கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உருவான வரலாறு

Page 1
யாழ்ப்பாண ப
உருவான
யாழ்ப்பாண பல்கலைக்கழ பூர்த்தியை - வெள்ளி விழாவை
விழாவை முன்னிட்டு மல வெளியிடப்பட்டதுடன், பல நி: பட்டிருந்தன. பல்கலைக் கழகத்தி பற்றியும், எதிர்காலத்தில் செய்யப் பல கட்டுரைகள் அறிஞர் பெரு பட்டுள்ளன.
எல்லாம் நல்லபடியாக நட போது வெளிவரத் தவறிய, இப்ப விடயம் ஒன்று, அதன் வளர்ச் மத்தியில் விசனித்திருப்பதை அ
அது -
இப்பல்கலைக்கழகம் எவ் மத்தியில் உருவானது என்பது பற ஏற்பாட்டாளர்கள் இதன் வரலாற்: அவர்களது அசட்டையினம் மட்( என்று கருதுவதற்கு நியாயமான
ஒரு தனிமனிதனும் சரி, நாடும் சரி, தனது தோற்றத்தை சாதாரண விடயமும்கூட, தமிழ் ச புலமைச் சமூகம் ஒன்றின் பு தற்செயலான நிகழ்வாக இருக்க
இன்னொரு பக்க உண்ை இன்றைய தலைமுறையைச் சேர்ந் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழ

சிந்தனை - 4 ஸ்கலைக்கழகம்
வரலாறு
- ச.சுப்பிரமணியம் -
கம் தனது இருபத்தைந்து வருடப் அண்மையில் கொண்டாடியது.
ர் ஒன்று (ஆங்கிலத்தில் மட்டும்) கழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் தின் கடந்தகால பன்முக வளர்ச்சி பட வேண்டிய பணிகள் குறித்தும், நமக்களால் அம்மலரில் எழுதப்
டந்தபோதிலும், இந்நிகழ்ச்சிகளின் ல்கலைக்கழகம் பற்றிய முக்கிய சியில் அக்கறையுள்ளவர்களின் வதானிக்க முடிகிறது.
வாறு பலத்த போராட்டங்களின் ற்றிய வரலாறாகும். வெள்ளிவிழா றை வெளிக்கொணரத் தவறியது, டுமின்றி, திட்டமிட்ட இருட்டடிப்பு
காரணங்கள் உண்டு.
ஒரு ஸ்தாபனமும் சரி, ஒரு அறிந்திருக்க வேண்டும் என்ற மூகத்தின் உயர்தன்மை வாய்ந்த லனுக்கு எட்டாமல் போனது, , (Լplգեւ IIT5l.
மயும் இந்த விடயத்தில் உண்டு. த தமிழ் சமூகத்துக்கு மட்டுமின்றி, கத்தில் கல்வி பயில்கின்ற அநேக

Page 2
மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் இது தோற்றம் பெற்ற வரலாறு தெரியாது என்பது கவலைக்குரியது.
ஒவ்வொரு தமிழ் மகனும் இப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றை அறிந்திருப்பது வெறும் தகவலுக்காகவோ, புலமைத்துவத்துக்காகவோ அல்ல. எமக்கு அன்றைய காலகட்டத் தில் தலைமை வழங்கிய தமிழ்த் தலைமைகள், தமது அப்புக்காத்துத் தொழிலிலும், தமது சுயநல அரசியல் தேவைகளிலும் செலுத்திய அபரிமிதமான அக்கறையை, தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் காட்டவில்லை என்பது மட்டுமின்றி, அதற்கு எதிராகவும் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்குமாகவே.
அவர்கள் தொடக்கி வைத்த தமிழ் மக்களுக்கெதிரான அழிவுப்பாதை, இன்றும் தொடரப்படும் துரதிஸ்டத்தையும் பார்க்கின்றோம். இப்பல்கலைக்கழகத்தை இயங்கவிடாதிருக்க எடுத்த முயற்சிகளும், இளஞ்சமுதாயத்தை கல்வியறிவற்றவர்களாக்கி, கொடிய யுத்தத்தில் அவர்களைப் பலிக்கடாக்களாக்குவதிலிருந்தும் இதைப் புரிந்துகொள்ள முடியும்.
எனவேதான், இப்பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒவ்வொரு மாணவனும் ஏனையவர்களும், இதன் தோற்றத்தைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது.
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு - கிழக்குப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற தமிழ் மக்களின் அவா, இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவே உருவான ஒன்று.
ஆனால் அக்கோரிக்கையை தமது அரசியல் கோசங்களாக் கியவர்கள், மூத்த தமிழ் அரசியல் கட்சியான திரு.ஜீ.ஜீ.பொன்னம் பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியும், அதிலிருந்து பிரிந்து சென்ற திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியுமே. தம் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கீரியும் பாம்புமாக எதிரெதிரான அரசியலை நடாத்தி வந்த இந்தக் கனவான்கள், இந்தப் பல்கலைக்கழக விவகாரத்திலும் ஏட்டிக்குப் போட்டியான நிலையிலேயே செயல்பட்டு வந்தனர். “தமிழ்மக்களுக்குத்
2

தேவையானது இந்துப் பல்கலைக்கழகம்” என பொன்னம்பலம் கோர, செல்வநாயகமோ “தமிழ் மக்களுக்குத் தேவை தமிழ்ப் பல்கலைக்கழகமே” என வாதிட்டார்.
இவர்கள் இருவரினதும் புத்திசாலித்தனமற்ற, தவறான, பிடிவாதமான இந்த நிலைப்பாடு, தமிழ்ப் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கும் கடமையைத் தட்டிக்கழிப்பதற்கு, அரசாங்கங்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.
இரண்டு தமிழர் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு, தமிழ்ப் பிரதேசத்தில் பல்கலைக்கழகக் கோரிக்கையை அரசாங்கத்திடம் வலியுறுத்தினால், சாதகமான ஒரு நிலைமை உருவாகும் என்றும், அவ்வாறு அமைக்கப்படும் பல்கலைக்கழகத்தில் இயல்பாகவே தமிழ் மக்களின் மொழி, கலாச்சார விடயங்களின் அபிவிருத்திக்கு களம் ஏற்படும் என்றும் (இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இருப்பது போன்று), பல தமிழ் அறிஞர்களும், முற்போக்கு அரசியல் சக்திகளும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட போதிலும், இரு தலைவர்களும் தமது நிலைப்பாட்டில் அழுங்குப்பிடியாக நின்று காரியம் கைகூடாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்தச் சூழ்நிலையில், தமிழரசுக் கட்சியினர் ஒருபடி முன்னே சென்று, தமது கற்பனைத் ‘தமிழீழ ராஜ்யத்தின் தலைநகரான திரிகோணமலையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் இறங்கினர். இதற்கென பல்வேறு குழுக்களை அமைத்து, பொதுமக்களிடமிருந்து ஆயிரக் கணக்கான ரூபா நிதி சேகரித்ததுடன், அவர்களிடமிருந்து அன்பளிப்பாகவும் மலிவு விலையிலும் பல ஏக்கர்கணக்கான காணிகளையும் பெற்றனர். ஆனால் இன்றுவரை அம்முயற்சி நிறைவேற்றப்படவில்லை. அதற்கெனப் பெற்ற நிதிக்கும் காணிகளுக்கும் என்ன நடந்ததென்பதும் மர்மமாகவே இருக்கின்றது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், 1965ம் ஆண்டு திரு. டட்லி சேனநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தது. இந்த அரசாங்கத்தில் எதிரும் புதிருமான - அதாவது தீவிர சிங்கள இனவாதிகளான கே.எம்.பி.ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க போன்றோரும், தமிழ் இனவாதக் கட்சிகளான தமிழ் காங்கிரஸ், தமிழரசு என ஏழு கட்சிகள் பங்காளிகளாக இணைந்து கொண்டனர்.
3

Page 3
இவ்வரசாங்கத்தில் தமிழ் காங்கிரஸ் சார்பாக மு.சிவசிதம்பரம் உதவி சபாநாயகராகவும், தமிழரசுக் கட்சி சார்பாக மு.திருச் செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகவும் பதவி ஏற்றனர்.
இந்த இரண்டு தமிழ் கட்சிகளின் ஆதரவு இல்லாமல், ஐ.தே.க பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கம் ஒன்றை நடாத்த முடியாத இக்கட்டான நிலையில் இருந்ததால், வரலாற்றில் முதல் தடவையாக பலமான பேரப்பேச்சின் மூலம், தமிழ்ப் பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைப்பது உட்பட, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படக் கூடிய வாய்ப்பு இந்த இரண்டு தமிழ் கட்சிகளுக்கும் இருந்தது.
தமிழர் பிரச்சினை சம்பந்தமாக, தமிழரசுக் கட்சிக்கும் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கும் இரகசிய உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அந்த டட்லி - செல்வா உடன்படிக்கை’ மூலம் மாவட்ட சபைகள் அமைக்கவும் இணக்கம் காணப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் பல்கலைக்கழக நம்பிக்கை மீண்டும் துளிர்விடத் தொடங்கியது.
சுதந்திர இலங்கைக்காக 1947ல் அமைந்த டீ.எஸ்.சேன நாயக்கவின் (டட்லியின் தந்தை) ஐ.தே.க அரசில் மந்திரிப் பதவி பெற்றிருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம், அவ்வரசு கொண்டு வந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்ற வர்களாகவும் ஆக்கிய சட்ட மூலத்தை ஆதரித்த காரணத்துக்காக, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான குழுவினர் தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த பின்னர் இரு பகுதியினரும் பரம வைரிகளாக அரசியல் நடாத்தி வந்த சூழ்நிலையில், தற்பொழுது இருபகுதியினரும் ஒரே அரசில் பங்காளிகளானபடியால், தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இணைந்து செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருந்தது.
டட்லியின் புதிய அரசாங்கம் அமைந்ததும் முதலாவது கொள்கை விளக்க உரையான சிம்மாசனப் பிரசங்க” உரையின் போது, மகாதேசாதிபதி (கவர்னர் ஜெனரல்) திரு.வில்லியம் கோபல்லவ, யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அடையாள மானியமாக 10 ரூபா ஒதுக்குவதாக அறிவித்தார்.
4.

இந்த அறிவிப்பு அரசின் மனப்பூர்வமான அறிவிப்பு அல்லவெனினும், இரண்டு தமிழ் கட்சிகளும் நினைத்திருந்தால், அதைப் பயனுள்ளதாக மாற்றியிருக்க முடியும். ஆனால் தந்திரமிக்க ஐ.தே.க அரசு எதிர்பார்த்தபடியே, தமிழ் கட்சிகள் இரண்டினதும் வழமையான நடவடிக்கைகள் அரசுக்குச் சாதகமாகவே முடிந்தது.
இரண்டு கட்சிகளும் தமிழ் மக்களின் தேவைகளைப் பற்றி எவ்வித கவலையும் படாமல், வழமைபோலவே இந்துப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம் என்ற குஸ்தியில் இறங்கி காரியத்தைக் கெடுத்துக் கொண்டன. ஐ.தே.க என்ற குரங்கிற்கு, இந்தத் தமிழ் பூனைகளுக்கு அப்பம் பங்கிட வேண்டிய தேவையே இல்லாமல் சுலபமாகக் காரியம் முடிந்துவிட்டது. இருந்தாலும் குள்ளத்தனமான ஐ.தே.க அரசு “பெருந்தன்மையுடன்”, “நீங்கள் என்னவிதமான பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஒரு தீர்மானத்துக்கு வந்தால், அந்த நிமிடமே அப்பல்கலைக்கழகத்தை நாம் வழங்குவோம்” எனக் கூறி பந்தை தமிழ்க் கட்சிகளின் பக்கம் உதைத்துத் தள்ளிவிட்டு நின்று கொண்டது.
ஆனால் தமிழரசுக் கட்சி நாலரை ஆண்டுகளும், தமிழ் காங்கிரஸ் கட்சி ஐந்து ஆண்டுகளும் டட்லி அரசுடன் இணைந்திருந்து, தமதும் தமது நெருங்கிய உறவினர்கள் சகபாடிகளினதும் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனரே தவிர, தமிழ் மக் களுக்கென எதனையும் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கவில்லை.
இறுதியில் ஐ.தே.க அரசால் மாவட்டசபைகளும், பல்கலைக் கழகக் கோரிக்கையும் குப்பைக் கூடைக்குள் துாக்கிவீசப்பட்டன. இந்த முக்கிய விடயங்களை விடுத்து, “திரிகோணமலையைப் புனித நகராக்கவில்லை” என்ற நொண்டிச்சாட்டைக் காரணமாகக் கூறி, 1970 பொதுத் தேர்தலை மனதில் கொண்டு, தேர்தலுக்குச் சில மாதங்கள் இருக்க தமிழரசுக் கட்சி அரசிலிருந்து விலகிக் கொண்டது. பின்னர் வழமைபோல தமிழ் மக்கள் மத்தியில் வந்து, “சிங்களத் தலைமைகள் எம்மை ஏமாற்றிவிட்டனர்’ என ஒப்பாரி வைத்து, அடுத்து வந்த பொதுத் தேர்தலில் கபட நாடகம் ஆடினர். ஆனால் இந்தத் தேர்தல் தந்திரம் தமிழ் மக்களிடம் எடுபடவில்லை என்பதை, தமிழரசு - காங்கிரஸ் தலைவர்களான அ.அமிர்தலிங்கம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.சிவசிதம்பரம், ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் ஆகியோர் 1970ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பெற்ற படுதோல்வி பின்னர் எடுத்துக்காட்டியது
5

Page 4
இந்த இடத்தில் தமக்குத் துரோகமிழைத்த தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சிகளுக்கு தமிழ்மக்கள் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு என்றென்றும் வரலாற்றில் நினைகூரக்கூடிய ஒன்றாகும்.
இந்தப் பாரதுாரமான தோல்விக்குக் காரணம, இந்த இரு கட்சிகளும் ஐ.தே.க. அரசுடன் இணைந்து தமிழ்மக்களுக்குத் துரோகமிழைத்தது மட்டுமல்லாமல், அன்றைய காலகட்டத்தில் வடபகுதி மக்களில் மூன்றிலொரு பகுதியினரான தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்ட நடாத்திய ஆலயப் பிரவேச, தேநீர்க்கடைப் பிரவேச, பொது இட சமத்துவப் போராட்டங்களை, இத்தமிழ் கட்சிகள் சாதி வெறியர்களுடனும் பொலிசாருடனும் இணைந்து அடக்க முற்பட்டமையுமாகும்.
நாட்டுமக்களை ஐ.தே.க அரசும் தமிழ்க் கட்சிகளும் ஏமாற்றிய குற்றத்துக்காக சிங்கள - தமிழ் - முஸ்லீம் மக்கள் அவ்விரு பகுதியினருக்கும் 70ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் பாடம் புகட்டியதுடன் நிற்காது, திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா - சமசமாஜ - கம்யூனிஸ்ட் கூட்டரசாங்கத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெறவும் வைத்தனர். இந்த அரசில் இடதுசாரிகளும் பங்கேற்றதால் தமிழ்மக்களில் ஒரு பிரிவினர் மத்தியில் பல்கலைக்கழகம் பற்றிய நம்பிக்கை மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. அதற்கான காரணம், அன்றைய சூழலில் வடபகுதியில் கம்யூனிஸ்ட் - சமசமாஜ கட்சிகளுக்குக் குறிப்பிடத்தக்க செல்வாக்கு மக்கள் மத்தியில் இருந்ததால், அவர்கள் அரசை வற்புறுத்தி இந்த விவகாரத்தைச் சாதிப்பார்கள் என மக்களில் ஒரு சாரார் நம்பினர்.
1970ம் ஆண்டு பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு, நிறைவேற்ற எண்ணிய வேலைத்திட்டங்களில் ஒன்றாக, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதும் இடம் பெற்றிருந்தது. வடபகுதியில் அன்றைய காலகட்டத்தில் செயல்பட்டு வந்த மக்கள் நலனில் அக்கறையும், மக்கள் செல்வாக்கும், தீர்க்கதரிசனமும் வாய்ந்த இடதுசாரி மற்றும் ஜனநாயகத் தலைவர்களான மு.கார்த்திகேசன், அ. வைத்திலிங்கம், எம்.சி.சுப்பிரமணியம், அ.விசுவநாதன், எஸ்.ஆர்.கனகநாயகம், அல்பிரட் துரையப்பா போன்றோரே அரசாங்கம் இப்பிரச்சினையில் முன்னுரிமையுடன் செயற்பட வைத்தவர்களில் முதன்மையானவர்கள் 6T60T6)ITb.

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதைத் துரிதப்படுத்துவதற்காகவும், அதன் செயற்பாடுகளை விசாலப்படுத்து வதற்காகவும் மக்கள் இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்த இயக்கத்தில் அப்பொழுது வடக்கில் செயற்பட்டுக் கொண்டிருந்த அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் (நா.சண்முகதாசனின் கட்சி தவிர்ந்த - அவர்கள் பல்கலைக்கழகம் அமைப்பதை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்), தமது கடந்தகால சித்தாந்த மற்றும் கொள்கை முரண்பாடுகளைக் கடந்து இணைந்து கொண்டமை, இடதுசாரிகளின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.
இந்த இயக்கத்தின் தலைவராக சேர்.பொன். இராமநாதன் அவர்களின் மருமகனும், பிரபல சட்டத்தரணியும், தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மூதவை (செனட் சபை) உறுப்பினருமான திரு.எஸ்.ஆர்.கனகநாயகம் தெரிவு செய்யப்பட்டார். அவருடன் வடக்கின் முக்கியமான இடதுசாரித் தலைவர்களான மு.கார்த்திகேசன், அ. வைத்திலிங்கம், அ.விசுவநாதன், வி.ஏ.கந்தசாமி, எம்.சி.சுப்பிரமணியம், திருமதி பத்மா சிவகுருநாதன், டாக்டர் சு.வே.சீனிவாசகம் , ஐ.ஆர்.அரியரத்தினம், ஆர்.ஆர்.தருமரத்தினம், மாதகல் வ.கந்தசாமி ஆகியோர் செயல்பட்டனர். அத்துடன் சிறீலங்கா சுதந்திரக்கட்சி வடபகுதி அமைப்பாளர்களான அல்பிரட் துரையப்பா, கு.விநோதன் ஆகியோரும் முக்கிய பங்கு வகித்தனர்.
வடபகுதி மக்களின் நீண்டகால அபிலாசையைப் பிரதிபலித்து நின்ற இந்த இயக்கத்திற்கு, தமிழ் சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த பல்வேறு பிரிவினரிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது. பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் இந்த முயற்சிக்குத் தமது மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்து, இந்த இயக்கத்தின் கூட்டங்களில் திரண்டனர்.
பெரும்தொகை ஆசிரியர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம் (சிறீலங்கா ஜாதிக குரு சங்கமய), இலங்கை ஆசிரியர் சங்கம் என்பனவும் ஏனைய தொழிற்சங்கங்களும் இம்முயற்சிக்கு உறுதுணையாக நின்றன. எழுத்தாளர்கள் - கலைஞர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினுாடாகத் தமது ஆதரவைப் பிரகடனம் செய்தனர்.

Page 5
யாழ்ப்பாணக் கல்வித்துறையின் பெரும் துாண்களாக அன்று திகழ்ந்த ஒறேற்றர் சி.சுப்பிரமணியம், எஸ்.சிவபாதசுந்தரம், என்.சபாரத்தினம், ஏ.எஸ்.கனகரத்தினம், வி.மகாலிங்கம், வித்துவான் க.ந.வேலன், எம்.பேராயிரவர் உட்பட பல கல்விமான்களும், கல்விச்சேவை அதிகாரிகளும், சமயப் பெரியார்களும் பல்கலைக்கழக இயக்கத்தின் உந்துசக்தியாக விளங்கினர்.
மறுபக்கத்தில் பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங் களின் பிரசித்திபெற்ற விரிவுரையாளர்களான பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.இந்திரபாலா, கா.சிவத்தம்பி, எஸ்.சிவஞானசுந் தரம் (நந்தி), ப.சந்திரசேகரம், எஸ்.தருமரத்தினம், கே.கைலாச நாதக் குருக்கள், எஸ்.இராமகிருஸ்ணன் மற்றும் விரிவுரையாளர்கள் எம்.ஏ.நு."மான், சித்திரலேகா மெளனகுரு போன்றவர்கள் யாழ். பல்கலைக்கழகம் அமைவதில் கரிசனையுடன் பங்காற்றினர்.
அரசாங்க தரப்பைப் பொறுத்தவரையில், பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க, கல்வி அமைச்சர் பதியுதீன் மஹற்முத், அமைச்சரும் ஹாட்லிக் கல்லுாரியின் முன்னாள் மாணவருமான கே.பி.இரத்தினாயக்க மற்றும் அமைச்சர்கள் பீட்டர் கெனமன், செ.குமாரசூரியர் ஆகியோரும், அந்த நேரத்தில் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராக இருந்த பிரேமதாச உடகம போன்றோரும், இப்பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர்.
இவ்விடயத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்ட இன்னொருவர், பிரதமர் சிறிமாவோவின் மூத்த புதல்வி சுனேத்ரா பண்டாரநாயக்கவின் கணவரும், “ஜனவேகய’ (தமிழில் “ஜனவேகம்) பத்திரிகையின் ஸ்தாபகருமான திரு.குமார் ரூபசிங்க ஆகும். அவர் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைய வேண்டியதின் அவசியத்தை அரசாங்க உயர்மட்டத்தில் தீவிரமாக வலியுறுத்தியதுடன், அதன் திறப்பு விழா ஒழுங்குகளுக்காக பல நாட்கள் முன்னதாகவே யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்து செயலாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அரசியல் பழிவாங்கும் நோக்குட்ன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த குமார் ரூபசிங்கவை, யாழ்.பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் செய்த சுவாரசியமும் நிகழ்ந்தது)

தமிழ் மக்கள் தரப்பிலிருந்தும், அரசாங்கத் தரப்பிலிருந்தும் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு இவ்வளவு ஆதரவு இருந்தபோதிலும், குறுகிய வழிகளில் இலாபம் பெறுவதைத் தமது வழமையாகக் கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை, இந்தப் பல்கலைக்கழக விடயத்திலும் புகுந்து தமது நாசகார வேலையை ஆரம்பிக்கத் தவறவில்லை. தமது கடந்தகால சுயநல போட்டி அரசியல் காரணமாகத் தம்மால் சாதிக்க முடியாமல் போன ஒரு விடயத்தை, ஏனையவர்கள் - அதுவும் இடதுசாரிகளும், தம்மால் "துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்ட அல்பிரட் துரையப்பா போன்றவர்களும் சேர்ந்து சாதித்தால், அது வரலாற்றில் பதிவாகித் தமக்கு நிரந்தர இழுக்காகிப் போய்விடும் என்ற அச்சமே, கூட்டணித் தலைவர்களின் இந்த எதிர்ப்புக்குக் காரணம்.
எனவே, தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் இக் காரியத்தை, “எமக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப் பிழையாக அமைய வேண்டும்” என்ற கணக்கில, மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். அதற்காகப் பல்கலைக்கழகம் அமைவதற்கு எதிராகப் பல சிரிப்புக்கிடமான கதைகளை மக்கள் மத்தியில் அவிழ்த்துவிட்டனர்.
அதில் ஒன்று, சேர்.பொன்.இராமநாதனால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலியிலிருந்த பரமேஸ்வரா கல்லூரியில் இப்பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டால், அப்பாடசாலை இல்லாமல் போய்விடும் என்பதாகும். (அதாவது கஞ்சிக்குப் பதிலாக பிரியாணி தந்தால், அது வேண்டாம், கஞ்சிதான் வேணும் என்பது போல!)
அத்துடன், பேராதனை பல்கலைக்கழகத்தில் இருப்பது போல ஏராளமான கட்டிடங்களைக் கட்டி ஆரம்பிக்காமல், “சும்மா வெறுமனே ஒரு பாடசாலையில் பெயர்ப்பலகையை மாட்டிவிட்டு, “இதுதான் பல்கலைக்கழகம்” என அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றப் போகின்றது' என்றும் கூறினர்.
இதற்குப் பதிலளித்த திரு.எஸ்.ஆர்.கனகநாயகமும் ஏனையோரும், திருநெல்வேலியில் தனது மனைவியின் பெயரில் பரமேஸ்வரா ஆண்கள் கல்லுாரியையும், மருதனார்மடத்தில் தனது பெயரில் இராமநாதன் பெண்கள் கல்லுாரிலையும், இராமநாதன் தம்பதிகள் அமைத்ததின் நோக்கம், எதிர்காலத்தில் அவற்றை பல்கலைக்கழகத்
9

Page 6
தரத்திலான உயர்கல்வி நிறுவனங்களாக வளர்த்தெடுக்கும் நோக்குடன்தான் என, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் களுக்கு எடுத்துக் கூறினர்.
அத்துடன், பேராதனைப் பல்கலைக்கழகம் பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் வெள்ளையர்களும், தமக்குச் சேவையாற்றக்கூடிய சிவில் உத்தியோகத்தர்களையும் பயிற்றுவிப்பதற்காக, மிகவும் சிறந்த முறையில் ஐவர் ஜெனிங்ஸ் என்ற வெள்ளையரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதெனினும், இன்று பெரும் புகழுடன் திகழும் கொழும்புப் பல்கலைக்கழகம் சுதந்திர இலங்கையில் முன்னாள் குதிரைப் பந்தயத் திடல் ஒன்றிலேயே ஆரம்பிக்கட்டு, பின்னர் படிப்படியாகப் பல கட்ட வளர்ச்சியூடாகத்தான் இன்றைய சிறந்த நிலையை அடைந்தது என்பதையும், படித்தவர்களும்’ சட்டத்தரணிகளும் நிறைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு எடுத்துக் கூறினர்.
கூட்டணியினரின் இன்னொரு பிரச்சாரம் என்னவெனில், மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற ஆழலில் பல்கலைக்கழகம் அமைந்தால், அங்கு பயிலும் மாணவ - மாணவிகளின் “சேஸ்டைகளைப் பார்த்து, இதர பாடசாலை மாணவர்களும் ‘கெட்டுப் போய்விடுவார்கள் என்றும், அயலிலுள்ள மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பிணக்குகள் மோதல்கள் உருவாகும் என்பதாகும். (அவர்கள் சொன்னது போலவே பின்னைய நாட்களில் பல்கலைக்கழக மாணவர்களையும் அயலிலுள்ள மக்களையும் மோத வைத்து, பல்கலைக்கழகத்தை சில வாரங்கள் மூடவும் வைத்துத் தமது வஞ்சனையைத் கூட்டணியினர் தீர்த்துக் கொண்டனர்)
அத்துடன் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் வழக்கத்திலுள்ள வகுப்பபுப் பகிஸ்கரிப்பு, மறியல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பனவும், மாணவர்களை அதிகம் ஆகர்சிக்கின்ற இடதுசாரி அரசியல் கருத்துக்களும் யாழ்ப்பாணத் திலும் தொற்றிவிடும் எனவும் தமிழர் கூட்டணியினர் அஞ்சினர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதற்கு எதிராக முன்வைத்த இன்னொரு
O

காரணம், அவர்களது வழமையான நாற்றமெடுக்கும் இனவாதப் பூச்சாண்டியாகும். அதாவது யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால், அங்கு சிங்கள மாணவர்களும் கற்பதற்கு வருவார்கள். அதன் மூலம் அங்கு ‘சிங்கள ஆதிக்கம்’ வந்துவிடும் என்பதாகும்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிங்கள விரோதப் பிரச்சாரமும் எடுபடவில்லை. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்களான பேராதனை, கொழும்பு, கட்டுப்பெத்த, வித்தியோதய, வித்தியலங்கார பல்கலைக்கழகங்களில் தமிழ் - சிங்கள - முஸ்லீம் மாணவர்கள் என மூவின மாணவர்களும் இனவேறுபாடின்றி இணைந்தே கல்விகற்று வந்தனர். (ஆனால் பிற்காலத்தில், விடுதலைப் புலிகளினதும் அவர்களுக்கு ஆதரவான சில பல்கலைக்கழகக் “கல்விமான்களினதும் யாழ்ப்பானிய (இனவாத) கொள்கை காரணமாக, முதலில் சிங்கள மாணவர்களும், பின்னர் முஸ்லிம் மாணவர்களும் யாழ்.பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியது.)
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களையும் தந்திரோபாயங்களையும் மேற்கொண்ட போதும், அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் நிறுவுவதில் முன்வைத்த காலைப் பின்வைக்காது உறுதியுடன் செயல்பட்டது. இந்தச் சூழ்நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு தற்காலிக ஏற்பாடாக, விஞ்ஞான பீடத்தை அமைப்பதற்கென வட்டுக்கோட்டையில் அமெரிக்க மிசனறிகளால் நிறுவப்பட்ட பழமைவாய்ந்த யாழ்ப்பாணக் கல்லுாரியின் கட்டிடங்களை அரசாங்கம் சுவீகரித்தது. (பின்னைய காலங்களில் திருநெல் வேலியில் விஞ்ஞான பீடத்துக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதும், இக்கட்டிடங்கள் யாழ்ப்பாணக் கல்லுாரி நிர்வாகத்திடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டது)
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகமும், அதனுடன் சம்பந்தப்பட்ட மதத் தலைமையும் கடுமையாக ஆட்சேபித்தன. இந்த ஆட்சேபனை தமிழ் மக்களுக்கு வியப்பை அளித்தது. ஏனெனில், அமெரிக்க மிசனரியினர் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவே யாழ்ப்பாணக் கல்லுாரியையும் இதர பாடசாலைகளையும் தமிழ்ப் பகுதிகளில் நிறுவியது
11

Page 7
உண்மையாக இருந்தால், அவற்றைவிடச் சிறப்பான, உயர்வான பல்கலைக்கழகத்தின் வரவை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றல்லவா இருக்க வேண்டும்" என, மக்கள் தர்க்கபூர்வமாக வினவியதில் வியப்பில்லை. (முன்னைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு தனியார் பாடசாலைகளை தேசியமயமாக்கிய போது, அதற்குக் கத்தோலிக்க மதபீடம் கிளப்பிய மூர்க்கத்தனமான எதிர்ப்பைக் கண்டவர்களுக்கு இது ஆச்சிரியம் அளிக்கவில்லை)
யாழ்ப்பாணக் கல்லுாரி நிர்வாகத்தின் எதிர்ப்பைக் கண்டு புத்துணர்ச்சி அடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான எஸ்ஜே.வி.செல்வநாயகம், அ.அமிர்தலிங்கம் போன்றோர், அக்கல்லுாரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களது எதிர்ப்புக்குத் துாபம் போட்டனர். இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமொன்றை நல்லுார் முத்திரைச்சந்தைக்கு அருகிலிருந்த கிறிஸ்தவத் தேவாலயத்தில் நடாத்தியதுடன், ஒழு குழுவை அமைத்து குருநாகல் சென்று அங்குள்ள சில சிங்கள கிறிஸ்தவ மதத் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்கு விரைந்து, அன்றைய அரசாங்கத்திலிருந்த மிகவும் செல்வாக்குப் பெற்ற கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அமைச்சரான பீலிக்ஸ் டயஸ் பண்டாநாயக்கவைச் சந்தித்து, அவர் மூலம் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி எவ்வித பலனையும் அளிக்கவில்லை.
எப்படியும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்தே தீரும் என்ற நிலை உருவானதும், 'ஒடுற வெள்ளத்தில் அள்ளுவது மிச்சம்’ என்ற நிலைப்பாட்டை தமிழர் கூட்டணியினர் எடுத்தனர். அதற்கொப்ப பல்கலைக்கழகத்தில் தமக்கு வாய்ப்பான ஆழலை உருவாக்குவதற்காக, அதன் சுக்கானைப் பிடிக்கும் முக்கிய பதவியான தலைவர் பதவிக்கு, நீண்டகாலம் தமிழரசுக் கட்சியினதும் பின்னர் தமிழர் கூட்டணியினதும் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களை நியமிப்பதற்கு ‘அலுவல் பார்க்கும் கைங்கரியத்திலும் இறங்கினர். ஆனால் அதுவும் அவர்களுக்குக் கைகொடுக்க வில்லை.
அரசாங்கம் பேராசிரியர் க.கைலாசபதி அவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவராக
12

நியமித்து, தன்னையும் கைலாசபதி அவர்களையும் தமிழையும் பெருமைப்படுத்திக் கொண்டது.
இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். அன்றைய கூட்டரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச உறுப்பினர்கள் சிலர், குறிப்பாக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் சொந்த ஊரான கரவெட்டியையும் வடமராட்சியையும் சேர்ந்த சிலர், திரு.சிவத்தம்பியை (பேராசிரியர் நீண்ட காலமாக மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த காரணத்தால்) யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவராக நியமிக்கும்படி, அரசாங்கத்திற்குத் தந்திகளையும் கடிதங்களையும் அனுப்பி வைத்தனர். ஆனால் அரசாங்கத் தலைமை ஏகோபித்த முறையில் பேராசிரியர் கைலாசபதி அவர்களையே முதலாவது தலைவராக நியமனம் செய்தது.
திட்டமிட்டபடி 1974 ஓகஸ்ட் 01ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை திருநெல்விேலியிலுள்ள பரமேஸ்வரா கல்லூரி வளாகத்தில் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவிருந்தார். அவரது இரண்டு நாள் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரல்களும் வகுக்கப்பட்டன. தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி உடன் யாழ்ப்பாணம் சென்று, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை நேரடியாக முன்னின்று கவனித்தார்.
நிலைமைகள் நல்லமாதிரி உருவாகி வந்தபோதிலும், தமிழர் கூட்டணியினர் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளில் மூர்க்கத்தனமாகவே இருந்தனர். அகிம்சையைப் பேசிக்கொண்டே வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டனர்.
முதலாவது வன்முறை, பேராசிரியர் கைலாசபதி யாழ்ப்பாணத்தில் வந்து தங்கியிருந்த வீட்டின்மீது நடாத்தப்பட்டது. அவர் அங்கு வந்து தங்கிய முதல்நாள் இரவு, அவர் தங்கியிருந்த வீட்டின்மீது தமிழ் இனவாத வன்முறையாளர்கள் நாட்டு வெடிகுண்டொன்றை வீசிவிட்டுச் சென்றனர். அதில் வீட்டுக்குச் சிறுசேதம் ஏற்பட்டதேயொழிய, எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
13

Page 8
பேராசிரியர் கைலாசபதி யாழ்ப்பாணம் வந்த ஆரம்ப நாட்களில், மானிப்பாய் வீதியில் வண்ணார்பண்ணைத் தபாலகத்திற்கு அருகாமையிலிருந்த அவரது மைத்துனரான கே.பொன்னம்பலம் (பின்னர் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்தவர்) வீட்டிலேயே தங்கியிருந்தார். அந்த வீட்டிலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
குண்டு வீசிய செய்தியை மறுநாள் அதிகாலையில் உள்ளுர் பத்திரிகை ஒன்றின் மூலம் அறிந்த நானும் இன்னுமொரு தோழரும், அவரைக் காண விரைந்தோம். எம்மை வழமைபோல அன்புடன் வரவேற்ற கைலாசபதி அவர்கள், சிரித்துக்கொண்டே கூறிய வார்த்தைகள் அவரது உறுதி குலையாத நிலைப்பாட்டின் வெளிப்பாடாக இருந்தது."நானும் பனங்காட்டு நரிதான் என்பதை இந்த மடையன்கள் மறந்துவிட்டான்கள் போல இருக்கிறது” என அவர் அப்பொழுது நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
திறப்பு விழாவுக்கு முதல் எல்லா ஒழுங்குகளையும் கைலாசபதி நேரடியாகவே கண்காணித்துச் செய்து முடித்தார். தினசரி காலை முதல் இரவாகும்வரை, பல்கலைக்கழகம் அமையவிருந்த பரமேஸ்வராக் கல்லுாரியின் ஒரு சிறிய அறையில் (இப்பொழுது பாதுகாப்பு பொறுப்பதிகாரியின் காரியாலயமாக இருப்பது), எவ்வித வசதிகளும் அற்ற நிலையில் இருந்துகொண்டு கடுமையாக உழைத்தார். கட்டிட வேலை, வர்ணம் பூசுதல், நீர், மின்சார விநியோகம், தளபாட அமைப்பு, துப்புரவு வேலை என எல்லா வேலைகளையும் தானே நேரடியாக முன்னின்று கவனித்துச் செய்வித்தார்
அந்த நாட்களில் ஒவ்வொரு நாள் இரவும் அவர் வீடு திரும்பும்போது, தலையில் சுண்ணாம்புத் துாசிகளுடன், ஒரு மேசன் வேலை செய்யும் தொழிலாளியைப் போலவே வீடு திரும்பினார்.
எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்ட ஆழ்நிலையில், தமிழர்களின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கப்போகும் ஒரு மங்களகரமான நிகழ்வுக்காக - அதாவது யாழ்.பல்கலைக்கழக வளாகத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக, பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தமது சிரேஸ்ட அமைச்சர்கள், அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சகிதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
14

மறுபக்கத்தில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வைக் குழப்பும் தமது எதிர்ப்பு முயற்சிகள் அனைத்திலும் தோல்விகண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர், ‘தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் போல, தமது அடுத்தகட்ட எதிர்ப்பு நடவடிக்கையைப் பெரும் ஆரவாரத்துடன் அறிவித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணத திற்கு வருகை தந்த இரண்டு நாட்களையும், குடாநாட்டுத் தமிழ்மக்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வேண்டுகோள் விடுத்தனர். அந்த இரண்டு நாட்களும் பிரதமர் சிறீமாவோ கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்றும், வர்த்தக நிலையங்கள் யாவற்றையும் பூட்ட வேண்டும் எனவும், தெருக்களில் மக்கள் நடமாடாது மயான அமைதி நிலவ வேண்டும் எனவும் அறிவித்தனர்.
பிரதமர் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்ட பின்னரே, மக்கள் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினர். தனது உணர்ச்சியூட்டும் வசனங்களால், தமிழ் மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பி விடுவதற்கு தமிழரசுக் கட்சியின் பிரச்சார ஏடான “சுதந்திரன்’ தலைகீழாக நின்று படாதபாடுபட்டது.
சிறீமாவோ பண்டாரநாயக்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நல்லுார் வீரமாகாளி அம்மன் கோவிலில் உண்ணாவிரதம் ஒன்றையும் இருநாட்களும் ஏற்பாடு செய்தனர். இந்தப் “போராட்டத்தில்’ கூட்டணியின் தலைவர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு எதிராக, கூட்டணியினர் செய்து கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கண்டு, மக்கள் வேதனையும் ஆத்திரமும் அடைந்த அதேவேளையில், இன்னொரு வதந்தியும் வேகமாகப் பரவியது.
அதாவது, உண்ணாவிரதம் இருப்பவர்களை பொலிசார் தாக்கப் போகிறார்கள் என்பதே அது. 1974ல் யாழ்ப்பாணத்தில் 5

Page 9
நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது குழப்பம் ஏற்படுத்திப் பெற்ற அரசியல் இலாபம் போல, இந்த நிகழ்விலும் அவ்வாறு ஒரு இலாபத்தை உருவாக்கிக் கொள்ள எண்ணிய கூட்டணியினர், “பொலிஸ் தாக்குதல்’ பற்றிய வதந்தியை முன்னதாகவே மக்கள் மத்தியில் பரப்பி, ஒரு பதட்டத்தை உருவாக்க முயன்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
ஆனால் மக்களைப் பொறுத்த வரையில், இவர்களது கூத்துக்களால் மிகவும் வெறுப்புற்ற நிலையில், “உண்மையிலேயே பொலிஸ் வந்து இவர்களுக்கு இரண்டு போட்டால் என்ன?’ என்று எண்ணும் நிலையிலேயே இருந்தனர்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், சில கூட்டணித் தலைவர்கள் உள்நோக்கத்துடன் திட்டமிட்டுப் பரப்பிய இந்த வதந்தியினால், கூட்டணியின் இன்னொரு பகுதியினர் உண்மையிலேயே அச்சத்திற்கு உள்ளாகினர். விபரீதங்கள் எதுவும் ஏற்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சினர். அவர்களில் முக்கியமானவர் அப்போதைய கோப்பாய் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ‘சிந்தனைச் சிற்பி திரு.சி.கதிரவேற்பிள்ளை
(5ld.
அதன் காரணமாக திரு.கதிரவேற்பிள்ளை உடனடியாகவே நடவடிக்கையில் இறங்கினார். தான் மிகவும் மதிப்பு வைத்திருந்த, அத்துடன் சகல தரப்பு மக்களினதும் மதிப்புக்கும் மரியாதைக்குரிய வராகவும் உண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாகவும் வாழ்ந்து கொண்டிருந்த தோழர் மு.கார்த்திகேசன் அவர்களை அழைத்து வரும்படி தனது காரை, கார்த்திகேசன் அப்பொழுது அதிபராக விருந்த பண்டத்தரிப்பு இந்துக் கல்லுாரிக்கு கதிரவேற்பிள்ளை அனுப்பி வைத்தார்.
எல்லோருடனும் நட்புடன் பழகினாலும், கார்த்திகேசன் தனது இலட்சியத்திலும் கொள்கைகளிலும் மிகவும் உறுதியானவர் என்பதைத் தெரிந்திருந்த கதிரவேற்பிள்ளை, எப்பொழுதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னக் கொடி பறந்து கொண்டிருந்த தனது காரில் ஏறி கார்த்திகேசன் வரமாட்டார் என்பதைத் தெரிந்து கொண்டு, அக்கொடியைக் கழற்றிச் சுருட்டி வைத்துவிட்டே தனது காரை அவரை ஏற்றிவர அனுப்பி வைத்தார்.
16

கதிரவேற்பிள்ளையின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, கார்த்திகேசன் தமிழர் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்த வீரமாகாளி அம்மன் கோவிலடிக்குச் சென்ற பின்னரே, தன்னை என்ன காரணத்துக்காக அவர் அழைத்திருந்தார் என்பதை அறிந்து கொண்டார். அதாவது உண்ணாவிரதம் இருக்கும் தம்மைப் பொலிசார் தாக்கி விரட்டாமல் இருக்க, கார்த்திகேசன் அரசாங்கத் தலைவர்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என, அங்கு வைத்து கார்த்திகேசனிடம் கதிரவேற்பிள்ளை வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
அவரது வேண்டுகோளைச் செவிமடுத்த கார்த்திகேசன், பொலிசார் அவ்வாறு முட்டாள்தனமாக நடந்து கொள்வார்கள் எனத் தாம் நினைக்கவில்லை என்றும், தற்செயலாக அவ்வாறு ஒரு அசம்பாவிதம் நடந்தால் அது முற்றிலும் அரசினதும் பொலிசாரினதும் முடிவு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், அப்படியான சந்தர்ப்பத்தில் அது சம்பந்தமாகத் தன்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை எனவும், திரு.கதிரவேற்பிள்ளைக்கு கார்த்திகேசன் விளக்கிக் கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர முயன்றார்.
ஆனால் கதிரவேற்பிள்ளை, காாத்திகேசனுக்கு பொலிஸ் தாக்குதலைத் தடுக்கக்கூடிய ஆற்றல் இல்லையென்றாலும், தமக்கு ஒரு மனத்தெம்புக்காகத் தமது உண்ணாவிரதம் முடியும்வரை கார்த்திகேசனை அவ்விடத்தில் தங்கியிருக்குமாறு தயவுடன் வேண்டிக் கொண்டார். தோழர் கார்த்திகேசன் வேறுவழியின்றி அவர்களது உண்ணாவிரதம் முடியும்வரை, அந்த இடத்துக்கு அருகிலேயே தங்கி நிற்கவேண்டி வந்துவிட்டது.
கூட்டணித் தலைவர்களில் ஒரு சாரார் பிரச்சாரம் செய்தது போலவோ அல்லது இன்னொரு சாரார் அஞ்சியது போலவோ, உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது பொலிசார் எவ்வித நடவடிக்கையையும் அன்று மேற்கொள்ளவில்லை.
ஆனால் மாலையில், உண்ணாவிரத முடிவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் திரு.அ.அமிர்தலிங்கம், ‘சங்கிலிய அரசனின் வாள்' என்று சொல்லி, ஒரு வாளை ஏந்தி வந்து அரசுக்கு எதிராகப் “போர்ப் பிரகடனம்’ செய்து தமது ‘வீரத்தைப் பறைசாற்றிக் கொண்டார்.
17

Page 10
இவை ஒருபுறமிருக்க, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பலத்த எதிர்ப்பையும் மீறி, 1974 ஆகஸ்ட் 01ம் திகதி திருநெல்வேலியில் பரமேஸ்வராக் கல்லுாரி அமைந்திருந்த இடத்தில், திட்டமிட்டவாறு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் மிகவும் கோலாகலமான முறையில், சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசாங்கத் தலைவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுத் துாதுவர்கள், கல்விமான்கள், சமய - சமூகப் பெரியார்கள் எனப் பலரும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி, சிறீமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்தில் பங்குபற்றிய இரண்டு நாள் நிகழ்ச்சிகள் அத்தனையின் போதும், அவர் சென்ற இடமெங்கும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டும் முண்டியடித்துக் கொண்டும் ஆயிரக்கணக்கில் வீதிகளின் இரு மருங்கிலும் கூடி நின்று, கைகளை அசைத்து அவருக்கத் தமது வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
குறிப்பாக சிறீமாவோ அரசின் விவசாயக் கொள்கைகளால் பெரும் பயனைப் பெற்ற வடபகுதி விவசாயிகள், திரண்டு வந்து அவருக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறான ஒரு வரவேற்பு எந்தவொரு தமிழ்த் தலைவருக்கும்கூட சமீப காலங்களில் கொடுக்கப்படவில்லை என்று சொல்லுமளவுக்கு, வடபகுதி மக்களின் வரவேற்பில் சிறீமா திளைத்தார் என்றால் மிகையாகாது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் திறந்து வைக்கப்பட்ட பின்னர், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும், குடாநாடு முழுவதிலுமிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். தமிழ் மக்களின் இந்தச் செயற்பாடானது, யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு எதிராகத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை இழைத்த, மிகப்பெரும் குற்றத்திற்கும் துரோகத்துக்கும் எதிராகத் தமிழ் மக்கள் அவர்களுக்கக் கொடுத்த தண்டனையாக வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும்.
8

பலத்த இடையூறுகளுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட பின்னரும், அதைச் சுமூகமாகச் செயற்படாமல் செய்வதற்கு தமிழர் கூட்டணியினர் பல்வேறு சீர்குலைவு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். பேராசிரியர் கைலாசபதி அவர்களின் தலைமையிலான நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதில் திரைமறைவில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக அயலிலுள்ள பொதுமக்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் அப்பகுதி தமிழர் கூட்டணி பிரமுகர்களால் பெரும் மோதல் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் சில பல்கலைக்கழக விரிவுரையாளர் களின் சமயோசித நடவடிக்கைகளால் அவையனைத்தும் முறியடிக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், 1977 பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடமேறியது. வழமையான தமிழ்த் தலைமைகள் போலவே, ஐ.தே.க ஆட்சிபீடம் ஏறியதும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையும், தனது ‘தமிழீழ கோரிக்கையையும், தீவிர தமிழ் இனவாதத்தையும் ஒருபக்கம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஜே.ஆர்.அரசுடன் தேனிலவை ஆரம்பித்தனர். பேராசிரியர் சு.வித்தியானந்தன் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக்கப்பட்டு, கூட்டணியினரின் ஆசை அபிலாசை நிறைவேற்றப்பட்டது.
ஜே.ஆர்.அரசின் மக்கள் விரோத - தமிழின விரோத நடவடிக்கைகளால் கோபமும் விரக்தியும் அடைந்திருந்த தமிழ் இளைஞர்களும் மாணவர்களும், அந்த அரசுடன் கூட்டணித் தலைமை கூடிக்குலாவுவதைக் கண்டு கோபமுற்றதுடன், படிப்படியாகத் தமிழர் கூட்டணித் தலைமை மீதும் நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். அவர்களது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான செயற்பாடுகளுக்கும், பின்னர் அவர்கள் பல்வேறு ஆயுதம் தாங்கிய இயக்கங்களை உருவாக்குவதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே அக்காலகட்டத்தில் களமாகத் திகழ்ந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மார்க்சியரான பேராசிரியர் க.கைலாசபதி முதலாவது தலைவராகப் பொறுப்பேற்றதும், அவரது கருத்தை ஒத்த ஒரு விரிவுரையாளர் குழாம் ஆரம்பத்தில் அங்கு ஆசிரியர்களாக இருந்ததும், ஆரம்ப காலத்தில் அங்கு கல்வி கற்ற மாணவர்கள் ஐ.தே.க எதிர்ப்பு,
19

Page 11
தமிழர் கூட்டணி எதிர்ப்பு அரசியலை உள்வாங்கிச் செயற்பட கால்கோள் இட்டது எனலாம். பின்னர் அது தமிழ் இனவாத சக்திகளால் திசைதிருப்பப்பட்டது வேறு வரலாறு.
பின்னர் பல்வேறு ஆயுதப்போராட்ட இயக்கங்கள் பொதுமக்களுக்கு எதிரான அராஜகங்களில் ஈடுபட்டபோதும், அதையும் யாழ்.பல்கலைக்கழக சமூகமே தட்டிக்கேட்டது. அதாவது எவ்வாறு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் ஏடு தொடக்கி வைத்ததோ, அதேபோல அந்தப் போராட்டத்தின் ஈட்டி முனையை மக்களின் மேல் குத்தி விபரீத நடவடிக்கையில் இயக்கங்கள் இறங்கிய போதும், அதே பல்கலைக்கழக சமூகமே அதற்கெதிராகப் போர்க்கொடி துாக்கியது. அதாவது சரியை ஆதரித்து பிழையை எதிர்ப்பது என்ற இரண்டு விடயங்களிலும், யாழ்.பல்கலைக்கழக சமூகம் ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று செயற்பட்டது எனலாம்.
இருப்பினும் இந்த இருவகைப் போராட்டங்களிலும் பல நல்ல மனிதர்களைப் பல்கலைக்கழக சமூகம் இழந்தது. பேராசிரியை ரஜனி திராணகம, செல்வி, தில்லைநாதன், சிவரமணி, கேதீஸ்வரன், விமலேஸ்வரன், தருமலிங்கம், ரமணி, விஜிதரன், மனோகரன், ரவிசேகர் போன்றோர் இந்தப் போரர்டங்களின் போது தமது இன்னுயிரை ஈந்த மாமனிதர்களாவர். இதில் ஒரு முக்கியமான விடயமென்னவெனில, இவர்களில் சிவரமணியையும், ரவிசேகரையும் தவிர மற்ற அனைவரும் பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.இவர்கள் அனைவரும் தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்காகவும், , தமிழ் பாசிச சக்திகளிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், யாழ்.பல்கலைக்கழகம் சிந்திய செந்நீர்த் துளிகளாகும்.
இத்தகைய பெருமைக்குரிய பாரம்பரியத்தைக் கொண்ட யாழ்.பல்கலைக்கழக சமூகம், இன்று பகிடிவதை என்ற அநாகரிகச் செயல்களிலும், ஜனநாயகச் செயற்பாடுகள், கருத்துச் சுதந்திரம் என்பனவற்றை மறுதலிக்கும் அரசியல் செயற்பாடுகளிலும, தன்னை
20

வீழ்த்தி வைத்திருப்பது கவலைக்குரிய நிலைமையாகும். இதைத் தடுத்து நிறுத்தி, பல்கலைக்கழக செயற்பாடுகளை இடையூறின்றித் தொடர, மீண்டும் களத்தில் இறங்க வேண்டியவர்கள் தமிழ்ப் பொதுமக்களும், முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழ் கல்விமான்களுமே.
இன்று தமிழ் மக்கள் ஒருபுறம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களப் பேரினவாதத்தால் தமது தேசிய ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு நிற்கின்ற நிலைமை, மறுபக்கத்தில் தமிழ்மக்களின் விடுதலைக்குப் போராடப் புறப்பட்டவர்களிடம், ஏற்கெனவே இருந்த அற்ப சொற்ப ஜனநாயக உரிமைகள் - மனித உரிமைகளையும் பறிகொடுத்து நிற்கின்ற அவலம் எனத் திக்குமுக்காடி நிற்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் ஏனோதானோ எனச் செயற்பட முடியாது. ஆரம்ப காலத்தில் அதைக் கட்டியெழுப்பிய முன்னோடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, மீண்டும் ஒரு முழுமையான - அதாவது ஆளணி, பொருள் வசதி மட்டுமின்றி, ஆன்ம பலத்திலும் திண்மை கொண்ட ஒரு நிறுவனமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செயற்பட வேண்டும் என்பதே, அதன் நலனில் அக்கறை கொண்ட அனைவரினதும் வேணவாவாகும்.
குறிப்பு:
தமிழ் ஆயுதப் போராட்டங்கள் உருவான பின்னர், அவற்றால் யாழ்.பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பும், குறிப்பாக புலிகள் தம்மை தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஆக்கிக்கொண்ட பின்னர் அப்பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகளும், தனியாக ஆராயப்பட வேண்டிய இன்னொரு காலகட்டமாகும். கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட இக்கதையை, இன்னொரு வெளியீட்டில் ஆராய்வதே பொருத்தமாகும்.
21

Page 12
பின்னிணைப்பு:
யாழ் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமிக்கும் தீயசக்திகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், சுப்பிரமணியம் தவபாலசிங்கம் 16.10.2011 அன்று யாழ் கந்தர்மடம் - பழம் வீதி சந்திக்கு அருகாமையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்டவர்கள் 'தனிநாடு தேவையா’ எனக்கேட்டு தன்னைத் தாக்கியதாகவும், சிங்களத்திலும் தமிழிலும் உரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். பழம் வீதியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (இந்த முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை உள்ளடக்கிய கட்சி) உய அலுவலகத்திற்கு சென்றுவிட்டு திரும்பும்போதே இவர் தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவரும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாகனத்தில் ஏற்றிச்சென்று யாழ் போதனா வைத்தியச்ாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள் ளார.
இத்தாக்குதல் சம்பவத்தை இலங்கையிலுள்ள சகல தமிழ்க்கட்சிகளும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. இத் தாக்குதலை இராணுவ புலனாய்வுத் துறையினரே மேற்கொண்டதாக பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பிபிசியின் சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். 2009ஆண்டு மே மாதம் புலிகள் முள்ளிவாய்க்காலில் வைத்து முழுமையாக தோற்கடிக்கப் பட்ட பின்னர், யாழ் குடாநாட்டில் அவ்வப்போது நிகழும் இவ் வாறான தாக்குதல் சம்பவங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினரே பொறுப்புக் கூறவேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் ஒருபுறுத்தில் வன்னியில் கைது செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யும் இலங்கை அரசாங்கம், தீவிர தமிழ் தேசியவாதம் மற்றும் அரச எதிர்ப்புணர்வு கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளுடன் உறவு வைப்பவர் களுக்கு இவ்வாறாக இனந்தெரியாத நபர் பாணியிலான தாக்குதல் செய்யும் அணுகுமுறையை கடைப்பிடிப்பார்களோ என்பதை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.
22

புலிகளுக்குப் பின்னான யாழ் குடாநாட்டிற்குரித்தான தீவிர தமிழ் தேசியவாதத்தை இவ்வாறாகத்தான் முளையிலே கிள்ளியெறிய வேண்டுமென யாராவது நினைத்தால் அதுவும் தவறான அணுகுமுறையே. ஏனெனில் புலிகள் முள்ளிவாய்க்காலில் வைத்து இராணுவ ரீதியாக மாத்திரமே தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தீவிர தமிழ் தேசியவாதம் என்பது குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களிடையே இன்னமும் பரந்து விருட்சமாக உள்ளது. இதனை அரசியல் ரீதியாக ஓரளவிற்கேனும் ஓரங்கட்டுவதற்கு, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய போக்குகளில் பாரிய மாற்றங்கள் நிகழவேண்டும். அரசதரப்பில் இந்த மாற்றங்கள் நிகழாதவரைக்கும் இவ்வாறான தாக்குதல்கள் தமிழ் தேசியவாதத்தை தீனிபோட்டு வளர்ப்பதாகவே அமையும்.
பொதுவாக உலகின் பல நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களின் அரசியல் விழிப்புணர்ச்சி என்பது அந்தந்த நாடுகளின் அரசியலில் பிரதான பங்கு வகித்து வருகின்றது. அண்மையில் எகிப்தில் முசாரப் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கெய்ரோ பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாக பங்கெடுத்திருந் தனர். யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு பேராசிரியர் க.கைலாசபதி அதன் தலைவராக பதவிவகித்த காலத்திலும், அதன்பின்னர் ஏறத்தாழ 1980ஆம் ஆண்டுவரையிலும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடையே தமிழ் பாராளுமன்ற தலைமைகளுக்கு எதிர்ப்பான நிலைப்பாடே பரவலாக இருந்து வந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் மாத்திரமன்றி, கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் கல்விகற்ற தமிழ் மாணவர்கள் மத்தியிலும் தமிழ் பாராளுமன்ற தலைமையை எதிர்த்த, புதிய தமிழ் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் வலுவாக இருந்தது.
புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கத்தின் கொடும்பாவியை எரிக்கும் அளவிற்கு ஒருகாலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவ சமுதாயத்தின் உணர்வுகள் இருந்தன. ஆனால் 1980ஆம் ஆண்டிற்கு பின்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் பாராளுமன்ற தலைமைகளுக்கு எதிரான எதிர்ப்பு என்பது, தமிழீழம் அமைக்கும் தமிழ் இளைஞர்களின் ஆயதப்போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவாக மாறியது.
2 3

Page 13
1983ஆம் ஆண்டு இனவன்செய போக்கிற்கு வலுச்சேர்க்க, அர யாழ் பல்கலைக்கழக மாணவ இயக்கங்களில் சேர்ந்தார்கள். யாழ் பல்கலைக்கழகம் என்பது சந்திப்புக்கூடமாக மாறியது. 198 ஆயுதப்போராட்ட இயக்கங்களைய தமது தீவிர தேசியவாதத்தின் போது, யாழ் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மாணவர்களா செல்வகுமாரன், செல்வி, தில்லை யாழ் பல்கலைக்கழக விரிவுரை புலிகள் கொன்றனர்.
தமிழ் பாராளுமன்ற தேசியவாதக் கருத்தையே பொது இந்த ஆயதப்போராட்ட இளைஞ படுத்தினர். ஆனால் ஆயதப்போ அமைத்தல் என்பதையே, தமிழ் ப ஒரு மாறுபட்ட அணுகுமுறைய கொண்டிருந்தனர். இதனை விழிப்புணர்ச்சி கொண்ட யாழ் உன்னிப்பாக கவனிக்கத்தவறி ஆக்கிரமிக்கப்பட்ட யாழ் பல்க போராட்டம்வரை கொண்டு செ இன்றைய யாழ் பல்கலைக்கழக கற்றுக்கொள்ள வேண்டும். அத் மீண்டும் தீயசக்திகள் ஆக்கி வேண்டும்.
வெளியீடு: இலங்கை கலை 18-6/1 ஹொலிா கொழும்பு 6
2

லும் தீவிர தமிழ் தேசியவாதப் சியல் விழிப்புணர்ச்சி கொண்ட ர்களில் பலர் ஆயுதப்போராட்ட பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதப்போராட்ட இயக்கங்களின் 6களின் பின்னர் புலிகள் எல்லா பும் தடைசெய்தும் கொன்றழித்தும் உச்சமான பாசிசத்தை நிறுவிய புலிகளிடம் சிறைப்பட்டது. யாழ் ன விஜிதரன், விமலேஸ்வரன், , மனோகரன் போன்றவர்களையும் யாளர் ராஜினி திரணகமவையும்
தலைமைகளின் தீவிர தமிழ் வாக 1980களின் பின்னர் தோன்றிய நர் குழுக்களும் பிரதிநிதித்துவப் ராட்டத்தின் ஊடாக தமிழீழத்தை ாராளுமன்ற தலைமைகளிலிருந்து ாக, இந்த இளைஞர் குழுக்கள் அக்காலகட்டத்தில் அரசியல் பல்கலைக்கழக மாணவர்கள் lனர். இந்தத்தவறு புலிகளால் லைக்கழகத்தை பொங்குதமிழ் ன்றது. இந்த தவறுகளிலிருந்து மாணவ சமுதாயம் பாடங்களை நுடன் யாழ் பல்கலைக்கழகத்தை ரமிக்காதவண்ணம் பாதுகாக்க
இலக்கிய மன்றம் வூட் பிளேஸ்.