கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2012.01

Page 1
சீதாவாக்கையில்அழிக்க JÜl. கிருங்கற்சிவாலயம்
猫
NDA.Nk 10000 CANADA
SIR ANKA. SLR 200,000 AUSTRALIA.
SINGAPORE.SGS 14.00 SWISS.
s E e
s
리 s --
 

ANs 1000 USA.Uss 1000 USS 10.00 U GB£ 6.00 HF 10.00 EUROPE.EUe 700

Page 2
"Iggegயர் கிடுகி0ாரிெசி
 

»I'səļņxəļųsəue6'www uuooosəļņxəļųsəue6@oļu|:||eu-E L£68çț¢Ć : Qı9$T19) 8.L0£ț7€Z ‘8ZI SZEZAprīg)09.091€0
· I I Fiqisi) uolo) ogēņ9 199Ųngle) og 8-18
IT-TITUȚIsso (Trog) souT)
IŲJŲ TŲJŲņTĘ ĖJIMŲJĘo
9/6), 30uIS
·q13)$4,00909$ qoyoossusqig) 1990fff0JOosgo@

Page 3
NO3433 Gole ROC e-O-45284.38
 

www.jeyechondrons.com Skype:jeyechondrins888
CColono-O3 / O-452843.5

Page 4

அட்டைப்படம் :
சிஸ்டைன் ஆலயத்தின் மேல் மாடத்தில் மைக்கல் அஞ்சலோவினால் வரையப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஓவியம்
உள்ளடக்கம்
22 காலவோட்டத்தில் புகைப்படக் கலையின் பரிணாம வளர்ச்சி
<>Ᏹ<>>>< 28 பராக்கிரமபாகுவின் காலத்து
நாய்மணைச் சாசனம்
56 மு. இராமலிங்கமும் நாட்டார்
பாடல் தொகுப்பு முயற்சியும்
ஒரு இலக்கியத்திலும்
சித்த மருத்துவத்திலும் வேம்பு

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
TP. + 94 11 5234338 WWW. kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai editor(CDkalaikesari.com
SUBEDITOR Bastiampillai Johnsan editor(CDkalaikesari.com
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. C. Pathmanathan Prof. S. Sivalingaraja Prof. P. Pushparatnam Prof. S. Jeyarasa Dr. Viviyan Sathyaseelan K. Thangeswary Subashini Pathmanathan Pathma SOmakanthan D. Manoharan
PHOTOS S. Surenthiran LAYOUT S. A. Eswaran
ICT
S. T. Thayalan
ADVERTISING A. Praveen marketing(CDVirakesari. Ik
CIRCULATION
K. Dilip Kumar
SUBSCRIPTIONS
Arjun Jeger arjun (CDexpressnewspapers.net
PRODUCTION L. A. D. Joseph
SSN 2012 - 6824
கலைக்கேசரி வாசகர்
உங்கள் அனைவ உரித்தாகட்டும். 20 ஆண்டுகளைப் பூர்த் வைக்கின்றது என்பத6 ஈழத் தமிழர்தம் 1 சமுதாயத்தினருக்கு எ
கலைக்கேசரி ஊக்
வாசகர்களாகிய நீங்க ஆய்வு அறிஞர்கள் த மகிழ்ச்சிக்குரியது. இ6 பொக்கிஷங்களை கை நாட்டார் பாடல்கள் தொட்டுக்காட்டுவன எ கருதப்படுகின்றன. அ ஆய்வுசெய்து, தொகு மு.இராமலிங்கம் அவ குறித்த கட்டுரையும் மேலும் பல ஆய்வுப் ப வாசித்து உங்கள் மாணவர்களுக்கும் அ எங்களுக்கும் எழுதலா மீண்டும் சந்திப்போ
6600Ti585 b
ਪ - گوجه تسمه ssآگوآ )
 

ஆசிரியர் பக்கம்
ாசகர்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்
5ளுக்கு வணக்கம். ருக்கும் எமது புத்தாண்டு, மற்றும் பொங்கல் வாழ்த்துகள் 12ஆம் ஆண்டின் மலர்வுடன், கலைக்கேசரி இரண்டு தி செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து னை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். பண்டைய மரபுகளையும், பெருமைகளையும் இளைய டுத்துரைக்கும் அந்த உயர் இலக்கில் சிறிதும் விலகாது, கத்துடன் செயற்பட்டு வருகின்றது என்பதனை ள் உணர்ந்திருப்பீர்கள். எமது இந்த அரிய நோக்கிற்கு மது பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கி வருகின்றமை னிவருங் காலத்திலும் அவர்கள் தமது அரிய ஆய்வுப் லக்கேசரிக்கு அளிப்பார்கள் என நம்புகின்றோம்.
ஓர் இனத்தின் கலாசார, பண்பாட்டுச் சிறப்புகளைத் ன்ற வகையில், அவை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் ந்தவகையில், ஈழத்தில் நாட்டார் பாடல்களைத் தேடி, த்துப் பல நூல்களை வெளியிட்ட வட்டுக்கோட்டை ர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். அவரது ஆளுமை
வழமைபோல் உங்கள் சிந்தனைக்கு ஊட்டந்தரும். டைப்புகள் இவ்விதழிலும் இடம்பெறுகின்றன.
கருத்தில் கொள்வதுடன், உங்கள் நண்பர்களுக்கும், அறிமுகப்படுத்தலாம் அல்லவ? உங்கள் கருத்துக்களை ம் அல்லவா?
TLD.
ՀՇ

Page 6
8
6600600
20/2 ஆ
9/4560)6)/60)CO
வைக்கின்ற
தத்தி த வருகின்றா வந்திருக்கிற
தமிழர் த மறந்து வி செயலாற்ற கட்டத்தில்
பண்பாட்டுக்
9/60)COCOGUOC தான் ெ
邸蕊蕊
မြို့'့် ‘့် 蠶 அவள தன எழுத்தாளர்.
పళ్లిళ్లపిళ్ల శభః ఓః UCCV607/TCČV 6.
គឺ រឿងខ្លាំងខ្លាំងជ្រៃផ្សេធអំងៃ
Σ அரிய கட்
விருந்தளிப் தேடுதலை என்பதையு தொடர்,
பாதையைக் மாதம் நை அங்கு ஓர் நோக்கில் கி செப்டம்பர்
அதற்கான
20//ஆம்
மாணவர்க
எதிர்பார்ப்ப மக்கள் த கலைக்கேக்
மாநாட்டிை ஆலோச6ை
ခြိုးပြီး နှီး མང་ தமது ஆக்ச அமரர் பேர
கொள்ள க
காலவே
எதிர்நீச்சல் முன்னெடுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8 & 8 8 ங்களும் வண்ணங்களும் II
பூம் ஆண்டு ஜனவரி மாதம் கலைக்கேசரி தனது இரண்டாவது /ப் பூர்த்தி செய்து மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து
/76.77,
த்தி நடை பயின்றாலும் தன் காலடிகளை ஆழப்பதித்தே நடத்து ள் என்பதை வாசகர்களாகிய நீங்களே எமக்குத் தெரியப்படுத்தி ரீர்கள். அது எமக்கு ஊக்கந் தருவதாகவே அமைந்து வருகின்றது. ம் தொல்லியல் பண்பாடு, கலாசாரம், மரபுப் பெருமைகளை மேலும் டாமல், புத்தூக்கம் அளிக்கும் பணியில், தன்னை அர்ப்பணித்து நோக்கம் கொண்டு மலர்ந்தவள் கலைக்கேசரி இன்றைய கால இவ்வகைப் பணிகள், அவசரமும் அவசியமும் ஆனதென்பதை ஒப்புக்கொள்வர். ஓர் இனத்தின் தொல்லியற் பெருமைகள், ச் சிறப்புகள், அதன் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக
ό.
காண்ட உயர் குறிக்கோளினை, செயல் உருவாக்கும் நோக்கில், ாக்கு ஏற்ற வகையில் கல்விமான்களோடும், கலைஞர்களோடும் களோடும், கைகோர்த்து நடைபயில்வதைக் காண்பீர்கள். அதன் தால்லியல், வரலாறு, பண்பாடு, மரபு ஆகியவற்றில் கடந்த வருடம் ட்டுரைகள் வெளியாகி, களிப்புத் தந்ததுடன், சிந்தனைக்கும் பவையாக அமைந்திருந்தன. அத்துடன் கலைக்கேசரியும் தனது தொடர்ந்தும் நடத்தி வருவதினால் மேலும் அணிசேர்க்க முடிகின்றது ம் குறிப்பிடலாம். தமிழக கலை கலாசார கட்டுரைகள், இராமாயணத் ஆகியன இதற்கு உதாரணங்களல்லவா? தான் நடந்துவந்த க் கலைக்கேசரி மீள நோக்குகின்றபோது, 2010ஆம் ஆண்டு ஜூன் டபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினையொட்டி, தன்னை Tளவுக்கேனும் அறிஞர் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட்டதைப் போன்று, 20// ஆம் ஆண்டு மாதம் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டதும் மறக்கமுடியாததொன்றே, சந்தர்ப்பமும் விதந்து கூறப்படக் கூடியதேதான். ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 27ஆம் ர, தமிழர் தம் தொன்மையைப் பேணுதலைக் குறிக்கோளாகக் லைக்கேசரியின் பூரண அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பல்கலைக் த்திய, "யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி மறக்க முடியாத ப்பொருட்காட்சியை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கண்டு மது தமிழுணர்வை மேலும் பலப்படுத்திக் கொண்டார்கள் என்பது கிழ்ச்சியைத் தந்த ஒன்றாகும். அத்தொல்லியல், பண்பாட்டுணர்வு ளிடையே மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே எமது பெரும் ாகும். இவ்வகையில் உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மது ஆதரவைத் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பது சரியின் வேண்டுகோளாகும். மேலும் உலகத் தமிழ் செம்மொழி னயொட்டி, கலைக்கேசரி வெளியிட்ட சிறப்பு மலருக்கு காத்திரமான னகள் வழங்கி, சிறப்பு மலர் சிறப்பாக வெளிவரவும் தொடர்ந்தும் 5ங்கள் மூலம் கலைக்கேசரியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்த ாசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களை இவ்விடத்தில் நினைவில் லைக்கேசரி விரும்புகின்றது. /ாட்டம், கரைபுரளும் வெள்ளம் போல் மிக மிக வேகமானது. அதில் எமது கடமை. அந்த வகையில் கலைக்கேசரியும் தனது பயணத்தை க்கும் என்பதைக் கூற விரும்புகிறோம்.

Page 7
݂ ݂ 赣
Regional D
 

සංවර්ධන බැංකුව 1 புபிவிருத்தி வங்கி )evelopment Bank

Page 8
560605 3557) o 08 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு:
1Dpibga)6Jujib 1)
 

]றைந்தவையும்
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
(சென்ற இதழ் தொடர்ச்சி)
யாழ்ப்பாணப் பிரதேசத்திலே பயிரிடப்பட்ட கிழங்கு வகைகளாக மரவள்ளி, இராசவள்ளி, மோதகவள்ளி, மயிர்வள்ளி (கொட்டி), வத்தாளை, சட்டிக்கறணை முதலானவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிலே மரவள்ளிக் கிழங்கு மிகவும் பிரதானமானதாகும். இப்பிரதேச மக்கள் மரவள்ளிக் கிழங்கைப் பல வகையாகப் பாகம் பண்ணிப் (அவித்து, கறியாக, மரவள்ளி மாவாக) பயன்படுத்தினர். மரவள்ளி யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக விளைச்சளைத் தந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்து இராசவள்ளிக் கிழங்குக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும் மிகுந்த செல்வாக்கு இருந்தது, இருக்கிறது. காலனித்துவ காலத்தில் மேலைப் புலத்தவர்களும் இக்கிழங்கை விரும்பியுண்டதாகக் கூறப்படுகின்றது. இராசவள்ளிக் கிழங்குக்குத் தேங்காய்ப்பால் விட்டு அவித்துச் சீனி அல்லது சர்க்கரை அல்லது பனங்கட்டி போட்டுக் களியாகக் கிண்டி விருந்துகளிற் கூடப் பரிமாறப்பட்டது. இன்றும் சிறுபான்மையாக இவ்வழக்கம் இருக்கிறது.
வத்தாளைக்கிழங்கு குறிப்பிட்ட ஒரு பருவ காலத்திலேயே பயிரிடப்படும். இனிப்புத் தன்மையுள்ள இந்த வத்தாளைக் கிழங்கினை ஒல்லாந்தரும் 三ー ஆங்கிலேயரும் இனிப்பு உருளைக்கிழங்கு என்று
அழைத்ததாக அறியமுடிகின்றது.
பனங்கிழங்கு பற்றிப் பின்னர் தனியேநோக்குவோம்.
மயிர்வள்ளிக் கிழங்கினைக் கொட்டிக்கிழங்கு என்று கூறுவார்கள். கொட்டிக்கிழங்கை அவித்து உரித்துச்

Page 9
சாப்பிடுவது மிகவும் கடினம். இதுபற்றி ஒரு நாட்டுப் பாடலே உண்டு.
'கொட்டிக் கிழங்கொண்டு பெட்டி எடுஎண்டாக் கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் அவிச்சு உரிச்சு முன்னாலை வைக்கச் சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம்' கொட்டிக்கிழங்கை அவித்து உரித்துச் சாப்பிடுவதிலுள்ள சிரமத்தினையே இப்பாடல் புலப்படுத்துகின்றது.
சட்டிக் கறணைக்கிழங்கு கறியாகச் சமைத்துச் சாப்பிடப் பயன்படுத்தப்பட்டது. (இது மருத்துவக் குணம் நிறைந்தது என்று கூறப்படுகின்றது.) சட்டிக்கறணையை 'கரணைக் கிழங்கு என்று அழைக்கும் வழக்காறும் உண்டு.
யாழ்ப்பாணத்து மண் வளம் பொதுவாகக் கிழங்கு வகை உற்பத்திக்கு மிகவும் உகந்தவை எனப் புவியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளமையும் அவதானிப்புக்கு உரியது.
யாழ்ப்பாணப் பிரதேச மக்கள் பயன்படுத்திய பழ வகைகளாக: மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், வத்தகப்பழம், வெள்ளரிப்பழம், அன்ன உன்னாப்பழம் (இதில் இரண்டு வகை உண்டு.) பப்பாசிப் பழம் (இது பின்னர் வந்தது என்று கூறப்படுகின்றது.) நாவற்பழம், ஈச்சம்பழம், இலந்தைப்பழம் முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் பெரும்பாலானவை ஒரே காலத்தில் கிடைப்பதில்லை. அந்த அந்தப் பருவ காலத்தில் கிடைப்பவையாகும். மா, பலா, வாழைப் பழங்கள் உணவுக்காக மட்டுமன்றிச் 5FLD UL l கரன அனுட்டானங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாண மாம்பழத்துக்குத் தனித்துவமானதோர் மதிப்பு உண்டு. யாழ்ப்பாணத்துக்கு வெளியேயும் யாழ்ப்பாண மாம்பழம் பெருமதிப்புடன் திகழ்ந்ததுதிகழ்கின்றது. யாழ்ப்பாண மாம்பழம் பற்றிக் கவிஞர் ஒருவர் பாடிய (ஐம்பதுகளில்) ஒரு பாடலைச் சுட்டிக்
காட்டலாம்.
 

យ៉ាងវិញម៉ារ៉ៃរឺ
O9
'நீதிபிழைப்பிக்கும் நேர்மை தவறுவிக்கும் பாதிப் படிப்பில் பதவிதரும் - ஏதுக்கும் ஒம்பட்டிசைவிக்கும் ஒன்றன்றோ யாழ்ப்பான மாம்பழத்துத் தீஞ்சுவையின் மாண்பு' யாழ்ப்பாணத்துச் சிறுவர் பாடல்களிலேயும் மாம்பழம் பற்றிய பாடல்கள் பல உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பழ வகையிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பனம்பழமாகும். ஒரு காலத்திலே யாழ்ப்பாண பிரதேச மக்களின் பிரதான உணவாகப் பனம்பழம் விளங்கியது. பனம்பழச் சாற்றினைச் 'களி' என்று குறிப்பிடுவர். களி மிகவும் சுவையானது. களியில் இருந்து செய்யப்படும் பனாட்டுப் பற்றிப் பல இலக்கியங்கள்
தோன்றியுள்ளன. பனை பற்றியும், பனம் பண்டங்கள்
பற்றியும் நாட்டுப்பாடல்களும் விடுகதைகளும் பழமொழிகளும் இப்பிரதேசத்திலே நிறையவே வழக்கத்தில் உள்ளமை இதன் பயன்பாட்டு முக்கியத்துவத்தையே புலப்படுத்துகின்றது.
பனையின் முக்கியத்துவம் பற்றிய LJGol) செந்நெறி இலக்கியங்களும் பிரதேசத்திலே
தோன்றியுள்ளன. உதாரணமாகப் பனங்காய்ப் பாரதம், தாலவிலாசம், பனைப்பாட்டு, பனைநூறு முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
பனம் பழத்தினைச் சாப்பிடுவதற்குப் பழப்புளியையும் காடியையும் பயன்படுத்துவர். இது பற்றிக் காதலியாற்றுப்படை பின்வருமாறு கூறும்.
“காடியிற் தோய்த்த கனபனங் கொட்டையைத் தாயர் தங்கையிற் தாவினர் வாங்கி வண்டியும் சொக்கும் பனங்களி புரள வண்டினந் தேனை உண்டால் போல்' என்றும் பனங்காய்க் களியுடன் சாமைமாக் குழைத்து வனைபந்தினைப் போல் நெய்யிற் போட்டுத் தட்டுத் தட்டாய்ச் சுட்டுமேலெடுக்கும்
கமழ்தரு செம்பனங்காய் பணியாரமும்

Page 10

பனம்பழத்தின் களியை உண்பதோடு பனங் களியிலே பலகாரம் (பணியாரம்) செய்வதும் வழக்கம். பனங்காய் பணியாரம் பனங்காய்ப் புட்டு என்பன குறிப்பிடத்தக்கன. பனங்களியைச் சாப்பிட்டால் நன்றாக மலங்கழியும் என்று கூறுவார்கள். இது பற்றியும் யாழ்ப்பாணத்துக் கவிஞரொருவர் பாடியுள்ளார் அப்பாடலின் ஒரு பகுதி (நினைவில் உள்ளது) பின்வருமாறு: 'ஆடி ஆவணி ஆகுமாதங்களிற் காடி தோய்த்த கனபனங்காய்களை நாடி நாடி நலம்பெற உண்பவர் ஒடி ஒடி ஒதுக்கினில் குந்துவர்' பனம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பனாட்டு ஒரு காலத்திலே யாழ்ப்பாணப் பிரதேச மக்களின் பிரதான உணவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. பனாட்டிலும் பாணிப்பனாட்டு’ என ஒரு வகையும் உண்டு. சாதாரண பனாட்டைவிடப் பாணிப் பனாட்டுக்குச் செல்வாக்கு அதிகம்.
பனம் பழத்து விதையிலேயே பாத்தி போட்டுப் பனங் கிழங்கை அறுவடை செய்வர். நாவலியூர் சோமசுந்தரப் புலவரின் பனம் பாத்தி பறித்திடுவோம்’ என்ற பாடல் ஒரு காலத்திலே புகழ் பெற்ற பாடலாக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
பனங்கிழங்கை அவித்துக் கிழித்துக் காயவிட்டுப் புழுக்கொடியல் செய்வர். பனங்கிழங்கைப் பச்சையாகக் கிழித்துக் காயவிட்டு ஒடியல் ஆக்குவர். ஒடியல் மாவிலே பிட்டு, கூழ் முதலியவை தயாரிப்பர். கோதுமை மாவின் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாணப் பிரதேசத்திலே ஒடியல்மா பெருமளவிற் பயன்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பாரம்பரிய உணவுகளிலே ஒடியற் கூழுக்குத் தனித்துவமானதோர் முக்கியத்துவம் உண்டு. ஒடியற் கூழிலும் மச்சக் கூழ் (மாமிசம்) சைவக்கூழ் (மரக்கறி) என இரு வகை உண்டு. பல்வேறு பண்டங்களையும் போட்டுக் காய்ச்சுவதனால் ஒடியற்கூழ் ஒரு வகை சூப்' தன்மையைக் கொண்டது எனலாம். ஒடியற்கூழ் பற்றி யாழ்ப்பாணத்து இலக்கியங்கள் நிறையவே பேசுகின்றன. வகை மாதிரிக்கு ஒன்றைக் குறிப்பிடலாம்.
"அல்லற்றுக் கண்டிக் கப்பல் போய் நிவித்திக் கொல்லைக்குப் போயலுப்புக் கொண்டதால் - கல்லடியான் வண்டாகும் மாலையணி மற்புயச் சுப்பையனுடன் கொண்டாடி னான் ஒடியற்கூழ்' மேற்காட்டிய LITLGi) ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையால் பாடப்பட்டது. ஒடியற் கூழ் உடல் அலுப்பு மாற்றுவது என்ற நம்பிக்கை முதியவர்களிடம் இன்றும் உண்டு. -
பனம் பண்டங்களில் பலரும் விரும்பிப் பயன்படுத்திய கள்ளு, பதநீர் என்பவையும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரியப் பான உணவாகவே கருதப்பட்டது. பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கட்டி பனைவெல்லம்

Page 11
(கல்லக்காரம்) முதலியவற்றுக்கு இன்றும் பெருமதிப்பு உண்டு. பதநீர் விட்டு இனிப்புக் கூழ் காய்ச்சுவதும் எமது பண்பாட்டில் இடம்பெறுகின்றது. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை’ எனத் தொடங்கும் சோமசுந்தரப் புலவரின் பாடல் இவ்விடத்திலே நினைவு கூரத்தக்கது.
கள்ளும் பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டது. கள்ளுப் பற்றி நிறையவே யாழ்ப்பாணத்துக் கவிஞர்கள் பாடியுள்ளனர். வகைமாதிரிக்கு ஒரு பாடலைச் சுட்டிக் காட்டலாம்.
"கூவில் கணபதியும் கோண்டாவில் வைரவியும்
சீவித்தரும் கள்ளுத் தித்திப்போ - பாவியிவன்
பண்டைக் குலத்தோன்றல் பக்தன் பிரசாதம்
அண்டர்களும் கானா அமுது'
யாழ்ப்பாணத்திலே 'கள்ளுக் கடவுளுக்குப் பஞ்சபுராணம் பாடியுள்ளார்கள் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
பாரம்பரிய உணவு வகைகளிலே கறிகளும் முக்கியமானவை. மாமிசக்கறி, மரக்கறி என இன்று அழைப்பதைக் சைவக்கறி, அசைவக்கறி (மச்சக்கறி) என அழைக்கும் வழக்காறும் நிலவியது. சைவக்கறியை ஆருதக்கறி என அழைக்கும் வழக்கமும் இருந்தது. கறி வகைகள் பற்றி விரிவாக நோக்க வேண்டியதில்லை.
ஒரு காலத்தில் (குறிப்பாக மழைக்காலத்தில்) இப்பிரதேச மக்கள் வெவ்வேறு (o) / (оO)c45ULJIT(oОТ பச்சிலைகளைப் பாகம் பண்ணி உண்டனர். முருங்கை இலை, முசுட்டை இலை, முல்லை இலை (இதில் இரண்டு வகை உண்டு.) அகத்தி இலை, குறிஞ்சா இலை, சண்டி இலை முதலான பலவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிலே
பலவற்றை இன்றைய யாழ்ப்பாணம் மறந்து விட்டது.
 

盡。 កែឆ្នាញ់
11
இன்று சம்பல் என அழைக்கப்படுவதைப் பச்சிடி- பச்சடி என்றே நம்முன்னோர் அழைத்தனர். பச்சையாக இடித்து எடுத்துப் பயன்படுத்துவது 'பச்சடி ஆயிற்று. பச்சடியிலும் பலவகை இருந்தது.
காரைநகர்ச் சோறும் கடுகடுத்த பச்சடியும் ஊரவருக் கன்றி உவப்பில்லை - சீர்பெருகு தங்கோடைச் சைவன் சமைத்த கறிசாதம் எங்கே போய்ச் காண்பேன் இனி'
என்று கல்லடிவேலுப்பிள்ளை காரைநகர்ச் சாப்பாட்டை விதந்து பாடியதை இங்கே சுட்டிக் காட்டலாம்.
பல்வேறு வகையான கறிவகைகளைப் பாகம் பண்ணும் முறையிலே பிரதேசத்துக்குள்ளேயே இடத்துக்கு இடம் வேறுபாடு உண்டு. அவை பற்றி விரிவாக நோக்கின் இக்கட்டுரை சமையற் கலைக் கட்டுரையாக மாறிவிடும். என்ற அச்சம் எழுகின்றது. மகாகவி உருத்திரமூர்த்தியின் கவிதை வரி ஒன்று சமயற்பாகம் பற்றிக் தெளிவாகக் கூறுகின்றது.
"அவள் கைபட்டால் வெறும் கத்திரிக்காயும் சுறாக்கறிபோலிருக்கும் நெய் விட்டாள் பருப்போடெனில் ஆம் அதன் நேர்த்தி சொல்லிட வார்த்தைகள் வேண்டுமோ' மாமிசக் கறிகளிலே மீன் பொரியல் அல்லது தீயல் எனப்படும் ஒருவகைப் பாகமுறையும் உண்டு. தீயல் என்றும் தீச்சகறி என்றும் அழைக்கும் வழக்காறும் இன்றும் உண்டு. இந்த இடத்திலே கவிஞர் செல்லையாவின் கவிதையொன்றைச் சுட்டிக் காட்டலாம்.
'காய்ச்சுச் சாராயம் கடை விஸ்கி காசுக்கேன் தீச்சகறிச் சோற்றுத் தீனியுடன் - ஆச்சியின்ரை செவ்விளானிப் பிள்ளையிலை சின்னையன் சீவின கள் இவ்வளவும் போதும் எனக்கு ' இன்று மறைந்துபோன, மறந்து போன உணவு வகைகள் இன்னும் பலவுள. பாரம்பரிய உணவுகளின் இடத்தை இன்று "கேக்’, 'பற்றீஸ், ஐஸ்கிறீம் முதலானவை
ஆக்கிரமித்து ஆட்சிபுரிகின்றன. பழையன கழிதல் சரி, பழையன கழித்தல் சரியா என்பது ஆய்வுக்குரியதுது

Page 12
உலகின் யோகா
6 லகின் யோகா நகரம்’ எனக் பெயர் பெற்று o விளங்குவது ரிஷிகேசம் ஆகும். இமய மலை அடி
வாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் மிகவும் அமைதி வாய்ந்த சூழலில் அமைந்துள்ள நகரமான ரிஷிகேசம்
மலைகளால் சூழப்பெற்று விளங்குவதுடன் கங்கை நதியினால் பிரிக்கப்பட்டும் காணப்படுகின்றது.
பத்ரிநாத், கேதாரநாத், கங்கேத்ரி, யம்னோத்ரி போன்ற இமாலய யாத்திரைத் தலங்களுக்கு செல்ல ஆரம்ப ஸ்தலமாக விளங்கும் ரிஷிகேசம், மேற்குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஒரு நுழைவாசலாக விளங்குகின்றது என்றே கூறலாம். தெஹ்ரி கார்ஹ்வால் மற்றும் பூரி கார்ஹ்வால் என்ற இரு மாவட்டங்களிலும் இது சூழப்பெற்றிருந்தது. மற்றுமொரு புனித ஸ்தலமான ஹரித்துவாரத்துக்கு சுமார் 45 கிலோ மீட்டர் வடக்காக ரிஷிகேசம் உள்ளது.
இவ்விடம் ஹ்ரிஷிகேசம், ருஷிகேசம், ஹ ருஷிகேசம் எனவும் அழைக்கப்படுகின்றது. இங்கு சுமார் 60 ஆயிரம் மக் கள் நிரந்தரமாக (2001) வாழ்கின்றார்கள். இருப்பினும் இப் புனித நகருக்கு பிரதி வருடமும் லட்சக் கணக்கான மக்கள், இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும், வேறு நாடுகளில் இருந்தும் யாத்திரீகர்களாகவும் மற்றும் சுற்றுலாப்
 

:
நகரம் ரிஷிகேசம்
பயணிகளாகவும் விஜயம் செய்கிறார்கள். இந்நகரில் புலால்
உணவு உண்பது சட்டத்தினால் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு மதுபான வகைகள் பாவிக்கப் படுவதில்லை. மேலும் கடைக்காரர்களும் நடைபாதை வியாபாரிகளும் பிளாஸ்ரிக் பைகளைப் பாவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ரிஷிகேசம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கும் ஒரு கதை உண்டு. றைப்யா ரிஷி என்ற ஒரு முனிவர் ஒருமுறை கடுமையான தவம் ஒன்றினை மேற்கொண்டாராம். அதன் பயனாக விஷ்ணு பகவான் ரிஷிகேஷ் என்னும் பெயருடன் அம்முனிவர் முன் காட்சி தந்தாராம். அடுத்து அவ்விடம் ஹிரிகேசம், ரிஷிகேசம் எனப் பெயர்கள் கொண்டு அழைக்கப்படலாயிற்று.
புனித கங்கை ரிஷிகேச நகரின் ஊடாகப் பாய்ந்து செல்கின்றது. இமாலயத்தின் ஷிவாலிக் மலைகளை விட்டு நீண்டதூரம் பாயும் கங்கை நதி இந்தியாவின் வடக்குச் சமவெளிக்குப் பாய்ந்து செல்கிறது. ரிஷிகேசத்தின் கங்கை நதி தீரத்தில், பழையதும், புதியதுமான பல ஆலயங்கள் உள்ளன. கங்கை நதி இங்கு பக்தி பூர்வமாக வழிபடப்படுவதுடன், ரிஷிகேசம் முழுவதுமே புனித

Page 13
இடமாகக் கருதப்படுவதினால் இங்கு இருந்து தியானத்தில் ஈடுபடுவது புண்ணியத்தைத் தரும் என நம்பப்படுகிறது. அத்துடன் இங்கு ஏராளமான ஆசிரமங்களும் காணப்படுகின்றன. அவற்றின் சில சித்தாந்த கற்கை நெறி, யோகாப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றில் சர்வதேச ரீதியில் பெயர்பெற்றவையாக விளங்குகின்றன.
1960 களில் உலக புகழ்பெற்ற பீற்றில்ஸ் குழுவினர் தமது குருவான மகரிஷி மகேஷ் யோகியுடன் அங்கு வந்து தங்கியதுடன் இந்நகரம் திடீரென உலகப் புகழ்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ரிஷிகேசம் ஒரு நகரம் மட்டுமல்ல சிறு கிராமங்களும் குடியிருப்புகளும் இங்கு காணப்படுகின்றன. அத்துடன் இப் பகுதி வர்த்தக மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் சுறுசுறுப்பாக விளங்குகின்றது. அதன் புறநகர்ப் பகுதிகளும் குறிப்பிடத் தக்கவையாகும். துறவிகளின் இடம் எனக் கூறப்படும் முனி-கி-றெட்டியும் ஒரு புறநகர்ப் பகுதியாகும். அத்துடன் சுவாமி சிவானந்தரின் இல்லமான சிவானந்த ஆசிரமம் அமைந்திருக்கும் சிவானந்த நகரும் ரிஷிகேசத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். சுவாமி சிவானந்தரே திவ்ய ஜீவன சங்கத்தினை உருவாக்கியவராவார்.
இந்நகரின் வடபுறமாக லக்ஷமன் ஜுலா ஆலயமும் மற்றும் பல்வேறு அசிரமங்களும் அமைந்து காணப்படுகின்றன. லகஷ்மணன் இங்கு தவம் செய்தார் எனவும் பரதன் தியானத்தில் ஈடுபட்டார் எனவும் கூறப்படுகின்றது. அதனால் இந்நகரம் ஒரு சிறப்பான
 
 
 

5ាញម៉ារ៉ៃរឺ
13
கலாசார இடமாகவும் விளங்குகின்றது. இந்து மதத்தின் சிறப்பை அறிந்து கொள்ளவும் ஆன்மீக சிந்தனைகளில் மூழ்கும் அனுபவத்தைப் பெறுவதற்காகவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்நகரை நாடுகின்றனர். இங்கிருந்து ஒருவர், 28 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள பிரசித்திபெற்ற நீலகண்ட மகாதேவ ஆலயத்துக்குச் செல்லமுடியும்.
திரிகோண சங்கமம் : கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்றாகப் பாயும் இவ்விடம் புனித நீராடலுக்கு பெயர் போனது. இங்கு யாத்திரீகர்கள், கங்கையில் நீராடி, இறை வணக்கம் செய்வர். தென் ரிஷிகேசத்தில், திரிவேணி சங்கமத்தில் ஆரத்தி விழா சூரியாஸ்தமனத்தின் போது நடைபெறுகிறது. இது ஒரு மிகச் சிறப்பான நிகழ்வாகும். அவ்வேளை பக்தர்கள் இலையை படகு போல செய்து அதில் பூக்கள் மற்றும் சிறு விளக்கு ஆகியவற்றை வைத்து நதியில் மிதக்க விட்டு, பக்தியோடு கடவுளை வழிபடுவர். ரிஷிகேச ஆலயங்களில் இந்துக்களால் வணங்கப் பெறும் இந்துத் தெய்வங்கள் ஏராளமாக இருப்பினும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் அத்தெய்வங்கள் கோவிலைக் கொண்டிருக்க வில்லை. ஆனால் ரிஷிகேசத்தில் பெரும்பாலான தெய்வங்கள் வணங்கப்படுகின்றன. சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் பல்வேறு ரூபங்களில் விக்கிரகங்களைக் கொண்ட ஏராளமான ஆலயங்கள் உள்ளன. ரிஷிகேசத்தில்
உள்ள சில முக்கிய ஆலயங்கள் வருமாறு :
பரத் மந்திர் : ரிஷிகேசத்தில் உள்ள மிகப் பழைமையான கோயில் இதுவாகும். இக்கோவில் மகா

Page 14
கலைக்கேசரி கீ 14
விஷ்ணு பெருமானுக்காக நிர்மாணிக்கப்பட்டதாயினும், சிவ வணக்கத்தோடு வழமையாகச் சம்பந்தப்பட்ட விக்கிரகங்களே அதிகமாகக் காணப்படுகின்றன.
நீலகண்ட மகாதேவர் : பாற்கடலில் இருந்து பிறந்த நஞ்சினை சிவபெருமான் இங்கிருந்துதான் உட்கொண்டார் என நம்பப்படுகின்றது. ஆலகால விஷத்தினை உண்டதினால் அவரது கண்டம் நீலநிறமாக மாறியது. அதன் காரணமாக சிவன் நீலகண்டன் என அழைக்கப்பட்டார். மலை உச்சி ஒன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. இதற்கு சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் நடந்து செல்ல வேண்டும். அல்லது காரில் செல்லலாம்.
ரகுநாத் மந்திர் : ரிஷிகேசத்தில் நடைபெறும் சமய விழாக்களுக்கு இது மிக முக்கிய இடமாகக் கருதப்படுகிறது. இவ்விடத்தில்தான் கங்கையும் ஜமுனையும் ஒன்று சேருகின்றது எனக் கருதப்படுகின்றது. பூமி சாஸ்திர ரீதியில் நோக்குமிடத்து அலகபாத்தில் தான் யமுனை நதி கங்கையுடன் சேருகின்றது.
ஹனுமன் மந்திர் : மாயா குண்டத்தில் உள்ள இந்த ஆலயம் 1924ஆம் ஆண்டு ஒரிசா பாபா என்றழைக்கப்படும்
 

சுவாமிராமதாஸினால் எழுப்பப்பட்டதாகும். மரபுரீதியாக, அனுமாரை வழிபடும் நாள் செவ்வாய்க்கிழமை எனக் கருதப்படுவதால் அன்றைய தினம் இங்கு பக்தர்கள் பெருமளவில் கூடுகின்றனர். மற்றுமொரு முக்கிய அனுமார் ஆலயம் சிவானந்த நகரில் உள்ளது.
மற்றும் புஷ்கர் ஆலயம், வெங்கடேஸ்வரர் ஆலயம், லசுஷ்மன் ஜூலாவில் கங்கை நதிக்குக் குறுக்கே உள்ள இரு நவீன ஆலயங்கள் ஆகியனவும் ரிஷிகேசத்தில் உள்ள முக்கிய ஆலயங்களில் அடங்கும். இங்கு கங்கையின் வடகரையில் உள்ள ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், உலகில் மிகப்பெரிய சிவலிங்கம் எனக் கூறப்படுகின்றது.
ஆசிரமங்கள் : இங்குள்ள பெரும்பாலான ஆசிரமங் கள் ஆன்மீக கற்கைகளுக்காகவே அமைக்கப்படுகின்றன. அவற்றுடன் உடல் ரீதியான ஒழுக்க நெறிகளையும் கற்பிக்கின்றன. சில ஆசிரமங்கள் மடாலயங்களாக
விளங்குகின்றன. இவற்றுள் சிவானந்த ஆசிரமம் ஆஸ்பத்திரி ஒன்றை நடத்துவதுடன் மூலிகை மருந்துகளை உற்பத்திசெய்கின்றது. 120 வருட பழைமை உள்ள கைலாஷ் ஆசிரமம் பிரம்ம வித்தியாதீபம் வேதாந்த கற்கை நெறிகளை

Page 15
பாதுகாப்பதிலும் பேணுவதிலும் பெயர்பெற்றது. சுவாமி விவேகானந்தர், சுவாமி சிவானந்தர் ஆகியோர் இங்கு கற்றுள்ளனர்.
ஓம்காரானந்த ஆசிரமம் : யோகா நிகேதனுக்கு மேலாக அமைந்துள்ள ஓம்காரானந்த ஆசிரமம் துர்க் மந்திர் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த அமைப்பு பாடசாலை ஒன்றினை நடத்தி வருவதுடன் ஆலயங்கள் சிலவற்றையும் நடத்தி வருகின்றது. அத்துடன் சமஸ்கிருதம், இந்தி, சங்கீதம், நடனம், ஆங்கிலம் ஆகியவற்றுக்கும் வகுப்புகளை நடத்துகின்றது.
அவ்விதமே இங்கு முனி - கி - ஹட்டி சுவாகாஸ்ரம், கீதாபவன், பர்மார்த் நிகேதன் ஆகியனவும் பிரசித்தமானவை. இவை சமய சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் யாத்திரீகர்களுக்கு தங்குமிட வசதிகளையும் வழங்குகின்றன.
2001 ஆம் ஆண்டில் இந்திய குடிசன மதிப்பீட்டின்படி ரிஷிகேசத்தின் மக்கட்தொகை 59671 பேராகும். ஆண்கள் 50 சதவீகிதமாகவும் பெண்கள் 44 சதவிகிதமாகவும் உள்ளனர். இந்திய தேசிய சராசரி கல்வி கற்றோர் சதவிகிதம் 59.5 ஆக இருக்க, ரிஷிகேசத்தில் கல்வி கற்றோர் விகிதம் 85 சதவீதமாக உள்ளது. 12 சதவிகிதமானவர்கள் இங்கு சிறுவர்களாவர்.
வெள்ளை நீர் கட்டுமரச் சவாரி விளையாட்டிற்கும் ரிஷிகேசம் ஒரு பிரபலமான இடமாக மாறி வருகின்றது. நீண்ட நடைப் பிரயாணத்திற்கும் இவ்விடம் பெயர் பெற்றது.
உஷ்ணம் : கோடை (ஆகக் கூடியது) 44.4
ஆகக் குறைந்தது 29 (டிகிரி. சென்ரிகிரேட்) மாரி காலம் : கூடியது 32.2 குறைந்தது 18 கோடைக்கேற்ற ஆடை : பருத்தி, உஷ்ணவலய உடைகள் மாரிக்கேற்ற ஆடை : கனத்த கம்பளி பேசப்படும் மொழிகள் கர்வாலி, இந்தி, பஞ்சாப்,ஆங்கிலம் சிறந்த பருவகாலம் : வருடம் முழுவதும்
ரிஷிகேசத்திற்கு எப்படி செல்வது ? விமானமூலம் : அண்மையில் உள்ள விமான நிலையம் தெஹ்ராடுன் (JOLLY GRANT) ரிஷிகேசத்தில் இருந்து 16 தி.மீ. இந்தியன் ஏயர்லைன்ஸ் போக்குவரத்து தெஹ்ராடுனுக்கும் டெல்லிக்கும் இடையில் நடைபெறுகிறது.
ரயில் மார்க்கம் : ஹரித்வார் (24 கி.மீ) ஊடாக, ஹெளறா, பம்பாய், டெல்லி, லக்னோ, வாரணாசி தெஹ்ராடுன் மற்றும் நகரங்களுக்கு ரிஷிகேசம் ரயில் போக்குவரத்தால் தொடர்புபடுத்தப்பட்டு
உள்ளது.
 
 
 

អ៊ែងហ្គ្រាម៉ាវែ
15

Page 16
கலைக்கேசரி கீ 16 {}
( அகத்தியர் ஸ்தாபனம் 6
1962ஆம் ஆண்டுக்கு முன்னர் கிழக்கிலங்கை என்பது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. 1963ஆம் ஆண்டு அரச புள்ளி விபரத்திணைக்கள அறிக்கையில் கிழக்கு மாகாணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அதாவது வடக்கே பறையன் ஆறு கொக்கிளாய் ஒலியும், கீழே கும்புக்கன் ஆறும் எல்லைகளாக அமையப்பெற்று இருந்தது. மேலும் விந்தன வெல்லச பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. மந்தினி ஆறு, பட்டிப்பளை ஆறு என்பன ஊவா மலை நாட்டிலிருந்து நீரை வழங்கின. இந்த பட்டிப்பளை ஆறு தற்போது கல்லோயா நதியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களையும் மகாவலிகங்கையின் கிளையாக வெருகல் ஆறு பிரிக்கிறது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட பண்டைய காலங்களில் இம்மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த கிழக்குப் பிரதேசம் தெட்சனாபதி என
வழங்கப்பட்டது.
தெட்சனாபதியின் பண்டைய ஆலயங்கள்
தெட்சனாபதி எனப்பட்ட இப்பிரதேசம் தொன்மை வாய்ந்த பிரதேசம் என்பதோடு கதிர்காமம் தொடக்கம் கொக்கிளாய் வரை பல பழைமையான சிவன், முருகன் ஆலயங்கள் அமைந்திருந்தன. ஆறுபடை வீடுகள் எனக் கூறக்கூடிய முருகன் ஆலயங்கள் சிறப்புற்றுக் காணப்பட்டன. திராவிட வேந்தன் இராவணன் ஆயிரத்து எட்டு லிங்கங்களை ஸ்தாபித்தான் என ஐதீகங்கள் கூறுகின்றன. இலங்கையில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களில் பல கடற்கோள்கள் ஏற்பட்டன. அதில் மூன்றாவது கடற்கோளின் போது பாரிய சிவன் ஆலயமொன்று கடலில் மூழ்கியது எனவும் அறியப்படுகிறது. இதனை சிங்கள வரலாற்று நூலான இராஜாவலியவும் கூறுகின்றது. இந்த ஆலயம் கோணேசர் கோயில் என ஆய்வுகள் காட்டுகின்றன.8
 

ானப்படும் திருக்கரைசை
கடலுக்கடியில் ஆய்வு செய்த றெட்ணி ஜொன்கிளாஸ் என்பவர் இக் கோயிலின் இடிபாடுகள், தூண்கள் போன்றன கடலுக்கடியில் காணப்படுவதை வெளிப்படுத்தி உள்ளார்.4 இவை அழிவுற்ற கோணேசர் கோயிலின் பகுதிகளாகும். இக் காலப்பகுதியில் கிழக்கில் குறிப்பாக திருகோணமலையில் பல சிவனாலயங்கள் சிறப்புற்றிருந்தன. அவை தம்பலகாமம் ஆதி கோணநாதர் கோயில், கந்தளாய் சிவன் கோயில், கங்குவேலி சிவன் கோயில், திருமங்களாய் சிவன் கோயில், திருக்கரைசை சிவன் கோயில் போன்ற இன்னும் பலவாகும். இவற்றில் சில அகத்திய மாமகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டன என
புராணங்களும், கர்ண பரம்பரைக் கதைகளும் கூறுகின்றன.
அகத்தியர் ஸ்தாபனம் எனப்படும் திருக்கரைசையின் அமைவிடம் - தொன்மை
மூதுர் பண்டைய நகராகும். பண்டைய சிற்பத் தூண்கள் சிற்பங்களைக் கொண்ட ஆலய இடிபாடுகள் பல இன்றும் மூதூர் பிரதேசக் காடுகளில் விரவிக் கிடக்கின்றன. இந்த இடிபாடுகளில் முக்கியமானது, திருமங்கலாய், கங்குவேலி, திருக்கரைசை ஆலயங்களில் இடிபாடுகளாகும். கொட்டியாரப்பற்று, மகாவலிகங்கையினால் வளம் பெற்ற பெரிய பிரதேசம். பண்டைக் காலத்தில் தமிழ்க் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பிரதேசமாகும். கிளிவெட்டியிலிருந்து பதினொரு கிலோ மீற்றர் தூரத்தில் திருக்கரைசை உள்ளது. கங்குவேலியிலிருந்து ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இம்மூன்று சிவன் கோயில்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. அகத்தியர் ஸ்தாபனம் எனப்படும் திருக்கரைசையிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் மகாவலி கங்கை கரைபுரண்டோடுகிறது. கங்குவேலியும் கீழே திருமங்களாயும் அணித்தாக உள்ளன.
இதனோடு தொடர்புடையதாக அகத்தியனாறு, அகத்தியர் தீர்த்தம் போன்றவையும் உள்ளன. பன்னெடுங் காலம் தமிழ் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட இப்பிரதே சம் அகத்திய மாமுனிவரின் கட்டுப்பாட்டில் பல காலம் இருந்ததாக அறிய முடிகிறது. சூழவுள்ள அரியம்மன் கேணி, ஈச்சிலம்பற்று இலங்கைத்துறை, செருவில், கிளிவெட்டி நீலபளை, பட்டித்திடல், மணல்சேனை, மல்லிகைத்தீவு, முதுரர் போன்றன பண்டு திருக்கரையுடன் நெருங்கிய தொடர்புடையது.
அகத்தியர் ஸ்தாபனம் பற்றிக் கூறும் நூல்கள் அகத்தியர் ஸ்தாபனம் எனப்படும் திருக்கரைசை வரலாறு பற்றி திருக்கரைசை புராணம் கூறுகிறது. மேலும் அகஸ்தியர் பற்றியும் திருக்கரைசை பற்றியும் தட்சணகைலாய புராணம், தட்சணகைலாய மான்மியம், கந்தபுராணம், இராமாயணம், திருவிளையாடற் புராணம் போன்றன கூறுகின்றன. இவை அகத்தியர் ஈழத்துக்கு வந்தது பற்றியும், வாழ்ந்தது பற்றியும்

Page 17
கூறுகின்றன. திருக்கரைசை புராணத்திலே இலங்கை வளம், அகத்தியர் இலங்கைக்கு வந்தது, மகாவலிகங்கைக் கரையிலே திருக்கரைசையில் கோயில் கட்டியது அகத்திய ஸ்தாபனம் மூலம் மறைகள், (வேதம்) கல்வி புகட்டியது போன்ற பல விடயங்கள் கூறப்படுகின்றன. இவை தமிழ் விருத்தப்பாவில் கூறப்படுகிறது. திருக்கரைசை புராணம் யாரால் எழுதப்பட்டது என்பது தெரியவில்லை. உமாபதி சிவாச்சாரியாரின் பரம்பரையில் வந்த ஒருவர் எழுதியது எனவும் அவரது சீடர் ஒருவர் எழுதியது எனவும் கருதப்படுகிறது. குருலிங்க பக்தியில் சிறந்தவரும் கொட்டியாபுர வன்னிமையுமான பூரீமான் முத்துக்குமார பிள்ளை அவர்களிடமிருந்த ஏட்டுப் பிரதியான திருக்கரைசை புராணம் அகிலேசபிள்ளை அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. வடமொழியில் சூதமுனிவர் பாடிய புராணங்களைத் தழுவி தமிழ் விருத்தப்பாவில் பாடப்பட்டுள்ளது. இது 170 விருத்தப்பாக்களைக் கொண்டது எனவும் தெரிகிறது. வருடாவருடம் ஆடி அமாவாசைதோறும் தீர்த்த வைபவத்திலே படித்து பொருள் சொல்லப்படும்.
இத்திருக்கரைசை புராணத்திலே அகத்தியர் வடக்கே கைலயங்கிரியிலிருந்து தெற்கு வந்த வரலாறு செய்யுள் மூலம் கூறப்படுகின்றது. உமாதேவியாரை பரமசிவன் திருமணம் முடிக்கும் சிறப்பைக் காண தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், காந்தர்ரூபர்களும் திருக்கைலையில் கூடினர். அதனால் தெற்கே சமமின்றி உயரும் நிலை ஏற்படுமோ என்று அஞ்சிய தேவர்கள் அகத்திய முனிவரை தெற்கே செல்லுமாறு வேண்டினர். சிவபிரானும் அகத்தியரிடம் தாம் திருமணக் கோலத்தில் காட்சியளிப்பதாகவும் செல்லுமாறும் கூறி அனுப்பி வைத்தார். திருக்கோணேஸ்வரம் வந்த அகத்தியர் சில நாள் பூசை செய்தார். சிவனொளிபாத மலையிலிருந்து புறப்பட்டு வரும் மகாவலிகங்கையானது கோணேஸ்வர பெருமானின் மலையடியை தொட்டு வணங்குவதைக் கண்டார். இப்புண்ணிய நதியில் நீராடி பூசனை புரிவதே சிறப்பானது என திருக்கரைசை வந்தார். நீராடிய போது மணக் கோலத்தில் காட்சியளித்ததோடு அங்கு தம்மை பிரதிஷ்டை செய்யுமாறு அசரீரியாக கூறினார். கோணேசர் ஆணைப்படி கங்கையின் கிழக்குக்கரையில் கரையம்பதியில் லிங்கம் அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை திருக்கரைசை புராணம் கூறுகிறது.
அகத்தியர் ஸ்தாபனத்தின் முக்கியத்துவம்
அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்ட கோயில்கள், வேறு அமைப்புகள் மூதூர் பிரதேசத்தை உள்ளடக்கி காணப்பட்டன. முத்தூர் என முன்பு வழங்கப்பட்ட இப் பிரதேசத்திலே தான் திருமங்கலாய் சிவன்கோயில், திருக்கரைசை சிவன் கோயில், கங்குவேலி சிவன் கோயில், அகத்தியர் ஸ்தாபனம், அகத்தியர் ஸ்தாபனத்துடன் இணைந்த வைத்தியசாலை, திருகோணமலை,

遠。 យ៉ារ៉ាវ៉ៅ 17
வில்லூன்றி விநாயகர், பெரியகுளம், பொத்துவில், திருக்கோணேஸ்வரம் கண்டகி லிங்கம் ஆகியவை அகத்தியருடன் தொடர்புடையதாக அமையப்பெற்றன.
அகத்தியர் ஸ்தாபனம் என்பது பல் கலைகளைப் போதித்த இடமாகும். இங்கு வாகடம், மருத்துவம், மாந்திரீகம், இரசவாதம், சோதிடம், தமிழ், தமிழ் இலக்கியம், இசை, நடனம், நாடகம், சைவ சித்தாந்தம், சிற்பம், ஒவியம், வாள் பயிற்சி, நகர் நிர்மாணம், குளங்கட்டல் போன்றன புகட்டப்பட்டன. இதனை திருக்கரைசை புராணம் மூலம் அறியமுடிகிறது.
இந்த வண்ண அருந்த காலமியற்ற நன்மறை யாகமம் புந்தி செய்து மடந்தை பங்குளயுனிதர் பூசனை பின்னணியே’
நான்மறையாகிய வேதம், ஆகமங்கள் புகட்டப்பட்டன என இதனால் அறியமுடிகின்றது. அகத்தியர் என பலபேர் பல்வேறு காலங்களில் இருந்ததாக அறியமுடிகின்றது. அகத்திய நூல்கள் அகத்தியம் 21000 என்ற பாரிய மருத்துவ நூல் அகத்தியர் என்பவராலே எழுதப்பெற்றது. 21000 செய்யுள்களைக் கொண்ட இந்நூல் மருத்துவம் பற்றியே கூறுகிறது. தமிழ் நாட்டில் நடந்த மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் அகத்தியம் இலக்கண நூலாக இருந்து வந்ததை சங்க நூலான இறையனார் அகப்பொருள் கூறுகிறது. பேரகத்திய சூத்திரத்தில் மருந்துக்கான மூலப் பொருட்கள் பயன்படுத்தும் விதம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
'வைர ஊசியும் மயன் வினை இரும்பும் செயிரறு பொன்னைச் செம்மை செய் ஆணியும் தமக்கமை கருவியும் தாமாம் சிற்றகத்தியம் என்றழைக்கப்படும் பன்னிராயிரம் பாடல்களைக் கொண்ட மருத்துவ நூல் அகத்தியம் பன்னீராயிரம் எனப்படும் தமிழ் மொழியிலே உள்ள மிகப் பெரிய நூல்கள் மருத்துவ நூல்களேயாகும். இதன் பரராசசேகரம் (யாழ்ப்பாண மன்னன்) பன்னீராயிரம், திருமூலர் எண்ணாயிரம், போகர் ஏழாயிரம் என்பன வாயிலாகவும் அறியமுடிகின்றது. திருக்கரைசை சிவனால யத்தையும், அகத்தியர் ஸ்தாபனத்தையும் ஸ்தாபித்த அகத்தியர் பெயரிலே மேலும் பல மருத்துவ நூல்கள்

Page 18
ជាបាតាវ៉ៅ 18
శ్లోఫేజ్ఞ
వ్లో giga ଝିଞ୍ଚି அகத்தியரின் அம்மி, இடிபாடுகள் மருத்துவ
கருங்கல் நிலத்தில் பதிக்கும் கல்
உள்ளன. அவை அகத்தியர் இந்திரன் சுருக்கம், அகத்தியர் பரிபூரணம் 400, அகத்தியம் வைத்திய சிந்தாமணி, அகத்தியன் பரிபூரணத்திரட்டு, அகத்தியர் இரண வைத்தியம், அகத்தியர் மூலிகை, அகத்தியர் அகராதி, அகத் தியர் செந்தூரம், அகத்தியர் ஆயிரத்து ஐந்நூறு, அகத்தியர் விஷ ஆரூடம், அகத்தியர் விஷ வைத்திய சிந்தாமணி, அகத்தியர் கற்பம், அகத்தியர் நாடி நூல், அகத்தியர் முப்புக் குரு, அகத்தியர் நயன விதி, அகத்தியர் மணிமந்திர அவிழ்தம், அகத்தியர் வைத்திய சதகம் என்பன முக்கியமான நூல்களாகும்.8
அகத்திய மாமகரிஷயின் மாணாக்கர் பலர் இருந்துள்ளனர். பதினொரு சித்தர்கள் அகத்தியரது மாணாக்கர் என்பர். அகத்தியரது மாணாக்கரில் போகர் ரிஷி, கோரக்கர், உரோமமகரிஷி, கபிலர் முனி, புலத்தியர், சிகண்டி சித்தர், சூதமுனி, இடைக்காடர், காலங்கிநாதர்,
கமலமுனி, திருமூலர், கபிலர், பூணைக்கண்ணன்,
 
 

யூகிமுனி, சட்டமுனி ஆகியோர் முக்கியமானவர்கள். அகத்தியரது மாணாக்கரான போகர் கதிர்காமத்தை ஸ்தாபித்தவர். கால் நடையில் கதிர்காமம் செல்வோர் இவரது சமாதியை காணலாம் என்பர். சிகண்டி முனிவரே சித்தாண்டியில் வாழ்ந்தவராகும். கோரக்கர் திருகோணமலையில் வாழ்ந்தவர் ஆவர். கோரக்கரது சமாதி கன்னியா வென்னிருக்கு சிலயார் தூரத்தில் மலைச்சரிவு பகுதியில் சமாதியுடன் இரு பாதங்களில் தடம் உள்ளன. இது கோரக்கர் சமாதியாகும். இதனை பெளத்த குருமார் தற்போது ஆக்கிரமித்துள்ளனர். ஆகவே திருக்கரைசையில் அகத்தியர் வாழ்ந்து பல கலைகளையும் வளர்த்தார்
என்பதற்கு இவை சான்றுகளாகின்றன.
அகத்தியர் பற்றிய பல்வேறு கதைகள் அகத்தியர் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். வேறுபட்ட காலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பேதங்கள் நிலவுகின்றன. அகத்தியரின் குடும்பத்தில் வந்தவர்களும் அகத்தியர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். புராண காலத்தைச் சேர்ந்த அகத்தியர் வேதங்களைச் செய்தவர். பிரமன் செய்த யாகத்தில் தோன்றியவர். இதனால் கும்பழனி, கும்பசம்பவர் எனவும் அழைக்கப்பட்டார். உருவத்தில் கட்டையான இவர் குறுமுனி எனவும் கூறப்பட்டார். கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகியனவும் இவர் பற்றிக்கூறும். கந்த புராணத்தில் வாதாபிவதை படலத்தில் வாதாபியை வதம் செய்தவர். இராமாயண, பாரதகாலம் வரை வாழ்ந்தவர்.
அகத்தியரது ஆசிரமம் ஒன்று குடகுமலையில் அமைந்திருந்தது எனப்படுகிறது. பஞ்ச வடிக்கு இரண்டு யோசனை தூரத்தில் அயோத்தி முகத்தின் சிகரத்தில் இது இருந்தது என இராமாயணம் கூறும். கிரவுஞ்சன் என்னும் அசுரனை மலையாக நிற்கச் செய்தவரும் இவரே. காவிரியை கமண்டலத்தில் கொண்டு வந்து சோழ நாட்டில் ஒட விட்ட வரும் இந்திரன் வேண்டுகோளின்படி விருத்திராசுரனை கொல்வதற்காக கடல் நீர் முழுவதையும் பருகி வற்றச் செய் தவரும் அகத்தியரே ஆகும். காசி அரசனின் புத்திரியாகிய லோபாமுத்திரையை திருமணம் செய்தவர். வட இந் தியாவில் இருந்து இலங்கை வரை யாத்திரை செய்தவர். கா சியில் அகத்திஸ்வர லிங்கம் பூஜித்தவர்.
இந்த அகத்தியரே வட நாட்டிலிருந்து தென்னாடு வந்து அந்தணர் கூட்டத்தவருடன் பொதிகை மலையில் தங்கியிருந்து, தமிழ் வளர்ந்தார் எனவும் கதையுள்ளது. அகத்தியம்' நூலை உருவாக்கியவர் எனவும் கூறப்படுகிறது. இந்நூல் மூன்று சங்கங்களிலும் இலக்கண நூலாகவும் தொல்காப்பியத்துக்கும் இதுவே முதல் நூலாகும் எனவும் அறியமுடிகிறது. தொல்காப்பியரும் அகத்தியரின் மாணாக்கர் எனப்படுகிறது.
பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியர் சிவபக்தர். சித்தர் கூட்டத்தை உருவாக்கியவர். பல சிவாலயங்களை உருவாக்கியவர். இவைகளை நடத்துவதற்கு அகத்தியப்

Page 19
பள்ளி உருவாக்கி சித்தர்கள் மூலம் பல கலைகள் வளர்த்தவர். இவரது வழித்தோன்றல்களான பதிணென் சித்தர்களே அகத்தியம் என்ற பெயரில் பல நூல்களை வழங்கியவர்கள். இவை மந்திரம், மருத்துவம், இரசவாதம், யோகம், ஞானம் போன்ற பல் கலைகளாகும். இவர்களே அகத்திய கோத்திரம் ஆகும். இவர்கள் கடல் கடந்த பல நாடுகளிலும் வாழ்ந்துள்ளனர். யாவா, சுமித்திரா, இந்தோனேசியா, பாலி, இலங்கை போன்ற நாடுகளில் பல சிவாலயங்களை அமைத்தவர்களாகும். இதனை ஜாவாவிலுள்ள கி.மு. 732 ஆம் ஆண்டு கல்வெட்டு உறுதி செய்கிறது. பல இடங்களிலும் அகத்தியர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முத்தூர் அகத்தியர் என்ற சிறப்புப் பெயருடன் அகத்தியர் திருக்கரைசையில் சிவனாலயம் நிறுவியுள்ளார். அகஸ்தியலிங்கம் ஸ்தாபித்து பூசை புரிந்துள்ளார். அகத்தியர் தாபனம் என்ற பல்கலைக் கூடத்தை நிறுவி பலவித கல்விகளை போதித்துள்ளார். அதனை திருக்கரைசை புராணமும் வேறு நூல்களும், உறுதி செய்கின்றன.0 அகத்தியர் திருக்கரைசையில் கட்டிய கோயில், கல்விக் கூடம் என்பன காலவோட்டத்தில் அழிவுற்றும் இருக்கலாம்.
அகத்தியர் ஸ்தாபன சிவன் ஆலயம் பண்டு புகழ் பரப்பி இருந்த இந்த லிங்க கோயில் பல்வேறு இயற்கை, செயற்கை அனர்த்தங்களால் அழிக்கப்பட்டு கொண்டே வருகிறது. மகாவலி கங்கைக் கரையை அண்மித்து பல இடிபாடுகள் காணப்படுகின்றன. கருங்கல்லினால் செதுக்கப்பட்ட அகத்திய மா முனிவரின் பாதச்சுவடுகள், கருங்கற் தூண்கள், படிக்கற்கள், வேலைப்பாடுகள் அமைந்த கருங்கற்கள், அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்ட பெரிய லிங்கம், நந்தி, பலிபீடம், சுப்பிரமணியர், அஸ்திரதேவர், வாசனைத் திரவியங்கள் அரைக்குடம் முக்கூட்டுக்கல், தூண்கள், கோமுகி, அகத்தியர்லிங்கம், போன்ற பல காணப்பட்டன. இவற்றை எல்லாம் இணைந்து இம்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இருந்தும் மீண்டும் மீண்டும் அழிக்கப்படுகிறது. இவ் வழிபாடுகளை ஒன்று திரட்டி பார்க்குமிடத்து பாரியதொரு ஆலயம் இருந்தமைக்கான சான்று கிடைக்கின்றன.
திருக்கைலாயத்திலிருந்து தெற்கே வந்த அகத்தியர் திருக்கரையம் பகுதியிலே கோயிலைக் கட்டி லிங்கத்தை ஸ்பானம் செய்திருக்கிறார். தவம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உடைய இத்தலம் பற்றியும் அகத்தியர் பற்றியும் பல்வேறு கதைகள் உள்ளன. திருக்கரைசை புராணம் அகத்தியர் கோயில் கட்டியதை பின்வருமாறு கூறுகிறது.0
'நிறுத்து முறையினிற் யாத மேட்டி கை செய் நிலமனி லுறுத்து கருங்கல்லினத்திபாரஞ் செய்துறை வித்து மறைப் பொருளாருறை கர்ப்பமனையொடிரு மண்டபமு மறிக்காக தருமுபானாதியருற்துரபி யந்தமுமாய்'

& கலைக்
19
ட்டு திருக்கரசை மாநகர்
கங்குவேலி கல்வெ
இடிபாடுகளுக்கிடையே குழியம்மி அகத்திய தாபனம்
திருக்கரசை மாநகர் சிவன் பார்வதி உருநாடு

Page 20
கலைக்கேசரி கீ 20
ーリー ---- క్ష్' ప్తిజ్ఞప్తిస్తే வலைப்பாடுகளுள்ள கருங்கற்தூண்
நாட்டியடி அகத்திய தாபனம்
தாபன முறையிலே செங்கல் நிலத்திலே கருங்கல்லினால் அத்திவாரமிட்டு கடவுள் உறைகின்ற கற்பக்கிருக மண்டபத்தில் மற்றைய இரு மண்டபங்களும் அரிய தூபி பரியந்தம் வரை அகத்தியரால் ஆலயம் கட்டப்பட்டதை இச்செய்யுள் கூறகின்றன. இன்று இங்கு அழிவுற்றுக் கிடக்கும் இடிபாடுகள் இதற்கு சான்றாக அமைகின்றன. இவ் இடிபாடுகள் கோயிற் தலமடு சிற்றாறின் கரையிலிருந்து மகாவலியாற்றங்கரை வரை சுமார் ஐந்து மைல் தூரம் தோட்டம் தோட்டமாகக் காணப்படுகின்றன. கோயிற் தல மடு சிற்றாற்றாங்கரையில் கருங்கற் படிகள் காணப்படுகின்றன. சுமார் இருபத்தைந்து அடிவரையிலான கருங்கற் பாதையும் அதன் முடிவில் அகத்தியர் லிங்கமும் இருந்துள்ளது. இவை அகத்தியலிங்க ஆலயத்தையும் பூசையையும் பல்கலைக்கழக போதனையையும் காட்டும் சின்னங்களாக இன்றும் காணப்படுகின்றன.
இந்த மருத்துவ நிறுவனத்துக்கு பாவிக்கப்பட்டதென கருதக்கூடியது அம்மி, குளவி என்பன இங்கு காணப்படுகின்றன. அகத்திய ஸ்தாபனமாகிய கல்விக் கூடம் அழிந்த பின்னரும் கோயிலும் வழிபாடும் மக்களால் பேணப்பட்டுள்ளது. மேலும் இவ்விடத்தில் ஒரு நகரே இருந்ததாகவும் அது அகத்தியரால் தனது மனைவி அனுசூசைக்காக ஏற்படுத்தப்பட்டது எனவும் கதைகள் நிலவுகின்றன. அகத்தியருடன் தொடர்புறும் மேலும் சில இடங்களும் உள்ளன. அகத்தியர் தீர்த்தம், அகத்தியனாறு, முத்தூர் லிங்கப்புரம் போன்றனவும் ஒன்றோடொன்று தொடர்புடைய எனலாம். இவை எல்லாம் இன்றும்
அகத்தியர் ஸ்தாபன எச்சங்களாக உள்ளன.
ஆடி அமாவாசை தீர்த்தமும் திருக்கரைசையும் ஆடி அமாவாசை தீர்த்தம் பெரும்பாலும் சில இடங்களில் பண்டைய பெருமை பெறும் தலங்களில்
 

நடப்பதைக் காண்கிறோம். மட்டக்களப்பிலே இராமபிரானால் வழிபடப்பட்ட மாமாங்கேஸ்வரம், திருகோணமலையிலே திருக்கரைசை என்பன குறிப்பிடத்தக்கன. ஆடி அமாவாசை தினத்தில் திருக்கரைசை சிவனார் மகாவலிகங்கைக்கு தீர்த்தமாட எழுந்தருள்வார். கொட்டியாரப்பற்று என அழைக்கப்படும் மூதூர், ஈச்சிலம்பற்று பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் இங்கு கூடுவர். அமாவாசை இரவிலே கங்கைக் கரையில் திருக்கரைசையைப் பாடிப் பயன் சொல்வர். கொட்டியாரப்பற்று முதியவர்களுக்கு இப்புராணம் மனப்பாடமாக தெரியும் என்பர். பயன் சொல்லி முடிந்ததும் காலையில் தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.
கங்குவேலிக் கல்வெட்டு
கங்குவேலிக் கல்வெட்டு என்று தற்போது கங்கு வேலியில் இருந்தாலும் இது திருக்கரைசையிலிருந்து கொண்டு வரப்பட்டு கங்குவேலி சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. கங்குவேலியிலும் அக்காலப் பகுதியில் சிவலிங்கக் கோயிலே இருந்துள்ளது. கங்குவேலி சிவன் கமலேஸ்வரன் எனப்படுகிறான். இங்கு ஆடி அமாவாசைத் தீர்த்தமும் இரவிரவாக திருக்கரைசை புராணமுமே படிக்கப்படுகிறது.
கல்வெட்டு வாசகம் சுருக்கமாக வருமாறு:- (இருபுறமும்) மலையில் வன்னியனாரும், எளு நிலை அடப்பர்களும் கூடி எம் பிரானக் கோணை நாதருக்கு கங்குவேலியில் வயல்வெளியும் பல நடுபாடும் பூரீ ஆகவிட்டோம். இதற்கு யாராகிலும் அகிதும் செய்தாகில் கெங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தைக்
கொலைக் கடவராயும் இப்படிக்கு தானத்தார்வரிப்பதிதர்.1
சிங்க பூதரன் அமைத்த திருக்கரைசை ஆலயம்
இந்திய மன்னர் பரம்பரையை சேர்ந்த சிங்கபூதரன் என்பவன் அயோத்தியிலிருந்து இலங்கை வந்தான். இலங்கைத் துறைமுகம் வந்த இவன் அப்போது அப் பகுதியை ஆட்சி செய்த எழில் வேந்தனது மகள் திரு நங்கையை திருமணம் செய்தான். திருக்கரைசையம்பதி ஆலயத்தை திருக்கரைசையில் அரண்மனை அமைத்து இருந்தான். அவனது அரண்மனை இருந்த இடமே இரணியன் குன்று என இருந்து இன்று இரணியன் கொட்டு என ஆகிவிட்டது. திருமங்கலாய் திருக்கோவிலையும் திருக்கரைசை புராணம் கூறுகிறது. இவ்வன் கர்ப்பக்கிருகம், மண்டபம், பலிபீடம், சிகரம், சுற்றி மதில் எல்லாம் சிற்பத்துடன் அமைந்ததாக கூறப்படுகின்றது. இதனை கடைசி ஐந்து பாடல்கள் கூறுகின்றன. சிங்கபூதரன் பற்றி வேறு வரலாற்று நூல்கள் மூலம் அறிய முடியா விட்டாலும் அகத்தியர் காலத்து ஆலயம் அழிவுற்று மீண்டும் புனரமைப்பு பெற்றது என்பதற்கு சான்றாகிறது. இன்றும் அழிவுற்ற நிலையில் இவ்வாலயம் புனரமைப்பு செய்யப்பட்டு வருவது இதன் மகிமையை உணர்த்துகிறது
க. தங்கேஸ்வரி பி.ஏ தொல்பொருள் சிறப்பு

Page 21
Devi Jwelers (Pvt) Ltd, 131, Sea Street, Colombo 11, Sri Lanka. Tel 494
 
 

- s
○び Леи/efers (Py) !ia.
22 KT Gold Jewellery
1123.9500 1-5, Fax. +94. 112327 101, E-mail: infoGde

Page 22
ក្រុងញ៉ងៃ 22 நூதனம்
-
! 3
காலவோட்டத்தில் புகைப்படக் கலையின்
பரிணாம வளர்ச்சி
கைப்பட கலைத்துறையானது 19 ஆம் நூற்றாண்டின் பு: Ꮷg5ᎱᎢᎶᎡᎩ கட்டத்திலேயே பெரிதும் அறிமுகமானது என்றால் அது மிகையாகாகது. ஒரு உருவத்தினையோ அன்றிக் காட்சியினையோ புகைப்படக் கருவியான கமரா என்னும் தொழிநுட்பவியல் சார் கருவி மூலம் படம் பிடித்து இரசாயனவியல்சார், கடதாசியில் இரசாயனவியல் பதார்த்தத்தால் கழுவி அச்சிடப்படுகின்றது. இதுவே சாதாரண வார்த்தைகளில் புகைப்படம் எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது.
புகைப்படப்பிடிப்பானது கமரா என்னும் தனித்துவம் பெற்ற புகைப்படக் கருவியினால் மட்டுமே பிடிக்கப்பட்டு இன்று நடைமுறையில் நாளாந்தம் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒர் அதி உன்னத கலை வடிவமாக இன்றியமையாத் தேவையாக விளங்குகின்றது.
அடிப்படை தேவைகளுக்கு அமைய கமராவின் பயன்பாடானது இன்று நடைமுறையில் பல பரிணாம வளர்ச்சி மற்றும், மாற்றம் பெற்ற போதும், அதன் ஆரம்ப கால நிலைப்பாட்டை ஆதாரமாகக் கொண்டே இன்றும் அதன் அடிப்படை இயக்கம் இடம் பெறுகின்றது. காலக்கிரமத்தில் தொழிநுட்பவியலில் ஏற்பட்ட
பலதரப்பட்ட பரிணாம வளர்ச்சியானது புகைப்பட ஊடகக்
 

கருவியான கமராவில் பரிணமித்து உள்ளது என்றால் அது மிகையாகாது. புகைப்பட ஊடகக் கருவியான கமராவில் பதிவு செய்து பிடிக்கப்படும் புகைப்படம் கமராவில் பிரதி விம்பமாகப் பிடிக்கப்பட்டு புகைப்படத்துறையில் பல பரிமாணப் படிமுறை வளர்ச்சியியை நாம் இன்று அவதானிக்க முடிகின்றது.
புகைப்படக் கலைக்கு ஆரம்பத்தில் பெட்டிக் கமராக்களும், அதன் படிமுறை வளர்ச்சியாகத் துருத்திக் கமராக்களும், அவற்றின் வழிமுறை வளர்ச்சித் தொடராக ஸ்ரூடியோ கமராக்களும், அஃதாவது புகைப்படக் கலைக்கூடப் படப்பிடிப்புக் கருவியான ஸ்ரூடியோ கமராவும் புழக்கத்துக்கு வந்துள்ளன.
இவற்றுக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் இலக்ரோனிக் கமராக்களும் மற்றும் டிஜிட்டல் கமராக்களும் புகைப்படத் துறை வரலாற்று வளர்ச்சிப் படிமுறையில், ஏற்பட்ட அபிவிருத்தி எனலாம். இவற்றின் நவீனத்துவ தனித்துவ தொழில்நுட்ப உயர் பிரதிபலிப்பே இன்று நடைமுறையில் உள்ள கையடக்கத் தொலைபேசி கமராக்கள் ஆகும். அடிப்படையில் ஆரம்ப காலத்தில் எழுந்த பெட்டிக் கமராக்கள் கைகளில் எடுத்துச் சென்று இலகுவாக வெளிக்களங்களில் படம்பிடிக்கக் கூடியதாக விளங்கின. அவ்வாறே துருத்திக் கமராக்கள் கூட கைவசம் இலகுவாக எடுத்துச் செல்லக் கூடியனவாக விளங்கின. ஆரம்ப காலத்தில் புகைப்படக் கலைக் கூடங்களில் பயன்படுத்தப்பட்ட கமராக்கள் அதிகளவு எடை கொண்டனவாகவும், தேவைக்கமைய உயர நிலைப்பாட்டில் ஏற்ற இறக்கம் செய்யக்கூடியனவாகவும் இருந்தன. இந்த வகை பெட்டிக் கமராக்களில் பிடிக்கப்படும் படங்கள், துல்லியமாவும் தெளிவாகவும் நீண்ட ஆயுளைக் கொண்டனவாகவும் விளங்கின. இத்தகைய புகைப்படக் கருவிகளில் படம்பிடிக்கும் கலையானது அனுபவம் மிக்க, தேர்ச்சி பெற்ற, பயிற்றப்பட்ட புகைப்படப் பிடிப்பாளர்களால் மட்டுமே கையாளக் கூடியதாக
ஆரம்பகால புகைப்படங்கள், கறுப்பு வெள்ளை, பிறவுண் வெள்ளை, நிறங்களில் பெரிதும் வழக்கத்தில் இருந்தன. ஆயினும் 1960 ஆம் ஆண்டுக்குப் பின்னர்
பெட்டிக் கமரா

Page 23
ஈஸ்மன் கலர்ப்படம் எனக் குறிப்பிட்டு அழைக்கப்படும் கலர் புகைப்படங்கள் நடைமுறை வழக்கத்தில் புதுமெருகுடன் புகைப்படக் கலைத் துறையினை அலங்கரித்தது.
இவ்வாறு படிப்படியாகப் புகைப்படத் துறையானது பல வளர்ச்சியினை, இரசாயனவியல், தொழிநுட்பவியல் என்பவற்றின் கூட்டுச் சேர்க்கையுடன் பின்னப்பட்டு வளர்ச்சியடைந்தன. முற் காலத்திலும், ஏன் இன்றும் கூட புகைப்படக் கூடங்களில் படப்பிடிப்பின் போது உயர் மின் அழுத்த மின்குமிழிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதினை காணமுடிகின்றது.
ஸ்ரூடியோ கமராக்கள், பெட்டிக் கமராக்கள், துருத்திக் கமராக்கள் என்பன அசையா நிழல் படங்களை மட்டுமே படம்பிடிக்க வல்லனவாக விளங்கின. காலக்கிரமத்தில் அடிப்படையான இக்கமராக்கள் மூலம் கிரகிக்கப்பட்ட தொழிநுட்பவியலை அடித்தளமாகக் கொண்டே துல்லியமான புகைப்படக் கருவிகள் பலதரப்பட்ட தேவைகளுக்கு அமைய விருத்தி செய்யப்பட்டன. இந்தவகையில் புகைப்படக் கருவி அபிவிருத்தியில் பிறிதொரு வளர்ச்சி, பிரதியாக்க கமராக்கள் ஆகும். இப்பிரதியாக்க கமராப் பயன்பாடு இன்று சாதாரண கிராமம் தொடக்கம் நகரம் வரை விஸ்தரித்து பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் புகைப்படத்துறையில் மற்றுமொரு வளர்ச்சிப் படிக்கல், மூலப்பிரதிகளை பெரிதாக்கலும், சிறிதாக்கலும் ஆகும். முற்காலத்தில் பிரதிப் பெரிதாக்கல் சிறிதாக்கலுக்கு பிரத்தியேகத் தனிக் கமரா உத்தியே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் இன்று கணனித் தொழிநுட்பவியலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுப் புகைப்படக் கலை பயன்படுத்தப்படுவதினால் இலகுவாகப் புகைப்படத்துறை மேலும் பல வளர்ச்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
புகைப்படத்துறையின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சி ஆங்கிலத்தில் "ஸ்லைட் மேகிங்" எனக்குறிப்பிட்டு அழைக்கப்படும் ஒன்றாகும். அஃதாவது எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை (அசையாப் புகைப்படத்தினை ) பெரிய வெண்திரையில் புறெஜக்டர் என்னும் கருவியினூடாகக் காண்பிப்பதாகும். அவ்வாறே டெலஸ்கோப் என்னும் தொலை நோக்கிக் கருவி மூலம், விண்வெளி ஆய்வுக்குத் தேவையான ஆய்வினை மேற்கொள்ள டெலஸ்கோ கருவியுடன் நவீன கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விண்வெளியில் இருந்து புகைப்படம் பிடித்து, புகைப்படத்தை பூமிக்கு அனுப்ப இக் கமராத் தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
காலக்கிரமத்தில் வெறும் அசையாப் புகைப்படத்தில் இருந்து பரிணாம வளர்ச்சிப்படி நிலை பெற்றதே திரைப்படக் கலையாகும். திரைப்படக் கலைக் கூடங்களில் முதலில் வெறும் அசையும் திரைப்படமாகவும் ஒலியற்ற நிசப்தமான படமாகவும் விளங்கிய இத்திரைப்படம்

3. 55OGOő អ៊ែ
23
பையஸ்கோப் என்றழைக்கப்பட்டது. அதன்பின் அசையும் திரைப்படமாகவும் ஒலியுடன் கூடிய திரைப்படமாகவும் வெளியாகி டோக்கிஸ் எனவும், பின் ஒலியுடன் கூடிய அசையும் திரைப்படம் ஒன்று சேர்ந்து பல அரிய தொழிநுட்பங்களுடன் காலக்கிரமத்தில் சினிமா என்னும் திரைப்படமாக வளர்ச்சி கண்டது. இன்று நாளாந்தம் இடம்பெறும் பொது நிகழ்வுகள், வைபவங்கள், கலை நிகழ்வுகள், கூட்டங்கள் என்பன வீடியோ, என்னும் நவீன கமரா மூலம் பதிவு செய்யப்பட்டு குடும்ப நிகழ்வுகளின் நினைவுச் சுவடுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறே குறுந்திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், தொலைக்காட்சி செய்தி வெளியீடுகளுக்கும் வியாபார வர்த்தக விளம்பர அபிவிருத்திக்கும் வீடியோ படங்கள் மூலம் பதிவுகள் செய்யப்பட்டு பல தரப்பட்ட தொலை காட்சித்துறை ஊடகங்களில் ஒலிபரப்பப்படுகின்றன. ஆரம்பத்தில் பெரிய அளவில் காணப்பட்ட கமராக்கள் இன்று நவீன தொழிநுட்பவியல் வளர்ச்சியின் பெறுபெறாக நுண்ணிய கையடக்க கருவியாக வளர்ந்துள்ளது.
பொதுவாகப் புகைப்படங்களாவன எமது நினைவுச் சின்னங்களாக இன்றும் மக்கள் மத்தியில் சமூக, சமய, சரித்திர, சம்பிரதாய மரபுகளை எடுத்தியம்பும் வரலாற்று மூலங்களாக, ஆதாரச் சுவடுகளாகப் பலதரப்பட்ட ஆய்வுகளுக்கு ஒப்பீட்டுப் பகுப்பு ஆய்வுக்கு ஆணித்தரமான அத்தாட்சிப் பதிவுகளாகப் புகைப்படங்கள் மிளிருகின்றன. త్ర - சுபாசினி பத்மநாதன்

Page 24
យម្បិញម៉ារ៉ៃរឺ 鑫 24 தொல்லியல்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்
(சென்ற இதழ் தொடர்ச்சி) நல்லூர்
வட இலங்கையில் முதன் முறையாக ஒரு மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட அரசு தோன்றிய காலமாக 13 ஆம் நூற்றாண்டு காணப்படுகிறது. இவ் அரசின் தலைநகர் அமைந்த இடமாக நல்லூர் விளங்குகிறது. இந் நல்லூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆரியச்சக்கரவர்த்திகளும், அவர்களைத் தொடர்ந்து சுதேச மன்னர்களும் ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம், தீவகம், தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம், வெளிநாடு என்று அழைக்கப்படும் பூநகரி, பொன்னாலை, வன்னி போன்ற பிரதேசங்கள் நேரடிக் கண்காணிப்பில் இருந்தன. இவற்றைத் தவிர திருகோணமலை மாவட்டம், கிழக்கிலங்கையில் சில வன்னிமைகள் ஆகியனவும் யாழ்ப்பாண அரசை ஏற்று நிர்வாகம் நடத்தினார்கள். திருமண உறவுகள் மூலம் இவ் அரசுகளுடன் உடன்பாடு ஏற்படுத்தி, அவர்களை யாழ்ப்பாண மன்னர்கள் தமது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமைக்கும் ஆதாரங்கள்
உள்ளன.
 

) ஓர் அறிமுகம் சி மையமான நல்லூர் இராசதானி
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
ஆகவே யாழ்ப்பாண மன்னர்களின் 350 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மையமாக நல்லூர் இராசதானியே காணப்படுகிறது. இங்கு உள்ள புராதன எச்சங்கள் அனைத்தும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உரியது என்று நாம் கூறமுடியாது. ஆனால் அவ்விடங்களில் புராதன எச்சங்கள் தோன்றியமைக்கு, யாழ்ப்பாண மன்னர்களுடைய இராசதானி அங்கு இருந்தமை ஒரு முக்கிய காரணமாகும். போர்த்துக்கேய ஆசிரியரான குவைரோஸ், தனது இறுதி யுத்தம் நல்லூரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுவதை உதாரணமாகக் கூறலாம். அந்த இறுதி யுத்தத்தின்போது மிகப் பெரிய ஒரு கோயிலைத் தாங்கள் சங்கிலிய மன்னனிடம் இருந்து கைப்பற்றி, அக்கோயிலையே தமது பாதுகாப்பு அரணாகவும், நிர்வாக அரணாகவும் பயன்படுத்தியதாக தமது குறிப்புக்களில் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
ஆகவே அத்தகைய ஒரு பின்னணியில் அங்கு பிற்காலத்தில் ஒல்லாந்தர் கால, ஆங்கிலேயர் கால கட்டடங்கள் காணப்பட்டமைக்கு, ஏற்கனவே இருந்த இராசதானி மையத்தை அவர்கள் கைப்பற்றி, அங்கிருந்து ஆட்சி செய்ததன் விளைவுதான் எனக் கூறமுடியும்.

Page 25
தற்போது நல்லூர்ப் பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாண அரசு காலச் சின்னங்களும் யாழ்ப்பாண அரசுகளைத் தொடர்ந்து ஆட்சி செய்த போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய காலச் சான்றுகளும் காணப்படுவதற்கு முக்கிய காரணம் நல்லூர் இராசதானி ஆகும். ஆயினும் தற்போது நல்லூர்ப் பிரதேசத்தில் நான்கு வகையான வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. யமுனா ஏரி, சங்கிலியன் தோரண வாயில், சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை என்பனவே அவையாகும்.
யமுனா ஏரி
இவற்றில் யமுனா ஏரியானது, யாழ்ப்பாண அரசு கால தொன்மைச் சின்னமாகப் பலராலும் கருதப்படுகிறது. யமுனா ஏரியின் வரலாற்று முக்கியத்துவம், யாழ்ப்பாண வைபவமாலையில் சிறப்பித்துக் கூறப்படுவது இங்கு நோக்கத்தக்கது. அதில் "கங்கை நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி, அவ்விடத்திலே யமுனா ஏரி ஏற்படுத்தப்பட்டதாக’க் கூறப்படுகிறது. யமுனா ஏரி பல்வேறு கால கட்டங்களில் புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டபோது, அங்கிருந்து புராதன கட்டட எச்சங்களும், வழிபாட்டுக்குரிய தெய்வச் சிலைகளும் கிடைத்தமை மூலம் இவ் ஏரி வரலாற்றுப் பழமை வாய்ந்த ஏரி என்பது தெளிவாகின்றன. 'ப' வடிவில் அமைந்த இவ் ஏரியின் அமைப்பானது, பிற்காலத்தில் தோன்றிய ஏரிகள் மற்றும் கேணிகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. மேலும் யாழ்ப்பாண அரசு தொடர்பான இலக்கியங்களிலே யமுனா ஏரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் அது ஒரு பழைமையான ஏரி என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
சங்கிலியன் தோரண வாயில்
நல்லூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற மிக முக்கியமான கலை வடிவமாக சங்கிலியன் தோரண வாயில் காணப்படுகிறது. சங்கிலியன் தோரண வாயிலானது, மன்னனுடைய அரண்மைக்குச் செல்லுகின்ற வாசலின் உட்பகுதி என்பது பொது மக்கள் பலருடைய பொதுவான அபிப்பிராயம் ஆகும். யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய நூல்களான கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை முதலான இலக்கியங்களிலே யாழ்ப்பாண அரசு கால அரண்மனைகள், கோட்டைகள், விதிகள் போன்றவற்றைப் பற்றிய விபரமான செய்திகள் காணப்படுகின்றன. அந் நூல்களில் குறிப்பிடப்பட்ட பலவற்றை தற்போது பார்க்க முடியாவிட்டாலும், இத்தோரண வாயில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலை வடிவமாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இத் தோரண வாயிலின் அழகும், கலை மரபும், தோற்றமும் ஒல்லாந்தர் காலத்தை ஒத்தது என்பது அறிஞர்களின் பொதுவான கருத்தாகும்.
ஆயினும் அவ்விடத்திலே அவர்கள் ஒரு தோரண வாயிலை அல்லது ஒரு வாசல் பகுதியை அமைத்தமைக்கு, ஏற்கனவே அங்கிருந்து ஆட்சி புரிந்த யாழ்ப்பாண

& கலைக்கேசரி 25
மன்னர்களைப் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் வெற்றி கொண்டமைதான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆகவே இந்தத் தோரண வாயிலின் கலை மரபிலே பிற்காலப் பிற நாட்டுக் கலை மரபுகள் காணப்பட்டாலும், அதில் காணப்படுகின்ற கபோதம், கும்முட்டம் போன்ற கலை வடிவங்கள் ஒரு திராவிடக் கலை மரபுக்கு உரியதாகக் காணப்படுகிறது. பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் இத்தோரண வாயிலின் கலை வடிவிலே அன்னியக் கலை மரபும், சுதேச கலை மரபும் கலந்து காணப்படுவதாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.
சங்கிலியன் தோரண வாயில் பழைமையான ஒரு இருப்பிடத்தின், தொடர்ச்சியான பிற்கால வடிவமாகப் பார்க்கப்பட்டாலும், இவ்விடத்திலே பழைமையான ஒர் இருப்பிடம் இருந்திருக்கலாம் என்பதை தோரண வாயிலுக்கு சில யார் தொலைவில் கிழக்கு நோக்கிச் செல்லுகின்ற போது காணப்படுகின்ற சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாகக் காணப்படுகின்றன. குறிப்பாக இலங்கைத் தொல்லியல் திணைக்களம் அங்கு அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அப்பிரதேசத்தின் நிலத்துக்குக் கீழே மிகப் பெரிய அரண்மனை போன்ற கட்டடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால்தான் என்னவோ, பாரம்பரியமாக சங்கிலியன் தோப்பு அல்லது சங்கிலியன் இருப்பிடம் என்று கூறப்படும் இடத்தில் எதிர்பாராத வகையில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், அங்கு ஒரு புராதன அரண்மனை அல்லது இருப்பிடம் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றது. அதன் காரணமாகவே

Page 26
បញ្ចប់ 26
தோரண வாயிலுக்குக் கிழக்கே காணப்படுகின்ற கட்டடங்களையும், அதன் கலை வடிவங்களையும் பொது மக்கள் சங்கிலிய மன்னனின் அரண்மனைக் கட்டடத்தின் ஒரு பகுதி எனக் கூறுகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது உள்ள கட்டட அத்திவாரத்தின் கீழ் தென்மேற்கு, தென்கிழக்கு நோக்கி பல அத்திவார சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மந்திரிமனை
நல்லூரில் காணப்படுகின்ற, பலரையும் கவர்ந்த ஒரு நினைவுச் சின்னமாக மந்திரிமனை காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அல்லது அங்கு தற்போது காணப்படுகின்ற பழைமையான பல்வேறு கட்டடங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கலை வடிவமாகும். இதன் அமைப்பு, தோற்றம், அழகு, தொழில்நுட்பம் ஆகியன யாழ்ப்பாணத்தில் உள்ள மிகத் தொன்மையான கலை மரபுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. இக் கட்டடப் பகுதியின் மேற் பக்கத்தில் தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி மூன்று கல்வெட்டுச் சாசனங்கள் காணப்படுகின்றன. இவை பிற்காலத்துக்குரிய சாசனங்களாகவே காணப்பட்டாலும், அரச இலட்சனையோடு உள்ள பிற்காலத்துக்குரிய கட்டடம் என கூற முடியாது. ஏனெனில், யாழ்ப்பாண அரசு தொடர்பான பல இலக்கியங்களில் இவ் அரண்மனை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
ஒல்லாந்தர் அல்லது போர்த்துக்கேயருக்கு உதவியாக இருந்தவர்களுக்காக, அவர்கள் கட்டிக் கொடுத்த கலை வடிவமாகவும் இதை சில அறிஞர்கள் நோக்குகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகச் சிறந்த,
பாதுகாக்கப்பட வேண்டிய, முக்கியமான கலை வடிவமாக
 

இம் மந்திரிமனை காணப்படுகிறது. இதன் அமைப்பு ஒல்லாந்தர் கால அல்லது பிற்பட்ட ஒல்லாந்தர் காலத்துக்கு உரியதாக இருந்தாலும், அதன் மர வேலைப்பாடுகளும், தொழில்நுட்பமும் மிகப் பழைமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே யாழ்ப்பாணத்தில் ஒர் அரசு 13 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கும் இடையில் இருந்தது என்பதற்கு இம் மந்திரிமனை மிகச் சிறந்த ஒரு சான்றாகும். பொதுவாக இம் மந்திரிமனையை அவதானித்த மேற்குலக அறிஞர்களும், சுதேச அறிஞர்களும் இதன் கலை வடிவத்தில் அன்னியக் கலை மரபும், சுதேச கலை மரபும் கலந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் இம்மந்திரிமனையைக் கட்டியவர்கள் சுதேச மக்களாக இருக்க வேண்டும்' எனக் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே நாம் இன்று பார்க்கின்ற நல்லூரில் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இருந்த கட்டடங்கள் இல்லாவிட்டாலும், பொதுவாக நகரிலும், கடற்கரையிலும் தங்கள் இருப்பிடங்களையும், நிர்வாக மையங்களையும், இராணுவ மையங்களையும் அமைத்துக் கொண்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அவற்றை அங்கு அமைக்காது நல்லூரில் அமைத்துக் கொண்டமைக்கு ஏற்கனவே நல்லூரிலே ஒரு இராசதானி இருந்தமைதான் மிக முக்கிய காரணமாகும். ஆகவே கலை மரபில் அன்னியக் கலை மரபு இருக்கின்ற காரணத்தால் இக் கலை வடிவங்களை நாம் புறக்கணிக்க முடியாது. அதிலே சுதேச கலை மரபுகளும் கலந்து காணப்படுகின்றன. ஆகவே இக்கலை வடிவமும்
பாதுகாக்கப்பட வேண்டும்.)
(தொடரும்) தொகுப்பு : உமா பிரகாஷ்

Page 27
நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் &liରତ୍ନତ୍ତ୍ଵ ରକ୍ଷirଛ; 50m மற்றும் 100m போத்தல்களில் இருக்கும்
இரகசியப்பகுதியை වාසනා äět ERFirst
స్క్రీలిభుజ బిణుకరణ
Sస్ట్రీపర్గ్ర
مي** c/\મોન્ટ, Эecrets
EN NACAs #ಣ್ಣೀ
霧羲
**ஜூ
:ஜ்ஜ்
wリAcAwん
鬣
இ
இ*இ
கொஹொம்ப மற்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ដ្យា 53: 311-3636449
கொஹொம்ப டர்மரிக் வைட்னிங் பேஷல் வொஷ்
2000 இலிருந்து |DObმF6)I მFIB0%|—60J. . .

Page 28
ខ្សថ្រាម៉ាឃី 度
3.காசனம்
கொழும்பு அரு
பராக்கிரமபாகுவின் க - கலாநிதி சி. பத்மநா
 

நங்காட்சியகத்திலுள்ள ாலத்து நாய்மனைச் சாசனம்
தன் தகைசார் பேராசிரியர், வரலாற்றுத்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
கோட்டே இராசதானிமன்னர்கள் குறித்து போர்த்துக்கேய வரலாற்றாசிரியரான கூற்றோ மேல்வருமாறு கூறுகின்றார். "அந்த அரசர்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு முறை முடி சூட்டிக் கொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றினார்கள். முதன் முதலாக முடி சூடிய நாளை அடிப்படையாகக் கொண்டு அடுத்துவரும் வருடங்களிலும் அந்த தினத்தில் முடிசூடினார்கள். அதனால் அவர்கள் முடி சூடிய வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களின் ஆட்சிக்காலம் நிச்சயிக்கப்பட்டது." 18
இந்த வழக்கம் ஆறாம் பாராக்கிரமபாகுவின் ஆட்சியிலே நிலவியமைக்கு நாய்மணைச் சாசனம் சான்றாகும்.
ஆண்டுதோறும் நடைபெறும் முடிசூட்டு விழாவில் அரசன் சமய நிறுவனங்களுக்கும் அறச்சாலைகளுக்கும் தானம் வழங்குவதும் குற்றம் புரிந்தமையாலே தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதும் மரபாகி விட்டது.18 பராக்கிரமபாகு தனது 20ஆம் ஆட்சியாண்டு நிறைவெய்தி, 20 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பூர்கூடித்து ஐந்தாம் நாளில் முடிசூட்டு விழாவினை நடத்திய பொழுது பிராமணர் பன்னிருவருக்கு அன்னம் இடுவதற்குச் சத்திரமொன்றுக்கு மானியங்களை வழங்கினான்.
பூமி தானம் அரசன் வழங்கிய நன்கொடை பற்றிய விபரங்கள் சாசனத்தில் இரண்டு இடங்களில் வர்ணிக்கப்படுகின்றன. சமஸ்கிருதப் பகுதியிலும் தமிழ்ப் பகுதியிலும் அவை காணப்படுகின்றன. அவற்றிற்கிடையிற் சில வேறுபாடுகள் உண்டு. தானம் பற்றிச் சமஸ்கிருதப் பகுதியிற் காணப்படும் விபரம் சுருக்கமானது. அது மேல்வருமாறு அமைந்துள்ளது
தர்ம்ம - ஸ்தித்யை த்வாதஸ் ப்ராஹ்மணா நித்யம் பூரீமத்தேவராஜஸ்ய நாந் சத்த்ரே க்ரோமம் ப்ராதாந் - நாய்மணே நாம ரம்யம் லங்காதீஸஹ் -பூரீ பராக்ராந்தி பாஹ920 "தேவராஜருடைய சத்திரத்தில் நாள்தோறும் பிராமணர் பன்னிருவருக்கு அன்னம் இடுவதற்கு இலங்கை அதிபனாகிய பராக்கிரமபாகு நாய்மனை என்ற பெயருடைய அழகிய கிராமத்தை வழங்கினான்."
தானகாரகனின் பெயர், நன்கொடையின் பெயர், நன்கொடை வழங்கியமையின் நோக்கம் நன்கொடை வழங்கப் பெற்ற நிறுவனத்தின் பெயர் ஆகியன சாசனத்திலே தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லப்படுகின்றன. சாசனத்தின் சமஸ்கிருதப் பகுதி செய்யுள் நடையில் அமைந்துள்ளதால் அரசனுடைய பெயர்

Page 29
எதுகை தோன்றும் வண்ணம் சற்று அலங்காரமாகிப் பராக்கிராந்திபாஹ" என்னும் மாற்று வடிவம் பெற்றுள்ளது. சாசனத்தின் தமிழ் பகுதியிற் காணப்படும் தாணம் பற்றிய குறிப்பு சற்று நீளமானது. ஓரளவிற்கு வேறுபட்டது. சமஸ்கிருதப் பகுதியிலுள்ள சில விபரங்கள் அதிற் காணப்படவில்லை. ஆனால் அதில் வேறு விபரங்கள் அடங்கியுள்ளன. அந்தப் பகுதி பின்வருமாறு உள்ளது.
இராசாக்கள் திருச்சன்னதியில் நிசதம் நடக்கிற சத்திரத்துக்கு திருவுள்ளம் பற்றின ஊர் நாய்மனை சுங்கங்கொல பகலகரமுல்லை வேர்துவை உள்பட்ட தோட்டம் வயல்கள் இவைக்கு சந்திராதித்தவரைக்கு நடக்கும் படி அறியவும்.*
புராதன ஆவணங்களிற் சொல்லப்படும் ஏற்பாடுகளும் நிறுவனங்களும் அவை தொடர்பான வழமைகளும் மறைந்துவிட்ட காலத்தில் அவற்றைக் குறிக்கும் சொற்றொடர்களிற் சில சமயங்களிற் பொருள் மயக்கம் ஏற்படுவதுண்டு. இச்சாசனத்தை வாசித்து விளங்கிய ஸ்.பரணவிதானவிற்கு அதிற் காணப்படும் குறிப்புகள் தொடர்பாக அவ்வாறான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனை இங்கு கவனிப்பது அவசியமாகின்றது. அவர் நன்கொடை பற்றி மேல்வருமாறு கூறுவார் :
"ஆயினும் சாசனத்தின் தமிழ்ப் பகுதி ஒரு நேரான கருத் தினைக் குறிக்கவில்லை. அந்தப் பகுதியிலும் சத்திரம் என்ற சொல் வருகின்றது. அது மூன்று இடங்களில் உண்டு. தமிழிற் சத்திரம் என்பது குடையினையும் அன்ன சத்திரத்தையுங் குறிக்கும். இங்கு முதலாம் இடத்தில் அது குடையினையே குறிப்பிடுகின்றது. அந்தச்
சொல் நன்கொடை பற்றிய குறிப்பில் இரண்டாவது முறையாக வருகின்றது. இராசர்கள் சன்னதியில் நிஷதம் நடக்கிற சத்திரத்துக்கு திருவுள்ளம் பற்றின ஊர் என்பது நன்கொடை பற்றிய குறிப்பாகும். இதிலே வரும் சத்திரம் என்பதைச் சமஸ்கிருதப் பகுதியில் உள்ளவாறு அன்னகத்திரம் என்று கொண்டால் அது பொருத்தமற்றதாகிவிடும்.சத்திரம் அன்ன சத்திரமாகில் இராசாக்கள் திருச்சந்தியில் நடக்கிற" என்ற அடைமொழி அதற்குப் பொருத்தமற்றது. சத்திரத்தைக் குடை என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5}ញម៉ាវែ
29
கொள்ளுமிடத்து இந்த வர்ணனை அதற்கு மிகவும் பொருத்தமுடையதாகும். புராதன காலத்தில் இந்தியாவிற் போல இலங்கையிலும் குடை அரச சின்னங்களில் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. அரசன் பிரயாணம் செய்யும் பொழுது அவனது தலைக்கு மேலாகக் குடை பிடித்து செல்வது வழக்கம். மேலும் இங்கே குறிப்பிடும் ஊர்கள் குடையின் 'சத்திரம் திருவுள்ளம் பற்றியனவாகச் சொல்லப்படுகின்றன.
'உள்ளம் என்ற சொல்லுக்கு ஆத்மா என்ற பொருள் உண்டென்று அகராதிகள் குறிப்பிடும்.' இந்தச் சந்தர்ப்பத்திற் பரிசுத்த ஆவி என்பதே திருவுள்ளம் என்பதன் பொருத்தமான விளக்கமாகும். அன்ன சத்திரத்தின் பரிசுத்த ஆவி என்று கொள்வது பொருளற்றது. மன்னர்களின் சின்னமான குடைகளிலே தேவர்கள் வசிப்பதாகக் கதைகளுண்டு. சமஸ்கிருதப் பகுதியிலுள்ள குறிப்பு தேவராஜர் பற்றியது. தமிழ்ப் பகுதி குடையின் தேவரைப் பற்றியது ஒருவரையே இரண்டுங் குறிப்பிடுகின்றது.?
சாசனத்தின் நன்கொடை பற்றி பரணவிதான சொல்லும் விளக்கம் கற்பனாதீதமானது; பொருளற்றது; தவறானது; திருவுள்ளம் பற்றிய ஊர் இராசாக்கள் திருச்சன்னதியில் நடக்கிற சத்திரம் என்ற தொடர்களை அவராற் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தவறான கருத்துகளின் விளைவாகப் பிழையான விளக்கங்களும் முடிவுகளும் ஏற்படும்.
திருவுள்ளம் என்பது பரிசுத்த ஆவியைக் குறிக்கும் என்று அவர் கொண்டார். அகராதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சொல்லைப் புரிந்து கொள்ள முற்பட்டதாற் சந்தர்ப்பத்திற்கு ஏற்பப் பொருளை அவரால் அறிய முடிய ១៨៦១ចាស. ១_6TនោTLb
gr gö7 L 互 பொதுவாக மனம் எ ன் ப  ைத யே குறிக் கும் 28 தி ரு வுள் ள ம் பற்றின அளர்'
என்னுந் தொடர்

Page 30
B, SOJOUB, ABB, fi ftit 30
மனமார உயர் நிலையிலுள்ள ஒருவர் வழங்கிய ஊரைக் குறிக்கும். அது நன்கொடை பற்றியது. அது சமஸ்கிருதப் பகுதியிலுள்ள 'க்ராமம் ப்ராதாத் என்ற தொடருக்கு நிகரானது. குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வழங்கிய நன் கொடையினை வர்ணிக்கும் ஆவணம் ஒன்றில் இருவேறு பகுதிகளில் முரண்பாடான விபரங்களை எழுதினார்கள் என்று கொள்ளவியலாது. இந்தச் சாசனத்தின் சமஸ்கிருதப் பகுதி சத்திரமொன்றில் பிராமணருக்குத் தினமும் அன்னமிடுவதற்கு நன்கொடை வழங்கியமை பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. தமிழ் பகுதியிலும் அதே விடயம் சொல்லப்படும் என்று எதிர்பார்க்கலாம். அதில் தினந் தோறும் செயற்படுகின்ற சத்திரத்துக்கு நன்கொடையாக ஊர்(கள்) வழங்கியமை பற்றிச் சொல்லப்படுகின்றது. சாசனத்தின் இரு வேறு பகுதிகளும் ஒரே நிறுவனத்தையே, அன்னகத்திரத்தைக் குறிப்பிடுகின்றன என்பது அதைப் பற்றிய இயல்பான பொதுவான விளக்கமாகும். அந்த விளக்கத்தை ஒப்புக் கொள்ளாது மாறுபடுவதாற் பரணவிதான தமிழ் பகுதியில் வரும் சத்திரம் குடை என்பதைக் குறிக்கும் என்றும், அதில் உறைகின்ற பரிசுத்த ஆவிக்கு நன்கொடை வழங்கப்பட்டதென்றும் கொள்கிறார். தமிழ் சாசன மரபில் குடை முதலான அரச சின்னங்களுக்குத் தானம் கொடுக்கும் வழக்கம் பற்றி எதுவிதமான குறிப்பில்லை. குடையில் உறையும் பரிசுத்த ஆவி தேவராஜருடையது என்ற பரணவிதானவின் முடிவு விந்தையானது. சத்திரத்துக்குத் திருவுள்ளம் பற்றின ஊர் என்ற தொடர் (அன்ன) சத்திரமொன்றுக்கு அரசன் வழங்கிய
 

நன்கொடைகளையே குறிக்கும். அதனை வேறு விதமாக விளக்குவதற்கு எதுவித ஆதாரமுமில்லை. அரச சின்னமாகிய குடையில் உறையும் பரிசுத்த ஆவிக்கு நன்கொடை வழங்கப்பட்டதென்ற கருத்துத் தவறானது. அது சாசன வாசகத்தில் அடங்காத சிந்தனை.
நாய்மணை முதலான ஊர்கள் இச்சாசனத்தின் சமஸ்கிருதப் பகுதியிலும் தமிழ்ப் பகுதியிலும் அமைந்துள்ள நன்கொடை பற்றிய குறிப்புகள் வேறுபடுகின்றன. முன்னே கவனித்தவாறு சமஸ்கிருதப் பகுதியில் நாய்மணை என்னும் ஊரின் பெயர் மட்டுமே காணப்படுகின்றது. நன்கொடை பற்றிய தமிழ்ப் பகுதி சற்று விரிவானது. அதில் மேலதிகமான விபரங்கள் அடங்கியுள்ளன. அது மேல்வருமாறு உள்ளது.
இராசாக்கள் திருச்சன்னிதியில் நிசதம் நடக்கிற சத்திரத்துக்குத் திருவுள்ளம் பற்றின ஊர் நாய்மணை சுங்கங் கொல பகலகரமுல்லை வேர்துவை உள்பட்ட தோட்டம் வயல்கள் இவைக்கு சந்திறாதித்த வரை நடக்கும்படி அறியவும். 24 சுங்கங்கொல, பகலகரமுல்லை, வேர்துவை என்ற மேலதிகமான இடப்பெயர்கள் இங்கே சொல்லப்படுகின்றன. தோட்டம், வயல்கள் என்பனவும் குறிப்பிடப்படுகின்றன. இவை எல்லாம் சமஸ்கிருதப் பகுதியில் இடம்பெறாதவை. இந்த வேறுபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன? என்பது வாசகர்களின் மனங்களில் இயல்பாகவே எழக் கூடிய வினாவாகும். அதுமட்டுமன்றித் தமிழ்ப் பகுதியின் வாசகம் பொருள்மயக்கம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. குறியீடுகள் இல்லாத வாசகங்களை எழுதும் முறை அதற்கான ஒரு காரணமாகலாம். இந்தச் சாசனம் பகுதியை இரு விதமாகப் படித்து, அதன் பொருளை விளக்கலாம். அவற்றிலொன்று திருவுள்ளம்பற்றின ஊர் நாய்மணை என்பதோடு ஒரு வசனம் முடிகின்றது என்று கொள்வது. அவ்வாறாகிற் சுங்கங்கொல, பகலகரமுல்லை, வேர்துவை உட்பட்ட தோட்டம், வயல்கள் இவைக்கு சந்திறாதித்தவரை நடக்கும்படி அறியவும் என்பது, அதற்கடுத்த வேறொரு வசனமாக கொள்ளப்படல் வேண்டும். அவ்வாறாகிற் சுங் கங்கொல, பகலகரமுல்லை, வேர்துவை என்பவற்றை வயல், தோட்டம் என்ற வகைக்குரிய நிலங்களின் பெயர்களாகக் கொள்ள வேண்டும். அவற்றை அவ்விதமான நிலங்களாகவே பரணவிதான அடையாளங் கண்டார்.
ஆனால், இச்சாசனப் பகுதியைப் பற்றிய தெளிவான விளக்கம் இடப்பெயர்களைத் தொடர்ந்து வரும் உள்பட்ட தோட்டம் வயல்கள்’ என்னுந் தொடரில் நிர்ணயிக்கப்பட வேண்டியது. சாசன வாசகத்தில் நாய்மணை, சங்கங்கொல, பகலகரமுல்லை, வேர்துவை என்பன எல்லாம் இணைத்துக் சொல்லப்படுகின்றன. சுங்கங்கொல, பகலகரமுல்லை, வேர்துவை என்பன நாய்மணையில் அடங்கியவை என்று

Page 31
பொருள்படும் வகையிற் சாசன பகுதி அமையவில்லை. அவை சத்திரத்துக்கு அரசன் தானம் பண்ணிய ஊர்களின் பெயர்கள் என்பதைக் குறிப்பிடும் வகையிற் சாசன வாசகம் அமைந்துள்ளது. அது மேல்வருமாறு அமைந்துள்ளது.
சத்திரத்திற்கு திருவுள்ளம் பற்றிய ஊர் நாய்மணை, சுங்கங்கொல, பகலகரமுல்லை, வேர்துவை. அஃறினைப் பொருட்கள் பலவற்றைச் சில சமயங்களில் ஒருமையிற் சுட்டுவது வழக்கம் என்பதால் ஊர்களை இங்கு ஊர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு ஊர்களின் பெயர்களைத் தொடர்ந்து உள்பட்ட தோட்டம், வயல்கள் என்னும் தொடர் வருகின்றது. நான்கு ஊர்களிலும் அடங்கிய தோட்டம், வயல்கள் ஆகியவற்யே சாசனம் எழுதியவர்கள் குறிப்பிடுகின்றனர். சொல்லப்பட்ட ஊர்களில் அடங்கிய தோட்டம், வயல் என்ற வகைகளைச்
சேர்ந்த நிலங்களிலிருந்தும் வரியாக அரசனுக்கு கிடைக்கும்
வருமானங்களை சத்திரத்துக்கு மானியமாக வழங்கியமையினையே சாசனம் வர்ணிக்கின்றது என்பது அதனை பற்றிய நிதானமான, பொருத்தமான விளக்கமாகும்.
களுத்துறையிலுள்ள ஐந்நூற்றுவரின் காளிகோயில் பற்றிய கல்வெட்டிலே தோட்டாயம், வயலாயம் என்னும் சொற்கள் காணப்படுகின்றமை இங்கு கவனத்திற்குரியது.* அவை முறையே தோட்டம், வயல் என்னும் வகைகளிலுள்ள நிலங்கள் மீதான இறை கடமைகளைக் குறிப்பனவாகும். அரசனின் சார்பிலே தோட்டம், வயல் ஆகியவற்றின் இறை கடமைகளை வழங்குமிடத்துக்குச் சில நிலங்களின் பெயர்களைச் சொல்லியும் ஏனையவற்றைக் குறிப்பிடாதும் சாசனங்களை எழுதும் வழக்கமில்லை. ஒன்றில் அவை எல்லாவற்றின் பெயர்களும் சொல்லப்படும். அல்லாவிடின் அவை எல்லாம் பொதுமையிற் குறிப்பிடப்படும். இந்த சாசனத்தில் ஊர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவற்றிலடங்கிய தானம் தொடர்பான இருவகையான நிலங்களைப் பொதுமையிற் குறிப்பிட்டுள்ளனர் என்று கொள்ள முடிகின்றது.
 

5ួញត្អែ
31
அவ்வாறாயின் சமஸ்கிருதப் பகுதியிலும் தமிழ்ப் பகுதியிலும் ஊர் தொடர்பாக எவ்வாறு முரண்பாடு ஏற்பட்டுள்ளது? என்னும் வினா இயல்பாகவே எழுகின்றது. சாசனத்தின் அமைப்பு இதற்கு ஏதுவான காரணமாகலாம். அதில் முன்னே கவனித்தவாறு இரு பகுதிகள் உள்ளன. முற்பகுதியான பெரும்பகுதி தமிழிலும் பிற்பகுதியான சிறிய பகுதி சமஸ்கிருதத்திலும் அமைந்துள்ளன. அவை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ள போதிலும் அவை தனித்தனியான வசனங்கள் போன்ற கோலத்தில் உள்ளன.
இதுக்கு அதிகம் நினைத்தவர் உண்டாகில் பசுவையும் பிராமணனையும் கெங்கையில் வதித்த பாவத்திற் பெற (க்) கடவர் ஆகவும் இது நிலையிட்டுக் குடுத்தவர் ஸ்வர்க்க மோக்ஷம் பெறவும் என்னும் வசனங்களோடு தமிழ்ப் பகுதி முடிகின்றது. இவை சாசனங்களில் வரும் ஒம்படைக் கிளவிக்கு நிகரானவை. எனவே இவற்றுடன் தமிழ்ச் சாசனம் நிறைவு பெறுகின்றது எனக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து கல்லில் எழுதப்பட்டிருக்கும் சமஸ்கிருத வாசகம் தமிழ்ச் சாசனத்தின் பொழிப்புரை போன்றது. சுருக்கமானது. இரண்டினையும் அரண்மனை அதிகாரிகள் வெவ்வேறாக எழுதி இணைத்துள்ளனர் என்று கருதலாம். ஆயினும் சத்திரம் பற்றிய விபரங்கள் இரண்டிலும் முரண்பாடின்றிக் கூறப்பட்டுள்ளன. மொழி வேற்றுமையினாற் சொல்லும் விதம் மட்டுமே வேறுபடுகின்றது.
சமஸ்கிருதப் பகுதி தேவராஜரது சத்திரம் பற்றிக் குறிப்பிடுகின்றது. தேவராஜர் என்பது அரசனின் அடைமொழியாக வரவில்லை. 'தேவராஜ' என்னும் காம்போஜ தேசத்து அரசரின் கோட்பாடு சிங்கள மன்னர்களுக்கு அந்நியமானது. கோட்டை காலத்து அரசர்களையோ வேறு காலத்து மன்னர்களையோ
இலங்கையிலே தேவராஜர் என்று குறிப்பிடும் வழக்கம்
இல்லை. தேவராஜ என்பது மகாவிஷ்ணு வின் நாமங்களில் ஒன்றாகும்? அது தேவர்கோனாகிய இந்திரனுக்கு உரியது. ஆனால் இச் சாசனம் வேறொரு தேவனையே தேவராஜர்

Page 32
យ៉ាងក្រុញយ៉ាវែ 32
என்று குறிப்பிடுகின்றது போலத் தெரிகின்றது. தேவராஜர் என்றுந் தேவனைத் தமிழ்ப் பகுதியிலுள்ள விபரங்கள் மூலமாக அடையாளங் காணமுடிகின்றது. அப்பகுதியில் தேவராஜருடைய சத்திரம் (தேவராஜஸ்ய சத்திரே) என்பதற்கு பதிலாக இராசாக்கள் திருச்சன்னதியில் நிசதம் நடக்கிற சத்திர(ம்) என்னும் தொடர் காணப்படுகின்றது. இதில் சொல்லப்படும் சத்திரம் நாள் தோறும் செயற்படுவது.
அது திருச்சன்னதி ஒன்றில் உள்ளது. அந்த திருச்சன்னதியும் இராசாக்கள் திருச்சன்னதி என்று வர்ணிக்கப்படுகின்றது. தேவகோட்டத்தையும் கோயில் வளாகத்தையும் திருச்சன்னதி என்று சொல்வது வழக்கம். யாழ்ப்பாணத்தின் வட கரையிலே தொண்டைமானாற்றில் உள்ள பிரசித்தமான முருகன்கோயில் செல்வச்சன்னதி என்னும் பெயரால் வழங்குகின்றது. எனவே இச்சாசனம் குறிப்பிடும் திருச்சன்னதி ஒரு கோயிலாதல் வேண்டும். வழமையாகச் சத்திரங்களான அறச்சாலைகள் கோயில் வளாகங்களில் அமைந்திருக்கின்றமையால் இக்கருத்து மேலும் வலுப்பெறுகின்றது.
திருச்சன்னதி, இராசாக்கள் திருச்சன்னதி என்று இங்கு வர்ணிக்கப்படுகின்றது. இராசாக்கள் என்பது இங்கு அரசனையன்றி தேவரையே குறிப்பிடுகின்றது என்பதற்குச் சமகால பெளத்த மரபு ஆதாரமாகும். இலங்கையில் மத்திய காலத்திலே பெளத்தர்கள் தேவர்கள் நால்வரை தேசத்தின் காவற்றெப்வங்களாகப் போற்றி வழிபட்டனர். உபுல்வன், சமன், விபீஷணன், குமாரக்கடவுள் என்போர் அந்நால்வர். அவர்களைக் கூட்டாகத் தெவிரஜ்ஜாருவன் (தேவராசர்கள்) என்று குறிப்பிட்டனர். அவர்களில் உத்பலவர்ணனாகிய உபுல்வனே முதன்மையானவன். 9 | | 6) Igo)16OLLL பிரதானமான கோயில் மாத்தறை மாவட்டத்திலுள்ள தேநுவரையில் அமைந்திருந்தது. தேவராஜனது கோவில் அமைந்துள்ள நகரம் தேவநகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதனை நகரங்களின் உத்தமமானது (நகரம் உத்தமம்) மகா வம்சம் வர்ணிக்கின்றது. அது நிசங்கமலலனது காலத்தில் (1187 -196) ஒரு பரிசுத்தமான
 

(தர்ம ஷேத்திரம்) நகராகி விட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் இலங்கை மன்னர்கள் அங்கு யாத்திரை போய், வழிபாடாற்றித் தான தருமங்கள் செய்வது வழமை. அரசனது முடிசூட்டு விழாவின் தினத்திலே தேவராஜனாகிய உபுல்வன் கோயில் வளாகத்திலுள்ள சத்திரம் ஒன்றிற் பிராமணருக்கு அன்ன தானம் கொடுப்பதற்கு நன் கொடையாக நிலம் வழங்கியமை பற்றியதே இச்சாசனம் என்பது அதனைப் பற்றிய நிதானமான விளக்கமாகும்.
திருச்சன்னதி என்பது அரசமாளிகையினையோ அரண்மனையினையோ குறிக்கும் என்று கொள்வதற்கு எது விதமான ஆதாரமும் இல்லை. தமிழ்ச் சாசன வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் அரண்மனையினை திருச்சன்னதி என்றும் சொல்லும் மரபில்லை. சன்னதி என்பது சமஸ்கிருத மொழிமூலம் வந்த சொல்லாகும். அது கடவுளின் சாந்தித்தியத்தை அடையாள பூர்வமாக உணர்த்தும் சின்னத்தைக் கொண்ட கோயில், திருத்தலம் என்பவற்றைக் குறிக்கும்.
சத்திரம் என்ற சொல் சாசனத்தின் தமிழ்ப் பகுதியில் மூன்றிடங்களிற் காணப்படுகின்றது என்ற பரணவிதானவின் கருத்துத் தவறானது. அது இரண்டு இடங்களில் மட்டுமே வருகின்றது. சாசனத்தின் 19 ஆம் 20 ஆம் வரிகளில் உள்ள எழுத்துகளைத் 'சத்திராத்திராத்த வரைக்கும் என்று பரணவிதான பிழையாக வாசித்துள்ளார். மேலும் இவை குடை மறையும் வரைக்கும்’ என்பதைக் குறிக்கும் என்கிறார். உண்மையில் இவ்விடயத்திற் சாசனப் பகுதியைப் பிழையாக வாசித்து, அதற்கு ஒரு விநோதமான, முற்றிலும் பொருத்தமற்ற விளக்கத்தைச் சொல்கிறார். சத்திரம் என்ற சொல்லை இங்கு காணமுடியவில்லை. சாசனத்திலே சந்திராதித்தவரை என்ற வாசகமே உள்ளது. அது வழமையாகச் சாசனங்களில் வருவது.
தேவராஜரது சத்திரமும் பிராமணரும் பெளத்த வழிபாட்டு மரபிற்குரிய தேவாலே ஒன்றுடன் இணைந்து சத்திரமொன்றிலே பிராமணருக்கு அன்னதானம் கொடுப்பதற்கு அரசன் நன்கொடை வழங்கியமை ஒரு அசாதாரணமான செயலாகத் தோன்றலாம். வணிகர் ஆதிக்கம் நிலவிய நகரமொன்றிலே பல்லினப் பண்பாட்டு மரபுகள் சிறப்புற்றிருந்த சூழ்நிலையில் இவ்வாறான உறவுகள் ஏற்பட்டன. இரண்டாம் பராக்கிரமபாகுவின் தெவுந்தர சாசனம் அவ்வாறான ஒரு நிலையைக் குறிப்பிடுகின்றது. அதன் மேல்வரும் பகுதி இங்கு கவனித்தற்குரியது.
புனித க்ஷேத்திரங்களான விகாரை, தேவாலே, அக்கிரகாரம், கோயில் ஆகியவற்றுக்கு யாதொரு அகிதமும் செய்யலாகாது. மும் மணிகளுக்கு வேண்டிய நிவேதனங்களும் விழாக்களும் சிறப்பாக நடைபெற வேண்டும். கட்டிடங்கள் கிலமடைந்திருப்பின் அவற்றைப் புனரமைக்க வேண்டும்.
இதன் பிரகாரம் விகாரம், தேவாலே, அக்கிரகாரம், கோயில் என்னும் நான்கு வகையான சமய நிறுவனங்கள்

Page 33
தெவுந்தரவில் இருந்தன. அவை பெளத்தம், இந்து சமயம் ஆகியவற்றைச் சேர்ந்தவை. அவை எல்லாம் புனித ஷேத்திரங்கள் என்றும் அவற்றுக்கு எதுவிதமான இடரும் விளைவிக்கக் கூடாதென்றும் அரசன் பிரகடனப்படுத்தியுள்ளான். அைெ)ெ அரசாங்க அதிகாரிகளினாலும் பாதுகாக்கப்பட வேண்டியவை. இச் சாசனம் அந்தணர் குடியிருப்பான அக்கிரகாரத்தைக் குறிப்பிடுவதோடு தேவாலே, கோயில் என்பனவற்றை வேறுபடுத்திச் சொல்கின்றது. இங்கு தேவாலே என்று சொல்லப்படுவது உபுல்வன் கோட்டம், இந்துசமய வழிபாட்டுத்தலம் கோயில் எனப்படுகின்றது.
தேனுவரையிலுள்ள அக்கிரகாரம் பிரசித்தமானது. இலங்கையில் மத்திய காலத்திலிருந்த அந்தணர் குடியிருப்புகளில் அதுவே மிகவும் பிரசித்தமானது. அர சருக்கும் அதற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அத்துடன் தேனுவரை நகரத்தின் விவகாரங்களில் அது மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தது. தேனுவரைப் பெருமாள் என்பது அதன் தலைமைப் பதவியைப் பெற்றவர்களின் பதவிப்பெயராகும்.
தேனுவரையில் அமைந்த அக்கிரகாரத்துப் பிராமணர்களுக்கும் உபுல்வன் கோயிலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தது. ஆறாம் விஜயபாகுவின் காலத்தில் வழங்கப்பட்ட தெவுந்தர சன்னஸவனால் இது உறுதியாகின்றது
அடிக்குறிப்புகள் 1. மாத்தறைக்கு வடக்கிலே ஏறக்குறைய இரண்டு மைல்களுக்கு அப்பால், காட்டுக் குள்ளிருந்த ஒரு தமிழ் கல்வெட்டினைப் பற்றி எடுஅட் மீயூலர் இலங்கையின் புராதன சாசனங்கள் (Ancient inscriptions of Ceylon ) என்ற தனது நூலிற் குறிப்பிட்டுள்ளார். அதனை முதலியார் ஒருவர் எடுத்துச் சென்றதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் அது எங்கு வைக்கப்பட்டது என்பது பற்றிய குறிப்பெதுவும் இல்லை. மியூலர் குறிப்பிடும் கல்வெட்டை ஸே, பரணவிதான, கொழும்பு அருங்காட்சியகத்துக் கல்வெட்டுச் சாலை u5Gc) gi) Gla-LIGOT5d 566TLITii. S. Paranavitana, The shrine of upulvan at Devundara, The Members of the Archaeological survey of Ceylon VI, P. 70 மேலது மேலது மேலது , ப. 71
பொலன்னறுவைக் காலத்துச் தமிழ்ச் சாசனங்களில் விஜயபாஹ, ஜயபgரஹ, வீர பாஹ, கஜபாஹ, பாராக்கிரமபாஹ போன்ற பெயர் வடிவங்களே காணப்படுகின்றன. கோட்டே இராசதானிக் காலத்தில் பஜாஹ என்னும் சொல்லை வாகு என்று எழுதினார்கள். இத்தகைய ஒலி மாற்றம் இலங்கையில் அக்காலத்தில் ஏற்பட்டுள்ள தமிழ்மொழி வழக்காகும். அது சமஸ்கிருத மொழிச் சொற்களைத் தமிழ் மயப்படுத்தலில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் ஒர் அடையாளமாகும். சி. பத்மநாதன், இலங்கைத் தமிழ்ச் சங்கங்கள், இந்து சமய கலாசார திணைக்களம், கொழும்பு, 2006, Lig. 417, 430, 432, 433, 434, 438 - 442 9. 15, 16 ஆம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் வரி வடிவங்களில் எழுதிய திருக்கோயிற் கல் வெட்டொன்றில் அரசனுடைய பெயரை விஜயவாகு தேவர் என்று எழுதியுள்ளனர். கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டொன்றிலும் அரசனின் பெயர் gaiG) ITD GTCupg| Lil GaitGT5. A. Veluppillai, Ceylon Tamil Inscriptions, Part I, Peradeniya, 1971, pp 1 – 4 10. மத்திய காலப் பாண்டியரின் சாசனங்களில் அரசனது நிறைவேறிய ஆண்டுகளின் Ceylon Tamil Inscriptions (CTI) Part - I ed A. Veluppillai, GILB. G56, Jilgit, Peradeniya, 1971, க 61 தொகையினை இலக்கத்தில் குறிப்பிட்டு, நடைபெறும் ஆண்டினை அதன் எதிராவது என்று குறிப்பிடுவது வழமை. உதாரணமாக யாண்டு 22ஆவதின் எதிராமாண்டு என்னும் குறிப்பு பூரீ வல்லவன் என்ற அரசனின் JTg GOTiggiri ST600TL JUGS airpg). South Indian Inscriptions Volume XIV, ed. A.S.Ramanatha Ayyar, Madras, 1962, P. 158. 11. Ceylon Tamil Inscriptions (CTI), Part II ed. A. Veluppillai, Peradeniya, 1972, Pp.56 -
67 12. சரசோதிமாலை, பாயிரச் செய்யுள்கள் 13. S. Paranavitana, The Shrine of Upulvaw, p. 71 14. M. Rohanadeera, “Revised Chronology of Sri Lankan Rulers, Circa. 1500 A. D., A Historiographical perspective", Reflection on A Heritage Historical Scholarship on Premodern Sri Lanka Part I - Edited by R. A. L. H. Gunawardana, S. Pathmanathan, M. Rohanadeera, Central Cultural Fund, Ministry of Cultural and Religious Affairs, Colombo, 2000, Pp 265–270. 15,16. மேலது 17. மேலது. ப. 266 18. மேலது

ញ៉ាញ់
33
19. வீரபராக்கிரமபாகு, அவனது ஐந்தாவது ஆண்டில், முடிசூட்டிய தினமாகிய வைகாசிப் பூர்வபக்ஷத்துப் பன்னிரண்டாம் நாள் மலை நாட்டில் முன்பு கிளர்ச்சி புரிந்து அதனாலே தண்டனை பெற்றவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கியமையினை அவனது காலத்தில் எழுதிய கடலாதெணிய சாசனம் பதிவு செய்கின்றது. அவன், தனது பத்தாம் ஆண்டில் முடிசூட்டிய பொழுது தனது தந்தை முன்பு அந்தணருக்கு வழங்கிய நில மானியங்களை உறுதிசெய்து அவற்றை மேலும் விரிவு படுத்தினான். அதற்குரிய கட்டளையும் அரசன் முடிசூடிய தினமாகிய வைகாசி முன்பக்கத்து 12 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது. மேலது, ப.272 20. CTI, Part ii, p. 58 21. மேலது, ப. 57 22. S. Paranavitana, The Shrine of Upulvan, Pp. 71-72 23. Madras Tamil Lexicon Vol. I, University of Madras, 1982, P. 472 24. CIT, part ii, pp. 57 - 58 25. CIT, part 1 ed. A. Veluppillai, Peradeniya, 1971, P. 45 26. CTI, Part II, p. 58 27 மேலது, ப.57
தேவராஜ என்பது விஷ்ணுவைக் குறிக்குமென்று கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை கருதுவார்.
அவர் மேல் வருமாறு குறிப்பிடுகின்றார். "According to Professor Paranavitana, the ancient shrine of upulvan began to be considered a visnu temple from about that periods due to south Indian influence. The object of the record was the grant of the village of Naymanai and other lands to the cattiram of Devaraja." தென்னிந்தியச் செல்வாக்கின் காரணமாக, இந்தக் காலத்தில் உபுல்வன் கோயிலை விஷ்ணுவின் ஆலயமாகக் கருதினார்கள் என்பது பேராசிரியர் பரணவிதானவின் கருத்தாகும். தேவராஜரின் சத்திரத்திற்கு வழங்கிய நன்கொடை பற்றிய விபரங்களைப் பதிவு செய்வதற்கே இச்சாசனத்தை எழுதியுள்ளார்.
தேவராஜரின் சத்திரத்துக்கு வழங்கிய நன்கொடையினை இச்சாசனம் பதிவு செய்கின்றது என்ற கருத்து மிகவும் பொருத்தமானது. அது மறுப்பதற்குரியதுமன்று. ஆயினும் இச்சாசனம் எழுதப்பட்ட காலத்திலே 15 ஆம் நூற்றாண்டில் (கி.பி1433) உபுல்வன் கோயில் விஷ்ணு கோயிலாக மாறிவிட்டதென்று உறுதியாகச் சொல்லமுடியாது. உபுல்வன் கோயிலும் விஷ்ணு கோயிலும் வெவ்வேறானவை. இரண்டாம் பராக்கிரம பாகுவின் (1236 - 1269) தெவுந்தர சாசனம் 'தேவாலே, கோயில் ஆகிய இரண்டினையும் குறிப்பிடுகின்றது. இக்காலத்துக்குரிய ‘ஸ்ந்தேஸ் காவியங்கள் உபுல்வனை விஷ்ணுவோடு ஒப்பிடுகின்ற பொழுதிலும் விஷ்ணுவென்று உபுல்வனை அவை அடையாளப்படுத்தவில்லை. எனவே நாய்மணைச் சாசனம் குறிப்பிடும் தேவராஜ(ர்) உபுல்வனாதல் வேண்டும். உபுல்வனை உத்பலவர்ண (ன்) என்று குறிப்பிடுவது வழக்கம். மகாவம்சமும் சில சிங்கள மொழிச் சாசனங்களும் உபுல்வனை “உத்பலவர்ண' என்று வர்ணிக்கின்றன. இலங்கையிலே பெளத்த சமய மரபிற் காவற்றெப்வங்கள் (தெவிரஜ்ஜாருவன்) நால்வரைப் பற்றிப் பேசப்படுகின்றது.
அவர்களின் முதன்மையானவர் உபுல்வன். குமாரக் கடவுள், விபீஷணன், சமன் ஆகி யோரின் தலைமைத் தானங்கள் முறையே கதிர்காமம், களனி, இரத்தினபுரி ஆகியவற்றில் அமைந்திருப்பதைப் போலத் தேவநகரம் உத்பலவர்ணனின் பிரதானமான கோயில் அமைந்திருந்த தலமாகும்.
தேவராஜாலய(ம்) பற்றி மகாவம்சம் ஈரிடங்களிற் குறிப்பிடுகின்றது. நாய்மணைக் கல் வெட்டுக் குறிக்கும் சத்திரம் அதன் வளாகத்தில் அமைந்த ஒன்றாகும். அதனை தேவராஸ்ய சத்தர என்று சாசனத்தின் சமஸ்கிருதப் பகுதியிலும் இராசாக்கள் திருச்சன்னதி என்று அதன் தமிழ்ப் பகுதியிலும் குறிப்பிட்டுள்ளனர். பெரு மரியாதைக்கு உரியவர்களை அவர்கள் என்றும் சொல்வதைப்போல காவற்றெப்வங்களான தேவராசர்களின் (தெவிரஜ்ஜாருவன்) முதல்வனான உபுல்வனைச் சாசனத்திலே இராசாக்கள் என்று பன்மையிற் குறிப்பிட்டுள்ளனர். எனவே இராசாக்கள் சன்னதியில் நிசதம் நடக்கிற சத்திரம்' என்பது உபுல்வன் கோயிலின் சுற்றாடலில் அமைந்திருந்த தர்மசாலை ஒன்றினையே குறிக்கும். இராசாக்கள் சன்னதி என்பது விஷ்ணு கோயிலாகக் கொள்ளக் கூடியதன்று. இராாசாக்கள் என்பது விஷ்ணுவுக்குரிய அடைமொழியுமன்று.
பிராமணர்கள் எவ்வாறு பெளத்த நிறுவனமான உபுல்வன் கோயிலுடன் தொடர்புபட்டனர்? என்ற வினா இயல்பாகவே தோன்றும் காவற்றெப்வங்களுக்கான கோயில்களில் வழிபாடுகள் இந்துக் கோயில்களில் உள்ளவாறே நடைபெற்றன. நிவேதனம், ஆடல் பாடல் முதலான உபசாரங்கள் எல்லாம் அங்கு நடைபெற்றன. பெளத்த சங்கத்தாருக்கும் தேவாலே நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை. தேவாலேக்களில் வழிபாடு இந்து சமய மயமாகிவிட்டது. அவற்றிலே பூசகர்களாக கோட்டே இராசதானிக் காலத்திற் பிராமணரையும் நியமித்தனர். CTI, Part II, Pp 56 -57 Culavamsa Part II Translated by Wilhelm Geiger and from The German into English by Mrs. C. Mabel Rickmers, The Ceylon Government Information Department, Colombo 1953,85:85一89;f3

Page 34
ព្រោ 34 = } Ê
கடவுள் தனது சாயலில் ஆதாமைப்
MICHAEL ANGELVS BONARIOTVS PATRTIVS FLORENTINVS AN AGENS LXXI I
QyAN'rv'M IN NArvRA ARS NATvRAGRyE Possrr IN ARTE HIC QVI NATVRAE. PAR FV'r ARTE DOCET”
M D XLV I
FYLKE
 
 
 
 

த்திச் செல்லும் ந்சலோவின் டைப்புகள்
லைஞர்களில் சிலர் ஒவியர்களாக இருப்பார்கள்; சிலர்
சிற்பிகளாக திகழ்வார்கள். ஆனால் ஒவியம், சிற்பம், கட்டிடக்கலை, கவிதை என நுண்கலைகளில் தலைசிறந்தவராக திகழ்ந்தார் மைக்கல் அஞ்சலோ. அவருடைய ஆற்றல்களும் கலைத்திறன் முதிர்ச்சியும் அவருடைய கலையாக்கங்களின் மூலம் துல்லியமாக வெளிப்படுகின்றன.
மைக்கல் அஞ்சலோவின் 88 வருட கால நீண்ட உலக வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது நுணுகிய, அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவைகள் - மூலம் 16ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் என்ற பெருமையையும் பெற்றுக் கொள்கின்றார். மைக்கல் அஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புக்களான பியேட்டோ, டேவிட் ஆகிய சிற் பங்கள் 16 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டன. மைக்கல் அஞ்சலோ 23 வயதாக இருக்கும்போது செதுக்கிய பியேட்டோ சிலை ஆறு அடி
உயரமானது.
கடவுள் உலகத்தைப் படைத்தார் இத்துடன் ஒவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய, உலகம் உள்ள வரை போற்றித்

Page 35
துதிக்கப்படும் இரண்டு ஒவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை உரோம் நகரிலுள்ள சிஸ்டைன் சப்பலின் விதானத்திலும், வழிபாட்டு மேடைக்குப் பின்னுள்ள சுவரிலும் வரையப்பட்டுள்ளன. 12,000 சதுர அடிகள் விஸ்தீரணமான சுவர் மற்றும் விதானங்களில் நோவாவின் படைப்புகள் என்ற தலைப்பில் 175 வெவ்வேறு வகையான ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றில் கடவுள் ஆதாமைப் படைத்தல், ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தல், பாம்பு ரூபத்தில் வரும் சாத்தானின் தூண்டுதலின் விளைவாக தடை செய்யப்பட்ட கனியை ஆதாமும் ஏவாழும் புசித்தல், 12 சீடர்களுடன் இயேசு உணவருந்தும் இறுதி இராப் போசனம், இறுதித் தீர்ப்பு உட்பட வேதாகமத்தில் உள்ள 300க்கும் அதிகமான பாத்திரங்களுக்கு உருக்கொடுத்து, உயிரூட்டி, வர்ணங்களினூடாக உலாவரவிட்டுள்ளார். இத்தகைய பிரமிப்பூட்டும் உயிர் ஒவியங்களை இறை கடாட்சம் பெற்ற ஒரு கலைஞனால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதில் ஐயமில்லை. இந்த ஒவியங்களைக் கண்டுகளிப்பதற்காக உரோம் நகரத்திற்கு வருட த்திற்கு g-TTgrful IIT-5 பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகைதந்து கண்டுவிதந்து செல்கின்றார்கள்.
பியேட்டா என்பது தாயும் சேயும்
வத்திக்கான் நகரில் புனித பேதுரு பசிலிக்காவில் பார்வைக்கும் வணக்கத்திற்கும் வைக்கப்பட்டுள்ள மைக்கல் அஞ்சலோவினால் செதுக்கப்பட்ட மிகப் பிரபலாமன சிலைகளில் ஒன்றுதான் பியேட்டா. கோவிலின் உள்ளே காலெடுத்து வைத்ததும் வலது புறமாக உள்ள முதல் பீடத்தில் இச்சிலை உள்ளது.
பியேட்டா என்பது தாயும் சேயும் என்பதாக பொருள்படும். இச்சிலை சிலுவை மரணத்தை எதிர் கொண்ட இயேசுவை அன்னை மரியாள் தனது மடியில் வளர்த்தியிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை இரண்டு ஆண்டுகளில் (1498 - 1499) செதுக்கி முடிக்கப்பட்டுள்ளது. எண்ணிறந்த ஒவியங்களையும் சிலைகளையும் செதுக்கிய மைக்கல் அஞ்சலோ இந்த ஒரு சிலையில் மட்டுமே தமது பெயரைப் பொறித்துள்ளார். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு உண்டு.
இச்சிலை பெட்ரோனில்லா சிறு கோவிலில் நிறுவப்பட்டதும் பார்வையாளர்கள் அதன் அழகைக் கண்டு வியந்து பேசிக்கொண்டனர். அப்போது ஒருவர் இந்த அழகிய சிலையை கிறிஸ்தோபரோ ஜொலாரி அற்புதமாகச் செதுக்கியுள்ளார்' என்று கூறியது மைக்கல் அஞ்சலோவின் காதில் விழுந்து விட்டது. தாம் இரண்டு ஆண்டுகள் கடின முயற்சிசெய்து உழைத்து உருவாக்கிய சிலை மற்றொரு கலைஞரால் உருவாக்கப்பட்டதாகக் கூறியதைக் கேட்டு அவர் கடுஞ்சினமுற்றார். உடனேயே இரவோடு இரவாகச் சிலையருகே சென்று அதில் புளோரன்ஸ் நகரைச் சேர்ந்த மைக்கல் அஞ்சலோ போனோரோட்டி இதைச்


Page 36
செதுக்கினார் என்று இலத்தீனில் பொறித்துவைத்தார்.
தாயும் சேயும் சிலையின் வடிவம் பிரமிட்டின் அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணலாம். சிலையின் மேற்பகுதி பிரமிட்டின் உச்சிபோல் உள்ளது. அங்கிருந்து கீழே இறங்கி வரவர சிலை விரிந்து மரியாள் அணிந்திருக்கும் உடை, பின்னர் கொல்கொத்தா மலைப் பாறை என்று அகன்று முடிகிறது. சிலையின் பெரும்பகுதி அவர் அணிந்திருக்கும் போர்வை போன்ற உடையால் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள உறவு இயல்பான விதத்தில் வெளிப்படுகிறது.
மரியாளின் வலதுகை இயேசுவின் தோளுக்குக் கீழே அவரைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. மரியாள் அமர்ந்திருக்கும் பீடம் போன்ற பகுதி கல்வாரி மலையின் உச்சியைக் குறிக்கிறது. அம்மலையில்தான் இயேசு சிலுவையில் அறையுண்டு உயிர்துறந்தார்.
மைக்கல் அஞ்சலோ வடித்த சிலைகளில் பெயர் சொல்ல வைத்த இன்னொரு சிலையான மோசேஸ் சிலை. இச்சிலையின் தலையில் இரு கொம்புகள் உள்ளன. கடவுளைக் கண்டு அவரோடு உரையாடிவிட்டுத் திரும்பிய மோசேஸின் முகம் ஒளிவீசி மிளிர்ந்தது. ஒளிக்கதிர்கள் சிதறிப் பரந்தன. அக்காட்சியைக் கொம்புகள் வழி
பியேட்டா என்றழைக்கப்படும் தாயும் சேயும் சிலை
 
 
 
 

செதுக்கியுள்ளார் மைக்கல் அஞ்சலோ, மோசேஸ் சிலையைச் செதுக்கி முடித்த அவர் அதன் அழகையும் ஆற்றலையும் கண்டு வியந்த நிலையில் தம் கையிலிருந்த
சுத்தியலைச் சிலையின் வலது கால் தொடைப்பகுதியில் தட்டி, "பேசு!" என்று கூறியதாக அறியமுடிகின்றது. அந்தளவுக்கு உயிரோட்டத்துடன் இச்சிலை தோற்றம் அளிக்கின்றது. வலது கால் அருகில் இன்றும் தழும்பு உள்ளது.
அட்டைப்படக் கட்டுரை:
வே தா க ம த் தைத் தழுவிய கடவுளின் படைப் பு தத்துவத்தை விளக்கும்
ஓவியம். உரோம் நகரிலுள்ள சிஸ்டைன் Îo gl'ILi6Sleo மைக்கல் அ ஞ் ச லே ரா வி னா ல் வரையப்பட்ட ஒவியம் இது. கடவுள் தமது சாயலில் மனிதனை ( ஆதாம்) படைத்தார் என்பதையும் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தார் என்பதையும் விளக்குகின்றது.
வீரன் டேவிற்றின் சிற்பம்
குறிப்பாக மைக்கல் அஞ்சலோவினால் செதுக்கப்பட்ட டேவிட் சிற்பம் மிகப் பிரபல்யம் வாய்ந்ததும் கலையம்சம் பொருந்தியதுமாகும். இதனைப் படைப்பதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் எடுத்ததாக கூறப்படுகின்றது. மனித உடலில் புற அமைப்பை அழகுற, கலை நேர்த்தியுடன், உள்ளதை உள்ளபடியே செதுக்கியுள்ளார். டேவிற் சிற்பமானது, ஒரு வீரனின் ஆரோக்கியமான உடற் கூறுகளைக் கொண்ட வெற்றுடம்புடன் நிற்கின்ற மனித உருவமாகும். இச்சிற்பம் கையை மடித்து இடது தோளில் ஒட்டியும், வலது கை நீண்டு வலது காலில் உடைந்து விடாமல் இருக்க, சிற்பியின் திறமையில் உருவான சிற்பமாகும். ஒரு மனிதனின் உடலில் ஒளி நிழல் விழுவதுபோன்று அளவில் குறையாமலும், அதிகரிக்காமலும் ஒளி நிழல் விழுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
மைக்கல் அஞ்சலோவின் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் வளரும் கலைஞர்களுக்கு வழிகாட்டல்களாகவே அமைகின்றன.
மைக்கல் அஞ்சலோவின் தனிப்பட்ட வாழ்க்கை
மைக்கல் அஞ்சலோவின் தனிப்பட்ட வாழ்க்கை, சாதாரண உலகியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதாகவும் சொந்த பந்தம் உற்றார் உறவினர்களை விட்டுவிலகிய லது அது குறித்த நிம்பிக்கையீனப் போக்குகளையே அவதானிக்க முடிகின்றது.

Page 37
மைக்கல் அஞ்சலோ LQ- லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி மார்ச் மாதம் ஆறாம் திகதி 1475 ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள கொப்ரெஸ், தஸ்கனியிலுள்ள அரெஸ்சோ என்னுமிடத்தில் பிறந்தார். மைக்கல் அஞ்சலோ இவரது தந்தையார் லொடோவிகோ டி லியனார்டோ டி புவனரோட்டி டி சிமோனி ஒரு நீதிபதியாவர். இவரது தாய் பிரான்செஸ்கா டி நேரி டெல் மினியட்டோ டி சியேனா. புவனரோட்டி குடும்பம் தஸ்கனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வழிவந்தது. எனினும் மைக்கல் அஞ்சலோவின் காலத்தில் இக் குடும்பம் ஒரு முக்கியத்துவமற்ற பிரபுத்துவ குடும்பமாகவே கணிக்கப்பட்டது.
மைக்கல் அஞ்சலோவின் குழந்தைப் பருவமோ அல்லது இளமைப்பருவமோ ஏனைய குழந்தைகளைப் போல் ம கிழ்ச்சியூட்டும் பருவமாக அமையவில்லை. இவர் பிறந்த உடனேயே வளர்ப்பு தாதியிடம் ஒப்படைக்கப்பட்டார். பிறந்ததற்குப் பின்னர் இவர் பெற்றோர் வீட்டிற்கு இரண்டு முறை மட்டுமே சென்று வந்துள்ளார். இரண்டு வயதாக இருக்கும் போது தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து
En EEEEEEEE BEEEEEEEE| --
 
 

sssssssssssssssssæES sisääässä
அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டாவது முறையாக ஏழு
வயதாக இருக்கும்போது தாயின் மரணத்தையடுத்து சென்று
வந்திருந்தார்.
தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ
என்பவரிடம் ஒவியத்தையும், பெர்ட்டோல்டோவிடம் சிற்பத்தையும் பயின்றார். இவரது திறமையால் கவரப்பட்ட பயிற்சியாளரான டொமெனிக்கோ, இவரை அந்நகர ஆட்சியாளரிடம் சிபாரிசு செய்தார். 1489 இல் தனது பயிற்சித் தலத்திலிருந்து விலகிய மைக்கல் அஞ்சலோ 1490இலிருந்து 1492 வரை முக்கியஸ்தர்களின் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் படித்தார். இக்காலத்தில் பிரபலமானவர்களைச் சந்தித்து தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார். அவர்கள் மூலம் இவரது கலை பற்றிய
எண்ணங்கள் மாற்றம் பெற்றதுடன், விரிவாக்கமும்
பெற்றது. இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் ரோமிலுள்ள சென் பீட்டர்ஸ் பசிலிக்காவின் குவிமாடத்தை வடிவமைத்தார். பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி 1564 ஆண்டு இயற்கை எய்தினார். து
- பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்

Page 38
ក្រុញយ៉ាម៉ា 38 நினைவுத்திரை
நடிப்புத்திறனையும் ெ பி. ஏ. வ
ர்நாடக இசையை இளம் வயதிலிருந்தே ஒழுங்கு முறையாகத் தகுந்த ஒர் இசையாசிரியரிடம் கற்றும், மற்றும் குருவிடமிருந்து எவ்வித கற்றல் அனுபவமும் பெறாமல் இயற்கைக்குரிய இனிய சாரீரத்தால் இளமையிலிருந்தே இசையைக் கேள்விச் செவியால் மட்டும் பருகி, அதன் நுட்பங்களையெல்லாம் விளங்கி உள் வாங்கிக் கொண்டும், பரம்பரை அதற்குப் பொருத்தமான சூழலைத்தர நிமிர்ந்தால் எழுந்தால் விழுந்தாலும் கூட இசைப்புலியின் மீதே ஒட்டுதல் என்ற நெருங்கிய ஒட்டுற வாலும் இசையை வளப்படுத்தி, வளர்த்தெடுத்து தம் அரும்பெரும் இசைத் திறமையால் திரையுலகைக் கட்டிப் போட்ட இசை விற்பன்னர்கள் பலர்.
அவர்களில் பலர் ஆண் பெண் என்ற பாகுபாடு காண இடமின்றி ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் தமது முயற்சியாலும் கடும் உழைப்பாலும் இசையின் பல நுட்பங்களைத் தொட்டு மெருகேற்றிப் பெரும் புகழீட்டியுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தளவில் என்ன தான் பெண்கள் அடக்கியொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாலும் கூட, இசையின் இனிய பாதிப்பு அவர்களுடைய இருள் களைய பெரிதும் உதவியுள்ளது
என்று கூடக் குறிப்பிடலாம்.
 

வளிப்படுத்திய பாடகி பரியநாயகி
இசையின் ஆரம்ப நாட்களிலே நடிகர்களாக வேடம் பூணுவோர் தாமாகவே பாடி நடிக்கும் முறைமையே பெரிதும் கையாளப்பட்டது. தொழில் நுட்பம் வளர்ந்த பிற் காலங்களில்தான் நல்ல தோற்றப் பொலிவும் அழகும் நிறைந்தவர்கள் பாடக்கூடிய குரல்வளமோ இசைத்தேர்ச்சியோ அற்றவர்களாயிருந்தாலும் அவர்கள் பாடுவதுபோலப் பாவனை செய்யவும், பின்னணியிலிருந்து நல்ல இசை வளமும் பாடும் திறமைமிக்கவரும் பாடி இக் காட்சியை அழகு மிளிர நிறைவு செய்வார். இப்படித் திரை மறைவிலிருந்து பாடுபவர்களைப் பின்னணிப் பாடகர் என அழைப்பர். நீண்ட காலம் தமது இனிய குரல் வளத்தாலும் பாடும் திறமையாலும் பின்னணிப் பாடகியாக விளங்கியவர் பி.ஏ. பெரியநாயகி. நாற்பது, ஐம்பதுகளிலேயே பி.ஏ.பெரியநாயகி கொடி கட்டிப்பறந்த காலமென்பதால் இன்றைய இளம் ரசிகர்கள் அறியாமலிருக்கவும் கூடும்.
இசையில் வல்லமை மிக்கோர் தமது குரலையும் நிகழ்ச்சிகளையும் வளம்படுத்தவும், பயிற்சிபெறவும், ஏனையோர் சுவைத்து ரசிக்கவும் கூடிய வகையில் ஆலயங்களின் முன்றலிலோ அல்லது சங்கீத சபாக்கள் மண்டபங்களிலோ மேடைக்கச்சேரி பண்ணியே பலரின் விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும் பெறுவர். ஆனால் பெரியநாயகியைப் பொறுத்தளவில் இவருக்கு ஒரு அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. அதாவது அன்றைய கால கட்டத்தில் பெரும் புகழும் பிரபலமுமிக்க ஏவிஎம் என்ற நிறுவனம் இவரை மேடைக்கச்சேரி செய்யுமாறு அழைத்தது. இம்மேடைக் கச்சேரி திறந்தவெளி அரங்கில் பொதுமக்கள் மத்தியில் தான் இடம்பெறுவதானாலும், இந் நிகழ்ச்சி ஒரு திரைப்படத்தில் அதாவது ஏவிஎம் தயாரிப்பில் ஏ.டி. கிருஷ்ணசாமி என்பவர் இயக்குநராக இருந்து எடுத்த சபாபதி என்ற திரைப்படத்திற்கான காட்சியாகப் படம்பிடிக்கப்பட்டது.
'சபாபதி என்ற படத்திலே ஒரு இசைக் கலைஞராகப் பாத்திரமேற்றுப் பெரியநாயகி பாடுகிறார். இவருடைய இன்றைய பாடலின் இனிமையில் சொக்கிய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து பாராட்டினர். நேரடியாகவே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஏ.வி. மெய்யப்பன் செட்டியாரும் பெரியநாயகியின் இனிய கானத்தால் கிறங்கிப்போய் மனம் மிக மகிழ்ந்து ஒரே ஒரு பாடலையே ஒளிப்பதிவு செய்வதற்குப் பதிலாக இரண்டு பாடல்கள் பாடவாய்ப்புக் கொடுத்ததும் எல்லோரும் மிகுந்த ஆனந்தமடைந்தனர். அன்றிலிருந்து பெரியநாயகியின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பிரமாதமாகப் பேசப்பட்டுப் பெரும் கீர்த்தி எங்கும் பரவியது. தமிழகம் முழுவதும் பெரியநாயகியின் பெயர் பெரிய பாடகியெனவே ஒலிக்கப்பட்டது. இதனைச் சீக்கிரம் தனக்கு நம்ப முடியாதளவில் புகழ் பரவுமெனக்

Page 39
கொஞ்சமும் எதிர்பாராதிருந்த இந்தப் பெரிய பாடகி மென் மேலும் தன் இசையிலும் பாடல்களிலும் மெருகூட்டி மக்களின் ரசனைக்கு விருந்து படைத்தார். பெரிய பாடகியான பெரிய நாயகிக்கும் நமது இலங்கைக்கும் சிறு தொடர்பு இருந்தது எனவும் அறிய முடிகின்றது. தமிழ் நாட்டில் பண்ருட்டிக்குப் பக்கத்தேயுள்ள திருவதிகை என்ற ஊரைச் சேர்ந்தவர் இவரது தாயாரான ஆதிலட்சுமி அம்மாள். ஆதிலட்சுமி அம்மாள் கர்நாடக சங்கீதத்தில் மிகவும் திறமை வாய்ந்த பாடகி. இவர் தம் நாட்டிற்கு அயலிலேயுள்ள எமது நாட்டிற்கு வந்து தமது இசை மழையைப் பொழிந்து பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விட்டார்.
அக்காலகட்டத்திலே நமது நாட்டிலும் இசையென்றாலோ, நடனமென்றாலோ, வாத்தியங்கள் என்றாலோ, சின்ன மேளம், பெரிய மேளம் என்றாலோ, நூல்களென்றாலோ, சொற்பொழிவாளர் என்றாலோ என்ன நிகழ்ச்சியாயிருந்தாலும் எல்லாமே தமிழ்நாடு, தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது என்ற போக்கே மிகுந்திருந்தது. தமிழ் நாடு ஏதோ தாய்போலவும் நாம் அதன் குழந்தைகளாக நம்மைப் பாவனை செய்துகொண்டு எதற்கும் தமிழ் நாட்டையே எதிர்பார்த்திருந்தோம். அத்தகையவரில் ஒருவராகவே இருந்த ஆதிலட்சுமி அம்மாள், நம் நாட்டில் நல்ல புகழும் வாழ்க்கைக்குப் போதிய வருவாயும் கிடைக்கத் தன் மூன்று குழந்தைகளுடனும் இங்கேயே நங்கூரமிட்டு விட்டார். அம்மாளின் மூத்த மகனின் பெயர் பாலசுப்பிரமணியன். இரண்டாவதும் மூன்றாவதும் பெண் குழந்தைகள். ராஜாமணி என்ற இரண்டாவது குழந்தையின் தங்கைதான் மூன்றாவதும் கடைக்குட்டியுமான பெரியநாயகி. பெரியநாயகி பிறந்த ஆண்டு 1927
இம்மூன்று குழந்தைகளோடும் இலங்கையிலே சில வருடங்கள் தங்கியிருந்த ஆதிலட்சுமி அம்மாள் குழந்தைகள் வளரவும் உடல் நலிவுற்றார். அத்தோடு இசையில் பெரும் வித்துவம் நிறைந்த தன்னைப் போல இரு பெண் குழந்தைகளையும் இசைத்துறையில் பெரும் வித்தகிகளாக்க வேண்டுமென்பதே அவரின் பெரும் கனவாக இருந்தது. அதற்கான சூழல் இலங்கையில் இல்லையென்பதைக் கருதி, இசைக்கு இயைந்த இடம் சென்னை தான் என்ற முடிவுடன், அவர் குழந்தைகள் மூவரையும் அழைத்துக் கொண்டு திருவல்லிக்கேணியிலே குடியேறினார். இயல்பாகவே பெரியநாயகிக்கு இறைவன் இனிய காந்தர்வக் குரலைக் கொடுத்தே இருந்தார். அதே வேளை அக்காள் ராஜாமணியின் குரல்வளத்தைப் பெரிதாகக் கூறமுடியாவிட்டாலும், அவள் அழகு தேவதையாகக் கண்ணைப் பறிக்கும் கவர்ச்சிக் கன்னியாக வளர்ந்தாள். என்றாலும் தாயார் இரு பெண் குழந்தைகளையும் அதிகாலை நாலு மணிக்கே நித்திரை விட்டெழும்பப்பண்ணி அகார, உகார சாதகங்களை எல்லாம் செய்யப் பயிற்சி கொடுத்தாள். தன்னைப் போல தன் குழந்தைகளும் இசையில் பிரகாசிக்கவும் எதிர்கால

茎 கலைக்கேசரி 39
வாழ்வுக்கு உதவக்கூடிய முறையில் தானே குருவாக இருந்து இசையைப் பயிற்றுவித்தார்.
அக்காளை விட பெரியநாயகியின் குரல் வளம் பலரையும் கவர்ந்தது. எல்லோரது பாராட்டுகளுக்கும் ஆளான பெரியநாயகியை மேற்கொண்டு இசை கற்க மா பெரும் இசைமேதையெனப் பெரும் புகழ் வாய்ந்த இசைப் பேரறிஞர் பத்தமடை சுந்தரம் ஐயரிடம் ஒப்படைத்து விட்டார். இந்த வேளையிலே தான் திரைப்படத் துறையில் இருந்தும் சகோதரிகள் இருவருக்குமே அழைப்புகள் குவிந்த வண்ணமேயிருந்தன. ராஜாமணி அழகு தாரகை என்பதால் 1938ஆம் ஆண்டில் பூகைலாஸ்’ என்ற படத்திலும் பின்னர் 1941 இல் 'பக்தகெளரி என்ற படத்திலும் சிறு சிறு பாத்திரங்களில் தோன்றி அக்கால முறைமைக்கேற்பத் தனது சொந்தக் குரலிலே பாடியும் நடித்துள்ளளார். டி.ஆர். மகாலிங்கத்துக்குப் பெரும் புகழை ஈட்டிக்கொடுத்த பூரீ வள்ளி படத்தில் கதாநாயகி ருக்மணி. அன்றைய நாட்களில் நடிக்கும் போதே நடிகர்கள் பாடிக் கொண்டு நடிப்பது என்ற ஒழுங்கில் டி.ஆர். மகாலிங்கத்தின்
காலத்தால் அழியாத சிறந்த பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ள பெரியபாடகி பி. ஏ. பெரியநாயகி ருக்மாங்கதன் என்ற படத்தில் நாரதராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பாட்டிற்குப் பொருத்தமான நடிகையின் பாடல் அமையாது போகவே ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் முகத்தைச் சுழித்துக்கொண்டார்.
முந்திய 'சபாபதி பட ஞாபகம் வரவும் அவர் உடனே இந்நடிகை பாடும் இடத்திற்குப் பெரியநாயகியைப் பாடப் போட்டு பூரீவள்ளியை வெற்றிப்படமாக வெளிக் கொணர்ந்தார். இந்நிகழ்வோடும் பெரியநாயகியின் இசைத் திறமை புகழ் ஏணியின் உச்சியைத் தொட்டது. அதனால் பெருந்தொகையான படங்களின் பாடவும் நடிக்கவும் கூட வாய்ப்புகள் கிட்டின. பலதை இவர் மறந்து விட்டாலும் 1946 இல் வெளியான 'ருக்மாங்கதன்’ என்ற படத்தில் நாரதரின் பாகமேற்றுச் சிறப்பாகப் பாடி நடித்தார். அதனால் இவரும் இவர் பாடிய பாடல்களும் மிகவும் பிரபலமாகிப் பலரையும் வியந்து பேச வைத்தது. ஏழைபடும் பாடு, வனசுந்தரி, காஞ்சனாவின் கனவு, பொன்னி, டாக்டர் சாவித்திரி, கோமதியின் காதலன், கூண்டுக்கிளி, மலைக்கள்ளன், மருமகள் எனப் பல படங்களில் பின்னணிப் பாடல்களைப்பாடிப் பெரும் புகழ்பெற்ற இவரைப் பற்றிய விபரமான சரியான தகவல்கள் எதுவும் திரையிசையோடு சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்க வில்லை என்ற குறையும் இருப்பதாக அறியக் கிடைக்கின்றது.
தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிச் சிறிதும் சிந்திக்காமலிருந்து அவர் 1990இல் இவ்வுலகை நீத்தார். இவரது இசைத் தட்டுப் பாடல்ஞம் திரையிசைப் பாடல்களும் இவரை ஞாபகப்படுத்துமென்பதில் ஐயமில்லை. త్ర பத்மா சோமகாந்தன்

Page 40
តែពាក្យអុំ ៖ 40 சுற்றுலா
தாய்லாந்தின் பாதுகா: மரகதப் பச்சை நி
Π ய்லாந்தின் மிகப் புனிதமான பெளத்த த ஆலயமாகப் போற்றப்படுவது மரகதப் பச்சை நிற புத்தர் பெருமான் ஆலயமாகும். (EMERALD BUDDHA) தாய்லாந்து மொழியில் இந்த ஆலயம் தெ வற்ப்ரா கியூ (TE WAT FHRAKAEW) என அழைக்கப்படும். தாய்லாந்தின் சக்தி வாய்ந்த சமய, அரசியல், சின்னமாகக் கருதப்படும் இவ்வாலயம் பாங்கொக் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மத்திய பகுதியில் (ப்ரா நகொன் மாவட்டத்தில்) மாபெரும் மாளிகை (GRAND PALACE) அமைந்திருக்கும் இடத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கிறது.
பிரதான கட்டிடத்தில் மரகதப் பச்சை நிற புத்தரின் உருவச்சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த உருவச் சிலையின் வரலாறு முக்கியத்துவமானது. இந்தியாவில் கெளதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு பின் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது.
இச்சிலை இந்தியாவில் உருவாக்கப்பட்டதாக இதிகாச கதைகள் கூறினாலும் வரலாற்றுக் குறிப்புகளின்படி, 15ஆம் நூற்றாண்டில், இப்புத்தர் பெருமான் சிலை கம்போடியாவில் காணப்பட்டது. பின்னர் 16ஆம் நூற்றாண்டில் லாவோஸ் நகருக்கு நகர்ந்து பின்னர் வியன்ரியன் (Vientiane) நகருக்கு கொண்டுசெல்லப்பட்டது. கி.மு. 150 ஆண்டில் வாழ்ந்த பிராமணரும், பின்னர் பெளத்த துறவியாக மாறியவருமான நாகசேன என்பவர்,
 

வலராக துதிக்கப்பெறும் ற புத்தர்பெருமான்
இத்திருவுருவச் சிலையின் நீண்ட வரலாற்றையும் மகிமையையும் பற்றிக் குறிப்பிடுகையில், இச்சிலை எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாட்டிற்கு வளமும், முக்கியத்துவமும் கிடைக்கும் எனக் கூறியிருந்தார்.
மற்றுமொரு மரபுக்கதை, இந்தியாவில் வாழ்ந்த நாகசேன என்னும் துறவி இந்துக் கடவுளான விஷ்ணு மற்றும் தேவர்களின் அதிபதியான இந்திரன் ஆகிய தெய்வங்களின் அருளினால் புத்தர் பரிநிர்வாணம் எய்தி 500 ஆண்டுகளுக்குப் பின் மரகதக் கல்லால் ஆன புத்தர் சிலையை செய்வித்தார் எனக் கூறுகிறது. இந்த மகரதப் பச்சை நிற புத்தர் சிலையானது லங்காதுவீப (பூரீலங்கா) ராமலக்கா, துவரவதி, சியங் மய் மற்றும் லான் சாங் (லாவோஸ்) ஆகிய 5 நாடுகளில், பெளத்த மதத்துக்கு மிக சிறந்த இடத்தை வழங்கும் என ஆரூடம் கூறியிருந்தார்.
வற் ப்றா கியூவின் வரலாற்றுக் குறிப்பின்படி 'வற் பாயியா (மூங்கில் காடு பர்ணசாலை) என்பது அதன் பூர்வாங்கப் பெயராகும். வட தாய்லாந்தில் சியங்ராய் மாகாணத்தில் இவ்வாலயம் உள்ளது.
1434ஆம் ஆண்டில், வற் மீது ஒரு மின்னல் தாக்கிய வேளை எண்கோண மண்டபம் உடைந்து விழுந்தபோது பச்சைக் கல்லினால் (Jade) செய்யப்பட்ட புத்தர்சிலை இருக்கக் காணப்பட்டது. பின்னர் அங்கிருந்து வியன்ரைனுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக
பாங்கொக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு

Page 41
வைக்கப்பட்டது. மற்றுமொரு மரபுக்கதை பின்கண்டவாறு கூறுகிறது: அதாவது இப்புத்தர் பெருமான் சிலையை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்பிய சியாங் மய் என்ற அரசன் (1434இல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்) மூன்று முறை அதனை தனது இடத்துக்கு எடுத்துச்செல்ல முயற்சி செய்த போதும் ஒவ்வொரு முறையும் அச்சிலையைச் சுமந்து சென்ற யானைகள் லாம்பேர்க்கில் ஒரு குறுக்கு வீதிக்கு மேலே செல்ல மறுத்து விட்டதாம். இது கடவுள் சித்தம் என்பதை உணர்ந்த அரசன் லம்பாங்கிலேயே இருக்க அனுமதித்து விட்டான். விசேடமாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் இத்திருவுருவச் சிலை அடுத்த 32 வருடங்கள் இருந்தது.
கம்போடியாவுடனும் இச்சிலை சம்பந்தப்பட்டு இருக்கின்றது. பர்மியர்கள் கம்போடியாவை ஆக்கிரமித்து, அயோத்யா நகரைத் தாக்கிய வேளை இச்சிலை காணாமல் போய்விட்டது என அஞ்சப்பட்டது. நாகசேன துறவியின் மற்றுமொரு புராணக் கதையின்படி, 300 வருடங்கள் பாடலிபுத்ரவில் (தற்போதைய பட்னா) இச்சிலை இருந்த பின் உள்ளூரின் ஏற்பட்ட யுத்தத்தில் இருந்து இச்சிலையைக் காப்பாற்றும் பொருட்டு பூரீலங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பர்மாவின் அரசனான அனுருத் என்பவன், தனது நாட்டில் பெளத்த மதத்தைப் பரப்பும் பொருட்டு, பெளத்த எழுத்துச் சுவடிகளையும் மகரதப் பச்சை புத்தர் சிலையையும் தனக்கு அனுப்புமாறு வேண்டினான்.
இவ்வேண்டுகோள் ஏற்கப்பட்டு கப்பலின் அச்சிலை அனுப்பப்பட்டது. ஆனால் கடலில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சிலை கம்போடியாவிற்குப் போய்ச் சேர்ந்தது.
6YE
1432ஆம் ஆண்டு, தாய்லாந்துக்காரர்கள் அங்கர் வற்றைக்
ខ្ញុំs
 

& கலைக்கேசரி 41
கைப்பற்றியபோது, மரகத பச்சைவர்ண புத்தர் சிலை பின்னர் அயோத்தியா மற்றும் சில இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதியாக சியாங் ராய்க்குக் கொண்டு செல்லப்பட்டது. கி.பி. 1782 ஆம் ஆண்டு, தாய்லாந்தில் முதலாவது ராமாவின் ஆட்சியின்போது, பாங்கொக் நகரில் வற்ப்றா கியுவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1782 முதல் 1809 வரை தாய்லாந்தை ஆண்ட மன்னனே முதலாவது ராமாவாகும். இது சக்ரி அரச வம்சத்தின் ஆரம்பத்தையும் எழுச்சியையும் குறிப்பதாக உள்ளது. (தற்போது 10ஆவது ராமாவின் ஆட்சி நிலவுகின்றது.)
இப்புத்தர் சிலை 66 சென்ரி மீட்டர் உயரம் கொண்டது. தனிப் பச்சை கல்லினால் செய்யப்பட்டது. தியானம் செய்யும் தோற்றத்தில் உள்ள இச்சிலை வடக்கு தாய்லாந்து லன்னா (Lanna) பாணியில் செய்யப்பட்டுள்ளது.
தாய் மன்னரைத் தவிர வேறு யாரும் இச்சிலையைத் தொடமுடியாது. வருடத்தில் மூன்று தடவை, கோடை, குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தின்போது இச்சிலையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஆடை அணிகளை மன்னர் தான் மிகவும் பயபக்தியாக பிரார்த்தனைப் பாடல்களை பாடிய வண்ணம் கழற்றி எடுத்துவிட்டு புதிய ஆடைகளை
l
Ääę
蠱

Page 42
550505ចំប៉ារី 墓 42
அணிவிப்பார். அந்த ஆடை அணிகள் குறிப்பிட்ட அந்த பருவ காலத்துக்கு ஏற்ப தெரிவு செய்யப்படுகின்றன. அந்நிகழ்ச்சியின்போது அங்கு சமூகமளித்திருக்கும் துறவிகள் மற்றும் மக்கள் மீது தண்ணிர் தெளித்து நாட்டு நலனுக்கு புத்தர் பெருமானை வழிபட கோரிநிற்பர். ஆடைகளை அணிந்து பின்னர் மன்னரின் சமூகத்தில் உதவியாளரால் மேற்கொள்ளப்பட்டது.
பச்சைநிற புத்தர் பெருமான் தமது நாட்டின் பாதுகாவலர் என தாய்லாந்து பெளத்த மக்கள் ஏற்றிப் போற்றுகின்றனர்.
மன்னர் முதலாவது ராமா தனது புதிய தலைநகரை அமைக்கும் போது, இப்புத்தர் பெருமானுக்கெனப் புதிய ஆலயத்தையும் கட்டுவித்தான். தனித்துவமான இவ்வாலயம் புதிய கட்டிடங்கள் சிலைகள், பகோடாக்கள் ஆகியவற்றினை உள்ளடக்கியதாக பெருமை பெறுகிறது. மாபெரும் மாளிகை எல்லைக்குள் அமைந்த அப்புனித ஆலயப் பகுதியில் 94.5 ஹெக்டயர் நிலப்பரப்பில் 100 கட்டிடங்கள் உள்ளன. இவற்றுடன் 200 வருட அரச வரலாறும் கட்டிடக்கலைப் பரிசோதனை முயற்சிகளும் இணைத்து இருக்கின்றன. இக்கட்டிடக் கலைப் பாணி
 

பழைய பாங்கொக் பாணியில் அமைந்ததாகும். பச்சை நிற புத்தரின் பிரதான ஆலயம் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பழைய அயோத்ய சூகர் கோவிலை ஒத்திருக்கிறது.
கூரைக்கு மினுக்கப்பட்ட ஆரஞ்சு மற்றும் பச்சை ஒடுகள் வேயப்பட்டுள்ளன. அத்துடன் பல வர்ணங்களிலான தூண்களும் உள்ளன. பலகைகளின் வேலைப்பாடுகள் பளிங்குக் கற்களினால் செய்யப்பட்டுள்ளன.
பச்சைக் கல் புத்தர் சிலை, பெரிய தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்களினால் சூழப்பெற்ற உயர்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் மேல்பகுதி மூலக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக விளங்க, அடிப்பகுதி மூன்றாவது ராமாவினால் கட்டப்பட்டதாகும். தாய்லாந்தைப் பொறுத்தவரை 'எமரல்ட்' என்றால் கடும் பச்சை நிறம் என்பதே அர்த்தம். பச்சைக்கல் (EMERALD) அல்ல.
பிரதான உருவச்சிலைக்கு இருபக்கத்திலும் சக்ரி 9 Jay- வம்சத்தின் முதலிரண்டு அரசர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தர் சிலைகள்

Page 43
வைக்கப்பட்டுள்ளன. காலங்கள் கடந்தபோதும் ஆலயம் அதன் மூலமாதிரிகள் அப்படியே உள்ளன. இருப்பினும் முதலாவது ராமாவின் ஆட்சியின் போது அது முதலாவதாக ஏற்றி வைக்கப்பட்டபின் சிறு சிறு அபிவிருத்திகள் செய்யப்பட்டன. ஆலயத்தின் மரவேலைகள், மூன்றாவது ராமாவினாலும் மற்றும் சூலோங்கொம் மன்னராலும் மாற்றப்பட்டன.மொங்கட் மன்னனின் ஆட்சியின்போது அழகான கதவுகள், யன்னல்கள் பொருத்தப்பட்டதுடன் தளத்துக்கு தகடுகள் பொருத்தப்பட்டன. அத்துடன் பின்னர் வந்த மன்னர்களால், சுவர் ஓவியங்கள், புத்தர் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களைச் சித்திரிக்கும் கூரை ஒவியங்கள் ஆகியன சேர்க்கப்பட்டன. மொங்கட் மன்னரால் மேற்கு புறத்தில் மேலும் மூன்று அறைகள் கட்டப்பட்டன. 19ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற ஒவியரான இன்கொங் என்பவர் சுவர் சித்திரங்களை வரைந்தார். ஆலயத்துக்கு, நதிப் பக்கத்தில் இருந்து மூன்றாவது வாசலில் இருந்து பிரவேசிக்கலாம். வாசலில் ராட்சத ஜோடி சிங்கங்கள் காவலுக்கு நிற்கின்றன. புத்தர் சிலை நிற்கும் பீடம் அழகான கம்பீரமான கருடனால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றது.
இச்சுவர்ச் சித்திரங்கள் தாய்லாந்து மொழியில், தாய்லாந்து தேசிய காப்பியமான ராமாகியன் உருவாக வைத்துள்ளன. இது முதலாவது ராமாவின் ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது. (1782 - 1809) இந்த ஒவியங்கள் ஒழுங்காக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இராமாயணத்தின் முழுக் கதையும் 178 காட்சிகளில் மூலம் ஒவியத்தில் காட்டப்பட்டுள்ளன. நேர்மை, நம்பிக்கை, பக்தி ஆகிய மனித விழுமியங்களை இவை சித்திரிக்கின்றன. கோவிலைச் சுற்றி முதலாவது ராமாவினால் கட்டப்பட்ட 12 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் கம்போடியா மற்றும் ஜாவா போன்ற பிராந்தியங்களில் தொல்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பாங்கொக் காலகட்டத்தில் பச்சை வர்ண புத்தர் சிலையை வீதிகளில் ஊர்வலமாக, எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. வாந்திபேதி நோய் பரவாது. நாட்டைக் காப்பாற்ற இவ்விதம் செய்யப்பட்டது. ஆனால் நான்காவது ராமா ஆட்சிக்காலத்தில் ஊர்வலம் நிறுத்தப்பட்டது. உருவச்சிலைக்கு ஏதும் ஊறு நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்விதம் செய்யப்பட்டது.
மேலும், கோவிலைச் சுற்றியுள்ள பெரும்பாலான ஆலயங்களும் மண்டபங்களும் தமக்கேயுரிய செழுமை மிக்க வரலாறுகளுடன் நிமிர்ந்து நிற்கின்றன. புகழ்பெற்ற சக்ரி அரச வம்சத்து மன்னர்களின் அரும்பெரும் பொருட்களையும் இம்மண்டபங்களில் காண முடியும்,
Vత్ర
- காங்கா

ឆ្នា ܕܣܛܢ
43

Page 44

சீதாவாக்கை இராட்சியத்தில் சிறப்புடன் இருந்த சிவாலயம்
லங்கையின் மேற்குப் பிரதேசத்தில் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கோட்டை இராசதானி இருந்தமையும் அதேபோல் வடக்கில் யாழ்ப்பாண தமிழ் அரசு இருந்தமையும் வரலாறாகும். போர்த்துகேயரின் வருகையுடன் சுதேச அரசுகளின் வீழ்ச்சி ஆரம்பமானது. அதற்கு முதலில் பலியானது கோட்டை இராச்சியமாகும். கோட்டை இராச்சியத்தின் 9|Jay- குடும்பத்தினரிடையே நிலவிய அதிகாரப் போட்டியானது அந்நியரான போர்த்துக்கேயர் அங்கு கால்பதிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது. போர்த்துக்கேயரின் செல்வாக்கு கோட்டை 9 Jéf மட்டத்தில் மேலெழுந்தமையால் அரச குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட ஒரு காரணமாய் அமைந்தது.
கோட்டை இராச்சியம் மூன்றாக பிளவுபட்டது. ஏழாம் விஜயபாகு மன்னனின் மூன்று புதல்வர்கள் 1521இல் பிளவுபட்ட கோட்டை, சீதாவக்கை, றைகம ஆகிய மூன்று பிரதேசங்களை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.
கோட்டைக்கு ஏழாம் புவனேகுபாகுவும் சீதாவாக்கைக்கு

Page 45
மாயாதுன்னையும் றைகமவுக்கு மத்துமபண்டாரவும் அரசராகினர். இது 1521இல் இடம்பெற்றது. மத்தும பண்டாராவின் மறைவின் பின் றைகம சீதாவாக்கையுடன் இணைந்தது. இது அரசியல் வரலாறு.
இப்பகுதியில் இந்து சமயம் நிலைபெற்று சிறப்புடன் விளங்கியமைக்கும் தமிழர்கள் வளத்துடன் வாழ்ந்ததற்கும் சான்றுகள் பல உள்ளன. கோட்டை இராட்சியத்திற்கு உட்பட்டிருந்த, இன்று இரத்மலானை என குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த சிவாலயம் அதற்கோர் சான்று. ஆறாவது புவனேகுபாகு மன்னன் காலத்தில் அதாவது 1454இல் தொட்டக வே ராகுல தேரர் என்ற பிக்குவினால் எழுதப்பட்ட 'சலலிஹினிசந்தேசய’ என்ற சிங்கள காவிய நூலில் மேற்படி சிவாலயம் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது. சிவாலய வழிபாடுகள் தொடர்பாக தனது பாடலில் விளக்கியுள்ள தேரர் அவ்வாலயத்தில் 'மக்கள் விரும்பும் இனிமையான தமிழில் தோத்திரம் பாடு வார்கள்’ என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே சீத்தாவாக்கை இராட்சியத்திலும் இந்து சமயம் சிறப்புடன் விளங்கியமைக்கு சான்றுகள் பலவுள்ளன. இன்று உடைபாடடைந்த நிலையில் தொல்பொருட் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் மாயாதுன்னையின் மகனான முதலாம் இராஜசிங்கனால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயமுள்ளது.
அவிசாவளையிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் கரவனல்ல செல்லும் பாதைக்கண்மையில் குறிப்பிட்ட சிவாலயம் அமைந்துள்ளது. பிரண்டிக் கோவில் என்று இன்று குறிப்பிடப்படும் இச்சிவாலயம் மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டு இருந்தாகவும் பொலன்னறுவை சிவாலயத்தை ஒத்த முறையில் அதன் நிர்மாணம் அமைந்திருந்ததாகவும் இவ்வாலயம் தொடர்பாக சிங்கள மொழியில் வெளிவந்துள்ள பல நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.
மூலமூர்த்தியாக சிவன் இருக்க, விஷ்ணு, வைரவர், அம்மன் போன்ற தெய்வங்கள் அங்கு வழிபடப்பட்டதாக அந்நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபக்தனும் தமிழனுமான அறிஸ்டகிவண்டு என்ற சேனாதிபதி இவ்வாலய அமைப்புக்கு வழி கோலியதாகவும், அவன் முதலாம் இராஜசிங்கனின் மிக நம்பிக்கைக்குரிய சேனாதிபதியாக விளங்கியதாகவும் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இவ்வாலய சுவர்களில் இராம இராவண யுத்தக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
1571 முதல் 1581 வரை சீதாவாக்கையை ஆட்சிசெய்த முதலாம் இராஜசிங்கனால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தமையை அதன் இடிபாடுகளை நோக்கும்போது புலப்படுகின்றது. பரந்த நிலப்பகுதியில் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருந்த சிவாலயத்தை பின்னாளில் மதவெறியர்கள் சிதைத்து உள்ளனர் என்று தெரிய வருகின்றது.போர்த்துக்கேயரால்


Page 46
GET 560605 (656ff). DE
Please complete the form given below, along with your Chequ (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No1 Te:+94-11-5322700/5738046 Fax:+94-11-557773 For more details, please contact. Overseas Subscriptions Ar
Local Subscriptions S.
Online Polyment : www.koloaikesoari.com / Subos
ORDER FORM : Title
.First No ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
ថាបាបាហាំរ៉ៃរឺ
Manager Subscriptions Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, a. Street /
Lost No
Institutic
盟 Apartm
Σ Sri Lanka. 원 Town/C Tel : +94-11-5322783 / +94-11-5738046 Count Fax :--94-11-551 7773 ry E-mail : subscription(a)kalaikesari.com Amount
Cheque should be drawin in favour of Mode o
Express Newspapers (Ceylon) (Pvt) Limited Online
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீதாவாக்கை இராட்சியம் கைப்பற்றப்பட்ட போது இச்சிவாலயம் சிதைக்கப்பட்டிருக்கும் என நம்ப முடிகின்றது.
முதலாம் இராஜசிங்கன் காலத்தில் பலமுறை முயன்றும் போர்த்துக்கேயரால் சீதாவாக்கையைக் கைப்பற்ற முடியாது போனமையும் வரலாற்றுப் புகழ் பெற்ற முல்லேரியா யுத்தத்தில் இராஜசிங்கன் போர்த்துகேயரை படு தோல்வியடையச் செய்து ஒடச் செய்ததையும் அப்போரின் போது அரிஸ்டகிவண்டு என்ற இந்துத் தமிழனே சேனாதிபதியாக போரை நடத்தினாரென்றும் வரலாறு கூறுகின்றது.
தொல்பொருள் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சிவாலய சூழலில் ஆலய இடிபாட்டில் கோமுகி அழிவுபடாமல் உள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட இவ்வாலய கருங்கற் தூண்களும் அங்கு காணப்படுகின்றன. பிரண்டி கோயில், பத்தினியம்மன் ஆலயம், சீதைக்குகை எனப்படும் சீதாலென, சீதாவாக்கை ஆற்றங்கரையிலுள்ள இராமர் பாதம் ஆகியவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைப் பறைசாற்றி நிற்கின்றன. ஐரோப்பியரின் ஆளுமைக்கு உட்படு முன்னரே இந்து சமயம் நிலைபெற்று, வளம்பெற்று இருந்தமை வெளிப்படுகின்றது. அதேபோல் மறைந்து கிடக்கும் உண் மைகள் வெளிப்படும்போது பண்டைய பெருமையும் உலகிற்குத் தெரியவரும் என்பது - த. மனோகரன்
LIVERED TO YOUR OME
le/Money Order written in favour of "Express Newspapers 85, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
jun -on arjun (d)expressnewspapers.net/Mobile.--94 777 801034 Sandrasegar – +94 77 5359106 / +94 - 11 - 5322783
cription
: Mr. Mrs. / Miss Dr. Prof.
me .............. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
me .............. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ent/Other Nos ............................................................................................
Rodd . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ity/State ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
SS S S S S S S S S S S SL L SLL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLLSS S S S S S S S S SSSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Enclosed .......... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (12 / 6 issues) fpayment : Cheque / Money Order
Payment : www.kalaikesari.com/Subscription

Page 47
முகம் கழுத்து மற்றும் இ
முகம் கழுத்து மற்றும் இடுக்குகளில் தோன்றும் கருமைக்கு பிரசவத்தின் பின் அல்லது மிதமிஞ்சிய சதைகளால் ஏற்படும் சுருக்கங்களிற்கு பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகள் (ஆ
韓ミ翌豪 鲁 இருப மற்றும் எரிகாய தழும்புகளிற்கு மூ/கண் கீழ் கருவளையம்
இறக்குமதி செய்து விநியோகிப்போர்: ஹாகோட்ஸ் தனியார் நிறுவனம் 書(நாடுபுராகவும் உள்ள அனைத்து பார்மசிகளிலும் கிடைக்கும்) மொத்த விற்பனையாளர்கள்
வசந்தாஸ்,10, ருநீகதிரேசன் வீதி,கொழும்பு 13, 2393812 - செலீனா ெ - ராஜ் டிஸ்டிபியூட்டர்,115/1,பேராதெனிய வீதி,கண்டி,08122e3O46 - ஒபா அல்லது 971 பிரதான வீதி,பண்டாரவளை.0572225330 - ஹாகோட் 176 சென்றல் ரோட் திருகோணமலை O26 2222O72-ஜெகண் பாமசின்
ரோசரி,திகல்ல ரோட்.கெசல்வத்தபாணதுறை. O382299544
இலங்கையில் உள்ள
சிகிச்சை
DR.H
V Ca தலைமுடி உதிர்வதை 参考 Tari af as Quangdum 56)6(p19 உதிர்தல், 2007,6 LIGIÖT 6956 இலங்கை, இந்திய மருத்துவர்
No
Medicine Side effect
சிகிச்சைமுறையை யாழ் மக்களுக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தி சேவை வழங்குவதில் பெருமையடைகின்றோம்
# 26, Brown Road, |#1695, dafna Road, 'auja sel.04%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுக்குகளில் காணப்படும் தினை போக்கும்
ഖിഞ്ഞ 25o/- RANA
கமிஸ்ட்,18/1/1,உயன்வத்த கிரவுண்ட் வீதி,மாத்தை மா ஹோல்டிங்ஸ் கம்பனி, 489,குடுகல்வத்த இரத்தினபுரி04:52226033 ஸ் சுபர் டிரக்ஸ், அனுராதபுரம் 02:55670302 மகாலக்ஷ்மி ஸ்ரோர்ஸ் வைத்தியசாலை வீதி,யாழ்ப்பாணம்.0212222194-ஒஸ்மானியா பார்மசி
ா ஒரே ஒரு தலைமுடியியல் மையம் இதுவே
are (Pvt) R
க, பொடுகு, இளநரை, புளுவெட்டுf80lassபோன்ற பிரச்சினைகளுக்கு களின் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்றது.
Good Bye
Dr. Pimple
முகப்பருக்களுக்கு
International Skin Peeling's சிகிச்சை முறைமூலம் 端 நிரந்தரத்தீர்வு |\、一ノ
ana.021 222 (0288
21 azer Avenue, Dehwala el OAST4854

Page 48
ក្រែអ្វី ់ 48 thufluti
யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி = ஆய்வுக் கருத்தரங்கின் போது பனைவள ஆய்வாளர் வீ. ஜி. தங்கவேல் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட
ஆய்வுக்கட்டுரை.
 
 
 
 
 
 
 
 
 

வரலாற்றில் பனையின் சிறப்பும் பண்டைத் தமிழர் வாழ்வும்
ஆய்வுச்சுருக்கம்: இன்றைய நிலையில் பனையின் வகிபங்கு பனையின் பயன்பாடுகள் பனையின் புவியியல் அமைவிடங்கள் தொல்லியல் ஆய்வு விடயம் பனைக்கொடைச்சிறப்பு தமிழ் இலக்கியத்தில் பனை வளம் தொல்காப்பியமும் பனை வளமும் யாழ்ப்பாணமும் பனையும் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் ԺCLD5 பொருளாதார நடவடிக்கைகளில் பனை வளம்
பனையின் பெருமை இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறையியல், விபரிப்பு முறையியல், வரலாற்று முறையியல் போன்றவற்றின் துணையுடன் மேற்கொள்ளப்படுவதுடன் இவ் ஆய்வுக்கு தேவையான தரவுகள், ஆய்வுடன் சம்மந்தப்பட்ட நூல்கள், பத்திரிகைகள், கட்டுரைகள், சஞ்சிகைகள் போன்றவற்றின் ஊடாக பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.
சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு நம்மவரில் பெரும்பாலானோர் முகம் கொடுக்கும் வேளைகளில் இறைவன் அருளால் மண்ணின் மகிமையால் நம் முன்னோர் தவப் பயனால் நமக்கு கிடைத்த அரும்பெரும் சொத்துக்களால் மலைபோல் வரும் சோதனைகள் திணையளவாகச் சிறிதாகி வருவதையும், பனித்துளி போல் மறைவதையும் காணலாம். எமது எண்ணங்களில் ஏதாவது ஒரு வகையிலாவது நிலைத்து நிற்கும் நினைவைத் தருவது கற்பகதரு எனப் போற்றிப் புகழப்படும் பனை மரமாகும். பெருமைக்குரிய பனை பற்றிய சிறப்பும் பழந்தமிழர் வாழ்வுடன் இரண்டறக் அவர்களின் அகவாழ்வு நிலையிலும் புறவாழ்வு நிலையிலும் நெருக்கமான
கலந்த தன்மையினையும்
கொண்டமைந்த தன்மையினையும் பண்பாட்டுக்
கோலங்களையும் அறியக் கூடியதாகவுள்ளது.
இன்றைய நிலையில் முழுமையான அபிவிருத்தியினை அடையாத ஒன்றாகப் பனை வளம் காணப்படுகின்றது. பண்டைய பெருமையினையும் நீண்டகாலமாகப் பலரின்
அக்கறையற்ற தன்மையினாலே புறக்கணிக்கப்பட்ட
ஒன்றாகப் பனை வளம் காணப்படுகின்றது. அதன்

Page 49
வளர்ச்சியுடன் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள் எதுவும் 1970 ஆம் ஆண்டு வரை இலங்கையில் ஆரம்பிக்கப்படவில்லை. பனைவள உற்பத்திகள் இலங்கையில் வெகுவாகப் பிரசித்தமாகாத நிலையில் இருப்பதற்கு, பனைவளம் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தனியுரிமை வளமாகக் காணப்படுவதும், வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியதும், நீண்ட தூரத்தில் இருப்பதுமாகும். ஆயினும் பனை வளப் பயன்பாடு நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டு பொருளாதார ரீதியான தரம் உயர்வடையுமாயின் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் யாவும் தானாகவே நீங்கிப்போகும். பனம் பொருள் உற்பத்திகளின் பொருளாதார நலன்கள் மக்கள் நடைமுறையில் அனுபவிப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதன் மூலம் பனை வளத்தின் மேம்பாடு தமதத்தின் மத்தியில் உயர்வடைந்து செல்லும் வகையில் உதவுவதற்காக மூல நிறுவனங்களைக் கட்டி எழுப்புதல் அவசியம் ஆகும்.
இந்த வகையில் கூட்டுறவு இயக்கம், பனை
அபிவிருத்இச் சபை, உயர் கல்வி நிறுவனங்கள் முழுதப்பற்றாளர், பொருளியலாளர், ஆய்வாளர்களின் ஆக்கபூர்வமான பணிகளினால் இன்று திறப்பாது முன்னேறிவரும் நிலையில் LEGO65T 6) I GYTL fò காணப்படுகின்றது.
உலஇல் உள்ள தாவரங்களில் பனை வளம் வற்றாத இயற்கைச் செல்வமாகும். மனித வாழ்வுக்கு இயற்கை அன்னை வாரி வழங்கும் சூரிய ஒளி, மழை, காற்று போன்று பனையும் நிலப் பயன்பாடு, பசளை, நீர் இல்லாத இடங்களிலும் மனிதனுடைய நேரடிக் கண்காணிப்பு இல்லாத நிலையிலும் தானாகவே வளர்ந்து மக்களுக்கு பலன் கொடுக்கின்ற தாவரம் பனையைப்போல் வேறில்லையென்பர். இதனால் பனை தாவரங்களின் அரசி
என்று பயன் தெரிந்தோரால் போற்றப்படுகின்றது. சிறந்த குடிசைக் கைத்தொழிலுக்கு அதிக மூலப்பொருட்ளை வழங்கி தம்மை அண்டி வாழ்கின்ற மக்களுக்கு நுனி முதல்
அடிவேர் வரை உதவும் மரம் வேறொன்றில்லை. கால்நடை உணவாகவும், கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கும் பனைவளம் உதவுவதுடன் ஏற்றுமதிக்கான உற்பத்திகளை வழங்குவதன் மூலம் அந்நிய செலாவணியினையும் பெறுவதற்கு உதவுகின்றது. 통렇
பனை வளம்: மத்திய ரேகையின் வடக்கே 45 பாகையும்
தெற்கே 45 இற்கும் இடைப்பட்ட தாலவட்டம் என அழைக்கப்படும் உஷ்ண வலயப் பிரதேசங்களில் உள்ள
 

மேற்கு ஆபிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்காசியா ஆகிய பிரதேசங்களில் குறிப்பாக இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, வங்காளம், தாய்லாந்து, ஆபிரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளில் பனைகள் செழிப்புற்று வளர்கின்றன. பனை வளம் அதி கூடிய எண்ணிக்கையான 60 மில்லியன் மரங்கள் இந்தியாவிலும், 11.2 மில்லியன் மரங்கள் இலங்கையிலும், இந்தோனேசியாவில் 10 மில்லியன், தாய்லாந்து 2 மில்லியன், பர்மாவில் 23 மில்லியன், மதகாரில் 1மில்லியன், கம்பூச்சியாவில் 2 மில்லியனும் ஏனைய இடங்களில் தொகை குறைவாகவும் பரந்துள்ளன.
பனையின் தொல்லியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியலாளர்கள் கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலும் பனைத் தொழில் செழிப்புடன் காணப்பட்டதற்கான உயிரியல் சுவடுகள் சான்று பகருவதாக அறிவித்துள்ளனர். பனை வளம் அதிகமுடைய பாரத நாட்டில் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பனைத் தொழில் மேற் கொண்டதற்கான சரித்திரச் சான்றுகள் காணப்படுகின்றன. பனையிலிருந்து 801 வகையான பொருட்களைப் பெறலாம் என்பதனை இந்தியாவின் தஞ்சையைச் சேர்ந்த அருணாச்சலக் கவிராயரால் எழுதப்பட்ட தாலவிலாசம் அல்லது 'பனை மரக்காவியம்’ எனும் பழைமையான நூல் பகருகின்றது.
யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ச.சு.பொன்னம்பல முதலியார் 14-12-1979 இல் இயற்றி வெளியிட்ட பனைநூறு எனும் கவிதை நூல் மூலம் பனையைச் சிறப்பித்துள்ளார். கடல் கொண்ட தமிழகத்தில் 'ஏழ்பனை நாடு இருந்ததாகப் பண்டைய வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. கடல் கொண்ட தமிழகத்தில் வடக்கில் எஞ்சிய நிலப்பரப்பு இலங்கை ஆகும். பண்டைய 'ஏழ்பனை நாடு அழிவுற்றதாயினும் அந்நிலப்பரப்பில் எஞ்சிய ஈழத்தில் பனைகள் நிலைபெற்று விளங்குகின்றன.
இந்த வகையில் இலங்கையில் 1 கோடியே 25 இலட்சம் பனை மரங்களில், யாழ். மாவட்டத்தில் 77 இலட்சம் பனை மரங்கள் பொருளாதார அபிவிருத்திக்கும், சூழற் பாதுகாப்புக்கும், போர்ச் சூழலில் மக்களைக் காக்கும்
காப்பரண்களாகவும், பிரதானமாக வரண்ட பிரதேச நுண்ணிய சூழலைப் பாதுகாக்கவும், மண்ணரிப்பைத் தடுக்கவும் ,மண்மாரியிலிருந்தும், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களிலிருந்தும், மக்களைக் காக்கவும்,
மக்களுக்கும் கால் நடைகளுக்கும் உணவாகவும்
இ —

Page 50
ថាក្រុងប៉ារ៉ៃរឺ 50
உதவுகின்றது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 450 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், 25000 குடும்பங்கள் மறைமுகமாகவும் பனை வளத்தில் தங்கியுள்ளனர். ஆயினும் மொத்த பனை வளத்தில் 2 % வளம் மட்டுமே கூடிய வருவாய் வழங்குகின்ற சாற்று உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் வளத்தின் 4 % மட்டுமே தற்போது ஏதோ ஒரு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூலோக கற்பகதருவெனவும், பஞ்சம் போக்கி எனவும் போற்றப்படும் பனை வளம் தமிழர் வாழ்வுடன் இரண்டறக் கலந்த தாவரமாகப்போற்றப்படுகின்றது. பண்டைய புலவர்களாலும், ஞானிகளாலும், சமயக் குரவர்களாலும், சித்தர்களாலும், அறிஞர்களாலும், மன்னர்களாலும் பனை வளம் போற்றிப் பாதுகாக்கப்பட்டது. சமயக் குரவர்களில் திருஞான சம்பந்தர் ஆண் பனையைப் பெண் பனையாக மாற்றியும், மாணிக்கவாசகர் பனையின் அழகைப் போற்றியும் பாடியுள்ளார்கள். திருஞானசம்பந்தர் காலத்தில் பனையை வளர்த்தல் சிவதொண்டாகக் கருதப்பட்டது.
தமிழ் இலக்கிய அடிப்படையில் தமிழர் வாழ்வுடன் இரண்டறக்கலந்த தாவரமாக, பனையைப் பற்றி தொல்காப்பியம் தொடக்கம் திருக்குறள், தேவார திருவாசகம், இதிகாசங்கள் யாவற்றிலும் சிறப்புற்று பேசப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் பனை வளத்தின் தன்மை தமிழர் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த தன்மையினையும் அவர்களின் அகவாழ்வு நிலையிலும், புற வாழ்வு நிலையிலும் நெருக்கமான பிணைப்பினைக் கொண்டமைந்த தன்மையினையும் பண்பாட்டுக் கோலங்களையும் அறியக் கூடியதாகவுள்ளது.
தொல்காப்பியத்தின் மரபியலில் (85) 'புறக்காழனவே புல்லென மொழிப' எனும் சூத்திரத்தில் புல்லு, மரமும் 6 TGÖT இரு சொல்லின் உற்பத்தி கூறப்பட்டுள்ளது. இச் சூ த் தி ரத் தி ற் கு ப் பொருள் கூறும் அ றி ஞ ர் க ள்
 
 
 
 
 
 

‘புறத்துக்காழ்ப்பு உடையனவற்றை ‘புல்" எனவும் அகத்துக்காழ்ப்பு உடையனவற்றை மரம் எனவும் கூறியுள்ளார்கள். 'புறக்காழன்’ எனவே அவ்வழி வெளிலு என்பது அறியப்படும். அவை பனையும், தெங்கும், கமுகும் தருதலாயின. புல் எனப்படும் இலுப்பையும், புளியும், அரசு முதலாயின மரம் எனப்படும்.
புறத்தே வைரமுள்ளனவாய் உள்ளே ஒட்டையாகும் தன்மையான சோற்றி அல்லது சோத்தியைக் கொண்டனவாய் இருக்கும் தாவரங்களை ‘புல்" எனவும், வெளியில் சோற்றியாய் உள் வைரமாய் இருப்பவற்றை மரம் எனவும் பெயரிட்டு வழங்கியதில் பொருள்களின் இயல்பை அவதானித்து அவற்றிக்குத் தக்க பெயரிடும் வழக்கம் காணப்படுகின்றது. உண்மையில் ‘புல்” எனும் சொல் உட்டுனையை காட்டுகின்ற ஓர் அடியிலும் மரம் எனும் சொல் வைரத்தைக் காட்டுகின்ற ஓர் அடியிலும் நின்றே பிறந்தன என நாம் அறிவோம். ‘புல்" எனும் சொல்லை சிங்களத்தில் 'பொல்’ என வைத்துத் தெங்கின் பெயராக சொல்வார். சிங்களத்தில் இது போன்று வேறு பல பழந்தமிழ் சொற்கள் பழைய உச்சரிப்பின்படி போலும் இன்றைக்கும் நிலவுகின்றது.
உண்மையில் புல்” எனும் சொல் உட்டுளையுள்ள தாவரங்கள் எல்லாவற்றிக்கும் பொதுப் பெயர். ஆகவே பனை ஆகியவற்றிக்கு வெவ்வேறு சிறப்புப் பெயர்களும் வேண்டப்பட்டன. அவற்றுள் பனைக்கு 'பொல்’ என்ற அடியின்றே ஒரு பெயர் எழுந்தது. அது 'போந்து' என்ற பெயர் கொள்ளுதலே போழ்தல் என்று ஆகி போழ்ந்தது (உட்டுளையுள்ளது) போந்து என வந்தது. 'போந்து பனைப் பெயராவதை உதயணன் கதையில் காணலாம். பின்கலந்தையும் - போந்து பனை எனவும், போந்தை இளம் பனை எனவும் குறிக்கின்றது. போந்துச் சொல்லே போந்தை என மாறிற்று. பனைக்கு பல பெயர்கள் எழுந்த வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்கள் பிங்கலநீகண்டு குறிக்கும் மேற்கோள்களை எடுத்தாண்டுள்ளார்கள். போந்து, தாலம், பெண்ணை, புற்பதி, தாளி, கரும்புறம், ஏடகம், கற்பகதரு, காமபுரம், தருமவிசாரன், தாணி, துருமேகம், நீலம், பாரிபத்திரம், பார்பதம், புல்லூதிபம், புற்றாளி எனப் பல்வேறு பெயர்களை ஒலி நூல் வாயிலாகவும் காரணப் பெயராகவும் கொண்டும் வழக்கில் வந்துள்ளது.
மனிதனின் உள்ளம் சம்பந்தமான அகவாழ்வு நிலையில் பண்டைய தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும்குறிப்பு நிலையினைத் கூற வந்த புலவர்கள் பழந்தமிழ் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, கலித்தொகை ஆகிய காவியங்களில் பதிவு செய்துள்ளார்கள். அதேவேளை அகவாழ்வு நிலையினைத் தொடர்ந்து புறவாழ்வு நிலையில் போரும் அது சம்பந்தமான

Page 51
நிகழ்வுகளும் புறவொழுக்கம் எனப் புலவர்களால் விளக்கப்பட்டது. புறநானூற்றுப் பாடலில் பனையின் உயரமும், கருமையும், வலிமை படைத்த யானையின் துதிக்கையுடன் பொருந்தி நிற்கின்றது. அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, திருமுரு காற்றுப்படை ஆகிய நூல்கள் வாயிலாக பல ஒப்பீட்டுக் காரணங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். பனைக்கொடி ஏந்திய பலராமனும், பனம் மாலை அணிந்து போருக்குச் சென்ற சேரனும், பனைக்கொடி ஏந்திய
ஞானிகளில் பீஷ்மரும் பாவித்தார்கள்
என்பதற்கான சான்றுகள் LJGN) தெரிவிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவர் குலம் பற்றியும் அவர்கள் வாழ்ந்த வரலாற்றையும், பனையைத் தெய்வமாக வழிபட்டதையும் செப்புகின்றது. மகாவம்சம் எனும் நூல் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் ஈழத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் சிலர் தLDது பட்டப்பெயராக 'பனையன்மாறன்’ என்ற சிறப்புப் பெயர் கொண்டு ஆட்சி செய்ததாக பகருகின்றது.
அடுத்து உணவு நிலையில் பழந்தமிழர் வாழ்வில் பனை, உணவு நிலையிலே மக்களுக்கு
உதவி புரிந்துள்ளதனைப் புலவர்கள் பலவாறு எடுத்து இயம்பியுள்ளார்கள். நல்லூரில் வாழ்ந்த நங்கையர் பதநீர் அருந்தி மகிழும் நிலையினைப் புறநாநூற்றுப்பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். குறுந்தொகையில் கள்ளில் ஆத்திரையினார் எனும் பெரும் புலவர் பனை மரங்களில் இருந்து இறக்கப்படும் கள் போதை மிக்கது. அக் கள்ளினை அருந்தி சுவைத்திட மக்கள் முனைவர். கள் இல்லாதவிடத்து பனை நுங்கினைப் பருகித் தமது வேட்கையினைத் தணிப்பர் என்பார். பதிற்றுப்பத்தில், வரும் விருந்தினர்களுக்கு கள்ளும் சோறும் அளித்து உபசரிப்பதை விபரிக்கின்றது. சேரனது கொடைச் சிறப்பு பற்றிப் பாடும் புலவர் உணவு நிலையில் கள் அருந்தியதை முக்கியப்படுத்துகின்றார். பருகும் கள்ளுக்குப் பதிலாக வரகும், கொள்ளும் கொடுத்த செய்தியும் உணவு நிலையில் பனையின் பயன்பாடுகள் பெரும் வளங்களாக இருந்ததைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
அடுத்துப் பனை மரத்தின் ஒலை உண்கலமாகப் பாவிக்கப்பட்டதனை கபிலர் தனது நற்றிணை பாடல்கள் மூலமாக விபரிக்கின்றார். அதே போல் புறநானூற்றுப்பாடலில் ஒலையினாலான உண்கலத்தில் உணவுப் பொருட்களை சுத்தமாக உண்பதற்கு பயன்படுத்தி வந்ததைப் பதிவு செய்துள்ளார். தமிழர் உண்டாட்டின் கோலத்தை ஆவூர் மூலங்கிழார் எனும் புலவர் இளம் பனை ஒலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தட்டுவம்
 

*町
என்னும் உண்கலம் தூய்மை மிக்கதாக குறிப்பிடுவார். இன்றும் கிராமங்களில் நடைமுறையில் தட்டுவம் பயன்படுத்தப்படுகின்றது. பனையின் இன்னொரு பகுதியான பன்னாடையின் உபயோகம் பற்றி புறநானூற்றுப்பாடல் மூலம் பதிவு செய்துள்ளார்கள். அடுத்து மொழி நிலையில் பனையின் சிறப்புப் போற்றப்படுகின்றது. பனை மனிதனுக்கு உணவும், உறையுளும் தந்ததுடன் மொழி நிலையிலும் உலாவுவது சிறப்பிடம் பெறுகின்றது. மரங்களிலே மனித வாழ்வுடன் மிக நெருக்கிய தொடர்பு கொண்டது பனையே. பனையை அடியொற்றிய பழமொழிகளில் சில.
/. பனை நிழலும் பரத்தையர் உறவும் போல்
2. பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் 3. குருவி கழுத்திலே பனம் பழம் கட்டியது போல் 4. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது 5. காவோலை விழ குருத்தோலை சிரிக்கின்றது 6. பனை பட்டாலும் ஆயிரம் நின்றாலும் ஆயிரம்
என்பன போன்ற பழமொழிகளில் பனை பிரதான இடம் வகிக்கின்றது. வள்ளுவர் தமது குறளில் மூன்று குறள்களை பனையினை மேற்கோள் காட்டியே இயற்றியுள்ளார். தமிழ் புலவர்கள் மட்டும் அல்ல ஆங்கிலப் புலவர் கீட்ஸ் தமது இஸபெல்லா எனும் காவியத்தில் 'பதநீர் இறக்கும் பனம்
பாளை வாடுவது போல்’ என்ற உவமானம்

Page 52

மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒளவையாரும் "தேம்படு பனையின் திரள் பழத்தொருவிதை' என வர்ணித்துள்ளார். திருமுறை தந்த திருமூலர் தம் திருமந்திரம் எனும் 10 ஆம் திருமுறையில் பனையின் சிறப்பு பற்றி பாடியுள்ளார். நீதிமான் 'பனையைப்போல் செழித்து வளருவான்’ என்று பைபிள் (11 ஆம் அதிகாரம்) கூறுகின்றது.
யாழ்ப்பாண மன்னர்களில் ஒருவரான செகராஜசேகரனின் அவைப் புலவர் வையாபுரி ஜயர் தாம் இயற்றிய நூலின் 12 ஆம் - 13 ஆம் பாடல்களில், இராவணன் இறந்த பின் முடி சூடிக்கொண்ட விபூஷணன் மன்னன் முன்னிலையில் கபோதியான யாழ் வாசிப்பவன் தனது திறமையான யாழ் வாசிப்புக்காக தான் பரிசாகப் பெற்ற மணற்றிடற்றினை திருத்தி, வேறு எவற்றுடனும் ஒப்பிட்டு சொல்ல முடியாத கற்பகத் தருவான பனையினையும், ஏனைய தாவரங்களையும் நடுகை செய்தான் எனக்கூறுகின்றது. இதன் காலம் 101 ஆம் ஆண்டாக இருக்கும் எனவும், யாழ்ப்பாணம் என்ற பெயர் இவ் யாழ் பாடியின் தொடர்பாக ஏற்பட்டது என்பதையும், பனை வளத்துடனேயே யாழ்ப்பாணக் குடியேற்றம் நடைபெற்றுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
தற்கால இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம், வேத சாஸ்திரங்கள், காளிதாசனின் சாகுந்தலம், வள்ளுவனின் குறள், தேவார, திருவாசகம், தமிழ் சங்கம் தந்த தொல்காப்பியம் தொடக்கம் சகல இலக்கண, இலக்கியங்கள் யாவும் ஏட்டில் எழுதப்பட்டவை ஆகும்.
இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகளில் பனை வளம் முக்கிய இடம் வகிக்கிறது. பனை வளம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் மக்களின் உணவு, போஷாக்கு, வீடமைத்தல், அலங்காரப் பொருட்கள், பானங்கள், பாவனைப் பொருட்கள் என்பவற்றை வழங்கும் கற்பகதருவாக விளங்கி வருகின்றது.
காரணமாக பனை வளப் பயன்பாட்டில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய போதும், தொடந்தும் இப் பகுதியில் வாழ்ந்த கணிசமான மக்கள் தொகுதியினர் தமது நாளாந்த வாழ்வுக்கு பனை வளத்தினையே நம்பி வாழ்ந்தார்கள், வாழ்ந்தும் வருகிறார்கள். பனை பல நாடுகளில் பல சமூகங்கள் மத்தியில் வளர்ந்திருந்தாலும் தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்துள்ளது. 'காலமும் தமிழனும் தலை வணங்காதத் தன்மையில் ஒத்தவர்கள்’ என ஒப்பிட்டுக் கூறப்பட்ட பனை வளம், கால மாற்றம் காரணமாகத் தமிழ் மக்களிளால் கைவிடப்பட்டு அழிவுபட்டுச் செல்லும் நிலையில் உள்ளது. அருமையான வளத்தின் பெருமையினை மேலைத்தேய அறிஞர் கூற்றில் 'தமிழ் மக்களுக்கு அத்துணை அளப்பரிய உதவியாகவுள்ள பயிருக்கு இழைக்கப்படும் ஒர் அநியாயமாகும்’ என்ற உண்மையினை இவ் ஆக்கம் வெளிப்படுத்தி நிற்கின்றதுது

Page 53
To place your
advertisement
KALAKESAR
GOGD66ëË
羲 翁黎 羲酸黏 kvENrs faskios INrekvikss kartotanikerer
Contact US On
+94 11 5322733/734/7
ᎤᏤ marketing@virakesarilk
 
 
 
 

Send the World's Best
Home Appliances
to your loved ones in
Sri Lanka
click away
Simply visit ww.singers.com he website of Sri Lanka's No. 1 retailer of home appliances, Choose any number of items among over 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We'll deliver then to your loved ones in any part of Sri Lanka. Guaranteed
SNGER SISL Prestige ESFAAL
W203. HITTACHI - anasioni. W

Page 54
瓣·
瓣 聽
戀
蹈 籌聽
議識
·
强 隱總 變
辯
 

- laff0)WF¶fil00 |யலின் GGO)
ந்திய இசை வாத்திய வரலாற்றில் ஆதி காலத்தில் ராவணகூஸ்” என்னுமொரு நாரிசை வாத்தியம் வழக்கத்தில் இருந்ததாக அறிகின்றோம். இந்திய பண்டைய சிற்பங்களில் காலத்தால் முற்பட்ட பல
அரிய கருவியிசை வடிவங்கள் செதுக்கப்பட்டு உள்ளமையால் அவற்றைப் பற்றிய பாங்கினை, அமைப்பை, இன்று இச்சிற்பங்கள் வாயிலாக நாம் பெரிதும் அறிய முடிகின்றது. மேலும் ஆங்காங்கே மிக அருமையாக வயலினை ஒத்த ஒரு வாத்தியத்தை நாம் காண முடிகின்றது.
அடிப்படையில் மேற்கத்திய வாத்தியமாக மிளிர்ந்த வயலின் வாத்தியமானது, கர்நாடக சங்கீதத் துறையில் ஏறத்தாழ பத்தொன்பதாம் நூற்றாண்டு கால கட்டத்தில் புகுந்து கொண்டது என்றால் அது மிகையாகாது. மேற்கத்திய வாத்தியமான இவ் வயலின் இசைக்கருவி இன்று இந்திய இசை வடிவங்களான இந்துஸ்தானிய சங்கீதமான வட இந்திய சங்கீதத் துறையிலும், தென்னிந்திய இசை வடிவமான கர்நாடக இசை வடிவத்திலும், அதி உன்னத பங்களிப்பை நல்கி வருகின்றது. இன்று எந்தவொரு வாய்ப்பாட்டு இசைக் கச்சேரியாயினும் வயலின் வாத்தியப் பயன்பாடு இன்றியமையாத அம்சமாக விளங்குகின்றது.
ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவ்வயலின் இசை வாத்தியப் பயன்பாடானது வழக்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுச் சிற்பங்களூடாக அறிகிறோம். வயலினின் இன்றைய வடிவமைப்பை எமக்கு வகுத்துத்
தந்தவர் ஸ்ட்ராடி வேரியல் என்னும் இத்தாலி நாட்டைச்
சேர்ந்த கலைஞராவர். இன்று நடைமுறையில் இவ்வாத்தியச் செய்கைக்குப் பலதரப்பட்ட ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவையாவன பைன் மரங்கள், மாபிள் மற்றும் வெண்ருக் என்பன.
வயலின் வாத்தியமானது மேற்கத்திய கலாசாரப் பாணியில் எழுந்த அடிப்படை வாத்தியமாகும். இத்தகைய மேற்கத்திய வாத்தியமானது, பாலசுவாமி தீட்சகர் என்பவரால் மட்டுமே கர்நாடக இசைத்துறையில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலைத்தேய இசைக் கருவியான வயலினைப் பயின்ற பாலசுவாமி தீட்சகர் அவர்கள், காலக்கிரமத்தில் தனது சுயசிந்தனை மற்றும் சுயகற்பனை வளத்துடன், ஏற்கனவே தான் பெற்றுக்

Page 55
கொண்ட பயிற்சியினை அடித்தளமாகக் கொண்டு கர்நாடக சங்கீதத் துறையில் தனக்கு இருந்த இசை ஞானம், ஈடுபாடு, ஆற்றல், ஆளுமை ஆகியவற்றுடன் தன்னை இணைத்து பலதரப்பட்ட சுருதி நிலைப்பாட்டிற்கு அமைய வயலின் இசையை கர்நாடக சங்கீதத்துறையின் தேவைக்கு அமைய உத்தியல் மாற்றங்களை மேற் கொண்டு வயலினை கர்நாடக சங்கீதத்துறைக்கு மாற்றி அமைத்தார். இந்த வகையில் வயலின் வாத்திய இசை வருகையினால் கர்நாடக சங்கீதத்துறை மேலும் மெருகூட்டப்பட்டு பொலிவுற்றது என்றால் அது மிகையாகாது.
கர்நாடக இசைத்துறையில் வீணை என்னும் நாரிசை வடிவத்துடன் வயலின் என்னும் மற்றுமொரு நாரிசை வடிவமும் புது மெருகுபெற்றுத் துலங்கியது. வீணையிலும் பார்க்க நடைமுறையில் வயலினானது இலகுவில் எடுத்துச் செல்லக் கூடியதாகவும், உயரிய வகையில் ஏற்ற இறக்கம், கமகங்கள், சீரியவகையில் துல்லியமாகப் பிரதிபலிக்கக் கூடிய கூரிய ஒலிநாதமுடைய வாத்தியமாக மிளிர்கின்றது.
வீணையானது நாரிசை வாத்தியத்தில் மீட்டல் வாத்தியம் என்பதினால் ஆங்காங்கே சில சமயங்களில் இசையின் நுட்ப நுணுக்கங்களின் இசை அசைவை குறித்த நிலைப்பாட்டிற்கு அப்பால் பயன்படுத்தல் மட்டுப்படுத்தப்படுகின்றது என்பது இயல்பே. ஆயினும் வயலின் வாசிப்புக் கருவியாதலினால் இசை நுணுக்கங்களைத் துல்லியமாகத் தெளிவாகப் பயன்படுத்த முடிகின்றது எனலாம். அவ்வாறே பல கட்டமைப்புகளில் இவ்வாத்தியத்தை சந்தையில் வழங்க முடிகின்றது. குறிப்பாக ஒருவரின் 6) Julg5), அவரது உயரம் போன்றவற்றுக்கு அமையவும், சிறுவருக்கு ஏற்ற வகையிலும், வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்ற வகையிலும் வயலினை நாம் சந்தையில் பெறமுடிகின்றது.
கர்நாடக சங்கீதத்துறையில் பாலசுவாமி தீட்சகரால் அறிமுகம் செய்யப்பட்ட வாத்தியமானது, பரத நாட்டியத்துறையில் தஞ்சை சகோதரர் நால்வரில் ஒருவரான வடிவேலுவினால் அறிமுகம் செய்யப்பட்டது. கர்நாடக சங்கீதத்துறையில் வயலினை அறிமுகம் செய்த பாலசுவாமி தீட்சருக்கு அவரது அரிய சேவையை பாரட்டி 1824 ஆம் ஆண்டு எட்டியபுரம் சமஸ்தானத்தில் சமஸ்தான வித்துவான் பதவி அளித்து கெளரவிக்கப்பட்டது.
அடிப்படையில் வயலின் இசைப்பதில் இரண்டு முக்கிய வகைகள் காணப்படுகின்றது.
அவையாவன பிடி வாத்திய முறைமை, ஜாருவாத்திய முறைமை என்ப
னவாகும். பிடி வாத்திய வகையில் விரலின் அடிப்பகுதியை பெரிதும் பயன்படுத்தி வாசிப்பதும், ஜாருவாத்தியத்தில் கமகங்களை விரல் பலகையின் மேல் இணைத்து வாசிப்பதும் முறைமையாகும். ஏனைய வாத்தியங்கள் போன்று வயலினும் பலவகை வாத்தியப் பகுதிகளைத்
 
 
 
 

塞 យម្បិញម៉ារ៉ៃរឺ
55
தன்னகத்தே உள்ளடக்கிய வாத்தியமாகும். உடற்பகுதியானது மேல் பாகம், மற்றும் அடிப் பாகப்பலகை ஆகியன தனிப்பலகையால் செய்யப்பட்டவையாகும்.
மேலும் வயலின் பல பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது. அவற்றுள் ஒரு பகுதி விலாப் பலகையாகும். அதாவது மேல் பலகையில் மேல் ஆங்கில எழுத்தான 'எவ்' என்னும் எழுத்தைப் பிரதிபலிக்கும் இரு துவாரங்களைக் கொண்டு விளங்குகின்றது. இத் துவாரங்கள் குதிரை என அழைக்கப்படும். நடு தந்திகளுக் கீழ் அமையப்பெற்ற குதிரை இருமருங்கிலும் காணப்படுகின்றது. தந்திகளைத் தாங்கும் குதிரை என்பது நடுப்பகுதி மரமாகும்.
இவை தவிர விரல் பலகை மற்றும் கழுத்துப் பாகம் உள்ள பகுதி, நான்கு பிரட்டைகள், மற்றும் தந்தி தாங்கி, நான்கு தந்தித் தாங்கியின் நரம்பு பிணைக்கப்பட்டிருக்கும் பித்தான்கள், திருகு, வில், உரோமம், நாடி தாங்கும் மட்டை, குதிரை, நான்கு தந்திகள் என்பன வயலினின் முக்கிய பகுதிகளாகும். இத்தகைய பல பகுதிகளைக் கொண்டு விளங்கும் வயலின் ஒட்டு மொத்தத்தில் இந்திய இசைப் பாரம்பரியத்தில் முக்கிய இடம் பெறுகின்றது.
கர்நாடக வயலின் இசையில் பிரசித்தம் பெற்றோர் பலராயினும் அதில் முக்கியமானோர் ஒரு சிலரேயாவர். அவர்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்தோர் லால்குடி ஜெயராமன், டி.என். கிருகஷ்ணா, செளடையா மற்றும் அண்மையில் காலமான குன்றக்குடி வைத்தியநாதன் ஆகியோராவர்து
- சேக்ஷன் கேசவன்

Page 56

வட்டுக்கோட்டை மு.இராமலிங்கமும் நாட்டார் பாடல் தொகுப்பு முயற்சியும்
- பேராசிரியர் சபா.ஜெயராசா
னத்துவ அடையாள நிரற்படுத்தலில் மிகவும் இ ஆழப்பதிந்திருப்பவை நாட்டார் கலைகளும் இலக்கியங்களுமாகும். இந்நாட்டுத் தமிழர் மரபில் நாட்டார் இலங்கியங்களைத் தேடித் திரட்டிய முன்னோடிகளுள் ஒருவராக வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் விளங்குதல் இனத்துவ அடையாளத் தேடலுடன் இணைந்த நிகழ்ச்சியாகும்.
கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆய்வுகளில் ஈடுபட்டு நாட்டார் பாடல்களைப் பொறுக்கிச் சேர்த்து ஆவணப்படுத்திய அவரது புலமைச் செயற்பாட்டினை எளிதில் மறந்து விட முடியாது. அவர் மேற்கொண்ட கள ஆய்வுகளும், திரட்டல்களும் யாழ்ப்பாணத்துடன் மட்டும் நின்று விடாது இலங்கை முழுவதும் விரவியதாக அமைந்தன.
அவரது சேகரிப்புச் செயற்பாட்டுக்கு உதவியவர்களாகப் பின்வருவோர் சிறப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.
1. காத்தான்குடி ஜனாப் எம். எஸ். எம். அலியார்
2.
3.
4.
5.
6.
7.
8. 9.
திருகோணமலை மங்கையர்க்கரசி மாரிமுத்து நானாட்டான் ம. பென்சமின் செல்வம் தம்பலகாமம் க. நல்லலிங்கம் செங்கலடி க. எ. பொன்னுத்துரை நாவிதன் வெளி சீ யோ. முருகேசு கரம்பன் என். கிருபாம்பிகை அம்மையார் சாவகச்சேரி வ. முருகேசு முள்ளியவளை செல்லம்மா கணபதிப்பிள்ளை
10. காரைநகர் ஆ. செல்வநாயகம்
11. நாவற்காடு சி. செல்வத்துரை
12. திருகோணமலை மா.சிவதாஸ் 13. தலையாளி வ. கந்தையா பரந்த வலைப்பின்னல் அமைப்புடன்
அவர் நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுக்க

Page 57
முயன்றார் என்பது மேற்கூறிய பட்டியலில் இருந்து அறியக் கிடைக்கின்றது.
அந்தப் பட்டியல் அவர்க்குரிய ‘புலமை நேர்மையையும் புலப்படுத்துகின்றது. அதாவது பிறர் தேடிக் கண்டறிந்த பாடல்களைத் தாமே தேடிக் கண்டறிந்ததாக அவர் உரிமை கோராதிருத்தல் ஊன்றிய நோக்கினுக்குரியது.
தான் சேகரிப்பில் ஈடுபட்ட வேளை பிறரையும் அத்துறையில் ஈடுபடுத்தி ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்த அவரது செயற்பாடு தேடலிற் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை மீள வலியுறுத்தியது. ஆயினும் அதைத் தொடர்ந்து நிறுவன முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆக்க நிலையிலும் இராமலிங்கம் அவர்கள் பன்முக e-9), (Ga560)LD கொண்டவராக விளங்கினார். நடிகராக, நாடக ஆசிரியராக, வரலாற்றாசிரியராக, இதழியலாளராக, இதழ்க்கீலம் (COLUMN) எழுதுபவராக அவரது ஆளுமை பரிமாணங்கள் விரிவடைந்திருந்தன.
வரலாற்று ஆய்வாளர் முதலியார் சி.இராசநாயகம் அவர்களோடு இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்ட செய்தியும் உண்டு. அதனை ஒய்வுபெற்ற கணக்காய்வாளர் நாயகம் கே.கனகரத்தினம் அவர்கள் நாட்டார் பாடல்கள் முன்னுரையிற் குறிப்பிட்டுள்ளார்.(1961)
எழுத்து இலக்கியம் சமூக அடுக்கமைவில் உயர்ந்ததோருக்கும் வாய்மொழி வழியான நாட்டார் இலக்கியம் அடித்தளங்களிலுமுள்ள 'கல்லா மாந்தர்க்குமாகக் கருதப்பட்ட அறிகை முரண்நிலை வளர்ந் திருந்த காலகட்டத்தில் மு. இராமலிங்கம், அவரது செயற் பாடுகள் நாட்டாரியல் பற்றிய தெளிவான புலமைத் கண்ணோட்டத்துடன் மேலெழுந்தன.
மரபு வழி வரன்முறையாகத் தமிழ் கற்ற பண்டிதர்களிற் பெரும்பாலானோர் நாட்டார் பாடல்களை ஏற்றுக்
கொள்ளாத முரண்பாடான நிலையும் காணப்பட்டது.
 

遠。 អ៊ែងហ្គាំរ៉ៃរឺ
57
நாட்டார் பாடல்களைத் திருத்தமற்ற வடிவங்கள்’ என்றும் மொழிசார்ந்த பின் தங்கிய வடிவங்கள் என்றும் அவர்கள் கருதினர். உரிய இலக்கிய அந்தஸ்த்தை அவர்கள் நாட்டார் இலக்கியத்துக்கு வழங்கவில்லை. ஆனால் பிரித்தானியர் ஆட்சி காலத்து நவீன ஆங்கில இலக்கிய மரபில் நாட்டார் இலக்கித்துக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்பட்டிருந்தது. மனோரதியம் அல்லது அகவுணர்ச்சி (ROMANTIC) இசை யும் கவிதைகளும் நாட்டாரியற் பண்புகளை வளமாகத் தழு வி ஆங்கில மரபில் எழுச்சியுற்றன. அவ்வாறான வளர்ச்சி களை ஆங்கிலக் கல்வி வாயிலாக அறிந்து கொண்ட மு. இராமலிங்கம், சி.வி. வேலுப்பிள்ளை முதலாம் எழுகுழாத் தினர் நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுக்க முயன்றனர். பெருமளவிலான மலையகத்து நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுத்த புலமை முயற்சி அமரர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களையே சாரும்.
பல்கலைக்கழக நிலையிலே அவற்றைத் தேடித் தொகுத்த முயற்சியை மேற்கொண்டவர்களுள் பேராசிரியர் சு.வித்தியானந்தன் தனித்துவமானவர். அவர் நாட்டார் பாடல் தொகுப்பு முயற்சிக்கும் மேலாகச் சென்று நாட்டுக் கூத்துகளை "வகைப்படுத்திய வடிவமான (STYLISED) மேடையேற்றினார்.
உடனடி மனவெழுச்சியானது ஏழுகை நிலையிலும், புத்தாக்க அறிகைத் தளம் பல்நிலையிலும் கிராமத்து மக்களின் வாய் மொழி சார்ந்த இணக்கல் முயற்சியினால் நாட்டார் பாடல் வடிவமாக உருவாக்கம் பெறுகின்றன. தொடர்ந்து வாய்மொழிக் கையளிப்பினால் அவை காவிச் செல்லப்படுகின்றன.
வினாவிடை வாயிலாக நாட்டார் பாடல் ஒன்று உருவாக்கம் பெற்ற நிகழ்ச்சியை மு.இராமலிங்கம் அவர்கள்
பின்வருமாறுவிளங்குகின்றார்.

Page 58
ក្ញត្អែ 鑫 58
'எந்த ஊரு எந்தத் தேசம்
எனக் கறியச் சொல்லுமம்மா?
வடக்கே வடதேசம்
வாழுறது பலாங்கொடை
சமயோசித எடுத்தாள்கையும் இணங்கலும் பாடல் உருவாக்கத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றன என்பதை மேற்குறித்த பாடலிலிருந்து அறிந்து கொள்ளமுடியும்.
மு.இராமலிங்கம் அவர்களது தொகுப்பு முயற்சியிலே காணப்படும் பிறிதொரு பரிமாணம் குறித்த நாட்டுப்பாடல் கிராமங்கள் தோறும் எவ்வாறு திரிபுபட்டு வழங்குகின்றது என்பதைக் கண்டறிந்ததாகும். ஓர் எடுத்துக் காட்டு வருமாறு
'மாடுமோ செத்தல் மாடு
மணலுமோ கும்பி மணல்
மாடி முழுக்க மாட்டாமல்
தானித்து மாய்கிறாண்டி’
நாட்டார் பாடல்கள் வாய்மொழியாக வழங்கி வருவதால் மாற்றங்களுக்கு எளிதாக உட்படும் தன்மையின். புவியியற் சூழல், வாழ்கைச் சூழல் முதலானவை மாற்றங்களை உட்படுத்திவிடக் கூடியவை. கும்பி மணல் நிரம்பிய வடமராட்சி கிழக்குப் பகுதியும் இயல்பாகவே மாடுகள் படும் சிரமமும் கும்பி மணல் என்ற தொடரைப் பெய்வதற்கு காரணங்களாக அமைந்திருக்கலாம். மணலின் பெருக்க நிலை முக்கியத்துவத்தை அங்குள்ள மணற்காடு’ என்ற ஊர்ப் பெயர்ச் சுட்டே நன்கு புலப்படுத்தும். நாட்டார் பாடல் "கிராமியப் பாடல்’ என்ற தொடர் தமிழில் நிலை பேறு கொண்டுவிட்டாலும், நகரங்களிலும் அவ்வகைப் பாடல் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு. கல்வி வளர்ச்சியின் போது எழுத்தறிவு பெற்றவர்களும் நாட்டார் பாடற் பணியிலே ஆக்கங்களை இயற்றுதலும்
 

வளர்ச்சியடைந்தன. நாட்டார் பாடல்களைத் தொகுப்போருக்கு அவற்றை பிரித்து பார்த்தறிதல் புலமைச் சவாலாக அமைந்தது.
அவ்வகையிற் கொழும்பு நகரில் ஆடி வேல் விழாவையொட்டி எழுந்த ஒரு பாடலை மு.இராமலிங்கம் அவர்கள் தந்துள்ளார். ஆடிவேல் விழா கடந்த நூற்றாண்டில் தொடக்கத்திலிருந்தே கொழும்பு மாநகரில் நிகழ்ந்து வரும் ஒரு நிகழ்ச்சியாகும். அது குறித்து எழுந்த பாடல் வருமாறு :
'வருஷா வருஷ மெல்லாம்
வருகுதடி வெள்ளி ரதம்
கதிரேசன் பேரைச் சொல்லிக்
கையெடுப்பார் கோடிசனம்'
நாட்டார் பாடல்களை ஆங்கில மரபுதழுவி வகைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை மு.இராமலிங்கம் அவர்கள் மேற்கொண்டார். தமது தொகுப்பில் தமிழ்த் தலைப்புக்கு இணையான ஆங்கிலச் சொற்களையும் தந்துள்ளமை ஆங்கில பகுப்பாய்வு முறையோடு அவருக்கிருந்த அறிகை இணைப்பைப் புலப்படுத்துகின்றது. அவர் மேற்கொண்ட தொகுப்பு முயற்சியில் முக்கியமாகக் கருதத்தக்கது ஒப்பாரிப் பாடல்களைத் தொகுத்தமையாகும். ஒப்பாரிப் பாடல்கள் இலக்கிய அந்தஸ்துப் பெறா வடிவங்கள் என்ற அறிக்கைக் காட்சி மேம்பட்டிருந்த காலகட்டத்திலே அவற்றைத் தேடித் தொகுத்து அச்சேற்றியமை யாழ்ப்பாணத்துச் சூழலில் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. அதன் தொடர்பாக "கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரிகள்’ என்ற தொகுப்பை அவர் 1960ஆம் ஆண்டிலே வெளியிட்டார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து பிரித்தானிய மரபில் எழுச்சி கொள்ளத் தொடங்கிய நாட்டாரியல் அறிவானது

Page 59
ஆங்கிலக் கல்விவாயிலாக இந்நாட்டிலே ஊன்றிப் பரவலுற்றாலும் ஒரு சிலரே அத்துறையில் ஆர்வம் காட்டினர். பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து இந் நாட்டில் வளர்ச்சிபெறத் தொடங்கிய வானொலி ஒலிபரப்பானது ஆங்கிய மாதிரிகையைப் பின்பற்றி இந்நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்டது. பிரித்தானிய ஒலிபரப்பில் நாட்டார் பாடல்களுக்கும் நாட்டார் இசைக்கும் முக்கிய இடமளிக்கப்பட்டது. அதனைப் பின் பற்றி இலங்கையிலும் அத்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட வேளை மு.இராமலிங்கம் அவர்களது பங்கு பற்றல் உள்வாங்கப்பட்டது. வானொலி வழங்கிய ஊக்கமும் அவரது செயற் பணிகளுக்கு விசையூட்டின. இலங்கையிலே நாட்டார் கலைத் தொகுப்பு ஒரு தனியாள் முயற்சியாக மேலெழுந்தது. ஒருங்கமைக்கப்பட்ட நிறுவன முயற்சியாளராக அது மேலெழவில்லை. நாட்டாரியல் தொடர்பான கழகங்கள் பின்னர் தோற்றம் பெற்றாலும் அவற்றிலே ஆளுமைகளே மேலோங்கி நின்றன.
இராமலிங்கம் அவர்களது பணிகள் முன்னேற்றம் பெறுவதற்குப் பின்புலமாக விளங்கியவர் இதழாசிரியர் எஸ்.டி.சிவநாயகம் ஆவர். அவர் ஆசிரியராகவிருந்த ‘சுதந்திரன்’ வார இதழில் நாட்டார் பாடல்களைத் தொகுத்து வெளியிடுமாறு அவர் உற்சாகப்படுத்தினர். அந்நிலையிலே நாட்டார் பாடல்களைத் தொகுத்தலும் வெளியீடு செய்தலும் பல தள முக்கியத்துவங்களைக் கொண்டிருந்தன. தமிழர்களது தேசிய அடையாளங்களைக் கண்டறிவதற்கு வரலாற்றுச் சான்றுகள் போன்று நாட்டாரியற் சான்றுகளும் வலிமையானவை என்ற கருத்தில் எஸ். டி. சிவநாயகம் அவர்களும் மு. இராமலிங்கம் அவர்களும் உடன்பாடு கொண்டிருந்தனர். அந்நிலையில் நாட்டார் இலக்கியங் களைத் தேடி வெளியிடும் நடவடிக்கைகளில் உற்சாகம் காட்டப்பட்டது.
தமிழ் தேசிய உணர்வுக்கு வலுவூட்டும் சந்தப் பாடல்களை உருவாக்கிக் கொள்வதற்கும், அவ்வாறான சந்தங்களையும் சொல்லாடல்களையும் பயன்படுத்தி புதிய கவிதைகளை உருவாக்கிக் கொள்வதற்கு நாட்டார் பாடல்களின் வழங்கலும் அளிக்கையும் முக்கியமானவை என இருவரும் கருதினர். அவற்றின் நேரடிச் செல்வாக்காக சுதந்திரன் வார இதழிலே நாட்டார் பாடல்களின் சந்தங்களையும் மெட்டுகளையும் அடிப்படையாகக் கொண்ட கவிதைகள் வெளிவரலாயின.
அதே காலகட்டத்தில் இந்தியத் தமிழகத்திலும் நாட்டார் பாடல்களைத் தேடித் தொகுக்கும் முயற்சிகள் மேலெழுந்தன. பேராசிரியர் வானமாமலை, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன், கல்கி ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இத்துறையிலே ஆர்வம் காட்டினார். கலை மகள் மற்றும் கல்கி ஆசிரியர் ஆகியோருக்கும் வட்டுக்கோட்டை மு.இராமலிங்கம் அவர்களுக்கும் தொடர்புகள் ஏற்பட்டன. இலங்கையின் நாட்டார் பாடல் தொகுப்புகளை அவர்களின் பார்வைக்கும்

அனுப்பி வைத்தார். அவரது முயற்சிகள் வானொலியிலும் இதழ்களிலும் பிறிதொரு செல்வாக்கையும் ஏற்படுத்தின.
நாட்டார் பாடல்களையும், நாட்டாரியல் தொடர்பான
தகவல்களையும் விரும்பிக் கேட்கும் நேயர்களின் எண்ணிக்கையும் வாசகர்களின், எண்ணிக்கையும் அதிகரிக்கலாயின. தொடர்ந்து வீரகேசரி, தினகரன் முதலாம் வார இதழ்களிலே மு.இராமலிங்கம் அவர்கள் எழுதிய கட்டுரைகளும் நாட்டார் பாடல் தொகுப்புக்களும் வெளிவந்தன. நாட்டார் பாடல்களை ஆவணநிலையிலே பாதுகாத்தல் வேண்டும் என்ற செயற்பாட்டிலும் மு.இராமலிங்கம் அவர்கள் கவனம் செலுத்தினார்.
தொகுப்புகளை வெளியிடும் பொழுது அவர் பிரதி பேதங்களை மாற்றங்கள் இன்றி வெளியிட்டார். சொற்கள் எதிலும் மாற்றங்களைச் செய்ய அவர் முற்படவில்லை. அதாவது நாட்டார் பாடல் வடிவங்களின் மெய்ம்மைநிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது. நாட்டாரியல் தொடர்பான அணுகுமுறைகளும் ஆய்வுகளும் தொடர்பான ஆங்கில நூல்கள் வழியாகக் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை அவர் தொகுப்பு முயற்சியிலே பயன்படுத்தியமையால் உள்ளதை உள்ளவாறே வெளியிட வேண்டுமென்று கருதினார். அவரிடத்துக் காணப்பெற்ற புலமை நேர்மையினை அது வெளிப்படுத்துகின்றது. vడ్డ

Page 60
Botanical Name - Azadirachta indica Family - Mediaceae English - Neem Tree Sinhala - Kohomba
 
 
 
 

இலக்கியத்திலும் ருத்துவத்திலும் வேம்பு
கலாநிதி திருமதி.விவியன் சத்தியசீலன்
மிழ் நாட்டின் இயற்கைச் சூழலிலே தமிழர் பண்பாட்டில் வளர்ந்த மருத்துவக் கலையே "சித்த மருத்துவம் ஆகும். அதனாலேயே இதற்குத் தமிழ் மருத்துவம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. மனிதனின் மொழிப் புலமையின் விளைவே இலக்கியம் ஆகும். அது போல மனித இனத்தின் பகுத்தறிவுக்கு இயற்கை அளித்த பரிசே மருத்துவமாகும். ஆகவே தமிழ் மக்களுக்கு இயற்கை அளித்த அருஞ்செல்வங்களுக்குள் இலக்கியமும், சித்த மருத்துவமும் மிகப் பழைமை வாய்ந்தனவாகும். அந்த வகையில் தமிழர் வாழ்வோடு வேம்புக்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியங்களில் போரும் வீரமும் பற்றிய செய்திகள் பேசப்படும் அதேவேளை, போர்க்களத்தில் படுகாயமுற்றோர் பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளன. எனவே காயப்பட்டவர்களுக்கு இரண சிகிச்சை முறைகளும் அக்காலத்தில் இருந்திருக்கும். பண்டைநாளில் இரண சிகிச்சை முறைகளில் மருந்து மரங்களின் பட்டை, பால், இலைச்சாறு முதலியவற்றினால் பெறப்படும் மருந்துகளும் பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கு புறநானூற்றின் 180 ஆம் பாடலின் மூலமும் தெளிவாகிறது.
"இரும்புச்சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்த்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்றி மயங்கிய யாக்கையன்’
(புறம் - 180, 4 - 6) பட்டை, பால் என்பன எடுப்பதற்காக வெட்டப்பட்ட மருந்து மரத்தின் தோற்றத்திற்குப் பகை மறவரின் இரும்பாயுதங்களால் பதம் பார்க்கப்பட்ட உடம்பினை இப்புலவர் ஒப்பிடுகிறார்.
ஆயுள் வேதம் கூறும் அட்டாங்க சிகிச்சை முறைகளில் ஒன்று பூதவித்தியா ஆகும். இது கெட்ட ஆவிகளைப் போக்கும் மருத்துவ முறையாகும். பழங்காலத்தில் போர்க்களத்தில் புண்பட்டவர்களிடம் கெட்ட ஆவிகள் அணுகாத வண்ணம் வீட்டிலே வேப்பிலை தொங்க விடுதல், அகில் புகை பிடித்தல், இசை பாடுதல் என்பன நடைபெற்றுள்ளன. இதற்குத் தற்காலத்தில் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் பல கொடுக்கப்பட்டாலும், அன்றைய நிலையில் சமய ரீதியான நம்பிக்கையே பெரிதும் போற்றப்பட்டமையை பின்வரும் பாடல் சான்று படுத்துகிறது. -
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரி வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்கக் கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசைமணி எறிந்து காஞ்சி பாடி

Page 61
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே'
(புறம் 281) இரவ இலையினையும், வேப்பிலையினையும் மனையின் இறப்பிலே செருகுவோம் எனத் தொடர்ந்து செல்கிறது பாடலின் பொருள். இதன் மூலம் வேப்பிலைக்கு தமிழர் வாழ்வில் உள்ள முக்கியத்துவம் புலப்படுகிறது.
மேலும் தமிழர் வாழ்வில் குழந்தை பெற்ற பெண்களுக்கும் வேப்பிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. குழந்தை பெற்ற பெண்களுக்கு வேப்பிலைக் காயம் கொடுப்பார்கள். வேப்பிலை 3 பங்கு, பாகலிலை, திராயிலை, குறிஞ்சாவிலை ஆகியவை ஒரு பங்கு துவைத்துச் சாறு கொண்டு கடுகு, மிளகு, சுக்கு, உள்ளி, கடுக்காய் சமன் கொண்டு அரைத்துக் கரைத்துக் காயங் காய்ச்சி சிற்றாமணக்கெண்ணையில் உள்ளி நறுக்கித் தாளிதஞ் செய்து கிண்டிக் காலையில் கொடுப்பார்கள்.
பிரசவித்த பெண்ணின் உணவு முறையுடன் அவளின் குளிப்பும் முக்கிய இடம் பெறுகிறது. 3 ஆம், 5 ஆம், 7 ஆம் நாட்களில் மூலிகை, பட்டைகள், இலைகள் என்பவற்றை அவித்துக் குளிக்க வார்ப்பார்கள். இதனால் கருப்பை வலுவடைவதுடன் அழுக்குகள் நீங்கி தாய்ப்பாலும் அதிகம் சுரக்கும்.
'வேம்பாடாதோடையே மாவிலங்கையே நொச்சியொன்றிற் காம்பிலை நிரிற்காய்ச்சிக் கருத்துடன் குளித்து மஞ்சள் சோம்பற வயிற்றின் மார்பிற் றுகளிலா வகையே பூசி
ஆம் வகை குளித்துப் பத்து நாளுமங் ககன்ற பின்னர்' என இருபாலைச் செட்டியார் மூலிகைக் குளிப்பு பற்றி எடுத்துரைத்துள்ளார். பிள்ளை ஆமணக்கிலை (சிற்றாமணக்கிலை), ஆடாதோடையிலை, மாவிலங்கம் பட்டை, வேம்பம் பட்டை, கருநொச்சியிலை, பருத்தியிலை ஆகியவற்றை அவித்து அந்த நீரைக் கொண்டு குளிக்க வார்ப்பர். அத்துடன் அவ்விதம் குளிக்க வார்க்கும் போது மேற்படி இலைகளால் அழுத்தித் தேய்த்து உரஞ்சி ஒத்தடமும் கொடுப்பர். இவ்விதம் குளிக்க முன்னர் வேம்பம் பட்டை அவித்த நீரைச் சிறிது பருகக் கொடுப்பர். இத்தகைய பழக்க வழக்கங்கள் இன்றும் கிராமப் புறங்களில் பின்பற்றப்படுகின்றன. மேலும் பூப்படைந்த பெண்களுக்கு வேப்பம் இலைச்சாறு, கத்தரிப்பிஞ்சுச்சாறு, நல்லெண்ணெய், முட்டை ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து குடிக்கக் கொடுப்பார்கள். காலை - மாலை வேளைகளில் வேப்பிலை, மஞ்சள், சீரகம் ஆகியவற்றை அரைத்துக் காயமாக்கிக் உண்ணக் கொடுப்பார்கள்.
இவ்வளவு சிறப்பு மிக்க வேம்பானது இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்தது. இதன் அடி மரம் செங்குத்தாகவும், 20 மீற்றர் உயரம் வரை வளரக்கூடியதாகவும் இருக்கும். வேம்பின் இலைகள் சிற்றிலைகளாக 5 - 15 கொண்ட தொகுப்பாக கிளைகளின் நுனியில் அமைந்திருக்கும். இவ் இலைகள் LDL - Giv விளிம்பில் வாள் வடிவில்

盡 អ៊ែងហ្គ្រាម៉ាអៃ
61
அமைந்திருக்கும். மலர்கள் வெள்ளை நிறத்தில், தேன் மணம் கொண்ட நீளமான மஞ்சரியாக இருக்கும். கனிந்த நிலையில் மஞ்சள் நிறம் கொண்ட ஒரு விதை கொண்ட வேம்பம் கனியானது, விதைகளில் எண்ணெய்த் தன்மையைக் கொண்டு காணப்படுகின்றது. மருத்துவ குணம் நிறைந்த வேம்பை 'கிராமத்தின் மருந்தகம்’ எனச் சிறப்பித்துக் கூறுவார்கள். வேப்ப மரத்தின் ஒவ்வொரு அங்கமும் மருந்தாகப் பயன்படுவது இயற்கை அன்னை கொடுத்த வரப்பிரசாதமாகும். அறுசுவைகளில் ஒன்றான கைப்புச் சுவையானது கட்டாயம் உணவில் சேர்க்கப்பட வேண்டும். கைப்புச் சுவை உணவை இலகுவில் ஜீரணிக்கச்செய்யும். உடலில் கிருமிகளை சேர விடாது. உடலில் சேரும் மேலதிக கொழுப்புச் சத்தையும் குறைக்கும்.
கிராமங்களில் மருந்தாக வேம்பு
குழந்தைகளுக்கு மாந்தம் ஏற்பட்டாலோ, மலம் வெள்ளையாக இருந்தாலோ, நுரையுடன் வயிற்றுப் போக்கு ஏற்பட்டாலோ வேப்பிலையை உருவி 5 - 6 ஈர்க்கு, அதற்குச் சமமாக பொடுதலை ஈர்க்கு, மாவிலை ஈர்க்கு, புளியிலை ஈர்க்கு, நெல்லியிலை ஈர்க்கு, நுரையிலை ஈர்க்கு ஆகியவற்றை எடுத்து, இரண்டாகக் கிள்ளிப் போட்டு, தண்ணிர் சேர்த்து மண் பாத்திரத்தில் கஷாயம் வைக்க வேண்டும். தண்ணிர் பாதியளவு சுண்டியதும் வடிகட்டி எடுத்து, 4 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஒரு தேக்கரண்டி அளவு கொடுக்க நோய் குணமாகும்.
வேம்பங் கொழுந்து 2 கிராம், கறிவேப்பிலை 1 கிராம் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் உட்கொண்டு வந்தால் நீரிழிவு குணமாகும். வேம்பம் பச்சைப் பட்டையின் காய்ந்த பகுதியை நீக்கி விட்டு பஞ்சு போல இடித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மண் சட்டியில் 300 மில்லி லீற்றர் பசுப்பாலை ஊற்றிப் பானையின் வாயில் ஒரு துணியைத் தொய்வாகக் கட்டி அதன் மேல் இடித்த வேப்பம்

Page 62
கலைக்கேசரி கி 62
பட்டைத் தூளை வைத்து மூடிச் சிறு தீயில் எரிக்க வேண்டும். தூளின் எடையில் கால் பங்கிற்கு மிளகுத் தூளைக் கலந்து, அக்கலவையில் இருந்து அரைத் தேக்கரண்டி காலை - மாலை உணவுக்குப் பின்னர் உண்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
வேம்பங்கொழுந்தை மை போல அரைத்து தேய்த்துக் குளித்தால் சொறி, சிரங்கு போன்ற சரும நோய்கள் குணமாகும். வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கிற்குப் பற்றிடலாம். வேப்பிலை அவித்த நீரைக் கொண்டு புண்களைக் கழுவி வந்தால் புண்கள் ஆறும். வேம்பம் பழச்சதையுடன் சம அளவு வெல்லம் சேர்த்து உண்டு வந்தால் தோல் நோய்கள் நீங்கும்.
வேப்பம்பூ, இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை துவையலாக அரைத்து காலை உணவோடு உட்கொண்டு வந்தால் பித்தப்பை நோய்கள் குறையும். வேப்பம் பூ மிளகு, சீரகம் சேர்த்து உட்கொண்டால் உடல் சூடு தணியும். நிழலில் உலர்த்திய வேம்பம் பூ, காய்ந்த கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக இடித்து, பின்னர் சேர்த்து இடித்து உப்பு சேர்த்து காலை உணவுக்கு முன்னர் ஒரு தேக்கரண்டி உண்டு வர வாந்தி, குமட்டல், இழுப்பு, வயிற்றுப் பொருமல், வயிற்றுப் புழு சம்பந்தப்பட்ட நோய்கள் தணியும். வேப்பிலை, பூ, பட்டை, உள்கட்டை, பிசின் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூளாக்கி, ஒன்றாகக் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அக்கலவையை 40 நாட்கள் காலை - மாலை 1 கிராம் அளவு தேனுடன் கலந்து உட்கொண்டு வர உடல் பலம் பெறும். வேப்பம் பூக்களைத் தேனில் ஊற வைத்து 'வேப்பம் பூ குல்கந்து தயாரிக்கலாம். விரைவில் கெட்டுப்போகாத வேம்பம் பூ குல்கந்தில் சிறு உருண்டையை வாயில் போட்டு விழுங்கி விட்டு, வெந்நீர் குடித்தால் பித்தம் தெளிந்து, உடல் பலம் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
வேப்பிலை, வேப்பம் விதை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்த வேண்டும். ஒரு மண் சட்டியில் நெருப்பைப் போட்டு, தீ தாங்கும் அளவுக்கு அடைகளைப் போட்டு, விரல் அளவு தூவாரம் உள்ள சட்டியால் மூடி மூடிய வீட்டுக்குள் 30 நிமிடங்கள் வைத்தால் கொசுத்
தொல்லை நீங்கும்.
 

2 தேக்கரண்டி வேப்பிலைச் சாற்றை உண்டு வர, முகப்பரு, வடுக்கள் மறையும். வேப்பம் பருப்பு 200 கிராம், பச்சை வேப்பம் பட்டை 100 கிராம், வேப்பம் காயின் சதை 100 கிராம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய் 1 லீற்றர் எடுத்து, சூடேற்றி அதில் வேப்பம் பட்டையைப் போட்டு மூடி 5 நிமிடங்களின் பின்னர் வேப்பம் பருப்பைப் போட்டு மூடி 10 நிமிடங்கள் சிறு தீயில் எரித்த பின்னர், வேப்பங்காயின் சதையைப் போட்டு மூடி சிறு தீயில் எரிக்க வேண்டும். தைலப் பதம் வந்ததும் இறக்கி ஆறவிட்டு, அடியிலுள்ள சக்கையை விடுத்து தெளிந்த எண்ணெயை, சொறி, சிரங்கு, சேற்றுப் புண், படை முதலிய நோய்களுக்கு மேற் பூச்சாகப் பயன்படுத்தலாம்.
நூறு வயதுடைய வேப்ப மரத்தின் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவற்றைச் சேகரித்து உலர்த்திப் பின்னர் அனைத்தையும் கலந்தெடுத்து பட்டுப் போன்று அரித்து எடுத்து, சுத்தமான புட்டியில் இறுக மூடி வைத்துக் கொள்ளவும். தொடர்ந்து 3 மாதங்கள் காலை - மாலை வெறும் வயிற்றில் ஒரு கடலையளவு பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால், வயோதிபத்திலும் வாலிபப் பருவத்துடன் இருக்கலாம்.
வேப்ப மர பரண் (இயற்கை வைத்திய முறை)
இந்தியாவின் வட நாட்டில் மிக அடர்த்தியான, பெரிய வேப்ப மரத்தோப்பு உள்ளது. அங்கு மிக வயதான வேப்ப மரங்கள் செழித்து வளர்ந்து உள்ளன. அவ்வேப்பத் தோப்பில் மரத்துக்கு மரம் சற்று உயரமான பரண்களை அமைத்து, வாடகைக்கு நோயாளிகளுக்குக் கொடுக்கிறார்கள். வேப்பம் காற்றிலேயே பல வியாதிகள் குணப்படுவதால், பலர் அங்கு தங்கி சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். அங்கு மூலிகைக் குளியல் வசதியும் காணப்படுகிறது. இவ் இயற்கை ஆரோக்கியமும் ஒரு வைத்திய முறையாகும்.
உசாத்துணை நூல்கள் இலக்கியத்தில் மருத்துவக் கருத்துக்கள் - கலாநிதி இ. பாலசுந்தரம் சித்த மருத்துவ மகப்பேற்றியலும் மகளிர் மருத்துவமும்டாக்டர். சே. சிவசண்முகராஜா M.D.S.
தொகுப்பு - பிரியங்கா

Page 63
Unique Features
ாக BCAS விரிவுரையாளர்களின் உதவியுடன் UK
விரிவுரையாளர்களால் நடாத்தப்படும் விரிவுரைகள்.
* மிகக்குறைந்த 5000(E) பெளன்ஸ் கட்டணத்தில் RICS
அங்கீகாரம் கொண்ட MSC பாடநெறியிணைஇங்கிலாந்தில் கற்பதற்கான வாய்ப்பு.
* பாடநெறியின் இறுதிப்பகுதியினை தொழில் வாய்ப்புடன்
கட்டாரில்அல்லது இங்கிலாந்தில் தொடர்வதற்கான வாய்ப்பு.
ான் UK பல்கலைகழகத்தின் நூலகம் மற்றும் ஏனைஉசாத்துணை
வசதிகளை இங்கிலாந்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு.
British College of Applied Studies
Building careers... transforming lives.
 
 
 
 
 
 
 

7 ISO 9001 - 2008 : | | | W | CERF E
SIVIII
Y OF
VERHAMPTON UK
Course Fee:
For Details Subject to approval O77 283 45.95 077 266 0.29
32, Dharmarama Road, Colombo 6.
Hotline: 2559255

Page 64
ក្រឡាញhិ 彦
இராவணனின் விமான 6)ll|fu
ராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகின்றன. இலங்கை மக்களைப் பொறுத்தவரையில், இராவணன் இலங்கையை சிறப்பாக ஆட்சிசெய்த ஒரு அரசன் எனும் கருத்து மேலோங்கி உள்ளது. இலங்கை தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியிலும் இதே கருத்து ஆழ வேரூன்றிக் காணப்படுகின்றது.
இராவணனுக்கு பத்துத் தலைகள் உள்ளதாக இராமாயணத்திலும் ஒவியங்களிலும் சிற்பங்களிலும் சித்திரிக்கப்படுகின்றது. இங்கே பத்துத் தலைகள் என்பது பத்துத் துறைகளில் தலை சிறந்தவனாக இராவணன் இருந்தான் என்பதாகும். வீணை வித்துவான், சிவபக்தன், போராற்றல் கொண்ட வீரன் போன்ற பத்து குணாதிசயங்கள் கொண்டவனாக கருதப்படுகின்றது. இவன் 27 நூல்களை யாத்துள்ளதாகவும் அறியப்படுகின்றது.
இராவணன் 9F| TLD வேதத்தில் நிபுணத்துவம் பெற்றிருப்பதற்குச் சான்றாக, இவன் தனது கை
მემბიენტად வாரியப்பொல
 
 
 

நிலையம் இருந்த இடம்
b)LuTT6NJ
நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாக இராமாயணம் கூறுகின்றது.
இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானம் தேவதச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானமாகும். இதைக் குபேரனுக்குப் பிரம்மதேவர் பரிசாக அளித்தார். குபேரனோடு போர் புரிந்த இராவணன் அவனது புஷ்பக விமானத்தைக் கைப்பற்றியதுடன் மட்டுமல்லாது, அந்த புஷ்பக விமானத்தில் ஏறி பல உலகங்களுக்கும் சென்று வெற்றி கொண்டார். இது தொடர்பான குறிப்புகள் இராமாயணத்தில் இருக்கின்றன. இந்த விமானத்தில்தான் சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து வந்தான். புராணங்கள் மற்றும் இலக்கியங்களின் தகவல்களின்படி விமானத்தில் பயணம் செய்த முதலாவது அரசனாக இராவணன் விளங்குவதாக அறிய முடிகின்றது.
விஞ்ஞானம் வளர்ச்சியுறாத புராதன காலத்திலேயே இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் தூரதேச உலகங்களுக்கு பறந்து சென்று வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றை அதீத
கற்பனை என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் புராணங்களும். இதிகாசங்களும் நடக்காதவற்றை,

Page 65
நடக்கவே முடியாதவற்றைப் பற்றி பேசுகிறது என்று கருதி வந்த நமக்கு அவைகள் உண்மைக்கு புறம்பானவை அல்ல, ஒரு காலத்தில் பூமியில் நடந்த சரித்திரங்களே என்பதை நிரூபிக்க பல சான்றுகள் தற்போது கிடைத்துள்ளன.
பறக்கும் திறன் உடைய வாகனத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் என்பதிலும், அவ் வாகனங்களின் மூலமாக பல கிரகங்களுக்கு சென்று வந்தார்கள் என்பதிலும் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நமது வேதங்களில் இறைவனை வழிபடுவதற்கான குறிப்புகள் மட்டும் காணப்படவில்லை. மாறாக விவசாயம், இரசாயனம், வானியல் பற்றியெல்லாம் தேவரிஷிகள் விரிவாக கூறியுள்ளார்கள், ரிக்வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்தியாயம் ஆறாவது சுலோகத்தில் காற்று நிரப்பிய ரதம் ஒன்றை வானவெளியில் நமது விருப்பப்படி செலுத்துவதற்கான வழிமுறை கூறப்பட்டுள்ளது.
இன்னும் பலவிதமான விமானங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பழைமையான ஏட்டுச் சுவடிகளிலும் கிரகந்த நூல்களிலும் காணக் கிடைக்கின்றன.
இராவணன் விமானவியல் சாஸ்திரங்களை நன்றாக கற்றுத் தேர்ந்தவனாகவும் இயந்திரங்களின் நுட்பங்களை அறிந்தவனாகவும் வானவீதியில் விமானத்தை செலுத்தவும் நிலையாக நிறுத்தவும் முன்னும் பின்னும் மேலும் கீழும்
༩་ལྟའི་
 

E0.
65
வட்டமாகவும் தலைகீழாகவும் விமானத்தை ஒட்டவும் தெரிந்தவனாகவும் இருந்தான் என இராமாயணம் கூறுகின்றது.
விமானவியலில் இத்தகைய தேர்ச்சி பெற்ற இலங்கை வேந்தன் இராவணனின் விமான நிலையம் எங்கே? எப்படி? இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் நரூபிக்கத்தக் கனவாக இல்லை. அதாவது விமான நிலைய விபரங்கள் ஏட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கவில்லை, அல்லது அகழ்வாராய்ச்சிகள் மூலம் எதுவித சான்றுகளும் கிடைக்கப் பெறவில்லை. இருந்தபோதிலும் இலங்கை மக்களிடையே, தமிழர் சிங்களவர் என்ற இரண்டு இனத்தாரிடம்கூட இராவணனின் விமான நிலையம் இலங்கையின் மத்திய பகுதியில் இருந்ததற்கான நம்பிக்கை வலுவாகக் காணப்படுகின்றது. இதற்குச் சான்றாக வரலாற்றுப் பெருமைமிக்க சிறிய கிராமம் ஒன்றுக்கு விமானம் ஏறி இறங்கிய இடம் என்ற பொருள்பட பெயர் சொல்லி அழைக்கப்படுகின்றது.
இந்தக் கிராமம் கடல்மட்டத்திலிருந்து 94 மீற்றர் உயரத்தில் காணப்படுகின்றது. இலங்கையில் நாகர்களின் தொன்மையை பறைசாற்றும் ஈஸ்வரங்களும் சிவ வழிபாட்டில் தலைசிறந்திருந்த இராவணனின் வரலாற்றுடன் தொடர்புபட்ட எச்சங்களாகத் திகழ்கின்றன. இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலாகிய
திருக்கேதீஸ்வரம்.கிழக்குப் பகுதியில் திருகோணமலையில்

Page 66
560605 35Fin Æ 66
எழுந்தருளியுள்ள திருக்கோணேஸ்வரம், மேற்குப் புறத்தில் சிலாபத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கீரிமலைப் பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரம் ஆகிய ஆலயங்களில் இரா வணன் நித்திய வழிபாடுகளில் ஈடுபட்டதாக இராமாயணம் கூறுகின்றது. இந்த நான்கு ஈஸ்வரங்களுக்கும் இலகுவில் வழிபாட்டுக்கு சென்றுவரக்கூடிய கேந்திர முக்கியத்துவம் மிக்க மையப் பகுதியில் இராவணன் தனது விமான நிலையத்தையும் தனது இருப்பிடத்தையும் அமைத்திருக்கக் கூடிய நிகழ்தகவுகள் அதிகம் காணப்படுகின்றன. ஏனெனில் இந்த ஆலயங்களுக்கு நாள்தோறும் சென்று வர இராவணன் தன்னுடைய விமானத்தைப் பயன்படுத்தி இருக்க முடியும்.
இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் உள்ள வாரியபொல என்ற கிராமமே இத்தகைய சிறப்புக்கும் புகழுக்கும் உரித்தான கிராமமாகும். வாரியபொல என்ற இந்தக் கிராமத்திலேயே இராவணனின் விமான நிலையம் மற்றும் கோட்டை இருந்ததாக இலங்கை மக்களால் நம்பப்படுகின்றது. 'வானோடும் கலம் இறங்குமிடம் என்ற வாக்கியத்தின் சிங்களப் பதம் வாரியபொல என்பதாகும்.
இதற்கேற்ப இப்பகுதியின் தரைத்தோற்றம் காணப்படுகின்றது. விமானம் ஏறி இறங்குவதற்கு வசதியாக காற்றின் வேகத்தைக் இயற்கையாகவே கட்டுப்படுத்தத் தக்கவாறு மூன்று பக்கங்களும் அரண் போன்று குன்றுகளின் தொடர் காணப்படுகின்றது. வடக்கே பரந்த
சமதரை வெளிகளும் காணப்படுகின்றன. இவை
 

இக்கிராமத்தின் மீது விமானநிலையம் இருந்ததற்கான வாய்ப்புகளை சாதகமாக வகையில் கவனத்தைச் செலுத்தத் தூண்டுகின்றன.
வாரியபொல கொழும்பிலிருந்து 89 கி.மீற்றர் தூரத்திலும் புத்தளத்திலிருந்து 90 கிலோ மீற்றர் தூரத்திலும் குருநாகலில் இருந்து 8 கி. மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
இராவணனின் கோட்டையும் விமான நிலையமும் இருந்ததாக கவனிப்புக்குள்ளான இடங்கள் இப்போது பெரியளவில் மாற்றங்களைக் கண்டிருக்கின்றன. விமான நிலையம் மற்றும் இராவணன் கோட்டை இருந்ததற்கான சுவடுகள் எதுவுமின்றி இப்பகுதிகள் தற்போது வயல் வெளிகளாகவும் தென்னந் தோப்புகளாகவும் நீர் நிலைகளாகவும் காணப்படுகின்றன.
இத்தகைய பெருமை பெற்ற இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியமாகப் இராவண காப்பியம் படைக்கப்பட்டது. இராவண காவியம் என்ற இலக்கியம் புலவர் குழந்தையினால் இயற்றப்பட்டது. இதைத் தமிழ்நாடு அரசு தடை செய்து விட்டது. வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளை இராவண காவியம் அடிப்படையாகக் கொண்டு, இராவணனை நல்ல இயல்புகள், சிறப்புகள் உள்ள நாயகனாக காண்பிக்க முயல்கின்றது. இராவணனுக்கு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் கோவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இராவணன் என்ற பெயரின் பொருள் இருஆவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்பதாகும். மேலும்
பிறர்க்கில்லா அழகன் என்னும் பொருளும் உண்டுது
- மிருணாளினி

Page 67
C_5 / v_/v_/v_2 ∼ 1~~~ 「, 《: ~ :「자(《, , 《 》----
/boo)
(stos@o@ (also oo-/g, og Ølgoć, polos)
:-/OOOZ, QD QQŪsiņ09ft), JZJ dwg思w활떨hm昌昌a wg법원통편 ĢģÊglo hsusmaņols @Ų@mssing ĢĪhņus, Zilms@-/ooooooool's
(Rosso@ (1998-/60) og Ølgod
 
 

síl,
uuooo exsue||os|^^^^^^ :qılı99ĒĢInı90909€. Ç6ț7 06ç ZILO :ọ9qogħqodo911@to) 8 – 96ç £çç ZILO {{Tīg)ɑ9c0911@to) LLZ Zçç ZILO :HTJđidoos@ 61109-ı-ās Z87 G/9 € //0 +4XƏL/||2O
"pij (voluoj) motywodao: »zuwangue agg
•*s meum seues : .
Įılmáis spulsoņu-a sið Áo||od əJIT əund
(soos@o@ (1998-//Lo) (Đạisigoo solos)
; /^^^o-(1) Q}{Tiffii000?? [7]

Page 68
நைன் வெல்ஸ் கெயார் தாய் சேய் வைத்தியசாலை 55/1, கிரிமண்டல மாவத்தை, நாரஹேண்பிடிய, கொழும்பு 05, W. NineWells Care.com
Printed and published by Express Newspapers (Ceylon I
 

பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களிsолшта, எல்லா வயதுடைய பெண்மணி
សាធាយ பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
vt)Ltd3t Pło ..185, Grandp3ss road, Colombo -14, Sri Lanka.