கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2010.07

Page 1
§  ်̈ s s S.
ERA EVENTS
భ ། eg erec in fie Deງ
يلي:
INR 40000 CANADAC
SIR ANKA SR 200 000 AUSTRAL.A.A.
SINGAPORE SGS 400 SWISS..........
 

OO
O
邸
|-藏
GB: 6
EUR 7
響 *) 響 密 戀 | ()
EUROPE
USA
UK
HF f O.00

Page 2
ய் வைத்தியசாலை
- காழும்பு 05
ஹண்பிடி
sCare
சே
Tui
藝
ல் கெயார் மண்டல மாவ
நைன்
囊妻
55/1, கிரி
COF
nee
N
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கருக்கட்டலுக்கான சாத்தியக் கூறுகளையும் (Sub Fertility) அகக்கருக் கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும்
ਸੀ। இனப்பெருக்க காலத்தின் ன்னரும் எமது தொழில்நுட்பதிறன்களிஎல்லா வயதுடைய பெண்மணி=តានាយ பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.

Page 3
வைத்தி சனல் ெ
இலகுவான
உங்கள் தொலைபே 225 அன
24 D600f நேரத்தையும் பணத்
CHANNELLIN
THE EASY WAY TO CHANNEL YOUR DOC
UUUUUU. eChannelling.COM
O11 53OO 4OO
 
 
 
 
 
 
 
 
 

UJ60) சய்ய
வழிகள்
6.TIF6)TÜ சியிலிருந்து ழைக்கவும்.
நேர சேவை தையும் சேமியுங்கள்.
etİSalat
பிரதிபலிக்கும்

Page 4

*GODLI’ ILLUD
காமன் கூத்து
O6 உடலுக்கும் உறவுக்கும் சுகம் தரும் மோதிரம்
O சிரிப்பின் மூலம் சிந்திக்க வைத்த
கலைவாணர்
14. நடனத்தில் பாணி என்று எதுவும் கிடையாது'
- ஊர்மிளா
24 ‘என் கண்கள் உங்கள் மேல் தான்'
- விபுலானந்தர்
38 "களையெடுத்தால் தான் கலை வாழும்
42. அழகும் ஆபத்தும்
மீளுருவாகும் கூத்துக்கள்
SO தமிழர் வாழ்வில் பூப்புனித சடங்கு

Page 5
கலை உணர்வுப் பெருமை
அன்புள்ள கலைக்கேசரி வாசகர்களுக்கு
வணக்கம் கலைக்கேசரியின் ஆறாவது இதழ் உங்கள்
கிடைத்திருக்குமென நம்புகின்றோம். கலைக்கேசரிக்குப் ெ
நல்லாதரவு மகிழ்ச்சியைத் தருகிறது.
மேலும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்ை கலைக்கேசரி வெளியிட்ட சிறப்பு மலரும் அறிஞர் வாசகர்களினதும் வரவேற்பைப் பெற்றுள்ளோம். இரட்டிப்பு 'சென்றிடுவீர் எட்டித்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் ெ சேர்ப்பீர் என்றார் பாரதி. எட்டுத்திக்கிலும் இருந்து மாநாட்டுக்கு அறிஞர்கள் பெருமக்களிடையே கலைக்கேசரி மூலம கலையுணர்வைப் பகிர்ந்து கொண்டோம் என நாம் பெருமை ெ அல்லவா - மேலும் இத்தகைய உணர்வுப்பகிர்வுச் சந்தர்ப்பங்க வேண்டும் என்பது எமது பெருவிருப்பம்.
இந்த ஜூலை இதழும் உங்களது எதிர்பார்ப்புகளை செய்யும் என்றே நம்புவோம். உங்கள் கருத்துக்களை வழி எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
வணக்கம் அன்புடன்
 

பகிர்வில்
கரங்களில் பருகிவரும்
டயொட்டி களினதும் பு மகிழ்ச்சி காயுர்திங்கு வந்திருந்த
ாக எமது காள்ளலாம்
ள் கிடைக்க
த் திருப்தி
pமைபோல்
මෙට්‍රිෂ්lpful if ||ගිණ්ණං
COPY
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, GrandpaSS Road, Colombo 14, Sri Lanka. T.P. --94. 11 5322700 www.kalaikesari.Com e-mail:editor(a)kalaikesari.com
Subscription(akalaikesari.com
EDITOR AnnalakSmy Rajadurai SUBEDITOR Bastiampillai John San
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa
CONTRIBUTORS
Prof.S. Pathmanathan Prof.S. Sivalingaraja BrO. R. Joseph Jeyakanthan Kala imamani POn. Thei Vendran
Shanthini Arulanantham PHOTOS
N. Joy Jeyakumar Sabita N. G. Vin Oth (India) LAYOUT S. PreSSanna S. A. ESWaran
ICT S.T.Thayalan
ADWERTISING M. Senthilnathan
CIRCULATION S. Alexandar
PRODUCTION L. A. D. Joseph

Page 6
ក្រុងប្រុញយ៉ាងៃអឺ 彦 O6 கலாசாரம்
யாழ்ப்பாணப் பண்பாடு:
1ppgഞഖub
உறையுள்
O/ழப்பாணப் பிரதேச மக்களின் பண்பாட்டுக் கோலங்களில் வீடு முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. மனித இனத்தின் வரலாற்றிலேயே உணவுக்கு அடுத்தபடியாக உறையுளே முக்கிய இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணச் சமூகத்திலே வீடும் வளவும் என்ற தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடும்பத்தின் வாழ்வியலுக்கு வீடு மாத்திரமன்றி வளவும் அத்தியாவசியமானதாக இருந்தது. வீட்டைச் சூழவுள்ள பகுதியை அல்லது வீடு அமைந்திருக்கும் காணியையே வளவு என்று அழைத்தனர். வளவிலே பயன் தரும் மரங்கள், நிழல் மரங்கள் முதலியவற்றை வளர்த்திருப்பார்கள். அத்துடன் ஆடு, மாடு முதலியவற்றிற்கும் கொட்டில்கள் அமைத் திருப்பர். வீடு வாசல் என வழங்கும் தொடரிலும் 'வாசல்' என்ற பதம் வளவை அல்லது முற்றத்தைக் குறித்து நின்றது
67606)/FCO,
குடும்பப் பொருளாதார நிலைகளுக்கு ஏற்பவே வீடுகளும் அமைந்தன. வறிய, அடிநிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடிசைகளையும் சிறிய மண்வீடுகளையும் பயன்படுத்தினர். ஒரளவுக்குப் பொருளாதார வசதியுடையவர்கள் சற்று விசாலமான மண் வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர். மண்
வீடுகளிலும் பல வகைகள் (அமைப்பு) இருந்தன. முட்டச்சுவர்,
 

DGDD.606ຫມຽນມີ
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
அரைச்சுவர் என மண்ணினாலே சுவர் வைத்துக் கூரையைப் பனையோலையாலோ, தென்னோலையாலோ (கிடுகு) வேய்ந்து, சுவரையும் தரையையும் அழகாக மெழுகிப் பயன்படுத்தினர். திண்ணை, மால் (இதனைத் தலைவாசல் என அழைக்கும் வழக்கமும் இருந்தது) மண் வீடுகளிலே இருந்தன. திண்ணை, மால் முதலியன யாழ்ப்பாணப் பிரதேச மக்களின் பண்பாட்டு இயல்புகளைக் கண்டறிய உதவும் அடையாளங்கள்
67607GU/TC).
திண்ணை, மால் முதலியன யாழ்ப்பாணப் பிரதேச மக்களின் பண்பாட்டு இயல்புகளைக் கண்டறிய உதவும் அடையாளங்கள்.
மண் வீட்டைப் பயன்படுத்தியவர்கள் பொருளாதார வசதி பெருக, செங்கல், சுண்ணாம்பு, சாந்து முதலியவற்றைப் பயன்படுத்திச் சற்று வசதியான வீடுகளை அமைத்தனர். பெரும்பாலும் சமூக மேலாண்மை பெற்றவர்களே இத்தகைய வீடுகளில் வாழ்ந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் செங்கல், ஒடு,
வீட்டுக்குத் தேவையான மரங்கள் (பலகை, தீராந்திகள்) பிற நாடுகளில் இருந்து பருத்தித்துறை, ஊர்காவற்றுறை முதலிய துறைமுகங்களினூடு யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கின. இவற்றைப் பயன்படுத்திக் கட்டிய வீடுகள் சில இன்று சிதைந்த

Page 7
யாழ்ப்பாணப் பிரதேச மக்களின் பண்பாட்டுக் கோலங்களிலே வீடு முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. மனித இனத்தின் வரலாற்றிலேயே உணவுக்கு அடுத்தபடியாக உறையுளே முக்கிய இடம்பெறுகின்றது. யாழ்ப்பாணச் சமூகத்திலே வீடும் வளவும் என்ற தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குடும்பத்தின் வாழ்வியலுக்கு வீடு மாத்திரமன்றி வளவும் அத்தியாவசியமானதாக இருந்தது. வீட்டைச் சூழவுள்ள பகுதியை அல்லது வீடு அமைந்திருக்கும் காணியையே வளவு என்று அழைத்தனர். வளவிலே பயன் தரு மரங்கள், நிழல் மரங்கள் முதலியவற்றை வளர்த்திருப்பார்கள். அத்துடன் ஆடு, மாடு முதலியவற்றிற்கும் கொட்டில்கள் அமைத்திருப்பர். வீடு வாசல் என வழங்கும் தொடரிலும் 'வாசல்' என்ற பதம் வளவை அல்லது முற்றத்தைக் குறித்து நின்றது எனலாம்.
யாழ்ப்பாணத்தில் ஒரு கால கட்டத்தில் நிலவிய மனித நேயத்திற்கும் சமூகப் பொறுப்புணர்வுக்கும் சங்கட படலைத் திண்ணைகள் சாட்சிகளாய் விளங்கின.
குடும்பப் பொருளாதார நிலைகளுக்கு ஏற்பவே வீடுகளும் அமைந்தன. வறிய, அடி நிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடிசைகளையும் சிறிய மண் வீடுகளையும் பயன்படுத்தினர். ஒரளவுக்குப் பொருளாதார வசதியுடையவர்கள் சற்று விசாலமான மண் வீடுகளைக் கட்டி வாழ்ந்தனர். மண் வீடுகளிலும் பல வகைகள் (அமைப்பு) இருந்தன. முட்டச்சுவர், அரைச்சுவர் என மண்ணினாலே சுவர் வைத்துக் கூரையைப் பனையோலையாலோ, தென்னோலையாலோ (கிடுகு) வேய்ந்து, சுவரையும் தரையையும் அழகாக மெழுகிப் பயன்படுத்தினார். திண்ணை, மால் (இதனைத் தலைவாசல் என அழைக்கும் வழக்கமும் இருந்தது) மண் வீடுகளிலே இருந்தன. திண்ணை, மால் முதலியன யாழ்ப்பாணப் பிரதேச மக்களின்
பண்பாட்டு இயல்புகளைக் கண்டறிய உதவும்
அடையாளங்கள் எனலாம்.
 

塞
O7
மண் வீட்டைப் பயன்படுத்தியவர்கள் பொருளாதார வசதி பெருக, செங்கல், சுண்ணாம்பு, சாந்து முதலியவற்றைப் பயன்படுத்திச் சற்று வசதியான வீடுகளை அமைத்தனர். பெரும்பாலும் சமூக மேலாண்மை பெற்றவர்களே இத்தகைய வீடுகளில் வாழ்ந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் செங்கல், ஒடு, வீட்டுக்குத் தேவையான மரங்கள் (பலகை, தீராந்திகள்) பிற நாடுகளில் இருந்து பருத்தித்துறை, ஊர்காவற்றுறை முதலிய துறைமுகங்களினூடு யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கின. இவற்றை பயன்படுத்திக் கட்டிய வீடுகள் சில இன்று சிதைந்த நிலையிலே காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Page 8
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை முதலிய இடங்களிலே வணிகர்கள் கட்டிய வீடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களே பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டன என்று கள ஆய்வின் போது அறிய முடிந்தது. குடா நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இத்தன்மை காணப்பட்டது.
ஐரோப்பியர் வருகையை ஒட்டி யாழ்ப்பாணத்து வீட்டுக் கட்டிட அமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
காற்று, வெய்யில், மழை, வெளிச்சம் முதலானவற்றை மனங் கொண்டு மூன்றலகு வீடுகள், நாற்சாரும் வீடுகள் என யாழ்ப்பாணத்தில் பல வகையான வீடுகள் கட்டப்பட்டன. அடுக்களை (சமையற் கூடம்) எப்பொழுதும் தனியாகவே அமைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்து வீடுகளின் அமைப்பு இப்பிரதேசத்தின் பண்பாட்டுக் கோலத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. உதாரணமாக நாற்சாரும் வீடும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையின் வெளிப்பாடு எனக் குறிப்பிடலாம். யாழ்ப்பாணத்து வீடுகளின் பின்னணியில் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு எத்தகைய செல்வாக்குச் செலுத்தியது என்பதை அகிலனின் யாழ்ப்பாணத்து மூவலகு வீடுகள் என்னும் கட்டுரை தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
யாழ்ப்பாணத்து வீடுகள் பற்றி மிஷனரிமார் எழுதிய குறிப்புக்கள் மிகுந்த அவதானிப்புக்குரியவை. 1820 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்த மிஷனரி ஒருவர் தான் அவதானித்த வீடுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"வீடுகள் பொதுவாகப் பதிவானவை. சுவர்கள் சாந்து
பூசப்பட்டவை. வெளியிலும் உட்புறத்திலும் வெள்ளையடிப்பது
 

வழக்கம்' இங்குள்ளவர்களின் வீடுகள் பொதுவாகக்
குடிசைகளாய் இருந்தன. சிலரின் வீடுகளின் நடுவில் ஒரு முற்றம் இருந்தது. மற்றப் பக்கங்களில் வீட்டின் ஏனைய பகுதிகள் இருந்தன. இவ்வீடுகள் பிரிந்திருந்த கூரையுடன் பக்கங்களில் மரக் கால்கள் தாங்கிக் கொண்டிருந்தன. பனை ஒலைகளால் வீட்டின் கூரை வேயப்பட்டிருந்தது. சில இடங்களில் தென்னோலைகளால் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் நாலு பக்கங்களிலும் விறாந்ததை போல் பத்தி இறக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் நிலம் களிமண்ணால் செய்யப்பட்டுள்ளது. அது மிகவும் கெட்டியாய் அமைந்துள்ளது. வெளிப்புற விறாந்தை வசதியாய் இருப்பதற்கும், வேலை செய்வதற்கும் சிலவேளைகளில் படுத்துறங்குவதற்கும் பாவிக்கப்படுகிறது.
மிஷனரிமாரின் விபரணக் குறிப்புகளில் யாழ்ப்பாணத்து வீடுகளின் சுத்தம், அழகு மற்றும் அந்த மக்களின் வீட்டுக் கட்டிட (கலை) அமைப்புடன் இவர்களின் வாழ்வியல் எத்தகைய சமூக உறவுடன் திகழ்ந்தது என்பதை குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வீட்டின் உட்புறம் சில இடங்களில் வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் ஒரு அறை போல் செய்யப்பட்டு, வீட்டாரின் பெறுமதியான சாமான்கள் போடப்பட்டுப் பூட்டுவதற்கேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகள் திறந்தபடியே உள்ளன. சிலவேளைகளில்

Page 9
ஒலைத் தட்டிகளாற் தற்காலிகமாகப் பிரிக்கப்படுவதுண்டு. இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து வாழும் நாற்சதுர விடும் (நாற்சாரும் வீடு) அமைந்துள்ளது',
மேற்காட்டிய இந்த நீண்ட விபரணக் குறிப்பு யாழ்ப்பாணத்து மக்களின் வீட்டுக் கட்டிட (கலை) அமைப்பு பற்றி மாத்திரம் பேசவில்லை. இவர்களின் வாழ்வியல் எத்தகைய சமூக உறவுடன் திகழ்ந்தது என்பதையும் குறிப்பாகச் சுட்டி நிற்கின்றது. இத்தகைய வீட்டு அமைப்பு இப்போது அருகி விட்டது. இத்தகைய வீடுகளின் சுத்தம், அழகு பற்றி மிஷனரிமார் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணச் சமூகத்தில் வீடும் வளவும் என்ற தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சாந்து, சுண்ணாம்பு முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளைக் கல்வீடு என்றே அழைத்தனர். அக்காலத்தில் கல் வீடுகள்மிக மிக அருந்தலாகவே காணப்பட்டன. பொருளாதார வளமுடைய மேற்தட்டு மக்களே பெரும்பாலும் கல் வீடுகளில் வாழ்ந்தனர். காலப் போக்கில் சீமெந்தின் வருகையுடன் வீடுகள் பல்வேறு பாணிகளில் அமையத் தொடங்கின. யாழ்ப்பாணத்திலே ஒரு காலத்தில் நிலவிய மனித நேயத்திற்கும் சமூகப் பொறுப்புணர்வுக்கும் இச்சங்கடப் படலைத் திண்ணைகள் சாட்சிகளாய் விளங்கினஒல்லாந்த, ஆங்கிலேய
பாணி வீடுகள் என இங்கு உள்ள வீடுகளின் பாணிகளைக்
குறிப்பிடும் வழக்காறும் உண்டு.
 

வீட்டு வளவின் வாசலுக்குச் சங்கடப் படலை என்ற கேற் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படலையை மூடி மேலே கூரை போடப்பட்டிருந்தது. இக்கூரை சங்கடப் படலையின் பாதுகாப்புக்குப் பயன்பட்டதோடு, வழிப் போக்கர்கள் இளைப்பாறிச் செல்லவும் உதவியமை குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் சங்கடப் படலைக் கூரைக்குக் கீழே வெளிப்புறமாக இரு மருங்கும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்திண்ணைகளையே வழிப் போக்கர்கள் பெரும்பாலும் இளைப்பாறப் பயன்படுத்துவர். யாழ்ப்பாணத்திலே ஒரு காலத்தில் நிலவிய மனித நேயத்திற்கும் சமூகப் பொறுப்புணர்வுக்கும் இச்சங்கடப் படலைத் திண்ணைகள் சாட்சிகளாய் விளங்கின.
நல்ல நாள் பெருநாள்' என்று உறவினர்கள் வந்து உணவருந்தக் கூடிய (பந்தியாக இருந்தது) வகையிலே வீட்டின் ஒரு பகுதி அமைக்கப்பட்டதும் உண்டு. யாழ்ப்பாணத்துப் பெரியவர் ஒருவரின் சரமகவியில் 'வீட்டில் விருந்தோம்ப விந்தையுடன் கூடமொன்றை நாட்டில் முன்மாதிரியாய் நன்கமைத்தாய்' என்று இடம் பெறுவதையும் இவ்விடத்திலே சுட்டிக் காட்டலாம், யாழ்ப்பாணத்திலே சபை சந்திக்குரிய வீடாகக் கட்ட வேண்டுமென்ற மனநிலை இன்றும் இருப்பதை அவதானிக்கலாம். காலச் சூழ்நிலைக்கேற்ப யாழ்ப்பாணத்து வீடுகளின் அமைப்புக்கள் மாறிக் கொண்டே
வருகின்றன.
வளரும் .

Page 10


Page 11
1953 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒரு மாலை நேரம். சென்னை, புரசைவாக்க மைதானத்தில் மாபெரும் மது ஒழிப்பு பிரசாரக் கூட்டம் ஏற்பாடாயிருந்தது. நிகழ்வில் என்.எஸ்.கே. குழுவினரின் வில்லிசையும் ஓர் அங்கம், கலைவாணர் திரை நாணில் உச்ச நிலையில் இருந்த காலம், கரை புரண்ட வெள்ளம் போல் ஜனத்திரள். கணபதிப் பாட்டுடன் ஆரம்பித்து, உச்சஸ்தானியில் மும்முறை குடித்துப் பழகனும் என்றார். குழுவும் பிற்பாட்டுப் பாடியது. டோலக் முழங்கியது. ஒரே நிசப்தம் பின் சலசலப்பு சபையில் கொல் என்ற சிரிப்பு.
மீண்டும், குடித்துப் பழகனும், நன்றாகக் குடித்துப் பழகனும், பாழும் கள்ளை நீக்கிப் பாலைக் குடித்துப் பழகனும்' என்றதும் ஏகோபித்த கரவொலி. இதுவே கலைவாணர் நகைச்சுவை மன்னன் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் அபாரத் திறன்.
நகைச்சுவையே மனிதனின் ஜீவநாடி, நகைச்சுவையுணர்வு அற்றவன் மனிதனே இல்லையென்பர் அறிஞர்குழாம். நாடகமே உலகம், நாம் அனைவரும் இங்கு நடிகர்களே என்றார் ஷேக்ஸ்பியர். நான்காம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்திருந்த கலைவாணர் நாலு பேர் மதிக்க வாழ்ந்தாரே! எதனால் ? அவரின் சிரிப்புக் கலந்த சிந்தனைத் துளிகள் இதன் காரணம். அறிஞர், ஆத் மீகவாதிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவரைப் பாராட்டினர்.
நாஞ்சில் நாடு பிரபல்யம் வாய்ந்த பிரதேசம், ஒழுகினசேரி என்ற கிராமத்தில் கிருஷ்ணன் 1908 நவம்பர் 29 ஆம் திகதி பிறந்தார். ஏழ்மையான குடும்பம்; பள்ளிப்படிப்பை சிறு வயதில் நிறுத்தி, சிறு வேலைகள் செய்து நாடகக் கொட்டகையில் கலர் சோடா விற்கும் வேலைக்குச் சென்றார்.
நெடிய உருவமாதலால் சோடா விநியோகத்துடன் கடைசியில் நின்று நாடகத்தை இரசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. கூர்ந்து கவனித்து மற்றவர்களுக்கு நடித்துக் காட்டப் பழகி விட்டார். அப்போது இவரது செல்லப் பெயர் கிட்டன், சிலரின் பழக்கத்தால் சாரதாம்பாள் நாடகக் குழுவில் சேர்ந்து கொண்டார். இக்குழுவில் சாவித்திரி நாடகம் நடந்து கொண்டிருந்தது. ஏனோ யமன் வேஷதாரி வரவில்லை. கலைவாணருக்கு யமன் வேடம் போட்டுத் தள்ளிவிட்டனர். விடிய விடிய நடைபெறும் நாடகம் சாவித்திரியின் கேள்விக்கு யமன் என்ன சொல்வார் என்ற ஆவலில் மக்கள் இருந்தனர்.
யமன் வேஷத்தில் கச்சிதமாகப் பொருந்திய கலைவாணரும் இச்சந்தர்ப்பத்தை விடக்கூடாது என எண்ணி வீறு நடையுடன் மேடையில் ஏறினார். காலன் கவர்ந்து சென்ற சத்தியவானின் உயிரை மீட்க, நடுநிசி /2 மணியிலிருந்து சாவித்திரி கெஞ்சுவது என்பது தான் காட்சி அவர் உயிரை தா?’ என்று சாவித்திரி கெஞ்ச, விடிகாலை 4 மணிக்குத்தான் யமன் மனமிரங்கி உயிரைத் திருப்பிக் கொடுப்பார். ஆனால் என். எஸ். கே. சாவித்திரியின் கெஞ்சலில் மனமிரங்கி '/2 மணிக்கே தந்தேன்’ என்று கூறி விட்டு சீனுக்குள்ளே போனதும், முதலாளி அம்மா முதல் சகலரும், நல்ல அடி கொடுத்து 'கெடுத்து விட்டான் பாவி நாடகத்தை' என்று இரைந்தார்கள்.

:8:
ğ ș ș ::::

Page 12
ថាញញ585] 12
அவருக்கு இது பெரிய அனுபவம். என். எஸ். கே.யின் கற்பூர மூளை சட்டென்று பிடித்துக் கொண்டது. ஒருபெண் மாங்கல்ய பிச்சைக்கு கெஞ்சும் போது கொடுத்துத் தானே ஆக வேண்டும்' என்றார். எல்லோரும் சிரித்தனர், நகைச்சுவை உதயமாயிற்று.
பூனாவுக்குச் சென்ற நாடகக் குழுவில் மதுரத்தைச் சந்தித்தார். பின் என்ன? காதல், திரைப்படம், நாடகங்கள்
ஆகியவற்றில் இவர்களே ஜோடியாக நடித்தார்கள். திருமணம்
முடிந்தது.
திருச்சியில் மதுரம் இல்லத்திற்கு இவரும் வேறு சிலரும் சென்று இருந்தனர். இவர்களைக் கண்ட மதுரம்
அமர்க்களப்பட்டு ஐயா டீயா? காப்பியா? என்றதும், என்.எஸ்.கே. டீ.யே. மதுரம் என்றார். வந்தவர்கள் அரை மணி நேரம் சிரித்தனர். தாலி பெண்ணுக்கு வேலி என்ற சிந்தனையை முதல் கூறிப் பெருமை பெற்ற விளம்பரம்யாவற்றிலும் என். எஸ்.கே. ரி.ஏ. மதுரம் என்று போட்டுக் காட்டுவார்கள். பாகவதருடன் ஏராளமான படங்களில் நடித்தனர். இவர்கள் நடித்த படங்கள் வெள்ளிக் விழாக் கண்டன.
என்.எஸ்.கே, மதுரத்தை இறுதி வரை உயிராய் நேசித்தார். தான் கட்டிய இல்லத்திற்கு மதுர பவனம் என்று பெயரிட்டார். மதுரமும் தான் கட்டிய வீட்டிற்கு கிருஷ்ணா பவனம் எனப் பெயரிட்டார். கிருஷ்ணனின் பெரியார், அண்ணா தொடர்பால் சீர்த்திருத்தக் கருத்துக்கள் பார் முழுவதும் பரவின. கட்சி பேதமின்றி சகலரும் இதுவரை அணைத்தனர். இவரின்றி எந்தத் திரைப்படமும் இல்லை என்ற நிலையும் வந்தது.
அங்க சேஷ்டைகளைவிட அறிவுசார் நகைச்சுவையையே
அன்று இரசித்தினர். கிருஷ்ணனின் நிமிர்ந்த நடை, தோற்றம், பார்த்தவுடன் புன்முறுவல், கம்பீரமான உரை, மதுரமோ
 

அழகுக்கு வரைவு இலக்கணம் ஆனவர். கனிந்த சேலம் மாம்பழ நிறம், அன்பு உரையாடல், ஆதரவுக் கரங்கள், எவரும் எந் நேரமும் இவர்கள் இல்லத்தில் விருந்து சாப்பிட வசதியிருந்தது. உச்ச நிலையிலிருந்த 1947 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாதம் ஒரு பாராட்டு விழா கண்டவர் கிருஷ்ணன். இவரது பேச்சைக் கேட்கவே விழா எடுத்தனர். ஆரம்ப திரைப்படக் காலம் தொட்டு நடிப்பில் ஈடுபட்டதால் பண வசதி ஏறிற்று. ஏழைகளுக்கு நன்கு உதவினார். அன்றாட நிகழ்வில் காணும் பிரச்சினைகளைத் திரையிலும் நாடகத்திலும் உடனுக்குடன் கொண்டு வந்தார். சிரிப்பு என்ற சொல்லில் பலவித சிரிப்புக்களை விளக்கினார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எதிர்பாராத சிக்கல் வந்து சிறை சென்று மீண்டார். டெல்லி வரை மதுரம் சென்று வாதா டிக் கணவனைக் காப்பாற்றினார். வழக்கு முடிந்ததும் திரைப்ப டம், நாடகம் ஆகியன தொடர்ந்தன. திருவல்லிக்கேணியில் இவ ருக்கு பாராட்டு விழா நடந்தது. நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் தலைமை வகிக்கிறார். "கலைவாணர்' என்ற பட்ட மும் பாராட்டும் வழங்கப்பட்டது. கொடை வள்ளல் போல் பங் கேற்கும் விழாக்காரருக்கு சன்மானம் கொடுத்து திராவிடக் கழக பேச்சாளராகவும் மிளிர்ந்தார்.
பணம், நல்லதம்பி போன்ற படங்களையும் தயாரித்து, தன் கருத்துக்களைப் புகுத்தினார். தலை நிமிர்ந்த தமிழர்களில் இருவரும் ஒருவர் என்றார் காமராஜர். 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோய் வாய்ப்பட்டதால் பலரையும் குலுங்கி அழ
வைத்து மறைந்தாலும், அவரின் புகழ் சிரிப்பு எம் இதழ்களில் பரவுகின்றன.
- கலைமாமணி எஸ். தெய்வேந்திரன்

Page 13
GANESH TEXT
# 8, 83, Main Street, ( Tel: 94 || 232528,2343078 Fax: 2458937 E-mail
 
 

لگEsw|
1976
ILES (PVT) LTD
Colombo- || |, Sri Lanka. : infoG)ganeshtextiles.com www.ganeshtextiles.lk

Page 14
多 14 நடனக்கலை
நடனத்தில் பாOைரி எ
கலைமாமணி ஊர்
少 ட்டுவனார்க்கும் நடனமாதுக்கும் இடையில் முழுமையான
புரிந்துணர்வு இருக்கும்போதுதான் நடன நிகழ்ச்சி சிறப்பாக அமையும், நட்டுவனார் நட்டுவாங்கம் செய்யாமல் நிச்சயமாக நடனம் இல்லை. நடனக் கலைஞர் குறித்த முழு அனுபவம் நட்டுவனாருக்கு இருக்கும்போதுதான் இருவரும் தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த முடியும், இவ்வாறு அமைவது மிக விஷேசமாகும் என்று கூறுகிறார் கலைமாமணி பூரீமதி ஊர்மிளா சத்திய நாராயணன் (நாட்டிய சங்கல்பா சென்னை). இவர் இலங்கை வந்திருந்தபோது கலைக்கேசரி சார்பாக அவரைச் சந்தித்து உரையாடினோம். அப்போது அவர்
பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கு தருகின்றோம்.
کی۔
 

ன்று எதுவும் கிடையாது
மிளா சத்தியநாராயணனுடன் ஒரு நேர்கானல்
"நான் 3 வயதில் நடனத்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். காரணம் அம்மம்மாவின் 60 ஆவது பிறந்த தினத் துக்கு நான் நடனமாட வேண்டும் என அம்மா ஆசைப்பட்டார். என்னை நடனப் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது, எனது நடனக் குரு முதலில் நினைத்தாராம் எனது அம்மாதான் நடனத்தைப் பயில வந்திருக்கிறார் என்று. எனவே குழந்தையை வெளியில் உட்கார வைத்துவிட்டு உள்ளே வரச் சொன்னாராம். அதற்கு அம்மா, நீங்க நடனம் சொல்லிக் கொடுக்கப் போறது என் குழந்தைக்குத்தான் என்றாராம். அதற்கு நடனகுரு "ஐயய்யோ. சின்னக் குழந்தைக்கு எப்படி நடனம் பயிற்றுவிப்பது' என்று சொன்னாராம். அதன் பின்னர் காரணத்தைத் தெரிந்து கொண்டு சில அபிநயங்களை சொல்லிக் கொடுத்தார். இவ்வாறுதான் எனது நடனப் பிரவேசம் இருந்தது. அதன் பின்னர் எனக்கு 6 வயதாகும்போது என் அம்மா என்னை தண்டாயுதபாணி பிள்ளை அவர்களிடம் சேர்த்துவிட்டார். அவரிடம் நான் கிட்டத்தட்ட 15 வருடங்கள் முறைப்படி நடனம் கற்றேன். அதன் பிறகு கே. ஜே. சரசாவிடம் சில வருடங்கள் நடனத்தைக் கற்று மேலும் தேர்ச்சி பெற்றேன். பின்னர் ஒரு நடனப் பள்ளியை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறேன்.
கல்விப் பின்னணியைப் பற்றி சொல்வதென்றால் ஆரம்ப
கல்வியை சேர்ச் பாக் கொன்வென்டில் படித்தேன். அதன் பின்
வுமன்ஸ் கிறிஸ்டியன் கொலேஜில் சைக்கோலஜி படித்தேன்.

Page 15
பரதம் மிகத் தொன்மையானது இதைப் பற்றி உங்கள் கருத்தைக் கூற முடியுமா?
பரதம் என்பது தென்னிந்தியாவிற்கு உரித்தான ஒன்று. 2000 வருடங்களுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றை பரதம் தன்னகத்தே கொண்டுள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்படுவதற்கு முன்னரே 'தேவதாசிகள்' இருந்ததாக நாம் வரலாறுகள் மூலம் தெரிந்து கொள்கிறோம். ஆண்டாள் எழுதிய
நாச்சியார் திருமொழியில் "சதிர் இள மங்கையர்' என்றொரு சொற்றொடர் வருகிறது. சதிராடுகிற இள மங்கையரோடு வருகின்ற பெருமான் தன்னைத் திருமணம் செய்வார் என நம்பும் ஆண்டாள் நாச்சியாரின் வரிகள் அவை. எனவே காலத்தால் முந்திய நாச்சியார் திருமொழியில் சதிர் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதில் இருந்து நடனம் எவ்வளவு பழைமையானது என்பது தெரியவருகிறது. கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்னர் தஞ்சை நால்வர் பரதத்தில் சில மாற்றங்களை உருவாக்கியுள்ளார்கள். நாம் இப்பொழுது பயன்படுத்தும் பரதம் அவர்கள் வழி வந்ததாகவே உள்ளன. சதிர் என்ற வார்த்தை பயன்பாட்டில் எவ்வாறான நடன வழக்கு இருந்தது என்பதற்கு எம்மிடம் முழுமையான சான்றுகள் இல்லை. ஆனாலும் தஞ்சை நால்வர்கள் தம்மால் முடிந்தளவு பரதத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்கள்.
பரதத்தின் தோற்றத்திற்கு காரணமான பரத முனிவர்தான் பரதநாட்டியத்தின் இலக்கணம், சட்ட திட்டங்கள் மற்றும் வரை முறைகளை மிகத்தெளிவாக தொகுத்து வழங்கியிருக்கிறார். அது மாத்திரம் அல்லாமல் அரங்க அமைப்பு, அரங்க அலங்காரம் என அனைத்து விடயங்களையும் அவர் எமக்குக் கொடுத் திருக்கிறார். எனவே பரதம் என்பது பரதமுனிவர் இல்லாமல் வளர்ந்திருக்க முடியாது. அவரின் பரத நூல்களைப் படித்தாலே போதும், பரதம் தொடர்பான பூரண அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். பாவம், ராகம், தாளம் ஆகிய மூன்றையும் விளக்க (փlգեւկլDT?
பாவம் என்று சொல்லும்போது அது முகபாவத்தைக் குறித்து நிற்கிறது. ஆனாலும் பாவத்தில் நான்கு விதமான பாவங்கள்
உண்டு. முழுமையான உடம்பு கொண்டு காட்டும் பாவம் அதில்
 

塞 ឆ្នាតែត្រែ 15
அடங்குகின்றது. ஆனாலும் பிரதானமானது முகபாவம் ஆகும். இம்முகபாவத்திற்கு கைகளின் அசைவுகளும் முக்கியமாகும். பாடல் இல்லாமல் பரதம் கிடையாது. பரதத்தின் முதுகெலும்பே பாடல்தான். பாடல் என்று சொல்லும்போது அது ராகத்தைக் குறிக்கிறது.
தாளம் என்பது லயத்தோடு தொடர்புபட்டது. லயத்தில் உள்ள கணக்கு வழக்குகள்தான் தாளம் எனப்படுகிறது. இம்மூன்றும் சேர்ந்ததுதான் பரதம். எனவே பரதத்தில் பாவம், ராகம், தாளம் மூன்றையும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு நடனமணிக்கு பாடும் ஆற்றல் கட்டாயமாகத் தேவையா?
நிச்சயமாகத் தேவை. பாடல் பாடக் கூடிய திறந்த குரல் வளம் இல்லாவிட்டாலும் முறைப்படியான கர்நாடக சங்கீத அறிவு கட்டாயமாகத் தேவை. அதன் மூலம் ஒவ்வொருவரும் தமது நடனத்தை மேலும் வளப்படுத்திக் கொள்ளலாம். நான் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைப் படிக்கவில்லை. எனக்கு இருக்கும் இசை அறிவு கேள்வி ஞானம் தான். சிறு வயது முதல் வீணை காயத்திரி அவர்களிடம் முறைப்படி வீணை கற்றுக் கொண்டேன். என்னிடம் உள்ள தனிப்பட்ட ஈடுபாடு காரணமாக நான் இசையைக் கற்றுக் கொண்டேன். அடவு, ஜதி பற்றிக் கூற முடியுமா? மேலும் முன்பிருந்த அடபுெ, ஜதி முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கான காரணம் என்ன?
அடவு என்பது தாளத்துடன் சேர்ந்தது. நடனத்திற்கு முதலெழுத்துப் போன்றது. ஆனால் தாளத்துடன் சிறிது வேறுபட்டு சொற்கட்டுடன் இருப்பது ஜதியாகும். இதற்கு வாயால் நட்டுவனார் சொல் சொல்லும் சிலர் /08 அடவு பண்ணுவார்கள். சிலர் 100 அடவு பண்ணுவார்கள். சிலர் 80 அடவு பண்ணுவார்கள். ஆனாலும் ஒவ்வொருவரும் தமது பாணிக்கு ஏற்ற விதத்தில் சிறுசிறு வித்தியாசத்துடன் அடவுகளைப் பண்ணுவார்கள். பரதத்துக்கும் நட்டுவனார்க்கும் உள்ள தொடர்பு என்ன?
நட்டுவனார் நட்டுவாங்கம் செய்யாமல் நிச்சயமாக நடனம்
இல்லை. அவர்கள் தான் நடனத்தின் இசையை முழுமையாக தம்

Page 16
56]ញ5&#ffff 16
கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள். ஆனாலும் நட்டு வாங்கமும் நடனமும் சமபலத்தில் மோதுவது என்பது குறைவான சந்தர்ப் பங்களில் அமையும். எங்களைப் பற்றிய முழு அனுபவம் ஒவ் வொரு நட்டுவனார்க்கும் இருக்க வேண்டும். எங்களுக்கும் அவர்களுடன் ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். அவ்வாறு அமைவது மிக அரிதாகும். ஆனால் அவ்வாறு அமைவது மிக முக்கியமாகும். இவ்வாறு அமைய வேண்டுமென்றால் ஒரே இசைக் குழுவுடன்தான் நாம் பணியாற்ற வேண்டும். ஆனால் தற் காலத்தைப் பொறுத்தவரையில் சாத்தியப்படக் கூடியதல்ல.
ஆனாலும் இசையிலும் நடனத்திலும் உள்ள தீராத காதலால் நட்டுவனார், நடனமாது இருவரதும் தமது அதிகபட்ச திறமைகளை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
t" * في نة
 

நீங்கள் கற்றுக் கொண்ட பரத நாட்டிய பாணி எது?
என்னுடைய வாத்தியார் கலாஷேத்திராவில் இருந்து வந்தவர். ஆனாலும் அவர் இசை வேளாளர் பரம்பரையைச் சேர்ந்தவர். இதனால் அவரிடம் வழுவூர் பாணி இயல்பாகவே அமைந்திருந்தது. எனவே நான் முதலில் வழுவூர் பாணியிலே பரதத்தைக் கற்றேன். ஆனாலும் கலந்த வழுவூர் பாணியே அவரிடம் இருந்தது. பின்னர் சரசா அவர்களிடம் சுத்தமான வழுவூர்ப் பாணியைக் கற்றுக் கொண்டேன். ஆனாலும் நான் எனக்குப் பிடித்த பாணிகளை கொண்டு என் மாணவர்களுக்கு, ஒரு புதிய வித்தியாசமான, வழுவூர் அடித்தளத்தைக் கொண்ட பரதத்தைக் கற்றுக் கொடுக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத் தவரையில் நடன பாணி என்பது இல்லை. அது ஒரு 20 வருடங் களுக்கு முன்பு இருந்தது. ஏன் 10 வருடங்களுக்கு முன்பு கூட இருந்தது. ஆனால் தற்போது ஒரு முழுமையான பாணியைக் கொண்ட நடன முறையைப் பார்ப்பது அரிதாகும். செய்வது சரியாக இருக்க வேண்டும். பாணி என்பது முக்கியமல்ல என்றும் ஊர்மிளா கூறினார்.
ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி 1960 ஆண்டு பிறந்த ஊர்மிளா சத்திய நாராயணன் பத்மசிறி கே.என். தண்டாயுதபாணி பிள்ளை மற்றும் கலைமாமணி கே.ஜே. சரசா ஆகியோரிடம் முறைப்படி பரத கலையைக் கற்றவர். 1976 ஆம் ஆண்டில் அரங்கேற்றம் நிகழ்த்தியவர். அன்று தொடக்கம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கலை நிகழ்ச்சிகள், நடன விழாக்களில் பங் குபற்றி வருவதுடன் இந்திய நடன விழாவிலும் தவறாமல் பங் குபற்றுபவர்.
மேலும் கலைமாமணி, நடனமாமணி, யுவகலாபூஷணி, யுவ கலா பாரதி, நாட்டிய இளவரசி நிருத்திய சூடாமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார். இந்திய நுண்கலை அமைப்பில் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் 1991 முதல் பரிசைப் பெற்றுள்ளார். அதே அமைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் 2009 இல் சிறந்த நட்டுவனார் விருதையும் (Best Natcharya Award) Gulfp/Gitanti, 哆
" உமா பிரகாஷ்

Page 17
TIP TOP τη
ADUSTABLE SEAT
AR COND Te: O11 236 1144 || 23
Tip Top Travels, is 296A
Office Tee O77 32 (பிரயாணத்தில் மாற்றம் இருப்பின் 6
Tip Top Guest House Holiday Bungalow # 23, Waverset Place, WellaWatte, Colombo 06. Tele: O77 3236354 Comfortable rooms, Attached Bathroom, Hot Water, Full furnitures
யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண தலைமையகம் 翼 愛 R.B. BOOKING CENTRE
இல, 15 பெரிய க ைவீதி, யாழ்ப்பாணம், (மரக்கறி மார்க்கட் அருகாமையில்)
Te: O21 2227O16 /
O21 2228,356
 
 
 
 
 
 

AVELS & TOURS ONED TV/DVD DALY SERVICE
6 4999 / O77 32363.54
Galle Road WellaVatta.
B6354 O777 520284.
ணித்தியாலங்களுக்கு முன் அறிவிக்கவும்)
Colombo - Jaffna
Tip Top Travels
Tour arrangement, Hotel Booking & Transport
கொழும்பு - யாழ்ப்பாணம்
Tip Top Guest House
# 34/2, Church Road, Nuwar-Eliya. Tele: 052 2235.742 Comfortable rooms with food, Attached Bathroom, Hot Water, Heater, Function Hall, Wedding Hall & Restaurant
ଅଶରଯଣୀ: R.B. BOOKING CENTRE நவீன சந்தை கீழ்தளம் (வைரவர் கோவில் அருகாமை) 077 9849690 / 021 4908.188
077 6103236

Page 18
5ក្លាញថាថ៌មី 18 ansamrarnTITù
உடலுக்கும் உறவிற்
த மிழர் சமுதாயம் பல கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டதாகும், நம் முன்னோர்கள் பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாம் விருப்பத்துடன் பின்பற்றும் காரணத்தால் தலைமுறைகள் பலவற்றைக் கடந்தாலும் தமிழர் சமுதாயம் உயிர்ப்புடன் வாழ்கிறது. வி ர ல் க ளி ல் மோதிரங்களை அணிவதால் மருத்துவப் பயன்பாடு கிடைப்பதாக பண்டைக்காலம்தொட்டு நம்பப்பட்டு வருகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தின்போது அதிகளவான இரத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைகிறது.
காலத்தால் முன் உணர்ந்த நம் முன்னோர்கள் கைகளில் தங்க ஆபரணங்களை அணிவதன் மூலம் அதற்கு தீர்வு உண்டு என்று நம்மை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அதன் காரணத்தினால்தான் பெண் குழந்தைகளுக்கு கைகளில் தங்க வளையல்களையும், விரல்களில் மோதிரங்களையும் அணிவித்தார்கள். அதனால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. அவர்களைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதேநேரம் மருத்துவப்பலனும் கிடைக்கப்பெற்றது. வலது 6)des மோதிரவிரலில் மோதிரம் அணியும்போது உணவுடன் சேர்ந்து தங்கத்தின் மருத்துவ சக்தியும் உடலுக்குக் கிடைக்கின்றது. தங்க ஆபரணங்களை உடலில் அணியும்போது ஒருவிதமான பளபளப்பும் மினுமினுப்பும் அழகும் நமக்குக் கிடைக்கிறது.
நாம் விரல்களில் அணிகின்ற விரலணிகள் காலத்தால்
முந்தியவை. ஆனாலும் அக்காலத்தில் மோதிரம் எனப்படும் தங்க
 

கும் சுகம் தரும் மோதிரம்
நகைக்கு வேறு பல பெயர்கள் வழங்கப்பட்டிருப்பதை இலக்கியங்களில் இருந்து அறிய முடிகிறது. இராமாயானத்தில் ராமனைப் பிரிந்த சீதாபிராட்டியை சந்திக்கும் அனுமன், தான் ராமபிரானின் தூதுவன் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக ராமன் கொடுத்து அனுப்புகின்ற கணையாழியை சீதாபிராட்டியிடம் கொடுப்பதில் இருந்து விரலணிகள் அக்காலத்தில் எவ்வளவு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறன என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
தற்காலத்தில் பல நாட்டு அதிபர்களும் தங்கள் இராஜாங்க கருமங்களுக்காக நட்பு நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை செய்துகொள்கிறார்கள். ஒரு நாட்டு தலைவரின் கையெழுத்து அல்லது அமைச்சரின் கையெழுத்துடன் அவரின் பதவி முத்திரையை பொறிப்பதன் ஊடாக அந்த ஒப்பந்தங்கள் பெறுமதிமிக்க ஒப்பந்தங்களாக மாற்றம் பெறுகின்றன. அக்காலங்களில் இவ்வாறான வழமை காணப்படவில்லை" என்பதுடன் அரசர்கள் அல்லது முக்கிய பொறுப்பில் உள்ள மந்திரிகளின் கணையாழிகள்தான் பெறுமதிமிக்க அரச முத்திரைகளாக பயன்படுத்தப்பட்டன என்பதை பழைமையான இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. மன்னன் தனது விரல்களில் பலவகையான சிறுசிறு வேறுபாடு கொண்ட முத்திரைகள் பொறிக்கப்பட்ட U6) மோதிரங்களை அணிந்திருந்ததுடன் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளுக்கு அவற்றை வழங்குவதன் ஊடாக தனது அதிகாரங்களில் சிலவற்றை குறிப்பிட்ட தளபதிகளுக்கு வழங்கினான் என்றும் பழைய நூல்கள் வாயிலாக உணரமுடிகிறது. அவ்வாறான
წწ ჯ

Page 19
மோதிரங்களை முத்திரை மோதிரங்கள்’ என சிறப்பாக அழைக்கப்பட்டதுடன் மிக முக்கிய அரச அதிகாரங்கள் அம்முத்திரை மோதிரங்கள் மூலம் பிரயோகிக்கப்பட்டன.
ஆழியங் கையினான்’ என்ற தொடரில் இருந்து மோதிரம் அணிந்த விரலை உடையவன் என்ற பொருள் நமக்குக் கிடைக்கிறது. ஆழி' எனப்படும் சொல்லிற்கு பொதுவாக கடல் என அர்த்தம் கொள்ள முடியும். ஆனால் இங்கு ஆழி' எனப்படுவது விரலணியைக் குறிக்கும் ஒரு சொல்லாகக் குறித்து நிற்கிறது. மேலும் விரலில் அணிகின்ற அணிகலனுக்கு கணையாழி' என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதை 3/T/TCO/Tu/7600Tch போன்ற இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
மோதிரம் என்ற ஆபரணத்திற்கு ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாக 'விரல் செறி’ என்ற சொல் பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளது. அதாவது விரல்களில் செறிப்பது அல்லது விரல்களில் அணிவது என்பது இதன் பொருளாகும். குறிப்பொறி விரற்செறி செறிந்து' என்னும் தொடர் அணிதாம்பிகைப் பிள்ளை தமிழில் வருகின்ற தொடர் இதற்கு சிறந்த ஒரு உதாரணமாகும். அத்துடன் வாழை முன் வாயைத் திறந்திருப்பதுபோன்ற தோற்றம் உடைய பல வகையான மோதிரங்கள் அக்காலத்திலும் பாவனையில் இருந்துள்ளமைக்கு போதிய சான்றுகள் உண்டு. இவ்வகையான மோதிரங்களுக்கு 'நெழி' என்னும் சிறப்பான பெயர் அக்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
'மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி' என்னும் தொடர் திருக்கைலாய தொடர் மூலம் 'மணிகள் பலவற்றைக்கொண்ட ஆழியை தனது மென்மையான விரலில்
அணிந்த' எனப்பொருள் கொள்ள முடியும். மேலும்
மோதிரங்களில் பவள மோதிரம், முத்து மோதிரம், மாணிக்க
 

塞 តែងក្លាយជាំខែ
19
மோதிரம், வைர மோதிரம் உட்பட நவரத்தின மோதிரங்கள், வெள்ளி மோதிரங்கள், தனித் தங்கத்தினால் உருவாக்கப்பட்ட மோதிரங்கள் என பல வகையான மோதிரங்கள் உண்டு.
கைகளில் நாம் மோதிரங்களை அணியும்போது நடு விரலில் மாத்திரம் மோதிரங்களை அணியக்கூடாது என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதற்கு காரணம் என்னவெனில் நடு விரல் என்பது ஆணவத்தைக் குறித்து நிற்பதாகும். அதாவது நடு விரல், மோதிர விரல், சின்னி விரல் ஆகியன முறையே ஆணவம், கன்மம், மாயையைக் குறித்து நிற்பதாக சைவ சித்தாந்தம் கூறுகிறது. ஆரம்ப காலங்களில் தற்போதைய மோதிர விரல் என்பது கன்மம் செய்வதற்கு உரிய விரலாகப் பாவனை செய்யப்பட்டு சைவ சமய கிரியைகளில் 3/jü60) (J தரிக்கும் விரலாகப் பயன்படுத்தப்பட்டது. இதன்காரணத்தால் அவ்விரலை ‘பவித்திர விரல்' எனச் சிறப்பாக அழைத்தார்கள், காலங்கள் செல்லச் செல்ல அந்த விரல் மோதிரம் அணிகின்ற விரலாகக் கருதப்பட்டது.
கிரியைகளைச்செய்யும் குருக்கள் கட்டாயமாக "பவித்திரம்' என்று அழைக்கப்படும் தர்ப்பையை பூணுவதன் மூலமே அந்த தகுதியைப் பெறுகிறார் என சைவ சமய கூறுகிறது. ஆனால் 'பவித்திரம்' என்று சொல்லப்படுகின்ற சிறப்பான மோதிரத்தை அணிந்த சைவ சமய குருக்கள் தர்ப்பை அணியாமல் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்குவதாகவும் சைவ சமயம் கூறுகிறது. பவித்திரம் என்ற சொல்லுக்கு தூய்மை அல்லது புனிதம் எனப்பொருள் கொள்ள முடியும்.
இவற்றைவிட திருமணம் என்ற பந்தத்தில் இணையும் கணவனும் மனைவியும் தமது அன்பின் அடையாளமாக கணையாழியைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த சம்பிரதாயம் தமிழர்களுக்கு மாத்திரமின்றி இனம், மதம், மொழி, நாடு கடந்து உலகம் முழுவதும் பின்பற்றப்படும் உலகப்பொது வழக்கியலாகத் திகழ்கின்றது. இவ்வாறு திருமண பந்தத்தில் இணையும் ஆணும்பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு, புரிந்துணர்வுடன் வாழ்வதற்கான கருவியாக மோதிரம் திகழ்கின்றது
స్త్ర
தகவல் வித்துவான் வசந்தா வைத்தியநாதன் தவர் Grfu Tiger

Page 20
550505 55574 20 புராதன செல்வம்
sairfhüuq salsünsünnun
(Oன்னார் - வவுனியா வீதியில் முருங்கன் சந்தியிலிருந்து சிலாபத்துறை வீதியில், சிலாபத்துறை கிராமத்தை அடுத்து இருக்கிறது அரிப்பு கிராமம். இங்கு கடற்கரையோரமாக கோட்டை ஒன்று இடிபாடுகளுடன் காணப்படுகின்றது, இது அல்லிராணிக் கோட்டை என அழைக்கப்படுகின்றது. அல்லிராணிக் கோட்டையின் வரலாறு அல்லி அரசி என்ற மாபெரும் அரசியுடன் தொடர்புபட்டுள்ளது. தற்போது கோட்டை இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் மண்ணோடு மண்ணாகும் நிலையில் உள்ளது. கோட்டையின் பெரும்பகுதி கடலுக்குள் சென்றிருக்க வேண்டும், எஞ்சியுள்ள ஏனைய சிறிய பகுதிகளும் கடலரிப்புக்குட்பட்டு காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. பகல் பொழுதில் இரண்டு கடற்படை வீரர்கள் காவல் கடமையில் ஈடுபடுகின்றனர். மன்னார், அரிப்புக் கோட்டை முத்துக்குளிப்புடன் தொடர்புபட்டதாகவே காணப்படுகின்றது. அல்லிராணி இக்கோட்டையில் 今<劣O/T今 பொழுதைக் கழித்தபடியே முத்துக்குளிப்பு நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருப்பார் எனவும் சில கர்ணபரம்பரைத் கதைகள் கூறுகின்றன.
தமிழர் பூர்வீக வரலாறுகளையும் பழம் பெருமைகளையும் உறுதிப்படுத்தத்தக்க பல தொல்லியல் சான்றுகள் மாந்தை,
மாதோட்டம், அரிப்பு, புத்தளம், வங்காலை போன்ற பகுதிகளில்
 

GUIUfējis GSSTUGUnu
நிறைந்தும் புதைந்தும் காணப்படுகின்றன. ஆனால் இப்பகுதிகளில் தொல்பொருள் அகழ்வாய்வு நடவடிக்கைகளை துல்லியமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதனால் அல்லிராணிக் கோட்டை தொடர்பான நிரூபிக்கத்தக்கதான, சரியான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. இருந்தபோதிலும் நாட்டுக்கூத்து மரபுகள், சிலப்பதிகாரம் போன்ற தமிழர் வரலாற்று, இலக்கிய நூல்களிலிருந்தும் ஆனைக்கோட்டை, பூநகரி, மாதோட்டம் ஆகிய பகுதிகளில் கிடைக்கப்பெற்ற தாளிகள், கல்வெட்டுகள் ஆகியவற்றிலிருந்தும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அல்லிராணி குறித்தும் அவளின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகள் குறித்தும் ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது.
புதைபொருள் அகழ்வாராய்ச்சி வெளியிடப்பட்ட Ancent Ceylon என்ற நூலின் 3, 4, 5 ஆகிய தொகுதிகளில் அல்லிராணி கோட்டை தொடர்பான வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வரலாறு தமிழ் ஆவணங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களுடன் பெரும்பாலும் முரண்படுகின்றன.
அல்லிராணிக்கு குதிரைமலை என்ற இடத்தில் ஒரு அரண்மனையும் மன்னார் அரிப்பிலும், சிலாபம் அரிப்பிலும் கோட்டைகள் இருந்தன. குதிரைமலைக் கோட்டை தற்போது
கடலுக்குள் காணப்படுகின்றது.

Page 21
லெமூரியா காலப்பகுதியில் இடம்பெற்ற பெரும்கடற்கோள் காரணமாக குமரிக்கண்டத்தை கடல்விழுங்கியதாகவும் இதனால் தமிழர்களின் இராசதானிகள், நகரங்கள் கடலுக்குள் சென்றன என்றும் தமிழ் இலக்கியங்கள் ஊடாக அறிகிறோம். சிலப்பதிகாரத்தில்
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற பாடல் மூலம் மன்னார் குடாவுக்கும் கன்யாக்குமரிக்கும் இடைப்பட்ட பகுதியை கடல் கொண்டது என்பதை நாம் அறிகின்றோம். குதிரைமலைப் பகுதி கடலுக்குள் இருப்பதாகவும் இந்தப் பகுதி கடல் கறுப்பு நிறத்தில் காணப்படுவதாகவும், எனவே இப்பகுதி மிகவும் ஆழம் கூடியது எனவும் அறியமுடிகிறது.
மேற்குறித்த விடயத்திற்கு சான்றாக, நாகருடைய ஆட்சிக் காலத்தில் மாந்தைத் துறைமுகம் பெரும் சந்தையாக விளங்கிய வரலாறுகளும் உண்டு. இந்த மாந்தைத் துறைமுக காலத்தில் மாந்தையை ஆட்சிசெய்த ஓவிய நாகர்களால் கட்டப்பட்ட காந்தக் கோட்டை மிகப்பெரும் வல்லமையுடையதாக திகழ்ந்ததாகவும் அக்கோடடையை கரிகாலன் அழித்தான் எனவும் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. குதிரைமலை கடற்கோளால் அழிந்ததுபோல் காந்தக் கோட்டையும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இதனூடாக அல்லி அரசியின் ஆட்சி பலம் மன்னார் அரிப்புக் கோட்டை, குதிரைமலையில் இருந்த பெரும் கோட்டை, மாந்தையிலுள்ள காந்தக் கோட்டை ஆகியன நம் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் உண்மை எனத் தெளிவாக புலப்படுகின்றது.
காந்தக் கோட்டை இருந்த காலத்தில் பகலில் சூரிய காந்தமும் இரவில் சந்திர காந்தமும் அக்கோட்டையில் காந்த விசையாக இருந்துள்ளன எனவும், இக்கோட்டை பல கப்பல்களை உள்வாங்கியதைக் கண்டு பயந்த அராபியர்கள் தமது கப்பலின் அடியில் தேக்கு மரத்திலான பலகைகளை இணைத்து, காந்தம் இழுக்காதவாறு அந்தக் காந்தக் கோட்டையைக் கடந்தனர். அரிப்பு, மாந்தை போன்ற
இடங்களில் முத்துக்குளித்தல், ஆபரணங்கள் செய்தல்,
பெறுமதி மிக்க சங்குகள் எடுத்தல் போன்ற
 


Page 22
ថ្វវែរអ៊ី 参 22
தொழிகளில் அராபிய நாட்டுவியாபாரிகளுக்கே தொடர்பிருந்த விடயத்தை மாந்தைப்பள்ளு என்ற நூலில் 'மக்கத்து துலுக்க மாந்தைக் கம்மியரும் பக்கத்திருந்தவாறே என்ற பாடல் அடி மக்கத்து துலுக்கர் தொடர்பாக காட்டப்படுகின்றது. ஆக இப்ெ துறைமுகங்களை உடைய அல்லிராணியின் காலத்தில், அர7 வியாபாரிகள் மத்தியில் முத்து வியாபாரம் இருர தெரியவருகின்றது.
நாகப்பேரரசி அல்லிராணி முரளி நாகர் பிரிவைச் சேர்ந்தவளாக சிலாபம், அரிப்பு, வங்காலை போன்ற இடங்கள் இவ ஆட்சிக்குட்பட்டிருந்ததாகவும் மாந்தை போன்ற பெருநகரத நல்லியக்கோடான் எனும் மன்னனும் ஆட்சி செய்த வரலாற் சிறுபாலாற்றுப்படை எனும் சங்க இலக்கிய நூல் காட்டுவே இலங்கை மாவிலங்கை என அழைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக் மன்னார்க் கடல் முத்துக் குளிப்புக்கு புகழ் பெற்ற கடல், இ விளையும் முத்துக்கள் தரமானவை; உலகப் பிரசித்தி பெற்ற அல்லிராணி முத்துக்குளித்தல் தொழிலை ஊக்கப்படுத்தியதாக அராபிய வியாபாரிகள் இவளிடம் முத்துக்கள் வாங்கிச் சென்றதாக அராபிய வரலாற்று குறிப்புகளில் காணமுடியின்றது.
இங்கு விளைந்த முத்துக்களில் பவள முத்து எனப்படும் ராஜமு விலைமதிக்க முடியாதளவு பெறுமதி கொண்டது என்றும், மன்னார்க் கடலில் காணப்படும் பவளப் பாறைகளில் அரி விளைந்ததாகவும் சில குறிப்புகளில் காணப்படுகின், அல்லிராணியிடம் பவள முத்து ரதம் ஒன்று இருந்ததாகவும் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாகவும் கிராமிய கலைய நாட்டுக்கூத்து பாடல்களில் அறிய முடிகின்றது. அல்லிராணி முத்தை அதிகம் விரும்பியதாகவும் அர்ச்சுனன் அல்லி மணந்ததாகவும் இவர்களுக்கு பப்ரவாகன் எனும் மகன் பிறந்ததாக நாட்டுக்கூத்து மரபில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கவிதை நடை நூலான அல்லியரசாணி மாலை எ அல்லியரசாணியின் புகழ்பாடும் நூலில் மிகைப்படுத்தல் அதிகமாகவும் யதார்த்தத்திற்கு புறம்பான சம்பவங்களும் அ. காணப்படுவதால் இந்நூலை வரலாற்றுச் சான்றாக ஏற்றுக்கெ/ முடியவில்லை. ஆனால் அல்லி என்றொரு அரசி இப்பகுதி வாழ்ந்திருந்தாள் என்பதும் அவள் மிகுந்த ஆழுமை மிக்கவளாக ஆ செலுத்தினால் என்பதும் ஊர்ஜிதமாகின்றது. மேலும் நாட் இலக்கியம், வாய்மொழி இலக்கியங்கள் ஊடாகவும் அல்லிராணி வரலாற்றை அறிய முடிகிறது.
இன்றும் நமது வீடுகளில் ஆழுமை மிக்க பெண்களை அல்லிராட் அல்லது அல்லிராணி என அழைப்பதை கண்டிருக்கின்றோம். என அல்லிராணியின் அரசாட்சி மிகவும் பலம் பொருந்திய அரசாக தனித்துவமாக ஆழுமை கொண்ட அரசியாகவும் வாழ்ந்திருந் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. இதை ஒட்டிய உறுதிப்படுத்தத் உண்மைத் தகவல்களை பெற்றுக்கொள்ள, புத்தளம், சில
மாதோட்டம், அரிப்பு, வங்காலை ஆகிய பகுதிகளில் தொல்பெ
 


Page 23
ஆய்வுகள் துல்லியமாகவும்,
வேண்டும்.
அல்லிராணி திருமணம் செ வெடியரசன், வீரநாராயணன் அல்லிராணியின் ஆழுகைக்குட்பட்ட அதிகாரம் செலுத்தினார்கள் ( தெரிவிக்கின்றன.
அல்லிராணி வாழ்ந்த கால முடியாதுள்ளது. சிலதகவல்கள் வரலாற்றுடனும், சில தகவல்கள் ே கொண்டது எனவும் கூறுகின்ற6 மேற்கொள்ளப்படும் பாரியளவிலான சரியான காலப்பகுதியை அறிந்து ெ
அல்லிராணியின் அரண்மனை எளினி பித்தன்கோடன், குமண6 குதிரைமலைப் பிரதேசத்தில் அறியமுடிகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வாழ்வியல் முறை, மன்னார் ம/ முறைகளுக்கு நெருங்கிய தொடர்பு இரு நிலப்பகுதியையும் பெரும் உண்மைகளை உணர முடிகிறது.
மேற்குறித்த பல விடயங்கள் நோக்கும்போது, ஒரு தாக்கம் ந( மண்ணில் பழமைமிகுந்த தமிழர் 6 போனமைக்கு நாமும் ஒரு காரண தெளிவு காண்பவர்கள் எமது வரலா முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். பாரிய பொறுப்பு ஒவ்வொருவருக்கு வாய்மொழிப் பாடல்கள், அந்த மக்க தகவல்கள், பழைமைமிகுந்த ஏடுகள் நாம் பேணிப்பாதுகாப்பதுடன் கொடுத்துதவுதலும் நலம்.
பின் குறிப்பு : இலங்கையில் கலாசாரமும், இலங்கைச் சரித்த அல்லியரசாணி மாலை, அர்ச்சுன மாந்தைப் பள்ளு, திருக்கேதீஸ்வ அன்றும் இன்றும்’ ஆகிய நூல்களில்
காணப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரிவாகவும் முன்னெடுக்கப்பட
ய்துகொள்ளவில்லை என்பதும் போன்ற குறுநில மன்னர்கள் பகுதிகளில் குறுநில மன்னர்களாக
எனவும் ஆய்வுத் தகவல்கள்
த்தை சரியாக அனுமானிக்க இலங்கையில் நாகர் காலத்து சாழர்களுக்கு முற்பட்ட காலத்தை ன. மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ா ஆய்வு நடவடிக்கையின் மூலமே காள்ளமுடியும், குதிரைமலையில் இருந்ததாகவும் ன் ஆகிய குறுநில மன்னர்கள் அதிகாரத்தில் இருந்ததாகவும்
உட்பட்ட நிலம், நீர், மக்கள் ாவட்ட நீர், நிலம், வாழ்வியல் |ண்டு. இந்த ஒற்றுமைகளினூடாக கடற்கோள் பிரித்த வரலாற்று
ரில் நாம் தெளிவு கொண்டு மக்குள் தெரிகின்றது. இலங்கை வரலாற்றுச் சின்னங்கள் அழிந்து ம். இந்தநிலையில் நம்மவர்களில் ற்று மூலங்களை தற்போது தேடும் அவர்களுக்கு உதவ வேண்டிய iம் உள்ளது. கிராமங்களில் உள்ள களிடம் உள்ள ஆலய வரலாற்றுத் ர், கல்வெட்டுக்கள் ஆகியவற்றை
ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு
தொல்பொருள் ஆய்வும் திராவிட திரம்', 'வெடியரசன் வரலாறு', ான் தீர்த்த யாத்திரைச் சுருக்கம், ர மான்மியம்', 'மாந்தை மாநகர்
ல் அல்லிராணி குறித்த தகவல்கள்
மம் காந்தன் குருக்கள்

Page 24
in t 24சுவடுகள்
தூரத்தில் இருந்தாலும் உங்கள்
கிழமைக்கு ஒரு கடிதம் எனக்கு எழுத வேண்டும்.
ஒவ்வொரு கிழமையும் படித்த பாடங்களையும் தீர்க்க வேண்டிய சந்தேகங்களையும் நீ எனக்கு எழுத வேண்டும். எனக்கு எழுதும் கடிதங்களிலே ‘கண்ணம்மை’ என்று கையெழுத்துப்போடு.' இது விபுலானந்த அடிகளார் தனது மருமகள் கோமேதகவல்லிக்கு எழுதிய கடிதத்தின் ஒருபகுதி. இவ்வாறு விபுலானந்தரின் நேரடி வழிகாட்டலில் வளர்ந்தவர்தான், அடிகளாரின் சகோதரியின் மகளாகிய கோமேதகவள்ளி. இப்பொழுது இவருக்கு 82 வயது.
"சோக்கா படிப்பிப்பார்’ என்று சாமியுடனான தனது ஞாபகங்களை மீட்ட கண்ணம்மை, விபுலானந்தர் கல்வி புகட்டும் முறைகுறித்து புகழ்ந்தார். எந்த வெளியூரில் இருந்தாலும் இன்னபாடத்தைப் படி, இன்னபுத்தகத்தை வாங்ககிப்படி என்று கிழமைக்கொடு கடிதம் எழுததிக் கொண்டேயிருப்பார் என அக்கடிதங்களை பெருமையுடன் எனக்குக் காண்பித்தார். மகாபுருசரின் கையெழுத்துக்கள்
அல்லவா?
விபுலானந்தர் சொல்லச் சொல்ல யாழ்நூலையும் கண்ணம்மையே எழுதியுள்ளார் என்ற விபரத்தையும் எமக்குக் கூறினார்.
கண்ணம்மை கூறுகிறார் . “1947 இல் எனக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. 47 இல்த்தான் சுவாமி இறந்தார்.
 
 

என் கண்கள் மேல் தான் - விபுலானந்தர்
கண்ணம்மாவை கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு வரட்டாம்.' என்ற தகவலையடுத்து நானும் அம்மாவும் கொழும்பு பெரியாசிப்பத்திரிக்குச் சென்றோம். சுவாமி மூச்சுப் பேச்சின்றி படுக்ககையில் இருந்தார். அம்மா அவரது கையைத் தூக்கியபோது அது பலமிழந்து குளிர்ந்து போயிருந்ததாம். அம்மாவையும் என்னையும் பார்த்து சிறிய புன்னகை : அவ்வளவுதான். அவருடைய உயிர் பிரிந்தது. ' சுவாமியின் மறையின் அந்தக் கணத்தையும் நினைவுகூர்ந்தார்.
கல்வி கற்ற பாடசாலையிலேயே 1947 ஆம் ஆண்டில் ஆசிரியராக நியமனம் பெற்று, அதே பாடசாலையிலேயே அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதைப் பெருமையாகவும் பெரும்பேறாகவும் கருதுகிறார். "அம்மாவின் அண்ணனுக்கு பெம்பிளைப்பிள்ளையிருந்தால் அவர் சாமியாராகி இருக்க முடியாது. மாமாவுக்கு பெரிய தென்னந்தோட்டம், வளவுகள் இருந்தன. ஒருநாள் வீட்டிற்கு வந்த சுவாமி 'கண்ணம்மைக்கு பூமிதரும்' என்று கூறிக்கொண்டே, தென்னந்தோட்டக் காணியை காலால் அளந்து எல்லைகளைப் பிரித்து இராமகிருஷ்ண மிசனுக்காகக் காணியை ஒதுக்கிக் கொண்டாராம். இந்தக் காணியிலேயே காரைதீவு இராமகிருஷ்ண மினன் பாடசாலையும், இராமகிருஷ்ண பெண்கள் ஆச்சிரமமும் உள்ளது .
'பசியை அகற்றி ஆன்மீகத்தை வழங்கு' என்ற மகுட வாசகத்திற்கு ஏற்ப விபுலானந்தரால் அநேக கல்விப்பணிகள் மேற்னூெனூகாள்ளப்பட்டன. அப்பணிகள் என்ற விதைகள் இன்று பெருவிருட்சங்களாக புகழ் பரப்புகின்றன.
சுவாமியின் பிறந்த வீடு இருக்கும் வளவு விபுலானந்தா அடிகளாரால் இராமகிருஷ்ண மிசனுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. சுவாமி பிறந்த வீடு இப்பொழுதும் பழைமை 64, C /Tao6ů புனர்நிர்மாணம் செய்யப்ட்டு பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சுவாமியின் தந்தை விதானையாராகத் தொழில் பார்த்தவர். தந்தையை விட தாயிடத்திலேயே சுவாமிக்கு அதிகளவு பாசம் இருந்துள்ளது. விபுலானந்தரின் குறிப்பொன்றில் பின்வருமாறு எழுதியுள்ளமை கவனிக்கத்தக்கது. "பதினாறாம் வயது தொடக்கம் நான் சிறுவேலைகள் பார்த்து அப்பாவுக்கு தகும் உதவி செய்து,
என்னுடைய படிப்பையும் நகர்த்திக் கொண்டுவந்தேன்.

Page 25
படிப்பிலே கருத்திருந்தால் ஆண்டவன் வேண்டிய செளகரியங்களைத் தருவார். தாயுடைய மனத்துக்குச் சந்தோசம் வரும்படி நடந்துகொண்டால் ஆண்டவனுடைய கருணை தானாகவே வரும். என்னுடைய அம்மாவைப் போல் உலகத்திலே இன்னும் ஒருவரைக் காணவில்லை. பார்வைக்கு அழகாக, தெய்வம் போல இருந்தார்கள். என்னை ஒரு பொழுதாவது கடிந்து பேசியது கிடையாது. அப்பா தடியினால் அடித்தாலும் எதிர்த்து நிற்பேன். அம்மா ஒருவார்த்தை சொன்னால் அதைத் தலைமேற் கொண்டு நடப்பேன். நான் நல்ல கல்விமானாக வேண்டுமென்று இருவரும் கடவுளைக் காலையிலும் மாலையிலும் நினைத்தார்கள். எனக்குக் கிடைத்த நன்மையெல்லாம் அவர்களுடைய தவப்பயனே. என்று சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
விபுலாநந்தரின் வாழ்க்கை மனிதராக வாழவிரும்புபவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு, சமயம் கடந்த நிலையில் மனித நேயம் என்ற உயர்ந்த பண்பில் திளைத்தவராக, அனைத்து இன மக்களையும் அரவணைத்து நின்ற அவரது உயர்ந்த பண்பாடு இப்போது நாட்டுக்கு மிகவும் தேவையாக உள்ளது.
விபுலானந்தரின் எழுத்தும் சிந்தனைகளும் அவருக்குப் பின்னால் உள்ள சமூகங்களுடன் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கின்றன. மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுசேர வாழும் மனிதனின் வாழ்வு பூரணத்துவம் பெறும் என்பது விபுலானந்தரது சித்தார்தமாகும்.
காரைதீவுக் à8/777Cocბ (LUGU) கல்வியியலாளர்களை
உருவாக்கியுள்ளது. இதற்குக் காரணம் விபுலானந்தரின் கல்வி
 

25
விழிப்புணர்ச்சி நடவடிக்கைகள் எனலாம். உண்மையில் காரைதீவு கிராமத்தில் 95 சதவிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்விசார் ஊழியர்களாகவும் நிர்வாக அதிகாரிகளாகவும் பணியாற்றுகின்றனர்.
தனது மருமகள் கண்ணம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கல்வியைப்பற்றியும் அதைக் கற்கும் விதம்குறித்தும் சுவாமி பின்வருமாறு எழுதியுள்ளார்.
څ ح بھیجrgصۓلاقہ طائی پتی حمG ہی علاer6لص سوچتے %് ആഴ്ചക്രജ്7മ്മf ( ക്ട് ஆதித்து . لލޛުޕީމ ب6ق&xޓަ}C
*நரல், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும்
ஒருமிக்கப்படிக்க வேண்டும். முதலிலே நான் குறிப்பிடுகின்ற சூத்திரங்களைப் பாடம்பண்ணி உரையையும் கவனமாகப் படிக்கவும். ஆறுமுகநாவலர் காண்டிகையுரை நீங்கள் படிக்க வேண்டியது. புத்தகம் ஒன்று தாமதமில்லாமல் வாங்கிக் கொள்ளவும். விளங்காத விடயங்களை அவ்விடம் உபாத்தியாயர்களிடம் கேட்டுக்கொள்ளலாம். ஒவ்வொரு
கிழமையும் படித்து முடித்த சூத்திரங்களின் இலக்கத்தைக்
1947 இல் நோய்வாய்ப்பட்டிருந்தபோது

Page 26
560605 (BöEF) at 26
குறிப்பிட்டு எனக்குக் கடிதமெழுதவும். என்று தொடர்ந்து சூத்திரங்களை எழுதிச் செல்கிறார். பின்னர் பின்வருமாறு தொடர்கிறார். ஒரு மாதத்திற்குள் மேற்கண்ட சூத்திரமல்வளவும் பாடம் பண்ணிக் கருத்துமறிந்து கொள்ள வேண்டும். பரிட்சைப் பத்திரம் ஒரு மாதம் முடிவில் அனுப்புவேன். புத்தகத்திலே சூத்திரம் சிறிது வேறுபட்டிருந்தாற் புத்தகத்திலிருக்கிற மாதிரிப் பாடம் பண்ணவும். ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கம் ஒன்று வாங்கிக் கொண்டால் எல்லாந் தெளிவாகும். நூணுகி ஆராய்ந்து படிக்க வேண்டும். பரீட்சைக்காக மாத்திரமல்ல உள்ளபடி தமிழறிவும் நல்லொழுக்கமும் வரும்படி இரவுபகலாகப் பாடங்களை ஆராய்ந்து படித்து மனதிலே நிற்கும் படியாக நெட்டுருப் பண்ணிக் கொள்ள வேண்டும். பின்பு இந்தியாவில் வந்து படிப்பதற்கு இப்போதுள்ள படிப்பு அஸ்திவாரமாக வேண்டும். தூரத்தில் இருந்தாலும் உங்கள் மேல் என்னுடைய கண்கள் இருக்கின்றன. சோம்பல் சிறிதும் கூடாது. சினிமாப் படம் முதலிய வேடிக்கைகளிலே மனஞ்சென்றால் படிப்பு வராது. நான் படிக்கிற காலத்திலே வேட்டி சட்டை கிழிந்திருப்பதைக் கூட நினைப்பதில்லை. படிப்பே கவனமாக இருந்தேன். ஒருவரிடத்தலும் போய் எனக்கு உதவி செய்யுங்கள் என்று இரந்து நின்றது மில்  ைல .
க ட வு ள்
 
 
 

மத்தியிலும் கல்வியிலும் மனஞ்செலுத்தினால் வேண்டிய செளகரியங்கள் தாமாகவே வந்து கைகூடும். படிப்பிலே கவனமுள்ளவர்களுக்கு ஆண்டவனுடைய கருனையினால் எப்படியும் உதவிகிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் எனது சகோதரியின் பிள்ளைகளானதால் இந்த விஷயங்களை உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் புத்தியுள்ள பிள்ளைகள் என்றால் நானிருக்கும்பொழுதே
உண்மைக் கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள்.
籌 囊 擎 ൧൦൬ മിഥുളBറ്
தலைசிறந்த ஆசிரியராக, அதிபராக, இராமகிருஷ்ண மிஸன் சங்கப் பாடசாலைகளின் முகாமையாளராக, தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் முதற்தமிழ்ப் பேராசிரியராக, பத்திரிகையாளராக, அரிய நூல்களின் ஆசிரியராக, எழுத்தாளராக, பேச்சாளராக, ஆய்வாளராக, இராமகிருஷ்ண சங்கத்தின் ஈழத்தின் முதற் துறவியாக விபுலானந்தர் விளங்கினார். மேற்கூறிய எத்துறையை எடுத்து நோக்கினாலும் அவ்வவ்துறைகளில் பல அரிய சாதனைகளை அவர் நிலைநாட்டியுள்ளார். 55 வருடகாலம் எம்மத்தியில் வாழ்ந்தார்.
考奉
கண்னம்மை சொன்னார் விபுலானந்தரின் ஒருசோடி ஆடையையும் யாழையும் பாதுகாத்து வந்ததாகவும் கலவரத்தின் போது முஸ்லிம்கள் அவரது ஆடையை எரித்துவிட்டு, யாழை எரிப்பதற்கு மண்ணெண்ணை ஊற்றிக் கொழுத்துவதற்கு ஆயத்தம். ஏதோ தெய்வ கருணையால் அவர்கள் இங்கிருந்து அகன்று விட்டார்கள். பின்னர் யாழை
எடுத்து இசைக் கல்லூரிக்கு கொடுத்து விட்டோம். ' என்று
கூறிய கண்ணம்மை தொடர்ந்து விபுலானந்தரின் உணவுப்பழக்க வழக்கங்களைக் கூறும்போது 6 அவருக்கு எப்பொழுதும் உணவில் வல்லாரை இருக்க வேண்டும். அது சம்பலாகவோ,
ரசமாகவோ இருக்கலாம். எண்ணையில்

Page 27
பொரித்து வதக்கின கறிகள் விருப்பம், ரசம் குடிப்பார், தயிரைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட மாட்டார். பிறம்பாக சீனிபோட்டுத்தான் சாப்பிடுவார். ஒருமுறை நெருப்புக்காச்சல் வந்திருந்த பொழுது ஆசையாக இஞ்சிப் பிளேன்ரியும் இடியப்பமும் சொதியும் கேட்டுச் சாப்பிட்டது இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கின்றது. அளவுக்குத்தான் சாப்பிடுவார். மத்தியானம் சாப்பிட்ட பின்னர் சிறிதுநேரம் தூங்கிவிடுவார். 2.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். இரவிலும் நேரம்செல்லத்தான் படுக்கைக்குப் போவார். அதிகாலைச் சாமத்திலேயே எழுந்துவிடுவார். ' என்றும் கண்ணம்மை நினைவுகளை மீட்டார்.
விபுலானந்ததர் என்ற துறவுப்பெயர் கொண்ட மயில்வாகனத்துக்கு இரண்டு சகோதரிகள். இவர்களில் மூத்தவள் அமிர்தவல்லி, இளையவர் மரகதவல்லி, மரகவல்லிக்கு நான்கு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையுமாக ஐந்து பிள்ளைகள். அந்தப் பெண்பிள்ளையே கோமேதகவல்லி. இவருக்கு சுவாமி விபுலானந்தர் இட்ட பெயர் கண்னம்மை', 'எங்கட அம்மா கண்ணம்மா, எனக்குத் தெரிந்த பிள்ளை கண்ணம்மை' என்று விபுலானந்தர் கண்ணம்மைக்கு விளையாட்ட்ாகச் 6ിക06) ബ70ff(b,
அமிர்தவல்லிக்கு குழந்தைவடிவேல், பத்மாவதி சாரதாதேவி என மூன்று பிள்ளைகள் . இவர்கள் அனைவரும் இன்று உயிருடன் இல்லை. மரகதவல்லிக்கு சுந்தரம்பிள்ளை (அமரராகி விட்டார்), விவேகானந்தன் (கண்டியில் வாழ்கிறார்),
கோமேதகவல்லி, சதாசிவம் (அமரராகி விட்டார்), கணேசன் என
ஐந்து பிள்ளைகள், கண்ணம்மைக்கு மூன்று பிள்ளைகள், ஒரு
 

க் கலைக்கேசரி 27
மகளும் இரண்டு மகன்களும்; மகள் ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.
சுவாமி விபுலானந்தர் இணைந்த, இராமகிருஷ்ணமிசனின் சமய நோக்கு சமரச நோக்கு என்றாலும் அவர்கள் வைதீக நெறிக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலேயே முன்னின்றார்கள் என்பதை மறுத்தலரிது. ஆனாலும் வேதாந்த வழிவந்த வைதீக நெறியை மக்கள் தர்மமாகக் கொண்டு அதனை வளர்ப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வந்தனர். ஆனால் விபுலானந்தர் தமிழர் முதுசொமாகக் கொண்ட சைவசித்தாந்தத்தினை ஒதுக்கிவிடவில்லை. 1935 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற சைவமகா சமாசத்தின் 30 ஆவது ஆண்டு விழாவுக்கு விபுலானந்தர் தலைமை தாங்கியதிலிருந்து அவரின் உண்மையான சிந்தனையை அறிய முடியும். விபுலானந்தரால் எழுதப்பட்ட நடராஜவடிவம், தில்லைத் திரு நடனம் ஆகிய இரு கட்டுரைகளும் கவனிக்கத்தக்கன.
உலக மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் சராசரி மனிதர். மற்றவகையினர் அறிவாளிகள், இன்னொரு வகையினர் மகாபுருசர்கள். சராசரி மனிதருக்கும் அறிவாளிகளுக்கும் புலப்படாத காட்சிப் புலங்கள் மகாபுருசருக்குப் புலப்படும். தனக்கு அடுத்த காலத்தை அவர் தொடக்கி வைப்பவராக இருப்பார். அவர் காலத்தில் அக்கருத்துக்கள் புரியாவிட்டாலும் அடுத்து வரும்காலங்களில் அது புரியப்பட்டு ஏற்கப்படுவதுடன் அவரும் மகா புருசராக ஏற்கப்படுவார். சுவாமி விபுலானந்தர் ஒரு மகாபுருசர். .
ஜே. பஸ்ரியாம்பிள்ளை

Page 28
நாங்கள் சிலரால் வளர்க்கப்படுகிறோம்" எங்களில் சிலர் தானாகவே வளர்கின்றார்கள்
நாங்களோ
வளர்ந்து வந்து நீர் கொடுக்கின்றோம் கட்டணமின்றி காற்றையும் கொடுக்கின்றோம்
வெய்யிலில் வெந்து வருவோருக்கு நின்று கொண்டே நிழலையும் கொடுக்கின்றோம்
அவர்களோ எங்களுக்கு எதனை கொடுக்கிறார்கள்
கத்தியும் கோடரியும் கொண்டு கத்தக் கத்த வேதனையைத்தான் கொடுக்கின்றார்கள்
எங்கள்
கைகளையும் கால்களையும் கொண்டு அடுப்பெரிக்கிறார்கள் உடலை மாத்திரம் உயர்த்தி விலைக்கு விற்று விடுகின்றார்கள்
6IIbib60)6II பெற்றுக்கொண்டவர்களாய் கீற்றுக் கிற்றாக கிழிக்கப்பட்டு தளபாடங்களாய் உருமாற்றப்படுகின்றோம்
 
 
 
 

எங்களுக்கு எத்தனை எத்தனை வேதனைகள்
அதனால் தான் எங்களில் சிலர் சினம் கொண்டு சுனாமியாகவும் சூறாவளியாகவும் ១ ឆ្នាំ1560)6T பதம் பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்தாக்கம் முண்டு
இது நியூட்டனின் தத்துவம் மானிடரே அதையை தான்
நாங்களும் சொல்லுகின்றோம்
எம். நேசமணி

Page 29
鱗
02 |- < |- C |- <% 甘 C) *
We llawat tha
 


Page 30
கலைக்கேசரி கி 30 Guyġli umri 63 unigų
மகிமைகள் மாமாங்கேஸ்வ
() ட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த திருத்தலமாகும். இராமாயண காலத்துடனும் மட்டக்களப்பு பிரதேசத்தை ஆட்சிபுரிந்த ஆடகசவுந்தரி என்னும் இளவரசியுடனும் தொடர்புடையதாக இத்திருத்தல வரலாறுகள், காதைகள் இயம்புகின்றன. திருப்படைக் கோவில்கள் என்ற சிறப்பைப் பெற்ற திருத்தலங்கள் பெருமை வாய்ந்தனவாகும். நாட்டை ஆண்ட மன்னர்களால் மதிக்கப்பெற்று அரசனிடமிருந்து அரச சீர்வரிசைகள், அரசமானியங்கள் பெற்ற திருத்தலங்களே திருப்படைக் கோவில்களாகும், மாமாங்கப் பிள்ளையார் கோவிலுக்கும் இந்தச் சிறப்புண்டு.
களுதாவளைப் பிள்ளையார் கோயிலில் சுயம்புலிங்கமாக தோன்றிய மூல மூர்த்தியை பிள்ளையார் எனப் பெயரிட்டு வணங்குகின்றனர். இதே போல் மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்திலும் மூல மூர்த்தி ஈஸ்வரர். ஆனால் பிள்ளையாராக வழிப்படுகின்றனர். இவ்வாலயத்தில் விநாயக வழிபாட்டு முறைகளிலேயே பூஜைகள் நடைபெறுகின்றன. மூல மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும் போது இன்றும் லிங்கத்தை காணலாம். அபிஷேகம் முடிந்தபின் திரையிட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்போது விநாயகர் எழுந்தருளி இருக்கிறார்.
ஆரம்பத்தில் ஆலயத்தை புனருத்தாரணம் செய்யும் நோக்கத்துடன் மூலஸ்தானம்
உள்ள பகுதியை, நீர்மட்டம் வரை
அகழ்ந்தும் மூலஸ்தானத்தில் உள்ள
 
 
 
 

ா நிறைந்த ரப் பிள்ளையார்
சிவலிங்கத்தைச் சற்றேனும் நகர்த்த முடியவில்லை. இந்த சிவலிங்கத்திற்கும் கோவிலின் அருகாமையில் வடக்குப்
பக்கமாக அமைந்துள்ள தீர்த்தக் குளத்திற்கும் இடையில் உள்ள தூரமானது ஒருசில முழங்களாகும். தீர்த்தக்குளத்தில் வற்றாத ஜீவநதியாக காணப்படுகின்ற நீரூற்றுக்கும் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்தின் அடிமட்டத்தில் காணப்படுகின்ற நீரூற்றுக்கும் தொடர்புண்டென அறியப்படுகின்றது.

Page 31
ஆலய வரலாறு
சீதையை சிறை மீட்டுச்செல்லும் வழியில் இராமன் களைப்புற்றதனால் சற்று இளைப்பாற எண்ணினார். ஆல், அரசு, நெல்லி, நாவல் ஆகிய மரங்களை அடர்த்தியாகக் கொண்டிருந்த இக்காட்டில், சிவ பூஜை செய்யும் விருப்பம் ராமபிரானுக்கு மேலிட, உடன் வந்த அனுமானிடம் லிங்கம் ஒன்றைக் கொண்டு வருமாறு பணித்தார். அனுமனின் வருகை தாமதம் அடையவே குறித்த காலத்தில் சிவபூஜையை நிறைவேற்றிட எண்ணிய இராமர், மணலில் பிசைந்து லிங்கம் ஒன்றை உருவாக்கினார். அதற்கு அபிஷேகம் செய்வதற்காக தனது கோதண்டத்தை நிலத்தில் ஊன்றிப் பதித்தார். பள்ளத்திலிருந்து சுரந்த புனித நீரை பெற்று அபிஷேகம் செய்தார். அப்பள்ளம் நீர் சுரந்து, நிரம்பி குளமாகியது. தாமதமாக வந்த அனுமான் கொண்டு வந்த லிங்கம் குளத்தின் நடுவில் புதைக்கப்பட்டது.
காலஓட்டத்தில் இராமனால் லிங்கம் அபிஷேகம் செய்யப்பட்ட இடம் பற்றைக் காடுகளால் நிறைந்தது. அவ்விடத்தில் வேட்டையாடிய வேடன் ஒருவன், களைப்படைந்து, தனது வில், அம்பு, கோடரி ஆகியவற்றை மரம் ஒன்றின் கீழ் வைத்து விட்டு உறங்கினான். லிங்கத்தைப்பற்றி கனவு கண்டான். கண்ட கனவின்படி , வில்லை சாத்தி வைத்திருந்த முள்ளாவ மரத்தைச் சுற்றி கிளறினான். வேர்களையும், பற்றைகளையும் வெட்டி ஒதுக்கினான். கனவில் கண்ட லிங்கம் அங்கே நனவில் தென்பட்டது. தன் இனத்தவர்களை கூவி அழைத்து காட்டினான். எல்லோரும் சேர்ந்து அவ்விடத்தில் கொத்துக் குளை பந்தலிட்டு வழிபட்டனர்.
1837 ஆம் ஆண்டு மட்டகளப்பு நில வரைப்படத்தில் மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயம் களிமண்ணால் கட்டப்பட்டிருந்த குறிப்பு காணப்படுகிறது. 1880 ஆம் ஆண்டு முதல் ஆலய நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1888 ம் ஆண்டில் கொடியேற்ற கம்பம் கட்டப்பட்டு, பெரிய
 

基 கலைக்கேச
31
அளவிலான கோயில் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆரம்ப காலத்தில் மாசி மாதத்தில்தான் இத்திருத்தலத்தில் விழா எடுக்கப்பட்டது என்பதனையும் இதன் காரணத்தினாலத்தான் மாமாங்கவாசகர் எனப் பெயர் ஏற்பட்டது என்பதனையும் மாமாங்கர் அம்மானை இயம்புகின்றது. ஆரம்ப காலத்தில் வருடாந்த மகோற்சவமானது ஒரு நாள் உற்சவமாக இருந்து பின்பு, ஐந்து நாள்த் திருவிழாவாக அதிகரிக்கப்பட்டு, இப்போது தீர்த்தோற்சவத்துடன் பத்து நாட்களாக நீடிக்கப்பட்டன. 1963 ஆம் ஆண்டு ஆலயத்தில் சில புனருத்தாரண வேலைகள் செய்யப்பட்டுக் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதிக காலமாக உள் வீதியில் கட்டப்படாமலிருந்த முருகன் கோயிலும்
அதனைச் சேர்ந்த மண்டபமும் 1993 இல் கட்டி முடிக்கப்பட்டது.

Page 32
56ាញយ៉ាវែ 32
தற்போது இராஜகோபுரம் அமைப்பதற்கான கோபுர வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
வருடாந்த உற்சவமானது ஆடி அமாவாசைக்கு முன் வருகின்ற ஒன்பது நாட்களும் முதலாம் நாள் கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகி பத்தாம் நாள் தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையும், உற்சவங்கள் தங்குதடையின்றி நிறைவேறும் வண்ணம் விநாயகருக்கு முதல் வழிபாடும், அடுத்தபடியாக காத்தற் கடவுளாகிய வைரவக் கடவுளுக்கும் பூசை செய்து பலி, ஓமம் முதலியன கிரியைகள் புரிந்து, ஆலயச் சூழலில் உள்ள இடங்கள் அனைத்தும் காவல் செய்யப்படும். இதையடுத்து பூமியைச் சுத்தம் செய்யும் கிரியை நடைபெறும். நான்கு முழ அளவிலான மனித உருவமொன்றைச் செய்து, அதன் தலையில் தீமூட்டி, காலில் பிடித்து இழுத்துச் சென்று, வடதிசையில் உள்ள தீர்த்தக் குளத்தில் போட்டுவிடுவர். பூமாதேவியை வழிபட்டு குறிக்கப்பட்ட இடத்தில் மண் எடுத்து, அம்மண்ணைப் பூசகர் தனது தலையில் சுமந்து வந்து படைத்தல் தொழிலைக் குறிக்கும் முளைப்பாலிகை இடப்படும்.
ஆலயத்தின் கொடியேற்றத்துக்குரிய சீலையானது முதல்நாள் பிற்பகலில் ஆலய வண்ணக்கர்களும் பக்தர்களும் மேளவாத்தியங்களுடன் மட்டக்களப்பு கோட்டைமுனை பூரீ வீரகத்திப் பிள்ளையார் கோவிலிலில் இருந்து மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு பிரதான வீதி வழியாகக் கொண்டு வருவார்கள். திருவிழாக் காலங்களில் சிவபெருமானும், உமையாளும் விநாயகப் பெருமானும் ஒருமித்து எழுந்தருளி உலாவருவர். தீர்த்தத் தினத்தன்றும் இவ்வண்ணமே எழுந்தருளி வருவர். கொடியேற்ற தினத்திலிருந்தே தீர்தக்கரை விழாக்கோலம் பூண்டுவிடும்.
வருடந்தோறும் வருகின்ற ஆடிஅமாவாசை உற்சவத்துடன் இத்தருத்தலத்தில் விநாயகர் சஷ்டி விரதம், சூரன்போர், கந்தர்சஷ்டி விரதம், கந்தபுராணக்கதை படித்தல், சித்திரை வருடப்பூசை (சித்திரை வருடக் கைவிஷேடம் ஆலய நிதியிலிருந்தே வழங்கப்படுகின்றது) தைப்பொங்கல் பூசை, தைப்பூச விழா, நவராத்திரி விழா, திருவெண்பாப் பூசை,
மகாசிவராத்திரி பூசைகள் கிரமமாக கொண்டாடப்படுகின்றன.
 

மாமாங்த் தீர்த்தம்
கும்பகோணத்திலுள்ள திருக்குடந்தைத் தீர்த்தத்தின் பெருமை மாமாங்கத் தீர்த்திற்கும் உண்டு நவநதிகளின் புண்ணிய தீர்த்தங்களை காசி முனிவர் தனது கமண்டலத்தினுள் கொண்டு வந்து மாமாங்கத் தீர்த்தத்தோடு கலந்து நீராடி புண்ணியம் பெற்றார் என வரலாறு ஒன்று கூறுகின்றது. கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்திரை, பவானி, காவேரி, தாமிரபரணி, சேது ஆகிய ஒன்பது மாமங்கையரின் பெயர் கொண்ட தீர்த்தங்கள் இத்தீர்த்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளமையால் மாமங்கைத் தீர்த்தம் என வழங்கப்படலாயிற்று. மாமாங்கப் பிள்ளை(UTரின் திருத்தலத்தை மட்டக்களப்பு மக்கள் தீர்த்தக்கரை என்றும் அழைப்பதுண்டு.
ஆடிஅமாவாசை அன்று பிதிர்க்கடன் கிரியைகளைச் செய்வதற்கு மிகவும் புனிதமான வழிபாட்டுத் தலமாகக் இத்திருத்தலம் கருதப்படுகிறது. ஆடிஅமாவாசை தினத்தன்று இறந்தவர்களின் சாதக ஒலைகளை (பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதப்பட்ட சாதகக் குறிப்பு) கிழித்து இம்மாமாங்கத் தீர்த்தத்தில் ஒடவிடுவதால் பிதிர்களின்
ஆத்மாக்கள் இறைவனடியை நிச்சயம் அடையும் என்பது
இங்குள்ளவர்களின் திடமான நம்பிக்கையாகும். ஆறு அல்லது 12 ஆண்டுகள் தொடர்ந்து இப்புனித தீர்த்தத்தில் தீர்த்தமாடுவோர் நிச்சயம் பரகதி அடைவர் என்பது இங்கு

Page 33
பேணப்படுகின்ற நம்பிக்கையாகும். இக்கைங்கரியத்தை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் பக்தர்கள் ஆண்டுதோறும் இச்சந்நிதிக்கு வருவதுண்டு. இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வதற்காக, பலமைல் தூரங்களை கால்நடையாகவே நடந்துவருவர். இவ்வாறு கால்நடையாக கஸ்டங்களை அனுபவித்து வருவதால், தங்கள் வாழ்நாட்களில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கெல்லாம் புண்ணியங்களைத் தேடிக்கொள்ள முடியும் என்பது நம்பிக்கையாகும். ஆரம்ப காலத்தில் /2 வருடங்களுக்கு ஒருமுறைதான் மாமாங்கத் தீர்த்த உற்சவம் இவ்வாலயத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வந்த இப்பெருவிழாவானது எவ்வாறு ஆண்டதோறும் ஆடிஅமாவாசை தீர்த்தமாக மாற்றம் பெற்றது என்பதற்கான வரலாற்றுத் தகவல்கள் எதையும் காணமுடியவில்லை.
மாமாங்கக்குளம் அனுமார் தீர்த்தம், காக்கை தீர்த்தம், பழையாறு நல்லதண்ணிர் மடு, பாலமீன்மடு, மட்டிக்கழி, கிண்ணையடித்தோணா என்ற ஏழு தீர்த்தங்களுடன் தொடர்புக்கொண்டுள்ளது. இவற்றிலே சில காலப்போக்கில் தூர்ந்தும், அழிந்தும், மறைந்தும் போயிருக்கலாம். ஆனால் அவை இருந்த தடயங்கள் அழியவில்லை, மாமாங்கக் குளத்தில் மேற்குப் பக்கத்தில் இருப்பது அனுமார் தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. சீதையைத் தேடி இலங்காபுரியிலுள்ள அசோக வனத்தை அடைந்த அனுமன் தனது வாலினால் இலங்கையை எரியூட்டியபின், வால் அணையாது பற்றிக் கொண்டிருந்தமையினால் 30)(U அணைப்பதற்கு மாமாங்கக்குளத்தின் மேற்குப்புறத்தில் உள்ள குளத்தில் வாலை விட்டு அமிழ்த்தி அனைத்ததாகக் கூறப்படுகிறது. மற்றைய தீர்த்தங்களுக்கும் காரணப் பெயர்கள் இருந்திருக்கலாம். தற்போது அவை வழக்கத்திலில்லை. இராமபிரானுடைய பணிப்பில் இந்தியாச் சென்று காலந்தாழ்த்தி இலிங்கத்துடனும் அவிமுத்தித் தீர்த்தத்துடனும் வேகமாக பாய்ந்து வந்த அனுமனுடைய பாதங்கள் பட்ட சுவடுகளே பள்ளங்களாகித் தீர்த்தங்களாயின என்றும் கருதப்படுகின்றன. அவிமுத்தித் தீர்த்தம் என்றால் தன்னைப்பற்றியவர்களை கைவிடாது
காப்பது என்னும் பொருள்படுவதாகும்.
மாமாங்கக்குளம் நிறைந்த சந்தணச்சேறு கொண்டது. மெல்லிய (தன்மை) பசுமை நிறமான இச்சேறு உடம்பில் வெளிப்புற நோய்களை மாற்றும் தன்மைக் கொண்ட - ஆதலால் அமிர்தசேறு என்று சொல்லப்படும். ஆலய நிர்வாக கோட்டைமுனைப்பகுதி வேளாளர் பரம்பரையினருக் அமிர்தகழிப் பகுதி ஏழுர்க் குருகுல வம்சத்தவர்களுக்கு உரிமை உடையது.
v மிருனாளி
 
 
 
 


Page 34
ឆ្នាអែអ្វី 遂 34 அட்டைப்பட கட்டுரை
தெ ன்னிந்தியாவில் இருந்து பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப்பட்ட மக்கள் பல கலை மரபுகளையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தார்கள். அவ்வாறான கலை மரபுகளில் சில அழிந்து போனாலும், ஒரு சில கலை மரபுகளை அம்மக்கள் இன்னும் பேணி பாதுகாத்து வருகின்றார்கள்.
அவற்றில் காமன் கூத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இந்த கூத்து சங்கீத வடிவிலேயே முன்னெடுக்கப்படுவது ஒரு முக்கிய அம்சமாகும். கப்பம் பாலித்தலும் காப்பு கட்டலும், காமன் ஊன்றுதல், ரதி - மதன் திருமணம், காமன் கூத்து ஆடி வரல், காமன் தகனம், தகனம் செய்யப்பட்ட காமனை உயிர்ப்பித்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதே இந்த காமன் கூத்து.
காமன் கூத்து தொடர்பாகவும், பாரம்பரியம் தொடர்பாகவும் கண்டி, மடுல்கலை, மாவுசா மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக காமன் கூத்து வைபவத்தை முன்னின்று செய்து வரும் காமன் கூத்து வாத்தியர்களான 78 வயதுடைய நல்லதம்பி குமாரவேலு மற்றும் 70 வயதுடைய முனியாண்டி மாரிமுத்து ஆகிய இருவரிடமும் கேட்டறிந்தோம்.
இந்தக் கூத்து பற்றிய முழு விபரங்களையும் எமக்கு கூறியதுடன் புத்தகங்களோ அல்லது எழுதி வைத்த ஏடுகளோ இன்றி, பாடல்களை தாளத்தோடு பாடி காண்பித்தார்கள். இந்த கூத்தினை பரம்பரை பரம்பரையாக அவர்கள் செய்து வருவதாகவும் தமக்குப்பின்னால், காமன் கூத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு இளைஞர்களை பயிற்றுவித்திருப்பதாகவும் கூறகிறார்கள்.
இந்துக்கள் சிவனை விட மகா விஷ்ணுவை அதிகமாக வழிபட்டு வந்ததாகவும் அதனால் சிவன் பார்வதியினூடாக விஷ்ணுவிடம் சம்பந்தம் பேசியதாகவும் பின்னர் விஷ்ணு தனது சங்கு மூலமாக
மன்மதனை உருவாக்கி சிவன், பார்வதி தேவி
அட்டைப்பட விளக்கம் : மலையகத்தி கலைவடிவம் அந்த மக்களின் கலைகளை ஒன்றிணைப்பதாக இருக்கிறது. இதை ஒ
நினைக்காமல் சமயச் சடங்காகவும் அதாவது காமன் கூத்தில் ஒரு பாத்திரம் ஏற்று ஆடுவது காமன் கூத்தில் முக்கிய பாத்திரங்க திகழ்கின்றார்கள் ஒரு பெண் தனித்துநின்று
வரை போராடி வெற்றி பெறுவது சாதாரண
துன்பம் ஒன்று நேர்ந்து விட்டால் தயங்கக்கூடாது என்ற மிகப்பெரிய உ உணர்த்திச் செல்கிறது.
 
 

ஆகியோரின் புத்திரியான ரதிதேவிக்கு மன்மதனை மணமுடித்து வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதான் காமன் கூத்தின் ஆரம்பம்.
காமன் கூத்து மாசி மாதத்தின் மூன்றாம் பிறைக் காலத்தில் ஆரம்பமாகும். காமன் ஊன்றப்பட்டு 16 ஆவது நாள் காமன் தகனம் செய்யப்படும். பின்னர் ரதிதேவி வெள்ளை ஆடை அணிந்து, சிவனிடம் மடிப்பிச்சைக் கேட்டு, மன்மதனை உயிர்ப்பிக்கும் வரை கதை தொடர்கிறது.
ரதியின் பக்கம் ஒரு குழுவும் மன்மதனின் பக்கம் ஒரு குழுவுமாக இருந்து பாடல்கள் பாடி கூத்து நடைபெறும். ஒவ்வொரு பாட்டிற்கு எதிர்பாடல்கள்பாடி மிகவும் சுவாரஷ்யமாக இந்த நிகழ்வு இடம்பெறும்.
ரதி - மன்மதனின் திருமணம் நடந்தேறும்போது, பார்வதியின் தந்தையான தக்கன் தான்தான் பெரியவன் என்று தவம் புரிகின்றான். அதனால் கோபம் கொண்ட சிவன் தக்கனின் தவத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
தக்கனின் தவத்தைக் கலைப்பதற்காக சிவன் முதலில் விநாயகரை அனுப்புகிறார். விநாயகரின் வருகையை அறிந்த தக்கன் விநாயகருக்கு விருப்பமான தின்பண்டங்களை படையலாக வைக்கிறார். அதனை உண்டு கழித்த விநாயகர் தான் வந்த வேலையை மறத்து விடுகிறார். அதனை தொடர்ந்து முருக பெருமான் வருகிறார். முருகப் பெருமானோ வள்ளி, தெய்வானையைக் கண்டதும் தனது கடமையை மறந்து அங்கேயே இருந்து விடுகிறார்.
இந்தச் சம்பவங்களால் சிவன் கடும் கோபமடைகிறார். கோபத்தில் உடல் வியர்க்க அவ் வியர்வையால் அகோதர வீரபுத்திரன் உருவாகிறார். அகோதர வீரபுத்திரரை தக்கனின் தவத்தை கலைப்பதற்கு சிவன் அனுப்புகிறார். அகோரவீர
புத்திரனால் தக்கனின் தவம்
ல் ஆடப்படும் காமன் கூத்து ம், தெய்வ வழிபாட்டையும் கலைக் கூத்தாக மட்டும் நேர்த்திக் கடன் செய்வோர் கூட வழக்கமாயிருக்கிறது. ாக ரதியும் மன்மதனும் கணவனின் உயிரை மீட்கும் குடும்பப் பெண்களுக்குகூட தனித்துநின்று போராடவும்
ögooaoavadõ 67oopod/a

Page 35
கலைக்கப்படுகிறது. தக்கனின் தவம் கலைக்கப்பட்டதும் இந்திர
லோகமே அதிர்ச்சியடைகிறது. உடனே தேவர்களெல்லாம் கூடி ஆராய்ந்து, சிவனின் தவத்தை கலைத்து சிவனை அழிப்பதற்கு வழி செய்கிறார்கள். இப்படியாக இந்திரன் சிவனின் தவத்தை கலைத்து சிவனை அழிப்பதற்கு மன்மதனின் உதவியை கோரி தூதன் மூலமாக ஒலையை அனுப்பி வைக்கிறான்.
தேவர்களால் அனுப்பப்பட்ட ஒலையினை பெற்றுக் கொண்ட மன்மதன் தேவர்களுக்கு உதவி செய்யும் முகமாக சகல வல்லமையும் பொருந்திய சிவனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார். இந்த அம்சம் தோட்டத்தொழிலாளர்களை வழிப்படுத்தும் சக்தி வாய்ந்ததாகவும் அவர்களைக் கவர்ந்த ஒரு காட்சியாகவும் விளங்குகிறது. காமன் கூத்தின் மிக முக்கியமான அம்சமும் இதுதான். அதாவது பலர் கூடி ஒரு உதவியை கேட்கும் போது அதை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் தயாராக இருத்தல் வேண்டும்.
இவ்வாறாக தேவர்களுக்கு உதவும் முகமாக சிவனுக்கெதிராக கிளர்ந்தெழும் மன்மதனை சிவன் அழித்து விடுகிறார். ரதியை மணமுடித்த அன்றே மன்மதன் இறப்பதால் ரதி விதவை
ஆகிறாள். ஆகையால்த்தான் காமன் கூத்தை
அன்று கட்டி அன்றறுத்தல்' என்றும் சொல்வார்கள். இவ்வாறு கணவனை
 
 
 
 
 
 

& ឆ្នា 35
இழந்த ரதிதேவி வெள்ளை உடையணிந்து தந்தை சிவனாரிடம் கணவனை உயிர்ப்பிக்குமாறு மடிப்பிச்சை கேட்கிறார். ரதிதேவியின் வேண்டுதலால் சிவனார் மன்மதனை உயிர்ப்பிக்கி றார். இப்படி காமன் கூத்து நிறைவடைகிறது.
காமன் கூத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் வேசம் கட்டுவதற்காக அரிதாரம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அவதாரங்களுக்கும் வேறுவேறு வர்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சிவனுக்கு வெள்ளை வர்ணமும் மன்மதனுக்கும் ரதிக்கும் மஞ்சளும், தூதனுக்கு பச்சையும், அகோர வீரபுத்திரனுக்கு சிவப்பும், கரும் காளிக்கு - கறுப்பும், சிவனுடன் போருக்கு போகும் போது மன்மதனுக்கு பச்சை வர்ணத்திலும் வேசம் கட்டுப்படுகிறது.
காமன் கூத்தின் பிரதான வாத்தியமாக தப்பும் சில வழமையான பக்க வாத்திய கருவிகளும் U(U667 படுத்தப்படுகின்றன. பிரதான வாத்தியக் கருவியான தப்பை பிரயோகிக்கும் விதம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இவ்வாறு சிறப்பும் வல்லமையும் மிக்க குறிஞ்சி நிலத்துக்குரிய சிறப்புக்கலை வடிவம் வாய்வழியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தபோதிலும் இவ்வாறான கலைமரபுகளை ஆவணப்படுத்துவதற்கு துறைசார் நிபுணர்கள்
முன்வரவேண்டும். క్ట్ల
எம். நேசமணி

Page 36
ចាញ់អ្វី ់
36 ស្លេអ៊ែ កញ្ញា
 
 

கொக்கான் வெட்டல்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் கொக்கான் ட்டலும் ஒன்றாகும். வேகமான வாழ்க்கைச் சூழ்நிலையில் லமெல்ல வழக்கிழந்து வரும் விளையாட்டுகளில் இதுவும் றாகும். கொக்கான் வெட்டுதல் ஐந்து கூழான் கற்களைக் ண்டு ஆடுகின்ற ஆட்டம் ஆகும். முதலாவது தடவையாக ஒரு கல்லை மேலே எறிந்து மீதிக் ளை கீழே போட்டு கல்லை எறிந்து எறிந்து ஒவ்வொரு ளாக எடுத்தல் வேண்டும். இவ்வாறாக இரண்டாம் தடவை ண்டு கற்களாகவும், மூன்றாம் தடவை மூன்று கற்களை எடுத்து கல்லையும் , நான்காம் தடவை நான்கு கற்களையும் தல் வேண்டும். ஐந்தாவது முறையாக கல்லை மேலே எறிந்து மீதி கற்களை 5ளுக்குள் வைத்துக் கொண்டு விரலால் நிலத்தைத் தொட்டு களை மூடிய நிலையில் பெருவிரல், சுட்டவிரல்களுக்கு நடுவில் லை ஏந்தல் வேண்டும். (இதனை புட்டுக்குழல் ஏந்தல் என்பர்) ஆறாவது தடவையாக ஒரு கல்லை மேலே எறிந்து ஒரு லை கையில் வைத்துக் கொண்டு மீதி கற்களை நிலத்தில் த்து ஒவ்வொரு கற்களாக கையிற்குள் உள்ள கல்லைக் ண்டு மாற்றிமாற்றி வைத்தல் மூன்று கற்களும் மாற்றியதும் ா கற்களையும் ஒவ்வொன்றாக எடுத்தல், (எடுக்கும் கற்களை லை எறிந்தேந்தும் கைகளிற்கு உள்ளேயே வைத்திருத்தல் ண்டும்) ஏழாவது முறையாக ஒரு கல்லை மேலே எறிந்து மீதிக் கற்களை வைத்து இரண்டு கற்களாக எடுக்கும் போது இரு தடவை தில் கற்களை தட்டி எடுத்தல் ஆகும். எட்டாவது தடவையாக கற்கள் எல்லாவற்றையும் ஏறிந்து புறங் பில் ஏந்தி ஒரு கல்லை வைத்துக் கொண்டு மீதிக் கற்களை தில் போட்டு எல்லா விரல் இடைவெளிகளிலும் ஒவ்வொரு ளை எடுத்து, புறங்கையில் இருக்கும் கல்லை மேலே எறிந்து, யை திருப்பி ஏந்தல் வேண்டும். (ஏந்தும் போது விரல் டவெளிகளில் உள்ள கற்களை தவற விடல் கூடாது) இவ்வாறு
/வதை நண்டு பிடித்தல் என்பர்.

Page 37
ஒன்பதாவது தடவையும் கற்களை மேலே எறிந்து புறங் கையில் ஒரு கல்லை வைத்துக் கொண்டு மீதி கற்களை நிலத்தில் இருந்து பெருவிரலையும், சுட்டி விரலையும் பயன்படுத்தி ஒவ்வொரு கற்களாக எடுத்தல் வேண்டும். (எடுக்கும் போது மற்றைய கற்களில் கை படலோ, கற்கள் ஆடுதலோ தவறாகும். இது ஒவ்வொரு தடவை விளையாடும் போது கவனத்தில் கொள்ளல் வேண்டும்.)
பத்தாவது தடவையாக கற்களை கீழே எறிய எதிராளி
தனக்குப் பிடித்த கற்களில் மூன்றை வெளியே எடுக்க மீதியாக இருக்கும் கற்கள் இரண்டையும் கோடிட்டு சுண்டி அடித்தல் வேண்டும்.
இவ்வாறு பத்து தடவைகளும் விளையாடிய ($ზ6ზ7 வெற்றியின் பெறுமானத்தை தீர்மானிப்பதற்கு எல்லா கற்களையும் மேலே எறிந்து புறங் கைகளில் ஏந்தி எந்திய கற்களை தவற விடாது உள்ளங்கையில் ஏந்தல் வேண்டும்.
கைகளுக்குள் எத்தனை கற்கள் உள்ளனவோ அதற்கு ஏற்ப பெறுமானம் தீர்மானிக்கப்படும். ஒரு கற்களுக்கு பத்து
புள்ளிகள் ஐந்து கற்களையும் பிடித்தால் ஐம்பது புள்ளிகள் ஆகும்.
கற்களை புறங்கையில் ஏந்தி திரும்ப ஏந்தும் போது மடக்கிப்
பிடித்தல் முறையில் ஏந்தினால் ஒரு கல்லின் பெறுமானம் இருபதாகக் கணிக்கப்படும். ஐந்து கற்களையும் ஏந்தினால்
நூறு புள்ளிகளாகக் கருதப்படும்.
மடக்கிப் பிடித்தல் என்பது புறங்கைகளில் உள்ள
கற்களை மேலே எறிந்து திருப்பி உள்ளங்கையில்
ஏந்தாது மேலிருந்து கீழ் நோக்கி வரும் கற்களை உள்ளங்கை நிலத்தை நோக்கிய வண்ணம் ܵ விரல்களை மடக்கி கற்களைப் பிடித்தல் மடக்கிப் பிடித்தல் எனப்படும்.
இவ்விளையாட்டை விளையாடும் போது யாதுமோர் இடத்தில் தவறிழைத்தால் எதிராளியிடம் கற்கள் கைமாறப்படும். மீண்டும் மீண்டும் இவ்வாறு ஆடப்படும் போது தவறிய இடத்திலிருந்து ஆட்டம் ஆரம்பமாகும்து
- சிவஞானம் மைதிலி ܢܡܝ
 
 
 
 
 
 
 
 
 
 


Page 38
கலைக்கேசரி கி 38 இசைக் கலை
தளையயெடுத்தால்தான்
ர்காழி ஜி. சிவசிதம்பரம்- தொழில் முறையில் ஒரு تمى மருத்துவராக பணியாற்றி வந்து கொண்டிருந்தாலும், கலை உலகத்திலும், இசையுலகத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வருபவர். தமிழ், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டது இவரின் தந்தையார் மறைந்த தமிழிசைப் பாடகர் சீர்காழி கோவிந்தராசனின் உச்சரிப்பில் தான் என்று சொன்னாலும் அதனை யாரும் மறுப்பவர்களில்லை. பக்தி பாடல்களாகட்டும், திரைப்பட பாடல்களாகட்டும், பக்தி அல்பங்களாகட்டும், மேடை நிகழ்ச்சிகளாகட்டும். அனைத்திலும் தமிழ் உணர்வு பொங்கி வழியும். தமிழிசைக்காக அர்ப்பணித்துக்கொண்ட இசைக் குடும்பத்தின் வாரிசான சீர்காழி ஜி. சிவசிதம்பரத்தை கலைக்கேசரிக்காக சந்தித் தோம். சீர்காழி கோவிந்தராஜன் என்றவுடன் அனைவரின் மனதிலும் பதிந்துவிட்ட அந்த கம்பீரமான வெங்கல குரலை, அவர் பேணுவதில் ஏதேனும் விசேடமான அக்கறையை காட்டினாரா?
அப்பா எப்போதுமே நல்ல எண்ணங்களைத் கேட்பவர்களின் மனதில் தோற்றுவிக்கிற பாடல்களை மட்டுமே தெரிவு செய்வார். அப்பாடல்களிலும் நல்ல சொற்களையே இடம் பெற்றிருக்கவேண்டும் என்றும் விரும்புபவர். கவிஞர்களிடமும் அதே வலியுறுத்துவார். ஏன்? என்று கேட்டபோது, நல்லச் சொற்களை நாம் உச்சரிக்கும் போது, நம்மையுமறியாமல் அந்தச் சொற்களுக்குரிய ஒசைநயம் அடர்த்தியாக 626)JGrfüc JGáő. பாடுபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் இடையே நல்லதொரு புரிந்துணர்வை வழங்கி, பாடகர்-ரசிகர் இடையே ஒரு சுமூகமான நிலையை உருவாக்கும். இதனால் பாடகர்களின் மன நலம் ஆரோக்கியமாக இருக்கும். அதே தருணத்தில் எம்முடைய தந்தையார் தன்னுடைய இளமைக் காலத்தில் இசையின் மீது வைத்திருந்த தீராக்காதலால் வறுமையையும் பசியையும் சந்தித்தவர். வயிற்றிற்கு உணவு கிடைக்காத போதெல்லாம் ஏதேனும் ஒரு பாட்டை மெய்மறந்து பாடி பசியை அடக்கிக் கொள்வாராம். அத்துடன் அந்த கால கட்டத்திய பாடகர்களுக்கு மேடையில் மைக் வசதி இல்லாததால் உரக்க பாடிபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றதொரு சூழல். இதன் காரணமாகவும் தன்னுடைய குரலை தக்கவைத்துக்கொள்வதற்கும், மேம்படுத்திக்கொள்வதற்கும் பல தருணங்களில் தொடர்ச்சியாக அசுர சாதகங்களை செய்தததுண்டு அதற்கு மேல் கடவுள் அளித்த கொடை குரல், அதாவது கள்ளத் தொண்டையில் பாடாமல், நல்லத்
தொண்டையில், உள்ளத்தில் வஞ்சகமில்லாமல், நேர்மறையான

A 500 orga | சீர்காழி சிவசிதம்பரம்
உணர்வுகளை தோற்றுவிக்கின்ற சொற்களைக் கொண்ட பாடல் இசை, கவிதை ஆகியவற்றைப் பாடினால் பாடிக்கொண்டே 駕 இருந்தால். குரலும், குரல் 器 வளமும் அப்படியே இருக்கும் என்பார். அதே தருணத்தில் வணிக நோக்கமும், பன்முகத் தன்மையும் கொண்ட திரைப்பட பாடல்களை பாடல் பதிவரங்கத்தில் பாடுவதை விட, பொதுமக்களின் முன் இறைப் பக்தியை வெளிப்படுத்துகிற பாடல்களை பாடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டினர். இதற்காக அதாவது ரசிகர்களுக்காக அவர் உணவு முறையில் பல தியாகங்களை மேற்கொண்டார் என்று சொல்வேன். ஏனெனில் ஒரு இசைநிகழ்ச்சி இருக்கிறது என்றால் குளிர்பானம், ஐஸ்கிறீம், மோர், தயிர், எலுமிச்சை ஊறுகாய், குளிர்ந்த நீர் என இவற்றையெல்லாம் அருந்தமாட்டார். ஆனால் நான் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கியதும் இதையெல்லாம் பின்பற்றாதே என்று அறிவுரை கூறினார். ஏன் என்று கேட்டதற்கு, அவர் ஒரு முறை இசை மாமேதை செம்பை வைத்தியநாத அய்யரை சந்தித்திருக்கிறார். பேச்சு வழக்கில் தான் பின்பற்றும் உணவு கட்டுப்பாடுகளை விவரிக்க, இது தவறு என்றும், இந்த சுவையை ருசித்துக்கொண்டே இசையை பாடினால், அந்த இசை இன்னும் அமிர்தமாக இருக்கும் என்று பதிலளித்ததை எம்மிடம் கூறியிருக்கிறார். அவருடைய பாடல்களில் இடம்பெற்றிருக்கும் தனி சிறப்புகளில் ஒன்று- தமிழ் மொழி உச்சரிப்பு, இதற்காக மேற்கொண்ட பயிற்சிகளும், முயற்சிகளும் என்ன?அவர் பாடிய மேடை இசை நிகழ்ச்சியின் உள்ளடக்கம் எப்படி யிருந்தது?
எம்முடைய தந்தையார் ஆங்கில வழியில் எட்டாம் நிலை வரை படித்து தேறியவர். இசை மீது கொண்ட மோகத்தால் Ug J60)U பாதியில் துறந்து, 256)6) உலகத்திற்கு பயனப்பட்டவர். சென்னையில் தொடங்கப்பட்ட அரசு இசை கல்லூரியில் சேர்வதற்கு முன் வரை நாடக கம்பெனிகளில் பயிற்சிப் பெற்றார். இசை கல்லூரியில் இணைந்த பிறகு இம் முயற்சி மேலும் பல மடங்கானது.தமிழை தமிழாக உச்சரிக்க வேண்டும் என்பதிலும், உச்சரிக்கும் போது அதன் பாவனை வெளிப்பட வேண்டும் எனபதிலும் தீவிரமாக இருப்பார். இதில் அவரின் தனிப்பட்ட முயற்சி தான் காரணமாக இருந்ததே தவிர யாரும் தூண்டுதலாக இல்லையென்றேச் சொல்லலாம்.
எம்முடைய தந்தையார் பல விடயங்களில் மற்றைய

Page 39
கலைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறார். எப்படி என்பதனை அப்பாவின் இசைக்குழுவில் பத்தாண்டுகளுக்கு மேல் வயலின் வாசித்த மறைந்த இசைமேதை குன்னக்குடி வைத்திய நாதன் அவர்கள், ஒரு முறை அப்பா தான் தொழிலை எப்படி நடத்துவது என்பதற்கு சிறந்த சாட்சி. ஏனெனில் மக்களிடம் தங்களுக்கு இருக்கும் திரைப்பட பின்னணி பாடகர் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு, நிகழ்ச்சியை எப்படி ஜன ரஞ்சகமாக நடத்துவது என்பதில் கெட்டிகாரர். அவரை அடியொற்றி தான் எம்முடைய நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறேன் என்பார். இதனையே பின்னணி பாடகர் கே. ஜே. யேசுதாஸ் அவர்களும் வழிமொழிந்திருக்கிறார். கர்நாடக சங்கீதத்தினை பாமர ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் இவரின் பங்களிப்பும் உண்டு. அதே தருணத்தில் தமிழிசையின் எல்லையை விரிவடையச் செய்ததிலும் இவர் தொண்டாற்றியிருக்கிறார். இசை மேதை தண்டபாணி தேசிகர் இசைக்கும், தமிழிசைக்கும் சேவையாற்றியது போல், எம்முடைய தந்தையாரும் கர்நாடக இசைக்கும், தமிழிசைக்கும் பாலமாக விளங்கியிருக்கிறார். எம்முடைய தந்தையார், தன்னுடைய இசை மேடையை மூன்று பகுதியாக பிரித்துக்கொள்வார். முதல் பகுதியில் கர்நாடக இசை அதாவது மரபிசை, இரண்டாவது பகுதி பக்தியிசை மூன்றாவது பகுதி திரையிசை என அமைந்திருக்கும். இம்மாதிரியான
உள்ளடக்கத்தில் பக்க மற்றும் உப பக்க வாத்திய
 

}ញត្អែ
39
கலைஞர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்வார். அத்துடன் அவர்களின் பங்களிப்பிற்கான மரியாதையை கெளவரத்துடன் வழங்கச் செய்வதிலும் கவனமாக இருப்பார். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற இசைக்குறிப்புகளை மேடையில் கொணர்ந்து, வெற்றிப் பெற செய்தவர் எம்முடைய தந்தையார் என்ற விமர்சனத்தைத் தாண்டி ஒரு மனிதநேயமிக்கவராக திகழ்ந்தார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. மேடையனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வாரா? பகிர்ந்துகொள்வார் எனில் எதனை பகிர்ந்து கொண்டிருக்கிறார்?
அவர் தன்னுடைய மேடையனுபவங்களை பகிர்ந்து கொண்டதைக் காட்டிலும், வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவத்தை ஒரு ஞானகுருவைப் போல் சொல்லியிருக்கிறார். இசைத்துறைக்கு நான் வருவதை விரும்பவில்லை என்றாலும், இசைப் பயிற்சிக்கு எம்முடைய தாயார் திருமதி சுலோச்சனா கோவிந்தாஜன் பரிந்துரைத்ததால் சம்மதித்தார். அதன் பிறகு மருத்துவ மாணவராக சேர்ந்த பிறகே இசை நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளவே அனுமதித்தார். அந்த தருணத்தில் அவரின் மனதில், இசை மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கிறானே, இவனை தயார் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி விடுவோமோ என்று தோன்றியதால், விடுமுறை நாள்களிலும், படிப்பிற்கு பாதகமில்லாத சூழலிலும் தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வார். அத்தகைய பயணத்தின்

Page 40
560605 CB5#ff, ki 40
போது அவர் பட்ட கஷ்ட நஷ்டங்களையும், பெற்ற அனுபவங்களையும், நாடக உலக அனுபவங்களையும், இசையின் நுணுக்கங்களையும், சக கலைஞர்களின் தனித்திறனையும், இசை நிகழ்ச்சியை நடத்திச் செல்வதில் எதிர்படும் சவால்களை எப்படி திறமையாக கையாள்வதையும் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார்.
இசைக்கல்லூரியில் இணைந்த போது, அவருடைய குரு, திரு பாம்புரம் சுவாமிநாதப் பிள்ளையிடம் குருகுல வாசப்படி இசையை பயின்றாராம். சங்கீதம் என்பது கிரஹறிக்கும் கலை என்பதனை உணர்ந்தார். அத்துடன் தான் இசையமைத்த முத்து தாண்டவ கீர்த்தனைகளை எம்முடைய தந்தையாருக்கு கற்பித்தார். இது தான் எம்முடைய குரு எமக்களித்த பிச்சை என்று எம்மிடம் குறிப்பிடுவார். அவர் எம்மிடம் வருத்தப்பட்டு சொல்வது ஒன்றே ஒன்று தான். இசைக்கல்லூரியில் பயிலும் போது சிறந்த மாணவனாக தேர்ச்சிப் பெற்றாலும், இரண்டாம் வகுப்பில் தான் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கினார்கள். இதனை எதிர்க்காமல், பணிவோடு ஏற்றுக்கொண்டார். அதை விட திரைப்பட பாடல்களை குறைவாக மதிப்பிடாதே எனச் சொல்வார். ஏனெனில் அதில் தான் சொல் சுத்தம், பாவனை சுத்தம், பதத்தை பாதிக்காமல் உச்சரித்தல், ஸ்ருதி சுத்தம், லய சுத்தம் என எல்லாம் அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என்பார். நான் குறிப்பிடுவதை அந்த கால பாடல்களைத் தானே தவிர இக் காலத்திய திரைப்பட பாடல்களையல்ல.
இலங்கையில் அருள்திரு தெய்வநாயகம் பிள்ளை அறங்காலவராக இருந்த முருகன் கோயிலின் கும்பாபிசேகத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் இலங்கைக்கு வந்திருந்தோம். நிகழ்ச்சித் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மழைப் பெய்யத் தொடங்கிவிட்டது. சாதாரண மழையல்ல. பெருமழை, ரசிகர்கள் அனைவரும் மழையில் நனைந்தபடியே நிற்கின்றனரேத் தவிர, யாரும் கலைந்துச் செல்லவில்லை. நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதா? வேண்டாமா? என்றதொரு நிலையில், மேடையில் உள்ள கலைஞர்களையும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் பார்த்து விட்டு, ‘ஒரு நிமிடம் காத்திருங்கள்’ என்று அறிவித்துவிட்டு, கண்ணை மூடி தியானித்தார். பின் கண்ணைத் திறந்து, இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மழை வராது. அதற்கு பிறகு மழை பெய்யும் என்று சொல்லிவிட்டு, 'விநாயகனே வினை
s
தீர்ப்பவனே." என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். அந்த பாடலை பாடி முடித்ததும், மழை சட்டென்று நின்றுபோனது. நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரசாதம் வாங்குவதற்காக யாக சாலைக்கு வந்தவுடன், சொல்லிவைத்தாற் 6cu/76ů மீண்டும் மழைபெய்தது. எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். இதற்கு நேர் மாறாக தமிழகத்தில் உள்ள வேலூர் பகுதியில் ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வை குறிப்பிடலாம். அந்த ஆலயத்திற்கான கும்பாபிசேகத்தின் போது, மேடையில், இந்த

ஆலயத்தின் பெயரிலேயே ஜலம் இருப்பதால், இன்று கண்டிப்பாக மழைப் பெய்யும் என்று அறிவித்தார். வந்திருந்த பார்வையாளர்களுக்கு புதிராக இருந்தது. ஏனெனில் நடை பெற்றுக்கொண்டிருந்ததோ அக்னி நட்சத்திர வெயில், இதில் மழையாவது. மண்ணாங்கட்டியாவது. என எண்ணினர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது பாடல் முடியும் போது மழை பெய்யத் தொடங்கியது. அதன் பிறகு ஆர்வத்தின் காரணமாக இதன் பின்னணி என்ன? என்று வினாவினேன். அதில் ஒன்று பெரிய ரகசியமில்லை. எம்முடைய மனதில் லஸ் கார்னர் வாசித்தி விநாயகரை நினைத்து, தொழுதேன். நிகழ்ச்சி நன்றாக நடைபெற்று முடிந்தால் ஆறு தேங்காய் உடைக்கிறேன்’ என்று வேண்டினேன் என்றார். அந்தளவிற்கு இறைபக்தியை கொண்டிருந்தார். அப்பா பாடிய திரையிசைப்பாடல்களையும், பக்தி பாடல் களையும் ஒப்பிடவும்?
இரண்டுமே அவருக்கு கிடைத்த வரபிரசாதம், கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி கிராமீய இசை, நாட்டுப்புற பாடல்கள் என எல்லாவகையான பாடல்களையும் பாடியிருக்கிறார். திரைத்துறையில் இவருடைய குரலில் ஒலிக்கும் தத்துவபாடலுக்கு ஆயுள் அதிகம் என்கிற நம்பிக்கை இருந்தததை பலர் குறிப்பிட்டுள்ளனர். பக்தி பாடல்களைப் பொருத்தவரை, அவர் தெரிவுச் செய்யும் பாடல்களில் பக்தியுணர்வை பிரதிபலிக்கும் சொற்கள் இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்துவார். தனிப்பாடல்களை விட அபிராமி அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி இலக்கியங்களை தன்னுடைய குரலில் பாடி, தமிழர்களுக்கு நிரந்தரமான கொடையை வழங்கியிருக்கிறார் எனலாம். தொழில் ரீதியாக அப்பாவிடம் இருந்து எதனை கற்றுக் கொண்டீர்கள்?
நேரந்தவறாமை, தொழில் ஒழுக்கம், வாக்கு சுத்தம், சொல் சுத்தம், சக கலைஞரின் உணர்வை மதித்தல், வணிக
நோக்கத்தைத் தாண்டி, இசை ஆர்வலர்களுக்காக

Page 41
இலவசமாகவும் பாடுவது, வல்லவனாக வாழ்வதை விட நல்லவனாக வாழ்வே சிறந்தது என்ற எண்ணம், இசையும், மருத்துவமும் இரண்டு கண்கள் என்று போதித்தது. தமிழிசையின் எதிர்காலம் எப்படியிருக்கும்?
இன்று போல் என்றும் பிரகாசமாகவே இருக்கும். ஆனால் தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் உணர்வுக்கும், தமிழ் இசைக்கும், தமிழ் சார்ந்த அனைத்து விடயங்களுக்கும் தற்போது அமில பரிசோதனை நடைபெறுகிறது. தமிழ் மொழியினை மாசுபடுத்துவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழிசைக்காக புதிதாக உழைக்கவேண்டும், உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை. தமிழில் இருக்கும் அரிய விடயங்களை, இசை வழியாக சொன்னாலே போதுமானது. தமிழறிஞர் முத்து தாண்டவர் எழுதிய கீர்த்தனைகள் ஏராளமாக உள்ளன. அதனை வெளிப்படுத்தி, பிரபலப்படுத்தினாலே போதும். அதற்காக இன்றைக்கு வெளியாகும் புதிய பாடல்களை வரவேற்கவில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. ஏற்கனவே இருக்கின்ற விடயங்களை, இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் கீழ் வெளிப்படுத்தினாலே போதும் என்ற எண்ணம் எமக்குண்டு. ஒவ்வொரு பாடல்களிலும் வர்ணனைகளும், அர்த்தமற்ற எதுகை மோனைகளும் இருப்பதை விட, கருத்துச் செறிவு இருக்கவேண்டும். அது தான் ஒரு பாடலின் ஆயுளை தீர்மானிக்கும் சக்தி என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். உலகம் முழுவதும் எம்முடைய கச்சேரிகளில், அப்பாவின் அறிவுறுத்தல் படி தமிழிசை நீக்கமற நிறைந்திருக்கும். அதனை தொடர்வோம். தங்களுடைய இசையை எப்போதாவது தாங்களே திறனாய்வு செய்திருக்கிறீர்களா? தங்களின் அனுபவத்தி லிருந்து முன்வைக்கும் ஆலோசனை என்ன?
அனுதினமும் செய்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் எம்முடைய தந்தையார் அரும்பாடுபட்டு உருவாக்கி வைத்திருக்கும் புகழை, எம்முடைய அஜாக்கிரதையால் இழக்க விரும்பவில்லை. எம்முடைய குரலில் பதிவாகும் ஒவ்வொரு பாடலையும், அப்பாடலுக்கான பதிவு முடிந்தவுடன் முதலில் எம்முடைய தாயாருக்கு போட்டுக் தாண்பிப்பேன். அவர்களுடைய விமர்சனத்திற்கு பிறகே அப்பாடல் முழுமைப் பெறும், ஆலோசனை கூறுமளவிற்கு நான்
பெரியவன் அல்ல. சாதனையாளனும்
அல்ல. நான் ஒரு சாதாரண
 
 

& கலைக்கேசரி 41
தமிழிசைத் தொண்டன். ஆனால் தொண்டனுக்கேயுரிய சில எதிர்பார்ப்புகள் உண்டு. அதனை பகிர்ந்துகொள்கிறேன். முதலில் தமிழிசைவாணர்களின் மனங்கள் விசாலமடையவேண்டும். தமிழிசைக்காகவே பல சிறப்பான களங்கள் சர்வதேச தரத்துடன் அமைக்கப்படவேண்டும்.
தமிழிசைக்கான இரசிகர்கள் உருவாகிக்கொண்டேயிருக்க வேண்டும். தமிழகத்தில் பிறந்த மும்மூர்த்திகளின் இசை இன்று பிரதான இடத்தில் இருப்பதற்கு காரணம், அவர்கள் தங்களின் தாய்மொழியில் இயற்றியதை, அவருடைய சீடர்களும், மொழி சார்ந்தவர்களும், மொழி பற்றாளர்களும் அதனை வளர்த்தெடுத்தனர். ஆனால் இந்நிலை தமிழுக்கு இல்லையே ஏன்? என்பதை உரியவர்கள் சிந்தித்து, செயல்படவேண்டும். தமிழிசைக்குரிய மூவராக கருதப்படும் முத்து தாண்டவர், மாரி முத்து சாஸ்திரிகள், அருணாச்சல கவிராயர் ஆகிய மூவரின் கீர்த்தனைகள் பரப்பப்பட வேண்டும்.
ஒரு படைப்பில் இருக்கும் நிறை, குறைகளை அலசி ஆராய்ந்து, அவற்றில் நல்லனவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல புத்தகங்கள், நல்ல திரைப்படங்கள் ஆகியவற்றிற்கும் 尋多のQ/ தாருங்கள். பொதுவாக கலைத்துறையில் களை அதிகமாகவும், வீரியமாகவும் வளர்ந்து விடும். எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே களையை களைய முடியும். என்னவே கலை வாழவேண்டும் என்றால் அதனுள் இருக்கும் களையை எடுப்பதற்கு முயற்சிக்கவும்.

Page 42


Page 43
தி ரான்ட் கன்யன் (Grand Canyan) என்பது அமெரிக்காவின்
அரிசோனா மாநிலத்தில் அமைந்துள்ள கொலறடோ நதியினால் உருவாக்கப்பட்ட செங்குத்தான பள்ளத்தாக்கு ஆகும். அமெரிக்காவின் முதலாவது தேசிய பூங்காக்களில் ஒன்றான கிரான்ட் கன்யன் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட் ஆவர்.
கிரான்ட் கன்யன் என்னும் இந்த மலையருவி ஓடும் பள்ளத்தாக்கு 277 மைல் நீளமுள்ளது. அதன் அகலம் நாலில் இருந்து 18 மைல்கள் அளவில் இருப்பதோடு, ஆழம் ஒரு மைலுக்கு மேல் உள்ளது.
இங்கு ஐரோப்பியர்களின் குடிவரவுக்கு முன் உள்ளூர் அமெரிக்கர்கள் பள்ளத்தாக்குப் பகுதியிலும் அதன் குகைகளிலும் Q/7924°324677, gởGa)7 (24467 (Pueblo People) - இப்பகுதியை ஒரு புனித இடமாகக் கருதுகின்றனர்.
இவ்விடத்துக்கு முதன் முதலில் சென்ற ஐரோப்பியர் 1540 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் இருந்து இங்கு சென்ற கார்சியா லோப்பெஸ்டி கான்டினாஸ் ஆவார். கொலறடோ பீடபூமியில் உள்ள மாபெரும் பிளவு கிரான்ட் கன்யன் ஆகும். உலகத்தின் மிக ஆழமான ஆற்றுப்பள்ளத்தாக்கு கிரான் கன்யன் அல்ல. இதிலும் பார்க்க மிக ஆழமான ஆற்றுப்பள்ளத்தாக்கு நேபாளத்தில் உள்ள காலி கன்டரி ஜோர்ஜ் ஆகும். அதே வேளை மிகவும் அகலமான பள்ளத்தாக்காக அவுஸ்திரேலியாவில் உள்ள கப்பர்ரி இருக்கின்றது. ஆனால் கிரான்ட் கன்யன் பார்வைக்கு மிகப் பெரியதாகத் தோன்றுகின்ற அளவின் காரணமாகவும் அதன் அழகான கண்ணையும் கருத்தையும் கவருகின்ற இயற்கைக் காட்சியினாலும் மிகவும் பிரசித்தமானதாகவும், பூகர்ப்ப ரீதியாக குறிப்பிடத்தக்கதாகவும் விளங்குகின்றது. அதற்குக் காரணமாக விளங்குவது அழகாகப் பாதுகாக்கப்படும் பழைமை வாய்ந்த கற் பாறைகளின் தடிப்பான தோற்றமும் ஆற்றுப்பள்ளத்தாக்கின் சுவர்களில் அவை வெளிப்படையாகத் தெரிவதினாலும் ஆகும்.
அத்துடன் தெற்கு விளிம்புப் பகுதியைவிட வடக்கு விளிம்புப் பகுதியின் உஷ்ணம் பொதுவாகக் குறைவானதாகும். அதற்குக் காரணம் அது கடல் மட்டத்தில் இருந்து கூடுதல் உயரத்தில் இருப்பதினாலாகும். கோடை காலங்களில் இருபகுதிகளிலும் மழை வீழ்ச்சி பொதுவானதாகவே இருக்கிறது. தெற்கு விளிம்பில்
இருந்து பார்ப்பதைவிட வடக்கு விளிம்புப் பகுதியில் இருந்து, ஆற்றுப்பள்ளத்தாக்கின் விரிவை நன்கு பார்க்க முடியும்,
/850 களில் இந்த ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதியில் இலகுவான நதியின் குறுக்குப் பகுதிகளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு ஜேம்ஸ் ஒறியோ பற்றி என்பவர் சிலருடன் சென்றார். உள்ளுர் அமெரிக்கர்களுடனும் அங்கு குடியேறியிருந்த வெள்ளையர்களுடனும் நல்ல தொடர்பை ஏற்படுத்தி பகுப்
போக்குவரத்துக்குப் பொருத்தமான இரு இடங்களைக் கண்டு பிடித்தார்கள்.
 


Page 44
அதன் பின்னரும் இவ்வழகிய பள்ளத்தாக்குப் பகுதியில் போக்குவரத்து வாய்ப்புகள் மற்றும் குடியிருக்கும் வாய்ப்புகள் உள்ளனவா என அறிய 1857 ஆம் ஆண்டில் எட்வேர்ட் பிட்ஸர்றல்ட் பில், யு.எஸ். லெப்டினன்ட் ஜோசப் ஆகியோர் தத்தம் குழுவினருடன் அவ்விடத்துக்கு பிரயாணம் செய்து புதிய அனுபவங்களைப் பெற்றுத் திரும்பினர்.
கிரான்ட் கன்யனுக்கு அமெரிக்க ஜனாதிபதி தியோடோர் ரூஸ்வெல்ட் 1903 ஆம் ஆண்டு விஜயம் செய்தார். அவர் 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிரான்ட் கன்யன் பொழுது போக்கு விளையாட்டு பாதுகாப்புப்பகுதியை உருவாக்கினார். பின்னர் அப்பகுதியை மேலும் விஸ்தரித்து ஒர் அமெரிக்க தேசிய நினைவிடமாக 1908 ஆம் ஆண்டு மாற்றினார். 1919 ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் 17 ஆவது அமெரிக்க தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது.
எனினும் பூங்கா வளங்களை முகாமைத்துவம் செய்த சமஷ்டி அரசு நிருவாகிகள் வான் பயன பறப்பின் சத்த மட்டங்கள், நீர் உரிமைகள், பூங்காவின் எல்லைகளில் வசித்த மக்களுடன் முரண்பாடுகள் எனப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருந்தது.
கன்யனின் தெற்கு விளிம்பு ஓரமாக குறிப்பாக கிரான்ட் கன்யன் கிராமத்தில் சில வரலாற்று முக்கியத்துவம் உள்ள கட்டிடங்கள் கட்டப்பெற்றன.
அவற்றுள் 1890 களில் பக்கி ஓ நீல் கபின் கட்டப்பட்டது. தெற்கு விளிம்பில் தொடர்ந்து நிற்கும் இக்கட்டிடம் தற்போது விருந்தினர் விடுதியாகப் பாவிக்கப்படுகிறது. 1904 ஆம் ஆண்டு எல்ஸ் வேர்த் மற்றும் எமரி கொல்ப் என்னும் சகோதரர்களால்
 

கொல்ப் ஸ்டுடியோ கட்டப்பட்டது. பிறைட் ஏன்ஜெல் டிரெயில்
எனுமிடத்துக்கு பார்வையாளர்ளாக வருவோரைப் படம் பிடித்து இவர்கள் அந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தினர். தற்போது இக்கட்டிடம் கலாபவனமாகவும் கண்காட்சிக் கூடமாகவும் இயங்குகின்றது.
அத்துடன் 1905 ஆம் ஆண்டு எல்ரோவர் வூேறாட்டல் ஹொபி ஹவுஸ் வேர்காம்ப்ஸ் கியூரியாஸ் (கைப்பணிப்பொருள் விற்பனை நிலையம்) ஆகியன கட்டப்பட்டன. அதேபோன்று பின்னர் கிராண்ட் கன்யன் ரெயில்வே டிப்போ ( 1909) லுக் அவுட் ஸ்டியோ (19/4), பாலைவனத்தைப் பார்க்கும் கண்காணிப்பு கோபுரம் (1932) பிறைட் ஏன்ஜெல் லொட்ஜ் ஆகியன கட்டப்பட்டன. தேசிய வானிலை நிலையம் 1903 ஆம் ஆண்டில் இருந்து தெற்கு விளிம்பில் கூட்டுறவு நிலையம் ஒன்றினை வைத்துக் கொண்டிருக்கிறது.
சில சமயங்களில் இம்மாபெரும் பள்ளத்தாக்கு காற்று மாசடைதலுக்கு உள்ளாகின்றது. காரணம் அருகே அமைந்துள்ள நிலக்கரி மின் சக்தி நிலையத்தினால் ஆகும். 1997ஆம் ஆண்டில் இந்த காற்று மாசு படுதலை மேலும் தடுக்க அரிசோனாவில் உள்ள நவஜோ மின் உற்பத்தி நிலையத்துடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.
கிரான்ட் கன்யன் பூங்காவில் ஏறத்தாழ 1737 வகை செடிகள் இருக்கின்றன. இதற்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது கொலறடோ நதியில் இருந்து வடக்கு விளிம்பு உச்சி வரை 8000 அடி உயரத்தில் மாற்றம் காணப்படுவதாலாகும். கொலறடோ நதி ஓரமாக 34 பாலூட்டி வகை மிருகங்களில் /5
றோடொன்ற்எஸும் 8 வெளவால்களுமாகும்.

Page 45
நதி ஒரமாக 43 பறவை இனங்கள் மட்டும் ஒழுங்காக கூடுகட்டி வாழ்கின்றன. மற்றவை அதனை ஓர் இடப்பெயர்வு வழியாக அல்லது மாரி கால வதிவிடமாகக் கருதுகின்றன. கிரான்ட் கன்யன் தேசிய பூங்காவில் பூச்சி வகைகளும் ஊர்வனவும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றன.
உலகில் முன்னோடி இயற்கை வனப்பு இடங்களில் ஒன்றாக விளங்குவது கிரான்ட் கன்யன் தேசியப் பூங்காவாகும். வருடாந்தம் சுமார் 50 லட்சம் உல்லாசப் பயணிகள் வருகை தருகிறார்கள். இந்த உல்லாசப் பயணிகளில் 80 சதவீதத்தினர் அமெரிக்க மாகாணங்களில் இருந்து வருகிறார்கள். மற்றும் பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் உல்லாசப் பயணிகள் இவ்விடத்துக்கு விஜயம் செய்கிறார்கள்.
தெற்கு விளிம்புப் பகுதியில் இருந்து கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 7000 அடி உயரத்தில் (2100 மீட்டர் உயரம்) வழமையான இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம். கட்டுமரப் பயணம், நடைப் பயணம், ஒடுதல் மற்றும் ஹெலிகொப்டர் சுற்றுப்பயணம் ஆகியன இங்கு விசேடமாக பிரசித்தமாக விளங்குகின்றன.
2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வடக்கு விளம்புப் பகுதியில் அல்ற்ரா மரதன் போட்டி நடைபெறவிருக்கின்றது. இப் போட்டி 24 மணித்தியாலத்துக்கு மேல் நடைபெறும். /26 கிலோ மீட்டர் தூர ஓட்டப் போட்டியாகும்.
பள்ளத்தாக்கின் தரைக்கு நடந்தும், கழுதை மீதும், படகிலும், மேல் நதியில் இருந்து கட்டுமரத்திலும் செல்ல முடியும். பள்ளத்தாக்கை ஆறுதலாகப் பார்த்துச் செல்ல கொக்கோனியோ கன்யன் ரயிலிலும் செல்ல முடியும். கிரான்ட்
கன்யன் தேசியப் பூங்காவில் பழைய கிரான்ட் கன்யன்
GRAND CANYON
፶፱፻፷፰ 駕 *
இ
ஜ்
 
 
 
 

டிப்போவில் இருந்து பள்ளத்தாக்கு காட்சிகளை ரயில் மூலம் 24 மைல் தூரம் பார்த்துச் செல்ல 90 நிமிடங்கள் பிடிக்கும். பள்ளத்தாக்கை குறுக்காகச் சென்று பார்த்து ரசிக்க வுெறலிகொப்டர் மற்றும் சிறு விமானங்கள் சேவையில் உள்ளன.
1870 ஆம் ஆண்டிலிருந்து இம் மாபெரும் பள்ளத்தாக்கில் சுமார் அறுநூறு மரணங்கள் சம்பவித்துள்ளன. இம் மரணங்களில் சில மிகுந்த ஆர்வமாய் புகைப்படங்கள் எடுக்க எத்தனித்தபோது சம்பவித்தவை, சில பள்ளத்தாக்கில் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதினால் ஏற்பட்டவையாகும். சிலர் கொலறடோ நீரில் மூழ்கியதால் மரணம் சம்பவித்தது. பலர் தமது உடல் ஆரோக்கியத்தின் மீது மிகக் கூடுதல் நம்பிக்கை வைத்து நீண்ட நடைப் பயணமாகச் செல்லும் போது, வெம்மையில் வாடி குழப்பமடைகிறார்கள்.
1956ஆம் ஆண்டு கிரான்ட் கன்யனில் இரு விமானங்கள் வானத்தில் மோதிக் கொண்டதால் பெரும் அனர்த்தம் ஏற்பட்டது. 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி லொஸ் ஏன்ஜெல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அன்று காலை இரு வர்த்தக விமானங்கள், மூன்று நிமிட வித்தியாசத்தில் புறப்பட்டு இம்மாபெரும் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிக்குப் பறந்தன. ஏறத்தாழ 90 நிமிடங்களுக்குப் பின் இரு விமானங்களும் பள்ளத்தாக்கின் மேல் கண்காணிப்பு இல்லாத விண்வெளியில் பறக்கும்போது மோதி வீழ்ந்தன. விமானச் சிதைவுகள் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் வீழ்ந்தன. இதில் 128 பிரயாணிகளும், இரு
விமானங்களது விமானப் பணியாளர்களும் மரணமாகினர்.
«'

Page 46
ក្អក៏ឆើ
46 மாத பவன்
இந்த மாதம் உங்
மிதுனம் : சூரியன், கேது, புதன் கர்க்கடகம் : வெள்ளி சிங்கம் செவ்வாய்
1707.2010 இல் கர்க்கட சூரியன், புதன் சந்திரன் அவிட்டம் நட்சத்திரம் தொடங்கி எ6 (0.07.2010 தொடக்க
SYLSLSL LLLLLLLLSLLLLLLSZZ LLLLSZZZZSLLLZZLLLLSLLLLL LSLSLLLLLZZLLLLSZZZYSLLLZZSLLLLSLZZYSLZZYSLZZ LLLSLSLL TS
வியாழன், சனி, இராகு கேது பார்வைகள் தொழில் நிலையில் அனாவசிய செலவுகளையும் அலைச்சல்களையும் தரக் கூடிய விதத்தில் அமைந்துள்ளதால் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. பொருளாதார ரீதியாக தடைகள் ஏற்பட : வாய்ப்புண்டு, குடும்பத்தில் நன்மையான காரியத்தின் பொருட்டு
செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடமைகளில் இடையூறுகளை எதிர்கொள்வர். அத்துடன் மேலதிகாரிகளையும் (3 பகைத்துக் கொள்ள நேரிடும். வியாபாரிகள் எதிர்பார்த்த இலாபம்!
குறைவடையும். ஆடி மாதம் மேட இராசியினருக்கு ஆசைகளைத் தூண்டும் மாதமாக அமையும். LTLLLLLLL LSLLLLL LLTLLL LLLLLL LLL LLLL LLDLLLL LL LSLL LLLL LLL LLLL LL LSLLLLL LZLLLLLLGLLLLGLLSqS
/**
வியாழன், சனி, இராகு, கேது பார்வைகள் திருப்திகரமாக அமையவில்லை, சகல விடயங்களிலும் அவதானத்துடன் நடந்து கொள்வது நன்மை தரும், தொழில் விடயங்களில் எதிர்பாராத மனக் கஷ்டங்களை ஏற்படுத்தும், நம்பியிருந்தவர்கள் இடைநடுவில் காலைவாரி விடுவர். பண விடயங்களில் தாமதமும் அதனால் கடன்படும் நிலையும் உருவாகும். குடும்பத்தில் கருமங்களில் வீண் தடைகளும் தாமதமும் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்வதுடன் பொறுமையை கடைப்பிடிப்பதும் நன்மை தரும். வியாபாரிகள் முதலீடுகளில் கவனமுடன் செயற்பட்டால்
睡 இலாபமடையலாம். மனக் குழப்பங்களை அகற்றும் மாதமாகும். TBSBLLLLSSSLLLSLLLLLSLLLL LLSLLLLLSLLLLL LSLLL LLDSDSLLSLLLLLLLL LLLL LL LSLLLLLLDLLLLLL LL LLLLLLLLSLSLLLLLL
மிதுனம்
琴琴參琴華顯琴琴藥琴變參琴琴瑟輕證琶證鹽蜀器鑫器顯器器器肆器惡顯蜀
வியாழன், சனி, இராகு,கேது பார்வைகள் சுபமாக :Y மனத்தாங்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் ரீதியாக எதிர் பார்ப்புக்கள் தாமதமாகும்.கருமங்களில் ஏற்படும் தடைகளால் : மனக் கஷ்டங்கள் ஏற்பட்டு மறையும், பண விடயங்களில் ஏற்படும் தாமதங்களால் சிலர் கடன்படும் நிலையை உருவாக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மனக் குழப்பங்களைத் தோற்றுவிப்பர். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகுவர். இதனால் மனக் கசப்புக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிங்கம் வியாபாரிகள் முதலீடுகளால் கவலையடைய நேரிடும்.சிங்க :
இராசியினருக்கு சிறிது கஷ்டங்களைக் கொடுக்கும் மாதமாக அமைந்திடும்.
k.ஃ------ா
வியாழன், சனி இராகு, கேதுக்களின் பார்வைகள் மத்திமமாக உள்ளதால் சகல விடயங்களிலும் அவதானமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக இடையிடை கஷ்டங்களை ஏற்படுத்தும். எதிர்பார்த்த கருமங்களில் தாமதங்கள், எதிர்பாரா செலவுகள் உண்டாகும். பண வரவுகள் திருப்தி தரக் கூடியதாக அமையாது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய காரியங்கள் மாத நடுப்பகுதியில் நடந்தேறும். உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு குறைவடையும். துலாம் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது.
வியாபாரிகள் முதலீடுகளால் சில கஷ்டங்களை எதிர்கொள்ள
நேரிடும். அதிக துயர் கொடுக்காத மாதமாக அமையும். 琴
TSLLLLLLLGGLSZ LSGLL LLL LLSLLLL LLSLLLL LL LSLSLL LLSLLLL LL LLSLL LLLL LSL LL LSSLL Z LDLDDSLDLD LL LDLLDL LLLSLL Z LLLSL LL LSLSS LL LLqTS
'''
顯顯器瑟語顯露器器琵露顯啟瑟證瑟密鑒證醬顯鑒顯語顯顯額顯舉
f வியாழன், சனி, கேது பார்வைகள் மத்திம பலனைக் கொடுக்கக் Y
கூடிய விதத்தில் அமைவதால் தொழில் நிலையிலும் கருமங்களிலும் அவதானமாக செயற்படுவது நன்மைகளைத் தரும். அடிக்கடி தொழில் நிலையில் குழப்பங்கள் தோன்றி மனக் கவலையை தோற்றுவிக்கும். பண விடயங்களில் அவதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் உறவினர்களால் பகைமை தோன்ற இடமுண்டு. தேக சுகத்திலும் அவதானத்துடன் நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தர்களின் செல்வாக்கு குறையும். மேலதிகாரிகள் பகைத்துக் கொள்வர். வியாபாரிகள் முதலீடுகளால் ஒரளவு இலாபமடைவர். திருமணத்திற்கு தகுந்த பலன்களைக் கொடுக்கும் மாத மிது
TSDL L LLLLL LLLL LL LLLLGL LL LDiLiL iLiBiLLLLLiiLqLLLL LL LLLLL YLGDSLSLL LLSLSLL LL LLLLLLLDLDLLDLLLDLSSLYLLLLZLLLLSSSLLLSqTT
YSzZzY YzLZLZSLLLLLLSLLLZLLLSLZYzZzYSZYzZZLLLLSSSLSLLLLSLLSLLZYLYSZYYYYZ ஆடி மாதம் அதிக நன்மைகளைக் கொடுக்கும். வியாழன், சனி இராகு, கேது பார்வைகள் சுப ஸ்தானம் பெற்றுள்ளதால் தொழில் நிலையில் எதிர்பார்ப்புக்கள் நன்மை தரக் கூடியதாக இருக்கும். நீண்ட நாள் தொழில்களால் இலாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் பலிதமாகும். பண நெருக்கடிகள் விலகி, உரிய பண வர வுகள் வந்து சேரும், குடும்பத்தில் மன மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும், உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். கும்பம் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைத்திட வாய்ப்புண்டு வியாபாரிகள் உரிய இலாபத்தினைப் பெற்றுக் கொள்வர். கும்ப இராசியினருக்கு குறைவில்லாத மாதமாக ஆடி மாதம் அமைந்திடும்.
SqSMLL LL LLLLSDDLL SDDSDDD L LS SDLDL L L L L L L L L L LSL L LSLSLL LLLL LL LLL LLLLLLLSLLLYLLLSLLLSLSLLLL LLLTTS
 
 
 
 
 
 
 
 

களுக்கு எப்படி?
கன்னி சனி
9560) : இராகு மீனம் வியாழன்
சிங்க இராசியில் வெள்ளி சஞ்சரிப்பார். ல்லா இராசிகளிலும் இம்மாதம் சஞ்சரிப்பார். ம் 31.07.2010 வரை) - ஜோதிடமாமணி எஸ். தெய்வநாயகம்
YYLSLSLZZYZZYLSYZZYSLSLSLZLLLSLZZLSLSSZZZYzSY YYYSLLLLZZLLLLSLLLL LLSLLLLLZZLSLSLZYYezZZ LSLSLL S வியாழன், சனி இராகு, கேது பார்வைகள் தொழில் ரீதியாக சிறந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்த்த கருமங்களில் வெற்றியையும் தரும், பண விடயங்களில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும். எதிர் பார்த்த பண வரவுகள் தாமதமின்றி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட் 2 டிருந்த மனக் குழப்பங்கள் மறையும். மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். உத்தியோகத்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த கஷ்ட நிலை மறையும். பதவி உயர்வுகள் கிடைத்திட வாய்ப்புண்டாகும். இடபம் வியாபாரிகள் முதலீடுகளால் உரிய இலாபமடைவர். இதமளிக்கும்
மாதமாக ஆடி மாதம் அமையும்.
i
YLLLSLLLLL LSLLLLL LL LLL LLLLLLLLSL LL LSLLLLL LSL LLLL LL LLLLLL LL LLL LLL LLGLLL LLLLLLLTGLLLLS
露薯尋要尋署尋瑟顯要語琴要琴要為蠱器語語要語委器尋語歪語署語語器舉
வியாழன், சனி, இராகு, கேது பார்வைகள் சுப பார்வை: உள்ளதால் எல்லாம் நல்லவைகளாக நடந்தேறும். தொழில் ரீதியாக ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவுறும். பண விடயங்களில் @ಳ್ತೀರಿ! உரிய பண வரவுகளும் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடந்தேறும். திட்டமிட்ட சுபகருமங்கள் நடந்தேறும். உத்தியோகத்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும், மேலதிகாரிகள் உரிய வேளையில் உதவுவர். வியாபாரிகள் முதலீடுகளில் அவதானத்துடன் செயற்பட்டால் கூடிய இலாபத்தை பெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். கஷ்டம் தரும் மாதமாக ஆடி மாதம் அமையாது. STiLSDLL LLL LSL LLL LSLSL LL LLLSDSSSDL LL LLLLSLSLLLLL LSL LLL LLuDi S LLSLLLLLZ LLLSSTLLLLSLLLLLZ LSLSL Y LSLSBLZLTLSLLLL LLSLLYLSLSLZ LTL LL LTTTT
YSSiLSSDLZ YYY ZYYZYYZYSLLLL ZLLLLLLZYLLLLLZYzZYZztSLLLLLZ LLLLSLSLSLL LLLL LLLLLLLSLLLLZLLLLSzZ YTSz Z YSL Z LSLS LSLS
வியாழன்,சனி, இராகு கேது பார்வைகள் சுப ான்:Y உள்ளதால் ஏழரைச் சனி நடந்தாலும் நன்மைகள் பெற வாய்ப்புண்டு. தொழில் ரீதியாக இதுவரை இருந்து வந்த கஷ்டநிலைகள் மறைந்து முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளால் அனுகூலம் ஏற்படும். திட்டமிட்ட பல கருமங்கள் நிறைவேறும், பண வரவுகள் சிறிது தாமதமாகி உரிய நேரத்தில் வந்து சேரும், குடும்பத்தில் எதிர்கொண்ட கஷ்ட நிலை மறைந்து நன்னிலை உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கடமைகளில் e மன நிறை வு ஏற் ப டு வது டன் மேல தி கா ரி க ளின் கன்னி பாராட்டுதல்களுக்கும் ஆளாகுவர். வியாபாரிகள் முதலீடுகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைத்திடும். மனக்கஷ்டங்கள் குறைந்திடும் மாதமாக இம்மாதம் அமையும். qqqqqLLL LSLL LLL L SAAALLAAAALL LA AiA LqqLALAiqAL LL LLLLL Y L L L L LL LL L LG T LTT
LSLSLSLSLSLSZ YSYZYYYYYSYYLLLSLLLSLLSLLSLLLZLLLYZZYZYYYYZYL Y L ZYYZzLY ZYSLLLZLLLSLLLL LL
வியாழன், சனி, இராகு, கேது பார்வைகள் சிறப்பாக :) இம்மாதம் கூடிய நன்மைகளைத் தரும் மாதமாக அமையும். தொழில் நிலைகள் எதிர்பார்த்தபடி அமையும், புதிய தொழில் : வாய்ப்புக்களை தொடங்கவும் வாய்ப்புண்டு பண விடயங்களில் தாராளமாக புழக்கம் உண்டு. எதிர்பார்த்த பண வரவுகள் வந்து சேரும், குடும்பத்தில் நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறி மன மகிழ்ச்சியைக் கொடுக் கும். உத் தி யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மைகள் கிடைத்திடும். நீண்ட நாள் பதவி உயர்வுகள் சிலருக்கு கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகள் : முதலீடுகளால் கூடிய இலாபமடைவர். கூடிய நன்மைகளைத் தரும் மாதமாக ஆடி மாதம் அமையும். SqTSLLLL LL LLL LLL LLLL LL LLLLSLLLLLSLLLL LL LLLLL LSLL LLLLLLLLL LL LLDDDSD LLLLLL LLLLL LLqqTS
வியாழன், சனி, இராகு, கேது பார்வைகள் சிறப்பு தரும் விதத்தில் அமைவதால் தொழில் நிலையில் ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் மறைந்து நன்னிலை தோன்றும். எதிர்பார்த்த பண வரவுகள் உரிய காலத்தில் வந்து சேரும். குடும்பத்தில் திட்டமிட்ட கருமங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களின்
செல்வாக்கு மேலோங்குவதுடன் மேலதிகாரிகளின் உதவிகளும் உரிய நேரத்தில் கிடைத்திடும். வியாபாரிகள் முதலீடுகளால் இலாபமடைவர். மகர இராசியினருக்கு குறை தீர்க்கும் ஆடி மாதமாக அமைந்திடும்.
*ாணாணாணாணாணாக"
மகரம்
騷器顯顯露器器器顯鑒證醬顯顯器肆蛙器器器顯證經鰓變經器器 經
வியாழன், சனி இராகு, கேது பார்வைகள் சிறப்பாக அமைய வில்லை. தொழில் நிலைகளில் மனக் கசப்புக்கள் ஏற்படுவதுடன் வீண் செலவுகளுக்கும் இடமுண்டு. புதிய முயற்சிகளை தொடங்குவதில் அவதானத்துடன் செயற்படுவது நல்லது. பண வரவுகள் திருப்திதரக் கூடிய விதத்தில் அமைவு பெறாது. குடும் பத்தில் எதிர் பாரா செலவுகளும் காரியங்க ளில் அலைச்சல்களும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேல் மீனம் அதிகாரிகளுடன் இணைந்து நடப்பது நன்மை தரும். வியாபாரிகள் முதலிடுகளால் மனக் குறைகளுக்கு ஆளாகுவர்.ஆடி மாதம் பெரிய நன்மைகளை தரா விட்டாலும் தீமை ஏற்பட வாய்ப்பில்லை. 瑟 qSL LLLLLLLL LL LLLiL LLDLLLL LLLL LL LLLLLLLL LL YLLLLL LL LLL LLLLYLLLL LLLL LLLLL LLLLLL LT

Page 47
GIÉlg ஒன்றைத் தேடுகிறீர்களா?
வைத்தியசாலை ஒன்றைத் தேடுகிறீர்களா?
ר ת_
அனைத்தையும் விை
RAINBõv
The National Bu:
 
 
 
 
 

6)IL605 6ITSGIb ஒன்றைத் தேடுகிறீர்களா?
6:5ղինալի ஒன்றைத் தேடுகிறீர்களா?
ரவாகக் கண்டுபிடிக்க
W PAGES
siness Directory

Page 48
ញ៉ប៉ារ៉ៃរឺ 鑫 48 இலக்கியம்
இலக்கிய வளர்ச்சிப் பேரச் குறிப்பிருமியழயாக உள்ளது
- எழுத்தாளர் அன்பும5
/ழெத்து இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பெயர் அன்புமணி ஆகும். கிழக்கு மாகாணத்தில் ஆரையம்பதியைச் சேர்ந்த இரா. நாகலிங்கம் என்னும் இயற் பெயர் கொண்ட இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கியத் துறையில் அயராது ஈடுபட்டு வருபவர். அத்துடன் ஓர் அரச அதிகாரியாக தொழிலாற்றி ஒய்வு பெற்றவர்.
ஒரு தந்தையின் கதை (நாவல்), ஒரு மகளின் கதை (குறுநாவல்), இல்லத்தரசி (சிறுகதை தொகுப்பு), வரலாற்று சுவடுகள்(சிறுகதை தொகுப்பு), எட்டுத்தொகை பத்துப்பாட்டு (விவரண நூல்), பதினெண் கீழ்கணக்கு நூல்கள்(விவரணம்) தமிழ் இலக்கிய அறிமுகம் (விவரணம்) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்மணி, கலாபூஷணம், ஆளுநர் விருது உட்படச் சில விருதுகளையும், கெளரவங்களையும் பெற்ற அன்புமணி ஓர் ஆர்வமான இலக்கியச் செயற்பாட்டாளருமாவார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுத்தாளர் அமைப்புகள், இலக்கிய அமைப்புகளில் முக்கிய பங்கெடுத்துச் செயற்பட்டு வரும் இவர் பல இலக்கிய மலர்களை தொகுத்தும் பல இலக்கிய விழாக்களை நடத்தியும் உள்ளார். இளம் எழுத்தாளர்களை இவர் அக்கறையுடன் ஊக்குவிப்பவராகவும் இருக்கின்றார்.
அண்மையில் பவள விழா ஆண்டையும் பூர்த்தி செய்த அன்புமணி அவர்களிடம் நாம் தொடுத்த வினாக்களையும் அதற்கு அவர் தந்த பதில்களையும் ஈண்டு தருகின்றோம். மட்டக்களப்பு பிரதேசத்தில் சமகாலத்தில் இலக்கியம் வளர்ச்சி கண்டு வருகிறதா?
.விபரங்களை முதலில் கூறுகின்றேன் رایگی மட்டக்களப்பிலிருந்து (JG) இலக்கியச் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. 'தொண்டன்' (40 வருடம்), "செங்கதிர்" (2 வருடம்), தென்றல்' (2 வருடம்), கதிரவன்' (2 வருடம்). இவற்றுள் "செங்கதிர் தரமான இலக்கிய சஞ்சிகையாக வெளி வந்து கொண்டிருக்கின்றது.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் என்று ஒரு நிறுவனம் கடந்த சில வருடங்களாகச் செயற்பட்டு வருகிறது. இதன் மேலாளர் ஓ.கே.குணநாதன். இதுவரை 55 நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவற்றுட் பல சாகித்ய விருதுகளைப் பெற்றுள்ளன. மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் பேரவை என்ற ஒரே நிறுவனம் மாதந்தோறும் இலக்கியக் கருத்தரங்குகளை நடாத்தி வருகிறது. வெளியிலிருந்து வரும் எழுத்தாளர்கள் ஊடனான இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்கிறது.

மட்டக்களப்பின் பழைய எழுத்தாளர்கள் பலர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். செகுணரத்தினம், ஆ.மு.சி. வேலழகன், அன்புமணி, ரி.எல்.ஜவ்பர்கான், மருதமைந்தன் ஏறாவூர் அனலக்தர், ஏறாவூர் தாஹிர், அ.ச. பாய்வா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
பல புதிய எழுத்தாளர்கள் தோன்றி உள்ளனர். பரமக்குட்டி பூநிஸ்கந்தராசா (ஆரையம்பதி), எஸ்.ஏ. பூரீதர் (வாழைச்சேனை), த. மலர்ச்செல்வன் (ஆரையம்பதி), துறைநீலாவணை செல்லத்துரை, அமிர்தேஸ்வரி கல்லடி றொபட், தமிழ்ச்செல்வி, தாமரைச் செல்வி ஆகியோர் அவர்களில் குறிப்பிடக் கூடியவர்கள்.
அவ்வப்போது (J6Ն) நூல்கள் 6)dიJ67fზtz6°c’ (6) வைக்கப்படுகின்றன. அமரர் அருள் செல்வநாயகத்தின் விபுலானந்த இலக்கியம் (600 பக்கங்கள்) அவரது மகள் ஜெயந்திமாலாவால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஆரையூர்த் தாமரை (தாமரைச் செல்வி) எழுதிய 'விற்பனைக்கு ஒரு கற்பனை" கவிதைத் தொகுதி அண்மையில் புரவலர் புத்தகப் பூங்காவால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதே மேடையில் காத்தான்குடி நசீலா எழுதிய சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. மட்டக்களப்பில் இயங்கும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் அண்மையில் தேசிய மட்டத்தில் எழுத்தாளர்களை தெரிவு செய்து 09.05.20/0 ஒரு பெரும் இலக்கிய விழாவை நடத்தி பணப் பரிசும் சான்றிதழும் வழங்கி கெளரவித்து அன்புமணி, செங்கை ஆழியான், தெளிவத்தை ஜோசப், ஜின்னா ஷெரிபுத்தீன், அகளங்கன் ஆகியோருக்கு தமிழியல் வித்தகர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 9 இலக்கியத் துறைகளில் இந்நூல்களை எழுதியோருக்கு பணப்
பரிசும் சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

Page 49
ஆண்டுதோறும் பிரதேச செயலக சாகித்திய விழாவும் சிறப்பு மலர் வெளியீடும் நடைபெறுகின்றன. இந்த இலக்கிய விழாக்களில் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குச் சான்றிதழ், மற்றும் விருது வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது. பல இலக்கிய மன்றங்களும், இலக்கிய விழாக்களை நடாத்துகின்றன. அண்மையில் ஆரையம்பதியில் இயங்கும் அஸ்டா நிறுவனம் அவ்வாறானதொரு இலக்கிய விழாவை நடாத்தி, மூத்த எழுத்தாளர்களையும் பாராட்டிக் கெளரவித்தது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு மா வட்டம் சமகால இலக்கிய வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதாகவே கொள்ள வேண்டும், மட்டக்களப்பில் பெண் எழுத்தாளர்களின் இலக்கிய பங் களிப்பு எப்படி இருக்கிறது?
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் பல பெண் எழுத் தாளர்களை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் பெண் என்ற அரை ஆண்டுச் சஞ்சிகையை வெளியிடுகிறது. பெண் எழுத் தாளர்களின் ஆக்கங்களைத் தொகுத்து அவ்வப்போது வெளியிடுகிறது.(உ+ம் கண்ணாடி முகங்கள் - கவிதைத் தொகுப்பு) கிழக்கில் காத்திரமான இலக்கியப் போக்கு உள்ளதா? இது பற்றி என்ன கூறுவீர்கள்?
செ. யோகராசா, மலர்ச்செல்வன், Guararéforfeyri சி. மெளனகுரு முதலியோர் இவ்வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். பேராசிரியர் சி. மெளனகுரு ஆய்வு நோக்கில் எழுதுபவர், கலாநிதி செ. யோகராசா, தேடல் முயற்சியுடன் ஆய்வு நோக்கில் எழுதுபவர், த. மலர்ச்செல்வன் தேடல் முயற்சிமிக்கவர், ஓ.கே. குணநாதன் பல ஆய்வுத்
 

遠 ម៉ាហ្វ្រងឿ 49
தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளார். அ.சபாய்வா ஆய்வு நோக்குடன் எழுதுபவர்.
திரு. வ. சிவசுப்பிரமணியம், வித்துவான் சா.கி.கமலநாதன் ஆய்வு நோக்கில் எழுதுபவர்கள். இவர்கள் முறையே சுருதி நூல் 'பாரத அம்மானை' என்ற நூல்களை எழுதியுள்ளனர். (ஏட்டு பிர திகளிலிருந்து.)
இவர்கள் எல்லோரையும் விட கனடாவில் வதியும் க.தா. செல்வராசா கோபால் (ஈழத்து பூராடனார்) 200 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ளார்.
கிரேக்க நாடகங்கள் 16 எழுதியுள்ளார். இதற்காக அவருக்குக் கிழக்குப் பல்கலைக்கழகம் இலக்கியக் கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவித்தது.(இது ஒரு மொழிபெயர்ப்பு)
இவை தவிர, கல்லாடம், நைடதம், பாரத சக்தி மகா காவியம், கடல் கோள் ஓவியம், ஐங்குறு நூல், சீவகசிந்தாமணி, பெருங்கதை, யசோதர காவியம், பதிற்றுப்பத்து, அரிச்சந்திர புராணம், மூன்று கிறிஸ்தவ நூல்களின் ஆய்வு முதலிய பாரிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
இவர் மட்டக்களப்பின் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்தவர். மட்டக்களப்புப் பகுதியில் தமிழ் இலக்கியம் மேலும் வளர்ச்சி அடைய உங்கள் ஆலோசனைகள் என்ன? /. மட்டக்களப்பில் வெளியாகும் இலக்கிய நூல்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் ஒரு நிலையான விநியோக வலைப்பின் னல் அவசியம் தேவை. 2. மட்டக்களப்பில் வெளியாகும் நூல்களுக்கு விமர்சன அரங்கு நடாத்தப்பட வேண்டும். மட். தமிழ் எழுத்தாளர் பேரவை, பல் கலைக்கழக தமிழ்ப் பிரிவு போன்றவை இத்தகைய விமர்சன அரங்குகளை நடத்தலாம். 3. வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்பட வேண்டும். பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் இதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 4. மட்டக்களப்பில் வெளியாகும் நூல்கள், சஞ்சிகைகளை
பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். (உழைப்பவர்கள், ஆசிரியர், உத்தியோகத்தர். இதற்காக ஒவ் வொரு மாதமும் தமது சம்பளத்தில் 5 வீதத்தை ஒதுக்குதல் தகும்) 5. இலக்கிய உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்
டும், 6. புத்தக விற்பனையாளர்கள் இத்தகைய நூல்களின் விற்ப
னைக்கு ஊக்குவிக்க வேண்டும். 7. புத்தக விற்பனையாளர்கள் இத்தகைய நூல்களுக்குரிய பணத்தை வழங்கி, அவற்றைக் கொள்வனவு செய்து விற் பனை மேற்கொள்ள வேண்டும். 8. பாடசாலைகள் தமது நூல் நிலையங்களுக்காக வசதிக் கட்ட ணத்திலிருந்து ஒவ்வொரு நூலினதும் 2 பிரதிகளைக் கொள்
வனவு செய்ய வேண்டும்,
Y

Page 50
ຫຼິ 彦 50 நாடகக் கலை
கூத்துக்களில் பெண்ணியல் கருத்துக்களுக்
முன்னுரிமை குருகிறோம்
 
 

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைகபீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஜெய்சங்கருடன் இணைந்து மட்டக்களப்பு பாரம்பரிய நாட்டுக்கூத்துகளை மீளுருவாக்கம் செய்த வடமோடி நாட்டுக்கூத்து அண்ணாவியார் சிவநாயகம் மற்றும் அண்ணாவியார் சி. ஞானசேகரம் (யோகன்) அவர்களுடன் உரையாடினோம்.
"என் அப்பா, தாத்தா எல்லோரும் கூத்துக் கலைஞர்கள் தான். அந்த வகையில் தான் நானும் இக் கூத்துக் கலையில் ஈடுபட்டேன். சீலாமுனையில் கடந்த முப்பத்தைந்து வருட காலமாக கூத்தில் ஈடுபட்டு வருகின்றேன் என்றார் ஞானசேகரன்.
உங்கள் கூத்து அனுபவங்களைக் கூறுங்கள் என இந்தக் கலைஞரிடம் கேட்டபோது, ‘வட மோடியில் அமைந்த கூத்துகளைத் தான் நாங்கள் ஆடி வருகின்றோம். வட்டக் களரியில் தான் எங்கள் கூத்து நடக்கும். நாம் ஒரு போதும் மேடையில் ஏறி ஆடவில்லை, மேடை நாடகத்திலும் நடித்த தில்லை. முன்னர் இரண்டு பேர் ஆடுவார்கள். பத்து இருபது பாட்டுகள் பாடுவார்கள், அது சலிப்பை ஏற்படுத்துவதுண்டு, மூன்றாவது கண் என்ற ஜெய்சங்கரின் பல்கலைக்கழக அமைப் பொன்றுடன் நாமும் சேர்ந்து கொண்ட பின், அவர்கள் மேற் கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கூத்துகள் ஐந்து 5 மணித்தியாலத்துக்கு சுருக்கப்பட்டு ஆடப்பட்டு வருகின்றன. கிழக்குப் பல்கலைக்கழகம் இதில் சேர்ந்து கொண்டதால் பெண் பிள்ளைகளும் இப்போ ஆடுகிறார்கள்.
முன்னர் நான் பெண் வேஷம் போட்டு ஆடுவேன். ஜெய்சங்கருடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மீளுருவாக்கம் செய்து சிவநாயகம் அவர்கள் எழுதிய நாடகங்கள் எல்லாவற்றையும் நான் எங்கள் குழுக் கலைஞர்களுக்குப் பழக்கி ஆட வைத்தேன். நான் மத்தளம் அடித்துப் பாடுவேன்’ எனக் கூறினார்.
எங்கெங்கு உங்கள் குழுவினரின் கூத்துக்கள் நடை பெற்றிருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் தருகையில், 'உள்ளுரிலும் யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களிலும் நடத்தப்பட்டிருக்கின்றன. கடந்த பத்து வருடங்களாக பல்கலைக்கழகத்துக்குள்ளும் கோவில்களிலும் செய்கிறோம். இதையெல்லாம் ஒரு சந்தோஷத்துக்காகத்தான் செய்கிறோம்' என்றார்.
தான் கடற்றொழில் செய்வதாகவும் தனது பிள்ளைகள் தச்சு வேலை செய்வதாகவும் ஞானசேகரம் மேலும் கூறினார். அண்ணாவியார் செல்லையா சிவநாயகம் தனது பழுத்த அனுபவங்களை நம்மிடம் கூறியதாவது.
"ஜெய்சங்கர் அவர்களுடன் இன்னந்து பழைய கூத்துக்களின் தன்மை மாறாமல், அவற்றை மீளுருவாக்கம் செய்யத் தொடங்கிய பின்னர் கூத்துப்பிரதி எழுதுவதோடு மட்டுமல்லாமல் கூத்தின் பல விடயங்களில் நான் தெளிவு பெற முடிந்தது' என்றார். இவரும் சீலாமுனையைச் சேர்ந்த கூத்துக்

Page 51
கலைஞர்தான். கூத்து மீளுருவாக்கம் ஓர் அனுபவக் எழுதியிருக்கிறார்.
"நான் மட்டுமல்ல, எம்மோடு சேர்ந்த ஏனைய கூத்துக் கலைஞர் வேறு விடயங்களையும் ஜெய்சங்கர் சேரின் வழிகாட்டலால் தெரி திறந்து பேசும் ஒரு துணிவையும் பெற்றிருக்கிறார்கள் என்று கூறு( தெரிவித்தார். இவர் கூத்தின்போது வசனங்களைச் சொ குறிப்பிடத்தக்கது.
இவரை மட்டுநகருக்கு அண்மையில் உள்ள சீலாமுனை என்னும் சந்தித்தோம்! கூத்துக்கலை பற்றிப் பல்வேறு விடயங்களையும் அவ இவருடன் அண்ணாவிகள் ஞானசேகரனும் இருந்தார். சிவநாயக கலை ஈடுபாடு பற்றி நினைவு கூர்கையில் பின் கண்டவாறு தெரிவ “எனது தந்தையார் ஒரு நாட்டுக்கூத்து கலைஞர். எனவே சிறு ெ வயதில் இருந்தே, என் அப்பாவுடன் சேர்ந்து கூத்துக்களைப் பு நிலைத்து நிற்க எமது பழைய அண்ணாவிமார் வழிவழியாக ஆற்றி சேவையை நாம் மறந்துவிட முடியாது. கூத்துக்கலையில் எனக்கு இல் நான் கூத்துக்கு பிரதி எழுத ஆரம்பித்தேன். அ.வ.மு. கிருஷ்ணபி துறையில் குருவாக விளங்கினார். அவர் ஒரு சாஸ்திரியார். அண் கூத்துக்கலை பற்றி பல்றுே விடயங்களையும் சொல்லித் தந்தார்’
"1990 ஆம் ஆண்டுப் பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக அவர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது.
அக்காலத்தில் கூத்துக்கள் விடிய விடிய நடத்தப்படுவது எல்ே நேரம் உட்கார்ந்து கூத்துப் பார்க்க இப்போதுள்ள மக்கள் தயாராக கூத்தினை சுருக்கி எழுத விரும்பினோம். தர்ம புத்திரன் நாட இருக்கவில்லை. எனவே நானும் ஜெய்சங்கரும் சேர்ந்து கலந்தா கதையைச் சுருக்கிக் கூத்தாக எழுதினேன்' என சிவநாயகம் மேலும்
நீங்கள் அவரிடம் கற்றுக் கொண்ட விடயங்கள் என்ன? என்று வரிகளைப் போட வேண்டும். பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ற வேண்டும் போன்ற விடயங்களைச் சொல்லித் தந்தார். அந்த பாசுபதம்’ என்ற கூத்துப் பிரதியை எழுதினேன். அதாவது அதன் த
 

குறிப்பு என்றொரு நூலையும்
களும் கூத்துக்கலை குறித்து பல் ந்து கொண்டிருக்கிறார்கள். மனம் வேன்' என்றும் கலைஞர் மேலும் ால்லிக் கொடுப்பவர் என்பது
இடத்திலுள்ள அவரது இல்லத்தில் Iர் எம்முடன் பகிர்ந்து கொண்டார். ம் தமது சிறு வயதுகால கூத்துக் பித்தார். பயதில் அதாவது எனது ஆறாவது /ார்த்து வந்தேன். கூத்துக்கலை வந்த சிறப்பான அர்ப்பணிப்பான மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1965 பிள்ளை என்பவர்தான் எனக்கு இத் ணாவியார், பூசகர், எனக்கு அவர் என்று குறிப்பிட்டார்.
விரிவுரையாளர் ஜெய்சங்கர்
லாரும் அறிந்ததுதான். மிக நீண்ட இல்லை. எனவே காலத்திற்கேற்ப கப் பிரதி அப்போது கைவசம் லோசித்தோம். அதன்படி பாரதக் * கூறினார்.
கேட்டதற்கு “எப்படிப் பாடலுக்கு 7வாறு எப்படி வசனங்கள் எழுத வகையில் "அருச்சுனன் பெற்ற
$ன்மை மாறாமல் மீளுருவாக்கம்
基 }}វែអ្វី 51

Page 52
செய்தோம்' எனப் பதில் தந்த பதில்களும் வருமாறு,
'நீங்கள் மீளுருவாக்க அை அந்த மீளுருவாக்க அம்சங்கள் சி மொத்தமாக ஒன்பது கூத் அரங்கேறவில்லை. அருச்சுண வதை, சீதையின் துயரம், அல்லி மேடை ஏற்றினோம்.
மீள் கருத்துருவாக்கம் பற்றி தர்ம யுத்தங்கள் அல்ல. சிம்மா பாண்டவர் யுத்தம், இராம இராவ இலக்கணன் போன்ற சிறுவர்க ண்ணியத்துக்கு நாம் முக்கியத்து திரெளபதையைக் காட்டினோம். இலக்குவனால் மூக்கறுபட இராவணன் முன் சீதையின் 3 துயரத்தைக் கருத்தில் எடுப்பதற் வைத்தோம். பெண்களது துயரத் பங்குபற்றும் கலைஞர்களும் ச பேசும் தைரியத்தைப் பெற்றார்க வேறு மாற்றங்கள் செய்யப் "ஆம்! பாடல்களிலும் மாற்றம் இருந்தன. அதைப் பாடும் கலைஞ சில பாடல்களை நாம் எளின இருந்ததால் உணர்வுபூர்வமாக
முன்னர் பெண் பாத்திரங்கள் ஆனால் தற்போது பெண் பாத் விடயம் நிறையப் பெண் பாத் அண்ணாவியாராக விளக்க மு கூடுதலாக உள்ளன'
சினிமா, தொலைக்காட்சிக பிடிக்குமா? 'கஷ்டந்தான்' என்று சிவநாய
 

岛
ார். மேலும் அவரிடம் நாம் கேட்ட கேள்விகளும் அதற்கவர் தந்த
மப்பில் எத்தனை கூத்துப் பிரதிகளை எழுதி மேடையேற்றினிர்கள்? சிலவற்றைக் குறிப்பிட முடியுமா?"
த்துப் பிரதிகளை எழுதினேன். இதில் இரண்டு கூத்துகள் ன் பெற்ற பாசபதம், சிம்மாசனப் போர், அபிமன்யு- இலக்கணன்
நரகாசுரன் வதை, சீதை சூர்ப்பனகை வதை ஆகியவற்றை எழுதி
க் குறிப்பிடுவதானால் ஏற்கனவே காட்டப்பட்டு வந்த யுத்தங்கள் சனத்துக்கான போர் என்பதைத் தெளிவுபடுத்தினோம். கெளரவர் /ன யுத்தம் என்பன குறிப்பிடத்தக்கவை. அத்துடன் இதில் அபிமன்யு ள் யுத்தத்தில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள். இக் கூத்துகளில் பெ துவம் கொடுத்தோம். சிம்மாசனப் போரில் ஒரு பேசும் பாத்திரமாக
இவ்விதமாக வேறு கூத்துகளிலும் சித்தரிக்கிறோம். ட்டு அவமானப்பட்டு வரும் சூர்ப்பனகை தனது தமையனான அழகை ஒவ்வொன்றாக வர்ணிக்கும்போது தனது சகோதரியின் குப் பதில் சீதையின் அழகில் மயங்கிப் போகும் இராவணனை முன் த்தை முன்னிலைப்படுத்தி காட்டினோம். இதனால் இக் கூத்துகளில் ருத்துகளில் தெளிவு பெற்றார்கள். தாமே தமது உரிமைக்காகப் 5ள்' என்பதையும் கூறலாம். பட்டனவா? என்று கேட்ட போது;
செய்தோம். அன்றைய பாடல்கள் மிகவும் கடினமானவையாக நர்களுக்கே அதன் அர்த்தம் விளங்காமல் பாடி நடித்தார்கள். எனவே >மப்படுத்தினோம். அது கலைஞர்களுக்கு விளங்கக் கூடியதாக நடிக்க முடிந்தது. ளையும் ஆண்கள் தான் ஏற்று, பெண் வேடம் போட்டு ஆடுவார்கள். திரங்களை பெண்களே ஏற்று ஆடும் நிலை உள்ளது. ஆனால் ஒரு திரங்கள் ஏற்று நடிக்கும் ஒரு கலைஞன் தான் ஒரு சிறந்த டியும். ஏனெனில் பெண் பாத்திரத்திற்கு ஆட்டங்கள் தாளங்கள்
ஸ் மக்களைக் கவர்ந்து வரும் நிலையில் கூத்துக்கள் நின்று
கம் பதிலளித்தார் நேர்முகம்: லசஷ்மி

Page 53
Indulge in a prestigious lifestyle in the lap of luxury, that adds real value to your investment.
A few opportunities still remain, be a part of this exclusive lifestyle at...
The 'Sunset Wing'... Ready for occupation!
 
 

A place you fall in love with
Trillium Residencies Limited. # 153 Elvitigala Mawatha, Colombo 8. Phone: 2686488 Email: info(CDtrillium. Ik Web: www.trillium. Ik
Call now to reserve your Spot of paradise in Sunset Wing
Call our Hotline : O777 888 222

Page 54
கோயம்புத்தூரில் ஜூன் மாதம் 23 முதல் 27 வரை சீரும் சிறப் நிகழ்வுகளை இங்கு காண்கிறீர்கள். தமிழர்களின் பெருமைகளை ஊர்திகளின் அணிவகுப்புகளும், புதைபொருள் சான்று
கலைக்கேசரியின் மாநாட்டு சிறப்புமலரை பங்குபற்றிய
 
 
 
 
 

. . . டந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பிக்கும் வகையில் ஆய்வரங்குகளும், கருத்தரங்குகளும், களின் கண்காட்சிகளும் மாநாட்டுக்கு மகுடம் சூட்டின. பிரதானிகள் ஆர்வத்துடன் ஊன்றி கவனிக்கின்றனர்.
羲教

Page 55


Page 56


Page 57
،©id$担saeaeae llae[9_Is.±
£1009009/Noĝiĝinto mŲ9ổi), @Ilgi sígig) !pooq. Qigoligi sāsri@@
qıígig) qi@sooooo |(9109o pogorĝITā
 

ZUGs-S9|090.JPG|W
69398) LLLO “gizlīze LLLO :@ophis-luoo uuoooexueloup www.
-I藏匿 ) si Fiqisi)moe), osso conosog) ‘go
ÅEDOTON HOHL
biasnaensono golon stosoloDE!!!!! │ │ │ │ │ │變
|
qu@TTTTooooo quhongo 109æling sụ91gorie)-qı9óipsídig) !9ærg, origo TheOVNICI Tugasnog) qıhırısıdııııını gĒĢ@@ Gjūjúogi 1091|ốigo 199Ųníodowe úgy& Qosnơiqoqoqong Tisiqoỹinge) sinn, collanoloģigos

Page 58
கலைக்கேசரி கி
ஆடி பிறந்ததும் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. தேவர்களுக்கு இரவுப் பொழுது என்று புராண வானியல்
நிபுணர்கள், சோதிடர் மொழிவர்.
அயனம் எனில் வழி என்றும் பொருள். தமிழர் கொண்டாடும் தைத்திருநாள் உத்தராயனம் என்பர். ஆறு மாதங்கள் முடிந்து ஆடி பிறக்க தட்சணாயன வழி தெளிவாகும். இது மார்கழி வரை நீளும், சூரியன் அதன் பன்னிரு ராசி மண்டலங்களைக் கடக்கும் காலக் கணக்கே இதுவென சோதிடர் பகர்வர். முதல் ஆறு மாதங்கள் தேவர்களுக்கு பகற் பொழுதும் பின் ஆறு மாதங்கள் இரவு என்றும் புராணம் கூறும். உத்தர அயனத்தில் பூமியின் சுற்றுப் பாதை வடக்கு வழி பின்பு தட்சண அயனம் தெற்கு வழி சிவன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு ஆணி வரை உற்சவங்கள் மகா உற்சவங்களாக நிகழும்.
ஆடியிலிருந்து அம்பாளுக்கு ஆராதனைகள் அமர்க்களப்படும். ஆடிப் பிறப்பு, ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய், ஆடிப் பட்டம், ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை என்று ஒரே கொண்டாட்டந்தான்.
ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் வாருங்களே’ என நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடியதை அறிவோம்.
யாழ்ப்பாணப் CU/TOE/F6D6)560)67 அரசாங்கம்
பொறுப்பேற்கும் வரை ஆடிப் பிறப்பு தினத்தை லிவு நாளாக
கருதினர். பண்டையத் தமிழனின் உணவும் கூழ்தானே. ஏழைகளுக்கு கூழே தஞ்சம். 'கூழேயாயினும் குளித்துக்குடி' "கூழேயாயினும் கூடிக் குடி' என்பதும் எம் பாட்டிமாரின்
 
 

முதுமொழி 1940 ஆம் ஆண்டு காலப் பகுதியை நினைவில் மீட்டுப் பார்க்கும் பொழுது, கிராமங்களில் ஒவ்வொரு இல்லத்திலும் நிகழ்ந்த பரிமளிப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆடி பிறக்க இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே ஊற வைத்த நாட்டுப் பச்சை அரிசியைக் காய வைத்து, “தொம், தொம்’ என்று உரலில் போட்டு இடிக்கும் சத்தம் கிராமம் முழுவதும் கேட்கும்.
ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இன்றி எங்கும் இது நிகழும். ஒருவருக்கு உதவியாக மற்றப் பெண்களும் உதவும் நோக்கில் இரு உலக்கைகளால் இடிக்கும் சத்தம் தாள நடை தப்பாமல் இருக்கும். முதல் நாள் மாலை வேளைகளில் ஒழுங்கை வழி செல்லும்போது “கறுக், கறுக் 'கென்று சிரட்டையை துப்புரவாக்கும் சத்தமும் கேட்கும். எப்படா கூழ்குடிக்கலாம்? என்று நாக்கு கேட்கும்.
இதற்கென்று பத்திரப்படுத்தி வைத்த “கட வாத்தியம் போன்ற பெரிய பானையில் கருப்ப நீர், தண்ணிர், அரிசி மா, பருப்பு, பனங்கட்டி எல்லாம் போட்டு அடுப்பில் வைத்துக் காய்ச் சுவர். பதம் பார்த்து, இறக்கி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுற்றிவர உட்கார்ந்து ஏற்கனவே தயார்படுத்திய புனா, சிரட்டை போன்றவற்றில் கூழை வீட்டுத் தலைவி ஊற்ற குடித்து மகிழ்வது கண் கொள்ளாக் காட்சியாகும். கொழுக் கட்டையையும் அவித்து உண்பர். ஒரே நறுமணம் வீசும்
ஆலயம் செல்வோர் ஒரு புறம், ஆனந்தக் கூத்தாடுவோர் மறுபுறம், பிற்காலங்களில் கஜு, ஏலம், கராம்பு, முந்திரிகை வற்றல் என்பவற்றை சுவை கருதி கூழில் சோர்ப்போரும்
உள்ளனர். இந்தப் பண்பாடு மிக நீண்ட கால வரலாற்றைக்
கொண்டது என்பர் முதியோர்.

Page 59
கோடி மகத்துவம் எனில் நூறு லட்சம் என்பதல்ல, வரிசை என்றும் கோடிக்கு பொருள் கொள்வர். ஆடிக் கூழ் குடித்து ஆனந்தித்த பின் ஆடிச் செவ்வாயில் அம்பாள், முருகனை எண்ணி விரதமிருந்து வழிபாடு இயற்றும் கோலம் காலம் காலமாக நடைபெறும் வழமை.
காற்றும் தடையின்றி இடையிடை கடுமையாக வீசும், தமிழ்ப் புத்தாண்டின் நான்காவது மாதமாதலால் தமிழ்நாட்டு விவசாயிகள், பயிரிடும் பருவம் எனக் கருதி ஆடிப் பட்டம் என்று பெயர் சூட்டி, 'ஆடி விதை தேடி விதை' என்பதற்கேற்ப சிறு தானியங்களை விதைப்பர். 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்' என்று காற்றைப் புகழுவர். யாழில் ஆலய மகோற்சவங்களும் உற்சாகமூட்டும்.
பலன் கருதா உதவி தாயுள்ளத்திற்கு ஒப்பானது என்பர். ஆடி மாதம் பதினெட்டாம் நாள் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும். நதியையே மதி சூடும் அண்ணல் சிரசில் தாங்குகிறார். நீர் வழங்கும் இயற்கையை பெண்ணாகவே நம் முன்னோர்கள் சித்தரித்தனர்.
ஆடி பதினெட்டை ஆடிப் பெருக்கென்பர், காவிரித்தாய் சூல் கொண்டிருப்பதாக ஐதீகம், புதுமணத் தம்பதிகள் விரதம் இருந்து திருமணமாகி ஆண்டு ஒன்று ஆனதும் விடிகாலை பல்வித அன்னம் செய்து காவிரி நீராடி புது ஆடை அணிந்து தாலி பாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டி அன்னையை ஆராதித்து வழிபடுவது மகத்துவம் மிக்க பண்பாடேயாகும்.
அமாவாசையில் மகத்துவம் மிக்கது ஆடி அமாவாசை தந்தையை இழந்தவர்கள், விரதம் இருந்து ஆலய தரிசனம் செய்து நீர் நிலைக்கருகில் (கடலோ, ஆறோ, குளமோ) சிவாச்சாரியார் மூலம் பிதிர் கடன் தீர்த்து, தான தருமம் செய்து பகுத்துண்டு வழிபாடியற்றுவது மகத்துவமானது.
அருளது சக்தியாகும் என்று அம்பாளுக்கு அபிடேக ஆராதனை செய்யும் நாள் ஆடிப் பூரம். உண்ணாமுலை
கொண்ட உமை அம்மைக்கு மிக உகந்த நாளாக
அனுட்டிப்பர். இதை அம்மையின் ருது காலமென்று புராணம் பகரும். இத்தினம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழ மணித் திருநாட்டில் தமிழர் வாழ்விடங்களிலெல்லம் இவ் விசேட தினத்தை தவறாது அனுட்டிப்பர். இதனை A. கன்னியரும் சுமங்கலிப் பெண்களும் தவறவிடார்.
என்னதான் ஆடியை எண்ணில் நாடி நரம்பெல்லாம் ஒடி உறைந்தாலும் தமிழர் தம் பண்பாட்டுக் கோலங்களைத் தி: தவறவிடார். "ஈழம் எங்கள் நாடடா இன்பமான வீடடா' என்று போற்றுவோம் வாழ்த்துவோம்.
Y இந்திரன்
 
 
 
 
 
 


Page 60
6 பண்ணின் உடல் வளர்ச்சியில் பெரிய பெண்ணாதல் என்ற நிலை அவள் வாழ்வின் முக்கிய நிலையை நினைவூட்டுகிறது. இதனைப் பருவமடைதல், ருதுவாதல், புத்தியறிதல், சாமர்த்தியப்படல், சமைதல், பூப்படைதல் என பலவிதமாக அவரவர் ஊரின் வாய்மொழியின் பாற்பட்டுக் குறிப் பிடுவர். பருவமடையும் இந்நிகழ்வு ஒவ்வொரு பெண்ணினதும் பரம்பரை, சூழல் உடல், நிலை என்பவற்றைப் பொறுத்துச் சுமார் 8 க்கும் 17, 18 வயது வரையில் நிகழலாம். மா னி ட ப் பிறப்பில் மட்டுமல்ல, மிருகங்கள் மற்றும் பிராணிகளிலும் கூட ஆண்-பெண் என்ற வேறுபாடு இனப் பெருக்கத்தின் பண்பைக் கொண்டே கணிக்கப்படுகின்றது. எந்த உயிரினத்திலும் பெண்ணின் பங்கு மிகமுக்கியமானது. காரணம் அதுவே கருவைச் சுமந்து பேணி வருவது.
ஒரு பெண் குழந்தை பெரியவளானதும் பெற்றோர் மிக மகிழ்ச்சியுடன் மிக நெருங்கிய உறவினரான
தாய்மாமன், மாமி பிள்ளைகளுட்பட தமக்கு மிக
நெருங்கியவர்களை அழைத்து கிணற்றடியில், சில
 
 
 
 

ඊශීඝ්‍රණී බවoréණිණී
gඊqය්ෂුණී රිචණ්ෂ
இடங்களில் இலை குழை சேர்ந்த குப்பை மீதோ இருத்தித் தோய வார்ப்பர். இச் சடங்கில் தாய் மாமன்மாருக்கே முக்கிய இடம் என்பதால் அவர்களே முதலில் தலையில் தண்ணிரை 3 அல்லது 5 தடவைகள் வார்ப்பர். அதன் பின்னரே மாமி, மச்
சாள் மற்றும் உறவினர் வார்ப்பார்கள். கண்டவுடன்
வார்க்கும் நீர் என்பதனால் இதனைக் கண்ட தண்ணி வார்த்தல் என்பர். நீராடிய பின் அழகாக உடை உடுத்தி, சிறுமியின் கையிலே வேப்பிலையும் சத்தக் காம்பையும் பாதுகாப்புக்காக வைத்திருக்கக் கொடுத்து ஒரு அறையிலோ வீட்டின் ஒதுக்குப்புறத்திலோ இருத்துவர். சிலர் கரியால் கோடிட்டு அதனுள் இருத்துவர். வேப்பிலையும் வைத்துவிடுவர். பிஞ்சுக் கத்தரிக்காய்ச் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் போட்டு நல்லெண்ணையும் விட்டு குடிக்கக் கொடுப்பர். இதனைத் தொடர்ந்து 3 அல்லது 5 நாட்கள் கொடுப்பர். நீர் வார்த்த தாய் மாமன் மாமி உட்பட ஏனையவரும் சிறுமியை ஆசீர்வதித்துத் தமது பரிசுகளையோ அன்பளிப்புகளையோ நல்குவர்.
பின்னர் அச்சிறுமிக்கு வழமையான உணவைத் தவிர்த்து கைக்குத்தாலான சிவத்தப் பச்சையரிசியில் தேங்காய்ப் பால் இட்டு பொங்கிய பொங்கலுடன் கத்தரிக்காய் வெங்காயப் பொரியலே உண்ணக் கொடுப்பர். காலை, மாலை இதே உணவுதான். அத்தோடு மஞ்சள் பொடி, வேப்பிலைத் துளிர், இஞ்சி, உள்ளி என்பவற்றையும் சேர்த்து அரைத்து சூரணமாக்கி பாக்கு அளவில் காலையும் மாலையுமாக மூன்று தினங்களுக்கு

Page 61
விழுங்கக் கொடுப்பர். நாலைந்து நாட்களின் பின் உழுத்தம்மா சேர்த்துக் களி பிட்டு என்பனவும் கொடுப்பர். அசைவம் உண் போர் முட்டை கொடுப்பார்கள், 3/ நாட்களின் பின் நல்ல நாள் முகூர்த்தம் பார்த்து பூப்பு நீராட்டு விழாவை நடாத்த ஒழுங்குககளை மேற்கொள்வர்.
வீடு, வாசல்களெல்லாம் துப்பரவாக்கி, நன்கு அலங்கரிப்பர். பிட்டு, கழி, சிற்றுண்டிகள் உணவு வகையென்பனவும் சிறப்பாகத் தயாரிக்கப்படும். நிறைகுடம் சகிதம் மங்கள இசையும் முழங்கும். குறிப்பிட்ட நாள் குறித்த முகூர்த்தத்தில் பெரியவளான பெண்ணை மாமி, மதனி நெருங்கிய உறவுகளைப் பெண்கள் அவரது கையில் சுருட்டிய வெற்றிலை வேப்பிலை என்பன கொடுத்து தலையில் ஒரு வெள்ளைத் துணியால் முக்காடிட்டு நீராட்டும் இடத்திற்கு அழைத்து வருவர். முன்னரைப் போலவே தாய்மாமன்மார் முதலில் தலையில் நீரை 3 தடவைகள் வார்ப்பர் 3, 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் பெண்கள் பாலும் அறுகம் புல்லும் சில்லறை நாணயமும் உள்ள கிண்ணத்தில் இவற்றை எடுத்து 3 தடவைகள் அச்சிறுமியின் தலையில் வைத்து நீரை வார்ப்பர். பின் அவரை அறைக்கு அழைத்துச் சென்று உடைமாற்றி, அலங்காரம் செய்வர். சிலர் பாவாடை தாவணி அணிந்தாலும் பலர் சேலை உடுத்தி தலை நகை ஒட்டியாணம் சிமிக்கி, காற்சங்கிலி என மணப் பெண் போல சகல நகைகளும் பூட்டி மேக்கப் அலங்காரமும் செய்வர். இந்தச் சேலையும் தாய்மாமனின் அன்பளிப்பாகவே இருக்கும்.
இவை ஒருபுறம் இடம்பெற ஐயர் வந்து புண்ணியாவாசனம் செய்து துடக்கு கழித்தலும் இடம்பெறும். இதன் பின்னர்தான் பெரிதான பெண்ணை தலையில் ஒரு வெள்ளை துணியால் முக்காடிட்டு கையில் வெற்றிலைச் சுருளுடன் மாமி மைத்துணி தோழிகள் மற்றைய முறைப் பெண்கள் சூழ இச்சடங்கு நிகழும் இடத்திற்கு அழைத்து வருவர். அவர் மண்டபத்திலோ அச்சபையிலோ உள்ள நிறை குடத்தில் விழித்து அங்குள்ள குத்து விளக்கை ஏற்றிய பின் தன் இருக்கையில் அமர்ந்து கொள்வார். இச் சடங்குகள் வழமையான நம்பிக்கைகள் ஒழுங்கு முறைகள் என்பன அந்தந்த இனத்தினருக்கும் குழுவினருக்மேற்ப மாறுபட்டும் இருக்கும்.
மணவறையிலே ஒற்றை விழுந்த இலக்கத்தில் ஆரத்தி எடுத்துக் கழிப்புக் கழிப்பதற்காக தட்டங்களில் பூ, பழம், தேங்காய், நிறைநாழி, சிற்றுண்டிகள், பிட்டு, கழி பொங்கல், தீபம், பன்னிர்செம்பு சந்தனம் பால் ரொட்டியும் வேப்பிலையும் என // தட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு தட்டுகளையும் பெண்கள் ஒவ்வொருவராகத் தலையைச் சுற்றியும் முன்பக்கம் முகத்திலிருந்து கால்வரை 3 தடவைகள் சுற்றி ஆரத்தி எடுப்பர். இவற்றில் அளவுகள் முறைகள் இடத்துக்கிடம் வேறுபடுவதுமுண்டு. கடைசியாக வயதான ஒரு பெரிய பெண்ணே பால்ரொட்டிகளைத் தலையை சுற்றி ஆரத்தி எடுத்து நாலு திசைகளிலும் அவற்றை நொருக்கிப் போட்ட பின் வேப்பிலையையும் சப்பித் துப்பும்படி கொடுப்பார். மீண்டும் ஆரத்தி எடுத்து இச் சடங்கை நிறைவு செய்வர்.
 
 

យ៉ាងញញត្អែ
61
சடங்கான பெண் சுவாமியை வணங்கிப் பின் தன் பெற்றோர், பெரியோர் சிற்றப்பா, பெரியப்பா என யாவரையும் வணங்கி ஆசி பெறுவார். அறுசுவை உண்டியோடு பிட்டும் கழியும் கூட எல்லோருக்கும் சிறிதளவாவது பரிமாறப்படும். இத்தகைய சடங்குகள் சம்பிரதாயங்களெல்லாம், இவ்விஞ்ஞான உலகில் பெண்ணுடைய உடற் கூற்றின் சிறியதொரு திருப்பம், இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்கள் என்ற கேள்விகளும் சமுதாயத்தை நோக்கி வீசப்படுகின்றன என்பதை நாம் தெரிந்திருந்தாலும் அன்றைய எமது சமுதாயக் கட்டமைப்பின் அன்பைப் பரிமாறும் நெருங்கிய உறவுக்கு உணர்வுகளுக்கும் ஒற்றுமைக்கும் சமாதானத்திற்கும் மனித நேய விரிவுக்கும் இச்சடங்குகளு
ம்பிரதாயங்களும் எவ்வாறு உதவின என்பதை எண்ணி எண்ணி வியக்கலாம்!
பத்மா சோமகாந்தன்

Page 62
535i as ----- ܗܘܘ ܒ R இ
esetako 鼠
جبني
பூநீ டி. மாணிக்கவேலு - திருமதி எம். ரெங்கா கோதை தம்பதிகளின் புதல்வி டாக்ட எம். செளயியலசுஷ்மி, திரு, திருமதி எம். இராமச்சந்திரன் தம்பதிகளின் புதல்வன் Eng ஆர்.மருது ஆகியோரின் திருமணம் மே மாதம் 19ஆம் திகதி தஞ்சாவூர், தமிழரசி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அவர்களின் திருமண வரவேற்பு வைபவ சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் மே மாதம் 24 ஆம் திகதி மாை
சிறப்பாக நடந்தேறியது. நண்பர்களுமு' உறவினர்களும் இவ்வைபவத்தில் கலந்: கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 
 
 


Page 63
2000 வருடங்கள் பழமையான
ஆயுர்வேத அழகின் ரகசியம் என்ன?
அதற்கான பதில் Wicco டர்மரிக் ஆயுர்வேத கிறீம். இயற்கை சந்தன எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த Wicco உபயோகிப்பதனால்,
• சருமத்திற்கு ஆரோக்கியமான பொலிவினை
வழங்குகிறது. - பருக்களை முழுமையாக குணப்படுத்துகிற சூரிய கதிர்வீச்சு மற்றும் அசுத்தக் காற்றில்
பாதுகாக்கிறது. கண்களில் ஏற்படும் கருவளையத்தினை
அகற்றுகிறது.
WICCO கிருமிகளை அழிக்கும், சருமத்திற்கு பொலிவினை மற்றும் இயற்கையான வெள்ளை நிறத்தினை வழங்கும். இனிமையான நறுமணத்தின்ைக் கொண்டது.
50 வருடங்களுக்கும் அதி: பாவனையாளர்களின் மன
 
 

§ư| 83 så oss; o stolțxis
OO བF VM N བF
HESPERUS MARKETING விநியோகஸ்தர்
திய
ன்ற
னை வெ
இந்
தி

Page 64
ESGIDSDÉBESEFNA
64 நிகழ்வுகள்
முக்கிய கலை,கலி
- கொழும்பு
బ్దాలిamaు 23 மாலை 6.00 மணிக்கு வாக்கியகாரர்
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைெ
ܢܣ
- ஐரோப்பா
ஜூலை 3 அன்னபூரணா நடனக் குழுவினரின்
அடியொற்றிய நடன நிகழ்ச்சி லண்
ஜூலை 11 ஜி. எஸ். ரஞ்சனின் புல்லாங்குழல் இ (3LIrrig,5é,5ai Festival Evora Clas
ஜூலை 12 - 20 ஜி. எஸ். ரஞ்சனின் புல்லாங்குழல் இ Lily Tai Taito Marseille and Aptggio E
ஜூலை 6 சோனாலி ஸ்கந்தனின் சோலோ பரத
LI Trfaino The Centre Mandapa geo
ஜெர்மனி
Eum
ஜூலை - 9 சர்வதேச ஆசிய கலைத் திருவிழா
Gagi LogiT Museum for East Asian
al
ஜூலை - 17 ரி. பாலசரஸ்வதி பிரியமாதேவ சங்க pálu,GuLITiš; 535.Júb Rochester, Atm
ஜூலை - 29 முதல் ஆகஸ்ட் 1 வரை ஹேமா ராஜகே சிகாகோ Storefont அரங்கில் நடை
ஜூலை - 23 பூரீ கிருஷ்ண பாரிஜாதம் டாக்டர் வே
ஹேமா ராஜகோபாலனின் நாட்டிய \
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள எழுத்தாளர்கள், ம கலாசாரம், பண்பாடு, வரலாறு ஆகியன குறித்த கட்டுரைகை படங்களையும் எதிர்பார்க்கிறோம்.
EDITOR, K. NO.185, GRANDPASSROAD email- editor(akalaikesari.co
イー」ー」s」|。
சகல வசதி (
தொலைக்காட் PUB-D.J- lfaðu
* కి క్
二」ー」
Tele --94 114588 8. Fax. On 294,442 Mobile O777
 
 
 
 

மாசற நிகழ்வுகள்
வரிசை இசை நிகழ்ச்சி பறும்.
Y இந்திய புராணக் கதைகளை TL6it Sheffield children festival 36) 1560LQup||b.
சை நிகழ்ச்சி sica இல் நடைபெறும்.
சை நிகழ்ச்சி டைபெறும்.
நாட்டியம் நடைபெறும். J
Art இல் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
༽
நந்தினி, ரமணி ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி non Yoga Studio இல் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
ாபாலனின் நாட்டிய நிகழ்ச்சி -பெறும்.
ஷாபனா நாயுடு குழுவினரால் நிகழ்ச்சி
ار
ற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்களிடமிருந்து இலக்கியம், கலை, ளயும், தகவல்களையும் அதனோடு தொடர்புடைய தெளிவான
- ஆசிரியர்
ALAIKESARI |, COLOMBO -14, SRILANKA. n/subscription(a)kalaikesari.com
/ __ , ミ | OU (19 edycybntuis Board)
கயுடன் கூடிய திருமண மண்டபம் A/C, Non A/C) 945mpsori சி மற்றும் மூன்று நேர உணவு வசதி ட், பியர் கார்டன், வாகன தரிப்பிட வசதி File:Kitta) is O2. C.J., Vatta Jal.
924.12.07 292090 0731,08250

Page 65
a Reception Hall for any functions, Wedding / Parties
Ample space
centra Nursing Home + ###క్ష్
சகல வசதிகளு அனைவரும் . விஷேட வைப
No. 51, Sivan Road, Thiruno Veli, Jaffna. Tel / Fa.
s
 
 
 
 
 
 
 
 
 
 

பகள் அங்கத்துவத்தை இன்றே
செய்து வாழ்க்கை துணையை
தெரிவு செய்யுங்கள்.
கம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கான
பிரத்தியேக திருமணசேவை'
வீரகேசரியின்
THRUMANAM.LK
இருமனம் சேர்ந்தால் திருமணம்
Www.thirumanam.k
சேவைகளை வழங்கும்!
ED BY Ceylon resurser estaarro
Comfortable Rooms with A/C, Non A/C, Seminar ect. for parking
ம் கொண்ட AC & Mor AC அறைகள் AG dij fagu Family Restaurant ங்களுக்கு ஏற்ற nd00 & Outd00 Catering வசதிகள்
- 021 2221889, 021 4922334

Page 66
கலைக்கேசரி 66 ឆ្នាឆ្នាំក្រពើ
6QJmé9-4,Ä PUGA
"கலைக்கேசரி" என்ற அழகு மலர்
矿
கலைக் கேசரி' என்ற அழகு (OGU/ எமது தேவஸ்தானத்துக்குக் கிடைத்தது. நிறைந்த நன்றிகள் உரித்தாகுக. கலையும் கருத்தும் தெளிவும் நிறைந்த தங்கள் சஞ் சிகையின் சிறப்பு பாராட்டுக்குரியது. தங்கள் பணி சிறக்க இறையருளை வேண்டி அமைகின்றேன்.
- ஆறு. திருமுருகன்
தலைவர் பூரீதுர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை,
அருமையான ஒளஷதம்
ஆழ்ந்த மனச்சோர்வோடும் மன வேதனைகளோடும் புத்தியை மழுங்கடிக்கும் புதினங்கள் காரணமாகவும் மனித சமுதாயம் தத்தளிக்கும் இவ்வேளையில் 'கலைக்கேசரி' அரு மையானதோர் ஒளஷதமாக வெளிவருவதை நினைத்து நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனதில் புதுத் தெம்பு விளைவு கொள்கிறது.
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை ஆனந்திக்கும் வகையில் சிந்தனையூற்றோடு கலைக்கேசரி விஷயதானங்கள் அமைந்துள்ளன.
மனித சமூகம் வழி தவறிப் பயணிக்கும் வேளையில் கலைக் கேசரி சஞ்சிகை சஞ்சலமற்ற வாழ்வை முன்னெடுக்க உதவும் என்பது வாசகர்களாகிய எமது நம்பிக்கை. இச்சஞ்சிகை தன்னி லையில் நீடுழி காலம் நிலைத்திருக்க வேண்டும். யான் என்றும் இறைவனைப் பிரார்த்திப்பேன்.
- வளர்க பத்திரிகா தர்மம்
மகாராஜபுரீசு. து. ஷண்முகநாதக் குருக்கள், பிரதம குரு மாவை ஆதீனம், மாவிட்டபுரம்,
கலைக்கேசரியா கலையரசியா?
அன்புடையிர்
கலையழகும், கருத்தாழமும் கண்ணைக் கவரும் வர்ணப் படங்களும் நிறைந்த 'கலைக்கேசரி' என் கரங்களில் கிடைக்கப் பெற்று களிப்பு மிக எய்தினேன். இவள் கலைக்கேசரியா அல்லது கலையரசியா? என வியப்புற்றேன்.
கலை, கலாசாரம், பண்பா, இலக்கியம், சமயம், வரலாறு, சினிமா என கலைக்கேசரி தொடாத துறையே இல்லை எனலாம். இச்சஞ்சிகையின் அட்டைப் படம் உயிரோவியமாக காட்சி தருகிறது.
தமிழர் பாரம்பரியங்கள் பற்றிய ஆதங்கத்தோடு அறியத் தருவது வாசகர்களை குறிப்பாக வெளிநாட்டில் வாழும் தமிழ் வாசகர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும் என்பதில்

ஐயமில்லை. இந்த வகையில் இன்னும் பல அரிய பெரிய விசயங்களுடன் கலைக்கேசரி வெளிவந்து எல்லோர் கரங்களிலும் திகழ வேண்டும் என்பதே எனது பெருவிருப்பமாகும்.
- கலாபூஷணம் இராஜேஸ்வரி ஜெகானந்த குரு, தெஹிவளை.
நிலையாகும் கலையிது
கலைக்கேசரியின் ஐந்தாவது இதழ் பெற்றேன்; படித்தேன்; சுவைத்தேன். ஈழத்துச் சஞ்சிகையின் மகுடம் ஒன்றை இன்று கண்டேன். பட்டுப் போல் மேனி பளபளக்கும் அட்டை, முத்துப் போல எழுத்துக்கள், தொட்டணைக்க தூண்டும் தோற்றம்.
இச் சஞ்சிகை என் கரம் கிட்டியதால் நான் பெருமையடைகின்றேன். வெளியிட்டுக் குழுவினரின் அயரா முயற்சிக்கு விலை மதிக்க முடியாது. என்னையும் எழுதத் தூண்டும் ஆக்கங்கள், தத்துவத்தை வெளிக் கொணரும் தனித்துவ அட்டை. இத்தனையும் இணைந்த எழிலான கலைக் தேசரியே நீ அகிலத்தை ஆளும் கேசரியாக எனது வாழ்த்துக்கள்.
- திருமதி ஜெகதீஸ்வரிநாதன், ('தம்பிலுவில் ஜெகா')
நான் என்ன செய்ய வேண்டும் ? மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு
கலைக்கேசரியின் நான்கு இதழ்கள் கிடைக்கப் பெற்றேன். நான் மட்டக்களப்பில் வாழ்கின்றேன். எமது பிரதேசத்தில் 鬣 கலைக்கேசரியை காண்பதே இல்லை. எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை. கொழும்பில் இருக்கும் நண்பர் ஒருவரே கலைக்கேசசியை வாங்கி அனுப்பினார். தமிழில் காத்திடமான
சஞ்சிகை ஒன்று வெளிவருவதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். கலைக்கேசரியை தொடர்ந்து எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை தெரிவிக்கவும். ܡ
உங்கள் முயற்சியை பாராட்டுவதுடன் எனது பங்களிப்பினை மட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான்
ஒரு வரலாற்று ஆசிரியராக கடமையாற்றுகிறேன். கலைக்கேசரியினுடனான எனது ஆக்கபூர்வமான பங்களிப்பினை எவ்வாறு பரிமாாரிக் கொள்ளலாம் என்பதனை தயவுசெய்து தொலைபேசி ஊடாகவோ கடிதம் மூலமோ தெரியப்படுத்தவும். நன்றி,
வி ராஜகாரியர், ஆரையம்பதி

Page 67

(vol.) Vyy so ouņou qorto pəŋus uouorodao o 8usyung vụoupụs puo souoyềuopų pusi. Kq pənssy
XII’oqsų"/w/w^^ Xsosio ZZ ZZZs; † 1. LO II e o Xueq | eool S, pļu Olw eu L
��){HSHolueuudolɔAəp S, euJļer go lued e aq on pnoud əue əw 'shueso eļeuoduoɔ
·pue leuosued on səos^ues pue sɔɔnpoud seļoueuụ pəssuoļsnɔ yo ɔ6ueu əps/w e ɓupļaou)
'pluo^^ eų] ssoloe səluoļļuuəl pue səļuļu noɔ 98 ueų euou uỊ səoụļo uoueuq og SH Oog'g uəao jo >|uovųou əleuoqele uno os euger 6uppe Aq ssəɔɔe leqo16 pue uoụu6ooəu Ieuoụeuuəļus noÁ 6uļuq əAA
*>|ueq seool s,p,u,o^^ eųļ ļo 6uļuədo əų uļļ^^ seqoỊ6 səo6 wou euụep

Page 68
sy
Assis
SESARSI
Wልኴ﷽ A A
SKÅë
LÄGGNING
Y:y:
8&
BabyBonn & ReeBonn Products are available at all Super N Cosmetic Shops, Pharmacies & General Groceries
Printed and published by Express Newspapers (Ceylon)(Pv
 

Baby Milk Bath
မွန္တီးဌ · Baby Shampoo
WF\\\\\\\\\\\\\\\\\\\\\\ Baby Moisturising Body Lotion Baby Moisturising Face Cream
Baby Moisturising Creamy Soap
AN Produ を* \\لام
larkets, Fancy Shops,
W 2
1-5344422, 0773-71017 ReeBonn
Naturally cosme fics
rt) Ltd. at No. 185, Grandpass Road, Colombo - 14, Sri Lanka.