கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் மக்களின் விமோசனத்துக்கு புதிய பாதை

Page 1
தமிழ் மக்களின்
புதிய
பொருளாதாரப் பிரச்சினை பாதிப்புக்கு உள்ளாகின்ற அதே ே பிரச்சினை தொடர்பான பாதி சுதந்திரத்துக்கு முந்திய குடிே பிரச்சினை ஆரம்பமாகிய போதி முதலாவது பாராளுமன்றத் தேர்த இருக்கவில்லை. வடக்கில் அ இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சேனநாயகவின் ஐக்கிய ( இணைவதற்கான முயற்சியை மு பிரச்சினையின் தீர்வு பற்றிய ே சமஷ்டிக் கோரிக்கைதமிழ் அரசிய
ஐக்கிய தேசியக் கட்சியின் சில நிபந்தனைகளை அப்போ காங்கிரஸ் பாராளுமன்ற உறு செல்வநாயகம் கட்சிக்குள் அடிப்படையிலான புதிய அரசி அரசியலமைப்பு நிர்ணய சபைை நிபந்தனைகளுள் பிரதானமானது ஈ.எம்.வீ. நாகநாதன் 1951 மார் தனிநபர் பிரேரணையாக குறிப்பிடத்தக்கது.*
அகில இலங்கைத் தமிழ்க் தீர்மானத்தின் அடிப்படையில் நிபந்தனைகளை நிராகரித்து

விமோசனத்துக்கு
J 606
சிவா சுப்பிரமணியம்
களால் நாட்டு மக்கள் அனைவரும் வளைதமிழ் மக்கள் தேசிய இனப் ப்புகளுக்கும் உள்ளாகின்றனர். யற்றத் திட்டங்களுடன் இனப் லும் 1947ம் ஆண்டு நடைபெற்ற லில் அது பிரதான பேசுபொருளாக அமோக வெற்றியீட்டிய அகில கட்சியின் தலைமை டீ.எஸ். தேசியக் கட்சி அரசாங்கத்தில் ன்னெடுத்த கட்டத்திலேயே இனப் பச்சு எழுந்தது. அப்போது தான் பல் அரங்குக்கு வந்தது.
அரசாங்கத்தில் இணைவதற்கான து அகில இலங்கைத் தமிழ்க் ப்பினராக இருந்த எஸ்.ஜே.வீ.
முன்வைத்தார். சமஷ்டி சியலமைப்பைத் தயாரிப்பதற்காக ய நிறுவ வேண்டும் என்பது அந்த . இதே கோரிக்கையை டொக்டர் ச் 14 ந் திகதி செனெற் சபையில் முன்மொழிந்தார் என்பதும்
காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைத் எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின்

Page 2
அரசாங்கத்தில் இணைந்தது. இந்த முடிவை ஆட்சேபித்து எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்தின் தலைமையில் கட்சியிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தவர்கள் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் (1952) பிரதான பேசுபொருளாகச்சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கு மக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி நிறுத்திய ஏழு வேட்பாளர்களில் இருவர் மாத்திரம் தெரிவாகினர். எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் காங்கேசன்துறைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
சமஷ்டிக்கு ஆதரவு
மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் (1956) சிங்களம் மட்டும் என்ற கோஷம் தென்னிலங்கையில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. நித்தம்புவவில் 17-12- 1955ந் திகதி நடைபெற்ற வருடாந்த மகாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் 18.02.1956ல் களனியில் நடைபெற்ற வருடாந்த மகாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்களம் மட்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தன. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் தமிழின் நியாயபூர்வ உபயோகத்தை அங்கீகரிப்பதற்கான ஏற்பாட்டுடன் ஒரே அரசகரும மொழியாக சிங்களம் (Sinhala the only official Language with provision for the recognition of reaSonable use ofTamil) என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் தீர்மானம் இலங்கையின் அரச மொழியாக சிங்களம் மாத்திரம் இருத்தல் Gouai.TG) b. (Sinhala should be made the state Language of Ceylon) என்றும் அமைந்திருந்ததை இங்கு குறிப்பிடலாம்.
இந்தப் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவு மக்களைக் கவர்ந்தது. சமஷ்டி அமைப்பில் தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கும் தனியான அலகொன்றைக் கோருவோம் என்று தமிழரசுக் கட்சி வாக்குறுதி அளித்ததால் முஸ்லிம்களும்

அக்கட்சியை ஆதரித்தனர். தமிழரசுக் கட்சி தேர்தலில் பத்து ஆசனங்களைப் பெற்றது.
கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட காலம் தொடர்ச்சியாகச் சமஷ்டியை வலியுறுத்தி வந்த தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருமாற்றம் பெற்று 1976 மே 14 ந் திகதி வட்டுக்கோட்டை மகாநாட்டில் தனிநாட்டுத் தீர்ம்ானத்தை நிறைவேற்றியது. கொள்கை நிலைப்பட்ட முடிவாக இதைக் கருத முடியாது. எதிர்காலத்தில் தமிழ் மக்களை மோசமான அவல நிலைக்கு இட்டுச் செல்லும் முடிவாக இது இருந்தது.
தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் 1961 டிசம்பர் 26ந் திகதி நடைபெற்றபோது வவுனிவைச் சேர்ந்த ஏ.சிற்றம்பலம் தனிநாட்டுப் பிரேரணையை முன்மொழிந்தார். தமிழரசுக் கட்சி அதை நிராகரித்தது. தனிநாட்டுப்பிரேரணை ஆயுதப் போருக்கு இட்டுச் செல்லும் என்றும் ஆயுதப் போர் புதிய பிரச்சனைகளை உண்டாக்குமேயொழிய எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணாது என்றும் தமிழரசுக் கட்சித்தலைமை கூறியது.
எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியாத தனிநாட்டுப் பிரேரணையை வட்டுக்கோட்டையில் ஏன் நிறைவேற்றினார்கள் என்பது முக்கியமான கேள்வி. கொள்கைக்கு அப்பாற்பட்ட சமரச ஏற்பாடாகவே தனிநாட்டுப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் கட்சியுமே தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான கட்சிகள். சமஷ்யைத் தீவிரமாக வலியுறுத்திய தமிழரசுக் கட்சியும் சமஷ்டியைத் தீவிரமாக எதிர்த்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கூட்டுச் சேர்வதற்குச் சமஷ்டி அல்லாத வேறொரு கொள்கை தேவைப்பட்டதாலேயே இந்த முடிவுக்கு வந்தார்கள். கூட்டணித் தலைவர்களின் பிந்தியகாலச் செயற்பாடுகளிலிருந்து தனிநாட்டுத் தீர்மானத்தில் அவர்கள் விசுவாசமான பற்றுறுதி கொண்டிருக்கவில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம். தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர்கள் செய்த முதலாவது

Page 3
பிரதான காரியம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டதும். அதிகாரங்கள் இல்லாததுமான மாவட்ட சபையை ஏற்று அதற்கான தேர்தலில் போட்டியிட்டதே. இன உணர்வைத் தட்டியெழுப்பும் பிரசாரத்தில் வல்லவர்களான கூட்டணித் தலைவர்கள் தனிநாட்டுத் தீர்மானத்தையும் அவ்வாறு கச்சிதமாகப் பயன்படுத்தித் தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்கவைத்துக்கொண்டனர். ஆனால், அத்தீர்மானத்தின் விளைவாக, மக்கள் இழக்கக் கூடாததையெல்லாம் இழந்து ஏதிலிகளாக நிற்கின்றனர்.
பின்னடைவு
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என வெவ்வேறு பெயர்களில் செயற்பட்ட போதிலும் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஒரே தலைமைப் பாரம்பரியமே தொடர்கின்றது. இக் காலப்பகுதியில் இத் தலைமை அதன் பகிரங்க அரசியல் செயற்பாட்டில் இனப் பிரச்சினையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையையும் உள்ளடக்கவில்லை. அரசியலில் அறுபது வருடங்கள் சாதாரண காலப்பகுதி அல்ல. இனப் பிரச்சினை தொடர்பாக கருத்தீடுபாட்டுடனும் தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட்டிருந்தால் இக் காலப்பகுதியில் சிறிதளவாவது முன்னேற்றத்தை அடைய முடிந்திருக்கும். ஆனால் தமிழ் LD&sair பின்னடைவுகளையே தொடர்ச்சியாக சந்தித்திருக்கின்றார்கள். இழப்புகளும் அழிவுகளுமே அவர்கள் கண்ட பலன். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இதற்கான காரணம் என்னவென்று நிதானமாக சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
சமகால யதார்த்தத்தை விளங்கிச் செயற்படுவதும் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவதும் நட்பு சக்திகளைச் சரியாக இணங்காண்பதும் அரசியல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அத்தியாவசியமானவை. தமிழ் மக்களின் அரசியல் தலைமையைத் தொடர்ச்சியாகத் தங்களிடம்

வைத்திருப்பதில் தமிழ்த் தலைவர்கள் அக்கறை செலுத்தினார்களே யொழிய மேலே கூறிய விடயங்களில் கவனம் செலுத்தவில்லை.
சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவுத் தளமொன்றை உருவாக்குவதன் மூலமே இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிரந்தரமானதாக நிலைக்க முடியும். தமிழ்த் தவைர்கள் இதைப் புரிந்துகொண்டு செயற்படவில்லை. சிங்கள விரோத உணர்வைத் தமிழ் மக்களிடம் தோற்றுவிக்கும் வகையிலேயே இவர்களின் அரசியல் செயற்பாடுகள் அமைந்திருந்தன. தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது என்ற உணர்வு அம்மக்களிடம் தோன்றுவதற்கு இது இடமளித்தது.
கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமான முறையில் பயன் படுத்தியிருந்தால், இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலையைத் தவிர்க்க முடிந்திருக்கும். பண்டா - செல்வா ஒப்பந்தம், வடக்கு-கிழக்கு மாகாண சபை, சந்திரிகாவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம் என்பனவிசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை. இவை தொடர்பாகத் தமிழ்த் தலைமை நடந்துகொண்ட முறை ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரடியாக நன்மை பயப்பதாக இருந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பண்டா - செல்வா ஒப்பந்தம் சமஷ்டி ஆட்கியமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றது என்று எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் அப்போது கூறினார். ஆனால் அந்த ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏறப்பட்ட நேரத்தில் அதைப் பலவீனப்படுத்தும் வகையிலேயே அவரது கட்சி செயற்பட்டது. தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஒப்பந்தத்துக்கு எதிராக மோசமான இனவாதப் பிரசாரத்தை மேற்கொண்டது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் நாடு பிளவுபட்டுவிடும் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சிங்களவர்கள் தமிழ் படிக்க நேரும் என்றும் அம்மாகாணங்களில் சிங்களவர்களைக் குடியேற்ற முடியாது போய்விடும் என்றும் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ததோடு பெளத்த மதகுருமாரையும் இப்பிரசாரத்தில்

Page 4
இணைத்துக் கொண்டது. ஒப்பந்தத்துக்கு எதிராக ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தலைமையில் கண்டி யாத்திரையும் சென்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரத்துக்கும் அரசாங்கத் திலுள்ள வலதுசாரி அமைச்சர்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் பிரதமர் பண்டாரநாயக ஒப்பந்தத்தை ஆதரித்து உறுதியாக நின்றார். இந்தநிலையில், பிரதமரைப் பலவீனப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காக வலதுசாரி அமைச்சர்கள் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மீண்டும் சிங்கள சிறீ பஸ்கள் அனுப்பட்டன. வலதுசாரி அமைச்சர்களின் நோக்கத்தை விளங்கிக்கொண்டு, பிரதமரின் கரங்களைப் பலப்படுத்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் தமிழரசுக்கட்சி செயற்பட்டிருக்கவேண்டும். ஆனால், தமிழரசுக் கட்சி சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துப் பிரதமரைப் பலவீனப்படுத்தியது. அரசியல்வாதி என்ற வகையில் ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதைத் தவிர வேறு வழி பிரதமருக்கு இருக்கவில்லை. ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் எண்ணம் ஈடேறுவதற்குத்தமிழரசுக் கட்சியும் கைகொடுத்தது.
வடக்கு, கிழக்கு மாகாணசபை செயற்பட முடியாத நிலையைப் புலிகளும் பிரேமதாசவும் இணைந்து உருவாக்கிய போது தமிழர் விடுதலைக் கூட்டணி அதற்கு எதிராக எந்த நகர்வும் மேற்கொள்ளாததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவுக்கு மெளன ஆதரவு அளித்தது.
சந்திரிகாவின் அரசாங்கம் முன்வைத்த அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டம் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டிருந்தது. அது சமஷ்டி ஆட்சியமைப்புக்கு மிக அண்மையான தீர்வுத்திட்டம். அத் தீர்வுத்திட்டத்தின் பிராந்திய சபைகளுக்கான அதிகாரங்களையோ, விடயங்களையோ, எல்லைகளையோ சம்பந்தப்பட்ட சபையின்

அல்லது சபைகளின் சம்மதமின்றி எவ்விதத்திலும் மாற்ற முடியாது. இது ஒரு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு. இந்தத்தீர்வுத்திட்டம் உரிய முறையில் பாராளுமன்றத்தில் நிறைவேற விடாது தடுப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய பிரதான நிகழ்ச்சி நிரலாக இருந்தது. தீர்வுத் திட்டத்தை எதிர்த்ததன் மூலம் தமிழ் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கம் நிறைவேறுவதற்குக் கைகொடுக் கும் வகையில் செயற்பட்டார்கள்.
அன்று அத் தீர்வுத்திட்டத்தை ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டு, சந்திரிகா அரசாங்க காலத்தில் தீர்வுக்காகச் சமாப்பிக்கப்பட்ட பிரேரணைகள் இனப் பிரச்சினைக்கான தீர்வில் எடுகோள்களாக இருக்கலாம் என்று இப்போது கூட்டமைப்பினர் கூறுவது"வேடிக்கையாக இருக்கின்றது.
இடதுசாரி எதிர்ப்பு
தேசிய இனப் பிரச்சினை சிங்களம் மட்டும் சட்டத்துடன் புதிய பரிமாணத்தைப் பெற்றது. தமிழ் அரசியல் அரங்கில் இப்பிரச்சினை பிரதான இடத்தைப் பெறத் தொடங்கியதும் இதன் பின்னரே. இக்காலத்தில் இடதுசாரிக் கட்சிகள் சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக நின்றன. சிங்களம் மட்டும் சட்டத்தை அவை பாராளுமன்றத்தில் எதிர்த்தது மாத்திரமன்றித் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் அதற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டன. இடதுசாரிக் கட்சிகளை நட்பு சக்தியாகக் கருதி அவற்றுடன் உறவை வளர்த்துக் கூட்டாகச் செயற்படுவதற்கு அன்றைய தமிழ்த் தலைமை முன்வந்திருந்தால் இனப் பிரச்சினையின் தீர்வுக்குப் பலம் மிக்க ஆதரவுத் தளமொன்றைச் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க முடிந்திருக்கும். தமிழ்த் தலைவர்கள் அப்போது இடதுசாரி எதிர்ப்பிலேயே கூடுதலான கவனம் செலுத்தினார்கள். தென்னிலங்கையில் இடதுசாரிகளை எதிர்க்கும் கட்சிகளையே நட்பு சக்திகளாக் கருதினார்கள். இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். அன்றைய தமிழ்த் தலைமையின் பிதாமகரான

Page 5
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அடிப்படையில் மார்க்சிய விரோதி என்பது ஒரு காரணம். அவர் மார்க்சிஸ்டுகளிலிருந்து தூர விலகி நிற்கும் மனோபாவம் உடையவர். இடதுசாரிகள் தங்கள் தலைமைக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் அன்றைய தமிழ்த் தலைவர்களுக்கு இருந்தது இரண்டாவது
STUG007LD.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இடதுசாரி சிந்தனை ஒரளவு வேரூன்றியிருந்தது. யாழ்ப்பாண வாலிபர் சங்கம் இடதுசாரிகளின் சூரியமல் இயக்கம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை ஆசியவற்றுடன் உடன்பாடு கொண்டு செயற்பட்டதோடு அதன் முக்கிய ஸ்தர்களாக விளங்கிய ஹன்டி பேரின்பநாயகம், பீநாகலிங்கம், கே.தர்மகுலசிங்கம், ரீதுரைசிங்கம், வீ.சிற்றம்பலம், வீசச்சிதானந்தம் போன்றோர் பிற்காலத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன்தங்களை இணைத்துச் செயற்பட்டனர்."
இடதுசாரிக்கட்சிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் கணிசமான செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதற்கு ஆரம்ப காலத் தேர்தல் முடிவுகள் சான்றாக உள்ளன. சில முடிவுகளைப் பார்ப்போம்.
பருத்தித்துறை
1947 ரீ இராமலிங்கம் (த.கா. ) O396 ஜெயம் தர்மகுலசிங்கம் (ல.ச.ச.க) a- 6109 பொன். கந்தையா (கம்.கட்சி) 3492
1952 ரீ இராமலிங்கம் (த.கா. ) ana II6Ο9 பொன். கந்தையா (கம்.கட்சி) 86.17 கே.சீ. நடராசா (சுயேச்சை) AO 55I2
சீ.பாலசிங்கம் (ல.ச.ச.க.) 22O8

1956
பொன். கந்தையா (கம்.கட்சி) 14381 எம்.சிவசிதம்பரம் (சுயேச்சை) 8064 கே.துரைரட்ணம் (இ.த.க.) -- 5859
வட்டுக்கோட்டை
1956 ஏ.அமிர்தலிங்கம் (இ.த.க.) 14937 ஏ.வயித்திலிங்கம் (கம்.கட்சி.) 10850
காங்கேசன்துறை
1947
எஸ்.ஜே.வீ.செல்வநாயகம் (த.கா.) 12126 பீநாகலிங்கம் (ல.ச.ச.க.) 5I60 எஸ்.நடேசன் (ஐ.தே.க.) 4605
இக்காலப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாக இடதுசாரிகள் இருந்தனர். சுண்ணாம், மானிப்பாய், ஆனைக்கோட்டை, உடுவில், புலோலி ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்."
இந்தப் பின்னணியில் இடதுசாரிகள் தங்கள் தலைமைக்கு அச்சுறுத்தலாக வரலாம் என்று அன்றைய தமிழ்த் தலைாவர்கள் கருதியது இயல்பானதே.
புதிய பாதை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பாதை இன்று முட்டுச்சந்துக்கு வந்திருக்கின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பெருமளவு பிரதிபலிக்கும் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டத்தை நிராகரித்துப் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி

Page 6
நிரலின் கீழ் செயற்பட்டார்கள். இச் செயற்பாடு இவர்களின் பாராளுமன்றப் பதவிகளைக் காப்பாற்றுவதற்கு உதவியது. மக்களுக்கு அழிவுகளும் இழப்புகளுமே கிடைத்தன. வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இடம்பெற்றிருக்காத அவலங்களைத் தமிழ் மக்களுக்கு இவர்கள் ஏற்படுத்தினர்.
ஆயுதப் போராட்டமோ தனிநாடோ சாத்தியமில்லை என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிலையில், சென்ற பாதை தவறானது என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு புதிய சூழ்நிலைக்கு உகந்த வேலைத்திட்டமொன்றைத் தயாரித்துச் செயற்படுவதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைாவர்கள் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. தாங்களாக எதுவும் செய்ய முற்படாமல் சர்வதேச சமூகம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.
இலங்கையின் இனப் பிரச்சினையைச் சர்வதேச சமூகம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துமேயொழிய நியாயமான தீர்வொன்றைப் பெற்றுத் தரப்போவதில்லை. அரைநூற்றாண்டுக்கு மேலாகச் சர்வதேசத்தில் நம்பிக்கை வைத்துக் கண்டபலன் எதுவுமில்லை. அதேபோல, அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் முழுமையாக நம்பிக்கை வைப்பதும் தவறு. ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சியுமான இரண்டு பிரதான கட்சிகளும் பேரினவாத அலைக்குள் மூழ்க்கியிருக்கின்றன. இவற்றுள் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதனுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தையில் சில தற்காலிக ஏற்பாடுகளைச் செய்யலாமேயொழிய நியாயமானதீர்வு சாத்தியமில்லை.
இன்றைய நிலையில் நியாயமான அரசியல் தீர்வு அரசியலமைப்புத் திருத்தத்துக்கூடாகவே நடைமுறைக்கு வர வேண்டும். சர்வசன வாக்கெடுப்பின் பின்னரே அரசியலமைப்புத் திருத்தம் பூர்த்தியடையுமென்பதால் சிங்கள மக்களில் கணிசமானோரின் ஆதரவு அவசியமாகின்றது. தமிழ் ப்ேசும் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து தீர்வுக்கான கோரிக்கையை ஒரே குரலில் முன்வைக்கும் நிலையிலேயே இது சாத்தியமாகும். இந்த இலக்கை நோக்கிய அணுகுமுறைதான் இன்றைய தேவை.
O

இவ்விடயத்தில் தென்னிலங்கையின் இடது சாரிகளும் முற்போக்காளர்களுமே உண்மையான நட்பு சக்தியாகச் செயற்படக்கூடியவர்கள். பாரம்பரிய இடதுசாரித்தலைவர்கள் சிலர் தடம் மாறிச் செல்கின்ற பின்னணியில் இது சாத்தியமாகுமா என்ற கேள்வி எழலாம். இனப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை அடைவதற்கு வேறு எந்த வழி சாத்தியமாகும் என்ற கேள்வியே இக் கேள்விக்கான பதில். கருத்தீடுபாட்டுடன் சரியான முயற்சியை மேற் கொண்டால் இது சாத்தியமாகும்.
சில தலைவர்கள் பதவி மோகத்தால்தடம் மாறியதை வைத்து இடதுசாரித்துவ உணர்வும் செயற்பாட்டு ஆற்றலும் ஒட்டுமொத்தமாக மறைந்து விட்டதாகக் கருதக்கூடாது. தடம் மாறிய தலைவர்களின் கட்சிகளுக்குள்ளேயே அவர்களின் போக்குக்கு எதிரான உணர்வலைகள் வெளிப்பாடு பெறுகின்றன. இனப் பிரச்சினை பற்றி முற்போக்கான சிந்தனையுடன் பல ஆய்வறிவாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் வெவ்வேறு தளங்களில் செயற்படுகின்றனர். இவர்களையெல்லாம் அணிதிரட்டி அரசியல் தீர்வுக்கான போராட்டத்தைத் தமிழ் மக்களின் போராட்டம் என்ற வட்டத்துக்கு வெளியே எடுத்துச் சென்று தமிழ், சிங்கள மக்களின் கூட்டுப் போராட்டமாக்கும் பட்சத்தில் நிரந்தரத் தீர்வு சாத்தியமாகும்.
இனைப் பிரச்சினைக்கானதீர்வில் விசுவாசமான இலக்குடன் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை தாங்குபவர்கள் தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளுடன் உறவை வளர்த்துக் கூட்டுச் செயற்பாட்டுக்கு வழிகோல வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விமோசனத்துக்கான பாதை. நின்று நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வேறு வழி இல்லை.

Page 7
குறிப்புகள்
1.
10.
A.Jeyaratnam Wilson - S. sis
A.Jayaratnam Wilson - it
K.M.de Silva - IE
A. Jeyaratnam Wilson - it
ரீ சபாரத்தினம் -
ତ
ரீ. சபாரத்தினம் - G
மாவை சேனாதிராசா - 2 G
A. Jayaratnam Wilson - it
曾蟹月
Santasilan Kadirgmar -
Santasilan Kadirgmar - il
வெளியீடு இலங்கை முற்பே 18/1, கொலின்வூட் பி

J.V. Chelvanayagam and the cri s of Tamil Nationalism. P. (7)
bid - P (37)
thnic Studies Report -
January 1966 - P (25)
pid - P(59)
தந்தை செல்வா ஓர் அரசியல் பாழ்க்கைச் சரிதை பக். (195)
மேலது - பக் (158)
011.06.19ந் திகதியதினக்குரல் நர்காணல்
pid - P (24)
The Left radition in Lankan Tamil olities" - in "Sri Lanka: Global hallenges and National rises' Ed: Rajan philps-P (271)
3id – P (272)
ாக்கு கலை இலக்கிய மன்றம் ளேஸ், கொழும்பு - 06