களும், துணைத்தலைவர் திரு சின்னத்து
TENT- SA - A Co
Libble
豎 சமூகசீலராகக் கெளரவம் பெற்ற வைத்திய கலாநிதி சின்னத்துரை சோமசேகரம் அவர்களுக்கு பொன்விழா சிறப்பு மலர் பிரதி வழங்கப்படுகிறது.
சமூகசீலராகக் கெளரவம் பெற்ற திரு சொ கருணைலிங்கம்(கண்ணன் அவர்களுக் செல்வி கீர்த்தன குரிய கெளரவ விருதை பூரீமத் மெளன தம்பிரான் சுவாமிகள் வழங்குகிறார். அருகே LIGOTSUzifistins வைத்தியக் கலாநிதி சி சோமசேகரம் , திருமதி கருணைலிங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சவுத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் றப் பொன்விழா மலர் அறிமுகமும் 15. Օ7, 2007)
சமூக சீலராக கெளரவம் பெற்ற திரு சொ. கருணைவிங்கம் தம்பதியினருக்கு பொன்விழா சிறப்பு மலர் வழங்கப்படுகிறது.
finistest Dajibility file
FEDERATION
களுக்கு மாமன்றப் பொன்விழா சிறப்பு மலர் பிரதிகளை திரு. துரை தனபாலா அவர்களும் வழங்குகிறார்கள்.
சமூகசீலராகக் கெளரவம் பெற்ற திருவே. சிவசுந்தரம் தம்பதியினருக்கு பொன்விழா சிறப்பு மலர் பிரதி வழங்கப்படுகிறது.
சர்வேஸ்வரக் குருக்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிரபல ஒலிபரப்பாளரும் பாடல் பாடுகிறார் சட்டத்தரணியுமான திரு விமல் சொக்கநாதன் மாமன்றப் பொன் விழா சிறப்பு
மலரைப் பற்றி விமர்சனம் செய்கிறார்.

Page 40
மாமன்றப் பொன்விழா சிறப்புப
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கு திரு க. ஜெகதீசன் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார். அருகே திரு செ. தி கனகலிங்கம்
சிவபூரீ சண்முகரத்ன சர்மா அவர்களிடமிருந்து திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் பொன்விழா சிறப்பு மலர் பிரதியைப் பெறுகிறார்.
திரு பால இந்திரசர்மா, நல்லை ஆதீன முதல்வரிடமிருந்து பொன்விழா சிறப்பு மலர் பிரதியைப் பெறுகிறார்.
Ի Հ யுனி ஆர்ட்ஸ் நிறுவன அதிபர் திரு. பொன் விமலேந்திரன் பொன்விழா சிறப்பு மலர் பிரதியை ஆதீன முதல்வரிடமிருந்து பெறுகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களுக்கு மாமன்றத் தலைவர் திரு வி. கயிலாசபிள்ளை பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கிறார்.
들
அகவை அறுபது நிறைவையொட்டி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்ட கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. சி. தில்லைநடராஜா தம்பதியினருடன் இடமிருந்து வலமாக திரு கந்தையா நீலகண்டன், நீதியரசர் கெளரவ எஸ்.
நீஸ்கந்தராஜா, திரு. வி. கயிலாசபிள்ளை,திருமதி அ. கயிலாசபிள்ளை.
நீதியரசர் கெளரவ எஸ். ரீஸ்கந்தராஜா அவர்களிடமிருந்து திரு. அ. கனகசூரியர் பொன்விழா சிறப்பு மலர் பிரதியைப் பெறுகிறார்.
நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுள் ஒரு பகுதியினர்.