கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேட்கை

Page 1


Page 2

வேட்கை
நீர்வை பொன்னையன்
ീഷ് പ്ര്
வெளியீடு: பூபாலசிங்கம் பதிப்பகம் 340, செட்டியார் தெரு கொழும்பு - 11.

Page 3
வேட்கை
முதற்பதிப்பு
(G)
விலை
Title
Subject
Author
No. of Pages
Type
Paper
Binding
Pri Ce
Publi SherS
In I ndia
Printed by :
2OOO
খণ্ডLIT 15()l-
\/EDKA
A Collection of ShOrt St OfieS in Tami
Neervai Ponnaiyan
188
11 points
1 1.6 Kg. creamwove
Art B0ard
150/. Poopālasingam Book Depot 340, Sea Street,
Colombo - 11
Kumaran Publishers \ , 3, Meigai Vinayagar Street, (Via) Kumaran Colony, 7th St., Vada palani, Chennai - 600026.
MONARK GRAPHIKS Chennai - 600 014. Ph: 858 88 15, 481 51 86
 
 

அழியாச்சுடர்
ஆத்மதாகம்
அன்னை அழைக்கின்றாள்
வீராப்பு
ஜீவநாதம்
விழிப்பு
வெண்புறா
புனர்ஜன்மம்
வேட்கை
தகர்ப்பு
13
28
59
76
95
108
129
143
|66

Page 4
g-LDst IL 1600ILD
இலங்கையில் தொடரும் கோர யுத்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும்.
 

எனது எழுத்துக்களும்
எனது கோட்பாடுகளும்
உங்களுடன் என் இதயத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை எனக்கு. நீங்களும் அதை விரும்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. காரணம் நீங்கள் வேறு நான் வேறு அல்ல. நீங்களும் நானும் ஒன்று. நாங்கள் உழைக்கும் மக்கள்.
இன்று எமது நாட்டில் மனித சங்கார யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆள்கொல்லி யுத்தம் நீண்ட காலமாகத் தொடர்கின்றது.
இக்கொடிய யுத்தத்தினால் எங்கள் தாய்த்திருநாட்டிற்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கள் தேசத்தின் மண்வளமும் மனித வளமும் சிதைந்து சீரழிந்து கொண்டிருக்கின்றன. பொருளா தாரம், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, ஏன் மானிதம் எல்லாமே அழிந்துகொண்டிருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் இளைஞர்களும் சிறுவர்களும் தான் செல்வத்தின் செல்வம். இந்த அரும்பெரும் செல்வம் இந்தக் கோர யுத்தத்தின் அசுரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றது. அழிகின்ற இந்த சிறுவர்கள் இளைஞர்கள் கிராமப்புறத்து வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

Page 5
இந்த யுத்தத்தினால், தமிழ் பேசும் மக்களாகிய நாம் எமது தாயக மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளோம். இன்று நாங்கள் அகதிகளாய், முகவரியற்றவர்களாய் முகமற்றவர்களாய் ஆக்கப்பட்டுள்ளோம்.
பெளத்த சிங்களப் பேரினவாதிகள் தமிழ் பேசும் மக்களாகிய எமது பொருளாதாரம், கல்வி, கலை, கலாசாரம் அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீண்ட காலமாக செயற்பட்டு வருகின்றார்கள். எமது தாயக மண்ணிலிருந்து எம்மை வேரோடு பிடுங்கி எறிந்ததன் மூலம் பேரினவாதிகளின் நோக்கம் எங்களில் ஒரு பகுதியினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
இன்றைய அராஜக யுத்தத்திற்கு தேசிய இனப் பிரச்சினைதான் மூலகாரணம் எமது நாட்டின் சிக்கலாக்கப்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கோட்பாட்டு ரீதியான திட்டத்தை முன் வைத்தவர்கள் முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்கள்தான்.
தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, இதன் அடிப்படையில் பிரதேச சுயாட்சியை அமைப்பதுதான் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழி என்று நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளோம். சிங்கள, தமிழ் இனங்கள் மத்தியிலுள்ள இனவாத சக்திகள் இதை எதிர்த்தன.
சுதந்திரத்திற்குப் பின் அதிகாரத்திற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இனவெறிச் சக்திகளின் எதிர்ப்புகளுக்கு அடி பணிந்து இப்பிரச்சினையைத் தீர்க்கத் தவறி விட்டனர். அத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இவைகள் இப் பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்திவந்துள்ளதுடன் தமிழ் பேசும் மக்கள் மீது ஒடுக்குமுறையையும் வன்முறையையும்
2

பிரயோகித்து வந்துள்ளன. இதனால் இனப்பிரச்சினை சிக்கலாக்கப்பட்டதுடன், அது பூதாகரமாகி, பெரும் யுத்தமாக வெடித்து இன்று முழு நாட்டையுமே கபஸ்ரீகரம் செய்யும் நிலையை எட்டி விட்டது.
உலகில் முதல்முதலாக தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்ட நாடு சோவியத் யூனியன்தான். மகத்தான அக்டோபர் புரட்சி வெற்றியீட்டிய உடனே சோவியத் யூனியனிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சினையைத்திப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை தோழர் லெனின் அவர்கள் மேற்கொண்டார். சோவியத் யூனியனில் வெறும் பேச்சு மொழிகளாக இருந்த எண்பத்தாறு மொழிகளுக்கு எழுத்து வடிவம் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார் தோழர் லெனின் அவர்கள். அது மாத்திரமல்ல, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிர்வாக ரீதியாக எடுக்கும் பொறுப்பை அந்த நாட்டிலுள்ள சிறிய இனங்களில் ஒன்றான ஜோர்ஜிய இனத்தைச் சேர்ந்த தோழர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். தோழர் ஸ்டாலின் இப்பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தார்.
சோவியத் யூனியனிலுள்ள சகல தேசிய இனங்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு, இன செளஜன்யம் என்ற அடிப்படையில் இப்பிரச்சினை உணர்வு பூர்வமாகத் தீர்க்கப்பட்டது. அத்துடன், ஒரு சிறுபான்மை தேசிய இனமான ஜோர்ஜிய இனத்தைச் சேர்ந்த தோழர் ஸ்டாலின் அவர்கள் சோவியத் சோஷலிஸ்க் குடியரசின் பிரதமராக வருவதற்குச் சந்தர்ப்பமளிக்கப்பட்டமை, அங்கு தேசிய இனப்பிரச்சினை வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டமைக்கு ஒரு வலுவான சான்றாக உள்ளது. ஆகவே மேற்கூறப்பட்ட அடிப்படையில் எமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
இடதுசாரி அணியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் தங்களை மார்க்ஸிஸ்ட்டுகள் என்று கூறிக்கொண்டு பாராளுமன்ற சந்தர்ப்பவாத
3

Page 6
அரசியற்பாதையைப் பின்பற்றினர். இவர்களே தங்களுடைய பாராளுமன்ற ஆசனங்களையும், அமைச்சர் பதவிகளையும் பாதுகாக்கும் நோக்குடன், பலதேசிய இனங்கள் வாழ்கின்ற எமது நாட்டை "பெளத்த சிங்கள நாடு” என்று பிரகடனப்படுத்திய அரசியல் அமைப்பை உருவாக்கிய மூல கர்த்தாக்களாகும். இவர்களது இச்செயலால் இனப்பிரச்சினை மேலும் சிக்கலாகியது. இதனால் இப்பகுதியினர் மாத்திரமல்ல முழு இடதுசாரிகளையும் தமிழ் பேசும் மக்கள் வெறுத்து ஒதுக்கும் நிலையை உருவாக்கி விட்டனர்.
எமது நாட்டைத் தகனம் செய்துகொண்டிருக்கின்ற இந்த யுத்தத்தின் பின்னணியில் ஏகாதிபத்தியமும் ஆயுத வியாபாரிகளும் உள்ளூர் இனவாத யுத்த வெறியர்களும்தான் இருக்கின்றனர். ஏகாதிபத்தியம் இருக்கும்வரை யுத்தம் இருந்தே தீரும். ஆகவே, ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து எமது நாட்டை நாம் மீட்பது அவசியம்.
பெளத்த சிங்கள பேரினவாதத்தின் தீவிரவாதக் குழுக்கள் இந்த யுத்தம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தென்னிலங்கையிலுள்ள சாதாரண பரந்துபட்ட சிங்களப் பொதுமக்கள் இந்த யுத்த கோஷத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
சமாதானத்திற்கான குரல் தென்னிலங்கையில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ்ப் பிரதேசங்களில் இக்குரல் ஒலிப்பதாகத் தெரியவில்லை. இது அடங்கி இருக்கின்றதா அல்லது அடக்கப் பட்டிருக்கின்றதா? ஆனால் தமிழ்ப் பிரதேசத்தில் இது நீறு பூத்த நெருப்பாகத்தா னிருக்கின்றது.
யுத்தத்துக்கு எதிராக படைப்பாளிகளாகிய நாம் பரந்து பட்ட மக்களுடன் இன்னும் நெருக்கமாக இணைந்து போராட வேண்டும். எமது படைப்புக்கள் மக்களை வீறுகொண்டெழுந்து போராடுவதற்கு உத்வேகமூட்ட வேண்டும்.
4.

ஜூவாலித்து எரிகின்ற மக்களுடைய பிரச்சினைகளை கவனத்திலிருத்திக் கொள்ளாமல், மேற்குலகில் என்றோ மரித்துக் காலாவதியாகிவிட்ட சில இலக்கியப் போக்குகளை வைத்துக் கொண்டு வேறு எதை எதையோ சிலர் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களைப் புதிய போக்காளர்கள் என்று கூறிக் கொண்டு மக்களால் புரிந்து கொள்ள முடியாத வகையில் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
புதிய இலக்கியப் போக்குகள் பற்றிப் பேசுகின்றவர்களுக்கு தமிழ் இலக்கியத்திலோ மேற்குலக இலக்கியத்திலோ போதிய பரிச்சயமோ அறிவோ இல்லை. இது இவர்களுடைய எழுத்துக்களிலிருந்து புலப்படுகின்றது. இவர்கள், மேற்குலகின் காலாவதியான சில இலக்கியப் போக்குகளை நுனிப் புல் மேய்ந்துவிட்டு அந்த எழுத்துக்களைப் போல தாங்களும் எழுதுவதாகப் பாவனை செய்கின்றார்கள். இந்த அரை வேக்காட்டாளரின் எழுத்துக்களில் ஒரே குழப்பம். இவர்கள் தாங்கள் குழம்பியுள்ளது மாத்திரமல்ல ஏனையவர்களையும் குழப்பியடிக்க முயல்கின்றனர்.
இப்புதிய போக்காளர்கள் தேடல், தகர்த்தல், கேள்வியெழுப்பல், இருத்தல், பரிசோதனை, ஆத்மவிசாரம், சூரியவாதம், மறுபரிசீலனை, மறுதலிப்பு என்று எதை எதையோ பற்றிப் பேசுகின்றார்கள் இவர்களில் சிலர் தம்மை நவீனத்துவப் பின்னையவாதிகள்(POSt Modernists) என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு எந்தவித அரசியல் கோட்பாடுகளோ தத்துவத் தளமோ இல்லை. இவர்களுக்கு தங்கள் மீதும் நம்பிக்கையில்லை மக்கள் மீதும் நம்பிக்கையில்லை. இவர்களுடைய எழுத்துக்களில் தனிமை, வெறுமை, தன்நம்பிக்கை யின்மை, இயலாமை, விரக்தி ஆகியவை பரவிக்கிடக்கின்றன. அசாதாரண மக்கள் பற்றியும் அவர்களுடைய அசாதாரண பாலுறவு விவகாரங்கள் பற்றியும் அழுத்தம் கொடுத்து எழுதுவதுதான் இவர்களது பிரதான நோக்கம் பயித்தியகாரர்கள்,

Page 7
நெறி பிறழ்ந்தோர், தெருவோரவாசிகள், விலைமாதர்கள்
ஆகியோரை விளிம்பு மனிதர்கள் (Marginal People) என்று கூறிக்கொண்டு இவர்களது பாலியல் விவகாரங்கள், ஒரினச்
சேர்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி எழுதுகின்றார்கள். இவர்கள்
தங்கள் மனோ விகாரங்களையும், மனவக்கிரங்களையும் தங்கள்
எழுத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர்.
தொழிலாளர் விவசாயிகள் தான் விளிம்பு மனிதர்கள் என்று மார்க்ஸிசம் கூறுகின்றது. நவீனத்துவப் பின்னையவாதிகள் கூறும் விளிம்பு மனிதர்கள் உண்மையான விளிம்பு மனிதர்களல்ல. இவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கிக் கொண்ட, தங்களைத் தாங்களே ஒதுக்கிக் கொண்ட ஒரு சிறு பிரிவினர். மார்க்ஸிசம் கூறுகின்ற விளிம்பு மனிதர்கள் மனித குலத்தில் பெரும் பகுதியினராகவுள்ள தொழிலாளர்கள் விவசாயிகள் தான். ஆனால் நவீனத்துவ பின்னையவாதிகள் கூறுகின்ற பகுதியினர் மனித குலத்தில் ஒரு சிறு குறுகிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நவீனத்துவ பின்னையம் (Post Modernism) என்பது நவீனத் துவத்தின்(Modernism) தொடர்ச்சி என்று சிலர் கருதுகின்றனர். இது தவறு. நவீனத்துவம் வேறு. நவீனத்துவ பின்னையம் வேறு. நவீனத்துவத்திற்கு விரோதமானது நவீனத்துவ பின்னையம்,
ஐரோப்பாவில் ஏற்பட்ட நிலப் பிரபுத்துவ சமூகத்தின் சரிவையும், அக்காலகட்டத்தில் ஏற்பட்ட முற்போக்கான மாற்றங்களையும், மனித நேயத்தையும், மனித மேம்பாட்டையும் மையமாக வைத்து, நவீனத்து படைப்பாளிகள் (Modernists) எழுதினார்கள். பொக்காஷியோவிலிருந்து விக்ரர் ஹியுகோ, எமிலிஜோலோ, ரோல்ஸ் ரோய், மாப்பசன் போன்ற படைப்பாளிகள் நவீனத்துவ எழுத்தாளர்களின் முன்னணியில் நிற்பவர்கள். இவர்களுடைய எழுத்தின் அடிநாதம் மனித நேயம் (Humanism)
6

நவீனத்துவ பின்னைய வாதிகள் நவீனத்துவத்துக்கு எதிரானவர்கள். இவர்களது எழுத்துக்களில் மனித நேயமும் மனித மேம்பாடும் எள்ளளவுமில்லை. பாலியலும் மனவக்கிரங்களும், அராஜகமும் தான் இவர்களது எழுத்துக்களில் மேலோங்கி நிற்கின்றன.
புதிய போக்காளர்கள் என்ற இந்த நவீனத்துவ பின்னைய வாதிகள் மனித சமூகத்திலுள்ள அழகானவற்றையும் உன்னத மானவற்றையும் பார்ப்பதில்லை. மனிதனின் மேன்மை, அதற்கான அவனுடைய போராட்டம், தியாகங்கள் என்பன இவர்களது கண்களில் படுவதில்லை. சமூகத்திலுள்ள அசிங்கமானவற்றையும் அருவருப்பானவற்றையும் தான் இவர்கள் பார்க்கின்றார்கள்: எழுதுகின்றார்கள். இவர்கள் எழுதுவதெல்லாம் துர்நாற்றம் வீசுகின்ற அருவருப்பான எழுத்துக்கள்தான்.
இப்புதிய நவீனத்துவ பின்னையவாதிகளின் பார்வையில் தெளிவில்லை. எழுதும் பொருளில் தெளிவில்லை. எழுத்தில் தெளிவில்லை. அதனால்தான் இவர்கள், பரந்துபட்ட மக்களால் புரிந்து கொள்ள முடியாதவாறு எழுதுகின்றார்கள். வார்த்தை ஜாலங்களுக்கு முதன்மை கொடுக்கின்றார்கள்.
நவீனத்துவ பின்னையம் இலக்கியப் போக்கில் புதுமையானதென தவறாக எண்ணிக்கொண்டு தங்களை மேதைகள் என்றும் புதுமையானவர்கள் என்றும் காட்டிக் கொள்ள இன்று சிலர் நவீனத்துவம் பின்னையம் பற்றிப் பேசுகின்றனர். இது புதுமையான தொன்றல்ல. இது மானுட விரோத அராஜகவாதம் சென்ற நூற்றாண்டில் உருவான இந்த மனித விரோதப் போக்கை மார்க்ஸிசம் தர்க்கரீதியாகத் தகர்த்துச் செயலிழக்கச் செய்து நிர்மூலமாக்கியது. இதனால்தான் இன்றைய மார்க்ஸிச விமர்சகர்கள் நவீனத்துவ பின்னையவாதத்தை ஆபரணங்களால் அலங்கரிக் கப்பட்ட பிணம் என்று குறிப்பிடுகின்றனர்.

Page 8
இன்று நாம் மற்றுமொரு அச்சுறுத்தலுக்கு, அதாவது கலாசார சீரழிவிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பூகோள மயமாக்கல் உலகம் ஒரே கிராமம் என்று கூறிக் கொண்டு ஏகாதிபத்தியமும் மேற்குலக வல்லரசு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. வளர்முக நாடுகளை பொருளாதார, கல்வி, கலை, கலாசார ரீதியாக தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வருவதுதான் ஏகாதிபத்தியத்தினது பூகோள மயமாக்கலின் பிரதான குறிக்கோள். இது ஏகாதிபத்தியத்தின் ஒரு புதிய தந்திரோபாயம்
இன்ரநெற் போன்ற ஊடகங்களினூடாக, வளர்முக நாடுகள் ஒவ்வொன்றினதும் பாரம்பரிய, தனித்துவமான கலை, கலாசாரம், பண்பாடு அனைத்தையும் படிப்படியாக அழித்து, மேற்குலகின் சீரழிந்து கேடுகெட்டுப் போன அராஜக கலாசாரத்தை எம்மீது திணிப்பதுதான் ஏகாதிபத்தியத்தின் பிரதான நோக்கம், நாம் எதை உண்பது, எதை உடுப்பது, எதைப் படிப்பது, எப்படிப்பட்ட கலாசாரத்தையும் பண்பாட்டையும் கடைப்பிடிப்பது என்பதைத் தீர்மானிக்கப் போவது ஏகாதிபத்தியம்தான். எதிர்காலத்தில் இதை இன்ர நெற் ஊடகத்தினூடாக நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது ஏகாதிபத்தியம் இந்த புதிய அச்சுறுத்தலை, கலாசார ஆக்கிரமிப்பை எதிர்த்து முற்போக்கு கலை இலக்கிய வாதிகளாகிய நாம் பரந்துபட்ட மக்களை அணி திரட்டி தீவிரமாகப் போராட வேண்டிய நிலையிலுள்ளோம்.
மகத்தான அக்டோபர் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, தொழிலாளர், விவசாயிகள், பரந்துபட்ட மக்கள் பற்றியும், அவர்களுடைய மேம்பாட்டுக்காகவும் இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்ற முற்போக்கு இலக்கியக் கோட்பாடு சோவியத் யூனியனில் பரிணமித்து உலகளாவிய ரீதியில் வியாபித்தது.
எமது அண்டை நாடான இந்தியாவிலும் இந்த இலக்கியக் கோட்பாடு காலடியெடுத்து வைத்தது. கேரளம், வங்காளம்,
8

மகாராஷ்டிரம் ஆகிய பிரதேசங்களில் இக்கோட்பாடு ஆழமாக வேர் விட்டது. தமிழ் நாட்டிலிருந்து ஈழத்துக்கு இது வியா பித்தது. எமது நாட்டில் அறுபது எழுபதுகளில் இக்கோட்பாட்டடிப்படையில் படைப்புக்கள் வீறாப்புடன் வளர்ச்சி கண்டு ஈழத்து தமிழ் இலக்கியத்தை செழிப்பாக்கின.
முற்போக்கு இலக்கியத்துக்கு எதிரான குரல் காலத் துக்குக் காலம் ஒலித்துக்கொண்டுதானிருந்தது. சர்வதேச அரசியல் அரங்கில் அண்மைக்காலமாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. மார்க்ஸிசக் கொள்கையின் அடிப்படையில் சென்று கொண்டிருந்த சோஷலிஸ் நாடுகளில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவைப் பயன்படுத்திக் கொண்டு, காலத்தால் நிராகரிக் கப்பட்ட தத்துவங்களை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளன. இச் சூழ்நிலையில் மார்க்ஸியத்திற்கும் முற்போக்கு இலக்கியத்துக்கும் எதிரான இவர்களது குரல் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
வரலாறு, என்றும் நேராகச் செல்வதில்லை. அது நெளிவு வளைவுகளுக்கூடாகத்தான் செல்கின்றது. பின்நோக்கிச் செல்வதில்லை. அது முன்நோக்கித்தான் சென்று கொண்டி ருக்கின்றது. வரலாற்றுச் சக்கரத்தை எந்தச் சக்தியாலும் பின்தள்ள முடியாது. சோஷலிச நாடுகளில் மார்க் ஸியத்தைப் பிரயோகப்படுத்துவதில் தவறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தவறை ஏற்றுக் கொண்டு. இதைச் சீர் செய்து முன் செல்ல வேண்டிய நிலையில் சோஷலிஸ் நாடுகள் உள்ளன. இத்தவறை நிச்சயமாகத் திருத்தி, தற்காலிக பின்னடைவைத் தகர்த்துக் கொண்டு உத்வேகத்துடன் முன்பாயத்தான் போகின்றன. சோஷலிஸ் நாடுகள் இது உறுதி வரலாற்று நியதி. -
மார்க்ஸிசம் ஒரு விஞ்ஞானம், அது விஞ்ஞானத் தர்க்கங்களுக்கு உட்பட்டு நிரூபணமான உண்மை. இது தற்காலிக
9

Page 9
பின்னடைவுக்குட்பட்டாலும் நிச்சயமாக அது தன் தளத்திலிருந்து மேலும் விரிவடையத்தான் போகின்றது. இந்த மார்க்ஸியப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற முற்போக்கு எழுத்தாளர் களாகிய நாம், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், சுரண்டலுக்கும் சூறையாடலுக்கும் எதிராகவும் குரலெழுப்பி, உத்வேகமூட்ட வேண்டும். இதுதான் எமது எழுத்துக்களின் அடிநாதமாக இருக்கின்றது. ஆகவே, நாம் தொழிலாளர்கள், விவசாயிகள் பரந்துபட்ட மக்கள் ஆகியோருடன் இணைந்து போராட்டப் பாதையில் செல்வது தவிர்க்க முடியாதது.
முற்போக்கு எழுத்தாளர்கள் என்று ஒரு சிலர் தம்மைக் கூறிக்கொள்கின்றார்கள். இவர்கள் தமக்குள் இருக்கும் தாழ்வுச் சிக்கல் காரணமாக, தாங்கள் எந்த வர்க்கத்தில் பிறந்தார்களோ அந்த வர்க்கத்தை மறைக்க முயல்கின்றார்கள். இவர்கள் எந்தத் தளத்திலிருந்து வளர்ந்தார்களோ வளர்ச்சி எழுத்திலல்ல, சமூக அந்தஸ்தில் - அந்தத் தளத்தையே மறந்து விட்டவர்களாய் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் பட்டங்கள், பதவிகள், பொன்னாடைகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஆலாய்ப் பறக்கின்றார்கள். இந்த இலக்கியப் பிரமுகர்களையும் முற்போக்கு எழுத்தாளர்களையும் யாராவது ஒரே தட்டில் வைத்து எடை போட்டார்களானால் அவர்கள் நிச்சயமாகத் தப்புக்கணக்குத் தான் போடுகின்றார்கள்.
"சகல கலை வடிவங்களினதும் தாயாக மக்கள் போராட்டம் இருக்க வேண்டும் மக்களிடமும் ஒடுக்கு முறைக்கெதிரான அவர்களது போராட்டங்களிலும் ஒரு கலைஞன் அக்கறை செலுத்தாவிட்டால் அவன் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்படுவான் என்று தெலுங்குக் கவிஞன் கும்மாட்டி விட்டலு கூறியுள்ளான்.
1 O

முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாம் யுகக்கவிஞன் பாரதி பரம்பரையினர். மார்க்சிம் கார்க்கியின் வாரிசுகள் முல்க்ராஜ் ஆனந்த், பிரேம் சந்த், கிஷன் சந்தர், கே. ஏ. அப்பாளில், தகளி, கேசவதேவ் பொட்டோகாட் ஆகியோரது பேரணியைச் சார்ந்தவர்கள் என்றும் நாம் உழைக்கும் மக்கள் பக்கம்தான் நிற்கின்றோம். நாம் சகல ஒடுக்கு முறைகளையும், அரச பயங்கரவாதத்தையும், தேசிய ரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் எதிர்க்கின்றோம்.
இன்று எமது நாட்டில் மனித சங்கார யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது. இந்த அசுர யுத்தத்திற்கு எதிராக எமது பேனாவைக்கூர்மையாகவும் வேகத்துடனும் பிரயோகிக்க வேண்டும் அத்துடன் எமது தாய்த் திருநாட்டின் முற்போக்கு சக்திகளதும் பரந்துபட்ட மக்களதும் போராட்டப் பேரணியில் இணைந்து செயல்படுவோம்.
"வேட்கை எனது ஐந்தாவது சிறுகதைத் தொகுதி, இதை எனது ஆத்மநேய வாசகர்களாகிய உங்கள் முன் வைக்கின்றேன்.
இத்தொகுதியிலுள்ள அழியாச்சுடர் என்ற கதை 1958இல் கருவெடுத்தது. ஆனால் 1980ல் தான் பிறந்தது.
1959க்கும் 1995க்கும் இடைப்பட்ட காலத்தில் எமது நாட்டில் ஏற்பட்ட வேறுபாட்டை எமது வாசகர்கள் ஓரளவிற்கேனும் கண்டுகொள்ளும் நோக்குடன் அழியாச் சுடர் பிரசுரமாகின்றது. ஏனைய கதைகள் 1995க்கும் 1999க்கும் இடைப்பட்ட யுத்தகாலத்தில் பிறந்தவை. இக்கால கட்டத்தில் எமது நாட்டு மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் அனுபவித்து வருகின்ற துன்ப துயரங்களையும் இவற்றை மன உறுதியுடன் சகித்து வருவதையும், எதிர்காலத்தில் அவர்களுக்கிருக்கும் வலுவான நம்பிக்கையையும் சுமந்து
வருகின்றன இக்கதைகள்.
11

Page 10
"புனர்ஜென்மம் கதைக்கு ஒரு பெருமையுண்டு. 'தினக்குரல்" பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபொழுது அதன் முதல் இதழ் எனது கதை ஒன்றுடன்தான் வெளிவர வேண்டும் என்று எனது ஆத்ம நண்பர் அமரர் பொன். ராஜகோபால் வலியுறுத்திப் பெற்று பிரசுரமாகியது 'புனர்ஜென்மம் கதை. அது மாத்திரமல்ல, இக்கதையின் பிரதம பாத்திரம். நான் இலங்கையன் என்று பிரகடனம் செய்தமைக்காக, ஒரு கடுமையான கண்டனத்தை ஒரு பெண் வாசகரிடமிருந்து பெற்றுத் தந்தமை குறிப்பிடத் தக்கது.
"வேட்கையைப் பற்றி சொல்லப் போனால், உரிமைப் போராட்டம் பற்றி மக்களின் மனநிலை, பங்களிப்பு ஆகியவற்றையும் எனது உணர்வலைகளையும் தாங்கி வருகின்றது இக்கதை.
எனது "வேட்கை'யை என் ஆத்மநேய வாசகர்களாகிய உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். இதை நீங்கள் விரும்பி வரவேற்பீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
"வசந்தம்" நீர்வை பொன்னையன் நீள்வேலி
-1-2000
1

இருள் திரை மெதுவாக அழிந்து கொண்டிருக்கிறது.
உதயத்தின் மலர்ச்சி
வேகமாக வந்து கொண்டிருந்த புகைவண்டி புகையிரத நிலையத்தில் நிற்கின்றது.
பிரயாணிகள் முண்டியடித்துக் கொண்டு இறங்குகின்
எனக்குக் களைப்பு: சோர்வு.
இரண்டாயிரம் மைல்களுக்கு அதிகமான தூரம்,
நித்திரை வெறி வேறு.
வீடு போய்ச் சேர வேண்டும் என்ற அவசரம்,
உடலில் புதுத் தெம்பு.
பஸ்ஸைப் பிடிப்பதற்குப் பிரயாணிகளின் நாயோட்டம் நானும் அவர்களில் ஒருவன். இடிபட்டுக் கொண்டு ஒரு மாதிரி பஸ்ஸில் ஏறுகின்றேன். பஸ் புறப்பட்டால் தானே பிரயாணிகள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள்.
13

Page 11
வேட்கை
எனக்கு எரிச்சல்,
பஸ் நகருகின்றது.
நகரத்தினூடாக பஸ் முக்கி, முனகிக் கொண்டு செல்கின்றது.
நகரம் கோழித் தூக்கத்தில்,
எனது கிராமத்தை நோக்கி பஸ் சென்று கொண்டிருக் கின்றது.
எப்பொழுதுதான் இந்தப் பஸ் எனது ஊர் போய்ச் சேரப் போகிறதோ?
என் உள்ளத்தில் தவிப்பு. என் அன்பு ஆச்சி, அப்பு, தங்கச்சி, நண்பர்களைப் பார்க்க வேண்டுமென்ற பேராவல்.
நீண்ட காலமாக அடக்கி வைத்திருந்த ஆவலல்லவா? ஆச்சி இப்பொழுது முற்றம் பெருக்கிக் கொண்டிருப்பா, அப்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பார். தங்கச்சி வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள். என் வரவை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்றொரு ஆசை எனக்கு.
என்னைக் கண்டதும் ஆச்சி மகிழ்ச்சியில் பொங்கிப் பூரிப்பா, -
தங்கச்சி ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பாள். அயல் வீடுகளின் சிறுவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரிப்பார்கள்.
"நீ ஒரு கடுதாசி எழுதிப் போட்டு வரக்கூடாதோடா?"
ஆச்சி என்னைச் செல்லமாகக் கண்டிப்பா,
14

,
நீர்வை பொன்னையன்
-
..
அவர்களுக்கு என் ($ld6) எவ்வ116lᎢ6)
நம்பிக்கை. ஆச்சி என்னை நீ பெற்று வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாய்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந் ப்பாய்? எவ்வளவு துன்பங்களை நீ மெளனமாக அனுபவித்திருப்பாய்?
. - என் நிமித்தம் ஊரவர்களிடம் அளவிலா ஏச்சுப் பேச்சுக்களை
. to .
அவதூறுகளைக் கேட்டு உனது உள்ளம் ஊமையாய் Ս 3535d5
கண்ணி வடித்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்
t உலகில் விசாலமானது சமுத்திரம் தான் என்பார்கள்.
ர் சமத்திாக்கையம் வி முத்திரத்தைய or
]ে
ஏன் இந்தப் பிரபஞ்சத்தையும் 6TLD. ஒரு சிறு துண்டு நிலத்தை வைத்துக் கொண்டு என்னை . . . - . வளர்த்து, உள்ளுரில் படிப்பித்தது போதாதென்று, வெ
- - நாட்டிற்கு அனுப்பி உயர்படிப்புப் படிப்பிக்க அப்பு நி 6162/6)16II6շ|
SASuS இன்னல் பட்டிருப்பாய் எனபை 5 உணராதவன் அல்ல நான். எத்தனை பேரிடம் கடன் பட்டிருப்பாய்? உன் உழைப்பின் பெரும்
- - - , , - பகுதி நீ எனக்காகப் ULL BL-g2D/35G5 6DIL டியாகத் தாரை
را به
. . . . . . . ് ДЪѣleъ6іт எனக்காகச் செய்த பரித்தியாகங்களை என்னால்
. . . . . . . கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
Сурв.
テイ下 விட விசாலமானது
"தோட்டம் செய்யிறவன்ரை மகனுக்கு படிப்பென்ன படிப்பு?
தோட்டம் கிண்டுறதுக்கோ?
சிலர் கேலி பண்ணினார்கள்.
" " )
- -- - "சும்மா உவன் ரை படிப்புக்கு வீணாய் காசை நாச DIT ĆjbỚBT60DLD, 916) 160601 மறிச்சு தோட்ட வேலையைப் பழக்கு,
- அல்லது சுருட்டு சுத்துறதுக்கு
அனுப்பு"
. . LL JSa L SLL S0SSSLLaLSTJS SSSSJTCS JS 0STMT H0S
SSS LSSLSL S SSS S S0SSqSSLL SS தோட்டக்காரர்களின் பிள்ளைகளும், தொழிலாளர்களின்
பிள்ளைகளும் படிப்பது பெரிய மனிதர்களுக்கு விருப்பமில்லை.

Page 12
வேட்கை ി ി 一
. - - -
. . . . - - ം - ~” ...' நாங்கள படிதது நாலும தெரிந்துவிட்டால்
- . . حجر | . . தோள்களில் அவர்கள் ஏறியிருந்து சவாரி விடேலாது, எங்கடை உழைப்பை உறிஞ்சேலாது என்ற பயம் அவர்களுக்கு
- . . . . . நாட்டுக்கு படிக்கப் போற உன்ரை மகன் L12L160L DITL LT 60T.... 29/6)J607 226TICUbbCUD25 திரும்பி வரவும் மாட்டான் به ایران.
வன்ரை சாதக பலன் சொல்லுது" uSMSMS
. 。 - சாதகத்தைப் பார்த்த சாத் திரி கந்தப்பா
திர 历川 கை ளயு LD J LD LU , * t T ó5 L
. اللہ “اسٹالنسل۔ பாவித்து உ ழைக்கிற எங்களை முட் Tsiig,6
- . . - . உழைப்பைச் சுரண்டி சுக சீவியம் நடத்திக் கொண்டிரு
N.
- Մ600IL6Ն வர்க்கம் . . . . , , ,
அவன் அங்கே போய் கட்சி வேலைதானே செய்வா
. . リrWarra。
டிக்கப் போறான்" என்றன
' '
படிப்பு. அப்பிடிப்
T e . . OU அரசியலு (ÖLD готите, உவங்களாலையும் உவங்கடை கூலிக்காரற்ரை கட்சியாலும் என்னத்தை சாதிக் கேலும்? கொஞ்ச நாளைக்கு சும்மா கத்திப்போட்டுக் கி ...... ,,... oم 6 பிரமுகர் (p6rug5TULIL --نیہیمی سیر.سی. با
தான " என்று @○ L اور
DTIQ LI JIġDlg ν
... . . . . . . . . . . . வங்காள ஆசிரியர்கள் தமது உரிை
. - - பொலிசார், 2101) செல்கின்ற ஆசிரியர்களைக்
,
காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகின்றனர்
. yr
லட்ச க்கணக்கான தொழிலாளர்கள் விவசா
- . . . . . o மாணவர்கள், பொது மக்கள், கல்கத்தா நகரின் பிரதான
........
வீதியில் ஆக்ரோஷமாகக் கோஷம் எழுப்பிய வண்ணம் சென்று
--- ܝ الاسد سم.
(O) - "x , , , 产子品 م. تیر
BFI T 19 (5 d5 கி. IT II db 67 号16】 T
.
களில் நானும் ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்வை பொன்னையன்
பொலிசார் எம்மீது பாய்ந்துநர வேட்டையாடத் தொடங்கு கின்றனர்.
குண்டாந்தடிகளின் சுழற்சி.
கண்ணிர்ப் புகை, துப்பாக்கிச் சனியன்களின் குரைப்பு. மக்களின் பச்சை ரத்தம் வீதியில் ஒடுகின்றது. நரபலி, வங்க மக்களின் பேரெழுச்சி. மக்களின் வெற்றி வங்காளத் தொழிலாள, விவசாய மாணவ இயக்கங் களிலும் அவைகளின் போராட்டங்களிலும் பங்கு பற்ற நான் கொடுத்து வைத்தவன்.
இவ்வியக்கங்களும் போராட்டங்களும் எனக்கு அனுபவங் களைத் தந்து வர்க்கபோதத்தையூட்டின.
இளமையில் அனுபவமும் முதிர்ச்சியுமற்ற எனது நடவடிக் கைகளால் எமது ஊரவர்களின் பெரும் எதிர்ப்புகளையும் வீண் தொல்லைகளையும் உங்களுக்கு நான் தேடித் தந்துள்ளேன். ஆச்சி, இதனால் நீங்கள் எவ்வளவு துன்பமடைந்திருப்பீர்கள்? இனி நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை.
தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் ஆச்சி. உங்கள் ஆசைகளை நான் நிராசையாக்கிவிடவில்லை.
வெற்றியுடன் தான் உங்கள் மகன் திரும்பி வந்து கொண்டி
17

Page 13
வேட்கை
பஸ் தோட்டங்களினூடாகச் செல்லும் வீதியில் ஒடிக் கொண்டிருக்கின்றது.
இடைக்கிடை நீரிறைக்கும் இயந்திரங்களின் இரைச்சல், அப்புவுடன் நான் பின் துலா மிதித்துக் கொண்டிருக் கின்றேன்.
காலைச் சூரியன் தலையை உயர்த்தி பனங்கூடலுக்கு மேலால் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
தூரத்தில் புல் வெளிக்கு அப்பால், பனங்கூடலின் தொங்கலில் ஆச்சி தலையில் கடகத்தைச் சுமந்தபடியே வந்து கொண்டிருக்கின்றா.
கடகத்திற்குள் எனது புத்தகங்கள், உடுப்பு, சாப்பாடு. ஆச்சி எமது கிணற்றடிக்கு வருகின்றா.
தண்ணி பாய்ந்து கொண்டிருக்கும் வாய்க்காலில் நான் குளிக்கின்றேன்.
பழைய சோறு, குரக்கன் பிட்டு, மரவள்ளிக் கிழங்குக்கறி, தயிர் எல்லாவற்றையும் குழைத்து உருண்டையாக்கி ஆச்சி எனக்குத் தருகின்றா.
சாப்பிட்டு விட்டு, மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள அயலூர் பாடசாலைக்கு நான் ஒட்டமும் நடையுமாகச் செல்கின்றேன்.
பஸ் எனது கிராமத்திற்குள் நுழைகின்றது. நிலம் வெளித்துச் சிரிக்கின்றது. வீதியின் இரு மருங்கிலும் செழித்து வளர்ந்த பச்சைப் பசேலென்ற வாழைகள் நிரையிட்டு நிற்கின்றன. ༣,
உருண்டு திரண்ட காய்களுடன் வாழைக் குலைகள் வீதியின் பக்கமாகத் தலை சாய்ந்து நிற்கின்றன.
அவை என்னை வாழ்த்தி வரவேற்கவா அப்படிநிற்கின்றன?
வாழைக் குலைக்குப் பெயர் பெற்றது எனது ஊர்.
18

நீர்வை பொன்னையன்
வீதியின் கிழக்குப் பக்கமாக விரிந்து பரந்த பச்சைப் பசேலென்ற நெல் வயல்கள்.
வயல்களின் தொங்கலில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் புல்வெளி.
புல்வெளியின் தொங்கலில் நீலக்கோடு கீறியது போல் உப்பாறு
உப்பாற்றை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் நீல வானத்தின் அடிவயிறு சிவந்திருக்கின்றது.
காகங்கள் கூட்டங் கூட்டமாக கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருக்கின்றன.
பஸ் கந்தசாமி கோவிலடியில் நிற்கின்றது. ஆவலுடன் நான் பஸ்ஸிலிருந்து இறங்குகின்றேன். உதயத்தின் இளம் தென்றல் என் உடலில் தவழ்கின்றது. எனது ஊரின் மண்ணில் கால் வைத்ததும் என் உடலில்
நிமிர்ந்து பார்க்கின்றேன். எனக்கு எதிரில் பழைய சிறு கட்டிடம் இருந்த இடத்தில் மூன்று மாடி யூனியன் கட்டிடம் கம்பீரமாக நிற்கின்றது.
எனக்கு பேராச்சரியம், மகிழ்ச்சி.
அம்மான் கதிரவேலு தனது தேநீர்க் கடையைத் திறந்து கொண்டிருக்கின்றார்.
"பொடியா, இப்பதான் வாறியோ? எப்பிடி சுகம்?" வாஞ்சையுடன் குசலம் விசாரிக்கின்றார். "நல்ல சுகம் அம்மான், உங்கள் பாடெப்பிடி'
"மோசமில்லை. ஆனால் எங்கடை உழைப்பை உறிஞ்சிற வங்கள், எங்களை முன்னேற விட்டால்தானே?
19

Page 14
வேட்கை
"எங்களுக்கும் காலம் வரும் அம்மான்." "படிப்பெல்லாம் முடிஞ்சுதோ? சோதினை எடுத்தனியே? எப்பிடி'
"நல்லாய் செய்திருக்கிறன்."
"பாஸ் பண்ணுவன் எண்டு நினைக்கிறன்." "உங்களைப் போல ஆக்கள்தான், காலுக்கை கிடந்து மிதிபடுகிற எங்களுக்கு கை குடுத்துத் தூக்கிவிட வேணும்." "நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் அம்மான். எதிர்காலம் எங்களுக்குத்தான்."
"களைச்சுப் போய் வாறாய். பொட்டியை இஞ்சை வைச்சிட்டுப் போ என்ரை மூத்த பெடியன் தண்ணி அள்ளப் போட்டான். அவன் வந்த உடனை சயிக்கிளிலே பெட்டியை குடுத்து அனுப்பி விடுகிறன்."
"அது பாரமில்லை அம்மான். உங்களுக்கு ஏன் வீண் சிரமம். நான் கொண்டு போவன்."
"சரி வேளைக்குப் போய் களைப்பாறு. பிறகு சந்திப்பம்." அம்மான் தனது வேலையிலீடுபடுகின்றார். நான் வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கின்றேன். கண்ணுக்கெட்டிய துரத்தில் கறுப்பும் வெள்ளையும் கலந்த மறை நாய் ஒன்று ஓடி வருகின்றது.
எங்கடை வீமன்,
கிட்ட வந்ததும் வாலைக் ஆட்டிக் கொண்டு இருகால் களையும் உயர்த்தி என் மேல் பாய்ந்து எனது கைகளை நக்கு கின்றது.
அது இங்கே ஏன் வந்தது? நான் வருவேன் எண்டு அதற்கு எப்படித் தெரியும்?
2O

நீர்வை பொன்னையன்
அதை நான் அன்புடன் தடவிக் கொடுத்துவிட்டு என்னை விடுவிக்கின்றேன்.
தனது முன்னங் கால்களால் எனது கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முனங்கிவிட்டு அது திரும்பி வேகமாக ஓடி மறைகின்றது.
வீடு நோக்கி நான் ஆவலுடன் வேகமாக நடக்கின்றேன். சில நிமிடங்களின் பின் வீமன் என்னை நோக்கி ஓடி வருகின்றது.
அது எனது வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டும்.
நான் வருகிறேன் எண்டு ஆச்சிக்கு உணர்த்தவா அது எனது வீட்டிற்கு ஓடியது.?
ஓடிவந்து தனது கால்களால் எனது கால்களைக் கட்டிப் பிடித்து முனங்கிவிட்டு திரும்பவும் எனது வீடு நோக்கி அது ஒடுகின்றது.
அது போவதும் வருவதுமாக ஒடிக்கொண்டிருக்கின்றது. செல்லர் அண்ணர் றோட்டு முடக்கால் திரும்பி என் எதிரே வந்து கொண்டிருக்கின்றார்.
அவர் எங்கோ பயணம் போகப் புறப்பட்டு வருவது போலத் தெரிகின்றது.
"இண்டைக்கு நீவாறாய் எண்டு எங்களுக்குத் தெரியாதே. ஏன் ஒரு காயிதம் போட்டிட்டு வந்திருக்கலாமே?”
"உங்களுக்கேன் வீண் தொல்லை தருவான் எண்டு ானண்ணை நான் எழுதேல்லை."
நான் பயணத்தால் வரும் வேளைகளில் செல்ல
இம்முறை நான் அவர்களுக்கு ஏன் வீண் சிரமம் கொடுப்பா னன்றுதான் எழுதவில்லை.
21

Page 15
- - "இதென்ன பெரிய கரைச்சலோ சரி அது போகட்
இஞ்சை தா பெட்டியை நான் கொண்டாந்து தாறன்."
- "வேண்டாமணன்னை, கொஞ்சத் gjoÍTULD தானே. நான
சமாளிப்பன். நீ வெளிக்கிட்ட பயணத்துக்கு போட்டு வா"
... . "அப்ப சரி உன்ரை ஆச்சிக்கும் சாடையாய் சுவமில்லை.
அவவாலை."
.
- "என்னண்ணை, ஆச்சிக்கு சுவமில் லையோ? என்ன
வருத்தம்?"
"விழுந்து போனா. காலிலை நோ. இப்ப கொஞ்சம்
- சுகம் ஆனால்."
"வாறனண்ணை, பிறகு சந்திப்பம்"
ーイ
. .جی . கூறிக் கொண்டு நான் வேகமாக நடக்கின்றேன்.
جر. . . .ے. எனக்கு ஓடவேண்டும் போ லிருக்கிறது. கையில் பெட்டி ()) INDI
- ح - حر . . اور..................... இயலு மட்டும் வேகமாகச் செல்கின்றேன்.
f சி I
芝 ア
கூப்பிட்டுக் கொண்டு படலையைத் திறக்கின்றேன்.
- . . - . . . دي له / ண்ணையில் ஆச்சி படுத்துக் கொண்டிருக்கின்றா
- c படுத்திருந்த அவவினுடைய சிலையைக் கெளவிப்பிடித்து - - - - .
இழுத்து விட்டு வீமன் என்னை நோக்கி ஓடி வருகின்றது.
...-- 一,” (). ,*、 எனது காலை அது கட்டிப்ப்டித் ாண்டு முனகுகிறது.
"காலை விடடா வீமன்"
அதை அதட்டுகின்றேன். "ਮੁਹੰf..." உரக்கக் கூப்பிட்டபடியே செல்கின்
ஆச்சி ஆவலுடன் தலையை உயர்த்திப் LITT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்வை பொன்னையன்
எழும்ப அவ முயல்கின்றா முடியவில்லை.
எனக்கு அதிர்ச்சி.
கையில் இருந்த பெட்டி விழுகின்றது.
"ஆச்சி."
அலறிக் கொண்டு ஓடுகின்றேன்.
ஆச்சி படுத்திருந்தபடியே எனது முதுகை அன்புடன் தடவிக் கொடுக்கின்றா.
எனது ஆத்மா ஒலமிட்டு அலறுகின்றது. என்னால் வாய் திறக்க முடியவில்லை. நான் ஆச்சியை வெறித்துப் பார்த்தபடியே இருக்கின்றேன். கண்ணி என் பார்வையை மறைக்கின்றது.
ஆச்சியும் வாய் திறக்கவில்லை.
அவவினுடைய கண்களில் அருவி பாய்கின்றது.
மெளனம்,
எவ்வளவு நேரம்தான் அப்படியிருந்தோமோ?
"அண்ணை"
தண்ணிர் வாளியுடன் வந்த தங்கச்சி ஆச்சரியத்துடன் சத்தம் போடுகின்றாள்.
நான் அவளை நோக்குகின்றேன்.
அவளால் வாய் திறக்க முடியவில்லை. அவள் பொருமுகின்றாள்.
அயலவர்கள் வந்து சூழ்கின்றார்கள் சிறுவர்கள் குது கலத்தில் ஆர்ப்பரிக்கின்றார்கள்.
"ஆச்சிக்கு இப்படி நடக்குமெண்டு நாங்கள் நினைச்சிருக்
கேல்லை. என்ன செய்யிறது. நடந்து போச்சு."
23

Page 16
கவலையுடன் கூறுகிறார் சின்னத்தம்பி 9600600T. "என்ன நடந்தது? எனக்கு ஏன் எழுதவில்ை
- . . . ... - . - ஆத்திரத்துடன் கேட்கின்றேன்.
க்கேக்கை கிறுதி வந்து விழுந்து முழங்கை எலும்பும் முறிஞ்சு
6u?"
. ) "எப்ப விழுந்தவ?"
தைப் பொங்கலண்டு." தங்கச்சி த படியே
- கூறுகின்றாள்.
- - - - - இவ்வளவு காலமாய் எனக்கேன் எழுதேல்லை'
செத்துப்போனேன் எண்டு நினைச்சியளோ
ான் சீறுகின்றேன்.
ந
சி - @ - - - ெ "ஆச்சிதான் எழுதவேண்டாம் எண்டு சொன்னவ." SLTSSMSSSMSSSMSSSM
. , 9. سلسل
"உனக்கு 6T ழுதின ால நீ . . - . . வந்திடுவியாம். சோதினையும் எடுக்க LDITL LQ LLJITLD. gD 60T60)JJ
LJL QL_1L 1d5 குழம்பிப் போம் எண்டு உனக்கு அறிவிக்க வேண்டா
படிப்பை விட்டிட்டு உடனை
மெண்டு சத்தியம் செய்து போட்டா"
- - செல்லம்மா அக்கா சொன்னா, .
- - ச்சியிலும் பார்க்க எனக்கு படிப்பு பெரிசோ?"
| Ι. . γ. Ο Ι. , - - ..." )م ع و( - "ÉL|5ü(36)T அப்பிடிச் சொல்லுகிறா Lil J. ġb6OT60D6OI 6) I(IbġbġbLD
. . . . . க்க வாறவையிட்டை தன்ரை வருத
. . ஒத்தத்தைப் பற்றி அவ - - ーリー . 「 . ஒண்டும் சொல்லேல்லை. உனக்கு எழுதிப் போட வேண்டா
|~ || +++++
- . . *。上○。_ /* __
மெண்டுதான் மண்டாடிச் சொல்லிக் கொண்டிருந்தா"
சரோ கூ றுகின்றாள்.
"இப்ப எவ்வளவோ சுவம், அப்ப நீ அவவைப் பார்த்தி
LI J60öTL LIT 6)....... "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்வை பொன்னையன்
"ஏன்?"
"பெரியாஸ் பத்திரிக்குக் கொண்டுபோன அண்டே ஒப்பரேஷன் செய்ய முந்தி உனக்கு எழுத வேண்டாமெண்டு சத்தியம் பண்ணிப் போட்டா"
"பிறகு?"
"ஒப்பரேஷன் முடிஞ்சு ஒன்பது நாளாய் அறிவு கெட்டுப் போச்சு, மூச்சில்லாமல் கிடந்தா, நாங்களும் நல்லாய் பயந்திட்டம்,
"ஆனா" நாங்கள் உனக்கு என்னண்டு எழுத?"
"இடைக்கிடை அறிவு வரேக்கை என்ரை பிள்ளைக்கு மாத்திரம் எழுதிப் போடாதையுங்கோ அவன்ரை படிப்புக் குழம்பிப்போம். எனக்கு ஒண்டும் நடவாது. நீங்கள் ஒண்டுக்கும் பயப்பட வேண்டாம், எண்டு அடிக்கடி சொல்லுவா"
"இரண்டு முறை ஒப்பரேஷன் நடந்தது. அப்பெல்லாம் அறிவு வரேக்கை இதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தா."
"அப்ப அவவின்ரை காலைப் பார்த்தா யானையின்ரை
கால் மாதிரி வீங்கிப் போய் இருந்துது இப்ப நல்லாய் வீக்கம் வத்திட்டுது. ஆனால் அவவாலை நடக்கத்தான் ஏலாது."
செல்லம்மா அக்காவின் குரல் தளதளக்கின்றது.
"ஆச்சி, இப்பிடியேனனை செய்தனி? உன்ரை உயிருக்கு
| 9J595/T o) IgDI நடந்திருந்தால் நான்.
"9/L. பயித்தியக்காறா, இப்பென்ன நடந்து நான்
செத்திட்டனே? என்ரை இடது காலும் கையும்தான் ஏலாது.
ஆனா வலது கைகால் இருக்குத்தானே."
அவவினுடைய குரலில் எவ்வளவு தன்னம்பிக்கை, மன உறுதி.
25

Page 17
வேட்கை
"ஆனால் உன்னாலை நடக்கேலாமல் போச்சுதேயணை" "அதெல்லாம் சரி வரும். நீ பயப்படாதை, உடுப்பை மாத்திப்போட்டு குளிச்சிட்டு வா."
நான் அவவைப் பார்த்தபடியே அசையாமல் இருக் கின்றேன்.
"எட முட்டாளே, இரண்டு தடவை என்னட்டை இயமன் வந்தான். என்னை அவனாலை ஒண்டு செய்யேலாமல் போச்சு. திரும்பிப் போட்டான். இனி நீஒண்டுக்கும் பயப்படாதை. இன்னும் நான் கனகாலமிருப்பன். என்ரை பேரப் பிள்ளையஞக்குக் கலியாணம் கட்டி வைச்சிட்டுத் தான் நான் கண்ணை மூடுவன்."
சிரித்துக் கொண்டு கூறுகின்றா. எதிர்காலத்தில் அவவிற்கிருக்கும் நம்பிக்கையைப் பார்க்க எனக்கு வியப்பாக இருக்கின்றது.
நான் அவவினுடைய காலைத் தடவிக் கொண்டே இருக்கிறேன்.
"போடா, போய் குளிச்சிட்டு வா. புள்ளை அந்தப் பழஞ் சோறு, குரக்கன் புட்டு, மரவள்ளிக் கிழங்குக் கறி, தயிர் எல்லாத்தையும் எடுத்து வை. நான் கொண்ணைக்கு குழைச்சு உறுட்டிக் குடுக்க."
எனக்கு ஆச்சரியம். "நான் வருவன் எண்டு உங்களுக்கு எப்பிடியணை தெரியும்? குரக்கன் புட்டு அவிச்சு அதோடை பழஞ்சோறும் ഞ ബക്സ, 5, '
"கன நாளாய் குரக்கன் புட்டு அவிக்கேலை, நீ இண்டைக்கு வருவாய் எண்டு ஏதோ என்ரை மனம் நேற்றுச் சொல்லிச்சு. அதுதான் குரக்கன் புட்டும் அவிச்சு அதோடை பழஞ் சோற்றையும் வைச் சிருக்கிறம்" மனப்பூரிப்புடன் கூறுகின்றா ஆச்சி.
26

நீர்வை பொன்னையன்
-
"றயிலாலை வந்த களை. வெய்யிலும் ஏறப்போகுது. எழும்பு மோனை போய் குளிச்சிட்டு சாப்பிடு."
- - - செல்லம்மா அக்கா என்னை அருட்டுகின்றா. "மோனை நான் மறந்து போனன். முந்த நாள் பின்னேரம் - - - - - . யாழ்ப்பாணத்திலிருந்து உன்ரை சோமனாக்கள் வந்தாங்கள்."
ஆச்சி கூறுகின்றா
II - ெ * ) " 6Ꭲ 60Ꭲ 60Ꭲ ("FIT 60/60/60)6) ILI J60)600.
'வாற மாதம் மேதின ஊர்வலமும் கூட்டமும் நடத்தப்
போகினமாம். அதுக்கு ஆயத்தங்கள் செய்ய வேணுமா
- - "நீ வந்த உடனை bLLTUD அனுப்பி விடுகிறம் எண்டம்."
- . - நான இண்டை க்குப் பின்னேரம் போய் сэ|6006)ІШ6026ITć7
I n மண்டு VOLL Taff? d5|Ո) 607.
Фć ""
கூறிக்கொண்டு அவவைக் கேள்விக் குறியுடன் பார்க்
- - அவவினுடைய முகத்தில் சிந்தனையலை,
"என்னணை ஆச்சி நான் பின்னேரம் போகட்டே? "இனி உன்னை ஏன்ரா நாங்கள் மறிக்கப்போறம்?"
- . . - நான் அவவின் கண்களை நோக்குகின்றேன்.
என் ஆச்சியின் கண்களில் தியாகச் சுடர் ஜூவாலித்துக்
- . கொண்டிருக்கின்றது.
- - நான் புதிய நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருக் கின்றேன்.
1980
ر - 27 '

Page 18
ஆத்ம தாகம்
குழந்தை ஒன்று தெருஒரத்தில் வெறும் கோப்பையுடன் நிற்கிறது. I
கமலா அந்தக் கிராமத்தை நோக்கி பைசிக்கிளில் வந்து கொண்டிருக்கின்றாள்.
உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய், பாசம் பொங்கிப் பிரவகிக்கின்ற மேரி மாதா பாலன் யேசுவை மார்புடன் அணைத்தபடியே, தெரு ஓரத்தில் வெறும் கோப்பையுடன் நிற்கின்ற குழந்தையைக் கருணையுடன் நோக்குவது போலிருக்கின்றது.
இளஞ்சூரியன் கானல் அலைகளை வீசிக்கொண்டிருக் கின்றான்.
அந்த மீன்பிடிக் கிராமம் முன்பு எவ்வளவு செல்வச் செழிப்பாக இருந்தது!
எந்த நேரமும் ஹோ ஹோ என்று ஆனந்தமும் ஆரவாரமும் நிறைந்ததாக இருந்தது அந்தக் கிராமத்தின் கடற்கரை,
ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் பெரியோர்கள் எல்லோரும் விடிந்ததும் விடியாததுமாய் கடற்கரையில் வந்து ஒன்று குவிவார்கள்.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வள்ளங்களை பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்து நிற்பார்கள் அவர்கள்.
28
 

நீர்வை பொன்னையன்
கடல் தாயை அடிவானம் முத்தமிடும் நெடும் துரத்தில் 5ரும் புள்ளிகளாய்த் தோன்றும் வள்ளங்களைக் கண்டதும் அவர்களது ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே.
படகுகள் கரை தட்டியதும், அம்மக்கள் தங்கள் உடன் பிறப்புக்களைக் குதூகலத்துடன் வரவேற்று ஆசுவாசப் படுத்துவார்கள். பின்பு அவர்கள் கொண்டுவந்த கடல் செல்வத்தைப் பார்த்துப் பூரிப்படைவார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் கொண்டுவந்த மீன்களை வள்ளங்களிலிருந்து எடுத்து கூறுகூறுகளாய் பெரிய மீன்கள் வேறாகவும் சிறியவை வேறாகவும் தெரிவு செய்வார்கள்.
சிலர் தமது மீன்களை கருவாட்டிற்குப் பதனிடுவார்கள். அங்கு வந்து கூடி நிற்கின்ற முதலாளிகளுக்குச் சிலர் தமது மீன்களை விற்பார்கள்.
கடற்கரை ஒரே அமர்க்களமாய் இருக்கும். மதிய வேளை சிறிது ஒய்வு, மாலையில் மீண்டும் ஆரவாரம்,
தங்கள் உடன் பிறப்புக்களை ஆழ்கடலுக்கு வழியனுப்பி
ஞாயிற்றுக் கிழமைகளென்றால் சொல்லத் தேவை ல்லை. காலையும், மாலையும் வெள்ளையுடை உடுத்து, ன்னப் பறவைகளாய் பெண்களும் சிறுவர்களும் சில ஆண்களும் தேவாலயத்திற்குச் சென்று அன்னை மேரியை ஆராதனை செய்து வருவார்கள்
ஆண்கள் சிலர் தங்கள் உடல் சோர்வகலக் குடித்து வெறிபாடுவார்கள். சிலர் சீட்டாடுவார்கள்.
ஆண்டுக்கொருமுறை அவர்களது மேரிமாதா தேவா லயத்தில் கொடியேற்றி விழா நடக்கும் பொழுதும், கிறிஸ்மஸ்,
29

Page 19
வேட்கை
புத் தாண்டுப் பண்டிகைகளின் போதும், கூத்துக் கள், நாடகங்கள், பெருவிருந்துகள் எல்லாம் நடத்திக் கொண்டாடுவார்கள். கிராமமே விழாக் கோலமாயிருக்கும்.
அக் கிராம மக்களுக்கு வறுமையென்றால் என்னவென்று தெரியாது.
தங்கள் உடலை வருத்தி உழைக்கின்றார்கள். அந்த உழைப்பில் வரும் செல்வத்தையும் செழுமையையும் தாமே பூரணமாய் அனுபவிக்கிறார்கள்.
தார்மீக அரசின் இராணுவம் வடபகுதியிலுள்ள கடல் பிராந்தியத்தைய பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்திய பின் இக் கிராம மக்களின் வாழ்வு சூன்யமாகி விட்டது.
கடல் செல்வத்தை வாரிக் குவித்த படகுகள் எல்லாம் இப்பொழுது கடற்கரையிலுள்ள தென்னந் தோட்டங்களில் கவிழ்க்கப் பட்டு அநாதரவாய்க் கிடக்கின்றன.
கடற்கரை தூங்குமூஞ்சியாய் இருக்கின்றது. தமது ஊரே அநாதையாகிவிட்டதென்ற உணர்வு அக் கிராம மக்களின் மனதில் நிலைகொண்டு விட்டது.
மக்களுக்குத் தொழிலில்லை, வருவாயில்லை, அவர்கள் உடல் சோர்ந்து, உள்ளமும் சோர்ந்து, நடைப்பிணங்களாய்த் திரிகின்றார்கள். வாழ்க்கையில் பஞ்சம் பசி, பட்டினி, பலவித நோய்கள்.
குழந்தைகளின் நிலை சொல்லவே முடியாது. மரணம் சர்வசாதரணமாகிவிட்டது.
கிராமத்தில் மனிதத்தன்மையே மறைந்து விட்டது. கமலா போன்றவர்கள் இங்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்த பின்பு இக்கிராம மக்களின் வாழ்வில் ஒளிக் கீற்றுக்கள் தென்பட ஆரம்பித்தன.
தோட்ட நிலங்களைப் பிளந்து பனங் கூடலூடாக
3O

நீர்வை பொன்னையன்
H - மலைப்பாம்பாய் வளைந்து நெளிந்து செல்கின்றது கிறவல் பாதை LTഞ9) யின் இருமருங் கிலுமு ள் ள நிலங்களுக்கு | ՓյնՓ6ն எல்லைக் கோடுகள் கிறி வேலிகளாய்
........................ .ے .سیه" (). : (). 9/602ІРБ. திருக் ன்ெறன. இடைக் கிடையே | Լ16161IIb, திட்டிக
-
. . . به : "", - அந்தக் கிறவல் பாதையால் 621յb 5| ժ5ԼՈ)d560)IT
ரம்பிய
. ہے۔ - றோட்டில் மிதந்து, கிரா 5U60)6りあ(5cm5TL-LQD@
வருகிறாள் கமலா
. உவர்ப்பும் வெப்பமும்
ளைக் கரிக்கி
-- தோப்பினுடாக
கின்றது.
'
-
ரு தனிவார்ப்பு
ー
su)T 6
巽,
. . . .
குறைந்த வார்த்தைகளில்,
நதி கருத்துட
ஆழ்
60)LO
யாக அவள் பேசுவாள்.
வாழ்க்கையில் காணும் துன்பதுயரங்க களையும் எதிர்த்துப் போராடி வருகின்றாள்
ஜீவ சத்து நிரம்பிய அவளது வட்
ழிகள் எந்த நேரமும் ஒளி வீசிக் கொண் அமைதியும் சாந்தமும் அவ்விழிகளில் குடிகொண்டிருக்
கின்றன. அவளுக்குப் பிடிக்காத சம்பவத்தைக் கண்டால்
... - வள் நிந்தனையுடன் ஒரு சிறு வேதனைப் புன்னகை
- 、, செய்வாள். அ
.
It . . .
پيدا
.
Z மென்மையான வார்
༢ ---- கு. அதிக சோபை தருகின்ற
சேவை செய்ய வேண்டுமென்ற அவளது தியாக உணர்வைச்
. . . -
சுமந்து வருகின்ற கட்டுக்கடங்காத அவளது உத்வேகம்
கண்களின் ஜீவ ஒளி அவளது
3

Page 20
வேட்கை
அவளுடைய விழிகளின் மூலமும் வார்த்தைகளின் வழியாகவும் வெளியே கட்டுக் கடங்காது பிரவகிக்கும்.
கமலாவின் தோற்றத்தில் எளிமை செயலில் வலிமை,
துன்பமும் துயரமும் நிறைந்த இந்தப் பரந்த உலகில் கமலா வயது வந்த ஒரு சிறு குழந்தை உலகில் அன்பு பெருக வேண்டும். துன்ப துயரங்கள் அனைத்தும் அகல வேண்டும் என்ற இதயதாகத்தால் தன்னை அந்தரங்க சுத்தியுடன் சேவை செய்வதற்காகப் அர்ப்பணித்த புனிதமான மனித ஜீவன் அவள்.
எந்த நேரமும் அவள் சுறுசுறுப்புடன் செயற்பட்டுக் கொண்டேயிருப்பாள், நாங்கள் அவளைச் சிட்டுக்குருவி யென்றே அழைப்போம். அவளது தலையசைப்பு, வெட்டுப் பார்வை, செயற்பாடு எல்லாம் அவள் சிட்டுக் குருவியே தான்.
வெயில், மழையென்று பாராமல் ஹெலிச் சூடுகள், பொம்பர் அடிகள் ஒன்றையும் பொருட்படுத்தாமல், சேவை செய்யும் எமது தொண்டர்களின் முன்னணியின், ஒரு நிலையத்திலிருந்து மற்ற நிலையத்திற்கு சிட்டுக் குருவியாய் பறந்து திரிவாள் கமலா, வீட்டுத் தரிசிப்பு வேறு. அவள் தனது உணவிைக் கூட நேரகாலத்திற்கு உண்பதில்லை.
"ஏன் இப்படி நீர் ஓய்வொழிச் சலின்றி வேலை செய்கின்றீர்? எந்தநேரமும் வெளியிலேதான் ஒடித் திரிகின்றீர். கொஞ்ச நேரமாவது ஒய்வெடுக்கலாமே. கந்தோரிலை இருந்து கொஞ்ச நேரம் வேலை செய்தாலென்ன? எந்த நேரமும் ஒரே ஒட்டம்தான். என்ன உம்மடை காலிலை சில்லுப்பூட்டியிருக்கா?"
நாங்கள் அன்பு கலந்த கண்டனக் குரல் எழுப்புவோம் இடைக்கிடை
"வெளிக் கள வேலையெனன் டால் வெளியிலைதானே வேலை செய்யவேணும், கந்தோரிலிருந்து எப்படி வேலை செய்யிறது? "
32

நீர்வை பொன்னையன்
சிரித்துக்கொண்டே எங்களைக் கேட்பாள். அவளுக்குக் கோபம் வந்ததை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. -
வலது பக்கமாய் தலையைச் சாய்த்துக் கொண்டு சிரிப்பாள் அவள், அப்பொழுது அவளது விழிகளும் சிரிக்கும். கமலாவின் சேவை வியக்கத்தக்கது. அவள் அதை சேவையென்று செய்யாமல் தொண் டென உணர்ந்து செயலாற்றுகின்றாள்.
அவள் ஒரு போஷாக்கு நிலையத்திற்குப் பொறுப்பாகத் தான் இந்தச் சேவையை ஆரம்பித்தாள். சில நாட்களின் பின் மூன்று நிலையங்களை மேற்பார்வை செய்பவளாக அவள் வந்தாள். பின்னர் ஜந்துநிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அவளுக்குக் கொடுக் கப்பட்டது. தற்பொழுது ஏழு கிராமங்களில் நடைபெறுகின்ற இருபத்தைந்து நிலையங்களை அவள் நிர்வகிக்கின்றாள்.
தன்னுடன் வேலை செய்கின்ற தொண்டர்கள் அனைவருடனும் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பற்றுடனும் பாசத்துடனும் பழகுகின்றாள். அவர்களும் அவளைத் தமது உடன்பிறப்பு என்ற நினைப்புடன் உரிமை கொண்டாடுகின்றனர்.
ஒருநாள், அயல் கிராமத்திலுள்ள நிலையம் ஒன்றில் தாய்மார்களின் கூட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காக அவளும் ஒரு மேற்பார்வையாளரும் நானும் அவசர அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.
அவளது பைசிக்கிளின் பின் சில்லிலுள்ள காற்று திடீரென போய்விட்டது.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு இன்னும் சிறிது நேரம்தான் இருக்கின்றது.
பைசிக்கிள் சீர்செய்த பின் தாமதித்துத்தான் புறப்படு கின்றோம்.
33

Page 21
வேட்கை
தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கின்றது.
கூடச் செல்கின்ற மேற்பார்வையாளருக்கு சிறிது தயக்கம்
"பயப்பட வேண்டாம், சிறிது தூரம் போய்த்தான்
|| III frij (3 JIT (BLD
- -
கமலா உற்சாகப்படுத்துகின்றாள்.
| . . . . . . . . . . . . .در است ' - - -
ஸ்டேசன் Шардыр 2ьтбо! பிரச்சினை போலக் கிடக்கு. . . . . . எதுக்கும் வாறவையைக் கேட்டுக் கேட்டு அவதானமாய்ப்
リ、川 போங்கோ
ി. - - கிராமத்தின் தொங்கலில் வந்து கொண்டிருக்கின்ற
て 。
வயோதிபர் ஒருவர் கூறுகின்றார் ' "ஸ்டேசனுக்குக் கிட்ட உள்ள நிலையத்தில்தான்
கூட்டம், கூட்டத்திற்கு வந்த தாய்மாரின் கதி என்னவோ?
- - ஆவல் மேலோங்க அவசர அவசரமாக மேற்பார்வை
யாளரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு வேகமாகச்
- - செல்கின்றாள் கமலா
- - SAAA SMS MAS S A SA S S SAS A MS MS SMSMSMS கிராமத்தின் மையத்திற்குச் செல்கின்றார்கள்.
ஸ்டேசனுக்கு இன்னும் சிறிது தூரம் தான்.
ஆள் நடமாட்டமேயில்லை.
. . . . - ஒரு மனிதன் கூட கண்ணில் தென்படவில்லை.
. - - ஊர் மெளனத் தியாகத் தியாக நிற்கின்றது.
பதற்றத்துடன் நிலையத்திற்கு வந்து விட்டார்கள்
அவர்கள். நிலையம் வெறுமையாக இருக்கின்றது.
"என்ரை ராசாத்தி இப்ப ஏன் இஞ்ச வந்தனியள்?"
- - - . - பயப்பீதி நிரம்பிய ஒரு நடுங்கும் குரல் கேட்கின்றது.
-
அவர்கள் நாற்புறமும் பார்க்கின்றார்கள்
ஒரு சிறு குடிசைக்குப் பக்கத்தில் 2)
34
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்வை பொன்னையன்
பொன்னாவரசுப் பற்றைக்குள் பதுங்கியிருந்த மூதாட்டி வெளியே வருகின்றாள்.
"ஏன் என்ன நடந்தது?"
கமலா ஆவலுடன் கேட்கின்றாள்.
"ஆமிக்காரர் வர முந்தி ஒடுங்கோ மோனையள், கெதியாய்ப் போங்கோ" மூதாட்டி அவர்களை அவசரப் படுத்துகின்றாள்
"அம்மா பயப்படாதயணை, என்னனை நடந்தது. சொல்லணையம்மா."
கமலா வாஞ்சையுடன் கேட்கின்றாள்.
"மூண்டு நாலு பொடியள் உந்தக் கோயிலுக்குப் பின்னாலை யுள்ள வேலியைப் பாஞ்சு ஓடினாங்கள்."
"பிறகு.?
"கொஞ்ச நேரத்தில கோதாரியில போற ஆமிக்காறங்கள் வந்தாங்கள். திடீரென அவங்கள் கோயில் பக்கம் சுடுகடென்று சுட்டாங்கள்."
"அதுக்குப் பிறகு?"
"அங்க பாருங்கோ கோயிலடியை. பாழ் பட்டுப் போவாங்கட வேலையை ஆணும் பெண்ணுமாய் ஐந்து மலையள் கோயிலடியில சரிஞ்சு கிடக்குது."
வயிற்றெரிச்சலுடன் கூறுகின்றாள் மூதாட்டி
"நீங்கள் இஞ்சை மினக்கிடாதையுங்கோ மோனையள். கெதியாய்ப் போங்கோ, கெதியாய்."
அவர்களை மூதாட்டி விரட்டுகின்றாள். கொஞ்ச நேரம் முந்தி வந்திருந்தால் நீங்களும் இந்த அமளி துமனியளுக்கை அம்பிட்டிருப்பியள். ஏதோ நல்ல காலம் அந்த முருகன் தான் உங்களைக் காப்பாற்றியவன்."
35

Page 22
வேட்கை
அந்த மூதாட்டி மனநிறைவுடன் கூறுகின்றாள். 'மிச்சம் பெரிய உபகாரமம்மா, நாங்கள் போட்டு வாறம்" நன்றியுணர்வுடன் கூறிவிட்டு வெறிச்சோடிக் கிடக்கின்ற அந்தக் கிராமத்தை விட்டுச் செல்கின்றோம். எமக்கெல்லோ ருக்கும் ஒருவித மலைப்பு.
எந்த நேரமும் எமது கிராமப் புறங்களில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்றது.
கமலா நிதானமாக, அமைதியுடன் வேலை செய்கின் றாள். எங்களையும் அவள் தேற்றி ஊக்குவிக்கின்றாள்.
மீன்பிடிக் கிராமத்தின் எல்லைக்கோட்டிற்கு வந்ததும் கமலா சிறிது தயக்கத்துடன் பைசிக்களை ஒட்டுகின்றாள். "இந்தமாதம் இந்த நிலையத்திலே குழந்தைகளின் நிறை கூட எடுக்க முடியாமல் போச்சே, இஞ்சையுள்ள குழந்தைகளின் நிலை எப்படியோ?"
அவளது உள்ளத்தில் ஒருவித தவிப்பு, வேதனை. சில நாட்களின் முன் வேறு ஒரு நிலையத்தில் குழந்தை களின் நிறை எடுப்பதற்கு நாங்கள் சென்று கொண்டிருக் கின்றோம்.
அந்த நிலையத்தை மேற்பார்வை செய்கின்ற சிவானி தயாரிப்பு வேலைகளைச் செய்வதற்காக சற்று முன்னரே சென்று விட்டாள்.
திடீரென துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்கின்றது. எம்மை விலத்திக் கொண்டு மூன்று பொடியள் நனைந்த உடையுடன் ஒடிக்கொண்டிருக்கின்றார்கள்.
மீண்டும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கின்றது. நிலையப் பக்கம் தான் வேட்டுச் சத்தம் கேட்கின்றது.
"சிவானிக்கு என்ன நடந்ததோ" அங்கலாய்ப்புடன் கூறிக்
36

நீர்வை பொன்னையன் கொண்டு நிலையப் பக்கம் செல்வதற்கு முற்படுகின்றாள் аыйрөuот.
எதிர்த்திசையில் இருந்து ஓடி வருகின்ற மக்கள் எங்களைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
சிறிது நேரத்தில் அமைதி சற்று நேரத்தில் நாங்கள் நிலையத்திற்கு வந்து சேருகின்றோம்.
போஷாக்கு நிலையத்திற்குள் பதுங்கியிருந்த சிவானி எங்களைக் கண்டவுடன் வெளியே வருகின்றாள்.
அவளது முகம் பேயறைந்தாற்போல் இருக்கின்றது. உடலில் நடுக்கம்.
கமலா அவளை ஆவலுடன் அணைக்கின்றாள். சிவானி கதறி அழுகின்றாள். சென்ற வருடம் இராணுவத் தால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தனது அருமை அக்காவை எண்ணி சிவானி அழுகின்றாளோ?
"சிவானி அழாதையம்மா, ஏன் இப்ப என்ன நடந்திட்டுது?"
9/6)1677 gafol முதுகைத் தடவிக் கொடுத்தபடியே சிவானியைத் தேற்றுகின்றாள் கமலா
"கமலாக்கா! என்ரை கமலாக்கா "
தாயின் அரவணைப்பிலுள்ள குழந்தையாய் சிவானி விக்கி
விக்கி அழுகின்றாள்.
கமலாவின் கண்கள் கலங்குகின்றன. "அக்கா வைப் போல் சிவா னிக்கும் ஏதாவது நடந் திருந்தால்?"
கமலாவின் உள்ளம் நடுங்குகின்றது.
"அந்தரங்க சுத்தியுடன் புனிதமான சேவை செய்கின்ற
37

Page 23
வேட்கை
மறைந்திருந்து ஒரு கரம் உங்களை நிச்சயம் காப்பாற்றும்."
அவர்களை விட்டுப் பிரிந்து சென்ற மேலதிகாரி அவர்களது சேவையைப் பாராட்டி இறுதியாகக் கூறிய வார்த்தைகள் கமலாவின் ஞாபகத்தடத்தில் தோன்றுகின்றது. ஆறுதலடைந்த கமலா ஆதூரத்துடன் சிவானியைத் தேற்றுகின்றாள்.
கடற்கரை வீதியில் சென்று கொண்டிருக்கிற கமலாவின் கண்களில், தென்னந்தோப்பில் கவழ்ந்து நிராதரவாய்க் கிடக்கின்ற படகுகள் தென்படுகின்றன.
"இந்தக் கிராமத்திற்கும் இப்படியும் ஒரு நிலையா?" வேதனைப் பெருமூச்சு விடுகின்றாள் கமலா மதுபோதையில் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருக் கின்ற சொலமன் கமலாவைக் கண்டதும் வெலவெலத்துப் போய், சாலை ஒரத்தில் ஒதுங்கி நின்று அவளுக்கு வழி விடுகின்றான்.
கமலா சொலமனைப் பார்த்ததும் பார்க்காதவளாகச் செல்கின்றாள்.
"என்ன மாதிரி உழைத்து தன்னுடைய ஏழு பிள்ளை களையும் மனைவியையும் கெளரவமாய்ப் பார்த்து வந்த மனிசன் இப்ப குடித்து அந்தக் குடும்பமும் சீரழிந்து திரியுதே" சொலமன் குடும்பத்தை நினைத்துக் கமலாவின் இதயம் அழுகின்றது.
"பாவம் அவன்தான் என்ன செய்வான்? சொலமனுக்காக அனுதாபப்படுவதைத் தவிர அவளால் எதைத்தான் செய்யமுடியும் ?
கமலா சேவை செய்கின்ற கிராமங்களிலுள்ள மக்கள் அனைவருக்கும் அவளையும் அவளது சேவையையும் பற்றி நன்கு தெரியும், அவளுக்கு அவர்கள் ஒருவித மரியாதை
38

நீர்வை பொன்னையன்
செலுத்துவதுடன், அவளைக் கெளரவமாக நடத்து கின்றார்கள். பெண்கள் மாத்திரமல்ல, ஆண்களும் சிறுவர்களும், வயோதிபர்கள் அனைவரும் கமலா மீது மட்டற்ற அன்பு செலுத்துகின்றார்கள்.
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை எல்லோரும் கமலாவை மாமி என்று பாசத்துடன் அழைக்கின்றார்கள்.
நிலையங்களிலுள்ள ஒவ்வொரு குழந்தையினதும் பெற்றோர்கள் அவர்களது குடும்ப விபரங்கள் பொருளாதார நிலை பற்றி சகல விபர விசயங்களையும் அவர்களது வீடு களுக்கு அடிக் கடி சென்று, அவர்களுடன் மனம் விட்டுக்கதைத்து, கலந்துரையாடி சேகரித்து வைத்து, இதன் அடிப்படையில் சேவையாற்றுகின்றாள் கமலா
மக்கள் தமது இன்பதுன்பங்களை பிரச்சினைகளை அவளுடன் மனந்திறந்து கதைத்துப் பகிர்ந்து கொள்கின் றார்கள். அவர்களது குடும்பப் பிரச்சினைகள் தங்களுக் குள்ளேயுள்ள பிணக்குகள், சச்சரவுகள் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு அவளை ஆலோசனை கேட்பார்கள். அவள் அவர்களது பல குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து வருகின்றாள்.
குழந்தைகளும், சிறுவர்களும் அவளை சத்துணவு மாமி என்று அன்புடன் அழைக்கின்றார்கள்,
கண்ணுக்கெட்டிய துரத்தில் தெரு ஒரத்தில் குழந்தை ஒன்று நிற்பது அவளுடைய கண்களில் தென்படுகின்றது.
அவளுக்கு சிறு தயக்கம் ۔۔۔۔ குழந்தையை நெருங்குகின்றாள் அவள்
குழந்தையின் ១Buាស៊ வெறும் கோப்பை, ஏக்கத்துடன் கமலாவைப் பார்க்கிறது குழந்தை,
உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய், பாசம் பொங்கிப் பிரவகிக்க குழந்தையை
39

Page 24
வேட்கை
தனது மார் புடன் அனைத் தபடியே நிற்கின்ற மேரி மாதாவையும், வெறும் கோப்பையுடன் தெரு ஓரத்தில் நிற்கின்ற குழந்தையையும் மாறிமாறிப் பார்க்கின்றாள் கமலா
மாதா கோவில் வளவிற்குள் குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். சிறு குழந்தைகளின் கைகளில் வெறும் கோப்பைகள், ! −
தேவாலயத்தின் கிழக்கெல்லைக் கோடியில் போஷாக்கு நிலையம்,
போஷாக்கு நிலையத்திலிருந்து கஞ்சியின் மணமு மில்லை, கலவை மாவின் வாசனையுமில்லை.
அந்த நிலையம் எப்பொழுதுதான் திறக்கப்படுமோ? கமலா தனது நீண்ட தளிர் விரல்களால் குழந்தையின் முதுகை அன்பாக வருடிக் கொடுக்கின்றாள். குழந்தையின் முகம் மலர்கின்றது. அதன் உதடுகளில் சிரிப்பு மின்னொளியாய் மிளிர் கின்றது.
மாதா கோவில் வளவிற்குள் விளையாடிக் கொண்டி ருக்கின்ற குழந்தைகள் எல்லாம் கமலாவைக் கண்டதும் ஆரவாரித்துக்கொண்டு தெருவை நோக்கி சிட்டுக்களாய்ப் பறந்தோடி வருகின்றார்கள்.
குழந்தைகள் அனைவரும் கமலாவைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு ஆனந்தத்துடன் ஆர்ப்பரிக்கின்றார்கள்.
'அஞ்சி மாமி வந்திட்டா' தனது பிஞ்சுக்கரங்களைத் தட்டியபடியே குழந்தை ஒன்று குது கலமாகத் துள்ளிக் குதிக்கின்றது.
'அஞ்சி மாமியல்லடா, கஞ்சி மாமி எண்டு சொல்லடா
கனன்னா"
ஒரு சிறுவன் குழந்தையைத் திருத்துகின்றான்.
40

கமலா முறுவலிக்கின்றாள். குழந்தைக்கு ஒரே ஆனந்தம் அவர்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கின்றனர்.
ہے . . . کار ، ، ، ، ، ۱۱
மாமி நீங்கள் ஏன் எங்களுக்கு கனநாளாய் கஞ்சி தாறேல்லை?"
ஒரு குழந்தை ஏமாற்றம் நிறைந்த குரலில் கேட்கின்றது. "நாங்கள் கலவை மா உருண்டை திண்டு கனநாளாய்ப் போச்சு. ஏன் நீங்கள் தரேல்ல மாமி?"
அவளை நோக்கி ஏக்க பாவத்துடன் கேட்கின்ற குழந்தையின் குரலில் சோர்வு.
I I (8LDrf} மாதாவே இந்த வார்த்தைகளைத் தவிர கமலாவினால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அவளது உள்ளத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பு. கண்கள் பனிக்கின்றன. "மாமி நாங்கள் இனிஒரு நாளும் வீட்டை கஞ்சி கொண்டு (BJTg5LDIT' Lip."
சில குழந்தைகள் ஒரே குரலில் கூறுகின்றனர்.
"நான் சாப்பிட முந்தி சவக்காரம் போட்டுக் கை கழுவிற னான் மாமி"
ஒரு சிறுவன் கூறுகின்றான்.
"கக்காக்குப் போட்டு வந்த பிறகு நான் சவுக்காரம் போட்டு
நல்லாய் உரஞ்சிக் கை கழுவிறனான் மாமி ."
இன்னொருசிறுவன் கூறுகின்றான்.
கமலாவின் உதடுகளில் சிறு முறுவல்
'அம்மா மாற்றை கூட்டங்களிலை நாங்கள் அடிக்கடி சொல்லிற சுகாதாரம் சம்மந்தமான விசயங்கள் வேலை
செய்யத் துவங்கியிருக்குது போலை கிடக்குது l
41

Page 25
வேட்கை
S. இதில் அவளுக்கு ஒருவித மனநிறைவு
"இனி எங்களுக்கு எப்ப கஞ்சி தருவியள் மாமி ஒரு குழந்தை ஆவலுடன் கேட்கின்றது. முருகன் கோயில் மணியின் நாதம் காற்றில் மிதந்து
- வருகின்றது.
It "முருகா '
கூறியபடியே கமலா ரே
க்குகின்றாள் வானத்தை, "எடியே அன்னம், எங்கட கமலாக்கா வந்திட்டாவடி it."
. ஆச்சரியத்துடன் கத்துகின்றாள் 2
- - . . . ஜீவாதான் அந்தப் போஷாக்குநிலையத்திற்குப் ெ
, ܸܟ ݂ - Sri- SLSYS S S S S "எனன எங்கட கமலாக்காவோ? " ஆவலுடன் கேட்டபடியே அன்னலட்சுமி வெளியே ஒடி வருகின்றாள்.
அவரகளுடைய விழிகளில் ջաLL,
ஆரவாரம் கேட்டு தாய்மார்கள் வந்து கூடுகின்றார்கள்.
- ܝ ܪ . . . . . "6Thlegы மாமி, எங்களிட்டை நிச்சயம் வருவ எண்டு எனக்கு நல்லாய்த் தெரியும்."
ஒரு கர்ப்பிணித்தாய நம்பிக்கையுட ன் கூறுகின்றாள்.
"என்ன மாமி எங்களை அடி யோட மறந்திட்டியளே " வேதனையுடன் கேட்கின்றாள் வேறொரு கர்ப்பிணித்தாய்.
. . . . - "சரிநீங்கள் எங்க ஊருக்கு இை க்கஞ்சியும் தரவேண்டாம்.
கலவை மாவும் தரவேண்டாம். நீங்கள் இடைக்கிடை வந்து எங்களைப் பார்த்திருக்கலாமே மாமி
- ன்னொரு தாய் கூறுகின்றாள். "நாங்கள் என்ன தப்புச் செய்தம் மாமி.? இப்ப ஏன் நீங்கள்
இஞ்சை வாறேல்லை'
42
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்வை பொன்னையன்
அவர்களுடைய குரலில் ஏக்கம், வேதனை. "சரி எங்களிட்டைத்தான் வரவேண்டாம். இந்தக் குழந்தை பளையாவது வந்து பார்த்திருக்கலாம் தானே. அதுகள் என்ன குற்றம் செய்ததுகள்?"
மீனாட்சி மனம் வெதும்பிக் கேட்கின்றாள். கமலாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "மாமி ஒவ்வொரு நாளும் சரியாய்ப் பத்து மணியெண்டால் குழந்தைகள் எங்களுக்குத் தெரியாமல் கோப்பையைத் தூக்கிக் கொண்டு உங்கடநிலையத்திற்கு வந்திடுங்கள். பிறகு ஏமாற்றத் தோடை வெறும் கோப்பையையும் கொண்டு வருதுகள்."
மகேஸ்வரி முறையிடுகின்றாள். "அதையேன் கேட் கிறியள் மாமி, ஒவ்வொரு நாளும் இப்படித்தான் செய்யுதுகள், நாங்கள் மறிச்சாலும் கேக்குது களில்லை. அதுகளை என்ன செய்யிறதெண்டு எங்களுக்கே தெரியேலை."
பிலோமினா பிரஸ்தாபிக்கின்றாள். கமலாவினால் இதற்கு ஒன்றும் கூற முடியவில்லை. அவள் மெளனியாய் நிற்கின்றாள். 267760)LDLLIT g5 6), LT6 II BLD6)|T2 "இதற்கு ஒருதரையும் குற்றம் சொல்ல ஏலாது. எங்கட நிலையத்திலை வேலை செய்யிற பெட்டையளிலதான் பிழை." மரியம்மா அடியெடுத்து வைக்கின்றாள்.
"அதுகள் சைவம்' வேதம் எண்டு புடுங்குப்பட்டதாலை
நான் வந்த வினை பிலோமினா வெறுப்புடன் கூறுகின்றாள்.
"அதுகள் சண்டை பிடிச்சா அதுக்காக நிலையத்தை
மூடுகின்றதோ?
சினத்துடன் சிறுகின்றாள் முத்தம்மா.
"ஆர் மூடினது? மாமியா நிலையத்தை மூடினவ? "
43

Page 26
வேட்கை
- . கமலாவின் முகம் கறுக்கின்றது. அவளுடைய உதடுகள்
துடிக்கின்றன. கண்கள் கலங்குகின்றன.
(S
- . . . "எடியே மாமியை ஏன் இதுக்கை இழுக்கிறியள். இவ்வளவு நாளும் அவ எங்களுக்கு செய்த சேவைக்கு சன்மானமா?
- - மகேஸ் இடைமறித்துக் கேட்கின்றாள்.
"அடி ஆத்தே! மாமியை நான் இதுக்கை ஏன் இழுக்கிறன்? உண்மையிலை ー圧yg方 உத்தமிதான் இந்த நிலைக்கு
- - It
ĝD LA_AFTத்தி 6ᏡᎠ6ᎠIᏯᏠ-Ꮿj-6ᎠᎱ.
மரியம்மா மன நிறைவுடன் கூறுகின்றாள்.
- ... , , "இப்ப இந்த நிலையம் மூடினதுக்கு ஆர் பொறுப்பு?" முத்தம்மாவின் கேள்வி
இது அந்த ஜீவாவாலை வந்த வினை."
fi ...)" "ஏன்?
"ஏனா? அவள் தானே நிலையத்துக்குப் பொறுப்பு. சாப்பாட்டுச்சாமான் எல்லாம் அவளின்ரை பொறுப்பிலதானே இருந்தது."
அதுக்கென்ன? "
பிலோமினா வினவுகின்றாள்.
'சாமானுக்குப் பொறுப்பான ஆளிட்டைத்தானே சாமான்
- to வைக்கிற அறைத் திறப்பு இருக்க வேண்டும்?"
மீனாட்சி பொறுப்பை உணர்த்துகின்றாள்.
"ஏன் எங்கட ஆக்களிலை விசுவாசமில்லையோ?"
ஜெனிற்றா விஸ்வாசம் பற்றிக் கூறுகின்றாள்.
"அது வேறை விசயம் சாமான் குறைஞ்சால் ஆர் அதுக்குப் பதில் சொல்லிறது? எதுக்கும் ஒரு ஒழுங்குமுறை இருக்குதல்லவா?
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்வை பொன்னையன்
"எங்கட கோயிலுக்குச் சொந்தமான அறை விசயமாய் முடிவெடுக்கிற உரிமை எங்கடசாமியாருக்குத்தானே இருக்கு" "அது சரிதான். ஆனால் அவர் என்ன சொல்லி அறைத் திறப்பை வாங்கினவர்?"
மகேஸ் கேட்கின்றாள்.
"தேவாலயத்திலை கொடியேற்றி திருவிழா நடக்க யிருந்தது. அதுக்கு வாற சாமியார் தங்க அறை தேவைப்பட்டது. அதுதான் குருவானவர் இடத்தை விடச் சொன்னவர்."
"சரி திருவிழா முடிஞ்சாப்பிறகு திறப்பை திருப்பிக் கொடுத் திருக்கலாமே?"
முத்தம்மாவின் கேள்வி இது.
"வேறை மதத்தைச் சேர்ந்த ஆளுக்கு எங்கடை மாதா கோயிலுக்குச் சொந்தமான அறைத் திறப்பை வைத்திருக்க என்ன உரிமைஇருக்கு? பங்குத்தந்தை அதுக்கு எப்பிடி உடன்
ஜெனிற்றாவின் உரிமை பற்றிய பேச்சு முத்தம்மாவுக்குச் சினமூட்டுகின்றது.
"வேறை மதத்தைச் சேர்ந்தவர்களும் மனிதர் தானே.
முத்தம்மா விட்டுக்கொடுக்காமல் கேட்கின்றாள்.
ஜெனிற்றா அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரிய ൺങ്ങാണ്ഡ്,
"ஏன் உங்கடை ஆக்கள் என்ன செய்தவை'
"உங்கடை முருகன் கோயிலுக்குப் பக்கத்திலை
போட்டினையே"
45

Page 27
வேட்கை
மரீனா விரக்தியுடன் சொன்னாள். "அது முருகன் கோயிலிலை கும் பாபிஷேகம் நடக்கேக்கை ஆக்கள் தங்கிறதுக்கும் இடம் தேவைதானே? அதுக்குத்தான் அந்தக் கொட்டிலை மறிச்சவை"
மீனாட்சியின் ஞாயம் இது. அது சும்மா சாட்டு, அதுக்கை வேறை விசயமிருக்கு. நான் புட்டுக்காட்டட்டோ?
பிலோமினா புதிர் போடுகின்றாள். "இதுக்கை என்ன புட்டுக் காட்டக் கிடக்கு? எங்கடை கோயிலை கிடக்கிற கொட்டிலுக்கைப் போஷாக்கு நிலையம் நடத்தினா கண்ட நிண்ட சாதியள் எல்லாம் வந்து கொட்டிலு க்கை இருப்பினை, பிறகு குறைஞ்ச சாதிக்காரர் எங்கடை கோயிலுக்கை உள்ளடுவினை. உதுகள் எல்லாத்துக்கும் நாங்கள் இடங் குடுப்போமே? "
பெருமையுடன் கூறுகின்றாள் மகேஸ். எல்லோருக்கும் வியப்பு. பிலோமினாவுக்கு ஆத்திரம், "ஏன் உங்கடை சாதி உயர்ந்ததோ? குறைஞ்ச சாதி யளுக்கை உங்கடை சாதியும் ஒண்டுதானே?"
பிலோமினா கொதிப்புடன் கேட்கின்றாள். அதிர்ச்சியுடன் எல்லோரும் பிலோமினாவைப் பார்க்கின்றனர்.
"உங்கடை தேவாலயக் கொடியேத்தத் தாலையும், முருகன் கோயில் கும்பாபிஷேகத் தாலையும் எங்கடை குழந்தையளின்ரை வாயிலை மண்ணைப் போட்டியளே"
இவ்வளவு நேரமும் பேசாமல் இருந்த செல்லம்மா வயிற்றெரிச்சலுடன் கூறுகின்றாள்.
"நீங்கள் ஏன் வீணாய்ச் சச்சரவுப்படுறியள்? நடந்தது நடந்து போச்சு. இனி நடக்க வேண்டியதைப் பாப்போம்."
46

நீர்வை பொன்னையன்
கமலா இடைமறித்துக்கூறுகின்றாள்.
"இனி என்ன மாமி பார்க்கக் கிடக்கு இரண்டு பகுதியும் சேர்ந்து எல்லாற்ரை வாயிலையும் மண்ணைப் போட்டிட்டின"
. - - - - மீண்டும் வலியுறுத்திக்கூறுகின்றாள் செல்லம்மா.
, - -
"ஏன் வீணாய் குழப்பமடையிறியள். இனி எல்லாம் FIf வரும்,
நிதானமாகக் கூறுகின்றாள் கமலா
"என்ன சொல்லிறியள் மாமி, எங்களுக்கொண்டும் பு
ഞഥെ' மீனாட்சி கேட்கின்றாள்.
- 言、 - எல்லோரும் கேள்விக் குறியுடன் Đ105UT 596)IL
- - பார்க்கின்றனர்.
"நிலையம் நிச்சயம் நடக்கும். "
அவளுடைய வார்த்தைகளில் உறுதி
. . . சிலருக்கு இதை நமப (!pg|Lഖിഞ്ഞൺ.
|
- . "எனக்குஅப்பவே தெரியும். எங் ഞL LDTL5) JilpLOT 6)ITT .. வெண்டு -
I
"மூடின நிலையத்தை எப்படித் திறக்கிறது
- - - சிலரது உள்ளத்தில் கேள்விக்குறி.
திறக்கிறதுக்கு ஏற்பாடு செய்யிறம்"
- கமலா அமைதியாகக் கூ றுகின்றாள்.
"அதுக் கை எப்பிடி நடத்தேலும் ? அங்கை LITour பாடசாலை நடக்குதே'
- - "உணவு சமைத்து எல்லாரும் வசதியாயிருந்து சாப்பிடு 195כשעלCD ஒரு DIT I 19 ou (čl. IT t (b2) 25 Tb5)||60601.
"அப்ப சாமான் எங்கை வைக்கிறது"
- - -
"அந்த வாசிகசாலை அறையுக் கைத்தான், அறைத்
V
47

Page 28
வேட்கை
திறப்பைத் தாறன் எண்டு சொல்லியிருக்கினை."
"பொதுச்சேவையெண்டால் இப்படியெல்லோ இருக்க வேனும்." திருப்தியுடன் கூறுகின்றனர் சிலர்.
"வாற முதலாம் திகதி உங்கடை நிலையத்தை அங்கை நிச்சயம் திறப்பம்."
எல்லோருடைய முகங்களிலும் மலர்ச்சி. சிறுவர்களும், குழந்தைகளும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.
உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய், பாசம் பொங்கிப் பிரவகிக்க, கண்களில் கருணை ஒளி வீச, குழந்தையைத் தனது மார்புடன் அணைத்த படியே தியாகத்தின் சின்னமாய் நிற்கின்றாள் மேரிமாதா.
"சரி நான் போட்டு வாறன்."
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கமலா வேம்படி சனசமூக நிலையத்தை நோக்கி வேகமாய்ச் செல்கின்றாள். அவளை எல்லோரும் மனதுள் வாழ்த்தி வழியனுப்பி வைக்கின்றனர்.
அவள் செல்கின்ற திசையை நோக்கி எல்லோரும் பார்த்தபடியே நிற்கின்றனர்.
முருகன் கோயில் மணியின் நாதம் காற்றில் மிதந்து வருகின்றது. -
இதயத்தில் இருந்து ஒரு பாரிய சுமை இறங்கியது போன்ற உணர்வு அவளுக்கு.
வானத்தை நோக்குகின்றாள் கமலா நீலவானத்தில் கூட்டம் கூட்டமாய்க் கடல்ப்பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன. -
O
1993
48

அன்னை அழைக்கின்றாள்
வான மண்டலத்தில் நிலைகுலைந்த எரிநட்சத்திரம் போல எதிர்பாராமலே அவன் முன் வந்து நிற்கின்றாள் அவள்.
அவனுக்குப் பேரதிர்ச்சி! வெறுப்பும் வேதனையும் கலந்த கோபாவேசத் தீ அவனுள்ளத்தில் சீறியெழுகின்றது. கண்கள் எரிதணலாகின்றன. அவளை அவன் வெறித்துப் பார்க்கின்றான்.
அவளுடைய முகத்தில் பீதி, சப்த நாடிகளும் ஒடுங்கித் தலை குனிந்தபடியே நிற்கின்றாள் அவள். அவளது நிலை பரிதாபகரமாய் இருக்கின்றது. கணப் பொழுதில் அவன் தன்னுணர்வு பெறுகின்றான். அவள் மேல் அவனுக்கு அனுதாபம் D றக்கின்றது.
"பாவம், அவள் தான் என்ன செய்வாள்?" தனக்குத்தானே கூறிக்கொள்கின்றான். நிதானத்திற்கு வந்த அவன், அவளைப் பரிவுடன் நோக்குகின்றான். "ஏன் நின்றுகொண்டிருக்கின்றாய்? உட்கார்வது தானே? கனிவுடன் கூறுகின்றான்.
அவள் தயங்கித் தயங்கி உட்காருகின்றாள். அவனை விழுங்கிவிடுவது போல தாபத்துடன் பார்த்துக் கொண்டி ருக்கின்றன அவளது விழிகள்.
முப்பது வருடங்களாக அவனைக் கணப்பொழுதாவது பார்க்க வேண்டுமென்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தன வல்லவா அவ்விழிகள்.
இருவரும் மெளனமாய் இருக்கின்றனர். அவளை அவன் வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
49

Page 29
வேட்கை
அவளது அடர்ந்த சுருண்ட கூந்தலில் இடையிடையே வெள்ளிக்கம்பிகளாய் மயிர்கள் தெரிகின்றன. இரட்டை நாடித் தேகம், உடற்கட்டில் மெல்லிய தொய்வு உடையில் எளிமை, அன்று போல் அவள் செல்வச் செழிப்புள்ளவளாக இருந்தும், தங்க நகைகள் மிகக் குறைவாகவே அணிந்திருக்கின்றாள். அவளது மோகனத் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க எதுவித மாற்றத்தையும் அவனால் கண்டு கொள்ள முடியவில்லை.
அதே மருட்சி பொங்கும் விழிகள். அவற்றில் ஆழம் காண முடியாத சோக நிழல் படர்ந்த ஏக்கம், முதல் நாளைய பிரயாணக் களைப் பின் சோர்வு அவளில் தெரிகிறது. அவளுடைய பிறை நெற்றியின் இடது புறத்திலுள்ள அந்த வடு. அவனது மனம் அலைகின்றது. அவள் சிறுமியாயிருந்த பொழுது அவனால் தான் இந்த வடு ஏற்பட்டது. ஜன்னலுடாக அவனது பார்வை வெளியே செல்கின்றது.
எண்ணற்ற கரங்கள் வானத்தை எட்டிப்பிடிக்க முயல்வது
போல தனது கொப்புகளையும் கிளைகளையும் பரப்பி கிளைத்துச் சடைத்து அடர்த்தியாக வளர்ந்தோங்கி மதர்த்து மரகத மலையாய் நிற்கின்றது ஒரு வேப்பமரம்.
அன்று அவளும் பருவம் பொங்கிப் பூரித்து மதர்த்து மரகத மோகினியாய் இருந்தாள்.
அவனது நினைவுச் சுழல் விரிகின்றது.
மண் விளையாடும் பருவத்தில் அவனும் அவளும் தினமும் இதே வேப்பமரத்தின் நிழலில் மணிக்கணக்காக விளையாடு வார்கள்.
வேப்பமரம் கன்னிப் பருவத்து வண்ணக் குமரிபோல் விடலையாயிருந்த போது சித்திரைப் புதுவருடப் பிறப்பு கொண்டாட்டக் காலங்களில் அந்த மரத்தின் கொப்பில் அன்ன ஊஞ்சல் கட்டி அவனும் அவளும் அப்பகுதியிலுள்ள பிள்ளை களும் சேர்ந்து மாதக் கணக்காக ஊஞ்சலாடி மகிழ்ந்து
5O

நீர்வை பொன்னையன்
குலாவியது அவனது ஞாபகச் சுவட்டில் தோன்றிப் படர் கின்றது.
ஒருநாள் அவள் அந்த அன்ன ஊஞ்சலில் தாவி
ஏறுகின்றாள். அவன் குறும்புத்தனமாக திடீரென ஊஞ்சலை ஆட்டுகின்றான். அவள் நிலை தடுமாறி விழுகின்றாள். அவளது நெற்றியின் இடது பக்கத்திலிருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்கின்றது. இதனால் ஏற்பட்ட அந்த வடு அவர்களது பால்ய பருவத்தின் நினைவுச் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கின்றது.
அவள் பருவமடைந்த பின்னர் கூட அவளும், அவனும் வேப்பமரத்தின் கீழ் மாலைவேளைகளிலும் நிலாக் காலங்களிலும் நீண்ட நேரம் தங்களது எதிர்கால வாழ்க்கை பற்றி மனக் கோலம் வரைந்து மெய்மறந்திருப்பார்கள். அவர்களது இதயங்களில் தினம் தினம் எண்ணற்ற புதுப்புது இன்பக் கனவுகள் தோன்றி தவழ்கின்றன.
அவர்களது பெற்றோர்கள் இதை பெரிதும் பொருட் படுத்துவதில்லை. ஏனென்றால் அவர்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.
காலப்போக்கில் இதே வேப்பமரத்தின் கீழ் அவர்களது இதயங்களில் தூய்மையான கன்னி உறவு அரும்பி மொட்டாகி மலர்ந்து எழிலுடன் மிளிர்கின்றது. இந்த உறவில் அவர்களது ஆத்மாக்கள் சுயதன்மையிழந்து இரண்டறக் கலந்து சங்கமிக்கின்றன. இச்சங்கமத்தில் ஜனித்த ஜீவநாதம் பிரபஞ்சத்தில் பிரவேசித்து வியாபித்து எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றது. ஒன்றாக இணைந்த அவர்களது ஆத்மாக்கள் வண்ணச் சிறகடித்து விண்ணில் மிதந்து உலாவி லயித்திருக்கின்றன.
பிணந்தின்னி அரசின் இரும்புக் கழுகு ஒன்றின் இரைச்சல் திடீரெனக் கேட்கின்றது. அவன் விழிப்படைகின்றான். அவள் பதறுகின்றாள்.
51

Page 30
வேட்கை
"இது ஹெலியின் இரைச்சல், இந்த ஹெலி வழமையாய் பலாலிக்கு இதாலைதான் போய்வாறது. சும்மா நாளையிலை பயப்படத் தேவையில்லை". அவன் அவளைத் தேற்றுகின்றான். அவள் அமைதியடைகின்றாள். அவனது பார்வை மீண்டும் வேப்பமரத்தை நாடுகின்றது. முன்பிருந்த அதே வேப்பமரமா இது?
அவனுக்கே தடுமாற்றம், அவன் தினமும் இந்த வேப்ப மரத்தைப் பார்த்திருக்கின்றான்.
ஆனால் இன்று என்றுமில்லாதவாறு இந்த வேப்பமரத்தைப் பார்த்த அவனது மனம் ஆத்மவிசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றது. இந்த வேப்பமரம் இவ்வளவு செழிப்பாக, அடர்த்தியாகக் கிளைத்துச் சடைத்து உருண்டு திரண்டு வளர்த்தோங்கி யிருக்கிறது என்பது அவனது கவனத்தில் புலப்படவில்லை.
ஏன் கோகிலாகூட எவ்வளவு முதிர்ச்சியடைந்து விட்டாள். அவளது சிந்தனையிலும் செயலிலும் எவ்வளவு மாற்றமேற்பட்டுள்ளது என்பது அவனுக்கு எங்கே புரியப் போகின்றது. அவளது உடல் சற்று பருத்துவிட்டதுதான். அதில் அன்றிருந்த ஒயிலும் நளினமும் மெருகும் இன்றுகூட எள்ளளவும் குறையவேயில்லை. அதில் அதே இளமைத் துடிப்பு. ஆனால் இன்று அந்தியில் தோன்றும் துன்ப நிலவின் சாயல் நிழலாடுகின்றது.
விசும்பும் சத்தம் கேட்கின்றது. தன்னை சுதாகரித்துக் கொள்ளுகிறான் அவன். சுயநிலைக்கு வந்த அவன் அவள் பக்கம் பார்வையைத் திருப்புகின்றான்.
அவளது விழிகளில் கண்ணி வழிந்து கொண்டிருக் கின்றது.
வாலிப வனப்புடன் இருந்த அவனது வாளிப்பான உடல் சிதைந்து சீரழிந்துவிட்டது. உருக்குலைந்த அவனது தோற்றத்தைப் பார்த்து, தன்னால்தான் அவனுக்கு இக்கதி
52

நீர்வை பொன்னையன்
ஏற்பட்டது என்று வருந்திக் கண்ணி விடுகின்றாளா? அல்லது தனது அன்புக் கினியவனுடன் தான் வாழக் கொடுத்து வைக்கவில்லையேயென்று பொருமி அழுகின்றாளா?
'கோகிலா உனக்கென்ன நடந்தது? ஏன் அழுகின்றாய்?" "என்னால்தானே உங்களுக்கிந்தக் கதி நேர்ந்தது" குற்ற உணர்வுடன் கூறுகின்றாள்.
"ஏன்? எனக்கென்ன குறைச்சல்?" "உங்கள் உடல். நீங்கள் ஏன் உங்களை இப்படி அழித்துக் கொண்டிருக்கின்றீர்கள்"
"எனது உடலுக்கென்ன?" "பார்த்தால் தெரியுதே என்ன மாதிரி வாட்ட சாட்டமாயிருந்த உடம்பு இப்படி எலும்பும் தோலுமாய் இளைச்சுப் போச்சே, ஏன் ஊண் உறக்கமில்லாமல், ஒய்வொழிச்சல் இல்லாமல் நாடோடியாய் அலைஞ்சு திரியிறியள்?"
"உனக்கெப்படித் தெரியும்? நேற்றுத்தானே நீ இஞ்சை வந்தனி"
"என்னைப் பார்க்க வந்த ஆட்களிட்டை உங்களைப்பற்றி விசாரிச் சனான், அவையிலை சிலபேர் என்னாலைதான் உங்களுக்கிந்த நிலை வந்த தெண்டு பட்டும் படாமலும்
"வந்ததும் வராததுமாய் என்னைப்பற்றி விசாரணையில் இறங்கிட்டியே? என்னிலை அவ்வளவு கரிசனையே?"
"ஏன் நான் விசாரிச்சால் என்னவாம்? எனக்கு உரிமை 17660)6(31 2" -
"நான் சும்மாவா சுத்தித் திரியிறன் என்ர வேலையைப் பற்றி எனக்கல்லவோ தெரியும், அதிலை எனக்குக் கிடைக்கிற திருப்தி, மனநிம்மதி மற்றவைக்கெப்படித் தெரியும்? எனக்குத் தான் அது தெரியும்"
53

Page 31
வேட்கை
"நீங்கள் நிம்மதியாய் சந்தோஷமாய் இருக்கிறியள் எண்டு என்மேல் ஆணையாய் சத்தியம் செய்யுங்கோ பார்ப்பம்."
உணர்ச்சிமயமாய்க் கேட்கின்றாள். 'கோகிலா உண்மையைச் சொல்றதுக்கு என்ன சத்தியம் வேண்டிக் கிடக்கு உத்தியோகம், சொத்து, காசு பணம் இருந்தால்தான் வாழ்க்கை சந்தோஷமாயிருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறியள். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பார்க் கின்றவை ஒண்டும் என்னட்டை இல்லைத்தான். ஆனால் நான் உண்மையாய் மனத்திருப்தியோடை சந்தோஷமாய்த்தான் வாழ்கிறன்."
"அதெப்படி? உங்களிட்டை என்ன கிடக்கு?" அவள் ஒன்றும் புரியாமல் அவனைக் கேட்கின்றாள்.
"நான் எந்த மக்களோடை சேர்ந்து வாழ்கிறேனோ அவர்கள்தான் என்ர சொத்து. நான் அவையின்ரை சொத்து!" அழுத்திக் கூறுகின்றான்.
எங்கோ குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கின்றது. கோகிலா பயப்பீதியடைவதை அவன் அவதானிக்கிறான். "கடலிலை யிருந்து பீரங்கியடிக்கிறார்கள் நேவிக்காரர்"
"ஏன்?" "கரையிலையிருக்கிற மக்களுக்குப் பயம் காட்டி கலைக் கிறதுக்குத்தான் இந்தப் பீரங்கியடி. ஆனால் ஆயிரக் கணக்கான மீன்பிடித்தொழிலாளரின்ரை வயித்திலை வரியக் கணக்காய் நெருப்புத்தான்." அவனுடைய வார்த்தைகளில் சூடேறுகின்றது. தீட்சண்யம் நிறைந்த தனன் தள் கனலாகின்றன.
கோகிலாவின் சகோதரி இரண்டு தம்ளர்களில் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டு அவர்களைப் பார்த்தபடியே நிற்கின்றாள்.
அவன் அவைகளைப் பார்க்கின்றான்.
54

நீர்வை பொன்னையன்
"தேத் தண்ணியைக் குடியுங் கோவன்" அவளுடைய
சகோதரி கூறுகின்றாள்.
அவன் தேநீரை எடுக்கவில்லை.
"எங்கடை செல்வம் தேத் தண்ணி குடிக்கிறதல்லை பெண்டு உனக்குத் தெரியாதே?"
உரிமை தொனிக்கும் குரலில் சகோதரியைக் கேட்கின் றாள் கோகிலா.
இவ்வளவு நீண்ட காலத்துக்குப் பிறகும் இந்த சின்ன விசயத்தைக்கூட ஞாபகத்திலை அவள் வைத்திருக்கிறாள் என்பதைக் கண்ட அவனுடைய உள்ளம் பூரித்துச் சிலிர்க் கின்றது. கண்கள் பனிக்கின்றன.
"நான் திர மறந்து போனன். இதோ ஒரு நொடியிலை வாறன்" விர்ரென அவள் அவ்விடத்தை விட்டகல்கின்றாள்.
மீண்டும் வெடிகுண்டுச்சத்தம் இடிமுழுக்கமாய் தொடர்ச்சி
யாய் கேட்கின்றது.
"அங் கை வீடுகளை ஆயிரக் கணக்கிலை கட்டிக்
குடுக்கிறாங்கள். இங்கை இருக்கிற ஆயிரக் கணக்கான
வீடுகளை குண்டு வைச்சுத் தகர்க்கிறாங்கள்." வெறுப்புடன்
கூறுகின்றான்.
செல்வராஜ் எலுமிச்சம் பழரசத்தை சுவைத்துக் குடித்துக்
கொண்டிருக்கின்றான். அவனது சிந்தனை எங்கோ சென்று கொண்டிருக்கின்றது.
"செல்வம் என்னை நீங்கள் இந்த முப்பது வரியத்தில எப்பவாவது நினைச்சதுண்டா? " அவளது குரலில் அன்றிருந்த அதே குழைவு.
'கோகிலா நான் உன்னை மறந்தாலல்லவோ நினைக்
கிறதுக்கு என்றைக்கும் நீ என்னுடன்தானே இருக்கிறாய்."
கோகிலாவின் இதயம் விம்முகின்றது. கண்கள் குள
55

Page 32
வேட்கை
மாகின்றன. அவனுடைய காலில் விழுந்து கதறி அழவேண்டும் போலிக்கிறது அவளுக்கு.
அவள் சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றாள். சேலைத்தலைப்பால் தனது கண்களைத் துடைக்கின்றாள்.
அவளது இதயத்தின் ஆழத்தில் நெடுங்காலமாக நெருடிக் கொண்டிருந்த முள்ளொன்று அகற்றப்பட்டு விட்டதென்ற உணர்வினால் ஏற்பட்ட ஆனந்தமய லயிப்பு அவளுக்கு.
"செல்வம், நீங்கள் கொஞ்ச நாளைக்கு எங்களோட வந்து இருங்கோவன்" என்ன கேட்கிறேன் என்று தெரியாமல் தன்னை மறந்த நிலையில் அவனைக் கேட்கின்றாள்.
"என்ன உங்களுடன் வருவதா?" வியப்புடன் பார்த்து அவளைக் கேட்கின்றான்.
"ஒம் செல்வம்! எங்களோட வந்திருந்தால் ஒய்வெடுத்து உடம்பைத் தேற்றலாம். வாறியளே? " கெஞ்சிக் கேட்கின்றாள் அவள்,
"சரி நான் வாறதெண்டு வைச்சுக் கொள்ளுவம், ஆனால் ஒண்டு. ' அவன் இழுக்கின்றான்.
வியப்பில் அவளது விழிகள் விரிகின்றன. "என்ன? என்னெண்டு சொல்லுங்கோ செல்வம்? " அவள் அவசரப்படுகின்றாள்.
"என்ரை சொத்து? " அவன் புதிர் போடுகின்றானா? "செல்வம் நீங்கள் என்ன கதைக்கிறியள்? உங்களிட்டை எங்கை சொத்துக் கிடக்கு? நீங்கள் வெறும் தனிக்கட்டை தானே? " ஒன்றும் புரியாமல் அவள் தடுமாறிக் கேட்கின்றாள். "முதலே நான் சொன்னனே, மக்கள்தான் என்ரை செல்வ மெண்டு. அதை அழிய விட்டிட்டு நாங்கள் என்னண்டு வெளி நாட்டுக்குத் தப்பி ஒடுறது?"
56

நீர்வை பொன்னையன்
அவளுடைய முகம் கறுக்கிறது. ஏமாற்றம் விம்மலாக வெளிவருகின்றது.
'கோகிலா நேரத்தோடைநாங்கள் போட்டி போடுறம், மூச்சு விடக்கூட நேரமில்லை. இந்த நெருக்கடியான நேரத்திலை எங்கடை நாட்டை விட்டிட்டு நாங்கள் தப்பி ஒடுறதே? இது நடக்கக் கூடிய காரியமே?"
அவளுக்கு குழப்பமாய் இருக்கின்றது. "செல்வம், உங்களோடை சேர்ந்து வாழ நான் குடுத்து வைக்காட்டியும் எங்களோடை நீங்கள் வந்து தங்கினால் எனக்கு மனம் சாந்தியடையும், உங்கட உடம்பும் தேறும், பிறகு நீங்கள் இஞ்சை திரும்பி வந்து நல்லாய் வேலை செய்யலாம். என்ன வாறியளே செல்வம்?" மீண்டும் அவள் மன்றாடுகின்றாள். "இதை மாத்திரம் கேளாதே கோகிலா என்னாலை வர முடியாது. நீ வேற ஏதாவது கேள். நான் செய்யிறன், நான் வரேலாதெண்டால் வரேலாதுதான்." அவனது வார்த்தைகளில் உறுதி, கடுகடுப்பு.
"இனி உங்களிட்டை என்னாலை எதைக் கேக்கேலும்? ஆனால் ஒண்டை மட்டும் உணருறன் செல்வம்."
"என்னத்தை உணர்கின்றாய் கோகிலா? " "என்னட்டை ஏராளம் சொத்திருக்கு, கணவன், பிள்ளைகள், சொந்தக் காறர்கள் எல்லாருமிருக்கினை. ஒண்டுக்கும் குறைச்சல் இல்லை. ஆனால் எல்லாம் இருந்தென்ன? நான் ஒன்றுமேயில்லாத அநாதைபோலத்தானே இருக்கிறேன். என்ரை வாழ்க்கை என்றுமே வறட்சியும் வெறுமையும் தான் செல்வம்." மனக் கசப்பும் விரக்தியும் நிறைந்த வேதனையுடன் கூறுகின்றாள் அவள்
"இதுக்கு என்னாலை என்ன செய்ய முடியும் கோகிலா?
"உங்களாலை ஒண்டும் செய்யேலாதுதான். அது காலம் கடந்து போச்சு, உங்களிட்டை ஒன்றுமேயில்லை. ஆனால்
57

Page 33
நீங்கள் எல்லாம் உள்ளவராக, நிம்மதியாய், சந்தோஷமாய்
' ' '
6) Jff றிெயள் 6f 60LD60)gb இண்டைக்குத்தான் நான உணருறன.
அதுவே எனக்குப்போதும்."
് -
- அவள் மன நிறைவுடன் கூறுகின்றாள்.
. | || ി.
திடீரெ 60T ஏதோஅழைப்பு வந்ததை உணர்ந்தவன் போல புறப்படுவதற்கு அவன் எழுகின்றான்.
'கோகிலா, எனக்கு நேரமாச்சு. ഋ1ങ്ങക 61601ഞ] ജൂ!,556T
. . . . - - என்னைப் பார்த்துக் கொண்டிருப்பினை சரி நான் போட்டு
வாறன்" கூறிக்கொண்டே அவன் புறப்படுகின்றான்.
தன்னை இழந்தவளாக , , , . பார்த்தபடியே நிற்
வெளியே வந்த அவனது உடலி காற்று தவழ்கின்றது.
அவன் வேப்பமரத்தைப் - , . . . . . ... ஏழெட்டு ஆடு மாடுகள் படுத்திருந்தபடியே அசை வெட்டிக் கொண்டிருக்கின்றன. .
29Iكى
ல் குழு
பார்க் ன்றான்.வேப்ப மரநிழலில்
- - மறுபுறம் பார்க்கின்றான். ir *で
மறந்து, ஆனந்த மயமாய் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
.
இதயச் சுமை இறங்கியவனாய் காற்றில் மிதந்து செல்லும்
,
- - உணர்வுடன் தன் தோழர்களைச் சந்திப்பதற்கு அவன்
வேகமாய்ச் சென்று கொண்டிருக்கின்றான்.
குழந்தைகள் சில தங்களை மறந்து, இந்த உலகையே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாகத் தெரிகின்றன
്
நகரத்தின் நாற்புறமும் மெளனத்
S S S ് " .
நக்கின்ற அந்தக் கட்டிடங்கள் பென்னம் பெரிய கரும்
ہر مہندسہ (عربی: , رQہر
F5, c5 660 2 Ꭷ6ᎠfᎢ ᎭᏞ1 LᏧᏓ1 1600Ꭲ
Il | T LI
o ز s : • II ல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கம்பீரமாய்
SMSMSMSMSMSMSMSMSMSMSMSMSZ ற்கின்றன. நாம வானளாவ உயாந IFI 35
. - .. . ,
நிற்கின்றோம் என்ற னைப்பில் 95LDLIIT6)/(UDLD
. . :
கொண்டுவிட்டவை
' )
நகரத்திற்குள் பிரவேசிக்கும் பெ
பொழுது பென்னம் பெரிய IUPOLIT வயிற்றுக்கு நுழைவது மாதிரி இருக்கின்றது அந்த வயிறு பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் ஜி சக்தியை காலாதிகாலமாக உறிஞ்சி
வடகோடியில் துை

Page 34
வேட்கை
அண்டினாற் போல புகையிரத நிலையம், அது மரணச் சடங்கு முடிந்தபின் வெறிச்சோடிக் கிடக்கும் இழவு வீட்டைப்போல் மயான அமைதியுடனிருக்கின்றது.
புகையிரத நிலைய அதிகாரி துங்கி விழுந்து கொண்டி ருக்கின்றார்.
ரோந்து சுற்றிக் கொண்டிருக்கின்ற பொலீஸ்காரனின் பூட்ஸ் ஒலி அமைதி நிலவுகின்ற பின்னிரவில் அச்சமூட்டுவதாக இருக்கின்றது.
"இந்தக் கடுங்குளிர் இரவிலை நல்லாய் குடிச்சுப்போட்டு வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு, குசாலாய் தூங்கிக் கொண்டிருப்பான் எங்கட மேலதிகாரி, எங்களைப் போலை சாதாரண பொலீஸ்காரர்தான் அரைகுறை வயித் தோடை நித்திரையுமில்லாமல் இரவிரவாய் நாய் மாதிரி ரோந்து சுத்தித் திரியிறம், அப்படியிருந்தும், எந்த நேரமும் எரிஞ்சு விழுந்து, எங்களைத் திட்டித் துலையிறான். லிவு கேட்டாலும் தாறா னில்லை. என்ன கடைகெட்ட நாய்ச் சீவியம்."
வேதனையுடன் தன்னுள் தானே மறுகிக் கொள்கின்றான் அந்தப் பொலிஸ்காரன்.
தனது மன உளைச்சலையும் விரக்தியையும் அடி, உதைகள் கொடுத்து வெளிப்படுத்துவதற்கு ஒரு மனிதன் தானும் அகப்படவில்லையே என்ற எரிச்சலில் தூங்கிக் கொண்டிருக்கின்ற தெருநாய் ஒன்றை தனது பூட்ஸ் காலால் ஓங்கி உதைக்கின்றான் பொலிஸ்காரன்,
மரண ஒலம் எழுப்பிக் கொண்டு ஓடுகின்றது தெரு நாய். புகையிரத அதிகாரி திடுக்குற்று விழிக்கின்றார். அவரது முகத்தில் பீதி, இதைக் கண்ட பொலிஸ்காரனுக்கு ஒருவித திருப்தி அவன் தனக்குள் சிரிக்கின்றான்.
பொலிஸ்காரனுடைய பூட்ஸ் ஒலி அழிந்து செல்கின்றது. புகையிரத நிலையத்திலிருந்து கல்லெறி துரத்தில் பஸ் Bിഞണ്ഡIII).
6O

வை பொன்னையன்
ஜன சமுத்திரம் அலைமோதிக் கொண்டிருக்கின்ற பஸ் நிலையம். இப்பொழுது ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி மரண நிழல் படர்ந்திருப்பது போலத் தோன்றுகிறது.
பஸ் நிலையத்தின் மேற்குப்புறத்தில் நாற்சந்தி, சந்தியின் வடமேற்கு மூலையில் சடை விரித்து நிற்கின்றது ஒரு பிரமாண்டமான அரசமரம்,
மின்னொளியில் அரச இலைகள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன.
அரச மரத்தின் கீழ் ஒரு புத்தர் சிலை.
சாந்தமே உருவான புத்தர் பெருமான் கண்மூடி மெளனத் தியானத்திலிருக்கின்றார்.
கையில் கொக் கோக்கோலாப் போத்தல் ஒன்றைப் பிடித்துக் கொண்டு அரை நிர்வாண கோலத்தில் நிற்கின்றாள் ஒரு இள மங்கை,
தெரு ஒரமாக நாட்டப்பட்டிருக்கின்ற பிரமாண்டமான கொக் கோக் கோலா விளம்பரப்பலகையிலுள்ள அந்த சிக்காக்கோ பாணி மங்கை பஸ் நிலையத்திற்கு வந்து போகின்ற மனிதர்களை கவரக்கூடிய வகையில் வர்ணக்
லவைகளில் திட்டப்பட்டிருக்கின்றாள்.
இப்போ இங்கு கொக்கோக்கோலா யுகம்தானே? நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. விடிவெள்ளி பூக்கின்றது.
வானத்தின் அடிவயிறு குங்குமமாகின்றது.
புதுயுக மலர்ச்சியின் சின்னமா அந்த இரத்தச் சிவப்பு? நிலம் வெளிறிக் கொண்டிருக்கின்றது. -
மின்னொளி மங்கிக் களையிழக்கின்றது. உல்லாசப் பயண ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு மனித மிருகம் ஒன்றிற்கு தனது உடலை விற்றுவிட்டு சோர்ந்து போய் வெளியே வருகின்றாள் ஒரு பெண்.
6

Page 35
வேட்கை
ஹோட்டல் வாசலில் நிற்கின்ற டாக்ஸி ஒன்று அவளைச் சுமந்து கொண்டு பஸ்நிலையத்திற்கு வருகின்றது.
டாக்ஸிக்காரனுக்குக் கட்டணத்தைக் கொடுத்துவிட்டு தனது வீட்டிற்குச் செல்வதற்கு பஸ்ஸிற்கு வந்து நிற்கின்றாள் அந்தப் பெண். -
செயற்கை அழகு அரைகுறையாகக் கலைந்து, கடந்த ஐந்தாண்டு காலத்துக்கிடையில் அவளது இளமையில் ஏற்பட்ட முதுமை வெளியே எட்டிப் பார்க்கின்றது. இயற்கை அன்னை சிரிக்கின்றாள். நகரம் விழிக்கின்றது. மக்கள் அலை பெருக்கெடுக் கின்றது. மனிதனின் மகோன்னதத் தன்மை பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கின்றது.
செத்துக் கிட்ந்த நகரத்தில் மீண்டும் உயிர்த் துடிப்பு நகரத்தின் நாலா புறங்களிலுமிருந்து வருகின்ற தெருக் களில் மக்கள் ஜீவநதிகளாய்ப் பெருகி வந்து கொண்டிருக் கின்றார்கள்.
மக்கள் மத்தியில் ஒருவித வேகம், அவசரம், அவர்கள் முகங்களில் எதுவித சலனமும் தென்படவில்லை. ஏகபோக முதலாளித்துவ சுரண்டல் பெருச்சாளிகளின் பேராசை வெறிக்கு, தாங்கள் தீனியாகின்றோம் என்ற பிரக்ஞை இல்லை அந்த உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய முகங்களில் ஒருவித ஏக்கம்,
கண்ணுக்குப் புலப்படாத, புரிந்து கொள்ள முடியாத ஒரு தீய சக்தி அந்த உழைப்பாளி மக்களுக்கு அச்சத்தையும், பீதியையும் ஊட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகின்றது. புகையிரதங்கள், பஸ்கள், மோட்டார்கள் எல்லாம் இரைந்து கொண்டு போவதும் வருவதுமாயிருக்கின்றன. அவற்றில் ஒருவித வேகம், இழந்து விட்ட ஏதோ ஒன்றைப் பிடிப்பதற்குத் துடிப்பது போன்ற அவசரம்
62

நீர்வை பொன்னையன்
பஸ்ஸில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கின்றனர்.
நீண்ட தூர பிரயாணத்திற்கான பஸ்கள் நிரையிட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவைகளில் பிரயாணத்திற்கான முஸ்திப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
கதிர்காமத்திற்குப் புறப்படுவதற்கு தயார் நிலையில் நிற்கின்றது ஒரு பஸ்,
பிரயாணிகள் வரிசைக்கிரமமாக நின்று பஸ் கொண்டக் டரிடமிருந்து தமக்குரிய பயணச் சீட்டுக்களைப் பெற்ற பின் அந்த பஸ்ஸில் ஏறி அமர்கின்றனர். இருந்துவிட்ட ஒவ்வொரு வருக்கும் இருப்பதற்கு ஆசனம் கிடைத்து விட்டதில் நிம்மதி ஒரு வித திருப்தி
பிந்தி வந்தவர்கள் அதிருப்தியுடன் நின்று கொண்டிருக் கின்றார்கள்.
பஸ் சாரதி அமைதியாக அமர்ந்து கொண்டு நடப்ப வற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றான்.
அவனுக்கு வாட்ட சாட்டமான உடற்கட்டு, அனுபவ முத்திரை அவனது முகத்தில் தென்படுகின்றது.
பஸ் சாரதியின் ஆசனத்திற்குப் பின்னால் பிரயாணி களுக்கான மூன்று ஆசனங்கள் வெறுமையாக இருக்கின்றன. அவை ஏற்கனவே யாருக்காகவோ 'புக் பண்ணப்பட்டிருக்க வேண்டும். அந்தக் காலி ஆசனங்களைப் பார்க்கின்ற பொழுது நின்று கொண்டிருப்பவர்களது மனங்களில் புழுக்கம்,
பஸ் முட்டி வழிகின்றது.
மூன்று ஆசனங்களும் வெறுமையாகத் தான் ருக்கின்றன.
பளல் எப்போ புறப்படப் போகின்றது என்ற தவிப்புடன் பிரயாணிகள் காத்திருக்கின்றார்கள்.
63

Page 36
வேட்கை
மூவர் வந்து பஸ்ஸில் ஏறுகின்றார்கள். அவர்களுடைய பார்வையில் ஒருவித மிடுக்கு, தோற்றத்தில் அவர்களிடையே சற்று மாறுபாடு காணப்படுகின்றது.
தலைக்கு மேல் தனக்கு முன்புறமாக உள்ள கண்ணாடி யில் அவர்களைப் பார்க்கின்றான் சாரதி.
ஓஹோ அவர்களா இவர்கள்?
இம்மூவரைப் பற்றியும் ஏற்கனவே தனது அலுவலகத் திலிருந்து அறிந்திருக்கின்றான் வீரக்கொடி
கண்ணாடிக்குள் அவர்களையே பார்த்துக்கொண்டிருக் கின்றான்.
அந்த மும்மூர்த்திகள் பிரயாணிகளை அலட்சியமாக நோட்டம் விட்டுவிட்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற ஆசனங்களில் அனாயசமாக அமர்கின்றனர். அவர்களுடைய முகங்களில் கள்வம், அதிகாரத் திமிர்.
இதை அவதானித்த வீரக்கொடியின் மனதில் ஒருவித வெறுப்பு.
பஸ்ஸில் ஏறிய மூன்று பிரமுகர்களதும் பிரயாணப் பைகளை இருகைகளையும் அடக் கொடுக்கத்துடன் நீட்டி ஒவ்வொன்றாக வாங்கி சாரதியின் ஆசனத்திற்கு இடப்பக்கமாக உள்ள பெரிய பெட்டியின் மேல் வைக்கின்றான் கொண்டக்டர்.
இதைக் கண்ணுற்ற வீரக்கொடியின் உள்ளத்தில் குமுறல்,
பஸ் பிரயாணிகளுக்கு ஆச்சரியம், பார் இவர்கள்? இவர்களுக்கு ஏன் இந்த ராஜோபசாரம்? பஸ் பிரயாணிகளது உள்ளங்களில் கேள்விக்குறி? "ஸ்டீபன்! பற்றிப் பெட்டிக்கு மேலை சாமான்கள் வைக்கக் கூடாதென்று உனக்குத் தெரியாதோ? இதுகளை எடுத்து அந்த மூலையில் போடு."
64

நீர்வை பொன்னையன்
கடுகடுப்புடன் கூறுகின்றான் வீரக்கொடி. கொண்டக்டர் அசடுவழிய செய்வதறியாது திகைத்து நிற்கின்றான்.
மும்மூர்த்திகள் இந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு திகைப்பு, எரிச்சல்,
"உங்களுக்கு இன்னும் அடிமைப்புத்தி விட்டுப் போகே ல்லை. உங்களைப் போன்ற பச்சோந்தியாலைதான் எங்கட மானம் போகுது. இந்தப் பைகளை மேல போடன், ஏன் நட்ட கட்டை மாதிரி நிற்கிறாய்?"
அதட்டுகின்றான் வீரக்கொடி.
மும்மூர்த்திகளுக்கு அவமானம், கோபத்தில் வீரக் கொடியை எரித்து விடுவது போல பார்க்கின்றனர்.
"ஸ்டீபன், ஏன் மரக்கட்டை போலை நிற்கிறாய்? நான் சொன்னது விளங்கேல்லியோ?"
மனம் பேதலித்த ஸ்டீபன் அந்த பிரயாணப் பைகளை எடுத்து ஒரு மூலையில் வைக்கின்றான்.
"இப்பிடிச் சேவகஞ் செய்யாதையுங்கோ எண்டு நாங்கள் உங்களுக்கு எத்தனையோ தரம் சொன்னம். நீங்கள் திருந் தேல்லை. உங்களை இனி வேறை வழியிலைதான் திருத்த வேனும்."
கூறிவிட்டு வீரக் கொடி பிரயாணிகள் பக்கம் திரும்பு கின்றான்.
பிரயாணிகளின் முகங்களில் திருப்தி தென்படுகின்றது. தங்களுக்கும் சேர்த்துத்தான் இந்த மங்களப்பாட்டு நடக்கிறது என்று மும்மூர்த்திகளுக்கு தெரிகின்றது. ஆனால் இந்த விடயத்தில் அவர்களால் எப்படித் தலையிட முடியும்?
"இந்தத் திமிர் பிடித்தவனுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேணும்"
65

Page 37
வேட்கை
மும்மூர்த்திகளின் தலைவன் தனக்குள் கறுவிக் கொள்கின்றான். -
"இப்ப எங்கடை கையிலை ஆயுதமில்லை. ஆயுதமிருந் திருந்தால் இந்தப் பிச்சைக் காரப் பயலுகளை இதிலை தோப்புக் கரணம் போட வைச்சிருப்பம் என்ன செய்யிறது இப்பிடியாப் போச்சே."
இயலாத் தன்மையை எண்ணி அவன் மனம் குமை கின்றான்.
தனது மனத்திலுள்ள புழுக்கத்தைத் தணிப்பதற்காக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து புகையை நன்றாக உள் ளிழுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றான் அவன்.
புகை பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது என்று அவனது தலைக்கு மேல் பஸ்ஸின் உட்புறப் பக்கவாட்டில் எழுதப் பட்டிருக்கின்றது. - -
சிகரெட் பிடிப்பவன் அதைப் பொருட்படுத்தாமல் புகை பிடித்துக் கொண்டிருக்கின்றான்.
வீரக்கொடி அவனை முறைத்துப் பார்க்கின்றான். அவன் சாரதியின் முறைப்பைப் பார்த்தும் பாராதவனாகப் பாவனை செய்து கொண்டு வேறு திசையை பார்த்துக் கொண்டி ருக்கின்றான்.
தன்னுணர்வை இழக்கின்றான் சாரதி அவனது உள்ளத் தில் கோபத் தி பொங்கிச் சீறுகின்றது.
சிகரெட் பிடிப்பவனுடைய மூஞ்சியில் ஓங்கிக் குத்த வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு.
கணப்பொழுதில் அவனுக்கு சுய உணர்வு வருகின்றது. பெரும் பிரயத்தனப்பட்டு தன் னைக் கட்டுப் படுத்து கின்றான் வீரக்கொடி
அவனது உள்ளத்தில் பொங்கியெழுந்த கோபத்தி அவனுக்குள்ளேயே செத்து மடிகின்றது.
66

வை பொன்னையன்
"இப்படிப்பட்ட அதிகாரத் திமிர்பிடித்தவர்களுக்கு கூடிய
கெதியிலை பாடம் படிப்பிக்கத்தானே போறம்."
தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொள்கின்றான்.
சிகரெட் புகைப்பவனின் செயலைப் பார்த்த பிரயாணி களில் சிலர் முகங்களைச் சுழிக்கின்றனர்.
புகை பிடிப்பவன் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரத்தில் அவன் புகையை நன்றாக உறிஞ்சி உள்ளிழுத்து விட்டு சிகரெட் கட்டையை வெளியே வீசி எறிகின்றான். அவன் ஆபாசப் படங்கள் நிறைந்த அமெரிக்கன் "பிளே போய்" சஞ்சிகை ஒன்றை எடுத்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டி ருக்கின்றான்.
"அசிங்கம் பிடித்த நாய்கள்" கூறிக் கொண்டு வெளியே காறித்துப்புகின்றான் வீரக் கொடி. சஞ்சிகையின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருக்கின்றவன் மாறகிங்ஹா அவன் கொழும்பிலுள்ள ஒரு பெரும்புள்ளியின் ஏகபுத்திரன். அவன் பிரபல்யமான ஒரு பெரும் கல்லூரியில் படித்தவன். தினமும் அவன் கல்லூரிக்கு மோட்டார் வாகனத்தில்தான் போய் வருவான். அக்கல்லூரியின் கிரிக்கட் குழுவின் தலைவனாக இருந்தவன்.
மாறகிங்ஹா பிஞ்சிலே பழுத்தவன். அவனை மாறயா இயமன்) என்றுதான் கல்லூரி மாணவர்கள் அழைப்பார்கள். ஆரம்பத்தில் அவன் இதை விரும்பவில்லை. காலப்போக்கில் அவனை மாறயா என்று அழைக்கும் பொழுது அவன் பெருமிதம் கொள்வான்.
மாறகிங்ஹாவும் அவனது சகாக்களும் செய்யும் அட்ட சங்களுக்கு குறைவேயில்லை. அவர்களைத் தட்டிக் கேட்க ருமே துணியமாட்டார்கள். நாட்டின் சட்டங்களைக் கூட வர்கள் துச்சமாக மதித்தனர்.
ஒரு தடவை தனக்கு எதிராக காதலில் போட்டியாக இருந்த சக மாணவனை மோட்டார் வாகனத்தினால் மோதிக்
67

Page 38
வேட்கை
கொலை செய்திருக்கின்றான். இக்கொலை மர்மமான முறையில் மூடி மறைக்கப்பட்டுவிட்டது. அவனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முற்படும் பொலிஸ் அதிகாரிகள் கூ உடனடியாகத் துர இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்கள். அவ்வளவு செல்வாக்கு அவன் தந்தைக்கு,
படிப்பை அரைகுறையில் நிறுத்திவிட்டு தனது சகாக் களுடன் கட்டாக்காலியாகத் திரிந்தான் அவன். அவனுக்குப் போதிய பணமிருக்கின்றது. மோட்டார் வாகனமிருக்கின்றது. நிறைய சகாக்கள் இருக்கின்றார்கள். கேளிக்கைகளுக்கு இரவு கிளப்கள் இருக்கின்றன.
குடி, சூதாட்டம், ஆட்கடத்தலுக்கு நேரகாலமில்லை. கொலை அவர்களுக்குக் கைவந்த கலை, மோட்டார் வாகனங்களை மாற்றுவது மாதிரி வேண்டிய நேரத்தில் தனது காதலிகளையும் மாற்றிக் கொள்வான்.
மாறகிங்ஹாவின் தந்தை பிரபல்யமான கொந்தராத்துக் காரர். புதுப் பணக்காரர். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் மிதந்தவர் அவர்,
தன் மகன் போற போக் கிலேயே விட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு தொழில் பார்க்க வேண்டிய அவசியம் மாறகிங்ஹாவிற்கு இல்லை.
அமெரிக்கன் "கெள போய் சணன் டைப் படங்களில் வருகின்ற கதாநாயகர்களைப் போல தானும் வீரசாகசங்கள் புரிய வேண்டுமென்ற ஆசையினால்தான் அவன் ராணுவத்தில் சேர்ந்தான் சிறிது கால சேவையின் பின் ராணுவ பயிற்சி பெறுவதற்கு தான் அமெரிக்காவிற்குச் செல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கை அவனுக்குண்டு.
மாறகிங்ஹாவுடன் பிரயாணம் செய்ய வந்திருக்கின்ற அவனது இந்த இரண்டு சகாக்களும் அந்தஸ்திலும் உணர் விலும் அவனைப் போன்றவர்களே.
68

நீர்வை பொன்னையன்
பஸ் புறப்படுவதற்கு முன் கொண்டக்டர் தனக்குப் பணிக்கப்பட்டுள்ள முக்கிய கடமையைச் செய்ய ஆரம்பிக் கின்றான்,
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பஸ் ஸிலுள்ள பிரயாணிகளின் மூட்டை முடிச்சுக்கள் அனைத்தையும் செக் பண்ண ஆரம்பிக்கின்றான் கொண்டக்டர்.
மும்மூர்த்திகளது பிரயாணப் பைகள் செக்' பண்ணப் படவில்லை.
ஏன்?
என்ன அவர்கள் சாமானியமானவர்களா? வேட்டைக்குப் போகு முன்னர் சிலர் தெய்வ வழிபாடு செய்வது வழக்கம்.
மாறகிங்ஹாவும் அவனது சகாக்களும் வட பகுதிக்கு ராணுவ கடமையாற்று செல்லவிருக்கின்றார்கள்.
வடபகுதிக்கு சேவையாற்ற செல்கின்ற ராணுவத்தினரில் பலர் தாங்கள் உயிருடன் தங்கள் வீடு திரும்புவதற்கு அனுக்கிரகம் புரிய வேண்டும் என்று கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்தி வைத்து வழிபாடு செய்து செல்வது வழக்கம்.
மாறகிங்ஹாவும் சகாக்களும் நேர்த்தி வைக்கத்தான் செல்கின்றார்கள். -
பஸ் கொண்டக்டர் ஒவ்வொரு பிரயாணியினதும் மூட்டை முடிச்சுக்களை மிக அவதானமாக ஆறுதலாக செக் பன்னிக் கொண்டிருக்கின்றான்.
பஸ் எப்பேர் புறப்படும் என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ற பிராயாணிகளுக்கு கொண்டக்டரின் இச்செயல் எரிச்சலையூட்டுகின்றது. சில பிரயாணிகள் தங்களு க்குள் முனு முனுத்துக் கொள்கின்றனர்.
"இது யாருடையது?" பஸ் சாரதியின் பின்னால் கிடக்கின்ற ஒரு சிறிய
69

Page 39
வேட்கை
காட் போட் பெட்டியைச் சுட்டிக் காட்டிக் கேட்கின்றான் கொண்டக்டர்,
பதிலில்லை.
"யாருடையது இந்தப் பெட்டி? " மீண்டும் கத்துகின்றான். அதற்கும் பதிலில்லை.
"இந்தக் காட்போட் பெட்டி யாருடையது? " உரக்கக் கத்துகின்றான். ஒரு பதிலுமில்லை.
"ஏன் பேசாமலிருக்கிறியள்? ஆருடையதப்பா இந்தப் பெட்டி?"
பதிலேயில்லை.
கொண்டக்டருடைய முகத்தில் மாற்றம்.
திரும்பமும் உரத்துக் கத்துகின்றான்.
அவனது குரலில் பதட்டம்,
ஒரே மெளனம் பிராயாணிகளிடையே
"வெடிகுண்டு!"
அலறியபடியே பஸ்ஸிலிருந்து வெளியே பாய்கின்றான் கொண்டக்டர்.
ൗ|ഖങ്ങ|g| 9|ഖണ്ഡക്ട குரலைக் கேட்ட பிரயாணிகள் Lഞg)
பதைத்து முண்டியடித்துக்கொண்டு வெளியே வருவதற்கு
முட்டி மோதிப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
தங்களது மூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு
வெளியேடுறுவதற்கு சிலர் முயல்கின்றனர்.
ஒன்றுமே வேண்டாம் உயிர் தப்பினால் போதும் என்று வெறுங்கையுடன் அவசர அவசரமாக வெளியே வருகின்றனர் சிலர்
7 O

நீர்வை பொன்னையன்
சிலர் பஸ்ஸின் யன்னலுடாக வெளியே பாய்கின்றனர்.
..................................... } () شي. 'ஏன் இடிபடுகிறியள்? ஒவ்வொருதராய் இறங்குங் கோவன் -
சாரதி வீரக்கொடி பிராயாணிகளை அமைதிப்படுத்த
முயல்கின்றான்.
அவனுடைய முயற்சியில் பயனில்லை. ஒரே அமர்க்களம்
b(Ժ5Ս 6Նժ56II,
. . . . . . உரக்கக் கத்திக்கொண்டே மக்கள் எ களிலும் ஒடிக்கொண்டிருக்கின்றனர்.
பெரும் பிரயத்தனத்துடன் பிராயாணிகள் பஸ்ஸிலிருந்து
இறங்கிவிட்டனர்.
o பிரயாணிகள் அனைவரும் இறங்கிய பின் பஸ் சாரதி வீரக்கொடி எதுவித பதட்டமுமின்றி அமைதியாக வெளியே வருகின்றான்.
பஸ் நிலையத்தில் பதட்டம், பெரும் பீதி
"வெடிகுண்டு!"
மக்கள் அலறியடித்துக் கொண்டு பலதிக்குகளிலும் வேகமாக ஓடிக்கொண்டிடுருக்கின்றனர்.
மரணதேவதை அவர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் செல்வது போலிருக்கின்றது.
"வெடிகுண்டு வெடிகுண்டு!" நகரத்தின் ஆத்மா மரண ஒலம் எழுப்பிக் கொண்டி நக்கின்றது.
அபாய ஒலி எழுப்பிக் கொண்டு தீயணைக்கும் படையினரின் வாகனங்கள் உறுமிக் கொண்டு அசுரவேகத்தில்
வந்து கொண்டிருக்கின்றன.
ராணுவ வாகனங்கள் உறுமியபடியே வருகின்றன.
71

Page 40
வேட்கை
வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்களுடன் பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைந்து வருகின்றனர்.
மரணாவளிஸ்தையில் நகரம் திணறிக் கொண்டிருக்க, மக்கள் வெள்ளம் அச்சத்தில் நகரத்தை விட்டு வெளியேறிப் பீறிட்டுப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
பஸ்நிலையத்திலுள்ள பஸ்கள் எல்லாம் அப்புறப் படுத்தப்பட்டுவிட்டன.
வேடிக்கை பார்ப்பதற்கும் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போவதற்குமாக வரும் கும்பலை பொலிஸார் விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் பஸ்வண்டி, நிலை யத்தில் முற்றும் துறந்த முனிவனைப் போல தன்னந்தனியனாய் நிற்கின்றது.
வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் இருவர் மெது மெதுவாய் மிக அவதானமாக பஸ்ஸை நெருங்குகின்றனர்.
பஸ்ஸின் பின்புற ஆசனத்தின் இடது புற மூலையில் ஒரு மனிதன் துங்கிக் கொண்டிருக்கிறான்.
வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்பவரில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பவனைக் கண்டுவிட்டார்.
அவருக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை. அந்த மனிதன் தன்னை மறந்து குறட்டை ஒலிஎழுப்பியபடியே தூங்கிக் கொண்டிருக்கின்றான்.
சிறிது நேரத் தயக்கத்தின் பின் அந்த வெடிகுண்டு நிபுணர் துங்கிக் கொண்டிருக்கின்ற அந்த மனிதனைப் பஸ் யன்னலுடாக ஜாக்கிரதையாக எழுப்புகின்றார்.
அவன் அசையவில்லை.
இரவு அருந்திய மது வெறியின் மூடாப்பில் அவன் தூங்கிக் கொண்டிருக்கின்றான்.
72

நீர்வை பொன்னையன்
நிபுணர் அவனை உசுப்பி எழுப்புகின்றார்.
அவன் தனக்குள் ஏதோ முனு முணுத்துக் கொண்டு கண்களைகளைத் திறக்க முயல்கின்றான்.
அவனுடைய கண்கள் எரிகின்றன. திறக்க முடியவில்லை. அவன் மீண்டும் துங்குகின்றான். நிபுணர் அவனை மீண்டும் தட்டி எழுப்புகின்றார். "ஆரடா பண்டிப் பயலே"? உனக்கு என்ன வேணுமடா? "
அவன் அதட்டியபடியே கண்களைத் திறக்க முயல்
அவனுடைய வாய் கசக்கின்றது. காறித் துப்பி விட்டு மீண்டும் தூங்க முயல்கின்றான். "பஸ்சுக்கை வெடிகுண்டு கெதியாய் வெளியாலை வா." நிபுணர் உரத்துக் கத்துகின்றார். அவன் அசையவில்லை.
"பஸ்சுக்கை வெடிகுண்டடா முட்டாளே! கெதியாய் இறங்கடா!"
நிபுணர் அதட்டியபடியே அவனுடைய தோளைப் பிடித்து உசுப்புகின்றார்.
மது மயக்கத்தில் இருந்த அவன் திடுக்குற்று
சுற்றும் முற்றும் பார்க்கின்றான். "பளல்ஸில் வெடிகுண்டு கெதியாய் இறங்கு" நிபுணர்
அவனுக்குத் திகைப்பு.
அவன் துள்ளிக்குதித்து எழுகின்றான். பதறியபடியே வெளியே ஒடுகின்றான்.
73

Page 41
வேட்கை
வெளியே நிற்கின்றவர்களுக்குத் திகைப்பு. பஸ்ஸில் இருந்த அந்த ஹாட் போட் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே பாய்கின்றான் அவன்.
"அந்தப் பெட்டிக்குள்ளே வெடிகுண்டு" அங்கு நின்றவர்கள் கத்துகின்றார்கள். "பெட்டிக்கை வெடிகுண்டு அதை நிலத்திலை வை." பல திக்குகளிலுமிருந்தவர்கள் பதறிக் கொண்டு கத்து கின்றார்கள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒடுகின்றான் அவன்.
அவன் ஒடுகின்ற திசையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் அலறிப்புடைந்துக் கொண்டு சிதறி ஒடுகின்றனர்.
அவன் ஒடிக் கொண்டேயிருக்கின்றான். மதுபோதையிலிருக்கின்ற அவனுடைய கால்கள் தள்ளாடித் தடுமாறுகின்றன.
"பெட்டியை மெதுவாய் நிலத்தில வை மெதுவாய்." அங்கு நிற்கின்றவர்கள் கூக்குரலிடுகின்றனர். அவன் கிலி கொண்டு வேகமாய் ஓட முயல்கின்றான். பெட்டியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிற தும்புக்கயிறு அறுகின்றது.
பெட்டி நிலத்தில் விழாமலிருக்க அதை எக்கிப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றான்.
உடுத்திருந்த சாரம் அவிழ்ந்து அவனுடைய இடுப்பி லிருந்து நழுவுகிறது.
ஒரு கையால் அவிழ்ந்து விழும் சாரத்தைப் பிடிக்க முனைகின்றான்.
74

நீர்வை பொன்னையன்
மறுகையிலிருந்த பெட்டி நிலத்தில் விழுகின்றது. அலாக்காக அவனும் விழுகின்றான். கூடி நின்றவர்கள் பயங்கரமாகக் கூக்குரலிட்டுக் கொண்டு தலைதெறிக்கச் சிதறி ஓடுகின்றனர்.
அந்தப் பெட்டிக்குள்ளிருந்து தோடம்பழங்கள் சிதறி நாற்புறமும் உருண்டோடுகின்றன.
அங்கு நின்றவர்களுக்கு வியப்பு வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்களும் ராணுவ பொலிஸ் அதிகாரிகளும் அசடு வழிய நிற்கின்றனர். பதட்டம் தணிகின்றது. சிறிது நேரத்தில் அமைதி, மக்கள் மீண்டும் கூடுகின்றனர். மக்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு. பஸ்நிலையத்தில் கிண்டல்கள், கேலிகள். நகரத்தில் ஜீவத்துடிப்பு. மக்கள் பிரவாகப் பெருக்கெடுப்பு. கதிர்காமத்திற்கு பஸ் புறப்படுகின்றது. பஸ் சாரதியின் பின்னாலுள்ள மூன்று ஆசனங்களும் காலியாக இருக்கின்றன.
பிரயாணப் பைகள் மூன்று (!pഞഖധിങ தேடுவாரற்று அனாதரவாகக் கிடக்கின்றன.
வீரக்கொடி வேகமாக ஆனால் நிதானத்துடன் பஸ்ஸை ஒட்டிக்கொண்டிருக்கின்றான்.
பனிமூட்டம் அகன்று விட்டது. இளஞ்சூரியனின் நீண்ட தளிர் விரல்கள் பூமித்தாயின் நெஞ்சில் வண்ணக்கோலமிட்டுக் கொண்டிருக்கின்றன.
O
1995.
75

Page 42
ஜீவநாதம்
இதயத்தில் சோகச் சுமையுடன் ஜடமாய் உட்கார்ந் திருக்கின்றாள் விஜயா.
அவளுக்கு முன்னால் ஒரு 'சூட் கேஸ் திறந்தபடியே யிருக்கின்றது.
வானவில்லின் வர்ண ஜாலக் கோலமிடும் அவளது உடைகள், அவள் எடுத்துச் செல்கின்ற அந்த சூட்கேஸில் அடுக்கடுக்காக மடித்து வைக்கப்பட்டும் வைக்கப்படாமலு மிருக்கின்றன.
பலரது இன்பதுன்பங்கள் தேவைகள், இதயச்சுமைகள், தாபங்கள் எல்லாவற்றையும் தமதகத்தே தாங்கிய உள்நாட்டு வெளிநாட்டுக் கடிதங்கள், கொழும்பில் தபாலில் சேர்க்கப் படுவதற்காக, பொலித்தரீன் உறையில் சுற்றி அவளது சூட் கேஸின் ஒரு பக்கத்தில் பாதுகாப்பாக வைக் கப் பட்டிருக்கின்றன.
விஜயாவின் நினைவுச் சுவட்டில் மத்தாப்பு வெடித்துக் கிளம்பி மலர்கின்றது. மலர்கின்ற அந்த வர்ணப் பூக்கள் ஒருவித வேதனை தரும் இன்பமும் துயரமும் கலந்த ஏக்க அலைகளை அவளது இதயத்தில் எழுப்புகின்றன.
தன்னைப் பெற்றெடுத்த இந்த அன்னை பூமியை விட்டுச் செல்கின்றேன் என்ற வேதனையா அல்லது தனது அன்புத் தாய் தந்தையரை இனி எப்போ காணப்போகின்றேன் என்ற 6Јёѣдьцрт?
76

நீர்வை பொன்னையன்
அவள் பிறந்து வளர்ந்து, வானத்து தாரகைகளை அள்ளி விளையாடத் துள்ளிக் குதித்தோடும் செல்லக்குழந்தையாய், பிஞ்சுக் கால் பதித்து ஆடிப்பாடித் திரிந்த தென்னஞ் சோலைகள், பச்சைப்பசேலென்ற மரகத வயல் வெளிகள், மொட்டுகளும் மலர்களும் நிறைந்த அந்தத் தாமரைக்குளம் எல்லாம் அவளது மனத்திரையில் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன.
ஏணிப்படியில் காலடி எடுத்து வைக்கின்றாள் விஜயா.
வசந்தகால இளந்தென்றல் அவளது மனோகர மேனியில் தவழ்ந்து அவளை அறியாமலே ஒருவித துயர மயக்கத்தை யூட்டுகின்றது அவளுக்கு.
அவளது வெண்நிலப் புடைவை மென்காற்றில் நடுங்கித் துடிக்கின்றது.
ஆழ்ந்த நிலவானத்தில் அவளது எழிலுருவம் உருகிச் சங்கமிப்பது போன்ற உணர்வு அவளுக்கு.
ஒரு கெட்ட கனவை மறப்பதற்கு முயற்சிப்பதைப் போல் அந்த பயங்கர சம்பவத்தை தனது இதயத்திலிருந்து துடைத்
தெறிவதற்கு இந்த நாட்டையே விட்டுச் செல்ல ஒரு காலத்தில் விஜயா தவித்துக் கொண்டிருந்தாள். அவளது தவிப்பு
ஏன் இந்தத் தயக்கம்?
அவள் பிறந்து வளர்ந்த நிலத்தோடு ஒட்டிய உறவை
அவள் இந்த நாட்டை விட்டுச் செல்வதற்கு தயாராகின் றாள். அதேவேளை அவள் இந்த நாட்டில் தங்கவும் என்னு கின்றாள். அவளுக்குத் தங்கவும் மனமில்லை, செல்லவும் மனமில்ைைல. இரண்டும் கெட்டான் நிலை.
தன்னைப் பெற்றெடுத்த அன்புத் தாய் தந்தை, தன் உடன் பிறப்புக்களான தம்பி தங்கைகள், இதுகாலவரை அவளுக்கு வழித்துணையாக இருக்கின்ற அவளது அன்பிற்கினியவனான
77

Page 43
வேட்கை
ஜீவா எல்லோரையும் தேடி அலைகின்றன அவளது துயரம் நிரம்பிய விழிகள், ஆயிரக்கணக்காக நிற்கின்ற மக்கள் மத்தியில் நிற்கும் அவர்களை துாரத்திலிருந்து அவளால் எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? ஒரே ஒரு தடவை இறுதியாக அவர்களை ப் பார்த்து விட அவளது விழிகள் ஏங்கித் தவிக்கி னறன.
ஆயிரமாயிரம் மனித வெள்ளத்திற்கு மத்தியில் தனது நேசத்திற்கும் பாசத்திற்குமுரியவர்களை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளது விழிகளில் நீர் திரையிடுகின்றது. என்ன செய்வதென்றே அவளுக்குப் ||fിLബിണ്ഡങ്ങാണ്ഡ്.
விருப்பு, வெறுப்பற்ற முற்றும் துறந்த ஞானியின் தியான நிலையில் நிற்கின்றாள் விஜயா,
பிரபஞ்சமே சூனியமயமாயிருக்கின்றது அவளுக்கு.
விஜயாவிற்கு ஏன் இந்த நிலை?
அவளது தாய் தந்தையரின் நினைவலைகள் எழுந்ததும் துயரம் அவளது இதயத்தை மெளன சுமையாய் அழுத்து கின்றது.
விஜயாவின் தந்தை ஊதாரி, தாய் (3ѣтштsї, தம்பியோ ஊர்சுற்றி, தங்கைகள் மூவரும் பொறுப்பற்ற செல்வங்கள். விஜயாதான் குடும்பத்தின் சுமைதாங்கி குடும்பத்தை நிருவ கிக்கின்ற அவள் வெளிநாடு சென்றால், அந்தக் குடும்பச் சுமை நோயாளியான தாயின் தலையில்தான். இதனால் தான் விஜயா வெளிநாடு செல்லத் தயங்குகின்றாளா?
விஜயாவை எப்படியாவது வெளிநாட்டிற்கு அனுப்பிவிட வேண்டுமென்று அவளது தந்தை சுந்தரம் துடியாய்த் துடிக்கின்றார். அவள் வெளிநாடு சென்றுவிட்டால் தனக்கு ஒரு சுமை இறங்கிவிடும். அவள் வெளிநாட்டிலிருந்து மாதாமாதம் அனுப்புகின்ற பணத்தைத் தாராளமாகச் செலவு செய்யலாம். அத்துடன் தனது சகோதரியையும் திருப்திப் படுத்தி விடமுடியும் என்பதுதான் அவரது நப்பாசை,
78

வை பொன்னையன்
தனது அன்பு மகள் தன் கண்முன்னால் குடியும் குடித் நனமுமாய் வாழ்வதைத் தான் கண்குளிரப் பார்க்க வேண்டு மென்பதுதான் அவளது நோயாளித் தாயாரின் ஆசை.
தந்தையின் நிர்ப்பந்தத்தினால்தான் விஜயா வேண்டா வெறுப்பாக வெளிநாடு செல்லத் தயாராகின்றாள்.
தான் வெளிநாடு சென்றபின் தன் குடும்பத்தின் கதி என்ன என்ற கேள்விக்குறி விஜயாவின் முன்னால் பூதாகாரமாக நிற்கின்றது. நீண்ட நாள்களாக இந்தக் கேள்விக்கு விடை காண அவளது மனம் அலைகின்றது.
ழுது கொண்டிருக்கின்றது.
கடந்த நான்கு வருடங்களாகத் தான் சேவையாற்றி வந்த நூற்றுக் கணக்கான மழலைச் செல்வங்களையும் அன்புத் தாய்மார்களையும் பிரிந்து செல்லப் போகின்றோம் என்ற வேதனை அவளது இதயத்தைத் தகிக்கின்றது. இந்த அன்பிற் குரியவர்களைப் போஷித்து வந்த நிலையங்களுக்குச் சென்று வரும் வேளைகளில் அவர்கள் முகம் கொடுத்த நெருக்கடிகள் எவ்வளவு? அவர்கள் எவ்வளவு அபாயகரமான சூழ்நிலைகளில்
சேவையாற்றுகின்றார்கள்?
வரப்போகும் பிரிவின் ஆகுலத்தால் அவளது மனம் ஏங்கி
ஊரடங்குச் சட்ட வேளைகளில் விமானத் தாக்குதல்கள். ஹெலிச்சூடுகள், ஷெல் தாக்குதல்கள் நடந்த வேளைகளில் தங்கள் உயிரைக் கையில் வைத்துக் கொண்டு ஒரு போஷாக்கு நிலையத்திலிருந்து மற்ற போஷாக்குநிலையத்திற்கு அவர்கள் சென்று சேவையாற்றியிருக்கின்றார்கள். ராணுவச் சுற்றிவளைப் புக்கள். தேடுதல் வேட்டைகள் நடக்கின்ற வேளைகளிலும் ... அஞ்சாமல், தயங்காமல் சேவையாற்றியுள்ளார்கள். விஜயாவின் பைசிக்கிள் பனங்கூடலைக் கிழித்துக் கொண்டு வளைந்து நெளிந்து செல்கின்ற ஒற்றையடிப் பாதை வழியே சென்று கொண்டிருக்கின்றது.
79

Page 44
வேட்கை
பனைமரங்கள் உணர்வற்று ஜடமாய் நிற்கின்றன.
கூட்டம் கலைந்த யானைகளைப் போல வறண் ட காண்டைப் பற்றைகள் சிதறிக் கிடக்கின்றன.
சிறிது தூரம் சென்றதும் தோட்ட நிலங்கள். அந்தச் செம்மண் தோட்டங்களில் தெட்டந் தெறியனாய் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் கெட்ட நேரத்தில் கொதித்துத் தகிக்கும் வெய்யிலில் தன்னந்தனியனாய்ச் சென்று கொண்டிருக்கின்ற விஜயாவின் சேவை உணர்வைப் பற்றி அவர்களில் சிலர் தங்களுக்குள் மெச்சிப் பேசுகின்றார்கள்.
தூரத்தில் எங்கோ சங்கிலித் தொடராய் நாய்கள் குரைக்கின்றன.
ராணுவம் எங்கோ நடமாடுகின்றது என்பதை ஊகித்த சில விவசாயிகள் விஜயாவை எச்சரிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ராணுவச் சுற்றிவளைப்புக்களுக்கும் தேடுதல் வேட்டைகளுக்கும் நேரடியாக முகம்கொடுத்துப் பரிச்சயப்பட்ட அவள் தன்னை எச்சரித்து விழிப்படையச் செய்த அந்த விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவித்து, ஒரு சிறு முறுவலை (666f படுத்திவிட்டு வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றாள். அன்று நடக்கவிருந்த போஷாக்கு சம்பந்தமான கருத்தரங்கைப் பற்றியே அவளது சிந்தனை ஒடிக்கொண்டிருக்கின்றது.
மீண்டும் நாய்களின் தொடர்ச்சியான குரைப்பு. விஜயா ஒன்றையும் பொருட்படுத்தாது சென்று கொண்டிருக் கின்றாள்.
ஆளரவமற்ற அந்த சூனிய வெளியில் அமானுஷ்ய அமைதி
ஆள்காட்டிப் பறவையொன்று திடீரென அலறிக்கொண்டு பறந்து செல்கின்றது.
8O

நீர்வை பொன்னையன்
வேகமாகச் சென்று கொண்டிருக்கின்ற விஜயா ஒரு வளைவில் தனது பைசிக்கிள் பிறேக்கைப் பிடித்து மெதுவாகச் செலுத்துகின்றாள்.
வளைவிலிருக்கின்ற காண்டைப் பற்றை மறைவிலிருந்து காக்கிச்சட்டை உருவம் ஒன்று திடீரெனப் பாய்ந்து விஜயா வினுடைய பைசிக்கள் ஹாண்டில்களைப் பிடிக்கின்றது.
நிலை தளும்பி விழவிருந்த விஜயா ஒருவாறு சமாளித்து தனது காலை ஊன்றியபடியே நிற்கின்றாள்.
அவளுக்குப் பேரதிர்ச்சி. விஜயா செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கின்றாள். பயப்பீதியில் அவளது உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. அவள் நட்ட கட்டையாய் நிற்கின்றாள்.
ஆஜானுபாகுவான அந்த உருவம் அவளது கையைப் பற்றுகின்றது.
விஜயாவின் ரத்தம் உறைந்துவிட்டது போன்ற உணர்வு அவளுக்கு.
அவளது திறந்தவாய் மூடவில்லை. விஜயாவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதா? அந்தக் காக்கி உருவத்திற்குக் குரூரம் நிறைந்த கண்கள். கனல் கக்கும் அந்த உக்கிரக்கண்களிலிருந்து தெறிக்கின்ற போதை நிறைந்த வெறித்த பார்வை விஜயாவை திகிலடையச் செய்கின்றது.
மதம் கொண்ட யானையைப் போன்று அந்த வெறியனின் உடும்புப்பிடி இறுகுகின்றது. அந்த மூர்க்கனுடைய பிடியில் அவளது குருத்து எலும்புகள் நொறுங்கி முறிவது போலிருக் கின்றது.
மரணத்தறுவாயில்தான் இருப்பதைப் போன்றிருக்கின்றது விஜயாவிற்கு நெருங்கிவரும் மரணத்தின் நிழல் அவள் முன் படர்வது போலிருக்கின்றது. -
81

Page 45
வேட்கை
கணப்பொழுதில் தன்னுணர்வு பெற்ற அவள் தன்னைச் சுதாகரித்துக் கொள்கின்றாள்.
திடீரென அவளது ரத்த ஒட்டம் துரிதமாகி நரம்புகளும், நாளங்களும் விண்ணென்று முறுகித் தெறித்துப் புடைக் கின்றன.
தன்னை விடுவிக்க அவள் போராடத் தொடங்குகின்றாள். காக்கி உடையின் இரும்புப் பிடி மேலும் இறங்குகின்றது. ஜயோ அம்மா!
அவளை அறியாமலே அவள் அவலக் குரலெழுப்பு கின்றாள்.
அவளது வாயைத் தனது கையால் பொத்த அவன் முயல்கின்றான்.
அவள் திமிறிக் கொண்டு மீண்டும் அவலக் குரலெழுப்புகின்றாள்.
காக்கி உருவம் விஜயாவை காண்டைப் பற்றை மறைவிற்கு இழுத்துச் செல்ல முயல்கின்றது.
அவள் அந்த வெறியனின் மரணப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அலறியபடியே ஜிவமரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றாள்.
தோட்டத்தில் வேலை செய்துகொண்டு நிற்கின்றவர் களுக்கு அவலக் குரலொன்று கேட்கின்றது. அது விஜயா வினுடைய குரல்தானென்று ஊகித்த அவர்கள் ஆரவாரித்துக் கூக்குரலெழுப்பியவாறு அலறல் சத்தம் வந்த திசையை நோக்கி நாலாபுறங்களிலுமிருந்தும் ஓடிவந்து கொண்டிருக் கின்றார்கள்.
விவசாயிகள் கூக்குரலிட்டபடியே விஜயா போராடிக் கொண்டிருக்கின்ற இடத்தை நெருங்குகின்றார்கள்.
தன்னைக் காப்பாற்றுவதற்கு அந்த வெறியனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற
82

நீர்வை பொன்னையன்
விஜயாவைக் கண்டதும் விவசாயிகள் ஆக்ரோஷமடை கின்றார்கள். அவர்களிடையே கொதிப்பும், கொந்தளிப்பும், கோபா வேசமும் பொங்கிப் பிரவகிக்கின்றன. கோபத்தில் கண்களை வெறித்து நோக்கியவர்களும், தமது புருவங்களை நெருக்கி முஷ்டிகளை உயர்த்தி தமது கோபாவேசத்தை ஆக்ரோஷக் குரல்களால் வெளிப்படுத்திக் கொண்டு ஓடி வருகின்றார்கள்.
விவசாயிகள் ஓடி வருவதைக் கண்ட அந்தக் காக்கி உடை தனது இரும்புப் பிடியைத் தளர்த்தி விஜயாவைத் தன் பிடியிலிருந்து விடுகின்றான்.
விஜயாவை நெருங்கி விட்ட விவசாயிகள் அந்தக் காக்கி உடைக் கிராதகனைப் பிடித்து, பிய்த்துப் பிடுங்கி கூறுகூறாகக் கிழித்தெறிய வேண்டுமென்று துடிக்கின்றார்கள். அதிகாரத் தொனியில் சத்தமிட்டுக் கொண்டு இன்னுமொரு காக்கிச் சட்டை உருவம் எதிர்ப்புறத்திலிருந்து வந்து கொண்டி ருக்கின்றது.
காலைத் தரையிலுான்றி அழுத்தமாக வைத்தபடியே அவன் சாவதானமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றான். அவனது கொழுத்த சிவந்த உருண்டை முகமும் கூரிய பார்வையுடைய உக்கிரக் கண்களும் நிதானமான நடையும் அவன் ஒரு அதிகாரி என்பதைத் துலாம்பரப்படுத்துகின்றன.
தனது அதிகாரியைக் கண்டதும் அந்த ராணுவச் சிப்பாயின் முகத்தில் பீதி, அவன் உடம்பை விறைத்துக் கொண்டு அற்ரென்ஷனில் நிற்கின்றான்.
விஜயா திகிலடைந்தபடியே நிற்கின்றாள். விவசாயிகள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டு நிற்கின்றார்கள்.
அதிகாரி விஜயாவையும் சிப்பாயையும் மாறி மாறிப் பார்க் கின்றான். என்ன நடந்திருக்கக்கூடுமென்று ஊகித்த அதிகாரி நிலைமையைச் சமாளிக்க முற்படுகின்றான்.
83

Page 46
வேட்கை
அவர்கள் இருவரும் அசையாமல் நிற்கின்றார்கள். விவசாயிகளைக் கலைந்து செல்லுமாறு புரியாத மொழி யில் ஏதோ கூறிக்கொண்டு சைகை செய்கின்றான் அதிகாரி
அவர்கள் அசையவில்லை.
அதிகாரி உடனே சிப்பாய் பக்கம் திரும்பி கோபமாக உரத்த குரலில் கத்துகின்றான்.
சிப்பாய் நடுங்கிக் கொண்டே விழுந்து கிடந்த விஜயாவின் பைசிக்கிளை தூக்கி நிறுத்தி அவளிடம் கொடுக்கின்றான்.
விஜயா யந்திரமாய் தனது பைசிக் கிளை வாங்கிய பின்னரும் தயங்கியபடியே நிற்கின்றாள்.
அதிகாரி விஜயாவைப் பார்த்து போகும்படி சைகை செய்கின்றான்.
அவனது முகச்சாயலில் மன்னிப்புக் கோரும் தோரணை. விஜயா போஷாக்கு நிலையத்தை வந்தடைகின்றாள். அவள் அங்கு எப்படி வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. வந்ததும் வராததுமாய் அவள் வழமையாய் இருக்கின்ற இடத்தில் மலைத்துப் போய் இருக்கின்றாள்.
இடிந்து போயிருக்கின்ற விஜயாவைப் பார்த்ததும் அங்கிருந்த தாய்மார்களுக்கு திகைப்பு அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விஜயாவிற்கு என்ன நடந்ததென்பதை அறிய அவர்கள் ஆவலுடன் முனைகின்றனர். -
அப்பொழுதுதான் அங்கு வந்த ஒரு தாய் தனக்குப் பக்கத்திலிருக்கின்ற ஒருவருக்கு விஜயாவிற்கு வழியில் நடந்த சம்பவம் பற்றி இரகசியமாகக் கூறுகின்றாள். சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தாய்மார்களுக்கும் விடயம் தெரிய வருகின்றது. சிலர் அதை நம்பவில்லை. நம்பியவர்களுக்குப் பெரும் கவலை. தாய்மார்கள் கோபத்தில் பொங்கிப் பொருமிக் கொண்டிருக் கின்றனர்.
ஜீவா அங்கு விரைந்து வருகின்றான். அவன் வந்த
84

வை பொன்னையன்
வழியில் அவனுக்கு விஷயம் எட்டிவிட்டது.
விஜயா ஜீவாவை வெறித்துப் பார்த்தபடியேயிருக்
ன்றாள். அவளது இதயத்தில் நிறைந்திருந்த துயரம் ாங்கிப் பொருமி வெடிக்கின்றது.
பயப்பீதியடைந்த குழந்தை தாயைக் கண்டதும் கதறி அழுவது போல திடீரென விஜயா கதறி அழுகின்றாள். அவளது உடல் குலுங்குகின்றது.
ஜீவாவிற்கும் துயரம் தாங்க முடியவில்லை. அவனது தயம் பொருமுகின்றது. கண்கள் கலங்குகின்றன. அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விஜயாவினுடைய இதயத்திலுள்ள துயரம் வெளியேறி மனம் ஆறும் வரை
வளையே பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
அங்கிருந்த தாய்மார்களுக்கு துயரத் தவிப்பு "ஐயோ! எங்கடை விஜயாவுக்கா இந்தக் கதி?"
ஒரு தாய் அங்கலாய்த்துக் கூறுகின்றாள்.
"அவன் நாசமாய்ப் போக" இன்னுமொரு தாய் சபிக்கின்றாள். "எங்கடை விஜயாவுக்கு அப்பிடியொண்டும் நடந்தி நக்காது. அவ நல்லாய் பயந்திட்டா. அவ்வளவுதான்."
செல்லம்மா அக்கா உறுதியாகக் கூறுகின்றாள். "உந்த அழிவாங்கள் எப்பதான் எங்கடை ஊரை விட்டுத் துலையப் போறாங்களோ?"
மகேசக்கா ஏக்கத்துடன் அங்கலாய்க்கின்றா. "ஆகாயத்திலை போன பிசாசை ஏணி வைச்சு இறக்கிப் போட்டு, அதை என்னண்டு கலைக்கிறதெண்டு ஒருதன் அவலப் பட்டதாக ஒரு கதையுண்டு. அதைப்போலைதான் இண்டைக்கு எங்கடைநிலைமையும், ஆனால் இதுக்குப் பொறுப்பானவைகள் ஒரு நாளைக்கு மக்களுக்குப் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்"
85

Page 47
வேட்கை
ஜீவா வெறுப்புடன் கூறுகின்றான். விஜயாவிற்கு முன்னரைப்போல் இப்போ வேலை செய்ய முடியாமலிருக்கின்றது.
அந்த ராணுவச் சிப்பாயின் கோரப் பார்வையுடன் வெறி பிடித்த கண்களும், அந்த விகாரமான முகமும் அவளை இரவு பகலாக அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. அவளுக்கு உறக்கமில்லை. உணவு உட்கொள்ள முடியவில்லை. எந்த நேரமும் திகில், அது மாத்திரமில்லை, அவளுக்கு அடிக்கடி மயக்கம் வருகின்றது. எந்த நேரமும் சித்தப்பிரமை பிடித்த வளாயிருக்கின்றாள்.
விஜயாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமை கின்றது. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் அவள் வைத்திய சாலையில் அனுமதிக்கப் படுகின்றாள்.
அவள் வைத்தியசாலையிலிருக்கும் பொழுது ஜீவா காலையும் மாலையும் ஏன் விடுமுறை நாள்களிலும் மூன்று வேளைகளும் வைத்தியசாலைக்குச் சென்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்றி அவளை உற்சாகப்படுத்தி வருகின்றான். அத்துடன் அவளது போஷாக்கு நிலையங்களின் கடமைகள் யாவற்றையும் தானே பொறுப் பேற்று நிறைவேற்றி வருகின்றான். இதில் அவனுக்கு மனநிறைவு.
விஜயா ஜீவாவின் ஆறுதல் வார்த்தைகளையும் பணிவிடைகளையும் இதயபூர்வமாக ஏற்றுக்கொள்கின்றாள். அவளது இதயம் பூரிப்படைகின்றது. படிப்படியாக அவளது உள நிலையும் உடல் நிலையும் தேறி வருகின்றன. ஆனால் அந்தப் பயங்கர சம்பவத்தை அவளால் முற்றுமுழுதாக மறக்க முடியவில்லை. அதன் கருநிழலை தனது உள்ளத்திலிருந்து பூரணமாகத் துடைத் தெறிவதற்கு அவள் முயற்சி செய்து வருகின்றாள்.
விஜயா பழையபடி வேலைக்குச் செல்லும் பொழுது
86

நீர்வை பொன்னையன்
ஜீவாவும் அவளுடன் செல்வான். அவள் தனியே வேலைக்குச் ബങ്ങക அவன் அனுமதிப்பதில்லை. நிழல்போல் அவன் அவளுடன் சென்று கொண்டிருக்கின்றான்.
விஜயாவின் தந்தை சுந்தரத்தார் அவளை வெளி நாட்டிற்கு அனுப்பப் பகிரதப் பிரயத்தனம் செய்கின்றார். அவள்
தற்கு உடன்படவில்லை.
அவளது தந்தைக்கும் விஜயாவிற்குமிடையில் முரண்பாடு முற்றுகின்றது. அவளுக்கு வீடு நரகமாகின்றது.
எங்காவது கண்காணாத இடத்திற்கு தன்னைக் கூட்டிச் செல்லும்படி ஜீவாவை அவள் அடிக்கடி வேண்டுகின்றாள். அல்லது தன்னுடன் வெளிநாட்டிற்கு அவனை வரும்படி ேே
ஜீவா அவளது வேண்டுகோள்களைப் பாராதுரமாக எடுக்கவில்லை. நோயின் காரணமாக அவளது உள்ளம் பலவீன மடைந்ததால்தான் அவள் அப்படிக் கேட்கின்றாள் என்று அவன் எண்ணுகின்றான். இதனால் அவளது கோரிக்கையை அவன் தட்டிக்கழிக்கின்றான்.
விஜயா ஜீவாவை இதயபூர்வமாக நேசிக்கின்றாள். ஆனால் அவளது காதலை அவனுக்கு அவளால் வெளிப்படுத்த
முடியவில்லை. ஏனென்றால் ஜீவா அவளை நேசிக்காவிட்டால்
வன் அவளைத் தவறாக நினைக்கக்கூடும். இதனால்
வனது வெறுப்புக்குத் தான் ஆளாக வேண்டிவரும் என்ற அச்சம் அவளுக்கு.
வசந்தத்தின் வாசலில் நிற்கின்ற அவளது இளம் மனதில் |லையலையாகப் பொங்கியெழுந்து பெருகி ஓடுகின்ற இந்த வவெள்ளத்தை இதயத்தில் மூண்டெழுகின்ற இந்த இதய நாகத்தை அவளால் வெளிப்படுத்தவோ தணிக்கவோ டியவில்லை. எவ்வளவு காலந்தான் இந்தப் புயலைத் தனது இதயத்தில் அவளால் அடக்கி வைத்திருக்க முடியும்? அவள் இதயத்தில் மூண்ட இந்தத் தாகத்தை இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்ததுதான் அதிசயத்திலும் அதிசயம்.
87

Page 48
வேட்கை
அவள் தன் ஆத்மார்த்தமான காதலை வெளியிட வாய்ப்பைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கின்றாள்.
ஜிவாவிற்கும் இதே நிலைதான். தனது ஆத்ம தாகத்தை அவளுக்கு வெளிப்படுத்துகையில் அவள் அதை ஏற்க மறுத்தால் அல்லது தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டு இழிவானவன் என்று நினைத்து வெறுத்தால் என்ன செய்வதென்ற திரிசங்கு நிலை அவனுக்கு.
இறுதியில் விஜயா பலியாடுபோல வெளிநாடு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். வேண்டா வெறுப்பாக அவள் தன் தந்தையின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுக்க வேண்டிய தாயிற்று.
அவள் பயணத்திற்கு வேண்டிய தயாரிப்புக்களைச் செய்து கொண்டிருக்கின்றாள்.
பைசிக்கிள் பெல் சத்தம் கேட்கின்றது. "அம்மா ஆரெண்டு பாரணை" கூறியபடியே விஜயா உடுப்புகளை சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருக்கின்றாள்.
"வெளிநாட்டுக் கடிதம் வந்திருக்கு, இந்தா ஆரெண்டு | Tir".
வெளியே சென்ற தாய் திரும்பி வந்து ஒரு கடிதத்தை விஜயாவிடம் கொடுக்கின்றாள்.
கடிதத்தைப் பார்த்ததும் விஜயாவின் கண்கள் மலர் கின்றன.
"அது எங்கடை பவானியினுடைய கடிதமனை அம்மா"
"இந்தக் கடிதம் நேரகாலத்துக்கு வந்தது நல்லதாய் போச்சு. நீ கடிதத்தைப் படித்துப்போட்டு விசயத்தைச் சொல்லு மோனை அடுப்பிலை வைச்ச கறி எரியப்போகுது. நான் அதைப் பார்த்து இறக்கிப் போட்டு வாறன்."
கூறிவிட்டு தாய் சமையலறைக்குள் செல்கின்றாள். "என்ரை பவானி என்னை ஒரு நாளும் கைவிடமாட்டாள்.
88

வை பொன்னையன்
சரி என்ன எழுதியிருக்கின்றாள் எண்டு பார்ப்பம்." ஆவலுடன் கடிதத்தைத் திறக்கின்றாள் விஜயா.
"என் அன்பு விஜயா
- - - - நீ இங்கு வருகின்றாய் என்று அறிந்ததும் எனக்கு
ஆனந்தம் தாங்க முடியவில்லை. எப்போது நீ இங்க வந்திறங்குவாய் என்று நான் ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால். pri
"நான் தற்செயலாக, எதிர்பாராத விதமாக சிவசங்கரைச் பந்திக்க நேரிட்டது. நீ என்னிடம் வருகின்றாய் என்று உனது அப்பா தனக்குக் கடிதம் எழுதியிருப்பதாக அவன் சொன்னான்."
"அப்பா எனக்குத் தெரியாமல் அவனுக்கு ஏன் கடிதம் போட வேண்டும்?"
விஜயாவின் மனதில் சந்தேகக் கேள்விக்குறி.
அவள் கடிதத்தை தொடர்ந்து படிக்கின்றாள்.
"அது மாத்திரமல்ல விஜயா, உன்னைத் தனக்குக் கல்யாணம் கட்டி வைக்க உனது தந்தையும், தனது தாயாரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உன் தகப்பனும் தன் தாயும் தனக்குக் கடிதம் எழுதியிருப்பதாக சிவசங்கள் எனக்குச் சொன்னான். அவன் உனது அப்பாவின் கடிதத்தையும் எனக்குக் காட்டினான்.
உனக்கு சிவசங்கரைக் கல்யாணம் செய்ய விருப்பமா விஜயா? நீ இதற்கு உன் சம்மதத்தைத் தெரிவித்தாயா?"
விஜயாவின் முகத்தில் கருநிழல் படர்கின்றது. "விஜயா இன்னொரு ஆச்சரியம் தரும் புதினத்தை உனக்கு அறியத் தருகின்றேன். இருவாரங்களுக்கு முன் சிவசங்கருக்குத் திருமணம் முடிந்து விட்டது. அதுவும் காதல் திருமணம்!"
அப்பாடா தொலைந்தது பீடை!
89

Page 49
வேட்கை
விஜயா நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றாள்.
- - - - - - - . அவள் மீண்டும் கடிதத்தைப் படிக்கின்றாள். . 1 . . . . 1 + '///////\صبر; .
"அப்போ நீ இங்கு வந்தால் என்ன செய்வதென்று நான்
- - - - () அவனைக் கேட்டேன். அவன் என்ன கூறினான் தெரியுமா?
"விஜயா விரும்பினால் நான் அவளையும் வைத்திருக்கத்
*_/ー、 ി . w தயார்' எண்டு அந்தக் கழிசடை எனக்குச் சொன்னான். அவனது மூஞ்சியில் காறித் துப்பவேண்டும் போலிருந்தது எனக்கு. நான்
உடனே."
மேற்கொண்டு வி யாவினால் கடி க்கைக் கொடர்ந்த
கடிதததைத தொடாநது
- படிக்க முடியவில்லை.
கோபாவேசத்தில் அவளது உடல் நடுங்கியது.
- . . - போயும் போயும் இந்தக் கேடு கெட்டவனையா எனக்கு
கட்டி வைக்க அப்பா முடிவு செய்தார்? அவர் தன்ரை சகோதரி யின்ரை மகன் எண்டதாலை அவன் எப்படிக் கெட்டழிஞ்சவ னெண்டாலும் பாதகமில்லை. அவனை என்ரை தலையிலை கட்டிச் சுமத்தினால் போதும், நான் எப்படி நாசமாய் போனாலும் பரவாயில்லை. அவருக்குத் தன்ரை சகோதரியைத் திருப்திப் படுத்தினால் சரி. அதோடை மாதாமாதம் வெளிநாட்டிலை யிருந்து ஆயிரமாயிரமாய் காசு வந்தால் காணும்.
இந்தக் கடைகெட்டவனெங்கே? என் அன்பிற்கினிய ஜீவா எங்கே?
6.5 சுந்தரத்தாரின் சகோதரியினுடைய மகன். அவன் ஏகபுத்திரன் அவனுடைய தந்தை சண்முகம் பெரும்புள்ளி அவரது தலைை மயில்லாமல் ஊரில் எதுவித பொதுவிடயமும் ஒருவராலும் நடத்த முடியாது. அவர் பெருமளவு சொத்துக்கு அதிபதி பலவித திருகுதாளங்களை நடத்தித்தான் அவர் இவ்வளவு சொத்துக்கும் அதிபதியானார்.
ஒருநாள் திடீரென நடந்த விமானத் தாக்குதலுக்கு அவர்
- - இரையானார். அவரது உடலை உறவினர்களால் கூடப் பார்க்க
(!pg|Lബ്ബഞണ്ഡ്.
90
 
 
 

நீர்வை பொன்னையன்
தந்தையைப் போலவேதான் மகனும்,
சிவசங்கர் செல்லப்பிள்ளை. பெருவாரியான சொத்துக்கு வாரிசு, அவன் யாழ்நகரிலுள்ள பிரபலமான கல்லூரியில் பயின்றவன் படிக்கும் பொழுதே கல்லூரியிலும், வெளியிலும்
- - - - பெரும் அட்டகாசங்களையும கெடுபிடிகளையும் நடத்தி புகழ்
. , பெற்றவன். அவன் பிஞ்சிலே பழுத்தவன். அவன் தனது
- ). , , . . சகபாடிகளுக்கே செய்த பல மோசடிகள் இறுதியில் அம்பலமாகி அவனுடைய உயிருக்கு அவர்களால் ஆபத்து நேரிட்டது. இது தெரிந்தவுடன் அவன் பத்து ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற் குத் தப்பி ஓடி விட்டான்.
அங்கும் அவன் மீண்டும் சட்ட விரோதமாக )5كروكITTL تت கைகளையும், இரவு விடுதிகள் நடத்தியும் போதைவஸ்துக்
நடத்தலிலும் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை குவித்து
நகி 60IIDIT607.
சிவசங்கரைத் தனது அண்ணனின் மகள் விஜயாவிற்குக் .
ல்யாணம் கட்டிவைத்தால் அவன் திருந்தி நல்ல வழிக்கு ரக்கூடும் என்று அவனுடைய தாய் எண்ணினாள். அவனைத் திருமணம் செய்தால் சண்முகத்தாரின் சொத்துக்கள் அனைத் தும் தம்வசமாகிவிடும் என்று சுந்தரத்தார் நினைத்தார்! அண்ணனும் தங்கையும் சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறைவேற்ற முடிவு எடுத்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஆனால் இந்த முடிவுக்கு விஜயாவினால் எப்படி
- ... உடன்பட முடியும்? ஜீவாவை அவள் எப்படி மறக்க முடியும்?
ஜீவாவிற்கு என் இதயதாகத்தை வெளிப்படுத்தாம
歌 í - .
லிருந்தது எவ்வளவு பெரிய தவி I? அவர் என்னை நேசிக்கா
விட்டாலும் ஒரு பொழுதும் அவர் 616) ഞങ്ങ வெறுக்க LDTI LTs.
-
இது நிச்சயம். அவர் எவ்வளவு நிதானமானவர் எவ்வளவு
It
முதலாளித்துவவாதிகள் பெண்களைப் பிள்ளை பெறும் பந்திரமாக, தங்களது உடல் வேட்கையைத் தீர்க்கும்
- - போதைப் பொருளாக, வியாபாரப் பண்டமாகக் கருது
91

Page 50
வேட்கை
கின்றார்கள்" என்று ஒரு மேதை கூறியதாக ஒருநாள் அவர் சொன்னார். இது முற்றிலும் சரி எண்டு இப்பதான் எனக்குப் புரியுது.
ஜீவாவிற்கு வெளிநாடு செல்ல எவ்வளவோ வாய்ப்புக்கள் வந்தும் அவன் செல்ல விரும்பவில்லை. அவன் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவனது தந்தை ஒர் ஏழை 6bilolaj Tuј.
அவன் இந்த நாட்டிலுள்ள உழைக்கும் மக்களின் விடிவிற்கான போராட்ட லட்சியத்திற்கு தன்னை அர்ப்பணித்துச் செயல்பட்டு வருகின்றான். அவன் அந்த லட்சியப் பாதையில் உறுதியாக நின்று தனது தோழர்களுடன் சேர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றான்.
"விஜயா, உம்மைப்போன்ற சேவை மனப்பான்மையுடை யவர் எங்களுடன் சேர்ந்துழைத்தால் உம்மால் எவ்வளவோ பங்களிக்க முடியும்" என்று அவர் கூறினார். அவருக்கு எவ் வளவு தூய்மையான உள்ளம் இருளுடன் ஒப்பிடும் பொழுதுதான் ஒளியின் மகத்துவம் தெரிகின்றது!
ஒருநாள் நாங்கள் இருவரும் போஷாக்கு நிலையத்திற்கு
எங்கள் பைசிக்கிள்களில் ஒன்றாகச் சென்று இறங்கினோம் இதைப் பார்த்த நல்லம்மாக்கா "இருவரும் நல்ல சோடிப் பொருத்தம்" என்று கேலியாகச் சொன்னா.
அதுக்கு நான் குடுத்து வைக்க வேணுமே" என்று அவர்
எனக்கு மெதுவாகக் கூறியதை அன்று நான் சரியாகப் புரிந்து
கொள்ளவில்லை. அது எவ்வளவு பெரும் தவறு என்று இப்பொழுதுதான் எனக்குத் தெரியும்,
வாறகிழமை நான் பயணம் போகிறேன் என்று சொன்ன பொழுது ஜீவாவின் வாடி வறண்ட உதடுகளில் ஒரு மெல்லிய
சிரிப்புத் தோன்றி மறைந்தது. அந்தச் சிரிப்பில் அவரது
அளவற்ற நிரா சையையும் வேதனையையும் தான் நான் கண்டேன். ஆண்டவா ! இப்படிப்பட்ட என் ஜீவாவையா நான்
92

o நீர்வை பொன்னையன்
விட்டுவிட்டு வெளிநாடு செல்லத் துணிந்தேன்?"
தனது இரு கைகளையும் தன்னையறியாமலேயே தன் தலைக்கு மேலே உயர்த்துகின்றாள் விஜயா. அவளது கையிலிருந்த கடிதம் நழுவி விழுகின்றது.
அவளது இதயத்தில் துயரம்தேங்கி நிற்கின்றது. சூட்கேஸிற்கருகிலுள்ள வெளிநாடு செல்லவிருக்கின்ற அவளது பாஸ்போட் விஜயாவின் கண்ணில்படுகின்றது.
விஜயா தனது பாஸ்போட்டை நிதானமாக எடுக்கின்றாள். பாஸ்போட்டின் தாள் ஒவ்வொன்றையும் அவள் பிரித்து சுக்கல் நூறாகக் கிழித்து அச்சிறுதுண்டுகளை தன் உள்ளங்கையில் வைத்து வாயால் ஊதி அவற்றைக் காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றாள். அச்சிறு துண்டுகள் அவளைச் சுற்றிய இடமெல்லாம் பூக்களைப் போல் பரவிக் கிடக்கின்றன.
அப்பொழுது தான் வெளியேயிருந்து வந்த அவளது தந்தை சுந்தரத்தார், விஜயா பாஸ்போட்டைக் கிழித்துக் கொண்டி ருப்பதைய பார்த்ததும் பிரமிப்படைகின்றார்.
அவருக்கு கோபம் சீறுகின்றது. "எடி நாசமாய் போறவளே! உனக்கென்னடி பயித்தியம் பிடிச்சிட்டுதோடி? என்ன வேலை செய்யிறாயடி?"
கோபாவேசமாகக் கர்ச்சிக்கின்றார் சுந்தரம், விஜயா ஒன்றும் பேசவில்லை. அவரை நிமிர்ந்து பார்க் நின்றாள்.
நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்படுகின்ற அக்கினிச் ஜுவாலையாக அவளது பார்வை,
விஜயாவினுடைய முகத்தின் இறுக்கத்தையும் அவளது அக்கினிப் பார்வையையும் பார்த்த சுந்தரனார் அஞ்சி நடுங்கிச் செய்வதறியாது திகைத்து நிற்கின்றார். ص
சுந்தரத்தாரின் கோபக்குரலைக் கேட்ட அவரது மனைவி புவனேஸ்வரி என்னவோ ஏதோவென்று பதறிக் கொண்டு
93

Page 51
வேட்கை
குசினிக்குள்ளிருந்து அவசர அவசரமாக வெளியே வருகின்றாள்.
அவள் அவர்களிருவரதும் போர்க்கோலத்தைக் கண்டு திகைத்து ப் போய் நிற்கின்றாள்
விஜயா எழுந்து நிதானமாக வெளியே வருகின்றாள். வான் (pdbf 60L அவள் அண்ணாந்து பார்க்கின்றாள். இளங்காலை வானம் துடைத்துவிட்டாற் போல தூய்மை யான வனப்புடனிருக்களின்றது.
வசந்தகால இளந்தென்றல் அவளது உடலுக்கு இத மூட்டுகின்றது.
அண்டசராசரங்களுக்குமப்பால் ஜனித்து, அலை பாய்ந்து வருகின்ற ஜீவநாதம் காற்றில் ஒலிப்பதான உணர்வு விஜயா விற்கு.
வளர் பிறையில் தென்படும் மென் நிலவொளிபோல
அவளது வதனத்தில் அமைதி நிலவுகின்றது. அப்பொழுது பரிபூரண பொலிவுடன் மலரின் மென் இதழ் விரிவது போல
அவளது முகத்தில் புதுப்பொலிவு.
பிரபஞ்சமே சொப்பன ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக் கின்றது .
விஜயா உயர்வானிலுள்ள தேவதையாகிவிட்டாளா! இதயத்துடன் இதயமாய் ஜிவாவுடன்சங்கமித்து விட்ட விஜயா அவனது லட்சியப்பாதையில் அந்தரங்க சுத்தியுடன் செல்வதற்கு எமது தாய்த் திருநாட்டின் புழுதியில் உறுதியாகக் காலூன்றி நிற்கின்றாள்.
O
1996.
94

இருள் ஒளியை விழுங்கத் திருட்டுத்தனமாக பதுங்கிப் பதுங்கி வந்து கொண்டிருந்தது.
ஊரெங்கும் பதற்றம், பதகளிப்பு!
ஒளி இருளை எதிர்க்கின்றது.
ஊர் மக்கள் அவசர அவசரமாகக் கிடைத்ததைக் கொண்டு தங்கள் வயிற்றை அரைகுறையாக நிரப்புவதற்கு
ஒளிக்கும் இருளுக்கும் மோதல்,
தங்களைத் தயார்படுத்துகின்றனர் கிராம மக்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில், ஊர் உறங்கவில்லை, சுறுசுறுப்பாகத் தானிருக்கின்றது.
கன்னங்கரேலென்ற மையிருளில் உலகம் புகைந்து
ஊரடங்குச் சட்டம்.
எங்கோ தூரத்தில் நாய்களின் குரைப்பு சங்கிலித்
95

Page 52
வேட்கை
நான்கு பக்கங்களாலும் வேலியை வெட்டிக் கொண்டு பல திக்குகளாலும் வந்து கொண்டிருப்பவர்களால் வீடு சுற்றி வளைக் கப்படுகின்றது.
பாதையால் வருவதற்கு அவர்களுக்கு அச்சம் அமுக்க வெடியில் கால்கள் இழப்பதைத் தவிர்ப்பதற்கு புதிய வழிகளால் வருகின்றார்கள் அவர்கள்.
வந்தவர்களின் தோள்களில் துப்பாக்கிச் சனியன்கள். சிலரது தோள்களில் ஷெல் அடிக்கும் கருவிகள்,
ஒரே ஆரவாரம், அமர்க்களம், வீட்டுக்குள் இருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியோர்கள் எல்லோரும் இந்த எதிர்பாராத சுற்றிவளைப்பால் பயந்து பதறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவருகின்றார்கள்.
தேடல் ஆரம்பிக்கின்றது. வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகின்றார்கள் வந்த வர்கள். எதுவித பயனுமில்லை.
தேடல் நடத்திய மும்மூர்த்திகள் வெளியே வருகின் றார்கள்.
வீட்டில் யார் யார் இருக்கின்றார்கள்? அவர்களின் வயதென்ன? தொழிலென்ன? வருமானம் ? எனப் பலவித கேள்விகள்,
வெளியே நின்று கொண்டிருப்பவர்களை குறிப்பாகப் பெண்களை நோட்டம் விடுகின்றார்கள் மும்மூர்த்திகள்.
இந்த விட்டில் தேடல் முடிகின்றது. அடுத்த வீட்டில் தேடல், பின் அடுத்த வீட்டில்,
ஊரே அல்லோலகல்லோலம்,
மாலைவேளையுடன் தேடல் முடிகின்றது. கிராமத்தில் அடிக்கடி தேடல் நடக்கின்றது.
96

நீர்வை பொன்னையன்
தேடல் ஊரில் தேடல், வீட்டில் தேடல் ஆட்களில் தேடல்,
ண்பரைத் தேடல், எதிரியைத் தேடல், இலக்கியத் தேடல், ஆத்மீகத் தேடல், கண்கண்ட தெய்வத்தை விட்டுவிட்டு கண்ணுக்குப் புலப்படாத தெய்வத்தை தேடி கற்பனைச் சவாரி செய்யும் தேடல், தேடல் பலவிதம்,
நூற்றுக்கணக்கானவர்கள் வருகின்றார்கள் தேடலுக்கு. சில வேளைகளில் இரண்டு, மூன்று பேர், சில நாள்களில் காலையில், சில நாள்களில் மாலையில், சில இரவுகளிலும் கூட தேடல், எப்பொழுது, எதற்காக என்றே கூற முடியாது.
கிராம மக்கள் பீதியும் ஆத்திரமுமடைகின்றார்கள். கிராமிய அமைதியும், ஆனந்தமும் சீர்குலைகின்றன.
மதிய வேளை,
வீடுகளில் ஆண்கள் இல்லை. வேலைக்குச் சென்று
எதிர்பாராமல் ஒரு பாத்திரத்தில் இடறுப்படுகின்றது.
தங்கம் திடீரெனத் திரும்புகின்றாள். அவள் எதிரில் மும்மூர்த்திகளில் ஒருவன், கொடிய கண்களின் வெறித்தனமான பார்வை தங்கத்தைப் பீதி கொள்ளச் செய்கின்றது.
அலறியடித்துக் கொண்டு வெளியே பாய்கின்றாள்.
தங்கம் தப்பி ஓடிவிட்டாள் அடுத்த வீட்டிற்குள்.
97

Page 53
வேட்கை
செல்லம்மா மீன் வெட்டிக்கழுவிக்கொண்டிருக்கின்றாள்.
ஆளரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றாள். படலையடி யில் ஒருவன், இடையில் மற்றொருவன்.
அவனுக்குப் பின்னால் மற்றவன் பல்லை இளித்தபடியே நிற்கின்றான்.
துள்ளி எழுகின்றாள செல்லம்மா.
கோபத்தில் அவளது முகம் புடைக்கின்றது.
கண்ணகியின் விழிகளாய் அவளது கண்களில் கோபத் தீ
"அடே கிட்டவந்தால் வெட்டுவண்ரா"
கத்தியை ஓங்கிக்கொண்டு கோபாவேசமாக கர்ச்சிக் கின்றாள் செல்லம்மா.
அவன் திகைத்து நிற்கின்றான்.
"இப்ப நான் உன்ரை கப்டனிட்டை போறணி பார், ஆரெண்டு நினைச்சாயLா?"
கத்தியை சுழற்றிக்கொண்டு குரலை மேலே உயர்த்தி தொண்டை கிழியக் கத்துகின்றாள் செல்லம்மா.
சத்தம் கேட்டு அயலவர்கள் ஒடி வருகின்றார்கள்.
மும்மூர்த்திகள் மெதுவாக நழுவுகின்றார்கள்.
தண்ணி வாளியுடன் மலசல கூடத்திற்குச் செல்கின்றாள் (pgjö35 LİDDET.
கதவைச் சாத்துவதற்கு அவள் திரும்பிய போது தனது பல்லைக் காட்டிக்கொண்டு அவளை நோக்கி வருகின்றான் ஒருவன் .
"கிட்ட வராதையடா"
அவள் எச்சரிக்கின்றாள்.
98

qo நீர்வை பொன்னையன்
அவன் கேட்கவில்லை. அவளை நெருங்குகின்றான்
"வராதையடா"
மீண்டும் கத்துகின்றாள்.
அவன் கிட்ட வந்து விட்டான்.
பயத்தில் அவளது உடல் நடுங்குகின்றது. விழிகள் பிதுங்குகின்றன.
திடீரெனப் பலம் பெற்றவளாய் தனது கையிலுள்ள
அவன் அதிர்ந்துபோய் நிற்கின்றான். முத்தம்மா அலறியபடியே வெளியே ஒடுகின்றாள்.
ஊர் மக்கள் திரள்கின்றனர். மும்மூர்த்திகள் மெதுவாகக் கழல்கின்றனர்.
சொட்டன் கந்தையா வீட்டுச் சந்தியில் இரண்டு இளை
இளைஞர்களின் நடமாட்டத்தில் சந்தேகம்,
இதையறிந்த கந்தசாமியும், குமாரவேலுவும் இளைஞர் களிடம் செல்கின்றனர். இளைஞர்கள் ரியூட்டரிச் சந்திக்குச் செல்கின்றனர். கந்தசாமியாக்கள் விடவில்லை. இளைஞர் களைத் தொடர்கின்றனர்.
"இதுக்கு கெதியாய் ஒரு முடிவுகட்ட வேணும். தொடர விடக்கூடாது."
தனது சடை மயிரைச் சிலுப்பிக் கொண்டு கோபாவேசமாகக் கூறுகின்றான் ஒரு இளைஞன்.
99

Page 54
வேட்கை
"ஓம் தம்பி இதுக்குக் கெதியிலை முடிவுகட்டத்தான் வேணும். நீ சொல்லிறது சரிதான். அவங்கடை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு."
குமாரவேலு முதுகில் தட்டிக் கொடுப்பது போல ஒத்துதுகின்றார்.
- இளைஞர்களுக்கு உற்சாகம் ,
"ஒண்டில் இண்டைக்கு அல்லது நாளைக்கு இரவுக் கிடையிலை அலுவலை முடிச்சுப் போட வேணும். இரண் டொருத்தரை முடித்தால்தான் அவங்கடை கொட்டம் அடங்கும்."
சடை வளர்த்த இளைஞன் கூறுகின்றான்.
அவன் பேசிய தோரணையில் ஒருவித அவசரச் சாயல் வெளிப்படுகின்றது.
"நாங்களும் அதைத் தான் விரும் பிறம் தம்பியள். ஆனால். ".
குமாரவேலு இழுக்கின்றார்.
"என்ன? என்ன ஆனால். ஒா
இளைஞன் வெட்டிக் கேட்கின்றான்.
"இந்தப் பகுதியிலை நெருக்கமாய் சனங்கள் குடி யிருக்குது.
"அதுதான். ft
கந்தசாமி ஆரம்பிக்கின்றான்.
"அதுக்கென்ன?"
இளைஞன் அவசரமாகக் குறுக்கிடுகிறான்.
"டே ஆவேசம், நீ பேசாதை நான் கதைக்கிறன்.
குமாரவேல் ஒருவித பதற்றத்துடன் கந்தசாமியை
1 OO

நீர்வை பொன்னையன்
அடக்கிவிட்டு தான் தொடர்கின்றார்.
"தம்பியள் முந்தநாள் எங்கடை புளியடி வயிரவ கோயிலடி யிலை சும்மா ஒரு வெடிவெடிச்சுது அது பண்டார வெடி கொஞ்ச நேரத்திலை அவங்கள் வந்தாங்கள். றோட்டுக்கரையிலை புள்ள எல்லா வீட்டுக் கண்ணாடி யன்னல்கள், கதவுகள் எல்லாத் தையும் அடிச்சு நொருக்கினாங்கள்."
"பிறகு יולי ஒரு இளைஞனின் கேள்வியில் அலட்சிய தோரணை, "அதோடை விட்டாங்களே? றோட்டாலை போய் வந்த ஆக்கள் எல்லாரையும் அடிச்சு உதைச்சாங்கள், துவக்கு சுறோங்குகளாலை எத்தனை பேற்றை கை கால்களை அடிச்சு முறிச்சாங்கள். மண்டையளைப் பிளந்தாங்கள்."
"அப்ப இப்ப என்ன செய்யிறது?" இளைஞன் விசனத்துடன் கேட்கின்றான். "நாங்கள் நாலஞ்சு பேர் நாளைக்கு முகாம் பொறுப் பதிகாரியைச் சந்தித்துக் கதைச்சுப் பார்க்கலாமெண்டி
க்கிறம். நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறியள்?"
இளைஞர்களுடைய நாடியைப் பிடித்துப் பார்க்க முயல் நின்றார் குமாரவேலு.
"அவங்களோடை கதைச் சாப் போலை பிரச்சினை தீர்ந்திடு மெண்டு நினைக்கிறியளோ?"
அது சரிவரா விட்டால் தாங்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை விளக்கமாக எடுத்துக் கூறுகின்றார் குமாரவேலு.
"அந்த முயற்சியும் தோற்றால் நாங்கள் உங்களிட்டை தான் வருவம், உங்களை விட்டிட்டு நாங்கள் வேற ஆரிட்டை போகேலும்?"
இளைஞர்களுக்கு ஒருவித திருப்தி,
1 O1

Page 55
வேட்கை
"சரி நடத்திப் பாருங்கோ பாப்பம்." இளைஞர்கள் கூறிவிட்டு அவ்விடத்தை விட் கல்கின்றனர்.
பல ஸ்தாபனங்களின் தலைவர் பதவிகளை வரிந்தெடுத் துத் தனது தலையில் சுமந்துகொண்டு இதன் மூலம் தனது வளங்களைப் பெருக்கிவிடுகின்ற தலைவர் சுந்தரம் கிராம மக்களுக்குத் தலையைச் சுற்றிவிட்டார்.
கிராமத்தின் இன்றைய அவல நிலைபற்றி ஆராய்வதற்கு பிள்ளையார் கோவிலடியில் நடத்தப்பட்ட கூட்டத்திற்கு தலைவர் சுந்தரமும் அவரைப்போல வசதிபடைத்த சில பெரிய குடும்பங் களைச் சேர்ந்த ஒருவர்தானும் வரவில்லை.
தலைவர் சுந்தரத்தின் தலைமையில்லாமல் இந்தக் கிராமத்தில் எந்தவொரு பொது வைபவமும் நடக்காது. நடத்த முடியாது. ஆனால் இன்று?
இந்தக் கிராமத்தில் இழப்பதற்கு ஒன்றுமேயில்லாத ஆனால் ஆத்மபலத்தை மாத்திரம் கொண்ட எண்ணற்ற தொழிலாளர்களும், விவசாயிகளும், பொறுப்பதிகாரியைச் சந்தித்துப் பேசுவதற்கு தாங்களாகவே முன் வந்திருக் கிறார்கள்.
உழவுகாரக் குமாரவேலு, சீமெந்துத் தொழிற்சாலை புல்டோசர் மணியம், சி.ரி.பி.மெக்கானிக் மயில் வாகனம், ஆவேசம் கந்தசாமி, நிறுதுளி இராசையா ஆகிய பஞ்ச பாண்டவர்கள் பொறுப்பதிகாரியைச் சந்திப்பதற்காக கூட்டத்திலுள்ள எல்லா மக்களாலும் ஒரே மனதாகத் தெரி செய்யப்பட்டனர்.
"எல்லோரும் நிண்டுபிடிக்கக் கூடிய நல்ல உரமா காய்கள்" என்று வேலுப்பிள்ளை பெருமையுடன் கூறுகின்றார் "போர் எண்டால் போர், சமாதானம் எண்டால் சமாதான எண்ட திமிர்த்தனமான பேச்சை மறந்திட்டியளோ?"
1 O2

a. நீர்வை பொன்னையன்
கூட்டத்திலுள்ளோரைப் பார்த்து ஆவேசம் கந்தசாமி கேட்கின்றான்.
"என்ன மறக் கின்றதா?" கூட்டத்திலுள்ளவர்களில் அநேகள் ஒரே குரலில் கூறுகின்றனர்.
"பேச்சை மறந்தாலும் ஆளை எப்படி மறக்கேலும்?
புல்டோசர் மணியத்தின் கூற்று. "இவர் தான் எல்லாத்துக்கும் மூலகர்த்தா, இவர்தான் இந்தப் பிரச்சினைக்கு எண்பத்திமூன்றுக்கு முன்னரே எப்பவோ ஏடு துவக்கி வைச்சவர். இவற்றை ஆக்களோடைதான் இண்டைக்கு நாங்கள் பேசப்போறம் எண்டதை மனதிலை வைத்திருக்க வேணும்."
கந்தசாமி நிதானமாகக் கூறுகிறான். கூட்டத்திலுள்ள வர்கள் கந்தசாமி கூறியதை பொறுப்புணர்வுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
"கதைக்கிறதுக்கு நாங்கள் நாலைஞ்சு பேர் போனாப் போலை சரிவராது. மக்கள் எல்லாரும் ஒண்டு திரண்டு போனால்தான் அவங்க படியிறங்கி வருவான்கள்" கந்தசாமி தூரதிருஷ்டியுடன் கூறுகின்றான்.
"முதலிலை நாலைஞ்சு பேர் போவம், அது பலன் தராட்டி நாங்கள் ஊர்மக்கள் எல்லோரும் திரண்டு போவம்."
குமாரவேலு கூறுகின்றார்.
பஞ்சபாண்டவர் சென்றனர்.
"எங்கடையாக்கள் சரியான கட்டுப்பாடுடையவை. அவை நண்டபடி வெளியில போகமாட்டினை, அதுக்கு நான் இடம் குடுக்கவும் மாட்டன், உங்களுடைய ஆக்கள்தான் ஊருக்கை இறங்கித் தொல்லைகள் குடுக்கினம் எண்டு நான்
நினைக்கிறன்." -
1 O3

Page 56
வேட்கை
பேச்சுவார்த்தை நடந்துவதற்கு வந்த குமாரவேலு ஆட்களைப் பார்த்து கூறுகின்றான் முகாம் பொறுப்பதிகாரி
தங்கடை முறைப்பாட்டை தங்களுக்கெதிராகத் திருப்பி விட முயற்சிப்பதை உணர்கின்றான் கந்தசாமி.
"என்ன சொல்லுறாய்? என்ன? எங்கடை ஆட்கள்தான் எங்களுக்கு தொல்லை தாறாங்களோ?"
கோபாவேசமாகப் பொங்கி எழுகின்றான் கந்தசாமி அவனுடைய நெற்றி நரம்பு விண்ணென்று புடைக்கின்றது. கண்கள் தீச்சுவாலையைக் கக்குகின்றன.
"அடே ஆவேசம், கொஞ்சம் பொறடா மோனை."
மயில்வாகனம் அவனைச் சாந்தப்படுத்துகிறார்.
"தேடல் எண்ட சாட்டிலை உங்கடை ஆக்கள்தான் அடிக்கடி வந்து ஊர்மக்களுக்கு தொல்லைகள் குடுக் கிறார்கள்" என்பதை ராணுவ அதிகாரிக்கு ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகின்றான் புல்டோசர் மணியம்.
"சரி அப்பிடியெண்டால் இந்த முகாமிலையுள்ள எல்லாரையும் நான் இங்கை கூப்பிடுறன். ஊருக்கை ஆரார் வந்து தொல்லை குடுக்கிறார்கள் எண்டு உங்களாலை அடையாளம் காட்ட முடியுமா?"
அதிகாரி கந்தசாமியாக்களைக் கேட்கின்றான்.
இதனால் வரவிருக்கும் பின் விளைவுகளை உத்தேசித்து கந்தசாமியாக்கள் மெளனமாயிருக்கின்றார்கள்.
"எங்கடை முகாமிலிருந்து சில யூனிபோம்கள் திருட்டுப் போய் விட்டன. உங்கடையாக்கள்தான் திருடியிருக்கிறார்கள் எண்டு எங்களுக்கு நல்லதாய்த் தெரியும். அந்த உடுப்பைப் போட்டுக் கொண்டு வந்து, அவங்கள் கொலைகள், கொள்ளை கள், எல்லாம் நடத்திப் போட்டு எங்களுடைய ஆட்களில் பழியைப் போடுறாங்கள் எண்டு எங்களுக்கு நல்லாய்த் தெரியும்,
104

நீர்வை பொன்னையன்
நீங்கதான் ஜாக்கிரதையாயிருக்க வேணும்."
அவர்கள் விரக்தியுடனும் வெப்பியாரத்துடனும் திரும்பு கின்றனர். ஆனால் அவர்கள் ஆத்ம உறுதியை இழக்கவில்லை. முகாமிலிருந்து திரும்பிய கந்தசாமியாக்கள் ஒய்ந் திருக்கவில்லை. அவர்கள் தீவிரமாகச் செயல்படுகின்றார்கள்.
கந்தசாமி கோயில் வடக்கு வீதிக்கு அருகாமையிலுள்ள அந்த தென்னஞ்சோலை மாடிவீட்டில் மும்மூர்த்திகளுக்கு "தீர்த்த" வைபவம் நடக்கின்றது. மெண்டிஸ் ஸ்பெஷல்' சாராயமும் கோழி இறைச்சிக் கறியும் நைவேத்தியம்' .
ஆவேசம் கந்தசாமியாக்களுக்கு இந்த இரகசியத் தகவல் கிடைக்கின்றது. -
தீர்த்த வைபவச் செலவுக்கான உபயத்தை தலைவர் சுந்தரம் பொறுப்பேற்றுள்ளார் என்று உள்வீட்டிலிருந்தே கந்த சாமியாக்களுக்கு நம்பகரமான தகவல் கிடைத்திருக்கின்றது.
இரவு பத்து மணி. கிராமம் கும் மிருட்டில் ஆழ்ந்த அமைதியில் மூழ்கி யிருக்கின்றது.
மயானஅமைதியைக் கிழித்துக்கொண்டு நாய்களின் சங்கிலித்தொடரான குரைப்பு. o
கோயில் மணி மூன்று தடவைகள் ஒசை எழும்புகின்றது. ஊரிலுள்ள ஒருசில வசதி படைத்த பெரிய குடும்பங்களைத் தவிர, விவசாயிகள், தொழிலாளர்கள். ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், வாலிபர்கள் ஆகிய அனைத்து உழைக்கும் மக்களும் அலை அலையாகத் திரண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஊழிக்கால பிரளயத்தின் போது கடல் குமுறிக் கொந்த ளித்து மூர்க்கத்தனமான பயங்கர இரைச்சலை எழுப்பவது போல, அலை அலையாகத் திரண்டு வருகின்ற இந்த
105

Page 57
வேட்கை
உழைக்கும் மக்களுடைய வஜ்ரக்குரல்களின் ஏகோபித்த பேரொலியும், அவர்கள் எழுப்புகின்ற பல்வேறு எக்காள சத்தங்களும் ஒன்றிணைந்து ஒரு பயங்கரப் பேரிரைச்சலாக ஜனித்து வியாபித்து வானமண்டலத்தை முட்டிமோத எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.
அணிதிரண்டு வருகின்ற இந்த மக்களின் கரங்களிலுள்ள தீப்பந்தங்கள் செவ்வொளி வீசி ஜூ வாலித்துக் கொண்டி ருக்கின்றன.
மதுபோதையில் காற்றில் மிதப்பதைப் போலச் வந்து கொண்டிருக்கின்ற மூன்று உருவங்கள் பேரிரைச்சல் கேட்டு பீதியில் திரும்பி ஓட முயல்கின்றன.
பயங்கரமான தீய சக்தி ஒன்று தங்களைக் கயளிகரம் செய்வதற்கு தம்மைப் பின்தொடர்வது போல நினைத்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவர்கள் தமது சக்தி அனைத்தையும் திரட்டி ஒட்டமெடுக்கின்றார்கள் அந்த மும்மூர்த்திகள்,
முகாம் காவலரணில் தூங்கிவிழுந்து கொண்டிருந்த சிப்பாய் பேரிரைச்சல் கேட்டுத் திடுக்குற்று எழுகின்றான்.
மூன்று உருவங்கள் தன்னை நோக்கி ஓடிவந்து கொண்டி ருப்பதை அந்தச் சிப்பாய் காண்கின்றான்.
நித்திரை வெறியில் கிடந்த அவனுக்குப் பெரும் அதிர்ச்சி
கிலியடைந்த அவனுடைய கையிலுள்ள இயந்திரத் துப்பாக்கி சடசடத்துக் கனைக்கின்றது. -
அலையலையாகத் துரத்தில் வந்து கொண்டிருக்கின்ற மக்கள் கோயில் மதிலுக்குப் பின்னால் ஒதுங்கிப் பாதுகாப் தேடுகின்றனர்.
மரண அமைதி!
சிறிது நேரத்தின் பின் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.
1 O6

வை பொன்னையன்
இருள் திரையைக் கிழித்துக் கொண்டு ஒளி கம்பீரமாக
வந்து கொண்டிருக்கின்றது.
மூன்று இராணுவச் சிப்பாய்களின் சடலங்கள் முற்பகலில்
ணுைவத்தினரால் பனங்காட்டுப் பகுதியில் தகனம் செய்யப் படுகின்றன.
தாழம்பற்றைக்குள் மறைந்திருந்த, மாடு மேய்க்கும் பையன்கள் இருவர் இதை அவதானிக்கின்றார்கள். அவர்கள் வரும் சிறிது நேரத்தில் ஓடிவந்து இந்த தகவலை கிராம களுக்குத் தெரிவிக்கின்றனர்.
கிராமம் நிம்மதியாக மூச்சு விடுகின்றது.
காவலரணைத் தாக்க வந்த மூன்று பயங்கரவாதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காலாதிகாலமாக ஆராதிக்கப்பட்டு வந்த கிராமத்தின் கெளரவம் விஸ்வரூபமெடுத்துக் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து பிற்கின்றது.
O
1996
1 O7

Page 58
வெண்புறா
*அண்ணா! நான் போட்டு வாறன். "அண்ணா" என்ற அந்த ஜிவ நாதம் அவனது ஆத்மாவையே ஆகர்ஷித்து, அவனை ஆனந்த பரவச மாக்குகின்றது.
"அண்ணா" என்ற அவளது அழைப்பில் பொங்கிப் பிரவகிக்கின்றன பாசம், கணிரென்ற கனிவான மதுரக் குரலோசை, துடுக்குத்தனம் நிறைந்த ஜீவன் ததும்பும் விழிகள், எடுப்பான கூரிய மூக்கு, பேதைமை கலையாத குழந்தைத் தனமான முகத்தின் தேஜஸ், பார்த்தோரையும் பக்தி பரவசமாக்கும் அவளது எழில் தோற்றம் அவனுக்கு ஒருவித ஆத்மார்த்த லயிப்புணர்வை யூட்டுகின்றன.
தன்னை மறந்த மோன நிலையில் நிற்கின்றான் அவன். அவனுடைய தீட்சண்யம் மிக்க விழிகள் அவளுடைய குழந்தைத் தனமான முகத்தில் எதையோ தேடுகின்றன.
தனது அன்புச் சகோதரியைத் தேடுகின்றானா அவன்? பெயரளவிற்கேனும் சுயநலமேயற்ற, ஜென்ம ஜென்மங் களாய்த் தொடர்ந்து கொண்டிருக்கின்ற மனிதநேய உறவின் வெளிப்பாட்டை அவளுடைய ஜீவன் ததும்பும் விழிகளில் அவன் காண்கின்றான்.
அவளுடைய தரிசனத்திற்காக அவனுடைய இதயம் எந்த நேரமும் ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கின்றது.
08

நீர்வை பொன்னையன்
"அண்ணா!" அதே மதுரக்குரல், அதே ஜீவன் ததும்பும் விழிகள், அதே பால் மணம் மாறாத குழந்தைத்தனமான முகம், கலையாத வெள்ளை யூனிபோம், பிறை நெற்றியில் கறுத்தப் பொட்டு, இரண்டாகப் பிளந்து பின்னப்பட்டு அடர்ந்த சுருண்ட கருங்கூந்தலின் தொங்கலில் வண்ணாத்துப் பூச்சி போன்று படபடத்துத் துடிக்கின்ற சிவப்புரியன்கள். பூரணத்துவ எழிலுடன் நிற்கின்றாள் அவள்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர்களை விட்டுப் பிரிந்த அவனது செல்லத் தங்கை தன்முன்நிற்பதான உணர்வு அவனுக்கு.
நிலத்தில் ஆழ அகலமாக வேரூன்றி, பொருமிப் பருத்து, வான்முகட்டைப் பார்த்து ஓங்கரிப்பதாய் உயர்ந்தோங்கி கிளைத்துச் சடைத்து, குளிர் நிழல் பரப்பி, விஸ்வரூபமாய் நிற்கின்றது அந்த மரம்.
எண்ணற்ற பறவையினங்கள் அந்த மரத்தின் கிளைகளி லிருந்து பலவகையான ஆனந்த இன்னிசை ஒலிகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
வேகமாய் வந்து கொண்டிருக்கின்ற அந்த 'சைக்கிள்" சந்திக்கருகாமையிலுள்ள அந்த மரத்தடிக்குச் சமீபமாக உள்ள கடையடியில் வேகம் தணிகின்றது.
மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பழுது பார்த்துக் கொண்டி நக்கின்றான் அவன்.
"அண்ணா!" என்ற மதுரக் குரலோசை கேட்டு அவன் தலை மகின்றது
கரும்பச்சையாய் கிளைத்துச் சடைத்து விஸ்வரூபமாய் நிற்கின்ற அந்த மரத்தைப் பின்னணியாகக் கொண்டு தூய வெள்ளை "யூனிபோம்" அணிந்த அவனுடைய தங்கை ஒரு காலை நிலத்தில் ஊன்றியபடியே பைசிக்கிளில் ஒய்யாரமாய் நிற்கின்றாள்.
109

Page 59
வேட்கை
f
"அண்ணா நான் போட்டு வாறன்." அவன் பெருமிதப் புன்னகையுடன் சரியெனத் தலை யசைக்கின்றான்.
என்றுமேயில்லாதவாறு அவள் சிறிது நேரம் தயங்கி நிற்கின்றாள். அவளது விழிகளில் ஒருவித பிரிவுத் துயரின் சோக நிழல் படர்கின்றது. இதை அவன் அவதானிக்கவில்லை.
அவளுக்கு ஏன் இந்த தயக்கம்? அவள் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்கின்றாள். இதுதான் அவளது இறுதிச் சந்திப்பு என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?
அவளது பைசிக்கிள் மெதுவாக நகர்ந்து செல்கின்றது. சிறிது தூரம் சென்றதும் அவள் தன்னுடைய தலையைத் திருப்பி பக்கவாட் டாய் சரிந்து துயரத்துடன் அவனைப் பார்த்துவிட்டு வானத்துத் தேவதையாய்ச் சென்று விட்டாள்.
போனவளேதான். ប្រវិត្រថៃ வரவேயில்லை.
அவளுடைய புத்தகப் பை தேடுவாரற்று அவளது பாடசாலை வகுப்பறையில் கிடக்கின்றது. பைசிக்கிள் அவள் விட்ட இடத்திலேயே தன்னந்தனியாய் நிற்கின்றது.
அவனும் அவனது பெற்றோரும் அவளைத் தேடாத இடமேயில்லை! -
அவனுக்கு வாழ்வே இருண்டு விட்டது. ஏக்கம், எதிர் பார்ப்பு, சோகம், அனைத்தையுமே அவன் தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு நடைப்பிணமாய்த் திரிகின்றான். ஏகாந்தமான அவனுடைய மனதில் எதிர்பார்ப்பும், i:
தன்மேல் கோபமும் பொதிந்து அழுத்துகின்ற பாரத்தோடு வாழ்கின்றான் அவன். *,
என்றாவது ஒருநாள் அவள் தம்மிடம் திரும்பி வருவாள்
11 O

நீர்வை பொன்னையன்
என்ற எதிர்பார்ப்புடன்தான் அவனும் அவனது பெற்றோரும் இருக்கின்றார்கள்.
அவளுடைய வருகைக்காக அவர்கள் ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.
நேரம் நத்தையாக நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவளுடைய தரிசனத்துக்காக அவனுடைய இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது.
அவள் இன்னும் வந்த பாடில்லை. நேற்றுக் காலையிலிருந்து அவளுக்காக அவனுடைய ഉ-ബi ஏங்கித் துடித்துக் கொண்டேயிருக்கின்றது.
அவள் ஏன் வரவில்லை?
மதம் கொண்ட யானையாய் மனித உயிர்களின்
மதிப்பையும் மகத்துவத்தையும் உணர்ந்தறியாத ஆயிர மாயிரம் மானுட உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருக் கின்ற அதிஉத்தமருடைய தாள்மிக அரசின் இரும்புக் கழுகுகள் அவளுடைய கிராமத்திற்கு நேற்று அதிகாலை விஜயம்
சய்திருப்பதாய் அவன் அறிந்திருந்தான்.
"ஒருவேளை பயம் காரணமாக அவளது பெற்றோர்கள் வளைப் பாடசாலைக்கு விடவில்லையோ? அல்லது அவளுக்கு ஏதாவது.
"சீ என்ன துர்க்குறியான எண்ணம் இல்லை! அவளுக்கு ன்றுமே நடந்திருக்காது.
தனது மனதிற்கு தானே சமாதானம் கூறுகின்றான் அவன். அவள் ஏன் நேற்று வரவில்லை? அவள் இண்டைக்கு நிச்சயம் வருவாள்.
நேரத்தைப்பார்க்கின்றான்.
1 11

Page 60
வேட்கை
நேரமும் எட்டு மணிக்கு மேலாகி விட்டதே. அவளை இன்னும் காணவில்லையே? ஒருவேளை அவள் இண்டைக்கும் வரமாட்டாளோ? இல்லை. இண்டைக்கு அவள் நிச்சயம் வருவாள். இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்பம்,
அவன் அவளுக்காக காத்திருக்கின்றான். அவனால் எதுவித வேலையும் செய்ய முடியவில்லை. நேற்றையிலிருந்து அவனுக்கு ஏராளம் வேலைகள் குவிந்து கிடக்கின்றன. அவனுக்குக் கையுமோடவில்லை, காலு
மனதில் நிம்மதியேயில்லை. அவளது தரிசனத்திற்காக அவன் தவமிருக்கின்றான் போலும்,
இன்று நேற்றல்ல, நீண்ட நெடுநாள்களாகவே அவன் அவளைத் தினசரி காலையும் மாலையும் தரிசித்துக் கொண்டே யிருக்கின்றான். அவளது கணிரென்ற மதுரக் குரலைக் கேட்டனுபவித்துக் கொண்டேயிருக்கின்றான்.
இரண்டு வருடங்களுக்கு முன். அன்று காலை ஏழரை மணியிருக்கும். அவளுடைய சைக் கிள் அவனுடைய கடைக்கு அருகிலுள்ள பைசிக்கிள் திருத்தும் கடைக்கு முன்னால் நிற்கின்றது. - -
'ஏதோ சத்தம் கேக்குது, சைக்கிள் ஒடேலாமைக்கிடக்கு. சரியான இறுக்கமாய்க் கிடக்கு. இதை ஒருக்கா திருத்தித் தாருங்கோ"
அவள் பதட்டத்துடன் கேக்கின்றாள். சைக்கிள் திருத்துபவன் அதை உருட்டிப் பார்க்கின்றான். "அச்சு இறுகிப் போச்சு கோப்பையும் உடைஞ்சு (55. எல்லாம் மாத்தி வேலை செய்யிறதென்டால் ஐம்பது ரூபாவுக்கு
112

நீர்வை பொன்னையன்
மேலை பிடிக்கும். என்ன கழட்டிறதோ'
"என்னட்டை இப்ப பத்துப் ரூபாதான் கிடக்கு." அவள் இழுத்துக்கூறுகின்றாள். "அப்ப என்னாலை ஒண்டும் செய்யேலாது." அவள் என்ன செய்வதென்றறியாது சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகின்றாள்.
தனது கடை வாசலில் நின்று கொண்டிருந்த அவன் இதை அவதானிக்கின்றான்.
"என்ன மோனை நடந்தது? ஏன் சைக்கிள் திருத் (85ണ്ഡങ്ങാണ്ഡ്'
"திருத்துறதுக்கு ஐம்பது ரூபாவுக்கு மேலே கேக்கிறார். என்னட்டை பத்து ரூபா மட்டும் தான் கிடக்குது. நான் என்ன Gay-Liu J?"
ஏக்கத்துடன் கூறுகின்றாள் அவள்,
அவன் ஒருவாறு அந்த பைசிக்களை ஒடக் கூடிய வகையில் சரி பண்ணிக் கொடுக்கின்றான்.
"இப்ப ஒரு மாதிரி ஒடேலும் . ஆனால் இரண்டு மூன்று நாளைக்குள்ளை திருத்திப் போடவேணும் இல்லாட்டி அச்சும் முறிஞ்சு ஆளுக்கும் ஆபத்து வரக்கூடும்."
அவன் எச்சரிக்கின்றான்.
"எவ்வளவு காசு?"
"நூறு ரூபா."
அவன் கூறுகின்றான்.
அவள திகைக்கின்றாள்.
"என்னட்டை இதுதான் கிடக்கு, மிச்சத்தை நாளைக்குக் கொண்டு வந்து தாறன்."

Page 61
வேட்கை
தன்னிடமுள்ள பத்து ரூபாவை நீட்டுகின்றாள்.
"எனக்கு முழுக்காசும் வேனும், இப்பவே தரவேணும். இல்லாட்டி சைக்கிளை விட்டிட்டுப் போ. காசை கொண்டு வந்து தந்திட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போகலாம்."
அவளுக்குத் திகைப்பு என்ன செய்வதன்றே தெரிய
கண்கள் நீர்த்திரை கட்டுகின்றன.
"எனக்கு ஒரு சதமும் தரவேண்டாம். நீ சைக் கிளை எடுத்துக் கொண்டு போ மோனை."
அவன் சிரித்த படியே கூறுகின்றான். அவள் அதிர்ந்து போய் அசையாது நிற்கின்றாள். "ஏன் பிள்ளை நிற்கின்றாய்? உனக்கு பள்ளிக்கூடத்திற்கு நேரம் போட்டுது. நீ போட்டு வா."
மீண்டும் அவன் கூறுகின்றான். அவள் தயங்கியபடியே பைசிக்களை எடுத்து ஏறி, ஒரு காலை நிலத்தில் ஊன்றி நின்றபடியே அவனை நன்றியுணர்வுடன் பார்க்கின்றாள்.
"நீ போட்டு வா மோனை."
அவன் நேசமாகக் கூறுகின்றான்.
"அண்ணா! நான் போட்டு வாறன்." "அண்ணா" என்ற அவளது அழைப்பிலுள்ள பாசம் அவனது இதயத்தை ஆகர்ஷிக்கின்றது.
அவனுடைய தங்கையே அவன் முன்னால் நிற்பது போன்ற உணர்வு அவனுக்கு. அவன் திக்குமுக்காடுகின்றான்.
அவள் மெதுவாக சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்து, பக்கவாட்டாகத் தலையயைச் சாய்த்து ஒரு செல்லச் சிரிப்பை வீசிவிட்டு வேகமாகச் செல்கின்றாள்.
114

நீர்வை பொன்னையன்
அவளது உருவம் பொட்டாகிப், புள்ளியாய் மறையும் மட்டும் அவன் அசந்துபோய் அவள் சென்று கொண்டிருக்கின்ற திசையையே பார்த்தபடியே நிற்கின்றான்.
இப்படித்தான் அவனுடைய தங்கையும் அன்றொரு நாள் சென்றாள்.
அன்றிலிருந்து அவன் அவளுடைய தரிசனத்துக்காகக் காலையும் மாலையும் ஆவலுடன் காத்துக் கொண்டே யிருக்கின்றான்.
சைக்கிள் மணிச்சத்தம். அதைத் தொடர்ந்து "அண்ணா நான் போட்டுவாறன்" என்ற பாசக்குரலோசையும் அவளுடைய செல்லச்சிரிப்பின் ஒளி வீச்சுற்.
அவனுடைய தங்கையும் இதே மாதிரித்தான் "அண்ணா நான் போட்டுவாறன்" என்று பாசமாகக் கூறிவிட்டுச் சென்றாள். அன்று, அவள் திரும்பி வராமலே வானத்துத் தேவதையாகி 67 LIT6TIT? -
இன்று, 'இவளுடைய பெயரென்ன? இவள் எங்கிருந்து வருகின்றாள' என்று அவன் கேட்டறியவில்லை. இவளைப் பற்றிய விபரங்களை அறிய வேண்டுமென்ற அக்கறையோ ஆவலோ அவனுக்கில்லை. அது அவனுக்கு அவசியமாகப் || ഖിബ്ഞൺ. அவனுக்கு வேண்டியது அவளுடைய பாசம் பொங்கிப் பிரவகிக்கும் அண்ணா என்ற அழைப்பும் அந்தப் பக்கவாட்டுப் பார்வையும், செல்லச்சிரிப்பும் ஒளி வீச்சும்தான். இவள் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவள். அவளுக்கு மூன்று அண்ணன்மார், தகப்பன் ஒய்வுபெற்ற அரசாங்க அதிகாரி அவருக்கு ஏராளமான நிலபுலம் பெரிய வசதியான வீடு பணமும் தாராளமாயுண்டு. ஊரிலும் அவருக்குப் பெரும் செல்வாக்கு, அவரை எதிலும் ஒருவரும் மிஞ்சிவிட முடியாது. எல்லா விஷயங்களுக்கும் அவர் முன்னணியில்தான்.
115

Page 62
வேட்கை
அவளோ விருப்பு வெறுப்பற்ற ஒருதுறவியாய் வாழ்க்கை யில் பட்டும் படமாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். அவள் தனக்கு அது வேண்டும். இது வேண்டும் என்று ஒருநாளும் தன் பெற்றோரைக் கேட்டதில்லை. ஆடம்பரமற்ற எளிய, பற்றற்ற ஒரு வாழ்க்கையையே அவள் கைக்கொண்டிருந்தாள்.
அவளுடைய இதயத்தில் சோகத்தின் நிழல் படர்ந் திருக்கின்றது.
சில வேளைகளில் அவள் தன்னிடையே தோன்றும் தள்மாவேச உணர்ச்சிகளுக்கு ஆளாகித் தன்னையே இழந்து விடுகின்றாள்.
"அப்பா, நேற்று நீங்கள் கூட்டத்திலை விளாசித் தள்ளினி LL6TIT(3D?"
அப்பொழுதுதான் வெளியேயிருந்து வந்த தந்தையைக் கேட்கின்றாள்.
"ஆர் சொன்னது மோனை' எப்படியிருந்ததாம் என்ர பேச்சு?" ஆவலுடன் கேட்கின்றார்.
"பேச்சு மிச்சம் உச்சமாய் தானிருந்தாம் ஆனால் .
"என்ன? என்ன ஆனால்.
"நாட்டைக் காக்கிறதுக்கு வீட்டுக்கு ஒரு பிள்ளையை விடும்படி கேட்டியளாமே?”
"ஒ, அதிலை என்ன தப்பு'
"என்னப்பா உங்கட மூண்டு பிள்ளையளையும் வெளி நாட்டுக்கு அனுப்பிப் போட்டமெண்ட துணிவிலைதானே மற்றவையின்ரை பிள்ளையளை விடச் சொல்லி உசாராய்க் கேக்கிறியள். இது நியாயமே?"
"இதலை நியாயம் அநியாயம் எண்ட பேச்சுக் கே இடமில்லை. இது போர்க்கலச் சூழ்நிலை, வைச்சிருக்கிறவை தங்கடை பிள்ளையளிலை ஒண்டைத் தரட்டன்."
116

நீர்வை பொன்னையன்
"அப்ப நான் போகட் டேஅப்பா?" கேலியாகக் கேட்கிறாள். "என்ன? நீ போகப் போறியோ? என்ன விசர்க்கதை பேசிறாய்? உன்ரை நிலையென்ன. தராதரமென்ன? உன்னை நான் லண்டனுக்கு அனுப்பிடொக்டருக்குப் படிப்பிக்கிறதுக்குத் திட்டம் போட்டிருக்கிறன். நீ என்னடா வெண்டால்.
"அப்பா, உங்கடை பிள்ளையன் வெளிநாட்டுக்குப் போய் பாதுகாப்பாய் இருக்கலாம். டொக் கடருக்குப் படிச்சுப் பெரியாளாகலாம். மற்றவையின் ரை பிள்ளையஸ் தான் படிப்பையும் விட்டுட்டு நாட் டைக் காக்கிறதுக்குப் போக வேண்டும். அவை செத்தாலும் பாதகமில்லலை. அப்படித்தானே?
இதுதான் உங்கடை நியாயமோ?"
"உன் ரை அப்பன் என்ன ஒண்டுமேயில்லாத ஏக் கி போக்கியே? என்ரை சொத் தென்ன? சுதந்திர மென்ன? தராதரமென்ன? என்ரை மகள்தானே நீ? மற்றப் பிளளையளைப் போலை ஒண்டுமில்லாத எடுபிடியே நீ? உந்த விசர்க்
கதையளைக் காதிலை போடாமல் நீ கவனமாய்ப் படி, அப்படியெண்டால்தான் டொக்டராய் வரலாம்."
அவர் கண்டிப்புடன் கூறுகின்றார். "அப்பா நான் டொக்டருக்குப் படிக்கேல்லை, இஞ்சினி யராய் வரவும் படிக்கேல்லை. ஒரு சாதாரண ரிச்சராய் வந்தால் போதும், அதுதான் என்ரை விருப்பம், இருந்து பாருங்கோவன் நீங்கள் வீணாய் மனக்கோட்டை கட்டிறியள். கடசியிலை ஏமாறத்தான் போறியள்."
அவள் உறுதியாகக் கூறுகின்றாள். அவர் அவளைப் பார்த்து திகைத்தபடியே வாயடைத்து நிற்கின்றார்.
"அது மாத்திரமில்லை அப்பா, உங்கடை சொத்தெல்லாம் பழிச் சொத்துக்கள். வட்டிக்கு வட்டி வாங்கிப் பெருக்கின பணம். நம்பிக்கை மோசடி செய்து, எத்தினை பேற்றை காணியளைக்
117

Page 63
வேட்கை
கொண்டிசன் உறுதியெழுதிவிச்சு அந்தக் காணியளை அமத்தி யெடுத்தியள்."
அவள் ஆத்திரத்தில் குமுறிக் கொண்டிருக்கின்றாள். வேறு எவராவது இப்படி அவருக்கு நெற்றிக்கு நேர் கூறியிருந்தால் அவர்களுடைய நிலை அதோ கதிதான் என்ன செய்வது? அவருடைய ஒரே ஒரு செல்ல மகள்தான் இப்படிக் கூறுகின்றாள். அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அவர் தனக்குள் தானே குமைந்து குமுறுகின்றார். "உங்கடை ஆம்பிளைப் பிள்ளையஸ் மூண்டும் வெளி நாட்டிலை என்ன செய்யினை? மூத்த மகன் பவுடர் கடத்தி பிடிபட்டுக் கம்பியெண்ணுறார். மற்ற இரண்டாவது செல்லம் லட்சக் கணக்கிலை சீட்டுப் பிடிச்சு மற்றவையின்ரை கா செல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். கடைசி மகன் வெளிநாடுகளுக்கு ஆக்களைக் கடத்தி பிடிபட்டு, 'மாமியார் வீட்டுக்கையிருக்கிறார். ஆனால் நீங்கள் இஞ்சை பெரிசாய்க் கதைத்துக் கொண்டு மற்றவயின்ரை தோளிலை ஏறிச் சவாரி விடுகிறியள்."
அவளுடைய வார்த்தைகள் தீப்பிழம்புகளாய்ச் சுழன்று அவரைச் சாடுகின்றன.
"ஏன், செல்லடியிலை செத்த உங்கடை தம்பியின்ரை பிள்ளையளை என்ன செய்தியள்? அதுகளைப் பராமரிக்கிற ணெண்டு பொறுப்பெடுத்தியள். பிறகு என்ன செய்யிறியள்? பள்ளிக்கூடத்துக்குப் போகவிடாமல் மறிச்சு அதுகளின்ரை படிப்பைக் குழப்பினியள். பிறகு இரவு பகலாய் அதுகளைக் கொண்டு வீட்டிலையும் தோட்டத்திலையும் மாடு மாதிரி வேலை செய் விக்கிறியள். சரி அப்படியென் டாலும் அதுகளுக்கு ஆனவாகிலை சாப்பாடுதானும் குடுக்கிறியளே? அதுகளுக்கு வேறை சாப்பாடு, எங்களுக்கு வேறை சாப்பாடு வரியப் பிறப்பு, தீபாவளியெண்டு நல்ல நாள் பெருநாளுக்குத் தானும் ஆனவாகிலை உடுப்புக்களை எடுத்துக் குடுக் கிறியளே?
118

நீர்வை பொன்னையன்
அதுகளுக்கு மலிவான இளக்க உடுப்புக்கள். எங்களுக்கு விலை கூடிய நல்ல உடுப்புகள், இதுக்காகத்தான் நீங்கள் எனக்கு எடுத்துத் தாற உடுப்புக்களை நான் உடுக்க மறுத்துச் சண்டை பிடிக்கிறனான்."
அவளுக்கு உடலெல்லாம் எரிவது போலிருக்கின்றது. "அப்பா உங்கடை குடும்பமே பழிக்குடும்பம், அந்தப் பழிக் குடும்பத்திலை நான் ஏன் வந்து பிறந்தேனோ?"
அவளுடைய குரல் தளதளக்கின்றது. கண்களில் நீர்த் திரை.
அவர் சடமாய் நிற்கின்றார். அவள் விசுக்கென அவ்விடத்தை விட்டகல்கின்றாள். *S1351631ff)“
பாசக்குரல் கேட்டு அவன் தலை நிமிர்கின்றது என்றுமேயில்லாதவாறு அவள் அன்று தனது சைக்கிளி லிருந்து இறங்கிஅவனுக்குக் கிட்ட வந்து தனது பரீட்சைப் பெறுபேற்றுப் பத்திரத்தை அவனிடம் கொடுத்துவிட்டு கம்பீரமாக நிற்கின்றாள்.
அவனுடைய சகோதரியும் அன்றொரு நாள் தனது ரீட் சைப் பெறுபேற்றை அவனிடம் ஒப்படைத்துவிட்டுக் ம்பீரமாக நின்ற காட்சி அவனுடைய மனத் திரையில் ழலாடுகின்றது.
அவனுடைய மனதில் பொருமல்,
சிறிது நேரக் கலக்கம் அவனுக்கு. தன் நிலைக்கு வந்த அவன், அவளுடைய பெறுபேற்றைப் பார்த்ததும் வியப்படைகின்றான். முகத்தில் மலர்ச்சி.
"என்ன, எட்டுப் பாடங்களிலும் டீ எடுத்திருக்கிறாய்! கெட்டிக்காரி, மிச்சம் சந்தோஷம், நீ இப்படி திறமையாய்
119

Page 64
வேட்கை
செய்வாயெண்டு எனக்கு நல்ல நம்பிக்கையிருந்தது."
அவள் மகிழ்ச்சிப் பெருமிதமாய் அவனைப் பார்க்கின்றாள்.
என்னை எப்படிப் பட்டவள் என்று நினைக்கிறாய் என்பது
- போலிருந்தது அவளது பார்வையும் நிலையும்,
"சரி இனி என்ன டொக்டருக்குத் தானே படிக் கதி உத்தேசம்?"
வினாவுடன் அவளை நோக்குகின்றான்.
"என்னுடைய அப்பாவும் அப்பிடித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அவர் என்னை லண்டனுக்கு அனுப்பிப் படிப்பிக்கப் போகிறாராம்."
"அட, பிறகென்ன! நல்லதுதானே! பிறகு நாங்களெல்லா டொக்டர் அம்மாவுக்குக்கிட்ட வரேலாது."
கிண்டல் பண்ணுகின்றான் அவன். "ஆனா எனக்கு அது விருப்பமில்லை." "ஏன் என்னத்துக்கு விருப்பமில்லை? அப்பாவாக்களை
விட்டிட்டு லண்டனுக்குப் போக விருப்பமில்லையோ?"
"அதுக்கில்லை, ஒரு சாதாரண ரிச்சராய் வரத்தான் எனக்கு விருப்பம் "
"இதென்ன வேடிக்கையாயிருக்கு? லண்டனுக்குப் போ படிக்க ஆர்தான் விரும்பமாட்டினை? அதுவும் டொக்டருக்குப்
படிக்க சான்ஸ் கிடைக்குதே."
. - ۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ ரிச்சர் தொழிலைத்தான் நான் விரும்புகிறன். எங்களுக்கு
ஒரு ரிச்சர் படிப்பிக்கிறா என்ன மாதிரி அருமையாய்ப் படிப்பிக்கிறா. எங்கள் எல்லாரையும் தன்ரை சொந்தப் பிள்ளை யள் மாதிரி அன்பாய் நேசமாய் கவனிக்கிறா, அதோை
சரியான அக்கறையாய்ப் படிப்பிக்கிறா. எங்கள் எல்லாருக்கும் அவவிலை உயிர் அவ மாதிரி ரிச்சராய் வரத்தான் நான் ஆசைப்படுகிறன் ."
12O
 
 

ர்ேவை பொன்னையன்
அவன் அவளைப் பேராச்சரியமாய்ப் பார்க்கின்றான்.
"நல்ல எதிர்கால சந்ததியை உருவாக்கிறவை ஆசிரியர் மார்தானே?"
ஆசிரியத் தொழில் புனிதமானது. அது மாத்திரமே? இந்த டாக்டர் மார் எல்லாரையும் படிப்பிச்சு உருவாக்கிறது ஆர்? அது ஆசிரியர்மார்தானே?
"அடிசக்கையெண்டானாம், அப்பிடி வா வழிக்கு எங்கடை
சனத்திலை எத்தனை பேர் உன்னைப் போல நினைக்கினை?" அவன் அவளை வாஞ்சையுடன் பார்த்துக் கேட்கின்றான்.
"இந்த உலகத்தை ஆதிசேடன் என்ற ஒரு பாம்பு தன்ரை லையிலை சுமந்து கொண்டிருக்கும் எண்டு ஒரு கர்ண
ம்பரைக் கதையுண்டு. அதைப் போலத்தான் டொக்டர்மார் லையிலைதான் உலகம் இருக்கெண்ட 6T600T600TLD 65.1560)
- 。ああ@りóう@。
அவன் வியப்புடன் அவளைப் பார்த்தபடியே நிற்கின்றான்.
"ஒரு குழந்தையின் ரை முதலாவது பிறந்த தினக் காண்டாட்டத்திலண்டு அல்லது அந்தக் குழந்தைக்கு ஏடு |வக்கிற அண்டைக்கே அந்தப் பிள்ளையை டொக்டருக்குப் டிப்பிக்கிறதுக்குத் திட்டம் போட்டிடுவினை எங்கடை ஆக்கள். அதை அடிக்கடி எல்லோருக்கும் சொல்லிப் பெருமைப்படுவினை. இந்த எண்ணத்தை அதாவது இந்த மனப்பான்மையைத்
கொதிப்புடன் கூறுகின்றாள் அவள்.
"ஏன் அப்படிச் சொல்லுறாய்." ஒன்றும் புரியாமலே அவன் கேட்கின்றான்.
I )ر - - : - ( )
இவையள் எல்லாம் ஆற்றை காசிலை படிக்கினை
... -- . அவை தங்கடை காசிலைதானே படிக்கினை.
121

Page 65
டி, நாங்கள் எல்லோரும் சனங்களின்ரை
ר
திலதான் படிக்கிறம் இது எத்தனை பேருக்குத் |
. . . .
(Y /Y --
I L(BLD. 935 bTL (bd)
கும் நல்லதுதான். ஆனால் இந்த டொக்டர்மார் இப்ப என்ன
().guiu 60D60 ?" .
LAJ 607
- “ን†† ஏன் என்ன செய்யினை?"
...
. . . - "இந் ப் பயங் .
- த்த காலத்திலை சனங்கள் s . • ےيرன்டு வீச்சிலையும் காயப்பட்டு
2万
(ଗ) ಲೆ:೨ಿಶjob to
( an
| DATCIb பிரக்கணக்கில மக்கள் செத்துக் கொண்டி
ܨܚܐ !, - - அவையளாலை எங்களுக்கும் எங்கடைநாட்டுக்கும்
بے خبر ہے حة . . . . . / பிரயோசனம், ஆனால் இஞ்சை கொஞ்ச டொக்டர்மார் நிண்டு
ཐ་ ,ി
க்கையும் சனங்களுக்கு சேவை செய்து
- பேற்றை உயிரைக் காப்பாத்தினை உண்மை
.
மனதத ம
- த டொக்டர்மார்தான் ம
,
என்ன
யிலை இந் D
இயாலாமையை (o 5)j6 மன அவனுடைய வார்த்
5shle56のL- 望みあ டத்தெறிய வேண்டு
- கூறுகின்றாள்.
மிஞ்சின புத்தி உன்ரை
三ー
c)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்வை பொன்னையன்
பேச்சும் அப்பிடித்தா னிருக்கு. ஆனால் எனக்கு உன் ரை கதையளைக் கேக்கேக்கை ஏதோ ஒரு வித பயமாய்க்கிடக்கு மோனை."
"இதலை பயப்பிட என்ன கிடக்கு எங்கடை ஆக்களின் ரை மனப்பான்மையைப் பற்றித்தானே நான் சொன்னன். சரி இப்ப என்ன வாறது வரட்டும் பாப்பம்."
சவால் விடுவதுபோல அவள் கூறுகின்றாள். ஏதோ நினைத்தவள் போல அவள் திடீரெனத் தனது சைக்கிளை எடுக்கின்றாள்.
"அண்ணைா! நான் போட்டு வாறன்." "சரி ரிச்சர் போட்டு வாங்கோ!
குறும்புத்தனமாகச் சிரித்தபடியே அவன் கூறுகின்றான். அவள் கலகலவெனக் சிரித்தபடியே பைசிக்களில் ஏறுகின்றாளர்.
அவர்கள் இருவருக்கும் என்றுமேயில்லாத பூரிப்பு இன்று! திடீரென பயங்கர இரைச்சல்,
"அது என்ன இரைச்சல்" - இருவரும் உஷாரடைந்து அவதானிக்கின்றனர் இரும்புக் கழுகுகளின் பயங்கர இரைச்சல் அந்த இரைச்சல் எங்கோ துரத்தில் கேட்கின்றது. அவள் புறப்படுவதற்கு எத்தனிக்கிறாள்.
"(O) LAITOJ 3DT១១ கொஞ்சம் பொறுத்துப் பார்த்துப் (3L_AFTg56DIT D. "
சிறிது நேரத்தில் அந்த இரைச்சல் சத்தம் அழிந்து மறைகின்றது.
"அண்ணா, நான் போட்டு வாறன் " தயங்கியபடியே அவள் றுகிறாள். -
123

Page 66
வேட்கை
"சரி மோனை அவதானமாய்ப் போட்டு வா." அவன் மனமின்றி விடை கொடுக்கின்றான். அவள் செல்ல மனமின்றி செல்கின்றாள். - சிறிது தூரம் சென்ற அவள் திரும்பிப் பார்த்து, தனது தலையைச் சரித்து அதே பக்கவாட்டுப் பார்வையையும் சிரிப்பொளி வீச்சையும் சிந்தி விட்டுச் சென்றுவிட்டாள்.
அவனுடைய தங்கையும் ஒருநாள் "அண்ணா நான் போட்டு வாறன்" என்று கூறி, இதே பக்கவாட்டுப் பார்வையையும், அதே சிரிப்பொளிவீச்சையும் சிந்திவிட்டுத்தான் சென்றாள். அவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை.
"அவள் களத்தில் பலியானாள்" என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால் அவளுடைய உடலை அவர்கள் காணவில்லை.
என்றாவது ஒருநாள் அவள் திரும்பி வருவாள் என்று அவளுடைய பெற்றோர்கள் எதிர்பார்த்துக் கொண்டுதானிருக் கின்றார்கள்.
ஆனால் அவளுடைய அண்ணன். அவளுக்குப் பதிலாக மற்றொரு தங்கை கிடைத்து விட்டாள் அவனுக்கு, அவளுடைய வருகைக்குப்பின் அவனது வாழ்வில் மீண்டும் வசந்தம் வந்தது.
அதே தங்கையின் தரிசனத்திற்காகத்தான் அவனுடைய இதயம் இப்போ ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கின்றது.
அவனுடைய உள்ளத்தில் ஒருவித பதட்டம். நேற்றை பிலிருந்தே இந்தப் பதட்டம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கின்றது.
நேற்றைய அந்தக் கனத்த இரவில், அந்த இரவின் மெளனச் சுமை அவனை அழுத்திக் கொண்டேயிருக்கின்றது. அந்த ஆத்ம வேதனையை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமலேயிருக்கின்றது.
124

நீர்வை பொன்னையன்
நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய கண்களில் அந்த மரம் தட்டுப்படுகின்றது.
அன்று கிளைத்துச் சடைத்து விஸ்வரூபமாய் நின்ற அந்த மரம் இன்று பட்டுப்போய் கொப்புகளும் கிளைகளும் காய்ந்து முறிந்து சிதைந்து மொட்டை மரமாய் நிற்கின்றது. தப்பி யொட்டியிருந்த பட்டுப் போன ஒரேயொரு உச்சாணிக் கொப்பின் தலைப்பில் பறவையொன்று தன்னந் தனியனாயிருந்து சோகக் குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றது.
அந்த பட்ட மரத்தின் அடியில் அடுக்கி வைக்கப பட்டிருக் கின்ற மண் மூட்டைகள் கிழிந்து சிதைந்து தேடுவாரற்றுக் கிடக்கின்றன.
நேரம் எட்டரை மணிக்கு மேலாகிவிட்டது.
அவள் இன்னும் வரவில்லை.
பட்டுப் போன மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனுடைய மனதில் சோகச் சுமை,
அவனுடைய இதயம் அவளுடைய தரிசனத்திற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றது.
அவனுடைய நண்பன் வருகின்றான். அவனுடைய கையில் அன்றைய செய்திப்பத்திரிகை, அவனுடைய முகத்திலும் 5Ᏼ6Ꭰ16ᏡᎠ6uᎧ படர்ந்திருக்கின்றது. அவன் பத்திரிகையை அவனிடம் தயங்கியபடியே கொடுக்கின்றான்.
நண்பனிடமிருந்து வாங்கிய பத்திரிகையை அவன் வேண்டா வெறுப்புடன் திறக்கின்றான்.
பத்திரிகையின் முன்பக்க வலதுபுற கீழ் மூலையில் தடித்த கறுப்புக் கோடுகளால் கட்டப்பட்ட பெட்டிக்குள் அவளுடைய | ILID!
அவனுக்குப் பேரதிர்ச்சி!
125

Page 67
வேட்கை
அவன் அவளுடைய வீட்டிற்கு விரைகின்றான். அங்கு ஊரே கூடி நிற்கின்றது. எல்லோருடைய முகங்களிலும் சோகம் வெறுப்பு கோபாவேசம்!
ஐந்து பிள்ளைகளின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டி ருக்கின்றன.
அவளுடைய அந்தக் குழந்தைத்தனமான முகம் முதலில் அவனுடைய கண்களில படுகின்றது.
"ஐயோ! என்ரை தங்கச்சி உனக்கும் இந்த முடிவா? அவனுடைய இதயம் ஒலமிடுகின்றது.
வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்ற அந்த ஐந்து பிள்ளை களின் உடல்களைப் பார்த்தபடியே நிற்கின்றான் அவன்.
அவர்களுடைய முகங்களை மாத்திரம்தான் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்தக் குழந்தைத் தனமான பிஞ்சு முகங்களைப் பார்த்த படியே நிற்கின்றான்.
நாங்கள் வாழ்வதற்காகவே பிறந்தோம். ஆனால் இது காலவரை நாங்கள் வாழ்வின் துன்ப துயரங்களைத் தவிர வேறு எதைத்தான் அனுபவித்தோம்? வாழ்வின் வசந்த காலத்தை எட்டிப்பிடிக்க ஏங்கித் துடித்துக் கொண்டிருந்த எங்கள் வாழ் வின் எதிர்கால இன்பங்கள் அனைத்தும் தட்டிப்பறிக்கப்பட்டு, நாம் வஞ்சிக்கப்பட்டு எமது வாழ்வவே அரைகுறையில் அழிக்கப்பட்டு விட்டதே' என்று அந்தக் குழந்தைத் தனமான பிஞ்சு முகங்கள் கூறுவது போல அவனுக்குத் தோன்றுகின்றது.
ஐயோ! இந்தக் கொலைகளுக்கும் அழிப்புகளுக்கும் முடிவேயில்லையா? அவனுடைய உள்ளம் குமுறுகின்றது.
"நண்பனே, போர் என்ற போர்வையில் இன்று மக்களுடையே சொத்துக்கள் பல தரப்பினராலும் அபகரிக்கப்
126

நீர்வை பொன்ன்ையன்
படுவதுடன் அழிக்கப்படுகின்றன. அதுமாத்திரமல்ல, ஆயிர மாயிரமாக மக்கள் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்."
அவனுடைய நண்பன் கூறியது அவனுடைய மனத் தடத்தில் தோன்றுகின்றது.
"இந்த அழிப்புகளும் கொடுரக் கொலைகளும் எப்பொழுது தான் முடிவுக்கு வரும்?" என்று அவன் கேட்கின்றான்.
"நண்பா, எமது நாட்டில் இன்று நரபலி எடுக்கிற நவீன நரகாசுரர்கள் உருவாகிவிட்டார்கள். இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளை என்று அழித்தொழிக்கிறோமோ அன்று தான் இந்தப் பலியெடுப்பு முடிவடையும்."
I 60DI 60DLLULJ நண்பன் கூறியது 9|ബബ്ബ60) || [L(9/6ته மனத்திரையில் ஒடுகின்றது.
"நேரமாகின்றது. ஏன் சுணங்குவான், தூக்குவம்." அந்த ஊர் பெரியவரின் வார்த்தைகள் அவனைச் சுய உணர்விற்குக் கொண்டு வருகின்றன.
ஊரே அழுது புலம்பி ஒலமிடுகின்றது! இந்த மரண ஒலம் வான் முகில்களைப் பிளக்கின்றன. சோக அலைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இறுதி யாத்திரை ஆரம்பம். - "பாழாய்ப் போவாங்கள்! பூவெண்டும் பிஞ்செண்டும் Tj To எல்லாத்தையும் கூட்டி அள்ளிக் கொண்டு
போறாங்களோ?"
ஒரு முதியவர் குமுறிக் கொண்டே கூறுகின்றார். "இந்த நரபலி எடுக்கிற யுத்த வெறிக்கு நாங்கள் முடிவு கட்டத்தான் போறம். இது நிச்சயம் நடக்கும். கெதியாய் ாடக்கும்."
127

Page 68
வேட்கை
அவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டிய அவன் உறுதியான ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவ்விடத்தை விட்டகல்கின்றான். சென்று கொண்டிருக்கின்ற அவன் ஏக சித்தனாய் வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான்.
நிலவானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்ற இரண்டு வெண் புறாக்கள் தென் திசையை நோக்கிச் சென்று மறைகின்றன.
வானத்துத் தேவதைகளாகி விட்ட செல்லச் சிரிப்பொளி வீச்சைச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற இரண்டு குழந்தைத் தனமான எழில் முகங்கள் அவன் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
"அண்ணா!" என்ற ஜீவநாதம் ஒலித்துக் கொண்டே யிருக்கின்றது.
O
1996
128
 

புனர்ஜென்மம்
அவன் நகரத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கின்றான்.
அவனுடைய உள்ளத்தில் விரக்தி, உடலில் சோர்வு.
நவயுக ஜனனத்தின் தரிசனத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற அவனுடைய உள்ளத்தில் ஏனோ இந்த விரக்தி?
அவன் முன்னால் நெடுஞ்சாலை நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடக்கின்றது. அது மலடாய் வெறிச்சோடிக்கிடக்கின்றது.
சாலையோரத்திலுள்ள புல்பூண்டுகளெல்லாம் கருகிச் செத்துப் போய் கிடக்கின்றன.
மரந்தடிகளிலும் இலைகுழைகளிலும் தெருப்புழுதி அப்பிக்கிடக்கின்றது.
அவன் நடந்து கொண்டேயிருக்கின்றான்.
அவனுடைய சிந்தனை எங்கோ லயித்திருக்க, பார்வை மட்டும் சாலையை வெறித்து நோக்கியபடியே நடந்து கொண்டிருக்கின்றான்.
இவ்வளவு காலமும் அவன் நடந்து வந்த கரடுமுரடான பாதை தன்னைச் சூனியத்திற்குள் கொண்டு போய்விட்டதான உணர்வு அவனுக்கு
இனி என்ன செய்வது? அவனுடைய சூனிய மயமான உள்ளத்தில் இந்தக்
129

Page 69
வேட்கை
கேள்
விக்குறி திரும்ப எழுந்து அலைமோதிக் கொண்டி ருக்கின்றது. -
தனது ഖണ്ഡകൃ கரத்தை அவன் அகஸ் மாத்தாகப் பார்க்கிறான்.
நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ள அந்தக்கரம் அவன் மனதில் வெறுமையை அள்ளி வீசுகின்றது.
அவனுடைய கட்டை விரலிலும் நோதல் தொடங்கி விட்ட தற்கான அறிகுறி.
அவனுடைய லட்சிய பாதை கானல் நீராகி விட்டதா?
உடலுறுப்பின் ஒரு பகுதி இழப்பு அவனுடைய உள்ளத்தில் அவ்வளவு பெரிதாய் பாதித்ததாக அவனுக்குப்படவில்லை. ஆனால் அவனுடைய லட்சியம் கானல் நீராகிவிட்டதே என்ற உணர்வு அவனுடைய ஆத்மாவையே ஆட்டம் காணச் செய்துவிட்டது.
அவன் தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு வெளியே வருகின்றான்.
அவன் ஒரு சிறந்த தொழிலாளி. அவனுடைய தொழிற் கூடத்தில் அவனையொத்த தொழிலாளர்கள் ஏழெட்டுப் பேர் வேலை செய்தாலும் அவன் மிகவும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் வேலை செய்வான். சகல விதமான மோட்டார் வாகனங்களையும் பழுது திருத்துவதிலும் அவற்றை லாவகமாகவும் வேகமாகவும் ஒட் டுவதிலும் வல்லவன். அவன் அதிநுட்பமான ஒரு மெக்கானிக், அதனால் தான் அநேகர் அவனைத் தேடி வருகின்றனர்.
பருவத்தைப் பொறுத்தமட்டில் அவனுக்கு மதியம் திரும்பி விட்டதுதான். ஆனால் அவனுடைய உள்ளத்திலும் உடலிலும் இளமைத் துடிப்பும் வாலிப மிடுக்கும் இப்பொழுதும் பொங்கிப் புடைத்துக் கொண்டே இருக்கின்றன.
உழைப்பினால் முறுக்கேறிய, உறுதியான உடற்கட்டு
130
 
 
 
 
 
 

நீர்வை பொன்னையன்
செயற்பாட்டில் கரைகாண முடியாத சுறுசுறுப்பும் வேகமும்,
விரிந்து பரந்த அவனுடைய மார்பை எந்த நேரமும் றுகப் பற்றிக் கொண்டிருக்கும் கபில நிற 'ரி சேட்
அவனுடைய ஆளுமை, தன்னை மறந்து பிறருடைய வாழ்வை ஆழமாக நேசிக்கின்ற உயர்ந்த பண்பிலிருந்து ஜனித்தது. அதனால் தான் அவன் சகலரதும் பெருமதிப்பைப் பெற்றிருக்கின்றான்.
ஒருநாள் அவனுடைய தொழிற்கூடத்திற்கு சமீபமாக வெடிகுண்டொன்று வெடிக்கின்றது.
டிறக் வண்டியில் சென்று கொண்டிருந்த காக்கிச் சட்டைகளில் இருவர் படுகாயமடைகின்றனர்.
என்ன நடந்ததென அவன் அந்த இடத்திற்குச் சென்று பார்க்கக்கூடவில்லை. அதில் அவனுக்கு அக்கறையுமில்லை. தனது வேலையிலேயே அவன் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான்.
அன்று மாலை அவன் கைது செய்யப்படுகின்றான்.
ஒரு வாரகாலம் விசாரணைக்காக அவன் தடுத்து வைக்கப்படுகின்றான்.
விடுதலை செய்யப்பட்ட அவன் வெளியே வந்த பின்பு அடிக்கடி ரத்தம் ரத்தமாய் வாந்தியெடுக்கின்றான்.
அவன் மூன்று மாதகாலம் ஆஸ்பத்திரி வாட்டில் தங்கி கிச்சை பெற வேண்டி நேரிட்டது .
131

Page 70
வேட்கை
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய அவனுடைய உடலின் பல பகுதிகளிலுமிருந்த ஊமைக் காயங்கள் எல்லாம் ஆறிவிட்டன. ஆனால் அவனுடைய இதயத்திலுள்ள காயம்? நாளாந்தம் நடந்துகொண்டிருக்கின்ற சம்பவங்களினால் அவனுடைய உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கின்ற தி கொழுந்து விட்டெரியத் தொடங்குகின்றது.
ஒருநாள் திடீரென அவன் தலைமறைவாகி விட்டான்.
புதிய சூழ்நிலை, புதியவர்கள் மத்தியில் அவனுக்கும் புதிய அனுபவங்கள் ஏற்படுகின்றன.
அவன் வெடிகுண்டுகள் தயாரிக்கின்ற வேலைகளிலும் களத்தில் தாக்குதல் நடத்துகின்ற வேலைகளிலும் உள்ளி ருந்தும் வெளியிலிருந்தும் சம்பவித்த பல கண்டங்களை வெற்றி கரமாகத் தாண்டியுள்ளான். ஆனால் இறுதியாக வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் அவனுடைய தோழர்களைப் பறி கொடுத்துள்ளதுடன் தனது வலக்கரத்தின் நான்கு விரல்களையும் இழந்துள்ளான். அப்படி யிருந்தும் லட்சிய வேட்கையுடன் செயல்பட்டுக் கொண்டி ருந்தான்.
கடந்தகாலச் செயற்பாடுகளெல்லாம் கானல் நீராகி விட்டதான உணர்வு அவனுக்கு ஏற்படுகின்றது.
பாம்பைப் பாம்பே விழுங்குகின்றதென்று அவனுடைய தோழர்களில் ஒருவன் இரண்டொரு சந்தர்ப்பங்களில் இரகசியமாக அவனுக்குக் கூறியபோதும் அவன் அதை நம்பவில்லை.
ஒருமுறை பாம்பைப் பாம்பு விழுங்குவதை அவன் அறிந்த போது, அவனுடைய இலட்சியக்கோட்டை தகர்ந்து போக ஈடாடிப்போய் விட்டான்.
தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு வெளியே வருகின்றான்.
132

நீர்வை பொன்னையன்
காலவோட்டத்தில் புயலும் இடியும் நாட்டில் ஏற்பட இருப்பதை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் கட்டியங் கூறுகின்றன.
எந்த மக்களுடைய நல்வாழ்விற்காக, மேம்பாட்டிற்காக, அவனும் அவனுடைய தோழர்களும் ஆத்ம தூய்மையுடனும் லட்சிய வேட்கையுடனும் போராடிக் கொண்டிருந்தார்களோ அந்த மக்களின் கடின உழைப்பினால் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த செல்வச் செழிப்பும், வேகமும், கவர்ச்சியும் வர்ண ஜாலமும் நிறைந்த அந்த வாழ்க்கை இன்று சிதைந்து சீரழிந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்து அவனுடைய உள்ளம் குமுறிக் கொண்டிருக்கின்றது.
கணக்கிலாச் செல்வத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த நிலத்தாயின் அழிவைத் தடுப்பதற்கு அவர்கள் முனைப்பு டன் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று கை விடப்பட்ட வரண்ட மூளி விளை நிலத்தையும் இடிந்து தகர்ந்த கட்டடங்களையும்தான் அவன் காண்கின்றான். வேதனையில் அவன் உள்ளம் அழுகின்றது.
வெளியே வந்த அவனால் மீண்டும் தனது முன்னைய தொழிலில் முனைப்பாக ஈடுபட முடியவில்லை. வாழ்க்கையை ஒட்டுவதற்காக ஏனோ தானோவென்று வேலை செய்கின்ற துடன் அவன் நகரத்தின் நுழைவாயிலுக்குள் பிரவேசிக் கின்றான்.
அங்கு துயரமான அமைதி நிலவிக் கொண்டிருக்கின்றது. வெறிச்சோடிக் கிடக்கின்ற பாதையின் இருமருங்கிலுமுள்ள வீடுகளின் முன்னால் தொட்டந் தொட்டமாக இரண்டு மூன்று பேர்களாகக் கூடி நின்று மக்கள் தங்களுக்குள் ஏதோ கதைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய முகங்களில் பயப்பீதி அப்பிக் கிடக்கின்றது.
நகரத்தின் ஆத்மா வேதனைப் பெருமூச்சு விடுவதாய் தென்படுகின்றது அவனுக்கு.
133

Page 71
வேட்கை
அவன் இதயச்சுமையுடன் நடந்து கொண்டிருக்கின்றான்.
இளமைக் கனவுகளைத் தமது இதயங்களில் சுமந்து கொண்டு மக்களின் நல்வாழ்விற்காக புன்முறுவலுடன் மரணத்தை அரவணைத்துக் கொண்ட இளசுகளின் வீரக் கோலங்கள் அவன் மனக்கண் முன் சொர்ப்பன ஒவியங் களாய்த் தோன்றுகின்றன.
அவனுடைய இதயத்தில் ஒருவித சோகமும் கோபாவேசமும் கலந்த உணர்ச்சி பொங்கிப் பிரவகிக்கின்றது.
அந்நிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளின் பேரின வாதப்பாஸிஸ் நடவடிக்கைகளுக்கு எதிராக தேசத்தின் பல பகுதி களில் இடைக்கிடையே பெரும் புயல்கள் உருவாகி மாபெரும் போராட்டம் வெடிக்க இருப்பதை அண்மைக்காலமாக அவன் அவதானித்து வருகின்றான்.
நேரம் செல்லச்செல்ல நகரம் களை கட்டுகின்றது.
மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக் கின்றார்கள்.
அவர்கள் மத்தியில் அவசரக் கோலம்.
திடீரென மக்கள் மத்தியில் பதட்டம்.
ஏன் இந்தப் பதட்டம்?
டிறக் வண்டியின் இரைச்சல்,
மக்களுக்கும் பீதி,
வந்து கொண்டிருக்கின்ற டிறக் வண்டிகளில் கரும் பச்சைக் காக்கிச் சீருடைகள்,
அவர்களின் கைகளில் ஆட்கொல்லித் துப்பாக்கிச் சனியன்கள். -
காக்கிச் சீருடைகள் இடைக்கிடையே இறங்கி நிற்கின் றார்கள்.
ஒரு வயோதிபர் குடை பிடித்தபடியே தள்ளாடித் தள்ளாடி
134

(tal நீர்வை பொன்னையன்
மெதுவாக வந்து கொண்டிருக்கின்றார். கையில் ஒரு சிறிய போத்தல், அது மருந்துப் போத்தலாக இருக்க வேண்டும்.
முதியவர் எதிரே வந்துகொண்டிருக்கின்ற சிலரில் தட்டுத் தடுமாறி முட்டி மோதியபடியே வருகின்றார்.
அவருடைய கண்பார்வை தெளிவற்றதாக இருக்க வேண்டும்.
எதிரே வந்த காக்கிச்சட்டை அந்த முதியவரை திடீரென நெட்டித் தள்ளுகின்றான்.
முதியவர் அலறியபடியே நீரும் சகதியுமாயிருந்த சாக்கடை க்குள் விழுகின்றார்.
குடையை மடக்கி வழிவிட்டு தனக்கு மதிப்புத் தர வில்லையே என்ற ஆத்திரம் போலும் அந்தச் செருக்குப் பிடித்த காக்கிச் சட்டைக்கு!
அவ்விடத்தால் வந்து போய்க் கொண்டிருப்பவர்கள் குவிந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.
முதியவர் சாக் கடைக்குள்ளிருந்து வெளியே வர முடியாமல் அவதிப் பட்டுக்கொண்டிருக்கின்றார்.
அவருடைய உடலெல்லாம் சேறும் சகதியும். காக்கிச்சட்டை எக்காளமிட்டுச் சிரிக்கின்றான். பார்வையாளரில் சிலர் அந்த முதியவருக்காகப் பச்சாத்தாபப் படுகின்றனர். ஆனால் அவருக்கு உதவ ஒருவர் தானும் முன் வருவதாயில்லை.
அவர்களுக்குப் பயம், சாக்கடைத் தன்னிருக்குள் அவதிப்பட்டுக் கொண்டிருக் கின்ற முதியவரையும் எக்காளமிட்டுச் சிரித்துக் கொண்டு நிற்கின்ற காக்கிச் சட்டையையும் விடுப்புப் பார்த்துக்கொண்டு நிற்கின்றவர்களையும் மாறி மாறிப் பார்த்த அவனுடைய ரத்தம் கொதிக்கின்றது.
135

Page 72
வேட்கை
அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த முதியவர் சாக்கடையிலிருந்து வெளியே வருவதற்கு உதவு கின்றான்.
திடீரென இடி முழக்கம்.
வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான்.
ஒரு சிறு புள்ளிதானும் வானத்திலில்லை.
6) IIT60Ti வெறுமையாயிருக்கின்றது.
இடிமுழக்கம் எங்கோ வெகுதூரத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
காக்கிச் சட்டையை அவன் வெறுப்புடன் பார்க்கின்றான்.
அகங்காரம் பிடித்த காக்கிச் சட்டையின் மூஞ்சையில் ஓங்கிக் குத்த வேண்டும் போலிருக்கிறது அவனுக்கு
அவன் ஒருவாறு சமாளித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவ்விடத்தை விட்டுஅகல்கின்றான்.
காக்கிச் சட்டைகளின் நடமாட்டத்தைப் பார்க்கின்ற மக்களுக்கு ஒருவித பீதி, பதட்டம்,
அவசர அவசரமாகத் தங்களுடைய கருமங்களை முடித்துக்கொண்டு விரைவில் தமது வீடுகளுக்கு சென்றுவிட வேண்டுமென்ற அவதி மக்களுக்கு,
அவன் நகரத்தின் வடகோடியிலிருந்து நகருகின்றான். காக்கிச் சட்டைகள் அகம்பாவத்துடனும் அதிகாரத் துடனும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.
நகரத்தின் இதயத்திற்கு வருகின்றான் அவன் மக்கள் கும்பலாய் திரண்டு எதையோ பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.
மீண்டும் இடிமுழக்கம், வானத்தை அண்ணாந்து நோக்குகின்றான் அவன்.
136

நீர்வை பொன்னையன்
திட்டுத்திட்டாகச் சிறு சிறு கருமுகில் துண்டங்கள் தென் திசையில் தென்படுகின்றன. -
மக்கள் கூட்டத்தை நெருங்குகின்றான் அவன். துண்டந் துண்டமாக இருந்த கருமுகில்கள் ஒன்று திரண்டு சூல்கொள்கின்றன.
தென்திசையின் ஒரு மூலையில் மின்னல் கீற்று. அதைத் தொடர்ந்து இடி இடிக்கின்றது. மக்கள் கூட்டத்தைப் பிளந்துகொண்டு வட்டத்திற்குள் பிரவேசிக்கின்றான் அவன்.
"அடோ, உனக்கு ஈலம் வேணுமோடா?" ஒரு காக்கிச் சட்டை நடுத்தர வயதுடைய வழிப்போக்கன் ஒருவனுடைய சேட்டை வலுவாகப் பிடித்து அவனை உசுப்பிய படியே கேட்கின்றான்.
காக்கிச்சட்டையின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக் கின்ற அந்த வழிப்போக்கன் திருதிருவென விழித்தபடியே நடுங்கிக் கொண்டிருக்கின்றான்.
கூடி நிற்கின்ற மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.
அட பாவமே' என்று அவனுக்காகப் பரிதாபப்படுகின்றனர் சிலர், -
ஆத்திரப்படுகின்றனர் வேறு சிலர். ஆனால் அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமலிருக் கின்றது. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வளவு பயம்,
வழிப்போக்கன் படுகின்ற அவஸ்தையைப் பார்த்து ரசித்து கைகொட்டிச் சிரிக்கின்றார்கள், காக்கிச்சட்டையின் சகாக்கள் மூவர்.
"அடோ இந்தாடா ஈலம்?"
37

Page 73
ன விடுங்ே
ՓII
('X2UL III,
வழி J (3 JITI
.
குதின்
- ああ60T •r+=
- இந்த அநியாயத்தைப் IT 2. III:
. - அங்கு கூடி நின்றவர்களின்
T
பார்க்கின்றான்.
- ان - தாக்கிய அதே காக்கிச்சட்டை
உணர்ச்சி அவனுள் பெரும் எரிமலையாய்
. . . . . .
نہ ہوئی۔ 70 ܪܽܝ.
©16
It - It
6DWL-L-T ぜ9庇gう eᏄl,60)6ᏠᎢ ! " .
. . . .
முழக்கமாய் கர்ச்சிக்கின்றான் அவன். முழக்கமாய் கர்ச்சிக்கின்றான் அவன்
7
) டு காக்கிச்சட்டை சத்தம்
bl60 。 ". '
- 607. அவன்
அவனுடைய விழிகள் ன்ைடிாக்கின்றன. 601) (1) ಝೆಲೆ: 6010601
காட்சியளித்த
9560)95L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-ത്ത
S SMSMMSMSuSuSMSM
நீர்வை பொன்னையன்
ill
SS
. ட்டைகளுக்கு திகைப்பு
LL).
-
சுகாரிக்கக் கொண்ட ザ 元宏のTsg)●lあ (olあT600IL
LÎ 19 க் @ ஸ் о கானன் (B 6) IIT
-
(OIT60T.
, , ... காக்கிச்சட்டையின் பிடிக்குள் அவன் அகப்படவில்லை.
. . . . . . . - அவன் லாவகமாகத் தப்பிக் கொள்கின்றா 60I.
. . . . . டன் நிற்கின்றான்.
அவன் நிதானமாக
' به عه ച്ചു। । । | "sel,ULT II <-- JULI
- آئی۔سی۔سرخ۔ .س
ஆே வசமாகக் கேட்டுக்கொண்டே
. ...... வதற்கு முயல்கின்றான் காக்கிச்சட்டை
- - . . மீண்டும் கோபாவேசமாகக்
TIL 600L.
- "நான் ஒரு . அவனுடைய
ΕΥ と احساس
- Lytt-Var - 77°
. 上
SS
.
- () ، ملٹےسرسیم حصہ ہو
۔۔۔۔۔
T
til ܝ ܐ G ஒ 6T6060T தமிலனா?
. . - - சந்தேகத்துடன் கேட்கின்றான் காக்கிச்சட்டை
9,66i ". நான தமிழனதானடா, தமிழன"
. این است || || ||
க்கமாய் கத்துகின்றான். ଔ 9(U!!! 92ש וויון(gי99לשוכJ59 וע -
G. ING VAKT G. Corrizar : so.------,
t t | IF VOC ད། F LI
ஈழம்தான் வேணும்ட
- -- ஒமடா 6T60Jó@

Page 74
வேட்கை
"என்ன, உனக்கு ஈலம் வேனுமாடா?"
காக்கிச்சட்டை வியப்புடன் கேட்கின்றான்.
"ஒமடா எனக்கு ஈழம்தான் வேணுமடா, ஈழமெண்டால் இலங்கைதானடா?"
"61656or F5olf?"
"நான் இலங்கையன்'
தனது இடது கை முஷ்டியை உயர்த்திக் கோஷிப்பது போல அவன் பேரிடியாய் முழங்குகின்றான்.
"நீ தெமிழன் உனக்கு ஈலம் வேணுமோடா ஈலம்?"
பேரினவாதத் திமிர் தொனிக்கிறது, காக்கிச்சட்டையின் குரலில்,
கொக்கரித்துக் கொண்டு அவனைத் தாக்குவதற்கு கரத்தை ஓங்கியபடியே அவனை நோக்கி ஓடிவருகின்றான் காக்கிச்சட்டை,
கோபாவேச உணர்ச்சி அவனுள் பொங்கி பெரும் எரிமலையாய்க் குமுறி வெடித்துக் கிளர்ந்தெழுகின்றது.
ஆவேசம் கொண்ட இடி மூர்க்கத்தனமாய் பிரபஞ் சத்தையே பாளம் பாளமாய் வெட்டிப் பிளந் தெறிந்து கொண்டி ருக்கின்றது.
அவனுடைய வலது கரம் தடுப்பாக முன்வர இடது கரம்
துரிதமாகச் செயல்படுகின்றது.
உழைப்பினால் முறுக்கேறிய தனது இரும்பு முஷ்டியை வில்லாக வளைந்து ஓங்குகின்றான் அவன்.
இந்த விமப்பலத் திடீர்த் தாக்குதலை காக்கிச்சட்டை எதிர் பார்க்கவில்லை.
அவன் நிலைகுலைந்து தடுமாறி நிற்கின்றான்.
காக்கிச்சட்டையின் சகாக்கள் ஏககாலத்தில் அவனைத் தாக்க முயல்கின்றனர்.
40 ܬ .

நீர்வை பொன்னையன்
திடீரென பாரிய முழக்கமாய் வெடிகுண்டுச் சத்தம், நகரமே அதிர்கின்றது.
குண்டுச் சத்தத்தைத் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுச் சத்தம்
காக்கிச்சட்டைகள் திகிலடைந்து செய்வதறியாது தடுமாறி நிற்கின்றனர்.
மக்கள் சிதறி ஓடுகின்றனர்.
மின்னலும் இடியும் மீண்டும் அமர்க்களப்படுகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பூமிக்கு ஏதோ ஒரு செய்தியை இடித்துக் கூற விரும்புவதுபோல் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு மோதுப்படுகின்றன.
தென்திசையில் திட்டுத்திட்டாய் இருந்த கருமேகங்கள்
வானம் இடிமுழக்கமாய்க் கனைக்கின்றது. "நான் இலங்கையன்"
அவனுடைய வஜ்ஜிரக்குரல் வானமண்டலத்தை முட்டி மோதுகின்றது.
மேகம் வெடித்து மின்னல் கருமுகில்களைக் கிழித்துக் கொண்டு வெளியே வருகின்றது. பூமியே தீபற்றி எரிவதுபோல மின்னற்கொடி தோன்றி மறைகின்றது.
துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தபடியே டிறக் ബങ്ങ്[Iറ്റ
141

Page 75
வேட்கை
துப்பாக்கிவேட்டுக்களைத் தீர்த்தபடியே டிறக் வண்டி யாழ் கோட்டை முகாமை நோக்கி வேகமாகச் செல்கின்றது.
அவன் நிதானமாக நடந்து கொண்டிருக்கின்றான்.
வானம் ஆனந்தக் கண்ணி சொரிக்கின்றது.
மழைத்துளிகள் தங்களுக்குள்ளே முனு முணுத்து இரகசியம் பேசிக் கொண்டிருக்கின்றன.
இடியோசை
திடீரென வானம் சரிந்து கொட்டத் தொடங்குகின்றது. பேய்க்காற்றும் பெருமழையும் முட்டி மோதிச் சாடுகின்றன.
சண்டமாருதம் சுழன்றடிக்கின்றது!
பேய்மழை கொட்டுகின்றது!
மின்னல் வெட்டுகின்றது!
இடி இடிக்கின்றது!
பிரளயம் வந்துவிட்டதா?
பாசிஸத்துக்கெதிரான தேசம் பரந்த பேர் அணியில் சங்கமிப்பதற்கு, ஏற்படவிருக்கின்ற பெரும் புயல்களுக்கு முகம் கொடுக்கக்கூடியதாக மன உறுதியுடனும் ஆத்மபலத்துடனும் அவன் தெற்கு நோக்கி நடந்துகொண்டிருக்கின்றான்.
பேய் மழை கொட்டுகின்றது!
சண்டமாருதம் சுழன்றடிக்கின்றது!
மின்னல் வெட்டுகின்றது!
இடி இடிக்கின்றது!
இயற்கையன்னையின் சீற்றத்தையும் அச்சுறுத்தலையும் துச்ச மென மதித்து எதிர்காலப் பெரும் புயல்களுக்கு முகம் கொடுக்க அவன் அஞ்சாநெஞ்சனாக நடந்து கொண்டி ருக்கின்றான்.
O
1997
142

நீர்வை பொன்னையன்
வேட்கை
செந்தழல் சூரியன் சாய்ந்து வீழ்கின்றான். வானஜோதி தயங்கி அணைகின்றது. திகைத்த மாலை மயங்கித் துவழ்கின்றது. செக்கர் வானம் கருகி இருள்கின்றது. காலையும், மாலையும் வானத்தில் தோன்றும் விந்தை ளையும், வர்ண ஜாலங்களையும் பார்த்து வியப்புற்று, அதில் மயங்கித் தன்னைத் தானேயிழந்து திகைப்புற்று நிற்கின்ற
வன் இன்று ஏனோ ஒன்றையும் பொருட்படுத்தவில்லை?
இன்று அவன், அவன் நிலையிலில்லை. அவனுக்கு ஒருவித அவசரம், வேகம், ஏன் இன்று அவனுக்கு இந்த உத்வேகம்?
நீண்ட நாட்களாகப் பார்க்காத தன் அன்புத் தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென்ற அங்கலாய்ப்பு அவனுக்கு.
விண்ணில் தொங்கிக் கொண்டிருந்த முன்நிலவு ப்பொழுதோ மறைந்து விட்டது.
இருளின் ஆக்கிரமிப்புக்குள் உலகம், இருள் திரையைப் பிளந்து கொண்டு ஆழக் கிணற்றின்
துலாக்கொடியாய் நீண்டு நெடியதாய் செல்கின்றது கோப்பாய் கைதடி வீதி
143

Page 76
வேட்கை
மலைமுகட்டிலிருந்து இருளில் இருளாய் இறங்கிவருகின்ற ராட்சத உருவாய், கையை வீசி, காலை எறிந்து, எட்டக் கவடு வைத்து வீச்சாய் நடந்து கொண்டிருக்கின்றான் அவன்.
சுடலைக் குருவியொன்று அலறியபடியே திடீரென 946)160)760)LLL முகத்தில் உராய்வது போல வேகமாய்ப் பறந்து செல்கின்றது.
அவனுக்கு கணநேரத் திகைப்பு. நடையில் தளர்ச்சி.
கோப்பாய்ப் பாலத்தை அவன் நெருங்கிக் கொண்டிருக் கின்ற பொழுது, வடமேற்கு மூலையிலிருக்கின்ற தன்னுடைய கிராமத்தை ஆவலுடன் பார்க்கின்றான்.
பரந்து விரிந்து விசாலித்திருக்கின்ற இருள் வெளியின் அடிவானத் தொங்கலில் சயனித் திருக்கின்ற அவனது கிராமத்தில் பொட்டுப் பொட்டாய் வெளிச்சங்கள் மங்கலாய் மின்னிக் கொண்டிருக்கின்றன.
எண்ணையோ, தண்ணியோ கண்டறியாத பரட்டைத் தலைமயிர் காற்றில் பறக்கின்றது. செம்பாட்டு நிறக் கந்தல் சட்டை. சின்னண்ணை எப்ப வருவான்? தின்னிறத்துக்கு என்ன கொண்டருவான்? என்று எதிர்பார்த்து, சடை விரித்துக் கருநிழல் பரப்பி நிற்கின்ற பூவரச மரத்தின் கீழ் எந்த நேரமும் ஆவலுடன் பார்த்துக் கொண்டு நிற்கின்ற அவனுடைய அன்புத் தங்கை தேவியின் மங்கல் தோற்றம் அவன் மனத்திரையில் நிழலாடு கின்றது.
தேவி பெயரளவில் சீதேவிதான். ஆனால் அவனுடைய
வீட்டில் மூதேவிதான் நிரந்தரமாகக் குடியிருக்கின்றாள்.
தேவியைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் அலை
அவனுடைய இதயத்தில் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றது
அவனுடைய நடையில் உத்வேகம்,
144

நீர்வை பொன்னையன்
மதர்த்து, மதாளித்து, மூச்சாய் கெம்பி எழும்பி வளர் கின்ற புது அடி மட்டத்துக் கதலி வாழைபோல இந்த ஆறு மாதங் களுக்கிடையில் செல்லக்கண்டனுடைய உடல் முறுகித் திரட்சி கண்டது வியப்புத்தான்.
விமானக் குண்டுத்தாக்குதல்கள், ஷெல்லடிகள்,
துப்பாக்கிச் சூடுகள் மத்தியிலும் அவனுடைய தோழர்கள் தடுத்து நிறுத்தியும் அவர்களுடைய வற்புறுத்தல்களையும் கேட்காமல், தனக்கு நேரவிருக்கும் உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல், களத்தில் காயமுற்ற பல சக தோழர்களை, இயந்திர மனிதனைப் போல அவன் லாவகமாய்த் துக்கிச் சுமந்து வந்து காப்பாற்றியுள்ளான். அவனுடைய மனத் துணிவையும், உடல் வலிமையையும் வீரதீரத்தையும் என்னவென்று சொல்வது!
இன்று அவன் தன்னுடைய அன்புத் தங்கையைப் பார்க்க வேண்டுமென்று பேராவலுடன் நடந்து கொண்டிருக்கிறான்.
கோப்பாய்ப் பாலத்தை தாண்டி அவன், றோட்டிற்கு அருகே தெற்குப் புறமாக உள்ள மயானத்தை நெருங்கிக் கொண்டிருக் நின்றான்.
அரைகுறையாய் எரிந்து கொண்டிருக்கின்ற பிரேதத் லிருந்து எழுகின்ற நிணநெடி சோழகக் காற்றுடன் கலந்து பந்து அவனுடைய நாசியைத் துளைத்து ஒருவித அருவருப்பையூட்டுகின்றது.
அவனுக்கு வயிற்றைக் குமட்டுகின்றது. அவன் வெறுப்புடன் காறித் துப்பிவிட்டு துரித கதியில் பந்து கொண்டிருக்கின்றான். -
றோட்டின் இரு மருங்கிலும் இடையிடையே சடைவிரி ாலமாய் தியான நிலையில் நிற்கின்றன உப்புக் காற்றில் டிபட்டு முற்றிக் கிழடு தட்டிப்போன பாரிய பூவரச மரங்கள்.
அவனுடைய வீட்டுப் படலையிலும் சடை விரித்துக்
145

Page 77
வேட்கை
கருநிழல் பரப்பி நிற்கின்றது ஒரு முற்றிப் பருத்த பூவரசு மரம், சிறுவனாயிருந்த பொழுது அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பூவரசில் ஏறிக் குதித்து விளையாடி யிருக்கின்றான். அது மாத்திரமல்ல, அந்தப் பூவரச மரத்தின் இலையைப் பிடுங்கிக் குழல் சுருட்டி "பீப்பீ" ஊதித் தனது தங்கைக்கு விளையாட்டுக் காட்டியிருக்கின்றான். அத்துடன் பூவரச மரத்தின் அடர்ந்த கரு நிழலில் மணித்தியாலக் கணக்காக எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்.
மதிய வேளையில் வெயில் வெக்கை தாங்க முடியாமல் அன்னமுத்தாச்சி காற்றோட்டமாய் நிற்கின்ற அந்தப் பூவரச மரத்தடியில் சாய்ந்து, தனது வற்றி மரத்துப்போன கால்களை நீட்டி ஆசுவாசமாயிருக்கின்ற வேளைகளில் செல்லக்கண்டன் தனது தந்தை தேவியைத் தன்னுடைய தோளில் இருத்திக் கொண்டு அந்தப் பூவரச மரத்தைச் சுற்றிச் சுற்றித் துள்ளித் துள்ளி சாமியாடி ஒடிக் கொண்டிருக்க, அவள் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பொலியெழுப்ப, அன்னமுத்தாச்சி அதைப் பார்த்து லயித்துச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பாள். அவனுக்கு அளவிலா ஆனந்தம்.
தங்கை தேவிக்கு மூன்று வயதாயிருக்கும் பொழுது தாயை அவர்கள் இழந்து விட்டார்கள். அண்ணன் ஊர் உலாத்தல்காரன். அப்பன் வெறிக்குட்டி தங்கை தேவிக்கு செல்லக் கண்டன்தான் சகலதும். அவளுக்குச் சாப்பாடு தித்துவது, அவளை நித்திரையாக்குவது, குளிக்க வார்ப்பது எல்லாம் அவனுடைய பொறுப்புத் தான்.
அரையிலிருந்து வழுகி விழுகின்ற அரைக் கால் சட்டையை வாழைநாரால் இறுக்கிக் கட்டிக்கொண்டு. எந்த நேரமும் கடை வாயால் வாணி ஒழுகிக் கொண்டேயிருக்கும். அவனுடைய மூக்கிலிருந்து வழிந்து கொண்டேயிருக்கின்ற சளியை அவன் அடிக்கடி உள்ளே உறிஞ்சிக் கொண்டே யிருப்பான். அல்லது தனது புறங் கையால் அதைத் தேய்த்து தனது காற்சட்டையில் துடைத்து விடுவான்.
146

நீர்வை பொன்னையன்
"தங்கச்சி" என்று அவனுக்குக் கூப்பிட வராது. "அங்கச்சி" என்பான். "திவசம்" என்பதை "டிவசம்" என்றுதான் சொல்வான். செல்லக் கண்டன் எந்நேரமும் தேவியைச் சுமந்து கொண்டே திரிவான். அவர்களுடைய பகுதியில் நடக்கின்ற கல்யாண வீடுகள், திவச வீடுகள், கோயில் பூசைகள் எல்லா வற்றிற்கும் செல்லக்கண்டன் தேவியைத் தனது இடுப்பில் காவிச்சென்று அங்கு கிடைக்கின்ற சோற்றைத் தேவிக்குத் தீத்திவிட்டுத் தானும் உண்பான். இந்த வேளைகளில்தான் அவர்களுடைய வயிறுகள் ஓரளவு நிறையும். அவன் யாருக்காவது தொட்டாட்டு வேலை செய்தால் கூலியாக அவனுக்குக் கிடைக்கின்ற சாப்பாட்டைக் கொண்டு வந்து முதலில் தேவிக்குத் தீத்திவிட்டுப் பின்னர் எஞ்சியதைத் தான் D 600TLJIT6öT.
எந்த நேரமும் பசி சொல்லக்கண்டனுடைய வயிற்றைப் பிடுங்கித் தின்று கொண்டேயிருக்கும். ஆனால் அவனுக்கு எல்லாமே அவனுடைய அன்புத் தங்கை தேவிதான்.
"சின்னண்ணை, சின்னண்ணை" என்று அவனை வாஞ்சை யுடன் கூறிக்கொண்டு நிழல்போல ஒட்டிக் கொண்டேயிருப்பாள் தேவி. அவன் கொண்டு வருகின்ற சாப்பாட்டைத் தனது பிஞ்சு விரல்களால் அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டே அவனுக்கும் தித்துவாள்.
அவன் படுத்திருந்து கொண்டு தனது கண்களை மூடி நித்திரை செய்வதுபோல பாவனை செய்ய, அவனுடைய கண் களைத் தனது தளிர் விரல்களால் திறக்க முயல்வாள். அவன் கண்கள் திறக்காவிட்டால் அவள் அவனுடைய நெஞ்சில் ஏறியிருந்து கொண்டு தனது பஞ்சுக் கைகளைக் குவித்து அவனுடைய மார்பில் பொத்துப் பொத் தென்று குத்துவாள். அதற்கும் அவன் கண் திறக்காவிட்டால் அவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்து அங்கும் இங்கும் தலையை ஆட்டுவாள். இதில் எழுகின்ற சுகானுபவத்தை அவன் தன்
147

Page 78
வேட்கை
கண்களை மூடியபடி அனுபவித்துக் கொண்டேயிருப்பான்.
செல்லக்கண்டன் தன் அன்புத் தங்கையை ஒருநாளாவது அதட்டியதோ, அடித்ததோ இல்லை. தேவியை வெறியில் அப்பன் அடிக்கும் பொழுது அதைத் தடுக்க முயல்வான். அல்லது அவரை ஏசிச் சண்டை பிடிப்பான். அவ்வேளைகளில் அவனுக்குச் சரியான அடி விழும், தேவிக்கு செல்லம் கொடுப் பதாக செல்லக் கண்டனைத் தகப்பன் ஏசுவார்.
அவனுடைய தந்தை சண்முகம் வீட்டில் நிற்கின்ற வேளைகளில், தொட்டதற்கெல்லாம் செல்லக்கண்டனுக்கு ஏச்சும், பேச்சும், அடியும், உதையுந்தான்.
ஒருநாள் செல்லக் கண்டன் திடீரெனக் காணாமல் போய்விட்டான்.
அவன் சென்ற நாளிலிருந்து தேவிக்குச் சரியான உணவோ, உறக்கமோ இல்லை. "சின்னண்ணை, சின்ன ண்ணை" என்று எந்த நேரமும் அழுது கொண்டேயிருப்பாள். சகலத்தையும் இழந்து விட்டதான உணர்வு அவளுக்கு. அன்னமுத்தாச்சிதான் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றி ஆதரவாக இருந்து வருகின்றாள்.
தனது தங்கையை விட்டுப் பிரிந்த நாள் தொட்டு செல்லக்கண்டனுக்கும் வேதனை தாங்க முடியவில்லை, மன நிம்மதியுமில்லை. அவனுடைய உள்ளம் துயரத்தில் தவித்துக் கொண்டேயிருந்தது.
ஆறு மாதங்களாக செல்லக்கண்டனுக்கு ೨ಿ: வாசம் மூன்று மாதங்கள் அவன் களத்தில், அவனுடைய உள்ளத்தில் தனது சகோதரியைப் பார்க்க வேண்டும் அவளுக்கு ஆதரவளித்து அவளை ஆளாக்கிவிட வேண்டு மென்ற உணர்வு மேலோங்கவும், பல பிரிவுகள் ஒன்றுக்கொன்று முனைப்பாக்கிக் கொண்டிருக்கவும் அவன் ஒருநாள் அங்கிருந்தும் காணாமல் போய்விட்டான். ஊருக்கு திரும்பினால் தான் மாட்டுப்படுவேன்' என்ற பயம் அவனுக்கு. அவன் ஒரு
148

நீர்வை பொன்னையன்
சாப்பாட்டுக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான், சம்பளம் எவ்வளவென்று பேசவில்லை. அவனுடைய வேலையைப் பார்த்துத்தான் சம்பளம் முடிவெடுக்கப்படும். ஆனால் மூன்று நேரச் சாப்பாடு, கைச்செலவுக்கு சிறிய தொகை சில்லறை.
இன்று தனது தங்கையைப் பார்க்க வேண்டுமென்ற பேராவாலை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை, எப்படியும் தங்கையைப பார்த்து விட வேண்டுமென்ற ஒருவித வெறியில் அவன் சென்று கொண்டிருக்கின்றான்.
அந்தப் பெரிய கல்லூரியைத் தாண்டித்தான் அவனுடைய வீடு செல்ல வேண்டும்.
அவன் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது கல்லூரிக் கட்டடத்தில் மின்சார வெளிச்சம் தெரிகின்றது.
"இந்தக் காலத்திலை என்னண்டு லைற் எரியேலும்?"
அவனுக்கு ஆச்சரியம். இண்டைக்கு இஞ்சை என்ன விசேடம்? அவனுடைய உள்ளத்தில் கேள்விக்குறி.
கல்லூரியை அவன் அண்மித்ததும் "ஜெனறேட்டரின் இரைச்சல் கேட்கின்றது.
பல வர்ணங்கள் கலந்த கொடிகள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.
கல்லூரி மண்டபத்திற்குள் ஆரவாரம்
என்ன நடக்கின்றது என்று அறியும் ஆவலுடன் அவன் உள்ளே செல்ல முயல்கின்றான்.
பாதுகாப்புக் காரணமாக மண்டப வாசல் மூடப்பட்டிருக் கின்றது.
ஜன்னலால் அவன் எட்டிப் பார்க்கின்றான்.
149

Page 79
வேட்கை
மக்களால் நிரம்பி வழிகின்றது மண்டபம்,
அவனுடைய கண்கள மண்டபத்தைத் துளாவுகின்றன.
முன்வரிசையில்.
அப்பா'
அவனுக்கு ஆச்சரியம்.
அரையில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சால்வையால் போர்த்தியிருக்கின்றார்.
"அம்மா செத்த அண்டைக்கும் அப்பர் இப்பிடித்தான் வெள்ளை வேட்டி கட்டியிருந்தவர். ஆனா இண்டைக்கு"
தேவி எங்கே?
ஆவலுடன் அன்புத் தங்கை தேவியைத் தேடி அலை கின்றன அவனது விழிகள்.
அட, அங்கையிருக்கிறாள்!
முன் வரிசையில் பெண்கள் மத்தியில் இருக்கின்ற தேவியைக் கண்டு விட்டன அவனது விழிகள்.
தேவிக்குப் பக்கத்தில் எங்கடை அன்னமுத்தாச்சியு மிருக்கிறா, அவவும் இருப்ப எண்டு எனக்கு நல்லாத் தெரியும்.
அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
'சிவப்பு நிறத்திலை புதுச்சட்டை தலையும் இழுத்து நல்லாய் பின்னிக் கட்டியிருக்கிறாள் தேவி
எவ்வளவு லட்சணமாயிருக்கிறாள் என்ரை தங்கைச்சி!
அவனுக்கு பேரானந்தம்,
உடலில் புல்லரிப்பு
இப்பவே தேவியைத் தூக்கித் தன் தோளில் வைத்துக் கொண்டு பூவரச மரத்தைச் சுற்றி சாமியாடி ஒட வேண்டும். அவள் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதைக் கேட்க வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு.
150

நீர்வை பொன்னையன்
"தங்கச்சி!"
தன்னை மறந்து, தன் மூச்சை அடக்கி உரத்துக் கத்து கின்றான் அவன் அவனுடைய வஜ்ரக் குரல் மண்டபத்திலுள்ள ஆரவாரத்தைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கின்றது.
"தங்கச்சி தேவி! "
மீண்டும்உரத்துக் கத்துகின்றான். சின்னண்ணையின்ரை குரல்போலையிருக்கு!
தேவிக்குப் போராச்சரியம்,
"தேவி! தங்கச்சி.! "
அவனுடைய எக்காளக் குரல் மண்டபத்தில் ஒலித்து
செல்லக்கண்டன்ரை குரலாய்க் கிடக்கு போலை.!" அன்னமுத்தாச்சிக்கு வியப்பு.
இருக்காது. அவன் எப்போதோ செத்துப் போனானே. அது
அன்னமுத்தாச்சி அமைதி கொள்கின்றா. சபையில் பரபரப்பு.
தொலைவில் நிற்கின்ற இவன் இரண்டு இரும்புக் கரங்
கறுப்பு உடுப்பு அணிந்திருந்த இருவர் அவனை மடக்கிப் பிடித்து, இழுத்துச் செல்கின்றனர். இதை யாரும் கண்டதாக
151

Page 80
வேட்கை
ருக்கின்ற மயானத்தில் எரிந்து கொண்டிருக்கின்ற பிணத்தின் சிதையிலிருந்து தி ஜுவாலைகள் காற்றில் துடித்துக் கொண்டி ருக்கின்றன.
அவனை இழுத்துச் செல்பவர்களுடன் இடையில் மேலும் இரு கறுப்பு உடுப்புக்கள் சேர்ந்து கொள்கின்றனர்.
தூரத்தில் நாயொன்று ஊளையிடுகின்றது. மண்டபத் திற்குள் ஒளிமயம்,
வெளியே பயங்கர இருள் .
மண்டபத்திற்குள், நாடகம் தொடங்குகின்றது.
மண்டபத்திற்குள் வெளியே?
மை இருட்டிலும் நாடகம் தொடங்குகின்றது.
நாடகம் உச்சக்கட்டத்தை அடைகின்றது.
(G6) 6f(3L 2
நாடகம் முடிந்து விட்டது .
நிசப்தம்,
இருள் மயம்,
மயக்கம் தெளிந்த செல்லக்கண்டனுடைய உடலெல் லாம் ஒரே வலி.
பேயிருளில் புல்தரையில் விழுந்து கிடக்கின்ற அவன் எழுவதற்கு முயற்சிக்கின்றான். முடியவில்லை. மண்டை பிளந்து விட்டது போன்ற உணர்வு,
தலையைத் தடவிப் பார்க்கின்றான். மண்டையின் வலது பக்க பின் புறம் மாங்காய் போலப் பிளந்திருக்கின்றது.
ரத்தம் கட்டியாக உறைந்திருக்கின்றது.
மூச்சுவிட முடியவில்லை அவனுக்கு. யாரோ அமத்தி யிருப்பது போல நெஞ்சு இறுக்கமாக இருக்கின்றது.
152

நீர்வை பொன்னையன்
பிரயத்தனப்பட்டு எழுகின்றான். அடிகள் எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் நடுங்குகின்றன.
அடிவயிற்றில் தாங்க முடியாத நோவு மெதுவாக அடியெடுத்து வைக்கின்றான். நடக்க முடியவில்லை.
கஷ்டப்பட்டுத் தள்ளாடித் தள்ளாடி மெதுவாக நடக் கின்றான்.
தேவிக்காக அவன் கொண்டு வந்த பலகாரப் பொட்ட லத்தை நாய்கள் குதறித் தின்றபின் அது சுற்றிக் கட்டியிருந்த, கிழிந்து சிதைந்து போன வாழையிலையும் கடதாசியும் அவனுடைய காலில் இடறுப்படுகின்றன.
தகரம் அடிக்கும் சத்தம். "இஞ்சேரப்பா ஆரோ தகரத்திலை அடிக்கிறான் போலை
அன்னமுத்தாச்சியைனழுப்புகின்றார்பதுங்கிக்கந்தையா.
"சும்மா கிடவணை" அரைகுறை நித்திரையில் கூறிவிட்டு
றுபுறம் திரும்பிப் படுக்கின்றாள் அவள்.
சிறிது நேரத்தின் பின் மீண்டும் தகரமடிக்கும் சத்தம், "முடிஞ்சுது, எல்லாம் முடிஞ்சுது" பதட்டத்துடன் கூறு
கின்றார் கந்தையா
"என்னப்பா முடிஞ்சுது? சும்மா அலட்டாமல் கிடவனப்பா"
அவள் அசட்டையாகக் கூறுகின்றாள்.
"வந்திட்டான், அவன் வந்திட்டான், அவன் தான் தகரத்
திலையடிக்கிறான்."
153

Page 81
வேட்கை
அவருடைய குரல் நடுங்குகின்றது. "ஆரப்பா அவன்? சொல்லித் துலையன்" எரிச்சலுடன் கூறுகின்றாள் அவள்
"மனிசரை நித்திரை கொள்ளவிடன். சும்மா அரிச்சுக் கொண்டிருக்கிறாய்."
அவளுடைய வார்த்தையில் கடுகடுப்பு. தகரச் சத்தம் மீண்டும். "அங் கேர் அடிக்கிறானப்பா, அவன்தான் செல்லக் கண்டன்தான் வந்திட்டான்."
நடுங்கிக் கொண்டே கூறுகின்றார். "என்ன விசர்க்கதை பேசிறாயப்பா? அவன் எப்பவோ செத்துப் போனானே."
"ஒமோம். அவன் செத்துப் போனான்தான். ஆனா அவன் இப்ப பஞ்சமிப் பேயாய் வந்திருக்கிறான்."
"என்ன பயித்தியகாரனைப் போல அலட்டிறாய்?" எரிச்ச லாய் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி.
"இல்லையணை, அவன்ரை பஞ்சமிப் பேய்தான் வந்தி ருக்கு. அவன் இளந்தாரியல்லே. அவனுக்கும் என்னென்ன ஆசைகள் இருந்ததோ? அதுதான் அவன் ரை ஆத்மா
அந்தரப்பட்டு அலைஞ்சு திரியுது. ஆரைப் பலியெடுக்கப் போகுதோ'
"சும்மா மனதைப் போட்டு அலட்டாமை கிடவப்பா"
"இல்லையணை. முந்தநாள் தானே அவன்ரை செத்தவீடு கொண்டாடினது. அதுதான் அவன்ரை ஆத்மா அவஸ்தைபட்டு அலைஞ்சு திரியுது." -
"செல்லக்கண்டன்ரை ஆவியுமில்லை. மண்ணாங் கட்டி யுமில்லை. சும்மா பேசாமல் படு." -
154

நீர்வை பொன்னையன்
"அப்பென்ன சத்தமனை"
"அது. அதுதான் சோழகக் காத்து கடுமையாய் அடிக்கு தல்லே, வேலுப்பிள்ளையின் ரை இரண்டாவது மகளின் ரை
சாமத்தியச் சடங்கு நாளைக்கல்லே வைக்கினை. அதுக்குப்
போட்ட செட்டியாற்றை பந்தலிலை கிடக்கிற தகரம் களண்டு சோழகக் காற்றிலை அடிபடுகுதப்பா, அதுதான் அந்தச் சத்தம். நீ பேசாமல் படணை."
அன்னமுத்தாச்சி அமைதிப்படுத்துகின்றா கந்தை U JIT 60)6) .
"விசர்க்கதை பேசிறாய் நீ தகரமடிக்குதாம், தகரம். உனக்குக் கனமாய்த் தெரியுமே? செல்லக்கண்டன் பஞ்சமி யிலை செத்தவன். அவன்ரை பஞ்சமிப் பேய் பலி எடுக்காமை விடாதெண்டு, அதுக்குத்தான் சாந்தி செய்ய வேண்டுமெண்டு நேற்று எங்கடை அண்ணாச்சாமி ஐயர் சொன்னவர்."
"அவர் கிடக்கிறார். அவர் வரும்படிக்குத்தான் அப்பிடிச் சொன்னவர். நீ எப்பன் அலட்டாமல் கிடவணை."
நேரத்தின் நகர்வு
சோழகக் காற்று ஊழையிடுகின்றது.
பனை மரங்கள் இரைந்து நர்த்தனமாடிக் கொண்டிருக் கின்றன.
தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம்.
நாய்கள் குரைக்கின்ற சத்தம் வர வரக் கிட்டடியில் கேட்கின்றது.
தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருக்கின்றான் செல்லக்கண்டன்,
நாய்கள் கடுமையாகக் குரைக்கின்றன.
வீட்டுப் படலையடிக்கு வந்துவிட்டான் அவன்.
155

Page 82
வேட்கை
படலை பூட்டிக் கிடக்கின்றது.
மேலே அண்ணாந்து பார்க்கின்றான்.
இருள் படலத்திற்கு மத்தியில் கிளை பரப்பிச் சை விரித்து நிற்கின்றது பூவரசமரம்,
"தங்கச்சி' கூப்பிடுகிறான்.
குரலில் வேதானாவஸ்தை.
நிசப்தம்.
"தங்கச்சி தேவி!" முக்கி முனகிக் கத்துகிறான்.
அந்தப் பிராணாவஸ்தைக் குரலைக் கேட்ட அயலவர் கள் அருண்டெழுகின்றனர்.
"தேவி!"
உரத்துக் கத்துகின்றான் தன்னால் இயன்றளவு.
"சின்னண்ணையின் ரை குரல்" பதைபதைத் தெழு கின்றாள் தேவி.
"அப்பா சின்னண்ணை கூப்பிடுகிறான் போலை கிடக்கு."
"அது வேறை ஆரோவாக்கும். அவன் எப்பவோ செத்துப் போனானே. நீ பேசாமல் கிடவடி"
"நான் சொன்னன் செல்லக்கண்டன்ரை பஞ்சமிப் பேய் வந்திட்டுதெண்டு. அங்கேர் நாய்களும் அமளிதுமளரியாக் குலைக்குதுகள்."
கந்தையா நடுங்கிக் கொண்டே கூறுகின்றார். தகரம் அடிக்கும் சத்தத்தையும் நாய்கள் குரைப்பதையும் கேட்டு அயலிலுள்ளவர்கள் எழும்புகின்றார்கள். ஆனால் பயத்தில் ஒருவரும் வெளியே வரவில்லை.
"அதாரோ ஒழுங்கையாலை போகினையாக்கும். அது தான் நாயன் குலைக்குது!" என்கின்றாள் அன்ன முத்தாச்சி.
156

நீர்வை பொன்னையன்
தகரம் தட்டும் சத்தம், அன்னமுத்தாச்சி புறுபுறுத்தபடியே எழுகின்றாள். "ஆரது?" வெளியே வந்து அவள் கேட்கின்றாள், பதிலில்லை. "ஆரப்பா அது?" மீண்டும் கேட்கின்றாள். ஒரு சத்தமுமில்லை. நாலு பக்கமும் பார்க்கின்றாள். அவளுடைய மாலைக் கண்களுக்கு ஒன்றும் புலப்பட வில்லை.
"இந்தாளாலை நிம்மதியாய் படுக்கேலாமல் கிடக்கு. சும்மா அரிச்சுக் கொண்டு கிடக்குது."
கூறிக் கொண்டே திரும்பிச் சென்று படுக்கின்றாள்.
நிசப்தம்,
நேரத்தின் நகர்வு. "தங்கச்சி! ஆ"
ஆழக் கிணற்றின் அடியிலிருந்து எழுந்து வருகின்ற ஈனஸ்வரக் குரலின் முனங்கல்.
"ஐயோ! என்ரை சின்னண்ணை என்ரை சின்னண்ணை யைச் சாக்காட்டிறாங்கள்!"
திடுக்கிட்டெழுந்த தேவி அலறுகின்றாள்.
பயத்தில் அவளுடைய உடல் நடுங்குகின்றது.
"ஐயோ அப்பா, எனக்குப் பயமாய்க் கிடக்கு அப்பா. அவள் குளறி அழுகின்றாள்.
"தேவி ஏன் மோனை அழுகின்றாய்?"
157

Page 83
வேட்கை
தேவி தொடர்ந்து குளறி அழுததைக் கேட்டுக் கொண்டு கிடந்த அன்னமுத்தாச்சி எழுந்து பதைத்தபடியே கேட்ட வளாய் வேலிப்பொட்டுக்குள்ளால் வருகின்றாள்.
"ஏன் மோனை குளறுகிறாய்? என்ன நடந்தது?" "ஐயோ ஆச்சி என்ரைசின்னண்ணையை கறுப்பு உடுப்புப் போட்ட நாலஞ்சு கறுவல் தடியன்கள் கட்டிப் பிடிச்சு அவற்றை தொண்டையை நெரிக்க அவற்றை கண்முழி பிதுங்கி, நாக்கு நீண்டு வெளியாலை வந்து."
"அது கனவு மோனை. நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. நானிருக்கிறன். வா என்ரை வீட்டை."
வேலிப் பொட்டுக்குள்ளால் தேவியைக் கூட்டிச் செல் கின்றாள் அன்னமுத்தாச்சி.
தேவிக்கு சலஞ்சலமாய் வியர்த்துக் கொட்டுகின்றது. அன்னமுத்தாச்சி அவளுடைய வியர்வையைத் தனது சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டு படுக்கின்றாள்.
தேவியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டி ருக்கின்றது. -
"நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை மோனை, நானிருக்கிறன்." தேவியைத் தேற்றுகின்றாள் அவள்.
அன்னமுத்தாச்சியைத் தேவி கட்டிப்பிடித்தபடியே கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்திருக்கின்றாள்.
நான்கைந்து கறுவல் தடியன்கள் கறுப்பு உடுப்புடன் அவளுடைய சின்னண்ணையைக் கட்டிப்பிடித்து அவனுடைய தொண்டையை நெரிக்க, கண்முழிகள் பிதுங்க, நாக்கு நீண்டு வெளியே வருகின்ற காட்சி தேவியினுடைய மனத்திரையில் அடிக்கடி தோன்றுவதும் மறைவதுமாக இருக்கின்றது.
அவள் எப்பொழுது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது.
158

நீர்வை பொன்னையன்
இரவு, அன்றைய தனது பயணத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
இருள் மெதுவாகக் கரைகின்றது. தயங்கித் தயங்கி நிலம் வெளிக்கத் தொடங்குகின்றது. நிலத்தாயின் முகத்தில் துயரச்சாயல், விடிந்ததும் விடியாததுமாக எழுகின்றாள் தேவி. S29J6DIGNb6ÖDL ULI மனதில் சஞ்சலம், உடலில் சோர்வு.
நித்திரை விட்டெழுந்த தேவி ஏனோ படலையடியில் நிற்கின்ற பூவரச மரத்தடிக்குச் செல்கின்றாள்.
கலைந்தும் கலையாத இருளில் பூவரச மரத்தடியில் ஒரு ஆள்.
பயத்துடன் மெல்ல மெல்ல அவள் கிட்டச் சென்று பார்க் கின்றாள்.
மெல்லக் குனிந்து பார்க்கின்றாள். "சின்னண்ணை" ! அவளுடைய தொண்டைக்குள்ளிருந்து சத்தம் திக்கித் ணறி வெளியே வருகின்றது.
"சின்னண்ணை, சின்னண்ணை" தடுமாறியபடியே அவனை கூப்பிட்டு எழுப்புகின்றாள்.
Lഴിഞ്ഞിണ്ഡങ്ങാണ്ഡ്. அவனுடைய தலையை ஆட்டுகின்றாள். பேச்சு மூச்சில்லை. "எனே அன்னமுத்தாச்சி, எணே அன்னமுத்தாச்சி இஞ்சை ஒருக்கா வாணை. எங்கடை சின்னண்ணை."
"என்ன மோனை' என்ன?" முற்றம் கூட்டிக் கொண்டு நின்ற அன்னமுத்தாச்சி
159

Page 84
வேட்கை
என்னமோ ஏதோவொன்று பதைபதைத்து ஓடி வருகின்றாள்.
பூவரச மரத்தடியில் படுத்துக் கிடக்கின்ற செல்லக் கண்டனைப் பார்த்ததும் அன்னமுத்தாச்சிக்கு அதிர்ச்சி. அவளுக்கு மூச்சுத் திணறுகின்றது. அவள் திகைத்தவளாய் நிற்கின்றாள். ஒன்றுமே பேச முடியவில்லை.
"ஆச்சி, சின்னண்ணை எழும் புறானில் லையணை. அவனை எழுப்பணை," கதறுகிறாள் தங்கை,
செல்லக்கண்டனைக் குனிந்து உற்றுப் பார்க்கின்றாள் அன்னமுத்தாச்சி.
அவனுடைய கண்கள் திறந்தபடியேயிருக்கின்றன. அவை எதையோ வெறித்துப் பார்ப்பது போலிருக்கின்றது.
வாய் 'ஆ' வென்று திறந்தபடியேயிருக்கின்றது.
அவள் குந்தியிருந்து பார்க்கின்றாள்.
அன்னமுத்தாச்சியின் கண் புருவங்கள் உயர்கின்றன. நெற்றி சுருங்குகின்றது. கூர்ந்து பார்க்கின்றாள்.
செல்லக்கண்டனுடைய தொண்டை வீங்கியிருக்கின்றது. அதில் நகக் கீறல் காயங்கள்.
"இது எப்பிடி நடந்தது? ஆர் இப்பிடிச் செய்திருப்பினை" அவளுக்கு ஒரே குழப்பமாயிருக்கின்றது.
"செல்லக்கண்டன் எப்பவோ செத்துப் போனான் எண்டு தானே சொல்லிச்சினை. அதுதானே நாங்கள் முந்தநாள் அவன்ரை செத்தவீடு கொண்டாடினம்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று ராத்திரி அவனுக்கு அஞ்சலிக் கூட்டம் கூட நடத்தினாங்கள்.
"செல்லக்கண்டன் செத்துப் போனான் எண்டு அண்டைக்கு வந்து சொன்னவன் கறுப்பு உடுப்புப் போட்ட பொடியன். அவன்
160

நீர்வை பொன்னையன்
தான் நேற்று ராத்திரி செல்லக்கண்டனுக்கு அஞ்சலிக் கூட்ட த்தை ஏற்பாடு செய்து நடத்தினவன். அவனோடை இன்னும் மூண்டு நாலுபேர் ஒடியாடி கூட்டத்தை நடத்தினாங்கள். அவங்களாயிருக்குமோ?"
அவளுக்குச் சந்தேகம், கூட்டம் முடிஞ்சு நாடகம் துவங்க முந்தி வெளியாலை ஆரோ குழறிக் கேட்டுதே. அந்த நேரம் வெளியாலை போன கறுப்பு உடுப்புப் போட்ட மூண்டு நாலு பேரும் திரும்பி வரேல்லை. நாடகம் முடிஞ்ச பிறகும் அவங்களைக் காணேல்லை.
அவளது சிந்தனை எங்கோ ஒடுகின்றது. இப்பதான் புரியுது விசயம்'
இடையிடையே நடக்கிற ஊர்வலங்களுக்கும் கூட்டங் களுக்கும் அன்னமுத்தாச்சி சென்றிருக்கின்றாள். அந்த நேரங்களில் இந்தக் கறுப்பு உடுப்புப் போட்ட மூன்று நாலு பேரையும் கண்டிருக்கிறாள். அவங்கள் தான் முன்னுக்கு நின்று இவைகளை நடத்துகின்றவர்கள் என்பதை அவள் அவதானித் துள்ளாள்.
அன்னமுத்தாச்சிக்கு விசயம் புரிந்துவிட்டது. அவங்கள்தான், அவங்களேதான் இந்தக் கொடுமை யைச் செய்தவங்கள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அன்ன முத்தாச்சி செல்லக் கண்டனுடைய முகத்தை ஆராய் கின்றாள்.
அவனுடைய முகத்தில் விரக்தி வேதனை. ஏக்க உணர்வு தெரிவதாய்ப் படுகின்றது அவளுக்கு.
செல்லக்கண்டனுடைய உதட்டில் இரண்டு இலையான்கள்
ருப்பதை அவள் அவதானித்தாள்.
அவன் எடுத்த ரத்தவாந்தி கடைவாய் வழியே வழிந்து உறைந்து போயிருக்கின்றது.
161

Page 85
வேட்கை
இலையான்களைக் கலைத்துவிட்டு அன்னமுத்தாச்சி செல்லக்கண்டனுடைய திறந்திருந்த கண்களைக் தனது கைவிரல்களால் கஷ்டப்பட்டு மூடிவிடுகின்றாள்.
"ஐயோ! என்ரை செல்லக்கண்டா!" தனது தலையி லடித்துக் கொண்டு குளறுகின்றாள்.
"ஜயோ என்ரை சின்னண்ணை' வீரிட்டுக் கத்துகின்றாள் தேவி. -
"தேவி உன்ரை சின்னண்ணை உன்ரை சின்னண்ணை. அவள் தேவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓலமிடுகின்றாள்.
l
அவர்களுடைய ஒலங்கள் அந்தப்பகுதியெங்கும் ஒலித்து எதிரொலிக்கின்றது.
அயலவர்கள் ஓடிவந்து குவிகின்றனர். ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.
"அட நேற்று ராத்திரி இவனுக்கு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. ஆனா இண்டைக்கு இவன்.
ஆச்சரியத்துடன் வைமன் கந்தையா கூறுகின்றார்.
புரியாப் புதிராயிருக்கின்றது அவர்களுக்கு. ஊரே கூடி விட்டது.
அன்னமுத்தாச்சி மெளனமாயிருக்கின்றாள். "இப்பென்ன செய்யிறது?" கந்தையா அவர்களைப் பார்த்துக் கேட்கின்றான். "எங்களுக்கு இவ்வளவும் போதும், நாங்கள் செய்த எல்லாத்துக்கும் பதிலாய், இதுக்கு மேலாலை எங்களுக்கு வேறை என்ன வேண்டிக்கிடக்கு.
எதையோ நினைத்தவளாக திடீரெனக் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி. எல்லோரும் அவளை வியப்புடன் பார்க் கின்றனர்.
162

soa நீர்வை பொன்னையன்
"நாங்கள் இனி மற்றவையளை நம்பியிருக்கக் கூடாது. எங்கடை அலுவல்களை நாங்களே பாக்கவேணும்."
நிதானித்துக் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி. அவளு டைய வார்த்தைகளில் நிதானம், உறுதி அங்கு கூடி நின்ற அயலவர்கள் அனைவரும் துரித கெதியில் செயல்பட ஆரம்பிக்கின்றனர்.
முந்தநாள் அதே வளவில் நடந்த செத்த வீட்டுக் கொண்டாட்டத்தைப் போல அந்தக் கிராமத்திலை முன்னர் எப்பொழுதும் அவ்வளவு டாம்பீகமாக நடக்கவில்லை. தகரப் பந்த லென்ன, கதிரைகள், வெத்திலை பாக்கு, சுருட்டு, வாழைகள், தோரணங்கள் எல்லாம் பெரிய எடுப்புத்தான்.
அனுதாபம் தெரிவிக்க அறிந்தவர்கள், அறியாதவர்கள், பெரியவர்கள், பிரமுகர்கள் எல்லோரும் வளவு முட்ட முகமனு க்கு நின்றவர்கள் நீயா நானோவென்று எத்தனை பேர். அங்கு கூடியிருந்தவர்களின் பெரும் பகுதியினர் போலிகள் என்று யாருக்குத் தெரியப் போகின்றது.
இன்று செல்லக்கண்டனுடைய செத்த வீட்டில் அப்பகுதி யிலுள்ள சிறு தொகையினர் துக்கத்தில் பங்கு கொள்கின் றார்கள். அவர்கள் அத்தனை பேரும் அசல்களே.
முந் தநாள் செட்டியாருடைய தகரப் பந்தல் இந்த முற்றத்தில் போடப்பட்டிருந்தது. இன்று நான்கு கைமரங்கள் நடப்பட்டு தேடாவளையக் கயிறு கட்டப்பட்டு அதற்குமேல் கிடுகுகள் பரப்பப்பட்டிருக்கின்ற பந்தல். இதற்குள் சங்கத்துக் கதிரைகளில்லை. கதிர்ப்பாய் விரிக்கப்பட்டிருக்கின்றது.
கிடுகுப் பந்தலின் நடுவேயிருக்கின்ற பலகை வாங்கிலே செல்லக்கண்டனுடைய வாட்டசாட்டமான உடல் கிடத்தப்பட்டு வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கின்றது.
163

Page 86
வேட்கை
அவனுடைய தலைமாட்டில் சித்தப்பிரமை பிடித்தவளாய் இருக்கின்றாள் தேவி. அன்னமுத்தாச்சி அவளை அணைத்துப் பிடித்தபடியே இருக்கின்றாள்.
கறுப்பு உடுப்புப்போட்ட இருவர் அப்பொழுதுதான் அங்கு பைசிக்கிளில் வந்து இறங்குகின்றனர்.
"அங்கை எங்கடை ஆயிரக்கணக்காண பிள்ளையஸ் தங்கடை உயிரையும் மதிக்காமல் எங்களுக்னகாக சண்டை பிடிச்சுச் செத்துக் கொண்டிருக்கிறாங்கள், இஞ்சை இந்த நாசமாய்ப்போன ஊர்ச்சோறு தின்னிக் குத்தியன்கள்.? " அன்னமுத்தாச்சி மனதிற்குள் கறுவிக்கொள்கின்றாள். பசுபதியாக்கள் பச்சைக் கமுகை வெட்டிப் பிளந்து பூ வரசம் கம்புகளை வில்லாய் வளைத்துக் கட்டி அதற்கு மேலே வெள்ளைத் துணிகளைப் போட்டு மூடி பாடை கட்டிக் கொண்டி ருக்கின்றார்கள்.
செல்லக் கண்டனுடைய உடலைக் கிடத்துவதற்கு பச்சைத் தென்னோலையை இரண்டாகப் பிளந்து கிழித்து பன்னாங்கு பின்னிக்கொண்டிருக்கின்றார் கணபதி.
கிளைத்துச் சடைத்து இதுகாலவரை குளிர் நிழல் தந்து கொண்டிருந்த அந்தப் பூவரச மரம் தறிக்கப்பட்டு சாய்ந்து விழுந்து கிடக்கின்றது.
அன்னமுத்தாச்சி எழுந்து செல்லக்கண்டனுடைய தலை மாட்டில் மங்கலாய் எரிந்து கொண்டிருக்கின்ற குத்து விளக்கிற்கு எண்ணெயை ஊற்றித் திரியைத் தூண்டி விடுகிறாள்.
விளக்கு சுடர்விட்டு பிரகாசமாய் எரிகின்றது.
கறுப்பு உடுப்புப் போட்டவர்கள் நோட்டமிட்டுக் கொண்டு நிற்கின்றனர்.
"அநியாயமாய் ஏன் இந்தப் பூவரசைத் தறிச்சவை?"
164

நீர்வை பொன்னையன்
சாய்ந்து விழுந்து கிடக்கின்ற பூவரச மரத்தைப் பார்த்த செல்லம்மா அக்கா கூறுகின்றா.
"நெஞ்சான் கட்டைக்கு." அந்தக் கறுப்பு உடுப்புப் போட்டவர்களைப் பார்த்தபடியே கர்ச்சிக்கின்றாள் அன்னமுத்தாச்சி.
வெடித்துக் கிளம்பிய அவளுடைய வார்த்தைகளில் கனல் தெறிக்கின்றது.
செல்லக்கண்டன்தான் கர்ச்சிக்கின்றானோ என்று அங்கு நிற்கின்றவர்கள் திகைக்கின்றனர்.
கண்ணகியாய் நிற்கின்றாள் அன்னமுத்தாச்சி.
1998
1.65

Page 87
வேட்கை
தகள்ப்பு
அழியா வரம் வேண்டி நிலையாய்த் தவம் புரியும் முனிவனைப் போல அவர்கள் பஸ்வண்டியை எதிர்பார்த்துத் தவம் கிடக்கின்றனர்.
அந்த இடத்தில் அவனும் நிற்கின்றான். உயிரோட்டமுள்ள இரண்டு இளசுகளும் அவனுடன் நிற்கின்றனர்.
அவனுக்கு இளமையின் எல்லைக்கோட்டில் நிற்கின்ற பருவம், வாலிபமிடுக்கும் இளமைத் துடிப்பும் அகலாத, முதுமை இன்னும் எட்டிப்பிடிக்காத இரட்டை நிலை. நன்றாகப் பழுத்த அனுபவ முத்திரை அவனது முகத்தில் நிலவுகின்றது. உருக்குப் போன்ற மன உறுதியும், மனோ தைரியமும், குன்றாத இலட்சிய வேட்கையும் அவனிடமிருக்கின்றன.
பஸ் வண்டிகள் வருகின்றன, போகின்றன. அவைகள் போய்க் கொண்டும் வந்துகொண்டுமிருக்கின்றன. ஆனால் அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்ற பஸ்வண்டி வந்தபாடில்லை.
அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்ற பஸ்வண்டி இரண் டொன்று வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றில் அவர்களில் ஒருவர் தானும் ஏறிக்கொள்ள முடியவில்லை. அவற்றில பிரயாணிகள் நிரம்பி வழிகின்றனர். சிலர் புட்போட்டில் தொங்கிக் கொண்டு நிற்கின்றனர். செட்டை விரித்த அடைக் கோழி மாதிரி அந்த பஸ்வண்டிகள் அவர்கள் காத்து நிற்கின்ற இடத்தில் நிற்காமலேயே அரைந்துகொண்டு சென்று விட்டன.
166

நீர்வை பொன்னையன்
அவர்களுக்கு மனதில் கொதிப்பு.
ஏறுவெய்யில்,
இளஞ்சூரியனின் கானல் அலைகள் அவர்களுடைய உடல்களைக் காந்திக் கொண்டிருக்கின்றன.
இயற்கை அன்னையின் வளத்தையும், வனப்பையும் சிதைத்துச் சீரழித்து அந்த அழிவின் மீது அகங்காரத்துடன் ஆரோகணித்து நிற்கின்றது நகரத்தின் கட்டடக்காடு. இந்தக் கட்டக்காட்டின் அசுரப் பசிக்கு இரையாகி விடாமல் தற்செய லாகத் தப்பிப் பிழைத்து தன்னந் தனியனாய் றோட்டோரத்தில் நிற்கின்ற வாகை மரம் தீக்குளித்துக் கொண்டு நிற்கின்றது.
செஞ்சடை பரப்பி நிற்கின்ற அந்த நெருப்பு வாகை மரத்தின் அரை வட்டக் குளிர் நிழல், அனல் வெய்யிலில் தவித்துக் கொண்டு நிற்கின்ற அந்தப் பிரயாணிகளை ஆதர்ஸ்மாக அரவணைத்து ஆறுதலளிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் பஸ் நிலையத்திற்குப் பின்புறமாயுள்ள அந்த இடிந்து பாழடைந்த கட்டடத்தின் இடிபாடுகளின் மேல் சோக மயமாய் சாய்ந்து வீழ்ந்து கிடக்கின்றது.
பிரயாணிகளுக்கு வெக் கை தாங்க முடியவில்லை. கால்கள் கடுக்கின்றன. -
அவர்களுடைய நீண்ட நேரத் தவநிலை குலைகின்றது.
"நாசமாய்ப்போன இந்த பஸ் எப்பதான் வந்து துலையப்
வெறுப்புக் கலந்த ஏக்கத்துடன் ஒருவர் கூறுகின்றார். "நான் ஆஸ்பத்திரிக்குப் போக வேணும் நேரம் பிந்தினால்
நம்பர் துண்டு எடுக்கேலாது. என்ன செய்யிறதெண்டு தெரியா
g2(b நோயாளியின் அவஸ்தை. "வழக்குத்தவணைக்குநான் கோட்டுக்குப் போக வேணும்.
167

Page 88
வேட்கை
நேரம் போட்டுது. கொள்ளையிலைபோன இந்த பஸ்ஸை இன்னும் காணல்லையே." ܘܗ
மற்றொருவர் அவசரப்பட்டுக்கொண்டு நிற்கின்றார். "வாழ்க்கையிலே அரைவாசிநாளுக்கு மேலை பஸ்ஸுக்கு காத்து நிற்கின்றதிலை கழிஞ்சு போகுது என்ன கடைகெட்ட
f6) fu JLD ?"
விரக்தியின் வெளிப்பாடு. "முந்தி என்ன மாதிரி பஸ் சேவை நல்லாய் நடந்து கொண்டிருந்தது. "அநியாயப்படுவாங்கள் சிலர் திட்டம் போட்டு அந்தப் போக்குவரத்துச் சேவையை நாசமாக்கினாங்கள். "ஊழல் மலிஞ்சு போச்சு", "நட்டத்திலை போகுது" எண்டு சாட்டுச் சொல்லி முந்தியிருந்த ஆட்சிக்காரர் அந்த பஸ் சேவையை தனியாரிட்டை தாரை வார்த்துக் குடுத்தாங்கள். இப்ப இந்தப் பெருச்சாளியள் எங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறாங்கள். எலி இருக்குதெண்டு வீட்டை எரிச்ச கதைதான் இது."
ஒருவர் வெறுப்புடன் கூறுகின்றார். "இப்ப இவங்கள் எங்களை மனிசராய் நடத்துறாங்களே? ஆடுமாடுகளைப் போலைநடத்துறாங்கள். நாங்கள் வாயில்லாப் புழுக்களாய்க் கிடந்து மிதிபடுகிறம்."
விரக்தி மேலிடப் பிரலாபிக்கின்றார் ஒருவர். நேரம் செல்லச் செல்ல சாலையை இரும்புக் குதிரைகள் ஆக்கிரமிக்கின்றன. வாகனங்களின் முற்றுகையினால் சாலை யில் மக்கள் நகர முடியாமலிருக்கின்றது.
ஜப்பானில் கழித்துவிடப்பட்ட பழைய இரும்புகளும் கறள்
பிடித்த தகரங்களும் இரும்புக் குதிரைகளாய் இந்த நகரத் திலுள்ள சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக் கின்றன.
168

நீர்வை பொன்னையன்
நகரத்தின் ஆத்மாவையே விழுங்கி ஏப்பமிடும் 8ബI് ഞക யுடன் இந்த வாகனங்கள் உறுமிக் கொண்டு கரும்புகையைக் கக்கியபடியே ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.
அன்றிருந்த மக்களுடைய போக்குவரத்துச் சேவையைக் கபளிகரம் செய்து ஏப்பமிட்டுவிட்ட இறுமாப்பில் திமிருடன் உறுமியபடியே சென்றுகொண்டிருக்கின்றன தனியாருக்குச் சொந்தமான பஸ் வண்டிகள், இவைகளில் பெரும் தொகை யானவற்றை இரண்டொரு மந்திரிமார்களும், அரசாங்க உய ரதிகாரிகளும் சொந்தமாக வைத்திருக்கின்றார்கள் என்பது எவருக்கும் தெரியாத விஷயம்.
பஸ் சிற்காகக் காத்துநிற்கின்ற அந்த மக்களுக்கு மனக்கொதிப்பு.
தார்மிக அரசின் ஆசியுடன் இறக்குமதியான கொக்கோ கலாசாரத்தின் சுழிப்புக்குள் சிக்கி அதற்குத் தாக்குப் பிடிக்க முடியாமலும், வெளியே வரமுடியாமலும் சீரழிந்து கொண்டிருக்கின்ற விடலைகள் கும்பலொன்று அங்கு வந்து சேர்கின்றது.
ஆனெது பெண்ணெது என்று அடையாளம் காண முடியாத வகையில் உருவத்திலும் உடையிலும் அர்த்த நாரீஸ்வரர்களாயிருக்கின்றனர் இந்த விடலைகள், போதை. வஸ்துப் பாவனை யால் அவர்களது முகங்கள் உப்பி வெளிறிப் போயிருக்கின்றன. சிலருடைய 'ரி சேட்களில் U S A. என்று பச்சை மஞ்சள் நிற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கின்றன.
விடலைகள், கிரிக்கட் விளையாட்டு விசிறிகள், ஹொலி வூட் படங்களின் நடிக நடிகைகள், அவைகளில் வருகின்ற ஆபாசக் காட்சிகள் போதைவஸ்து பாவனை, இரவு விடுதிக் களியாட்டங்கள், அங்கு நடக்கின்ற ஆபாச நடனங்கள், பாலியல் செயற்பாடுகள் பற்றி ஒளிவு மறைவின்றி பச்சை
169

Page 89
வேட்கை
யாகவே சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கின்றது இந்தக் கும் பல். இக்காட்டாக்காலி விடலைகளின் அசிங்கமான உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்ற பிரயாணி களுக்கு எரிச்சல், மனக்கொதிப்பு சிலர் முகம் சுழிக்கின்றனர். சமூகத்தில் பெரும் செல்வாக்குடைய சில குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இக் கட்டாக் காலி விடலைகள் இவர்கள் நகரத்திலேயுள்ள பெரிய பிரபல்யமான கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்று நடக்கவிருக்கின்ற பெரும் கிரிக்கட் மாச்சிற்கு செல்வதற்கு வந்திருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி மோட்டார் வாகனங்களில் பிரயாணம் செய்யும் வாய்ப்பும் வசதியுமுள்ளவர்கள். ஆனால் இப்படியான பஸ் வண்டிகளில் நெருங்கி இடிபட்டு கைச் சேட்டைகள் விட்டுக்கொண்டு செல்வதில் இவர்களுக்கு திறில்,
"அந்த நாட்டுப்புறச் சிட்டு எப்படி மச்சான்?" "பாத்தா அது சண்டைக் கோழி மாதிரியிருக்கடா?"
"வெளிப்பார்வைக்கு அப்பிடித்தான். ஆனால் அவளை ஒரு மாதிரி வளைச்சுக் கையுக்கை போட்டிட்டால் பிறகு சொல்லத் தேவையில்லை. அவள் தன்னையே முழுசாய். ஆனால் அது ஒரு கடுமையான முயற்சியடா"
"என்ன அனுபவம் பேசுதோ?" "இவளைப்போலை எத்தினை பேரை நான் LDL jiġi யிருக்கிறன் தெரியுமே? இப்ப நான் இவளைச் சாடையாய்
லைன் பண்ணிப் பார்ப்பம்."
"மச்சான் அவசரப்படாதையடா. காரியம் கெட்டுப்போம். அவள் பஸ்சுக்கை ஏறினாப் பிறகு நாங்கள் எங்கடை கை வரிசையைக் காட்டுவம் கொஞ்சம் பொறுமையாயிருடா."
தாங்கள் கதைப்பது அவளுக்கு எங்கே புரியப் போகின்றது என்ற நினைப்பில் மனம் போன போக்கிலே கதைத்துக்
17O

நீர்வை பொன்னையன்
கொண்டு நிற்கின்ற அந்தக் கட்டாக்காலிகள் அவள் பக்கம் திரும்புகின்றனர்.
அவளுடைய செந்தழல் விழிகள் அந்தக் கட்டாக் காலி களையும் தன்னுடைய காலிலுள்ள செருப்பையும் மாறி மாறிப் பார்க்கின்றன.
அவளுடைய கரங்கள் செயல்படுவதற்கு வெடவெடத்துத் துடிக்கின்றன.
அவனுக்கருகிலுள்ள அந்த இளசு சீறிப்பாயத் தயாரா யிருக்கின்ற சிறுத்தையாய் நிற்கின்றான்.
ஆஜானுபாகுவான உடல்வாகைக் கொண்ட சோமன் வெறுப்பும் கோபமும் கொண்ட வெட்டுப் பார்வையுடன் நிற்கின்றான்.
"உங்களுக்கு முதுகு உளையுதோடா" என்ற கேள்விக் குறி அவனுடைய உக்கிரப் பார்வையில் பீறிடுகின்றது.
அம் மூவருடைய ரெளத்ராவேச நிலை அந்தக் கட்டாக் காலிகளைக் கதிகலங்கச் செய்கின்றது.
அப்பொழுதுதான் அங்கு வந்து நிற்கின்ற ஒரு பஸ் வண்டியில் அந்தக் கட்டாக்காலி விடலைகள் இடிபட்டு முண்டி யடித்துக் கொண்டு ஏறித் தப்பித்துக் கொள்கின்றனர்.
நேரம் நீண்டு செல்கின்றது. வெய்யிலின் மூர்க்க வெறி தாங்க முடியாத நிலை பிரயாணிகளுக்கு,
அதிர்ஷ்டவசமாக ஒரு பஸ் வண்டி வந்து நிற்கின்றது. அது வெற்று வண்டி அவர்கள் எதிர்பார்த்துத் தவம் கிடந்த
ൺ ബഞ്ഞTറ്റു.
அவர்களுக்கு ஆச்சரியம் வெற்று வண்டியாக இருந்தும் வர்கள் பரபரப்புடன் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளி முண்டியடித்து ஏறுகின்றனர்.
171

Page 90
வேட்கை
அந்த பஸ்சிற்கு இரட்டை வாசல்கள். அவனும் இளசுகள் இருவரும் பின் பக்கமுள்ள வாசலால் ஏறி கடைசி ஆசனத்தில் அமருகின்றனர்.
பஸ் வண்டி புறப்படுகின்றது. பிரயாணிகளுக்குத் திருப்தி பஸ் வண்டியின் சாரதி கறுப்பு "ரிசேட் அணிந்திருக் கின்றான். அத்துடன் கறுப்புக் கண்ணாடி , அவனுக்குக் கறுப்பு நிறத்தில் மோகம் போலும், சடை வளர்த்துக் குதிரைவாலாய்த் தொங்க விட்டிருக்கின்றான். அவனுடைய முன்பக்கத் தலை மயிர் கோழிக் கொண்டையாய்க் கத்தரிக்கப்பட்டு அடர்த்தி யாய்க் குத்திட்டு நிற்கின்றது. அவன் அநாயாசமாய் சிகரெட் புகையை இழுத்து ஊதிவிட்டுக் கொண்டே பஸ்வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான்.
பஸ் கொண்டக்டர் நல்ல உடற்கட்டான காளை, பச்சை நிற சேட் அணிந்திருக்கின்றான். இந்தப் பச்சைநிற சேட் சென்ற தேர்தல் காலத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைத்திருக்க வேண்டும் போலும், அவன் கழுத்தில் ஒரு லேஞ்சித் துண்டு கட்டியிருக்கிறான். அவனுடைய இரத்தச் சிவப்பேறிய கேடு சூழும் கழுகுக் கண்கள் பிரயாணிகளைக் கொத்திக் கொண்டி ருக்கின்றன.
சோமனும் அந்த இரு இளசுகளும் எதைப் பற்றியோ தங்களுக்குள் காரசாரமாகக் கதைத்துக் கொண்டிருக் கின்றனர்.
பஸ் வண்டிக்குள்ளிருந்த பிரயாணிகளது அத்தனை விழிகளும் அந்த மூவர் மீதும் மையப் புள்ளியாய்க் குவிந்திருக் கின்றன. அவ்விழிகளின் பார்வையில் சந்தேகம்,
"எல்லாரும் எங்களைத்தான் உன்னிப்பாய்க் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கினை"
ஒரு இளசின் எச்சரிப்பு.
172

நீர்வை பொன்னையன்
"இவை எங்கையோ குண்டு வைக்கத்தான் போகினை போலக் கிடக்கு."
எவராலும் ஆழம் காணமுடியாத அவளுடைய அகலமான விழிகளில் குறும்புத்தனம் நடனமாட பொட்டு வைத்திருக் கின்ற அவள் கூறுகின்றாள்.
பிரயாணிகளை ஏற்றுவதற்காக வண்டி ஓரிடத்தில் நிற்கின்றது. -
"கெதியாய் இறங்குங்கோ கெதியாய்."
பிரயாணிகளை அவசரப்படுத்தி அவர்களது முதுகுகளில்
கத்துகின்றான் கொண்ட்க்டர்.
"கெதியாய் ஏறுங்கோ", "கெதியாய் ஏறுங்கோ",
நிக்கிறியள்", "ஏசிவப்புசாரி, பின்னுக்குப்போ", "ஏ நீலச்சட்டை, போ, பின்னுக்குப் போ", "கெதியாய் ஏறுங்கோ."
பஸ்வண்டியின் புட்போட்டில் நின்றுகொண்டே உரத்த குரலில் அதட்டி பிரயாணிகளை இடித்துத் தள்ளி அவர்களைத்
நடுத்தர வயசுப் பிச்சைக்காரன் ஒருவன் பஸ்சிற்குள் |5றுகின்றான். அவன் தமிழின விரோதப் பாடல் ஒன்றை உரத்துப்
பாடுகின்றான். அவனுக்கு நல்ல சாரீரம்,
இனவிரோதப் பாடலைப் பாடினால் தனக்குக் கூடுதலாகப் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு போலும் அவனுக்கு. ஆனால் பிரயாணிகள் அவனைப் பொருட்படுத்தவில்லை.
அவன் பிரயாணிகளைச் சபித்துத் திட்டிக் கொண்டே பஸ்சைவிட்டு இறங்கிச் செல்கின்றான்.
பிரயாணிகளை இறக்கி ஏற்றுவதற்காக பஸ் நின்று விட்டுப் புறப்படுகின்ற ஒவ்வொரு இடத்திலும் அவன் உரத்த
73

Page 91
வேட்கை
குரலில் அதட்டி பிரயாணிகளை அவசரப்படுத்தி அவர்களுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றான். ஆனால் இளம் பெண்களை அவன் தட்டியும் தடவியும் ஆதூரத்துடன் அனைத்துப் பெளவியமாக பஸ்சிற்குள் ஏற்றியும், இறக்கியும் விடுகின்றான். -
கொண்டக் டரின் இந்த வக்கிரச் செயல்களையும் சேட் டைகளையும் சில பிரயாணிகள் பார்த்தும் பாராதவர் களாகப் பாவனை செய்து கொண்டிருக்கின்றனர். சிலர் தங்க ளுக்குள்ளேயே மனம் வெதும்பிக் குமைகின்றனர். இதைத் தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?
பிரயாணிகளை அவசர அவசரமாய் அவலப்படுத்தி பஸ்சிற்குள் ஏற்றியும் இறக்கியும் கொண்டிருக்கின்ற இவர்கள் தாங்கள் நினைத்த நினைத்த இடங்களிலெல்லாம் பிரயாணி களை ஏற்றுவதற்காகப் பத்துப் பதினைந்து நிமிடங்களாய் பஸ்வண்டியை மறித்து வைத்துத் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பிரயாணிகள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் பஸ்சிற்குள்ளேயே காத்துக்கிடந்து பெரும் சிரமங்களுக் குள்ளாகின்றனர்.
"என்ன இவங்கள் கெதியாய் ஏறுங்கோ", "கெதியாய் இறங்குங்கோ" எண்டு எங்களை அவலப்படுத்துறாங்கள். ஆனால் தாங்கள் நினைச்ச ஒவ்வொரு இடத்திலையும் பத்துப் பதினைஞ்சு நிமிடங்கள் பஸ்சை மறிச்சு வைச்சு எங்களைத் தாமதப்படுத்துறாங்கள். இப்பிடியெண்டால் நாங்கள் என்னண்டு குறிப்பிட்ட நேரத்துக்கை போய் சேருறது. அரை மணித்தி யாலத்திலை செய்யிற பிரயாணத்துக்கு ஒண்டரை மணித்தி யாலம் சிலவழிக்க வேண்டியிருக்கு நேரகாலத்துக்கு நாங்கள் பயணம் செய்யேலாமல் கிடந்து உத்தரிக்கிறம். இவங்கடை நட்டாமுட்டித்தனத்தைக் கேக்க ஆரிருக்கினை"
பிரயாணிகள் தங்களுக்குள்ளேயே அலுத்துச் சலித்துக் கொள்கின்றனர்.
174

நீர்வை பொன்னையன்
"என்னப்பா பஸ்சுக்கை நாங்கள் நிக்கேலாமை நெரி பட்டுக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றம். கொண்டக்டர் என்னடாவெண்டால் ஆடுமாடுகள் மாதிரி ஆக்களை ஏத்தி அடையுறான்."
வெறுப்புடன் கூறுகின்றார் ஒரு பிரயாணி
'நெருக்கத்திலை சனவெக்கை தாங்கேலாமல் கிடக்கு. மூச்சு விடேலாமல் நாங்கள் திணறிக் கொண்டிருக்கிறம். மேலேல்லாம் சலம்சலமாய் வேர்த்து வழிஞ்சு கொண்டிருக்கு. நாங்கள் எல்லாம் சுண்ணாம்புச் சூளைக்குள்ள அம்பிட்ட மாதிரி அவிஞ்சு கொண்டிருக்கிறம், காலெடுத்து வைக்கேலாமல் கிடக்கு அவனென்னண்டால் பின்னுக்குப் போங்கோ பின்னு க்குப் போங்கோ எண்டு கத்திக்கொண்டு அளவு கணக்கில் லாமல் ஆக்களை ஏத்தி அடைஞ்சு கொண்டிருக்கிறான். இந்தக் கொடும் பாவியளைக் கலைச்சால்தான் எல்லாஞ் சரிவரும்."
அந்தப் பிரயாணியின் குரலில் வேதனையும், வெறுப்பும், "அவர்கள் எங்களைப் பற்றி ஏன் கவலைப்பட போறாங்கள். எவ்வளவு காசை எங்களிட்டை புடுங்கேலுமோ அவ்வளவையும் சூறையாடுறதுதான் அவங்களுடைய நோக்கம்."
"காசைக் குடுத்தால் டிக்கட்டைத்தானும் தாறாங்களே?" "டிக்கட் குடுத்தால் வருமான வரிக்காரனுக்கு காட்டி வரி குடுக்க வேண்டிவருமே."
பஸ்வண்டியில் பொருத்தப்பட்டிருக்கின்ற வானொலியில் ஆங்கில ஆபாச பாடலொன்று உச்சஸ்தாயியில் கர்ண கடுரமாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. சனநெருக்கத் நிலும் வெக்கை யிலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கின்ற பிரயாணிகளுக்கு இது இன்னுமொரு சித்திரவதையாக இருக்கின்றது.
175

Page 92
வேட்கை
"எங்கடை கலாசாரம் போற லட்சணத்தைப் பாருங் கோவன்" என்று நடுத்தர வயதுப் பிரயாணி ஒருவர் அருவருப்புடன் கூறுகின்றார்.
பஸ் டிறைவர் திடீரென பிறேக்கைப் போட்டு பஸ்வண்டியை நிறுத்தும் பொழுதும் திடீரென பஸ்சை எடுக்கும் பொழுதும் பிரயாணிகள் முன்னுக்கு வீசப்பட்டும் பின்னுக்கு வீசப்பட்டும் ஒருவருடனொருவர் மோதி அவஸ்தைப் படுகின்றனர். இக் காட்சியை டிறைவர் தனக்கு முன்னால் தலைக்கு மேலேயுள்ள கண்ணாடியில் பார்த்து ரசித்து தனக்குள் நமட்டுச் சிரிப்புச் சிரிக்கின்றான். அதுமாத்திரமல்ல பஸ்வண்டியை திடீர் திடீரென அவன் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் அடிக்கடி மடக்கி வெட்டும் பொழுது பிரயாணிகள் வலப்புறமாகவும் இடப் புறமாகவும் திடீர் திடீரெனச் சரிந்து ஒருவருடன் ஒருவர் முட்டி மோதுப்படுகின்றனர். இதையும் அவன் பெரும் வேடிக்கையாய் பார்த்து ரசிக்கின்றான்.
"கட்டேலை ஏத்த வேண்டிய பஸ் வண்டியளை, றோட்டிலை ஓடவிட்டு சனங்களை கட்டேலை போகப் பண்ணிக் கொண்டி ருக்கின்றாங்கள் இவங்கள்."
ஒரு முதியவர் முறையிடுவது போல் கூறுகின்றார். "இந்த தனியார் பஸ் வண்டியளிலை பிரயாணம் செய்யி றவை எல்லாரும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள்."
உறுதியாகக் கூறுகின்றார் ஒருவர், பிரயாணிகளில் சிலர் அவரை வியப்புடன் பார்க்கின்றனர். பிரயாணிகளை ஏற்றுவதற்கு ஒரு இடத்தில் பஸ் நிற்கின்றது.
மூன்று வயதுக் குழந்தை ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு நிறைமாதக் கர்ப்பிணித்தாய் பஸ்சிற்குள் ஏறு வதற்கு முயற்சிக்கின்றாள்.
176

நீர்வை பொன்னையன்
"கெதியாய் ஏறு", "கெதியாய் ஏறு" என்று புட்போட்டில் ன்று கொண்டிருக்கின்ற கொண்டக்டர் அவளை அவசரப் டுத்துகின்றான்.
கர்ப்பிணித் தாயால் பஸ்சிற்குள் ஏற முடியாமலிருக் ன்றது.
கொண்டக்டர் புட்போட்டில் நின்றுகொண்டிருப்பதால் அவள் ஏறி உள்ளே செல்வதற்கான வாசல் இடைவெளி போதா மலிருக்கின்றது.
"ஏன் சுணங்கிறாய்? கெதியாய் ஏறித் துலையன்." அவன் அவசரப்படுத்துகின்றான். அந்தக் கர்ப்பிணித்தாய் நெரிந்து கொண்டு ஏறுகின்றாள். கொண்டக்டர் தற்செயலாக நடப்பதுபோலப் பாவனை செய்து கொண்டு தனது கையால் அவளுடைய மார்பில் வேண்டுமென்றே இடிக்கின்றான்.
கர்ப்பிணித்தாய் பதட்டமடைந்து கால் இடறி விழப் பார்க்கின்றாள். ܚ
"அக்கிரமத்திற்கும், அடக்குமுறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகின்ற இந்தச் சமூகம், இன்று இந்த தனியார் பஸ் மா. பியாக் கும்பலின் நவீன நரகாசுரர்களின் அட்டகாசங். களையும், சண்டித்தனங்களையும் எப்படித்தான் சகித்துக் கொண்டு இவ்வளவு பொறுமையுடனிருக்கின்றதோ? இதனு டைய தன்மான உணர்வு செத்துவிட்டதா?"
இக்கேள்வி சோமனுடைய உள்ளத்தில் எழும்புகின்றது.
சோமன் கொண்டக்டர் பக்கம் திரும்புகின்றான்.
177

Page 93
வேட்கை
வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்ற கொண்டக்டர் அவன் கண்ணில் படுகின்றான்.
கோபத்தில் சோமனுடைய நாளங்களில் இரத்தம் வீறிட்டு வேகமாய்ப் பாய்ந்தோடுகின்றது. நரம்புகளும் நாளங்களும் புடைத்து விண்ணென்று நாணாய்த் தெறித்து நிற்கின்றன.
நெடுந்துரம் பாரிய வாகனத்தை ஒட்டுவதைத் தொழிலா கக் கொண்டிருக்கின்ற தன்னுடைய நீண்ட உருண்டு திரண்டு முறுக்கேறிய கைகளினால் அந்த அற்பனை அலாக்காகத் தூக்கி எதிரிலேயுள்ள மதில் மேல் மோத வேண்டும் போலிருக் கின்றது அவனுக்கு.
சோமனுடைய முப்புரமெரித்த உருத்திரப் பார்வையில் கொண்டக்டருக்கு பீதியில் உதறலெடுக்கின்றது. அவனுடைய முகம் பேயறைந்த மாதிரி வெளிறிக் கிடக்கின்றது.
இந்தக் கோழை ஆத்மாவைத் தாக்கித் தன்னுடைய கரங்களைக் கறைப்படுத்தக் கூடாதென்ற எண்ணத்தில் அவன் தன்னுடைய கோபத்தைக் கடும் பிரயத்தனப்பட்டு அடக்கு வதற்கு முயற்சிக்கின்றான்.
"இறங்கடா றாஸ்கல் , புட்போட்டாலை."
சோமனுடைய கோபக்கனல் வார்த்தைகளாய் வெடிக் கின்றது.
எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலால் கொண்டக்டர் நிலை தடுமாறி அதிர்ச்சியடைகின்றான்.
"நீ ஆரடா எனக்குச் சொல்றதுக்கு?" சிறிது நேரத்தில் தன்னைச் சுதாரித்துக் கொண்ட (3)BT60õTLä5LffÕI LIITLi jär6ü.
"நான் ஒரு பிரயாணியடா. நீங்கள் விடுகின்ற சேட்டை யளை, உங்கடை அட்டகாசங்களை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் வாறம், எதுக்கும் ஒரு எல்லை வேணும்."
178

நீர்வை பொன்னையன்
சோமன் நிதானித்துக் கூறுகின்றான். "என்னத்தைக் கண்டிட்டியள்? நாங்கள் என்ன செய்யிறம்'
ஒன்றுமே தெரியாத அப்பாவி போல கொண்டக்டர் நடிக்கின்றான்.
"உங்கடை வக்கிர உடல் வேட்கையைத் தீர்க்கிறதுக்கு பஸ் பிரயாணிகள் தான் கிடச்சினையோ?"
"என்ன கதையளக்கிறாய்?" ஏளனமாய் கேட்கின்றான் கொண்டக்டர்.
" "நீங்கள் புட்போட்டிலை நிண்டுகொண்டு பஸ்சிலை ஏறுற, இறங்கிற இளம் பெண் பிள்ளையளை உரஞ்சிறது, இடிக்கிறது எங்களுக்குத் தெரியாதெண்டு நினைக்கிறியளே?"
"என்ன சொல்லிறாய்?" "ஏன் இப்ப நீ என்ன செய்தனி?"
"உன்ரை தாய்க்கு அல்லது உன்ரை சகோதரிக்கு இப்பிடி ஆராவது செய்தால் நீ என்னடா செய்வாய்?"
கொண்டக்டர் மெளனமாய் நிற்கின்றான்.
"உன்ரை பெண்சாதிக்கு இப்பிடி ஆராவது இடிச்சால் நீ பாத்துக கொண்டு சும்மாய் நிப்பியோடா?"
சோமனுடைய ஆக்ரோஷ வார்த்தைகள் கொண்டக்ட ரைச் சாடுகின்றன. அவன் மலைத்துப் போய் நிற்கின்றான்.
மெளனிகளாயிருந்த பிரயாணிகள் மத்தியில் சலசலப்புக் கிளம்புகின்றது.
"எபே நாங்கள் சிங்களவரடா. இது எங்கடை இடமடா. நீங்கள் தமிழரடா, உங்கடை இடம் யாழ்ப்பாணம். நீங்கள் எல்லாரும் யாழ்ப்பாணம் போங்கோடா."
179

Page 94
வேட்கை
புதிதாக எதையோ கண்டுபிடித்துவிட்டதாக நினைத்துப் பெருமையுடன் கூறுகின்றான் கொண்டக்டர்.
"நீ போடா மாத்தறைக்கு."
சோமன் கத்துகிறான்.
'எதுக்கடா நான் போகவேனும்?"
"யாழ்ப்பாணம் இந்த நாட்டின்ரை ஒரு பகுதியடா. அது மாதிரித்தான் மாத்தறையும் இலங்கையின்ரை ஒரு பகுதி. இந்த நாட்டிலை பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாடு சொந்தம். இது என்ரை தாய்நாடு. என்னை யாழ்ப்பாணம் போகச் சொல்ல உனக்கு என்ன உரிமையிருக்கடா? என்னை நீ யாழ்ப்பாணம் போகச் சொல்ல உனக்கு உரிமையிருக கெண்டால் உன்னை மாத்தறைக்குப் போகச் சொல்ல எனக்கு உரிமையிருக்கு. இந்த நாட்டிலை உங்களுக்கிருக்கிற உரிமைதான் எங்களுக்குமிருக்குதெண்டதை நீங்க மறந்தி பாதையுங்கோடா, நாங்கள் எங்கை இருக்கிறதெண்டு தீர்மானிக்கிற உரிமை எங்களுக்குத்தானிருக்கடா."
தீர்க்கமாய் உறுதிப்பாட்டுடன் கூறுகின்றான் சோமன். தென்பகுதியிலுள்ள கிராமப்புற மக்கள் கதைக்கின்ற பாணியில் சோமனுடைய பேச்சு இருந்ததைத் தெரிந்துகொண்ட பிரயாணிகளுக்கு வியப்பு.
சோமன் எண்பதாம் ஆண்டு ஜூலை வேலை நிறுத்தம் வரை, கொழும்புக்கும் மாத்தறைக்குமிடையில் பஸ் சாரதியாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன். அந்தக் காலத்தில் தென்பகுதிக் கிராமப்புற மக்களுடன் அவன் அந்நியோன் யமாகப் பழகி அவர்களுடைய பேச்சு வழக்கை பரிச்சயப் படுத்திக் கொண்டதால் அவர்களுடைய பாணியில் இப்படி அவனால் சரளமாகப் பேச முடிகின்றது என்பது இந்தப் பிரயாணிகளுக்கு எங்கே தெரியப்போகின்றது.
18O

நீர்வை பொன்னையன்
நிலைகுலைந்து தடுமாறி நிற்கின்றான் கொண்டக்டர்.
"நீங்கள் எல்லாம் புலியள்!"
திடீரெனக் கத்துகின்றான் கொண்டக்டர். இது மற்றுமொரு புதிய கண்டுபிடிப்பு என்ற நினைப்பு அவனுக்கு.
"நீதி நியாயத்தைப் பற்றிப் பேசிறவனை புலியெண்டு நீங்கள் நினைச் சால் அதுக்கு எங்களாலை ஒண்டும் செய்யேலாது."
பொட்டு வைத்திருக்கின்ற அந்த பெண் இளசு பிரத்தி யட்சமாய்க் கூறுகின்றாள். -
"நாங்கள் புலியளெண்டால் பஸ்சை பொலீசுக்குக் கொண்டு போங்கோவன்."
நிர்ப்பயமாகக் கூறுகின்றாள் அவள். பொலிஸ் என்றதும் பஸ் சாரதியின் நெஞ்சு திக்கென்றது. "என்ன நடந்தாலும் கடைசிவரையும் நான் பொலிஸ் ஸ்டேசனுக்குப் போகமாட்டன். இது நடக்காத காரியம்."
அவனுடைய நெஞ்சு படபடக்கின்றது. "முதலாளியும்கூட பொலிஸ் ஸ்டேசன் பக்கம் தலை காட்டக் கூடாதெண்டு துடக்கத்திலேயே சொன்னவர். நான் போக மாட்டன், வாறது வரட்டும்."
கொண்டக்டர் கூட பொலீஸ் என்றதும் பீதியில் பதறு கின்றான்.
"பொலீஸ் ஸ்டேசனுக்குப் போனால் எங்கடையாடு அதோ கதிதான். இப்பென்ன செய்யிறதெண்டு எங்களுக்கு ஒண்டும் தெரியாமல் கிடக்கு?"
அவன் திரிசங்கு நிலையில் நிற்கின்றான். "எங்களுக்கு நேரம் போட்டுது. சும்மா புடுங்குப் பட்டுக் கொண்டு நில்லாதையுங்கோ, பஸ்சை பொலீசுக்கு விடுங்கோ
181

Page 95
வேட்கை
அல்லது போவேண்டிய இடத்துக்கு பஸ்சை விடுங்கோ."
சில பிரயாணிகள் ஏககாலத்தில் கூறுகின்றனர். "பொலிசுக்குப் போனால் எங்களுக்கும் நல்லது. ஐஞ்சாறு மாதம் உள்ளுக்கை இருந்திட்டு வரலாம், நாங்கள் லொச் காரனுக்குக் கொட்டி அளக்கிற காசு மிச்சம், அதோடை சைவக்கடைக்காறன்ரை பழைய சாப்பாட்டுக்கு காசு தானம் பண்ணவும் தேவையில்லை."
மூன்று நான்கு தடவைகள் வெலிக்கடைச் சிறைக்குச் சென்று வந்த அவள் கூறுகின்றாள். அங்குதான் அவள் இப்படிச் சிங்களம் பேசக் கற்றுக் கொண்டாள். அத்துடன் வேறு சிலருடனும் அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சிலருடைய தொடர்பு அவளுடைய உள்ளத்தை விழிப்படையச் செய்துள்ளது.
"அற நனைஞ்சவனுக்கு குளிரென்ன கூதலென்ன? நாங்கள் அப்பாவியள். எங்களை வீட்டிலையும், றோட்டிலையும் கண்ட நிண்ட இடங்களிலையெல்லாம் வைச்சு நாயளைப்போல அள்ளிக் கொண்டு போறாங்கள். ஆண் பெண், சிறிசு பெரிசு, கிழடுகட்டை எண்ட வித்தியாசமில்லாமல்தான் பிடிக்கி றாங்கள்."
வேதனை மேலிட அவள் கூறுகின்றாள். "அது மாத்திரமே? நட்டநடுச் சாமத்திலையும் வந்து பிடிக்கிறாங்கள். பெண்பிள்ளையளை உடுத்த உடுப்போடை பிடிச்சுக் கொண்டு போறாங்கள். அதோடை இளம் பெண் பிள்ளையளை இரவு உடுப்போடை படம் கூடப் பிடிக்கிறாங்கள்."
அவளுடைய வார்த்தைகளில் வேகமும் துடுதுடுப்பும், "ஏன் தாமதிக்கிறியள்? பஸ்சை பொலீசுக்கு கொண்டு போங்கோவன்."
அவர்கள் மூவரும் ஒரே மூச்சில் கூ றுகின்றனர்.
182

நீர்வை பொன்னையன்
பஸ் ஓடிக்கொண்டிருக்கின்றது. பொலீஸ் நிலையத்தை நோக்கி அந்த பளில் வண்டி
"சுந்தரம் மாமா, நாங்கள் திரும்பிப் போவம்." அவள் கூறுகின்றாள். "என்ன மோனை? திரும்பிப் போகவா?" "ஓம் மாமா, நாங்கள் லொச்சுக்குத் திரும்பிப் போவம்."
"என்ன உங்களுக்காகத்தானே நான் லீவு எடுத்துக் கொண்டு வந்தனான். இண்டைக்கு நான் தங்காலைக்கு லொறி கொண்டு போக வேணும். அதையும் விட்டிட்டு இஞ்சை வந்தனான். நீங்கள் என்னடா வெண்டால். ஒ
"மாமா நாங்கள் ஏஜன்சிக்காரனிட்டை போகேல்லை." "என்னது?" "நாங்கள் கனடாவுக்குப் போகேல்லை, இஞ்சைதான் நாங்கள் நிக்கப்போறம்."
இளசுகள் இரண்டும் உறுதியுடன் கூறுகின்றனர். "இப்படி நடக்குமெண்டு எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அது உங்கடை வாயுக்காலை வரட்டுமென்டுதான் நான் இருந்தன்."
இரண்டு இளசுகளும் சுந்தரத்தைப்பார்த்து அர்த்த புஷ்டியாகச் சிரிக்கின்றனர். அந்தச் சிரிப்பில் பூரணத்துவ எழில்
சுந்தரத்திற்கு தலைகால் தெரியாத ஆனந்தம், அது பேரானந்தம்,
பஸ் ஓடிக் கொண்டிருக்கின்றது. பொலிஸ் நிலையத்தை நோக்கி பஸ் செல்லவில்லை.
ஏன்?
183

Page 96
வேட்கை
இந்த பஸ் சாரதியும் கொண்டக்டரும் தென்பகுதியில் நடந்த அநேக கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளுக்காகப் பொலீஸாரால் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வருபவர்கள்.
இருவரும் இராணுவத்தை விட்டு ஓடி வந்தவர்கள். இந்த விஷயம் இந்த பஸ்சின் முதலாளிக்கு மாத்திரம் தான் தெரியும்.
பஸ் முதலாளி இதைப்போல ஏழெட்டு பஸ்களின் சொந்தக் காரர்.
இந்த பஸ் முதலாளி ஓய்வு பெற்ற ஒரு பொலிஸ் உயர் அதிகாரி.
O
1998
184


Page 97


Page 98

|DIர்க்ஸிசப் பாதையில் சென்று கொண்டிருக்கிற முற்போக்கு எழுத்தாள ாகிய நாம், அடக்கி ஒடுக்கப்பட்ட க்களுக்கு ஆதரவாகவும் சுரன்டல் சூறையாடல்களுக்கு எதிராகவும் குரலெழுப்பி உத்வேகமுட்ட வேண்டும். துதான் எமது எழுத்துக்களில் அடி நாதமாக இருக்கின்றது. ஆகவே நாம் தொழிலாளர்கள், விவசாயிகள் பரந்து மக்கள் ஆகியோருடன் இணைந்து பாராட்டப் பாதையில் செல்வது
விக்க முடியாதது
நாம் சகல ஒடுக்கு முறைகளையும் அரச பயங்கரவாதத்தையும் தேசிய தியாகவும் சர்வதேசியளிதியாகவும் திக்கின்றோம்.
சகல கலை வடிவங்களினதும் தாயாக மக்கள் போராட்டம் இருக்க
வேண்டும். மக்களிடமும் ஒடுக்கு றைக்கு எதரான அவர்களது பாராட்டங்களிலும் ஒரு கலைஞன்
2க்கறை செலுத்தாவிட்டால் அவன் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் ாக்கி எறியப்படுவான்