கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெய்வீகம் மலரும் பொழுது: கணபதிப்பிள்ளை சிவபாதவிருதயர் (நினைவு மலர்)

Page 1

ifili.G. ாயி Карабитi.

Page 2


Page 3

திரு.கணபதிப்பிள்ளை சிவபாதவிருதயர்
(வடவலய ஓய்வு புெற்ற உதவிபொதுமுகாமையாளர் - மக்கள் வங்கி) வவுனியா சாயிசமித்தி மனித மேம்பாட்டுக் கல்வி இணைப்பாளர்
தாயின் மடியில் சாயியின் அடியில் 15 - 08 - 1945 19 - O - 2007 அவர்களின்
நினைவாக அன்பளிப்பு
3-11-2007

Page 4

தெவீேகம் மலரும் Uெnழுது.
AGIGib 166MT6S tý5 5851u 8frví) 666MT jG606utvô 母币5命 of 55 65 AGNaitut
தொகுப்பு சாயியுடன் மு.க.சிவபாதவிருதயர்
அகில இஞ்ைகை சத்ல சா ைசேலின் இறுலீசரங்கனின் இணைப்புக் குழுஇன் அனுமதியுடன்

Page 5
வெளியீடு
விலை
கிடைக்குமிடம் :
குறிப்பு
விபரம்
த.ச.சா
ஆ.ச.சா
E.S.S
பி.கோம
S.S.S
பா.கீ.பே
Fs.
ப்அவ
ச.சி.சு
LIFT-26)
:2000 பிரதிகள்
:கரிகனன் பிறிண்டேர்ஸ்
:ஐந்தாவது வெளியீடு
சகல பகவான் பூரீ சத்ய சாயி சேவை நிலையங்கள், பஜனை மண்டலிகள்
ஸ்தாபனங்கள்.
: ஒவ்வொரு கருத்தின் கீழும் அந்த விடயம்
எந்தப் புத்தகத்தில் அல்லது எந்த நாள்
அருளுரையில் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
:தமிழ் சனாதன சாரதி
: ஆங்கில சனாதன சாரதி
: ஆங்கில சனாதன சாரதி
: பிருந்தாவனத்தில் கோடை மழை
: Sathaya Sai Speaks : பாபாவின் கீதைப் பேருரைகள்
: சாயி அருளமுதம்
: ப்ரசாந்தியில் அமிர்தவர்ஷினி
: சத்தியம் சிவம் சுந்தரம்
: பாபாவின் ஆனந்த லஹரி
என்பது

பொருளடக்கம்
1) பகவான் பூரீ சத்ய சாயி பாபாவின்
வார்த்தைகளில் இம்முயற்சி 0-03
2) கேளுங்கள் அமரத் தன்மையின் 04ー05
குழந்தைகளே கேளுங்கள்
3) சுவாமி ஆத்மகனானந்தாஜி மகராஜ்
அவர்களின் ஆசியுரை 06 4) முகவுரை
i) பூரீ.செ.சிவஞானம்
முன்னாள் மத்திய இணைப்பாளர் 07-08
ii) பேராசிரியர் நா.ஞானகுமாரன் 09-10 5) தெய்வீக வாசலில் Il-14
6) மலர்ந்து மணம் வீசட்டும்
- சாயியுடன் மு.க.சிவபாதவிருதயர். 15-21 7) விடயவரிசை 22
மனிதனில் உள்ளுறையும் தெய்வீகத்தை
வெளிப்படுத்தவே வந்துள்ளேன்
-LVTAT

Page 6


Page 7

பகவானின்வார்த்தைகளில் இம்முயற்சி
மோகமும் மோட்சமும்,
The Capacity of transition from Moha to Moksha is once again an expression of Divinity of man. LD6ofsóofla) a 60 puptb தெய்வீகத்தின் வெளிப்பாடே மோகத்திலிருந்து மோட்சத்துக்கு மாறக்கூடிய தகுதி.
சிவனே ஜீவன் ஜீவனே சிவன். இவ்வாறு சிவனும் ஜீவனும் ஒன்றே என்ற உண்மையை உணர்ந்து தெளிந்தவனே உண்மையான ஞானி.
01. மறைந்துள்ள தெய்வத்துவம்.
upravarias6rl upravaisons
மானிடனாகப் பிறத்தல் அரிது. தெய்வத்துவம் மனிதத் தன்மைக்குள் மறைந்திருக்கிறது. ஏகத்வம் என்ற தத்துவம் இவ்வாறு கூறப்படுகிறது. என்னிடம் இருக்கும் ஆத்மாவே சகல உயிர்களிலும் குடிகொண்டிருக்கிறது. மனிதன் மட்டுமே தனக்குள் இருக்கும் தெய்வத்துவத்தை உணர்ந்து தெளிவுற வல்லமை பெற்றிருக்கிறான்.
02. பஞ்ச கோசங்கள்
மனிதனிடம் பஞ்ச கோசங்கள் உள்ளன. அவை அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆனந்தமயம் ஆகியவை. விக்ஞானமய கோசத்தைப் பற்றி மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளால் அறிய இயலாது. எனவே மனிதன் பிற ஜீவராசிகளை விட மிக மேன்மையானவன். தன்னை அறியும் உள்ளத்தின் நுட்பமும்,

Page 8
மெய்ஞ்ஞானத்தை உணரும் ஆராய்ச்சி அறிவும் தெய்வீகத்தை உணரும் உள்ளுணர்வும் ஒருங்குசேரப் பெற்றவன் மனிதன். இது மட்டுமல்ல.
03.மோக-ஜயம் - மோட்சம்
இறைவனே ஜீவன். ஜீவனே இறைவன் என்பதற்குப் பலவிதங்களில் அர்த்தங்கள் கூறப்படுகின்றன. அனைத்தி லும் இருப்பது ஒரே ஆத்மா என்பது பற்றி மனிதனால் விளக்கங்கூற இயலுகிறது. தவிர அனைத்து ஜீவராசிகளி மும் மோகம் (மயக்கம்) ஒரே விதமாகப் பரவியிருக்கிறது. ஆனால் மனிதனால் மட்டுமே மோகத்தைக் குறைத்து, மோகஜயம் செய்து, மோகத்தை மறையச் செய்து மோட்சம் அல்லது முக்தி பெற இயலும். ஆகவே மனிதன் தெய்வமாகி றான். அதனால் தெய்வத்துவமானது - ஏகத்வம் (ஒருமைத் தன்மை) மட்டுமல்ல அநேகத்துவத்திலும் (பலவற்றிலும்) கூட உள்ளது என்பது நிரூபணமாகிறது.
(Gassr.p2000 129)
04. உள்ளிருப்பதன் பிரதிபலிப்பு
இறைவன் உள்ளும் வெளியும் வியாபித்திருக்கிறான். இரும்புத்துண்டு உலையில் கிடக்கும்போது நெருப்பு இரும்புத் துண்டிலும் அதற்கு வெளியிலும் இருக்கிறது. அதே விதமாக தெய்வத்துவம் மனிதனுக்குள்ளும், மனிதனுக்கு வெளியிலும் இருக்கிறது. இங்கு இரண்டு நிலைகள் இல்லை. உள்முக நோக்கில் புலப்படும் ஆத்ம தத்துவமே வெளிக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கிறது. புலனாகிறது இதுவே Reflection of the inner being 61607th Golgi. (olóiólfutil 256r பிரதிபலிப்பு) வெளியில் காண்பதனைத்தும் உள்ளிருப்பதன் பிரதிபலிப்பே. உண்மை நிலை உள்ளே இல்லாத போது, வெளியிலே பிரதிபலிப்பு இருக்க இயலாது. உண்மை நிலை

உள்ளே இருக்கிறது. பிரதிபலிப்பு வெளியே இருக்கிறது. ஒலி (Sound) உள்ளே இருக்கிறது. எதிரொலி வெளியே இருக்கிறது. செயல் உள்ளே இருக்கிறது. பிரதிச் செயல் வெளியே இருக்கிறது. உண்மைநிலை-பிரதிபலிப்பு, ஒலி எதிரொலி, செயல்-பிரதிச்செயல் இதுவே சராசரப் பிரகிருதி யில் உள்ள தொடர்புகள்.
( î.G3a5IT.D2000 Lu 147)
05. சிரத்தை
நீங்கள் நேர்மையாக முயற்சி செய்தால் தெய்வத்துவம் அடையப் பெறுவீர்கள். மனிதன் நாலாவது கோசமாகிய விக்ஞானமய கோசத்தை அடையப் பெறுவான். ஐந்துானாம் நர ஜன்ம துர்லபம். அரிது அரிது மானிடனாகப் பிறத்தல் அரிது. அனைத்து ஆற்றல்களும் அவனிடம் உள்ளன. இத்தகைய மனிதன் ஏன் பிறருடைய யுக்திகளுக்கு அடிமையாக வேண்டும்?
06. உபதேசங்கள் உன்னை உயர்த்தும்
பண்டைய முனிவர் இதன் உண்மைத் தன்மையைப் பற்றி சிந்தித்து, ஒருமைத் தன்மையை உணர்ந்தனர். சாதாரண மனிதன்கூட பண்டைய காலத்தில் உபதேசங் களின் விளைவாக அற்புத மனிதனாக மாறினான். (நாங் களும் மாறுவோம்)
(பி.கோ.ம2000 ப131)
உனது இதயத்தில் தெய்வீகம் மலரும் பொழுது நீ எனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறாய்
–
= 03

Page 9
கேளுங்கள் அமரத்தன்மையின் குழந்தைகளே கேளுங்கள்
மாயத் தோற்றத்தையும் மயக்கத்தையும் கடந்து (தம்முள்) உறைகின்ற ஆதி புருஷரும் முதன்மையானவரும் ஆன மகாபுருஷோத்தமரின் தர்சனத்தைப் பெற்ற ரிஷிகளின் உபதேசத்தைச் செவிமடுத்துக் கேளுங்கள்.
ஒ மானிட மக்களே! நீங்கள் இயல்பிலேயே முழு நிறைவானவர்கள். நீங்கள் உலகில் நடமாடும் கடவு ளாவிர்கள். நீங்கள் பாவிகள் என்று சொல்லிக் கொள்வதை விட பெரிய பாவம் உலகில் வேறு உண்டா? அந்தப் பெயரை ஏற்றுக் கொள்ளும்போது நீங்கள் உங்களை இகழ்ந்து கொள்கிறீர்களல்லவா!
எழுமின் நீங்கள் ஆடுகள் போல தாழ்வுறச் செய்யும் உணர்வை உதறித் தள்ளுங்கள். அந்த எண்ணத்தில் மயங்காதீர்கள்.
நீங்கள் ஆத்மா.
நீங்கள் நிரந்தர சத்யம், சிவம், சுந்தரமான அமுதத் துளிகள். உங்களுக்கு ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. புறப்பொருள் பற்றிய அனைத்தும் உங்கள் கொத்தடிமைகள். இப்போது நினைப்பது போல் நீங்கள் அவற்றின் கொத்தடி மையல்ல.
. 04 =

மேலும்
ஒப்பற்ற உண்மை இருப்பைப் பற்றி அறி. அதையே மூச்சாக விடு. அதிலேயே நீராடு. அதிலேயே வாழ். பின் அது உன்னுடைய எல்லாமும் ஆகும் நீ முழுமையாக அதாகி விடுவாய்
ஸத்திய சாய் வாஹினி முன்னுரையில் பகவானின் வார்த்தைகள்
நாமெல்லாம் கடவுளின் நிழல்கள்
எப்பொழுதும் எச்சரிக்கையாய் இருங்கள். எங்கள் உண்மைச் சொரூபம் வேறு. உங்கள் உடலிலிருந்து வேறுபட்டவர்கள் நீங்கள். நீங்கள் உங்கள் உடல் இல்லை என்பதை உணருங்கள். இதுவே உங்களை நோய்களிலிருந்து காப்பாற்றும் உங்கள்
நடவடிக்கைகளில் ஒருவித சுலபம் ஏற்படும். நீங்கள் இப்படி நினைத்தால் உங்களுக்குத் துன்பம் தான் ஏது? கடவுள் எப்பொழுதும் சத்தியத்தின் அருகிலேயேதான் இருப்பார். அவரது நிழலாகிய திருப்பாதங்களை நம்பிக்கையுடன் பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் துன்பமே வராது.

Page 10
வாழ்த்துச்செய்தி
சாயி அன்பர் திரு.மு.க.சிவபாதவிருதயர் எழுதி வெளியிடும் தெய்வீகம் மலரும் பொழுது." என்னும் இந்த நூலுக்கு இவ்வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
மனிதனது உண்மை சொரூபம் ஆத்மா. அது என்றும் பிறப்பற்றது. என்றும் சுதந்திரமானது, பூரணத்துவம் உடையது, சத்சித் ஆனந்தமயமானது.
ஆத்மாவை உணர்ந்தவன் அனைத்து பந்தங் களிலிருந்தும் விடுதலை பெறுகிறான். ஆத்மாவை உணருவதற்கான முயற்சியே பல்வேறு சமய சாதனைகளாக அமைந்துள்ளன. மார்ர்க்கங்கள் பல குறிக்கோள் ஒன்றே.
ரீ சத்ய சாயி பாபாவின் மேற்கோள்களைப் பரவலாகக் கையாண்டு, மேற்கூறிய கருத்துக்களைப் பல்வேறு கோணங்களிலிருந்து இந்நூலில் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர். அவரது முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
இறை அன்பர்கள் இந்நூலை வாசித்துப் பயன் பெறுவார்களாக.
Ramakrishna Mission சுவாமி ஆத்மகனானந்தாஜி Ceylon Branch, D36 ITg. 40 Ramakrishna Road
Wellawatta.
Colombo-6.

தெய்வீக மலர்ச்சி
பகவான் பூரீ சத்ய சாயி பாபாவின் நூல்களையும், அருளுரைகளையும், அவரே எழுதிய அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களையும் அவர் எம்முடன் இருக்கும் பொழுதே வாசிக்கும் அரும் பெரும் பாக்கியம் எமக்கு உண்டு. இதைப் பயன்படுத்துவோர் எம்மில் எத்தனை பேர்? பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிலேயே ஒரு சிறுபகுதிதான் என்று சொல்லலாம். அந்தச் சிறுபகுதியில் படிப்பதை ஆழமாகச் சிந்தித்து விளங்க அக்கறை கொண்டவர்கள் அதிலும் சிலர். இந்தச் சிலரில் தாம் அறிந்ததை மற்றவர்களும் அறிந்து பயன் பெறவேண்டும் என்ற அவாவும், நற்சிந்தனையும் உள்ளவர்கள் ஒரு சிலரே. பகவானுடைய கிருபையால் அந்தச் சிறு கூட்டம் எம்முள் இருக்கிறார்கள் என்பதையிட்டு நாம் மகிழ்ச்சி அடையத் தான் வேண்டும்.
அந்தச் சிறு கூட்டத்தில் ஒருவராக விளங்குபவர் திரு.மு.க.சிவபாதவிருதயர். ஒரு நல்ல பக்தன். தனது தொழிலையும் சிறப்பாகச் செய்து ஓய்வு நேரம் முழுவதை யும் பகவான் பூரீ சத்ய சாயி பாபாவின் போதனைகளை சத்யசாயி நிறுவனத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும் என்ற பேரவாவின் காரணமாக பல நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.
அந்த வரிசையில் தெய்வீகம் மலரும் பொழுது." என்ற ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் நூல் வெளியாகிறது. பகவானின் போதனைகளை ஒரு தொடராகத் தொகுத்து

Page 11
ஆத்மீக சாதகர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தக்கூடிய முறையில் வெளியிட்டிருக்கிறார்.
நாட்டம் உள்ளவர்கள் வாசித்து மறுமுறை வாசித்து, சிந்தித்து, ஆழமாகச் சிந்தித்து பயன் பெறுவார்களாக.
செ.சிவஞானம், முன்னாள் மத்திய இனைப்பாளர்,
பேரின்பத்தைச் சுவையுங்கள். எல்லாப் பொருளிலும் இறைவனைப் பார்க்கின்ற பக்குவத்தை ஒருவன் பெற்று விட்டால், எல்லா அறிவுக் கருவிகளும் அந்த இறை உணர்வைத் தரும் பொழுது, அந்த இறைத் தன்மை ஒன்றையே பார்த்து, கேட்டு, சுவைத்து முகர்ந்து தொட்டு உணரப்படும் பொழுது மனிதன் ஐயமின்றி இறைவனின் வடிவத்தில் ஒரு பகுதியாகி அவனிடத்திலே அவனோடு கூடவே வாழ்கிறான்.
உங்களுடைய சொந்த வளர்ச்சிக்காகவே இந்தக் கடமையை நீங்கள் ஆற்ற முற்படும்பொழுது முதற்படியிலேயே நீங்கள் ஒரு சக்தியைப் பெறுவீர்கள். ஒரு புதிய தூய்மையான மகிழ்ச்சியில் சிலிர்ப்பீர்கள்.
பேரின்பத்தின் முழுமையைச் சுவைப்பீர்கள். ஒரு புது
மனிதத் தன்மையினால் புத்துணர்வு பெறுவீர்கள்
 

தெய்வீகத்தின் திருவுளத்தை நாடும் முயற்சி
அதர்மங்கள் அதிகரித்து தர்மங்கள் எப்போது நலிவடைகிறதோ அப்போதெல்லாம் இறைவனது கருணை அவதார வடிவத்தில் எழுவதனை நாம் இந்து மத வாழ்வில், குறிப்பாக வைஷ்ணவ நெறிமுறையில் காண்கிறோம். அது போல இறைவனது அருட் பிரவாகமானது பக்குவப்பட்ட ஆத்மாக்களை வழிப்படுத்தி வசப்படுத்தும் வகையில் குருவடிவாய்த் தோன்றி நிற்றலை சைவசமயப் பாரம் பரியத்தில் அறிகின்றோம். இவ்வகையில் இறைவன் எம் மாட்டும், எமது உய்வின் பொருட்டும் பிரத்தியட்சப் பிரசன்னம் பெறுவது வரலாறு காட்டும் உண்மைகளாகும். இவ்வாறான தெய்வீகத்தின் மாட்சியை நாம் எவ்வாறு உணர்ந்து, எம்முள் விளங்கும் தெய்வீகத்தின் திருவுருவத்தை அறியவும் அறிந்தமையை அனுபவிக்கவும் அனுபவத்தில் எழுந்ததை உணர்வில் கலந்து திளைத்துப் பேரின்பப் பெருவாழ்வடையவும் வழிகாட்டி நிற்கின்றது. இவ்வாறான உயர்வான கருப்பொருளை, தெய்வீகத்தின் திருவுளத்தை நாடுகின்ற முயற்சியில் இப்பணி அமைந்துள்ளமை வரவேற் கத்தக்கது.
சாயி அன்பர் திரு மு.க.சிவபாதவிருதையர் தொகுத்தளிக்கின்ற "தெய்வீகம் மலரும் பொழுது” எனும் படைப்பானது உண்மை விசாரத்தை தூண்டுகின்ற செயற்பாடாகும். மனிதனுள் உள்ளுறையும் தெய்வீகத்தினை அறிமுகப்படுத்திய அன்பர் தெய்வீகத்தின் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தொகுத்தளிப்பது தெய்வீகம் பற்றி நாடும் உள்ளங்களுக்கு நல்விருந்தாகிறது. முன்னைய ஆக்கங் களில் தெய்வீகம் பற்றி எடுத்தாண்ட போதிலும் இதில்

Page 12
அன்பர் கொண்ட இறை விசாரம் பகவானின் வாக்குகளை ஒருசேரத் தொகுத்தளித்து வாழ்வின் அர்த்தத்தை வளமாக்கு கிறது.
தெய்வீகம் பற்றி அறிந்து தெளியவும் இத் தெளிவிற்கு உறுதுணையான நிலைகளை புரியவும் தெய்வீக அனுபவம் தரும் மேன்மையில் மனித மேம்பாட்டின் அடிப்படைகளைச் சுட்டி விளக்கும் இச்சுடரொளியானது வாழ்வின் உன்னதத்திற்கு அச்சாரமாக அமைவது குறிப்பிடத் தக்கதாகும். இவ் அன்பர் படைக்கும் ஆன்மீக விருந்தில் அனைத்துள்ளங்களும் பங்கு பற்றி தெய்வீகப் பேற்றை அடையப்பெற்று உயர்வடைவார்களாக,
பேராசிரியர் நா.ஞானகுமாரன்,
மெய்யியல்துறை,
யாழ் பல்கலைக்கழகம்.
இப்பொழுது நான் சில முக்கியமான விஷயங்களைக் கூறுவதற்குக் காலம் கனிந்து விட்டதாகக் கருதுகிறேன். கங்கை உற்பத்தியாகும் இடத்தில் எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தூய்மையாக உங்கள்
இருதயங்களில் எண்ணம் உருவாக வேண்டும். வெறும்
வாய் வார்த்தைகள் போதாது செயலிலும் அது வெளிப்பட வேண்டும். சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில்
ஒற்றுமை வேண்டும்.
 

தெய்வீக வாசலில்.
1. மனித வாழ்வின் அர்த்தம் என்ன?-- (தெய்வீகம்) மனித வாழ்வின் இலக்கு என்ன?-- (தெய்வீகம்) மனித வாழ்வின் நோக்கு என்ன?-- (தெய்வீகம்)
மனித வாழ்வின் தனித் தன்மை என்ன?-- (தெய்வீகம்}
இந்தக் கேள்விகளுக்கான மறுமொழியைத் தேட ஒரு சிலர்தான் முயல்கிறார்கள். உணவு, நித்திரை, புலனின் பங்கள் இவை மட்டுமே முக்கியமானவை என நினைத்து உள்ளுறைகின்ற தெய்வீகத்தை மனிதன் மறந்து விடுகின்றான். இது முற்றிலும் தவறானது.
தன் உள்ளுறையும்தெய்வீகத்தைத் தானும் உணர்ந்து சமுதாயத்திடம் அதைப் பகிர்ந்து கொண்டு தானும் அனுபவித்து ஆனந்திப்பதுதான் மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கம், அதுதான் மனித வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்.
2. முதலில் தெய்வீக உள்ளுணர்வுகள் உண்டாக
வேண்டும்.
ஒரு சிறிய கடிதம் எழுத வேண்டும் என்றாலும் யாருக்கு எழுத வேண்டும்?
என்ன எழுத வேண்டும்?
எதைப்பற்றி எழுத வேண்டும்?
எப்படி எழுத வேண்டும்?
என்று முற்சுட்டியே சிந்தித்து அதன் பிறகே எழுதத் துவங்குகிறார்கள். ஆக முதலில் எழுவது உள்ளுணர்வுகள் தான். அதன் பிறகே நடைமுறை சாத்தியமாகிறது. ஆகவே மனித வாழ்க்கை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ജ്ഞ 11 =

Page 13
09. தெய்வீகத்தை உள்ளுணர்வுகளுக்கு எடுத்துக்
கொள்ளுங்கள். தெய்வீகத்தை உள் உணர்வுகளால் சிந்தித்து அறிந்து
கொள்ளுதல் அவசியம். இதைத்தான் வேதாந்தம் "பிரம்ம
வித் பிரம்மைவபவதி” என்று உரைக்கின்றது.
04.ரத்னாகரன் என்ற வழிப்பறிக் கொள்ளைக்காரன்
கொடிய கொள்ளைக்காரனாக இருந்த ரத்னாகரன் தெய்வீகத்தைப்பற்றி மகரிஷிகள் கூறியவற்றையெல்லாம் கேட்டு, சிறிது சிறிதாக மாறி நிரந்தரமாக ராம நாமம் ஸ்மரிக்க ஆரம்பித்தான். அதனால் ரத்னாகரனுடைய வடிவத்திலும் ரீ ராமனின் திருவடிவச் சாயலும் தோன்ற ஆரம்பித்தது. அந்த வழிப்பறிக் கொள்ளைக்காரன் மகா முனிவன் வால்மீகி ஆனான்.
அதேபோல பிரஹலாதன் நிரந்தரமாக நாராயணனைப் பற்றிய நினைவிலேயே இருந்தான். அவனது முகத் தாமரையில் நாராயணனின் திருவடிவமும் ஜாஜ்வல்யமும் பதிவாகியது.
05.டார்வின்
டார்வின் என்ற விஞ்ஞானி சிறு வயதாக இருந்த சமயம் அவரது குரு ஹென்ஸ்லோ என்பவர் மிகவும் சிறந்த தூய எண்ணம் கொண்டவர். ஒரு நாள் டார்வின் சிந்தித்தார். நானும்கூட என் குருவைப் போல உயர்ந்த நிலைக்கு உயர வேண்டும் என நினைத்தார். அந்த எண்ணம் தொடங்கியதும் தன் குருவைப் போலவே சிந்தித்து அவரைப் போலவே நடக்க ஆரம்பித்தார். யாரைப்பற்றி இடைவிடாது சிந்திக்கி றோமோ, யாரைப் பார்த்து செயல்படுகிறோமோ, அவ்வாறே

மாறி விடுகிறோம். அதனாலேயே நல்லதையே செய்து, நல்லதையே எண்ணி, நல்ல முறையிலே நடந்து கொள்ளும் போது உண்மையான மனிதன் என அழைக்கப்பட தகுதியா கிறாய்.
08.நீ எனது அம்சம் "மனமவாம்ஸோ ஜீவலோகே ஜீவயூத ஸனாதனஹ”
என்று வேதாந்தம் கூறும் போது மனிதா! நீ வெறும் ஐம்பூதங்களின் கூட்டு அல்ல. வெறும் மனித அம்சம் அல்ல. நீ எனது அம்சமே.
நீ எனது அம்சமாகிவிட்டபடியால் எனது பா(B)வங்களும் கூட உன்னிடம் திகழ வேண்டும். தெய்வீகமான உள்ளுணர் வுகள் உன்னிடம் வளர வேண்டும்.
07. தெய்வீகத்தை ஏற்றுக்கொண்ட நிலை
எத்தனையோ சாதுக்களுக்கு இந்த சத்தியம் தெரியும். எனினும் கஷ்டங்களும் துயரங்களும் தாக்கும் போது தவிக்கிறார்கள். கஷ்டத்தை அனுபவிக்க முடியாமல் துவஞகிறார்கள்.
உனக்குக் கஷ்டம் வந்துவிட்டது என்று நீநம்பத் தொடங்கினால் நீதெய்வத்தின் அம்சமாகமாட்டாய். கடவுளுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. கடவுளுக்கு எந்த விசாரமும் இல்லை.
ஆகவே நீ கஷடம், துக்கம், விசாரம் என நினைக் கும்போது தெய்வத்தின் அம்சமாக இருக்க இயலாது. அப்படித் தெய்வ அம்சம் இல்லையெனில் நீ வேறு யார்?

Page 14
அப்போது மனிதன்
மிருக இயல்போ, அரக்க ஸ்வபாவமோ, அலையும் மனநிலையோ கொண்டவனாக மாறி கஷட நஷ்டங்களுக்கு ஆட்படுகிறான்.
08.உண்மை என்ன?
அனைவரும் தெய்வீகப் பெரு நெருப்பின் சிறு பொறிகள்தான். ஆனால் எத்தனை பேர் இதை உணர்ந்தி ருக்கிறார்கள்? ஏதோ ஒரு சிலர்தான் இவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இது போதாது. ஒவ்வொரு மனிதனும் தான் தெய்வாம்சமே என்று தீவிரமாக நம்ப வேண்டும். அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்பவன்தான் உண்மையான மனிதன்.
09.புரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் யார்?
அவர்களும் வாழ்கிறார்களே? வாழ்கிறார்கள். மிருகங்களைப்போல் வாழ்கின்றனர். மிருகங்களைப் போன்ற எண்ணங்கள். அதற்கேற்ப பலனையும் அடைகிறார்கள். ஆனால் தெய்வாம்சமாக இருக்கும் மனிதன் தெய்வீக ஆனந்தத்தையே அனுபவிக்கி றான். நித்யானந்தத்தையே நிரந்தரமாக அனுபவிக்கிறான். உயர்ந்த சுகத்தை அடைகிறான். ஆகவே மனமவாம்சோ என்றபடி அனைவரும் தெய்வீக அம்சந்தான். அதனால் தெய்வீக சிந்தனைகள் மனித மனங்களில் உருவாக வேண்டும்.
(த.ச.சா செப் 1997-ப 4) (ஆ.ச.சா செப் 1997-ப 225)
அதோ உயிர்ப்பூட்டும் சூரியன் உள்ளது ஒன்று என்பது தான் அதன் உயர்ந்த சாரம். இந்தப் பிரபஞ்சத்தைப் பரிபாலிப்பது அது பக்தர்களின் இதயத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. பக்தர்களுக்கு
ஆறுதல் அளிக்கிறது. உலக அமைதிக்குக் கட்டியம் கூறப்படுகிறது
-
 

மலர்ந்து மணம் வீசட்டும்.
சாயியுடன் மு.க.சிவபாதவிருதயர்
இந்தப் பொழுது, தெய்வீகம் மலரும் பொழுது,
ஏன்? எப்படி? * உங்கள் ஒவ்வொருவரிலும் உள்ளுறைகின்ற தெய்
வீகத்தை வெளிப்படுத்தவே வந்துள்ளேன்.
LITIT
* உன்னிடம் திட நம்பிக்கை இருந்தால் உனது உள் மையத்திலுள்ள இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். அவர் உனது கைப்பிடிக்குள் இருக்கிறார். நித்ய சாட்சியாகத் துலங்கும் அவரை நினைத்திரு. அவர்
அனைத்தையும் காண்கிறார். அனைத்தையும் அறிவார்
if -ls
ச நீங்கள் இரத்தமல்ல. சதைப்பிண்டமல்ல. உள்ளடங்கியி ருக்கும் ஆசைகளுமல்ல. வெளிப்பட்ட மனமுமல்ல. நீங்கள் முக்திக்கு இடைஞ்சலாக விளங்கும் மோகமு மல்ல. பிரமையுமல்ல. நீங்களே நிரந்தரமான பரமாத்மா. உங்களுக்கு வல்லமைகளை அருளுவதற்கு யாரால்
இயலும். (உங்களைத் தவிர)
(5.9.FIT. g60p690. Lu1)
தனது வல்லமைகளை ஆற்றல்களை இன்னொருவர் சொன்னபொழுதுதான் அனுமாருக்குத் தெரியவந்தது என்று

Page 15
சொல்வார்கள். இன்று பகவான் எங்களின் உண்மைத் தன்மையை எடுத்துச் சொல்வதற் கென்றே வந்துள்ளார்.
இன்ன தன்மை என்று நம்மை எடுத்துச் சொல்வார் so 6oo6; ur”
-யோகர் சுவாமிகள்
'கடவுள் அனைத்து ஐஸ்வர்யங்களின் திருவடிவம்'. மனிதனும் அவ்வாறே, ஸம்பதா (செல்வம்) ஜஸ்வர்யம் (உரிமை/கட்டுப் படுத்தும் சத்தி) யஸ்ஸ் (புகழ்) சக்தி, ஞானம் மற்றும் ஆனந்தம் இவை எல்லாம் அளிக்கும் பரிசுகள். இவை ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் உறைகின்றன. ஆனால் அவன் இவற்றை சரிவர உணராமல் இருக்கிறான். ஏனெனில் இவற்றைப் பயன்படுத்த அவனுக்குத் தெரியவில்லை. இந்த ஆறு செல்வங்களையும் சரியானபடி உபயோகித்தால் தெய்வம் மனிதனிடம் ஜாஜ்வல்யமாக ஜவாலிக்கும்.
(த.ச.சா ஏப்ரல்2002-ப19)
ஒ சனாதன தர்மத்தின் புனித ஆத்மாக்களே! இந்த சனாதன தர்மத்தின் கலாசாரத்தை (தூயதாக்கும் தன்மை யைப்) புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் அளவற்ற வலிமையும், ஆற்றலும் உள்ளவர்கள். ஆனால் உங்களின் அதித பலத்தை அறியாதவர்களாக இருக்கிறீர்
கள்.
(ஆ.ச.சா மே2002-ப31)
எங்கள் பெருந்தலைவர் சிவஞானம் ஐயா அவர்கள் புட்டபர்த்திக்கு முதல்முறை சென்ற பொழுது அவரை வரவேற்ற பகவானின் தெய்வீகச் செய்தி
= 16

நீ தெய்வீகத்தின் திருருைவம். உன்னை அதனு டைய எல்லாம் வல்ல தன்மை, மாட்சிமை, மகிமை, மேன்மை, பிரபைளன்ற எண்ணங்களால்நிரப்பிக் கொள்' என்பதே.
பகவான் சொல்கிறார்
1. மனித அச்சினுள் தெய்வத்துவம் நிரப்பப் பெற்றவனே மனிதன். ஒவ்வொன்றும் அவ்வாறேதான். ஆனால் இந்த ஒப்பற்ற தன்மையை அறியும் திறமை பெற்றிருப்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. இதுவே மனிதனுக்கு உபநிடதங்கள் கூறும் செய்தி. இந்தச் செய்தியே சாதுக்களின் முழக்கங்களிலும் மறை நூல்களிலும் எதிரொலிக்கிறது
11.நீயும், பிரபஞ்ச முழுவதிலும் நிறைந்திருப்பதும் ஒன்றே. நீயும் நித்யமும் ஒன்றே. நீ தனி மனிதனல்ல. குறிப்பிட்ட ஒருவனுமல்ல. தற்காலிகமும் அல்ல. இதனை உணர்ந்து கொள். இதனை அறிந்து கொள். (அதற்கு) இசைவாகச்
செயல்படு.
(எனது குரு வொலட்டி)
எப்படி இந்த உண்மையை மேன்மையை ஏற்று எங்களை தெய்வீகமயப்படுத்தலாம்? நாம் உதவியற்றவர்களாக சூனியத்தில் நின்று கொண்டு இந்த முயற்சியைச் செய்யவில்லை.
(1) உனது முயற்சிகளை ஊக்குவிக்கவும் தேவையான உதவிகளைத் தரவுமே நான் காத்துக் கொண்டி ருக்கிறேன். (i)தெரிவு செய்வது உன்னைப் பொறுத்தது. எப்பொழுது என்று தீர்மானிப்பதும் உன்னைப் பொறுத்தது. ஆனால் நான் ஒவ்வொரு கணமும் உனது

Page 16
முயற்சியை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். (i)கருடனும் சிறகை விரித்துப் பறக்காவிட்டால் எந்தத் தூரத்தையும் தாண்ட முடியாது. சிறு எறும்பும் தன் சின்னக் கால்களை வைத்து முதலடி எடுத்துத்தான் நீண்ட தூரங்கள் பயணிக்கிறது. ஆகாயவிமானம் மேலெழும்பிப் பறக்காவிட்டால் எந்தத் தூரமும் சாத்தியமில்லை. (iv) ஆரம்பிப்பது உனது சுயேட்சை (சுய-இச்சை) அந்த உனது சுதந்திரத்தில் நான் குறுக்கிடமாட்டேன். தொடக்கப்பட்டால் அதை முடித்து வைப்பது எனது பொறுப்பு. (v)கட்டுப்பட்டிருப்பதல்ல. சுதந்திரமாக இருப்பதே உனது பிறப்புரிமை. பிரபஞ்சத்துக்குப் பொது வான எல்லையற்ற தர்மத்தால் ஒளியூட்டப்பட்ட நீ உன்னை அதன் வழியில் நடத்திக் கொண்டு போகும் போது தான் நீ உண்மையான சுதந்திரமாய் இருக்கிறாய்.
இந்த முயற்சியை எப்படிச் செய்யப் போகிறோம்?
பூரிராமன், சுக்கிரீவனைத் தன்னந்தனியாகப் போய் வாலியை எதிர் கொள்ளச் சொல்லவில்லை. அவனுக்கு முன்பாகவும், பின்பாகவும், அயலிலும் தான் இருப்பேன். என்ற திடமான நம்பிக்கையைக் கொடுத்தான். வாலியுடன் தான் போராடினால் தன் பலத்தை எல்லாம் இழக்கவேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டும் சுக்கிரீவனால் வாலியை எதிர் கொள்ள முடிந்தது. ஏன்? ரீராமன் தனக்குப் பக்க பலமாக இருப்பான் அல்லது இருக்கிறான் என்ற உறுதி அவனுள் இருந்தது. இறைவன் என்னோடு இருக்கிறான் நானாக இருக்கிறான் என்ற நினைவோடு, உணர்வோடு எதிர் கொள்கிற பொழுது எதிர் மறையான எண்ணங்களை, வாலிகளை) வென்று விடலாம்.
= 18 =

வினை வந்து எவ்வாறு எனை வந்து மோதும்?
அந்தத் திடமான, உறுதியான, பாறையில் மோதினால் சிதறுண்டு போய்விடாதா? தெய்வீகச் சூழலில் பலத்தை இழக்க வேண்டும் என்ற பயம் எங்களுக்கு எப்படி ஏற்படும்? அப்பொழுது நாங்கள் தெய்வபலம் பெற்ற சுக்கிரீவர்கள் ஆகிவிடுவோம்.
நான் எப்பொழுதும் உன்னுடனேயே, உன்னைத் தூண்டிக் கொண்டே இருக்கிறேன். உன்னை வழி நடத்திக் கொண்டே இருக்கிறேன். என்பதை அறிந்து கொள். எப்போதும் இவ்வாறு இந்த இறை சந்நிதியில் வாழ்ந்திரு”
இந்தத் தெய்வீக எண்ணம் எங்களில் மலர்ந்த பொழுது எங்களைப் பற்றியுள்ள பயம், கவலை, துன்பம், அறியாமை என்பன அகன்று சாந்தி, அமைதி, ஆனந்தம் என்ற தெய்வீக சூழலில் எம்முடைய உண்மைத் தன்மையைத் தரிசிப்போம்.
பூரீகிருஸ்ணன் என்ற தெய்வீகம் சிறைச்சாலையில் தேவகிக்கு மகனாகப் பிறந்த பொழுது சிறைச்சாலையின் பூட்டுக்கள் தாமாகக் கழன்றன. அந்தத் தெய்வீகத்தை திரு வயிறு வாய்த்ததால் தேவகி, வாசுதேவர் இருவரினதும் கை, கால் விலங்குகள் அறுந்தன. சிறைக்காவலர்கள் அறியாம லேயே அந்தத் தெய்வீகம் வெளியேறத்தக்கதாக அவர்கள் அறியாமை என்ற துயிலில் தாங்களாகவே உறங்க வைக்கப் பட்டனர். அன்று அட்டமி. ஆனால் சந்திரன் அவர்கள் செல்ல வேண்டிய பாதையைக் காட்டினான். நதி வழிவிட்டது. எப்பொழுது? தெய்வீகம் மலர்ந்த பொழுது.
அதனால்தான் சுவாமி சொல்கிறார்
My Birthday is the day when Divinity Blosom in your Heart.

Page 17
"உனது இதயத்தில் தெய்வீகம் மலரும் நாள்தான் (உன்னைப் பொறுத்தவரையில்) எனது பிறந்த நாள்"
எங்களில் சுவாமியின் பிறப்பைக் கொண்டாடுவோம். எங்களில் தெய்வீகம் மலரட்டும். தெய்வ உலகின் ப்ாரிஜாத மலர்களின் திவ்ய மணங்களை பூவுலகுக்கும் கொண்டு வரட்டும்.
எனது அன்புக்குரியவர்களே!
"உங்களது மூச்சுக் காற்று தெய்வீகத்தில் மலரும் சுகங்களைத் தாங்கி வரட்டும். நற்செய்திகளைத் தாங்கி வரும் தேவதைகளாக உங்கள் உதாரணங்கள் இருக்கும். உங்கள் ஆனந்தமே எனது ஆனந்தம்"
(மலரும் சாயியுகம் -ப15)
ஆத்மீக முன்னேற்றத்திற்கு எடுக்கப்படும் முயற்சி தனி மனிதனுடைய அறிவொளிக்காக மட்டுமன்றி சமுதாய நலனுக்காகவும், மனித குலத்தையே தெய்வீகம் நிறைந்து பிரகாசிக்கச் செய்யும் நோக்கம் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். இது தற்கால சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது. சமுதாயத்தில் நற்பணி புரியும்போது ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள தெய்வத்துவம் விரைவில் மலர்ந்து நாற்றிசையும் நறுமணம் பரப்பி வெகு தூரம் பட்டொளி வீசும் கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டும். நீங்கள் உலகத்தை வெளிப்படையாகவே காண்கிறீர்களே யன்றி அதில் அடிப்படையாக அமைந்து எல்லாவற்றையும் இயக்குவிக்கும் தெய்வத்துவத்தை உங்களால் காணமுடிவ தில்லை. அதேபோல் தனி ஒருவரின் இயக்கத்தை மட்டும் பார்க்கிறீர்களேயன்றி சமுதாயத்தில் உள்ள அடிப்படை
= 20 =

ஒற்றுமையைப் பார்க்கத் தவறிவிடுகிறீர்கள். அதனால் சமுதாய நலனையும் கோருவதில்லை. சமுதாயம் என்பது அதன் ஒவ்வொரு உறுப்பினரிடமும் ஆழ்ந்துள்ள பேரானந்த மயமான தெய்வத்துவத்தின் ஒட்டுமொத்தமான உருவமே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
(த.ச.சா ஜூலை1998 பின்பக்கம்)
அவதார காலத்தில் எமது பணி
செயல்படாத தொலை நோக்கு ஒரு கனவு போன்றது. தொலைநோக்கு இல்லாத செயற்பாடு ஒரு கொடுமையான கனவு. தொலைநோக்கும் அதை ஒட்டிய செயற்பாடும் உலகை மலரச் செய்யக் கூடியவை.
எப்படி இருந்தாலும் அந்தத் தொலை நோக்கைச் செயற்படுத்துவதற்கு தெய்வீகத்திற்கு மனிதனின் உதவி தேவைப்படுகிறது.
பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடியினால் குவிக்கப்படாவிட்டால் எல்லையில்லாத சக்தியுள்ள சூரிய ஒளிக்கதிர்களால் ஒரு புல்லிதழையோ, கடதாசித் துண்டையோ எரிக்க முடியாது.
அதே போன்று கலியுகத்தில் அவதாரத்தின் அமுத மொழிகளுக்கும், அருளுரைகளுக்கும், ஊக்குவிப்புகளுக்கும் தொலைநோக்குக்கும் மனிதர்கள் சாயி சேவை செய்பவர்கள் கருவியாக இருந்து செயல்திட்டங்களை ஒருங்கு குவித்து நிகழ்ச்சி நிரல் ஆக்க வேண்டும். அப்படியென்றால்தான் தனிப்பட்டவர்களும், குடும்பங்களும், சமூகமும் நாடும் பயன் பெறலாம்.

Page 18
விடயவரிசை
01) தெய்வீகம். 02) தெய்வீகத்தைப் புரிந்து கொள்வதிலுள்ள இடர்பாடு 03) தெய்வீகத்தை விளங்கிக் கொள்ளும் முறை 04) தெய்வீகத்தைத் தெரிந்து கொள்ளும் நிலை 05) தெய்வீகத்தை அடையும் வழி 06) தெய்வீகம் உணர்த்தும் உண்மை 07) தெய்வீகத்தை அண்மிப்பதற்கு 08) தெய்வீகத்தை உணர்த்துவதில் மந்திரங்கள். 09) நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் 91) கஷ்டங்களும் நம்பிக்கைமீனமும் 92) உணர்வுடன் கலக்க வேண்டும் 93) மனமாற்றம் 94) உண்மைத் தன்மையைப் புரிதல் 10) உண்மைத் தன்மையைப் புரிந்து கொள் 11) மனித மேம்பாடும் தெய்வீகத்தின் வெளிப்பாடும்
111) தெய்வீகம் மிளிரும் இடங்கள் 12) மெய்யுணர்வைப் பெறுதலும் மனித மேம்பாடும் 12) செய்ய வேண்டியது. 13) தன்னை அறிய வேண்டும் 14) தெய்வீக அனுபவங்கள் 15) ஆத்ம வித்யை 16) தெய்வீக சத்தியும் அதனை அடையாளம் காணுதலும் 17) மனித உன்னதம்.
= 22 =

01:தெய்வீகம்.
1)ஒரு மாபெரும் மலையைப் பார்த்ததும் மனம் மகிழ்கிறான் மனிதன், சல சல என ஒடும் நதியின் நீரைக் கண்டு சிலிர்த்துப் போகிறான். ஓயாது எழுந்து விழும் பேரலைகளின் காட்சி மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. இவையெல் லாம் தெய்வீகத்தின் பல்வேறு முகங்கள். வானில் தெய்வீகப் பேரொளி விளங்குகிறது. நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. சூரியன் கண் கூசும் ஒளியோடு காணப்படுகிறது. மேகங்கள் இடியோசை எழுப்புகின்றன. இவையெல்லாம் கடவுளின் புற வெளிப்பாடுகள்.
(த.ச.சா.டி 95 ப.2)
11) பூதாகாசம் (பெளதீக ஆகாசம்-Cosmos) என்பதே நீங்கள் காணும் அனைத்திலும் நிறைந்திருக்கிறது. நம் கண்களில் தெரியும் நட்சத்திரங்களை விட நம் கண்ணில் தெரியாதவை எவ்வளவோ இருக்கின்றது. இவையெல்லாம் கூட பூதாகா சத்திற்குச் சம்பந்தமானவைதான். இந்தப் பூதாகாசம் ஆயிரக்கணக்கான மைல்கள் விஸ்தீரணம் பரவியிருக்கிறது. அது மட்டு மல்ல, இந்தப் பூமித்தாய் சூரிய சந்திரர்களிட மிருந்து, 9கோடி 11லட்சம் மைல்கள் தள்ளி இருக்கிறாள். இதைப் போன்ற காட்சிகள் இன்னும் எத்தனையோ இருக் கின்றன. கண்களில் தெரிவதும் பூமிக்கு அருகில் இருப்பதும் சூரியனும், சந்திரனும் மட்டுமே. இவற்றை, விட அதிகமாக, பலவிதமான கிரகங்கள் இன்னும் அதிக தூரத்தில் உள்ளன. அவையும் சூரியனைப் போன்றவையே. அவையெல்லாம் சூரியனது அளவுக்கு இருக்கின்றன. அவை மிகவும் தூரத்தில் இருப்பதால் கண்களுக்கு மிகச் சிறியனவாகத் தெரிகின்றன. ஒவ்வொன்றும் ஒரு சூரியனே. இவ்வாறு இருக்கும் பல

Page 19
கிரகங்கள் பூமிக்கு ஒளியைச் சிந்துகின்றன. இருப்பினும் இவற்றிலிருந்து ஒளி பூமியை அடைய எத்தனை நேரம் எடுத்துக் கொள்கிறது. ஒரு நிமிடத்தில் 16000 கோடி மைல் தூரம் ஒளி பயணப்படுகிறது. ஆனால் சில நட்சத்திரங்களின் ஒளி இன்னும் பூமியை வந்து அடையவேயில்லை. பூமிக்கு ஒளிதரும் கிரகங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. அத்தகைய நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமானவை. ஜாஜ்வல்யமானவை. அத்தகைய கிரகங்களின் ஒளியைத் தாங்க பூமியால் இயலாது. அவற்றைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அவை அந்த் அளவுக்கு ஒளிர் கின்றன.
(பிருந்தாவனத்தில் கோடை மழை2002 -ப.151)
III)ஆனால் நாம் காணும் பூதாகாசம் (Cosmos) பல ஆயிரம் மைல்கள் தள்ளியிருக்கின்றது. அத்தகைய தூரத்தில் காணும் கிரகங்கள் பொருட்கள் எல்லாம் சித்தாகாசத்தில் (Cosmic mind- LiguGj5FID6öLb) tólsó sfgóg5Ta5ú L1562ATaél இருக்கின்றன. சித்தாகாசத்தில் காணப்படுபவை எல்லாம் சிதாகாசத்தில் (Self ஆத்மா) இருக்கும் வடிவங்களின் பிரதிபிம்பமே. பூதாகாசத்தில் இருப்பவையும் சித்தாகாகத் தில் மிகக்குறைவாகக் காணப்படுகின்றன.
நாம் ஒரு மலையைப் பார்க்கிறோம். பார்த்துவிட்டு கண்களை முடிக்கொள்கிறோம். நீங்கள் கண்ட மலை சித்தாகாசத்தில் (மனதில்) பதிவாகியிருப்பது புரியும். இந்த ஆகாசம் அவற்றில் இருக்கும் கிரகங்கள் நட்சத்திரங்கள் ஆகியவை சித்தாகாசத்தில் மிகவும் சிறியதாகப் பரவியிருக் கின்றன. பூதாகாசத்தின் வடிவ எல்லைகள் இத்தனை அத்தனை என யாராலும் விபரிக்க இயலாது. ஆனால் சித்தாகாசத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் அளவுக்கு விசாரித்து வைத்துக் கொள்ளமுடியும்.

அனைத்து வடிவங்களும் கண்ணில் புலப்படும் அத்தனை பொருட்களும் சித்தாகாசத்தில் பதிவாகியி ருக்கின்றன. ஆகவே சித்தாகாசத்தில் நாம் காணும் ஒவ்வொன்றும் பூதாகாசத்தில் காணப்படும் வடிவங்களின் பிரதிபிம்பமே.
கண்களால் காண்பது பூதாகாசம் (Cosmos). மனத் தளவில் கண்டு உணர்வது சித்தாகாசம் (Cosmic mind).
மூன்றாவது சிதாகாசம். Selfஅல்லது ஆத்மா.
(15.65IT.LD2002 Lu 153)
IV)சுற்றியுள்ள வெளிப்படையாகத் தெரியும் இத்தகைய இறைவனின் (தெய்வீக) அம்சங்களையும் அவற்றின் மேன்மைகளையும் பெருமைகளையும் நாம் உணர்ந்து கொண்டால் தான் கடவுளைப்பற்றி (தெய்வீகத்தைப் பற்றி) நாம் புரிந்துகொள்ள முடியும். அதேபோல மனிதத்துவத்தின் இயல்பைப் புரிந்து கொண்டவனால் மட்டுமே தெய்வீகத் தைப் புரிந்துகொள்ள முடியும்.
(த.ச.சா டிச95 ப2)
V) 9 ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் ஜோதி
9 மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திருமூர்த்தி
9 வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற
நுண்ணியன்.
இப்படியெல்லாம் சொல்லி தெய்வீகத்தின் தன்மையை எங்களுக்கு விளக்க முயன்றார்கள். கதையாகச் சொன்னால் விளங்கும் என்று கதையாகவும் சொன்னார்கள். பிரம்மா விட்டுணு என்ற கடவுள்களாலேயே தெய்வீகத்தின் அடியை யும், முடியையும் காணமுடியவில்லை. அந்த தெய்வீகத்தை தமது அகக் கண்ணால் கண்டபடி எமக்கு கடவுள்களாக காட்டித் தந்தார்கள்

Page 20
VI)"கடவுளில் ஆர்வமுள்ளவன் கல்லில் உள்ள பிரதிபிம் பத்தை கடவுளின் நிலைக்கு உயர்த்துகிறான்" அவன் கடவுளை கல்லின் நிலைக்கு குறைக்கவில்லை. திருவுருவம் என்பது o 6905 G5uióias Lungsglutb (Container)  ைதெய்வீகத்தை ஊட்டிக்கொண்டிருப்பது (Prompter)  ைதெய்வீகத்தின் அடிப்படை (Base) 0 தெய்வீகத்தை ஞாபகப்படுத்துவது (Reminder)
பார்ப்பதிலிருந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்றுக்கும், துளியிலிருந்து எல்லையற்ற சமுத்திரத்திற்கும், வெளிப்படை யான ஒன்றிலிருந்து மறை பொருளான ஒன்றுக்கும், இப்படித் தான் திருஉருவ வழிபாடு பக்தனுக்கு உதவி செய்கிறது.
உண்மையில் எல்லையற்ற பரம்பொருளை ஒரு சக்தியாக, கருணையின் உருவமாக, ஞானமாக, பேரறிவாக, தூய்மையாக, அதீத பலமாகத்தான் ஒரு வகையில் புரிந்து கொண்டு உருவகப்படுத்த முடியும். இந்தக் குணங்கள் அவனுடைய உணர்வில் ஊடுருவி, சூரியன், தாமரை, சமுத்திரம், அலைகள் என்று உருப்படியான அனுபவமாக (Մ)ւգարհ,
இறைவனின் நாமம் என்பது சொல்லக்கூடிய உருவம். திருவுருவம் என்பது பார்க்கக்கூடிய கிரகித்துக் கொள்ளக் கூடிய ஒரு அடிப்படை. ஒரு சிறிய விதை ஒரு பெரிய ஆலமரத்தை உள்ளடக்கி இருக்கிறது. லிங்கம் என்பது வெளிப்படையாகக் கூடியதை மட்டுமல்ல, வெளிப்படையான
பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியுள்ளது.
(மனிதனுள் உள்ளுறையும் தெய்வீகம்.விடயம்13.ப57)
S.S.S. VIIB. 1" Chapter

VI)அமரத்துவத்தின் புத்திரன் என்று புனித நூல்கள் மனிதனை ஏற்றிப் போற்றுகின்றன. இந்த உண்மையை விளங்கிக்கொள்ள முயலாத மனிதன் அழிவின் புத்திரன் என்று தன்னை இழிவுபடுத்திக் கொள்கிறான். அழியா மெய்ப் பொருளின் குழந்தை என்று தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டுமே தவிர அழிகின்ற பொய்ப் பொருளின் பிரதிநிதியாக அவன் இருக்கக்கூடாது. நீ கடவுளை நேசிப் பது மட்டும் போதாது கடவுளாகவும் வேண்டும். தெய்வீக அன்பை அனுபவிக்கத் தொடங்கினால்தான் நீ கடவுளின் உணர்வைப் பெறமுடியும்.
கடவுள் எங்கே இருக்கிறார்? நீ கடவுள் உன்னிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறார் என்று நினைத்தால் அவர் துரத்தில் தான் உள்ளார். ஆனால் நீ உண்மையாகவே கடவுள் உன்னோடு நெருக்கமானவர் என்றும் உனது அரும் பெரும் நண்பன் என்றும் நினைத்தால் அவர் உன்னோடும் உன்னுடையதோடும், நீயாகவும் அவர் இருப்பார்.
கடவுள் கோயில்களிலும் புனித இடங்களிலும் யாத்திரை மையங்களிலும் மட்டும் தான் உள்ளார் என்று நம்புவது பெரிய பிழையாகும். தெய்வீகத்தை தம்முள் உணர்ந்த ஞானிகளால் இது ஏற்கெனவே விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பாரம்பரிய வழிபாடு முறைகளும் கிரியை முறைகளும் உண்மையாகவே தேவையானவைதான். இது ஒரு மொழியைப் படிக்கும் பொழுது அதன் அரிச்சுவடியைப் Ulqil g5! (3 IT6ings. A,B,C,D 676igy 67Gup5g/d55606ng தெரிந்த பின்பு GOD என்று கடவுள் என்ற சொல்லைத் தெரிந்து கொள்ளலாம். சொற்களைத் தெரிந்து கொண்டவு டன் வசனங்களை வாசிக்கலாம். வசனங்களை வாசிக்க முடிந்ததும் புத்தகம் ஒன்றையே வாசிக்கலாம்.

Page 21
இதைப்போன்று தெய்வீகம் என்ற விடயத்தை ஆரம்பித்து வைப்பதற்காக முன்பிருந்த ஞானிகள் கோவிலுக்கும் தூய இடங்களுக்கும் செல்வதை ஊக்குவித்தார்கள். இது எழுத்துக்களைப் படிப்பது போன்றது. ஆத்மீகப் பாதையில் சாதாரண மக்களுக்கும், ஆரம்ப நிலையில் உள்ளவர் களுக்கும் இது சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் கிரியை களையும், வழிபாட்டையும் அதனுடைய உண்மைக் கருத்தை உணராமல் செய்வது ஆத்மீக வளர்ச்சியில்
தடையாகி விட்டது.
(ஆ.ச.சா நவ2000 ப350)
VI)எள்ளின் உள்ளே மறைந்திருக்கும் எண்ணெயைப் போல், பாலின் உள்உறையும் நெய் போல, மலரின் மத்தியில் மறைந்து காணப்படும் மதுரமான வாசனை போல், பழத்தினுள் நிறைந்திருக்கும் இனிய பழச்சாறைப் போல், மரத்தினுள் மறைந்திருக்கும் நெருப்பைப் போல எல்லா ஜீவராசிகளிடமும் தெய்வத்துவம் உள்ளே உறைகிறது.
கண்களில் பார்வை இருப்பது போல், கேட்கும் சக்தி காதுகளுக்கு இருப்பது போல், நாவுக்கு ருசி அறியும் சக்தி இருப்பது போல் எல்லா ஜீவராசிகளிடமும் தெய்வத்துவம் இருக்கிறது.
வெளிப்புறமாகத் தெரியும் இந்த உலகில் கண்களுக்குத் தெரியாத ஒன்றும் இருக்கிறது. அந்த ஞானம் தான் தெய்வத்துவம். பல விலையுயர்ந்த இரத்தினங்களுடே சென்று அவற்றை இணைக்கும் நூலைப் போல் கடவுள்
எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறார்.
(த.ச.சா மார்ச்95 ப3)

IX)கஸ்தூரி மான் தன் வயிற்றிலுள்ள கஸ்தூரியின் மணத்தை நுகர்ந்து விட்டு இந்த வாசனை எங்கிருந்து வருகின்றது என்று தெரியாமல் அலைகிறது. தேடித் தேடி அலைந்து ஒரு நிழலில் அமர்ந்து கொள்கிறது. முகத்தை அதன் வயிற்றில் தேய்த்துக் கொள்ளும் பொழுது அதனுள் இருந்துதான் கஸ்தூரி மணம் வருகிறது என்று புரிந்து கொண்டு இது தெரியாமல் எங்கெங்கோ அலைந்தேனே என எண்ணிக் கொள்ளும் கஸ்தூரி மான் போல தன்னுள் இருக்கும் தெய்வீகத் தத்துவத்தை உணராது மனிதன் அலைபாய்கிறான்.
(த.ச.சா மார்ச்95 ப13)
X)ஒவ்வொரு மனிதனும் தன்னுள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இதை விட உயர்ந்த ஆத்மீக சாதனை எதுவும் இல்லை.
(த.ச.சா டிச2000 ப4)
எனது இலட்சியம், உண்மையாகவே, ஒரு சில வார்த்தைகளில் சொல்லிவிடலாம். அதாவது மனிதனுக்கு அவனுடைய தெய்வீகத்தையும் அதை
எப்படி அவன் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு
அசைவிலும் பிரதிபலிக்கச் செய்யலாம் என்று போதிப்பதே.
-சுவாமி சிவேகானந்தர்
= 29

Page 22
O2.தெய்வீகத்தை புரிந்து கொள்வதிலுள்ள இடர்பாடு
1) ஒரு முறை விவேகானந்தர், இராமகிருஸ்ண பரமஹம்சரி டம் கேட்டார் நீங்கள் கடவுளைக் கண்டீர்களா?" அதற்கு இராமகிருஸ்ணர் கடவுளைக் கண்டு கொண்டிருக்கிறேன். இந்தக் கணத்தில் கூட" என்றார்.
விவேகானந்தர் கேட்டார் "எந்த உருவில்?" அதறகு இராமகிருஸ்ணர் "உன்னுடைய இதே உருவில்" என்று சொல்லி தனது சீடர்களைக் காட்டி இந்த பரமானந்தர் அந்த நித்தியானந்தர் எல்லோரும் கடவுளின் உருவங்கள் தான். நான் உங்கள் எல்லோரின் உருவிலும் கடவுளைக் காண்கி றேன் என்றார். அந்த வார்த்தைகளின் தாற்பரியத்தை கிரகித்துக் கொள்ள முடியாத விவேகானந்தர் திரும்பவும் கேட்டார் சுவாமி நாங்கள் இறந்து போபவர்கள். நீங்கள் எப்படி எங்களைத் தெய்வீகம் என்று கருதிக் கொள்ளலாம்? அதற்கு இராமகிருஸ்ணர் சொன்னார் அடே முட்டாள் மனிதனே நீ ஒவ்வொருவரையும் உடம்பை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் பார்க்கிறாய். ஆனால் நான் ஒவ்வொருவரையும் ஆத்மாவை மையமாகக் கொண்டு பார்க்கிறேன். ஆகையால் எனக்கு எல்லாமே தெய்வீகமாகத் தெரிகிறது.
உடம்பை மையமாக வைத்துப் பார்ப்பதை விடுத்து ஆத்மாவை (தெய்வீகத்தை) மையமாக வைத்துப் பார்க்கும் பொழுது நீ உன்னிலேயே கடவுளைக் காண்பாய். உனது பார்வையிலேதான் (திருஸ்டி) பிழை உள்ளது. சிருஸ்டியில் அல்ல. நீ காணும் தவறுகள் எல்லாம் உன்னில் உள்ள பிரதிபலிப்பு, எதிரொலி, தாக்கம். மாம்பழத்தை உண்டால் உன் ஏவறையிலும் மாம்பழம்தான் இருக்கும். வேறு

பழத்தின் ஏவறை வரமாட்டாது. அதே போல் நீ வெளியில் காண்பது எல்லாம் உன்னுள் உள்ளதன் பிரதிபலிப்பு. ஆகவே உன்னிலே தெய்வீக உணர்வுகளை வளர்த்துக் கொள். அப்பொழுதுதான் தெய்வீகம் என்ற உண்மையைக் காணமுடியும்.
(22.10.2002 த.பேருரை)
I)ஒரு முறை நரேந்திரன் (சுவாமி விவேகானந்தர்) ரீராமகிருஸ்ணரிடம் கேட்டார் சுவாமி நீங்கள் கடவுளைக் காணலாம் என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் நாங்கள் ஏன் கடவுளைக் காண முடியவில்லை"
பகவான் இராமகிருஸ்ணர் அவருக்கு நேரடியான ஒரு பதிலைக் கொடுத்தார். 'மகனே மனிதர்கள் மனைவிக்கும், கணவனுக்கும், மக்களுக்கும், குடும்பத்திற் கும், தங்களுடைய உடமைகளுக்கும் என்று அழுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு துளி கண்ணிரைத்தானும் கடவுளுக் கென்று சிந்தியிருக்கிறார்களா? ஒருவன் பரிபூரணமான இதயத்துடன் கடவுளுக்காக கண்ணிர் சிந்துவானாயின் கடவுள் அவனுக்கு பிரத்தியட்சமாவார்"என்றார்.
கடவுளைக்கான வேண்டுமென்ற திடமான தீர்மா னத்தை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். மனிதர்கள் சந்தேகம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். உடற்பற்றின காரணமாக சந்தேகங்கள் எழுகின்றன. உடற்பற்று இருக்கும் வரை கடவுட்பற்றுத் தோன்றாது. சந்தேகமுள்ளவர்கள் முன் கடவுள் தோன்றமாட்டார். ஆனபடியால் எந்தச் சூழ்நிலையி லும் சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். இந்த ஒரு சாதனையை மட்டும் நீங்கள் செய்யவேண்டும். இந்த சாதனையுடன் கடவுள் உங்களின் முன்பு பிரத்தியட்ச шот6штії.

Page 23
I)'தெய்வம் மனுச ரூபேன". (கடவுள் மனித உருவில் வருகிறார்) இருந்தும் மனிதனால் தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மனிதன் கடவுளிலிருந்துதான் உற்பத்தியானவன். (ஏகோஹம்,பஹஸ்யாம்- ஒன்றான நான் என்னைப் பலவாக்கிக் கொண்டேன்.) அப்படியிருக்கும் பொழுது ஏன் மனிதன் தெய்வீகத்திலிருந்து வேறான்வனாகத் தன்னைக் கருதிக் கொள்ள வேண்டும். கடவுள் உங்களின் தந்தை. அவருடைய தத்துவம் உங்களில் பாய்ந்து கொண்டி ருக்கிறது. அந்த உண்மையைப் புரிந்து கொள்கின்ற ஒருவன் தன்னைக் கடவுளிலிருந்து வேறுபடுத்தமாட்டான்.
(22.10.2002 த.ச.சா அருளுரை)
IV)உன்னுடைய கடமை பூரணமான முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியதே. வெற்றியையும், தோல்வியையும், கடவுளின் கையில் விட்டுவிடு. வெற்றியைப் பெறுவதற்கு நீ உன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும். கேட்காமல் உன்னுடைய தாயும் உனக்கு உணவு தரமாட்டாள். கதவைத் தட்டாவிட்டால் கதவு திறக்கப்படமாட்டாது. கேள் உணவு கிடைக்கும். தட்டு கதவு திறக்கப்படும். அதே போல நீ விடுதலைப்படவும் கடவுளின் அருளுக்கு பிரார்த்திக்க வேண்டும்.
இன்று கடவுளே அவனுக்கு அருகில் வந்தாலும் மனிதன் கடவுளிடமிருந்து தூரப் போகிறான். இதைவிட ஒரு துர்அதிர்ஸ்டமோ, பாவமோ இருக்க முடியாது. திறமையைப் பெற்றுக் கொள் கடவுளுக்கு அருகே இருந்து கொள். (சகல விதத்திலும்). உப நிடதங்கள் மனிதனுக்கு இப்படிப் புத்தி கூறுகின்றன. எழுவாய், விழிப்பாய், கருதிய கருமம் கை கூடும் வரை நிறுத்திக் கொள்ளதே.

மனிதன் அஞ்ஞானத்திலிருந்து அறியாமையிலிருந்து விழித்துக் கொண்டு (திருப்பள்ளியெழுச்சி) பிரக்ஞானம் என்ற சூரியனை (பேருணர்வை- Consciousness) தரிசிக்க வேண்டும். இது தான் ஒவ்வொரு உபநிடதங் களினுடைய போதனையுமாகும். இந்த அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும் போதுதான் உண்மையை உணர்ந்து, புரிந்து அனுபவிக்க
லாம்.
(22.10.2001 அருளுரை)
உங்களுக்கே உரியவன்
நீங்கள் எத்தனையோ முறை என்னிடம் வந்திருக்கலாம். எத்தனையோ முறை எனது வார்த்தைகளைக் கேட்டிருக்கலாம். ஆனால் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாது, நடைமுறைப் படுத்தாது, நம்பிக்கை வைக்காது இருந்தால் எனக்கும் உங்களுக்கும் ஒருவித தொடர்பும் இராது. இதை நான் உங்கள் நலத்திற்கு என்று சொல்கிறேன். எனது வார்த்தைகளை ஏற்று அவற்றை நடைமுறைப் படுத்தினால் நான் என்றும் உங்களுக்கே உரியவன்.

Page 24
03. தெய்வீகத்தை விளங்கிக் கொள்ளும் முறை
I)எந்தப் பெயரில் என்றாலும், எந்த உருவில் என்றாலும் வழிபடப்படும் தெய்வீகம் ஒன்றே ஒன்று என்ற உண்மையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று தன்னைப் பலவாக்கிக் கொள்ள சங்கல்பித்தது.
"ஏகோஹம் பஹரஸ்யாம்". கடவுள் ஒன்று அதை அறிந்தவர்கள் பலவிதமாகச் சொல்லியுள்ளார்கள். "ஏகம் சத் விப்ரா பஹரீதா வதந்தி". பார்ப்பவர்களின் கற்பனைதான் ஒன்றான தெய்வீகத்தைப் பலவாகக் காட்டுகிறது. சூரியன் ஒன்று மட்டும்தான் ஆனால் அதன் பிரதிபலிப்பு பலவித பாத்திரங்களில் காணப்படுகிறது. அதேபோல கடவுளும் வெவ்வேறு உயிர்களின் இதயங்களில் பலவிதமான வடிவங்களில் பலவிதமான தன்மைகளில் உறைகின்றார்.
(Ess Oct97 L 262)
I)தன்னுடைய உள்ளுறை (தெய்வீக) அன்பின் தன்மையை வெளிப்படுத்த வேண்டிய மனிதன் கல்லாக இறுகிப் போன இதயம் உள்ளவனாக மாறிவிட்டான். அவனது ஆசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் பொறுமை, கருணை, அன்பு இவைகளை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். அத்தோடு பாபகரமான செயல்களைச் செய்யக்கூடாது. மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதனால் உனது ஆசை நிறைவேற்றுப்படமாட்டாது. பொறாமை, பெருமை, ஆடம் பரம் இவைகளால் நீ நிறைந்திருக்கும் போது கடவுளைத் திருப்திப்படுத்த முடியாது. தூய மாசுபடாத அன்புக்குத் தான் கடவுள் பதிலளிப்பாரே தவிர பணத்துக்கும், பதவிக்கும் அல்ல.
(Ess Oct97 u u...267)

I)எத்தனையோ பேர் கடவுளைக் காண வேண்டுமென்று அலைகின்றனர். இது என்ன பைத்தியக்காரத்தனமான கோரிக்கை. அவர்கள் பார்க்கும் எல்லாவற்றிலும் கடவுள் இருப்பதை அவர்கள் உணரவில்லை. அனைவரும் இறைவனின் வடிவங்களே. பிறகு எப்படி இறைவனைக் காண வேண்டும் என்று விரும்புகிறாய்? வேதங்களும் இதையே தான் சொல்கின்றன. "காண்பதெல்லாம் கடவுள் வடிவம் என்று இருக்கையில் கடவுளைத் தேடி அலைவதென்ன மூடனே" என்று உரைக்கின்றன. அனைத்தும் தெய்வ சொரூபமாக இருப்பதால் "அஹம்ப்ரம்மாஸ்மி" என்ற தத்துவத்தை உணர முயற்சிக்க வேண்டும். ஆனால் "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பதுடன் முடிவதில்லை.
மற்றொன்று உண்டு பகவத் கீதையில் "மமாத்மா சர்வ பூத அந்தராத்மா" என்று கூறப்பட்டிருக்கிறது. என்னுடைய ஆத்மாவே எல்லா பூதங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆகவே அனைவரிடமும் நிறைந்திருப்பது பகவானது ஆத்மாவே எனப் புரிகிறது. ஆத்மா ஒன்றுதான் இரண்டல்ல. ஆகவே எல்லோரிடமும் நிறைந்திருக்கும் ஆத்மா தெய்வ தத்துவம் என உணர்ந்து கொள். அப்போதுதான் மாணவத்வம் பூரணத்துவம் அடையும்.
(த.ச.சா ஒக்97 ப6) IV)உண்மையான ஆத்மீகம் உள்ளது ஒன்று என்ற ஒருமை உணர்வைப் பெறுவதுதான். உடம்புப் பற்றை விடும் பொழுதுதான் இந்த ஒருமை உணர்வு உண்டாகும். இந்த உடல் பற்றை விடுவது மிகவும் கடினமானது என்று மக்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். அது அப்படி அல்ல. நீங்கள் நான் ஆத்மா என்ற திட்டவட்டமான உறுதியான உணர்வை அபிவிருத்தி செய்தால் உடல் பற்றை விடுவது மிகவும் சுலபமாகும். மக்கள் இந்த உணர்வை
= 35 =

Page 25
பொதுவாகவே அபிவிருத்தி செய்தால் மனித இனத்தில் பெரிய, உயரிய, மாற்றம் ஏற்படும். அமைதி, சாந்தி என்பது தனிமனிதனிலிருந்து தொடங்கி குடும்பம், சமுகம், நாடு, உலகம் என்று பரவ வேண்டும். மறுபக்கமாக அல்ல.
(Ess Nov97 p289)
IV)தனிப்பட்ட ஒருவனுடைய தன்மைதான் இந்தப் பிரபஞ்சத்தின் தன்மை என்றும், சிவன் தான் தனிப்பட்ட ஒருவனுடைய தன்மை என்றும் அறிந்தவன்தான் பரிபூரண மான உண்மை அறிந்தவன் (ஞானி). இந்தப் பிரபஞ்சம் உயர்ந்த பரிபூரணமான ஒன்று என்பதே அர்த்தமாகும். இந்த ஒன்று என்ற விடயத்தை விளங்கிக் கொள்வது தான் உயரிய ஞானமாகும்.
(Ess Nov97 L 292)
0 சித்த மலம் அறுவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
• சிந்தை தனைத் தெளிவித்து சிவம் ஆக்கி எனை ஆண்ட
(திருவாசகம்)
VI) கடவுள் எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரவி இருந்தாலும் எங்களிடையே சில விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். நாங்கள் வானவெளி முழுக்கத் தேடிவிட்டோம். அவரை நாங்கள் சந்திரனில் தேடிவிட்டோம். இல்லை. அவர் ஒரு இடமும் காணக்கிடைக்கவில்லை. அவர் இல்லவே இல்லை.
எங்கே தேடுவது எதைத் தேடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தும் அவர்கள் தங்கள் அகம்பாவத் தால் கடவுளைக் காணவில்லை என்று உறுதிப்படுத்து கிறார்கள். ஒரு அடையாளப்படுத்தக்கூடிய உடலில் அல்லது

உருவத்தில் உறைபவரா கடவுள்? அவருக்கு பாரம்பரிய மான உறையும் இடம் அல்லது குடியிருப்பு உண்டா?
இதெல்லாம் கடவுள். இதற்கு அப்பாலும் கடவுள். இதெல்லாவற்றிலும் அவர் இருக்கிறார். இதற்கு அப்பாலும் அவர் இருக்கிறார். அவரை மறுக்கின்ற அந்த விஞ்ஞானியின் உள்ளிருந்து அவரை இயக்குபவர் அவர். மனிதன் அவனே கடவுள். எல்லாப் பொருட்களும், சந்திரனில் இருப்பது கூட தெய்வீகத்திலிருந்து உண்டாகி தெய்வீகமாக இருக்கும் தெய்வீகத்தின் பிரசன்னம். விஞ்ஞான கூடத்திலுள்ள உபகரணங்களைக் கொண்டு கடவுளைத் தேடுவது வயிற்றி லுள்ள உபாதைக்கு, கண்ணில் மருந்துத் துளி விடுவதைப் போன்றது. ஆத்மீக விஞ்ஞானத்தில் முன்னேறிய ஞானிகள் இதற்கான நுட்பத்தை வளர்த்துள்ளார்கள். அதைப்பற்றிச் சொல்லியுள்ளார்கள்.
1. பற்றின்மை அன்பு என்பவற்றினூடாக தெளிவான, பார்வையுள்ள கண்களோடு உன்னை ஆயத்தப் படுத்து.
i. தப்பான எண்ணங்களில்லாத, பாரபட்சம் இல்லாத பகுத்தறியும் தன்மையுள்ள புலன்களைக் கூர்மை யாக்கு. அப்பொழுது நீ கடவுளை உன்னிலும், உன் னைச் சுற்றிவரவும் நீ காண்கின்ற உணர்கின்ற எல்லாவற்றிலும் காணலாம்.
VI)கடவுள் சர்வவியாபி. என்னுடைய முன்னிலையில் இல்லாமல் தூரத்தில் இருக்கும்பொழுது வேறு விதமாக நடந்து கொள்ளாதீர்கள். எப்பொழுதும், எங்கிருந்தாலும் எனது முன்னிலையிலேயே இருப்பதான உணர்வை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சின்ன வேலையைச்

Page 26
செய்கின்ற பொழுதும் கூட மிகவும் விழிப்போடு ஈடுபடுங் கள். உங்கள் இதயத்தின் ஆழத்திலும், வெளியிலும் அமைதியைக் கடைப்பிடியுங்கள். கடவுளின் கைகளும், கால்களும் எங்கும் உள்ளது என்று கீதை சொல்கிறது. வேறு சப்தங்களின் குறுக்கீடு இல்லாத பொழுதுதான் நீங்கள் கடவுளின் காலடி ஓசையைக் கேட்கமுடியும். கடவுள் தனது அளப்பெறும் கருணையினால் பக்தன் விரும்பும் உருவை எடுத்துக் கொள்கிறார். அவர் தூய்மை. அவர் உயர்ந்த ஞானம். அவர் எப்பொழுதும் சுதந்திரமானவர். எப்பொழுதும் கருணையுள்ளவர். கடவுளைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள். எங்கும் எதிலும் அவரைப் பார்த்து எல்லா உயிர் களுக்கும் சேவை செய்.
VI)ஒரு பக்தன் கடவுளைக் கேட்டான் "நீங்கள் என்னில் இருப்பதாகச் சொல்கிறீர்கள். எனக்கு மேல் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அது எப்படி நீங்கள் என்னைப் பாதுகாக்காமல் இருக்கிறீர்கள்"
கடவுள் சொன்னார்:
"நான் எப்பொழுதும் உன்னோடு இருக்கிறேன்
உன்னைச் சுற்றிவர இருக்கிறேன். என்னை வெளியில்
தேடாதே".
பக்தன் கேட்டான்
"நீங்கள் உண்மையாகவே எனக்குப் பின்னால்
இருக்கிறீர்களா?"
கடவுள் பதிலளித்தார்
"உனது உடம்பு எனது நிழல்தான்"

கடவுள் இருக்கிறாரா என்று திரும்பிப் பார்த்த பக்தன் அவரைக் காணவில்லை. அப்பொழுது கடவுளைக் கேட்டான்.
"நீங்கள் உண்மையைக் கதைக்கிறீர்களா? நான் உங்களைக் காணவில்லை".
கடவுள் பதிலளித்தார்
"நீ பின்னுக்குத் திரும்புகிற பொழுது நானும் உனக்குப் பின்னால் வரவேண்டும். அப்படியானால் நீ என்னைப் பார்க்க முடியவில்லை" உன்னால் உண்மையை விளங்கிக் கொள்ள முடியவில்லை. கதிரைக்கு முன்னால் நீ நிற்பதாக வைத்துக் கொண்டால் அந்தக் கதிரை உனக்கு முன்னால் இருக்கிறது. (அப்பொழுது) நீ உன்னைச் சுற்றித் திரும்புகிறபொழுது கதிரை உனக்குப் பின்னால் வருகிறது. "கடவுள் உன்னுடைய உணர்வுகளுக்குத் தக்கபடி தன்னை பிரத்தியட்சமாக்குகிறார்".
நீ பிரார்த்திக்கும் பொழுது என்னுடைய பிரார்த்தனை யைக் கேட்கவில்லையா? என்றால் நீ அவரை காதாக இருந்து உனது பிரார்த்தனைகளைக் கேட்பதாக உருவகிக்கி றாய். என்னுடைய வருத்தங்களைப் பார்க்கவில்லையா? என்று பிரார்த்திக்கும் பொழுது கண்ணை மட்டும் பார்க்கி றாய். என்னோடு இருக்கக்கூடாதா? என்று பிரார்த்திக்கும் பொழுது அவருடைய காலடி ஓசையைக் கேட்கிறாய். நீ பூரண அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். பழைய ஞானிகள் கடவுளின் குரலான பிரணவத்தைக் கேட்க தங்கள் நேரத்தை ஒதுக்கி இருந்தார்கள். இப்பொழுது நீ இதை அனுபவிக்கலாம். காதுகளை மெதுவாக முடு "ஓம்" என்ற சப்தம் உள்ளிருந்து வருவதைக் கேட்பாய்.

Page 27
கடவுள் பிரகடனப்படுத்துகிறார். ஓ பக்தனே ஊனக் கண்ணால் காண்கிறாய். காது மடல்களால் கேட்கிறாய். பூரண அமைதியில் இருந்து கொள். கடவுளின் காலடி ஓசையைக் கேட்பாய். பெரிய பக்தர்களால் இப்படிப்பட்ட தூய்மையான பாதைகள் காட்டப்பட்டுள்ளன. இதை அறிந்து
கொள்ளாதவன் அறியாமையில் இருக்கிறான்.
(Ess Sep 98 p.232)
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
கடவுளை நெருங்குவதற்கு நீங்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் பொழுதும் கடவுள் உங்களை நோக்கிப் பத்து அடி எடுத்து வைக்கிறார்
இந்த யாத்திரையில் தங்கும் மடங்கள் இல்லை. நாளிலும் பொழுதிலும், இறப்பிலும், பிறப்பிலும், மாதாவின் மடியிலும், மரணத்தின் முடிவிலும் நடைபெறும் தொடர்ந்த யாத்திரை பாதை முடிந்ததும், இலக்கை அடைந்ததும் தன்னிலி ருந்து தனக்கே பிரயாணம் செய்ததை யாத்திரிகள் உணர்கிறான். அந்த நீண்ட ஏகாந்தமான பாதை யில் தன்னை வழி நடத்திச் சென்ற கடவுள் எப்பொழுதும் தன்னைச் சுற்றி தன்னுடன், தன்பக்கத்தில் தன்னுள்ளேயே இருந்ததை உணர் கிறான்.
 

04. தெய்வீகத்தை தெரிந்து கொள்ளும் நிலை
1)வெளியுலகில் காண்கின்ற எல்லாமே தெய்வீகத்தின் வெளிப்பாடு. சரியான பார்வை இல்லாததால் மனிதன் இதனை உணர்ந்து கொள்ளத் தவறி விடுகிறான். (பஸ்ய னாப்பி ச ந பஸ்யதி மூடோ) கண்ணால் கண்டு கொண்டும் உண்மையை உணர்ந்து கொள்ளாதவன் ஒரு முடன். இந்த உலகில் மனிதன் காண்பது, செய்வது, அனுபவிப்பது தெய்வீகம்தான் ஆனால் மனிதனால் இந்த தெய்வீகத்தைக் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. கடவுளுக்கு ஒரு மேன்மையோ, வேறுபாடோ இல்லை. இவருக்கு செய்வது இது, செய்யக்கூடாதது இது என்று எவரும் நிபந்தனை விதிக்க முடியாது. எல்லாவற்றிலும் அவர் உள்ளபடியால், எல்லாமாகவும் அவர் உள்ளபடியால் அவரால் எதுவும் செய்ய முடியும். அவருக்கு மேற்பட்ட ஒரு தலைவன் இல்லை.
ஒருவன் அவரை தன் மனக் கண்முன் தோற்றுவிக்க முனைவதாயின் எல்லாவிதத்திலும் தன்னிலும் பார்க்க மேம்பட்ட ஒரு மனித உயிரில்தான் அவரைப் பார்க்க (ԼpւգԱյլb.
(ஐந்துானாம் நரஜன்ம துர்லபம்) எல்லாப் பிறவிகளிலும் மனிதப் பிறவியே அரியது. (அரிது அரிது மானிடராகப் பிறத்தலரிது)
(தெய்வம் மனுச ரூபேன) கடவுள் மனித உருவை எடுக்கின்றார்.
ஆரம்பத்திற்கு ஒரு மனிதன், மனிதனின் இயற்கைத் தன்மையைத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாப் புனித 41 =

Page 28
கிரந்தங்களும் கடவுள் மனித உருவில் இருக்கிறார் என வர்ணிக்கின்றன. ஆனால் இது கடவுள் மனித உருவத்திற்கு மட்டும் மட்டுப்பட்டுள்ளார் என்று கருதவில்லை. எல்லா உருவங்களும் அவருடையதே. எப்படி இருந்தாலும் கடவுளை மனித உருவில் தவிர வேறு எந்த உருவிலும் மனக்கண் முன் நிறுத்திக் கொள்ள முடியாது.
(Ess Nov2001 P339)
I) தவிர்க்க முடியாதபடி அடிப்படையில் எல்லோரும் தெய்வீகமானவர்களே. ஐம்பூதங்களை நாங்கள் எங்கே பார்த்தாலும் அங்கே தெய்வீகம் இருக்கிறது. மனிதன் ஐம்பூதங்களால் ஆனவன் என்றபடியால் அவன் நிச்சயமா கவே கடவுள் தான். கடவுளுக்கு வெவ்வேறு உருவத்தை மனிதர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள். இங்கே நாங்கள் தட்சணா மூர்த்தியினுடைய ஒரு சிலையை வைத்திருக் கிறோம். இந்த உருவம் உங்கள் மனதின் கண் தோற்று விக்கப்பட்ட கற்பனையே தவிர வேறோன்றுமில்லை. உண்மை இது அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் உருவமாகவும் இருக்கும் கடவுளை எப்படி உன் மனதின்கண் கொண்டு வருவது?
விஸ்வா என்பது கடவுளின் ஒரு பெயர். விஸ்வா என்பதன் கருத்து என்ன? மட்டுப்படுத்த முடியாத உருவங்களுள்ள, வடிவுகளுள்ள, பொருட்களான, அதன் அங்கங்களான ஒன்றுதான் விஸ்வா. விஸ்வா என்ற இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களாலானது. ஆகையால் இதுவும் (மனித உடலும்) விஸ்வா தான்.
(சஹஸ்ர சீர்ஷா புருஷசகஸ்ராக்ஸ் சகஸ்ரபாத்) ஆயிரம் தலைகள், கண்கள், கால்கள், உள்ளவர் கடவுள். அதாவது எல்லாத் தலைகளும், எல்லாக்கைகளும், எல்லா இதயங் களும் (Head,HandHeart-3HV) அவருடையது தான் (அவரு

டையது மட்டுந்தான்) என்பதை இது குறிக்கிறது. இந்த உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியாமல் தன்னை ஒரு சாதாரண உயிராக நினைத்து மனிதன் உடல் பற்றை (மட்டும்) வளர்த்துக் கொள்கிறான்.
நீஉருவில் தான் மனிதன் ஆனால் நீதெய்வீகத்தின் திரு உருவம்" ஆகவே நீ கடவுள் என்பதில் திடமான நம்பிக்கையை வைத்துக் கொள். நீ கடவுளைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்ற நாலு மகா வாக்கியங்களில் உள்ள உண்மையில் முழு நம்பிக்கையை வைத்துக் கொள்.
இங்கே ஒரு சின்ன உதாரணம். இது என்னுடைய கைக்குட்டை என்று நீ சொல்லும் பொழுது, நீ கைக்குட்டையி லிருந்து வேறானவன் என்றாகிறது. அதே போல இது எனது உடம்பு, இது எனது மனம், இது எனது புத்தி, இது எனது சித்தம் என்று இப்படியெல்லாம் நீ சொல்லும் பொழுது இவையெல்லாவற்றிலும் இருந்து நீ வேறானவன் என்றாகி றது. அப்படி என்றால் நீ யார்?
"இந்தக் கேள்வியை உனக்குள்ளேயே கேட்டுக் கொள்"
இவையெல்லாம் ஒரு கருவிகள் மட்டுமே. நீ இதன் தலைவன்.
இந்த உண்மையை ஒரு முறை (உண்மையாக) உணர்ந்து கொண்டால் நீ இவற்றையெல்லாம் தாண்டிச்
சென்று விடலாம்.
(Ess Nov2001 P341)
I)கடவுளின் சங்கல்பத்தை யாராலும் சரியாகக் கிரகித்துக் கொள்ள முடியாது. தெய்வ சங்கல்பத்தைப் புரிந்து கொள்ள

Page 29
முடியாமல் யதார்த்தத்தை (உண்மையை) மறந்து கஷ்டத்தில் (அனர்த்தத்தில்) வீழ்ந்து விடுகிறான். பதார்த்தம் என்ற உலகப் பொருட்களால் அடித்துச் செல்லப்பட்டு பரார்த்தத்தை (தெய்வீகம்) உதாசீனம் செய்து விடுகிறான். பரார்த்தம் அடிப்படையானது. மற்ற எல்லாம் பெளதீக உலகைக் குறிப்பது. பெளதீக உலகில் உன்னுடைய நம்பிக்கையை வைத்துக் கொள்ளாதே. ஆனால் இந்த வாழ்க்கை என்ற நாடகத்தில் உன்னுடைய பங்கை நீ நன்றாக ஆற்ற வேண்டும்.
அந்த அளவுக்கு நீ இந்த உலகை மனத்துள் வைத்துக் கொள்ளலாம். கடவுளில் உனக்குத் திடமான விசுவாசம் இருந்தால் எங்குமுள்ள தெய்வீகத்தை சரியாகப் புரிந்து கொள்வாய். எந்த நினைவும் உன் மனதில் இடம்பெறாது. ஐம்பூதங்களின் தத்துவத்தை ஒருமுறை புரிந்து கொண்டாயானால் தெய்வீகத்தை உன்னால் புரிந்து கொள்ள
(1Քւգալb.
(Ess Nov2001 P342)
IV)எல்லாவற்றிற்கும் முதலில் கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட உருவம் தான் உள்ளது என்ற எண்ணத்தை விட்டு விட வேண்டும். அவருக்குக் கற்பிக்கப்படும் எல்லா உருவங் களும் மனிதனுடைய சொந்தப்படைப்பும், கற்பனையுமாகும். கடவுள் தனது நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, பத்மம் இருப்பதாக விபரிக்கப்படுகிறது. கடவுள் உண்மை யாகவே நான்கு கைகளுடன் பிறந்தால் மக்கள் அவரைப் பொருட்காட்சிச்சாலையில்தான் போடுவார்கள். கடவுள் இந்த அடையாளச் சின்னங்களை வைத்திருப்பதன் உள் அர்த்தம் என்ன?
சங்கு ஒலியைக் குறிக்கிறது. சக்கரம் காலச் சுழற்சியைக் குறிக்கிறது. கதை பலத்தைக் குறிக்கிறது. தாமரை இதயத்தைக் குறிக்கிறது.

கடவுள் ஒலி, காலம், பலம், இதயம் ஆகியவற்றின் தலைவன் என்பதை உங்களுக்கு உணர்த்தவே இந்த அடையாளச் சின்னங்களை வைத்திருக்கிறார். கடவுளின் எல்லா உருவங்களிலும் மனித உருவமே மிகச் சிறப்பு வாய்ந்தது. கடவுள் மனித உருவில் அவதரிக்கிறார். நீங்கள் தெய்வீகத் திருஉருவம் என்பதில் முழு நம்பிக்கை
வைத்திருக்க வேண்டும்.
(Ess Nov2001 P343)
V) ஒவ்வொரு அனுவும் தெய்வீகத்தினால் ஊடுருவப்பட்டு வியாபிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெய்வீகத்தை ஏற்றுக் கொள்வது. (உனக்குக்) கடினமாக உள்ளது. அதே போல் இது தெய்வீகம் அது தெய்வீகம் அல்ல என்றும் (உன்னால்) சொல்ல முடியாதுள்ளது. ஒளிக்கதிர்கள் சூரியனிலிருந்து வெளிப்படுவதைப் போல இயற்கையும் கடவுளிடமிருந்து ஆரம்பமானது. இயற்கை என்பது பலம், சக்தி இவற்றின் கொள்கலன். கடவுளின் படைப்பான இயற்கைக்கே இவ்வளவு சக்தி இருக்குமானால் கடவுளின் அளவிட முடியாத சக்தியை நீ கணக்கிட்டுப் பார்க்கவேண்டும். தெய்வீகத்தின் தொழிற்பாடு ஆச்சரியமானது என்று சொல்லப்படுகிறது.
(Ess 2000 P195)
அன்பின் வடிவங்களே அஞ்ஞானத்தை விட்டு விலகுங்கள்.உங்களினுள் ஞானதீபத்தினை
ஏற்றுங்கள். முடிவாக தெய்வீகத்துடன் ஐக்கிய
மாகுங்கள். இதுதான் சுவாமி உங்களுக்குத் தரும் இன்றைய அருட் செய்தி

Page 30
05. தெய்வீகத்தை அடையும் வழி
1) "மனிதர்கள் பல்வேறு சாதனைகளைச் செய்கிறார்கள். ஆனால் அந்தச் சாதனைகள் ஊடாக அவர்கள் கடவுளை அடைய முடியாது." சரியான பாதையைக் காட்டுபவர்கள் ஒருவரும் இல்லாதபடியால் இன்றைய மனிதன் இந்த உண்மையை உணர முடியாமல் இருக்கிறான். இந்தப் பாதைகள் எதுவும் கடவுளை அடைய ஒருவனுக்கு உதவி செய்யமாட்டாது. கடவுளை எப்படி அடைவது? கடவுள் உன்மீது அன்பைச் சொரிவது போல, உன்னுடைய அன்பை (தேடிப்பிடித்து) மற்ற எல்லாருடனும் நீ பகிர்ந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தைக் கொண்டுள்ள எல்லோர் மீதும் கடவுள் தனது அருளைப் பொழிகிறார். எல்லோருடனும் இங்கே உள்ளது ஒன்று என்ற தன்மையை அனுசரித்து உனது அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால்தான் நீ கடவுளை அடைய முடியும். கடவுளை அடைவதென்பது கடவுள் உன்னிலிருந்து வேறானவர் என்பதைக் குறிக்கவில்லை. அவர் உன்னிலிருந்தே பிரத்தியட்சமாவார். பிரதிபலிப்பு, எதிரொலி, தாக்கம் வெளியில் தான். ஆனால் நிதர்சனம் உள்ளே தான். அது தான் மூலாதாரமான அடிப்படை. இதை ஒருவரும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தெய்வீக கட்டளை களின் படி நடந்து கொள். அப்படியென்றால் நீ நிச்சயமாக தெய்வீகத்தை அடைந்து விடலாம்.
(அருளுரை 23.10.2001)
I)"இராவணன், பஸ்மாகரன், கம்ஸன் என்பவர்கள் பாண்டித்தியத்திலோ, சமய ஆசாரங்களிலோ குறைந்தவர் களல்ல." ஆனால் இவைகளெல்லாம் வெளியில் செய்யப்

பட்டவை. (பிரவிருத்தி) உள்ளுறையும் தன்மைகள் வளர்க் கப்படவில்லை (நிவிருத்தி) (உள்ளுறை தெய்வீகம் வெளிக் கொணரப்படவில்லை) எனவே அவர்களின் அடிப்படையான அசுரக் குணங்கள் மாறவில்லை.
(ஆ.ச.சா செப்96 ப231)
I) "இன்று மனிதர்கள் தங்களின் தெரிவின்படி ராமர், கிருஷ்ணர், சிவன், சாய் என்று வணங்குகிறார்கள்." ஏன் இந்த வித்தியாசங்களை மனதில் வைத்திருக்க வேண்டும்? கடவுள் ஒருவரே. பெயரும், உருவமும் மன உணர்வின் (சுவையின்) வித்தியாசத்தைப் பொறுத்தது. ஆனால் தெய்வீகம் ஒன்று. உள்ளது ஒன்றுதான் என்ற ஆத்மீக உணர்வை அபிவிருத்தி செய்தீர்களானால் தெய்வீகத்தில் ஒன்றாகி விடுவீர்கள்.
மாணவர்களே!
கடவுளை உங்களிலிருந்து வேறானவர் என்று கருதாதீர்கள். கடவுளை வழிபட்டால் அவர் உங்கள் முன்னே தோன்றுவார் என்ற புத்திசுவாதினமுள்ள சித்தக் கோளாறான கருத்தை வைத்துக் கொள்ளாதீர் கள். உங்களையே அவருக்குக் கொடுங்கள். அடுத்த கணமே அவரை உங்களுக்குள் அனுபவிப்பீர்கள். வேறு ஒரு கடுமையான தவம் அங்கே தேவை யில்லை.
(ஆ.ச.சா ஒக்96 ப265)
IV) "இன்று பலவிதமான வெளிப்புற (உண்மையில்லாத, வேஷமான) (Ostensible) ஆத்மீகப் பயிற்சிகள் கடவுளை உணர்வதற்காக நடைமுறைப்படுத்துகின்றன." ஆனால் அவற்றை அப்படி மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
as 47 =

Page 31
மனிதப்பிறவி என்ற பிறப்பே தெய்வீகத்துக்கான அடை யாளம். இங்கு தேவையானது உள்ளுறை தெய்வீகத்தை உணர்ந்து அதன் அடிப்படையில் வாழ்வதே. கடவுள் எங்கே இருக்கிறார்? கோவில்களில் அல்ல. யாத்திரைத் தலங்களி லல்ல. வேறு இடங்களிலல்ல. அவர் ஒவ்வொருவரின் இதயத்திலும் உறைகிறார். தெய்வீகத்தை உன்னுள்ளே அனுபவிக்க வேண்டுமென்றால், மற்ற எல்லோரிலும் தெய்வீகத்தைப் பார்த்து அந்த உட்கருத்தின் அடிப்படையில் எல்லோருக்கும் சேவை செய்ய வேண்டும்.
(ஆ.ச.சா நவ96 ப285)
V)"மானிடக் கண்களுக்குப் புலப்படும் இந்த பெளதீக உலகு பிரபஞ்சத்தின் மிகப் பெரிய காட்சி அம்சம் உடையது? இது பூதாகாசம் எனப்படும்". இந்தப் பெளதீக அம்சம் சூக்கும அம்சமாகிய மனமாக இருக்கும் பொழுது அது பிரபஞ்சத்தின் சூக்கும அம்சமாக இருக்கிறது. இது சித்தாகாசம் எனப்படும். இந்த மன அம்சமானது இதயத்தின் நுண்மையான அம்சமாகும் போது பிரபஞ்சத்தின் காரண அம்சம் உங்களிடம் நிலை பெறுகிறது. இது சிதாகாசம் எனப்படும். இப்போது பெரியவற்றிற்கெல்லாம் பெரியதாக, இவையனைத்திற்கும் அதீதமாகத் திகழும் எல்லையற்ற இறைவன் சிறியவற்றிலெல்லாம் சிறியதாக வடிவமெடுத்து பத்தனின் இதயமான சிதாகாசத்தில் தன்னை எழுந்தருளு விக்கிறார். இத்தகைய எல்லையற்ற, பரந்து, விரிந்த, ஆற்றல் மிகு இறைவன் சிறியவற்றிலெல்லாம் சிறியதாக வடிவமெடுத்து பக்தனின் இதயத்தில் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொள்கிறார் என்ற அற்புதமான உண்மை இதில் இருக்கிறது.

சுருக்கம்- ஒருமுறை நாரதரிடம் உலகில் பெரியது என்று நாராயணன் கேட்டபோது நிலம் என்றார், நீர் என்றார், பின் அகத்தியர் என்றார், பின்பு ஆகாசம் என்றார், இறுதியில் பகவான் என்று சொன்னபோது நாராயணன் கேட்டார் எல்லையற்ற இறைவனைத் தனது சொந்த இதயத்துக்குள் சிறைப்படுத்தும் பக்தனைப் பற்றி என்ன நினைக்கிறாய்? இப்போது சொல் நாரதா இதயத்துக்குள் (இறைவனை வைத்துப்) பூட்டிய பக்தன் பெரியவனா? பூட்டப்பட்ட பகவான் பெரியவரா? எனவே பகவானை விட பக்தனே பெரியவன். எனவே அனைத்துப் பொருள்களையும் விட ஏன் பகவானை யும் விடவும் முதன்மையான முக்கியத்துவம் பெறுபவன் பக்தனே. இறைவனையும் கட்டுப்படுத்தும் இப்படிப்பட்ட பிரமிப்பூட்டும் ஆற்றல் ஒவ்வொரு பக்தனுக்கும் கிட்டக் கூடியதாக இருக்கிறது. ஓர் ஆற்றலின் வீரியமும், அடர்த்தி யும் எப்படி இருப்பினும் அது மற்றொன்றுக்குக் கட்டுப்படு மாகில் எது அதைக் கட்டுப்படுத்துகின்றதோ அதுதான் மிக்க ஆற்றலுடையதாகக் கருதப்பட வேண்டும். வியப்பூட்டும் இறைவனின் ஆற்றல் அடியவரின் அன்பெனும் ஆற்றலுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கிறது. எனவே பக்தி வழியில் இறைவனைக் கட்டிப்போட்டு உங்கள் இதயத்துக்குள் அவரைப் பூட்டிவிட முடியும்.
(பா.கீபே பாகம்1 ப18-20)
i) நான் தெய்வாம்சம், தெய்வீகமான செயல்களில் ஈடுபடு கிறேனா? இல்லையா? தெய்வீகமான உள்ளுணர்வுகள் என்னில் எழுகின்றனவா? என் நடத்தை தெய்வீகமாக இருக்கின்றதா? என் செயல்கள் தெய்வீகமாக இருக்கின் றனவா? என நம்மை நாமே விசாரிக்கும் பொழுது நம்மை தெய்வீகமாக உணரமுடியும். நாம் தெய்வீகத்
தின் அம்சம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
(த.ச.சா ஜன98 ப11)
= 49 =

Page 32
i)எத்தனையோ வருடங்கள் கழிந்துவிட்டன. வருடங்கள் செல்லச் செல்ல நம் வயதுதான் அதிகரிக்கின்றது. ஆனால் நம் உள்ளுணர்வுகள் மட்டும் மாறுவதில்லை. உணர்வுகள் மேன்மையானதாக இல்லை. உள்ளுணர்வு கள் நல்ல முறையில் வளர வேண்டும். உன்னதமான சிந்தனைகள் ஞானத்துக்கு சமமாகின்றன. தூய எண்ணங்களின்றி ஞானம் எங்ங்ணம் கிடைக்கும். ஞானம் கிடைத்த பிறகு தான் கைவல்யம் என்ற (தெய்வீக pilo6) Liberation isol disapg5.
(த.ச.சா ஜன98 ப8)
VI)குணம்+அன்பு:நெருக்கம்+பின்பற்றுதல்=தெய்வத்துவம்
விருப்பு, வெறுப்பு, பயம் இவற்றை விலக்க வேண்டும். இவை மூன்றும் உலகியல் குணங்களாகும். ஆன்மீகத் தத்துவம் புரிவதற்கு இவை மூன்றிலிருந்து விலகுவது மட்டும் போதாது. குணங்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் ஆத்ம தத்துவத்தைப் புரிந்து கொள்வதென்பது இயலாத காரியம். மேஜைக்குக் குணங்களில்லை. ஆத்ம தத்துவத் தை இது புரிந்து கொள்ள முடியுமா? இந்தக் கூடாரத்துக்கு குணங்கள் ஏதும் இல்லை. ஆத்ம தத்துவத்தை இது புரிந்து கொள்ள முடியுமா? குணங்கள் இல்லாமல் இருப்பது மட்டும் போதாது. அன்பு உள்ளே இருத்தல் வேண்டும். கடவுளிடம் அன்பு வேண்டும். அன்பினால் மட்டும் ஆத்ம தத்துவம் புரிவது இயலாததாகும். கடவுளின் அருகில் செல்ல வேண்டும். அதுவும் போதாது கடவுளின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். இவை மூன்றும் ஒருங்கு சேரும் போதுதான் தெய்வத்துவம் நமக்கு விளங்கும்.
(அருளுரை 20.03.1993)

VI)சரீர மாத்யம் கலு தர்ம சாதகம் ஆகவே இவ்வுடலைக் கொண்டு தர்ம வழியில் நடக்க வேண்டும். அவ்வாறெனில் மனம், வாக்கு, காயம் இவற்றின் ஒற்றுமையே தர்மம். இந்த ஏகத்வம் என்ற ஒற்றுமையைக் கொண்டவரே திவ்யத்துவம் (தெய்வீகத் தன்மை) அடைந்தவராகக் கொள்ள முடியும்.
(த.ச.சா பெப்98 ப12)
VI)அன்புக்கு மூல காரணம் நம்பிக்கையே. நம்பிக்கைக்கு மூல காரணம் திவ்யமான சத்ய மார்க்கமே. சத்ய மார்க்கத்திற்கு மூலகாரணம் திவ்யத்துவமே. திவ்யத்துவம் சத்யமார்க்கத்தை இணைத்துக் கொண்டு உலகம் முழுவதையும் நம்பிக்கையோடு நோக்குகிறது. அனைவரும் சகோதரத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதனுள் ஒரு வகையான திவ்யத்துவம் பெருக வாய்ப்பு இருக்கிறது. அப்போதுதான் மானவத்வம் பிரகாசிக்கிறது. அனைவருக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
(த.ச.சா மார்ச்98 ப16)
IX)எல்லாச் செயல்களையும் இறைவனது திருப்திக்காகச் செய்கின்றேன் என்ற எண்ணத்தில் பரிபூரணமாகச் சமர்ப் பித்து விட வேண்டும். உன் கடமையைச் செய். எதையும் தியாகம் செய்ய வேண்டும் என்பது இல்லை. உன் தொழில், உத்தியோகம் என எதில் வேண்டுமானாலும் ஈடுபடு. ஆனால் எதைச் செய்த போதும் சர்வகர்ம பகவத் ப்ரீதியார்த்தம் (எல்லாச் செயலும் இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக) என்கிற நினைப்புடன் செயல்பட வேண்டும்.
(த.ச.சா ஏப்ரல்96 ப15)

Page 33
X)தெய்வீகத்தை நினைத்தால் மட்டும் போதாது தெய்வீகமான நடத்தை வேண்டும். எத்தனையோ படிக்கிறோம். எவ்வளவோ கேட்கிறோம். இவை அனைத்தும் வெறும் காலம் கடத்துவதற்கு என்று மட்டும் இல்லாமல் நடைமுறையில் கொண்டு வருவதற்காக என்றிருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் படிப்பதும், கேட்பதும் காலத்தை நகர்த்துவதற்காகவே செய்யப்படுகின்றன. இதிலிருந்து என்ன நன்மை விளைந்து விடப் போகின்றது. பழக்கத்தில் கொண்டு வரும் போது தான் இங்கோ, அங்கோ என்று சில நன்மைகள் விளைய வாய்ப்பு இருக்கிறது.
(த.ச.சா மே96 ப15)
XI)தெய்வீகம் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய ஒன்றா? இல்லை, இல்லை. உணர்ந்து, தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. எப்படி? உன்னிடம் இருக்கும் திய குணங்களை வெளியேற்றினால் தெய்வீகம் தானாக உள்ளே நுழைகிறது.
பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி
(சிவபுராணம்) ஏகம் ஏவா அத்விதியம் ப்ரம்மா. ஆகையால் தெய்வத்தைத் தேடிப் பெறுவதற்காக அநேகப் பிரயாசைகள் செய்ய வேண்டியதில்லை. அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைவரையும் நேசியுங்கள். கடவுள் எல்லோரிடமும் இருக்கிறார் என நம்புங்கள். ஆனால் உங்களின் இயல்பை தெய்வத்தின் இயல்புடன் ஒத்திருப்பதாக அமைத்துக் கொள்ளுங்கள்.
(த.ச.சா ஆகஸ்ட்96 ப16)
XI)எண்ணங்களைக் கவனியுங்கள்: உங்கள் வாழ்வின் முடி வான உண்மையை நீங்கள் உணர்ந்து ஆத்மக் கோட்பாட்டு ஆனந்தத்தில் நீங்கள் முழ்க விரும்பினால் உங்களுடைய ஆசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

ஓர் எண்ணம் எழின் அடுத்த நொடியே அந்த எண்ணத்தின் இயல்பை நீங்கள் ஆராய வேண்டும். உங்களை நீங்களே:-
இந்த எண்ணம் தேவைதானா?” "ஆத்மீக முன்னேற்றத்திற்கு இடையூறு செய்யக் கூடியதா?”
என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
(பா.கீபே.பா1 ப120)
XIII) கட்டுப்பாடுகளைக் கவனியுங்கள்.
* சாதாரண உடல் வெப்பநிலை 98.4F ஆகும். அது ஒரு டிகிரி கூடினாலும் நோய் ஆரம்பித்து விடும். அது சரியான அளவில் இருந்தால் தான் உடல் நலமாக இருப்பதாக கருதப்படும்.
அதைப் போலவே உங்கள் இரத்த அழுத்தமும் 120-80 என்ற அளவுப்படி இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் 150,190 என்று உயர்ந்தால் அது உடல் நல்ல நிலையில் இல்லை என்பதன் அடையாளம். அது ஒரு நோயைச் சுட்டுவதாகவும் இருக்கலாம்.
* அதைப் போல இதயத்துடிப்பும் 75ஐ அனுசரித்து இருக்க வேண்டும். துடிப்பு அதிகரித்தால் அதுவும் நோயின் அறிகுறிதான்.
: கண்களுக்கும் இந்த உண்மை பொருந்தும். அவற்றின் நலமான செயற்பாட்டிற்கு ஓர் ஒளி அளவு உள்ளது. ஒளி மிகப் பிரகாசமுடையதாக இருப்பின் கண்களால் காண முடியாது. அது கண்களைப் பாதிக்கும்.
* காதுகளுக்கும் இந்த அடிப்படை பொருந்தும். ஒரு குறிப்பிட்ட ஒலி எல்லையை மீறினால் விமானம், புகைவண்டி, ஒலிபெருக்கி முதலியவற்றால் காதுகளுக்கு இன்னல் ஏற்படும்.

Page 34
வாழ்க்கை ஒரு (எல்லைக்குட்பட்ட) லிமிட்டட் கம்பெனியைப் போல் இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்த லிமிட்டட் கம்பெனியுடன் நீங்கள் எல்லையற்ற வணிகத் தொடர்புகள் வைத்தால் எண்ணற்ற பாதிப்புக்களுக்கு
ஆளாக நேரிடலாம்.
(L IIT.a.03u1 u136)
XIV) உங்கள் இலக்கு: அதீதமான சிறப்புடைய ஒன்றை நீங்கள் அடைந்தாக வேண்டும். உங்களிடம் மறைந்தி ருக்கும் தெய்வீகத்தை உணர்ந்து கொள்வதற்காகவே இந்த வாழ்க்கை உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நிலையற்ற வற்றை விட்டு நீங்கி நிலையானவற்றை அடைவதே மனிதர்களின் முதன்மையான கடமையாகும். ஆனால் நீங்களோ இன்று அப்படிப்பட்ட அதீதமான இயல்புகளை அடையப் பாடுபடாமல் பற்றுமிக்க வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
(பா.கீபே 2 ப113)
XV)நீ நம்ப வேண்டும்; நீ இறைவனை உன் இதயத்தில் அமர்த்த வேண்டும். நீ கூட அமர வைக்க வேண்டாம். அவரே அமர்ந்து கொள்வார். அவர் உன் இதயத்தில் அமர்ந்திருக்கிறார் என்று நம்பினாலும் போதும். அந்த சத்தியத்தை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்களும் கூட தெய்வ வடிவமாவீர்கள்.
(25.5F.TIT g6072001 u11)

o6. தெய்வீகம் உணர்த்தும் உண்மை
1)இந்த எண்ணத்தை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு சாதாரண மனிதன் ஐந்து அல்ல. நான் தெய்வீகத்தின் திரு உருவமாகும். இந்தத் திடமான உறுதியை உங்கள் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். உங்களால் உண்மையை உணர முடியும். பிரம்மவித் பிரம்மைவ பவதி (பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகவே ஆகிறான்). உன்னை பிரம்மமாக நினைத்துக் கொண்டால் நீ பிரம்மமாகவே ஆகின்றாய். உன்னை நீ மனிதன் மட்டுமே என்று நினைத்தால் மனித ஜந்துவாகவே இருந்து கொள்வாய். மனித உருவில் நீ இருந்தாலும் ஆத்ம தத்துவம் உன்னில் உள்ளது.
(ஆ.ச.சா ஒக்2001 ப298)
I)தெய்வீகம் ஒன்றே ஒன்று. (ஏகம்சத் - உண்மை ஒன்று) (ஏகம் ஏவ அத்விதியம் ப்ரம்மா ஒன்றுதான் உள்ளது. இரண்டு என்று இல்லை.) உங்கள் தெரிவான தெய்வீக உருவில் நிலை நின்று அதை சரியாகப் பற்றிக் கொள்ளுங்கள். இதுதான் உண்மையான பக்தி. பலவிதமான இடங்களுக்கு தேவையில்லாமல் போய்க்கொண்டிருக் காதீர்கள். இது உங்கள் பக்தியை அழித்துவிடும். வளரும் ஒரு சிறு செடியை இடம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். அது எப்படி ஒரு நல்ல பலமான மரமாக முடியும். உங்கள் தெய்வீக வழிகாட்டிகளை அடிக்கடி மாற்றிக் கொண்டீர்களானால் அந்த பக்தி ஒரு கலப்படமாகிவிடும். அப்படியான ஒரு வழிக்கு போகாதீர்கள். கீதை சொல்வது போல், "மமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவ பூத ஸனாதனஹ” (எனது அம்சமான சனாதனமான நிரந்தர ஆத்மாவே எல்லா

Page 35
உயிரிலும் உள்ளது) கடவுள் எல்லாரிலும் எங்கும் உறைவ தாக விசுவாசியுங்கள். ஒரு கடவுளிலிருந்து இன்னொரு கடவுளுக்கு மாறிக் கொண்டிருந்தால் அது ஒரு பிழையான பக்தி, உங்களுடைய விசுவாசத்தை மாற்றிக் கொண்டிருக்
கக்கூடாது.
கடவுள் நிர்க்குணம் சுத்த நிரஞ்சனம் புத்த சனாதனம் முத்த நிகேதனம் நிர்மல நித்ய ஸ்வரூபணம்
இந்த நம்பிக்கையில் திடமாக இருந்து கொள்ளுங்கள்
(ஆ.ச.சா ஒக்2001 ப300)
III)ஆத்மீக ஆனந்தத்தை இன்றைய மக்கள் விரும்பினால்
அவர்கள் மூன்று அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்ற
 ைஅறிய வேண்டியதை அறிய வேண்டும்.  ைவிட வேண்டியதை விட வேண்டும். ச அடைய வேண்டிய இலக்கை அடைய வேண்டும்.
(1) அறிய வேண்டியது
இந்த உலகம் என்ன? நான் எவ்வளவு காலம் வாழ்வேன். பலர் இறந்து மறைந்து போவதைக் காண்கிறோம். வருவதும் (பிறப்பதும்) (தோற்றமும்) போவதும் (இறப்பதும்) (மறை வும்) தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பெளதீக உலகின் நிச்சயமற்ற தன்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது ஆனந்தம் உணரப்படும். (நித்ய அநித்ய விவேகம்- நிலையானது நிலையில்லாதது என்ற அறிவு)

(i)விட வேண்டியது
உண்மையற்றதை உண்மை சான்றும், உண்மையை உண்மையற்றது என்றும் எண்ணும் தவறான நம்பிக்கை களை விட வேண்டும். மாயையின் துன்பத்தில் அசுரப் பிடி யில் இருப்பதாக மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். (இல்லாத மாயை) துன்பத்திற்கு உன்னைக் கட்டிப்பிடிக்கக் கரங்கள் இல்லை. நீதான் துன்பத்தைக் கட்டிப் பிடிக்கிறாய். இது உனது அறியாமையின் பிரதிபலிப்பு. இந்த அறியாமை
போக ஆனந்தம் வரும்.
(ii) அடைய வேண்டிய இலக்கு நீ வந்த அந்த மூலத்திற்கு திரும்பவும் போக வேண்டும். ஆத்மாவிலிருந்து வந்த நீ ஆத்மாவிற்குத் திரும்பிப் போக வேண்டும். 9 அசத்தோமா சத்கமய
உண்மையற்றதிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக உண்மையற்றது உண்மையின் நிழல்- உண்மை யல்ல O 5LD66nmLDIT ஜோதிர் கமய
இருளிலிருந்து (அஞ்ஞானத்திலிருந்து) ஒளிக்கு (ஞானத்திற்கு) அழைத்துச் செல்வாயாக. உள்ளது ஒளி ஒளி இல்லாத நிலமைதான் இருட்டு. O tibqgšGuLITLIDIT அம்ருதம் கமய
மரணத்திலிருந்து அமரத்துவத்திற்கு அழைத்துச் Gaf66 ITu IITs இறப்பும், பிறப்பும் உடம்பிற்குத்தான். உனக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை.
(ஆ.ச.சா ஒக்96 ப255)

Page 36
IV)தன்னை உணர்வதற்காகவும், ஒருமையின் ஆனந்தத்தை அடைவதற்காகவும் மனிதன் எத்தனையோ ஆத்மீகப் பயிற்சிகளைச் செய்கிறான். இவை ஒன்பது விதமான பக்திகளை உள்ளடக்கியுள்ளன. இந்த வழிகளில் கடவுளை தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானாகக் கருதப்படுகிறது. உயர்ந்த விதமான வழிபாடு கடவுளையும் மனிதனையும் ஒன்றாகக் கருதுவது. நிதான்நான். நான்தான்நீ இந்த பாவனை மனிதனை பந்தங்களிலிருந்து விடுபட வைக்கிறது.
மனிதர்கள் உருவத்திலும் பெயரிலும் வேறு வேறாக இருக்கிறார்கள். உணர்வில், எண்ணத்தில் ஒருமை, ஒன்று என்ற உணர்வு வந்தால்தான் அவர்களிடையே ஒற்றுமை ஏற்படும். அந்த ஒற்றுமை என்பது இந்த முழுப் பிரபஞ்சமும் தெய்வீகத்தினால் உருவாகி யிருப்பது என்ற உணர்வின்
அங்கீகாரமே.
(ஆ.ச.சா ஒக்96 ப259)
V) பல மனிதர்கள் கடவுளுக்காக ஏங்குகிறார்கள். வழிபடுகி றார்கள். அவரையே மனதில் நினைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த எந்த வழியாலும் கடவுளை உணர முடியாது. இந்த எல்லா நடவடிக்கைகளினதும் அடிப்படை மனிதனை யும் இறைவனையும் வேறுபடுத்துகிறது. ஒருமை என்ற உணர்வுதான் இங்கே தேவையானது. இதை எப்படிப் பெறுவது? நானும் நீயும் என்ற உணர்வை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். இந்த ஒருமை என்ற உணர்வு மனதிற்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்டது. புத்தி மட்டுமே புலன்களுக்கு ஏற்பட்ட இந்த உணர்வை அனுபவிக்க முடியும். (காயத்ரி ஜெபம்).
(ஆ.ச.சா ஒக்96 ப263)

6) மனிதன் ஒரு அறிவுள்ள உயிர். ஆனால் அவனுக்கு இந்த அறிவை எப்படிப் பாவிப்பது என்று தெரியவில்லை. எப்படி இந்த அறிவைப் பாவிக்க வேண்டும் என்று ஒரு சிலருக்குத் தெரிந்திருந்தாலும் தவறான வழிகளையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஏன் இந்த வழியைப் பின்பற்றுகிறீர்கள் என்று கேட்டால் அவர்கள் ஒரு வழவழப்பாகச் சொல்லிக் கொள்கிறார்கள். எல்லாம் மாயை என்கிறார்கள். மாயை என்பது ஒரு தவறான நம்பிக்கை என்றே பொருள்படும். ஆனால் அது உண்மையில் இல்லாத ஒன்று. இந்த ஆச்சரிய மான உலகை உண்டாக்கி அதை அதன் பலவகையான தோற்றங்களுடன் உண்மை போலத் தோன்றச் செய்தது மாயை என்று மக்கள் கற்பனை செய்துள்ளார்கள். அறிஞர் கள் இந்த மாயையை ஒரு நாட்டியக்காரி அல்லது நர்த்தகி என்று அழைத்தனர். இந்த மாயை ஒவ்வொருவரையும் ஆட்டி வைக்கிறது. இதை எப்படிக் கட்டுப்படுத்தலாம். இந்த நர்த்தகி என்பதை மாற்றி வைத்தால் கீர்த்தன என்றாகிறது. இது ஒரு பக்தி மார்க்கமாகும்.
(ஆ.ச.சா ஆகஸ்ட்96 ப208)
VI) அன்பாகப் பேசுங்கள். அன்பாகச் செயல்படுங்கள். அன்பாகச் சிந்தியுங்கள். உங்கள் இயக்கம் எல்லாம் அன்பு பொங்கித் ததும்பும் இதயபூர்வமாக இருக்கட்டும். உங்கள் மனம் உலக விஷயங்களில் மூழ்கி இருக்கும்போது மாலையை உருட்டிக் கொண்டு தியானம் செய்வதில் அர்த்தமில்லை. உங்கள் உள்ளுறையும் தெய்வீகத்தை இடைவிடாது கிரகித்துக் கொண்டிருக்கும் ஜபமே நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டியது. இதுதான் வேதங்களின் உயரிய செய்தி
(ஆ.ச.சா ஆகஷட்96 ப213)
His 59 =

Page 37
VI) மனிதனுள் தெய்வீகம் உள்ளுறைகின்றது மனிதன் தன்னை ஒரு சாதாரண ஐந்து எனக் கருதிக் கொள்கிறான். இது அப்படி அல்ல. எல்லோரும் தெய்வீகத்தின் வெளிப்பாடு தான். இந்த உண்மையை மனிதன் அங்கீகரிக்காததனால் தான் இந்த அதிசய உலகத்திலே உள்ள மானிட நடவடிக் கைகளில் எல்லாவிதமான குழப்பங்களும் ஏற்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் பிரம்மம் என்ற விழிப்புணர்வை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவனால் தன்னுடைய உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ள முடியும். கடவுள் மனிதனிலிருந்து வேறானவர் அல்ல.
(g.F.FIT GuD97 Lu 131)
IX) ஈஸ்வரன் என்றால் அர்த்தம்? சிட்டிபாபு (முதலில் தமிழில் பேசியவர்) சொன்னபடி ஆண்டவன் அம்மைஅப்பன். தாய்தந்தை அந்த ஒன்றான தன்மையை அர்த்த நாரீஸ்வரன் என்ற பதம் குறிக்கிறது. அதாவது ஒரு உடம்பி லுள்ள தெய்வீக மணமக்கள். ஒவ்வொரு மனிதனும் அந்த நாரீஸ்வரனின் அடையாளம். உடம்பு இயங்காதது. ஆத்மா என்பது பேருணர்வு. உடம்பு பிரகிருதி (இயற்கை) ஆத்மா ஈஸ்வரன். பிரகிருதி பரமாத்மாவின் இணைப்பு. மனிதத்து வத்தைக் குறிக்கிறது.
(g.F.&FIT GD97 Lu 130) X)தெய்வீகத் ர்மிப்பதற்
i) தெய்வத்துவத்தை உலகியல் பொருட்களோடு சம்பந் தப்படுத்திப் பார்ப்பதை விடுத்து உலகியலானவற் றைத் தெய்வீகமாகக் காணக் கற்றுக்கொள். அதுவே உண்மையான பக்தி அதன் மூலம் உன் பணி வழிபா டாக மாறும். எது செய்தாலும் அது இறைவனுக்குச் செய்யும் ஆராதனையாகக் கருத வேண்டும்.

i) மனிதர்கள் ஆதர்சமான வாழ்க்கை வாழ வேண்டும். தங்கள் உள்ளிருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்தி யபடி அவர்கள் என்ன செய்தாலும் பேசினாலும், பழகி னாலும் எல்லாம் உன்னதமாக இருக்கவேண்டும். எந்த ஒரு சிறிய செயலும் கூட அடுத்தவருக்கு இன்னல் விளைவிக்கக் கூடாது. ii)கடவுள் ஒவ்வொருவரிலும் இருக்கிறார். இந்த உண்மையை நீங்கள் பரப்புவது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தெய்வீகமானவர்கள் என்று உறுதி யாகச் சொல்ல வேண்டும். இந்தச் செய்தியை நீங்கள் பரப்பும் பொழுது அது உண்மையான சேவையாகிறது. இந்தச் சேவை ஒரு தோணியாகி உங்களைக் கடவு ளுக்குக் கிட்டக் கொண்டு போய் சேர்க்கும். இந்தப் புற உலக வாழ்க்கை என்ற சாகரத்தில் உங்களைக் கடவுளின் அருகாமையில் கொண்டு சேர்க்கும் தோணி Agil.
(go on Jan97 Li13) iv)தன்னுடைய தெய்வீகத்தை மறந்ததுதான் மனிதனு டைய மிகப் பெரிய அறிவீனமான செயல். தாங்கள் கடவுளிலிருந்து வந்தவர்கள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். எல்லோரும் கடவுளின் குழந்தைகள். கடவுளை நெருங்கி, நெருங்கிப் போவ தற்கு ஒவ்வொருவரும் முயல வேண்டும். உங்கள் இருதயத்தில் ஹற்ருதய வாசியான கடவுள் உறைகிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும். (அதை உணர்த்த வேண்டும்)
ஆ ச சா Jam97 ப3 V) மனிதன் அமரத்துவத்தின் குழந்தை. அவன் ஒரு தெய்வீகப் பண்டகசாலை. அவன் பல வழிகளின் மூலம் தெய்வீகம் தானே என்ற தகுதியை அடைந்து விடலாம்.

Page 38
தன்னை இயக்கக் கூடிய சக்தி ஒன்று இல்லாத இயந்திரம் பயனற்றது. அதே போல தெய்வீகப் பொறி (யந்திரத்தன்மை) இல்லாத மனித உடல் ஒரு பயனும் இல்லாதது. அந்தப் பொறி இல்லாத பொழுது அவன் ஒரு காய்க்காத மரம். பால் தராத பசு அவன் அந்த (தெய்வீகப்) பொறி பற்றிய விழிப்புணர்வைப் பெற வேண்டும். அவனுக்கு எப்படித்தன்னை ஒளியேற்றுவது என்று அந்தப் பிரமையில் எப்படித் தன்னையே ஈடுபடுத்துவது என்றும் தெரியவேண்டும்.
s, at HTOApril97 p.35)
Vi)கடவுளைப் பற்றிக் கவலைப்பட்டால் உனது மற்ற எல்லாக் கவலைகளும் உன்னை விட்டுப் போய்விடும். எதைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிய வருமோ அதனைத் தெரிந்து கொள். அதனை அடைந்து
விட்டால் எல்லாவற்றையும் பெற்றுவிடலாம்.
ஆ ச சா(ஆயச97-67)
wi)பொருளாதார வட்டகையில் மனித ஆசைகள் மனிதனில் ஒரு தெய்வீக உந்துதலை உண்டாக்கும். பொருள் தேடுவதும் புலனின்பங்களின் தாக்கமும்
தானாகவே கடவுளின் பக்கம் திரும்பிவிடும்.
g, F FITOMar97-58)
wii)உங்களிடையே வந்துள்ள சாயியை சரியாக உபயோ கப்படுத்துங்கள். பர்த்தியிலுள்ள அவர் கமலமலர்ப் பாதங்களை வணங்கிக் கொள்ளுங்கள். கண்டவற்றின் பின்னாலும், சில்லறைகளின் பின்னாலும் அலைந்து
ങ്ക് 62 =

தப்பான எண்ணங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இப்படியான தெய்வீக உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
(eg at ay-it May97 Lu119)
ix)அறிந்து கொள்ள வேண்டும், முன்னேற வேண்டும், என்னிலே உங்களைக் காணவேண்டும் என்ற ஆர்வத்துடன் வாருங்கள் நான் நிச்சயமாக உங்களை வரவேற்று வழிகாட்டுகிறேன். நீங்கள் உண்மையா கவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். எல்லாப் புனித கிரந்தங்களும், எல்லாப் புத்தகங்களின் முல வாக்கியங்களும், உபநிஷதம் என்ற பசுவில் இருந்து கறக்கப்பட்ட பாலான கீதையும் உங்களிலே தாக் கத்தை உண்டாக்குவதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு கொடி தான் படர மரத்தைத் தேடுவதைப் போல, காந்தம் இரும்புத்துளைத் தேடிக் கவர்வதைப் போல பூக்களைத் தேடி தேனி போவ தைப் போல, கடலைத் தேடி ஆறு போவதைப் போல உனது தாகம் இருக்க வேண்டும். பிரிவினையினால் வந்த விரகதாபம் (கடுமையான வேதனை) உன் இதயத்தை அரித்துத் தின்ன வேண்டும். உன்னுடைய எல்லாமுமே நீ பிரிந்து வந்து விட்ட ஒன்றுடன் சங்க மிக்க வேண்டும் என்ற மாறாத ஆர்வம் வரவேண்டும். அப்படியும் இப்படியும் என்று நிச்சயமற்றிருக்காதே. உனது விசுவாசத்தை மாற்றிக் கொள்ளாதே. நாமத்தையும், ரூபத்தையும் மாற்றிக் கொண்டிருந்தால் அது உனது நேரத்தையும், சக்தியையும் வீணாக்கி விடும். இறைவனையே இடைவிடாது தியானித்திருப்பா யானால் அது உன்னிலே என்றும் மாறாத அம்ருதத்து
வத்தின் சுவையைத் தந்துகொண்டிருக்கும்.
(Ess July 97-173)

Page 39
X)பாபம் என்றால் என்ன? சுயநலத்தினால் உந்தப்பட்டு உடலையும், புலனின்பங்களையும் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்ட எல்லா நடவடிக்கை களும் இதில் அடங்கும். ஒரு மனிதனைக் கடவுளருகே கொண்டுபோகும் எல்லா நடவடிக்கைகளும் புண்ணிய மாகும். (பர-உப-காரம்). தெய்வீகத்துக்கு ஊறுவிளை விப்பதோ அதை மறப்பதோ பாபம் (பரபீடனம்) ஆகும். எல்லோரிலும் உள்ள தெய்வீகத்தை நினைப் பது புண்ணியம் பெறும் வழியாகும்.
(Ess July97 173) xi)அகங்காரம் என்பது உண்மையில் எந்த அடிப்படையும் இல்லாதது. ஏனெனில் இந்த எல்லையில்லாத பிரபஞ் சத்தில் ஒரு தனி மனிதன் அற்பமான புள்ளி. இது அறியாமையால் ஆரம்பித்தது. இந்த முழு உலகமும் தெய்வீகத்தினால் ஊடுருவி உள்ளது என்றும் எல்லாம் அதனைச் சேர்ந்தது என்றும் தெரியவரும் போது அறி யாமை அகன்று விடும்.
(Ess July97 179)
xi)கடவுள் இருதயத்துள் உள்ளுறைபவர். இதை உணர்ந்து கொண்ட பொழுது உங்களிடம் ஒரு குறை யும் இருக்க மாட்டாது. (ஒரு குறையுமில்லை) ஆனந் தம் பொங்கித்ததும்பும். தவறு செய்ய மாட்டீர்கள். ஒன்றிற்கும் அஞ்ச மாட்டீர்கள். உங்கள் மனச் சாட்சி
உங்கள் வழிகாட்டியாயிருக்கும்.
(Ess Aug97 L 202)
xi)இவ்வுடல் நமக்குத் தரப்பட்டுள்ளது எதற்காக? எனச் சிந்திக்க வேண்டும். மனித வாழ்க்கையில் உள்ளுறை யும் தெய்வீகத் தத்துவத்தை வெளிக் கொணர்வதற்
Eಹಾ- 64 ܒ

காகத்தான் மனித உடல் தரப்பட்டுள்ளது. அப்படியில் லாமல் Reverse இல் மிருகத்தன்மைக்கு போய் விடக்கூடாது.
(த.ச.சா செப்97 ப14)
Xiv)தெய்வமே இவ்வாறு வடிவமெடுத்து இவ்வுலக மக்கள் தெய்வத்தை அடைவது எப்படி என்று போதிக்க அவதாரம் எடுக்கிறது. அந்த சத்தியத்தை நீங்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
(த.ச.சா செப்97 ப22)
XV)கீதை பிரகடனப்படுத்துகிறது அத்யாத்ம வித்யா வித்யானாம். (எல்லா அறிவுகளுள்ளும் நான் தன்னை அறியும் அறிவாக உள்ளேன்) இந்த அறிவைப் பெறுவதுதான் வாழ்க்கையின் உண்மையான நோக் கம். விநாயகர்தான் இந்த அறிவின் குரு. அந்தக் குரு உள்ளுக்குள்ளேயே இருக்கிறார். விநாயக தத்துவம்
எல்லோரிலும் இருக்கிறது.
(Ess Sep97 L 236)
XVi)நிலத்தில் நின்று கொண்டு, வானத்தில் பறக்கும் ஒரு ஆகாய விமானத்தில் இருக்கும் விமான ஒட்டியைப் பார்க்க விரும்புகிறவனைப் போல இன்றைய மனிதர் கள் உள்ளார்கள். விமானத்தில் இருக்கும் விமான ஒட்டியைப் பார்ப்பதற்கு உள்ள ஒரே வழி பார்க்க விரும்பும் அவனே அந்த விமானத்துக்குள் ஏற வேண் டும். கடவுளை அனுபவிக்க விரும்பினால் கடவுளைப் பற்றிய ஒரு ஒரு பார்வையைப் பெறுவதற்கு நீ வேட்கை கொள்ளவேண்டும். அதுதான் ஒரு இலட்சிய
மானதும் ஆனந்தமானதுமான வாழ்வைப் பெறும் வழி
(Ess GooFL97 L 240)

Page 40
XVi)தங்கத் தேர் போன்ற காணிக்கையை எங்காவது கொடுக்க வேண்டும் என்று இல்லை. அப்படியான காணிக்கையை கொடுக்க வேண்டும் என்று விரும்பு பவர்கள் எவரும் தெய்வீகமானவர்கள் அல்ல. தெய் வீகம் எல்லாவற்றிலும் உள்ளுறைகின்ற பொழுது நீங்கள் தெய்வீகத்திற்கு என்ன கொடுக்க முடியும்? ஏதாவது காணிக்கையை கொடுப்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது. எல்லாமே கடவுளுக்கு உரி மையானது. ஆகவே இன்று முதல் தங்க நகைகளோ, அலங்காரத் தேரோ அல்லது தங்கத் தேரோ பக்தர்கள்
ஒருவரும் இங்கு கொண்டு வரக்கூடாது.
(Ess Oct97 L 254)
XVi)ஆத்மாவை உணர்ந்து கடவுளை அறிந்து கொள்வ தற்கு கஷ்டப்பட்டு முழு முயற்சியும் செய் மற்ற உலக விடயங்களில் பெறும் வெற்றியிலும் பார்க்க இந்தப்
போராட்டம் உயர்ந்த சிறப்பு மிக்கது.
(Ess Oct97 L 254)
xix)ஒவ்வொருவரும் தனது உடலை ஒரு புல்லாங்குழல் போன்று ஆக்கி அதனூடாக தெய்வீக இசை தவழ்ந்து வர முயற்சிக்க வேண்டும். உடல் அந்த தெய்வீக இசைக்கு ஏற்றதாக மாற்றப்பட வேண்டும். அப் பொழுது அது மற்றவர்களுக்கான சேவையாகின்றது. கடவுளை நேசிக்கும் சிறந்த வழி எல்லோரையும் அன்பு செய்வது. எல்லோருக்கும் சேவை செய்வது. உனது பரம எதிரியையும் நேசிக்கக் கூடிய அளவுக்கு நீ உயர வேண்டும். உன்னுடைய அன்பான வார்த்தையினால் ஒரு எதிரி கூட தன் வெறுப்பைத் தவிர்த்து விடலாம். அன்பின் மூலம்தான் ஒருவன் தன் தன்மையை
துலக்கிக் கொள்ளலாம்.
(Ess Oct97 L 263)

XX)ஒவ்வொருவரும் தன்னிலே உள்ள தெய்வீகத்தை உணர முயற்சி செய்து கொண்டு மற்ற உயிர்களிலே உள்ள G5uisians spiritsifias GooliGib. (Everyone should seek to realize his/her divinity and recognize the divinity in all
beings)
Xxi)ஒவ்வொரு மனிதனிலும் உள்ள தெய்வீகம் அவன் மற்ற உயிர்களிலுள்ள தெய்வீகத்தை அங்கீகரிக்கும் அந்த profiGs)(3tu gaitaatli Lugialuit's LDiTig5tb.(The divinity in each human being will become manifest the day each one recognize the divinity in every being)
XXi)மனிதர்கள் சமுதாயத்தில் ஒரு அங்கம். மனித சமுதாயம் மானிடத்தின் ஒரு அங்கம், மானிடம் இயற்கையின் ஒரு அம்சம். இயற்கை பரமாத்மாவின் அம்சம். இந்த தொடர்பு சங்கிலியைப் பார்த்தால் எல்லையற்ற ஆனந்தத்தின் திருவுருவுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு விளங்க வரும். ஏன் இந்த ஆனந்தம் மனிதனிடமி ருந்து தவறி விடுகிறது? ஏனெனில் தன்னிடமுள்ள தெய்வீகத் தை அங்கீகரிக்கவில்லை.
(Ess Nov97 L 201)
XXi)எங்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. இதற்கு என்ன பரிகாரம்? மனிதன் மனதிலே ஒரு பாரிய அடிப்படையான உயர் மாற்றம் வேண்டும். மனிதர்கள் தங்கள் உள்ளுறை தெய்வீகத்தை இனங்கண்டு உணர G56160iiGilb. (People should recognize the inherent divinity in man) இந்த மனத்தின் உயர் மாற்றமும், தெய்வீக உணர்வும்

Page 41
ஒன்றாக வந்தால் மனித இனத்தில் தெய்வீகத் தன்மை 6sibLIGIb. (Divinisation)
(Ess Nov97 L 284)
XXi)தியாகம் என்றால் என்ன? உன் சொத்துக்களை விட்டுவிட்டு காட்டிற்குப் போவதல்ல. உன் உள்ளுணர் வுகள் மாற வேண்டும். அதை மாணவர்கள் ஜாக்கிரதை யாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
Xiv)மக்களின் நன்மைக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். அதுதான் என்னுடைய ஒரே கவலை(விசாரம்) நான் செய்வதெல்லாம் கடவுளின் அருளுக்கு பாத்தியதை உள்ளவர்களாக எல்லோரையும் ஆக்குவதற்கான முயற்சியே" இதை ஒரு சிலர்தான் விளங்கிக் கொள்கிறார்கள். பல வருடங்களாக இங்கு வந்து போகின்றவர்களும் இதை விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை.
(Ess Nov97 L 285)
ܘܘܘܘܘܘܘܘ.dfܗ̄%ܐܶܗܣܐ
மாற்றம் என்ற நிகழ்வு எங்கும் எதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு சிறிய விதை பெரிய விருட்சமாகிறது. ஒரு முட்டை
கோழியாக மாறுகிறது.
ஆனால். மனிதன் மட்டும் தெய்வீகமாக மாறாமல்
தவறிவிடுகிறான்
 

08. தெய்வீகத்தை உணர்த்துவதில் மந்திரங்கள்
மந்திரங்கள் - காயத்ரி i)ஓம் பூர் புவ ஸ்வக மூன்று உலகங்களிலும் இறைவன் பரவியிருக்கிறான். அம்மூன்று உலகங்களும் அவனிடம் உள்ளன. கடவுள் மனிதனிடம் முன்று உருவங்களில் பரவியிருக்கிறார். பெளதீக உடல். (ஸ்துல உடல்) அன்ன மயமானது. தூல உடல் பருப் பொருளாலானது. வேறொன் றும் இதனுள் நுழைய இயலாது. (Materialisation) சடமான இவ்வுடலில் ஏதோ ஒரு ஆற்றல் இருந்து இதை அசைய வைக்கிறது. அச்சக்தியே உயிர் வாழ்வு. அதுவே (Vibration) இத்தகைய அதிர்வுதான் உடலை அசையச் செய்கிறது. இந்த அதிர்வுக்குள்ளிருக்கும் சக்தி Radiation எனப்படு drugs. LD60f2567 (3tbeup6igilsit Radiation, Vibration, MaterialiSation ஆகியவற்றின் வடிவம். உடல் ரீதியாகக் காணும்போது மனிதனிடம் தெய்வத்துவம் உள்ளது. பிராணகோசத்தின் அடிப்படையில் அவன் அதிர்வுகள் (Vibration) pilopig5616i. (Awareness) 9pj6,600Tito நிலையில் அவன் Radiation நிறைந்தவன்.
பிரக்ஞானம் பிரம்மா என்பதே பிரம்ம தத்துவம் ப்ராணன் பிரம்மா. உயிர்ச் சக்தியே ப்ரம்மம். ஆகவே இறைவன் மனிதனிடம் தூலப் பொருள், அதிர்வு, (கதிர்வீச்சு) Radiation என்ற வடிவத்தில் உள்ளார். இத்தகைய விழிப்புணர்வு வேதத்திலும் கூறப்பட்டுள்ளது. இந்த Radiation (கதிர்வீச்சு) Conscience (மனச்சாட்சி) என்று கூறப்பட்டுள்ளது.

Page 42
இறைவன் Conscience (மனச்சாட்சி) என்ற வடிவத்தில் இருக்கிறார். கடவுள் பிராணனிலும் Vibration (அதிர்வு) ஆக இருக்கிறார். உடல் தூலப் பொருளால் உருவாகிய இயந்தி ரம். எவ்வளவு சிறந்த இயந்திரமாகிலும் அது மின்சக்தியுடன் இணைக்கப்படாவிடின் அது வேலை செய்யாது. கோடிக் கணக்கில் செலவழித்து இயந்திரத்தை வாங்கலாம். மின்சக்தியுடன் இணைக்கப்படாவிட்டால் அது வேலை செய்யாது. அது போல இது (உடல்) வெறும் சடமான இயந்திரம். இவ்வுடலில் Vibration என்பது ஸ்விட்ச் ஆகும். Conscience el6ü6log5 Radiation 616áLg5 lóli ará5luATg5tb. தெய்வ சக்தியாகிய Radiation சடமாகிய இவ்வுடலை அசை யச் செய்கிறது.
இங்கு இரும்புத்துண்டு இருக்கிறது. அது அசைவதற்கு கால்களோ, பறப்பதற்கு இறக்கைகளோ இல்லை. அதன் பக்கத்தில் காந்தத்தை வைக்கும் பொழுது அது இரு பக்கமும் அசைகிறது. இவ்வாறு Radiation என்ற தெய்வசக்தி Vibration மூலமாக இவ்வுடலை அசையச் Gyuildings. sasco Radiation, Vibration, Materialisation
ஆக இம்மூன்றும் ஒன்றுபட்ட சக்தியே தெய்வத்துவம்.
(FIT.96aintao 93 U178)
02)தெய்வம் மனிதர்களில் மூன்று வகையாக குடிகொண்டுள் ளது. அதையே பூர், புவஸ், ஸ்வஹ என்று குறிப்பிடுவர். பூர் என்பது பதார்த்தம் அல்லது பருப் பொருளின் வடிவம் (Materialisation) புவ என்பது பிராண சக்தி அல்லது உயிர்ச்சக்தி (Vibration) ஸ்வஹ என்பது பிரக்ஞா சக்தி இதுவே மெய்யுணர்வு எனப்படுவது. (Radiation) இந்தப் பிரக்ஞா சக்தி பிராண சக்தியின்மூலம் ஜடப்பொருளை இயங்க வைக்கிறது. இந்தச் சக்தியின் ஆதிக்கம்

இல்லாவிட்டால் சரீரம் வெறும் ஜடமாகத்தான் இருக்கும். (3rb25 cup6talb Cup60dpGu Radiation, Vibration, Materialization என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகின்றன. இவை மூன்றும் தெய்வத்தின் அம்சங்களே.
சரீரம் என்பது நீர், வாயு, இரும்பு, ஈயம், மற்றும் பொஸ்பரஸ்(Phosphorus) போன்ற இரசாயனப் பொருட் களின் சேர்க்கையே. அவை ஜடப்பொருட்களே. அதை இயங்க வைப்பது பிரக்ஞான சக்தியும், பிராண சக்தியும் ஆகும். காற்று இல்லாவிடின் எப்படி மரத்தின் இலைகள் அசையாதோ அதே போல இந்த சக்தியின்றி சரீரமும் இயங்காது. பிரக்ஞா சக்தியே மனச்சாட்சி. Conscience, ஆக ஒவ்வொருவரிடத்தும் (இது) முக்கிய பங்கு கொண்டுள்ளது. இந்த உண்மையை உணர்ந்தால் ஆத்மீக நாட்டம் கொண்டு மனிதர்கள் தீய உணர்வுகளுக்கு இடமளிக்கமாட்டார்கள். மனித சரீரத்தின் இயக்கமே ஒரு விந்தை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
(5EIT.993 124) ii) காயத்ரி மந்திரம் புத்தியைப் பிரகாசிக்கச் செய்யும் வேத வழிபாடு. இந்த மந்திரம் பலவாக, வேறுபாடாகத் தெரியும் சிருஷ்டியில் உள்ள ஒற்றுமையைக் காட்டுவது. இந்த ஒற்றுமையை அங்கீகரிப்பதன் மூலம்தான் வேற்றுமையைப் புரிந்து கொள்ளலாம். களிமண் ஒன்று. ஒரே பொருள். ஆனால் வெவ்வேறு விதமான பானைகள் செய்யலாம். தங்கம் ஒன்று நகைகள் வேறுபடலாம். ஆத்மா (Divine-Self தெய்வீகம் உண்மைத்தன்மை) ஒன்று ஆனால் அது உறையும் அல்லது தரித்த உருவங்கள் வெவ்வேறாக இருக்கலாம். பசுவின் நிறம் எதுவாக இருந்தாலும் பால் எப்பொழுதும் வெள்ளை தான்.
(SSS16 விடயம் 6 17-03-1883 அருளுரை)
s= 71

Page 43
iv) தியோ யோந பிர சோதயாத்
காயத்ரி மந்திரத்தின் ஒளிக்கிற்றுக்கள் (Rays) மனத்தையும் புத்தியையும் பிரகாசிக்கச் செய்து அறிவை, ஞானத்தை, பகுத்தறியும் ஆற்றலை
6) 1677ITI IL 5/Tes.
(SSS16 P39 17-03-1983 9056.560y) எங்களுடைய அறிவைத் துலங்க வைப்பாயாக
(தமிழ் கீதாவாஹினி ப 4)
W) காயத்ரி மந்திரத்தை அப்பியசிக்கும் பொழுது எல்லாம் தன்னுள்ளே இருப்பதை உணர்ந்து தன்னுடைய உண்மைத் தன்மையில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று மனிதனுக்கு உள்ள பெரிய தொல்லைகளுக்கு எல்லாம் காரணம் தன்னுடைய உண்மைத் தன்மையில் அவனுக்கு நம்பிக்கை இல்லாததே. ஆத்மீக நாட்டமுள்ள வன் ஆறு எதிரிகளான காம, க்ரோத, மோக, மத, மாச்சரி யங்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இந்தத் தொல்லைகள் இல்லாமல் போவதானால் தன்னுடைய உன்னத தன்மையில் நம்பிக்கை வேண்டும்.
(ஆ.ச.சா செப்95 ப237)
Vi) காயத்திரியை ஜெபிப்பதால் ஒருவர் மனித உடம்பிலுள்ள பஞ்சபூதங்கள், பஞ்ச பிராணன்கள் அத்துடன் ஆத்மாவை முடியிருக்கும் பஞ்ச கோசங்களின் உள்ளிருந்து இயங்கும் சக்தியைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறலாம்.
(ஆ.ச.சா ஆகஸ்ட்81 ப187)
Vi) வேலை செய்யும் பொழுது, பிரயாணம் செய்யும் பொழுது, வீட்டில் இருக்கும் பொழுது எப்பொழுதென்றாலும் காயத்ரி மந்திரத்தை ஒரு நாளில் ஒரு சில தடவைகள்

என்றாலும் சொல்லுங்கள். அது உங்களைப் பாதுகாக்கும். மேற்கத்தியர்கள் இதைப் பரீட்சை செய்து பார்த்துள் ளார்கள். வேதங்களில் சொன்னபடி சரியான உச்சரிப்புடன் சொல்லப்பட்டால் சுற்றாடல் நாம் பார்க்கக்கூடிய அளவுக்கு தூய்மைப்படும். பிரம்ம பிரகாசம் என்று சொல்லப்படும் தெய்வீகத்தின் ஜாஜ்வல்யம் உங்களில் ஏற்பட்டு உங்கள் புத்தியைப் பிரகாசிக்கச் செய்யும்.
(20-06-77 அருளுரை)
wi)நீ எந்த மந்திரத்தைச் சொல்லாவிட்டாலும் சர்வ தேவதா
ஜ்வரூபமான காயத்ரிமந்திரத்தை இடைவிடாது சொல். உன்
கஷ்டங்கள் உன்னை ஓரளவும் தொல்லைப்படுத்தாது.
(த.ச.சா ஒக்95 ப11)
ix)(காயத்ரிமந்திரம்) மூன்றாவது கண்ணாகத் தரப்படுகிறது.
இரண்டு கண்கள் உலகைப் பார்ப்பது, மூன்றாவது ஞானக்
கண். பிரம்ம தேஜஸ் உங்கள் மீது ஏற்படும்.
(SSS Volx p 122)
X)பக்தன் - ஒரு பக்தனால் கடவுளிடம் கேட்கக்கூடிய மிக
நல்ல கேள்வி எது?
LuTLIT 6TILIg usomo67 sj6oL6).g5/? Howtoreach God? பக்தன் . சுவாமி அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். பாபா காயத்ரி மந்திரத்தை அப்யஸியுங்கள் (Practice Gayathri that is the way to God) sigs/G861 &L6,606m அடையும் வழி
(Saddana & Sathiya Sai)

Page 44
xi) தியோ யோ ந பிரசோதயாத் ந - நானல்ல. நாங்கள் என்று குறிக்கும். துரதிஷ்ட வசமாக (பாரத நாட்டில்) காயத்ரி மந்திரத்தைப் பயின்று வந்தாலும், நான் என்ற உணர்வுடன் ஜபிக்கிறார்களேயன்றி நாங்கள் என்று தன்னை மறந்த நிலையில் அவர்கள் ஜபிப்பதில்லை.
5g) - 5IDID
பிரசோதயாத் - வெளிப்பட்டும்
ஒரு மனிதனின் புத்தியைப் பிரகாசிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்யவில்லை. எல்லாப் புத்திகளும் பிரகாசிக்க வேண்டும். சேர்ந்து செயல்படும் சமூக ஒட்டுறவு இப்போது நலிந்து கொண்டே வருகிறது. சுயலாபம் சுய உணர்வுமே இப்போது அதிகமாகிக் கொண்டுவருகின்றன. வேதம், சாஸ்திரம் புராணங்கள், இதிகாசம் ஆகியவற்றில் நாங்கள் என்று சமுகத்தை ஒட்டிய சொல்லைப் பயன்படுத்துகிறோம். குறுகிய மனமுடையவர் உலக ஆசைகள் நிறைவேறுவதை மனதில் கொண்டு குறுகிய வழியாகிய நான் என்ற பொருளிலேயே இவற்றை அறிந்து கொள்கிறார்கள். இந்த வழியை எந்தப் புனித நூலும் ஏற்றுக்
கொள்வதில்லை.
(gr.9.Gar93 L1179)
xi)லும் பூர் புவஸ் ஸ்வஹ என்கிறார்கள். பூர்-பூலோகம், புவஹ-ஸ்வர்லோகம், ஸ"வஹ- ஸ்வர்க்கலோகம். அத்த கைய தத்துவங்களை எடுத்துச் சொல்பவர் யாரும் இல்லை. சந்தேகங்களைத் தெளிவாக்குபவர் எவரும் இல்லை. அதனால்தான் அஞ்ஞானம் மனிதனிடம் காணப்படுகிறது.

பூர்-பூலோகம்.Material உலகம் ஆகையால் இது Materialisation புவஹ-மனத்தத்துவம்-சலனம் மிக்கது அதுவே பிராணன்-Vibration. ஸ"வஹ-ஞானம் ப்ரக்ஞானம் ligiblpit-ggs/G361 Radiation. Materia-lization, Vibration, Radiation மூன்றும் நம்மிடையே இருக்கின்றன. அது எங்கோ இல்லை. நம்முள்ளேயே இருப்பதால் சாலோக்ய, சாரூப்ய,
சாயுஜ்ய என்று கூறப்படுகிறது.
(த.ச.சா.செப்96 ப11)
xiii)6GLigāGp Good ļas 65šas (366b, Always being அதுவே சத்சித் ஆனந்தம், அதுவே AwareneSS 65glilj600Tito. Constant Integrated Awareness (360Luping ஒன்றிணைந்த விழிப்புணர்வு. இது மாறாதது. இதை நீங்கள் அடையப்பெற வேண்டும். அதற்கு இறைவனிடம், சத்தியத் திடம் பிரார்த்திக்க வேண்டும்.
சத்தியத்திடம் பிரார்த்திக்கும்போது (உடம்பில்Materialisation g6b) fig 676ip 60.556iu Ilb (Vibration) ஏற்படும். Vibration ஏற்பட்ட பின் Radiation ஏற்படும். அதை நாம் அடையப் பெறுவோம். Radiation இலிருந்து
தெய்வத்துவத்தை (divinity) அடைகிறோம்.
(த.ச.சா பெப்93 ப30)
Xiv)கடவுள் ஒவ்வொருவரிலும் இருக்கிறார் என்ற அடிப்படைக் கொள்கையை ஓம் புர் புவஸாவ என்பது பிரதிபலிக்கிறது.
(ஆ.ச.சா பெப்93 ப44)
15)மனிதனில் மறைந்து காணப்படும் Cosmic Power தெய்வீகமான ஆத்ம சக்தி பல வகையில் செலவிடப்

Page 45
படுகிறது. இந்த சக்தி மறைந்து காணப்படுகிறது. வெளிப்புற பார்வைக்குத் தெரிவதில்லை. இப்படி மறைந்து காணப்படும் ஆனந்தமான சக்தியே ஆதி சக்தி. இதைத்தான் பூ என்றார்கள். இது உலகியல் சம்பந்தப்பட்டது. ஆகையால் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பூ என்கிற சக்தி பரவியுள்ளது.
இதைத்தவிர மனிதனிடம் மற்றொரு சக்தி பரவியுள்ளது. அது Vibration Power என்கிற பிரான சக்தி இந்த சக்திதான் மனிதனின் ஒவ்வொரு அங்கத்தையும் இயக்குகிறது. இதுதான் புவர் சக்தி எனப்படும். இதுதான் லட்சுமி, சக்தி எனக் குறிப்பிடுகிறார்கள். இதன் மூலமாகத்தான் இயக்கங்கள் நடைபெறுகின்றன. புலன்கள் அவற்றின் செயலைச் செய்கின்றன. நல்ல பார்வை, நல்ல விஷயங்களைக் கேட்பது, நல்ல பேச்சைப் பேசுவது, நல்ல செயல்களைச் செய்வது எல்லாம் லட்சுமியின் சக்திதான். இதன்முலம் நல்ல வளங்களும், செல்வங்களும் பெருகுகின்றன. இதுதான் புவ எனப்படுகிறது.
மூன்றாவது சரஸ்வதியின் சக்தி. இது வாக்தேவாஸ் வருபம். சக்தி ஸ்வரூபினி துர்க்கா பிரான ஸ்வரூபிணி லட்சுமி
இவை மூன்றும் இணைந்ததே ஆத்ம தத்துவம். இதைத்தான் இந்த உலகை Materialisation என்றார்கள் fillaélagšgólsö. gö35 Materialisation fibe5 Lf6öiGomT6ð Conscience (மனச்சாட்சி) என்கிற ஞானம் இருக்கிறது. இதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என

நிர்ணயிப்பது பகவத்சக்தி, வாக்சக்தி இதுவே Radiation எனப்படுவது.
(த.ச.சா நவ94 ப3)
XVi)மனிதன் ஒரு தெய்வீகப் பொறி. அது அவனுடைய புத்தியைப் பிரகாசமடையச் செய்யக் காத்துக் கொண்டி ருக்கிறது.
xvii)
i மந்திரம்
->தேகம் - தேகாத்ம பாவனை தாசோகம்
ஊழியனுக்கு ஊழியன் அகங்காரத்தை அழியோடு அழிக்கிறது
-> மனம் - ஜவாத்ம பாவனை ஸோகம்
சித்த சுத்தி ஏற்படுகிறது. ஆனால் இது முழுமையாக ஆத்ம தத்துவத்தை குறிப்பறிந்து கொள்ளச் செய்யாது. இதிலும் கூட துவைதம் இருக்கிறது. ஸோகம் (அதுநான்) என்கின்ற இரண்டு தத்துவங்கள் கூடி இருக்கின்றன. துவைதம் இருக்கும் பொழுது திவ்வியத்துவம் பிராப்திக்காது. அதன் பொருட்டே தேகாத்ம, ஜீவாத்ம பாவனைகளை அகற்றிக் கொண்டு பரமாத்ம தத்துவத்தை நாம் வரித்துக் கொள்ள வேண்டும்.
-> ஆத்மா - ஆத்ம பாவனை - ஓம்
ஸோ சப்தத்திலுள்ள ஸ் காரத்தை நீக்கிவிட்டால் ஒ எஞ்சி நிற்கிறது. ஹம் சப்தத்திலுள்ள ஹ காரத்தை நீக்கிவிட்டால் ம் என்கிற சப்தம் மட்டும் மிகுந்திருக்கிறது. அப்பொழுது ஓ, ம் இரண்டும் சேர்ந்து ஓம் என ஓர் உருவத்தைத் தரிக்கின்றன.
(த.ச.சா முஉவ83 ப.19)

Page 46
XVi)-அதேகம் - பூதாகாசம் - தோற்றமளிக்கும் உலகு
பெளதீக உலகு- பஞ்ச பூதங்கள். நிலையற்றவை. பொய்மையில் பொய்மை - நனவுநிலை.
மனம் - சித்தாகாசம் -குக்கும உலகு- மன உலகு மெய்மையில் பொய்மை-உண்மையை வெளிப் படுத்துகிறது கனவு நிலை
ஆத்மா - சிதாகாசம் - காரண உலகு மிகமிக நுண்ணியது மெய்மையில் மெய்மை ஆழ்ந்த உறக்கம்.
இங்கே நடப்பது
மீண்டும் மனிதனை விழித்தெழுச் செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அவனே கடவுள் என்ற நிலைக்கு மனிதன் விழித்தெழுப்பப்படுகிறான். மனித உடம்பு நீயல்ல. தெய்வீகப் பொறியை தன்னுள்ளே வைத்திருக்கும் தேவாலயம் - ஏனெனில் ஒவ்வொரு மனித இதயத்திலும் கடவுள் உறைகின்றார். அந்த உள்ளுறையும்தெய்வீகமே நீ. அதுவே உன்னுடைய உண்மைத் தன்மை. மற்றவைகள் எல்லாம் மாயத்
தோற்றம்
 

O9. நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
1)தெய்வீகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மட்டுமே முட்டாள் தனமான முறையில் நடந்து கொள்கிறார்கள். உண்மையில் மனிதன் அவனே தெய்வீகமானவன். தனது தெய்வீகத்தை உணர்ந்த பின்புதான் அவன் ஒரு பூரண மனிதனாக வரமுடியும். அப்பொழுது அவன் செய்கின்ற எல்லாமே பூரணமாக இருக்கும்.
அந்தோனி என்று ஒருவர் இருந்தார். அவர் வயலின் செய்பவர். அவர் பரிபூரணமாக எதையும் செய்பவர் என்றபடியால் ஒரு வயலின் செய்ய ஒரு வருடத்தை எடுத்துக் கொள்வார். "அந்தோனி, நீ ஒரு வயலின் செய்ய ஒரு வருடம் எடுக்குமானால் உன்னுடைய குடும்பத்தை நீ எப்படி ஆதரிப்பாய்” என்று அவருடைய நண்பர்கள் சீண்டினார்கள். அவர்கள் சொன்னார்கள் நீ உன்னுடைய நேரத்தை வீணாக்குகிறாய்”
சகோதரர்களே, நான் செய்வது கடவுளுடைய வேலை அவர் பரிபூரணத்தின் திரு உருவம். ஆகவே நான் செய்யும் வயலினும் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று கவனம் எடுத்துக் கொள்கிறேன் என்றார். அதனால் அந்தோனியினு டைய வயலின்கள் புகழ் பெற்றவையாக இருந்தன.
நீங்கள் எதைச் செய்தாலும் அதைக் கடவுளின் திருப்திக்காக என்று செய்யுங்கள். அப்பொழுது மட்டுந்தான் உங்கள் வேலையில் உங்களால் திருப்தி கண்டு கொள்ள முடியும், எல்லோருக்கும் உங்கள் செயல்கள் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். அப்பொழுது மட்டும் தான்

Page 47
நீங்கள் எனக்கு அன்பானவர்களாக வர முடியும். நானும் உங்களுடைய நண்பனாக முடியும். ஒரு வாய் உணவை ஒருவருக்கு கொடுக்கின்ற போது என்றாலும் அதை ஒரு சரியான முறையில் செய்யுங்கள்.
(Ess Nov2001 P345)
I) கடவுள் எப்பொழுதும் எல்லாவற்றையும் ஒரு குறையும் இல்லாமல் செய்து முடிப்பவர். (பரிபூரணன்) நான் ஒரு பக்தனுக்கு மோதிரத்தைச் சிருஷ்டித்துக் கொடுக்கும் பொழுது அது அச்சொட்டாக அவருடைய விரல்களில் பொருந்தும். ஒரு பொற்கொல்லர் அளவு எடுத்துச் செய்தாலும் சில சமயங்களில் பிழைவிட்டு விடலாம். அவர் ஒரு பொற்கொல்லர். ஆனால் கடவுள் ஒரு வாழ்வு-கொல்லர். அவர் எப்பொழுதும் எல்லாவற்றையும் அச்சொட்டாகச் செய்பவர்.
நீங்கள் செய்யும் எந்தச் சேவையும் பூரணமானதாகச் செய்யப்பட வேண்டும். சேவை செய்பவரும் சேவை பெறுபவரும் திருப்தி அடைய வேண்டும். அது தான் உண்மையான சேவை. அப்படிப்பட்ட சேவையின் பயனாகப்
பெறும் ஆனந்தம் வேறு எங்கும் காணப்பட முடியாது.
(Ess.Nov2001 P346)
I)உங்கள் ஒழுக்கம், நடத்தை என்பன இந்த உலகத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இன்று இந்த உலகம் ஒரே குழப்பத்தில் இருக்கிறது. துக்கம், குழப்பம், பாவம், கோபம் எங்கும் எதிலும் இருக்கிறது. இந்த நிலைமையில் கலக்கமடைந்திருக்கும் இந்த உலகிற்கு அமைதியைக் கொடுக்க வேண்டிய மட்டற்ற ஒரு கடமை உனக்கு இருக்கிறது.

அமைதி எங்கே இருக்கிறது. அது உன்னுள்ளே இருக்கிறது. நீயே அமைதியின் உருவம், வெளி உலகில் அமைதி இல்லை. (Peace), அங்கே எல்லாம் சிதறிப் போயிருக்கிறது (Pieces) இதற்கெல்லாம் மனிதனின்
சுயநலம்தான் காரணம்.
(EssNov2001 P347)
9.1.கஷடங்களும் நம்பிக்கையினமும் உணர்த்துவன்
என்ன கவடிடம்?
1. உயர்நிலைக்கு வரவில்லை. பெரிய விஷயங்களைப்பற்றி சொன்னால் ஸ்வாமி நாங்கள் இன்னும் அந்த உயர் நிலைக்கு வரவில்லை எனப் பதில் சொல்கிறார்கள். பாவம் செய்யும் நிலையில் இருக்கிறீர்களா? அடுத்தவரை விமர்சிக்கும் நிலையில் இருக்கிறீர்களா? மற்றவரைத் துஷிக்கும் நிலையில் இருக்கிறீர்களா? இந்த நிலையில் எல்லாம் இருக்க முடியும் என்றால் ஏன் உயர் நிலையில் இருக்க முடியாது. முயற்சி செய்யுங்கள் பலன் கிடைக்கும். பாவம் செய்வது மிகவும் கஷ்டம். புண்ணியம் செய்வது மிகவும் சுலபம். பொய் சொல்வது கஷ்டம். உண்மை பேசுவது மிகவும் சுலபம். இருப்பதை இல்லை என்று சொல்ல எத்தனையோ முறை யோசித்து, யோசித்து செயல்பட வேண்டும். அதனால் அசத்யம் சொல்வதும் அநியாயம் செய்வதும் மிகவும் கஷ்டமானது.
(த.ச.சா மே95 ப9)
i.சத்யமே பேசுகிறேன். மனிதர்களைப் பற்றி வேடிக்கையாக ஏதாவது சொன்னால் ரசிக்கிறார்கள். ஸ்வாமி அப்படிப் பேசி உங்களைத் திருப்திப்படுத்த விரும்பவில்லை. சத்தியத் தையே போதிப்பேன். இன்றில்லை என்றாலும் நாளையாவது

Page 48
உண்மை உங்களுக்கு விளங்காதா என்ற ஆர்வத்தில் சத்யத்தையே எடுத்துச் சொல்வேன்.
(த.ச.சா ஜூலை95 ப8)
i. உணர்ந்திருக்கிறோமா? தெய்வத்தை அடையச் செய்யும் சாதனைகளில் நம் பங்கு எவ்வளவு? எந்த அளவு தெய்வத்துவத்தை உணர்ந்திருக்கிறோம்? இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்படாவிட்டால் இறைவனின் சமீபத்தில் எத்தனை காலம் இருந்தும் பயனில்லை.
iv. இந்த உலகில் தெய்வத்துவத்தைத் தவிர மிக நெருக்கமானது வேறொன்றுமில்லை. சில சமயம் தாய் கூட தள்ளியிருக்கலாம். தெய்வம் மட்டும். அவ்வாறு இருக்காது. அப்படி என்றால் என்ன?
நீயே கடவுள். இதைப் புரிந்து கொள்ள நிரந்தரமான தெய்வத்துவத்தை அறிந்து கொள்ள மனிதன் முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வெளியே புற வழிபாடுகள், சடங்குகள் இவற்றிலேயே மனிதன் தன் காலத்தைக் கழிக்கிறான். ஒரு புறம் வெளிப்புறச் சடங்குகள் இருந்தாலும் புனிதமான உள்ளுணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
(த.ச.சா மே95 ப13)
V வாழ்க்கை, வழிபாடு வேறுபடலாம் இலக்கு ஒன்று. தெய்வத்துவத்தின் தன்மையை யாரும் தீர்மானிக்க இய லாது. இறைவனது தன்மைகள் இவை மட்டுமே, மறறவை அல்ல என்று கூறுபவன் அறிவிலி. காரணம் என்ன? மமாத்மா சர்வ பூத அந்தராத்மா. ஒரே ஆத்மா எல்லா இடத்திலும் உள்ளது. மின் குமிழில் (Bulb) செல்லும் மின் சக்தி ஒன்7ே,
sm 82 =

இனிப்புக்கள் அனைத்திலும் இருக்கும் சர்க்கரை ஒன்றே. நகைகள் அனைத்திலும் இருக்கும் தங்கம் ஒன்றே. நகைகள் பல தங்கம் ஒன்றே. பசுக்கள் நிறம் வேறு பால் ஒன்றே. ஜீவர்கள் பல உள்ளிருப்பது ஒன்றே. மலர்கள் பலவகை வழிபாடு ஒன்றே. அறிவுக்கூர்மை இல்லாது அறிவிலியாக இருந்து வாழ்க்கை நடத்தப் போராடுகிறார்கள். நற்குணமிக்க மாணவர்கள் (நாங்கள் எப்படி சிந்திப்போம்) அடங்கிய இந்தக் கூட்டத்தில் வேறு என்ன கூற இருக்கிறது.
ரோஜா, மல்லிகை சம்பங்கி போன்ற பூக்களால் அர்ச்சித்தாலும் வழிபாடு ஒன்றே. வெறும் வாழ்க்கை நடத்துவதற்கு வேறுபட்ட முறைகள் தேவைப்படுகின்றன. பல்வேறு நியமங்களை அனுஷ்டிப்பது உடற்கூற்றைப் பொறுத்தது. இது தற்காலிக இயல்பைக் கொண்டது. ஆத்ம தத்துவமோ என்றும் மாறாத ஆனந்த, அமுத உண்மையாகும். தெய்வத்துவம் மனிதத்துவத்துக்குள் உறைந்து கிடக்கிறது. அவரவர் தம் புத்தியை அனுசரித்து தெய்வத்துவம் கூடுதலாகவோ, குறைவாகவோ
இருப்பதாகக் கருதுகிறார்கள்.
(ப்.அ.வபாகம்5 ப4)
Vi. மாயை நன்மையும் செய்யும் காற்று நம்மைச் சுற்றி இருக்கிறது. இருப்பினும் கண்ணுக்குத் தெரிவதில்லை. கையில் பிடிக்கவும் முடிவதில்லை. ஆனால் காற்றே இல்லை என்றால் நமக்கு வாழ்வே இல்லை. அதனால் இந்தக் காற்றும் ஒரு மாயை எனக் குறிப்பிடலாம். அது நன்மை செய்யுமா அல்லது கெடுதல் செய்யுமா என நினைக்கக் கூடும். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். மாயை எப்போதும் தீங்கு செய்யாது. எத்தனையோ முறை மாயையினால் அவதிப்படுவதாகத் தோன்றுகிறது. மாயை

Page 49
யாரைப் பற்றுகிறது? அதற்கு கையும், காலும் கிடையாது. உனக்குத்தான் கையும், காலும் இருக்கின்றன. அதனால்தான் நீ மாயையைப் பற்றிக் கொள்கிறாயே தவிர, மாயை உன்னைப் பற்றுவதில்லை. எப்படி மாயையைப் பற்றிக் கொள்கிறாயோ அதே போல பிரமனையும் (தெய்வீகத்தையும்) பற்றிக்கொள்.
(த.ச.சா செப்96 ப7)
wi. தியாகம் என்பது தெய்வீக நினைவுகளை வளர்ப்பது. ஒரு முறை ஸ்வாமி காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒருவர் கேட்டார் "ஸ்வாமி தாங்கள் சர்வம் பிரம்ம மயம் என்கிறீர்கள். ஆனால் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இடர்களையும் இன்னல்களையும் அனுபவிக் கிறோமே இதற்கெல்லாம் காரணம் என்ன?” ஸ்வாமி கூறினார் தியாகம் செய்யக் கற்றுக் கொள். அதனைப் புரிந்து கொண்டு செயலாற்று.
தியாகம் என்பது என்ன? உலகியல் நினைவுகளை அகற்றி விட்டு தெய்வீக நினைவுகளை வளர்த்துக் கொள்ளுதல்தான் தியாகம், தெய்வீகம் எல்லா இடத்திலும் பரவியிருக்கிறது. உலகியலான நினைவுகளை உதறுங்கள். அதுவே தியாகம்.
(த.ச.சா ஏப்ரல்98 ப16)
wi.உயர்ந்த ஒழுக்கத்தின் வழிமுறை பற்றிய ஸ்வாமியின் அளவுகோலை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அது உங்கள் தவறு. ஸ்வாமியினுடைய எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப உங்களால் உயர முடியாததற்கு இதுதான் காரணம். அதற்கு முதல் தேவை தூய்மை, பொறுமை மற்றும் விடாமுயற்சி.
(த.ச.சா ஜூலை94 ப17)

ix. வலியுறுத்த, தெளிவுபடுத்த எனது செய்தியை இடைவிடாமல் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த மாணவர்கள் முன்மாதிரிகளாகத் திகழவேண்டும் என்பதற் காக அவர்களை நான் உற்சாகப்படுத்துகிறேன். அவர்கள் பேசிப் பழகவும் மந்திரங்களை ஒதவும், பாடவும், நடிக்கவும் நான் தூண்டு கோலாக இருக்கிறேன். அதன் மூலம் நான் அளிக்கும் செய்தி அவர்களின் இதயங்களில் நிலைபெற்று விடுகிறது. நான் செய்கின்ற அல்லது செய்ய வைக்கும் அனைத்தும் மனிதன் ஆத்மாவை உணர வேண்டும் (உள்ளுறை தெய்வீகத்தை உணர வேண்டும்) எனும் செய்தியை வலியுறுத்த அல்லது தெளிவுபடுத்த அல்லது எடுத்துக் காட்டுவதற்காகத்தான்.
(F.fl...&#G LIITatsub4 Lu 117)
X)ஒருவன் மகாபலசாலியாக இருக்கலாம். ஒருவன் தியானம் செய்து தவ வாழ்க்கை மேற்கொள்ளலாம். நல்ல ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் நிரந்தரமான சத்யம், ஞானம், அனந்தம் பிரம்மா என்ற தெளிவைப் பெறவில்லை என்றால் எல்லாம் வியர்த்தமே.
(த.ச.சா நவ94 ப18) xi)சாயியிடம் நெருக்கமான பிறகு நீ அதிகமான ஆன்மீக ஞானத்தைப் பெறவேண்டும். 5வருடங்களாக ஒரே வகுப்பில் உட்கார்ந்து கொண்டு மேல் வகுப்புக்கு அனுப்பப்படாமல் இருப்பது தவறு மட்டும் அல்ல. அவமானகரமானதும் கூட.
(த.ச.சா ஜூலை94 ப9)
xi)மிருகக்குணங்களிலிருந்து விலகியிருந்து மனித குணங் களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் மூலம் தெய்வீகத்துடன் ஒன்றுங்கள். மனித உயர் குண நலன்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை எனில் எப்படி

Page 50
உங்களால் தெய்வீகத்தைப் புரிந்து கொள்ளமுடியும்? முதலில் மனித உயர் குணங்களை நடைமுறைப்படுத் துங்கள். தெய்வீகம் தானாக மலரும்.
(த.ச.சா பெப்99 ப16)
xi)தெய்வத்தன்மை என்பது என்ன? எல்லோரின் நன்மைக் காகவும் ஆசைப்படு. யாருக்கும் துன்பம் விளைவிக்காதே. எல்லோரும் ஆனந்தம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய். அதுவே தெய்வ இயல்பு. மனித இயல்பு என்பது 676io. Help ever Hurt never 6T Gungsub so 2567 Gatlit 6905 பொழுதும் துன்பம் தராதே. இதுவே விரதமாக இருக்க வேண்டும்.
(த.ச.சா ஏப்ரல்99 ப10)
xiv) அத்வைதம் எங்கும் நிறைந்த இறைவன் ஒருவரே என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால் அதன் பின் அவருக்கு ஓர் உருவம் இருந்தாக வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. எங்கும் நிறைந்த அவர் இல்லாத இடம் ஏதாவது இருக்க முடியுமா? இந்த உலகம் முழுவதும் இறைவனது மாளிகையானால் அதில் நுழைவதற்குரிய வாசலை எங்கே போய்த் தேடுவீர்கள்? தனியாக ஒரு விதியும், ஒரு விடும் இருந்தால் அந்தத் தெருவுக்குள் நுழைவதற்குரிய வாயிலும் இருந்தாக வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு தெருவே இல்லையே. எங்கும் நிறைந்த இறைவன் எல்லா இடத்திலும் இருக்கும் போது தனியாக ஓரிடம் எப்படி இருக்க முடியும். அப்படி இல்லாத போது அவரை எங்கே போய்த் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்? அவர் இருப்பதற் கென்று தனியாக ஓரிடம் கிடையவே கிடையாது. அவர் எங்கும் எல்லாக் காலத்திலும் இருப்பவர் என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால் அதன் பின் பல்வேறு இடங்களிலும்
ത്ത് 86 =

காணப்படும் பிரதிபலிப்புகளுக்குரிய ஒரு தோற்றப் பொருள் உண்மையாக தெய்வீக அனுபவம் அல்ல என்பதும் நீங்களே, ஆத்மாவே, அந்த ஒன்றே, எங்கும் எல்லாப் பொருள்களிலும் அதனுடைய முழு அளவில் நிரம்பியிருக் கிறது என்பதும் உங்களுடைய உண்மையான தெய்வீக அனுபூதியாக இருக்கும். எல்லாவற்றிலும், எல்லா நேரத்தி லும் (இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க) நிறைந்த இந்தத் தெய்வீகக் கோட்பாடே அத்வைதம் என அழைக்கப்படுகிறது.
(பா.கீபே பாகம்1 ப117)
XV) வழிபடுவது ஒன்றையே உடல் பெருங்கோவில். இறைவனே உள்ளிருப்பவர். உனது உடலே கோவில். உள்ளிருக்கும் ஜீவனே இறைவன். உன்னை நேசித்துக் கொள்வதைப் போல பிறரையும் நேசித்துக் கொள்ள வேண்டும், அதுவும் கோவில். இதுவும் கோவில். அங்கும் ஜீவன் இங்கும் ஜீவன். ஜீவன் ஒன்றே. (அங்கும் இறைவன் இங்கும் இறைவன்) இறைவன் ஒன்றே கோவில்கள் தான் பலவாகும்.
ஒரே மனிதன். மகன் அவனை அப்பா என்று அழைக் கிறான். மருமகன் மாமா என்று அழைக்கிறான். சகோதரன் அண்ணா என்று அழைக்கிறான். ஒரே மனிதன் பல பெயர் களால் அழைக்கப்படுகிறான். பல பெயர்களில் அவனது தொடர்பை அனுபவிக்கிறார்கள். அனுபவங்கள் பலவாகும். அவற்றின் மூலம் ஒன்றே. ஒரே மனிதன். ஒருவனே அண்ணா, தந்தை, மாமா அனைவரும். மக்கள் இறைவனை அல்லா, ஜீசஸ், ஜாராதுஸ்டிரா, ராமர், கிருஷ்ணர், புத்தர் என்று பல விதமாகப் போற்றித் துதிக்கின்றனர். இவையெல்லாம் நமது உடல், உணர்வு சம்பந்தப்பட்ட உணர்வுகளே. உண்மையில்

Page 51
கடவுள் ஒருவரே. நாம் எத்தகைய வேறுபாடும் காட்டலாகாது. புத்தரை விரும்பினால் இறைவனை புத்தரின் வடிவில் வழிபடு ஈசுவரனை விரும்பினால் இறைவனை ஈசுவரனின் வடிவில் வழிபடு. அல்லாவை விரும்பினால் அல்லாவாக வழிபடு ஜீசஸை விரும்பினால் ஜீசஸ்ஸாக வழிபடு எந்தப் பெயரில் வழிபட்டாலும் வழிபடுவது ஒன்றையே என்று அறி. இலட்சியம் ஒன்றே. இறைவன் ஒருவரே. தெய்வத்துவத்தைப் பற்றி எந்த வேறுபாடும் கொள்ளலாகாது.
(L 52.GéabnI.ud 2000 Lu157)
xwi) நீரிலே பிறந்து நீரிலே பெருகி நீரிலே மறைவது நீர்க்குமிழி. நான் (மனிதன்) நீர்குமிழி. நாராயணனே (இறைவனே) நீர். மனிதன் என்ற நீர்க்குமிழி இறைவன் என்ற நீரிலிருந்து தோன்றியதாகும். ஜீவனே இறைவன். இறைவனே ஜீவன். ஜீவன் தனிப்பட்டதல்ல.
(15.085II.LD2000 Lul65)
XVi) மனிதன் தன்னிடம் நம்பிக்கை வைப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன? அவன் தனியாக இருப்பதாகவும், இறைவனை விட்டுப் பிரிந்திருப்பதாகவும் நினைத்துக் கொள்வதுமே காரணமாகும். ஆனால் உண்மையில் அவ னது இதயத்தின் அடித்தளமாக இருப்பதே தெய்வீகந்தான். பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருப்பதும் அதே தெய்வீகம் தான். நீங்கள் இறைவனிடம் உறுதியான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் எப்போதும் பயப்படமாட்டீர்கள். நீங்கள் வழிபடும் தெய்வமே எல்லாப் பொருளிலும் எல்லா உயிர்களிலும் உங்களிடமும் இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். அந்த நம்பிக்கை உங்கள் இதயத்திலுள்ள அனைத்து விதமான

பயங்களையும் ஒட்டி விடும். ஆனால் அந்த நம்பிக்கை உங்களிடம் இல்லையேல் பயம் உங்களை ஆட்டிப்படைத்து விடும். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் நீங்கள் பயப்படுவீர்கள். சோதனை நேரும் போது பயந்து விடுவீர்கள். விமானத்தில் பயணம் செய்யும் போது பயப்படுவீர்கள். சாலையில் எதிர்த்திசையில் ஓர் வாகனம் வந்தாலும் பயப்படுவீர்கள். தூங்க ஆரம்பித்ததிலிருந்து தூங்கி எழும்வரை பயப்படுவீர்கள். உங்கள் காலம் முழு வதும் பயத்திலேயே கழிந்து கொண்டிருக்கும். ஆனால் இது சரியல்ல. பயமற்றவர்களாக நீங்கள் மாறியாக வேண்டும்.
நீக்கமற நிறைந்துள்ள ஒன்றின்மீது நம்பிக்கை வைப்பதே நீங்கள் பயமின்மையை வளர்த்துக் கொள்வதற்கான வழியாகும். நம்பிக்கை இழக்கும் போது பயம் அதிகரிக்கும். உங்களுடைய உண்மையான சொந்த இயல்பை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஐந்தடி (அல்லது ஆறடிவரை) உள்ள உடம்பே நீங்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் எல்லையற்ற வடிவமும் அளவிலா ஆற்றலும் உடையவர்கள். சிறிது முயன்றால் மோக மயக்கங்களைக் களைந்து ஆத்மாவைக் கண்டு
நிர்வாண நிலையில் ஐக்கியமாகி விடலாம்.
(பா.கீபே பாகம்2 ப241)
9.2.உணர்வுடன் கலக்க வேண்டும்.
1) உண்மையை உணரும்வரை எல்லாமே துன்பம்தான். தெய்வத்துவம் என்ற உண்மையை உணர்ந்தபின் உங்கள் கவலையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது. பலருக்கு பலபபல (வேறு வேறு வகை) இனிபக்கள் பிடிக்கும். ஆனால் எல்லா இனிப்புக்கும் ஆதாரம் சர்க்கரைதான்.
一 = 89=

Page 52
அதே போல தெய்வத்துவம் மட்டும் ஒன்றுதான். இதுதான் ஸர்வம் கல்விதம் ப்ரம்மா என்பதன் பொருள்.
(t. IIT...6) 191)(905Guj60J20. 1195)
i) நமக்குள்ளே அமைதி நிரம்பியிருக்கிறது. உனது உண்மையான ஆத்மாவை (Self) அறியும் போது நீ அமைதியை உணர்கிறாய். உன்னை நீ அறிந்து கொள்ளும் போது உனக்கு அமைதி கிட்டுகிறது. அமைதிக்கென்று ஒரு வடிவம் இல்லை. அமைதி என்பது ஆத்ம தத்துவம். அமைதி இதயத்திலிருந்து வெளிவருவதற்கு தபஸ், தியானம் போன்ற எந்த ஆன்மீகப் பயிற்சியும் தேவையில்லை. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் துால உடலுடனும் உலகியற் செயல்களுடனும் தொடர்பு கொண்டவை.
(சா.அ. கோடை 1997 ப94)
i) ஞானத்துக்கும், அறியாமைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை நாம் கண்டறிய வேண்டும். ஒரு அறை முழுவதிலும் கண்ணாடிகள் உள்ளன. ஒருவன் அந்த அறைக்குள் நுழைகிறான். எந்தக் கண்ணாடியில் பார்த்தாலும் தன்னுடைய பிரதிபலிப்பையே பார்க்கிறான். தானே அனைத்தும் என்பதில் திருப்தி அடைகிறான். இதுவே ஞானம்.
ஒரு நாய் அந்த அறைக்குள் நுழைகிறது. அங்கு பல நாய்களை அது கண்டது. மற்ற நாய்கள் தன்னுடன் சண்டையிட விரும்புவதாக அது நினைத்தது. மற்ற நாய்களை (தனது பிம்பத்தை) அது தாக்கியது. இதனால் கண்ணாடிகள் பல துண்டுகளாக உடைந்தன. இப்போது பார்க்கும் இடமெல்லாம் அது நாய்களைக் கண்டது. (அந்த நாய்களுடன் உடைந்த கண்ணாடியில் கண்ட) சண்டை

யிட்டது. உண்மையில் அது தன்னுடன் தான் சண்டையிட்டுக் கொண்டது. வெளியே செல்ல அங்கே ஒரு வழி இருந்தது. அதைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் வெளியே சென்றது. இத்தகைய நிலையே அறியாமையாகும். மனிதன் ஆத்மா (தெய்வீகம்) வேறு தான் வேறு என்று நினைக்கிறான். ஆத்மாவாக இருந்து கொண்டு தான் உடல் என்ற பிரமை யில் உழலுகிறான். அங்கு ஞானம் என்ற வழியும் பக்தி என்ற வழியும் உள்ளன. மனிதன் வாழ்க்கையுடன் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கிறான். சங்கிலியை விலக்கிக் கொள் வது எங்ங்னம்? இவற்றை விலக்கிக்கொள்ள இரு வழிகள் உண்டு.
சங்கிலியை உடைத்துக் கொண்டு தப்பிக்கலாம்
சங்கிலிக்குள்ளே புகுந்து தப்பிக்க வேண்டும்.
மிகச் சிறியவனாக மாறித் தப்பிக்கும் வழிதான் பக்தி, நான் சிவன். நான் சிவன். சிவோஹம்,சிவோஹம் என்று கூறி மிகப் பெரியவனாக வளர்ந்து சங்கிலியை உடைப்பது இன்னொரு வழி. அதுவே ஞானம்.
நான் சேவகன் நான் சேவகன், தாசோஹம் தாசோஹம் என்றே கூறிக் கொண்டே இருக்கும் போது நீ மிகச் சிறியவனாகிறாய். சங்கிலியின் உள்ளே புகுந்து தப்பிக்கிறாய். இதுவே பக்தி மார்க்கம். ஆகவே பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்ற இரு வழிகள், உண்டு. ஞான வழி கடினமானது. பக்தி வழி எளிதானது. அது முழுமையான அன்பாகும். உனது இதயத்தில் திட நம்பிக்கையை இருத்திக் கொண்டு உனது வாழ்க்கையை (தெய்வீக) அன்பினால் நிரப்பினால் அதைவிட எளிதான வழி வேறெதுவும் இல்லை.
= 91

Page 53
தெய்வீக அன்பின் வடிவங்களே!
நாம் காணும் மனித வாழ்க்கை, தடங்கல்கள், இடைஞ்சல்கள், துன்பங்கள், பலவகையான துக்கங்கள் நிறைந்தது. தெய்வத்துவம் இல்லாமல் மனிதன்
அமைதியைப் பெறமுடியாது.
(afIT.9.65mgool 1997 L72)
IV) நீ காளில் உட்காரும் போது பொறுப்பை டிரைவரிடம் ஒப்படைத்துவிட்டு தூங்குகிறாய். நீ கவலைப்படத் தேவையில்லை. அது போல பொறுப்பை உன்னை நடத்திச் செல்லும் கடவுளிடம் ஒப்படைத்து விடு. அவர் அனைத்தையும் கவனித்துக் கொள்வார். ஒரு செல்வந்தன் வீட்டில் காவற்காரன் வீட்டைக் கவனித்துக் கொள்கிறான். காவற்காரன் தன்னைக் காப்பாற்றுகிறான் என்று நினைத்து செல்வந்தன் உறங்குகிறான். நாவிதனிடம் செல்லும் போது அவன் உனது தலையைப் பிடித்துக் கொண்டு தலை முடியை வெட்டுகிறான். உன்னைக் கடவுளிடம் ஒப்படைக்க உன்னால் முடியவில்லை. இதுவே இக்காலத்திய மனிதனின் பலவீனம். நீ அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கும் போது அவர் உனது தொந்தரவுகளையும், கவலைகளையும் எடுத்துக் கொள்கிறார். மனிதனிடம் திடநம்பிக்கை இருப் பதில்லை. கடவுளின் மீது திடநம்பிக்கையை வளர்த்துக் கொள். ஒவ்வொருவரிடமும் அதே தெய்வத்துவம் உள்ளது என்ற உண்மையைக் கண்டு கொள். துன்பங்கள் வந்தால் அவற்றை எதிர்கொள். தெய்வம் எனக்குள் இருக்கிறது (எப்படி?) துன்பங்கள் என்னை ஒன்றும் செய்யாது என்று நினைத்துக் கொள். உண்மையான மனோதிடம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. அத்தகைய மனோதிடத்தால் படிக்கவும், பேசவும் வேலை செய்யவும் நம்மால் முடிகிறது.
= 92 =

எது செய்வதாயினும் மனோதிடம் வேண்டும். மனவுறுதியே (தெய்வீகத்தின் நம்பிக்கையில் பெற்ற) இறைவனாகும்.
(syn.9.035IT60pL1997 Lu114)
V) வியாதிக்குத் தகுந்த மருந்தைக் கொடுக்க வேண்டும். வயிற்று வலிக்கு கண்மை தடவுவதில்லை. வலி ஓரிடத்தில் இருந்தால் மருந்தை வேறிடத்தில் தடவுகிறோம். வியாதிக்கு ஒரு காரணம். மருந்து அளிப்பதற்கு காரணமோ வேறு. ஒரு மனிதனுக்கு ஒரு குமாரன். அவன் பந்து விளையாடச் சென்றபோது மூலையிலிருந்த தேள் அவனைக் கொட்டியது. தேள் கொட்டிவிட்டது என்று அவன் அழுது கொண்டு வந்தான். தந்தைக்கு மகனிடம் மிகுந்த அன்பு. உடனே வைத்தியரிடம் சென்றார். மருத்துவர் ஒரு களிம்பைக் கொடுத்து தேள் கொட்டிய இடத்தில் இந்த மருந்தைத் தடவுங்கள் என்று கூறினார். தந்தை வேகமாகச் சென்று மகனிடம் தேள் எந்த இடத்தில் கொட்டியது என்று கேட்டார். அப்பா தேள் அந்த முலையில் (இருந்துதான்) கொட்டியது என்று மகன் சொன்னான். களிம்பை அறையின் மூலையில் தடவினான். மகனுக்கு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க வில்லை. அசாந்தி எங்கிருந்து வந்தது? அதற்குக் காரணம் என்ன? என்று அறிந்து அதற்குத் தீர்வு காண வேண்டும். நாம் இதன் உண்மையை அறிவதில்லை. வலி ஓரிடம் மருந்து தடவுவதோ வேறொரிடம். கடவுள் எங்கிருக்கிறார் என்று நாம் கிராமம் கிராமமாக, மலையுச்சிகளில், இமாலய மலையில் தேடுகிறோம். கடவுள் எங்குமிருக்கிறார். கடவுள் உனக் குள்ளும், வெளியிலும், பக்கத்திலும், கூடவும், மேலும், கீழும், சுற்றிலும் இருக்கிறார். கடவுள் எங்கோ என்று வேறெங்கு தேடுவாய். பார்வையை உள்நோக்கித் திருப்பித் தேடு.
(பி.அ.வ.2 ப59)

Page 54
VI)மலேரியாவால் அவதிப்படுபவனுக்கு சர்க்கரை கசக்கும். இதில் குறை அவனது நாக்கில்தானே தவிர சர்க்கரையில் இல்லை. இதைப் போலவே உலகியல் ஆசையில் மூழ்கியி ருப்பவனுக்கும் தெய்வீகத்தின் இனிமையைச் சுவைக்க முடியாது. தீர்மானமாக
கடவுள் என்னிடம் இருக்கிறார்
என்னுடன் இருக்கிறார்
என்னைச் சுற்றி இருக்கிறார்
எனக்கு ஆதரவாக என்பின்னால் இருக்கிறார்
என்ற முடிவில் இருங்கள். இவ்வாறு எண்ணும் போது நீ தெய்வீகமாக மாறி விடுகிறாய். நீங்களும் கடவுளும் வேறு என்ற எண்ணத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
(த.ச.சா பெப்99 ப25)
VII)ஆத்ம தத்துவத்தை (தெய்வீகத்தை) அனுபவிக்கத் தடையாக நம் வழியில் வருவது எது என்பதை ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அகங்காரம் (நான்) மமகாரம் (எனது) என்ற இரண்டுமே இதற்குத் தடையாக இருக்கின்றன. மமகாரமும், அகங்காரமும் விலகினால்தான் உங்களுக்குத் தூய்மையான இதயம் உருவாகும். தூய்மை யான இதயமே உயர்ந்த ஞானத்தை நீங்கள் அனுபவிப் பதற்கு இட்டுச் செல்லும். உங்களுக்குப் பற்றுதல் அதிக மாக அதிகமாக பதட்டம் இன்னும் அதிகரிக்கும். அகங்காரம் என்பது மிகவும் ஆபத்தானது. மனிதப்பிறவியின் குணப் படுத்த முடியாத நோய் அது. ஆகவே அகங்காரத்தையும் மமகாரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு உங்களை ஆத்மாவிற்குள் தேடுவதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
(த.ச.சா ஜன99 ப15)
= 94 =

VIII) நீ உன்னுடைய இயல்பான உள்ளுறையும் தெய் வீகத்தை மறந்து விட்டாய், வெளிப்புறமாகத் தெரியும் வடிவங்களையும், உருவங்களையும் கண்டு மலைத்துப் போகிறாய். அதனால் தெய்வீகத்தை உணர முடியவில்லை. ஆகவே நாம் மாறிக் கொண்டேயிருக்கும் நமது தேகத் தின்மீது இருக்கும் பற்றுதலைக் குறைத்துக் கொள்ளும் போதுதான் நிரந்தரமான தெய்வீகத்துவம் நமக்குப் புரியத்தொடங்கும்.
(த.ச.சா ஏப்ரல்99 ப4)
IX) முதல் வகுப்பில் சேரும் மாணவன் ஒருவன் அந்த வகுப்பிலேயே இருப்பதில் திருப்தி கொள்ளமாட்டான். அவன் மேல்வகுப்பிற்கு செல்ல ஆசைப்படுவான். மாணவன் ஒருவன் ஒரே வகுப்பில் இரண்டு வருடம் இருந்தால் அவனிடம் மனத்தளர்ச்சியும் ஆர்வமின்மையும் வளர்ந்து விடும். அவனது மனம் சோர்வுறுவதுடன் சக மாணவர்களின் பலவிதமான கிண்டல்களையும் தாங்கிக் கொள்ள வேண்டி யிருக்கிறது. அதைப் போலவே நீங்கள் ஆன்மீக மேன்மை யுறாமல் துவைத நிலை வழிபாட்டிலேயே தொடர்ந்து தங்கி விடுவீர்களானால் மற்ற பக்தர்கள் உங்களைத் தாழ்வாகவே கருதுவர். மற்ற பக்தர்கள் இந்த ஆசாமியைப் பாருங்கள் எத்தனை உபன்யாசங்களைக் கேட்டிருக்கிறார்? எத்தனை சாத்திரங்களைப் படித்திருக்கிறார் இத்தனை இருந்தும் என்ன பயன். ஒரு முன்னேற்றமும் இருப்பதாகத் தெரிய வில்லையே என்று கூறுவர். முதல் நிலையிலேயே ஒட்டி கொண்டிருக்கும் இந்த துரதிஷ்ட வசமான செயல்முறை யானது ஜடத்துவமும், சோம்பலும் நிறைந்த தமோ குணத்தைச் சார்ந்தது ஆகும். இந்த தமோ குணத்திலிருந்து விடுபட்டு நீங்கள் துவைதத்திலிருந்து விசிஷ்டாத்வைதத் திற்கு முன்னேற வேண்டும். இறைமையின் மீது இடைவிடா
മ്മ 95 =

Page 55
மன ஒருமைப்பாட்டைச் செலுத்தி நீங்கள் விரும்பிய குறிப் பிட்ட வடிவில் இறைக்காட்சியைக் காண முயல வேண்டும். தீவிர ஈடுபாடு உங்களிடமிருப்பின் இறைவனைக் காணும் அந்த அரிய வாய்ப்பும், நேருக்கு நேர் அவருடன் உரை யாடும் வாய்ப்பும், பற்பல வழிகளில் அவருக்குப் பணி யாற்றும் வாய்ப்பும் உங்களுக்குக் கிட்டும்.
ஆனால் அத்துடன் நீங்கள் திருப்தியடைந்து விடக் கூடாது. அடுத்த நிலையை அடைவதற்குரிய வாய்ப்புக்காக நீங்கள் பாடுபடவேண்டும். இறுதி நிலையான அத்வை தத்தை அடையும் வரை அதாவது நீங்கள் முழுமையாக இறைவனுடன் கலந்து ஒன்றுவதை உணரும்வரை ஓய்வு கொள்ளவோ, மனச் சாந்தி அல்லது மனநிறைவு பெறவோ
கூடாது.
ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் உடலுக்கு ஓய்வளிக் கவும் சிறிது மனச்சாந்தி பெறவுமே ஆசைப்படுகிறீர்கள். ஆனால் இது நல்லதல்ல. ஆத்மசாந்தி பெறும் நிலையை நீங்கள் அடைந்தாக வேண்டும். ஆத்மாவுடன் ஒன்றும்போது நீங்கள் சாந்தசொரூபியாகவே இருப்பீர்கள். நிரந்தரமான சாந்தியின் பிறப்பிடமே ஆத்மாதான். தனித்து நிற்கும் ஜீவாத்மா பிரபஞ்சமுழுவதும் நிரம்பியுள்ள பரமாத்மாவுடன் ஒன்ற(ாக) வேண்டும். அதன் பின்னரே நீண்ட நெடும் பயணம் (இறுதியில்) நிறைவு பெறும். நிரந்தர ஆனந்தமும் உணரப்படும்.
கடலில் தோன்றிய ஆறு கடலில் சங்கமமாகிறது. ஆனால் ஆறு ஆரம்பமான விதம் எப்படி? ஆரம்பத்தில் கடல் மேகமாக மாறுகிறது. கடல்நீர் மேகமாக மாறியவுடன், ஒன்றாக இருந்த மேகமும் தனித்தனியாகப் பிரிந்து

இரண்டாகி விடுகிறது. உப்பாக இருந்த கடல்நீர் மேகமாக மாறியவுடன் இனிக்கிறது. மேகமாக மாறிய நீர் மழையாகப் பொழிகிறது.
அதை நீங்கள் அன்பு மழை என அழைக்கலாம். ஏனெனில் மழைநீர்தான் ஆறாக மாறி கடலுடன் கலக்கும் எண்ணத்தில் விரைந்து ஓடுகிறது. இதை விசிஷ்டாத் வைதத்தின் காட்சி நிலையுடன் ஒப்பிடலாம். இங்கேதான் இறுதிக் குறிக்கோளை அடைவதற்குரிய முயற்சியும் பேராவலும் வளர்கிறது. இந்தக் கட்டத்தில்தான் நீங்கள் பிரிந்து வந்த பிறந்த இடத்தை அடைவதற்கு இதயபூர்வமாக ஆசைப்படுகிறீர்கள். நீரானது ஆற்றின் வடிவெடுத்து ஓடி இறுதியில் குறிக்கோளை (கடலை) அடைகிறது. இதுதான்
அத்வைத நிலை.
(பா.கீபே பாகம்1 ப74)
9.3 மனமாற்றம் 1) தெய்வீக தத்துவம் ஒருவனுடைய மனதின் ஊடாகவே அவனுடைய உண்மைத் தனித்தன்மையோடு தொடர்பு கொண்டுள்ளது. எண்ணங்களையும் அதை ஏற்றுக் கொள்ளாத முடிவில்லாத எண்ணங்களையும் வரவேற்று உபசரிப்பது மனதின் சிறப்பியல்பாகும். சில சமயங்களில் எண்ணங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவை அவன் காலையே வாரிவிடுகின்றன. சில சமயங் களில் கலியுகத்தின் காரணமாக தடம் மாறிய எண்ணங்க ளால் மனிதன் போதையேற்றப்படுகிறான். மனம் (மதி) இலக்கு(கதி) அந்தஸ்து(ஸ்திதி) அபிவிருத்தி (சம்பதி) ஒன்றை ஒன்று சார்ந்தவை. இந்த நான்கையும் பிழையாகக் கையாள்பவன் அரக்கனாகிறான்.
(Ess Nov97 L 292)

Page 56
11)ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் என்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு மர்மமான பொருள். அது இடம்பெயராதது போலத் தோன்றும். இருந்தும் இது ஒளியின் வேகத்திலும் பார்க்க அதிவேகமாகப் போகக்கூடியது. ஒருவன் பலவிதமான பிறவிகள் எடுத்தாலும், பெயரிலும், உருவத்திலும் பலவிதமான மாற்றங்களை அடைந்தாலும் மனம் ஒருவித மாற்றமும் அடையாமல் இருக்கும். அது ஒருவனை அவன் பிறவி தோறும் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும். இதுதான் மனத்தின் விசித்திரமான இயக்கமாகும். இந்த நிலையில் ஒருவர் எப்படி தன் மனிதத்தன்மையை வெளிப்படுத்தலாம். சுவையற்ற பூவில்கூட இனிமையான தேனைச் சேகரிக்கும் தேனியின் உதாரணத்தை மனிதன் பின்பற்ற வேண்டும். அதே போல தீயதைப் போல தோன்றும் ஒரு விடயத்தில்கூட நல்லதைத் தேர்ந்தெடுக்க ஒருவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தீயது என்று சொல்வதிலும் நல்லது என்று ஏதோ இருக்கிறது.
(ESS ஒக்96 ப92)
I.மனிதனிடம் ஒவ்வொரு கணமும் தெய்வத்துவம் ஒளி விடுகிறது. மனிதன் பிறந்திருப்பது ஏதோ சுயநலத்திற்கும், சுயலாபத்திற்கும் அல்ல. உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டாக உதாரண புருஷனாக வாழ அவன் இலக்கு நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். இந்த உலகில் எங்கு நோக்கினும் அமைதியின்மை, அமைதியின்மைதான். எல்லாம் மாறு கின்றன. காலம் மாறுகிறது. மனிதர்கள் (புறத் தோற்றத்தில்) மாறுகிறார்கள். நியமங்கள் மாறுகின்றன. மனித மனம் மட்டும் மாற மறுக்கிறது.
(த.ச.சா ஏப்ரல்96 ப2)
= 98

IV. மனிதன் தன்னுள் இருக்கும் தெய்வீகத்தை அடக்கி வைத்திருப்பான். எப்போது இத்தெய்வீகத்தை அதிகமாக வளர்க்கிறானோ, அப்போது தெய்வ சங்கல்பத்தைக்கூட மாற்ற இயலும். ஏனெனில் மனிதன் தெய்வீகத்தின் அம்சம். பிரகிருதியின் அம்சமல்ல. அதனால் நல்ல எண்ணங்க ளையும், செயல்களையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். உதாரண புருஷனாக உன்னை நிலை நிறுத்திக் கொள்ளு தல் அவசியம்.
(த.ச.சா ஏப்ரல்96 ப8)
V) ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் ஆரம்பம் இப்போதுதான் ஏற்படத் துவங்கியிருக்கிறது. விதை மரமாகவும், குழந்தை தந்தையாகவும் என மாற்றம் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. முட்டை பறவையாக மாறுகிறது. இவையெல்லாம் மாற்றத்தின் விளைவுகளே. ஆனால் மனிதன் தெய்வமாக உயருவதில்லை. ஆனால் அரக்கனாக கீழே இறங்கிப் போய் விடுகிறான். இது தவறு. முன்னேற வேண்டும். பின் வாங்கக் கூடாது. மாணவத் தன்மையிலிருந்து (மனிதத்தன்மையிலிருந்து) தெய்வத்துவமாக மாற வேண் டும். பிராணிகளின் நிலையிலிருந்து மனிதனாக வளர்ந்திருக் கிறோம். தெய்வீகமாக உயர வேண்டுமேயன்றி வேறு வழி செல்லக்கூடாது.
(த.ச.சா ஏப்ரல்96 ப18)
V1) நான் என் பக்தர்களுக்குக் கொடுப்பதெல்லாம் தூய அன்பைத்தான். அதற்குப் பதிலாக எதிர்பார்ப்பது மனமாற்றத்தை. களங்கங்கள் அகன்று தூய மனமாக அவை மாற வேண்டும் என்பதைக் குறித்தே என் வியத்தகு செயல்கள் அமைகின்றன. ஸ்வாமியின் ஆவலை நிறை
H 99 =

Page 57
வேற்ற நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நம்மனதை அவரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவோம்.
(த.ச.சா ஏப்ரல்96 ப28)
VI) ஒவ்வொரு மனிதனும் தான் தன்குடும்பம் என்ற குறுகிய மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். தெய்வத்து வத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். சத்சங்கத்தில் சேர வேண்டும். தெய்வ சிந்தனை தொடர்ந்து இருக்க வேண்டும். தெய்வத்துவத்தை மறந்து விட்டதால்தான் இந்நாழில் இவ் வுலகச் சிக்கல்களில் கட்டுண்டு வாழ்க்கையில் விரக்தியடை கிறான். அதிகமான செல்வம் இருப்பதால் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான் இந்தத் தேசம் பலவீனப் பட்டுப் போனதற்குக் காரணம் தனிமனித ஆசைகளே. தெய் வத்தை மறந்து உலகியல் செளக்கியங்களே உயர்ந்த தெனக்கருதி மாயையில் வீழ்ந்து கிடக்கிறான். மனிதன் (தான்) தெய்வமென்பதையே முழுமையாக மறந்து விட்டான். அதனால் மனித வாழ்க்கை என்பது முழுமையும் வீணான ஒன்றாக மாறிப் போய் இருக்கிறது. இங்கு மனிதர்கள் இருக்கிறார்களே தவிர மனித குண நலன்கள் முற்றாக காணப்படவில்லை. உருவத்தில்தான் அவன் மனிதனாக இருக்கிறானே தவிர நடத்தையில் மனிதனாக இல்லை. எல்லோரும் பக்தர்களாகவே காட்சியளிக்கிறார்கள். இந்த பக்தி எல்லாம் தற்காலிகமான பக்தியே. இதயபூர்வமான நம்பிக்கை காணப்படுவதேயில்லை. இடையிடையே சுய நலனும் சுயலாபமும் பற்றிய எண்ணங்கள் வேறு குறுக்கிட்டு உன் உண்மையான இயல்பையே மறக்கச் செய்கிறது. மனிதன் உலகியலாக எத்தனை உயர்ந்த நிலையில் இருந்தபோதும் அவனது உள்ளுறையும் தெய்வீகத்தை மறக்கக்கூடாது.
(த.ச.சா மே96 ப2)
= 100=

VIII) வருடங்கள் செல்லச் செல்ல நம் வயதுதான் அதிகரிக்கிறது. ஆனால் நம் உள்ளுணர்வுகள் மாறுவ தில்லை. உணர்வுகள் மேன்மையானதாக இல்லை. உள்ளுணர்வுகள் நல்ல முறையில் வளர வேண்டும். உன்னத மான சிந்தனைகள்தான் ஞானத்துக்குச் சமமாகின்றன. தூய எண்ணங்களின்றி ஞானம் எங்ங்னம் கிடைக்கும். ஞானம் கிடைத்த பிறகுதான் கைவல்யம் என்கிற Liberation கிடைக்கிறது. எத்தனையோ வழிகளில் மனிதன் பணம் சம்பாதிக்கிறான். நல்ல பெயரும் பெறுகிறான். புகழ் மரியா தை அவனுக்கு வந்து சேருகின்றன. அவன் பணக்காரனா கவும் ஆகிறான். எத்தனை செல்வம் சேர்ந்தாலும் வாழ்க்கை யின் நோக்கமும், இலக்கும் மட்டும் அவனுக்குப் புரிவ தில்லை. காரணம் என்ன? பிரிந்து கிடக்கும் பலவற்றை ஒன்றாக காண்பதைத் தவிர்த்து ஒன்றாக இருப்பதை பலவாகக் காண்பதே இதற்குக் காரணம்.
(த.ச.சா ஜன98 ப8)
IX.கிருஷ்ணர் ஆகர்ஷண சக்திக்கு உருவகமாகிறார். பலராமர் சங்கர்ஷண சக்திக்கு உருவகமாகிறார். இவை இரண்டு சக்திகளும் இணைந்தது தான் உலகெங்கும் வியாபித்திருக்கும் பிரகர்ஷண சக்தி என்கிற வளம் பெருக்கும் அபிவிருத்தி செய்யும் சக்தி ஒரு கர்ப்பத்திலி ருந்து மற்றொரு கர்ப்பத்திற்கு மாற்றியதால் சங்கர்ஷணர் என்று பெயர் வந்தது. அதாவது சங்கர்ஷண சக்தி இப்போது நமக்கு என்ன சங்கர்ஷணம் தேவைப்படுகிறது? மனிதத் தன்மையை தெய்வீகமாக மாற்றுவதுதான் இப்போதைய தேவை. முதலில் நாம் ஆகர்ஷிக்கப்பட வேண்டும் அதன் பிறகு மாற்றம் தானாக நிகழும். இந்த ஆகர்ஷணம் பிறகு சங்கர்ஷணம் இரண்டும் அதிகமாகப் பரவ வேண்டும். அதுவே பிரசங்ஷணம்.
(த.ச.சா மே96 ப20)

Page 58
X.சரணாகதி என்றால் என்ன? உடலைப்பற்றிய நினைவு களை விட்டு தெய்வீகமே கதி என்று நினைத்திருப்பதுதான் சரணாகதி ஆத்மாவைப் பற்றிய எண்ணங்களில் லயித்து தேகத்தைப்பற்றியநினைவுகளை மறப்பதுதான் சரணாகதி
உன் செல்வம், உன் உடல் இவற்றையெல்லாம் தெய்வத் துக்கு அர்ப்பணம் செய்வது சரணாகதி என்பதாகாது. நிறையப் பேர் திருப்பதிக்குப் போகிறார்கள். ஸ்வாமி லாட்டறியில் பரிசு விழுந்தால் உனக்கும் பங்கு தருகிறேன் என்று பிரார்த்திக்கிறார்கள். எதையாவது நிறைவேற்றித் தந்தால் தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக் கொள்கிறார்கள். வெங்கடேஷ்வர ஸ்வாமிக்கு தேங்காய்க் குப் பஞ்சமா?
கடவுளுக்கு ஏன் லஞ்சம் கொடுக்க முயல்கிறாய்? ஏன் இத்தகைய குறுகிய முறையில் இறைவனை வேண்டிக் கொள்கிறாய். நீ சரியான வழியில் நடந்தால் இறைவன்
தானாகவே உதவிக்கு வருவான் (மாற்றம்).
(5.F.HT (3 D96 L121)
X1. ஒரு புரட்சிகரமான மாற்றம். மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவற்றையும் ஊடுருவியது. மனித வரலாற்றிலே என்றுமே ஏற்பட்டிருக்காத ஒன்று. இது சாதாரணமாக அரசியல், பொருளாதார, விஞ்ஞான அல்லது தொழில்நுட்ப ரீதியானது அல்ல. அதைவிட ஆழமானது. மிகவும் அடிப் படையானது. இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒரு புனித ஆத்மீக மயப்படுத்தும் ஒரு புரட்சிகர மாற்றம். இந்தப் புரட்சிகர மாற்றத்திற்கு அன்புதான் இதன் வழியும் முடியும். உலகம் முழுவதிலுமுள்ள கல்வி, அரசியல், ஒழுக்கம், சட்டம், வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய களங்கள்

(Field) ஒவ்வொன்றிலும் அன்பின் சுனையைத் தேடி விழிப்படைய வைத்து இயங்கவைக்கும். கடவுளின் தந்தைத் தன்மையையும், மனிதர்களின் சகோதரத்துவத்தையும் வெளிக்கொணரக்கூடிய மாதிரியான அன்பின் சேவைக்கு மனிதர்களை ஊக்கப்படுத்தும் ஒருவர் எங்கு அவர் வாழ்ந்தாலும் அவருடைய சமூக அந்தஸ்து எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவருடைய நம்பிக்கைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் மனித இனத்தை அதனுடைய சொந்த அறியாமையிலிருந்து விடுதலைப்படுத்தும் இந்த புனித புரட்சிகர மாற்றத்தில் பங்கு கொண்டு அதற்கான ஒரு கருவியாக (நீங்கள்,தெய்வீக கரங்களில்) இருக்கலாம். இது தனது ஆத்மீக உண்மைகளைக் காணக்கூடிய அளவுக்கு மனிதனின் உள்முக பார்வையைக் கூர்மையாக்குகிறது. இதனுடைய தாக்கம் நிச்சயமாக மனித இனத்தை அரவ ணைத்து எல்லா மனித சமூகங்களையும் செழிப்பாக்கி அமைதியாக அழகாகப் பாய்ந்து சென்று தெய்வீகக் கடலில் கலக்கும் சாதகர்களின் அருவியாக அது மானிட இனத்தை ஆக்கும்.
(I, We & He 1" Page by Sri Indulalshah)
XII.நீங்கள் உண்மையை நன்றாக விசாரித்துப் புரிந்து கொண்டால் உங்களுக்குள்ளே வசிக்கும் ஆன்மாவுக்கு (ஒன்றுக்கும்) முதுமையோ, சாவோ இல்லையென்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். உள்ளே வசிக்கும் இவரை நீங்கள் புரிந்து கொண்டால், அதுவே கடவுளாகவும் உங்கள் சொந்த ஆத்மாவாகவும் இருக்கும் உண்மையை நீங்கள் அறிந்து எல்லையற்ற சாந்தியை அனுபவிப்பீர்கள்.
(பா.கீபே. பா1 ப193)
= 103 =

Page 59
9.4.உண்மைத் தன்மையைப் புரிதல் 1. பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் ஊடுருவிய தெய்வீகம் இருக்கிறது என்பதைக் காணவிரும்பினால் கண்ணிலே பார்க்கும் சக்தி உள்ளதைப்போல, காதிலே கேட்கும் சக்தி உள்ளதைப்போல (எங்களுடைய நாளாந்த வாழ்வில் நாம் தெய்வீகத்தை அங்கீகரிக்க வேண்டும்) கடவுள் மனித உடம்பில் பேருணர்வாக வெளிப்படுகிறார். உலகில் கடவுள் இல்லாத ஒரு இடமுமே இல்லை. படைப்பு என்பது தெய்வீகத்தின் ஒரு வெளிப்பாடு. அது கடவுளின் உருவம். அது பிரகிருதி எனப்படும். (இயற்கை) ஆகவே இயற்கையின் குழந்தையான மனிதன் இயற்கையாகவே தெய்வீகமானவன்.
(Ess May97 P 120)
II. ஒருவருடைய நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் எல்லோரிலும் தெய்வீகம் ஒரே மாதிரியாக உள்ளது. அதை நம்புபவர்கள் தெய்வீக கட்டளைகளுக்கு ஏற்ப நடந்து தங்களிலே தெய்வீகம் உள்ளுறைகின்றது என்ற அடிப் படைக்கு அமைவாக நடந்து தங்கள் வாழ்க்கையை ஈடேற்ற வேண்டும்.
சில விஞ்ஞானிகள் கடவுளை மறுதலிக்கலாம். ஆனால் எலத்திரன், புரோட்டன் ஆகியவற்றிற்கான சக்தி தெய்வீகத்தி லிருந்து பெறப்பட்டது என்பதை அவர்கள் உணரவில்லை. எந்தப் பெயராலும் கடவுளை அழைக்கலாம். ஆனால் கடவுள் ஒருவரே. கடவுள் என்று சொல்லப்படாத ஒன்று நாஸ்திகர்களின் வணக்கத்திற்கு உரியதாக இருக்கலாம். ஆனால் எது எப்படி இருந்தாலும் அதில் தெய்வீகம்
உள்ளது.
(Ess 6JJJ6ö97 L 187)
= 104 =

Iதெய்வம் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறது. ஸர்வதப்ராணி பாதமதத் ஸ்வதோதி எபிரோமுகம் என்பதன் மூலம் இறைவன் இல்லாத இடம் இல்லை. அவர் சிரசும் கரங்களும், பாதங்களும் எங்கும் நிறைந்திருக்கின்றன என்பது தெளிவாக எடுத்துக் கூறப்படுகிறது. இருப்பினும் உன்னால் அவரைக் காணமுடியவில்லை. என்ன பார்க்கிறாய் என்றால் மனிதனைப் பார்க்கிறேன் என்கிறாய். அம் மனிதனிலும் தெய்வம் உண்டு. மனிதனைக் காண்கிறாயே தவிர அவனுள் இருக்கும் தெய்வத்தைக் காணமுடிய வில்லை. தெய்வத்துவம் இல்லாமல் மனிதன் எவ்வாறு இருக்கமுடியும்.
உன்னைச் சுற்றி காற்றிருக்கிறது. ஆனால் உன் கண்ணில் தென்படவில்லை. கைகளால் பிடிக்க முடியாமல் இருப்பினும் காற்று இல்லை எனச் சொல்லமுடியுமா? காற்றில்லை எனில் எப்படி வாழ முடியும். காற்று இருக்கிறது. கண்ணிற்குத் தெரியவில்லை. கைகளுக்கும் சிக்கவில்லை. அதேபோல தெய்வம் இருக்கிறது கண்களுக்கும், கைகளுக் கும் தென்படவில்லை. எனினும் தெய்வம் இருக்கத்தான் செய்கிறது.
பின் எப்போது அவரை அடைவது?
நிர்மலமான இதயம் உனக்குள் உருவானால் இறைவன் தானாக வந்து உனக்குள் இடம்பிடிப்பான். ஆகவே பவித்ரமான இதயம் தேவை. எத்தகைய பவித்ரம்? அனைவரிடமும் தெய்வம் உள்ளது என்கிற ஏகாத்ம பாவம் உடைய பவித்ரம். எவரைத் தூவுரித்தாலும் அது இறைவனைத் தூவுரித்ததாக ஆகும். யாரிடம் அன்பு

Page 60
செலுத்தினாலும் அதுவும் இறைவனிடம் அன்பு காட்டுவதாக ஆகும். இதுதான் உண்மையான சாதுத்தன்மை,
(த.ச.சா செப்97 ப16)
11. மோட்சம் என்பது ஏதோ ஒரு தெய்வீக அந்தஸ்தை அடைவதைக் குறிக்கவில்லை. தெய்வீகம் உன்னுள்ளே இருக்கிறது. நீ செய்யவேண்டியது அதை வெளிப்படுத்துவது மட்டுமே. இல்லாத ஒன்றை வெளியில் கொண்டுவர முடியாது. இருக்கின்ற ஒன்று இல்லாமல் போக முடியாது. எல்லா விடயங்களும் இங்கேயே இப்பொழுதே இருக்கின்றன. ஆகவே எந்த வித தேடுதலுக்கும் எந்த வித சாதனைகளுக்கும் தேவை இருக்கவில்லை. நீ செய்கின்ற எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்ப்பணமாகச் செய். என்னுடைய வேலை கடவுளுடைய வேலை என்று வேறுபடுத்தாதே. ஒரு வித்தியாசத்தை உண்டாக்குகிற பொழுது வேறுபாட்டின் காரணமாக அங்கே வெறுப்புக்கு இடம் கொடுக்கிறாய். வெறுப்பு வந்துவிட்டால் அங்கே தெய்வீகம், துாய்மை, ஒருமை என்பவற்றுக்கு இடம் இல்லை. கடவுளை உன் இதயத்தில் அரசோச்ச வைப்பாயானால் அங்கே வேறு தப்பான எதற்குமே இடம் இருக்காது. ஆனால் இன்றைய ஆத்மீகக் குறிக்கோள் உள்ளவன் தனது இதயத்தை ஒரு சங்கீதக் கதிரையாகக் கருதுகிறான். அவர்கள் ஒரு சுவாமியில் இருந்து இன்னொரு சுவாமிக்கும் போகிறார்கள். ஒரு சாதனையிலிருந்து இன்னொரு சாதனைக்கு மாறுகிறார்கள். இத்தகைய கேளிக்கை விளையாட்டுக்களால் என்ன பயன். எல்லாம் (வாழ்க்கையையும், நேரத்தையும்) வீணானவைகள் ஆக்குபவைதான்.ஒரு இதயம் ஒரு எண்ணம், ஒரு கடவுள், ஒரு இலக்கு, அல்லா, இயேசு, புத்தர், ஜோராஷ்டர்,
== 106 =

குருநானக் என்று எதை உச்சரித்தாலும் எல்லாம் ஒன்றையே குறிப்பன.
(Ess AuG98 P209)
கடவுள் எல்லா நேரங்களிலும் உன்னில் இருந்தாலும், உன்னோடு இருந்தாலும், உன்னைச் சுற்றவர இருந்தாலும் நீ அவரை வெளியிலே தேடி உன்னுடைய ஏராளமான நேரத்தை வீணாக்குகிறாய். நேரத்தை வீணாக்காதே. ஏனெனில் நேரம் என்பது கடவுளாகும். காலஸ்வ ரூபாய நமஹ; கால திதாய நமஹ (நேரத்தின் உருவமாக இருப்பவருக்கு நேரத்தைக் கடந்தவருக்கு வணக்கம்) கடவுளின் சந்நிதியில் அவரின் துணையோடு இருக்கும்
பொழுது ஏன் கவலைகளுக்கு இடம் கொடுக்கிறாய்.
(Ess Nov2001 P344)
10. உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்
(Know your true self)
1. சத்தியத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த எத்தனையோ உத்தமர்களை உலகு கண்டிருக்கிறது. இன்றும்கூட மற்றவர்களின் நன்மைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். தங்கள் கனவில்கூட உலக சுகங்களை விரும்பியிராதவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இந்த உடம்பு ஏன் தரப்பட்டுள்ளது என்று அறிய முயல்பவர்கள் ஒரு சிலரே. தேகம் தந்தது தேகத்திலுள்ள தேஹறியை அறிவதற்கே. சொர்க்கம் ஒருசில கடவுளர்களின் பிரத்யேக இடங்களிலே இருப்பதல்ல. அது மனித இனத்தின் மாண்புகள் நிறைந்த மனிதர்களிடம் தான் உள்ளது. உத்தம குணத்துடன் வாழ்க்கை நடத்தி உயர்ந்தவனாக வாழ்ந்து

Page 61
வந்தால் சொர்க்கத்தை அவன் ஏன் தேட வேண்டும். இங்கே, இப்பொழுதே, அவனே சொர்க்கம்.
(பாபாவின் பாடலை பின்பற்றி)
உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் அறிந்து கொள்வ தற்காக மனிதன் பலவித முயற்சிகளை மேற்கொள்கிறான். ஆனால் ஒருவரும் தன்னை அறிந்து கொள்வதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை. மற்ற விடயங்களைப் புரிந்து கொள்வதற்கு எண்ணற்ற மணித்தியாலங்களைச் செலவிடுகிறான். ஆனால் தன்னை அறிந்து கொள்ள நேரத்தை ஒதுக்குவது அவனுக்குக் சிரமமாக இருக்கிறது. ஒருவனுடைய படிப்பு, பதவி, அறிவு எப்படி இருந்தாலும் அவன் தன்னை அறியாமல் மனதில் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறமுடியாது.
விஞ்ஞானம், கலை போன்ற அறுபத்து நாலு
துறைகளிலும் பாண்டித்யம் பெற்ற நாரதர் மனதின் அமைதியால் வரும் எல்லையில்லாத ஆனந்தத்தைப் பெறமுடியவில்லை. அவர் சனத்குமாரரை அணுகி தன் மனதில் அமைதியில்லாததற்கு காரணம் கேட்டார். சனத்குமாரர். நீர் என்னென்ன ஆற்றல்களைப் பெற்றிருக்கிறீர் நாரதர். வேதம், வேதாங்கம், 64 கலைகள், யானை அடக்கம், கால்நடை பேணுதல் என்று வரிசைப்படுத்தினார். சனத்குமாரர்- (தன்னுள் சிரித்துக் கொண்டே) உங்களை
யாரென்று
தெரியாமல் இவைகளையெல்லாம்
தெரிந்து என்ன பயன். (நாரதர். பிரமனின் மானஸ் புத்திரன். அதாவது பிரம்மனின் சிந்தனையில் உற்பவித்தவர்)
mas 108 =

நாரதர் அமைதி இழந்து அலைந்ததற்கான காரணம் என்ன? இடைவிடாது விஷ்ணுவின் நாமத்தை உச்சரிப்பவர். எந்த விதமான உலக ஆசைகளும் இல்லாதவர். உலகத்தில் பக்தியை வளர்ப்பதற்கும் மனிதர்களிடையே நல்ல குணங்களை வளர்ப்பதற்கும் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்ட நாரதர் திருமணம் செய்யும்படி வற்புறுத்தப்பட்டபோது இடைவிடாது ஹரியின் நாமத்தை உச்சரித்து ஆனந்த நிலையில் இருக்கும் எனக்கு இப்படிப்பட்ட பந்தத்திற்கு என்ன தேவை. மரியாதைக்குரிய தந்தையே உங்களுடைய எந்தக் கட்டளைக்கும் அடிபணியத் தயாராக இருக்கிறேன், ஆனால் திருமணபந்தத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.
மனிதனின் சிக்கலான நிலையும் இதைப்போன்றது தான். மனிதன் கடவுள்தான் எனக்கு எல்லாம் என்று உரிமை கொண்டாடுகிறான். ஆனால் கடவுளின் கட்டளைக்குப் பணிய மறுக்கிறான். அது அவனது அமைதியின்மைக்கும் காரணமாகிறது. உலக வாழ்வில் ஆழ்ந்துபோய் அவதிப் படும் ஒரு மனிதனுக்கு இறைவனின் நாமம் நிச்சயம் ஒரு நல்ல மருந்தாகும். ஆனால் இந்த மருந்தோடு சொல்லப் பட்ட முறையான பத்தியத்தையும் அவன் அனுசரிக்க வேண்டும்.
கடவுளின் ஆணைகள்தான் அந்த உணவு முறைகள். மருந்தை எடுக்கிறான் ஆனால் பத்தியத்தை (உணவு முறைகளை) விட்டு விடுகிறான். உணவு முறையைப் பின்பற்றினால் மருந்தை விட்டு விடுகிறான். அதனால்தான் அமைதி இழந்து காணப்படுகிறான். கடவுளின் நாமம் மருந்து. கடவுளின் கட்டளைகள் பத்தியம். கடவுளிடம் பக்தி செய்து கொண்டு கடவுளின் ஆணையைப் புறக்கணித்தால் அமைதி பெறமுடியாது. நாரதர் அமைதி இழந்ததற்கு
تتسنة 109 ك=

Page 62
பிரம்மாவின் சாபம் ஒரு காரணம். எனது கட்டளையை நீ நிறைவேற்றாததால் நீ இன்றிலிருந்து அமைதி இழந்து அலைந்து திரிவாயாக. அதனால் சனத்குமாரர் நாரதருக்கு அறிவுறுத்தினார். நீ யார் என்று அறியும் மட்டும் உன்னால் அமைதி பெற முடியாது.
ஆயிரம் கோடி கடவுளை வேண்டினும் அமைதியை அவரிடம் பெற முடியாது உன்தன் உண்மைத்தன்மையைத் தெரிந்ததும் அமைதியின் உறைவிடம் நீயாவாய் உள்ளுறைகின்ற தெய்வீகம் ஒன்றே அமைதியை இங்கே அள்ளித்தரும்.
(ஆ.ச.சா ஒக்90 ப261-சுருக்கம்)
I.எமது புராணங்களின்படி நாரதர் என்ற முனிவர் மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவர். திரிலோக சஞ்சாரி நாரதர் உயிர்த் தத்துவத்தைப் பிரதிபலிப்பவர். மூன்று உலகமும் பூர், புவ, ஸ்வ கருதுவது சடசக்தி (Materialisation) உயிர்
Fai5 (Vibration) gigsLissy-digi (Radiation)
(ஆ.ச.சா பெப்93 ப44)
I.மனிதனின் பந்தம் பற்றிக் கதைக்கிறார்கள். எது மனிதனைப் பந்தப்படுத்துவது? (கட்டுப்படுத்துவது) தன்னை எது பந்தப்படுத்துவது என்று தெரிந்தால்தானே மனிதன் தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொளஸ்லாம்.
மனைவியும் மக்களுமா? இல்லை சொத்துக்களா? g6)606) (Proper-ties) புலன் இன்பங்களா? இல்லை
മ്മ 110 =

அவன் தன்னை அறிந்து கொள்ளத் தவறுவதுதான் மிகப் பெரிய பந்தம். தன்னுடைய உண்மைத் தன்மையைத் தெரியாத ஒருவன் துன்பத்திற்கு இரையாகின்றான். துன்பம் இருக்கும் மட்டும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. மனிதனை விழுங்கும் துன்பம் என்ன?
மூன்று விதமாக வரும் துன்பம் பல வழிகளில் அவனைப் பாதிக்கிறது. அசத் (பொய், உண்மையற்றது)->(சத்ஆகவேண்டும்) தமஸ் (இருள், அறியாமை) ->(ஜோதி (ஞானம்)ஆக வேண்டும்)
Logootto ->(அழியாமையாக வேண்டும்)
இந்த சந்தர்ப்பத்தில் வேதாந்தம் மூன்று பகுதிகளை விபரிக்கிறது.
பிரகிருதி (இயற்கை) (D-6e) ஜீவாத்மா (தனிஉயிர்) (Dusi) பரமாத்மா (தெய்வீகம்) (பரம்)
எதை விட்டுவிட வேண்டுமோ அதை விடாவிடில் மனிதன் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிந்து கொள்ள விட்டால் மனிதன் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. அவன் அடைய வேண்டிய இலக்கிற்கு முயற்சிக்காமல் இருக்கும் மட்டும் ஆனந்தம் அவனிடமிருந்து விலகியே இருக்கும். எதை விடவேண்டும்? 685 66 எதை தெரிந்துகொள்ள வேண்டும்? ஜீவபாவனையை எது அவனுடைய இலக்கு? தெய்வீகம்
ஈசாவாஸ்யம் இதம் ஜகத்
பிஸ்வம் விவர் ib
a= 1 1 1 =

Page 63
இந்தத் தீர்க்கமான உயரிய தெய்வீக உண்மையை உதாசீனம் செய்து உலக கவர்ச்சியில் மயங்கி துன்பத்திற்கு இரையாகிறான். உலகம் ஒரு பெளதீக வெளிப்பாடு என்று கருதாமல் உலகத்தை ஒரு தெய்வீக வெளிப்பாடு என்று கருத வேண்டும். மனிதன் தன்னை தெய்வீக எண்ணங்களால் நிரப்பிக் கொண்டால்தான் உலக கவலையிலிருந்து விடுபட (Մ)ւգարճ, ஜீவன் யார்? ஜீவன்தான் கடவுள் ஜீவன் உடம்பில் உறைகிறது தெய்வம் இதயத்தில் உறைகிறது.
அவர்கள் இருவரும் ஒன்றாக வந்து ஒரு பரஸ்பர (மாறி மாறி இருவருமாக) விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். பொம்மை விளையாட்டை ஒரு இயக்குனர் இயக்குகிறார். பொம்மைகளில் நல்லதும் உண்டு தியதும் உண்டு.
ஜீவாத்மாவும், தெய்வீகத் தன்மையும் (பரமாத்மா வும்) இரண்டு வெவ்வேறு தனித்தனிப் பிரகிருதிகள் அல்ல. அறியாமையினால் அடிப்படை உண்மையை மனிதன் மறந்து அவன் கவலைகளை உண்டாக்கும் மயக்கங்களை வளர விடுகிறான். இது கயிற்றை பாம்பு என்று பிழையாக நினைத்து பயந்து அலறும் மனிதனின் நிலையைப் போன்றது. உண்மை தெரியவந்ததும் பயம் போகிறது. அதுபோல உலகை ஒரு வேறுபட்ட, தனியான, அபூர்வமான, அதிசயமான ஒன்றாகப் பார்க்கிறான். உண்மையில் அது தெய்வீகமானது. உலகின் தெய்வீகத் தன்மையை விளங்கிக் கொண்டால் மனிதன் தான் ஒரு தனிப்பட்டவன் என்ற அறியாமை போய்விடும். தெய்வீகம் இம்முழுப் பிரபஞ்சத் தையும் ஒளியூட்டுவதனால் இந்தப் பிரபஞ்சம் தெய்வீகமாக ஒளிர்கிறது. கடவுளும் பிரபஞ்சமும் பிரிக்க முடியாத
= 112 =

நண்பர்கள். (புருஷபிரகிருதி பாவம்- ராதா கிருஷ்ணன் உமாசங்கர். ) இதுதான் சாயியின் பிரதான கருத்து
மனிதன் அடைய வேண்டிய இடம் எது. அவன் எங்கிருந்து வந்தானோ அந்த முல வீடு. (சுவஸ்தானம்) எது அந்த மூல வீடு?
தன்னைப்பற்றிய உண்மைத் தன்மையின் விழிப்புணர்வு. இந்த உண்மையை உணர்வதற்குத்தான் தெய்வீகம் அவனுக்கு இந்த உடம்பைக் கொடுத்திருக்கிறது. அவன் எங்கே தன் உண்மையைத் தேடலாம். வெளியில் தேடுவது வீண் விரயமே. தெய்வீகத்தின் கால்களும், கைகளும் எங்கும் இருக்கிறது. கண்கள், தலை, வாய் எங்கும் இருக்கிறது. இந்தப்பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் சூழ்ந்து பிரிவற்று இருக்கிறது. தெய்வீகம் எங்கும் பரந்து எல்லாமாகவும் இருக்கும் பொழுது ஒரு இடத்தில் தேடுவது எவ்வளவு முடத்தனம். மனிதனின் இலக்கு உள்ளுறை தெய்வீகத்தை
வெளிப்படுத்துவதே.
(ஆ.ச.சா ஜன92 ப30)
IV.பலவாகத் தெரியும் உலகில் நாம் காண வேண்டிய ஒன்று எது? இதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்ப்போம். ஒரு பெரிய வீடு. பல அறைகள். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு விதமான பிரயோசனத்துக்காக. அறைகளைப் பிரித்துக் காட்டுவது சுவர்கள். சுவர்களை எடுத்துவிட்டால் அறைகள் என்ற வேறுபாடு இல்லை. பிரதானமான மாளிகை மட்டும் இருக்கும். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் ஒரு நாமம், ஒரு உடல் இருக்கிறது. அவற்றின் சொரூபம்
= 113 =

Page 64
அகன்றால் எல்லாவற்றின் தன்மை (தெய்வீகம்-ஆத்மா) ஒன்றாகும். வேறு வேறு என்ற உணர்வு மனதின் சிருஷ்டியே. அறியாமையில் பிறந்த இந்த உணர்வு போனால் மனிதனின் தெய்வீகம் பிரகாசிக்கும். ஒவ்வொரு மனிதனுள்ளும் அவனின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் கற்பகத் தரு இருக்கிறது. (என்பதைத் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.) அதைச் சுற்றிவர ஒரே பற்றைகள். பற்றைகளை நீக்கினால் மரம் தெரியவரும். அதுதான் ஒவ்வொருவரின் உண்மைத் தன்மை. இந்தத் தன்மை புலன்களின் இச்சை களால் மூடப்பட்டிருக்கிறது. ஆசைகள் அகன்றால் உண்மைத் தன்மை தெரியவரும்.
(ஆ.ச.சா ஜன92 ப32)
V. சத்யம் பிரம்மா. ஜகத்மித்யை பிரம்மம் மட்டும் உண்மை. ஜகத் ஒரு ஏமாற்று, பொய் என்று சொல்லப்படுகிறது. இது சரியல்ல. இந்தப் பிரபஞ்சமும் உண்மைதான். அன்பு நிறைந்த பார்வை இருந்தால் பிரபஞ்சம் ப்ரமத்தால் ஊடுருவப்பட்டது என்று தெரியவரும். பெளதீகக் கண்ணால் பார்த்தால் இந்த உலகம் பிறப்பிலிருந்து இறப்புவரை குழப்பமுள்ளதாகவே தோன்றும். கடவுளின் மீது அன்பு செலுத்துவது தான் (உண்மைத்தன்மையான தெய்வீகத்தில்) இந்தக் குழப்பத்திலிருந்து மீள ஒரே வழி. இதை விட ஒரு பெரிய விடயத்தை நான் உங்களுக்குச் சொல்ல முடியாது.
(ஆ.ச.சா ஏப்ரல்92 ப94)
V1.உலக அறிவும், ஆத்ம அறிவும். உலக அறிவில் எப்போ தும் எதிரொலியும் எதிர்ச் செயலும் இருக்கத்தான் செய்யும். நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களிடம் திரும்பிவரும். நீங்கள் எதைந் சொன்னாலும் அது திரும்பி வந்து உங்கள் காதில் ஒலிக்கும். நீங்கள் எதை நினைத்தாலும் அந்த
H. 114 =

எண்ணம் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டே யிருக்கும்.
ஆனால் ஆத்மீக சாம்ராஜ்யத்தில் (அறிவில்) எதிரொலி, எதிர்ச் செயல், எதிர் விளைவு என்பதில்லை. அங்கே ஆழ்ந்த அறிவு ஒன்று மட்டுமே இருக்கும். அதுவே உண்மையான அறிவாகும். அங்கே எந்தப் பொருளும் உங்களிடம் திரும்பி வராது. எந்தவிதமான எதிரொலியோ, எதிர் விளைவோ இருக்காது. ஏனென்றால் அங்கே இன்னொன்று அப்படி இருந்தால்தானே அப்படி ஏற்படும்.
அங்கே இருப்ப தெல்லாம் ஒன்றே.
(LIT.aśGBL. LIITatsub 1 Lu 199)
நறுமண மலரும், புனிதமான செயலும். நீங்கள் அர்ப்பணிக்கும் மலரில் அருமையான நறுமணம் அடங்கி யிருப்பதைப் போன்றே உங்கள் செயலும் அன்பும் புனிதமும் நிறைந்ததாக இருக்கவேண்டும். நீங்கள் அளிக்கும் மலர் அழகாகவும் தூய்மையாகவும் இருப்பதைப் போன்று உங்கள் செயல்களும் நல்லவையாகவும், தூய்மையுடையன வாகவும் இருக்க வேண்டும்.
(பா.கீபே பாகம் ப249)
அது, அவனுடைய உண்மைத் தன்மை
எப்போதும் அவனோடு தெய்வீகமாய்
இருந்திருக்கிறது.
ജ്ജ് 115 =

Page 65
11. மனித மேம்பாடும் தெய்வீகத்தின் வெளிப்பாடுகளும்
1. மனித மேம்பாடுகள் என்றால் என்ன? உண்மை (சத்யம்), நன்னடத்தை (தர்மம்), அமைதி (சாந்தி), அன்பு (தெய்வீகஅன்பு) அஹிம்சை என்பவைகளை மனித மேம்பாடுகள் என்று சொல்கிறார்கள். உண்மையான மனிதத்தன்மை என்பது மிருகக் குணங்களை பூரணமாகத் தோற்கடித்து அடக்குவதிலும், தெய்வீகத்தை மனதில் நினைந்து நிலைநிறுத்துவதும் தான்.
11. ஆத்மீகம் என்பது என்ன? உள்ளுறை தெய்வீகத்தை வெளிப்படுத்துவது.
III. நல்லொழுக்கம் என்றால் என்ன? மானிடத்தில் மறைந் துள்ள தெய்வீகத்தைப் புரிந்து, தெளிந்து, அடைந்து வெளிப்படுத்துவதிலும் அதை முழு உலகிலும் பரப்புவதிலும் நல்லொழுக்கத்தின் அர்த்தம் உள்ளது. Person (மனிதன்) என்ற ஆங்கிலச் சொல்லு Persona என்ற ரோம அடிச் சொல்லைக் கொண்டது. தெய்வீகத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் கவர்ந்த இயேசுவை வர்ணிக்க ரோமர்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்கள். Persona என்ற சொல்லும் மனிதனில் மறைந்துள்ள தெய்வீகத்தைக் குறிக்கிறது. வியக்தி (மனிதன்) என்பவன் அவ்யக்தமான மறைந்துள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்தக் கூடிய தகுதி உள்ளவன் என்பதைக் குறிக்கிறது. Persona என்ற சொல்லும் வியக்தி என்ற சொல்லும் ஒவ்வொருவரிலும் தெய்வீகம் மறைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. தன்னிலே மறைந்துள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கு ஒவ்
= 116 =

வொரு மனிதனும் பூரண முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதன் தன்னிலே மறைந்துள்ள தெய்வீகத்தை அங்கீகரிக்கவும் அதை வெளிப்படுத்தவும் முயன்று கொள்ளாமல் தன்னைப் பலவீனமானவன், உதவியற்ற வன் எனக் கருதிக்கொள்கிறான்.
IV.தெய்வீகம் எல்லோரிலும் உள்ளது. சரியான இடத்தைத் தேடிப்பிடித்து அந்தச் சுரங்கத்திலிருந்து செம்பு, வெள்ளி, தங்கம் என்று தோண்டி எடுத்து அதைப் பிரித்து ள்டுப்பதைப்போன்று தெய்வீகச் சுரங்கமான இதயத்திலி ருந்து புனிதமான குணங்களை வெளிப்படுத்த வேண்டும்.
(20.10.2001 தசரா அருளுரை)
V.குரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதுபோல மனிதத்து வமும் உண்மை, நன்னடத்தை, நல்லொழுக்கம், அன்பு என்ற உயர் குணங்களின் கலவையாகும். திசையறி கருவியின் திசைகாட்டும் ஊசி எப்பொழுதும் வடதிசையையே காட்டும். அதேபோல மனித அன்பு என்பது எப்பொழுதும் கடவுளையே சுட்டி நிற்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவன்தான் மனிதன் என்ற தகுதி உள்ளவன். நான், எனது என்ற குணங்களுக்கு அப்பாற்பட்டு எல்லா உயிர்களிலும் உள்ள ஒருமையை அங்கீகரித்து அதற்கேற்ப தன்னுடைய நடவடிக்கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். அன்பு என்ற அடிப்படைக் கொள்கையை புரிந்து கொள்வதற்கு எல்லோரிலும் உள்ள தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அன்பு புனிதமானது. விலைமதிப்பற்றது. மானிடத்தில் எங்கும் வியாபித்துள்ளது. தெய்வீகம் மனிதனுள் அன்பென்ற உருவில் உள்ளுறைவதை அங்கீகரிப்பது மனிதனின் பிரதானமான கடமையாகும். ஆனால் இந்த வழியில் மனிதன் எந்த முயற்சியும் செய்யவில்லை. கடவுள் தன்னிலிருந்து வேறாக இருப்பதாக நினைத்து மனிதன் கடுமையான

Page 66
கஷ்டங்களுக்கு உள்ளாகிறான். அவர் எல்லா உயிர்களிலும் அன்பாக உள்ளுறைகிறார். இந்த உண்மையை உணர்வதற்கு ஒருவன் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அவன் தன்னை உலக சம்பந்தமான நிலையற்ற விடயங்களில் ஈடுபடுத்திக் கொள்கிறான். தன்னிலுள்ள அன்பு தெய்வீகத்தைத் தவிர வேறல்ல என்பதை உணரத்தவறி விடுகிறான்.
அடிப்படையில் அன்பு தெய்வீகமானது. தாயில் உள்ள அன்பு வாத்சல்யம் என்றும், கணவனில் மனைவியில் உள்ள அன்பு மோகம் என்றும், நண்பனிலும் உறவினரிலும் உள்ள அன்பு அனுராகம் என்றும் பொருட்களில் உள்ள அன்பு இச்சை என்றும் அன்பு வெவ்வேறாக வரையறுக்கப்பட்டாலும் அன்பு அடிப்படையில் தெய்வீகமானது. மனிதன் இதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். மனிதன் இந்த அடிப்படை உண்மையை மறந்துவிட்டபடியால் பெளதீக உறவில் வேற்றுமைகளை ஏற்படுத்திக் கொள்கிறான். இதுவே மனிதனின் கஷ்டங்களுக்குப் பிரதான காரணம். இந்த வேற்றுமை உணர்வு மனிதனில் இருக்கும் வரை அவன் தெய்வீகத்தை அடைந்து கொள்ளமுடியாது.
(22.10.2001 தசரா அருளுரை)
VI.மனிதர்களிடையே அமைதி, சாந்தி ஏற்படுவதற்கு உள்ளது ஒன்று என்ற ஆத்மீக உணர்வு ஏற்பட வேண்டும். கீதையில் விபரித்துள்ளதைப் போன்று மமாத்மா சர்வபூதாந்தராத்மா (எனது ஆன்மாவே சகல உயிர்களிலும் உள்ள ஆத்மாவாக உள்ளுறைகிறது) இந்த உணர்வு இருந்தால் எந்த வித்தியாசத்திற்கும், விரோதத்திற்கும் இடமில்லை. தன்னிலே உள்ள ஆத்மாதான் எல்லா உயிர்களிலும் உறைவதை உணர்பவன், காண்பவன் எப்படி
= 118 =

மற்ற உயிர்களை வெறுக்க முடியம்? தன்னுடைய பிம்பத்தை கண்ணாடியில் காண்பவன் அதை வெறுக்க முடியுமா? ஒவ்வொரு வரும் தன்னுடைய உண்மைத் தன்மையை விரும்புவர். இந்த விடயமாக எழுவயதில் நான் எழுதிய பாடலை மீட்டுக் கொள்கிறேன். 01.உன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் காண உனக்கு
ஒருவரின் உதவி தேவையா? 02. இந்த நோக்கத்திற்கு மற்றொருவரின் நட்பு எதற்கு? 03. வானத்தில் சந்திரனைப் பார்ப்பதற்கு உனக்கு விளக்கின்
உதவி தேவையா, 04. உளது ஆத்மாவை உணர ஒரு குருவின் உதவி எதற்கு? 05. ஆத்மா உனது கடவுள். உனது விஷ்ணு. சிவன். பிரமன்.
இதை உணர்ந்த ஒருவனுக்கு குரு எதற்கு?
ஆகவே ஒரே தெய்வீக ஆத்மாவே எல்லா உயிர்
களிலும் உள்ளுறைகிறது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். ஒவ்வொருவரும் தெய்வீகத்தின் திரு உருவங்கள். இந்த தெய்வீக உணர்வு எல்லோரிலும் நிரம்பி இருந்தால் அங்கே முரண்பாட்டிற்கும் குழப்பத்திற்கும் இடமிராது.
இன்று மனிதர்கள் இந்தப் புனித உண்மையை மறந்து விட்டார்கள். வெறுப்பு மட்டுமே எங்கும் நிறைந்துள்ளது. சுயநலம் எங்கும் வியாபித்துள்ளது. சுய ஈடுபாடே ஆட்சி செலுத்துகிறது. இந்த தீய குணங்களினால் தூய மனித உறவு குறைத்து மதிப்பிடப்படுகிறது.
உள்ளது ஒன்று என்ற ஆத்மீக உறவையே நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மை நானும் நீங்களும் ஒன்று.
ك= 119 =صس=

Page 67
இந்த நீங்கள் என்பது யார்? அதுவும் இன்னொரு நான்.
எல்லோருக்கும் தன்னை நான் என்று தெரியும். நானும், நீங்களும் ஒன்று என்ற பிரகடனத்தில் நீங்கள் என்பது கடவுளைக் குறிக்கிறது. (ஒவ்வொருவரிலும் உள்ளவர்)
கடவுளின் முதலாவது பெயர் அகம் (Aham)என்பதே. அதன் பின்பே ஓம் வந்தது.
ஒவ்வொருவரும் தன்னைக் குறிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் என்றே விபரிக்கிறாாகள். நான் ஒரு மனிதன் என்று ஒருவன் தன்னைச் சொல்லும் பொழுது மனிதன் என்பது நிலையற்றது. அளவுக்குட்பட்டது. நான்
என்பது நிலையானது. என்றுமுள்ளது. எல்லையற்றது.
(ஆ.ச.சா ஆகஸ்ட்96 ப230)
VI.மனிதன் பிறப்பிலேயே தெய்வீகக் குணங்களுடன் பிறந்தவன். ஒரு விதையிலிருந்து ஒரு இளஞ் செடியும், ஒரு இளஞ் செடியிலிருந்து பூவும், பூவிலிருந்து பழமும் வருவதைப்போல இந்த முழுப் பிரபஞ்சத்தின் விதையும் கடவுளாவார். மனிதன் நல்லொழுக்கம், தர்மம், ஆத்மீகம் இவற்றின் உண்மையான கூட்டாவான். துர்அதிஷ்டவசமாக மனிதன் இவற்றை மறந்து இவைகள் இல்லாமல் இருக்கிறான்.
(Ess May97 u 120)
VI.ஒவ்வொருவரும் தெய்வீகம் தங்கள் இதயத்தில் உறைகின்றது என்கின்ற உணர்வால் நிரம்பி இருக்க
வேண்டும். (ஈஸ்வரன்) மனம் தெய்வீக எண்ணங்களால்
- 120 =

நிரம்பியிருக்க வேண்டும். (விஷ்ணு) எந்தக் குறைவான எண்ணமும் மனதில் எழக்கூடாது. மனம் தவறான வழியில் போகவிடக்கூடாது. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிரம்மா உதயமானவர் என்று சொல்லப்படுகிறது. அவர் வாக்கைக் குறிக்கிறார். அப்பொழுது மூன்று தெய்வங்களும் மனிதனின் தெய்வீகக் குணங்களைக் குறித்து நிற்கின்றன. ஆகவே மனிதன் தன்னுள்ளேயே தெய்வீகத்தைக் கண்டுகொள்ள லாம்.
(Ess May97 P125)
IX. தெய்வீகத்தின் விசேஷ குணங்கள் சத்யம், சிவம், சுந்தரம் என்று உபநிடதங்கள் கூறுகின்றன. தெய்வீகத்தின் விசேஷ குணங்கள் உண்மை, நல்ல தன்மை, அழகு என்று பிளேட்டோ கணித்துள்ளார். சிவம் என்பது மங்களகரமான தன்மையைப் பிரதிபலிப்பது. அது ஒரு புறம் உண்மையு டனும் மறுபுறம் அழகுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.
(Ess 6JLJ6ö97 L 87)
X. தண்ணிர் நிறைந்த குவளை ஒன்றின் அடியிலே சினி இருந்தால் நீ அதைக் கலக்கி சினியைக் கலந்து அங்கே உள்ள முழுத் தண்ணிரையும் இனிமையுள்ளதாக ஆக்கலாம். அதே போல் உனது இதயம்தான் அந்தக் குவளை. அதனடி யிலே தெய்வீகம் உள்ளது. புத்தி என்ற கரண்டியை எடுத்து இதயத்தில் தெய்வீகத்தைக் கலந்து விடு. அப்பொழுது இதயத்தில் உள்ள தெய்வீகம் முழு உடலின் சுற்றோட்டத்து டன் சேர்ந்து விடும். அப்பொழுது
உனது ஒவ்வொரு நடவடிக்கையும் இனிமையாய் இருக்கும்.
உனது ஒவ்வொரு வார்த்தையும் இனிமையாய் இருக்கும்.
= 121 =

Page 68
உனது ஒவ்வொரு பார்வையும் இனிமையாய் இருக்கும். உனது ஒவ்வொரு எண்ணமும் இன்மையாய் இருக்கும். உனது எல்லாமுமே இனிமையாய் இருக்கும்.
உன்னுள்ளேயே இனிமை உள்ளது என்பதை உணர்ந்து கொள். உனது புத்தியை உட்புறமாகத் திருப்பி அதனை அன்பினால் நிரப்பி அந்த இனிமையைத் தேடுவாயாக.
(ESS ஏப்ரல்97 ப90)
XI. எள்ளுக்குள் எண்ணெய் இருப்பதைப்போல, பாலுக்குள் வெண்ணெய் இருப்பதைப்போல, பூவுக்குள் சுகந்தம் இருப்பதைப்போல, பழத்துக்குள் நல்ல சுவை இருப்பதைப்போல, மரத்துக்குள் தீ இருப்பதைப்போல இந்தப் பெரிய பிரபஞ்சத்துக்குள் தெய்வீகம் உள்ளது. எல்லாவற்றையும் ஊடுருவிப் பரவி எல்லா உயிர்களிலும் உள்ளது தெய்வீகம். கண்களைப் பார்க்க வைப்பது. காதுகளைக் கேட்க வைப்பது அதனுள்ளே உள்ள தெய்வீக சக்திதான். தெய்வீக சங்கல்ப சக்தியின் தோற்றமே இந்த சிருஷ்டி. இயற்கை உயரிய தெய்வீகத்தின் வெளிப்பாடே. மனிதன் தெய்வீகத்தை வெளிப்படுத்தி, பிரதிபலிப்பதற்கே இந்தப் பிறவி எடுத்துள்ளான். இயற்கையின் அங்கம் வகிக்கும் எல்லாமே தங்கள் உள்ளார்ந்த தகுதிகளைப் பிரதி பலிக்கின்றன. மனிதனும் அப்படியே செய்யவேண்டும். ஆனால் உள்ளார்ந்த மனித குணங்கள்ே வெளியிடப் படுவதில்லை.
(Ess August97 L 203)
XII. எல்லாவற்றிற்கும் முதலில் என்றும் மாறாத, சனாதன மான ஆனந்தமான தெய்வீகம் உன்னுள் உள்ளது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சிருஷ்டியில் ஒவ் வொருவரும், ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு பொருளும்,
= 122 =

தெய்வீகத்தின் வெளிப்பாடு. உங்களுக்குள்ளேயே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நான் சத்தியத்தின் திரு உருவம். நான் சாந்தியின் திரு உருவம். நான் அன்பின் திரு உருவம். நான் தர்மத்தின் திரு உருவம்.
ஆத்மா என்ற முக்கிய விடயத்தில் நம்பிக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒன்று இல்லாத பொழுது நீங்கள் எதைச் சொன்னாலும், நீங்கள் எதைச் செய்தாலும் அது சத்தியம் என்றோ, தர்மம் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது. ஆகவே எல்லாவற்றிற்கும் முன்பாக எல்லாம் உன்னுள்ளேயே உள்ளது. என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள். இந்த நம்பிக்கை இல்லாவிட்டால் மனிதன் நாசமடைந்து விடுவான். (சம்சய ஆத்மா வினாசயதி)
(Ess Aug2001 L 236)
XII. இந்தப் படைப்பின் (சிருஷ்டி) மூலம் என்ன? அது தெய்வீகத்தின் சிறப்பு, மகத்துவம். மனிதப் படைப்புக்கு தெய்வ சங்கல்ப்பமே காரணம் என்றபடியால் அவனுக்கு தெய்வீக உணர்வுகளே இருக்கவேண்டும். தெய்வ சங்கல் பத்தினால் உண்டான படைப்புக்கு பெயர் இயற்கை. இயற்கையினால் உருவாக்கப்பட்ட மனிதனும் இயற்கையின் குணங்களையே வெளிப்படுத்த வேண்டும். இயற்கைக்கு விரோதமான குணங்கள் அவனிடம் இருக்கக்கூடாது. உங்கள் உணவின் காரணமாகவே ஆசை, கோபம், பற்றுதல், பேராசை, முரண்டு பிடித்தல் என்பன உண்டா கின்றன. பழைய பிறவிகளின் சமஸ்காரங்களின் காரண மாகவும் அவை உண்டாகின்றன. அவை உங்களுடைய இயற்கையான தன்மைகள் அல்ல.
(நுளள புரப2000 ப203)

Page 69
XIV.இந்தப் படைப்பு எல்லாவற்றிற்கும் மூலம் தெய்வீகம். சிருஷ்டி கர்த்தா, சிருஷ்டி, இந்தப் பிரபஞ்சத்தின் இயக்குனர் எல்லாமே தெய்வீகம்தான். தெய்வீகம் கண்ணாலே காணொணாதது. கருத்தாக விளங்கிக் கொள்ள முடியாதது. நீ இந்த தெய்வீகத்தின் பிரதிபலிப்பு என்று ஏற்றுக்கொள். அப்பொழுது நீ ஒருவரையும் வெறுக்க மாட்டாய். ஒருவரைப் பற்றியும் பொறாமை கொள்ள மாட்டாய், அகங்காரத்திலி ருந்து விடுபட்டவனாக இருப்பாய்.
தவளை தாமரை மீதே அமர்ந்திருந்தாலும் அதிலுள்ள தேனைச் சுவைக்க அதற்குத் தெரிவதில்லை. அதைப் போலவே பரமாத்மா நமக்குள்ளே ஜீவாத்மாவாக இருந்த போதும் அதை உணர்ந்து அனுபவிக்கத் தெரியாதவர்களாக
நாம் இருக்கிறோம்.
(LumTLITT6nisi afGLI. Lurrastib1D
11. தெய்வீகம் மிளிரும் இடங்கள். பெற்றோர்களின் ஆசியில்.
தாய் தெய்வீகத்தைப் புரிந்துகொள்ள நீ முதலில் உன் தாயிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். தாயும் படைக்கிறாள். தாய்தான் நம் எல்லோரையும் படைத்தவள். அதனால்தான் மாத்ரு தேவோ பவ என்று சொல்கிறார்கள். ஆகையால் தாய்க்கு பிரமன் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும். அவளுக்கு மரியாதை செலுத்த வேண்டும். சேவை செய்ய வேண்டும். அவளின்மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இதுதான் நாம் பிரம்மனின்மேல் (தெய்வீகத்தின்மேல்) வைக்கும் நம்பிக்கையின் சின்னம்.
தந்தை குழந்தையைய் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பது தந்தையின் பொறுப்பு. ஆகையால் அவரே
മ്മ 124 =

விஷ்ணு. அதனால்தான் பித்ரு தேவோ பவ என்கிறார்கள். இப்படியாகத்தான் தாயும் தந்தையும் பிரம்மா மற்றும் விஷ்ணுவின் (தெய்வீகத்தரின்) பிரதிநிதரியாக விளங்குகின்றனர். அவர்கள் எல்லாம் தெய்வீகத்தின் பிரதிபலிப்புத்தான். தெய்வத்துடன் ஒன்றியவர்கள்தான். அவரிடமிருந்து வேறானவர்களல்ல.
(பா.அ.வ ப151அருளுரை23.11.95)
11.பெற்றோர்கள்தான் நமக்கு வாழும் தெய்வங்கள். அவர் களது நம்பிக்கையையும் ஆசைகளையும் தெரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்ற முழுமூச்சுடன் ஈடுபடவேண்டும். அதன்மூலமே அவர்களது அருளைப் பெறமுடியும்.
கண்ணுக்குத் தெரியும் கடவுளரான பெற்றோரை மதியாமல் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் அருளைப்பெற முயற்சிப்பது வெறும் மாயை. தாய் பிரம்மாவின் பிரதிபலிப்பு. தந்தை விஷ்ணுவின் மறுவடிவம்.
அவர்களது அருளைப்பெற முடியாமல் எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிற சுலபமாக அடைய முடியாத கடவுளின் அருளைப்பெற முயற்சிக்கிறாய். ஆகையால் நீ எப்போதும் உன் பெற்றோரை மதித்து அவர்களது ஆசிகளைப் பெற வேண்டும். அவர்களது கட்டளைகளைச் சிரமேற்கொள்ள வேண்டும்.
(பா.அ.வ ப155அருளுரை23.1195)
11.பெண்மை போற்றப்படும்போது எங்கெல்லாம் பெண்மை போற்றப்படுகிறதோ, எங்கெல்லாம் பெண்களுக்கு உரிய இடம் அளிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் தன் பல்வகைப் பெருமைகளோடும் தெய்வத்துவம் மிளிர்கின்றது என
H 125 m

Page 70
வேதங்கள் முழங்குகின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக இன்றோ, பெண்களை மதிப்பது மிகவும் தரக்குறைவான செயலாகக் கருதப்படுகிறது. பெண்களை மதிப்பது என்னவோ தேவையற்றதாகவும், சிறுமையானதாகவும் சிலர் நினைக்கின்றனர். ஆனால் இது சரியானதல்ல.
வீட்டில் பெண்கள் கிரகலட்சுமியாக மதிக்கப்படுகி றார்கள். அவளே தர்ம பத்தினி அவளே அர்த்தாங்கி (ஆணின் சரிபாதி) தற்போது பத்மபூரி, பத்மவிபூஷன் பட்டங்களைப் பெறுவதைப் பலர் பெருமையாக நினைக் கிறார்கள். அவைகளெல்லாம் சிறப்பற்றவை. பெண்களுக்கு எல்லாம் நிரந்தரமான பட்டங்கள் தரப்பட்டிருக்கின்றன. பெண்ணில்லாத ஒரு விடு காட்டிற்குச் சமம், பெண்ணிற்கு உரிய மதிப்பைக் கொடுப்பதும் அவர்களைக் கண்ணிர் சிந்த விடாமல் நடந்துகொள்வதும் ஆண்களின் முக்கியமான பொறுப்பு. பெண் கண்ணிர் சிந்தும் இல்லம் நிச்சயம் அழிந்துபோகும்.
(அருளுரை 19.11.95 பா.அ.வ ப59)
III. பூரணத்தில் ஒரு வேலையை ஒருவர் பூரணமாகச் செய்யும் போது மிகவும் துல்லியமான தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள நீங்களும் எல்லா வகையிலும் Perfect (பூரணமாக) ஆக இருத்தல் வேண்டும். இத்தாலியில் ஜான்சன் என்ற ஒரு இசைக் கலைஞன் இருந்தான். அவன் வயலின் தயாரித்து வந்தான் விற்பனைக்காக, ஒரு வயலினுக்கு ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேல் எடுத்துக் கொள்வான். ஒருநாள் யாரோ அவனைக் கேட்டனர் ஜான்சன் ஒரு வயலினை தயாரிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டால் இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கையை நடத்த முடியும். அப்போது ஜான்சன் பதில் சொன்னான் சகோதரா,

கடவுள் எந்தக் குறையும் இல்லாதவர் அவர் Perfection இன் உயர்ந்த வடிவம். அதனால் அவர் கொடுத்த செயலையும் எந்த விதக் குற்றம் குறையுமில்லாமல் செய்து முடிக்க வேண்டும்.
பூரணம். கடவுள் எல்லாவற்றிலும், எல்லாவகையிலும் பூரணமானவர். ஆகையால் என் வேலையையும் எந்தவிதக் குற்றம் குறையுமில்லாமல் செய்து முடிக்கவேண்டும். பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே. பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணம் ஏவா வசிஷ்யதே.
(பா.ஆ.வ. ப118 அருளுரை 21.11.95)
IV. இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு மாபெரும் மலையைப் பார்த்ததும் மனிதன் மனம் மகிழ்கிறான் சலசல என ஒடும் நதியின் நீரைக்கண்டு சிலிர்த்துப் போகிறான். ஓயாது எழுந்துவிழும் பேரலைகளின் காட்சி மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவையெல்லாம் தெய்வீகத்தின் பல்வேறு முகங்கள். வானில் தெய்வீகப் பேரொளி விளங்கு கிறது. நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. சூரியன் கண்கூசும் ஒளியோடு காணப்படுகிறது. மேகங்கள் இடியோசை எழுப்பு கின்றன. இவையெல்லாம் கடவுளின் புறவெளிப்பாடுகள்.
நம்மைச் சுற்றியிருக்கும், வெளிப்படையாகத் தெரியும் இறைவனின் அம்சங்களையும் அவற்றின் மேன்மைகளையும், பெருமைகளையும் நாம் உணர்ந்து கொண்டால்தான் நதியின் ஓடும் நீரின் இயல்பையும் குணத்தையும் புரிந்துகொள்ள முடியும். ஒருதுளி நீரின் இயல்பையும், குணத்தையும் புரிந்து கொள்ள முடியும், அதேபோல புனிதத்துவத்தின் இயல்பைப் புரிந்து கொண்டவனால் மட்டுமே தெய்வீகத்தைப் புரிந்து கொள்ள இயலும்,
(பா.அ.வ ப149 அருளுரை 23.11.95)
as 127 =

Page 71
V. அன்பு ஆனந்தம் இவை காணும் இடத்தில் முழுமையான அன்பையும் ஆனந்தத்ததையும் காணுமிடத்தில் உன்னையே நீ அர்ப்பணித்துக்கொள். அவ்விடத்தைப் பற்றிய விவேக விசாரணை தேவையில்லை. இறைவன் ஒருவனே பூரண அன்பும் ஆனந்தமும் கொண்டவர். ஆகவே அவை இருக்கு மிடம் இறைவன் உள்ள இடம். பஜனைகள் பாடும்போது அவற்றிற்காக ஆசைப்படு. பஜனை முடிந்ததும் சாந்தி, சாந்தி, சாந்தி என்று மும்முறை பாடுகிறாய். அந்த சாந்தியை உள்ளே உணர வேண்டும். (ஸ்வாமி சாந்தி, சாந்தி, சாந்தி என்று கடினக் குரலில் பாடி பின்கூறினார்) சாந்தியை அமைதியுடன் (உணர்ந்து, ஆறுதலாகக்) கூறு அசாந்தியுடன் கூறாதே.
(சா.அ.கோடை 1977 ப129)
VI. விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம். (அவஸ்தை நிலைகள்) நீங்கள் கனவில் காணும் மாளிகைகள் உண்மையாகத் தோன்றிடினும் கண்விழித்ததும் கணப்பொழுதில் மறைந்து விடுகின்றன. கனவு நிலையில் காண்பதும் அனுபவிப்பதும் யாவும் விழிப்பு நிலையில் பொய்யாகி விடுகின்றன. அதைப் போலவே விழிப்பு நிலையில் உண்மையாக இருப்பவைகள் கனவு நிலையில் பொய்யாகி விடுகின்றன. அதில் எது உண்மை? இதை மனதின்மூலம்தான் பகுத்தறிய வேண்டும். கனவு நிலையும், விழிப்பு நிலையும் வேறானவை. ஒரு நிலையில் மெய்யாகக் காண்பவை மற்ற நிலையில் பொய்யாகி விடுகிறது. ஒன்று பகல் மற்றொன்று இரவு என்று வைத்துக் கொள்வோம். இரண்டு நிலைகளிலும் நீங்கள் இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் எப்போதும் வியாபித்திருக் கும் தன்மை பெற்றவர்களில்லையா? இதுவே நீங்கள் தெய்வத்தன்மை பெற்றவர்கள் அதாவது ஆத்மாவின் இருப்பிடம் என்ற உண்மையைப் புலப்படுத்துகிறது.
(த.ச.சா. பெப்85 ப 214)
Hs 128 =

VIII. மனித வாழ்க்கை உலகில் எவ்வளவோ விதங்களில் மனிதனின் தெய்வீகத் தன்மை விளங்குகிறது. உதாரணமாக திரைப்படக் காட்சியை எடுத்துக் கொள்ளலாம். நாம் காணும் காட்சிக்கு ஆதாரமாயிருப்பது சினிமாத் திரையே. இதில் நதியில் பிரவாகமாகப் போகும் வெள்ளத்தையும் பார்க்கிறோம். பெருந்தீ பரவும் காட்சிகளையும் பர்க்கிறோம். இவை எல்லாவற்றையும் அந்தத் திரையின் மீதே பார்க்கி றோம். ஆனால் இந்தக் காட்சிகளால் அந்தத் திரை நனைந்து விடுவதோ எரிந்து விடுவதோ இல்லை. இதே விதமாகத்தான் ஆத்மா தெய்வீகம் என்பது எல்லாவற்றிற்கும் ஆதாரமாயிருப்பினும் அது நம்முடைய எந்தச் செயல்களா லும் பாதிக்கப்படுவதேயில்லை. மனித வாழ்வில் சுக துக்கம், உயர்வு தாழ்வு, முதலியவை வந்தாலும் இவைகள் ஆன்மா வைப் (தெய்வீகத்தைப்) பாதிப்பதில்லை.
(5.y.a-IT LDiTité-85 Lu10)
VIII. விசுவாசம் உண்டானால் ஒரு விமான விபத்து ஏற்பட்டு விட்டபோது ஒருவருக்கு அதில் ஈடுபாடு எப்போது வரும்? தன்னுடைய சொந்தப் பிள்ளை அல்லது பெற்றோர் அல்லது சகோதரர் அதில் பிரயாணம் செய்திருந்தால் மட்டுமே அந்த விமானத்தைப் பற்றி அறியும் கரிசனை கூடிக் குறைந்து ஏற்படும். அல்லது ஒரு சாதாரண விபத்தை அறிகின்ற ஆர்வம் மட்டுமே இருக்கும். அதைப் போல ஆத்மாவை (தெய்வீகத்தை) உங்கள் உண்மைத் தன்மை வழியாக விசுவாசிக்காத வரையில் ஆத்மா என்பது ஒரு செய்தியாக மட்டுமே கணிக்கப்படும். ஆத்மாவை உங்கள் உண்மைத்தன்மை என்றும் அதே ஆத்மாதான் எல்லாரிலும் உறைகின்றது என்றும் திடமாக உணர்ந்த உடனேயே ஒரு GLIflui 56ofluosofi5 loni)plb (Individual Transformation) ஏற்படும்.
(F.FIT GSF '90 LJ370)

Page 72
IX, ஆத்ம தத்துவம் விழிப்பிற்கும் (Waking) தூக்கத்திற்கும் இடையே ஒரு நிலை இருக்கிறது. ஒரு சிலருக்குத்தான் இது என்ன நிலை என்று தெரியும், நாங்கள் விழிப்பு நிலையில் இருக்கிறோம். பின் கண்ணை மூடி நித்திரை கொள்கிறோம். யோகிகள் இந்த அபூர்வமான அதிசயத்தைக் கவனித்து இருக்கிறார்கள். விழிப்பு நிலைக்கும் நித்திரையான நிலைக் கும் இடைப்பட்ட கால உணர்வை (Consciousness) ஆத்ம தத்துவம் என்று கண்டார்கள். விழிப்பு நிலை ரஜோ குணத்தையும் நித்திரை நிலை தமோ குணத்தையும் குறிக்க அதற்கு இடைப்பட்ட சத்வகுண நிலைதான் ஆத்ம (தெய்வீக) உணர்வு.
(ஆ.ச.சா செப்90 ப237)
X. சத்சங்கம் கடவுளை அடையவேண்டுமெனில் முதலில் சத்சங்கத்தில் சேருங்கள். தன்னைத் தரிப்பவர்களை ரஷிப் பது தர்மம் என்பது வேத வாக்கு. அறநெறி வழி நடப்பதே சிறந்த வாழ்க்கை முறை. ஆனால் மனதைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன் நெறிதவறிவிடுகிறான். உதாரணமாக ஒரு கார் இருக்கிறது. அதன் உருவம் மட்டும் இருந்தால் போது மா? அதற்கு இயங்கத் தேவையான ஸ்டியரிங், பால்போரிங், டயர், மின் இணைப்பு மற்றும் எல்லா விதமான உபகரணங் களும் தேவை. இல்லாவிட்டால் அது நகரவே நகராது. நகர இயலாத கார் இருந்து என்ன பயன்? அதைக் கார் என்று கூறுவது பொய்யாகிவிடும். நம்மை நாம் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பது அதன் முக்கிய கடமை. அதைச் செய்யாவிட்டால் அதனால் என்ன பயன்? அதைப்போலவே மனிதனின் கடமை தன்னுள் உள்ள தெய்வத்தன்மையை நாடுவதே. இது நிறைவேறாவிடில் இயங்காத கார் போன்ற வனாகவே ஆகிவிடுகிறான்.
(த.ச.சா நவ85 ப14)
ജ 130=

XI. தெய்வீக வாழ்க்கை எல்லா வித்தைகளையும் கற்று ஒரு பயனுமில்லை. பணம், பொருள் ஈட்டியும் ஒரு பயனும் இல்லை. என் உண்மைத் தன்மையை நாடி நான் செல்கி றேனா என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனிதன் என்று கூறிக் கொள்வதே சரியல்ல. நற்குணங்களே மனிதனை மனிதன் எனக் கருதச் செய்பவை. மனிதனுக்குத் தெய்வம் எவ்வளவு தேவையோ அவ்வளவு தெய்வத்திற்கும் மனிதன் தேவை. மனிதன் இல்லையெனில் அவதார நோக்கம் இல்லை. மகன் இருந்தாலல்லவோ தகப்பன் என்பதற்கு இடமுண்டு. அதேபோல் நாம் இருந்தால் தான் நாராயணனுக்கு இடமுண்டு.
(த.ச.சா. நவ85 ப14)
11-2 மெய்யுணர்வைப் பெறுதலும் மனித மேம்பாடும் 1. மனிதப்பிறவி என்பது ஆதர்சத்தை நிலைநாட்டத் தேவையானது. இன்றைய மனிதன் உள்ளுறையும் தெய்வீகத்தை மறந்து விட்டு வாழ்க்கை நடத்துகிறான். மனித உயர்குண நலன்கள் மறக்கப்பட்டு மிருக வாழ்க்கை வாழ்கிறான். ஏனெனில் அவனுள் கோபம், காமம், லோபம், பேராசை போன்ற தீய குணங்கள் நிறைந்திருக்கின்றன. மனித வாழ்க்கை என்பது மிகவும் விலைமதிப்பானது.
உள்ளுறை தெய்வீகம் அதனையும் விட உயர்ந்தது. இன்றைய மனித சமுதாயம் சில கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் உள்ளுறை தெய்வீகத்தின் புனிதத்துவம் புரிந்து கொள்ளப்படாததுதான்
காரணம்.
(த.ச.சா ஆகஸ்ட் 99 ப13)
മ്മ 131 =

Page 73
I.நெறிமுறைப்படி வகுக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டுடன் கூடிய வாழ்க்கைக்கான கோட்பாடுகளைப் பின் பற்றாததே இந்த அவல நிலைக்குக் காரணம். தன்னுடைய உண்மை யான இயல்பை மறந்து மனிதன் புலனிச்சைகளால் அடையும் சிறிறின்ப சுகத்திலே நாட்டம் கொண்டு உலக விஷயங் களிலேயே முழுநேரமும் ஈடுபட்டு வருகிறான். இப்படி உலக விஷயங்களில் அடையும் சொற்ப மகிழ்ச்சியில் அவன் அமைதி பெறமுடியுமா? அது முடியாது. கடைசியில் வாழ்க் கையை அதிருப்தியுடனும், ஏமாற்றத்துடனும் முடித்துக் கொள்கிறான்.
தூய்மையான, நிரந்தரமான, உண்மை வடிவமான தெய்வீகத்தைத் தன்னுள் பெற்றிருக்கும் மனிதன் அசுரத் தன்மைகளையும், மிருகத் தன்மைகளையும் பெருக்கிக் கொள்கிறான்.
தர்மமே எல்லாவற்றிற்கும் வேர் போன்றது. அதுவே மிக உயர்ந்த நற்பண்பாகும். சீரிய ஒழுக்கம் என்பது தர்மத்தினால் உண்டாவதேயாகும். அன்றாட உலக வாழ்க்கையில் சில சட்ட திட்டங்களைப் பின்பற்றுவது மட்டும் நல்லொழுக்கமாகாது. நல்லொழுக்கம் என்பது நேர்மையா னதும், புனிதமானதுமான நன்னடத்தையைப், பின்பற்றுத லேயாகும். நல்லொழுக்கம் நன்னடத்தையில் மலர்வதே. அதுவே மனிதனை சாதனையின் உச்சிக்கு வழிகாட்டும் நெடுஞ்சாலையாகும். சமூகத்தின் சிறப்பு நல்லொழுக்கத் தைச் சார்ந்தே உள்ளது. நல்லொழுக்கமின்றி சமுகமே சீரழிந்து விடும். சமூகத்தை வளர்ப்பதும், கெடுப்பதும் நல்லொழுக்கமே.

ஒழுக்கத்தில் உறுதியாய் நிலைத்திருப்பவனிடம் மட்டுமே முழுமையான ஆளுமை வெளிப்படும். உள்ளே மறைந்து உறையும் தெய்வீகத்தை எவன் வெளிப்படுத்துவானோ அவனுக்கே ஆளுமை என்ற சிறப்புப் பொருந்தும். மனித உருவம் மட்டும் ஒருவனுக்கு முழு ஆளுமையைத்தராது. அவனுடைய நடத்தையே முக்கியமானது. சுயகட்டுப் பாட்டுடன் வாழ்க்கையை நன்னெறிப்படி நடத்துபவர்களே தங்களுக்குள் உள்ள தெய்வீக இயல்பை வெளிக் காட்டும் உண்மை மனிதர்களாக கருதப்படத்தக்கவர்கள். மனு, நளன், ரகு, பலிச்சக்கரவர்த்தி அரிச்சந்திரன் போன்ற வர்களே மனித மேம்பாட்டை வெளிப்படுத்தும் உன்னதமான உதாரணங்கள் ஆவார்கள். இப்படி மனிதனின் சிறப்பி யல்புகளை முழுமையாக வெளிப்படுத்திய மகாபுருஷரே இயேசு ஆவார். நபிநாயகம், முகமதுவும் சிறந்த ஆன்மீக நன்னெறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய வரலாற்றுச் சிறப்புப் பெற்றவரே.
இயல்பாகவே தெய்வீகத்தன்மை கொண்ட மனிதன் தன்னுள் ஆத்மாவைக் கொண்டிருந்தும் தீய செயல்களில் ஈடுபட்டு நெறி தவறி மனித குலத்துக்கே களங்கம் ஏற்படுத்துவதில் முனைந்துள்ளது துர்ப்பாக்கியமே. இருண்ட காலம் எனப்படும் பண்டைய காலத்தில் இப்படிப்பட்ட கொடு மையான செயல்களில் அரக்கத்தனமாகவும், மிருகத்தன்மை யுடனும் ஈடுபட்டதற்கு ஏதோ ஒரு விதமாக சமாதானம் கூறலாம். ஆனால், இக்காலத்தில் விஞ்ஞானம் முன்னேறி அதனால் பற்பல சாதனைகளை நிகழ்த்தி தங்களை நாகரீகம் மிக்கவர்களாகக் கூறிக்கொள்ளும் மனிதர்கள் இப்படிப்பட்ட கொடிய செயல்களில் நன்றியுணர்வின்றி ஈடுபட்டால் இவர்கள் அரக்கர்களா? மனிதர்களா? என்ற
சந்தேகம் எழுகிறது.
(த.ச.சா. ஜன85 ப18-20)
= 133 =

Page 74
III. நாம் உலகில் செயலாற்றிவரும் விதத்தை ஒரு உதாரணத்தின்மூலம் விளக்கலாம். நாம் அழுக்காடை அணிந்து உடலும் துாய்மையற்றிருக்கும்போது யாராவது தெரிந்தவர்கள் வந்துவிட்டால் உடனே வெட்கப்படுகிறோம். உடலும், உடையும் அழுக்காக இருப்பதற்காக வெட்கப்படு கிறோம். ஆனால் உண்மையில் உனக்கு நெருங்கிய நண்பரான இறைவன் உள்ளத்திலிருக்கும்போது உள்ளத் தைக் களங்கம் நிறைந்து அழுக்கடைந்ததாக வைத்தி ருப்பதில் வெட்கமடைவதில்லை என்பது வருந்தத்தக்க தல்லவா? கடவுளின் மகிமை தெரிந்திருந்தும் உங்கள் மனதில் தீய எண்ணங்களை வளர்ப்பது வெட்கப்பட வேண்டிய செய்கையல்லவா? இந்த உண்மையை சற்று சிந்தித்துப் பார்த்தால் நீங்கள் கட்டாயமாகத் தூய்மை யடைந்து விடுவீர்கள். உலகப் பொருட்களின் அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவையே. நொடிப் பொழுதில் அழியக்கூடியவை. மாறக் கூடியவை. ஆகவே தெய்வீகத்தை (ஆத்மாவை) நாடவேண்டும். குணமுலம் இதம்ஜகத்- இந்த உலகில் நல்ல செயல்களைச் செய்வதற்கு நற்குணமே இன்றியமையாத தேவை. நற்குணமற்றோருக்கு இறைவனின் இராச்சியத்திலும் இடமில்லை.
(த.ச.சா பெப்85 ப5)
IV.உங்கள் இதயத்தைப் பரிசுத்தமாக்கிக் கொண்டு தூய்மையான உள்ளத்துடன் சாதனையில் ஈடுபடுங்கள். கிராமங்களில் பணிபுரியும்போது அங்கே உள்ள கோயில்களையும், மசூதிகளையும், சர்ச்சுகளையும் சுத்தப் படுத்துகிறீர்கள். மக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்து சுற்றுப் புறத்தையும் சுத்தம் செய்கிறீர்கள். இவையெல்லாம் நல்ல பணிகளே. ஆனால் இப்படி வெளிப்புறத்தில் சுத்தம் செய்து வருகின்றீர்களேயன்றி
= 134 =

உங்கள் உள்ளத்தை, இதயத்தை பரிசுத்தம் செய்வதில்லை. இப்படி உள்புறத்தில் தூய்மையின்றி வெளிப்புறத் தூய்மை செய்து என்ன உபயோகம்? சாதனை முகாம் நடத்துவதில் என்ன பயன்? தூய்மை எங்கள் இதயங்களில் முகாமிட வேண்டும். இதயத்தூய்மை இருந்தால் நீங்கள் எங்கு சென்றாலும் தூய்மையில்லாமல் இருக்கும் எல்லா வற்றையும் தூய்மையாக்கலாம்.
(த.ச.சா பெப் 85 ப7)
V) மனித குணங்களில் தெய்வீகம் பிரதிபலிக்க வேண்டும். மிருக குணங்களைத் தவிர்த்து தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு. மிருக மனித குணங்கள் நிறைந்தவர். இவர்களிடம் எப்போதும் வெறுப்பு, கோபம், பொறாமை, பேராசை போன்ற உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். மனித மற்றும் தெய்வீக குணநலன்களை தன்னகத்தே கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், அன்பு நிறைந்தும் காணப்படுவார்கள். எப்போதும் உண்மைக்குப் பக்கத்திலேயே இருப்பார் கள். இத்தகைய குணங்கள் இன்றி எந்த ஒரு ஆன்மீகச் சாதனைகள் செய்தும் பயனில்லை.
(SEIT.998 L 24)
= 135 =

Page 75
12. செய்ய வேண்டியது
பிரமையை விடு, பிரமனைக் காண்பாய்
1.கடவுளை வழிபடும் எல்லோருக்கும் சிறிதளவாவது மனதில் அமைதி நிலவுகிறதா? இல்லை. எங்கு நோக்கினும் அமைதி யின்மை. எதைக் கண்டாலும் பயம். எங்கு கண்டாலும் துக்கம். எங்கு பார்த்தாலும் கலகம், கொந்தளிப்பு. இவை யெல்லாம் வெளியில் வைத்துக்கொண்டு உள்ளே ஆனந்தம் அனுபவிக்க இயலுமா? இவையனைத்தும் அசுர குணங்கள். கடவுளை நினைக்கும் போது தெய்வீக குணங்கள் உன்னிடம் நிரம்ப வேண்டும். இதுவே உண்மையான ஞானம். யத்பாவம் தத்பவதி உனது பாவனைகள் எவ்விதமோ அவ்விதமே உனது அனுபவமும். ப்ரம்மவித் ப்ரம்மைவபதி ப்ரம்மனை அறிந்தவன் ப்ரம்மனாகிறான். ப்ரம்மனைப் பற்றி நினைத்தால் நீ ப்ரம்மனாகத்தான் இருக்க முடியும். வெறும் பிராமணனாக இருக்க முடியுமா? வெறும் பூநூலை அணிவதால் மட்டும் ஒருவன் பிராமணன் ஆவதில்லை. ப்ரம்மத்தை அறிந்தவனே உண்மையான பிராமணன். இக்கால மக்கள் பிரம (பொய்த் தோற்றமான) சாதனைப் பயிற்சிகள் செய்கின்றார்களே தவிர பிரம்ம (இறைவனை அறியும்) சாதனைப் பயிற்சிகள் செய்வ தில்லை. பிரமைக்கும், பிரமனுக்கும் என்ன வேறுபாடு. பிரமை ஒன்றைப் பலவாக நினைத்து வேறுபாடுகளாகக் காண்கிறது. பிரம்மன் வேறுபாட்டுடன் தோன்றும் பலவற்றை ஒன்றிணைத்து அவற்றின் ஒருமையைக் காண்கிறது.
11.சத்யம் நாஸ்திபரோதர்ம எங்கும் உனக்கு அமைதி யில்லை. உன் கையில் பணம் இருந்தால் வழியில் என்ன நடக்குமோ என்று பயந்து விமானத்தில் பயணம் செய்கிறாய். சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கண்டு நடுங்குகிறாய். ரயிலில் பிரயாணம் செய்யலாம் என்று நினைத்தால் அங்கும் விபத்து
= 136 =

நேருமோ என்று அஞ்சுகிறாய். சரி காரில் பயணம் செய்ய லாம் என்றால் அதிலும் விபத்து நேரிடலாம். பயம் இல்லாத இடம் இவ்வுலகில் இல்லை. அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம். தாழ்ப்பாழைப் போட்டுக் கொண்டு வீட்டில் தங்கினாலும் வீட்டில் என்ன நேருமோ என்று பயம். யார்தான் பயமில்லாத மனிதன்? பயம், பயம், பயம், எதிலும் பயம், எங்கும் பயம். சுற்றியுள்ள மக்கள் உருவாக்கிய பத்ம வியூகமே பயம். அதிர்ஷ்டம் கெட்ட மக்கள் சீர்குலைந்த மனிதர்கள் உறவினரால் இடைஞ்சல்கள். அனைத்துமே பயம். பயந்தான் எமக்கு உறவும் பரிசுமா? பயங்கரமான இந்த நரகத்துக்கு முடிவேதும் இல்லையா? பயம் பயம் பயம் பயம் எங்கும் பயம் எதிலும் பயம். பயமில்லாத மனிதன் யாருமே இல்லை. இறைவன் மட்டுமே பயமற்றவர். இறைவன் சத்தியத்தின் வடிவம். உண்மைக்குப் பயமில்லை. சத்யம் நாஸ்தி பரோதர்ம
சத்யத்தைவிட உயர்ந்த தர்மம் வேறெதுவுமில்லை. பயம் நிறைந்த மனிதனிடம் சத்யமில்லை. தர்மமில்லை நியாயமில்லை. ஆகவே அவனிடம் பயம் குடிகொண்டி ருக்கிறது. பயமில்லாமல் இருக்க சத்யத்தை பின்பற்று. சத்ய வடிவினரான இறைவனுடன் நீ இணைந்திருக்க வேண்டும். கடவுளை உன் இதயத்தில் பிரதிஷ்டை செய்து கொள்ள
வேண்டும்.
(TIT.9.63.5/T60L99 L1143)
III. உன்னைப்போல் அயலவனையும் நேசி அன்பின் வடிவமான தெய்வத்தை ஒருவன் எவ்வாறு கண்டுகொள்ள முடியும். இவ்வுலகில் அன்னை,தந்தை, சகோதரன், மனைவி, நண்பர்கள், சுற்றத்தினர் ஆகியோர் வெளிப்படுத்தியவாறான பல்வேறு வடிவங்களை அன்பு ஏற்றுக் கொள்கிறது.

Page 76
இத்தகைய உலகியல் அன்பில் நீ சுயநலத்தையும் சுயலாபத்தையுமே காண்கிறாய். ஆனால் தெய்வீக அன்பு முழுமையாக சுயநலமற்றது. இறைவன் எல்லோரையும் நேசிப்பதைப்போல நீயும் எல்லோரையும் நேசிக்க முயற்சி செய்ய வேண்டும். பகவத் கீதையில் "மனவாம்ஸோ ஜீவலோகே ஜீவ பூதஸ் ஸ்நாதனக” அனைவரும் தெய்வீகப் பொறிகள் என்பது இதன் பொருள். ஆகவே இறைவன் உன்னை நேசிப்பது போலவே நீயும் மற்றவர்கள் எல்லோரை யும் நேசித்து அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கவேண்டும். எல்லாவற்றுக்குள்ளும் ஒரே தெய்வம் இருக்கிறது என்ப தைப் புரிந்துகொளஸ்வேண்டும். இந்த உண்மையைப் புரிந்து கொண்டு இந்த சத்யத்தில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் ஒவ்வொருவரையும் இவனால் நேசிக்கமுடியும். இன்று இத்தகைய அன்பைக் காணமுடிவதில்லை என்றால் இறைவனுடைய வாக்கில் மனிதனுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள்.
(பி.பூ.பு.ம98 ப81)
IV.உயர்நிலைக்கு வரவேண்டும். மனிதன், அறிவைக் கடந்துள்ள தெய்வத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் மனிதனின் நிலைக்கு மேம்பட்ட உயர்ந்த நிலையை நாம் அடையும் வரையில் மனித நிலையில்தான் மனிதன் அனுபவங்களைப் பெறமுடியும். மனிதனாக வாழ்ந்து கொண்டு மனித ஆற்றலுக்கு மேற்பட்ட ஒன்றை அறிவது 6úLig?
ஆகவே, மனிதன் முதலில் மனிதனாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல் வாழவேண்டும். தன்னலமற்ற சேவை செய். அன்பில் தோய்ந்து வாழ். அதுவே உண்மையான மனிதனுக்கு அடையாளம். இறைவனை நேசிப்பதற்கு சிறந்த வழி
= 138 =

எல்லோரையும் நேசித்து எல்லோருக்கும் சேவை செய்வதா கும். இத்தகைய நம்பிக்கை இல்லாததால் மக்கள் கடவுளை எங்கெல்லாமோ தேடுகிறார்கள். ஒவ்வொருவரிடமும் தங்கி யிருக்கும் தெய்வத்துவம் ஒன்றானாலும் ஒவ்வொருவரிடமும் உள்ள திறமைகளும் உள் ஆற்றல்களும் வெவ்வேறானவை. மனப் பக்குவத்துக்குத் தக்கவாறும், ஆன்மீக சாதனை களுக்குத் தகுந்தவாறும் அவர்களது மனோபாவங்கள் பரந்ததாகவோ, குறுகியதாகவோ இருக்கும்.
மக்களின் மனோபாவங்களும் அவர்களது அன்றாட அனுபவங்களைப் பொறுத்திருக்கும். ஆகவே அன்றாடம் மக்கள் நற்செயல்களை மேற்கொள்ளவேண்டும். பாடிக்கொண்டே இருந்தால் நன்கு பாடமுடியும். நீச்சல் பழகிக் கொண்டேயிருந்தால் நீந்த வரும். கல்லைத் தேய்த்துக் கழுவிக் கொண்டேயிருந்தால் அது வழவழப்பாக மாறும். வைரத்தைப் பட்டை தீட்டும்போதுதான் அதன் மதிப்பு அதிகமாகும். துன்பங்களுக்கிடையேதான், ஆன்மீக சாதனைகளுக்குப் பிறகுதான் தெய்வத்துவம் வெளிப்படும். இரண்டு கட்டைகளை ஒன்றுக்கொன்று உரசுகையில் தான் நெருப்பு வெளிவரும். கரும்புக் கட்டையைக் கடையும் போதுதான் கருப்பஞ்சாறு கிடைக்கும். தங்கத்தைச் சுடச் சுடத்தான் அதன் அழுக்கெல்லாம் நீங்கிதங்கம் ஒளிவீசும்.
வியாதி மனத்துன்பங்கள், கஷ்டநஷ்டங்கள் இவற்றுக் கிடையே தியாகம் புரியும்போதுதான் தெய்வத்துவத்தை மனிதன் உணருகிறான். ஆத்மீகப் பயிற்சிகள் தாயை வணங்குவதிலிருந்து தொடங்கவேண்டும். அன்னையைப் பற்றி நன்குணர்ந்தவனுக்கு கடவுளனுபவம் சுலபமாகிறது. உனது ஆசைகளையும், உயர் லட்சியங்களையும், அனுப வங்களையும், பசித்தாகத்தையும் உன் தாய் அறிவாள்.
உன்னை நன்கு அறிந்த தாயைத் திருப்திப்படுத்த நிமுயற்சி
= 139 =

Page 77
செய்யவேண்டும். மனித எல்லைக்கு அப்பாற்பட்ட கடவுளைப்பற்றி நீஎன்ன புரிந்துகொள்ள முடியும்.
(HT.9.65II60L93 l (245)
V.அண்ணன் வாலி மிகுந்த பலசாலி அவனைவிட வலிமை மிகுந்த நண்பர்கள் இருந்தால்தான் கக்கிரீவனால் வாலியை வெல்ல முடியும். அதோ அந்த ஐந்து மரங்களைப் பாருங்கள் வலுவான மரங்கள் அவையனைத்தையும் வாலியால் துளைக்கமுடிந்தது. இராமன் வாலியைவிட பலசாலியானால் தான் அவரது நட்பை நாடலாம் என்றான். இராமன் புன்முறு வலுடன் ஒரு அம்பை விட்டான். வாலியின் அம்பு 5மரங்க ளைத் துளைத்தது. இராமனின் அம்போ 7 மரங்களையும் (ஒரே வரிசையில்) துணைத்தது. சுக்கிரீவன் இராமனின் காலடியில் வீழ்ந்து உங்கள் நட்பை நான் நாடுகிறேன். உங் கள் உதவி எனக்கு மிகவும் தேவை எனக்கூறி காலடியில் வணங்கினான். சுக்கிரீவனின் நண்பர்கள் படைவீரர்கள் அனைவரும் இராமனின் காலடியில் வீழ்ந்து வணங்கினர். ரஹமாம் சரணாகதம் நீயே என் புகலிடம் உன்னிடம் மட்டுமே நாங்கள் உதவி கோருகிறோம். இவ்வாறு கூறி சுக்கிரீவன் அக்கினி சாட்சியாக இராமனைத் தன் நண்பனாகக் கொண் டான். இந்நிகழ்ச்சியின் உட்பொருள் என்ன?
இங்கு யார் எதிரி? யார் நண்பன்? மாயைதான் (அறியாமை) பலமிகுந்த எதிரி. இந்த மாயத் தோற்றத்தை விலக்கிக் கொள்ள அதைவிட வலிமை வாய்ந்த கடவுளைப் புகலிடம் அடைய வேண்டும். நாம் கடவுளைச் சரணடைந்தால் மாயத் தோற்றத்தை எளிதில் வெல்லலாம். (இன்னொரு உட்பொருள்-சுக்கிரீவன் நேரடியாக மோதினால் தன் பலத்தை இழக்கநேரிடும். அதே போல் நாம் மாயை
= 140 =

என்ற அறியாமையுடன் தெய்வீகத்தின் உதவியின்றிப் போராடினால் நம் பலத்தைத்தான் இழக்க நேரிடும்.
(aft. 9.6asitéool 93 L247)
VI.கடவுள் சகாயம் மகாபாரதத்தில் வரும் கண்ணன் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவன். அவனிடம் மதிக்கூர்மை, வில்லாற் றல் போன்ற பல ஆற்றல்கள் குடிகொண்டிருந்தன. ஆனால் கடவுள் சகாயம் என்ற துணையாற்றல் அவனிடம் இல்லை. அந்த ஆற்றல் பாண்டவர்களிடம் இருந்தது. கடவுட் சகாயம் இல்லாமல் எத்தனை ஆற்றல்கள் இருந்தாலும் மனிதன் பலவீனமாகவே இருப்பான். எத்தகைய சிறந்த கர்ணன் முடிவில் என்ன கதியடைந்தான்? மிகுந்த பலவீனனாகி விட்டான். மனிதனின் புத்தி, சக்தி, சாமர்த்தியங்கள் அனைத் தும் பலமிழக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் அன்பை வளர்க்க வேண்டும். முக்கியமாக கடவுளிடம் அன்பை வளர்க்க வேண்டும். பதவி, ஆற்றல், செல்வம், பகட்டு, இவையெல்லாம் பெற்றிருந்த கெளரவர்கள் முடிவில் என்ன ஆனார்கள்? பல நாடுகளை அவர்கள் கைப்பற்றினார்கள். அவர்களிடம் இருந்த சொத்து, சுகம் , ஆற்றல், ஆஸ்திக்குக் குறைவில்லை. அவர்கள் படையிலிருந்தவர்களும் மாவீரர் கள். பீஸ்மாசாரியார், துரோனோசாரியார், கிருபாசாரியார், அசுவத்தாமன், கர்ணன் போன்ற மாவீரர்கள் இருந்தனர். இவ்வளவு ஆசாரியர்கள் இருந்தும் என்ன பயன்? ஆசாரியர் களுக்கு ஆசாரியனான கடவுளின் துணை பலம் அவர்களிடம் இல்லையே. மற்றவை இருந்து என்ன பயன்?
(சா.அ.கோடை93 ப231)
VI.ஆன்மீக அம்சங்கள் வேண்டும். இங்கு ஒரு தீப்பெட்டி இருக்கிறது. இந்தத் தீப்பெட்டியைத் தண்ணில் வைத்தி ருந்தால் அது ஈரமாக இருக்கும். தீக்குச்சியை உரசினால்
= 141 =

Page 78
நெருப்பு வெளிவராது. நெருப்பு இருப்பதோ உண்மைதான். ஆனால் எத்தனை தடவைகள் உரசினாலும் தீப்பற்று வதில்லை. அதேபோல் மனிதனிடம் தெய்வத்துவம் என்ற நெருப்பும் உயர்நலம் என்ற நெருப்பும் உள்ளடங்கியுள்ளன. இவை வெளிப்படுவதற்கு பல உயர்ந்த ஆன்மீக அம்சங்கள் தேவைப்படுகின்றன. விரதங்கள் எத்தனை கடைப்பிடித்தா லும் ஜபம், தியானம் செய்தாலும், பஜனைகள் புரிந்தாலும், பூஜை போன்ற சடங்குகள் செய்தாலும், கீதை போன்ற நூல்களைப் பாராயணம் செய்தாலும் உள் மறைந்துள்ள தெய்வீக ஆற்றல் வெளிப்படுவதில்லையே. இது ஏன் என்று நாம் ஆராய்தல் வேண்டும்.
மனிதன் இவையனைத்தையும் வெளிப்புறச் செயல்க ளாகவே செய்கிறான். அவன் மனது உலக இன்ப நாட்டத் திலேயே தோய்ந்து இருக்கிறது. அவன் மனது உலக விஷயங்கள் நிறைந்ததாக இருக்கிறது. அவனது இலட்சியம் நிரந்தர உண்மையில் நிலைபெற்றிருப்பதே என்று அவன் அறிந்திருந்தாலும் அவன் மாறுகின்ற நிலையற்ற உலக சுகத்தை நம்பி வாழ்வதால் இத்தகைய ஆன்மீகப் பயிற்சிகள் பலனளிப்பதில்லை. அவன் செயல்களனைத்தும் தண்ணில் தன் நிழலைக் கண்டு தண்ணிரை விட்டு விலகிச் செல்லாமல் நிழலுடன் போராடுவது போலாகிறது. தீப்பெட்டி போன்ற தன்னை துறவு(வைராக்கியம்) என்ற பெரிய வெப்பத்தில் வைக்க வேண்டும். துறவு என்ற சூரிய வெளிச்சத்தில் கண்
விழித்திருந்தால் தெய்வத்துவம் வெளிப்படும்.
(gFIT.9.65mGoDL93 1229)
VI.கடமையே வழிபாடு. உனது கடமையைச் செய். சிருஷ்டியில் நீயும் பங்கு கொள். நீ செய்வது அனைத்தையும் கடவுளின் செயல் என்று நினைத்துக் கொள். அப்போது வேலை வழிபாடாக உயர் மாற்றம் அடையும். ஸ்வாமி

வேலையை விட்டு விட்டுக் காட்டுக்குச் செல் என்று ஒரு பொழுதும் சொன்னதில்லை. நீ வேலை செய்யும்போதே காட்டில் இருக்கும் தனி உணர்வுடன் இரு என்று கூறுகிறார். ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சுவாமி கூறவில்லை. நீ வேலை செய்யும்போதே உனக்கு ஓய்வு கிடைக்கிறது. உன்னிடமுள்ள துரசை (Dust) போக்கும் போது உன்னிடமுள்ள துருவை (Rust) போக்குகிறாய். துரு விலகும் போது உனக்கு (Rest) ஒய்வு கிடைக்கிறது. இந்த முறையில் வேலை செய்யும்போது தெய்வத்துவம் ஒவ்வொரு மனிதரிலும் எல்லா நேரத்திலும் பிரகாசிக்கிறது.
(சா.அ.கோடை93 ப240)
IXதஸ்மை நம: கர்மணே, வேலையே வழிபாடு. உலகைத் துறக்கலாகாது. குடும்பத்தைப் பராமரித்துக் கொள். கடமை களைச் செய். அலுவலகப் பணிகளில் ஈடுபடு. ஆனால் அனைத்தும் இறைவனுக்கு அர்ப்பணம் என்ற பாவனையுடன் செயல்புரி அனைத்தும் இறைவனுக்கான பணி இவ்வாறு வேலை வழிபாடாக மாறிவிடும். வழிபாடு இல்லாத பொழுது வேலையையும் ஒழுங்காகச் செய்ய இயலாது. வெறும் அலுவலக வேலை என்று நினைத்தால் அந்த வேலை ஒழுங்காக நடைபெறாது. இறைவனை மட்டும் வழிபட்டால் போதாது. வேலையையும் வழிபட வேண்டும். ஒவ்வொரு வேலையையும் ஒவ்வொரு பொருளையும் வணங்கி வழிபட வேண்டும். அப்போதுதான் விளைவுகள் பயனுள்ளவையாக இருக்கும்.
(பிர.அ.வ5 ப36)
X.அத்வைதம் மனதில் வரவேண்டும். நீ ஆசைப்படுவது உன்னிடம் இல்லையென்றால் பிறரிடம் அதைக் கேட்கலாம். நீ ஆசைப்படுவது உன்னிடம் இருக்கும்போது பிறரிடம் நீ
ك= 143 =صس

Page 79
ஏன் அதைக் கேட்கவேண்டும்? உன்னிடமுள்ள பஞ்ச பூதங்கள்தான் அவர்களிடமும் உள்ளன. பிறகு அவர்களிட மிருந்து ஏன் எதையும் எதிர்பார்க்கிறாய்? அது துவைதம். உன்னிடமுள்ள பஞ்சபூதங்கள் அவர்களிடமுமிருந்தால் இரண்டும் ஒன்றேயாகும். ஆகவே உனக்கு வேறொன்றும் தேவையில்லை. எனக்கு எந்தப் பொருளும் தேவையில்லை. ஏகம் ஏவா அத்வீதியம் - ஒன்றே ஒன்று இரண்டல்ல. ஏகோஹம் பஹ"ஸ்யாம், பஹ"ஸ்யாம், பஹ"ஸ்யாம். ஒன்றே பலவாயிற்று. ஒரே தங்கம், பல நகைகளாக மாறியது. பஞ்ச பூதங்களிலுள்ள தெய்வத்துவம் எல்லாவற்றிலும் உள்ளது. எவ்வித வேறுபாடும் எங்களுக்கு இல்லை. இதுவே பதார்த்த அத்வைதம். (பொருட்களின் அத்வைத நிலை)
மனிதன் இவற்றைப் புரிந்து கொண்டு இவற்றின் பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் அவனது வாழ்க்கை நிறைவடையும். மனதில் துவைத பாவனையை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் அத்வைதம் கடைப்பிடித்தால்
அமைதியின்மைதான் ஏற்படும்.
(பி.அ.வ 5 ப7)
IX. plupigsJ 696opólosop6topis5 6ólanujawniony (Constant) இவ்வுடல் இறைவனின் இருப்பிடம். நீ உட்கொள்ளும் உணவு அத்தெய்வத்திற்கு அளிக்கும் படையல். நீநீராடுவது உன்னுள் நிறை தெய்வீக ஆன்மாவைச் சடங்கு முறையாக நீராட்டுவது. நீநடந்து செல்லும் நிலம் அவரைச் சார்ந்தது. நீ துய்க்கும் இன்பம் அவருடைய கொடை. நீ அனுபவிக்கும் துன்பம் நீ நல்வழியில் நடவாதிருந்ததைச் சுட்டிக்காட்டி மிகவும் கவனமாக நடக்கவேண்டுமென்ற எச்சரிக்கை என்ற ஆழ் எண்ணம் கொண்டு வெயிலிலும், நிழலிலும், இரவிலும்
== 144 =

விழிப்பிலும், உறக்கத்திலும் அவரை நினைத்திருத்தல் வேண்டும். இது உன் கடமையாகும்.
(த.ச.சா நவ83 பின்பக்கம்)
XII.ஐந்து பிரார்த்தனைகள்(பஞ்ச பிராணன்) இதை (தெய்வீகத்தை) அடைய தீவிர சிரத்தையும் பேராவலும் இருந்தால் நான் சொல்லப்போகும் முக்கியமான கருத்தை ஆழ்ந்த ஒரு நிலைப்பாட்டுடன் கேளுங்கள். அந்த (B)பாவங்களில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
a. நானே கடவுள். நான் கடவுளிலிருந்து வேறுபட்டவனல்ல.
கடவுள் என்னிலிருந்து வேறுபட்டவரல்ல.
b. நான் எல்லையற்ற பெருமை கொண்ட அகண்ட
பரப்பிரம்மமாவேன்.
c. "வியதாக்லேசம்” அதாவது கவலைகளும் இன்னல்களும்
என்னைப் பாதிக்க விடமாட்டேன்.
d. சத்-சித் ஆனந்தம் என்னிடமிருந்து வேறுபட்டதல்ல. அது
என் இயல்பே.
e. நான் எப்போதும் திருப்தி நிறைந்தவனே.
இந்த ஐந்து பிரார்த்தனைகளையும் தினமும் மன உறுதியுடன் வழிபாடாகக் கொண்டால் பயத்திற்கு இடமே இல்லை. ஏ மனமே எப்போதும் ஓம் தத் சத் என்று உச்சரித்துக்கொண்டே இரு என்று அடித்துக்கூறி வற்புறுத்தல் வேண்டும். இந்த (B)பாவத்துடன் இந்த ஐந்து பிரார்த்தனைகள் செய்யப்படுவது மிக அவசியம். இவையே பஞ்ச பிராணன். அதாவது ஐந்து வகை உயிரூட்டும் உயிர் சக்திகளாக இருந்து உங்களை அல்லும் பகலும் அனவரதமும் காப்பவை. இப்படியே ஒரு முனைப்பாட்டுடன்

Page 80
பிரார்த்தனையில் ஈடுபட்டால் நீங்கள் பரம்பிரம்மம்மாகவுே ஆகலாம். பிரம்மவித் பிரம்மைவபதி என்ற மறைவாக்குப்படி பிரம்மத்திலே ஒன்றியிருந்து பிரம்மம்மாகவே ஆகலாம்.
(த.ச.சா நவ83 ப23) XII.சத்சங்கம் ஒரு திறமைமிக்க தொழிலாளி தனது திறமையால் சிறுதுண்டு உலோகத்தை விலையுயர்ந்த சரியான நேரம் காட்டும் கடிகாரமாக மாற்றிவிட்டான். இதுவே பரிசுத்தப்படுத்தும் முறை. இந்தச் செயலுக்கே அதாவது ஒரு விலையற்ற ஒரு பொருளை விலை மதிப்புள்ள பொருளாக மாற்றும் செயலுக்கே நாம் பணம் கொடுக்கிறோம்.
அதேபோல் ஒருவன் அறியாமையில் பிறந்திருந்தாலும் தன்னைத்தான் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. வழி இருக்கிறது. அந்த வழியே நல்லோரைக் காணல். அவர் சொல் கேட்டல், நல்லோரிடம் பேசுதல். இந்த வழிமுறை உங்களை அறிவற்ற முடநிலையிலிருந்து பரமஹம்ச நிலைக்கு (தெய்வீக) நல்ல அறிவாளி என்ற
நிலைக்கு மாற்றும்.
(பி.கோ.அ.73 ப67)
XIV. இதயத்திலுள் தெய்வீகத் தங்கம், படைத்த இறை வனுக்கு இன்னுமொரு பெயர் ஹிரண்யகர்பம். ஆகவேதான் இறைவனை பங்காரு (தங்கம்) என அழைக்கின்றனர். (சுவாமி எங்களை அப்படி அழைக்கிறார்) இந்தத் தெய்வீகத் தங்கத்தை உங்கள் இதயத்தில் பதித்துக் கொண்டால் உங்களால் உங்கள் விருப்பத்திற்கேற்ப நகைகளைச் செய்து கொள்ள முடியும். உதாரணமாக சாந்தி, சத்யம், தர்மம் போன்ற நகைகளைச் செய்து கொள்ள முடியும்.

தங்கம் இன்றி எந்த ஆபரணமும் செய்து கொள்ள முடியாது. என்பதைப்போல தெய்வீகமின்றி உங்களால் அமைதியையும், சத்தியத்தையும், தர்மத்தையும், அடையமுடியாது. ஹிரண்யகர்ப்பம் ஒவ்வொருவரிடமும் நிறைந்துள்ளது. அதனால் தான் சுவாமி ஒவ்வொருவரையும் பங்காரு என அழைக்கின்றேன்.
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு இறைவன் உன்னுள் நிறைந்திருக்கிறான் என்ற உறுதியான நிலைப்பாடு எழுந்தால் மட்டுமே உனது வாழ்வில் அனைத்து நலனும் சேரும். இதை மறந்து விட்டு வெளிப்புறமாகக் காணப்படும் எந்த ஒரு பொருளுக்காகவும் செய்யப்படும் முயற்சிகள் நிச்சயம் தோல்வியைத்தான் தழுவும். ஆகையால் முதலில் இறைவன்மேல் நம்பிக்கையை
வளர்த்துக் கொள்ளுங்கள்.
(த.ச.சா ஜன2000 ப8)
XV.ஸ்ரத்தாவான் லபதேஞானம் - சிரத்தை இல்லாதவ னுக்கு எந்தவித அபிவிருத்தியும் ஏற்படாது. சிரத்தை உள்ளவனிடம் ஒரு சிறிய நெருப்புக் கங்குல் தந்தாலும் போதும் அதை ஊதிப் பெரிதாக்கி வளர்த்துப் பெரும் தீச்சுவாலையாக மாற்றி விடுவான். சிரத்தை இல்லாத வனிடம் பெருநெருப்பைத் தந்தாலும் சிரத்தையின்றிச் செய்யும் வேலையால் அதையும் வீணடித்து அணைத்து விடுவான். அதனால்தான் ஸ்ரத்தாவான் லபதேஞானம் என்றார்கள். சிரத்தை உடையவனுக்கு ஞானம் கிடைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் பகவத் விஷயமாகப் பாவித்து மிகவும் அத்யந்தமான சிரத்தையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
(த.ச.சா ஜுலை99 ப13)
== 147 =

Page 81
XVIநாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உள்ளிருக்கும் தெய்வீகத்தைப் புரிந்து கொள்வதற்கானதாக இருக்க வேண்டும். நம்முள்ளே உறையும் தெய்வீகம் அகங்காரம், கோபம் இவற்றால் முடப்பட்டிருக்கிறது. ஆகவே மோகம் ஹித்வா புனர் வித்யா எனக் கூறுகின்றனர். உண்மையில் உள்ளிருக்கும் தெய்வீகம் பற்றுதலால் முடப்பட்டிருக்கிறது. எங்கிருந்து இப்பற்றுதல் வந்தது. அளவுக்கதிகமான ஆசைகள்தான் பந்தத்துக்கு வழிவகுக்கிறது. ஆகவே நாம் அதிக ஆசைகளுக்கு இடம் தரக்கூடாது. அன்பின் வடிவங் களே நீங்கள் அனைவரும் தெய்வீகத்தின் வடிவங்கள்.
(த.ச.சா ஜுலை99 ப29)
XVI.ஆறானது கடலில் தோன்றி கடலில் சேர்ந்தபோதும் அது கடலை விட்டு விலகியிருக்கும் போது அதற்கு ஆறு என தனியான பெயரும் வடிவமும் இருக்கிறது. ஆனால் அது கடலில் சேர்ந்தவுடன் கடலின் சுவையைப் பெறுகிறது. கடலில் வடிவத்தைப் பெறுகிறது. கடலின் பெயரையும் பெறுகிறது. நீங்கள் இறைவனுடன் ஒன்ற விரும்பினால்
இறை உணர்வும்
இறை வடிவமும்
இறைவனுடைய சிறப்பியல்புகளும்
உங்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் அவருடன் ஒன்ற(ாக) முடியும். இறைவனது சிறப்பியல்புகள் யாவும் உங்களிடமிருந்து வெளிப்பட வேண்டுமென்று நீங்கள் உணர வுேண்டும். இறைவனின் பரந்த மனப்பான்மை என்னிடம் ஓர் அங்கமாகட்டும். இறைவனின் சிறப்பியல்பான சுயநலமற்ற உணர்வு என்னிடம் ஓர் அங்கமாகட்டும். இந்த உணர்வை நீங்கள் பெற்றவுடன் நீங்களும் நானும் ஒன்றே" எனும் நிலையை அடைந்து விடுவீர்கள்.
(LIT.a.G3 u. L Tabib 1 , 171)
ത്ത് 148 =

13. தன்னை அறியவேண்டும்
1. ஒவ்வொரு ஆத்மீக சாதகரும் தன்னை அறிய முயலவேண்டும். ஆத்மீக பயிற்சிகள் அனைத்துக்கும் ஒதுக்கும் நேரத்தில் நான்கில் மூன்று பங்கு நேரத்தை தன்னை அறிய ஒதுக்கவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு முழுப்பலன் கிட்டும். காலத்தை முறையாகப் பயன்படுத்தி உங்கள் உடலைப் புனிதப்படுத்தி உங்கள் செயல்கள் அனைத்தையும் தூய்மையாக்கினால்தான் நீங்கள் குறிக்கோளை அடைய முடியும். துன்பங்கள் அனைத் துக்குமுரிய மிகமிக முக்கியமான காரணம் புலன்களின் பலவீனமே. புலன்களை உறுதியுடன் கட்டுப்படுத்துங்கள். மனதைச் சரியான பாதையில் செலுத்துங்கள். நீங்கள் எடுக்கும் தீர்மானம் வலிமையுடையதாக இருக்கட்டும்.
(பா.கீபே பா2 ப108)
II. உன் இதயம் துடிக்கிறது. அவ்வேலையில் உன்னுடைய பங்கு என்ன? ஒன்றுமில்லை. அதுவே இறைவனின் திருவுள்ளம். நான் நினைக்கின்றேன் நான் செய்கின்றேன் என்ற அகந்தைக்கு இடமேது? இதயத் துடிப்பில் நீ செய்வது ஏதுமில்லை. நாடித்துடிப்பில் நீ செய்வது ஏதுமில்லை. நீ ஒன்றும் செய்வதில்லை. இறைவனே இதயத்தை அமுக்கி விரிவடையச் செய்கிறார். இரத்தத்தை எல்லா இடங் களுக்கும் அனுப்புகிறார். நுரையீரலை இயக்கி இரத்தத் தைச் சுத்தப்படுத்துகிறார். உடலிலுள்ள இறக்குமதி ஏற்று மதி இரண்டையும் நடத்துகிறார். தெய்வத்துவம் உள்ளே இல்லாது உன்னால் எதுவுமே செய்ய இயலாது. ஆகவே இந்த தெய்வத்துவத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும் இறைவன் தனது செயலை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீ நம்பிக்கை யுடன் இவற்றைப் புரிந்து கொண்டால் உனக்கு ஆனந்தம் அதிகரிக்கும். உனது பிரார்த்தனைகள் அனைத்தையும் முழு
a 149 as

Page 82
உணர்வுடன் செய். (நடப்பவற்றை இறைவன் நடத்துப வற்றை) நாம் அனுபவிக்க வேண்டும்.
(பி.அ.வ.5 ப37) III. Brother hood of man and father hood of god 67aip வசனத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். யார்மேலும் பொறாமைப்படாதீர்கள். பொறாமை என்பது தீர்க்க முடியாத வியாதி போற்றுதலும், தூற்றுதலும் எந்த மனிதர்களாலும் தவிர்க்க முடியாத ஒன்று. பழுத்த மரம்தான் கல்லடிபடும். அதைப்போல நல்லவர்கள்தான் தொல்லைகளை எதிர் நோக்குகிறார்கள். இத்தகைய துன்பங்களுக்கும், துயரங் களுக்கும் முக்கியத்துவம் தராதீர்கள். ஆனால் கல்லடியை மரங்கள் வரவேற்கின்றன. ஏனெனில் மக்கள் தங்களது மதிப்பைப் புரிந்து விட்டனர் என்பது அதற்குப் புரிகிறது. அதைப்போலவே மனிதன் மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்படும்போதும் விரக்தியடையக்கூடாது. இன் பமோ, துன்பமோ, எதுவானாலும் சமநிலையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த பரந்த மனப்பான்மை வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய புனித நோக்கம் இருப்பவர்களிடம் தெய்வீகம் தானாகவே மலர்கிறது.
(த.ச.சா.ஜன99 ப10)
IV. வெறுமனே இறைவனை நேசிப்பதில் அதிக பலன் கிட்டாது. அவரது அன்பையும், அருளையும் எப்படி அடைவது? என்பதையும் அவரை உங்கள்மீது எப்படி அன்பு செய்ய வைப்பது? என்பதையும் நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். கடவுள் உங்களுடையவரே என்று பேசுவதிலும் உரக்கக் கத்துவதிலும் அர்த்தமே இல்லை. நீங்கள் அவருடையவரே என்று கடவுளே உறுதிபடக் கூறுவது உங்கள் காதில் விழும் வகையில் நீங்கள் பாடுபட்டாக வேண்டும். நீங்கள் அடைந்தாக வேண்டிய மிகமிக முக்கியமான பொருள் அதுதான்.
(LIT.E.(8 LIT2 LuIS6)
ജ്ജ് 150 =

14. தெய்வீக அனுபவங்கள்
1.உபநிடதங்கள் தரும் செய்தி சனாதனமானது. நிலை யானது. அமரத்துவமானது. தெய்வீகமானது. இங்குள்ள எல்லாவற்றினதும் சாரம் கடவுள் (ஈ சோ வை சஹ) என்று அவை பிரகடனப்படுத்துகின்றன. (சர்க்கரைக் கலவையின் ஒவ்வொரு துளியிலும் இனிப்பு இருப்பதைப்போல பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருப்பதைப்போல) படைப்பின் ஒவ்வொரு கலத்தையும் ஒவ்வொரு அணுவையும் தெய்வீகம் ஊடுருவி உள்ளது. எப்படி இருந்தாலும் சிறிய அணுவிலிருந்து பெரிய அண்டம் வரை வியாபித்திருக்கும் தெய்வீகத்தின் புனிதத்துவத்தையும், பரம இரகசியத்தையும் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. (அதனாலேயே விளங்கப்படுத்தப்படும் பொழுது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்? எங்கள் ஒவ்வொருவராலும்?)
வேறு எந்த வழியாலும் மனிதனுக்குத் தெரிந்திருக்க முடியாத பரம இரகசியத்தை உபநிடதங்கள் வெளியிடு கின்றன. கரும்பிலுள்ள இனிமையை, மிளகாயிலுள்ள உறைப்பை, எலுமிச்சையிலுள்ள உவர்ப்பை மலரிலுள்ள சுகந்தத்தை ஒவ்வொருவரும் அனுபவிப்பதைப் போல படைப்பின் எல்லா அம்சங்களிலும் ஒவ்வொருவராலும் தெய்வீகத்தை அனுபவிக்க முடியும். இந்த உள்ளுறையும் தத்துவத்தை ஒரு விஞ்ஞானியினாலோ ஒரு பொறியியலாள னாலோ புரிந்து கொள்ள முடியாது. இவையெல்லாம் தெய்வீகத்திற்கான நேரடி நிரூபணங்கள். இதனை அடை யாளம் காணுவதற்கான முயற்சியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிரவகித்து ஒடும் ஆற்றைக் காணும்போது நிரம்பித் ததும்பி நிற்கும் ஒரு நீர்நிலையைக்
=ങ്ക് 151 =

Page 83
காணும்போது நன்றாக வளர்ந்திருக்கும் ஒரு வயற் பரப்பைக் காணும்போது ஒருவர் அளவில்லாத ஆனந்தத்தை அடைகிறார். அவையெல்லாம் கடவுளின் இருப்பிற்கான நேரடி அடையாளங்கள். எப்படி இருந்தாலும் மனிதனால் இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறந்ததிலிருந்து தொடங்கி இறக்கும் வரை மனிதன் பலவித அனுபவங் களுக்கு ஆளானாலும் தானே செய்பவன், தானே அனுபவிப் பவன் என்ற எண்ணத்தால் ஏமாந்து விடுகிறான். தன்னுடைய உண்மைத் தன்மையை புரிந்து கொள்ள முடியாதவனால் எப்படி எல்லாவற்றையும் தாண்டிச் செல்கின்ற தெய்வீக தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். பார்க்கின்ற, கேட்கின்ற, அனுபவிக்கின்ற ஆனந்திக்கின்ற ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் கடவுளின் இருப்பை பறைசாற்றுகின்றது. தெய்வீக தத்துவத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இன்றைய மனிதன் துருவித் துருவி ஆராய்கின்றான். கணனி, தொலைக் காட்சி, தொலைத்தொடர்பு இவைகளை விளங் கிக்கொள்ள எவ்வளவு நேரத்தையும் செலவிட ஆயத்தமாக இருக்கும் மனிதன் தெய்வீகத்தைப் பற்றி, தெய்வத்தைப் பற்றி எந்த நேரத்தையும் செலவிட ஆயத்தமாக இல்லை.
(24-10-2002 த.ச.ரா அருளுரை)
I. ஒரு பறவையின் பிறப்பு முறையை ஒருவர் எப்படி விளங்கப்படுத்த முடியும்? யார் அதை அந்த முட்டைக்குள் வைத்தது? உருவான அந்த சின்னஞ் சிறிய கருவுக்கு முட்டையை உடைத்து வெளிவருவது எப்படி என்று யார் சொல்லிக் கொடுத்தது? ஒரு சிறிய விதைக்குள் ஒரு பெரிய விருட்சம் அதன் வியாபித்த கிளைகளோடு பழங்களோடு எப்படி இருந்தது? எப்படி ஒருவரால் இதைப் புரிந்து கொள்ள முடியும்? இவைகளெல்லாம் கடவுளின் இருப்பைச் சுட்டிக் காட்டுகின்றன. பிரம்மம் பெரியதின் பெரியது சிறியதின்
m 152 m

சிறியது. சனாதனமான என்றுமுள்ள அந்த சாட்சி, படைப்பின் விதை, ஆத்மா என்ற உருவில் முழுப் பிரபஞ்சத்தையும் ஊடுருவி உள்ளது. (24-10-2001)
I.ஒரு சிறு துளி நீர் புனித கங்கை ஆற்றினை ஞாபகப் படுத்திக் கொண்டு வருகிறது. ஒரு சிறு துளி நீருக்கும் கங்கை ஆற்றுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருப்பதாக ஒருவர் நினைக்கலாம். ஆனால் அளவில்தான் அங்கு வித்தியாசம் உள்ளது. பல மழைத்துளிகள் சேர்ந்து ஒரு அருவியாக ஓடுகிறது. பல அருவிகள் சேர்ந்து ஒரு ஆறா கிறது. பல ஆறுகள் கடைசியாகச் சமுத்திரத்தில் சங்கமிக் கின்றன. ஆகவே சமுத்திரம் என்பது பல நீர்த்துளிகளின் கூட்டு என்று ஒருவர் தீர்மானிக்கலாம். பலமுள்ள சமுத் திரத்தில் இருப்பதைப்போல கடவுள் ஒரு அற்பத் துளியிலும் இருக்கிறார். ஒரு சிறிய நெருப்புப் பொறி பெரு நெருப்பாக உருவெடுக்கிறது. அற்பமான ஒரு சிறிய பொருள் அளவற்ற ஆற்றலுள்ள ஒன்றாக மாறுவதைக் கவனிக்கிறோம். உல கத்தில் நடைபெறும் ஒவ்வொரு மாற்றத்திலும் கடவுள் இருப்பை நாம் புரிந்து கொள்ளலாம். கடவுளை நீ காண வேண்டுமென்றால் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளி லும் அவரைக் காணலாம். பார்க்கிறான் இருந்தும் அவன் பார்க்கவில்லை. அவன் முட்டாள் அல்லவா. எல்லா நேரத்தி லும் நீ கடவுளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். இருந்தும் நீ அவரைக் காணவில்லை என்று உணர்கிறாய். அவனிலும் பார்க்க ஒரு பெரிய மடையன் இருக்க முடியுமா? மனிதனின் பிறப்புக்கும் அவன் வளர்ச்சிக்கும் யார் பொறுப்பு. உணவு தான் காரணம் என்று நீ நினைக்கிறாய். உணவை யார் சிருஷ்டித்தது. இப்படியான முறையில் நீ சிந்தித்தால் நீ இறுதியில் அதன் அடிப்படையை உணர்ந்து கொள்வாய். (24-10-2001).
153 =

Page 84
IV. அடர்ந்த கானகத்தைக் காணும்பொழுது ஒருவன் பரவசப்படுகிறான். வானளாவிய மலையின் காட்சியில் ஒருவன் அதிசயப்படுகிறான். பிரவகித்து ஓடும் ஓர் ஆற்றைக் காணும்போது ஒருவன் களிப்படைகிறான். இவையெல்லாம் தெய்வீக சக்திக்கு அத்தாட்சியாகின்றன. நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. கிரகங்கள் தன்னையும் சுற்றிக்கொண்டு சுழல்கின்றன. சூரியன் தன் தீச்சுடரை வீசுகின்றது. காற்று வீசுகின்றது. இவையெல்லாம் தெய்வீகத்தின் தொழிற்பாடு களுக்கான அடையாளங்கள். ஒரு திப்பொறியைக் காணும் போது பெரு நெருப்பின் தன்மையைப் புரிந்து கொள்கிறாய். ஒரு துளி நீரின் இயற்கைத் தன்மையைப் புரிந்து கொண்டால் கங்கையின் இயற்கைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். அதேபோல் அணுவின் இயற்கையைப் புரிந்து கொண்டால் பிரபஞ்சத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். இந்த உண்மைகளை அங்கீகரித்துக் கொண்ட உபநிடதம் தெய்வீகம் என்பது அணுவின் சூட்சுமமானது பெரியதிலும் பெரியது என்றது. (சிறியவாகப் பெரியோன் காண்க. அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் நோக்கரிய நோக்கு நுணுக்கரிய நுண்ணுணர்வு.
V.உண்மை என்றால் என்ன? அது எங்கே உள்ளது? எங்கும்
உள்ள அதனை எங்கே தேடுவது?
e எல்லாப் பொருளிலும் வியாபித்துள்ள சர்வ வியாபியான தெய்வீகத்தை அங்கீகரித்துக் கொண்டு உண்மைக்கான தேடுதல் நடைபெற வேண்டும்.
e தோற்றமாக வெளியிலே தெரியும் உண்மை என்றும் மாறாத நிச்சயமான உண்மை என்றும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். நாளாந்த வாழ்வில் சூரியன் உதிப்பது என்றும் மறைவது என்றும் தோன்றுகிறது. ஆனால் இது நிச்சயமாக பூமி தன்ன்ை
as 154 =

சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் ஏற்படுகின்ற தோற்றப்பாடு.
• அதேபோல வெளிப்படையான அபிப்பிராயங்களால் ஏற்படுகின்ற உன்னைப்பற்றிய தோற்றப்பாடும் உன்னு டைய உண்மையல்ல. அந்த நித்தியமான உண்மை புலன்களுக்கும், உடம்புகளுக்கும் அப்பாற் பட்டது. அந்த உண்மை உன்னுள்ளே உள்ள என்றும் பிரகாசித்துக் கொண்டுள்ள தெய்வீகம்.
தியானத்தினால் இதயத்தைக் கடைவது இதயத்தில் கருணை வெளிப்படுவது போன்றவற்றோடு இந்தத் தெய்வீகத் தேடுதல் தொடங்கப்பட வேண்டும். பாற் கடல் (ஷரீரசாகரம்) போன்று இருக்க வேண்டிய இதயம் (அங்கு தெய்வீகமான விஷ்ணு பயணம் செய்ய) உப்புக்கடல் (ஷாரசாகரம்) போன்று மாறி அங்கே வெறுப்பு, பேராசை
போன்றவை தொற்றியுள்ளன.
(ஆ.ச.சா ஒக்96 ப254)
VI.(தெய்வீக)அன்பு என்பது கப்பலோட்டிகளின் திசையறி கருவி போன்றது. நீங்கள் அதை எங்கே வைத்தாலும் அது கடவுள் இருக்கும் இடத்தையே காட்டும். உங்கள் ஒவ்வொரு செயலிலும் நாளாந்த நடவடிக்கைகளில் (தெய்வீக) அன்பைப் பிரத்தியட்சமாக்குங்கள். அந்த (தெய்வீக) அன்பில் தெய்வீகம் வெளிப்படும். இதுதான் கடவுளை அடையும் சுலபமான வழி. ஆனால் ஏன் மக்கள் இதைத் தேர்ந்தெடுப்பதில்லை? ஏன் அந்த அனுபவம் சித்திப்ப தில்லை? 0 கடவுளை அனுபவிப்பதைப் பற்றிய ஒரு பிழையான கருத்தின் கொள்கைப் பிடிப்பால் ஆக்கிரமிக்கப்

Page 85
பட்டிருக்கிறார்கள். கடவுள் எங்கோ தொலைவில் இருக்கும் பிரகிருதி (ஒரு பொருள்) என்றும் அதை சில கடுமையான ஆத்மீக சாதனைகளால் அடைந்து விடலாம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறர்கள். (ஆனால் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய உண்மை) i) கடவுள் எங்குமுள்ளவர். அவரைத் தேட வேண்டிய
தேவையில்லை. i) நீகாண்கின்ற எல்லாம் தெய்வீகத்தின் வெளிப்பாடு. i) நீ காணும் எல்லா மனிதர்களும் தெய்வீகத்தின்
திருவுருவங்கள். iv) உன்னுடைய பிழையான பார்வையைத் திருத்திக் கொள்.
நீ எல்லாவற்றிலும், எல்லா உயிர்களிலும் கடவுளை அனுபவிப்பாய்.
(ஆ.ச.சா. ஆக96 ப213)
VI. உன்னிலே உள்ளுறைகின்ற தெய்வீகமே எல்லா உயிர்களிலும் உள்ளுறைகின்றது என்பதை எல்லா நேரங்களிலும் உணர வேண்டும். ஒருவனுக்கு உதவி செய்கிற பொழுது, ஒருவனுக்கு உணவளிக்கும் பொழுது உன்னிலே உள்ள தெய்வீகம் மற்றவரிலே, இன்னொரு வரிலே உள்ள தெய்வீகத்திற்கு உதவுவதாக, உணவளிப்ப தாக உணர வேண்டும். தெய்வீக ஆத்மாவின் திருவுரு வங்களே! பல ஆண்டுகளாக நீங்கள் கடவுள் உங்களி லிருந்து வேறானவர் என்ற உணர்வோடு பிழையான பாதை யைப் பின்பற்றியுள்ளிர்கள். உன்னுடைய உண்மை நீ தொகுப்பான ஒன்றின் (சமஷ்டி) ஒரு பகுதி. இந்தத் தொகுப்பு சிருஷ்டியின் ஒரு பகுதி. சிருஷ்டிக்கு அப்பால் உள்ளது பிரபஞ்ச சக்தி(புஷ்டி) அதையும் தாண்டி உள்ளது (அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பால்) அதியுயர்ந்த எங்கும் நிறைந்த தன்மை, () தெய்வீகத்தின் திரு உருவமாய் நீ அந்த இவை எல்லாம். தனிமனிதனிலிருந்து எங்கும்
as 156 =

நிறைந்த தன்மைக்கு நீ முன்னேற வேண்டும். இங்கு உள்ளவை எல்லாம் தெய்வீகத்தின் வெளிப்பாடுகள். சுவாமிக்கு உள்ள சக்தியை நானும் பெறலாமா என்று நீ கேட்கலாம். என்னைப் பின்பற்று. நீ அந்த சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த சக்தி உன்னிலே மறைந்து உள்ளுறைகின்றது. ஆனால் நீ அதைப் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறாய். பலவாக இருக்கும் தன்மையை ஒரு பொருளாக வடிவமைத்துக் கொள்வதையே முக்தி என்கிறார்கள்.
(s.dyFIT84 118)
VIII. ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டுமென்று ஆவலுறு கிறாய். நீசுவாமியை உண்மையாகப் பின்பற்றினால் நீ அந்த ஆனந்தத்தை உன்னுள்ளேயே காண்பாய். இல்லை அது மட்டும் இல்லை. அந்த ஆனந்தம் நீ எங்கே போனாலும் உன்னைச் சுற்றிலும் உள்ளதைக் காண்பாய். இந்தப் பெளதீக உலகில் அந்த ஆனந்தம் இல்லை. அது முழுதாக உன்னுள்ளே தான் உள்ளது. எல்லா நேரத்திலும் எல்லாச் சூழ்நிலையிலும் உன்னையே நீ தெய்வீகமாகக் கொள்வாய். அதன் மூலம் நீ தெய்வீகத்துடன் ஒன்றாகி விடுவாய். கடவுளின் பக்கம் உன் மனதைத் திருப்பு. (மனதைத் திருப்பியது கடவுளின் பக்கமா என்று பார்த்துக் கொள்.) நீ நிச்சயம் தெய்வீகத்தின் ஆனந்தத்தை அனுபவிப்பாய். இதற்காகத்தான் நேரத்துக்கு நேரம் ஸ்வாமி நீ விட வேண்டியதைப் பற்றியும் கைக்கொள்ள வேண்டியதைப் பற்றியும் உனக்கு அறிவுறுத்துகிறேன். கடவுளை அறிந்து, புரிந்து பூரணமாக, உணர்ந்து கொள்வதற்கு, உனக்கு பிரம்மத்தைப் பற்றிய உயரிய உண்மையை உணர்த்துவ தற்கு உனது புனித பிறவியை ஒரு இலட்சியப் பிறவியாக் கத்தான் இந்த முயற்சியெல்லாம். உனக்காகவே ஒன்றும் எனக்காக அல்ல.
(ஆ.ச.சா.ஆக96 ப202)

Page 86
15. ஆத்மடுவித்யை
உத்தாலகர் தன் ஒரே மகனுக்கு ஆத்ம வித்யை போதிக்க உத்தேசித்தார். உத்தாலகரைவிட உயர்ந்த அறிஞர் யாருமில்லை. மாபெரும் அறிஞராக இருந்த அவர் தனது மகனான நசிகேதனை வேறொருவரிடம் கற்றுக் கொள்ள அனுப்பினார். தந்தை என்ற உணர்வு இருக்கும் வரையில் குரு என்ற உணர்வு தோன்றாது. குருவிடம் மரியாதை இருக்க வேண்டும் என்பதற்காக வேறொரு குருவிடம் பயில தன் மகனை அனுப்பினார்.
உத்தாலகர் மாணவர்களிடமும் தன் மகனிடமும் சில பலவீனங்களைக் கண்டார். எல்லோரும் குருமூலமாக ப்ரம்மன் சர்வ வியாபகமானது என்று அறிந்தனர். மகன் வீட்டுக்கு வந்ததும் (குருவிடம் பயின்ற பின்பு) தந்தையே எனக்கு பிரம்மனின் இயல்பு என்ன என்று தெரியும் என்றான். பிரம்மன் எங்கும் நிறைந்தவர். கையில் வாள் இருப்பதால் மட்டும் நீ வீரனாக இருக்க முடியுமா? கையில் வீணை இருப்பதால் மட்டும் அதற்கு இசை கூட்ட முடியுமா? பித்தனே உபதேச மூலமாக பிரம்மன் எங்கும் நிறைந்தவர் என்று கேட்டறிந்தால் மட்டும் போதாது. இது மாணவர்களின் பலவீனம், தெரிந்து கொள்வது அணுவளவு பேசுவதோ எண்ணற்ற வகையில்.
கண்டுபிடி
உத்தாலகர் இக் கோட்பாட்டையே மறுபடி நசிகேத னுக்கு கற்பித்தார். மகனே பாத்திரத்தில் தண்ணிர் கொண்டு வா. மகன் பாத்திரத்தில் தண்ணிர் கொண்டு வந்தான். தாயிடம் சர்க்கரை கேட்டு வாங்கி வா. சர்க்கரையை முதலில் கண்ணால் பார்த்துக் கொள். நசிகேதன் சர்க்கரையை கண்ணால் பார்த்துக் கொண்டான்.
= 158 =

சர்க்கரையைத் தண்ணில் கரை. அதைத் தண்ணில் கரைத்தான். உத்தாலகர் நசிகேதா சர்க்கரை எங்கிருக் கிறது? மகன் கண்ணை நன்கு திறந்து (சர்க்கரையை தேடி) தண்ணிரைப் பார்த்தான். நீரில் சர்க்கரை காணப்படவில்லை. (சர்க்கரையை)கையால் எடுத்துப் பற்றிக்கொள். சர்க்கரை யை அவனால் பற்றிக்கொள்ள முடியவில்லை. தந்தையே நான் அதைக் கையால் பற்றிக் கொள்ளவும் இல்லை அதைக் கண்ணால் காணவும் இயலவில்லை.
அப்போது உத்தாலகர் கூறினார் நீயே சர்க்கரையைக் கொண்டுவந்தாய் உனது கையாலேயே அதைத் தண்ணில் கலக்கினாய். இருந்தாலும் உன்னால் அதை எடுக்க முடியவில்லை. கண்ணால் காணவும் முடியவில்லை. எங்கு சென்றுவிட்டது என்னு கண்டுபிடி என்றார்.
எல்லா இடத்திலும் உள்ளது.
நசிகேதன் எனக்குத் தெரியவில்லை என்று கூறினான். இரு ஒரு துளி தண்ணிரை நாக்கில் சுவைத்துப் பார்" தந்தையே சர்க்கரை தண்ணில் இருக்கிறது. இப்போது நீ கூறு சர்க்கரை பாத்திரத்தின் மேற்புறத்தில் உள்ளதா? நடுவில் உள்ளதா? அடியில் உள்ளதா?
இது எல்லாவிடத்திலும் உள்ளது. இதுவே ஏகத்துவம். (ஒருமைத்தன்மை) உலகம் என்ற பெரும் பாத்திரத்தில் தெய்வத்துவம் என்ற இனிமையை மனிதன் தன் அன்றாடச் செயல்களால் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சம் என்ற பாத்திரத்தில் தெய்வத்துவம் என்ற இனிமையை எவ்வாறு உணர முடியும். அதைக் கண்ணால் காணமுடியாது. கையால் பற்றவும் இயலாது. அனுபவத்தின் மூலமே இதை அறிந்து கொள்ள முடியும். இனிப்புச் சுவை பாத்திரத்தின் மேற்புறத்தில், நடுவில், அடிப்புறத்தில் உள்ளது. பாத்திரம் முழுவதும் இனிமையால் நிறைந்துள்ளது.

Page 87
நீக்கமற நிறைந்துள்ளது)
மாணவர்களே (எங்களையும் சேர்த்து) இதை நன்கு
புரிந்து கொள்ளுங்கள். அதேவிதமாக, மனிதத் தன்மையில் தெய்வத்துவம் என்ற இனிமை எங்கும் நீக்கமற நிறைந் துள்ளது. ஆகவே உமது ஒவ்வொரு செயலும் இனிமையாக இருக்கவேண்டும். ஒவ்வொரு பார்வையும் இனிமையாக இருக்க வேண்டும். நீங்கள் கூறும் ஒவ்வொரு சொல்லும் இனிமையாக இருக்க வேண்டும். உங்கள் புலன்கள் வழியாக வெளிப்படுத்தும் ஒவ்வொன்றும் இனிமையாக இருக்க வேண்டும்.
நயனம் மதுரம் வசனம் மதுரம்
ஹஸ்தம் மதுரம் பாதம் மதுரம்
சர்வம் மதுரம் மதுராதிபதே
மதுரம் மதுரம் மதுரம்.
(கண்ணும் இனிமை, சொல்லும் இனிமை, கையும்
இனிமை, காலும் இனிமை. அனைத்தும் இனிமை மதுரைத் தலைவா. இனிமை இனிமை எங்கும் இனிமை) இதுவே ஏகத்துவத்தின் முக்கிய இயல்பு. தெய்வத்துவம். பேசும் போது கசப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். அதில் இனிமை எதுவும் இல்லை. வெறும் தண்ணிர்தான் உள்ளது. கடவுள் இருக்கிறார் அவரைச் சரியான முறையில் உங்கள் முன் கொண்டுவர உங்களால் இயலவில்லை.
காரணம் என்ன? அகங்காரம், மமகாரம் என்று வியாதிகள் உள்ளிருப்பதே காரணம். மலேரியா காய்ச்சலால் துன்புறும்போது இனிப்புப் பண்டத்தைச் சுவைத்தாலும் அது கசப்பாகவே இருக்கும். குற்றம் இனிப்பினுடையதல்ல. நாக்கினுடையது. அதே விதமாக தெய்வத்துவம் உன் உடல் முழுவதும் நிறைந்துள்ளது. அபிமானம், அகங்காரம் என்ற
வியாதிகளின் காரணமாக அதன் இனிமை மாறிவிட்டது.
(பி.அ.வ.5 ப61-64)
== 160 =

16. தெய்வீக சக்தியும்
அதனை அடையாளங் காணுதலும்
1.சக்தி என்றால் என்ன? ஒருவனால் பார்க்கவோ, கேட்கவோ, கிரகிக்கவோ முடியாத ஒன்று. சக்தி என்பது சக்தி மட்டுமே. அது தெய்வீகம். பெளதீகமான ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அடிப்படை உண்டு. மனிதனில் மின்சார சக்தி உள்ளது. அதேபோல் மனிதனில் கதிர்வீச்சு சக்தி உள்ளது. இந்த சக்திகளுக்கெல்லாம் ஒரு அடிப்படை இருக்க வேண்டும். உலகத்தில் ஒவ்வொரு பொருளும் இன்னொரு பொருளை அடிப்படையாகக் கொண்டதை நீ அவதானிக்கலாம்.
11.விஞ்ஞானிகள் பொருள் என்று சொல்கிறர்கள். அது சக்தி மட்டுமே. ஒரு வஸ்து பொருள் போலத் தோன்றுகிறது. ஆனால் அது பின்பு சக்தியாக மாறுகிறது. அதேபோல ஒருவர் உனக்கு ஒரு ஜீவியாகத் தோன்றலாம். அவரும் காலக் கிரமத்தில் சக்தியாக மாறுவார். நீ காணும் எல்லாப் பொருளும் பெயரினால் குறிப்பிடப்படும். எல்லாமும் சக்தியின் வெளிப்பாடு ஆகும்.
I.கடவுள் தான் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா விதமான சக்திகளுக்கும் ஆதாரம். வேதாந்திகள் இதை அதீத சக்தி என்கிறார்கள். விஞ்ஞானிகள் இதை உயர்தர சக்தி என்கிறார்கள். பாவிக்கின்ற பெயர்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அந்த அடிப்படை ஒன்றும் ஒரே மாதிரியானதும் ஆகும்.
IV.ஒவ்வொரு மனிதனும் அவனுள் மறைந்துள்ள அளப்பரிய சக்திகளைப் பற்றி அவன் அறியாது இருக்கிறான். விஞ்ஞானி கள் அந்த ஒவ்வொன்றிற்கும் பலவிதமான பெயரைக்
= 161 =

Page 88
கொடுத்திருக்கிறார்கள். ஸைக்கோரோனிக் பயோ பிளாஸ்மிக் சக்தி வேதாந்திகள் அதீத சக்தி என்கின்றனர்.
V. இந்த சக்திகளை எப்படி அடையாளம் காணுவது? வேதாந்திகள் இந்த சக்திகளை அடையாளங் காணும்
முறைகளை LDITGOTifas faig5 (Will Power)
தாரண சக்தி ஞான சக்தி (தியானம்) yFLDIIğ57 (ஆழ்ந்த விழிப்புணர்வு)
இந்த முறைகளால் தெய்வீக சக்தியை ஆற்றலை ஒருவர் இனங்காண முடியும். (ஆத்ம சக்தி) இதனுடைய கருத்து என்ன? இறுதியான ஆராய்ச்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு சக்தியின் தோற்றங்களும் தெய்வீகத்துடன் ஒன்றாகும் என்பதே.
VI.தானே தானான, இரண்டு என்றில்லாத, ஒன்றேயான தெய்வீகத்துடன் எப்படி ஒன்றாவது? இதை எப்படி பெற்றுக் கொள்ளலாம்? கடவுள் உருவங்களுக்கு அப்பாற்பட்டவர். எல்லாச் சக்திகளுக்கும் ஆரம்பமுலமே அவர். அது எல்லையில்லாத ஈடு இணையில்லாத பிரகாசம். கடவுளை எண்குணத்தான் என்பது எட்டுத் தன்மைகள் உள்ளவர் எனக் கூறப்படுகிறது.
எல்லா ஒலிகளினதும்
எல்லா ஒளிகளினதும்
எல்லா வார்த்தைகளினதும்
எல்லா ஆனந்தத்தினதும்
எல்லா உயர் விழுமியங்களினதும்
எல்லாதப்படபிப்பிராயங்களினதும்
எல்லாமங்கலங்களினதும் ஆரம்ப மூலம் அவர்.
= 162 =

VI.இப்படிப்பட்ட எல்லாமான தெய்வீகத்தை எப்படி ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும், தண்ணிர் தண்ணிருடன் இரண்டறக் கலக்க முடியும் நெருப்பு நெருப்புடன் ஒன்றாக முடியும். கடவுள் உருவங்களுக்கு அப்பாற்பட்ட படியால் அவருடன் ஒன்றாக வேண்டு மென்றால் நாமும் உருவங் களுக்கு அப்பாற்பட்டவராக வேண்டும். இது எதைக் குறிக்கிறது. அதாவது நாங்களும் உருவங்களுக்கு அப்பாற்பட்டு உடற்பற்றிற்கு அப்பாற்பட வேண்டும். இது தியானத்தினால் கைகூடுகிறது. உடம்புப் பற்றை வைத்துக் கொண்டு கடவுளை வழிபடுவதன் மூலம் கடவுளோடு ஒன்றா வதை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் உருவத்தைக் கடந்து போகும் பொழுதுதான் உருவத்துக்கு அப்பாற்பட்ட தெய்வீகத்தை உணர முடியும். கடவுள் எல்லையில்லாத மகிமைப் பிரகாசத்தின் திரு உரு. கடவுளை உணர வேண்டு மானால் உனது வாழ்வும் மகிமைகளின் பிரகாசம் உள்ள தாக வேண்டும். உனது வாழ்வின் ஒளி எல்லா ஒளிகளுக்கும் ஆதி மூலத்திலிருந்து வந்தது என்பதை நீ உணர வேண்டும். எல்லா ஒளிகளும் எங்கிருந்து ஆரம்பித்தனவோ, அந்த தெய்வீக பிரகாசத்துடன் இந்தத் தனிச்சுடர் சங்கமிக்க வேண்டும். தனிப்பட்ட ஒருவன் அந்த உயர்ந்த பிரகாசத் தைத்(பரம்-ஜோதி) தியானித்து தனது தனிப் பிரதியை அந்த உயர்ந்த பிரமையுடன் சங்கமிக்க வைக்க வேண்டும்.
VI.துவைதத்திலிருந்து கடவுளோடு ஒன்றாவது (அத்வை தம்) இது சம்பந்தமாக இன்னமும் ஒரு விடயத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பஜனை, ஜபம், தியானம், யாகம், யக்ஞம் அல்லது வேறுபல ஆத்மீகப் பயிற்சிகளைச் செய்கிறீர்கள். இவையெல்லாம் வெளிப்புறப் பயிற்சிகள். இவை உனது உள்ளார்ந்த ஆத்மாவை கண்டு பிடிக்க உதவமாட்டாது. அந்த ஆத்மீகப் பயிற்சிகள் அவை
= 163 =

Page 89
கள் மட்டில் நல்ல செயல்கள். ஆனால் அவைகள் ஆத்மீகத் gillig, Elbl. iii.5i/56ö6litg56061. (They are unrelated to Spirituality) ஆத்மீகம் என்பது ஆத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்டைப் பற்றியது. எல்லாச் செயல்களுக்கும் அதற்குத் தகுந்த பிரதிபலன் உண்டு. ஒவ்வொரு செயலும் அதற்குள்ள பலனை வெகுமானமாகக் கொண்டுள்ளது. நல்ல செயல்கள் நல்ல பலனைத் தருகிறது. ஆனால் அவை ஆத்மீக முன்னேற்றத்திற்கு எந்த விதமாகவும் பங்களிப் பதில்லை. ஆகவே நல்ல செயல்கள் ஆத்மீக யாத்திரையில் சுவடு பதிக்க உதவும் படிக்கற்களாக இருக்க வேண்டும்.
IXபடிப்படியாக முன்னேற்றம். கிரியைகளும், வழிபாடுகளும் செய்வதன் மூலம் நீங்கள் திருப்திப்பட்டு இருந்து விடக் கூடாது. எப்பொழுது ஆத்மீக சாகஸங்களில் ஈடுபடப் போகிறீர்கள். நீங்கள் இரட்டை உணர்வான துவைதத்தி லிருந்து அத்வைதம் என்ற ஒன்று மட்டுமே இரண்டு அல்ல என்ற தன்மைக்குப் போகவேண்டும். தெய்வீகத்தோடு ஒன்றாகும் அத்வைத பேருணர்வு வந்த பொழுதுதான் பூரணத்தைப் புரிந்து கொண்ட ஞானி ஆவீர்கள்.
சத்ய சாயியின் தூதுவர்கள் நாடு முழுவதும் தெய்வச் செய்தியைப் பரப்புவதில் முன் நிற்க வேண்டும் என்பது என் கருத்து
(த.ச.சா.டிச 2000. ப.23)
கொஞ்சம் கொஞ்சமாக புனிதமான இவற்றை மனதில் கொண்டு நகரம் தோறும் வீடு தோறும் இந்த ஆத்மீக தத்துவத்தைப் பரவச் செய்யுங்கள்
(լն.ւյ.ւյ.ւռ 1998, Լ1.95)
= 164 as

17. மனித உன்னதம்
1. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உள்ளுறைகின்ற உண்மைத் தன்மையைத் தெளிவாகச் சொல்லி, அதை உறுதிப்படுத்தி மானிட இனத்தை ஒரு குடும்பமாக சகோத ரத்வ பந்தத்தினால் ஒன்றிணைத்து முழுப் பிரபஞ்சத்திற்கும் அடிப்படையான தெய்வீகத்தை வெளிப்படுத்தும் உயரிய பணியை நிறைவேற்றவே சாயி வந்துள்ளார். தன்னுடைய மிருகக் குணங்களை விலக்கி தன்னுடைய இலட்சியமான தெய்வீகத்திற்கு மனிதனை ஆளாக்குவதற்காக எல்லோருக்கும் அவர்களுடைய பொதுவான தெய்வீக பாரம் பரியத்தை அறிவுறுத் துவதை நான் ஏற்றுக் கொண்டிருக் கிறேன்.
(ஆ.ச.சா. நவ2001 ப327)
II. உங்களுடைய இதயம் தெய்வீக அன்பினால் நிரம்பித் ததும்பும் பொழுது இந்தச் சிருஷ்டி பூராகவும் உள்ள ஒருமைத் தன்மையை உங்களால் அனுசரிக்க முடியும். இந்த ஒற்றுமைத் தன்மை எங்களை ஊடுருவும் பொழுது மற்றவர்கள் மீது வெறுப்பு ஏற்படுவதற்கு எந்த இடமும் கிடையாது. இருக்கின்ற எல்லாவற்றினுடைய ஒற்றுமையின் அனுபவத்தோடு சனாதனமான அன்பு எங்கள் இதயத்தில் நிலைநிறுத்தப்பட்டுவிடும். ஆகவே தெய்வீகத்தைப் பின் பற்றி தெய்வீக அன்பைப் புரியவைப்பவர்கள் உண்மையி லேயே அதிஷ்டசாலிகள்.
(19.11.2001 மகளிர் தினம்)
III. கல்வி என்பது சுவையற்ற நீர் போன்றது. எஜ"கேர் என் பது சர்க்கரை போன்றது. சர்க்கரையை நீரில் போடுவதால்
= 165 =

Page 90
மட்டுமே அது இனிப்பாகிவிடாது. அதை நன்றாக கலக்கி னால் மட்டுமே சர்க்கரை நீரில் கரைந்து இனிப்பாகிறது. இதயம் என்பது டம்ளர். தெய்வீகம் சர்க்கரை. உலகியல் கல்வி என்பது நீர். புத்தி என்கிற ஸ்பூனின் உதவிகொண்டு தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் விசாரணை என்ற முறையில் கலக்கினால், நம்மால் எங்கும் நிறைந் திருக்கும் தெய்வீகத்தை அனுபவிக்க முடியும். இதுதான் உண்மையான ஞானம். இதன் மூலமே படைப்பின் அனைத்திலும் இருக்கும் ஒற்றுமையை புரிந்து கொள்ள (Քւգարճ,
(த.ச.சா. மார்ச்2002 ப18)
அப்படியானால் -
தெய்வீகம் என்னுள் உள்உறைகின்றது. அந்த தெய்வீகத்தை வெளிப்படுத்த வேண்டும். * புத்தி என்ற ஸ்பூனின் உதவி கொண்டு தன்னைத் தானே கேள்வி கேட்டு எங்கும் நிறைந்துள்ள என்னிலும் உள்ள தெய்வீகத்தை அனுபவிக்க வேண்டும்.
அப்படியானால் நான் யார்?
நாம் சிறுவயதில் "நான்” என்பதைப் பற்றி
பாடசாலைகளில் கேட்ட பொழுது எழுதினோம்.
நான் இன்னார், நான் இன்னாருடைய பிள்ளை,
நான் இன்ன இடத்தில் வசிப்பவன், நான் இன்ன தோற்றம் உள்ளவன்.
இப்படி எல்லாம் எழுதினோம். இதையேதான் தொடர்ந்தும் எழுதிக் கொண்டும், எண்ணிக் கொண்டும் இருக்கப்போகிறோமா? எங்களை எங்களுக்குள் எப்பொழுது

தேடப்போகிறோம்? என்னை எனக்குள் எப்பொழுது தேடுவேன்? உன்னை உனக்குள் எப்பொழுது தேடுவாய்?
அதாவது நான் யார்?
அவர் யார்? அவள் யார்? அது என்ன? என்று
பலவிதமாகத் தெரிந்திருக்கும் நாம் அந்த அளவுக்காவது
"நான்” என்பதைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோமா?
நான் யார்? என்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? இதை யாராவது எனக்குச் சொல்லித் தர வேண்டுமா? ஆம். i என்னை எனக்கு அறிவித்தான் எங்கள் குருநாதன் i தன்னைத் தன்னால் தானறிய வேண்டும். i தானே தானாய்த் தளைத்திடல் வேண்டும். iv தன்னைத் தன்னால் உயர்த்திக் கொள்க V உன்னையே நீ அறிவாய்.
இன்ன தன்மை என்று எம்மை எடுத்துச் சொல்வார் உண்டோ
- யோகர் சுவாமிகள்
ஆம் பகவான் சொல்கிறார்.
நான் யார்? பகவான் ஒருமுறை மாணவர்களிடம் கேட்டார்.
மாணவர்கள் சொன்னார்கள் நீங்கள் கடவுள்"
இது சரியான பதில் அல்ல. சரியான பதில் கூறுபவர்களுக்கு ஒரு பரிசு உண்டென்றார். நீங்கள் சிவன், விஷ்ணு என்று இப்படி இந்துக் கடவுளர்களின் பெயர்களைச் சொன்னார்கள். அல்லா, கர்த்தர் என்று வேறு சமயக் கடவுளர்களின் பெயர்களைச் சொன்னார்கள். இல்லை என்று சொன்ன பகவான் சொன்னார் நானே நான்” என்றார்.(1am1)

Page 91
நான் தானாய் விளங்குகிறான் எங்கள் குருநாதன்” (நானாக அவன் தன்னை உணர்ந்தவன்)
(யோகர் சுவாமிகள்)
அந்த நான் என்ன?
படைப்புக்கள் அனைத்துக்கும் 5 பிரதான அம்சங்கள்
உள்ளன. அவற்றுள் 3 அனைத்துக்கும் பொதுவானது.
மாறாதது. இதை வேதாந்தம்
1)அஸ்தி வாய்மை சத்
2) பாதி ஒளிச்சுடர் - சித்
3)பிரியம் - விரும்பத்தக்கது ஆனந்தம்
மாறுதலுக்கு உட்பட்டவை இரண்டு அம்சங்கள்
4 நாமம் - பெயர்
5 - ரூபம் - உருவம்
மாறுகின்ற நாம ரூபங்கள் மாறாத சத்சித் ஆனந்தம்
என்ற மாறாத நிலையான குணங்களைச் சார்ந்தே இருப்பன.
இதற்குப் பகவான் தரும் உதாரணம்
"அலைகள் கடலிலிருந்து உருவாகின்றன. அலையின்மீது நுரை இருக்கிறது. நுரைக்கு மூலம் அலை என்றால் அலைக்கு மூலம் கடல். கடல்தான் அந்தப் பரம் பொருள் - சத்சித் ஆனந்தம். அலைகள் - பிரதிபாதிகம் - ரூபம் நுரை வியவ காரிகம் - பெயர்
(சத்ய உபநிடதம் கேள்வி9 ப8)
நான் ஆத்மா(தெய்வீகம்) என்கிற ஸ்வஸ்வரூபமே உண்மையானது. ஆனால் உண்மையான, உன்வடிவமான ஆத்மா மறக்கப்பட்டு உலகியலான விஷயங்களே சத்யமாக உணரப்படுகிறது. மனிதன் தன் பெயர், நாடு, தொழில்
ജ്ഞ 168 =

இவற்றுக்கே முதன்மை கொடுக்கிறான். இது களப்படி இருக்கிறது?
கார் ஒட்டுபவர் கார் இல்லை. கார் வேறு டிரைவர் வேறு. இது என் கார் நான் ஒட்டுகிறேன் என்று சொல்லலாம். அதேபோல் தேகம் ஒரு கார் போன்றது. அதை ஒட்டுகின்ற,
இயக்குகின்ற ஆத்மா நீ
(த.ச.சா. நவ95 ப5)
"ஆத்மாவே நாம் என்னும் அறிவை மறந்ததனால் வீண்பாவமாச்சுதடி"
(யோகர் சுவாமிகள்) ஆலயத்துள் இறைவனைத் தேடு. தேகத்தினுள் தேகியைத் தேடு. ஷேத்திரத்துள்ஷேத்ரக்ளுனைத் தேடு. தெய்வீகத்தை இனம் கண்டுகொள்வோம்.
எல்லாவற்றையும் சம்பாதிக்கக்கூடிய ஒன்று
ஒரு முறை ஒரு பேரரசன் ஒரு அபூர்வமான பொருட் காட்சி ஒன்றை ஒழுங்கு செய்தான். கலை, கட்டிடக் கலை, சங்கீதம், விஞ்ஞானம் போன்ற எல்லாவித கலைகளிலும் அவன் பிரியம் உள்ளவன். அந்தப் பொருட்காட்சியில் பலவித வேறுபட்ட பொருட்களை யெல்லாம் காட்சிக்கு வைத்திருந்தான். இந்தப் பொருட்காட்சி எந்த வித கட்டுப்பாடுமின்றி எல்லாருக்கும் திறந்திருந்தது. அனுமதிக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இதை விட அரசன் ஒரு விசித்திரமான அறிவிப்பையும் செய்தான்.
"மக்கள் இந்தப் பொருட்காட்சியைப் பார்ப்பது மட்டுமல்ல தங்களுக்குப் பிடித்தமான எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லலாம்.
169 =

Page 92
இயற்கையாகவே அங்கே ஆண், பெண், குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் கூடினார்கள். அவர்கள் பேராசை நிறைந்தவர்களாக எடுக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றார்கள். அரசன் மக்கள் சந்தோசமாக வந்து போவதைப் பார்த்து ஆனந்தித்தான்.
இருந்தாற்போல், பொருட்காட்சியின் முலை முடுக்கெல் லாம் அமைதியாக பரம சந்தோசத்துடன் ஒரு பெண் சென்று வருவதையும், ஆனால் அவள் எந்தப் பொருட்களாலும் கவரப்படாததையும் அரசனின் கண்கள் கண்டன. அவன் ஆர்வத்துடன் அவளருகில் சென்று அமைதியாக அம்மா, எந்த ஒரு பொருளும் உங்களைக் கவரவில்லையே அது எப்படி? இந்தப் பொருட்காட்சியை இரசிக்கிறீர்களா? இது உங்கள் இரசனைக்குத் தக்கதாக இருக்கிறதா? நான் தெரிந்து கொள்ளலாமா? என்றெல்லாம் கேட்டான்.
மிகவும் நேர்த்தியாக ஆனால் திடமாக அவள் பதிலளித்தாள். "ஓ அரசனே இந்தப் பொருட்காட்சி உண் மையிலேயே பிரமாண்டமானது. இதைவிட வேறுவிதமாக இப்படிப் பலவித வேறுபட்ட பொருட்களின் காட்சி இருக்க முடியாது. இது உண்மையிலேயே மிகவும் இரசிக்கத்தக்கது"
என்றான்.
"அப்படி என்றால் ஏன் நீங்கள் எந்தப் பொருட்களையும் எடுக்கவில்லை?(அரசன்)
"ஓ அரசனே ஒருவனுடைய ஆசைகளுக்கு முடிவே இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம் என்றாள்.
罗
"ஓ பெண்னே நீ எதையாவது கேள் அது உனதாகிவிடும் என்றான் அரசன்.
sus 170 =

தனது உதட்டில் ஒரு வெட்கமான புன்னகையுடன் அவள் சொன்னாள் "அரசனே, அது எப்படிப்பட்ட விநோதமான வேண்டுகோளாக இருந்தாலும் நீ உன்னுடைய வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவாயா?
நிச்சயமாக” என்றான் அரசன்.
"அப்படி என்றால் நான் உன்னைத் திருமணம் செய்ய வேண்டும்” அவள் கேட்டுக் கொண்டாள். அரசன் தனது வார்த்தைகளுக்கமைய அவளைத் திருமணம் செய்து கொண்டான்.
இந்தக் கதையின் கருத்து என்ன? பலவித வேறுபட்ட பொருட்கள், உயிர்கள் உள்ள இந்த அழகான உலகம்தான் பொருட்காட்சி அந்தப் பொருட்காட்சியின் சொந்தக்காரனும் அரசனும்தான் கடவுள். மக்கள் யாரும் இந்த உலகுக்குள் வரலாம். எந்தப் பொருளையும் அவரவர் திறமைக்கேற்ப எடுத்துச் செல்லலாம். அதில் தாங்களே ஆனந்தப்படலாம். (அவதிப்படலாம்) ஆனால் இந்தப் பொருட்களில் ஆசையில்லாதவர்கள் (ஆசைகளை மட்டுப்படுத்தியவர் கள்) ஒரு சிலரே. அதிலும் ஒரு சிலர்தான் கடவுளுக்காக ஏங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரைப் பிரதிநிதித்து வப்படுத்துபவர்தான் இந்தக் கதையில் வரும் பெண்.
உங்களுக்காக எல்லாவற்றையும் சம்பாதிக்கக்கூடிய ஒன்றைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.
(சின்னக்கதா 11 105 ப155)
171 =

Page 93
இங்கு நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை. நாங்கள் எல்லோரும் பெண்களா? எல்லோருக்கும் இது பொருந்துமா? எல்லோருக்கும் இது சாத்தியமா?
திருமணம்? 1. நாங்கள் எல்லோரும் பெண்களா? இறைவன் ஒருவனே புருஷன். உலகின் ஜீவராசிகள் அனைத்தும் ராதை, (புருஷபிரகிருதி தத்துவம்) நான் அடிக்கடி சொல்வதுண்டு இவ்வுலகமே ஒரு (Ladies Hostel) பெண்கள் கல்லூரி அதில் ஒரு நாடகம் போட்டால் பெண்களே நடிப்பர் அல்லவா?
(த.ச.சா. ஏப்98 ப17)
திருவெம்பாவை தரும் தத்துவம் இதுதான். திருப்பள்ளி எழுச்சி எல்லோரும் பாடுகிறார்கள். எல்லா ஜீவன்களும் துவைத பாவனையில் இறைவனை ஆணாகவும் தன்னைப் பெண்ணாகவும் பாவித்து வணங்குகின்றனர். ஆனால் ஆத்மீக பாதையில் முன்னேறுபவன் இந்த பிரகிருதி புருஷன் என்னும் துவைத பாவனையில் இருந்து முன்னேற வேண்டும்.
2. எல்லோருக்கும் இது பொருந்துமா? காந்தத்தோடு உராய்ந்து உராய்ந்து இரும்பு ஒன்று காந்தமயப்படுத்தப்ப டுகிறது. அதேபோல தெய்வ சம்பந்தத்தால் நாம் தெய்வீக மயப்படுத்தப்படல் வேண்டும். இத்தனை தண்ணிர்த் துளி களும் சமுத்திரத்தில் சேரலாம். சமுத்திரத்தின் தன்மையைப் பெறலாம்.
"மிகப் பரந்து கிடக்கும் சமுத்திரத்தின் முன் அணு அளவு உள்ள நீர்த்துளி அற்பமாகக் காட்சி அளிக்கின்றது. ஆனால் அந்த அற்பமான நீர்த்துளியை சமுத்திரத்தோடு ஒன்று
a 172=

சேர்த்தால் அது சமுத்திரத்தின் வடிவத்தையே தரிக்கிறது. ஆகவே மானிடத் தன்மையின் அற்பத் தன்மையை பெருந்தன்மையோடு கூடிய தெய்வீகத் தன்மையோடு சேர்த்தால் இதுவும் கூட "ப்ரம்ம வித் ப்ரஹற்மைவ பவதி” என்றபடி ஏகத்துவத்தை அடைந்து விடுகிறது. ஏகத்துவத் துக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான மார்க்கமே பக்தி மார்க்கம் அன்புத் தத்துவம்.
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை பக்தி நெறி அறிவித்து பழவினைகள் பாறும் வண்ணம் சித்த மலம் அறுவித்து சிவமாக்கி எனை ஆண்ட அத்த னெனக் அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே
(திருவாசகம்)
அகண்ட சொரூபியும், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனுமான இறைவனை மானிடர்கள் எளிதில் அர்த்தம் செய்து கொள்வதில்லை. ஒரு கிராமத் தலைவன் அல்லது அமைச்சர் போன்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு அடக்க ஒடுக்கத்தோடு அவர் களைச் சார்ந்து அவர்களைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். ஆனால் பிரமாண்ட நாயகனான இறைவனிடம் அடக்க ஒடுக்கங்களை சற்றேனும் காட்டுவதில்லை. பிரமாண் டத்துக்கே தலைமை வகிக்கும் இறைவனை அற்பமாக நாம் பாவிக்கிறோம்.
அஹம் தேகாஸ்மி(நான் உடலாக இருக்கிறேன்) என்கின்ற துவைத பாவனையினால் மானிடன் அற்பனாகி விடுகிறான். இந்த அஹம் தேகாஸ்மியிலிருந்து அஹம் ஜீவாஸ்மி (நான் ஜீவனாக இருக்கிறேன்) என்கின்ற விசிஷ்டாத்வைதத்திற்குப் போக வேண்டும். அஹம்
ജ്ജ് 173 =

Page 94
ஜீவாஸ்மி என்கின்ற விசிஷ்டாத் வைதத்திலிருந்து அஹம் ப்ரம்மாஸ்மி என்கின்ற அத்வைதத்துக்குள் பிரவேசிக்க வேண்டும்.
அஹம் தேகாஸ்மி இது துவைதம். இது துக்கத்திற்கு தாய் விடு. ஆத்மஸ்தான திருஷ்டியை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டுமேயன்றி உடல் ஸ்தான அற்ப த்ருஷ்டியை அபிவிருத்தி செய்து கொள்ளக் கூடாது. இந்த உடல் சதாதனனான இறைவனுக்குக் கோயில் போன்றது. இந்த தேகத்தை (உடலைக்) காப்பதன் நோக்கம் தேஹியை (உடலுக்கு உரியவனை) லட்சியத்தில் வைப்பதுதான்.
நமது அன்புத் தத்துவத்தை (பக்தியை) இறைவனுக்கு சமீபம் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எதை எண்ணினாலும் எதைச் செய்தாலும் எதைப் பார்த்தாலும் அனைத்தும் இறைவனைச் சார்ந்தவ்ைகளாகப் பாவித்தால் இறைவனை நெருங்குவதற்கு மார்க்கம்
ஏற்படுகின்றது.
(த.ச.சா. ஜன85 ப10)
அதிகாரிகளின் முன்பு நாம் நடிக்கலாம். ஆண்டவன் சர்வ வியாபி என்று அர்த்தம் செய்து கொள்ளுமளவுக்கு எமது எண்ணம் சொல் செயல் ஒன்றாகி தூய்மை யடைந்து G5uitofaggaiapuduol pigs (Unity, Purity, Divinity) தெய்வத்தோடு ஒன்றாகிறது.
3. எல்லோருக்கும் இது சாத்தியமா? நாங்கள் எப்படி தெய்வீகத்தை தேடவேண்டுமென்பதை ஸ்வாமி பாஹவத வாஹினியில் அபிமன்யுவின் மகனுடைய பெயர் சூட்டு விழாவின் மூலம் விளக்குகிறார்.
as 174 =

"குழந்தையின் முன் பல விளையாட்டு பொம்மை களையும், விளையாட்டுக் கருவிகளையும் வைத்து அதன் கவனத்தைத் திசை திருப்ப முயன்றார். தானே (கிருஷ்ணன்) அதன் (அந்தக் குழந்தையின்) பார்வையினின்றும் மறைந்து நின்றார். குழந்தை சீக்கிரம் அவரைப் பற்றிய (கடவுளைப் பற்றிய) நினைவை மறந்து விடும் என எதிர்பார்த்தார். ஆனால் குழந்தை பரீட்சித்தின் கவனம் எதைப்பற்றியும் செல்லவில்லை. அவரைத் தவிர (கிருஷ்ணனைத் தவிர, கடவுளைத் தவிர) வேறு எதையும் வேண்டுவதாகத் தெரியவில்லை. கிருஷ்ணர் எங்கு மறைந்திருப்பார் என ஊகத்தால் உணர்ந்து அந்தத் திசை நோக்கி நகரத் தொடங்கினான். குழந்தையின் கவனத்தை மாற்ற தான் (கிருஷ்ணர்) செய்த முயற்சிகள் எல்லாம் பயனற்றுப் போனதைக் கண்டு கிருஷ்ணர் கூறினார்.
"இது சாதாரண குழந்தை அல்ல. என்னுடைய பரீட்சைகளிலெல்லாம் தேறிவிட்டான். ஆகையால் பரீட்சித்
என்ற பெயர் இவனுக்குப் பொருத்தமானது தான்" என்றார்.
(த.ச.சா. ஜ"ன்94 ப24)
எல்லாவற்றையும் இது இறைவனா எனப் பரீட்சித்துப் பார்த்த பலர் இருக்கிறார்கள். இது எமக்குச் சரிப்பட்டு வராது என்று நினைத்தால் ஒரு அவதாரத்தின் சம காலத்தவர் என்ற அருகதையை, யோக்யதயை, தகுதியை நாம் இழந்து விட மாட்டோமா?
ரீ ராம பக்த ஹனுமார் ராமச்சந்திரமூர்த்தியினுடைய பட்டாபிஷேக விழாவில் சீதையினால் கொடுக்கப்பட்ட முத்துப் பரல்களை கடித்துத் துப்பினார். காரணம் கேட்டபோது அதில் ராமன் இல்லையென்றார். பின் தனது
തു 175 =

Page 95
ரோமம் ஒவ்வொன்றும் ராமனுடன் கலந்ததென்றார். ரோம ரோமமு ராம நாமமு என்று வந்தது. ஈஸ்ாவாஸ்யம் இதம் ஜகத் ஈஸ்வரஸ் ஸர்வ பூதானாம்.
எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான். அது அதாக அது அதனுடைய அந்தத் தன்மையாக இருக்கிறான். அந்த, அந்தப் பொருட்களை அதனுடைய தெய்வீகத் தன்மைக்காக நாம் விரும்பும்பொழுது இறைவனை விரும்புகிறோம். அதனுடைய அற்பத் தன்மைகளுக்கு விரும்பாமல் தெய்வீகம் என்ற பெருந்தன்மைக்காக விரும்புவோம். ஒவ்வொன்றினு டைய ஆதாரமும் அவன். காரணம் அவன். நாம் பார்ப்பது ஆதெயம் அல்லது காரியம். நாம் படைத்தவனை விட்டுவிட்டு அவனுடைய படைப்புக்களை, அதனுடைய வெளிஇயல்பு களை விரும்புகிறோம். ஆனால் இறைவன்தான் அதனுடைய உண்மைத் தன்மை.
சாயி வந்தனா என்ற நூலில் (1990) வந்த Dr.Bruch.B. Fani Banda வின் கட்டுரையை 1993ம் ஆண்டு சனாதன சாரதியில் குறிப்பிட்டிருந்தார்கள். “படைத்தவரைக் கவனியாமல் - என்பது அது. பகவான் ஒருமுறை வெள்ளியினாலான அழகிய கரிய மரத்தின் மேல் பதிக்கப் பட்ட இந்திய வரைபடம் ஒன்றைச் சிருஷ்டித்தார். அச் சின்னத்தின் விளிம்பில் பல பெரிய விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கல்லிலிருந்தும் ஒரு வெள்ளிக்கோடு புறப்பட்டு இந்தியாவில் ஒவ்வொரு இடத்தைச் சுட்டிக் காட்டியவாறு இருந்தது. அக் கேந்திரங் களுக்குப் பொறுப்பாக உள்ள மக்களின் பெயர்களும் அங்கு குறிப்பிடப்பட்டு இருந்தன. ஒவ்வொருவருக்கும் மனம் துள்ளியது. அந்த இலச்சனையைப் பார்க்க (emblem)

ஒவ்வொருவரும் ஆசைப்பட்டார்கள். (நான், என்னுடைய) காமிராவில் உள்ள Lens ஐக் கொண்டு அவ் இலச்சுனை யைப் பதிக்க முயன்றேன். தேவநாகரியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் மிகவும் நுண்ணியதாக இருந்ததால் படிக்க முடியவில்லை.
பகவான் இந்த இலச்சினையை எடுத்துக் கொண்டு மாணவரிடையே வந்து அதிலுள்ள பல விபரங்களை சுட்டிக் காண்பித்தார். இதயத்தின் ஆசை கெடுமளவிற்கு அதைத் தொட அனுமதித்தார். சிலர் கண்களிலும் ஒற்றிக் கொண்டனர். நான் அபூர்வமான ஒரு நிகழ்ச்சியையும் அவதானித்தேன். (முன் கதையின்படி பொருட்காட்சி. இலச்சனை, அரசன்-பகவான், பக்தர்கள்-பார்வையாளர்கள் என வைத்துக் கொள்வோம்) பகவான் அடிக்கடி நான் இங்கு இருக்கிறேன் என்று கூறி வந்தார்.(அவதாரம்) யாரும் இதைக் கவனிக்கவில்லை. எல்லோரும் இலச்சனையால் (படைக்கப் பட்ட பொருளில்) கவரப்பட்டு, அதன் நுட்பத்திலேயே ஆழ்ந்திருந்தார்கள். பகவானின் நான் இங்கு இருக்கிறேன்" என்ற சொற்களின் உட்சிறப்பை நானும் புரிந்து கொள்ளவில்லை.
பகவான் ஒரு சுற்றுச் சுற்றித் திரும்பி வந்தபொழுது புகைப்படம் எடுப்பதற்காக அந்த இலச்சனையைக் கையில் வைத்திருக்க வேண்டுமென்று வேண்டினேன். பகவானும் சம்மதித்து "ஆம் ஆம் நான் இங்கே இருக்கிறேன்" என்று கூறினார். அப்பொழுதுதான் பகவான் கூறியதன் பொருள் எனக்கு விளங்கியது.
இப்பொழுது இந்த ஹாலில் கடவுள் நான் இங்கு இருக்கிறேன் என்று பிரகடனம் செய்கின்றார். ஆனால்

Page 96
பக்தர்கள் அவரது அங்கையிலுள்ள இலச்சனையிலேயே (படைப்பிலேயே) ஆழ்ந்திருக்கிறார்கள். தனது சர்வ வல்லமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற படைப்புக் கடவுளை அவர்கள் கவனிக்கவே இல்லை. தமக்கே உரிய மகத்தான பாணியில் பகவான் இந்த ஆன்மீகச் சிறப்பு மிகுந்த உண்மையைத் தெரிவிக்கிறார்.
• உலகம் யாவையும் தாமுளவாக்கிய இறைவனிடம் உன் மனதைத் திருப்பு. அப்போது படைக்கப்பட்ட இவ்வுலகம் உன்னைக் கவர்ந்து துன்புறுத்துவது தானாக நின்று விடும். o இந்த அனுபவத்தை மறுபடியும், மறுபடியும் பலமுறை நினைவு கூர்வதன் மூலம் ஒருவரது மனம் இறைவனை அழுத்தமாகப் பற்றிக் கொள்கிறது. உலகத்தின் மேல் அதன் மீதுள்ள பிடிப்புத் தளர்கிறது. e இறைவன்மீது பற்றுக் கொள்வதால் பகவானின் சிறு விருப்பத்தைக் கூட மனம் நுட்பமாகத் தெரிந்து கொள்கிறது.  ைமறு பேச்சுப் பேசாமல் அவ் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்கிறது. தவிர அவர் சம்மதிக்காத எதுவானாலும் சரி அவரது விருப்பத்துக்கு விரோதமான எதுவானாலும் சரி அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. 0 பகவான் சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் இருப்பவர், எல்லாம் அறிந்தவர் என்ற உணர்வுடன் கூடி இருப்பதால் கவர்ந்து கொள்ளும் ஆசைகளும், பகட்டின் ஆர்வங்களும் குறைந்து மறைகின்றன. e இதற்குரிய பயிற்சிகளை மனிதன் மேற்கொள்ளும் போது அவன் "இறைவா, தங்கள் கருவியான என்மூலம் தங்கள் விருப்பம் நிறைவேறுவதாக. என்று பிரார்த்தனை செய்யும் உரிமையைப் பெறுகிறான்.
அவதார புருஷர் நம்மை நேர் வழியில் கொண்டு செலுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காக தம்மை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டு பிரகடனம் செய்கிறார்.
as 178=

அவற்றைக் கொண்டு அளவற்ற பயனைச் சம்பாதிப்பது நமது சாதனை. அது பூரணம். அந்தப் பூரணம் சொல்கிறது இதுவும் பூரணம். அது சத், அசத் என நினைக்கும் இதுவும் சத்தாம் அது ஜோதிர். அறியாமை இருள், தமஸ் என மயங்கும் இதுவும் ஜோதியாக மாறக்கூடிய சின்மயம். அது அமரத்துவம் இதுவும் அழியாத, மாறாது, நிலைத்த ஒன்று
பால வயதில் விளையாட்டில் மாய்ச்சல் காளை வயது யுவதியர் மாய்ச்சல் விருத்த வயதில் கவலையில் மாய்ச்சல் பரப்பிரமத்தில் எவர்க்குண்டுமாய்ச்சல் (2)
(பஜகோவிந்தம்)
இது எமக்கு விளங்கவில்லையா? சாயி கிரிதர் என்ற தமது 9 வயது மாணவன் இதை எப்படி விளங்கிக் கொண்டுள்ளான் என்று சுவாமி பகிரங்கப்படுத்தியுள்ளார். 1991ம் ஆண்டு மே6 ஈஸ்வராம்பா தினத்தில் சாயி கிருதருடன் சம்பாஷனையில் அந்தக் குழந்தையிடம் எதையும் கேட்கச் செர்லி சுவாமி கேட்டபோது அவன் இல்லை சுவாமி எனக்கு
வேறு எதுவும் வேண்டாம் நீங்கள்தான் வேண்டும்” என்றார்.
(த.ச.சா. ஒக்91 ப8)
நாங்கள் தெய்வீகத்தைக் கேட்க வேண்டும். அதை எங்களோடு இணைக்க வேண்டும். "சாயியிடம் நெருக்க மான பிறகு நீ அதிகமான ஆன்மீக ஞானத்தைப் பெற வேண்டும். 5 வருடங்களாக ஒரே வகுப்பில் உட்கார்ந்து கொண்டு மேல் வகுப்புக்கு அனுப்பப்படாமல் இருப்பது தவறு மட்டுமல்ல அவமானகரமானதும் கூட, உன்னுடைய திய நடவடிக்கையால் தான் உன் புண்ணியம் உன்னை
ams 179 m.

Page 97
விட்டுப் போகிறது. நல்ல மற்றும் திய விளைவுகளுக்கு உன் நடத்தையே காரணம்"
(த.ச.சா. ஜூலை94 ப9)
"தெய்வத்தின் சக்தியை, தெய்வத்துவத்தை நீங்கள் எப்போது உணர்கிறீர்களோ, பிரத்தியட்சமாக்க நினைக்கிறீர்களோ அப்போது நிச்சயம் இறைவன் தன்னை வெளிப்படுத்துவார். கடவுள் கூட தன் கடமையை சரிவரச் செய்யவேண்டும்.
(த.ச.சா. டிச94 ப2)
4. திருமணம்?
ஒரு நீர்க் குமிழியும் சமுத்திரமும் என்ற முதலாவது d5 660 tuila) Sprit and mind 616ip Liggagigial) Dr.Samuel SandweiSS ஒரு திருமணம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
(BuTITafflu i Praben Plum 676il 16160J L156) intail lib கூட்டிச் சென்றிருந்தார். பேராசிரியருக்கு வயது 72. டென்மார்க்கிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிகளை வழிநடத்தி யது மட்டுமல்ல கண்காணாத இடங்களிலுள்ள வலது குறைந்த சிறார்களுக்கு மருத்துவ உதவி, கவனிப்பு எல்லாம் செய்தவர். பகவான் இவர்களை நேர்முகத்திற்கு அழைத்து விஞ்ஞானம், ஆன்மீகம் என்பவற்றை எல்லாம் விளக்கினார்.
பேராசிரியர் பணிவாக அந்தப் பேராசான் முன்பு (பகவான்) அமர்ந்திருந்தார். கடைசியாக தன் கைகளைச் சுழற்றி ஒரு மோதிரத்தை உண்டாக்கி பேராசிரியரின் கைகளில் போட்டார். அச்சொட்டாக இருந்தது.
அந்த அனுபவம், அந்த மாட்சி, அந்த வாயடைத்துப் போன தன்மை அவற்றுடன் இருவரும் வெளியில்
a- 180 -

வருகிறார்கள். அந்த அமைதிக்குப் பிறகு சாண்ட வெய்ஸ் இறுதியாகச் சொன்னார் "பிரபென் உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய வாழ்க்கை பூராவும் பாபா உங்களோடு இருந்திருக்கிறார். நான் நிச்சயமாகச் சொல்கிறேன், நீங்கள் தனிமையாக இருக்கிறேன் என்று நினைத்த போதெல்லாம் உங்களைப் புரிந்து கொண்டுள்ளார். ஒருவரும் இல்லையே என்று நினைத்திருந்த காலங்களில் பலம் தந்துள்ளார். அவரின் கண்காணிக்கும் கண்கள் உங்களை அவதானித்து, உங்களைப் புரிந்து கொண்டு, வலது குறைந்த குழந்தை களுக்கு, பிரச்சனைகளின் மத்தியிலும், தேவையான வேளைகளிலும் உதவி செய்த உங்கள் தன்னலமற்ற சேவையில் திருப்தி கொண்டிருக்கிறது. தேவையுள்ள தனது குழந்தைகளுக்கு நீங்கள் ஆற்றிய அளப்பரிய சேவை எல்லா நேரங்களிலும் அவரைச் சந்தோஷப்படுத்தியுள்ளது. அவர் இப்போது தங்களைத் தன்னிடம் வரவழைத்துள்ளார். தனது தெய்வீகமான பரிசைத் தங்களுக்குத் தந்துள்ளார். அது அவருடைய எங்குமுள்ள அன்பு அவர் தந்த மோதிரம் நீங்கள் தன்னோடு மிக நெருக்கமானவர் என்ற அத்யந்த உறவின் 'ன்னம் என்பதை நான் அறிவேன். அவர் உங்களை மணந்து கொண்டதற்கான அத்தாட்சி இது". (a Wedding of you tohim)
நான் நிமிர்ந்து பார்த்தேன். வயதிலும் வாழ்க்கையிலும் முதிர்ச்சி பெற்ற அந்தப் பேராசிரியரின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது.
புருஷன் என்ற ஆத்மா (தெய்வீகம்) பேருணர்வு ஒப்பற்ற தத்துவமாகும். பேருணர்வுக்கு ஆண் பெண் என்ற வேறுபாடில்லை. உண்மையான புருஷன் ஆத்மாவாகும். ஆத்மா சம்பந்தமான விஷயங்களைத் தேடுவதே
அர்த்தமாகும்.
(சா.அ. கோடை 97 ப97)
= 181 =

Page 98

مکسمبر
S LLLCL S SLS SLS S SSSM M0S0rSYSLSeSTeMeSeSr 0S S TS
་་་་་་་་་་་་་་་་་་་་3

Page 99


Page 100