கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நடராசா சிதம்பரம் (நினைவு மலர்)

Page 1
காரைநகர், களபூ பிறப்பிடமாகவும்,
LUITE
ඌ சிவபத
நிை 鳢 19.
 

பூமி, பொன்னாவளையைப் வசிப்பிடமாகவும் கொண்ட
©pg
ா சிதம்பரம் Haripofla 5T - ப்பேறு குறித்த னவு மலர் 11.2010

Page 2


Page 3


Page 4
O O O GFLOTILJILJ600T LO எங்கள் உயர்வையே தன் இலட்சியமாகக் கொண்டு தன் கஷ்டங்கள் யாவும் மறந்து எமக்காகவே வாழ்ந்து மெழுகுவர்த்தியாகத் தன்னையே உருக்கி அன்புக்கு அணிகலனாய், பாசத்தின் இருப்பிடமாய், பொறுமையின் பொக்கிஷமாய், சுமை தாங்கியாய் வாழ்ந்து ஒளியூட்டிய எமது இதயத்தில் என்றும் அணையாத் தீபமாய் சுடர் வீசும்
மறைந்தும் மறையாத எம் அன்புத் தெய்வத்தின் இனிய நினைவுகளை எங்களின் உதிரங்களிற் சுமந்த வண்ணம் இம் மலரை அவரின் பாதங்களுக்கு அர்ப்பணித்து காணிக்கை ஆக்குகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 5

வையத்துள் வாழ்வாங்கு Sirjeli வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
5 LUTTSFT சிதம்பரம்
அவர்கள்
திதி நிர்ணயப்பா பேராரும் விகிர்திவரு ஐப்பசி நான்கதனில் சீராரும் பூர்வபக்க சதுர்த்தசியில் - நீரார பாக்கியமென் றேயழைக்கும் பாவையவள் சிதம்பரம் காக்குமிறை கழலிணைந்தாள் காண்.

Page 6

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் இறையும் இதலத்துல்இக்கப்படும்
asses ფოთის ისეულ - Lumièrცა იმე იციუჭუჭეს, ასეთmm555) — ვენეrეფე LS S S S0 S S S S S S S S S S S S S S S S

Page 7

. de LDUb
பஞ்சபுராணம்
திருச்சிற்றம்பலம் தேவாரம்
திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்
சுடரே செழுஞ்சுடர் நற்சோதீமிக்க உருவேயென் உறவே என் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தினுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினை நோய் அடையாவண்ணம்
ஆவடு தண்துறை உறையும் அமரரேறே.
(நாவுக்கரசர்)
திருவாசகமீ
ஆடு கின்றிலை கூத்துடை யான் கழற்(கு)
அன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை;
பணிகிலை , பாதமலர் சூடுகின்றிலை ; சூட்டுகின்றதுமிலை;
துணையிலி பிணநெஞ்சே, தேடுகின்றிலை தெருவுதோறலறிலை;
செய்வதொன்ற றியேனே.
(மாணிக்கவாசகர்)
நினைவு மலர் 03

Page 8
திருவிசைப்யா நீறணி பவளக் குன்றமே! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே வேறணி புவன போகமே! யோக
வெள்ளமே! மேருவில் வீரா! ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா!
அம்பொன்செய் அம்பலத் தரசே! ஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்
தொண்டனேன் இசையுமாறு இசையே!
(திருமளிகைத்தேவர்)
திருப்யல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர், சில்லாண்டிற்சிதை யும்கில தேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத்திரண் மேரு
விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
(சேந்தனார்)
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும்; மீண்டும்
பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்துபாடி, அறவா! நீ ஆடும் போதுஉன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
(காரைக்காலம்மையார்)
04 நினைவு மலர்

திருப்புகழ்
அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான் மடந்தையுத் தமிபாலா ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவினன்குடிப் பெருமாளே.
BIT55 (இருணகிரிநாதர்)
சிவனடியே சிந்திக்கும் சிவனடியார் பதம் வாழ்க பவமது நீங்க மேலாம் பரணருள் வேண்டித் தவமது புரிந்து மற்றும் தரணியிலுள்ளோர் எல்லாம் சிவநெறி வழியே நின்று சீருடன் நீடு வாழ்க.
Diasoff அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னால் அறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுகட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீகாழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்.
திருச்சிற்றம்பலம்
நினைவு மலர் 05

Page 9
2ásai DuLb
திருக்கோயில் வழிபாடு
உலகெலாம் உணர்ந்து ஒதற்கு கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
- சேக்கிழார் உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடை யார் அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
- asius
சிவனோடு'ஒக்கும் தெய்வம் தேடினுமில்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை புவனங் கடந்து அன்று பொன்னொளி மின்னும் தவளச் சடைமுடித் தாமரையான்!
- திருமூலர்
பரங்கருணைத் தடங்கலாகிய சிவபெருமான் ஒருவரே முழுமுதற் கடவுள். அவர் ஒருவரே எல்லோராலும் வணங்கப் பெறுபவர். என்றும் உள்ளவராயும், எங்கும் நிறைந்தவராயும் இயல்பாகவே பாசங்கள் நீங்கியவராயும், எல்லாம் செய்பவராயும், இன்பவடிவினராயும் வயமுடையவராயும் எல்லாம் அறிந்தவராகவும் இருப்பதாலேயே சிவபெருமான் முழுமுதற் கடவுளாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
சிவபெருமானுக்கு அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்று வடிவங்கள் உள்ளன. இவற்றுள் அருவுருவத் திருமேனி கொண்டு மூலத்தானத்திலும், உருவத் திருமேனி கொண்டு திருக்கோயிலிலும் எழுந்தருளியிருந்து எல்லா உயிர்களுக்கும் சிவபெருமான் அருள்புரிந்து வருகின்றார். சிவாலயத்திற் சிவபெருமானது பரிவார மூர்த்திகளும் எழுந்தருளியிருப்பார்கள்.
மூலத்தானத்திலுள்ள அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கம் "ஆவுடை" என்னும் பீடத்துடன் கூடியிருக்கும். இதிற் சிவலிங்கம் " ஆவுடை சிவசக்தியும் ஆகும். இதைச் "சதாசிவமூர்த்தி" என்று அருள்நூல்கள் கூறும். சிவபெருமானது உருவத்திருமேனிகள் பல.
"சிவமும்
திருப்பெயர்களும் பல.
06 நினைவு மலர்

சிவாலயதரிசனம் நாடோறும் செய்தல் வேண்டும்
தூய நீரில் உடம்பைச் சுத்திசெய்து, தோய்த்துலர்ந்த சுத்தமான துணிகளை உடுத்தி, "சிவ சிவ" என்று திருநீறு பூசி, உருத்திராக்கம் அணிந்து, கற்பூரம், பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் முதலியவற்றில் இயன்றவற்றை இயன்ற அளவு எடுத்துக்கொண்டு, சிவாலயத்தை அடைந்து, கோபுரத்தை வணங்கி உள்ளே சென்று, வெளிப்பிரகாரத்தில் கொடி மரத்தின் எதிரில் வணங்க வேண்டும். ஆண் மக்கள் தலை, மோவாய், கைகளிரண்டு, காதுகளிரண்டு, புஜங்களிரண்டு ஆகிய எட்டும் நிலத்தில் தோயும்படியும், பெண் மக்கள் தலை, இருகைகள், இரண்டு முழங்கால்கள் ஆகிய ஐந்தும் நிலத்தில் படும்படியும் வணங்கவேண்டும். கிழக்கு மேற்கு சந்நிதிகளில் வடக்கு முகமாகவும், வடக்கு தெற்கு சந்நிதிகளில் கிழக்கு முகமாகவும் இருந்து மூன்று முறைகள் வணங்க வேண்டும்.
கொடிமரத்தின் எதிரில் வணங்கி திருநந்திதேவரிடம் விடைபெற்று, விநாயகரை ஒருமுறையும், சிவபெருமானை ஐந்து, ஏழு, ஒன்பது, பதினைந்து அல்லது இருபத்தொரு முறையும், நடராஜர், தக்ஷரிணாமூர்த்தி, சோமஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர், சமயாச்சாரியர், நால்வர், அறுபத்து மூவர் முதலிய மூர்த்திகளை மூன்று முறையும், நவக்கிரகங்களை ஒன்பது முறையும், பார்வதி தேவியை நான்கு முறையும் வலம் வந்து வணங்கி, அர்ச்சனை செய்து, கற்பூரம் பார்த்துப் பிரசாதம் பெற்று அணிந்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொரு சந்நிதியிலும் அந்தந்த மூர்த்திகளின் மீதே கவனத்தைச் செலுத்தித் உள்ளங் கசிந்துருகித் தேவார திருவாசக தோத்திரப் பாடல்களை பண்ணுடன் பாடவேண்டும். பிரகாரம் இல்லாத சந்நிதியில் தன்னைத்தானே வலமாகச் சுற்றுதல்வேண்டும். கடைசியாகச் சண்டேசுரரை அடைந்து, மும்முறை தாளமிட்டு சிவதரிசன பலனைத் தரும்படி வேண்டி பிறகு கொடி மரத்தின் அருகில் வணங்கி; வடக்கு முகமாக உட்கார்ந்து திருஜந்தெழுத்தை நூற்றெட்டு முறை தியானித்து எழுந்து வைரவரை வணங்கி சிவசொத்து ஒன்றையும் எடுத்து செல்லவில்லையென்று உறுதி சொல்லி கோவிலுக்கு வெளியே செல்லவேண்டும்.
நினைவு மலர் 07

Page 10
சிவாலயத்துள் மூக்குச் சிந்துதல், எச்சில் துப்புதல், வெற்றிலை, பாக்கு, போசனம் முதலியன உட்கொள்ளுதல், ஆசாரமில்லாது இருத்தல், வீண் வார்த்தைகள் பேசுதல், நந்திதே வருக்கும் சிவபெருமானுக்கும் குறுக்கே செல்லுதல், அவசரமாக வணங்குதல் வலம் வருதல் முதலியன கூடாது.
சிவாலய உருவங்களின் தத்துவம்
Lö - LIör - LIITöFlh
ஆய பதிதா னருட்சிவலிங்கமா
மாய பசுவுடமடலே றெனநிற்கு மாய பலிபீடமாகுநற் பாசமா
மாய வரநிலை யாய்ந்து கொள்வார் கட்கே
-திருமூலர் கோபுரம் ஸ்துலலிங்கம் கொடிமரம் நேர்மை பலிபீடம் - шптағub
நந்திதேவர் - 5 விநாயகர் பிரணவம் திரைச்சேலை - LDfTóð)LI சிவலிங்கம் பதி பிரகாரங்கள் ஐந்து - பஞ்சகோஷங்கள் படிகள் ஐந்தெழுத்து நடராஜர் - பஞ்ச கிருத்திய ஸ்வரூபி தக்ஷரிணமூர்த்தி - ஆனந்தரூபி சோமஸ்கந்தர் m சத்து, சித்து, ஆனந்தம் பார்வதிதேவி - சக்தி
தினந்தோறும் அல்லது திங்கள், வெள்ளி, பிரதோஷம், சிவராத்திரி முதலிய நாட்களில் சிவாலயம் சென்று அமைதியோடு வணங்கி, எல்லா நலனும் பெறவேண்டும். பிரதோஷ காலங்களிற் சோம சூத்திரப் பிரதட்சணம் செய்வது சிறப்பாகும்.
ஐந்து மூல(பூதச் சிவப்பதிகள்
சிவபெருமான் திருக்கோயில்களுள் மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் ஐந்து மூலப்பொருள்கள் சிறந்து விளங்குவன ஐம்பூதத் திருக்கோயில்கள் என்று வழங்கப்பட்டு வருகின்றன. அவையாவன:
08 நினைவு மலர்

LDGði திருவாரூர், காஞ்சிபுரம்
நீர் திருவானைக்கா நெருப்பு : திருவண்ணாமலை காற்று திருக்காளத்தி
வான் திருத்தில்லை (சிதம்பரம்)
ஒன்றே குலம் ஒருவனே தேவன் "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்றார் திருமூலர். இது சைவசித்தாந்தக் கருத்து. இதிலிருந்து சிவனை முழுமுதற் கடவுள் என்பதும், சிவ வழிபாட்டினர் மக்கள் குழுவினரை ஒரு குலத்தவராகக் கருதுகின்றனர் என்பது தெளிவாகும்.
பாடல் பெற்ற திருக்கோயில்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளான தேவாரம் பாடப்பெற்ற திருக்கோயில்களே பாடல்பெற்ற திருக்கோயில்கள் என்று சிறப்புற வழங்கப்படுகின்றன. அவை தமிழ் நாட்டிலும், பிற மாநிலங்களிலும் ஈழநாட்டிலும் உள்ளன. அவை மொத்தம் 274
திருக்கோயில்களாகும். அவையாவன:
சோழநாடு 190 நடு நாடு 22 பாண்டிநாடு 14 ஈழநாடு 2 சேரநாடு 1 துளு நாடு 1 தொண்டைநாடு 32 வடநாடு 5 கொங்கு நாடு 7 274
வைப்புப் பதிகள்
தேவார ஆசிரியர்களால் தனிப்பதிகங்கள் பாடப்பெறாமல், அவர்கள் பாடிய பிற பதிகங்களின் இடையிடையே வைத்துப் பாடப்பெற்ற திருக்கோயில்களும் பல உண்டு. அவை"வைப்புப் பதிகள்"
என வழங்கப்பெறுகின்றன.
சிவ இதிகாசம்
இந்தக் கவசம் பத்திராயு வென்னும் இராசகுமாரனுக்கு விடையமுனி அருளிச் செய்ததென்று நைமிசாரணிய முனிவருக்குச் சூதகமாமுனிவர் அனுக்கிரகித்தது.
நினைவு மலர் 09

Page 11
சிவீயம் கட்டளைக் கலித்துறை (எவ்வித இடர்பாடுமின்றிக் கொடிப்படம் தம்பத்து நுனியைச் சென்றடையும் பொருட்டு உமாபதி சிவாச்சாரியார் தில்லை நடராசப் பெருமானை வணங்கி நின்று பாடிய பாடல்கள்)
கொடிக்கவி
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடம்
ஒன்று மேலிடிலொன்று ஒளிக்கும் எனினும் இருள் அடராது
உள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனுந்
திரிமலத்தே குளிக்கும் உயிர் அருள்
கூடும்படிக் கொடிகட்டினனே.
வெண்பா
பொருளாம் பொருளேது போதேது கண்ணேது இருளாம் வெளியே (து) இரவே (து) அருளாளா நீபுரவா வையமெலாம் நீ அறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி.
வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும் தாக்காது உணர்வரிய தன்மையனை நோக்கிப் பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே குறிக்கும் அருள் நல்கக் கொடி.
அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலைப்பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப் பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி.
அந்த மலமறுத்திங்கு ஆன்மாவைக் காட்டியதற்கு அந்த அறிவை அறிவித்தங்கு இந்தறிவை மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங் கூறாமற் கூறக்கொடி
10 நினைவு மலர்

சிவமயம்
மகோற்சவ நவசந்தி
இடம் :தமியி1 பண் : குக்கரகம் இராகம் : காம்போதி
SLif
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது திருச்சிற்றம்பலம்
பொடியுடை மார்பினர் போர்விடை
யேறிப் பூதகணம் புடைசூழக் கொடியுடையூர் திரிந்தையங்
கொண்டு பலபல கூறி வடிவுடை வாணெடுங் கண்ணுமை
பாகமாயவன் வாழ்கொளி புத்தூர்க் கடிகமழ் மாமலரிட்டுக்
கறைமிடற்றாண்டி காண்போம்.
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங்கீழ் உடையும் கொண்ட உருவ மென்கொலோ.
கும்பம் 2 பன் : காந்தாரபஞ்சமம் இராகம் : கேதாரகெளளை.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சி வாயவே.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது
ஆடினாய் நற நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் நாடினாயிடமா நறுங் கொன்றை நயந்தவனே பாடினாய் மறையோடு பல் கீதமும் பல்சடைப் பணிகால் கதிர் வெண்டிங்கள்
சூடினா யருளாய் சுருங்களம் தொல்வினையே.
நினைவு மலர் 11

Page 12
இடம் : மத்தி பண் ; மேகராகப்பூங் குறிஞ்சி &ງກຣມື : .sຽກມື້ມຫົ
நீறு சேர்வதோர் மேனியர் நேரிழை கூறு சேர்வதோர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே.
ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
கீருவர்க்கிரங்கி நின்று நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
நெறியளித்தோன் நின்ற கோவில் பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசை கேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருள் சொல்லும் மிழலையாமே.
இடம் : கிழக்கு தேவன் : இந்திரன் பண் : காந்தாரம் இராகமீ நவரோஸ். திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
வரியமறையார் பிறையார் மலையோர் சிலையா வணங்கி எரிய மதில்களெய்தாரெறியுமுசலமுடையார் கரிய மிடறுமுடையார் கடவூர் மயானமமர்ந்தார் பெரிய விடைமேல் வருவாரெம் பெருமானடிகளே.
இடம் : தென்கிழக்கு தேவன் :அக்கினி பன்: கொல்லி இராகம் நவரோஸ். திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது
மானினேர் விழி மாதராய் வழுதிக்கு மாபெரும் தேவிகேள் பானல் வாயொரு பாலனிங்கிவ - னென்று நீபரி வெய்திடேல் ஆனை மாமலை யாதியாய - இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட் கெளியேனலேன்திரு - ஆலவாயரனிற்கவே.
12 நினைவு மலர்

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
SLћ : Бајер தேவன் :யன் பன் : கெளசிகர் இராகம் : பைரவி
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது குற்ற நீ குணங்கணிகூடலால வாயிலாய் சுற்ற நீ பிரானு நீ தொடர்ந்திலங்கு சோதி நீ கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை முற்று நீ புகழ்ந்துமுன்னுரைப்பதென் முகம்மனே.
வாழ்க அந்தணர் வானவர் ஆணினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்க்கவே.
இடம் : தென்மேற்கு தேவன் நிருதி பண் நடயாடை இராகம் :நாட்டை
அங்கமும் வேதமும் ஒது நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ மங்குன் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி ஏந்தியாடும் கணபதி ஈச்சரம் காமுறவே.
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான் மலை திருமா மணிதிகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலை முழவதிரும் அண்ணமலை தொழுவார்வினை வழுவா வண்ணம் அறுமே இடம்: மேற்கு தேவன் வருணன் பண் : சீகாரம் இராகம் : நாதநாமக்கிரியை திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது கண்காட்டுநுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண் காட்டிலுறைவானும் விடைகாட்டுங் கொடியானே
நினைவு மலர்

Page 13
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர் மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானாருறையுமிடந் தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது SL : Los ebaõT:Tu பன்:தககேசி இராகம்: காம்போதி
பொன்னும் மெய்ப் பொருளுந் தருவானைப் போகமுந் திருவும் புணர்ப்பானைப் பின்னைஎன் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை இன்ன தன்மையன் என்றறி ஒண்ணா
எம்மானை எளிவந்த பிரானை அன்னம் வைகும் வயற்பழனத் தணி
ஆரூரானை மறக்கலு மாமே.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது
பொடி கொளுருவர் புவியினதளர்
புரிநூல் திகழ் மார்பில் கடிகொள் கொன்றை கலந்த நீற்றர்
கறைசேர் கண்டத்தர் இடிய குரலாலிரியு மடங்கல்
தொடங்கு முனைச்சாரல் கடிய விடைமேற் கொடியொன்
றுடையார் கயிலை மலையாரே.
இடம்: வடக்கு தேவன் : குபேரன் பண் : குக்கராகம் இராகம் : காம்போதி திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது
அரைகெழு கோவண வாடையின் மேலோர்
ஆடரவ மசைத்தையம் புரைகெழு வெண்டலை யேந்திப்
போர் விடையேறிப் புகழ வரைகெழு மங்கையதாக மோர்பாக
மாயவன் வாழ்கொளி புத்தூர் விரைகமழ் மாமலர்தூவி விரிசடை
யானடி சேர்வோம்.
நினைவு மலர்

துணிவளர் திங்கள்துளங்கி விளங்கச்
சுடர்சடைச் சுற்றி முடித்துப் பணிவளர் கொள்ளையர் பாரிடஞ்சூழ
வாரிடமும் பலி தேர்வர் அணிவளர் கோல மெலாஞ் செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற மணிவளர் கண்ட ரோமங் கையைவாட
மயல் செய்வதோ இவர் மாண்பே.
இடம்: வடகிழக்கு தேவன் : ஈசானன் மண் : சாலாபணி (பதிற்பன் : சாதாரி) இராகம் பந்துவராளி
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளியது
மருந்தவை மந்திரம் மறுமை நல்
நெறி அவை மற்று மெல்லாம் அருந்துயர் கெடும் அவர் நாமமே
சிந்தை செய்நல் நெஞ்சமே பொருந்து தன் புறவினிற் கொன்றைபொன்
சொரி தரத்துன்று பைம்பூஞ் செருத்தி செம்பொன்மலர் திருநெல்வே
லிஉறை செல்வர் தாமே.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது
தலையே நீவணங்காய்
தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
பன் : இந்குளம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட் றையுள் அத்தாஉனக் காளாஇனி அல்லேனென லாமே.
நினைவு மலர்

Page 14
2. fsLDLuLib
தெய்வத் திருமுன்பாடுந் தோத்திரம்
விநாயகக் கடவுள்
தேவாரமி பிடியதனுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
புராணம் எடுக்கும் மாக்கதை இன்தமிழ் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்குஅருள் செய்திடத் தடக்கை ஐந்துஉடைத் தாழ்செவி நீள்முடிக் கடக் களிற்றைக் கருத்துள் இருந்துவாம்.
சிவபெருமான் தேவாரம் அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச் சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என்கண் டாயே.
புராணம் நன்மைபெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரில் மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந்தெழும்பொழுதில் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்றவர்தஞ் சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
உமை அம்பிகை
தேவாரம் உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமுழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
நினைவு மலர்

புராணம்
நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது அச்செழுத்துமே ஆக ஆளுடைய
அம்மை செம்மலர்க் கைகுவித்திதருளித் தஞ்சம் ஆகிய அருந்தவம் புரியத்
தரிப்பரே அவன் தனிப்பெருங் கணவர் வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில்
வந்து தோன்றினார் மலைமகள் காண.
சிவகாமியம்மை தேவாரம் காரு லாமலர்க் கொன்றையந் தாரனை வாரு லாமுலை மங்கை மணாளனைத் தேரு லாவிய தில்லையுட் கூத்தனை ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ,
ມຸງm68ຫມື
பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச் சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க அரந்தைகெடப் புகலியர்கோன் அமுதுசெயத் திருமலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரிப்பூங் கழல்போற்றி.
சுப்பிரமணியக் கடவுள் தேவாரம்
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன்அடி யேனையும் தாங்குதல் என்கடன்பணி செய்து கிடப்பதே.
புராணம்
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா மயிலாய் போற்றி
முன்னிய கருணையாறு முகப்பரம் பொருளே போற்றி
கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி.
நினைவு மலர் 17

Page 15
வைரவக் கடவுள் தேவாரம்
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தரும கங்கை தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம் உரித்துமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
புராணம்
அஞ்சுவன் கரத்து ஆறுஇழி மதத்துஒர்
ஆனை நிற்கவும் அரைஇருள் திரியும் மஞ்சுநீள்வது போலும் மாமேனி
மலர்ப் பதங்களில் வண்சிலம்பு ஒலிப்ப நஞ்சு பில்கு எயிற்று அரவ வெற்று அரையின்
நாம மூன்று இலைப் படைஉடைப் பிள்ளை எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும்.
ஐயனார்
தேவாரம் பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரையாட வைத்தார் சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேத கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியம் நல்ல தீர்த்தமுஞ் சடையில் வைத்தார் திருப்பயற்றுாரனாரே.
ugus: ei
ມຸງກBທມມື பையரா அமளி யானும் பரம்பொருள் முதலு நல்கும் ஐயனே யோலம், விண்ணோர்க் காதியே யோலஞ் செண்டார் கையனே யோல மெங்கள் கடவுளே யோல மெய்யர் மெய்யனே யோலம் தொல்சீர் வீரனே ஒலம் ஒலம்.
ஆரணச் சுருதி ஒர்சார் அடலுருத் திரனென் றேத்துங் காரணக் கடவுள் ஒலம்; கடல்நிறத் தெந்தாய் ஒலம் பூரணைக் கிறைவா ஒலம்; புட்கலை கணவா ஒலம் வாரணத் திறைமேற் கொண்டு வரும்பிரான் ஒலம் என்றாள்.
& நினைவு மலர்

சண்டேசுவரர் தேவாரம் மாழயவர்: திருஞானசம்பந்தர்
தழைத்தோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுத மீந்தார் குறுகைவீரட்ட னாரே.
புராணம் பொன்னங் கடுக்கை முடிவேய்ந்த புனிதற் கமைக்கும் பொருளன்றி மின்னுங் கலனா டைகள் பிறவும் வேறு தனக்கென் றமையாமே மன்னுந் தலைவன் பூசனையின் மல்கும் பயனை அடியார்கள்
துன்னும் படிபூசனைகொள்ளுந்தூயோ னடித்தா மரைதொழுவாம்
பிராயச்சித்தார்த்தம் கல்லாப் பிழையுங் கருதாப் பிழையுங் கசிந்துருகி நில்லாப் பிழையு நினையாப் பிழையுநின்னஞ் செழுத்தைச் சொல்லாப் பிழையுந்துதியாப் பிழையுந் தொழப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.
திருமந்திரம் பாடியவர்: திருமூலர்
ஏடு தொடக்கலுக்கு முக்கியமானது ஏடங்கை நங்கை இறையெங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை பாடும் திருமுறை பார்ப்பணி பாதங்கள் சூடுமின் சென்னிவாய் தோத்திரம் சொல்லுமே.
தகூறினாமூர்த்தி கல்லாலின் புடை அமர்ந்து
நான்மறை ஆறு அங்கம்முதல் கற்றகேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு
இறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் எல்லாம் ஆய் அல்லதும் ஆய்
இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
பரஞ்சோதி முனிவர் அருளியதிருவிளையாடற் புராணம்
நினைவு மலர்

Page 16
செல்வக் கூட னகருறையுஞ்
சிவனைப் பணிந்து செழுஞ்சோதி வில்வத் தளிரோ டிளமதியம்
வேய்ந்த வேணி விகிர்தனே எல்வத் திரமைந்துடையாயெம்
மீசா வாச விதழியுள்ளாய் மல்வக் கரையா வெனநிதமும்
வாழ்த்தி வணங்கு மடநெஞ்சே
ஆல வாயிலமர்ந்தருளு
மமல னருளை யன்றிநெஞ்சே சால வாயின் வேறுதுணை
சாற்றற் குண்டோ அவன்பெயரைக் கோல வாயினுரைத்துரைத்துக்
குறித்தே யவன்றாண் மலரிருப்பின் சீல வாயினருள்புரிவன்
நீர்ப்பன்றுயர மியாவையுமே.
- முரீசுந்தரேசுவரர் துதி
பெண்ணப்பன் வேள்வி தனிலே யுகந்து பெருகப்பிடித் துண்ணப் புகுந்த சுரரையெல்லாந்துரந் தோடச் செய்தாய் விண்ணப்ப மொன்றுண்டு கேளடியேன்மெய்ப் பிணிகளைவாய் கண்ணப்ப னெச்சிலுகந்தவனே திருக்காளத்தியே.
பணிக்கு மருந்து கருட னலாதில்லை பாரிலிருள் அணிக்கு மருந்து தவண்ண லாதில்லை யானபசி தணிக்கு மருந்தன்ன தானமல் லாதில்லை சாற்றுகிலேன் பிணிக்கு மருந்து கயிலாய ரன்றிப் பிறரில்லையே.
நெஞ்சடை யாமுன் னினைவழி யாமுன்னெடும் புலன்கள் அஞ்சடை யாமுன்னறிவழி யாமு னயர்ந்து கண்கள் பஞ்சடை யாமுன் னடியேனைக் காத்துன் பதந்தருவாய் செஞ்சடை யாய்பர மாகயி லாயச் சிவக்கொழுந்தே.
- திருக்காளத்தி இட்டகாமிய மாலை
20 நினைவு மலர்

அருட்சோதி தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரு மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் தெருப்பாடல் உவந்தெனையுஞ் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின் தெய்வமதே தெய்வம்.
- இராமலிங்கம் சுவாமிகள்
ஆலந்தரித்த லிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம் மூலமாய் எங்கும் முளைத்தலிங்கம் - பாலொளியாம் மத்தனே கூடல் மதுரா புரிஉமையாள்
அத்தனே ஆலவா யா.
- குருமை குருஞானசம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா
ஆசையறாய் பாசம்விடாய் ஆன சிவபூசை பண்ணாய் நேசமுடன் ஐந்தெழுத்தைநீ நினையாய் - சீசீ சினமே தவிராய், திருமுறைகள் ஒதாய்
மனமே உனக்கென்ன வாய்?
பரபரக்க வேண்டா, பலகாலும் சொன்னேன் வரவரக் கண்டாராய் மனமே- ஒருவருக்கும் தீங்கு நினையாதே; செய்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.
-தருமை குருஞான சம்பந்தர் அருளிய சிவபோகசாரம்
கண்டத்தில் விடமும் கையினில் மழுவும்
காதினில் துலங்கிடு நாக
குண்டலத்து அழகும் தலையில் வெண்மதியும்
குரைகழற் சிலம்பு நன்னுதலில்
நினைவு மலர் 21

Page 17
புண்டரத்து அழகும் பொறுப்பான மார்பில்
புனைதலை மாலையின் சிறப்பும்
கண்டக மகிழ்ந்து களிக்குநாள் உளதோ கருணைசேர் ஜலகண்டே சுவரனே!
- வேலூர்க் கோடையில் உள்ள திருக்கோயிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஜலகண்டேசுவரர் பதிகம்
தோற்றந் துடியதனில் தோயுந்திதியமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு.
- திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளிய "உண்மை விளக்கம்"
மதுரை மீனாட்சி
சுரும்பு முரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி உத்தரியத் தொடித்தோள் போற்றி கரும் புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப்
பால் சுரந்த கலசம் போற்றி இரும்பு மனம் குழைந்து என்னை எடுத்துஆண்ட
அங்கயற்கண் எம்பிராட்டி அரும்பும் இளநகை போற்றி ஆரணருா
புரம் சிலம்பும் அடிகள் போற்றி.
- பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்
வேதன், நெடுமால், ஆதி விண்ணாடர், மண்ணாடர், விரதயோகர்
மாதவர், யாவரும்காண, மணிமுறுவல் சிறிய அரும்பி மாடக் கூடல்
நாதன், இரு திருக்கரம்தொட்டு அம்மியின்மேல் வைத்தகயல்
நாட்டச்செல்வி
பாதமலர், எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர்; பற்றி லாதோர்.
நினைவு மலர்

நாவார நின்னை நவிலாது
சைவநல் லாரியர் சொல் தேவார பாரணஞ் செய்யாது
வீணரைச் சேர்ந்தொழுகித் தீவாய் நரகுக் கிரையாகு
வேனைத் தியங்கவிடேல் காவாய் புனல்வையத் தென்கூடல்
வாழும் கயற்கண்ணியே.
உண்ணலுடுத்தலுறங்கன் முதலியவே
நண்ணலுறு மிக்கொடிய நாயேனை யாள்குவையோ
விண்ணடைந்தாங்கின்பநுகர் வீரன்மலயத்துவச
அண்ணல்வரு கூடனகர் அங்கயற்க ணாயகியே.
- அங்கயற்கண்ணிமாலை
கச்சி உமாதேவி
தொல்லை மறைதேர்துணைவன்பால் யாண்டுவரை எல்லை யருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள் ஓங்குலகில் வாழு முயிரனைத்து மூட்டுமால் ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை
- வீரசோழியன்
அக்கினியில் தவம் செய்யும் மாங்காட்டுக் காமாசுறி செய்யும் தொழில்கள் நலமாகச் சேரும் செல்வம் நிலையாக கையில் நீங்கா வலிவாகக் கருத்தில் உண்மை ஒளியாக வையம் புகழத் துணையிருந்து வாழ்த்தி வரங்கள் தரவேண்டும் மையார் தடங்கண் மலைமகளே மாங்காடுறையுங் காமாட்சி.
தாலிப் பாக்கியம் காக்கும் வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி
செய்யும் தொழில் சிறக்க வேண்டும் தையல்நாயகி செல்வவளம் பெருக வேண்டும் தையல்நாயகி
ஆறுநூறு ஆக வேண்டும் தையல்நாயகி - அதில் ஆனந்தமே பொங்க வேண்டும் நாயகி.
நினைவு மலர் 23

Page 18
மாங்கல்யம் காத்திடுவாய் தையல்நாயகி மனம்போல வாழ்வளிப்பாய் தையல்நாயகி ஓங்கார ரூபிணியே தையல்நாயகி உள்ளத்தில் வாழுகின்றாய் தையல்நாயகி
திருக்கடவுர் அபிராமி கலையாத கல்வியும் குறையாத வயதும் ஒர்
கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்; அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
- 9 JTadius Lif
மயிலைக் கற்பகம்
ஆடும் மயிலாய் உருவெடுத்து அன்று இறைவன் திருத்தாள் நாடி அர்ச்சித்த நாயகியாய் நின் நாமங்களைப் பாடி உருகிப் பரவசம் ஆகும் அப்பாங்கு அருள்வாய் காடெனவே பொழில்சூழ் மயிலாபுரிக் கற்பகமே.
24 நினைவு மலர்

மதுராபுரி அம்பிகை மாலை திருவே விளைந்த செந்தேனே வடியிட்ட தெள்ளமுதின் உருவே மடப்பிள்ளை ஓதிமமே யொற்றை ஆடகப்பூந் தருவேநின்றாமரைத் தாளே சரணம் சரணம் கண்டாய் அருவே அணங்கர சேமதுராபுரி அம்பிகையே.
- குலசேகர பாண்டியன் காளி (கொற்றவை)
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி வேண்டினேனுக் கருளினள் காளி தடுத்து நிற்பது தெய்வம் தேனும்
சாரும் மானுடமாயினும் படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறு மாறே.
- மகாகவி பாரதியார் ஊன் ஆனாய் உயிர் ஆனாய்
உயிரில் ஊறும் உணர்வானாய் வான் ஆதி ஐம்பூத
வாகை எல்லாம் நீ ஆனாய் தேன் ஆகும் மலர்க் கொன்றைச்
சிவம் என்னும் பொருள் ஆனாய் நான் ஆனாய் உயிர்க்கு உயிரே
ஞானப் பேரொளி உமையே.
6LouULOGOGo 2GOLouUGUGir
"சீரார் பெருந்துறையில் சிவயோக நாயகி
சிவகாமி தில்லைமன்றில் தென்குமரி பகவதி, திருவானைக் காவினில்
திகழும் அகிலாண்டேஸ்வரி, காரார் மதிற்கச்சி காமாட்சி, அங்கயற்
கண்ணி செந் தமிழ்மது ரையில் கங்கைவள நாடுடைய நங்கை விசாலாட்சி
காளி வங்காள மண்ணில்
நினைவு மலர் 25

Page 19
தாரார் சிவன்தோளும் தமிழும் விழைபவள்
சமயபுரம் அதனில் மாரி
தட்டாமல் கடவூரில் பட்டருக் கருள்செய்த
தையல் அபிராம வல்லி
ஏரார் மழைக்கண்ணி எண்ணரிய நின்கோலம்
யாவும் எமை ஆளவலவோ?
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே.
முநீ இராஜராஜேஸ்வரி சிந்துாரம், குங்குமம், செவ்வாணம், அவ்வானம்
திக்ழவரு கதிரின் உதயம், தேசுமிகு மாணிக்கம் திருஏறு கமலம் அச்
செங்கலம் அஞ்சு பவளம் மந்தாரம், மழைநாளில் வரும் இந்தர கோபம், அவ்
வண்டுரும் மலையில் நறவம், மான்மதம் செங்குருதி போன் மலரும் மாதுளம்
மாதுளம் சிதறு முத்தம் செந்தீயின் வண்ணம் எனவே சொல்லும் மேனியும்
செப்பரிய அழகு வடிவும், சிங்காத தனத்திலும் சிவனார் மனத்திலும்
சீர்கொண்டிலங்கும் எனினும் எந்தாய்நின் பேர்சொல்லும் ஏழையேன் அறிவிலும்
என்றென்னும் திகழ அருள்வாய்! இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே!
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தரி திரியம் பகியெழிற்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சக்தி என்றுன் நாமமே உச்சரித் திடுமடியார் நாமமே
நானுச் சரிக்க வசமோ
26 நினைவு மலர்

ஆரணி சடைக்கடவுள் ஆரணிஎனப் புகழ்
அகிலாண்ட கோடி யீன்ற
அன்னையே, பின்னையும் கன்னியென மறைபேசும்
ஆனந்தரூபமயிலே.
வாரணியுமிருகொங்கை மாதர் மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவையரசே,
வரைராசனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காதலிப்பெண் உமையே.
- தாயுமானவ சுவாமிகள்
பரந்து எழுந்து சண்முதலாம் பரசமய இருள் நீங்க சிரம்தழுவு சைவ நெறித் திருநீற்றின் ஒளி விளங்க அரந்தைகெடப் புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால் சுரந்து அளித்த சிவகாம சுந்தரிபூங்கழல் போற்றி.
- Imm6 fañi
திருநெல்வேலி காந்திமதியம்மன்
ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீதுன் அருகிருந்து நீமுத்தம் தாவென்று அவர் கொஞ்சும் வேளையில் நித்தம் நித்தம் வேய்முத்த ரோடுஎன் குறைகளெல்லாம் மெல்ல மெல்லச் சொன்னால் வாய்முத்தம் சிந்திவிடுமோ நெல்வேலி வடிவன்னையே.
வேல்கொடுத் தாய்திருச் செந்தூரார்க்கு அம்மியின் மீது வைக்கக் கால்கொடுத் தாய்நின் மணவாளனுக்குக் கவுணியர்க்குப் பால்கொடுத் தாய்மதவேளுக்கு மூவர் பயப்படச் செங் கோல்கொடுத் தாயன்னை யேயெனக் கேதுங் கொடுத்திலையே.
பஞ்சாக் கரனே வருகே, உமை பாகா வருக, பண்சிறந்த செஞ்சொற் குகந்தே என்பணங்கு செய்தாய் வருக, சிவனேனன் நெஞ்சக் கவலை அகற்றியருள் நிலைக்க வருக; எஞ்ஞான்றும் அஞ்சல் எனமெய்த் திருச்செங்கோட் டரசே வருக; வருகவே.
- பழக்காசுப் புலவர்
நினைவு மலர் 27

Page 20
aferoj: puuub
ரூராடி ஜெயம்
ழரீ நாராயணர் தோத்திரப் பாக்கள் திருவாய்மொழி
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையிற் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மொடு
அவர் தரும் கல்வியே கருதி ஒடினேன் ஒடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
ஆவியே அமுதே நினைந்துருகி
அவரவர் பணைமுலை துணையாய் பாவியேன் உணராதெத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாட்கள் தூவிசேரன்னம் துணையொடு புணரும்
சூழ்புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
குலந்தரும் செல்வந் தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம் நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினு மாயின செய்யும் நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
GLJfrg5
பச்சை மா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தேஎன்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
28 நினைவு மலர்

திருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடிநூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
உடுத்துக் களைந்தநின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு தொடுத்ததுழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம் விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருகோணத் திருவிழாவில் படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
திருப்புரானம் சரணமென்றடைந்த பேர்க்கு உன் சரணமே கொடுத்து நீங்கா மரணமும் பிறப்பும் நீக்கி வண்டொரு திகரி நல்கி அரணமாய் வைகுந்தத்தை யளித்துவெம் பகையதான முரணலாங் கெடுக்குமாழி முகுந்தனே போற்றி போற்றி.
நெடிய மாயவனே போற்றி நிலமகள் கொழுநா போற்றி அடியினால் உலகமெலாம் அளந்ததுமல்லால் அந்தப் படியெலாம் உண்டு காத்த பண்ணவா போற்றி கொடிய காலிங்க நர்த்த குஞ்சிதபாதா போற்றி போற்றி.
பங்கயனாகி யெல்லாம் படைப்பவன் நீயே நீண்ட வங்கவார் கடல் சூழ் வையம் வளர்ப்பவன் நீயே எங்கும் பொங்கிய உயிரையெல்லாம் புசிப்பவன் நீயே நர சிங்கமாய் நின்ற தேவதேவனே போற்றி போற்றி.
ஆஞ்சநேயர் துதி அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.
சர்வத்தன கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா 1 கோவிந்தார்
நினைவு மலர் 29

Page 21
s f6:n Louuio
நூற் சிறப்பு விநாயகர் அநுபூதி
காசிய முனிவரால் அருளப்பட்ட இவ் விநாயகர் அநுபூதி இலகுவாகப் பாராயணம் செய்யக்கூடிய எளிய நடையிலும், பொருள் உணர்ந்து தாளக்கட்டுக்கு அமைவாகவும், இசையோடும் பாடுவதற்கும் சிறப்புடையதாகும்.
மேலும், இந் நூலை நாள்தோறும் பாராயணம் செய்பவர்கள் அத்தியாவசிய சிறப்புக்களான நாநலம் பெற்று, சொல்வன்மை அடைந்து, கீழ்மைப் பண்புகளை அழித்து, முழுமுதலை உணர்ந்து பேரின்பம் பெறுதல் போன்ற வேண்டுதல்களையும் பெறுவர் என்பதில் சந்தேகமில்லை. எனவே, விநாயக அடியார்களுக்கு இந்நூல் ஒர் வரப்பிரசாதமாகும்.
நாநலம் பெற
1. பூவார் புனிதா புவனத்தலைமைத் தேவா! கரியின் சிரமே உளவா! மூவாத் தமிழால் முறையே உனைஎன் நாவால் புகழும் நலமே அருள்வாய்.
பொழிப்பு:
அழகு பொருந்தியவனே! ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் தலைவன் ஆனவனே யானையின் முகத்தைக் கொண்டவனே! நான் உன்னைப் பழமையான தமிழால் புகழ்ந்து பாடும் வலிமையை எனக்கு அருள்வாய்.
ിrൺഖ്ഞഥ ിഗ്ര
2. வில்லாணர் மையரும் விரிமா தமிழில்
வல்லாண் மையரும் வளமாய்ப் புகழும் நல்லாண் மையது நனியே மிளிரும் சொல்லாண் மைகொடு எந்துரியப் பொருளே!
6lшифійц:
துரியப் பொருள் ஆனவனே தோள் வலிமை மிக்கவரும், தமிழில் புலமை மிக்கவர்களும் உன்னைப் புகழ்வார்கள். அவ்வாறே நானும்
உன்னைப் பாடசொல்வன்மையை எனக்குக் கொடுப்பாயாக!
30 நினைவு மலர்

கீழ்மைப்பண்புகள் அழிய
3. காமா திகளாம் கயமைப் பிணிகள்
போமாற) அருள்வாய் புரைதீர்த்து எனைஆள் கோமா! கருணைக் குகனார் தமையா! பூமா! பொலமார் புலவா! வருவாய்!
6) pů:
தலைவனே! முருகனின் சகோதரனே! பூவுலகுக்குத் தலைவனே!
ஞான வடிவான புலவனே காமம், குரோதம், லோபம், மோகம், மதம்,
மாச்சரியம் என்னும் கீழ்த்தரமான பண்புகள் என் உள்ளத்திலிருந்து
போகும்படி அருளி என்குற்றம் தவிர்த்து என்னை ஆட்கொள்வாயாக!
முழு முதலை உணர
4. அத்தே வர்களும் அயன், மால் அரனும் சுத்தாத் துவிதத் துறைநின் றவரும் "கத்தா கரிமா முகத்தான்" எனவே வித்தா ரமொடு விளம்பும் இறையே!
பொழிப்பு:
தேவர்கள், திருமால், நான்முகன், சிவபெருமான், சைவ சித்தாந்திகள்
போன்றவர்களால் “வழிபடுவதற்கு உரிய முழுமுதற் கடவுள் விநாயகனே
ஆவான்" என்று புகழப்படும் விநாயகனே!
குருவாய் வந்து அருளுவான்
5. காவா எனைஐங் கரனே! மதுரப்
பாவா ணர்புகழ் பரமெனி குருவே! நீவா விரைவாய் நிமலன் புதல்வா! தாவா கருணைத் தளிர்சே வடியே!
6) Týlů:
ஐந்து கைகளை உடையவனே! என்னைக் காப்பாய். இனிமையாகப் புலவர்களாற் பாடப்படும் குருவே! தூய்மையான வடிவுடைய சிவபெருமானின் மைந்தனே! நீ வருவாயாக. குற்றமில்லாத கருணையைப் பொலியும் தளிர்போன்ற செம்மையான அடிகளை
உடையவனே!
நினைவு மலர் 31

Page 22
பேரின்பம் பெறுக
6. ஒருகொம் புடையான்; உயர்மோ தகமே
விரும்பும் பெருமானி; விடையோனி குமரன், கரும்பார் தொடையன் சுகமா குமெலாம்
அருள்வான்; அருள்வான்; அடியார் அவர்க்கே!
பொழிப்பு:
ஒற்றைக் கொம்பை உடையவன்; மோதகத்தை விரும்பும் பெருமான்; சிவபெருமானின் மைந்தன், வண்டுகள் மொய்க்கும் மாலையை
உடையவன்; அடியவர்களுக்கு இன்பங்களை அருள்வான்.
விதியினால் வரும் வேதனை நீங்க
7. பேழ்வாய்ப் பெரியோன் பெரும்பூங் கழலைச்
சூழ்வார், பணிவார், துதிப்பார் அவர்க்கே ஊழ்வே தனைதீர்த்(து) உளமே மகிழ வாழ்வே தரும்வல் லபைநா தனரே!
ଗୋU୩[ily:
சிறப்புப் பொருந்திய வாயினை உடைய விநாயகனின் மலர்போன்ற
திருவடிகளை அணுகுபவர், பணிந்து வணங்குபவர், புகழ்ந்து பாடுபவர்
ஆகியவர்களின் முன்வினைப் பயனைத் தீர்த்து, நல்ல வாழ்வைத்
தருபவன் வல்லபையின்நாதனே ஆவான்.
பேய், பூதம். பில்லி,சூனியங்களால் வரும் துன்பங்கள் அகல
8. பேய்பூ தமொடு பில்லிகு னியமும்,
பாய்வேங் கையதும் பரையின் அருமைச் சேய்வா ரணனார் திருப்பேர் புகலப் போய்மாய்ந் திடுமே புனிதம் வருமே!
6lштфlüц:
பராசக்தியின் புதல்வனாகிய விநாயகனது திருப்பெயரைச்
சொல்பவருக்குப் பேய், பூதம், பில்லி, சூனியம் போன்றவற்றாலும்,
வேங்கை முதலிய விலங்குகளாலும் விளையும் தீமைகள் போகும்,
தூய்மையும் வந்தடையும்.
நினைவு மலர்

நல்ல புலமை பெற
9. பல்காப் பியங்கள் பகரும் திறமும்
ஒல்காப் புகழும், உயிர்செல் வமதும் நல்காய் நலமாய் நளின மலர்த்தாள் செல்வா/ திகழ்ச்சித் திவிநா யகனே!
ଗUI['fily:
அழகான மலர் போன்ற அடிகளை உடைய செல்வனே! சித்தி விநாயகனே! நான் பல்வகைக் காப்பியங்கள் இயற்றும் திறமைமையும்,
அழியாதபுகழையும், சிறந்த செல்வத்தையும் பெற அருள்வாய்!
சிறியவனும் அருள் பெற
10. பூந்தார் குழல் வில் புருவம், தளிர்போல்
ஆந்தே கம்மிளிர் அணியார் இருவர் சார்ந்தே விளங்கும் தனிமா முதலே! தேர்ந்தே தொழுதேன் சிறியேற்(கு) அருளே!
6lшлpйц:
மாலையை அணிந்த கூந்தலையும், வில்போன்ற புருவங்களையும், இளந்தளிர் போன்ற உடலினையும் பெற்றிருக்கும் சித்தி, புத்தி என்ற தேவிமார் இருவரையும் பெற்று எழுந்தருளியிருக்கும் ஒப்பில்லாத முதல்வனே! உன்னைத் தொழுதேன், சிறியவனாகிய எனக்கும் அருள்
GoFu'anuntu unt:5!
ബ്ബണ് 9|Ldo
1. வஞ்சப் புலன்என் வசமாய் நிசமாய்க் கொஞ்சிக் குலாவிக் குணமாய் மிளிர எஞ்சித் தமதில் இனிதே உனது கஞ்சக் கழல்வை கணநா யகனே!
மொழிப்பு:
தேவர்களுக்கெல்லாம் தலைவனே! என்னை வஞ்சித்துத் தீய வழியில்
சேர்க்கும் ஐம்புலன்களும் என் அறிவுக்கு உட்பட்டு நல்ல செயல்களைச்
செய்பவையாய் மாறி ஒளி விடுவதற்கு, என் சித்தத்தில் உனது தாமரை
போன்ற அடிகளை வைப்பாய்!
நினைவு மலர் 33

Page 23
வறுமை நீங்கிச் செல்வம் பெறுக
12. பொல்லா வறுமை, புரைசால் கொடுநோய் எல்லாம் ஒழித்தே எனைஆண் டிடவே வல்லாய் வருவாய்; வளமே தருவாய்; உல்லா சமிளிர் ஒருகை முகனே!
பொழிப்பு:
அழகான துதிக்கையை உடையவனே! பாவங்களைச் செய்யத்
தூண்டும் வறுமையையும், கொடிய நோய்கள் எல்லாவற்றையும்
அழித்து என்னை ஆண்டுகொள்ள வல்லமை பெற்றவன் நீ ஒருவனே!
எனக்கு வளங்களைத் தருவாய்.
இப்பிறவிப்பயன்பெற்று வீடுபேறுபெற
13. மகத்தாய், அணுவாய், மதியாய்க், கதிராய்,
செகத்தாய், அறிவாய்த் திகழ்சாட் சியதாய் அகத்தும், புறத்தும் அகலாப் பொருளாய், இகத்தும் பரத்தும் இருக்கும் பரமே!
பொழிப்பு:
பெரிதாயும், அணுவாயும், சந்திரனாயும், சூரியனாயும், சகமாயும்,
அறிவாயும், நல்வினை தீவினைகளுக்குச் சாட்சியாயும், அகத்திலும்
புறத்திலும் அகலாத பொருளாயும் இம்மைப் பயனாயும், மோட்சமாயும்
திகழும் விநாயகனே!
நிறைந்த அருளைப் பெற
14. கருணைக் கடலைங் கரனே! கபிலர்க்(கு)
அருளே கொடுத்தாய் அபயம் அளித்தாய்! தருவே அனையாய்! தமியன் தனைஆள் குருவே பொறுமைக் குணநா யகனே!
6)шпфlйц:
கருணைக் கடலாகத் திகழும் ஐந்து கரத்தானே கபிலருக்கு அருளைக்
கொடுத்து, அடைக்கலம் தந்தாய். கற்பக மரம் போன்றவனே! தனியான
என்னை ஆளும் குருவே! பொறுமை மிக்க குணங்களுக் கெல்லாம்
தலைவனே!
34 நினைவு மலர்

அருட்பாடல்கள் இயற்ற
15. கற்பார் இதயக் கமலத்(து) உறையும்
அற்பார் ஒளியே! அழகுஆ னைமுகா! பொற்பாய் உனது பொலந்தாள் மலர்க்கே
நற்பா கொடுத்தேன் நனிஏற்(று) அருளே!
பொழிப்பு:
கற்பவர்கள் உள்ளத் தாமரையில் ஒளியாக எழுந்தருளுபவனே! அழகிய ஆனைமுகத்தவனே! உன் பொன்போன்ற திருவடிகளுக்கு நல்ல பாமாலையை நான் கொடுத்தேன். இதை நீ ஏற்றுக்கொண்டு அருள் புரிவாயாக!
செய்த பிழைகள் எல்லாம் தீர
16. ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்
சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான் சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கை ஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே.
பொழிப்பு:
உன் கருணைத் திறம் அறியாத நான் உன் திருவடிகளிற் செய்த பிழைகளைத் தீர்ப்பாய்! கோபம் தவிர்ப்பாய்; பரம்பொருளானவனே!
நான் இயற்றிய தமிழ் மாலையை உனது துதிக்கையில் ஏற்று அருள்வாய்.
எல்லாப் பிறவிகளிலும் இறை எண்ணம் பெருக
17. எந்தப் பிறப்பை எடுத்தா லும்உனைச்
சொந்தத் தமிழால் துதிசெய் திடவே கொந்தே அலர்தார்க் குழல்வல் லபையாள்! சிந்தைக்(கு) உகந்தாய்/ சிறப்பாய் அருளே!
பொழிப்பு:
மணம் வீசும் மலர் மாலைகளை அணிந்த வல்லபையின் மனத்திற்கு
உகந்தவனே! நான் எந்த வகையான பிறப்பினை எடுத்தாலும் உன்னை
என்னுடைய தமிழ்மொழியாற் போற்றி வழிபட எனக்கு அருள்
செய்வாய்.
நினைவு மலர்

Page 24
பழையபாவங்கள் தீர
18. சிந்தா மணிதான் திகழ்மார் புடையாய்!
முந்தை வினையை முழுதும் தொலைத்(து) ஆள் எந்தாய்! எளியேன் எனைநீ எழிலாய் வந்துஆள்! உயர்ஓம் வடிவப் பொருளே!
6lшпф)йц:
என் தந்தையே! பிரணவத்தின் வடிவாகவும், பொருளாகவும் விளங்குபவனே! சிந்தாமணி விளக்கும் மார்பை உடையவனே! முற்பிறப்பு வினைகளை முழுதும் தொலைத்து எளியவனான எனக்கு முன் அழகாகத் தோன்றிவந்து ஆள்வாயாக!
வலிமை பெற
19. பகையார் அவர் முப் புரமே பொடியா
நகைசெய் தபிரான் நலமாம் கனியை வகையாய் அருள வலம்வந் தவனே! தகையாய்! திடம்நீ தருவாய் மணியே!
Glшпфlйц:
முப்புரங்களையும் தன்னுடைய சிரிப்பினால் பொடிசெய்த
சிவபெருமான், ஞானப் பழத்தை உனக்கே கொடுக்கும்படி, அவனையும்,
உமையம்மையையும் வலம் வந்தவனே! சிறந்த பண்பை உடையவனே!
எனக்கு வலிமையைத் தந்தருள்வாய்.
எல்லாச் செல்வங்களும் பெற
20. சீரோங் கிடும்; நல் திறமும் பெருகும்; ஏரோங் கிடுமே; இனிதாம் திடமே பேரோங் கிடும்; நல் பெரும்வே ழமுகன் தாரோங் கடியைத் தொழுவார் தமக்கே!
பொழிப்பு:
யானை முக விநாயகனின் திருவடிகளைத் தொழுபவர்களுடைய புகழ் ஓங்கும். நன்மைகள் பெருகும். அழகு மிகும்; வலிமை மிகுதியாகும் என்பது உறுதி.
36 நினைவு மலர்

குழந்தைப்பேறும் செல்வமும் பெற
21. மகப்பேடு) அருள்வான் மகிழ்வாய் நிதியை
அகத்தே தருவான்; அணியன்; கரிமா முகத்தான் அடியை முறையாய் நிறையாய்ச் செகத்தீர் தொழுமின்/ தொழுமின்! தினமே!
6][[Iộũt{=
விநாயகன் குழந்தைப் பேற்றினை அருள்வான்; இல்லங்களில் எல்லாம் மகிழ்ச்சியுடன் செல்வத்தைத் தருவான்; அவன் அருகிலேயே இருப்பான், விநாயகனின் திருவடியை முறையாக நாள்தோறும் தொழுவீர்களாக,
நவக்கிரகங்களும் நல்லருள் புரிய
22. பெருமைப் பரிதி, பிறை, இத் தரைசேய்,
அருமால், குருவே, அசுரர் குரவன், கருமை அரவு கள்இவை நலமாம் ஒருகை முகனிபேர் உரைப்பார் அவர்க்கே!
6luп00ц:
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு,
கேது ஆகிய ஒன்பது கிரகங்களும், விநாயகருடைய திருப்பெயரை
உச்சரித்தவர்களுக்கு எப்பொழுதும் நன்மைகளையே செய்யும்.
too (9Goto 6p
23. ஒடித் திரிவாய் உலகுஏ ழும்மிக
வாடித் திரிவாய் மனனே! தகுமோ கூடிக் குலவா ஒருகோ டனைநீ பாடிப் பணிவாய் பணிவாய் நலமே!
பொழிப்பு:
என்மனமே! அமைதியைத் தேடி ஏழு உலகங்களிலும் திரிந்தாய். இது
உனக்குப் பொருத்தமுடையது அன்று. ஒற்றைக் கொம்பை உடைய
விநாயகனைக் கூடுவாய்! பாடிப்பணிவாய்.
நினைவு மலர் 37

Page 25
Luutólaig 6oaTg
24 ஏகாக் கரனை எழில்ஜங் கரனைப்
பூகாப் பவனைப், பொறுமைக் குணனை,
மாகா ஸரியவள் மகனை, மனனே
நீகா எனவே நிதமும் பணியே!
6штфüц:
மனமே ஓங்கார வடிவை உடையவனை, அழகிய ஐந்து கரங்களை
உடையவனை, உலகைக் காப்பவனை, அடியார்கள் செய்யும்
பிழைகளைப் பொறுப்பவனை, சக்தி மகனாகிய விநாயகனை அடைந்து,
"நீகாப்பாய்” என்று நாள்தோறும் பணிவாயாக!
நலங்கள் பலவந்து சேர
25. தேடிப் பணிவார் சிலபேர்; சிறப்பாய்
ஆடிப் பணிவார் சிலபேர்; அணியாய்ப் பாடிப் பணிவார் சிலபேர்; அவரை நாடித் தருவான் நலம்ஐ முகனே!
பொழிப்பு:
விநாயகப் பெருமானைச் சிலர் தலங்கள் தோறும் தேடிச் சென்று பணிவார்கள்; சிலபேர் அவனைப் பாடி, ஆடிப் பணிவார்கள். சிலபேர் கூட்டம் கூட்டமாய் கூடிப் பாடிப் பணிவார்கள். இவ்வாறு பத்தி செய்பவர்களைத் தேடிப்போய் விநாயகன் நலன்கள் பலவற்றைத்
தருவான்.
பகை நீங்க
26. துட்டர் குதர்க்கர் தொலைந்தே பொடியாய்ப்
பட்டே இரியப் படையை விடுவாய்! சிட்டர் புகழும் திறமே! வளரும் மட்டில் மதமார் மழலைக் களிறே!
பொழிப்பு:
பொல்லாதவர்களும், முறையில்லாமல் வாதம் செய்பவர்களும் பொடிப் பொடியாகப் போகும்படி, தன் திருக்கரத்தில் உள்ள படைக்
நினைவு மலர்

கலத்தை விடுபவனே! நல்லவர்கள் புகழும் உறுதிப் பொருளே! அளவில்லாமற் கருணையாகிய மதநீர்பொழியும் அழகிய விநாயகரே!
இதமான வாழ்வுபெற
27 விண்நீ; உடுநீமிளிர்வா யுவும்நீ;
மணிநீ; அனல்நீ; புனல்நீ; மதிநீ; கண்ரீ; மணிநீ; கவினார் ஒளிநீ; எணர்நீ; உனைஆள் இதம்செய் பவனே!
பொழிப்பு:
வானும் நீ, அதில் விளங்கும் விண்மீன்களும் நீ சந்திரனும் நீ; இவற்றைக் காணும் கண் நீ கண்ணினுள் மணி நீ; அதில் ஒளிரும் ஒளி நீ; எண்ணப்படுகின்ற பொருள் நீ என்னை ஆட்கொண்டு நன்மை செய்பவனே!
நல்ல வழியில் செல்ல
28. தீய நெறிநாத் திகத்தில் திளைத்தே ஆய நெறியை அறியா திருந்தேன் தூய நெறியின் தொடர்காட் டினைநீ ஆயும் நெறியும் அறிவித் தனையே!
6LTy:
விதி வசத்தால் நாத்திகத்தில் உழன்றேன்; உன் அருளைப் பெறும்
சன்மார்க்க வழியை அறியாமற் காலம் கழித்தேன்; தூய்மையான பக்தி
வழியைக் காட்டினாய்; நான் உய்யும் நல்ல வழியை அறிவித்தாய்.
பிறவித் துன்பம் நீங்க
29. தொல்லைப் பிறவித் துயர்மா கடலுள்
அல்லல் வழியில் அழுந்தல் முறையோ! செல்வா! பிரமச் செழுமா மணியே! நல்லாய் கரைஏற் றிடும்ஜங் கரனே!
6]uff):
நான் தொடர்ந்துவரும் பிறவியாகிய துன்பக் கடலில் மூழ்கி
அழுந்திக் கிடப்பது முறையோ? செல்வனே! பிரமனும் போற்றும்
மணியே! நன்மை புரிபவனே! என்னைக் கரை ஏற்றிடும் ஐந்து
கரமுடையவனே!
நினைவு மலர் 39

Page 26
(95ugoto (9sgu
30. மாயை எனும்கார்த் திரையைத் தெரித்துஎன்
பேயை விரட்டும் பெருமான் ஒருவன்! தாயை நிகர்த்த தனிமா முதல்வன்; காயைக் கனிஆக் குவன்கண் ணியனே!
Gurfly
உயர்ந்தவனே! நீ மாயை என்னும் கரிய திரையைக் கிழித்து, என்
மனதில் தோன்றும் அச்சமாகிய பேயை விரட்டக்கூடிய பெருமான்.
தாயைப் போன்ற ஒப்பற்ற முதல்வனே காயையும் கணிஆக்குவது போல்,
பக்குவம் இல்லாத என்னையும் பக்குவப்படுத்துபவனே!
நன்மைகள் பெற
31. அயில்கை உளநம் அறுமா முகற்கே
மயிலுரர் திதனை மகிழ்ந்தே அளித்தான்; செயிர்தீர் அடியார் சிறப்பாம் வகையில் ஒயிலாய் நலம்தந்(து) உயர்த்தும் அவனே.
ଗu୩[[fily:
அடியார்கள் சிறப்படையும்படி நன்மைகளைச் செய்து, அவர்களை உயர்த்துபவன் விநாயகப் பெருமானே ஆவான். அவன் வேலைத் தாங்கிய
முருகனுக்குமயிலை வாகனமாக மகிழ்ந்து அளித்தான்.
அர்ச்சித்துஅருளைப் பெற
32. கரிமா முகனின் கருணை அறியார்
எரிவாய் நரகில் இடரே படுவார்; விரிமா தவரும் விரும்பும் பெரியோனி அரிதா அருச்சித்(து) அவனைப் புகழே.
பொழிப்பு:
யானை முகத்தவனின் கருணைத் திறத்தை அறியாதவர்கள்
வெம்மையான நரகத்தில் துன்பப்படுவார்கள். தவத்தை விரும்பிச்
செய்யும் தவசிகள் விரும்பும் விநாயகனை வழிபட்டு அவனைப்
புகழுங்கள்.
40 நினைவு மலர்

எணர்வகைச் சித்திகளைப் பெற
33. இருநான்(கு) அவதா னம்எண்சித் திகளும்
பெருமானி உமையின் பெரும்பிள் ளையவன் தருவான்! தருவான்! தரவே விரைவாய் வருவான் வருவான் வழுத்தாய் மனனே!
6lшпфйц:
உமையம்மையின் மைந்தனாகிய விநாயகன் எட்டு அவதானங் களையும், எட்டுச் சித்திகளையும் விரைவாக வந்து அருளுவான்.
அத்தகையவனை, மனமே! போற்றுவாயாக!
பிரணவப்பொருளை உணர
34. கருமால் வினையைக் களைந்தே அருளும்
திருவைந் தெழுத்தும், திகழா றெழுத்தும், இருநான் கெழுத்தும் எமதுஜங் கரனார் ஒருபேர் எழுத்தே உணர்வாய் மனனே!
பொழிப்பு:
இரு வினைகளையும் போக்கும் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தும்,
நம குமராய என்னும் ஆறெழுத்தும், ஓம் நமோநாராயணாய என்னும்
எட்டெழுத்தும், விநாயகருக்குரிய ஒம் என்னும் ஒரே எழுத்தில் அடக்கம்
என்பதை, மனமே! உணர்வாயாக.
இறை எண்ணம் பெற
35. அளவைக் கடந்தான்; அகிலம் கடந்தான்; உளதத் துவத்தின் உயர்வைக் கடந்தான்; வளமாய் நிலைமேல் வகிப்பானி பெரியோன் உளமே அறிந்துஇன் புறவே வருவாய்!
6Iຫຼືມີມູະ
விநாயகன் பிரமாண அளவைகளுக்கு அப்பாற்பட்டவன்; இவ்வுலகைக் கடந்து நின்றவன்; முப்பத்தாறு தத்துவங்களின் உச்சியில் நின்று கடந்து நிற்பவன். அத்தகையவன் என் மனமாகிய இருப்பிடத்தை அறிந்து நான் இன்புறும்படி வரவேண்டும்.
நினைவு மலர் 41

Page 27
பழத்தோர்துன்பம் நீங்க
36. கத்தும் தரங்கக் கடல்சூழ் புவியில்
தித்தித் திடும்செந் தமிழ்மா லைசெயும் வித்தர் களின்தீ வினையை விலக்கும் அத்தித் தலைவன் அருட்பார் வையதே!
6)επρίις
கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தில், இனிமையான செந்தமிழாற் பாமாலை புனையும் கவிஞர்களின் தீவினைகளை எல்லாம் யானை
முகத்தவன் அருட்பார்வை நீக்கிவிடும்.
நல்ல கவிபாட
37. ஆரா அமுதம் எனஆ சுகவி
சீராப் புகலும் திறமே அருள்வாய்! தீராக் கலைகள் திகழ்வா ரிதியோ/ வாராய்! வளமே வளர்வா ரணனே!
பொழிப்பு:
வளமெல்லாம் அளிக்கும் யானை வடிவானவனே! முடிவில்லாத கலைகளால் நினைந்த கடலே! தெவிட்டாத அமுதம்போன்று ஆசு
கவிகளை உன் புகழுக்காக நான்பாடும் ஆற்றலை அருள்வாய்!
விநாயகனைக் கண்டு மகிழ
38. வேதா கமமே மிகவும் புகழும்
பாதாம் புயனே! பணிசெய் அடியேற்(கு) ஆதா ரநின(து) அருட்காட் சிதர வாதா எழில் "ஒ" வடிவா னவனே!
6luпф)йц:
வேதங்களும், ஆகமங்களும் புகழும் திருவடிகளை உடையவனே! தொண்டு செய்பவர்களுக்கு ஆதாரமானவனே! அழகான ஓங்கார
வடிவானவனே! உனது அருட்காட்சியை எனக்காக வந்து தருவாயாக!
விநாயகனின் அருளைப் பெற 39. உம்பர் புகழும் உறுதிப் பொருளே!
தும்பிச் சிரனே! தொழுதேன்; தொழுதேன்;
42 நினைவு மலர்

நம்பும் எனைநீ நழுவ விடாமல் அம்பொன் கரத்தாய் எனைஆண்டு) அருளே!
Gurgy:
தேவர்களெல்லாம் புகழ்ந்து பேசும் உறுதிப் பொருளே யானை வடிவானவனே! உன்னைத் தொழுதேன். உன்னையே நம்பும் என்னைக் கைவிட்டுவிடாமல் உன் அழகிய பொற்கரத்தால் ஆண்டுகொண்டு அருளுவாய்!
குறை தீர
40. கவிஞன் புகலும் கவின்ஆர் தமிழ்உன் செவிஏ றியும்நீ திருகல் சரியோ புவிதான் புகழும் புழைக்கைய! கரம் குவிவேன்; மகிழ்வேன்; குறைதீர்த்தருளே!
6)шпфlйц:
கவிஞர்களால் புகழ்ந்து பேசப்படும் அழகிய தமிழ்ப் பாக்கள் உன் செவிகளில் விழுந்தும் நீஅருளாமல் இருப்பது சரியாகுமோ? உலகத்தார் புகழும் தும்பிக்கையை உடையவனே! என் இரண்டு கைகளையும் குவித் தேனர்; அதனால் மகிழ் ந் தேனி ; எண் குறைகளைத் தீர்த்தருளுவாயாக!
அருள் மழையில் நனைய
41. மங்கை வலயை மணவா ளன்அருள்
பொங்கும் புனல்போல் பொழிந்தே புவனம் எங்கும் நிறைந்தே இருக்கினி றதுகண்! துங்கக் குணத்தீர் புசிமின் தொழுதே!
பொழிப்பு:
வல்லபையின் கணவனாகிய விநாயகனின் அருள் பொங்கி வெள்ளம்போல் இவ்வுலக மெல்லாம் நிறைந்து காணப்படுகின்றது. விநாயகனின் குணங்களைப் பாடுபவர்களே! அவன் கருணை வெள்ளத்தை வழிபட்டு அனுபவியுங்கள்.
(96.Oyoff (9sabeo 42. gp6v co6u6Var 560p6oTéir gps6i6 var/
சீல செழும்செம் சடையன் சிவனார்
நினைவு மலர் 43

Page 28
பால உயர்தற் பரனே! அருள்தா! கோலம் மிளிரும் குணமார் பொருளே!
6umphuະ
மூல மலமாகிய ஆணவ மலத்தைத் தீர்க்கும் முதல்வனே அற
வடிவான சிவபெருமானுடைய மைந்தனே! உயர்ந்த பரம் பொருளே!
அழகொளி வீசும் குணங்களால் நிறைந்த பொருளே! அருள்தருவாயாக!
பக்குவம் பெற
43. சித்தி தரும்சத் திநிபா தமதே
எத்தி னமதில் எனைவந்(து) உறுமோ! அத்தி முகவா! அருமைத் தலைவா! சத்தி தனையா! தமியற்கு உரையே!
6ury:
யானை முகத்தவனே! பெருமைமிக்க தலைவா! பராசக்தியின் மைந்தனே! பக்குவ ஆன்மாக்களிடம் திருவருள் பற்றுவதாகிய தன்மை எந்த நேரத்தில் என்னிடம் வந்து சேருமோ? எனக்கு சக்திபாதம் வாய்க்கும் நாளை உரைப்பாயாக.
துயரம் நீங்க 44. முதல்வா படவே முடியா(து) இனிநோ
இதமே அருளா(து) இருத்தல் எனை? பொற் பதமே உடையாய் பணிந்தேன்! பரையின் புதல்வா அருளாய்! புரைதீர்ப் பவனே!
பொழிப்பு:
பொற்பாதங்களை உடையவனே பராசக்தியின் மைந்தனே! அருள்வாய்! குற்றங்களைத் தீர்ப்பவனே தலைவா! என்னால் இனித் துன்பப்பட இயலாது. என்ன காரணத்தினால் எனக்கு இன்னமும் அருள் புரியாமல் இருக்கிறாய்?
பேரருள் பெற
45. சீலனி துதிக்கைச் சிரனை அனவே
ஞாலத் தினிலே நலம்ஈ வர்எவர்? கோலச் சிகிவா கனனாம் குகனும் சாலப் புகழும் தனிமன் அவனே!
44 நினைவு மலர்

6LT:
யானை முகத்தனைப் போல உலகத்தில் இனி நன்மைகளை
அருளுபவர் யார் உள்ளார்கள்? மயில் வாகனனாகிய முருகனாலும்
மிகவும் ஒப்பற்ற தலைவன் விநாயகனே ஆவான்.
ഖബ്ബ് ഉദ്ദി
46. திணிதோள் சதுரும், திகழ்ஜங் கரமும்,
வண்டார் குழலார் மகிழ்ந்தே மருங்கில் பண்டே வளர்கோ லமதைப் பணிவாய்க் கண்டேன்; களித்தேன்; கவலை இலனே!
பொழிப்பு:
திண்மையான நான்கு தோள்களையும், ஐந்து கரங்களையும், இரண்டு
பக்கங்களிலும் சித்தி புத்தியாகிய தேவிமார் இருவரையும் பெற்ற
விநாயகனுடைய அழகிய கோலத்தைக் கண்டேன்; மகிழ்ந்தேன்;
கவலைகள் எல்லாம் என்னைவிட்டு நீங்கிவிட்டன.
ஞானம் பெற
47 மோன நிலையில் முழுசித் திபெறும்
ஞானம் தருவாய்! நலமார் பெரியோய்! தீனன் எனைஆள் திருமனி கருணைத் தேனம் எனவே திகழ்கின் றவனே!
மொழிப்பு:
அருள்நலம் மிக்க பெரியவனே! அருளாகிய கடல் போன்று
திகழ்பவனே! நான் மெளனத்தில் மூழ்கி முழுமையான பரஞானம் பெற
அருள்வாய் அறிவிலியாகிய என்னை ஆள்வாயாக!
பிறவி அச்சம் நீங்க
48. அச்சம் விடுத்தேன் அரனார் முதலோர் மெச்சும் படியாய் மிளிர்ஜங் கர/ நின் பச்சைத் தளிராம் பதமே பலமாய் இச்சை யுடனே பிடித்தேன் இதமே!
6) If
சிவன் முதலானவர்கள் புகழும் ஐந்து கரத்தை உடையவனே!
உன்னுடைய தளிர் போன்ற திருவடிகளை விருப்பத்துடன் பிடித்துக்
கொண்டேன். அதனாற் பிறவி அச்சத்தை விட்டேன்.
நினைவு மலர் 45

Page 29
சகல சித்திகளும் பெற
49. பக்தி நெறியில் பலமாய் உறைவார்
அத்தி முகனின் அடியைப் பணிவார்; முக்தி பெறுவார்; முதன்மை உறுவார்; சித்தி அடைவார்; திடமே! திடமே!
பொழிப்பு:
பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்கள் யானைமுக விநாயகனின் திருவடிகளிற் பணிவார்கள். அதனால் முக்தியைப் பெறுவார்கள். எண்
வகைச்சித்திகளையும் பெறுவார்கள். இது உறுதி.
புகழைப்பெறுவதற்கு,
50. தாதா சரணம்; சரணம் தளிர்த்தாள் நீதா சரணம் சரணம்; நிகர்இல் வேதா தரனே சரணம்; மிளிர்ஐம் யூதா சரணம்! புகழ்நாற் புயனே!
பொழிப்பு:
தலைவனே! வேதங்களின் பொருளாக விளங்குபவனே! ஐம் பூதங்களானவனே! நான்கு தோள்களை உடையவனே விநாயகனே! உனது தளிர் போன்ற பாதங்களை நான் சரணடைவதற்குத் தந்தருள்வாயாக.
உலகம் வாழ
51. ஊழி முதல்வன் உயர்வே ழமுகன் வாழி/ திருசத் திகளும் அணியாம் வாழி/ கவினார் வாச மலர்த்தாள் வாழி! அடியார் வளம்வா ழியவே!
பொழிப்பு:
உலகத்திற்கு முதல்வனான யானைமுகன் வாழ்க! சித்தி, புத்தி தேவிகள் வாழ்க! அழகு நிறை அவனுடைய மலர்ப் பாதங்கள் வாழ்க! அடியார்கள் செல்வங்கள் பலபெற்று வாழ்க!
நினைவு மலர்

S.
திருப்புகழ் பக்கரைவி சித்ரமணி பொற்கலனை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரசுைடிதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வ விருப்பமொடு செப்பெனன் னக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண் டெச்சல்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பசுடிணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனு மருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
තිර්‍ර්‍ට්‍ර
воđ6) đош đпUћ * சிவபெருமான் தம்மை ஆன்மாக்கள் அறிந்து வழிபட்டு உய்யும் பொருட்டு அருளிச் செய்த முதல்நூல்கள் வேதம், சிவாகமம் என்னும் இரண்டுமாகும். * சிவபெருமானை வழிபடும் பொருட்டு ஆன்மாக்களுக்குக் கிடைத்த
கருவி மனிதசரீரம்.
9 மனித சரீரத்தைப் பெற்ற ஆன்மாக்களுக்குச் சிவபெருமானை
வழிபடும் பொருட்டுத்தகுதியை வருவிப்பது சிவதீட்சை
* சிவதீட்சை பெற்றுக்கொண்டு வேதசிவாகமப்படியே சிவபெருமானை
வழிபடுகிற சமயம் சைவசமயமாகும்.
இ சைவ சமயிகள் அவசியமாகச் செபிக்கத்தக்க சிவமூலமந்திரம்
பஞ்சாட்சரம், (திருவைந்தெழுத்து)
-=@@e====—హౌకP
நினைவு மலர் 47

Page 30
9_ சிவமயம்
O O O O O o o O த்வஜஸ் தம்பத்தின் முக்கியத்துவம்
கொடிகளும் கொடிக்கம்பங்களும் அரசுகள், அரசர்கள், தலைவர்கள் பெருமையை, உரிமையைப் பறைசாற்றுவன. இறைவனின் புகழை, பெருமையைப் பறைசாற்றி நிற்கும் ஆலய த்வஜஸ்தம்பங்களே அவற்றிற்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது.
உற்சவங்கள் அல்லது விழாக்கள் கொண்டாடுவதென்பது நமது பாரம்பரியத்தோடு இணைந்த ஒன்று. சங்ககாலத்திற்கூட பலவகையான விழாக்கள் நாட்டின்கண் நடைபெற்றதை அக்கால இலக்கியங்களால் அறிகிறோம். விழாக்கள் எல்லாம் உயிர்களுக்கு இன்பம் நல்குதற் பொருட்டே செய்யப்படுகின்றன என்கின்றது பதிற்றுப்பத்து (15). விழா எடுப்பதற்குமுன், விழா இனிது நடைபெறவேண்டி இறை வழிபாடு செய்வர். அவ்வமயம் கால்கோள் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சிவபிரானது குமாரனாகிய முருகப் பெருமானுக்கு விழா எடுப்பதற்குக் கால்கோள் செய்யப்பட்டதைக் கலித்தொகை (83:14-95) கூறுகிறது. கொடிக்கம்பம் நட்டுக் கொடியேற்றி, இறைவழிபாடு செய்து விழாவைத்துவக்கும் முறையே கால்கோள் எனப்பட்டது.
அவ்வகையாகவே இந்நாட்களிலும், ஆலய உற்சவங்களிலும், தொடக்கத்திற் கொடியேற்றுதல் (த்வஜாரோஹணம்) நிகழ்கிறது. உற்சவத்தின் நிறைவு நாளன்று அவ்வாறு ஏற்றப்பட்ட கொடிகள் இறக்கப்படுகின்றன. எனவே, த்வஜஸ் தம்பம் உற்சவங்களுக்கு இன்றியமையாததாகின்றது.
உற்சவ காலங்களிற் கொடி ஏற்றும்போது கொடிமரத்திற்கு வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பாற் சாதம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து பலியாக இடவேண்டும், பின்னர் அந்த பலிச்சோற்றை பிரசாதமாக அன்பர்களுக்கு விநியோகிக்க வேண்டும். அதனைப் பெற்று உண்பவர்களுக்குப் பிள்ளை இல்லாக்குறை நீங்கும். என்கின்றது. மகுடாகமத்தின் சிவோத்ஸவ விதி படலத்திலுள்ள 94 ஆவது சுலோகம். இதே விவரத்தை பூர்வகாரண ஆகமம். மஹோற்சவ விதிப்படலம் 69 ஆவது சுலோகம் உறுதி செய்கிறது.
எங்கு த்வஜயஸ்டி வைக்கப்படுகிறதோ அங்கு (1) அகாலமரணம் ஏற்படாது, (2) செல்வம் பெருகும், (3) திருட்டு-பயம் ஒழியும், (4) அவமானம், கலகம் ஏற்படாது, 5ே) பிணக்குகள் திரும், (6) நோய்கள் அகலும், (7) நல்ல மழை பொழியும், (8) எல்லா உயிரினங்களுக்கும் சுபீட்ஷம் உண்டாகும், (9) பசுக்கள் நன்கு பால் கொடுக்கும், (10)
நினைவு மலர்

கொடியேற்றத்தைப் பார்ப்பவர்கள் அதற்குமுன் செய்த பாவச் செயல்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவர் என்கின்றன உத்தரகாமிக ஆகமம், ஆறாவது படலமான மஹோத்ஸவ விதிப் படலம், சுலோகங்கள் 93-96.
ஆலய த்வஜஸ்தம்பங்களில் ஏற்படும் கொடிகள் அனைத்து உயிர்களுக்கும் இன்பமளிப்பன. ஆன்மாக்கள் முத்தியின்பம் பெற வேண்டியே இறைவன் கொடிகட்டி உற்சவம் கொண்டாடுகிறார். எனவேதான் ஆலயக்கொடிக் கம்பங்கள் காரண லிங்கங்கள் எனப் படுகின்றன. கொடிகள் ஒரு காரணத்துடன் ஏற்றப்படுவன. உறுதி, ஒற்றுமை, ஒன்றுபட்ட முயற்சி இம்மூன்றின் சின்னமே கொடி. அது ஏற்றப்படும் த்வஜஸ்தம்பம், ஆன்மாக்கள்மேல் இறைவன் கொண்டுள்ள வெற்றியின்சின்னம்.
த்வஜஸ்தம்பத்தில் ஏற்படும் கொடியின் அமைப்பு, ஆலயத்தின் மூல தெய்வத்தைப் பொறுத்தது. கொடிகளில் வரையவேண்டிய இலச்சினைகளும் அவை எந்தெந்த வண்ணங்களில் வரையப்பட வேண்டும் என்ற குறிப்புகளும்கூட ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.
சிவாலயங்களில் வ்ருஷபக் கொடி ஏற்றுவிக்கப்படும். வ்ருஷபம் தர்மத்தைக் குறிக்கின்றது. இறைவன் அறமே வடிவானவன். ஆகவே, தர்மத்தைக் குறிப்பிடும் வ்ருஷபக் கொடி அவனுடையது. வினையின் பயனை நுகர்வித்து, உண்மை ஞானம் கூடச்செய்து, உயிர்களின் குற்றங்களினை மாற்றி, குணங்களை ஒங்கச் செய்வதற்கே இறைவன் காத்திருக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காகவே அவனது கொடி அசைந்தாடுகிறது.
உற்சவ ஆரம்பத்திற் கொடி ஏற்றப்பட்ட உடன் முதன்முதலாக அது எந்தத் திசையை நோக்கிப் பறந்தாடத் துவங்குகிறது என்பதைக் கொண்டு பலாபலன்களை அறியலாம். (உத்தர காமிக ஆகம, மஹோத்சவ விதிப்படலம், சுலோகம் 85,86)
வ்ருஷபக் கொடியின் அமைப்பு
தூன் எனப்படுவது பகைவரைத் திடுக்கிட வைப்பது, பறக்கும் கொடி, நாம் ஞானம் பெறத் தடைகளாக இருக்கும் ஐம்புலன்கள் என்னும் பகைவர்களைத் திடுக்கிடச் செய்தவாறு பரஞான வெளியில் பறப்பதே இறைவனின் விருஷபக் கொடி.
ஆலயம் புகும்போது, இறை உருவ வடிவமான கோபுரத்தை முதலில் வணங்குகிறோம். பிறகு கொடிமரத்தை வணங்குகிறோம். அதில்
நினைவு மலர் 49

Page 31
பறக்கும் அல்லது பறக்கவிருக்கும் கொடி நம்முள் உள்ள பகைவர்களான ஐம்புலன்களையும் திடுக்கிடச்செய்து அடக்கவிருப்பதை உணர்ந்து புலனடக்கம் வேண்டி நின்று இறைவனைப் பிரார்த்தித்துச் சரணாகதியாக விழுந்து கும்பிடவேண்டும். சிவாலயத்தில் வேறு எந்த இடத்திலும் விழுந்து கும்பிடக்கூடாது.
த்வஜஸ்தம்பத்தின் அருகில் உள்ள பலிபீடத்தில் ஆணவ மலத்தைப் பலியாக இடுவதாகச் சிந்தையில் கொள்ளுதல்வேண்டும். அதாவது, அகந்தை, மமதை, ஆசை கோபம். மயக்கம், அஞ்ஞானம் இவற்றைப் பலியாக இட்டு, அதை ஏற்குமாறு இறைவனை வேண்டிக் கொள்ளவேண்டும். அத்துடன், அவனை வழிபடுவதற்கு ஞானஒளியைத் தருமாறு அவனிடமே பிரார்த்திக்க வேண்டும்.
த்வஜஸ்தம்பத்தை அடுத்து, இறைவனை நோக்கியவாறு இருப்பது ஐயனின் விருஷப வாகனம். அது தர்ம தேவதையின் உரு. அதன் பின்னால் நின்ற வண்ணம், மூலலிங்கத்தை நோக்கி "அறத்தின் பின்னின்று ஒழுகி, அறம் காட்டும் வழிநடந்து உன்னை அடைய அருள் வாயாக" என்று வேண்டிக்கொள்ளல் வேண்டும். அந்த விருஷப தேவரைத் தொடுவதோ, அவரது காதுகளில் நம் குறைகளை ஒதுவதோ தோஷம் விளைவிக்கும் செய்கைகள். நமது குறைகளை அறியாதவனா இறைவன்? அறவிடையின் பின்நின்று, அறவழி ஒழுகி உன்னை அடைய அருள் செய் என்று வேண்டிக் கொண்டாலே நம் குறைகளைக் களைந்து வாழ்வை நிறைவாக்கமாட்டாதவனாசிவபிரான்?
"குறிகளும், அடையாளமும், கோயிலும், நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் கரணம் ஒதினும் போதாது” என்கின்றார் திருநாவுக்கரசர். உருவமற்ற இறைவனை உணர்வதற்கு உருவத்துணை வேண்டும். உருவம் உள்ளத்தில் பதிவதுபோல் அருவம் உள்ளத்தில் பதிவதில்லை. உள்ளத்தில் பதியும் உருவமாக, ஆனால், உறுப்புகளற்ற குறியாக (அடையாளமாக) விளக்கி நமக்கு அருள்பாலித்து வருவதே சிவலிங்கம்.
“லய” என்ற வினைச் சொல்லுக்கு லயித்தல், அதாவது ஒன்றுபடுதல் அல்லது மறைந்திருத்தல் என்பது பொருள். அந்த வினைச்சொல்லில் இருந்து தோன்றிய சொற்களே ஆலயம், லிங்கம் ஆகிய வழக்கில் உள்ள இரு சொற்களும். எனவே, லிங்கம் என்ற சொல்லுக்கு தன்னுள் லயித்திருக்கும் அதாவது மறைந்திருக்கும், ஒரு பொருளைக் குறிக்கும் குறி அல்லது அடையாளம் என்பதே பொருள். அதுபோன்ற பல லிங்கங்களைத் தன்னுட்கொண்ட காரணத்தினால் இறைவனின் திருக்கோவில்களும் ஆலயங்கள் எனப்படுகின்றன.
50 நினை ഥബ്
6f

ஆலயங்கள் என்பதற்கு ஆன்மா லயிக்க வேண்டிய இடம் என்பதாகவும் பொருள்.
நடைமுறையிலே ஆகமங்கள், ஆலயங்கள் பற்றி நாம் பேசும்போது, லிங்கம் என்ற சொல்லால், ஒருதனிப்பட்ட உருவம் அல்லது அமைப்பு, அதிலும் குறிப்பாகக் கருவறை மூர்த்தம் என்பதைக் குறிப்பிடுவதற்கு உபயோகிக்கின்றோம்.
சொல்லாராட்சி (etymology) விளக்கத்தைப் பார்ப்போமானால், லிங்கம் என்ற சொல் எல்லாமும் எதனுள் ஒடுங்குமோ, எதிலிருந்து அவை எல்லாம் மீண்டும் தோன்றுமோ அந்த மூலப்பொருட்களுக்கு லிங்கம் என்று பெயர் என்ற விளக்கம் புலனாகின்றது.
“லயம் கச்சந்திபூராதி ஸம்ஹாரே ரிகிலாறி க / நிர்க்கச் யதப்பரசாடி லிங்கோத்திஸ்தேர ஹேதுரா"
என்கிறது அஜிதாகமம் (கிரியா, 3, 17, 18).
கருவறையிற் சிவனின் சின்னம் ஆவுடையார்மேற் பதிக்கப்பெற்ற பாணமாக அமைந்துள்ளது. அந்த மூலலிங்கம் சூட்சுமலிங்கம் எனப் படுகின்றது. கருவறையின்மேல் உள்ள ஸ்தூபி ஸ்தூல லிங்கம் எனப்படுகின்றது. இங்கு கோபுரகலச வடிவாக சிவனின் சின்னம் அமைந் துள்ளது. கருவறைமுன் த்வஜஸ் தம்பத்தின் அருகே உள்ள பலிபீடம் பத்ரலிங்கம் எனப்படுகின்றது. இந்த இடத்தில் பலியிடும் கல்போல சிவனின் சின்னம் அமைந்துள்ளது. பத்ரம் என்றால் மங்களம். ஆணவ மலத்தைப் பலியாக ஏற்றுக்கொண்டு, பதிலுக்கு மங்களங்களை அருளுவது பத்ரலிங்கம். கொடிக்கம்பம் காரணலிங்கம் எனப்ப டுகின்றது. காரணலிங்கத்தில் நெடிதுயர்ந்த த்வஜஸ்தம்பத்தின் தண்டமே சிவனின் சின்னமாக அமைந்துள்ளது. லிங்கம் என்று நாம் சாதாரண மாகக் குறிப் பரிடும் போது, “கர்ப் பக்ருஹத்தில் ஆவுடையார்மேல் பதிந்திருந்து அருளும் பாணம்” என்ற உருவகத்தை அச்சொல் சுட்டிக் காட்டி நம் உள்ளத்தில் பக்தி உணர்வினைத் தட்டி எழுப்பிடினும் லிங்கம் என்ற சொல்லாற் குறிப்பிடுவது ஒரு சின்னம். குறி அல்லது அடையாளம் என்பதைத்தான் எனக்கொண்டு நோக்கினால், ஸ்துல பத்ரகாரணலிங்கங்களின் பெயர்விளக்கம் புலனாகும்.
ஆன்மா சென்று லயிக்க வேண்டிய ஆலயத்தினுள் இறைவன் சிவத்தைச் செய்வதற்காக ஐந்து இடங்களில் உருவம்தாங்கி நின்று, அதாவது சின்னங்களாக இருந்து அருள்பாலிக்கின்றார் என்பர். அந்த பஞ்சலிங்கங்களாவன: மூலலிங்கம்: (கருவறையினுள்) இதுவே ஸிஷ்மலிங்கம். உடலுக்கு உயிர்போன்றது,
நினைவு மலர் 51

Page 32
ஸ்தூலலிங்கம்: என்ற விமானக் கலசம் (உடலை எடுத்துச்சென்று கரைசேர்ப்பது ஆகாய விமானம், ஆன்மாவை எடுத்துச்சென்று கரை சேர்ப்பது ஆலயவிமானம்), ஸ்விபம் என்பது உயிரைத் தாங்கிநிற்கும் உடல்போன்றது, விமானம் காணும் உடலாகவும், கருவறைலிங்கம் உள்ளுறை உயிராகவும் இருக்க, முதலில் விமானத்தைத் தரிசித்து வணங்கியபிறகே உள்ளேயுள்ள லிங்கத்தைத் தரிசிப்பது முறை. ஸ்தூலலிங்கம் நமஸ்கருத்ய சாலயம்து ப்ரவேயத், ஸ்தூலலிங்க விமானம் ஸ்யாத், ஸிஷ்மலிங்கம் ஸ்தாபம், பலிபீடம் பத்ரலிங்கம் லிங்கத்ரயமி ஹோச்யதே என்கிறது.
கொடிக்கம்பத்தின் அருகே உள்ள பத்ரலிங்கம் என்பது பலிபீடம் காரணலிங்கம் என்பது கொடிக்கம்பம்.
சிவோகம் பாவனை செய்து நிற்கும் சிவாச்சாரியார் எல்லா ஆகமங்களை அறிந்தவனும், அமைதியானவனும், சிவலிங்க வழி பாட்டில் ஈடுபட்டவனும், நித்ய ஹோமத்தோடு கூடியவனும் சிவபெருமானுக்கு நிவேதனம் தயார் செய்பவனும், கிரஹபலி முதலியவைகளைச் செய்பவனும் பிஷை அளிப்பவனும் நிந்தனை இல்லாதவனுமான சிவாச்சாரியாரைச் சிவனாகவே அறிய வேண்டும். உத்தரகாமிக ஆகமம்மஹோற்சவ விதிபடலம், சுலோகங்கள்.
“கோயில் என்பது இறைவனின் உறைவிடம் என்பதை விடக் கோயிலே இறைவனின் சொரூபம் என்று கொள்ளவேண்டும்” என்கிறார் திருகணபதி ஸ்தபதி "ப்ராஸாதம் புருஷம் மர்வா பூஜயேத் மந்த்ரவித்தமஹ” என்ற உபநிஷத் வாக்கியம் மந்திரங்களை நன்கு கற்றுணர்ந்த பூசாரி கோயிலையே இறைவன் என்று உணர்ந்து அதற்கு மரியாதை செய்து பூஜிக்க வேண்டும் என்றுரைக்கின்றது.
அன்றியும் கருவறையை முதலாகக்கொண்டு கோவிலை நாம் நீட்டமைப்பில் நோக்கினாலும், நெட்டமைப்பில் ஆராய்ந்தாலும் மனிதஉடலில் தலை, பாதம் முதலிய உறுப்புக்களும் ஆறு சக்கரங்களும் குறிப்பிடப்படுவது விளங்கும். உதாரணமாக ஒரு யோகி அல்லது இறைவன் காலை நீட்டித் தலை நிமிர்ந்து படுத்திருக்கும் முறையாகக் கோயில் அமைந்துள்ளதாக உருவகித்து நோக்கினால் பாதம் போன்றது முன்கோபுரம். விரல்கள் போன்றவை அதன் சிகரக் கலசங்கள். மூலாதாரத்தை ஒத்தது கொடிக்கம்பம் சிரசுபோன்றது கருவறை சிரசின் மத்தியை ஒத்தது கருவறையில் எரியும் தீபம் அந்தத் தீபஒளி இறைவனின் அருவுருவத்தை நினைவூட்டுகின்றது. புறக்கோவில் அமைப்பு உடற் கோயிலின் பரிணாமம் என்பதற்கு திருநாவுக்கரசரின் காயமே கோயிலாக கடிமணம் அடிமையாக என்ற தேவாரமும், உள்ளம் பெருங்
52 நினைவு மலர்

கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற திருமூலரின் திருமந்திரமும் சான்றாகும்.
கோயில்களிற் கோபுரம்: கடவுளின் விராட் சொரூபம். ஸ்தூபி: (கருவறை, விமானக்கலசம்) இறைவனுடைய ஸ்தூல ரூபம். கருவறையுள் இருக்கும் திருமேனி: சூக்குமலிங்கம், கற்பக்ருஹ மண்டபம், அர்த்த மண்டபம், மஹாமண்டபம் ஸ்நாந மண்டபம் அலங்காரமண்டபம், சபா மண்டபம் ஆகிய ஆறு முக்கியமான மண்டபங்களும் முறையே மூலாதாரம், சுவாதிஷ்டாநம், மணிபூரகம், அனாகதம் விசுத்தி ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களைக் குறிக்கும். மூலமூர்த்தி, நந்தி, பலிபீடம் ஆகியவை முறையே பதி, பசு பாசத்தைக் குறிக்கும். சரீரம் நேராக இருந்து அசையாது தியானத்தில் பரமானந்த சொரூபியாகிய பரமசிவம் தரிசனமாகும் என்ற தத்துவத்தை மூலமூர்த்திக்கு நேராக நின்றுகொண்டி ருக்கும் கொடிக்கம்பம் குறிப்பிட்டு உணர்த்தும். இவ்வாறும் ஒரு விளக்கம் உண்டு.
த்வஜஸ்தம்பங்களைப் ப்ரதிஸ்டை செய்வதிலும், பராமரிப் பதிலும், போற்றுவதிலும் மிகுந்த கவனம் தேவை என்பதும் ஆலயத்தின் பிரகாசம் மேலும் மேலும் ஓங்கி நின்று அன்பர்களுக்கு அருள் செய்வதிலும் த்வஜஸ் தம்பங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்ப தும் மேற்கூறியனவற்றால் புலனாகும்.
சைவசித்தாந்தத்தில் த்வஜஸ்தம்பம்
கொடியேற்றம் என்பது பொதுவாக ஆலயங்களிற் கும்பாபி ஷேகங்களின்போதும், மற்றத் திருவிழாக்களின்போதும் நடைபெறு கின்ற ஒரு முக்கிய சடங்கு. இச்சடங்கின் உட் பொருளை மிக அழகாகச் சைவ ஆகமத் தத்துவங்களைப் புகுத்தி ஐந்தே பாடல்களில் கொடிக்கவி என்ற நூலில் விளக்குகிறார். அதன் நூலாலாசிரியரும் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவருமான உமாபதி சிவாச்சாரியார்.
இந்நூல் எழக் காரணம் குறித்து ஒரு சுவையான வரலாறும் உண்டு. தில்லை மூவாயிரவரில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார், சிதம்பரத் திற்கு அருகில்உள்ள கொற்றவன்குடி என்னும் ஊரில் மடம் அமைத்து ாழ்ந்திருந்தவர். ஒரு சமயம் மற்றைய தில்லைவாழ் அந்தணர் கொடியேற்றத் தொடங்கியபோது கொடிக்கம்பத்தில் கொடி மலெழாமலேயே இருந்தது. மனக்கவலை கொண்ட அவர்களுக்கு உமாபதி வந்தால் கொடி ஏறும்" என்று வானில் எழுந்த திருவாக்கு வகை கூறிற்று. அவர்களும் உமாபதி சிவாச்சாரியாரை அணுகி வேண்டினர். வாச்சாரியார் தில்லைக்குச் சென்று “ஒளிக்கும் இருளுக்கும்” எனத்
நினைவு மலர் 53

Page 33
தொடங்கும் கட்டளைக் கலித்துறைப் பாடலைப் பாடிய உடன் கொடி தானாகவே மேலே ஏறிற்று. அப்பாடல் கொடிக் கவி என்னும் நூலுக்கு முதல் பாடலாயிற்று. பின்னர் சிவாச்சாரியார் அடுத்து வரும் நேரிசை வெண்பாப் பாடல்களைப் பாடி நூலை நிறைவு செய்தார். இந்நூல் வடிவில் சிறிதாக இருப்பினும் சைவ சித்தாந்தத்தின் மூலக்கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து பெருமை சேர்க்கின்றது. கடவுளுக்கும் ஆன்மாக்களுக்கும் உள்ள தொடர்பை பதி-பசு-பாசம் என்ற தத்துவத்தால் விளக்குபவர்கள் சைவசித்தாந்திகள். சைவ சித்தாந்தம் கடவுள் ஒருவரே என்று வலியுறுத்துகின்றது. அவரே மங்களங்களைச் செய்யும் செய்விக்கும் சிவபிரான். அந்த சிவம் எனப்படுவது எல்லாவற்றிற்கும் மேலான தாய் அருவம், உருவம் இல்லாததாய குணம், குறிகள் அற்ற தனித்தியங்கவல்ல, என்றும் இருக்கவல்ல ஒன்று. அதுவே பதி எனப்படுவது, அது எண்ணிறைந்த ஆன்மாக்களுக்கும் அறிவாகி, அகலமாய், அகண்டிதமாய், ஆனந்த உருவாய், மலங்களால் கட்டுண்டவர்களுக்கு எட்டாததாய், அணுவும் ஆகி, அண்டமும் ஆகி விளங்குவது. பாசத்தால் கட்டுண்டு உழல்வதால், ஆன்மாக்கள் பசு என்று பெயர்பெறுகின்றன. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் பாசம் எனப்படும். பசுக்கள் பதியின் அருளுடன் பாசத்திலிருந்து விடுபட்டு முத்தி அடைய வேண்டும். இதற்கான உத்திகள், இடைப்பட்ட நிலைகள், அவற்றின் தன்மைகள் ஆகியவற்றை விளக்குவனவே சைவசித்தாந்தக் கோட்பாடுகள். தமிழர்களின் முதிர்ந்த சிந்தனைச் செறிவு, நாகரிக முதிர்ச்சி, ஆழ்ந்த சமய உணர்வு போன்றவற்றிற்குச் சைவசித்தாந்தக் கோட்பாடுகள் சான்றுகளாக விளங்குகின்றன. சைவசித்தாந்தத்தை விளக்கும் ஆதாரபூர்வ சாத்திர நூல்களாக 14 நூல்கள் போற்றப்படுகின்றன. இவை அனைத்தும் 12,13.14ஆம் நூற்றாண்டிலே தோன்றியவை. சைவசித்தாந்த நூல்கள் மெய்கண்டசாத்திரம் அல்லது சைவ சித்தாந்த சாத்திரம் என்று வழங்கப் படுகின்றன. பதின்நான்கு சைவசித்தாந்தசாத்திர நூல்களுள் கொடிக்கவி பதினொன்றாவது கொடிக்கவியிலுள்ள பாடல்கள் கொடி ஏற்றுதலின் பெருமை பகர்கின்றதோடு, சைவசித்தாந்தத் தத்துவச் செறிவு மரிக் கதாகவும் உள்ளன. ஆகம முறைப் படி நடைபெறும் கொடியேற்றுவிழா தொடர்பான நிகழ்ச்சிகள், அக்கருத்துக்களை வெளிப்படுத்திக் காட்டுவனவாக அமைந்துள்ளதை இன்றும் காணலாம். இறையாகிய பதியும், ஆசைகளுக்கு மூலமான பாசமும் சேர்ந்து இருக்கும் இடம் பசுவாகிய (ஆன்மாக்கள் என்றழைக்கப்பெறும்) உயிர்களிடத்திற்றான், அப்படிப் பதியும் பாசமும் ஒன்றுசேர்ந்து இருந்தாலும் இறைசக்தியானது உயிரைப் பாசங்கள் தாக்காவண்ணம் அருள்புரிந்துகொண்டே இருக்கின்றது. நாம் உணரவேண்டும், உயிர்
54 நினைவு மலர்

உலகியல் இன்பங்களால் ஈர்க்கப்பட்டுக் கீழ்நோக்கிச் செல்லாமல், பதியை நோக்கி மேலே செல்லவேண்டும் என்பதை உணர்த்த கொடி கட்டப்படுகின்றது என்பதை கொடிக்கவியின் முதல் மூன்று பாடல்கள் தெளிவாக உணர்த்துகின்றன. "ஓம்" என்னும் மூலமந்திரத்திலிருந்து எழுகின்ற ஐந்தெழுத்து மந்திரமாகிய "நமசிவாய" மற்றும் அவ்வைந்து எழுத்துக்களிலிருந்து எழுகின்ற பல மந்திர அஷரங்கள், அவற்றிலிருந்து உருவாகும் ஒலி அலைகள், அவ்வொலி அலைகளைத் தாங்கி நிற்கும் மொழிகள், இவை அனைத்திற்கு ) அப்பாற்பட்ட மெளனநிலை ஆகிய அனைத்துமே உயிரோடு கலந்திருக்கின்ற பரம் பொருளையே உணர்த்துகின்றன. இறைசக்தி எல்லையற்ற கருணைகொண்டது. உயிர்கள் (பசுக்கள்) மலங்களிலிருந்து (பாசத்திலிருந்து) நீங்கித் தெளிவுபெற்று, அந்தத் தெளிந்த அறிவுடனே, மாறாமல் இருக்கின்ற நிலையே சிவப்பேறு. அல்லது முத்திநிலை. இக் கருத்துக்களை இந் நூலின் (4,5) ஆவது பாடல்கள் விளக்குகின்றன.
இவ்வகையாகக் கொடி ஏற்றுதலும், கொடிக் கம்பமும் சைவசித்தாந்தக் கோட்பாடுகளை நிலைநிறுத்திக் காட்டுதற்கு எத்துணைஇன்றியமையாததாக உள்ளது என்பது வெளிப்படும்.
உமாபதி சிவம் அருளிய கொழக்கவி
கட்டளைக் கலித்துறை ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்ஒன்று மேலிடில் ஒன்(று) ஒளிக்கும் எனினும் இருள்அட ராதுஉள் உயிர்க்(கு) உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்(து) உள தேனும் திரிமலத்தே குளிக்கும் உயிர்அருள் கூடும் படிகொடி கட்டினனே. . (OI)
உயிரின் குறிக்கோள்கூறும்பாடல். இதன் உரை:
“ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்”- "ஆணவத்துக்கும் ஞானத்திற்கும் இடம் ஒன்றே" - "ஒன்றுமேலிடில் ஒன்றுஒளிக்கும்"- "ஞானம் மேலிட்ட காலத்து ஆணவம் ஒளிந்து நிற்கும்"- "ஆணவம் மேலிட்டகாலத்து ஞானம்ஒளிந்து நிற்கும்” எனினும் இருள் அடராது - ஒன்று மேலிட்ட காலத்திலே ஒன்று ஒளிந்து நின்றாலும் ஞானத்தை ஆணவம் பொருந்தாது. உள்ளுயிர்க்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துளதேனும் திரிமலத்தே குளிக்கும் - முற்பிறவிப் பயன்களாலே நம் உள்ளே சிறிது சிவஞானம் விளங்கினாலும் நாம் மும்மலங்களால் மூழ்கித் தான் கிடப்போம். உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனேஇப்படி மும்மலங்களிலே மூழ்கிக் கிடக்கின்ற நம் ஆன்மாவுக்கு அருள் கூடுவதற்காக: குருவருளால் மலங்கள் நீங்கித் திருவருள் கிடைப்பதற்காக திஷரக்ரமங்களில் ஒன்றான கொடியைக் கட்டினேன்.
நினைவு மலர் 55

Page 34
G5rflexoe GeaJediTunr
பொருளாம் பொருள்ஏது போ(து) ஏது கண்ஏது இருளாம் வெளிஏது இர(வு)ஏது - அருளாளா நீபுரவா வையமெலாம் நீ அறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி, -(O2)
உயிருக்கு அருளும் முறைமை கூறும்பால் 65sõ9oog:
“பொருளாம் பொருள் ஏது"- பொருளிலே அழியாத பொருள் எது? (கர்த்தா எது? அது சிவ பரம்பொருள்). "போது ஏது”- கிரணமாகிய சக்தி எது? (சூரியன் இது எனக் காட்ட, கதிர்கள் இருப்பது போல, சிவம் இது என உயிர்களுக்குக் காட்டும் சக்தியே திருவருள்). "கண் ஏது"- கண் போன்ற ஆன்மா ஏது? (திருவருள் எனும் சக்தியால் சிவத்தைப் பார்க்கும் பொழுது கொண்டதுதான் ஆன்மா). "இருளாம் வெளி ஏது"- அறியாமையால் மும்மலங்களில் உழலும் “சகலநிலை ஏது?"- "இரவு ஏது"- "கேவல நிலை ஏது?" இவற்றை எல்லாம் விளக்க அருளாளாஅருளுடையவனே. நீ புரவா வையமெல்லாம் "நீ அறிய"- வையகமாகி மும்மலங்களிலே பொருந்தாமல் ஆன்மாக்களிடமாகப் பொருந்தி இருக் கின்ற தேவரீர் சாட்ஷரியாக. கோபுரவாசற் கொடி கட்டினேன்*கோபுரவாசலிலே கொடிகட்டினேன்"
கட்டளைக் கலித்துறை
வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும் தாக்கா(து) உணர்(வு) அரிய தன்மையனை - நோக்கிப் பிறித்(து) அறிவு தம்மில் பிரியாமை தானே குறிக்கும் அருள் நல்லக் கொடி, -(03)
திருவருளை வேண்டும் பாடல் இதன் உரை :
"வாக்காலும் - தன்மையனை”- வாக்கால், மனத்தால், எக்காலத்திலும் அறிதற்கு ஒண்ணாத தன்மை உடையவனை "பிறித்து" - பாசம், பசு ஆகியவற்றினின்றும் பிரித்து. "நோக்கி”- ஆராய்ந்து ஒன்றும் புலப்படாமல், "அறிவு” கொடி-அறிவுக்கு அறிவாய், பதிபற்றிய ஞானம் உள்ளவரோடு, கூடியிருந்தே அறிய முடியும் என்பதை உணர்ந்து உலகினோர் அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டிக் கொடி கட்டினேன்.
கட்டளைக் கலித்துறை
அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலைப் பெரு எழுத்தும் - நெஞ்(சு) அழுத்திப்
நினைவு மலர்

பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும் கூசாமற் காட்டக் கொடி. -(04)
இதன் உரை:
“அஞ்செழுத்தும் - நாலெழுத்தும் "- சிவாய நம என்ற ஐந்தெழுத்தும், ஒம் ஆம் ஒளம் சிவாய நம என்ற எட்டெழுத்தும் “ஓம் நமசிவாய என்ற ஆறெழுத்தும் ஓம் சிவாய என்ற நாலெழுத்தும் விதிப்படி உச்சரித்து. “பிஞ்செழுத்தும் - நெஞ்சழுத்தி"- "வ" என்ற பிஞ்சு எழுத்தாகிய சக்தியையும், "சி" என்ற பெருவெழுத்தாகிய சிவனையும் இதயத்தில் வைத்தால். “பேசும் - கொடி"- "வா” என்ற பேசும் எழுத்தாகிய திருவருள் எனும் சக்தி, "சி" என்ற பேசா எழுத்தாகிய சிவத்தினோடு இரண்டறக் கலக்கும்படி செய்து, மோஷம் அளிக்கும் என்று உலகுக்கு உணர்த்தவேண்டி கொடி கட்டினேன்.
இந்தப் பாடலில் ஸ்தூல, ஸ9கூழ்ம, அதி ஸ9கூழ்ம, ஸலிக்ஷஷரீட பஞ்சாஷரங்கள் என்ற நான்கு வகை பஞ்சாட்ஷரங்களையும், அவற்றை உச்சரிக்கும் முறைப்படி உச்சரித்தாற் பெறக்கூடிய பேறு விளக்கப் பட்டது.
நேரிசை வெண்பா
அந்தமலம் அறுத்திங்(கு) ஆன்மாவைக் காட்டி அதற்(கு) அந்த அறிவை அறிவித்(து) அங்(கு) - இந்(த) அறிவை மாறாமல் மாற்றி மருவுசிவப் பேறு என்றும் கூறாமற் கூறக் கொடி,
த்வஜாரோஹண காலத்தில் த்வஜத்தை ப்ரதிஷ்டை செய்யும் சடங்குகளைக் கவனித்தால் த்வஜஸ்தம்ப தத்துவம் வெளிப்படை யாகின்றது. ஆகமங்களின் கூற்றுப்படி த்வஜஸ்தம்பத்தின் அதிதேவதை சிவன். அந்தஸ்தம்பமே சிவனைக்குறிப்பதாகும்.
நெடிதுயர்ந்த கொடிமரம் மூன்று பகுதிகளைக் கொண்டது.
அவையாவன:
1. சதுரமான அடிப்பகுதி(பிரம்ம பாகம்).
2. எண்கோண கட்டிட அமைப்பு (பீடம் அல்லது வேதிகை) விஷ்ணு
LfTölb.
3. வட்டமானநீண்ட மரப்பகுதி(தண்டம்) ருத்ரபாகம்.
த்வஜாரோஹண காலங்களில் த்வஜதண்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு முறையே, அப்பகுதிகளில் ஆத்மதத்துவம், வித்யா
நினைவு மலர் 57

Page 35
தத்துவம், சிவதத்துவம் ஆகியவை மந்திரங்களால் நியாசம் செய்யப்படுவது, இதை ஊர்ஜிதம் செய்கின்றது. த்வஜஸ்தம்பமும் கருவறை லிங்கத்தைப் போலவே ஸ்கல, நிஷ்கல சதாசிவனை அவரு டைய பஞ்சக்ருத்தியங்களைக் குறிக்கும் என்பது இவ்வகையாகப் புலனாகின்றது.
கருவறைச் சிவலிங்கத்தைவிட த்வஜஸ் தம்பம் ஒரு வகையில் வேறுபட்டு நிற்கின்றது. த்வஜஸ்தம்ப தண்டத்தின் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதியாகிய மேற்பகுதி, சிவனின் எல்லையற்ற விஸ்தாரத்தை அடையும் சக்தியைக் குறிப்பதாகும் என்பதே அது.
உடலாக உருவகப்படுத்தப்படும் த்வஜஸ் தம்பத்தின் உச்சியிலுள்ள குவிந்த பகுதியைத் தலையுச்சி எனக்கொள்ளல் வேண்டும் என்கிறது உத்தரகாரண ஆகமம். தண்டம் - முகம், கொடியின் இரு புறக் கயிறுகளும் - இரு கைகள், தர்ப்பைக் கட்டு அல்லது கூர்ச்சம் என்பது சடைமுடி, கொடியின் துணி - தோல், தண்டத்தின் அடியில் உள்ள மேடை - ஐயனின் பீடம், கொடியிற் காணப்படும் ரிஷபம் - மும்மலங் களும் கூடிய ஆத்மா, கொடியை ஏற்ற உபயோகப்படுத்தப்படும் கயிறு - அரனிடமிருந்து பிரியாத திருவருட்சக்தி, கயிறு இல்லாமற் கொடி ஏறாது. அதுபோல, திருவருட் சக்தியின் கருணை யாலல்லாது ஆத்மா உயர்ந்துசென்று சிவத்தின் பக்கத்தை அடைந்து ஞானவெளியில் மகிழ்ந் தாடஇயலாது. த்வஜதண்டத்தைச் சுற்றிக் கட்டப்படும் தர்ப்பைக் கயிறு மும்மலங்களாகிய பாசத்தை முக்கியமாக ஆணவமலத்தைக் குறிக்கும்.
மேற்கூறியவாறு த்வஜஸ்தம்பத்தின் உருவ அமைப்பும், அதில் ஆண்டுதோறும் நிகழும் கொடியேற்ற விழாச் சடங்குகளும், கொடிமரத் திற்கும் கருவறையிலுள்ள மூலலிங்கத்திற்கும் அமைப்பிலும் செயலிலும் உள்ள ஒற்றுமையைக் காட்டுவனவாம். மூலலிங்கத்தின் சூஷ்மம் காரண லிங்கத்தில் தெளிவாகின்றது. த்(து)வஜாரோஹணம் என்னும் நிகழ்ச்சி த்வஜா படத்திலுள்ள ரிஷபம் ஆறு சக்கர வளையங்கள் ஊடே மேலே சென்று அமர்வதுமூலம் பசுக்களான ஆத்மாக்கள் பராசக்தியின் உதவியால் மேலேசென்று உய்வடைவதைக் காட்டுகின்றது.
சைவசித்தாந்தத்தின்படி பசுவான ஆத்மா சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை உபாயங்களால் பாசங்களை விட் டொழிந்து, படிப்படியாக ஸாலோக்கியம், ஸாமீப்யம், ஸாரூப்யம் ஆகிய நிலைகளைக் கடந்து சிவஸாயுஜ்யத்தை அடைவதே மோஷம் அல்லது முக்திநிலை அல்லது சிவப்பேறு எனப்படுகிறது. இதற்கு இன்றியமையாதது தஷை. அந்த வகையிலே கொடியேற்றி
நினைவு மலர்

நிகழ்த்தப்பெறும் மஹோற்சவமே சாம்பவி தீஷை எனப்படுகின்றது. அதாவது பசுக்களான ஜீவர்கள்பால் கருணை கூர்ந்து பதியாம் ஐயனே இறங்கி வந்து அவர்களை உய்விக்கின்றான் என்கின்றன சாத்திரங்கள். தீகூைடி என்ற சடங்கிற்கு பத்துக் க்ரியங்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. மஹோற்சவ காலத்தில் நிகழும் யாகம், வாகன ஊர்வலம்போன்ற பத்து வகைக் கிரியைகள் சாம்பவி தீக்ஷா கிரியைகளே என்கின்றது யோஜதந்த்ரம், யோஜ தந்த்ரமுறை முழுவதுமே த்வஜஸ்தம்பத்தில் அடங்கியுள்ளதாகக் கொள்ளப்படுகின்றது. த்வஜஸ்தம்பமே ஸகூைyடும் நா நாடி, அதன் அடியிலுள்ள பீடம் குண்டலினிஸ்தம்பத்திலுள்ள ஆறு வளையங்கள் இக்குறிப்பீட்டை உறுதிப்படுத்துவன.
பாக்கு மரம், பலாசுமரம், கருங்காலி மரம், அரசமரம், ஆலமரம், சந்தன மரம், சாலவிருக்ஷம் (தேக்குமரம்), இலுப்பைமரம், மாமரம், மூங்கில் இனத்தைச் சார்ந்த மரங்கள், வன்னிமரம், வில்வமரம் ஆகிய மரங்களை த்வஜஸ்தம்பம் செய்ய உபயோகிக்கலாம். (உத்தர காமிக ஆகமம் ஆறாவது படலமான மஹோத்சவ விதிப் படலம்) முற்றாத மரங்கள் (பாலவிருகூடிம்) த்வஜஸ்தம்பம் செய்யப் பயன்படா. தென்னைமரம், பனைமரம், மருதமரம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம் (குமார தந்திரம்). தேவதாருமரம் பயன்படுத்தலாம் (ஸலிப்ரபேத ஆகமம்).
துணைநூல்கள்
1. தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசன் 2. இறையியல் தத்துவமும் வழிபாட்டு முறைகளும் - சிதம்பரம்
திருநாவுக்கரசு 3. "சைவ சித்தாந்தம்” இரத்தின விளக்கம் - சி. இராம. நாகப்பச்
செட்டியார் மெய் கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்தம்) - பூரீமத் மகாலிங்கத் தம்பிரான்சுவாமிகள் (தருமபுர ஆதீனம்) "மஹோற்சவ விளக்கம்” குமாரசாமிக்குருக்கள். "சைவக்கிரிகை விளக்கம்” சைவப்பெரியார்சிவபாதசுந்தரனார்(B.A) "மஹோற்சவ விளக்கம்” சிவத்திரு. சிவபாதசுந்தரக் குருக்கள். "இந்துப்பாரம்பரியம்” கொழும்பு மகளிர் இந்து மன்றம். கும்பாபிஷேகம் - ஆர். பூரீதரன்
4.
நினைவு மலர் 59

Page 36
2. சிவமயம்
விநாயகர்
விநாயகனே வெவ்வினையை வேரனுக்கவல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கசிந்து.
இந்துமதத்தில் உருவ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்து மதத்தில் தெய்வத் திருவுருவங்களைக் கடவுளாகக்கொண்டு கட வுளின் தத்துவரீதியாகிய சின்னங்களை நினைந்து அத்திரு வுருவங்கள்மீது எமது மனத்தை ஒருமுகப்படுத்தி லயிக்கவிட்டு இறை வன் அருள்வேண்டி வணங்குகின்றோம். எமது மனத்தில் விநாயகரோ முருகனோ அம்பிகையோ வைரவரோ எந்தத் தெய்வம் எமது மனதில் பதிந்து அந்தத் தெய்வத்தின்மூலம் நாம் வணங்கும் தன்மையின் படி திருவருள் கிடைக்கிறது. எந்தத் தெய்வத்தை வழிபட்டாலும் இறைவன் அத்தெய்வத்தின்மூலம் எமக்குத் திருவருள் பாலிப்பான். இது ஆத்மீகமான உண்மை. இதையே "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார் தாம் வருவார்" எனும் நூற்றுணிபு விளக்குகிறது. இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உருவவழி பாட்டில் விநாயகர் முதலிடத்தைப் பெறுகிறார். எந்தக் காரியமாக இருந்தாலும் விநாயகரைப் பிரார்த்தித்துச் சங்கல்பம் செய்தே எதனையும் செய்ய ஆரம்பிக்கின்றோம். நாம் எதையும் எழுதத் தொடங்குமுன் பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் தொடங்குகின்றோம். விநாயகரைப் போற்றும் ஆன்மாக்களுக்கெல்லாம் பிறஉயிர்களால் ஏற் படும் இடையூறுகளை விக்கினங்களை நீக்குவதுதான் விநாயகரின் அவதார நோக்கம்.
விநாயகரின் யானைவடிவம் ஒம் காரத்தை நினைவூட்டுகிறது. இவர் ஞானசொரூபி இடைக்குக்கிழே மனிதசொரூபம், இடைக்குமேல் தேவ உருவம் கழுத்தின்மேல் யானையின் உருவம் இது பிரணவத்தை வலியுறுத்துகிறது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களுக்கு அவர் நாயகர் என்பதை ஐந்து கரங்களும் உணர்த்துகின்றது. சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய மூவரும் மூன்று நயனங்களாக அமைந்துள்ளன. அகன்ற இரு செவிகளும் ஆன்மாக்கள் மலவாதனை ஆட்கொள்ளாமல் வினை வெப்பத்தைப் போக்கி அருளக்கூடிய திறன் பெற்றவை. விநாயகர் பெருவயிறு தமது சக்தியால் அண்டங்களையும் உயிர்களையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் அவரது பேராற்றலைக் குறிக்கும். விநாயகரின் நான்கு திருக்கரங்களில்
60 நினைவு மலர்

அமைந்திருக்கும் அங்குசம் ஆன்மாக்களைத் தன் கருணையினால் நல்வழிப்படுத்துவதைக் குறிக்கிறது. பாசம் தீவினையாளர்களைத் துன்பத்திலிருந்து மீட்பதைக் குறிக்கின்றது. தந்தம் கல்வி, திறமை என்பவற்றை உணர்த்துகின்றது. மோதகம் அமிர்தம்போன்ற உணவை யுண்டு உயிர் வாழ்வதைக் குறிக்கிறது. தமது துதிக் கையால் மோதகத் தைத் தொட்டுக் கொணர்டிருப்பது அமிர்தத்தை ஆன்மாக்களுக்கு அள்ளி வழங்குவதைக் குறிக்கின்றது. இவ்வண்ணம் விளங்கும் விநாயகரின்திருவருட்கருணையோ அளவிறந்தது. இந்துமதக் கோட்பாட்டின்படி விநாயகர் இல்லாத இடமே கிடையாது. அரச மரத்தின் கீழுமிருப்பார், ஆற்றங்கரையிலுமிருப்பார், வீடுகளில் மங்கல கருமங்கள் நடைபெறும் போது மஞ்சள் மாவிலோ அல்லது சாணத்திலோ பிள்ளையார் பிடித்து அறுகம்புல்லைச் சாத்திவிட்டால் கணப்பொழுதில் அவ்விடத்திலும் வந்தருளுவார். எமது நாட்டில் விநாயகர் ஆலயமில்லாத இடமே கிடையாது.
வாழ்க வளர்க வணக்கம்
S359 gye-ric
சைவ சமய சாரம்
9 உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று
தொழில்களையும் செய்வதற்குக் கர்த்தா ஒருவர் இருக்கிறார்.
9 அந்தக் கர்த்தாசிவபெருமான். 9 சிவபெருமான் என்றுமுள்ளவர், எங்கும் நிறைந்தவர், என்றும் சுத்தர்,
எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர். 9 சிவபெருமானுக்குத் தேவி அவருடைய சக்தியாகியதிருவருள். 9 சிவபெருமான் ஒருவரே விநாயகர், சுப்பிரமணியர் முதலிய பல
மூர்த்திகளாகிநின்று அருள் செய்வர்.
=====ంce===09
நினைவு மலர் 61

Page 37
fls)ADub விநாயகர் வழிபாடு நாம் எக்கருமங்களைத் தொடங்கும்போதும் அக்கருமங்கள் எதுவித இடையூறுமின்றி வெற்றிபெறுவதன் பொருட்டு முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பே தொடங்குவது தொன்று தொட்டுவரும் வழக்கமாகும். விநாயகப்பெருமானை இந்துக்கள் மட்டுமல்லாது பெளத்தர்கள், ஜைனர்கள் ஆகியோர்களும்
போற்றி வணங்குகின்றார்கள்.
பெளத்த மதம் நன்கு வேரூன்றியுள்ள பர்மா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளிலும் கணபதி வழிபாடு காணப்படுகின்றது. தாய்லாந்து நாட்டில் இரு கரங்களுடன் யானைமுகக் கணபதி மற்றும் சிவலிங்க வழிபாட்டின் சின்னங்கள் "நசொன் சீ தம்ராட்" என்னும் நகரில் காணப்படுகின்றது. வேதகாலத்தில் மஹாபாரதக் கதையை வியாச மஹரிஷி கூற விநாயகர் தனது ஒடித்த தந்தத்தைக் கொண்டு எழுதியதாக வரலாறு கூறுகின்றது. இருக்கு வேதத்திலும் "கணானாம் த்வாம் கணபதிம் ஹவாமஹே" என கணாதிபதின் போற்றப்படுகின்றார். பிரணவம் என்பது ஓங்காரமாகும். உலகத் தோற்றத்திற்கு மூல காரணமாக இந்த ஒங்கார நாதம் விளங்குகின்றது. இந்த ஓங்காரமாகிய பிரணவம் விநாயகர் வடிவமே. என்பதற்கு பிள்ளையார் சுழியே ஆதாரமாகும். உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் தோன்றும்போது ஒங்கார வடிவாகவே படைக்கப்பட்டுப் பின்னர் இருவினைக் கீடாகப் பல்வேறு உயிரினமாகப் பரிணமிக்கின்றது. பூத கணங்கள் அனைத்திற்கும் பதியாக விளங்குவதால் நாம் விநாயகரைக் கணபதி , கணாதிபன், என்று போற்றுகின்றோம். மேலும் அறுவகைச் சமயங்களில் முதலாக "காண பத்தியம்" காணப்படுகின்றது. கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாபத்தியம் என அழைக்கப்படும்.
ஒளவை மூதாட்டியும் தனது மூதுரைக்கான காப்புச் செய்யுளில் பின்வருமாறு கூறியுள்ளார்.
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது- பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு"
விநாயகக் கடவுளைப் பூசித்துப் பக்தியுடன் வழிபடுபவர்கட்கு சகல கலைஞானங்களும், அன்பு அறங்கள், அருள், அறவழியான
2 நினைவு மலர்

நன்நோக்கங்கள், விருப்பும் செயலும், கைகூடிவரும். அஷ்ட ஐஸ்வரியங்களும் இலட்சுமி கடாக்ஷமும் பேறும் கிட்டும். புவன போகங்களும் நோயற்ற நீண்ட வாழ்வும் உண்டாகும் என ஒளவையார் வழி காட்டியுள்ளார். அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரந்தும் வியாபித்து நிற்கும் இறைவனாக விளங்குபவர் விநாயகப்பெருமான். இவ்வாறாக விநாயக வழிபாடு எமது சைவசமய மரபில் வேரூன்றியுள்ளது. இவ்வாறு பல சிறப்புக்களைத் தன்னகத்தேகொண்ட விநாயகர் பார்ப்போர் பரவசங்கொள்ளும் அற்புதமான திருவடிவத்தைத் தாங்கிக் காட்சியளிக்கின்றார். மேலும் விநாயகர் ஞானக்கடவுளாவார் இதன் காரணமாகவே ஒருவருக்கு வித்தியாரம்பம் செய்யும்போது முதலில் விநாயகப்பெருமானை வழிபட்டே செய்வது தொன்றுதொட்ட மரபாக உள்ளது. இற்றைக்கு 6000 வருடங்கட்கு முந்திய திருமந்திரத்தில் திருமூலநாயனார் "நந்தி மகன் தன்னை ஞானக்கொழுந்தினை" எனக் குறிப் பிடப்படும் அடிகள் விநாயகரை அறிவுத் தெய்வமாகக் காட்டப்படுவது ஆழ்ந்து நோக்கத் தக்கதாகும். இவ்வாறு பல்லாண்டு காலமாக நமது மூதாதையர்கட்கும் இரிஷிகள், சித்தர்கள், ஞானவான்கட்கும் இஷ்ட சித்திகளை நல்கி ஆட்கொண்ட விநாயகப்பெருமானது திருவடிகளை நாமும் வணங்கி அவரது அருளுக்குப்பாத்திரராவோமாக. சுபமஸ்து.
"சர்வஜனஹாசுகிநோபவந்து"
୬୪୪ ଗ୍‌d୮ =ത്തന്ത്രഭൂരൂത്ത
சொக்கநாதரின் பல்வேறு பெயர்கள்
கற்பூரசுந்தரர், கடற்பவனசுந்தரர், கலியாண சுந்தரர், அபிராமசுந்தரர், சண்பக சுந்தரர், கத்தூரி சுந்தரர், பழி அஞ்சிய சுந்தரர், மகுடசுந்தரர், ஆலவாய் சுந்தரர், நான்மாடக் கூடல் நாயகர், மதுரபதி வேந்தர், சமட்டி விச்சாபுர வேந்தர், சீவன் முத்திபுரநாதர், பூலோக சிவலோகதிபர், கன்னிபுரீசர், மூலலிங்க நாதர், மூர்த்தி, அபிடேகச் சொக்கர், புமுகு நெய் சொக்கர், கர்ப்பூரச் சொக்கர், அழகிய சொக்கர், கடம்பவனச் சொக்கர், சங்கத் தமிழ்ச் சொக்கர், மதுரைப் பேரால வாயான், இறையனார், சொக்கநாதர்.
-ecoc=-6(23
நினைவு மலர் 63

Page 38
  

Page 39
7.சித்திவிநாயகர்
இவர் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, எள்ளுருண்டை,
பரசு என்பனவற்றைத் தனது ஐந்து கரங்களிலும் தரித்தவரும், பொன்
கலந்த பசுமைநிறமுடையவருமாக விளங்குகின்றார்.
8. உச்சிஷ்டவிநாயகர்
நீலோற்பலம், மாதுளம்பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை இவற்றைத் தரித்தவரும், நீல நிறத்திருமேனி உடையவருமாக விளங்கு பவர். பிறிதொரு நிலையில் இவர் பெண்ணின் யோனியில் துதிக்கையை வைத்தவராக காம மோகிதராகவும், நீலவர்ணம் உடையவராகவும் விளங்குகின்றார். உச்சிஷ்டம் என்பதற்கு ஒருவர் உபயோகித்த பின் ஒதுக்கிய அசுத்தமான பொருள் என்பது கருத்து ஆகும். எச்சில் என்றும் அர்த்தம் உண்டு. சுத்தமான நிலையை மட்டு மன்றி அசுத்தமான நிலையினையும் கடந்து நிற்கும் நிலையே எமது வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அசுத்தமான பொருள்களும் செடி, கொடிகளுக்குப் பசளையாகி எமக்கு நலன் பயக்கின்றது. இவ்வாறு "அழுக்கை அழுக்காகக் கருதக் கூடாது அவையும் நன்மை செய்யும்" என்ற தத்துவத்தை உச்சிஷ்ட விநாயகர் வடிவம் சுட்டி நிற்கின்றது. சிற்றின்பம் தெய்வீக நோக்குடன் அமையும்போது பேரின்பம் பெறப்படும் என் பதும் இத்திருவடிவத்தின்நுண்பொருள் ஆகும்.
9. விக்னவிநாயகர்
சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றோடு கூடிய திருக்கரங்களையுடையவராகவும், ஆபரணங்களை நிரம் பத் தரித்தவராகவும் பொன் மேனியுடையவராகவும் விளங்குகின்றார்.
10. வழிப்ரவிநாயகர்
தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை ஏந்தியவர். செவ்வரத்தம் பூப்போன்ற அழகிய மேனியர். செந்நிற மானவர்.
11. ஹேரம்ரவிநாயகர்
அபயம், வரதமாகிய கைகளையுடையவர். பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் இவற்றைத் தாங்கியவர். சிங்க வாகனத்தில் ஏறியவர். யானைமுகம் ஐந்துடையவர். பசுமை கலந்த கருமை நிறம் உடையவர்.
12. இலட்சுமி விநாயகர்
எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம் பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்கம், வரதம் இவற்றையுடையவர். அமுதப்
6 நினைவு மலர்

பிரவாகம் போன்ற வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப்பூவை ஏந்திய இருபெருந்தேவிமார்களோடு திகழுபவர்.
13. மஹா விநாயகர்
மாதுளம்பழம், கதை, கரும்பு, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோற்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம் இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியவர். செங்கதிர்போன்ற நிறம் உடையவர். முக்கண்ணர், பிறை முடியர். மடிமீது எழுந்தருளியிருக்கிற-தாமரையை ஏந்திய தேவியாற் சுவையோடு தழுவப் பெற்றவர்.
14. விஜய விநாயகர்
பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவைகளைத் தரித்தவர். பெருச்சாளிவாகனத்தில் ஏறியிருப்பவர். செந்நிறமானவர்.
15. நிருத்த விநாயகர்
இவரைக் கூத்தாடும் பரிள்ளையார் என அழைப்பர். மோதிரங்களனிந்த விரல்களையுடைய கைகளால் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் என்பவற்றைத் தரித்தவர். பொன்போன்ற நிறமுடைய திருமேனியர்.
16.ஊர்த்துவ விநாயகர்
நீலப்பூ, நெற்பயிர், தாமரை, கரும்புவில், பாணம், தந்தம்
இவற்றையுடையவர். பொன் வண்ண வண்ணர், பச்சைநிற மேனியோடு
விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர்.
17.ஏகாட்சர விநாயகர்
செந்நிறமானவர். செம்பட்டாடையர். செம்மலர், மாலையர், பிறை முடியர், முக் கண்ணர், குறுந்தாளர், குறுங்கையர், மாதுளம் பழம் பாசம், அங்குசம், வரதம், இவை தாங்கிய கரங்களையுடையவர். யானை முகவர்பது மாசனத்திருப்பவர். பெருச்சாளிவாகனர்.
18. வரவிநாயகர்
செவ் வணிணர், யானைமுகவர், முக் கணிணர், பாசம், அங்குசங்களைத் தரித்தவர். தேன்நிறைந்த கபாலத்தை உடையவர். பிறைமுடியர்.
19. திரயாஷ்ரவிநாயகர்
அ ைசகரினர் ற செவரிகளாகரிய சாமரையணிந்தவர் . பொன்னிறமானவர். நான்கு கரங்களை உடையவர். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத்தாங்கியவர். துதிக்கை நுனியில் மோதகம் உடையவர்.
நினைவு மலர் 67

Page 40
20. வழிப்ரபிரசாதவிநாயகர்
பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளம் பழம், தாமரை, தருப்பை, விடரம் இவற்றை தரித்தவர். திருவாபரணங்களை அணிந்தவர். பேழை வயிற்றையுடையவர்.
21. ஹரித்திராவிநாயகர்
மஞ்சள்நிறமானவர். நான்கு கரங்களை உடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம், இவற்றைத் தரித்திருப்பவர். பக் கட்கு அபயமளிப்பவர்.
22. ஏகதந்த விநாயகர்
பேழைவயிற்றுடன் நீலமேனியர் கோடரி, அட்ச மாலை, லட்டு, தந்தம் இவற்றையுடையவர்.
23. சிருஷ்டிவிநாயகர்
பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர். பெருச்சாளிவாகனத்தையுடையவர் சிவந்த திருமேனியர்.
24. உத்தண்டவிநாயகர் நீலம், தாமரை, மாதுளம்பழம், கதை, தந்தம், கரும்புவில், ரத்ன கலசம், பாசம், நெற்கதிர், மாலை இவற்றையேந்திய பத்துக்கைகளை உடையவர். அழகிய தாமரைப் பூவை ஏந்திய பச்சைமேனியாளாகிய தேவியால் தழுவப் பெற்றவர். சிவந்த மேனியுடையவர்.
25. ரனமோசன விநாயகர்
பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்கு போன்ற மேனியர் செந்நிறப்பட்டாடையுடுத்தியவர்.
26. துண்டிவிநாயகர்
அட்சமாலை, கோடரி, ரத்னகலசம், தத்தம் இவற்றை ஏந்தியவர்.
27. துவிமுக விநாயகர்
தந்தம், பாசம், அங்குசம் ரத்ன பாத்திரம் இவற்றைக் கையில்
ஏந்தியவர். பசுநீலமேனியர் செம்பட்டாடையும் ரத்தின கிரீடமும்
அணிந்தவர். இருமுகம் உடையவர்.
28. மும்முக விநாயகர்
வலதுகைகளில் கூரிய அங்குசம், அட்சயமாலை, வரதம் இவற்றை உடையவர். இடது கைகளில் பாசம், அமுதகலசம் இவற்றை உடையவர். பொற்றாமரையாசனத்தின் நடுப் பொகுட்டில் மூன்று முகங்களோடு எழுந்தருளியிருப்பவர். புரசம் பூப்போன்ற சிவந்த நிறம் உடையவர்.
நினைவு மலர்

29. சிங்க விநாயகர்
வீணை, கற்பகக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, ரத்னகலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளையுடையவர். வெண்ணிறமான மேனியர், யானைமுகர், சிங்கவாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.
30. யோக விநாயகர்
யோக நிலையில், யோக பட்டம் தரித்துக் கொண்டு, இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இந்திரநீலம் போன்ற ஆடையை உடுத்திக் கொண்டு, பாசம் அட்சமாலை, யோகதண்டம், கரும்பு இவற்றை ஏந்தி இருப்பவர்.
31. துர்க்காவிநாயகர்
சுட்ட பசும்பொன்னிறம், எட்டுக்கை, பெரியமேனி, அங்குசம், பாணம், அட்ச மாலை, தந்தம் இவைகளை வலது கைகளில் ஏந்தியவர். பாசம், வில், கொடி நாவற்பழம் இவைகளை இடது கைகளில் உடையவர். செந்நிற ஆடையர்.
32. சங்கடஹர விநாயகர்
இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இடப்பக்கத் தொடையில் சக்தியை உடையவராக விளங்குகின்றார். சக்தி பசியமேனியளாக நீலப்பூவினை ஏந்தியவளாக இருப்பாள். வலதுகையில் அங்குசம், வரதம் உடையவர். இடது கையில் பாசம், பாயச பாத்திரம் ஏந்தியவர். செந்தாமரைப் பீடத்தில் நிற்பவர். நீலநிறமான ஆடையணிந்தவர்.
மேலே காட்டப்பட்டுள்ள விநாயகரின் திருவடிவங்களை நோக்கும்போது அவர் பொதுவாக யானை முகம்கொண்டவராகவும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து என்ற எண்ணிக்கை உடைய திருமுகங்களை உடையவராகவும், நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினாறு என்ற திருக்கரங்களைக் கொண்டவராகவும், அவற்றில் வெவ்வேறு ஆயுதங்களைத் தரித்துள்ளவராகவும், செம்மை, வெண்மை, மஞ்சள், கருநீலம், நீலம் ஆகிய நிறங்களை உடையவராகவும், தேவி அற்ற திருமேனியராகவும், ஒரு தேவியை உடையவராகவும், இரு தேவியர்களுடன் விளங்குபவராகவும், எலி, சிங்கம் ஆகிய வாகனத்தில் எழுந்தருளியிருப்பவராகவும் விளங்குகின்ற தத்துவ நிலை தெரியவருகிறது. மேலும் விநாயகர் படிமங்கள் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், ஆடற்கோலத்திலும் அமையும் மெய்மையும் புலப்படுகின்றது. நின்ற கோலத்தில் இயற்றும்போது ஆபங்கம் அல்லது சமபங்கத்தில் விநாயகரின் படிமம் அமைதல் வேண்டும். அமர்ந்த
நினைவு மலர் 69

Page 41
கோலத்தில் அமைக்கும்போது உடலையும் தலையினையும் நேரியதாக அமைத்து வலது காலை ஆசனத்தில் தொடையுடன் சேர்த்து மடக்கி ஊன்றி இடது காலைக் கிடத்தியதாயிருத்தல் வேண்டும். இல்லங்களில் வைத்து வழிபடுவதற்கும். கோயில்களில் பிரதிட்டை செய்வதற்கும் அமர்ந்த விநாயகர் கோலப்படிமமே ஏற்றதாகும். உற்வசங்களுக்கு அமர்ந்த கோலம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும் நின்ற கோலமுடைய விநாயகரேவிஷேடமென்பது தத்துவமாகும்.
விநாயகரின்திருவுருவத்தத்துவம்
விநாயகர் திருவுருவத்தின் தத்துவ நிலை பரமரகசியமானதாகும். அவரின் தத்துவத்தையும் அவரின் வீரதரச் செயல்களின் உட்பொருளையும் சிறப்பாகப் புலப்படுத்துவது "விநாயக புராணம்” ஆகும். ஒளவையார் பாடியருளிய "விநாயகர் அகவல்" விநாயகர் உருவம் பற்றியும் அவ்வுருவம் சுட்டும் தத்துவப் பொருளையும் விளக்கி நிற்கும் சைவத்தமிழ் இலக்கியமாகும். இவ்விலக்கியத்தில் விநாயகரின் திருவுருவத்தில் சிலம்பு அணிந்து விளங்கும் திருவடிகள். பொன்னால் செய்யப்பட்ட இடைக்கொடி, பெருவயிறு, ஒற்றைக்கொம்பு, சிவந்த குங்குமப் பொட்டு, ஐந்து கரங்கள், அங்குசமும் பாசமும் தரித்த கைகள், நீலமேனி, பெரியவாய், நான்கு திருத்தோள்கள், சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று திருக்கண்கள் கன்னமதம், கைம்மதம், கோசமதம் என்னும் மதங்களைப் பொழிதலால் உண்டாகும் தழும்புகள் இரண்டு பெரிய காதுகள், பொன்னால் செய்யப்பட்ட கிரீடம், திரண்டு மூன்று வடமாக விளங்கும் பூணுரல், பெருச்சாளி வாகனம் என்பன திகழ்வதையும் அவர் சொல்லும், பொருளும் கடந்த தத்துவப் பொருளாக விளங்குவதையும் தன் அடியவர்களுக்கும் தமது தத்துவப் பெருநிலையைக் கொடுத்து ஆட்கொள்ளும் பேரருட் திறத்தையும் தத்துவார்த்த ரீதியாக விளக்குகின்றது. இதனை ஒளவையார் விநாயகர் அகவலில்
"சீதக் களபச் செந்தா மாரைப்பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிருபுயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
70 நினைவு மலர்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக்களிறே முப்பழம் நுகரும் மூசிக வாகன தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயகர் விரைகழல் சரணே"
என்று குறிப்பிடுவதனால் அறியலாம். திருமூலரும் விநாயகரின் திருவுருவத்தை "ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற் றனை” என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார். அருணந்திசிவாசாரியரும் விநாயகரின் திருவுருவத் தத்துவத்தை,
"ஒரு கோட்டன் இரு செவியன் மும்மதத்தனி நால்வாய்ஐங் கரத்தனி ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையானி
தரும் ஒருவாரணத்தின் தாள்கள்”
என்று மொழிவர். விநாயகர் தனது திருக்கையொன்றில் மோதகம் ஏந்தி விளங்குவதை ஆதிசங்கரர் தனது கணேசபஞ்சரத்தின் முதற் பாடலில் "முதாகராத்த மோதகம்" என்று சுட்டுவதால் அறிய முடிகின்றது.
விநாயகரின் திருவுருவ உறுப்புக்கள் உணர்த்தும் மறைஞான தத்துவப் பொருளை இங்கு நோக்குவோம்.
ஐந்து காங்கள்
விநாயகர் நான்கு கரங்களுடன்தும்பிக் கையையும் சேர்த்து ஐந்து கரங்கள் உடையவராக விளங்குகிறார். பாசம் தரித்துள்ள கரம் படைத்தற் றொழிலைக் குறிக்கின்றது. அங்குசம் ஏந்திய கரம் அவரின் அழித்தற்றொழிலை அறிவிக்கின்றது. உயிர்களுக்கு அபயம் அளித்துக் காக்கும் அபயகரம் அவரின் காத்தற்றொழிலைச் சுட்டி நிற்கின்றது. மோதகம் ஏந்தி நிற்கும் வலது கரம் உயிர்களுக்கு அருள்புரியும் அருளற் றொழிலைப் புலப்படுத்துகின்றது.
தும்பிக்கை எனப்படும் துதிக்கை உறு உணர்ச்சி, மணம் அறிதல், உணவை எடுத்தல் என்ற முத்திறங்களை உடையது. அத்துதிக்கை காட்டியும் மறைத்தும் நிற்கும் திரோதானம் ஆகிய மறைப்புத்தொழிலை உணர்த்தி நிற்கின்றது. இங்ங்ணம் விநாயகரின் ஐந்து திருக்கரங்களும் படைத்தல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என்ற ஐந்து தொழிலுக்கும் அவரே அதிபதி என்பதையும், இதனால் அவர் அளவில்
நினைவு மலர் 7

Page 42
ஆற்றல் உடையவராக விளங்குகின்றார் என்பதை யும் உணர்த்தி நிற்கின்றன.
யானைமுகம்
விநாயகர் யானைமுகம் உடையவராக விளங்குவது, அவரே "ஓம்" என்ற பிரணவப் பொருள் என்பதைச் சுட்டி நிற்கின்றது. அவர் ஒங்கார வடிவினன் என்பது, அவரின் அட்டோத்திர சத நாமங்களில் "ஒங் காராய நம” என்று அவர் துதிக்கப்படுவதனால் உணரலாம். யானைக்கு நினைவு வன்மை, காண்டல், கேட்டல், ஊறு, ஒன்றையும் ஒரு காலத்தும் மறவாமை, மிக்க வலிவு உடைமை, அளப்பரும் சாந்தமுடைமை, இதம் செய்பவர்களுக்கு வசமாய் உதவுவது ஆகிய இவை அருங்குணங்களாக உள்ளன. அதனாலேயே இக்குணங்களெல்லாம் ஒருங்கே அமைந்த விநாயகருக்கு யானைமுகம் அமைந்து விளங்குகின்றது.
கொம்புகள்
விநாயகரின் திருமுகத்தை நோக்கும் போது ஒரு பக்கம் யானைத் தந்தமாகிய கொம்பு காணப்படுகின்றது. இது ஆண்வடிவின் அடை யாளமாகும் . மறுபக்கம் யானைத் தந்தமாகிய கொம் பு காணப்படவில்லை. இந்நிலை பெண் வடிவைச் சுட்டி நிற்கின்றது. இந்நிலையானது விநாயகர் ஆண்பாலா பெண்பாலா என்று கேட்பவர்களுக்கு அவர் எப்பாலுங்கடந்த அப்பாலுக்கப்பாலாய் நிற்கும் இயல்பினர் என்ற தத்துவத்தை உணர்த்தி நிற்கின்றது. ஒடிந்த கொம்பு அபரஞானமாகிய விந்துவைக் குறிக்கும். மற்றைய ஒற்றைக்கொம்பு இறைவனை உணர்வதற்கு வாயிலாகவுள்ள பரஞானத்தைச் சுட்டிநிற் கின்றது. விநாயகரின் திருவுருவத்தில் காணப்படும் கொம்புகளைப் பதிஞானம், பாசஞானம் என்று கூறுதலும் உண்டு. வலது கொம்பாக விளங்கும் ஒடிக்கப்பெற்ற கொம்பு பாசஞானம் ஆகும். பாசஞானம், உணர்வரிய கலைஞானமாகிய சிவஞானத்திற்கு வாயிலாக விளங்கும் தன்மையது ஆகும். அதன் காரணமாகவே அது பாரதம் எழுத உதவிய எழுத் தாணியாக உதவியது. இடதுகொம்பு பதிஞானத்தைச் சுட்டி நிற்கின்றது. அதனாலேயே அது விநாயகரைப் பொருந்திப் பிரிவின்றி இருக்கின்றது.
மூன்று கண்கள்
சூரியன் சந்திரன், அக்கினி என்ற முச்சுடர் களையும் கண்களைக் கொண்டு அவற்றிற்கு ஒளியைக் கொடுத்து நிற்பவர் விநாயகர் என்ற தத்துவத்தை அவரின் மூன்று கண்கள் சுட்டி நிற்கின்றன. பகலில் சூரியன் என்ற கண்ணாலும், இரவில் சந்திரன் என்ற கண்ணாலும், அக்கினி என்ற
72 நினைவு மலர்

கண்ணால் எந்நேரமும் அறியும் ஆற்றல் உடையவர் என்பதே விநாயகரின்மூன்று கண்கள் புலப்படுத்தும் தத்துவமாகும்.
மும்மதம்
விநாயகர் அறிவு, இச்சை தொழில் என்ற மூன்றும் உடையவர் என்பது மும்மதம் என்ற சொல்லால் சுட்டப்படும். உவமையிலாக்கலை ஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம் திருப் பெருகுசிவஞானம் என்ற மூன்று ஞானங்களும் மும்மதங்களாக சுட்டப் பெறுவதில் உண்டு. இத னடிப்படையில் இந்த மூன்று ஞானங்களையும் உணர்த்துகின்றவர் விநாயகர் என்பதே மும்மதம் என்பதன் தத்துவப் பொருளாகும்.
பெருவயிறு
விநாயகரின் பெரு வயிறானது (பேழை வயிறு) எல்லா உலகங்களும் தம்முள் அடங்கியுள்ளன என்ற தத்துவத்தைச் சுட்டி நிற்கின்றது.
பாம்பாபரணம்
விநாயகர் பாம்பை ஆபரணமாக அணிந்து விளங்குவது அவரின் திருவுருவத்தில் குண்டலினி சக்தியின் தரிசனத்தைக் காட்டி நிற்கின்றது. பாம்பு குண்டலினி சத்தியின் குறியீடாக விளங்குவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இங்கு “இருத்தியே நாகரூபம்" என்று குறிப்பிடுவது நோக்குதற்குரியது. இருத்தி என்பதற்கு நல்ல செல்வம், ஐஸ்வரியம், மேலாந்தன்மை என்பது பொருளாகும். இதனடிப்படையில் நோக்கும் போது இவைகளை உடையவர் விநாயகர் என்பது மட்டுமன்றி அடியவர்களுக்கு அவற்றைத் தருபவர் விநாயகர் என்பதையும் அவர் அணிந்துள்ள பாம்பாபரணம் புலப்படுத்துகின்றது. விநாயகரின் பூணுரலும், அரைநாணும் பாம்பாகவும் விளங்குவது உண்டு.
பிறை
விநாயகர் பிறை சூடியிருப்பது, அறியாமை அகன்று மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்ற உயிர்களை உயர்நிலைக்கு உயர்த்தி உய்விப்பவர் என்பதையும், அவர் ஞானமே வடிவினர் என்பதையும் உணர்த்துகின்றது.
பூனூல்
விநாயகர் பூணுால் அணிந்துள்ளமை, அவர் பிரம்மஞான உபதேசத்திற்குரிய பிரம்ம ஞானி என்பதையும், அவர் முப்புரிநூல் தரித் துள்ளமையானது பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற முப்பெரும் கடவுளர்களும் அவருள் உறைகின்றனர் என்ற பெரும் தத்துவத்தையும்
நினைவு மலர் 73

Page 43
சுட்டி நிற்கின்றது. எங்கும் நிறைந்த அக்கினி வடிவானவர் என்பதையும் சுட்டி நிற்கின்றது.
மோதகம்
விநாயகர் மோதகம் ஏந்திய திருக்கையானது அனைத்து உலகங்களும், அவ்வுலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் விநாய கரிடத்தில் அடங்கியுள்ளன என்பதை உணர்த்துகின்றது. மோதகம் பூரணப் பொருளின் ஒர் அடையாளமாகும். மேலும் அடியார்கள் பசு ஞானத்தைக் கவளமாக மோதக வடிவில் படைக்கின்றனர் என்பதையும் அவர அதை உண்டு தமது பேழை வயிற்றைத் திறந்து சிவஞானத்தை அவர்களுக்கு வழங்குகிறார் என்பதையும் உணர்த்தவே கவள உணவாகிய மோதகத்தை அவர் கையில் கொண்டு காட்சி தருகின்றார் என்பது தத்துவமாகும். மேலும் விநாயகரின் திருக்கரத்தில் காணப்படும் மோதகம் அவருக்கு மோதகம் மீதுள்ள விருப்பத்தைப் புலப்படுத்துகின் றது. அவருக்கு மோதகம் படைத்து வழிபட்டால் அவ்வடியார்களுக்கு அவர் பேரின்பமாகிய முக்திப் பேற்றினைக் கொடுப்பார் என்பதை உணர்த்தவே ஆதி சங்கரர் தனது கணேச பஞ்சரத் தினத்தில் நுட்பமாக "முதாக ராத்த மோதகம் ஸதாவி முத்தி சாதகம்” என்று அவரைப் பாடியுள்ளார் எனலாம்.
திருத்தாள்கள்
விநாயகரின் திருவுருவமும் திருத்தாள்களும் ஞானத்தின் அடையாளங்களாகும். விநாயகர் ஞானக் குழந்தையாக விளங்குவதை "ஞானக்கொழுந்து" என்ற திருமந்திரக் குறிப்பால் அறிய முடிகின்றது. சிவபெருமானை ஞானத் திருவுருவாகக் காட்டும் குமரகுருபர அடிகள் அவரின் திருவடிகளும் ஞானம் என்பதைச் சுட்ட "ஞானம் திருவடி" என்றே குறிப்பிடுகின்றார். தத்துவ நோக்கில் உயிர்களைப் பற்றி நிற்கும் மும்மலங்களை இயக்கி அருமையின்பத்தை அளிப்பது ஞானமாகும். இந்த ஞானம் ஏற்பட்டதும் உயிர்கள் விளக்கம் பெறுகின்றன என்பது சைவ தத்துவ முடிவாகும். இவ்வகையில் உயிர்களை உய்வித்து அவ்வுயிர்களுக்குப் பேரின்பப் பேற்றை அளிக்கும் சித்தாந்த சைவ தத்துவத்தைச் சுட்டி நிற்பதாக விநாயகரின் திருத்தாள்கள் விளங்குகின்றன.
விநாயகர் ஏந்தியுள்ள ஆயுதங்களின் தத்துவம்
விநாயகர் பிரணவ தத்துவ வடிவமாவார். அவர் தமது திருக்கரங்களில் பல வகையான ஆயுதங்களை ஏந்தியவராக விளங்குகிறார். அவ் வாயுதங்கள் நல்லவர்களைக் காப்பாற்றவும், தீயவர்களை அழிக்கவும், தம்மை வழிபடுகின்ற அடியவர்களின்
74 நினைவு மலர்

இடையூறுகளைப் போக்கவும் பயன்பட்டதை விநாயகரின் தெய்வீக வரலாறு பற்றிய கதைகள் நன்கு புலப்படுத்துகின்றன.
தனது அடியவர்களுக்கு ஆன்மீக அழகுப் பொருட்களாகவும், அபயம் அளிக்கும் கருவிகளாகவும் காட்சியளிக்கும் அவ்வாயுதங்கள் தீயவர்களுக்கு அச்சத்தைக் கொடுப்பனவாகவும் விளங்குகின்றன. விநாயகர் தனது திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஆயுதங்களைக் கூர்ந்து நோக்கினால், அவர் வாழ்வில் வெற்றியீட்டித் தரும் வீரம்மிகு கடவுளாக விளங்குவது புலப்படுகின்றது. விநாயகர் தனது திருக்கரங்களில் ஏந்தி நிற்கும் ஆயுதங்கள் அவர் ஒரு வெற்றித் தெய்வம் என்ற விநாயக தத்துவத்தைப் புலப்படுத்துகின்றது. விநாயகர் தனது திருக்கரங்களில் ஏந்தி நிற்கும் ஆயுதங்கள் சுட்டும் தத்துவப்பொருளை ஈண்டு நோக்கு வோம்.
IIIJFub
இது விநாயகருக்குரிய சிறப்பான ஒரு போர்க் கருவியாகும். கயிறு என்றும். இதனை வழங்குவர். தீயவர்களின் கை கால்களைக் கட்ட இது பயன்படுகின்றது. இது மூன்று வடமாகவுள்ள கயிற்றை வளைத்துப் பிடித்த அமைப்பாகும். எளிதில் அவிழக்கூடிய முடிச்சாக முறுக்கி இதனை அமைப்பர். சுருக்கு இடாமல் வளையமாகவும் இது அமைதல் உண்டு. விநாயகருக்குச் சிறப்பான ஆயுதமாக அமையும் நாகமே, பாசமாக அமைவதும் உண்டு. இதனை "நாக பாசம்” என்பர். இது நான்கு வகைப்படும். யானையைப் பாசத்தால் கட்டுவதுபோல் ஆன்மாக்களின் ஆணவமலத்தைக் கட்டி, அதனை வலிகுன்றச் செய்ய உதவும் கருவி பாசம் ஆகும். மூன்று வடமாகவுள்ள பாசக் கயிறு "பாசத்திரவியம்” என்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களைக் குறிக்கும். விநாயகர் உயிர்களுக்குப் போகங்களைக் கொடுத்து, அதனோடு கட்டுண்டிருக்கச் செய்யும் கருத்தைப் பாசம் என்ற கயிறு சுட்டுகின்றது. பாசமாகிய பற்று அறுத்தலையும் பாசம் என்பது புலப்படுத்துகின்றது.
அங்குசம்
விநாயகர் தாங்கியிருக்கும் சிறந்த கருவிகளில் அங்குசமும் ஒன்றாகும். இது யானையை அடக்கப் பயன்படுகிறது. யானைப்பாகன் இதனை யானையின் காதிலே மாட்டித் தொங்க விட்டிருப்பான். உயிர்களைப் பாதிப்படையச் செய்யும் ஆணவமலத்தை பாசக்கயிற்றால் கட்டி அங்குசத்தில் அதனை அடக்கி மறைத்தல் என்னும் அருளைப் புரிபவர் விநாயகர் என்பதை அங்குசம் என்ற கருவி உணர்த்துகின்றது. இது வயப்படாத பொருளை வயப்படுத்தும் ஆயுதமாகும். இது
நினைவு மலர் 75

Page 44
உயிர்களின் சித்த மலமாகிய ஆணவத்தை அடக்கி இறுதியில் உயிர்களைத் தன்வயப்படுத்துதலை உணர்த்தும் தத்துவத்தைச் சுட்டுகின்றது.
தந்தம்
இது ஒடிந்த யானைக் கொம்பு ஆகும். வேதவியாசர்
மகாபாரதத்தை எடுத்துரைத்த போது, அந்த இதிகாசம் அழியாது அதனை அனைவரும் படித்துப் பயன் பெறும் பொருட்டு விநாயகர் தமது தந்தங்களில் ஒன்றை ஒடித்து அதையே எழுத்தாணியாகக் கொண்டு எழுதி வைத்தார். அந்த எழுத்தாணியே அவரது திருக்கரத்தில் விளங்கும் ஒடிந்த ஒற்றைக் கொம்பாகிய தந்தம் என்பதன் விளக்கம் ஆகும். இக்கொம்பானது "எழுத்தறிவித்தவன் விநாயகரே" என்ற விநாயக கல்வித்தத்துவத்தைச்சுட்டிநிற்கின்றது.
மேலும் விநாயகர் தந்தத்தைக் கையில் வைத்திருப்பது பிறிதொரு தத்துவ விளக்கத்தையும் தருகின்றது. ஓர் அசுரன் தனக்கு எந்த ஆயுதத்தினாலும் மரணம் நேரக் கூடாது என்ற வரத் தைப் பெற்றிருந்தான். வரம்பெற்ற காரணத்தினால் நல்லவர்களுக்கெல்லாம் சொல்லொண்ணாத் துயர் விளைவித்தான். ஆயுதப் பிரயோகம் இன்றி அக்கொடிய அசுரனைக் கொல்வதெப்படி என்று தேவர்களெல்லாம் அஞ்சி நின்ற வேளையில் விநாயகர் தமது தந்தங்களில் ஒன்றை முறித்து அதனால் அசுரனைக் கொன்ற தத்துவப் பொருளை நினைவுபடுத்துவ தாகவும், அவர் திருக்கரத்தில் திகழும் ஒடிந்த கொம்பாகிய தந்தம் விளங்குகின்றது.
வேதாளம்
அச்சமும் அருவெறுப்பும் தரத்தக்க தசைநாரில்லாத பூதவடிவாக
இது விளங்குகிறது. பகைவர்களை விழுங்கச் செய்ய இது ஏவப்படும். வீர
விநாயகரின் ஒரு கரத்தில் இது இருக்கிறது.
சக்தி
இதனை வேலாயுதம் என்பர். இது முருகனுக்கும் சிறப்பாக அமைந்த ஓர் ஆயுதம் ஆகும். ஆறு கூரிய பகுதிகளை உடையது. தகட்டு வடிவானது விநாயகர் வீர கணபதியாக விளங்கும் போது இதனைத் தாங்கியிருப்பார். இது எதிரியை எறிந்து அழிக்க உதவும் ஒரு போர்க்கருவியாகும். இதனை நடுவில் பிடித்து எறியலாம். இரு பக்கமுங் குத்தும் இயல்பு இவ்வாயுதத்திற்கு உண்டு. இவ்வாயுதம், மூன்று சாய் சதுரங்களின் சோடிகள் ஒன்றோடொன்று நெருங்கியிருக்குமாறும் வரிசையாகவும் அமையப் பெற்று அப்பகுதி ஒரு தண்டத்தின் நுனியில் பொருத்தப்பட்ட நிலையிலும் அமையலாம். இதன் மேற்பகுதி
நினைவு மலர்

இச்சாசக்தியையும், நடுப்பகுதி ஞானசக்தியையும், கீழ்ப்பகுதி கிரியா சக்தியையும் குறிக்கும். இதனடிப்படையில் நோக்கும் போது இச்சை கிரியை, ஞானம் ஆகியமூன்று சக்திகளும் விநாயகருள் அடங்கும் என்பது இவ்வாயுதத்தின் தத்துவப் பொருளாகும்.
அம்பு
இது வில்லை வளைத்து அதில் வைத்து எய்யப்பெறுங் கருவி, நுனி கூரியமுள்போன்றது. நுனி மட்டும் இரும்பாலானது. நுனியை ஒரு கழியிற் செருகியிருப்பார்கள். அதனது வால்ப்பக்கத்தில் கழுகின் இறகுகளையும், மற்றப் பறவை இறகுகளையும் கட்டியிருப்பார்கள். பெரும் பாலும் கழுகிறகே இதற்குப் பயன்படும். விரைந்து காற்றை ஊடுருவிச்செல்வதற்காகவே இறகுகட்டப்படுகின்றது.
வில்
இது அம்பு எய்யப் பயன்படுவது. மூங்கில், சிலையென்னும் மரம் முதலான வளையக்கூடிய நார் மரத்தால் செய்யப்பெறுவது. இந்த வில்லில் தோல் அல்லது நார்க் கயிற்றானி என்ற நாண் கட்டப் பெற்றிருக்கும். வில்லை வளைத்து நாணை இறுகக் கட்டி அதன் நடுவில் அம்பை வைத்துவிடுவது வழக்கம். எவ்வளவுக்கெவ்வளவு வில்லின் வலிமையும் நாணின் உறுதியும், இழுத்து விடுபவனின் வன்மையும் இருக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு அம்பின் வேகமும், தைக்கும் வன்மையும் மிகும். அம்பு பட்டவுடன் இறப்பதற்காக அதன் நுனியில் விஷம் தேய்த்து வைத்தலும் வழக்கம். அம்பின் நுனி பிறைமதிபோலக் கவர்பட்டதாகவும் இருக்கும். இதற்குப்பிறையம்பு என்று பெயர்.
சக்கரம்
இது விநாயகருக்கும் விஷ்ணுவுக்கும் உரிய சிறப்பான ஆயுதம் ஆகும். விஷ்ணுவின் சக்கரத்திற்குச் "சுதர்சனம்" என்று பெயர். இதன் அமைப்பு அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. அதில் இருவகையுண்டு. ஒன்று தேருருளை போன்றது. மற்றது வளையம் போன்றது. இது வட்ட வடிவமாகவும், நான்கு திசைகளில் திச்சுடர்களைக் கொண்டதாகவும் விளங்கும் சக்கரம் தர்மத்தின் அடையாளம் ஆகும்.
கத்தி
இது இன்று அறவே மறந்துபோன ஒரு கருவி. தலைப்பகுதி குண்டாகத் தடித்துள்ள நீளக்கழியிற் கோக்கப்பெற்றுள்ள கருவி. இதுவும் பகைவரை அடிக்கப் பயன்படுவது. தலைப் பக்கம் ஒரு மண்டை ஒடு போலவும் கம்பரி முழங் கால எலும் பாகவுங் கூட அமைந்திருப்பதுண்டு. இதனைக்குத்துக்கத்தியாகிய பிச்சுவா என்பாரும்
GIT.
நினைவு மலர் 7

Page 45
BasLuib
இது கத்தி வெட்டைத் தடுப்பதற்காகப் பயன்படுவது. பலகையானாலும், வலுவுள்ள காட்டெருமை, கடமா, நீர்யானை, காண்டாமிருகம் இவற்றின் தோலாலும் செய்யப்பெறும். சதுரம், நீள்சதுரம், வட்டம், முக்கோணம் முதலிய பலவடிவங்களிற் செய்யப்பெறும். இன்னல், இடையூறுகள் என்பவற்றைத் தடுத்து நிறுத்தும் கேடயம் என்ற கருவி தர்மத்தின் ஒர் அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.
சம்மட்டி
இது இரும்பாலியன்ற கணத்த தலைப் பகுதியை உடையது. இதன் நடுவில் தொளையிடப் பெற்றிருக்கும். இதில் கைபிடிக்கும் சிறு கழியைக் கோத்திருப்பார்கள். இதுவும் உடைய வன் கையைவிட்டு அகலாதபடி எதிரியை அடித்துத் தாக்கப் பயன்படுத்தப்பெறும்.
கதை
குண்டாந்தடி, இதில் பலவகைகள் காலாந் தரத்தில் ஏற்பட்டன. பகைவர்களை அடித்து நொருக்கப் பயன்படுவது. கையைவிட்டு அகலாத படி, காவலாக இருந்து, உடையவனைப் பாதுகாப்பது.
நாகபாசம்
பாசவகைகளுள் "நாகபாசம்” என்பதும் ஒன்றாகும்.
discoLD
இது மூன்று நுனிகளையுடையது. விநாயகர் தரித்திருக்கும் இவ்வாயுதம் சிவபெருமானுக்கும் சிறப்பாக உரியது. கரைவரையிலும் எஃகு இரும்பாற் செய்யப் பெற்றது. நீளமான மரக்கம்பிற் கோக்கப் பெற்றிருக்கும். இதனை மூவிலை, நெடுவேல், முத்தலைவேல் என்றும் கூறுவர். இதன் மூன்று நுனிகளும் ஆரணி, ஜெனனி ரோதயித்ரி என்ற முச் சக்திகளைக் குறிக்கும். ஜெனனி ஆக் கலையும், ஆரணி அழித்தலையும், ரோதயித்ரி காத்தலையும் குறிக்கும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற மும்மூர்த்திகளையும், சாத்துவிகம், ராஜசம், தாமசம், என்ற முக்குணங்களையும் சுட்டி உணர்த்துவதாகவும் இவ்வாயுதம் திகழ்கின்றது.
குந்தாலி
இன்று, வன்மையான நிலப் பாறைகளை உடைக் கப்
பயன் பெறும். தலைக் கனத்துக்குரிய நுனியோடு இருக்கும்.
இரும்பானியன்ற கருவி இது. இதில் பல வகைகள் உண்டு.
78 நினைவு மலர்

DUP
இன்று மரங்களை வெட்டப் பயன் பெறுவதாக எறியென்னும் பெயருடன் வழங்குகின்றது. மிகக் கூர்மையானது "வாய்ச்சி” என்னும் மரஞ்செதுக்கும் கருவியினின்றும் முற்றிலும் வேறுபட்டது. தீப்பிழம்பு என்பதும் உண்டு. சிவபெருமானுக்கு விருப்பமான கருவி. விநாயகரின் சத்தியம் என்ற உயர்குணத்தைச் சுட்டும் கருவி மழு ஆகும்.
GläБПр
கொடி வெற்றிக்கு ஒர் அடையாளம் ஆகும். துணியாலியன்றது, அடையாளம் எழுதப் பெற்றது. இதனையும் விநாயகப் பெருமான் தமது திருக்கையில்தாங்கியிருக்கின்றார்.
தண்டம்
இது நீளமான கைத்தடி ஆகும். மரத்தாலானது, மரணத்தையும் தண்டனையையும் இது சுட்டிக்காட்டுகின்றது.
கமண்டலம்
நீர் வைத்துள்ள கலம். ஒரு மரத்தின் காயால் உண்டானது. முனிவர்கள், அந்தணர்கள் தங்கள் நாட்கடன்களைக் கழிப்பதற்காக அதனை வைத்திருப்பார்கள். இது ஆயுதமாக இல்லா விட்டாலும், திருவுரு நிலையை அறிந்த கொள்ள உதவும் கருவி ஆகும். பரந்த ஞானம் தம்முள்நிறைந்தவர் என்பதைக் கமண்டலம் சுட்டி நிற்கின்றது.
UDTöir
இது சற்றேறக்குறைய மழுப்போன்ற கருவி ஆகும். ஆனாலும் மழுவின்வாய் சதுரமாக இருக்கும். இதன்வாய் சற்று வளைந்து கூரியதாக இருக்கும். இதுவும் காம்பில் செறிக்கப்பெற்றுப் பயன்படுத்தப்பெறும் கருவியாகும். விநாயகரின் சத்திய குணத்திற்கு இது ஒர் அடையாளமாகும்.
கரும்புவில்
கரும்பால் செய்யப்பெற்ற வில். இது மன்மதனுக்குரிய சிறப்பான
கருவி. யோகியாக இருக்கும் மற்றைய தெய்வங்களும், காமேஸ்வரி
யாகிய காமாட்சியும் இதனைத்தாங்கியிருப்பர்.
சங்கு
இது விநாயகருக்கு மட்டுமன்றி விஷ்ணுவுக்கும் சிறந்த ஆயுதம் ஆகும். இது வெற்றியை அளிக்கும் கருவியாகும். பகைவர்கள் இதன் ஒலி கேட்டதுமே ஒடுங்குவர். இது ஒர் அச்சக் கருவியாகும். இதிலும் பல வடிவங்கள் உள்ளன. சங்கு வலம் சுழித்ததாகவோ இடம் சுழித்ததாகவோ
நினைவு மலர் 79

Page 46
இருக்கலாம். சங்கிலிருந்து விநாயகரின் வடிவத்தைச் சுட்டும் ஓங்கார ஒலி எழும்புவதால் இது ஆக்கல் தொழிலைக் குறிக்கும் தத்துவச் சின்னத்தின் குறியீடு எனலாம்.
புஷ்பபாணம்
இது தாமரை, அசோகு, மா, முல்லை, நீலம் என்ற ஐந்து பூக்களால் இயன்ற பாணம் ஆகும். இவற்றை மன்மதன் மக்களிடத்தில் காம நினைப்பூட்ட எய்வன். இதனைப் போக நிலையில் மற்றத் தெய்வங்களும் தாங்குவதுண்டு. காமத்தை எரிப்பவர் என்பது புஷ்ப பாணத்தின்நுண்பொருள் ஆகும்.
(335i Lif
மரம் பிளக்கப் பயன்படும் கருவியைப் போன்று பகைவரின் உடலைப் பிளக்க இது பயன்படும். இக்கருவி இரும்பால் ஆனது.
அட்சமாலை
இது உருத்திரா அட்சமாலை ஆகும். இது தனித் தனியே ஒரு மாலையாகத் திருவுருவங்களில் தொங்குவது உண்டு. மிகப் பழமையான திருவுருவங்களில் இது ஒராயுதம் போல் இருப்பதைக் காணலாம். அட்சமாலை கால தத்துவத்தின் ஓர் அடையாளம் ஆகும்.
SFIILDIIIb
இது கவரிமானின் வால் மயிரால் ஆனது ஆகும். இது ஒர் ஆயுதம் அன்று. இருந்த போதிலும் விநாயகருடைய திருவுருவ அடை யாளங்களில் ஒன்றாகையால் ஆயுத வரிசையில் இதுவும் இடம் பெற்றிருக்கின்றது.
கட்டுவாங்கம்
இது ஒர் நீளமான கத்தியாகும். போரில் பகைவர்களை வெட்டப் பயன்படுகின்றது. இதில் ஒருமுனையுடையதும் இருமுனையுடையதும் என இரு வகையுண்டு. குத்துக் கத்தியாகக் கூரிய நுனியை உடையதாகவும் இது விளங்கும். இது உயிர்களின் மீது படிந்துள்ள பாசங்களை அறுக்கும் கருத்தைச் சுட்டிநிற்கிறது.
தீஅகல்
இது ஒர் தீப்பிழம்பு ஆகும். தீ அகலாகிய மழுவின் வடிவும் இதைப் போன்றே இருக்கும். இது விநாயகரின் அழிக்கும் ஆற்றலை குறிக்கும் உயிர்கள் மீது படிந்துள்ள பாசங்களைச் சுட்டு உயிர்களைத் தூய்மைப்படுத்துகின்ற இறைவனின் ஆற்றலைக் குறிக்கும் ஒர் அடையாளமாகும்.
நினைவு மலர்

வீணை
இது ஒர் இசைக் கருவி ஆகும். போர்க் காலங்களில் தளர்ச்சியடைந்திருக்கும் படை வீரர்களுக்கு உணர்ச்சி ஊட்ட இக்கருவி பயன்படும்.
விநாயகர் தரித்திருக்கும் மேற் கூறப்பட்டுள்ள ஆயுதங்கள் சிவன், அம்பிகை, விஷணு, முருகன் ஆகிய கடவுளர்களின் திருக்கரங்களிலும் விளங்கக் காணலாம். சிவனின் திருக்கரத்தில் திகழும் மழு, பரசு, சூலம் என்பன அம்பிகை கைகளில் ஏந்தியுள்ள அங்குசம், பாசம், அட்சமாலை, கரும்புவில், கத்தி, வாள், வீணை ஆகியவை: விஷ்ணுவின் கரங்களில் விளங்கும் சங்கு, சக்கரம் என்பவை. முருகன் திருக்கரங்களில் தரித்துள்ள சத்தி வேல், வில், அம்பு, தண்டம் போன்றவை விநாயகரின் திருக்கரங்களிலும் திகழ்வதைக் கண்டு மகிழ முடிகின்றது. "கடவுள் ஒருவரே அவ்வப்போது பற்பல வடிவங்கள் எடுக்கிறார்” என்ற ஒர் இறை தத்துவத்தை, கடவுளர் எல்லோரிடத்திலும் ஒரே விதமாகக் காணப்படும் சிறப்புமிகு ஆயுதங்கள் நுட்பமாகப் புலப்படுத்துகின்றன எனலாம்.
விநாயகர் வழவங்களில் சத்திதத்துவம்
விநாயகர் வடிவங்களில் சத்தி இடம் பெற்றிருப்பதும் விநாயகரே சில இடங்களில் பெண்வடிவத்தில் காட்சி தருவதும் விநாயகரின் தத்துவச்சிறப்பை நன்கு புலப்படுத்துவதாகவுள்ளது. -
தமிழகத்திலும் ஈழத்திலும் விநாயகரைப் பெரும்பாலும் பிரம்மச்சாரியராகவே வழிபடுவது பிரசித்தமாக வழிபாட்டு மரபாகக் காணப்படுகின்றது. “பவன் பிரமச்சாரி” என்ற சைவ சித்தாந்த தத்துவம் இங்கு நினைவு கூரத்தக்கதாகவுள்ளது. தமிழகம், ஈழம் போன்ற இடங் களில் விநாயகரைப் பிரமச்சாரியின் கோலத்தில் வழிபடுவதே சிறப்புற்றிருப்பினும், தமிழகத்தில் விநாயகர், வல்லபை என்ற சக்தியுடன் கூடிய நிலையிலும் “சித்தி, புத்தி” என்ற இரு சக்திகளுடன் சேர்ந்த கோலத்திலும் தொழப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வட இந்தியாவில் விநாயகர் பெரும்பாலும் சத்தியுடன் சேர்ந்த நிலையிலேயே விளங்குகின்றார். இவ்வடிவத்தை அவர்கள் "லட்சுமி விநாயகர்” என அழைக்கின்றனர்.
தமிழகத்திலும் ஈழத்திலும் "வல்லபை" என்ற சக்தியுடன் விளங்கும் விநாயகரை "வல்லப விநாயகர்" அல்லது "வல்லப கணபதி” ான்று வழங்குகின்றனர். வல்லபை என்ற சத்தியை விநாயகர் தனது இடது பக்க மடியில் அணைத்து வைத்திருக்கும் அமைப்பில் வல்லபை
நினைவு மலர் 81

Page 47
விநாயகர் படிமம் காணப்படுகின்றது. சிவாகமங்கள் விநாயகரின் சத்தியாக வல்லபையைக் குறிப்பிடுகின்றது. வல்லபம் என்பதற்கு வல்லமை என்பது பொருளாகும். வல்லமை என்றால் ஆற்றல் என்பது கருத்தாகும். எனவே ஆற்றலின் ஒர் அடையாளத்தைச் சுட்டி நிற்பதாக விநாயகருடன் வல்லபை என்ற சத்திவிளங்குகின்றாள் எனலாம்.
உமாதேவியின் அம்சமான இவள், யமுனை ஆற்றின் அருகேயுள்ள ஒரு தடாகத்தில் ஒரு தாமரை மலரில் பெண்வடிவமாக அவதரித்து மரீசி முனிவரால் வளர்க்கப்பட்ட தெய்வீக சத்தியாவாள்.
விநாயகர் சித்தி, புத்தி என்ற இரு சக்திகளுடனும் "சித்தி விநாயகராக" விளங்குகின்றார். சித்தியும், புத்தியும் பிரமதேவனது புத்திரிக ளாவர். விநாயகர் சித்தி, புத்தி எனும் இரண்டு சத்திகளுடன் விளங்குவது பெரும் தத்துவத்தைச் சுட்டி நிற்கின்றது. சித்திதேவி கிரியா சத்தியின் வடிவமாவார். புத்திதேவி இச்சா சத்தியின் அம்சமாவார். விநாயகர் பிரம்ப ஞான வடிவமுடையவர். இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானத்தின் மூலம் ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்ற தத்துவத்தைச் சுட்டவே விநாயகர் சித்தி, புத்தி எனும் இரு சத்திகளுடன் விளங்குகிறார். இந்நிலையில் இவர் இல்லற ஞானியாகத் திகழ்கின்றார் எனலாம். பிரபஞ்சம் ஒடுங்கும் போது இச்சை கிரியை எனும் இரு சத்திகளை விநாயகர் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு, தாம் ஞானவடிவமாகத் திகழ்கின்றார். அப்போதே விநாயகர் பிரம்மச் சாரியாக விளங்குகின்றார்.
உலகில் அவ்வப்போது அஞ்ஞானத்தின் உருவமாகச் சில அரக்கர்கள் தோன்றி தர்மத்தை அழித்து அதர்மத்தை மேலோங்கச் செய்து உலகில் பெரும் கொடுமைகளைச் செய்ய முற்படும்போது விநாயகர் சித்தி, புத்தி எனும் தேவிகளின் பிரம்மச்சாரிய வடிவமாக தாம் மட்டுமே ஞான வடிவமாக நின்று, அதர்மம் செய்பவர்களை அழிக்கின்றார் என்று அவர் பற்றிய தெய்வீக வரலாறுகள் அமைந்து விளங்குகின்றன. அவருடன் பெண் அம்சமான சத்திகள் இருக்குமாயின் சத்தியின் இயல்பாக கருணை எண்ணமே மேலோங்கி நிற்கும். இதனால் அதர்மத்தை அழிக்க முடியாத நிலை ஏற்படும். தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்ற வேண்டிய வேளைகளில் கருணையின் அடை யாளமாக சத்திகளின்றி தாம் தனியாகவே பிரம்மச்சாரியாக அவர் விளங்குகின்றார். துட்ட நிக்ரஹ சிட்ட பரிபாலனம் செய்ய வந்ததே பிரம்மச்சாரிய விநாயகர் ஆவார். மேலும் விநாயகர் திருமாலின் புத்திரிகளான மோதை, பிரமோதை, சுமநகை சுந்தரி, மநோரமை, மங்கலை, கேசினி, காந்நை, சாருஹாலை சுமத்தியமை, நந்தினி, சாமதை
நினைவு மலர்

என்ற பன்னிருவரை மணந்தார் என்றும் சமயநூல்கள் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சத்தியுடன் விளங்கும் விநாயகர் படிமங்களாக சக்தி விநாயகர். லட்சுமி விநாயகர், மஹாவிநாயகர், ஊர்த்துவ விநாயகர். உத்தண்ட விநாயகர். பூரீசங்கட ஹர விநாயகர், வல்லப விநாயகர், சர்ப்பா பரண விநாயகர் என்போர்காட்சிதருவது கண்டு களித்தற்குரியதாகும்.
மஹாவிநாயகர், சித்திவிநாயகர், சத்தி விநாயகர், மோட்ச விநாயகர், வித்யா விநாயகர் என்ற ஐந்து விநாயகர் வடிவங்களின் அரிய இணைப்பாகக் காட்சி தரும் "பஞ்சமுக விநாயகர்" வடிவம் விநாயகரின் சத்திதத்துவத்தை மேலும் பெருமைப்படுத்திநிற்கின்றது.
இவ்வாறு விநாயகர் சத்தியுடன் சேர்ந்த நிலையிலும் சத்தியுடன் சேராத நிலையிலும், சத்தியாகவே விளங்குகின்ற நிலையிலும் காணப் படும் விநாயக தத்துவநிலை வியக்கத்தக்கதாகவுள்ளது.
விநாயகரின் வாகனத்தத்துவம்
விநாயகர் நான்கு யுகங்களிலும் நான்கு வாகனங்களில் விளங்குகின்றார். அவர் கிருத யுகத்தில் சிங்க வாகனத்திலும், திரேத யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபரயுகத்தில் எலி வாகனத்திலும், கலியுகத்தில் குதிரை வாகனத்திலும் விளங்குவதாகச் சமய நூல்கள் குறிப்பிடுகின்றன. நந்தி ,பூதம், கருடன் என்பனவும் விநாயகருக்கு வாகனங்களாக விளங்கக் காணலாம். விநாயகரின் சிறப்பான வாகனம் மூஷிகம் ஆகும். இன்றைய கால கட்டத்தில் விநாயகர் மூஷிக வாகனத்தில் விளங்குவதையே பெரிதும் காணமுடிகின்றது.
மூவழிகவாகனம்
விநாயகருக்கு மூஷிக வாகனன் என்று ஒரு பெயர் உண்டு. மூஷிகம் என்பது எலி. பெருச்சாளி என்பனவற்றைக் குறிக்கும் வடமொழிச் சொல் லாகும். பென்னம் பெரிய விநாயகர் சின்னஞ் சிறிய மூஷிகத்தை (எலி, பெருச்சாளி) வாகனமாகக் கொண்டது. பெருந்தத்துவத்தைப் புலப் படுத்துகின்றது. நல்லவர்களைக் காப்பாற்றுதல், தீயவர்களை அழித்தல் என்ற இறை தத்துவத்தைச் சுட்டி நிற்பதே விநாயகர் எழுந்தருளியிருக்கும் மூஷிக வாகனமாகும்.
நல்லவர்களாகிய தேவர்களின் துயர் களைந்து, அவர்களைக் காப்பாற்றும் பொருட்டாகவே அசுரனாக விளங்கிய கஜமுகாசுரனை விநாயகர் அழித்தார். அசுரனாகிய கஜமுகாசுரனை அழித்தபோது அவன் பெருச்சாளி வடிவம் (எலி) பெற்று விநாயகருக்கு வாகன மாயினன்
நினைவு மலர் 83

Page 48
என்பது விநாயகரின் தெய்வீக வரலாற் றுக் கதைகளால் அறியப்படும் செய்தியாகும். இக்கதை ஒர் அரிய சித்தாந்த சைவதத்துவத்தைப் புலப்படுத்துகின்றது.
ஆணவ மலத்தின் அடையாளமாக விளங்கிய கஜமுகாசூரன், அம்மலம் வலிகுன்றிய நிலையில் சின்னஞ்சிறிய பெருச்சாளியாக விளங்க அதனை விநாயகர் வாகனமாக கொண்டார் என்பது தத்துவமாகும். இவ்வகையில் நோக்கும் போது மூவுரிகவாகனம் ஆணவமலத்தின் ஒரு குறியீடாக விளங்கும் தத்துவம் என்பது நன்கு புலப்படுகின்றது.
பாற்கடலில் தோன்றிய ஆணவமாகிய பெரும் விஷமானது சிவபெருமானின் திருமிடற்றிலடங்கி முதல் கெடாது வலிகெட்டு நிற்பதைச் சுட்டுவது போலவே ஆணவமல வடிவமாகிய கஜமுகாசுரனும் முதல்கெடாது வலிகெட்டு மூஷிக வடிவில் (எலி) விநாயகரின் வாகனமாக விளங்குவது புலப்படுகின்றது.
சிம்ம வாகனம்
விநாயகர் ஐந்து முகங்களுடன் விளங்கும் நிலையில் அவர் ஏரம்ப விநாயகர் என வழங்கப்படுகின்றார். ஏரம்ப விநாயகரின் வாகனம் சிம்ம வாகனம் ஆகும். விநாயகரின் திருநாமங்களுள் சிம்மவாகஹனாயக என்பது ஒன்றாகும். அம்பிகை காளியாக விளங்கும் நிலையில் அவள் சிம்மத்தை வாகனமாகக் கொண்டு விளங்குவாள் இதனால் அவளுக்குச் "சிம்மவாஹினி” என்ற பெயர் உண்டு. மிகக்கொடிய சிங்கத்தை அடக்கி ஆள்வதை சிம்ம வாகனம் காட்டுகின்றது. மிகக் கொடிய ஆணவமலம் அழியாது அடக்கப்பட்டிருத்தலையே விநாயகரின் சிம்ம வாகனம் சுட்டிநிற்கின்றது.
யானை வாகனம்
யானை முகக் கடவுளாகிய விநாயகருக்கு யானை வாகனம் அமைந்து விளங்குவது பொருத்தமாக உள்ளது. திருச்செந்தூர் ஆவுடை யார் குளக்கரையிலுள்ள அரசாள்வார் விநாயகர் முன்பும், பூறிவில்லி புத்தூர் (காமராசர்) மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் நுழை வாயிலில் உள்ள கல்யாண விநாயகர் முன்பும் யானை வாகனம் காணப்படுகின்றது. யானை ஆணவ மலத்தின் ஓர் அடையாளமாகும். அதனை அடக்குவதைக் காட்டுவதே யானை வாகன விநாயகர் சுட்டும் தத்துவமாகும்.
மயில் வாகனம்
திருச்சியிலுள்ள திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில் காணப்படும் ஒவியத்தில், விநாயகர் மயில்வாகனத்தில் உள்ளார்.
84 நினைவு மலர்

பாண்டிச்சேரி மலைக்குகை விநாயகர் கோயிற் சுவரிலுள்ள கதைச் சிற்பத்திலும் விநாயகர் மயில் மீது காட்சிதருகின்றார். அருப்புக்கோட்டை தாதன் குளவிநாயகர் கோயிலிலும் மயில்வாகனம் உள்ளது. மயிலும் ஆணவ மலத்தின் குறியீடாகும். மயில்வாகனம் இதையே சுட்டி நிற்கின்றது.
குதிரைவாகனம்
குதிரையானது மூன்று விதமான கோலங்களில் வாகனமாகக்
கொள்ளப்படும். நின்ற கோலம், பாய்ந்து நிற்கும் கோலம், நாட்டியக் கோலம் ஆகியவை அம்மூன்று கோலங்களாகும். குதிரையோகத்தின் ஒர் அடையாளம் ஆகும். குதிரைகள் திசைகளையும் புலன்களையும் குறிக்கின்றன. கடலூர் வட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையம். மலையாணர் டவர் விநாயகர் கோயிலில் குதிரை வாகனம் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் குருபதேசிக கவுண்டர் விநாயகர் கோயிலிலும் குதிரைவாகனம் உள்ளது.
நந்திவாகனம்
நந்தி தர்மத்தின் அடையாளம் ஆகும். சுசீந்திரம், வில்லிபுத்தூர்
மடவார்வளாகம், இராசபாளையம் முதலிய இடங்களில் உள்ள
விநாயகர் கோயில்களில் நந்திவாகனம் உண்டு.
பூதவாகனம்
மதுரை திருப்பரங்குன்றம் பழைய சொக்கநாதர் கோயில் முன் மண்டபத்தூணில் போருக்குப் புறப்படும் நிலையில் விளங்கும் சிற்பம் ஒன்றைக் காணலாம்.
கருட வாகனம்
விநாயகர் விஷ்ணுவின் அம்சமாகவும் விளங்குவதால் அவருக்கு முன் கருடனை நிறுவலாம் என்று விஸ்வக்சேன சம்ஹிதை குறிப்பிடுகின்றது.
விநாயகரின்நாமதத்துவம்
விநாயகருக்குப் பல நாமங்கள் உள்ளன. அவற்றுள் அவரின் அருட் பேராயிரத்தைக் கூறும் "பூரீமஹா கணபதி ஸஹஸ்ர நாமாவளி"யும் முந்நூறு நாமங்கள் கொண்ட "த்ரிசதிநாமாவாளி” யும் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் வரும் திருநாமங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் தத்துவப் பொருளை புலப்படுத்துகின்றன. விநாயகரின் முக்கிய திருநாமங்கள் சுட்டும் தத்துவப் பொருள் பின்வருமாறு அமைகின்றது.
நினைவு மலர் 85

Page 49
விநாயகர்
விநாயகர் என்ற பெயர் பல தத்துவப் பொருள்களை தந்து நிற்கின்றது. விநாயகர் என்பதற்கு தமக்கு மேலொரு நாயகரும் (தலைவரும்) இல்லாதவர் என்பது பொருளாகும். அதாவது தலைவரற்றவர் என்பது பொருளாகும். இதனை வி+ நாயகர் = விநாயகர் - நாயகன் இல்லாதவர் என்று நோக்கி அறிய முடிகிறது. (வி +மலன் = விமலன் மலமில்லாதவன் எனப் பொருள்படுவது போல) ஆதி சங்கரர் தனது கணேச பஞ்சரத்தினத்தின் முதலாவது சுலோகத் தில் "அநாயகைக நாயகம்" என்று விநாயகரைக் குறிப்பிடுகின்றனர். இந்த "அநாயகைக நாயகம்" என்பது அநாயக, ஏகநாயகம் என்ற இரு சொற்க ளால் ஆனது. இதன் பொருள் "தனக்கு ஒரு நாயகன் இல்லாத அநாயக நிலையிலும் எல்லா நாயர்கட்கும் நாயகராகிய நிலையிலும் உள்ளவர் என்பதாகும். மேலும் "வி" என்றால் கல்வி நாயகர் என்றால் தலைவர். இதன்படி தன்னை வணங்குபவர்களுக்குக் கல்வியை தருபவர் என்பது பொருளாகும். இதனையே உமாமதி சிவாசாரியரும் "நற்குஞ் சரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்கும் சரக்கன்று காண்" என்று திருவருட்பயன் ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றார். அடுத்து "வி" என்றால் திசை என்றும் நாயகர் என்றால் தலைவர் என்றும் பொருள் கொண்டு "எத்திசைக்கும் தானே தலைவர்” என்றும் விநாயகர் என்ற சொல்லுக்குப் பொருள் கூறலாம். விநாயகர் எனும் பெயரின் தத்துவப் பொருள் விநாயக புராணத்தில்
"விக்கின முழுது நீக்கி வேண்டிய வரங்கணல்கி மக்கள் விண்ணவர்கள் யாரும் வழிபடு தெய்வமாகி யெக்கடவுளர்க்கு முன்னர்ப்பூசனையேற்பாராகி மிக்கவரின்மை தோன்ற விநாயக ரெனும் பேர் தாங்கி” என வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வக்கிரதுண்டவிநாயகர்
பிரளய முடிவில் தோன்றி பிரமன் விஷ்ணு உருத்திரன் என்ற
மூவர்களைப் படைத்தல், காத்தல், அழித்தல், என்ற முத்தொழில்களைக்
கற்பித்தமையால் "வக்கிரதுண்ட விநாயகர்" எனும் பெயர் பெற்றார்.
சிந்தாமணி விநாயகர்
கபிலருடைய சிந்தாமணியைக் கவர்ந்து சென்ற கணராஜனை வென்று அதனை மீட்டு அவர்க்கு அளித்தமையால் “சிந்தாமணி விநாயகர்" எனும் பெயர்பெற்றார்.
நினைவு மலர்

கஜானன விநாயகர்
பிரமதேவனின் கொட்டாவியினின்றும் தோன்றிய சிந்துரனைக்
கொன்று தேவர்களைக் காத்தமையால் "கஜானன விநாயகர்” என்னும் பெயர்பெற்றார்.
விக்கினராஜ விநாயகர்
காலருபனெண்கின்ற விக்கினனை அழித்து உலகத்தைக் காத்தமையால் "விக்கினராஜ விநாயகர்" எனும் பெயர்பெற்றார்.
மயூரேச விநாயகர்
பிரமதேவனிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்ற கமலாசுரனையும், தேவர்களைச் சிறை வைத்த சிந்தாசுரனையும் கொன்று ஏனைய அவுணர்கள் செய்த மாயையினை ஒழித்து மீட்டும் அவ்வேதங்களைப் பிரம தேவனுக்கிந்து தேவர்களை மீட்டு உலகுக்கு இதஞ்செய்தமை யால் "மயூரேசவிநாயகர்” எனும் பெயர் பெற்றார்.
பாலசந்திரவிநாயகர்
யமனிடத்தினின்றும் உதித்த அனலாகரனை ஒரு சிறு
பிராமணப் பிள்ளை போல் சென்று அவ்வசுரனை விழுங்கித்
தேவர்களைக் காத்தமையால் "பால சந்திர விநாயகர்”எனும் பெயர்
பெற்றார்.
கணபதிவிநாயகர்
கஜமுகாசுரனைக் கொன்று விஷ்ணுவின் சாபம் தீர்த்தமையால்
“கணபதிவிநாயகர்”எனும் பெயர்பெற்றார்.
தூமகேதுவிநாயகர்
மாதவராசனுக்கும் அவர் மனைவியாகிய தமதைக்கும் தீங்கு
செய்த தூபராசனைக் கொன்று அவ்விருவரையும் காப்பாற்றியமையால்
"தூமகேது விநாயகர்" என்று பெயர் பெற்றார்.
கணேச விநாயகர்
தன்னிடத்தில் அளவற்ற வரங்களைப் பெற்ற பெபி என்ற ஒரசுரன் மூவுலகங்களையும் அழிக்க முற்பட்டபோது தேவர்கள் விநாயகரை வேண்டுதல் செய்ய அவர் ஐந்து முகங்களோடு தோன்றி அவ்வசுரனை அழித்து தேவர்களைக் காப்பாற்றியதால் 'கணேச விநாயகர்” எனும் பெயர் பெற்றார்.
மகோற்கடவிநாயகர்
நராந்தகனையும், தேவாந்தகனையும் நாசம் செய்து காசிராஜனுக்கு முத்தி அளித்தமை யால் “மகோற்கட விநாயகர்” என்றும் பெயர் பெற்றார்.
நினைவு மலர் 87

Page 50
துண்டி விநாயகர்
துராசதனை வென்று திவோதரசன் மனத்தைக் மகிழ்வடையச் செய்து விஸ்வநாத மூர்த்திக்குக் காசிமாநகரை அழித்தமையால் "துண்டி விநாயகர்” எனும் பெயர்பெற்றார்.
கணபதி
விநாயகருக்குக் “கணபதி” என்பதே தொன்மையான பெயராக உள்ளது. கணபதி என்பதற்கு பிரமகணம், தேவகணம், பூதகணம், அசுரகணம், மனிதகணம் முதலிய எல்லாக் கணங்களுக்கும் தலைவர் என்பது பொருளாகும். "கணபதி” என்ற பெயரில் உள்ள "க" என்பது புத்தி "ண" என்பது ஞானம். “பதி” என்பது தலைவர். இதனடிப்படையில் நோக்கும்போது "கணபதி” என்பதற்குப் புத்திக்கும் ஞானத்திற்கும் தலைவர் (அதிபதி) என்பது பொருளாகின்றது. இதனால் புத்தியையும் ஞானத்தையும் வளர்த்துக் கொள்ளுதலே உண்மையான கணபதி வழி பாட்டின் தத்துவப்பொருள் என்பது புலப்படுகின்றது.
விக்கினேஸ்வரர்
விக்கினேஸ்வரர் என்பதற்கு விக்கினங்களை (இடையூறுகளை) ஆக்கவும், நீக்கவும் வல்லவர் என்பதே மெய்ப்பொருளாகும்.
பிள்ளையார்
விநாயகரைப் பொதுவாக எல்லோரும் “பிள்ளையார்" என்றே அழைப்பர். சிவசக்திக்கு முதற்பிள்ளை என்பதால் முதலில் "பிள்ளை" என்னும் பெயர் பெற்றார். மரியாதைக்காக “பிள்ளை”என்பதுடன் "யார்” என்ற விகுதி சேர்க்கப்பட்டு பிள்ளையார் என்று பின்னர் அவர் அழைக்கப்பட்டார். பிள்ளை என்றால் “குழந்தை” என்ற எண்ணமே முதலில் வருகின்றது. இதனைக் கருதியே அவரை “ஞானக் கொழுந்து" என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பொதுவாக ஒரு கிராமத்திலோ அல்லது சிற்றுார்களிலோ இருக்கும் பெரிய குடும்பத்துப்பிள்ளை, எல்லோருக்கும் குழந்தையாகவே செல்வாக்கின் கராணத்தால் செல்லமாகக் கருதப்பட்டு அழைக்கப்படுவதைக் காண்கிறோம். இவ்வாறே அனைத்து உலகங்களுக்கும் தந்தையான சிவபெருமானின் முதற்பிள்ளை என்ற கராணத்தால் அவர் பிள்ளையும் அனைவராலும் “பிள்ளை”என்றே அழைக்கப்பட்டு பின்னர் மரியாதைக்காக “யார்” என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு “பிள்ளையார்” என அழைக்கப் படுகின்றார். எனக் காஞ்சிப் பெரியவர் குறிப்பிடுவதும் இங்கு எண்ணி மகிழ்வதற்குரியது. பிள்ளைச் செல்வத்தை வழங்கும் தெய்வம் என்பதாலும் “பிள்ளையார்”எனும் பெயர் பெற்றார்.
88 நினைவு மலர்

நவக்கிரக விநாயகர்
விநாயகரை வணங் கினால் நவக் கிரக வழிபாடும் நிறைவுறுமென்பது நவக்கிரக விநாயகர் சுட்டும் தத்துவமாகும். இதனைப் புலப்படுத்தும் விதத்தில் விநாயகரின் திருவுருவத்தில் ஒன்பது நவக்கிரகங்களும் அமைந்து விளங்கக் காணலாம். இத்தகைய வியத்தகு விநாயகர் வடிவத்தினையே "நவக்கிர விநாயகர்" என அழைக்கின்றனர். இவ்வாறான நவக்கிரக விநாயகரின் திருவுருவத்தில் அவர் தனது நெற்றியில் சூரியனையும், நாபிக்கமலத்தில் (தொப்பூழ்) சந்திரனையும், வலது தொடையில் செவ்வாயினையும், இடது தொடையில் கேது வையும் வலது மேற்கையில் சனியையும், வலது கீழ் கையில் புதனையும், இடது மேற்கையில் இராகுவையும், இடது கீழ்க்கையில் வெள்ளியை யும் தலையில் வியாழனையும் கொண்டவராகக் காட்சியளிக்கிறார். நவக்கிரக தோசம் உடையவர்கள் விநாயகரை வழிபடுவதன்மூலம் தோச நிவர்த்தி பெறுவர் என்பது நவக்கிரக விநாயகர் வழிபாட்டின் தத்துவநிலை ஆகும். தமிழகத்திலுள்ள சில விநாயகர் ஆலயங்களில் நவக்கிரக விநாயகர் வடிவத்தை ஒவிய வடிவத்தில் கண்டு வணங்க முடிகின்றது.
விநாயகரின் வழிபாட்டுத்தத்துவம்
விநாயகரின் வழிபாட்டுத் தத்துவத்தில் விநாயகர் விரதங்கள், அறுகம்புல்லினால் அர்ச்சித்தல், தோப்புக்கரணம் போட்டு வழிபடல், சிதறு தேங்காய் உடைத்தல் என்பன தத்துவப் பொருளை உணர்த்துகின்றனவாக விளங்குகின்றன.
விரதங்கள்
விநாயகர் வழிபாட்டிற்குரிய விரதங்களில் ஆவணிச் சதுர்த்தியும் மாசிச் சங்கடஹர சதுர்த்தியும் விசேடமானவை ஆகும். குற்றம் செய்கின்றவர்களை மன்னித்து அவரவர் விரும்பிய போக மோட்சங்களை விநாயகர் அளிக்கின்றார் என்பதே ஆவணி மாத விநாயகர் சதுர்த்தியின் உட்பொருளாகும்.
அறுகால் அர்ச்சித்தல்
விநாயகரை அறுகு மற்றும் வன்னிப் பத்திரங்கள், மந்தாரைப் பூ என்பவற்றால் அர்ச்சித்தல் வழக்கமாயினும் அறுகம்புல் அர்ச்சனை மிக சிறப்புடையதாகும். எனக் கூறப்படுகின்றது. அறுகம் புல்லால் விநாயகரை அர்ச்சித்ததால் இடபம், கழுதை, புலைச்சி என்போருக்குச் சாலோக முத்தி கிடைத்ததாக விநாயக புராணம் குறிப்பிடுகின்றது. எனவே அறுகம்புல்லால் விநாயகரை அர்ச்சித்தால் பெறுதற்கரிய முத்திப் பேரின்பம் கிடைக்குமென்பது அறுகம்புல்லின் தத்துவச் சிறப்பாகும். அறுகு ஒரிடத்தில் முளைத்துக் கொடிபோல் நீண்டு
நினைவு மலர் 89

Page 51
ஆறிடங்களில் வேரூன்றிப் படர்ந்து கொணர் டே போகும் இயல்புடையது. அங்ங்ணமே மூலாதாரமூர்த்தியாக விளங்கும் விநாயகர் மூலாதாரம். சுவாதிட்டானம், மணி பூரகம், விசுத்தி, அநாகதம் ஆஞ்ஞை என்ற ஆறிடங்களிலும் பரந்து விளங்கி சகஸ்ரதளத்தில் விளங்கி அருளுகின்றார் என்பது அறுகம்புல் உணர்த்தும் தத்துவப் பொருளாகும். ஆறிடங்களில் படர்ந்து வேரூன்றும் இயல்பு அறுகுக்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் இருப்புத்தன்மை உறுதியானது என்பதையே "அறுகுபோல் வேரூன்றி" என்ற பழமொழியும் சுட்டி நிற்கின்றது.
தோப்புக்கரண வழிபாட்டு முறை
விநாயகரை வழிபடுகின்றவர்கள் முதலில் தோப்புக்கரணம் போட்டு அவரை வழிபடத் தொடங்குவர். வலக்கையால் இடக் காதின் கீழ்ப்பகுதியினையும், இடக்கையால் வலக்காதின் கீழ்பகுதியினையும் பிடித்துக் கொண்டு நின்ற நிலையில் மூன்று முறை அல்லது பலமுறை உட்கார்ந்தும் எழுந்தும் வழிபடுவர். தோர்பி, கர்ணம் என்ற இரண்டு சொற்களும் இணைந்தே தோப்புக்கரணம் என மருவி வந்துள்ளது. தோர்பி என்றால் கைகளினால் என்றும், கர்ணம் என்றால் காது என்றும் பொருளாகும். எனவே தோர்பிகரணம் எனின் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது என்பது கருத்தாகும். இதுவே மருவி தோப்புக் கரணம் என வழங்குகின்றது. தோப்புக் கரணம் போட்டு விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையானது உடலின் நரம்பு மண்டல நல்லியக்கத்திற்கு வழி வகுக்கும் ஆன்மீக தத்துவ சாதனை முறையாக விளங்குகின்றது.
சிதறுதோங்காய் உடைத்தல்
விநாயகரை வழிபடும் முறைகளுள் "சிதறு தேங்காய் உடைத்தல்" சிறப்பிடம் பெறுகின்றது. சிதறு தேங்காய் உடைத்தல் என்பது ஒன்று அல்லது பல தேங்காய்களை எடுத்து அது பல சிறுதுண்டுகளாகச் சிதறுமாறு விநாயகர் ஆலய முகப்பில் உள்ள ஒரு கல்லில் அல்லது அதற்குரிய இடத்தில் எறிந்து உடைத்தல் எனப் பொருள் படும். சிதறு தேங்காய் உடைத்தல் என்பதே இன்று எல்லோரும் செய்யும் விநாயகர் வழிபாடாக விளங்கக் காணலாம். உயர்வு தாழ்வு எதுவும் இன்றி எவரும் செய்கின்ற விநாயகர் வழிபாட்டு முறையாக இது நடைபெறுகின்றது. சிதறு தேங்காய் உடைக்கும் வழிபாட்டு முறை பற்றிய தத்துவ விளக்கம் பின்வருமாறு அமைகின்றது.
விநாயகர் ஒருமுறை தன் தந்தையாகிய சிவனிடம் சென்று அவரது தலையைத் தனக்குப் பலியாகத் தரவேண்டும் என்று கேட்டாராம். "மூன்று கண்கள் உடைய எனது தலையைத் தானே
90 நினைவு மலர்

வேண்டும்" என்று சிவன் விநாயகரிடம் கேட்டபோது. விநாயகர் அதற்கு "ஆம்" என்று பதில் கூறினார். இதன் பிரகாரம் சிவனே மூன்று கண்களை உடைய தேங்காயை எறிந்து உடைத்தார். இந்த விளக்கத்தின் பிரகாரம் சிதறு தேங்காய் உடைத்தல் என்பது. ஒருவன் தனது கண்கள் உள்ள தலைப்பகுதியை இறைவனுக்குத் தியாகம் செய்யும் மாபெரும் வழிபாட்டுத் தத்துவத்தைச் சுட்டி நிற்கின்றது. இது பலி வழிபாட்டின் ஒரு வளர்ச்சி நிலையாகும். இன்று விநாயகர் ஆலயங்களிற் சிதறு தேங்காய் உடைத்து வழிபடும்முறை காணப்படுகின்றபோதும் ஈழத்தில் உள்ள “திருமுறிகண்டி விநாயகர்" கோயிலில் நாளாந்தம் ஆயிரக்கணக் கில் சிதறு தேங்காய் உடைத்து வழிபடும் மரபு சிறப்பாக நடைபெறுகின்றது. தமது பிரயாணம் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக இவ்வாலய வீதியாற் செல்லும் பயணிகள் சிதறுதேங்காய் அடித்து முறிகண்டி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். சிதறு தேங்காய் உடைத்தல் என்பது மக்களின் உளநலத்தத்துவ வெளிப்பாடாகவே விநாயகர் ஆலயங்களில் சிறப்பாக நிகழ்த்தப்படு கின்றது.
dippojeoЛ
இவ்வாறாக விநாயகர் வியக்கத்தக்க விதத்திற் பற்பல திருவுருவங்களைக் கொண்டு திகழ்வதையும், அவரின் திருவுருவ உறுப்புக் களும், அவர் தனது திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஆயுதங்களும், அவரின் திருநாமங்களும், அவர் எழுந்தருளும் வாகனங்களும் மற்றும் அவரின் வழிபாட்டு முறைகளும் விநாயகர் தத்துவத்தைச் சிறப்பாக வெளிப்படுத்திநிற்பதையும் அறியமுடிகின்றது.
-caeos-tae seatae seatae sel-N
அட்டதிக்கு பாலகர்:-
கிழக்கு இந்திரன்
தென்கிழக்கு அக்கினி
தெற்கு ujLD6i
தென்மேற்கு நிருதி
மேற்கு வருணன்
வடமேற்கு 6)IITեւ
வடக்கு குபேரன்
வடகிழக்கு ஈசானன் ASASLSLLLLLSJASASAS0SM sLiiLiLSASYM MLiLiLSLSLSB BSLiqSLeSLSYST SLiLiS
நினைவு மலர் 9

Page 52
s foul DLLb
சைவத் திருமுறைகளும் நம்மவர் செல்நெறியும்
அறிமுகம்
தமிழ் வேதம் எனப் போற்றப்பெறும் திருமுறைகள் இறையன்பை மேம்படுத்தவல்ல திருப்பாடல்களாக விளங்குகின்றன. திருமுறை என்பதற்குத் தெய்வத் தன்மை பொருந்திய நூல் எனப் பொருள் கொள்ள முடிகின்றது. (முறை நூல்)
பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழும் தேவாரம் என்னும் பெயரை உடையவை. தேவாரம் என்றால் தெய்வத்திற்கு மாலை எனப் பொருள் கொள்ளலாம். (தே - தெய்வத் தன்மை, ஆரம் - மாலை) தே என்பதைத் தெய்வத் தன்மை எனப் பொருள் கொண்டு வாரம் என்பதற்கு அன்பு எனப் பொருள் கொண்டால் தெய்வ அன்புப் பாடல் எனப் பொருள்கொள்ளலாம். முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடல்க ளாகவும் அடுத்துவரும் மூன்றும் திருநாவுக்கரசர் பாடல்களாகவும் ஏழாம் திருமுறை சுந்தரர் பாடல்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன.
மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் என்பன எட்டாம் திருமுறைப் பாடல்களாகவும் திருவிசைப்பா, திருப்பல் லாண்டு என்பன ஒன்பதாம் திருமுறைப் பாடல்களாகவும் திருமந்திரம் பத்தாம் திமுறையாகவும் காரைக் கால் அம்மை, சேரமாண் பெருமாள் உள்ளிட்டோர் பாடிய பாடல்களின் தொகுதி பதினோராம் திருமுறையாகவும் சேக்கிழாரின் பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாகவும் கொள்ளப்படுகின்றன.
திருமுறைத் தொகுப்பு
முதலாம் இராச இராச சோழன் காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் பெரியார் திருமுறைகளைப் பதினொன்றாக வகுத்தார் எனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது. சோழர் காலத்தில் பாடப்பட்ட பெரியபுராணம் பின்னாள்களில் பன்னிரண்டாம் திருமுறையாகக் கொள்ளப்பட்டது.
வடமொழிமந்திரங்களுக்கு ஈடானவை
திருமுறைகள் வடமொழி வேத, ஆகம மந்திரங்களுக்கு ஈடான சக்தி படைத்தவை. இதனாலேயே தேவாரம் வேதசாரம் எனவும் திருவாசகம் உபநிடதசாரம் எனவும் திருமந்திரம் ஆகமசாரம் எனவும் குறிப்பிடுகின்றனர்.
92 நினைவு மலர்

திருமறைக்காட்டில் வேதங்களால் பூட்டப் பெற்ற கதவைத் திருநாவுக்கரசர் தேவாரம் பாடித் திறப்பித்தார் எனவும் திரு ஞானசம்பந்தர் மீண்டும் தேவாரம் பாடிக் கதவைப் பூட்டினார் எனவும் அறிகிறோம். வேதங்களால் பூட்டப்பட்ட கதவு தேவாரத்தால் திறக்கப்பட்டது என்றால் தேவாரங்கள் வடமொழி மந்திரங்களுக்கு ஈடானவை என்பதே பொருளாகும்.
இறைவனுக்குப் பிடித்தவை
திருமுறைப்பாடல்களில் இறைவன் மிக்க விருப்புடையவர். தன்வாயினாலேயே விருப்பத்தை அவர் தெரிவிக்கும் சந்தர்ப்பங்கள் பற்றிய இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. "நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனைப் பாட்டே ஆகும் ஆதலால் மணிமேல் - நம்மைச் சொல் தமிழ் பாடுக என்றார் துர்மறை பாடும் வாயார்”
(பெரிய புராணம் - 216)
எனச் சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட சிவபெருமான் கூறியதாகப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. மேலும், சுந்தரருக்குப்பித்தா என்றும் சேக்கிழாருக்கு உலகெலாம் என்றும் இறைவனே அடியெடுத்துக் கொடுத்துள்ளார். திருவாசகப் பாடல்களை இறைவன் தன் கைப்பட எழுதியுள்ளார்.
இவ்வாறு பெருமை பெற்றுள்ள திருமுறைப் பாடல்கள் இன்று எத்தகைய நிலையை எதிர்கொள்கின்றன?
திருமுறைகள் - இன்றைய நிலை
இறைதன்மை பொருந்திய திருமுறைப் பாடல்கள் நம்மவர்களது அறியாமையாலும் அலட்சியப் போக்கினாலும் முக்கியத்துவம் குறைந்த நிலையை எய்திவிட்டன.
அ) பாரும்போதுவிடப்படும் தவறுகள்
பாடசாலைகள், ஆலயங்கள் போன்ற பொது இடங்களில் திருமுறை பாராயணம் மேற் கொள்ளும் சிலர், தாம் ஒதும் பாடல்களில் பிழைகளை ஏற்படுத்திப் பாடும்நிலையை அவதானிக்க முடிகின்றது. பிழையான வார்த்தைப் பிரயோகங்கள் திருமுறைகளின் பெருமைக்குப் பங்கம் ஏற்படுத்துவதோடு தீயபலன்கள் ஏற்படவும் காரணமாகி விடுகின்றன. அன்றாட வாழ்வியலில் நாம் பிழைவிடும் பிரயோகங்கள் சிலவற்றைப் பார்ப்போம். * அங்கமும் வேதமும் ஒதும் நாவர் என்ற பாடலில் ஒதும்நாவர்
என்பதற்குப்பதிலாகச் சிலர் ஒதும் நால்வர் எனப்பாடுதல்.
நினைவு மலர் 93

Page 53
* திருஞானசம்பந்தர் பாடிய மங்கையர்க்கரசி என்ற பாடலை
மங்கையற்கரசி எனப்பாடுதல்.
* இடரினும் தளரினும் என்ற தேவாரத்தில் “இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையே அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே" என்பதில் இதுவோ. அதுவோ. என்பதை இதுபோல். அதுபோல். எனப்பாடுதல்.
* முத்திநெறி அறியாத என்ற மிகப் பிரபலமான திருவாசகப் பாடலில் "சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி." எனப்பாடுவதற்குப் பதிலாக "சித்தமலம் அறிவித்துச்சிவமாக்கி. எனப்பாடுதல்.
* சிவபுராணத்தில் “கோகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க" என்ற அடியில் குருமணி தன் என்பதற்குப் பதிலாகக் குருமனிதன் எனப்பாடுதல்.
* பாலுக்குப் பாலகன் எனத் தொடங்கும் திருப்பல்லாண்டுப் பாடலில் "ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாக." என்ற அடியில் தில்லைச் சிற்றம்பலமே இடமாக என தில்லை என்ற சொல்லைச் சேர்த்துப்பாடுதல்.
* கடையவனேனைக் கருணையினால். எனத் தொடங்கும் திருவாசகப் பாடலில் "கடையவனே எனைக் கருணையினால்." எனப்பதம் பிரித்துப்பாடுதல்.
முதலிய சந்தர்ப்பங்களைக் குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்டவை இக்கட்டுரையாளர் தனது அனுபவத்தில் கண்ட தவறுகளாகும். இதைவிட இன்னும் பல சந்தர்ப்பங்கள் இருக்கலாம்.
ஆ) பிழைகள் ஏற்படக்காரனமானவர் யார்?
இவ்வாறான பிழைகள் ஏற்படக் காரணம் யாது? அல்லது காரணமானவர் யார்? என்பதில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. இளமையில் கல்வி சிலையில் எழுத்து", "கேள்விச் செவியன் ஊரைக் கெடுத்தான்" முதலிய வாசங் களை இங்கு நாம் நினைத்துப் பார்க்கமுடியும். நாம் அறிந்து வைத்திருக்கின்ற திருமுறைப் பாடல்களிற் பெரும்பாலானவை நமது இளமைக் காலத்தில் எம்மால் அறியப்பட்டவை. இங்கு அறிதல் முறையில் ஏற்பட்ட தவறே பிரதான மானது. ஒரு விடயத்தை எவ்வாறு மணனஞ் செய்கின்றோம் என்றால், செவிவழியாகப் புகுந்த செய்தியை மூளையில் பதித்து வைக்கின்றோம்.
நினைவு மலர்

அல்லது கண்களால் புகுந்த செய்தியை மூளையில் பதித்து வைக்கின்றோம். பெரும்பாலும் செவிவழியாகக் கேட்பவையே எமக்குரிய அனு பவங்களாகும். பெரும்பாலான சினிமாப் பாடல் களையும் இவ் அனுபவத்தரினுTடாகவே நாம் ஞாபகத்தில் வைத்திருக்கின்றோம். செவிகளில் சேரும் வடிவம் பிழையாயின் பின்னர் வாய் மூலம் பாடப்படும்போது பிழையான வெளிப்படுத் துகையே பெறப்படும். கேள்வி ஞானத்தில் பாடும் பழக்கம், "பற்றித்தொடரும் பிழைகளை" ஏற்படுத்திவிடுகின்றது.
பாடல்களைப் பொருளுணர்ந்து பாடும் போது இத்தகைய பிழைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை. நூல்களின் துணையுடன் பாடல்களைப் பாராயணம் செய்தால் இவ்வாறான பிழைகள் ஏற்படுவதைக் கணிசமான அளவு குறைக்கலாம். இவை பற்றிய விடயங்களில் சமயபாடம் கற்பிக் கும் ஆசிரியர்களும் கவனஞ்செலுத்த வேண்டும்.
இ) கிரியைகளில் திருமுறைகள்
பஞ்சபுராணம் என்ற வகையில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய பாடல்கள் பாடப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படும். ஆயினும் பல ஆலயங்களில் தேவாரம், புராணம் என இரு பாடல்களுடன் திராவிட வேதகானம் பாடுதல் நிறைவு பெற்றுவிடுவதை அவதானிக்க முடி கின்றது. கோவிற் பூசகர்களின் அவசரமும் நேரமின்மை என்ற குற்றச்சாட்டும் இவ்வாறு இருபாடல்களுடன் பஞ்சபுராணம் நிறைவுபெறக் காரணமாக அமைகின்றது.
கோவிற் பூசகர்கள் திருமுறைகளை அலட்சியப்படுத்துகின் றார்களோ? எனவும் எண்ண வைக்கின்றது. பூசைக்கிரமங்களில் வேதபா ராயணம், திருமுறைப்பாராயணம், ஆசீர்வாதம் என்ற ஒழுங்கைச் சிலர் கைக் கொள்கின்றனர். பலர் வேதபாராயணத்தை அடுத்து ஆசீர்வாதத்தை மேற்கொண்டபின் திருமுறைபாடுமாறு கிரியை செய்கின்றனர். பூசைகள் யாவும் நிறைவுபெற்று ஆசீர்வாதமும் இடம்பெற்ற பின்னர் திருமுறை பாடுவதற்கு இடம்வழங்கப்படுதல் திருமுறைகளை அலட்சியப்படுத்துவதாகவே நோக்கப்பட வேண்டியது.
இதைவிடத் திருமுறைபாடும் நேரத்தில் தாமும் சேர்ந்து வழிபாடாற்றுவதை விட்டுவிட்டு அதனை ஒரு இடைவேளை நேரமாகக் கருதும் பூசகர்மார் பலர் உள்ளனர். திருமுறை பாடும் வேளையில் அலட்சியமாக அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லுதல் அல்லது அர்ச் சனை முதலான செயற்பாடுகளில் ஈடுபட்டு ஏனைய
நினைவு மலர் 95

Page 54
அடியவர்களையும் திருமுறையின்பால் ஈடுபாடு ஏற்படாமற் செய்தல் முதலிய செயற்பாடுகளில் இந்துக் குருமார் சிலர் ஈடுபடுவதையும் இங்கு வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இதனால் கூடியிருக்கும் அடியவர்களும் திருமுறைகளுக்கு உரிய மதிப்பு வழங்கத் தவறிவிடுகின்றனர்.
பெரியபுராணம் பாடப்பட வேண்டிய வேளையில் வேறு
புராணப் பாடல்களைப் பாடும் நிலையையும் இங்கு தவறுகளுள் ஒன்றாகச் சுட்டிக்காட்ட முடியும். இவ்வாறு பெரிய புராணம் என்ற போர்வையில் நாம் பாடும் வேறு புராணப்பாடல்கள் சில வருமாறு: * பரமனை மதித்திடாப் பங்கயாசனன் (கந்தபுராணம்)
வான்முகில் வழாது பெய்க. (கந்தபுராணம்) ஆறிரு தடந்தோள் வாழ்க. (கந்த புராணம்) அருவமும் உருவமாகி. (கந்த புராணம்) திருவாக்கும் செய்கருமம். (11 ஆம் திருமுறை)
எமது ஆலயங்களில் வீற்றிருந்து அருளாட்சி நல்கும் இறை மூர்த்தங்கள் யாவற்றினதும் அடிப்படை, சிவாம்சமாக உள்ளமையால் எத் தெய்வத்தின் முன்னும் திருமுறைப்பாடல்களை ஒதுவதில் தவறில்லை.
திருமுறைகளைப் பண்ணுடன் (இராகத்துடன்) பாடுவோர் தொகையும் அருகி வருகின்றது. இவ்வாறு இராகமின்றி ஜனரஞ்சக மற்ற முறையில் பாடுவதும் திருமுறை பாடும் போது மற்றவர்கள் உரிய மரியாதை கொடுக்கத் தவறுவதற்குக் காரணமாக அமைகின்றது. சில ஆலயங்களில் குறிப்பிட்ட ஒரு சிலர், தாமே “வாணாள் ஒதுவார்” எனக் கருதி மற்றவர்கள் பாடுவதற்குரிய சந்தர்ப்பங்களை மடக்கித் தாமே எப்போதும் பாடிக்கொள்வர். இளையவர்களை வளர்த்துவிடும் மனோபாவம் இத்தகையவர்களிடம் இல்லையாதலால் இவர்களுடைய காலத்துடன் திருமுறைகளைச் சீராகப் பாடக் கூடியவர்கள் அருகிவிடுகின்றனர்.
ஈ) பொது நிகழ்வுகளில் திருமுறைகள்
பொது நிகழ்வுகளில் திருமுறைகள் படும் பாடு பற்றிச் சொல்லவேண்டியதில்லை. விழாக்கள், கூட்டங்கள் போன்ற பொதுநிகழ்வுகள் திருமுறைப் பாராயணத்துடன் ஆரம்பமாவது வழமை. இதன்போது எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் வழக்கம் காணப்படுகின்றது. ஆனால் கைகூப்பி வணங்கும் வழக்கத்தைப் பலரிடம் காணமுடிவதில்லை. திருமுறைப் பாடல்களைப் பாடும்போது ஏதோ ஒப்புக்கு எழுந்து நிற்பவர்களைப்போலவே பலர் எழுந்து
நினைவு மலர்

நிற்கின்றார்கள். பெரும்பாலான பாடசாலைகளில் இந்நிலையே காணப்படுகின்றது. திருமுறைகளுக்கு மதிப்பளிக்கும் அடிப்படை பாடசாலைக்காலத்திலேயே கட்டி வளர்க்கப்பட வேண்டும். ஆனால் பாடசாலைகளில் திருமுறைப் பாராயணம் இடம்பெறும்போது எத்தனை ஆசிரியர்கள்முன்மாதிரியாகக் கைகூப்பித் தொழுகின்றனர்?
பாடசாலையில் இருந்து சமூகத்திற்கு வரும் போது இந்நிலை இன்னும் விசாலிக்கிறது. பொது நிகழ்வுகளில் இறைவணக்கம் என்ற செயற்பாட்டை சம்பிரதாயத்திற்காகச் செய்கிறார்களோ? என எண்ணத் தோன்றுகின்றது. மன ஈடுபாட்டு டன் இறை வணக்க நிகழ்வில் பங்கேற் போரைக் காண்பது அரிதாகிவிட்டது.
மரணச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் சம்பளத்திற்குத் திருமுறைபாடும் ஒதுவார்மார் பலர் உளர். இவர்களில் பலர் உரத்துப் படிக்க வேண்டும் என்பதைக் காரணம் காட்டி மது அருந்திவிட்டுத் திருமுறைகளைப் பாடித் தொலைக்கின்றனர். புனிதமில்லா வாய்களால் புனிதமான பாடல்களைப் பாடுவதே பிழையான காரியம். இதைவிட இவர்களில் அநேகர் பிழைவிட்டுப் பாடுவதையும் இக்கட்டுரையாளர் நேரடியாகத் தரிசித்திருக்கிறார்.
சிலவிடயங்கள் தமக்குத் தெரியாதவை எனக் கூறிக் கொள்வதைப் பெருமையாகக் கருதும் வேடதாரிகளும் நம்மிடையே இருக்கின்றனர். வேட்டி கட்டத் தெரியாது. சேலை உடுக்கத் தெரியாது என்ற வரிசையில் தேவாரம் பாடத் தெரியாது என்பதும் அவர்கள் நினைக்கும் கெளரவமாக உள்ளது.
2)புலம் பெயர் நாடுகளில் திருமுறைகள்
புலம் பெயர்நாடுகளில் உள்ள சைவர்கள் திருமுறைப் பாடல்களை தமது வாரிசுகளிடம் கையளிக்கும்போது ஆங்கில மொழி வடிவத்தி லேயே கையளிக்க வேண்டியநிலையில் உள்ளனர். நேரடியாக தேவாரத்தை ஆங்கில வார்த்தை களில் உச்சரித்துப் பாடும்போது உரிய சொற்களுக்கான சரியான உச்சரிப்பு அமைகின்றதா என வழிப்படுத்தவேண்டிய தேவை உள்ளது. இதே வேளை திருமுறைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புச்செய்து பரப்பவேண்டிய தேவையும் உள்ளது. இப்படி ஆங்கிலத்தில் எழுதியாவது பாடுகிறார்களே என்று ஆறுதல்பட வேண்டிய நிலையே உள்ளது. ஆயினும் திருமுறைப் பாடல்களின் இறுவட்டுக் களை (CD) வைத்துச் சரியான உச்சரிப்புக்களைக் கையாண்டு பிள்ளைகளை வழிப்படுத்துவது
ரோக்கியநிலைக்கு வழிவகுக்கும்.
நினைவு மலர் 97

Page 55
திருமுறைகளின் எண்ணிக்கை தொடரப்படவேண்டுமா?
திருமுறைகளின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். திருமுறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பி தனது காலத்தில் பதினொன்று என்றே வகுத்தார். பின்னர் பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது. எனவே சோழர்காலத்தில் திருமுறைகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தியமையால் தற்காலத்திலும் இவ்வெண்ணிக்கையை அதிகரிக்கலாமேயென அறிஞர்கள் சிலர் வாதிடுகின்றனர்.
பஞ்சபுராணம் பாடவேண்டிய சந்தர்ப்பங்களில் ஆறு, ஏழு பாடல்களைப் பாடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். திரு முறைக்குள் அடங்காத திருப்புகழ், அபிராமி அந்தாதி, வள்ளலார் பாடல் போன்றவற்றைப் பாடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றோம். எனவே திருமுறைகள் தொடரப்படுவதில் தப்பில்லை. ஆனால் இதனை நடைமுறைப் படுத்தும் தகுதியாரிடம் உள்ளது என்பதே இங்கு தொக்கு நிற்கின்ற வினாவாக அமைந்திருக்கின்றது.
பஞ்சபுராணம் என்ற ஒழுங்கிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. ஈழத்தில் பிரபலமான தெல்லிப்பழைத் துர்க்கை அம்மன் கோவிலில் தேவாரம், பெரியபுராணம், அபிராமிஅந்தாதி ஆகிய மூன்று பாடல்களையே திராவிட பாராயணம் என்ற நிலையில் பாடும் வழக்கம் அன்னை சிவத்தமிழ்ச் செல்விதங்கம்மா அப்பாக்குட்டி காலத்திலிருந்து உள்ளது. இவ்வாறான மீளாய்வுகள் மேலும் அலசி ஆராயப்பட வேண்டி யனவாக உள்ளன.
பண்ணிசைப் பயிலகங்கள் தேவை
திருமுறைகள் பெருமை பெறுவதற்குப் பண்ணிசைப் பயில்நெறி வளர்க்கப்பட வேண்டும். பண்ணிசை பாடவல்லவர்களைக் கெளர வித்தல், பண்ணிசைப் போட்டிகளை நடாத்துதல், வகுப்புக்களை நடாத்துதல் போன்ற செயன்முறைகள் திருமுறைகள் வளர்வதற்கு ஆதரவாக அமையும். கோவில்களில் இசைத் தட்டுக்கள் மூலம் பக்திப் பாடல்களை ஒலிபரப்புவதற்குப் பதிலாகத் திருமுறைப் பாடல்களை ஒலிபரப்புவதும் சாலச்சிறந்தது.
நிறைவுரை திருமுறைகள் நமக்கு அளிக்கப்பட்ட அரும்பெருஞ் செல்வங்களாகும். அவற்றை போற்றுவதும் பாதுகாப்பதும் நம்மவர் கடனன்றி வேறில்லை. கோவில்களின்கருவறை வரை செல்லத்தக்க திருமுறை களைநம் உயிராகக் கருதிச் செயற்படுவோம்.
நினைவு மலர்

as LDLJLib பிள்ளைகளின் கற்றல் மேம்பாட்டில் குடும்பங்களின் பங்களிப்பு
றிமுகம்
பிள்ளைகளின் கல்வி முன்னேற்றங்களில் பாடசாலைகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற எதிர்பார்க்கை வலுவானது ஆனால் பாடசாலைகள் கற்பிக்கும் அனைத்து மாணவருக்கும் அதே பாடங்களை அதேமாதிரியில் - சில சமயங்களில் சற்றுப் பலவீனமான முறையில் - வழங்கும் ஏற்பாடுகளாக தனியார் கல்வி நிலையங்கள் செயற்படுவதை எவரும் சட்டபூர்வமாக எதிர்க்கவில்லை. இத்தகைய மாற்றுக் கல்வி வசதிகளை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றுச் செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும் அத்தகைய காரணங்களில் குடும்பங்களின் பங்களிப்பு குறைந்து சென்றமையும் மிகமுக்கியமானதென்பதால் அத்தகைய அம்சம்பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது.
தடும்பம் முதல்நிலை நிறுவனம்
பிள்ளைகள் குடும்பங்களின் ஊற்றுக்கள், குடும்பங்களின் சொத்துக்கள், குடும்பங்களின் விளைபொருள்கள் குடும்பங்களில் பிறந்து வளர்ந்து சமூகத்தில் பலவற்றைக் கற்று மற்றொரு குடும்பத்தை உருவாக்குவதன்மூலம் சமூக விருத்தியையும் சமூக நிலைப்படுத் தலையும் உறுதிப்படுத்துபவராக காணப்படுபவர்களே குழந்தைகள்.
குடும்பங்கள் பிள்ளைகள் தாமாக கற்பதற்கு வழிகாட்டுகின்றன. தாய் மொழியை கேட்கவும் புரிந்துகொள்ளவும், பேசவும் குடும்பம் அடிப் படையில் துணைசெய்து வருகிறது. தாயிடம் தொடங்கி சகோதரர்கள், மூத்தோர் போன்றோர் பலரிடமும் இதனைக் கற்றுத் தெளிகின்றனர். பாடசாலை ஒழுங்குபடுத்தி பல மறுவாய்ப்புக்களை வழங்கி மொழிவிருத்திக்கு உதவுகின்றனர்.
அன்றாட வாழ்வியல் பழக்கங்கள் குடும் பங்களினால் அனுபவமுறைகளாக கற்பிக்கப்படுகின்றன. ஒழுங்கு, சுத்தம், நம்பிக்கை, தொடர், செயல், நேரமுகாமை போன்ற பலவும் குடும் ப பழக்கங்களிலிருந்து வடிவமைக்கப்படுகின்றன. உடை, உணவு, ஒழுங்குக் கிரமங்கள் கடவுள் வழிபாடு, கற்கும் நேரங்கள் போன்ற பல டயங்களையும் அவைபற்றிய உணர்வுகளையும் நடத்தைகளை யும் டும்பம்தான் போதித்து வந்திருக்கிறது.
நினைவு மலர் 99

Page 56
சமயப் பழக்கங்கள் குடும்பங்களினால் வளர்க்கப்படுவது வழமை. சில குடும்பங்களில் வலுவான சமய ஆசாரங்கள் பிள்ளைகளின் நடத்தை மாதிரிகளின் தன்மையை கூர்மையாக நிர்ணயித்து வருவதுண்டு. சமயகுருமார், போதகர்கள் ஒதுவார்கள் இசைக் கலைஞர்கள் போன்றோரின் பிள்ளைகளிடம் விசேடித்த கற்றல் மற்றும் பயிற்சியை குடும்பங்கள் வலியுறுத்திவருவதையும் காண்கிறோம். பொலிஸ் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் போன்றோரின் பிள்ளைகளிடமும் செயல் ஒழுங்குகளும் கட்டுப்பாடான நடத்தைகளும் தீவிரமாக வலியுறுத்தப்படுவதை நன்கு அவதானிக்க முடியும்.
வீட்டுக்கு வெளியே தொழிலின் நிமித்தம் செல்லாத தாய்மாரின் பிள்ளைகள் பலவகை அறிவையும், திறன்களையும், தேர்ச்சிகளையும், மனப்பாங்கையும் முறையில் மாதிரியில் கற்றுத் தேர்வதை வரலாற்று ரீதியாக அவதானித்து வந்துள்ளோம். சமைத்தல், உடைகளை பரா மரித்தல், தைத்தல், வீட்டுத்தோட்டப் பராமரிப்பு, கால்நடை வளர்ப்பு போன்ற பல்வகைத் திறன்களையும் தாய்மாரிடமிருந்து பெண் பிள்ளைகள் கற்றுவந்தனர். தொழில் பார்க்கும் தேவை தாய்மாருக்கு கட்டாயமானபோது இப் பணிகளிலிருந்து மெல்ல மெல்ல தாய்மார் தம்மை விடுவித்தனர். வேலையாட்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு அவை கையளிக்கப்பட்டன. இது சமூக வளர்ச்சியின் ஒருபடிமுறைதான். பெண் விடுதலையின் முதன்மை மிக்க பரிமாணம்தான். இதனால் பிள்ளைகள் தாயிட மிருந்து முன்பு கற்றுக்கொண்ட பலவற்றை இன்று இழந்துவிட்டனர்.
இதேபோல் மரபுவழித்தொழில்கள் பல வசிப்பிட வீடுகளுடன் இணைக்கப்பட்ட தொழிற்கூடங்களில் மேற்கொள்ளப்பட்டபோது தொழில்சார் கண்ணோட்டம், தொழில் ஈடுபாடு, தொழில் மகத்துவம் போன்ற பலவற்றையும் உணர்ந்து கொண்டதோடு கருவிகளைக் கையாளும் திறன்கள், தொழிற் தேர்ச்சி போன்றவற்றையும் கற்றுக்கொண்டிருந்தனர். தொழில் அடிப்படையில் முன்னேற்றகரமான மேல் நிலைத் தொழில்கள் நோக்கி நகர்வதை இவை தடுத்துவிட்டன என்ற குற்றச்சாட்டு சமூகவியல் நோக்கில் முன்வைக்கப்படுவதையும் நிராகரிக்க முடியாது. தொழில் அடிப்படையிலான சாதிமுறை, சாதிமுறை சார்ந்த வளர்ச்சி வாய்ப்புக்களிலான பாரபட்சம், புதிய திறன்களை குடும்ப மாதிரியில் நிராகரிக்கும் நடைமுறைகள்போன் றனவே இளம் பருவத்தில் இயல்பாகவே குடும்பத் தொழில்களைச் கைத் தொழில் களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஆணி
()() நினைவு மலர்

ள்ளைகளுக்கு இல்லாமற் செய்துவிட்டன என்பதும் வருத்தம் தரும் ண்மையாகும்.
குடும்ப விழுமியம், தொழில், மானிடத்திறன் விருத்தி என்பன தாடர்பாக வரலாற்றுக் காலத்தில் செய்துவந்த பங்களிப்பு கைவிடப் ட்டுவிட்டது.
கல்வி-தொழில்-வாழ்க்கை என்ற தொடர் ஒழுங்கு முறையிலான வாழ்வை குடும்பங்களிலிருந்து பிள்ளைகள் பெற்றுவந்த வாய்ப்பு பெரிதும் கைநழுவிப் போவதை நன்கு அவதானிக்க முடியும். இது வருத்தம் தருகின்ற மாற்றம்தான்.
ாயின் கண்காணிப்பில் கற்றல்
பிள்ளைகள் விடலைப்பருவத்தை அடையும்வரைதாயின்நிழலில் மகிழ்ச்சியுறுபவர்கள் அதில் வளருபவர்கள் அவர்கள் அதிகம் நேசிக்கும் பராகவும் நம்புகின்ற நபராகவும் வாழ்பவர்கள் அன்னையர்தான். இது உயிரியல் முறைசார்ந்த உறவுதான். எனினும் எமது சமூக வாழ்வு அதனைப் பலமடங்கு வலிமைப்படுத்தியுள்ளது.
எமது பண்பாட்டின் வலிமையும் பாதுகாப்பும் இதுதான். இது ான் எமது சிறார்களின் கற்றலில் தாய் என்பவர் அன்புரிமை மிக்க மேற்பார்வையாளராக, கண்காணிப்பாளராக, வழிகாட்டியாக செயற்படுவதற்கு வழிவகுத்தது.
மிகவும் வறிய எழுத்தறிவற்ற தாய்மார் நீங்கலாக ஏனையவர்கள் ாலை வேளைகளில் பிள்ளைகளின் கற்றலை ஒழுங்குபடுத்திவந்தனர். துெ நாளாந்த குடும்ப மாலை நிகழ்ச்சி நிரலாக இருந்துவந்தது. இதில் ாய்மார்பின்வரும் மாதிரிகளில் பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர்.
1. பிள்ளைகள் பள்ளியில் பயன்படுத்தும் பயிற்சிப்புத்தகங்களை
பார்வையிடல். 2. பிள்ளைகளை கடவுள் வழிபாட்டின் பின் பள்ளியில் படித்த பாடங்களைப் பயிலுமாறு பணித்தல், மேற்பார்வை செய்தல், தம்மாலியன்றளவு உதவுதல். 3. பிள்ளையின் பள்ளிக்கூட வாழ்வு பற்றி உசாவுதல்-அதாவது பிள்ளையின் நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்கூட நிகழ்ச் சித்திட்டங்கள் என்பவற்றைப் பற்றிக் கேட்டறிதலும், அபிப்பிராயம் உருவாக்கலும், வழிகாட்டலும்.
நினைவு மலர் 101

Page 57
4. பரீட்சைக்கால அடைவுப்புள்ளிகள்பற்றி கலந்துரையாடல் விசாரித்தல், வலியுறுத்தல், முதன்மையை உணரச் செய்தல் மீள் ஊக்கங்களை வழங்குதல்,
இந்த மேற்பார்வை வகிபங்குதான்மாலை வேளையில் பிள்ளைகள் கற்றலை குடும்பப் பண்பாடாக மாற்றியிருந்தது. பிள்ளைகள் நிறைய கற்றார்கள் கருத்துபரிமாற்றம் செய்தார்கள் தாயின் ஈடுபாடுபற்றி வகுப்பில் சகபாடிகளுடனும் ஆசிரியர்களுடனும் தேவைக்கேற்ப உரையாடி மகிழ்ந்தனர்.
தற்போது இந்த மாலைவேளைகுடும்ப மட்ட கற்றல் மேற்பார்வை முறை கைவிடப்பட்டுவிட்டது. இதற்குப் பல காரணிகள் பொறுப்பாக
உள்ளன.
1. பெரும்பாலான பெற்றோர் தொழிலின் நிமித்தம் வீட்டுக்கு வெளியே செல்லுதல், அதிகதுாரம் பயணம் செய்தல், வேலைக் களைப் புடன் வீடு திரும் புதல், இரவு நேர வீட்டுவேலைகளில் பரபரப்புடன் ஈடுபடுதல்.
2. பிள்ளைகள் பாடசாலை விட்டபின்ரியூசன் வகுப்புக்கு சென்று அதரிக மாணவருடனர் அமர்ந்து பாடம் கேட் டலி (கிரகிக்கின்றனரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை) அதனால் அதிக உடற்களைப்புடன் வீடுதிரும்புதல், ஒய்வுத் தேவை உணர்வுடன் வீட்டிற்கு வருதல்.
3. நடுத்தர வருமானம் உள்ள குடும் பங்களின் மாலை வேளை பொழுது போக்கு எஜமானாக தொலைக்காட்சி தொடர் நாடகங்களும், பிற கலைநிகழ்ச்சிகளும் அமைந்திருத்தல், இதில் 50% நேரம் விளம்பர மோகியினியின் மின்னியல அட்டகாசத்தின் ஆதிக்கத்தில் குடும்ப அங்கத்தவர் அனைவரும் கட்டுப்படுதல், இது இரவு 11.00 மணி வரை நீண்டு செல்லுதல் குடும்பத்தில் எல்லா வயதினர்மீதும் இந்த செலவு மிக்க மின்னியல் பொழுதுபோக்கு அரக்கனின் ஆதிக் கமி மேலாண்மையுடனிருத்தல்.
4. தாயும் களைத்து, பிள்ளைகளும் களைத்து வீடு திரும்பு
நகர்மய குடும்ப வாழ்வு பொறிமுறையில் தாய்-பிள்ளைகள்
102நினைவு மலர்

மட்டத்திலான உணர்வுப்பரிமாற்றம் தகவல் பரிமாற்றம் கற்றல் மதிப்பீடு, கற்றல் உறக்கம் என்பன அடிபட்டுப் போய்விட்டன.
இத்தகைய குடும்ப நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட புரள்வு-பாதகமான திசை நோக்கிய குடும்ப செயலாற்ற அசைவானது பிள்ளைகளின் சுய கற்றலை பெரிதும் பாதித்துவிட்டது. பிள்ளையின் படிப்புப்பற்றிய பெற்றோர் இடைவினையுறவை மிக மோசமாக சிதைத்து விட்டது.
இத்தகைய குடும்ப செயல் முறைகளில் ஏற்பட்டுள்ள கிடையான அசைவியக்கமானது பிள்ளைகளில் கற்றல் தொடர்பான குடும்ப ஈடுபாட்டை வெட்டிப்பிரித்துவிட்டது.
குடும்ப வாசிப்பும் அதற்குதவும் நூல்களும்
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு யாழ்ப்பாணப் பிரதேச வீடுகளில் எல்லோரும் பொது வாக வாசிப்பதற்கான நேரமும் பழக்கமும் காணப் பட்டன. குடும்பசஞ்சிகைகள் பல இந்தியாவிலிருந்து அதிகளவில் வந்து சேர்ந்தன. அவற்றில் வெளிவரும் படைப்புகளின் இலக்கு வாசிப்பாளர் குடும்பத்துப் பெண்கள்தான் என வலுவாக நம்பப்பட்டது. அதில் உண்மையுமிருந்தது.
மென்மையான முறையில் பண்பாடு மிக்க உரையாடல்களும் முதிர்ச்சி பெற்ற கதாபாத்திரங்களும் யதார்த்த சம்பவங்களும் தொடர்பு படும் பல புனைவுகளை அந்த நூல்கள் தாங்கி வந்தன. இதனால் குடும்பத்தில் எல்லோரும் வாரா, வாரம் காத்திருந்து போட்டி போட்டு வாசித்தனர். இதனால் வாசித்தல் என்பது குடும் பத்தினரின் இன்றியமையாத கடமைக் கூறுகளில் ஒன்றாகியது. இந்த நூல்களே குடும்ப அங்கத்தவரிடையில் உறவுகளை ஒன்றிணைக்கும் அறிவுச்சங்கிலிகளாகவும் விளங்கின. இதனால் மொழியறிவும் வாசிப்புத் தேர்ச்சியும் வளர்ந்த தோடு பண்பட்ட உணர்வுகளும் செம்மைப் படுத்தப்பட்ட குணச்சித்திரங்களும் வளர்க்கப்பட்டன. இது உபகற்றல் செயற்பாடாக விளங்கியது. இது பிள்ளைகளிடமும் வாசிப்பு நாட்டத் தையும் வாசிக்கும் ஆசையையும் உருவாக்கியிருந்தது.
இத்தகைய நூல்களையும் வாசிப்புக்களை யும் சுற்றி வளர்ந்த பிள்ளைகளின் கற்றல் கலாசாரம் தேய்ந்து மறைந்துபோய்விட்டது. இது குடும்பங்களில் ஏற்பட்ட கல்விசார் தேய்மானம்தான், தோல்விதான். தொலைக் காட்சிகள் இந்த நூல்களைப் பதிலிடுவதாகக் கூறுவது
நினைவு மலர் 108

Page 58
பூந்தோட்டங்களுக்குள் உலாவுவதற்குப் பதிலாக இரைச்சல் மிக்கதும் ஆபத்து ஏற்படுத்துவதுமான இரசாயனத் தொழிற்சாலையில் உலாவு வதுபோலானதே. நூல்கள், பத்திரிகைகள் வாசிக் கும் பழக்கம் குடும்பப் பண்பாடாக உயிர்ப்புடன் இல்லாமல் போனதால் பிள்ளைகளின் வாசிப்புத் திறன் தேய்ந்து போய்விட்டது என்பது பேருண்மையாகும்.
கதைசொல்லும்பாட்டிகள் காணாமல் போன தெப்பழ
முன்பெல்லாம் குடும்பம் குதூகலப் பூந்தோட்டமாக இருந்தது.
சகோதரர், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்ற குடும்ப உறவுகளினால்
பிணைக்கப்பட்ட உயிர்ப்புள்ள இல்லங்களாக அவை விளங்கின.
முதியோரிணி அறிவுரை, ஆலோசனை, அதிகாரமும், அன்புரிமையும் இணைந்த கட்டுப்பாடு, கடமை மீதூரப் பெற்ற கண்காணிப்பு என்றவாறு அனுபவ வழிகாட்டல்கள் இருந்தன. பிள்ளைகளும் மதித்தல், கட்டுப்படுதல், கடமைசெய்தல் என்ற வாழ்வியல் மாண்புகளை மூத்தோரிடமிருந்து பெற்று வளர்ந்தனர். அனுப வங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அறிவையும் செயலாற்றங் களையும் பாட்டிமார் இரண்டாம் தலைமுறையினரான பேரப்பிள்ளை களுக்கு கை மாற்றிவந்தனர். இந்த வாழ்வியல் கல்வி பிள்ளைகளின் கற்றல் உன்னதங்களை உறுதிப்படுத்தின. அவற்றுக்கு உரமூட்டின.
மாலை மற்றும் முன்னிரவுகளில் பிள்ளைகள் பாட்டியைச்சுற்றி உலாவருவர். கதை சொல்லும் மானிடத் தொலைக்காட்சியாக பாட்டி இருந்தார்.
"ஒரே ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார்."
"ஒரு நாள் அவர்.”
இவ்வாறு “ஒரு” மைய கதைத் தொடர்களை கூறினார்கள்.
ஆவலைத் தூண்டும் வகையில் கதைகளை நிறுத்திவிட்டுப் பிள்ளை களிடம் கேள்விகளை மதிப்பீட்டு வினாக்களாக கேட்பார்கள்.
"காட்டில் இராசா எதைக் கண்டார்” "அந்த குரங்கு முதலைக்கு என்ன சொன்னது"
இந்த மாதிரி வினாக்களை எறிந்து விட்டு பாட்டி ஒய்வெடுத்தார். பிள்ளைகள் ஞாபகத்தை உறுதிப்படுத்தினார்கள், கலந்துரை யாடினார்கள். திரும்பவும் சொல்லியதையே சொல்லும்படி கெஞ்சிக்
104நினைவு மலர்

கேட்பார்கள். இப்படிப் பிள்ளைகளுக்கும் பாட்டிக்குமான அன்புரிமை அறிவுத் தேடலை வளர்ப்பதாகவே பாட்டி கதை சொல்லும் கலாசாரம் உயிருடனிருந்தது.
இன்று வீடுகளில் பாட்டிமார் இல்லை, அவர்கள் வயோதிபர் இல்லங்களில், பிள்ளைகள் பச்சை இரத்தம் சொட்டும் வன்முறைக் காட்சிகளைக் கொப்பளிக்கும் தொலைக் காட்சிகள்முன்னால்,
பாட்டிகள் இருந்தாலும் பலருக்கு கதைகள் தெரியாது அல்லது அவர்களும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் கைதிகளாக விட்டிருப்பர்.
இந்த குதூகலம் நிறைந்த- உயிரோட்டமான இரண்டு தலைமுறையினரிடையிலான தொடர்பாடல்கள் கற்றல் திறன்களை வளர்த்தன, அறிவை மேம்படுத்தின, மானிட உணர்வுகளின் மேன்மையை உணர்த்தின. குதூகலக் குடும்பங்களில் பிள்ளைகள் முறையில் கல்வியால் மேம்பாடடைந்தனர்.
இந்தக் கலாசாரத்தை தொலைத்து விட்டதால் வீட்டில் கற்றல் சூழல் காணாமல் போய்விட்டது எங்கோ தொலைந்துபோய்விட்டது.
്യD2ബ്
இப்படி குடும்பங்களின் கட்டமைப்பு மாற்றங்களினால் கற்றல் வாய்ப்புக்களும் ஊக்கமும் குறைந்து போய்விட்டது.
தாய்மாரின் பங்களிப்பும், பணிநிலையும் மாறிப்போனதால் அவர்களின் உதவியற்ற அநாதைகளாகிப் போனார்கள் குடும்பப் பிள்ளைகள்.
அனுபவச் சுரங்கங்களான மூத்தோரை இழந்துவிட்டு தொழில் நுட்பக் கருவிகளினாலும் பணப்பசியுடன் அலையும் வணிகமயப்பட்ட கல்வி நிறுவனங்களினாலும் பள்ளிப் பிள்ளைகள் சிறைப்பிடிக்கப்பட்டு விட்டார்கள்.
பொருள்தேடல்முனைப்பும், போட்டி நிலை அந்தஸ்துணர்வும் குடும்பத்தவர்களை பணம்தேடும் இயந்திரங்களாக்கிவிட்டன. அவர்கள் தம்பிள்ளைகளை அடைப்பதற்காக சரணாலயங்களாக புதிய பள்ளிகளைத் தேடியலைகின்றனர்.
நினைவு மலர் 105

Page 59
குடும் பங்களின் கட்டமைப்பும் இலக்கும் குலைந்ததால்
பிள்ளைகள் கற்றல் ஊக்கங்களை வெளியுலகில் பணம் கொடுத்து தேடிக்
கொண்டிருக்கின்றார்கள். உணர்வுகளும் விழுமியங்களுமற்ற
சடங்குமுறைக்கல்வி வழங்கும் நிறுவனங்களில் பொறிமுறையில் செயற்படும் ஆசிரியர்களைத் தேடி அலைகின்றார்கள். இதுவே இன்றைய பிள்ளைகளின் கற்றல் வாழ்க்கையாகும்.
குடும்பங்களிலிருந்து கல்வித்தேவைக்காக குடும்பங்களைவிட்டு
அதிக தொலைவிற்கு பிள்ளைகள் போய்விட்டார்கள். அவர்களை
திரும்பவும் அழைக்க முடியுமா? குடும்பங்கள் உண்மையானவர்களை
உருவாக்குமா? சமூகம்தான் விடைகாண வேண்டும்.
-tae seas ose-care estae su-N
本
ഞorഖ fou rji
சிவபெருமானை நோக்கிச் செய்யும் வழிபாடே அசுத்தர்களாகிய ஆன்மாக்களைப் பந்தித்த (பிணைத்திருக்கும்) பாசமாகிய நோய்க்கு மருந்து. வழிபாடாகிய மருந்துக்கு ஆநுபவமாவது (துணையாக இருப்பது) மெய்யன் பு. வழிபாடாகிய மருந்துக்குப் பத்தியங்களாவன: உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்நன்றி அறிதல், தாய்தகப்பன் உபாத்தியாயர் குரு முதலாகிய பெரியோர்களை வணங்குதல், வறியவர்களுக்குக் கொடுத்தல் முதலிய புண்ணியங்கள். வழிபாடாகிய மருந்துக்கு அபத்தியங்களாவன : கொலை, களவு, கள் குடித்தல், புலானுண்ணல், பொய் பேசுதல், விபசாரம், கதாடல் முதலிய பாவங்கள். சிவபெருமான் தமக்கு ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டை ஏற்று நிற்கும் இடங்களவான சிவலிங்கம் முதலிய திருமேனியும், மெய்யடியார்களுடைய திருவுருவமுமாகும்.
Nu-N-Noose seese-sloose as ese
106நினைவு மலர்

空_ சிவமயம்
கேதாரேஸ்வரர் நோன்பு கதை
காப்பு தாரனைய கூந்ந்கவுரி யியற்றியதே தார விரதத்தை யான்படிக்க சீரிலகும் ஐந்துகரத் தந்திமுகத் தண்ணலடி யார்க்கருளுங் கந்தமலர்ச் செஞ்சரணே காப்பு.
கேதாரேஸ்வரர் பூஜாவிதி
பூஜாரம்பத்தில் மஞ்சளால் விநாயகரைச் செய்வித்துக்
கதம்பபுஷ்பம் அறுகு சாந்தி நோன்பு நூற்பவர்கள் கையில் புஷ்பம் கொடுத்து விநாயகரை அர்ச்சனை செய்விக்க வேண்டியது, அதற்கு
மந்திரங்களாவன:
ஒம்சுமுகாய நம ஒம்தூமகேதவே நம ஒம் ஏகதந்தாயநம ஒம் கணாத்யக்ஷாய நம ஒம் கபிலாய நம ஓம் பாலசந்திராய நம
ஒம் கஜகர்ணகாயநம ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் லம்போதராயநம ஒம்சூர்ப்பகர்ணாய நம
ஓம் விகடாய நம ஓம் ஹேரம்பாய நம ஓம் விக்நராஜாயநம ஓம் ஸ்கந்த பூர்வஜாயநம ஓம் விநாயகாய நம ஒம் மகாகணாதிபதியே நம
என்னும் சோடச நாமங்களையோதி நானாவித பத்திர புஷ்பமிட்டுதூபம் ஆக்கிராபயாமி தீபம் தர்சயாமி என்று சொல்லி தூபதீபம் காண்பித்து தக்ஷணை தாம்பூலம் நைவேத்தியம் வைத்து தீபாராதனையான பிறகு பூரீ கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்ய வேண்டும். அதாவது அம்மியையுங் குழவியையும் (புற்று மண்ணால், மஞ்சள், சந்தணம்) இவற்றில் ஒன்றால் சிவலிங்கம் செய்து அலங்கரித்து அம்மியின் மேல் குழவியை நிறுத்தி குங்குமம் கந்தம் முதலிய பரிமள திரவியங்களை அணிவித்து பருத்திமாலையிட்டு புஷ் பஞ்சாத்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி
நினைவு மலர் 107

Page 60
அதற்கும் பருத்திமாலையிட்டு புஷ் பஞ்சாத்தி அதனெதிரில் கலசம் நிறுத்தி அதற்கும் பருத்திமாலை புஷ் பஞ்சாத்தி நோன்பு விரத மனுஷ்டிப்பவரை அங்கே அமரச்செய்து கேதாரீஸ்வரரை மனதிலே தியானஞ் செய்து கொள்ளச்சொல்லி காசிங்கா தீர்த்த திருமஞ்சனமாட்டியது போலும் பட்டு பீதாம்பரம் ஆபரணாதி களாலலங்கரித்து போலும் மனதில் சங்கல்பஞ் செய்துகொள்ளச் சொல்லி வில்பம்தும்பை கொன்றையாகிய மலர்களால் ஈஸ்வரரை கீழ்கண்ட மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்விக்க
வேண்டும்.
ஓம் சிவாயநம: ஒம் கேசவாயநம: ஒம் ருத்ராயநம: ஒம்சங்கராயநம: ஓம் நீலகண்டாய நம: ஒம் நாராயணாய நம: ஒம் கிருஷ்ணாய நம: ஒம்பத்மநாபாய நம: ஒம் கங்காதராயநம: ஓம் கைலாசவாசாய நம: ஓம் திரிசூலாயநம: ஓம் மழுவேந்திராயநம: ஒம் கபாலமூர்த்தியே நம: ஓம் பரமகுருவே நம: ஓம் சாந்தருத்ராயநம: ஒம் மார்பண்டாயநம: ஓம் திரிபுரதஹனாயநம: ஓம் மானந்திராயநம: ஓம் சிவாயநம: ஓம் சதாசிவாயநம:
ஓம் அச்சுதாய நம:
108நினைவு மலர்

ஓம் நிர்மலாயநம: ஓம் அருபருபாயநம: ஒம் ஆனந்தரூபாய நம: ஒம் கோவிந்தாயநம: ஓம் சூலபாணயே நம: ஒம் ஈசான்யாய நம ஓம் சிவபூஜாயநம: ஒம் காலகண்டாய நம: ஒம் தாமோதராய நம: ஒம் பார்வதீபிரானேசாய நம: ஓம் சற்குருவேயநம: ஒம் நந்திகேஸ்வராயநம: ஓம் கேதாரீஸ்வராயநம:
என்று அர்ச்சனை செய்வித்து அவர்கள் கையில் புஷ்பம் அக்ஷதை கொடுத்து மும்முறை பிரதசுஷ்ணம் செய்வித்து கையிலுள்ள புஷ்ப அக்ஷதையை சுவாமியின் பதத்தில் போடச் செய்து தூபதீபங்காட்டி நைவேத்தியம் தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாராதனை காண்பித்து அவர்களுக்கு நோன்புக்கயிரும் புஷ்பமும் அக்ஷதையும் கொடுத்து ஆசீர்வாதம் செய்யவும். அவர்கள் அக்ஷதையும் சிரசின்மேல் போட்டுக் கொண்டு நோன்புக்கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டியது.
TG)
ஆதிகாலத்தில் பூரீகைலாயத்திலே நவரத்தினங்களினாலிழைத்த சிங்காசனத்தின் மீது பரமேஸ்வரரும் பார்வதி தேவியும் கொலு வீற்றிருக்கையில் பிரம்மா விஷ்ணு தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிகள், அஷ்டவசுக்கள், கின்னரர், கிம்புருடர், கருடகாந்தர்வம், சித்தவித்யாதரார், ஜனக ஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புருநாரதர், மற்றுண்டான, தேவரிஷிகள் பிரதி தினம் வந்து பரமசிவனையும் பார்வதி தேவியையும் பிரதசக்டிண நமஸ்காரஞ்செய்து கொண்டு போவார்கள். இப்படியிருக்க ஒருநாள் ஸமஸ்த தேவர்களும் ரிஷிகளும் வந்து ஈஸ்வரரையும் ஈஸ்வரியையும் பிரதசுSண நமஸ்காரம் தோத்திரம் செய்து செலவு (விடை)
நினைவு மலர் 109

Page 61
பெற்றுக்கொண்டு தங்கள் எதாஸ்தானங்களுக்கு போகின்ற சமயத்தில் பிருங்கியென்கிற ரிஷி ஒருவர் மாத்திரம் பார்வதியம்மனைப் புரம்பாக தள்ளி ஈஸ்வரரை மாத்திரம் பிரதசுஷிண நமஸ்காரஞ் செய்து ஆனந்தக் கூத்தாடினார். அப்போது பார்வதியம்மனுக்கு மஹா கோபமுண்டாகி பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், தேவேந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத் தொண்ணாயிரம் ரிஷிகள் அஷ்டவசுக்கள், கின்னரர், கிம் புருடர், கருட காந்தர்வர், சித்தவித்யாதரார், ஜனகஜனனாதரி, ஸனத்குமாரர், தும்புருநாரதர், கெளதமர், அகத்தியர், மற்றுண்டான தேவரிஷ்களும் வந்து ஈஸ்வரரையும் நம்மையும் கண்டு வணங்கிப் போகின்றார்கள். இந்த பிருங்கி மஹரிஷி நம்மைப் புரம்பாகத் தள்ளி ஈஸ்வரரை மாத்திரம் நமஸ்கரித்து நின்றானேயென்று கோபத்துடனே பரமேஸ்வரி கேட்கப் பரமேஸ்வரன் சொல்லுகிறார் "பர்வதராஜ குமாரியே பிருங்கிரிஷி பாக்கியத்தைக் கோரினவல்ல மோக்கஷத்தைக் கோரினவனானபடியால் எம்மை மாத்திரம் பிரதசுSண நமஸ்காரம் செய்தான்" என்று சொல்ல பரமேஸ்வரி பிருங்கி ரிஷியைப் பார்த்து "ஓ! பிருங்கி ரிஷியே உன் தேகத்திலே இருக்கின்ற ரத்தம் மாமிசம் நம்முடைய கூறாச்சுதே! அவைகளை நீகொடுத்து விடு" என்று சொல்ல அப்பொழுது பிருங்கிரிஷி தன் சரீரத்திலிருந்து ரத்த மாமிசத்தை உதறிவிட பின்பு தன்னுடைய கூறாகிய ரத்த மாமிசத்தை எடுத்துக்கொள்ள பிறகு பிருங்கி மஹாரிஷி நிற்க முடியாமல் அசக்தனாய் இருப்பதைப் பார்த்த பரமேஸ்வரர் "ஏ பிருங்கி மஹரிஷியே! ஏன் அசத்தனானாய்?" என்று கேட்க பிருங்கி பரமேஸ்வரரை வணங்கி "பரமேஸ்வரா! அம்பிகையை நீக்கி தங்களை மட்டும் வணங்கியதால் அம்பிகை கோபித்து அடியேனுக்களித்த தண்டனை இது" என்று கூற பரமேஸ்வரன் மனமிரங்கி ஒரு தண்டைக் கொடுக்க பிருங்கி மஹரிஷி தண்டை ஊன்றிக் கொண்டு மறுபடியும் பரமேஸ்வரனை நமஸ்கரித்து விட்டு ஆச்சிரமத்திற்கு எழுந்தருளினார். பிறகு பரமேஸ்வரி பரமேஸ்வரரைப் பார்த்து நீவிர் என்னை உபேக்க்ஷை செய்யலாமோ இனி எனக்கு காரியமென்னவென்று கைலாயத்தைவிட்டு பூலோகத்தில் வால்மீகி மஹரிஷி சஞ்சரிக்க நின்ற பூங்காவனத்தில் ஒரு விருகூடித்தின் அடியில் எழுந்தருளி இருந்தாள். அத்திசையில் பன்னிரண்டு ஆண்டு மழையின்றி விருக்ஷங்கள், செடிகள், உலர்ந்து வாடிவதங்க அவையெல்லாம் தளிர்த்துத்தழைத்து புஷ்பித்துக் காய்த்துப் பழுத்து இன்னும் அனேக பூச்செடிகளெல்லாம் மல்லிகை, முல்லை, கொங்கு, இருவாக்ஷக்ஷரி மந்தாரை, பாரிஜாதம், சண்பகம், சிறுமுல்லை, புன்னை,
| 10 நினைவு மலர்

பாதிரி, வில்வம், பத்திரி, துளபம், மற்றுமுண்டான சகலஜாதி புஷ்பங்கள் விஸ்தாரமாய்ப் புதுப்பித்து பரிமளித்து சுற்றிலும் நாலுயோசணை விஸ்தீரணம் பரிமளம் வீசினது. அந்த சமயம் வால்மீகி மஹரிஷி தம் பூங்காவனத்தை பார்த்து அதிசயப்பட்டு பன்னிரண்டு வருஷம் மழையில்லாமல் உலர்ந்திருந்த விருகூடிங்களெல்லாம் இப்பொழுது துளிர்த்துப் புஷ்பித்து காய்த்துப் பழுத்திருக்கின்ற ஆச்சரியம் என்னவோ தெரியவில்லையென்று மனத்தில் நினைத்துக்கொண்டு பூங்காவனத்திற்கு
வந்தார்.
வந்தவர் சகலபுவன கர்த்தாவாகிய பரமேஸ்வரன் பரமேஸ்வரி பிரம்மா, விஷ்ணு வந்திருக்கிறார்களோ அவர்களை காணவேண்டு மென்று அதை சுற்றி ஆராய்ந்து பார்க்கையில் பூரீ பார்வதிதேவி வில்வவிருகூடித்தின் அடியில் எழுந்தருளியிருக்கக் கண்டும் மூவருக்கும் முதன்மையான தாயே! முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாற்பத்தொண்ணாயிரம் முனிவர்களுக்கும் ஒப்பற்ற தெய்வமாய் நின்ற பராசக்தியான ஈஸ்வரியே நான் எத்தனை கோடி தவஞ்செய்தேனோ இந்த பூங்காவனத்தில் எனக்கு காக்ஷரி கொடுக்கக் கைலாயத்தை விட்டு பூலோகத்திற்கு நீர் எழுந்தருளினதென்னவோ என்று வால்மீகி முனிவர் கேட்க பார்வதி தேவியார் வால்மீகி முனிவரே பூரீ கைலாயத்தில் பரமேஸ்வரனும் நாமும் ஒரு நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கையில் பிரம்மா விஷ்ணு தேவேந்திரன் முதலான தேவர்களும் மற்றுமுண்டான மஹரிஷிகளும் வந்து இருவரையும் நமஸ்கரித்து போனார்கள் பிருங்கி முனிவர் சுவாமியை மாத்திரம் நமஸ்கரித்து நம்மை புறம்பாக தள்ளினார். அப்போது இவனா நம்மை புறம்பாக தள்ளுகின்ற வென்று கோபத்துடன் என் கூறான மாமிசத்தை வாங்கிக் கொண்டேன். அப்போது பரமேஸ்வரர் அவனுக்கு ஒரு தண்டு கொடுத்தார். இப்படி செய்யலாமோ கேட்டதற்கு அவர் மறுமொழி சொல்லவில்லை. ஆகையால் நமக்கு கோபம் பிறந்து பூலோகத்திற்கு வருகின்றபொழுது இந்த பூங்காவனத்தைக்கண்டு இங்கே தங்கினோம் என்று பார்வதியம்மையார் வால்மீகருக்கு உரைக்க அவரும் அம்பிகையை தன் ஆச்சிரமத்திற்கு எழுந்தருளும்படி வேண்ட அம்பிகையும் அவரிட்ட படியே எழுந்தருள முனிவர் அம்மணிருக்கு ஆச்சிரமமும் ஒரு நவரத்தின சிம்மாசனமும் உண்டு பண்ணி அந்த சிம்மாசனத்தின் மீது எழுந்தருளின பின் பரமேஸ்வரி வால்மீகி முனிவரை பார்த்து ஒ! தபசியே இந்த பூலோகத்தில் நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நூதனமும் மேலானதுாய்மையான விரதம் ஒன்றிருக்குமாயின் அதை எனக்கு சொல்லவேண்டும் என்று கேட்க வால்மீகி முனிவர்
நினைவு மலர் 11

Page 62
தொழுது தாயே லோகமாதாவே! அபிராமியே! திரிபுராம்பிகே! சிவகாமி! கெளரிகைலாசவாசகி விபூதி, ருத்ராக்ஷP! கிருபாமுத்ரி! கிருபாநந்தி! தேவஸ்ரூபி! உம்முடைய ஸன்னி தானத்தில் அடியேன் ஒரு விண்ணப்பம் செய்கின்றேன். கோபமில்லாமல் கேட்டு திருவுள்ளம் பற்றவேண்டும் என்று சொல்ல அதென்ன வெறும் அம்பிகை கேட்க ஜெகத்ரக்ஷயே! இந்த பூலோகத்தில் ஒருவருக்கும் தெரியாத ஒரு விரதமுண்டு அந்த விரதத்திற்கு கேதாரேஸ்வரர் நோன்பு என்று பெயர். அதை இதுவரையில் யாரும் அனுஷ்டிக்கவில்லை. நீர் அந்த விரதத்தை அனுஷ்டித்தால் இஷ்டசித்தியாகும் என்று சொன்னார். அதை பரமேஸ்வரி கேட்டு அந்த விரதம் எக்காலத்தில் எவ்விதமான அனுஷ்டிக்க வேண்டும் என்று கேட்க வால்மீகி சொல்கின்றார். புரட்டாதி மாதம் சுக்லபக்ஷ தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருகஷணபசுஷ் தீபாவளி சதுர்த்தசி வரைக்கும் இருபத்தொருநாள் பிரதிதினம் ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரமணிந்து ஆல விருக்ஷத்தின் கீழ் சிவலிங்கம் பிரதிக்ஷடை செய்து அபிஷேகம் செய்து விபூதி சந்தனம் அக்ஷதை புஷ்பஞ்சார்த்தி வெல்ல உருண்டை, சந்தன உருண்டை மஞ்சள் உருண்டை, அதிரசம், வாழைப்பழம், தேங்காய், பாக்கு, வெற்றிலை, இவைகளை வகைக்கு ஒன்றாக வைத்து வில்வார்ச்சனை செய்து தூப தீபம் நைவேத்தியம் செய்து நமஸ்கரித்து இருபத்தோரிழையிலே ஒரு கயிறு முறுக்கி அதை தினம் தினம் ஒரு முடியாக இருபத்தொரு நாள் முடிந்து தினமும் உபவாசமிருந்து நைவேத்தியஞ் செய்து அதிரசத்தையுண்டு, இருபத்தொருநாளும் கிரமமாக இவ்விரதத்தை அனுஷ்டித்தால் இருபத்தோராம் நாள் தீபாவளி அமாவாசை தினம் பரமன் ரிஷபவாகன புருஷராய் காட்சியளித்துக் கேட்ட வரத்தையும் கொடுப்பார். வால்மீகர் சொல்ல கேட்டு அம்பிகை மகிழ்ந்து அதே பிரகாரம் புரட்டாதி மாதம் சுக்லபக்ஷம் தசமி முதல் ஐப்பசி மாத அபரபசுஷ் சதுர்த்தசி வரை இருபத்தொரு நாளும் வால்மீக முனவர் தெரிவித்தபடி நியம நிஷ்டையுடன் உபவாசமிருந்து விரதம் அனுஷ்டிக்க பரமேஸ்வரியின் விரதத்திற்கு மகிழ்ந்து பரமன் தேவகணங்கள் புடைசூழ காட்சியளித்து இடப்பாகத்தை பரமேஸ்வரிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக கைலாயத்திற் கெழுந்தருளி வீற்றிருந்தார்.
இவ் விரதத்தின் மேன்மையைக் கண்ட தேவர்கள் ரிஷிகள்
முதலானவர்களும் அன்று முதல் இவ்விரதத்தை அனுஷ்டித்து வரலாயினர். தேவகன்னியர் இவ்விரதத்தை கங்கை கரையில்
12.நினைவு மலர்

அனுஷ்டிப்பதை பூலோகத்திலே ஒர் அரசனுடைய குமாரத்திகளான புண்ணியவதி பாக்கியவதி என்னும் இரு பெண்கள் தன் தகப்பன் நாடு நகரிழந்ததன் பயனாக விவாகமாகாத கன்னியர் கங்கை கரை வர அச்சமயம் தேவகன்னியர் இயற்றும் பூஜையைக் கண்டு அதன் விபரமறிந்து தேவகன்னியர் கொடுத்த நோன்பு கயிற்றையும் பெற்று வீட்டிற்கு போக வீடு அடையாளம் தெரியாமல் குச்சு வீடு மாடமாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வர்ணம் பெருகியிருக்கும் புதுமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்து நிற்கையில் தகப்பன் தனது குமாரத்திகளை அழைத்து சென்ற சுகமாக வாழ்ந்து வரும் நாளில் இராஜகிரி அரசன் புண்ணியவதியையும் அளகாபுரி அரசன் பாக்கியவதியையும் மணந்து தத்தம் ஊர்களக்குச் சென்று புத்திர பாக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர்.
இங்ங்ணம் வாழ்ந்துவரும் நாளில் பாக்கியவதி தன் கையில் அணிந்த நோன்பு கயிற்றை அவரைப்பந்தலின் மேல் போட்டு மறந்துபோனதின் விளைவாக பாக்கியவதியின் நாட்டை பேரரசன் கைப்பற்றிக்கொண்டு இவர்களை ஊரைவிட்டு துரத்தி விட்டான். பாக்கியவதியும் அவள் புருசனும் நித்திய தரித்திரியர்களாகி உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி இருக்கையில் நோன்பு கயிறு அவரைப் பந்தலில் இருந்ததால் அவரைக் காய் மிகையாககாய்கள் பாக்கியவதி அந்த அவரைக்காய்களை
சமைத்துப் புசித்து ஜீவித்து வந்தனர்.
இப்படியிருக்கையில் ஒருநாள் பாக்கியவதி தன் குமாரனை அழைத்து அப்பா நாம் நாடு நகரிழந்து உண்ண உணவுக்கும் உடுக்க ஆடைக்கும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆகையால் நீ இராஜகிரிக்கு போய் உன் பெரியதாயான புண்ணியவதி சகல ஐஸ்வர்யத்துடனும் வாழ்வதால் அவளிடம் நம்முடைய தற்கால நிர்வாகத்தை தெரிவித்துக் கொஞ்சம் திரவியம் கேட்டு வாங்கிக்கொண்டு வா என்று சொல்லி கட்டமுது கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள். அந்தப்பிள்ளை ராஜகிரிக்குப் போய் தன்
பெரிய தாயாரைக் கண்டு தங்கள் வர்த்த மானங்களைச் சொல்ல
நினைவு மலர் 113

Page 63
தாபந்தியப்பட்டு பிள்ளையை நாலு நாள் வைத்து இருந்து சில வஸ்த்திரங்களும் ஆபரணமும் திரவிய மடிப்பும் கட்டமுது கட்டிக்கொடுத்து அனுப்பினாள். அதை வாங்கிக் கொண்டு சில தூரம் வந்து ஒரு குளக்கரையில் மூட்டையை வைத்துவிட்டு கட்டமுது சாப்பிடுகின்ற சமயத்தில் மூட்டையை கருடன் எடுத்துக்கொண்டு போய்விட்டது. அது கண்டு சிறுவன் மனஸ்தாபப்பட்டு மறுபடியும் நடந்ததை சொல்ல விசனப்பட்டு திரவியங்களைக் கட்டிக்கொடுத்து அனுப்பினாள்.
அதைக் கொண்டு வருகையில் வழியிலே ஒரு திருடன் வந்து சிறுவனிடம் பறித்துக்கொண்டு போய்விட சிறுவன் துக்கப்பட்டுக்கொண்டே மறுபடியும் பெரிய தாயாரிடம் சென்று அம்மாநாங்கள் செய்த பாவம் என்னவோ தெரியவில்லை. இரண்டாவதாகக் கொடுத்த திரவியங்களையும் திருடன் பறித்துக்கொண்டு போய் விட்டான் என்று சொல்லி வருந்திய சிறுவனை தேற்றி குழந்தாய் உன் தாயார் கேதாரேஸ்வரர் விரதத்தை அனுஷ்டித்து வருகின்றாளா இல்லையா? என்று கேட்க அந்த நோன்பு விரதத்தை அனுஷ்டிப்பதில்லை முன்னே நோன் புக் கயிற்றையும் அவரைப் பந்த லின் மேலே போட்டுவிட்டாள். அன்று முதல் இக்கஷ்டங்கள் எல்லாம் வந்தது என தெரிகிறது என்று கூறினான். இதைக்கேட்டு புண்ணியவதி மிகவும் மனம் வருந்தி புரட்டாதி மாதம் வருந்தனிலும் சகோதரி குமாரனை தன்னிடமே நிறுத்திக்கொண்டு புரட்டாதி மாதம் தான் நோற்கின்ற நோன்போடு கூட பாக்கியவதிக்கும் ஒரு பங்கு நோன்பு வைத்து நோற்று அந்த நோன்புக்கயிறும் பலகாரமும் பாக்கு வெற்றிலை மஞ்சளும் இன்னும் சில ஆடை ஆபரணங்களும் திரவியமும் கொடுத்து காவலாக சில சேவகரையும் கூட்டி இனிமேலாவது இந்த நோன்பை விடாமல் நோக்கச்சொல்லி சில புத்திமதிகளையும் சொல்லி அனுப்பினாள்.
பெரிய தாயாரிடம் விடை பெற்று வரும்போது முன்னே வழியில் பறித்துப்போன திருடர் திரவியத்தைக் கொடுத்து சென்றான். கருடன் மூட்டையை கொண்டு வந்துபோட்டுவிட்டு
114நினைவு மலர்

உன் தாய் கேதாரேஸ்வரர் நோன்பு விரதத்தை விட்டு விட்டதினாலே இவ்விதம் வந்தது. இனிமேல் பயபக்தியுடன் நோன்பு நோற்க சொல் என்று சத்தம் உண்டாக்கி கூற சிறுவன் ஆச்சரியப்பட்டு பயபக்தியோடும் சந்தோசத்தோடும் தன் வீட்டிற்கு வந்து தாயின் கையில் பெரிய தாயாரால் கொடுக்கப்பட்ட நோன்பு கயிற்றையும் பலகாரத்தையும் முன்னே கொடுத்துபிறகு தனத்தையும் கொடுத்து நடந்த விஸ்தாரங் களையும் சொல்லக் கேட்ட பாக்கியவதி மெய்தான் என் அகங்காரத்தினால் கேட்டேன் என்று சொல்லி ஸ்நானம் செய்து கேதாரேஸ்வரரை நமஸ்காரம் செய்து கயிற்றை வாங்கி கட்டிக்கொண்டாள். அந்த நாளிகைக்கே தங்கள் பட்டணத்தை பிடுங்கிக் கொண்ட அரசன் பட்டணத்தையும் யானை சேனை பரிவாரங்களையும் பகுதியையும் கொடுத்து விட்டுப் போய்விட்டான்.
பிறகு முன்போலவே பாக்கிய வதிக்கு அஷ்ட ஐஸ்வர்யமும் உண்டாகவே தான் முன்பு நோற்க தவறியபடி யினாலே கேதாரேஸ்வரர் வறுமையை தந்தாரென்று அறிந்து அன்று முதல் நோன்பை கைப்பற்றியதால் சகல சம்பத்தும் பெருகி சுக போகத்தோடு வாழ்ந்து வந்தாள். ஆதலால் இப்பூவுலகத்தில் கேதா ரேஸ்வரர் விரதத்தை மனப்பூர்வமாக விரும்பிச் செய்பவர்களுக்கு பரமேஸ்வரன் சகல செல்வங்களையும் அனுக்கிரகிப்பார். அன்பர்கள் இந்த நோன்பை பக்தி விநயத்தோடு செய்து சுக சேமங்களை அடைந்து மேன்மை யாக
வாழ்வார்களாக,
கேதாரேஸ்வரர் நோன்பு கதை முற்றிற்று.
«Η γη
S0S LLqiqSLLSL0S LiLSL0M SLSeLS0M iLiqLSiSSiSSiS SJYSiiiLLS
சொக்கரும் அருளும்
சொக்கன் என்ற ஒருகால் ஒதின் துயர்கெடும் பகையும் மாளும் சொக்கன் என்று ஒருகால் ஒதின் தொலைவிலாச்செல்வம் உண்டாம் சொக்கன் என்ற ஒருகால் ஒதின் கருதிசொல் யாண்டும் செல்லும் சொக்கன் என்ற ஒருகால் ஒதின் சொக்கமும் எளிதாம் அன்றே.
N-N-sease as N2-case s2 s sas
நினைவு மலர்

Page 64
தேவி து8ைDT ஓம் சக்தி
கெளரி காப்பு
திருச்சிற்றம்பலம் விநாயகர் துதி முன்னின்று செய்யுள் முறையாகப் புனைவதற்கு
என்னின்று அருள்செய் எலிவா கனப்பிள்ளையாய் சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வுதரும் எக்குற்றமும் வாராமற் கா.
வேண்டுதற் கூற்று காப்பெடுக்க வந்தேனே கெளரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய் பண்ணும் வினையாவும் பணிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிருக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய் சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மாகாளி தாயே கொடியமகி ஷாசுரனைக் கூறு போட்டவளே அசுரக் குணம்யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரணை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய் அரனை நினைத்தல்லோ அம்மா நீ நோன்பிருந்தாய் சங்கரனை எண்ணியல்லோ சங்கரி நீ நோன்பிருந்தாய்
16நினைவு மலர்
 

ஐங்கரனைப் பெற்றவளே அன்று நீ நோன்பிருந்தாய் விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும் அம்மா உமையணைத்தே அருள்மாரி பொழிந்தானே வகையாற்றுப் படலமிதை வழிவழியாய்க் காட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய் காப்பைப் புனைந்துவிடு காலபயம் ஒட்டிவிடு நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா வீடு செழிக்கவென்றே விழைகாப்பு அருளுமம்மா நல்வாழ்வு வாழ்வதற்கு நற்காப்பு அருளுமம்மா அல்லல் அறுப்பதற்கு அருட்காப்பு அருளுமம்மா பிள்ளைஅற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா கல்வி சிறப்பதற்குக் கலைமகளே வாருமம்மா செல்வம் சிறப்பதற்குத் திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா பாட்டுடைத் தலைவியாரே பராசக்தி தாயவளே! ஏட்டுடைத் தேவியாரே எல்லாம்மிகு வல்லபையே காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள் நானுமக்குத் தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையைக் கணப்பொழுதில் மாற்றிவிட்டால் ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகழ் தேவியரே காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும் ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
நினைவு மலர் 117

Page 65
தொடர்ந்து அணிவோர்க்குத் தொட்டதெல்லாம் ஜெயமாகும் இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும் நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும் சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே குங்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கெளரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிந்ததென்று ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனிற் பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன் காப்பெணக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பவரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன் தீமைச் செயலெதுவும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு சித்தியெல்லாந்தருள்வாள் சீர்பெருகு கெளரியவள் முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வும் உண்டு எச்சகத்திலுள்ளோரெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கெளரியவள் கெளரிக் காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே
காளியாய் வந்தமர்ந்த கெளரியே காப்பருளும்.
திருச்சிற்றம்பலம்
શ્રે
18நினைவு மலர்

&一 。 dejLpulb
6(560Tafsirfish are III fisér
இருளிய
திருப்புகழ்
விநாயகர் துதி
இராகம் : கம்பீரநாட்டை
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன
தாளம் : ஆதி
தனதான
1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் கற்றிடு மடியவர் புத்தியிலுறைபவ
கற்பக மெனவினை மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு முத்தமிழடைவினைமுற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது பொடிசெய்த அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்
இராகம் : பாஹேழரீ
தந்தனத் தானதனத்
தந்தனத் தானதனத்
2. உம்பர்தருத் தேனுமணிக்
ஒண்கடலிற் றேனமுதத்
இன்பரசத் தேபருகிப்
ஏன்றனுயிர்க் காதரவுற்
தம்பிதனக் காகவனத்
தந்தைவலத் தாலருள்கைக்
அன்பர்தமக் கானநிலைப்
ஐந்துகரத்தானைமுகப்
அடிபேணி
கடிதேகும்
மதயானை
பணிவேனே
முதல்வோனே
அதிதீரா
யிபமாகி
பெருமாளே.
தாளம் : கண்ட சாபு
தனதான
தனதான
கசிவாகி துணர்வூறி பலகாலும் றருள்வாயே தணைவோனே கனியோனே பொருளோனே பெருமாளே.
நினைவு மலர் 19

Page 66
இராகம் எதுகுலகாம்போதி தாளம் : ஆதி(கண்டகதி)
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன í தனதான
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதுமதிக்கவரு குக்குடமும் ரகூைடிதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்திருப்புகழ்விருப்பமொடு
செப்பெனன் னக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சக்கரைபருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை யிளநீர்வண் டெச்சில்பயறப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பசுஷ்ணமெனக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனு மருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
இராகம் : சண்முகப்பிரியா தாளம் : மிச்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன தனதான
4. முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரிமத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியி லிரவாகப்
120நினைவு மலர்

பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பகூடித்தொடு ரக்ஷத் தருள்வது
தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு
திக்குபரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ நட்பற்றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல
திருப்பரங்குன்றம்
இராகம் : சாருகேசி
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன
5. உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடு னடியிணை உறப்பணிந்தில னொருதவ மிலனுண
உளத்து ளன்பினருறைவிட மறிகிலன்
விருப்பொ டுன்சிகரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன்
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதனுழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு
மொருநாளே
கழுதாடத்
எனவோதக்
முதுகூகை
பெருமாளே.
தாளம் ஏகம்
தனதானா
தருள்மாறா
மலைபோலே
பொருபோதே
நினைவு மலர் 121

Page 67
கலக்குறுஞ்செய லொழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தி லென்பய மறமயில் முதுகினில் வருவாயே
வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுண விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் புரிவேலா
மிகுந்த பண்பயில் குயில்மொழி யழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை யுடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொரிந்தலர் பொதியவிணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநிவரர்தொழ மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநிறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்ப ரங்கிரிதனிலுறை சரவண பெருமாளே.
திருப்பரங்குன்றம்
இராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி
தந்தனந் தந்தத் தனதான தந்தனந் தந்தத் தனதான
6. சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந்துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் றுனைநாளும் கண்டுகொண் டன்புற் றிடுவேனோ தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே.
நினைவு மலர்

திருச்செந்தூர்
இராகம் : அடானா தாளம் : ரூபகம் (கண்டஜாதி)
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத் தந்தன தனந்தனந் தனதனத் தனதான
7. அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்தத முவந்துகண் டரிவையர்க் கன்புரு குசங்கதந் தவிரமுக் குணமான அந்திபக லென்றிரண்டையுமொழித் திந்திரி யசஞ்சலங்களையறுத் தம்புயப் பதங்களின் பெருமையைக் கவிபாடிச்
செந்திலை யுணர்ந்துணர்ந்துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந்தறிவினிற் சென்றுசெருகுந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையுமவிழ்ந்தவிழ்ந்துரையொழித் தென்செயலழிந்தழிந்தழியமெய்ச் சிந்தைவ ரவென்றுநின் தெரிசனைப் படுவேனோ
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக் கும்பிடு புரந்தரன் பதிபெறக் குஞ்சரி குயம்புயம் பெயஅரக் கருமாளக்
குன்றிடியவம்பொனின் திருவரைக்
கிண்கிணி கினின்கினின் கிணினென
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீச
தந்தன தனந்தனந்தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந்துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளிர்நடை சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.
நினைவு மலர் 123

Page 68
திருச்செந்தூர்
இராகம் : உசேனி தாளம் : கண்டசாதிதிரிபுடை
தனதனன தனன தந்தத் தனதான
தனதனன தனன தந்தத் தனதான
8. இயலிசையிலுசித வஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் தருவாயே மயில்தகர்க லிடைய ரந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் தணைவோனே கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே கரிமுகவ ணிளைய கந்தப் பெருமாளே.
திருச்செந்தார்
ராகம் ஆனந்தபைரவி ஆனநத
தந்த தனன தனனா தனனதன
தந்த தனண தணனா தனனதன
தந்த தனண தணனா தனனதன
9. தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு
வந்த பிணியுமதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவேதனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை
124நினைவு மலர்
தாளம் : ஆதி
தனதான
நகையாடி
செவியாகி
துயர்மேவி
வரவேணும்

எந்தை வருக ரகுநாயகவருக
மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
யுண்க வருக மலர்கு டிடவருக என்று பரிவி னொடுகோசலைபுகல வருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிள
வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய அடுதீரா
திங்க ளரவு மதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் பெருமாளே.
திருச்செந்தூர்
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி
தந்ததன தான தானத் தான
தந்ததனதான தானத் தான தந்ததன தான தானத் தான தனதானா
10. முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே முந்தைவினை யேவராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத்தோடு நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநுகூல பார்வைத் தீர செம்பொன்மயில் முதி லேயெப் போது வருவாயே
நினைவு மலர் 125

Page 69
அந்தண் மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார முடிமேலே
அஞ்சலிசெய்வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான செஞ்சமரை மாயு மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.
பழநி (திருவாவினன்குடி)
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி
தான தந்தன தானா தனாதன
தான தந்தன தானாதனாதன
தான தந்தன தானா தனாதன தனதான
11. நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம ஞான பண்டித ஸாமீநமோநம வெகுகோடி நாம சம்புகு மாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோநம நாக பந்தம யூரா நமோநம பரசூரர்
சேத தண்டவிநோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம தீர சம்ப்ரம வீரா நமோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரிபாகா நமோநம அருள்தாராய்
ஈதலும்பல கோலால பூஜையும்
ஒதலுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையு மறவாத
126நினைவு மலர்

ஏழ்த லம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம நோகர ராஜ கெம்பிர நாடாளு நாயக Gill g/TTIT
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடேமு நாளினில் ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்ந னாடதில் ஆவி னான்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
பழநி (திருவாவினன்குடி)
இராகம் சக்கரவாகம் தாளம் : கண்டஜாதி ஜம்பை
தனதான தந்தனத் தனதான தனதான தந்தனத் தனதான
12. அபர நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானி னைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே இமவான்ம டந்தையுத் தமிபாலா ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவினன்குடிப் பெருமாளே.
սքtB இராகம் : கரகரப்பிரியா தாளம் : கண்டசாபு
தனனாதனந்ததன தனனாதனந்ததன தனனாதனந்ததன தனதான
13. சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதிலும்பகர்செய் குருநாத சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவிரும்பியுளம் நினையாமல்
நினைவு மலர் 127

Page 70
அவமாயை கொண்டுலகில் விருதாவலைந்துழலு
மடியேனை அஞ்சலென வரவேணும் அறிவாக மும்பெருக இடரானதுந்தொலைய
அருள்ஞான இன்பமது புரிவாயே.
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே தெவயானை யங்குறமின் மணவாள சம்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா திருவாவினன்குடியில் வருவேள்சவுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் பெருமாளே.
பழநி இராகம் : கல்யாணி தாளம் : ஆதி(திஸ்ரநடை)
தனன தனணதனன தனன
தனன தனன தனதான
14.தமரு மமரு மனையுமினிய
தனமு மரசும் அயலாகத் தறுகண் மறலி முறுகு
கயிறு தலையை வளைய எறியாதே
கமல விமல மரகதமணி
கனக மருவு மிருபாதங் கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி மலையோனே கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி Doððoj TYTIT
அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் தருள்வோனே அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய பெருமாளே.
128நினைவு மலர்

பழநி
இராகம் மோகனம் தாளம் ஆதி (திஸ்ரநடை)
தனன தனணதனனதனன
தனனதனன தனதான
15. திமிர உததி யனைய நகர
செனன மதனில் விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் வரவேநின் அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்
சமர முகவெலசுரர் தமது
தலைக ளுருள மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை விடுவோனே
வெமர வணையிலினிதுதுயிலும்
விழிகள் நளினன் மருகோனே மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் பெருமாளே.
பழநி இராகம் : மதுவந்தி தாளம் : கண்டசாபு
தனதனனதான தந்த தனதனனதான தந்த தனதனனதான தந்த தனதான
16. அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேநடந்து இளைஞோனாய் அருமழலை யேமிகுந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வளர்ந்து பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநினைந்து துதியாமல்
நினைவு மலர் 129

Page 71
தெரிவையர்களாசை மிஞ்சி வெகுகவலை யாயுழன்று திரியுமடி யேனை யுன்ற னடிசேராய்
மவுணவுபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத னிந்த மகதேவர்
மனமகிழ வேயணைந்து ஒருபுறம் தாக வந்த
மலைமகள்கு மாரதுங்க வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதிகழ்ந்து
படியதிர வேநடந்த கழல்வீரா
பரமபத மாய செந்தில் முருகனெனவேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த பெருமாளே.
սքi8
இராகம் தோடி தாளம் : கண்டசாபு
தனதனனதான தந்த தனதான தனதனனதான தந்த தனதான
17. உலகபசு பாச தொந்த மதுவான
உறவுகளை தாயர் தந்தை மனைபாலர் மலசலசு வாச சஞ்ச லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய் சலமறுகு பூளை தும்பை யணிசேயே
சரவணபவாமு குந்தன் மருகோனே பலகலைசி வாக மங்கள் பயில்வோனே பழநிமலை வாழ வந்த பெருமாளே.
பழநி
இராகம் : இராகமாலிகை தாளம் : கண்டசாபு
தனதனனதான தந்த தனதனத தான தந்த
தனதனனதான தந்த தனதான
18. கருவினுரு வாகி வந்து வயதளவிலேவளர்ந்து
கலைகள்பல வேதெரிந்து மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரிதாகி நொந்து மிகவாடி
130நினைவு மலர்

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று மறியாமல் அசனமிடு வார்கள் தங்கள் மனைகள் தலை வாசல்நின்று
அநுதினமு நாண மின்றி யழிவேனோ
உரகபட மேல்வளர்ந்த பெரியபெரு மாள ரங்க
ருலகளவு மால்ம கிழ்ந்த மருகோனே உபயகுலதீபதுங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரிலன்று வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வளர்ந்த (5LDGugit பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீளவென்ற
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.
սքi8 இராகம் : சாருகேசி தாளம் கண்டசாபு
தானதன தானதனதானதனதானதன
தானதனதானதன தந்ததான
19. ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்
ஏறுமயில் வானகு காசரவணாஎனது
ஈசன்ன மானமுன தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவினாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ மேவஅணி
நீலமயில் வாகவுமை தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமரனேயிரம
தேவர்வர தாமுருக தம்பிரானே.
நினைவு மலர் 131

Page 72
ալքf6
இராகம் சக்கரவாகம் தாளம்: சங்கீரன ஜம்பை
தனதனன தனதனனதானத் தானத்
20. ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத்
தனதான
துணரேனே
உனதுபழ நிமலையெனு மூவரைச் சேவித்தறியேனே
பெருபுவியிலுயர்வரிய வாழ்வைத் தீரக்
குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப்
தொழுதுவழி படுமடியர் காவற் காரப்
விருதுகவி விதரணவி நோதக் காரப்
விறன்மறவர் சிறமிதிரு வேளைக் காரப்
பழநி இராகம் : சன்முகப்பிரியா தாளம்:
தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன
21. கடலை பொரியவரை பலக னரிகழைநுகர்
கடின குடவுதர
கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது
வடவரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வருமரகத மகபதிதருசுதை குறமி னொடிருவரு
மருவு சரசவித
அடல சுரரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட
அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
பமரக ரசரவன
படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுபதிவரநதி
பெருமாளே பெருமாளே
பெருமாளே பெருமாளே.
கண்டசாபு (திஸ்ர)
தனதான
விபரீத
துணைவோனே
மயில்வீரா
go GTI
எழில்மீறும்
பவலோலா
அழகான
பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு
132நினைவு மலர்
பெருமாளே.

u9ß
இராகம் பந்துவராளி தாளம் : கண்டசாபு
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதான
22. திடமிலிசற் குணமிலிநற்றிறமிலியற் புதமான
செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் றமிழ்பாட
இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் பெறவேணும்
கெடுமதியுற்றிடுமசுரக் கிளைமடியப் பொரும்வேலா கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்க்கொக் கிறகோடே படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் கொருபாலா பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் பெருமாளே.
սքi8 இராகம் : சிம்மேந்திரமத்திமம் தாளம் : கண்டசாபு
தனதனன தாத்த தனதான
23. வசனமிக வேற்றி மறவாதே
மனதுதுயராற்றி லுழலாதே இசைப்பயில்ச டாக்ஷ ரமதாலே
இகபரசெள பாக்ய மருள்வாயே பசுபதிசி வாக்ய முணர்வோனே பழநிமலை வீற்ற ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர்சிறை மீட்ட பெருமாளே.
சுவாமிமலை இராகம் ஆனந்தபைரவி தாளம் : திஸ்ரரூபகம்
தனதனன தனதனனதான தந்தனம்
தனதனன தனதனனதான தந்தனம் தனதனன தனதனனதான தந்தனம் தனதான 24. ஒருவரையு மொருவரறியாமலுந்திரிந்
திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ்
சனையாலே
நினைவு மலர் 133

Page 73
ஒளிபெறவே யெழுபுமர பாவை துன்றிடுங்
கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந் தொளிருமினலுருவதென வோடி யங்கம்வெந்
திடுவேனைக் கருதியொரு பரமபொருளிது என்றுஎன்
செவியிணையினருளியுரு வாகி வந்தஎன் கருவினையொ டருமலமு நீறு கண்டுதண்
டருமாமென்
கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
தொடைமசூட முடியுமொளிர்நூபு ரஞ்சரண் கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந்
தெனையாள்வாய் திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
தருணமழ விடையனட ராஜ னெங்கணுந் திகழருண கிரிசொருப னாதி யந்தமங் கறியாத
சிவயநம நமசிவய கார ணன்சுரந்
தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன் திருவுருவின் மகிழெனது தாய்பயந்திடும் புதல்வோனே
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
புவனகிரி சுழலமறை யாயிரங்களுங் குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் திடுவோனே
குறமகளினிடைதுவள பாத செஞ்சிலம்
பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண் குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் பெருமாளே.
சுவாமிமலை
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : கண்டசாபு
தனனதனதான தந்த தனணதனதான தந்த
தனனதனதான தந்த தனதான
25. சரணகமலாலயத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையிலேசனித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனே
நினைவு மலர்

கருணைபுரி யாதிருப்ப தெனகுறையி வேளை செம்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க
அரியதமிழ் தானளித்த மயில்வீரா அதிசயம் நேக முற்ற பழநிலை மீது தித்த
அழகதிரு வேரகத்தின் முருகோனே. சுவாமிமலை
இராகம் ஹம்ஸானந்தி தாளம் : கண்டசாபு
தனதன தனதன தனதான
26. நிறைமதி முகமெனு மொழியாலே நெறிவிழி கணையெனு நிகராலே உறவுகொள் மடவர்கள் உறவாமோ உனதிரு வடியினி அருள்வாயே மறைபயிலரிதிரு மருகோனே மருவலரசுரர்கள் குலகாலா குறமகள் தனைமண மருள்வோனோ குருமலை மருவிய பெருமாளே.
சுவாமிமலை இராகம் : பாஹேபூரீ தாளம் : மிச்ரசாபு
தான தனதனதான தனதன
தான தனதன தனதானா
27. பாதி மதிநதி போது மணிசடை
நாதரருளிய குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய LDGÕÕGolf GTIT
நினைவு மலர் 135

Page 74
காது மொருவிழி காக முறவருள்
மாய னரிதிரு
கால னெனையணு, காம லுனதிரு
காலில் வழிபட
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல
சுவாமிமலை
இராகம் : கல்யாணவசந்தம்
தனன தனதனதனன தனதன
தனன தனதன
28. குமரகுருபர முருக சரவண
குகசண்முககரி குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குரு றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர திமிர எழுகடலுலக முறிபட
திசைகள் பொடிபட சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு நமனை யுயிர்கொளு மழலினிணைகழல்
நதிகொள் சடையினர்
நளினகுருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ்
நினைவு மலர்
மருகோனே
அருள்வாயே
சிறைமீளா
மிளையோனே
லுறைவோனே
பெருமாளே.
தாளம் : மிச்ரசாபு
தனதான
பிறகான
மணியேயென்
முனையோதும்
லளியாயோ
வருசூரர்
மயில்வீரா
குருநாதா
பெருமாளே.

இராகம் ஹம்ஸானந்தி தாளம் : கண்டசாபு
தானந்த தத்ததன தானந்த தத்ததன
தானந்த தத்ததன தனதான
29. தேனுந்து முக்கனிகள் பால்செங்க ருப்பிளநீர்
சீரும்ப பூழித்தசிவ மருளுறத் தீதும்பிடித்தவினை யேதும்பொடித்துவிழ
சீவன்சி வச்சொருப மெனதேறி நானென்பதற்றுயிரொ டுனென்பதற்றுவெளி
நாதப்பரப்பிரம வொளிமிதே ஞானஞ்சுரப்பமகிழாநந்த சித்தியொடெ
நாளுங்க ளிக்கபத மருள்வாயே வானந்த ழைக்கஅடி யேனுஞ்செழிக்கஅயன்
மாலும்பிழைக்க அலை விடமான வாருங்க ரத்தனெமை யாளுந்த கப்பன்மழு
மானின்கரத்தனருள் முருகோனே தானந்த னத்ததன னாவண்டு சுற்றிமது
தானுண்க டப்பமல ரணிமார்பா தானங்கு றித்துஎமை யாளுத்திருக்கயிலை
சாலுங்கு றத்திமகிழ் பெருமாளே.
திருத்தணிகை
இராகம் : கல்யாணவசந்தம் தாளம் : ஆதி (கண்டநடை)
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன தனதான
30. இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவ
ரிடுக்கினை யறுத்திடு மெனவோதும் இசைத்தமிழ் நடத்தமிழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய கவிநாலுந்
தரிப்பவருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத லறியாதே தனத்தினில் முகத்தினில் மனத்தினிலுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
நினைவு மலர் 137

Page 75
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த மதவேளைக் கருத்தினில் நினைத்தவ னெருப்பெழநுதற்படு
கனற்கணி லெரித்தவர் கயிலாயப்
பொருப்பினிலிருப்பவர் பருப்பதவுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் தருசேயே புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே.
திருத்தணிகை
இராகம் ஹம்ஸானந்தி தாளம் : கண்டஜதி
தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்
தனத்தன தனத்தந் தனதான
31. சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவ ருயிர்க்கும் சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புகழுரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபோரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழங்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுந்துங் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தென்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
188நினைவு மலர்

திருச்சிராப்பள்ளி
இராகம் : சிவரஞ்சனி தாளம் திஸ்ரதிரிபுடை
தானத்தத் தான தானன
தானத்தத் தான தானன தானத்தத் தனதானன தந்ததானா
32. வாசித்துக் காணொணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொணாதது நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொணாதது நேசர்க்குப் பேரோணாதது
மாயைக்குச் சூழொ ணாதது விந்துநாத
ஒசைக்குத் தூரமானது
மாக்கத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது கண்டுநாயேன்
யோகத்தைச் சேருமாறுமெய்ஞ்
ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும யங்கலாமோ ஆசைப்பட டேனல் காவல்செய்
வேடிச்சிக்காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி கந்தவேளே
ஆலித்துச்சேல்கள் பாய்வய
லூரத்திற் காள மோடட ராரத்தைப் பூணம் யூரது ரங்கவீரா
நாசிக்குட் ப்ராண வாயுவை
நேசிதெட் டாத யோகிகள் நாடிற்றுக் காணொ னாதென நின்றநாதா
நாகத்துச் சாகை போயுயர்
மேகத்தைச் சேர்சி ராமலை நாதர்க்குச் சாமி யேசுரர் தம்பிரானே.
நினைவு uostorf || 39)

Page 76
சிரகிரி (சென்னிமலை)
இராகம் : தேஷ் தாளம் : ஆதி
தத்தானா தானனத் தனதான
33. பத்தியால் யானுன்னைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமாதானசற் குணர்நேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே.
சிரகிரி (சென்னிமலை)
இராகம் : சாமா தாளம் : ரூபகம்
தனதனதனத் தனதான தனதனதனத் தனதான
34. பகலிரவினிற் றடுமாறா பதிகுருவெனத் தெளிபோத
ரகசியமுரைத் தநுபூதி ஈதநிலைதனைத் தருவாயே இகபரமதற் கிறையோனே : இயலிசையின்முத் தமிழோனே சகசிரகிரிப் பதிவேளே சரவணபவப் பெருமாளே.
விராலி மலை
இராகம்: ஹிந்தோளம் தாளம் ஏகம்
தானான தானதான தனதன
தானான தானதான தனதன
தானானதான தான தனதன தனதான
35. சீரான கோல கால நவமணி தனதான
மாலாபிஷேக பார வெகுவித தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்
140நினைவு மலர்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள் ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ் ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையிைல்
மீதேறி மாறி யாடு மிறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த லீலாவி சார தீர வரதர குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னிடேறு மாறு பாநு மறைவுசெய் கோபால ராய னேய முளதிரு மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்விராலி மலைதயுறை பெருமாளே.
நாககிரி இராகம் கானடா தாளம் : கண்டசாபு
தானதனத் தனதான தானதனத் தனதான
36. காலலிடத் தணுகாதே ; காசினியிற் பிறவாதே
சீலஅகத் தியஞான; தேனமுதைத் தருவாயே மாலயனுக் கரியானே; மாதவரைப் பிரியானே நாலுமறைப் பெருமானே; நாகதிரிப் பெருமாளே.
நினைவு மலர் 141

Page 77
கதிர்காமம்
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி தாளம் : ஆதி
தனதனனதான தனதனனதான
தனதனன தானத் தனதானா
37. திருமகளு லாவு மிருபுயமு ராரி
திருமருக நாமப் பெருமாள்காண் ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளையாடு
மரகதம யூரப் பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண் அரவுபிறை வாரி விரிவுசடை வேணி
அமரர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவிடாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப் பெருமாளே.
கதிர்காமம் இராகம் : சாரங்கா தாளம் : ஆதி
தனனதான தத்த தனதான
38. எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தாணி னைப்பை யிருபோதும் இதய வாரி திக்கு ளுறவாகி
எனது ளேசிறக்க அருள்வாயே
142நினைவு மலர்

கதிர காம வெற்பி லுறைவோனே
கனக மேரு வொத்த புயவிரா மதுர வாணி யுற்ற கழலோனே வழுதி கூனி மிர்த்த பெருமாளே.
GULDGDGD
இராகம் : சண்முகப்பிரியா தாளம் : சதுஸ்ரஆதி
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன தனதன தனதானா
39. சரவணபவநிதி யறுமுக குருபர
சரவணபவறித யறுமுக குருபர சரவணபவGதி யறுமுக குருபர எனவோது தமிழினிலுருகிய வடியவரிடமுறு
சனனம ரணமதை யொழிவற சிவமுற தருபிணிதுளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே
கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர்துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மதிகன
கலகமிணையதள கழியழிவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது மொருநாளே திரிபுர மெரிசெயு மிறையவரருளிய
குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலுமுலவிய வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
மனதுகுடியுமிரு பொருளிலு மிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு பெருவாழ்வே.
நினைவு மலர் 143

Page 78
அரவணை மிகைதுயில் நரகரி நெடியவர் மருகனெனவெவரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய முருகோனே
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
அழகினு டனமரு மரகர சிவசிவ பெருமாளே.
குன்றுதோறாடல்
இராகம் : கல்யாணி தாளம் : ஆதி
தனனந்தனன தந்த தனதான தனனந்தனன தந்த தனதான
40. அதிருங் கழல்பணிந்து னடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண இதயந் தனிலிருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே எதிரங் கொருவரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கி லுமைபாலா பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும மர்ந்த பெருமாளே.
பழமுதிர்ச்சோலை
இராகம் : சிம்மேந்திரமத்திமம் தாளம் அதி
தனதனதான தனதன தான தனதனதான தனதான
தனதனதான தனதனதான தனதனதான தனதான
41. அகரமுமாகி யதிபனு மாகி யதிகமுமாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி
அமர்மேலாய்
நினைவு மலர்

இகரமுமாகி யெவைகளு மாகி யினிமையுமாகி
வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி
வரவேணும் மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களிகூரும்
வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம
முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு
மயிலோனே திருமலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவு
பெருமாளே. பழமுதிர்ச்சோலை இராகம் ஹம்ஸத்வனி தாளம் : சதுஸ்ரஆதி
தான தத்த தான தனா தனாதன
தான தத்த தான தனா தனாதன தான தத்த தான தனா தனாதன தனதானா
42. சீர்சிறக்கு மேனி பசேல் பசேலென
நூபுரத்தி னோசை கலீர் கலீரென சேர விட்ட தாள்கள் சிவேல் சிவேலென வருமானார்
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களு நூறு லக்ஷ கோடி மயால் மயால்கொடு
தேடி யொக்க வாடி யையோ வையோவென மடமாதர்
மார்படைத்த கோடு பளீர் பளீரென ஏம லித்தெனாவி பகீர் பகீரென மாம சக்கி லாசை யுளோ முளோமென நினைவோடி
வாடை பற்று வேளை அடா அடாவென
நீம யக்க மேது சொலாய் சொலாயென
வாரம் வைத்த பாத மிதோ இதோவென அருள்வாயே
பாரதத்தை மேரு வெளி வெளிதிகழ்
கோடொடித்த நாளில் வரைஇ வரைஇபவர்
பானிறக்க ணேசர் குவா குவாகனர் இளையோனே
நினைவு மலர் 145

Page 79
பாடன் முக்ய மாது தமிழ் தமிழிறை
மாமு னிக்கு காதிலுணார் வுணார்விடு பாச மற்ற வேத குரூ குரூபர (95LDGug-st
போர்மி குத்த சூரன் விடோம் விடோமென
நேரெதிர்க்க வேலை படீர் படீரென போயறுத்த போது குபிர் குபிரென வெகுசோரி
பூமி யுக்க வீசு குகா குகாதிகழ்
சோலை வெற்பின் மேவு தெய்வ தெய்வானைதொள்
பூணியிச்சையாறு புயா யுயாறுள பெருமாளே.
காஞ்சிபுரம்
இராகம் அடனா தாளம்: சங்கீர்ணசாபு
தத்தத் தனதான தத்தத் தனதான
43. அற்றைக் கிரைதேடி, - அத்தத் திலுமாசை
பற்றித் தவியாத, - பற்றைப் பெறுவேனோ வெற்றிக் கதிர்வேலா; - வெற்பைத் தொளைசீலா கற்றுற் றுணர்போதா, - கச்சிப் பெருமாளே.
திருவானைக்கா
இராகம் : பாஹேழரீ தாளம் : ஆதிதிஸ்ர)
தானத் தானத் தனதான
44. நாடித் தேடித் தொழுவார்பால்
நானத் தாகத் திரிவேனோ LDT ó5 g. L-ió பதிஞான
வாழ்வைச் சேரத் தருவாயே பாடற் காதற் புரிவோனே
பாலைத் தேனொத் தருள்வோனே ஆடற் றோகைக் கினியோனே
ஆனைக் காவிற் பெருமாளே.
நினைவு மலர்

சிதம்பரம்
இராகம் : காபி
தனதன தனன தனதன தனன
தனதன தனன
45. எழுகடல் மணலை அளவிடி னதிக
மெனதிடர் பிறவி இனியுணதபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு கடலுன தடய மடிமையு னடிமை
கடுகியு னடிகள்
விழுதிகழழகி மரகத வடிவி
விமலிமு னருளு
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில்
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
யிரைகொளும் அயலை
இமையவர் முனிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு
சிதம்பரம்
இராகம் சாருமதி
தனதனன தனன தந்தத்
46. இருவினையின் மதிமயங்கித்
எழுநரடிகிலுழலு நெஞ்சுற் பரமகுரு அருள்நினைந்திட்
பரவுதரி சனையை யென்றெற்
தாளம்: விலோமமிஸ்ரசாபு
தனதான
அவதாரம்
(LDL9-Us Igbs
மயர்வானார்
தருவாயே
முருகோனே
வருவோனே
யுடையோனே
பெருமாளே.
தாளம் : ரூபகம்
தனதானா
திரியாதே றலையாதே
டுனர்வாலே
கருள்வாயே
நினைவு மலர் 147

Page 80
தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே சிவனருளு முருக செம்பொற் கழலோனே
கருணை நெறி புரியு மன்பார்க் கெளியோனே கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
பொது
ராகம் : பூர்வகல்யாணி
lb
தய்யதனதான
தாளம் : கண்டஜாதி ஜம்பை
தனதான
47. துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே மெள்ளவரு சோலைக் குயிலாலே மெய்யுருகு மானைத் தழுவாயே தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே செய்யகும ரேசத் திறலோனே வள்ளல்தொழு ஞானக் கழலோனே
வள்ளிமண வாளப் பெருமாளே.
பொது
இராகம் : பிலகரி தாளம் : கண்டசாபு
தானந்த தானந்த தனதான தானந்த தானந்த தனதான
48. நீலங்கொள் மேகத்தின் மயில்மிதே நீவந்த வாழ்வைக்கண் டதனாலே மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா நாலந்த வேதத்தின் பொருளோனே நானென்று மார்தட்டும் பெருமாளே.
14&நினைவு மலர்

பொது
இராகம் : கரஹரப்பிரியா தாளம் : கண்டசாபு
தனதான தந்ததத்த தனதான தந்ததத்த
தனதான தந்ததத்த தனதான
49. அடியார்ம னஞ்சலிக்க எவராகிலும்பழிக்க
அபராதம் வந்துகெட்ட பிணிமூடி அனைவோரும் வந்துசிச்சி யெனநால்வ ருஞ்சிரிக்க
அனலோடழன்றுசெத்து விடுமாபோற்
கடையேன்ம லங்கள்முற்ற மிருநோயு டன்பிடித்த
கலியோடி றந்துசுத்த வெளியாகிக் களிகூர என்றனுக்கு மயிலேறி வந்துமுத்தி
கதியேற அன்புவைத்து னருள்தாராய்
சடைமீது கங்கைவைத்து விடையேறு மெந்தைசுந்த
தழல்மேனியன்கிசிரித்தொர் புரமூணும்
தவிடாக வந்தெரிர்த்த மதனாக முஞ்சிதைத்த
தழல் பார்வையன்றளித்த குருநாதா
மிடிதீர அண்டருக்கு மயிலேறி வஞ்சர்கொட்டம்
வெளியாக வந்துநிர்த்த மருள்வோனே மினனுரல்ம ருங்குல்பொற்பு முலைமாதி ளங்குறத்தி
மிகமாலொ டன்புவைத்த பெருமாளே.
பொது
இராகம் : ஹமீர்கல்யாணி தாளம் : ஆதி
தானா தனந்த தானா தனந்த
தானா தனந்த தனதான
50. ஊனே றெலும்பு சீசீமலங்க
ளோடே நரம்பு கசுமாலம் ஊழ்நோ யடைந்து மாசானமண்டு
மூனோ டுழன்ற கடைநாயேன்
நினைவு மலர் 149

Page 81
நானா ரொடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து உனையோத நானா ரிரிங்க நானா ருணங்க
நானார் நடந்து விழநானார்
தானே புணர்ந்து தானே யறிந்து
தானே மகிழ்ந்து அருளுறித் தாய்போல் பரிந்த தேனோடுகந்து
தானே தழைந்து சிவமாகித்
தானே வளர்ந்து தானே யிருந்த
தார்வே ணியெந்தை யருள்பாலா சாலோ கதொண்டர் சாமீபதொண்டர்
சாரூ பதொண்டர் பெருமாளே.
பொது
இராகம் : சிவரஞ்சனி தாளம் : கண்டசாபு (செளக்கம்)
தனதான தான தந்த தனதான தான தந்த
தனதான தான தந்த தனதான
51. மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநினைந்து
மதனூட லேமு யங்கி யதிரூப மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி
மதிசிரெ லாமழிந்த கொடிதான
வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேயுழன்று
விரகான்மெ யேதளர்ந்து விடுநாளில்
விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
வெளிஞான வீடு தந்து அருள்வாயே.
தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று
சிறுபேதை கால்பணிந்த (5LDGug-IT
திரையாழி சேது கண்டு பொருராவணேசை வென்ற
திருமால்மு ராரி தங்கை யருள்பாலா
150 நினைவு மலர்

முனிவோர்கள் தேவ ருமபர் சிறையாக வேவளைந்த
முதுசூரர் தானை தங்கள் கிளையோடு முடிகோடி தூளெழுந்து கழுகோடு பாற ருந்த
முனைவேலி னாலெறிந்த பெருமாளே.
பொது
இராகம் வசந்தா தாளம் : சதுஸ்ர அட
தனந்த தானந் தந்தன தனதன தனதான
52. இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு முறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் DGTGTGITT திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே சிவந்த காலுங் தண்டையு மழகிய பெருமாளே.
பொது இராகம் : சாருகேசி தாளம் : ஆதி
தனந்த தானந் தனதன தானன தனதான
53. இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் எழில்நீறும்
இலங்கு நூலும் புலியதளாடையு மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேரஞ முனிவோனே உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே அசந்த போதென்துயர்கெட மாமயில் வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
நினைவு மலர் 151

Page 82
பொது
இராகம் : மோஹனம் தாளம் ஏகம்
தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன தந்ததான
54. படிதனிலுறவெனு மனைவர்கள் பரிவொடு
பக்கத்திற்பல கத்திட்டுத்துயர் கொண்டுபாவப் பணைமர விறகுடை யழலிடை யுடலது
பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை யொன்றியேகக்
கடிசம னுயிர்தனை யிருவிழி யணலது
கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு டன்றுபோமுன் கதிதரு முருகனு மெனநினை நினைபவர்
கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது தந்திடாயோ
வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட
மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் வென்றிவாய வலியுடனெதிர்பொரு மசுரர்கள் பொடிபட
மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம லைந்தவிரா
அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை
அத்தர்க் குப்பொருள் கற்பித்துப்புகழ் கொண்டவாழ்வே அடியுக முடியுனும் வடிவுடனெழுமவு
னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் தம்பிரானே.
பொது
இராகம் : ஆபேரி தாளம் : மிஸ்ர ஜம்பை
தான தான தானான தானத் தனதான
55. காதி மோதி வாதாடு நூல்கற் றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப் பெறுவோரும் மாது பாகர் வாழ்வேயெ னாநெக் குருகாரும்
மாறி லாத மாகாலனுTர்புக் கலைவாரே
152 நினைவு மலர் 152நினைவு

நாத ரூப மாநாத ராகத்
நாக லோக மீரேழு பாருக்
தீதி லாத வேல்வீர சேவற்
தேவ தேவ தேவாதி தேவப்
பொது
இராகம் : கானடா தாளம்
தனனதான தானான தனனதான தானான
தனனதான தானான
56. குருதி தோலினால்மேவு குடிலி லேத மாமாவி
குலைய ஏம னாலேவி
துறைவோனே குரியோனே கொடியோனே பெருமாளே.
ஆதி(செளக்கம்)
தனதான
விடுகாலன்
கொடிய பாசமோர்சூல படையி னோடு கூசாத
கொடுமை நோய்கொ டேகோலி
யெதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியு லோர்கள் பாலாழி
பயமுறாமல் வேலேவு
மிளையோனே
பழுது றாத பாவாண ரெழுதொணாத தோள்வீர
பரிவினோடு தாள்பாட
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவி லானை தான்மூல
அருள்தாராய்
மெனவோடி
வருமுராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசன மோம றாகேசன்
கருதொணாத ஞானாதி எருதி லேறு காபாலி
கடிய பேயி னோடாடி
கனிலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
கருணை மேரு வேதேவர்
மருகோனே
கருதார்வெங்
பெருமாளே.
நினைவு uDavorí 153

Page 83
பொது இராகம் கானடா தாளம்: ஆதி(செளக்கம்)
தனனதான தானான தனனதான தானான
தனனதான தானான தனதான
57. அதல சேடனாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையிலேறு வாராட
அருகு பூத வேதாள Gö06 44 diff
மதுர வாணிதானாட மலரில் வேத னாராட
மருவு வானுளோராட மதியாட
வனச மாமி யாராட நெடிய மாமனாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்
கதைவிடாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை பொடியாகக் கதறுகாலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடுதி அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் மருகோனே உதய தாம மார்பான ப்ரபுடதேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே.
பொது
இராகம் : சண்முகப்பிரியா தாளம் : மிச்ரசாபு
தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன தந்ததான
58. குருரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
குறைவு லாப்பல என்பினாலும் கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய
குடலி லேற்றுயி ரென்றுகூறும் வடிவி லாப்புல மதனை நாட்டிடு
மறலியாட்பொர வந்திடாமுன்
154நினைவு மலர்

மதியு மூத்துன தடிக ளேத்திட
மறுவி லாப்பொருள் தந்திடாதோ
கடிய காட்டக முறையும் வேட்டுவர்
கருதொணாக்கணி வேங்கையாகி கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
களவி னாற்புணர் கந்தவேளே
முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ
முடிய வேற்கொடு வென்றவீரா முடிவி லாத்திரு வடிவை நோக்கிய
முதிய மூர்த்திகள் தம்பிரானே. பொது இராகம் : சாமா தாளம் : ரூபகம்
தந்த தனன தந்த தனன
தந்த தனன தனதான
59. மைந்த ரினிய தந்தை மனைவி
மண்டி யலறி மதிமாய வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
வன்கை யதனி லுறுபாசந்
தந்து வளைய புந்தி யறிவு
தங்கை குலைய உயிர்போமுன் தம்ப முனது செம்பொ னடிகள்
தந்து கருணை புரிவாயே
மந்தி குதிகொ ளந்தண் வரையில்
மங்கை மருவு D6ðÖTQ [TYTIT மண்டு மசுரர் தண்ட முடைய
அண்டர் பரவ மலைவோனே
இந்து நுதலும் மந்த முகமு
மென்று மினிய மடவார்தம் இன்பம் விளைய அன்பி லணையு
மென்று மிளைய பெருமாளே.
நினைவு மலர் 155

Page 84
GLJfTé5J
இராகம் : மத்தியமாவதி தாளம் : ஆதி
ததன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன தனதான
60. நிருத ரார்க்கொரு காலா ஜெயஜெய
சுரர்களேத்திடு வேலா ஜெயஜெய நிமலனார்க்கொரு பாலா ஜெயஜெய விறலான நெடிய வேற்படை யானே ஜெயஜெய எனஇ ராப்பகல் தானே நான்மிக நினது தாட்டொழு மாறே தானினி யுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவு மாக்கடலூடே நானுறு சவலை தீர்த்துன தாளே சூடியு னடியார்வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமு மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவுவ தொருநாளே
தருவினாட்டரசாள்வான் வேணுவி
னுருவ மாய்ப்பல நாளே தானுறு தவசி னாற்சிவனிபோய் வானவர் சிறைதீர
சகல லோக்கிய மேதா னாளுறு
மசுர பார்த்திப னோடே சேயவர்
தமரை வேற்கொடு நீறா யேபட விழமோதென்
றருள ஏற்றம ரோடே போயவ
ருறையு மாக்கிரி யோடே தானையு மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ரடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்டர னார்பால் மேவிய அதிபராக்ரம வீரா வானவர் பெருமாளே.
156நினைவு மலர்

ஆசைகளால் ஏற்படும் விளைவுகள்
பலகோடி பிறவிகளில் மானிடப் பிறவியே உயர்வானது என்று பகவான் பரந்தாமன் கூறுகிறார். இருந்தாலும் அப்பிறவி எடுத்தவர் செய்யும் செயல்களால் நல்வினையும், தீவினையும் அடைகின்றனர். அதைப்பற்றி மேலும் விளக்குகிறார்.
மானிடர்கள் நற்காரியங்களைப் புரிவதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்துவந்தால் நல்லுலகம் அடைவர். அவ்வாறின்றி தீயகாரியங்களைப் புரிந்துவந்தால் நரகலோகம் அடைவர். இதனால் உயர்ந்ததானமானிடப் பிறவியே வீணடிக்கப்பட்டு விடுகின்றது. உலகில் தம் பிறவிகளில் நற்காரியங்களை விடுத்து தீய காரியங்களைப் புரிபவர்கள் அதிகமாக உள்ளனர். முற்பிறவியிற் செய்த புண்ணியத்தாற் பெற்ற மானிடப்பிறவியைத் தமக்குத் தாமே பாழ் படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் அவர்கள் தமக்குத்தாமே கேடு புரிந்து கொள்பவர்களாகின்றனர்.
இவ்வுலகில் மானிடர்களை ஆட்டிப் படைப்பது ஆசைகள். அந்த ஆசைகளை மூன்றாகப் பிரித்துக் கூறலாம். மண், பொன், பெண் ஆசைகளாகும். இந்த மூவகை ஆசைகளில் மயங்கி, தம் மனச்சாட்சிக்கும், தம் மான உணர்வுக்கும் மாறான தீய காரியங்களில் ஈடுபட நேருகின்றது. இதனால் நீதி, தர்மங்கள் அழிக்கப்படுகின்றன. அந்நிலையில் மானிடராகப் பிறந்தும் மிருகங்களுக்கு ஒப்பான காரியங்களில் ஈடுபட்டு விடுகின்றனர்.
மானிடருக்கு ஆசை கூடாது என்பது பொருளல்ல. எதிலும் மிதமான ஆசை இருப்பது நல்லது. அப்படியின்றி அதுவே மிகுமானால், பேராசையாகின்றது. மானிடரிடம் பேராசை மிகும்போது அறிவுமயங்கி விடுகிறது. அன்பு அழிந்து போகின்றது அறநெறி தவற நேருகிறது. பேராசை மிகுதிப்படும்போது எவ்வளவு கிடைத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை.
எவ்வளவு கிடைத்தாலும் இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் ஆசை மிகுதிப்பட்டுக்கொண்டே போகிறது. எந்த ஒரு நிலையிலும் அது திருப்தி அடைவதில்லை. கையில் ஒரு காசும் இல்லாதவர், ஒரு பொன் வேண்டும் என்பர். அது கிடைத்துவிட்டால் அடுத்து பத்துப் பொன்மீது ஆசைகொள்வர். அதுவும் கிடைத்து விட்டால் அதற்கு மேலும் வேண்டும் என்று மேலும் மேலும் கேட்பார்.
நினைவு மலர் 157

Page 85
இவ்வாறுதான் ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தி அடையாமல் மேன்மேலும் வேண்டும் என்று பேராசை கொண்டு அலைந்து திரிந்து வருகின்றனர். அவ்வாறு அளவுக்கு அதிகமாகச் செல்வத்தைப் பெற்ற பிறகாவது மன அமைதி கொள்வாரா என்றால், இல்லை. ஒர் ஊருக்குத் தலைவனாக விரும்புவான். அது கிடைத்த பின்பு ஒரு நகரத் தலைவனாக ஏங்குவான். இவ்வாறு ஒரு நாட்டுக்கு அரசனாக அதற்கும் மேலாக அகில உலகத்துக்கே அதிபதியாக விரும்புவான். அப்படி அவன் ஏகாதிபத்ய சக்கரவர்த்தியான பின்பும் திருப்தி அடைவானா என்றால் அதுவும் இல்லை. வானுலகையே தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர விரும்புவான்.
பொன், பொருள், ஆசைகள் மிகுதிப்படும்போது அதுவே மண் ஆசையாக மாறி, மானிடர்களை அலைக்கழிக்கிறது. இந்த இருவகை ஆசைகளும் வளர, அதுவே பெண்களுடன் இன்பமனுபவிக்கும் பெண்ணாசை ஏற்படுகிறது. இவ்வாறு பொன், மண், பெண் ஆகிய மூன்று ஆசைகளும் பெருகப் பெருக மானிடர்களிடமுள்ள மானிடத்தன்மையை இழக்க நேருகிறது. இதனால் என்ன செய்கிறோம்? என்ன செய்வது என்று புரியாத குழப்பநிலைக்கு ஆளாக நேருகிறது.
தம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்திற் சுயநலக்காரனாகின்றனர். பஞ்சமா பாதகச் செயல் புரியவும் அஞ்சுவதில்லை. பிறருக்குத் துரோகம் புரியவும் தயங்குவதில்லை. அவர்களின் ஆசைகள் அவர்களின் மதியை மங்கச்செய்து விடுகிறது. தம்மைவிடக் கீழானவர்களையும் கரம் குவித்து வணங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், தம்நிலையில் தாழ்வுறுகின்றனர். பிறரால் இகழப்படக்கூடிய நிலை அடைகின்றனர்.
அவர்களின் வாழ்நாளில் இறுதிவரை அவர்களின் ஆசை நிறைவேறாமலேயே போய்விடுகிறது. அது மட்டுமன்றி அவர்கள் இறந்த பிறகு நரகத்திற்கே ஆளாகின்றனர். இத்தகைய விரும்பத்தகாத கேடு விளைவிக்கும் நிலை அடைவதற்குக் காரணம் ஆசை, பேராசை. அதுவே பல அழிவுகளுக்குக் காரணமாகிவிடுகிறது.
இந்த உண்மையை அறிந்த அறிஞர்கள், அதையே பின்பற்றுபவர்களாலும் மற்றவர்களாலும் போற்றப்படுவர். அது மட்டுமன்றித் தம் இறுதிக் காலத்தில் நிம்மதியாக இருந்து மரணத்துக்குப் பின் சொர்க்கத்தை அடைகின்றனர். புலன்கள் செல்லும் வழிகளில் மனத்தைச் செல்லவிடாமல் அடக்கியாள வேண்டும். அவ்வாறு புலன்களுக்கு அடிமையாகாமல் தன் மனத்தை நிலைநிறுத்தி இருக்கும் மானிடரே சுதந்திர மனிதராகின்றார். அவரே சகல விதமான
158நினைவு மலர்

நன்மைகளையும் பெறும் தகுதியுடையவர்கள் ஆவர். அவ்வாறின்றி மனத்தை அடக்கியாளாதவர், இளமையில் தாய் தந்தையரின் சொற்படி கேட்டு நடக்காதவர். பருவத்தில் பெண்களின் மோக வலையில் சிக்கி அவர்கள் பேச்சுக்கு மயங்கி நடப்பவர்கள், தம் முதுமைக் காலத்தில் தம் புத்திரர்களாலும், பேரன்களாலும் அவமதிப்புக்குள்ளாகி அவதியுற நேரும்.
இவற்றிற்கெல்லாம் காரணம் புலன்கள்மூலமாக அனுபவிக்கும் சுகங்களால் விளைவதே. அது எவ்வாறு என்பதை உதாரணம்மூலம் விளக்குகிறார் பரந்தாமன்.
துள்ளி ஒடுகின்ற புள்ளிமான்கள் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு மயங்கித் தம்மை மறந்து நின்று விடுகின்றன. அது தான் சமயமென்று வேடன் அந்தப் புள்ளிமானை வெகு சுலபத்தில் பிடித்து விடுவான். இதுகாதால் கேட்கும், செவிப்புலனால் நேரிடும் கேடாகும்.
பெண்யானையுடன் புணர்ச்சிகொள்ள விழைந்து ஆண்யானை அதைத் தொடர்ந்து செல்லும். இதையறிந்த வேட்டைக்காரர்கள் பள்ளத்தை வெட்டி அதில் அந்த யானையை எளிதில் விழச்செய்வர். இந்த வகையில் ஸ்பரிச உணர்வால் யானை கெடுவதாகும். மழைக் காலத்தில் எரியும் விளக்குகளைக் கண்டு, அவை கனிந்திருக்கும் கனி என்று நினைத்து விட்டில் பூச்சிகள் விளக்கில் பாயும், பின் தீய்ந்து கரியாகும். இது பார்வைப் புலனால் கெடும் நிலையாகும்.
தேனீக்கள் தமது நாவின் சுவைக்காகப் பல இடங்களிலும் அலைந்து திரிந்து, தேனைச் சேகரித்துவந்து தம் கூட்டிற் சேகரித்து வைக்கின்றன. அதன் விளைவு வேடர்கள் தீயினால் கொளுத்தியும், தேனீக்களைத் துரத்தியும், கொன்றும் எந்த வகையிலாவது தேனைக் கவர்ந்து செல்கின்றனர். இது சுவை என்ற நாப்புலனால் கெடுவதாகும்.
மீனைப் பிடிப்பவர்கள் தூண்டில் முள்ளின் முனையில் மண் புழுவின் இறைச்சியை வைப்பர். அதன் நாற்றத்தால் ஈர்க்கப்பட்ட மீன்கள் அதைப் பற்றிஇழுக்க தூண்டில் முள் நெஞ்சில் சொருகி இறக்க நேரிடுகிறது. இது முகரும் புலனால் ஏற்படும் கெடுதலாகும். இவ்வாறு புலன்களின் உணர்வினால் தமக்கு நாசத்தைத் தாமே தேடிக் கொள்கின்றனர். இதுபோன்றுதான் ஐம்புலன்களின் வாயிலாக அடையும் சுகத்திற்காக மானிடர்கள் அதிகதுன்பங்களை ஏற்கின்றனர்.
உலக வாழ்க்கையிற் சுக துக்கங்கள் எது அதிகமானாலும், அவர்களுக்குப் பெண்பிள்ளை என்று பிறந்து அவர்கள் மீது பாசமும்
நினைவு மலர் 159

Page 86
அதிகமாகி அதற்குக் கட்டுண்டு வாழ்கின்றனர். அதனால் அவர்கள், மகிழ்ச்சியைவிடத்துக்கமே கொள்கின்றனர். நிம்மதி ஏற்படுவதில்லை. மானிடர்களில் ஆண், பெண், வயது வேறுபாடின்றி அனைவரும் ஆயுட்காலத்தைக் கணித்து, அவர்களின் உயிரைக் கவர்ந்துசெல்ல மரண தேவன் ஒருவன் தயார் நிலையில் இருக்கிறான் என்பதை மறந்து விடுகின்றனர். எமன் ஒருவன் இருப்பதை உணர்ந்து நடக்கும் மானிடர் ஒருவருமில்லை.
இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் மானிடர்கள் தம் மனைவி, புத்திரர்கள் இவர்களுக்காகவும், உற்றார் உறவினர்களின் நன்மைக்காகவும், பொன் பொருள்களைச் சம்பாதிக்கின்றனர். அதற்காக எத்தகைய கஷ்டங்களையும் மேற்கொள்ளத் தயாராகுகின்றனர். அவர்கள் தங்களின் இன்பமான வாழ்க்கைக்கு வீடு, மனை, மாளிகை என்ற பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டிப் பூரிக்கின்றனர். அவற்றையெல்லாம் தாம் அனுபவிக்கப் போகிறோம் என்ற தனியான ஆசை.
ஆனால், இத்தனை ஆசை கொண்ட மானிடர் என்றோ ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமலேயே தாம் தேடிய பொன், பொருள் மாடமாளிகைகளையெல்லாம் விட்டுவிட்டு மாண்டு விடுகின்றனர். அவர்கள் இறுதிப் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்கள் போற்றிய பெற்றோரும், அன்பு செலுத்திய மனைவியும், பாசம் கொண்ட பிள்ளை, பெண்கள் யாவரும் துணைவருவதில்லை. தனி ஒருவராகவே பிறந்ததுபோன்று, தனி ஒருவராகவே மாண்டு போகின்றனர்.
அவர் உடலிலிருந்து உயிர் பிரிந்தாலும் உடல் மிஞ்சுகிறது. செயலற்ற அந்த உடலை மரம் போலத் தரையிற் கிடத்தி குடும்பத்தினர், உற்றார், உறவினர் என்று பலரும் சேர்ந்து அழுது புலம்புவர். அவர்கள் அவ்வாறு புலம்புவதனால் செத்தவர் உயிர்பெறப்போவதில்லை. ஒருவர் தம் வாழ்நாளில் பொய்ப் பித்தலாட்டம் புரிதல், பொய்யான பத்திரம் எழுதுதல், பிறரை ஏமாற்றுதல், வழிப்பறி செய்தல், கொள்ளை, கொலை புரிதல் மற்றும் பஞ்சமாபாதகச் செயல்களையும் புரிந்து ஏராளமான பொருள்கள் சம்பாதிப்பர். அவ்வாறு அவன் சம்பாதித்து வைக்கும் பொருள்களை அவர் குடும்பத்தாரும், உற்றார், உறவினர்களும் உரிமை கொண்டு பங்குபோட்டு அனுபவிப்பர்.
அவர்கள் இறந்தவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் தான் பங்கு கொள்கிறார்களே ஒழிய, அவர்கள் புரிந்த பாவச் செயல்களில் எவ்விதப்
)நினைவு மலர்

பங்கும் கொள்வதில்லை. அதனால், பாவச் செயல்களைப் புரிந்தவன் எவ்வளவு சொத்துச் சம்பாதித்து விட்டுச் செல்கின்றாரோ, அந்த அளவுக்கு முழுமையான பாவத்தைத் தாமே ஏற்று, அதற்குண்டான நரக தண்டனையை அவரே அனுபவிக்க நேரும்.
அவருடைய நல்ல, தீய காரியங்கள் தான் மரணத்துக்குப் பின்னும் அவரைத் தொடர்ந்து செல்கின்றதே தவிர, அவர் சம்பாதித்த பொன், பொருள், மாடமாளிகைகள் எதுவுமே உடன் செல்வதில்லை. அவருடைய உற்றார், உறவினர்கள் மட்டும் அவர்களின் சவத்தோடு மயானம்வரை சென்றுவிட்டு உடனே வீடு திரும்பி விடுவர். அவர்களில் ஒருவரும் இறந்தவருடன் இறுதிவரை பயணம் செல்வதில்லை.
ஆனால், இறந்தவர் தாம் வாழும்போது புரிந்த பாவ புண்ணியங்கள் மட்டும் அவரைவிட்டு விலகுவதில்லை. மயானத்தையும் தாண்டி அவர் எங்கு செல்கின்றாரோ அங்கெல்லாம் அவரை நிழல் போலத் தொடர்ந்து செல்லும். அதனால் ஒருவர் தாம் சம்பாதித்த பொருள்களைப் புண்ணிய காரியங்களுக்காகப் பயன்படுத்தவேண்டும். அவ்வாறு பயன்படுத்தாத பொருள் உரியவருக்கே சொந்தமாவதில்லை.
அதனால் ; புனிதப் பயணம் மேற் கொள்ளுதல், இறைத்தொண்டு புரிதல் போன்ற நற்காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். தானதருமங்கள் புரிந்து பிறரையும் வாழ்விக்கவேண்டும். அத்தகையவர்தான் உயர்நிலை அடைவர். ஒருசிலர் தானம், தருமம் என்ற பெயரில் விளம்பரத்தைத் தேடிக் கொள்வர். அவ்வாறு செய்யப்படுவது நற்கதி அடைய உதவாது. இறை பக்தியுடன் எவ்வித கைமாறும் எதிர்பாராது செய்ய வேண்டும். அத்தகைய, தான தருமம் தான் செய்தவருக்கு நற்கதியை அளிக்கும். அத்தகையவன் மறுபிறவியிலும் மகாபாக்கியவானாகத் திகழ்கின்றான்.
பக்தி சிரத்தையோடு சிறிதளவு தான, தருமம் புரிந்தால் போதும்; அதற்குண்டான பலனைப் பெருமளவு அடையலாம். அதனால், மானிடராக பிறந்தவர் பேராசை இல்லாதவராக, தூய்மையும், பக்தியும் கொண்டவராய், தானம், தருமம், தவம் போன்றன புரிபவர்களாகத் திகழ்ந்தால் உயர்வான நிலை அடையலாம். அதனை முக்தி, மோட்சம், பரமபதம் என்று எப்பெயராலும் கூறலாம்.
Göğ5 6sa%36öTDLİb
உலக நாயகனான மாதவனிடம், கருடாழ்வார், மானிடர்களுக்கு இறந்த பின்பு ஆவிரூபம் என்ற ஜென்மம் ஏற்படாமல்
நினைவு மலர் 161

Page 87
இருப்பதற்கான வழிமுறை என்ன என்று கேட்கின்றார். அதற்குக் கருணையே வடிவான பரந்தாமன்விளக்கமளிக்கிறார்.
மானிடர்கள் இறந்த பிறகு வேறு ஒரு சரீரத்தை அடைவது என்பது தான் நிகழ்வது. அப்படியின்றி அவர்கள் ஆவிரூபமான மறு ஜென்மத்தை எடுப்பது என்பது கொடியது. இந்நிலை ஐந்து வயதுக்குட்பட்டவருக்கு ஏற்படுவதில்லை. அதற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு ஏற்படக்கூடும். அவ்வாறு ஏற்படாமல் தவிர்க்கமுயல்வது நல்லது. எவ்வாறு தவிர்ப்பது என்று பகவானே கருடாழ்வாரிடம் கூறுகிறார்.
மண்ணிற் பிறப்பு எடுத்த ஒவ்வொருவரும் இறக்கப்போவது நிச்சயம். இது தவிர்க்க முடியாதது என்பதை எல்லா மானிடரும் உணர வேண்டும்.அதனால், அவர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பாகவே மறு ஜென்மம் ஏற்படாமல் தவிர்க்கவேண்டி விருஷோற் சர்க்கம் என்னும் கருமத்தைப் புரியவேண்டும். அதாவது, காளைக் கன்று ஒன்றைத் தானமாகக் கொடுக்கவேண்டும். இந்தக் கருமத்தைப் புரிந்தால் போதும். பிரேத ஜென்மம் ஏற்படாது தவிர்க்கலாம். இந்தக் கருமத்தைத் தவிர, வேறு எந்த வகையான கருமங்களைப் புனிதப் பயணம் போன்று எந்தச் செயற்பாட்டாலும், தான, தருமங்கள் புரிந்தும் இக் கொடுமையிலிருந்து மீளமுடியாது என்பதை உணரவேண்டும்.
அதனால், மறு ஜென்மம் ஏற்படாமல் இருப்பதற்கு ஒரே மார்க்கம் விருஷோற் சர்க்கம் செய்தலாகும். மானிடர்கள் இறப்பதற்கு முன்பு செய்தால் பிரேத ஜென்மம் ஏற்படாமல் தவிர்க்கலாம். அதுபோல அவர்கள் இறந்த பின்பும் செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றாலும் மறு ஜென்மம் ஏற்படும் என்று ஜகந்நாதன் கூறி, அதற்கான விளக்கமும் அளிக்கின்றார்.
மானிடர் இறந்த பின்பு அவருக்குச் சிரார்த்தம் முதலியன செய்வதற்கு முன்பாக விருஷோற்சர்க்கம் எனப்படும் கருமத்தைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் சிரார்த்தம் முதலான எதைச் செய்தாலும் அவற்றால் இறந்தவருக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று உறுதியாகக் கூறுகிறார். ஒருவர் மரணமடைந்த பதினொராம் நாளன்று விருஷோற்சர்க்கம் செய்யவேண்டும். அன்று இக்கருமத்தைச் செய்யாது போனால், இறந்தவருக்கு மறு ஜென்மம் ஏற்பட்டே தீரும்.
விரஷோற் சர்க்கம் செய்யப்பட்டால் மறு ஜென்மம் ஏற்படாது என்பது மட்டுமல்ல; பெரியோர்கள் சென்றடையும் மோட்ச உலகை
நினைவு மலர்

அவரும் அடைவார். முத்தி தரும் திருத்தலங்கள் உள்ளன. அத்தகைய திருத்தலமொன்றில் மரணம் ஏற்படுவது புனிதமானது. அத்தகைய தலங்களில் உயிர் துறப்பவர், எமனால் பீடிக்கப்படாமல் நன்மையளிக்கும் மேலுலகை அடைவர். அதைப்போன்ற நற்பேறு விருஷோற்சர்க்கம் செய்யப்பட்டவருக்கும் கிடைக்கும் என்பது நிச்சயமாகும்.
ஒருவர்தாம் இருக்கும்போது அவரே விருஷோற்சர்க்கம் செய்து விடுகிறார். ஆனால், அவர் இறந்த பிறகு அவருக்காக யார் விருஷோற் சர்க்கம் புரியவேண்டும் என்ற ஐயத்தையும் தீர்த்து வைக்கிறார் பகவான். ஒருவர் மரணமடைந்தால் அவருடைய மனைவியோ, புத்திரனோ இதைச் செய்யலாம். அல்லது அவருடைய பெண்ணோ பெண் வயிற்றுப் பிள்ளையோ செய்யலாம்.
இவ்வாறு பொதுவாகக் கூறப்பட்டாலும் இறந்தவருக்கு மகன் இருப்பானாயின் அவன் ஒருவன் மட்டுமே செய்யும் தகுதி பெற்றவனாகிறான். அவன் இருக்கும்போது வேறு யாரும் செய்யக் கூடாது. இறந்தவனுக்கு மகன் இல்லை என்ற நிலையில் மட்டும் மனைவியோ, பெண்ணோ, பெண் வயிற்று மகனோ செய்யத் தகுதியுடையவராகின்றனர்.
அதனால் ஒருவருக்குப் பிள்ளைச் செல்வம் ஏற்படுவது என்பது முக்கியமாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அப்பேறு பெறாமல் ஒருவர் இறந்துவிட்டால் நல்லுலகம் அடையமாட்டார். ஒருவர் தம் வாழ்நாட்களில் நற்காரியங்களைப் புரியவேண்டும். அவ்வாறு ஒருவர் நற்காரியம் எதுவும் புரியாமல் மரணமடைய நேர்ந்தாலும், ஒருவருக்குப் புத்திரர் இருந்தும் செய்யவேண்டிய கருமங்களைச் செய்யாமல் விட்டு விட்டாலும், இறந்தவர் பகலிரவு என்று எக்காலமும் பொறுக்கமுடியாத தாகத்துடனும் பசியுடனும் கூச்சலிட்டபடி அங்குமிங்குமாக எல்லா இடங்களிலும் நெடுங்காலம் வரை அலைந்து திரிய நேரும். அதன் பிறகு புழு பூச்சிகளாகப் பிறவி எடுத்து, மீண்டும் மானிட இனத்தில் கீழான நிலையிலுள்ளவர்கருவில் தோன்றி பிறந்துதுன்புற்று மடிய நேரும்.
அதனால்தான் எங்கும் நிறைந்து காத்தருளும் பரந்தாமன் கருணையுடன் கூறுகிறார். மனிதர்கள் நோய் நொடிகளால் பீடிக்கப்படுவதற்கு முன்பாகவும் முதுமைப் பருவம் அடைவதற்கு முன்பாகவும், தம்உடல் தளர்ச்சி ஏற்பட்டுச் செயற்பாட்டில் ஒடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாகவும், நல்லுலகை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் நற்காரியங்களைச் செய்ய வேண்டும். அத்தகைய
நினைவு மலர் 163

Page 88
நற்காரியங்களைப் புரிவதில் காலதாமதமோ, நாளை செய்யலாம், பிறகு செய்யலாம், என்று ஆலோசித்து வருவதோ கூடாது. காரணம், மரணம் எப்போது வருமென்று யாராலும் நிச்சயமாகக் கூற முடியாது. அப்படிக் காலத்தைக் கடத்துவது, ஊர் தீப்பற்றிச் சுவாலையுடன் எரியும்போது அந்த நேரத்திற் கிணற்றைத் தோண்டும் முயற்சியில் ஈடுபடுவதற்கு ஒப்பாகும். அக்கிணறு தோண்டுவதற்கு முன்பாகவே எல்லாம் எரிந்து சாம்பலாகிவிடும்.
அதனால் மானிடர்களே, இருக்கும்போதே, இன்றே இப் போதே நற்காரியங்களைப் புரியவேண்டும் என்று கருடாழ்வார்மூலம் பரந்தாமன் போதிக்கிறார்.
தானங்களிற் சிறந்தது
பூணூரீமந் நாராயணன், தான தருமங்கள் செய்வது பற்றிக் கூறுகிறார்: ஒருவர் தானிருக்கும்போது தான, தருமம் செய்கின்றனர். அப்படியின்றி ஒருவர் இறந்த பின்பும் அவருக்காகத் தான தருமங்கள் செய்யப் படுகின்றன. இவற்றில் எது சிலாக்கியமானது என்பதற்குப் பகவானே விளக்கமளிக்கிறார்.
அத்துடன் தான தருமங்கள் எவ்வாறு முறையாகச் செய்வது என்பதைப் பற்றியும் தெளிவுபடுத்துகிறார். தான தருமங்கள் எவ்வாறு செய்ய வேண்டும் என்று சாஸ்திரவிதிகளில் கூறப்பட்டுள்ளன. அவ்விதிகளைக் கடைப்பிடித்து மன உறுதியும் மனத்தூய்மையும் கொண்ட நிலையில்; தான தருமம் செய்யவேண்டும். அவ்வாறின்றிச் செய்யப்படும்தானதருமங்கள் எத்தகைய பயனும் தருவதில்லை.
ஒருவர் தானிருக்கும்போதே தான தருமங்கள் புரியவேண்டும். அவ்வாறின்றி ஒருவர் இறந்தபிறகு அவருக்காக வேண்டிதானதருமங்கள் செய்தாலும் அவர் இருக்கும் போது செய்ததற்கும் அவரின் மரணத்தருவாயில் செய்யும் தானதருமத்திற்கும் ஈடாகாது. அவர் இறந்த பிறகு செய்யும் ஆயிரம் தான தருமங்களும் இருக்கும் போது செய்யும் ஒரே ஒரு தான தருமத்திற்கு ஒப்பாகும். ஆகவேதான் ஒருவர் இருக்கும் போதே தான தருமம் செய்து விட வேண்டும். தவறினால் மரணத் தருவாயிலாவது செய்ய வேண்டும். அவ்வாறு புரிவதே மேலானது.
அதுமட்டுமின்றி, கொடுக்கப்படும் தானம் நல்லதாக இருக்க வேண்டும். தானம் வாங்குபவரும் நல்லவராக இருக்க வேண்டும். அத்துடன் தானம் அளிக்கப்படும் இடமும் நல்லதொரு தலமாக இருக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பவர் மனத்தூய்மையுடன் இருந்து தானம்
நினைவு மலர்

கொடுக்கும் பொருளும் நல்லதாகவும், பெறுபவர் நல்லவராகவும், கொடுக்குமிடம் நல்ல தலமாகவும், எல்லாமே நல்லதாக அமைந்துவிட்டால் அவ்வாறு அளிக்கப்படும் தானத்தால் கோடிப் பயனைப் பெறலாம்.
தானம் கொடுப்பவர் மட்டுமின்றி; தானம் வாங்குபவரும் மனத்தூய்மையுடன் கற்றுணர்ந்த உத்தமராகவும் இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு அளிக்கப்படும் தானத்தால் அடையும் புண்ணிய பலன் அதிகமாகும். விஷத்தைப் போக்கக்கூடிய மந்திரமும், குளிரைப் போக்கக்கூடிய நெருப்பும் பிறருக்கு நன்மை செய்வதால், அதன் சக்திகளில் குறைந்து போவதில்லை. அது போன்றுதான் தானம்பெறும் சான்றோரும் தம்முடைய நற்கருமத் தாலும், நல்லொழுக்கத்தாலும் குற்றமற்றவராகின்றனர்.
உயர்வான பயனைப்பெற விழைவோர் கோதானம் முதலான தானங்களைப் புரியவேண்டும். அவ்வாறு தானம் புரியும் போது வேத சாஸ்திரங்களை நன்கு கற்றுணர்ந்த உத்தமரான அந்தணருக்கே அளிக்க வேண்டும். அத்தகையவர்தான் தானம்பெற்ற பொருளின் தன்மையை அறிவார். அவ்வாறின்றி வேத சாஸ்திரங்களைக் கற்றுணராத எவரும் பெயரளவில் அந்தணராக இருந்து நல்லொழுக்கமில்லாதவராகவும் இருப்பவருக்குக் கோதானம் அளித்தால் அதனால் எந்தப் புண்ணிய பலனும் வராது. காரணம் தானம் பெற்றவர், தான்பெற்ற தானப் பொருளின் சிறப்பு அறியமாட்டார்.
அதனால் தானமளித்தவருக்கு நற்பலனுக்கு மாறாக நரகத்தை அளித்துவிடும். அதுமட்டுமல்ல; தானம் வாங்குபவரும் தம்முடைய தகுதி அறிந்து வாங்கவேண்டும். அவ்வாறு தகுதியில்லாத ஒருவர் தானம் பெறுவாராயின், அவர் நரகம் புகுவதோடு அவருடைய தலைமுறை களுக்கும் நரக வாழ்வே கிடைக்கும். கோதானம் என்பது பசுவைத் தானமாகக் கொடுத்தலாகும். ஒரு பசுவை ஒருவருக்கு ஒரே ஒரு முறை மட்டுமே தானமாகக் கொடுக்கவேண்டும். அப்படியின்றி ஒரு பசுவை பலருக்குத் தானமாகக் கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுக்க நேர்ந்தால் தானம் பெற்றவர்கள் அதை விற்று, அத்தொகையைப் பங்கு போட்டுக்கொள்ள நேரும்.
அல்லது தானம் பெற்றவர் ஒவ்வொருவரும் அப்பசுவிடம் உரிமை பாராட்டி, மாதம் ஒருவராக வைத்திருக்க நேரலாம். இவ்வாறு ஏதாவதொரு முறையைப் பின்பற்றினாலும் அப்பசுவைத் தானம் கொடுத்தவருக்கு எந்தவித புண்ணியமுமில்லை. அவருடைய ஏழு
நினைவு மலர் 165

Page 89
தலைமுறையினரோடு நரகத்தில் நீண்டகாலம் வசிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலை உண்டாகும். அதனால் தான் தானம் செய்யும்போது உறுதியான மனத்துடனும், பக்தி சிரத்தையுடனும், முறையோடு தகுதியானவருக்குச் செய்யவேண்டும். அதிலும் முக்கியமாகத் தாமே மரணத்துக்கும்முன் சுய நினைவு உள்ள காலத்திலேயே தானம் செய்வது தான் சிலாக்கியமானது.
நீண்ட தூரம் பயணம் செய்பவர் தம்முடன் கட்டுச்சோற்றைக் கொண்டு செல்வார்களேயானால் பசியைப் பற்றிய கவலையே இருக்காது. அது போன்றதுதான் தானமளிப்பதும், தாம் உயிருடனிருக்கும்போது கோதானம், அன்னதானம் போன்றவற்றைத் தம் கையாலேயே செய்வார்களேயானால் மரணமடைந்து செல்லும் நிலையில் அவரும் பசியோ, தாகமோ இல்லாமல் நல்லுலகை அடைந்து மகிழ்வர். அவ்வாறு கட்டுச்சோறு இன்றிப் பயணம் செய்பவர் அடையும் கவலை போன்றுதானம் தானம் எதுவும் செய்யாமல் இறந்து போகின்றவர் பசிதாகத்தோடு வருந்த நேரும்.
ஒருவருக்கு மிக உயர்ந்த தானமாகக் கூறப்படுவது விருஷோற் சர்க்கம் என்பதாகும். அதனால் அன்னதானம், கோதானம் போன்றவற்றை விட விருஷோற் சர்க்கம் செய்வதே மேலானதாகும். இன்று இருப்பவர் நாளை இருப்பார் என்பது நிச்சயமில்லா மனித வாழ்க்கை அநித்யமானது. ஆகையால் எந்த ஒரு நற் காரியங்களையும் நாளை, மறுநாள் என்று நாட்களைக் கடத்தாமல், இருக்கும் காலத்திலேயே செய்துவிடவேண்டும்.
புத்திர பாக்கியமுள்ளவர் தம் கையால் எந்தவொரு தானதருமத்தையும் செய்யாமல் இறக்கநேரிட்டால், அவர் எந்த நற்கதியும் அடையமாட்டார். புத்திர பாக்கியமில்லாதவர் தம் கையால் நற்காரியங்களைச் செய்வார்களேயானால் அவரது மரணத்துக்குப் பின் நரகதி அடைவர். எல்லாத் தானங்களிலும் ரிஷப கன்றைத் தானமாகக் கொடுக்கும் விருஷோற்சர்க்கம் சிலாக்கியமானது என்று முன்பே கண்டோம். அது வேள்வி புரிவதைக் காட்டிலும் உயர்வானது.
அக்கருமத்தைக் கார்த்திகை மாதத்து பெளர்ணமியிலாவது, மற்ற எந்தப் புண்ணிய நாளிலாவது செய்யலாம். உத்தராயன காலத்து வளர்பிறையிலாவது, தேய்பிறையிலாவது, துவாதசித் திதியிலாவது செய்யலாம். அத்தகைய புண்ணிய திதியில், யோக நட்சத்திரமும் கூடிய நாளில் புனிதமான திருத்தலத்தில், வேத சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களைக் கொண்டு, ஓம குண்டம் வளர்த்து வேள்வி முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு இக்கருமத்தைப் புரிபவர்
நினைவு மலர்

தம்மைத்தூய்மையுள்ளவராகச் செய்து கொள்கிறார். அதன் பின்பு அவர் நவக்கிரக பூஜை செய்து, மாதர் தேவதைகளுக்கு அர்ச்சனை புரிந்து, பூர்ண ஆகுதி கொடுத்து, மகாவிஷ்ணுவைக் குறித்து சிரார்த்தம் செய்து காளைக் கன்றை நீராட்டி, அதற்கு ஆடை, ஆபரணம் மற்றும் தூய மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.
மேலும், நான்கு காளைக் கன்றுகளோடு அந்தக் கன்றையும் நிற்க வைத்து, வேள்வியில் உண்டான அக்கினியை வலம்வரச்செய்ய வேண்டும். பின், வடதிசை நோக்கி நின்று, அக்காளைக் கன்றை நோக்கி "தருமமே நீயே காளைக் கன்றானாய் ! பிரம்ம தேவனால் ஆதியில் படைக்கப்பட்டாய்! என்று கூறி, அதைத் தானம் அளிக்கவேண்டும். இந்தத் தானத்தை இந்த முறையில் இறந்துபோன ஒருவருக்காகச் செய்யலாம்.
அவ்வாறின்றி இத்தகைய தானத்தை உயிருடனிருக்கும் காலத்தில் அவரே செய்யலாம். அவ்வாறு செய்யும்போது தம்மைக் குறித்து அந்தக் காளைக் கன்றின் வாலில் மந்திர நீர் விட்டு, அந்த நீரைத் தன்னுடைய கையினால் ஏந்தி, சிரசில் தெளித்துக்கொள்ள வேண்டும். பின்பு, மற்றக் காளைக் கன்றுகளுடன் அக்கன்றையும் போகுமாறு விட்டுவிடவேண்டும். அதன்பின் தாம் விரும்பும் பொருள்களை அந்தணருக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதுதான் விருஷோற்சர்க்கம் எனப்படும் தானமாகும்.
இத்தகைய புண்ணிய கருமத்தை ஒருவர் செய்யாமல் இறந்து போனால், அவருக்கு மறு ஜென்மம் பற்றிக்கொள்ளும். அதனால், விருஷோற்சர்க்கம் செய்யாமல் மற்ற எந்த நற் கருமங்களைத் தமக்குத்தாமே செய்துகொண்டாலும்கூட மரணத்திற்குப் பின்பு அவரது புத்திரர், மற்றவர் பல நற்கருமங்களைப் புரிந்தாலும் கூட எந்தவிதப் பயனும் உண்டாகாது. ஒருவர் இறந்த பிறகு தானம் செய்வது என்றால் அவர் மரணமடைந்த பதினொன்றாம் நாளில் செய்ய வேண்டும். அவ்வாறு இறந்த பின்பு அவரைக் குறித்துத் தானமளித்தால் அவர் நற்கதி அடைந்து மகிழ்வார். அவர் பிரேத ஜென்மத்தை அடையமாட்டார். சந்நியாசிகள், முனிவர்கள், அடையும் லோகத்தை அவரும் அடைவார். அதனால் தாய், தந்தை, குரு முதலானவருக்குத் தம்மாலியன்ற புண்ணியத்தைச் செய்ய வேண்டும். தாய் தந்தை இறந்தபின்பு அவர்களுக்கு ஆண்டு தோறும் சிரார்த்தம் செய்து வருவது, செய்பவர்களுக்கும் நற்கதியை அளிக்கும் என்பதை அறியவேண்டும்.
எமலோகம் செல்லும்பாதை
மகாலட்சுமியின் மணாளனான பூரீமகா விஷ்ணுவைப் பணிந்து,
பறவை அரசனான கருடாழ்வார், பூலோகத்திற்கும் எமலோகத்திற்கும்
நினைவு மலர் 167

Page 90
இடைப்பட்ட தூரம்பற்றியும் எமலோகத்தின் தன்மை பற்றியும் கேட்கிறார். அதற்குப் பரந்தாமன் விரிவாகக் கூறுகிறார்: மானிடர் வாழும் பூலோகத்திற்கும் எமலோகத்திற்கும் இடைப்பட்ட தூரம் எண்பதாயிரம் காத தூரமாகும். ஒரு காத தூரம் என்பது பத்து மைல் ஆகும். அதாவது பதினாறு கிலோ மீற்றர். எமலோகத்தின் தலைவனாக விளங்குபவன் எமதர்ம ராஜன். உலகத்தில் பிறந்து வாழும் ஒவ்வொருவரின் ஆயுட்காலம் முடிந்ததும் அவர்களின் உயிரைக் கவர்ந்து வர தம் தூதர்களை அனுப்பிவைப்பான். எமதர்மராஜன் மட்டுமன்றி, எமதுரதர்களும் கரியநிறம் உள்ளவர்களாகவும், கரிய ஆடைகளை அணிந்து பயங்கர உருவமைப்புள்ளவர்களாகவும் இருப்பர். அவர்கள்முகத்தில் கடூரமும் கோபமும் மிளிர்ந்திருக்கும்.
அவர்கள் தங்களிடம் பாசம், முசலம், ஆயுதங்களைக் கொண்டிருப்பர். அவ்வாறு எமனும் ஏவல் புரியும் தூதர்களைக் கிங்கரர்கள் என்பர். எமதர்மராஜன் தம் தூதர்களில் மூவரை அனுப்பி வைப்பான். அவர்கள் மூவரும் பூலோகம் சென்று ஆயுட்காலம் முடிந்த உலக பிறவுகளைப் பாசத்தால் கட்டிப் பிணைத்து காற்று உருவமான உடலில் அடைத்து தம்முடன் எமலோகத்திற்குக் கொண்டு வருவர். அதையே ஆவியுருவம் என்பர்.
எமதுTதர்கள் ஆயுள் முடிந்த வரை, ஆவியுருவத்தில் எமலோகத்திற்குக் கொண்டுவந்து எமதர்மராஜன் முன்பாக நிறுத்தி, "தர்மபிரபு! தங்கள் கட்டளைப்படி ஆயுட்காலம் முடிந்த இந்த ஜீவனைத் தங்கள் சபைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளோம்! இனி, கட்டளைப்படி நடக்க சித்தமாயிருக்கிறோம்!" என்று விண்ணப்பித்து வணங்குவர். எமதர்மராஜன் தூர்களிடம், "கிங்கரர்களே! ஆவியுருவில் உள்ள இந்த ஜீவனை நீங்களே கொண்டுபோய் அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு வாருங்கள். மீண்டும் பன்னிரண்டு நாட்கழித்து நீங்களே சென்று முறைப்படி இச்சபைக்கு அழைத்து வாருங்கள்" என்று உத்தரவிடுவான்.
அவ்வாறு எமதர்மராஜனான காலதேவன் கூறியதும் கிங்கரர்கள் சற்றும் தாமதிக்காது மீண்டும் எண்பதாயிரம் காதம் அந்த ஜீவனை அழைத்துச்சென்று அவன் வீட்டிலேயே அவனைக் கட்டியுள்ள பாசத்தை அவிழ்த்து விட்டுவிட்டுத் தம் லோகத்திற்குத் திரும்பிவிடுவர். அவ்வாறு இறந்தவர், ஆவி உருவத்தில் எமலோகத்திற்குச் சென்று திரும்பியவர், தன் பூத உடலுக்குப் பத்துமுழ உயரத்தில் நின்றிருக்கும் சுடுகாட்டில், தன் உடல் எரிக்கப்படுவதைக் காணும்போது, அஷர்புண்ணியம் செய்தவராக இருந்தால், தம் உடல் எரிந்து அழிவது கண்டு மகிழ்ச்சி கொள்ளும். மற்றவர் தன் உடல் எரிந்து போவதுகண்டு ஒலமிட்டு அழும். சிதையில் உடல் எரிந்து வெந்து சாம்பலாகும்போது
18நினைவு மலர்

தலை வேகும்வரை அந்த ஜீவனுக்குத் தம் உடல்மீதும், மற்ற உறவுகள், பொருள்கள் மீதுமுள்ள ஆசையானது இருக்கும்.
சிரசு முதல் பாதம் வரை உடல் முழுவதும் வெந்து சாம்பலானவுடன், அடுத்து அந்த ஜீவனுக்குப் பிண்டத்தாலான சரீரம் உண்டாகிறது. மரணமடைந்தவரின் புத்திரன் முதல்நாட் போடும் பிண்டத்தால் சிரசும், இரண்டாம் நாட் போடும் பிண்டத்தாற் கழுத்துத் தோலும், மூன்றாம் நாட் போடும் பிண்டத்தால் மார்புமாக உண்டாகிறது. இவ்வாறே நான்காம் நாளில் வயிறும், ஐந்தாம் நாளில் தொப்புளும், ஆறாம் நாளில் பிருஷ்ட மென்னும் முதுகும், ஏழாம் நாளில் குய்ய மென்னும் அபானவாயில், மற்றும் பிறப்புறுப்புக்களும், எட்டாம் நாளில் தொடைகளும், ஒன்பதாம் நாள் கல்களுமாக உண்டாகின்றன.
பத்தாம் நாட் போடும் பிண்டத்தால் உடல் முழுவதுமாக உண்டாகும். அவ்வாறு முழு உடல் பெற்றவுடன் தாம் வசித்துவந்த வீட்டுக்கு வருவார். ஆனால், வீட்டிற்குச் செல்லமாட்டார். அந்த வீட்டின் வாயிலின் நின்று வருவோர் போவோரைப் பார்ப்பார். இவ்வாறு பிண்ட உருவத்தைப் பெற்ற பதினோராம் நாளிலும், பன்னிரெண்டாம் நாளிலும் தம் புத்திரரால் அந்தணர்மூலமாக அளிக்கப்பட்டதை உண்பர்.
பதின்மூன்றாம் நாள் எமதுாதர்கள் மீண்டும்வந்து, பிண்ட உருப்பெற்ற ஜீவனை, முன்போலப் பாசத்தாற் பிணைத்துக் கட்டி இழுத்துச் செல்வர். அந்த ஜீவன் தம் வீட்டைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கதறியபடி செல்லும். எமதுரதர்கள் பிண்ட சரீரம்பெற்ற ஜீவன்களை இழுத்துச் செல்லும்போது இடையில் பல இன்னல்களுக்கு ஆளாக நேரும். அவர்கள் அச்சரீரத்தை நாளொன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத தூரம் வீதமாகப் பகல் இரவு என்று பாராமல் இழுத்துச்செல்வர்.
அவ்வாறு செல்லும்போது மரங்கள் அடர்ந்த கானகத்தைக் கடக்க வேண்டியிருக்கும். அந்த மரங்களிலுள்ள இலைகள் வாள் போன்று கூர்மையானதாக இருக்கும். அக்கானகத்திற் பெரும் கஷ்டப்பட்டுத்தான் செல்லவேண்டும். அப்படிச் செல்லும் பிண்ட சரீரத்துக்குப் பொறுக்க முடியாத தாகமும் பசியும் ஏற்பட்டு அவதியுற நேரும்.
எமலோகத்தை அடைவதற்கு முன்பாக வைவஸ்வதப் பட்டணம் என்ற ஒரு பட்டினத்தை அடைய நேரும். அங்கே பெரிய பெரிய மாளிகைகள் ஒன்றோறொன்று நெருங்கியதாகவும், அச்சந்தரும் நிலையிற் பிரம்மாண்டமானதாகவும் இருக்கும். அங்கே பலவித
நினைவு மலர் 169

Page 91
விலங்குகள் காணப்படும். அவை யாவும் பயத்தை உண்டாக்கும் கோர உருவங்களை உடையவை. அந்த இடத்தைக் காணவே பிண்ட சரீரத்துக்கு நடுக்கமும் வேதனையும் உண்டாகும்.
அதுமட்டுமன்றி அந்த இடத்தில் ஆவி உருவிலுள்ளவர் பலர், அந்த இடமே அதிரும்படி வானமே கிழியுமாறு பெருங்குரலில் ஒலமிட்டுக் கொண்டிருப்பர். அவர்கள் யாவரும் பாவஞ் செய்தவர்கள். அதைக்காணப் பிண்ட சரீரத்துக்குத் துக்கம் அதிகரிக்கும். அந்த இடத்தில் தண்ணிர் இருக்கும். ஆனால் அருந்துவதற்கு உதவாதது. அங்குள்ள நீர் யாவும் வெப்பத்தால் கொதித்துக் கொண்டிருக்கும். அதனால் தாகத்தால் அவதியுறும் பிண்ட சரீரத்துக்குக் குடிக்கத் துளிநீரும் கிடைக்காது. அந்த இடத்தில் மேகங்கள் சூழ்ந்து காணப்படும். மழையும் பொழியும். ஆனால், அவ்வாறு பொழிவது நீராக இருக்காது இரத்தமாக இருக்கும்.
பிண்ட சரீரத்துக்குப் பசி, தாகம் இவற்றோடு நடந்து செல்லும் களைப்பும் காணப்படும். அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் யாவும் கலக்கத்தை உண்டுபண்ணுவதாக இருக்கும். அந்தச் சமயத்திற்றான் அந்த சரீரத்துக்குத் தான் முன்பு வாழ்ந்த நிலைபற்றி நினைக்கத் தோன்றும். தன் மகனைப் பற்றி நினைக்கும். தான் உயிருடன் வாழ்ந்து வந்த காலத்திற் கடவுள் பக்தி இல்லாமலும், பெற்றோர் மற்றும் பெரியோர்களை மதிக்காமல் இருந்ததையும் நினைத்து வருந்தும்.
தனக்கு வசதி வாய்ப்பு இருந்தும் ஒருவரின் பசியையும், தாகத்தையும் போக்கவில்லையே! ஒருவருக்கும் எந்த நன்மையும் செய்யாது இருந்து விட்டாமே ! என்று அப்போது நினைக்கும். தனக்கு நல்லது சொன்னவர்களை யெல்லாம் உதாசீனம் செய்து நன்னெறிக்கு மாறாகத் தீயவைகளில் நடந்து, அதனாற் பாவம் சூழப்பட்டுவிட்டதே என்பதை அப்போது உணர்ந்து வேதனைப்படும்.
இவ்வாறு அந்தச் சந்தர்ப்பத்தில்தான் பிண்ட சரீரம் தாம் வாழ்ந்த காலத்தில் செய்த பாவச்செயல்களையெல்லாம் எண்ணிக் குமுறும் கூக்குரலிட்டுக் கத்தும், அப்போது அது யாரிடமும் தம் குறையைக் கூறமுடியாது. கேட்பவர் யாருமில்லை என்றாலும், ஒலமிட்டு அழுதுகொண்டிருக்கும். எமதுரதர்கள் அவர்களைப் பற்றிக் கவலைப்படாது எமலோகம் நோக்கி இழுத்துச் செல்வதிலேயே குறியாக இருப்பர். இறந்தவர் அனுபவிக்கும் துன்பங்கள்
பிண்ட சரீரம், தான் முன்புசெய்த பாவச் செயல்களை எண்ணி வேதனையால் கதறி அழுது கொண்டிருக்கும் நிலையிலும், எமதுரதர்கள்
70 நினைவு மலர்

அவரைக் கட்டியுள்ள பாசக்கயிறை இழுத்தும். அடித்தும், மேலும் துன்புறுத்துவர். இவ்வாறு எமலோகம் சென்றடையப் பன்னிரண்டு மாதங்கள்; அதாவது ஓராண்டு காலம் பிடிக்கும். அதுவரை அவர்களுக்கு உணவு அவர்களின் மகன் மற்றும் உறவினர்களால் மாதந்தோறும் படைக்கப்படும் பிண்டச் சோறுதான் உதவுகிறது. பிண்ட சரீரம், எமதுரதர்கள் அளிக்கும் சித்ரவரைகளைப் பொறுக்கமுடியாமல் தன் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் போன்று மற்றவர்களை நினைத்து, அவர்கள் நம்மைக் காப்பாற்ற வரவில்லையே! இவ்வாறு எமதுரதர்களிடம் சிக்கவைத்து வேடிக்கை பார்க்கிறார்களே! என்று எண்ணிக்குமுறும்.
இப்படிப்பட்ட நிலையில். தாம் வாழ்ந்த காலத்தில் மனச்சாட்சியின்றி நீதி, நேர்மைக்கு அப்பாற்பட்ட நிலையில் பலரை வஞ்சித்தும்; துன்புறுத்தியும் பொன், பொருள் சேர்த்தோமே! அவையாவும் யாருக்காக? இவற்றையெல்லாம் உற்றார், உறவினர்தானே அனுபவித்து இன்பமடைகின்றனர். ஆனால், நாமோ அவர்களுக்குச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு, அதனால் பழி பாவங்களைச் சுமந்து இவ்வாறு அல்லற்படுகின்றோமே என்று வேதனையால் துடிதுடித்துப் போவர்.
அவர்கள் நினைப்பது, துடிப்பது யாவும் எம தூதர்களுக்குத் தெரியும். அதற்காக அவர்கள் இரக்கம் காட்டமாட்டார்கள். மேலும் துன்புறுத்தி, "மூடனே இப்போதுதான் உனக்குப் புரிகிறதா? வாழ்ந்து வந்த காலத்தில் உன் சுகத்திற்காகவும், உன் மனைவி மக்களின் மேன்மைக்காகவும், பிறர் நலனையும் கெடுத்து, பொன்னும், பொருளும் சேர்த்துக் குவித்தாயே! அப்போது எண்ணவில்லையே! நீ எத்தனை பேருடைய உழைப்பை உனக்கு ஊதியமாக்கிக் கொண்டிருப்பாய்! ஏழை எளியவர்களைப் பற்றி வேதனைப் படுபவர்களைப் பார்த்து நீ இரக்கம் காட்டினாயா? பிறரை ஏமாற்றவும், அவர்களின் பொருள்களை அபரிக்கவும், துணிந்தாயே! உன்னால் எத்தனை பேர் துன்பத்திற்கு ஆளாகியிருப்பர் மண் ஆசை பொன்ஆசை பெண் ஆசையால் மதிமயங்கி இருந்தாயே! தான தருமம் செய்தாயா! உனக்கும் மேலான கடவுளை நினைத்து வாழ்ந்தாயா! உயிருடன் வாழ்ந்துவந்த காலத்தில் எல்லாமே நீதான் என்றும்; யாவும் உன்னால்தான் நடக்கிறது என்றும், இறுமாப்புடன் இருந்தாய்! அதற்குத் தண்டனைதான் இது! இப்போது நினைத்து கூக்கிரலிட்டுப் பலம்புவதால் எந்தப் பயனுமில்லை. உனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நீங்கிவிடாது! என்று அவர்கள் செய்த பாவங்களைச் சுட்டிக்காட்டிப் பாசத்தை இழுத்தும், முசலத்தால் புடைத்தும் துன்புறுத்துவர். முசலம் என்பது உலக்கை போன்று ஒர் ஆயுதம். இவ்வாறு தாம் வாழ்ந்திருந்த காலத்தில் தீமை புரிந்தவர்கள் அடையும் துன்பம் அதிகமாகும். அவர்கள் சிறிது தூரம், பலத்த காற்று
நினைவு மலர் 171

Page 92
வீசும் வழியிலும், சிறிது தூரம் புலிகள் நிறைந்துள்ள வழியிலும் செல்ல நேரும்.
அப்படிச் செல்கையில் எம தூதர்கள் ஒரிடத்தில் தங்குவர். அப்போது அவர் இறந்த இருபத்தெட்டாம் நாளில், பூமியில் அவர் மகனால் செய்யப்படும் குறைவான சிரார்த்த பிண்டத்தைப் புசிக்கும். அதன்பிறகு அவர்கள் யாமியம் என்னும் நகரத்தை அடைவர். அந்த நாள் அந்த ஜீவன் மரணமடைந்த முப்பதாவது நாளாக இருக்கும். யாமியம் என்பது தெற்குப் பக்கமாக இருக்கும் நகரமாகும். அங்கு பிரேதங்கள் கூட்டங்கூட்டமாகக் குடியிருக்கும். அந்த இடத்திற் புண்ணிய பத்திரை என்ற ஆறும், வட விருகடிமும் அங்கிருக்கும்.
அந்த நகரத்தில் எமதுரதர்கள் சிரமப் பரிகாரத்தை முன்னிட்டுச் சிறிதுகாலம் தங்குவர். அவர்களுடன் ஆவி உருவமும் தங்கும். இரண்டாவது மாத சிரார்த்தத்தின்போது அந்த ஜீவனுக்கு அளிக்கப்படும் பிண்டத்தை அருந்திய பின் எமதுரதர்களால் மேற்கொண்டு இழுத்துச் செல்லப்படும். இரவு பகலென்று பாராது எமதுரதர்கள் ஆவி உருவத்தைப் பலவகையிலும் துன்புறுத்தியபடி இழுத்துச் செல்வர். அத்துடன் பயங்கரமான காடு வழியாகவும் செல்ல நேரும். அதனால், ஆவி உருவில் இருப்பவர் அழுது ஒலமிட்டபடி சென்று கொண்டிருப்பார்.
அதன்பின் அவர்கள் சங்கமன் என்ற மன்னனுக்குரிய செளரி என்ற நகரத்தை அடைவர். அந்த இடத்தில்தான் பூவுலகில் அளிக்கப்படும் மூன்றாவது மாத சிரார்த்த பிண்டத்தை ஏற்றுக் கொள்வார். அவர்களின் பயணம் மேலும் தொடரும் வழியில் பொறுக்க முடியாத அளவு குளிர் வாட்டும். அக்குளிர் தாங்க முடியாமல் ஆவி உருவம் வேதனையோடு புலம்பும். அப்போது எமதுரதர்கள் அந்த ஜீவன் மீது கற்களை எறிவர். அதனால் மேலும் துன்பத்திற்குள்ளாகும் ஜீவன், புலம்பியபடி சென்றுகொண்டிருக்கும்.
அடுத்து அவர்கள் குரூரன் என்ற மன்னனின் ஆளுகைக்குட் பட்ட குரூரபுரம் என்ற பட்டிணத்தை அடைவர். அந்த இடத்திற்றான் ஐந்தாவது மாத பிண்டத்தை உண்ணும். அதற்குப் பின் நடந்து இரெளஞ்சம் என்ற ஊரை அடைவர். அங்கு ஆறாவது மாத பிண்டத்தை ஏற்றுக்கொள்ளும். அங்கு அவர்கள் அரை முகூர்த்த காலம் மட்டுமே தங்கியிருப்பர். ஒரு முகூர்த்தம் மூன்றே முக்கால் நாழிகை அதாவது ஒன்றரை மணி நேரம். அரை முகூர்த்தம் முக்கால் மணி நேரம் என்பது. அதன்பின் எமதுரதர்கள் அந்த ஜீவனை இழுத்துக் கொண்டு பயங்கரமான பாதை வழியாகச் செல்வர். அப்போதும் எமதுரதர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். அந்த ஜீவனைப் பலமாக இழுத்தும், அடித்தும்,
நினைவு மலர்

பல வகையிலும் துன்புறுத்திக் கொண்டே இருப்பர். இவ்வாறு ஜீவன் பலதுன்பங்களை அனுபவித்தவாறு ஒரு நதியை வந்தடைவார். அந்நதி நீர், பொறுக்க முடியாத துர்நாற்றம் வீசக்கூடியது. அதையே வைதரணி என்பர். அந்த ஜீவன் உயிருடன் இருந்தபோது கோதானம் செய்ததாக இருந்தால் மட்டுமே அந்த ஆற்றைச்சுலபமாகக் கடக்க முடியும்.
அவ்வாறு செய்யாதவர்களை அந்த ஆற்றில் தள்ளி பாதாளம் வரை அழுத்தித் துன்பப்படுத்துவர். அதிலேயே நீண்டகாலம் மூழ்கித் தவிக்க நேரும். வைதரணி என்ற ஆறு, பாய்ந்து செல்லும் நீர்நிலை அல்லது. அந்த ஆறு மிகவும் நீள அகலமானது; ஆழமானது; அதில் தண்ணிர் இருக்காது. இரத்தமும் சீழும், சிறுநீரும் மலமுமாகக் கழிவுப் பொருட்கள் யாவும் நிறைந்திருக்கும். அதிலிருந்து வீசும் துர்நாற்றம் பொறுக்க முடியாத அளவு இருக்கும். அதில் நாசியில்லாத கொடிய பயங்கரத் தோற்றமுள்ள விலங்குகள் ஏராளம் வசித்திருக்கும்.
பூமியில் தாம் வாழ்ந்திருந்த காலத்தில் கோதானம் செய்தவர்கள் இந்த ஆற்றில் மூழ்கி வேதனையுறமாட்டார்கள். மற்றவர்கள் மூழ்கி துன்பத்திற்குள்ளாக நேரும். கோதானம் செய்தவர்களுக்குத் துன்பமில்லை. அந்த ஜீவன் சுலபமாக ஆற்றைக் கடந்து சென்றுவிடும். அதன்பின் எமதர்மராஜனின் இளைய சகோதரனான விசித்திரன் என்பவனின் நகரத்தை அடைவர். அங்கு ஆறாவது மாதப் பிண்டத்தை உண்ட பின்பு பயணத்தைத் தொடரும்.
ஏழாவது மாதப் பிண்டத்தை அந்த ஜீவன் உண்ண முடியாமல் தவிக்க நேரும். அப்போது அந்த ஜீவன் முன்பாக சில பிசாசுகள் தோன்றி, அப்பிண்டத்தை உண்ணாதவாறு தட்டிப் பறிக்க முயற்சிக்கும். அந்த ஜீவன் வாழ்ந்திருந்த காலத்தில் தம்மை நாடி வந்தவர்களுக்கும், தான தருமம் செய்தவருக்கும், பசிக்கும் உணவளித்தவருக்கும், பூஜை வழிபாடு செய்தவருக்கும் இந்நிலை ஏற்படாது. அவர்கள் பிண்டத்தை உண்ணத் தடையுமிருக்காது.
ஆனால், அவ்வாறு செய்யாதவர்களுக்குத்தான் துன்பம் உண்டாகும். அந்தப் பிண்டத்தை உண்ணும் உரிமை அவர்களுக்கு இல்லையென்று பிசாசுகள் தட்டிப் பறித்துச் சென்றுவிடும். அதன்பின் அந்த ஜீவன் மிகுந்த பசியோடு எமதுரதர்களால் இழுத்துச் செல்லப்படும். அப்போதுதான் எமதுரதர்கள் அந்த ஜீவனிடம், "மூடனே உயிருடன் மானிட உருவில் வாழும்போது இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய புண்ணியங்களைத் தேடிக்கொள்ளவேண்டும். தான தருமங்களைச் செய்யவேண்டும். பூஜை வழிபாடு, புனிதப் பயணங்களை மேற்கொண்டு இறைவனருளைப் பெறவேண்டும்; வாழ்க்கையில் நேரிய முறைகளைக்
நினைவு மலர் 173

Page 93
கொண்டு ஒழுக்கமாக வாழவேண்டும். பெரியோர்களை மதிக்க வேண்டும். வறியவர்களைக் காக்க வேண்டும்; பிறருக்கு நன்மையைத் தவிர தீமை செய்யக் கூடாது. பாவம் எது புண்ணியம் எது என்று அறிந்து புண்ணிய செயல்களையே செய்து வந்தால் இக்கதி நேராது! அப்போது செய்யாமல் ஆவியுருவம் பெற்றபின் எத்தகைய செயலும், பரிகாரமும் செய்துகொள்ள முடியாது. ஏற்படும் துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும்!" என்று கூறுவர். ஏழாவது மாதத்தில் அந்த ஜீவன், தாம் செல்லவேண்டிய இடத்தின் பாதித்தூரத்தைக் கடந்துவிட்டிருக்கும்.
எட்டாவது மாதத்தில் பக்குவபதம் என்ற பட்டினத்தை அடையும். அங்குதான் எட்டாவது மாத பிண்டத்தை உண்ணும். அதன்பின் துக்கதம் என்ற ஊரை அடையும். அங்கு பெரும் துக்கத்திற்குள்ளாகி ஒன்பதாம் மாதப் பிண்டத்தை ஏற்கும். அங்கிருந்து நாதாக்கிரந்தம் என்ற பட்டிணத்தில்தான் பத்தாவது மாதப் பிண்டத்தை உண்ண நேரும். அந்த இடத்தில் அநேக ஜீவன்கள் ஆவி உருவத்துடன் கூட்டங் கூட்டமாக ஒலமிட்டுத் திரிந்து கொண்டிருப்பர். அவர்களெல்லாம் விருஷோற்சர்க்கம் என்ற கருமத்தைப் புரியாதவர்கள்.
அவ்வாறு ஒலமிட்டுக் கதறுபவர்களைக் கண்ட அந்த ஜீவனும் கதறி அழும். பின் அங்கிருந்து அகப்தம் என்ற ஊரை அடையும். அந்த ஊரில் தான் பதினொராம் மாதப் பிண்டத்தை ஏற்கும். அதன்பின் சென்றடைவது சீதாப்ரம் என்ற நகரமாகும். அந்த இடம் கடுமையான குளிர் நிறைந்ததாகும். அங்கு பன்னிரண்டாவது மாதப் பிண்டத்தை உண்ணும். அதன்பின் அந்த ஜீவன் தம் நிலையை எண்ணிப் புலம்பும். தன்னுடன் வாழ்ந்து வந்தவர்களில் ஒருவர்கூடத் தன் அருகில் இல்லையே! என்று ஏங்கி வேதனையுறுவர். அந்த ஜீவன்கள் எமதுரதர்களிடம் தம் உறவினர்களைப் பற்றிக் கேட்கும்.
அதற்கு எமதுரதர்கள், "உன்னுடன் வாழ்ந்தவர்கள் பூவுலகில் இப்போதும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். நீ மட்டும்தான் இங்கு வந்துள்ளாய். உன்னுடன் வந்துள்ளது நீ செய்த பாவ புண்ணியங்களின் பலன்தான்" என்பர். அப்பொழுதான் அந்த ஜீவனுக்கு நாம் புண்ணியச் செயல்களைப் புரியாதது பற்றிய எண்ணமே தோன்றும். தமக்குத்தாமே எண்ணிப் புலம்பும். அதன் பிறகு எமதுரதர்கள் அந்த ஜீவனை வைவஸ்வதப்பட்டினம் என்னும் லோகம் இழுத்து வருவர்.
அந்த எமலோகம் மிகவும் விஸ்தாரமுள்ளதாய் தேவ கன்னிகைகள் கூடியதாய் எண்பத்து நான்காயிரம் விலங்குகள் வாழுமிடமாய்த் திகழ்கின்றது. ஜீவன்கள் செய்யும் பாவபுண்ணியங் களுக்கேற்ப எமதர்மராஜன் அவர்களை நடத்துவான். அவர்களின் பாவ
174நினைவு மலர்

புண்ணியங்களை அறிந்து கூறுவதற்கென்று பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் எமதர்மராஜனுக்கு உதவியாளராக இருப்பர்.
ஜீவன்கள் அனைவரும் அந்தப் பன்னிரண்டு சிரவணர்களையும் ஆராதனை செய்யவேண்டும். அவ்வாறு ஜீவன்கள் செய்யும் ஆராதனையால் சிரவணர்கள் திருப்தி அடைந்தால், அந்த ஜீவன் செய்த பாவங்களைவிட்டு புண்ணியங்களை மட்டும் எமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பர். அதனால் பன்னிரு சிரவணர்களை ஆராதித்து வந்தாலும் மறுமையில் நன்மை பெறலாம் என்று பரந்தாமன் கூறியருளுகிறார்.
பன்னிரு சிரவணர்கள்
எமலோகத்தில் எமதர்மராஜனுக்கு ஜீவன்களின் பாவ புண்ணியங்களை எடுத்து வைப்பவர்கள் பன்னிரு சிரவணர்கள் ஆவர். அவர்களைப் பற்றி பரந்தாமன் கூறியதும் கருடாழ்வாருக்குச் சந்தேகம் எழுந்தது. அதனால் அவர் மாதவனிடம், அந்த சிரவணர்கள் யார்? அவர்கள் வைவஸ்வத புரியான எமலோகத்தில் இருக்கவேண்டிய அவசியமென்ன? பூலோகத்தில் மானிடர் செய்யம் பாவ புண்ணியங்களை அவர்கள் எவ்வாறு அறிகின்றனர்? போன்ற வினாக்களுக்கு விடையளிக்குமாறு கோருகின்றார்.
சர்வவல்லமை படைத்த மாதவனும் மனமுவந்து விளக்கம் அளிக்கிறார். சகல உலகங்களிலும் பிரளயம் ஏற்பட்டு எல்லா உயிரினங்களும் மடிந்துபோயின. உலக நாயகனான மகாவிஷ்ணு அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் ஒடுக்கிக்கொண்டு எங்கும் நிறைந்திருந்த நீர் நிலையில் ஒரு பக்கம் ஆதிஷேசன்மீது யோக நித்திரை கொண்டிருந்தார். அச்சமயம் அவரது உள்ளக் கமலத்திலிருந்து நான்முகனான பிரம்ம தேவன் தோன்றினார். பின் அவர் மகாவிஷ்ணுவைக் குறித்து நீண்ட காலம் தவம் புரிந்தார். அவர் வேத சாஸ்திரங்களையும், படைப்புத் தொழிலையும் அறிந்து ஒவ்வொன்றை யும் படைக்கத் தொடங்கினார். அவ்வாறு அவர் படைத்ததும், உருத்திரன் முதலான தேவர்களும் அஷ்டதிக்கு பாலகர்களும் தத்தம் தொழில்களைப் புரியத் தொடங்கினர். தேவர்களில் மிகவும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்த எமதர்மராஜன் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து அதன் அரசனாகி ஜீவன்கள் செய்யும் பாவ புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராயத் தொடங்கினார். ஆனால், ஜீவன்கள் செய்யும் பாவ புண்ணியங்களை அறிய எமதர்மராஜனால் இயலவில்லை. அதை எப்படியாவது அறிய வேண்டும் என்று பலகாலம் முயன்று பார்த்தார். அவரால் எந்த முயற்சியாலும் அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதனால் எமதர்மராஜன் பிரம்ம தேவனிடம் சென்று வணங்கி, "நான்முகனே! நான், ஜைமினி நகரத்திலிருந்து ஜீவன்கள் செய்யும் பாவ புண்ணியங்களை ஆராய
நினைவு மலர் 175

Page 94
முற்பட்டேன். ஆனால், என்னால் அறிந்துகொள்ளமுடியவில்லை. இந்நிலையில் ஜீவன்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கேற்பத் தண்டிக்கவும், காத்தருளவும் சக்தி இன்றி இருக்கிறேன். அதற்கான வழியைத் தாங்களே கூறியருள வேண்டும்." என்று கேட்டார்.
எமதர்மராஜனின் வேண்டுகோளைக் கேட்டு, பிரம்மதேவன் தன் கரத்தில் ஒரு தர்ப்பைப்புல்லை எடுத்து எறிந்தார். அதிலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் தோன்றினர். அவர்களே சிரவணர்கள். அவர்கள் நீண்ட கண்களும் அழகிய தோற்றமும் உள்ளவர்கள். மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்துகொள்ளும் தனி ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் தம் ஆற்றலால் உலகில் பிறந்த ஜீவன்கள் அனைவரும் நினைப்பது, பேசுவது, செயல்புரிவது போன்ற அவர்களின் எல்லாச் செயற்பாடுகளையும் அறிந்து உணர்த்த வல்லவர்கள்.
அப்படிப்பட்டவர்களை எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்கப் படைத்த பிரம்மதேவன், "எமதர்மனே! இனிக் கவலை வேண்டாம்! இவர்கள் உன்னுடனிருந்து ஜீவன்கள் புரியும் பாவ புண்ணியங்களை அறிந்து உனக்கு எடுத்துரைப்பர். அதற்கேற்ப ஜீவன்களை தண்டிக்கவோ காத்தருளவோ செய்யலாம்" என்று கூறி அவருக்குத் துணையாக அனுப்பி வைத்தார். அதன்பின் எமதர்மராஜன் பன்னிரு சிரவணர்களோடு தென் திசை சென்று ஜீவன்களின் பாவ புண்ணியங்களை அறிந்து, தம் பணியைச் சீராகச் செய்து வரலானான்.
பூமியில் தம் இறுதிக்காலம் முடிந்த ஜீவன்கள் கட்டைவிரல் பரிமாணமேயுள்ள வாயு வடிவத்தில் எமதுரதர்களால் எமபுரியை நோக்கி இழுத்துச் செல்லப்படுவர். அவர்களின் பாவம் புரிந்த ஜீவன்கள் யாவரும் பல துன்பங்களுக்கிடையே கால் நடையாகவே இழுத்துச் செல்லப்படுவர். புண்ணியம் புரிந்தவர்களுக்கு அந்நிலை இல்லை. பலவகையிலும் தானதர்மங்கள் புரிந்த உத்தமர்கள் யாவரும் தரும மார்க்கமாகவே அவரவர் புரிந்த புண்ணியத்திற்கேற்ப அழைத்துச் செல்லப்படுவர்.
பெரியோருக்கும், சான்றோருக்கும் பொன், பொருள் முதலியவற்றைக் கொடுத்தவர்கள் விமான மூலமாகவும், குதிரை மீதும் அழைத்துச் செல்லப்படுவர். அது அவரவர் புரிந்த புண்ணியத்தின் அளவைப் பொறுத்தது. ஜீவன்களில் ஒரு சிலர், முத்திபெறும் நோக்கத்தில் வேதசாஸ்திர புராணங்களை அறிந்து, கடவுள் பக்தி கொண்டு வழிபாடு முதலானவற்றைப் புரிந்து அருள் பெற்றவர்கள் புண்ணியவான்கள். அத்தகையவரை அழைத்துச் செல்ல என்று தேவ விமானம் வரும். அதில் ஏறி வானுலகம் சென்றடைவர். இவ்வாறு எந்த
176நினைவு மலர்

புண்ணியமும் செய்யாத பாவிகள்தான் கால் நோக நடந்து செல்வர். அவர்கள் செல்லும் பாதையில் அடர்ந்த காடுகள், வாள்போன்று கூரிய இலைகளைக் கொண்ட மரஞ்செடி கொடிகள் போன்றவற்றினுள் செல்ல நேரும்.
அவர்கள் நடந்து செல்லும் பாதைகள் வறுத்த மணல்கள், பறல்கள் நிறைந்ததாக, சுட்டு எரிப்பதாக இருக்கும். இவ்வாறு பல துன்பங்களையும் ஏற்றுச்செல்ல நேரிடும். பூமியில் ஜீவன்கள் தாம் வாழ்ந்துவரும் காலத்தில் சிரவணர்களைப் பூஜித்தவராக இருந்தால், அந்த சிரவணர்கள் அவர்கள்மீது கருணை கொள்வர். அதனால் எமதர்ம ராஜனிடம் அவர்கள் செய்த பாவங்களை விடுத்து புண்ணியங்களை மட்டுமே எடுத்துக் கூறுவர்.
பூமியில் எல்லா ஜீவன்களும் சிரவணர்களைப் பூஜிப்பதில்லை. அவ்வாறு சிரவணர்களைப் பூஜிப்பவர்களின் மனம் தெளிவுடனிருக்கும். எவ்விதப் பாவச் செயல்களுக்கும் அவர்கள் மனம் இடந்தராது. பன்னிரு சிரவணர்களையும் பூஜிப்பது மிக எளிதாகும். பன்னிரு கலசங்களில் நீர் நிறைந்து, அவற்றில் சோறு சமைத்து அந்தக் கலசங்களை அந்தந்த சிரவணர்களைக் குறித்து அந்தணருக்குத் தானமாகக்கொடுக்க வேண்டும். அவ்வாறு தானம் செய்வது சிரவணர்களுக்கு திருப்தி அளிப்பதாகும். அதனால் அந்த ஜீவன்களுக்குச் சகல நன்மைகளையும் புரிவர்.
பன்னிரண்டு சிரவணர்களைப் பற்றிய தோற்றம், மற்றும் அவர்களின் குணநலன், வழிபாடு போன்றவற்றை அறிபவரின் பாவம் நீங்கும்.
நரகங்களும் தன்மைகளும்
இதுவரை பன்னிரு சிரவணர்களைப் பற்றிக் கண்டோம். அவர்கள் மூலமாகத்தான் ஜீவன்கள் செய்த பாவ புண்ணியங்களை எமலோகக் கணக்கன் சித்திரகுப்தன் அறிகிறான். சித்திரகுப்தன்தான் எமதர்ம ராஜனுக்கு ஜீவன்களின் பாவ புண்ணியங்களைப் பட்டியலிட்டுக் கூறுபவன். அவ்வாறு கூறப்படும் பாவபுண்ணியங் களுக்கேற்பத் தண்டனைகளை நிறைவேற்றி வைப்பவர்கள் எம தூதர்கள்.
ஒருவர் செய்த பாவ புண்ணியங்களின் தன்மைக்கேற்பவே தண்டனை நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் வாக்கால் பாவ புண்ணியம் புரிந்திருந்தால், வாக்காலும், மனத்தால் செய்திருந்தால், மனத்தாலும் உடலால் செய்திருந்தால், உடலாலும் அதற்குரிய பலன்களை
நினைவு மலர் 17

Page 95
அனுபவிக்க நேரும். பெரியோர்களை மதித்தல், போற்றுதல் வேத புராண சாஸ்திரங்களைப் பக்தியோடு படித்தல், கேட்டல் போன்ற புண்ணிய செயல்களைப் புரிந்தவர் தம் வாக்கு வன்மையால் நன்மையே பெறுவர். அவ்வாறின்றிப் பெரியோர்களை அவமதித்தல், தூற்றுதல் போன்ற பாவ காரியங்களைப் புரிந்தவரின் வாயிலிருந்து புழுக்கள் வெளிவந்துகொண்டே இருக்கும். புனிதப் பயணம் மேற்கொண்ட வர்கள், புனித நீராடியவர்கள், இறைவனை வழிபடும் நல்லுபதேசம் செய்யும் பெளராணிகள், குருமார்கள் போன்று தெய்வீக விஷயங்களை உபதேசிப்பவர்கள், முனிவர்கள் போன்றவர்களை வணங்கியவர்கள் புண்ணியம் செய்தவர்களாவர். அத்தகையவர்கள் தங்களுக்கு விருப்பமான சரீரத்தைப் பெற்று மகிழ்வர்.
பிற பெண்களைச் சேர்ந்தவர், பிற உயிர்களைத் துன்புறுத்திய வர்கள் கொடூரமான சரீரத்தைப் பெற்றுத் துன்புறுவர். இறைவழிபாடு செய்தவர்களும், தியானம், வேள்வி புரிந்தவர்களும், பிறருக்கு நன்மையே செய்தவர்களும், ஊருக்கு உழைத்த உத்தமர்களும், உலக நன்மைக்காகத் தம்மையே அர்ப்பணித்தவர்களும் எப்போதும் மகிழ்ச்சி கொள்ளும் மனமுடையவர்களாக இருப்பர். அவ்வாறின்றி மற்றவருக்குத் தீமைசெய்ய நினைத்துக் கொண்டிருந்தவரும், கெடுதல்கள் புரிவதையே தொழிலாகக் கொண்டவர்களும், எப்போதும் வேதனைப்படும் மனமுடையவர்களாக இருப்பர்.
அதனால் இறந்தவர்களுக்காக அவனுக்குரியவர்கள் அன்ன தானம், தீபதானம், கோதானம், பூதானம் முதலான தானங்களைச் செய்தல் வேண்டும். அன்னதானம் புரிவதால் இறந்தவரின் ஜீவன் தமது எமலோக பயணத்தின் போது பசி, தாகம் எடுக்காமல் செல்லும். தீபதானம் செய்தால் அந்த ஜீவன் இருள்நிறைந்த இடத்திலும், வழி தெரிந்து துன்பமின்றி செல்லும், கார்த்திகை மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்தசியில் தீபதானம் செய்தாலும், விருஷோற் சர்க்கம் செய்தாலும் அந்த ஜீவன் மேலுலகில் நற்கதி அடையும்.
நீர்க்குடத்தைத் தானம் செய்வதால் எமதுரதர்கள் திருப்தி அடைவர். அதனால் அவர்கள் தாம் இழுத்துச்செல்லும் ஜீவன்களைத் துன்புறுத்தமாட்டார்கள். பொருள் தானம் செய்தால் அந்த ஜீவன் விமானத்தில் ஏறி நல்லுலகை அடையும். இறந்தவருக்கு பதினொரு நாட்கள் செய்யும் பிண்டங்களால்தான் சிரசு, ரோமம் போன்றன நன்றாக அமையும். பதினொராம் நாள் முடியும்வரையில் அந்த ஜீவன் உயிர்விட்ட இல்லத்தில், தம் மனைவிக்கு முன்பாகப் பசிதாகத்தோடு நின்றிருக்கும்.
அதனால், பதினொராம் நாளிலோ, பன்னிரண்டாம் நாளிலோ செய்யப்படும் தானமானது அந்த ஜீவன்களுக்கு எமலோகத்திற்குச்
நினைவு மலர்

செல்லும் வழியில் துன்பங்களைப் போக்க உதவும். பரந்தாமன், கருடாழ்வாருக்கு பத்தானம் செய்வது குறித்து விவரிக்கிறார். குடை, தண்டம், வஸ்திரம், மோதிரம், நீர்க்குடம், ஆசனப்பலகை, சோறு வழிபாட்டிற்குரிய பொருள்கள், பூநூல் , தாமரசெம்பு, அரிசி போன்றவற்றைத் தகுதி உடையவர்களுக்குத் தானம் செய்வதே பத்தானம் எனப்படும். குடை தானம் செய்தால் ஜீவன் எமலோகத்துக்குச் செல்லும் வழியில் குளிர்ந்த நிழல் நிறைந்த இடமாக இருக்கும்.
இதைப் போன்றுதான் ஒவ்வொன்றையும் தானம் புரியும்போது அதற்குரிய நன்மைகளை, ஜீவன்களை எமலோகத்திற்குச் செல்லும் போது பெறுகின்றனர். பட்சிராஜாவான கருடன் பூரீமந் நாராயணனை வணங்கி, பாவம் செய்தவர்கள் அடையக்கூடிய நரகங்களைப் பற்றி விரிவாகக் கூறுமாறு வேண்ட அவரும் கூறுகின்றார். பாவம் செய்தவர்களுக்கு எமதர்மராஜனால் ஏற்படுத்தப்பட்ட இடமாய் விளங்குவது நரகங்களாகும். நரகங்கள் ஒன்று, இரண்டல்ல, எண்பத்து நான்கு லட்சம் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைப் பாவம் செய்தவர்களைத் தண்டிக்கும் இடமாகும். அவற்றில் இருபத்தெட்டு நரகங்கள் மிகவும் கொடியனவாகும். அவை:
தாமிஸ்ரம் அந்தாமிஸ்ரம் ரெளரவம் மகாரெளரவம் கும்பீபாகம் காலசூத்திரம் அசிபத்திரம் பன்றிமுகம் அந்த கூபம் கிருமிபோஜனம் அக்கினிக்குண்டம் வஜ்ஜிரகண்டம் சான்மணி வைதரணி பூயோதம் பிராணரோதம் விசாஸனம் லாலாபட்சம் சாரமேயாதனம் அவிசி பரிபாதனம் கூடிாரகர்த்தமம் ரகேஷாகணம் ஆலரோதம் தந்த ஆகமம் வடரோதம் பர்யாவர்த்தனகம் ஆசிமுகம்
இதுபோன்ற கொடிய நரகங்கள் எமதர்மராஜனுடைய அதிகாரத்தின் கீழுள்ளன. அங்கு பாவம் செய்தவர்களுக்கு ஆயுதபயம், விலங்குபயம் போன்ற பலவகையான பயங்களும், துன்புறுத்தல்களும் உண்டு. தாமிஸ்ரம் என்ற நரகம்: பிறர் மனைவி, குழந்தை போன்றவர்களை அபகரித்தவர்களுக்கும், பொன், பொருள்
நினைவு மலர் 179

Page 96
முதலானவற்றைத் கொள்ளையடித்தவர்களுக்குமானது. அந்தாமிஸ்ரம் நரகம் என்பது, கணவன் அல்லது மனைவி இவர்களில் ஒருவர் மற்றவரை வஞ்சித்து வாழ்ந்தவர் அடையுமிடம். கண்கள் இருள் அடைந்து மூர்ச்சித்து விழுமிடமாகும்.
ரெளரம் என்பது, பிறர் வாழ்க்கையைக் கெடுத்து வலுக்கட்டா யமாகப் பொருள்களைப் பறித்து, தாம் வாழ்ந்தால் போதுமென்ற சுயநலக்காரர்கள் அடையுமிடம். மகாரெளரவம் என்னும் இவ்விடத்தில் பயங்கரத் தோற்றமுடைய மிருகங்களால் பாவிகள் துன்புறுத்தப்படுவர். கும்பீபாகம் என்னும் நரகம், தன் சுயநலனுக்காக பிற உயிர்களை வதைத்த, சுவைக்காகக் கொன்ற இரக்கமற்ற பாவிகள் அடையுமிடம். காலசூத்திரம் என்பது பெற்றோரையும், வயதிலும் அறிவிலும் முதிர்ந்த பெரியோர்களையும் அவமதித்தும், துன்புறுத்தியும் வந்தவர்கள் அடையுமிடம் நரகம்.
அசிபத்திரன் என்ற நரகம், தெய்வங்களை நிந்தித்தும், நமக்குரிய தர்மங்களை கடைப்பிடிக்காத அதர்மம் புரிந்தவர்களும் அடையக் கூடிய நரகமாகும். பன்றிமுகம் என்ற நரகம், அநியாயமாக பிறரைத் துன்புறுத்தியும் ஆணவத்தால் அநீதிகளையும், கொடுமைகளையும் புரிந்த அக்கிராமக்காரர்களுக்குரிய இடமாகும். அந்தகூபம் என்பது துரோகம், கொலை போன்ற கொடிய செயலைப் புரிந்தோர் அடையக்கூடிய நரகமாகும். கிருமி போசனம் என்ற நரகம், தான் மட்டும் உண்டு பிறரைத் துன்புறுத்திய கிருமிகள் போன்ற ஈவிரக்கமற்ற பாவிகள் அடையுமிடம்.
அக்கினிக் குண்டம் என்பது, சுயநலக்காரர்களாகப் பிறர் உரிமைகளையும், உடைமைகளையும் தன்னுடைய வலிமையான பலாத்காரமாகப் பறித்து வாழும் பாவிகள் அடையும் நரகம். வஜ்ஜிரகண்டம் என்பது, ஒழுக்கம் தவறியவரும், சேரத்தகாத ஒர் ஆணையோ, ஒரு பெண்ணையோ கட்டித்தழுவி மோகம் கொண்ட வெறியர்கள்தண்டிக்கப்படும் நரகம் ஆகும்.
சான்மணி என்பது நல்லது, கெட்டது, உயர்வு, தாழ்வு என்று தரமறியாது யாருடன் வேண்டுமானாலும் எப்படியும் கூடிமகிழும் காமவெறி பிடித்தவர்கள் அடையும் நரகம், வைதரணி நரகம் என்பது, அதிகார வெறியாலோ, கபட வேஷத்தாலோ, வஞ்சக எண்ணத்தாலோ, நல்வழிக்கு மாறாக அதர்மத்திற்குத் துணைபுரியும் அதர்மவான்கள் அடையக்கூடியது.
பூயோதம் என்பது , கூச்சமில்லாது இழி மகளைக் கூடியும், ஒழுங்கீனத்துடனும் எந்த ஒரு இலட்சியமுமின்றி விலங்குகள் போன்று
180நினைவு மலர்

சுற்றித்திரியும் கயவர்கள் அடையக்கூடிய நரகம். பிராண ரோதம் என்ற நரகம் விலங்குகளைத் துன்புறுத்திய வரும், கொலை புரிந்த கொடுமைக்காரரும் தண்டிக்கப்படுமிடமாகும். விசாஸனம் என்பது, வீண் பெருமைக்காகப் பசுவதை புரிந்து வேள்வி முதலியவற்றைச் செய்த பித்தலாட்டக்காரர்கள் அடையும் நரகம்.
லாலாபட்சம் என்ற நரகம், தான் மணந்த வாழ்க்கைத் துணைவியைத் துன்புறுத்தியும், விபரீத மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடுமைக்காரர்கள் அடையுமிடம், சாரமேயாதனம் என்பது, குடிசை வீடுகளுக்குத் தீவைத்தல், பொருள்களைச் சூறையாடுதல், உயிர்வதை செய்தல், விஷமிடுதல், கூட்டம் கூட்டமாக மக்களை வதைத்தல் போன்று பிறரையும், பிறர் பொருள்களையும் அழிப்பதே தொழிலாகக் கொண்டவர்கள் தண்டிக்கப்படும் நரகமாகும்.
அவீசி நரகம், பொய்ச் சாட்சி சொன்னவர்கள் ஆணவங் கொண்டு அதனால் அகம்பாவச் செயல் புரியும் பாவிகள் அடையக் கூடிய இடம். பரிபாதனம் என்பது எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மது அருந்தும் குடியர்கள், பிறருக்கு மது போதைக்குப் பொருள்களைக் கொடுத்தும், பிறர் குடிகளைக் கெடுக்கும் தீயவர்கள் துன்புறுத்தப்படும் நரகம்.
கூyாரகர்த்தமம் என்பது, தாம் மட்டுமே உயர்ந்தவர், மதிக்கத்தக்கவர் என்று நல்லவர்களையும், பெரியோர்களையும் அவமதித்துக் கர்வத்துடன் தீயகாரியங்களைப் புரிந்தவர்கள் அடையும் நரகம், ரகேஷாகணம் என்பது, வேள்வி என்ற பெயரில் நரபலி கொடுத்தல், மனித மாமிசங்களைப் புசித்தல், சாதுவான விலங்குகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோர் அடையும் நரகம். அவர்கள் உயிருடன் இருந்தபோது யாரை வதைத்தார்களோ அவர்களே இவர்களை வதைத்து துன்புறுத்தும் நிலைக்கு ஆளாவார்.
ஆலரோத நரகம், நிரபராதிகளைத் தண்டித்தல், தமக்குத் தீமை செய்யாதவரைக் கொடுமைப்படுத்தல் அல்லது கொல்லுதல், நயவஞ்சகமாக பிற உயிரைப் பறித்தல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் போன்ற பாவச் செயல்களைப் புரிந்த பாவிகள் அடையக்கூடிய இடம். தந்தஆகம் என்பது, நல்லதுக்கு மாறான தீயச் செயல்களையே புரிந்து வந்த கொடுமைக்காரர்கள் அடையக்கூடிய நரகம், வடரோதம் என்ற நரகம், வாயில்லாத ஜீவன்களான பிராணிகளைக் கொடுரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் தண்டிக்கப்படுமிடம். பர்யாவர்த்தனகம், தம் வீடு தேடிவந்த விருந்தினரை வெறுத்து நின்றவர்களும் பகிர்ந்துண்ண விரும்பாத
நினைவு மலர் 181

Page 97
சுயநலக்காரர்களும் துன்புறுத்தப்படுமிடம். ஆசிமுகம் என்ற நரகம், தான் பணக்காரன் என்ற ஆணவத்தினாலும், செல்வாக்கினாலும், மற்றவர்களை அலட்சியப்படுத்தியவர்களும், துன்புறுத்தியவர்களும், அநீதி வழியில் பொருள் சம்பாதித்து அதை அறவழிகளில் செலவிடாது திருட்டுத்தனமாகப் பதுக்கி வைப்பவர்களும் அடையக்கூடிய இடமாகும்.
இதுவரை கூறப்பட்ட இருபத்தெட்டு வகை நரகங்களுக்கு மேலாக ஒவ்வொரு வகையிலும் ஏராளமான பிரிவுகள் உள்ளன. ஒருவர் வாழும் காலத்தில் எவ்வித பாபக் காரியங்கள் புரிந்தாலும் அதற்கேற்ற நரகத்தில்துன்புறுத்தப்பட நேரும் என்று பூரீவிஷ்ணு கருடாழ்வாருக்குக் கூறியருளுகிறார்.
பாவபுண்ணியத்தின் பலன்
ஒருவர் மரணமடைந்து ஒராண்டு முடியுந்தருவாயில் அந்த ஜீவன், பிண்டத்திலான உணவை விட்டு எமலோகத்துக்குச் சென்றடைவர் என்பதைக் கண்டோம். ஆனால், எமலோகத்துக்கு அந்த பிண்டத்திலான உடல் செல்லாது. அந்தப் பிண்ட சரீரம் எமபுரியை அடையுமுன்பு ஒரு கட்டை விரல் அளவுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று, ஒரு வன்னி மரத்தில் சிலகாலம் தங்கியிருக்கும். அச்சமயம் அதற்கு கர்மத்தாவாகிய புது சரீரம் உண்டாகும். அதன்பின்தான் எமதுரதர்கள் அந்த ஜீவனைச் சித்திரகுப்தன் வசிக்கும் பட்டினத்தின் வழியாக எமலோகத்துக்கு அழைத்துச்செல்வர்.
அந்த ஜீவன் புண்ணியம் செய்ததாக இருந்தால் எமலோகம் அழகிய பட்டணமாகக் காட்சிதரும். பூலோகத்தில் இறந்தவனைக் குறித்து இரும்பாலாகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்திருந்தால், அந்த ஜீவன் எமலோகத்தை நெருங்கியவுடன், அங்கு வாசலிலுள்ள பூதகணங்கள் அவர்களைக் கண்டு மகிழ்ந்து காலம் தாமதிக்காமல் அந்த ஜீவன் வந்திருப்பதை எமதர்மராஜனிடம் சென்று தெரிவிப்பர்.
எமலோகத்தில் எமதர்மராஜனின் அருகிலேயே தர்மத்துவஜன் என்பவன் சதாகாலமும் இருப்பான். அவன்தான் வந்த ஜீவன் புண்ணியம் செய்தவனா 1 பாவம் செய்தவனா? என்பதைத் தெரிவிப்பவன். பூமியில் இறந்தவனைக் குறித்துக் கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயறு, துவரை ஆகிய நவதானியகங்களைப் பாத்திரங்களில் வைத்து தானம் செய்திருந்தால் அதனால் தர்மத்துவஜன் திருப்தி அடைந்து, "அந்த ஜீவன் புண்ணியம் செய்தவன்; நல்லவன்" என்று தெரிவிப்பான்.
அதனால் தான் பூமியில் ஒருவர் வாழ்ந்திருந்தபோது தான தருமங்கள் செய்திருந்தாலோ இறந்தபின் அவருக்காக அவரது
182நினைவு மலர்

உறவினர்கள் தான தருமங்கள் செய்தாலோ அந்த ஜீவனுக்கு எமலோகத்தில் மதிப்பும் நல்ல வரவேற்பும் இருக்கும். பாவம் செய்தவர்கள் எமலோகத்தைக் கண்டாலே நடுங்குவர். அவர்களுக்கு அது பயங்கரமாகத் தோற்றமளிக்கும். அவர்களுக்கு எமதுரதர்களும் எமதர்மராஜனும் கூடப் பயங்கரமானவர்களாக, கொடூரமான வர்களாகத் தோன்றுவர். அவர்களைக் கண்டு பயத்தால் கத்தி ஒலமிடுவர்.
புண்ணியம் செய்தவராக இருப்பின், எமதுரதர்கள், எமதர்மராஜன் போன்றவர்கள் நல்லவர்களாகத் தோற்றமளிப்பர். புண்ணியம் செய்த அந்த ஜீவன் அருகில் சென்றதும், எமதர்மராஜன்தான் அமர்ந்திருக்கும் சிம்மாசனம்விட்டு எழுந்து மரியாதை செய்வான். காரணம் புண்ணியம் செய்தவர் சூரிய மண்டலம் வழியாக பிரம்மலோகம் செல்லத்தக்கவர்கள்.
அவர்களுக்கு அங்குள்ள எமதுரதர்கள்கூடத் தங்களிடமிருக்கும் பாசம், உலக்கை போன்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணம் அணிவகுத்து நின்று மரியாதை செய்வர். புண்ணியம் செய்தவர்கள் பூலோகத்தில் மட்டுமல்ல; எல்லா லோகங்களிலுமே மதிக்கப்படுவர்.
இறந்துபோன ஜீவனுக்கு மாசிக, சோதக, கும்ப முதலான வற்றையும் பத்தானத்தையும் செய்யவில்லையெனில் அந்த ஜீவன் துன்பத்திற்குள்ளாக நேரும். அத்தகைய ஜீவனை எமதுரதர்கள் பாசத்தால் இறுகக் கட்டி, உலக்கையால் அடித்து, ஆடு, மாடுகளைப் போன்று இழுத்துச்சென்று எமதர்மராஜன் முன்நிறுத்துவர்.
ஒரு ஜீவன் செய்த பாவ புண்ணியங்களின் அளவுக்கேற்ப வேறு ஜென்மம் உண்டாகும். பெருமளவு புண்ணியம் செய்திருந்தவரை எமதுரதர்கள் துன்புறுத்தாமல் எமதர்மராஜனின் முன்பு சென்றதும், தேவர்களுள் ஒருவராக உருமாறித் தேவருலகம் செல்வர். அப்படியின்றி அந்த ஜீவன் பாவச் செயல் புரிந்ததாக இருந்தால், எமதர்மராஜனின் கட்டளைப்படி நரகத்தில் ஆழ்ந்து, பிறகு கிருமி, புழு முதலான பிறவியை அடைவர். அவர்மானிடப்பிறவி அடைவது அரிது.
அந்த ஜீவன் மிதமான புண்ணியம் செய்தவராக இருப்பின் முன்போல அவர் மானிடப் பிறவியைப் பெறுவர். தான தருமங்கள் செய்தவர் யாராக இருந்தாலும் அந்த தான தருமங்களுக்குண்டான பயன்களை அவர்கள் மறுஜென்மத்தில் நிச்சயம் பெறுவர். ஒருவர் தாம் வாழும் காலத்தில் மிகப் பெரிய செல்வந்தனாக, உயர்ந்த பதவி வகித்தவராக, சக்கரவர்த்தியாக, அறிவிலே பேரறிஞராக, உடற்
நினைவு மலர் 183

Page 98
பலமிக்கவராக, சகலகலாவல்லவராக, அறிவியல் மேதையாக, மதத் தலைவராக, பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இறந்த பிறகு அவரது உடலில் அரை ஞாண்கயிறையும் விடாது அறுத்தெறிந்து விடுவர். அவரது உடலை மண்ணிற் புதைத்தோ தகனம் செய்தோ அழித்து விடுவர். இதுதான் மானிட உண்மைத் தன்மை. இருப்பினும் ஒருவருக்குக் கிடைப்பதற்கரிய மானிடப்பிறவி, அதிலும் கூன், குருடு, செவிடு, மலடு, நீங்கிப் பிறத்தல் அரிது. அப்படி எடுத்த மானிடப் பிறவியில் ஜீவன் பாவச் செயல்களை விடுத்து புண்ணியங்களைச் செய்து இறைபக்தியுடன் ஒழுக்கத்தில் சிறந்திருந்து முத்திபெற முயற்சிக்கவேண்டும். அதற்குமாறாக, பாவகாரியங்களைச் செய்தால் நரகத்தில் வீழ்ந்து பல துன்பங்களுக் குள்ளாக நேரும். இழிவான பிறவிகளை எடுக்கவும் நேரும்.
பிரேத ஜென்மம் ஏற்படக் காரணம்
ஒரு சிலர் மரணத்துக்குப் பிறகு எமதுரதர்களுடன் எமலோகம் செல்லாது காற்று ரூபமான பிரேத ஜென்மமெடுத்து பூவுலகிலேயே அலைந்து திரிந்து வருகின்றனர். அத்தகையவர்கள் புரிந்த பாவங்களைப் பற்றிக் கருடாழ்வார் மாதவனிடம் கேட்க, அவர் அதற்கான விளக்கத்தைக் கூறியருளினார்.
உலகில் பிறந்து வாழும் ஒருவர் பிறருடைய பொருட்களையும், பிறர் மனைவியையும் அடைபவர் எவரோ அவரே மரணமடைந்த பின்னும் வேறு சரீரம் அடையப் பெறாமல் காற்று ரூபமான பிரேத ஜென்மத்தை அடைவர். அவர்கள் எமனுடைய காவலக்கும் அடங்காது. பசி, தாகத்தோடு பல இடங்களிலும் சுற்றித் திரிவர்.
மேலும் ஒருவர் இறந்துவிட்ட பிறகு, அவருடைய பூதவுடல் வீட்டில் இருக்கும்போதே அதைப்பற்றி வருத்தப்படாமல், அவரின் உற்றார், உறவினர்களையெல்லாம் ஏமாற்றி அவர் விட்டுச் சென்ற பொருள்களை வஞ்சகமாக அபகரிக்கும் பாவம் செய்பவர் காற்று ரூபமான பிரேத ஜென்மமடைவர். அத்துடன் அவர்கள் தன் குடும்பத்தாரையும் உற்றார் உறவினர்களையும்துன்பப்படுத்துவர்.
பிரேத ஜென்மத்துடன் இருப்பவர், தாம் வசித்துவந்த இடத்தையே சுற்றித்திரிவர். பிதுர்க்களின் தினத்தில் வீட்டிற்குவரும் பிதுர்களை வீட்டினுள் நுழையவிடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்துவர். அவர்களுக்கு வழங்கப்படும் அவிசுகளையும் அவரே வாங்கிப் புசித்து விடுவர். அது மட்டுமா! தம் வீட்டிலுள்ள பொருள்களை குடும்பத்தைச் சார்ந்தவர்களும், பிறரும் அனுபவிக்க முடியாமலும் வீணாகக் கிடக்கச் செய்வர். தம் புத்திரர் புத்திரி
நினைவு மலர்

முதலானவருக்குச் சந்ததி ஏற்படாமல் செய்து வம்சம் நாசமடையச் செய்வர். தம் புத்திரர்களுக்குச் சீதக்காய்ச்சல், தாபகாய்ச்சல், வைசூரி முதலான நோய்களை உண்டாக்கித் துன்புறுத்துவர்.
இவ்வாறு பிரேத ஜென்மம் எடுத்தவர் புரியும் தீய காரியங்களைப் பரந்தாமன் கூறியதும், அதைத் தொடர்ந்து அவரிடம், ஒருவர் பிரேத ஜென்மத்துடன் அலைந்து திரிந்து வருகிறார் என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளமுடியும் என்ற சந்தேகத்துக்கு விளக்கம் கேட்கிறார் கருடாழ்வார். அதற்கும் பதிலளிக்கிறார் பூரீமந் நாராயணன். பிரேத ஜென்மமடைந்தவர் தன்னைச் சார்ந்த குலத்தாரையே அதிகம் பாதிப்புக்குள்ளாக்குவர்.
இருப்பினும் தான தருமங்கள் செய்பவர்களையும், கடவுள் வழிபாடு செய்து வருபவர்களையும், பிதுர்களைக் குறித்து சிரார்த்தம் செய்து வருபவர்களையும், புனித தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்தவர்களையும் பிரேத ஜென்மத்தினரால் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாக்க முடியாது.
அவ்வாறின்றி, தான தருமம் போன்று நற்காரியங்கள் எதையும் செய்யாதவர், கடவுளை நிஷ்டிப்பவர், பக்தி இல்லாவதவர்கள், புலால் உண்டவர், மது அருந்தியவர், பொய் பித்த லாட்டக்காரர் போன்றவர்களுக்குப் பிரேத ஜென்மம் அடைந்தவர்களாற் பெருமளவு துன்பம் உண்டாகும்.
ஒருவர் ஆண் மகவைப் பெறாமல் பெண்களையே பெறுவதற்கும், அப்படி ஆண் குழந்தை கருத் தோன்றினாலும், பிறந்து இறப்பதற்கும், குடும்பத்தினரிடையே ஒற்றுமையின்றிச் சண்டைச் சச்சரவுடன் வாழ்வதற்கும், பசுபால் பாக்கியம் ஏற்படாமல் போவதற்கும், உற்றார், உறவினர், நண்பருடன் பகைமை கொள்ள நேர்வதும், கடவுள் பக்தி செய்யவும், யாகம், வேள்வி புரியவும் இயலாமல் போவதற்கும், தமக்குக் கீழானவருடன் தொடர்பும், அதனால் வேதனை ஏற்படுவதற்கும், தேவர்களையும், அந்தணர் களையும், தாய் தந்தையரையும், மற்றுமுள்ள பெரியோர்களை இகழ்வதற்கும், அயலாரைக் கொல்ல முயற்சிப்பதற்கும் காரணம் வேறு யாருமல்ல, பிரேத ஜென்மமடைந்தவராலேயே நிகழ்வதாகும்.
இவை மட்டுமா! பயிர்கள் நன்றாக விளைந்திருந்தும் அதன் பயனை முழுமையாக அடைய முடியாமல் போவதற்கும் தமக்குப் பொருத்தமில்லாத ஒருவரை மணக்க நேர்வதற்கும், தாம் உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தும் இழிந்தோர் செய்யும் தொழில்களைச் செய்து
நினைவு மலர் 185

Page 99
பிழைப்பதற்கும், எப்போதும் இழிந்தோர் செய்யும் தொழில்களைச் செய்து பிழைப்பதற்கும், எப்போதும் நல்லது நினைக்காமல் அதர்மங்களையே எண்ணுவதற்கும், எதிலும் துணிச்சல் இன்றி கோழையாக இருப்பதற்கும், திருடராலும், நெருப்பாலும், அரசராலும் பொருள்கள் நாசமடைவதற்கும், நோய்நொடிகள் அடிக்கடி ஏற்பட்டு துன்புறுவதற்கும், தம் துணைவருடன் சேர்ந்து வாழாமல் போவதற்கும், தம்புத்திரர்களே தமக்கு பகைவர்களாகி நடப்பதற்கும் போன்று, ஒருவருக்கு அவர் குடும்பத்தினருக்கு ஏற்படும் துன்பங்களுக்கு அந்த குலத்தில் பிறந்து இறந்த பிரேத ஜென்மமடைந்தவரே காரணமாகின்றார்.
அந்தக் குடும்பத்தில் சுபீட்சம், அமைதி, சந்தோஷம் நிலவாது. எப்போதும் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், துன்பங்களும் நிறைந்து காணப்படும். பிரேத ஜென்மமடைந்தவர் கொடூர முகத் தோற்றமும், வாள் போன்ற கூரிய பற்களும் கொண்டவராய்தம் குலத்தவரின் கனவில் தோன்றி தம்மைக் காப்பாற்றுபவர் யாருமில்லையே என்று அழுது புலம்புவர். இவ்வாறு கனவில் தோன்றுவர் என்பது கட்டாயமில்லை. தோன்றாமலும் போகலாம். ஆனால் தம் குலத்தைச் சார்ந்தவர்களுக்குத் துன்பங்களைச் செய்வர். இத்தகைய பிரேத ஜென்மம் இறந்து போகும் அனைவருக்கும் ஏற்பட்டுவிடுமா? யாருக்கு இத்தகைய ஜென்மம் ஏற்படுமென்ற சந்தேகம் கருடனுக்கு ஏற்படுகிறது. அதற்கும் பகவானே விளக்கமளிக்கின்றார்.
பூர்வ ஜென்மத்தில் கொடிய பாவம் புரிந்தவர்கள் யாரோ, அவர்தான் பிரேத ஜென்மத்தை அடைவர். ஒரு குலத்தில் பிறந்த ஒருவர் தரும சிந்தனையுடன் பொதுஇடங்களில் கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளை வெட்டியும் தண்ணிர்ப் பந்தல், சத்திரம் வைத்து, கோயில்கள் முதலியவற்றைக் கட்டியும் பொதுமக்களுக்குப் பயன்படும்படியான தருமத்தைச் செய்திருப்பர். அதற்குப் பின்னர் அவரே அத்தகைய பொது நலனுக்காக ஏற்படுத்தியவற்றை விற்க நேர்ந்தாலோ, தம் சுய தேவைக்கு உபயோகப்படுத்திக் கொண்டாலோ அவர் பிரேத ஜென்மம் அடைவர்.
அல்லது அவருக்குப் பின் அவர் கலத்தில் பிறந்த ஒருவர் அவற்றை விற்று, பொதுநலனுக்குக் கேடு விளைவிப்பாராகில் அவர் இறந்த பின் பிரேத ஜென்மத்தை அடைவர். அது மட்டுமின்றி, பிறருக்கு உரிமையான பொன், பொருள், பூமி போன்றவற்றை அபகரித்தவர் கிராமத்தின் எல்லைகளையும், வயலின் எல்லைகளையும், காட்டின் எல்லைகளையும் மாற்றித் தம் நிலத்தோடு சேர்த்துக்கொள்பவர்; குளம், கிணறு போன்ற நீர்நிலைகளைத்தூர்த்து அதைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்பவர், சண்டாளனால் அடிபட்டும், மிருகங்களால் கடிபட்டும், மாடு முட்டியும் இறந்து போனவர், இடிவிழுந்து மாண்டவர், தீவிபத்தில்
186நினைவு மலர்

சிக்கியும் தீயிலிட்டு தம்மைக் கொளுத்தியும், இறந்தவர் தூக்கிலிட்டும், விஷமருந்தியும், இறந்தவர்; துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்தவர், அயல்நாடுகளில் தம் குடும்பத்தார் எவரும் அறியாமல் இறந்து போவர், விருஷோற் சர்க்கம் செய்யாமல் உயிர்விட்டவர், தம் தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமலேயே இறந்து போகிறவர் போன்றவர்கள் பிரேத ஜென்மத்தை அடைந்து அலைந்து திரிவர்.
இத்தகையவர்கள் மட்டுமின்றி மலைமீது அல்லது உயரமான இடத்திலிருந்து விழுந்து இறந்தவர், இடர்பாட்டில் சிக்கி உயிர் விட்டவர், படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போதோ தூங்கும் போதோ உயிர் பிரிந்தவர், இறைவன் திருநாமத்தை உச்சரிக்காமல் உயிர் விட்டவர், தாய், மனைவி, மகள், மருமகள் போன்றோர்கள் மீது அபாண்டப் பழிசுமத்தியவர், சாதுக்கள், பசுக்கள் போன்ற ஜீவன்களைத் துன்புறுத்துபவர், கள், மதுபானம் போன்றவற்றை அருந்துபவர், தம் குருபத்தினியைக் கூடியவர், பெண், பட்டு, பொன், பொருட்களைக் களவாடியவர் போன்றவர்களும் பிரேத ஜென்மத்தை அடைந்து வருந்துவர்.
பிரேத ஜென்மம்நீங்க வழி
அவ்வாறு பிரேத ஜென்மம் அடைந்தவர் சிலர்தம் குலத்தவரின் கனவில் தோன்றிப் புலம்பி அழுவதுண்டு. ஒருசிலர் கனவில் தோன்ற மாட்டார்கள். தம் குலத்தினருக்கு எப்போதும் துன்பங்களைச் செய்து வருவர். அப்படிப்பட்ட நிலையில் அக்குடும்பத்தினர் துவண்டு விடாமல் பெரியோரிடம் தெரிவித்துவிட வேண்டும். அவர்கள் பிரேத ஜென்மம் அடைந்தவருக்குச் செய்ய வேண்டிய பரிகாரங்களைப் பற்றிக் கூறுவர். அவ்வாறு அவர்கள் கூறும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மாமரம், தென்னைமரம், சண்பகமரம், அரசமரம் போன்று பலருக்கும் பயன்தரும் மரங்களை நடவேண்டும். மலர்ச்செடிகளை நட்டு பூங்காக்களை அமைக்கவேண்டும். அது பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும்படியாக அமையவேண்டும். அந்தணர் களுக்கு பூதானம் போன்றவற்றை அளித்தல், பசுக் கூட்டங்கள் மேய்வதற்குப் பசும்புல் தரைகளை ஏற்படுத்தல், வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்கக் கிணறு, குளம் வெட்டுதல், தண்ணிர்ப் பந்தல் வைத்தல், தாகம் தீர்க்க வேண்டித் தண்ணீர்த் தொட்டிகள் கட்டுதல், காவிரி கங்கை போன்ற ஆறுகளில் நீராடி தான தருமங்கள் செய்தல், இறை வழிபாட்டிற்காகப் புனித தலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளுதல், போன்ற செயல்பாடுகளைச் செய்யவேண்டும்.
நினைவு மலர் 187

Page 100
மானிடர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பங்கள் அதிகம் சூழ்கின்றதோ அப்போதெல்லாம் இத்தகைய நற்காரியங்களில் ஈடுபட்டு தம் மனத்திற்கும் தமக்கும் நற்பலனைத் தேடிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் துன்பங்கள் மேலும் மேலும் ஏற்படும். பிரேத ஜென்ம தோஷத்தால் புண்ணிய காரியங்களில் மனம் நாடாமல் போகும் நிலையிலும், ஊக்கமும், முயற்சியும் கொண்டு அக்காரியங்களைச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் விலகுவதோடு பிரேத ஜென்மமடைந்தவரும் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியுற்று தம் பிரேத சரீரத்தை நீக்கிக்கொள்வார். அத்துடன் தம் குலம் சிறக்க வேண்டுமென்று எண்ணுவர். புத்திரபாக்கியம் உண்டாகவும் செய்வர்.
இதுவரை கூறப்பட்டவற்றிலும் ஒரு சந்தேகம் கருடனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு குடும்பத்தினருக்கு தன்குலத்தில் பிரேத ஜென்மம் அடைந்திருக்கிறார் என்பது தெரியவில்லை. அவ்வாறு பிரேத ஜென்மம் அடைந்தவரும் கனவில் தோன்றிக் கூறவுமில்லை. ஆனால் அவனுக்கும், அவன் குலத்தினருக்கும் துன்பம் உண்டாகின்றது. அந்நிலையில் என்ன செய்வது? அந்நிலையிலும் அவர் தமக்கு நேர்ந்த துன்பங்களைப் பற்றி பெரியோரிடம் சொல்லி அதற்கான பரிகாரம் கேட்கவேண்டும். அப்போது அவர்கள் இது பிரேத ஜென்மத்தினால் ஏற்படுகின்றன என்று கூறினால், அவர்கள் பேச்சை உதாசீனப்படுத்தக் கூடாது. அவர்கள் கூறுவதை நம்பி அவ்வாறே செய்யவேண்டும்.
புனித நீராடுதல், ஜபம் செய்தல், வேள்வி புரிதல், தவம் புரிதல் போன்றவற்றினால் தம் பாவங்களைப் போக்கிக் கொள்ளவேண்டும். பின் புண்ணிய காலங்களில் புனித தலங்களில் பிதுர்களைக் குறித்துத் தான தருமங்களைச் செய்யவேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்கு பிரேத ஜென்மம், பேய், பிசாசு, போன்றவற்றால் எந்தவிதத் துன்பமும் ஏற்படாது.
ஒவ்வொருவருக்கும் மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் முதல் தெய்வமாவர். அதனால் இம்மூவரையும் எந்தக் காலத்திலும் உதாசீனப்படுத்தாது நேசிக்கவேண்டியது கடமையாகக் கொள்ள வேண்டும். அவர்களின் சொற்படி நடக்க வேண்டும். ஒருவர் தம் தாய் தந்தையரையே தெய்வமாகப் பாவித்துப் பூஜித்து வந்தாலே போதும். அவர் தெய்வ வழிபாடு, பக்தி, புனித நீராடல், புனிதப் பயணம் போன்ற எதையும் செய்யவில்லையெனினும் பரவாயில்லை. அதனால் எந்தத் தீங்கும் நேர்ந்துவிடாது. அவ்வாறின்றி தாய் தந்தையரை மதிக்காமல் அவர் சொற்படி நடக்காமல் இருந்து வேறுபல தான தர்மங்களைச் செய்தாலும் அவற்றால் எந்தப் பயனும் உண்டாகாது. எல்லாமே வீணாகும். அதுமட்டுமன்றி தாய் தந்தையர் இறந்த பின்பு அவர்களைக்
நினைவு மலர் 18நினைவு

குறித்துத் தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் நற்பலனை அவரே அடைவர். தம் தாய் தந்தையரை "புத்" என்ற நரகத்திலிருந்து கரையேற்றுபவரே அவர்கள்தான் அதனாலேயே புத்திரர்கள் எனப்படுகின்றனர்.
கிணறு, ஆறு போன்ற நீர் நிலைகளில் விழுந்து இறந்தவர், வாளால் குத்துண்டு வெட்டப்பட்டு மடிந்தவர், தற்கொலை செய்து கொண்டு இறந்தவர் ஆகியவர்களுக்கு ஒராண்டு காலம் வரையில் எந்தவிதக் கிரியைகளும் செய்யக்கூடாது. ஒருவருடம் முடிந்த பின்பு இறந்தவருக்குச் சிரார்த்தம் முதலிய கருமங்கள் செய்த பின்பு அவனுடைய பிரேத ஜென்ம தோஷம் நீங்குவதற்கான கிரியைகளைப் புரிய வேண்டும்.
அவ்வாறு கர்மம் புரிவதற்குமுன் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபங்கள் செய்யக்கூடாது. புனித யாத்திரை, புனித நீராடல் போன்ற எதிலும் ஈடுபடலாகாது. ஒருவர் இறந்து பிரேத ஜென்மம் அடைந்தால் அதற்கான கிரியைகள் செய்யாதவரை அந்த ஜென்மம் நீங்காது பெரிதும் அவதிகளுக்குள்ளாக நேரும். பிரேத ஜென்மம் பற்றிக் கூறிவரும் பூரீமந் நாராயணன், பிரேத ஜென்மம் அடைந்த ஒருவனுடைய சரித்திரத்தைக் கூறுகிறார்.
திரேதா யுகத்தில் பப்ருவாக வாகனன் என்ற மன்னன் மகோதயம் என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். அவன் நீதிநெறிதவறாதவன். நித்திய கர்மங்களை முறைப்படி செய்து வருபவன். அவன் ஒரு நாள் வேட்டையாட விரும்பித் தன் பரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றான். அங்கு அவன் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு புள்ளிமான் அவன் பார்வைக்குத் தென்பட்டது.
அரசன் அம் மான்மீது குறிவைத்து அம்பு எய்தினான். குறி தவறவில்லை. மான் அடிபட்டுக் கீழே விழுந்தது. ஆனால், ஆழமாக அடிபடாத காரணத்தால், மான் எழுந்து ஒட முயற்சித்தது. அதைக் கண்ட மன்னன் மறுமுறையும் இன்னொரு அம்பை எய்தான். அதுவும் குறி தவறாமல் மானைத் தாக்கிப் பெருத்த காயத்தை உண்டாக்கி இரத்தம் கசிந்தது. இருந்தும் மான் வேகமாக ஒடி எங்கோ மறைந்து விட்டது.
இருந்தாலும் மன்னன் அந்த மானை விடுவதாக இல்லை. அவன் தரையில் கொட்டியிருந்த இரத்தச் சுவட்டைப் பின்பற்றிச் சென்றான். இவ்வாறு நீண்டதூரம் சென்று வேறு காட்டை அடைந்தான். அங்கு பல இடங்களிலும் தேடிப் பார்த்தான். அந்த மான் எங்கும்
நினைவு மலர் 189

Page 101
தென்படவில்லை. அவன் தன் முயற்சி வீணாகி விட்டதே என்று சலிப்புற்றான். அத்துடன் அவனுக்கு நீண்ட தூரம் வந்த களைப்பும், சோர்வும் ஏற்பட்டது. பசியும் தாகமும் வாட்டியது. சுற்று முற்றும் பார்த்தான் அவனுக்கு நீர்நிலை எதுவும் தென்படவில்லை. அந்த வனம் முழுவதும் தேடினான். ஒரிடத்தில் தாமரைக் குளம் ஒன்றைக் கண்டான். அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தக் குளத்தில் நீராடித் தன் சோர்வை நீக்கிக் கொண்டதோடு, அந்நீரைக் குடித்துத் தாகத்தையும் போக்கிக் கொண்டான்.
அதற்குமேல் நடக்க அவனால் இயலவில்லை. அதனால் தன்னுடன் வந்த பரிவாரங்கள் தன்னைத் தேடி வருமென்று அங்கிருந்த ஒர் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தான். அவனுடைய பரிவாரங்கள் அரசன் சென்ற திக்கை கவனிக்காததால், அவர்கள் வேறு திக்குகளில் தேடிக் கொண்டிருந்தனர். சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னும் படைவீரர்கள் அரசன் இருக்குமிடத்தை அடையவில்லை. இரவும் வந்துவிட்டது.
இருள் சூழ்ந்த கானகத்தில் அரசன் தன்னந்தனியாக வேறுஇடம் செல்ல வழிதெரியாமல் அரச மரத்தடியில் இருக்க நேரிட்டது. அப்பொழுது சற்று தூரத்தில் ஒரு காட்சி அரசனைப் பயமும் அதிர்ச்சியும் கொள்ளச்செய்தது. ஒரு பிரேத ஜென்மம் எலும்பும் நரம்பும் தசையுமில்லாத சரீரத்துடன் பல பிரேதங்களுடன் சேர்ந்து அங்குமிங்கும் பசி, தாகம் பொறுக்க முடியாமல் ஒடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டதும் அரசனுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை. அங்கிருந்து வேறிடம் செல்லவும்துணிவின்றி அச்சத்துடன் இருந்தான்.
அதற்குள் அந்தப் பிரேத ஜென்மம் அரசனருகில் வந்துவிட்டது. அது, அவனுக்கு வணக்கம் தெரிவித்து, "அச்சம் வேண்டாம் அரசனே! நான் உன்னைப் பார்த்ததை புண்ணியமாகக் கருதுகிறேன். உன்னால் நான் பிரேத ஜென்மம் நீங்கி, நற்கதி அடைய முடியும் என்று நம்புகிறேன்" என்று கூறியது. அரசனுக்கு அப்போதும் அச்சம் நீங்கவில்லை. அதனால் "நீ யார்? உன்னைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நீ பிரேதத்தைப் போன்று அச்சம் தரும் ரூபத்தில் இருக்கிறாய்? உன்னால் எப்படிப் பேச முடிகிறது? உன்னைப் பற்றி எனக்குக் கூறு" என்று பதற்றத்துடன் கேட்டான். அதற்கு அந்த பிரேத ஜென்மம், தன் வரலாற்றைக் கூறியது.
வைதீசம் என்ற பட்டணத்தில் வைசிய குலத்தில் பிறந்தவன் தேவன். அவன் தக்க பருவத்தில் திருமணம் செய்து கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தான். அவன்தன் வாழ்நாளில் பக்தியுடையவனாக வழிபாடு, ஆராதனை, விரதமிருத்தல் போன்ற அனுஷ்டானங்களையெல்லாம்
190நினைவு மலர்

தவறாது கடைப்பிடித்து வந்தான். பெரியோரையும் அந்தணர்களையும் மதித்து நடப்பான். தெய்வ தலங்களுக்குச் சென்று புனித நீராடல், இறைதரிசனம் பெறுதல், திருத்தொண்டு புரிதல் போன்றவற்றையும் தவறாது செய்து வந்தான். அவன் தன் வாழ்நாளில் பல தான தருமங்களைப் புரிந்துள்ளான். ஏழை, அனாதைகளையும் ஆதரித்து வந்தான். ஆனால் அவனுக்குப் புத்திர பாக்கியம் மட்டும் ஏற்படவில்லை. அவனுக்கு உற்றார், உறவினர் யாருமில்லை.
ஒருநாள் அவன் மடிந்தான். அவனுக்குப் புத்திரர், உற்றார், உறவினர் யாருமில்லாத காரணத்தால் யாரும் கர்மம் செய்யவில்லை. அதனால் இவன் பிரேத ஜென்மம் எடுத்து வெகுகாலமாக அலைந்து திரிந்து வருகிறான். அவ்வாறு பிரேத ஜென்மம் அடைந்தவன் தன் மன்னனிடம் தன் கடந்த காலத்தைப் பற்றிக் கூறி, "மன்னனே! எனக்கு யாருமே இல்லாத காரணத்தால் இறந்த பின்பு கர்மம் செய்யாமையால் பிரேத ஜென்மம் எடுத்து வேதனையோடு திரிந்து வருகீறேன். நீ அரசன் குடிமக்களுக்கெல்லாம் தலைவன். அந்த வகையில் அனைவருக்கும் நீ சொந்தக்காரனுமாவாய்! அதனால் எனக்குரிய கர்மங்களை நீயே செய்து இந்தப் பிரேத ஜென்மம் நீங்க உதவவேண்டும். அதற்குக் காணிக்கை என்னிடமுள்ள விலை மதிப்புமிக்க மாணிக்கத்தை அளிக்கிறேன்! அன்புடன் ஏற்றுக்கொள்" என்று அந்த ரத்தினத்தைக் கொடுத்தான்.
அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் அவன், "பிரேதமே! உனக்கு நான் எப்படி கர்மங்கள் செய்வது? அதைச் செய்யும் முறையும் எனக்குத் தெரியாதே! ஒருவருக்குப் பிரேத ஜென்மம் எதனால் உண்டாகின்றது? அது எவ்வாறு நீங்கும்? போன்ற விவரங்களை எனக்குக் கூறு" என்று கேட்டான்.
அதற்குப் பிரேத ஜென்மம், "மன்னனே! அந்தணர், சான்றோர் போன்ற வர்களின் பொன், பொருள்களையும், தெய்வ சொத்துக்களையும், பெண்கள், குழந்தைகள், பார்வையற்றோர், வாய் பேசாதவர்கள், காது கேளாதவர் போன்றவர்களின் பொருள்களையும் மோசம் புரிந்து அபகரித்தவர் யாராக இருந்தாலும் அவர் எத்தனை பெரிய தான தருமங்களைச் செய்தவராக இருந்தாலும் பிரேத ஜென்மத்தை அடைவர். துறவிப் பெண்ணையும், தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறர் மனைவியையும் விருபுகின்றவர் பிரேத ஜெமத்தை அடைய நேரும். தாமரை மலர்கள் நவரத்தினங்கள், பொன், பொருள்கள் போன்றவற்றைத் திருடியவரும் செய்நன்றி மறந்தவரும் தனக்கு நல்லது செய்தவருக்கு, தீமை புரிந்தவரும் பிரேத ஜென்மத்தை அடைவர். தம் நாட்டுக்காகச் சண்டையிடும் போர்க்களத்தில் புறங்காட்டி ஒடியவர்கூட பிரேத ஜென்மத்தையே
நினைவு மலர் 191

Page 102
அடையவேண்டும்" என்று பிரேத ஜென்மம் அடைதவற்கான காரணங்களைக் கூறினான்.
அரசன் பிரேத ஜென்மம் கூறியதுகேட்டுத் தொடர்ந்து, "அவ்வாறு ஏற்பட்ட பிரேத ஜென்மம் எவ்வாறு நீங்கும்? அவனுக்கு எத்தனை கர்மத்தை எவ்விதம் செய்யவேண்டும்? அதையும் நீயே கூறிவிடு" என்று கேட்டான். அதற்குப் பிரேத ஜென்மம், "அரசே! பூரீமந் நாராயணன் போன்று மங்கள விக்கிரகம் ஒன்றைச் செய்து நிலை நிறுத்தி, ஆராதனை செய்து, வலம்வந்து வழிபாடு செய்து, அக்கினி வேள்வி செய்து விருஷோற் சர்க்கம் என்ற தானத்தைச் செய்ய வேண்டும். பதின்மூன்று அந்தணர்களுக்கு குடை மோதிரம், பலகை, ஆடை, ஆபரணம் போன்றவற்றை தானமாக வழங்கி உணவருந்த வைத்தால் போதும். இறந்தவர் பிரேத ஜென்மத்திலிருந்து நீங்குவர்" என்று கூறியது.
அந்த சமயத்தில் அரசனின் பரிவாரங்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களையெல்லாம் கண்டதும் பிரேத ஜென்மம் அவ்விடத்திலிருந்து மறைந்து விட்டது. அரசன் தனக்குத்தானே யோசித்தான். பிரேத ஜென்மத்தின் மீது இரக்கம் ஏற்பட்டது. அதற்கு தான் விமோசனம் அளிக்க வேண்டும் என்று தன்னுள் தீர்மானித்துக் கொண்டான். பின் அரசன் தன் நகரத்தை அடைந்ததும் பிரேத ஜென்மம் நீங்குவதற்குரிய கர்மங்களையும், தான தருமங்களையும் முறைப்படி செய்தான். அதன்பிறகு பிரேதம் தனக்கேற்பட்ட ஆவிப்பிறவியை விட்டு நல்லுலகை அடைந்தது.
பிரேத ஜென்மம் நீங்குவதற்கு எண்ணெய் நிறைந்த குடத்தைப் பெரியோருக்குத் தானம் கொடுக்கலாம். அதனால் இறந்தவர் பாவங்கள் நீங்கப் பெற்று பிரேத ஜென்மம் நீங்கும். பொற்குடங்களில் பாலும் நெய்யும் நிரப்பி அக்குடங்களை அஷ்டதிக்கு பாலகர்களையும் ஆதிசங்கரரையும் பூரீ ஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களைச் சான்றோர்களுக்குத் தானமாகக் கொடுப்பது சிறந்ததாகும். அதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு பிரேத ஜென்மமும் நீங்கும்.
பிறப்பும் இறப்பும்
ஒருவர் எக்குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், அவர் செல்வந்தவராகவோ, வறுமை நிலையிலோ வாடுபவராக இருந்தாலும் அவர் அறிவு ஆற்றல்பெற்ற மேதையாகவோ, அறிவாளியாகவோ இருந்தாலும்; அவர் சிறு குழந்தையாகவோ, வயோதிபராகவோ இருந்தாலும் அவருக்குக் குறிப்பிட்ட காலத்தில் மரணம் ஏற்படுகிறது. அதற்கக் காரணமென்ன என்ற சந்தேகம் கருடனுக்கு எழுகிறது. அதற்கு வைகுண்டவாசன் பூரீமகாவிஷ்ணு விளக்கம் அளிக்கிறார். ஜீவன்களுக்கு
192நினைவு மலர்

மரணம் ஏற்படுத்துவதற்கென்றே நியமிக்கப்பட்டு இருப்பவன் எமதர்மன் ஆகும்.
உலகில் வாழ்பவர்கள் அவர்கள் தாங்கள் செய்யும் பல விதமான தோஷங்களால் ஆயுள் குறைந்து மரணமடைகின்றனர். இறந்து போனவன் வீட்டில் உணவு அருந்துதல், பிறர் மனைவியை விரும்புதல், தனக்ககுத் தகாத இழித்தொழிலைப் புரிதல் போன்றவர்களின் வாழ்நாள் மறந்து இறப்பர். இகலோக வாழ்க்கைக்கும், பரலோக வாழ்க்கைக்கும் வேண்டிய நல்வினை புரியாதவரும், பெரியோர்களை மதித்து நடக்காதவரும், கடவுள் பக்தி இல்லாதவரும், தூய்மை இல்லாதவரும் பாவங்கள் என்று அறிந்திருந்தும் அதையே செய்பவரும் எமலோகத்தில் நரகத்தில் சிக்கி வருந்த நேரும்.
பிறரைக் கெடுக்க நினைப்பவர், கேடு விளைவிப்பவர், பொய் பேசுபவர், உயிர்களிடத்தில் கருணை இல்லாதவர், சாஸ்திரம் கூறும் அறநெறிப்படி வாழாது பிறருக்குரிய கருமங்களைப் பின்பற்றுபவர், பாவகாரியங்களையே புரிபவர் எமலோகத்தில் பெரும் வேதனைக் குள்ளாவர். இவ்வுலகில் பிறந்து சஞ்சரித்துவரும் ஜீவன்களின் உடல் நிச்சயமற்றது. நிலையானது அல்ல; இந்திரியத்தாலும் இரத்தத்தாலு மானது. உடல், உணவு நீர் போன்றவற்றால் விருத்தியடைவது. காலையில் வயிறு புடைக்க உண்டாலும் மாலையில் சீரணித்துவிடும்; உடனே பசிக்கும். மீண்டும் உண்ண வேண்டும். அப்பொழுதுதான் உடல் வளரும். இல்லையெனில் தளர்ந்து சீர் குலைந்துவிடும். அதனால் அநித்யமான இந்த உடல் கர்ம வினையால் மீண்டும் இவ்வுலகில் பிறவி எடுக்காமல் இருக்கும் பொருட்டு நற்காரியங்களைச் செய்ய வேண்டும். மீண்டும் பிறவா நிலையான மோட்சம் பெறுவதற்கான வழியைத் தேடவேண்டும்.
அதனால், பாவங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். பாவங்கள் என்பது மனம், வாக்கு, உடல் ஆகியவற்றால் செய்யப்படுகின்றன. ஒருவர் மிகுதியான பாவங்களைச் செய்வாராயின் அவர் போன்ற இழிந்த பிறவி எடுக்க நேரும். ஒருவர் இறப்பதைவிட பிறக்கும்போதுதான் அதிக துன்பத்தை அடைகின்றார். தாயின் கருவில் இருக்கும் காலத்தில் தாயின் மலம், மூத்திரம், ஆகியவற்றால் அதிக துன்பத்தை அடைவர். அதனால்தான் பிறவி எடுப்பதே துன்பமானது என்று அறிந்து அதிலிருந்து மீள நல்லொழுக்கம், நற்பண்புகள் கொண்டவராகத் திகழவேண்டும். ஆனால், மக்கள் இளம் வயதில் தமக்கு உறுதியானதும், நன்மை பயப்பதும் எது என்று அறியாமல் தீய விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். முதுமை வயோதிப பருவத்திலோ, சோர்வாலும் துக்கத்தாலும் எதையும் உணர்ந்துகொள்ள முடியாமல் போகின்றனர்.
நினைவு மலர் 193

Page 103
வ்வா ன்மையை உணராமல் செய்பவர் பலராவர். பூர்வ
g)] [b 乌 புண்ணிய வசத்தால் உறுதியானதை நல்லதைச் செய்பவர் நிலையான முத்தியை அடைவர்.
ஜீவன்கள் செய்யும் கர்ம வினையினால் தான் பிறந்து பிறந்து இறக்கின்றனர். உலகில் பிறந்தவர் நீண்ட வயது வாழாது, பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இறப்பது என்பது கொடியது அது அவர் செய்த பாவத்தினால் ஏற்படுவதாகும். பிறந்தவுடனேயே இறந்துபோவது கொடிய பாவத்தினால் நேர்வது ஆகும். அத்தகையவர்கள் பிறத்தலுக்கும், இறத்தலுக்கும் எண்ணிக்கை இருக்காது.
முன் ஜென்மத்தில் ஒருவர் நல்லொழுக்கம் மிக்கவராய், தான தருமங்கள் புரிந்து நேரிய வழியில் வாழ்ந்தவர் மீண்டும் பிறந்தால் மனைவி, மக்கள், சுற்றத்தோடு நீண்டகாலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்து, பின் நற்பேறு பெறுவர். ஒரு தாய் கருவுற்று அது ஆறு மாதத்திற்குள் எந்த மாதத்திலாவது கலைந்து போனால் எத்தனையாவது மாதத்தில் அது நிகழ்ந்ததோ அத்தனை நாட்களுக்கு மட்டும் அந்த தாய்க்குச் சூதகத்தீட்டு உண்டு. ஆனால் தந்ைைதக்கு தீட்டு இல்லை. அவர் எந்த கர்மமும் செய்யவேண்டியதில்லை.
அவ்வாறின்றி பத்தாம் மாதத்தில் குழந்தை பிறந்து மூன்று வயதிற்குள் இறக்கநேரிட்டால், இறந்துபோன குழந்தைக்காகப் பாற்சோறும், தயிர் சோறும் சுற்றியுள்ள ஊர்க் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். மூன்று வயதுமுதல் ஐந்துவயதுக்குள் இறந்து போனாலும் மேற்கூறியது போலவே ஊர்க் குழந்தைகளுக்கு பாற்சோறும், தயிர்சோறும் கொடுத்தாலே போதுமானது.
பிறந்த ஒரு மாதத்திற்குள், பிறந்த, குழந்தை இறக்க நேரிடின் அந்தந்தக் குலத்தினரின் முறைப்படி நீர், பால், பாயாசம், முதலிய உணவுப் பொருட்களை திரவ வடிவில் பிற குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். ஆகவே உலகில் பிறப்பவர் இறப்பதும், இறப்பவர் பிறப்பதும் என்பது உறுதியானது. அதனால் ஒருவர் தாம் இறந்த பிறகு மறு பிறவி எடுக்காமல் இருப்பதற்குண்டான முயற்சியில் ஈடுபடவேண்டும். அதற்கான புண்ணிய செயல்களையே செய்யவேண்டும்.
மற்றவர்களுக்குக் கீழ்படிந்து நடத்தல், பெரியோரை மதித்தல், உண்மையே பேசுதல், இனிமையாகப் பேசுதல், தான தருமங்கள் செய்தல், இறை வழிபாடு புரிதல், புனித நீராடுதல் போன்ற நற்காரியங்களைப் புரியவேண்டும்.
194நினைவு மலர்

இறந்தவருக்கு சடங்குகள்
இதுவரை ஒரு ஜீவன் கருவிலேயே சிதைந்துபோனாலும், பிறந்தது முதல் ஐந்து வயதுக்குட்பட்டு இறந்துபோனாலும் செய்யக்கூடிய கர்மங்களைப் பற்றிப் பார்த்தோம். ஐந்து வயதுக்குட்பட்டு இறந்துபோனால் ஊர்க் குழந்தைகளுக்குப் பால், பாயாசம், உணவு முதலியவற்றை வழங்க வேண்டு என்று அறிந்தோம். அத்துடன் குழந்தை இறந்த பதினொன்று, பன்னிரண்டாம் நாட்களில் செய்யவேண்டிய சில கர்மங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அவர்களுக்காக விருஷோற் சர்க்கமும், விசேஷ தானதருமங்களையும் செய்யவேண்டியதில்லை. இருந்தாலும் இறந்து போனவர் குழந்தையாக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும் வயோதிபர் போன்று எந்த வயதுடையவராக இருந்தாலும் அனைவருக்கும் உதக கும்பதானத்தைத் தவறாமல் செய்யவேண்டும்.
மூன்று வயதுக்குட்பட்ட குழந்தை இறந்து போனால் அதை பூமியில் புதைக்க வேண்டும். இருபத்து நான்காவது மாதம் முடிந்த இருபத்தைந்தாவது மாதத்தில் இறந்த குழந்தைஎனில் தகனம் செய்ய வேண்டும். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை சிசு எனப்படும்; மூன்று வயது வரையுள்ளது பாலகன் ஆகும்; ஆறு வயது வரையில் கமரன் எனப்படும்; ஒன்பது வயது வரை பவுண்டகன் என்றும், பதினாறு வயது வரையில் கைசோரன் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.
இவர்களில் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள் இறந்துபோனால் செய்யவேண்டியதை ஏற்கனவே கண்டோம். ஐந்து வயதுக்கு மேல் பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள் அல்லது பன்னிரண்டு வயது நிரம்பியவர் இறந்து போனால் விருஷோற் சர்க்கம் முதலியவற்றைச் செய்யவேண்டும். ஆனால் பிதுர்களுக்கான சபிண்டீகரணம் செய்யலாகாது. பால், தயிர், வெல்லம் முதலானவற்றைச் சேர்த்துப் பிண்டம் போடவேண்டும். குடை, குடம், தீபம் போன்றவற்றைத் தானம் கொடுக்கவேண்டும். இல்லையெனில் இறந்த போனவர் மறுபிறவியிலும் மரமாகத் தோன்றுவார்.
ஒருவருக்குப் பிறக்கும் புத்திரர் வேறுயாருமல்ல; அவருடைய ஆத்மாவே ஆகும். அதனால்தான் புத்திரர் இறந்து போனால் அவருக்கு அவர் தந்தையும், தந்தை இறந்து போனால் அவருக்காக அவருடைய புத்திரரும் கர்மம் செய்ய வேண்டும். அந்நிலையில் ஒருவர் தனக்குத்தானே புத்திரர் ஆவர் என்று வேத சாஸ்திரம் கூறுகிறது. சூரியன் ஒன்றே, சந்திரனும் ஒன்றே.
பகல் நேரத்தில் நீர் நிறைந்த குடங்களை வரிசையாக வைத்து அதனுள் பார்த்தால் ஒவ்வொரு குடத்தினுள்ளும் சூரியன் தெரியும்.
நினைவு மலர் 195

Page 104
அதைப் போன்றுதான் சந்திரனும் அநேக நீர்குடங்களை வைத்தால் அதனுள்ளும் சந்திரன் தெரியும்.
அவ்வாறுதான் ஒருவருக்கு பல புத்திரர்கள் பிறக்கின்றனர். பெரும்பாலான புதல்வர்கள் அவர்களில் தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஆற்றலும் ஒழுக்கமும் உள்ளவர்களாகத் திகழ்கின்றனர். இருப்பினும் குருடனுக்குக் குருட்டுப் பிள்ளையோ, ஊமைக்கு ஊமைப் பிள்ளையோ, செவிடருக்கு செவிட்டுப் பிள்ளையோ பிறப்பதில்லை. தந்தையிடம் அமைந்துள்ள சிறப்பான அம்சங்களில் ஏதேனும் ஒன்று பிள்ளைக்கும் பொருந்தியிருக்கும். இதுவே நியதி என்று பூரீவிஷ்ணு பகவான் உறுதியுடன் கூறுகின்றார். மேலும் அவரே தொடர்ந்து கூறுகிறார்.
ஒருவர்தம் மனைவியின் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தை தம் கண்களால் பார்த்து விட்டாலே போதும். அவர் அந்த ஜென்மத்தின் இறுதியில் புத் என்ற நரகத்தை காணமாட்டார். ஒருவருக்கு தம் மனைவி ஒருவரின் மூலம் புத்திரர் பிறந்தால் அவரது குலத்து பிதுர்த் தேவர்கள் மகிழ்ச்சி கொள்வர். ஒருவருக்கு ஒன்றுக்கு மேல் பத்து புத்திரர்கள் பிறந்தால் அவர்களில் முதல் மகனே தலைச்சன் ஆகிறான். அவரே தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்யக் கடமைப்பட்டவராகிறார். அவரே தம் தந்தையின் பரலோக வாழ்விற்கு உதவுகின்றனர். மற்ற புதல்வர்கள் தம் தந்தையின் இகலோக வாழ்விற்கு மட்டுமே சாதகமாக இருப்பர்.
ஒருவருக்கு தாம் மாலையிட்டு மணந்த மனைவியின் வயிற்றில் பிறந்த புத்திரன் அவருக்கு இறுதிச் சடங்குகளையும் கர்மங்களையும் செய்யக் கடமைப்பட்டவர்கள். மற்ற புத்திரர்கள் இருப்பின் அவர்கள் மாண்ட தகப்பனைக் குறித்து சிறிது கர்மங்களம் சிரார்த்தங்களும் செய்யலாம். ஒருவர் தமக்கு பெளத்திரன் பிறக்கக் கண்டு இறக்க நேரிடினும் அத்தகையவர்கள் மறுமையில் நல்லுலகை அடைவர். கொள்ளுப் பேரனைக் கண்ட பிறகு இறந்து போகிறவன் அதைவிட மேலான உலகை அடைவர். ஒருவருக்கு பெண் மகள் இருந்து அவளை எந்த பொருளும் கோராமல் (வரதட்சணை, சீர் போன்றவை) ஒருவர் மணந்து அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் பிறப்பாராகின்தம் குலத்து இருபத்தொரு தலை முறையினரையும் கரையேற்றுவார். அது மட்டுமின்றி அத்தகைய புத்திரனே தாய், தந்தையருக்கு கர்மம் செய்யத்தக்க உரிமையுடையவர் ஆகிறார்.
ஒருவருக்கு காதற்கிழத்தி இருந்து அவள் மூலமாக புத்திரர் இருப்பின் அப்புத்திரர் சிறிது கருமம் செய்யலாம். அவ்வாறின்றி
196நினைவு மலர்

முற்றிலுமாக செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் செய்தவருக்கும், இறந்தவருக்கும் நரகமேற்படும். இருப்பினும் காதற்கிழத்தியின் மகன் தன்னைப் பெற்றவரைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம், தான தருமங்களைச் செய்யலாம். மனிதராகப் பிறந்தவர்கள் நல்ல நெறிமுறைகளைக் கையாண்டு நல்லொழுக்க மிகுந்தவர்களாய் ஜாதிக்கலப்பு செய்யாமல் ஒரு பெண்ணை மணந்து நற்புத்திரரை பெறுதல் வேண்டும் என்று பகவான் மகாவிஷ்ணு கருடாழ்வாருக்குக் கூறுகிறார்.
afilaineas Torib
பரந்தாமன் தொடர்ந்து சபிண்டீகரணம் என்னும் சடங்கு செய்வது பற்றியும் கணவன் உயிருடனிருந்து மனைவி இறந்து விட்டால் அவளுக்கு சபிண்டீகரணம் செய்வது எப்படி என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார். இறந்த வருக்கு முன் மாண்ட மூன்று தலைமுறையினர் பிரேத பிண்டத்தின் இறந்தவரின் பிண்டத்தையும் ஒன்று சேர்ப்பது சபிண்டீகரணம் எனப்படும். அவ்வாறு செய்வதால் இறந்தவர் பிரேதத்துவம் நீங்கப் பெற்று பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வர். அதனால் அவர் உயிர் துறந்த பன்னிரண்டாம் நாளிலும், மூன்றாவது பக்ஷத்திலும், ஆறாவது மாதத்திலும் சபிண்டீகரணம் செய்ய வேண்டும். இந்த சடங்கு முக்கியமாக செய்ய வேண்டியதாகும். அப்படி செய்யாதவரை இறந்து போனவர் பிரேதத்துடனேயே இருப்பர். அதனால் கர்மம் செய்த புத்திரருக்கு சிறிது அசுத்த தோஷம் உள்ளது. அதனால் சபிண்டீகரணம் செய்யாதவரை அப்புத்திரர் திருமணம் புரிந்து கொள்வது நல்லதில்லை. அவர் எந்தவித சுபகாரியங்களிலும் ஈடுபடலாகாது. துறவிகளுக்கு யாசகமிடவும் கூடாது.
அதனால் சபிண்டீகரணம் செய்து அதன் மூலமாக பிண்டம் சேர்க்க இறந்தவர் பிரேதத்துவம் நீங்கப் பெற்று பிதுர்த்துவம் பெற்று மகிழ்ச்சி கொள்வர். ஆகவே பன்னிரண்டாம் நாளிலேயே செய்து விடுவது உத்தமமாகும். ஒருவர் இறந்து போனால் அவருடைய புதல்வர் மட்டும் கர்மம் செய்ய வேண்டும். புத்திரர் இல்லாது போனால் இறந்தவரின் மூத்த சகோதரர் அல்லது கடைசி இளைய சகோதர் இவரில் எவராவது செய்யலாம். அல்லது அவர்களில் ஒருவருடைய மகனாவது செய்யலாம்.
இறந்து போனவரின் சகோதரர்கள் பங்கு, பாகம் பிரித்துக் கொண்டு தனித்தனியாக வாழ்ந்துவரின் இறந்தவரின் மனைவி கர்மம் செய்ய வேண்டும். இறந்தவருக்கு புத்திரரும் அவரது சகோதரரும் சகோதரரின் புத்திரரும், மனைவியும் இல்லையெனில் இறந்தவரின் பங்காளி இருப்பின் அவர் செய்யலாம். அவரும் இல்லாத நிலையில் இறந்தவருக்கு மாணாக்கர் இருந்தால் அவர் செய்யலாம். அப்படி
நினைவு மலர் 197

Page 105
யாருமே இல்லையென்றால் புரோகிதரே அவருக்குரிய கர்மங்களைச் செய்யலாம்.
சகோதரர்கள் நான்கு அல்லது ஐந்து பேர் என்று பலர் இருந்து அவர்களில் ஒருவருக்கு மட்டுமே புத்திரர் இருப்பின் மற்ற சகோதரர்களும் புத்திரருடையவராவர். அதுபோன்று ஒருவருக்கு சட்ட விதிப்படி ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருந்தும் அவர்களில் ஒருத்திக்கு மட்டுமே புத் திரர் இருப்பின் மற்றவர்களும் புத்திரருடையவராவர். பெண் ஒருத்தி திருமணமாகி புத்திரரை பெறாமல் இறக்க நேரிட்டால் அவளுக்குரிய கர்மங்களை அவள் கணவனே செய்யலாம். சபிண்டீகரம் செய்த பின்பு பிதுர்த்தேவர்கள் அனைவரையும் குறித்து இல்லாமல் இறந்தவரை மட்டுமே குறித்து சிரார்த்தம் செய்வது கூடாது. அவ்வாறு செய்தால் இறந்தவரும் சிரார்த்தம் செய்பவரும் சிரார்த்தம் செய்விக்கின்ற புரோகிதரும் நரகமடைவர்.
இறந்துபோனவருக்கும் பலர் இருக்கலாம். இருந்தாலும் ஒராண்டு வரையிலும் ஒருவரே சகல கிரியைகளையும் செய்ய வேண்டும். ஒராண்டு முடியும் வரை நித்திய சிரார்த்தத்தோடு ஒரு குடத்தில் நீர் நிறைத்து உதககும்ப தானத்தைச் செய்ய வேண்டும். அவ்வாறு இறந்தவருக்குரிய தர்மங்களை தவறாமல் செய்து வந்தால் அவர் விமானத்தில் நல்லுலகை அடைவர்.
பாட்டன் உயிருடனிருக்கும் போது தம் தந்தை இறந்தால் அவருக்கு சபிண்டீகரணம் செய்யக்கூடாது. பாட்டன் இறந்த பின்பு அந்த பாட்டனுக்கு சபிண்டீகரணம் செய்த பின்புதான் இறந்து போன தந்தைக்குச் செய்ய வேண்டும். தந்தையும், தந்தையைப் பெற்ற பாட்டியும் உயிர் வாழ்ந்திருக்கும் போது தாயார் இறந்து போனால் அவர்களுக்கு சபிண்டீகரணம் செய்யக் கூடாது. அவர்கள் இருவரும் இறந்த பின்பு அவர்களுக்கு சபிண்டீகரணம் செய்த பின்பு தான் தாயாருக்குச் செய்ய வேண்டும்.
ஒரு பெண் தன் கணவரையே தெய்வமென்று பாவித்து வாழ்ந்திருந்து அவர் இறந்தவுடனேயே தன்னுயிரை விடுவாரேயானால் அவள் மற்றவர்களைவிட நற்கதி அடைவாள். அத்தகையவள் புண்ணியவதியாகக் கருதப்படுவாள். அவளுடைய இந்நிலையால் அவள் கணவர் பாவங்கள் பல செய்திருந்தாலும் அவனும் புண்ணியவானாக தன் மனைவியுடன் சொர்க்கமடைந்து சுகமடைவான்.
அவ்வாறு கணவனும் மனைவியும் இறந்தால் அவர்களின் புத்திரன் ஒரே சபிண்டீகரண சடங்கைச் செய்தாலே போதுமானது.
198நினைவு மலர்

ஆனால் தனித்தனியாக சிரார்த்தம் செய்ய வேண்டும். அதைப் போன்று விருஷோற் சர்க்கமும் தானதருமங்களையும் தனித்தனியே செய்ய வேண்டும். இவ்வாறு ஓராண்டு வரையில் எல்லாவற்றையும் தனித்தனியே செய்து வந்தால் இருவருமே மகிழ்ச்சி கொள்வர். புனித தலங்களிலும், கிரகணம், மாயை, அமாவாசை முதலான புண்ணிய காலங்களிலும் அவர்களிருவருக்கும் சிரார்த்தம் செய்து வேறுவேறாகப் பிண்டம் போட வேண்டும். ஒருத்தி தான் மணந்த கணவனையே உயர்ந்த தெய்வமாக கருதி தன் கணவனுடன் உயிர்துறப்பவள் தன் கணவனுடன் சொர்க்கத்தில் இன்புற்றிருப்பாள்.
பின் மறுஜென்மத்தில் மகா யோகமுள்ளவர்களுக்கு அவர்கள் மகன் மகளாகப் பிறந்து மீண்டும் அவர்களே கணவன் மனைவியராகி மேன்மை அடைவர். தன் கணவர் இருக்கும் போதோ இறந்த பின்போ வேறு ஒருவருடன் உடன்பட்டு இன்பமனுபவிக்கும் மனைவியால் தாம்பிறந்த குலத்துக்கு தோஷம் உண்டாவதுடன் அத்தகையவர் நரகத்தை அடைவர். அப்படியின்றி தம் கணவரையே மேலாக மதித்து அவருடன் உடன்பட்டு ஒழுக்க நிலை தவறாமல் வாழும் பெண்கள் இறந்த பின்பும் புண்ணிய லோகத்தை அடைவர்.
தம் கணவரை மதிக்காமல் அலட்சியம் செய்து தம் விருப்பப்படி வாழும் பெண்கள் மரணத்துக்குப் பின் கொடிய நரகத்தையே அடைவர். அத்துடன் அடுத்து ஏற்படும் பிறவியில் கொடூரகுணமுள்ளவருக்கு மனைவியாக வாய்த்து துன்புறுத்தலுக்குள்ளாவர் என்று நற் பண்புள்ள மனைவியர் அடையும் நிலை பற்றி பகவான் கூறுகிறார்.
இறந்தவருக்கான கருமம்
பூணூரீமகாவிஷ்ணு இறந்தவரைக் குறித்து செய்ய வேண்டிய கருமங்களைப் பற்றி இத்தொடரில் விளக்கமாகக் கூறுகின்றார். இகத்திலும் பரத்திலும் இன்பம் பெற வேண்டுமாயின் புத்திர பாக்கியம் பெற்றவராக இருக்க வேண்டும். அப்பேறு பெறாதவருக்கு எவ்வுலகிலும் இன்பமில்லை. அதனால் தானமும், தவமும் புரிந்தாவது புத்திரபாக்கியம் பெறுவதற்காக முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முயற்சி செய்யாத நிலையில் மனைவிக்கு கரு உற்பத்தியாகாது. அப்படியானாலும் கரு கலைந்து போகும், புத்திரரைப் பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.
அவ்வாறு கருமங்களைச் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். அவ்வாறு சுத்தப்படுத்தாமல் செய்யும் கருமங்கள் பூர்த்தியடையாது. அரக்கரும் பூதங்களும் பிரேத பிசாசுகளும் கூடி அக்கருமம் நிறைவேறவிடாது
gÉ96ad6Or6oy (d6qorf99)

Page 106
செய்து விடுவர். அதனால் அந்த இடத்தைச் சுத்தம் செய்தால் அந்த இடத்தில் தேவர்கள் வந்திருந்து உடனிருந்து மேற்கொள்ளும் கருமங்களை குறைவின்றி நிறைவேற்றி வைப்பர். அப்படிச் செய்தால்தான் இறந்து போனவர் அந்த கருமத்தின் முழுப் பயனையும் பெறுவர். இல்லையெனில் நரகத்தையே அடைய நேரும். பிதுர்களுக்கு கருமம் செய்யும் போது எண்ணையும் தர்ப்பைப் புல்லையும் உபயோகிக்க வேண்டும்.
எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியது. அதனால் மிகவும் பரிசுத்தமானது. எள்ளில் கறுப்பு எள், வெள்ளை எள் என்று இருவகை உள்ளது. இவற்றில் எந்த வித எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுக்கலாம். அதனால் ஏற்படும் பயன்ஸ் ஒன்றே. ஆனால் சிரார்த்த காலத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்து கொடுப்பதுான் சிறப்பாகும். அதனால் பிதுர்த்தேவர்கள் மிகவும் திருப்தி கொள்வார்கள்.
தர்ப்பை என்பது ஆசகப்புல்லாகும். ஆதியில் இப்புல் ஆகாயத்தில் தோன்றியது. அந்தத் தர்ப்பையின் இரு முனைகளிலும் பிரமனும் சிவனும் மத்தியில் பூரீ விஷ்ணுவும் வாசம் புரிகின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் முதலான எந்தக் கர்மங்களையும் செய்யக்கூடாது. அந்தணருக்கும், மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும் அக்கினிக்கும், துளசிக்கும் நிர்மாலிய தோஷமில்லை. அதாவது ஒருமுறை பூசித்து நீக்கியதையே மீண்டும் உபயோகிக்கலாம். அதனால் தோஷப்படுவதில்லை.
ஏகாதசி விரதமும் துளசியும் பகவத்கீதையும் பசுவும் உயர்ந்தோர் பக்தியும் பூரீமந் நாராயணனின் சரணமும் ஆகிய இவை அனைத்தும் சம்சாரம் என்னும் கடலை எளிதில் கடக்க உதவும் தோணிகளாகும். மரணத்தறுவாயில் ஒருவர் ஒரிடத்தை கோமயத்தால் மெழுகி தர்ப்பைப் புல்லைப் பரப்பி அதன்மீது எள்ளை இறைத்து அந்தத் தர்ப்பைப் புல் மீது படுத்து தம் கையில் தர்ப்பைப் புல்லையும் துளசியையும் வைத்து கொண்டு பூரீமந் நாராயணனின் நாமத்தை வாயார உச்சரித்தபடி உயிரை விடுவாராயின் அத்தகையவர் மிக உயர்ந்த இன்ப வீடாகிய வைகுண்டத்தை அடைவர்.
அவ்வாறு உயிர் விடுபவர் தர்ப்பைப் புல்லின் மீது குப்புறப் படுக்கக்கூடாது. முதுகு கீழுற படுத்து உயிர் பிரிவதற்கு முன்பாகவே துளசியோடு, தான் மேலுலகம் அடைய வேண்டிய தான தருமங்களையெல்லாம் செய்து விட வேண்டும். தானம் புரிவதில் உப்பு தானம் என்பது மிகவும் உயர்வானதாகும். உப்பு விஷ்ணு லோகத்தில்
நினைவு மலர்

உண்டானது. அதனால் ஒருவர் உப்பைத் தானம் செய்வாரெனில் அவர் சொர்க்கலோகத்தை அடைவர்.
தானதருமங்களின் சிறப்பு
தானங்களில் பல வகைகளையும் தானங்கள் புரியும் முறைகளையும் அதனால் ஏற்படக் கூடிய பலாபலன்களைப் பற்றி பூரீமகாவிஷ்ணுவே கருணையோடு கூறுகிறார். தானங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது பருத்தி தானமாகும். அதைத் தானம் புரிவதையே மகாதானம் என்பர். அறப்படி வாழ்பவர்களும் வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்களும் பூணுால் அணிகின்றனர். அந்தப் பூணுால் பருத்தியினாலானதே.
உலகில் வாழ்கின்ற மானிடர்களின் மானத்தைக் காப்பதற்கு ஆடைகளை அணிகின்றனர். அந்த ஆடைகளை செய்ய உதவுவது பருத்தியே ஆகும். அதனால் பருத்திக்கு தனி சிறப்பு உண்டு. அத்துடன் பருத்தி தானம் புரிவதால் மாமுனிவர்களும் பிரம்மா, சிவன், விஷ்ணு, இந்திரன் போன்ற தேவாதி தேவர்களும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகின்றனர். அதனால் பருத்தி தானம் செய்தவன் இறந்தபின் அவர் சிவலோக பதவி பெற்று அங்கு சுகமாக இருந்து பின் அழகிய உடலும் நீண்ட ஆயுளும் பெற்று மறு ஜென்மத்தில் பூமியில் அரசர் போன்ற உயர் குலத்தில் பிறந்து பலரும் போற்றும்படி வாழ்ந்து மீண்டும்
சொர்க்கலோகத்தையே அடைவர்.
எள்தானம், பசுதானம், நிலதானம், பொன், பொருள் தானம், தானிய தானம் போன்றவற்றை தானம் செய்தால் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும் யாவும் விலகிவிடும். இவற்றில் எள் தானமும் பசுதானமும் மிகவும் சிறப்பானவை. அவை, எத்தனை கொடிய பாவங்களையும் போக்க வல்லவை. அதனால் இந்த வகை தானங்களை அதன் புனிதம் தெரியாத சாதாரணமானவர்களுக்குக் கொடுக்காது உத்தம சான்றோர்களுக்கே அளிப்பது சிறப்பாகும். அவர்கள் அதன் புனிதத்தன்மை அறிவர்.
பெண்களுக்கும் தனக்கும் வேண்டியவருக்கும் எதையும் விருப்பப்பட்டு கொடுக்கலாமே தவிர, அதைத் தானமாகக் கொடுக்கலாது. அப்படிக் கொடுப்பது தானமாகாது. தானங்கள் செய்வதற்கு உகந்த காலம் ஒருவர் இறந்த காலமே ஆகும். அல்லது கிரகண புண்ணிய காலத்திலும் செய்யலாம். இருந்தாலும் ஒருவர் சுகமுடன் வாழ்ந்திருக்கும் காலத்திலேயே அவரே தம் கையால் தான தருமங்களைச் செய்வதுதான் சிலாக்கியமானது. அவ்வாறு தான தருமம் செய்ய விரும்புபவருக்கு புத்திரர் இருப்பின் அவனிடம் தனக்காக தானம்
நினைவு மலர்201

Page 107
செய்யப் போவதைச் சொல்லி அவனுடைய சம்மதம் பெற்ற பின்பு தானம் செய்யலாம்.
ஒருவர் இறக்கும் காலத்தில் எள், இரும்பு, உப்பு, பருத்தி, தானியம், பூமி, பொன், பசு போன்றவற்றைத் தானம் செய்வது மிகவும் சிறப்பாகும். எள்ளையும் இரும்பையும் தானம் புரிவதால் எமதர்மன் மகிழ்ச்சி கொள்வான். உப்புதானம் செய்தால் இறப்பவருக்கு எமனைக் கண்டு பயம் உண்டாகாது. பருத்தி தானம் செய்தால் எமதுரதர்களிடத்தில் பயம் உண்டாகாது.
தானியங்களைத் தானம் புரிந்தால் எமதர்மனும் அவன் தூதர்களும் மகிழ்ந்து அந்த ஜீவனுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வர். பூமி, பொன், பொருள், பசு போன்றவற்றைத் தானம் செய்தால் பாவங்கள் நீங்கப் பெறும் மரண வாயிலுள்ள ஒருவர்தம் நிலை அறிந்து இறைவனையே நினைத்து இறைவன் நாமத்தையே உச்சரித்து வரவேண்டும். அவ்வாறு உச்சரிப்பவர் இன்பவீடு எனப்படும் சொர்க்கலோகத்தை அடைவர்.
ஒருவர் தம் தந்தை இறந்த பிறகு அவருக்காக மிகப் பெரிய அளவில் சிரார்த்தம் போன்றவற்றைச் செய்வதைவிட அவர் இறக்கும் தருணத்தில் அருகில் இருந்து தான தருமங்களைச் செய்வது உத்தமமாகும்.
இரும்பு தானம் செய்வது சிறப்பானது. அதற்குக் காரணம் கூடாரம், உலக்கை சூரி, தண்டம் முதலான எமனுடைய ஆயுதங்கள் அனைத்துமே அதனால் இரும்பு தானம் செய்வதால் எமன் மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்வான். இறப்பவர் யாராக இருந்தாலும் இரும்பு தானம் செய்வது சிறப்பாகும். ஒவ்வொரு ஜீவனும் வேறான ஒன்று அல்ல. எல்லா ஜீவன்களின் உடல் உறுப்புக்களாகிய கால் முதல் சிரசு வரையிலான எல்லாமே பிரம்மா, சிவன் விஷ்ணு மற்றும் இந்திராதி தேவர்களின் அம்சமாகும்.
ஒவ்வொருவருக்கும் தாய், தந்தை, குரு, உற்றார், உறவினர் மற்றுமுள்ள உயிர்கள் யாவுமே பூரீவிஷ்ணு சொரூபமாகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களும் பொன், பொருள், தானியம் போன்ற பொருள்களும் வேள்வி, தவம் யாவுமே விஷ்ணு மயமாகும். ஒன்றைக் கொடுப்பவர் வாங்குபவர் ஆக இருவருமே பூரீ பகவானே தவிர வேறு யாருமில்லை. ஜீவன்கள் பூர்வ ஜென்மத்தால் செய்த கர்மங்களை அனுசரித்து அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களுக்கு புத்தியை பகவானே நாடச்
202நினைவு மலர்

செய்கிறார். அவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இருந்தால் சொர்க்க லோகத்தையும், பாவம் செய்தவர்களாக இருந்தால் நரக லோகத்தையும் அடைய நேருகிறது.
இவ்வாறு தானங்களின் சிறப்புப் பற்றி பூரீ மகாவிஷ்ணு கருடாழ்வாருக்கு உணர்த்துகின்றார். தான தருமங்கள் செய்வதிலும் ஒரு தனிச்சிறப்பைப் பற்றி பரந்தாமன்விளக்குகிறார். இறைவனை ஆராதித்து புனித தலங்களில் தான தருமம் செய்வது அதிகமான புண்ணியங்களைத் தரும். இறந்து போனவரைக் குறித்து பூமி தானம் செய்தால் அந்தப் பூமியானது எத்தனை அடிகள் கொண்டதோ அத்தனை ஆண்டுகள் இறந்தவர் சொர்க்கலோகத்தில் சுகமாக இருப்பார்.
ஆசனப் பலகையையும் சுயமாக சம்பாதித்த பொருளையும் செப்புத்தாலியையும் தானம் செய்தால் இறந்தபின் அவர் செல்லும் பாதையில் முள் போன்றவற்றால் துன்பம் நேராது; அத்துடன் குதிரை மீதேறி நல்லுலகு அடைவர். குடை தானம் புரிந்தால் அவர் நிழலுள்ள பாதையாக எமலோகம் செல்வர். பெருத்த மழை பெய்தாலும் அதனால் எத்துன்பமும் நேராது. தீப தானம் செய்திருந்தால் காரிருள் சூழ்ந்த இடத்திலும் வெளிச்சம் தோன்றி அச்சமின்றிச் செல்வர்.
ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களிலோ சதுர்த்தசியிலோ பெளர்ணமியிலோ ஒருவர் இறந்த தினத்திலோ தீப தாபம் செய்வது சிலாக்கியமாகும். ஒருவர் இறந்த நாள் முதல் ஒராண்டு காலம் வரை நாள்தோறும் தீப தாபம் செய்வது மிகச் சிறப்பாகும். இறந்து போனவர் கரடு முரடான பாதையில் இல்லாது நல்லதொரு வழியாகச் சென்று எமலோகத்தை அடைவர். அதுமட்டுமன்றி எமலோகத்தில் அவரது கலத்தைச் சேர்ந்தவர்கள் நரகத்தில் அவதியுற்றிருப்பின் அவர்களையும் நல்லுலகத்துக்கு அழைத்துச்செல்வர்.
அந்த அளவுக்கு தீபதானத்திற்கு சிறப்பு உள்ளது. கோயில்களில் வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ தீபம் வைக்க வேண்டும். அவ்வாறு தீபம் வைப்பவர்கள் தமக்கு எதிர்முகமாக தீபத்தை சுடர் விட்டெரியச் செய்ய வேண்டும். அரிசி, எள், பதின்மூன்று கடகம், மோதிரம், குடை விசிறி, காலணி போன்றவற்றைக் கட்டாயம் தானம் செய்ய வேண்டும். யானை, குதிரை போன்றவற்றைத் தானம் செய்வது விசேஷமான புண்ணியத்தைத் தரும். எருமைக் கடாவை தானம் புரியும் போது அத்துடன் அதிகமான பொருள்களையும் தானம் செய் யவேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ போன்றவற்றையும் சேர்த்து செய்தால் எமதுரதர்கள் மகிழ்ச்சியுறுவர். அதனால் தாம் அழைத்துச் செல்லும் ஜீவன்களைத் துன்புறுத்த மாட்டார்கள். அவர்களிடம்
நினைவு மலர்203

Page 108
பரிவுடன் நடந்து கொள்வர். ஆடைகளைத் தானம் செய்தால் இறந்தஜீவன் முன் எமதுரதர்கள் பயங்கரமாகத் தோன்றாமல் நல்ல உருவத்துடன் தோற்றமளிப்பர்.
இவ்வாறு ஒருவர் செய்யும் தானத்தின் சிறப்பால் அதற்கேற்ற புண்ணியத்தை அடைவர். பூரீமந் நாராயணன் மனித உடலிலிருந்து உயிர் எவ்வாறு பிரிந்து செல்கிறது என்பது பற்றி விபரிக்கின்றார். மனிதர் உடலிலிருந்து உயிர் கண்கள் வழியாகவோ நாசி வழியாகவோ ரோமக்கால்கள் 9தோலிலுள்ள துளைகள் வழியாகவோ பிரிந்து செல்லும். அதுவே ஞானிகள் என்றால் அவர்களின் கபாலம் விரிந்து அதன்வழியாக உயிர் நீங்கும்.
பாவிகளின் உடலிலிருந்து உயிரானது சுலபத்தில் நீங்காது. பலவித தொல்லைகளை அனுபவித்த பின்பு அபானம் வழியாக உயிர் நீங்கும். உயிர் நீங்கியதும் மனித உடல் மரக்கட்டையைப் போன்று கிடக்கும். மனித உடல் கூறுகள் பஞ்ச பூதங்களாலானது. ஆகையால் மண்ணிலும், நீரிலும், நெருப்பிலும், காற்றிலும், ஆகாயத்திலும், ஆகிய ஐந்தினுள்ளும் ஐக்கியமாகிவிடும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியம் ஐந்தும் ஆகியவை மனித உடலில் திருடர்கள் போன்று பதுங்கியிருந்து ஒன்றுடன் ஒன்று உறைந்தும் இருப்பன.
சரீரத்தை விட்டு உயிர் பிரியும் தருவாயில் அவையெல்லாம் மனத்தோடு ஒன்றாகிவிடும். மரணமடையும் ஆவியானது தன் கருமத்தினாலேயே மறு ஜென்மத்தை அடைகிறது. பழைய வீட்டில் வாழ்ந்து வருபவர் பணம் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிகுடிபுகுவது போன்று, புண்ணியம் செய்தவர்தம்வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு புதியதொரு சரீரத்தில் குடிபுகுவர்.
மனித உடலை விட்டு உயிர் நீங்கப் பெற்றதும் அந்த உடல் புதைக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ அழிக்கப்பட்டு விடுகிறது. இதுதான் மனித உடல் அடையும் நிலையாகும். தசை நரம்பு கொண்டதும் பங்சேந்திரியங்கள் பொருந்தியதும் காமக் குரோத லோப மோக மத மாச்சரியமாகிய கர்மேந்திரியங்களால் கட்டியதுமான தேகம் எல்லா உயிரினங்களுக்கும் உள்ளதாகும்.
பிறப்பு உண்டாகும் விதம்
மனித உடல், தோல், நரம்பு, எலும்பு, இரத்தம், தசை தலை,
நாக்கு, பிறப்புறுப்பு, கால்கள், கைகள், நகம், ரோமம் போன்றவற்றால்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயமிக்க உடல் எவ்வாறு
204நினைவு மலர்

உண்டாகிறது என்று கருடன் பரந்தாமனிடம் பணிந்து கேட்க, அதற்கு அவரும் விளக்கமளிக்கிறார்.
மானிடர்களில் ஆண், பெண் என இரு பிரிவு உண்டு. இவ்விருவரும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு சேர்க்கை புரியும் நிலையில் பெண் வயிற்றில் கரு உற்பத்தியாகி அது படிப்படியாக வளர்ந்து பத்து மாதத்தில் முழு வளர்ச்சி பெற்று குழந்தை பிறக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் மாதவிலக்காவது இயல்பாகும். அவ்வாறு மாத விலக்கான நான்கு நாட்கள் வரையில் அவள் தனித்திருக்க வேண்டும். அந்த நாட்களில் அவளைக் காண்பவர்கள் பாவத்துக்குள்ளாவர்.
பெண்களுக்கான மாதவிலக்கு ஏற்படும் காரணத்தையும் பகவானே ஒரு சம்பவம் மூலம் கூறுகிறார். முன்பொரு சமயம் இந்திரன் தேவலோகத்தில் தன் அரியணையில் அமர்ந்து தேவ கன்னியர்களின் நடனத்திலும், கந்தர்வர்களின் இசை கானத்திலும் தன்னை மறந்திருந்தான். அந்தச் சமயம் தேவ குருவான பிரகஸ்பதி அங்கு வருகிறார். இந்திரன் அவர்வந்ததையும் கவனிக்காமல் ஆட்டத்திலும் கானத்திலும் லயித்திருந்தான். அதைக் கண்டு ஆத்திரமுற்ற தேவகுரு சாபமிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார். அதன் பிறகுதான் அந்த சம்பவம் பற்றி தேவேந்திரன் அறிந்தான்.
அதனால் குருவை மதிக்காததால் இந்திரன் தன் செல்வ வளங்களை இழக்க நேரிட்டது. அதற்கான காரணத்தை அறிந்த தேவேந்திரன் தன் தவறை உணர்ந்து தன் குருவிடம் மன்னிப்புக் கேட்டு தனக்கேற்பட்ட நிலையைப் போக்கிக் கொள்ள முற்பட்டான். ஆனால் தேவகுரு பிரகஸ்பதி இருக்குமிடத்தைக் கண்டறிய முடியவில்லை. அதனால் அவன் பிரம்மதேவனிடம் சென்று தனக்கு உதவுமாறு வேண்டினான்.
பிரம்மதேவன், குல குருவை அலட்சியப்படுத்தியது மாபெரும் குற்றமாகும். அதனால்தான் அவர் சாபமிட்டுவிட்டு உன்னை விட்டு விலகிச் சென்று விட்டார். இருந்தாலும் தேவர்கள், குரு ஒருவர் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. அதனால் அவர் வருமளவும் தற்காலிகமாக ஒர் ஆசான் வேண்டும். அசுரகுலத்தைச் சேர்ந்ததுவஷ்டா என்பவனின் மகன் விச்சுவவுருவன் இருக்கிறான். அவன் மூன்று தலையுடையவன். இருப்பினும் இப்போது இருப்பவர்களில் அவன் ஒழுக்க நெறியுள்ளவன், அறிவுள்ளவன், வேத சாஸ்திரங்கள் அறிந்தவன். அவனையேகுருவாகக் கொள்வாயாக! என்று யோசனை கூறி அனுப்பினார்.
அவ்வாறு இந்திரன் விச்சுவுருவனை குருவாகக் கொண்டான். அவனைக் கொண்டு ஒரு வேள்வியைத் தொடங்கினான். அசுர
நினைவு மலர் 205

Page 109
குலத்தைச் சேர்ந்த விச்சுவவுருவன் வேள்வி புரியும் போது தன் குலம் தழைக்க தம்முள்ள மந்திரங்களைக் கூறி வந்தான். தேவேந்திரனுக்கு அவன் வஞ்சக எண்ணம் தெரிந்து விட்டது. வேதர்களுக்காகப் புரியும் வேள்வியில் அசுரர் நலம் வேண்டிய அவன் மீது கோபங்கொண்டு தன் வஜ்ஜிராயுதத்தால் அவன் மூன்று தலைகளையும் வெட்டினான். அத்துடன் அவனும் அழிந்தான்.
ஆனால் அவன் தலைகளுள் ஒன்று சோமபாணம் அருந்தியதால் காடையாகவும், மற்றொரு தலை சுரபானஞ் செய்ததால் ஊர்க்குருவியாகவும், இன்னொரு தலை அன்னபானம் செய்ததால் கிச்சிளப் பறவையாகவும் ஆயிற்று. விச்சுவவுருவன் அரக்கனே என்றாலும் அவன் தேவர்களுக்கு குருவாக இருந்தவன். அதனால் தன் குருவைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்ம யத்தி தோஷம் பீடித்தது. அதாவது உயிர்க் கொலை புரிந்த பாவத்திற்குள்ளானான். இதனால் தேவேந்திரன் தன் பொலிவையும் ஆற்றலையும் இழக்க நேரிட்டது. அதைக் கண்ட தேவர்கள் ஒன்றுகூடி இந்திரனுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்கு ஒரு வழியைக் கண்டறிந்தனர். அதன்படி தேவர்கள் தண்ணிரையும், மண்ணையும், பெண்களையும் இந்திரனுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் படி வேண்டினர்.
அம்மூவரும் "எவ்வாறு பங்கிட்டுக் கொள்வது?" என்று கேட்க அதற்குத் தேவர்களே வழி கூறினர். தண்ணில் தோஷம் நுரையாகக் கழியும், மண்ணிலே தோஷம் உவராகக் கழியும், பெண்களில் தோஷம் பூப்பாகக் கழியும் என்ற வழியைக் கூறினர். அதைக்கேட்டு மூவரும் இவ்வாறு இந்திரனுக்கு ஏற்பட்ட தோஷத்தை தாங்கள் ஏற்பதால் உண்டாகும் நன்மை என்ன என்று வினாவினர். அதற்குத் தேவர்கள் தண்ணிர் இறைக்க இறைக்க அது சுரக்கும், மண்ணில் தோண்டப்பட்ட குழி தானே நிறையும்; பெண்கள் கருவு மிளிர்க்கும் வரையில் கணவருடன் கூடிக்களிக்கலாம் என்ற நன்மைகளைக் கூறினர்.
இவ்வாறு தேவேந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பங்கிட்டு அளிக்கப்பட்டதும் அதன்படி பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்று மாதவிலக்காகின்றனர். அவ்வாறு மாதவிலக்காகும் பெண்களை நான்கு நாட்கள் வரை பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் பாவம் வந்தடையும். நான்காம் நாள் நீங்கிய பின்பு சிறிது தூய்மை அடைவாள். ஐந்தாம் நாள் முழுவதும் தூய்மை பெற்ற குடும்பகாரியங்கள் செய்யும் தகுதி அடைவாள். அதன்பிறகு பார்ப்பது தோஷமில்லை. அவ்வாறு மாதவிலக்கான ஆறாவது நாள்முதல் பதினெட்டாம் நாள் வரையிலுள்ள இரட்டை நாட்களில் இரவில் அவளோடு சேர்க்கைக் கொள்ள ஆண் குழந்தை உண்டாகும்.
நினைவு மலர்

அதனால் ஆண்குழந்தை வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் தம் மனைவியை, மாத விலக்கான இரட்டை நாள்களாக 6,8,10,12,14,16,18 ஆகிய நாள்களில் கூடி மகிழலாம். அவ்வாறு இரட்டை நாளில் கூடியிருந்து அதனால் குழந்தை பிறந்தால் அது நல்ல குணமுள்ளதாகவும், கடவுள் பக்தி உள்ளதாகவும் இருக்கும். சாதாரணமாக ஒரு பெண் மாதவிலக்கான நான்கு நாட்களுக்கு மேல் எட்டு நாள்களுக்குள் கருத்தரிக்க ஏற்ற காலமாகும்.
தம்பதிகள் இருவரும் தங்களுக்குப் புத்திரபாக்கியம் உண்டாக வேண்டும் என்ற ஒருமித்த மனத்துடன் அதிக மோகமுடையவர்களாய் கூடிகளிக்க வேண்டும். அவ்வாறு சேர்ந்தால் ஆணிடமிருந்து வெளிப்படும் சுக்கிலமும் பெண்ணிடமிருந்து வெளிப்படும் சுரோனிதமும் ஒன்று கலந்து கருவில் சேர்ந்து விருத்தியடையும். ஆண் பெண் இருவரிடமிருந்து வெளிப்படும் சுக்கில சரோனிதத்தால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண் மகவும், பெண்ணின் சுரோனிதம் அதிகமானால் பெண் மகவும் பிறக்கும். இரண்டும் சம அளவில் இருந்து கலக்கும் நிலையில்தான் அலியாகப் பிறக்கிறது.
அவ்வாறு தம்பதிகள் கூடிப் புணர்ந்த ஐந்தாம் நாளில் கருப்பையினுள் ஒரு குமிழி உண்டாகும. அதுவே பதினான்காம் நாளில் சிறிது தசையாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலும் வளர்ச்சியுறுகிறது. ஒரு மாதத்தில் அந்தத் தசையுடன் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.
இரண்டாவது மாதத்தில் தோலும், மூன்றாவது மாதத்தில் நரம்புகளும், நான்காவது மாதத்தில் ரோமங்களும் உள்ளவடிவமும் உண்டாகும். ஐந்தாவது மாதத்தில் காதுகள், மூக்கு, மார்பு தோன்றும், ஆறாவது மாதத்தில் கழுத்து, சிரசு, பற்கள் உண்டாகும். ஏழாவது மாதத்தில் பிறப்புறுப்பு உண்டாகும்.
எட்டாவது மாதத்தில் கருவில் எல்லா உறுப்புகளும் உண்டாகி முழு உருவை அடையும். ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்ற நாபியின் மூலத்திலிருந்து பூர்வ ஜென்ம கர்மங்களை நினைத்துக் கொண்டிருந்து பத்தாவது மாதத்தில் பிறக்கிறது.
மனித தேகமாது பஞ்சபூதங்களாலானது. பஞ்சந்தீரியங்களை அடைந்து பத்து நாடிகளைக் கொண்டதாய் சவித வாயுக்கள் சேர்ந்துள்ளன. பிராணன், அபானன், சமானன், உதானன், வியனன், நாகன் கூர்மன், கருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகியவையே வாயுக்களாகும். கருவில் இருக்கும் போதே அந்த ஜீவனுக்குரிய ஆயுள்
நினைவு மலர்207

Page 110
இவ்வளவுதான் என்றும் இந்த விதத்தில் மரணம் ஏற்படும் என்றும் அதன் அறிவு கற்கும் வித்தை இவ்வளவுதான் என்னிடம் கோபம், யோகம், போகம், இவ்வளவுதான் என்றும் இவை எல்லாம் பூர்வ ஜென்மப் பலன்களை அனுசரித்து பிரம்ம தேவனால் நிச்சயிக்கப்படுகின்றன. அதனால் ஒருவர் தீர்க்காயுள், உயர்ந்த கல்வி, இன்பசுகம், யோகம் போன்ற நற்பலன்கள் மறுஜென்மத்தில் உண்டாகவேண்டும் என்று நினைத்தால் எடுத்த பிறவியில் நற்காரியங்களைச் செய்ய வேண்டும் என்று வேதசாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.
உலக வாழ்க்கையில் எத்தனையோ கவலைகள் உண்டு அவற்றின் தீர்வுக்கு இறைவழிபாடு ஒன்றே உதவும்.
உனக்குப் பணிசெய்ய உன்றனை எந்நாளும் நினைக்க வரம்எனக்கு நீதா - மனக்கவலை நீக்குகின்ற தென்மதுரை நின்மலரை எவ்வுலகும் ஆக்குகின்ற சொக்கநாதா.
நான் எத்தனையோ காலமாக இறந்தும் பிறந்தும் இளைத்தேன். இனி மறந்தாலும் யான் பிறவாத வரத்தை எனக்கு தந்தருள்.
நித்தம் எழுந்தருளிநின்மலனே என்றனக்குப் புத்திமிகமிகவும் போதித்துச் - சித்தமயல் போக்குவாய் இன்பசுகபூரணத்துள் இரண்டறவே ஆக்குவாய் சொக்கநாதா.
என்னிடத்தில் தவம் சிறிதும் இல்லை. அவமோ அளவின்றி உள்ளது. நான் சிவத்தைப் பெறுவது எங்ங்ணம் கைகூடும்.
நோயால் வருந்தி உனை நூறுகுரல் கூப்பிட்டால் நீயார் எனாதிருக்கை நீதியோ?-தாயாய் அலைகொடுத்த கேழல் அருங்குழவிக்கு அன்று முலை கொடுத்தாய்நீயலவோ முன்
உலகில் எந்தச் செயலும் உன் அருளாலேயே நிகழ்கிறது. நீனினைக்கவில்லையானால் அணுவும் அசையாது.
ஆறுதலை இல்லை அடியேனுக்கு அன்பாகத்
தேறுதலை சொல்வார் சிலர் இல்லை - வேறெனக்குத்
திக்காருமில்லை சிவனே பழிக்கஞ்சி
சொக்கேநின்தாளே துணை.
208நினைவு மலர்

பேரன்பனல்லன் பிழைசெய்யான்தானல்லன் ஒரன்பும் இல்லா உலுத்தனேன் - பேரன்பு காட்டிஎனைக் காட்டியுனைக் காட்டியின்பத் தொட்டிலிலே ஆட்டி வளர் சொக்கநாதா.
நியியற்ற ஓர்பொருளை நிச்சயித்தநாயேனும் போயியற்றல் செய்யப் புரிகுவேன்-நீயியற்றல் ஆக்காது அணுவும் அசையுமோ அவ்விகற்பம் தாக்காத சொக்காகா கா.
என்பன போன்ற பாடல்கள் உயர்ந்த தத்துவங்களை எளிய நிலையில் கூறும் அரிய பாடல்களாகும்.
r S2 §
60)őF6) őFiou őFTgíb
ஆன்மாக்கள் சிவபெருமானுக்கு என்றும் அடிமைகள். சிவபெருமானை மனம், வாக்கு, காயம் என்ற மூன்றினாலும் வழிபடுதல் ஆன்மாக்களுக்குக் கடன். மனத்தினாலே செய்யும் வழிபாடு சிவபெருமானைத்தியானித்தல். வாக்கினாலே செய்யப்படும் வழிபாடு சிவபெருமானுடைய
திருநாமங்களை உச்சரித்தல், அவருடைய பெருமையைப் பேசுதல், அவருடைய சரித்திரங்களைப் படித்தல் முதலானவைகள். இ காயத்தினால் செய்யும் வழிபாடுகளாவன : சிவபெருமானுடைய
திருமேனியைத் தலையினாலே வணங்குதல், கண்களினாலே
தரிசித்தல், கைகளினாலே கும்பிடுதல் - பூசித்தல், கால்களினாலே
வலம் வருதல் முதலானவைகள்.
c=-a-seed —
நினைவு மலர்209

Page 111
10.
11.
12.
l3.
l4.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
தவிர்க்க வேண்டிய சில பாவங்கள்
நல்லோர் மனதை நடுங்கச் செய்வது பாவம்.
வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது பாவம்.
தானம் கொடுப்போரைத் தடுப்பது பாவம். மனமொத்த நட்பிற்கு வஞ்சகம் இழைப்பது பாவம்.
ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர்முகத்தைப் பாராதிருப்பது பாவம். கோள் சொல்லிக் குடும்பத்தைக் கலைப்பது பாவம்.
குருவை வணங்கக் கூசி நிற்பது பாவம்.
ஊன் சுவை உண்டு உடலை வளர்ப்பது பாவம்.
கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம்.
தவம் செய்வோரைத் தாழ்த்திப் பேசுவது பாவம்.
தாய், தந்தை மொழியைத் தட்டி நடப்பது பாவம். எனவே இச்செயல்களை நாம் செய்யக்கூடாது. முன்கோபக்காரரோடு பழக்கம் கூடாது. குறைகளைப் பெரிதாகச் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது.
கொலை, களவு செய்பவரோடு சேரக்கூடாது. அறிஞர்களை ஒரு நாளும் பழித்துப் பேசக்கூடாது. ஆட்சி செலுத்துபவர்களிடம் எதிர்வாதம் செய்யக்கூடாது. கோயில் இல்லாத ஊரில் வசிக்கக்கூடாது. மனைவி மீது குற்றம் கூறிக்கொண்டிருக்கக்கூடாது. வம்பு பேசுவோர் வாய் பார்த்து அவர் பின்னே அலையக் கூடாது.
தன்னை மதிக்காதவர் வீட்டிற்குச் செல்லக்கூடாது. தன்னைவிட மூத்தவர்கள் சொல்கிற அறிவுரைகளை மறந்து
விடக்கூடாது.
சிந்தித்துப் பார்க்காமல் எதையும் செய்யக்கூடாது.
ஏழ்மையானவர்களிடம் பகைமை பாராட்டக்கூடாது.
20நினைவு மலர்

25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
7.
10.
II.
l2.
13.
14.
சேரத் தகுதி இல்லாதவர்களோடு சேரக்கூடாது.
தனக்கு உதவி புரிந்தோரை ஒருபோதும் மறக்கக்கூடாது.
உறவினரை அவமரியாதையாகப் பேசக்கூடாது.
காணாததைக் கற்பனை செய்து கூறக்கூடாது.
அடுத்தவர் மனம் நோக எதையும் கூறக்கூடாது. சாமர்த்தியமாகப் பேசிக் கலகம் செய்து அலையக்கூடாது. தன்னை இகழ்ந்த உறவினரிடம் உதவி கேட்கக்கூடாது. ஒற்றுமையோடு வாழும் குடும்பத்தை இரண்டாக்கிக் கெடுக்கக் கூடாது. பிறர்மீது அவதூறு சொல்வதைத் தொழிலாகக் கொள்ளக்கூடாது. சக்தியுடைய தெய்வத்தை இகழக் கூடாது.
உலகநீதி கூறும் நன்னெறிகள்
கல்வி பயிலாமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது. யார் மீதும் அவதூறுகள் சொல்லக் கூடாது. பெற்ற தாயை ஒரு நாளும் மறக்கக் கூடாது. வஞ்சனை செய்பவர்களோடு சேரக் கூடாது. போகத் தகாத இடங்களுக்குப் போகக் கூடாது. ஒருவர் நம்முன் இருக்கும் பொழுது புகழ்ந்து கூறிவிட்டு அவர் சென்றதும் அவரைப் பற்றிக் குறை கூறக் கூடாது. மனம் அறிந்து வீணாகப் பொய் சொல்லக்கூடாது. நற்பண்பு இல்லாதவர்களோடு சேரக்கூடாது.
அடுத்தவரை ஒருபோதும் கெடுக்கக் கூடாது. மனம் போன போக்கில் போகக் கூடாது. பகைவனை உறவினன் என்று நம்பக் கூடாது. செல்வந்தேடி உண்ணாமல் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது. பிறர் செய்யும் தருமத்தை ஒருபோதும் கெடுக்கக் கூடாது.
கோபம் உண்டாக்கி அதனால் துன்பப்படக்கூடாது.
நினைவு மலர் |

Page 112
சைவ அன்பர்களுக்குப் பணிவான வேண்டுகோள்.
1. அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். எல்லா
மதத்தவர்களையும் மதித்து நடக்க வேண்டும். அன்பே அறம், அறமே அன்பு என்பது சைவ நெறியாகும்.
2. சிவச்சின்னமாகிய திருநீறு, உருத்திராக்கம் தவறாது அணிதல்
வேண்டும்.
3. திருமுறைகளை ஏதேனும் ஒரு முறையில், தினமும் ஒதுதல்
வேண்டும்.
4. ஞானநூல்கள், பெரியபுராணம் ஆகியவற்றைப் படிக்க நேரம்
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. சமயச் சொற்பொழிவுகள், வகுப்புக்கள் எங்கு நிகழ்ந்தாலும்
ஆர்வத்துடனும் பக்தியுடனும் சென்று கேட்க வேண்டும்.
6. பல அன்பர்கள் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடுகள், சமயச் சொற்பொழிவுகள் திருமுறை முற்றோதல் ஆகியவற்றை நடத்த வேண்டும்.
7. சைவ சமய சபைகளில், திருக்கோயில்களில், பள்ளிகளில்
மாணவர்களுக்குத் தேவாரம் பயிற்றுவிக்க ஆவன செய்யவேண்டும்.
8. ஏழை எளியவர்களுக்கும், சைவ சமய வளர்ச்சிக்கும் ஒவ்வொருவரும்
அவரவர்கள் தகுதிக்கு ஏற்ப நிதி உதவி அளிக்கவேண்டும்.
9. உழவாரத் தொண்டு, துப்பரவுப் பணி முதலியன செய்ய வேண்டும்.
10. திருமுறைகள் ஒதி நோய் வாய்ப்பட்டவர்கள் குணமடைய இறைவனை வேண்டுதல். அவர்களைத் திருமுறை ஒதுமாறு கேட்டுக்கொள்ளுதல் வேண்டும்.
மேற்கூறியவற்றை கடைப்பிடித்து ஒழுகினால் மன அமைதியுடன் நெடிது வாழ்வர். இது உறுதி உறுதி!
நினைவு மலர்

등 6 କ୍ଳି ܡ SEه
S. S 宦 இ 哈
형 ཕྱི་ 중 S. 6궁 哈 @

Page 113

சிவமயம் காரைநகர், களபூமி, பொன்னாவளை
சைவ வேளாண் குலத்தைச் சேர்ந்த அமரர் நடராசா சிதம்பரம்
அவர்களின்
வாழ்க்கை வரலாறு
ஈழத்திருநாட்டின் சிகரமென விளங்குவது யாழ்ப்பாணம். அதன் வடமேற்றிசையில் இருப்பதும், நாற்றிசையும் கடலால் சூழப்பட்டதும், ஈழத்துச் சிதம்பரத்தைத் தன்னகத்தே கொண்டதுமான பேரூர் காரைநகர். காரைநகரின் கிழக்குப் பகுதியாகிய களபூமியில் சீரும் சிறப்பும் பொலியும் வளுப்போடையிற் சைவ வேளாளர் குலத்தோன்றலாகிய அமரர் வேலாயுதம் வல்லிபுரம் அவர்களுக்கும், அவரின் துணைவியாரான முத்துப்பிள்ளை அவர்களுக்கும் ஏக புத்திரியாக 1922ஆம் ஆண்டு பங்குனி மாதம் 27ஆம் திகதி அமரர் ந. சிதம்பரம் அவதரித்தார்.
அன்னார் தனது மூன்றாவது வயதில் தந்தையாரை இழந்தமையால் தாயாரினதும், தாய்வழிப் பேரனாகிய வேலுப்பிள்ளை யினதும் அரவணைப்பில் வளர்ந்தார். இவர் தனது கல்வியை காரை / சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற் பயின்றார். இவர் மணப் பருவம் எய்தியதும் கணவுடையார் வம்சத்தைச் சேர்ந்த அருணாசலம் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் ஏக புத்திரன் நடராசாவை 1946ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர் இனிதே இல்லற வாழ்க்கையை நடாத்திவரும் வேளையில் இல்லறத்தின் பயனாக; தவமணி, தனராசசிங்கம், லோகேஸ்வரி, சுந்தரராஜா, தவநாயகி என்னும் பிள்ளைச் செல்வங்களைப் பெற்றெடுத்தனர்.
இவர்களுக்கு உரிய கல்வி, பண்பாடுகளைப் புகட்டி அன்புடன் வளர்த்து வந்தார். தனது மூத்த புதல்வி தவமணியைத் தனது கணவர் நடராசாவின் சகோதரியான பொன்னாவளையைச் சேர்ந்த சின்னத் தம்பி பொன்னம்மா தம் பதியரின் ஏக புத்திரன் மாணிக்கவாசகருக்கு 1971ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களின் இல்லற வாழ்க்கையின் பயனாக கிருஸ்ணாம்பிகை (கனடா), கிருஸ்ணதேவி (லண்டன்), மஞ்சுளா (லண்டன்), தயாபரன்(கனடா), கலாபரன் (கனடா), நேசராணி (கனடா), நெரஞ்ஜனி(கனடா) ஆகியோர் பிறந்தார்கள்.
நினைவு மலர்

Page 114
தனது மூத்த புதல்வன் தனராசசிங்கத்திற்கு விளானையைச் சேர்ந்த சுப்பிரமணியம் அபிராமிப்பிள்ளை தம்பதியரின் புதல்வி வசந்தகோகிலத்தை 1978ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களின் இல்லற வாழ்க்கையின் பயனாக வாகீசன் (லண்டன்), வாசுகி(நோர்வே), தனுஜா, தமிழழகன் (லண்டன்) ஆகியோர் பிறந்தார்கள்.
தனது இரண்டாவது மகளான லோகேஸ்வரிக்கு வளுப்போடையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சின்னக்குட்டிதம்பதியரின் புதல்வன் தியாகலிங்கத்தை 1973ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களின் இல்லற வாழ்க்கையின் பயனாக கருணைதேவன் (கனடா), ஜெயமலர்(லண்டன்), சிவமங்களா, சந்திராதேவி(லண்டன்), சர்மிளா, சிலம்பரசன்ஆகியோர் பிறந்தார்கள்.
இளைய மகன் சுந்தரராஜாவை இந்தியாவைச் சேர்ந்த காட்டூர் கோபால் கிருஸ்ணவேணி தம்பதியரின் புதல்வி வளர்மதிக்கு 1987ஆம் ஆண்டு திருமணம் செய்துவைத்தார்கள்.
இளைய மகளான தவநாயகியை விளானையைச் சேர்ந்த ஆறுமுகம் இராசம்மாதம்பதியரின் புதல்வன் தர்மலிங்கத்திற்கு 1981ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களின் இல்லற வாழ்க்கையின் பயனாக, தயானந்தன், சுதானந்தன் (லண்டன்), ஐங்கரன், ஞானகரன், திவாகரன், ஜனனி (லண்டன்) ஆகியோர் பிறந்தார்கள்.
இவ்வாறாக வாழ்ந்து வருங்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1991ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தார். யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் வேளையில் அமரரின் கணவர் நடராசா நோயுற்று 1993ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ஆம் திகதி சிவனடி சேர்ந்தார்.
மீண்டும் தனது சொந்த ஊரான காரைநகருக்கு வந்து மகளுடன் வசித்துவந்தார். இவ்வாறு வாழ்ந்து வருங்காலத்தில் அன்னார் நோய்வாய்ப்பட்டு அறுபதுநாட்கள் வரையில் உணவு உண்ண முடியாமல் இருந்து விகிர்தி ஆண்டு ஐப்பசித்திங்கள் 4ஆம் நாள் (21.10.2010) வியாழக்கிழமை பகல் 11.00 மணிக்கு பூர்வபக்ஷ சதுர்த்தசித்திதியில் இறைவனடி சேர்ந்தார்.
ஓம் சந்தி, சந்தி, சந்தி 214நினைவு மலர்

"அம்மா நீ எங்கு சென்றாய்" பத்துத் திங்கள் கருவினிற் சுமந்து பெற்றெடுத்து
பாங்குடன் எமை வளர்த்து பயன்பெறும் வாழ்வு தந்து
திண்ணியராகப் பெற்ற மக்களைப் பேணிக்காத்து
அன்பு அறிவு இரக்கம் உண்மை போன்ற பண்புகளை எமக்கு ஊட்டி
பாரினில் எமை வாழ வைத்த எம் அன்புத் தெய்வமே "அம்மா" நீ
எங்கே சென்றாய்.
அன்பிற்கோர் உருவமாகி
அயலவர் போற்ற வாழ்ந்தாய் துன்பங்கள் வந்த போதும்
துணிவுடன் இதயம் தாங்கி புண்ணியக் கடமை செய்து
போற்றிடும் சேவை செய்து பின்தூங்கி முன்னெழுந்து
முறைப்படி சேவை செய்தாய் உங்களைப் பார்க்கத்துடித்த வேளையிலே
எங்களைத் துடிக்க வைத்தது உங்கள் பிரிவுச்செய்தி இனி நீங்கள் எம் அருகில் இல்லை
உமது ஆசியை விண்ணுலகிலிருந்து வழங்குவீராக.
Obo
தவநாயகி.
பிள்ளைகள் புலம்பல்
ஈரைந்து திங்கள் எமைச் சுமந்து ஈன்றெடுத்து உன் உதிரத்தை உணவாக்கி எமக்களித்து இகத்தினிலே நாம் வாழ எத்தனையோ துயர்ப்பட்டு சீர்கொண்டு நாம் வாழ அம்மா நீ உன் சுகம் வெறுத்து எமை ஆளாக்கி உரிய கல்வி புகட்டி பாரினிலே நாம் வாழ வழிகாட்டியாய் அமைந்த எம் அன்புத் தெய்வமே அம்மா கொடிய நோயினால் நீ பட்டதுன்பம்
நினைவு மலர்

Page 115
நாம் அறிவோம் தாயே உன் மகிழ்வைக் கண்டு கூற்றுவனும் பொறுக்காமல் ஏனழைத்தான் தாயே தாய்ப்பறவையை இழந்து தத்தளிக்கும் குஞ்சுகளாய் சேய்கள் நாம் தவிக்கின்றோம் செய்வதொன்றும் புரியாத செயலற்ற குஞ்சுகளாய் வழியொன்றும் தெரியவில்லை வாழும் வகை புரியவில்லை வானுலகு சென்ற உன்னைத் தேடிவர முடியவில்லை அம்மாவே ஆரூயிரே சொப்பனத்திலேனும் நீ வந்துவிடு எம் சோகமதைத் தீர்ப்பதற்கு அம்மா நீ வந்துவிடு அம்மாவே இனி எப்போ நாம் உன் முகம் காண்போம்.
ஈரவிழிகளுடன் உன் முகம் தேடி நிற்கும், பிள்ளைகள்,
அம்மம்மாவிற்கு என் பொன் நினைவலைகள்
எங்களை வளர்த்த அம்மம்மா எமக்கு ஒரு ஆலமரம் அதில் தங்கிய குருவிகள் நாங்கள் வந்தோரை வரவேற்று அவர்கட்குத் தன்னால் ஆகவேண்டிய உதவிகள் செய்தீர்கள் இயலாத நேரத்திலும்கூட உங்கள் வேலைகளை நீங்களே செய்தீர்கள் கடைசியாக உங்களைப் பார்த்தபொழுது நீங்கள் சொன்ன வார்த்தைகள் அதைத்தான் என்னால் மறக்க முடியவில்லையே. கடைசிநேரத்தில் உங்களைப் பார்க்க வேண்டும் வளர்த்த அம்மம்மாவிற்குக் கடமைகள் செய்ய வேண்டும் என நினைத்தேனே. அது எங்ங்ணம் பொய்யாகிப் போனதே. உங்கள் குரலைக்கூடக் கடைசியில் கேட்காமல் போனது என் மனதை என்றுமே விட்டு அகலாது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பேரப்பிள்ளைகள், நந்தன், சகோதரர்கள்.
216நினைவு மலர்

அம்மம்மா உன்னை இனி நாம் எப்போ காண்போம்
எமக்குத் துணையிருந்த அம்மம்மாவே - நீ எங்கு சென்று விட்டீர்! எம்மை நடுக்கடலில் தவிக்கவிட்டு நீண்டதுாரம் சென்றீரோ! கரைசேர்க்க வருவாயென்று காத்திருக்கின்றோம் அம்மம்மா திக்கரை முருகனின் திருவிழாவைக் கண்டுகளித்த உனக்குச் சடுதியிற் கொடிய நோய் வந்ததுவோ! நோயால் நீபட்டதுன்பம் நாம் அறிவோம் அம்மம்மா எம் அம்மா வெளியூர் சென்றபோது எமக்குத்துணையாய் தாயாய் இருந்தாயே! அம்மாவிடம் எம்மை ஒப்படைத்துவிட்டு நீ இறுதிப் பயணம் சென்றாயோ! எமக்கு இனி, துணை யார் அம்மம்மா தனியே துணையின்றித் தவிக்கின்றோம் எம்மால் உன் பிரிவைத் தாங்கமுடியவில்லையே! அம்மம்மா உன்னை இனி நாம் எப்போ காண்போம்.
பேரப்பிள்ளைகள்,
சிவமங்களா, அர்மிளா, சிலம்பரசன்,
சிதம்பரம் இல்லத்தின் நற் சிந்தனையாளர்
பெரியோர்களால் போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்பட்ட மரபுகளை மதித்து, தன்னுடைய வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்து, மற்றவர்களுக்குப் பயன்படும் அளவிற்கு வாழ்ந்து, வாழ்க்கையிற் புகழையும், பெருமையையும் சேர்த்துக்
கொண்டவர்.
நற் சிந்தனையுடன் கடலில் செல்லும் கப்பலைச் செலுத்தும் மாலுமியைப் போன்று தனது இல்லத்தின் கடமைகளைத்
தூரநோக்குடன் சரியாக அமைத்து வழிநடத்தியவர்.
நினைவு மலர்217

Page 116
"தற்காத்துத் தற்கொண்டான் பேணித்தகைசான்ற சொற்காத்துச்சோர்விலாள் பெண்"
என்றார் வள்ளுவர்.
தன்னைக் காத்துக்கொண்டு தன்னை மணந்த கணவனை அன்போடு பாதுகாத்துத் தகுதி நிறைந்த கற்பு என்னும் புகழையும் பாதுகாத்து, இல்லற தர்மங்களை மறதி இல்லாமல் செய்பவளே குடும்பப் பெண் ஆவாள். இந் நடைமுறைகளைப் பின்பற்றி, இல்லத்தின் குடும்பத் தலைவியாய் வாழ்ந்து திகழ்ந்தவர் அமரர் நடராசா சிதம்பரம் என்றால் மிகையாகாது.
அமரர் நடராசா சிதம்பரத்தை இழந்து தவிக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சுற்றத் தவருடன் நாமும் பங்குகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தி யடையத் திக்கரைமுருகனைப் பிரார்த்திப்போமாக.
விளானை, வே. நடராசா களபூமி, காரைநகர், "சித்தாந்த வித்தகர்" இரங்கல் உரை இருள் சேர்ந்த இடர் உலகில் அருள்நலம் பெற்று வாழ்ந்தவர்
அமரர் நடராசா சிதம்பரம்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
என்ற வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருமகனார் வாக்கு. மனிதராய்ப் பிறந்தவர்கள் எந்தவகையில் வாழ வேண்டும் என்பதற்கு வரைவிலக்கணமாக அமைகின்றது. மனிதன் பிறவி எடுத்தல் கர்மவினைப் பயன்களை நீக்கி முத்தி இன்பம் பெறுவதற்கே என்பர்.
"அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது" என்றார் ஒளவைப்பிராட்டியார். மேலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப்
21&நினைவு மலர்

பிறத்தல் அரிது என்றும் அப்படிப் பிறந்தால் தானமும் தவமும் தான் நயத்தல் அரிது. இவ்வாறான சிறப்புக்களுடன் வாழ்ந்தவர் அமரர்சிதம்பரம் என்றால் மிகையில்லை.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவார்நீந்தார் இறைவனடி சேராதவர்"
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல பாலா
வோடை, குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மனையும் பயிரிக்கூடல் முருகப் பெருமானையும் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
சிவபூரீ கு. சண்முகராஜக்குருக்கள்,
(தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார்)
பாலாவோடை அம்மன்,
பயிரிக்கூடல் முருகன்.
எல்லோர்க்கும் இனிமையானவர்
அமரர் நடராசா சிதம்பரம் அவர்கள் எங்கள் குடும்பத்தில் ஒன்றிய வாழ்கை வாழ்ந்து தம் உறவுக்காரர் எல்லோருடனும் இனிமையாக பழகி அன்பு பாராட்டி அரவணைத்துக் கொண்டவர்.
சித்தர் காசிநாதர் வேலுப்பிள்ளை மகள் முத்துப்பிள்ளைக்கு ஒரே ஒரு மகளாக இருந்தமையாலும் எங்கள் எல்லோர் மீதும் அன்பு பாராட்டி அரவணைத்துக்கொண்டமையாலும் எங்கள் சித்தர் காசிநாதர் வழி வந்தோர் எல்லோரும் எங்கள் "முத்துவின் மகள்" என உரிமையுடன் மதிப்பும் மரியாதையும் வைத்து அன்பு பாராட்டி உறவு
கொண்டனர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தனது முதிர்ந்த வயதில் ஒரு
மாதத்திற்குள் எற்பட்ட நோயினால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல திக்கரை முருகன் திருவடிகளை வேண்டிநிற்கின்றோம்.
ஓம் சாந்தி, ஒம் சாந்தி, ஓம் சாந்தி கு. சிவஞானசுந்தரம்,
முகாமையாளர்,
இலங்கைவங்கி, ஊர்காவற்றுறை,
நினைவு மலரி2)

Page 117
தேற்றம் கொள்வோம் விதையொன்று வீழ்வதும் பின் - அது முளைப்பதும் வாழ்க்கையின் மாற்றங்களாம். அது வருவது நிச்சயமாம்; பிறக்கின்ற உயிருக்கு நிச்சயம் இறப்புண்டு. ஆண்டவன் சட்டமிது - அதை அழித்திட முடிந்திடாது - ஆகையால் ஆறிடுவோம்; ஆறியே தேறிடுவோம்.
வாழ்க்கையின் பரிமானம்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்; அதை நழுவ விடாதீர்கள் வாழ்க்கை ஒரு பயணம் : அதை சென்று முடியுங்கள் வாழ்க்கை ஒரு விடுகதை: அதை விடுவியுங்கள் வாழ்க்கை ஒரு விளையாட்டு அதை வென்றுகாட்டுங்கள் வாழ்க்கை ஒரு வெகுமதி: அதனை ஏற்று மகிழுங்கள் வாழ்க்கை ஒரு போட்டி: அதில் மோதிப் பாருங்கள் வாழ்க்கை ஒரு கலை: அதை மேன்மைப்படுத்துங்கள் வாழ்க்கை ஒரு வேதனை: அதைத் தாங்கி சிரியுங்கள் வாழ்க்கை ஒர் அறைகூவல்: அதை எதிர்கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு சோகம்: அதை இரசித்துக் கடவுங்கள்
வாழ்க்கை ஒரு பிரச்சனை: தீர்வு கண்டு மேன்மை அடையுங்கள்
S0M eLiqeSeL0M eSLSLS0M MLiqSLSLM LLqiqSiSJYSSiLq
பெண்கள் கடல் நீராடும் முறை
di கொழுநன் கைத்தலம், காதலன் கைத்தலம் அன்றிக் கன்றின்வால் ஆதல்இம் மூன்றில் ஒன்று அங்கை பற்றியே ஓத நீராடுதல் மரபு."
(கணவன் கை அல்லது புதல்வன் கை அல்லது பசுவின் கன்றின் வால் ஆகிய இம்மூன்றில் ஒன்றினைப் பற்றியே கடல் நீராடல் மரபு.
N-N-No see as Ne-sease se s2
20நினைவு மலர்

ன்ெறென்றும் ங்ெகள் GE-డిజాం 6-కిండిeg IEరీrj5ch1.
எங்கள் அன்புத் தெய்வம்
அமரர் நடராசா சிதம்பரம் அவர்கள் இறைபதம் எய்தியமை கேட்டு ஓடோடி வந்து உதவி செய்த உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்களுக்கும், உள்ளூரிலிருந்தும் வெளிநாடு களிலிருந்தும் தொலைபேசி மூலமும், தந்திமூலமும் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் வார்த்தை கூறியோருக்கும் எங்களுக்குப் பல வழிகளிலும் உதவிகள் புரிந்தவர்களுக்கும், இறுதி தகனக்கிரியைகளில் கலந்துகொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரியைகளில் கலந்து கொண்டு
அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தித்தோருக்கும் இம்மலரினை அழகுற அச்சிட்டுத் தந்துதவிய கரிகணன் அச்சகத்தாருக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
நன்றி
6 O பொன்னாவளை, பிள்ளைகள், மருமக்கள், களபூமி, பேரப்பிள்ளைகள்,
காரைநகர். பூட்டப்பிள்ளைகள்,

Page 118
6)
米 இருபுறமுயர்ந்த மானாமுதலி (க
* சுந்தரிமகன் * நே
V * அபிராமி * வியாழி * பார்வதி
水 ಹಟ್ಟಹಾಗೆ
V,
* அம்பலவாணர் * சுட்
* JibbyihiloirooooIT * சின்னப்பிள்ளை Vy
* அருணாசலம் * சதாசிவம் * கந்தையா
-H * தெய்வானைப்பிள்ளை
米 * பொன்னம்மா
plgriefT +
* சின்னத்தம்பி
மாணிக்கவாசகர்
W, தவழ்னி சசிங்கம் (8 * s Iroflă: o தனராக 6OT ဒုéfoogh ಹರಿಯTಆಹT வசந்தகோகிலம் * தியாகலிங்க’
கிருஸ்ணாம்பிகை HS --
யோகரட்னம் –>anಣ್ಣೆಕ್ರ್ಟಿ =>666 gBC3 ass6oo6oo6) Imrooofil
JIrBuLIGOT
6ി →ಯಾಗ್ದà -> 6l8Bu ->SIF6600
ரு ஐணதே p@ ERIT 6finists(36 தில்ஷநாதன்
சஞ்ஜீவராஜா ஜீ பிரதீப் -> 5g)Jegm šj -> மஞதள + . - 1 főILori FotioTcpaTsTITFIT flo) Iglorf o
-> சந்திரா 69IT செந்தூரன் +
9یک ಇಂಗ್ಲಿಗಿ சிவகெளரி Φ5 莎 ன் -தமிான் சந்தோ -> abouTLIgor öFTdı5g H) நேசரணி omu
தவக்குமார் H>TIfor
->சிலம்பர கெளதம்

பம்சாவழி
ணவுடையார்) * இராமுடையார்
ன்னிமுருகன் * கறுத்தார் * வெள்ளையர் * சங்கரியார் * பரமானந்தர்
* முருகேசு * 5600TL15unoiroo6IT * வேலாயுதம் * வல்லிபுரம்
H
* yoğjöğJŮu'îloi:TGOD6IT
* சிதம்பரம் (பாக்கியம்)
Ny சுந்தரராஜா தவநாயகி
Hޞ வளர்மதி #mndမှrhizpth ணதேவன் HPதயானந்தன் HH* o பலட்சுமி i-m சுதானநதன ILn6oir ஜெயதர்சினி 十 னஸ்வரன் o6I6960orofil
. ->ஐங்கரன்
->ஞானகரன் JT H>திவாகரன்
56TT -9 ஜனனி
தேவி
மரன்
oilo ன்
groចំT
صالح ”அமரர்களைக் குறிக்கும்

Page 119


Page 120

s s
=
s
s s