கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்

Page 1


Page 2


Page 3

நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் பிரபந்தங்கள்
UőlüUTípulÍ: 5. SJ (jugei
Siseau STFJ 9SIGIsossi SanatäST கொழும்பு 2005

Page 4
நாலின் பெயர்:
பதிப்பாசிரியர் : முதற்பதிப்பு வெளியீடு
அச்சு
பக்கங்கள்
பிரதிகள்
அளவு
கடதாசி
விலை
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள் க. இரகுபரன்
: 2005
: இந்தசமய கலாசார
அலுவல்கள் திணைக்களம். 248, I/1, 3766 63, கொழும்பு - 04
: “கெளரி அச்சகம்’
இல, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்த மாவத்தை, (ஆட்டுப்பட்டித் தெரு) கொழும்பு-13. தொ.பே. 2432477
: XXI + 353
: 1000
: Ifs
: 80 கிராம் வெள்ளை அச்சுத்தாள்
: A
Title
Editor
First Edition
Published by
Printers
No. of Pages
No. of Copies
Size
Paper Used
Price
Nallur Chinnattambip Pulavar Pirabanthangal
K. Raguparan
2005
Dept. of Hindu Religious & Cultural Affairs 248 1f1, Galle Road, Colombo - 04.
Gowriy Printers, No. 207, Sir Ratnajothi Sarawanamuthtu Mawatha, Colombo -13. Te: 2432477
: XXI + 353
1000
1/8
80 Gsm. White Printing
: Vgg=
முன் அட்டையில் காண்பது, பறாளை விநாயகர் கோயிலில் உள்ள
பழமைவாய்ந்த தேரின் சிற்பமொன்று.
நன்றி : கலைவட்டம், நண்கலைத்தறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம். (Art Circle, Dept of fine Arts, university of Jaffna)

அ. குமாரசுவாமிப் புலவள் 1855-1922
நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரின் ‘கரவைவேலன் கோவையை முதன் முதலாகச் ‘செந்தமிழ்’ பத்திரிகை வாயிலாகத் தமிழுலகுக்கு வெளிப்படுத் தியவர் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள்; அவராலேதான் அந்நூல் சிதைந்த நிலையிலாயினும் இன்றும் நின்று நிலவுகின்றது. அன்றியும் சின்னத்தம்பிப் புலவரின் மறைசையந்தாதிக்கும் அரும்பதவுரை கண்டவர் குமாரசுவாமிப் புலவர்; அவ்வகையில் சின்னத்தம்பிப் புலவர் தொடர்பான புலமைப் பணியில் காத்திரமான பங்களிப்பினை நல்கிய குமாரசுவாமிப் புலவரது பிறப்பின் நூற்றைம்பதாவது ஆண்டு நிறைவின் நினைவாக, சின்னத்தம்பிப் புலவர்தம் பிரபந்தங்களின் தொகுப்பாய் அமையும் இந்நூல் விளங்குவதாக.
அவர்நூலுரைகளைப்பொன்போலப்பரிந்தோம்பிப்போற்றிக்கொளல்வேண்டும்பகிரங்கஞ்செயற்பாலனவற்றைப் படிப்மேர்பொருட்டுஅச்சிற்பதிப்பித்தல்வேண்டும்
- அ. குமாரசுவாமிபுலவர்.

Page 5

Ijjj)
மான்புமிகு டக்ளஸ் கே. என். தேவானந்தா கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி,
இந்துசமய அலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி, வாழ்க்கைத்
தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சர்.
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நல்லூர் சின்னத்தம்பிப் புலவரின் நான்கு நூல்களைத் தொகுத்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்நூலை வெளியிட்டு வைக்கின்றது. திணைக்களத்தின் அரிய நூல்களைப் பதிப்பிக்கும் திட்டத்தின் கீழ் இந்நூல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஆண்டுகளில் இலங்கையின் கிடைத்தற்கரிய நூல்கள் பல, இத் திட்டத்தின் அடிப்படையில் திணைக்களத்தின் மூலம் வெளியிடப்பட்டு பலராலும் பயன் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்துப் புலவர்கள் பலரும், தமிழுக்கும், சைவத்துக்கும் அருந் தொண்டு புரிந்துள்ளனர். அவர்களுள்ளும் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் தலைசிறந்தவராவர். ஒல்லாந்தர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த வில்லவராய முதலியார் என்னும் பெரியாரே தேச வழமைச் சட்டம் எழுதும் சபைக்குத் தலைவராக விளங்கியவர். அன்னாரின் புதல்வரே சின்னத்தம்பிப் புலவராவர்.
இந் நூலில் புலவரின் மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நான்கு நூல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் உள்ளடக்கம் ஆன்மீகச் சிறப்பும் தமிழ் இலக்கியப் பெருமையும் மிக்கதாக விளங்குகின்றது.
இத்தகைய நூல்களே ஈழத்துப் புலவர் பெருமக்களின் மேதா விலாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வழி காட்டுவனவாக அமைகின்றன. ஈழத்து
இலக்கிய வளர்ச்சி தொடர்பான கற்கையை மேற்கொள்வோருக்கு இவை

Page 6
II
பெரிதும் துணை புரிவனவாக அமையும். பல்கலைக்கழகம் முதல் பாமர மக்கள் வரை, இந் நூலைப் படித்து இன்புறும்வகையில், நான்கு நூல்களும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளமை
சிறப்புக்குரிய அம்சமாகும்.
இந்நூற் பதிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகின்றேன். வருங்காலத்தில் இதுபோன்ற பல அரிய நூல்களைத் திணைக்களம் வெளிக் கொணரவேண்டும். அதற்கு எமது அமைச்சு
பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

GGGMWLSDJ
திருமதி. சாந்தி நாவுக்கரசன் பணிப்பாளர்,
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிடைத்தற்கரிய நூல்களைப் பதிப்பிக்கும் செயற்றிட்டத்தின்கீழ் நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரின் நான்கு நூல்களையுந் தொகுத்து ஒரே நூலாக வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.
கடந்த பல நூற்றாண்டுகளில், ஈழத்தில் தோன்றிய புலவர்கள் பலர் தமது ஆழ்ந்த தமிழ்ப்புலமையினால் சிறந்த இலக்கியங்கள் பலவற்றை ஆக்கி, தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் செழுமை சேர்த்தனர். அத்தகையோரில் நல்லூர்ச் சின்னத்தம்பிப்புலவர், தலைசிறந்தவராவர்.
ஈழத்தின் சிறந்த புலவர்களான கூழங்கைத் தம்பிரான், மாதகல் மயில்வாகனப் புலவர், சுன்னாகம் வரதபண்டிதர், இருபாலைச் சேனாதிராச முதலியார் ஆகியோரும் தமிழகத்தவர்களான திருவாவடுதுறைச் சிவஞான சுவாமிகள், கச்சியப்பமுனிவர் போன்றோரும், இவரது சமகாலத்தவர் என்பது நோக்கத் தக்கதாகும்.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்புலவர், ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த உயர்குடிப் பிறப்பினராகிய வில்லவராய முதலியார் என்பவரின் புதல்வராவார். இப்பெரியாரே தேசவழமைச் சட்டம் எழுதும் சபைக்குத் தலைவராக விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சின்னத்தம்பிப்புலவர் இளமையிலே கல்வி நாட்டமின்றித் திரிந்தவராயினும் வரகவியாக விளங்கியவர். தமிழ் இலக்கண இலக்கியங்களையும், புராண இதிகாசங்களையும் சந்தேகமறக் கற்றுத் தெளிந்தவர். இளமையிலேயே செய்யுள் இயற்றும் வல்லமை மிக்கவராக விள்ங்கியவர்.
இந்நூல், புலவர் இயற்றிய மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நான்கு நூல்களின் தொகுதியாக அமைகின்றது.

Page 7
மறைசையந்தாதி வேதாரணியத்தில் எழுந்தருளியுள்ள வேதாரணியேஸ்வர் மேற் பாடப்பட்ட அந்தாதி ஆகும். கல்வளை அந்தாதி, கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட யமக அந்தாதி ஆகும். சுழிபுரம் பறாளை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிரபந்தமாக பறாளை விநாயகர் பள்ளு அமைகின்றது. கரவெட்டி என்னும் ஊரில் வாழ்ந்த வேலாயுத பிள்ளை என்னும் பிரபு பற்றி பாடப்பட்ட கோவைப் பிரபந்தமே கரவை வேலன் கோவையாகும்.
இந்நான்கு நூல்களின் மூலம், புலவரின் தமிழ்ப் புலமையும், செய்யுள் இயற்றும் ஆற்றலும் நன்கு புலனாகின்றன. மேலும், தமிழ் இலக்கியங்களை இவர் நன்கு கற்று உணர்ந்தா ரென்பதும், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி போன்ற இலக்கண வரம்புகளைத் தெளிந்திருந்தார் என்பதும் அறிய முடிகின்றது.
தற்போது பல்கலைக்கழகங்களில் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கு, ஈழத்துத் தமிழ்ப் புலவர் பற்றிய அறிவும் ஆய்வும் அவசியமானதாகும். இதனைப் பிரதான நோக்கமாகக் கொண்டு, தமிழ் ஆர்வலருக்கு உதவும் நோக்குடன், இத்தொகுதியைத் திணைக்கள வெளியீடாக வெளியிட்டு வைக்கின்றோம்.
தமிழ் இலக்கிய, இலக்கணத் துறைகளில், - குறிப்பாக ஈழத்துப் புலவர் ஆய்வில் - ஈடுபடுவோருக்கு இந்நூல் பெரிதும் பயன்மிக்கதாக அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.
இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுவதற்கான ஆலோசனையை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழக சரித்திரத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களுக்கும், நூலைப் பதிப்பித்து வெளியிடுவதில் பணிசெய்த திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு. சீ. தெய்வநாயகம் அவர்களுக்கும், இப்பதிப்பின் ஆசிரியர் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் திரு. க. இரகுபரன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Ujliji)
திரு. க. இரகுபரன் மொழித்துறை, தென்கிழக்குப்பல்கலைக்கழகம்,
ஒலுவில்.
ஈழத்துத் தமிழ்ப் புலவர்களுள் முதன்மை நிலையில் வைத்து ஒருமனதாகப் போற்றப் பெறுபவர் நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரே. பாவலர் சரித்திர தீபக ஆசிரியர், சின்னத்தம்பிப்புலவரை யாழ்ப்பாணத்துப் புலவருக்குள்ளே திலதம் போல் விளங்கியவராகக் காண்கிறார். "ஈழமண்டலத்திலே நல்ல பேரறிஞராய்க் கவித்துவ சாமர்த்தியத்திலே தலைசிறந்தவர் சின்னத்தம்பிப் புலவர்’ என்ற பண்டிதமணியின் கூற்றில் சின்னத்தம்பிப் புலவரின் புலமைத்துவமும் கவித்துவமும் ஒருசேர விதந்துரைக்கப்படுகின்றன.
“சின்னத்தம்பிப்புலவர் 18-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிரபலமுற்று விளங்கிய நல்லூர் வில்லவராய முதலியாரது மைந்தர் என்பதும் இவர் ஏறக்குறைய கி.பி. 1730-ம் ஆண்டளவில் தோன்றிக் கல்வியறிவு ஈசுர பக்தி தமிழ்ப்புலமை என்பவற்றாற் றலைசிறந்து விளங்கி ஏறக்குறைய கியி. 1787-ம் ஆண்டிலோ அதற்குச் சிறிது முற்படவோ இவ்வுலக வாழ்வை ஒருவினாராதல் வேண்டும் என்பதும்”
சதாசிவ ஐயரின் ஆராய்ச்சி முடிவுகள் (கரவைவேலன் கோவைப் பதிப்புக்கான சதாசிவ ஐயரின் முகவுரை சின்னத்தம்பிப் புலவர் பற்றிய ஆராய்ச்சிபூர்வமான செய்திகள் பலவற்றை விரிவாகவும் முதன்முதலாகவும் தருவதாய் அமைந்துள்ளது). யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் ஒல்லாந்தரின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலப்பகுதியில் வாழ்ந்த சின்னத்தம்பிப்புலவர், அவ்வொல்லாந்தரால் அங்கீகரிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பிரபுக்களுள் முதன்மை நிலையில் விளங்கிய தொன் பிலிப் வில்லவராய முதலியாரின்" புதல்வர் என்பதால் அவரை, தமிழ் மரபில் வழமையாகப் பேசப்படும் ஏழைப் புலவர்களுள் ஒருவராகக் கொள்ளமுடியாது; கல்வியாலும் பொருளாலும் பாரம்பரியத்தாலும் பிரபுத்துவத்திற் சிறந்த ஒருவராகவே கொள்ளல் வேண்டும். சின்னத்தம்பிப் புலவராற் பாடப்பட்டதாகக் கொள்ளப்படும் சீட்டுக்கவிப் பகுதியொன்றின்படி அவரும் ஆட்சியாளருக்கு ஆலோசனை கூறும் உயர் நிலையில் இருந்தார் என்று கொள்ள இடமுண்டாகிறது. அச்சீட்டுக்கவிப்பாகம் வருமாறு:

Page 8
தரளவயல் குழிதரு தென்காரை யம்பதிச்
சமரகோன் முதலி பேரன்
செகராசன் மதிமந்திரி யானசின் னத்தம்பிச்
செயதுங்கன் எழுதும் ஓலை,
கொச்சிக் கணேசையர் என்பாரால் சின்னத்தம்பிப் புலவரின் வித்துவத்துக்குப் பரிசிலாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பண்டாரக்குளம் என்னும் வயல்நிலத் தோம்பின் அடிப்படையில்,
“இவருக்குரிய சுயநாமமாகிய அரசாட்சிப் பட்டப்பெயர் செயதுங்க மாப்பாண முதலியார் என்பதாகல் வேண்டும் என்பதும் சின்னத்தம்பிப் புலவர் என்பது சிறுவயதிலேயே புலமை வாய்க்கப் பெற்றமையால் இவர்க்கு இட்டு வழங்கிய பெயராகல் வேண்டும் என்பதும் ஊகித்துக் கொள்ளத் தக்கன”
எனக்கருதும் சதாசிவ ஐயர், மேற்படி சீட்டுக்கவிப்பாகத்தால் அவ்வூகத்தை உறுதியான முடிவாக்கிக் கொள்கிறார்.
மேற்படி சீட்டுக்கவிப் பாகம் சதாசிவ ஐயர் கொண்ட ஊகத்தை உறுதி செய்வதற்கு உதவுவதாக மட்டுமன்றி அவர் சிந்திக்காத (சின்னத்தம்பிப்புலவர் பற்றிய) மேலதிக விடயங்கள் சிலவற்றை உட்கொண்டதாகவும் புலப்படுகிறது. சின்னத்தம்பிப்புலவர் இக் கவியில் தம்மை 'செகராசன் மதிமந்திரி’ என்றார். அவர் சுட்டும் செகராசன் யார்? யாழ்ப்பாணத்துக்கான ஒல்லாந்த அரச பிரதிநிதியா? அல்லது உள்ளூர்ப் பெரும் பிரபு எவரேனுமா? தரள வயல் சூழ்தரு தென்காரையம்பதிச் சமரகோன் முதலி பேரன்’ என்னும் தொடர் செகராசனுக்கு அடைமொழியாய் அமைவதா? சின்னத்தம்பிப் புலவருக்கு அடைமொழியாக அமைவதா? இக்கேள்விகளுக்கு விடைகளைத் தேடும்போது சின்னத்தம்பிப்புலவர் பற்றி இதுவரை அறிந்து கொண்டவற்றை விட அதிகம் அறியக்கூடியவர்களாவோம்.
‘சமரகோன் முதலிபேரன்’ என்பது சின்னத்தம்பிப் புலவரைச் சுட்டுவது என்று கொள்வதே மொழிப்பயில்வின் அடிப்படையிலும் பொருட்பயில்வின் அடிப்படையிலும் பொருத்தமாகப் படுகிறது. சின்னத்தம்பிப் புலவரின் இயற்பெயர் செயதுங்கமாய்பாண முதலியார், அவரது தந்தையார் வில்லவராய முதலியார் பெயரன் சமரகோன் முதலியார் போலும்? அவ்வாறு கொள்ளப்படும் பட்சத்தில் சமரகோன்முதலியின் ஊராகக்

VII
குறிப்பிடப்படும் தென்காரையம்பதி எது? ஈழம் சார்ந்ததா (காரைநகர்), தமிழகம் சார்ந்ததா? இவையும் விடைதேட வேண்டிய வினாக்களே. தந்தையார் வில்லவராய முதலியாரின் உத்தியோக நிமித்தமே நல்லூர், சின்னத்தம்பிப்புலவரின் ஊராயிற்றுப் போலும். சதாசிவ ஐயர், தோம்புகளை ஆராய்ந்ததன்படி சின்னத்தம்பிப் புலவருக்கு, தாமோதரம் பிள்ளை என்ற மகன் ஒருவர் இருந்தார்’ எனத் தெரிய வரும் செய்தியையும் கொண்டு நோக்கும்போது, அவ்வம்சத்தின் நாலு தலைமுறைப் பெயர்களை அறிந்தவர்களாவோம் என்பதும் இவ்விடத்திற் கருதத்தக்கது.
சின்னத்தம்பிப் புலவர் பற்றி அறியப்படும் செய்திகளின்படி அவர் இளவயதிலேயே பெரும் புலவர்களினதும் வித்தியா விநோதங்களில் விருப்பம் மிக்க புரவலர்களதும் உளங்கவர்ந்த கவிஞராய் விளங்கினார் என்பது தெரியவருகிறது. சிறு பராயத்திலேயே மிகுபுலமைத்துவத்துடன் விளங்கியதால் உண்டாய சின்னத்தம்பிப் புலவர் என்ற காரணப்பெயரே அவர்தம் இயற்பெயர் என்னும்படியாய் நிலைபெற்றது என்ற செய்தியும் அவ்வுண்மையையே உணர்த்துகின்றது எனலாம்.
சின்னத்தம்பிப் புலவரின் புலமைத்துவத்தின் ஊறுக்கால்களை ஒரளவில் அவர்தம் தந்தையார் வில்லவராய முதலியாரிடத்தும் அதற்கு மேலாக, தமிழ் நாட்டிலிருந்து ஈழம்வந்து, முதலியாரின் நண்பராய், அவர்தம் இல்லத்திலே தங்கியிருந்து, ‘வித்தியாகாலசேஷபம் செய்துவந்த கூழங்கைத் தம்பிரானிடத்தும் கண்டுகொள்ளலாம் போலும். இவ்விருவருள் கூழங்கைத் தம்பிரான் ஈழத்துத் தமிழ்ப்புலமை மரபிற் பெறும் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டுள்ளமை அறியத்தக்கது.”
சின்னத்தம்பிப் புலவரின் சமகாலத்தவர்களாகக் கொள்ளப்படும் யாழ்ப்பாணப் புலவர்கள் மாதகல் மயில்வாகனப்புலவர், சுன்னாகம் வரதபண்டிதர், இருபாலைச் சேனாதிராயமுதலியார் முதலியோர். இவர்களுள் வரதபண்டிதர் சின்னத்தம்பிப் புலவரோடு புலமைத்தொடர்பு கொண்டவராகத் திகழ்ந்துள்ளார். மறைசை அந்தாதியின் சிறப்புப்பாயிரமான ‘செந்தாதியன்’ எனத் தொடங்கும் செய்யுளைப் பாடியவர் வரதபண்டிதர் என்றே யாழ்ப்பாணம் சைவபரிபாலணசபைப் பதிப்பில் உள்ளது. ஆனால், அதைப்பாடியவர் வேதாரணிய ஆதீன வித்துவான் சொக்கலிங்கதேசிகர் என யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியர் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கூறியுள்ளார்." சின்னத்தம்பிப் புலவரின் கல்வளையந் தாதிக்கும் (திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் 1964இல் வெளியிட்ட பதிப்பில்) வரதபண்டிதர் பாடியதாகக் கருதப்படும் சிறப்புப்பாயிரம் உள்ளதென்று கீழ்வரும் பாடலை கா. செ. நடராசா தந்துள்ளார்.

Page 9
VIII
செம்பொற் குவட்டினிற் பாரதந் தீட்டிய கோட்டினண்சீர்க் கம்பக் கரிமுகன் கல்வளை வாழுங் கணபதிக்கு நம்பற் கினியமுற் சங்கத்து நூலென நல்லைச்சின்னத் தம்பிப் புலவனல் வந்தாதி மாலையைச் சற்றினனே,
வரதபண்டிதரியற்றிய ‘சிவராத்திரிபுராணத்திற்கு, சின்னத்தம்பிப் புலவர் பெயரில் ஒரு சிறப்புப்பாயிரம் உள்ளது. மயில்வாகனப்புலவர் பெயரிலும் ஒன்று உள்ளது. ஆயினும் சின்னத்தம்பிப்புலவரும் வரதபண்டிதர், மயில்வாகனப்புலவர் முதலானோரும் சமகாலத்தவர்கள் என்பதில் பொ. பூலோகசிங்கம் ஐயங்கொள்கிறார். ஆனால், அந்த ஐயப்பாட்டுக்கான வலுவான காரணங்களை அவர் தெரிவித்ததாயில்லை.
சின்னத்தம்பிப் புலவராற் கவரப்பட்ட புரவலர்களுள் கொச்சிக் கணேசையரை முதன்மையானவராகக் கொள்ளலாம்.
“இவருடைய மாளிகையிலே ஒருமுறை கம்பராமாயணப் பிரசங்கம் நடந்தபோது அங்கு கூடியிருந்த வித்துவான்கள் ஒரு செய்யுளுக்குப் பொருள் சொல்லமுடியாது திகைக்க, அங்கே ஒரு புறத்தொதுங்கி யிருந்த இளைஞராகிய சின்னத்தம்பிப் புலவர் அச் செய்யுளுக்கு நயம்படப் பொருள் உரைத்த திறமையை மெச்சிக் கணேசையர் அவருக்குப் பண்டாரக்குளம்’ என்னும் வயல்நிலத்தைப் பரிசிலாக வழங்கினர்”*
என்னும் செய்தி சின்னத்தம்பிப் புலவரின் கம்பராமாயணப் புலமையை உணர்த்திநிற்கும் புறச்சான்று. சின்னத்தம்பிப்புலவரின் கம்பராமாயணப் புலமை இவ்வாறானதொரு புறச்சான்றின் வழியாகவே உணரப்பட வேண்டிய தொன்றன்று. அவருடைய நூல்கள் - குறிப்பாக கரவைவேலன்கோவைச் செய்யுள்கள் - அவர்தம் கம்பராமாயணப் புலமைக்கான தெளிவான அகச்சான்றாய் அமைவன. புலவர் தமது ‘கரவை வேலன் கோவையில் பெரும்பாலான இடங்களில் இராமாயணத்தை நன்கு கையாண்டுள்ளார். அவை புலவரின் கம்பராமாயணப் புலமையை உணர்த்துகின்றன என்பதற்கு மேலாக புலவரிடத்திருந்த கம்பராமாயண இரசனையை உணர்த்துகின்றன என்று கொள்வது அதிக பொருத்தமுடையதாகலாம். உதாரணமாக கரவைவேலனை, பூவென்ற மால்இலங்கேசனை ‘நாளைக்குப் போர்புரிய வா’ என்ற வீரன்’ இராமனாக உருவகிக்கும் தொடர், “இன்று போய்ப் போர்க்கு நாளை வா’ என நல்கிய கம்பராமனின் பெருமித வார்த்தையில்

IX
சின்னத்தம்பிப் புலவர் எவ்வளவு தூரம் ஈடுபட்டார் என்பதையே புலப்படுத் துகின்றது. நம்மிடையே வாழ்ந்து மறைந்த கம்பராமாயண இரசனையா ளராகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையும் கம்பனின் இதே பாடலில் அதிகம் ஈடுபட்டார் என்பது அவரது 'கம்பராமாயணக் காட்சிகளிலும் பிறவற்றிலும் புலனாகும். பண்டிதமணியின் இரசனை வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை வழிவந்தது என்பது பிரசித்தம், பொன்னம்பலபிள்ளையின் கம்பராமாயண இரசனையின் நதி மூலத்தைச் சின்னத்தம்பிப் புலவரிற் காணலாம் போலும்.
சின்னத்தம்பிப்புலவரின் இராமாயணப் புலமைக்கு வெகுமதியாக பண்டாரக்குளம் என்ற வயல்நிலத்தைக் கொச்சிக்கணேசையர் சன்மானித்தார் என்றுகண்டோம். அவ்வாறாகச் சின்னத்தம்பிப் புலவருக்குச் சன்மானம் செய்த மற்றொரு புரவலர் கரவெட்டியில் வாழ்ந்த சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார். அவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதே ‘கரவைவேலன் கோவை’ (கரவைவேலன் கோவை பாடப்பட்ட வரலாற்றையும் சின்னத்தம்பிப் புலவர் சன்மானிக்கப்பட்ட முறையையும் இந்நூலில் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ள சதாசிவ ஐயரின் முகவுரையிற் காண்க). இங்கு நாம் ஒருவிடயம் குறித்துச் சிந்தித்தல் வேண்டும். அக்காலத்தைய முதன்மைப் பிரபுக்களில் ஒருவரான தொன்பிலிப் வில்லவராய முதலியாரின் மைந்தர், "செகராசன் மதிமந்த்ரி’யான சின்னத்தம்பிப் புலவர் தம்மையொத்த உள்ளூர்ப் பிரபுக்களது சன்மானத்தை உவந்து பெற்றாரா? அல்லது சன்மானத்துக்காக உள்ளூர்ப் பிரபு ஒருவர்மேற் பிரபந்தம் பாடும் நிலையிலா சின்னத்தம்பிப் புலவரின் குடும்ப அந்தஸ்து இருந்தது? சின்னத்தம்பிப்புலவர் சந்திரசேகர மானா முதலி என்ற மற்றொரு உள்ளுர்ப் பிரபுவையும் பறாளை விநாயகர் பள்ளில் ஒரு செய்யுளால் (121) பாடியுள்ளார். தொன் ஜுவான் சந்திரசேகர மானா முதலி என அறியப்படும் அவர் வில்லவராய முதலியாரினும் ஒருபடியேனும் குறைந்த செல்வாக்கினராகவே இருந்தார் என்றே கொள்ளக்கூடியதாயுள்ளது. அத்தகையவரைப் பாடிய சின்னத்தம்பிப் புலவரின் அச் செய்யுள் வருமாறு:
நாளுங் கலியைத் துரப்பதே யன்றி
நாளை வாவென் றுரைத்திடான்
நம்பி னோர்க்கருள் தருத யாபரன் வெம்பி னோர்க்கரி பேறனான்
வாளின் தடக்கைச் சந்திர சேகர
மாண7 முதலி வாழ்கவே.

Page 10
இப்பாடலின் பாவனையில் தொனிப்பது ஏழைப்புலவன் ஒருவனின் குரலே. அதுபோலவே பாட்டுடைத் தலைவரும் அக்கால யதார்த்தத்துக்கு மிஞ்சிய உயர் நிலையினராகவே புலப்படுத்தப்படுகின்றார். நட்புரிமை பூண்ட அல்லது அக்கால உள்ளூர்ப் பிரபுத்துவப் போட்டியில் ஒரு கட்சியினராய் நின்ற பிரபுக்கள் குடும்பத்து இலக்கிய சல்லாபங்களாக இவை இருத்தல் கூடும். அச்சல்லாபம் பாரம்பரிய பிரபுத்துவ குடும்பங்கள் தமது மேல்நிலை அங்கீகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டிய சமூகத் தேவையால் விளைத்ததாதல் கூடும். கரவைவேலன்கோவை பாடப்பெற்றமை பற்றிய வரலாறு கூறும் செவிவழிக்கதையின் அடிப்படையில் கலாநிதி எஸ். சிவலிங்கராஜா கூறுவது இங்கு கருதத்தக்கது.
“இக் கதையினூடு அக்காலச் சமூகத்தில் அதிகார மேலாதிக்கம் கொண்ட நிலப்பிரபுக்களுக்கிடையே நிலவிய போட்டிகளையும் கண்டுகொள்ள முடிகிறது. ஒல்லாந்த அரசு தேசவழமையை அனுசரித்தமையாற் ‘புலவர் பாடும் புகழுடையார்’ எனக் கருதப்பட்ட பிரபுக்களுக்குச் சகல வசதிகளையும் வாய்ப்புக்களையும் வழங்கியிருக்கக்கூடும். வேலாயுத முதலியார் குடும்பம் ஒல்லாந்த அரசின் சலுகைகளைப்
பெற இக் கோவைப் பிரபந்தமும் உதவியிருக்கலாம்.”*
அக்காலத்துத் தோன்றிய தண்டிகைக் கனகராயன் பள்ளும் இத்தகைய தொரு தேவையின் நிமித்தம் தோன்றியதாகலாம். எது எவ்வாறாயினும் இப்படியானதொரு தேவை அக்காலத்தில் இருந்தது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியதொன்றே. அ. முத்துத்தம்பிப்பிள்ளை அக்கால யாழ்ப்பாண வரலாறாக எழுதுவனசில இங்கு நோக்கத்தக்கன.
“பறங்கிகள், இனிமேல் இராசாகுடும்பத்தார் தம் பெயரோடு இராசா வென்னும் பட்டப்பெயரைச் சேர்த்து வழங்கலாகா தெனத் தடுத்து முதலியெனத் தஞ்சாதிப் பட்டப் பெயரை யொட்டியே வழங்கல் வேண்டுமெனச் சட்டஞ் செய்தார்கள். அவர்கள் பரராச சிங்கனுக்குக் கொடுத்த முதன் மந்திரித்தா னத்தை அவன் இறந்த பின்னர்ப்
பிறருக்குக் கொடாது நிறுத்தி நான்கு மாதாக்கள்களை நியமித்தர்கள்"
இது போர்த்துக்கேயர் காலத்தைய யாழ்ப்பாணத்து நிலைமை; அப்போதே யாழ்ப்பாண உயர்குடியார் கீழிறங்கத் தொடங்கிவிட்டார்கள்.

XI
“முதலியென்னுஞ் சிறப்புப் பெயர் பண்டைக் காலமுதல் வேளாளருக்கே உரியதாயிருந்தது. பறங்கிகள் அதனைக் கரையாருக்குமாக்கினர். தமிழரசர் காலத்தில் மந்திரி இலிகிதர் முதலிய உத்தியோகங்களிலிருந் தவர்கள் பெரும்பாலும் வேளாண்முதலிகள். அதுபற்றிப் பறங்கியரசு ஒல்லாந்தவரசுகளிலும் அவ்வுத்தியோக முடையவரெல்லாம் முதலியா ரெனப்பட்டனர். பின் அவ்வுத்தியோகமும் முதலியுத்தியோக மெனப் பட்டது.”
ஒல்லாந்த தேசாதிபதிகள் சிலரின் ஆட்சியில் யாழ்ப்பாணப் பரம்பரைப் பிரபுக்களின் நிலை மேலும் கீழிறங்குவதாயிற்று.
“இனி மற்றைய தேசாதிபதிகளோ மிக்க கொடியர். சிலர் பரிதானப் பியர். வேறுசிலர் அடிமைகளை விற்றும் தனவான்களுக்கு முதலியர், 'தொன் என்னும் பட்டப் பெயர்களை விற்றும் பெரும் பொருளிட்டினர்"
சின்னத்தம்பிப் புலவர் தொன் பிலிப் வில்லவராய முதலியாரின் மைந்தராக, 'செகராசன் மதிமந்த்ரி’யான செயதுங்கமாப்பாண முதலியாக இருந்த போதிலும் பிரபுத்துவ குடும்பங்கள் சிலவற்றுக்காக பழம்புலவர் மரபில் வந்ததொரு ஏழைப் புலவராகவும் பாவனை பண்ண வேண்டிய நிலையில் அக்காலச்
சூழல் இருந்திருக்கிறது எனலாம்.
சின்னத்தம்பிப் புலவர் தம்முடைய பறாளை விநாயகர் பள்ளில் மற்றுமொரு பிரபுவையும் பல இடங்களிற் (பாட் 61-63, 73, 88) போற்றியிருப்பது குறிப்பிடத் தக்கது. ரகுநாயகன் என்றும் ரகுநாயக மதிபதி என்றும் சுட்டப்பெறும் அப்பிரபுவை குதிரை வீரனாக அல்லது குதிரைக்கலை நிபுணனாகவும் பெண்களைக் கவரும் அழகனாகவும் பகைவரைத் தலைகவிழச் செய்பவனாகவும், உடல்வலிமிக்க வீரனாகவும், பெருங் கொடையாளியாகவும் மேழிக் கொடியுடையவனாகவும் (வேளாளனாகவும்) புகழ்ந்துரைக்கிறார் புலவர்.
பறாளை விநாயகர் பள்ளில் உள்ள,
வரிசைவளர் திரிபதகை மரயின் உரியவர் கிளைகள் மதி செல்வம் ஏறவே கூவாய் குயிலே (60)
என்ற பாடல் சின்னத்தம்பிப் புலவரின் நோக்கத்தை முழுமையாக உள்வாங்கியுள்ளதொரு பாடல் எனலாம். அதாவது கங்கா குலத்தவர்களாகிய வேளாளர்களின் கிளைகளது மதிப்பாகிய (அவர்களுக்குரிய முதன்மைத் தானமாகிய) செல்வம் ஏறும்படியாகக் குயிலைக் கூவச் சொல்கிறார் புலவர்.

Page 11
XII
பிரபுக்களைப் பாடிய சின்னத்தம்பிப் புலவர் தெய்வங்களைப் பாடும்போது மானுடம்பாடுவதில் வெறுப்புக் கொண்டதோர் இறையடியாராகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்வது சுவாரசியமானது. கல்வளையந்தாதியிலும் மறைசையந்தாதியிலும் பல இடங்களில் இப்பண்பை இனங்காணலாம். உதாரணத்துக்காக இரண்டை நோக்குவோம்.
“செல்வத்தைக் காவல்செய்வதே யல்லாமல் தக்கவர்களுக்கு வழங்காத உலோபிகளைப் பாடி, தளர்ச்சியைத் தரும் பசிமிகுந்த காக்கைகள் உண்பதற்கிடமான இந்த உடலைப் பெருக்குவதிலே சலித்தேன்’ (கல்,86)
“என் மனமாகிய வண்டு இரும்பையொத்த வன்னெஞ்சராகிய கீழ்மக்களைப் பாடி வருந்தாமல் மறைசைக் கடவுளின் திருவடித் தாமரையில் ஒன்றுவதைச் செய்வதாயில்லையே” (மறை. 4)
கல்வளையந்தாதி, மறைசையந்தாதி என்பவற்றில் ஆங்காங்கே இவ்வாறான மானுடம்பாடலிலான சின்னத்தம்பிப் புலவரின் சலிப்புத் தோன்றுவது கொண்டு மானுடம்பாடிய கரவைவேலன் கோவையின் பின்பு தான் அந்தாதிகளிரண்டையும் அவர் பாடினார் என்று முடிவு செய்துவிட முடியாது. இப்பாடல் அருளாளர்களின் பாடல்களின் பயிற்சியில் - அவற்றின் பாவனையில் - பக்தி இலக்கிய மரபில் - பாடப்பட்டவையாக இருத்தல்கூடும். கல்வளை அந்தாதியே இவரால் முதன்முதல் செய்யப்பட்ட பிரபந்தம் என்பது பல அறிஞர்களது கொள்கை. மறைசையந்தாதியும் புலவரது இள வயதிலே பாடப்பட்டதென்றே குறிப்பிடப்படுகிறது. "அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார்’ எனப்படுகிறது." சின்னத்தம்பிப் புலவர் இளவயதிலேயே பாடுமாற்றல் கைவரப் பெற்றவர் என்பது தோன்ற அவருக்கு "வரகவி’, ‘அருட்கவி’, ‘வாலகவி’ என்னும் பெயர்களும் வழங்கின" என அறியவருவதும் இங்கு சுட்டத்தக்கது.
புலவர் பாடிய பிரபந்தங்கள் நான்கில் மறைசையந்தாதி ஒன்றே ஈழத்துக்கு அப்பாற்பட்டுத் தமிழகத்தோடு தொடர்புபட்டதாக உள்ளது. இலங்கை, இந்திய நாடுகள் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் வரையில் யாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் இருந்த தொடர்பு மிக நெருக்கமானது.

XIII
“அண்மைக்காலம் வரையில், யாழ்ப்பாணத்தவர் சிதம்பரத்துக்கு அடுத்ததாகச் சோழநாட்டுத் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேதாரணியத்தோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகரையிலிருந்து சோழநாட்டின் மிகக்கிட்டிய துறைமுகமான கோடிக்கரையிலே போய் இறங்குபவர்க ளுக்கு வேதாரணியம் (திருமறைக்காடு) முதலிலே காணும் பெரிய கோவிலாக அமைந்திருக்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள கரண வாய், வரணி என்னும் கிராமங்களிலுள்ள சைவக்குருமார் வேதாரணியத் திலுள்ள சைவக்குருக்கள்மாரோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்துள்ளனர். வேதாரணியத்தோடான தொடர்பு பதினெட்டாம் நூற்றாண்டிலும் நிலவியிருக்கிறது. அதனாலேதான், நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவர் மறைசை (வேதாரணியம்) யந்தாதி பாடினார்.”*
சின்னத்தம்பிப்புலவர் கல்வளையந்தாதி பாடும்போதுகூட ஒரு செய்யுளில் (5) மறைசையை நினைவுகூர்ந்து பாடியுள்ளார். ஆகையால் சின்னத்தம்பிப் புலவருக்கு மறைசை இறைவனிடத்துத் தனித்ததொரு ஈடுபாடு இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம். அந்த ஈடுபாடு தமிழக யாத்திரையால் ஏற்பட்டதாயின் மறைசையந்தாதியைப் பாடிய பின்னரே கல்வளையந்தாதியைப் பாடினார் என்று கொள்ள (கல்வளையந்தாதியிலும் தமிழகத்து வேறு தலங்களை விடுத்து சிதம்பரத்தையும் மறைசையையுமே பாடியிருத்தலால்) இடமுண்டாகின்றது.
சின்னத்தம்பிப் புலவர் பாடிய ஏனை இரு தலங்களும் யாழ்ப்பாணத்தைச் சார்ந்தன. சின்னத்தம்பிப் புலவருக்கு மறைசைத் தலத்தில் ஈடுபாடு வந்ததற்கு அவருடைய தென்னிந்திய யாத்திரை காரணமாயின் (சண்டிலிப்பாய் சர்ந்த) கல்வளை, (சுழிபுரம் சார்ந்த) பறாளை என்றும் யாழ்ப்பாணத் தலங்களின் மேலான அவரது ஈடுபாட்டுக்குக் காரணம் யாது? நல்லூர் வாழ்விடமாக, அவரது பூர்வீகம் மேற்படி தலங்களை ஒட்டயதாக அமைந்ததோ என்பது உசாவத்தக்கது. புலவர் பொன்னாலை வரதராசப் பெருமாளையும் பல இடங்களில் (பறா. 42, 52, 79, 91, 15) நினைந்து கொள்கிறார்.சின்னத்தம்பிப் புலவர் பெயரில் வழங்கும் சீட்டுக் கவிப்பாகம் அவரது பெயரனாரைத் தென் காரையம்பதி (காரைநகர்?)யைச் சேர்ந்தவராகச் சுட்டுவது மீளவும் சிந்திக்கத்தக்கது. சின்னத்தம்பிப் புலவரை முதலியார் இராசநாயகம், "சண்டிருப்பாய் வில்லவராய சின்னத்தம்பிப் புலவர்’ என்று குறிப்பிடுவதும். அவதானிக்கத்தக்கது.*

Page 12
XIV
சின்னத்தம்பிப் புலவரை அழைத்து கரவை வேலன் கோவையைப் பாடுவித்தவர்கள் அக்காலத்தில் அவர் பெற்றிருந்த பிரசித்தங் காரணமாகவே அழைத்தார்கள் என்னும்போது கரவை வேலன் கோவைக்கு முன்பாகவே பிரசித்தி பெறத்தக்க வகையில் சில நூல்களை அவர் பாடியிருத்தல் வேண்டும். அந்நூல்கள் மேற்படி அந்தாதிகள் இரண்டுமாயிருத்தல் கூடும்.
சின்னத்தம்பிப் புலவர் பாடிய இரண்டு அந்தாதிகளும் கரவை வேலன் கோவையுமாகிய அவை மூன்றும் கட்டளைக் கலித்துறைச் செய்யுளால் அமைந்தவை. கோவைப் பிரபந்தம் இயல்பாகவே முழுக்க முழுக்க அகத்திணை மரபு தழுவியது. அந்தாதிகள் இரண்டிலும்கூட கணிசமான இடங்களிற் சின்னத்தம்பிப் புலவர் அகத்திணை மரபைத் தழுவிச் சென்றுள்ளார்.
மறைசையந்தாதி, திரிபு என்னும் சொல்லணியமைந்த நூற்றந்தாதி (திரிபு என்பது செய்யுளின் நான்கடியிலும் முன்னுள்ள சீர்களிலுள்ள சொற்றொடரின் முதலெலுத்து நீங்க ஏனைய எழுத்தெல்லாம் அடி தோறும் ஒத்திருப்பது); கல்வளையந்தாதி, யமகம் அல்லது மடக்கு என்னும் சொல்லணி அமைந்த நூற்றந்தாதி (யமகம் அல்லது மடக்கு என்பது ஒரு கவியின் நான்கடியிலும் முற்பகுதி எழுத்துக்கள் அனைத்தும் ஒன்றுபட்டிருப்பது). அக்காலத்தில் ஈழத்தெழுந்த அந்தாதிகள் பற்றிய கலாநிதி க.செநடராசாவின் அபிப்பிராயம் சின்னத்தம்பிப் புலவரின் அந்தாதிகளுக்கு விலக்கானதென்று கூறுவதற்கில்லை.
“இவ்வந்தாதிகளிற் கையாளப்பட்ட யமகம், திரிபு ஆகிய அணிகளாற் பெறப்படும் இலக்கியச் சுவையே கற்றோர் மனத்தைப் பெரிதுங் கவர்வனவாயுள்ளன. இச் செய்யுளைப் படிக்குந்தோறும் அவற்றைப் புனைந்த புலவனுக்கும் பொருள் பிரித்தறிய முயலும் புலனுடையார்க்கு மிடையே நிகழும் புலமைப் போரை உய்த்துணர முடிகிறது. கற்றோரன்றி மற்றோரைப் பொறுத்த வரையில், இத்திரிபு யமகம் ஆகிய ‘தில்லு முல்லுக்களே இந் நூல்கள் ஜனரஞ்சகமானவையா யில்லாமற் போனமைக்கான காரணங்களென்றுங் கூறலாம். உதாரணமாகப் புலியூரந்தாதியின் நாலாவது செய்யுளின் நான்கடிகளும் யமக அணிக்கேற்ப 'பாயசங் கண்டு’ என்று ஆரம்பிக்கின்றன. ஆனால் முதல் அடியில் அவற்றைப் பாய் அசம் கண்டு’ என்றும், இரண்டாமடியிற் பாயசம் (கற்) கண்டு’ என்றும், மூன்றாம் அடியில் (இரண்டாமடியின் இறுதியிலுள்ள, 'உ' வைச்சேர்த்து) "உபாய சங்கு அண்டு’ என்றும்,

XV
நாலாமடியில் (மூன்றாமடியின் இறுதியிலுள்ள 'உப்பு’ என்பதைச் சேர்த்து) 'உப்பாய சங்கண்’ என்றும் பிரித்துக் கருத்துரைப்பது நுண்மாண் நுழைபுலம் ஆயினும், சாதாரண வாசகரின் மனத்தைக் களைக்க வைக்கும் முயற்சியாகவே தோன்றும். இவ்வாறே இவற்றின் ஒவ்வொரு செய்யுளும் அமைந்திருக்கக் காணலாம். அதுவே இந்நூல்களின் நிறையும் குறையும் எனலாம்.”*
கரவைவேலன் கோவை, யமகம் திரிபு முதலிய சொல்லணிகள் இல்லாததால் புலவரின் அந்தாதிகளோடு ஒப்பிடுகையில் எளிமை வாய்ந்தது. 425 செய்யுள்களால் ஆகப்பெற்ற இந்நூலில் 172 செய்யுள்கள் அழிந்துவிட்டன. இவற்றின் அழிவுக்கு யாழ்ப்பாணப் பிரபுக்களின் போட்டி பொறாமைகள் காரணமாய் இருந்திருக்கலாம். ஈழத்து இலக்கியங்களில் இந்நூலுக்கு ஒரு முக்கியத்துவம் இருப்பதாக உணரப்படுகின்றமை அறியத்தக்கது.
“இந்நூல் உள்ளுர்ப் பிரபுத்துவ பரம்பரைபற்றித் தோன்றிய முதல் ஈழத்து நூலாகும். சமயச் சார்பற்ற, தேசிய நிலைநின்ற இலக்கியத்தின் கால்
கோளாக இந்நூலினைக் கொள்ளல் வேண்டும்”*
சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய பறாளை விநாயகள் பள்ளு அவரின் ஏனைய மூன்றிலிருந்தும் கணிசமான தனித்துவமுடையது எனலாம். அப்பிரபந்த வடிவம் இயல்பாகவே பொதுமக்கட் சார்பினைக் கொண்டதாகும். புலவரின் இயல்பான கவித்துவத்துக்கு இடங்கொடுப்பதாய் அது அமைந்தது. பறாளை விநாயகர் பள்ளிலும் சின்னத்தம்பிப் புலவரின் நாட்டுப் பற்றினை ஓரளவிற் காணலாம். பள்ளுப் பிரபந்த அமைப்புக்கேற்ப ஈழமண்டலப்பள்ளி தன் நாட்டின் புகழை மிகுவித்துப் பேசுகிறாள். ஈழநாட்டின் இயற்கைவளம் கூறும் பாடல்கள் ஒருபக்கமிருக்க,
பணணிற் றோயப் பொருணமுடிப் புக்கட்டிப்
பாடும் பாவலர்க் கீந்தி வென்றே
பெணணிப் பொண்முடிப் புக்கட்டி வைத்திடும்
ஈழ மணடல நாடெங்கள் நாடே. (25)
கற்ற நூலுனர் பண்டிதர் மார்பஞ்ச
காவி யம்சட் கலைக்கடல் தோய்ந்தும்
எற்றை நாளும்கல் வித்திறம் பார்த்திடும்
ஈழ மணடல நாடெங்கள் நாடே (33)

Page 13
XVI
என்னும் பாடல்கள் ஈழநாட்டின் கல்விச் சிறப்புக்குறித்த நல்லறிவுச் சுடர் கொளுத்த முனைவனவாகப் புலப்படுகின்றன. சின்னத்தம்பிப் புலவர், ஈழநாட்டை மாவலிகங்கை நாடாகக் காண்கிறார். சின்னத்தம்பிப் புலவர் மாத்திரமன்றி ஈழநாட்டுப் புலவர் பலரும் மகாவலிகங்கையையே தமது தேசத்து ஆறாகப் போற்றியுள்ளனர். கதிர்காமத்தைப் பொருளாகக் கொண்டெழுந்த கதிரைமலைப் பள்ளுக்கூட (அத்தலத்தின் புனித தீர்த்தமான மாணிக்ககங்கையைப் பாடாது) மாவலிகங்கையையே சிறப்பித்துப் பாடுவது அவதானிக்கத்தக்கது. இலங்கையில் தமிழ்நிலப்பரப்பினூடாக ஓடும் பேராறு என்ற காரணத்தாலேயே மாவலிகங்கை தமிழ்ப் புலவர்களிடம் இத்தகு அபிமானத்தைப் பெற்றது எனத் துணிந்து கூறலாம். சின்னத்தம்பிப் புலவரின் சுதேசப்பற்றை அல்லது அன்னியராட்சியில் அவருக்கிருந்த வெறுப்பைக் காட்டுவதான பாடலொன்றையும் பறாளை விநாயகர் பள்ளிற் கண்டு கொள்ளலாம்.
கயல் வரைந்த துவசன் பணிநவ
கனடி மன்னன் வரராச சிங்கன்
இயல்புடன் திருச் செங்கோல் நடாத்திய
ஈழ மணடல நாடெங்கள் நாடே. (பறா29)
சின்னத்தம்பிப் புலவர் காலத்தில் தமிழறிந்தவர்களாய்ச் சுயாதிபத்தியத்துடன் ஆட்சி செலுத்தியவர்கள் கண்டியரசர்கள் மாத்திரமே. ஆனால், இப்பாடலிற் போற்றப்பெறும் கண்டியரசன் சின்னத்தம்பிப் புலவரின் சமகாலத்தவனல்லன். 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவனான இராஜசிங்கனே இங்கு போற்றப் பெறுகிறான். அவனது படைகள் இருதடவை யழ்ப்பாணத்தின்மீது படையெடுத்துச் சென்றதாக அறியவருகிறது. சைவத்துக்குப் பேரிடர் புரிந்த ஐரோப்பியர் காலத்தில் வாழ்ந்த யாழ்ப்பாணப் பிரபுக்கள் சைவாபிமானியாய் விளங்கிய இராஜசிங்கன்மேல் அபிமானங் கொள்ளுதல் இயல்பே. சின்னத்தம்பிப் புலவர் காலம்வரையில் அவன் மேலதான அபிமானம் யாழ்ப்பாணப் பிரபுக்களிடையே நீடித்திருந்தது போலும், அந்த அபிமானத்தின் மிகுதிப்பாடே இராஜசிங்கனை மேற்படி பாடலில் பாண்டியனும் பணியும் பிரதாபமுடையவன் என்று புகழச் செய்ததாகலாம்.
பறாளை விநாயகர் பள்ளிற் காணப்பெறும் யாழ்ப்பாணப் பிரதேச வழக்காறுகள் தனியாக நோக்கப்பட வேண்டியன: ஐரோப்பியர் வழிவந்த அரக்கு (சாராயம் - Arrack) என்ற திசைச்சொல்லைக் கையாள்வது குறிப்பிடத்தக்கது (செ5). சீனி (செ.42), சாடி (74) என்னும் வேறு திசைச் சொற்களையும் புலவர் கையாண்டுள்ளார்.

XVII
எவ்வகையிலும் சின்னத்தம்பிப் புலவர் ஈழத்துப் புலமை மரபின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக விளங்குபவர். அவரது பிரபந்தங்களைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடும் இப்பணி பலவகையிலும் பயனுடையதாக அமையும் என்பது உறுதி. புலவரின் பிரபந்தங்கள் பல்வேறு உரைகளையும் கண்டுள்ளன. அவற்றுள் முக்கியமான அல்லது வசதியான உரைகளோடு இப்பிரபந்தங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. அவ்வுரைகளுள் மறைசையந்தாதி உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் உரையோடு வெளியிடப் பெறுவது ஒரு சிறப்பாகும். அதன்மூலம் இந்நூல் ஈழத்தின் மற்றுமொரு புலமை அடையாளத்தை வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் ஆக்கங்கள் தனியாகத் தொகுத்து ஒரு நூலாக்கப்பட வேண்டியன என்பதை அழுத்தமாக வலியுறுத்தத்தக்க வளம் மிக்க உரையாக அவ்வுரை அமைந்துள்ளது.
கல்வளையந்தாதி, ம.வே. திருஞானசம்பந்தபிள்ளையின் உரையோடு வெளியிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தபிள்ளை ஈழத்தின் புலமைப் பாரம்பரியம் மிக்க குடும்பமொன்றிலே தோன்றியவர்; இந்துசாதனம் பத்திராதிபராக விளங்கியவர்; மரபிலக்கியப் பயிற்சி மிக்கவராயிருந்ததோடு ஆக்க இலக்கியகாரராகவும் விளங்கியவர். அவர் கல்வளையந்தாதிக்கு பதவுரை, கருத்துரை, விசேடவுரைகளை எழுதியுள்ளார்.
கரவைவேலன் கோவையும் பறாளை விநாயகர் பள்ளும் அரும்பதவுரை, குறிப்புரை என்பனவற்றுடனேயே வெளியிடப் பெறுகின்றன. கரவை வேலன் கோவைக்கு கரணவாய் சி. ஆழ்வார்ப்பிள்ளையால் எழுதப்பட்ட விரிந்த உரை உள்ள போதும், அது நான்கு பிரபந்தங்களின் தொகுப்பான இந்நூலின் பக்க எண்ணிக்கையை மிகவும் அதிகரிக்கச் செய்துவிடும் என்னும் அச்சத்தால் சதாசிவ ஐயரின் அரும்பதவுரையே தேர்ந்தெடுக்கப்பட்டது. ஐயரின் பதிப்பில் நிரல் நிறையாகத் தரப்பட்ட செய்யுள்களும் உரையும் இப்பதிப்பில் அண்மைப்படுத்தித் தரப்பட்டுள்ளமை அறியத்தக்கது.
பறாளை விநாயகர் பள்ளுக்கு உள்ளது, திருமயிலை சே.வெ. ஜம்புலிங்கம்பிள்ளையின் குறிப்புரை மட்டுமே. ஜம்புலிங்கம்பிள்ளை ஈழத்தின் ஏனைய பள்ளுப் பிரபந்தங்களான கதிரைமலைப் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு என்பவற்றையும் பதிப்பித்த சிறப்பினை உடையவர். அவர் ஈழநாட்டவர் அல்லாததால் அவரது குறிப்புரைகளில் ஆங்காங்கே (ஈழம் சம்பந்தமான விடயங்களில்) சில தவறுகள் நேர்ந்துள்ளன."

Page 14
XVIII
உதாரணமாக 'மகாவலிகங்கை’க்கு ‘பறாளை நகரத்திற் பாயும் நதியின் பெயர்’ என்று குறிப்பெழுதியுள்ளமையைக் குறிப்பிடலாம்' அவர் தமிழகத் தவராதலால் ஈழநாட்டின் புவியியலை அறியவில்லைப் போலும்.
ஈழநாட்டின் புவியியலுக்குப் புறம்மான செய்தியொன்று சின்னத்தம்பிப் புலவரின் பாடலிற்கூட அமைந்து கிடப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பொருவில் கோணச் சிகரத் தருகிற் பொழிந்த வெள்ளம் வழிதுபோய்ப் பூந்தணர் குறிஞ்சி வளைந்து வேடிச்சி காந்தன் சேவடி வணங்கி. (74)
ஓடுவதாகப் பாடுகிறார் புலவர். கோணமலை நெய்தல் நிலத்தேயிருக்கும் ஒரு குன்று என்பதையும் அங்கு பொழிந்த வெள்ளம் குறிஞ்சி நோக்கி ஒட முடியாதென்பதையும் அவர் அறியார் என்று கொள்ள வேண்டியதில்லை. ஈழத்து இலக்கியமரபிலே கோணேசர் மலை பற்றிய புனித உணர்வொன்று நெடுங்காலமாகவே இருந்து வந்தது. கோணமாமலை சமய குரவராலும் பாடப்பெற்ற சிறப்பினது; தென்கைலாசம் என்று போற்றப் பெறுவது. மலை என்று பாடும்போதும் மத்திய மலைநாட்டை விட்டு, கோணமலையைப் பாடியது அந்த அபிமான உணர்வின் வெளிப்பாடு என்றே கொள்ளவேண்டும். யாழ்ப்பாணத்துக் கரவெட்டியிலே மலையைப் (கரவையில் வேலன் வியன்கிரி) பாடுவதற்கு இடங்கொடுத்த இலக்கிய மரபே கோணமலையை இவ்வாறு பாடுவதற்கும் இடங்கொடுத்தது.
அது அவ்வாறாக, இப்பதிப்புக்குறித்து மீளவும் நோக்குவோம். சின்னத்தப்பிப் புலவரின் நான்கு நூல்களையும் கால ஒழுங்கில் வரிசைப்படுத்துவதற்கு அதுபற்றிய தெளிந்த அறிவு இல்லாத காரணத்தால் தமிழ்ப் பிரபந்த வரலாற்றின் அடிப்படையில் அந்தாதிகள் இரண்டும் முன்வைக்கப்பட்டன. அந்தாதிக ளுள்ளும் கல்வளையந்தாதி முதலில் வைக்கப்பட்டது விநாயகரை எப்போதும் முன்னிறுத்தும் நமது வழமை கருதியே. அந்தாதிகளை அடுத்து அவ்வந்தாதிகள் பாடப்பட்ட யாப்பிலேயே பாடப்பட்டதும் தமிழ் பிரபந்தங்களின் வரலாற்றில் அந்தாதிக்கு அடுத்தபடி தோற்றம் பெற்றதுமான கோவைப் பிரபந்தம் வைக்கப்பட்டது. பிரபந்த வரலாற்றில் இறுதிக் காலங்களில் தோன்றியதே பள்ளு ஆதலால், பறாளை விநாயகர் பள்ளு இறுதியில் வைக்கப்பட்டது.

XX
சின்னத்தம்பிப் புலவர் பெயரில் வழங்கும் தனிப்பாடல்களும் தொகுக்கப் பெற்று விளக்கக் குறிப்புக்களுடன் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.
இப்பதிப்புக்குத் தேர்ந்தெடுத்த முன்னைய பதிப்புக்கள் எவையென்றும் அவற்றின் பிற விபரங்களையும் அறியத்தக்க வகையிலே அவ்வப்பதிப்பின் முகப்புக்களும் பதிப்புரை முதலியனவும் உள்ளவாறே பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. சின்னத்தம்பிப் புலவர் பற்றியதும் அவர்தம் பிரபந்தங்கள் பற்றியதுமான மேலதிக செய்திகளை அவற்றுட் காண்க.
பாவலர் சரித்திர தீபகத்தில், சின்னத்தம்பிப் புலவர் பற்றி எழுதப்பட்ட வரலாறும் அதற்கு கலாநிதி பொ. பூலோகசிங்கம் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்பும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. பூலோகசிங்கமவர்களின் ஆராய்ச்சிக் குறிப்பில் உள்ள சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்களின் பதிப்புகள் பற்றிய விபரங்கள் பயன்படும் என்ற கருத்திலேயே அவை பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டன.
பூலோகசிங்கமவர்கள் 'சின்னத்தம்பிப் புலவர் இயற்றியதாக நாலுமந்திரி கும்மி என்னும் நூலொன்று சண்டிருப்பாய் எம்.வேலுப்பிள்ளையாற் கரவெட்டி ஞானசித்தி யந்திரசாலையில் 1934 இற் பதிப்பிக்கப் பெற்றுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதன் உள்ளடக்கம் பற்றிய விபரங்கள் எதனையும் தராததால் அவரும் அப்பதிப்பைக் கண்டிலர் எனக் கருதலாம். 'நாலுமந்திரிகும்மி சண்டிருப்பாய் வேலுப்பிள்ளையால் 1934 இல் அச்சிடப்பட்டது’ என்ற விபரம் பறாளை விநாயகர் பள்ளுப் பதிப்பில் ‘சின்னத்தம்பிப் புலவர் சரித்திரம்’ என்ற பகுதியிலும் தரப்பட்டுள்ளது. 'நாலு மந்திரிகும்மி எமக்குக் கிடைக்காததால் அதனை இத் தொகுப்பில் அடக்க முடியவில்லை. அன்றியும் அந்நூலைச் சின்னத்தம்பிப் புலவருடையதாக ‘புலவர் வரலாறு’ எழுதிய முன்னை ஆசிரியர் எவரும் குறிப்பிடாமையால் அது நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவருடையது என்பது பெரிதும் ஐயத்துக்கு உரியதே. அந்நூல் கிடைப்பின் ஆராய்வின்பின்னரே அது பற்றித் தீர்மானித்தல் சாத்தியமாகும்.
சின்னத்தம்பிப் புலவரின் பிரபந்தங்களை ஒரு நூலாக வெளியிடும் இம்முயறசியில் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மதியுரைஞருமான பேராசிரியர் சி. பத்மநாதன்

Page 15
XX
அவர்களின் ஆலோசனையும் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களின் வரவேற்பும் உதவிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) சீ. தெய்வநாயகம் அவர்களின் ஒத்துழைப்பும் என்றும் நினைத்தற்குரியன. நூலின் அச்சுப் பிரதிகளை ஒப்பு நோக்குவதில் ஒத்துழைத்த திருமதி ஞானேஸ்வரி சோமசுந்தரம் (முன்னைநாள் அதிபர், இராமநாதன் கல்லூரி) திரு. க. உமாமகேஸ்வரன் ஆகியோரின் பங்களிப்பும் அத்தகையதே.
நூற்பிரதிகளைச் சேகரிப்பதில் உதவிய சக விரிவுரையாளரான நண்பர் செல்வி எம். ஏ. எஸ். எப். சாதியா, பேராதனைப் பல்கலைக்கழக நூலக உதவியாளர் திரு. வே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் முழுமனதோடு ஒத்துழைத்த அச்சகத்தார்க்கும் நன்றி!
அடிக் குறிப்புக்கள்
1. பூலோகசிங்கம், பொ. (ப.ஆ), 1975, பாவலர் சரித்திர தீகம் - பாகம் - 11
கொழும்பு தமிழ்ச்சங்கம், கொழும்பு, ப. 232
2. கணபதிப்பிள்ளை, சி. இலக்கியவழி (திருத்தப்பதிப்பு - 1994) தனலக்குமி புத்தகசாலை,
சுன்னாகம் ப38
3. சதாசிவ ஐயர், (ப.ஆ), (1935), கரவைவேலன் கோவை, ஆரிய திராவிட பாசாபிவிருத்திச் சங்கம், யாழ்ப்பாணம். ப. XI (இந்நூலில் அநுபந்தமாக இது தரப்பட்டுள்ளது.)
4. தொன் பிலிப் வில்லவராய முதலியார் ஒல்லாந்தராட்சிக் காலத்திற் பெற்றிருந்த செல்வாக்கையும், அவரது பெயரில் உள்ள கிறிஸ்தவச் சார்புக்கான காரணத்தையும் அறிதற்கு சதாசிவ ஐயரின் மேற்படி முகவுரையைப் பார்க்கவும். பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறுவதும் இதுதொடர்பாக நோக்கத்தக்கது.
"போர்த்துக்கேய ஆட்சி காரணமாகவும், கத்தோலிக்க மதத்தாலும், யாழ்ப்பாணத்திற் புதிய ஒரு பிரபுத்துவத்தை அரசியற்பலமும், சமூகவாய்ப்பும் கொண்ட ஒரு புதிய பிரபுத்துவத்தை தோற்றுவிக்க முடிந்தது. பழைய பிரபுத்துவத்தின் செல்வாக்கு இதனால் குன்றிக் கிடந்தது.
"ஒல்லாந்த ஆட்சிகாலம் வந்தபொழுது பாரம்பரியப் பிரபுத்துவம் முன்னர் ஒருதடவை விட்ட பிழையை, இரண்டாவது தடவையும் விடவில்லை. ஒல்லாந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்து உயர்மட் நிலப்பிரபுத்துவம் இறப்பிறமாது மதத்தை பெயரளவில் ஏற்றுக் கொண்டது. பதமாற்றம், அந்நிய பண்பாட்டுத் தொடர்பு ஆகியன தமது தனித்துவத்தையும் பண்பாட்டு அடிப்படையையும் ஊறு செய்துவிடக் கூடாது

10.
11.
12.
13.
14.
ΧΧΙ
என்பதற்காகத் தாம் உத்தியோகக் கிறிஸ்தவர்களாக இருக்கும் அதேவேளையில் சைவப்பண்பாட்டை வற்புறுத்தும் பாரம்ப்ரியப் புலமைக்கும் இலக்கியத்துக்கும் ஊக்கமளித்தனர்.” (சிவத்தம்பி, கா. (1987) ஈழத்தில் தமிழ் இலக்கியம் (இரண்டாம் பதிப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட், சென்னை. பக். 175.176)
சதாசிவ ஐயர், தி. மேற்படி, ப. X
சதாசிவ ஐயர், தி. மேற்படி, ப. X
ஒல்லாந்தர் காலப்பகுதியிலே ஈழத்தில் தோன்றிய பள்ளுப்பிரபந்தங்களுள் ஒன்றான தண்டிகைக் கனகராயன் பள்ளு’ தமிழ்நாட்டுக் காரைக்காடு’ என்னும் ஊரிலிந்து வந்து தெல்லிப்பழையிற் குடியேறிய வேளாளர்குலத் தலைவரான கனகராயன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது என்பதும் அப்பள்ளின் மூத்தபள்ளி, இளைய பள்ளியர் முறையே வடகாரைப் பள்ளியாகவும் தென்காரைப்பள்ளியாகவும் குறிப்பிடப்படுகின்றமையும் நாட்டுவளங்கூறும் பகுதியில் வடகாரை வளமும் தென்காரை வளமுமே பேசப்படுவதும் அறியத்தக்கன. போர்த்துக்கேயராட்சியின் இறுதிக் காலகட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் காரைதீவிற் குடியேறிய (உலகுகாவல) முதலிபரம்பரையொன்று அறியப்படுதலும் அறியத்தக்கது. அப்பரம்பரையின் முதல்வனான உலகுகாவல முதலி, யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயராட்சி ஒழிந்து ஒல்லாந்தராட்சி ஏற்படுவதற்குத் துணையாய் அமைந்தவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. (முத்துத்தம்பி, ஆ, (1915) யாழ்ப்பாணச்சரித்திரம் (இரண்டாம் பதிப்பு), நாவலர் அச்சகம், யாழ்ப்பாணம், ப. 81)
சதாசிவ ஐயர், தி. முற்குறிப்பிட்டது, ப. X
சிவத்தம்பி, கா. முற்குறிப்பிட்டது, ப. 177
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. முற்குறிப்பிட்டது, ப. 101
நடராசா, க. செ. (1982) ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, கொழுப்புத் தமிழ்ச்சங்கம், கொழும்பு.
பூலோகசிங்கம், பொ. (ப.ஆ), முற்குறிப்பிட்டது, ப. 235 (பொ. பூலோகசிங்கம் நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு மலரில் எழுதிய "பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ என்ற கட்டுரையிலும் இக்கருத்தை முன்வைத்துள்ளார்.)
சதாசிவ ஐயர், தி. முற்குறிப்பிட்டது, பக். IX, X
“யாழ்ப்பாணத்தில் திசாவை உத்தியோகத்திலிருந்த கிளாஸ் ஐசாக்ஸ் என்னும் ஒல்லாந்தனால் தொகுக்கப்பட்ட "தேசவழமை’ என்னும் சட்டங்களை (LaWS) ஆராய்ந்து அதில் தொகுக்கப்பட்டுள்ள தமிழர் வழக்கங்கள் நாட்டில் வழங்கிய வண்ணம் உண்மையானவையெனச் சம்மதங் கொடுத்துக் கைச்சாத்திட்ட பிரபலமான தமிழ்முதலிமார்

Page 16
XXII
15.
16.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
பன்னிருவருள் முதலாமாளாக ஒப்பமிட்டவர் தொன் பிலிப் வில்லவராச முதலியார் என்பவர். நாலாமாளாக ஒப்பமிட்டவர் தொன் ஜுவான் சந்திரசேகர மானா முதலியார் என்பவர்’ (சதாசிவ ஐயர், தி. முற்குறிப்பிட்டது, ப.V) என்பதால் அப் படிநிலை வேறுபாட்டை உணர்ந்து கொள்ளலாம்.
சிவலிங்கராஜா, எஸ். (2001) ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, தனலக்குமி புத்தகசாலை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. முற்குறிப்பிட்டது, ப. 78
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. முற்குறிப்பிட்டது, ப. 79
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. முற்குறிப்பிட்டது, ப. 90
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. முற்குறிப்பிட்டது, ப. 101
சதாசிவ ஐயர், தி முற்குறிப்பிட்டது ப. X
வேலுப்பிள்ளை, ஆ. (1986) பண்டிதமணி போற்றிய யாழ்ப்பாணத்துச் சைவத்தமிழ்ப் பாரம்பரியம், யாழ்பாபாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், ப. 22
இராசநாயகம், செ. (1933) யாழ்ப்பாணச் சரித்திரம், மீளச்சு (1999) Asian Educational Services, New Delhi, L. 230
நடராசா, க.செ. முற்குறிப்பிட்டது, ப. 83, 84
சிவத்தம்பி, கா. முற்குறிப்பிட்டது. ப. 13.
மூதலித்தல் (92) தூக்குணி (93) முதலானவை.
“குறிப்புரை, தலமகிமை முதலியவற்றோடு திருமயிலை சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளை அவர்களால் சென்னை வித்தியாதுபாலன அச்சகத்தில் பதிப்பித்தது” என்று நூன்முகப்பில் இருப்பினும் பதிப்புரையில் ஜம்புலிங்கம்பிள்ளையவர்கள் அரும்பதக் குறிப்புரையும் பள்ளுச்சிறப்பும் எழுதியுதவியவர்களென்று திருவாவடுதுறை ஆதீன வித்துவான் திருநெல்வேலி சிதம்பர ராமலிங்கம்பிள்ளை, சென்னைத் தமிழ்ப் பண்டிதர் கொ. இராமலிங்கத் தம்பிரான் ஆகிய இருவரைக் குறிப்பிடுகின்றார்.
இதே ஜம்புலிங்கம்பிள்ளையாற் பதிப்பிக்கப் பெற்ற கதிரைமலைப்பள்ளில் உள்ள ஒரு செய்யுளில் (2) வரும் ‘காசிநன் மாவலிகங்கை’ என்னுந் தொடருக்கு 'ஈழத்துக் காசியாகிய கதிர்காமத்தைச் சேர்ந்த மாவலிகங்கை’ என (தவறான) விளக்கம் எழுதப்பட்டடுள்ளமையும் அவதானிக்கத்தக்கது.

1.
g) GÍ GTLi ötÖ
வாழ்த்துரை
வெளியீட்டுரை
பதிப்புரை
கல்வளையந்தாதி
மறைசையந்தாதி
கரவைவேலன் கோவை
பறாளை விநாயகர் பள்ளு
தனிச்செய்யுள்கள்
முன்னைய பதிப்புக்களின் முன்னுரை முதலியன
. சின்னத்தம்பிப் புலவர் (பாவலர் சரித்திர தீபகம்)
செய்யுள் முதற்குறிப்பகராதி
Ol
141
241
339

Page 17

sögi fidan öğÜLGİ GuÖdu.

Page 18

நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய
கல்வளையந்தாதி
(DOJ. D. G| Bub6braTFIBLD55inishaDSH)
35TL
தார்கொண்ட பூமல் லிகைச்சேக்கை யிற்றும்பி சாலப்பம்புஞ் சீர்கொண்ட கல்வளை யந்தாதி பாடத் திரைக்கடல்சூழ் பார்கொண்ட பல்லுயிர்க் கானந்த மும்மதம் பாயுங்கும்பக் கார்கொண்ட கம்பக் களியானை முன்னின்று காப்பதுவே
இதன் பதப்பொருள். தார் கொண்ட மல்லிகைப்பூச் சேக்கையில் - நிரைநிரையேயுள்ள மல்லிகைப் பூக்களாகிய படுக்கையில், தும்பி சாலப் பம்பும் சீர் கொண்ட - வண்டுகள் மிகவும் ஒலியைச் செய்யும் சிறப்பையுடைய, கல்வளை அந்தாதி பாட - கல்வளை யென்னும் திருப்பதியிற் கோயில் கொண்டருளிய விநாயகக் கடவுளின் அந்தாதியாகிய தோத்திரப் பிரபந்தத்தைத் தமியேன் பாடுவதற்கு, திரைக் கடல் சூழ் பார்கொண்ட பல்லுயிர்க்கு - திரைகள் மலிகின்ற சமுத்திரஞ் சூழ்ந்த இப்பூவுலகம் தன்னகத்துட் கொண்ட பல்வகையான ஆன்மகோடிகட்கு, ஆனந்த மும்மதம் பாயும் - பேரானந்த வெள்ளமாகிய மூவகை மதசலம் பெருகும், கார்கொண்ட கும்பம் - கரிய நிறத்தையுடைய மத்தகத்தினையும், களி - களிப் பினையும் உடைய, கம்பயானை முன்னின்று காப்பது - தறியிற் கட்டப்பட்டுள்ள யானையாகிய விநாயகக்கடவுள் (எவ்வகை இடையூறும் வாராவண்ணம்) முன்னின்று காத்தருளுவர் என்றவாறு.

Page 19
2/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
முற்றும்மை விகாரத்தாற் றொக்கது. ஆனந்தத்தைச் செய்வதை ஆனந்த மென்று காரணத்தைக் காரியமாக உபசரித்தார். யானை என்று உபசரித்ததற் கேற்பக் கம்பத்திற் கட்டப்படுதல் கூறப்பட்டது. அடியாருடைய உள்ளமாகிய கம்பத்திற் கட்டப்படுதலைக் குறித்தவாறு. கார் - இனஅடை. ஏஈற்றசையோடு தேற்றமுமாம். இது, ஆசிரியர் தாம் பாடும்படி எடுத்துக் கொண்ட நூல் எவ்வகையான இடையூறுமின்றி இனிது முற்றும்வண்ணம் தமது குலதெய்வமும், பாட்டுடைத் தலைவரும், தம்மை வழிபடுவோர்க்கு வரும் விக்கினங்கள் எவற்றையும் நீக்கியருளுபவரும் ஆகிய கல்வளைப் பிள்ளை யாரை வாழ்த்தியவாறாம்.
நாம் பாடத் தொடங்கிய கல்வளை யந்தாதி இனிது முற்றும் வண்ணம் அந்தக் கல்வளைப் பதியில் எழுந்தருளிய விநாயகப் பெருமானே காத்தருளுவர் என்றபடி
ஒன்றா யிருசுடர் முத்தொழி னான்மறை யோதுமைந்தாய் நன்றாய வாறாங்கம் யாவுக்குங் காரண நாதனுமாய் நின்றாய்நின் கல்வளை யந்தாதி பாடவென் னெஞ்சகத்துப் பொன்றா வருள்புரி வாயானை மாமுகப் புங்கவனே.
இ-ள்: ஒன்றாய் - ஏகமூர்த்தியாயும், இரு சுடர் (ஆய்) - சூரிய சந்திரர் என்னும் இரு சுடர்களாயும், முத்தொழில் (ஆய்) - படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் தொழில்களைச் செய்யும் பிரம விஷ்ணு உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளாயும், நான்மறை (யாய்) - இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களாயும், ஒதும் ஐந்தாய் - சொல்லப்படுகின்ற நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூதங் களாகியும், நன்றாய ஆறு அங்கம் (ஆய்) - நன்மையாகிய மந்திரம் வியாகரணம் நிகண்டு சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம் என்னும் வேதாங்கம்
ஆறுமாய், யாவுக்கும் காரண நாதனுமாய் - எல்லாவற்றிற்கும் காரணகருத்தாவுமாய், நின்றாய் - நின்றருள்பவரே, யானை மா முகப் புங்கவனே - மேன்மை பொருந்திய யானைமுகப் பெருமானே, நின்
கல்வளை அந்தாதி பாட - தேவரீர் எழுந்தருளியிருக்கும் கல்வளைப் பதியின் மகத்துவத்தை விளக்கும் இந்த யமக அந்தாதியைத் தமியேன் இடையூறின்றி இனிது பாடும்வண்ணம், பொன்றா அருள் என் நெஞ்சத்துப் புரிவாய் - அடியேன் மனத்திற் கெடுதலில்லாத திருவருளைத் தேவரீர் பாலித்தருளல் வேண்டும். எ-று.

கல்வளையந்தாதி /3
ஒன்று, ஐந்து, முத்தொழில் ஆகுபெயர்கள். இச்செய்யுளில் ஒன்று முதல் ஆறு வரையிலுள்ள எண்கள் முறையே வருதலின் சிறப்பை நோக்குக. சிவத்திற்கும் விநாயகப் பெருமானுக்கும் பேதமில்லையாதலின், “ஒன்றாய்.நாதனுமாய் நின்றாய்” எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது. சிறியேன் தேவரீர்மீதே பிரபந்தம் பாடத் துணிந்தேன் ஆதலின் அந்த அபிமானம் பற்றியேனும் தமியேனுக்கு அனுக்கிரகஞ் செய்ய வேண்டு மென்பார் “நின்கல்வளை யந்தாதி பாட . பொன்றா அருள்புரி .’ என்றார். இதுவும் விநாயக வணக்கங் கூறியவாறாம்.
ஏகமாய் எல்லாமாய் நின்ற விநாயகப் பரம்பொருளே தேவரீர்மீது கல்வளை யந்தாதி யென்னுந் தோத்திரப் பிரபந்தத்தைப் பாடுவதற்குத் தேவரீரே தமியேனுக்கு அனுக்கிரகஞ் செய்யவேண்டு மென்றபடி
நூல் கற்பக நாடன் பதின்சதக் கண்ணனெண் கண்ணன்றொழுங் கற்பக வஞ்சி யிடக்கண்ணன் றந்தமுக் கண்ணனன்றிற் கற்பக வேலெறிவேடுணை வன்கல் வளைப்பதிவாழ் கற்பக நன்னிழல் சேர்ந்தார் கருக்கரை கண்டவரே.
இ-ள்: கற்பக நாடர் - கற்பக விருகூடித்தையுடைய விண்ணா டராகிய தேவரும், பதின்சதக் கண்ணன் - ஆயிரங்கண்ணனாகிய இந்திரனும், எண்கண்ணன் - பிரமதேவனும், தொழும் - வணங்கும், கற்பு அக வஞ்சி இடக்கண்ணன் தந்த முக் கண்ணன் - கற்பையுடைய திருவுளத்தைக்கொண்ட வஞ்சிக் கொம்பு போலும் உமாதேவியாரை வாமபாகத்தில் உடையராகிய சிவபெருமான் பெற்றருளிய முக்கண்ணரும், அன்றில் கல் பக வேல் எறிவேள் துணைவன் - அன்றிற் பறவையின் பெயராகிய கிரெளஞ்சம் என்னும் மலை பிளக்க வேலாயுதத்தை எறிந்த முருகக் கடவுளது துணைவருமாகிய, கல்வளைய் பதிவாழ் கற்பக நல் நிழல் சேர்ந்தார் கரு கரை கண்டவரே - கல்வளைப் பதியில் எழுந்தருளியிருக்கின்ற கற்பக விநாயகரது நல்ல திருவடி நிழலைத் தியானித்தவர் பிறவி யென்னுங் கடலின் கரையை அடைந்தவராவர்.
அன்றிற்கல் ஒரு குறிப்புமொழி. சேர்தல் - இடையறாது சிந்தித்தல். ஆதலின், சேர்ந்தார் என்பதற்குத் தியானித்தவர் எனப் பொருள் கொள்ளப்பட்டது. கரையென வருதற்கியைய, பிறவி கடலெனப்பட்டது. இனி, கற்பக நன்நிழல் என வருதல் பற்றிப் பிறவியாகிய வெய்யிலின் எனப் பொருள் கோடலு

Page 20
4/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
மொன்று. திருவடி வருவிக்கப்பட்டது. கணிடவரே யென்பது துணிவுபற்றிவந்த இறந்தகாலம். “நஞ்சுண்டாயோ செத்தாய்’ என்பது போல்.
பிரமா இந்திரன் ழதலாந் தேவர்களால் வணங்கப்படும் பரம சிவனுடைய திருக்குமாரராயுள்ள கல்வளைப்பதி விநாயகப் பெருமானுடைய திருவடிகளைத் தியானிப்போர் பிறவித்துன்பத்தை யடையார் என்றபடி ( )
கண்டலம் போதைப் புளினமென்றோர்ந்துகங் கம்பதுங்கிக் கண்டல மர்ந்து சிறகாற்றுங் கல்வளைக் கற்பகநின் கண்டல முன்று மெனையாள்பொற் பாதமுங் காணவின்னா கண்டலன் போற்கண் படைத்திலன் வாசக் கமலத்தனே.
இ-ள்: கங்கம் கண்டலம் போதை புள் இனம் என்று ஒர்ந்து - பருந்து தாழம்பூக்களைத் (தான் பசவித்தற்கு உரிய) பறவை இனம் என்று கருதி, கண்டல் பதுங்கி அமர்ந்து சிறகு ஆற்றும் - (அவற்றைக் கவரவென்று) கண்டன் மரத்திற் பதுங்கியிருந்து சிறகை ஆற்றப்பெறும், கல்வளைக் கற்பக - கல்வளைப் பதியில் எழுந்தருளியிருக்குங் கற்பக விநாயகரே, நின் கண்டலம் முன்றும் - நுமது கண்கள் மூன்றையும், எனை ஆள் பொன் பாதமும் காண - என்னை ஆண்டருளுகின்ற பொன்போலுந் திருவடியையும் (யான்) காண, வாசக் கமலத்தன் - வாசனை பொருந்திய தாமரைப் பூவிலிருக்கின்ற பிரம தேவன், விண் ஆகண்டலன் கண் போல் - சுவர்க்கலோகத்திலுள்ள இந்திரனது ஆயிரங் கண்களைப் போல், படைத்திலன் - (எனக்குப்) படைத்தானல்லன். எ-று.
புள்ளினம் புளின மென ள கரம் தொக்கது.
கல்வளைத் தலத்தில் எழுந்தருளிய கற்பகப்பிள்ளையாரே, தேவரீருடைய அருளொழுகுந் திருவிழிகளையும் ஆண்டருளுந் திருவடிகளையுந் தமியேன் கண்ணாரத் தரிசித்தற்கு இந்திரனுக்குப் போல ஆயிரங் கண்களைப் பிரமன் தமியேனுக்குப் படைத்திலனே யென்றபடி (2)
கவானரம் பையஞ் சுரும்பு விரும்பு கருங்குழற்போ கவானரம் பைக்குலம் போற்றிட வாழ்தல்கண் ணேனினிச்சங் கவானரம் பைங்கத லிக்கனி சிந்திடுங் கல்வளைப்புங் கவாநரம் பைத்திகழ் யாழ்க்கூற் றுமையருள் காதலனே.

கல்வளையந்தாதி /5
இ-ள்: சங்க வானரம் - கூட்டமான குரங்குகள், பைங்கதலிக் கனி சிந்திடும் - பசிய வாழைகளின் கனிகளைச் சிதைக்கின்ற, கல்வளைய் புங்கவா - கல்வளைத் தலத்திற் கோயில் கொண்டருளிய பெருமானே, நரம்பு திகழ் யாழ்க் கூற்று உமை அருள் காதலனே - நரம்புகள் பொருந்திய யாழின் ஒசையை ஒத்த இனிய வர்த்தையையுடைய உமாதேவியர் பெற்றருளிய மூத்த திருக்குமாரரே, கவான் அரம்பை - தொடையாகிய வாழைத்தண்டையும், சுரும்பு விரும்பு அம் கருங்குழல் - வண்டுகள் விரும்புகின்ற அழகிய கரிய கூந்தலையும் உடைய, அரம்பைக் குலம் போற்றிட - தேவமகளிர் கூட்டம் துதிக்க, போக வான் வாழ்தல் - போகங்களை அனுபவித்தற்கு இடமாகவுள்ள விண்ணுலகத்தில் வாழ்தலையும், இனி கண்ணேன் - இனி ஒரு போதும் பெரும் பேறென மதிக்கமாட்டேன். எ-று.
அரம்பை, ப்ோகம் யாழ் என்பன ஆகுபெயர்கள். வாழ்தல் என்பதில் சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. நரம்பைத் திகழ் என்றவிடத்து ஐ சரியை.
சகல செல்வங்களும் பொருந்திய கல்வளைப் பதியில் எழுந் தருளிய பெருமானே, இந்திரபோகத்தையும் வேண்டேன்; தேவரீரு டைய திருவடிப் பேற்றையே வேண்டிநிற்கின்றேன் என்றபடி (3)
அருளத்த னந்து சிலைகதை வாள்சுட ராழிகொள்ளை யருளத்த னந்தந் தெரியா வகைநிற்கு மைம்முகனின் றருளத்த னந்த வனஞ்சூழுங் கல்வளை யண்ணலடி யருளத்த னந்தரம் வாழ்வானென்றால்வினை யஞ்சிடுமே.
இ-ள்: அருள் அத்தன் - அருட்செயலையுடைய அபயம் வரதமாகிய திருக்கரங்களையுடையவரும், நந்து சிலை கதை வாள் சுடர் ஆழி கொள் ஐயர் உள - சங்கு வில் தண்டு வாள் ஒளி பொருந்திய சக்கரம் என்னும் பஞ்சாயுதங்களைக் கொண்ட தலைவராகிய மகாவிஷ்ணுதேட, தன் அந்தம் தெரியா வகை நிற்கும் - தமது அடி அந்த விஷ்ணுவுக்குப் புலப்படா வண்ணம் பரஞ்சோதியாய் நின்றருளிய, ஜம்முகன் ஈன்று அருள் அத்தன் - ஐந்து திருமுகங்களையுடைய சிவபெருமான் தோற்றுவித்த ருளிய தெய்வம், நந்தவனம் சூழுங் கல்வளை அண்ணல் - பூந்தோட்டங்கள் சூழ்ந்துள்ள கல்வளைப்பதியிற் கோயில்கொண்ட பெருமான், அடியர் உளத்து அனந்தரம் வாழ்வான் - அடியர் மனத்தில் அநுதினமும் வசிப்பவர், என்றால் - என்று (இப்படித்) துதித்தால், வினை அஞ்சிடும் - அங்ங்னந் துதிப்போரைத் தீவினை அணுகுதற்குப் பயப்படும். எ-று.

Page 21
6/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
உள்ள என்பது உளவெனவும், தன்னந்தம் தனந்தமெனவும், நந்தனவனம் நந்தவனமெனவும் தொக்கு வந்தன. அருள் அத்தன் என்பதற்குத் திருவருளோடு கூடிய பரமபிதா எனினுமாம். ஜம்முகன் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களைக் கொண்ட சிவன்.
திருமால் தேடி யறியாத சிவபிரானின் திருக்குமாரரே, கல்வளைப் பெருமானே என்று துதிப்பவரைத் தீவினையணுகாதென்றபடி (4)
அஞ்சத் திரத்தன் முழவென வேகொதித் தார்த்துரப்பி யஞ்சத்திரத்தந் தகன்வரும் போதுன் னபயநடை யஞ்சத் திரத்த வடிவா ணயனத் தமலைபெற்ற வஞ்சத் திரத்தன் றுணைவாதென் கல்வளை யானந்தனே.
இ - ள்: அஞ்சத்து நடை - அன்னத்தின் நடையையொத்த நடையினையும், இரத்த வடிவாள் நயனத்து - இரத்தந்தோய்ந்த கூரிய வாள் போன்ற கண்ணையும் உடைய, அமலை பெற்ற - நிர்மலையாகிய உமாதேவியார் பெற்றருளிய, அம் சத்திரத்தன் துணைவா - அழகிய வேற்படையைக் கொண்ட முருகக் கடவுளின் சகோதரரே, தென்கல்வளை ஆனந்தனே - அழகு பொருந்திய கல்வளைப்பதியில் எழுந்தருளிய ஆனந்த மூர்த்தியே, திரத்து அந்தகன் - வலிமையுடைய யமன், அஞ்சு அத்திரத்தன் முழவு எனவே கொதித்து - பஞ்ச பாணங்களைக் கொண்ட மன்மதனுடைய முரசாகிய சமுத்திரம் போலக் கொதித்து, ஆர்த்துஉரப்பி - ஆரவாரஞ் செய்து உரப்பி, அஞ்ச வரும்போது - அடியேன், பயப்படும்படி வரும் அந்திய காலத்திலே, உன் அபயம் - தமியேன் தெவரீருக்கு அடைக்கலம் எ-று.
ஈற்றடியிலுள்ள அஞ்சு ஐந்து என்பதன் போலி.
உமை புத்திரராகசிய சுப்பிரமணியக் கடவுளுக்கு மூத்தவரே, கல்வளைப் பெருமானே, என்னுயிரைக் கவரும் வண்ணம் யமன் வரும்போது தமியேனைக் காத்தருள வேண்டுமென்றபடி (5)
தனந்தனந் தந்தி மருப்பன்ன மாதர் தரைவிரும்பு தனந்தனந் தந்திகழ் தண்டுறை தோறுமென் சஞ்சரிகந் தனந்தனந் தந்திமி யென்கல் வளையன்சங் கக்குழைக்கா தனந்தனந் தந்தமொன் றானென்று நெஞ்சந் தனிலுன்னுமே.

கல்வளை யந்தாதி /7
இ-ள்: தனம் - பொன்னையும், தந்தி மருப்பு அன்ன தனமாதர் - யானையின் கோட்டினையொத்த தனங்களையுடைய பெண்ணையும், தரை - மண்ணையும், விரும்புதல் நந்த - விரும்புதல் கெட, நந்தம் திகழ் தண் துறை தோறும் - சங்குகள் விளங்கும் குளிர்மையாகிய நீர்த்துறைகளில், மெல் சஞ்சரிகம் - மிருதுவாகிய வண்டுகள், தனந்தனந் தந்திமியெண் - தனந்தனந் தந்திமியென்று ரீங்காரஞ்செய்யும், கல்வளையண் - கல்வளைத் தலத்து விநாயகக் கடவுள், சங்கம் குழை காதன் நந்தன் - சங்கக் குண்டலத்தைத் தரித்த திருச்செவிகளை யுடைய பரமசிவனது திருக்குமாரர், அம் தந்தம் ஒன்றாண் - அழகிய ஒற்றைக் கொம்பினையுடையவர், என்று நெஞ்சந்தனில் உன்னும் - என்று வாக்கினாற் சொல்லி மனத்திலே தியானிக்குதிர் எ-று.
புதல்வன் என்னும் கருத்துடைய நந்தனன் நந்தன் எனத் தொக்கு வந்தது.
உலகத்திரே, பொன்னாசை பெண்ணாசை மண்ணாசை யென்னும் மூன்றும் கெடும் வண்ணம் கல்வளைப் பெருமானைத் துதித்துத் தியானிக்குதிர் என்றபடி (6)
சந்தன மின்னுபொற் கச்சணி பாரத் தனதடம்ப சந்தன மின்னிடைப் பூவஞ்சிக் கொம்பன தையலுட்க சந்தன மின்னலுற் றாள்கல் வளையன்றனதிடம்போஞ் சந்தன மின்னம் வரக்கண்டி லேமென்ன தாமதமே.
இ-ள்: மின் அன இடை வஞ்சி பூ கொம்பு அன தையல் - மின்னலை நிகர்த்த இடையினையுடைய வஞ்சிப் பூங்கொம்பை யொத்த தலைவியானவள், சந்தனம் மின்னு பொன் கச்சு அணி பாரம் தனதடம் பசந்து - சந்தனத்தையுடைய விளங்குகின்ற பொற்கச்சணியப்பட்ட பாரமாகிய தனங்கள் பசலையுற, அனம் மனம் கசந்து - அன்னத்தை யுள்வெறுத்து, இன்னல் உற்றாள் - துன்பமுற்றாள், கல்வளையன் றனது இடம் சந்து போம் அனம் - கல்வளைப்பதியை யுடையராகிய விநாயகரிடத் துத் தூது சென்ற அன்னம், இன்னும் வரக் கண்டிலேம் - இன்னமும் வரக் கண்டிலேம், என்ன தாமதம் - யாது தாமதம்? எ-று.
அன்ன, அன்ன, அன்னம், அன்னம், என்பவற்றில் னகரங்கள் இடைக்குறையாயின. சந்தனமின்னு என்றதற்கு, சந்தனம் விளங்கப் பெற்ற என்று பொருளுரைப்பினு மமையும். பசந்து - பசக்கவென்பதன் றிரிபு.

Page 22
8/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இது புறப்பொருளில் கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்தில், தலைவியுடைய வருத்தத்தைக் குறித்துத் தூதனுப்பிய அன்னத்தைக் காணாது வருந்துந் தோழியர் தம்முட் கூறுங் கூற்று. (7)
தாமதிக் காந்தச் சிலைபோன் மனத்தினைத் தந்தசைகா தாமதிக் காந்தகை மென்மொழிப் பூமின் றலைமகன்வே தாமதிக் காந்தர மாகிநின் றோன்மைந்த தண்ணிதழித் தாமதிக் காந்தம் புகழ்தல் வளையநின் றாட்கஞ்சமே.
இ-ள்: அசை காதா - அசைகின்ற காதையுடையவரே, மது இக்கு ஆம்தகை மெல்மொழி பூமியின் தலைமகன் - தேனுங் கரும்பும் (நிகர்) ஆகும் (மதுரமாகிய) தன்மையை யுடைய மென்மையாகிய மொழியினைப் பேசும் 'இலக்குமிக்கு நாயகராகிய விஷ்ணுவும், வேதா - பிரமனும், மதிக்க அந்தரமாகி நின்றோன் மைந்த - தேட மறைவாய் நின்றவராகிய பரமசிவனுடைய திருக்குமாரரே, தண் இதழித் தாம - குளிர்மை யாகிய கொன்றைப் பூமாலையை யுடையவரே, திக்கு அந்தம் புகழ் கல்வளைய - அட்டதிக்குகளின் முடிவு வரைக்கும் புகழப்படுகின்ற கல்வளைப் பதியை யுடையவரே, மதிகாந்தம் சிலை போல் மனத்தினை தந்து - சந்திரகாந்தக் கல்லையொத்த உருகும் மனத்தை முன்னர்த் தந்து (நுமக் கண்பனாக்கி), நின் தாள் கஞ்சம் தா -நுமது திருவடித் தாமரைப் பூவைப் பின்னர்த் தந்தருளுவீர் எ-று.
இச்செய்யுள் பூட்டுவிற்பொருள்கோள். பூவின்றலைமகன் என்று பாடமாயின் பூமிதேவிக்கு நாயகர் என்று பொருளுரைக்க. மதிக்காந்தரம் என்பது மரூஉ மொழி. திக்காந்தம் நீட்டல் விகாரம் பெற்றது. இதழி, கஞ்சம்: ஆகுபெயர்கள். மேல் இவ்வாறு பெருவழக்காவரும் ஆகுபெயர்களை உய்த்துணர்ந்து கொள்க.
அரிபிரமர் தேடிக்கான முடியாத பரமசிவனது திருக்குமாரரே, தேவரீரிடத்து இடையறாப் பத்தி பாராட்டுதற்கான மனத்தைத்தந்து, பின்னர் உமது திருவடி நீழலிற் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனப் பெருமானை இரந்தவாறாம். (8)
கஞ்சக் கரந்தனின் முவிலை வேல்கும்பங் கார்முகஞ்சங் கஞ்சக் கரங்கதை மாதுள மேந்தி கவின்களம்பூ கஞ்சக் கரம்பயில் வேல்வல வைக்கொரு காந்தன்பொன்னா கஞ்சக் கரப்புவி கும்பிடுங் கல்வளைக் கைவரையே.

கல்வளையந்தாதி /9
இ-ள்: கஞ்சக் கரந்தனில் - தாமரை மலர்போன்ற கைகளில், முவிலைவேல் - சூலாயுதத்தையும், கும்பம் - பூரண கலசத்தையும், கார்முகம் - கரும்புவில்லையும், சங்கு - சங்கினையும், அம் சக்கரம் - அழகிய சக்கராயுதத்தையும், கதை - தண்டாயுதத்தையும், மாதுளம் - மாதுளங் கனியையும், ஏந்தி - தரித்தவர், கவின் களம் பூகம் - அழகிய கழுத்து கமுகு, சக்கு அரம்பயில் வேல் - கண்கள் அரத்தால் அராவப்பட்ட வேல்கள் என்று கூறத்தக்க, வலவைக்கு - வல்லபாம் பிகைக்கு, ஒரு காந்தன் - ஒப்பற்ற நாயகர், பொன் நாகம் சக்கரப் புவி கும்பிடும் - பொன்னுலகத்தாரும் பாதாள லோகத்தாரும் வட்டமாகிய பூவுலகத்தாரும் வணங்குகின்ற, கலவளைக் கைவரை - கல்வளைப்பதியி லெழுந்தருளியிரா நின்ற ஆனைமுகக்கடவுள் எ-று.
கல்வளைக் கைவரை ஏந்தி, காந்தன் என மாற்றி யியைக்க. இப்பெருமான் சூலம் முதலியவற்றை ஏந்தியுள்ளா ரென்பதனை விநாயக சகஸ்ரநாமத்துக் காண்க. சக்கு -சக்ஷ என்னும் வடமொழிச் சிதைவு, களம் பூகம், சக்கு வேல் என்பன உருவகவணி. நாகம் - பாதாள லோகம். பொன் முதலிய மூன்றும் ஆகுபெயராய் அவ்வவ் வுலகத்தினரைக் குறித்து நின்றன.
கல்வளைப் பதியில் எழுந்தருளிய விநாயகப் பெருமான் பூவுலகத்தாராலும் வணங்கப்பெற்றவர், சூலம் முதலியனவற்றைத் தரித்தவர், வல்லபாம்பிகைக்கு நாயகராயுள்ளார் என்றபடி (9)
வரையாரம் பாலன்ன தோணகை வாணி வலவைகண வரையாரம் பார்சடை யார்கல் வளைவெற்ப வண்ணமுத்தேன் வரையாரம் பாளிதப் பூட்கொங்கை மீது வயங்குதொய்யில் வரையாரம் பால விழியா ஸ்ரீடையின் வறுமைகன்ைடே.
இ-ள்: வரை ஆரம் பால் அன்ன தோள் நகை வாணி வலவை கணவர் - மூங்கிலும் முத்தும் பசுப்பாலும் போன்ற தோள்களும் பற்களும் வார்த்தையும் முறையே உடைய வல்லவையென்னுந் தேவிக்குத் தலைவரும், ஐ ஆர் அம்பு ஆர் சடையார் - அழகிய ஆத்திப் பூமாலையும் கங்கையும் விளங்கும் சடையினை உடையவருமாகிய விநாயகக் கடவுளுடைய, கல்வளை வெற்ப - கல்வளைப் பதியில் வசிக்கும் பொருப்பனே. அம்பு ஆல விழியாள் இடையின் வறுமை கண்டு - அம்பையும் நஞ்சையும் ஒத்த கண்ணையுடைய தலைவியினது இடையின் மெலிவை மதித்து,

Page 23
O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பூண் கொங்கை மீது - ஆபரணம் படிந்த அவளுடைய தனங்களில், பாளிதம் வரை ஆரம் வயங்கு தொய்யில் வரையார் - (செவிலித்தாயர்) பச்சைக் கருப்பூரம் விரவிய மலை இடமாய சந்தனக்குழம்பு அப்புதலையும் விளங்குகின்ற தொய்யில் எழுதுதலையுஞ் செய்திலர், வண்ணம் முத்து ஏன் - அங்ங்னமாக நீ கையுறையாகக் கொண்டு வந்த வெண்ணிறமான முத்துமாலை அவளுக்கு எதன்பொருட்டு எ~று.
இழிவு சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. வறுமை, சிறுமை என்னும் பொருளில் வருதலை “வறிது நகை தோற்றல்” என்பதிற் காண்க. இஃது அகப்பொருளில் பாங்கி கையுறை மறுத்தற் கிளவியாகும்.
மெலிவடைந்த தலைவியின் மருங்குல் இற்று விடுமென்ற அச்சத்தினால் அன்னையர் சந்தனக்குழம்பு முதலியவற்றை அவள் மார்பில் அப்பாதொழிந்தனர். அங்ங்னமாக தலைவனாகிய நீ கொண்டு வந்த கையுறையாயுள்ள முத்தாரம் இவளுக்கு எதன் பொருட்டு எனப் பாங்கியர் மறுத்தன ரென்றபடி (lO)
மைக்கண்ட னேறிய தேரச் சறுக்கும் வரதன்வெந்தீ மைக்கண்ட நம்மையொட் டாவைாங் கரத்தன்னல் வாழுமிடம் மைக்கண் டவள நகையார் குடையு மடுவினிம்மா மைக்கண்ட னிழலிற் சங்கீனுந் தென்கல் வளைப்பதியே.
இ-ள்: மை கண்டன் ஏறிய தேர் அச்சு அறுக்கும் வரதன் - திருநீலகண்டராகிய பரமசிவன் எழுந்தருளிய தேரின் அச்சு ஒடியும்படி செய்தருளிய வரதமூர்த்தியும், வெம் தீமைக்கு அண்ட நம்மை ஒட்டா ஐங்கரத்து அண்ணல் - கொடிய தீநெறிக் கண் அடியேமைச் செல்லவொட்டாது தடுத்தருளும் எமது தலைவருமாகிய விநாயகப் பெருமான், வாழும் இடம் - கோயில் கொண்டருளிய தலம், (எதுவென்னில்); மை கண் தவளம் நகையார் குடையும் மடுவினில் - அஞ்சனந் தீட்டப்பெற்ற கண்களையும் வெள்ளிய பற்களையுமுடைய மகளிர் புனலாடுந் தடாகத்தில், மாமை கண்டல் நீழலில் - அழகாகிய தாழை மரநீழலில், சங்கு ஈனும் தென் கல்வளைப் பதியே - சங்குகள் முத்துக்களை ஈனும் சிறப்புடைய கல்வளை என்னுந் திருப்பதியாகும் எ-று.
அரிபிரமேந்திராதி தேவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து
பரமேசுவரன், பூமியைத் தேராகவும் சந்திர சூரியர்களைச் சிற்களாகவும் வேதங்களைப் பரிகளாகவும் பிரமதேவரைப் பாகனாகவும் மேருமலையை

கல்வளை யந்தாதி /
வில்லாகவும் திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுர தகனஞ் செய்யும்படி புறப்பட்ட பொழுளுது அத்தேர் உருள்தலின்றி அச்சு ஒடிந்துவிட, இஃ து ஐங்கரக் கடவுளை அலட்சியஞ் செய்தமையினால் அப்பெருமான் செய்த இடையூறாகு மெனத் தேவர்கள் உணர்ந்து அவரைப் பூசித்து வேண்ட, சிவபிரானும் தமது மூத்த திருக்குமாரருக்குப் பல வரங்களை உதவ, தேர் இடையூறு நீங்கி விரைந்து சென்றதென்பது சரித்திரம். இதன் விரிவை விநாயக புராணம், உபதேசகாண்டம் முதலிய நூல்களுட் காண்க. மாமை அழகைக் குறிக்கும் ஒருசொல். வெந்தீமைக்கு என்பதில் கு உருபு கண்ணுருபின் திரியாகும்.
திருநீலகண்டராகிய பரமேசுவரன் எழுந்தருளிய தேரின் அச்சினை இறச்செய்து பின்னர்த் தேவர் வேண்டுகோளின்படி அந்த இடையூற்றை நீக்கியருளிய கணபதி கோயில் கொண்டருளிய திருப்பதி, தாழைமர நீழலிற் சங்குகள் முத்தீனும் நீர்வளம் பொருந்திய கல்வளையென்னுந் தலமாம் என்றபடி (ll)
கல்வளை யாத விரும்புநெஞ் சேகைய ரோடுறவா கல்வளை யார்சுனை வாயரக் காம்பல்செங் காவியின்பக் கல்வளை யார நிலாவீச விள்ளுங் கழனிசுற்றுங் கல்வளை யானங் குசபாச மேந்துங் கரன்புகழே.
இ-ள்: வளையாத இரும்பு நெஞ்சே - இலகுவில் இளகுதலில்லாத இரும்பை யொத்த கடினமான மனமே, கையரோடு உறவு அகல் - கீழ் மக்களுடன் நட்புக் கொள்ளற்க, வளை ஆர் சுனைவாய் - வள்ளிக்கொடி படர்ந்த நீர்ச்சுனையின்கண், அரக்காம்பல் செம் காவியின் பக்கல் - சேதாம்பல் செங்கழுநீர் என்னுமிவைகளின் அயலேயுள்ள, வளை ஆரம் நிலா வீச - சங்கீன்ற முத்துக்கள் நிலவைப்பரப்ப, விள்ளும் - அந்நிலவைக் கண்டு அவை இரண்டும் மலரும், கழனி சுற்றும் - வயல்கள் சூழப்பெற்ற, கல்வளையான் - கல்வளைப்பதியில் எழுந்தருளியவரும், அங்குசம் பாசம் ஏந்துங் கரன் - அங்குசம் பாசம் என்னுமிவைகளைப் பரித்த திருக்கரங்களை உடையவருமாகிய பிள்ளையாரின், புகழே கல் - கீர்த்திப் பிரவாகமாயுள்ள தோத்திரங்களையே ஒது எ - று.
உறவாகல், என்பதில் ஆகல் எதிர்மறை வியங்கோள். வள்ளையார் என்பது வளையார் எனத்தொக்கு வந்தது.
கசிவற்ற மனமே, கீழ்மக்கள் சகவாசத்தை விடுத்துக் கல்வளைப் பெருமான் திருப்புகழைச் சிந்திப்பாயாக என்றபடி (19)

Page 24
12/ நல்லுள் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
கரும்பனை யத்தனைப் பூவே ழிடந்தசெங் கண்விடைப்பா கரும்பனை யத்துவக் கிர்த்துடல் போர்த்த கடவுண்மொழிக் கரும்பனை யத்தர்கை மாங்கனி வாங்கிய கல்வளைமா கரும்பனை யத்தனை யான்மற வேன்புன் கவிதைகொண்டே.
இ-ள்: கரும்பனை அத்தனை - கருமையாகிய பனையை ஒத்த திருக்கரத்தை யுடையவரும், ஏழ் பூ இடந்த செம் கண் விடைப்பாகள் - கீழ் ஏழு உலகங்களையும் பன்றி வடிவாக அகழ்ந்து சென்ற செந்தாமரைப் பூப்போலுங் கண்களை யுடைய திருமாலாகிய இடபத்தை வாகனமாகக் கொண்டவர், உம்பல் நையத் துவக்கு ஈர்த்து - கயாசுரனென்னும் யானையானது வேதனையுற அதன் தோலினை யுரித்து, உடல் போர்த்த கடவுள் - தமது திருமேனியிலே போர்த்தருளிய தெய்வம், கரும்பு மொழி அனை அத்தர் கை - கரும்பு ரசம் போன்ற தித்திக்கும் மொழியினையுடைய உலகமாதாவாகிய உமா தேவியாரை வாமபாகத்திற் கொண்ட பரமசிவனுடைய திருக் கரத்திலுள்ள, மாங்கனி வாங்கிய - மாம்பழத்தைப் பெற்ற, கல்வளை மாகள் உம்பனை - கல்வளைப் பதியில் எழுந்தருளிய தேவதேவனை, அத்தனை - பரமபிதாவை, புன்கவிதை கொண்டே - புல்லிய நரஸ்துதி பாடுவதில் ஈடுபட்டு (அதனால்), யான் மறவேன் - தோத்திரஞ் செய்வதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் எ - று.
முன்னொருகாலத்திற் சோதிவடிவாய்த் தோன்றிய பரமேசுவரனுடைய திருவடியைக் காணுவான் வேண்டித் திருமால் சுவேதவராக (வெண்ணி றமான பன்றி) வடிவுகொண்டு கீழ் ஏழ் உலகத்தையும் அகழ்ந்து சென்ற மையின், “பூவேழிடந்த செங்கண் விடை’ எனப்பட்டது. திருமால் தவங்கிடந்து பரமேசுவரனுக்கு வாகனமான வரலாற்றைக் கந்தபுராணம் - ததீசியுத்தரப்படலம் முதலியவற்றுட் காண்க. யானை வடிவங்கொண்ட கயன் என்னும் அசுரன் முனிவர்களை வருத்த, அவர்கள் காசி சேஷத்திரத்திற் சென்று விசுவநாதப் பெருமானாரைச் சரணடைய, பெருமானார் அக்கயாசுரனைக் கொன்று தோலை உரித்துத் தரித்தருளின ரென்பது சரித்திரம். மொழிக் கரும்பனை யென்பதில், அன்னை, அணை யெனத் தொக்குவந்தது. அத்தர் - பரமசிவன், இதனை “அத்தர் தந்த அருட்பாற்கடல் 800’ எனப் பெரிய புராணத்திற் காண்க. முன்னொருகாலத்திற் சிவபிரான் ஒரு திருவிளையாடலைத் திருவுளத்திற் கொண்டு தமது திருக்கரத்தில் ஒரு மாங்கனியைக் கொண்டவராய், விநாயகர் சுப்பிரமணியர் என்னும் இருதிருக்குமாரர்களையும் ந்ோக்கி, “உங்களுள் எவர் விரைவில் இப்பூவுலகை வலஞ்செய்து வருவீரோ அவருக்கே இம்மாங்கனியை

கல்வளை யந்தாதி /3
உதவுவேம்’ என்று திருவாய் மலர்ந்தருள, பாலசுப்பிரமணியப் பெருமான் உடனே மயின்மீது எழுந்தருளிப் பூமியை வலஞ் செய்யும் வண்ணம் புறப்பட, விநாயகப் பெருமான், “எல்லா வுலகமுமானாய் நீயே’ என்றபடி, பரமசிவனை வலம்வரின் சகல உலகங்களையும் வலஞ் செய்தமைக்குச் சமமாகுமெனத் திருவுள்ளத்திற் கொண்டு அப்படியே உபாயமாக அப்பெருமானை வலஞ்செய்து முந்தி வந்து மாங்கனியைப் பெற்றாராதலின், 'மாங்கனி வாங்கிய கல்வளை மாகரும்பனை.’ என்றார். “பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவிர்காள்’ என்று பெரியாரும் பணித்தமையின், “யான் மறவேன் புன்கவிதை கொண்டே” என்பதற்கு, நரஸ்துதி பாடுவதில் ஈடுபட்டுத் தேவரீரைப்பாட மறக்கமாட்டேன் எனப் பொருள் கொள்ளப்பட்டது.
சிவபிரானிடத்தில் மாங்கனி வாங்கிய கல்வளைப் பெருமானே, தேவரீரைப் பாடுதலாகிய திருத்தொண்டைத் தமியேன் ஒரு காலத்தும் மறவேன் என்றபடி (13)
கவிநா யகன்றிடு வாய்க்கிரைப் பண்டங் கறையிரத்தக் கவினா யகன்மக் குடம்பையை விக்கியென் கண்டபயன் கவிநாயகன்றொழும் ராமன் கொலைப்பவங் காய்ந்திடுதுங் கவிநா யகதிருக் கல்வளை வாழுங் கணபதியே.
இ-ள்: கவிநாயகன் தொழும் - குரங்குகளுக்குத் தலைவனாகிய அனுமன் வணங்கும், ராமன் கொலைப்பவம் காய்ந்திடும் - இராம பிரானுடைய பிரமகத்தி தோஷத்தை ஒழித்தருளிய, துங்க விநாயக - நிர்மலமான வீரகத்தி விமோசனரே, திருக்கல்வளை வாழும் கணபதியே - சிறப்போடு கூடிய கல்வளைப் பதியிற் கோயில் கொண்டருளிய கணேசப் பெருமானே, நாய் கவி அகன்றிடு வாய்க்கு இரைப்பண்டம் - நாயானது கெளவிக் கொண்டு ஒடும்போது அதன் வாய்க்கு உணவுப் பொருளாயுள்ளதும், கறை இரத்தம் ஆய கன்மக் குடம்பை - கறையாகிய இரத்தத்தினால் அழகு பெற்ற கன்மக் கூடாகிய உடலை, விக்கி - பருக்கச் செய்து, கண்ட பயன் என் - பாவியேன் எடுத்த பலன்தானென்னை எ - று.
கவ்வி கவியெனத் தொக்கது. கறை இரத்தம், இருபெயரொட்டு. என் என்னும் விகுதி எதிர்மறைப் பொருளில் வந்தது, பயன் ஏதுமில்லை என்றபடி, கவிநாயகன் என்பதற்கு குரக்கரசனாகிய சுக்கிரீவன் எனக் கொள்ளினுமாம். கொலைப் பவங் காய்ந்திடு துங்கவிநாயகர் - வீரகத்தி (விமோசன)ப்

Page 25
14/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பிள்ளையார். இராவணன் புலத்திய முனிவர் வழித்தோன்ற லாதலின் அவனைச் சம்மாரஞ் செய்தவுடன் பிரமகத்தி தோஷம் இராமபிரானைப் பீடித்து வருத்த, அவர் இராமலிங்கப் பிரதிட்டை செய்து பூசித்து அத்தோஷம் நீங்கப் பெற்றனரென்பது சேது புராணம்.
ழரீராமரும் வணங்கும் வீரகத்தி விநாயகரே, கல்வளைக் கணேச மூர்த்தியே, தேவரீருக்குத் தொண்டு செய்தற்கின்றி இவ்வுடலை போஷித்து வளர்ப்பதினால் நான் அடையக் கூடிய பயன் யாதுமில்லை என்றபடி (14)
கணத்தலை வன்குழு விப்பிறைக் கோட்டன் கதிர்மணிப்பைக் கணத்தலை வன்ன்ச் சராக்கச் சரையன் களமரில்லாங் கணத்தலை வன்ன வளையூருங் கல்வளை காணிலரைக் கணத்தலை வற்பகை முன்பனி மானுங் கருகிடினே.
இ-ள்: கணத் தலைவன் - பூத கணங்களுக்குத் தலைவரும், குழவிப் பிறைக் கோட்டன் - இளமையாகிய பிறைச்சந்திரனை யொத்த கொம்பினையுடையவரும், கதிர் மனியை கணத்தலை வல்நச்சு அராக் கச்சு - ஒளியையுடைய இரத்தினத்தையும் படத்தினையும் பல தலைகளையும் கொடிய விஷத்தையும் உடைய பாம்பைக் கச்சாகத் தரித்த, அரையன் - திருவரையை யுடையவருமாகிய விநாயகப் பெருமான் (கோயில் கொண்ட ருளிய) களமர் இல் அங்கணத்தலை வன்ன வளை ஊரும் கல்வளை காணில் - வேளாளர் வீட்டு முற்றத்தில் அழகிய சங்குகளுருகின்ற கல்வளைப்பதியைத் தரிசித்தால், அலைவு - அப்படித் தரிசிப்பவரது துன்பம், கருதிடில் - ஆராயுங்கால், அரைக் கணத்து - அரைக்கண நேரத்துள், அற்பகை முன் பனி மானும் - சூரியன் முன்னிலையிற் பனி நீங்குதல் போல நீக்கி விடும் எ-று.
அரைக்கணம், ஈண்டு அற்ப நேரத்தைக் குறித்து நின்றது.
விநாயகக் கடவுள் கோயில் கொண்டருளிய கல்வளைப் பதியைத் தரிசிப்போரை, அவர் தீவினை விரைவில் விட்டகலு மென்றபடி (15)
கரியா னனத்தன் றொழுபதம் வேண்டிக்கன் ணார்பவஞ்சங் கரியான னத்த மவர்க்கிழைப் பான்கடற் காசினிக்கோர் கரியா னநத்தம் புரைகோட்டுக் கல்வளைக் கன்னமத கரியா னனத்தன் புகழ்பாடி யுள்ளங் கசிந்திடுமே.

கல்வளையந்தாதி /5
இ-ள்: கரியான் அனத்தன் தொழும் - மேகவர்ணராகிய திருமாலும் அன்ன வாகனத்தை யுடைய பிரமாவும் வணங்கு கின்ற, பதம் வேண்டிக் கண் ஆர் பவம் சங்கரியான் - தமது திருவடிகளைப் பக்தி பூர்வமாகத் தியானஞ் செய்யாதவர்களுடைய பிறவியைக் களையாதவரும், அவர்க்கு அனத்தம் இழைப்பான் - அங்ங்ணம் வணங்காதவர்க்கு இடரை ஆக்கு பவரும், கடல் காசினிக்கு ஓர் கரியான கல்வளை - கடலினாற் சூழப்பெற்ற இப் பூமிக்கு ஒரு சாட்சியாக (ஆதாரமாக) விளங்கு கின்ற கல்வளைப் பதியில் எழுந்தருளிய, நத்தம் புரை கோட்டுக் கன்ன மதகரி ஆனனத்தன் - சங்கினை ஒத்த வெள்ளிய திருமருப்பையும் கன்ன மதத்தையும் பொருந்திய யானை முகத்தையுடையவருமாகிய விக்கிநேசுவரக் கடவுளது, புகழ்பாடி உள்ளம் கசிந்திடுமே - கீர்த்திப்பிரபாவத்தை ஸ்தோத்திரமாகப் பாடி மன முருகுவீராக எ-று.
தம்மை வழிபடுவோர்க்கு விக்கினங்களை நீக்கி வழிபடார்க்கு விக்கினங்களை யாக்குதலின் விநாயகக் கடவுளுக்கு விக்கிநேசுவரன் எனவும் ஒரு திருநாமம் உண்டு. தம்மை வழிபடார்க்கு விக்கினங்களை யாக்குதல் இறைவனுக்கு முறையாகு மோவெனின், அற்றன்று; பாசத்தினாற் பந்திக்கப்பட்ட ஆன்மாக்களை ஈடேற்றுதற்கு அப்பெருமான் இயற்றியருளும் மறக்கருணை முறை அதுவாகும்.
உலகத்தீரே! தம்மை வழிபடுவோருக்கு வருந்துன்பங்களை நீக்குபவரும், வழிபடாதார்க்குத் துன்பங்களை ஆக்குபவருமாகிய கல்வளை விக்கிநேசுவரனைப் பக்தியோடு தோத்திரஞ் செய்து கடைத் தேறுதிர் என்றபடி (16)
சிந்தா மணிதென்ற லன்றி னிலாப்பகை செய்யவணி சிந்தா மணிமுலை வாடின ளேழு செகமளந்த சிந்தா மணிதுள வன்றேடு கல்வளைச் செய்யவருட் சிந்தா மணிவரக் காணோம் பயோதரச் செல்லினமே.
இ-ள்: சிந்து ஆ மணி தென்றல் அன்றில் நிலா - கடலும் பசுவிற்கட்டப்பட்ட மணியும் தென்றலும் அன்றிற்பறவையும் சந்திரனும், பகை செய்ய - பகையைச் செய்ய (வருத்த), மணி முலை அணி சிந்தா வாடினள் - அழகிய ஸ்தனங்களை யுடைய தலைவி தன் அழகு முழுவதும் கெடும்படி வாட்ட மடைந்தாள், பயோதரச் செல்லினமே - குற்கொண்ட முகிற் கூட்டங்களே, ஏழு செகம் அளந்த - சத்த தீவுகளைக் கொண்ட இப்பூமியை ஒரு அடியால் அளந்த, சிந்து ஆம் அணி துளவன்

Page 26
16/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தேடு - வாமன வடிவங் கொண்ட துளசிப் பூமாலையை அணிந்த திருமாலுந் தேடுகின்ற, கல்வளைச் செய்ய அருள் சிந்தாமணி வரக்காணோம் - கல்வளைப்பதியிற் கோயில் கொண்டருளிய செவ்விய அருளோடு கூடிய சிந்தாமணி விநாயகப் பெருமான் இன்னமும் வரக் கண்டிலேம். எ-று.
நிலா, ஏழு, சிந்தாமணி என்பன ஆகுபெயர்கள். மணிமுலை - அன்மொழித்தொகை. புன்மேய்ந்துவிட்டு மாலைக்காலத்தில் மீண்டும் வரும் பசுவிற் கட்டப்பட்ட மணியின் ஒசையும் விகாரத்தை ஆக்குமென்பது பொருணுல். அன்பர்கள் நினைத்தவற்றை அருளுதல் பற்றி, சிந்தாமணிபோலும் எனப்பட்டது.
தலைவன் பிரிவினால், தலைவியானவள், கடல் தென்றல் அன்றில் சந்திரன் என்னுமிவற்றால் வருந்த, பாங்கியர் அவள் வருத்தத்தை முகிலினங்களுக்கு எடுத்துரைத்தபடி (17)
தரங்க வளக்க ரொலிவே யிசைநண் தாக்கத்துப்ப தரங்க வளக்கரிக் கொங்கைக் குதவிலன் றாரைநிரந் தரங்க வலைப்பட வென்னை விடாமத தந்திசொல்லாந் தரங்க வளக்கல் வளைப்பதி மேவிய தற்பரனே.
இ-ள்: தரங்க அளக்கள் ஒலி வேய் இசை நனி தாக்க - திரையையுடைய கடலொலியும் வேய்ங்குழலோசையும் (எமது தலைவியை) மிகவுந் தாக்க, (அதனை யாமனுப்பிய தூதா லறிந்தும்) துப்பு அதரம் கவளக் கரிக் கொங்கைக்கு - பவளம் போலும் அதரத்தினையும் கவள உணவைக் கொள்ளுகின்ற யானைக்கோடுபோலுந் தனத்தினையுமுடைய அத்தலைவிக்கு, நிரந்தரம் கவலைப்பட என்னைவிடா மத தந்தி - எப்பொழுதும் கவலைப்பட என்னைவிடாத மதயானையும், சொல் ஆந்தரங்க வளக் கல்வளைப்பதி மேவிய தற்பரன் - (புகழ்ந்து) சொல்லப்படுகின்ற உச்சிதமாகிய வளத்தினையுடைய கல்வளைப் பதியில் வாழும் ஆன்மநாயகருமாகிய விநாயகக் கடவுள், தாரை உதவிலன் - (தமது) மாலையைக் கொடுக்கின்றிலர் (அவரது திருவுள்ளம் இருந்தபடி யென்னை?) எ - று.
வேய், ஆகுபெயர். அதரங்கவளம், மெலிக்கும் வழி மெலித்தல். யானை மான் ஆதிய சில பொருள்களின் ஒவ்வோருறுப்பு மகளிரது ஒவ்வொர் உறுப்புக்கு நிகராகவும், முதல் சினைகளின் ஒற்றுமைபற்றி அம்முதற்பொருள்களை உவமைப் பொருள்களாக வழங்கலும் புலவர்

கல்வளை யந்தாதி /7
வழக்காதலிற் கரிக் கொங்கையெனப்பட்டது; ஆகுபெயரெனினுமாம்.
இதுவும் மேற்படி மானுடப்பெண்டிர் நயந்தபக்கத்தில் தலைவிக்கு மாலையைக் கொடாத தலைவனாகிய விநாயகக் கடவுளது நெஞ்சத்தின் வன்மையைத் தோழியர் தம்முட் கூறியபடி (18)
பரசங்க முத்தமிழ் கல்லா வெனையனைப் பாவிதிகம் பரசங் கரவென்று மெய்ந்நொந்து பெற்ற பலனன்றுதா பரசங் கமவுயி ருக்குயி ராய பரஞ்சுடரே பரசங்க மாறந்தனர்போற்றுங் கல்வளைப் பண்ணவனே.
இ-ள்: தாபர சங்கம உயிருக்கு உயிர் ஆய பரஞ்சுடரே - அசரமுஞ் சரமுமாகிய இருவகை உயிர்களுக்கும் உயிராகிய பரஞ்சோதியே, பரசு ஆறு அங்க அந்தணர் போற்றும் கல்வளைப் பண்ணவனே - துதிக்கப்படுகின்ற வேதாங்கங்கள் ஆறையும் உணர்ந்த மறையவர்கள் போற்றும் கல்வளைப் பதியில் எழுந்தருளியிருக்கின்ற விநாயகத் தெய்வமே, பரசங்க முத்தமிழ் கல்லா எனை - மேலான சங்கப்புலவரால் ஆராயப்பட்ட முத்தமிழ் நூல்களைக் கல்லாத என்னை, பாவி அனை - பாவியாகிய என் அன்னை, திகம்பர சங்கர என்று மெய் நொந்து பெற்ற பலன் நன்று - திகம்பரரே சங்கரரே யென்று துதித்து வயிறுநொந்து பெற்ற பலன் நல்லது எ- று.
சங்கம், தமிழ்: ஆகுபெயர்கள். முத்தமிழ் இயல் இசை நாடகம். என்னை என்பதில் னகரந் தொகுத்தது. மூடப்பிள்ளையைப் பெற்றமையாற் பாவியன்னையென்றார். அனை இடைக்குறை. நன்று, தீது என்னும் பொருளில் வந்தது. திகம்பரன், திக்கை ஆடையாகத் தரித்தவன். சங்கரன் - உயிர்களுக்கு இதத்தைச் செய்பவன்.
சராசரங்களுக்குத் தலைவராயுள்ள சோதி சொரூபரே, வேதாங்கம் ஆறும் உணர்ந்த அந்தணர் போற்றும் கல்வளைப் பெருமானே, கல்வி யறிவும் தேவரீரிடத்து அன்புமில்லாத என்னை என் தாய் வருந்திப் பெற்றதனால் அடைந்த பயன் யாதுமில்லை என்றபடி (19)
அவலம் புரிமுக் குறும்பைந்து யூத மடக்கிமென்று யவலம் புரிமலர் தூய்த்தொழு தேத்த வருண்மெய்யர்மெய் யவலம் புரிமருப் புத்தக ரூரு மறுமுகன்முன் னவலம் புரிவயற் கல்வளை யாலயத் தாதிக்கனே.

Page 27
18/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: மெய்யர் மெய்ய - மெய்யர்க்கு மெய்யனே, வலம் புரி மருப்புத் தகள் ஊரும் அறுமுகன் முன்ன - வெற்றியைத் தருகின்ற கொம்பினை யுடைய ஆட்டுக்கடாவை வாகனமாகச் செலுத்திய சண்முகப்பெருமானுக்கு மூத்தவரே, வலம்புரி வயல் கல்வளை ஆலயத்து ஆதிக்கனே - சங்குகள் சஞ்சரிக்கும் வயல்சூழ்ந்த கல்வளைப் பதியில் எழுந்தருளிய தலைவரே, அவலம் புரி முக்குறும்பு ஐந்து யூத மடக்கி - துன்பத்தை ஆக்குகின்ற காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங் களையும் சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் ஐம்புலன்களையும் அடக்கி, மெல் தூய வலம்புரி மலர் தூய் - மிருது வாகிய பரிசுத்தமுள்ள நந்தியாவர்த்த மலர்களைக் கொண்டு அர்ச்சனைசெய்து, தொழுது ஏத்த அருள் - தேவரீரை வணங்கித் தோத்திரஞ் செய்ய அடியேனுக்கு அருள்புரிவீராக எ-று.
நாரதமுனிவர் செய்த யாகாக்கினியிற் றோன்றி உயிர்கட்கு அநர்த்தம் விளைத்த ஆட்டுக்கடாவை முருகக்கடவுள் அடக்கித் தமக்கு வாகனமாகக் கொண்டருளினராதலின், தகர் ஊரும் அறுமுகன் என்றார். இதன் விரிவைக் கந்தபுராணம் - தகரேறு படலத்திற் காண்க. முன்னவ என்பது முன்ன என வந்தது. அவனருளாலே அவன்றாள் வணங்க வேண்டுமாதலின் மலர் தூய்த் தொழுது ஏத்த அருள் என்றார். புலன்களைப் பூதம் என்று காரண காரிய ஒற்றுமை நயம்பற்றி உபசரிக்கப்பட்டது.
அறுமுகத் தெய்வத்துக்கு மூத்தவரே, தமியேன் முக்குறும் பெறிந்து ஐம்புலன் அடக்கித் தேவரீரை அர்ச்சித்து வழிபட்டுத் தோத்திரஞ் செய்தற்கு தேவரீரே அடியேனுக்கு அனுக்கிரகஞ் செய்ய வேண்டும் என்றபடி (2O)
திக்குடை யானடி யைப்போற்றிப் பூவலஞ் சென்றுசெஞ்சோ திக்குடை நீழலின் மேவந்த னிர்செய்யு விரென்றன்பத் திக்குடை யான்கல் வளையான் சிலம்பினிற் றேன்பண்ணையோ திக்குடை யோதிச்செங் காலியுங் காளையுஞ் சென்றதுவே.
இ- ள் : திக்கு உடையான் அடியைப் போற்றி - திக்கை ஆடையாகவுடைய பரமசிவனுடைய திருவடிகளைப் போற்றி, செம் சோதிக் குடை நீழலில் பூவலம் சென்று மேவும் அந்தணி - செவ்வொளியோடு கூடிய குடைநீழலில் பூமியைப் பிரதசஷணம் செய்கின்ற அழகிய தண்ணளியை யுடையவர்களே, என்றன் பத்திக்குடையான் - தமியேன் பத்திசெய்தற்

கல்வளையந்தாதி /9
குரியவரும், கல்வளையான் - கல்வளைப்பதியில் எழுந்தருளியவருமாகிய பிள்ளையாரின், சிலம்பினில் - மலையில், தேன்பண்ணை ஒதிக்குடை - வண்டுகள் இசையைப் பாடிக்கொண்டு கிண்டப்பெறும், ஒதிச் செம்காலியும் - கூந்தலையும் சிவந்த அடிகளையு முடையவளாகிய தலைவியும், காளையும் - தலைவனும், சென்றது செய்யுவின் - கூடிச் சென்றதைக் கண்டீரோ சொல்லுங்கள் எ-று.
இஃது ஆற்றிடை முக்கோற் பகவரை வினாவியபடி (21)
வேதா ரணிய முறைவேயின் முத்தருள் வேழமுய்ய வேதா ரணியம்பொ னாடேத்து கல்வளை வெற்பன்னமே வேதா ரணிய மலைதிருக் கோயில் விளங்கநின்பால் வேதா ரணியந்த காரநம் பாலில் விதித்தனனே.
இ-ள்: வேதாரணியம் உறை வேயின் முத்து அருள் வேழம் - திருமறைக்காடு என்னுந் தலத்தில் எழுந்தருளிய மூங்கிலிற் றோன்றிய முத்தராகிய ஈசுவரன் பெற்றருளிய யானைமுகக் கடவுளுடைய, தாரணி அம் பொன் நாடு உய்யவே ஏத்து கல்வளை வெற்பு அன்னமே - மண்ணுலகத்தாரும் அழகிய விண்ணுலகத்தாரும் தாம் ஈடேறும் வண்ணம் துதிக்கின்ற கல்வளைப்பொருப்பில் வாழும் அன்னம் போன்றவளே, வேதா - பிரமதேவர், இரணிய மலை திருக்கோயில் நின்பால் விளங்க - பொன்மலையாகிய தனமும் இலக்குமிக்கு இடமாயுள்ள செந்தாமரைப்பூவாகிய முகமும் உன்னிடத்தில் விளங்கவும், தார் வேய் அணி அந்தகாரம் நம்பால் விதித்தனன் - மாலை தரித்த அடர்ந்த இருளாகிய கூந்தலை (நான் காணும்படி) என் பக்கல் விதித்தார் எ-று.
தாரணி, பொன்னாடு, அன்னம், இரணியமலை, திருக்கோயில், அந்தகாரம் என்னுமிவை ஆகுபெயர்கள். இஃது இடையூறு கிளத்தற்கிளவியின் பாற்று. (வேதாரணியேசுவரிடத்து இவ்வாசிரியர் விசேடபக்தியுள்ளவ ரென்பது இச்செய்யுளாலும், இவர் அவ்வீசுவரர் மீது மறைசை யந்தாதி பாடியமையினாலும் புலப்படக்கிடக்கின்றது.)
அன்னமே, நின் அழகிய முகத்தையும் தனத்தையுங் காண்பதற்கு நினது கூந்தல் இடையூறாக விருக்கின்றதெனத் தலைவன் இடையூறு கிளத்தியபடி (22)

Page 28
2O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தனையா யுதவிய தந்தையில் வாழ்க்கை தணந்தருட்சிந் தனையா யுதகந் தனினின்று செய்யுந் தவத்திர்வெண்டந் தனையா யுததி யகிலம் படைக்குஞ் சதுர்விதவே தனையா யுதன்றொழுங் கல்வளை யானைச் சரண்புகுமே.
இ-ள்: தனை ஆய் உதவிய தந்தை இல்வாழ்க்கை தணந்து - பிள்ளையாகப் பெற்றெடுத்த பிதாவையும் இல்லறத்தையும் துறந்து, அருள் சிந்தனையாய் - திருவருளைப் பெறுதலையே விசாரமாகக் கொண்டு, உதகந் தன்னில் நின்று செய்யுந் தவத்திள் - நீரில் நின்று செய்யுந் தவத்தையுடைய துறவிகளே, (அங்ங்னஞ் செய்தலை விடுத்து); வெண் தந்தனை - வெள்ளிய கொம்பினையுடையவரும், ஆய் உததி அகிலம் படைக்கும் சதுர்வித வுேதன் - ஆராய்ந்து கடலையும் உலகத்தையும் சிருட்டிக்கும் நான்கு வேதங்களையுணர்ந்த பிரமா, ஐயாயுதன் - பஞ்சாயுதங்களை யுடையராகிய திருமால், தொழும் - வழிபடும், கல்வளையானைச் சரண் புகும் - கல்வளைப் பதியிற் கோயில் கொண்டருளிய பிள்ளையாரிடம் அடைக்கலம் புகுதிர் எ-று.
ஆய், ஆகவென்பதின் றிரிபு. ஆயுததி என்பதில் ஆய் 'வரிப்புனை பந்து' என்பதிற் போல வினையெச்சப் பொருளில் வந்தது. மகன் துறவியாகில், பிதா வணங்க வேண்டுமெனவும், ஆனால் துறவியான மகனும் தாயை வணங்க வேண்டுமெனவும் நூல்கள் கூறுதலானும், பட்டினத்தடிகள் போன்ற மகா துறவிகள், பெற்ற தாயின் மரணத்தின் பின்பே துறவறத்தைக் கொண்டமையினாலும், தாயின் அந்தியகாலத்தில் அவ்வடிகள் பெரிதும் வருந்தினாரென்ற காரணம்பற்றியும் துறத்தல் விஷயத்தில் தாயை யொழித்து “உதவிய தந்தை இல்வாழ்க்கை தணந்து’ என ஆசிரியர் ஈண்டுக் கூறினர்.
நீர் முதலியவற்றில் நின்று அருந்தவஞ் செய்யுந் துறவிகளே, அச் செயலை விடுத்து, பிரமா விஷ்ணு தொழுங் கல்வளைப் பெருமானைச் சரணாக அடையுங்கள் என்றபடி (23)
சரந்தண் டருமலர் வேண்மைத் துனன்செந் தமிழ்க்கலைபஞ் சரந்தண் டலையிற் கிளிதேருங் கல்வளை தங்கிடுகுஞ் சரந்தண்ட பாணி யழகினைக் காணப்பொற் றாமரைவா சரந்தண்டர் போல விமையாத பார்வையைத் தந்திலரே.
இ-ள்: தண் தரும் மலர் சரம் வேள் மைத்துனன் - குளிர்ச்சியைத் தரும் பூக்களைப் பாணமாகக் கொண்ட மன்மதனுக்கு மைத்துனரும்,

கல்வளையந்தாதி /21
செம் தமிழ்க்கலை தண்டலையில் பஞ்சரக் கிளி தேரும் - செந்தமிழ் நூல்களைச் சோலையின் கண்ணே கூட்டிலிருந்து கிளிகள் செப்பும், கல்வளை தங்கிடு குஞ்சரம் - கல்வளைப் பதியைத் தமக்கு இடமாகக் கொண்ட யானையும், தண்டபாணி - தண்டாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தியவருமாகிய விநாயகக் கடவுளின், அழகினைக் காண - திருக்கோலத்தைத் தமியேன் தரிசித்தற்கு, பொன் தாமரை வாசர் - பொற்றாமரை மலரிலிருக்கின்றவராகிய பிரமதேவர், அந்த அண்டர் போல இமையாத பார்வையைத் தந்திலர் - (விண்ணுலக வாசிகளாகிய) அத் தேவர்களுக்குக் கொடுத்தவாறு இமைத்தலில்லாக் கண்களைத் தமியேனுக்கு உதவிலர் எ-று.
சரத்தண், பஞ்சரத்தண்டலை யென்பன சரந் தண், பஞ்சரந் தண்டலையென மெலிந்து நின்றன. அந்தண்டர் போல என்பதில் அந்த என்பதின் ஈற்று அகரந் தொக்கது. விநாயகப்பெருமான் கொண்ட திருமூர்த்தங்களுள் ஒரு மூர்த்தம் தண்டாயுதத்தையும் பரித்துள்ளதாதலின் “தண்டபாணி’ என்றார். விநாயக மூர்த்தங்களின் வரலாற்றையும் விரிவையும் விநாயக பராக்கிரமம் முதலிய நூல்களிற் காண்க. விநாயகப் பெருமானாரது பேரழகை இடையறாமற் றரிசிப்பதற்கு, கண்ணிமைத்தல் இடையூறா யிருத்தலின் அண்டர்கட்குப் போல் இமையா நாட்டத்தைத் தந்திலரேயெனப் பிரமதேவரை நொந்து கூறியவாறு.
கல்வளைப் பெருமானாரை இடையறாது தரிசித்தாலும் கண் தெவிட்டா தென்றபடி (24)
தந்தனந் தாமரை வெற்பிரு னேரிடை சாய்நடைபா தந்தனந் தார்க்குழல் யாமள கோமள சாமளய்பெண் தந்தநந் தாபனை நெல்விளை கல்வளை தன்னிலொற்றைத் தந்தநந் தாவிளக் கேயெனப் போமிருட் சம்பந்தமே.
இ-ள்: தந்து அனம் தாமரை வெற்பு இருள் - நூல் அன்னம் தாமரைப்பூ மலை இருள்; நேர் இடை சாய் நடை பாதம் தனம் குழல் - (என்னுமிவைகளை முறையே) நிகர்த்த இடையினையும் நடையினையும் பாதங்களையும் தனங்களையும் மாலையணிந்த கூந்தலையுமுடைய, யாமள கோமள சாமளப் பெண் - இளமையாகிய பசிய நிறத்தையுடைய உமாதேவியார், தந்த நந்தா - பெற்றருளிய திருக்குமாரரே, நெல் விளை பண்ணை கல்வளை தனில் - நெல்விளையும் வயல்கள் பொருந்திய கல்வளைப்பதியில் எழுந்தருளிய, ஒற்றைத் தந்த - ஏக தந்தரே, நந்தா விளக்கே - எக்காலத்தும்

Page 29
அ2/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ஒளிகுன்றாத தீபத்தை யொத்தவரே; என - என்று துதிக்க, இருள் சம்பந்தம் போம் - மலத்தொடர்பு நீங்கிவிடும்.
அனம், பணை என்பன தொகுத்தல் விகாரம், யாமள கோமளம், ஒரு பொருட் பன்மொழி.
ஈசுவரி புத்திரரே, ஏக தந்தரே, அருளொளி விளக்கே என்பன போன்ற திருநாமங்களைச் சொல்லித் துதிப்போரைப் பீடித்த வினை அகலு மென்றபடி (25)
சம்பந்த மாவினைத் தென்னவற் கீந்தவன் றாங்குமருட் சம்பந்த மாமுனி பாமாலை சூடி தருபொருண்மா சம்பந்த மாலம் புனைகுழுங் கல்வளைத் தந்திவெம்பா சம்பந்த மாயையென் பானிக்கி வாழ்வுசம் பாதிப்பனே.
இ-ள்: சம்பு அந்த மாவினைத் தென்னவற்கு ஈந்தவன் - நரிகளை அழகிய குதிரைகளாக்கி அரிமர்த்தனபாண்டியனுக்கு உதவியவரும், அருள் தாங்கும் மாசம்பந்த முனி பாமாலை சூடி - மூன்றாம் வயசிலேயே திருவருட்பிரசாதத்தை வகித்த திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் பாடியருளிய தேவாரங்களைச் சூடி (ஏற்று) அருளியவருமாகிய சிவபிரான், தருபொருள் - பெற்றருளிய பிள்ளையாராகிய, மா சம்பு அம் தமாலம் புனை சூழும் கல்வளைத் தந்தி - மாமரங்களும் நாவல்களும் அழகிய பச்சிலைமரங்களும் புன்னைகளும் சூழப்பெற்ற கல்வளைப் பதியில் எழுந்தருளிய யானைமுகக் கடவுள், பந்த வெம்மாயை பாசம் - கட்டாகிய கொடிய மாயா பாசத்தை, என் பால் நீக்கி - தமியேனிடமிருந்து அகற்றி, வாழ்வு சம்பாதிப்பன் - தமியேனுக்கு மோட்ச வாழ்க்கையைத் தேடிவிடுவார். எ-று.
அந்தம் - அழகு. நரியைப் பரியாக்கி ஈந்தருளினமை மாணிக்க வாசகசுவாமிகள் பொருட்டாம். பொருள் - பிள்ளை, “தம்பொருளென்ப தம்மக்கள்’ ஆதலின். புனை - புன்னை, தொகுத்தல் விகாரம். பரமபிதாவாகிய சிவபிரான் தமது அடியாராகிய மாணிக்கவாசகசுவாமிகள் பொருட்டு நரியைப் பரியாக்கியும், ஆளுடையபிள்ளையாரை மூன்றாம் வயசில் அடிமை கொண்டும் ஈடேற்றியருளினராதலின், தந்தை குணம் மைந்தர்க்கு முண்டு என்றபடி அப்பெருமானுடைய மூத்த திருக்குமாரராகிய விநாயகப்பெருமானும் தமியேனை ஈடேற்றி வைப்பரென்பதாம்.
கல்வளைப் பெருமான் தமியேனுடைய பாச பந்தங்களைத் தவிர்த்துத் தமியேனையும் ஈடேற்றி வைப்பர் என்றபடி (96)

கல்வளையந்தாதி /23
பாலை வனத்தத்தைக் கியாரளிப் பாரென்று பன்னினளைம் பாலை வனத்தடங் கார்கண்டு வெட்கும் படிவந்தமின் பாலை வனத்தகன் றாள்கல் வளைப்பர மானந்தன்றன் பாலை வனத்தள வும்மன்பி லாரிற் பதைபதைத்தே.
இ-ள்: ஐம்பாலை வனத் தடம் கார் கண்டு வெட்கும்படி வந்த மின் - தன் கூந்தலை நீர் கொண்ட பெரிய முகில் கண்டு நாணும் வண்ணந் தோன்றிய எனது மகள், வனத் தத்தைக்கு யார் பாலை அளிப்பார் என்று பன்னினள் - தான் வளர்க்கும் பஞ்சவன்னக்கிளிக்கு இனிமேல் யார் பாலை ஊட்டப் போகின்றார் என்று (நேற்றுச்) சொன்னாள், கல்வளைய்பரமானந்தன் பால் - கல்வளைப்பதியி லெழுந்தருளியிருக்கும் பரமானந்த குணத்தராகிய பிள்ளையார் மீது, ஐவனத்து அளவும் அன்பி லாரில் பதைபதைத்து - ஒரு மலை நெல்லளவேனும் அன்பில்லாதவர் போலத் துரிதப்பட்டு, பாலை வனத்து அகன்றாள் - வேறொரு தலைவன் பின்னே பாலைவனத்திற் போயினாள் எ-று.
“வனத் தத்தைக்கு யார் பாலை அளிப்பவர்’ என்று அவள் நெருனற் பன்னியபோது, அவண்மேற் சந்தேகங்கொண்டு அவளைப் பாதுகாத்திருக்க வேண்டியது என் கடனாக, நான் குறிப்பறியாது வாளாவிருந்தேனே யெனச் செவிலித்தாய் பச்சாத்தாப மடைந்தவாறு. வன்னத் தத்தை - வனத்தத்தை யெனத் தொக்கு வந்தது.
இது செவிலி தன் அறிவின்மையையுணர்ந்து பச்சாத்தாபமடைந்த 12. (27)
தைக்கும் பகழி யுடல்பாய் தறுகட் சயிலம்வந்த தைக்கும் பகன தனத்தீர்கண் டிரெனிற் சாற்றிடுமே தைக்கும் பகனன்முன் னோனைப்பந் தாடித் தகர்த்துரஞ்சி தைக்கும் பகவன்றென் கல்வளை வாசன் றடமலைக்கே.
இ- ள்: கும்ப கன தனத்தீர் - குடத்தை நிகர்த்த கனத்த தனங்களையுடையீர், மேதைக் கும்பகனன் முன்னோனை - நல்ல அறிவினையுடைய கும்பகன்னனுக்குத் தமயனாகிய இராவணனை, பந்து ஆடி தகர்த்து உரம் சிதைக்கும் பகவன் - பந்து போல எறிந்து விளையாடி அவன் மார்பிற் புடைத்து வலிமையைக் கெடுத்த தெய்வமாகிய, தென் கல்வளை வாசன் - அழகிய கல்வளைப் பதியில் எழுந்தருளும் விக்கினேசுவரரது, தடமலைக்கு - விசாலமாகிய மலையில், தைக்கும் பகழி பாய் உடல் தறுகண் சயிலம் - எனது இலக்குத் தப்பாத பாணம்

Page 30
24/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ஏறுண்ட உடலோடு தறுகண்மை பொருந்தியதாகிய மலைபோலும் யானை ஒன்று, வந்ததைக் கண்டீர் எனில் சாற்றிடும் - இங்கே வந்தமையைக் கண்டீராயின் சொல்லுங்கள் எ-று.
தடமலைக்கு என்றதில் குவ்வுருபு கண்ணுருபின் றிரிபாகும். அரக்கள் குலத்திற் பிறந்தானாயினும் கும்பகன்னன் நீதியுடையவனாதலால் “மேதைக் கும்பகனன்” என்றார். கும்பகன்னன் முன்னோனைப் பந்தாடித் தகர்த்து உரஞ் சிதைக்கும் பகவன் என்பதன் வரலாறு:- பூர்வத்தில் இராவணன் அருந்தவஞ் செய்து கைலாசபதியிடம் ஒரு சிவலிங்கத்தைத் தந்தருளும்படி வேண்ட அப்பெருமானார் அங்ங்ணம் அவனுக்கு ஒரு இலிங்கத்தை உதவி இவ்விலிங்கத்தை நிலத்தில் வைத்தால் பேர்த்து எடுத்தல் முடியாது என்று கூறியருளினார். இராவணன் அவ்விலிங்கத்தைப் பெற்றுத் தன் கரங்களில் ஏந்தியவனாய் இலங்கையை நோக்கி வருவானாயினன். இதற்கிடையில் அவ்விலிங்கத்தை இராவணன் கொண்டுபோய் இலங்கையில் ஸ்தாபித்துப் பூசிப்பனேல் அவனை வெல்வது அசாத்தியமென்று அஞ்சிய அரிபிரமேந்திராதி தேவர்கள் உடனே விநாயகப் பெருமானைப் பூசித்து, “எம் பெருமானே, கொடியவனாகிய இராவணன் பரமேசுவரனிடத்திற் பெற்றுச் செல்லும் இலிங்கத்தை அவன் தன் பட்டினத்திற் கொண்டு போய்ச் சேர்க்க வொட்டாது தடுத்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்க, விநாயகக் கடவுள் அதற்கிசைந்து ஒரு பிராமணச் சிறுவனாகி, இராவணன் வரும் மார்க்கத்திற் சென்று நின்றார்.அப்பொழுது ஆவசியகம் சலவிமோசனம் செய்ய வேண்டியவனாய், இராவணன், மார்க்கத்திலே நின்ற பிராமணச் சிறுவனைப் பார்த்து, "அப்பா, இச்சிவலிங்கத்தை நிலத்தில் வைக்க வொண்ணாதாதலால் நான் சிறுநீர் விடுத்து வரும் வரைக்கும் இதனை உன் கையில் ஏந்திக்கொள்” என்று கொடுக்க அதனை வாங்கிக்கொண்ட அப்பிராமணச் சிறுவர், “அரசனே, இது மிகவும் பாரமானது, நீடித்த நேரம் இதனைப் பரித்தல் என்னால் முடியாது; ஆதலால் உன்னை மும்முறை கூப்பிடுவேன்; நீ வர நேரந் தாழ்த்தால் நிலத்தில் வைத்து விடுவேன்’என்று சொல்ல, இராவணனும் அதற்கு இசைந்து சென்றான். செல்வதற்கிடையில் பிராமணச் சிறுவர் மும்முறை இராவணா என்று கூப்பிட்டுவிட்டு, சிவலிங்கத்தை நிலத்தில் வைத்து நின்றனர். விரைந்து மீண்ட இராவணன் அதனைக் கண்டு சீற்றம் கொண்டானாய் அச் சிவலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயன்றும் அஃதியலாமை யினால் இது “மகாபெலம்’ என்றான். அதனால் மகாபெல இலிங்கம் என்னுங் காரணத் திருநாமம் அதற்கு ஏற்பட்டது. பின்னரும் அதனைப் பெயர்த்தெடுக்க அரக்கன் முயன்றகாலை அது பசுவின் செவிபோலக் குழைந்தமையின்,

கல்வளையந்தாதி /25
அதற்குத் திருக்கோகர்ணம் என்னுங் காரணப்பெயரும் வாய்ந்தது. சிவலிங் கப்பெருமானை மண்ணிலிருந்தெடுத்தல் இயலாதெனக் கண்ட இராவணன் அடங்காச் சீற்றமடைந்தானாய், முன்னின்ற மறைப் பிள்ளையின் சிரத்திற் குட்டக் கருதித் தன் இருபது கரங்களையும் கபித்தமாகப் பிடித்துக் கொண்டு காற்றென விரைந்து தாக்க முயலுதலும், ஐங்கரத் தெந்தை உடனே பரமேசுவரத் திருக்கோலங் கொண்டு இராவணனைப் பற்றிப் பந்துபோல் மேலே எறிந்தெறிந்து ஏந்தித் திருவிளையாடல் புரிந்தார். தன்னுடன் திருவிளையாடல் புரிபவர் ஆனைமுகத்தையன் என்பதை யுணர்ந்த இராவணன் பதை பதைத்து,
'மறையோனென் றுனைநினைந்த மடைமையினால் ஈதிழைத்தேன்
பிறையே7ங்கு மணிமகுடப் பெருங்களிறே/ பிழை செய்தேன்; இறையோனே! பொறுப்பதுணக் கியல்” பென்றென் றேத்துதலும், பொறையோடும் உமை புதல்வன் புவியில் அரக்கனை விடுத்தான்.”
எம்பெருமானே, தேவரீர் செய்யும் மாயையுள் அகப்பட்ட சிறியேன் அறியாமையினால் தேவீரை உண்மையிற் பிராமணச் சிறுவனென்று மதித்துப் பெரும் பிழைசெய்தேன்; அடியேன் அறியாமையினாற் செய்த பிழையனைத்தும் பொறுத்து என்னை ரட்சித்தல் வேண்டுமென்று முட்டியாகப் பிடித்த இருபது கரங்க ளாலும் தன் பத்துச் சிரங்கள்மீதும் படபடெனக் குட்டுதலும் விநாயகப் பெருமான் அந்த இராவணனுக்குத் திருவருள் செய்தார்.
இஃது வேழம் வினாவியபடி (28)
மலைவல் லியம்பிரி யாத்தில்லைக் கானுறை மாமதங்கி மலைவல் லியம்பிள நீரின் பயோதரி வானிமய மலைவல்லியம்பிகை கான்முளை கல்வளை வாணன்பொங்க மலைவல் லியம்பர வையானெய் யாமுன் வரவில்லையே.
இ-ள்: மலை வல்லியம் பிரியாத்தில்லைக்கான் உறை மா மதங்கி - மாறுபடுகின்ற புலிகள் நீங்காத தில்லைக் காடாகிய சிதம்பரத்திலே எழுந்தருளிய மேலான தவமுதல்லியும், வல் இளநீர் மலை இயம்பு இன் பயோதரி - சூதாடு கருவியையும் குரும்பையையும் ஒப்புச் சொல்லத்தக்க நல்ல தனங்களை யுடையவளும், வான் இமய வல்லி - மேலான இமயமலையிற் றோன்றிய கொடியை நிகர்த்தவளும் (பர்வத வர்த்தனியும்), அம்பிகை - எங்கள் தாயுமாகிய உமாதேவியாருடைய, கான் முளை - திருக்குமாரராகிய, கல்வளை வாணன் - கல்வளைப் பதியில் எழுந்தருளிய தலைவர், பொங்குவல்

Page 31
26/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
கமலை இயம் பரவையான் எய்யாமுண் - மிக்க பெரிய சத்தத்தைக் கொண்ட கடலாகிய முரசையுடைய மன்மதன் மலர்ப்பாணங்களை என் மீது எய்தற்குமுன், வர இல்லையே - வரவில்லையே (இதற்கு யான் என் செய்வேன்) எ-று.
கான்முளை, இருபெயரொட்டு. வாழ்நன் வாணனென வந்ததென்பர்; தலைவன், இச்சொல், அம்பலவாணன், ஏகம்ப வாணன், கலைவாணன் எனச் சேர்ந்து வருதலின்றித் தனியே வருதல் அரிது. ஏ, ஈற்றசையோடு கழிவிரக்கமுமாம்.
இது விரக வேதனையுற்ற தலைவி தன் தலைவன் வர வில்லையேயென வருந்தியபடி (99)
வரம்பல வன்பருக் கீவா ரெனக்குமெய் வாழ்வுதரு வரம்பல வன்கொன்றை மாலிகை யாத்தி வனைந்தகற்ற வரம்பல வன்பெற்ற மாதங்க வானனர் மள்ளர்செய்யும் வரம்பல வன்குண் டலர்முடுங் கல்வளை வானவரே.
இ-ள்: அம்பு அலவன் கொன்றை மாலிகை ஆத்தி வனைந்த கல்தவர் அம்பலவன் - கங்கையையும் பிறைச் சந்திரனையும் கொன்றைமாலையையும் திருவாத்திப்பூவையும் சூடியவரும் மேருமலையை வில்லாக வுடையவருமாகிய பொன்னம்பலவர், பெற்ற மாதங்க ஆனனர் - பெற்றருளிய யானை முகக்கடவுளும், மன்னர் செய்யும் வரம்பு அலவன் குண்டு அலர் முடும் கல்வளை வானவர் - மன்னர்கள் அமைத்த வரம்பிலுள்ள நண்டின் பொந்துகளைப் பூக்கள் மூடியுள்ள கல்வளைப் பதியில் எழுந்தருளிய தேவதேவருமாகிய விநாயகப் பெருமான், அன்பருக்கும் பல வரம் ஈவார் - தமது அடியார்களுக்கு வேண்டிய பல வரங்களைக் கொடுப்பார், எனக்கும் மெய் வாழ்வு தருவர் - தமியேனுக்கும் நிலையான மோட்ச வாழ்வைத் தந்தருளுவர் எ-று.
“வரம்பு அலவன் செய்யுங் குண்டு அலர் மூடும்” என்பது அக் கல்வளைப் பதியின் நீர்வளத்தை உணர்த்தியவாறு.
கல்வளைப் பிள்ளையார் தமது அடியார்க்கு வேண்டிய வேண்டியாங்கு அருள்பவராதலின், தமியேனையும் புறக்கணித்த லின்றி வாழவைப்பா ரென்றபடி (3O)

கல்வளை யந்தாதி /27
வானஞ் சலஞ்சலத் தீயொலி மண்மயங் காவுயிர்போ வானஞ் சலஞ்சல மந்திடுங் காற்றுயர் மாற்றவரு வானஞ் சலஞ்ச லெனவுரைப் பான்கல் வளைப்பதிவாழ் வானஞ் சலஞ்சலக் கைத்தல மாறன் மருமகனே.
இ-ள்: வானம் சலம் சலத்தீ ஒலி மண் மயங்கா - ஆகா யத்தின் கூறாகிய செவியும் நீரின் கூறாகிய வாயும் வெம்மை யுடைய நெருப்பின் கூறாகிய கண்ணும் வாயுவின் கூறாகிய மெய்யும் நிலத்தின் கூறாகிய மூக்கும் ஆகிய ஐம்பொறிகளினின்றும் கலங்கி, அஞ்சு அலஞ்ச - ஐம்புலங்களும் அலைவுற, உயிர் போவான் அலமந்திடுங்கால் - உடம்பைவிட்டு உயிர் போவதற்குச் சுழலுஞ் சமையத்தில் (மரணாவத்தையில்), கல்வளைய்யதி வாழ்வான் - கல்வளைப்பதியில் எழுந்தருளியவரும், அம் சலம்சலக் கைத்தலமால் தன் மருமகன் - அழகிய பாஞ்ச சந்நியமென்னுஞ் சங்கைத் தரித்த கரத்தை யுடைய திருமாலின் மருகருமாகிய விநாயகப் பெருமான், துயர் மாற்ற வருவான் - அத்துன்பத்தை மாற்றும் வண்ணம் வருவாராய், அஞ்சல் அஞ்சல் என உரைப்பான் - அன்பனே பயப்படாதே பயப்படாதே யென்று திருவாய் மலர்ந்தருளுவர் எ-று.
அஞ்சு, ஐந்தென்பதன் போலி; சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் ஐந்தினையுங் குறித்து நின்றது. அலஞ்ச அலைந்து அலைய என்பதன் றிரிபு. வருவான் வினைமுற்று வினையெச்சம். “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம் மேலுந்தி - அலமந்த போதாக அஞ்சேலென் றருள் செய்வான். . .’ என்னுந் தேவாரத்தின் கருத்து இச்செய்யுளில் அமைந்திருத்தல் உணர்தற்பாற்று.
மரண வேதனையுற்று ஆன்மா வருந்துஞ் சமையத்தில் கல்வளைப் பெருமான் தோற்றி அபய மளித்தருளுவா ரென்பது நிசம் என்றபடி (31)
மகரந்தவள மலர்ச்சோலைப் பொங்கரின் வான்குளி மகரந் தவழ்கல் வளையாகு வாகன வல்லவைவா மகரந் தவள மருப்பானை வேங்கை மடங்கலெண்கு மகரந் தவளைபுள் ளானாலு நின்னை மறப்பரிதே.
இ- ள் : மகரந்த வளமலர்ச் சோலைப் பொங்கரில் - தேன்பொருந்திய அழகோடு கூடிய சோலையிலுள்ள மரங்களிலே, வான்குளிர் இமகரம் தவழ் - பெருமையான குளிர்ந்த சந்திரன் தவழ்ந்து செல்லும், கல்வளை ஆகுவாகன - கல்வளைப்பதியிற் கோயில் கொண்ட மூஷிக

Page 32
28/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வாகனரே, வல்லவை வாம - வல்லவையென்னுஞ் சக்தியை இடப்பக்கத்திற் கொண்டவரே, கரம் தவளம் மருப்பு ஆனை வேங்கை மடங்கல் எண்கு மகரம் தவளை புள் ஆனாலும் - கழுதை வெள்ளிய கொம்பினையுடைய யானை புலி சிங்கம் கரடி மற்சம் தவளை பறவை என்னுமிவைகளாகப் பிறந்தாலும், நினை மறப்பது அரிது - தேவரீரைத் தமியேன் தியானித்தலின்றி மறந்து விடுதல் முடியாது எ-று.
பொங்கள், இமகரம் ஆகுபெயர்கள். இக்கவி “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி யென்மனத்தே - வழுவாதிருக்க வரந்தரவேண்டும்.” என்ற தேவாரத்தின் பொருளை ஒட்டியிருத்தல் உணரத்தக்கது.
கல்வளைப் பெருமானே, இம்மானுடப் பிறவி நீங்கி, விலங்கு பறவை நீர்வாழ்வன முதலிய வாகப் பிறந்தாலும் தமியேன் தேவரீரை மறவேன் என்றபடி (39)
அரவம் புலிங்க வனற்கண்ண வென்றரி போற்றச்சிலம் பரவம் புலிபணி கேட்பமன் றாடி யருண்மதலை யரவம் புலியணி கோடீரன் கல்வளை யண்ணல்கண்ணே யரவம் புலிய குணத்தா ரெனினு மவர்முத்தரே.
இ-ஸ்: அர அம் புலிங்க அனற் கண்ன என்று - அரனே அழகிய பொறியோடு விரவிய அக்கினிக் கண்ணரே என்று, அரி போற்ற - விஷ்ணுமூர்த்தி துதிக்கவும், சிலம்பு அரவம் புலி கேட்ப - திருவடிச் சிலம்பினோசையைப் பதஞ்சலி வியாக்கிரபாதர் என்னும் முனிவர்கள் (காதாரக்) கேட்பவும், மன்று ஆடி அருள் மதலை - பொன்னம்பலத்தில் அநவரத தாண்டவஞ் செய்தருளும் நடராசப் பெருமான் தோற்றுவித்தருளிய திருக்கு மாரரும், அரவு அம்புலி அணி கோடீரன் - பாம்பையும் பிறைச்சந்திரனையும் தரித்த சடாமுடியை உடையவரும், கல்வளை அண்ணல் கண் நேயர் - கல்வளைப் பெருமானிடத்து அன்பு கொண்டவரும், அவம் புலிய குணத்தார் எனினும் - தீயகுணத்தை யுடையவராயினும், அவள் முத்தரே - அவ்வன்பர்கள் சீவன் முத்தரேயாவர் எ-று.
அரன்(ஆன்மாக்களை இளைப்பாற்றும் பொருட்டுச்) சங்காரஞ் செய்பவர். புலியின் காலை யொத்த கால்களை உடையராதலின் வியாக்கிர பாதர் புலியெனவும், பதஞ்சலி பாம்பு போன்ற கால்களை உடைமையின் பணியெனவுஞ் சொல்லப்பட்டனர். புல்லிய புலிய எனத் தொக்குவந்தது.

கல்வளையந்தாதி /29
திருமாலுந் துதிக்கும் பரமசிவனது திருக்குமாரராகிய கல்வளைப் பெருமானாருடைய அன்பர்கள் புல்லொழுக்க முடையரேனும் நற்கதி பெறுவரென்றபடி (33)
தரப்பணி யாரம் பலழுண்டு தேர்முதற் றானைதற்குழ் தரப்பணி யாரைத் தடிந்துல காளலற் சர்க்கரைசுந் தரப்பணி யார மமுதுசெய் வோன்கல் வளைத்தலத்தா தரப்பணி யார்வத் தொடுஞ்செய்து வாழ்த றகவுடைத்தே.
இ-ள்: தரப்பணி பல ஆரம்பூண்டு - முடியையும் பல ஆரங்களையும் அணிந்து கொண்டு, தேள் முதல் தானை தற்சூழ்தர - தேர் முதலாகச் சொல்லப்பட்ட நால்வகைச் சைனியமுந் தன்னை உடன் சூழ்ந்துவர, பணியாரைத் தடிந்து உலகு ஆளலில் - பகைவரைக் கெடுத்து இராச்சிய பரிபாலனஞ் செய்தலைக் காட்டினும், சர்க்கரை சுந்தரப் பணியாரம் அமுது செய்வோன், சர்க்கரை கலந்து ஆக்கப்படும் அழகிய மோதகத்தை உவப்புடன் திருவமுது செய்யும் பிள்ளையார் (கோயில் கொண்டருளிய) கல்வளைத் தலத்து - கல்வளைப்பதியில், ஆதரம்பணி ஆர்வத்தொடு செய்து வாழ்தல் தகவு உடைத்து - ஆராதனை செய்தல் முதலிய திருத்தொண்டுகளைப் பத்தியுடன் புரிவது மேன்மையுடைத்து எ~று.
தரம் - தலை, பணி - ஆபரணம், கிரீடம். பணிகாரம், பணியாரமென மருவியது. ஆதரம் - ஆகுபெயர்.
அரசனாக இருந்து இராச்சிய பரிபாலனஞ் செய்தலைக் காட்டிலும் கல்வளைப் பிள்ளையாரைச் சேவித்துக் கதியடைதல் உத்தம மென்றபடி
தகரங் கமழ்குந் தளந்தர ளந்தள வின்னகையிர் தகரங் கமலன் மணக்கோலஞ் செய்த றடாதிருபா தகரங் கமலஞ் சிவந்தோன் மருகன் றவமற்றபா தகரங்கண் மேவருங் கல்வளை யான்மலைச் சாரலிலே.
இ-ள்: தகரம் கமழ் குந்தளம் - மயிர்ச்சாந்து மணக்கும் கூந்தலையும், தரளம் தளவு இல் நகையீர் - முத்தையும் முல்லையரும்பையும் ஒத்த பற்களையுடையீர், இரு பாத கரம் கமலஞ் சிவந்தோன் - இரண்டு பாதங்களும் கைகளும் செந்தாமரைப் பூப்போலச் சிவக்கப் பெற்ற திருமாலுக்கு, மருகன் - மருகரும், தவம் அற்ற பாதகள் அங்கண் மே அரு கல்வளையான் - பூர்வ புண்ணியம் இல்லாத பாவிகள் வசித்தற்கு முடியாத கல்வளைப்பதியிற் கோயில் கொண்டவருமாகிய

Page 33
3O/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
விநாயகப் பெருமானது, மலைச் சாரலில் - மலைச்சாரலிலே, தகர் - (வெட்டக் கொணர்ந்த) ஆடு, அங்கம் அலன் மணக் கோல் அஞ்சு எய்தல் தடாது - உருவிலியாகிய மன்மதன் செலுத்தும் வாசனை பொருந்திய பூக்களாகிய பஞ்ச பாணங்களைத் தடுக்கப் போவதில்லை எ-று.
மே, முதனிலைத் தொழிற்பெயர். இது பாங்கி வெறி விலக்கியவாறு.
வெறியாட்டாளனே, கல்வளையான் மலைச் சாரலில் நீ ஆட்டுக்கடாவைக் கொணர்ந்து வெட்டுவதனால் தலைவி கொண்ட விரக வேதனை நீங்கப் போவதில்லை. ஆதலின் வீனே உயிர்க்கொலை செய்யற்க எனப் பாங்கி விலக்கியபடி (35)
இலங்கை யிராவணன் கண்டதுண் டம்பட வெய்சரம்ப யிலங்கை யிராமன் கடதாரை சிந்து மிரண்டிருகோ டிலங்கை யிராவதன் றாழ்கல் வளைய னெனின்முத்திவா யிலங்கை யிராது கடைத்தா டிறப்பிப்ய னேரம்பனே.
இ-ள்: இலங்கை இராவணன் கண்டதுண்டம்பட - இந்த இலங்கையை ஆண்ட இராவணனானவன் கண்டதுண்டமாம்படி, எய் சரம்பயில் அம் கை இராமன் - செலுத்திய பாணம் பொருந்திய அழகிய கையையுடைய யூரீ ராமபிரானும், கடதாரை சிந்தும் இரு இரண்டு கோடு இலங்கு ஐராவதன் தாழ் - மதநீர் சொரிகின்ற நான்கு கொம்புகள் விளங்கப்பெற்ற ஐராவத மென்னும் யானையை வாகனமாகக் கொண்ட இந்திரனும் வழிபடும், கல் யன் எனில் - கல்வளைப் பிள்ளையாரே என்று சொன்னால், முத்தி வாயில் அiங்கை இராது - மோட்ச வாயில் திறக்கப்படாது இருத்தல் முடியாது, எரம்பன் கடைத் தாள் திறப்பிப்பான் - அந்த ஏரம்பமூர்த்தி அவ் வாயிற்கதவின் தாளை நீக்கித் திறப்பித் தருளுவர் எ-று.
நான்காமடியிலுள்ள அங்கை என்பதை அங்கு என்பதின் ஈறு திரிந்ததென்றேனும் ஐகாரச் சாரியை பெற்று வந்ததென் றேனும் கொள்க. கடை ஆகுபெயர். கடைத்தாள் இக்காலத்தில் தாழ்ப்பாளென வழங்கும். ஏரம்பன், விநாயகருடைய திரு நாமங்களுள் ஒன்றாம்; சிவனது சமீபத்தில் இருப்பவன் எனவும், பத்தர்களை விருத்தி யடைவிப்பவன் எனவும் பொருள் படும் வடசொல். “இலங்கை இராவணன் கண்டதுண்டம்பட எய்சரம்பயி லங்கையிராமன் .தாழ் கல்வளையன்’ என்பதில் ராமன் என்பதற்கு இராமாவதாரத்தை எடுத்த விட்டுனுைவும் வணங்கப் பெறும் கல்வளைப் பதியிலுள்ள விநாயகக் கடவுளெனப் பழைய உரையிற் கொள்ளப்பட் டிருக்கின்றது. இராவணனை வதைத்த பிரமகத்தி நீங்கும்படி இக்கல்வளைப் பெருமானை இராமபிரான் வணங்கினார் என்னுங் கொள்கை இந்நூலா

கல்வளையந்தாதி /3)
சிரியரிடத்து உண்டு ஆதலின் “இராமன் .தாழ்” என்பதற்கு இராம பிரானும் வழிபடுகின்ற என ஈண்டு நேரே பொருள் கொள்ளப்பட்டது. நூலாசிரியர் கொள்கை இஃதென்பதை இந்நூலில் “கவிநாயகன் றொழும் ராமன் கொலைப்பவங் காய்ந்திடுதுங் - கவிநாயக திருக்கல்வளை வாழுங் கணபதியே” எனவரும் பதினாலாஞ் செய்யுளானறிக.
இலங்கையை ஆண்ட இராவணனை வதைத்த இராமபிரானும் ஐராவதத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனும் வணங்கும் கல்வளைப் பிள்ளையாரின் திருநாமங்களை நாவார ஒதினால், மோட்ச வாசல் அந்தப்பெருமானது திருவருளால் திறக்கப்படும் என்றபடி (36)
அம்பலங் காசில் வயல்சூழுங் கல்வளை யைங்கரனாட் டம்பலாங் காசியென்றாய்கேள்வர் பின்செல வாமதலா யம்பலங் காசின் முலையானின் கைதந்த வாசறப்பொன் னம்பலாங் காசிசென் றேவா தரவென் னருஞ்சொர்க்கமே.
இ-ள்: அம்பு அலங்கு ஆசு இல் வயல் சூழும் கல்வளை இலங்கு ஐங்கரன் நாட்டு - நீர்ததும்புகின்ற குற்றமற்ற வயல் சூழ்ந்த கல்வளை ஐங்கரக் கடவுளின் நாட்டிலே, அம்பல் அங்கு ஆசி என்று ஆய் கேள்வர் பின்செல் அவா மதலாய் - பலர் அறிந்து அலர்துற்றத் தமக்கு வாழ்த்தென மதித்துக் கொண்ட தலைவர்பின் விரும்பிச் சென்ற மகனே, என் அரும் சொர்க்கந்தர - எனது அரிய பாலை உனக்கு ஊட்டுதற்கு, காசின் மலையாள் அம்பலம் நின் கை தந்த ஆசு அற - (ஒருவர்க்கென வரைவு இல்லாமையாகிய) குற்றம் பொருந்திய தனங்களையுடைய பரத்தை நல்ல பழத்தை உன்கையில் தர நீ(ஏற்றுண்ட) குற்றம் நீங்க, பொன்னம்பலம் காசி சென்றே வா - புண்ணிய தலங்களாகிய சிதம்பரம் காசியென்னு மிவையிரண்டிற்கும் யாத்திரை போய் மீண்டுவருதி எ-று.
“அவர் மதலாய்” என்னும் பாடத்திற்கு அத்தலைவருடைய மகனே எனப் பொருள் கொள்க. தலைவன் தன் மகவைப் பரத்தைவீட்டிற்கு ஒருமுறை கொண்டு சென்றான் என்ற காரணம்பற்றி எழுந்த வெறுப்பைக் குறிக்கும் பொருட்டுத் தன்மதலை யென்னாது அவர் மதலையெனத் தலைவி விளித்தனள். இனி பின்செல ஆம் மதலாய் எனப் பிரித்து, பின் செல்லும்படி பிறந்த மகனே, எனப் பொருள் கொள்ளினுமாம். காசு, செர்க்கம், பொன்னம்பலம் என்னுமிவைகள் ஆகு பெயர்கள். இது தலைவி பரத்தையைப் பழித்தல் என அகப் பொருளில் வருவது. இரண்டா மடியிலுள்ள அம்பல், சிலர் அறிந்து தம்முட் புறங்கூறல், பழிச்சொல் என்னுங் கருத்தில் வந்தது. சொர்க்கம் (சுவர்க்கம்) - முலை.

Page 34
32/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
குழந் தாய், நீ உன் அப்பனுடன் கூடிக் கொண்டு பரத்தை வீட்டிற்குச் சென்றவிடத்து அவள் உனக்குத்தந்த பழத்தை ஏற்ற தோஷந் தீர, சிதம்பரம் காசி என்னும் புண்ணியதலங்களைத் தரிசித்து வந்தபின்பே உனக்குப் பாலூட்டுவேன் எனத் தன் மகனுக்குத் தலைவி யுணர்த்தியபடி (37)
கமண்டலம் பாற்கரன் போலாழி யேந்துங் கடவுளர்நா கமண்டலம் பாதலங் கைகூப்பு தாளென்று காட்டுவையர்க் கமண்டலம் பார்க்குமுய் யானம் வளைக்குங் கழனியிற்சங் கமண்டலம் பாய முழங்கிடுங் கல்வளைக் காரணனே.
இ-ள்: அர்க்க மண்டலம் பார்க்கும் உய்யானம் வளைக்கும் கழனியில் - சூரியமண்டலத்தை அளாவிப் பார்க்கும் (உந்நதமான) சோலை சூழ்ந்த வயலில், சங்கம் மண்டு அலம்பாய முழங்கிடும் - சங்குகள் நெருங்கிய கலப்பை தாக்க நாதஞ் செய்கின்ற, கல்வளைக் காரணனே - கல்வளையிற் கோயில் கொண்ட சர்வ காரண மூர்த்தியே, கமண்டலம் - குண்டிகையையும், பாற்கரன் போலாழி - சூரியன் போன்ற சக்கரப்படை யையும், ஏந்துங் கடவுளர் - முறையே தரித்துள்ள பிரம விஷ்ணுக்களும், நாகம் மண் தலம் பாதலம் - விண்ணுலக மண்ணுலக பாதல உலக வாசிகளும், கைகூப்புதாள் - தங்கள் கைகளைக் கூப்பித் தொழும் தேவர் ருடைய திருவடிகளை, என்று காட்டுவை - தமியேனுக்கு எப்போழுது தரிசிப்பித் தருளுவீர்.
நாகம் மண்டலம் பாதலம் என்பன ஆகுபெயர்கள். நீள்வளம் நிலவளம் பொருந்திய கல்வளைத் தலத்திற் கோயில் கொண்டருளிய சர்வகாரணக் கடவுளே, பிரம விஷ்ணுக்களும் திரிலோக வாசிகளும் கும்பிடுந் தேவரீருடைய திருவடித் தரிசனத்தைத் தமியேனுக்கு எப்பொழுது தந்தருளுவீரோ அறியேன் என்றபடி
காரண வாத திரிசூல யூத கணேசவன்பா காரண வாததென் கல்வளை நாத கடம்பணிவா காரண வாத முதலைந் திணைவைத்துக் காத்தழிக்குங் காரண வாத நடந்தை யுலாவுங் கலகத்திலே,
இ-ள்: ரணவாத திரி சூல - யுத்தச் செயலுக்குரிய முக்கருப் பொருந்திய சூலப்படையைத் தரித்தவரே, பூத கணேச - பூதகணங்களுக்குத் தலைவரே, அன்பாகார் அணவாத தென் கல்வளை நாத -

கல்வளை யந்தாதி /33
பத்தியில்லாதவர்கள் அடைதற்கரிய சிறந்த கல்வளைப்பதி நாதரே, கடம்பு அணிவாகார் அண - கடப்பம் பூமாலையைத் தரித்தருளிய முருகக் கடவுளின் அண்ணரே, வாதம் முதல் ஐந்தினை வைத்துக் காத்து அழிக்குங் காரண - ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களையும் படைத்துக் காத்து ஒடுக்கியருளும் காரண மூர்த்தியே, வாதம் நடந்து ஐ உலாவும் கலகத்திலே கா - வாதங் குன்றிச் சிலேட்டுமம் அதிகப்படும் அந்திய காலத் துன்பத்திலே வந்து தமியேனை இரட்சித்தருள வேண்டும் எ-று
வாதங் - காற்று, இங்கே காரணகரிய ஒற்றுமை நயம்பற்றி அதனைத்தரும் ஆகாயத்திற்கானது. திரிசூலம் முதலாம் படைக்கலங்கள் விநாயகப் பெருமானுடைய மூர்த்த பேதங்களுக்கு உண்டு. வாகர் எனற்பாலது வாகார் என நீண்டது. அண்ண என்பது அண எனத் தொக்கு வந்தது. மரணகாலத்திலே வாதங் குன்றிச் சிலேற்பனம் விருத்தியாகுமென்பது வைத்திய நூற் கொள்கையாதலின் “வாதம்நடந் தையுலாம் கலகத்திலே’ என்றார். காலத்திலே என்றும் பாடம். மரணகாலத்தில் சிலேஷ்மம் அதிகப்படுதலை, ‘புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைமேலுந்தி, அலமந்தபோதாக” எனவும் “ஐயுந்தொடர்ந்து விழியுஞ் சொருகி அறிவழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது’ எனவும் பெரியார் பணித்தவாற்றானுணர்க.
குலப்படையைப் பரித்தவரே, பூதகணநாதரே, அன்ப ரல்லாத வர்க்கு அதீதமானவரே, சர்வபுதகாரனரே, அந்திய காலத்தில் தமியேனைப் பாதுகாத்தருள வேண்டுமெனப் பிரார்த்தித்தபடி (39)
கலகத் தமரத் திரையின் றுயரைக் களைந்தருள்ச கலகத் தமரகதக்கம்பி யாற்செய் கடுக்கைபுல்ல கலகத் தமரளி வாழ்சோலைக் கல்வளைக் கற்பகவென் கமலத் தமரவிந் தத்திருக் காலெந்தக் கால்வைப்பதே.
இ-ஸ்: கலகத் தமரத் திரையின் துயரைக் களைந்தருள் சகலகத்த - (அன்பர்களுடைய காமம் முதலிய) கலகமாகிய ஒலியினையுடைய கடலால் வருந்துன்பத்தை நீக்கியருளுஞ் சர்வேசுரரே, மரகதக் கம்பியாற் செய்கடுக்கை புல் அகல - மரகதக்கம்பியாற் செய்த (காம்பையுடைய) கொன்றைப் பூமாலை பொருந்துங் திருமார்பினை யுடையவரே, கத்து அமர் அளிவாழ் சோலைக் கற்பக - ரீங்காரஞ் செய்கின்ற மிகுதியான வண்டுகள் சஞ்சரிக்குஞ் சோலைகள் சூழ்ந்த கல்வளைத் திருப்பதியில் எழுந்தருளிய கற்பகப் பிள்ளையாரே, என் கல்

Page 35
34/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
அகத்து - பாறைக்கற் போன்ற என்னுடைய (அஞ்ஞானந்தடித்த) உள்ளத்தில், அம் அரவிந்தத் திருக்கால் எந்தக்கால் வைப்பது - தேவரீருடைய அழகிய செந்தாமரைப்பூவை நிகர்த்த திருவடிகளை எப்பொழுது வைத்தருளப் போகின்றீர் (யான் அறியேன்) எ-று.
கல்வியறிவு ஈசுரபத்தி முதலிய நன்மைகளின்றி அஞ்ஞான இருள் தடித்துச் சடப்பொருளை ஒத்தமனமென்பார் கல்லகத்து என்றார். இது ஆசிரியர் தம்மனநிலையை இழித்துக் கூறியவாறாம். மெய்யன்பர் தம்மிடத்துள்ள பத்தி போதியதன் றென்பதைக் குறிப்பிக்கும் பொருட்டு இப்படி கூறுதல் இயல்பாகும். இதனை “செஞ்சுடர் வை வேலுடைய செம்மலடி தீயேன், நெஞ்சக அடுக்கலிலும் நின்றுலவு மென்றால்’ எனக் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் கூறியவாற்றானும் உணர்க. உட்பகை காமக் குரோத லோப மோக மத மாற்சரிய மென்பன.
அன்பர்களிடத்துள்ள காமம் முதலாம் பகைகளைக் களைந் தருளும் சர்வேசுரரே, கொன்றைப் பூமாலையைத் திருமார்பிற் றரித்தவரே, கல்வளைக் கற்பகவிநாயகரே, வன்கண்ணனாகிய எனக்குத் திருவருள் செய்வது எந்நாளோ என்றபடி (4O)
வையத் திருக்கை யறுப்பா னெகினம் வளைமணிக்கு வையத் திருக்கை கயிலையில் வெண்மங்கு னேர்கல்வளை வையத் திருக்கைப் பரியாக்கி பிள்ளைக்கு மானனையார் வையத் திருக்கை யயர்ந்தாளென் றோது மதுகரமே.
இ-ள்: மதுகரமே - வண்டுகளே, வையத் திருக்கை அறுப்பான் - பூமியிலுள்ள தீமைகளை நீக்கி அருளுபவரும், வளைமணிக் குவையத்து எகினம் இருக்கை - சங்கீன்ற முத்துக் குவியலின்மீது அன்னப்பறவை இருத்தல், கயிலையில் வெள் மங்குல் நேர் - கைலாச கிரியின் சிகரத்தில் வெண்முகில் படிதலை ஒத்திருக்கப் பெறும், கல்வளை - கல்வளைப் பதியி லெழுந்தருளிய, இருக்கை வையத்துப் பரிஆக்கி பிள்ளைக்கு - வேதங்களைத் தேரிற்பூட்டப்படும் குதிரைகளாக்கியருளிய சிவபிரானுடைய (மூத்த) திருக்குமாரருக்கு, மான் அனையார் வைய - மானை நிகர்த்த நோக்கினையுடைய (தன்னோடொத்த) அயல் மகளிர் பழிக்க, திரு - இலக்குமியை நிகர்த்த தலைவி, கையயர்ந்தாள் என்று ஒதும் - கை (கால்) சோர்ந்தாள் என்று சொல்லும் எ-று.
திருக்கு - குற்றம், குவையத்து என்பதில் அத்து சாரியை. ஆக்கி வினையாலணையும் பெயர், ஒதும் முன்னிலை ஏவல். திருக்கை அயர்ந்தாள்

கல்வளையந்தாதி /35
என்பதில் ககரம் விரித்தல். இதுகடவுண் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்தபக்கத்து வண்டுவிடு தூது.
வண்டினமே, பூமியிலுள்ளவரின் விக்கினங்களை நீக்குபவரும் சிவகுமாரருமாகிய கல்வளைப்பதித் தலைவரிடம் தூது சென்று தன்னோடொத்த அயன்மகளிர் பழித்தமையால் தலைவி சோர் வடைந்தனள் என்று புகலுதிர் என்றபடி (41)
கரவடம் பத்தி யிலார்க்களிப் போயிருள் காய்ந்திடும்பாற் கரவடம் பத்தி யொளிபாய் முலைச்சங் கரிபெறுமைங் கரவடம் பத்திரக் காறுஞ்சு மான்மரு மாசந்த்ரசே கரடவம் பத்திரட் கல்வளை யாயெனைக் காத்தருளே.
இ-ள்: பக்தி இலார்க்குக் கரவடம் அளிப்போய் - அன்பில்லா தவருக்கு விக்கினத்தை ஆக்குபவரே, இருள் காய்ந்திடும் பாற்கர - மலவிருளைக் கடிந்தகற்றும் ஞானகுரியரே, பத்தி வடம் - நிரையே கோக்கப்பட்ட முத்து மாலையில், ஒளி பாய் - ஒளி பாயப்பெற்ற, முலைச் சங்கரி பெறும் ஐங்கர - பரஞானம் அபரஞானம் என்னும் தனபாரங்களையுடைய உமாதேவியார் பெற்றருளிய ஐங்கரக்கடவுளே, வடம் பத்திரக்கால் துஞ்சும் மால் மருகா - ஆலமிலையில் அறிதுயில் கொள்ளும் திருமாலின் மருகரே, சந்த்ர சேகர - பிறைச்சந்திரனை யணிந்த சடாமுடியை யுடையவரே, அடம்பத்திரள் கல்வளையாய் - கூட்டமான அடம்பங்கொடிகள் பரந்துள்ள கல்வளைப்பதியிற் கோயில் கொண்டவரே, எனைக் காத்து அருள் - தமியேனைப் பாதுகாத்துத் திருவருள் புரிவீர் எ-று.
கரவடம் - வஞ்சனை, களவு என்னுமிவைகளைக் குறிக்குஞ் சொல்; இங்கே தீமையை உணர்த்தி நின்றது. தம்மை வழிபடார்க்கு விநாயகப் பெருமான் விக்கினத்தை விளைக்கும் மறக்கருணையி னியல்பு இவ்வந்தாதி யுரையில் முன்னர் விளக்கப்பட்டது.
அன்பிலார்க்கு விக்கினங்கள் நேர விடுபவரே, மலவிருளை யகற்றும் ஞானசூரியரே, உமையம்மையார் புத்திரரே, திருமான் மருகரே, கல்வளைக் கணபதியே, தமியேனைக் காத்தருள்புரிக என்றபடி (42)
அருந்துதிக் கையமில் கற்பீந்த மேனை யசலவரை யருந்துதிக் கைக்கு மகளாய்ப் பிறந்திடு மன்னைவிட மருந்துதிக் கைப்புனை கூறைப் பினாகி யருள்கல்வளை யருந்துதிக் கைக்குன்ற மேயடி யேனுன் னடைக்கலமே.

Page 36
36/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: அருந்துதிக்கு ஐயம் இல் கற்பு ஈந்த - வசிட்டமுனி வருடைய பத்தினியாகிய அருந்ததிக்குச் சந்தேகமற்ற கற்பை அருளியவளும், மேனை அசல அரையரும் துதிக்கைக்கு மகளாய்ப் பிறந்திடும் அன்னை - மேனை யென்பவளும் மலையரசனும் போற்றும்படி அவர்களிடத்தில் மகளாய் வளர்ந்த எங்கள் தாயுமாகிய உமாதேவியாரும், விடம் அருந்து திக்கைக் கூறை புனை பினாகி - நஞ்சை உண்டவரும் திக்கை ஆடையாகப் புனைந்தவரும் பினாகம் என்னும் வில்லைக் கொண்டவருமாகிய சிவ பெருமானும், அருள் - பெற்றருளிய, கல்வளை அருந் துதிக்கைக் குன்றமே - கல்வளைப் பதியில் எழுந்தருளிய தும்பிக் கையையுடைய மலையை நிகர்த்த கயமுகக்கடவுளே, அடியேன் உன் அடைக்கலம் - தமியேன் தேவீருக்கு அடைக்கலம் எ-று.
அருந்துதிக் கையமில் கற்பீந்த அன்னை, மேனை யசலவரை யருந் துதிக்கைக்கு மகளாய்ப் பிறந்திடும் அன்னை, எனத் தனித்தனி முடிக்க. “காமரு வடிவாய் எங்குங் காண்பது சக்தி” என்ற பிரகாரம், ஈசுவரியே அழகின் மயமாயுள்ளாளாதலானும் பெண்பாலார்க்குரிய பேரழகும் கற்பு முதலாம் உயர் குணங்களும் இறைவியுடைய அம்ஸமாதலினாலும் “அருந்துதிக் கையமில் கற்பீந்த . அன்னை” என்றார். அருந்ததி, அருந்துதியென வந்தது.
ஈசுவரிக்கும் ஈசுவரனுக்கும் புதல்வராகத் தோன்றியருளிய யானைமுகந் தெய்வமே கல்வளைப் பெருமானே தமியேன் தேவரீருக்கு அடைக்கலம் என்றபடி (43)
அடைக்கலங் காவென்ற பேர்க்கினி யான்மட வன்னக்கண மடைக்கலங் காரஞ் சினையென் றனைகல் வளைவரைவா யடைக்கலங் காட்டுந் தனத்திர் விரக மகலப்பொன்னி லடைக்கலங் காக்கவென் றென்றோ குணதிசை யாவதுவே.
இ-ள்: அடைக்கலம் கா என்ற பேர்க்கு இனியான் - தமியேன் தேவரீருக்கு அபயம் காத்தருள வேண்டும் என்று இரப்பவர்க்கு இதமானவராகிய விநாயகப் பெருமானுடைய, மட அன்னக் கணம் அலங்கு ஆரம் - இளமையான அன்னப் பெடைகள் ஒளி செய்கின்ற முத்துக்களை, சினை என்று அடைக்கு அணை - தாம் இட்ட முட்டையென் றெண்ணி அடை காக்கச் செல்லப்பெற்ற, கல்வளை வரை வாய் - கல்வளைப் பதியிலுள்ள மலைச்சாரலில், அடைக்கலங் காட்டுந் தனத்தீர் -

கல்வளை யந்தாதி /37
ஊர்க்குருவியின் வடிவைக் காட்டும் (திரண்ட) தனங்களை யுடையவரே, விரகம் அகல - எனது விரகவேதனை நீங்க, பொன் இல் - நுமது வீடாகிய தாமரைப்பூ அடைக்கல் காக்க - அடைத்தலாகிய குவிதலை நீக்க (இதழ் விண்டு அலர), என்று - சூரியன், குண திசை ஆவது - கிழக்குத் திக்கில் உதிப்பது, என்றோ - எந்த நேரமோ (அறியேன்) எ-று.
பொன் = இலக்குமி, ஈண்டுத் தலைவியைக் குறித்து நின்றது. “அடைக்கலம் காக்க” என்புழி அம் விரித்தல் விகாரம். இது பிரிவுழிக் கலங்கலென்னுங் கிளவித் தொகையுள் “கண்படை பெறாது கங்குனோதல்’ என்னும் அகப்பொருட் டுறையாகும். தனத்தீர்: உயர்வுப்பன்மை. தலைவியை இலக்குமியாகப் புனைந்துரைக்குங் கருத்தால் அவள் தன் வீட்டினின்றும் வெளிப்போதருதலைக் குறித்து ‘தாமரைமலராகிய வீடு திறக்கப்பட்டால் (பொழுது புலர்ந்தால் என்றபடி) தலைவியைத் தான் சென்றெப்தல் எளிதாகு’ மென்னும் உட்கோளால் இவ்வாறு தலைவன் கூறினானென்பது. தலைவி தன்னெதிரில் இல்லையாகவும் தன்னிச்சையால் முன்னிலைப்படுத்திக் கூறுகின்றானாதலின், நும்மில்” எனற்பாலது ‘பொன்னில்’ என அவளைப் படர்க்கைச் சொல்லாற் கூறியது “ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே" என்னுஞ் சூத்திரத்தாற் போந்த இடவழுவமைதி. அகல காக்க ஆவது எனக் காரியப் பொருளவாகிய வினையெச்சங்களை முறையே முடிக்க.
இயற்கைப் புணர்ச்சியிற் கூடித் தலைவியைப் பிரிந்து தனித் திருக்குந் தலைவன் இரவில் விரகவேதனையால் தலைவியை முன்னிலைப்படுத்தி இங்ஙனம் தன்னுட் கூறிவருந்தினானென்றபடி (44)
வனத்தா னையன்றொழு மம்மானை யம்புலி மானனிசெவ் வனத்தானை யன்ன வயற்கல் வளைய்பெரு மானைமறை வனத்தா னையனக் கணைமலை மான்மரு மானையைம்பூ வனத்தானை யன்புசெய் வார்முலைப் பாலை மறந்தவரே.
இ-ள்: வனத்தான் - துழாய் மாலையைத் தரித்தவராகிய விஷ்ணு மூர்த்தியும், அயன் - பிரமதேவரும், தொழும் அம்மானை - வழிபடும் தலைவரும், அம்புலி மான் அணி செவ் வனத்தானை - பிறைச் சந்திரனை அணிந்த வரும் செவ்விய திருமேனியை யுடையவரும், அன்ன வயற் கல்வளைப் பெருமானை - அன்னப் பறவைகள் சஞ்சரிக்கும் செந்நெல் வயல்களைக் கொண்ட கல்வளைப் பதியிற் கோயில் கொண்ட பெருந்தகையும், மறை வனத்தான் நயனக் கணை மலை மான்

Page 37
38/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
மருமானை, வேதாரணிய ஈசுவரரும் திருக்கண்களாகிய பாணத்தைப் பொருந்திய பருவதவர்த்தனியும் பெற்றருளிய புதல்வரும், ஐம்பூவன் அத்தானை - ஐந்து பூக்களைப் பாணமாகக்கொண்ட மன்மதனுக்கு மைத்துனரும் ஆகிய விநாயகக் கடவுளை, அன்பு செய்வார் - பத்தி பாராட்டுபவர்கள், முலைப்பாலை மறந்தவரே - தாயின் முலைப்பாலைக் குடிப்பதனை மறந்தவராவர். எ-று.
"முலைப்பாலை மறந்தவரே” என்பது இனிமேற் பிறவியெடுக்க மாட்டாரென்பதை உணர்த்தியவாறாம். ஐயன் நையனம் என்பன முறையே அயன், நயனம் என்பனவற்றின் போலியாம்.
கல்வளைப் பெருமானை வழிபடுபவர் இனிமேற் பிறவியுட் புகமாட்டார் என்றபடி (45)
தவராக மாகன கச்சிலை கோலிபொற் றாள்பெறமைத் தவராக மாக விடந்தவன் சாபந் தவிர்த்தவன்மா தவராக மாகநற் காமுரல் கல்வளைத் தந்திநன்மா தவராக மாகரன் கண்ணாறு பூங்கொன்றைத் தாமத்தனே.
இ-ள்: தவராக மா கனகச் சிலை கோலி - வில்லாகப் பெரிய பொன்மலையான மேருவை வளைத்த சிவபெருமானுடைய, பொன் தாள் பெற - பொன்போலும் திருவடிகளைத் தேடிக்காணவேண்டி, மைத்த வராகமாக இடந்தவன் - கருநிறங் கொண்ட பன்றியாகப் பூமியை அகழ்ந்து சென்ற திருமாலுக்கு, சாபந் தவிர்த்தவன் - (ஈசுவரி இட்ட) சாபத்தை நீக்கியருளியவர் (யாரெனில்), மாதவ ராகம் ஆக - வண்டுகள் மிகவும் ராகத் தோடு, நல்கா முரல் கல்வளைத் தந்தி - நல்ல பூஞ்சோலையிலே பீங்காரஞ் செய்யப்பெற்ற கல்வளைப் பதியிற் கோயில் கொண்டருளிய யானைமுகத் தெய்வமும், நல்மாதவர் ஆகம் ஆகரன் - தூயவர்களாகிய முனிவர்களுடைய மனத்தை இருப் பிடமாகக் கொண்ட வரும், கள் நாறு கொன்றைப்பூத் தாமத்தனே - தேன் மணக்கும் கொன்றைப்பூ மாலையை யணிந்தவருமாகிய கணேசமூர்த்தியேயாவர் எ-று.
மூன்றாமடியிலுள்ள “தவ” மிகுதியைக் குறிக்கும் ஒர் உரிச்சொல். மைத்த வராகமாக இடந்தவன் சாபந் தவிர்த்தவன் என்பதன் வரலாறு: பன்றி வடிவங்கொண்டு பரமசிவனுடைய திருவடியைத் தேடிச்சென்ற திருமால், ஒரு தினம் கைலையங்கிரியிற் கண்ணுதற் பெருமானைத் தரிசிக்கச் சென்ற

கல்வளை யந்தாதி /39
விடத்துக் கைலைக் கோபுர வாசலில் எழுந்தருளிய கரிமுகக் கடவுளுக்கு வழிபாடாற்றாது செம்பொற்றிருக் கோயிலுட் சென்று கறைமிடற்றிறைவனையே வணங்கி நிற்றலும், எம்பெருமான் ஒரு திருவிளையாட்டைத் திருவுளங்கொண்டு, இறைவியை நோக்கித் தம்முடன் கவறாட வரும்படி இயம்பியருளுதலும், இறைவி நாம் கவறாடும்போது வெற்றி தோல்வி சொல்வதற்கு ஒரு நடுவன் வேண்டுமே யென, இறைவர், இத்திருமாலே சான்றாக இருக்குக என்றருளி, அங்ங்ணம் அவரைச் சான்றாக வைத்துக் கவறாடியவிடத்து ஈசுவரி வெல்ல, ஈசுவரன் தாம் தோல்வியுற்றும் தோல்வியுறவில்லை யெனச் சாதித்தருள, எமையாள் உமையாள் உற்றது உரைத்தியெனத் திருமாலைக் கேட்க, இறைவன் தம் பக்கல் சொல்ல வேண்டுமெனத் திருமாலுக்குத் திருவிழியாற் குறிப்புக் காட்ட அவர், வென்ற இறைவி தோற்றனளென்றும் தோற்ற இறைவர் வென்றாரென்றும் ஒரஞ் சொல்ல, இறைவி சீற்றங்கொண்டு “திருமாலே, நீ கண்ணாரக் கண்டுகொண்டிருந்தும் ஒரஞ் சொன்னாயாதலின் குருட்டுத் தன்மையுள்ள மலைப்பாம்பாகிப் பசி தாகம் வருத்தக் கிடந்து அலமருதி” என அக் காவற் கடவுளைச் சபித்தருளினர். பின்னர்ப் பாம்புருவடைந்த திருமால் கைலாசபதி பணித்தருளியபடி தெட்சண பூமியிலுள்ள ஆலவனத்தை யடைந்து அங்குள்ள ஆலமரத்தின் பொந்திற் சிலகாலங்கிடந்து வருந்தி, சத்த கன்னியர் உபதேசித்தபடி மார்கழி மாசத்து விநாயக சஷ்டி விரதத்தை விதிப்படி அநுஷ்டித்து எங்கள் ஐங்கரக் கடவுளைப் பூசிக்க அப்பெருமான் தேவி இட்ட சாபத்தை நீக்கித் திருவருள் புரிந்தன ரென்பதாம். இவ்வரலாற்றைக் கந்தபுராணம் - கயமுகன் உற்பத்திப் படலம், அநந்தன் சாய நீங்கு படலம் முதலியவற்றிற் பரக்கக் காண்க. இங்கே பசுபதியும் பருவதவர்த்தனியும் ஆடியருளிய கவறு, சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினராகிய மானுடர்கள் ஆடும் கவறு சதுரங்கம் முதலியன போலல்லாது ஞானக் கருத்தமைந்த தென்பதனை,
“காயம் பலகை கவறைந்து கணமூன்றாய் ஆயம் பொருவ தோரைம்பத் தோரக்கரம் மேய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப் பறியேனே’
என்னும் திருமூலநாயனார் திருவாக்கானுணர்க.
உமாதேவியார் நாராயணமுர்த்திக்கு இட்ட சாபத்தை நீக்கிய ருளியவர் கல் வளைப் பதியில் எழுந்தருளிய கயமுகக் கடவுள் என்றபடி (46)

Page 38
4o/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
மத்தன் பராபரை சீராட்டுப் பிள்ளை மணிமந்தரஸ மத்தன் பராவிச் சிவந்திடு சேவடி வாய்ந்தபது மத்தன் பராகவெண் ணிறணி கல்வளை வானவனா மத்தன்ப ரானவ ரன்றோ கயிலையில் வாழ்பவரே.
இ-ள்: மத்தன் - ஊமத்தம்பூவை யணிந்த பரமசிவனும், பராபரை - ஈசுவரியும், சீராட்டுப்பிள்ளை - சிறப்புச்செய்தலை யுடைய (பாராட்டுகின்ற) பிள்ளையும், மணி மந்தர மத்தன் - (பாற்கடல் கடைந்தபோது) அழகிய மந்தரமலையை மத்தாகக் கொண்ட திருமால், பராவிச் சிவந்திடு சேவடி வாய்ந்த பதுமத்தன் - துதித்து வணங்குதலிற் சிவந்த திருவடித்தாமரையை யுடையவரும், பராக வெண்ணிறு அணி கல்வளை வானவன் - உயிர்களின் மலநீக்கத்தின் பொருட்டு (நிர்மலமாகிய தமது திருமேனியில்) துகளாகிய விபூதியைத் தரித்தருளியவருமாகிய கல்வளைப் பெருமானுடைய, நாமத்து அன்பர் ஆனவர் அன்றோ - திருநாமங்களை அன்புடன் செபித்தவர்களல்லவா, கயிலையில் வாழ்பவர் - கைலாசபதவியில் (தவறாது) இருப்பவர் எ-று.
வாழ்பவர் என்னும் வினை முக்காலத்தையும் உட்படுத்தி நின்றது. திருமால் தமது திருமுடி பெருமானுடைய சீறடியில் உறுத்தும்படி பன்முறை வணங்குவரென்பதை உணர்த்தும் வண்ணம் 'பராவிச் சிவந்திடு சேவடி” என்றார்.
கல்வளைப் பெருமான் திருநாமங்களை யோதுவோர் எக்காலத்தும் நற்கதியுறுவ ரென்றபடி (47)
பவநம் புயர்தொண்டர்க் கில்லாமை யாக்கும் பரன்கனனிர் பவனம் புயங்க முடியேந்து மண்விண் படிவன்கருப் பவனம் புயலளக் குங்கல் வளைப்பதி மீதிலுறை பவனம் புயன்றொழும் பாதாம் புயனெம் பரதெய்வமே.
இ-ள்: நம்பு உயர் தொண்டர்க்கு பவம் இல்லாமை ஆக்கும் பரன் - தம்மை நம்பிய மேலான அடியவர்களுக்குப் பிறவி இல்லாமையைச் செய்கின்ற முதல்வரும், கனல் நீர் பவனம் - நெருப்பு தண்ணிர் காற்று, புயங்கம் முடி ஏந்தும் மண் விண் படிவன் - ஆதிசேடன் என்னும் பாம்பு தன் தலையிற் சுமக்கும் பூமி ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் வடிவைக் கொண்டவரும், கருப்பவனம் புயல் அளக்கும் கல்வளைப் பதிமீதில் உறைபவன் - கருப்பஞ்சோலைகள் முகின்மண்டலம் வரையில்

கல்வளையந்தாதி /4
உயரப்பெற்ற கல்வளைப்பதியிற் கோயில் கொண்ட வரும், அம்புயன் தொழும் பாத அம்புயனே - பிரமதேவரும் வணங்குந் திருவடித்தாமரைகளை யுடையவருமாகிய விக்கினேசுவரப் பெருமானே, எம்பர தெய்வம் - எங்கள் முழுமுதற் கடவுளாவர் எ-று.
ஈற்று ஏ தேற்றம், புயல் - இங்கே முகில் மண்டலத்திற்காகி நின்றது.
அடியவர் பிறவித்துன்பத்தை ஒழிப்பவரும் பஞ்சபூத வடிவினரும் பிரமாவாற் பூசிக்கப் படுபவருமாகிய கல்வளைப் பெருமானொருவரே எங்கள் முழுமுதற் கடவுளென்றபடி (48)
பரமானந் தக்கன் மழைமாரி காத்திடும் பைங்கனகாம் பரமானந் தக்கந் தரவிந்தி ராணி பதியயனும் பரமானந் தக்கல் வளையத்த ஆத்தம பத்தர்சித்தன் பரமானந்தப்பிள்ளை யார்துணைச் சேவடிப் பங்கயமே.
இ-ஸ்: கல்மழை மாரி நந்த - கன்மழை பெய்தமையால் நேர்ந்த இடையூறுகெட ஆன் காத்திடும் பைங் கனக அம் பரமால் - கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்த கிருஷ்ண அவதாரத்தைக் கொண்ட பீதாம்பரத்தை உடுத்தியவராகிய திருமாலுக்கும், நந்தக் கந்தர இந்திராணி பதி - சங்கினையொத்த கழுத்தையுடைய இந்திராணியின் நாயகனாகிய இந்திரனுக்கும், அயன் - பிரமதேவருக்கும், உம்பர் - (ஏனைய) தேவர்கட்கும், அமான் - தலைவரும், அந்தக் கல்வளை அத்தன் - சிறந்த கல்வளைப்பதியில் எழுந்தருளிய பரமபிதாவும்,
உத்தம பத்தர் சித்தனி - மேலான அன்பர்களின் சித்தத்தில் உறைபவருமாகிய, பரமானந்தப் பிள்ளையார் துணைச் சேவடிப் பங்கயமே - பரமானந்தப் பிள்ளையாருடைய இரண்டாகிய
திருவடித்தாமரைகளே, பரம் - தமியேனுக்குப் பற்றுக் கோடாம் எ-று
அம்மான் என்பது அமான் எனத் தொக்கு வந்தது. அம்மான் - தலைவன், கண்ணபிரானோடு மாறுபட்ட இந்திரன் கன்மழை பெய்யும்படி செய்ய அம்மழையினாற் பசுக்கள் இடருறுவதை இடையர் போய்க் கண்ணபிரானுக்கு முறையிட, அந்தப் பிரான் கோவர்த்தனமென்னும் மலையை அகழ்ந்தெடுத்துத் தலைகீழாக மாறிக் குடையாகப் பிடித்துக் கன்மழையைத் தடுத்துப் பசுக்களைக் காத்தருளினாரென்பது சரித்திரம்.

Page 39
42/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
கல்வளைப்பதியிற் கோயில் கொண்டருளிய பரமாநந்தப் பிள்ளையார் திருவடிகளே சரணம் என்றபடி (49)
பங்கைய மாலை யளிக்குழல் வாய்முலை பண்மொழிகோ பங்கைய மாலை யனையாட் குதவரன் பாலன்றடப் பங்கைய மாலை யலர்கல் வளைக்கண் பரிந்தொருகூ பங்கைய மாலையந் தொட்டியற் றாரெய் படியுய்வரே.
இ-ள்: அம்மாலை அளிக் குழல் - அழகிய மாலையைச் சூடிய வண்டுகள் படியுங் கூந்தலை உடையவரும், வாய் முலை பண்மொழி - அதரமும் தனங்களும் இனிய சொல்லும், கோபம் கயம் ஆலை அனையாட்கு - (முற்ையே) இந்திர கோபத்தையும் யானைமத்தகத்தையும் கருப்பஞ்சாற்றையும் நிகர்த்த இறைவிக்கு, பங்கை உதவு அரன் பாலன் - இடப்பாகத்தைக் கொடுத்த ஈசுரனது புத்திரராகிய விநாயகப் பெருமான் கோயில் கொண்டருளிய, தடப்பங்கயமாலை அலர் கல்வளைக் கண் - தடாகங்களில் தாமரைப்பூக்கள் நிரையே மலரப்பெற்ற கல்வளைத்தலத்தில், பரிந்து ஒரு கூபம் கயம் தொட்டு - மனப்பூர்வமாக ஒரு (தருமக்) கிணற்றையேனும் ஒரு திருக்குளத்தினையேனும் தோண்டி, ஆலயம் இயற்றார் - (அத்) திருக்கோயிலின் திருப்பணியையும் முற்றுவிக்காதவர் (நிறைவேற் றாதவர்); எப்படி உய்வர் - எவ்வாறு ஈடேறப் போகின்றார்கள் எ-று.
அம்மாலை என்பது அமாலையென மகரந் தொக்குவந்தது; கோபம் - இந்திரகோபம் (தம்பலப்பூச்சி); ஒரு என்பதைக் கயத்தொடுங் கூட்டுக. எப்படி என்ற வினா எதிர்மறைப் பொருளில் வந்தது; ஒருவாற்றானும் உய்யமாட்டாரென்பதாம்.
ஈசுர புத்திராகிய கல்வளைப் பெருமான் எழுந்தருளிய திவ்விய தலத்தில் ஒரு தருமக் கிணற்றையேனும் திருக் குளத்தையேனும் அமைக்காதவரும் அத்திருக்கோயிற் றிருப்பணியை முற்றுவிக்காத வரும் எவ்வாறு ஈடேறப் போகின்றார் என்றபடி (5O)
வருந்தும் பிறவி யலைவாரி நீந்த மதுவினைக்க வருந்தும்பி வீழ்மலர்த் தாட்புணை தாகன்னல் வான்கதிர வருந்தும் ப்ரகாச மணித்தேர் தடுக்கும் வளக்கல்வளை வருந்தும்பி மாமுகத் தையாமெய் யாகுண்ட வண்டியனே.

கல்வளையந்தாதி /43
இ-ள்: கன்னல் வான் கதிரவர் உந்தும் பிரகாச மணித் தேர் தடுக்கும் - கரும்புகளானவை அந்தரத்திற் செல்லும் சூரியன் செலுத்தும் ஒளியுடைய அழகிய தேரைத் தடுக்கின்ற, வளம் கல்வளை வரும் மா தும்பி முகத்து ஐயா - வளத்தை யுடைய கல்வளைப்பதியிற் கோயில் கொண்டருளிய பெருமை யாகிய யானைமுகத்தையுடைய தலைவரே, மெய்யா - மெய்யர்க்கு மெய்யராயுள்ளவரே, குண்ட வண்டியனே - குடம் போன்ற திருவயிற்றை யுடையவரே, வருந்தும் பிறவி அலை வாரி நீந்த - வருந்துகின்ற பிறவியாகிய அலைகளையுடைய கடலைத் தமியேன் கடப்பதற்கு, மதுவினைக் கவரும் தும்பி விழ் மலர்த் தாட்புணை தா - தேனைச் சேர்க்கின்ற வண்டுகள் படியும் செந்தாமரைப் பூப்போன்ற திருவடியாகிய தெப்பத்தைத் தரல்வேண்டும் எ~று.
கல்வளைப்பெருமானே, மெய்யர்க்கு மெய்யனே, குடம்போலும் திருவுதரத்தை யுடையவரே, தேவரீருடைய திருவடியையே தெப்பமாகத் தந்து தமியேன் பிறவிப் பெருங்கடல் நீந்தும் வண்ணம் திருவருள் பாலித்தல் வேண்டு மென்றபடி (51)
வண்ட மருங்குலை யான்மரு கன்கல் வளைச்சிலம்பா வண்ட மருங்குலை ஞாளியு மாறு வருமதள்வாய் வண்ட மருங்குலை விற்கொண்ட வேட்டுவர் மாவலிது வண்ட மருங்கு லிளவஞ்சி பாலல்லின் வாரலையே.
இ - ள்: வண்டு அமரும் குலையான் மருகன் கல்வளைச் சிலம்பா - வண்டுகள் படியும் துளசிப்பூமாலையைத் தரித்த திருமாலின் மருகராகிய விநாயகப்பெருமான் கோவில் கொண்டருளிய கல்வளைப் பதியிலுள்ள பொருப்பனே, வண் தமரும் குலைஞாளியும் மாறு - (நீ தலைவியிடம் வரும் விஷயத்தில் இங்குள்ள) வளவிய சுற்றத்தவரும் குரைக்கின்ற நாயும் உனது வருகைக்கு மாறாகும், வரும் அதர் வாய் - (அன்றியும்) நீ வரும் மார்க்கத்தில், வண்டு அமரும் குலைவில் கொண்ட வேட்டுவர் மா (மாறு) - அம்பு பொருந்திய குதையோடு கூடிய வில்லினைக் கொண்டவர்களாகிய வேடர்களும் மிருகங்களும் மாறாகும், வலி துவண்ட மருங்குல் இளவஞ்சி பால் அல்லின் வாரலை - (ஆதலால்) கொடியெனத் துவண்ட இடையினையுடைய யெளவனம் பொருந்திய தலைவியிடத்து இரவில் வாராதொழிதி எ-று.

Page 40
44/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
குல்லை வல்லி என்பன லகரந் தொக்கு வந்தன. குரைத் தலைக் குலைத்தலெனல் உலகவழக்கு. வாரலை, எதிர்மறை யேவல்.
சுற்றத்தாரும் நாயும் நீ வரும் மார்க்கத்திலுள்ள வேட்டுவரும் மிருகங்களும் நின் வருகைக்கு மாறாதலின் நீ தலைவியிடம் இரவில் வாராதொழிகெனத் தலைவனைப் பாங்கி தடுத்தபடி (52)
வாரிக் கடுக்கை தனையண்டர் சொல்ல வரவெனை நீர் வாரிக் கடுக்கையி னாற்பாவி யீர்கன் மனத்துவைத்தேன் வாரிக் கடுக்கைமென்றான்றுஞ்சு காமயி லாடக்கண்டு வாரிக் கடுக்கைசெம் பொன்றுாற்று கல்வளை வாசனையே.
இ-ள்: அண்டர் கடுக்கைதனை சொல்ல வாரிவர - பகை வராகிய அயலார் பழிதூற்ற வாயிலில் வர, நீர் எனை வாரிக் கடுக்கையினால் - நீவிர் என்னை மிகவுஞ் சினத்தலினாலே, பாவியீர் - பாவிகாள், ஆன் வார் இக்கு அடுக்கை மென்று துஞ்சு கா - பசுக்கள் நீண்ட கரும்பின் கூட்டத்தைத் தின்று உறங்கல்பெறுஞ் சோலையில், மயில் ஆடக் கண்டு - மயில்கள் ஆடுவதைக் கண்டு, கடுக்கை செம்பொன்வாரித் தூற்று கல்வளைவாசனை - கொன்றை மரங்கள் (தம்மலர்களாகிய) செம்பொன்னை (சந்மானமாக) அள்ளி வீசுகின்ற கல்வளைப்பதியில் எழுந்தருளிய விநாயகக்கடவுளை, கல்மனத்து வைத்தேன் - கசிவற்ற கடிதான என்னுள்ளத்திற் சதா தியானிக்கலானேன் எ-று.
இது தலைவன்மாட்டுத் தலைவி நயந்த பக்கத்து அத்தலைவி தான் இடையறாது துயருற்றமைக்குக் காரணங் கூறியபடி (53)
வாசவ னந்தர நாட்டோர் துதிக்கு மதக்கலுழி வாச வனந்தற்கு ஞானோப தேசம் வழங்குமெய்யா வாசவ னந்த வளவளை சேர்கல் வளைப்பதியின் வாச வனந்த ரவிபோலுன் றாடலை வைத்தருளே.
இ-ள்: வாசவன் அந்தர நாட்டோர் துதிக்கும் மதக்கலுழி வாச - இந்திரனும் பொன்னுலகவாசிகளாகிய தேவர்களும் பரவுகின்ற ஞானமத நீரின் வாசனையை யுடையவரே, அனந்தற்கு ஞானோபதேசம் வழங்கும் மெய்யா - விஷ்ணு மூத்திக்கு ஞானோபதேசத்தைச் செய்தருளிய மெய்பொருளே,

கல்வளை யந்தாதி /45
வாச அனம்தவள வளை சேர் கல்வளைய்பதியின் வாச - சிறகையுடைய அன்னங்களும் வெண்மையான சங்கும் பொருந்திய கல்வளைப்பதியை வாசஸ்தானமாகக் கொண்டவரே, அனந்தரவி போல் உன்தாள்தலைவைத்து அருள் - அநந்தஞ் சூரியரை நிகர்த்த ஒளியோடு கூடிய தேவீருடைய திருவடிகளைத் தமியேன் சிரசின்கண் வைத்துத் திருவருள் செய்தருளுவீர்
6T-g).
அனந்தற்கு ஞானோபதேசம் வழங்கியது, தேவியிட்ட சாபத்தினால் விஷ்ணுமூர்த்தி அநந்தன் என்னும் பெயர் கொண்ட பெரிய பாம்பாக ஆலவனத்துள்ள ஆலமரப்பொந்துட் கிடந்து வருந்திய காலத்தில் விநாயகசஷ்டி விரதத்தை யநுட்டித்து ஐங்கரக் கடவுளின் அருளும் பாவவிமோசனமும் பெற்ற காலத்திலாம். மூன்றாமடியில் அன்ன மென்பது அனமெனத் தொக்கு வந்தது.
திருமாலுக்கு ஞானோபதேசஞ் செய்தருளிய கல்வளைப் பெருமானே, தமியேனுக்கும் திருவடிதீக்கை செய்தருள வேண்டு மென்றபடி (54)
அருக்கரைக் கன்ன றொடுங்கல் வளைய னறுகிதழி யருக்கரைக் கன்னங்கை யைத்தந்தை யாயுடை யான்வினைநே யருக்கரைக் கன்னலிற் றீர்ப்பான் வரைமின் னராமணிப்பை யருக்கரைக் கன்ன நடைக்கென்ற னாவி யகன்றதுவே.
இ-ள்: கன்னல் அருக்கரைத்தொடும் கல்வளையன் - கரும்புகள் சூரிய மண்டலத்தைத் தொடும் கல்வளைப்பதியில் எழுந்தருளியவரும், அறுகு இதழி அருக்கரை கல் நங்கையைத் தந்தை ஆய் உடையான் - அறுகம் புல்லையும் கொன்றைப் பூவையும் எருக்கலம்பூவையும் சூடுபவராகிய பரம சிவனையும் பருவதவர்த்தனியையும் (முறையே) பிதா மாதாக்களாக வுடையவரும், நேயருக்கு வினை அரைக் கன்னலில் தீர்ப்பான் - தமது அடியவர்கட்கு நேரும் தீவினைகளை அரை நாழிகையுள் நீக்கியருளுபவருமாகிய விநாயகப் பெருமானுடைய, வரைமின் - மலையிற் பெண்ணினது, அரா மணிப்பை அருக்கு அரைக்கு - பாம்பின் இரத்தினத்தோடு கூடிய படத்தை யொத்த கடிதடத்திற்கும், அன்ன நடைக்கும் - அன்னத்தின் நடையை ஒத்த நடைக்கும் (ஆக), என்தன் ஆவி அகன்றது - எனது உயிர் போய்விட்டது எ-று.

Page 41
46/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இரண்டாமடியில் அருக்கு - எருக்கலை, இங்கே பூவுக்காகி நின்றது. கன்னல் - நாழிகை, இருபத்து நாலு நிமிஷங்கொண்ட நேரம். அரை, அன்னம் ஆகுபெயர்கள்; அரைக்கு நடைக்கு என்பனவற்றில் உம்மைகள் தொக்கன. தன் - சாரியை.
இது தலைவன் தலைவியை நினைந்து வருந்திக் கூறிய தென்றபடி
அகம்பத்தர் நெஞ்சமுங் கல்வளைக் கோட்டமு மானவன்றி யகம்பத்த ரைச்சங் கரித்தோன் மருகன்றண் டாழிவெள்ளி யகம்பத்த ரென்றளி யூதாத பூவிறைத் தன்புருகி யகம்பத்தர் தாம்பெறும் பேறய னாலு மளப்பரிதே.
இ-ள்: பத்தர் நெஞ்சமும் கல்வளைக் கோட்டமும் அகம் ஆனவன் - அடியாருடைய மனத்தையும் கல்வளைப்பதியையும் கோயிலாகக்கொண்டவர், தீய கம் பத்தரைச் சங்கரித்தோன் மருகன் - கொடியவனும் பத்துத்தலைகளை யுடையவனுமாகிய இராவணனை (இராமாவதாரத்தில்) வதைத்த திருமாலுக்கு மருகள், தண்டு ஆழி வெள்ளிய கம்பு அத்தள் என்று - தண்டாயுதம், சக்கரம், வெண்மையாகிய சங்கு என்னுமிவைகளை யேந்திய திருக்கரங்களை யுடையவரென்று (துதித்து), அளிஊதாத பூ இறைத்து - வண்டுகள் ஊதாத அன்றலர்ந்த பூக்களை வரை வின்றி இட்டு, அன்பு உருகிய கம்பத்தர் தாம் பெறும் பேறு - அன்பினால் உள்ளம் உருகும் மெய்விதிர்ப்புடைய அடியவர்கள் பெறும் பேறானது, அயனாலும் அளப்பு அரிது - பிரமதேவராலும் அளவிடுத்தற் கரியதாம் எ-று.
வண்டு படிந்த பூ பூசைக்கு உரியதல்லவாதலின் அளி யூதாத பூவெனப்பட்டது.
அடியார் உள்ளக் கமலத்திற் கோயில் கொண்ட கல்வளைப் பெருமானைப் பூசித்து வழிபடும் அன்பர் பெறும் பேற்றை அளவிடுதல் பிரமாவாலும் முடியாதென்றபடி (56)
அப்பா தகமல நீக்கிச் சிலம்பிசை யார்த்திடுங்கோ லப்பா தகமலம் பூசித்து நேசிக்க வன்புதவா யப்பா தகமலங் கார்வயற் கல்வளை யாதிபொன்றா தய்யா தகமலந் தாங்குஞ் சடைக்கரு ணாகரனே.

கல்வளையந்தாதி /47
இ-ள்: அய்யா - அப்பரே, தகமலங்கு ஆர் வயல் கல்வளை ஆதி - மலங்கு மற்சம் மிகப் பொருந்திய வயலையுடைய கல்வளைப்பதியிற் கோயில்கொண்டருளிய ஆதிக்கடவுளே, பொன் தாது அப்பாத கமலம் தாங்கும் சடைக் கருணாகரனே - கங்கை நீரைத் தரித்துள்ள சடையையுடைய கருணை மூர்த்தியே, அய்யாதக மலம் நீக்கி - அந்தப் பாதகமாகிய மலத்தை நீக்கி, சிலம்பு இசை ஆர்த்திடும் - சிலம்பின் ஒலி நிகழும், கோலப் பாத கமலம் பூசித்து நேசிக்க - தேவரீருடைய அழகிய திருவடித் தாமரைகளைப் பூசை செய்து அன்பு பாராட்டுதற்கு, அன்பு உதவாய் - தமியேனுக்கு அருள் செய்தருள வேண்டும் எ-று.
பொன்றா தப்பாதகமலம் - நீர், பொன்றாது அப்பிய கமலம் - தாமரை. இங்கே நீர் கங்கையாகும். அவனருளாலே யவன்றாள் வணங்க வேண்டுமாதலின் “பாத கமலம் பூசித்து நேசிக்க அன்புதவாய்” என்றார்.
கல்வளைப் பெருமானே, கங்காதரரே, தேவரீர் திருவடிகளைத் தமியேன் பூசித்து ஈடேறும் வண்ணம் திருவருள் புரிக என்றபடி (57)
கருவரம் பாயயி னோக்கியர் தூறுகற் றுக்கற்றுப்ப கருவரம் பாயப் படேலன்ன மேகல் வளைக்களிற்றைக் கருவரம் பாய்ந்துகண் டோர்காட்டு தூபத்தின் கற்றையளக் கருவரம் பாய்துண் டாலிக்கு மாலிக் கனமல்லவே.
இ-ள்: அளக்கள் உவர் அம்பு ஆயது உண்டு - (அந்தரத்திற் காணப்படுவது) கடலின் உவராகிய நீரை மொண்டு, ஆலிக்கும் ஆலிக் கனம் அல்ல - பெய்கின்ற ஆலாங்கட்டி மழையை யுடைய முகிலன்று, கருவரம்பு ஆய்ந்து கண்டோர் - கருப்பத்தின் (பிறவியின்) எல்லையை ஆராய்ந்து கண்ட ஞானிகள், கல்வளைக் களிற்றைக் காட்டு தூபத்தின் கற்றை - கல்வளைப்பதியில் எழுந்தருளிய யானையாகிய விநாயகக் கடவுளுக்கு இடப்படும் தூபத்தின் (புகைப்) படலமாகும், அன்னமே அம்பாயப்படேல் - (ஆதலால்) நடையில் அன்னத்தை யொத்தவளே நீ துன்பப்படாதே, கரு அரம்பாய் அயில் நோக்கியர் - கரிய அரத்தால் அராவப்பெற்ற வேல்போலுங் கண்களையுடைய பெண்கள், தூறு கற்றுக் கற்றுப் பகருவர் - பழி மொழியைப் பயின்று பயின்று சொல்லுவார்கள்
6T-s).

Page 42
48/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
கல்வளைக் களிற்றைக் காட்டு என்பதில் ஐ உருவு குவ் வுருபின் றிரிபாம். அம்பாயம் - உபத்திரவம், துன்பம். (உலக வழக்கு). இஃது இகுளை பருவமன்றெனல்.
தலைவியே, ஆகாயவெளியிற் காணப்படுவது ஆலாங்காட்டி பெய்யும் கரிய முகிலன்று, கல்வளைப் பெருமானுக்கு அந்தணர்கள் இடும் தூப (புகைப் படலாகுமென இகுளை சொற்றபடி (58)
கனஞ்சஞ் சரித்திடும் வண்டலை தண்டலைக் கல்வளையே கனஞ்சஞ் சலமுறு பாசா டவிவெளி கண்டவனோங் கனஞ்சஞ் சரிசொலும் வேற்க ண்டைக்குக் கருங்குழலுங் கனஞ்சஞ்சரிகங்களேநீரிருக்கை கடனல்லவே.
இ-ள்: கனம் சஞ்சரித்திடும் வண்டு அலை தண்டலைக் கல்வளை ஏகன் - முகில்கள் படிகின்ற வண்டுகள் ஊடாடும் சோலைகள் பொருந்திய கல்வளைத்தலத்திற் கோயில்கொண்டருளிய ஏகமூர்த்தியும், நம் சஞ்சலம் உறு பாச அடவி வெளி கண்டவன் - எம்முடைய துன்பஞ்செறிந்த பாசமாகிய காட்டை (வெட்டிச் சுட்டு) வெளியாக்கியவருமாகிய விநாயகக்கடவுளின், ஓங்கல் - மலையில் வாழும், நஞ்சம் சரிசொலும் வேற்கண் இடைக்கு - நஞ்சை ஒப்பாக்கச் சொல்லுகின்ற வேல்போலும் விழிகளையுடைய தலைவியினது இடைக்கு, கருங்குழலும் கனம் - அவளது கரிய கூந்தலும் பாரமாகும், சஞ்சரிகங்களே நீள் இருக்கை கடன் அல்ல - (அதலால்) வண்டுகளே நீவிர் அவள் அளகத்திற் படிவது சரியல்ல எ-று.
இது மெய்தொட்டுப் பயிறலாகும். தலைவன் இவ்வாறு வண்டுகட்கு உரைத்து அவற்றை ஒச்சும்போது தலைவியின் மெய்யில் (அபுத்திபூர்வமாகத்) தீண்டுவான் போல் தீண்டினானென்பதாம்.
தலைவிக்குப் பேரழகைச் செய்வதும் இன்றியமையாததுமாகிய அளகமே அவளது நுண்ணிய இடைக்குப் பெரும் பாரமாயிருக்க அவ்வளவோடமையாது நீவிரும் அவள் கூந்தலிற் படிந்து இடைக்குப் பாரத்தை அதிகரிக்கச் செய்தல் முறையன்றெனச் சொல்லி வண்டுகளை ஒச்சுவான் போலத் தலைவியின் மேனியில் மெல்லெனத் தீண்டினா னென்றபடி (59)

கல்வளை யந்தாதி /49
கடம்பிடிக் குங்கமஞ் சூன்மா லளந்திடுங் கல்வளையான் கடம்பிடிக் குங்கர டத்தறு கட்சிறு கட்களிறு கடம்பிடிக் குப்புய னிருட்டு வெற்பநங் காமர்வஞ்சி கடம்பிடிக் குங்கண்கள் காதள வோடிக் கதித்தனவே.
இ-ள்: கடம்பு இடிக்கும் கமம் சூல் மால் அளந்திடும் கல் வளையான் - கடப்பமரக் கொம்பர்கள் உரோஞ்சுகின்ற நிறைவாகிய சூற்கொண்ட மேகத்தை அளக்கும் கல்வளைப்பதியில் எழுந்தருளிய விநாயகக் கடவுளுடைய, கடம் பிடிக்கும் கரடத் தறுகண் களிறுகள் - கதுப்பைச் சர்ந்த மதசலச்சுவட்டினையும் தறுகண்மையையும் சிறு கண்களையுமுடைய ஆண்யானைகள், தம் பிடிக்குப் புயல் நீர் ஊட்டு வெற்ப - தங்கள் பிடி (பெண்) யானைகளுக்கு முகிலின்கண் உள்ள நீரை(க் கோட்டினாற் குற்றி ஒழுகச்செய்து) ஊட்டுகின்ற பொருப்பனே, நம் காமர் வஞ்சி கடு அம்பு இடிக்கும் கண்கள் - நமது அழகிய பெண்ணுக்கு நஞ்சையும் அம்பையும் வென்ற விழிகள், காது அளவு ஒடிக் கதித்தன - காதுவரையும் நீண்டு வளர்ந்தன எ-று.
இது பருவங்கூறி வரைவொடு விலக்கல் என்றபடி (6O)
கதிரைக் கடவுள் குறமானை மேவச்செய் காங்கனநா கதிரைக் கடலொலி போன்மள்ள ரார்த்துக் களைந்தசெந்நெற் கதிரைக் கடைசியர் போரேற்று கல்வளை யாய்ககனக் கதிரைக் கடவயிற் றார்ப்பாயென் றால்வருங் கைவலமே.
இ-ள்: கதிரைக் கடவுள் குறமானை மேவச்செய் நாக காங்கண - கதிர்காமத்து ஐயன் வள்ளிநாயகியைச் சேரும்படி செய்தருளிய நாககங்கணத்தை யுடையவரே, திரைக் கடல் ஒலிபோல் - திரைகளோடு கூடிய சமுத்திரத்தின் பேரொலிபோல, மள்ளர் ஆர்த்துக் களைந்த செந்நெற் கதிரை - உழவர்கள் ஆரவாரித்து அரிந்த செந்நெற்கதிர்களை, கடைசியர் போர் ஏற்று கல்வளையாய் - உழத்தியர் போராகக் குவிக்கின்ற கல்வளைப்பதியில் எழுந்தருளிய பெருமானே, ககனக் கதிரை - ஆகாயத்திற் சஞ்சரிக்கின்ற சூரியனை, கடவயிற்று ஆர்ப்பாய் என்றால் - குடம் போன்ற திருவயிற்றின் மீது தரித்தவரேயென்று போற்றினால், கைவலம் வரும் - முத்தி சித்திக்கும் எ-று.

Page 43
50/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ஐங்கரத்தெந்தை "கதிரைக் கடவுள் குறமானை மேவச்செய்த வரலாற்றினைக் கந்தபுராணத்திற் பரக்கக் காணி க. விநாயகப் பெருமான்பாரமேசுவரத் திருக்கோலங்கொண்ட சமயத்தில் சூரியன் அப்பெருமானுடைய திருவயிற்றின்மீது ஒரு இரத்தினம்போல் விளங்கினன் என்பது சரித்திரம். அங்ங்ணம் கதிரவன் விளங்கினானென்பதை,
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர விண்மணி யாவுறை விகட சக்கரண் மெய்ப்பதம் போற்றுவாம்.
என்னும் கந்தபுராணக் காப்புத் திருவிருத்தத்தானுணர்க. கைவலம் - மோகூவும். ‘புலியூரனென்றால் வரும் கைவலமே” என மயில்வாகனப்புவர் தமது புலியூரந்தாதி 58-ம் செய்யுளிற் பாடியிருத்தலையும் நோக்குக.
எம்பெருமானாகிய கந்தசுவாமி வள்ளிநாயகியை மார்ச்சாரசம்பந் தமாக அடிமைகொள்ளும்படி வந்த சமையத்தில் யானையாக வந்து அவளைப் பெருமானோடு சேர்த்தருளிய தந்திமுகத் தெந்தையின் திருவருட் பிரவாகங்களை எடுத்துத் தோத்திரஞ் செய்வார்க்கு முத்தி தவறாது சித்திக்கு மென்றபடி (61)
வரச்சந் திரனெனுஞ் செந்தழற் பந்தம் வழுத்துநற்ற வரச்சந் திரணத்தின் மாற்றுங் கடாசல மங்குலுலா வரச்சந்திரதில கம்வளர் கல்வளை மானுயிர்க வரச்சந் திரவி னடந்தா னுணவென வந்ததுவே.
இ-ள்: வரசந்திரன் எனும் செந்தழற் பந்தம் - மேலான சந்திரன் என்று சொல்லப்படும் நெருப்புப் பிழம்பு, வழுத்தும் நல் தவர் அச்சம் திரனத்தின் மாற்றும் கட அசலம் - தம்மைத் துதிக்கின்ற நல்ல தபோதனர்களுடைய (பிறவிப்பிணிப்) பயத்தைத் துரும்பெனத் தவிர்த்தருளும் ஞானமதம் பொருந்திய ய்ானையாகிய விக்கினேசுவரரது, மங்குல் உலாவர சந்திர திலகம் வளர் - முகில்கள் சஞ்சரிக்கும்வண்ணம் சந்தனமரங்கள் (உயர்ந்து) வளர்ந்துள்ள, கல்வளைமான் உயிர் கவர - கல் வளைப்பதியில் வசிக்கும் பெண்ணின் உயிரைக் கவரும்படி, இரவில் சந்து நடந்தான் உணவு என வந்தது - நடுயாமத்தில் சுந்தரர் பொருட்டுப் பரணி,வயாரிடத்துத் தூது சென்றருளிய பரம சிவனுடைய உணவாயுள்ள ஆலாகலம் என்னும் நஞ்சு என்று சொல்லும்படி (வெம்மையோடு) உதித்துள்ளது எ-று.

கல்வளை யந்தாதி /5
“செந்தழற் பந்தம்.மானுயிர் கவர.நடந்தா னுணவென வந்தது’ என முடிக்க. அசலம் - ஆகுபெயர். திரணத்தின் மாற்றுதல் - இலகுவாக நீங்கிவிடுதல். இரவிற் சந்து நடந்த வரலாற்றையும் நஞ்சு உணவான வரலாற்றையும் முறையே பெரியபுராணம் கந்தபுராண மிவற்றிற் பார்க்குக. இது நிலவு வெளிப்பட வருந்துதலாகும்.
கல்வளைப்பதியிலுள்ள தலைவிக்குச் சந்திரோதயம் விடம் போல் வெம்மையைத் தந்ததென்றபடி (62)
வந்தனை யன்பர் மனத்துண் தடைபடு மாதங்கங்க வந்தனை யன்றுகொன் றோன்முக நாபிகண் வாய்கரஞ்சி வந்தனை யன்பணி கல்வளை யான்வரை மன்னவனி வந்தனை யன்றெனின் மானுயிரம்புலி மானுண்னனுமே.
இ-ள்: வந்தனை அன்பர் மனம் தூண் தடைபடும் மாதங்கம் - வழிபாட்டையுடைய அடியவர்களது மனமாகிய தறியினிடத்துப் பிணிக்கப்படுகின்ற யானையும், கவந்தனை அன்று கொன்றோன் - கவந்தன் என்னும் அரக்கனை இராமாவதாரத்திற் கொன்றவ ராகிய, முகம் நாபி கண் வாய் கரம் சிவந்தன் - முகமும் உந்தியும் கண்களும் அதரமும் கரங்களும் சிவந்துள்ள விஷ்ணுமூர்த்தியும், அயன் - பிரமதேவரும், பணி கல்வளையான் வரை மன்னவன் - வணங்குகின்ற கல்வளைப்பெருமானுடைய மலைத்தலைவனே, நீ வந்தனை - நீ இங்கு (காலதாமசமின்றி) வந்துவிட்டாய்; அன்றெனில் - வாராதிருந்தால், மான் உயிர் அம்புலிமான் உண்ணனும் - தலைவியின் உயிரைச் சந்திரன் தின்றுவிடும் எ-று.
அன்பர் தியானத்தில் எம்பெருமான் அகப்படுதலை,
உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந் தறிநிறுவியுறுதியாகத் தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி மிடைப்படுத்தித் தறுகட்டாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும் வெள்ளமதம் பெழிசித்தி வேழத்தை நினைந்துவரு வினைகeர்ப்பாம்.
என வருஞ் செய்யுளால் இனி துணர்க. கவந்தன் இராமராற் கொல்லப்பட்ட வரலாற்றை இராமாயணத்திற் காண்க, சிவந்தவன், சிவந்தன் என வந்தது. இது வருத்தங்கூறல்.

Page 44
52/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தலைவனே நீ இப்பொழுது வாராதொழியின் தலைவி சந்திரனுக் காற்றாது மாண்டிருப்பாளெனக் கூறியபடி (63)
மான வலக்கண் டவாவினைப் பஞ்சினை மாய்க்கும்பவ மான வலக்கண்டை மாவுரி யான்வன சப்பதத்தின் மான வலக்கண் டரித்தோன் புகழ்கல் வளையிற்பெரு மான வலக்கண் டகர்க்கொளிப் பாயென மாலறுமே.
இ-ள்: மான அலக்கண் தவாவினைப் பஞ்சினை மாய்க்கும் பவமானன் - வலிய துன்பமறாத வினையாகிய பஞ்சை யெரிக்கின்ற நெருப்பை யொத்தவரே, வலக் கண்டை மா உரியான் வனசய்யதத்தில் - வலிய கண்டாமணி கட்டிப்பட்ட கயாசுரன் என்னும் யானையின் தோலைப் போர்வையாகக் கொணிட சிவபெருமானுடைய அண்றலர்ந்த தாமரைப்பூப்போன்ற திருவடியில், மான வலக்கண் தரித்தோன் புகழ் கல்வளையிற் பெருமான் - மகிமையுள்ள வலக்கண்ணை இடந்து சாத்திய திருமால் போற்றும் கல்வளைப் பெருமானே, அவலக் கண்ட கள்க்கு ஒளிப்பாய் - தீங்கினைக்கொண்ட கயவர்க்கு ஒளிப்பவரே, என - என்று தோத்திரஞ்செய்ய, மால் அறும் - அறியாமையானது நீங்கும் (ஞானம் சித்திக்கும்) எ-று.
சுதரிசனமென்னுஞ் சக்கரப்படையை வேண்டி அநுதினமும் ஆயிரந் தாமரைப்பூக்கொண்டு பரமசிவனை அர்ச்சித்துவர, ஒருதினம் பெருமான் றிருவிளையாட்டால் ஒரு பூ குறைய, திருமால் தமது கண்ணை இடந்து பூவாகப் பாவித்துச் சாத்தித் தமது நியதியை முடித்துச் சக்கரப்படையையும் பெற்றாரென்பது சரித்திரம். மால் அறுமெனவே ஞானஞ் சித்திக்குமென்பது அருத்தாபத்தியாற் பெறப்பட்டது.
அடியவர் தீவினையை யொழிப்பவரே, திருமால் வணங்கும் பெரியோனே, மெய்யர்க்கு மெய்யனே, பொய்யர்க்குப் பொய்யனே எனப் போற்றுபவர்கட்கு அஞ்ஞான மகல மெய்ஞ்ஞானம் உதிக்கு மென்றபடி (64)
மாலைய னங்காங் கரியோன் பதம்பெரிதன்றுமன்றின் மாலைய னங்காங்கை வார்சடி லேசன் மதலைகொன்றை மாலைய னங்காங் கணவெங் கணபன வாளரவன் மாலைய னங்காங் குலாங்கல் வளையிரு மாதவர்க்கே.

கல்வளையந்தாதி /53
இ-ள்: மன்றில் மாலயன் அம் கங்கைவார் சடில ஈசன் மதலை - பொன்னம்பலத்தில் மேலான நடனத்தை யுடையவரும் அழகிய கங்கையைத் தரித்த நீண்ட சடையினை யுடையவருமாகிய நடேசப்பெருமானுடைய திருக்குமாரரும், கொன்றை மாலையன் - கொன்றைப்பூ மாலையை யணிந்தவரும், அம்கங்கண வெம் கண பண வாள் அரவன் - அழகிய கங்கணமாகிய கொடிய கூட்டமான படத்தினைக் கொண்ட ஒளியுடைய பாம்புகளைத் தரித்தவருமாகிய விநாயகப் பெருமான் எழுந்தருளிய, மாலை அனம் காங்குல் உலாம் கல்வளை இரு மாதவர்க்கு - மாலைக்காலத்தில் அன்னங்கள் வயல் வரம்பிற் சஞ்சரிக்கின்ற கல்வளைப்பதியில் இருக்குந் தபோதனர்கட்கு, மால் அயன் அங்கம் கரியோன் பதம் பெரிது அன்று - விஷ்ணு பிரமா கரியமேனியையுடைய இந்திரன் ஆகிய இவர்களுடைய (முறையே வைகுந்தம் சத்திய உலகம் சுவர்க்கம் என்னும்) பதவிகள் மேலானவை யல்ல எ-று.
கல்வளைத் திருப்பதியிலுள்ள விநாயகப் பெருமானுடைய அடியவர்களுக்கு வைகுந்த சத்திய சுவர்க்க பதவிகள் அடைதற் கரியனவல்ல என்றபடி (65)
இரும்புண் டரவெண் டுகன்மணி மந்திர மெய்தன்பரை யிரும்புண்ட நீரெனத் தற்சேர்க்கு நாதனை யிக்கு நெற்ப யிரும்புண்ட ரீகமுஞ் சூழ்கல் வளையனை யெண்ணிப்பன்னி இரும்புண்டருமயிற் றென்றிசைக் கோன்பினை யென்செய்வனே.
இ-ள்: இரும்புண்டர வெண் துகள் மணி மந்திரம் எய்து அன்பரை - மகத்தான திரிபுண்டரமாகத் தரிக்கப்படும் வெள்ளிய விபூதி உருத்திராக்க மணி பஞ்சாக்கரம் என்னும் சாதனங்கள் பொருந்திய அடியவர்களை, இரும்பு உண்ட நீர் எனத் தன் சேர்க்கும் நாதனை - கொல்லன் உலையிற் சிவக்கக் காய்ச்சிய இரும்பானது உறுஞ்சிய நீரைப்போல் தம்மொடு இரண்டறச் சேர்த்துக் கொள்ளும் இறைவரும், இக்கும் நெற்பயிரும் புண்டரீகமும் சூழ் கல்வளையனை - கரும்பும் செந்நெற் பயிரும் தாமரைகளும் சூழப்பெற்ற கல்வளைத் தலத்திற் கோயில் கொண்டருளிய பெருமானுமாகிய விநாயகரை, எண்ணிப் பன்னி இரும் - மனத்தினால் தியானித்து வாயார வாழ்த்திக்கொண்டு இருக்குதிர், புன் தரும் அயில் தென்திசைக்கோன் பின்னை என் செய்வன் - நிணம் பொருந்திய சூலவேலைக் கொண்ட தென்றிசைக் கிறைவனாகிய யமன் பின்னர் என்ன செய்வான் எ-று.

Page 45
54/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
என்செய்வன் என்றதிலுள்ள வினா எதிர்மறைப் பொருளில் வந்தது.
சைவசாதனத்தைப் பூண்ட மெய்யடியவர்களைத் தம்முடன் சேர்த்தருளும் கருணைவள்ளலாகிய கல்வளைப் பெருமானைச் சதா தியானித்துத் துதித்துக் கொண்டிருப்பின் யமபய மில்லை யென்றபடி
வன்னி களங்க னரிமா றுதிக்கு மலைமகள்கை வன்னி களங்கனி யென்றென்னணு கண்டன் மகிழ்ந்துபெற்ற வன்னி களங்கபடற்றோர் பிறவி வலைப்பிணியாம் வன்னி களங்களை யுங்கல் வளைக்கும்ப மாதங்கமே.
இ-ள்: வன்னி களங்கன் அரிமால் துதிக்கும் மலைமகள் கை வன்னி - அக்கினிதேவனும் சந்திரனும் சூரியனும் திருமாலும் போற்றுகின்ற பருவத வர்த்தனியாருடைய திருக்கரத்திலேயுள்ள கிளியானது, களங்கனியென்று எண்ணுைகண்டன் மகிழ்ந்து பெற்ற வன்னி - களம்பழம் என நினைக்கும் திருநீலகண்டத்தைக் கொண்ட பரமேசுவரன் உவந்து பெற்றருளிய பிரமசாரியும், கல்வளைக் கும்ப மாதங்கம் - கல்வளைப்பதியில் எழுந்தருளிய மத்தகத்தையுடைய யானையுமாகிய விக்கிநேசுவரர், களம் கபடு அற்றோர் பிறவி வலைப்பிணியாம் வல் நிகளம் களையும் - கள்ளங் கபடு இல்லாத (பரிசுத்தமுடைய) வர்களுடைய பிறவிப் பிணிப்பாகிய துன்பத்தைத் தரும் வலிய விலங்கை அகற்றியருளுவர் 6T-C).
முதல் மூன்றடிகளிலும் வன்னி முறையே அக்கினி, கிளி, பிரமசாரி என்னும் பொருள்களில் வந்தது. நான்காமடியில் வல் + நிகளம் எனப் பதச் சேதஞ் செய்யப்பட்டது. விநாயகப் பெருமான் கொண்ட மூர்த்தங்களுட் சில தேவியில்லாதன வாதலின் வன்னி (பிரமசரி) யென்றார். கள்ளம் - களம் எனத் தொக்கு நின்றது. பெருமான் திருக்கண்டம் நிறத்திற் களம் பழத்தை யொத்திருத்தலின் பிராட்டியார் திருக்கரத்திற் பொருந்திய கிள்ளை களம்பழமென மயங்கிய தென்க.
சிவகுமாரராகய கல்வளைப் பெருமான் தூய சிந்தனையுடைய அன்பர்களின் பிறவிப்பெரும் பிணியை நீக்கி அவர்களை ஈடேறச் செய்வர் என்றபடி (67)

கல்வளையந்தாதி /55
தங்க மலையதி னால்வேதப் போலி தனைவரைமா தங்க மலையச மேழ்காதம் வாசந் தருங்கல்வளை தங்க மலையம் பிகைகும ராவென்று சாற்றிற்சந்த தங்க மலையரும் பாக்கொம் பிரண்டுந் தருவிப்பனே.
இ-ள்: தங்க மலையதில் நால் வேதப் போலிதனை வரை மாதங்க - பொன்மலையாகிய மேருவில் நான்கு வேதப் போலியாகிய பாரதத்தை எழுதிய யானையே, மலை அசம் ஏழ் காதம் வாசம் தரும் - சந்தனம் ஏழு காத தூரத்திற்கு நறுமணங் கமழுகின்ற, கல்வளை தங்கு அமலை அம்பிகை குமார - கல்வளைப் பதியிற் கோயில்கொண்ட நின்மலையாகிய உமையம்மையார் திருக்குமாரரே, என்று சந்ததம் சாற்றில் - என்று தினந்தோறும் ஓதினால், கமலை அரும்பாக்கொம்பு இரண்டுந் தருவிப்பன் - இலக்குமி சரசுவதி என்னும் இருதேவியர் மூலமாக முறையே செல்வப் பொருள் கல்விப் பொருள் இரண்டினையும் தருவித்தருளுவார். 6T-C).
வேதப்பொலி - வேதத்தைப் போல்வது, நான்கு வேதங்களின் ஒற்றுமை பற்றியே பாரதம் ஐந்தாம் வேதமெனப்படும். பாரதம் ஐந்தாம் வேதமென்பதையும் அதனை விநாயகப்பெருமான் மேருமலையாகிய ஏட்டில் தமது திருமருப்பாகிய எழுத்தாணி கொண்டு எழுதினாரென்பதையுங் கீழ்வரும் வில்லிபுத்துரர் பாரதக் காப்புச் செய்யுளாலுணர்க:
நீடழி யுலகத்து மறைநாலெ7 டைந்தென்று நிலைநிற்கவே வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னநாள் ஏடாக மரமேரு வெற்பாக வங்கூ ரெழுத்தானிதன் கோடாக வெழுதும்பி ரானைப்ப னணிந்தன்பு கூர்வமரோ.
அரும்பாக்கொம்பு - அரிய பாக்களாலாய கலைக்கட்குத் தெய்வமாயுள்ள பூங்கொம்பை நிகர்த்தவள்; தருவிப்பார், பிறவினை.
மேருமலையிற் பாரதம் எழுதிய பரம்பொருளே, உமாதேவி திருக்கு மாரரே என்பன முதலாம் திருநாமங்களைச் சொல்லிக் கல்வளைப் பெருமானைத் துதிப்போர் கல்வி செல்வம் இரண்டினையும் பெறுவர் என்றபடி (68)

Page 46
56/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தருமந்தக் காரிடத் தாக்கிடு மாமுகன் சந்தனப்பூந் தருமந்தக் காலசை கல்வளை வாசன்றன் னாட்டினின்மா தருமந்தக் காலமுந் தய்யாமற் சாரதி தாரைத்துளி தருமந்தக் கார்முந்த முன்றேர் கடவுதல் சால்புடைத்தே.
இ-ள்: தக்கார் இடத்துத் தருமம் ஆக்கிடும் மாமுகன் - சற்பாத்திரர்களிடத்தே தருமத்தைச் சேர்த்து வைக்கும் யானைமுகத் தெய்வமும், மந்தக்கால் பூ சந்தனத்தரு அசை கல்வளை வாசன் தன் நாட்டினில் - தென்றற் காற்றானது பூக்களைக் கொண்ட சந்தன மரத்தை அசையச் செய்கின்ற கல்வளைப்பதியிற் கோயில் கொண்டவருமாகிய விநாயகப் பெருமானுடைய நாட்டிலே, மாதரும் அந்தக் காலமும் தய்பாமல் - தலைவியும் (நான் குறித்துச் சொல்லிய) சமையமும் தவறாமல், சாரதி - தேர்ப்பாகனே, தாரை துளிதரும் அந்தக் கார் முந்தமுன் - மழை நீரைச் சிந்துகின்ற அந்த முகில் முந்திப் போவதற்குமுன், தேள்கடவுதல் சால்புடைத்து - நீ தேரை (விரைவாக)ச் செலுத்துதல் தகைமையு டையதாகும். எ~று.
தேள் முந்தாது கார் முந்தினால் தலைவி இறந்துபடுவாளா தலின் “மாதருந் தப்பாமல்’ என்றானென்க. இது பாகனொடு கூறலாகும்.
பாகனே, கார் முந்திச் சென்றால் தலைவி வருந்துவளாதலின் நீ தேரை விரைந்து செலுத்துதி யெனத் தலைவன் பாகனுக்குக் கூறியபடி (69)
சாலிக்கு வாலிக்கு வெங்கனை யேவித் தயங்கியபாஞ் சாலிக்கு வாலிய தூசருள் கோலமுன் றாங்குபொறை சாலிக்கு வாலிப மார்க்கண்டர்க் கீந்தவன் றந்தமைந்தன் சாலிக்கு வாலிக்கு வான்றாவுங் கல்வளைத் தானத்தனே.
இ-ள்: சாலிக்கு வாலிக்கு வெம் கணை ஏவி - மராமரங்க ளுக்கும் வாலியென்னும் குரக்கரசனுக்கும் வெவ்விய பாணத்தைச் செலுத்தி, தயங்கிய பாஞ்சாலிக்கு வாலிய தூசு அருள் கோலம் - வருந்திய திரெளபதைக்குத் (தொடர்பாக) வஸ்திரத்தை யுதவிய விஷ்ணுவாகிய பன்றி, முன்தாங்கு பொறை சால் இக்கு - முன்னர்த் தாங்கிய பாரமாகவுள்ள இப்பூமியில்; மார்க்கண்டர்க்கு வாலிபம் ஈந்தவன் தந்த மைந்தன் - மார்க்கண்டேய முனிவருக்கு (நித்திய) இளமையை யருளிய பரமசிவன் பெற்றருளிய பிள்ளையாரே, சாலிக் குவால் இக்கு வான்தாவும் கல்வளைத் தானந்தன் - நெற்பயிர்க் கூட்டமுங் கரும்புகளும் முகின் மண்டலத்தை அளாவும் கல்வளைப்பதியை இருப்பிடமாகக் கொண்டுள்ளவர். எ-று.

கல்வளையந்தாதி /57
"சாலிக்கு வாலிக்கு வெங்கணை ஏவி”யது இராமவதாரத்தி லாகும். இராமபிரானுடைய வலிமையைச் சோதிக்க விரும்பிய குரக்கரசனாகிய சுக்கிரீவன் கிஷ்கிந்தையிலுள்ள ஏழு மராமரங்களை ஒரம்பினால் ஏககாலத்தில் எய்தழிக்கும்படி கேட்க, இராமபிரான் அங்ங்ணஞ் செய்தனரென்பது சரித்திரம். இதன் விரிவையும் வாலியை வதைத்த வரலாற்றையும் இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டத்திற் காண்க. பாஞ்சாலி பாஞ்சால நாட்டு அரசனாகிய துருபதன் மகள், இவள் இவன் மகளாதலில் துரோபதை யெனப்படுவள். துரியோதனன் சொற்படி அவன் தம்பியாகிய துச்சாதனன் வேத்தவையில் நிறுத்திப் பாஞ்சாலியின் வஸ்திரத்தை உரிய, அவள் தன் மானத்தைக் காக்கும்படி கண்ணபிரானை நினைத்து ஒலமிட, அப்பெருமான் அவன் உரியமுடியாது சலிக்கும் வரையும் அவளுக்கு ஆடையை அளித்துப் பாஞ்சாலியின் மானத்தைக் காத்தாரென்பது பாரதம். பிரளய வெள்ளத்தில் அமிழ்ந்திய பூமியைக் காவற்கடவுளாகிய நாராயணமூர்த்தி ஒரு சுவேதவராக வடிவங்கொண்டு வெள்ளத்துட் புகுந்து தமது கொம்பில் எடுத்துவைத்து மேலே கொண்டு வந்து நிறுவினராதலின் “கோலம் முன்றாங்கு பொறை சாலிக்கு” எனப்பட்டது. கு - பூமி. பரமேசுவரன் காலனையுதைத்து மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறுவயதீந்த சரித்திரம் வெளிப்படை. குவால் - கூட்டம், குவியல்.
விநாயகப் பெருமானே கல்வளைப் பதியிற் கோயில் கொண்ட ருளிய எங்கள் குலதெய்வம் என்றபடி (7O)
தானவ ரங்கம்பங் கஞ்செய்யுஞ் சாரங்கன் றாழுமுத்தித் தான வரங்கது வாவேற் குமரன் றமையமழைத் தானவ ரங்கம் பலத்தான் றருகளி றேகல்வளைத் தான வரங்க ளுதவாயென் சித்தத் தறியினின்றே.
இ-ள்: தானவர் அங்கம் பங்கம் செய்யும் - அசுரர்களுடைய அவயவங்களைச் சிதைக்கும், சாரங்கன் தாழும் முத்தித் தான - சர்ங்கமென்னும் வில்லைக்கொண்ட திருமால் வணங்கும் மோட்சமாகிய கொடையை யுடையவரே. அரம் கதுவா வேற் குமரன் தமைய - அரத்தினால் அராவப் பெறாத (தெய்வத்தன்மை பொருந்திய) வேற் படையையுடைய குமாரக் கடவுளுக்குத் தமையனாகவுள்ளவரே. மழைத்தான - மழையை யொத்த மதசலத்தைக் கொண்டவரே, அரங்கு அம்பலத்தான் தரு களிறே - நாடக மேடையாகிய பொன்னம்பலத்தில் தாண்டவஞ் செய்தருளும் நடராசப் பெருமான் அருளிய யானைக்கன்றே, கல்வளைத்தான - கல்வளைப்பதியைத் தலமாகக் கொண்டவரே, என் சித்தத் தறியில் நின்று வரங்கள் உதவாய் - எனது உள்ளமாகிய கம்பத்திற் கண்டுண்டு நின்று வரங்களைத் தந்தருளுள் எ-று.

Page 47
58/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சார்ங்கம் திருமால் கரத்திற் பரித்த வில்லின் பெயர், சார்ங்கன் சாரங்கன் என நின்றது. திடசித்தமென்பதைக் குறிப்பிப்பார் சித்தத்தறி யென்றார்.
திருமாலும் பூசிக்குந் தேவனே, அம்பலவாணர் திருக்குமரா, ஆறுமுகனுக்கு மூத்தோனே, கல்வளைப்பெருமானே தமியேனுக்குத் திருவருள் செய்குதி யென்றபடி (71)
சித்தம் பரமுத் தலைவேலன் பாம்பரை சிக்கெனவி சித்தம் பரமுத்தரிகங்கொண் டோன்மைந்தன் செய்யிற்பரி சித்தம் பரமுத்த நாகொன்று கல்வளைத் தேவையுன்னுஞ் சித்தம் பரமுத்த ராவாருக் காகுஞ் செயத்தம்பமே.
இ-ள்: சித்தம்பர முத்தலை வேலன் - சிதம்பரத்தின்கண்ணே எழுந்தருளிய முக்கருப் பொருந்திய சூலாயுதத்தைத் தரித்தவரும், பாம்பு அரை சிக்கென வசித்து - பாம்பைத் திருவரையிற் கச்சாக இறுகக் கட்டி, அம்பரம் உத்தரிகம் கொண்டோன் மைந்தன் - திக்கை ஆடையாகக் கொண்டருளியவருமாகிய நடராசப் பெருமானது திருக்குமாரராயுள்ள, அம்பர முத்த நாகு செய்யில் பரிசித்து ஒன்று கல்வளைத் தேவை உன்னும் - கடலில் விளைந்த முத்துக்களைக் கொண்ட சங்குகள் வயல்களின்கண் பயின்று படிகின்ற கல்வளைப்பதியிற் கோயில் கொண்ட விநாயகக் கடவுளைத் தியானிக்கும், சித்தம் பர முத்தள் ஆவாருக்குச் செயத்தம்பம் ஆகும் - மனத்தினையுடைய மேலாகிய முத்தராயுள்ளார்க்கே (வினைப்பகையை வென்று நாட்டும்) வெற்றித்தம்பம் கைகூடும் எ-று.
சிதம்பரம் சித்தம்பரம் என நின்றது.
கல்வளைப்பெருமானைத் தியானிக்கும் மேலோரே வினைகளை வென்று ஈடேறுவ ரென்றபடி (79)
தம்பஞ் சுரதஞ்செய்யாதீன்ற சேய்தொழுந் தாளினன்கி தம்பஞ் சுரமிழற் றுஞ்சோலைக் கல்வளைச் சாரலிற்பா தம்பஞ் சுரத்துப் படச்சேக்கும் பொற்கொடி சர்ப்பத்தினி தம்பஞ் சுரருண்டி பொன்மொழி தேன்குழ றானெங்குமே.
இ-ள்: தம்பம் சுரதம் செய்யாது ஈன்ற சேய் தொழும் தாளினன்
- தூணமானது கூட்டுறவின்றிப் பெற்ற திருமால் தொழுகின்ற திருவடிவங்களை யுடைய விநாயகக்கடவுளது, கீதம் பஞ்சரம் மிழற்றும் சோலைக்

கல்வளையந்தாதி /59
கல்வளைச் சாரலில் - பண்ணினை வண்டுகள் பாடுகின்ற சோலைகளைக் கொண்ட கல்வளைப்பதியின் மலைச்சாரலில் பஞ்சு உரத்திற் படச் சேக்கும் பாதய் பொற்கொடி - பஞ்சானது உரத்துப் பட்டமாத்தி ரத்தே சிவக்கின்ற அழகிய கொடிபோன்ற பெண்ணினுடைய, சர்ப்பத்தின் நிதம்பம் - பாம்பின் படத்தையொத்த கடிதடமும், சுரர் உண்டிபோல் மொழி - தேவபானமாகிய அமுதம்போன்ற இனிய சொல்லும், தேன்குழல் - தேன் பிலிற்றுகின்ற கூந்தலுமே, எங்கும் - எவ்விடத்துங் காணப்படுவன எ - று.
தம்பஞ் சுரதஞ் செய்யாது ஈன்ற சேய் - தூணிடைத் தோன்றிய நரசிம்மமூர்த்தி.
இது தலைவன் தலைவியின் உருவெளித்தோற்றத்தைக் கண்டு சொல்லியபடி (73)
கும்ப னகத்திய ஒாலளந் தோகொற்ற வாகல்வளைக் கும்ப னகத்திற் கனகா சுரற்செற்ற கோளரியே கும்ப னகத்தின் சிறகரிந் தோன்றொழுங் கோன்வெற்பின்வாய்க் கும்ப னகத்தின் புவிதாங்கி யோகுறைந் தாய்புயமே.
இ-ள்: கல்வளைக் கும்பன் - கல்வளையில் எழுந்தருளிய மந்தகத்தைக் கொண்டவரும், நகத்தின் கனகாசுரன் செற்ற கோளரி - நகத்தினால் இரணியாசுரனைக் கொன்ற நரசிம்மராகிய திருமால், ஏகும் பல் நகத்தின் சிறகு அரிந்தோன் - பறந்து சென்ற பல மலைகளின் சிறகர்களை அரிந்த இந்திரன் (ஆகிய இருவரும்), தொழும் கோன் வெற்பில் - வணங்குகின்ற விநாயகக்கடவுளது மலையில், கொற்றவா - தலைவனே, கும்பன் அகத்தியன் நூல் அளந்தோ - கும்பத்திற் பிறந்துள்ள அகத்திய முனிவருடைய தமிழ் நூல்களை ஆராய்ந்தோ, (இன்றேல்) பனகத்தின் வாய்க்கும் புவி தாங்கியோ - ஆதிசேடனாற் சுமக்கப்படும் பூமிபாரத்தை வகித்தோ, புயம் குறைந்தாய் - புயங்கள் சோர்வடைந்துள்ளனை எ-று.
பன்னகம் பனகம் எனத் தொக்குவந்தது. இது பாங்கன் தலைவனை உற்றது வினாவியவாறாம்.
கல்வளைப்பதிப் பொருப்பனே, செந்தமிழ்நூலாராய்ச்சியினாலோ இன்றேல் பூபாரஞ் சுமந்தமையினாலோ உன் புயங்கள் சோர்வடைந்த வெனப் பாங்கன் தலைவனை வினவினானென்றபடி (74)

Page 48
6O/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
புயங்கந் தரித்தவன் கட்கலன் பூண்டு சிலம்பிசுற்றப் புயங்கந்த மைந்து மடக்கிச் சடம்புற்று முடவெம்பேய் புயங்கந் தரத்தக்க கானுறை மாதவப் போதர்க்கன்றம் புயங்கந்த நாறிடுங் கல்வளை யானடிப் போதரிதே.
இ-ள்: புயங்கம் தரித்தவன் கட்கலம்பூண்டு - பாம்பைத் தரித்தருளிய பரமசிவனுடைய கண்ணிற் றோன்றிய உருத்திராக்கத்தைப் புனைந்து கொண்டு, புயம் சிலம்பி சுற்ற - புயங்களிலே சிலந்திகள்தம் நூலினாற் சுற்றிக்கொள்ள, கந்தம் ஐந்தும் அடக்கி - பஞ்சேந்திரியங்களையும் அடக்கி, சடம் புற்று முட - தேகத்தைப் புற்று மூடிக்கொள்ள, வெம் பேய் புயங்கம் தரத்தக்க - கொடிய பேய்கள் கூத்தாடத்தக்க, கான் உறை மாதவ
போதர்க்கு - காட்டில் இருக்கின்ற மேலான தவத்தினையுடைய முனிவர்களுக்கு, அம்புயம் கந்தம்நாறிடும் கல்வளையான் அடிப்போது அரிதன்று - தாமரைமலர்கள் வாசனைவிசும் கல்வளைப்பதியில்
எழுந்தருளிய பெருமானுடைய திருவடிப்பேறு அரியதல்ல எ - று.
புயத்திற் சிலந்தி சுற்றுவதும் சடத்தைப் புற்று மூடுவதும் அத்தபோதனர் நீடித்தகாலம் பத்தி வைராக்கியத்தோடு மெளன விரதம்பூண்டு அசைதலின்றி யிருந்து தவஞ்செய்தலைக் குறிப்பனவாம்.
மகாஞானிகள் யோகிகளாயுள்ளார்க்குக் கல்வளைப் பெருமான் திருவடிப்பேறு அரியதன் றென்றபடி (75)
அரியா தவனிந் தளகேசன் வானயி ராவதத்தி னரியா தவனிறைஞ் சுந்தாட் பதுமவண் டார்பிறப்பை யரியா தவநி மலக்கல் வளையுறை யத்தபொய்யர்க் கரியா தவநிலை யார்க்கெளி யாயெ னகப்பொருளே.
இ-ள்: அரி - அக்கினிதேவன், ஆதவன் - சூரியன், இந்து - சந்திரன், அளகேசன் - குபேரன், வான் அயிராவதத்தின் அரி - விண்ணுலகத்துள்ள ஐராவத மென்னும் யானையை வாகனமாகக்கொண்ட இந்திரன், யாதவன் - விஷ்ணு, இறைஞ்சும் தாள் பதும - (ஆகிய இவர்கள்) வணங்குகின்ற திருவடித் தாமரைகளையுடையவரே, அண்டார்பிறப்பை அரியாதவ - வந்து சரண் புகாதவர்களுடைய பிறவித்துன்பத்தைக் களையாதவரே, கல்வளை உறைநிமல - கல்வளைத் தலத்திற் கோயில்கொண்ட பரிசுத்தரே, அத்த - பரமபிதாவே, பொய்யர்க்கு

கல்வளை யந்தாதி /a1
அரியா - பொய்யொழுக்கங் கொண்டவர்க்கு அதீதமானவரே, தவ நிலையார்க்கு எளியாய் - தவவொழுக்கத்தைக் கடைப்பிடித்தோர்க்கு எளியவரே, என் அகப்பொருளே - தமியேன் மனத்திற் குடிகொண்ட பரம்பொருளே. எ-று.
இந்திரன் முதலாம் தேவர்களாற் பூசிக்கப் படுபவரே பொய்யர்க்குப் பொய்யராயுள்ளவரே, மெய்யர்க்கு மெய்யரே, கல்வளைக் கணபதியே, தமியேன் தியானப்பொருளாயுள்ளவரே, காத்தருள்க என்றபடி (76)
கப்பணத் தந்தமில் வெஞ்சூரட் டோனுடன் கார்விடநா கப்பணத் தந்த வரைக்குற மாதின் கருத்துறவா கப்பணத் தந்தக் கரியாய்வந் தோர்க்கிடங் கஞ்சத்திரா கப்பணத் தந்தவழ் செய்தொறு மாமுரல் கல்வளையே.
இ-ள்: கப்பணத்து அந்தம் இல் வெம் சூர் அட்டோன் உடன் - வேற்படையினாலே எல்லையில்லாத கொடிய சூரபன்மனைக் கொன்றருளிய சண்முகக்கடவுளுடன், கார் விட நாகப் பணத்து அரை அந்தக் குறமாதின் கருத்து உறவாகப்பண - கரியவிடம் பொருந்திய பாம்பின் படத்தை நிகர்த்த கடிதடத்தையுடைய அந்த வள்ளி நாயகியின் மனசை உடன்படச் செய்தற்கு, தந்தக்கரியாய் வந்தோர்க்கு - கொம்பினையுடைய யானையாக வந்தருளிய விநாயகப் பெருமானுக்கு இடம் - திவ்விய தலமாயுள்ளது, (எதுவென்னில்), நத்தம் தவழ் செய்தோறும் - சங்குகள் ஊர்ந்து செல்லுகின்ற வயல்தோறும் பொருந்திய, கஞ்சத்து மா இராகப் பண்முரல் கல்வளையே - தாமரைப் பூக்களிற் சஞ்சரிக்கும் வண்டுகள் இராகமாகிய பண்ணைப்பாடும் கல்வளைத் திருப்பதியேயாகும். எ-று.
உறவாகப் பண என்பதில் பண்ண என்பது பணவென நின்றது.
கல்வளைத் திருப்பதியே விநாயகப் பெருமான் அமர்ந்த திவ்விய சேஷத்திரமென்றபடி (77)
e முரற்பெண்ணாக்குபின்னாச் க் கண்ணனென் O கல்லாரஞ் செங்கழுநீர்வாவி மேவிய கல்வள்ையான் கல்லா ரருவியங் குன்றத்தி னேற்றுன் கணவர்பொன்னே கல்லாரம் பூமுருக் கென்றா ரறிந்திலன் கான்மயிலே.

Page 49
62/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: கல்ஆர முரல் பென் ஆக்கு பிள் நாக்க அணைக் கண்ணன் எண்ணும் - கல்லை முத்துப்போன்ற பற்களையுடைய பெண்ணாகச் செய்தவரும் பிளந்த நாவினையுடைய சேடனாகிய சயனத்தையுடையவருமாகிய விட்டுணுமூர்த்தி தியானிக்கின்ற, கல்லாரம் செங்கழுநீர் வாவி மேவிய கல்வளையான் - நீர்க்குளியும் செங்கழுநீரும் செறிந்த வாவிகள் பொருந்திய கல்வளையிற் கோயில்கொண்ட பெருமானது, கல் ஆர் அருவி அம் குன்றத்தில் - கல்லென்னு மொலியொடு கூடிய அரிவிகள் பாயும் அழகிய மலையிலே, நேற்று - நேற்று, உன்கணவர் - உனது தலைவர், பொன்னே - இலக்குமிபோன்றவளே, கல்லார் அம் முருக்குப் பூ என்றார் - படியாதவர்கள் அழகிய முருக்கம் பூவுக்குச் சமமாவர் எனச் சொன்னார், கான் மயிலே அறிந்திலன் - கானகத்திற் சஞ்சரிக்கும் மயில்போல்வாளே அவர் அப்படி சொன்னதன் காரணத்தை யான் உணர்ந்திலேன் எ-று.
கல்லைப் பெண்ணாக்கியது இராமாவதாரத்திலாகும். கெளதம முனிவர் தமது பத்தினியாகிய அகலிகையை இந்திரன் வஞ்சித்துக் கூடிய சமையத்தில் அதனையுணர்ந்து அவனை ஆயிரங்கண்ணனாகவும் அவளைக் கல்லாகவுஞ் சபித்து விட, அங்ங்னங் கல்லான அகலிகை மிதிலைக்குச் செல்லும் மார்க்கத்திற் கிடக்கும்போது பூg ராமபிரானுடைய அடிப்பொடி பட்ட மாத்திரத்தே சாபவிமோசனமாகித் தன் சுவய வடிவத்தைப்பெற பூீரீ ராமபிரான் அவளைக் கெளதம முனிவரிடங் கொண்டுபோய்ச் சேர்த்தாரென்பது இராமாயணம். இஃது ஒதற்பிரிவு தலைமகன் குறிப்பாலறிந்த தோழி தலைமகட் குணர்த்திய தெனப்படும்.
கல் வளைப் பொருப்பிலுள்ள தலைவனாகிய நின் கணவன் கல்லார் முருக்கம்பூவுக்குச் சமமாவரெனக் குறிப்பாலுரைத்தான் எனத் தோழி தலைவிக்கு உணர்த்தின ளென்றபடி (78)
கானகத் தானத்தி சூழிலாங் கேசனைக் காய்ந்துவெண்மை கானகத் தானத்தில் வீழ்த்தரன் சேய்வளை கான்றழுத்தங் கானகத் தானத் திருள்சீக்குங் கல்வளைக் கட்டுபின்னற் கானகத் தானத்தி யென்றேத்தி னென்பவக் கட்டறுமே.
இ-ள்: கால் நகத்தால் அத்தி சூழ் இலங்கா ஈசனைக் காய்ந்து - திருவடிப் பெருவிரல் நகத்தினால் கடல்சூழ்ந்த இலங்கைக் கிறைவனாகிய இராவணனை வருத்தி, வெண்மை கால் நகத்தானத்தில் வீழ்த்து

கல்வளை யந்தாதி /63
அரன்சேய் - வெள்ளொளி வீசுகின்ற கைலாசமலையின் அடியில் வீழ்த்திய பரமசிவனுடைய திருக்குமாரராகிய விக்கிநேசுவரரை, வளை கான்ற முத்தம் கால் நக - சங்கீன்ற முத்துக்கள் வாய்க்காலில் ஒளிசெய்து, தானத்து இருள் சீக்கும்கல்வளை - அவ்விடத்துள்ள இருளை அகற்றுகின்ற கல்வளைப்பதியில் (எழுந்தருளிய), கட்டு பின்னல் கானகத்தான் அத்தி என்று ஏத்தின் - கட்டுகின்ற முறுகிய சடையாகிய காட்டையுடைய யானைமுகத் தெய்வம் என்று துதித்தால், என் பவக் கட்டு அறும் - என்னுடைய பாவமாகிய பந்தம் அறுந்துபோம் எ-று.
நக என்பது நக்கு என்பதன் றிரிபு.
சிவகுமாரராகிய கல்வளைப்பெருமானைத் துதிப்பின் தமியேனு டையா பாசபந்தம் நீங்குமென்றபடி (79)
கட்கஞ்ச மள்ளர் களைகளை கல்வளைக் கத்தன்றறு கட்கஞ் சனைவதைத் தோன்மரு கன்வரைக் காவன்மின்னே கட்கஞ் சனய்புயல் பொங்கால கால கடுவடுவேற் கட்கஞ்ச மானம் வரைப்பா யிருதொழில் காட்டரிதே.
இ-ள்: கள் கஞ்சம் மள்ளர் களை களை கல்வளைக் கந்தன் - தேன் பொருந்திய தாமரை மலரை(உழவர்கள்) களையாகப் பிடுங்குகின்ற கல்வளைப்பதியில் எழந்தருளிய தலைவரும், தறுகண் கஞ்சனை வதைத்தோன் மருகன் - தறுகண்மையுடைய கஞ்சனைக் கொன்ற திருமாலின் மருகரு மாகிய விநாயகக் கடவுளுடைய, வரைகாவல் மின்னே - மலையில் தினப்புனத்தைக் காக்கின்ற மின்னிடையாளே, கட்கு - உனது விழிக்கு, அஞ்சனப்புயல் - கருமையாகிய மேகம், பொங்கு ஆலகால கடு - மேலேயெழுந்த ஆலகாமென்னும் நஞ்சு, வடு - மாம்பிஞ்சு, வேல்- வேற்படை, கட்கம் - வாள், சமானம் - (ஆகிய இவைகள்) ஒப்பாகும், வரைப்பாய் இருதொழில் காட்டரிது - (ஆயினும் அவை துன்ப இன்பங்களுக்கு) எல்லையாகிய இரண்டு தொழில்களையுஞ் செய்த லில்லை எ-று.
ஆல கால கடு - ஒரு பொருள் குறித்த பல்பெயர். இது தலைவியைப் புகழ்ந்தவாறாம்.
கல்வளைப் பொருப்பில் ஏனல் காக்கின்ற பெண்ணே, மேகம் முதலிய பொருள் உன் விழிகட்கு ஒப்பெனச் சொல்லப்படினும் அவை
இன்புறுத்தல் துன்புறுத்தல் என்னுமிரண்டினையும் செய்யத் தக்கன

Page 50
64/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வல்ல எனத் தலைவியைத் தலைவன் புகழ்ந்தபடி (8O)
அரக்கர விந்தறக் கொன்றோன் பெறாவமு தேவெங்கொலை யரக்கர விந்தம் பயில்வன நீத்தண்மி னோநின்றுகே ளரக்கர விந்தன் குலத்தோர் மணிகையி னாற்கல்வளை யரக்கர விந்தம் புனைவோர்க் கொலிக்கு மரவங்களே.
இ-ள்: அரக்கள் அவிந்து அறக் கொன்றோன் பெறா அமுதே - அசுரர்கள் மாண்டு ஒருங்கு அழியும்வண்ணம் (அச்சமையத்தில் மோகினி வடிவங் கொண்டு உபாயத்தால்) அவர்களை நாசஞ்செய்த திருமால் (பாற்கடலிற்) கடைந்தெடாத அமிர்தமா யுள்ளவளே, வெம் கொலையர் அக் கரவிந்தம் பயில் வனம் நீத்து அண்மினோம் - கொடிய கொலைஞராகிய வேட்டுவரும் அந்த யானைகளும் சஞ்சரிக்கின்றதாகிய காட்டைக் கடந்து ஊரைக் கிட்டினோம், அரக்கு அரவிந்தன் குலத்தோர் - செந்தாமரைப் பூவில் இருக்கின்ற பிரமாவின் குலத்தவர் (பிராமணர்), கல்வளையர் - கல்வளைத் தலத்திற் கோயில் கொண்டவரும், அக்கு அரவு இந்து அம்புனைவோர்க்கு - உருத்திராக்கம் பாம்பு பிறை கங்கை என்னுமிவைகளை யணிந்தவருமாகிய விநாயகமூர்த்திக்கு, கையினால் மணி யொலிக்கும் அரவங்கள் நின்றுகேள் - (பூசைக் காலத்தில்) தங்கள் கையினாலே மணியடிக்கும் போது எழும் ஓசையை (தாமதித்து) நின்று கேட்பாயாக எ-று.
பூர்வத்தில் அமிர்தத்தைப் பெற விரும்பிய சுரரும் அசுரரும் திருமாலைத் தலைவராகக்கொண்டு பாற்கடலைக் கடைந்த சமையத்தில் அமிர்தம் பிறக்க, திருமால் அசுரருக்கு அந்த அமிர்தத்தைக் கொடாது வஞ்சிக்க நினைத்து தாம் ஒரு அழகிய மோகினி வடிவத்தைக்கொண்டு அசுரர்களை நோக்கி “உமக்கு என்னை வேண்டுமோ? இன்றேல் இவ்வமிர்தம் வேண்டுமோ” என்று கேட்க, அசுரர்கள், “உன்னையே வேண்டும்” என அங்ங்ணமாயின் “உங்களுள் எவன் வலியனோ, அவன் என்னைப் பெறுக’ எனத் திருமாலாகிய மோகினி சொல்ல, அவ்வசுரர் ஒருவரோ டொருவர் மாறுபட்டுப் போர்புரிந்து ஒருங்கு மாண்டனரென்பது சரித்திரமாதலின் “அரக்கரவிந்தறக் கொன்றோன்” என்றார். இதன் விரிவைக் கந்தபுராணத்திற் காண்க. விந்தம் இங்கே மலைப்பொது, கரவிந்தம் - கைம்மலை, யானை, “அரவங்கள்’ எனப் பன்மையிற் கூறியது கல்வளைப் பெருமானுக்குப் பல காலங்களில் பூசைகள் தோறும் ஒலிக்கப்படும் மணியோசையின் மிகுதிபற்றியதாம். இது தலைவன் தன் பதியடைந்தமையைத் தலைவிக்குணர்த்துத லென்க.
“தலைவியே, கல் வளைப் பெருமானார்க்குப் பலகாலமும் ஆராதனை நடக்கும் போது ஆதிசைவர் அடிக்கும் மணியோசையைக்

கல்வளையந்தாதி /65
கேட்பாயாக’ எனத் தலைவன் கூறினான் என்றபடி (81)
வங்காங் கணவர் நிதிதேடப் போனதென் வாய்ந்தபில வங்காங்க ணச்சி யுடைக்குங் குடக்கனி வார்ந்தநற வங்காங் கனவி மடைதத்து தென்கல் வளையிலர வங்காங் கனன்கிரி யன்னாள்பொன் னங்க மருவுறவே.
இ-ள்: வாய்ந்த பிலவங்கங்கள் நச்சி உடைக்கும் குடக்கனி வார்ந்த நறவம் - (அங்குச்) சஞ்சரிக்கும் குரங்குகள் ஆசைப்பட்டுப் பிளக்கின்ற குடம் போன்ற பலாப்பழங்களிற் பெருகும் தேனானது, கங்கு அணவி மடைதத்து தென் கல்வளையில் - வரம்புகளை யடைந்து நீர் மடையை மேவிப் பாயப்பெற்ற வளவிய கல்வளைப்பதியில் எழுந்தருளிய, அரவம் காங்கனன் கிரி அன்னாள் அங்கம் பொன் மருவுற - சர்ப்ப கங்கணத்தை யணிந்த விநாயகப் பெருமானது மலையில் அத்தலையின் மேனியில் பொன்னாபரணங்கள் பொருந்தும் வண்ணம், வங்கம் கணவர் நிதி தேடப்போனது என் - மரக் கலத்திலேறிக்கொண்டு தலைவர் பொன்னைத் தேடப்போன தென்னை எ-று.
இஃது ஆற்றாமை கூறல் என்றபடி (82)
மருக்காவில் னாறிடக் குங்குலு வாலயம் வாசங்கொள்ள மருக்காவி பூம்பண்ணை நாறிடுங் கல்வளை வார்கொன்றைத்தா மருக்காவி யன்னவ னைப்பா டிலர்கவி வாணரென்க மருக்காவின் பாலுகுத் தாலென்னப் பாடுவர் மாந்தரையே.
இ-ஸ்: மருகாவில் நாறிட - மருக்கொழுந்து சோலையிலே பரிமளிக்கவும், குங்குலு ஆலயம் வாசங்கொள்ள - குங்குலிய(த் தூப) ம் திருக் கோயிலில் கமழவும், மரு காவி பூம்பண்ணை நாறிடும் கல்வளை - வாசனை பொருந்திய காவிமலர்கள் பொலிவான வயல்களில் முளைக்கப்பெற்ற கல்வளைப்பதியில் (எழுந்தருளியவரும்), வார் கொன்றைத் தாமருக்கு ஆவி யன்னவனை - நெடிய கொன்றைப்பூ மாலையைத் தரித்த சிவபெருமானுக்கு ஆருயிர் போன்றவருமாகிய விநாயகக் கடவுளை, கவி வாணர் பாடிலர் - புலவர்கள் பாடுகின்றிலர், கமருக்கு ஆவின்பால் உகுத்தால் என மாந்தரையே பாடுவர் - நிலத்திலுள்ள பிளப்பிலே பசுவின் பாலை ஊற்றினாற்போல (வீணாக) மனுடர்களையே புகழ்ந்து பாடுகின்றார்கள், எண் - இ.தென்ன விபரீதம் எ-று.
புலவர்கள் நரஸ்துதி செய்யாது எம்பெருமானையே பாட வேண்டும் என்பதை “... பொய்ம்மையாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவிர்காள்’ எனப் பெரியார் பணித்தமையான் உணர்க.

Page 51
66/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
புலவர்கள் கல்வளைப் பெருமானாரைப் பாடித் துதிப்பதை விடுத்து நரஸ்துதி செய்வது பேதமையின் பாற்படும் என்றபடி (83)
தரைக்குந் ததக்குங் கனிவா யங்காந்து தயங்கியமந் தரைக்குந்த வாளி தனுவாங்கு மால்பணி தற்பரன்மைந் தரைக்குந் தளக்கஞ்ச மான்மகிழ் கல்வளை தங்கியநா தரைக்குந்தன் முன்னவனைப்பாட லாற்கொள்வர் சங்கத்தரே.
இ-ள்: தரைக்கும் ததிக்கும் கனிவாய் அங்காந்து - பூமியையும் தயிரையும் உட்கொள்ளும் பொருட்டுக் கொவ்வைக் கனியை நிகர்த்த வாயைத் திறந்தும், தயங்கிய மந்தரைக்கு வாளி உந்த தனு வாங்கும் - தடுமாற்றமடைந்த கூனியென்பவட்கு (அவள் கூன் நீங்கும்படி மண்ணாங்கட்டியாகிய) பாணத்தைச் செலுத்தச் சுண்டு வில் வளைத்தும் உள்ள, மால் பணி தற்பரன் மைந்தரை - மகாவிஷ்ணு வணங்கும் ஆன்ம நாயகராகிய பரமசிவனுடைய திருக்குமாரரும், குந்தளம் கஞ்ச மான் மகிழ் கல்வளை தங்கியநாதரை - கூந்தலையுடைய தாமரையாச னியாகிய இலக்குமி விரும்பி வதியும் கல்வளையிற் கோயில்கொண்ட தலைவரும், குந்தன் முன்னவனை - வேலாயுதக்கடவுளின் தமயனுமாகிய விநாயகக்கடவுளை, சங்கத்தார் பாடலாற் கொள்வர் - புலவர்கள் தாம் பாடும் தோத்திரப்பாக்களாற் பெற்றுக்கொள்வார்கள் எ-று.
திருமால் முன்னொருகாலத்துப் பூமியை எடுத்து விழுங்கி உமிழ்ந்தும், கிருஷ்ணாவதாரத்தில் இடைச்சியர் தயிரைத் திருடியுண்டு முள்ளாராதலின், ‘தரைக்கும் ததிக்கும் கனிவாய் அங்காது’ என்றார். மந்தரைக்கு வாளி உந்தத் தனுவாங்கியது இராமாவதாரத்திலாகும் ; கைகேசியின் பணிப்பெண்ணாகிய மந்தரை யென்பவள் கூனுடையவளாக, இராமபிரான் தமது சிறு பிள்ளைப் பருவத்தில் விளையாட்டாக மண்ணுண்டையைச் சுண்டுவில்லில் வைத்துப் பிரயோகிக்க, அது அவள் முதுகிற் பட்ட மாத்திரத்தே அவளுடைய கூன் நீங்கியது. ஆயினும் உண்டை பட்டு அவட்கு வருத்தம் விளைத்தமையின் அவள் பூரீ இராமபிரானை வெறுத்துப் பின்னர்ப் பட்டாபிஷேகத்திற்கு இடையூறு விளைவித்தாள். இதன் விரிவை இராமாயணத்திற் காண்க. கல்வளைப்பெருமானைப் புலவர்கள் தம் பாடலாற் பெறுதலென்றது அப்பெருமானுடைய அருளைப் பெறுதலாகும்.
தமிழ்ப்புலவர்களாயுள்ளார் கல்வளைப் பெருமானைப் பாடி அவர் திருவருளைப் பெற்று ஈடேறுதலாகு மென்றபடி (84)

கல்வளையந்தாதி /67
சங்கர னாட்டத் திரண்டஞ்சு நாற்பொறிச் சர்ப்பம்வன சங்கர னாட்டந் தவிர்த்தோன் றுயில்வடந் தண்டரளஞ் சங்கர னாட்டயில் சேர்வஞ்சி கல்வளைத் தந்தியங்கு சங்கர னாட்டன்பி னன்பகண் டாயென்றனதுயிரே.
இ-ஸ்: அன்பின் அன்ப - அன்பினையுடைய பாங்கனே, கல்வளை தந்தி அங்குசம் கரம் நாட்டு - கல்வளைப்பதியில் எழுந்தருளிய யானையும் அங்குசத்தைத் திருக்கரத்திற் கொண்டவருமாகிய விநாயகக்கடவுளது திருநாட்டிலே, சங்கரன் நாட்டத்து இரண்டு அஞ்சு நால்பொறிச் சர்ப்பம் - பரம சிவனுடைய கண்கள் இரண்டாகிய சந்திரனும் சூரியனும் பயப்படுகின்ற நான்கு பொறிகளையுடைய பாம்பின் படமும், வனசம் - தாமரைப் பூவும், கரன் ஆட்டம் தவிர்த்தோன் துயில் வடம் - (இராமாவதாரத்தில்) கரன் என்னும் அரக்கனது வலிமையைக் கெடுத்த திருமால் நித்திரை கொள்ளும் ஆலிலையும், தண் தரளம் - குளிர்ச்சியாகிய முத்தும், சங்கு - சங்கும், அரம் நாட்டு அயில் - அரங் கதுவப்பெற்ற வேற்படையும், சேர்வஞ்சி என்தனது உயிர் - (என்னுமிவைகள்) பொருந்திய ஒரு கொடியே எனது உயிர் எ-று.
பாம்பிற்குக் கண்ணுஞ் செவியும் ஒரேபொறியாதலின் மெய் வாய் மூக்கு என்பவற்றையுஞ் சேர்த்து நாற்பொறி யென்றார். பாம்பின்படம் தாமரைப்பூ ஆலிலை முத்து சங்கு வேல் கொடி என்பன முறையே, கடிதடம் முகம் உதரம் பல் கழுத்து விழி இடை என்னுமிவைகட்கு உவமானமாக வந்தன. இது இவ்விடத்து இவ்வியல்பிற்றென்னல்.
தலைவியே தன் உயிர் எனத் தலைவன் பாங்கனுக்கு உரைத்தபடி
தனக்காக்கை யன்றி வழங்காரைப் பாடித் தளர்பசிய தனக்காக்கை யுண்னு முடல்வீக் கிடச்சலித் தேன்சிலைவே டனக்காக்கை போக்கிய நோக்கினன் மைந்ததண் காரினைச்சந் தனக்காக்கை நீட்டுதென் கல்வளை யன்பர் சகாயத்தனே.
இ-ள்: தனம் காக்கை அன்றி வழங்காரைப் பாடி - திரவியத்தைக் காப்பதேயல்லாமல் சற்பாத்திரத்தில் இடாதவராகிய உலோபர்களைப் (புகழ்ந்து) பாடி, தளர் பசி அதனம் காக்கை உண்ணனும் உடல் வீக்கிடச் சலித்தேன் - தளர்ச்சியைத் தரும் பசிமிகுதி கொண்ட காக்கைகள் உண்ணும் என் உடம்பைப் பெருக்கச்செய்வதற்காகச் சஞ்சலமுற்றேன், சிலைவேள் தனக்கு ஆக்கை போக்கிய நோக்கினன் மைந்த -

Page 52
68/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
(கருப்பம்) வில்லையுடைய மன்மதனுக்கு அவன் தேகத்தை எரித்த நெற்றிக் கண்ணைக்கொண்ட பரமசிவனது திருக்குமாரரே, தண் காரினைச் சந்தனக்கா கை நீட்டு தென் கல்வளை அன்பர் சகாயத்தனே - குளிர்த்த முகிலைச் சந்தனமரச் சோலைகள் தம் கொம்பராகிய கைகளை நீட்டித் தொடுகின்ற அழகிய கல்வளைப்பதியில் எழுந்தருளியிருக்கும் பத்தர்சகாயமூர்த்தியே எ-று.
தனம் காக்கை யென்றதில் காக்கை தொழிற்பெயர்; அதனம் - அதிகம், இது அதறு என்பதன் திரிபாகும்.
மன்மதனையெரித்த கண்ணுதற்பெருமான் றிருக்குமாரரே, பத்தர்சகாயரே, காக்கை உண்ணக் காத்திருக்கும் இவ் வாக்கை யைப் போஷிக்க வேண்டிஈயாத புல்லரைப்பாடி இடர்ப்பட்டேன் எனப் பச்சாத்தாப மடைந்தபடி (86)
காயப் படவு துளங்கிச் சிலேட்டுமக் கால்விசைத்துக் காயப் படவு முடியுதை யோமலர்க் காவணமா காயப் படவுயர் கல்வளை நாத கரியுரியே காயப் படவுமை காதல னின்ற கரமஞ்சனே.
இ-ள்: சிலேட்டுமக்கால் விசைத்துக் காய - சிலேட்டுமமாகிய காற்று முனைத்து வருத்த, காயப்படவு துளங்கிப் படவும் முடியுது ஐயோ - தேகமாகிய தோணியானது நடுங்கி அழிய நேர்ந்தது ஐயோ, மலர்க்கா ஆகாய வணம் பட உயர் கல்வளை நாத - பூஞ்சோலை மேகவர்ணத்தை அடையும் வண்ணம் உயர்ந்துள்ள கல்வளைப்பதியிற் கோயில்கொண்டருளிய தலைவரே, கரி உரி ஏகாயப்பட உமை காதலன் ஈன்ற கரமஞ்சனே - யானைத் தோலாகிய போர்வையை யணிந்தவரும் உமாதேவியாருக்கு நாயகருமாகிய சிவபிரான் பெற்றருளிய துதிக்கை யினையுடைய யானைக்கன்றே எ-று.
முடிகிறது முடியுதெனத் திரிந்து நின்றது. ஐயோ, இரக்கக் குறிப்பை யுணர்த்துஞ் சொல். வண்ணம் வணமென நின்றது. மலர்க்கா ஆகாயவணம்படுதல் மேகமண்டலத்தை அளாவிநிற்றலாலென்க. ஏகாயப் படம்-உத்தரீயம், போர்வை. மஞ்சு - மேகம், இங்கே மேகம்போன்ற யானையைக் குறித்தது. சிலேட்டுமக்கால் விசைத்தல் சிலேட்டுமம் அதிகப்படுதல், மரணகாலத்திற் சிலேட்டுமம் அதிகப்படுமென்பதை, “புலனைந் தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐமேலுந்தி - அலமந்தபோதாக.” எனவும், “ஐயுந்தொடர்ந்து விழியுஞ் சொருகி

கல்வளையந்தாதி /se
அறிவழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது.” எனவும் வரும் பெரியார்கள் திருவாக்கானுணர்க.
கரியுரிபோர்த்த கண்ணுதற்பெருமான் மைந்த, கல்வளைப்பெரும, மரணாவள்தைப்படும்போது தமியேனைக் காத்தருள்க என இரந்த L 2. (87)
மஞ்சரிக் கண்ணிமின் வேணியன் கல்வளை, வாசன்மணி மஞ்சரிக் கண்ணிய சாபத்தை மாற்றும் வரதன்வெற்பின் மஞ்சரிக் கண்ணிப் புயத்தாய் மனங்கலங் காயின்றுநீ மஞ்சரிக் கண்ணி நகைக்குடைந் தாயுன் மனத்துரமே.
இ-ள்: மஞ்சு அரி கண்ணி மின் வேணியன் - வலிய சர்ப்பமாகிய மாலை விளங்குகின்ற சடாமுடியை யுடையவரும், கல்வளை வாசன் - கல்வளைப்பதியில் எழுந்தருளியவரும், மணி மஞ்சு அரிக்கு அண்ணிய சாபத்தை மாற்றும் வரதன் வெற்பில் - அழகிய மேகவர்ணராகிய திருமாலுக்கு (உமா தேவியாரால் நேர்ந்த) சாபத்தை நீக்கியருளிய வர தருமான விநாயகக்கடவுளின் மலையில், கண்ணி மஞ்சரி புயத்தாய் மனம் கலங்காய் - மலரரும்புகளாலாய மாலையை யணிந்த புயத்தினைக் கொண்ட தலைவனே (முன்பு எக்காரணத்தானும்) மனங் கலங்கிலை, நீ இன்று மஞ்சு அரிக்கண்ணி நகைக்கு உன் மனத்து உரம் உடைந்தாய் - நீ இச்சமயத்திற் செவ்வரி படர்ந்த விழிகளையுடைய ஒரு பெண்ணின் புன்முறுவலுக்கு உனது மனத்திடம் அழியப்பெற்றாய் எ-று.
இது கற்றறிபாங்கன் கழறல் எனப்படும்.
எவ்வகையான இடர் வந்தவிடத்தும் முந்தி மனமுயடையாத நீ இப்பொழுது தலைவிநோக்கத்தால் மன முடைந்தமை புதுமையா மெனப் பாங்கன் தலைவனைத் தேற்றியபடி (88)
துரங்கந்தந் தாவளந் தேரா ளெனும்படை சூழ்ந்திடுசா துரங்கந் தரணி படைத்திந்த்ர லோகமுந் துய்ப்பரிதோ துரங்கந் தனிலுறை மாலேத்துங் கல்வளைத் தும்பிகற்சிந் துரங்கந்த வேடுனைக் கன்பான மெய்த்திருத் தொண்டருக்கே.

Page 53
7O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ - ள்: துரங்கந்தன்னில் உறை மால் ஏத்தும் கல்வளைத் தும்பி - பரிசுத்தமான பூரீரங்கத்தில் எழுந்தருளிய விஷ்ணுமூர்த்தி துதிக்கும் கல்வளைத்தலத்திற் கோயில் கொண்ட யானையும், கல் சிந்து உரம் கந்தவேள் துணைக்கு - கிரெளஞ்சமலையை (வேற்படையாற்) சிதைத்த கந்த சுவாமியின் தமயனாருமாகிய பிள்ளையாரிடத்து, அன்பான மெய்த் திருத்தொண்டருக்கு - பத்தியுள்ளவராகிய உண்மையடியவர்களுக்கு, துரங்கம் தந்தா வளம் தேர் ஆள் எனும் சூழ்ந்துள்ள சாதுரங்கப் படை - குதிரை யானை தேர் காலாள் என்னும் சூழ்ந்துள்ள நால்வகைச் சேனைகள். தரணி படைத்து - பூமி ஆகிய இவைகளைப் பெற்று, இந்த்ரலோகமும் துய்ப்பு அரிதோ - இந்த்ரலோக போகங்களையும் அனுபவித்தல் அரிதாமோ எ-று.
சதுரங்கசேனை இராச்சியம் என்னுமிவைகளை இம்மையிலும் இந்திரலோகபோகத்தை மறுமையிலும் பெறுவரென்க. ஈற்று ஒகாரம் எதிர்மறைப் பொருளில் வந்தது.
கல்வளைப்பெருமானாரைப் பூசித்துப் போற்றும் மெய்யடியாருக்கு இம்மை மறுமைப் போகங்கள் இலகுவிற் கிடைக்குமென்றபடி (39)
அருமந்த மாருதத் தேரோற்கு மைத்துன னானபிரா னருமந்த மாமுகன் கல்வளை யான்வெற்பி னாடவரை யருமந்தக் கார்குழன் மாலையும் வாடின தையமில்லை யருமந்த மானுக் கிருப்புவெள் ளேறுடை யான்வையமே.
இ-ஸ்: அரு மந்தமாருதத் தேரோற்கு மைத்துனன் ஆன பிரான் - நுண்ணிய இளந் தென்றலாகிய தேரையுடைய மன்மதனுக்கு மைத்துனராகவுள்ள பெருமானும், அரும் மந்த மாமுகன் - அருமையாகிய யானைவதனத்தை யுடையவரும், கல்வளையான் வெற்பில் அருமந்த மானுக்கு - கல்வளைப்பதியில் எழுந்தருளியவருமாகிய விநாயகக் கடவுளின் மலையிலுள்ள அருமருந்தன்ன பெண்ணுக்கு, ஆடவர் அயரும் அந்தக் கார் சூழல் மாலையும் வாடினது - (கண்ட) ஆடவர்கள் சோர்வடையும் அழகினையுடைய முகில்போன்ற கூந்தலிலுள்ள மாலையும் வாடியது, இருப்பு - (ஆதலால்) இப்பெண்ணின் வாசஸ்தானம், வெள் ஏறு உடையான் வையமே - வெண்ணிறமான இடபத்தை வாகன மாகவுடைய பரமசிவன் தேராகக் கொண்ட இப் பூவுலகமேயாகும், ஐயமில்லை
- (இதிற்) சந்தேகமில்லை எ-று.

கல்வளை யந்தாதி /71
மத்தமா மந்தமா என மெலிந்துநின்றது. வையமே இருப்பு எனக் கூட்டி முடிக்க. வையம் என்பது பூமியையும் தேரையும் குறிக்கும் ஒரு சொல். பூமியைத் தேராகப் பரமசிவன் கொண்டது திரிபுரதகன காலத்திலாகும் மாலையும் என்ற உம்மையால் கண்ணிமைத்தல் முதலியனவு முண்டென்பது பெறப்பட்டது.
மாலை வாடியிருத்தல் முதலிய தன்மையால் இவள் மானுடப் பெண்ணெனத் துணியப்பட்டாளென்றபடி (90)
வைப்பர சத்தி யுரியா னிடத்தின் மகிழ்தருபார் வைய்யர சத்தி திருமுலைப் பாலுண்ட வாயன்மத வைப்பர சத்தி செறிந்திடுங் கல்வளை வானவர்கோ வைப்பர சத்தினம் பெற்றாரற் றார்குயர் மானிலத்தே.
இ-ள்: வை பரசு அத்தி உரியான் இடத்தில் மகிழ்தரு பார்வைப் பரசத்தி-கூரிய கோடரிப்படையையும் யானைத் தோலையும் (முறையே ஆயுதமாகவும் போர்வையாகவும்) தரித்தருளிய சிவபிரானது இடப்பாகத்திலுள்ள கிருபா கடாட்சத்தோடு கூடிய உமையம்மையாரது, திருமுலைப்பால் உண்ட வாயன் - திருமுலைப்பாலை யருந்திய வாயினை யுடையவரும், மத வைப்பு அரசு அத்தி செறிந்திடும் கல்வளை வானவர் கோவை - மிகுதியாகத் தன்னிடத்தில் அரசமரமும் அத்திமரமும் பொருந்தப்பெற்ற கல்வளைத்தலத்திற் கோயில்கொண்ட தேவ தேவராகிய விநாயகப்பெருமானை, தினம் பரசய்பெற்றார் - நாள்தோறும் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்றவர்கள், மாநிலத்தே துயர் அற்றார் - பெரிய பூமியின்கண்ணே (இம்மையிலே) தம் துயரனைத்தும் ஒழியப் பெற்றவராவர் எ-று.
கல்வளைப் பெருமானைத் தினமும் வணங்கத் துதிப்போர் எவ்வகையான கிலேசமும் ஒழியப் பெறுவரென்றபடி (9)
மாவா ரணமெனக் கொண்டோன் விழிப்பட்டு மாய்ந்தவெங்கா மாவா ரணங்க ளொருநாலு மேத்தி வணங்குமந்த மாவாரணங்கல் வளையான்றந் தான்கொன்றை மாலையெங்கண் மாவா ரணங்கினை யென்செய்கு வாய்மலர் வாளிகொண்டே.
இ-ள்: மா வாரணம் எனக் கொண்டோன் விழிபட்டு மாய்ந்த வெம் காமா - யானைத் தோலை மேற்போர்வையாகத் தரித்த சிவ பெருமானுடைய கட்பார்வை பட்டு மாண்ட கொடிய மாரனே, ஆரணங்கள் ஒருநாலும் ஏத்தி வணங்கும் - வேதங்கள் நான்கும் துதித்து

Page 54
72/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வணங்குகின்ற, அந்த மா வாரணக் கல்வளையான் - பெரிய யானையாகிய அக்கல்வளையிற் பிள்ளையார், கொன்றை மாலை தந்தான் - கொன்றை மாலையைத் தந்துள்ளார், எங்கள் மா ஆரணங்கினை மலர் வாளி கொண்டு என் செய்குவாய் - இலக்குமியை நிகர்த்த எங்கள் தலைவியைப் பூங்கணைகளைக் கொண்டு நீ என்ன செய்குவாய் எ-று.
மா வாரணம் எனக்கொண்டோன் விழி, என்பதில் மா, விழி, ஆகு பெயர்கள். மா ஆரணங்கு - இலக்குமியாகிய பெண், என் செய்குவாய் என்ற வினா உன்னால் ஏதுஞ் செய்ய முடியாதென்ற எதிர்மறைப்பொருளில் வந்தது. இது புறப்பொருளில் கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்தைச் சார்ந்ததோர் கிளவி.
தலைவிக்கு விநாயகப்பெருமான் கொன்றை மாலை யொன்றை யுதவியதனால் அத்தலைவியை அம்மதன் வருத்தல் முடியாதென மதனுக்குத் தெருட்டியபடி (92)
வாள முருக்கிதழ் வல்லவை சேர்கல் வளையிற்பிர வாள முருக்கித வேணியன் வெற்பின் மதித்தசக்ர வாள முருக்கு முலையாய் மலர்க்கரங் கொண்டுகர வாள முருக்கயி னேர்வாரி பொத்துதன் மற்றfதே.
இ-ள்: வாள முருக்கு இதழ் வல்லவை சேர் - ஒளியையுடைய முருக்கம்பூவை யொத்த அதரங்களையுள்ள வல்லவை பொருந்தப் பெற்ற, கல்வளையில் பிரவாளம் உருக்கு இத வேணியன் வெற்பில் - கல்வளைப் பதியிற் கோயில்கொண்ட பவளத்தை உருக்கினாற் போன்ற செய்ய சடையினையுடைய விநாயகக்கடவுளின் மலையில், மதித்த சக்கரவாளம் முருக்கும் முலையாய் - (புலவர் ஒப்பாக) மதித்த சக்கரவாளப் பறவையை வென்ற தனங்களையுடைய தலைவியே, கரவாளம் உருக்கு அயில் நேர் வாரி மலர்க்கரம் கொண்டு - வாட்படையையும் உருக்கினாலியன்ற வேற்படையையும் ஒத்த கண்ணைப் பூப்போன்ற கையினால், பொத்துதல் அரிது - பொத்துதல் அரிதாகும். எ-று.
வாரி - நீரையுடையது; இங்கே கண், கரவாளம் - வாள்; மற்று அசைநிலை, இஃது இடையூறு கிளத்தலாகும்.
தலைவியே உன் விழி கைக்கடங்காவென்றபடி (93)

கல்வளை யந்தாதி /73
மற்கடந் தாவருங் காமேவு கல்வளை வாசன்வெங்கா மற்கடந்தார்புகழைங்கரன் வெற்பில்வன் பார்த்தனுடன் மற்கடந் தான்கட் டழல்குளி தீச்சுர வாரியென்னா மற்கடந் தாங்கிய கொங்கையெவ் வாறு மருவினளே.
இ-ள்; மற்கடம் தாவரும் காமேவு கல்வளை வாசன் - குரங்குகள் தாவிப் பாய்கின்ற சோலைகள் பொருந்திய கல்வளைப் பதியைக் கோயிலாகக் கொண்டவரும், வெம் காமற் கடந்தார் புகழ் ஐங்கரன் வெற்பில் - கொடிய மன்மதனை வென்ற முனிவர்கள் போற்றும் ஐங்கரக் கடவுளுடைய மலையில், வல் பார்த்தனுடன் மற்கள் தந்தான் கண் தழல் குளிர் தீச்சுர வாரி என்னாமல் - வ்லிய அருச்சுனனோடு மல்யுத்தங்களைச் செய்த கைலாசபதியின் நெற்றிக்கண்ணிலுள்ள அக்கினிதானுங் குளிருகின்ற நெருப்பைக் கொண்ட பாலைவன மார்க்கமென்றுஞ் சிந்தியாமல், கடந் தாங்கு கொங்கை எவ்வாறு மருவினள் - குடத்தினியல்பை யொத்த தனங்களையுடைய எமது மகள் எவ்வாறு சென்றாள் எ-று.
காமற் கடந்தார் - பெண்ணாசையைக் கடந்த முனிவர்கள், பார்த்தனுடன் மற்கள் தந்த வரலாற்றைப் பாரதம் - அருச்சுனன் றவநிலைச் சருக்கத்திற் காண்க. கண் தழல் குளிர் தீ - நெற்றிக்கண்ணிற் பொருந்திய நெருப்புங் குளிரென்று சொல்லத்தக்க வெம்மையுடைய தீ. கடம் ஆகு பெயர். இது தன்மகள் மென்மைத் தன்மைக் கிரங்குதலாகும்.
கொடிய பாலைவனத்தைக் கடந்து மகள் எவ்வாறு சென்றா ளெனத் தாயிரங்கியபடி (94)
மரக்கணி யார்தம் மலரே டவிழ்த்து வயினிடத்த மரக்கணி யாரெனச் சோதிடஞ் சொல்லினர் வாளரிச்ச மரக்கணி யாதுசெய் வாணம் விதிவசம் வல்லவைவா மரக்கணி யார்மைந்தர் கல்வளை வாசர் மலையகத்தே.
இ- ள்: வல்லவை வாமர் - வல்லபையை இடப்பாகத்திற் கொண்டவரும், அக்கு அணியார் மைந்தர் - என்பு மாலையாகிய அணியினை யுடைய பரமசிவனது திருக்குமாரரும், கல்வளை வாசர் மலையகத்து - கல்வளைத் தலத்து எழுந்தருளியவருமாகிய விநாயகக் கடவுளின் மலையில், மரக் கணியார் - மரமாகிய கணியார், தம் மலர் ஏடு அவிழ்த்து - தமது மலரேட்டை அவிழ்த்து வயினிடத்து அமர் அக்கணியார் என - இத்தலத்தின் கண்ணே வசிக்கும் அக்கணிச் சாதியார்போல, சோதிடஞ் சொல்லினர் - (தினை விளைந்ததென்று) சோதிடங் கூறினர், வாள் அரி சமரம் கனி யாது செய்வாளர் -

Page 55
74/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
(முன்னொருபோதும் தலைவரைய் பிரியாத) வாள் போலும் இரேகைகள் பொருந்திய பேர்புரியும் விழிகளையுடைய தலைவி இனி என்ன செய்யப் போகின்றாள், எம் விதி வசமே - இப்படி நேர்ந்தமை எம் விதி வசமாகும் எ-று.
மரக்கணி - வேங்கை மரம். மலரேடு - பூவிதழ். மூன்றாமடியிற் கண்ணி கணி யெனத் தொக்கது. இஃது சிறைப்புறமாகச் செறிப்பறி வுறுத்தலாகும்.
வேங்கை பூத்தமையே தினை முற்றியமைக்கு அறிகுறியாக, தினைப் புனத்தைத் தலைவி காத்தல் அதன்மேல் இல்லையாக, அவள் சிறுகுடிலிற் செறியவேண்டி நேர்ந்தமையின் தலைவனைப் பிரிந்தறியாத தலைவி இல்ரிப்பிரிவாற்றாது வருந்துவளே யெனப் பாங்கி அவள்பொருட்டு இரங்கியபடி (95)
கத்தாறு காலிசை யார்க்குங் குழற்கரும் பேயுயர்மா கத்தாறு காலக் கருமாரி வந்தது கன்னியம்பூ கத்தாறு காலுங் கனியள்ளி யாரங் கரைசிந்திவே கத்தாறு கால்வருங் கல்வளை வாழைங் கரன்வெற்பிலே,
இ-ள்: கத்து ஆறுகால் இசை ஆர்க்கும் குழற்கரும்பே - ஒலி செய்யும் வண்டுகள் கீதம்பாடும் கூந்தலையும் கருப்பிரசம் போன்ற இனிய சொல்லையுமுடையவளே, கன்னியம் பூகத்தாறு காலும் கனி அள்ளி - இளமையாகிய கமுகின் குலைகள் உதிர்த்த பழப்பாக்குகளை அள்ளிக் கொண்டு, ஆரம் கரை சிந்தி - முத்துக்களைக் கரையி லொதுக்கி, வேகத்து ஆறு கால் வரும் - வேகமாகி நதி வாய்க்காலின்வழியே வருகின்றது, கல்வளைவாழ் ஐங்கரன் வெற்பிலே - (ஆதலால்) கல்வளைப் பதியில் எழுந்தருளிய ஐங்கரக்கடவுளுடைய மலையிலே, உயர் மாகத்து ஆறு - உயர்ந்த ஆகாய மார்க்கமாக, காலக்கரு மாரி வந்தது - கார்காலத்துக் கருமேகம் வந்தது (போலும்) எ-று.
ஆறுகால் - அறுபதம், வண்டு. இஃது தலைவி அறியாள் போன்று குறியாள் கூறலென்க.
நதி பிரவாகித்துப் பாய்தலின் கார்காலத்துக் கருமுகில் மேலே வந்தது போலும் என்றபடி (96)

கல்வளையந்தாதி /75
கரனா கராமுனி மாதுள மேத்திய கல்வளையான் கரனா கராவற நேமிப் படைக்கல மேவிவரு கரனாக ராசன் பணிபெரு மான்புகழ் கற்றிடச்சி கரநாக சாதிய னாயிர நாப்பெற்ற காரணமே.
இ-ள்: கரன் நாகு அரா முனி மாதுளம் ஏந்திய கல்வளையான் - திருக்கரங்களில் சங்கையும் சர்ப்பத்தையும் வில்லையும் மாதுளம்பழத்தையும் தரித்த கல்வளைப் பெருமானும், கரன் கரா நா அற நேமிப் படைக்கலம் ஏவி வரு கரன் - கரன் என்னும் அரக்கனும் முதலையும் நடுவறச் சக்கரப்படையைத் தூண்டிய கையினையுடைய திருமால், நாகராசன் பணி பெருமான் - விண்ணுலக அரசனாகிய இந்திரன் (ஆகிய இவர்கள்) வணங்கும் பெருமானாகிய விக்கினேசுவர மூர்த்தியின், புகழ் கற்றிட - திருப்புகழைப் படிப்பதற்கே, சிகர நாகள் ஆதிபன் ஆயிரம் நாய் பெற்ற காரணம் - உயர்ச்சியாகிய சர்ப்பங்களுக்குத் தலைவனாகிய ஆதிசேடன் ஆயிரம் நாக்களைக் கொண்ட காரணமாகும். எ-று.
முனி - வில்லு. நா - நடு, கரன் இராவணனுக்குத் தம்பிமுறை பூண்ட அரக்கன், திருமால் இராமாவதாரத்தில் இவனை வதைத்தனர். கரா - இங்கே கயேந்திர ஆழ்வான் என்னும் யானையைப் பிடித்த முதலை.
ஆதிசேடன் ஆயிரம் நாக்களைப் பெற்றிருத்தல் கல்வளைப் பெருமான் திருப்புகழைப் பாடுதற்குப்போலும் என்றபடி (97)
காரப் பிணைவிழி வல்லவை பாலமர் கல்வளையான் காரப் பிணையென வெங்குநின் றோன்வெற்பிற் காமரந்த காரப் பிணையற் சுருள்வஞ்சி போற்கன்னி யிர்பொறியா காரப் பிணையொன்று வந்ததுண் டோசொல்லுங் கண்டதுண்டே.
இ~ள்: கார் அய்பு இணை விழி வல்லவையால் அமர் கல்வளையான் - கரிய அம்பினையொத்த இருகண்களையுடைய வல்லபையென்னுந் தேவி இடப்பாகத்தில் விருப்பத்தோடு இருக்கப்பெற்ற கல்வளைப் பெருமானும், கார் அப்பு இணை என எங்கும் நின்றோன் வெற்பில் - முகிலில் நீர்போல எங்கும் வியாபித்திருக்கின்றவருமாகிய விநாயகக்கடவுளின் மலையிலே, காமர் அந்தகாரப் பிணையற் சுருள் வஞ்சிபோற் கன்னியீர் - அழகிய இருளை நிகர்த்த மாலையை யணிந்த கூந்தலை யுடைய வஞ்சிக்கொம்பு
போன்ற கன்னிமீர், பொறி ஆகாரப்பினை ஒன்று வந்ததுண்டோ - புள்ளிவடி

Page 56
76/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வினையுடைய மான் ஒன்று (இந்த மார்க்க மாக) வந்ததோ, கண்டதுண்டே - நீவிர் பார்த்த துண்டோ, சொல்லும் - சொல்லுவீர் எ-று.
இது கெடுதி வினாதல்,
கல்வளைப் பெருமான் வெற்பிற் கன்னிமீர், ஒருபுள்ளிமான் இந்தமார்க்கமாக வந்தமையை நீவிர் கண்டதுண்டோ என வினா வியபடி (98)
கண்டால முண்ட பெருமா னுதவிய கான்முளைபுன் கண்டால மாந்தர்க் ககற்றாகு வாகனன் கல்வளையின் கண்டால நேருங் கரத்தானைக் காணத் தொழுப்புகழக் கண்டாலங் கைத்தலம் பெற்றேனற் றேனென் கனதுயரே.
இ-ள்: கண்டு ஆலம் உண்டபெருமான் உதவிய கால்முளை - (தேவர்கட்குத் துன்பஞ்செய்ய வந்தமையைக்) கண்டு ஆலாகலம் என்னும் அந்நஞ்சை உண்டருளிய பரமசிவன் பெற்ற பிள்ளையாரும், தாலமாந் தர்க்குப் புன்கண் அகற்று ஆகு வாகனன் - இப்பூமியில் (தம்மை வழிபடும்) மனிதருக்கு நேரும் விக்கினங்களை நீக்கியருளும் பெருச்சாளி வாகனக் கடவுளும், கல்வளையின் கண் தாலம் நேரும் கரத்தானை - கல்வளைத் தலத்திற் கோயில்கொண்ட பனையைப்போன்ற தும்பிக்கையி னையுடையவருமாகிய கணேசமூர்த்தியை, காணக் கண் - தரிசிக்க கண்களையும், தொழக்கைத்தலம் - கும்பிடக் கைகளையும், புகழத் தாலம் - (வாயார) வாழ்த்த நாவினையும், பெற்றேன் - பெற்றுக் கொண்டேன்; என் கன துயர் அற்றேன் - அதனால் என்னுடைய மிக்க துன்பம் ஒழிந்தேன் எ-று.
கான் முளை, இருபெயரொட்டு. தலம், தாலமென நீண்டது.
கல்வளைப்பதியிற் கோயில் கொண்ட கணேச மூர்த்தியைத் தரிசிக்கக் கண்களையும் கும்பிடக் கரங்களையும் வாழ்த்த நாவையும் பெற்றுள்ளேனாதலின் என்துயர் நீங்க எக்குறைவுமின்றி வாழலானே னென்றபடி (99)
கனகந் தரநிற மால்சாபந் திர்த்திடுங் காரணவென் கனகந்தரநெஞ்சிற்றோன்றுபுன்மாலைகைக் கொள்வைசெங்கோ கனகந் தருமலர் கோவைசெய் நாருங் கவினுமன்றோ கனகந் தரள மணிமாடக் கல்வளைக் கற்பகமே.

கல்வளை யந்தாதி /77
இ-ள்: கன கந்தர நிறமால் சாபந் தீர்த்திடும் காரண - மேகம்போலும் கரிய நிறத்தையுடைய நாராயணமூர்த்திக்கு நேர்ந்த சாபத்தை நீக்கியருளிய சர்வகாரணரே, கனகம் தரளம் அணி மாடக் கல்வளைக் கற்பகமே - பொன்னும் முத்தும் அலங்காரத்தைச் செய்கின்ற மாளிகைகளைக் கொண்ட கல்வளைத் தலத்திற் கோயில்கொண்டருளிய கற்பகப் பிள்ளையாரே, என் கல் நகம் தர நெஞ்சில் தோன்றும் புல்மாலை கைக்கொள்வை - என்னுடைய கற்பாறை போன்ற (கடிமான) உள்ளத்திலிருந்து கிளர்ந்த புல்லிய இந்த (அந்தாதியாகி) பாமாலையை ஏற்றருளல் வேண்டும், செம் கோகனகந்தரும் மலர் கோவை செய் நாரும் கவினும் அன்றோ - செவ்விய தாமரையிற் பூக்கும் மலரைத் தொடுக்கின்ற நாரும் அழகையடையு மலலவா எ-று.
திருமாலுக்குத் தேவியால் நேர்ந்த நீக்கமுடியாத சாபத்தை நீக்கியருளிய தேவரீருக்குத் தமியேனுடைய துன்பங்களை நீக்குதல் ஒருபொருளல்ல வென்பதைக் குறிப்பாலுணர்த்துவார், “கன கந்தர நிறமால் சாபந்தீர்த்திடுங் காரண” என்றர். கல்நகந்தர நெஞ்சில் - இரக்கம் முதலாம் நல்லியல்புகளில்லாத உள்ளத்தில்; “நெஞ்சக அடுக்கலில்’ என்றார் கச்சியப் பசிவாசரிய சுவாமிகளும், பூவோடுகூடிய நர் கவினுறுதல் போல, தேவீருடைய திருவருட் பிரவாகத்தைத் தொடர்ப்படுத்திப் பாடுதற்கு ஏதுவாயிருத்தலின் என் பாடலும் புன்மை நீங்கி நன்மையுறுமென்பது கருத்து. இச்செய்யுள் தாம் பாடிய இவ்வந்தாதியை அக்கல்வளைப்பெருமானுக்கு அர்ப்பணஞ் செய்தவாறாகும்.
கல்வளைப்பெருமானே, தமியேன் தேவரீர்மீது பாடிய இவ்வந் தாதியைத் தேவரீர் திருச்செவி மடுத்தருளித் தமியேனுக்குக் கிருபாநோக்கஞ் செய்தல் வேண்டுமென நூலாசிரியர் அப்பெருமானை இரந்தபடி (100)
கல்வளையந்தாதி முலமும் உரையும் முற்றுப்பெற்றன.

Page 57

fii fiI SUI,
ܕ ܐ .

Page 58

bGorff føÖTUĞöbúi) (GOGUT GULJÄru
மறைசையந்தாதி
o GO: EUA 6 GFDLGUGU
நூற்சிறப்புப்பாயிரம்
(யாழ்ப்பாணம் ழரீமத். வரதராசகவிராசர் இயற்றியது.)
செந்தாதி யன்மணிப் பூண்புலி யூரற்குச் சேர்ந்தளித்த சிந்தாத்தி யானஞ்செய் வில்லவ ராசன் றிருப்புதல்வன் நந்தாவ ளந்திகழ் நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர் அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே.

Page 59
8O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
காப்பு
அந்தமு மாதியு மில்லா மறைசையி லத்தர் தம்மேற் செந்தமிழ் நூற்பொரு ளந்தாதி பாடச் சிலம்பிலன்னை யிந்தன வாணுைதற் சுந்தரி யம்பிகை யீன்றெடுத்த சுந்தர வீரகத் திச்சே தகன்றாட் டுணைதுணையே.
இதன் பொருள் : அந்தமும் ஆதியும் இல்லா மறைசையில் அத்தர்மேலி - முடிவும் முதலும் இல்லாத வேதாரணியத்துச் சிவபெருமான்மேல், செந்தமிழ் நூல் பொருள் அந்தாதி பாட - செந்தமிழ் நூலில் வழங்கும் பொருளையுடைய அந்தாதியைப் பாடுதற்கு, சிலம்பில் அன்னை இந்து அன வாள் நுதல் சுந்தரி அம்பிகை ஈன்று எடுத்த - (இமைய) மலையிலுதித்த மாதாவாகிய பிறையை யொத்த ஒளியைக்கொண்ட நெற்றியையுடைய பார்வதிதேவி பெற்ற, சுந்தர வீரகத்திச் சேதகன் துணைத்தாள் துணை - அழகையுடைய வீரக்கொலையாலாய (பழியைத்) துடைத்தவராகிய கணேசரது உபய திருவடிகளும் (எனக்குத்) துணையாகும் என்றவாறு;
இல்லா என்னுமீறுகெட்ட பெயரெச்சம், பெரியபுராணத்தில், “அங்கண ரோலைகாட்டி யாண்டவர் தமக்குநாடு’ என்றவாறு பாலிழுக்கிநின்ற அத்தரோடு முடிந்தது. தம் சரியை. சுந்தரத்தைத் தாளோடு சேர்ப்பினுமையும். தாளென்பது, ‘எருமைநாற்கானீர்க்கீழல்வே” என்றதுபோல முற்றும்மை விகா ரத்தாற்றொகநின்றது. ஏ ஈற்றசை. அந்தாதியென்பது, தண்டியலங் காரத்தில், “செய்யுளென்பவை தெரிவுறக் கிளப்பின்-முத்தகங் குளகந் தொகை தொடர் நிலையென-வெத்திறத் தனவு மீரிரண்டாகும்’ என வரையறுத்து, “சொல்லினும் பொருளினும் மிருவகை தொடர்நிலை” என வகுத்து “செய்யுளந்தாதி சொற் றொடர் நிலையே’ என விரித்ததி லமைவதென்க. ப. றொடையவாய் நேரிசை இன்னிசையென்னும் பகுப்போடு பட்டவற்றின் மேற் பஃறொடைவெண்பா வென்னும் பெயர் வழங்காமைபோல, சொற்றொடர் நிலையவாய்க் கலம்பகம் நான்மணிமாலை யென்னும் பகுப்போடு பட்டவற்றின்மே லிப்பெயர் வழங்கா தாயிற்று. இதுவுங் கலம்பகமும் முதலிய எழுத்துத் தொடர் நிலையாய் வருவனவுமுள; அவை யாண்டமையப்படு மெனிற் கமுகந்தோட்ட மென்றாற்போல நின்ற இச்சொற்றொடர் நிலையிற்றானே யமையுமென்பது. இதனாற் சொற்றொடர் நிலையே சிறப்பும் பெருவரவும் ஆசிரிய ரிலக்கணஞ்செய்த காலத்து நிகழ்வுமென்க.

மறைசையந்தாதி /a1
நூல்
திருவாரணங்கு மணமகன் பூசித்த செல்வர் வெள்ளைக் கருவா ரணங்குமி றும்பண்ணை சூழ்மறைக் காடரிசை மருவா ரணங்கு திரையாரைப் பாடுமென் வாய்க்கவிதைக் கிருவா ரணங்குசெய் பூண்முலைப் பாமயி லென்றுணையே.
இ~ள்: திரு ஆர் அணங்கு மணமகன் பூசித்த செல்வர்இலக்குமியாகிய அருமையான தெய்வமாதுக்குத் தலைவரான புருஷோத்தமர் அருச்சித்த பகவரும், வெள்ளைக் கரு வாரணங் குமிறும் பண்ணை சூழ் மறைக்காடர் -வெண்மையாகிய சூலையுடைய சங்குகள் முழங்கும் வயல் சூழ்ந்த வேதாரணியத்தை யுடையவரும், இசை மருவு ஆரணங் குதிரையாரை - இசைபொருந்திய வேதமாகிய குதிரையையுடைய வருமாகிய சிவபெருமானை, பாடும் என்வாய்க் கவிதைக்கு - பாடுகின்ற எனது வாயிற் பாட(லினிது முடிதற்) பொருட்டு, வார் அணங்கு செய் பூண் இருமுலைப் பாமயில் என் துணை - கச்சுக்கு வருத்தத்தைப் புரியும் ஆபரணத்தைத் தாங்கிய இரண்டு தனத்தையுடைய கலைமகள் எனது துணை, எ-று.
திரு ஆர் அணங்கு என்பதற்கு இலக்குமிக்கும் பூமிதேவிக்கும் எனப்பொருள் கூறினுமமையும். ஆர் பூமிக்காதலை சூடாமணி நிகண்டில் “ஆர்கூர்மை யாத்தி சோதி யம்புவி யாகுமாமே” என்பதனா லுணர்க. ஆரணங்குதிரையாரை யென்பது, மெலிக்கும்வழி மெலித்தல். செல்வர் மறைக்காடார் குதிரையாரைப் பாடும் என்றதும் மேல்வருமின்னவும், “ஒரு பொருண்மேற் பலபெயர்வரி னுறுதி-யொருவினை கொடுப்ப' என்னும் நன்னூல்விதியிலமைவன. திரு என்பது மங்கலமொழி. (1)
என்றா டலையொன்று காலனைத் தாங்கி யெழிற்கணக மன்றா டலைச்செய்து வான்பர வைப்பெயர் மண்னனும் விண்னனுஞ் சென்றா டலைக்கடை வாயிற் படியினிற் சேர்ந்துவைகு முன்றா டலைவைப் பதுமறைக் காட்டி லுறைபரனே.
இ-ஸ்: மறைக்காட்டில் உறை பரனே - வேதாரணியத்தில் வீற்றிருக்கின்ற கடவுளே, ஆடல் ஒன்று காலனைத் தாக்கி - வலிபொருத்திய நமனை யுதைத்தும், எழில் கனக மன்று ஆடலைச் செய்து-அழகையுடைய பொன்னம்பலத்தி லானந்த நடனத்தைச் செய்தும்,

Page 60
32/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வான் பரவைப் பெயர் மண்னனும் வின்னுஞ் சென்றாள் தலைக் கடைவாயில் படியினில் சேர்ந்து வைகும் உன்தாள் - பெருமையாகிய பரவையென்னும் பெயர் பூமியிலும் ஆகாயத்திலும் செல்லப்பெற்றாளது தலைவாயிற் படியினிற் சேர்ந்துமிருந்த நுமது திருவடியை, தலைவைப்பது என்று -(என்) சிரத்தில் வைப்பது எப்போது எ-று.
ஆடலை என்பதின் ஐ சாரியை. கடைவாயில் ஒருபொருட் பலபெயர். உன் தாள் என்பது, “உன்னன்புடையவொருமகவு மீங்கில்லை” என்னுங் கந்தபுராணச் செய்யுள்போல நின்றது. (2)
பரமரம் பாலிகைச் செம்பவ ளக்கொடி பங்கள்சுரும் பரமரம் பானை யெரித்தார் மறைசைப் பதியர்வரிப் பிரமரம் பாடிய பொற்கொன்றைத் தாமரைப் பேசுதியோர் தரமரம் பாவிநெஞ் சேவினை யாங்கருந் தாதினுக்கே.
இ-ள்: பாவி நெஞ்சே - பாவியாகிய மனமே, பரமர்-முன்னானவரும், அம் பாலிகைச் செம்பவளக்கொடி பங்கர்-அழகாகிய அதரமாய செம்பவளத்தையுடைய வல்லிபோல்வாரைப் பாகத்தி லுடையவரும், சுரும்பர் அமர் அம்பானை எரித்தார் - வண்டுகளிருக்கின்ற மலர்ப் பாணத்தை யுடையானாகிய மதனை யெரித்தவரும், மறைசைப் பதியர் - வேத வனமாகிய பதியையுடையவரும், வளிப்பிரமரம் பாடிய பொன் கொன்றைத் தாமரை - வரியைக் கொண்ட வண்டுகள் பண்ணைப் பாடும் பொன்போலுங் கொன்றை மாலையை யுடையவருமாகிய சிவனை, ஒர்தரம் பேசுதிஒருமுறை துதி, வினை ஆங் கருந்தாதினுக்கு அரம்-(அத்துதி) வினையாகிய இரும்பைத் தேய்த்தற்கு அரமாகும்.
பொன் அழகுமாம். பிரயோகவிவேகத்தில், “கொள்வோன் விடநிகழ்கின்ற குத்தாதர்த்தியாதி” என்ற சூத்திரத்தில் ஆதிசத்தத்தினாற் கருந்தாதினுக்கு என்பதின் நடுவில் தேய்த்த லென்னுஞ் சொல்லுப் பெய்துரைக்கப்பட்டது, “துன்பத்துக் கியாரே துணையாவார்’ என்றதுபோல. மேல் மையற் பிணிக்கு என வருவது மிது. (3)
கருந்தாதை யன்ன கயவர்தம் மீதிற் கவிதை சொல்லி வருந்தாதை யாநநன் வேதா ரணியன்வை வேற்குகனைத் தருந்தாதை தெய்வ மணங்கமழ் சேவடித் தாமரைமேற் பொருந்தாதை யோநினை வில்லாவென் சித்தப் பொறிச்சுரும்பே.

மறைசையந்தாதி /33
இ-ள்: என் நினைவு இல்லாச் சித்தப்பொறிச் சுரும்பு-எனது நினைவு இல்லாத மனமாகிய பொறியையுடைய வண்டு, கருந்தாதை அன்ன கயவர் மீதில் கவிதை சொல்லி வருந்தாது-இரும்பை யொத்த (வன்னெஞ்சையுடைய) கீழ்மக்கள்மேற் பாட்டைப் பாடி வருந்தாமல், ஐயாநநண்-ஐந்து திருமுகங்களை யுடையவரும், வேதாரணியன்மறைக்காட்டை யுடையவரும், வை வேல் குகனைத் தருந்தாதை - கூரிய சக்தியைக்கொண்ட குமாரக்கடவுளைத் தந்த பிதாவுமாகிய சிவனது, தெய்வமணங் கமழ்சேவடித்தாமரை மேல்-தெய்வமணங் கமழாநின்ற செம்மையாகிய பாதாரவிந்தத்தின்மேல், ஐயோ பொருந்தாது-அந்தோ பொருந்துதல் செய்திலது. எ-று. (4)
சுரும்பர வைக்கிசை தாமரை யோவிடந் தொல்புவியோ கரும்பர வைக்க ணயலேது துரதிருட் காலமுல்லை யரும்பர வைப்பயிலும்வா ணகையல்கு லன்னமென்ன வரும்பர வைக்கு நடந்தார் மறைசை வரையிறையே.
இ-ள்: முல்லை அரும்பு (பயிலும்) வாள் நகை - தளவமுகையை யொத்த வொளியைக்கொண்ட பல்லையும், அரவைப் பயிலும் அல்குல்சர்ப்பபடத்தையொத்த நிதம்பத்தையுமுடைய, அன்னம் என்ன வரும் பரவைக்கு - அன்னத்தைப் போல நடக்கும் பரவையாரிடத்தில், இருள் காலந் தூது நடந்தார் மறைசை வரை இறையே-இருளையுடைய விராக் காலத்திற் (சுந்தரமூர்த்தி நாயனாருக்காகத்) தூது போன சிவபெருமானது வேதவனத்து மலையில் தலைவனே, கரும் பரவைக் கண் இடம் - (நின் னிறையை வாங்கிய) கரிய கடலையொத்த கண்ணையுடை யாளுக்கு இடம், சுரும்பர் அவைக்கு இசை தாமரையோ-வண்டுகளுக்கு ஏற்ற தாமரைமலரோ?, தொல்புவியோ - (அல்லது) பழைய பூமியோ?, இயல் ஏது-இயல் யாது? (சொல்லுதி) எ~று.
அவை பகுதிப்பொருள் விகுதி. வாணகையல்கு லன்னமென்ன வரும் பரவைக்கு என்பது, திருமுருகாற்றுப்படையில் “பலர்புகழ் திணிதோ ளுமையமர்ந்து விளங்கு - மிமையா முக்கண் மூவெயின் முருக்கிய - முரண்மிகு செல்வனும்’ என முடிந்தது போல முடிந்தது. அன்னமென்னவரும் பரவைக்கு என்பது, இலக்கணக் கொத்தில் பல சொல்லினையே யொரு சொல்லாகவும் எனக் கூறிய விதியமைத்து, “வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன்’ என்பதுபோல நின்றதெனினுமாம். பரவைக்கு என்பது, “கிளையரிநாணற் கிழங்கு மணற்கீன்ற” என்பதுபோல “யாதனுருபிற் கூறிற்றாயினும்- பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்” என்ற

Page 61
84/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தொல்காப்பிய விதியமைந்து நின்றது. பரவைக்கண் உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த வன்மொழித்தொகை. சொல்லுதி அகப்பாட்டுறுப்பினெச்சம். (எவ்விடத் தெவ்வியற்றென்றல்). (5)
வரைச்சங் கரிக்கு மணவாளர் கூடல் வளர்ந்திடுமு வுரைச்சங் கரிக்கு வனஞ்சூழ் மறைசையி லுத்தமநா தரைச்சங் கரிக்கு விடப்பாணி சக்கிரத்தானைதொட்ட திரைச்சங் கரிக்குந் தெரியாப் பதநீழல் சேர்மின்களே.
இ-ள்: வரைசசங்கரிக்கு மணவாளர்-மலையிற் பிறந்த உமாதேவிக்கு நாயகரும், கூடல் வளர்ந்திடும் முவுரைச் சங்கர்-மதுரையில் வளர்ந்த முத்தமிழ்ச் சங்கத்தை யுடையவரும், இக்கு வனஞ் சூழ் மறைசையில் உத்தம நாதர்-கருப்பஞ்சோலை சூழ்ந்த வேதவனத்தில் வாழும் முதன்மையாகிய கடவுளுமாகிய சிவனது, கரிக்கு அச்சம் விட-யானைக்கு (முதலையா லடைந்த) பயம் நீங்க, பாணி சக்கிரத் தானை தொட்டகையிற்றங்கிய சக்கிராயுதத்தைத் தூண்டிய, திரைச் சங்கு அரிக்குந் தெரியாய் பதநிழல் சேர்மின்கள்-கடலிலெழுந்த சங்கையுடைய மாயவனுக்குந் தெரியாத திருவடிநிழலிற் (பிறவிவெய்யி லிளைப்பொழிய நீவி) சேருள். எ-று.
முத்தமிழ் : இயல் இசை நாடகம் என்பன. நாதர்பதமென வியையும் திரை ஆகுபெயர். (6)
மின்னஞ்சு கங்கைச் சடாதரன் சத்த விடங்கன்றிரை வன்னஞ்சு கந்தவன் மாமறைக் காடற்கு மாதொரிராங் பன்னஞ் சுகமென வேள்காம காண்டப் பகழியினா லின்னஞ் சுகமில்லை யென்றத்தை யோது மிளந்தத்தையே.
இ-ள்: இளந் தத்தையே-இளமையாகிய கிளியே, மின் அஞ்சு கங்கைச் சடாதரன்-(ஒளியினால்) மின்னல் பயங்கொள்ளுங் கங்கையைத் தரித்த சடாமுடியை யுடையவரும், சத்த விடங்கன் - எழாகிய விடங்க மூர்த்தமானவரும், திரை வல் நஞ்சு உகந்தவன்-கடலிலெழுந்த வலிய நஞ்சை விரும்பினவரும், மாமறைக் காடற்கு-பெருமையாகிய வேதவனத்தை யுடையவருமாகிய சிவனுக்கு, மாது ஓர் இரா பன்னஞ்சு உகம் என-(நமது) மங்கை ஓரிரவு பதினைந்து யுகமென்ன, வேள் காம காண்டப் பகழியினால்-மதனது காமகாண்ட தனு (விலிருந் தெழும்) பாணத்தால், இன்னஞ் சுகம் இல்லை என்றத்தை ஒதும்-இன்னுஞ் சுகமில்லை யென்று சொன்னதை (நீர்) சொல்லும். எ-று.

மறைசையந்தாதி /35
பன்னஞ்சு என்பதற்குச் சொல்லப்படும் ஐந்து என்னினு மமையும். கழிதுயர் விளைத்தலிற் காமகாண்டமென்றாள். தத்தையே ஒதுமென உவப்பினால் “புறவே தமியேன் பெறவே புகல்வீர்” என்றவாறு முடிந்தது. அல்லது தத்தை பால்பகா வறிணைப் பெயராதலிற் கிளிகளேயெனக் கூறி, ஒதும் என வழாநிலையாக்கினுமாம். இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்துக் கிளியைத் தூதுவேண்டல். (7)
தத்தலை வேலையன் காணாத வேதத் தனிவனத்து முத்தலை வேலையன் வெற்பினம் மாது முளரியடி யத்தலை வேலையன் முட்சொரி பாலை யருஞ்சுரத்து வைத்தலை வேலையன் பாலென்னை நாடி வரவெண்ணுைமே.
இ-ள்: தத்து அலை வேலையன் காணாத - தத்துகின்ற திரையைக் கொண்ட (பாற்) கடலையுடைய மாயவன் காணாத, தனிவேதவனத்து முத்தலைவேல் ஐயன் வெற்பில் நம்மாது- ஒப்பற்ற திருமறைக்காட்டில் வாழும் முத்தலைச் சூலத்தையுடைய சிவனது மலையில் நமது மங்கை, முளரி அடி-தாமரைமலரைப் போலும் (மெல்லிய) தாளை, அத்தலை வேல் அயல் முள் சொரி - அவ்விடத்து வேலமரம் பக்கத்தின் முள்ளைச் சொரியும், பாலை அருஞ்சுரத்து வைத்து அலைவேலைபாலைவனத்திலுள்ள அரிய நெறியில் வைத்து அலையும்போது, அன்பால் என்னை நாடி வர எண்ணும்-அன்பினா லென்னைத்தேடி (யிங்கு) வரக் கருதுவள். எ-று.
ஐயல் - போலி. (தலைமகண் மென்மைத் தன்மைக் கிரங்கல்.) (8)
வரபர சங்கர வேதா ரணிய மடங்கலஞ்சுஞ் சரபர சங்கர ளம்பொதி வாய்விழித் தையல்பங்கி னரபர சங்க ரவிபோ லொளியி னணிதிகழும் புரபர சங்கர வாநம னார்வரும் போதத்திலே.
இ-ள்: வர - அநுக்கிரகத்தைக் கொண்டவரே, பர-முன்னானவரே, சங்கர-சுகத்தைச் செய்பவரே, வேதாரணிய-மறைக்காடரே, மடங்கல் அஞ்சுஞ் சரப-நரசிங்கம் பயந்த சிம்புள் வடிவானவரே, ரசம் (பொதி) வாய் கரளம் பொதி விழித் தையல் பங்கின் அர-அமுதைப் பொதிந்த வாயையும் நஞ்சைப் பொதிந்த கண்ணையுமுடைய உமாதேவியைக் கொண்ட பாகத்தையுடைய சங்காரகருத்தரே, பர-பரமாத்மாவே, சங்க ரவிபோல் ஒளியின் அணிதிகழும்புர-கூட்டமாகிய சூரியரைப்போலச் சோதியினால் அலங்காரம்
விளங்குந் திருமேனியை யுடையவரே, பரசுக் கர - மழுவைத் தாங்கிய

Page 62
86/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
கையை யுடையவரே, நமனர் வரும் போதத்தில் வா- (என்மாட்டுக்) காலன்வரும்போது (மரண வேதனை தீர) வந்தருளும் எ-று.
சங்கரவி என்பதற்குச் சங்கசூரியரெனினு மமையும். சங்கம் ஒரெண். பரசு அங்க என வைத்து, துதிக்கப்படும் அங்கத்தை யுடையவரே என்பதுமொன்று. ரசம் ஆகுபெயர். அம்மும் அத்துஞ் சாரியை. (9)
போதவனத்த நவீராழி விற்கதை பூட்டுசிலை மாதவ னத்தன் மனாதிக்கெட் டாத வரதனங்கி யாதவ னத்த நகுமதி முன்றுகண் னான்பொறியார் வேதவ னத்தன் பதம்பேணிற் பாச விலங்கறுமே.
இ-ள்: போதவன்-தாமரைமலரின் வசிக்கின்ற பிரமனுக்கும், நத்தம் நவீர் ஆழி வில்கதை பூட்டு சிலை மாதவன் அத்தன் - சங்கையும் வாளையுஞ் சக்கிரத்தையும் ஒளியைக்கொண்ட தண்டையும் நாண் பூட்டும் வில்லையுமுடைய மாயவனுக்கும் பிதா வானவரும், மனாதிக்கு எட்டாத வரதன் - மன முதலியவற்றிற்கு அதீதமான வரதரும், அங்கி ஆதவன் நத்தம் நகு மதி முன்று கண்ணான்-அக்கினியுஞ் சூரியனும் இரவில் விளங்குஞ் சந்திரனுமாகிய திரிநேத்திரத்தை யுடையவரும், பொறி ஆர் வேதனவத்தன் - இலக்குமிவாழும் மறைக்காட்டை யுடைய வருமாகிய சிவனது, பதம் பேணில் பாசவிலங்கு அறும்- திருவடியைப் பேணினாற் பாசமாகிய விலங்கு அறும். எ-று. (10)
விலங்க லரிக்குலஞ் சூழ்மறைக் காடன் விரிந்ததுழா யலங்க லரிக்கரு மாரூரி லோர்புற்றமர்ந்திருக்கு மிலங்க லரிக்கட் களக்கறை யானைச்சற் றெண்ணுநெஞ்சே கலங்க லரிக்குநந் தீவினை யான கருங்கலையே.
இ-ள்: நெஞ்சே-மனமே, விலங்கல் அரிக்குலஞ் சூழ் மறைக்காடன் - மலையிற் சிங்கக்கூட்டஞ் சூழும் வேதாரணியத் திறைவன், விரிந்த துழாய் அலங்கல் அரிக்கு அரும் ஆரூரில் ஓர் புற்று அமர்ந்து இருக்கும் - அலர்ந்த துளவமாலையை யணிந்த மாயவனுக்கு மரிய கமலாலயத்தில் ஒரு புற்றில் மகிழ்ந்து வீற்றிருக்கும், இலங்கு அலரிக்கண் களக்கறையானை- (அங்ஙனம் வீற்றிருக்கின்ற) விளங்காநின்ற சூரியனாகிய கண்ணையுடைய களக்கறையானை, சற்று எண்ணு-சிறிது கருதுதி, நந் தீவினை ஆன கருங்கலை அரிக்கும் - (கருதில் அக்களக் கறையான்) நமது தீவினையாகிய கரிய வஸ்திரத்தை அரிக்கும், கலங்கல்கலங்கேல் 6T-1)!.

மறைசையந்தாதி /87
களக்கறையானென்பது கழுத்திற் கறையை யுடையானெவும் களக்கறை யானெனவும் பொருள் பயந்தது. கறையா னென்றதற்கிசைய வினையைக் கலையென்றார். மறைக்காடனாகிய களக்கறையானென விசைப்பாருமுளர்.
கருங்கலை மானுமென் சித்தா சனம்புகுங் கண்ணுைதலோ னருங்கலை மானுறை வேதா ரணிய னணிவரைமேன் மருங்கலை மாதுதிக் கண்முலை யிருங்கள் வார்தடங்கன் பொருங்கலை மானொன்று வந்ததுண் டாயிற் புகன்றிடுமே.
இ- ள் : என் கருங்கலை மானுஞ் சித்தாசனம்புகும் நுதற்கண்ணோன் - எனது கருங்கல்லையொத்த (திண்ணிய) இதயtடிகையிலும் புகுந்தருளும் நெற்றியிற் கண்ணை யுடையவரும், அருங் கலைமான் உறை வேதாரணியன் - அரிய பாமகளிருக்கின்ற திருமறைக்காட்டை யுடையவருமாகிய சிவனது, அணி வரைமேல் - அழகைக்கொண்ட மலையில் (வாழும்), மருங்கு அலை மா நுதிக் கண் முலையிர் - இடையை யலைக்கின்ற கரிய நுதியைப் பெற்ற கண்ணையுடைய தனத்தீர், உங்கள் வார் தடங்கண் பொருங் கலைமான் ஒன்று வந்தது உண்டாயின் புகன்றிடும் - நுமது நீண்ட விசாலமாகிய கண்ணைப் போலும் ஒரு கலைமான் (இப்புனத்து) வந்ததுண்டானாற் சொல்வீர். எ-று.
மாவை முலைக்கு அடையாக்கிற் பெரியவெனப் பொருளுரைக்க. கண்பொருங் கலைமானெண்பது “கருநெடுங் கண் போலுங் கயல்கள்’ என்பது போல நிற்றலின் விபரீதவுவமையணி. தலைவனஷ்வகை வினாதல்.)
புகரானை யிரு முரியானை வெண்பொருப் பானையெண்ணம் பகரானை மேய்த்துவெண் பற்றானை யாற்கைப் பகட்டைக்கவ்வி யகராநை யச்சுட ராழிதொட் டாற்கரி யானைமறை நகரானை யன்றிச்சொல் லாதிறைஞ் சாதென்ற னாச்சிரமே.
இ-ள்: புகர் ஆனை ஈரும் உரியானை-கபிலநிறத்தைக் கொண்ட யானையிலுரித்த தோலையுடையவரும், வெள் பொருப்பானை - வெள்ளிய கயிலைமலையை யுடையவரும், எண் அம்பகள்-எட்டுக் கண்ணைக் கொண்ட பிரமனுக்கும், ஆனை மேய்த்து-பசுவை மேய்த்து, வெள் பல் தானையால் கைப்பகட்டைக் கவ்விய கரா நையச் சுடர் ஆழி தொட்டாற்கு அரியானை - வெள்ளிய பல்லாகிய படையாற் றுதிக்கையைக் கொண்ட யானையைக் கவர்ந்த முதலை வருந்தப் பிரபையை யுடைய சக்கிரத்தைத் தூண்டிய மாயவனுக்கும் அரியவரும், மறை நகரானை

Page 63
38/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
அன்றி என் நாச் சொல்லாது சிரம் இறைஞ்சாது - வேதவனத்தை யுடையவருமாகிய சிவனை(ச் சொல்வதும் வணங்குவது)மன்றி(ப் பிறதெய்வத்தை) எனது நாச்சொல்லாது, தலை வணங்காது.
முதலில் ஆனை கெடுதல்விகாரம் பெற்றது; இரண்டில் ஆனையில் ன் சாரியை. (13)
சிரவர விந்தம் புனைமறைக் காடத்ரி சூலங்கொண்ட கரவர விந்தம் பணித்தோன் மலைத்தென்றற் கன்றுயிர்க வரவர விந்த மடநடைக் கோமள வஞ்சியிரு ளிரவர விந்த மெனக்கிடந் தாள்பின்னை யென்செய்வளே.
இ-ள்: அரவு இந்து அம் புனை சிர-பாம்பையுஞ் சந்திர கலையையுங் கங்கையையுந் தரித்த தலையை யுடையவரே, மறைக்காட-வேதவனத்தரே, திரிசூலங்கொண்ட கர-முத்தலைச் சூலத்தைக் கொண்ட (வலக்) கையரே, வர-அநுக்கிரகஞ் செய்பவரே, விந்தம் பணித்தோன் மலைக் கன்றுத் தென்றல்-விந்தமலையைத் தாழ்த்தவராகிய அகஸ்தியமுனிவரது (பொதிய) மலையில் (நின்றெழு) மந்தமாருதம், உயிர் கவர வர - ஆவியைக் கவரவர, மடநடைக் கோமள இந்த வஞ்சி - மடநடையையுடைய இளமையாகிய இப்பெண், இருள் இரவு அரவிந்தம் எனக் கிடந்தாள்-இருளையுடைய இரவில் தாமரைமலர்போலக் (கூம்பிக்) கிடக்கின்றாள், பின்னை என் செய்வள் - (அவ்வாறு கிடத்தலன்றிப்) பின் யாது செய்வாள் எ-று.
அர எனக் கொள்ளினுமாம். இது கடவுண்மாட்டு மானுடப் பெண்டிர் நயந்த பக்கத்துத் தலைவி மயலை யிறையோன் முன்னர்த் தோழி சொல்லியது. “வாகைதன்பின் கொட்கும் பொதுவியல்பாடாண் புறப்புறம்” என வீரசோழியத்திற் சொன்னமையின், இத்திறனெல்லாம் புறப்புறம் என்க. (14)
செய்யரைக் கோடியை மாவுரி யாரைச் செழுங்கனன்மான் கையரைக் கோடி புனைமறைக் காடரைக் கண்ணிற்கண்டாற் பையரைக் கோடிமின் னார்மய லால்வரும் பாவமெல்லா மையரைக் கோடி யருந்துக ளாவ தறிசித்தமே.
இ-ள்: சித்தமே-மனமே, செய்யரை-செம்மையை யுடையவரும், கோடு இயை மா உரியாரை-தந்தம் பொருந்திய யானையினது தோலை யுடையவரும், செழுங் கனல் மான் கையரை-அழகிய அக்கினியையும் மானையுந் தாங்கிய கையை யுடையவரும், கோடி புனை மறைக்காடரை

மறைசையந்தாதி /89
- கோடி தீர்த்தத்தைத் தாங்கிய வேதவனத்தை யுடையவருமாகிய சிவனை, கண்ணில் கண்டால்-நேத்திரத்தால் தரிசித்தால், பை அரைக்கோடி மின்னர் மயலால் வரும் பாவம் எல்லாம்-நிதம்பத்தையுடைய அரையி லாடையைக் கொண்ட மகளிரது மயக்கத்தால் வரும் பாவம் முழுதும், அரும் ஐயரைக் கோடி துகள் ஆவது அறி-அரிய இரண்டரைக்கோடி துகளாகச் சிதைதலை யறிவாய். எ-று.
பை-உவமவாகுபெயர். (15)
சித்திர வன்னிக ருங்கொங்கை பங்கள்செற் றார்புரமுன் றத்திர வன்னிக் கருணகை யார்க்கிட மாகமதூன் மித்திர வன்னியும் பூவையுங் கேட்டு வியந்துரைக்கும் பத்திர வன்னி மரஞ்சேர் மறைசைப் பதியகமே.
இ-ள்: அகமே-நெஞ்சே, சித்திர வல்நிகருங் கொங்கை பங்கள்அழகிய சூதாடு கருவியைப்போலுந் தனத்தையுடைய உமாதேவியைப் பாகத்திலுடையவரும், செற்றார் முன்று புரம்-பகைவரது முப்புரத்தையும், அத் திர வன்னிக்கு அருள் நகையார்க்கு இடம்-அந்த வலிய அக்கினிக்குக் கொடுத்த சிரிப்பையுடையவருமாகிய சிவபெருமானுக்கு இடமாவது, மித்திர வன்னியும் பூவையும் ஆகமதூல் கேட்டு வியந்து உரைக்கும்-சினேகத்தையுடைய கிளியும் நாகணவாயும் (ஆன்றோரோதும்) ஆகமசாஸ்திரத்தைக் கேட்டு வியந்து பேசுகின்ற, பத்திரவன்னி மரஞ் சேர் மறைசைப் பதி-இலையைக் கொண்ட வன்னிமரஞ் சேர்ந்த வேதவனபுரி. எ-று.
சித்திரவன்னி கருங்கொங்கை என்பது அன்மொழித்தொகை. இதனைப் பிரயோகவிவேகத்தில், “இருமொழி பன்மொழி பின்மொழி யெண்ணோ டிருமொழியெண்-டருமொழி யொற்றொழி திக்கந்தராளஞ் சகமுனிற்குமொருமொழியேனை விதிகார லக்கணத்தோடு வரும் - பெருமொழியாகி வெகுவிரியன்மொழிப் பேரடைந்தே’ என்னுஞ் சூத்திரத்தானறிக. அத்திர வன்னிக்கு என்பதற்குப் பாணத்தில் நுதியாகிய அக்கினிக்கு எனக் கூறினு மமையும். இதில் அத்திரம் ஆகுபெயர். கொங்கை பங்கள் என்பதற்குத் தனத்தைப் பாகத்திலுடையவரென்பதுமொன்று. வியந்துஎன்பதை வினையெச் சத்திரிபாக்கி வியக்கவெனினு மமையும். அகமே என்பதை இடமாக்கினுமாம்.

Page 64
9O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பதிகம் பரிக்குங் குழன்மாத ராயப் பரவையுள்ளே வதிகம் பரிக்கு நிகர்விழி யாய்மலை மாதுகங்கா ளிதிகம் பரிக்கு மணியாக மீந்தரு ஸ்ரீசர்முத்தம் பொதிகம் பரிக்குந் திரைவேலை வேத புரிவரைக்கே.
இ-ள்: மலை மாது-(இமைய) மலையில் (உதித்த) மங்கையும், கங்காளி - முழுவெலும்பைப் புனைந்தவரும், திக் அம்பரிக்கு - திசையாகிய ஆடையை யுடையவருமாகிய உமாதேவிக்கு, மணி ஆகம் ஈந்தருள் ஈசர்-அழகாகிய (பாதித்) திருமேனியைக் கொடுத்த இறைவரது, முத்தம் பொதி கம்பு அரிக்கும்-முத்தைப் பொதித்த சங்கையரிக்கின்ற, திரை வேலை வேதபுரி வரைக்கு-அலையையுடைய கடலை (யோர்சாரிற்கொண்ட) திருமறைக்காட்டு மலையில், அம்பு அரிக்கு நிகர் விழியாய்- பாணத்துக்கும் வண்டுக்குஞ் சமமாகிய கண்ணையுடையாய், பதிகம் பரிக்குங் குழல் ஆய மாதள்ப் பரவையுள் வதிக - பாசியை வருத்துகின்ற கூந்தலையுடைய தோழிப்பெண்களாகிய கடலு விருக்கக்கடவை. 6T-g).
பதிகம் இப்பொருளாதலை இரகுவம்சத்தில், “செறியணிப் பதிகத் திடை வளரிளஞ் சேல்கள்’என்னுஞ் செய்யுளானுணர்க. பரிக்குங்குழல் என்பதற்குத் தாங்கினாற் போன்ற கூந்தலெனினுமாம். மிகுதிபற்றிப் பரவையென்றான். உள்ளே என்பதின் ஏ இசைநிறை. வதிக என்பது ஈறுகெட்டது. வதிகு என்பாருமுள். ஆயத்துய்த்தல்). (17)
புரியார நந்த னறியாய் பதம்பெறப் பொற்கயிலைப் பெரியா ரனந்தனை வென்னடை பாகர் பிறப்பினிலங் குரியா ரனந்த வளமறைக் காட்டைக் குறித்திருந்து மரியா ரனந்தன் சிரமேற் புவித்தல மானவரே.
இ-ள்: புரி ஆர் அம் நந்தன் அறியாய் பதம் பெற-புரி பொருந்திய அழகாகிய சங்கையுடைய மாயவனுமறியாத பாதத்தைப் பெற, பொன் கயிலைப் பெரியார்-அழகைக்கொண்ட கைலாசத்தில் வீற்றிருக்கும் பெரியவரும், அனந்தனை வெல் நடை பாகர்-அன்னத்தை வென்ற நடையைக் கொண்ட உமா தேவியைப் பாகத்திலுடையவரும், பிறப்பினில் அங்குரியார்-பிறவியில் முளையாதவருமாகிய சிவனது, அனந்த

மறைசையந்தாதி /e)
வளமறைக் காட்டைக் குறித்திருந்து-அளவற்ற வளத்தைக் கொண்ட வேதாரணியத்தைக் கருதியிருந்து, அனந்தன் சிரப் புவித்தல மேல் மானவர் மரியார்-சேடனது தலைக்கட்டங்கிய நிலவுலகத்தில் மேலிடத்துள்ள மனுட ரிறவார். எ-று.
அநந்தன் எனக் கொண்டு அந்தநந்தனென்றும், புரி ஆர நந்தன் எனக் கொண்டு புரியையும் முத்தையுமுடைய நந்த னென்று முரைக்கினு மமையும்.
மானத் தரக்கரந் தைப்பட விர்ந்துரி வாங்கினர்கற் றானத் தரக்க ரரசுட்க வுன்றிய தாளர்குடப் பானத் தரக்கர விந்தத்தின் மேற்றுயில் பண்ணைமறைக் கானத்த ரக்கர மைந்துணர் விர்வினைக் கட்டறுமே.
இ-ள்: மானத் தரக்கு அரந்தை பட ஈர்ந்து உரிவாங்கினர்வலியைக் கொண்ட புலி இடருற இழுத்துத் தோலைக் கொண்டவரும், கல்தானத்து அரக்கள் அரசு உட்க ஊன்றிய தாளர்-(கயிலை) மலையாகிய இடத்தின்கண் இராக்கத இராசனாகிய இராவணன் அஞ்ச ஊன்றிய திருவடியை யுடையவரும், குடப் பால் நத்து அரக்கு அரவிந்தத்தின் மேல் துயில் பண்ணை மறைக்கானத்தர்-குடத்தைப் போலும் வெண்மையாகிய சங்குகள் சிவப்பாகிய தாமரைமலரில் துஞ்சுகின்ற வயல் (சூழ்ந்த) வேதவனத்தை யுடையவருமாகிய சிவபெருமானது, ஐந்து அக்கரம் உணர்வீர் வினைக் கட்டு அறும்-பஞ்சாக்கரத்தை அறிமின், வினைத்தளை அறும். எ-று.
அரந்தைப்பட - விரித்தல் விகாரம். ஊன்றியது பெருவிரலாலாகவும் முதல் சினை யொற்றுமை கருதித் தாளிலேற்றினார். தாள் ஆகுபெய ரென்னினுமையும். அரக்குத் தேனுமாம். (19)
அறுத்தவித் தாரச் சமைத்தபிள் ளைக்குகந் தார்பொதியக் குறுத்தவித் தார முனிக்கருள் கோலக் குழகரராய் பொறுத்தவித் தாரண யேத்தா ரணபுரம் போந்துகரு வறுத்தவித் தாக்கும தல்லாது வேறு மருந்தில்லையே.

Page 65
92/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: அறுத்து அவித்து ஆரச்சமைத்த பிள்ளைக்கு உகந்தார்அறுத்து அவித்து முற்றச்சமைப்பித்த (சிறுத்தொண்ட நாயனாரது) பிள்ளைக்கறியை மகிழ்ந்தவரும், பொதிய வித்தார குறுத்த முனிக்கு அருள் கோலக்குழகள்-பொதியமலையில் வாழும் விற்பன்னத்தையுடைய அகஸ்திய ரிஷிக்குக் காட்டிய திருமணக் கோலவழகை யுடையவருமாகிய சிவனது, அராப் பொறுத்த இத்தாரணி ஏத்து ஆரணபுரம் போந்து(சேஷனாகிய) சர்ப்பந் தாங்கிய இந் நிலத்தார்கள் துதிக்கும் வேதபுரியிற் போய், கரு வறுத்த வித்து ஆக்கும் - கருவை வறுத்தவிதை ஆக்குமின், அது9ல்லாது வேறுமருந்து இல்லை-(அங்ங்ணம் ஆக்குதற்கு) அந்த வேதபுரியன்றிப் பிறிது மருந்தில்லை. எ-று.
ஆரணபுரம் போந்து என்பது, “புலம் புக்கனனே’ என்றது போல நின்றது. (20)
மருக்கர வீரநின் னோதியைக் காரென்று மஞ்ஞையெல்லா முருக்கர விர வயில்விழி யாய்நட முற்றனவைந் திருக்கர வீரகத் திச்சே தகன்றந்தை சீர்மறைசை யெருக்கர விர மதிவேணி வெற்பி லெழிலியன்றே.
இ-ள்: ஐந் திருக் கர வீரகத்திச் சேதகன் தந்தை-ஐந்து திருக்கைகளையுடைய வீரசத்திச் சேதகராகிய விநாயகரது தாதையும், சீர் மறைசை எருக்கு அரவு ஈர மதி வேணி வெற்பில்-செல்வத்தைக் கொண்ட வேதவனத்தில் வீற்றிருக்கும் எருக்கலரையும் பாம்பையும் குளிர்ச்சி யுடைய சந்திர கலையையுந் தாங்கிய சடையை யுடையவருமாகிய சிவனது மலையில், உருக்கு அர வீர அயில் விழியாய் - உருக்கரத்தையும் வீரத்தைப் பெற்ற வேலையு மொத்த கண்ணையுடையாய், மஞ்ஞை எல்லாம் - (இந்நிலத்து வாழும்) மயில்கள் யாவும், நின்மருக் கரவிர ஓதியைக் கார் என்று நடம் உற்றன எழிலி அன்று-நினது வாசத்தை யுடைய அலரிப்பூவைப் புனைந்த கூந்தலை மேகமென்னக் கருதி நடித்தன; இது காாகாலமணறு. எ-று.
விழிக்கு அரம் உவமையாதலைக் கம்பரந்தாதியில், “களங்கண் முகங்கம் பரந்தாதியை கஞ்சமன்னாள் பங்கனே’ என்னுஞ் செய்யுளானுணர்க. இகுளைவம்பென்றல்.) (21)

Ln60p603 Urbg. Itg5 /93
அன்றாலி னாட்டந் துயின்றோ னிகரண்ண லேதிருமான் கொன்றாலி நாட்டநஞ் சுண்டார் மறைசைப் பொருப்பகத்தி லொன்றாலி நாட்டவழ் கார்போலும் வார்குழு லொண்டொடியூர் குன்றாலி நாட்டவர் கொள்ளா ருனது குளிமுத்தமே.
இ-ள்: அன்று ஆலில் நாட்டந் துயின்றோன் நிகர் அண்ணலேஅக்காலத்தில் (ஆலிலையிற்) கண்வளர்ந்த புருஷோத்தமனை யொத்த தலைவனே, திருமான் பொன் தாலி நாட்ட நஞ்சு உண்டார் மறைசைப் பொருப்பு அகத்தில்-இலக்குமியினது பொன்னாலாய தாலியை நாட்டுதற்கு நஞ்சை யுண்டாராகிய தம்பிரானாரது வேதாரணியத்து மலைக்கண், ஆலி ஒன்று நாள் தவழ் கார்போலும் வார் குழல் ஒள் தொடி ஊர் குன்றால்-ஆலங்கட்டி பொருந்தாநின்ற மழைக்காலத்துத் தவழும் மேகத்தைப்போலும் நீண்ட கூந்தலையும் ஒள்ளிய வளையலையு முடையாளது பதி மலையாதலால், இந்நாட்டவர் உனது குளிர் முத்தங் கொள்ளார்இந்த நாட்டர்கள் உனது குளிர்ந்த முத்தமாலையை (இவள் மேற்கண்டா லதனை யிவளுக்குரிய அணியென்று) கொள்ளார் (ஐயுறுவர்) எ-று.
நின்னைப் புரப்பே மென்பதுபடப் பொன்றாலிநாட்ட நஞ்சுண்டார் மறைசைப்பொருப்பென்றாள். திருமான் பொன்றாலி நாட்ட நஞ்சுண்டார் என்னுந் தொடர் பிறிதினவிற்சியணி. (கையுறை மறுத்தல்) (22)
முத்திரு மாதங்க வார்முலை பாகள் முதுமறைசை மெய்த்திரு மாதங்க மாற்கரி யானை விளம்புகிலிர் பத்திரு மாதங் கருவயி னுாறிய பாழுடம்பை வைத்திரு மாதங்க தென்றிசைக் கூற்று வருங்கடைக்கே.
இ-ள்: முத்துவர் மாதங்க இரு முலை பாகள் - முத்த மாலையையுங் கச்சையும் (புனைந்த) யானைத்தந்தத்தைப் போலும் உபயஸ்தனத்தையுடைய உமாதேவியைப் பாகத்தி லுடையவரும், முது மறைசை மெய்த் திருமாது அங்கமாற்கு அரியாரை விளம்புகிலிர் - பழைய வேதவனத்தில் வீற்றிருக்கின்றவரும் மெய்ம்மையாகிய இலக்குமியை மார்பிற்கொண்ட மாயவனுக்கும் அரியவருமாகிய சிவனைத் துதிக்கின்றிலீர், பத்து மாதம் இருங் கருவயின் ஊறிய பாழ் உடம்பை வைத்து இரும் - பத்துத்திங்க

Page 66
94/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ளளவும் பெரிய கருவிடத்திலூறிய பாழான காயத்தை வைத்துக்கொண்டு இரும், ஆதங்கத் தென்திசைக் கூற்று கடைக்கு வரும் - ஆபத்தை விளைக்கின்ற தெற்குத்திக்கில் யமன் முடிவில் வருவன். எ-று.
பத்திருமாதம் என்பதற்குப் பன்னிருமதி யென்பது மொன்று. அப் பொருள்கூறில், முதலடியில் இரும் எனவைத்துப் பெருமை யாகியவெண்க. ஆதங்கம் இப்பொருளாதலைப் பாரதத்தில், "இப்பாராதங்கமாற வருமைவரி னைவர்மைந்தர்” என்னுஞ் செய்யுளானுணர்க. கூற்று என்பது, “உயர்திணை மீறுபோ லஃறிணை வருதலு - மஃறிணை மீறுபோ லுயர்திணை வருதலும்’ என்னும் இலக்கணத்திரட்டு விதியான்வந்தது. (23)
வருகர நாக மகவான் பதமும் வனசப்பிரான் பொருகர னாகம் பிளந்தான் பதமும் புகலின்மிக்கோ முருகர நாகர் பணிமா முகரத்தன் முவர்தமிழ்க் குருகர னாக மருங்குழை யாற்பணி யொண்டவர்க்கே.
இ-ள் அ நாகள் பணி முருகள் மாமுகள் அத்தன்-அத்தேவர்கள் வணங்குகின்ற குமாரக்கடவுளுக்கும் யானை முகத்தையுடைய கணபதிக்கும் பிதாவும், முவர் தமிழ்க்கு உருகு அரன்-(திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனாராகிய) மூவரது தேவாரத்துக்கு உருகாநின்ற சங்காரகருத்தாவும், அமரும் நாகுக் குழையான் பணி ஒள் தவர்க்கு - பொலிவுற்ற சங்கக் குண்டலத்தை யுடையவருமாகிய சிவனை வணங்குகின்ற ஒள்ளிய தவத்தருக்கு, வரு கர நாக மகவான் பதமும்-சரிக்கின்ற துதிக்கையைக் கொண்ட (ஐராவத) யானையையுடைய இந்திரனது பதவியும், வனசப் பிரான் (பதமும்)- தாமரை மலரிலிருக்கின்ற பிரமனது பதவியும், பொரு கரன் ஆகம் பிளந்தான் பதமும் புகலின் மிக்கோ - (வனத்திற்) பொருத கரனது மார்பைப் பிளந்த மாயவனது பதவியும் சொல்லில் மேம்பட்டனவோ, அன்று. 6T-0).
ஆகம் உடலுமாம். தலப்பெயர் யாண்டும் வரல்வேண்டு மென்னும் யாப்புறவின்மையாலும், திருச்செந்திலந்தாதியில், “சாரங்கஞ் சங்கரி கட்கிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார் - சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய் - சாரங்கஞ் சங்கரி யாநண்ணி னர்க்கந்தத் தந்திரத்தா - சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே’ என முடிந்ததனானும், இது வழு வுடைத்தன்றெண்க. (24)

மறைசையந்தாதி /95
ஒண்டூதை யுண்புற வின்மறந் தாரெம தூரர்முன்னாண் மண்டுதை யாக்கிய சோறிந் திடமகிழ்ந்தார்வயலி னண்டுதை யால்வெயில் காய்மறைக் காட்டுறை நாகமணி வண்டுதை யோதிக்குச் செம்பாதி யாதி மணிவரைக்கே.
இ- ள்: ஒள் தூதை உண் புறவீர்-ஒள்ளிய கோடாங்கல்லை யுண்ணும் புறாக்கள், வயலில் நண்டு ஒளதையால் வெயில்காய் மறைக்காட்டுறை - கழனியில் ஞெண்டுகள் குளிர்காற்றால் வெய்யில்காயும் வேதவனத்தில் வீற்றிருக்கின்ற, நாகம் அணி வண்டு ஊது ஐயோதிக்குச் செம்பாதி ஆதி மணிவரைக்கு-பாம்பையணிந்த வண்டுகள் (மகரந்தத்தை) ஊதும் ஐவகையாய் முடிக்கப்படுங் கூந்தலையுடைய உமாதேவிக்குச் செம்பாதி யாகிய சிவனது அழகாகிய மலைக்கண், எமது ஊரர்-நமது ஊரர், முன் நாள் மண் தூதை ஆக்கிய சோறு ஈந்திட மகிழ்ந்தார்(யாக்கையொன்றாக முயங்கிய) தலைநாளில் மண்ணாலாய தூதையிலும் அட்டசோற்றை யுதவ மகிழ்ந்தவர், மறந்தார்-இந்நாள் மறந்தார் எ-று.
தூதையிலும் என்னும் இழிவு சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. நாகம் புன்னைமலருமாம். நாகமணி வண்டுதை யோதிக்குச் செம்பாதியாதி என்பது "வல்லமெறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல்யானைப் பெருவழுதி” என்பது போன்ற பொருத்தமில் புணர்ச்சியாயினும் பெருவரவிற்றென்க. உறை அணி என்னும் எச்சவடுக்குகள், ஆதியோடு முடியும். ஐயோதி - முடி, கொண்டை, குழல், பனிச்சை, சுருள் என்பன. ஐ அழகுமாம். (பறவையொடு வருந்தல்.) (25)
மணிக்குட நாடகன் மாறன் பதாகை வரித்ததுதற் கணிக்குட னாடக வாழுமென் றாலிம்மை காயுமையற் பிணிக்குட னாடகப் பொற்கொன்றை வாங்கும் பெருமறைசை யணிக்குட நாடக மால்பணி யாதி யரனிடத்தே.
இ-ள்: மணிக் குடநாடகன் பதாகை வரித்த நுதல் - அழகைக் கொண்ட மேனாட்டிடத்தை யுடையானாய சேரனது துவசமாகிய வில்லை அமைத்தாற்போன்ற நெற்றியையும், மாறன் (பதாகை வரித்த) கணிக்கு - பாண்டியனது துவசமாகிய மீனை அமைத்தாற் போன்ற கண்ணையு முடையாளுக்கு, உடல் நாள் தக வாழும் என்றால் இம் மை காயும்காயந் தினமேற வாழுமானால் இத்தகரை வெட்டுதிர், மையல் பிணிக்கு (என்றால்) - மய்க்க நோய் போதலுக்கானால், அணிக் குட நாடக மால் பணி - அலங்காரத்தைக் கொண்ட குடக்கூத்தை யுடைய மாயவன்

Page 67
96/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வணங்கும், பெருமறைசை ஆதி அரன் இடத்து - பெரிய வேதவனத்தில் வீற்றிருக்கின்ற முதலானவருஞ் சங்கார கருத்தாவுமாகிய சிவனிடத்தில், ஆடகப் பொன் கொன்றை உடன் வாங்கும் - பொன்போலும் அழகிய கொன்றைமாலையை இப்போதே வாங்குமின் (மறியை யறுக்கவேண்டா) 6T-C).
இலக்கணையா யமைத்தற்பொருண்மேல் நின்ற வரித்த வென்பது, கல்லாடத்தில், “கைதை முட்செறித்த கூரெயிற் றரவினை’ என்பது போல நின்றது. மறைசையணி என நின்றபடி நிற்ப, மறைசையிற் கிட்டி எனப்பொருள் கூறில், தலைவி பிறபதியாளாம். இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்தில் வெறிவிலக்கி மாலை பெறுவித்தல். (26)
இடங்க ரடக்கய மேனின்று கூப்பிட் டிரங்குமந்தத் தடங்க ரடக்கயங் காத்தோன் சரமனைத் தையல்கன்ம கடங்க ரடக்கய மேறாகு நான்மறைக் கான்புவனி விடங்க ரடங்கய நீர்போ லெனைமுத்தி மேல்வைப்பரே.
இ-ள்: இடங்கள் அடக் கய மேல் நின்று கூப்பிட்டு இரங்கும்முதலை தெறக் குளத்தின்மேல் நின்று (ஆதிமூலமே யென்று) கூப்பிட்டு இரங்கிய, தடங் கரட அந்தக் கயங் காத்தோன் (ஆகும்) சரம்பெருமை யாகிய மதம்பாய் சுவட்டை யுடைய அந்தக் (கஜேந்திரனாய) யானையைப் புரந்தோனாகிய மாயவனான பாணத்தையும், கல் மகள் (ஆகும்) மனைத்தையல் - (இமய) மலை (ராச) குமாரியாய உமாதேவி யாகிய இல்லக் கிழத்தியையும், தம் ஏறு ஆகுங் கரடக்கயம் - தமது இடபமாய கையிற் கொடியையு முடைய, நான்மறைக் கான் புவனி விடங்கர் - நான்மறைக் காட்டில் வீற்றிருக்கின்ற புவனி விடங்கர், அயம் அடங்கும் நீர்போல் எனை முத்திமேல் வைய்யர் - இரும்பு அடக்கிய சலத்தைப்போல என்னையும் மோக்கத்தின்கண் வைப்பர். எ-று (27)
மேல்விண்டு நாயக வில்லார் மறைசை விமலரிடப் பால்விண்டு வேதன் வலப்பாலு மாகப் படைத்தவர்வா யால்விண்டு நூனிரை சுற்றுஞ் சிலம்பிக் கரசளித்தாற் போல்விண்டு முத்தரு மெற்கு மருள்வரிப் புன்சொற்கொண்டே.
இ-ள்: மேல் விண்டு நாயக வில்லார் - மேலாகிய மலைகளுக்குத் தலைமையாகிய மேருவாய வில்லை யுடையவரும், மறைசை விமலர் - வேதவனத்தின் மலரகிதரும், விண்டு இடப்பா (லும்) வேதன் வலப் பாலும் ஆகப் படைத்தவரும், மாயவன் வாமபக்கத்திலும் பிரமன் வலப்பக்கத்

மறைசையந்தாதி /97
திலுமாகப் படைத்தவரும், விண்டு முத்தரும்-மூங்கில் முத்தானவருமாகிய சிவன், வாயால் விண்டு நூல் நிரை சுற்றுஞ் சிலம்பிக்கு அரசு அளித்தால் போல் - வாயால் விட்டு நூல் நிரையைச் சுற்றிய சிலந்திக்கு இராச்சியத்தைக் கொடுத்தாற்போல, இப்புல் சொல் கொண்டு எற்கும் அருள்வர் - இப்புல்லிய பாடலைக்கொண்டு எனக்குந் திருவருள் செய்வர். எ-று. (28)
புன்னாக வேலி மறைக்காட ரன்பரைப் புண்டரிக மின்னாக மாதவ னான்முகன் வாசவன் மேற்பதத்தின் மன்னாக வைப்பவர் காடோடு மாடு மகிழ்ந்துபுன்றோல் பன்னாக நஞ்சுடை பூனூைண தாகப் படைத்தவரே.
இ- ள்: புன்னாக வேலி மறைக்காடர் - புன்னையாலாகிய வேலியையுடைய வேதபுரீசர், வாசவன் நான்முகன் புண்டரிக மின் ஆக மாதவன் பதத்தின் மேல் - இந்திரனதும் பிரமனதும் வனசமங்கையாகிய இலக்குமியைத் தாங்கிய மார்பையுடைய புருஷோத்தமனதும் (சொர்க்க, சத்தியலோக, வைகுந்த) பதங்களுக்கு மேலாகிய சிவபதத்தில், அன்பரை மன் ஆக வைப்பவர் - அடியாரை நிலையாக வைப்பவர், காடு ஒடு மாடு மகிழ்ந்து - (நடனபூமியாக) மயானத்தையும் (பிசஷா பாத்திரமாக) ஒட்டையும் (வாகனமாக) ஏற்றையு முவந்து, புல் தோல் உடை (ஆக) - புல்லிய தோலை ஆடையாகவும், பல் நாகம் பூண் (ම9,5) - பல்லையுடைய பாம்பைப் பணியாகவும், நஞ்சு ஊண் ஆகப் படைத்தவர் - ஆலகாலத்தை யுணவாகவும் பெற்றவர். எ-று.
அது பகுதிப்பொருள்விகுதி. மறைக்காடர் எழுவாய். வைப்பவர், படைத்தவர் பயனிலைகள். வைப்பவர் மறைக்காடர் எனவும், படைத்தவர் மறைக்காடர் எனவும், எழுவாயும் பயனிலையு மாக்கினுமாம். மறைக்காடரும் வைப்பவருமாகிய சிவன் படைத்தவ ரென்றும், வைப்பவரும் படைத்தவருமானவர் மறைக் காடரென்று மிசைப்பினுமாம். மன் அரசருமாம். பல் பலவுமாம். ஏனையுயிர்களது பற்போலாது விஷத்தை வெளிப்படுத்துந் துளையினைக் கொண்ட சிறப்புடைமையிற் பல்லென்றார். (29)
படைக்கந்த ரத்தர் திருமறைக் காடர் பனிவரைமே லடைக்கந்த ரத்த நிறத்தா மரைமுகத் தன்னமன்னா டொடைக்கந் தரத்தம ருஞ்சுரு ளோதிச் சுரும்பினங்கா ளிடைக்கந் தரம்வரி னுங்களுக் கேபழி யேற்றிடுமே.

Page 68
98/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: படைக் கந்தர் அத்தர் - வேலையுடைய சுப்பிரமணிய சுவாமிக்குப் பிதாவும், திருமறைக் காடர் பனி வரை மேல் - வேதவனத்தை யுடையவருமாகிய சிவனது குளிர்ச்சியைக் கொண்ட மலையில், கந்தம் அடை-வாசமடுத்தலையுடைய, ரத்த நிறத் தாமரை முகத்து அன்னம் அன்னாள் - சிவப்பு நிறத்தைக் கொண்ட தாமரை மலர் போலும் முகத்தையுடைய அன்னம் போல்வாளது, தொடைக்கந்தரத்துச் சுருள் ஓதி அமருஞ் சுரும்பு இனங்காள் - மாலையைப் புனைந்த மேகத்தை யொத்த சுருண்ட கூந்தலில் வாழும் வண்டுத்தொகுதிகாள், இடைக்கு அந்தரம் வரின் உங்களுக்கே பழி ஏற்றிடும்-இடைக்கு முடிவுநேரின் (இறந்துபடின் அதனாலாய) பழி நுமக்கேயிசையும். எ-று.
படைக்கலங்களுள் தலைமையாதல் பற்றிப் படையென்றார், நால்வர் நான்மணிமாலையில், “பூவெனப்படுவது பொறிவாழ் பூவே” என்றாற்போல. அடை இல்லையென்னாமோவெனின், என்னாம்; என்னை? அது சினைக்கின்மையின். தாமரையைப் பூவுக்குப் பெயரென்பாருமுளர். அன்னமன்னாள் என்பது, திருக்கோவையாரில், “அம்மா முலைசுமந்து தேயுமருங்குற் பெரும் பணைத்தோளிச்சிறுநுதலே' என்றதிற் சிறுநுதல்போல நின்றது. மெய்தொட்டுப் பயிலுங் கழிகாதன்மையின் உங்களுக்கே பழியேற் றிடுமென்றான். (மெய்தொட்டுப்பயிறல்.) (30)
ஏற்றுக் கொடியர் திருமறைக் கானத்த ரேழுலகப் பேற்றுக் கொடியத்தர் திக்காடை நாதரைப் பேணிக்கொண்டேன் கூற்றுக் கொடியற்கு மஞ்சே னினியிக் குவலயத்திற் றோற்றுக் கொடிவரை கேதன மாதுந் தொலைந்தனளே.
இ-ஸ்: ஏற்றுக் கொடியர் - இடபத் துவசத்தையுடையவரும், திரு மறைக் கானத்தர் - திருமறைக் காட்டையுடையவரும், ஏழு உலகப் பேற்றுக்கொடி அத்தர்-சத்தலோகப் பேற்றையுடைய உமாதேவிக்குப் பிதாவானவரும், திக்கு ஆடை நாதரைப் பேணிக்கொண்டேன் - திகம்பர நாதருமாகிய சிவனைப் பேணிக் கொண்டேன், இனிக் கூற்றுக் கொடியற்கும் அஞ்சேன் - (அதனால்) மேல் நமனாகிய கொடியவனுக்கும் பயமுறேன், இக்குவலயத்துக் கொடி வரை கேதன மாதுந் தோற்றுத் தொலைந்தனள் - இப்பூமியிற் காக்கை யெழுதிய துவசத்தை யுடைய மூதேவியுந் தோற்று அழிந்தனள். எ-று.

Ln6OpéOf Libgrg5 /99
ஏழ் என்பாருமுளராசிரியர். “பரமசிவன் தன்னுடைய பராசத்தியருளாற் பகள்குடிலை தனினாதந் தோன்றுமதில் விந்து-வருமவைகள் சிவஞ்சத்தி யென்னும்பேராம்” எனத் தத்துவப் பிரகாசத்திற் கூறியபடி சிவதத்து வத்தினின்றுஞ் சத்திதத்துவம் தோன்றினமையின், ஏழுலகப்பேற்றுக் கொடியத்தரென்றார். திருக்கோவையாரில், 'தன்னொருபா லவளத்தனாம்” என் றதுஉமிது. அத்தர் பாதியானவரெனினுமமையும். (31)
தொலைவேதனையர் கருக்குழி வாய்ப்படுந் தொல்லைச்சன்ம நிலைவே தனையென் றுழலூசல் போல நினையுநெஞ்சி ஒனுலைவே தநைய வொருகாலஞ் சேலென் றுரைக்கினென்னங் கலைவேதனையன் பணிமறைக் காடவென் கண்முனின்றே.
இ-ள்: வேத கலையன் ஐயன் பணி மறைக்காட-வேத நூலையுடைய பிரமனும் அவனது தந்தையாகிய மாயவனும் வணங்கும் மறைக்காடரே, அனையர் கருக் குழிவாய்படுந் தொல்லைச் சன்ம நிலை வேதனைதாயரது கருக்குழிக்கட்படும் பழமையாகிய பிறவியாகிய நிலைத்த வேதனை, தொலைவு ஏது என்று - அழிதல் யாது என்று, உழல் ஊசல்போல நினையும் - உழலும் ஊஞ்சலது திரிவுபோல நினைக்கின்ற, நெஞ்சின் உலைவு ஏதம் நைய - மனத்தினுலைவுந் துன்பமுங் கெட, என் கண் முன் நின்று - எனது விழிக்கு முன்னின்று, அஞ்சேல் என்று ஒருகால் உரைக்கின் என் - பயப்படேல் என்று ஒருமுறை திருவாய் மலர்ந்தருளினா லென்னை எ-று.
ஆம் அசை. என் ஆம் என்பதற்கு யாதாமெனக் கூறினுமாம். திருக்குறளில், “கற்றதனாலாய பயனென்’ என்பதில் என் வினாப் பொருளைக் குறியாது இல்லையென்னும் பொருளைக் குறித்தல் போல, தொலைவேது என்பதிலுள்ள ஏது ஈண்டு இல்லை என்னும் பொருள் குறித்தது. (32)
கண்ணச் சிராக வரிசூழுங் காமறைக் காடன் செந்தி வண்ணச் சிராசல மேருவில் லாளி வரைவிடுதே ருண்ணச் சிராக விழிக்கால வேலுறை விட்டுவிட்டுப் பெண்ணச் சிராள்வல வாவிறிங் காது பிடியன்னமே.
இ-ஸ்: வலவா - பாகனே, கள் நச்சு இராக அரி சூழுங் கா மறைக்காடன் - தேனை விரும்புகின்ற இசையைப் பாடும் வண்டுகள் குழுஞ் சோலையை யுடைய வேதவனத்தை யுடையவரும், செந்தி வன்னச் சிராசல மேரு வில் ஆளி வரை - சிவந்த அக்கினி வண்ணத்தைப்

Page 69
Ioo/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பெற்ற மலைகளுள் தலைமையாகிய மேருவை வில்லாவாண்டவருமாகிய சிவனது மலையில், பெண்-மங்கை, உள் நச்சு ராக விழிக் கால வேல் உறை விட்டு விட்டு-அகத்தில் நஞ்சு நிறத்தைக்கொண்ட கண்ணாகிய காலத்தைச் செய்யும் வேல் நீரை விட விட, பிடி அன்னம் இறங்காது - ஒருபிடி சோறும் உட்புகாது, அச்சு இராள் - உயிர் தரியாள், தேர் விடு - (ஆதலில் இறந்துபடமுன் ஆண்டுச் செல்லத்) தேரை (விரைந்து) தூண்டுதி. எ-று.
நச்சி என வினையெச்ச மாக்கினுமாம். காலவேல் என்பதற்குச் சிந்தாமணியிலும் இப்பொருளுரைத்தார். விட்டுவிட்டு என்பன, “உரற்கால் யானையொடித்துண் டெஞ்சியயர்’ என்பதுபோன்ற வினையெச்சத் திரிபு. அச்சிராள் என்பது பாரதத்தில், “தன்னாட்ட மிகச்சிவந்தான்’ என்பது போல நின்றது. அச்சிரா என்பது பாடமேல், பெண் என்பதை எழுவாயாக்காது நான்காவதாக்கி, உயிரிராது என்க. இப்பொருட்கு இராது என்பதனீறு கெட்டது. அன்னமும் என்பதினும்மை தொக்கது. பாகனொடு சொல்லல்)
அன்னம் பலவ நறும்புன்னைச் சேர்க்கை யமர்மறைசை முன்னம் பலவன் முடித்த சடாதர முர்த்திதில்லைப் பொன்னம் பலவன் பினாகிகாங் காளன் புராந்தகன்சீர் வன்னம் பலவன் பசுபதி நாதனென் வான்றுணையே.
இ-ள்: அன்னம் பலவ புன்னை நறுஞ் சேக்கை அமர் மறைசை முன்-அன்னங்கள் தளிரையுடைய புன்னைகளிலுள்ள நறிய படுக்கையி லிருக்கப் பெற்ற வேதவனத்து முதல்வரும், அம்பு அலவன் முடித்த சடாதர முர்த்தி-கங்கையையுஞ் சந்திர கலையையுந் தரித்த சடாமுடியையுடைய அருள்வடிவரும், தில்லைப் பொன்னம்பலவணிசிதம்பரத்துக் கனகசபையை யுடையவரும், பினாகி - பினாக வில்லை யுடைய வரும், கங்காளன்-முழுவெலும்பை யணிந்தவரும், புராந்தகன் - முப்புரங்களுக்குக் காலரும், சீர் வன்னம் பலவன் - நன்மையாகிய பல மந்திரத்தை யுடையவரும், பசு பதிநாதன் - பசுக்களுக்குப் பதியான வருமாகிய சிவன், என் வான் துணை-எனது பெரிய துணை. எ-று.
முதலடி திணைமயக்கம், “திணைமயங் குறுதலுங் கடிநிலை யிலவே' என்றார் தொல்காப்பியனார். பல அம் என வைத்து, காயை அல்லது கனியைக் கொண்ட அழகாகிய என்னினும், பலவு என வைத்து, பலாமரத்தினதும் என்னினுமமையும். வன்னம் இப்பொருளாதலைச் சிவஞானசித்தியாரில், “வந்திடு மந்திர மிரண்டு பதங்கண் மூவேழி வன்னங்க ணாலாறு’ என்பதனா னறிக. அதற்கு நிறமென்பது மொன்று. (34)

மறைசையந்தாதி ho)
வானப் பிறையையும் வாடைப் புலியையு மையல்செய்யுந் தேனப் பிறையையுந் தென்றலை யுங்கண்டு சில்லரிக்கண் மீனப் பிறைக்கு மடமானை மேவிலர் வேடனிடு முனப் பிறைச்சிக் குகந்தார் மறைசை யுகந்தவரே.
இ-ஸ்: வேடன் இடும் ஊன் அப்பு இறைச்சிக்கு உகந்தார் மறைசை உகந்தவள்-கண்ணப்பநாயனாரிட்ட ஊன் அப்பிய இறைச்சியை விரும்பினவரும் வேதவனத்தை மகிழ்ந்தவருமாகிய சிவன், மையல்செய்யும் வானப்பிறையையும் வாடைப்புலியையும் தேன் அப்பு இறையையுந் தென்றலையுங்கண்டு-மயக்கத்தை விளைக்கும் ஆகாயத்தில் தோற்றும் பிறையையும் வடந்தையாகிய புலியையும் தேனைக்கொண்ட (மலர்ப்) பாணத்தையேந்திய மதனராசனையுந் தென்காலையுங் கண்டு, சில் அரிக் கண் மீன் அப்பு இறைக்கும் மட மானை மேவிலர் -சிலவாகிய அரியையுடைய கண்ணாகிய மீன் நீரிறைக்கப்பெற்ற இளமையாகிய மங்கையை அணைகின்றிலர். (இனிச் செய்யக்கிடந்ததுதான் யாது!) எ-று.
கண்மீன் தொகையுருவகம். இது கடவுண்மாட்டு மானுடப் பெண்டிர் நயந்தபக்கத்து இறைவ னணையாமையைத் தோழிகூறி மெலிந்தது. (35)
உகந்தா வடிக்கு மிடையர்தம் பாலனை யுண்டுகடற் சகந்தா வடியனுக் கெட்டாத ஞான தலத்துமுத்திச் சுகந்தா வடிதமிழ் நான்மறைக் காட துணைவரியம்
பகந்தா வடிசெல் குழையாண் மருவிய பாகத்தனே.
இ-ஸ்: வடி தமிழ் நான் மறைக்காட - (சங்கத்தாரால்) தெள்ளி தாக்கப்பட்ட தமிழைக்கொண்ட நான் மறைக் காட்டை யுடையவரே, வரித்துணை அம்பகம் தாவடிசெல் குழையாள் மருவிய பாகத்தனேவரியைப்பெற்ற இரண்டு கண்களும் பேர்க்குச்செல்லுங் காதையுடைய உமாதேவி யணைந்த (வாம) பாகத்தரே, உகந்து ஆ அடிக்கும் இடையர் பால் அளையுண்டு -மகிழ்ந்து பசுவை (மேய்த்தற்கு) அடிக்கின்ற ஆயரது பாலையுந் தயிரையு முண்டு, கடல் சகந் தாவு அடியனுக்கு எட்டாத ஞான தலத்து முத்திச் சுகந் தா-கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தை யளந்த பாதத்தையுடைய மாயவனுக்கும் எட்டாத ஞான பூமியின்கணுள்ள மோசஷாநந்தத்தை (அடியேனுக்குத்) தந்தருளும். எ-று.

Page 70
IO2/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தாவடி இப்பொருளாதலைக் கந்தரலங்காரத்தில், “தாவடியோட்டு மயிலினும்’ என்பதனானுணர்க. வரி நீளமுமாம். அளையுங் குழையும் ஆகுபெயர். (36)
பாக னகனி மொழியாய் நினது பனிமுகமாங் கோக னகநில வுந்துணைப் பானலிற் கோடல்கண்டே னாக நகநிமி ரும்புலிப் பாதரு நாடவன்று மாக னகநிலை மன்றாடி வேத வனமலைக்கே.
இ-ள்: நாகம் நகம் நிமிரும் புலிப்பாதரும் நாட-பதஞ்சலியும் நகநிமிரும் வியாக்கிரபாதரும் மகிழ்ச்சிகொள்ள, மாநிலை கனக மன்றுமகத்துவம் நிலைத்த பொன்னம்பலத்தில், அன்று ஆடி வேதவன மலைக்கு-அந்நாளி ஸ்ானந்ததாண்டவஞ் செய்தருளிய இறைவனாரது திருமறைக்காட்டு மலையில், பாகு அன கனி மொழியாய் - பாலையொத்த கனிந்த சொல்லையுடையாய், நினது பனிமுகம் ஆம் கோகனகம் நிலவுந் துணைப்பானலில் கோடல் கண்டேன்-உனது குளிர்ச்சியைக்கொண்ட வதனமாகிய தாமரை மலரில் விளங்கும் இரண்டு கருங்குவளை மலரிலுங் காந்தட்பூவைக் கண்டேன் எ-று.
பாகு கனி அன என வைத்துப் பாலையும் பழத்தையு மொத்த எனக் கூறினுமாம். கருங்குவளைமலர் விழி, காந்தட்யூ கை. துணைப்பானலிற் கோடல் என்னுந் தொடர் உருவக வுயர்வுநவிற்சியணி இடையூறு கிளத்தல்) (37)
மலைக்கார் முகதர யாழைப் பழிமொழி மான்குறையா நிலைக்கார் முகமதி யாள்பாங்க னேநிறை காய்க்கந்திச்சூ ழலைக்கார் முகந்திடும் வேதா ரணிய வருந்துயரந் தொலைக்கார் முகந்தமியேன்சொல்லு வேனென்ன சொன்னதிலே,
இ-ள்: மலைக் கார்முகதர - (மேரு) கிரியாகிய வில்லைக் கொண்டவரே, குறையா நிலைக்கு ஆர் முக மதியாள் யாழைப் பழி மொழி மான் பங்கனே-நிறைந்த நிலையிலமைந்த வதனசந்திரனை யுடையாராகிய வீணாவாத விதூஷணி யம்மையாரை (வாம) பாகத்தில் வைத்தவரே, நிறைகாய்க் கந்திச் சூழலைக் கார்முகந்திடும் வேதாரணிய - நிறைந்த காயைப் பெற்ற கமுகஞ்சோலையை மேகமளக்குந் திருமறைக்காட்டை யுடையவரே, தமியேன் அருந் துயரந் தொலைக்க ஆர்முகஞ் சொல்லுவேன் சொன்னதில் என்ன-தமியேன் (இந்த) அரிய துன்பத்தை நீக்க யார் மாட்டுச் சொல்லுவேன்! சொன்னதினாலாகும் பயன்றா னென்னை?. எ-று.

மறைசையந்தாதி /io3
முகத்தல் ஈண்டு முகத்தலளவையைக் குறியாது அளத்த லென்னும் பொருண்மேல் நின்றது. தொலைக்க என்பதில் அகரந் தொக்கது. முகம் இடப்பொருள். (38)
சொன்னச் சிலம்பு குழைத்தவில் லான்சுருதிப்பதியான் வன்னச் சிலம்பிக் கரசளித் தான்வெற்பின் மாணிழைகண் மின்னச் சிலம்பு கலைநனை யாமன்மெய் வேர்வரும்பச் சின்னச் சிலம்படி யாய்குடைந் தாயொரு தேன்சுனையே.
இ-ள்: குழைத்த சொன்னச் சிலம்பு வில்லானி-வளைத்த பொன் மலையாகிய வில்லையுடையவரும், சுருதிப் பதியான்-மறைக்காட்டை யுடையவரும், வன்னச் சிலம்பிக்கு அரசு அளித்தான் வெற்பில்அழகையுடைய சிலந்திக்கு இராச்சியத்தைக் கொடுத்தவருமாகிய சிவனது மலையில், சிலம்புச் சின்ன அடியாய்-சிலம்பைப் பூண்ட சிறிய தாளை யுடையாய், மாண் இழைகள் மின்ன மெய் வேர்வு அரும்பமாட்சிமைப்பட்ட ஆபரணங்கள் விளங்கவுஞ் சீரத்தில் வியர்வை பொடிக்கவும், சிலம்பு கலை நனையாமல் - ஒலிக்கின்ற ஆடை நனையாமலும் ஒரு தேன் சுனை குடைந்தாய் - ஒரு வாசம் பொருந்திய சுனையில் ஆடினாய். எ-று.
பண்டில்லாத நாற்றநிகழ்ச்சியையுந் தெரிப்பத் தேன்சுனை என்றாள். இதில் விரவியடுக்கியவினை காண்க. இது பரியாயவணி, (சுனைவியந் துரைத்தல்.)
தேன்றதும் பிக்குளிர் தாமரைப் பீடிகைச் செல்வனும்வாய் நான்றதும் பிக்கருண் மாயனும் வான்புவி நண்ணியதுங் கின்றதும் பித்தவ ராற்கிட்டு மோகிடை யாவுலக மீன்றதும் பிக்குழல் சேர்மறைக் காட னிரண்டையுமே.
இ-ஸ்: தேன் ததும்பிக் குளிர் தாமரைப் பீடிகைச் செல்வன் வான் நண்ணியதும்-தேனிறைந்து குளிருகின்ற தாமரைமலராகிய ஆசனத்தையுடைய பிரமன் அன்னமாய் ஆகாயத்திற் பறந்து போனதும், வாய் நான்ற தும்பிக்கு அருள் மாயவன் புவி கின்றதும் பித்து-வாய் நான்ற யானைக்கு அருள்செய்த கண்ணன் (வராகமாய்ப்) பூமியைக் கீண்டதும் பித்தமே. உலகம் ஈன்ற தும்பிக் குழல் சேர் மறைக்காடன் இரண்டும் அவரால் கிட்டுமோ கிடையா-உலகத்தைப்பெற்ற, வண்டைத் தாங்கிய கூந்தலையுடைய உமாதேவி சேர்ந்த வேத புரீசரது (முடியும் அடியுமாகிய அவ்) விரண்டும் அவர்களுக்குக் கிட்டுமோ? கிட்டா. எ-று.

Page 71
104/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
செல்வனும் மாயனும் என்னு நிரனிறையின் உம்மையை நீக்கி, விளங்கு தற்பொருட்டு, ஆற்றொழுக்காகவுரைத்தாம். வாய்நான்ற தும்பிக்கு என்பது “வாய்வன்காக்கை” போல நின்றது. அவரால் உருபுமயக்கம். அவ்வுருபாக நிற்பில் தேட என்னுமோர்சொல் வருவிக்கவேண்டும். இரண்டை என்பதின் ஐ சாரியை. (40)
இரண்டந் தகரங் கிருந்தன்ன பார்வை யிணைச்சுரும்பர் புரண்டந் தகர மளவிய கோதையைப் பொன்னில்வைத்தார் முரண்டந் தகரவை வேலா கடற்றிரை முத்தச்சங்கங் குரண்டந் தகர வெறிமறைக் காடன் குளிர்கிரிக்கே.
இ-ள்: முரண் தந்த கரவை வேலா - வலிமையைப் பெற்ற கையிற் கூரிய வேலையுடையாய், கடல் திரை குரண்டந் தகர முத்தச் சங்கம் எறி-ஆழியின் அலையானது (தன்மாட்டுள்ள மீனைக் கவரத் தூங்கியிருக்குங்) கொக்குத் தகரமுத்தையுடைய சங்கை யெறிகின்ற, மறைக்காடன் குளிர் கிரிக்கு-வேதபுரியிலிறைவனாரது குளிர்ந்த மலையில், அங்கு இரண்டு அந்தகள் இருந்தன்ன இணைப்பார்வை - அவ்விடத்தி லிரண்டு காலர்கள் இருந்தாற்போன்ற துணைவிழிகளையும், சுரும்பன் புரண்டு அந் தகரம் அளவிய கோதையைப் பொன் இல் வைத்தார்-வண்டு புரண்டு அழகிய சாந்திலளாவப்பெறுங் கூந்தலையு முடையாளை (நமர்) அழகாகிய வீட்டிற் செறித்தார். எ-று.
இருந்தன்ன என்பது, காசிக்கலம்பகத்தில், “காந்தண் மலர்ந்தன்ன பாந்தளி னிரையும்’ என்பதுபோல நின்றது. மேல் நிரைத்தென்ன வருவதுமிது. முரண் போருமாம். கடற்றிரை முத்தச்சங்கங் குரண்டந்தகர வெறியென்னவே, நீயும் வஞ்சித் தொழுகுவையேல் நமரான் மெலிவையென உள்ளுறையுவமந் தொனித்தது. “அவற்றுள், - உள்ளுறை யுவம முய்த்துணர் வகைத்தாய்ப் - புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும்” என்றார் பொருளிலக் கணத்தார். தம்மாட்டுள்ள தண்ணளியை யுணர்த்துவாள் குளிர்கிரி யென்றாள். இற்செறிப் புணர்த்தல்.) (41)
கிரிதா ரகையணிந் தாலென்ன முத்தங் கிடந்தகொங்கை யரிதார மன்னவ ளம்பகாங் காட்டு மருக்கன்மதி யெரிதார வெற்பு விழியா சனத்த னெழின்மறைசை விரிதார கப்பொரு ளானே றுகந்தவன் மெய்யொளியே.

மறைசையந்தாதி ho5
இ-ள்: அருக்கன் மதி எரி விழியன் - சூரியனுஞ் சந்திரனும் அக்கினியுமாகிய (மூன்று) கண்ணையுடையவரும், தாரவெற்பு ஆசனத்தன்-வெள்ளிமலையாகிய ஆசனத்தை யுடையவரும், எழில் மறைசை விரிதாரகப்பொருள்-அழகைக்கொண்ட வேதவனத்தில் வீற்றிருக்கும் பரந்த பிரணவப்பொருளானவரும், ஆன் ஏறு உகந்தவன் மெய் ஒளி-எருதை மகிழ்ந்தவருமாகிய சிவனது திருமேனியிற் செஞ்சோதியை, கிரி தாரகை அணிந்தால் என்ன முத்தங்கிடந்த கொங்கை-மலையில் உடுக்க ளணிபட்டாற் போல நித்திலத்தொடை தங்கிய தனத்தையுடைய, அரிதாரம் அன்னவள் அம்பகாங் காட்டும்-மாயவனது மனைவியாகிய இலக்குமியை யொத்தாளது கண்கள் காட்டும். எ-று.
கொங்கை தாரத்துக்கடை. பொருளான் எனவும் ஏறு எனவும் பிரிப்பினுமாம். கண்கள் சிவந்தமையிற் புணர்ச்சியுண்மை யுணர்ந்தபடி (தோற்றத்தாலா ராய்தல்.) (42)
மெய்த்துத்தி யான பணியா பரணன் விரைமருவுங் கொத்துத்தியானஞ் செறிமறைக் காட்டுறை கோனை யெண்ணிப் பொய்த்துத்தி யானம் புறுசெருக் கற்றுப் புலனடங்க வைத்துத் தியான சமாதிசெய் வார்க்கில்லை வன்பிறப்பே.
இ-ஸ்: மெய்த் துத்தி ஆன பணி ஆபரணன் - படத்திற் பொறியுண்டாகப் பெற்ற சர்ப்பாபரணத்தை யுடையவரும், விரை மருவுங் கொத்து உத்தியானஞ் செறிமறைக்காட்டு உறை கோனை எண்ணிவாசம் பொருந்திய கொத்துக்களையுடைய சோலை நெருங்கிய வேதவனத்தில் வீற்றிருக்கின்ற தலைவரு மாகிய சிவனைக் கருதி, பொய்த்த உத்தியால் நம்புறு செருக்கு அற்று-பொய்த்த புத்தியால் நம்புஞ் செருக்கு ஒழிந்து, புலன் அடங்க வைத்துத் தியானசமாதி செய்வார்க்கு வல்பிறப்பு இல்லை - (ஐம்) புலனையும் அடங்கவைத்துத் தியானசமாதி செய்பவருக்கு வலியபிறவியில்லை எ-று.
மெய் ஆகுபெயர். (43)
வன்போ தகவல் லியநெடுங் கான்சென்று மார்புடம்பி னென்போ தகவல் லியன்மா தவம்புரிந் தேனிளைப்பீர் பொன்போ தகவல்லி யன்பார் சுருதி புரத்தபத்த ரன்போ தகவல்லி யங்கொன்றை யாயென் றறைந்திடுமே.

Page 72
lo6/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: வல் போதக வல்லிய நெடுங்கான் சென்று - வலிய யானையையும் புலியையும் கொண்ட நெடிய வனத்திற்போய், மார்பு உடம்பின் என்பு ஒதக - மார்பிலும் (மற்றை) யங்கத்திலு முள்ள எலும்புகள் (வலி) யொழிதல் பொருந்த, வல் இயல் மாதவம் புரிந்து ஏன் இளைய்யிர் - திடம்மிகுந்த பெருமையாகிய தவத்தைச் செய்து ஏனிளைக்கின்றீர், பொன் போதகவல்லி அன்பு ஆர் சுருதி புரத்த - இலக்குமியும் ஞானச்செல்வியாகிய வாணியும் அன்பாகச் சேர்ந்த வேதபுரீசரே, பத்தர் அன்பு ஒது அக அல்லிக் கொன்றையாய் என்று அறைந்திடும் - மெய்யடியார் அன்பாற் றுதிக்கின்ற அகவிதழைக் கொண்ட கொன்றைமாலையை யுடைய இறைவரே யென்று (மனைக்கண் இருந்து உண்டு உடல்வலி குன்றாம லிளைப்பின்றிச்) சொல்லும் (சொல்லில் அத்தவத்தர் பெறும்பேறு எளிதிலடைவீர்) எ-று.
ஒதகவில் ஒ முதனிலைத் தொழிற்பெயர், 'ஒதகு செயலிலா வுலகத் தேவையும்’ என்றதில் ஒவும் இது. உடம்பு என்பு ஆகு பெயர். "நாவின் கிழத்தி யுறைதலா னண்ணாளே - பூவின் கிழத்தி புலந்து” என்பார் மதம் ஈண்டமையாதென்பார், பொன் போதக வல்லி யன்பார் சுருதி புரத்தவென்றார். சிந்தா மணியிலுங் கோவீற்றிருந்த திருநாட்டணிக்கு முதலணியாக, 'நாவீற்றிருந்த கலைமா மகளோடு நன்பொற் - பூவீற் றிருந்த திருமா மகள் புல்ல” என்றார். அம் சாரியை. (44)
கருமந் திரிகர ணம்வேறு மாறு கயவர்ப்பற்றித் தருமந் திரியு மெனையாள்வை யோவெற்றித் தானவர்தம் பெருமந் திரியை யுதரத்தில் வைத்த பிரானளகை யொருமந் திரிநண்ப னேமறைக் கானுறை யுத்தமனே.
இ-ள்: வெற்றித் தானவர் பெருமந்திரியை உதரத்தில் வைத்த பிரான் - ஜெயத்தையுடைய அசுரரது பெரிய அமைச்சனாகிய சுக்கிரனை வயிற்றில் வைத்த கடவுளே, அளகை ஒருமந்திரிநண்பனே - அளகாபுரியில் வசிக்கும் ஒப்பற்ற குபேரனது தோழரே, மறைக்கான் உறை உத்தமனே - வேதாரணியத்தில் வீற்றிருக்கின்ற முதல்வரே, திரிகரணங் கருமம் வேறு மாறு கயவர்ப் பற்றித் தருமந் திரியும் எனை ஆள்வையோ - முக்கரணத்தையும் (அவற்றாலாகுந்) தொழிலையும் வேறாக மாறுகின்ற கீழ்மக்களைப் பிடித்துப் புண்ணியத்தோடு மாறுபட்டுத் திரியும் என்னையும் ஆள்வீரோ. எ-று.

மறைசையந்தாதி /io7
ஆள்வை எனக் கொண்டு ஆள்வீர் எனப் பொருள் கூறி ஒவை அசையாக் கினுமாம். பிரான் என்பது திருவாசகத்தில் “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்’ என்பது போல விளியாய் நின்றது. (46)
உத்தம ரத்தி யுரியார் மறைசை யொருத்தர்வெள்ளோ லத்தம ரத்தி னிறைகங்கை வேணிய ராலெரிந்த நத்தம ரத்தி முரசான் செழுங்கனை நல்கமுன்னாள் வைத்த மரத்தின்மெய்த் தூரில்வெந்நீர்விடு மங்கையரே.
இ-ள்: மங்கையரே - மாதரே, உத்தமர் - முதல்வரும், அத்தி உரியார் - யானைத்தோலை யுடையவரும், மறைசை ஒருத்தர்வேதவனத்தில் ஏகநாதரும், வெள் ஒலத் தமரத்தில் நிறை கங்கை வேணியரால் எரிந்த-வெள்ளிய திரையின் பேரொலியால் நிறைந்த கங்கையைத் தாங்கிய சடையை யுடையவருமாகிய சிவபெருமானால் எரிந்த, நத்து அமர் அத்தி முரசான் செழுங்கனை நல்க - சங்குகள் வசிக்கின்ற கடலாகிய முரசையுடைய மன்மதனுக்கு அழகிய (மலர்ப்) பாணத்தைக் கொடுக்க, முன் நாள் வைத்த மரத்தில் மெய்த் தூரில் வெந்நீரை விடும் - முற்பகலில் வைத்த தருக்களது மூலவேரில் வெந்நீர் விடுமின் (விட அவை படும், பட மதனுக்கு மலரின்றாகும், ஆக மடவார் சுகமுறுவர்) எ-று.
“பிரிந்துழி நெஞ்சொடும் பிறரொடும் வருந்திச் - சொல்லவு முரியள்’ என்ற ஒத்துப்படி தலைவி தன்றுயரைத் தோழியர்க் குரைத்தல். இது அகப்பொருட் பெருந்திணைப்பாற்படும். (47)
மங்கல மந்தர முன்னாத நின்கண்ட வண்ணங்கண்டு சங்கல மந்தர வங்கொண்டு கூனிச் சுரிமுகஞ்சார்ந் திங்கல மந்தர மத்தான் கையிற்புக் கிருந்ததுநா கங்கல மந்தர தம்புவி யான்மறைக் கானமின்னே.
இ-ஸ்: கலம் நாகம் அந்த ரதம் புவியான் மறைக்கான மின்னே - ஆபரணம் பாம்பும் அத் தேர் பூமியுமாகக் கொண்டவராகிய சிவனது வேதவனத்தில் மாதே, மங்கலம் அந்தரம் உன்னாத நின்கண்ட வண்ணங் கண்டு - மங்களத்துக்கு வேறுபாட்டைக் கருதாத உனது கழுத்தின் அழகைக் கண்டு, சங்கு அலமந்து அரவங்கொண்டு கூனிச் சுரிமுகஞ் சார்ந்து - சங்கானது சுழன்று ஏங்குதலையுற்று வளைந்து

Page 73
108/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சுரித்த முகத்தை யடைந்து, இங்கு அல மந்தர மத்தான் கையில் புக்கு இருந்தது - இவ்விடத்துமன்று மந்தர மலையாகிய மத்தையுடைய மாயனது கரத்திற் போயிருந்தது. எ-று.
அந்தம் - அழகுமாம் தற்குறிப்பேற்றவணி. (பொய்பாராட்டல்) (48)
கானவண் டானக் களிற்றைவர்க் காகக் கழுவிற்றங்கு மானவன் டானது காணாத தாமரை யானுஞ்செவ்வி ஞானவன் டானத் துறைவோனும் வாவியி னாடிக்கொத்து மீனவன் டானந் திரிமறைக் காட்டுறை வித்தகனே.
இ-ள்: கானவள் தானக் களிற்று ஐவர்க்கு ஆகக் கழுவில் தங்கும்-காட்டிற் சஞ்சரிக்கும் வளவிய மதத்தைக்கொண்ட யானைப் படையையுடைய பஞ்சவர்களைக் காக்கும் பொருட்டாகக் கழு(நுனியி)லிருந்த, ஆனவண்டானது காணாத தாமரையானும் - பசுக்களையுடைய மாயவனாகிய வண்டு காணாத தாமரைமலரை யுடையவரும், செவ்வி அன் ஞானதானத்து உறைவோனும் - அழகு சார்ந்த ஞான நிலத்தில் எழுந்தருளி யிருப்பவரும் (யாரென்னில்), மீனம் நாடிக் கொத்து வண்டானம் வாவியில் திரி மறைக்காட்டு உறை வித்தகன் - மீனைத் தேடிக் கொத்துகின்ற நாரைகள் வாவியிற் சஞ்சரிக்கும் வேதவனத்தில் வீற்றிருக்கும் பெரியோர். எ-று. (49)
வித்தந் தியாக முதவா வுலோபர்க்கு வினிற்சொற்பாட் டைத்தந் தியாக பதியென்ப ரான்முத லாம்பிள்ளையை மைத்தந்தி யாகப் பெறுமறைக் காடர் வயங்குமுண்மைச் சித்தந்தி யாக தியாகரைப் பாடிலர் தீங்கறவே.
இ-ள்: வித்தந்தியாகம் உதவா உலோபர்க்கு - பொன்னைக் கொடையாக உதவாத உலுத்தர்கள்மேல், சொல் பாட்டை வினில் தந்து யாகபதி என்பர் - சொல்லையுடைய பாவை வாளா பாடி மகத்தலைவனாகிய இந்திரனே என்று சொல்லும் புலவர்கள், முதல் ஆம் பிள்ளையை மைத் தந்தி ஆகப் பெறு மறைக்காடர் - மூத்த பிள்ளையைக் கருமையாகிய யானையாகப் பெற்ற வேதவனத்தரும், வயங்கும் உண்மைச் சித்து - விளங்கா நின்ற உண்மையாகிய சிற்சொரூபரும், அந்தி ஆக தியாகரைத் தீங்கு அறப் பாடிலர் - செவ்வானத்தையொத்த திருமேனியை யுடைய தியாகருமாகிய சிவனைத் தீமையொழியப் பாடிலர் (இவர் மதியிருந்த வாறென்னை) எ-று.

மறைசையந்தாதி /io9
என்பர் - வினையாலணையும் பெயர். உறுப்புக்களிற் சிறந்தது முகம் அவர்க்கு அது யானைமுகமாதலில், தந்தியாக என்றார். பெரியபுராணத்தில் “கடக்களிற்றைக் கருத்து விருத்துவாம்” என்றதுமிது. இவ்வாறு எல்லா வாசிரியரும் கூறுப. இக பர சுகமெலா மடையலாமென்பதும் எத் தீமைகளும் ஒழியலா மென்பதும்படத் தியாகரைத் தீங்கறப் பாடிலர் என்றார். (50)
தீங்கரும் பாரஞ் செறிவயல் வேதத் திருவனத்துக் கோங்கரும் பார மணிமுலைச் சாமளக் கோமளப்பெண் பாங்கரும் பாரண சூலாயு தாவிப் படிவச்சுமை தாங்கரும் பார மினிப்பிற வாமுத்தி தந்தருளே.
இ-ள்: தீம் கரும்பு ஆர் அஞ் செறிவயல் திரு வேதவனத்து - மதுரமாகிய கரும்புகள் பொருந்திய நீர் செறிந்த வயலைக் கொண்ட திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கின்ற, ஆரம் அணி கோங்கு அரும்பு முலைச்சாமளக் கோமளப் பெண் பாங்கள் உம்பா - முத்தமாலையை யணிந்த கோங்க முகையை யொத்த தனத்தையுடைய பசுமையையும் இளமையையுங் கொண்ட மங்கையைப் பங்கிலுடைய தெய்வமே, ரண சூலாயுதா - போரை விளைக்குஞ் சூலப்படையை யுடையவரே, இப்படிவச் சுமை தாங்க அரும் பாரம் - இத்தேகச் சுமை தாங்க அரிய பாரமாயிற்று (ஆதலா லிதை யொழித்து), இனிப் பிறவாமுத்தி தந்தருள் - மேற் பிறவாவண்ணஞ் செய்கின்ற (பர) முத்தியைத் தந்தருளும். எ-று.
கரும்பு ஆரம் எனப் பிரித்து கரும்பினது முத்தெனக்கூறி, இரண்டா மடியில் ஆரத்தைச் சந்தனம் என்னினும் இழுக்காது. தீங்கரும் பார் அஞ்சு எறி என வைத்து, கொடியரானவரும் பிரபஞ்சவாழ்வையும் ஐம்புலனையும் வென்ற என்றும், பூமியிற் பஞ்சபாணத்தை வென்ற வென்றும் தீங்கு அரும்பார் அஞ்சு எறி என வைத்து, தீமை சிறிதுமில்லாதவர்கள் புலனையும் பாணத்தையும் வென்றவென்றும், பொருள் கூறினுமாம். (51)
தந்தம் படைத்த களிறொன்று தாக்கத் தனிபுரந்து துந்தம் படைத்தலை வேல்விழிக் கன்னியை நோக்கியதா னந்தம் படைத்தலைச் சால்வழி யூர்ந்திடு நான்மறைசை யிந்தம் படைத்த சடையான்வெற் பாடவ வெண்சிங்கமே.
இ-ள்: தந்தம் படைத்த களிறு ஒன்று தாக்க - கொம்பைப் பெற்ற யானை யொன்று எதிர்ப்ப, நந்தம் படைத் தலைச்சால் வழி ஊர்ந்திடும் - சங்குகள் கலப்பையாலுண்டாகிய உழவுச்சால் வழியே

Page 74
IO/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ஊர்கின்றன, நான் மறைசை இந்து அம்பு அடைத்த சடையான் வெற்பு - நான்மறைக்காட்டில் வீற்றிருக்கின்ற சந்திர கலையையும் நீரையுஞ் சேர்த்த வேணியை யுடையாரது மலையில், தலை வேல் படை விழி தும் கன்னியை, தலைமையாகிய வேலாயுதத்தை யொத்த கண்களையுடைய உமது கன்னியை, ஆடவ எண் சிங்கம் தனி புரந்து நோக்கியது - காளையாகிய மதிக்கப்படுஞ் சிங்கம் தனியே காத்துப் பார்த்தது எ-று.
ஆடவனைச் சிங்கமாக வுருவகித்தமையின், நோக்கியதென்னும் பயனிலைகொண்டது. சிந்தாமணியிலும், “சீவக வேழுயர் போதக மினத் தொடேற்றதே’ என்றது மிது. தனி என்றமையில் வீரம் விளங்கியது. களிறுதரு புணர்ச்சியா லறத்தொடு நிற்றல்) (52)
சிங்க முருக்குவன் றென்கால னாவியைச் செய்பிலின்னே காங்க முருக்குர னாய்விருந் துண்ணக் கனத்திடுமென் னங்க முருக்கும் பிணியங்கு மிங்கு மலையவைத்தாய் பங்க முருக்கிதழ் சேர்மறைக் காட்டுறை பண்ணவனே.
இ-ள்: முருக்கு இதழ் சேர் பங்க - முருக்கம்பூவை யொத்த அதரத்தை யுடைய உமாதேவி சேர்ந்த பாகரே, மறைக்காட்டு உறை பண்ணவனே-வேதவனத்தில் வீற்றிருக்குங் கடவுளே, தென் காலன் என் ஆவியைச் சிங்க முருக்குவன் - தென்திசையில் நமன் எனது உயிரைக் குன்ற வருத்துவன், செய்பில் - (இன்னும்) சொல்லில், கங்கம் உருக்குரல் நாய் விருந்து உண்ணக் கனத்திடும் அங்கம் பிணி உருக்கும் - பருந்தும் அச்சப்படுத்து முழக்கையுடைய நாயும் விருந்து உண்ணக் கனத்த காயத்தை நோய் வருத்தும், இன்னே அங்கும் இங்கும் அலைய வைத்தாய் - இவ்வண்ணமாகவே அவ்விடத்தும் இவ்விடத்தும் அலையும்படி வைத்தீர் (இவ்வலைவு மாறும் வகை இனியருள் செய்வதுதான் என்றோ?) எ-று.
இதற்கு, பங்கரே பண்ணவரே கங்கமும் நாயும் விருந்துண்ணக் கனத்த என் அங்கத்தை மெலிவிக்கும் பிணியால் அங்கும் இங்கும் அலைய வைத்தீர், அக்கடும் பிணியாற் காலன் ஆவியை இப்போதே முருக்குவன் எனப்பொருள் கூறலுமொன்று. இதன் கருத்து: பிணிகளுக்கரசான பெரும் பிணியால் எனது காயம் பீடிக்கப்படுகை இப்போதே யிறப்பதனோ டொக்குமென்பதாம். (53)

மறைசையந்தாதி /11
பண்ண முதலையின் சொல்லிபங்காளன் பகைவிடம்வன் கண்ண முதலையி னேமியை யேவிய கண்ணனுயி ருண்ண முதலையின் றோன்மறைக் காடனை யுண்டென்பதே யெண்ண முதலையின் கானிடைப் பூவி னினிநெஞ்சமே.
இ-ள்: ஐக் கான் இடைப் பூ நெஞ்சமே - கோழைக் காட்டிலுள்ள பூப்போன்ற மனமே, பண் அமுது அலை இன் சொல்லி பங்காளன் - பண்ணையும் அமுதையும் வென்ற இனிய சொல்லையுடைய உமாதேவியைப் பாகத்திலுடையவரும், வன் கண்ண முதலையில் நேமியை ஏவிய கண்ணன் உயிர்-வன்கண்மையையுடைய முதலையிற் சக்கிராயுதத்தைத் தூண்டிய மாயவனது ஆவியை, பகை விடம் உண்ண முதல் - பகைத்த நஞ்சு உண்ண முன், அயின்றோன் - அதைத் தாமுண்டவரும், மறைக் காடனை - வேதவனத்தை யுடையவருமாகிய சிவனை, உண்டு என்பதே இனி முதல் எண்ணம் - உண்டு என்னத் துணிதலே இனி முதலாகிய எண்ணம், (அந்திய காலத்துக்கு அவரே துணை, ஒழியாது கருதுதி) எ-று.
இனி என்றதினால் இத்துணைக் காலமெல்லாம் வாழ்நாளை வீணாள் படக் கழித்தனை என்பது போதரும். ஈற்றடியில் இன் இரண்டுஞ் சாரியை. ஐயின்றோன் போலி. (54)
நெஞ்சத் திருக்கு மதிநீயைம் பூத நிலயமுநீ கஞ்சத் திருக்கு மரிசேருங் கண்ணனெண் கண்ணனுநீ வஞ்சத் திருக்கு மலமாயை நீங்கிய மாதவத்தோர் தஞ்சத் திருக்கு வனத்துறை காரண தற்பரனே.
இ-ள்: வஞ்சத் திருக்கு - கொடுமையாகிய ஆணவ மலத்தையும், மலம் - கன்ம மலத்தையும், மாயை நீங்கிய மாதவத்தோர் சத்து - மாயா மலத்தையும் ஒழித்த தவத்தர்களது சத்தாகிய, இருக்கு வனத்து உறை காரணதற்பரனே - வேதாரணியத்தில் வீற்றிருக்குஞ் (சகத்துக்கு) நிமித்த காரணமாகிய பதியே, நெஞ்சத்து இருக்கும் மதி நீ - மனத்திலிருக்கும் அறிவும் நீ, ஐம்பூத நிலையமும் நீ - பஞ்சபூதங்களுக்கு இடமும் நீ, கஞ்சத் திருக்குமரி சேருங் கண்ணன் (நீ) - (செந்) தாமரை மலரி லிருக்கின்ற இலக்குமியாகிய கன்னி சேர்ந்த மாயவனும் நீ, என் கண்ணனும் நீ - எட்டு நேத்திரத்தையுடைய பிரமனும் நீ எ-று.

Page 75
12/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வஞ்சத்திருக்கு என்றமையின் ஆணவம் போதந்தது. திருக்குமலம் என ஒன்றாக்கினுமாம். காத்தலும் படைத்தலும் அழிப்பவன் மேலவாதலின் அது சொல்லாதமைதலானும் காரண தற்பரனே யென்றதினானும், நீயே முழுமுதற் கடவுளாதலின், நின்மாட் டடைந்தேன் என்பது கருத்து. மதி புத்தியுமாம். (55)
தற்கோல மென்ற கனிவாயை வேட்டுத் தயங்குமணப் பொற்கோல மென்றடி யேன்காண் குவன்புவி புக்கிடந்த முற்கோல மென்றவி சம்புயன் போகி முதலமரர் நிற்கோல மென்ற பொழுதால முண்ட நிருமலனே.
இ-ள்: முன் புவி புக்கு இடந்த கோலம் - முன்னாளிற் பூமியைப் புகுந்து கிழித்த பன்றியாகிய மாயவனும், மெல் அம்புயத் தவிசன் - மெல்லிய தாமரை மலர்ப் 'பீடிகையையுடைய பிரமனும், போகி முதல் அமரர்-இந்திரன் முதலிய தேவர்களும், நிற்கு ஒலம் என்ற பொழுது ஆலம் உண்ட நிருமலனே - நுமக்கு ஒலமென்று நொந்தபோது (அவர்களைப் புரப்ப) நஞ்சையுண்டருளிய மலரகிதரே, தற்கோலம் மென்ற கனி வாயை வேட்டு - தக்கோலத்தை மெல்லாநின்ற (கொவ்வைப்) பழத்தைப் போலும் வாயையுடைய உமாதேவியை விவாகஞ் செய்து, தயங்கும் பொன் மணக் கோலம் அடியேன் என்று காண்குவன் - விளங்காநின்ற (நுமது) பொன்போலும் அரிய திருமணக் கோலத்தை அடியேன் எப்போது காண்பேன் எ-று.
இறப்பை யொழிக்க ஒலமென்றார், அமரர், ஆகவும் அவரை அமரரென்பது முகமனாமென்னலை வலியுறுத்தத் தாமு மங்ஙனங் கூறினர். இழித்தாரெனினுமாம். நிற்கு என்பது “இன்னுமோர் கோடியாண்டிருந்து நிற்கியாம் பன்னினும்’ எனக் கந்தபுராணத்தில் வந்ததுபோல வந்தது. (56)
நிருமல ரஞ்சனை சேய்பணி மாலத்தர் நீள்விசயற் பொருமல ரஞ்சநை யந்திடும் வேத புரிவரைக்கோன் மருமல ரஞ்சனை யன்னார் மறார்சொல் வருவர்வன்க னருமல ரஞ்சனை யாதொழி யாய்மதி யாய்மனமே.
இ-ள்: மனமே - நெஞ்சே, நிருமலர் - மலரகிதரும், அஞ்சனை சேய் பணிமால் அத்தர் - அஞ்சனாபுத்திரனாகிய அனுமன் வணங்கிய மாயவனுக்குப் பிதாவானவரும், நீள் விசயன் பொரு மலர் - நெடிய அருச்சுனனோடு பொருத மல்லருமாகிய சிவனது, அஞ்சம் நயந்திடும் வேதபுரிவரை - அன்னங்கள் மகிழ்ந்து (உலாவுந்) திருமறைக்காட்டு மலையில், மரு அஞ்ச மலர்க் கோலனை அன்னார் - வாசத்தைக்கொண்ட பஞ்ச புஷ்ப பாணத்தையுடைய மதனையொத்த தலைவர், சொல் மறார் - (தெய்வத்தின் முன்னுரைத்த) சூளுரையை மறர், வன்கணரும் அலர் - வைரமுடையவரு

மறைசையந்தாதி /113
மல்லர், அஞ்சல் - (இகந்து விடுவாரென்று) பயமுறேல், நையாதொழியாய் - துன்புறேல், வருவர் - (இன்னே) வருவர், மதியாய் - தெளிதி. எ-று.
(தேற்றரவு) (57)
மனக்காக்கை முவர் தமிழ்க்குயில் வாணியை வைத்தகுழை யுனக்காக்கை வஞ்ச வினையேன்புன் னாவி லுரைத்ததமிழ் சினக்காக்கை வாயினுறுங்குரற் சொல்லொக்குஞ் சேண்முகிற்சந் தனக்காக்கை நீட்டு மறைக்காட்டில் வாழ்சிவ சம்பரனே.
இ-ள்: சேண் முகில் - ஆகாயத்து மேகமண்டலத்தில், சந்தனக் கா கை நீட்டு மறைக்காட்டில் வாழ் சிவசம்பு அரனே- சந்தனச்சோலை கை நீட்டுகின்ற வேதவனத்தில் வீற்றிராநின்ற சிவசம்புவே சங்காரகருத்தரே, மனக்காக்கை முவர் தமிழ்க் குயில் வாணியை வைத்த குழை உனக்கு - மனக்காப்பையுடைய மூவரது தேவாரமாகிய குயிற்சொல்லை அடக்கிய திருச்செவியை யுடைய நும்மேல், ஆக்கை வஞ்ச வினையேன் புல்நாவில் உரைத்த தமிழ் - காய (மெடுத்தற்கு ஏதுவாகிய) கொடுமை யாய வினையை யுடையேன் எளிய நாவாற் பாடிய பாடல், சினக்காக்கை வாயின் உறுங் குரற் சொல் ஒக்கும் - கோபத்தையுடைய காகத்தினது வாயில் நின்றுந் தோற்றும் வெடிசொல்லையொக்கும். எ-று.
புன்னாவிலெனவே இழிவாகவு மமையாமையின் உவமை முகத்தானுங் கூறினார். சிவசம்பரனே என்பதைச் சிவ எனப் பிரித்துச் சிவனேயெனவும், சம்பரனேயெனப் பிரித்து மானை அல்லது கங்கையைத் தரித்தவரே யெனக்கூறினு மமையும். (58)
சம்பாதி யந்தச் சடாயுவும் போற்றுந் தலைவன்புரம் வெம்பாதி யந்த மிலாமறைக் காடன் விரைக்குழல்சேர் செம்பாதி யந்தண் சமயமல் லாது திரிநெஞ்சமே நம்பாதி யந்தகர் பொல்லாச் சமயங்க ணன்றெனவே.
இ-ஸ்: திரி நெஞ்சமே - (மெய்யறியாது தடுமாறித்) திரியுமனமே, அந்தச் சம்பாதி சடாயுவும் போற்றுந் தலைவன் - (முன்னிலைமைமாறிப் புள்வடிவாகிய) அச்சம்பாதியுஞ் சடாயுவுந் துதிக்குந் தலைவரும், புரம் வெம்பு ஆதி அந்தம் இலாமறைக்காடன் - முப்புரத்தையும் எரித்த உற்பத்திநாசம் இல்லாத வேதவனத்தரும், விரைக் குழல் சேர் செம்பாதி - வாசத்தைக் கொண்ட கூந்தலையுடைய உமாதேவி சேர்ந்த செம்பாதியானவருமாகிய சிவனது, அந்தண் சமயம் அல்லாது - அழகிய அருளையுடைய சமயம் (ஒன்றை)யன்றி, அந்தகள் பொல்லாச் சமயங்கள் நன்று என நம்பாதி - (அகக்) குருடரது பொல்லாச் சமயங்களை நன்றென்ன நம்பேல். எ-று.

Page 76
14/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சுட்டு பண்டறிசுட்டு. நம்பினார்க்கு இன்பத்தையும் நம்பாதார்க்குத் துன்பத்தையும் அளிப்பாரென்பது போதரப் புரம் வெம்பு என்றும், எத்துதியையுங் கொண்டருள்வாரென்பது போதரச் சம்பாதி சடாயு போற்றுந் தலைவனென்றும், நித்தியானந்தத்தைத் தருவதென்பது போதர அந்தண் சமயமென்றுங் கூறினார். அந்தகரெனவே சமயமுமதுவாக, பொல்லாவெனல் வேண்டாவாயினும் வலியுறுத்தற்கு வேண்டுமென்க. (59)
நன்றென் புலமைந்தில் வாயொன்று மேநவை யாயினுஞ்சீர் நின்றென் புலவு கறையாக்கை துஞ்சுமு னிள்பொதியக் குன்றென் புலவர்முன் னோர்கவி யாயினுங் கூறியதால் வன்றென் புலவனைத் தாக்கிய வேத வனத்தனையே.
இ-ஸ்: என்பு உலவு கறை சீர் நின்ற யாக்கை துஞ்சும் முன்எலும்பையும் உலாவுகின்ற இரத்தத்தையுமுடைய சிறப்பு நிலைத்த காயம் அழியமுன், வல் தென்புலவனைத் தாக்கிய வேத வனத்தனை - வலிய தென்றிசையை யுடையனாகிய நமனை யுதைத்த வேதபுரீசருக்கு, நீள் பொதியக்குன்று என் புலவர் முன் - (மக்களுயிர்க்குத் தமிழ் சுரத்தலால்) நெடிய பொதியமலையென்னும் பண்டிதருக்குமுன், ஒர் கவியாயினுங் கூறியதால் - ஒரு பாவையேனும் பாடியதினால், எண் ஐந்து புலனில் நவை ஆயினும் வாய் ஒன்றுமே நன்று - எனது பஞ்சப்புலனில் குற்றத்தையுடைத்தாயினும் வாயொன்றுமே நன்று. எ-று
"திரைக்கடல் குடித்த கரத்தமா முனிக்குந் - திங்கள் வாழ்குலந் தங்கு வேந்தற்கு - மமுத மூற்றெழுந்து நெஞ்சகங் களிக்குந் - தமிழெனுங் கடலைக்காணி கொடுத்த - பொதியப் பொருப்பு’ எனக் கல்லாடத்திலும், “கவுணியர்க்குத் தமிழ் சுரக்குங் காட்சியாலே வண்ணமுலை மலயமலை மானும்’ எனச் சேதுபுராணத்திலும் கூறியதுபற்றி, "பொதியக் குன்றென் புலவர்” என்றார். வேதவனத்தனை என்றது, இலக்கணக் கொத்தில் “எல்லா வுருபொடுங் கொள்வோ னெழுமே” என்ற விதியமைந்து “அவ்வித் தழுக்காறுடையானைச் செய்யவள் தெளவையைக் காட்டிவிடும்” என்னுங் குறள் போல நின்றது. (60)
வனக்கோதை யேயு மறுகா றுவைத்துவண் டேன்பிழிந்த கனக்கோதை யேனளித் தீள்கரும் பாட்டிய கட்டிநல்கா தெனக்கோதை வாரித் திருவே மதிமலி யென்றமிழ்விற் பனக்கோதை பால்விடுத் தான்மறைக் காடன் பனிவரைக்கே.
இ- ள்: மதி மலி என் தமிழ் விற்பனக் கோதைபால் விடுத்தான் மறைக்காடன் பணி வரைக்கு - மதிமலி என்ற (முதற் குறிப்பையுடைய) செய்யுளை (ப் பாடியருளிப் பாணபத்திரரிடத்திற் கொடுத்து) வித்தாரத்தை யுடைய சேரமான்பெருமா னாயனாரிடத்தில் அனுப்பினவரும், வேதவனத்தை

மறைசையந்தாதி /15
யுடையவருமாகிய சிவனது குளிர்ச்சியைக் கொண்ட மலையில் (வாழும்), ஓதை வாரித் திருவே - சத்தத்தையுடைய (பாற்) கடலில் வந்த இலக் குமியே, எனக்கு ஆட்டிய கரும்புக்கட்டி நல்காது - எனக்கு (ஆலையில்) ஆட்டியதனாலாய கருப்பஞ் சாற்றாலமைந்த கட்டி (போலும் வசனத்தைத்) தராமல், வனக் கோதை ஏயும் அறுகால் துவைத்து வள் தேன் பிழிந்த கனக்கோதை ஏன் அளித்தீர் - அழகாகிய மாலையிற் பொருந்திய வண்டுகள் துவைத்து வளவிய தேனைப் பிழிந்தெடுத்த மேகத்தைப்போலுங் கூந்தலை ஏன் தந்தீர்? எ-று
மதிமலி என்றசெய்யுளாவது: “மதிமலி புரிசை மாடக் கூடற் - பதிமிசை நிலவும் பானிற வரிச்சிற - கன்னம் பயில்பொழி லாலவாயின் - மன்னிய சிவன்யான் வரைதரு மாற்றம் - பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் - குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் -செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க - பண்பால் யாழ்பயில் பாண பத்திரன் - றன்போ லென்பா லன்பன் றன்பாற் - காண்பது கருதிப் போந்தனன் - மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே” என்பது. கட்டி உவமவாகுபெயர். மொழிபெற வருந்தலாதலின் வசனத்தைத் தராமல் ஏன் தலைசாய்ந்து நிற்கின்றீரென்றான். கரும்புக்கட்டியைத் தராது கனத்தகோதை ஏன் தந்தீரென்று மொருபொருள் போதரும். இப்பாட்டை அகத்தமிழ் புறத்தமிழ்த் திறனறியார் தோன்றியவாறே புறங்காட்டலெனப் புதிதொன்று படைத்துக் கூறுவர். திருவே ஏனளித்தீர் என்னுமுடிபு கந்தபுராணத்தில் “நாவலோய் நீருநடந்தருளும்” என்னுஞ் செய்யுள்போல முடிந்தது. திருவே என்பது தொல்காப்பியனார் விளியெழுத்தைப் பொதுமையிற் கூறி “உகரந்தானே குற்றியலுகரம்” என விதந்த விதி பிற்காலத்து ஒருசார் வீழ்ந்ததற்கு உரையாளர் “திருவே எனச்சிறுபான்மை முற்றுகர வீறுமுளவேனும்” எனக் கூறியதும், முற்றும் வீழ்ந்ததற்கு நன்னூலார் “இஉ ஊவோ டையோ னளரல’ என்ற பொதுவிதி மேற் சிறப்புவிதி கூறி அவற்றோடமையாததும், விரிவுரையாளர் எடுத்தமையாததும், நேமி நாதத்தார் 'ஏயாம்-உகரவோ கார வுயிர்கள்’ எனப் பொதுமையிற் கூறியதும் சான்றாதலானும், இராமாயணத்தில் “சீலமின்னதென்றருந்ததிக் குதவிய திருவே” எனவும், “தெரிவைமார்க்கொரு கட்டளையெனச்செய்த திருவே” எனவும், தாயுமானார் பாடலில் “மந்த்ரகுருவேயோக தந்த்ர குருவேமூலன் மரபில்வரு மவுன குருவே” எனவும், தஞ்சை வாணன் கோவையில் “கார்த ளைக்குங் குழற்றிருவே” எனவும், காரிகையில், “வெள்ளைச் செந்துறையாகுந் திருவே” எனவும், வந்ததுபோல, பன்னூல்களிலும் பயின்றுவருதலாலும், இன்னோசை யுடைமையானுஞ் சிறுவரவிற்றெனக் கூறுத லினியேலாது. இன்னுந் தொல்காப்பியத்தின் வழியாய நன்னூ லெழுந்தகாலத்து முற்றும் வீழ்ந்த

Page 77
I6/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
விதியைப் பின்னூல் செய்த தமது காலத்தும் நிகழ்ந்ததாக்கக் கருதிய கருத்துக்கேற்பவுந் தொல்காப்பியனார் விதந்தது போலவும் நன்னூலாருந் தாமும் பிறவெழுத்துக்களை விதந்தது போலவுஞ் சூத்திரியாது “இஉ ஊவோ டையோ னளரல - யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு - ணஃகா னாவீ றாகும் பொதுப் பெயர் - மெய்யுயி ரனைத்தீற் றஃறிணை விளிப்பன - வொல்வழி யறிதல் வழக்கத்தான’ எனக்கூறிக் குற்றுகரம் பெரும்பான்மையும் முற்றுகரஞ் சிறுபான்மையும் வருதலை ஒல்வழி என்பதனா லிடர்ப்பட்டமைத்த இலக்கண விளக்கத்தார் கருத்து நன்னூலா ரோடு மாறுபட்டெழுத்த மதமுதிர்ச்சியெனத் தெளிக. (61)
பனிச்சந்திரனணி வேணியுந் தாங்குஞ்செம் பஞ்சினுட னனிச்சந் திரளன்னத் தூவியிற் சேக்குமஞ் சீறடிபாற் றணிச்சந் திரவி னடந்தான் சிகர தளம்பொலிமே திணிச்சந் திரவரை வில்லான் மறைசையிற் செந்துருவே.
இ-ள்: செம் பஞ்சினுடன் அனிச்சந்திரள் அன்னத் தூவியில் - செம்பஞ்சினும் அனிச்சமலர்த் திரளினும் அன்னச்சிறையினும் (மிதித்து நடப்பினுங் கன்றி), சேக்கும் அஞ் சீறடி பால் இரவில் தனிச் சந்து நடந்தான் - சிவக்கின்ற (மெல்லிய) அழகாகிய சிறிய தாளையுடைய பரவையாரிடத்தில் இராக்காலத்தில் தனியே தூதுசென்றவரும், மேதினிச் சிகரதளம் பொலி சந்திர வரை வில்லான் - பூமியில் முடிக்கணம் பொலியப் பெற்ற பொன் மலையாகிய வில்லையுடையவருமாகிய சிவனது, மறைசையில் செந்து உரு-வேதாரணியத்தில் (வாழும்) செந்துக்களாய உருவுடையனவும், பனிச் சந்திரன் அணிவேணியுந் தாங்கும் - குளிர்ச்சிபொருந்திய சந்திரகலையை அணிந்த சடாமுடியையுந் தாங்கும். 6Tg).
வேணியுமென்னு மும்மையால் அத்தொடக்கத்தன பிறவும் ஒழிந்தபிறவு மமையும். செந்துருவு மென்னுமும்மை விகாரத்தாற் றொக்கது. தொக்கதன்றேல், இவையே சாரூபத்தையடையு மென்றும், பிறவுயிர் அதை யடையாவென்றும் பொருட்பட்டு, இறைவனூலோடு பகைக்கும். திரளை முன்னிலும் பின்னிலுஞ் சேர்ப்பினும் பொருளிசையும். (62)
உருப்பவனாசன வாய்த்தேரை யிற்பிணிக் குள்ளுடைந்தேன் கருப்பவநாச நதிமணி கன்னிகைக் கான்மறைசை நெருப்பவ னாசன காதியர் தேசிக நீள்பதுமத் திருப்பவ னாசனப் பாற்கட லான்பணிந் தேத்திறையே.

மறைசையந்தாதி /I7
இ-ள்: கருப்பவநாச மணிகன்னிகை நதி மறைசைக் கான் - கருவையும் பாவத்தையுந் துடைக்கின்ற மணிகன்னிகை நதியைக் கொண்ட வேதவனத்தில் வீற்றிருக்கும், நெருப்பவனா - அக்கினியினது நிறத்தையுடையவரே, சனகாதியர் தேசிக - சனகள் முதலியோரது குரவரே, நீள் பதுமத்து இருப்பவன் ஆசனப் பாற் கடலான் பணிந்து ஏத்து இறையே-நெடிய தாமரை மலரிலிருக்கின்ற பிரமனும் ஆசனமாகிய பாற் கடலை யுடைய மாயவனும் வணங்கித் துதிக்குந் தலைவரே, உருப்ப வனாசன வாய்த் தேரையில் பிணிக்கு உள் உடைந்தேன் -அச்சத்தை விளைக்கின்ற பாம்பினது வாயிற்பட்ட தேரையைப் போல நோயா லுள்ள முடைந்தேன் (இதை நீரன்றி நீக்குவர் பிறரில்லை) எ-று.
பிணிக்கு உள்ளுருவுடைந்தேனெனப் புணர்ப்பினுமமையும். (63)
ஏத்திரப் பாண்டி யெனவைய மேற்கு மிறைவன்மதிக் கோத்திரப் பாண்டிய னாகிமண் ணாண்டவன் கோலநரைக் காத்திரப் பாண்டியன் மறைக்கா டனைமல காயமென்னுஞ் சூத்திரப் பாண்டி லிறுமிறுங் கானுந் தொழுமுன்னமே.
இ-ள்: மலகாயம் என்னுஞ் சூத்திரப் பாண்டில் இறும் இறும்மலத்தையுடைய உடலாகிய சூத்திரப்பண்டி (இன்றி ருப்பினும் நாளை) முரியும், முரியும், முன்னம் - அது முரிய முன் (இப்போதே என்றபடி), ஏத்து இரப்பு ஆண்டி என ஐயம் ஏற்கும் இறைவன்-துதிக்கின்ற இரப்பையுடைய ஆணிடியாகப் பிச்சையை ஏற்ற தலைவரும், மதிக்கோத்திரப் பாண்டியன் ஆகி மண் ஆண்டவன் - சந்திரகுலத்துப் பாண்டியனாகிப் பூமியை யாண்டவரும், கோல நரைக் காத்திரப் பாண்டில் மறைக்காடனை-அழகாகிய வெண்மையையுடைய காயத்தைக் கொண்ட ஏற்றையுடைய வேதவனத்தருமாகிய சிவனை, தொழும் - வணங்குமின். 6s-gi.
ஐயமேற்றாரே இகபரசுகத்தையெல்லா முற்றுயிர்க்கு அருள வல்லாரென்பதைத் தேற்ற இறைவனென்றும், எல்லாஞ் செய்ய வல்லாரென்பார் ஆண்டியென்றும், மண்ணாண்டவனென்றும், கூறினார். காணும் முன்னி 66)6OF. (64)
முன்னாவ லாரிசை யுங்கூடற் சங்கள் முதியவெள்ளை நன்னாவ லாரியன் மாமறைக் காடர் நயங்கொள்பச்சை மின்னாவ லாரிவரைக்கான வேண்டும் விழிசதப்பந் தென்னா வலாரி படைத்தா னவையு மிமைப்பிலவே.

Page 78
13/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: முன் நாவலார் இசையுங் கூடல் சங்கள் - முன் புலவர்களிருந்த மதுரைச் சங்கத்தையுடையவரும், முதிய நல் வெள்ளை நாவலார்-பழைய நல்ல வெண்ணாவலை யுடைவரும், இயல்மா மறைக்காடர்-இயற்றமிழைக்கொண்ட பெருமையாகிய வேதவனத்தை யுடையவரும், நயங் கொள் பச்சை மின் ஆவலார் இவரை - நயத்தைக்கொண்ட பசுமையாகிய உமாதேவிக்குக் காதலருமாகிய இச் சிவபெருமானை, காண சதப்பத்து விழி வேண்டும் என்னா-தரிசித்தற்கு ஆயிரங் கண்கள் வேண்டுமென்று, வலாரி படைத்தான் அவையும் இமைப்பில - இந்திரன் பெற்றான் அவையு மிமையாதன. எ-று.
இசை நாடகமும் வழங்குவவேனும், அவை முதனூலை யுணர்தற்குக் கருவியன்மையிற் கூறாராயினார். தமிழில் முற்றாசை யுடையாரென்பதைத் தேற்ற நாவலர் இசையுஞ் சங்கள் என்றும் இயன்மா மறைக்காடரென்றுங் கூறினர். இக்கருத்துப் பற்றியன்றே திருவிளையாடற் புராணத்திலும் “கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோடமர்ந்து - பண்ணுறத்தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழேனை - மண்ணிடைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோலெண்ணிடைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ” எனக் கூறினார். இயலென்பதற்குச் சிலப்பதிகாரத்தில் “குணவாயிற் கோட்டத்தரசு வீற்றிருந்த” என்னுஞ் செய்யுளுரையினும் தொல்காப்பியத்தில் "வடவேங்கடந் தென்குமரியாயிடை’ என்னுஞ் சூத்திர விருத்தியினுங் கூறியபடி இலக்கண மென்னினு மமையுமெனினும் இலக்கியத்தை ஒழித்தற்கு ஓரியைபு மின்மையானும், அதனமைதியே இலக்கணமாதலானும், அதினிரம்பார்க்கு இலக்கணத் தெளிவு பிறவாமையானும், அக்கருத்து ஈண்டைக்காகாதென்க. தற்குறிப்பேற்றவணி நிகழ்தலிற் புராணகாவிய சரிதத்தோடு இது மாறுபடாது. (65)
இமையாத வம்பகர் சூழ்மறைக் கானத் திறைவகங்கைச் சுமையாத வம்பக வன்செயச் சென்னி துளக்கரனே கமையாத வம்பகல் வீசிய வாரிதிக் காசினியோ ருமையா தவம்பக ரார்வேட னெச்சிலை யுண்டதற்கே.
இ-ள்: இமையாத அம்பகள் சூழ் மறைக்கானத்து இறைவ - இமையாத நாட்டத்தையுடையராய தேவர்கள் சூழும் வேதபுரியில் இறைவரே, கங்கைச் சுமையா - கங்கையாகிய சுமையை உடையவரே, பகவன் தவஞ் செயச் சென்னி துளக்கு அரனே - பிரமன் தவத்தைச் செய்ய (நன்றென்று மகிழ்ந்து) சிரத்தையசைத்த சங்கார கருத்தரே, வேடன் எச்சிலை உண்டதற்கு - (நீர்) கண்ணப்பநாயனாரது எச்சிலை யுண்ட தற்காக, கமை ஆதவம் பகல் வீசிய வாரிதிக் காசினியோர் - (சூரியனது

மறைசையந்தாதி /19
வெம்மையைப் பலவுயிர்களும் பொறுக்கலாற்றா என்று நினைந்து தேவவிருடிகள் அவ்வெம்மையைப் பொறுத்தலாற்) பொறுமையாக வெய்யில் பகலில் வீசப்படுகின்ற கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தார், உமை யாது அவம் பகரார் - நும்மை என்ன தோஷஞ் சொல்லார் (எல்லாத் தோஷமுஞ் சொல்வார்) எ-று.
பகல் சூரியனுமாம். கமையா தவம்பகல் வீசிய என்பதற் குரைத்ததை “நிலமிசை வாழ்ந ரலமர நீரத்-தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்காலுணவாகச் சுடரொடு கொட்கு-மவிர்சடை முனிவரு மருள’ என்னும் புறப்பாட்டாலறிக. இடை குறைந்த உம்மையென்பது இராமாயணத்தில் 'யாரென விளம்புவேனோ னெங்குலத் தலைவற்கும்மை’ என்றது போலப் பெருவரவிற்றாகவும், புதியன புகுதலென்பார். (66)
உண்டலத் தானையன் பின்வந்த வண்டின முதுந்துழாய்க் கொண்டலத் தானைய னஞ்சுடர் முன்றையுங் கொண்டமுக மண்டலத்தானையன் கொண்டாடும் வேத வனத்தன்சிறு கண்டலத் தானையன் றிருரி வாங்குங் கருணையெற்கே.
இ-ள்: அலத்தானையன் பின் வந்த வண்டு இனம் ஊதுந் துழாய்க்கொண்டல் அத்தான் - கலப்பைப் படையைத் தாங்கிய பலதேவனுக்குப் பின் பிறந்த வண்டுக் கூட்டங்கள் ஊதுகின்ற துளவமாலையைப் புனைந்த மேகம் போலும் மாயவனுக்கு அத்தானும், சுடர் முன்றையும் நயனங்கொண்ட மண்டல முகத்தான் - சூரியனும் சந்திரனும் அக்கினியுமாகிய முச்சுடர்களையும் விழியாக் கொண்ட விம்பமுகத்தை யுடையவரும், அயன் கொண்டாடும் வேதவனத்தன் - பிரமன் கொண்டாடுகின்ற மறைக்காட்டை யுடையவருமாகிய சிவன், அன்று - (அஞ்சித் துன்புழந்து அடியரானோர் காசியில் அபயம் புகுந்த) அந் நாளில், சிறு கண் தலத்து ஆனை ஈர் உரி வாங்குங் கருணை எற்கு உண்டு - சிறிய கண்ணையுடைய யானையில் இழுத்த தோலைக் கொண்ட கிருபை எனக்கும் உண்டு. எ-று. (67)
எற்பதங் கன்று வளர்சோம னங்கி யிவர்செய்கையாய் நிற்பதங் கன்று திருமறைக் காட னிறைவைகுந்த நற்பதங் கன்று நிரைமேய்த் தவற்கரு ணாதன்பெண்பாற் சிற்பதங் கன்று மெனச்சென்ற தூதன் செயல்வன்னமே.

Page 79
12o/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: எல் பதங்கன் து வளர் சோமன் அங்கி - ஒளியை யுடைய சூரியனுஞ் சுத்தம் பெருகாநின்ற சந்திரனும் அக்கினியுமாகிய முச்சுடர்கள், இவர் செய்கையாய் அங்கு நிற்பது அன்று - இவரது தொழிலாய் அங்ஙனம் நிற்பதன்று, திருமறைக்காடன் - திரு மறைசையை உடையவரும், கன்று நிரை மேய்த்தவற்கு நிறை நல் வைகுந்த பதம் அருள் நாதன் - கன்றுப்பசுவை மேய்த்த மாயவனுக்கு நிறைந்த நல்ல வைகுண்ட பதத்தை உதவிய கடவுளும், சிற் பதங் கன்றும் எனப் பெண்பால் சென்ற தூதன் செயல் வண்ணமே (நிற்பது) - ஞானமயமாகிய திருவடிகள் கன்றும் என்று (கண்டோர்) சொல்லப் பரவையாரிடத்திற் சென்றருளிய தூதருமாகிய சிவபெருமானது தொழில் வண்ணத்தாற்றான் நிற்பது. எ-று.
தூ கந்தரந்தாதியிற் “செப்புங்கவ சங்கரபாலக’ என்பது போலக் குறுகியது. ஈற்றில் ஏ தேற்றப்பொருட்டு. (68)
வண்ணவெண் கண்ணன் மரையா ஞறைமறைக் காட்டிறைவள் திண்ணவெண் கண்ணன் மதமாத்திரியுஞ் சிலம்பகம்யூ வுண்ணவென் கண்ண னனையே நிதம்ப முயர்சுருதிப் பண்ணவெண் கண்ணன் மனையே முகநண்ப பைந்தொடிக்கே.
இ-ள்: நண்ப - பாங்கனே, பைந்தொடிக்கு அகம் - (என்னிறையை வாங்கிய) பசிய வளையலையுடையாளுக்கு இடமாவது, கள் நல் வெள்வண்ண மரையாள் உறை - தேனைக் கொண்ட நல்ல வெள்ளை நிறமாகிய தாமரைமலரை யுடையாளாய வாணி இருக்கும், மறைக்காட்டு இறைவர் - வேத வனபுரீசரது, திண்ண எண்கு அண்ணல் மதமாத் திரியுஞ் சிலம்பு - வலிமையையுடைய கரடியும் பெருமையான மதயானையுந் திரியும் மலையே, நிதம்பம் - அல்குலாவது, பூஉண் அ எண் கண்ணன் அணையே - பூமியை உண்ட அந்த மிடலைப் பெற்ற மாயவனது படுக்கையாகிய பாம்பினது படமே, முகம் - வதனமாவது, உயர் பண்ண சுருதி எண்கண்ணன் மனையே - உயர்ந்த பண்ணைப்பெற்ற வேதத்தையுடைய பிரமனது வீடாகிய தாமரை மலரே. எ-று.
அறிவைக் கொடுத்தலின் நல்லென்றார். எண் இப்பொருளாதலை “எண்வலி யெள்ளிலக்க மெளிமை சோதிடம் விசாரம்’ என்னும் சூடா மணி நிகண்டானுணர்க. (அவன. திவ்விடத் திவ்வியற் றென்றல்) (69)

மறைசையந்தாதி /2
தொடிப்பாணி நித்திரை யாகாளென் காதிற் றுளைக்குமட்டோ நொடிப்பாணி னித்தில தென்னும் விழுமெழு நோமிப்பிவாய் வெடிப்பாணி நித்தில மையோ சுடுமென்னும் வேதவன முடிப்பாணி நித்தியப் பெம்மான் பவனி முறையிற்கண்டே.
இ-ள்: வேத வன முடிப் பாணி நித்தியப் பெம்மான் பவனி முறையில் கண்டு - திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்குஞ் சிரத்திற் கங்கையைக் கொண்ட நித்திய நாதராகிய சிவனது திருவுலாவை முறையாற் றரிசித்து, தொடிய் பாணிநித்திரை ஆகாள் - வளையலையணிந்த கையையு டையாள் துயில் கொள்ளாள், நொடிய் பாண் இனித்திலது என்னும் - சொல்லு தலைக்கொண்ட பண் இனித்திலது என்பாள், விழும் - விழுவாள், எழும் - எழுவாள், நோம் - நோவாள், வெடிப்பு வாய் இய்பி ஆணி நித்திலம் - வெடிப்பாகிய வாயையுடைய இப்பியினது ஆணி முத்தம், ஐயோ சுடும் என்னும் - ஐயோ சுடுமென்பாள், என் காதில் துளைக்கும் மட்டோ - (இவ்வாறு வருந்தும் வகை) எனது காதைத் துளைக்குமளவோ அதிலும் விஞ்சியது. எ-று.
என்காதிற் றுளைக்குமட்டோ என்பதற்கு எனதுகாதிற்றுளைக்கு மளவோ அயலார் காதையுந் துளைத்தது என்னினு மமையும். காமச்சுவையணி. இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்தில் இறைவனு லாக்கண்டு மயலுற்றாள் துயரைத் தோழி சொல்லியது. (70)
கண்டங் கடுத்தவி ராமாலை வேதன் கழிந்ததலை முண்டங் கடுத்த மிசைந்திடும் வானின் முளைத்தபிறைத் துண்டங் கடுத்த துதலிமை யாசலத் துய்யபச்சைப் பெண்டங் கடுத்தது பார்மறைக் காட்டுறை பேரொளிக்கே.
இ-ஸ்: மறைக்காட்டு உறை பேர் ஒளிக்கு - வேதவனத்தில் வீற்றிருக்கும் பெரிய சோதிக்கு, கடு கண்டந் தவிரா - நஞ்சு கழுத்தை நீங்காது, மாலை வேதன் கழிந்த தலை முண்டங்கள் - மாலையாவது பிரமனது கழிந்த தலைகள், அங்கு அடுத்தது - அவ்விடத்து அவரைச் சார்ந்திருப்பது, வானில் முளைத்த துத்தம் இசைந்திடும் பிறைத் துண்டங் கடுத்த நுதல் - ஆகாயத்திலே தோற்றுகின்ற பாலையொத்த (வெள்ளிய) பிறைத்துண்டம் போலும் நெற்றியையுடைய, இமையாசலத் துய்ய பச்சைப் பெண்டு - இமையமலையிலெழுந்த சுத்தமாகிய பச்சைப்பெண், பார் - (தோழி) பார்க்குதி. எ-று.

Page 80
122/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இவ்வொழுக்கங்கள் களவொழுக்க மாகையானும், தலைமகள் பெருநாணினிளாகையானும், தோழியாற் கூறப்பட்ட கூற்றுகட்கு வெளிப்படையாக மறுமொழி கொடாது, மறைக்காட்டுறை பேரொளிக்குப் பெண்டடுத்ததெனக் குறிப்பாற் கொடுத்தாள். கொடுக்கவே, முன்னர்ப் பாங்கற் கூட்டம் வற்றவாறு மமைந்து நின்னினாய கூட்டம் பெறுகை காரணமாக நின்னிடத்து வந்திரந்து குறையுறா நின்றார்க்கு வேண்டியது செய்வாயாக என்பது மமைந்தது. இறைவியறியாள் போன்று குறியாள்கூறல்) (71)
ஒளியா னிறையுந் திவாகரக் கண்ண னுலகத்துயி ரளியா னிறையுந்தி யம்புயன் வேதற் கருஞ்சின்மய வெளியா னிறையுந்தி முந்நீர் மறைசையில் வெற்பணங்கே தெளியா னிறையுந் திகைத்தங் கிரேன்வந்து சேருவனே.
இ-ள்: ஒளியால் நிறையுந் திவாகரக் கண்ணன் - சுடரால் நிறைந்த சூரியனாகிய கண்ணையுடையவரும், உலகத்து உயிர் அளி ஆன் இறை உந்தி அம்புயன் வேதற்கு - உலகிற்றங்கிய ஆவிகளைக்காக்கும் பசுக்களுக்குத் தலைவனாயும் நாபிக் கமலத்தை யுடையவனாயும் இராநின்ற மாயவனுக்கும் பிரமனுக்கும், அருஞ் சின்மய வெளியான் - அரிய ஞானமய வெளியானவருமாகிய சிவனது, இறை உந்தி முந்நீர் மறைசையில் வெற்பு அணங்கே - பெருமையாகிய யாறுங் கடலுஞ் சூழ்ந்த வேதவனத்து மலையில் மாதே, யான் இறையுந் திகைத்து அங்கு இரேன் வந்து சேருவன் தெளி - நான் இறையளவு நேரமுந் திகைத்தங்ங்ணமிரேன் (இங்ங்ணம் விரைவில்) வருவேன் இதைத் தெளிதி. எ-று.
உந்திமுந்நீர் ஒருபொருட் பலபெயரெனக் கொண்டு கடலென்று உரைப்பினுமாம். “முந்நீர்ப் பிறந்த பவளத்தொடு சங்குமுத்தும்” என்னுஞ் சித்தாமணிச் செய்யுளில், முந்நீர் - படைத்தல் காத்தல் அழித்தலாகிய முக்குணமென்றார் நச்சினார்க்கினியர் (பிரிந்து வருகென்றல்) (72)
சேரு வரிக்கடை யாளமில் லாவுருச் சித்தசர்போ லாரு வரிக்கடை யேநிற்ப ராலணங் கேசெழும்பூந் தாரு வரிக்கடை பண்பாடும் வேதத் தலத்திறைமுந் நீரு வரிக்கடை வெங்காள போசன னtண்மலைக்கே.

மறைசையந்தாதி /123
இ~ள்: செழும் பூந் தாரு வரிக்கடை பண்பாடும் வேதத் தலத்து இறை - அழகிய பூந்தருவில் வண்டுகள் பண்ணைப் பாடும் வேதபுரியில் வீற்றிருக்குந் தலைவரும், முந்நீர் உவரிக் கடை வெங்காள போசனன் நீள்மலைக்கு - முந் நீரையுடைய கடற்கட்டோன்றிய வெய்ய நஞ்சவுணவை யுடையவருமாகிய சிவனது நீண்ட மலையில், அணங்கே-மாதே, இக்கு அடையாளம் இல்லாத சித்தசர் போல் உருச்சேருவர் - கருப்பு வில்லாகிய அடையாளம் இல்லாத மதனரைப்போல உருவத்தை யுடையவரும் இக்கடையே நிற்பர் - (ஈண்டுள்ள பலவிடத்திலு மின்றி) இவ்விடத்திற்றானே (பயின்று) நிற்பவருமாகிய, உவர் ஆர் - உந்தக் காளையர் யார் (நீயறிவையேற்) சொல்லுதி. எ-று.
உவப்பிற்சித்தசரென்று பால்வழுவக் கூறியதற்கிசைய உவரென்றாள். “கண்கால்கடையிடை’ என நன்னூலார் கூறினமையின் ஈண்டுக் கடை அப்பொருட்டு. கடையே என்பதில் ஏ தேற்றம் வரிக்கடை இப்பொருளா தலை இரகுவமிசத்தில் “வரிக்கடைபாண்செயு மருதமெய்தினான்’ என்னுஞ் செய்யுளா னுணர்க. சேருவர் நிற்பர் என்பவற்றிற்குச் சேர்ந்தவராகி நிற்பவராகிய எனக் கூறலுமொன்று. (இறைவன்றனக்குக் குறைநேர் பாங்கி யிறைவிக் கவன்குறை யுணர்த்தல்.) (73)
நீண்ட வராக மலைமாநிலங்கிண்டி நின்றறியா னாண்ட வராக மலைகுனித் தான்மறை நற்பதியான் மாண்ட வராக மலையாமல் வைப்பவன் வான்புகழை வேண்ட வராகம லைக்குமுன் றோற்றும் வெறுந்தவ்வையே.
இ-ள்: நீண்டவராகம் அலை மாநிலங் கிண்டி நின்று அறியான்நெடிய (மாயவனாகிய) பன்றி கடலாற் சூழப்பட்ட பெரிய பூமியை யிடந்து நின்றறியப்படாதவரும், நாண் தவர் ஆக மலை குனிந்தான் - நரியையுடைய வில்லாக மேரு கிரியை வளைத்தவரும், நல் மறைப்பதியான் - நல்ல வேதவனத்தையு டையவரும், மாண்தவர் ஆகம் அலையாமல் வைப்பவன் - மாட்சிமைப்பட்ட தவத்தர்களது காயத்தை அலையாமல் வைப்பவருமாகிய சிவனது, வான் புகழே வேண்ட - பெருமையாகிய கீர்த்தியை வேண்ட, கமலைக்கு முன்தோற்றும் வெறுந் தவ்வை வராள் - (அவரிடத்தில்) இலக்குமிக்கு முன்பிறந்த வெறிய மூதேவி வராள. எ-று.

Page 81
124/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
அலை ஆகுபெயர். அறியான் என்பது, “முதனிலை தொழிற்பெயர் முற்றீ ரெச்சம் - வினைமுதல் செயப்படு பொருளே ழாதியுட் - படுசொ லற்றே படுபொரு ளாயும்’ என்னும் இலக்கணக் கொத்துவிதியால், “இல் வாழ்வா னென்பான்’ என்பதுபோல நின்றது. வராள் ஈறு கெட்டது; வராது எனக் கொள்வது மொன்று. (74) வெறும்பந்தி நிச்சய மில்லெனை யாட்கொண்டு விட்டில்வைப்பா யுறும்பத்தி னிற்பத்து மாமகன் மாலய ஓம்பருக்கு மெறும்பத்தி நிற்குங் கடைமுத லாவி யெவைக்குமருள் பெறும்பத் தினியங்க னேமறைக் கானப் பெருஞ்சுடரே.
இ- ள்: பத்தினில் உறும் பத்து மா மகன் மால் அயன் உம்பருக்கும் - நூற்ாகிய அசுவமேதத்தையுடைய வாசவனுக்கும் மாயவனுக்கும் மலரோனுக்கும் வானவருக்கும், அத்தி முதல் எறும்பு கடைநிற்கும் ஆவி எவைக்கும் அருள் - யானை முதலாய் எறும்புமுடிவாய் நிற்கின்ற உயிர்களெவற்றுக்கும் அருளுகின்ற, பத்தினி பெறும் பங்கனே - உமாதேவி பெற்ற பாகத்தையுடையவரே, மறைக் கானப் பெருஞ் சுடரே - வேதாரணியத்திற்பெரிய சோதியே, பத்தி நிச்சயம் இல் வெறும் எனை ஆள் கொண்டு வீட்டில் வைப்பாய் - பத்திநிச்சயமில்லாத வெறிய கடையேனையும் அடிமைகொண்டு மோசஷத்தில் வைத்தருளும். எ-று.
அருள்பெறும் எனவைத்து அருளைச் சுரக்கின்ற வென்பது மொன்று; (பத்தி நிச்சயம் - திடபத்தி; உம்மைத்தொகையுமாம்). (75)
பெருங்கா சினித்தலங் கொண்டாடி யாடிப் பிறங்குகங்கை யருங்காசி நித்த முறைவோர் மறையை யமலர்வெற்பின் மருங்காசி ரிைத்தலை கொள்ள விடாவென்ன மார்பகத்திற் பருங்காசினித்தகைப் பூட்கொங்கை மங்கைக்குப் பாரித்தவே.
இ-ள்: பெருங்காசினித் தலங்கொண்டாடி ஆடிப் பிறங்கு - பெரிய நிலவுலகத்தார் கொண்டாடி முழுகி உயர்வடைகின்ற, அருங் கங்கை காசி நித்தம் உறைவோர் மறைசை அமலர் வெற்பில் மங்கைக்கு - அரிய கங்கைநதியைக் கொண்ட காசியில் எக்காலத்தும் வீற்றிருக்கின்ற வராகிய மறைக்காட் டிறைவனாரது மலையில் மங்கைப்பருவ முடை யாளுக்கு, மருங்கு ஆசு இனித் தலை கொள்ள விடா என்ன -

மறைசையந்தாதி /25
இடையைச் சிறிதேனும் மேல் தலைகொள்ள விடாவென்னும் வண்ணம், மார்பு அகத்திற் பருங்காசின் இத்தகைப்பூண் கொங்கை பாரித்தமார்பின்கணி பருத்த மணிகளையுடைய இத்தகுதியாகிய ஆபர ணத்தையணிந்த தனங்கள் பணைத்தன. எ-று.
உறைவோர் அமலர் என்பவற்றுக்கு உறைகின்றவரும் மலரகிதருமாகிய சிவனது எனக் கூறலும் வழுவன்றென்க. இயற்கைப்புணர்ச்சி புணர்கின்ற காலத்துப் பதினொராண்டும் பத்துத்திங்களும் புக்காளாதலின் மங்கை ஈண்டுக் காலவாகு பெயர். அக்காலந்தான் பன்னிரண்டும் பதின் மூன்றுமாய இருவற்சரங் கொண்டதென்ப. (பருவங்கூறி வரவுவிலக்கல்) (76)
பாரிக்கு மார முலையுமை யாட்கும் பகிரதியா நாரிக்கு மாரப் புரமுஞ் சிரமு நயந்தளித்தோன் முரிக்கு மாரனைத் தந்தான் மறைசையின் முர்த்திதந்தான் றாரிக்கு மாரனுக் கில்லையென் மேற்பகை சாதிப்பதே.
இ-ள்: பாரிக்கும் ஆர முலை உமையாட்கும் பகிரதி ஆம் நாரிக்கும் - பருத்த முத்தமாலையை அணிந்த தனத்தையுடைய உமாதேவிக்கும் கங்கையாகிய பெண்ணுக்கும், ஆரய் புரமுஞ் சிரமும் நயந்து அளித்தோன் - அவர் தங்கும்வண்ணம் (நிரலே பாதித்) திருமேனியையுந் தலையையும் மகிழ்ந்து கொடுத்தவரும், முரிக்குமரனைத் தந்தான் - (சரபுக்க தேவர் துன்பங்களைதற் பொருட்டு அரசுரரை யழிக்கத்தக்க) வலிமை படைத்த முருகக்கடவுளை உதவியவரும், மறைசையில் முர்த்தி - வேதவனத்தில் அருள்வடிவு கொண்டமர்பவருமாகிய சிவன், தார் தந்தான் - (நானிரந்த கொன்றை) மாலையைத்தந்தனர், இக்கு மாரனுக்கு என்மேல் பகை சாதிப்பது இல்லை - (அதனாற்) கருப்புவில்லையுடைய மதனுக்கு (இற்றை வரையுஞ் சாதித்தது இனி) என்மாட்டுப் பகைசாதித்தலில்லை. எ-று.
முன் கொன்றை வாங்கும் என்றதினாலும் சிதம்பரச்செய்யுட் கோவையில் "தண்ணென் கடுக்கை கொணர்ந்தாரோ தம்மினென’ என்றதினானும், காசிக்கலம்பகத்திலே “தண்ணொன்று நறையிதழித் தாரென்றாள்’ எனவும், “நல்காரே மின்னங் கடுக்கையிவட்கு’ எனவுங் கூறியதினானும், பொதுமையிற் கிடந்தார் என்றதற்குக் கொன்றைமாலை என்றாம். இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்துக் கொன்றை மாலை பெற்ற துரைத்தல். இதுவுங் கிளி முதலியவற்றைத் தூதுவிடுதலு முதலிய இன்னோரன்னவா யகத்தமிழ் நெறிப்படாது வருவன வெல்லாம் புறப்பொருளில், “கடவுட்பக்கத்து

Page 82
126/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
மேனேர்பக்கத்து மடவரன் மகளிர் மகிழ்ந்த பக்கமும்’ என்றவிதிப்பாற்படும்; கடவுண் மாட்டு மானுடப் பெண்டிர் நயத்தபக்கத்து வெண்பாமாலையில் இசைத்த செய்யுள், “அரிகொண்ட கண்சிவப்ப வல்லினென் னாகம் - புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரி வண்டு - பன்னலங் கூட்டுண்ணும் பனிமலர்ப்பா சூரென் - னுண்ணலங் கூட்டுண்பா னுர்’ என்பதே. மகிழ்ந்தபக்கமும் என்றது பற்றியே நூலியற்றுமாசிரியர் தத்தமக்கு வேண்டியவாறே விரிப்பாராயினர்.
சாதிப்ப ராகம மென்பயன் வேட்டுவன் சாதிப்புழு வேதிப்ப ராகம் பெறல்போல மெய்க்குரு வாற்பெற்றியான் பூதிப்பராக மணிந்தன்ப னாவதெப் போதருளா யாதிப்பராகவி னான்மறைக் கானத்தெணம்புயனே.
இ-ள்: ஆதிப்பரா - முதற்கடவுளே, கவின் நான்மறைக் கானத்து அம் என் புயனே - அழகை யுடைய நான்மறைக் காட்டில் வீற்றிருக்கும் அலங்காரத்தைப்பெற்ற எட்டுப்புயத்தை யுடையவரே, ஆகமம் சாதிப்பள் பயன் என் - (அநுபவ ஞானமின்றி) ஆகமத்தைச் சாதிப்பார் அதனாற் பயன்யாது?, வேட்டுவன் சாதிப்புழு வேதிப்ப - வேட்டுவன் ஓர் சாதிப்புழுவை வேதிப்ப, ராகம் பெறல் போல - (அது அவ்வேட்டுவனது) வடிவத்தைப் பெறுதல்போல, யான் - நான், மெய்க்குரவால் பெற்று - உண்மையையுடைய ஞானாசாரியரால் (உபதேசத்தைப்) பெற்று (முன்னிலை மாறி), பூதிப் பராகம் அணிந்து அன்பன் ஆவது எப்போது அருளாய் - திருவெண்ணிற்றைப் புனைந்து மெய்த் தொண்டனாவது எக்காலத்தில், உரைத்தருளும். எ-று (78)
புயற்கூடு போம்பொழில் வேதா ரணியன்பொன் னாட்டகத்தே மயற்கூடு மாடவர் நாரிய ராருயிர் வாரியுண்ணு முயற்சுடு தாக்க விறாற்கூ டுடையு முடிச்சிலம்பா கயற்கூடு கண்ணிடை யாகாயந் தீட்டுதல் கைக்கரிதே.
இ-ள்: மயற்கு ஊடும் ஆடவர் நாரியர் ஆர் உயிர் வாரி உண்ணும் - மயக்கத்தால் ஊடுகின்ற காளையரதும் மாதரதும் அரிய ஆவியை வாரியுண்ணாநின்ற, முயற்கூடு தாக்க இறால் கூடு உடையும் முடிச்சிலம்பா - சந்திரன் தாக்கத் தேன்கூடு உடையப்பெற்ற சிகரத்தைக் கொண்ட மலையை யுடையாய், புயற்கு ஊடு போம்பொழில் வேதாரணியன் பொன்நாட்டு அகத்து - மேகமண்டலத்துக்கு ஊடாகப் போகுஞ் சோலைசூழ்ந்த மறைக்காட்டில் இறைவரது பொன்னாட்டுக்கண்

மறைசையந்தாதி /27
வாழும், கயல் கூடு கண் இடை ஆகாயந் தீட்டுதல் கைக்கு அரிது - கயல் சேர்ந்தாற்போன்ற கண்ணையுடையாளது இடையானது ஆகாயமாயிற்று (ஆதலாலதனை மனத்தாலெழுதலாமன்றிக்) கையாலெழுதுதல் அரிது. எ-று.
இடையாகாயம் என்பதற்கு இடையாகிய ஆகாயமென்னினுமாம் (பாங்கி தலைமக ளவயவத் தருமை சாற்றல்) (79)
அரிதிரி கைக்கு வடுவாழ் மறைசை யரன்வறுமை பெரிதிரி கைக்குவந் தாண்டான்மெய்ஞ் ஞானப் பிறங்குசுடர் விரிதிரி கைக்கும் வினையே னிடத்தினில் மேவியசக் கிரிதிரி கைக்கு நிகராம் பிறப்புங் கெடுவிப்பனே.
இ-ள்: அரி திரி கைக்குவடு வாழ் மறைசை அரண் - சிங்கமும் யானையும் வாழும் வேதவனத்தில் வீற்றிருக்கின்ற சங்கார கருத்தரும், வறுமை பெரிது இரிகைக்கு வந்து ஆண்டான் - (அருளின்மையாகிய) வறுமை முற்றாய் நீங்கும் பொருட்டு (வலிது) வந்து அடிமை கொண்டவரும், பிறங்கு மெய்ஞ்ஞானச் சுடர் விரி திரி - விளங்காநின்ற மெய்ஞ்ஞான விளக்கில் விரிந்த திரியானவருமாகிய சிவன், கைக்கும் வினையேன் இடத்தினில் மேவிய - (நல்லோரால்) வெறுக்கப்படும் வினையேன்கட் பொருந்திய, சக்கிரி திரிகைக்கு நிகர் ஆம் பிறப்புங் கெடுவிப்பான் - குயவனது திரிகைக்கு நேராகிய பிறவியையும் (தமது அருளாற்) கெடுவிப்பார். எ-று.
திரி கைக்குவடு - திரியுங் கையையுடைய மலை என்னவே யானையாம்; அது "வருங்குன்ற மொன்றுரித்தோன்’ போல்வது. “அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம்” என்றலின் வறுமை அருளின்மையென்றாம். இரிகைக்கு உவந்து எனவைத்து மகிழ்ந்து எனக் கூறுவது மொன்று. பிறப்பும் என்புழி உம்மை இழிவுசிறப்பு.
கெடுப்போன கந்தையை நான்முகன் கேசவனார்க்குமுண்டோன் கடுப்போன கந்தையற் பங்கில்வைத் தான்மறைக் கானுவந்தா னடுப்போன கந்தை யுடையான் சிலம்பினம் மாதையொப்பாய் வடுப்போன கந்தை மணிமுலை நின்குறை மற்றிலையே.

Page 83
123/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ள்: நான்முகன் கேசவனார்க்கும் அகந்தையைக் கெடுப்போன் - பிரமனுக்கும் மாயவனுக்கும் ஆணவத்தைக் கெடுத்தவரும், கடுப் போனகம் உண்டோன் - நஞ்சவுணவை அமுது செய்தவரும், தையல் பங்கில் வைத்தான் - சத்தியை (வாம) பாகத்தில் வைத்தவரும், மறைக்கான் உவந்தான் - வேதவனத்தை மகிழ்ந்தவரும், கந்தை போன நடு உடையான் சிலம்பில் நம்மாதை ஒப்பாய் - ஆடை நீங்கிய அரையை யுடையவருமாகிய சிவனது மலையில் நம் மங்கையை யொத்த அணங்கே, வடுப் போல் நகந் தை மணி முலை நின்குறை மற்று இலை - வடுவைப்போல நகந் தைத்த மணி போலும் (அரிய) தனமே (அவளோடு ஒத்தற்கு) நின் மாட்டுள்ள குறை பிறிது இல்லை. 6T-g).
கெடுப்போன் இயல்பிற் காலம்பிறழ்ந்தது; திருவாதவூரர் புராணத்தில் “அந்தமால்விதி தேடுவார் மதிசூடுவார்’ என்றது பே ால. நடுப்போன கந்தையுடையான் என்பதற்கு அரையில் நீங்கிய ஆடையுடையவரென்னில் “கழிந்த பற்றுடை வசிட்டன திருக்கையாய்” என்பது போல நின்றதென்க. இது திகம்பரனென்னும் பொருட்டு; நகந் தைக்கப்படுதல் முலைக்கு அழ கென்று மகிழ்வித்து உட்கோளுணர்வாள் மணிமுலை யென்றாள். மணி அழகுமாம். (தகையணங்குறுத்தல்) (81)
மற்றலத் தேரைய மின்றிநெஞ் சேயென்ன மாயங்கொலோ முற்றலத் தேரை விடுஞ்சாலிற் சங்க முழங்கு பண்ணைய் பொற்றலத் தேரை மறைமறைக் கானப் புனிதன்கல்லுட் பற்றலத் தேரைக்கு மேயளந் தானெப் படிப்படியே.
இ-ள்: நெஞ்சே - மனனே, ஏரை விடும் முற்று அலத்துச் சாலில் - ஏற்றைத் தூண்டாநின்ற (தொழில்) முழுதும் அமைந்த கலப்பையா
லுண்டாய உழவுச்சாலில், சங்கம் முழங்கு பண்ணை - சங்குக ளாரவாரிக்கும் வயலாற் சூழப்பட்ட, பொன் தலத்து ஏரை மறை மறைக்கானப் புனிதனி - (தன்மாட்டுள்ள பெரியதோ ரழகினாற்)
பொன்னிலத்துள்ள அழகைச் (சிறிதாகும் வண்ணம்) மறைக்கின்ற வேத வனத்தில் வீற்றிருக்குஞ் சிவபெருமான், கல்லுள் பற்றல் அத்தேரைக்குமே படி எய்படி அளந் தான் - கல்லுட் பற்றுதலாகிய அத்திறத்தையுடைய தேரைக்குமே படியை எவ்வண்ண மளந்தார், என்ன மாயங்கொல் - இது மாயமோ, ஐயம் இன்றித் தேர் - சங்கையின்றி யறிதி, மற்று அல - அதற்கு உணவுகிடைப்பது பிறிதொரு வழியானு மன்று. எ-று.

மறைசையந்தாதி /2e
அசை. மாயமோ வென்றாக்கி, கொல்லை அசையாக்கினுமாம். பொற்றலத்தேரை மறை என்பது சிலப்பதிகாரத்தில் ‘மண்டேய்த்த புகழினான்’ என்பது போலும். பற்றலத் தேரைக்கும் என்றது கோயிற்புராணத்தில் “பொன்றிகழ் பங்கய மூழ்கி’ என்பது போன்றது. (82)
படிகந் தனையனை யான்மறைக் காடன்பொற் பாணியில்வேல் பிடிகந் தனையரு டாதைய னாடகப் பேரவனைக் கடிகந் தனைமுகில் காணானை யேத்தக் கருதுநெஞ்சே விடிகந் தனைய மடவார் கலக விழிமையலே.
இ-ள்: நெஞ்சே - மனமே, படிகந்தனை அனையான் - பளிங்கை ஒத்தவரும், மறைக்காடன் - வேதாரணியத்தை யுடையவரும், பொன் பாணியில் வேல்பிடி கந்தனை அருள் தாதையன் - பொன்போலும் (அருமைத்) திருக்கரத்தில் வேலாயுதத்தை யேந்திய குமாரக்கடவுளை உதவிய தந்தையாரும், ஆடகப் பேரவனைக் கடி கந்து அனை முகில் காணானை - இரணியன் என்று பொன்னினது பெயரை யடுத்தவனைக் கொன்ற தூணாகிய தாயையுடைய முகில் போலும் மாயவனாற் காணப்படாதவருமாகிய சிவனை, ஏத்தக் கருது - துதிக்க எண்ணுதி, அனைய மடவார் கலக விழி மையல் இகந்து விடு - (நீ இத்துணை ஞான்று மணைந்து களித்த) அம்மகளிரது கலகத்தையுடைய கண்ணாலாகும் மயக்கத்தை நீக்கி விடு
(நிச்சயம் முத்தி சித்திக்கும்) எ-று.
“தயாபரகரும சாதாக்கியரைத் தியானவுணர்விற் சேர்வு செப்பிற் படிக நிறம்’ எனச் சதாசிவ ரூபத்திற் கூறினமை பற்றிப் படிகந்தனை யனையா னென்றார். தாதையன் என்பது கல்லாடத்தில் “சின்முலைக்கொடி மடந்தையள்’ என்பது போலும், கந்தனை முகில், புலியூரந்தாதியில், “கந்தனை யாகவந் தாற்கரி யானை’ என்பது போலும், அனைய என்பதை அல் நைய எனப் பிரித்து, அஞ்ஞானமாகிய இருள்கெட என்றுரைப்பினுமமையும். (83)
மையகற்றானை முகன்றாதை மாணிக்க வாசகனா மெய்யகற் றானை மகிழ்மறைக் காடனை வேண்டியுன்னுஞ் செய்யகற் றானைமுக் கோலந்த னிர்சுரஞ் சென்றனரோ துய்யகற் றானைப் புரந்தானன் னானுநந் தோகையுமே.

Page 84
13O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ஸ்: மை அகற்று ஆனை முகன் தாதை - (தம்மை வழிபடுவார்களது) குற்றத்தைத் தவிர்க்கின்ற யானை முகத்தையுடைய கணேசரது தந்தையும், மாணிக்கவாசகன் ஆம் மெய்ய கற்றானை மகிழ் மறைக்காடனை-மாணிக்க வாசகராகிய மெய்ம்மையையுடைய பண்டிதரை யுவந்த வேதவனத்தருமாகிய சிவனை, வேண்டி உன்னுஞ் செய்ய கல்தானை முக்கோல் அந்தணி - வேண்டித் தியானிக்கின்ற காவிக்கல் அளையப்பட்ட ஆடையையும் திரிதண்டத்தையுங் கொண்ட வேதியரே, தும்ய கற்று ஆனைய்புரந்தான் அன்னானும்நந்தோகையுஞ்சுரஞ்சென்றனரோ - சுத்தமாகிய கன்றையுடைய பசுவைக் காத்த மாயவனை யொத்தா னொரு காளையும் (இலக்குமியையொத்த) நமது மங்கையுஞ் சுரத்திற் போயினரோ? கண்டிரேற் சொல்லும். எ-று.
கன்று ஆன் என்பது கற்றான் என நின்றது, திருவாசகத்தில், “கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே’ என்றது போல, “மென்றொடர் மொழியுட் சிலவேற் றுமையிற் - றம்மின வன்றொட ராகா மன்னே’ என்பது விதி. (ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல்.) (84)
தோகை யிராமன் மதன்பான மங்கந் துளைத்ததுகா ரீகை யிராமன் விதிகற்ப மானதென் மீதிற்சற்று மோகை யிராமன் மறந்தா ரிராவண னுட்கவென்ற வாகை யிராமன் பணிமறைக் காடர்வந் தாரில்லையே.
இ-ள்: தோகையிர் - மாதரே, ஆ - ஆ. மன்மதன் பாணம் அங்கந் துளைத்தது - மதனது பூவம்பு சரீரத்தைத் துளைக்கவும், கார் ஈ கை இரா மன் விதி கற்பம் ஆனது - கருமையைத் தருதலையுடைய இரவும் நிலைபெற்ற பிரமகற்பமாகவும், இராவணன் உட்க வென்ற வாகை இராமன் பணி மறைக் காடர் வந்தார் இல்லை - இராவணன் அஞ்ச வென்ற வெற்றியையுடைய இராகவன் வணங்கிய திருமறைக்காடர் வந்திலார், என் மீதில் சற்றும் ஒகை இராமல் மறந்தார் - (அதனால்) என்மேற் சிறிதும் அன்பிராமல் மறந்தார் (இனிச் செய்யக்கிடந்தது யாது? சொல்லுமின்) எ-று.
துளைத்து ஆனது என்னும் முற்றுக்கள், சொற்றிரியினும் பொருள் திரியா வினையெச்சமாய்க் “கானவ ரிய வில்வாய்க் கடுங்கணை தொடுத்தலோடு - மானினம் பெயர்ந்ததாய ரார்த்தன ரணிந்த திண்டோ - டானொன்று முடங்கிற் றொன்று நிமிர்ந்தது சரம்பெய்மாரி - போனின்ற தென்ப மற்றைப் பொருவருஞ் சிலையி னாற்கே” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுள்போல நின்றன.

மறைசையந்தாதி /3)
நின்றபடி நிற்ப மறந்து வந்திலாரென்னினுமமையும். அப்பொருட்கு வினைமுற்று எச்சமாயிற்றென்க. வினைமுற்றே எச்சமாகுமென்றும், முற்றுக்கள் திரிந்து எச்சமாகு மென்றும் எச்சமே முற்றாமென்றுங் கூறுவார் கருத்தை ஆங்காங்குக் காண்க. (இது கடவுண்மாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்தில் இரவினிட்டம்.) (85)
வந்தித்திக் குங்கனை யுங்கொண்ட வேள்பணி மான்குழற்கா டுந்தித்திக் குங்கனி வாயும்வெண் முரலு மொண்குழையும் பந்தித்திக் கும்பெறத் தோன்றிய வேதப் பதியன்பொற்றா ளந்தித்திக் குந்தகு மென்னமன் றாடு மரன்கிரிக்கே.
இ-ள்: வேதப் பதியன் - மறைக்காட்டை யுடையவரும், பொன் தாளந் தித் திக்குந் தகும் என்ன மன்று ஆடும் அரன் கிரிக்கு - அழகாகிய தாளந் தித்திக்குந் தகும் என்ன (ப்பொன்) அம்பலத்தில் ஆடுகின்ற சங்கார கருத்தருமாகிய சிவனது மலையில், இக்குங் கணையுங் கொண்ட வேள் வந்தித்துப் பணி மான் குழல் காடும் - கருப்பு (வில்லையும்) (மலர்) அம்பையுங் கொண்ட காமனும் வழிபட்டு வணங்குகின்ற மங்கையுடைய கூந்தலாகிய வனமும், தித்திக்குங் கனிவாயும் - மதுரிக்கும் பழத்தையொத்த வாயும், வெள் முரலும் - வெள்ளிய நகையும், ஒள் குழையும் - ஒள்ளிய காதும், பந்தித் திக்கும் பெறத் தோன்றிய - வரிசையாகிய (இந்த வெய்ய) திசையும் பெறும் வண்ணந் தோன்றின (இ. தென்ன மாயமோ நெஞ்சே சொல்லுதி) எ-று. (86)
குழற்காடு தொகையுருவக மாயினமையில் காடு மிகுதிப் பொருட்டன்று. தகுதியின்மையணி. (தலைமகன் றலைமகள துருவு வெளிப்பாடு கண்டு சொல்லியது.)
அரம்பையங் காட்டக வேதா ரணியத்த னாவியச்சுக் குரம்பையங் காட்டவல் லான்சித சித்தன் குரூஉச்சடிலச் சிரம்பையங் காட்ட வணிந்தோ னரவிந்தச் சேவடியென் பரம்பையாங் காட்ட வெளிமுற்பஞ் சாகப் பறந்திடுமே.
இ-ள்: அரம்பை காட்டு அக வேதாரணியத்தன் - வாழைக் காட்டிடத்தைக் கொண்ட திருமறைக்காட்டையுடையவரும், ஆவி அச்சுக் குரம்பை அங்கு ஆட்ட வல்லான் - உயிரது காயமாகிய கூட்டை அங்ங்ணம் ஆட்டவல்லவரும், சித் அசித்தன் - சித்தும் அசித்தும் ஆனவரும், குரூஉச் சடில சிரம் பயம் காட்ட அணிந் தோன் - (செந்) நிறத்தைக் கொண்ட சடாமுடியிற் கங்கையைக் காட்டப்

Page 85
132/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
புனைந்தவருமாகிய சிவனது, அரவிந்தச் சேவடி - தாமரைமலர் போலுஞ் செம்மையாக்கிய திருவடி, என்பரம்- எனக்குப் பாரமானது, பயங் காட்ட எரிமுன் பஞ்சு ஆகப் பறந்திடும் - (அதனாற் பிறப் பிறப்பாதியவற்றால் வரும்) பய மெல்லாம் விறகிற் பற்றிய அக்கினிக்கு முற்பட்ட பஞ்சுபோல விரைவில் அழியும். எ-று.
பட்டினத்துப்பிள்ளையார் பாடலில் “ஆட்டவல்லானு மொருவனுண்டே தில்லையம்பலத்தே’ என்பதுகொண்டு அங்காட்ட வல்லா னென்றார். பறந்திடும் என்பது விரைவிலழியு மென்னும் பொருள் தருவதோ ரிலக்கணை, (87)
பறக்கும் பருந்துவக் குங்கழி யூன்முடைப் பற்றுளதா யிறக்கும் பருந்துவக் காக்கையை நீக்கி யினிப்பொதிய வறக்கும் பருந்து தமிழ்மறைக் காட னருளைக்கொண்டு திறக்கும் பருந்துதித் தற்கரி தாமுத்திச் சீர்க்கதவே.
இ-ள்: பறக்கும் பருந்து உவக்குங் கழி ஊன் முடைப் பற்று உளது ஆப்-பறக்கின்ற பருந்துகள் மகிழும் மிகுந்த மாமிசத்தின் நாற்றப்பற்றுள்ளதாகி, இறக்கும் பருந் துவக்கு ஆக்கையை நீக்கி - துஞ்சுகின்ற பருத்த தோலையுடைய காயத்தை யொழித்து, உம்பருந் துதித்தற்கு அரிது ஆம் சீர் முத்தின் கதவு - தேவருந் துதித்தற்கரிதாகிய சிறப்பையுடைய வீட்டுக்கதவை, பொதிய அறக் கும்பர் உந்து தமிழ் மறைக்காடன் அருளைக் கொண்டு இனித் திறக்கு - பொதியமலையில் வீற்றிருக்கின்ற புண்ணியத்தையுடைய அகஸ்தியமுனிவர் உயர்த்திய தமிழையுடைய திருமறைக்காட்டில் இறைவரது திருவருளைக்கொண்டு இனித் திறப்பேன். எ-று.
ஆக்கையை நீக்கி அருளைக்கொண்டு மோக்கக் கதவைத் திறப்பே னென்றியைக்க. “கடதற வென்னும், அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோடென்னே னல்லென வரூஉ மேழுந் - தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே’ எனத் தொல்காப்பியத்திலும், “குடுதுறு வென்னுங் குன்றியலுகரமோ - டல்லன் னென்னே னாகு மீற்ற - விருதிணைமுக்கூற் றொருமைத் தன்மை” என நன்னூலிலும், “புல்லுங் குடுதுறு மென்னேனும் பொற்றொடியா - யல்லுந் தனித்தன்மையாம்’ என நேமிநாதத்திலும், “குடுதுறு வென்னுங் குன்றியலுகரமோ - டல்லன் னென்னே னாகு மீற்ற-விருதிணை முக்கூற் றொருமைத் தன்மையும்’ என இலக்கணவிளக்கத்திலுங் கூறியதனானும்,

மறைசையந்தாதி /33
ን ን ፌ &
திருக்கோவையரில் “மடுக்கோ’ “படுக்கோ’ என்றற் றொடக்கத்தனவற்றுக்குத் தன்வினையாகப் பொருளுரைத்தமையானும் நச்சினார்க்கினியர் சிந்தாமணியில், “தள்கு’ என்பதைத் தன்வினை யுரைக்குந் தன்மைச்சொல்லெனக் கூறுதலானும் அகப் பொருளில் பிரிந்துவருகென்றலின் பொருள் வருவேனெனப் படுதலானும், அதனிலக்கியமாகிய தஞ்சைவாணன் கோவையில், “நின்றே வருவல்’ எனக் கூறுதலானும் சீர்காழிக் கோவையிலும் வெங்கைக் கோவையிலுங் கோடீச்சுரக்கோவையிலும் அப் பொருள்பட வருதலானும், திறக்கு என்பதற்கு இதுவே பொருளெனத் தெளிக. (88)
கதவாயு நீரங்கி மண்காய மான கடவுளெனை யுதவாயு மப்பணு மானவன் வேத முறைவனத்தான் பதவாயு தக்கொடி வேடாதை கீர்த்தியைப் பாடுதற்குச் சதவாயு நாவுந்தந் தானில்லை வாணி தலைமகனே.
இ-ள்: காயம் கதவாயு அங்கி நீர் மண் ஆன கடவுள் - வானமும் உக்கிரத்தையுடைய காற்றும் அக்கினியுஞ் சலமும் பிருதிவியுமாகிய தேவும், எனை உதவு ஆயும் அப்பனும் ஆனவன் -என்னையும் பெற்ற தாயும் தந்தையுமானவரும், வேதம் உறை வனத்தானி - ஆரணங்களிருக்குங் காட்டையுடையவரும், பத ஆயுதக் கொடிவேள் தாதை கீர்த்தியைப் பாடுதற்கு - கோழிக் கொடியையுடைய முருகக்கடவுளது பிதாவுமாகிய சிவனது கீர்த்தியைப் பாட, வாணி தலைமகன் சத வாயு நாவுந் தந்தான் இல்லை - சரசுவதியுடைய கணவனாகிய பிரமன் நூறு வாயையும் நாவையும் (எனக்குத்) தந்திலன். எ-று.
தோற்றமுறைக்கும் அரதனமாலையணிக்கும் பிறழ்ந்து, தொல்காப்பியத்தில் “தலையினு நெஞ்சினு மிடற்றினு நிலைஇ’என்பதுபோலச் செய்யுளின்பம் படநின்ற முதலடியை முறைதந்து பொருளுரைத்தாம். (89)
மகர சலந்தர ளந்தரு வேத வனத்தன்புய சிகர சலந்தர னாவியுண் டானடல் சேர்ந்திலங்கு முகர சலந்தர வாலாச னாவுரி யங்கையொற்றைப் புகர சலந்தரப் போர்த்தா யெனவினை பொன்றிடுமே.
இ-ஸ்: மகர சலந் தரளந் தரு வேதவனத்தன் - சுறாமீனை யுடைய கடல் முத்தைத் தருகின்ற மறைக்காட்டை யுடையவரும், புய சிகர சலந்திரன் ஆவி உண்டான் - புயமலையையுடைய

Page 86
134/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சலந்தராசுரனைக் கொன்றவருமாகிய சிவனை, அடல் சேர்ந்து இலங்கும் உகர - வலிமைபொருந்தி விளங்காநின்ற உகர மெனப்பட்ட, சகந் தர ஆலாசனா - வயிரத்தைக் கொண்ட காள போசனரே, அம் ஒற்றைக் கைப் புகள் அசலம் உரி தரப் போர்த்தாய் என வினை பொன்றிடும் - அழகாகிய ஒரு கையையுங் கபில நிறத்தையுமுடைய யானை தோலைத் தரப் போர்த்தவரே யென்று துதித்துக் கொள்ளப் (பிறவிக்கேதுவாகிய) இருவினைகளும் அழியும். எ-று.
சங்காரத்தொழிலை யியற்றலால் அடல்சேர்ந்து என்றார். உவ்வென்பது சிவனுக்குப் பெயராதலைக் கந்தரலங்காரத்தில் “ஆலுக்கணிகலம் வெண்டலைமாலை” என்பதனா லுணர்க. (90)
பொன்றுதை யம்புயத் திண்கால னஞ்சிப் புரண்டுவிழ நின்றுதை யம்புயத் தான்மறைக் காட னிழல்வெற்பினி ரொன்றுதை யம்புயாங் கன்வாய் விழுங்கிய தோமணித்தே ரென்றுதை யம்புயன் முடிய தோவின் றியம்பிடுமே.
இ-ள்: பொன் துதை அம் புயத் திண் காலன் அஞ்சிப் புரண்டு விழ - ஆபரணம் நெருங்கிய அழகாகிய புயத்தையுடைய வலிய நமன் பயந்து புரண்டு வீழ, நின்று உதை அம்புயத்தான் மறைக்காடன் நிழல் வெற்பினி - நின்று உதைத்த திருவடியாகிய தாமரைமலரை யுடையராய வேதபுரீசரது குளிர்ச்சியைக் கொண்ட மலையில் வாழும் மடவீர், ஐயம் ஒன்றுது - சங்கை பிறக்கின்றது, மணித்தேள் என்று உதை - மணியைக்கொண்ட தேரையுடைய உந்தச் சூரியனை, புயங்கண்வாய் விழுங்கியதோ - இன்றைக்குக் கேது வாய் விழுங்கிற்றோ, அம்புயல் முடியதோ - (அன்றேல்) நீர்மேகம் மூடிற்றோ, இயம்பிடும் - (தெரிதிரேற்) சொன்மின் எ-று.
ஒன்றுகின்ற தெனற்பாலது, பட்டினத்தடிகள், “வேகுதே தீயதனில் வெந்துபொடி சாம்ப - ராகுதே’ எனக் கூறியது போல மரீஇயிற்று. புயங்கன் என்பது பாரதத்தில் “உரகருந் தங்கள்வாய் விடங்கள் கொன்றென வீழ்ந்தர்’ என்றாற்போல நின்றது. உது பண்டறிசுட்டு. (இரவின்ட்டம்) (91)
இயக்கோடை யாம்பன் முசுகுந்த னேத்து மிறைவவண்டு முயக்கோடை யாம்பன் மலர்மறைக் கான்முத லேசுருதிச் சயக்கோடை யாம்பன்முத் தேயடி யேன்சட் டகம்விடுநாண் மயக்கோடை யாம்பன் மருந்தே நின்பார்வை வழங்குதியே.

மறைசையந்தாதி /35
இ-ள்: இயக்கு ஓடை ஆம்பல் முசுகுந்தன் ஏத்தும் இறைவ - (பாகள்) தூண்டுகின்ற (நெற்றியில்) பட்டத்தைக் கொண்ட யானையையுடைய முசு குந்தச் சக்கிரவர்த்தி துதித்த தலைவரே, ஓடை வண்டு முயக்கு ஆம்பல் மலர் மறைக்கான் முதலே - ஒடையில் வண்டுகளைப் புணர்க்கின்ற ஆம்பற் பூ மலரப்பெற்ற வேதவனத்து முதல்வரே, சுருதிச் சயக் கோடை ஆம்பல் முத்தே - வேதமாகிய வெற்றியைக்கொண்ட குதிரையையுடைய மூங்கில் முத்தே, மயக்கோடு ஐ ஆம் பன் மருந்தே - (அன்பரது) மயலுக்குங் கோழைக்குமான நெருங்கிய ஒளஷதம் போல்வாரே, அடியேன் சட்டகம் விடும் நாள் நின்பார்வை வழங்குதி - அடியேன் காயத்தைத் துறக்கும் நாளில் (மரணவேதனை நீங்க) நுமது திருநோக்கத்தைத் தந்தருளும். எ-று.
கோடைக்கியைந்தமையிற் சயமென்றார். (92)
குதிக்குஞ் சிதரரிக் கட்கயற் பாவை கொழுநன்மன்றிற் சதிக்குஞ் சிதநடத் தான்கொன்றை மாலை தவழ்குழவி மதிக்குஞ்சி தங்கிய வேணியன் வேத வனத்தலத்தி ஆதிக்குஞ் சிதலை யெறும்பாதி பேறு முரைக்கரிதே.
இ-ள்: குதிக்குஞ் சிதர் அரிக்கண் கயல் பாவை கொழுநன்குதிக்கின்ற சிதறும் வரியையுடைய விழியாகிய கயலைக் கொண்ட உமாதேவிக்கு நாயகரும், மன்றில் சதிக் குஞ்சித நடத்தான் - பொன்னம்பலத்திற் (புரிந்தருளுந்) தாளவொத்துக் (கிசைந்த) குஞ்சித நடனத்தை யுடையவரும், கொன்றை மாலை தவழ் குழவி மதிக் குஞ்சி தங்கிய வேணியன் - கொன்றை மாலையையுந் தவழும் இளம்பிறையையும் புனைந்த குஞ்சி பொருந்திய சடையையுடையவருமாகிய சிவனது, வேத வனத் தலத்தின் உதிக்குஞ் சிதலை எறும்பு ஆதி பேறும் உரைக்க அரிது - திருமறைக் காட்டிற் பிறக்குங் கறையான் எறும்பு முதலியவற்றின் பேறுஞ் சொல்ல அரிது. எ-று.
குதிக்கும் வினை கயன்மேற்று. உரைக்கரிது என்பதை உரைக்கு அரிது என வைத்துச் சொல்லுக்கு அரிது எனக் கூறினுமமையும். (93)
உரைத்தென்ன வன்மை பரன்மறைக் கானுறை யோங்கன்முகி னிரைத்தென்ன வன்மலி பூங்குழ லானெஞ் செனுமிரும்பைக் கரைத்தென்ன வந்தகைய் பூண்மார்பஞ் சேரக் கருதுபொதி வரைத்தென்ன வன்கொடி சாடிய வேல்விழி வானகையே.

Page 87
136/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இ-ஸ்: பொதி வரைத் தென்னவன் கொடி சாடிய வேல்விழி வால் நகையே - பொதிய மலையையுடைய பாண்டியனது துவசமாகிய சேலைவென்ற வேற்கண்ணையும் வெண்மையாகிய பல்லையுமுடைய மாதே, வன்மை உரைத்து என்ன - சமர்த்தைச் சொல்லி (அதனாற் பெறுவது) யாது, பரன் மறைக் கான் உறை ஓங்கல் - சிவனது வேதவனத்திலிருக்கு மலையில், முகில் நிரைத்தென்ன அல் மலி பூங் குழலாள் - மேகம் நிரைந்தாற் போல இருள் நிறைந்த மலரைக்கொண்ட கூந்தலை யுடையாள், என்ன அம் நகைப்பூண் மார்பஞ் சேர - எனது அழகாகிய ஒளியைக்கொண்ட ஆபரணத்தைப்புனைந்த மார்பைத் தழுவ, நெஞ்சு எனும் இரும்பைக் கரைத்துக் கருது - (நினது) மனமென்னப்பட்ட இரும்பைக் கரைத்து எண்ணுதி. எ-று.
வால் நகையே பூங்குழலாள் என் மார்பைச் சேர நீ நெஞ்சைக் குழைத்து எண்ணுதி என முடியும். உரைத்து என்னும் வினையெச்சம், வருவித்த பெறுவது என்பதின் முதனிலையோடு முடிந்தது, “செய்வியென் வினையுட் செய்வினை சிலவே' என்னும் இலக்கணக்கொத்து விதியால் நிரைத்தென நின்றது. "நிரையாமாச் சேர்க்கு நெடுங்குன்ற நாட” என்னும் நாலடியார்ச் செய்யுளு மிது. நிரைத்தாற்போல எனப் பொருள் கூறில், முகில் இரண்டாவதாம். பொதி என்பது, “பொதியிலே விளைகின்றன சந்தனம் பொதியி னதியிலே விளைகின்றன முத்தம்’ என்னுந் திருவிளையாடற் புராணச் செய்யுள்போல நின்றது. வேற்கண் ஒருசொல், கந்தபுராணத்தில் “கூற்றமன்ன வேற்கண்ணி’ என வந்ததுமிது. (தன்னிலை தலைவன் சாற்றல். (94)
வானண்ட ருண்டி வழங்குஞ்செவ் வாய்ச்சி மணிகறங்கு மானண்டர் வேயிசை கேட்கப் பொறாளனை வாய்கவைத்த கானன் டளையினி னத்தீனு முத்தினைக் காமரன்னந் தானண்ட மென்றணைக் கும்மறைக் காட்டுறை சங்கரனே.
இ-ள்: கவைத்த கால் நண்டு அளையினில் நத்து ஈனும் முத்தினை-கவர்பட்ட காலையுடைய ஞெண்டுகளது அளையிற் சங்கு ஈனும் முத்தை, காமர் அன்னம் அண்டந்தான் என்று அணைக்கும் மறைக்காட்டு உறைசங்கரனே - அழகையுடைய அன்னம் (தனது) முட்டையேயென்று அணைக்கின்ற வேதவனத்தில் வீற்றிருக்குஞ் சங்கரனே, வான் அண்டர் உண்டி வழங்குஞ் செவ்வாய்ச்சி - ஆகாயத்தில் வாழுந் தேவர்களது உணவாகிய அமுதைக் கொடுக்கின்ற சிவந்த வாயையுடைய (நம்) மாது, மணி கறங்கும் ஆன் அண்டர் வேய்

மறைசையந்தாதி /37
இசை கேட்கப் பொறாள் அணைவாய் - (நும்மாட்டு வைத்த காதலால்) மணி ஒலிக்கும் ஏற்றையுடைய ஆயுரது வேய்ங்குழலி (லெழுமினிய) இசையையுங் கேட்கப் பொறாளாய்ப் (பெரிது படருகின்றாள் அது தீர அவளைத்) தழுவுதிர். எ-று.
வானண்டர், திருக்கோவையாரில் “கருங்கண் ணனையறி யாமை நின்றோன்’ என்பது போல நின்றது. வான் பெருமையுமாம். ஆன் ஏற்றுக்குமாதலைத் திருச்செந்திலந்தாதியில், “அங்கயிலையை யேய்ந்த தகை யானைக்கு’ என்பதனானறிக. காமர் காதலுமாம். தான் அசையுமாம். தானாக என் னினு மமையும். சங்கரனே அணை வாய் என்றமையிற் கருத்துடையடையணி. மறைக்காட்டு உறை சங்கரனே, ஞெண்டளையிற் சங்கு ஈன்ற முத்தை, அன்னம், அண்டம் என்று அணைக்கும், அதுபோலச் செவ்வாய்ச்சி மணியொலிக்கும் ஆனணிடரது வேயிசையையுங் கேட்கப்பொறாது மயலுறுகின்றாள், அம்மயலொழிய அவளைத் தழுவுதி, தழுவில், (நீ யின்றும் அயின்றறியாத) தேவாமிர்தத்தைத் தருவள் எனக் கூறலுமொன்று. அமிர்தத்தைச் செவ்வாயில் தருவள் என்பதுபடச் செவ்வாய்ச்சி யென்றாள். கடவுணிமாட்டு மானுடப்பெண்டிர் நயந்த பக்கத்தில் தலைவியோடணைய இறைவனை வருகவெனத் தோழி யிரத்தல். (95)
சங்க மடங்கலை சூழ்மறைக் காடன் றடஞ்சிலம்பிற் றுங்க மடங்கலை யன்னான் புரியுஞ்சொற் சூதையெண்ணேன் பைங்க மடங்கலை நேரும் புறவடிப் பார்வைதக்கோர் சிங்க மடங்கலை கற்பாரென் றார்பொற் சிலைநுதலே.
இ-ஸ்: சங்க மடங்கு அலை சூழ் மறைக்காடன் தடஞ்சிலம்பில் சிலைநுதலே - சங்குகளையுடைய மறியுந் திரை பொருந்திய கடல் சூழ்ந்த வேதவனத்தி லிறைவரது பெருமையாகிய மலையில் வாழும் வில்லையொத்த நெற்றியையுடைய மாதே, துங்க மடங்கலை அன்னான் - உயர்ச்சியாகிய சிங்கத்தை யொத்த (சயத்தையுடைய) தலைவர், பைங் கமடம் நேரும் புற வடிகலை நேரும் பார்வை - பசிய கூர்மத்தைப் போலும் புறந்தாளையும் மானைப் போலுங் கண்ணையுமுடையாய், மடஞ் சிங்கத் தக்கோர் கலை கற்பார் என்றார் - அறியாமைகுன்றப் பெரியோர் சாஸ்திரங்களைப் படிப்பாரென (நென்னற்) சொல்லி வைத்தார், புரியுஞ்சொல் சூதை என்னேன் - அன்று சொல்லிய சொற்குதைத் தேற்றிலேன் (இன்று அவள் பிரிந்ததினாற் றேறினேன்) எ-று.

Page 88
138/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
உயர்வுடை முயற்சியிற் கிளர்ந்ததினால், அன்னான் என்ற ஒருமை என்றார் என்ற பன்மையோடு மயங்கிற்று. திருவள்ளுவ நாயனாரும் “எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் - தேரான் பிறனில்புகல்’ எனப் பான்மயங்கக் கூறியதை யுணர்க. பிரிவு ஆறனுள் “ஒதலுந் தூது முயர்ந்தோர் மேன” எனத் தொல்காப்பியனார் கூறுதலின் இது உயர்ந்ததாயிற்று. விளியிரண்டில் ஈற்றது தலைவியைத் தோழி விளித்தது. மற்றது பாங்கியைத் தலைவன் விளித்தது. (கல்விக்குப் பிரிவு தலைமகனா னுணர்ந்த தோழி தலைமகட்குரைத்தல்.) (96)
சிலைக்கோடு மேல்வைத்த கோற்றே னுடைந்ததன் டேறல்வயற் றலைக்கோடு வேத வனப்பெரு மான்மலைச் சங்கரிதன் முலைக்கோடு பட்ட் தழும்பான் சடில முடிமணியாங் கலைக்கோடு வெண்பிறை யைச்செங்கை கூப்புதி கார்மயிலே.
இ-ள்: கார் மயிலே - கார்காலத்து மயில்போல்வாளே, சிலைக் கோடு மேல்வைத்த கோல் தேன் உடைந்த தண் தேறல் - மலைமுடிமேல் (ஈக்கள்) வைத்த கொம்பர்த் தேன்கூடு உடைந்ததனா லெழுந்த குளிர்ந்த தேன், வயல் தலைக்கு ஒடு வேதவனப் பெருமான் - கழனிக்கண் ஒடுந் திருமறைக் காட்டிற் பெரியவரும், மலைச் சங்கரி முலைக்கோடு பட்ட தழும்பான் - (இமய) மலையிலுதித்த உமாதேவியாரது தனக்கொம்பு பட்டதனாலான வடுவை யுடையவருமாகிய சிவனது, சடில முடி மணி ஆங் கலைக்கோடு வெள் பிறையைச் செங்கை கூப்புதி - சடையானியன்ற முடிக்கு மணியாகிய கலையையுடைய வளைந்த வெள்ளிய பிறையைக் கைகூப்பு. எ-று.
உடைந்த தணிடேறலும் கோடுபட்ட தழும்பும், கல்லாடத்தில், “தேவர்கோமான் சிறையரி புண்ணுக்காற்றாது’ என்பதிற் சிறையரி புண்ணுக்கு என்பது போல்வன. ஆட்டிய கரும்பும் இது. புணர்ச்சிக் களிப்புடைமைபற்றி நகையாடுவாள் கார்மயிலே யென்றாள். (பிறைதொழுகென்றல்.) (97)
காரண னோமத் தலைவே திகைமறைக் கானப்பரி பூரண னோமத்த மானவன் வில்லிடம் பொன்வெள்ளிமா வாரண நோமத்த வாரணங் காத்திடு மாழிப்புவி பாரண னோமத்த வேணியைத் தாங்கிய பால்விடையே.

மறைசையந்தாதி /39
இ-ள்: காரணன் - (சகத்துக்கு நிமித்த) காரணரும், ஓமத் தலைவேதிகை மறைக் கானப் பரி பூரணன் - யாகத்துக்குரிய தலைவேதிகையை யுடைய வேதாரணியத்துப் பரிபூரணரும், ஓம் அத்தம் ஆனவன் - பிரணவப்பொருளானவருமாகிய சிவனது, வில் பொன் - தனுப் பொன்(னாகும்)- இடம் வெள்ளி - தானம் வெள்ளி(யாகும்), மா ஆரணம் - குதிரை வேத(மாகும்), மத்த வேணியைத் தாங்கிய பால் விடை - உன்மத்தம் பூவையணிந்த சடையையுடைய (அச்) சிவனைப் பரித்த வெள்ளையேறு, நோம் மத்த வாரணங் காத்திடும் ஆழிப் புவி பாரணன் - (முதலையால்) நொந்த மத யானையைக் காத்த கடலாற் சூழப்பட்ட பூமியை யுண்ட மாயவன். எ-று.
ஒ சிறப்புப்பொருளில் வந்தது. இக்கவி "வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந் - தையலாய் நீயின்று நல்கினை நல்காயேற் - கூடலார் கோவோடு நீயும் படுதியே - நாடறியக் கெளவை யொருங்கு’ என்பது போல வந்ததனாற் பிரிந்துவழிஇயதன்றென்க. (98)
பாலம் பகவன் மயிலுரைக் கோவியற் பாவைபங்கன் ஞாலம் பகவன் மருப்பினிற் கின்றிடு நாரணனாங் கோலம் பகவ னவின்மறைக் காடன் குரூஉச்சடில மேலம் பகவ னமையாண் டருளுவன் மேதகவே.
இ-ள்: பால் அம்புக் கோ அகவல் மயில் இயல் பாவைபங்கன் - பாலையொத்த சொல்லையும் பாணத்தையொத்த கண்ணையும் நடித்தலைக் கொண்ட மயிலை யொத்த இயலையு முடைய உமாதேவியைப் பாகத்திலுடையவரும், ஞாலம் பக வல் மருப்பினில் கின்றிடுங் கோலம் ஆம் நாரணன் - பூமிகிழிய வலிய எயிற்றாற் கிழித்த பன்றியாகிய மாயவனும், பகவன் நவில் மறைக்காடன் - பிரமனுந் துதிக்கும் வேதவனத்தை யுடையவரும், குரூஉச்சடில மேல் அம் பகவன் - (மின்) நிறத்தைக்கொண்ட சடையின்மேல் நீரைத் தரித்த செல்வருமாகிய சிவன், மேதகை நமை ஆண்டு அருளுவன் - மேன்மை தக எம்மையும் அடிமை கொண்டருள்வன். எ-று. (99)

Page 89
14O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தகர நகரமுன் னாமைந் தெழுத்தள் தறுகண்முகப் புகர னகரத் தரவேழப் போர்வையர் பொங்கனலம் பகர நகரத்தள் வேதங்கள் பூசித்த பான்மைபெற்ற சிகர நகரத்த ரெற்களிப் பார்முத்திச் செந்திருவே.
இ-ள்: தகர நகர முன் ஆம் ஐந்து எழுத்தர் - தந்நகரமுதலிய பஞ்சாக் கரத்தையுடையவரும், தறுகண் முகப் புகள் கரத் தர அன வேழப் போர்வையர் - மறமாகிய முகத்தையுங் கபிலநிறத்தையுந் துதிக்கையையும் வலிமையையுமுடைய அந்தக் கயாசுரனது தோலையுடை யவரும், பொங்கு அனல் அம்பகள் - பொலிந்த அக்கினிக்கண்ணை யுடையவரும், அநகர் - மலரகிதரும், அத்தர் - (சகத்துக்குப்) பிதாவான வரும், வேதங்கள் பூசித்த பான்மை பெற்ற சிகர நகரத்தள் - வேதங்க ளருச்சித்த தன்மையைப்பெற்ற முடிபொருந்திய திருக்கோயிலை யுடைய வருமாகிய சிவன், எற்கு முத்திச் செந்திரு அளிப்பார் - (நாயிற் கடைப் பட்ட) எனக்கும் மோக்கலக்குமியைத் தந்தருள்வர். எ-று.
திருவாசகத்தில் 'நமச்சிவாய வாஅழ்க’ எனவும் தேவாரத்தில் 'நற்றுணையாவது நமச்சிவாயவே” எனவும் அருளப்பட்டமை பற்றி நகரமுன்னா மைந்தெழுந்தர் என்றார். (100)
மறைசையந்தாதி முலமும் உரையும் முற்றுப் பெற்றன.
 


Page 90

நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய
Syansı GaIGMG GSTSONS
[05DU56jSDJ 5 55Tf6 2Uí
காப்பு
மற்பயில் வாகன் கரவையில் வேலன் மகிபதிமேற் சொற்பயில் கோவைச் செழுந்தமிழ் மாலை தொகுத்துரைக்கச் சிற்பரை வானிமை யப்பிடி யீன்றருள் தில்லைவனக் கற்பக வாரணப் பொற்சர ணாம்புயாங் காப்பதுவே.
வாகன் - தோளையுடையவன் (வாகு - தோள்). மகீபதி பூமிக்குத் தலை வன் (மகீ - பூமி). சிற்பரை - ஞானசொரூபி. இமையப்பிடி இமைய மலைமகள், பார்வதி. தில்லைவனம் -சிதம்பரம். கற்பகவாரணம் - கற்பகப்பிள்ளையார், வாரணம் -யானை. பொன் - அழகு, பொலிவு.
சரணாம்புயம் (சரண +அம்புயம்) பாததாமரை.
இது நூலாசிரியார் தாம் செய்யத் தொடங்கிய நூல் இடையூறின்றி இனிது முடிதற் பொருட்டுத் தம் இஸ்ட தெய்வத்தைத் துதித்தவாறாம்.

Page 91
142/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
எனணிறைந்த தில்லை யெழுகோ புரந்திகழக் கணணிறைந்து நின்றருளுங் கற்பகமே - நணர்ணியசீர்த் தேனூறு செஞ்சொற் றிருக்கோவை பெண்கின்ற நானூறு மென்மனத்தே நல்கு.
என்பதும் ஈண்டு நோக்கற்பாலது.
களவியல்
ܚܙܝܗܝܕܼ ܠ ܐܒܗܝ=ܚܣܚ=-
கைக்கிளை
காட்சி
தேருங் கடலு மIர்தமுந் திங்களுஞ் செய்யமின்னுங் காருஞ் சுமந்த மணிவல்லி யொன்று கனகவல்லி சேரும் ப்ரதாபன் கரவையில் வேலன் சிலம்பில்வண்டுந் தாருஞ் செறியும் பசுங்காவி னின்று தயங்கியதே.
கனகவல்லி - இலக்குமி. ப்ரதாபன் - பிரதாபன் (பிரதாபம் -கீர்த்தி, வீரம்). சிலம்பு - மலை. தார் - பூ வல்லி - கொடி, தலைவியைக் குறிப்பது. தேர், கடல், அமிர்தம், திங்கள், மின், கார் என்பன முறையே அல்குல், கண் இகழ், நெற்றி, இடை, கூந்தல் என்னும் அவயவங்களைக் குறிக்கும். (1)
ஐயம்
காங்கா தரன்சிலை யோரத மோகவி லும்பணியோ வெங்காள போசன சாலைய தோவியன் முத்தமிழும் மங்காது வந்த கரவையில் வேலன் வரையிலிசை சிங்கார வல்லியர் வாழ்பதி யாதெனத் தேர்கிலமே.
கங்காதரன் - சிவன். சிலை - வில், பணி - ஆபரணம். காளம் - நஞ்சு. வெங்காள போசனசாலை - கடல். சிங்காரம் - அழகு. சிவனது வில், தேர், ஆபரணம், போசனசாலை என்பன முறையே மலை, பூமி,

கரவைவேலன்கோவை /43
பாம்பு, கடல் என்பனவாம். கண்ட தலைமகன் கொடியல்லப் பெண்ணென்றறிந்து இவள் வரையரமகளோ? மானுட மாதோ? நாககன்னியோ? நீரரமகளோ? என ஐயுறா நின்றானென்க. (2)
துணிவு
பூவென்ற மாவிலங் கேசனை நாளைக்குப் போர்புரிய வாவென்ற வீரன் கரவையில் வேலன் மகிபதிமேற் பாவென்ற வாணிப் பவளச்செவ் வாய்மடப் பாவையிவ ளேவென்ற காதள வோடிய பார்வை யிமைக்கின்றதே.
பூ - பூமி. மால் - பெருமை. இலங்கேசன் - இராவணன் (இலங்கா + ஈசன்). பா - பாட்டு, ஒசை. வாணி - சொல். ஏ - அம்பு. பார்வை - கண். பூவென்ற . வாவென்ற வீரன் - இராமன். திருமாலின் அவதாரமாகிய இராமனை ஒத்த வேலன் என்க. 'இலங்கேசனை நாளைக்குப் போர் பூரிய வாவென்ற வீரன்’ என்பது,
ஆளை யாவுனக் கமைந்தன மருத மெறிந்த பூளை யாயின கணடனை யின்று போய்ப் போர்க்கு நாளை வாவென நல்கின னாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்
(இரா. யுத். - முதற். செ. 256)
என்னும் கம்பர் திருவாக்கை யனுவதித்துக் கூறியவாறாம். (3)
குறிப்பறிதல்
மருநோக்கும் வண்டறை யைம்பா லளக மடந்தைக்கண்ணி லிருநோக் குடையது காணெஞ்ச மேயிரு நோக்கதனி லொருநோக்கு நஞ்ச மொருநோக் கமிர்த முயர்பதுமத் திருநோக்கு மார்பன் கரவையில் வேலன் சிலம்பகத்தே.
மரு - வாசனை. வண்டறை (வண்டு + அறை); அறைதல் - ஒலித்தல், ஐம்பால் - ஐவகைமயிர்முடி. பதுமத்திரு - இலக்குமி, (4)
கைக்கிளை முற்றியது.

Page 92
144/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இயற்கைப் புணர்ச்சி
இரந்து பின்னிற்றற் கெண்ணல்
கொத்தாருங் கோதை யணிகோதை மானைக் குறையிரந்தும் வித்தார வார மணியாரக் கொங்கையின் மேவுதும்யாம் முத்தான வேகக் களியானை முத்தமி ழோர்க்குதவுங் கைத்தான மேகங் கரவையில் வேலன் கனகிரிக்கே.
கொத்து - கூட்டம். கோதை - மாலை. கோதை மான் - கூந்தலையுடைய பெண். வித்தாரம் - பரத்தல். ஆரம் - முத்து. ஆரமணி ஆரம் - முத்து மணிமாலை. ஆரம் சந்தனம் எனினுமாம். முத்தானம் - மூவகை யாகிய மதம் (கும்பமதம், கன்னமதம், கோசமதம் என). கனகிரி - (கனம் + கிரி) மேகம் படியும் மலை. முத்தமிழோர்க்கு யானையை உதவுங்கை என்க. தானமேகம் - கொடை பொருந்திய மேகம், கொடையில் மேகத்தை ஒத்தவன் எனன்பதாம். (5)
இரந்து பின்னிலை நிற்றல்
கலைவிசு மென்னகத் தாருயிர் மீனைக் கலகச்செங்கண் வலைவீசி நிற்பது மக்கறி வோமரு வார்மகுடத் தலைவீசும் வாட்கைக் கரவையில் வேலன் றடஞ்சிலம்பி லலைவீசும் வாரி யுதியாத பூதலத் தாரமுதே.
கலை - அறிவு, ஞானம். மருவார் - பகைவர். மகுடம் - முடி. தடம் - விசாலம். வாரி - கடல். ‘அலை வீசும் வாரியுதியாத பூதலத்து ஆரமிர்தே’ என்பதை,
“அலையிடைப் பிறவா அமிழ்தே பென்கோ’
(சில, 2. மனை. 78) என்பதனோ டொப்பு நோக்குக. (6)
முன்னிலையாக்கல்
பாடாம லோசை யடியாமற் செம்மணிப் பந்துகழங் காடாம லூசலு மாடாமற் பாங்கிய ராயத்தொடுங் கூடாம னின்றதென் வெங்கலி முடிக் குவலயங்கள் வாடாமல் வந்த கரவையில் வேலன் வரையணங்கே.

கரவைவேலன் கோவை /45
கழங்கு - மகளிர்விளையாட்டின் ஒன்று. பாங்கி - தோழி. ஆயம் - கூட்டம் கலி - வறுமை. குவலயம் - பூமி. அணங்கு - தெய்வப் பெண். (7)
மெய்தொட்டுப் பயிறல்
ஆதி பதம்பணி வேலன் கரவை யதிபதியாஞ் சோதி திருந்து புயமாலைக் காவிச் சுரும்பினாங்காள் காதி னிருந்து விழியாப் பருங்கலக் காரிகையை யோதி யிருந்து பிறநூலை யாய்த லுரித்தல்லவே.
ஆதி - கடவுள். காவி - குவளைமலர். சுரும்பு - வண்டு. யாப்பு - கட்டு, பொருந்தியிருத்தல். காதின் இருந்து விழியாப்பு என்பது காதளவு நீண்டு பொருந்தியிருக்குங் கண்ணையுடைய என்பதாம். ஒதி - கூந்தல். நூல் -(1) இடை (2) சாத்திரம். அருங்கலம் காரிகை - அரிய ஆபரணம் அணிந்த பெண், கலம் - ஆபரணம். ஐ - ஐந்து வகையாய் முடிக்கின்ற. யாப்பருங்கலக்காரிகை நூலைக் கற்றுப் பின் வேறு யாப்பிலக்கண நூலை ஆராய்தல் உரித்தல்லவே எனப் பிறிதோர் பொருள் தொனித்தலுங் காண்க. (8)
பொய்பாராட்டல்
சேது நிலையிடட்ட மாப்பாண னின்றருள் செல்வன்கலை யோதும் வரிசைக் கரவையில் வேல லுயர்சிலம்பின் மாது நினது முகத்துக்குத் தோற்று வனசமலர்ப் போது வனத்துட் சிறையாகிப் பங்கம் பொருந்தியதே.
சேது நிலையிட்ட - என்பது மாப்பாணனுக்குரிய பட்டப்பெயர் என்ப. மேலும் அது பாட்டுடைத் தலைவனாகிய வேலாயுத உடையாரும் அவர் தந்தையும் இளமையில் இராமேச்சுரத்தில் சிறிது காலம் வசித்திருந்த சம்பவத்தைக் குறிப்பதுமாம். வரிசை - மேம்பாடு, உயர்வு. சிலம்பு - மலை, வனசம் - தாமரை. மலர்ப்போது - ஒருபொருட்பன்மொழி. வனம் - (1) நீர் (2) காடு. சிறை -(1) இடம் (2) காவல், மறியல். பங்கம் - (1) சேறு (2) தோல்வி. தாமரைமலர் தோற்று நீரிடமாய்ச் சேற்றுள் பொருந்தியது என்னும் நேர் பொருளோடு தாமரைப்பூ நீருட் சிறைப்பட்டுத் தோல்வி பெற்றது என ஒரு பொருள் தொனிக்குமாறுங் காண்க. (9)

Page 93
146/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இடம்பெற்றுத் தழாஅல்
சினந்தோயு மாரன் கணைதைத்த வேதனை தீரவிடர் மனந்தோயு மாசைக் கவிதீரச் செந்நெல் வளர்ந்தெழுந்து கனந்தோயும் பண்ணைக் கரவையில் வேலன் கனகிரிமே லினந்தோயு மார்பத் தனந்தோய்தற் காகு மிடமிதுவே.
தோய்தல் - பொருந்துதல். மாரன் - மன்மதன். ஆசைக்கலி - ஆசைப் பெருக்கம்; ஆசையாகிய வறுமை எனினுமாம். கனம் - மேகம். பண்ணை - வயல். இனந்தோயும் - இரண்டாகப் பொருந்திய. (10)
வழிபாடு மறுத்தல்
தாரணி மெச்சிய சிற்றம் பலவனைத் தந்ததந்தை போரணி வாகைக் கரவையில் வேலன் பொருப்பகத்தே சேர்மயல் வெம்மைக் குனதரு ளாநிழல் சேர்த்திடுவாய் வார்குழை யாடிய கண்மலர் சூடு மலர்வஞ்சியே.
தாரணி - பூமியிலுள்ளோர். சிற்றம்பலவன் என்பவர் பாட்டுடைத் தலைவன் மகன். தந்த - பெற்ற, வாகை - வெற்றிமாலை. பொருப்பு - மலை. வெம்மை - வெய்யில். வார் - நீண்ட குழை - காது. குழையாடிய - காதோடு பொருதுகின்ற. கண்மலர் - கண்ணாகியமலர். வஞ்சி - கொடி
(பெண்). (11)
இடையூறு கிளத்தல்
மல்வளைக் கும்புயத் தொன்னார் கிளைகள் வனம்புகுத வில்வளைக் குஞ்செங்கை வேலன் கரவை வியன்சிலம்பிற் பல்வளைக் கைக்கொண்டு காதலின் னிலப் பரவைதன்னை யல்வளைக் குஞ்சுருட் கோதாய் புதைத்த ததிசயமே.
மல் - மல்வீரர், மல்வளைக்கும் - மல்வீரரை வணங்கச் செய்யும். ஒன்னார் - பகைவர். நீலப்பரவை -(1) கண் (2) கருங்கடல். வளை - (1) வளையல் (2) சங்கு. அல் - இருள். சுருள் - கூந்தல். கோதாய் - பெண்ணே புதைத்தல் - பொத்துதல், மறைத்தல். வளையலணிந்த கைகளைக்கொண்டு கண்ணைப் புதைத்தது அதிசயமே என்னும் நேர் பொருளோடு, சங்குகளைக் கையிற்கொண்டு கடலைப் புதைத்தது அதிசயம் என்பதொரு பொருள் தொனித்தலும் நோக்குக. (12)

கரவைவேலன் கோவை /47
நீடுநினைந் திரங்கல்
சத்திக் குமாரன் பதம்பணி வேலன் றடஞ்சிலம்பின் முத்திக் குமார னாகிய னிதி முறைதிறம்பா தெத்திக்கு மாணை செலுத்துமின் னேயென தாசையெல்லாந் தித்திக்கு முங்கண் மணிவாய்க் குமுதச்செந் தேறலுக்கே.
சக்தி - வேல். முத்திக்குமாரன் - முத்து+ இக்கு + மாரன் (முத்துப் பொருந்திய கருப்பம் வில்லையுடைய மன்மதன்). மின்னே - பெண்ணே.
தித்திக்கும் - இனிமையுறும். குமுதம் - செவ்வாம்பல். தேறல் - தேன்.
(13)
மறுத்தெதிர்கோடல்
வெற்பான தோளண்ண லார்விர காக்கினி வெம்மைமுன்னென் கற்பான பொன்னுரு காமைநில் லாதெனக் காணெஞ்சமே பொற்பா ரியலிசை நாடகந் தேரும் புலவர்தந்த சொற்பா வணியுங் கரவையில் வேலன் சுரும்பகத்தே.
விரகம் - ஆசைநோய். சுரும்பு - மலை. (14)
வறிதுநகை தோற்றல் தொண்டா யிவட்கு வறிதே யிரந்தனந் தோகைமனத் துண்டாகு மெண்ணம் பிறிதல்ல வென்றுள மேயறிதற் குண்டாணி செந்துவர் முத்தீன்ற தென்னக் குறுமுறுவல் விண்டாள் கரவையில் வேலன் மகிபதி வெற்பனாங்கே.
ஆணி - ஆதாரம், அறிதற்கு ஆணி உண்டு எனக்கூட்டுக. துவர் -பவளம் (15)
முறுவற்குறிப் புணர்தல் ஒளன்றாவுங் காயத் தெனதுயிர் தாங்கற் கொருமருந்தாங் கான்றாவும் பச்சிளம் பூகதப் பாளையிற் கன்னிவரான் மீன்றாவும் பண்ணைக் கரவையில் வேலன் வியன்சிலம்பின் மான்றா வியவரிக் கண்ணாட்டி கோட்டிய வாணகையே.
காயம் - சரீரம். கான் -வாசனை. பூகதம் - கமுகு, கண்ணாட்டி காதலி, கண்ணாளன் என்பதன் பெண்பால். கோட்டிய - செய்த, (16)

Page 94
148/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
முயங்குத லுறுத்தல்
வான்பெற்ற நாத னமுதுபெற்றான்மணி வாய்க்குலகின் நான்பெற்ற பெண்ணமு தேயைம் புலாதிக்கு நன்றுகண்டாய் தேன்பெற்ற தாமரை மான்பெற்ற மாரன் செகமடந்தை தான்பெற்ற பாலன் கரவையில் வேலன் றடங்கிரிக்கே.
வான் பெற்ற நாதன் - இந்திரன். ஐம்புலாதி - ஐம்புலனும் மனமும்; புலன் + ஆதி=புலாதி என மருவியது; முருகேசன் என்றாற்போல. இந்திரன் அமுதம் பெற்றுச் சுவைப்புலனுகர்வு ஒன்றே அடைந்தான், யானோ இப்பெண்ணமுதைப்பெற்று ஐம்புலனும் மனமுஞ் சேர்ந்து நுகர்வு பெற்றேன் எனத் தலைவன் தன்னுயர்வு கூறியவாறு. (17)
புணர்ச்சியின் மகிழ்தல்
எண் நிறமெண்ணிய் பன்னாண் முயன்றிசைந் தேனிசைந்தேன் விண்ணாக்குஞ் சாலியிற் பைந்தேறலுக்குமென் றேரைவெவ்வா யண்ணாக்கும் பண்ணைக் கரவையில் வேல னணிவரைமேற் பண்ணாக்கு மெல்லுரை யார்சொர்க்க போகப் பயன்களையே.
விண் ஆக்கும்; ஆக்குதல் - உயர்தல், வளர்தல். அண்ணாக்கும் - திறக்கும். சொர்க்கம் - (1) முலை (2) தேவருலகம். பயன் - அனுபவம். இசைந்தேனிசைந்தேன் என்பது உவகைப்பற்றி வந்த அடுக்கு. (18)
புகழ்தல்
குறியாக நீர்நின்று கண்ணிர் பெருகக் குவலயங்காள் வறிதாகு மா க் செய்வதெல் ம்வெண் ரியண் வுறிதாவுஞ் செங்கைக் கரவையில் வேல னுயர்சிலம்பி னறியாத சிற்றிடை யார்கண்கள் போல்வதரிதுமக்கே.
குறி - குறிப்பு. நீர் நின்று - (1) நீங்கள் நின்று எனவும் (2) நீரில் நின்று எனவும், கண்ணீர் - (1) கண்களில் நீர் எனவும் (2) கள்ளாகிய நீர் எனவும் இருபொருள் படுமாறு காண்க. குவலயம் - கருங்குவளை LD6ur. (19)
இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று.

கரவைவேலன் கோவை /49
வன்புறை
அணிந்துழி நாணியதுணர்ந்து தெளிவித்தல்
நகைவாய்த்த சுந்தர சந்த்ரோ தயவட்ட நானுமுக முகைவாய்த்த பூண்முலை மாணிக்க மேதும் முதுகுலத்தோர் பகைவாய்த் திடாம லணியணிந் தேனிரு பத்திரண்டாந் தொ O ர்ளல் கர go (3 ன் சுரும்பகத்தே.
வட்டம் - மண்டலம். முகை - அரும்பு; முகைவாய்த்த - பூ அரும்பை ஒத்த: “கோங்கிற் பொலியரும்பேய் கொங்கை’ எனத் திருக்கோவையரிலும் (செய், 13), “அரும்புறுகாலை கொங்கைக் கழிவுற்று” எனக் கந்த புராணத்திலும் வருவன காண்க.
இருபத்திரண்டாந் தொகைவாய்ந்த வள்ளல் - முதல், இடை, கடை என மூவகையாகிய 21 வள்ளல்களுக்குப்பின் 22-ம் வள்ளலாக எண்ணப்படுபவன். முதல் வள்ளல் எழுவர் பெயரும், இடைவள்ளல் எழுவர் பெயரும், கடைவள்ளல் எழுவர் பெயரும் :-
மிக்கசெம்பியனே, காரி விராடனே,'நிருதி தானும் தக்கதுந்துமாரி தானுஞர், சகரனு,'நளனுந் தாமுன் அக்குரண்'சந்திமானோ டந்திமான் சிசுபா லனினே வக்கிரன்'கண்ணன்"சந்தன்'இடைவள்ளல் வகுத்தவாறே.
பாரி'ஆப்'எழிலிநள்ளி பசுந்தொடைமலயன் பேகன்' ஓரியே கடையிலுற்றோ ருறுபொருள் தணடாதீந்தும் வாரியிலிரந்தோர்க்கிட்டும் வளர்புகழ் துதிக்க ஈந்தும் பேரியல் வையமெணர்ணப் பெற்றனர் முப்பா லாகும்.
என்னும் நிகண்டுச் செய்யுள்களா னுணர்க. (20)
பெருநயப் புரைத்தல்
துளியாரு நீலப் பயோதரங் காணிழன் மேற்சுளியுங் களியானை வீரன் கரவையில் வேலன் கனகிரிமா னளியார் முகமதி போலிரு சாரங்க மாங்கமரு மொளியார் மதியொன்று கண்டதுண் டாயி னுரைமின்களே.
பயோதரம் - மேகம். சளித்தல் - கோபித்தல். சாரங்கம் - மான். (21)

Page 95
15O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தெய்வத் திறம் பேசல்
மன்றாடு வானரு ளால்விதி வண்ணம் வகுத்ததெம்மை யொன்றான கூட்டம் பிரிப்பவ ராருரைத் தேபயில்வாய் கன்றாடு செங்கையர் வேளன்ன வேலன் கரவைவெற்பிற்
குன்றா கியமுலைச் சந்தன வாடைக் குளிர்வஞ்சியே.
கன்று - வளையல், வேள் - மன்மதன். வாடை - மணம். (22)
பிரியே னென்றல்
தாளாருஞ் சீத வனசய் பிராட்டியைத் தண்டுளபத் தோளான் பிரியினும் யான்பிரியேன்றுங்க மேழிகொண்ட வேளாளர் வேந்தன் கரவையில் வேலன் வியன்சிலம்பில் வாளாருங் கண்ணி பிரிந்து தரிப்பது மற்றில்லையே.
வனசம் - தாமரை. வனசப்பிராட்டி - இலக்குமி. (23)
பிரிந்து வருகென்றல் வன்பா லறிவுமென் னாசையு நெஞ்சமும் வாழுயிரு முன்பாவில் வைத்துப் பிரித்திடு வேனொன்ன லார்கிளைக்குத் தென்பா லளிக்குங் கரவையில் வேலன் செழுஞ்சிலம்பி லன்பால் வருகுவன் றண்டலை வாயென தாரமுதே.
வன்பு - திடம், வலி. தென்பால் - இயமலோகம். தண்டலை - சோலை,
இடமணித் தென்றல்
மங்கையர் மோகன் கரவையில் வேலன் வரையினும்முர்த் தங்கிய சாரலில் வேய்மணி யாரந் தருமொளியைத் திங்க ணிலவென்று நம்முர்த் தடம்பணை சேருமதுப் பங்கய ராசி பகலே முகிழ்த்திடும் பான்மொழியே.
வேய்மணிஆரம் - மூங்கில் முத்து. பணை - வயல். பங்கயராசி தாமரை மலர்க் கூட்டம். முகிழ்த்தல் - குவிதல், கூம்புதல். (25)
வன்புறை முற்றிற்று.

கரவைவேலன்கோவை /51
தெளிவு
அறையாழி வற்றினும் வாய்மைதப் பாதவ ரவ்விடத்தே யிறையா மளவு முறையா ரெனைமறந் தீர்ம்பண்ணைவாய்த் துறையால் வலம்புரிச் சங்கின்ற முத்தைத் தொழுதியன்னஞ்
துறையால் = துறையில் அசைகின்ற (ஆலுதல் - அசைதல்). தொழுதி - கூட்டம். (26)
தெளிவு முற்றிற்று.
பிரிவுழு மகிழ்ச்சி
செல்லுங் கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லல்
துடிபோ லிடைதெரிந் துந்தெரி யாதென்று சொல்லுநெஞ்சே கொடிபோல வொல்கி மயில்போ லசைந்து குலாவும்வண்ணப் பிடிபோ னடைகொண்ட தாலென தாவி பெரும்புலவர் மிடிபோக வந்த கரவையில் வேலன் வியன்கிரிக்கே.
துடி - உடுக்கு. மிடி - வறுமை. எனது ஆவி நடைகொண்டது என்க. (27)
பாகனொடு சொல்லல்
புடையுற்ற பார முலைமலை யேந்திப் புகழ்வலவா
நடைகற்ப தென்ன நடைகற்ற தாலொரு நல்வியொவ்வாக் கொடைகற்ற மேகங்கரவையில் வேலன் குளிவரைக்கே.
நவ்வி - மான். (28)
பிரிவுழ மகிழ்ச்சி முற்றிற்று.

Page 96
152/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பிரிவுழக் கலங்கல்
ஆயவெள்ளம் வழிபடக்கணி டிது மாயமோ வென்றல்
விந்தத்தை நேர்முலை யாள்கற்ற மாயமென் விழிச்செவ்வாய் தந்தத்தை யோவளை யாயப் பெருங்கட றப்பியிப்பால் வந்தத்தை யோசொல்லு வேனுத்தி யானத்தில் வண்டமிழ்நூற் பந்தத்தை யாயுங் கரவையில் வேலன் பனிவரைக்கே.
வீழி - விழுதிப்பழம். ஆயம் - மகளிர்கூட்டம். உத்தியானம் - சோலை. பந்தம் - பிரபந்தம், நூல். (29)
வாயில் பெற் றுய்தல்
புண்விளை யாடுநெஞ் சேவருந் தேலொரு பூவையன்னாள் பண்விளை யாடு முரைமுக மீதிற் பதுமமனைப் பெண்விளை யாடுங் கரவையில் வேலன் பெருஞ்சிலம்பின் மண்விளை யாடுமின் கண்விளை யாடி வருகின்றதே.
பூவை - நாகணவாய். பண் விளையாடு = பணி பொருந்திய. உரை - சொல்லை(ப்பேசும்). பதுமமனைப்பெண் - இலக்குமி. மண்விளையாடும் மின் - மண்ணில் வந்து பயில்கின்ற மின்னல் போன்ற தலைவி. மின்னது கண் பூவையன்னாள் முகமீதில் விளையாடி வருகின்றது எனக் கூட்டுக.
பணிபு பாராட்டல்
துப்புள வாய்மைக் கரவையில் வேலன் றொடைதனக்கே ஒப்புள பார்வையினாண்முலைக் கேயினை யுள்ளதென்றால் வெப்புள தாயதின் மாறுள தாய்விம்மி விம்மிவளர் செப்புள தாயி னுவமிக்க லாங்கலை தேர்ந்தவர்க்கே.
துப்பு - வலி. தொடை - மாலை, இங்கு மாலையிலுள்ள குவளைமலர். அதின்மாறு - தண்மை, தட்பம். (31)

கரவைவேலன் கோவை /53
பயந்தோர்ப் பழிச்சல்
கருமேக மேயன்ன சாரங்க பாணிக்குக் கஞ்சமின்னைத் தருமேழி லெட்டிலொன் றோநிக ராஞ்சக மேதையென்ன வருமோதை யாளன் கரவையில் வேலன் வரைவரைவாய் இருமே தினியிலென் சம்போக வல்லியை யீன்றவர்க்கே.
சாரங்கபாணி - திருமால். கஞ்சமின் - திருமகள் (கஞ்சம் - தாமரை). ஏழிலொன்றோ? எட்டிலொன்றோ? நிகராம் எனத் தனித்தனி கூட்டியுரைக்க. ஏழில் ஒன்று - ஏழு கடலில் ஒன்றாகிய பாற்கடல், இலக்குமியைத் தோற்று வித்தது. எட்டில் ஒன்று - சிவனது அட்ட மூர்த்தங்களுள் ஒன்றாகிய நிலம்; அது இலக்குமியி னவதாரமாகிய சீதையைத் தோற்றுவித்தது. பாற்கடலில் இலக்குமி தோற்றியதுபோல், சீதை நிலத்தினின்றுந் தோற்றினாள் என்பதை:-
உழுகின்ற கொழுமுகத்தினுதிக்கின்ற கதிரினொளி பெழிகின்ற புவிமடந்தை யுரு வெளிப்பட் டெனப்புணரி எழுகின்ற தெள்ளமுதொ டெழுந்தவளு மிழிந்தொதுங்கித் தொழுகின்ற நன்னலத்துப் பொணர்ணரசி தோன்றினாள்.
(இரா. பால. கார்மு. செய். 17)
என்னும் இராமாயணச் செய்யுளானு முணர்க.
சகம் - உலகத்தர், மேதை - அறிஞன். ஒதையாளன் - கீத்திபொருந்தியவன். வரை வரை - மூங்கில்கள் வளர்ந்துள்ள மலை. சம்போகம் - அனுபவம். வல்லி - பெண். (32)
கணி படைபெறாது கங்குனோதல்
பண்ணுரை நூலன் கரவையில் வேலன் பனிவரைமேல் எண்னுரை யாப்பொன் பிரிந்தேன் கரைகண்டி லேன்முகிலாம் வெண்ணுைரை மேவிய யுடுமீன் செறிந்து விளங்கு நிலாத் தண்ணுரை வால்வளை சேரிரு ளாகுஞ் சலதியையே.
உரையா - மாற்றறியப்படாத, உடுமீன் - நட்சத்திரம். நிலா - சந்திரன்.
வால்வளை - வெண்சங்கு. சலதி - கடல். பொன்னைப் பிரிந்தேன் இருளாகுஞ் சலதியைக் கரைகண்டிலேன் என முடிக்க. (33)

Page 97
154/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இடந்தலைப்பாடு
தந்த தெய்வந் தருமெனச் சேறல்
அன்னந் தருநடை யம்பா லிகைத்துவ ராணிமுத்தை முன்னந் தருந்தெய்வங் காணிசைந் தேமுது நாவலர்க்குச் சொன்னந் தருங்கைக் கரவையில் வேலன் சுரும்பகத்தில் இன்னுந் தருநெஞ்ச மேசந்த னாடவி யின்னிழற்கே.
பாலிகை - இதழ், அதரம். துவர் - பவளம். ஆணி - மேன்மை. சொன்னம் - பொன். சந்தனாடவி - (சந்தன + அடவி); சந்தனமரச் சோலை. 34
முந்துறக் காணிடல் செறிக்குங் கனாங்குழை மாணிக்க ராகமுஞ் செவ்வரிதோய் வெறிக்கும் விழியிந்த்ர நீலமுஞ் சேர்ந்துழு மேழிதன்னைப் பொறிக்கும் பதாகைக் கரவையில் வேலன் பொருப்பகத்தி லெறிக்கும் பவளக் கொடிபோலக் கானின் றிலங்கியதே.
ராகம் - செவ்வொளி. இந்த்ரநீலம் - நீலரத்தினம். பதாகை - கொடி. (35)
முயங்கல் வந்தெழு மிந்தவள் நானே சகோரம் மதம்பொழியுஞ் சிந்துர நானவ டானே கரும்பெனச் சேர்ந்தனம்யாம் பைந்தமிழின்கவிச் சுந்தரன் சந்துரை பண்ணவற்குச் சந்துரை முன்கைக் கரவையில் வேலன் றடங்கிரிக்கே.
சகோரம் - நிலாமுகிப் பறவை. சிந்துரம் - யானை. சுந்தரன் - சுந்தரமூர்த்தி நாயனார். சந்து - தூது. சுந்தரன் சந்துரை பண்ணவன் - சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையாரிடத்துச் சென்று தூது உரைத்த சிவபெருமான், இந்த அற்புதத்தை இந்நூலாசிரியர்,
66
w & w w a ss a அாது இருட் காலமுல்லை அரும்ப ரவைப்பமிலும்வான கையல்கு லண்னமென்ன வரும்ப ரவைக்கு நடந்தார் மறைசைப் பதியிறையே’
என மறைசையந்தாதியிலுங் கூறுமாறு கான்க.
பண்ணவற்குச் சந்து உரை முன்கை - சிவபெருமானுக்குச் சந்தனம் உரைக்கின்ற முன்கையையுடைய. (36)

கரவைவேலன் கோவை /55
புகழ்தல்
கறைகொண்டு நீரறு காலாய்ப் புலம்பிக் களியளிகாள் சிறைகொண் டுலாவித் திரிவதெல் லாஞ்செம்பொன் மேருவென்னப் பொறைகொண்ட சீலன் கரவையில் வேலன் பொருப்பகத்தில் பிறைகொண்ட வானுதல் கண்போ லுவமித்த பேர்படைத்தே.
கறை - (1) கருமை (2) குற்றம். அறுகால் -(1) ஆறுகால் (2) அற்ற கால், புலம்பி - (1) ஒலித்து (2) அழுது. சிறைகொண்டு - (1) சிறகு படைத்து (2) சிறைப்பட்டு. அளி - வண்டு. பேர் - சொல்; சொல்லினால் வந்த பழி என்க. திரிவது - (1) சஞ்சரித்தல் (2) அலைதல். இதன்கண் மிளிருந் தொனிப்பொருள் நோக்கத்தக்கது. (37)
ஆயத்துய்த்தல்
ஒள்ளிய தாரகை போல்வளை யாயத்துள் ளேபுகுந்து வெள்ளிய மாமதி யாய்விளங் காய்விரி பாற்கடலிற்
றெள்ளிய சீர்த்திக் கரவையில் வேலன் செழுஞ்சிலம்பிற் புள்ளிசை பாடிய கள்ளிசை வார்குழற் பூங்கொடியே.
தாரகை - நட்சத்திரம். புள் - வண்டு. (38)
இடந்தலைப்பாடு முற்றிற்று.
பாங்கற் கூட்டம்
தலைவன் பாங்கனைச் சார்தல்
வாரா யலைமன மேநண்ப னாகு மருந்துமின்னார் போராடு பார்வைச் சுரும்புஞ் சுரும்பும் பொருகுவளைத் தாராடு தோளன் கரவையில் வேலன் றடங்கிரிவாய்த் தீராத காமப் பெரும்பிணி யாவையுந் தீர்த்திடுமே.
அலைமனம் - அலைகின்ற மனம். பார்வைச் சுரும்பு - கண்ணாகிய வண்டு. தார் - மாலை. நண்பனாகும் மருந்து பிணியாவையுந் தீர்த்திடும் எனக் கூட்டுக. (39)

Page 98
156/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பாங்கன் றலைவனை உற்றது வினாதல்
விதிக்கின்ற முத்தமிழேழிசை யாவும் வியந்துணர்ந்தோ கதிக்கின்ற பூமிக் கனம்பரித் தோவெழு காசினியிற் பதிக்கும் புகழ்வளர் வேலன் கரவைப் பனிவரைமேன் மதிக்குஞ்செவ் வேலண்ண லேமெலிந் தாயுன் மலைப்புயமே.
கனம் - பாரம். காசினி - பூமி. (40)
தலைவ னுற்ற துரைத்தல்
உளமிகு மாண்மைக் கரவையில் வேல லுயர்வரைவாய்த் தளவன வாணகை வெம்மையுந் தண்மையுந் தாங்கியசூ தளவள வாமுலை யாரரை நாகத்தி னாலென்கலை வளர்தரு பூரண மாமதிச் செவ்வி மழுங்கியதே.
தளவு அன = முல்லையரும்பை ஒத்த. சூது - சூதாடுகருவி. மதி - (1) புத்தி (2) சந்திரன். செவ்வி - அழகு. (41)
கற்றறி பாங்கன் கழறல்
சங்கந் தவழும் வயல்சூழ் கரவை தழைக்கவந்த துங்கன் குணாகரன் வேல மகிபன் சுரும்பின்மின்னாட் காங்கம் பொலிவழிந் தேன்மெலிந் தாய்சிறு மானுக்கஞ்சிச் சிங்கம் புலம்புவ தொப்பாகு முரிச் சிலையண்ணலே.
துங்கன் - உயர்ச்சியுடையோன். குணாகரன் - (குண + ஆகரன்) - குணங்களுக்கு உறைவிடமானவன், ஆகரம் - உறைவிடம். மூரி - வலிமை. அங்கம் பொலிவழிந்து ஏன் மெலிந்தாய் எனக் கொள்க. (42)
கிழவோன் கழற் றெதிர்மறுத்தல்
தழையேந்து சோலைக் கரவையில் வேலன் றடஞ்சிலம்பி லிழையேந்து சோதி வலம்புரி தாங்கி யிலங்குமுத்தைக் குழையேந்து கொம்பை யிடைதேய்ந்த பொன்னைக் குளிரளக மழையேந்து மின்னைக்கண் டாலுரை யாயிந்த மாற்றங்களே.
தழை - இலை. இழை - ஆபரணம். வலம்புரி - சங்கு. குழை - காதணி. (43)

கரவைவேலன் கோவை /57
கிழவோற் பழித்தல்
ஆயாத நீதிக் கலையில்லை யோர்பெண்ணி னாசைகொண்டு நீயா யிருந்தும் புதுவிருந் தாய்வந்து நேர்ந்தவற்குத் தாயாகு நந்தங் கரவையில் வேலன் றடஞ்சிலம்பிற் பேயாகி விட்டனை யுன்போல யாரிப் பெரும்புவிக்கே.
ஆயாத - ஆராய்ந்தறியாத, (44)
கிழவோன் வேட்கைதாங்கற் கருமை சாற்றல்
பஞ்சேறு சீறடி யார்திருக் கோரம் பயின்றவிழி நஞ்சேறி யென்னை மயக்கிய வாறறி யாய்நண்பனே மஞ்சேறு போலுரை யாவிக ழாய்வயன் மாங்கனியின் செஞ்சேறு சூழுங் கரவையில் வேலன் சிலம்பகத்தே.
கோரம் - கொடுமை. மஞ்சேறு - மஞ்சு + ஏறு, மஞ்சு - மேகம், ஏறு - இடியேறு. (45)
பாங்கன் றன்மனத் தழுங்கல்
சொல்லுங் கதையுரை யெல்லுமல் லும்பசுந் தோகைமுல்லைப் பல்லும் புரூர மணிவில்லு மேவயற் பைங்கரும்பும் நெல்லுஞ் செறியுங் கரவையில் வேலன் நிழல்வரையில் வெல்லுங் குரிசிலுக் கென்னாமென் மாற்றம் விளம்புவதே.
எல் - பகல். அல் - இரவு. புரூரம் - புருவம். குரிசில் - தலைவன். மாற்றம் - வார்த்தை. (46)
தலைவனோ டழுங்கல்
பாலூன்று மென்மொழி தன்பொருட் டாகப் பரம்பொருளின் மேலுன்று சிந்தைக் கரவையில் வேலன் வியன்சிலம்பில் மாலூன் றுணக்கென் னுரைத்திற மோமக மேருவிழுந் தாலூன்று கோலுமுன் டோவண்ண லேயென் னறிவின்மையே.
ஊன்றுதல் - பொருந்துதல். மால் - மயக்கம. (47)

Page 99
158/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
எவ்விடத் தெவ்வியற் றென்றல்
குடைதாங்கி னானுந்தி யோவணை யோகொற்ற மேவலரைச் சடைதாங்க வைத்த கரவையில் வேலன் றடஞ்சிலம்பிற் படைதாங்கும் வேல்விழி யாரிய லேது பகரெனக்கே.
விடை தாங்கினான் (சிவன்) சிலை (வில்) - மலை, மலைக்குடை தாங்கினான் (திருமால்) உந்தி (நாபி) - தாமரை. திருமாலது அணை (படுக்கை) - பாம்பு; நாகலோகமோ என்றபடி, இடம் ஏது என்பது வருவித்துக் கொள்க. (48)
அவனஃதவ்விடத்தவ்வியற் றென்றல்
மாலே யனைய கரவையில் வேலன் வரையிடமே நூலே பருமை யவர்நேரிடைக்கிரு நோக்கினுக்கும் வேலே யிரும்பவ ரோதிக்குக் கார்கொண்ட மேகமெல்லாம் பாலே கசப்பவர் மெல்லுரை வாணிக்குப் பாற்சுவையே.
அவர் நேர் இடைக்கு, நூலே பருமை - நூலும் பருத்து உவமான மாகாது என்றபடி, பாலே - வெண்மையாகும். அவர் மெல்லுரை வாணி (சொல்லு)க்குப் பாற்சுவை கசப்பே என்க. (49)
பாங்க ணிறைவனைத் தேற்றல்
பணியணி யல்கு லிருமுலைக் கோட்டுப் பசும்பிடியைப் பிணியணி நெஞ்சய் பெருங்களிறேகண்டு பேருமட்டுந் தணியணி யாசையி னொன்னாரை வென்று சமரில்வென்றி யணியணி வாகன் கரவையில் வேல னணிவரைக்கே
பிணியணி - துன்பங்கொண்ட அணி ஆசையின் தணி - கொண்ட ஆசையினின்றுந் தணிவாய். வென்றி அணி - வெற்றிமாலை. அணி வாகன் - அணிந்த தோளை யுடையவன். (50)
குறிவழிச் சேறல் சங்குஞ் சுழியும் பவளமு மாரமுந் தண்ணறலும் பொங்குங் கயலும் பொருந்தது ராகப் புணரிதிசை யெங்கும் புகழுங் கரவையில் வேல னெழில்வரைமேற் கொங்குஞ் சுரும்பும் பயில்காவி னிற்குங் கொலோமனமே.

கரவைவேலன் கோவை /59
அறல் - கருமணல். அநுராகம் - ஆசை, அதிகப் பிரியம். புணரி - (1) கடல் (2) பெண். கொங்கு - தேன். சுரும்பு - வண்டு. பெண்ணைப் புணரி என்றதற்கேற்ப அவளவயவங்களையும் சங்கு (கழுத்து), சுழி (கொப்பூழ்), பவளம் (இதழ்), ஆரம் (பல்) அறல் (கூந்தல்), கயல் (கண்) என உருவகித்துக் கூறினான். புணரி பசுங்காவில் நிற்குமோ என்பதில் வரும் முரண்நயம் நோக்குக. (51)
இறைவியைக் காண்டல்
மருந்தே குதலை மணிவட மேய்முலை மந்தரமே முருந்தே முறுவன் மயிலே யியன்முத் தமிழ்செவிக்கு விருந்தே யுதவுங் கரவையில் வேலன் வியன்சிலம்பிற் கருந்தே னணிதொடை யார்சொன்ன மானுமிக் கன்னிகையே.
மருந்து - அமிர்தம். குதலை - பேச்சு. மணிவடம் - முத்துமாலை.
மந்தரம் - மந்தரமலை. முருந்து - இறகின் அடிக்குருத்து. முறுவல் - பல். (52)
இகழ்ந்ததற்கிரங்கல்
பாரூரி லந்தகன் பெண்ணுருக் கொண்ட படியனையாள் வாரூருங் கொங்கை மதயானை கண்டுவந் தார்விசயன் றேருரு மாண்மைக் கரவையில் வேலன் செழுஞ்சிலம்பிற் பேரூரர் நெஞ்சங் கலங்கிய வாறு பிழையல்லவே.
விசயன் - அருச்சுனன். விசயன் தேர் ஊரும் ஆண்மையன் - திருமாலவதாரமாகிய கண்ணன், அவனையொத்த என்பதாம். “பாரூரி லந்தகன் பெண்ணுருக் கொண்ட படியனையாள்’ என்பதனை,
“பண்டறியேன் கூற்றென் பதனை மினியறிந்தேன் பெண்டகையற் பேரமர்க் கட்டு’
என்பதனோ டொப்பு நோக்குக. (53)
தலைவனை வியத்தல்
சிந்தா மணியன்ன வேலன் கரவைச் சிலம்பின்மின்னார் தந்தா வளத்துணை பாயவும் பார்வைச் சரந்தைக்கவும் பைந்தா ரணிமுடிக் கண்ணியிற் பட்டும் படாதவர்போல் வந்தா ரவர்ப்புகழின்வேனினுஞ் சேடனும் வாணனுமே.

Page 100
16O/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சிந்தாமணி - சிந்தித்ததைக் கொடுக்கும் மணி. தந்தாவளம் - யானை, இங்கு யானைக்கோடு. துணை - இரண்டு. கண்ணி (1) மாலை (2) வலை. வேணும் - வேண்டுமென்பதன் சிதைவு. சேடன் - 1000 நாவையுடைய பாம்பு. வாணன் - 1000 கைகளையுடைய ஒரசுரன். (54)
தலைவியை வியத்தல்
உருளார வாணகை யாரண்ண லார்மதி யோய்ந்தமயன் மருளான நோய்க்கு நிதியள காபுரி மன்னவன்போற் பொருளால் விளங்குங் கரவையில் வேலன் பொருப்பகத்தி லருளா திராரருட் பார்வையும் வாய்மருந் தானதுமே.
வாணகையார் - தலைவி. ஒய்ந்த - நீங்கின. பார்வை - (1) நோக்கம் (2) மாந்திர்கப்பார்வை. வாய்மருந்து - (1) அதரபானம் (2) வாயிலிடும் மருந்து. வாணகையார் அண்ணலாரது நோய்க்குப் பார்வையும் மருந்தும் அருளாதிரார் என முடிக்க. நோயுற்றார்க்குப் பார்வை பார்த்தலும் மருந்து வழங்கலும் உலகவழக்கு, அதுபோற் செய்யாதிரார் என வேறுமொரு பொருள்தொனித்தல் காண்க. (55)
தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறல்
தாரை விளக்கிய வேலாய்கண் டேனுனைத் தண்டலையேம் காரை விளக்குங் கரவையில் வேலன் கனகிரிமேற் பாரை யளக்கும் பெருந்திரை யாற்றினுட் பட்டலையுங் கோரை யெனச்செய்த செந்தா மரைப்பசுங் கொம்பினையே.
தாரை - கூர்மை. கார் - மேகம். (56)
தலைவன் சேறல்
ஏறுஞ் சுரும்பும் பதுமமுங் கோங்கு மெழிற்கொன்றையும் வீறுங் குலவல்வி நின்றது வேவளர் மென்கமுகின் றாறும்பர் தோயுங் கரவையில் வேலன் சயிலத்தின்றே ஒாறுஞ் செழுமலர்த் தண்டலை வாயி னொருதலைக்கே.
கொன்றை - கொன்றைக்காய். தாறு - குலை. ஏறுகின்ற சுரும்பும் (கண்) பதுமமும் (முகம்) கோங்கும் (முலை) கொன்றையும் (கூந்தல்) விளங்குகின்ற குலவல்லி (போன்ற பெண்) என்க. (57)

கரவைவேலன் கோவை /61
தலைவியைக் காண்டல்
வான்மணி நோக்கிய ராசீவ மென்ன மதுப்புனல்சூழ் நீன்மணி மங்குல் படிசோலை யாவி யணிநிறுத்தார் மேன்மணி நாவலர்க் கீந்திடும் வேலன் விளைவயலிற் சூன்மணி நந்து தவழுங் கரவைச் சுரும்பகத்தே.
வான்மணி - சூரியன். ராசீவம் - தாமரை. நிறுத்தார் - நிலைநிற்கச் செய்தார். ஆவி அணிநிறுத்தார் - எனது உயிர் அழகுபெற்று நிற்கச் செய்தார், தலைவி சோலையில் நின்றமை கூறியவாறு. நந்து - சங்கு. (58)
கலவியின் மகிழ்தல்
ஈனந் தவாவென் மயற்பசிக் காயென தாகச்செய்யி னானந் தவாமுலை யாலுழு தார்நசை வித்துவித்தி யானந்த போகப் பயிர்விளைத் தாரிசை யாபரணன் மானந் தவாத கரவையில் வேலன் வரையணங்கே,
ஆகம் - மார்பு. செய் - வயல், நானம் - கத்துரி நசை - ஆசை. (58)
புகழ்தல்
மொழிகண்ட முச்சங்க முத்தமிழ் நூலை முதுமதியால் வழிகண்ட நீதிக் கரவையில் வேலன் மணிவரைமேற் சுழிகண்ட வுந்திப் பசுந்தோகை யஞ்சனந் தோயுமிரு விழிகண்ட பின்னல்ல வோபய மானது வேலையுமே.
அஞ்சனம் - மை. பயம் - (1) நீர் (2) அச்சம். வேலை - சமுத்திரம்.
பாங்கியொடு வருகெனப் பகர்தல்
ஒரொரு சாதி வலம்புரி சூல வுவந்துமுன்னே சாரொரு சுந்தர மேவிய துங்கச் சலஞ்சலம்போல் நீரொரு தோழி யுடன்வர வேண்டு நிறைந்தகல்வித் தேரொரு வாய்மைக் கரவையில் வேலன் சிலம்பின்மின்னே.
துங்கம் - உயர்ச்சி. சலஞ்சலம் - உயர்ந்த சாதிச் சங்கு. கல்வியும் வாய்மையுமுடைய வேலன் என்க. (61)

Page 101
162/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பாங்கிற் கூட்டல்
கலமணி கொங்கையிற் பொற்சுணங் கின்று கவினுமென்கட் டலமணி யேயுன்றன் மின்னார் குழுவினிற் சார்திகங்கா குலமணி யாகிய வேலன் கரவைக் குளிர்சிலம்பிற் பலமணிச் சூழலிற் சிந்தா மணிசெலும் பான்மையொத்தே.
கலம் - ஆபரணம். பொன் - பொன்னிறம். சுணங்கு - தேமல். (62)
பாங்கற்கூட்டம் முற்றிற்று.
பாங்கி மதியுடன்பாடு
முன்னுற வுணர்தல்
தோற்றத்தாலாராய்தல்
ஆடுஞ் சுனைகுடைந் தோவன்ட லாடி யயர்ந்திளைத்தோ சூடும் புதுமலர் கொய்தோ வயற்சுரி கோடுமன்னப் பேடும் பயிலும் கரவையில் வேலன் பெரும்கிலம்பிற்
குடைதல் - நீராடுதல், வண்டல் - விளையாட்டு. சுரி - சுரித்த, கோடு - சங்கு. கோடும் - வளையும். (63)
பிறைதொழுகென்றல்
சிலைக்கோல வானுதல் பங்காளு மாதிச் சிவபெருமா னலைக்கோல மான முடிமணி யாஞ்சம மாய்ந்துரைக்குந் துலைக்கோ லனைய கரவையில் வேலன் சுரும்பகத்திற் கலைக்கோல வெண்பிறை யைச்செங்கை கூப்புதி கார்மயிலே.
சிலைக்கோல - வில்லுப்போல் வளைந்த, அலை - கங்கை. கோலம் - அழகு. சமம் ஆய்ந்து உரைக்கும் - தான் முதலிற் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பொருளின் பாரத்தை வரையறுத்துக் காட்டும். துலைக்கோல் - நிறுக்குங் கருவி. துலைக்கோல் அனைய என்பது நடுவுநிலைமையுடையவன் எனப் பாட்டுடைத்தலைவனது குணப்பெருமை கூறியவாறாம்.

கரவைவேலன் கோவை /63
“சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி”
என்னும் நாயனார் வாக்கும் ஈண்டு நோக்கற்பாலது.
கலைக்கோல - கலைவடிவாகிய, முடிமணியாம் பிறை எனக் கூட்டுக.
* τα சடில முடிமணியாங் கலைக்கோடு வெண்பிறை யைச்செங்கை கூப்புதி கார்மயிலே’
என இந்நூலாசிரியர் செய்த மறைசையந்தாதியிலும் இத்துறைச் செய்யுள் (செ. 97) 4-ம் அடி வருவது காண்க. (64)
சுனைநயப் புரைத்தல்
இன்றொன்றதிசயங் கண்டோம் வெளுப்பு மிதழ்ச்செம்மையு மொன்றொன்றுமாற்றிக் கொளச்செய்த தேயசைந் தோடுதென்றற் கன்றொன்று சோலைக் கரவையில் வேலன் கனகிரிமேற் குன்றொன்று வார்முலை நீநீர் படிந்த குளிர்சுனையே.
நீ நீபடிந்த சுனை உன் விழி சிவப்பவும் இதழ் வெளுப்பவும் ஒன்றொன்று நிறம் மாற்றிக் கொள்ளச் செய்தது என்க, தென்றற்கன்று - இளந்தென்றல்.
சுனைவியந்துரைத்தல்
(செய்யுள் இல்லை) an (66)
தகையணங்குறுத்தல்
உன்னை யொளித்தவளைக்காட்ட லாமொரு வேற்றுமைய்யூப் பொன்னை மணக்குங் கரவையில் வேலன் பொருப்பிற்பின்னை யன்னை யுனக்கு மணிவாய் வெளுப்பவட் கானுமட்டு
மென்னை மயக்கிடு மாற்பின்னை நீசென்றெழுந்தருளே.
அவளை என்றது தலைவியை. பின்னை - மேலும். அன்னை, விளி. ஒரு வேற்றுமை அவட்காணுமட்டும் என்னை மயக்கிடும் என்க. பின்னை - பின்பு, அவள் வந்தபின்பு என்பதாம். (67)

Page 102
164/ நல்லுள் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
நடுங்க நாட்டம்
வெம்பணி கேது விழுங்கும் பிறையன்ன மேற்குருதிக் கொம்பனி யானையைக் கண்டஞ்சி னேன்குறு கார்குழையிற் செம்பணி தாங்கச்செய் வேலன் கரவைச் சிலம்பகத்தில்
வெம்பணி - கொடிய பாம்பு. குறுகார் - பகைவர். செம்பணி - செம்பு அணி வம்பு (=கச்சு) அணிந்த பூண் முலை வம்பு (வாசனை) அணி வார்குழல் என்க. (68)
முன்னுறவுணர்தல் முற்றிற்று.
குறையுற வுணர்தல்
பெட்டவாயில் பெற் றிரவு வலியுறுத்தல்
தொடைத்தமிழ் கொண்டு புலவேர் பணிமணி துள்ளிச்செந்தேன் மடைத்தலை பாவுங் கரவையில் வேலனை வந்துகண்டு கிடைத்தது போலருட் பாங்கியைச் சேர்ந்த கிளிக்கிளவிப் படைத்தலை நோக்கி யருந்தனஞ் சேர்குவன் பார்நெஞ்சமே.
பணிமணி - நாகரத்தினம். புலவோர் வேலனை வந்து கண்டு பணிமணி கிடைத்தது போல என்க. மடை - மதகு, வாய்க்கால் எனினுமாம். மடைத்தலை என்பதில் தலை 7-ம் வேற்றுமையுருபு. பாவுதல் - பரம்புதல். கிளவி - சொல். படைத்தலை - ஆயுதத்தின் நுதி. நோக்கி - கண்ணை யுடையவள், தலைவி. தனம் - (1) முலை (2) பொருள். இச் செய்யுளின் உவமைநயம் நோக்கத்தக்கது. (69)
ஊர்வினாதல்
குறைவிட மான மருங்குஞ் சுருங்கக் குவிந்தமுலைக் கறைவிட வாள்விழி யீர்தென் புலத்தரைக் காலன்செய்யுஞ் சிறைவிட வந்த கரவையில் வேலன் சிலம்பகத்தே யுறைவிட மேதுசொல் லிரறி யேனொரு காலத்துமே.
குறைவு இடமான மருங்கு (இடை) விடம் - நஞ்சு. தென்புலத்தர் - பிதிரர். தென்புலத்தரை . . சிறைவிடவந்த என்பது தான் செய்யும் புண்ணிய கன்மத்தால் தன் பிதிரரை யமதண்டனையினின்றும் நீக்கிச் சுவர்க்கம் புகுவிப்பவன் என்பதாம். (70)

கரவைவேலன்கோவை /65
பெயர்வினாதல்
முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் துத்தம் பயின்மொழி யாற்சொல்லுஞ் சால்வழி சூல்பெருகு நத்தம் பயிலுங் கரவையில் வேலனன் னாட்டினுங்கள் சித்தம் பயில்பதி சொல்லா திருக்கிற் றெரிவையரே.
முத்தம் - பல். பவளம் - இதழ். துத்தம் - பால். சித்தம் பயில் பதி - மனஞ் சென்று பயில்கின்ற ஊர். (71)
கெடுதிவினாதல்
எழுமுகி றன்னி லிரண்டெனப் பூசுரர்க் கென்றுந்தெண்ணி விழுமிய பொன்பொழி வேலன் கரவையில் வெற்பிலின்னே யுழுகரு மேனிச்செந் நீரார்ந் துதிரம் பொழியிறுதிச் செழுமுகில் போலொரு மாவந்த தோவித் தினைப்புனத்தே.
எழு முகில் - ஏழு முகில், ஏழு முகில்களின் பெயரும் : (1) ஆவர்த்தம் (2) புட்கலம் (3) சங்காரம் (4) ஆசவனம் (5) நீர்க்காரி (6) சொற்காரி (7) சிலாவருடம் எனச் சூடாமணி நிகண்டிக் கண்டவாறாம். திவாகரத்திற் கூறியபடி அவற்றின் பெயர் சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்பன. இவற்றுள் ஈண்டு இரண்டெனக் குறிக்கப்பட்டவை ஆவர்த்தம்’ என்னும் நீர்பொழி முகிலும் புட்கலாவர்த்தம்’ என்னும் பொன்பொழி முகிலுமாம். பூசுரர் - பிராமணர். இரண்டு முகில்போல் பூசுரர்க்குத் தெண்ணீர் வார்த்துப் பொன் பொழியும் வேலன் என்க. உழு - (பாணங்களால்) உழப்பட்ட, புண்பட்ட என்பதாம். DIT -- T665)60T. (72)
ஒழிந்தது வினாதல்
மாசால மோமணி வாய்நோகு மோதும் மரபியலி னாசரா மோவிர தத்தடை யோதிரை யாடைசுற்றுந் தேசா திபர்மெச்சு வேலன் கரவைச் சிலம்பனையிர் பேசா திருக்கும் வகையின்ன வாறென்று பேசிடுமே.
மா - பெரிய, சாலம் - மாயம். ஆசாரம் - ஒழுக்கம், செய்கைமுறை. இக்கவியின் பல நயங்களையும் ஓர்ந்துணர்க. (73)

Page 103
166/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்
என்னா மிவர்மனத் தெண்ணிவ ரார்புகன் றேபதியுஞ் சொன்னா மமுங்கர மாவும் வினாவுவள் தும்பியிசை தென்னா வெனுந்தொடை வேலன் கரவைச் சிலம்பினிப்போ
எண் - எண்ணம். கரமா - யானை. தும்பி - வண்டு. தென்னா - ஒலிக் குறிப்பு. தொடை - மாலை. மாற்று - மறுமொழி. (74)
எண்ணந்தெளிதல்
எடுத்தார் வினாமுத னும்பதி யேதென் றிதனைவிட்டுத் தொடுத்தார் வினாமுகம் பற்பல வாதலி னாற்றுணையே யடுத்தாரை வாழ்விக்கும் வேலன் கரவை யணிவரைமேல் வடுத்தாரை நோக்கி பொருட்டென்று கானு மனத்தினுக்கே
வினாமுகம் - வினாவாகிய உபாயம். வடு - மாம்பிஞ்சு. தாரை - வாள். நோக்கி (நோக்கம் + இ) கண்ணையுடையவள். (75)
குறையுற வுணர்தல் முற்றிற்று.
இருவருமுள்வழி அவன்வர வுணர்தல்
தலைவன் கையுறையேந்தி வருதல்
துதியுங் குறையுமென் னாதர முஞ்சொல்லிச் சொல்லிச்சங்க நிதியும் பதும நிதியமும் போற்கணி நீழலின்வாய் வதியும் கருணை மடவாரை வேண்டுவன் மாமதியும் விதியும் பயன்பெறு வேலன் கரவையில் வெற்பகத்தே.
ஆதரம் - அன்பு, விருப்பம். கணி - வேங்கைமரம். மதியும் விதியும் பயன்பெறுதலாவது மதிநலத்தாலும் விதி நலத்தாலும் பெற்ற ஆக்கங்களை உடையனாதலாம். (76)

கரவைவேலன் கோவை h67
தலைவ னவ்வகை வினாதல்
திருமா னிரண்டனை யிருங்க ளஞ்சனச் செவ்வரிக்கண் பொருமான வாளியி னெய்தேன் வனத்திற் புரியுங்கள்ளந் தருமானை யெய்த கரவையில் வேலன் றடஞ்சிலம்பி
செவ்வரி - சிவந்த வரி. கண் பொரும் - கண்ணை ஒத்த. கள்ளந் தருமான் - மாயமான், மரீசன். மாயமானை எய்தவன் - இராமன், அவனை ஒத்த வேலன் என்க. (77)
எதிர்மொழி கொடுத்தல்
பொற்கலை மாதவன் சேயனை யாயருள் பொங்குமுக விற்கலை மாமதி வேலன் கரவையில் வெற்பகத்தே நற்கலை யாயு முனிவோர் புரத்து நறுந்தருவின் வற்கலை யன்றி யிவண்கண்டி லேமொரு மான்கலையே.
பொற்கலை - பொன் ஆடை, பீதாம்பரம். மாதவன் - திருமால். அவன் சேய் - மன்மதன். முக வில் கலை மாமதி வேலன் - முகமாகிய ஒளி பொருந்திய கலைகள் நிறைந்த பூரணசந்திரனையுடைய வேலன். நற்கலை - நல்ல சாத்திரம். புரத்து - உடலில், வற்கலை - மரவுரி. இக்கவியிலுள்ள சொற்சித்திரம் நோக்கத்தக்கது. (78)
இறைவன் நகுதல்
தேடிய கீர்த்திக் கரவையில் வேலன் சிலம்பிற்குழை சாடிய வேல்விழி மானே மதியைத் தலைவன்செங்கைக் கூடிய மாந்தளி ரம்புபட் டோடிக் குலைந்துவெரீஇ யோடிய மான்புகுந் தன்றோ குரங்கியென் றோதுவதே.
குரங்கி - சந்திரன் (குரங்கம்பூ இ) குரங்கம் - மான். ஒடிய மான் புகுந்தன்றோ மதியைக் குரங்கி என்றாதுவது எனக் கூட்டுக. கையில் அம்பின்றித் தளிர் பிடித்து நிற்றலின் இவ்வாறு நகையாடிக் கூறினா ளென்க.

Page 104
163/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பாங்கி மதியி னவரவர் மனக்கருத் துணர்தல்
திருவள ராகன் கரவையில் வேலன் சிலம்பகத்தி லிருவரு மோருயிர் கூடிரண் டென்பதி வள்விழித்தே ஒனுருவளர் வேளனை யான்விழிப் போதி ஒனுடன்கலந்து மருவுத லாலவர் தங்கண்க ளேசொல்லும் வாயின்றியே.
ஆகன் - மார்பையுடையவன் (ஆகம் + அன்). கூடு - உடம்பு, விழித்தேன் - கண்ணாகிய வண்டு. உருவளர் வேள் - உருவம் பெற்ற மன்மதன்.
வேளனையான் விழிப்போது - தலைவனது கண்ணாகிய மலர். (80)
இருவரு முள்வழி யவன்வர வுணர்தல் முற்றிற்று.
பாங்கி மதியுடன்பாடு முற்றிற்று.
பாங்கியிற் கூட்டம்
தலைவன் உட்கோள் சாற்றல் ஏதா யினுதும் பணிமுறை கேட்ப னிமையவர்காய் போதா யினுந்தர வல்லவ னான்புவி போலெவர்க்கு மாதார மான கரவையில் வேல னணிவரைமேற் பாதார விந்த மயிலனை யிரென்னைப் பார்த்திடுமே.
கா - சோலை. இமையவர் கா - கற்பகச் சோலை. (81)
பாங்கி குலமுறை கிளத்தல்
சாத்திர நீதிப் படியானங் கோதை தயங்குகுறக் கோத்திர மாணவ ணிகுல மேரு குணத்திலிவன் மாத்திர மென்னுங் கரவையில் வேலன் வரையிலிவஸ் பாத்திர மன்றுனக் குப்புயல் சூழும் பதிக்கிறையே.
கோதை - பெண். நீ குல மேரு - நீ குலத்தால் மிக உயர்ந்தவன் என்றபடி, குணத்தில் இவன் மாத்திரம் - நற்குணத்தில் இவன் ஒருவனே, பிறிதொருவர் சமானமில்லாதவன் என்றவாறு. பாத்திரம் - தகுதியுடையவன்.

கரவைவேலன்கோவை /69
தலைவன் தலைவிதன்னை யுயர்த்தல்
(83)
பாங்கி யறியாள் போன்று வினாதல் மனங்காண் மலர்கொய்து தண்சுனை நீர்மகிழ்ந்தாடிவருங் கணங்கானுை மாதரு ஞங்கதி ராபுரிக் கந்தற்கண்றி வணங்காத சென்னிக் கரவையில் வேலன் வரையிலுன்னை
கதிராபுரி - கதிர்காமப்பதி. கணம் - கூட்டம். (84)
இறையோ னிறைவிதன்மை யியம்பல்
சுந்தர மாரன் கரவையில் வேலன் சுரும்பனையாய் அந்தர நீண்முகில் கூன்மதி யார மணிந்தசங்க மந்தர நேரிடை வார்குழல் வானுதல் வாய்ந்தமனிக் கந்தர மாமுலை யாமென தாவியின் கண்மணிக்கே,
அந்தரம் - ஆகாயம். கூன்மதி - பிறைச்சந்திரன். ஆரம் - முத்து. கந்தரம் - கழுத்து. அந்தரம் நேர்இடை, நீண்முகில் நேர்குழல், கூன்மதி நேர்நுதல், சங்கம் நேர்கந்தரம், மந்தரம் நேர்முலை என நிரனிறையாக் கொள்க. (85)
பாங்கி தலைவியருமை சாற்றல்
(86)
தலைவ னின்றியமையாமை யியம்பல்
(87)
பாங்கி நின்குறை நீயேசென் றுரை யென்றல்
(88)
பாங்கியைத் தலைவன் பழித்தல்

Page 105
17O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பாங்கி பேதைமை யூட்டல்
(90)
LLLLSLLLLLLLLLLLL0LLLL00LLLLL0LLLLL0LLLL0LLLLLLLLLLLLLLLC00LLL
காதலன் றலைவிமூதறிவுடைமை மொழிதல்.
(91)
பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல்
(92)
தன்னிலை தலைவன் சாற்றல்
போதொற்று கோதையுன் கையிலென் னாவி பொருஞ்சமரி ஒனுதொற்றை வால்வளை வேலன் கரவை யுயர்சிலம்பிற் காதொற்று வேல்விழிக் கன்னிதன் னாகக் களபக்கொங்கை வேதொற்றி னாலன்றி மீளாதென் காம வினைக்குளிரே.
போதொற்று - மலரணிந்த. களபம் - கலவைச்சாந்து. வேது வெம்மையைச் செய்வது. வேதொற்றல் - வேது பிடித்தல். (93)
பாங்கி யுலகிய லுரைத்தல்
அரும்பை மனக்குங் கனதன வாணகை யாரங்கொண்ட கரும்பை மனக்குஞ் செயல்புரி வாய்மதுக் காவின்மலர் சுரும்பை மணக்குங் கரவையில் வேலன் சுரும்பண்ணலே யிரும்பை மனக்கும் பணியேந் துலகி லியலிதுவே.
கரும்பு - கரும்பு போல்வாள்; தலைவி. அவளை மணக்குஞ் செயல் - மணஞ் செய்தல். சுரும்பு - (1) வண்டு; (2) மலை. இரும் பை மணக்கும் - பெரிய படம் பொருந்திய, பை - பாம்பின் படம். பணி ஏந்து உலகு - அதிசேடன் தாங்கும் பூமி. இயல் - முறைமை. (94)
தலைமகன் மறுத்தல்

கரவைவேலன் கோவை /71
பாங்கி யஞ்சி யச் சுறுத்தல்
(96)
தலைவன் கையுறை புகழ்தல்
(97)
பாங்கி கையுறை மறுத்தல்
வையுறை வேலண்ண லேயயர்ப் பார்நமர் வாங்கியுன்றன் கையுறை யாந்தழை யிந்நாட்டி னின்மையிற் கைக்கனகம் பெய்யுறை மேகங் கரவையில் வேலன் பெருஞ்சிலம்பி லையுறை யல்கு லணியப் படாதுநம் பான்மொழிக்கே.
வை - கூர்மை. அயிர்ப்பார் - ஐயப்படுவார். கையுறை - கையிற்
கொடுக்கும் பொருள். தழை - தளிராலும் மலராலுஞ் செய்யப்படுவதோர்
உடை. உறை - துளி, மழை. ஐஉறை - அழகு பொருந்திய. (98)
ஆற்றாநெஞ்சினோ டவன்புலத்தல்
(99)
பாங்கி யாற்றுவித் தகற்றல்
கரம்பெற்ற தாகவு முன்றழை கன்னியைக் காங்குலின்வாய் வரம்பெற்ற தாகவுங் கண்டுகொ னிமட வார்க்குப்பஞ்ச சரம்பெற்ற மாரன் கரவையில் வேலன் சயிலத்திலா யிரம்பெற்ற சோதி யெழுங்கால் வருதி யிறையவனே.
பஞ்சசரம் - ஐங்கணை. சயிலம் - மலை. ஆயிரம் பெற்றசோதி - சூரியன். சூரியனுதிக்கும் போதுவா; வந்தால் நின் தழை என் கையதாகவும் கன்னியை யான் இவ்விராமுற்றும் குறையிரந்து வரம் பெற்றதாகவுங் காண்பாய் என்பதாகும். (100)

Page 106
172/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்
பொய்ய்பொருள் காட்டிடை யார்தந்த காமப் புதைபொருட்கு முய்பொரு னுைாற்கவிப் பாவா னருக்கு முகந்துகந்து கைப்பொரு ணல்குங் கரவையில் வேலன் கனகிரிமேல்
மெய்பொருளாவது நெஞ்சே மடலன்றி வேறில்லையே.
புதை - மறைவு. முப்பொருள் நூற்கவி - இயல் இசை நாடகமென்னும் முத்துறைகளையுஞ் சேர்ந்த நூற்பாக்கள். மடல் - மடலேறுதல்; பனங்கருக்காற் குதிரை செய்து அதிலேறுதல். (101)
பாங்கிக் குலகின்மேல் வைத் துரைத்தல்
அடற்பரி யேறுங் கரவையில் வேல னனிவரைமேல் விடக்கறை வேல்விழி யார்தந்த காம விடாய்பெருகிக் கடற்கடு வாளிதன் சாந்தணிந் தேகிழி கைப்பிடித்து மடற்பரி யேறி வருவா ரிளைஞர் மறுகினிலே,
விடம் - நஞ்சு. கறை - கரிய. விடாய் - தாகம். கடு - நஞ்சு. கடற் கடு ஆளி - கடலிலெழுந்த நஞ்சை அடக்கியவர், சிவன். அவனது சாந்து - சாம்பர். கிழி - தலைவியினுரு எழுதப்பட்ட துணி மறுகு - வீதி, தெரு.
அதனைத் தன்மேல் வைத்துச் சாற்றல்
ஒருகோதை யாரைப் படமேல் வரைவ னுமிழ்பசுந்தேன் றருகோதை பாதியன் சாந்தணி வேன்வயற் சங்கச்சங்கம் பெருகோதை செய்யுங் கரவையில் வேலன் பெருஞ்சிலம்பில் வருகோதை கோதை மடலேறி நாளை வருகுவனே.
கோதையார் என்றது தலைவியை. படம் - சீலை, கிழி. கோதை பாதியன் - சிவன். சங்கச்சங்கம் - கூட்டமாகிய சங்கு. பெருகுஒதை - மிகும் ஒலி. கோதை - பெண்ணே. கோதைமடல் - பனைமடல். வருகோதை என்பதில் கோதை - சேரன் எனினுமாம், பனை அவற்கு மாலையாதலின்.

கரவைவேலன்கோவை /73
பாங்கி தலைமகள் அவயவத் தருமை சாற்றல் வரியார் விழிக்கட லுந்தன மேருவும் வன்னமுத்தஞ் சொரியாலை வேலிக் கரவையில் வேலன் சுரும்பிற்செங்கைச்
சரியா ரிடைதெரிந் துந்தெரி யாதென்ற சங்கையுஞ்சொல் லரீதா யிவைபடைத் தெவ்வா றெழுதுவை யாண்டகையே.
ஆலைவேலி - கரும்புவேலி. சரி - வளையல், செங்கைச் சரியார் என்றது தலைவியை, சங்கை - ஐயம், அளவு. சொல்லரிதாய் - சொல்லும் அரிதாக.
விழிக்கடலும் தனமேருவும் தெரிந்துந் தெரியாதென்ற சங்கையும் சொல்லின் அருமையும் என்னும் இவற்றை எவ்வாறு படைத்து எழுதுவாய் என்றாள் என்க. ஆண்டகை - ஆண்மக்களுட் சிறந்தவன்- அன்மொழித் தொகை.
“மந்தா கினியனணி வேனிப் பிரான்வெங்கை மன்னவனி கொந்தார் குமுன்மணி மேகலை நூனுட்பங் கொள்வதெங்கன் சிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினு நந்தா வுரையை யெழுதலெவி வறு நயுந்தருளே’
என்னுந் திருவெங்கைக் கோவைச் செய்யுளும் ஈண்டு நோக்கததக்கது. (104)
தலைமகன் தன்னைத் தானே புகழ்தல்
சீதள வான்மதி நேர்முக மாது சிறைவண்டுசூழ்
தாதவிழ் கோகன காசன மீதினிற் றங்கலின்றிப்
ல மேல்வந்த நான்முக னானென்னைப் போன்றவரார்
மேதகு கேள்விக் கரவையில் வேலன் வியன்கிரிக்கே.
தாது - மகரந்தப்பொடி, கோகனம் - தாமரை. தாமரை ஆசனத்தை விட்டுப் பூமியில் தோன்றி நிற்கும் பிரமன் யான் ஆதலிற் படைத்து எழுதுதல்
எனக்கு அரிதன்று எனக் கூறினான் என்க. (105)
பாங்கி யருளியல் கிளத்தல்
பனைமட லேற்றை விரும்பிடில் வீட்டிற் பயிலுமன்றிற் சினையுள பார்ப்புள பாவம்வந் தீண்டிடுஞ் சிந்தைதன்னி னினைதல்செய் யாரரு ணல்லவர் வேரி நிறைகுவளை புனைமணி மார்பன் கரவையில் வேலன் பொருப்பிறையே.
பார்ப்பு - பறவைக்குஞ்சு. வேரி - தேன். (106)

Page 107
174/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பாங்கி கொண்டு நிலைகூறல்,
அலைப்பெண்ணை வெல்லு மியல்சேரு மாகத் தரும்புகொம்மை முலைப்பெண்ணை வேண்டுவ னான்மறுத் தான்மொழி நாவகத்தே கலைப்பெண்ணை மேவுங் கரவையில் வேலன் கனகவெற்பிற் குலைப்பெண்ணை கொண்டு குறைமுடிய் பாய்யின்னைக் கொற்றவனே
அலைப்பெண் - இலக்குமி, அலை - கடல். கொம்மை - குவிவு. கலைப் பெண் - கலைமகள், சரஸ்வதி. குலைப்பெண்ணை - குலையையுடைய பனை. (107)
தலைவி யிளமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல்
அல்லைக் குழைக்குஞ் சுருண்முடி யாளணி யாகத்திலே வல்லைக் குழைக்கும் முலைபொடி யாது மணிமிதிலை வில்லைக் குழைத்த பெருமான் கரவையில் வேலன்வெற்பிற் கல்லைக் குழைத்த புயத்தா யிளஞ்சிறு கன்னிகையே.
அல் - இருள். வல் - சூதாடுகருவி. பொடித்தல் - அரும்புதல். மிதிலை வில்லைக் குழைத்த பெருமான் - மிதிலாபுரியில் சனகமகாராசனிடத்திருந்த சிவனது வில்லை வளைத்த இராமன்; அவனை ஒத்த வேலன் என்க. கல்லைக் குழைத்த புயம் - கல்லையுங் குழையச் செய்யுந் திண்ணிய புயம்.
தலைவன் தலைவிவருத்தியவண்ணம் உரைத்தல்
கொஞ்சிய மென்மொழிக் கிஞ்சுக வாய்மலர்க் கொம்பனையாய் வஞ்சியர் மாரன் கரவையில் வேலன் மணிவரைமேற் பஞ்சணி சீறடிக் குங்குமப் பூண்முலைப் பாவைநல்லா ளஞ்சன வேல்விழி யாலென தாவி யலைத்தனளே.
கிஞ்சுகம் - கிளி; முருக்கு எனினுமாம். (109)
பாங்கி செவ்வியருமை செப்பல்
வைப்பையில் வேலண்ண லேயெழு பாரு மதித்தகொடி கைப்பயில் மேழிக் கரவையில் வேலன் கனகிரிமே லப்புல வுஞ்சுனை யாடாள்பொற் பந்தடி யாளியம்பி லெப்படி யான்சென்றறிவிப்பதாய்மணி யேந்திழைக்கே.
வை - கூர்மை. அப்பு - நீர். (110)

கரவைவேலன் கோவை /75
தலைவன் செவ்வி யெளிமை செப்பல்
திரையாழி யீன்ற திருமாது மேலுந் தெளியும்வகை குரையாழி முழ்குந் திரையொக்கு மேயன்றிக் கொண்டலென்ன வரையாத வள்ளல் கரவையில் வேலன் வரையிற்செந்தே னுரையா யுனைப்புல்லு நான்வந்த வாசென் றுரைத்திடினே.
திருமாது - இலக்குமியை ஒத்த தலைவி. குரைத்தல் - சத்தித்தல். ஆழி - கடல். குரையாழி மூழ்குந் திரை ஒக்கும் - ஒலிக்கின்ற கடலில் அடங்கின திரைபோலச் சாந்தமடைவாள். நான் வந்தவா(று) சென்றுரைத்திடின் உன்னைப் புல்லும் என்க. (111)
பாங்கி யென்னை மறைத்தபி னெளிதென நகுதல்
நெய்யுந் திரியும் விளக்கிருந் தாலுந் நிறைவிளக்கஞ் செய்யுங் கருவி முதற்றுாண்டு கோல்திகழ் வாயுங்கண்ணுங்
கையுஞ் சிவந்த கரவையில் வேலன் கனகிரிமே லெய்யுஞ் சிலையண்ண லென்மறைத் தாலங் கியல்வதன்றே.
‘என் மறைத்தால் அங்கு இயல்வது அன்று' - என்பது நீரிருவரு மொத்து என்னை மறைத்தால் அவ்விடத்து நுங்குறை முடிவதன்று என்றவாறு. (112)
அந்நகை பொறாஅ தவன் புலம்பல்
பன்னாக மாமணி பாவலர்க் கீந்திடும் பாரிசெம்பொற் கன்னானுைந் தோளன் கரவையில் வேலன் கனகிரிமா னன்னார் மயல்கொண் டலைவேனை யன்புட னஞ்சலஞ்ச லென்னாம னிநகைத் தாய்துயர் மேற்றுய ரெய்திடவே,
பாரி - கடையெழு வள்ளல்களில் ஒருவன். (113)
பாங்கி தலைவனைத் தேற்றல்
தண்ணான வார்குழ லார்தோழி யாரெனச் சாருறுப்பிற்
கண்ணான நாணினிக் கண்ணன் சுருதியெண் கண்ணயனுக்
கண்ணானை யேத்துங் கரவையில் வேல னணிவரைமே லெண்ணாய் மனக்குறை யென்னா லியலு மிறையவனே.

Page 108
176/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பாங்கி கையுறை யேற்றல்
மதிவண்ண வேணி யிருவண்ண மேனி மறைக்கொழுந்தைத் துதிவண்ண வாயன் கரவையில் வேலன் சுரும்பிற்பொறி பதிவண்ண லோசன மாலனை யான்றந்த பைந்தழைதான் விதிவண்ண மேவலி தாமெனும் பேரை விளக்கியதே.
வண்ணம் -(1) அழகு (2) தன்மை (3) நிறம் (4) செயல். பொறி - இலக்குமி. பொறிபதி - இலக்குமியி னுறைவிடம், தாமரை. லோசனம் - கண். பேர் - சொல். (115)
கிழவோ னாற்றல்
திருந்திய கோதண்ட ராகவ னானைக்குச் சீற்றமின்றிப் பெருந்திரை யோல மமைந்தது போலிந்தப் பேதைசொல்லாற் றருந்தரு மானுங் கரவையில் வேலன் றடஞ்சிலம்பி லருந்துய ரோல மமைந்ததென் னாகமென் னார்கலியே.
கோதண்டம் - வில். ராகவன் - இரகு குலத்தவன்; இங்கு இராமன். ஒலம் - சத்தம். தருந்தரு - தருகின்ற மரம், கற்பகம். ஆர்கலி - சமுத்திரம். என் ஆகம் என்னும் ஆர்கலி ஒலம் அமைந்தது (அடங்கியது) என்க. (116)
இறைவன் றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக் கவன்குறை யுணர்த்தல்
குனிக்குங் கரும்புத் தனுவொழி யாத்தனுக் கொண்டனையார்
லினிக்குங் குணாகரன் வேலன் கரவைவெற் பிற்பஞ்சினும் பனிக்குஞ் சரணியென் னாமவர்க் கேசெயும் பான்மையதே.
குனிக்கும் - வளைக்கும். தனு முன்னையது வில்லு, பின்னையது சரீரம். தனு ஒழியா - வில்லை நீக்கி, தனுக் கொண்டு அனையார் - மன்மதன் உருவு கொண்டது போன்றவர். தலைவர் தரு ஆர் தழை தருவார் என்க: தரு ஆர் - மரத்திற் பொருந்திய, பனிக்கும் - நடுங்கும். சரணி - சரணத்தை உடையவள் சரணம் - பாதம். சரணி, விளி. நாம் அவர்க்குச் செய்யும் பணி எனக் கூட்டுக. (117)

கரவைவேலன் கோவை /77
இறைவி அறியாள் போன்று குறியாள் கூறல்
தரைபொங்கு கிர்த்திக் கரவையில் வேலன் றடஞ்சிலம்பில் விரைபொங்கு தேன்மழை யாறாய் பெருகி மிகுங்கடல்போற் றிரைபொங்கி யோங்கும் மரகதப் பூகத் திரள்கவர்ந்து கரைபொங்கி யெங்கும் பரக்கின்ற தாலென்ன காரணமே,
மரகதம் - பச்சை. பூகம் - கமுகு. (118)
பாங்கி யிறையோற் கண்டமை பகர்தல்
விந்தா சலமன்ன தோளான் கரவையில் வேலன்வெற்பிற்
சந்தார் முலைச்சி மறைப்பதென் னோநின் றனைவிரும்பிச்
சிந்தா குலத்தொடு மானை வினாவிச் செழும்புனத்தில்
க்கானை யின் ன் டேன்சோலை வாய்வண் b க்கே.
விந்தாசலம் - (விந்த + அசலம்) விந்தமலை, முலைச்சி விளி. சிந்தாகுலம் - (சிந்தா+ ஆகுலம்) மனக் கலக்கம். வண்டல் - விளையாட்டு. மனை - சிற்றில். (119)
பாங்கியைத் தலைவிமறைத்தல்
பைவாழ் நிதம்பப் பசுங்கொடி யேபொற் பணைப்புயத்திற் செய்வாகை சூடுங் கரவையில் வேலன் செழுஞ்சிலம்பிற் கைவர் தழைகொண்டு மெய்வாடி நிற்பவர்க் கண்டுபின்னை யில்வாறு நீயுரைத் தாலேத மாகுமென் றெண்ணிலையே.
வாகை - வெற்றிமாலை. ஏதம் - குற்றம். (120)
பாங்கி யென்னை மறைப்பதென்னெனத் தழாஅல்
நின்றா ளரவிந்தஞ் சென்னியிற் சூடி நிரந்தரமு மொன்றா யிருக்கு மெனக்கொளித் தாயொன்ன லார்சிலையை
வென்றாண்மை கொண்ட கரவையில் வேலன் வியன்சிலம்பிற்
அரவிந்தம் - தாமரை. நிரந்தரம் - இடைவிடாது. திதலை - தேமல்.

Page 109
178/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பாங்கிகையுறை புகழ்தல்
திங்களை நேர்முகத் தாய்கிடை யாதிச் சிலம்பில்வயற் சங்களை வாழுங் கரவையில் வேலன் றடஞ்சிலம்பி லெங்களை வேண்டிய கோமான் றருந்தழை யேண்பொதியின் கொங்களை சாந்தன சந்தனச் சாதிக் கொழுந்தழையே
ஏண் - பெருமை. பொதி - பொதியமலை. சாந்து அன - சந்தனம் போற் குளிர்ந்த, சாதிச் சந்தனத் தழை யென்க. (122)
தோழி கிழவோன்றுயர்நிலை கிளத்தல்
மேகந் தவழ்குழற் பொன்னே திணைப்புன மேய்ந்துமயில் போகந் திகழு நிறமாடைப் பேடையைப் புல்லக்கண்டு சோகம் பெருகி யெனைப்பார்ப்ப ரம்புயத் தோகைமயி லாகம் பயிலுங் கரவையில் வேல னணிவெற்பரே.
போகம் - சுகம், அனுபவம். மாடை - மாடு (பக்கம்) ஐமீறுபெற்ற குற்றுகரச் சொல். மாடை பொன்னுமாம், அவ்வழி, மாடைநிறப் பேடை என மாற்றிக் கொள்க. அம்புயத் தோகைமயில் - இலக்குமி. (123)
மறுத்தற் கருமை மாட்டல்
தொடியார் கரதல மின்னனை யாய்கடற் றுசுகொண்ட படியாண் மதலை கரவையில் வேலன் பனிவரைமேற் கடியார் மலர்த்தழை யேந்திவந்தார்தமைக் காண்டொறுமேன் முடியா தினியின்று காறுஞ்சொன் னேன்பொய்ம் மொழித்திறமே.
தொடி - வளையல். தூசு - ஆடை, படியாள் மதலை - மண்மகள்
புதல்வன். இன்றுகாறும் பொய்ம்மொழித்திறஞ் சொன்னேன், இனிமேல் முடியாது எனக் கூட்டி உரைக்க. (124)
தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல்
திருவெள் மால்விடை யூர்வேயின் முத்தொடுஞ்செங் யொருவெள்ளை யோடுங் கறுப்பாகு மெண்ண முடையர்வயற் கருவெள்ளை யூருங் கரவையில் வேலன் கனகிரிமேல் வருவெள் ப்யலி வாண் ந்த மன் (ŠT.
வேய் - மூங்கில். வேயின் முத்து என்றது சிவனை. படை - கலப்பை. ஒரு வெள்ளை - ஒப்பற்ற பலராமன். கறுப்பாதல் - கோபித்தல்,

கரவைவேலன்கோவை /79
பகையாதல். வெள்ளையோடுங் கறுப்பாகும் என்பது முரண் நயந் தோன்ற நின்றது. சிவனுடன் பகை கொள்ளுதல் எருக்கமாலை என்பு மாலை அணிதல். பலராமனோடு பகைகொள்ளல்ாவது பனையை வெட்டுதல், பனை அவனுக்குக் கொடியாகலின். எனவே மடலேறுங் குறிப்புக் கூறியவாறு. கருவெள்ளை - சூற்கொண்ட சங்கு, இத்தொடையின் நயம் நோக்கிக் கொள்க. அம்புலி - சந்திரன். (125)
தோழி தலைவியை முனிதல்
கான்சொன்ன மேக மனையான் வரையி னலர்மறைக்க நான்சொன்ன குற்றம் பொறுத்திட வேண்டும் நளினமுகத் தேன்சொன்ன மென்மொழி யெங்குல மாதர் சிகாமணியே.
மீன் சொன்ன கண்ணியர் மால் வேள் - மீனைப் போன்ற கண்ணையுடைய பெண்கள் மயங்குகின்ற மன்மதன், அவனை ஒத்த என்பதாம். மால் வேள் வினைத்தொகை. கொடைக்கு ஆன் சொன்னமேகம் அணையான் என்பது கொடையிற் காமதேனுவையும் புட்கலாவர்த்தமென்னும் பொன்பொழி முகிலையும் ஒத்தவன் என்பதாம். சொன்னம் ஸ்வர்ணம் என்னும் வடமொழித்திரிபு: பொன் என்பது பொருள். அலர் - பழிச்சொல். நளினம் - தாமரை. தேன்சொன்ன - தேனை ஒத்த, சிகாமணி - தலையிற் சூட்டும் மணி, தலைமையைக் குறிக்குஞ் சொல்; ஈண்டுத் தலைவி. சூளாமணி, சூடாமணி, சிரோமணி என்பனவும் இப்பொருளன. (126)
தலைவி பாங்கியை முனிதல்
(127)
தலைவி கையுறையேற்றல்
பாங்காய் வரும்செம்ம லார்தந்த சாதிப் பசுந்தழையாம் வாங்கா விரும்பி யணியா திருக்கில் வரித்தும்பிசூழ்
பூங்காவி மாலைக் கரவையில் வேலன் பொருப்பகத்திற் றாங்கா தயலவர் வாயலர் தூற்றத் தகுமயிலே. (128)
இறைவி கையுறையேற்றமை பாங்கி யிறைவற் குணர்த்தல்
வயமேல் வருமிறை யுன்றழை வாங்கி வரிவிழியிற் குயமே லணைத்தொற்றி னாள்கய மேலன்று கூப்பிடுங்கைக் கயமே லருள்வைத்த வேலன் கரவைக் கனகவெற்பிற் புயமே லனைத்தெனக் கொண்டாடி னாளந்தய் பொற்கொடியே.

Page 110
18O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வயம் - வலிமை. இறை - தலைவனே. குயம் - முலை. கயம்மேல் - வாவிக்கண். கைக்கயம் - கையையுடைய யானை, கூப்பிடுங் கைக்கயம் என்பது முதலையாற் பற்றியிழுக்கப்பட்ட போது “ஆதிமூலமே” என்று ஓலமிட்ட கயேந்திரன் என்னும் யானை. அதனிடத்து அருள் வைத்தவன் திருமால், அவனை ஒத்த வேலன் என்பதாம். (129)
பாங்கி தலைமகற்குக் குறியிடங் கூறல் தணிவகல் சீற்றத்து மேவார்கள் சிங்கந் தயங்குமிசைப் பணியணி மெய்ம்மைக் கரவையில் வேலன் பணிச்சிலம்பா வணிகிளர் பூந்துள வப்புயலாகத் தணியுந்துங்க மணியென வேசெம் மணிவெயில் விசும் வயினதுவே. மேவார் - பகைவர். பூந்துளவப் புயல் (திருமால்) அகத்து அணியும் துங்கமணி கெளஸ்துபம் எனப்படும். செம்மணி - மாணிக்கரத்தினம். வெயில் - ஒளி, வயின் - இடம். (130)
பாங்கி குறியிடத் திறைவியைக் கொண்டுசேறல்
போதுள கொய்து சுனைகுடைந்தாடிய் பொருப்பெதிர்கூய்த் தாதவிழ் மாதவிப் பூம்பந்தள் நின்று தரியலர்மேல் வாதுள வாரண வேலன் கரவை வரையினில்வா தூதுள வாய்மயி லேவிளை யாட றொடங்குதற்கே.
எதிர்கூய் - எதிர் கூவி. மாதவிப்பூம்பந்தர் என்பது புனத்தயற் சோலையில் குருக்கத்தி படர்ந்து மலர்ந்து நறுமணம் வீசப் புதர் சூழ்ந்து மறைவு வாய்த்ததோரிடம் என்பதாம். தரியலர் - பகைவர். வாதுள - வாது (சண்டை) உள்ள. தூதுளம் - தூதுவளைப்பழம். கொய்து ஆடிக்கூய் நின்று தொடங்குதற்கு வா என முடிக்க. (131)
குறியிடத் துய்த்து நீங்கல் சந்தன நீழலஞ் சாரலின் வாய்நில்லுந் தாரணிக்கு ளைந்தரு வான கரவையில் வேல னணிவரைமேற் செந்திரு மால்பிறப் பிரஞ்சின் முன்றன்ன செய்யவிழிச் சுந்தர மேவும் புறவடி நாடிடைத் தோகையரே.
ஐந்தரு - ஐந்து தேவவிருட்சம்; அவையாவன “சந்தானம் வேண்டிற்றெல்லாந்தரும் அரிசந்தனர் பூ - மந்தாரம் பாரிசாதம் கற்பகம் மற்றோரைந்தாம்' (நிகண்டு 4வது. செய். 2). மால்பிறப்பு ஈரைந்தும்,

கரவைவேலன் கோவை /8
நாமமீன் ஆமை பன்றி நாரசிங் கத்தினோடு வாமனன் பரசுராமன் வானரர் தொழுமி ராமன் பாமலி வாசுதேவன் பலதேவ னுடனே கற்கி ஆமிவை பத்துந்தானே அரி அவதாரமென்ப,
என்னும் நிகண்டு (12-107)ச் செய்யுளானுணரப்படும். மால் பிறப்புப் பத்தில் மூன்றாவன மீன் ஆமை சிங்கம் என்பன, அவற்றை ஒத்த உறுப்பாவன முறையே விழி புறவடி இடை என்பனவாம். (132)
இறைவி இறையோனிடத்தெதிர்ப்படுதல்
மத்தக யானைக் கரவையில் வேலன் மணிவரைமேற் கொத்தவிழம்புயய் பிடிகை நீங்கிக் குளிபவள முத்தொடு சாதி வலம்புரி யேந்தி முறைமையினா லித்தரை வந்த தெனையாள வோசொல்லு மேந்திழையே.
அம்புயப்பீடிகை. தாமரையாசனம். பவளம், முத்து, வலம்புரி ஏந்தி என்பது முறையே இதழ், பல், கழுத்து என்னும் உறுப்புக்களுடைமையைக் குறிப்பதாம். (133) புணர்ச்சியின் மகிழ்தல் எமையாள வெண்ணி யமையாருந் தோளி யினிதுநல்கு மமையாத வின்பம் புகழெளி தோவிரு ளாவபர சமையா தபணுயர் வேலன் கரவைத் தடஞ்சிலம்பி லிமையார் பதமும் பதவது போகமு மென்பெறவே.
அமை - மூங்கில். அமையாத - அடங்காத, தெவிட்டாத என்றபடி, இருள் ஆ அபர சமைய ஆதபன் என்பது பிறசமயமாகிய இருளை யகற்றுஞ் சூரியன் என்பதாம். அபரம் - பின், வேறு, பிற என்னும் பொருள் தரும் ஒரு வடசொல். இமையார் - தேவர். (134)
புகழ்தல் முகத்தான் மதியை மறுவாக் கினிர்முலை கொண்டுவல்லைச் சகத்தா ரறிந்திடக் காசாக் கினிர்குழை சாடியவம் பகத்தாலும்ாவை வடுவாக்கி னிரெழு பாரிற்சத
மறு - (1) குற்றம் (2) அடையாளம். காசு - (1) குற்றம் (2) பொன். அம்பகம் - கண். வடு - (1) குற்றம் (2) பிஞ்சு. சதமகத்தான் - இந்திரன். (135)

Page 111
182/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தலைமகளைத் தலைமகன் விடுத்தல்
ஆருயி ராமுன் றுனைவஞ்சி யோடுமன் புள்ளகலாச் சீர்வள ராயத்திற் சென்றரு னிதெவ்வ ரஞ்சவெல்லும் போர்பயில் வாகைக் கரவையில் வேலன் பொருப்பகத்திற் காரணி கோதைக் கனத்தா லிடையிடை காரிகையே.
இடை இடை - இடை மெலிகின்ற (136)
பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறைகாட்டல்
பூமேவு தாமரைப் போதிவை காவியம் போதிவைமாந் தேமேவு வாசத் தளிவை காணிவை சேர்த்தணிவாய் காமேவு செங்கைக் கரவையில் வேலன் கனகிரியின் மாமேவு முண்டக மீதுறை யாத மடமயிலே,
பூ - அழகு, பொலிவு. காமேவு செங்கை - கற்பகச்சோலையையொத்த கொடையமைந்த கை. முண்டகம் - தாமரை. (137)
தலைவியைப் பாங்கிற் கூட்டல்
இல்லா மருங்குன் மயிலிய லாயினி யாந்தனித்து நில்லாம லாயத்தி லெய்துகம் வாநிறை தேமலர்க ளல்லார் நினது குழற்கணிந் தேனம ராரைவெல்லும் வில்லாண்மை வீரன் கரவையில் வேலன் வியன்கிரிக்கே.
எய்துகம் - எய்துவம். அமரார் - பகைவர். (138)
நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல்
பெற்றாய் பெறுவதை யானாலு மாண்மைப் பெருந்தலைவா பொற்றா மரைவஞ்சி யுன்னாக மேவப் புணர்தந்தருள் வற்றாத வாரிதி வேலன் கரவை வரையினினான் முற்றாத முற்றுவித் தேனென்று காண்டி முறையுனக்கே, (139)
உலகியன் மேம்பட விருந்து விலக்கல்
வினைமா வழங்குநஞ் சீறுார்க் குரம்பையின் மேவிப்பசுந் தினைமாவுந் தேனும் விருந்திருந் துண்டு சிலம்பதக்க
6)TOT நகுலன் கரவையில் வேலன் கனகவெற்பிற் புனைமா மணிப்புய காலையி னேகுநின் பொன்னகள்க்கே.

கரவைவேலன் கோவை /85
வினைமா - கொடிய வன விலங்கு. வழங்குதல் - சஞ்சரித்தல்.
குரம்பை - சிறுவீடு. கணைமா - குதிரை. நகுலன் பஞ்சபாண்டவருள் நாலாமவன், அசுவசாத்திரம் குதிரையேற்றம் என்பவற்றில் வல்லுனன்; அவனை யொத்த வேலன் என்க. (140)
விருந்திறை விரும்பல் மருப்பா மெனவளர் பூண்முலைப் பார மயிலனையீர் விருப்பா லருளுந் தினைமாவுந் தேனும் விருந்தினர்க்குத் தருப்பா னியானங் கரவையில் வேலன் றடஞ்சிலம்பிற் றிருப்பாற் கடல்வரு புத்தமிர் தாமென்னத் தேர்குவரே.
தருப்பாணியான் - கற்பகதருவையொத்த பாணி (கை)யையுடையவன்.
தினைமாவுந்தேனும் விருந்தினர்க்குப் புத்தமிர்தாமென்ன (அவர்) தேர்குவர் எனக் கொள்க. (141)
பாங்கியிற் கூட்டம் முற்றிற்று.
ஒருசார் பகற்குறி
கிழவோன்பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது கண்டிரங்கல்
தழுவிய வன்பர் தணந்தாரென் னாவி தனைவருத்தக் குழுமிய தேனுழுங் கோதைநல் லாய்கும ரேசர்பதந் தொழுகரு ணாநிதி வேலன் கரவைச் சுரும்பகத்தி லெழுபிறை வாலெயிற் றுச்செக்கள் மேற்றிசை யெய்தியதே.
தணத்தல் - நீங்குதல். கருணாநிதி - அருட்செல்வன், தயையுடையவன். அன்பர்தணந்தார், செக்கள் வருத்த எய்தியது என்க.
பாங்கி புலம்பல்
வெதிர்புரை தோளியைக் காதல னிங்கிய வேலைகண்டு மதிபயில் வாகைக் கரவையில் வேல மகிபனன்ன முதிர்பொறை ஞாலத் திருள்சீக்குஞ் சோதி முழுமணியாங் கதிர்வரக் கொண்டுசென்றீர்பரி காளந்தி கண்ணுறவே.
வெதிர் - மூங்கில். வேலமகிபன் அன்ன முதிர் பொறை ஞாலம் என்பது விபரீத உவமை. சீத்தல் - நீக்குதல். பரிகள் என்றது சூரியனது ஏழு குதிரைகளை. கண்ணுறல் - காண்டல். (143)

Page 112
184/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தலைவனிடத் தலைவி வருந்தல்
காவியந் தாரணி வேலன் கரவைக் கனகவெற்பி லாவியொன்றாகு மெனைய்புல்லி யேகிய வாண்டகையே. (144)
தலைவியைப் பாங்கி கழறல்
மானிகள் சீதையை ராமன் பிரிந்தது வண்ணமுத்தம் போனகை யாயது கேட்டிலை யோபொரு மேவலரைக் கானக மேற்றுங் கரவையில் வேலன் கனகவெற்பி
லூனகு வேல ரெனைப்பிரிந்தாரென் றுரைப்பதென்னே.
மான் நிகர் சீதை, முத்தம் போல் நகையாய் பிரிந்தது அது கேட்டிலையோ? என்க. கானகம் ஏற்றுதல் - காட்டில் ஓடி ஒளிக்கச் செய்தல், எனை என்பது தலைவி கூற்றாகத் தோழி தலைவியைச் சொன்னது.
தலைவி முன்னிலைப்புறமொழிதல்
(146)
பாங்கியொடு பகர்தல்
இயங்கும் பிறப்பென் னிருவினைப் பாலன வென்றுணர்ந்தேன் முயங்கும் பொழுதின்ப மில்லா விடிற்றுன்ப முட்டுவர்காண் தயங்கும் பெரும்புகழ் வேலன் கரவைத் தடஞ்சிலம்பில் வயங்குங் கருங்குழற் செவ்விதழ் வெண்ணகை வானுதலே.
இருவினைப்பாலன - வினைப்பகுதியால் வருஞ் சுகதுக்கங்களை யனுபவிப்பன என்றபடி, (147)
பாங்கி யச் சுறுத்தல்
விதையம் புனத்திற் றினைக்காவ லின்றியவ் வேலவர்மே லிதையந் தனைவைத் திருந்தா யுனைவைப்ப ரில்லிற்கங்கை யுதையன் கரவையில் வேல மகிப லுயர்சிலம்பிற் புதையம்பு வேடர்கண் டாற்கிடை யாது புணர்ச்சியுமே.
விதையம்புனத்தில்- விதைக்கப்பட்ட அழகிய புனத்தில், கங்கையுதயன் - கங்காகுலத்தி லுதித்தவன். புதை - இலக்கிற்றப்பாது பாய்கின்ற, புதை அம்புக்கட்டு எனினுமாம். (148)

கரவைவேலன் கோவை /85
நீங்கற்கருமை தலைவிநினைந் திரங்கல் செய்போ திளமுலை யாயெனைக் கூடவுஞ் செய்துசெம்ம லிப்போது நீங்கிப் பிரிதலுஞ் செய்தன னென்னினந்த மெய்ய்போது வாரிச வேதனை யான்வியக் கோபழிக்கோ துப்போது மேன்மைக் கரவையில் வேலன் சுரும்பகத்தே.
வாரிசம் - தாமரை. வேதன் - பிரமா. வியக்கோ - (வியக்கு + ஓ) வியப்பேனோ. பழிக்கோ - (பழிக்கு + ஓ) பழிப்பேனோ. வியக்கு பழிக்கு என்பன தன்மை எதிர்கால வினைமுற்றுக்கள். துப்பு வலிமை. (149)
தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றல்
(150)
சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்
(151)
முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல்
(152)
முன்னின்றுணர்த்தல்
(153)
முன்னின்றுணர்த்தி யோம்படைசாற்றல்
ஆறணி செஞ்சடைச் சங்கரன் பாத மகத்துள்வைத்தான் மாறடர் வீரன் கரவையில் வேலன் வரையிற்சந்தச் சேறணி சுந்தரத் தோளண்ண லேயெங்கள் சேயிழைக்கு வேறிலை நின்னையல் லாற்றனஞ் சாயினு மெய்யிதுவே.
மாறு - பகைவர். தனஞ்சாயினும் என்பது மூப்பினும் என்றபடி,
கிழவேன் றஞ்சம்பெறாது நெஞ்சொடு கிளத்தல்
(155)
ஒருசார்பகற்குறி முற்றிற்று.

Page 113
186/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பகற்குறி யிடையீடு
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்
வெற்பன தோளண்ண லேகலிக் கோடைக்கு மேயநிழற் கற்பக மான கரவையில் வேலன் கனகிரிமேற் பொற்பக லேனற் குரலறற் கேய்ந்தன போதலங்க லற்பகை யோதிமுன் பற்பல கால்வரு மன்னையுமே.
கலிக்கோடை - வறுமையாகிய வேனில், ஏனல் குரல் - திணைக்கதிர் பொற்பு அகல் ஏனற்குரல் அதற்கு ஏய்ந்தன என்க; கொய்யும் பருவ மடைந்தன என்பதாம். அலங்கல் - மாலை. அல்பகை ஒதி என்றது தலைவியை, அன்மொழி. (156)
இறைவியைக் குறிவரல் விலக்கல்
வண்டலை தண்டலை வாரலை நீயினி வானத்தெழுங் கொண்டலை நேர்கொடை யான்புகழ் கங்கைக் குலத்துதித்தோன் மிண்டினர் சிங்காங் கரவையில் வேலன் வியன்சிலம்பிற் கண்டினை வென்று கசப்பாக்கு மென்மொழிக் காரிகையே.
வாரல் - வரற்க. ஐ சாரியை. கண்டு - பாகு (கற்கண்டு). (157)
இறைமகள் ஆடிடநோக்கி யழுங்கல்
தண்ணிறை பூஞ்சுனை யுந்தெளி யாறுந் தடஞ்சிற்றிலு மெண்ணிய பேரிரு விப்புனந் தானு மிலங்குமுத்த வெண்ணகை யார்மதன் வேலன் கரவையில் வெற்புமிந்தக் கண்ணினு மேவிப் பிரிந்தாரைப் போலிலர் வன்கண்ணரே.
இருவி - தினைத தாள். வனி கணிணர் - கொடியர், சுனைமுதலியவிடத்து என் கண்ணினும் பார்க்க எனக்கு அரியராய் மேவிப்
பிரிந்தாரைப் போல் வன்கண்ணர் இலர் என்றாள் என்க. (158)
பாங்கி ஆடிடம் விடுத்துக் கொண்டகறல்
(159)

கரவைவேலன் கோவை /87
பின்னாள் நெடுந்தகை குறிவயினீடு சென்றிரங்கல்
கிளிகாள் மயிலினங் காள்மலர்ச் சோலையிற் கீதம்பயில் அளிகாள் பசுங்கொடி யன்னார் விளங்குமென் னம்பகமுன் வெளியாக நின்றில ரந்தோ நதிக்குல வேந்தன்றமிழ்த் தெளிவாய கும்பன் கரவையில் வேலன் சிலம்பகத்தே.
தமிழ்த் தெளிவு ஆய கும்பன் - தமிழிலே தெளிந்த வறிவுபொருந்திய அகத்தியன்; அவனை ஒத்த வேலன் என்க. (160)
வறுங்களநாடி மறுகல்
சேருங் கலபப் பிணிமுகங் காளந்தச் செல்வியரென் சோரும் பிணிமுகம் பார்த்தில ரேதுன்ன லார்கிளைமேற் பேருங் களிற்றண்ணல் வேலன் கரவைப் பெரும்கிலம்பிற் சாரும் பொறியளி காளவர்க் கேயில்லைத் தண்ணளியே.
கலபம் - கலாபம், மயிலின்தோகை. பிணிமுகம் - மயில். சோரும் பிணிமுகம் - சோருகின்ற பிணிகொண்டமுகம். பொறி - வரி. தண்ணளி - இரக்கம் (தண் + அளி). இதன்கணுள்ள சொன்னயம் நோக்குக (161)
தலைமகன் தலைமகள் வாழுமூர்நோக்கி மதிமயங்கல்
மருக்குங் குமப்புய வேலன் கரவை வரையிற்கவிர் கருக்குஞ் செவ்வாயுமெ னெஞ்சா கியகருங் கற்கரைய வுருக்கும் பணிமொழிச் சந்தணி யும்முலை யோங்குமன்ன
மிருக்கும் பதியெது வென்றறி யேனினி யென்செய்வனே.
கவிர் - முருக்கம்பூ கருக்கும் - கருகச் செய்யும்படி சிவந்த,
பகற்குறியிடையீடு முற்றிற்று.

Page 114
188/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வால்
இரவுக்குறி
இறையோன் இருட்குறி வேண்டல். கறுத்தன மங்கு றுளித்தன வாரிருட் காங்குன்மனம் பொறுத்தினி நம்பதிக் கேகரி தாங்கயல் பூகமுட்டிச் செறுத்தலை வாவுங் கரவையில் வேலன் சிலம்பினென்போன் மறுத்தவிர் திங்கண் முகத்திகிட் டாது வருவிருந்தே.
செறுத்தலை - வயலின்கண், தலை ஏழனுருபு. (163)
பாங்கி நெறியினதருமை கூறல் விரத குணாகர வேலன் கரவை வியன்சிலம்பிற் கரவரை மேற்பகைக் கோளரி பாய்ந்திடுங் கானெறிவா யிரவினி லெவ்வண நிவரு வாயிறை வாவிகலுஞ் சரவிழித் தேன்மொழிக் குங்குமப் பூண்முலை தன்பதிக்கே.
விரதம் - தவம், நியமம். கரவரை - யானை. (164)
இறையோன் நெறியின தெளிமை கூறல் பொருமதத் தாரைக் கறையடி நீலப் புழைக்கைக்குன்றம் வெருவர வாலுளைச் சியங்கள் பாயும் வியனெறியு மருமைய தோவெற் கெளிதாமென் றெண்ணுதி யாண்மைகொண்ட மருவலர் கோபன் கரவையில் வேலன் வரையணங்கே.
கறை அடி - உரல்போன்ற கால். புழைக்கைக்குன்றம் - யானை. உளை - வெள்ளிய பிடர்மயிர். கோபன் - பகைவன். (165)
பாங்கி யவனாட் டணியியல் வினாதல்
அன்பதி னோர்தச நாற்கலை தேரு மறிவுடையா யுன்பதி மாதர்க் கருந்தமிழ் வாணர்க் குவந்துமணி யொன்பது நல்குங் கரவையில் வேல லுயர்சிலம்பி லென்பணி யென்றொடை யென்றழை யென்னிய லெவ்விடமே.
அன்பது - ஐம்பது, போலி. அன்பதி னோர்தச நாற்கலை - 64 கலை
ஞானம். உன்பதிமாதர்க்கு பணி என்? தொடை என்? தழை என்? இயல்
என்?
எவ்விடம்? என்றா ளென்க. (166)

கரவைவேலன் கோவை /89
கிழவோன் அவள்நாட் டணியியல் வினாதல்
சிறந்திடு மென்பதி செப்பியென் னும்பதித் தேமொழியார் நிறந்திகழ் பூவிடங் காவிரு நான நிறைகுணத்திற் கறந்திடு பாலன்ன வேலன் கரவைக் கனகவெற்பின் மறந்தரு வேல்விழி யாயுரை யாடுதி வாய்திறந்தே.
நானம் - நீராடல்; ஸ்நானம் என்னும் வடசொற்சிதைவு. (167)
அவற்குத் தன்னாட்டணியியல் பாங்கி சாற்றல் கோட்டின் றிகழ்முத்தஞ் சந்தனஞ் செவ்விய கோடன்மலர் காட்டும் புதுமை யழகா யணிவர் கவின்சுனைநீ ராட்டம் பயில்வர் மதுநாக நீழ லமர்வர்கற்றோர் வாட்டந் தவிர்த்திடும் வேலன் கரவைநம் மங்கையரே.
கோடு - யானைக்கொம்பு. கோடல் - காந்தள் (கார்த்திகைப் பூ),
இறைவிக் கிறையோன் குறையறிவுறுத்தல் அஞ்சாயல் வஞ்சியுன் பால்வர வெண்ணின ராடுகதிர்ச் செஞ்சாலி சூழுங் கரவையில் வேலன் சிலம்பகத்திற்
சஞ்சார மும்மத நால்வாயைத் தேடித் தவளநிறப் பஞ்சா னனந்திரி யுங்காங்குல் வாயந்தப் பண்பினரே.
வஞ்சி விளி. சாலி - நெல். சஞ்சாரம் - திரிதல், கூட்டம், கூட்டமாக வாழுமியல்புடைய எனினுமாம். நால்வாய் - யானை. தவளம் - வெள்ளை. பஞ்சானனம் - (பஞ்ச + ஆனனம் பரந்த முகத்தையுடையது) சிங்கம் (169)
நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல்
வெறியார் குழலியர் நன்னெஞ்ச மேயிந்த மேதினியோ ரறியாத பேதைய ரென்பது மெய்யுயி ராமன்பரைச் செறியார் வணங்குங் கரவையில் வேலன் சிலம்பிற்கங்குற் குறியாய் வருநெறி வாய்வரல் வேண்டுமிக் கோல்வளையே.
மேதினியோர் குழலியர் பேதையர் என்பது மெய் எனக்கூட்டுக. இக்கோல்வளை என்றது தோழியை. (170)

Page 115
19O/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
நேரிழை பாங்கியோடு நேர்ந்துரைத்தல்
அருள்விழி யாளன் கரவையில் வேல னணிவரைமேற் றெருளுடை யார்பணி சங்கரன் கண்ட மெனச்செறிந்த விருளிடை மேவுறக் காதலக் காதலர்க் கென்னினஞ்ச மருள்விழிக் கோமளக் கொப்யனை யாயென்சொன் மாற்றங்களே.
தெருள் - தெளிவு; தெருளுடையார் - ஞானிகள். கண்டம் - கழுத்து.
அக் காதலர்க்கு இருளிடைமேவுறக் காதல் என்னின் (யான்) சொல் மாற்றங்கள் என்? என்க. அவரது விருப்பம் அதுவாயின் யான் மறுத்தல் தகுமோ எனத் தலைவி இரவுக்குறி நேர்ந்தமை கூறியவாறு காண்க. (171)
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல்
என்னா லியன்றன வெல்லாம் புகன்றிந்த்ர கோபச்செவ்வாய் மின்னார்பொற் பாதம் பணிந்திரந் தேனிவ் விரவிரவில் தென்னா வலர்புகழ் வேலன் கரவைச் சிலம்பகத்து
இந்த்ரகோபம் - தம்பலப்பூச்சி. இ விரவு இரவில் - இந்த இருள்
செறிந்த இரவில், தென் - அழகு, இசை. (172)
பாதி
குறியிடை நீறீஇத் தாய்துயிலறிதல்
மேதினி யாடந்த வேலன் கரவை வியன்சிலம்பி லூதி யுலாவி யளிசூழ் கருங்குழ லொண்டொடியே போதிசை நாகந் தழுவிய பீலியம் பொன்மயில்கள் பாதி யிராவுந் துயிலா மிகுந்த பரிவுகொண்டே.
மேதினியாள் தந்த - பூமிதேவி பெற்ற, மண்மகள் புதல்வன் என்பதாம். இரா - நடுஇரவு. பரிவு - துயர், சோகம், (173)
இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தல்
பொலம்புரி பூண்முலைப் பொன்னே யுனைப்பண்டு புல்லிமிக நலம்புரி யின்பமுண் டேகிய வாழி நகைத்திகிரி வலம்புரி மாலின் றிரவில்வந் தார்மய லானதியின் குலம்புரி மாதவ வேலன் கரவைக் குளிர்வரைக்கே.

கரவைவேலன் கோவை /91
ஆழி நகை திகிரி வலம்புரி மால் - வட்டமாகிய ஒளி பொருந்திய சக்கரத்தையுஞ் சங்கினையுமுடைய திருமாலை நிகர்த்த தலைவர். மயலால் வந்தார் என்க. நதியின் குலம் - கங்காகுலம். (174)
அவட்கொண்டுசேறல்
பூண்டருஞ் சோதி வெயில்வீசும் வல்லிருட் போதிலுன்னை வேண்டிவந் தாரும்மைக் கானுகம் வாசியை மேவலர்மேற் துண்டுசங் க்ராமன் கரவையில் வேலன் சுரும்பினில்வா பாண்டியன் கேதன மஞ்சிய நீலப் படைக்கண்ணியே.
உன்னை - (உன் +ஐ) உன் தலைவர். உன்னை உம்மை வேண்டி வந்தார் (அவரை) காணுகம் (காண்போம்) வா எனக்கூட்டுக. சங்க்ராமன் - போரில் வல்லவன்; சங்கிராமம் - போர். கேதனம் - கொடி, பாண்டியன் கேதனம் - மீன். (175)
குறியுய்த் தகறல்
இனபரிபாலன் கரவையில் வேல னெழில்வரைமேற் கனமன கோதைக் கருங்குயி னிகலந் தேயணியப் புனல்வரி வாளை விளையாடும் வாவியிற் போதுமது வனசமுங் காவியுங் கொண்டிவன் மீண்டு வருகுவனே.
கனம் (மேகம்) அன கோதை என்க. கருங்குயில் அன்மொழித் தொகை, விளி. (176)
வணிடுறைதாரோன் வந்தெதிர்ப்படுதல்
குவிகறை மேகம் பயில்சோதி மின்னெனக் கூண்டிருண்டு கவியிரு ணிவரக் கண்டவென் கண்கள் கவிக்குவிழிச் செவிமணி நல்குங் கரவையில் வேலன் சிலம்பகத்திற் புவியினி லென்றவ மாற்றிய வோமணிப் பூங்கொடியே.
கறை - கரிய, கூண்டு - கூடி, கவிக்கு - பாடலுக்கு (ப்பரிசிலாக); புலவருக்கு எனினுமாம். விழிச்செவி - கட்செவி, பாம்பு, விழிச் செவிமணி
நாகரத்தினம். கண்ட என் கண்கள் என் தவம் ஆற்றிய என்றானெண்க.

Page 116
192/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பெருமகள் ஆற்றினதருமை நினைந்திரங்கல்
கங்குலென் றாற்பய மன்றியுந் தாரைக் கணமழைநீ ரெங்கனுைங் கானெறி வாய்முத லைக்குழி யாவுமெண்ணா திங்குநின் கால்வழி யாய்வந்த வாறென்சொ லென்பொருட்டால் வெங்கய முந்திடு வேலன் கரவையில் வெற்பண்ணலே (178)
புரவலன் தேற்றல்
அஞ்சன வல்லி னிருளும் பகலெனக் கானதென்னே நெள்ச மெமர் ரிக்கள் is (3 நீள் 影 குஞ்சர முர்ந்திடு வேலன் கரவைக் குளிர்சிலம்பின் மஞ்சன வார்குழ லந்தர சோதி மனிவிளக்கே.
அஞ்சன அல்லின் இருள் - மைபோலக் கரிய இராக் காலத்தி னிருள். என்னே - அதிசயக்குறிப்பு. மஞ்சு அன - மேகத்தை ஒத்த, அந்தரம் - தனிமை. அந்தரசோதி - ஒப்பற்ற ஒளி கற்பிற் சிறந்த தன்காதலியைத் தலைவன் தூண்டாமணிவிளக்கே என விளித்தலின் பொருத்தங் கண்டு கொள்க. (179)
புணர்தல்
குங்கும வாகன் கரவையில் வேலன் குளிர்சிலம்பிற் பொங்கரு ஞண்கட் சலராசி தோய்ந்து பொலிந்தகளச் சங்கொலி யார்த்திட நின்னரைத் தேர்கொண்டு தையனின்னா லங்கச ராசன் விழாமுற்றி னேன்மய லாறுதற்கே.
உண்கண் - மையுண்ட கண், சலராசி - கடல். அங்கசன் - மன்மதன்.
புகழ்தல்
விண்டோயுஞ் சோலையின் மேகார மாட விரைமலரின் வண்டோசை பாடுங் கரவையில் வேலன் மணிவரையிற் கண்டோது மென்மொழிநின்னருங் கண்டத்தைக் கண்டபின்னு முன்டோ சுரிமுக மில்லாத சாதி யொளிவளையே.
மேகாரம் - பயில். கண்டோது - (கண்டு + ஒது) பாகுபோன்ற, மென்மொழி தலைவி; விளி. கரிமுகமில்லாத என்பதில் சங்குக்கு இயல்பாகவுள்ள சுரித்த (சுருங்கின) முகம் என்பதனோடு, தலைவி கழுத்துக்குத்தோற்ற வெட்கத்தினாற் சுருங்கின முகமுடையது என்றும் வெட்கத்தினாற் சேற்றினிடம் மறைந்துகொண்டது என்றும் ஒருபொருள் தொனித்தல் காண்க.
(181)

கரவைவேலன் கோவை /93
இறைமகள் இறைவனைக் குறிவரல் விலக்கல். மலையிரு தோளன் கரவையில் வேலன் மணிவரையின் றலைவய மாவினஞ் சஞ்சரித் தோங்குநஞ் சாரலினம் முலைநலம் வேண்டித் தனியிருள் யாமத்து முன்னிவர
O 简 g த் தா 8 C
தலை ஏழனுருபு, வயமா - சிங்கம், புலி, யானை. வரல் - வரற்க வியங் கோள் எதிர்மறைவினைமுற்று. அலை - அலைகின்ற, புரளுகின்ற.
அவன் தலைவியை இல் வயின் விடுத்தல்
வில்வலி யாண்மைக் கரவையில் வேலன் வியன்சிலம்பி னல்வளை பூங்குழ லார்பிரவாள மனையசெவ்வாய் வல்வளை பூண்முலை மாதேயுன் பாத மலர்சிவக்க இல்வயிற் சென்றமர் தேடவுந் தம்மனத் தென்னணுவரே.
பிரவாளம் - பவளம். (183)
இறைவியை எய்திப் பாங்கி கையுறை காட்டல்
காதள வோடுநின் கண்னனுக்குத் தோற்ற கருங்குவளைப் போதிவை நின்முகம் வென்றிடத் தோற்ற புனலரும்புந் தாதவிழ் தாமரைப் பூவிவை நின்குழற் றானணியுஞ் சீதள முல்லை யரும்பிவை வேலன் சிலம்பணங்கே. (184)
பாங்கி இறைவியை இற்கொண்டேகல்
வள்ளுறை வாங்கிய வாள்போற் கயவர் மனமனைய நள்ளிருள் யாமத்துக் கண்படை நீங்கிநற் றாய்விழித்தே உள்ளினு மாம்நின்றிருமனைக் கேகுதி யோதிமம்யூம் பள்ளியில் வாழுங் கரவையில் வேலன் பனிவரைக்கே.
வள் - கூர்மை, வாள்போற் கொடிய கயவர் என்க. கண்படை - நித்திரை. பள்ளி - படுக்கை. (185)
பிற்சென்று பாங்கி இறைவனை வரவு விலக்கல்.
விரலணி மங்கைகனி போலயிலேந்தி விரைசுரும்பர் முரலணி மென்சுருள் போலிருட் காங்குலின் முன்னியடி யுரல்பொரு வாரண வேலன் கரவை யுயர்சிலம்பின் வரலுரு காசையி னாலசை யாவலி மன்னவனே.

Page 117
194/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
அயில் - வேல். விரை சுரும்பர் - விரைகின்ற வண்டு. சுருள் - கூந்தல், உருகு ஆசையினால் முன்னிக் கங்குலில் வரல் (வரற்க) என்றாளென்க.
தலைவன் மயங்கல்.
மாவடு வென்ற மதரஞ் சனவிழி மங்கைதன்பால் நீவர லென்று விலக்கினை யேசெம்பொ னேரிழையாய் பாவலர் மேகங் கரவையில் வேலன் பதம்பணியா மேவலர் போலு நடுக்கமுஞ் சோகமு மேவியதே.
மதர் - களிப்பு. (187)
தோழி தலைமகள் துயர்கிளந்து விடுத்தல்.
பொறிகாட் டுரகமுங் கண்கா ணொணாத புதையிருளிற் செறிகாட் டருநெறி வந்தனை வேலன் சிலப்பகத்தின் மறிகாட்டுங் கண்ணின ளுய்யச்சென் றாலுன் வளநகள்க்குக்
குறிகாட்ட வேண்டுந் தொடைசேர் மணிப்புயக் கொற்றவனே.
பொறி - புள்ளி, முத்திரை. புதை - மறைவு. மறி - மான். குறி - அடையாளம், குறிப்பு. (188)
திருமகட்புணர்ந்து அவன் சேறல்.
குடமார் கனதனக் கோதைநல் லாயெளி தாங்குறிக்கின் திடமாக நம்பதிக் கேகுவ தேசெய்ய நாவலர்க்குக் கடவா ரனநல்கு வேலன் கரவைக் கனகிரியின் மடவார் குழைமணி யின்வெயி லாலிருண் மாறிடுமே.
நம்பதிக்கு ஏகுவது குறிக்கின் எளிதாம் எனக் கூட்டுக. கடம் -
யானை மதம், மடவார் குழைமணியின் வெயிலால் - மடவாரது (தலைவியது) குழையிலனிந்த மாணிக்கத்தினது ஒளியினால், (189)
இரவுக்குறி முற்றிற்று.

கரவைவேலன் கோவை /95
இரவுக்குறியிடையீடு
O அல்லகுறி
இறைவிக்கு இகுளை இறைவர் வரவுணர்த்தல்
இருங்கயல் வென் O ன்னியென் னாகு மிலங் மருங்கினிற் புன்னையி லஞ்சமெல் லாமண்டலிகள்மெச்சும் பெருங்கன யோகன் கரவையில் வேலனைப் பேணலர்போ லொருங்கிருள் யாமமெல் லாம்விழி முடி யுறங்கிலவே.
கைதை - தாழை. அஞ்சம் - அன்னம். மண்டலிகள் - தேசாதிபர். கனம் - பெருமை, சீர்மை. யோகன் - பொருந்தியவன். ஒருங்குதல் - ஒருவழிப்படுதல். (190)
தான்குறிமருண்டமை தலைவி அவட்குரைத்தல்
கயற்குறி கானுங் கருங்கண்ணி யேயெண் கவியினுக்கோ ரியற்குறி யோனிகள் வேலன் கரவை யிருஞ்சிலம்பின் மயற்குறி மேவிய மற்றோர் குறியை மணந்துசென்றார் செயற்குறி யேயென்று சென்றோடி மீண்டு திகைத்தனனே.
கவி - பாட்டு. குறியோன் - அகத்திய முனிவர். மயற் குறி - மயக்கமாகியகுறி, பிறிதொன்றால் நிகழ்ந்தகுறி. மணந்து சென்றார் - என்னை மணந்து சென்ற தலைவர். செயற்குறியே யென்று - செய்த குறியென்று. மற்றோர் குறியை செயற்குறியே யென்று என இயையும். (191)
பாங்கி தலைவன் தீங்கெடுத்தியம்பல்
மல்லாருந் திண்புய வேலன் கரவை மணிவரையி னல்லா யுனக்கு வருத்தமன் றோமிகு நம்பின்மையாஞ் செல்லா தருங்குறி செய்தா ருலகினிற் செய்புமுதற் பொல்லா தவர்வஞ்சர் பூணணி யாகப் புரவலரே.
நம்பு - விருப்பம். செல்லாது - குறியிடத்து வராது. (192)

Page 118
196/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
புலர்ந்து அவன் போதல்
கரவேழ முருங் கரவையில் வேலன் கனகிரியிற் குரவே கமழுங் குழல்பொருட் டாய்க்கொடுங் கானெறியி லிரவேயின் னள்ளிருள் வாயஞ்சி டாவகை யென்னையிங்கு வரவேகற்பித்த மனமேபெற் றாயெண்ணில் வன்பிணியே. (193)
புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கல் மைந்துறை வேலவ ரும்பிழைத் தார்குறி மாமதியின் செந்துறை நூலன் கரவையில் வேலன்றென் னாட்டகத்தி னந்துறை யுந்துறை யேமடற் றாழை நறுந்தருவே கொந்துறை யும்புனை யேபிழைத் தென்சொற் குறித்தனரே.
மைந்து - வலிமை. மதியின் என்பதில் இன் சாரியை. செந்துறை - செப்பமான துறைபற்றிய. மதியையும் நூலையுமுடைய வேலன் என்க. மாமதியினால் நூலை யறிந்தோன் எனினுமாம். நந்து உறையும் துறையே யெனப்பிரிக்க. கொந்து - பூங்கொத்து. புனை - புன்னை. குறித்தனர் - சொன்னார். (194)
தலைவி பாங்கிக் குரைத்தல்
சலஞ்சல முத்த நிலாவிசுங் கண்டலந் தண்டுறைவர் நிலஞ்செறி யுங்கருந் தாதன்ன கோட்டு நிழல்விரிக்கும்
s ந்செறி 姆 sö பக்குறி பொய்த் ன்றே
வலஞ்செறி வாட்கைக் கரவையில் வேலன் வரையகத்தே.
கண்டல் - தாழை. கருந்தாது - இரும்பு. கோட்டு - கோட்டையுடைய, கோடு - மரக்கொம்பு. பொலம் - பொன். வலம் - வெற்றி. (195)
தலைமகளவலம் பாங்கி தணித்தல்
அடிப்பூ மயினின் குறிப்பிழை யேவிடை யண்ணல்பதம் முடிப்பூ வெனவைத்த வேலன் கரவை முதுசிலம்பிற் கொடிப்பூ மரத்திற் புனல்வா யரும்பிய கோகனதக் கடிப்பூ விருந்த தவர்பாற் குறிப்பிழை கண்டிலமே.
அடிப்பூ - அடியாகிய மலர். மயில், தலைவி; விளி. கொடிப்பூமரம் - கொடிபடரப்பெற்ற பூவையுடைய மரம். கோகனதம் - செந்தாமரை, செவ்வாம்பல், கோகம் என்பது சக்கரவாகம், (அதனை) நதம் ஆனந்திக்கச் செய்வது என்பது பெயர்க்காரணம். குறிப்பிழை - குறிதவறியது. (196)

கரவைவேலன்கோவை h97
இறைவன் மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல்
பேரா வருந்துய ரெங்களுக் காக்கிப் பிறிதுமொன்றுந் தேராதெம் முர்க்கு வரவொழித் தீள்தெவ்வ ரஞ்சவெல்லும் போராண்மை வீரன் கரவையில் வேலன் பொருப்பினும்முர் சேரா வரநினைந் தேம்புகல் விர்துந் திருநகரே. (197)
இறைவிமேல் இறைவன் குறிபிழைப் பேற்றல்
பெருக்கான சீர்த்திக் கரவையில் வேலன் பெருஞ்சிலம்பின் மருக்காலுந் தாமரை வாண்முகச் செந்திரு மங்கையன்ன முருக்கா ரிதழி யெனைமறந் தாலு மொழியினுண்மை யொருக்காலு நெஞ்சின் மறந்திலன் வேல்விழி யொன்டொடியே.
முருக்காரிதழி - முருக்கமலரையொத்த இதழையுடைய தலைவி.
தலைவி குறிமருண்டமை பாங்கி தலைவற் குரைத்தல்
கருமா னிகருங் கொடைக்கரத் தானுயர் காசினிமான் மருமான் கரவையில் வேல மகிபன் மணிவரையிற் றிருமா னிகரும் புகழண்ண லேதுணைச் செய்புமுலை யொருமான் குறிமருண் டேயுடன் மீண்டுவந் துற்றனளே.
கரும் ஆன் நிகரும் - பெருமைபொருந்திய காமதேனுவை யொத்த. காசினிமான் - பூமிதேவி. மருமான் - மகன். திருமால் நிகரும் என்க. துணை - இரண்டு. ஒருமான் என்றது தலைவியை. (199)
அவன் மொழிக்கொடுமை பாங்கி அவட்கியம்பல்
வெம்புலி சிங்க மதமலைக் காட்டு வியன்குன்றினி லம்பர மாகத் துருமே றதிர்வதும் பார்ப்பதின்றி வம்பவிழ் சோலைக் கரவையில் வேலன் வரைப்பவளக் கொம்பனை யாயெல்லி சென்றன மென்றனர் கொற்றவரே.
மதமலை - யானை. அம்பரம் - ஆகாயம். மாகம் - மேகம். பார்ப்பது - கருதுவது. கொடிய விலங்குகள் சஞ்சரிக்குங் காடுபொருந்திய மலையில் இடி ஆரவாரித்தலையுங் கருதாமல் குறியிடத்து இராப்போது வந்து நின்றேன் என்றார் தலைவர் என்றாளென்க. (200)

Page 119
198/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
என் பிழைப்பன்றென் றிறைவி நேர்தல்.
ஊற்றிய தண்சுனை நாவற் செழுங்கனி யூறுபுனற் சேற்றிடை வீழு மொலிகேட் டிராமுற்றுந் தெவ்வர்வலி மாற்றிய வீரன் கரவையில் வேலன் வரைச்சிலம்ப ராற்றிய தாங்குறி யென்றிருந் தேன்பிழை யன்றெனக்கே.
ஊற்றிய - ஊற்றுப் பொருந்திய, (201)
அல்லகுறி முற்றிற்று
வருந்தொழிற்கருமை
தாய்துஞ்சாமை
அயிலாளு நீல விழித்தோழி கேள்நரை யானில்வருங் கயிலாய னண்பன் கரவையில் வேலன் கனகவெற்பில் வெயிலார் புவனங்க ளெல்லாந் துயின்றன வீங்கிருளிற் றுயிலா னம்மன்னை கொடியாள் பெருங்கண்க டுஞ்சிலவே.
நரை - வெள்ளை. ஆன் - இடபம். கயிலாயன் நண்பன் - அரனது தோழன், குபேரன், குபேரனையொத்த வேலன் என்க. (202)
நாய் துஞ்சாமை
கஞ்சமின் சேருங் கரவையில் வேலன் கனகவெற்பர் பஞ்சினுந் தீண்டப் பணித்திடுஞ் சீறடிப் பாவைகொடு நஞ்சினுங் கோரம் பயிலன்னை துஞ்சினுஞ் ஞாளிக்குலந் துஞ்சலெனின் னாது குரல்காட்டுங் கங்குற்றொடர்நெறிக்கே,
பாவை - தோழியே! ஞாளிக்குலம் - நாய்க்கூட்டம். (203)
ஊர்துஞ்சாமை
சீரினங் குந்தமிழ் வேலன் கரவைச் சிலம்பிற்செம்பொன்
வாரினங் குங்கொங்கை மங்கைநல் லாய்கங்குன் மன்னெறியி னேர்விளங் குந்தொடைப் பொற்புய வேற்கை யிறைவருந்த வுருறங் காவஞ் சனவிழி யாங்க ளுறங்கினுமே. (204)

கரவைவேலன்கோவை hee
காவலர் கடுகுதல்
(205)
நிலவு வெளிப்படுதல்
தாதே யளகமுஞ் சூதேய் முலையுந் தயங்குமின்ப மாதே கருந்திரைப் பட்டாடை சுற்றிய வையமங்கை மீதே நிலாக்கதிர் பொங்கியதால்விறற் பாண்டவர்க்காய்த் துதே நடந்த கரவையில் வேலன் சுரும்பகத்தே.
தாது - மகரந்தப்பொடி, தேன் எனினுமாம். பாண்டவர்க்காய்த் தூது நடந்தவன் யூரீகிருஷ்ணன்; அவனையொத்த வேலன் என்க. (206)
கூகை குழறுதல்
விராவிய பூகத்து வெண்மடன் மீது வெறித்துமடு வரால்குதி பாயுங் கரவையில் வேலன் வரையிற்செவ்வி
யராமணி யல்குன் மடமயி னாமன மஞ்சவளர் மராமர மேற்குழ றாநின்ற கூகைகள் வாய்திறந்தே. (207)
கோழி குரற் காட்டுதல்
வேலா யுதனை வணங்குங் கரவையில் வேலன்வெற்பின் மாலாசை யன்பரெவ் வாறணை வார்மதி வாணுைதலாய் பாலான வாயரி கோலான வாற்பசு மஞ்சளொக்குங்
காலான வாயுதச் சேவலும் வாய்க்குரல் காட்டியதே.
பால் - வெண்மை, பாலான வாயும் அரிகோல்போன்ற வாலும், காலான ஆயுதமுமுடைய சேவல் என்க. அரிகோல் - கத்தரிக்கோல். (208)
வருந்தொழிற் கருமை முற்றிற்று.
இகுறியிடையீடு முற்றிற்று.

Page 120
ஜoo/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வரைதல் வேட்கை
தலைமகளைப் பாங்கி பருவரல் வினவல்
சுற்றாய வெள்ளத் துடன்முனி வாற்றுய ருற்றனையோ நற்றாயர் கோபங் கொளவந்த தோதமிழ் நாவலர்க்கோர் கற்றா வனைய கரவையில் வேலன் கனகிரிமேற் பொற்றா மரைமுலை யுற்றது வேது புகலெனக்கே.
பொற்றாமரைமுலை - சுணங்குபூத்த தாமரைமுகைபோலும் முலையை யுடை தலைவியே! (209)
அருமறை செவிலி யறிந்தமை கூறல்
பங்கய மானுறை வேலன் கரவைப் பனிவரையிற் செங்கயல் வென்ற மதர்விழி யாயன்பர் சேர்ந்தணைந்து பொங்கிய காதலுந் தந்தவர் போயபின் பூண்டிருந்த நங்கள வன்னை யறிந்தாண் முகத்தினி னானங்கொண்டே.
நம் முகத்தினில் தோற்றிய நாணத்தைக் கொண்டு அன்னை நம் களவை அறிந்தாள் எனத்தலைவி கூறியவாறாம். (210)
தலைமகன் வருந்தொழிற் கருமைசாற்றல்
LuTui Lurf யூருங் கரவையில் வேலன் பனிவரைமே லாய்குரல் ஞாளியில் வுர்துயின் றாலுமக் காவலரோ காய்வர் நிலாவெண் கதிர்காலு மேயிருட் காங்குன்முற்றும் வாயடை யாதுவன் கூகையுஞ் சேவலும் வாள்விழியே.
ஆயும் (தாயும்) ஞாளியும் ஊரும் என உம்மை விரிக்க. காய்வர் - சினத்தோடு திரிவர். (211)
தலைவி தலைமகனுர்க்குச் செலவொருப்படுதல்
குன்றாத செல்வக் கரவையில் வேலன் குளிர்சிலம்பிற் பின்றா ழளக மதிமுகக் கீற்றுப் பிறைநுதலாய் மின்றா ரகையன்ன நித்திலக் கொங்கை விரும்பிப்புல்லிச் சென்றார் நகர்க்கினி யேகுவ மோநன்று செப்புதியே.
மின் தாரகை - மின்னுகின்ற நட்சத்திரம். (212)

கரவைவேலன் கோவை /ஜol
பாங்கி இறைவனைப்பழித்தல்
பூந்தொடை மார்பன் கரவையில் வேலன் பொருப்பின்மின்னார் தாந்துயர் கூர்ந்த தகையல ரேயறிந் தாரவர்தாம் பாந்தளும் வெண்பற் பிறழ்வாய்க் கராமும் பயின்றவர்க்கு நீந்தருங் கானெறி வாயிருள் வாயினி நீந்துவமே.
மின்னார் என்றது தலைவியை. பாந்தள் - பாம்பு. கராம் - முதலை. பயின்றவர்க்கு என்பது அவரிடத்துக்கு என்பதாம். நீந்துவம் - துன்பமுற நடந்து செல்வோம். (213)
இறைவி இறையோன்றன்னை நேர்ந்து இயற்படமொழிதல்
நிழல்சுளி யானைக் கரவையில் வேல னெடுஞ்சிலம்பர் குழலிசை வாய்மொழிக் கொம்பனை யாயென் குவிமுலைமே லெழிலிருந் தோங்கும் பசப்புநஞ் சார்வுமெண் ணாததெல்லாம் பழவினை யன்றி யவர்மீதிற் சற்றும் பழுதில்லையே.
பசப்பு - நிறவேறுபாடு சார்வு - உறவு, ஒழுக்கம். (214)
கனவு நலிபுரைத்தல்.
இந்நா ஸ்ரியாமத் தவர்வந்து கூடி யெனைப்புணர்ந்தார் நன்னா ணனவென்று கண்விழித் தேனொன்று நான்கண்டிலேன் கன்னாவ தாரன் கரவையில் வேலன் கனகிரிமேன் முன்னாள் வினைப்பய னோகள வாக முடிந்ததுவே.
கன்னாவதாரன் என்றது கன்னனைப்போன்ற கொடையுடையவன் என்பதாம். (215) கவினழி புரைத்தல், புனைமே கலைமயில் வெற்பனு நீயும் புலவர்தமிழ் தனையே விரும்புங் கரவையில் வேலன் றரியலர்போ
னினைவே யழிந்து கவின்சோர்ந்து வாடி நெடுந்துயர்தாங் கெனையே யறியி. ரறியாத நுங்குறை யென்வினையே.
மயில் அண்மைவிளி தோழியை விளித்தது. (216)

Page 121
2O2/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தன்துயர் தலைவர்க் குணர்த்தல் வேண்டல் திசைப்பா லிசைவைத்த வேலன் கரவைச் சிலம்பர்தம்பால் விசைப்பா னமன்ன விழியணங் கேநம் மெலிவையெல்லா
நசைய்யான் மையோடு மவர்காதி னிற்புக நல்வசன மிசைய்யா ரவரெவ ராயினு மேபுக ழேறுவரே. (217)
துன்புறல் பாங்கி நீ சொல்லென (பாங்கி) சொல்லல்
விரையக லாத்திரை போலிருந் தேநம விம்முதுய
வோசென் நீயுயர்ந் தோங்குசெம்பொன் வரைநிகரான கரவையில் வேலன் மணிவெற்பிற்பாம்
விரை - விரைதல். இருந்து விம்முதுயர் என்க. பாம்பு அரை மயிலே - பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய பெண்ணே. (218)
அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி
செய்ச்சங் கமுருங் கரவையில் வேலன் சிலம்பகத்திற் கச்சங் கமுடுரு வுந்தனத் தாய்மதன் கைம்மலர்க்கு நச்சம் பனைய விழியா ரலர்க்கு நடுங்கியுள்ளத் தச்சம் பெருகிய தாலடை யாதுகண் ணாலியுமே.
கச்சு அங்கம் - கச்சாகிய அணி. ஆலி - துளி. (219)
ஆறுபார்த்துற்ற அச்சக்கிளவி
காமமிக்க கழிபடர்கிளவி
தரையே மதிக்குங் கரவையில் வேலன் றடந்துறைவாய்த் திரையேவிட் டென்னக ணத்திரை யேசெழும் பாறிரண்ட
க்கிலென் காதலிக்கென்றன்ே யெல்லாங் கரையே கரவலை யேயிழந் தேனென் கரவளையே.
திரை கண் நித்திரைவிட்டு என்ன? என மாற்றிக்கொள்க; திரை உறக்கமின்றி ஓயாது ஒலிப்பினுந் தனக்கு உபகாரமாகாமையின் இங்ங்னங் கூறினாளென்க. நுரை நுரைக்கில் என்? என்றதுந் தனக்கு அதனால் வரும் உபகாரமின்மையினெண்க. கரையே - களிக்கரையே! என்கரவளை

கரவைவேலன் கோவை/2O3
இழந்தேன், என்நோவை எல்லாம் வன் காதலர்க்கு கரவலை (மறையற்க) எனக்கூட்டி யுரைக்க, கரவளையையிழந்தேன் என்றாள் பிரிவினால் தன் உடல் மெலிந்தமையைக் குறிப்பித்தற்கு. (221)
தன்னுட் கையா றெய்திடுகிளவி,
LSLLLLLLLCLLLLLLL0LL00L0LL0L0LLLLLLLLCLLLS LLS0LLLL0LLLL00LLLLL L0LLLLL0LLLLL0LLLLSSLLLLLLSLLLLLLS0LLLL0LLLLLLLLLLSL000L0L0LLLL LLLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLSLLLLLLLS (222)
நெறி விலக்குவித்தல்.
இலக்கண நூலுணர் வேலன் கரவை யெழில்வரையிற் குலக்கவின் மேரு நிகர்க்குநம் மன்பரைக் கூடுஞ்செவ்வி
விலக்குதி நீயென் னுயிர்க்குயி ராகிய மென்கொடியே.
செவ்வி - தன்மை, காலம், கூடுஞ் செவ்வி - இரவில் வந்தொழுகுதல். அன்பரை வாரல் என்று கூடுஞ்செவ்வி விலக்குதி எனக்கூட்டுக. (223)
குறி விலக்குவித்தல்
ஆலையின் மாரன் கரவையில் வேல னணிவரையின் வேலைவென் றோங்கு விழியனங் கேகறை மேவிருளின் சோலையின் வாரலென் வேற்கா ளையைமடத் தோகையின்னும் வாலையென்றேசொன்ன தாலிசைந்தாளன்னை மாற்றங்களே.
ஆலை - கரும்பு. ஆலையில் மாரன் - கருப்பம்வில்லில்லாத மன்மதன், அவனையொத்த என்பதாம். வாரல் - வராதே. என் - என்றுசொல்லுதி. மடத்தோகை என்றது தலைவியை. வாலை - இளம்பிராயத்தவள். சொன்னதால், நமர் சொன்னதால். மாற்றம் - சொல். வேற்காளையை மடத் தோகை பின்னும் வாலை யென்றே (நமர்) சொன்னதால் அன்னை (அம்) மாற்றங்கள் இசைந்தாள், (ஆகலின்) இருளின் சோலையின் வாரல் என்: எனக் கூட்டியுரைக்க. வாலையென்றெ சொன்ன மாற்றம் என்பது தலைவி இன்னும் தினைக் கொல்லையிலிருந்து காவல் செய்யுஞ் சிறுபிராயத்தள் என்றவாறாம். (224)

Page 122
204/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வெறி விலக்குவித்தல்
வாராடு பூண்முலை யாயூரன் றந்த மயற்பிணியை யோராது சூர்வந்து தீண்டிய தாமெனக் கென்னவன்னை யோராமல் வெள்ளையின் மேற்கறுப் பாயின ளுண்மைதாங்குங் காராளர் கற்பகம் வேலன் கரவைக் கனகிரிக்கே.
ஊரன் - தலைவன். ஏராத - எழுச்சியில்லாத, உயர்வில்லாத. சூர் - தெய்வம். ஏராத சூர் என்பது கற்புடைமகளிரைத் தீண்டும் வன்மையில்லாத சூர் என்பதாம். வெள்ளை - வெள்ளாடு. கறுப்பு - கோபம். வெள்ளையின் மேற் கறுப்பாயினள் என்பது வெள்ளாட்டினை யறுத்துப் பலிகொடுத்து வேலன் சன்னதமாடுதலாகிய வெறியாட்டுச் செய்விக்க எண்ணினாள் என்பதாம். வெள்ளையின்மேற் கறுப்பாயினளென்பதன் முரண் நயம் நோக்குக. (225)
பிற விலக்குவித்தல்
கன்ன மதாசலம் போன்றிடும் வேலன் கரவைவெற்பிற் பொன்னுட னேயுற்றுச் சாரவந்தார்குலப் பூங்கொடியே துன்னிய பாங்கி னொதுமலர் சாற்றிய சொற்றிறங்கேட் டென்னிரு காதிற் கனல்காச்சு வேலெறிந்தாலொக்குமே.
கன்னம் - கபோலம். அசலம் - மலை. கன்னமதாசலம் - யானை. துன்னிய பாங்கின் நொதுமலர் பொன்னுடனே உற்றுச் சாரவந்தார் (எனச்) சாற்றிய சொல்திறம் கேட்டு, (அச்சொல்) என்னிருகாதில் கனல் காச்சு வேலை எறிந்தால் ஒக்கும் (என்று தலைவர்க்கு கூறி அவர்வரவு விலக்குதி என்றாள்) என்க. நொதுமலர் - அயலார். துன்னிய பாங்கின் நொதுமலர் - பொருந்திய ஒருபக்கத்து அயலார். துன்னிய பாங்கின் என்பதற்கு நெருங்கிய உரிமையோடெனினுமாம். (226)
குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்
வரைதல் வேட்கை முற்றிற்று.

கரவைவேலன் கோவை /205
வரைவு கடாதல்
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்
LLLLSLLLSLLSLLSLLLLLSLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLSLLLSLLLLLSLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLL (228)
அலரறிவுறுத்தல்
LLLLLL LLLLLLLL LLLLLLLLSLLLLLLL0LLLLLSLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLL LLLSLLLS0LLLLLLLLLSLLLLLLSLLLLLLLLLLLLLLL00LLLLLLLLLLLLLLSLL0LLL0LLLLLLLLS . (229)
தாயறி வுணர்த்தல் LLLLLLLL0LLLL0LLLLLL0L0 LL LLLLLLLLLSL LLLLLLLLLL LSLL L0LLL LLLLLLLLLLSLLLLLLLYLLLLL0LLLLLLSLLLLLLLL ...................... (230)
வெறியச் சுறுதல்
அரும்பவிழ் சோலைக் கரவையில் வேல னணிவரைமேல் வரும்புய னேர்செங்கை மன்னவ னேதிரு மங்கைக்குற்ற விரும்பிணி யாதென் றயிர்த்தவ ளன்னையு மென்னனையும் விரும்பினர் நெஞ்சில் வெறியாடல் வித்தக வேலனையே. அயிர்த்து - சந்தேகித்து. வித்தகம் - சாதுரியம். வேலன் - சன்னதகாரன், வெறியாட்டாளன். வெறியாடல் நெஞ்சில் விரும்பினர் எனவே அங்ங்ணம் வேலனை வினாவுதற்கு முன்னமே வரைந்துகொள் என்பது குறிப்பால் தோன்றச் சொல்லியவாறு. (231)
பிறர் வரைவுணர்த்தல்
சாதிப் பவளக் கொடிமீதிற் சங்கந் தவழ்துறைவா வாதித் தவர்சிங்கம் வேலன் கரவை மணிவரைமேற் பாதிப் பிறைநுத லாண்முக ராகப் பணிமதியு மோதிச் சுருளுங்கண் டார்மயங் காரிவ் வுலகினிலே, ராகம் - இராகம் (= ஆசை, மோகம்); நிறம் எனினுமாம். கண்டு ஆர் மயங்கார் என்க. சாதிப் பவளக்கொடி மீதிற் சங்கந்தவழ் துறைவா என்றது மணம் பேசிவந்தவர் தலைவிக்கு இயைபில்லாதவர் என்னும் இறைச்சிப் பொருள் பயந்து நின்றது. (232)
வரைவெதிர்வுணர்த்தல் பிறைசூடி யைத்தொழும் வேலன் கரவைப் பெருஞ்சிலம்பி லிறைவாநஞ் சாரல் வறிதே வருதி யியற்சுருதித்
துறைவே தியனொடு வந்தானங் கேளிர்நின் சொற்ககலா

Page 123
206/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வறிது - பயனின்றி. சுருதித்துறை - வேதத்தின் பிரிவுகள். நின்சொற்கு
அகலார் - நின் சொல்லைக் கடவார். உறைவான் - வானுறை என மாற்றிக்கொள்க. உறைவான் கலைமதி கண்டான் மலர்ந்திடு முற்பலமே என்பது வேற்றுப்பொருள் வைப்பு என்னும் அணி. (233)
வரையுநா ஞணர்த்தல் தேங்கமழ் சோலைக் கரவையில் வேலன் சிலம்பின்மின்னார் கோங்கரும் பன்ன முலைச்சுணங் காகிக் குளிர்சினைவாய் வேங்கையும் பூத்தன செங்கதிர் நாண விளங்குசுட ரோங்கயிலேந்திய தோளண்ண லேமதியூர்கொண்டதே.
சுணங்கு ஆகி - தேமல்போற் பொன்னிறம் உடையதாய். சினை - கொப்பு. வாய் ஏழனுருபு. ஊர் - பரிவேடம். மதி ஊர் கொண்டது - சந்திரன் நிறைவுற்றது. பூரணை யென்றபடி, வேங்கையும் பூத்தன என்றது திணைக்கதிர் முற்றி அறுக்கப்பட்டதனால் திணைப்புனக் காவலின்ங்கித் தலைவி இற்செறிக்கப்பட்டாள் எனக் களவு நிகழ்தற்கு வாய்ப்பின்மை காட்டி உலகமுறைப்படி வரையும் நாள் உணர்த்தியவாறு. மதியூர் கொண்டது என்றது சந்திரன் நிரம்பிற்று, வளர்பிறையின்றி வரையும்நாட் கொள்ளாராகலின் அதுவும் ஆயிற்று என்றவாறாம்.
“வேங்கையு மொள்ளினர் விரிந்தன
நெடுவெண டிங்களு மூர்கொணர் டன்றே”
என்பதும் (அகம். செ. 2)
“குன்ற வாணர்கள் யாவருங் கொடிச்சியை நோக்கித்
துன்று மேணல்கள் விளைந்தன கணிகளுஞ் சொற்ற
வின்று காறிது போற்றியே வருந்தினை மினிநீ சென்றி டம்மவுன் சிறுகுடிக் கெனவுரை செய்தார்.’
என்னுங் கந்தபுராணச் செய்யுளையும் நோக்குக. (234)
தலைமகிளறிவு அறிவுறுத்தல்
வாரித் தலம்புகழ் வேலன் கரவை வரையின்மிகப் பூரித்து விம்மி நுனிக்கண் கறுத்துப் புடைத்ததிகம்
பாரித்த கொங்கை பழிசொல்வன் யானென நின்பழிதான் யாரிப் படிமறைப் பார்மறைத் தாளெனை யென்னன்பனே.

கரவைவேலன் கோவை /2O7
கொங்கை என்பது ஆகுபெயராய் இங்குத் தலைவியை யுணர்த்தியது. யான் தோழி. நின் என்றது தலைவனை. கொங்கை யான்பழி சொல்வன் என நின்பழி எனை மறைத்தாள், யார் இப்படி மறைப்பார் என்க. (235)
குறிபெயர்த்திடுதல்
பற்றலர் சிங்கங் கரவையில் வேலன் பனிவரைமே லுற்றலர் தூற்றப் பெறுஞ்சிறை யார்வண் டுறங்கிமுரன் மற்றொரு காவினிற் சேர்ந்தினி நீநம் மலைக்குயத்துப் பொற்றொடி யாளுட னேவிளை யாடுதி பூட்புயனே.
அலர் உற்று தூற்றவும் பெறும் - (பிறரறிந்து) பழிச்சொல் தோன்றிப் பரம்பவுங்கூடும். குயம் - முலை. (236)
பகல் வருவானை இரவு வருகென்றல்
புரிவால் வளையிள முத்தமும் புன்னைப் புதுமலருந் தெரியா திலங்கு துறைக்கூடற் சேர்ப்ப செழுந்தமிழார் பிரியாத நண்பன் கரவையில் வேலன் பெருஞ்சிலம்பி
புரி - முறுக்கு. வால் - வெள்ளிய. கூடல் - கூடுதல். உரியாள் - தலைவன தன்பிற் குரியவள். (237)
இரவுவருவானைப் பகல் வருகென்றல்
செருமலி வாகைக் கரவையில் வேலன்றெண் ணிர்சுரக்கு மருவியஞ் சாரன் மணிச்சிலம் பாவரக் காம்பற்செவ்வாய் மருவிளங் கோதையும் யானும் புனத்திடை வைகுதுஞ்செம் பருதிநின் றோங்கும் பகல்வரு வாயினிப் பண்புடனே. (238)
பகலினுமிரவினும் பயின்றுவருகென்றல்
சிகரந் தளைபொன் மகமேரு வேலன் செழுஞ்சிலம்பிற் தகர மளவுஞ் சுருளோதி யாரத் தவளநகை மகர மணிக்குழை மான்மயிற் கண்ணியன் மாதுபொறாள் பகலு மிரவும் பயின்றே வருதிநம் பார்த்திபனே.

Page 124
2O8/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சிகரம் - கொடுமுடி, தகரம் - மயிர்ச்சாந்து. மான்மயிற் கண்ணியல் என்பதை மான்கண் மயில்இயல் என நிரனிறையாக் கொள்க. பொறாள் -
ஆற்றாள். பயின்று - நெருங்கி. (239)
பகலினு மிரவினு மகலிவ ணென்றல்
அயலா ரறிந்து பழியலர் தூற்றுவ ராம்பகலின் மயலா ரிருளின் மணிச்சிலம் பாமதி வாய்த்ததமி ழியலாயு நாவன் கரவையில் வேல னெழில்வரைமேற் கயலாடு கண்ணி முலைய்போகத்தால்வரல் காய்யல்லவே.
பகலில் அலர் தூற்றுவர், இருளில் வரல் (வரற்க), காப்பல்லவே என்க. காப்பு - காவல், கேமம். காப்பல்லவே என்பது தலைவி இச்செறிப்புண்டு காவலில் இருப்பவள் அல்லவா? எவ்வாற்றானும் அவள் நின்னை யெதிர்ப்படுதல் அரிதாகலின் இரவு வருதலிற் சிறிதும் பயனில்லை யென்றாளென்பதாம். ஏகாரம் (காப்பல்லவா என) வினாப் பொருள் பயந்து நின்றது. (240)
உரவோன் நாடுமூருங் குலனுமரபும் புகழும் வாய்மையுங் கூறல்
மரைமான் விரும்புங் கரவையில் வேலன் மணிவரைநாட் டுரைசால் குடிமைக்குஞ் சீர்மைக்கு மேன்மை யுயர்ந்தபெருந் தரையார் புகழ்நங் குலநலத் திற்குந் தகைமையுடன் வரையா திருப்பது நன்றல்ல நாடு மதித்திடுமே.
மரைமான் - இலக்குமி, மரை - தாமரை. நாடு மதித்திடும் என்றது களவு நீட்டிக்கின் நாட்டவர் ஆராயத்தொடங்குவர் என்பதாம்.
ஆறுபார்த்துற்ற அச்சங் கூறல்
கதறுந் திருமக ராலயஞ் சூழுடைக் காசினிமா ஆதவுந் திருமைந்தன் வேலன் கரவை யுயர்சிலம்பா
மதரஞ் சனக்கண் முலைநலம் வேண்டி வனத்திடைக்கல் லதரின் றனியெல்லி வாய்வரல் கற்பி னழுகல்லவே.
கதறும் - ஒலிக்கும். மகராலயம் - கடல். மதரஞ்சனக்கண் என்றது தலைவியை, அன்மொழி. அதர் - வழி. எல்லி - இரவு. வாய் - ஏழனுருபு. (242)

கரவைவேலன்கோவை/209
ஆற்றாத்தன்மை யாற்றக்கூறல்
LLLSLLL0LLLLLLLLLSLLLLLLLLLLLLLSLLLLLLSLLLLLLSLLLLLSLLLLLSLLLSLLLL LLLLLLLLSLLLL0 LLLLLSLLLLLSLLLLLSLL LSLLSLL LLLLSLSLLLSLLLLLSLLLLLSLLLLLS0SLLLSLLLLLLLL LLL LL (243)
காவன் மிகவுரைத்தல்
LLLLL 0LL0LLLLSLLLS0LLLLLLL LLLLLLLL0LSLC0LLL0LLLLLLLL LLLLLLLLSLLLL LLSLL0L0LLLSLLL LLLLLLLLSLSLLLLLSLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLLSL (244)
காம மிகவுரைத்தல்
LLLLLLLL00LLLL0LLLLL0LSLLLLLLLLzLL0LLLL00LLLLLLLS0LLLLLLL LLLLLLLL LL LLL LLL LLLLLLLLSLLLLLLLSLLLLLLLSLLLLLLLLLS LSLLLLLSLLLL LLLLLLLLLSLLLLLSLLLLLLSLLLLLL (245)
கனவு நலிபுரைத்தல்
0LL LLLL0LLLL0LLLLL0LLLLLLLL00LLLL0LLLLLLLSLLLLLLLLLLLLL LLLLLLLL0LLLLL0LLLLLLL LLLLLLLLSLLLLL0LLL LLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLL (246)
கவினழிபுரைத்தல்
LLLLLLLLL00LLLLLLSLLLSLLLLLLLL00LLL00JLLL0LLLLSLLL0LLLL00LLLLLSLLLLLLSLLLLLSLLLLLSL LLLLLLLLSLLLSLLSLLLLLLLLSLLLLLLLLSLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLLLLLLSL LL LSLL LL LSL LLSLLLLLSLLLLLLLLL (247)
வரைவுகடாதல் முற்றிற்று.
ஒருவழித் தணத்தல்
தன் பதிக்ககற்சி தலைவன் சாற்றல்
LLLLLLLL00LLL0LS0LLSLCLCLLCLLCL C00CLLLLLCLLL LLL 0LLCCLSLCSLCLLLLSLLL0LLLLLLLLCLCLLLLLCLLL LL LLL Y LLLLLYLLLLLLLSLLLLCLLLLLLL0LLLLLLL LSLLLLLLLLLLSL SLLLL L LL 00L (248)
பாங்கி விலக்கல்
SLL L LL0 LLLL0LL CLLCCCLCLCCL000L0LLLL0LLLL LLLLCLLLLLCLLL LL LL0SL LLLLLSLLSLL00LLLSLLLSLLLLL0SLLLLL LLL L0L LLLLL LSLSSLSLSSLLLSLLLLLSLLLLL0SL LL0LL LLL LLLS LLSLLLL LSLLSL S LSL0L L LL L 0LLL LLL (249)

Page 125
அo/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தலைமகனைப் பாங்கி விடுத்தல்
LSLLLLLLSLLLLLLLLLLLLLLLLL LSLLLLLLSLLLLLLLLLSLLLLLLLL LLLLLLLL LL LLL LLLLLLLL0LLLLLLL00LLLLLLLL0LLCLLLLLL C00 CL0LLYLSLCLLLL CLLCLLCL0LL
LLL Y LLLLLLYLLLLLYL0LLYY LLLLSL LLLLL LLLL LLLLL LLLLLLL LLLLLLLLYLLLL0LLLLLLLLL0LLLL0LLL Y 0LL0L Y 0L LLY0L LLLL LL LLLLSL YYL S 0LLL LLLLLLL0LLLLLYLLLLL YLLLL LLYYLLLL Y LLLLLLL LLLLLL
LLLLSLLLLLLLLLLLLLLYLLLL 0LL LLLLLLLLSLLLLLLLLL LLLLLLLLLL0LLLLLSLLLL LLLLLLLLLYLLLLL0LLLLLLLLC0LLLLC0LLLL00LLLLL0LL00LL LLLLLLCLLLLCLCLLCL
YYY 0L 0YLLL0 LL LL0LLL0 LLLL0LLLLLLLYYY LLLLLLLLSLLYLLLLL0LL LLLYLLLzLLLLYLLLLLYLLLLLLLYLLLLL LL LLL LLLLLLLLLLL LL LLLLLL L0LLLLLLLLLLL0LLLL
L0L0LLL00LLLLLLL LLLLLLLLzYL0LL LLL LLL LLLLYLLLLLLLY YLLLSLLL YLLLLLL0LLLLLLLLLLLLLL0L LLL0LLLLSLLLLLLLL LLLLL LLL 0LL0L Y 0L LLLLL0L LLLSL LLLLL Y LLLS
0L0LzzL0L LLLL LLLLLLLL00L0LLLL0LzLLYY0YY LL0L0 zYLLLLLYLLLC0LYYL0CLLL0LLLL0LLLL LLLLLLLLLLLLYYLLLLLLLLLLLL LLLLLLLL0LLL0LLL0LLL0LLLLL0LL LLLY0LLLLL 0
YLLLYYY0LLLL0LYLLLLLLLLLLLLL0YLLLLLLSY LLLYLLLLLLLLLYYLLLLYYYLLLLLYLLLLLYLLLLLLSLLLLLS0LLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLL LLLLLL
YLLLL0YLLL0L0LL LLLYLLLLL0LLCLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLL YLLLLL LLL0LLLL0GLLLLLLLL0LLLLLLLLL LLLLLLLLLLLGLLLLLLLSLL LL
LLLL0LLLLY0LLLLL0LLLLL0YYLLLLLYYLLLLSLLLLL0LLLLL0 0LLLLLLSLLLLL YLLLLLL0LLLL00LLLLL0LLLL0LLLL00LL0L LL0L LLLLLLLLSLLGLLLLLLLLSLLL0LLLSLLLLLLL0LLLLLSLLL0LLL0LL0LL00LL0LL0LL
ஒருவழித் தனத்தன் முற்றிற்று.
(253)
(254)
(255)
(258)
(259)

கரவைவேலன்கோவை /21
வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல்
என்பொருட்பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல்
YYLLLL YY LLYYLLLYY YYL0LLLLLL0LSYYLLL0LLC0L0YYLLL LLLYLLLLLLLzLLLLL LzYLLLLLL0LLLYLLLL LLYY LYLLLYYYLLLLLYLLLL0LLLLLLLLCLLL0SLS L0LLYLL0LLLL0LLLLLSL0LL0SYLLLL0YLL0L (260)
நின்பொருட்பிரி வுரை நீயவட் கென்றல்
0LLYzLLLL LLzYLLYLLSLLCYLLLL LLLLLLLLYLLYLLYLLLLLLSLLLL LLLLLLLGLLLGLLYLLLLLLLLYYLLLLLYLLLLLL0LLLLL 0LLL LSLYLLLLSYLLLLLLY0LLLYYLLLLLYLLLLLYLLLLLY (261)
நீடேனென்று அவ னிங்கல்
LLLLLLYL LLLLLLLL0LLL0LLLLL 0LLYL 0LLYLLLLL LL LLLLL LLL0LLLY0LLLLL0LLLL0LLLLL0 YLLL LLLY0LLL YY Y0L LLLLSL YYLY YL0LYLLY Y LLLLLL LL LLLLLL LLLLLSY LLLSLLLLLSL LLLLLLLLSL0L0L0LLYL 00L LL LLL L0L LL LLL LLSL (262)
பாங்கி தலைவிக்கு அவன்செல வுணர்த்தல்
LLLLLLLLLLLLLLLL0LLLLLYLLLLLLLLLLLYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLL LL LLLLLLLLLL LLLLLL LLLLGLLLLLLLL0LLLLLLLLSLLGLLGLLLLLLLL0LLLL0LLLLLLLLLLLLLLLLLLLLL (263)
தலைவியிரங்கல்
Y0LLLLLLLLLLLLLLLLLLL0LLLL00LLLLLLLLLLLLLLLLL0LLLL0LLLL0LLLLLYLLLLLLLL LL LLLLLLL LLL LLLLGLLLLLL GLLLLLLLLLL LLLL LLL0LLLLLLSLLLLLLLLLL LLLL LL LLLLLGLLLLLLLLGLLLLLLLL0LLLL0LLLLLLLLL (264)
பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்
LLLLLLLL0LLLL YLLLLLLYLLLLLLLLLLLLLLLSLLLLLLLYLLLLLL0LLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLL LLLL LLLLLL LLLLLLLLLLLLLLSL (265)
தலைவி கொடுஞ்சொற் சொல்லல்
0LYKLL0L0LLYLL00LLL0LL LLLLLL L0LLL LL0LLLL0L0L 0LLS0L SL0L 0LLLL L0L YY S0LL0LL LLL LLL 0LLSL LLLLY 0LLLLLLLYY LLLL L0 LYLLLLLLL L 00LLL0LLY LLSL Y 0LLL 0LL LLSYLLLLL L0L LLLLY0LY LLL 0LL LSL (266)
வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்
LLLLLLLL0LLL0LLLSLL0LYLL GL LLG LGLLLLLLL LGLGSLGSLLSLLGLLLGLLGLLLLSLLLLLSL G LGLLSLLLL LLL 0LLLLLLLYLLLL LLLL LSL 0SLL LLLLSLLL YLELLL LLLL LY LLLLLLL ELLSL LLLLLLLLLL LELLL LLLL LEL LLLLLLLL LLLLLL 0SLLE LLLLL0L LSLL S L LL GL GSL 0LLL EL LLLLSL LLLL (267)
பருவங்கண்டு பெருமகள் புலம்பல்

Page 126
அ2/ நல்லுள் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இகுளை வம்பென்றல்
பெருகுந் துயரந் தனிமயி லிட்டம் பெருந்தமிழ்க்கே யுருகும் விநோதன் கரவையில் வேல ஒனுயர்சிலம்பில் வருகும்ப வெம்முலை மாதே யுனது மருவலங்கல் செருகுங் குழலைப் புயலென்று நாடகஞ் செய்கின்றதே.
அலங்கல் - பூமாலை, தளிருமாம். மயிலீட்டம் குழலைப் புயலென்று நாடகஞ் செய்கின்றது; (அதனால்) துயரம் தணி என்க. நாடகஞ் செய்கின்றது என்பதன் தொனிப்பொருள் காண்க. (269)
இறைமகனி மறுத்தல்
மந்திர நேருங் கரவையில் வேலன் மணிவரையிற் சந்திர னேர்முகத் தையனல் லாயித் தலங்களெங்கு மிந்திர கோபஞ் செறிந்தன காந்த விலங்கினமைக் கந்தர மாமயி லாலித் தனமழைக் காலமிதே.
மந்திரம் - கோயில், நேரும் - பொருந்திய. மைக்கந்தரம் - கருமை விளங்குங் கழுத்து. ஆலித்தன - ஆரவாரித்து ஆடின. (270)
அவர்துாதாகிவந்தடைந்தது இப்பொழுது எனத் துணைவி சாற்றல்
மாதான சூரன் கரவையில் வேலன் மணிவரையிற் பேதாய் வருதி யிரங்கியஞ் சேலந்தப் பேரிறைவ ரோதாண்மை யோடுமிப் போதே வருவ துரைத்திடமுன் றுதாகி வந்தது காண்வெளி மார்க்கத் துளிமுகிலே.
மா - பெரிய, தானம் - கொடை. சூரன் - வீரன். தலைவர் வருதலை யறியாது வீணே வருந்தலிற் றலைவியைப் பேதாய் என விளித்தாள். ஒது ஆண்மை - புகழப்படும் வெற்றி வெளிமார்க்கம் - ஆகாயவழி.
தலைமகளாற்றல்
ஆராத வின்பத் தணைந்திடு கால மவர்மனியா மோரா ரொளியென்றிடுமன்பு ளார்தலினுண்மைகன்ைடேன் காராருஞ் செங்கைக் கரவையில் வேலன் கனகவெற்பர் வாரா தவரல்லர் யாந்துயர் கூர்வது மாற்றுதற்கே.

கரவைவேலன் கோவை /213
ஆராத - நிறைவடையாத. வாராதவரல்லர் வருவர் என்பதாம். (272)
அவனவட்புலம்பல்
LLLLLLLLLLL LLLLLLLL0LLLLL Y LSL LLLYLLLSLLL LLL LLS 0L LLLLL LL LLLLLLLL0SLLLLLLLL LLLLLLLL LLLL LSLLLLL LLLLLLLLLSLLL0LL0LCLLCLLCLLL LLLLLLLL0LLLLLL0LLLLLLL LLLLLLLLYLL (273)
பாகனொடு சொல்லல்
நிலவாருங் கிர்த்திக் கரவையில் வேல னிழல்வரையி னிலவா ரீதழி குடபாலிற் செக்கர்வந் தெய்தியக்காற் சலவாரி கண்விட் டலமரு மேங்குந் தயங்குமுயர்
நிலவு - ஒளி. இலவு ஆர் இதழி - இலவமலரையொத்த தழையுடைய தலைவி. குடபால் - மேற்குத்திசை. வாரி - மிகுதி.
p @
மேகத்தொடுசொல்லல்.
நாம்பொருட் டேடி வரச்சென்று நீண்ட நலிவகல வாம்பரி முற்சென்று மாமுகில் காண்மணி யாவழைக்கக் காம்பிசை யூதுங் கரவையில் வேலன் கனகிரிமேற்
O to ந்தாதென் மீட்சி பகர்ந்திடுமே.
நலிவு - வருத்தம், மெலிவு. நீண்ட நலிவு என்பது நாம் உடன் மீளாது காலம் நீட்டித்ததனால் தலைவிக்கு உண்டான துன்பம் என்பதாம். மணி ஆ - மணிகள் கட்டப்பெற்ற பசுநிரை. காம்பு - வேய்ங்குழல். மணியாவழைக்கக் காம்பிசை யூதினவன் கண்ணபிரான்; அவனை யொத்த
வேலன் என்க.
“கண்றால் விளவின் கனியுகுத்துங் கழைய7 னிரையின் கனமழைத்துங் குன்றால் மழையின் குலந்தடுத்துங் குலவுஞ் செல்வக் கோபாலர்’
என்பது வில்லிபாரதம்.
பாம்பு அணை - பாம்பின் படத்தை யொத்த, அல்குல் ஆகுபெயராய்த் தலைவியை யுணர்த்திற்று. (275)

Page 127
214 / நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பாங்கி வலம்புரிகேட்டு அவன் வரவு அறிவுறுத்தல்
பழங்கவி நாவலர் வெங்கலி தீரப்பைம் பொன்னையள்ளி வழங்கிய மேகங் கரவையில் வேலன் வரையிறைவன் தழங்கிய மாமணித் தேர்வரு கின்ற தென்வெண்சங்கம் முழங்கிய தாலொலி கண்மலர் சூடிய மொய்குழலே.
பழங்கவிநாவலர் - பழமை பொருந்திய தமிழ்ப்பாடலில் வல்ல புலவர்கள். “காலத்தோடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம்பாடற் கலைமாச் செல்வர்” எனவும், “தொடுக்குங் கடவுட் பழம்பாடற் றொடை” எனவும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் வருவனவுங் காண்க. தழங்குதல் - ஒலித்தல். (276)
வலம்புரி கிழத்தி வாழ்த்தல்
கச்சணி கொங்கையர் மன்மத ரூபன் கலையுணரும் உச்சித னாண்மைக் கரவையில் வேல ஆறுயர்சிலம்பி லச்சணி தேர்மு னொலித்தவெண் சங்க மரவணையின் மைச்செறி மேனித் திருமால்கைச் சங்கென வாழியவே.
உச்சிதன் - தகுதியோன், மேலானவன். அச்சு அணி - அச்சையுடைய. அரவு அணை - பாம்பாகிய படுக்கை. திருமால் கைச்சங்கு என்பது பாஞ்சசன்னியம், பஞ்சஜநன் என்னும் அசுரனது எலும்பில் உண்டாயதுபற்றி பாஞ்சஜந்யம் எனப் பெயர் பெற்றதென்பது. (277)
தலைவன் வந்துழிப் பாங்கி நினைந்தமை வினாதல்
செவ்விய னாண்மைக் கரவையில் வேலன் சிலம்பகத்தில் வெவ்விய வேலிறை நீபொருட் கேசென்று மேவியநா ளெவ்வமில் சிந்தை நினைத்தனை போலு மினையுமிள நவ்வியை வென்ற விழிப்பாவை யாரை நவிலுகியே.
எவ்வம் - வெறுப்பு, வருத்தம். போலும் என்பது சந்தேக வினாப் பொருட் குறிப்புணர்ந்தும் அசைச்சொல். இணைதல் - வருந்துதல். நவ்வி - மான். பாவையார் - பாவைபோல்வார். பாவையாரை நினைத்தனை போலும், நவிலுதி எனக் கூட்டுக. (278)

கரவைவேலன் கோவை /215
தலைவன் நினைந்தமை செப்பல்
உருக்காம வேணிகர் வேலன் கரவை யுயர்சிலம்பின் மருக்கால் குழலி நகைநீழ லார்முக மண்டலத்தைப் பொருக்கா நெறிகடந் தியானிதி தேடுறப் போநகரி லொருக்காலு நெஞ்சின் மறந்தறியேன்மயி லுன்னையுமே.
குழலி என்றது தலைவியை. நகை நீழலார் முகம் - ஒளியுங் குளிர்ச்சியும் பொருந்திய முகம். பொருக்கா - பொருக்கென, விரைந்து. பொருக்கு - தகட்டுவடிவாய் வெடித்த வண்டல்: பொருக்கு வெடித்த நிலத்துவழி என வழியினதருமை கூறியதெனக் கொள்ளலும் ஒன்று. மறந்தறியேன் - மறந்திலேன். மறத்தலில்லாமையின் நினைத்தலுமில்லை யென்பது குறிப்பு. ஈண்டு,
“உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கணினாள் குணம்” (திருக்குறள் செய் 125)
என்பதும் நோக்குக. (279)
பாங்கி தலைவியை ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல்
தோற்றிசை யாளன் கரவையில் வேலன் சுடர்வரையின் மாற்றினி லேறுபொற் பூட்புயனேமயி னேர்மங்கையைத் தேற்றியும் போற்றியு நீவருங் காறுந் தெளிவினுட னாற்றியும் வைத்திருந் தேன்மன னாடி யறிகுதியே. (280)
வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதல் முற்றிற்று.
களவியன் முற்றிற்று.

Page 128
அ6/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வரை வியல்
வரைவு மலிவு
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல்
மந்தார மன்ன கரவையில் வேலன் மணிவரையிற் பைந்தார மார்பன் பொருள்பல தேடிப் பரிவினுடன் தந்தா ருனது முலைவிலைக் காகத் தவாதுபெருஞ் சித்தா குலமலி பொன்வண்ண மாறுதல் செய்யிலையே.
மந்தாரம் தேவதருவுள் ஒன்று, நினைத்தவற்றைக் கொடுப்பது. முலை விலை - மணமகன் கொடுக்கும் பரிசப்பணம்; இது பெண்ணின் தாய்க்குப் பெண்ணை வளர்த்ததன் பொருட்டுக் கொடுப்பதென்ப; இது முலைப்பாற்கூலி யெனவும்படும். தவாது - தவறாது. சிந்தாகுலம் - மனக்கவலை. மலி - பெருகச்செய்கின்ற, பொன்வண்ணம் - பிரிவினால் உடலிற் பொன்மையாக நிறம் வேறுபடுதல், பசப்பு - பொன்வண்ணம் மாறுதல் - பசப்பு நீங்குதல். மார்பன் உனது முலைவிலைக்காக தவாது பல பொருள் தேடித்தந்தார் (நீ) பொன்வண்ணம் மாறுதல் செய்யிலையே எனக் கூட்டுக. (281)
காதலி நற்றாயுள்ள மகிழ்ச்சி உள்ளல்
LSL LLLLL LLLLLLLL0LLLSLLLLLLLL LL LLLLLLLLSLSLLLLLSLLLL0 LLL LL LSLLLLL LSLLLLSLLLLLLLL LLLLLLLL0LLLL0LSLLLSL00L0SLLL LLLLLLLLSL0SL0LLLSLLLLLLSLLLL LL LLL LLL LLLLLLLL0LLLSLLLSLLLLLLLLL0LL LL0LLLSLLLLLLL (282)
பாங்கி தமர் வரைவெதிர்ந்தமை தலைவிக்குணர்த்தல்
தலைமகள் உவகை யாற்றாது உளத்தொடு கிளத்தல்
LLLLLSLLLLLSLLLL LL LLLLLLLLSLLLLLSLLLLL LSL LLS LSLSL LSL LSL LLLLSL LLLLL LLLL LSL 0LL LLLL0LL0L LLL LL LS LS LSL L LSL LSL LSLLSLLLSLLLL LLL LLSL LSL LSLSL LSL LSL LSLLSL LSLSLLSL LL LSLLLLL LL LLL LLSLLSLLLLL LL LSLL LLLLSLLLLLSLLLSLLLLLSLLSL LL LSLLLLL LSLLSLLLLLSLLLLLSLL LL (284)
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.

கரவைவேலன் கோவை /217
தலைவி மணப்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டல்
LSLLLLLLLLSLLLSLLL0LLLL0LL000LLLLLLLLLLLLLLLLLL0SLLSLLSLL00LL0LLLLLLLLLSLSLLL0LLLLL0LLLLLLSLLLLLL0LLLLLLLLSLLLSLLLLLLLLLLLLLLLLLLSLLLSLLLLLSLLLLLLLLLSLLLLLLSS (286)
பராநிலைகண்ட தலைமகன் மகிழ்தல்
LLLLLL LLLLLLLSLLLCLL LLLLLLLL00LLLLLLLL0LLC0LL LLLL0LLCLSLLLLLLLLLCLLLLLCLLLCLLL0LLLLLLL LLL0LLLLLL0LLLLLLSL LLLLLCLLLLLLL0L LL0L 0LL LLLLLLLL0000 00LLLLLLSLLLLS (287)
வரைவு மலிவு முற்றிற்று.
அறந்தொடு நிலை
கையறுதோழி கணிணிர் துடைத்தல்
0LLL0LLLLLLL0LL0S0LLLLLLYLLLLL0LLL0SLLLSLLLLLSLLLL0CLLLLLLL00LLLLLLLLLLSLLLLLSL0LLLLLLL LL LLLLLLLL0SLLLLL0LL LL0LLLSLLSLLLLLLLLLLL0LL0LSLLLLLLLL LLLL LSLLLLL LLLLLLLLLCCL (288)
தலைமகள் கலுழிதற் காரணங்கூறல்
... (289)
தலைவன் தெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல்
வையாரும் வேல னணங்கொடுஞ் சூளுரை வார்த்தைதனை மெய்யாக நம்பி யிருந்தனன் யான்வினை யேனடையார் செய்யாளை மாற்றுங் கரவையில் வேலன் செழுஞ்சிலம்பின் மையால் விளங்கும் மதள்விழி வானுறை வானுதலே.
அணங்கு - தெய்வம். சூள் - ஆணை. அணங்கொடு சூளுரைத்தல் - தெய்வ முன்னாக (ப் பிரியேனென்று) ஆணை கூறுதல். அடையார் - பகைவர். செய்யாள் - இலக்குமி. (290)
றைவி தலைவன் இகந்தமை யியம்பல்
D 5
செப்பார் முலைச்சியர் சிங்கார வேலன் செழுஞ்சிலம்பின் ஒப்பார் மணிக்குழைக் கொம்பனை யாயிக் குவலயத்து ளொப்பாரு மற்றிடுந் தெய்வமுன் னேசொல் லுரைத்தகன்றார் தய்யார் மொழிபெரி யாரென்ப தேழைமைத் தன்மையதே.

Page 129
அ8/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ஒப்பார் மணிக்குழை என்பதில் ஒப்பு அழகு. சொல் என்பது பிரியேன் என்ற சூளுரை. பெரியார் மொழிதப்பார் என்பது என இயையும். (291)
பாங்கி இயற்பழித்துரைத்தல்
இல்லாத மெல்லிடை வல்லிநல் லாயிசை முத்தமிழ்நூல் வல்லான் கரவைப் பதிவாழும் வேலன் மணித்துறைவாய் எல்லாரும் போற்றிடுந் தெய்வமுன் னேயெங்க ளைப்பிரிந்து சொல்லாமை சொல்லிச்சென்றார்நல்லர் நல்லர்நஞ் செல்வருமே.
நஞ் செல்வரும் நல்லர் நல்லர் என இயையும். உம்மையும் அடுக்கும் கழசசககுறuபல வநதன.
ழ்ச்சிக்குறிப்பில் வந் 292
தலைமகள் இயற்பட மொழிதல்
வாலியும் நீள்சினைச் சாலியுஞ் சாய வயங்குசிலை கோலிய விரன் கரவையில் வேலன் குளிர்சிலம்பிற் பாலியை மென்மொழி கேதகைக் கானற் பதிப்புலம்பர் போலினியாரினியாரின்ன ராகப் புலப்படினே.
வாலி - இராமனாற் கொல்லப்பட்ட ஒரு வாநரத்தலைவன்; சுக்கிரீவனுக்குத் தமையன், சினை - கொப்பு. சாலி - சாலமரம், மராமரம். மராமரங்கள் ஏழையும் ஒரம்பினாற் றுளைசெய்து வாலியையுங் கொன்ற வீரன் இராமன்; அவனையொத்த வேலன் என்க. இச்சம்பவத்தை நூலாசிரியர் தாமியற்றிய கல்வளையந்தாதியிலும் (செய் 70)
‘சாலிக்கு வாலிக்கு வெங்கனை பேவித் தயங்கியபாஞர்
சாலிக்கு வாலிய தூசருள் கோலம். . . .”.
எனக் காட்டுவர்.
மென்மொழி என்றது தோழியை, அன்மொழி; விளி. கானல் - கடற்கரை. புலம்பர் - நெய்தனிலத் தலைவர். இன்னர் - துன்பஞ் செய்பவர். புலம்பர் இன்னராகப் புலப்படின் இனியார் இனி யார் எனக் கூட்டுக. போல் உரையசை. தலைவரைத் துன்பஞ் செய்பவராகக் கருதினால் நமக்கு இனியராயுள்ளார் இனி யார் உண்டு என்றவாறாம். (293)

கரவைவேலன்கோவை /219
தெய்வம் பொறைகொளச் செல்குவமென்றல்
வழுவா மொழியகன் றார்வரு வார்குறை வந்ததுநம் பழுதா மினியன்ன மேயிரு வேமும் படர்ந்துதெய்வந் தொழுதாத லிப்பிழை யைப்பொறுப் பாயென்று சொல்லிலவர் எழுவாய் கரவைய் பதிவேலன் சங்க மெழுந்துறைக்கே
வழுவா - வழுவி. மொழிவழுவா அகன்றார் - தலைவர் உரைத்த சூளின் வழுவிப் பிரிந்து சென்றார். குறைவந்தது நம்பழுதாம் என்றது, இக்குறை எங் குற்றத்தால் வந்ததாகும்; தலைவர்பாற் குற்றமில்லை என்ற வாறாம். இனி இருவேமும் படர்ந்து தொழுது பொறுப்பாய் என்று சொல்லில் அவர் வருவாய், எழுவாய்: எனக் கூட்டுக. (294)
இல் வயிற் செறித்தமை யியம்பல்
தத்தார் கரவைப் பதியுறை வேல னளிவரையிற் பைத்தா ரநிதம் படப்புதை பொன்னிற் பகையயலின் முத்தார் நகைச்சிய ராயலர் தூற்று முறைமையினான் வைத்தா ளெனையன்னை கற்பாக வாழுமனையகத்தே
நளிர் - குளிர். பித்தசம்பந்தமானது பைத்தம் = மதிகேடு. பைத்தார் - மதியீனர்; கோபித்தவர் எனினுமாம். அநீதம் - நீதியின்மை. முறைகேடு. பைத்தாரரீதம்படப் புதை பொன்னின் என்றது, மதியீனர் தாம் உண்ணாதுங் கொடாதும் பூமியிற்புதைத்துவைத் திழக்கும் பொன்னைப் போல என்பதாம். அன்னை எனை வாழ மனையகத்தே கற்பாக வைத்தாள் என்க: மனையிடத்தில் என்னைக் காவலில் வைத்தாளென்பதாம். (295)
செவிலி கனையிருள் அவன் வரக் கண்டமைகூறல்
தனதனை யேயுங் கரவையில் வேலன் றடந்துறைவாய் வினவிய நல்லிருள் யாமத்தி லேவியன் றேரிலெழுந் தினகரன் போல்வந்த நாங்கா தலரைச் செறிந்திருண்ட கனமலி கோதைநல்லாய்விதியாலன்னை கண்டனளே.
தனதன் - குபேரன். எய்தல் - ஒத்தல். தடம் - விசாலம். துறை வாய் - துறையின்கண். வினவிய இருள் என்பது ஒலிக்குறிப்பானன்றிக் கண்ணினாற் காணமுடியாத செறிந்த இருள் என்பதாம். தினகரன் - சூரியன். விதியால் - ஊழ்வசத்தால். (296)

Page 130
22O/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
எறிவளை வேற்றுமைக் கேதுவினாவல்
புனையிழை மங்கை தினைக்காவல் விட்டபின் பூம்பதும மனைமகள் சேருங் கரவையில் வேலன் வரையின்மின்னே நினைவறி யாம லுடல்விழி பீருட னிர்மலிந்து தனையுன ராவகை யாயின ளேதுற்ற தையலுக்கே.
பூம்பதும மனைமகள் - தாமரை யாசனத்தியாகிய இலக்குமி. மின்னே! எனப் பாங்கியை விளித்தது. நினைவு அறியாமல் - நினைவு இழந்து. உடல் பீர் மலிந்து விழி நீர் மலிந்து என நிரனிறையாக் கொள்க. பீர் - பசப்பு, நிற வேறுபாடு. தனையுணராவகையாயினள் - தன்னறி வில்லாத வளாயினள். தையலுக்கு ஏது உற்ற? என இயையும். ஏது உற்ற என்பது ஒருமைபன்மை மயக்கம். (297)
பாங்கி வெறிவிலக்கல்
0LC0LCLCLCLLCLLSLLLLLLLLL LLLLLLLLSL LLLLLCLLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLLL0LLC0LLL0LLL0LLLLLLLYLLLLL CLLLLLLL00LLCCL0LLL0L0L0LCLLLLLCLLLLLLL0zLLL0LLLL (298)
வெறிவிலக்கியவழி செவிலி பாங்கியை வினாதல்
LSLLLLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLLLLLSLL LSLLLLLLSLLSLLSLLLLLSLLLLLLLL LLLLLL 0LLLSLLSLLLLLSLLLLLLSLLLLLSLLLLLLLL L0L LLL LLL LLLLLLLLSLLLSLLLLLLLLSLLLL0LLLLLLLL (299)
பூத்தருபுணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்
SLLLLLLLSLLLLLSLLLLLLLLLLSLLLLLLLLLLLSLLLLLSLLLLS LLLL LLL LLSLLLLSLLSLLLLSLLL LLLLLLLLLLLSLLLLLSLLLLLLSLLLSLLLLLSLLLLLLLLSLLLLLLLLLLL LLL0L0L0L0LSSLSLSSLSLLLSLSLLLLLSLLLLLSLLLL0LLLLL00L000LLL0L0L (300)
புனறரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்
SLLLLLLSLLLLLLLL LLLLLLLL LL LSLLLSLSLLLSL0SLLSLLSLSLLSLSLLSLLLLLLLL LLLLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLLL LLLLLLLL00LLLL0LLLL0LLLLLSLLLLCLLLLLLL0LLLL0LLLLLLLL LLLLLL 0LS (301)
களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்
மகபதி மானுங் கரவையில் வேலன் மணிவரைவா யிகலயில் வேல்விழிக் கோமளக் கொம்பை யெதிர்த்துவெய்ய
புகள்முகத் தான மழைபொழி யுங்கவுட் போதகநெஞ் சுகவருங் கால்வந்து காத்தனன் வேற்கை யொருமன்னனே.

கரவைவேலன் கோவை /221
மகபதி - இந்திரன், இந்திரச் செல்வம்போல இயைந்த செல்வச்சிறப் புள்ளவன் என்பதாம். இகல் - பகை, அயில் - கூர்மை. கோமளம் - இளமை. கோமளக்கொம்பை - இளம்கொம்பு போன்றாளாய தலைவியை, அன்மொழி. புகள் - புள்ளி. தானம் - மதம். கவுள் - கன்னம். போதகம் - யானை, புகள் பொருந்திய முகத்தையும் தானமழை பொழியுங் கவுளையு முடையபோதகம் என்க. நெஞ்சு உக - மனம் அறிவு அழிய. வருங்கால் - வந்த காலத்தில். குறிப்பால் புணர்ச்சியுண்மை அறிவித்தவாறு காண்க.
தலைமகள் வேற்றுமை கண்டு நற்றாய் செவிலியை வினாதல்
எண்ணருங் கிர்த்திக் கரவையில் வேல னெழில்வரையிற் கண்ணிறை கோதை தளர்வு நறிய கருங்குழலி வண்ணமும் பார்வையும் வேறோர் குணம்வந்து வாய்த்தனவா லுண்ணிறை யாவியன் னாயயி ராம லுரையெனக்கே.
கள் நிறை கோதை - தேன் நிறைந்த மாலையை யணிந்தமகள் (தலைவி); இதனைக் கண்நிறை கோதை எனப்பிரித்து கண்நிறைந்த காட்சியளாகிய மகள் எனப் பொருள் கொள்ளினுமாம். நறிய கருங்குழலி என்பது அவள் எனத் தலைவியைச் சுட்டும் பெயர். வண்ணம் - நிறம். வேறோர் குணம் வந்து வாய்த்தன என்பது, வேறுபட்டிருக்கின்றன என்றபடி, அயிராமல் - ஐயுறாமல் சொல்லத்தகாதென மறைக்காமல். உயிர்போல்வாய்! மகளது தளர்வுக்காரணத்தை மறைக்காமல் எனக்குச் சொல்வாய் என்றாளென்பது கருத்து. (303)
செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியால் அறத்தொடுநிற்றல்
Y0L 0 0LY00LC0LCLL CLLLLLL 0L LLLLL CYL000C0CLLCLL0LLLLLLL LLL 0TLL0YL0LLLLLL0L YLLLLLL0LLLLLLL LLL LLL 0L LLLY Y LLTLLLLLLL 0L LLLLL Y Y Y Y 0LLL LL LSLLLLL LLL LLLLLL 0L LLLLL LLL 0L L 0L LLLS 0 (304)
அறத்தொடுநிலை முற்றிற்று.

Page 131
222/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
உடன்போக்கு
பாங்கி தலைவற்கு உடன் போக் குரைத்தல்
A
தலைவன் உடன் போக்கு மறுத்தல்
சிலையார் நுதன்மயிற் கொங்கைக்கு வாரிச் செகங்களெல்லாம் விலையாகு நும்மையர்க் கெம்முரும் மின்னே யணியதன்றால் விலையார் மணிகள் நெரிஞ்சிப் பழமென வேபனிக்கும்
() ருங் கானெங் 脑
ஐயர் - சுற்றத்தார். மின்னே! நும் ஐயர்க்கு வாரிச் செகங்கள் எல்லாம் சிலையார் நுதன்மயிற் கொங்கைக்கு விலையாகும் எனக்கூட்டுக. வாரி - கடல், செகம் - பூமி. பனித்தல் - நடுங்கல். நிலை - நிலைமை, மென் மைத் தன்மை. அருங்கான் - கூர்ங்கற்களையுடைய நடத்தற்கரிய சுரம்.
அனிச்சமு மண்ணத்தின் நூவியு மாத ரடிக்கு நெரிஞ்சிப் பழம். (திருக்குறள் 1120) என்பதும் நோக்குக. (306)
பாங்கி தலைவனை உடன்படுத்தல்
திரந்தரு திணிபுய வேலன் கரவைச் செழுஞ்சிலம்பி லரந்தெறு வேல்விழி யன்னமன் னாளுட னாரழல்தோய் சுரந்தனிற் செல்லும் பொழுதினில் வாசத் தொடையண்ணலே நிரந்தர நின்னரு ளல்லா லவட்கு நிழலில்லையே.
திரம் - நிலைபேறு, உறுதி. சுரம் - காடு. நிரந்தரம் - இடைவிடாமல், எப்போதும். நிழல் என்பது வெயிலுக் கொதுங்குமிடம் என்றும் தஞ்சம் என்றும் இரண்டு பொருள்பட நின்றது. (307)
தலைவன் போக்குடன்படுதல்
படியினில் வெஞ்சுரஞ் சென்றிட வெண்ணம் பயில்நெஞ்சகங் கொடியது மென்னடைச் சீறடிக் கோமளக் கொம்பினுடன் வடிதமிழ்க் கும்பன் கரவையில் வேலன் மணிவரையிற் பிடிபிடி யாகு நடையிடைச் சுந்தரப் பெண்ணனங்கே.

கரவைவேலன் கோவை/223
கொம்பினுடன் சுரம் சென்றிட எண்ணம் பயில் (என்) நெஞ்சகம் கொடியது என்க. எண்ணம்பயில் - எண்ணிய, வடி - தெளிவு. கும்பன் - அகத்தியன்; அவனையொத்த வேலனென்க. பிடிபிடியாகு நடையிடை என்பது, நிரலே, பிடியாகு நடையும் பிடியாகு மிடையும் என இயையும். பிடி முன்னது பெண்யானை, பின்னது (கைப்) பிடியளவு. (308)
பாங்கி தலைவிக்கு உடன் போக்குரைத்தல்.
கற்றவர் நம்புங் கரவையில் வேலன் கனகவெற்பிற் பற்றிய பஞ்சின் மிதிப்பினுஞ் சேர்க்கும் பரிமளப்பூஞ் சிற்றடி வெம்பரன் மேல்வைக்கு மோவென்று சிந்தைகொண்டார் விற்றிரள் வாணுைத லாய்தெரியாதன்பர் மேனினைவே,
சேக்கும் - சிவக்கும். பரல் - பருக்கைக்கல். (309)
தலைவி நாணழி விரங்கல்
குன்றே யனைய புயங்கொட்டி யார்க்குங் குறுகலரை வென்றேநல் வாகை யணிமால் கரவையில் வேலன்வெற்பிற் கன்றேயுஞ் செங்கை மயினா னழிந்து கலங்குதலின் நன்றே யலபெண் குலத்திற் பிறப்பது நானிலத்தே.
கன்று - வளையல். மயில் ஆகுபெயராய்த் தோழியை யுணர்த்திற்று; விளி. கலங்குதலின் - கலங்க வேண்டியிருத்தலின். நானிலம் - (நால்+ நிலம்) பூமி. பெண் - பெண்கள். குலத்திற் பிறப்பது - நற்குடியிற் பிறத்தல். பெண் குலத்தில் எனப் பணிபுத்தொகையாகக் கொண்டு பெண்பிறப்பாகப் பிறத்தல் என உரைப்பினுமாம். (310)
கற்பின் மேம்பாடு பாங்கி கழறல்
பண்ணிற் சிறந்த தமிழாயும் வேலன் பசுங்குவளை வண்ணத் தொடையற் பெருமான் சிலம்பினில் வள்ளைக்குழைப் பெண்ணுக் கணிகல மாண்பெருங் கற்புப் பிறங்குமணிக் கண்ணுைக் கணிகலங் கண்ணோட்டங் காணியற் காரிகையே.
வள்ளை - குழை - காது. காண் அசை. கண்ணுக் கணிகலம் கண்ணோட்டமென்பது, (311)
"கணணுக் கணிகலங் கணணோட்டங் காமுற்ற
பெணணுக் கணிகலம் நாணுடைமை’.

Page 132
224/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
என்றும் (திரிகடுகம்),
“கணினிற் கணிகலங் கணணோட்ட ம.தின்றேற் புணர்னென் றுணரப் படும்” (திருக்குறள் - 575)
என்றும் வருவனவற்றா னுணர்க.
தலைவி ஒருப்பட் டெழுதல்
எல்லாருஞ் சொல்லு முரைகளுந் தாங்கி யிருக்கச்சிலர் வல்லா ரமுத குணாகர சீலன் மதிப்புலவர் நல்லா ரணையுங் கரவையில் வேலனை நண்ணல்செய்ய ஒல்லா ரெனவலர் சூழ்ந்தே யழுங்குக வுரிதுவே.
சிலர் வல்லர் எனவே, யான் வல்லேனல்லேன் என்பது உணர்த்தினாளாம். வேலனை நண்ணல் செய்ய ஒல்லார் (முடியாதவர்) அழுங்குதல் போல இது ஊர் அலர் சூழ்ந்து அழுங்குக என்க. அலர் சூழ்ந்து - அலர் தூற்றிக் கொண்டு நின்று. அழுங்குக - இரங்குக, கெடுக எனினுமாம். இச்செய்யுளோடு,
"அலரே சுமந்து சுமந்திந்தவூர் நின்றழுங்குகவே”
(தஞ்சை வா. கோ. செய். 312) எனபதும,
"சிலரும் பலருங் கடைக்க னோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெனடி ரம்ப நூற்றச் சிறுகோல் வலந்தன ளன்னை யலைப்ப அலந்தனென் வழி தோழி காணற் புதுமலர் தீணடிய பூநாறு குரூஉச்சுவற் கடும7 பூணட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொணர்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகவிவி வழுங்க லூரே.”
(நற்றிணை. செ. 149)
என்பதும் ஒப்பு நோக்கத்தக்கன. (312)

கரவைவேலன் கோவை /225
பாங்கி சுரத்தியல்பு உரைத்துழித் தலைமகள் சொல்லல்
வையக மெங்கும் புகழ்கொண்ட வேலன் வலம்புரிகள் செய்யி னுலாவுங் கரவைக் கதிபன் சிலம்பகத்திற் பையர வல்குன்மின் னேயன்னை மாக்கள் பயிலில்லினும் வெய்யது வோவினி நாஞ்செலற் காகிய வெஞ்சுரமே.
அன்னை மாக்கள் என்பது தாயராகிய சனங்கள் என்றும் மிருகங்கள் என்றும் இரண்டு பொருள்பட நின்றது. வெய்யவோ என்பதில் ஒகாரம் எதிர்மறை. (313)
பாங்கி கையடை கொடுத்தல்
பாங்கி வைகிருள் விடுத்தல்
ஒருமொழி யாளன் கரவையில் வேல லுயர்சிலம்பிற் குருமனி யாரக் குவிமுலை நீங்கள் குறித்துச்செல்லும் அருநெறிக் கேநமர்க் கேற்பன சொல்லி யயலவர்வாய் மருவலர் போக வுரைத்துதும் பின்னர் வருகுவனே.
ஒருமொழியாளன் - சத்தியவசனன். குருமணி - பரும்மணி. குவிமுலை அன்மொழி; விளி. நீங்கள் - தலைவியுந் தலைவனும். சொல்லி உரைத்து (நெறிக்கு) வருகுவன் என முடிக்க. (315)
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்
விடந்திகழ் கண்ணியர் மால்வேள் கரவையில் வேலன்வெற்பி லிடந்திகழ் மென்சினைப் பூம்பசுங் காவு மிலங்குவெண்மைத் தடந்திகழ் வாலுகக் குன்றமு நோக்குதி சாரன்மெல்ல நடந்தரு ளார வடந்திகழ் கோமள வாணகையே.
கண்ணியர் மாலும் (மயங்குகின்ற) வேள் (மன்மதனை யொத்தவன்) என்க. மால்வேள் வினைத்தொகை. வாலுகம் - வெண்மணல். (316)

Page 133
226/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தலைமகன் தலைமக ளசைவறிந் திருத்தல்
வாயுளி போலும் பரற்கொடும் பாலை வனநெறியிற் காயழல் வெம்மையின் மேனடந் தேமலர்க் கால்சிவந்தாய் ஆய்தமிழ்க் கும்பன் கரவையில் வேல னணிவரையில் வேயணி தோன்மயி லேயிளைப் பாறுதி மென்பொழிற்கே.
வாயுளி என்பதை உளிவாய் என மாற்றிக்கொள்க. உளிவாய்போலுங் கூரிய பருக்கைக்கல் நிறைந்த பாலைவனவழியில் என்க. ஈண்டு,
“பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்
விரணுதி சிதைக்கு நிரைநிலை யதர பரல்முரம் பாகிய பயமில் காணம்’ (அகம். செ. 5)
என்பதும் நோக்குக.
வேய் - மூங்கில். பொழிற்கு - பொழிற்கண், உருபுமயக்கம். (317)
உவந்தலர் சூட்டி உணி மகிழ்ந் துரைத்தல்
மந்தா கினிக்குல வேலன் கரவை மணிவரையிற் செந்தா மரைமுக மின்குழன் மீதிற் சிவந்தபொறிக் கொந்தா ரழற்சுர வாரியின் வாய்க்கதங் கொண்டமதுப் பைந்தாமஞ் சூட்டி மகிழவு மென்றவம் பாலித்ததே.
மின் - காதலியினது. சுரம் - பாலை, வாரி - வழி. வாய் ஏழுனுருபு. சிவந்த பொறிகளையுடைய கூட்டமாகிய அழல் பொருந்திய பாலை நிலத்து வழிக்கண் என்க. கதம் - அடைந்தது. கதங்கொண்ட அடைந்துள்ள. தாமம் - பூ மாலை. பாலித்தல் - அருளுதல், கொடுத்தல். (318)
கண்டோர் அயிர்த்தல்
காரொன்று செங்கைக் கரவையில் வேலன் கழல்பணியாய் போரொன்று மேவலர் போஞ்சுர மீதினிற் போந்தவர்தாம் பாரொன்று மானவரோவன்றி விண்ணுறை பண்ணவரோ ஆரென் றதிசய மெம்மால் வினவி யறிவரிதே. (319)

கரவைவேலன்கோவை /227
கண்டோர் காதலின் விலக்கல்
வெம்பானு வுங்குட பாலடைந் தானிந்த வெஞ்சுரத்தி லம்பாருங் கண்ணியர் சிங்காரன் வேல னணிவரையிற் கொம்பாரு மெல்லியல் பங்கனும் போல்வருங் கோளுடையீ ரெம்பாடி யிற்றங்கிப் பாலுந் தசையுமுன் டேகிடுமே.
கொம்பாரு மெல்லியல் - பூங்கொம்பு போன்ற மெல்லிய இயலினையுடைய உமாதேவியார். மெல்லியல் அன்மொழி. மெல்லியலும் என உம்மை விரிக்க. பங்கன் - சிவ பெருமான். கோள் - கொள்கை.
உமாமகேச்சுரர்களது அர்த்தநாரீச்சுர வடிவம்போல ஒருவரையொருவ ரிணைபிரியாது வருங் கொள்கையை யுடையீர்! என்றபடி. பாடி - ஊர். தசை - ஊன், இறைச்சி. (320)
தலைவன் தன்பதியணிமை சாற்றல்
வரவிந்த மன்ன மணிப்புய வேலன் வரையகத்தில் இரவித் தனைய முகத்தாய் மலையிரண் டேகடந்தால் விரவுங் கனக மணிமா ஸ்ரீகையும் விரைபொதியு மரவிந்த வாவியுஞ் சூழுநம் முரணித் தாய்வருமே.
வரவிந்தம் - மேன்மைபொருந்திய விந்தமலை, விரை - வாசனை. அரவிந்தம் - தாமரை. (321)
தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக் குணர்த்தல் அரும்பா லணிதொடைப் பூங்குழல் சேர்ந்தபொன்னாரமுலைப் பெரும்பா ரமேந்தி யிடைநூ லசையப் பிறைநுதற்பைாங் கரும்பார் மொழிநடந் தேமென்று நெஞ்சிற் கவலல்வந்தேம் விரும்பார் வணங்குங் கரவையில் வேலன் வியன்கிரிக்கே.
அரும்பு - பூமொட்டு. தொடை - மாலை. கரும்பு ஆர்மொழி -
கரும்பின் இரசம்போன்ற இனிய மொழியாளே! கவலல் - வருந்தாதே. விரும்பார் - பகைவர். வியன்கிரிக்கு வந்தேம் கவலல் என்க. (322)
உடன் போக்கு முற்றிற்று.

Page 134
228/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
கற்பொடுபுணர்ந்த கவ்வை
செவிலி பாங்கியை வினாதல்
LLLLLLLL0LLL0LLCLL LLLLLLLCLLLLLCLLLLLCLLLLLCLLLLLLLLCLLLCLLLLLLL0Y0LCL0 LLL LLL LLL LLLLYLLLLLLLLLL0LLLLLLLLCLLLLCLCLLCCCLLCLLLL LLLLLL YLLLLL
SLLLLLLLLLLLLLLLYLLLL LLL LLLLLLLLSLLLLLSLLLLLLLLL 0LLLLLLLL0L0LLLLLLSLLLLLLLCLLLLLCLLLLLLL LLLLL LLLLLLLLLLLLLSLLLLLLSL
LLLLLL LLLLLLLLLLLLSLLLLLSLLLLCLLLLLCLLLLLLLSLLAqLLLLCLCSLLLLLLLLL LLLL CLLLLLLL00LLLL0LLLL0LLLLLLLLCLLLLLLL0LLLLLLLLCLLLCLL LLLL LL 0L LLL0LLLL0LLLLLL
YYLLLLSL0LL0LLLLL 0LL0L0L00LCLL L0L LLLLLLCLL00Y 0Y 0LLLLL0LLLL0LLLLLLL0LLL0LLLL LLLLLLLLY0LLLYSLLLL YS Y LLL LLL LLLLLLLLSLL LL LYL SLLLLLLLLLL 0LLSL LL LLLLL LLLLLLLLLLL LLTLLLLLLL LL
LY0LL0 0L0L0L0L0L0 00LC0 LLLLL CLLLLLL LLLLLLL LLLLLLLLz0LLLLLL0LL0L T YLLLYY LLL YY Y Y LLL LLL LLL LLLLL SY 0LL0 LLLLLLLLSLLLL 0LLL LLLL LLLLLLLL L LLLLL LL LL LLLLLL
0LLLLLLLLCLLCLCLLLL LLLLLL YL LSL0SL0LLLLLLL LLLLCLLLLLSLLLLCLLLC0LLLLLLLL zLLLLLLLLLLSLLSLLSLSLCLLCLLCCLLLLLC0C00LC0C0LL00 LLLL0LL0CLL LCLL00LLLLLLLLCLLLCLLCL
0L0LLL0 LLLL0LSLLL0LLLLLLL LLLL CLLLLCL 0zL0LLYLL0LL L LLLL 0L YLLL0LY 0YY LLL Y YLL00LL YLLLLL 0 LLLLL LLLL LL LLLLL LSL LLLLLLL 0LL LLLLLLLLSL LLLLL LLLLLLLLSLLLLL LSLLLLL LLL LLLLTLLL LLLLLLLLS LTYLLLL LL
0Y0M 00L00L00Y0LLCLCL 00LLCLLCLCLL0 T000 0CLLL00L L0CLC0L 0LLL L0 0LL0z0LL 0 0LL 0LL LL L0LLLL LLL LLLLL S 00LL 0 0LLL L0YLL LLLLY LLL 0LLL LLLL LL LLL LLL LLL LLL T LLL LLL LLL LL
Y LLCLY 0 CLLLLLLL0L LLLLL00 LLLLLCL LL LLL LLL LLLLL Y LLL LLL 00 LLL Y 0SLL00 L LL00 L 00LL LL 0L LLL 0L 00L 0LLL 0LLLLLSLLLL LLL LLLL LL 0L LL LLLLL LL LLL LLL LLLL L LLLLL L L LS L LLLSLLLSLSLSLSLS
(323)
(324)
(325)
(326)
(327)
(328)
(329)
(330)
(331)
(332)

கரவைவேலன் கோவை/229
நற்றாய் தலைமகள் பயிலிடந்தன்னொடு புலம்பல்
000LL 000 LL 0 0 LLLL 0 00 0M LYL0 YL0 0L 0LLL0 0 YL00L0LLLLLLL0 LLLLLL LLLLLLLLY0LLLLL0LLY LLLLLL0LLLL0LLLLLLSY LL LTL LLL LL0L 0LL 0LL 0LL LLLL LLL 0LLLL 0LLL 0LL LSLSL LLSLLLLLLSL (333)
நிமித்தம் போற்றல்
zLLL0LLCLC0CL0L LL L0LLLLLYLLLL CLLLLCLCLL CLL00LL LL 00L00LLLL0 0L L0L0L0L0L0LLLLLLLLL0L LLLLYY LLLL LLLLLL 0LL LLLLLLLLT 0L L L 00L LLLLYLL LLTLLS T LLL LL LLL LLL LLLL LL L LLLLL LLSL TS (334)
சுரந்தணிவித்தல்
00LL LL0LLLL0LLLLLL0LLLLLLLLCLLCLCLCCCCLCLCLLLLLLL0LLLLL00 LL L0LC0 Y CL0LLYCLL0LL0LLL00LL0LL0LL0L0LCLCL0L0LLCLLCLLCLLC0L0LLLL000LLLL LLLLCLL 00 CLCLCL0L (335)
தன் மகளின் மென்மைத்தன்மைக் கிரங்கல்
YY 0L00L00LL LLL MMLL LLLLY0L 0L0LYLL 0YLLL LL0LL LL00LLLL0LLY 0LL CLLLLLL 0L LLLLL LLLLLLY LLLL L0 L0LLLL00LLLL0LLLL0LLLL0LLLL LLY Y LLLLLLL LLLL LL LLLLL LLLL Y 0LLL LL LLL LLL LLL LL (336)
இளமைத்தன்மைக் குளமெலிந்திரங்கல்
0LLLLLLLLLLYY LLLLLLLLLLLLLLLCLLLLLLLLCLLLCLL LLLLLLLL0L 00 0LLLLLLLL0LLL0LLL0LLSCLC00LLLLLLLL0LLLL L00L0LL0LLL LLLL LLLLLL (337)
அச்சத்தன்மைக் கச்சமுற் றிரங்கல்
L0000LLLLL 0L0L00 LLLL0LL0L L00LLLL00 Y LLL 00LL0LLLLY0L0L CLLLLLLLLYYLLLLLYLLLLL LSLLLLLL0LLLL0LLLLLLLL LLL LLL0LLLY0LY0LLLLL0LL LL0LL LLL LLL LLSLLLLLSL LLLLL LLLLLLLL LLL LL (338)
கண்டோரிரக்கம்
0zLLLLLL0LLLLLY LLL0L LLLLY LLLL CS Y L0L LL L0L LLLLLL 0L LLLL YYLLLYLLL0L0L0L 0L 0L0LLLLL 0LLYY LLL0L LLL LLLLLLLLSL 0LLL 0LLLL 0LLSLLLLLLLTLLL L L L L L L L LLLLLLT LL LLLSLL L LTY LLLSLLL L SLL LSL S (339)
செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றல்
00000LL 0L00 0LL 0LLYL0YCLCLLLL LLLLLLLL0LLCLLCL LCL Y LCLC0L00 LL L0LL CLL0LYLLLLLL0LLL0LLL0LLLLLLL LLLL YLL0 LLLLLS LL0LL0LLLL0LL 0L LYLLLLL LLLL LL LLL LLL 0LL LLLLS LLL LLLL L TY S LLLL (340)
மிக்கோ ரேதுக் காட்டல்
Y000Y0LL0LL0LLz0L LL0L0LSL0 LLz00LLLzLLL LLYLLLLLL0LS0LLLL0LLLL 0SL0LLLSLLL0 Y LLLLLLS LLLSL LLLLL LLLL LL LLLL LLK LSL GL LLSLL0LLLS LL0LSLL LLSLL0LLLLL ELL 0LLLL LLL LLLL LLL0L LLL LLL LLSL 0L LLSSL0SS (342)
செவிலி எயிற்றியொடு புலம்பல்

Page 135
23O/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
செவிலி குரவொடு புலம்பல்
LLL0LLLSLLLLLLSLLLSLLSLLLLLLLLLLLLLSLLLL LLLL LSLLLLL LLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLSLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSLSL0LLLL0LSLLLLSLLLLLL (344)
LL00LLLLLLLL0LLLLLLLLSLLLLLLLSLLSSLSLLLLSLLLLLLLLLLSLLLLLLLL0LL LL0LLLL0LLLL0LLLLLLLLSLLLLLLLLLLLLLSLLLLLLLSLLLLLLLLSLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLL0LLLSLLL (345)
LLLLLLLL0LLLLL0LLLLLLLSLL0SLLLLL0L0LLLLLLS0LLLLLLLLLLLLLL0LL0LL0LL0LL0LLLLLLL0LLLL0LLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLSLLLSLLSLLSL0LLLSLLS0LLLLSLLL0LLLLLLLLL (346)
அவர் புலம்பல் தேற்றல்
L0L0LLLLLLLLSLLLLLSLLLLLLSLLLSLLLLLSLLLSLLLSLSLLLSLLSLLSLLSL LLLLLLLLLLLLLL LLLLLLLLSLL LLL0LLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLSLLLSLLSLLSLLLLLSLLLLLSLLLSLLSLLLLLLSLLLLLSLLL0LLLLLLLL0LLLLL (347)
செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல்
0LLLL0SLL0LLL0LLLLLLLLLLLLLLLLLLLL LLLLL LLLLLLLLSLLLLLLLL0LLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLC0LLLLSLLLLLLL0LLLLLSCLLC0LLLLLLL00LLLL0LLLL (348)
கற்பொடுபுணர்ந்த கவ்வைமுற்றிற்று
மீட்சி
தலைவி சேனகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல்
SLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLSLLLL0LLSLLLLLL0LLLSLLL LLLL LLLLLLLL0LLLLLL0CLLL0LLLLLLLLCLLLLLLL LLLLLLCLLLLLSLLLLLLLLL LLLLLL (349)
தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல்
0LLLLL0LLLLSLLLLLSLLLLLLSLLLSLLSLLSLLLLLLLL LLLLLLLSLLLLCLLLLLCLLLLLCLLL0S0LLLLSLLLL000L0LLLL0LLLSLLLLLLSLLLLL0LL0LLLLLSLLLLLSLLLLLSLLLL0SLLLSLLCLLSSLLLLSLSLLCLLLLLLL00LLLLLSC00LLL0LL00LLL (350)
முன்செல்வோர்தம்மொடு தலைவி தாம் வரல் பாங்கியர்க்குணர்த்தவிடுத்தல்
LL LLLL LLLLLLLLSLLLLLSLL LLLLSL LLLLLL LL LSLLLLLLSS LLLLLSLLLSLLSLLSLLLLL LL LLL LLLSLLLLLSL0LLLLLLLSLLLLLLLL0L LLL LLL LLL LLLL LLLL LLLLLLLL0LLLSLLLLLSLSL00LLLLLL0LLL0LL00LLC LLLLLLLL0 (351)
முன்சென்றோர் பாங்கியர்க்குரைத்தல்

கரவைவேலன் கோவை 123
பாங்கியர் கேட்டு நற்றாய்க்குரைத்தல்
LLLLLLLLLS LLLLLLLLLL LLLLLLLLLLLLLL 0LLLLLLLYL00L0LLLSLLL L0LL LL0L0 LLLLLL LLLLLLLL0 Y0LLLLLLLLLLLLLLL LL LLLLLLLL0LLLL00L0000L00 0 00ML0L (353)
நற்றாய் கேட்டுத் தலைவனுளங்கோள் வேலனை வினாதல்
00LLLLL0LLLL0LLLLLLLLLLLLLLLLSLLLLLLLCLLLLLCLLLLLLLLSLLLLL YLLLLL LLL LLL LLLLLLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLLLLLL0LLLLL0L0LLLLS (354)
மீட்சி முற்றிற்று
தன்மனைவரைதல்
நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்
YLLLSLLLY LLLL 00 0L Y 00LLLLLL0LLLLLLL LLLLLLLLLLLLSLLLLLLLS LLLLLLLLS0LL0LL LLL SLLLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLL LLLLLLLLSLLLLLLLLLLSLLLLLLL0LLLSLLLLLSLLLLLLLLLL (355)
செவிலிக்கு இகுளை வரைந்தமை யுணர்த்தல்
LL LLLLLLLLLLLLLLLL T LLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLLL0LLLL L0LLYY0 0LL LLLLL LLLLLLLLLLLLL00LLLL0LLLLYYTLLLLLLLL0000 L00 L 0L000 (356)
வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தல்
LLLLLLLL0LLLLLL0L LLLL0LL C0CLLLLLC0LLLCLLLLLCLLLLCLC0C0L00LLSLLL0LLLL0LLLLL 0LLLL 0LLLLLLLLL LLCLLLLLCLLLLCLCLLLLCLCLLLCLLLLLCLLLLLLL0LLLL 0000 L0LLYLL00CLCL0 (357)
தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு சென்றென்றல்
0LL00LLL0LLLSLLL00LLLLL LLLLCLLLCLL LCLLCL LCLCLC0LLL0C0LCLLLLLLL0LLSLL0LLLLLL0LLLL0YLLLLL L0L LLLLL LL LLLLLLLL0LL0LC LLLLCLCLC LLLLLLLCL0LLCLLC0LCLCCLLCLLCLCLLLLCL0CL0Y (358)
பாங்கி தான் அதுமுன்னே சாற்றியதுரைத்தல்
LS L LLLLLLLLSTSLSTLSLSLLLLLSLLLLLSLLLSLSLL LLLLLLLTL LL LLLLLLL LLLLLLLLSL L SLLL 0SLLL LLLLLLL 0LLLLL0LL LSL LLLLL LL LLLLLLY LLL0LLL 0LLLL0LL0LL00LLLL0LLLL0LLLL YLLLLLLL C0L LL0LLCLLL LLLLLLLL0SYLL00Y 00S (359)
தன்மனைவரைதல் முற்றிற்று

Page 136
232/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
உடன்போக்கிடையீடு
நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன் செலவுணர்த்திவிடுத்தல்
LLLLLLLL0LLY LLLL 0S0 GL LSLLLLLLLL GL LLLL LLLLLLY LSL Y LSLL Y0LLLLLSL LLSLYLLLLSLLLLLSLLGLLLGLLLLSLLLLLSLLL0LLL0 GLSLLLLLLLLLLLYLLSLGLLLGSL YY LSLLLLLL0LLLLLL0LLLLLLL LLL LLSLL L0LLSL LLLLL LL LYG SLLLLLLSLLLLLL (360)
LLLLSLLLLLS YLTLLL LLLL0LLLLLY YYL LLLLL YY LLLSL0LLLLL0LLLL LLL LLL 0LL LLLLLL LT LL SL LLL YY LLLL L0LLLL LY LLL LLLL0 Y 0 Y0 LLLL LSLLLL Y LLL LLL LLLLL LLLLLLLSLLLLL YLL L00LY LL0LLLL L0 LLLL YLLLLY LL (361)
LLLLLLLL0LLLL0LLLLLLLL0LLLLLLLL0 LLSLYLLLLLL0LLLLL0LLLLSLLLLL0LLLLLLL LLLLCLLLLLLL0LLLLLL0LLLSLLLSLLLLLLLLLSLLLLLL0LLLLLLLLLL LLLLLLLL0 (362)
நற்றாய் அறத்தொடுநிற்றலின் தமர் பின் சேறலைத் தலைவிகண்டு தலைவர்க்குணர்த்தல்
LLLLLLLLSLLLLLLLLLGLLLLLLLLLLLLLLLLLL0SL GLLLLLLSLL LSLL LLL0LLLLL0LLLLL0LLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLLL0GLLLLLLLSLLLLLLLLLLSLLSLL0LLLLSLLL0LLLLLL0LY (363)
தலைவியைத் தலைவன் விடுத்தல்
LLLLLSLLLLLLLYLLLLLL00SLLLLLLL0LLL0LLL0LLLLLSLL GLLLGSLL0LGLLGzLL0LLL0LLLSLLLLLLLLLLLSLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLSLL0LSLLLL0LLLL YLLLLLLLL LLL0LLLL0LLLL0LLLLLL (364)
உடன்போக்கிடையீடு முற்றிற்று.
வரைதல்
சென்றோன் மீண்டுவந்து அந்தணரையுஞ் சான்றோரையும்
முன்னிட்டு வரைந்துகொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல்

கரவைவேலன் கோவை/233
கற்பியல்
இல்வாழ்க்கை
தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்
LLSLLLLL0LLLLLLLLLL0LLLLLLLLLLLL000SLLLLLL0LLLLL0LLLLLLLLLLSLLLSLLLLL0LLL0LL00LLLLL0LLL0LLCLLLSLLLLLLL0LLLL00LLLL0LLLLLLLLCLLLLLLL0LLLLL (368)
பாங்கி தலைவியை வரையுநாளளவு வருத்தாதிருந்தமை உரையா யென்றல்
LLLLLLL LSLLSLLLLLLLSLLLL LLLLLLLLSLSLLLSLLLLLSLLLLLLSLLLLLLLLL LLSLLLLL LSLSLLLLLSLLLLLSLSLLLSLLLLSLLSLLLLLSLLLLLLLLLLLSL LSLLLLLLSLLLSLSLLLL0LLLLSS (369)
பெருமக ளுரைத்தல்
(370)
தலைவனைப் பாங்கி வரையுநாளளவு நிலைபெறவாற்றிய நிலைமை வினாதல்
SLLLLL LL LL SLLLLLLLLL LLLL LLL0LLLLLLL LL LLLLLLLLLLL Y Y TLLLLSL00 LLLL0LLLLLLSLLLLLLLLLL L0LLLLLLLLL LLLLL LL LLLLL LL LLLLLLCLLL LL LYYLLLSLL0L (371)
மன்றன் மனைவரு செவிலிக்கு இகுளை அன்புற வுணர்த்தல்
LS 0 YLLLLLL SL LL0L LLLLLLLL0LLLSL0LLLSLL0L0LLSLLLLSLLLLLLLLL 0LL LLLL LLLL LLSL0SL 0SL00LLSLLLLLLLL LLL LLL 0L LLLLLLLLS0SLLSLLLSLSLL L00L LL LLLLL LL LL000 0 L0SLLSLLSL0SLLLLL0LLLLLLL LSL LL (372)
பாங்கி இல் வாழ்க்கைநன்றென்று செவிலிக் குரைத்தல்
LSLL LLSL LSLLLLL LSLLLLLLSLLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLLLLLLLSLLLLLSLLLSLLLLLLL0LL0LL LL0LL LLSLLSL LLSLLLLLSLLLSLLLLLSLLLLLL0LLLLLLL LL LSLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLSLLLLLLLLSLLLLLSLLLSLLLLLLLLL L0LLLLL (373)
மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தல்

Page 137
234/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
நண்மனைவாழ்க்கைத்தன்மை யுணர்த்தல்
LL0LL0Y0LL LLLLLL 00LLLL00LLLLLLLLCLLLLLCCLCLCLLCLLLC0LCLLLLLLL0LLLL 00Cz YLLL0LLLLLLL LLLLLLLL0LLLLL0LLLLLL0LLC0LCLLLLLLLSL00L0LL 0LL LLLLLLL LL 0L LLLL YLL (375)
செவிலி நற்றாய்க்கு இருவர்காதலையும் அறிவித்தல்
SLLLLL00LLLLL0LLLLLLLLCLLCLCLLLLLLLLCLLLCL SL0LLLCLLLLLCLLLLLCLLLLL LLLLLL 0LLL LLLL LLLLLLLL0LLLLLLL00SLCLLLSLLLLCLLLLLCLLLSLLLSLLSLL0LLSL00L0LLL LLLLLL 0 0SLLL Y LLLLSY YLL LL LLLLLL (376)
இல்வாழ்க்கை முற்றிற்று.
பரத்தையிற் பிரிவு
காதலன் பிரிவுNக் கண்டோர் புலவிக்கேது ஈதாம் இவ்விறைவிக் கென்றல்
SL000L0LLL00L0LL00LCLL0L 0LLC0LLL0LL0LCLLLLLSLLLLCLCLCLCLLCLCLLLLLCCLCLL LLLCLLL LLL Y00L00LL LLLLL LLLLCL0LCLLSLSL00CLCLLCCLLLLL 0SLLLL0LLLLLLLLCLLL CL0LL0LCLLLLLLL0LLL00L0L (377)
தனித்துழி இறைவி துணித்தழு திரங்கல்
LLLLLL 00L00 SLLL LLCLLLLL LLLLzLLLLL LSLLLLLL0LLLSLLLSLLLCLL LLLCLLCLLLCLL LLL0LLLLL 0LLL00L0LLL00LLL0LLL0LL000CLLLLLCLLLC0LCLCLLL LL LLLLLLY 0LCLLLLLLL0LLC0L (378)
ஈங்கிது என்னெனப் பாங்கி வினாதல்
00 L0LL L00LLL0000LLLLLLLLCLCLC0L CL CL CL CC CCCCCCLL LLLCLLL CLLLLLL C LLLLL 0LLL LLLL L0LL0L LLL 00 LL LL 0LCLCL 0LL 00LCLCLLLSLLLSCSLSLCLLLL CLLLLLCLLLLLLLLLL LL LLL LLL 0L LLS (379)
இறைமகன்புறத்தொழுக்கு இறைமக ளுணர்த்தல்
SLLCLL0LLLLL 0LL0L LL0LLL S 0L0LLLLLLLLLLLLLSLLLLLSSL0LLSLLLSLLL LL00LLLLLL Y00LY SLL Y LLL LLS0LLCLLLLLLL0LL LL L0SL LLLLLL 0LLLLLLLYL0L000LLLSLLLLCLLLCLLCL (380)
தலைவியைப் பாங்கி கழறல்
LLL0 YYLLLLL L0L L L00L 0LL0 zLL0LLL0LLL0LLLL MLLLY Y Y LLL LSLL LLL0L0L LL LLS 0L MLLY LLLLLL LLLLLS ...................................... (381)
தலைவி செவ்வணி யணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி யுழையர்கண்டு அழுங்கிக் கூறல்

கரவைவேலன் கோவை /235
பரத்தையர் கண்டு பழித்தல்
LLLLLLLL0SLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLLLLL0LLLLLLL00 (383)
பரத்தையர் உலகியனோக்கிவிடுத்தலிற் தலைவன் வரவுகண்டுவந்து வாயில்கள் மொழிதல்
LLLLLLLLLL Y Y00 LLLLLLLLSLLLL0 LLLL0L0LLLLLLLLCLSLLSLLLLLLLL LLLL LLLLL LLLLLLLLSLL0L0L0LLL00L0LLLLLSLLLLSLL0L 0LL0LLLL0LLCLLCCLLLLLLL0 LLLL0LLLL (384)
தலைமகன் வரவு பாங்கி தலைவிக் குணர்த்தல்
LLLLLLLLLSLLLLLLL0LLL0LLL0LLLLLLLLLSLLLLLLL0L0LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLSLLSLLLLLLLLLLLL0LLLLSLLLLLLL00LLL0000LL0L (385)
தலைவனைத் தலைவி எதிர்கொண்டு பணிதல்
LSLLLLLLLSLLLLLLLLLLL00LLLLLLLL LL LLLLLLLLSLLLSLLL0LLLLLLLLSLLLS0L0LLLL0LLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLL (386)
புணர்ச்சியின் மகிழ்தல்
SLLSLLLLLLSLLLSLLLLL0LLLLLLSLSS0LSS0LSLSLLL0LLLL0LLLLLLLLSLLLLLLLLL0LLLLLLLLLLSLSLLL0LLLLLL0LLLLLS0LLLLSSSLSLLLLSLL0L0LLLL0LSLLSLSSSLLLSLLLL0LLLLSL0L0L0L0 (387)
வெள்ளணி யணிந்து விடுப்புழித் தலைமகன் வாயில் வேண்டல்
LLLLSLLLSLLSLLSLLLLLLL0LLLL0LLLLLLLLLSLLLSLLLLLLLL LSLL0LLLLLLL LLLLLLLLLSLLLLSLL0SLLLLL LLLLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLLLLL0LLLL0LL0LL0LLSLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLLL00LLLLLLLLLLS (388)
தலைவி நெய்யாடியது இகுளை சாற்றல்
LSLLLLLLLLLLLSLLLLLL0LLLSLLSLLLLLLLLLLLSLLLSLLLLLSLLLL0LLLLLLLLLLSLLLSLLLLLSLLLLLLLLSLLLLLLLLSLLLLLL0LLLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLSLLLLLSLLLSLLLLLSLLLSLLLLLL0LL0000LLLS (389)
தலைவன் தன்மனத்து உவகைகூர்தல்
LLLLLLLLL LLLL0LLSLL0LLSLLLLLLLL LL LLLLLLLLSLLSSLSCLLLLSLLLL 0L 0LLLLLLL LLSLLSLLSLLLLLL0L LLL LLL LLSLLS0SLLLLLLLL LL0LLLSLL0LL0LLSLLLLLLLL0LLLL0LLLLLS (390)
தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றல்
SSLLSSLLLLSLLLLLLLLLLLL LLLLLL 0SLLLSLL0LL LLSL0LLLLLLLSLLSLLS0LLLLLLL LSLCLLLLLCLLLLLSLLLSLLSLLLLLSLLLSLL0LLL0LLSLCLSLLLLC0LLL0LLLLLL0LLLLLLSS0SSCSCLCL00LLLL0LLL0S (391)
SLLLSSL S LSS LSS LSL LSSLLS LSLL LS LS LS LSLSLSSLLSSL LS S LSL LS LSL S LSL LSS LSL LSSLSS LSS SS S SS S S LS SL S LS LS LS LS S S LSL LS LSSSL0SLL LSLSL LSL LL LSLL LSLLSL LLSLLSL LSS LSL LSSSL0SLL0SL LLLLL LL LSLLLSL LSLSLSL LSS LSL LLSL0SL LLSLLS 0SLLSLSL (392)

Page 138
236/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தலைவி பாணனை மறுத்தல்
LLLLLLLL00SLLL00LLLL0000LLLLLLLLL0LLSLLS0SLLLSCLLLLSLLLLLLLLSLLLLLSLLL0LLLLLLLSLLSLLLL0LLLSLLLLLLSLLLLLSLLLLLL0LLLSLLL LLLL LLSLLLLLLSLLLL LLL LLLL LLLLLL
0LLYLL0LLLLLLLLCLLLLLLLLLLL0L0LLLL0LLLSLLLLLS00LLS00LLLL0LLLLLLLLLSLLL0LL0LL0LL0LLL0LLLLLSLLLLLSLLL0LLLLLLL0LLLLLLLLLLLSSLLLLSLLLLLLSLLLL0LLLLLLSLLSLLS
LLLLLLLLSLLLLLLLL0LLLLLLSLLLLLLLLLSLLLLLSLLLSLLLLLSLLLLL0LLLLLLLLL LLLLLLLLLLSLLLLLSLLLLLLLLSLLLLLLLLSLLSLLLLLLLLSLLLLLLLS
விருந்தொடுவந்துழிப் பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல்
LLLC00LCL0LLCCLLLLLLL0LLLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLLSL LLLLLLLLLL LSL LLLLLLLLLLLLL LL0 LLL LLL LLLLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLLS
விருந்துகண்டொளித்த ஊடல் வெளிப்படநோக்கிச் சீறேலென்று அவன் சீறடிதொழுதல்
SLLLL0LLLLLLLLSLLSLLSLLLLLLLLL0LLL0LLLSLLLLLSLLLLLLSLLLLLLLLLLLLLLL0LLLLLLSLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLLSLLLLLLLLL LLLLLLLL
LLLLLLLLLLLLL0LLLLLLLL LLLLLLLLSLLL0LLLLLLL LLSLLLS Y LLLLLLLLLSLLLLLSLLL0LLLLLY LLLLLL 0L LLLLL LLLLLL00LLLLL LL 00 0L LL 0LLL00SL0LLLLLLSLLLL Y Y0L LLL LLL LLLLLL
SL0LLLLLLSL LLLLLLLLLLLLSLLSLLSL00LLLLL LLL LLLSLLSLLLLLSL0SL LLSLLLL LLLLL LLLLLL LSL LLLLLLLLSLLLLSLL LLLLLL LL LL0SLLLLL LLLLLS L0LLS LLLLLLLLSLLLL 0LSLLLLLLLL LL LLLLSLLLLLSLLLSLLLLLSLLLLLLLL LLLL LL LLL
LLL00LL0LLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLLL LSLLSLLLLSLLSLLLLLSLLLSLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLSLLLSLLLLLLSLLLSLLL0L LSLL SLLLLLLSLLLSLLSLLLLLLLL0LLLLLLSLSLL LLSLLSLLLLSLSS0LL0LLLL0L0L0LSLLLSL
000 LLSLL LSLL LLSLS CLSL LSL SLLLL LLLLLLLL0LLLSLLLSLLSLLSLLLLLSLLLSLLSLLSLLSL LLLLLL 0L LLLLLSLLLLSLLSLSLSLLL 0LLSL LLLLLLLLS LSLLLSLSLSL LS00LL0L 0SLLLLLLSL CCLSLSL0LL0SSSL0LL0L0L LLSL LLCLLCLL0L LSLLC
(393)
(394)
(395)
(396)
(397)
(398)
(399)
(400)
(401)

கரவைவேலன் கோவை /237
தலைவி புலவிதணியாளாகத் தலைவன் ஊடல்
பாங்கி அன்பிலை கொடியை யெனத் தலைவனை இகழ்தல்
LLLL0LLLLLLLLLLLSLLL0LLLLLLLLLSLLLLL LSLLLLLL0L LLL LLLLLLLLLLSLLLSLLSLLLLLSLLLSLLLLLSLLLLLSLLLLLLLLLLLLLLLL0LLLLLSLLLLLLLSLLLLS0SS00LLLLLLLLSLLL0LLL ....... (403)
மகனும் ஆற்றாமையும் வாயில்களாக (வந்த தலைவனை)த் தலைவி வரவெதிர் கோடல்
S0SLLLLLCLLLSSSLLLSLLLLL0LLLLLLL LLLLLLLL00LLLLLLLLCLLSSLLLLLLSL LLLLLCLLLS LLLLL LSLLLLLL0LLLLLLL0LLLLLLLL0LLLLLLL LLLLLLLLSLLLLLLLLLLLCLLLLLSLLLLLSLLLL0LLLLLL0S (404)
மணந்து அவன் போயபின் வந்த பாங்கியொடு இணங்கிய மைந்தனை இனிதிற் புகழ்தல்
LL00LLLLLLLLLLLLLLLLL LLLLLLLL LL LL0L LL0L LL0LLLSL0LL0LLLLSLLLLLLLLLLLLL L L L L L L L L L LLLLLLLLSLLLLL0LLLL0LLLLLLL LLLL LLLL LLLL LL LSLL LLLL LLLLLLLLS (405)
தலைவி தலைவனைப் புகழ்தல்
LLSL0SL LLSLLSLL000SLLLSLLLLLSLLSLLLLLLLLLLLLLLL 0L LLL0LLLLLS (406)
பாங்கி மனைவியைப் புகழ்தல்
0LLLSL0LLLSLLLLLLLL LLLLLLLL 0LL 0LL SL LLLLLYLLLSL 00LL LSLLLSL00 LLLLLSLLSLLLLLSLLLLLSLLL 0LLSLLL LLLL LL LLL LLL LLLL LSLLLLL LSLLLLLL0LLSLLSLLLLLS00LLLLSLLLLL LSL LLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLL (407)
பரத்தையிற் பிரிவு முற்றிற்று
ஒதற் பிரிவு
கல்விக்குப்பிரிவு தலைமகனானுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்
LLLLSLLLSLLLL LLSLLLLLLLS LLLLLSLLL0LLLSLLLLLLLLLS LLLLLSLLLSLLLSLLSLL LLLLLL LL LL LLL LLLLLLLLSLLLSLSLLLL LL LSLLLLLLLLSLLSLLSLSLLSLLSLLLLLSLLLLLSLLLSLLLL LLLLL LL LLL LLLLLLLLSLLLLL LSLLSLLS (408)
S0LSSLSLS LSSS LSL LSL SLLSLSL LSLLLSL LSL LSLLSL LLL LLLL L LL 0SLL LL LSL LLL LLLL LSL 0L LSLLSL LLSLS LS S SLS SLS SL LS LSS LSSL0S LS LS 0LL LLLLL LLL LLL 0L LLLLL LL S LSLLSLLSL0SSSLSSL LSLLSLLLS0 LS LLLLL LSLSLL 0L 0L LLLL LL LLL LLLS LLLLLSLLLL SLL LSL LLLLLS (409)

Page 139
238/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தலைமகளைப் பாங்கி ஆற்றுவித்தல்
0LLSLCSLLSLLLLL LLLLLLLL0LSLLLLLLLSLLLLLSLLLLLLLLLLSLLLLLLLLLLLLSLLLL LLLLLL LLLLLLLLSLLLSLLLLLLLL LLLLLLLLSLLSLL0LLLLSLLL0LLLSLLSLLLLLS0LLSL0LLLLLLLLLLLLL0YLLLLLLLLLL0LYLL00LSL (410)
ஒதற் பிரிவு முற்றிற்று
காவற் பிரிவு
தோழி தலைவிக்கு தலைவன் காவற்பிரி வுணர்த்தல்
LLLLSLLLSLLLLLLLL L LLLLLLLLSLLLLLSLLLLLSLLLSLLSLLSLLLL 0LLLLLSLLLLLSLLLLLLLL LL LLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLLLLS (411)
தலைமகள் கூதிர்ப்பருவங்கண்டு வருந்தல்.
LLLL0LSL0LSLLSLL0LL0L0LLLLLLSLLLLLLLLLLLLSLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLLLLLSSLSLLLLSLL0L0L0LLLLLLSSLLLLS0L0L0LLLLLSLLL0LLL00L0LL0LL0LL0LL0LLL0000LLLLLLLLCLLLLLCLLL0LLLL (412)
தோழி யாற்றுவித்தல்.
LLSL0LLLLLLLLCLLLLLLLSL LLLLL LLLSLLLLLLLLSLLSLLLLL LLLLLLLL0LLLSLLSLLLLLLLLLLSLLLSLLLLLLLSLLL0L0LLLLLLSLLSLLLLLLLCLLLLLLL0LL0LL0LLLLL0LLL0LLLLLLLLLL0LLLLLLLLC 0L00LLSS (413)
காவற் பிரிவு முற்றிற்று
தூதிற் பிரிவு
துTதிற்குப்பிரிவு தலைமகனாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல்,
LL LLLLLLLLS LSLSLL LLSLLLLLL0L LLLSLSLLL LS0 0L LLLLLLLLSLLL00 LLLLL LLLLLSSL0LLLLS LSL LLL LLLLLLLL LS LLL LLLLCLLL LL LL0L L0LLLLLLL L LLLLLLLC0LC0L00L LLLLLLCLLLLCLCCCCL00 L0 (414)
தலைவி முன்பணிப் பருவங்கண்டு வருந்தல்
LSLLSLL SSLLSLLL0SSL LSL LSL LSL LSLLLLSLLSLLLLS LSL LSSLLSLSLLSLSSLSSLLL LSL LLLLL LSL LSL SSL LS SL LLLLL LLL LLL 00LSLLL0S 00SL0LLLLLLL LLLLLLL 0L Y0LLLLLLL 0LL0LCSCLCCLLLLLLLLCLC CCLLLLLLL0LLLL0L0L (415)
தோழி யாற்றுவித்தல்
LSL LSL LSLLSS LSLLLL LLSL LSL LSL LSL LSLSL SLLL0L0SL SSLLLLL LSLLLSLSLLLS0LLL LSL LL LSSLLSSLLSLLLL LL LLL LL0LLLSLLLLLSLS LLL LL LLL LLLSSLSLL SSLL LLLSS LLLL LL0L LLLLL LL LLLLL L z LSLLCLLCL0LL0LL0LCCCCLL00 (416)
தூதிற்பிரிவு முற்றிற்று

கரவைவேலன் கோவை/239
துணைவயிற் பிரிவு
துணைவயிற் பிரிந்தமை தோழி தலைமகட்குணர்த்தல்
0M 0YYYLLL Y0YLL LLLL0LLLL0LLL0LLL0LLL0 0LYYLLC0 Y 0LCLCLL0 C LL0LLLL0LLLLLLLLL0LL LL0LLLLYYLLLLLL Y 0 Y 00LY 0LLLL LLLLLL 0L0L LLLLL LLLLLLLL LL LLL LLSLLLLLL (417)
தோழியாற்றுவித்தல்
zzz Lz YL LCLL0 L0LL0 0LL LL0L LL0L LLL 0L L L L L L L L L L YY LL LLLLLLLLL L0LL LLLYL LLLL LLLLLL LL 0L LL LLL LLL LLL LLL LLL LLLLLLLL0LLLLLTY LSL LLLLL LLLL LL LLL LLL L LLS L LL L LLLSLLLLLLTL LL LT S LTLLT LLTLLL LLLL (419)
துணைவயிற் பிரிவு முற்றிற்று.
பொருள் வயிற் பிரிவு
பொருள்வயிற்பிரிவு தலைமகனாலுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்
LLLLLLLL0LLLLL CLLLLLL LL LLLLLLL LLLLLLLLLLLLLLLLLL LLLLLL L0L0L0L0LLLLLL0LLLLLLL LLLL LLLLLLLL0LLL0L00LLLLLLL LLLLLLLLLL0L0LLLLLLLLLL LLLLLLL (420)
தலைவி இளவேனிற் பருவங்கண்டு புலம்பல்
0LLLC0LLL0 LLLLLL LL 0 LL LLLLL LLLL LLLLCLLLCLSCLLLLCLCLLLLLLL0LL LL0L LSLLL LLLL LLSLYLLLL LSLLLLLL00L0L00LLCLCLLLCLLLLCLCLLLCLL L0L0L LLLLLLLLSL0LL0LLLLLLL LLLLLLLL0LLLLL0S (420)
தலைவியைத் தோழியாற்றுவித்தல்
YL0 00L LLL 0L LLL0LLC0LLCLCLLCL LLL CLLLLLL 0L 0LL0L000LLL00 0LL L0 L0 L0 LLLL LSL LL0LL LLL LLLL LSL LLL 0L LL 0 L L0L TL LLLLLL 0LS LLL LLL L0L 0LL LL LSLL LLLL LLL LLLL L LLSLLL S LS LTLLS LTLT LSLLLSLS S S LSLSLSSSSTSL LSSL S LS (422)
பொருள் வயிற்பிரிவு முற்றிற்று.

Page 140
24O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தலைமகன் தலைமகளது உருவெளிப்பாடுகண்டு சொல்லல்
S S S S S S SS SS LS LSL SL S SL SL SS LS LS L SL LSL S LSL LSL SLL L SLL LS LS LS LL LSL S LSL LSL LSL LSL LSL S LSL SLL LS S LSL LSSSL0L LSSL LSL LSL LSLLSL LLSLL LS LS LSL LSL LSL LSL LLLLL S SLL LC LC SS LS LSL LLL SC LCLC C C CSC LS CLC C CS C C C S (423)
பாசறை முற்றி மீண்டு ஊர்வயின் வந்த தலைவன் பாகற்குச் சொல்லல்
தலைமகளோடிருந்த தலைமகன் கார்ப்பருவங்கண்டு மகிழ்ந்து சொல்லல்
வெண்மைத் தரள நிரைத்திடு முரல் விளங்கிழையார் பெண்மைக் கணியவர் கொங்கை முயங்கிடப் பெற்றனம்யா முண்மைக்கு வாய்ந்த கரவையில் வேல லுயர்ந்தகொடை வண்மைக் கரதலம் போற்பொழி கார்ப்புயல் வாழியவே.
தரளம் - முத்து. நிரைத்திடும் - நிரைத்தாலொத்த மூரல் - பல். பெண்மைக்கு அணியவர் - பெண்மைக்குணத்திற்கு அழகுசெய்பவர். விளங்கிழையாரும் அணியவரும் ஆகிய தலைவி, அவரது கொங்கை
யென்க. உண்மைக்கு வாய்ந்த - வாய்மை தப்பாத, உண்மையிற் சிறந்த,
வண்மை - வரையாது கொடுத்தல். வேலனது உயர்ந்த கொடையைப் பொழிகின்ற கைத்தலம்போலக் கார்காலத்து முகிலே! (உலகுக்கு) நீரைப் பொழிவாய், உலகம் வாழ்க, என்றவாறு. (425)
கற்பியன் முற்றிற்று
(172 செய்யுட்கள் காணப்படவில்லை)
கரவைவேலன்கோவை முற்றிற்று.

DÖ)Tİ GÜLSDSİ GÜMI
O O DIT GONGIT GETUIGI

Page 141

நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் இயற்றிய
பறாளை விநாயகர் பள்ளு
தொல்லுலகம் போற்றுஞ் சுழிபுரம்வா ழைங்கரன்மேற் பல்வளஞ்சேர் பள்ளினிசை பாடவே - வில்வழங்கு மையாழிக் கண்ணன் மலர்க்கண் வளர்ந்ததிருக்
கையாழிக் கண்ணனே காப்பு.
பள்ளினிசை - பள்ளுப்பாட்டு. இசை - பாட்டு. இன் - தவிர் வழி வந்த சாரியை. வில் - இந்திர தனுசு. மை - மேகம், அம் மேகம் படியும் ஆழி என்க. ஆழி - கடல். கண் - ஏழனுருபு. நன்மலர்க்கண் - நல்ல தாமரை மலர்போன்ற திருக்கண். வளர்தல் - உறங்குதல். கையாழிக் கண்ணன் - வலத் திருக்கரத்திலே சக்கரப்படையைத் தாங்கிய திருமால்.

Page 142
242/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
r இதுத
65 Tuu Sffr
நந்து தவழ நதிதனி லாம்ப னனிமலருஞ் சுந்தரஞ் சேரும் பழனப் பறாளையிற் றோன்றுசுடர் வந்தெதிர் நின்ற கயமுகன் றன்னை வதைத்ததந்த வைந்து கரப்பிள்ளை யென்னகத் தேநின் றருள்செயுமே.
நந்து - சங்கு. சங்கு நதியில் தவழ என்க. அதனது தண்ணிலவொளியால் வயலிலுள்ள ஆம்பல் மலர்கின்றது. சுந்தரம் - அழகு. பழனம் - வயல். சுடர் - பரஞ்சோதி, கயமுகன் - கயமுகாசுரன். சுடரும், வதைத்ததுமாகிய ஐந்து கரப்பிள்ளை என்க. தீயோனாகிய கயமுகாசுரனை வதைத்த பிரானாதலின், இந்நூற்கு வரும் இடையூற்றை அவன் நீக்கி யருளுவனென்பது கருத்தாகக் கொள்க.
நடேசர்
சுருதி யின்முத லாகிய காரணர்
துளைபொ லிகர வாரண மாமுகள் சுழிபு ரநகள் மேவுப றாளையி லுறைநாதர் கரும ணிவிழி யாளுமை பாலகள்
கதிரை யின்வடி வேலர்ச கோதரர் கருணை யின்மத தாரையி னார்பளி னிசையோதச் செரும ருவுத்ரி சூலவ ராயுதர்
திரிதி ரிபுர கோபர நாமயர் திகழி ரணிய மேருச ராசனர் பணிநானார் பொருமு முவையி னிருரி யாடையர்
புரிச டைவளை சோமக லாதரர் பொதுவி னினட மாடிய சேவடி மறவேனே.
சுருதியின் முதல் - பிரணவம். துளை - துவாரம். துளை பொலிகரம் - துதிக்கை. வாரணம் - யானை. கதிரை - கதிர்காமமென்னுந்திருப்பதி. கருணையின் - இன் - தவிர்வழி வந்த சாரியை. மததாரை - மதமழை. செருவிலே பொருந்திய முத்தலைச் சூலம். செரு - போர். வர ஆயுதர் -

பறாளை விநாயகர் பள்ளு/243
மேலான படையையுடையவர். திரி திரிபுரம் - மூவுலகங்களிலும் திரியும் முப்புரம்; அவற்றைச் சினந்தவரென்க. அநாமயர் - அநாதியே பாசங்களினிங்கியவர். ஆமயம் - பாசம். ‘ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்’ என்பது தமிழ் வேதம். இரணியமேரு - பொன்மயமான மகாமேருமலை. சராசனம் - வில்: அம்பைத் தள்ளுவதென்பது உறுப்புப் பொருள். பணி - பாம்பு; இங்கே ஆதிசேடன், வாசுகியுமாம். நாண் - வில்லினாண். உழுவை - புலி. புரிசடை - முறுக்குண்ட சடை, வளை சோமகலாதரர் - வளைந்த சந்திரகலையைச் சூடியவர். பொது - அம்பலம்; இங்கே திருச்சிற்றம்பலம், ஒத மறவேன் என முடிக்க.
சிவகாமியம்மை
தோட்டு வாரிச நான்முகன் பேணிய தும்பி மாமுக னம்புவி தாங்கிய சேட்டு மேருவிற் பாரதந் தீட்டிய
தென்ப றாளைப் பரஞ்சோதி யன்னை கோட்டு வாரணி கொங்கைப் பெருக்குங்
குழற்சு ருக்கு மணிவாய் முருக்கும்பஞ் சூட்டு சீறடி யுந்துடி நேரிடை
யுடையு மொங்கனு மென்கணி னின்றவே.
தோடு - பூவிதழ். வாரிசம் - தாமரை, பேணுதல் - ஈண்டு வழிபடுதல், தும்பி - யானை. சேடு - பெருமை. தீட்டுதல் - எழுதுதல். பரஞ்சோதி அன்னை - பரஞ்சோதி விநாயகப்பிரானது திருத்தாய். கோட்டுக்கொங்கை - யானைக் கொம்பு போன்ற கொங்கை. வார் - கச்சு. குழற்சுருக்கு - கூந்தலினது கட்டு. முருக்கு - முருக்கம்பூப்போன்ற இதழ். பஞ்சு ஊட்டு சீறடி - செம்பஞ்சுக் குழம்பு எழுதப்பட்ட சிற்றடி துடிநேர் இடை - உடுக்கை போன்ற இடை.
நுால்
பள்ளியர் தோற்றம்
குத்துமுலைக் குவடுகுலுங் கத்தரள வடம்புரளக் குமுதச்செவ் வாயின்வெள்ளிநகையரும்பத்
தத்துவரிக் கயலைவெருட்டிப் பத்திமணிக் குழையொடுமுட்டித்
தாரைமணிக் கண்களிரண்டுந் தாவடிசெல்லச்

Page 143
244/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சித்தியளித் திடுசுழி புரநக-ருறை-யத்திமுகக் கணபதி பணபதிச்
சேடனுநாவா லசைக்கரிய சீரிசைபாடி
யெத்திசையும் புகழநிதிக் கோனள காபுரியென் றெவருமதிக்கு
மீழமண் டலப்பள்ளி தோற்றினாளே.
குவடு - மலை, தரளவடம் - முத்துவடம். குமுதம் - செங்குமுதமலர். வெள்ளி நகை - வெண்மையான பற்கள். வெருட்டி - அஞ்சுவித்து. பத்திமணிக்குழை - வரிசையாகவுள்ள இரத்தினங்கள் அழுத்திச் செய்யப்பட்ட குழையென்னுங் காதணி. தாரை - கூர்மை. தாவடி - போர். தாவடி யோட்டு மயிலிலும்', 'தண்டு தாவடி போய்’ எனவும் 'ஆயிரமக்கடாவடி போயினார்’ எனவும் பிறரும், துணைவரி யம்பகந் தாவடி செல்குழையாள் என இவ்வாசிரியரும் கூறுமாற்றால் இஃது இப்பொருட்டாதலறிக. கண்கள் இரண்டும் வெருட்டி முட்டித் தாவடி செல்ல என்க. சித்தி - மனோபீஷ்ட நிறைவு: அஷ்டமாசித்தியுமாம். அத்தி - யானை. பணபதிச்சேடன் - ஆயிரபணா மகுடங்களை யுடைய பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேடன். அசைக்க அரிய - சொல்ல முடியாத, நாவசைத்தார்’ என்பர் முன்னும். நிதிக்கோன் - குபேரன். குலுங்கப் புரள அரும்பச் செல்லப் பாடிப் புகழுமாறு தோற்றினாளென்று முடிக்க. இது மூத்த பள்ளித் தோற்றம். (1)
சின்னவிடை நூலிறுமிறு மெனச் சீறடியிற் சிலம்பு புலம்பச்
சிறியதுதற் பிறையணிவட்டச் சுட்டியிலங்கய் பொன்னசலக் குசமதி னவமணி மின்னுதனக் கச்சு நெகிழப் புனைந்தகருங் கொண்டையில்வண்டு புரண்டுநெருங்கச் செந்நெல்வயற் சுழிபுர நகருறை கன்னமதத் திறையவர் பரி
சேவடியைத் திக்குநோக்கித் தெண்டம்பண்ணிச் (புரச் சொன்னநிலத் துறுவசி யிவளென வன்னமெனப் பிடியென
சோழமண் டலப்பள்ளி தோற்றினாளே. (நிதிவளர்
இடைநூல் - நூல்போன்ற இடை. இறும் இறும் என - இற்றுவிடும் இற்றுவிடும் என்று. சீறடி - சிறிய அடி. சிலம்பு - காலணி விசேடம். புலம்ப - ஒலிக்க. நுதல் - நெற்றியில். பிறையணிவட்டச் சுட்டி - பிறைபோன்ற அழகிய வட்டமாகிய நெற்றிச் சுட்டி, பொன் அசலம் - பொன்மலை: அது மகாமேரு. மேரு போன்ற குசத்தில், குசம் - கொங்கை. அது - பகுதிப் பொருள் விகுதி. நவமணி கோத்து விளங்கும் மாலை. கன்னம் - காது. பரிபுரம் - சிலம்பென்னுங்காலணி, தெண்டம் பண்ணுதல் - சாஷடாங்கமாக நமஸ்கரித்தல். சொன்ன நிலம் - பொன்னுலக மெனப்படும் தேவலோகம். உறுவசி - ஊர்வசி யென்னுந் தெய்வப் பெண். பிடி - பெண் யானை. இஃது இளையபள்ளித் தோற்றம். (2)

பறாளை விநாயகர் பள்ளு/245 பள்ளியர் வரலாறு கூறல்
தோடார் குழலசைய நுதல்வேர் வரும்பியெழுத் துடியுங் கொடியுமன்ன மருங்கு னெருங்கக் கோடா னவைகுலுங்க மணிமேகலைக ளார்ப்பக்
குழையுங் கயலுஞ் சென்று நின்றாடவே நீடானை யேறுசந்த்ர சூடா மணிக்குவந்த
நித்தன்பா ரதக்கதையை யாடகக் குன்றை யேடாக வெழுதினோன் றிருநாமம் பாடியாடு
மீழமண் டலத்தினிற் பள்ளி நானே.
தோடார் குழல் - பூவிதழ் பொருந்திய கூந்தல். வேர்வு - வியர்வை. துடி - உடுக்கை. மருங்குல் - இடை. கோடு - உவமையாகுபெயர். மேகலை - அரைப்பட்டிகை: அஃது எழுகோவையுடையது. காதிற் குழையும் கயல்போன்ற கண்ணும் ஒன்றோடொன்று சென்று சேர, ஆடப் பாடியாடு மென்க. நீடு ஆன் - பெருமை மிகுந்த இடபம்: நீடு ஆனை யெனக்கொண்டு பெருமை மிகுந்த அயிராவணமென்னும் யானை யென்றலுமாம். சந்திர சூடாமணி - சிவபெருமான். சிவபெருமானுக்குப் பிரியம் வாய்ந்த என்க. நித்தன் - அழிவில்லாதவன். ஆடகக்குன்று - மாமேரு - இது மூத்தபள்ளி தன் வரலாறு கூறியது. (3)
கோங்கிளம் புதியமுகைக் கொங்கைக் கெளரிமைந்தன்
கூறுபுகழ்க் கல்லாம னாவசையார் தாங்குபணி யரையிற்பூட்டு பிரான்பங்கயத்
தாளுக்கல் லாமற்சென்னி சற்றும்வணங்கார் வீங்குகடல் குடங்கைகொண்டான் கரகநிர்பூ
விட்டான்கோ யிலையன்றிச் சூழ்ந்து துதியார் தூங்குதழை செவியன்பத்திமைத் தொண்டர்வாழுஞ்
சோழமண் டலத்தினிற் பள்ளி நானே.
முகை - அரும்பு. கெளிமைந்தன் - இங்கே விநாயகப்பிரான். கூறுபுகழ் - கூறப்படும் தகுதிவாய்ந்த சீர்த்தி. பணி - பாம்பு. சென்னி - தலை, வீங்கு கடல் - நீர்மிக்க கடல். கடல் குடங்கை கொண்டான் - அகத்தியமுனிவன். குடங்கை - உட்குழிந்தகை. அகத்திய முனிவனது குண்டிகையிலிருந்த காவிரியைப் பூமியிற் பெருகச் செய்தவனென்க. அசையாரும் வணங்காரும் துதியாருமாகிய பத்திமைத் தொண்டர். விநாயகப் பெருமான் அரையிற் பாம்பணிந்திருத்தலைப் 'படந்தாழ் கச்சைப் பாம்பொடு தழீஇ' என்பதனான் அறிக. காவியை அப் பெருமான் பூமியில் விடுத்த வரலாறு கந்தபுராணத்துக் கூறப் பட்டது. இஃது இளையபள்ளி தன் வரலாறு கூறியது. (4)

Page 144
246/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பள்ளன் தோற்றம்
சுற்றுகருங் கச்சைக்கட்டி மாதுளம்பூவுறுமால் சோரவிட்டுக் கட்டித்துள்ளு மீசை முறுக்கி வெற்றியரக் குங்குடித்து நீற்றையும்பெ ருக்கப்பூசி மேல்வளைய லுந்தரித்து விழிகள் சிவந்து பற்றியமண் வெட்டிவைத்துச் சருக்கி நடந்து - தங்கப் -
பாளத்தாற் சமைத்தகொட்டுத் தோளிற்சுமந்தே யெற்றவரு மொற்றைமணிக் கொற்றக்கொப்யன் பண்ணை பார்க்கு
மீழமன் டலப்பள்ளன் றோற்றி னானே.
அரையிற் சுற்றப்படும் கரிய கச்சை. உறுமால் - ஆடைவி சேடம். சோர விட்டுக்கட்டி - பிடரிப்பக்கம் தூங்குமாறு விட்டுத் தலையிற் கட்டி. அரக்கு - சாராயம். மேல் வளையல் - மணிக்கட்டுக்கு மேலிடத்து அணியப்படும் வளையல். ஒரு மண்வெட்டியைக் கையிற் பிடித்தும் மற்றோர் மண்வெட்டியைத் தோளிற் சுமந்தும் வருகின்றான் என்க. கொட்டு - மண்வெட்டி. பகைவரை எற்றுதற்குப் பயன்படும் ஒற்றைக் கொம்பு. அவனது பண்ணையைப் பார்க்கும் பள்ளன். இஃது பள்ளன் தோற்றம் கூறியது. (5)
(கொச்சகம்)
பொய்யூரு மிடைக்கெளரி புதல்வனெழிற் புரிக்கோடு செய்யூருஞ் சுழிபுரத்துச் சேர்ந்தபறா ளையிலுறையு மையூர்முத் தானவள்ளன் மணிநாட்டு வளம்பேசப் பையூருங் களிறிதம்பப் பள்ளியர்நா வசைத்தாரே.
பொய் ஊரும் இடை - பொய்யென்று சொல்லப்படும் இடை. எழில் - அழகு. புரிக்கோடு - புரிகளையுடைய சங்கு. செய் - வயல். மையூர் முத்தானம் - கருநிறம் பொருந்திய மும்மத நீர். அதனையுடைய வள்ளல் பரஞ்சோதி விநாயகப்பிரான். பை - பாம்பின் படம். களிநிதம்பம் - களிப்பைத் தரும் அல்குல். நிதம்பம், அல்குல், கடிதடம் ஒரு பொருட் சொற்கள். இவை இடுப்பின் கீழுள்ள பின்புறத்தைக் குறிப்பன. ‘பஸ் சாத் நிதம்ப; ஸ்த்ரீ கட்யா” என்பது அமரகோசம். (6)

பறாளை விநாயகர் பள்ளு /247
பள்ளியர் குத்தம் நாட்டுவளங் கூறல்
போற்று மாதுளை மாணிக்க வித்தைப்
பொதிந்த சோதிக் கணிபல தூக்குந் தாற்று வாழை யிலைசென்று மாகத்
தரணி மேலால வட்ட மசைக்குந் தோற்று மாசினி முட்புறச் செம்பழஞ்
சுட்ட பொன்னின் சுளைபல தூற்று மேற்று வாளை கமுகிற் குதித்திடு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
மாணிக்க வித்து - மாணிக்கம் போன்ற விதை. தாறு - குலை. மாகத் தரணி - விண்ணுலகம். ஆசினி - பலாவிசேடம். சுட்ட பொன்னின் சுளை - உருக்கி ஓடவைத்த பொன்போன்ற இனிய சுளை. ஏற்று வாளை என்பது ‘கடல்வாழ் சுறவு மேறெனப் படுமே என்பதன் உபலக்கணத்தால் வந்தது. தூக்கும் முதலிய நான்கினையும் பெயரெச்சமாகக் கொண்டு ஈழமண்டல நாடென்பதனோடு முடிக்க, அன்றி அவற்றை வினைமுற்றாகக் கொண்டு அத்தகைய எனச் சொல்லிவிரித்து ஈழமண்டல நாடென்பதனோடு முடித்தலுமாம். பிறவும் அன்ன. (7)
காடெல் லாங்கரி மான்தஞ் சேருங்
கடலெல் லாம்வெள் வலம்புரி ԱՑ நாடெல் லாங்கதிர்ச் சாலி தழைக்கு
நரம்பெல் லாமிசை யேழை யழைக்கும் வீடெல் லாம்வள்ளைப் பாட்டொலி பூனுைம் - விண் -
மீனெல் லாந்தண் டலைத்தலை கானுந் தோடெல் லாம்பொறி வண்டுபண் பாடிய
சோழ மண்டல நாடெங்க ணாடே.
கரி - யானை, மான்மதம் - கத்துரி மிருகம். வெள்வலம்புரி - வெண்மையான வலம்புரிச் சங்கு. இசையேழி - சப்தஸ்வரம், இங்கே சம்பூர்ண ராகம். வள்ளைப்பாட்டு - உலக்கைப் பாட்டு. தண்டலை -
சோலை. தலை - ஏழனுருபு. தோடு - பூவிதழ். பொறி - புள்ளி. (8)
கண்ண கன்ற வரைத்தலைச் செம்மணிக்
காந்தி தூயநந் தாவிளக் கோர்பால்
வண்ண வேய்ங்குழ லூதண்ட ராவின்
மணியி னோசை கறங்குவ தோர்பால்

Page 145
248/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பண்ணை யோதிமக் கூட்டமு மோர்பால்
பவளக் கொம்பிற்கம் பூர்வது மோர்பா லெண்ணி னானில மும்புடை யோங்கிய
வீழ மண்டல நாடெங்க ணாடே.
கண் - இடம். வரைத்தலை - மலையில். காந்தி - ஒளி. நந்தா - கெடாத, வேய்ங்குழல் - மூங்கிலாற் செய்யப்பட்ட இசைக்குழல். அண்டர் - இடையர். ஆவின் கழுத்திற் கட்டிய மணி. கறங்குதல் - ஒலித்தல். பண்ணை - வயல், ஒதிமம் - அன்னம். பவளக்கொம்பு - பவளக்கொடி. கம்பு - சங்கு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலென்னும் நானில வளமும் கூறியவாறு. (9)
மின்னுங் காருங் கரும்புமுத் தீனும்வின்
மீனு மீனு மணிமுத்த மீனு முன்னுங் கார்மத வேழமுஞ் சேர்கழை
யோங்கல் வேழமு மாரம் பயக்கும் பன்னுஞ் சீதளப் பங்கய ராசியும்
பாண்டுக் கூனற் பணிலமுஞ் செங்கார் துன்னுஞ் சாலிக் குழாமு நிறைந்தொளிர் சோழ மண்டல நாடெங்கணாடே.
மின்னுங்கார் - மின்னலைச் செய்யும் மேகம். விண்மீன் - நசவுத்திரம் போன்ற பெண்கள்: “மாதரொத் தனவுடுத் தோற்றம்” என்பது கந்தபுராணம் உன்னும் - உயர்வாக எண்ணப்படுகின்ற, சேர்கழை ஓங்கல் வேழம் - புனர்பூச நக்ஷத்திரத்தை அளாவிய மூங்கிலாகிய வேழம் உயர்ச்சியையுடைய முங்கிலுமாம். ஆரம் - முத்து. பங்கயராசி - தாமரைத் தொகுதி. பாண்டு - வெண்மை. கூனற் பணிலம் - வளைவினையுடைய சங்கு. செங்கார் - செவ்விய கார்காலம். சாலி - செந்நெல். இதனுள் முத்துப் பிறக்குமிடங்கள் ஒன்பதும் கூறப்பட்டன. (10)
கோரந் தோய்ந்த வரியஞ்ச னத்தின்
குழம்பு தோய்விழிக் கொம்பனை யார்தா மாரந் தோய்ந்த களபக் கடாசல
மன்ப னார்புயக் கந்தினிற் பூட்ட வாரந் தோய்சந் தனமணந் தோய்ந்து
வயங்கு மின்னிசைத் தண்டமிழ் தோய்ந்தே யீரந் தோயு மிளந்தென்றல் வந்தசை
யீழ மண்டல நாடெங்க ணாடே.

பறாளை விநாயகர் பள்ளு/249
கோரம் - நஞ்சு. வரி - கண்ணிலுள்ள செவ்வரி. ஆரம் - சந்தனம். கடாசலம் - மதமலை: யானை; இங்கே கொங்கை, கொம்பனையார் தமது கொங்கையாகிய யானையைத் தமது கணவரது புயமாகிய தறியிலே பூட்ட என்க. வாரம் - மலைச்சார்பு. மலையின் அடிவாரத்திலே வளர்ந்துள்ள சந்தனமரங்களின் மணத்தோடு அளாவி. வயங்குதல் - விளங்குதல். ஈரம் - குளிர்ச்சி. சந்தனமணம் தோய்ந்து, தண்டமிழ் தோய்ந்து, ஈரந்தோயும் இளந்தென்றல். (11)
நீரி லேபுண்ட ரீக மரும்பு
நிழலி லேகரு மேதி யுறங்கும் வாரி லேவெண் டரள நிலாவும்
வரம்பி லேசெந்நெற் பூங்குலை சாயும் போரி லேநென் மணிக்குவை சேரும்
பொறியி லேகரும் பாடுங் கரும்பின் றுாரி லேகம டங்கண் வளர்ந்திடு
சோழ மண்டல நாடெங்க ணாடே.
புண்டரீகம் - தாமரை. மேதி - எருமை. வார் - முலைக்கச்சு. தரளம் - ஈண்டுத் தரளவடம். பூங்குலை - அழகிய குலை. போர் - நெற்போர். பொறி - ஆலை. தூர் - அடி. கமடம் - ஆமை. (12)
மஞ்ச ளாவிய மாடங்க டோறும்
மயில்கள் போன்மட வார்கணஞ் சூழு மஞ்ச ரோருகப் பள்ளியில் வான்சிறை
யன்ன வன்னக் குழாம்விளை யாடுந் துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்க ளோடிப் பலாக்கனி கீறி யிஞ்சி வேலியின் மஞ்சலிற் போய்விழு மீழ மண்டல நாடெங்க ணாடே.
மஞ்சு - மேகம். கணம் - கூட்டம். அம் - அழகு. சரோருகம் - தாமரை. வான்சிறை - பெருமை மிக்க சிறகு, சிறகுக்குப் பெருமையாவது மென்மை. அன்னவன்னக் குழாம் - வன்ன அன்னக் குழாம் எனக் கூட்டி நிறம் விளங்கிய அன்னத்தொகுதி என்றுரைக்க. இனி வான் சிறையையுடைய மடவாரன்ன அன்னக்குழாம் என்றலுமாம். துஞ்சுதல் - நிலைபெறுதல். அறந்துஞ்சுஞ் செங்கோலையே' என்றாற்போல, இங்கு, நீர்நிலையிற் றங்குமென்க. இஞ்சி வேலியின் மஞ்சல் - இஞ்சியை வேலியாகவுடைய மஞ்சல்: இஞ்சியின் வேலியாகிய மஞ்சலென்றலுமாம். (13)

Page 146
25O/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
தண்ட பாணி யிறைஞ்சு பதாம்புயத்
தானு நாதன் றிகம்பரத் தூயன் பண்டை நாகனை யானும் விரிஞ்சனும்
பாதஞ் சென்னி யறியாத நம்ப னண்டர் நாயகற் கற்புத மீதென
வரிக ளேந்திய வாலய வெற்பைத் துண்ட வான்கழு கென்றும் வலம்வருஞ்
சோழ மண்டல நாடெங்க ணாடே.
தண்டபாணி - முருகக்கடவுள்: அன்மொழித் தொகை. திகம்பரம் - திக்காடை. நாகணையான் - திருமால்: நாகம் - அம்முக்கெட்டு நின்றது. விஞ்சன் - பிரமதேவர். பாதம் சென்னி - நிரனிறையாகக்கொள்க. நம்பனாகிய அண்டர் நாயகன். அற்புதம் ஈது எனத் துண்டவான் கழுகு என்றும் வலம் வருமென்று கூட்டுக. அரிகள் - மூங்கில்கள்: சோலைகளுமாம். துண்டம் - மூக்கு: கழுகு நீண்ட மூக்குள்ளதாதலின் துண்டவான் கழுகு எனப்பட்டது. வான் - பெருமை. இது திருக்கழுக்குன்றத்தினைச் சிறப்பித்துக் கூறியவாறு. இத்தலம் தொண்டை நாட்டகத்ததேனும், அத் தொண்டைநாடு சோழ நாட்டின் ஒரு பகுதியாய்ச் சோழவரசனாற் றொண்டைமா னிளந்திரையனுக்குக் கொடுக்கப்பட்டதே யாகலின், அதனைத் தொண்டை நாட்டுத் தலமென்னாது சோழநாட்டுத் தலமென்றார். (14)
அருவி யோதை யிழுமெனுங் குன்றி
லடைந்த சாரற் குளிர்புன மீதி லுருவு சேர்தினைப் பூங்கதிர் மேற்கிளி
யோச்ச வேண்டிப் புலிநகத் தாலி மருவு வண்குறப் பேதையர் கட்செவி மாசு ணப்பன நேர்கவண் மீதி லிருளி லாத மணிவைத் தெறிந்திடு
மீள மண்டல நாடெங்க ணாடே.
ஒதை - ஓசை, இழுமெனல் - ஒலிக் குறிப்பு. சாரல் - மலைப்பக்கம். உருவு சேர்தல் - வடிவுமுற்றுப் பெறுதல்: அஃதாவது பயிர்முற்றி விளைதல். ஒச்சல் - ஒட்டுதல். புலி நகத்தாலி - குறப்பெண்கள் அணியும் ஆபரணம். கட்செவி - பாம்பு: கண்ணே செவியாகவுடையது. மாசுணப்பணம் - பெரும் பாம்பின்படம். கவண் - கிளிமுதலியவற்றைக் கடியுங் கருவி: தட்டை, குளிர், தழலை என்பன இதன் பேதங்கள். கவணில் மணிவைத் தெறிந்திடுமென்க. இருள் இலாத மணி - பிரகாசம் பொருந்திய இரத்தினங்கள்.

பறாளை விநாயகர் பள்ளு /25
மாலை தோறு மிசைவன வண்டுமென் மாலை நூலிடை யேயுந் துவண்டு மேலை தோறும் பயில்வன சங்கம்
வியங்க முகந்தொ றுந்தமிழ்ச் சங்க மாலை தோறும் பொழிவன சாறுபொன்
னான வீதி யரியரன் சாறு சோலை தோறு மலர்த்தா திறைத்திடுஞ் சோழ மண்டல நாடெங்க ணடே.
நூல் இடை - நூல் போன்ற இடை. இடை துவண்டு ஏயும். வேலை - கடல். சாறு - முன்னது கருப்பஞ்சாறு, பின்னது விழா. இது (LLD5h. (16)
(சிந்து)
பைப்பணிப்பகு வாய்ப்பட்ட திங்களிற்
பாயு மோதக் கடற்கரை தோறு
மிப்பி வாயிலின் முத்த மிலங்கிய
வீழ மண்டல நாடெங்க ணாடே.
பை - பாம்பின் படம். பகுவாய் - பிளந்த வாய். திறந்தவாயென்றவாறு. திங்களின் - சந்திரன்போல. ஒதம் - அலை. இப்பியின்வாயில் இன் முத்தம் என்க. இன் முத்தம் - மெய்க்கு இனிதாம் முத்து. இது முதல் இருபத்து நான்கும் இரண்டடிச் சிந்துகள். (17)
மாரி மேகந் தவழ்மலைச் சாரலின்
மந்தி வைத்த மணிப்பத்ம ராகஞ்
சூரி யோதயம் போல விளங்கிய
சோழ மண்டல நாடெங்க ணாடே.
மாரி - நீர். மந்தி - பெண் குரங்கு. பத்மராகம் - ஒருவகை இரத்தினம். அதன் ஒளி சூரிய உதய ஒளிபோல விளங்கிய தென்க. (18)
பரப்பு மேகலை மாங்கையர் போகம்
பயில வேண்டி யினங்கார் முகத்தை
யிரப்ப தேயன்றி வேறிரப் பில்லாத
வீழ மண்டல நாடெங்க ணாடே.

Page 147
252/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
மேகலை - அரைப்பட்டிகை. இணங்கார் - ஊடிய பெண்கள். இரத்தல் - யாசித்தல். இதுவும் மேல் வருவதும் பரிசங்கியாலங்காரம். (19)
வாம மேகலைப் பாவையர் கோவை
வதனம் போல விளங்கிய விண்ணிற்
சோமன் மேலன்றி யோர்மறு வில்லாத
சோழ மண்டல நாடெங்க ணாடே.
கோவை - உவமையாகுபெயராய் அதரத்தை உணர்த்திற்று. விளங்கிய சோமன். சோமன் - சந்திரன். (20)
வளமை சேர்ந்திடு முப்பிய லான்முது மந்தி தாவி மலையிடைப் பாய
விளமை மந்தி யுருவடி வாய்விடு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
மூப்பு இயல் - முதுமைத் தன்மை. உருவடிவு - அழகிய வடிவம்.
முன்னை நாளிற்பஞ் சானன ரூபன்
முளரி யந்தட முழ்கிய போதிற்
சொன்ன மேனி விளங்கி யெழுந்திடு
சோழ மண்டல நாடெங்க ணாடே.
பஞ்சானனம் - சிங்கம்: பஞ்சம் - விரிவு, ஆனனம் - முகம் விரிந்த முகத்தையுடையது என்பது உறுப்புப் பொருள். பஞ்சானனஞபனென்றது சிங்கவன்மனை. முளி - தாமரை. தடமென்றது சிவகங்கைத் தீர்த்தத்தை. சொன்ன மேனி - பொன்மேனி. இவ்வரலாற்றைக் கோயிற்புராணத்தில் இரணியவன்மச் சருக்கத்திற் காணலாம்.
அருளதனாற் றடம்படியு மவன்கடமே வருக்கனென விரவுபசுங் காணடைந்த மேருகிரி யெனவிளங்கி யிரணியமர முருவாகி யெழுந்ததுகண டதிசயித்துப் பரவியது பெயராக யாவர்களும் பயில்வித்தார்.
என்பது அத்திருவாக்கு. (22)

பறாளை விநாயகர் பள்ளு/253 உரைத்த வாணிந்து காந்தச் சிலைவிட்
டுருகு நீர்ப்பிர வாகங்க ளோடி யிரைத்த வேலைப் புலால்வெடி மாற்றிடு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
உரைத்த - மேலாகச் சொல்லப்படும். வான் இந்து - ஆகாயத்திற் சஞ்சரிக்கும் சந்திரன். இந்து காந்தச்சிலை - சந்திரகாந்தக்கல். அது சந்திரன் வரவாற் புனல்பெருக்குவது. பிரவாகம் - வெள்ளம். இரைத்தவேலை - முழங்கும் கடல். புலால் வெடி - புலால் நாற்றம். (23)
பகுத்த வந்தனர் சாலைக டோறும்
பயிலும் வேதத் தொலிபண்ணை மீதிற்
றொகுத்த மள்ளர் குரவையை மாற்றிடு
சோழ மண்டல நாடெங்க ணாடே.
சாலை - ஈண்டு அத்தியயனஞ் செய்யுமிடம். பகுத்தசாலை - இஃது இருக்குவேதம் ஒதுமிடம், இஃது யசுர்வேதம் ஒதுமிடம் என்று இங்ங்ணம் பகுக்கப்பட்ட சாலை. பண்ணை - வயல். தொகுத்த - கூடிய, குரவை யொலியினும் மறையொலி மிக்கதென்றவாறு. (24)
பண்ணிற் றோயப் பொருண்முடிப் புக்கட்டிய்
பாடும் பாவலர்க் கீந்திட வென்றே
யெண்ணிப் பொன்முடிய் புக்கட்டி வைத்திடு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
பண் - இசை. தோய்தல் - பொருந்துதல். பொருள் முடிப்புக்கட்டி - விஷயத் தொகுதியை அமைத்து. பொன் முடிப்பு - பொற்கிழி. (25)
செல்லுஞ் சென்முடிக் குந்தளக் கண்ணிரு சேலைப் போன்ற கடைசியர் செய்க்குச்
சொல்லுஞ் சொன்முடிய் புக்கட்டி வைத்திடுஞ்
சோழ மண்டல நாடெங்க ணாடே.
செல்லும் செல் - (விண்ணில்) செல்லும் மேகம். மேகம் போன்ற முடியாகிய குந்தளம். முடி - ஐம்பாலினொன்று. குந்தளம் - பெண்மயிர். குந்தளக் கடைசியரென முடிக்க. குந்தளத்தையும் இரண்டு சேன்மீன்களைப் போன்ற கண்களையுமுடைய கடைசியர். செய் - வயல். சொல்லும் - புகழ்ந்து சொல்லப்படும். சொல் - நெற்பயிர். சொல்முடிப்பு - இங்கே நாற்றுமுடி. (26)

Page 148
254/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
காந்தி சேர்கண் ணிலாதவர்க் குக்கண்ணுங்
காட்சி யுந்தந்து சூர்ப்பகைச் செவ்வே லேந்தல் சேர்கதி ராபுரி சேர்ந்திடு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
காந்தி - ஒளி. கண் - கண்ணிந்திரியம். காட்சி - அறிவு. சூர் - சூரபதுமன். சூர்ப்பகைச் செவ்வேல் ஏந்தல் - சூரனுக்குப் பகைவனாகிய முருகக்கடவுள். கதிராபுரி - கதிர்காமம். (27)
பொங்கு கூளி பிடித்தவர்க் குக்கூளி
போக்கி யிக்கலி மீதினிற் செவ்வேற்
றுங்க முத்தையன் வீற்றிருக் கும்புரிச்
சோழ மண்டல நாடெங்க ணாடே.
கூளி - பேய். இக்கலிமீதில் - இந்தக் கொடிய கலியுகத்திலும். துங்கம் - பெருமை: வெற்றியுமாம். முத்தையன் - முத்துக் குமாரசுவாமி யென்னும் திருநாமம் பூண்ட முருகக்கடவுள். அப்பெருமான் வீற்றிருக்கும்புரி புள்ளிருக்கு வேளுர் எனப்படும் வைத்தீசுரன்கோயில். (28)
கயல்வ ரைந்த துவசன் பணிநவ
கண்டி மன்னன் வரராச சிங்க
னியல்பு டன்றிருச் செங்கோ னடாத்திய விழ மண்டல நாடெங்க ணாடே.
துவசம் - கொடி, கயல்வரைந்த துவசன் - மீன் வடிவம் எழுதிய கொடியையுடைய பாண்டியன். பணி - வணங்கிய, நவகண்டி - ஒரூர்: அ.திக்காலத்துக் கண்டியென வழங்கப்படுவது. வரராசசிங்கன் - அல்ஆரரசன் பெயர். (29)
நேரியன்சரண் புக்க புறாவி
னிறைத னக்கு நிறையிற் புகுந்த
சூரியன்குடை நீழலிற் றங்கிய
சோழ மண்டல நாடெங்க ணாடே.
நேரியன் - சோழன்; நேரிமலை அவனதாகலான். நிறையிரண்டனுள் முன்னது அளவு, பின்னது துலைத் தட்டு. சூரியன் - இங்குச் சிபிச்சக்கர வர்த்தியைக் குறித்தது. சோழ வரசர்க்குரிய பரம்பரையினனாதலான், சிபிச்சோழன் சூரிய னெப்பட்டான். (30)

பறாளை விநாயகர் பள்ளு /255 கான்ற சோதியி னித்திலஞ் சிந்துங்
கரும்பி னிற்குருத் தைக்கதிர்க் கற்றை யீன்ற சாலிக் குழாஞ்சுமந் தோங்கிடு
மீழ மண்டல நாடெங்க ணாடே
கான்ற சோதியின் நித்திலம் - வெளிவிடும் பிரகாசத்தினையுடைய முத்து. கதிர்க்கற்றை - கதிர்த்தொகுதி. சாலிக்குழாம் சுமந்தோங்குதலாவது கரும்பினது உயரம் வளர்ந்து நிற்றல். (31)
சாதி நாகிளந் தொங்கினிற் சாய்ந்திடு தண்கு ரும்பையைப் பூகத ராசிச்
சோதி யார்பவ ழக்குலை தாங்கிய
சோழ மண்டல நாடெங்க ணாடே.
சாதி - ஈண்டு உயர்வு. நாகிளமை - ஒரு பொருட் பன்மொழி: மிக்க இளமை யென்றவாறு. பூகதம் - கமுகு, ராசி - கூட்டம். பவழக்குலை - கமுகின் குலை பழுத்தவழிப் பவழநிறங்கோடலின் அவ்வாறு கூறினார். 'எண்ணார் முத்தமீன்று மரகதம்போற் காய்த்துக், கண்ணார் கமுகு பவழம் பழுக்குங் கலிக்காழி என்பது தமிழ்மறை. மேலதற்குரைத் தாங்குரைக்க. (32)
கற்ற நூலுணர் பண்டிதன் மார்பஞ்ச
காவி யஞ்சட் கலைக்கட றோய்ந்து
மெற்றை நாளுங்கல் வித்திறம் பார்த்திடு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
கற்றலின் வேறு உணர்தலாதலின் ‘கற்ற நூலுணர் பண்டிதன்மர் எனப்பட்டது. 'ஓதியுணர்ந்தும் எனத் தேவர் கூறியதும் அது. மார் - பன்மை விகுதி. பஞ்சகாவியம் - தமிழிலேயுள்ள ஐம்பெருங் காப்பியங்கள். அவை சிந்தாமணி சிலப்பதிகார முதலியன. சட்கலை - ஆறுவகைக் கலைகள்: அவை நையாமிக முதலிய வடமொழிச் சாத்திரங்கள். எனவே, அப்பண்டிதர்கள் இருமொழியிலும் வல்லுநராதல் கூறப்பட்டது. எற்றைநாளுங் கல்வித் திறம் பார்த்தலாவது சாந்துணையுங் கற்றல். இதனை, “யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு’ என்னுந் திருக்குறளா லறிக. (33)

Page 149
256/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
திகந்த மெட்டும் வடகலை தென்கலை
தேர்ந்து தேர்ந்து செழுமலர்க் காவிற் சுகந்த னக்கயற் பூவை பயிற்றிடு
சோழ மண்டல நாடெங்க ணாடே.
திக் அந்தம் - திக்கின் முடிவு. அதன் வரைப் பரவிய வடகலை தென் கலை. அடுக்கு, பலகாலுந் தேர்ந்தமை யுணர்த்திற்று. சுகம் - கிளி. தனக்கு அயல்பூவை - தனக்கு பக்கத்திலிருக்கும் நாகணவாய்ப்பறவை. கிள்ளை பாடுவ கேட்பன மெய்ப்பூவை என்பன பெரியார் திருவாக்குகள். (34)
ஆட்டு முசலி னாடுமின் னார்பொன்
னணிக லத்தின் மணிதெறித் தோடி
யேட்டுக் காவிற் குயிற்றுயின் மாற்றிடு மீழ மண்டல நாடெங்க ணாடே.
மின்னார் - பெண்கள். ஏடு - பூவிதழ். கா - சோலை. துயில் - தூக்கம். (35)
வாவி யின்கரைக் கெண்டை குதிக்க
மண்டு கம்பாய்ந்து செந்தா மரைப்பாயற்
றுவி யன்னத்தி னித்திரை மாற்றிடு
சோழ மண்டல நாடெங்க ணாடே.
வாவி - நீர் நிலை. மண்டுகம் - தவளை. கெண்டை குதித்தலின் மண்டுகம் பாய்ந்து அன்னத்தின் துயிலை நீக்குகின்றதென்க. தூவி - சிறை. (36)
கோல மாதவி வன்னி மராமரங்
கோங்கு வேங்கை செங்குங்கு மஞ்சாதி
யேல மார்கதிர்க் கற்றையை மாற்றிடு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
கோலமாதவி - அழகிய மாதவி, மாதவி - குருக்கத்தி விசேடம். ஆர்கதிர் - நிறைந்த கிரணம்; வினைத்தொகை. கதிர் - ஈண்டுச் சூரிய கிரணம். (37)

பறாளை விநாயகர் பள்ளு /257
ஆலை தாதகி பொன்னிறக் கொன்றை
யரும்பு கூவிளம் பாதிரி புன்னைச்
சோலை வான முகிலைத் தரித்திடு
சோழ மண்டல நாடெங்க ணாடே.
ஆலை - கரும்பு. தாதகி - ஆத்தி. கூவிளம் - வில்வம். வான முகில்-வானத்திற்செல்லும் மேகம். (38)
கருவ லம்புரிச் செங்கதிர் மாவலி
கங்கை யாறு பெருகிக் கரையி னிரும ருங்கினு முத்தங் கொழித்திடு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
கருமை - பெருமை. வலம்புரியின் செவ்வியகதிர்கள். மாவலி கங்கை யென்பது யாற்றின் பெயர். முத்தம் கொழித்தல் - முத்துக்களை வீசுதல்.
(39)
வள்ளி யோரிற் கொடைநிறைந் தேநுரை
மண்டி யேவரு காவிரி யாறு
துள்ள வாளை பசும்பொ னிறைத்திடு
சோழ மண்டல நாடெங்க ணாடே.
வள்ளியோர் - வரையாது கொடுப்போர். இன் - ஐந்தனுருபு; ஒப்புப்பொருளில் வந்தது. வாளைமீன் துள்ளுமாறு காவிரியாறு பொன்னை வீசுகின்றதென்க. இத்துணையும் பள்ளியர் தம் நாட்டு வளங் கூறியவாறு.
(40)
(வெண்பா)
ஒளவியநெஞ் சொன்றுமின்றி யன்புபுரி பத்தர்வினைச் செவ்வியகோ டைக்குநிழல் செய்யுமே - வைவேற் றுதிசெய்குருந் துக்குத் துணையாம் பறாளைப் பதியொருகோட் டுக்கற் பகம்.
ஒளவியம் - கோட்டம். அவ்வியநெஞ்சமென்பதற்குக் கோட்டம் பொருந்திய மனம்’ என்றார் ஆசிரியர் பரிமேலழகரும். ஒன்றும் - சிறிதும். செவ்வியகோடை - மிக்க கோடை. துதிசெய் வைவேற் குருந்து என்க. குருந்து - சிலேடையால் மரவிசேட்மும் குழந்தையுமாம்; குழந்தை ஈண்டு முருகக்கடவுள். ஒரு கோடு - ஒற்றைக் கொம்பு.

Page 150
258/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
கற்பகம் - ஈண்டுப் பரஞ்சோதி விநாயகப்பிரானைக் குறித்து நின்றது. குருந்துக்குத் துணையாம் கற்பகம் கோடைக்கு நிழல் செய்யுமென்க.
குலமுறை கிளத்தல்
(சிந்து)
1. ஆதி காலத்தி லாருயிர் யாவு
மளித்த ளித்துத் துடைக்கும் பிராட்டி பாதி யம்புலி வாணுதற் சத்திநாற்
பத்து முக்கோண சக்ரவி நோதி
2. தூய சோதிப் பனிவரைக் கொம்பெனுந்
தோகை தன்னை மணச்சாலை தன்னு ளாய வேதப் பிதாமகன் பேணி
யமையு மோமச் சடங்கு புரிய
3. வென்றி சேர்வெள் ஞவாப்பிட ரேறிய
வேந்த னேமுத லெண்டிசை காப்போர் மன்ற னாறுந் துழாய்மவு லிப்பணி
வயிரி யூர்ந்திடு வைகுண்ட நாதன்
4. எண்ணில் கோடி வயிரவர் சூழ்ந்திட
வெண்ணில் கோடி யுருத்திரர் சூழப் பண்ண மைந்த பசும்பரி யேழுடைப்
பருதி வானவ ரும்வந்து சூழ
5. அண்ட பந்தி யெடுத்துக்கை யம்மானை
யாடு பூத கணங்க ணெருங்கப் பண்டை யூழிக் கனல்விழிச் சோதிப்
பணக ணாடவிச் சேடனுஞ் சூழச்
6. சித்தர் சாரணர் சூழ்ந்திட நாரதன்
சேருந் தும்புரு யாழிசை பாடப் பத்தி வாணன் குடமுழ வத்துடன்
பானு கம்பன் பணில முழக்கத்

10.
11.
12.
13.
பறாளை விநாயகர் பள்ளு/259
தேரு நாமகள் சீர்த்தி யிசைக்கத்
திரும டந்தைநன் சேடியு மாக
வாரு லாவு குயத்தின் கவுரியை
வந்து சேவித்துப் பக்கலி னிற்கும்
அமய மூன்று மணிவரைக் கண்டத்
தலங்கு மங்கல நாணது பூட்டி
யிமய ராசன் புனல்வார்ப்ப மால்வரை
யீன்ற பாவை தனைக்கைப் பிடித்து
வேட்ட பின்கதி ராடகப் பூதர
வில்லி யும்வல்லி யும்முறை போதிற்
கோட்டு மாவும் பிடியும் புணர்ச்சியிற் கூடி யேவிளை யாடுதல் கண்டு
சத்தி யுஞ்சிவ மும்பிடி யும்மத
தந்தி யாகப் புணர்ந்தவந் நாளின்
மத்த மாவத னத்துட னோங்கார
வண்ண மாய்வந்த ஞானக் குழவி
அன்னை தேவி மனோன்மணி கொங்கை
யமுத தாரை பருகிய நேசன்
முன்னர் நின்றிகல் சூரனை வென்ற
முருக வேட்குமுன் னாகிய தோன்றல்
தந்த தந்தை பரம னுகைத்திடு
தட்டு டைத்தடந் தேரச் சிறுத்தோன்
முந்த நெஞ்சி னெவர்நினைந் தாலு
முயன்று முன்னின்று காத்தரு ளெம்மான்
தூய மூவுல கும்புகழ் வீசித்
துதிக்கை வாய்ந்த துதிக்கையொன் றுள்ளான்
பாயுந் தானம் படைத்திடு கார்ணன்
பத்த ரானவர்க் கன்பு புரிவோன்

Page 151
260/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
14.
15.
16.
7.
18.
19.
20.
மார்பின் மூன்றணி நூல்புனை நாதன்
மழலைத் தும்பி குடைகொன்றைத் தாமன்
பார தக்கதை யைப்பொற் சிலம்பினிற்
பாணித் தந்தம் பறித்துப் பொறித்தோன்
செறியும் பஞ்ச தருநிழற் சுந்தரத்
தேவர் கோன்புரி பூசனைக் காகக்
குறுவன் பாணி கரகத்திற் பாணி
குவல யத்திற் பெருகிடச் செய்தோன்
மோது மோதப் பயோததி மீது
முடக்கு நெட்டெயிற் றுப்பணைச் சேக்கை
மாத வன்கொண்ட வன்பணிச் சாபத்தை மாற்றி மேலும் வரந்தந்த வண்ணல்
பங்க யங்கனி மாதுளங் கும்பம்
பரப்பு நேமி கதாயுதஞ் சங்க
மங்கு சந்தனு வேந்திய பாணிய
னாகு வாகன மூர்ந்திடு நேசன்
அந்த ரத்தரு ணோதயர் கோடி
யருக்கள் போல விளங்குசெம் மேனி
யெந்தை வான்சரற் காலத்துச் சந்திர
னென்னத் தோற்றும் வடிவமுங் கொண்டோன்
நாக கன்னியர் தான்றொழு மைங்கர
னாளு மெள்ளுண்டை மோதகஞ் சீனி
பாகு சர்க்கரை மாங்கனி மீங்கிவை பார ணம்புரி யுந்தொந்தித் தந்தி
செருக்கு மூடிய ராவண வஞ்சனைச்
சேண்பு லத்தெறிந் தாடிய வீரன்
மருக்கு லாவுவெண் டாமரைப் பீடிகை
வாழுஞ் சோதி யடியார்க் கெளியோன்

பறாளை விநாயகர் பள்ளு /26 21. மாறெ திர்ந்து பொருத கயமுக
வாள ரக்கனை விண்டலத் தேற்றித் தேறு கொன்றை யுடன்வாகை வேய்ந்தவன் சில்ல ரிக்கண்ணி வல்லபை பாகன்
22. மானஞ் சேர்விக்ர மாதித்த வேந்தன்
மதிக்க நிதீதிரைப் பள்ளியிற் சென்று கானஞ் சேர்குழன் மாதை யகற்றுதி
நாளை யென்று கனாவினிற் சொன்னோன்
23. ஆமை யேன மழுப்படைச் செங்கைய
ராகு ராமர் குறள்சிங்க மச்ச நாம வேயனொன் பானுற் பவித்தவ
னாபி யிற்புவ னம்பல பூத்தோன்
24. தண்ட நேமி தனுவொடு வாள்சங்கந்
தாங்கி வேலை யறிதுயில் செய்யுங் கொண்டல் வண்ணப்பொன் னாலைப் பதியுறை
கோல நீல நெடுமான் மருகன்.
1. அளித்தல் - முன்னது படைத்தல்; பின்னது காத்தல். துடைத்தல் - அழித்தல். சிவபிரான் தன் சத்தியால் முத்தொழிலும் நடாத்தலின் இவ்வாறு கூறினார். பாதி அம்புலி வாள் நுதல் - அர்த்த சந்திரனையொத்த ஒளிபொருந்திய நெற்றி அம்மையார் எழுந்தருளிய பீடங்களுள் நாற்பத்து முக்கோண சக்கரமும் ஒன்றாகலின் ‘நாற்பத்து முக்கோண சக்ரவிநோதி என்றார்.
2. பனிவரைக் கொம்பு - இமாசலன் புத்திரி. தோகை - இருமடி ஆகுபெயராய் உமாதேவியை யுணர்த்திற்று. பிதாமகன் - பிரமன். ஓமச்சடங்கு - ஓமக்கிரியை.
3. வெள்ளுவா - (ஐராவதம் என்னும்) வெள்ளையானை. வேந்தன் - இந்திரன். எண்டிசை காப்போர் - எட்டுத்திக்குப் பாலகர். அவராவார்: இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். மன்றல் - வாசனை. பணிவயிரி - கருடன், பணி - பாம்பு.

Page 152
262/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
4. எண்ணில் - கணக்கில்லாத. கோடி - ஈண்டு ஓர் எண்ணைக் குறிக்காது பல என்னும் பொருண்மேல் நின்றது. பசும்பரி - பச்சைக்குதிரை.
பருதி வானவர் என்றது பன்னிரு சூரியர்களை.
5. அண்டபந்தி - அண்டங்களின் வரிசை. அம்மானை - அம்மனைக் காய். ஆதிசேடன் ஆயிரம்பட முடிகளை யுடையவனாதலின் "பணகணாடவிச் சேடன்’ என்றார். பணகண + அடவி = பணகணாடவி; இது வடமொழித் தீர்க்கசந்தி. பணகணம் - பாம்பின் படக்கூட்டம். அடவி - காடு, ஈண்டு மிகுதி மேற்று.
6. வாணன் - வாணாசுரன். இவன் சிவபெருமான் சந்நிதியில் தன் ஆயிரங் கைகளாலும் குடமுழா முழக்குவிப்பவன். பானுகம்பன் - பூதகணத் தலைவருள் ஒருவன்; ஆயிரஞ் சிரங்களையுடையவன். கைலையங்கிரியில் தன்னாயிர வாய்களாலும் சங்கத்தொனி செய்பவன்.
7. நாமகள் - சரசுவதி. திருமடந்தை - இலக்குமி. கவுரி - உமாதேவி.
8. மூன்று மணிவரை - மூன்று அழகிய இரேகை. மங்கல நாண் - தாலிச் சரடு, புனல்வார்ப்ப - நீர் வார்க்க. மால்வரையீன்ற பாவைதனை - மலையரையன் பெற்ற உமாதேவியை.
9. வேட்டபின் - மணஞ் செய்துகொண்ட பிறகு, ஆடகப் பூதரவில்லி - பொன்மலையாகிய வில்லையுடைய சிவபெருமான். உறைபோதில் - (கைலாயத்தில்) எழுந்தருளி யிருக்குங்காலத்தில். கோட்டு மா - கொம்பையுடைய ஆண் யானை. பிடி - பெண் யானை.
10. மததந்தி - மதம் பொருந்திய ஆண் யானை, மா வதனம் - யானை முகம். ஓங்காரம் - பிரணவம். ஞானக்குழவி - ஞானமே திருமேனியாகவுடைய குழந்தை (விநாயகன்).
11. மனோன்மணி - உமாதேவி. கொங்கை யமுததாரை - முலைப்பாலொழுக்கு.
12. தந்தை பரமன் - தந்தையாகிய சிவபிரான். உகைத்தல் - செலுத்துதல். திரிபுரசங்கார காலத்தில் சிவபெருமானது பூமியாகிய தேரின் அச்சை யிறுத்தவர் விநாயகராதலின் அவரைத் தேரச்சிறுத்தோன்’ என்றார். சிவபெருமான் திரிபுர தகனஞ் செய்யும் பொருட்டுத் தேவர்கள் சமைத்த தேரில் எழுந்தருளும்போது அத்தேவர்கள் விநாயகரை நினையாத காரணத்தால் தேரின் அச்சு இற்றது என்னும் விநாயக புராணம்.

பறாளை விநாயகர் பள்ளு/263
13. துதிக்கை - முன்னது துதித்தல்; பின்னது தும்பிக்கை: தானம் - மதஜலம், போக்குரை - கொடை.
14. தும்பி - வண்டு. கொன்றைத்தாமன் - கொன்றை மாலையை யணிந்தவன் (விநாயகன்). பொற்சிலம்பு - மேரு மலை, பாணி - (தன்) கையால், பறித்து - பிடுங்கி.
பொறித்தோன் - எழுதினோன். விநாயகர் தம் கொம்பை முறித்தது கஜமுகனைக் கொல்லும் பொருட்டேயனன்றிப் பாரதம் எழுதும் பொருட்டும் முறித்தனர் என்பது சரித்திரம். அதனை,
"முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக மரமேரு வெற்பாக வங்கூர் எழுத்தானிதன் கோடாக வெழுதும்பிரானைப் பணிந்தண்பு கூர்வாமரோ’
என்பதனாணுமுணர்க.
15. பஞ்சதரு - தெய்வ லோகத்திலுள்ள ஐந்து விருட்சங்கள். அவை: அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்பன. தேவர்கோன் - இந்திரன். குறுவன் - அகத்தியன். பண்படியாகப் பிறந்த பெயர்; குறுமை பகுதி. பாணிகரகத்தில் - கையிலுள்ள கமண்டலத்தில்: நிலை மொழியும் வருமொழியும் வட சொற்களாதலின் இயல்பாயிற்று. பாணி - முன்னது கை; பின்னது நீர். குவலம் - பூமி. சீர்காழியில் இந்திரன் வைத்த நந்தவனத்தின் பொருட்டு அகத்தியர் கமண்டலத்திலுள்ள நீரை, விநாயகர் காக வடிவமாய்ச் சென்று கவிழ்த்தனர் என்பது புராண வரலாறு.
16. ஒதம் - குளிர்ச்சி. பயோததி - பாற்கடல். முடக்கு நெட்டெயிற்றுப் பணைச்சேக்கை என்றது ஆதிசேடனை. எயிறு - பற்கள். பணை - பருமை. சேக்கை - படுக்கை. மாதவன் - திருமால். பணி - பாம்பு. பர்வதி தேவியார் இட்ட சாபத்தால் பாம்பின் வடிவுபெற்ற திருமால் விநாயகரைப் பூசித்து அச்சாபத்தை யொழித்துக் கொண்டனர் என்பது விநாயக புராண
வரலாறு.

Page 153
264/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
17. பங்கயம் - தாமரைப்பூ கனி மாதுளம் - மாதுளங்கனி, கும்பம் - கலசம். நேமி - சக்கரம். கதாயுதம் - கதை. சங்கம் - சங்கு. அங்குசம் - தோட்டி, தனு - வில். ஆகுவாகனம் - பெருச்சாளி வாகனம்.
18. அருணோதயர் - சூரியோதயமாதற்கு முன்தோன்றுபவர். இவர் செந்நிறமுடையவர். சரற்காலம் - மாரிகாலம் (ஐப்பசி கார்த்திகையின் பருவம்). விநாயகப்பெருமானார் தம் அடியார்முன் பவள நிறந்தராயும் பால் வண்ண நிறத்தராயும் தோன்றுவரென்ப. திருவலஞ்சுழியிலுள்ள விநாயகருக்கு வெள்ளை விநாயகரென்று பெயர்.
19. பாரணம் - உண்ணுதல். தொந்தி - வயிறு.
20. சேண்புலத்து - ஆகாயத்தினிடத்து. கோகர்ணம் என்னுந் திருப்பதியில், இராவணன் கைலையினின்றும் கொணர்ந்த சிவலிங்கத்தின் பொருட்டு, அவனை, விநாயகர்பெருமான் செண்டு போல் ஆகாயத்தில் எடுத்து எறிந்தனர், என்பது புராண வரலாறு. 'மருக்குலாவு வெண்டாமரைப் பீடிகை வாழுஞ் சோதி’ என விநாயகரைச் சிறப்பித்தமையால் அவருக்கு வெண்டாமரை ஆசனமும் உண்டென்பது போதரும்.
21. வாகை - வெற்றிமாலை. அரி - செவ்வரி, கருவரி. வல்லபை பாகன் - வல்லபை என்னும் சத்தியை ஒரு மருங்கில் வைத்துக்கொண்டி
ருப்பவன்.
22. மாது - விக்கிரமாதித்தன் மனைவியாகிய இலக்கண சுந்தரி. இவள் விநாயக விரதம் நோற்றமையால், தான் இழந்த பதவியை மீண்டும் பெற்றாள். இக்கதையின் விரிவை விநாயக புராணத்திற் காண்க.
23. ஆமை - கூர்மாவதாரம். ஏனம் - பன்றி (வராகாவதாரம்). மழுப்படைச் செங்கையர் - பரசுராமர். ரகுராமர் என்பது ராகுராமர் என நீட்டல் விவகாரம் பெற்றது. நாமம் - கீர்த்தி, வேயன் ஒன்பானுற்பவித்தவன் - புல்லாங் குழலுடையவனாகிய ஒன்பதாவது அவதாரமாக வந்த கிருஷ்ணன். புவனம் பல பூத்தோன் - பிரமன்.

பறாளை விநாயகர் பள்ளு /265
24. குறள் - வாமனன். கொண்டல் வண்ணன் - திருமால். பொன்னாலைப்பதி - யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு வைணவத் திருப்பதி. பார்வதி தேவியார், திருமாலுக்குத் தங்கை முறையாதலின் அவர் மூத்த பிள்ளையாகிய விநாயகனைத் 'திருமாலின் மருமகன்’ என்றார். (42)
(கொச்சகம்)
வேட்டுவன்வா யுண்டுமிழ்ந்த மிச்சிலுவந் தான்புதல்வன் தோட்டுவளஞ் சூழும் சுழிபுரத்தி லானைமுக னாட்டுவளம் பேசியபுன் நவ்விவிழிக் கொம்பனையார் கோட்டுநனை மாவின் குயிலிசையைக் கேட்டாரே.
வேட்டுவன் - கண்ணப்ப நாயனார். மிச்சில் உவந்தான் - எச்சிலாகிய இறைச்சியை உண்டு மகிழ்ந்தவன் (சிவபிரான்). தோடு - இதழ்; ஆகுபெயராய்ச் சோலையை யுணர்த்திற்று. நவ்வி விழி - மான்போன்ற கண். மா - மாமரம். (43)
குயில் கூவுதல்
ஆனே றுயர்த்தகொடி யந்தன னுவந்ததிரு வாலையம் விளங்கவே கூவாய் குயிலே.
ஆணேறு உயர்த்த கொடி - இருஷபக்கொடி. அந்தணன் - சிவபிரான். “கொந்தணவும் பொழிற்சோலைக் கூங்குயிலே யிதுகேணி, அந்தணனாகி வந்திங்கே யழகிய சேவடி காட்டி’ என்பது திருவாசகம். (44)
தேனே றுகொன்றை யணிசிவனெழுத் தஞ்சுமே செகமீதி னிலைபெறக் கூவாய் குயிலே.
எழுத்தஞ்சு - பஞ்சாக்கரம். (45)
மீனேறு கடலால போசனன் பரியான வேதந் தழைத்திடக் கூவாய் குயிலே.

Page 154
266/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ஆலபோசனன் - விஷமாகிய உணவையுண்டவன் (சிவபிரான்), “ஆலந் தானுகந் தமுது செய்தானை’ என்னுந் தேவாரத்தை நோக்குக. பரியான வேதம் - வேதக் குதிரை. (46)
மானேறு வரிநயன மங்கையொரு பங்கனார் வாழ்சமய மெய்யென்று கூவாய் குயிலே.
மான் ஏறு - கலைமான். ஏறு - உவமவாசகமுமாம். நயனம் - கண். மங்கை - உமாதேவி. சமயம் - சைவசமயம். (47)
பூரிவரை மேலா ரணப்போலி யதனைப்
பொறித்தபெரு மானென்று கூவாய் குயிலே.
பூரிவரை - மேருமலை, ஆரணப்போலி - ஐந்தாம் வேதமென்று சொல்லப்படும் பாரதம். பெருமான் - விநாயகன். (48)
பேரியென மாலொலி முழங்கிமைய யூதரப் பிடிதந்த களிறென்று கூவாய் குயிலே,
மால் - மேகம். பூதரப்பிடி - பர்வதி. களிறு - ஆண்யானை (விநாயகன்).
மாரனை யளித்தகண்ணன் புயாங்கப் படிவ மாற்றுபெரு மானென்று கூவாய் குயிலே.
மாரன் - மன்மதன். கண்ணன் - கரிய நிறத்தையுடைய திருமால். கண்ணன் என்பது பாகதச் சிதைவு, புயங்கம் வடிவு - பாம்பு வடிவு.
ஆரமணி யாலைவயல் சூழ்தென்ப றாளையுறை யைங்கரனை வாழ்த்தியே கூவாய் குயிலே.
ஆரமணி - முத்துமணி. ஆலை - கரும்பு; ஆகுபெயர். ஐங்கரன் - விநாயகன். (51)
ஆயிரம்பகு வாயனந்தனின் வீறுகண்டுயில் வாரிருந்தபொன் னாலையம்பதி வாழவே கூவாய் குயிலே.

பறாளை விநாயகர் பள்ளு/267
அனந்தன் - ஆதிசேடன். வீறு - மற்றொருவருக்கில்லாத சிறப்பு. கண்டுயில்வார் - யோக நித்திரை செய்பவராகிய திருமால். பொன்னாலை - புன்னாலைப்பதி. (52)
கோயிலின்னதி காரமன்றென விசனன்புறு மாதொடொன்றிய கோணயங்கிரி வாழவே கூவாய் குயிலே
அதிகாரமன்று - அதிகார சபை. கோணயங்கிரி - திரிகோண மலை. இது தேவாரம் பெற்ற ஈழநாட்டுத் தலங்களுளொன்று. (53)
ஆயிசுந்தரி சேயர்நன்குடி லேசர்மின்மொழி வேலர்தண்கதி ராபுரந்தனில் வாழவே கூவாய் குயிலே.
ஆயி - தாய். சுந்தரிசேயர் - உமாதேவி புத்திரர் (முருகள்). நன்குடிலேசர் - நன்றாகப் பிரணவத்தை யுபதேசித்தவர். கதிராபுரம் - கதிர்காமம். (54)
ஆயிரங்கலை யாயுமண்டல வேதபண்டித ராயவந்தனர் தேரும் விஞ்சையின் மீறவே கூவாய் குயிலே.
ஆயிரங்கலை, வேதத்தின் உட்பிரிவை யுணர்த்திற்று “சாகையாயிர முடையார்” என்பது தமிழ்மறை. (55)
அரந்தோயு மயில்விழிகொள் சிவன்பாதி யுமைபுதல்வ னயன்பேனணு பரமனென்று கூவாய் குயிலே.
அயில்விழி - வேல்போன்ற கண்கள். அயன் - பிரமன். பரமன் -
முருகன். (56)
இரங்காழி புடைவளையும் நிலங்கீறி யுழுதசம ரிளங்கேழல் மருகனென்று கூவாய் குயிலே.
கேழல் - திருமாலாகிய பன்றி. (57)
உரந்தாவு தசமகுட தரன்சாய விசையினெறிந் துகந்தாடு பெரியனென்று கூவாய் குயிலே
தசமகுடதரன் - பத்து மகுடங்களை யுடையனாய இராவணன். உகந்து - மகிழ்ந்து. பெரியன் - விநாயகன். (58)

Page 155
268/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பரங்கான நொடியில்வினை தவிர்ந்தோட வுலவுமொரு பரஞ்சோதி யிறைவனென்று கூவாய் குயிலே.
பரங்காண - பரம்பொருளாகிய தன்னைத் தரிசிக்க. பரஞ்சோதியிறைவன் - விநாயகர். (59)
வரிசைவளர் திரிபதகை மரபினுரியவர்கிளைகண் மதிசெல்வ மேறவே கூவாய் குயிலே.
திரிபதகை மரபினுரியவர் - கங்கை குலத்தவர் (வேளாளர்). திரிபதகை - கங்கை. கிளைகள் - உறவினர். மதிசெல்வம் - மதிக்கின்ற செல்வம், வினைத்தொகை. (60)
பரிசகல கலைநிபுண னதிபரத விததுரிய பரிநதல னிவனென்று கூவாய் குயிலே.
பரிசகலகலை - குதிரை லட்சணத்தை யறியும் சகல சாஸ்திரம். அதி - அதிகமான, பரதம் - நடன சாத்திரம். பரிநஞலன் - அசுவஇலட்சணத்தை முற்றும் உணர்ந்தவனான நகுலன்: இவன் என்று - விசய ரகுநாயகனென்று.
(61)
விரியமுத முறுமகுட மருவுமனி முகுடமுலை மின்னார் விகாரனென்று கூவாய் குயிலே
முகுடம் - கிரீடத்தை யொத்த. மின்னார் - பெண்களை, விகாரனென்று - விகாரப்படுத்தத் தக்கவனென்று; (விசயரகு நாயகன்). (62)
தரியலர்கண் மெளலிகுனி விசயரகுநாயகன் சகமதனில் வாழவே கூவாய் குயிலே.
தரியலர்கள் - பகைவர்கள். (63)
கழிக்கரைப் புலம்பல்
விரைமலர் மேலறு காலிசை கானிசை மேவுபறாளையில்வாழ் வரைகிழி வேலவ னினிய சகோதர மதகய மாமுகனார் கரையொலி வார்கட லேதிரை யேசுற வேகழி யேகயலே யுரைமது நீண்மழை யேமய லோபெரி தோதரி தோதரிதே.
(தலைவன் பொருள் வயின் பிரிவில் தலைவி யிரங்கல்)

பறாளை விநாயகர் பள்ளு/269
அறுகால் - வண்டு. திரையே - அலையே! சுறவே - சுறாமீனே! மயலோ பெரிது - மயக்கமோ பெரிது. ஒதரிது ஒதரிது - சொல்லமுடியாது. அடுக்கு அவலத்தின் கண் வந்தது. ஓத அரிது என்பது ஒதரிது என அகரந் தொக்குகின்றது. (64)
மழை கேட்டல்
(கொச்சகம்)
இருநிலத்து வேதியரும் ஏருழுவே ளாளர்களும் பரிவினுடன் கடல்வருண பகவானைக் கண்டிறைஞ்சி விரிதிரைநீர் வளம்பெருக மேவுமுயிர்ப் பயிர்தழையத் தருமமொடு தரைவிளங்கத் தந்தருளி மழையையென்றார்.
இருநிலத்து - பெரிய வுலகத்தில். பரிவினுடன் - அன்புடன்: இன் - சாரியை. வருண பகவானை - வருண தேவனை. நீர்வளம் பெருகவும், உயிர்ப் பயிர் தழையவும், தருமங்களோடு உலகம் விளங்கவும் மழையைத் தந்தருள் என்றார் என்க. உயிர்ப்பயிர் - உயிர்களாகியபயிர் எனவும் உயிர்கட்கு ஆதாரமாகவுள்ள பயிர் எனவும் கொள்க. (65)
என்பனசொற் செவிப்புகுத இயல்வருண னேதுசொல்வான் பொன்பயிலுஞ் சீவனுமம் புவிமகனும் வக்கரித்தார் வன்படைவாள் வலியசுர மந்திரியுந் தெற்கடைந்தான் நன்பயன்மா மழைகேட்டீர் நாமினியெவ் வாறளிப்போம்.
பொன் பயிலும் சீவன் - பொன் என்னும் பெயர் பெற்ற வியாழன். வியாழனுக்குப் பொன் எனவும் சீவன் எனவும் பெயர் உண்டு. “தீதிலாத் தெய்வ மந்திரி யமைச்சன் சிகண்டிகன் இரணியன் வேந்தன், கோதிலான் வளப்பா னந்தணன் மறையோன் குருபொன்னன் றமநியன் சீவன், வேதனல் வியாழப் பெயர்’ (சாதக சிந்தாமணி - காலநிகண்டு) என்பதனாணு முணர்க. புவிமகன் - அங்காரகன். அசுரமந்திரி - சுக்கிரன். வியாழனும் அங்காரகனும் வக்கரித்தலும், சுக்கிரன் தெற்கடைதலும் மழையில்லாமைக்கு அறிகுறியாகும். இதனை,
“வசையில்புகழ் வயங்கு விணமின், நிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற், புட்டேம்பப் புயண்மறி வான்பொய்ப்பினுந் தானிபொய்யா, மலைத்தலைய கடற்காவிரி’
- பட்டினப்பாலை.
என்றதானு முணர்க. (66)

Page 156
27O/நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ஆனாலு மோர்மதியிங் கறைந்திடுவ னிர்கேன்மின் தேனாரு மலர்ச்சோலை செழித்தசுழி புரநகரிற் கானார்மும் மதமழைபெய் கணபதியைக் கைதொழுதால் வானாரு மழைபொழிய வரந்தருமென் றனுப்பினனே.
ஓர்மதி - ஒரு புத்தி. கான் - வாசனை. விநாயகருக்கு யானை முகமாதலால் இருமதமேயாயினும் மிகுதிநோக்கி மும்மதமென்றார். அன்றியும், இச்சா ஞான கிரியைகளையே மும்மதமாக வுடையவராதலால், மும்மத மழைபெய் கணபதி” என்றார். “ஒரு கோட்ட னிருசெவியன் மும்மதத்த னால்வாயைங் கரத்தன்” என்றார் பெரியாரும். (67)
எண்ணிவிடை கொண்டருளு மிருபிறப்பா ளரைமுதலோர் திண்ணமென நினைந்துகொண்டு திருவாய்த்த சுழிபுரத்தில் அன்னல்பரஞ் சோதிவிநாயகனைவலம் வந்திறைஞ்சிப் புண்ணியரே யாங்களுய்யப் புனன்மழைநீர் தருதிரென்றார்.
இருபிறப்பாளரை முதலோர் - அந்தணரை முதன்மையாகச் கொண்ட வேளாளர். (68)
செப்பு மொழி தனிவினவிச் செம்பவள மணிமேனிக் கைப்பனையைங் கரஞானக் களிறுசுழி புரநகள்வாழ் பைய்பணிகங் கணம்பூண்ட பரஞ்சோதி யருட்கடவுள் மைப்பருவ முகின்மாரி வழங்கமனத்திரங்கியதே.
கைப்பனை - பனைமரத்தை யொத்த துதிக்கை. பணி கங்கணம் - சர்ப்ப கங்கணம். முகில் - மேகம். பரஞ்சோதி யருட்கடவுள் - விநாயகர். இரங்கியது - இரக்கங் கொண்டது. (69)
(சந்தவிருத்தம்)
செருகிய தவளக் கணமுகி றமரத்
திரைகடல் சுழியப் புனல்பருகா பொருசிலை பயிலச் சிறைவிசை யுவனப்
புனைதுள வரியொத் தொளிகருகா தருமொலி குமுறச் சுழிபுற நகரிற்
சகமகிழ் வரதக் கணபதியேர் இருநுத லணிபட் டமதென மின்னி
யெழுந்திசை யெங்கனுை மண்டியதே.

பறாளை விநாயகர் பள்ளு /27)
தமரம் - ஒசை. பருகா - பருகி. பொருசிலை - பொருகின்ற வில், ஈண்டு இந்திரதனுசு. உவணம் - கருடன். அரி - திருமால். சகம் - உலகம். மண்டி எழுந்து - நெருங்கி எழுந்தது. மண்டியது என்புழியுள்ள விகுதியை எழும் என்பதனோடு இயைத்துப் பொருள் கூறப்பட்டது. ஏர் - அழகு. (70)
கருமயி லாடக் குயிலினம் வாடக்
கவியின மோடக் கரடிபுல்வாய் பொருபுலி யாளித் திரள்மரை சாரற்
புறமுழை பதறிக் கிடுகிடவே யருகுழை தவளக் குலமலை தகரத் தடதிகிரியின்முத் துதிர்தரவே சொரிமல ரகிலப் பலமர முறியச்
சோவென மாரி பொழிந்ததுவே.
கார் காலத்தில் மயில் மகிழ்தலும் குயில் வாடுதலும் மரபாதலின், ‘கருமயி லாடக் குயிலினம் வாட' என்றார். கவியினம் - குரங்குக்கூட்டம். புல்வாய் - மான். கிடுகிட - நடுங்க. திகிரி - மூங்கில், அகிலப்பலமரம் - பல அகில் மரம், அ - சரியை, சோவென - ஒலிக்குறிப்பு. முழை - குகை. (71)
வெருண்டு வரியுடல் சுருண்டு துயில்புரி
விடங்கொ ஞரகமு நடுங்கவே உருண்டு நிலமிசை புரண்டு நடைமலை
யுடைந்து விதலையொ டொடுங்கவே மருண்டு குழியத ரிடங்கள் நெளிதர
வரம்பில் வனசரர் கலங்கவே இருண்டு புவிமயில் கிழிந்து விடநிரை
யெழுந்து கனமழை பொழிந்ததே.
உரகம் - பாம்பு. நடமலை - யானை, விதலை - நடுக்கம். குழியதர் - குழிந்த இடங்கள். இடங்கள் - முதலை. வனசரர் - வேடர். புவிமயில் - பூமாதேவி. நிரையெழுந்து - வரிசையாக எழுந்து. (72)
பணபதி சிரமிசை நிலவிய புகழ்பொலி
படிமக ளுதவிய திருமருமான் மணமலி குவளைய மலர்செறி தொடையணி
வடகுவ டனபுய வலிமையினான் இணரவிழ் சிகழிகை வனிதையர் தினமட
லெழுதிய தனுமத னனையனையான் குணதர வரகு நாயக மகிபதி
கொடையென மாரி பொழிந்ததுவே.

Page 157
272/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பணபதி - ஆதிசேடன். படிமகள் - பூமிதேவி. மருமான் -
வழித்தோன்றல். குவளையமலர் என்புழி அ - சாரியை. வடகுவடு - மேருமலை, இணர் - பூங்கொத்து. சிகழிகை - பூமாலை. தனுமதனனை - வில்லேந்திய மன்மதனை. (73)
ஆற்றுவரத்து
(சிந்து)
பொருவில் கோணச் சிகரத் தருகிற்
பொழிந்த வெள்ளம் வழிந்துபோய்ப் பூந்தண் குறிஞ்சி வளைந்து வேடிச்சி காந்தன் சேவடி வணங்கியே குருளை கோளரி வேழுக் களபம்
குருட்டு மாசுண முருட்டியே குறவர் குடிலுஞ் சிலையு மிதனுைங் கொண்டு பாலை யடைந்துமேற் பருதி நயனச் சூலக் காளி
பாதம் பணிந்து கழுகுடன் பருந்து நடுங்கக் குரவின் வேரைப் பறித்து முல்லை யடைந்துபூந் திருவின் கொழுநன் சரணம் வணங்கித்
தேங்கு மாயர் பாடியைத் தேடி வெண்டயிர்ச் சாடி சாடிச் சிறந்த மருதம் புகுந்ததே.
வெள்ளம் குறிஞ்சியிற் சென்று பாலையையடைந்து பின்னர் முல்லையைச் சார்ந்து மருதம் புக்கதென்பதை இச்செய்யுள் கூறிற்று. கோணச் சிகரம் - திரிகோண மலையின் உச்சி. வேடிச்சி காந்தன் - வள்ளி நாயகிக்குக் கணவனாகிய முருக வேள். இவர் குறிஞ்சி நிலக் கடவுள். கோளிக்குருளை - சிங்கக்குட்டி. குருளைக் கோளரி என்பது சந்தவின்ப நோக்கி இயல்பாய்நின்றது; முன் பின்னாகவந்த ஆறாம் வேற்றுமைத் தொகை. வேழக்களபம் - யானைக்கன்று. மாசுணம் - மலைப் பாம்பு. குடில் - குடிசை. சிலை - வில். இதண் - பரண். பருதி நயனம் - வட்டமான கண், காளி - பாலைநிலத் தெய்வம் கழுகு, பருந்து - பாலை நிலப்பறவைகள். குரவு - குரா மரம், இதுவும் அந்நிலக் கருப் பொருள். திருவின் கொழுநன் - இலக்குமி காந்தனாகிய திருமால், இவர் முல்லை நிலக்கடவுள். ஆயர்பாடி - இடையர் சேரி. சாடி - முன்னது பாண்டம், பின்னது
மோதி. (74)

பறாளை விநாயகர் பள்ளு/273
வாய்ந்த மருத நிலத்திற் புகுந்து
வயங்கு கண்சதம் பத்தினான் வயிரம் பிடித்த வெள்ளை வாரணன் வனசத் தாளை வணங்கியே சேந்த பதுமங் குவளை களைந்து
தேக்கிக் காஞ்சியைத் தாக்கியே செந்நெற் குலமும் வெண்ணெற் குலமுஞ் சேர்த்து நெய்த னிலத்திற்போய் ஆய்ந்த வருணன் சரணம் வணங்கி யடம்பங் கொடியைப் பிடுங்கியே அடிகோண் முண்டகந் தடவு கடலை யடையப் பறித்துப் பவளமுந் தோய்ந்த நித்திலக் குவையும் வாரிச்
சுறவுக் குலங்கள் பதறவே சுழித்துத் திரட்டி வெருட்டி யுருட்டித் துள்ளி வெள்ளம் பரந்ததே.
கண் சதம் பத்தினான் - ஆயிரங் கண்ணனாகிய இந்திரன், இவன் மருத நிலக்கடவுள். வயிரம் பிடித்த - வச்சிராயுதத்தைத் தாங்கிய, வெள்ளை வாரணன் - வெள்ளை யானையாகிய ஐராவதத்தை யுடையவன். சேந்த - சிவந்த. காஞ்சி - காஞ்சி விருட்சம். இது மருதநிலக் கருப்பொருள். வெண்ணெல் - சம்பாநெல். வருணன் - வருணபகவான்; இவன் நெய்தனிலக் கடவுள். அடம்பங்கொடி - கொடி விசேடம்; முண்டகம் - தாழை, இவ்விரண்டும் நெய்தனிலக் கருப்பொருள்கள். பரந்தது - (கடலிற்) பரவியது. (75)
குறவை வாளை யுளுவை மயிந்தன்
குப்பு ளாவுடன் திருக்கைமீன் கொழுத்த மடவை தொகுத்த கிளி குமிளா மாசினி செங்கண்ணன்
உறுகி ழாத்தி காலை பாலை
யோங்கு திரளி வச்சிர முட கத்துடன் சூடை செய்யலி யுற்ற நெடுவா லூடகம்

Page 158
274/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பறவை யுறவி குளக்கன் றோகைப்
பருந்து வாயன் மட்டிமீன் பாரக் கெண்டை தடியன் சீலா பாரக் கத்தலை யாரல்மீன்
கறுவிக் கரையில் வழைக ளொதுக்கிக் கதித்துக் குதித்துப் பாயவே கங்கை யாறு பெருகி வார காட்சி பாரும் பள்ளிரே.
இச்செய்யுளும், அடுத்த இரண்டு செய்யுட்களும் மீன் வகைகளைக் கூறுகின்றன. மயிந்தன், குப்புளா, கீனி, குமிளா, மாசினி, செங்கண்ணன், கிழாத்தி, காலை, பாலை, திரளி, வச்சிரமூடகம், சூடை, செப்பலி, நெடுவாலூடகம், பறவை, உறவி, குளக்கன் றோகை, பருந்துவாயன், மட்டிமீன், கெண்டை, தடியன், சீலா, கத்தலையாரல்மீன் இவைகள் மீனின் பேதங்கள். வழை - சுரபுன்னை; இது நெய்தனிலக் கருப்பொருள். வார காட்சி - வருகின்ற காட்சியை, வருகிற என்னுஞ் சொல்லின் மரூஉ: (78)
தாவு கெளிறு வாரா லாரல்
தகுவெள் ளாரல் தும்பையன் சாலு மாம்பழக் கெளிறு சின்னத் தரளங் கறுத்த கெளிற்றுமீன் வாவு கருங்கண் வாளை பவள
வாளை முக்கன் வாளைகோ வஞ்சி கடியன் பொதியன் கெளிறு வவ்வால் வெள்ளை வவ்வால்மீன் ஒவி னெடிய வாயன் மடவை யுரிய மணலைக் கூரலோ டோடும் பூனைக்கண் கெளிறு வயலி னுதிக்குங் காணி யாளனும் பூவின் றடத்தில் வயலிற் பாயப்
புறத்துப் பாயப் பாயவே பொருது மாவலி கங்கை வார புதுமை பாரும் பள்ளிாே.

பறாளை விநாயகர் பள்ளு/275
கெளிறு, வாரால், ஆரல், வெள்ளாரல், தும்பையன், மாம்பழக் கெளிறு, சின்னத்தரளம், கறுத்த கெளிற்று மீன் (கருங்கெளிறு), கருங்கண்வாளை, பவளவாளை, மூக்கன்வாளை, கோவஞ்சி, கடியன், பொதியன் கெளிறு, வவ்வால், வெள்ளை வவ்வால்மீன், நெடியவாயன், மடவை, மணலை,
கூரல், பூனைக்கண் கெளிறு, காணியாளன் - இவை மீன்வகைகள். மாவலி கங்கை - பறாளை நகரத்திற் பாயும் நதியின் பெயர். வார புதுமை என்பதற்கு முன்னுரைத்தாங்குரைக்க. (77)
திருக்கை புலியன் றிருக்கை யாரற்
றிருக்கை கள்ளத் திருக்கைமீன் சிவந்த திருக்கை சட்டித் தலையன் சிறுந் திருக்கை வெட்டியான் தருக்குங் குறிஞ்சித் திருக்கை கருமை
தயங்கி றாலொடு வெள்ளிறால் தண்டைச் சுறவு மொய்டு ரல்கிளை தக்கன் பாரைக் கல்லிறால் உருக்க முடைய கெண்டைக் கார
லூர்த்த வெள்ளைவாற் றிருக்கைமீன் ஒலை வாலன் கருங்கண் ணாளன் ஔரிற் பெரிய மீனெலாம் வருக்க முடைய பூக ராசியின்
மடைத்தலை தத்திப் பாயவே மாவலி கங்கை பெருகி வார வளமை பாரும் பள்ளிரே.
இச்செய்யுளில் திருக்கையும் அதன் வகைகளையும், இறால் மீனும் அதன் வகைகளையும் கூறுகின்றார். ஒலைவாலன் - மச்ச விசேடம். கருங்கண்ணாளன் என்பதும் அது. வருக்கம் பூகராசி - பாக்கு மரத்தின் கூட்டம். பெருகி வார - பெருகி வாய்க்க. வலிமை - (அதன்) வன்மை. பள்ளிரே - பள்ளிப் பெண்களே. பாரும் - செய்யுமென்னும் ஏவற் பன்மை
வினைமுற்று, புதியன புகுதல். (78)

Page 159
அ76/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
UtbjóU
(விருத்தம்)
பஞ்சவர்து துரைத்தவன்பொன் னாலை வாழும்
பவளவாய் முகில்மருகன் பனைக்கை நால்வாய்க் குஞ்சரமா முகப்பெருமான் தென்ப றாளைக்
கோடொன்றான் மணிவரைப்பூங் கொம்ப னாரே நஞ்சுபழ கியவுமத கண்கள் வேலோ
நகைவதனங் குளிமதியோ நகைத்தண் கோதை அஞ்சனவார் குழல்பருவ மஞ்சோ வேலை
யம்பவள மோகினிவா யதரந் தானே.
பஞ்சவர் தூதுரைத்தவன் - கிருட்டினன். கோடொன்றான் - ஒற்றைக் கொம்பன் (விநாயகன்) கொம்பனாரே - பூங்கொம்பு போன்ற தலைவியே! கோதை - பூமாலை. அஞ்சனம் - கருமை. பருவ மஞ்சோ - கார்காலத்து மேகமோ, அதரம் - உதடு. (79)
பண்ணைக்காரன் தோற்றம்
(சிந்து)
மாறுகண்னனுஞ் சோகிப் பாகிற் பல்லி னழகுஞ் - சுத்த
மாவளந்த நாழிபோலே வாயி னழுகுஞ் சீறுசளி யாற்பெருத்த துள்ளு நாசியுங் - கொட்டை
திரித்த பருத்தியின்பைக் கூறை வயிறுங் கிறிவேறு தசையொட்டி வைத்தி டுகாதுஞ் - சற்றே கிடுகுகட்டிய் பெற்றமுட்டிக் காலு மாகவே ஆறுமுக வேலர்துணை யார்வ டிவமோர் - பதி
னாறனார்பண் சேரும்பண்ணைக் கார னார்வந்தார்.
சோகிப்பாகின் - பலகறையின் வெண்மைபோல. நாழி - படி, பைக்கூறை - துணிப்பை; முன் பின்னாகவந்த ஆறாம் வேற்றுமைத் தொகை. கிடுகு - சட்டப்பலகை. (80)

பறாளை விநாயகர் பள்ளு/277
காதளவு சென்றவிழிக் கஞ்சனந் தீட்டி - மலர்க்
காந்தளங்கை யாடகம்பொற் சூடகஞ் சூட்டித் தாதளவு கோதைக்குமென் கண்ணியுஞ் சூட்டி - முலைச்
சந்தனச்சே றாட்டிநறுங் குங்குமங் கோட்டிச் சோதிமணி நீலமயில் போலியல் காட்டி - மரைச்
சுந்தரச்சீறடியிற்செம் பஞ்சுவைத் தூட்டி ஆதிபரஞ் சோதிநாத வேத கீதனார் - பண்ணை
யாண்டவரைக் கண்டுதொழு வாரும் பள்ளிரே.
அஞ்சனம் - கண்ணுக்கிடும் மை, சூடகம் - வளையல். மரை - தாமரை (முதற்குறை விகாரம்). (81)
ஆண்டையை வணங்கல்
குட்டச்சொறி மேனியாரே கும்பிடுகிறேன் - உப்புக் கொட்டுப்போல் வயிற்ற னாரே கும்பிடுகிறேன் சட்டிவைத்த முகத்தனாரே கும்பிடுகிறேன் - தூங்கற்
சண்டைக்கடா வழக னாரே கும்பிடுகிறேன் கட்டைமுளிக் காதனாரே கும்பிடுகிறேன் - மதிக்
கார்த்திகைமாங் காய னாரே கும்பிடுகிறேன் அட்டைவா யுதட்டனாரே கும்பிடுகிறேன் - பன்னை
யாண்டவரே யாண்டவரே கும்பிடுகிறேன்.
கொட்டு - மரப் பெட்டி, தூங்கல் சண்டைக்கடா - அசைகின்ற போர்க்கடா. மதி கார்த்திகை மாங்காயனாரே - கார்த்திகை மாதத்திலுண்டாகும் மாங்காய்போல அருமையானவரே. பண்ணையாண்டவரே - வயல் நிலத்தை யுடையவரே. ஆண்டவரே - அடிமையாகக் கொண்டவரே. (82)
(கலிப்பா)
பார்ம திக்க வருஞ்சோழ மண்டலப்
பள்ளி பள்ளனை யுள்ளாக்கி வைத்தபின் ஒளர்ம திக்கு நிகள்வத னாம்புயத்
தொருத்தி முத்தவ ளாலே யுணர்ந்துமின் கார்ம திக்த குழலிளை யாடன்மேற்
கண்சி வந்து கறுத்தாண்டை சீறவே பார்ம திக்கும் வயற்செய்கை பார்த்துடன்
வருதல் போற்பள்ளன் வருகின்றானே.

Page 160
278/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சோழமண்டலப் பள்ளி - ஈண்டு இளையபள்ளி. உள்ளாக்கி வைத்த பின் - தன் வசப்படுத்தியபின். மூத்தவளாலே - மூத்த பள்ளியாலே. உணர்ந்து - (ஆண்டை) உணர்ந்து. சீறிட - (பள்ளனைக்) கோபிக்க. (83)
விதைவகை கேட்டல்
(சிந்து)
பொருப்பி னெல்விதைக் கோட்டையி னிட்டிய
பூட்டு நானுகத் தீட்டமுஞ் சிந்தை விருப்பு மேழிக் கலப்பை வகையும் மண்
வெட்டியும் சொர்ணக் கொழுவின் வகையும் கருப்ப வேலிப் பறாளையில் வாழுமுக்
கண்ணனார் பண்ணை மாட்டின் வகையும் இருப்பும் போன செலவுநன்றாய்க்கணக்
கேற்றிச்சொல் லீழ மண்டலப் பள்ளா.
முக்கண்ணனார் - விநாயகர்; தந்தைக்குள்ளது போல இவருக்கும் மூன்று கண்ணுண்டு என்க. பண்ணை - வயல். ஈழமண்டலப் பள்ளா - யாழ்ப்பாணத்துப் பள்ளனே. (84)
சிந்து ரத்துணை புள்ளு ரயன்பணி
தென்ப றாளைப் பரஞ்சோதி நாத தந்தி யேறிய வாகனந் தின்று
சமைந்த நெற்கோட்டை யாயிரங் கானும் வந்த பாவலர் வெங்கலி தீர
வழங்குங் கோட்டையோ ரைந்நூறு கானும் இந்த நாளினி லென்பொரு ளாய்வைத்
திருந்த தோர்வட்டுக் கோட்டையொன் றாண்டே.
சிந்துரத் துணை புள் - சிவந்த இரண்டு கால்களையுடைய அன்னப்புள். துணை - ஆகுப்பெயர். துணைப்புள் என்பது துணை புள்ளெனச் சந்தவின்ப நோக்கி மிகாதாயிற்று. பரஞ்சோதி நாத தந்தி - விநாயகர். வாகனம் - பெருச்சாளி, வெம்கலி - கொடிய துன்பம். வட்டுக்கோட்டை - திரண்ட நெற்கோட்டை பறாளைக்கு அருகாமையிலுள்ள ஓர் நகரம். (85)

பறாளை விநாயகர் பள்ளு/279
தெற்றிக் காளை கழுத்தால் நெரிக்கச்
சிதைந்து போன நுகமொரு கோடி
சுற்றிப் பூனுைங் கயிற்றா லழுந்தத்
துளைப றிந்த திருநூறு கோடி
இற்றை நானுக மொன்றையுங் காண்கில
னேழு நான்கிலொன் றில்லாத நாளில்
மற்றப் பாம்புக்கும் பூரத்துக் கும்பகல்
வைத்த நானுக மொன்றுண்டே யாண்டே.
நுகம் - நுகத்தடி. ஏழு நான்கில் - இருபத்தெட்டில். ஒன்று இல்லாத நாளில் - ஒன்று குறைந்த நாளில், எனவே இருபத்தேழு நாளில் (இருபத தேழு நட்சத்திரங்களில்): பாம்புக்கும் - ஆயிலியத்துக்கும். பூரத்துக்கும் - பூர நட்சத்திரத்திற்கும். பகல் வைத்த நாள் - நடுவிலுள்ள நட்சத்திரம்; அது மகம். மகமாகிய நுகம் ஒன்றுண்டு என்க. வானகத்திற் செல்லும் நுகம் (மகம்) ஒன்றேயன்றி வேறு நுகம் கண்டிலேன் என்பதாகும். (86)
கத்தி வேலம்பு வில்லுடன் தெண்டையங்
கட்டு வாங்காங் கருந்தா துலக்கை பைத்த பாம்புவன் பாசந்திரிசூலம்
பரித்த வீரப் பரஞ்சோதி முர்த்தி முத்து நெல்வய லோரந் திருத்த
முறிந்த தையிரண் டாயிரங் கானும் வைத்த மண்வெட்டி யொன்றுவைத் தேன்மன
மஞ்சிப் பார்க்கிறேன் காண்கில னாண்டே.
தொண்டை - ஓர் ஆயுதம் கட்டுவாங்கு - தண்டாயுதம் (87)
அக்க மாலை கமண்டலம் புத்தக
மாடல் வெங்கதை யேந்திய மேலோர் திக்கெ லாம்புகழ் விசுஞ் சுழிபுரத்
தென்ப றாளைப் பரஞ்சோதி நாதர் தக்க பண்ணை யுழுதிடத் தேய்ந்தன
சாற்றில் மட்டிலக் கேயில்லை யானால் மிக்க வீர ரகுநா யகன்கொடி
மேழி யொன்றுண்டு காட்டுவே னாண்டே.
இரகுநாயகனுக்கு மேழிக்கொடி யாதலின், அக்கொடியிலுள்ள மேழியேயன்றி வேறு மேழிகண்டிலேன் என்பதாகும். (88)

Page 161
28O/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வன்னச் சோதிநீ லோற்பல மோர்கதிர் மாது ளம்பூ மணிவீணை தாங்குந் தன்னைத் தானனை யான்றென் பறாளையிற்
றம்பி ரான்றன் வயலுழு காளை பின்னர்ச் சாலினிற் சங்கினிற் றட்டப்
பிளந்து போன கலப்பை யனந்தாங் கன்னத் தோர்குண் டலப்பல தேவன்
கரத்தி லேயோர் கலப்பையுண் டாண்டே.
பலதேவன் - பலராமன். பலதேவனது கலப்பையேயன்றி வேறு கலப்பை கண்டிலேன் என்பதாம். (89)
வேனிக் கங்கையர் காதலர் வாலுளை
வெண்சிங் காசன மேறிய போதர் சேனிற் கண்விஞ் சையர்பணிந் தேத்திய
தென்ப றாளை விநாயகர் நாட்டில் ஆணிப் பொற்கொழு வெல்லாம் நிலம்பட்
டழிந்து கூர்மை யகன்றத னேகம் மாணிக் கஞ்செர்ன்ன கோவையி லேகொழு வைத்தி ருப்பது பார்மின்கா னாண்டே.
ஆணிப்பொன் - ஒருவகைப் பொன் (உயர்ந்த பொன்). மாணிக்கஞ் சொன்ன கோவையில் - மாணிக்கவாசகர் திருவாய் மலந்தருளிய திருச் சிற்றம்பலக்கோவையில். கொழு - காறு, கொளு - கொழு, அஃதாவது, மாணிக்கவாசகர் சொல்லியருளிய கோவையிலுள்ள கொளு (கொழு) வேயன்றி வேறு கொழுக் கண்டிலேன் என்பதாகும். கொளு என்பது ளகரழகர பேதத்தால் கொழு என்றாயது. கொளு - துறைக்கருத்து. (90)
செழுநிலாமதிக் கண்ணிச் சடாடவித்
தேவ னாருக் கொருகாளை போச்சு வழுவில் கோடி யுருத்திர ரென்றுளர்
வாங்கி னாரந்த மாட்டறியேனான் பழுதில்லா நாரை யொன்று குளந்தத்தப்
பாய்ந்து போகிய தாலிந்தப் பூமி உழுத காளையொன் றுண்டது பொன்னாலை
யூரி லேவாருங் காட்டுவே னாண்டே.

பறாளை விநாயகர் பள்ளு /281 ஒருகாளை - நந்தி, உழுதகாளை - திருமால். இதனை, “எருத்துக் கொட்டிலும் பொன் வேய்ந்திடச் செய்தோம்’ என்பதனாலுணர்க. பொன்னாலையூர் - ஒர் வைணவத் திருப்பதி. (91)
(கொச்சகம்)
சிந்தைமதிக் கெட்டான் செழித்தபண்ணை யாண்டவனுக் கிந்தவகை பள்ள ரிையம்புமொழி யைக்கேட்டு வந்தகுல முத்தாள் வறிதுநகை யுந்தொற்ற முந்துகுடும் பன்சரிதை முதலிக்கத் தொடங்கினளே.
குடும்பன் - பள்ளிற்றலைவன். மூதலித்தல் - ஒப்புவித்தல். (92)
முறைப்பாடு
(சிந்து)
பண்பு நீதி யறியாத தூக்குனிப்
பள்ளன் செய்கரு மங்களைக் கேளும் உண்ப துங்குடிப் புங்களிப் புங்கண்
னுைறக்க மும்மிளை யாள்குடி லோடே எண்பொருந்துமென் புத்தியுங் கேளான்
யானும் பின்னை யுரைப்பதும் விட்டேன் பெண்பிறந்தது நான்மட்டு மோவிந்தப்
பேச்சை யார்க்கினி விள்ளுவே னாண்டே.
தூக்குணிப்பள்ளன் - உரோசமில்லாத பள்ளன். குடில் - குடிசை, விள்ளுவேன் - சொல்லுவேன். (93)
கட்டு நீர்வயற் செய்கையுந் தீண்டான்
கலகப் பள்ளி மயல்வலைப் பூண்டான் பட்டியின் மாட்டைக் கிட்டியும் பாரான்
பழைய தாரமென் றென்னையுஞ் சேரான் சட்டைக் காரியை விட்டுப் பிரியான்
சற்றே பிரிந்தா லும்மிங்குத் தரியான் பெட்டிச் சோற்றுக்குங் கள்ளுக்கும் நெல்லெல்லாம்
பெட்டியா லஸ்ளிக் கொட்டினா னாண்டே.

Page 162
282/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
கலகப் பள்ளி - கலகத்தையுடைய இளையபள்ளி. பெட்டி - அளவுக்கருவி (94)
தூர திட்டியன் னான்பண்ணை பாரச்
சுமையெண் ணானிரைத் தூண்டிலிட் டார்க்குப் பார மெல்லா மிதப்பிற்கண் ணாமிந்தப்
பள்ள னுைக்குக்கண் பள்ளத்தி மேலே தார மென்றென் கழுத்தின்முன் னாளிற்
சரடு கட்டிய பாரதம் வைத்தோன் ஆர வாரஞ்செய் கோட்டுக்கும் பாட்டுக்கும் ஆட்டுக் குஞ்சமத் தாயின னாண்டே.
மிதப்பில் - தக்கையில். பாரதம் - சுமை: ஆகு பெயர். ஆட்டுக்கும்
- கூத்தாட்டத்திற்கும்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். சமத்து - சமர்த்து என்பதன் சிதைவு. (95)
மஞ்சொத்த குழலா - விளையவள் - குஞ்சுக்கு முதலா - நெல்லு
மணிவிற்றுத் தட்டான் - கையிற் - பணிசெய்வித் திட்டான் வஞ்சத்துக் குரியா - கற்ற - விஞ்சைக்குப் பெரியா - விட்ட
மருந்துக்கு விருந்தா - கிக்கொண் - டிருந்துட்கிக் கரைந்தான் கஞ்சிக்குப் பிறகே - நின்று - நெஞ்சிக் கொண்டிருப்பா - னவள் காலையும் பிடிப்பா - னவள் சொன்னால் - நாகமும் பிடிப்பான் பிஞ்சுற்ற மதிநே - ரொற்றைக் - கொம்பத்த கரியா - யெட்டிப்
பிடியுங்கைச் சவுக்காற் - கட்டி - யடிமின்கா னாண்டே.
குஞ்சுக்கு முதலா - பறவைக்குஞ்சு முதலாக (பறவைக் குஞ்சு - ஈண்டுக் கோழிக்குஞ்சு) பணி - ஆபரணம். உட்கி - நடுங்கி. நாகமும் - பாம்பையும். அத்தகரியாய் - கையையுடைய யானைபோல. கரியாய் என்பது எமனாய் என்புழிப் போல. ஆய் - உவமவாசகம். (96)
ஒச்சடி யடித்தா - லென்ன - பேச்சிவன் குடும்பன் - இந்த
வுருக்கு மிணங்கான் - தலையாரிக்கும் வணங்கான் பூச்சிய முறையன் - பேச்சுழு படைச்சால் - வழி
புரிவளைக் குலஞ்சேர் - சுழிபுரநகள்ப் பெருமான் ஆச்சியங் கவர்ந்தான் - எதிர்வரு - பேச்சிகொங்கையின் - பாலு வரிக்கொரு மருகன் பண்ணை நிலைத்திட வேண்டிற் (ண்ட காய்ச்சுலை யடுத்தே - யறத் - தோச்சிடு மிரும்பாற் - பண்ணிக்
கடுவிலங் கிடவே - யினித் தடைசெய்யீ ராண்டே.

பறாளை விநாயகர் பள்ளு/283
புரிவளைக்குலம் - முறுக்கினையுடைய சங்குக் கூட்டம். ஆச்சியம் - நெய்; ஈண்டு வெண்ணெயை யுணர்த்திற்று, ஆகுபெயர் முகத்தான்; காரியவாகு பெயர். பேச்சி - பூதகி. அரி - திருமால். பண்ணை - வயல். காய்ச்சு - ஆசெதுகை. தோச்சிடும் - தோய்த்திடும். மரூஉவொடு போலியும் பெற்றது; இடு - துணைவினை. (97)
(விருத்தம்)
பள்ளணிரு காலினுக்கு விலங்குபூணப்
பண்ணுைவித்தா ளென்றிளைய பள்ளி கானா வெள்ளளவு மிரக்கமென்பதிலையோ வாண்டைக் கென்னபழி யென்றிரங்கிக் குழைந்து போனாள் கள்ளவழி யாலிழப் பள்ளிபோந்து
கள்ளும்நல்ல கொழுத்தமறிக் கறியுங் கூட்டித் துள்ளியுள்ள அகந்தையினாற் காலிற் பூண்ட
தொடுவிலங்குப் பள்ளணுக்குச் சோறிட் டாளே.
ஈழப்பள்ளி - மூத்தாள். ஈழப்பள்ளி சோறிட்டாள் என்க. (98)
பள்ளன் முத்த பள்ளியை வேண்டல்
(சிந்து)
பட்ட நெஞ்சி லடாதன செய்தார்
படாத தெல்லாம் படுவார்க ளென்கை கெட்டி யாயறிந் தேனினி நீயிட்ட
கீற்றை யுங்கட வேனொருக் காலுந் தொட்ட கோபந் தவிர்கணக் காம்படி
சொல்லுவே னுங்க ளாண்டைக்குச் சொல்லித் தட்டு காற்றளை நீக்குவித் தேயென்னைத் தாங்கிக் கொள்ளிழ மண்டலப் பள்ளி.
தவிர் - ஒழி. கால்தளை - காலிற்பூட்டிய விலங்கு. தாங்கிக் கொள் - ஏற்றுக்கொள். ஒருக்கால் என்பது உடன்பாட்டொடு முடியின் ஒருகால் என இயல்பாயும் எதிர் மறையொடு முடியின் விகாரப்பட்ட எண் மிக்கும் வருதல் வழக்காறென்க. 'அடாது செய்பவர் படாது படுவர்” என்பது பழமொழி. (99)

Page 163
284/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
முத்த பள்ளி ஆண்டையை வேண்டுதல்
கண்ணி லேகரந் தீண்டிவிட் டாலந்தக் கைவி ரல்தறிப் பார்களு முன்டோ வண்ண மான முலைவிழுந் தாலவ்
வயிறு தாங்கக் கடனல்ல வோதான் அண்ணல் வாரி யுலகத்தி லேயடி
யாத மாடு படியாத தென்கை திண்ணந் திண்ணஞ் சிறியோர் செயும்பிழை
சீரி யோர்பொறுக் கக்கட னாண்டே.
‘கண்ணிலே கரந்தீண்டி விட்டால் அந்தக் கைவிரல் தறிப் பார்களுமுண்டோ’ என்னும் கருத்துப்பற்றியே “கண்மலரியற் கைபடாதோ’ என்றார் பிறரும். "சிறியோர் செய்யும் பிழை சீரியோர் பொறுக்கக் கடன்’ என்பதைச் “சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம், பெரியோராயிற் பொறுப்பது கடனே’ என்பதனோடு ஒப்பிடுக. திண்ணம் திண்ணம் என்னும் அடுக்குத் துணிபு மேற்று. (100)
ஒறுத்த தாற்பய னென்பொறுத் தாருக்
குலக முள்ளள வும்புக ழென்றே மறுத்த விர்ந்திடு வள்ளுவ னார்சொன்ன மான வெள்ளைக் குறளறி யீரோ வெறுக்கை போது மினியெள் யான்பிழையான்
மேன்மை யாக்கணக் கொப்புத் தருவான் செறுத்த காவலில் வைத்திடு பள்ளனைச்
சேர்த்த காற்றளை மாற்றுவி ராண்டே.
வெள்ளைக்குறள் - குறள் வெண்பா. அஃது, “ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்” என்பதனாலறியப்படும். வெறுக்கை - தண்டனை. காரணத்தைக் காரியமாக உபசரித்தார். ஆண்டே - ஆண்டவனே என்பதன் மரூஉ. (101)

பறாளை விநாயகள் பள்ளு /285 (விருத்தம்)
ஒளசல்வட முர்சகட முழன்றிடுபம்
பரம்பேய்த்தே ரொத்த வாழ்விற் பாசமிகு மறலிதனக் கீடாக
வருந்தல்பா ராத தேதோ வீசுகதிர்ச் சலஞ்சலங்கண் முத்தநிலா
வொளியெறிப்ப வேரி யேறி வாசமிகு குவளைமலர் சுழிபுரத்தா
லயத்தனொற்றை மருப்பி னானே.
வாழ்வானது மேல் கீழாகவும் கீழ் மேலாகவும் மாறி மாறி வருதலின், 'ஊசல் வடம்’ என்றும், சகடம்’ என்றும், அது ஓரிடத்தும் நில்லாது சுழன்று வருதலின் “உழன்றிடு பம்பரம்’ என்றும், உள்ளது போலத்தோன்றி யில்லாதாய் நிற்றலின் ‘பேய்த்தே ரொத்த’ என்றும் கூறினார். மறலி - இயமன். வேரி - வாசனை. மலர் சுழிபுரம் - வினைத்தொகை. மருப்பினான்
பாராதது ஏதோ என இயையும். (102)
பள்ளன் ஆண்டைக்குக் கணக்கொப்பித்தல்
(சிந்து)
குட்டைநாம்பன் வெள்ளிக்கண்ணன் குறுங்கழுத்தன்
கூழைவாலன் வெடிவாலன் வட்டச்செவியன் மொட்டைத்தலை மோழைக்காளை புள்ளிக்கறுப்பன்
முறிகொம்பன் தறிகொம்பன் சுத்தக்கறுப்பன் பட்டிக்காளை குன்றுமணிக் கண்ணன்மயிலை
பால்வெள்ளை நரைக்காளை காற்சிலம்பன் துட்டக்கள்ளன் வளைகொம்ப னொற்றைக்கொம்ப னர்பண்ணை
சூழ்ந்தபல மாட்டின்வகை சொல்லினே னாண்டே.

Page 164
அ86/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
குட்டை நாம்பன் முதலிய பெயர்கள் மாட்டின் விசேட வகைகளைத் தெரிவிக்கின்றன. ஒற்றைக் கொம்பன் - விநாயகன். பண்ணை - வயல்,
நாம்பன் - இள எருது; நாகு - கிடரி (103)
மாட்டுவகை யும்பவளத் தாலுழுக் கோலும்
பரிமளச்சந் தனமரத்தாற் செய்பட வாளும் நாட்டுமணி மேழியுங்கை வச்ர நுகமுஞ்சுட்ட
நல்லபொன்னினாலே சமைத்த கொழு வகையும் சேட்டிளம் பருதியின்ப்ர காச முடையார் தூய
தென்பறாளை யன்பர் நண்பர் செய்யுமருளாளர் தோட்டுமலர்ப் பொன்னிதழிச் சூட்டர் பண்ணைக்கேவெள்ளிச்
சோதிநாஞ்சி லின்வகைகள் சொல்லினே னாண்டே.
உழக்கோல் என்றது உழவுகோலை; அது முட்கோல். படவாள் - கலப்பையின் ஓர் உறுப்பு. மேழி - கலப்பை, நுகம் - நுகத்தடி கொழு - காறு. பருதியின் - சூரியனைப்போல; இன் - ஒப்புப் பொருளது. நண்பர் - நண்பு; அர் - போலி. அருளாளர் - அருளையுடையவர். நாஞ்சில் - கலப்பை, (104)
பார்புகழுங் குண்டைச்சம்பா விஞ்சருச் சுனம்பஞ்ச
பாலைபசுங்கள்ப்பூர வாடைக் கறுப்பன் சேருமணல் வாரிகுள வாழை கறுப்பன்
சின்னட்டிபொன் னாயகன்சொற் காடைக்கறுப்பன் சீரழ கியவாணன் மங்கா மைக்காத்தான்
செம்பவளச் சம்பாமுத்து மாலைக் குறுவை வார்கருப்பஞ் சாற்றினாற்றல் வீற்றிருப்ப தோர்பண்ணை
வைத்துக்கட்டு வித்துவகை செப்பினே னாண்டே.
இச்செய்யுளில் நெல்லின் விசேடங்களைக் கூறுகிறார். குள வாழை - ஒர் நெல்லினம். (105)

பறாளை விநாயகர் பள்ளு /287
தலைவன் பொருள்வயிற் பிர்ந்துழித் தலைவி வருத்தம் பாங்கி கூறல்
(கட்டளைக்கலித்துறை)
சங்கத்தை யேந்தும் பரஞ்சோதி நாதர் சயிலமின்னார் புங்கத்தை வாய்ந்த மணிநீலப் பார்வை பொலியுமுத்து மாங்கத்தி லேற்றிடு தங்கத்திற் பீருமுன்ை டாயிருக்க வங்கத்தி லேறித் தனந்தேடப் போனவர் வந்திலரே.
சங்கத்தை யேந்தும் பரஞ்சோதிநாதர் - சங்கினைக் கையில் தாங்கிய பரஞ்சோதி விநாயகர். புங்கம் - அம்பு; அத்து - சாரியை. பார்வை - கண்; ஐ - கருவிப் பொருள் விகுதி. பொலிதல் - உகுத்தல்; சொரிதல். முத்தும் - முத்துப் போன்ற நீரும்; உவமையாகு பெயர். அங்கத்தில் - சரீரத்தில். தங்கத்தின் - தங்கத்தைப் பொல. பீர் - பசலை. வங்கம் - மரக்கலம். (106)
முகூர்த்தங் கேட்டல்
(சிந்து)
செம்பருதி வாரமதிற் பூரணை யென்றார்
தேட்கடையென்றார் சித்த யோகமு மென்றார் கும்ப முகூர்த்தமென்றார் செம்பொ னோரையென்றார்
குஞ்சரக் கரணமென்றார் கூடிய் பெரியோர் நம்பு கலப்பைச்சக்கரம் நன்றாய்ப் பொருந்துமென்றார்
நாயக ரெமைப்புரக்கு நாதனார் நாட்டில் வம்பவிழ்பூம் பண்ணையி லேர்ப்பூட்டி யுழுவே
நன்மனத் துடனேபோதி யீழமண் டலத்துப்பள்ளா.
பருதிவாரம் - ஞாயிற்றுக்கிழமை. பூரணை - பெளர்ணிமை. தேட்கடை - மூலநாள். கும்ப முகூர்த்தம் - கும்ப லக்கினம். பொன் ஒரை - தனுசும் மீனமும்; அது குரு இலக்கினம். குஞ்சர கரணம் - கரணம் பதினொன்றில் ஒன்று, கரசகரணம் என்பதன் பரியாய பதம். போதி - போவாய். இச்செய்யுளிற் கூறிய சுப முகூர்த்தத்தில் உழுதால் பயிர் விருத்தியாகு மென்பதாம். (107)

Page 165
288/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
ஊற்று தேன்பொழில் சூழ்தென் பறாளை
யுகந்த ஞானப் பரஞ்சோதி தன்னைப் போற்றிக் கொள்ளறி யாமற்பொன் னேரினைப்
பூட்டிச் சால்விட் டுழுகின்ற நேரந் தோற்று மேற்றுக் குறுங்கண்ணன் வாளைமீன்
துள்ளிப் பாய நுகத்தை முறித்துச் சீற்றக் காளை வெருண்டுகொம் பாற்குத்தச்
சேற்றிற் பள்ளன் விழுந்தான்கா னாண்டே.
குறுங் கண்ணன் - மாட்டின் விசேடம். நுகம் - நுகத்தடி, காளை - எருது. கொள் என்பது கொள்ளுதல் என முதனிலைத் தொழிற் பெயர்.
பள்ளன்பண்ணை மீது விழவே - முத்த பள்ளி பரிதவித்து முகத்திலறைந்து துள்ளிவிழி நீர்சொ ரியவே - யழுதழுது
சோதிமுலைப் பந்தி லடித்துக் கள்ளவிழ்பூங் கோதை கலைய - விழுந்தெழுந்து
கனன்மெழுகி லுருகி யிளைய குள்ளிமருந் தீட்டின் மயக்கோ - நாச்சிமார்தங்
குறையோவென் றழுதி ரங்கினாள்.
மூத்த பள்ளி - பெரிய மனைவி. பரிதவித்து - வருந்தி. முலைப் பந்து - முலையாகிய பந்து; உருவகம். கோதை - கூந்தல். இளையகுள்ளி - இளைய மனைவி. நாச்சிமார் - சத்த தேவிகள்; அவராவார்: அபிராமி, மாகேசுவரி, கௌமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி. (109)
இரங்கல்
(கொச்சகம்)
தேன்கிடந்த தொடையானே தேடரிதாங் கண்மணியே வான்கிடந்த புகழானே மலைகிடந்த தோளானே யூன்கிடந்த மெய்தளர்ந்தே யோவியம்போல் வயலணையில் ஏன்கிடந்தா யென்னகுறை யின்னதென்று சொல்வாயே.
மலைகிடந்த - மலையை யொத்த; கிடந்த - உவமவாசகம். ஒவியம் - சித்திரம். (110)

பறாளை விநாயகர் பள்ளு/289
கண்ணனுதற் கண்ணனருள் காரியைய னார்குறையோ விண்ணினிடி மின்னாமல் வீழ்ந்ததையா வென்புகல்வேன் நுண்ணறிவு முயிர்ப்புமின்றி யொடுக்கமுட னிகிடந்தாற் பண்ணைவகை தமைப்போந்து பார்ப்பவரார் காப்பவரார்.
காரி - வயிரவர். ஐயனார் - சாத்தனார் (அரிகர புத்திரர்). உயிர்ப்பு - மூச்சு. பண்ணை வகைதமை - வயலின் வகையை. (111)
கொங்கை யுரந்தடியாக் குழன்முடியாக் காலத்தே மங்கலநா ணெனக்கணிந்து வரைந்ததுவு மறந்தனையோ பங்கவயற் செய்கைசெய்யப் பரஞ்சோதி காக்குமென்று செங்கையினி தெளித்திடவே தெளிந்துபள்ள னெழுந்தனனே.
உரம் - மார்பு. தடியாக் காலத்து - புடைக்காத காலத்து. குழல் முடியாக் காலத்து - கூந்தல் முடிக்கப்படாத காலத்து. காலத்து என்பது தடியா என்பதனோடும் இயைக்கப்பட்டது. பங்கம் - சேறு. (112)
(வெண்பா)
சுத்தர்பணிந் தேத்துஞ் சுழிபுரத்து வீற்றிருக்கும் அத்த பரஞ்சோதி யண்ணலே - கைத்தலத்துச்
சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக் காலன் வரும்பொது கா.
சுத்தர் - மனத் தூய்மையோர். அத்த - பிதாவே அண்மை விளி. முதல் வேற்றுமை அத்தன். முனம் தோன்று ஆலகாலம் என - திருப்பாற் கடல் கடைந்த காலத்துத் தோன்றிய கொடிய விடம் போல. காலன் - யமன். (113)
(சிந்து)
உழுது பரம்படித்தேன் சாலி விதையை
உண்மைபொலி நன்முகூர்த்தந் தன்னில் விதைத்தேன் அளவாய் முளைத்தபின்பு நீரைப் பாய்ச்சினே
னம்புயனும் மாதவனும் போற்றித் துதிக்கும் மழகளிறானபரஞ் சோதிப் பெருமான்
வழங்கு கருணையின் வளர்ந்த நாற்றைத் தொழுது நடும்வடிவு காண வாரும்
சொல்லவந்தேன் கானும்பண்ணைக் கார னாண்டே.

Page 166
29O/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சாலி விதை - நெல் விதை, தொழுது - விநாயகனைத் தொழுது, இந்திர தெய்வத்தைத் தொழுது எனவுமாம்; நிலமகளைத் தொழுது என்றலும் ஒன்று. நடும் வடிவு - நடுகின்ற அழகு. பண்ணைக்காரன் - பள்ளர் தலைவன். (114)
நற்றாயிரங்கல்
(விருத்தம்)
காமன்மகிழ் மைத்துனனார் பொன்னாலைப்
பதியிலுறை காயா மேனி மாமன்மகிழ் மருமகனார் சுழிபுரம்வாழ்
பரஞ்சோதி வரதள் நாட்டிற் பூமகள்கேள் வனையனைய காளையுடன்
தழல்வடவை பொங்கு கானிற் சேமநிதி மங்கலமான் சீறடிவைத்
தெவ்வாறு செல்கின்றாளே.
காளை - தலைமகன். கானில் - பாலை நிலத்தில். மங்கல மான் - மங்களகரமான மான்போன்ற தலைவி, மான் - உவமையாகுபெயர். சீறடி = சிறுமை + அடி, உவமைப் பொருள்களைச் சீறுகின்ற அடி எனினுமாம்
(115) நாற்று நடவு
(சிந்து)
திங்க ளாடப் பணியு மாடத் திருச்ச டாடவி யாடவே செறிந்த கனகக் கடுக்கை யாடச் சிந்து ரத்துரி யாடவே
அங்கை மான்மழு வாட வம்புலி
யரவ மாட மன்றினில் ஆடி னாரவர் சேய்ப றாளை யமர்பரஞ் சோதி வயலுளே
கொங்கை யாட மகரக் குழையுங்
கொப்பு மாடச் சுரும்பினக் கோவை யாடக் கோதை யாடக் கோலமுத் தார மாடவே

பறாளை விநாயகன் பள்ளு /291
சங்க மாடச் சரிக ளாடத்
தனத்திற் கச்சசைந் தாடவே தயங்கு நாற்றை யொருவர்க் கொருவர் தள்ளி நடவாரும் பள்ளிரே.
கடுக்கை - கொன்றை மாலை. சிந்துரத்துரி - யானைத்தோல், மன்று - கனகசபை, மன்றினிலாடினார் - நடராசப் பெருமான். சேய் - பிள்ளை. சுரும்பினக் கோவை - வண்டின் வரிசை. கோதை - கூந்தல், சங்கம் - சங்குவளையல்; அம் - சாரியை (ஆகுபெயர்). சரிகள் - கருவளையல். பள்ளிரே - பள்ளப் பெண்களே. வாரும் என்பதில் உம் - முன்னிலை வினைமுற்று விகுதி. புதியன புகுதல் என்பதாம். (116)
சின்னி வன்னிநாகி யேகி
திருவி யுருவி குருவியுஞ் சேவியாவி பூவி யேவி செல்வி தன்னுடன் வல்லியும்
பொன்னி கன்னி வேலி பாலி
புளுகி சிவப்பி கறுப்பியும் புலிச்சி கலிச்சி விரி சூரி பூமி யுடனே சோமியும்
பன்னு சுருதி முனிவர்க் குரிய
பரன்பறாளைப் பதியில்வாழ் பவள மேனியன் வயலில் நாற்றைப் பாடி நடவாரும் பள்ளிரே.
சின்னி முதலியவை பள்ளச்சிகளின் பெயர். (117)
மருதி டைத்தவழ் பசிய வித்தக
மரகதப்புயல் மருகனார் வலவை பக்கலி லுறையு முத்தம மதக யத்திரு வதனனார்
சொருகு கொத்தல ரளக முக்கணி
யுமைய ஸ்ரீத்திடு புதல்வனார் சுழிபு ரப்பதி யால யப்பரஞ் சோதி நாயகர் வயலுளே
யிருவிழிக்கயல் சுறவு கிட்டுற
விரல னித்தொகை பிறழவே யிடத்திற் றொடுத்து முடிந்த நாற்றை யெடுத்து நாங்க னடச்செய்தோம்

Page 167
ஜ92/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வெருவி முட்பொதி பலவி னிற்கனி
சிதற லான்மிகத் திருக்குடன் விழுந்து மீன்கள் குதித்துப் பாயும் விதத்தைப் பாரும் பள்ளிரே.
மரகதப் புயல் - திருமால். வலவை - வல்லயைதேவி. கயம் - யானை. வதனம் - முகம். முக்கணியுமை - மூன்று கண்களை யுடைய உமாதேவி (முக்கணி - காளி)சுறவு விழிக்கயலைத் தம்மினமெனக் கருதிக்கிட்டுற என்க. (118)
தண்ணென் தொடைய லிதழிப் புங்கவன்
தந்த கூரொற்றைக் கொம்பனார் தாரணிப் புவன பூரணப் 1 IIID காரணப் பொருளு மாயினார் வண்ணஞ் சிவந்த புரத்தினார் தொந்தி
வயிற்றின் முப்புரி நூலினார் மஞ்சு சூழ்பொழிற் றென்பறாளையில் வாழ்பரஞ் சோதி வயலுளே பண்ணி னிசைந்த சொல்லி லேதுதல் வில்லி லேயினை வில்லிலே முலை பல்லி லேமுலை வல்லி லேயரைப் பணத்தி லேமஞ்சன் மனக்கிலே கண்ணி லஞ்சனத் தீட்டி லேதுதற்
சூட்டி லேகுழைத் தோட்டி லேகுழற் காட்டி லேயிசைப் பாட்டி லேதலை யாட்டி றானடி பள்ளிரே.
தொடையல் - பூ மாலை. புங்கவன் - சிவன். சிவந்த புரத்தினார் - சிவந்த திருமேனியை யுடையவர்; பவளமேனியராதலில் இங்ங்னங் கூறினார். தொந்திவயிறு - தொப்பை வயிறு. மஞ்சு - மேகம். இணைவில் என்றது புருவத்தை. முலைப் பல் - முல்லையரும்பையொத்த பல். முல்லை என்பதன் இடைக் குறை விகாரம். முலைவல் - முலையாகிய சொக்கட்டான்காய். அரைப்பணம் - அல்குல். நுதற்சுட்டு - நெற்றிப்பட்டம். குழைத் தோடு. குழையோடு தோடு, குழை, தோடு இவைகள் காதணி. குழையாகிய தோடு எனினு மமையும். குழற்காடு - உருவகம். ஆட்டிறான் - ஆட்டு கிறான் என்பதன் சிதைவு. (119)

பறாளை விநாயகர் பள்ளு/293
தேடிப் பொருளைப் புதைத்துக் கொழித்துத் தெளித்துக் குழைத்து வடித்த நூல் தெள்ளு நாவ ருள்ள மேலுறை தேவ னார்திரி கோவனார் வாடிச் சிறகு மிடைப்பு லோமசை
மகிழ்நன் பூசித்த வரதனார் மண்ட லம்புகழ் தென்பறாளை வாழ்பரஞ் சோதி வயலுளே கோடி வளைந்த கரும்பு ரூரங் குனிக்கு மிந்திர சாபமாக் கொடிம ருங்குன்மின் னாக வேதுதல் குழவிப் பிறையி னிலங்கவே யாடிச் சரிந்த கோதை மேகங்க
ளாகத் தரளக் கோவையை யாலிக் குலமென்று பீலிக் குலமயி லாலிப் பதைப்பாரும் பள்ளிரே.
பொருளை - உண்மைப் பொருளை. தேடி - ஆராய்ந்து. நாவர் - ஈண்டு மெய்யடியார். திரிகோவனார் - மூன்று கண்ணை யுடையவர்; (கோ - கண்). புலோமசை - இந்திராணி புரூரம் - புருவம். இந்திர சாபம் - இந்திரதனு. மருங்குல் - இடை. குழவிப் பிறை - இளம்பிறை. ஆலிக்குலம் - மழைத் துளியின் தொகுதி, ஆலாங்கட்டியின் தொகுதியுமாம். ஆலிப்பதை - ஆரவாரிப்பதை, (120)
நாளுங் கலியைத் துரப்பதே யன்றி
நாளை வாவென் றுரைத்திடான் நம்பி னோர்க்கருள் தருத யாபரன் வெம்பி னோர்க்கரி யேறனான்
வாளினன் றடக்கைச் சந்த்ர சேகர
மானா முதலி வாழவே வரந்தந் துதவு தென்ப றாளை வாழ்பரஞ் சோதி வயலுளே
தாளிற் பதும ராகச் சுவடு
தயங்கு சுப்பிரம் பதியவே சருவிச் சருவி யொருவள்க் கொருவர் தயங்கு நாற்று நடுகைக்கே

Page 168
294/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
மீளத் திரும்பிப் பள்ளனைப் பார்த்து
வெண்ணகைத் தரளங் காட்டவே வெருவிப் பங்கயங் குவியக் காவிகள் வெடிப்பதைப் பாரும் பள்ளிரே.
கலி - வறுமை. வெம்பினோர் - பகைத்தோர். அரியேறு - ஆண்சிங்கம். சந்திரசேகர மானாமுதலி - ஓர் வள்ளல். பதுமராகச் சுவடு - பதுமரேகை. சுப்பிரம் - ஒளி வெண்மையுமாம். சருவிச் சருவி - மிக நெருங்கி; (சருவுதல் - நெருங்குதல்). வெண்ணகைத் தரளம் காட்ட என்றது சிரித்தலை பற்களின் ஒளியைச் சந்திரிகையென்று தாமரை குவிதலையும் நீலோற்பலங்கள் மலர்தலையும் பாருங்கள் என்றார். (121)
அத்தி மணிச்சுடி கைத்துயி லிற்பயில்
பச்சை முகிற்கொரு மருகனா ரத்தி முகத்தவர் நித்தர் விழித்திரி யற்புத வித்தகள் வயலுளே முத்து முலைச்சிய ரக்கு வலைச்சிய
ரற்ற விடைச்சியர் நடுகைக்கே முத்தை யனத்திரன் முட்டை யெனச்சிறை
கட்டி யணைக்குது பள்ளிரே.
அத்தி - பாற்கடல். சுடிகை - உச்சி, முடி. இங்கே (ஆதி சேடன்) உச்சி. பச்சைமுகில் - திருமால்; அன்மொழி. அத்தி - யானை. விழித்திரி - மூன்றுகண்; திரிவிழி என மாற்றுக. முத்து - முத்துமாலை; ஆகுபெயர். அக்குவலைச்சியர் என லகரளகர ஒற்றுமையால் நின்றது. அன்னத்திரள் - அன்னக்கூட்டம். சிறை - சிறகு, அணைக்குது - அணைக்கிறது என்பதன் சிதைவு. (122)
வடிக்குஞ் சகல கலைகள் போற்றும்
வள்ள லைங்கர னாட்டிலே
தெரிக்குங் கழனிப் பயிர்கள் வளர்ந்து செறிந்து விளைந்து சரிந்தவே.
ஐங்கரன் - விநாயகன். செறிந்து - நெருங்கி. சரிந்த - சாய்ந்த; அன் - சாரியையின்றி வந்தது. (123)

பறாளை விநாயகர் பள்ளு/295
தேன்பயி லுந்தடஞ் சோலைப்பெருந் தென்பறாளையி னாதன்றிகழ் வான்செறி யும்பணன்னை மீதேகதிர்
வாய்க்குங்குலைச் செந்நெறானே கூன்பிறை நேரிரும் பாலேமள்ளர்
கொய்துசெய்தே வைக்கும்வேலைக் கான் செறி தாபரைப் பூமே லன்னங்
கண்டுயில்பாரும் பள்ளிரே.
குலைச்செந்நெல் - நெற்குலைகளையுடைய செந்நெற்பயிர். கூன்பிறைநேர் இரும்பு - வளைந்த பிறையை யொத்த அரிவாள்; இரும்பு - கருவியாகு பெயர். (124)
கொந்தவிழ் தாமப் பொற்றொடை யான்மத
குஞ்சர வானனமுடையா னனு கூலன்
றிரி சூலன் றரு பாலன் புனை நூலன்
கந்தனை வாய்த்திடு துணையா னன்பர்
கருத்திலேயன் றிணையான் றழை காதன் றெய்வ
நா தன் சிவ போதன் றிரு நாட்டில்
செந்துவர்க் காய்க்குலை கனத்தேய் வயற் செந்நெற் குழாங் குயத்தாலே யரி தீரம்
மரி தீரம் மரி தீரம் மெனு நேரம்
வெந்திறல் வேலை யடர்த் தேவரி
மேவு கயற்கண்ணியாரே வாழை மேற்றினன்
குலைத் தாற்றின் கவி யேற்றந் தனைப் பாரீர்.
திரிசூலன் - சிவன். குயத்தால் - அரிவாளால். அரிதீர் - அரிவீர்; அரிவீர் என்பது அரிதீர் எனத் துச்சாரியை பெற்றது; அடுக்கு விரைவின் மேற்று. கவி - குரங்கு. (125)

Page 169
296/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வீறுயர் பாரதக் கதைநூ லம்பொன்
மேருவிற் றீட்டிய பெருமான் றிரை யாறணி சேகரன் மருமா னானை
மாமுகன் தன்றிரு நாட்டிற்
காறகை யாவெழு சாலிப் பசுங்
காயடி யோதையைக் கண்டே வயற்
சேறளை மீன்குதித் தறுமீன் மட்டுஞ்
சேர்வது பாரும்பள் வீரே.
ஆறு அணிசேகரன் - கங்கையைத் தரித்த சிரசை யுடையவன் (சிவபெருமான்). கால் தகையா - காற்றைத்தடுத்து. சாலிப் பசுங்காய் - நெற்பயிரின் முதிர்ந்த நெற்குலை. அறுமீன் - ஆரல் மீன்( ஆகாயத்தில் தோன்றும் நட்சத்திரம்). (126)
(இறதியில் சில பாக்கள் சிதைந்தன)
பறாளை விநாயகள் பள்ளு முற்றிற்று.

அநுபந்தம் - 1
föGIÖölblij LG)GÍ 6uÖÍul jafë Griqsissi
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும் நன்பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை வீசுபுகழ் நல்லூரான் வில்லவரா யன்கணக வாசலிடைக் கொன்றை மரம்.
(இது புலவர் சிறுவனாயிருந்த காலத்தில் தெருவில் விளையாடிநின்ற வேளை ஒருநாள், முதலியார் வீடு யாது?’ எனப் புலவரின் தந்தையாரைத் தேடி வினவிய வடநாட்டுப் புலவரொருவருக்கு விடையாக உடனே பாடிய செய்யுள் எனப்படுகிறது. அதாவது சின்னத்தம்பிப் புலவரை வரகவி என்று உணர்த்துஞ் செய்யுள்)
கடனந்தனவன கண்டத் தனளனங் கன்கணையால் விடனங் கயிலை மயிலையொத் தாள்விட மிக்கதுத்திப் படனந் தகிமுடி மேனின்ற நச்சுப் படவரவின் நடனம் புரிதிம்ம ராச கணேச நரேந்திரனே.
(இது ஒல்லாந்தராட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் அரசசெல்வாக்குப் பெற்று முதலியாராய் விளங்கிய கொச்சிக் கணேசையர்மேற் பாடியது. சின்னத்தம்பிப் புலவர் கொச்சிக் கணேசையராற் சன்மானிக்கப்பெற்றவர். அவ்விபரத்தையும் இச்செய்யுளின் பொருளையும் இந்நூலின் - ஆம் பக்கத்திற் காண்க)
ஆணிப்பொற் கொடைவழங்கும் பெருமாள்தன்
கிளைவாழ்க அனேக காலம் சேணிக்கைப் புகழ்ச்சேது நிலையிட்ட
மாப்பாணன் சேயாம் வேலன் காணிக்கைப் பிரதாப மாகவே
புலவர்வரக் கட்டின் மீது மாணிக்கப் பிரகாசப் பச்சைவடம்
விரித்ததுநல் வடிவு தானே.

Page 170
அநுபந்தம்/298
(இப் பாடல் கரவைவேலன் கோவையின் பாட்டுடைத் தலைவன் வேலாயுதபிள்ளை, சின்னத்தம்பிப் புலவர் கரவெட்டி வரும் வழியில் ஒரு பந்தல் அமைத்து, பச்சைப்பட்டு விரித்த கட்டிலில் புலவரை அமர்வித்து உபசரித்தமைக்கு மகிழ்ந்து பாடியது என்று கூறப்படுகிறது.)
மைத்தவிடப் பணிப்பணியான் வராசனமுஞ்
சராசனமு மலையாக் கொண்ட சித்தனுயர் சிவநிசிமான் மியமிதனைச்
செந்தமிழாற் றெரித்தல் செய்தான் அத்தகைய பாரத்து வாசகோத்
திரனரங்க னருளு மைந்தன் சத்தபுரி களிற்காசிநகள்வரத
பண்டிதன்முத் தமிழ்வல் லோனே.
(இச் செய்யுள், சுள்ளாகம் வரதபண்டிதர் இயற்றிய சிவராத்திரி புராணத்திற்கு, சின்னத்தம்பிப் புலவர் பாடிய சிறப்புப்பாயிரம்.)
தரளவயல் சூழ்தரு தென்காரை யம்பதிச்
சமரகோன் முதலி பேரன் செகராசன் மதிமந்த்ரி யானசின் னத்தம்பிச் செயதுங்க னெழுது மோலை
(இது சின்னத்தம்பிப் புலவர் எழுதிய “சீட்டுக்கவி’ யொன்றின் பகுதி, முழுமையாகக் கிடைக்கவில்லை. இச்சீட்டுக்கவி யாருக்கு எழுதப்பட்டது என்ற விபரமும் தெரியவில்லை)

அநுபந்தம் - 2
இந்நூலுக்குக் கையாண்ட முன்னைய பதிப்புக்களின் நூலமுக்யு முகவுர்ை ஒலியன.
கல்வளையந்தாதி, நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
இயற்றியது.
இது
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரித் தமிழ்ப்போதகாசிரியரும் ‘இந்து சாதன’ பத்திராசிரியருமாகிய
ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை
எழுதிய
பதவுரை, கருத்துரை, விசேடவுரை,
நூலாசிரியர் வரலாறு
என்னுமிவைகளுடன்
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரால்
தமது
சைவப்பிரகாச யந்திரசாலையில்
அச்சிடப்பெற்றது.
பவ வைகாசி
1934
புதியபதிப்பு) CopyRight Registered.) 66oa) gasp 50

Page 171
ET GÄLLD ES LÊ
யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத் தம்பிப்புலவர் இயற்றிய இக்கல்வளை யந்தாதி சொன்னயம் பொருணயம் வாய்ந்துள்ளதென அறிஞர் எவராலும் பாராட்டப்படுவது. இதன் அருமை நோக்கி யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் தாம் நடாத்தும் பால பண்டித பtகூைடிக்கு இதனை ஒருபாடமாக விதித்துள்ளது. இவ்வந்தாதிக்கு இயற்றமிழிப் போதகாசிரியராக விளங்கிய வலி  ைவ ச . வைத்தியலிங்கபிள்ளை செய்த பதவுரை ஒன்று உளது. அதுவே பழைய உரையென வழங்குவது. அவ்வுரை திட்ப நுட்பம் வாய்ந்ததேனும், தமிழ்க் கல்வி அருகிவரும் இக்காலத்து மாணாக்கர்கட்கு உபாத்தியாயர் உதவியின்றிப் பயின்று கொள்வதற்கு அமைந்ததன்றாதலின், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரின் கேள்விப்படி இவ்வந்தாதிக்கு, அந்தப் பழைய உரையைத் தழுவி, அற்பகல்வி யறிவுடையவர்களும் இலகுவில் விளங்கத் தக்கதாக ஒரு விரிவான உரையை எழுதியுள்ளேம். நிரம்பாக் கல்வியுடைய எம்போல் வார்க்கு இவ்வரிய நூலுக்கு உரை எழுதத் துணிவு போதாதாயினும், அக்கல்வளைப் பெருமானாருடைய திருவடிகளைச் சிந்தித்தவண்ணமே இத்தொண்டைச் செய்தோமாதலின் இப்புத்துரை நாம் கருதியவாறு பயன்படு மென்பது எமது நம்பிக்கை. இவ்வுரையை எழுதும்போது எமக்குத் துணைபுரிந்த நண்பர்களாகிய வித்துவான் யூரீ ந. சுப்பையா பிள்ளை, பண்டிதர் பூரீ சி. கணபதிப்பிள்ளை என்னுமிரு வரிடத்தும் நன்றி பாராட்டுகின்றோம். இவ்வுரையின்கண் யாதும் திருத் தற்பாலான வுளவேல் அறிஞர் அதனை எமக்குத் தெரிவிப்பின் அடுத்த பதிப்பில் நன்றியறிதலோடு திருத்தி வைப்பேம். நமது யாழ்ப்பாணத்து விளங்கிய சிறந்த புலவரால் இந்நூல் இயற்றப்பெற்ற காரணம்பற்றித் தமிழகத்தாரனைவரும் இதனை அபிமானித்து ஆதரிப்பரென்பது எமது எண்ணம்.
வண்ணார்பண்ணை, LD. (é6)I.
இந்துசாதனாலயம், திருஞானசம்பந்தன் 23 - 5 - 34

않_
BTSDI flfwi GUGUTO
இக் கல்வளையந்தாதியை இயற்றிய வரகவியாகிய சின்னத்தம்பிப் புலவர் இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர், ஒல்லாந்தர் இந்நாட்டை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்து நல்லூரில் வாழ்ந்த வில்லவராய முதலியா ரென்னும் பிரபுவின் புதல்வராவர். வில்லவராயமுதலியார் உயர்குடிப்பிறப்பு, கல்வி, யொழுக்கம், செல்வம், செல்வாக்கு, அதிகாரம் முதலிய சுகுணங்களோடும் நற்செயல்களோடும் கூடியவர். இம் முதலியாருடைய கல்வித் திறமையையும் நற்குண நற்செய்கை செல்வம் செல்வாக்கு என்னும் இவைகளையும் அறிந்த ஒல்லாந்த அரசினர் தேசவழமையை எழுதுவதற்கு அக்காலத்து விளங்கிய அறிஞர் பன்னிருவரை, ஒருசபையாகக் கூட்டி அச்சபைக்கு வில்லவராய முதலியாரையே தலைவராக நியமனஞ் செய்தனர். இச்சபையார் எழுதிய தேசவழமையே இப்பொழுதும் கையாளப்பட்டு வருவதாகும். அருளம்பல முதலியார், சந்திரசேகரமானாமுதலியார், மனப்புலி முதலியார், வன்னியராய முதலியார், சயம்புநாத முதலியார், சேனாதிராச முதலியார், இராசரத்தின முதலியர் முதலிய பிரபுக்கள் நமது வில்லவராய முதலியாரின் தலைமையில் அச்சபையிலிருந்து தேசவழமையை எழுதியுள்ளார்கள்.
1707-ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 5-ந் தேதி இவர்கள் தேசவழமையை
எழுதி முடித்தவுடன், ஒல்லாந்த தலைவருக்கு எழுதிய கடிதம் தேசவழமைப்பிரதியிற் காணப்படுகின்றது.
இப்படியான அறிவிற் சிறந்த வில்லவராயமுதலியாருடைய புத்திரராகிய இவர் சிறுபராயத்திற் கல்வி கற்றலை அலட்சியஞ் செய்து விளையாட்டிலேயே தம் சிந்தை செல்லப் பெற்றிருந்தா ரென்றும், இங்ங்ணம் மாடுமேய்க்குஞ் சிறுவருடன் கலந்து தெருவில் விளையாடிக்கொண்டு நிற்குஞ் சமையத்தில், இவரது தந்தையாராகிய முதலியாரைக் காணும்படி இந்தியாவிலிருந்து இங்கே வந்த தமிழ்ப்புலவரொருவர், “முதலியாருடைய வீடு எவ்விடத்ததோ’ என்று இவரைக் கேட்க, அப்பொழுது ஏழுவயசுப் பராயமுடையவராகிய இவர்
வசனத்தில் அப்புலவருக்கு விடைசொல்லாமல்,

Page 172
3O2/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும் நன்யூ தலந்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை வீசுபுகழ் நல்லூரான் வில்லவரா யண்கணக வாசலிடைக் கொண்றை மரம்.
எனவிடையிறுத்தனரென்றுஞ் சொல்வர். அதன்பின்பே இவர் வரகவி யென்பது உலகோர்க்குப் புலனாயிற்று. இவர் வரகவி யென்பதற்கு ஆதாரமாக இன்னும் பல ஐதிகங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றை மாத்திரம் இங்கே எடுத்துக் காட்டுகின்றேம். இப்புலவர் பால்யத்திற் கல்வி கல்லாது விளையாட்டிலேயே மனஞ் செல்வாராய்த் திரிவதைக் கண்ட தகப்பனார் பலமுறை புத்திபுகட்டியும் கடிந்தும் தண்டித்தும் இவரைத் திருத்த முயன்றும் இயலாமை கண்டு தம்வீட்டைவிட்டு அகற்றிவிட்டனர். தந்தையார் இவ்வண்ணஞ் செய்தாரேனும், “பொல்லாத சேயெனில் தாய்தள்ள நீதியோ, புகலிடம் பிறிது முண்டோ’ என்றவாறாய் இவர் தாயார் தம்பிள்ளையை முதலியார் இல்லாத சமையம்பார்த்து வீட்டிற்கு வந்து உண்டுவிட்டுப் போகும்படி இரகசியமாக ஒழுங்கு செய்திருந்தார். இப்படித் தினந்தோறும் கரவாக வீட்டிற்கு வந்து தாயிடம் உண்டு சென்ற இவர், ஒரு தினம் கூரையின் உட்புறத்தே ஒரு வெள்ளேடு சொருகி யிருப்பக் கண்டு அதனை எடுத்துப் பார்த்த போது, தமது பிதாவின் கையெழுத்தில் ஒரு அந்தாதிச் செய்யுளில் இரண்டு அடிகள் மாத்திரம் வரையப்பட்டிருத்தலைக் கண்டு, மற்றை இரண்டு அடிகளையும் எழுதி அச்செய்யுளைப் பூரணமாக்கி ஏட்டினைப் பழையபடி சொருகிவிட்டு விளையாடப் போய்விட்டார். அன்று சிறிது நேரஞ்செல்லத் தம் வீட்டிற்கு மீண்டு வந்த முதலியார் தாம் பாடிக் குறையில் வைத்த செய்யுளை நிரப்பும்படி அந்த ஏட்டை எடுத்துப் பார்த்தபோது ஈற்றடி யிரண்டும், தாம் எண்ணியிருந்ததினும் பார்க்க அதிக சொற்சுவை பொருட் சுவைகளோடு வரையப்பட்டிருதலைக் கண்டு அற்புதங்கொண்டு “இங்கு யார் நான் இல்லாத நேரத்தில் வந்தார்’ என்று தம் மனைவியாரை வினவ, அவர் சிறிது யோசித்து விட்டுப் பின்னர் “உங்கள் மகனைத் தவிர வேறு எவரும் இங்கே வரவில்லை’ என்று தெரிவிக்க, முதலியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டு தன்மகனைக் கூப்பிடுவித்து அன்புபாராட்டி வித்தை கற்பித்து வந்தனர். நமது புலவர் வரகவியாயிருந்ததோடு மாத்திரம் அமையாது இலக்கண இலக்கியங்களைச் சந்தேக விபரீதமற ஆசானிடத்திற் கிரமமாகப் பயின்றுள்ளா ரென்பது, அவர் இயற்றிய நூல்களை ஆராய்வார்க்குத் தெற்றெனப் புலப்படும்.

அநுபந்தம்/303
மேலும் நமது புலவர் புராணேதிகாசங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின்கணுள்ள நுண்பொருளையுணர்ந்துள்ளாரென்பது கீழ் வரும் ஐதிகத்தால் இனிது விளங்கும். ஒல்லாந்தர் காலத்தில் உத்தியோகம் அரசசந்மானம் என்னுமிவைகளோடு வாழ்ந்த கணேசையர் என்பவர் தமது இல்லத்திற் பல வித்துவான்களை அழைத்து நாள்தோறும் இராமாயணத்திற்கு அர்த்தஞ் சொல்லுவித்து வந்தாரென்றும், ஒருதினம் அவ்வித்துவான்கள் கம்பசூத்திர மொன்றிற்குப் பொருள்காணவியலாது மயங்கிய விடத்து, இப்புலவர் அதன் பொருளை அச்சபையிலுள்ளார்க்குத் தெள்ளிதில் விளக்கிச் சபையோரை அற்புதமுறச் செய்தா ரென்றும், அதற்கு மகிழ்ந்து கணேசையர் நல்லூரிலுள்ள பண்டாரக்குளம் என்னும் வயலைப் புலவருக்குச் சந்மானமாகக் கொடுத்தாரென்றும் வரலாறுண்டு.
சின்னத்தம்பிப்புலவரவர்கள் இயற்றிய நூல்கள் மறைசை யந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன்கோவை, பறாளை விநாயகர் பள்ளு என்னுமிவைகளாம். இவற்றுள் முதனின்ற மறைசை யந்தாதியை, நமது புலவர், சிதம்பரம் வேதாரணியம் முதலாம் சிவஸ்தலங்கட்கு யாத்திரை சென்ற காலத்து வேதாரணியேசுவரர் மீது பாடினரென்ப. அவ்வந்தாதிக்கு உடுப்பிட்டி, அ. சிவசம்புப் புலவரும், மதுரை மகாவித்துவான் சபாபதிமுதலியாரும் தனித்தனி உரை இயற்றியுள்ளனர். அவ்வந்தாதி சிவசம்புப் புலவருடைய உரையோடு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரால் அச்சிடப்பெற்றுள்ளது.
இரண்டாவதாகவுள்ள கல்வளை யந்தாதி சண்டிருப்பாயிலுள்ள புராதன தலமாகிய கல்வளைப்பதியில் எழுந்தருளிய விநாயகர் மீது பாடப்பெற்றதாகும். சிவசம்புப் புலவரவர்களின் மாணாக்கரும் இயற்றமிழ்ப் போதகாசிரியருமாகிய வல்வை: ச. வைத்தியலிங்கபிள்ளை யவர்கள் இவ்வந்தாதிக்கு ஒரு நுட்பமான உரையெழுதிப் பல வருடங்கட்கு முன்னர் அச்சிடுவித்து வெளிப்படுத்தியுள் ளார். அந்த உரையையே “பழைய உரை” என்னும் பெயரோடு சென்னை எஸ். அநவரத விநாயகம்பிள்ளையவர்கள் பரிசோதித்து ‘ரிப்பன் அச்சியந்திரசாலையில் அச்சிடுவித்து வெளியிட்டுள்ளார். வைத்திலிங்கபிள்ளை யவர்கள் எழுதிய உரையைத் தழுவியே இப்பொழுது இவ்விரிவுரை எழுதப் பெற்றதாகும்.

Page 173
3O4/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
மூன்றாவதாகவுள்ள கரவை வேலன்கோவை வட மராட்சியைச் சேர்ந்த கரவெட்டியில் வாழ்ந்த வேலாயுதபிள்ளை என்னும் பிரபுவின் மேற் பாடப்பெற்றதாகும். இக்கோவையிலுள்ள சில கவிகள் செந்தமிழ்ப் பத்திரிகையில் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் எழுதிய உரையுடன் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒரு செய்யுளை உரையுடன் இங்கு எடுத்துக் காட்டுதும்:
முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் அதுத்தம் பயின்மொழி யற்சொல்லுஞ் சால்வழிச் குல்பெருகும் நத்தம் பயிலுங் கரவையில் வேலனன் னாட்டிலுங்கள் சித்தம் பயிலபதி சொல்ல7 திருக்குந் தெரிவையரே.
தெரிவையரே! நும் பெயர் சொல்லும் என முடிக்க. முத்தம் பொதியும் பவளந் திறந்து என்பது உருவக வுயர்வுநவிற்சியணி. வாயைத்திறந்து எனப் பொருள்படும். முத்தம் என்றது பற்களை. பவளம் என்றது வாயினை. துத்தம் பயில்மொழி - பாலினை யொத்த சொல். சூல் பெருகும் நத்தம் - கரு முதிர்ந்த சங்கு. சித்தம் பயில்பதி - மனம் பயின்ற ஊர்.
இந்நூல் முழுவதும் அகப்பட்டுள்ளதெனவும், இது விரைவில் அச்சாகி வெளிவருமெனவும் அறிந்து மகிழ்ச்சியுறுகின்றேம்.
இறுதியிற் சொல்லப்பட்ட பறாளை விநாயகர் பள்ளுச் சுழிபுரத்தைச் சேர்ந்த பறாளை (பறளாய்) என்னுந் தலத்திற் கோயில் கொண்டருளிய விநாயகக்கடவுள் மேற் பாடப்பெற்றது; சொற்சுவை பொருட்சுவிை மலிந்தது. இது மலாய - சுழிபுர ஐக்கிய சங்கத்தின் பொருளுதவி கொண்டு, வித்தியாபிமானியாகிய திருமயிலை சே. வெ. ஐம்புலிங் கம்பிள்ளையால் பரிசோதித்து அச்சிடுவிக்கப்பெற்று வெளிவந்திருக்கின்றது.
இவர்காலத்தில் விளங்கிய தமிழ்ப்புலவர்கள், கூழங்கைத் தம்பிரான், சித்தாந்த சரபம் சொக்கலிங்க தேசிகர், சிவராத்திரி புராணம் ஏகாதசிபுராணம் முதலியவற்றை இனிது பாடிய வரதராஜ கவிராசர், புலியூரந்தாதி யாழ்ப்பாண வைபவம் என்னும் இவைகளை இயற்றிய மாதகல் மயில்வாகனப்புலவர் முதலியவர்களாவர். வரதராஜகவிராசர் இயற்றிய சிவராத்திரி புராணத்திற்கு இச்சின்னத்தம்பிப்புலவரும் மாதகல் மயில்வாகனப் புலவரும் பாயிரம்

C-9. LBLJibbin /3O5
பாடியுள்ளனர். இவற்றால் ஒல்லாந்தர் நமது யாழ்ப்பாணத்தைப் பரிபாலித்த காலத்தில் தமிழ்மொழி பெரிதும் விருத்தியடைந்த தென்பதும், பல அரிய நூல்கள் தமிழிற் செய்யப்பட்டன என்பதும், இந்த ஆங்கில பரிபாலன காலத்திலேயே தமிழ்மொழி அதோகதி யடையலாயிற்றென்பதும் நன்கு புலப்படும்.
இவை இங்ங்ணமாக, இப்புலவரது வரலாற்றை எழுதிய சரித்திர நூலாசிரியர்கள் சிலர், இவரது தந்தையாராகிய வில்லவராய முதலியாரையும் பிற்காலத்திலிருந்த வில்லவதாசமுதலியார் என்பவரையும் ஒருவரென மயங்கி எழுதியிருப்பக் காணப் படுகின்றது. வில்லவராய முதலியார் நல்லூரை ஜெந்மஸ் தானமாகக் கொண்டவர்; இவர் தேசவழமைச் சங்கத்தில் தலைமை வகித்துத் தேசவழமையை எழுதி முற்றுவித்த தினம் 1707-ம் ஆண்டு ஏப்பிரல் மாசம் 5-ந் தேதி என்பதை மேலே காட்டி யுள்ளேம்: இனி மற்ற வில்லவதாச முதலியார் காலம் இம்முதலியாருக்கு 140 வருடம் வரையிற் பிந்தியதாகும். இத்தாச முதலியாரின் இயற் பெயர் தாமோதரர் சிற்றம்பலமாகும். இவர் சங்கானை மடப்பத்தைச் சேர்ந்தவர்; ஜெந்மவூருஞ் சங்கானையாகும். பெண்கொண்டு வசித்த ஊர் சண்டிருப்பாயென்பர். சென்ற 1849-ம் ஆண்டு மே மாதம் 25-ம் திகதி இவ்வில்லவதாச முதலியார் தமது கைச்சாத்தோடு முடித்துக் கொடுத்த நன்கொடை உறுதிச் சாதன மொன்றை நாம் நேரிற்பார்த்துள்ளேம். இவரை நேரில் அறிந்த காலங் கண்ட முதியோர் சிலர் இப்பொழுதும் உள்ளனர். சண்டிருப்பாயில் “முதலியார் வளவு’ என வழங்கும் காணியும் இவருடையதேயாகும். இந்த ஆதாரங்களால் நல்லூர் வில்லவராய முதலியார் வேறு, சணண்டிருப்பாய் வில்லவதாச முதலியார் வேறு என்பது ஆசங்கையின்றி இனிது விளங்கக்கிடக்கின்றது.

Page 174
மறைசையந்தாதி,
நல்லூர் : சின்னத்தம்பிப்புலவர் இயற்றியது.
இஃது உடுப்பிட்டி
பூனிமத். அ. சிவசம்புப்புலவர்
எழுதிய உரையுடன்
நூலாசிரியர் வரலாறுஞ் சேர்த்து
யாழ்ப்பாணம்
சைவபரிபாலன சபையாரால்
தமது
சைவப்பிரகாசயந்திரசாலையில்
அச்சிடப்பெற்றது.
Lion eig. 1934
பிரதிகள் 500) விலை சதம் 30.

TGOTiffwit GugGOTO
இம் மறைசையந்தாதியை இயற்றிய வரகவியாகிய சின்னத் தம்பிப் புலவர் இற்றைக்கு இருநூறு வருடங்கட்கு முன்னர், ஒல்லாந்தர் இந் நாட்டை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்து நல்லூரில் வாழ்ந்திருந்த வில்லவராயமுதலியாரென்னும் பிரபுவின் புதல்வராவர். வில்லவராயமுதலியார் உயர்குடிப்பிறப்பு, கல்வியொழுக்கம், செல்வம், செல்வாக்கு, அதிகாரம் முதலிய சுகுணங்களோடும் நற்செயல்களோடும் கூடியவர். இம் முதலியாருடைய கல்வித்திறமையையும் நற்குண நற்செய்கை செல்வம் செல்வாக்கு என்னும் இவைகளையும் அறிந்த ஒல்லாந்த அரசினர் தேசவழமையை எழுதுவதற்கு அக்காலத்து விளங்கிய அறிஞர் பன்னிருவரை, ஒருசபையாகக் கூட்டி அச்சபைக்கு வில்லவராய முதலியாரையே தலைவராக நியமனஞ் செய்தனர். இச்சபையார் எழுதிய தேசவழமையே இப்பொழுதும் கையாளப்பட்டு வருவதாகும். அருளம்பலமுதலியார், சந்திரசேகரமானா முதலியார், மனப்புலி முதலியர், வன்னியராய முதலியார். சயம்புநாதமுதலியார், சேனாதிராசமுதலியார், இராசரத்தின முதலியார் முதலிய பிரபுக்கள் நமது வில்லவராய முதலியாரின் தலைமையில் அச்சபையிலிருந்து தேசவழமையை எழுதியுள்ளார்கள்.
1707-ம் ஆண்டு ஏப்பிரல் 5-ந் திகதி இவர்கள் தேசவழமையை எழுதி முடித்தவுடன், ஒல்லாந்த தலைவருக்கு எழுதிய கடிதம் தேசவழமைப்பிரதியிற் காணப்படுகின்றது.
இப்படியான அறிவிற் சிறந்த வில்லவராய முதலியாருடைய புத்திரராகிய இவர் சிறுபராயத்திற் கல்வி கற்றலை அலட்சியஞ் செய்து விளையாட்டிலே தம் சிந்தை செல்லப்பெற்றிருந்தாரென்றும், இங்ங்ணம் மாடுமேய்க்குஞ் சிறுவருடன் கலந்து தெருவில் விளையாடிக்கொண்டு நிற்குஞ் சமையத்தில், இவரது தந்தையாராகிய முதலியாரைக் காணும்படி இந்தியாவிலிருந்து இங்கே வந்த தமிழ்ப்புலவரொருவர், “முதலியாருடைய வீடு எவ்விடத்ததோ’ என்று இவரைக் கேட்க, அப்பொழுது ஏழுவயசுப் பராயமுடையவராகிய இவர் வசனத்தில் அப்புலவருக்கு விடை சொல்லாமல்,
பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும் நன்யூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை வீசுபுகழ் நல்லூரான் வில்லவர7 யன்கணக வாசலிடைக் கொண்றை மரம்.

Page 175
3O8/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
என விடையிறுத்தாரென்றுஞ்சொல்வர். அதன்பின்பே இவர் வரகவியென்பது உலகோர்க்குப் புலனாயிற்று. இவர் வரகவி யென்பதற்கு ஆதாரமாக இன்னும் பல ஐதிகங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றை மாத்திரம் இங்கே எடுத்துக் காட்டுகின்றேம். இப் புலவர் பால்யத்திற் கல்வி கல்லாது விளையாட்டிலேயே மனஞ் செல்வாராய்த் திரிவதைக் கண்ட தகப்பனார் பலமுறை புத்திபுகட்டியும் கடிந்தும் தண்டித்தும் இவரைத் திருத்த முயன்று இயலாமை கண்டு தம்வீட்டைவிட்டு அகற்றிவிட்டனர். தந்தையர் இவ்வண்ணஞ் செய்தாரேனும், “பொல்லாத சேயெனில் தாய் தள்ள நீதியோ, புகலிடம் பிறிதுமுண்டோ’ என்றவாறாய் இவர் தாயார் தம்பிள்ளையை முதலியார் இல்லாத சமையம்பர்த்து வீட்டிற்குவந்து உண்டுவிட்டுப் போகும்படி இரகசியமாக ஒழுங்கு செய்திருந்தார். இப்படித் தினந்தோறும் கரவாக வீட்டுக்கு வந்து தாயிடம் உண்டுசென்ற இவர் ஒருதினம் கூரையின் உட்புறத்தே ஒரு வெள்ளேடு சொருகி இருப்பக் கண்டு அதனை எடுத்துப் பார்த்தபோது, தமது பிதாவின் கையெழுத்தில் ஒரு அந்தாதிச் செய்யுளில் இரண்டு அடிகள் மாத்திரம் வரையப்பட்டிருத்தலைக் கண்டு, மற்றை இரண்டு அடிகளையும் எழுதி அச்செய்யுளைப் பூரணமாக்கி ஏட்டினைப் பழையபடி சொருகிவிட்டு விளையாடப் போய்விட்டார். அன்று சிறிது நேரஞ்செல்லத் தம் வீட்டிற்கு மீண்டு வந்த முதலியார் தாம்பாடிக் குறையில் வைத்த செய்யுளை நிரப்பும்படி அந்த ஏட்டை எடுத்துப் பார்த்தபோது ஈற்றடி யிரண்டும், தாம் எண்ணியிருந்ததினும்பார்க்க அதிக சொற்சுவை பொருட் சுவைகளோடு வரையப்பட்டிருத்தலைக் கண்டு அற்புதங்கொண்டு “இங்கு யார் நான் இல்லாத நேரத்தில் வந்தார்’ என்று தம் மனைவியாரை வினவ, அவர் சிறிது யோசித்துவிட்டுப் பின்னர் “உங்கள் மகனைத் தவிர வேறு எவரும் இங்கேவரவில்லை’ என்று தெரிவிக்க, முதலியார் அடங்கா மகிழ்ச்சி கொண்டு தன்மகனைக் கூப்பிடுவித்து அன்பு பாராட்டி வித்தை கற்பித்து வந்தனர். நமது புலவர் வரகவியாயிருந்ததோடு மாத்திரம் அமையாது இலக்கண இலக்கியங்களைச் சந்தேக விபரீதமற ஆசானிடத்திற் கிரமமாகப் பயின்றுள்ளா ரென்பது, அவர் இயற்றிய நூல்களை ஆராய்வார்க்குத் தெற்றெனப் புலப்படும்.
மேலும் நமது புலவர் புராணேதிகாசங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின்கண்ணுள்ள நுண்பொருளை யுணர்ந்துள்ளா ரென்பது கீழ்வரும் ஐதிகத்தால் இனிது விளங்கும். ஒல்லாந்தர் காலத்தில் உத்தியோகம் அரச சந்மானம் என்னுமிவைகளோடு வாழ்ந்த கணேசையர் என்பவர் தமது இல்லத்திற் பல வித்துவான்களை அழைத்து நாள்தோறும் இராமாய ணத்திற்கு அர்த்தஞ் சொல்லுவித்துவந்தாரென்றும், ஒருதினம் அவ்வித்து வான்கள் கம்பசூத்திர பொன்றிற்குப் பொருள் காணவியலாது மயங்கியவிடத்து,

அநுபந்தம்/309
இப்புலவர் அதன் பொருளை அச்சபையிலுள்ளார்க்குத் தெள்ளிதில் விளக்கிச் சபையோரை அற்புதமுறச் செய்தாரென்றும், அதற்கு மகிழ்ந்து கணேசையர் நல்லூரிலுள்ள பண்டாரக்குளம் என்னும் வயலைப் புலவருக்குச் சந்மானமாகக் கொடுத்தாரென்றும் வரலாறுண்டு.
சின்னத்தம்பிபுலவரவர்கள் இயற்றிய நூல்கள் மறைசையந்தாதி, கல்வளையந்தாதி, கரவை வேலன்கோவை, பறாளை விநாயகர் பள்ளு என்னுமிவைகளாம். இவற்றுள் முதனின்ற இம்மறைசை யந்தாதியை, நமது புலவர், சிதம்பரம் வேதாரணியம் முதலாம் சிவஸ்தலங்கட்கு யாத்திரை சென்ற காலத்து வேதாரணியேசுவரர் மீது பாடினரென்ப. இவ்வந்தாதிக்கு உடுப்பிட்டி, அ. சிவசம்புப் புலவரும், மதுரை மகாவித்துவான் சபாபதிமுதலியாரும் தனித்தனி உரை இயற்றியுள்ளனர். இவ்வந்தாதி சிவசம்புப் புலவருடைய உரையோடு யாழ்ப்பாணம் சைவ பரிராலன சபையாரால் அச்சிடப் பெற்றுள்ளது.
இரண்டாவதாகவுள்ள கல்வளை யந்தாதி சண்டிருப்பாயிலுள்ள புராதன தலமாகிய கல்வளைப்பதியில் எழுந்தருளிய விநாயகர் மீது பாடப்பெற்றதாகும். இதுவும் மேற்படி சபையாரால் இப்பொழுது புத்துரையோடு வெளியிடப் பெற்றுள்ளது. மூன்றாவதாகவுள்ள கரவை வேலன்கோவை வடமராட்சியைச் சேர்ந்த கரவெட்டியில் வாழ்ந்த வேலாயுதம்பிள்ளை என்னும் பிரபுவின் மேற் பாடப் பெற்றதாகும். இக்கோவையிலுள்ள சில கவிகள் செந்தமிழ்ப் பத்திரிகையில், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் எழுதிய உரையுடன் வெளிவந்துள்ளன. இந்நூல் முழுவதும் அகப்பட்டுள்ளதெனவும், இது விரைவில் அச்சாகி வெளிவரு மெனவும் அறிந்து மகிழ்ச்சியுறுகின்றேம்.
இறுதியிற் சொல்லப்பட்ட பறாளை விநாயகர் பள்ளு, சுழிபுரத்தைச் சேர்ந்த பறாளை (பறளாய்) என்னுந் தலத்திற் கோயில் கொண்டருளிய விநாயகக் கடவுள்மேற் பாடப்பெற்றது; சொற்சுவை பொருட்சுவை மலிந்தது. இது மலாய-சுழிபுர ஐக்கிய சங்கத்தின் பொருளுதவிகொண்டு, வித்தியாபிமானியாகிய திரு மயிலை சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளையாற் பரிசோதித்து அச்சிடுவிக்கப் பெற்று வெளிவந்திருக்கின்றது.
இந்நூலாசிரியர் காலத்து விளங்கிய தமிழ்ப்புலவர்கள், கூழங்கைத்தம்பிரான், சித்தாந்தசரபம் சொக்கலிங்கதேசிகர், சிவராத்திரி புராணம், ஏகாதசிபுராணம் முதலியவற்றை இனிது பாடிய வரதராஜகவிராசர், புலியூரந்தாதி யாழ்ப்பாண வைபவம் என்னும் இவைகளை இயற்றிய மாதகல் மயில்வாகனப் புலவர் முதலியவர்களாவர். வரதராஜகவிராசர் இயற்றிய சிவராத்திரி புராணத்திற்கு,

Page 176
31O/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இந் நூலாசிரியராகிய சின்னத்தம்பிப்புலவரும் மாதகல் மயில்வாகனப் புலவரும் பாயிரம் பாடியுள்ளனர். இவற்றால் ஒல்லாந்தர் நமது யாழ்ப்பாணத்தைப் பரிபாலித்த காலத்தில் தமிழ்மொழி பெரிதும் விருத்தியடைந்த தென்பதும், பல அரிய நூல்கள் தமிழிற் செய்யப்பட்டன என்பதும், இந்த ஆங்கில பரிபாலன காலத்திலேயே தமிழ்மொழி அதோகதி யடையலாயிற்றென்பதும் நன்கு புலப்படும்.
இவை இங்ங்ணமாக, இப்புலவரது வரலாற்றை எழுதிய சரித்திர நூலாசிரியர்கள் சிலர் இவரது தந்தையாராகிய வில்லவராய முதலியாரையும் பிற்காலத்திலிருந்த வில்லவதாச முதலியார் என்பவரையும் ஒருவரென மயங்கி எழுதியிருப்பக் காணப்படுகிறது. வில்லவராயமுதலியார் நல்லூரை ஜெந்மஸ்தானமாகக் கொண்டவர்; இவர் தேசவழமைச் சங்கத்தில் தலைமை வகித்துத் தேச வழமையை எழுதி முற்றுவித்த தினம் 1707-ம் ஆண்டு ஏப்பிரல் மாசம் 5-ந் தேதி என்பதை மேலே காட்டியுள்ளோம்: இனி மற்ற வில்லவதாச முதலியார் காலம் இம் முதலியாருக்கு 140 வருடம் வரையிற் பிந்தியதாகும். இத்தாச முதலியாரின் இயற்பெயர் தாமோதரர் சிற்றம்பலமாகும். இவர் சங்கானை மடப்பத்தைச் சேர்ந்தவர், ஜெக்மவூருஞ் சங்கானையாகும். பெண் கொண்டு வசித்த ஊர் சண்டிருப்பாயென்பர். சென்ற 1849-ம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி இவ்வில்லவதாச முதலியார் தமது கைச்சாத்தோடு முடித்துக் கொடுத்த நன்கொடை உறுதிச் சாதனமொன்றை நாம் நேரிற் பார்த்துள்ளேம். இவரை நேரில் அறிந்த காலங்கண்ட முதியோர் சிலர் இப்பெழுதும் உள்ளனர். சண்டிருப்பாயில் “முதலியார் வளவு’ என வழங்கும் காணியும் இவருடையதேயாகும். இந்த ஆதாரங்களால் நல்லூர் வில்லவராய முதலியார் வேறு, சண்டிருப்பாய் வில்லவதாச முதலியார் வேறு, என்பது ஆசங்கையின்றி இனிது விளங்கக் கிடக்கின்றது.

யா. ஆ. தி. பா. சங்க வெளியீடு - 1
கடவுள் துணை.
யாழ்ப்பாணத்து நல்லூர்ச்
சின்னத்தம்பிப்புலவர் இயற்றிய
கரவைவேலன்கோவை
இது
யாழ்ப்பாணம்
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்
சங்கத்தாருக்காக
சங்கக் காரியதரிசி
தி. சதாசிவஐயரால்
அரும்பதவுரையுடன்
யாழ்ப்பாணம்
சைவப் பிரகாச யந்திரசாலையில்
அச்சிட்டு வெளியிடப்பட்டது.
20.02.1935
விலை சதம் 75 (அனா 12)] All Rights Reserved.

Page 177
(D66GDJ
கரவைவேலன் கோவை என்பது கரவையிலிருந்த வேலன்மேற் பாடப்பட்ட கோவைப் பிரபந்தமென விரியும். கரவை என்பது கரவெட்டி யென்பதன் மரூஉ: மாவை (மாவிட்டபுரம்) வல்வை (வல்வெட்டி) புதுவை (புதுக் கோட்டை, புதுச்சேரி) என்பனபோல. கரவெட்டி என்பது யாழ்ப்பாணத்தி லிருந்து பருத்தித்துறைக்குச் செல்லுந்தெருவில் 17வது மைலில் இருக்கும் ஒரு கிராமம். வேலன் ஸ்ன்றது வேலாயுதபிள்ளை என்னும் பிரபுவை. இவருடைய முழுப்பெயர் சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுத பிள்ளையென்பது. இவர் பெயர் வேலாயுதர், வேலாயுத உடையார், வேலாத்தை உடையார் எனப் பலவிதமாகவும் வழங்கும். இப்பிரபுவின்மேல் இக்கோவைப் பிரபந்தத்தைப் பாடினார் யாழ்ப்பாணத்து நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவராகுமென்பது.
வேலாயுதப்ள்ளை
இக்கோவைப் பிரபந்தத்தின் பாட்டுடைத் தலைவனாக விளங்கும் வேலாயுதபிள்ளை கரவெட்டியில் வேளாண் குலத்திற் பிறந்து செல்வமுஞ் சிறப்புமுற்று வாழ்ந்த ஒரு பெரும் பிரபு ஆவர். இவருடைய தந்தையார் பெயர் சேதுநிலையிட்ட மாப்பாணமுதலியார் என்பது. இவர் இற்றைக்கு ஏறக்குறைய 200 வருடங்களுக்குமுன் இலங்கையை ஒல்லாந்தர் ஆளுகை செய்தகாலத்தில் இருந்தவர். ஒல்லாந்த அரசினர் சனங்களிடமிருந்து நிலவரி தண்டுதற்கு ஆதாரமாக அமைத்துக் காலத்துக்குக்காலந் திருத்தி வைத்துக்கொண்ட சாதனம் தோம்பு என்னப்படும். தோம்பு என்பது புத்தகம் என்னும் பொருள் கொண்ட ஒரு பறங்கிப்பாஷைச் சொல்லாகும். இந்நிலவரித் தோம்பு காணித்தோம்பு எனவும்படும். இத்தோம்பில் நன்செய் புன்செய் நிலங்களும் அவற்றின் பெயர்களும் அவற்றிலுள்ள பயிர்வகைகளும், அந்நிலங்களின் சொந்தக்காரருடைய பெயர்களும் இறுக்கவேண்டிய வரிப்பணத் தொகையும் முதலிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இவ்விதமாகிய காணித்தோம்பு ஒல்லாந்தராற் கடைமுறையாகத் திருத்தப்பட்ட காலம் கி.பி. 1754-ம் ஆண்டென்பர். இங்ங்னந் திருத்தப்பட்ட ஒல்லாந்தருடைய தோம்பைப் படியெடுத் தெழுதிய ஒலைச்சுவடிகள் இப்போதும் யாழ்ப்பாணக் கச்சேரி ஆவண சாலையில் (Records Office) சேமமாக வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் கரவெட்டி வென்றிபாகுதேவன்
* டாக்கள். போ. பீறிஸ் இயற்றிய “இலங்கையும் ஒல்லாந்தரும்” பக்கம் 77. எனினும் நல்லூர்க்
குறிச்சித்தோம்பு 1787-ம் ஆண்டிலுந் திருத்தப்பட்டதென்பது அத்தோம்பிற் குறிக்கப்பட்டிருக்கிறது.

அநுபந்தம் /313
குறிச்சிக்குரிய காணித்தோம்பில் சில நிலங்களின் சொந்தக்காரனாகச் சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதர் என்னும் பெயர் காணப்படுகின்றது. இதுவே இக்கோவைப் பாட்டுடைத் தலைவன் பெயர் என்பது,
சேது நிலையிட்ட மாப்பான வீன்றருள் செல்வண்கலை ஒது வரிசைக் கரவையில் வேலன் உயர்சிலம்பில் (செய், 9)
என இந்நூலகத்துவருஞ் சான்றினால் நன்கு துணியப்படும். அதனால், இக்கோவையிற் பாடப்பட்டோராகிய வேலாயுதபிள்ளை என்பவர் கிபி. 1754-ம் ஆண்டுக்கு முன்னமே பிறந்து வளர்ந்து தக்க பிராயம் எய்தியவராதல் வேண்டுமென்பது வெளிப்படையாகும். ஆகவே இவர் பிறந்தகாலம் கி.பி.1730-க்கு 5 வருடம்வரை முன்பின்னாக இருத்தல் கூடுமென்பது மிகையாகாது.
இவருக்குப் புதுநாச்சி என்னும் பெயரையுடைய ஒரு சகோதரியுண் டென்பதும் முற்குறித்த தோம்பிற் கண்டது. இவர் இளைஞராயிருந்த போது சேது, இராமேச்சுரம், சிதம்பரம் முதலிய புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செய்து சிலகாலம் இராமேச்சுரத்தில் வசித்து வந்தாரென்றும், மலையாளதேசஞ் சென்று மாந்திரீகவித்தை கற்றாரென்றுங் கூறுப. இவருக்குச் சிற்றம்பலம் என ஒரு மகன் உண்டென்பது,
தாரணி மெச்சிய சிற்றம் பலவனைத் தந்ததந்தை
என இந்நூலுட் கூறப்படுவதனா லறியப்படும். இவருக்குப் புத்திரிகள் ஏழு பேர் இருந்தார்களென்றும் அவர்களுக்கு அங்கங்குத் தக்க வரன்களைத் தேடி விவாகஞ் செய்வித்து வேண்டிய சீர் சிறப்புக்கள் நல்கிக் கரவெட்டியில் இருத்தினா ரென்றுங் கூறுப. இவர்களின் வழித்தோன்றல்களாக அநேகள் இக்காலத்திற் கரவெட்டியில் இருக்கிறார்கள். இவர்கள் வேலாயுதபிள்ளையுடைய 6-ம் 7-ம் சந்ததியாராவர்.
வேலாயுதபிள்ளை பெருஞ் செல்வராக விளங்கினதுமன்றிப் பெருந் தருமசீலராகவும் விளங்கினார். இவரூரில் ஏழு மட புண்ணியங்கள் இவராலமைக்கப்பட்டனவென்பர். அவற்றுள் தம்பான்மடம், தாளங்குடிமடம் என இரண்டு மடங்கள் இப்போதும் இவர் பெயரால் வழங்கிக் கரவெட்டிப் பகுதியிற் கிலமாயிருப்பக் காணலாம். இவருக்குச் சொந்தமாகத் திரைகடற்புரவி, சிங்காரப்புரவி, என இரு கப்பல்கள் இருந்தன வென்ப.

Page 178
34/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இவர் பெயர் வேலாயுத உடையார் எனச் சிறுபான்மையாக வழங்கினும் இவர் ஒல்லாந்த அரசாட்சியில் உடையார் உத்தியோகம் வகித்தவரல்லர்.
நூல் பாடப்பட்ட வரலாறு
சேதுநிலையிட்ட மாப்பாணமுதலியார் காலத்தில் இரு மரபுந்துய்யமாப்பாண முதலியார் என வேறும் ஒரு வேளாளகுலப் பிரபு கரவெட்டியில் இருந்தார். இந்த இரு குடும்பத்தவர்க்குட் பகைமையுண்டாகி ஒருவர்க்கொருவர் தீங்கிழைத்து வந்தனர். வசைக்கவி பாடியும் மாந்திரீகச் செய்கைகள் செய்தும் ஒரு குடும்பத்தார் மற்றக் குடும்பத்தாரை வெல்லமுயல்வாராயினர். வேலாயுதபிள்ளை காலத்தில் அவரது எதிரிகள் தங்களுக்குப் புகழாகவும் அவருக்கு இகழாகவும் கவி பாடுவிக்க எண்ணி அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த நல்லூர்ச் சின்னத்தம்பிப்புலவரை அழைப்பித்தாராக, அதனைக் கேள்வியுற்ற வேலாயுதபிள்ளை, புலவர் வரும்வழியில் தாமே முன்னதாகச் சென்று ஓரெல்லைமானப் பந்தல் அமைப்பித்து மேற்கட்டி முதலியவற்றால் அலங்களிப்பித்து அதிற் புலவரை வரவேற்றுப் பச்சைப்பட்டு விரித்த கட்டிலில் அமர்வித்து உபசரித்துத் தமக்கு நன்மை பெருகும்படி தம்மேல் ஒரு தமிழ்ப்பிரபந்தம் பாடும்படி வேண்டிக்கொண்டனர். புலவரும் பிள்ளையவர்கள் செய்த வரவேற்புபசாரங்களுக்கு மகிழ்ந்து அவர்வேண்டுகோட்கியைந்து இக்கோவைப் பிரபந்தத்தைப் பாடினர். பாடும்போது ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு வராகன் உட்புதைந்த ஒவ்வொரு தேங்காய் பரிசிலாகப் புலவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு வேலாயுதபிள்ளை சின்னத்தம்பிப்புலவரை வரவேற்று உபசரித்துப் பாடல் பெற்ற இடம் எல்லைமானப்பந்தலடி என இன்றும் வழங்கி வருகின்றது. இது யாழ்ப்பாணத்திலிருந்து மட்டுவில் வழியாகக் கரவெட்டிக்குச் செல்லும் மார்க்கத்திற் கப்புநாவெளி என்னும் இடத்திலுள்ளது. பிள்ளையவர்களின் எதிரிகள் தாம் அழைப்பித்த புலவரைக் கொண்டே அவர் தமக்குச் செந்தமிழ்ப்பாமாலை சூட்டுவித்துக்கொண்ட செய்தியைக் கேள்வியுற்றுப் பின் ஒன்றுஞ் செய்யலாற்றாது வாளா இருந்தனர். இதுவே இந்நூல் பாடப்பட்ட வரலாறென்ப. கட்டிலின்மேற் பச்சைப்பட்டு வித்து அதிலிருத்தி யுபசரித்ததை வியந்து புலவர் சொல்லியதாக வழங்கிவருஞ் செய்யுள் ஒன்று வருமாறு:-
* தென்மராட்சிப்பிரிவு மணியகாரனாயிருந்து இப்போது இளைப்பாறியிருக்கும் V முதலியார் சிற்றம்பலம் மணியமவர்கள் இவருடைய 5-வது வழித்தோன்றலாவர். இவர்க்குப்பின் இரு சந்ததி இப்போதுண்டு.

அநுபந்தம் /315
ஆணிப்பொற் கொடைவழங்கும் பெருமாள்தன்
கிளைவழிக வனேக காலம் சேணிக்கைப் புகழிச்சேது நிலையிட்ட
மாப்பாணனி சேயாம் வேலன் (5/7600fisops/ 1523.7L/ I0/7(56.2/
புலவர்வரக் கட்டின் மீது மாணிக்கப் பிரகாசப் பச்சைவடம்
விரித்ததுநல் வடிவு தானே.
சின்னத்கும்பிப் புலவர்
சின்னத்தம்பிப்புலவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் வேளாள குலத்தில் வில்லவராய முதலியாருடைய அருந்தவப் புதல்வரா யுதித்தவர். இதனை,
செந்தா தியன்மணிப் பூணபுலியூரர்க்குச் சேர்ந்தளித்துச் சிந்தாத் தியானஞ்செய் வில்லவ ராசன் றிருப்புதல்வன் நந்தா வளந்திகழ் நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர் அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே.
என இவர் செய்த மறைசையந்தாதிக்குச் சொல்லப்பட்ட சிறப்புப்பாயிரச்
செய்யுளிற் கூறப்படுதலா னறியலாம். இவர் தோன்றிய காலம் இற்றைக்கு
ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன் எனக் கொள்ளல் மிகையாகாது
என்பது; என்னை? இவராற் பாடப்பட்ட கரவை வேலாயுதபிள்ளையின்
காலமும் அதுவாகலின் என்க. மேலும், இவர் தந்தையார் பெயர் வில்லவராயர்
என்பதும் அவர் இருந்த இடம் நல்லூர் என்பதும்,
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும் நண்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம்-மின்பிரயை வீசுபுகழ் நல்லூரான் வில்லவர7 யன்கணக வாசலிடைக் கொண்றை மரம்.
என்னுஞ் செய்யுளானு முணரப்படும்.
இச்செய்யுள் சின்னத் தம்பிப் புலவர் சிறுவனாகத் தெருவில் விளையாட்டயர்திருந்த காலத்தில் ஒருநாள், முதலியார்வீடு யாது? என்று வினாவிவந்த ஒரு வடதேசப் புலவருக்கு விடையாக உடனே அவர் சொன்ன செய்யுள் என்ப.

Page 179
வில்லவராச முதலியார்
யாழ்ப்பாணச்சரித்திரத்தில் வில்லவராசமுதலியர் என்ற பெயராற் பிரசித்திபெற்று விளங்கியவர் இருவர் காணப்படுகின்றனர். ஒருவர் ஒல்லாந்தர் காலத்தவர், மற்றவர் ஆங்கிலேய அரசு ஆரம்பமானகாலத்திருந்தவர். கி.பி. 1707 இல் கொழும்பிலிருந்த சீமோன் என்னும் ஒல்லாந்த தேசாதிபதியின் கட்டளைப்படி, யாழ்ப்பாணத்தில் திசாவை உத்தியோகத்திலிருந்த கிளாஸ் ஐசாக்ஸ் என்னும் ஒல்லாந்தனால் தொகுக்கப்பட்ட "தேசவழமை’ என்னும் சட்டங்களை (LaWS) ஆராய்ந்து அதில் தொகுக்கப்பட்டுள்ள தமிழர் வழக்கங்கள் நாட்டில் வழங்கியவண்ணம் உண்மையானவையெனச் சம்மதங் கொடுத்துக் கைச்சாத்திட்ட பிரபலமான தமிழ்முதலிமார் பன்னிருவருள் முதலாமாளாக ஒப்பமிட்டவர் தொன் பிலிப் வில்லவராச முதலியார் என்பவர். நாலாமாளாக ஒப்பமிடட்டவர் தொன் ஜூவான் சந்திரசேகர மானா முதலியார் என்பவர். ஒல்லாந்தர் ஆளுகையின் முற்கூற்றில் சமய சுயாதீனமில்லாமல் குடிகளைத் துன்புறுத்தி வலிந்திழுத்துத் தம் மதத்திற் புகச்செய்து ஞானஸ்நானங் கொடுத்துக் கிறிஸ்தவப் பெயரும் வழங்கி வைத்துக்கொள்ளும் முறை மிக நெருக்கமாகக் கைக்கொள்ளப் பட்டு வந்தது. அதனால் அந்தரங்கத்தில் சைவவழிபாடுடையவரும் வெளியில் கிறிஸ்தவர் போல் ஒழுகி நடிக்க வேண்டிய நிலைமை யிருந்தது. இதனை,
ஒவ்வோர் புருஷர்க்குந் தங்கள்பேர் குட்டினர் உயர்சிவ பத்திசெய் யதுத டுத்தனர் சைவர்க ளானாலும் தொம் பிலிப் பென்றபேர் சொன்ன தறியாயோ ஞானப் பெணனே. (26)
தண்மார்க்க மல்லாற் பிறமதக் காரரைத் தணடனை செய்து சமயத்து எ7ாக்கினர்.
என்னும் யாழ்ப்பாண உத்தியோகத்தர் லட்சணக்கும்மிச் செய்யுட்களானு மறியலாம். அதனாலேயே இந்த முதலியார்களின் பெயரோடு தொன்பிலிப் எனவும் தொன் ஜூவான் எனவும் கிறிஸ்தவப் பெயர்கள் சேர்ந்திருக்கின்றன வென்ப தறியத்தக்கது. எனவே கி.பி. 1707இல் ஒல்லாந்தரது ‘தேசவழமைச் சட்டத்துக்குக் கைச்சாத்துக்கொடுத்த தொன்பிலிப் வில்லவராச முதலியாரே நமது புலவரது தந்தையாவர் எனக் கொள்வதிற் பொருந்தாமையின்மை காண்க. மேலும், முற்குறித்த "தேசவழமைச் சட்டத்துக்குக் கைச்சாத்துக் கொடுத்தவருள் நாலாவதானவர் தொன் ஜூவான் சந்திரசேகர மானா முதலியார் என்பவர். சின்னத்தம்பிப் புலவர் தாம் இயற்றிய பறாளை விநாயகள் பள்ளு’ என்னும் பிரபந்தத்தில்,

அநுபந்தம் /37
நாளுங் கலியைத் துரப்பதே யன்றி
நாளை வாவென் றுரைத்திடான்
நம்பி னோர்க்கருள் தருத யாபரன்
வெம்பி னோர்க்கரி யேறனான,
வாளின் றடக்கைச் சந்திர சேகர
மானா முதலி வாழவே
என ஒரு சந்திரசேகர மானாமுதலியைப் பாடியிருத்தல் ஆராயத்தக்கது. தந் தந்தை காலத்தவரும் ஒத்த பதவியினரு மாகிய தொன்ஜுவான் சந்திரசேகர மானாமுதலியாரையே புலவர் இப்பாட்டில் குறித்துள்ளார் எனக் கொள்ளல் பொருத்தமுடைத்தாகி முற்கூறிய கொள்கையை வலியுறுத்துமாறுங் காண்க. வில்லவராசன் என்னும் பெயர் வில்லவராயன், வில்லவதாசன், (பிழையாக) வில்லவதராசன் எனப் பலபடியாக வழங்கியிருக்கக் காணலாம். நல்லூர் இறைப்பிரிவுத் தோம்பில் வில்லவதாசர்பேரிற் பதியப்பட்ட காணிகள் (நிலங்கள்) பல காணப்படுகின்றன. படவே, இவ் வில்லவராசமுதலியார் நல்லூரில் வில்லடித் தெருவில் கொன்றையடி வயிரவர் கோயில் என இக்காலத்து வழங்கும் இடத்தில் வாசஞ்செய்திருந்தார் என்னுஞ் செய்தி நன்கு நிலைபெறுத்தப்படும்.
வில்லவராச முதலியார் தமதன்னைவழியால் செகராசசேகர மன்னன் மரபி லுதித்தவர் என்ப. அவர் கல்வி கேள்விகளிற் சிறந்து செய்யுளியற்றும் வன்மையுடையராய் விளங்கினர்; பல தமிழ்ப்புலவர்களை யாதரித்து வந்தனர். தென் இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்திற் றங்கிய தமிழ் இலக்கிய இலக்கணக் களஞ்சியமாகிய கூழங்கைத் தம்பிரான் என்னும் கலைஞரும் வில்லவராய முதலியாரது மாளிகையிற் றங்கி, முதலியாரோடு அளவளாவிக் கவிப் பிரசங்கஞ் செய்துவந்தனர். இவர்களுடைய சல்லாபங்களை உடனிருந்து கேட்டுவந்தமையால் சின்னத்தம்பிப்புலவர் சிறுவராயிருக்கும் போதே கவித்துவம் வாய்க்கப் பெறுவாராயினார்.
கூழங்கைத் தம்பிரான்
இவர் காஞ்சிபுரத்திற் பிறந்தவர், வேளாளகுலத்தவர், தஞ்சாவூரிலுள்ள ஒரு சைவ ஆதீனமடத்திற் கல்விகற்று வடமொழி தென்மொழிகளிற் சிறந்த பாண்டித்தியம் பெற்றவர், சமய சாத்திரப்பயிற்சி நிரம்பப்பெற்று அம்மடத்திற்றானே தம்பிரானாக இருக்கும்போது அம்மடாதிபதியின் சூழ்ச்சியினால் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தம்வலக்கையாற் றுக்கி அதனாற் கை வெந்து கூழங்கையாகப்பெற்றவர்; அப்பிணக்குக் காரணமாக அவ்வூரினின்றும் யாழ்ப்பாணம் போந்து, தம் எஞ்சிய ஆயுட் காலத்தை இங்குக் கழித்தனர்.

Page 180
318/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இவர் நீண்ட காலம் வசித்து மிக்க வயோதிக வயசில் கி.பி. 1795-இல் தேகவியோகமாகி யாழ்ப்பாணத்தை யடுத்த திருநெல்வேலியில் சமாதி வைக் கப்பட்டனர். இவர் இறந்த ஆண்டையும் வயதையுங் கொண்டு நோக்கினால், இவர் யாழ்ப்பாணம் வந்த காலம் ஏறக்குறைய கிபி. 1740 வரையிலென்னலாம். இவர், அக்காலத்துப் பிரபலமுற்று விளங்கிய வித்துவான்கள் கல்விமான்களுக்கு வித்தியா குரவராயிருந்து யாழ்ப்பாணத்திற் றமிழ்க் கல்விப்பயிர் செழித்து வளர்வதற்கு முக்கிய காரணராக இருந்தனர். இவரிடத்திலே கல்விகற்றுத் தேறிப் பெரும் புலவராக விளங்கியவர்களுள் இருபாலைச் சேனாதிராய முதலியாரே மிகச் சிறந்தவர். சேனாதிராயமுதலியார் கூழங்கைத் தம்பிரானிடம் கற்றுத் தேறியவர் என்பது எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நன்கறிந்த சம்பவமாகும். கூழங்கைத்தம்பிரான் என்னும் பட்டப் பெயரால் மாத்திரம் அறியப்பட்டுச் சுயநாமம் இன்னதென இதுகாறும் அறியப்படாதிருந்த இக்கவிவாணருடைய சொந்த நாமம் இன்னதென ஊகித் தறிதற்கு முற்குறித்த (சேனாதிராய முதலியாருக்கு இவர் வித்தியாகுரு வாயிருந்த) சம்பவம் ஏதுவாமாறு காட்டுதும்.
மாதகல் மயில்வாகனப்புலவர் இயற்றிய புலியூரந்தாதிக்கு ம.க. வேற்பிள்ளைப் புலவர் செய்த உரைக்குச் சிறப்புப் பாயிரமீந்த உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர் அப்பாயிரச் செய்யுளில்,
யாமிய திசைக்கன் றெதிருறு திசைக்குமோ ரேமநற் கலைமுனி மிருந்தன னெண்னாப் புடவி சொலக்கலைப் புணரியை முகந்து திடமொடு தேக்கெறி தேசிகோத் தமனாய்ச் சான்ற கனக சபாபதி யோகியாம் போன்றவர் பிறரிலாப் புணர்னிய னடிதழிஇ ஒவ்வொரு நூலையு மொவ்வொரு முறைவினாய் அவ்வவர் சொற்பொரு ளனைத்தையு மகத்தமைத் அவழிபடு திறமிதென் றுலக முவப்பக் கழிபடு கடுமையிற் கற்று நிறைந்த திதமுறு நுண்மதிச் சேனாதி ராய முதலி பாலினும் .
எனக் கூறியிருத்தலின், ஈண்டுக் கனகசபாபதி யோகி என்றது கூழங்கைத் தம்பிரானையே என ஊகித்தல் வரலாற்றுமுறைக்கு இழுக்காத துணிபாமாறு கண்டுகொள்க.

அநுபந்தம் /319
கனகசபாபதியோகியாகிய இக் கூழங்கைத் தம்பிரான் வில்லவராய முதலியார், கொச்சிக்கணேசையர், கோபாலச் செட்டியார், பின்பு அவர் மகன் வண்ணை வைத்தியலிங்கச் செட்டியார் ஆதியாம் பிரபுக்களை யடுத்து அவரால் ஆதரித்துச் சன்மானிக்கப் பெற்றிருந்தார். கி.பி. 1723 இல் கொழும்பில் தமிழ்க்குடியிற் பிறந்து கல்வியில் மிக்க தேர்ச்சி பெற்று ஆறு பாஷைகளில் மிக வல்லுனராய் விளங்கிய மெல்லோப்பாதிரியார் கி.பி.1758இல் யாழ்ப்பாணத்துக்குக் கிறிஸ்தவ குருவாக வந்தனர். அவர் அப்போது இங்கிருந்த கூழங்கைத்தம்பிரானோடு பழகி நண்புபூண்டு அதுவாயிலாகத் தம் தமிழ்ப் பாண்டித்தியத்தை மேன்மேலும் விருத்தி செய்து கொண்டனர். 1758இல் மெல்லோப்பாதிரியார் கொழும்புக்கு மீண்டு சென்றனர். கூழங் கைத்தம்பிரான் கிறிஸ்தவ நண்பர்களோடு கலந்து பழகினமையால் அவர்களது கிறிஸ்துசமயக் கொள்கைகள், சரிதங்கள் முதலியவற்றில் நன்கு பயின்றிருந்தனர். அவர் யோசேப்புப் புராணம் என்னுங் காவியம் ஒன்று (1023 செய்யுள்கொண்டது) இயற்றித் தமது நண்பராகிய மெல்லோப் பாதிரியாருக்கு அதனை உரிமையாக்கினர்.
வண்ணை வைத்தியலிங்கச் செட்டியார்
இவர் யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீசுவரசுவாமிகோயிலை கி.பி. 1787இல் கட்ட ஆரம்பித்து 1791இல் திருப்பணியை முடித்துக் கும்பா பிஷேகஞ் செய்வித்த தர்மகர்த்தா ஆவர். இவர் கோபாலச்செட்டியாருக்கு மகன். முத்துக்குளிப்புக் குத்தகை எடுத்து அதுவாயிலாக அளவற்ற பெருந்திரவியம் சம்பாதித்த லசஷப்பிரபு. இவர் முத்துக்குளிப்புக் குத்தகை எடுத்துப் பெரும் பொருள் சம்பாதிப்பதற்கும், பின்பு சிவன் கோயில் கட்டுவதற்கு ஒல்லாந்த அரசினரிடமிருந்து உத்தரவு பெறுவதற்குந் துணை யாயிருந்தவன் அந்தோனி முயார்ட் என்னும் ஒல்லாந்தன். இவன் கி.பி. 1762 முதல் யாழ்ப்பாணத்தில் கொம்மந்தோராக இருந்து ஒல்லாந்த அரசியல் நடத்தியவன். கிபி. 1712 ஆண்டுக்குப்பின் வெகுகாலம் இலங்கையில் முத்துக்குளிப்பு நடைபெறாதிருந்து பின்பு 1746 முதல் 1750 வரையும் முத்துக்குளிப்புக் குத்தகையினால் ஒல்லாந்த அரசினர்க்குப் பெரும் லாபம் கிடைப்பதாயிற்று. ஒல்லாந்தர் காலத்தில் கடைமுறையாக முத்துக்குளிப்பு நடைபெற்றது 1768இல் என அறியப்படுதலினால் வைத்தியலிங்கச் செட்டியார் முத்துக்குளிப்புக் குத்தகை எடுத்துப் பெரும் பொருள் சம்பாதித்த காலம்
* டாக்டர் போ. பீறிஸ்: “இலங்கையும் ஒல்லாந்தரும்” பக்கம் 82
S ... A a பக்கம் 144

Page 181
32O/நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
1762க்குப்பின் 1768-ம் ஆண்டு ஈறாகவுள்ளகாலம் எனக் கொள்ளலாம். அக்காலத்தில் அவர் மிக இளைஞராயிருந்தும் அந்தோனி மூயார்ட் என்னும் கமந்தோரின் முழு ஆதரவும் துணையும் அவர்சார்பில் இருந்தமையால் அவர் அப்பெருங் காரியத்திற் றலையிட்டு மட்டற்ற இலாபம் பெறலாயின ரென்ப. அதனால் அவர் பிறந்த ஆண்டு 1740 க்குமேல் 1745 வரையில் என ஊக்கிக்கலாம்போலும். இவர் இவ்வாறு பெருந்தனவந்தராய் விளங்கிய காலத்திற்றான் இவர் கூழங்கைத்தம்பிரானிடம் சமயசாஸ்திரப் பயிற்சி செய்ததும், மாதகல் மயில்வாகனப் புலவர் இவரோடு கூடவிருந்து தம்பிரானிடத்திற் பாடங்கேட்கும் விஷயத்தில் இவருக்குத் துணைபுரிந்து வந்ததுமாகும். கி.பி. 1805-ம் ஆண்டில் வைத்தியலிங்கச்செட்டியார் தம் ஆஸ்திகளைப் பற்றிய மரணசாதனப் பத்திரம் பிறப்பித்தார் என்பது அப்பத்திர வாயிலாகவே இன்றும் நாமறியக்கிடக்கின்றது. அங்ங்ணம் பத்திரம் பிறப்பித்தபின் செட்டியார் பெரும்பொருள் எடுத்துக் கொண்டு வேண்டிய பரிசனங்களுடன் தந்தோழராகிய மயில் வாகனப் புலவரையும் அழைத்துக் கொண்டு காசிக்குப் பிரயாணமானார். வழியிலும் காசிப்பதியிலும் பல தருமத் தாபனங்கள் செய்து அங்குச் சிறிதுகாலத்தில் செட்டியார் காலகதியடைய மயில்வாகனப்புலவர் மீண்டு யாழ்ப்பாணம் வந்து மேலும் சில காலம் வாழ்ந்திருந்தனர். அப்போது அவராலெழுதப்பட்ட கந்தபுராண ஓலைச்சுவடி ஒன்று இப்பொழுதும் மாதகலில் அவர் வழித்தோன்றலாகிய ஒருவரிடம் இருக்கின்றது. அவ்வேட்டின் இறுதியில் முந்தின கையெழுத்திலேயே,
ஈசன் மைந்தன் புராண மெழுதினோன் தேசு லாவு திருவளர் மாதையூர் மாசி லாமணி மாமகன் மைந்தனாங் காசி கானமயில் வாகன போகனே.
என்னுஞ் செய்யுள் எழுதப்பட்டிருக்கின்றது. இச்செய்யுளால் மயில்வாகனப் புலவர் காசிக்குச்சென்று மீண்ட சம்பவம் நன்கு தாபிக்கப்படுகிறது. 1814ம் ஆண்டில் மாதகற்பகுதியிற் பெருவெள்ளம் ஒன்று நிகழ்ந்ததென்றும், அவ்வெள்ளத்தையும் அதனால் விளைந்த சேதத்தையுங் குறித்து ஓர் அம்மானை மயில்வாகனப்புலவராற் பாடப்பட்டதென்றும் அவர் வழித் தோன்றலாயுள்ளார் கூறக்கேட்டலின் மயில்வாகனப்புலவர் கி.பி. 1814-ம் ஆண்டில் வாழ்ந்திருந்தாராகல் வேண்டும். ஆகவே, அவர் செய்த “யாழ்ப்பாண வைபவமாலை” என்னும் சரித்திர நூல் கி.பி. 1736-ம் ஆண்டில் இயற்றப்பட்டதென்னுங் கொள்கை எவ்வாறு பொருந்தும் என்பது அறிஞர்கள் ஆராயத் தக்கது. 1736-இல் மயில் வாகனப் புலவரும் சின்னத்தம்பிப்புலவரும் பத்துவயதுக்குட்பட்ட மிகச் சிறுவர்களாகவே இருந்திருப்பார்கள்.

கொச்சிக் கணேசையர்
இவர் ஒல்லாந்த அரசாட்சி யிறுதிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக் கொம்மந்தோருடைய சபையில் அதிகாரம் பெற்றுவிளங்கிய பிராமணப் பிரபு. இவர் கொங்கண சாதியைச் சார்ந்தவர். இவர் பெயர் ஆதிநாராயண கணேசையர் என்பது. முதலியார்ப்பட்டம் பெற்றிருந்தமையால் இவர் பிராமண முதலியார் எனப்படுவர். இவரிருந்த மாளிகையின் ஒருபாகம் இப் பொழுதும் வண்ணார்பண்ணைப் பெரியகடைத்தெருவில் காணப்படும். இவர் தென் இந்தியாவிலிருந்து வருவோரும் யாழ்ப்பாணத்தி லிருந்தோருமான தமிழ்ப்புலவர்களை ஆதரித்து அவர்க்குச் சன்மானஞ் செய்துவந்தவர். இவருடைய மாளிகையிலே ஒருமுறை கம்பராமாயணப் பிரசங்கம் நடந்த போது அங்குக்கூடியிருந்த வித்துவான்கள் ஒரு செய்யுளுக்குப் பொருள் சொல்லமுடியாது திகைக்க, அங்கே ஒருபுறத் தொதுங்கியிருந்த இளை ஞராகிய சின்னத்தம்பிப்புலவர் அச்செய்யுளுக்கு நயம்படப் பொருள் உரைத்த திறமையை மெச்சிக் கணேசையர் அவருக்குப் பண்டாரக்குளம்’ என்னும் வயல் நிலத்தைப் பரிசிலாக வழங்கினர். சின்னத்தம்பிப்புலவரால் கணேசையர்மேல் பாடப்பட்ட ஒரு செய்யுள் வருமாறு :-
கடனந் தனவன கனடத் தனளனங் கண்கனையால் விடணங் கயிலை மயிலையொத் தாள்விட மிக்கதுத்திப் படனந் தகிமுடி மேனின்ற நச்சுப் படவரவின் நடனம் புரிதிம்ம ராச கணேச நரேந்திரனே,
(விடம் மிக்க துத்தி படல் நந்து அகி (காளியன் என்னும் பாம்பு) முடிமேல் நின்ற நச்சு பட அரவின் (போல்) நடனம்புரி (ந்த கண்ணபிரானை யொத்த) திம்மராச! (கொங்கணர்களுட் டலைவனே) கணேச நரேந்திரனே! கடல் நந்து அண வன கண்டத்தனள் அனங்கன் கணையால் விடு அனம் (= கைவிடப்பட்ட அன்னம் போன்று) கயிலை மயிலை (= உமாதேவியை) ஒத்தாள் (இளைத்து உடல் பாதியானாள், என்றவாறு) எனப்பிரித்துப் பொருள் கொள்க.)
பண்டாரக்குளம்
இவ்வயல்நிலம் சின்னத்தம்பிப் புலவருக்குப் பரிசிலாக வழங்கப்பட்டது என்பது. இந்நிலத்துக்கு உரியவராகத் தோம்பில் பதிவுசெய்து காணப்படும் பெயர் செயதுங்கமாய்பாணமுதலியார் தாமோதரம்பிள்ளையும் பிறரும் என்பது. இதனால் இவருக்குரிய சுய மமாகிய அரசாட்சிப் பட்டப் பெயர்

Page 182
322/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
செயதுங்கமாய்பாண முதலியார் என்பதாகல் வேண்டும் என்பதும் சின்னத்தம்பிப்புலவர் என்பது சிறுவயதிலேயே புலமை வாய்க்கப் பெற்றமையால் இவர்க்கு இட்டு வழங்கிய பெயராகல் வெண்டும் என்பதும் ஊகித்துக் கொள்ளத்தக்கன. இவருக்கு இந்த இரண்டு பெயரும் உண்டென்பதை இவராற் பாடப்பட்டதாக வழங்கும் ஒரு சீட்டுக் கவியின் பாகமாகிய,
தரளவயல் குழிதருந் தென்காரை யம்பதிச்
சமரகோன் முதலி பேரண்
செகராசன் மதிமந்திரி யானசின் னத்தம்பிச்
செயதுங்க னெழுது மோலை
என்பதில் இவர் தம்மைச் சின்னத்தம்பிச் செயதுங்கன் எனக் குறிப்பிடுவதினாலு மறியலாம். மேலும், ஒருவர்க்குத் தம் கையெழுத்துப்பெயர் ஒன்றும் எல்லாராலுமறியப்பட்டு வழங்கும் பெயர் இன்னொன்றுமாக இரண்டு பெயருளதாதல் உலக வழக்கிற் பலகாலுங் காணப்படுவதாகலின், சின்னத்தம்பிப் புலவருக்குச் செயதுங்கமாப்பாணமுதலியார் என இன்னொரு பெயரும் இருப்பின் அதிற் புதுமையொன்று மின்றென்பது எவரும் ஒப்பத்தக்கது. “பண்டாரக்குளம்” என்னும் பரிசில்நிலம் செயதுங்க மாப்பாண முதலியார் தாமோதரம்பிள்ளை பேரில் தோம்பிற் பதிவு செய்யப் பட்டிருத்தலைக் கொண்டு ஊகித்தறியத் தக்கன வேறும் இரண்டு செய்திகளுண்டு. அவையாவன:- முதலாவது, செயதுங்கமாப்பாண முதலியார் என்னும் சின்னத்தம்பிப்புலவருக்குத் தாமோதரம் பிள்ளை என ஒரு மகன் உண்டு என்பது; இரண்டாவது, சின்னத்தம்பிப் புலவர் அதிபிரசித்தி பெற்று விளங்கியிருந்த காலம் கி.பி. 1754க்கும் கியி.1787க்கும் இடைப்பட்ட முப்பது ஆண்டுகள்வரை என்பது. இஃதிங்ங்னமாதல் எவ்வாறு பெறப்படுமெனில்: ஒல்லாந்தர் நல்லூரிறைக் காணித் தோம்புகளைத் திருத்தியது 1754 இல் ஒரு முறையும் 1787இல் தொடங்கி இன்னொரு முறையும் என்பது முன்னர்க் கூறப்பட்டது; 1754-ம் ஆண்டுக்குமுன் இந்நிலம் சின்னத்தம்பிப் புலவருக்கு வழங்கப்பட்டிருப்பின் அது அவரது பேரிற் பதிவு செய்யப்பட்டிருப்பக் காணலாம். அன்றி 1787க்குப்பின்னும் அவர் வாழ்ந்திருந்தாலும் அவரது பேரிற் பதிவு செய்யப்படுதல் கூடும். அங்ங்ணமின்மையால் 1754இல் காணித்தோம்பு திருத்தப்பட்டபின்பே இதனைப் பரிசிலாகப் பெற்றாரென்றும், 1787இல் மறுமுறை திருத்துதற்கு முன் காலகதியடைந்தாரென்றும், அதனால் 1787 இல் அவர் குமாரர் தாமோதரம் பிள்ளை பேரிற் பதிவு செய்யப்பட்டதென்றும் கொள்ளுதற்கு இடமிருத்தலினால் பெறப்படுமென்பது. இன்னும் தாமோதரம்பிள்ளையின் மனைவி (சேதுகாவல

அநுபந்தம்/323
முதலியார் மகள்) நல்ல நாச்சன் என்பவர் பேரிற் பதிவுபெற்ற காணிகளுள் வாலகவி வளவு என ஒன்றும் மேற்படி தோம்பிற் காணக்கிடப்பது. சின்னத்தம்பிப் புலவருக்கு வரகவி, அருட்கவி, வாலகவி முதலிய பெயர்கள் வழக்கிலுணி மையால் முற் குறித்த “வாலகவிவளவு’ என்பது அவர்க்குரியதாயிருந்த ஒரு காணி என்றும் அது அவர் மகன் மனைவி பேரில் தோம்பிற் பதிவுசெய்யப்பட்டது என்றுங் கொள்ளுதல் பொருத்த முடைத்தாதல் காண்க.
சின்னத்தம்பிப்புலவர் காலம்
சின்னத்தம்பிப்புலவர் 18-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிரபலமுற்று விளங்கிய நல்லூர் வில்லவராய முதலியாரது மைந்தர் என்பதும் இவர் ஏறக்குறைய கி.பி. 1730-ம் ஆண்டளவில் தோன்றிக் கல்வியறிவு ஈசுரபக்தி தமிழ்ப்புலமை என்பவற்றாற் றலைசிறந்து விளங்கி ஏறக்குறைய கி.பி. 1787-ம் ஆண்டிலோ அதற்குச் சிறிது முற்படவோ இவ்வுலக வாழ்வை யொருவினா ராதல் வேண்டும் என்பதும் இதுகாறுங் கூறிய ஏதுக்களால் நன்கு புலனாகு மென்பது. இங்ங்னமன்றி, ஆங்கில அரசாட்சி காலத்தில் கிபி. 1850-ம் ஆண்டளவும் வாழ்ந்திருந்த (சங்கானை மடப்பம்) வில்லவதாச முதலியார்ே இந்நல்லைச் சின்னத்தம்பிப் புலவருடைய தந்தையாராவர் எனக் கொள்ளுதல் எவ்வாற்றானும் பொருந்தாததொன்றென்பது. பிந்திய வில்லவதாசமுதலியார், சின்னத்தம்பிப் புலவரின் வழித்தோன்றலாவர் எனக் கொள்ளுதற் கிடமுண்டு. இவையெல்லாம் இன்னும் ஆராய்தற்பாலன.
இவர் காலத்தில் இருந்த புலவர்கள் முற்குறித்த கனகசபாபதி யோகிகள் (கூழங்கைத் தம்பிரான்), மாதகல் மயில்வாகனப் புலவர், சுன்னாகம் வரதபண்டிதர், இருபாலை சேனாதிராச முதலியார், திருவாவடுதுறை சிவஞான சுவாமிகள், கச்சியப்ப முனிவர், முதலியவர்களாவர்.
இவர் இயற்றிய நூல்கள்
இவராலியற்றப்பட்ட நூல்களாவன:- (1) கல்வளையந்தாதி: இது கல்வளை விநாயகர் மீது பாடப்பட்ட யமக அந்தாதி. இதுவே இவரால் முதன்முதற் செய்யப்பட்ட பிரபந்தமென்பது பல அறிஞர்களது கொள்கை. (2) மறைசையந்தாதி. இது வேதாரணியத்தி லெழுந்தருளியிருக்கும் வேதாரணியேசுரர்மேலது. சொன்னயம் பொருணயங்களாற் சிறந்தது. இவ்

Page 183
324/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
வந்தாதிக்குச் சிறப்புப் பாயிரமாக வழங்கும் “செந்தா தியன்மணி” என்னுஞ் செய்யுள் சுன்னாகம் வரதபண்டிதராற் பாடப்பட்ட தென்பர். இவ்வரதபண்டிதர் இயற்றிய சிவராத்திரிபுராணத்துக்குச் சிறப்புப்பாயிரமாகிய,
மைத்தவிடப் பணிப்பணியான் வராசனமுஞ் சராசனமு மலையாக் கொண்ட சித்தனுயர் சிவநிசிமான் மியமதனைச் செந்தமிழாற் றெரித்தல் செய்தான் அத்தகைய பாரத்து வாசகோத் திரணரங்க னருளு மைந்தன் சத்தபுரி களிற்காசி நகர்வரத பணடிதன்முத் தமிழ்வல் லோனே.
என்னுஞ் செய்யுள் சின்னத்தம்பிப் புலவராற் செய்யப்பட்ட தென்பது.
(3) பறாளை விநாயகர் பள்ளு இது சுழிபுரத்திற் பறாளாய் என்னுந் தலத்திலுள்ள விநாயகப்பெருமான் பாட்டுடைத் தலைவனாக அவர்மேற்பாடப் பட்ட ஒரு பள்ளுப் பிரபந்தம்; சந்த வின்பமும் சுவையும் பொருந்தியது. (4) கரவை வேலன் கோவை; இது கரவெட்டி வேலாயுதப் பிள்ளைமேற் பாடப்பட்ட அகப்பொருட் கோவை, சொன்னயம் ஒசையின்பம் தொனிப்பொரு ணயம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது.
இந்நூலகத்துள்ள இன்சுவைப் பகுதிகளுட் சில காட்டுதும்:- 'காதினிருந்து விழியாப்பருங்கலக்காரிகையை - யோதியிருந்து பிற நூலையாய்த லுரித்தல்லவே” (செ. 8) எனவும், "வனசமலர்ப் போதுவனத்துட் சிறை யாகிப்பங்கம் பொருந்தியதே” (செ9), எனவும், ‘அருளாதிராரருட் பார்வையும் வாய்மருந்தானதுமே” (செ55) எனவும், “விழிகண்ட பின்னல் லவோ பயமானது வேலையுமே” (செ. 60) எனவும், 'உண்டோ சுரி முக மில்லாத சாதி யொளிவளையே’ (செ. 181) எனவும் வருமவற்றிலுள்ள தொனிநயம் நோக்கி மகிழத்தக்கது. இன்னும் ‘கந்தரன் சந்துரை பண்ண வதற்குச் சந்துரை முன்கை” (செ. 36) என்பதன் சொன்னயமும், 69-ம் செய்யுளிலுள்ள உவமை நயமும் 78-ம் செய்யுளில் வரும் சொற்சித்திரமும் 125 இலுள்ள தொடை நயமும், ‘ஒரு வெள்ளையோடுங் கறுப்பாகு மெண்ண முடையர்’ (125) என்பதிலும் ‘’வெள்ளையின்மேற் கறுப்பாயினள்’ (225) என்பதிலும் வரும் முரண்நயமும் 2-ம் 17-ம் 73-ம் செய்யுட்களின் ஓசை நயங்களும் முதலியன படித்து இன்புறத்தக்கன.

UğÜLGDJ
இற்றைக்குப் பலவருடங்களுக்குமுன் இந்நூலிலிருந்து சில செய்யுட்களை யெடுத்துச் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகைவாயிலாக வெளியிட்டர்கள். அந்நாட்டொடங்கி இந்நூல் முழுதையும் படித்தற்குத் தமிழன்பர் பலர் ஆவலாயிருந்தனர். எனினும் மூலப்பிரதி அகப்படாமையால் இந்நூல் அச்சில் வெளிவந்திலது. 1932-ம் ஆண்டில் இந்நூற் காகிதப்பிரதியொன்று கரவைவேலன் வழித் தோன்றிய கந்தப்புச் சட்டம்பியார் சங்கரப்பிள்ளை என்பவரிடமிருந்து அரிதிற் கிடைப்பதாயிற்று. அப்பிரதியும் செய்யுட்கள் முழுமையும் இன்றிச் சிதைவுறப்பெற்றும், காகிதம் பழுதுற்று எழுத்து மங்கலாயும், எழுத்துப் பிழைகள் மலிந்தும் துறைகளுஞ் செய்யுட்களும் மாறுபட்டும் இருந்தது. இவ்வொரு பிரதியேயன்றி வேறொன்றும் எங்குத் தேடியும் அகப்படாமையால் இருப்பதும் அழிந்தொழிந்து போகாமல் இதையேனும் இப்போது அச்சிட்டு வெளிப்படுத்துதல் நன்றாகும் என யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தார் செய்த தீர்மானத்தின் படி இது அச்சிட்டு வெளிப்படுத்தப்படுவதாயிற்று. தமிழுக்கும் தமிழுலகிற்கும் உபகாரமாகும்படி இப்பிரதியைத் தந்துதவிய கரவெட்டி க. சங்கரப்பிள்ளையவர்களது நன்றியும் இதிலொரு பாகத்தைக் கரலிகித வழுக்களைந்து பிரதிபண்ணிக் கொடுத்த (கரணவாய்) பண்டித: திரு. செவ்வந்திநாத தேசிகரவர்கள் செய்ந்நன்றியும் என்றும் போற்றற்பாலன.
உடன் வைத்து ஒப்புநோக்குதற்கு வேறொரு பிரதியுமின்றிச் சிதைவுற்ற இவ்வொருபிரதியையே வைத்து ஆராய்ந்து வழுக்களைந்து இயன்றளவு சுத்தபாடமாகச் செப்பஞ் செய்துகொள்ளுதல் பெரும் பிரயாசமாயிற்று. இவ்வாறு மூலத்தைச் சுத்தபாடமாக்குதலிலும் அதற்கோர் அரும்பதவுரை யமைப் பதிலுஞ் சலிப்பின்றி உடனிருந்து பெருந்துணை புரிந்தவர்கள் வித்துவான் சி. கணேசையர் அவர்கள், கவிஞர் நவநீத கிருஷ்ண பாரதியவர்கள், பண்டிதர் வே. மகாலிங்கசிவமவர்களுமாவர். இவர்கள் செய்த நன்றி,
சின்னத்தம் பிப்புலவன் செப்பியவே லன்கோவை யுன்னித்த நுணமதியா லொணமைசெய்த - துன்னும்விற் பன்னமகா விங்கசிவம் பாரதிக ணேசையர்க் கென்னகைமா றேல்வ மியாம்.

Page 184
326/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
என என்றும் பாராட்டற்குரியது.
இப்புத்தகத்தை அழகுற அச்சிட்டு விரைவில் வெளிப்படுத்துவதில் ஊக்கமாயிருந்து வேண்டிய உதவிபுரிந்த அன்பர் சைவப்பிரகாச யந்திரசாலை மானேஜர் ச. அக்ஷலிங்கம் அவர்கள் நன்றி மறக்கற்பாலதன்று, செய்யுட்கள் கிடையாத இடங்களில் துறைப்பெயர்கள் மாத்திரங் காட்டப்பட்டிருக்கின்றன. செய்யுட்கள் முழுதுமுள்ள மூலப்பிரதி எங்கேனுமிருந்து, வைத்திருக்கும் அன்பர் அதனைத் தந்துதவினால் அது இச்சங்கத்தாரால் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும்.
சின்னத்தம்பிப்புலவருடைய வரலாற்றைப்பற்றிய விசாரணையில் அங்கங்குக் கிடைத்த செய்திகளைத் திரட்டி உத்தேசமாக இங்குக் கூறியவற்றை அறிஞர்கள் நன்கு ஆராய்ந்து உண்மை காண்பார்களாக,
யாழ்ப்பாணம் தி.சதாசிவஐயர், 20.2.35 காரியதரிசி
யா.ஆதியா. சங்கம்.

கணபதி துணை.
பறாளை விநாயகள் பள்ளு
யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
இயற்றியது.
வடகோவை அ. சிவகுருநாதன் அவர்கள்
விரும்பியபடி குறிப்புரை தலமகிமை முதலியவற்றோடு
திருமயிலை சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளை
அவர்களால்
சென்னை: வித்தியாதுபாலன அச்சகத்தில் பதிப்பித்தது.

Page 185
UÜLDJ
விநாயகனே வெவ்வினையை வேறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பாண் - விநாயகனே விண்ணிற்கும் மணணிற்கும் நாதனுமந் தண்மையினாற் கணனிற் பணிமின் கனிந்து,
இப்பிரபந்தம் பணிடைநாளில் ஏட்டுப்பிரதியா யிருந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ளவர்களால் சிரமத்தோடு பெற்றுப் படிக்க நேர்ந்தது. இதனை நீக்க சுழிபுரம் ச. சிவப்பிரகாச பண்டிதர் தமது நண்பர் வே. இரத்தின பிள்ளையின் வேண்டுகோளின்படி பல ஏட்டுப்பிரதிகளைப் பரிசோதித்து விரோதி வருடம் (1889) சென்னையில் அப்போதிருந்த சபாபதிநாவலரின் சித்தாந்த வித்தியாநூபாலன யந்திரசாலையில் அச்சிட்டு முதல் முதல் வெளியிட்டார்.
அப்பதிப்புப் பிரதிகள் மறைந்தமையால் பிரசோற்பத்தி வருடத்தில் (1932) யான் இரண்டாம் பதிப்பாகக் குறிப்புரை, பறாளைத்தல மகிமை, ஆசிரியர் சரித்திரம், பள்ளுச்சிறப்பு முதலியவற்றோடு எனது நண்பரும், சபாபதி நாவலரின் மருகரும், முதற்பதிப்பை அச்சிட்ட சிவப்பிரகாச பண்டிதரின் தமையனார் குமாரருமாகிய அ. சிவகுருநாதன் மலேய சுழிபுர ஐக்கிய சங்கத்தினரிடம் பெற்ற பொருளுதவிகொண்டு சென்னையில் அச்சிடலானேன்.
நாளடைவில் அப்பிரதிகள் செலவானபடியால் அந்நூல் இறந்துபடாமற் காப்பதற்காக நண்பர் கடந்த சில ஆண்டுகளாகப் பெருமுயற்சி செய்தனர். சுழிபுரத்திலுள்ள சில சிவநேயர்களோடு கூறி வற்புறுத்தினர். சுழிபுர சங்கத்தினருக்கு விண்ணப்பித்தனர். இவரது விடா முயற்சிக்கு அவர்கள் இணங்கி மூன்றாம் பதிப்பைத் தங்கள் செலவில் அச்சிடுவதாகப் பொருளுதவி புரிந்தனர். அவர்களுக்கும் நண்பர் சிவகுருநாதனுக்கும் பரஞ்சோதிப் பிரான் திருவருள் பாலிப்பாராக.
இச்சீரிய நூலுக்கு அரும்புதக் குறிப்புரையும் பள்ளுச் சிறப்பும் எழுதியுதவிய நண்பர்கள் திருவாவடுதுறை ஆதீனவித்துவான் திருநெல்வேலி சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, சென்னைத் தமிழ்ப்பண்டிதர் கொ. இராமலிங்கத்தம்பிரான் ஆகிய இருவரும் இம்மூன்றாம்பதிப்பைக் காணாமற் சிவபத மடைந்தமைக்கு வருந்துகிறேன்.

அநுபந்தம்/329
பறாளைத்தலமகிமை நண்பர் வடகோவை அ. சிவகுருநாதனால் புதுப்பிக்கப்பட்டது. ஆசிரியரின் சரித்திரம் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் புலவர் சரித்திரத்தைத் தழுவி எழுதியதாகும்.
இந்நன்முயற்சியில் யான் இருமுறை ஈடுபடும்படி நேர்ந்தமைக்கு கணபதியை வாழ்த்தித் துதிக்கின்றேன். இந்நூற்பதிப்பு மேலும் மேலும் வருவதாக! அப்பதிப்புகளைச் சுழிபுரச் சங்கத்தினர் உரிமை பாராட்டி வெளியிடுவாராகவும். இந்நூல் வேளாண்மையைச் சிறப்பிப்பதால் இதனைப் பள்ளி மாணவரும் பிறரும் படித்து உய்யலாம்.
உழுதுண்டு வழிவதற் கொப்பில்லை கணடீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு.
திருமலை, மன்மத, தைப்பூசம். சே. வெ. ஜம்புலிங்கம் பிள்ளை.
27-01-56.

Page 186
சின்னத்தம்பிப் புலவர் சரித்திரம்
இவரூர் யாழ்ப்பாணத்துள்ள நல்லூர். குலம் வேளாளர் குலம். சமயம் சைவம். காலம் இற்றைக்கு 180 வருடங்களுக்கு முன்னென்பர். இவர் அக்காலத்து உலாந்த அரசினராற் பாராட்டப்பட்ட பிரபுக்களுள் ஒருவரும், யாழ்ப்பாணத்திற் கல்வியை விருத்தி செய்த தமிழரசர்களுள் முதன்மையரான பரராசசேகரன் செகராசசேகரன் என்னும் இரு சகோதரர் வமிசத்திற் றோன்றினவரும், தமிழ் வித்துவானுமாக விளங்கியவருமான வில்லவராய முதலியாருக்கு மைந்தர். கலைமகளருளாற் கவி பாடுந்திறம். இளைமை யிலேயே வாய்க்கப் பெற்றவரென்பர். இவர் ஏழு வயசளவில் வில்லவராய முதலியார் வீடு யாது என்று வினாவி வந்த புலவரொருவர்க்கு விடையாக அவர் வாசலிடைக் கொன்றை மரம் நிற்றலை அடையாளமாகச் சுட்டிக் கூறி அதனையும் வருணித்து வெண்பா ஒன்று பாடினவர். அவ் வெண்
பாவாவது:
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும் நண்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை வீசுபுகழ் நல்லூரான் வில்லவர7 யண்கணக
வாசலிடைக் கொண்றை மரம்.
வில்லவராயர் வசித்த இடம் நல்லூர் வில்லடித்தெரு மாளிகையாம். சட்டை நாதர் கோயிலுக்கு மேற்கிலுள்ள கொண்டலடி வைரவகோயில் என்னும் இடத்தில்
புலவர் பிரமசாரியாக வாழ்ந்தனரென்ப.
இவர் இயற்றிய வேறு நூல்கள் : மறைசை யந்தாதி, கல்வளை யந்தாதி, கரவை வேலன் கோவை, நாலுமந்திரி கும்மி முதலியன. மறைசை யந்தாதி வேதாரணியேசுரர் மேலது. இது இவர்தம் பதினைந்தாம் ஆண்டிற் சிதம்பர தரிசனம் செய்து மீளுங்கால், வேதாரணியத்திற் பாடப்பட்டதென்பர். கல்வளையந் தாதி சண்டிருப்பாயிலே கல்வளையிலிருக்கும் விநாயகர் மேலது. இது, இவர் தந்தையாரால் தொடங்கப்பட்டு விடப்பட்டிருந்ததை இவரால் முடித்துப்
பூர்த்தி செய்யப்பட்டதென்பர். கரவை வேலன் கோவை யாழ்ப்பாணத்திலே

அநுபந்தம் 1331
கரவெட்டியிலே செல்வராயிருந்த வேலாயுதப் பிள்ளை என்னும் பிரபு மேலது. நாலுமந்திரிகும்மி சண்டிருப்பாய் வேலுப்பிள்ளையால் 1934ல் அச்சிடப்பட்டுளது. இப்பிரபந்தங்களினால் இவர் பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக்கணங்களையும் இனிதுணர்ந்தவர் என்பது புலப்படுகின்றது.
இவர் தமிழ்ப் புலமைக்காக அக்காலத்துப் பிரபுவாய் விளங்கிய வண்ணார்பண்ணைக் கணேசையரென்பவரால் பண்டாரக்குளம் என்னும் ஓர் வயல் இவருக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தென்பர். இவர் காலத்தில் விளங்கிய தமிழ்ப் புலவர்கள்: கூழங்கைத் தம்பிரான், சித்தாந்த சரபம் - சொக்கலிங்க தேசிகள்* முதலியோர். விநாயகப் பெருமான்மீது இரு பிரபந்தங்கள் பாடியிருப்பதால் இவருக்கு அப்பெருமான் உபாசனாமூர்த்தி போலும்!
* இப்புலவர்கள் விளங்கிய காலம் கி. பி. 1790 என்ப.

Page 187
பறாளைத் தல மகிமை
யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு வடமேற்கில் சமுத்திரக் கரைக்குச் சமீபத்தில் தொல்புரம் சோழியபுரமென இரண்டு ஊர்கள் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் உள்ள தூரம் ஒரு மைல். தொல்புரமென்பது பழைய ஆசாரங்களை அநுட்டித்தவர்கள் இருந்ததினால் வந்த பெயரென்றும், சோழியர் புரம் சுழிபுரமென மருவியதென்றும் சொல்லுகிறார்கள். சோழியபுரமென்பது இந்தியாவிலிருந்த சோழியர் இருந்தினால் வந்த பெயரென்றும், சுழிபுரம் முற்காலத்திய செந்தமிழ்க் கல்விக்கும் சைவாசாரத்திற்கும் உறைவிடமாக இருந்தது. இந்தச் சுழிபுரத்திலுள்ளது பறாளாய் என்னும் இடம். பறாளாய் என்பது பறாளை என மருவியது.
திசைமழுவனென்னும் ஒரு சிற்றரசன் அரசு செய்த இடம் இதற்குச் சமீபத்திலுள்ளது என்பர். இந்த இடம் இப்போது மழுவைக்காடு என்று சொல்லப்படும். இந்த இடத்தில் திசைமழுவன் காலத்தில் விளங்கிய சம்பேசுரன் என்னும் சிவாலயம் இருந்த இடம் அழிந்துகிடப்பதை இப்போதும் காணலாம். இன்னும் இதற்குச் சமீபத்தில் பூரீராமபிரான் பாதம் வைத்த காரணத்தால் திருவடிநிலை எனப் பெயர் பெற்ற ஒரு ஸ்தலம் இப்போதும் வழிபடப்பட்டு வருகின்றது. இத்தலம் யாழ்ப்பாணத்துக் கீரிமலையைப்போல் மூர்த்தி தலம், தீர்த்த விசேடங்கள் பெற்றது. இங்கேதான் பறாளை விநாயகர் முருகர்கோயில்களின் தீர்த்த உற்சவங்களும் பொன்னாலைக் கிருஷ்ணன் கோயில் தீர்த்த உற்சவமும் கொண்டாடப்படுவன. சம்புத் துறை* என்றொரு கடற்றுறைமுகமும் இதற்குச் சமீபத்திலுண்டு.
இந்தப் பறாளையில் ஒரு விநாயகராலயம் தமிழரசர் காலத்திற் கட்டப்பட்டிருந்தது. போர்த்துக்கேச அரசினர் மற்றைச் சைவாலயங்களை இடிக்கிற காலத்தில் இதனையும் இடிக்கத் தொடங்க, ஒரு காகம் வந்து இடிப்பித்த அதிகாரியினுடைய கண்ணைக் கொத்தி இடிக்க விடவில்லை.
* சம்புத்துறை என்பது இந்தியாவிலிருந்து கொண்டுவந்த சிவலிங்கம் இறக்கப்பட்ட துறைமுகம் என்பர். இதற்குச் சமீபத்தில் மாதகல் என்னும் ஊர் உள்ளது. உமாதேவியின் திருவுருவச்சிலை என்று பொருள்படும். மாது-கல் நிறுவிய இடம் இப்போது மாதகல் என மருவியதென்பர். சம்பு-சுகஞ் செய்பவன்.
சம்புகல் - மாதுகல் கடலோரத்தில் இருந்தன என்றும் சொல்வர்.

அநுபந்தம்/333
அதனால் அப்பிள்ளையாருக்குக் கண்ணைக் கொத்திக் காக்கைப் பிள்ளையார் என்று பெயர் வழங்கலாயிற்று. விநாயக ராலயத்திற்குச் சமீபமாக முருகராலயமும் ஒன்றுளது. இவ்விரண்டாலயங்களும் இருக்குமிடம் வயல் சூழ்ந்த மருத நிலம்.
இவ்விநாயகர் கோயில் காலகதியில் கிலமடைந்திருந்தது. ஐம்பது அறுபது வருடங்களுக்குமுன் ஒருவாறு புதுப்பித்துக் கும்பாபிஷேகம் முதலியன நடைபெற்றுள்ளன. இன்னும் நடைபெற வேண்டிய திருப்பணி வேலைகளுள்ளன. அவற்றுள் கோயிலுக்கின்றியமையாது வேண்டும் களஞ்சியம் மடப்பள்ளி இரண்டும் நெடுநாளாய்க் கிலமடைந்திருக்கின்றன. இதுவரை எவரேனும் இவைகளைத் திருத்திக் கட்டிக் கொள்ளாமையினால் போலும் மலேய சுழிபுர ஐக்கிய சங்கத்தார் பொதுநன்மை கருதிக் களஞ்சியம் மடப்பள்ளி வேலைகளை நிறைவேற்றுதற்கு நன்கொடையாகப் பொருளுதவி செய்ய நிச்சயித்திருப்பது. இது இங்கே குறிப்பிடத்தக்கதொரு நற்செய்தியாகும். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பொதுசன வழிபாட்டுக்கும் நன்மைக்குமுரிய இக்கோயிற் காரியங்களைக் கிரமந் தவறாது நன்றாக நடத்தும் பொறுப்புடைய பரிபாலகரும் உபயகாரரும் மற்றும் அபிமானிகளும் அறிவொற்றுமையோடு கலந்து மேற்படி சங்கத்தார் செய்யப்போகும் தொண்டினை வியந்து இப்பொது விஷயத்தில் அவர்களுக்கு ஊக்கமுண்டாகச் செய்தல் நன்றாம்.
மேலும் பறாளை விநாயகர் முருகர் பவனிவரும் தேர் விநோதமானது. முன்னாளில் வடதேசத்துச் சிற்ப விற்பன்னர்களால் அழகுபெற அமைக்கப்பட்ட சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டு விளங்குவது. ஆயினும் இப்போது திருத்தப்படவேண்டியதாயிருக்கிறது. மலேயசுழிபுர ஐக்கிய சங்கத்தின் ஆதரவில் திருப்பணிகளுக்காகத் திரட்டப்படும் நிதியிலிருந்து இத்தேர்த்திருப் பணியாகிய புனருத்தாரண சற்கருமம் செய்தற்கு வேண்டும் நன்முயற்சி நடைபெறுவது வியக்கத்தக்கது.

Page 188
கோயிற்பரிபாலனம்
“என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்பது சமய குரவர் திருவாக்கு. அதற்கேற்ப, பரிபாலகள் பூசகராவார் சமயக் கல்வியறிவு, ஒழுக்கம், ஆசாரம், அனுஷ்டானம், தியாகம், உண்மை, என்னும் பண்பினால் தகுதியு டையராய் வழிபடும் அடியார்களுக்கு நல்வழி காட்டிப் பொது நோக்குடன் பொது நலங்கருதிக் கோயிற் கருமங்களைச் சிரத்தையோடு தொண்டாகச் செய்தல் கடனாகும். இப்படி விதி முறைகளைப்பேணிக் கிரமந் தவறாது பூசனை வழிபாடுகள் நடைபெறும் திவ்வியதலங்கள் திருக் கோயில்களெனப் போற்றப்படும். அத்தகைய திருக்கோயில்களையுடைய நாட்டில்தான் கால மழைபெய்யும், பலவளங்களும் பெருகி நாடு செழிக்கும்; பொது நன்மைகள் விருத்தியாகும்; குடிகள் சுகமாய் வாழ்வர்.
ஆற்றரு நோய்மிகு மவனி மழைகுன்றும் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தாண்திருக் கோயில்க ளானவை சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே.
முன்னவனார் கோயிற் பூசைகள் முட்டிடின் மண்ணற்குத் தீங்குள வாரிவளங் குன்றுங் கண்ணங் களவு மிகுத்திடுங் காசினிக் கென்னரு னந்தி யெடுத்துரைத் தானே.
- திருமந்திரம்.
கோயிற் பரிபாலனம் முறைகேடாக நடப்பதனாற் போலும் மேற்குறித்த குறைகளே இக்காலத்தில் எங்கும் மலிந்து காணப்படுகின்றன. இன்னும் கோயில்களுக்குரிய தருமச் சொத்துக்கள் அங்குமிங்கும் துர்விநியோகம் செய்யப்படுதலைக் காணலாம். ஆலயங்களின் பரிபாலனம்* நன்முறையில் நடவாமை இதன்காரணமாகும். திருக் கோயிலில்லாத திருவிலூரைப்போல, கோயில் தருமச் சொத்துக்களைப் பேணிப் பாதுகாக்கப்படாத திருவிலூரும்
ck “யாழ்ப்பாணத்துக் கோயில்கள் மிகவும் சீர்கெட்டுப்போயிருக்கின்றன. சைவசமயத்துக்கு நேர்ந்துள்ள
பொல்லாங்குகளுள் எங்கள் கோயில்களுக்கு நேர்ந்துள்ள பொல்லாங்கு மிகக் கொடியது” என்பதும், 'கோயில்களும் தருமச் சொத்துக்களும் நன்றாகப் பரிபலிக்கப்படாது சீர்கெட்டிருக்கும்போது, திருத்தப்பட்டுள்ள இந்து அறநிலையச்சட்ட மின்றியமையா அருமையுள்ள நல்ல சட்டம் ( \ fine piece Oflegislation)” என்பதும் சைவப்பெரியார் பூரீ ச. சிவபாதசுந்தரம் அவர்கள் கருத்து.

அநுபந்தம் /335
அடவிகாடேயாமென்பதும் நோக்கத்தக்கது. உதாரணமாக, பறாளைப் பிள்ளையார் கோயிலுக்குரிய தருமக் காணிகளுள் சுழிபுரம் செட்டிகுறிச்சியில் வளவுக்காணி ஒன்றுள்ளது. இது நெடுங்காலமாய் பாதுகாப்பில்லாது கோயில் தருமத்துக்கு ஒருவகையிலும் பிரயோசனமில்லாது பாழாய்க்கிடக்கிறது. இப்படியாக மேற்படி கோயிலுக்குரிய காணியுண்டென்று இப்போது பரிபாலகராய் இருப்பவருக்குத் தெரியுமோ என்பதும் சந்தேகம். இந்தக் காணியைக் கவனித்து அறுக்கையாக வேலிபோட்டுக்கொண்டு பனை முதலிய வான்பயிர்களை உண்டாக்கிப் பார்வை செய்துவருதல் நன்று. இனிவருங் காலத்தில் அதன் புரோசனங்களைக் கோயிலுக் குபயோகமாகும்படி செய்யலாம்.
மேலும் இந்த இடத்திலுள்ள சிவன்கோயிற் சொத்துக்களும் பிறதமருமச் சொத்துக்களும் சீர்கெட்டிருப்பதைக் காணலாம். கோயிற் பரிபாலனம் ஒழுங்காயிருந்தால் தருமச்சொத்துக்கள் அதர்மவழியில் வீணாய் ஒழியுமோ? தரும நன்கொடையான கோயிற்காணிகளை அலட்சியம் பண்ணி அவம்போக விட்டிருக்கும் அக்கிரமத்தினாலன்றோ இங்குள்ள மற்றக் காணிகளும் வளங்குன்றிப் பயனில்லாது கிடக்கின்றன. இந்த இடம் முன்னிருந்த நிலைமாறி இங்கிருந்த குடிகளும் குறைந்து போயிருப்பதை இங்குள்ளார் கண்டுங் காணாதவராயிருப்பது கவலைக்கிடமானது. உத்தரவாதமில்லாதவராய் மனம்போனபடி நடக்கும் பரிபாலகரை நம்பி ஏமாந்து வாளாவிருப்பதை விடுத்து அவரை உத்தரவாதமுடையராகச் செய்வது வழிபாட்டுக்குரிய பொது மக்களைப் பொறுத்த கடமையாகும்.
கேவலம் நிலையில்லாத தற்பெருமை தற்புகழ்ச்சியான விளம்பரம், சுயநலம் என்னும் சிறுமைக்கிலக்காய் அவரவர் அற்பநோக்கம்பற்றி “எனக்கெனக்” கென்று உரிமையும் முகாமையுங் காட்டிக்கொள்ளும் ஆசையினால் போலிவகையான சிலர் கோவில் என்பதன் மகிமையைப்பற்றிச் சிறிதும் சிந்தனையில்லாது, தவம் செய்தற்குப் பதிலாக, விவகாரங்களில் ஈடுபட்டு அவம் செய்வதில் வீண்காலம் போக்குதலால் கோயிற் பரிபாலனம் சீர்கெடும். அதனால் வரும் பழிபாவத்துக்கஞ்சி, கோயிலுக்குரிய பணிகளில் பேர் ஊக்கமுடையராதல் வேண்டும். அதுவொன்றோ! உத்தம கைங்கரியமான கோயிற் பூசைகளைக் கிரமப்படி பயபக்தி விசுவாசமாகச் செய்தற்குரிய சைவாசார சம்பிரதாயமுடைய அர்ச்சகள் நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் முறையான கோயிற்பரிபாலத்துக்குப் பிரதானமாய் வேண்டப்படுவதொன்றாம்.

Page 189
336/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
முன்னைநாளில் சுழிபுரம் நல்ல நிலையிலிருந்தமையினாற் போலும் “தொல்லுலகம் போற்றும் சுழிபுரம்” என இந் நூலாசிரியர் காப்புச்செய்யுளில் கூறினார். இவ்விதமாக இந்நகரச் சிறப்பைமட்டும் இக்காலத்தவர் எடுத்துவிதந்து கூறுவது போதியதன்று. தம் முன்னோரைப்போல அதன் நற்கீர்த்தியைப் பலவிதத்திலும் பரவச்செய்ய முயற்சி செய்யவேண்டியதே அவர்கள் பெருங்கடனாகும். மற்றும்,
மூர்த்தி தலந்தீர்த்தம் முறையற் றொடங்கினார்க்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.
என்று கூறியபடி பிள்ளையார் - முருகமூர்த்தி கோயில்களின் அருகாமை
யிலுள்ள கேணிகளாகிய நீர்நிலையங்களைச் சுத்தமாக வைக்கவேண்டிய
முறைகளைத் தேடி சீர்திருத்தல் அவசியமாகும்.
சுழிபுரம் சங்கத்தார்

பள்ளுச் சிறப்பு முதலியன
பறாளை விநாயகர் பள்ளு என்னுஞ் சொற்றொடர் பறாளை என்னுந் திருப்பதியில் எழுந்தருளிய விநாயகரைப் பற்றிய பள்ளு அல்லது இசைப்பாட்டு என்று பொருள்படும். பள்ளு என்பது தொண்ணுற்றாறு பிரபந்தங்களுள் ஒன்று. இப்பிரபந்தத்தை உழத்திப் பாட்டு எனவுங் கூறுப. இது வேடிக் கையான நாடகத்தின் பாற்படும்; பள்ளர், கன்மர், கடைஞராகிய உழவர்களால் மருத நிலத்தில் நிகழும் ஓர் ஊடலாகும். இதன் இலக்கணம்,
புரவலர் கூறி யவன்வாழியவெண் நகல்வயற் றொழிலை யொருமை யுணர்ந்தன ளெனவரு மீரைந் துழத்திப் பாட்டே.
என்ற பன்னிரு பாட்டியற் சூத்திரத்தால் அறியலாம்.
உழத்திப் பாட்டின் விளக்கமாவது:- கடவுள் வணக்க முறையே மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவோடு அவன் பெருமை கூறல் முறையே அவர் வரலாறு, நாட்டு வளம், நகர்வளம், குயிற்கூக் கேட்டல், மழை வேண்டிக் கடவுட்பரவல், மழைக்குறி ஒர்தல், மழை பொழிதல், ஆற்றின் வரவு, அதன் சிறப்புக் காண்டல் இவற்றிற் கிடையிடை அகப் பொருட்டுறையுங் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிகளிருவர் முறையீடு, இளையாளை அவனுரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல் வினவல், அவனது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வரல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும்பன் கிடையிலிருந் தான்போல வரல், அவனைத் தொழுவின் மாட்டல், அவள் புலம்பல், மூத்தபள்ளி யடிசிற் கொடுவரல், அவன் அவளோடு கூறல், அவன் அவளை மன்னித்தல், கேட்க வேண்டல், அவள் மறுத்தல், அவன் சூளுறல், அவள் அவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல், விதை காளை முதலிய வளங்கூறல், உழவருழல், காளை வெருளல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவன் எழுந்துவித்தல், அதைப் பண்ணைத் தலைவற்கு அறிவித்தல், நாறு நடல், விளைந்தபிற் செப்பஞ் செயல், நெல் அளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளுள் ஒருவர்க்கொருவர் ஏசலென இவ்வுறுப்புக்களுறப் பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்ற அளவடியாய் முதற்சீர் வெண்சீராய் ஏனைய சீர் முதலசை நிரையசையுற்ற வெண் சீராயும் அல்லது இயற்சீர் வெண்சீர் ஒன்றி வருவதுமான ஒரு கலிப்பாவும் பற்பல சந்தச் சிந்தும் விருத்தமும் விரவிவர இவற்றாற் பாடுவது. இவ்வுறுப்புக்களுள் சில குறைந்து வருதலுமுண்டு. அதற்கு உதாரணம் இந்நூலேயாகும்.

Page 190
338/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இந்நூலில், ஆன்றோர் வழக்கின்படி காப்புச் செய்யுளும், விநாயகள், நடேசர், சிவகாமியம்மையாகிய இவர்களது துதியும், பள்ளியர் தோற்றமும், பள்ளியர் வரலாறு கூறலும், பள்ளன் தோற்றமும், பள்ளியர் தத்தம் நாட்டுவளங்கூறலும், குலமுறை கிளத்தலும், குயில் கூவுதலும், மழை கேட்டலும், ஆற்றுவரத்தும், பண்ணைக்காரன் தோற்றமும், ஆண்டையை வணங்கலும், விதைவகை கேட்டலும், முறைப்பாடும், பள்ளன் மூத்த பள்ளியை வேண்டலும், மூத்த பள்ளி ஆண்டையை வேண்டலும், பள்ளன் ஆண்டைக்குக் கணக்கொப்பித் தலும், முகூர்த்தங் கேட்டலும், மூத்த பள்ளியிரங்கலும், நாற்றுநடவும், அதன் விளைவும் கூறப்பட்டு, கழிக்கரைப் புலம்பல், தலைவன் பொருள்வயிற் பிரிவில் தலைவி யிரங்கல் தலைவியைப் புகழ்தல், தலைவன் பொருள்வயிற் பிரிந்துழித் தலைவி வருத்தம் பாங்கி கூறல், நற்றாயிரங்கல் முதலிய அகப்பொருட்டுறைக ளிடையிடையே விரவியும் வெண்பாவும், விருத்தமும், சந்தவிருத்தமும், கலிநிலைத் துறையும், கட்டளைக் கலித்துறையும், கலிப்பாவும், கொச்சகமும், சிந்தும் விரவப்பெற்றுள்ளன. இந்நூல் சொற்சுவையும் பொருட்சுவையும் உடையது.
இதில், மீன் வகைகளும், மாட்டின் வகைகளும், நெல்லின் வகைகளும், அக்காலத்தில் வழங்கிய பள்ளிகளுடைய பெயர்களும், ஆண்டையைப் பள்ளிகள் சிறப்பித்துப்பேசும் வகையும் நன்கு அறியலாம். சில நீதிகளும் பழமொழிகளும் கூறப்பட்டுள்ளன. சில புராண கதைகளும், திருக்குறள் முதலிய நூல்களின் கருத்துக்களும் காணலாம். “மழை கேட்டல்” (பா-66) என்னு மிடத்து மழைக்கோள் வக்கிரித்தலைக் கூறியதும், விதை வகை கேட்டல் என்னு மிடத்து 'மற்றப் பாம்புக்கும் பூரத்துக்கும் பகல் வைத்த நாணுகமொன்று ண்டே யாண்டே’ (பா-86) எனக் கூறியதும் கொழுவைப் பற்றிக் கூறுமிடத்து ‘’மாணிக்கஞ் சொன்ன கோவையிலே கொழுவைத்திருப்பது பர்மின் காணாண்டே’ (பா-90) எனக் கூறியதும் உழவெருதைப் பற்றிப் பேசுமிடத்து, “உழுதகாளை யொன்றுண்டது பொன்னாலை யூரிலே வாருங்காட்டுவே னாண்டே’ (பா-91) எனக் கூறியதும், பறாளை வீரதேவன் வயலிலுள்ள மண்வளத்தைச் சோதித்து, 'ஊற்றுதேன் பொழில்சூழ் தென்பறாளை’ (பா-108) என்று சிறப்பித்துக் கூறியதும், இவைபோன்ற வேறு சில தொடர்களும் வியக்கற்பாலனவாயுள்ளன.
எல்லாச் சிவ சேஷத்திரங்களுக்கும் 'பள்ளு உண்டென்பர். சில தலங்களில் துவஜாவரோகண தினத்தில் உருத்திர கணிகையர் பள்ளைப் பாடிக் காப்பை அவிழ்ப்பது வழக்கமாயிருக்கின்றது. சில பள்ளுகளே ஆன்றோரால் போற்றப்பட்டு வருவதாகத் தெரிகின்றது. அவற்றுள்ளும் பல இதுவரை அச்சிடப்படவில்லை.

அநுபந்தம் - 3
af6ör GOTöB5bLîừu qao6ur - Chinnattambip Pulavar
யாழ்ப்பாணப் புலவருக்குள்ளே திலதம் போல் விளங்கிய இவர், நல்லூரில் இருந்தவரும், இற்றைக்கு முன்பின் 180 வருடங்களின் முன்னே இலங் காதிபதியாய் இருந்த சைமொன்ஸ் என்னும் உலாந்தா மன்னனாற் சேர்க்கப்பட்ட தேசவழமை என்னும் யாழ்ப்பாண நியாயப்பிரமாணத்தைப் பரிசோதனை பண்ணித் திருத்தும் பொருட்டு நியோகிக்கப்பட்ட பல பிரபுக்களுள் ஒருவருமாகிய வில்லவராய முதலியார்மேற் பிரபந்தம் ஒன்று பாடிக்கொண்டு அவர் உறைவிடந்தேடி வந்து விசாரணை செய்தபோது, தெருவிற் பிள்ளளைகளோடு பாக்குக்கட்டி விளையாடிக்கொண்டு நின்ற இப்பாலியப் புலவர்,
“பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும் நண்பூ தலத்தோர்க்கு நன்னிழல7 - மின்பிரபை வீசுபுகழ் நல்லூரன் வில்லவரா யன்கணக வாசலிடைக் கொண்றை மரம்’
என்று தம் பிதா வீட்டுக்குக் குறிப்புச் சொற்றனராம். இவர் பாடிய அந்தாதிகள் இரண்டுள. ஒன்று மறைசை அந்தாதி எனப் பேர்பெறும். நூறு செய்யுட்கொண்ட இது வேதாரணிய ஈசன்மேலது.
"செந்தாதி யண்மணிப் பூணபுலியூரற்குச் சேர்ந்தளித்த சிந்தாத் தியானஞ்செய் வில்லவ ராசன் றிருப்புதல்வன் நந்தா வளந்திகழ் நல்லைச்சின் னத்தம்பி நாவலண்சீர்
அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே ’
என்றதனால் அவ் அந்தாதிக்கு இவர் ஆக்கியோன் எனல் விளங்கும். மற்றது கல்வளை அந்தாதி. இது சண்டிருப்பாயிலுள்ள கல்வளைப் பிள்ளையார் மேலது. முந்தினதில் நின்று சற்றே கருகல் கொண்டது. மாதிரிக்காய் அதிலொன்றை இவ்விடந் தருவம்.
"கல்வளை யாத விரும்புநெஞர் சேகைய ரோடுறவா கல்வளை யார்சுனை வாயரக் காம்பலிசெங் காவியின்பக் கல்வளை யார நிலாவீச விள்ளுங் கழனிசுற்றுங் கல்வளை யானங் குசபாச மேந்துங் கரண்புகழே.”

Page 191
34O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
இவ்விரண்டு அந்தாதிகளுள் மறைசை அந்தாதிக்கு உடுப்பிட்டி, அ. சிவசம்புப்புலவர் உரை இயற்றி அச்சிடுவித்திருக்கிறார். இந்த உரை நயப்பையும் வியப்பையும் 'உதயதாரகை’ப் பத்திரிகையிற் பேசி இருக்கிறோம்.
ஒரு முறை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிற் கணேசையர் வீட்டில் அநேக வித்துவசனர் சபை கூடி இராமாயணத்துக்கு அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்குஞ் சமையம், அவர் சொல்லமுடியாது மலைத்த ஓர் பாட்டிற்கு இளைஞராதலில் ஓர் கோணத்தில் உளுக்கார்ந்திருந்த இப் புலவர் அர்த்தஞ் சொன்ன திறமைக்காக மகா கனவானான அவ் ஐயர் பண்டாரக்குளம் என்னும் ஓர் வயலை இவர்க்கு வெகுமதி கொடுத்தனர். சின்னத்தம்பிப்புலவர் என்ற சொற்பொருட்படி சின்னப் பையலாய் இருந்தபோதே சரஸ்வதியின் கடாட்ச வீட்சணம் இவருக்கு அகப்பட்டது என்றதற்குப் பின்வருங் கதை சாட்சியாகும்.
இவர் சிறுமையிலே பாடசாலைக்குச் செல்லாது கல்வியை அசட்டை செய்து மாடு மேய்க்கும் பிள்ளைகளோடு விளையாடித் திரிபவராதலிற் தந்தையார் இவரைக் கண்டிக்க, இவர் கண்ணுக்குத் தென்படாது ஒளித்துப் போய்த் தாயாரிடம் அன்னம் வாங்கி உண்டு கட்டாக்காலி போல் மறுபடி பாய்ந்துவிடல் வழக்கம். இப்படித் திரியும்போது ஓர் நாள் வழக்கம் போலப் பிதா இல்லாத நேரம் வீட்டுக்கு வந்து போசனம் உண்டு, அவர் முதல் அடி எடுத்து எழுதி வைத்துவிட்டுப் போன ஓர் அந்தாதிப்பாட்டை இறப்பிலிருக்கக் கண்டு எடுத்து, அதின் 2ம் ம்ே 4ம் அடிகளை எழுதி வைத்துத் தன்பாட்டிற் போயினாராம். பிதா வீட்டுக்கு வந்து முன் தொடங்கி விட்டுப்போன பாட்டை முடிக்கும்படி ஒலையைத் தேடி எடுத்துப் பாட்டு முடிந்திருக்கக் கண்டு, இங்கே வந்து போனது யாரென்று மனைவியிடம் கேட்க, அவள் அச்சங் கொண்டு மறைத்தும், பின் நாயகன் நெருக்கத்தால் அந்தப் பேய்ப் பையல்தான் உங்கே வந்தானென்று கூறப், பிதா மகிழ்ந்து இவரைத் தேடி அழைத்து நேசம் பாராட்ட, அப்புறம் இவர் அந்தாதி பாடிமுடித்தனர் என்ப. இவரது சுற்றத்தார் நல்லூரிலும் சண்டிருப்பாயிலும் இருக்கிறார்கள். மானிப்பாய் அச்சியந்திரசாலைத் தலைவருள் ஒருவரான அ. சிற்றம்பலம் ஸ்திறோங் என்பவரும் இப்புலவர் வமிசத்தவரே.

9 DILib25in /34
குறிப்பு
தேசாதிபதி சீமோன் 1706 இல் இட்ட கட்டளைக்கிணங்கத் திசாவை கிளாஸ் ஐசாக்ஸ் டச்சுமொழியில் 1707இல் தேச வழமையைத் தொகுத்தார். இதற்கு ஜான் பைரஸ் செய்த தமிழ் மொழிபெயர்ப்பைப் பார்வையிட்ட பன்னிரு தலைவருள் ஒருவர் தொன் பிலிப் வில்லவராய முதலியார். இப்பன்னிருவரும் தமிழ் மொழிபெயர்ப்புச் சரியானது என்று கையொப்பமிட்ட பின்னர் தேசவழமைப் பிரதிகள் 1707 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நாலாம் தேதி சிவில் நீதிமன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. எனவே, தொன் பிலிப் வில்லவராய முதலியார் பதினெட்டாம் நூற்றாண்டின் முன்பகுதியில் வாழ்ந்தவர் என்பது புலனாகும்.
மறைசையந்தாதிச் சிறப்புப் பாயிரம் “வில்லவராசன் திருப்புதல்வன். நல்லைச் சின்னத்தம்பி’ என்று கூறுகின்றது. சின்னத்தம்பிப்புலவர் பாடியதாக வழங்கும் 'பொன்பூச்சொரியும்’ எனும் வெண்பா "வீசுபுகழ் நல்லூரான் வில்லவராயன்’ என்று உரைக்கின்றது. தொன் பிலிப் வில்லவராய முதலியாரும் சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாம் வில்லவராய முதலியாரும் ஒருவரே என்பது காசிக்செட்டியவர்கள் முதலானோர் கருத்தாகும்.
கரவைவேலன் கோவைப் பதிப்பாசிரியர் தி. சதாசிவஐயர் அந்நூலின் பாட்டுடைத்தலைவன் அடிப்படையிலும், பண்டாரக்குளம் எனும் காணியின் அடிப்படையிலும், சின்னத்தம்பிப்புலவர் காலம் பதினெட்டாம் நூற்றாண்டு என்பதை வற்புறுத்தியுள்ளார். கரவை வேலன் ஆகிய கரவெட்டி சேதுநிலையிட்ட மாப்பாணமுதலியார் வேலாயுதபிள்ளை பெயரிற் கரவெட்டி வென்றியாகுதேவன் குறிச்சிக்குரிய காணித்தோம்பிற் சில நிலங்கள் பதியப்பட்டிருப்பதாகவும் ஒல்லாந்தர் கடைசி முறையாக கி. பி. 1754 இல் காணித்தோம்பினைத் திருத்தியமையால் அவ்வாணி டில் அவர் வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் கருதுவர். புலவரவர்களுக்கு வழங்கப்பட்ட பண்டாரக்குளம் நல்லூரிறைக் காணித்தோம்புகளை 1787 ஆம் ஆண்டினை ஒட்டித் திருத்தியபோது செயதுங்க மாப்பாண முதலியார் தாமோதரப்பிள்ளை பேரிற் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனாற் புலவரவர்களுக்கு செயதுங்க மாப்பாண முதலியார் என்ற பெயருமுண்டு என்றும், தாமோதரம்பிள்ளை
அவர் புதல்வர் என்றும் கூறுவர்.

Page 192
342/ நல்லுர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
சின்னத்தம்பிப்புலவர், வரத பண்டிதர், மயில்வாகனப்புலவர் ஆகியோர் சமகாலத்தவர் என்ற கூற்று ஆய்வுக்குரியது. இக் கூற்றுக்கு அடிப்படையாய் அமைவன சில சிறப்புப்பாயிரங்களேயாம். யாழ்ப்பாண வைபவமாலையின் சிறப்புப்பாயிரமாக வழங்கும் இரு செய்யுள்களையும் வரதபண்டிதரும் சின்னத்தம்பிப்புலவரும் பாடினர் என்று வ. குமாரசுவாமி முதலானோர் கூறுவதற்கு எவ்விதமான ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. புலியூரந்தாதியின் சிறப்புப் பாயிரம் வரதபண்டிதருடையதென்றும் கல்வளையந்தாதியின் சிறப்புப்பாயிரம் மயில் வாகனப் புலவருடையதென்றும் கூறப்படும் கருத்துகளுக்குப் பழைய ஆட்சி இருப்பதாகத் தெரியவில்லை. மறைசையந்தாதியின் சிறப்புப்பாயிரம் ஆக்கியோன் பெயரின்றியும் வரதபண்டிதர் பேராலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் வரணி சித்தாந்தசரபம் வேதாரண்யாதீன வித்துவான் சொக்கலிங்கதேசிகள் பாடினார் என்ற வழக்கும் நிலவுகின்றது. சிவராத்திரி புராணத்தின் சிறப்புப்பாயிரப் பாடலிரண்டும் 1893 ஆம் ஆண்டுப் பதிப்பில் மயில்வாகனப்புலவர், சின்னத்தம்பிப்புலவர் பேரால் வழங்குகின்றன. முன்னைய பதிப்புத் தரும் விபரம் அறியமுடியவில்லை. மயில்வாகனப் புலவர், வரத பண்டிதர் குறிப்புகள் காண்க.
கல்வளையந்தாதியை வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை யுரையுடன் வல்வை ச. நமச்சிவாயபிள்ளை வல்வை பாரதீநிலைய முத்திராகூடிர சாலையிற் சர்வசித்து வருடம் ஆவணி மாதம் (1887) பதிப்பித்தார். இவ்வுரையினைப் பழையவுரை என்ற பெயரோடு எஸ். அநவரதவிநாயகம்பிள்ளை சென்னை ரிப்பன் அச்சியந்திர சாலையில் மீண்டும் 1913 இற் பதிப்பித்தார். சி. தம்பையாபிள்ளை (வண்ணை சுவாமிநாதபண்டிதர்) சென்னை ஆறுமுகவிலாச யந்திரசாலையில் ஜய வருடம் கார்த்திகை மாதம் (1895) கல்வளையந்தாதியைப் பதிப்பித்துள்ளார். சிவசங்கரன் செட்டி வெளியீடாக 1913இல் சென்னை ஆறுமுகவிலாச யத்திரசாலையிலிருந்து கல்வளையந்தாதிப் பதிப்பொன்று வெளிவந்தது. மட்டுவில் வே. திருஞானசம்பந்தபிள்ளையுடன் வருடம் வைகாசி மாதம் (1934) கல்வளையந்தாதிப் பதிப்பொன்று யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையிலிருந்து வெளிவந்தது. மறைசையந்தாதியை ஆறுமுகநாவலர் முதன்முதலாகப் பதிப்பித்தனர் என்பர். உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர் உரையுடன் பதிப்பித்த மறைசையந்தாதியுரைப் பதிப்பினை யாழ்ப்பாணம் வைவபரிபாலன சபையினர் 1905, 1934, 1939 ஆம் ஆண்டுகளில் மும்முறை வெளியிட்டனர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவரின்

அநுபந்தம் /343
அரும்பதவுரையுடன் கூடிய மறைசையந்தாதியைக் கொக்குவில் ச. இ. சிவராமலிங்கையர் விரோதிகிருது வருடம் கார்த்திகை மாதம் (1911) கொக்குவில் சோதிடப் பிரகாச யந்திரசாலையிற் பதிப்பித்தார். மதுரை மகாவித்துவான் சு. சபாபதி முதலியாரும் மறைசையந்தாதிக்கு உரைகண்டுள்ளார். காப்புச் செய்யுள் நீங்கலாக 252 முழுப்பாடல்களும் ஒரு குறைப்பாடலும் கொண்டதாகக் கரவைவேலன் கோவையை முகாந்திரம் தி. சதாசிவஐயர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்திற்காக அரும்பதவுரையுடன் கரணவாய் செவ்வந்திநாததேசிகர், வித்துவான் கணேசையர், க. சு. நவநீதகிருஷ்ணபாரதியார், பண்டிதர் வே. மகாலிங்கசிவம் ஆகியோர் உதவியுடன் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் 1935இற் பதிப்பித்தார். கரணவாய் தெற்கு சி. ஆழ்வார்ப்பிள்ளை தும்பளை கலாநிதி யந்திரசாலையில் உரையுடன் 1956இல் கரவைவேலன் கோவையை மீண்டும் பதிப்பித்தார். சுழிபுரம் பறாளாய் விநாயகப்பெருமான் மீது 130 பாடல்களால் யாக்கப்பெற்ற பறாளை விநாயகர் பள்ளினைச் சுழிபுரம் ச. சிவப்பிரகாசபண்டிதர் சென்னை சித்தாந்த வித்தியாதுபாலன யந்திரசாலையில் விரோதி வருடம் சித்திரை மாதம் (1889) பதிப்பித்தார். இதனைத் திருமயிலை சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை மீண்டும் 1932, 1956 ஆம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பித்தார். சின்னத்தம்பிப் புலவர் இயற்றியதாக நாலுமந்திரி கும்மி எனும் நூலொன்று சண்டிருப்பாய் எம். வேலுப்பிள்ளையாற் கரவெட்டி ஞானசித்தியந்திரசாலையிற் 1934 இற் பதிப்பிக்கர்பெற்றுள்ளது,
கொச்சிக்கணேசையர் மீது பாடிய தனிப்பாடல் ஒன்று காசிச் செட்டி யாவர்களாலும் கரவை வேலாயுதபிள்ளையின் உபசாரம்பற்றி ஒரு பாடலும் சீட்டுக்கவிப் பாகமொன்றும் கரவைவேலன் கோவைப் பதிப்பாசிரியராலும் சின்னத்தம்பிப்புலவர் பாடல்களாகத் தரப்பட்டுள்ளன.
. Governor Cornelis Jaan Simons 1703 - 1707
. Dissava Claas IsaaksZ
. Codex Jaifanensis
. Jan Pirus
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை : ஈழமண்டலப்புலவர்

Page 193
அநுபந்தம் - 4
GlfüWG LD555 aflüU5JNijl
கல்வளையந்தாதி (பக். 01-77)
செய்யுள் இல. செய்யுள் இல
9
அகம்பத்தர் 56 கரவடம் 42 அஞ்சத்திரத் 5 கரனாகராமுனி 97 அடைக் கலங் 44 கரியானனத்தன் 16 அப்பாதக 57 கரும் பனை 13 அம்பலங் 37 கருவரம்பா 58 அரக்கரவிந்தற 81 கல்லாரமூரற் 78 அரவம் புலிங்க 33 கல் வளையாத 12 அரியாதவ 76 கலகத்தமரத் 40 அருக்கரை 55 கவானரம் 3 அருந்துதி 43 கவிநாயகன் 14 அருமந்த 90 கற்பகநாடர் 1 அருளத்த 4 கனகந்தரநிற 100 அவலம் புரி 20 கனஞ்சஞ்சரித் 59
இ இரும்புணர் டர 66 காயப்படவு 87 இலங்கை 36 காரப்பிணை 9 8
காரணவாத 39 ஒன்றாயிருசுடர் -காப்பு- 2 கானகத்தா 79
க் கஞ்சக்கரந் 9 ಅಟUಷ್ರಣೆ! 74 கட்கஞ் ச 80 சங்கரனாட்டத் 85 கடம்பிடிக்குங் 60 சந்தனமின்னு 7 கணி டலம் 2 சம்பந்தமாவினை 26 கணி டா லமுண்ட 99 சரந்தண் டரு 24 கணத் தலைவன் 15 கத்தாறுகா 96 சாலிக்குவாலி 70 கதிரைக் கடவுள் 6 கப் பணத் தந்த 7 7 சித்தம்பர 72 கமணி டலம் 38 சிந்தாமணி 7

செய்யுள்
த்
தகரங்கமழ் தங்கமலையதி தந்தனந் தம்பஞ் சுரதஞ் தரங்கவளக்க தரப்பணியாரம் தருமந்தக் தரைக்குந்ததி
தவராகமா
தனக் காக்கை தனந்தனந் தனையாயுதவிய
தாமதிக்காந்த
தார் கொண்ட
தானவரங்கம்
திக்குடையானடி
துரங்கந்
தைக்கும் பகழி
ն
பங்கையமாலை
பரசங்க
பரமானந்தக்
பவநம்புயர்
பாலைவனத்
புயங்கந்தரித்த
-காப்பு
35
68
25
73
18
34
69
84
46
86
23
7 1
2
89
50
19
49
48
27
5ך
செய்யுள்
மகரந்தவள மஞ்சரிக்கண்ணி மத்தன்பராபரை மரக்கணியார் மருக்காவி மலைவல்லியமம்
மற்கடந்
மாலையனங்
மாவாரண மானவலக்கண்
மைக்கண்ட
வ்
வங்கங்கணவர் வண்டமருங் வந்தனையன்பர் வரச்சந்திர
வரமபல வருந்தும்பிறவி வரையாரம் வன்னிகளங்க
வனத்தானையன்
வாசவனந்தர வாரிக்கடுக்கை வாளமுருக்கிதழ் வானஞ்சலஞ்
வேதாரணிய
வைப்பரசத்தி வையத்திருக்கை
அநுபந்தம் /345
இல.
32
88
47
95
83
29
94
65
92
64
82
52
63
62
30
51
10
67
45
54
53
93
31
22
9
4

Page 194
மறைசையந்தாத (பக். 79- 140)
செய்யுள்
6 அந்தமு மாதியு அரம்பையங் அரிதிரிகைக் அறுத்தவித்
அறைககனட அன்றாலினாட்டந் அன்னம்பலவ
இ இடங்கரடங்கய இமையாத இயக்கோடை இரண்டாந்தகரங்
உகந்தாவடிக்கு உண்டலத்தானை உத்தமரத்தி
உருபபவனாசன உரைத்தென்னை
G எற்பதங்கன்று என்றாடலையொன்று
ஏ ஏத்திரப்பாண்டி ஏற்றுக்கொடியர்
ஒண்டுதை ஒளியானிறையுந் க் கண்டங்கடுத்த கண்ணச்சிராக கதவாயு நீரங்கி கருங்கலைமானு கருந்தாதை கருமந்திரிகரணம்
இல.
காப்பு 87
80
20
45
22
34
27
66
92
41
36
67
47
63
94
68
64
31
25
72
71
33
89
12
46
செய்யுள்
காரணனோமத் கானவண்டானக்
கிரிதாரகையணிந்
குதிக்குஞ்
கெடுப்போனகந்தை
885LDLIE85606)
சம்பாதியந்தச்
சாதிப்பராகம
சிங்கமுருக்கு சித்திரவன்னிக
சிரவரவிந்தம் சிலைக்கோடு
சுரும்பரவைக்கிசை
செய்யரைக்கோடி
சேருவரிக்கடை
சொன்னச்சிலம்பு
த் தகரநகரமுன் தத்தம்படைத்த தத்தலைவேலையன் தற்கோலமென்ற
திருவாரணங்கு
தீங்கரும்பாரஞ்
தேன்றதும்பிக்
98
49
42
93
81
96
59
78
53
16
14
97
15
73
39
100
52
56
5
40

செய்யுள்
தொடிப்பாணி தொலைவேதனையர்
தோகையிராமன்
ந் நன்றென்புல
நிருமலரஞ்சனை
நீண்டவராக
நெஞ்சத்திருக்கு
f படிகந்தனை படைக்கந்த பண்ணமுதலை பதிகம்பாரிக்குங் பரமரம் பறக்கும்பருந்து பணிச்சந்திர
பாகனகனி பாரிக்குமார
பாலம்பகவன்
புகரானையீடு புயற்கூடு புரியாரநந்த புன்னாகவேலி
பெருங்காசினி
பொன்றுதை
போதவனத்த
மகரசலந்தர
மங்கலமந்தர
70
32
85
60
57
74
55
83
30
54
17
88
62
37
7ך
99
3
79
18
29
76
91
90
48
செய்யுள்
மணிக்குட நாடகன் மருக்கரவீர மலைக்கார்
மற்றாலாத்தேரைய
மனக்காக்கை
மானத்தரக்க
மின்னஞ்சு
முன்னாவலா முத்திரு மாதங்க
மெய்த்துத்தியான்
மேல் விண்டு
மையகற்றானை
வ் வந்தித்திருக்குங்
வண்ணவெண்
வரபர சங்கர
வருகரநாக வரைச்சங்கரிக்கு வன்போதக வணக்கோதை
வானண்டருண்டி வானப்பிறையையும்
வித்தந்தியாக விலங்கலரிக்குலஞ்
வெறும்பத்தி
அநுபந்தம் /347
இல,
26
2
38
82
58
19
65
23
43
28
84
86
69
24
44
6
95
35
50

Page 195
கரவை வேலன் கோவை
(பக். 141 - 240 )
செய்யுள்
s அஞ்சனவல்லி அஞ்சாயல் வஞ்சி அடற்பரியேறுங் அடிப்பூமயில் அயலாரறிந்து அயிலாளுநீல அரும்பவிழ்சோலை அரும்பாலணி அரும்பைமணக்கும் அருள்விழி அல்லைக்குழைக்கும் அழைப்பெண்ணை அறையாழி அன்பதினோர் அன்னந்தரு
ම%
ஆடுஞ்சுனை ஆதிபதம்பணி ஆயாதநிதி ஆராதவின்பத் ஆருயிராமுன் ஆலையின்மாரன் ஆறணிசெஞ்சடை
இ
இயங்கும்பிறப்பென் இருங்கயல்வென்ற இல்லாதமெல்லிடை இல்லாமருங்குன் இலக்கணநூல் இன்றொன்றதிசயம் இன்னாளியாம இனபரிபாலன்
ஈனந்தவாவென்
இல.
179
169
102
196
240
2O2
231
322
94
7
108
107
26
166
34
63
44 272 136 224 154
47
190
292
138
223
65
215
176
59
செய்யுள்
9. உருக்காமவேணிகர் உருளாரவாணகை உளமிகுமாண்மை உன்னையொளித்தவளை
?
ஊற்றியதண் ஊன்றாவங்காய
କT
எடுத்தார்வினா எண்ணருங் எண்ணாத்திற எமையாளவெண்ணி எல்லாருஞ் எழுமுகிறன்னில் என்னாமிவர்மனத் என்னாலியன்றன
ெ
ஏதாயினும் பணி ஏறுஞ்சுரும்பும்
9 ஒருகோதையாரை ஒருமொழி ஒள்ளியதாரகை
9 ஒரொருசாதி
க்
கங்காதரன் கங்குலென்றாற் கச்சணிகொங்கை கஞ்சமின்சேருங் கதறுந்திருமக கயற்குறிகாணுங் கரம்பெற்ற
279 55 41 67
2O1
75 303
134 312 72
172
8 57
103 315 38
61
78
277
2O3
242
191
100

செய்யுள்
கரவேழமுருங் கருமானிகருங் கருமேகமேயன்ன கலமணிகொங்கை கலைவீசுமென்னகத் கற்றவர்நம்புங் கறுத்தனமங்குல் கறைகொண்டு கன்னமதாசலம்
காதளவோடு காரொன்று
கிளிகாள்
குங்குமவாகன் குடமார்கணதன குவிகறைமேகம் குறியாகநீர் குறைவிடமான குன்றாதசெல்வ குன்றேயனைய குனிக்குங்கரும்பு
கொஞ்சியமென் கொத்தாருங்
கோட்டின்றிகழ்
ά, சங்கந்தவழும் சங்குஞ்சுழியும் சத்திக்குமாரன் சந்தனநீழல் சலஞசல
சாத்திரநீதி
சாதிப்பவளக்
சிகரந்தளை சிந்தாமணியன்ன
193
199
32
62
6 309 163
37
226
184 319
160
180 189 177
19
70 212 31 O 117
109
168
42
51
13
132 195
82 232
239
54
செய்யுள்
சிலைக்கோல சிலையார்நுதன் சிறந்திடுமென் சினந்தோயுமாரன்
சீதளவாண்மதி சீரிணங்குந்தமிழ்
சுந்தரமாரன் சுற்றாயவெள்ள
செப்பார்முலைச் செப்போதிளமுலை செய்ச்சங்கமுருங் செருமலி செவ்வியனாண்மை செறிக்குங்கனங்குழை
சேதுநிலையிட்ட சேருங்கலப
சொல்லுங்கதை த் தண்ணானவார் தண்ணிறைபூஞ் தணிவகல்சீற்ற தரைபொங்கு தரையேமதிக்குங் தழுவியவன்பர் தழையேந்து தனதனை
தாதேயளகமு தாரணிமெச்சிய தாரைவிளக்கிய தாளாருஞ்சீத
திங்களைநேர் திசைப்பாலிசை திரந்தருதிண்புய
அநுபந்தம் /349
இல.
64
306
167
10
105
204
85
209
291 149
29
238
278
35
16.1
46
114
158
130
8 221
142
43
296
206
1
56
23
22 27 307

Page 196
35O/ நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பிரபந்தங்கள்
செய்யுள்
திருந்தியகோதண்ட திருமானிரண்டு திருவளராகன் திருவெள்ளைமால்
திரையாழியீன்ற
துடிபோலிடை துதியுங்குறையு துப்புளவாய்மை துளியாருநீல
தேங்கமழ்சோலை தேடியகீர்த்தி தேருங்கடலு
தொடியார்கரகல தொடைத்தமிழ் தொண்டாயிவட்கு
தோற்றிசை
ந் நகைவாய்த்த நத்தார்கரவை
நாம்பொருட்டேடி
நிலவாருங்கீர்த்தி நிழல்சுளியானை நின்றாளரவிந்தஞ்
நெய்யுந்திரியும்
பங்கயமானுறை பஞ்சேறுசீறடி படியினில்வெஞ்சுரம் பண்ணிற்சிறந்த பண்ணுரைநூலன் பணியணியல் குல் பழங்கவிநாவலர் பற்றலர் சிங்கம்
இல.
116
7ך
80
125
11
27
76
31
21
234
79
124
69
15
280
20
295
275
274
214
121
1 12
210
45
308
31
33
50
276
236
செய்யுள்
பன்னாகமாமணி பனைமடலேற்றை
பாங்காய்வரு LJпLITLD(36)Т608 பாய்பரியூருங் பாரூரிலந்தகன் பாலூன்று
பிறைசூடியை
புடையுற்றபார புண்விளையாடு புரிவால்வளை புனைமேகலைமயில் புனையிழைமங்கை
பூண்டருஞ்சோதி பூந்தொடைமார்பன் பூமேவுதாமரை பூவென்றமால்
பெருக்கான
பெருகுந்துயரந் பெற்றாய்பெறுவதை
பேராவருந்துயர்
பைவாழ்நிதம்ப
பொய்ப்பொருள் பொருமதத்தாரை பொலம்புரிபூண் பொற்கலைமாதவன் பொறிகாட்டுரக
போதுளகொய்து போதொற்று
d மகபதிமானுங்
13
106
128
21
53
47
233
28
30
237
216
297
175
213
137
198
269
39
197
120
10
165
174
78
88
13
93
302

செய்யுள்
மங்கையர்மோகன் மணங்காண்மலர் மத்தகயானை மதிவண்ணவேணி மந்தரநேருங் மந்தாகினிக் மந்தாரமன்ன மருக்குங்கும மருந்தேகுதலை மருநோக்கும் மருப்பாமென மரைமாண்விரும்பு மல்லாருந்திண்புய மல்வளைக்கும்புய மலையிருதோளன் மற்பயில்வாகன் மன்றாடுவான்
ιDπό π6υ(βιρτ மாதானசூரன் மாலேயனைய மாவடுவென்ற மானிகர்சீதையை
மீண்சொன்ன
முகத்தான்மதியை முத்தம்பொதியும்
மேகந்தவழ் மேதினியாடந்த
மைந்துறை
மொழிகண்ட
வ் வண்டலைதண்டலை வந்தெழுமிந்து வயமேல் வரு வரவிந்தமன்ன வரியார்விழி
25
84
113
115
270 3.18
281 162
52
141 241
192 12 182 காப்பு 22
73
27
49 187
145
126
135
71
123
173
94
60
157
36
29
32
104
செய்யுள்
வழுவாமொழி வள்ளுறைவாங்கிய வன்பாலறிவு
வாயுளிபோலும் வாராடுபூண்முலை வாராயலைமனமே வாரித்தலம்புகழ் வாலியும்நீள்சினைச் வான்பெற்றநாதன் வான்மணிநோக்கிய
விடந்திகழ்கண்ணியர் விடைதாங்கினான் விண்டோயுஞ் விதிக்கின்றமுத்தமிழ் விதையம்புனத்திற் விந்தத்தைநேர் விந்தாசலமன்ன விரதகுணாகர விரலணிமங்கை விராவியபூகத்து விரையகலாத்திரை வில்வலியாண்மை வினைமாவழங்குங்
வெண்மைத்தரள வெதிர்புரைதோளியை வெம்பணிகேது வெம்பானுவுங்குட வெம்புலிசிங்கம் வெற்பனதோள் வெற்பானதோள் வெறியார்குழலியர்
வேலாயுதனை
வைப்பயில்வேல் வையகமெங்கும் வையாரும்வேலன் வையுறைவேல்
ceglluriath /35)
இல.
294 185
24
317 225
39 235
293
17
58
316
48 181
40
148
29
19 164
186
207
218 183
40
425
143
68
320 200 156
14
70
208
10
313
290
98

Page 197
பறாளை விநாயகர் பள்ளு
(பக். 241 - 296 )
செய்யுள்
e அக்கமாலை அத்திமணிச் அரந்தோயு அருவியோதை
ජීනෝ, ஆட்டுமூசலி ஆதிகாலத்திலாருயிர் ஆயிசுந்தரி ஆயிரங்கலை ஆயிரம்பகுவா ஆரமணியாலை ஆலைதாதகி ஆனாலுமோர்மதி ஆணேறுயர்த்த
இ
இரங்காழி இருநிலத்து
உரந்தாவு உரைதத 2 -(L93 LJLDU19
Spor ஊசல்வட ஊற்றுத்தேன்
o எண்ணிவிடை என்பன "சொற்
ஒ ஒறுததாறபயன
ஓ
ஒசசடியடிததா
ஒள ஒளவியநெஞ்
35 கட்டு நீர்வயற் கண்ணகன்ற கண்ணிலே கரந் கண்ணுதற் கத்திவேலம்பு கயல் வரைந்த கருமயிலாடக்
இல.
58 23 114
102 108
68 66
10
97
41
94
100 1
87
29 7
செய்யுள்
கருவலம்புரிச் கற்றநூலுணர்
காடெலாங் காதளவு சென்ற காந்திசேர்கண் காமன் மகிழ் கான்றசோதி
குட்டச் சொறி குட்டை நாம்பன் குத்துமுலைக் குறவைவாளை
கொங்கையுரந் கொந்தவிழ்தாம
கோங்கிளம் கோயிலின்னதி கோரந்தோய்ந்த கோலமாதவி
&ক্ত சங்கத்தை யேந்தும்
சாதிநா கிளந்
சிந்திரத்துணை சிந்தைமதிக் சின்னவிடை சின்னி வன்னி
சுத்தர்பணிந்தேத்துந் சுருதியின்முத சுற்று கருங்
செப்பு மொழி செம்பருதிவார செருகிய தவளக் செல்லுஞ் சென் முடிக் செழுநிலாமதிக்
த் தண்டபாணி தண்ணென் தரியலர் கண்
இல.
39 33
81 27
115 31
82
103
76
112
125
53 1. 37
106
32
85 92
117
13
துதி
69 107 70 26 91
14 19
63

செய்யுள்
தாவு கெளிறு
திகந்த மெட்டும் திங்களாடப் திருக்கை புலியன்
தூரதிட்டி
தெற்றிக்காளை
தேடிப்பொருளைப் தேன்கிடந்த தேன்பயிலுந் தேனேறு கொன்றை
தொல்லுலகம்
தோட்டுவாரிச
தோடார்குழ
ந்
நந்து தவழ
நாளுங்கலியை
நீரிலே புண்டரீக
நேரியன் சரண் f பகுத்தவந்தணர் பஞசவா தூது பட்ட நெஞ்சி பண்ணிற் றோயப் பண்புநீதி பணபதி சிரமிசை பரங்கான பரப்பு மேகலை பரிசகலகலை பள்ளன் பண்ணை பள்ளணிருகாலி
பார்புகழுங் பார்மதிக்க
பூரிவரைமேலா
பேரியென
7ך
34 6 78
95
86
120 110 124
45
-காப்பு
துதி
துதி
121
12
30
24 79 99 25 93 73
59 9 61 109 98
105 83
48
49
அநுபந்தம் /353
செய்யுள்
பைப்பணிப்பகுவாய்
பொங்குகூளி பொய்யூரு பொருப்பினெல் பொருவில்கோணச்
போற்றுமாதுளை
ib மஞ்சளாவிய மஞ் சொத்தகுழலா மருதிடைத்தவழ்
மாட்டுவகை மாரனையளித்த மாரிமேகந்தவழ் மாலைதோறு மாறுகண்ணுஞ் மானேறு வரிநயன
மின்னுங்காருங்
மீனேறு கடலால
முன்னைநாளிற்
வ் வடிவுக்குஞ் வரிசைவளர் வள்ளியோரிற் வளமை சேர்ந்திடு வன்னச்சோதி
வாமமேகலைப்
வாய்ந்த மருத வாவியின் கரைக்
விரியமுதமுறு விரைமலர்
வீறுயர்ந்த பாரத
வெருண்டு வரியுடல்
வேட்டுவன் வேணிக்கங்கையர்
இல.
7
28
6 84 74
7
13 96 18
104 50 18 16 80 47
10
46
22
123 60 40 21 89
20 75 36
62 64
126
72
43 9 O

Page 198


Page 199


Page 200


Page 201
அரசகேசரியிலிருந்து நமது கண் ஓரிலக்கியவழி தொடர்ந்து வந்தி இடையிடையே செடி போனாலும் வழியொன்று கிறதென்பதற் சான்றுகள்
தலைமறைவில் வாழ்ந்து வந்திருச் றாக விளங்கு சின்னத்தம்பி வருடங்களுக்கு முந்தியது. தக்கே புலமை கனிந்த பரம்பரையைச் பதை அவரியற்றிய நூல்கள் பாதி குலவித்தை என்கின்ற ஆவசியகத்தைத் தெரிவிப்பதாயிரு
கசடுகளைப் போக்கி, அவர்களை
துவதற்கு முதலிற் படிக்கும்படி ஒன்று மறைசையந்தாதி, சின்னத் கலைசைச் சிலேடை வெண்பா ஆராமை அதிகம். அதில் வருளு சொல்லிச் சொல்லிச் சுவைப்பவர் கள் கொண்டாடுவதிலிருந்தே மன எத்தகையது என்பது உணரத்தக்
ஆராய்பவர்) ாதாரண நாட்டு கல்லாதாை
6
அச்சுப்பதிப்பு: கௌரி அச்சகம், கொழும்பு -3.
 
 
 
 
 
 
 
 
 

எவ்வாறோ தொடர்புற்று
டு.
சேர்காலம் முடிய, ஒல்லாந்தர்க டிலதாயினும் ஆங்காங்கே புலவர்க $கிறார்களென்பதற்கு ஒரு பெருஞ்சான்
స్రి கல்லாமற் பழமொழியும் ஒரு பரம்பரையின் ங்கின்றது.
ளங்கியவரும், சொற்குற்றம் பொருட் ண்ணிதின் ஆராந்து தூய்மை செய்
தம்பிப் புலவரியற்றியது.
மறைசையந்தாதியிலே புல சொற்கள் தொடர்களை புலவர். தோடஞ்ஞரான புலவ ஒறசையந்தாதியின் தமிழ்மரபு கது. (தோடம் - தோஷம், சின்னத்தம்பிப் புலவரியற்றிய
வான்கள் கைகூப்பி வணங்கத்தக்க
டிதமணி சி. கண
L.A. S.
III
Rls