கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2012.02

Page 1
culturas HERTAGE TRADiffios FASHIO VOLUME: 03 ISSUE: 02 Registered སྟོན་ཕྱིན་ན་ nt of Posts of S
INDIA Nri 100,00 T. cANADA
SR LANKA SLR 200.00 AUSTRAL.A.
SINGAPORE.SGS 14.00 SWISS...
 
 
 
 

ANS 10.00 AUS$ 10.00
CHF 10.00
USA. US$ 1000
UK.GB 600
EUROPE.EU6 7.00

Page 2

LITETUNGULUMGÜT
பண்பாட்டுக்கு பெருமை சேர்ப்பது பட்டுச்சேலைகள்.
பாரம்பரியமிக்க பட்டுச்சேலைகளுக்கு பெருமை சேர்ப்பது.
| | | *
இனிமையான நேரங்களில் இணைந்திடும். கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்
76 81-83, மெயின் வீதி, கொழும்பு 1 தொலைபேசி: 232528, 2343078 GL156rib; 2458937 E-mail: infO@ganeshtextileS.COm WWW.ganeshtextileS.Ik

Page 3
سیقی
Kingfisher A Colombo to in
You can now experience our consistent on-time enjoy the benefits of King Club, India's most re. Flyer Program, when you fly India's favourite air you can also plan your vacation with Kingfish discover breathtaking delights of India.
 

COn
nes connects dia Via Chennaj.
erformance and arding Frequent
e. What's more r Holidays and

Page 4

அட்டைப்படம் :
இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள கோனார்க் சூரியக் கோயில்
உள்ளடக்கம்
14 சாசனம் எழுதப்பட்ட
வலம்புரிச் சங்கு
27 தமிழியலின் தளத்தை விரிவாக்கிய
தனிநாயகம் அடிகளார்
) 40 பெத்தலகேம் குறவஞ்சி
49 இசைமேதையான நடிகர் எஸ். ஜி. கிட்டப்பா

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
TP + 94 11 5234338 WWW. kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai editor(CDkalaikesari.com
SUB-EDITOR Bastiampillai Johnsan editorOkalaikesari.com
MEDIA CO-ORDNATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. C. Pathmanathan Prof. S. Sivalingaraja Prof. P. Pushparatnam Prof. S. Jeyarasa Dr. Viviyan Sathyaseelan Mrs. Vasantha Waithyanathan K. Thangeswary SubaShini Pathmanathan Pathma Somakanthan Mrs. Shamila Ranjithkumar D. Manoharan
PHOTOS S. Surenthiran J. Harish Mirunaan LAYOUT S. A. Eswaran
ICT S. T. Thayalan
ADVERTISING A Praveen marketing(CDvirakesari. Ik
CIRCULATION
K. Dilip Kumar
SUBSCRIPTIONS
Arjun Jeger arjun(G)expressnewspapers.net
PRODUCTION
L. A. D. Joseph
ISSN 2012 - 6824
அன்பார்ந்த கலைச்
வணக்கம். கை
சந்திப்பதில் மகிழ்ச்சி
கலைக்கேசரியி
குதுகலமடையச் ெ
வாழ்க்கையில் உழைப்பு ஆகியன
விடுகின்றன. ( நம்பிக்கையுட்டி, மிகையில்லை. அ இருந்து வருகின்றது
Ꮜ560Ꭷ6ué560Ꭷ6lᎢ 606
நற்கருத்துக்களைய போது அவை ஆட்கொண்டு விடு:
ஆத்மாக்களை உருவாக்கப்பட்டு க வகைப்பட்டவை. கு குறவஞ்சி, கும்பே தெய்வங்கள் மீது ஆளுமையும், கற் ஆக்கத்தை முழுை இதன் வழி ஆற்றுப்படுத்தும் "பெத்தலகேம் குற6 வாசகர்களுக்குத் பயனுள்ள ஆய் படைப்புக்களையும்
நன்றி வணக்க
○。 تسهیچهای آن
ܠܵ
 
 

ஆசிரியர் பக்கம்
களிப்போடு வழிப்படுத்தும் கலைகள்
5கேசரி வாசகர்களுக்கு, லைக்கேசரியின் 26ஆம் இதழ் மூலமாக உங்களைச் சி அடைகிறோம்.
ன் வளமும் வனப்பும் வாசகர்களாகிய உங்களைக் சய்கின்றது என்பதில் எமக்கு மிகுந்த திருப்தி!
கஷ்டங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான நாளாந்த மனிதர்களை அவ்வப்போது சலிப்புக் கொள்ள வைத்து அப்போதெல்லாம் அவர்களுக்கு உற்சாகமளித்து, மீண்டும் செயற்படத் தூண்டுபவை கலைகள் என்றால் தில் நடனக் கலைக்கும் ஒரு கணிசமான பங்கு எப்போதும் து என்பதை நாம் நன்கறிவோம். வறும் பொழுதுபோக்காகவன்றி மானுடத்தை வாழ்விக்கும் பும் பொருத்தமாக இணைத்து, கலைத்துவமாய் வழங்கும் உன்னதம் பெறுகின்றன. சுவைஞர்களைப் பெரிதும் கின்றன.
பரமாத்மாவுடன் இணைக்கும் ஆன்மீக உயர் நோக்கில் ாலங்காலமாக ஆடப்பட்டுவரும் குறவஞ்சி நாடகங்கள் இவ் நற்றாலக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, திருமலை ஆண்டவர் சர் குறவஞ்சி, அர்த்தநாரீஸ்வரர் குறவஞ்சி என்றெல்லாம் குறவஞ்சி நடனங்கள் ஆடப்படுகின்றன. இலக்கிய )பனைத்திறனும் ஆன்மீக நோக்கும் குறவஞ்சி நாடக மயாக்குகின்றன. நின்று கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்ற மக்களை நோக்கில் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது வஞ்சி ஆகும். இந்த விபரத்தினை இம்மாதக் கலைக்கேசரி தருவதோடு வழமைபோன்று அறிஞர்களின் பல்வேறு பவுக் கட்டுரைகளையும் மற்றும் சுவாரஸ்யமான ) அளிக்கின்றது. வாசித்துப் பயன்பெறுங்கள்.
b.
༼ག་་་་་་་་་་་་་་་་་་ يجمع جي كهف طعم)

Page 6
யாழ்ப்பாணப் பண்
மறந்தவை
யாழ்ப்பாண நாற்பது, ஐம்பது வருடங்களு ஆடம்பரத் திருவிழாக்கள் பற்றிய நிலைப்பட்ட திருவிழா நடைமுை கிராம மக்களின் வாழ்வியே பரிமாணங்கள் உண்டு.
ஒன்று: ஆகம முறைகளைப் பூங்காவனம் என நிறைவுபெறுவது இரண்டு: ஆகம முறையின்றி அ வருடத்தில் ஒன்றோ இரண்டோ : சங்காபிஷேகம், அல்லது மணவாள
இந்த இரண்டு வகைத் திருவிழ
 
 
 
 
 
 
 

TG:
und D60O556D6Wund
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
த்துக் கோயில்களிலே திருவிழாக்கள் நக்கு முன் யாழ்ப்பாணத்துக் கோயில்களிலே நடைபெற்ற அறிமுகக் குறிப்பாக இக்கட்டுரை அமைந்துள்ளது. ஆகம றகள் பற்றி இக்கட்டுரையிலே விளக்கவில்லை. லாடு ஒன்றிப்போன கோயிற் திருவிழாக்களுக்கு இரண்டு
பேணிக் கொடியேற்றத்துடன் தொடங்கித் தேர், தீர்த்தம்,
1. புலங்காரத் திருவிழா நடத்துவது. அலங்காரத் திருவிழா என்பது தான் நடைபெறும். அதுவும் புராணப்படிப்புப்பூர்த்தி, அல்லது ாகோலத்தினம் என அமையும்.
ாக்களிலும் ஆடம்பரத் திருவிழாக்கள் நடைபெறும்.

Page 7
யாழ்ப்பாணச் சமூகத்தின் மனநிலை, சிந்தனைப் போக்கு, சமூக இயைபாக்கம் முதலானவற்றைக் கோயிற் திருவிழாக்களினூடு தரிசிக்கலாம்.
ஆகம நிலைப்பட்ட கோயிற் திருவிழாக்காரர்களுக்கும் அலங்காரத் திருவிழா நடத்தும் கோயிற்காரர்களுக்கும் இடையே வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத ஒருவித போட்டி மனப்பான்மையும் இருக்கும். இந்த போட்டி மனப்பான்மை திருவிழாக்களினூடு தெரியவரும். அக்காலத்திலே போட்டிக்குத் திருவிழா நடத்துவது சர்வ சாதாரணம் என்பதை மூத்தோர் அறிவர்.
திருவிழாக் காலங்களிலே கிராமங்கள் நகரங்களாக மாறுகின்றன என்று ராஜாஜி கூறுவர். பொதுவாக யாழ்ப்பாணத்துக் கோயில்களிலே மாசி மாதம் தொடக்கம் ஆவணிமாதம் வரையுமே பெரும்பாலும் திருவிழாக்கள் நடைபெறும். தேர் தீர்த்தத்திற்கென ஒரு சிறப்புத் தினத்தை (திதி, நட்சத்திரம்) வைத்திருப்பார்கள். உதாரணமாக மாசி மகம், பங்குனி உத்தரம், சித்திரைப்பூரணை, வைகாசி விசாகம், ஆனிஉத்தரம், ஆடி அமாவாசை முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
யாழ்ப்பாணக் குடா நாட்டிலே மழைவிட்டு வெயி லெறிக்கத் தொடங்கும் இந்த மாதங்கள் திருவிழாக் கொண்டாட்டங்களுக்குரிய காலமாகத் தீர்மானிக்கப் பட்டமையின் பின்னணியிலே புவியியல் சிந்தனையும் உள்ளது எனலாம்.
யாழ்ப்பாணத்துக் காலநிலைக்கேற்பப் பூக்கள், பழங்கள், சிறு தானியங்கள், பனைப்பிரயோசனங்கள், மரக்கறி வகைகள் முதலியன இக்காலப் பகுதியிலேயே பெருமளவுக்குக் கிடைக்கும். அத்துடன் பணப் புழக்கம் அதிகரித்துக் காணப்படும். அதனாற் திருவிழாக்கள் சிறப்புற நடைபெற வாய்ப்பாயிற்று.
யாழ்ப்பாணத் தோட்டக்காரர்கள் செய்யுந் தோட்டங்களில் ஒரு பகுதியின் பயனைத் திருவிழாவுக் கென்று ஒதுக்கி வைத்து விடுவதும் வழக்கம். குறிப்பாகப் புகையிலை, வெங்காயம் முதலியவற்றைப் பயிரிடுவோர் ஒருபாதிப் பயிரைக் கோயில் திருவிழாவுக்கென்றே தீர்மானித்துப் பராமரிப்பர். அதில் பெறும் பயன் முழுவதும் ஆடம்பரத் திருவிழாவுக்கே செலவு செய்யப்படும். சிறுபான்மையாக இந்த வழக்காறு இன்றும் நிலவுவதை வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்களிலே காணலாம்.
பெரும்பாலான கோயில்களிலே திருவிழாக்கள் குடும்ப நிலைப்பட்டதாகவோ அல்லது சமூக அடுக்கமைவுக்கு உட் பட்டதாகவோ தான் இருக்கும். கோயிலுக்கு உரிமை பூண்டவர்கள், சூழலிலே உள்ளவர்கள், அடியவர்கள் திருவி ழாக்கள் தொடங்கி விட்டால் மது, மாமிசம் நீக்கி ஆசார சீலர்களாகி விடுவார்கள். வீடு வாசல் திருத்துதல், புதிய உடைகள், புதிய ஆபரணங்கள், புதிய பாத்திரங்கள் வாங்கு தல் முதலானவை திருவிழாக்களையொட்டி நடைபெறும். திருவிழாக் காலங்களில் கிராமத்தின் வாழ்வியலில் ஒரு மாற்றம் தென்படும். அடிப்படைக் குணாம்சங்களில்

#ff O7
អ៊ែងហ្គ្រាម៉ាអៃ ܬܣܛܢ

Page 8
கலைக்கேசரி தீ O8
மாற்றம் ஏற்படாவிட்டாலும் வெளிப்படை வாழ்வு பெரும்பாலும் புனிதமாகவே இருக்கும்.
கிராமத்துக் கோயில்களின் திருவிழாவுக்காகப் பணம் சேர்ப்பதற்கு உபயக்காரர்களில் கணிப்புக்குரிய ஒருவர் ஈடுபடுவார். ஒவ்வொரு திருவிழாக் குழுவினரும் இது தனது உரிமையும் கடமையும் எனக் கருதிப் பணத்தை வழங்குவர். சேரும் பணத்தின் அளவுக்குத் தக்கதாக திருவிழாவின் சீரும் சிறப்பும் அமையும்.
கோயில் உரிமையாளர் (இவரை மணியம் என அழைப்பதே மரபு) அல்லது கோயிற் குருக்கள் அல்லது சபையினர் திருவிழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே கோயிலுக்கு வெள்ளை அடித்தல், பித்தளைப் பாத்திரங்களை மினுக்குதல், கோயிற் சுற்றுப்புறங்களைத் துப்பரவு செய்தல் முதலான பணிகளுக்கு அடியவர்களைப்
பயன்படுத்துவர். அடியவர்களும் பயபக்தியுடன் இப்பணிகளைச் செய்வர். அக்காலத்திலே திருப்பணி என வழங்கும் கோயிற் கட்டிட வேலைகள்
நடைபெறுவதில்லை (ஒரிரு கோயில்கள் இதற்கு விதிவிலக்காகவும் இருந்துள்ளன.)
அக்காலத்தில் ஆடம்பரமான திருவிழாக்களை நடத்துவதிலேதான் பெரும்பாலானவர்கள் மனநிறைவைக்
கண்டனர். 'எங்களுடைய பிள்ளையாருக்கு அலங்காரந்தான்
பிடிக்கும்’ என்று தங்களின் மனநிறைவைப் பிள்ளையாரின் மேல் ஏற்றி வழங்கும் வழக்காறும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

திருவிழாக் காலங்களில் கோயில் பலவாறாக அலங்கரிக்கப்படும். மாவிலை, தோரணம், கமுகு, வாழைப்பழக் குலை கட்டுதல் (சில ஆடம்பரத் திருவிழாக்களில் ஒரு மைல் இரண்டு மைல் தூரத்திற்கு வீதியில் இரு மருங்கும் வாழைகள் (பழக் குலைகளுடன்) கட்டப்படுவதும் உண்டு. சில கோயில்களில் தென்னை, பனை, மூங்கில் முதலியனவும் கட்டும் வழக்கமும் இருந்தது.
திருவிழாக்கள் தொடங்கினால் கோயில் முகப்பிலே பந்தல் போடுவார்கள். இந்தப் பந்தலை புலிமுகப்பந்தல் என்று அழைப்பார்கள். புகுமுகப்பந்தல் என்ற சொல் நாளடைவிலே புலிமுகப்பந்தலாக மருவியிருக்க வேண்டும். யாழ்ப்பாணக் குடா நாட்டிலே நன்மை தீமைகளுக்காகப் பல வகையான பந்தல்கள் போடுவார்கள். கைவினைத்திறன் - தொழில்நுட்பத்திறன் அமைந்த பந்தல்கள் பற்றிய ஆய்வுகளும் செய்யப்படவேண்டும்.
ஆடம்பரத் திருவிழாக்களின் பிரதான அம்சமாக ஒலி, ஒளி அமைப்புக்கள் அமையும். பெரிய ஜெனறேற்றர்கள் (Generator) பயன்படுத்தப்படும் (இதனை லைட்மெசின், அல்லது லைட் எஞ்ஜின்) என்றே அழைப்பர். இன்று மின் பிறப்பாக்கி என்று வழங்குகின்ற லைட் மெஷினைச்
சுற்றியே சிறுவர் கூட்டமொன்று புதினம் பார்த்துக் கொண்டிருக்கும். ஆலய வெளி வீதியில் நிறுத்தப் பட்டிருக்கும் ஜெனறேற்றரில் இருந்து வரும் மின்சாரத்தினால் கோயிலின் உட்புறம், வெளிப்புறம்,

Page 9
சுற்றுச் சூழல் எல்லாமே ஒளி வெள்ளத்தில் மிதக்கும். பல்வேறு விதமான மின்விளக்கு அலங்காரங்களும் அலங்கார வளைவுகளும் கிராமத்தை நகரமாக்கிக் கொண்டிருக்கும்.
திருவிழா ஒழுங்குகளை நோட்டீசாக அடித்து மக்கள் மத்தியிலே வழங்குவர். திருவிழா நிகழ்ச்சி நிரலின் இறுதியில் 'மின்சார தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பரத்தில் எம்பெருமான் எழுந்தருளி அருள்பாலிப்பார் என்ற குறிப்பும் இடம்பெற்றிருக்கும்.
பெரிய திருவிழாக்கள், வீதி அலங்காரங்கள் என்பதைத் தீர்மானிப்பவை ஒலி, ஒளி அமைப்புக்கள்தான். வீதி அலங்காரங்கள், சிகரம், முத்துச்சப்பரம், தவில், நாதஸ் வரம், சின்னமேளம், இசைக்கச்சேரி, சீனடிசிலம்படி, வாண விளையாட்டு (இதனை வாணவேடிக்கை என்பர்) முதலியவைகளே.
ஒளி அமைப்புக்குச் சமதையாக ஒலி அமைப்பும் அமையும். ஒலிபெருக்கி (Loud Speaker) ஆலயச் சூழல் முழுவதையும் ஆக்கிமித்துக் கொண்டிருக்கும். பலவற்றை மறந்தும் மறைந்தும் போகவிட்ட யாழ்ப்பாணத்திலே இன்றும் மறையாமல் இன்னும் அதிகமாக இந்த ஒலி பெருக்கி மரபு பேணப்படுகின்றது. சுற்றுச் சூழலுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் இந்த ஒலிபெருக்கி மரபு யாழ்ப்பாணத்திலே நின்று நிலைப்பதற்கும் பெருகுவதற்குமுரிய சமூக பொருளாதார அரசியற் காரணிக ளும் ஆராயப்பட வேண்டியவை. அவை தனியான
 

& கலைக்கேசரி O9
ஆய்வுக்குரியவை. திருவிழாக் காலங்களில் ஆலயச் சூழலில் இடம்பெறும் அலங்காரங்களிலே சிகரம் கட்டும் மரபு மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த மரபு எங்கிருந்து வந்தது என்பதைத் தெளிவாக அறிய முடியவில்லை. சிகரங்களின் அமைப்பினைப் பார்க்கும் பொழுது இந்தியக் கட்டிடக்கலை மரபுக்குப் புறம்பாக ஒரு பாணியைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
ஆலயத்தின் முகப்பிலே சிகரம் கட்டப்படும். பெரும் திருவிழாவெனில் மூன்று நான்கு சிகரங்களும் ஆலயச் சூழலிலே கட்டப்படும். பல வர்ண மின் விளக்குகளுடன் சிகரங்கள் கம்பீரமாகக் காட்சிதரும். இப்பொழுதும் யாழ்ப்பாணத்திலே கரவெட்டி, அளவெட்டி, மல்லாகம் முதலிய இடங்களிலே சிகரங்கள் உள்ளன. ஆனால் முன்னரைப் போல இப்பொழுது பயன்படுத்தப்படுவது இல்லை. யாழ்ப்பாணத்துக் கோயில்களில் கட்டப்படும் சிகரம் பற்றிய ஆய்வுகளைச் செய்ய வேண்டுமென்று பேராசிரியர் கா. சிவத்தம்பி அடிக்கடி கூறுவார்.
சிகரம், சப்பரம் முதலியவற்றை வாடகைக்குக் கொடுப்பது மிகவும் வருமானந்தரும் தொழிலாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. சிகர, சப்பர உரிமையாளர்களிடையேயும் போட்டி மனப்பான்மை
நிலவும். இதனாலே அவற்றின் அமைப்புகளிலே சிற்சில மாற்றங்களையும் செய்து கொள்வர். ஒருவித அழகியல் மரபு இதனூடு வெளிப்படுவதுண்டு. பூ
இத்

Page 10
ប៉ារ៉ាវ៉ៅ 10 LT +២
மாவீரன் வீரபாண் சிறையிருந்த “ஊ
மிழ்நாடு மாநிலத்திலுள்ள புதுக்கோட்டை த மாநகரிலிருந்து மதுரை செல்லும் வீதியில் சுமார் 20
கிலோமீட்டர் தொலைவில் திருமயம் உள்ளது. நீண்டநெடிய வரலாற்றைக் கொண்ட நகரமாக திருமயம் விளங்குகின்றது. இதற்குக் காரணம் இங்குள்ள மன்னர் ஆட்சிக்கால கோட்டையாகும். காவலரண்கள், மதிற் சுவர்கள், காவற்கொத்தளங்கள் ஆகியவை எவ்வாறு தமிழ் இலக்கியங்களிலும் வரலாற்றுக் குறிப்புகளிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, அவ்வாறு நியதிகளுக்கும் விதிகளுக்கும் அமைய கட்டப்பட்டுள்ள ஒரு கோட்டையை நாம் இன்றும் மெய்யாய்த் திருமயத்தில் காணக்கூடியவாறு உள்ளது.
இந்தியா ஐரோப்பியரின் ஆட்சிக்கு உட்படு முன்னர் திருமயம் கோட்டை கட்டப்பட்டுள்ளமை இதன்
 

உய கட்டபொம்மன் மையன் கோட்டை”
பழைமைக்குச் சான்றாகும். இங்கு மன்னராட்சிக் காலத்தைச் சேர்ந்த பீரங்கிகள், பீரங்கிக் குண்டுகள், போர் உடைகள், உடை வாள்கள், பூட்டுகள் மற்றும் ஆயுத உற்பத்திச்சாலை என்பவை தொல்பொருட் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்திய தொல்பொருள் துறையினரின் பராமரிப்பில் உள்ள இந்தக் கோட்டை 40 ஏக்கர் பரப்பளவில் வட்ட வடிவில் அமைந்துள்ளது. கோட்டையைச் சுற்றி ஏழு சுற்று மதில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
வெளிச் சுவரைச் சுற்றி முதலைகளும், நச்சுப் பாம்புகளும்
நிறைந்த அகழி இருந்ததற்கான தடயங்களும் காணப்படுகின்றன. தற்போது அகழிதூர்ந்து போய்விட்டது.

Page 11
இடிபாடான நிலையிலிருக்கும் சுற்றுச் சுவர்களை இந்திய தொல்பொருட் துறையினர் ஒருவித சிவப்புச் சாந்து பூசி, கற்களுக்கு இடையிலான சிதைவுகளைச் சரிப்படுத்துகின்றார்கள். இந்திய தொல்பொருட் துறையினரின் இந்த நடவடிக்கை கோட்டைக்கு புதுமெருகைத் தருகின்றது. சுற்றுப் புறங்கள் ஒரளவு தூய்மையாகப் பேணிப்பராமரிக்கப்படுகின்றன.
கோட்டையின் வெளிநுழைவாயில்கள் வடக்கு, தெற்கு, தென்கிழக்கு என மூன்று திசைகளிலும் உள்ளன. உள்கோட்டைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் சிறிய வாயில் உள்ளது.
பாதுகாப்பாக ஒளிந்திருந்து பதுங்கிப் பாய்ந்து தாக்குவதற்கு ஏதுவாக கோட்டையின் ஏழு சுற்று மதிற் சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கருத இடமுண்டு. தாக்குவதற்கு படையெடுத்து வரும் எதிரிகளை ஒளிந்திருந்து, வியூகம் வகுத்து, சுற்றிவளைத்து, எதிர்த்தாக்குல் நடத்துவதற்கு வசதி வாய்ப்பான, இயற்கை அரண்கள் நிறைந்த புவி அமைப்பை இக்கோட்டையில் அமைந்துள்ள மலைப்பகுதி கொண்டுள்ளது. உதாரணமாக குன்றின் மேற்பகுதியை பாதுகாக்க இயற்கை அரண்களாக பாறைச் சரிவுகள், பாறைப் பிளவுகள் என்பவை அமைந்துள்ளன. குன்றின் மேற்பகுதியில் இருக்கும் மிகப் பெரிய பாறையிலேயே உட்கோட்டை அமைந்துள்ளது. கோட்டைக்குள் தற்போது கட்டிடங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் அங்கிருந்த கட்டிடங்கள் அழிக்கப்பட்டதற்கான தடயங்கள் தென்படுகின்றன. இந்த கோட்டையைச் சுற்றிப் பார்க்கும்போது மன்னர் கால போர்
முறைகளின் நுட்பங்களை, வியூகங்களை, தந்திரங்களை
கண்முன் கொண்டுவரும் சூழலைக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது.
 


Page 12
iिsग
கோட்டையின் மையப் பகுதியில் காணப்படும் மலையின் உச்சியில் பெரிய பீடம் ஒன்று காணப்படுகின்றது. இது இயற்கையாக அமைந்திருந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டிருத்தல் வேண்டும். இந்தப் பீடத்தின் மேற்பகுதியில் ஆங்கிலேயர் காலத்து பீரங்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
உட்கோட்டையில் நின்று பார்க்கும் போது திருமயம் சுற்றுவட்டாரத்தின் மருத நிலம் மற்றும் பரந்த புல்வெளிகளையும் கண்டு பூரிக்கலாம். மன்னர் ஆட்சிக் கால போரியல் முறையைப் பார்க்கும்போது, பாதுகாப்பாக ஒளிந்திருந்து சுற்று வட்டாரத்தில் ஒற்றர்களின் நடமாட்டங்கள், படைபலம், படை நகர்வுகளை தெளிவாக அவதானித்து, நின்று நிதானித்து எதிர்த் தாக்குதல் தந்திரோபாயங்களை வகுப்பதற்குரியதாக இக்கோட்டை அமைந்துள்ள பிரதேசம் காணப்படுகின்றது.
உட்கோட்டையில் பீடத்துக்கு அருகில் அடிச்சுற்று மிகவும் குறுகியதாகவும் மேலே அகலமாகவும் இருக்கும் பாறையொன்று சாய்ந்து விழாமல் அப்படியே நிற்கின்றது. யாரோ இந்தப் பாறைகளைச் செய்து அங்கே கொண்டு போய் நிற்க வைத்ததுபோல இருக்கின்றது. இயற்கையின் பேராற்றலை என்னவென்று சொல்வது?
உட்கோட்டைப் பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று காணப்படுகின்றது. இப்பாதை இராமநாதபுரம் சாக்கோட்டை வரை செல்வதாக நம்பப்படுகின்றது.
ஆனாலும் சுரங்கம் தூர்ந்துபோய் அடைபட்டுள்ளது. தெற்கு, வடமேற்கு, தென்கிழக்கு ஆகிய பகுதிகளில்
நீர்ச்சுனைகள் காணப்படுகின்றன.
 

சோழர், பாண்டியர் ஆட்சிக் காலம் முதற்கொண்டே போர்ப்படைகள் தங்கும் இடமாகவும் பீரங்கிக்குத் தேவையான வெடி மருந்துகளைச் சேகரித்து வைக்கும் ஆயுத களஞ்சியமாகவும் இக்கோட்டை பயன்படுத்தப்பட்டு இருந்தது. ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதிற்கவர்ளைக் கொண்டமைந்திருந்த இக்கோட்டையில் தற்போது நான்கு சுற்று மதிற்கவர்கள் மாத்திரமே பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன.
குன்றின் அடியில் குடைவரை கோவில்கள் மூன்று காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று மலையுச்சிக்கு செல்லும் வழியில் காணப்படுகின்றது. மூலவர் லிங்கமாகக் காட்சியளிக்கிறார்.
விஷ்ணு கோயிலும் சிவன் கோயிலும் குன்றின் தெற்குப் புறத்தில் உள்ளன. இயற்கையில் அமைந்த குகையே விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குகைக் கோயில்களில் பெரியது இது. விஷ்ணு பெருமானை அனந்த சயனமூர்த்தியாக மலையோடுசேர்ந்து பாறையிலேயே வடித்திருக்கின்றார்கள். இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம்.
சிவனுக்கும் குடைவரை கோயில் உண்டு. சிவன் கோயில் சற்று காலத்தால் பிந்தியது என்கின்றனர். சிவபெருமான் சத்தியகிரீஸ்வரர் எனவும் விஷ்ணு பெருமான் சத்தியமூர்த்தி எனவும் அழைக்கப்படுகின்றனர்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை முத்தரையர் எனப்படுவோர் ஆண்டனர். இவர்கள் பாண்டியரின் கிளைக் குடியினராயினும் பல்லவர் ஆட்சிக்கு
பக்கபலமாக இருந்து பாண்டியருக்கு எதிராக போரிட்டனர்.
உட்கோட்டையில் இருக்கும் பீடம் மற்றும் நீர்ச்சுனை

Page 13
சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், சிற்றரசர்களான பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் எனப் பலரால் ஆளப்பட்டு வந்தது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டின் எல்லையாக திருமயம் விளங்கியது. 16 -17 ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையாகத் திகழ்ந்தது.
சேதுபதி மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட இப்பகுதியை பல்லவராயர்களும், பின்னர் 1636ஆம் ஆண்டு தொண்டைமான் மன்னர்களும் ஆண்டனர். திருமயம் கோட்டை இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. பின்னர் 1728இல் தனது LDTLD6öT இரகுநாதராயத் தொண்டைமானுக்கு கொடுக்கப்பட்டது. சோழ, பாண்டிய நாடுகளுக்கு இடைப்பட்ட சேதுபதி மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையாகத் திருமயம் திகழ்ந்தது.
1799இல் ஆங்கிலேயருக்கு எதிரான போரின்போது பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டப் பொம்மன் மற்றும் அவனது தம்பி ஊமைத்துரை இருவரும் தொண்டைமானால் இந்தக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டு, பின்னர் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் பட்டார்கள் ஊமைத்துரை ஆங்கிலேயரிடமிருந்து தப்பித்து மீண்டும் இந்தக் கோட்டைக்கு வந்து பாதுகாப்பாக ஒளிந்திருந்து, ஆட்களைத்திரட்டி ஆங்கிலேயர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அறிய முடிகின்றது. இதனால் இந்தக் கோட்டை ஊமையன் கோட்டை என்று
அழைக்கப்படுகின்றது
பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
 
 


Page 14
கலைக்கேசரி கீ
சாசனம் எழுதப்பட்
- கலாநிதி சி. பத்மநாத
(ଗ) ழும்பிலுள்ள தேசிய அருங் காட்சியகத்தின் BIT, ஒரு வலம்புரிச் சங்கு. அது அங்குள்ள அரும் பொருள்களிலே சிறப்பானவற்றில் ஒன்றாகும். தமிழ்ச் சாசனம் எழுதப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும்.
2008 ஆம் ஆண்டில் அருங்காட்சியகத்தைச் சீரமைப்பதற்கான முன்னேற்பாடாகக் காட்சிக்கு வைக்க வேண்டிய அரும் பொருட்கள் பற்றிய விபரங்களை மிகச் சுருக்கமாக எழுதும் பணி கலாநிதி லீலானாந்த பிரேமதிலகவிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்னார் அவற்றைப் பற்றிய விபரக் குறிப்புகளை மிகச் சுருக்கமாக எழுதினார். பின்பு அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பினை எம்மிடம் ஒப்படைத்தார். அவற்றை வாசித்த பொழுது தமிழ் எழுத்துகள் பொறித்த சங்கு ஒன்றினைப் பற்றிய குறிப்பினைக் காண நேர்ந்தது.
அச்சங்கில் எழுதப்பட்டுள்ள விடயத்தை அறியவேண்டும் என்ற ஆர்வத்தினால் லீலானந்த பிரேமதிலக அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அதனைப் பற்றி வினாவினோம். சங்கின் புரிகள் எல்லாவற்றிலும் எழுத்துகள் இருப்பதாக அவர் சொன்னார். அதனால் அந்தச் சங்கினைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. எனவே, அருங்காட்சியகத்துப் பணிப்பாளரான கலாநிதி நந்தா விக்கிரமசிங்கவினைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறித்த வலம்புரிச்
சங்கினைப் பற்றி வினாவினோம். சங்கின் புரிகள்
எல்லாவற்றிலும் எழுத்துகள் இருப்பதாக அவரும் சொன்னார். அதனைப் பார்க்க வேண்டும் என்ற எமது
 

If O ( ) L (6)6ODIsldF 3FIsle
ன் தகைசார் பேராசிரியர், வரலாற்றுத்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்
ஆவலைப் பற்றி அவரிடம் கூறினோம். அதனைப் பரிசீலனை செய்வதற்கான ஏற்பாடுகளை அவர் மனமுவந்து செய்தார். அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரான ரஞ்ஜித்ஹேவகே மிகுந்த உற்சாகத்தோடு எமக்கு ஆதரவு புரிந்தார். வலம்புரிச் சங்கில் எழுதப்பட்டுள்ள சாசனத்தை முழுமையாக வாசிக்க முடிந்தது.
சங்கிலுள்ள சாசனம்
ஐராவதம் மகாதேவன் அவர்கள் கொழும்பிலுள்ள அருங்காட்சியகத்துக்குப் போன சமயத்தில் இந்த வலம்புரிச் சங்கினை அவரிடம் காட்டினார்கள். அவராற் சாசனத்தின் சில பகுதிகளை மட்டுமே படிக்க முடிந்தது. போதிய நேரம் இல்லாமை அதற்குரிய காரணமாகலாம். அவருடைய வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு ரஞ்ஜித்ஹேவகே" வலம்புரிச் சங்கைப் பற்றிச் சிங்களத்தில் ஒரு கட்டுரை எழுதினார். மகாதேவன் படித்த சாசன வாசகம் அதில் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளது. அந்த வாசகம்
நிறைவில்லாதது. சாசனத்தின் முழுமையான வாசகத்தை
எம்மால் வாசிக்க முடிந்தது. அந்த வாசகம் மேல் வருமாறுள்ளது:

Page 15
நாறாயன சுவாமிக்கி புலந் நாடாரும் சுப்பிறமணிய நாடாரும் யிருபேரும் செய்து வைச்ச சங்குநாதம் பளனிப் பண்டாரமத்துக்கு உபயம் புலந் நாடார் சுப்பிறமணிய ந(ா)டாற் யிரு பேருக்குமாக மண்டபத்தில் சுவாமிக்கி அடசியில்லாமல் வேலை பார்த்துக் கொள்ளவும் இச்சாசனத்தில் வலம்புரிச் சங்கு சங்குநாதம் என்று சொல்லப்படுகின்றது. அதில் நாராயணசுவாமி, புலன் நாடார், சுப்பிரமணிய நாடார், பளனிப் பண்டாரம் ஆகிய நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. புலன் நாடார், சுப்பிரமணிய நாடார் ஆகிய இருவரும் அதனைச் செய்தவர்கள். அவர்கள் அதனை நாராயண சுவாமி என்பவருக்குச் செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது.
சங்குநாதம் பளனிப்பண்டாரமத்துக்கு உபயம் என்று சொல்லப்படுவதால் நான்காவது பெயரான பளனிப் பண்டாரம் என்பது மனிதர் ஒருவரையன்றிக் கோயில் ஒன்றிலே பள்ளிகொண்ட தெய்வத்தைக் குறித்தல் வேண்டும். ஆயினும் இதனைப் பற்றிய சாசனத் தொடர் தெளிவாகப் பொருள் விளங்கும் வகையில் அமையவில்லை என்பதனை இங்கு கவனித்தல் வேண்டும்.
சாசனத்திற் காணப்படும் சொல்லாட்சியும் வசன நடையுமே
அதற்குரிய காரணங்களாகும். சாசனத்தின் பொருை விளக்குவதற்கு முன்பு அதன் மொழி நடையின் அவதானிப்பது அவசியமாகின்றது. −
சாசனம் எப்பொழுது எழுதப்பட்டது என்பது பற்றி அதில் எதுவிதமான குறிப்பும் இல்லை. அரசனது பெயரோ ஏதாவது நிறுவனத்தின் பெயரோ அதிற் குறிப்பிடப்பட வில்லை. வரிவடிவங்களை அடிப்படையாகக் கொண்டே சாசனத்தின் காலத்தை ஒருவாறு அனுமானித்துக் கொள்ளலாம். எனினும் 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட சாசனங்களைப் பொறுத்தவரையில் வரிவடிவ வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு ஆவணங்களின் காலத்தை நிச்சயிப்பது இலகுவானதன்று. அக்காலத்திலே தமிழ் வரிவடிவங்களின் வளர்ச்சி ஓரளவிற்கு முழுமையாகி விடுகின்றது.
வலம்புரிச் சங்கின் புரிகளிற் சாசனம் இரண்டு வசனங்களில் எழுதப்பட்டுள்ளது. சங்கின் புரிகளின் மேல் வெண்கல வார்ப்பு காணப்படுகின்றது. அதன் மேலே கூரிய கருவியினால் வெட்டி எழுத்துகளை அமைத்துள்ளனர். இலங்கையிலே பொலன்னறுவைக் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் இடம்பெறாத சொல்வடிவங்களும் ஒலியமைதிகளும் இச்சாசனத்தில் உள்ளன. அவை பெருமளவிற்கு அசாதாரணமானவை.
இச்சாசனத்தின் மொழிநடை பேச்சு வழக்கானது இலங்கைத் தமிழின் பிரதேச வழக்கு எதனையும் அது பிரதிபலிப்பதாகத் தெரியவில்லை. இராமநாதபுரத்துப் பேச்சு வழக்கின் சாயல்கள் இதிற் காணப்படுகின்றன.
 
 
 

塞 យញញ5855ff 15
இது மொழியியல் தெரிந்தவர்களால் மேற்கொண்டு தெளிவுபடுத்தப்பட வேண்டியது. இதில் வரும் பெயர்கள் ரகர, றகர மயக்கத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். நாராயணசுவாமி, சுப்பிரமணிய நாடார் என்னும் பெயர்களை முறையே நாறாயன சுவாமி, சுப்பிறமணிய நாடாற் என்று எழுதியுள்ளனர். இரண்டாவது பெயரில் ர என வரவேண்டிய எழுத்தை இரண்டு இடங்களில் ற என்று எழுதிவிட்டனர்.
சொல்லின் முடிவிலுள்ள உகரத்தை யி என்று மாற்றிவிடும் போக்கு இங்கு காணப்படுகின்றது. சுப்பிரமணிய சுவாமிக்கு என்ற தொடரை சுப்பிறமணிய சுவாமிக்கி என்று எழுதியுள்ளனர். இலங்கைத் தமிழ்ச் சாசன வழக்கைப் பொறுத்தவரையில் இது ஒரு புறநடையாகும். ஒரு சொல்லின் இறுதி வடிவமான உகரம் அடுத்து வரும் சொல்லின் முதலெழுத்து இ ஆக அல்லது ய வாக வருமிடத்து மட்டுமே யி ஆக மாறும். யிரு பேரும் என்ற சொற்கள் சாசனத்தில் ஈரிடங்களிற் காணப்படுகின்றன.
இகரம் முதனிலையாக வரவேண்டிய இடத்தில் யிகரம் வந்தள்ளது. இராமநாதபுரப் பகுதிக்கும் இலங்கையின் வடமேற்குப் பகுதிகளுக்கும் இடையில் ஆதிகாலம் முதலாக இடையறாத தொடர்புகள் நிலவிவந்துள்ளன.

Page 16
ខ្សាវ៉ាឌ័ 16
அதனால் இரு பகுதிகளிலும் வழங்கிய பேச்சு வழக்கான தமிழ் நடையிலே பொதுத் தன்மைகள் ஏற்படுவது இயல்பானது.
புள்ளி முதலான குறியீடுகள் சாசனத்திற் காணப்படவில்லை. எனவே, அது அண்மைக் காலத்தில் எழுதப்பட்டதென்று கொள்ளவியலாது. அது 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கொள்ளத்தக்கது. பிரித்தானியரின் ஆட்சி ஏற்பட்ட பின்னர் (1796) தமிழகத்துச் செட்டியார்களும் நாடார் சமூகத்தவரும் வாணிபம் காரணமாக வந்தனர். சில்லறைச் சரக்குகள், அத்தியாவசியப் பொருட்கள் போன்றன தொடர்பான வாணிபத்தில் ஒல்லாந்தர்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினார்கள். பிரித்தானியரின் ஆட்சியில் அந்தக் கட்டுப்பாடுகள் கணிசமான அளவிலே தளர்த்தப்பட்டன. எனவே இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான வாணிப, வர்த்தக நடவடிக்கைகளில், முற்காலங்களிற் போல இப்பிராந்தியத்தவர்கள் ஈடுபட்டனர். அந்த வகையில் நாடார் சமூகத்தவர் முதன்முதலாக இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதிகளுக்கு வந்தனர். மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் மட்டக்களப்பு தேசத்தில் வாழ்ந்த சாதிப் பிரிவினருள் ஒரு வகையினராக நாடாரைக் குறிப்பிடுகின்றது. ஆயினும் கொழும்பு முதலான தென்மேற்கு கரையோரங்களுக்கு மட்டக்களப்பில் வாழ்ந்த நாடார் சென்றிருந்தனர் என்று கொள்வதற்கு ஏதுவான எந்த விதமான சான்றுகளும் இல்லை. -
சாசனம் குறிப்பிடும் பேர்கள்
முன்பு கவனித்தவாறு இச்சாசனம் நால்வரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. புலன் நாடாரும் சுப்பிரமணிய நாடாரும் சங்கினைச் செய்து கொடுத்தவர்கள். சங்கில் அமைந்திருக்கும் வெண்கல வேலைப்பாடுகளையே அவர்கள் இருவரும் செய்தனர் என்று கருதலாம். 'புலன் நாடாரும் சுப்பிறமணிய நாடாரும் யிருபேரும் செய்து வைச்ச சங்குநாதம் என்னும் தொடரால் இது தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் அதனை நாராயண சுவாமிக்குச் செய்து கொடுத்தார்கள். நாராயண சுவாமி பற்றி வேறொன்றும் சொல்லப்படவில்லை. அவனே வலம்புரிச் சங்கின் உடமைக்காரன் என்றும் அதிலுள்ள உலோக வேலைப்பாடுகளைச் செய்வித்தான் என்றும் கருதலாம்.
சங்குநாதம் என்பது ஆலயமொன்றிலே சமய வழிபாடுகள் நடைபெறும் வேளையில் ஒலிப்பதற்கென்று செய்யப்பட்டது. பழனிப் பண்டாரம் என்பது சாசனத்தில் வரும் நான்காவது பெயராகும். அதனை இருவிதமாக விளக்கலாம். அத்தொடரின் முதற் சொல்லான பளனி என்பது பழனி என்பதன் மாற்று வடிவமாகும். சாசனங்களிலும் வேறு தமிழ் ஆவணங்களிலும் ழகர, ளகர மயக்கம் வழமையானது. பழனி முருகப்பெருமானின் படை வீடுகளில் ஒன்று. சிவபெருமான் மாங்கனியைப் பிள்ளையாருக்குக் கொடுத்துவிட்டதாற் சினமடைந்த முருகன் பார்வதிபரமேஸ்வரரை விட்டு நீங்கிப் பழனிக்குச்

சென்று, அங்கு ஆண்டியான கோலத்திலே தங்கிவிட்டார் என்பது புராணக் கதை. அதனால் முருகனைப் பழனியாண்டி என்று சொல்வர். சைவரிடையிலே கடவுட் பெயரை பிள்ளைகளுக்கு இடுவது நீண்டகால வழமை. பண்டாரம் என்பது பல பொருள் குறிக்குஞ் சொல். அரசர், துறவுவேடம் தாங்கி யாசகம் பண்ணி வாழும் சந்நியாசிகள், கோயில்களிலே தொண்டுகள் புரியும் ஒருவகை சாதியார் என்போரை அச்சொல் குறிக்கும். ஆனாற் பழனிப் பண்டாரமத்துக்கு உபயமாகச் சங்குநாதம் வைக்கப்பட்டதென்று சொல்லப்படுவதால் அது முருகனது கோயிலொன்றிற்கு அல்லது சிவன் கோயிலொன்றில் உள்ள முருகன் கோட்டத்துக்குத் தானமாக வழங்கப்பட்டதென்று கருதலாம்.
சங்குநாதத்திலுள்ள சமய சின்னங்கள்
சாசனம் எழுதிய வலம்புரிச் சங்கு ஒரு தொல்பொருட் சின்னம். அது ஒரு வரலாற்றுச் சின்னமாகவும் கலைப்பொருளாகவும் விளங்குவது. வலம்புரிச் சங்கு கிடைத்தற்கரியது. அது ஒரு மங்கலப் பொருளாகக் கொள்ளப்படும். அதனால் ஆலய வழிபாட்டிலும் சடங்குகளிலும் விழாக்களிலும் அது பயன்படுத்தப்படும். மகாவிஷ்ணு, துர்க்கை போன்ற படிமங்களில் அது காணப்படும். சங்கு, சக்கரம் ஆகியவை வைணவ சமயத்தின் சின்னங்களாகக் கொள்ளப்படும்.
சாசனம் எழுதிய வலம்புரிச் சங்கில் வெண்கல வேலைப்பாடுகள் சேர்க்கப்பட்டதால் அது ஒரு கலப்புச் சின்னமாகிவிட்டது. முன்னே கூறியவாறு, அதிலுள்ள சாசனம் புரிகளின் மேலமைந்த வெண்கல வார்ப்பான படையொன்றின் மேல் அமைந்துள்ளது. சங்கின் முன்புறத்தில், ஒர் அலங்கார வடிவமாக, அன்னப் பறவையின் வால் போன்ற, உலோகக் கலவையின் வார்ப்பான உருவமொன்றை இணைத்துள்ளனர். அது இணைக்கப்பட்டுள்ள இரு பக்கங்களிலும் மிக நுட்பமான முறையில் மகரத் தலைகள் வார்க்கப்பட்டுள்ளன. சங்கின் நடுப்பாகத்தின் உலோக வார்ப்பான சைவசமய சின்னங்கள் வெண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்தின் சிற்றுருவம் நடுவில் அமைந்திருக்கின்றது. வலப்புறத்திலே, சிவலிங்கத்தை நோக்கிய கோலத்தில் நந்தியின் உருவம் அமைந்திருக்கின்றது. சிவலிங்கத்தின் பின்னாற் சற்று வளைந்த கோலத்தில் நிற்கும் மயிலின் உருவம் காணப்படுகின்றது. அது தலையினைப் பின்புறமாகத் திருப்பிய கோலத்தில் உள்ளது. சின்னங்களின் அளவுகள்
சங்குநாதத்தில் அடங்கிய உறுப்புகளும் அவற்றின் அளவுகளும் மேல்வருமாறு உள்ளன:
1. வெண்கல வார்ப்புகள் இணைந்த
வலம்புரிச்சங்கின் நீளம் - 30 செ.மீ 2. வாலின் உயரம் - 22 செ.மீ 3. மகரயாளிகளின் நீளம் - 12 செ.மீ 4. சங்கின் உயரம் - 13 செ.மீ 5. சங்கின் நீளம் - 19 செ.மீ

Page 17
6. காளையின் நீளம் 02 செ.மீ
7. காளையின் உயரம் 1.5 செ.மீ 8. லிங்கத்தின் உயரம் 02 செ.மீ 9. மயிலின் நீளம் - 06 செ.மீ 10. மயிலின் உயரம் - 3.5 செ.மீ
சைவசமய சின்னங்கள்
சைவசமய சின்னங்களான இலிங்கமும் காளையும் வலம்புரிச் சங்கில் அமைக்கப்பட்டுள்ளன. சிவாலயங்களில் மூலஸ்தானத்தை நோக்கிய வண்ணமாக அமைந்திருப்பதைப் போன்று இங்கும் காளையின் உருவம் லிங்கத்தை நோக்கிய கோலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்திற்கு மேல் ஐந்து தலை நாகபடம் தெரிகின்றது. சங்கிலே சிவசின்னங்கள் காணப்படுவதால் அவற்றை உருவாக்கியவர்களும் அவற்றைச் செய்வித்தவர்களும் சைவராயிருத்தல் வேண்டும். சைவசமயத்தைச் சார்ந்த கோயிலொன்றுக்கு இச்சங்கினைத் தானம் பண்ணினார்கள்
என்பதும் ஐயத்திற்கு இடமற்றதாகும். 'சங்கநாதம் என்பதோடு தொடர்புடையவர்கள் முருக வழிபாட்டில்
ஈடுபாடுள்ள சைவராதல் வேண்டும்,
அடிக்குறிப்புகள்
1. தீபகற்ப இந்தியா, யாழ்ப்பாணக் குடாநாடு, இலங்கையின் வடமேற்குப் பகுதி ஆகியவற்றிலே, 12 முதல் 20 பாகங்கள் வரையான ஆழத்திலே, கடலின் அடியிற் சங்குகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. பாக்குநீரிணையின் இருமருங்கிலும் உள்ள கரையோரங்களில் வாழ்ந்த பரதவர், முக்குவர் ஆகியோர் புராதன காலம் முதலாகச் சங்கு குளிப்பதில் ஈடுபட்டனர்.
இந்திய துணைக்கண்டத்திற் சங்குகள் பெருமளவிற் தேவைப்பட்டன. அவை பல தேவைகளுக்குப் பயன்பட்டன. கைவளை, மோதிரம், கழுத்து மாலை முதலிய ஆபரணங்கள் சங்கிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டன. சங்குகள் நீர் அருந்து கலன்களாகவும் கொள்கலன்களாகவும் பயன்பட்டன. மாந்திரிகம், தீய சக்திகள் ஆகியவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பலன்களை மங்கலப் பொருளான சங்கு தடுக்க வல்லதென்று நம்பினார்கள். அதனால் அவற்றை வீடுகள், மாளிகைகள், இராசதானிகள், ஆலயங்கள் ஆகியவற்றின் வாயிற்புறங்களிலே புதைத்து வைக்கும் வழக்கமுண்டு.
சங்குகளை இசைக்கருவியாகவும் பயன்படுத்துவது வழமை. சைவ, வைணவ, சமண, பெளத்த கோயில்களில் ஆராதனைக் காலங்களிற் சங்கினை ஊதும் வழக்கமுண்டு. அரசர், பிரதானிகள் ஆகியோரின் ஊர்வலங்களிலும்
போர்க்களத்தில் யுத்தம் ஆரம்பமாகுமிடத்தும் சங்கூதுவது வழமை. குருக்க்ஷேத்திரத்திலே பாரதப் போர் ஆரம்பமாகுமுன் பாண்டவர்கள்
 

A hួញត្អែ
17
சங்கூதினார்கள். மகாபாரதம் மேல் வருமாறு கூறும்:
யுதிஷ்டிர மகாராஜன் தேவதத்தம் என்னும் சங்கினையும் வீமசேனன் பெளந் திரம் எனும் சங்கினையும் ஊதினார்கள். பாஞ்சசன்யம், தேவதத்தம் என்பவற்றை முறையே கிருஷ்ணரும் அர்ச்சுனனும் ஊதினார்கள். நகுலசகாதேவர் சுகோஷம், மணிபுஷ்பகம் என்னும் சங்குகளை ஊதினார்கள். அதனால் எழுந்த பேரொலி வானம் வரை பரந்தது என்பது மகாபாரதம் சொல்லும் கதை.
ஹரப்பா நாகரிகம், ஆதி இரும்புக்காலப் பண்பாடு என்பனவற்றுக்குரிய தலங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளிலே சங்கிலமைந்த ஆபரணங்களும் சங்கினை அறுக்கும் கருவிகளும் கிடைத்துள்ளன. இந்தியாவிலே சாசனம் எழுதிய சங்குகள் பல கிடைத்துள்ளன. அவை பெரும்பாலும் தென்னிந்தியாவிற் கிடைத்தவை. அவை தொல்பொருளியல் ஆய்வுகளிற் கிடைத்துள்ளன. அவற்றிலுள்ள சாசனங்கள் பிராகிருதத்தில் அல்லது தமிழில் எழுதப்பட்டவை.
சாசனம் எழுதிய மிகப் பழைய சங்குகள் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சாலிகுண்டம் என்னும் ஊரிலே கிடைத்தன. பெளத்த சமய அழிபாடுகள் காணப்பட்ட தலமொன்றை அகழ்வு செய்த பொழுது எழுத்துகள் பொறித்த இரண்டு சங்குகளைக் கண்டெடுத்தனர். அவற்றிற் காணப்படும் சாசனங்களும் அவற்றின் தமிழ்மொழி பெயர்ப்பான வாசகங்களும் மேல்வருவனவாகும்.
1. கேஜாவலவை ச பிகgசதஐநம்ஸ
லிப்தஐக சிதியஸ ஸாலிபேடக
கோவல்லவன், பிக(ன்) ஆகிய இருவரும் ஸாலிபேடகத்துச் சேதியத்திற்கு இதனை எழுதிக் கொடுத்தார்கள்.
2. கஜஹபதி அபதிஸ பஐரிய சgடகாய
தாந ஸாலிபடக துஆஸகடகே.
அபுதிஸனின் மனையாளான சாடகா
சாலி()ேபடகத்திலுள்ளதுஸகடத்திற்குச் செய்த தானம்.
பஐகவதோ அட்டபுஜஸ் என்று எழுதிய சங்கொன்று நாகார்ஜுனகொண்டாவிலுள்ள அஷ்டபூஜ சுவாமி கோயிலின் வளாகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்வுகளின் போது கிடைத்துள்ளது.
பத்தாம் நூற்றாண்டு முதலாகவே தமிழ்ச் சாசனங்கள் எழுதிய சங்குகள் கிடைத்துள்ளன. மாகோன் என்பவனால் வழங்கப்பட்ட, தங்க வேலைப்பாடுகள் பொருந்திய சங்கு அவற்றிலொன்று. அதிலே மாகோன் குடுத்த சங்கு பொன் கெட்டியது என்று வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனைக் காட்டிலும் நீளமான, தமிழ் எழுத்துகளிற் சாசனம் எழுதிய சங்கொன்று தஞ்சாவூர் மாவட்டத்துத் திருவிடைவாசலிற் கிடைத்துள்ளது. அதில் ஸ்வஸ்தி பூரீ வேளான் துட பிடரன் (அடியா)ள் ஆதிச்சியார் மகள் உமையன்னை இட்ட சங்கு அங்காடி தாழன் என்ற வசனம் எழுதப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்துச் சொர்ணபுரீஸ்வார் கோயில் வளாகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளிலே சாசனம் பொறித்த சங்கொன்று கிடைத்துள்ளது. அது செப்புப் படிமங்கள் பலவற்றுடன் புதைக்கப்பட்டிருந்தது. அதிலுள்ள சாசனத்தின் வாசகம் மேல்வருவதாகும்:
பூரீ எகஞ்சூர் இறையாநீசுரம்
உடையார்க்கு நகருடையாந்
செய்யகோவந் இட்ட சங்கு
ந. அதியமான், சங்கு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2005, பக்.173 - I79

Page 18
យ៉ាងញញយ៉ាងៃទី 廖 18 தொல்லியல்
யாழ்ப்பாணம்
நாற்றிசைக்
ழ்ப்பாண அரச வரலாற்றில் அவ் அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வரலாற்றுத் தகவல்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். யாழ்ப்பாண 9|Jör தொடர்பாகக் கூறும் தமிழ் இலக்கியங்கள் அரசர்களுக்கு உரிய மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் மற்றும் கோட்டைகள் முதலியன தொடர்பாகக் கூறுகின்றன. ஆனால் அவற்றின் பல எச்சங்கள் அல்லது அழிபாடுகள் என்பன தற்போது இல்லை. ஆயினும் அவ் இலக்கியங்கள் யாழ்ப்பாண அரசின் நான்கு திசைகளிலும் நான்கு கோயில்கள் இருந்தன எனக் கூறுகின்றன. ஆனாலும் அந்த நாற்றிசைக் கோயில்கள் எவை என்பது தொடர்பான சில வேறுபாடுகள் உள்ளன.
கைலாயநாதர் ஆலயம் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் ஆலயங்களில் ஒன்றாக 'கைலாயநாதர் ஆலயம் காணப்படுகின்றது.
'கைலாயமாலை என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள
 

ஓர் அறிமுகம் கோயில்கள்
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
ஆலயங்களில் மிக விரிவாகக் கூறப்படும் ஆலயமாக இவ் ஆலயம் உள்ளது. கைலாயமாலை நூலில் இவ் ஆலயத்தின் அளவுப் பிரமாணம், விஸ்தீரணம், அமைப்பு, கட்டடப்பாணி என்பன தொடர்பாக விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆனாலும் அவ் இலக்கியம் கூறுகின்ற ஆலயத்திற்கும், தற்போது யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற ஆலயத்திற்கும் இடையில் பல மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் என்பன உள்ளன. யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்ட போர்த்துக்கேயர் இவ் ஆலயத்தை இடித்து, அதைத் தமது இருப்பிடங்களாகவும், வழிபாட்டு மையங்களாகவும் மாற்றியமையே இம் மாற்றத்திற்கு மிக முக்கிய காரணம் ஆகும். போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்ட பின்னர் யாழ்ப்பாணம் தொடர்பாக எழுந்த நூலிலே குவைரோஸ் தாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த கிட்டத்தட்ட 500 ஆலயங்களை இடித்து, அழித்ததுடன் அவ் ஆலயக் கற்களைக் கொண்டே தமது
கைலாசநாதர் கோயில்
N

Page 19
கோட்டைகளையும், நிர்வாக மையங்களையும், இராணுவ மையங்களையும் அமைத்ததாகக் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. ஆகவே யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்ட பின்னர், யாழ்ப்பாண அரசர்களின் ஆதிக்கத்திலே இருந்த பல வரலாற்று மையங்கள், ஆலயங்கள் என்பன அழிக்கப்பட்டமை மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் கைலாயநாதர் ஆலயமும் ஒன்று என்பதில் ஐயமில்லை.
கைலாயநாதர் ஆலயத்திலே பழைமையான சிற்பங்கள், கட்டட எச்சங்கள், கட்டட அத்திவாரங்கள் முதலியன தற்போதும் காணப்படுகின்றன. அவ் ஆலயக் கர்ப்பக்கிரகத்தின் மேலே அமைந்துள்ள விமானம் சிறப்பாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பொதுவாக இந்துக் கோயில்கள் திராவிட கலை மரபிலே அமைக்கப்படுவது வழமை ஆகும். அத்துடன் திராவிட மரபிலே சிற்பங்களும் ஒவியங்களும் தீட்டப்படுகின்றன. ஆனால் கைலாயநாதர் கோயில் விமானத்தை நோக்கும்போது, மிக அற்புதமான புதிய விடயத்தைக் காணக் கூடியதாக உள்ளது. அவ் ஆலய விமானத்திலே பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பல இந்துத் தெய்வங்களின் சிற்பங்கள், அத் தெய்வங்களுக்குச் சேவகம் செய்யும் நிலையில் அல்லது தெய்வங்களுக்குக் குறைந்த நிலையில் ஒல்லாந்தர் காலப் படை வீரர்கள், படை அதிகாரிகள், போர் வீரர்கள் ஆகியோரின் உருவங்கள்
சட்டநாதர் ஆலயத்தின் பழைய தோற்றம்
 
 

基 កែឆ្នាវ៉ាឌ័
19
என்பன அவ்வாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒல்லாந்தர் காலப் பெண்மணிகளின் தோற்ற அமைப்பிலே பல சிலைகள், சிற்பங்கள் என்பனவும் அங்கு காணப்படுகின்றமை மிகவும் அவதானத்துக்கு உரியது. ஆகவே ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியிலே வழங்கப்பட்ட மத சுதந்திரத்தின் போது முதலாவதாகக் கட்டப்பட்ட ஆலயங்களில் ஒன்றாக இக் கைலாயநாதர் ஆலயம் இருக்கலாம் என்பது இதன் மூலம் புலனாகிறது. எனவேதான் இக்கோயில் சிற்பங்களில் ஒல்லாந்தர் கால ஆடை அமைப்பு, முகபாவம், ஆபரணங்கள் முதலியவற்றின் செல்வாக்கு உள்ளன. இதனாலேயே இவ் ஆலயம் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் ஒன்று என்ற முடிவுக்கு வரமுடியும்.
சட்டநாதர் ஆலயம்
நல்லூர் இராசதானி காலத்தில் முதன்மை பெற்ற இன்னுமொரு ஆலயமாக சட்டநாதர் ஆலயம் காணப்படுகிறது. இது நல்லூருக்கு வடக்கில் அமைந்த ஓர் ஆலயமாகும். யாழ்ப்பாண அரசு கால வரலாற்றுடன் இவ் ஆலயத்திற்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை, அவ் ஆலயத்தின் தோற்றம் தொடர்பான மரபுக் கதைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். மேலும் நல்லூரில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில்
அதிகளவான சிற்பங்கள், சிலைகள் ஆகியன

Page 20
s
ນງານ (8 இடிபாடுகள்
羲
 

கண்டுபிடிக்கப்பட்ட இடமாக இச் சட்டநாதர் ஆலயம் உள்ளது. இன்றைய சட்டநாதர் ஆலயக் குளத்தில் இருந்து பிள்ளையார், வள்ளியம்மை, தெய்வயானையுடன் இணைந்திருக்கும் முருகன், கஜலட்சுமி, தக்ஷணாமூர்த்தி, சனீஸ்வரன், காவல் தெய்வமான ஐயனார் போன்ற கற்சிலைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஒல்லாந்தர் ஆட்சியின் பின்னர் இவ் விடத்தில் ஒர் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்னர், அங்கு ஒர் ஆலயம் இருந்தமைக்கு அவ்விடத்தில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட் சின்னங்கள் சான்று பகர்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன், முருகன், விநாயகர் முதலான தெய்வங்களின் சிலைகள் பல இச் சட்டநாதர் ஆலய வளவுப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். அவற்றைத் தவிர சட்டநாதர் ஆலயத்தில் காணப்படுகின்ற சில விக்கிரகங்கள், சில ஆலயப் பாத்திரங்கள் முதலியன யாழ்ப்பாண அரசு காலத்துக்கு உரியவை என ஏற்கனவே அடையாளம்
காணப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பூதராயர் கோயில்
சட்டநாதர் கோயிலுக்கு அடுத்து யாழ்ப்பாண அரசு காலத்தில் முக்கியத்துவம் பெற்ற ஆலயமாக பூதராயர் கோயில் விளங்குகின்றது. இக் கோயில் சட்டநாதர் ஆலயத்திற்கு வட மேற்கில் அமைந்துள்ளது. ஏனைய ஆலயங்களுக்கு இல்லாத பல சிறப்புக்கள் இவ் ஆலயத்திற்கு உண்டு. யாழ்ப்பாண அரசு தோன்றிய காலத்தில் இருந்து, 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியரிடம் யாழ்ப்பாண அரசு தோல்வியடையும் வரை உள்ள வரலாற்றைச் சித்தரிப்பதாக தோன்றும் பல ஒவியங்கள் இங்கு வரையப்பட்டுள்ளன. இங்குள்ள பல விக்கிரகங்கள் யாழ்ப்பாண அரசு காலத்துக்கு உரியவை எனக் கூறப்படுகின்றன.
அண்மையில் இவ் ஆலயம் இடிக்கப்பட்டபோது, பல பழைமையான சிற்பங்கள், சிலைகள் என்பன சிறிய ஒர் ஆலயத்துக்குள் வைக்கப்பட்டு உள்ளமையையும் காணக் கூடியதாக உள்ளது. மேலும் பழைமையான இவ் ஆலயத்தில் இருந்து மீட்கப்பட்ட பெருமளவான கற்கள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் முதலியன விஜய நகர காலத்துக்கு உரியவை என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் பொதுவான கருத்தாகும். மேலும் ஆலயத்திற்குரிய விளக்குகள், பாத்திரங்கள் பலவற்றில் 200 தொடக்கம் 300 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் மக்கள் தானமாக வழங்கியபோது, அதில் தங்களுடைய பெயரையும் சேர்த்துப் பொறித்துள்ளமையையும் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே தற்போது SO GİTGIT ஆலயம் பிற்காலத்துக்குரியதாக இருந்தாலும், அவ் ஆலயத்தில் உள்ள விக்கிரகங்கள் மற்றும் ஆலயப் பொருட்கள் என்பன யாழ்ப்பாண அரசு காலத்துடன் தொடர்புபட்டவையாகக் கருதப்படுகின்றன.

Page 21
அரசகேசரிப் பிள்ளையார்
யாழ்ப்பாண அரசு பற்றிய வரலாற்றில் சட்டநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில், பூதவராயர் கோயில், கைலாயநாதர் கோயில் ஆகிய நாற்றிசைக் கோயில்களோடு தொடர்புபட்ட ஆலயமாகவும், நாற்றிசைக் கோயில்களில் ஒன்றாகவும் நாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் கோயில் கூறப்படுகின்றது. நாயன்மார்கட்டு என்னும் பெயர் வந்ததற்கு நீண்ட ஐதீகமும், நம்பிக்கையும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுவது அவதானத்துக்கு உரியது. யாழ்ப்பாண அரசை முன்னிலைப்படுத்தித் தோன்றிய சரசோதிமாலை போன்ற இலக்கியங்களில் நாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் கோயிலை மையப்படுத்தி பல வரலாற்றுத் தகவல்கள் காணப்படுகின்றன. அவற்றில் இக் கோயிலின் தோற்றம் மிகத் தொன்மையானது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள நாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் ஆலயம் பிற்காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், ஆலயத்தின் பழைமையான தோற்றமும், குறிப்பாக ஆலயத்திற்கு முன்புறமாக உள்ள தீர்த்தக் கேணியும் மிகத் தொன்மையானவை என்பதற்கு உரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக 1942 ஆம் ஆண்டு ஆலய தீர்த்தக் கேணியில் இருந்து பழைமையான ஆலயக் கட்டட அழிபாடுகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றிலிருந்து கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக் கல்வெட்டு மூலம் சிங்கை ஆரியனால் இக்கேணி
புனரமைக்கப்பட்டது என்னும் செய்தி மிகத் தெளிவாகக்
 

& கலைக்கேசரி 21
கிடைக்கப்பெற்றது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலம் மிகத் தொன்மையான காலமாக இருந்தாலும், கல்வெட்டில் உள்ள எழுத்துக்களின் சாயல் அல்லது வடிவம் 16 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்டதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கல்வெட்டை ஆராய்ந்த சாசனவியலாளர்கள், வரலாற்று அறிஞர்கள் 'பண்டு தொட்டு இவ்வாலயம் சிங்கை ஆரியனோடு தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்ட காரணத்தால், பிற்காலத்தில் வாழ்ந்த ஒருவர் கேணியை புனரமைப்புச் செய்து அக்கல்வெட்டில் சிங்கை ஆரியனின் பெயரை எழுதியிருக்கலாம்’ எனக் கூறுகின்றனர். ஆயினும் யாழ்ப்பாண அரசுகால நாற்றிசைக் கோயில்களில் ஒன்றாக இக்கோயில் காணப்படுகின்றது.
இக்கோயிலுக்கு அண்மையில் சரசோதிமாலை எழுதிய அரசகேசரி வாழ்ந்தார் என்பது ஒரு நீண்ட கால ஐதீகமாகும். அவ் ஐதீகத்தை உறுதிப்படுத்தும் வகையில், கோயிலுக்கு அண்மையில் மிகப் பழைமையான கட்டடம் ஒன்று காணப்படுகின்றது.அக்கட்டட மேல் மாடியில் இருந்துதான் சரசோதிமாலை போன்ற இலக்கியங்களை அரசகேசரி உருவாக்கியதாகக் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக் கது. வரலாற்று இலக்கியங்களில் அரசகேசரிப் பிள்ளையார் கோயில், தீர்த்தக்கேணி, அரசகேசரி வாழ்ந்த வீடு மற்றும் அரசகேசரி வளவில் இருந்து கிடைக்கப்பெற்ற கட்டட அழி பாடுகள் ஆகியவற்றில் இருந்து போர்த்துக்கேயர் வருகை யின்போது இருந்த ஆலயங்களில் ஒன்றாக அரசகேசரிப் பிள் யைார் ஆலயத்தைக் கூறமுடியும்.து
தொடரும்.
தொகுப்பு: உமா பிரகாஷ்

Page 22
கலைக்கேசரி கி 22 ក្រុងប៊្រីត្រិ
தாந்து Usungsununu
தாந்தாமலை அமைவிடம்
புவியியல் பழைமையும் வரலாற்றுப் பழைமையும் மிக்க தாந்தாமலைப் பிரதேசம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் மேற்கில், மண்முனை தென் மேற்கு பட்டிப்பளைப் பிரிவில் அமைந்துள்ளது. தாந்தாமலை எனப்படும் இக் குன்றுப் பகுதி தனி ஒரு மலையல்ல. பல தொடர் குன்றுகளின் தொடர்ச்சியாகவும் மத்திய மலைநாட்டின் ஒரு பகுதியாகவும் உள்ளது. தாந்தாக் குன்றின் உச்சியில் நின்று பார்த்தால் இக்குன்றினைச் சுற்றி வர நிரம்பிக் காணப்படும் குன்றுகளையும், மலைப் பாறைகளையும் அதன் தொடர்ச்சியான அமைப்பினையும் தெளிவாக அவதானிக்க முடியும். இவ்உச்சியில் நின்று பார்க்கும் போது எதிரே பெரியதொரு வெள்ளை வெளேர் என மேலுமொரு குன்று பளிச்சென காட்சியளிப்பதைக் காணமுடியும். இதனை மக்கள் வெள்ளியங்கிரி என அழைப்பர். வெள்ளிமலை எனவும் வழங்குவர். தாந்தாமலை எனப்படும் இம்மலை உச்சியில் பிள்ளையார் கோயிலும் கீழ் பகுதிகளில் முருகன், வள்ளி, தெய்வானை கோயில்களும் அமையப் பெற்றுள்ளன.
தாந்தாமலையை சூழவுள்ள பிரதேசம்
பழைமை மிக்க தாந்தாமலையை சுற்றி பல பண்டைய
கிராமங்கள் அமைந்துள்ளன. தாந்தாமலையின்
 

| Ա ՈԻՆ ՈՒՆ մի տուլյsվոլոլմի
அடிவாரத்தில் ஒருபுறம் அம்பாறையை அண்மித்து பல கிராமங்கள் உள்ளன. அவை ராஜகல, தெம்பிச்சி, நுகலாந்த, பம்பரஸ்தலாவ, திவுளான பியன்கல, கெவுளியாமடு, மங்களகம போன்றனவாகும். இவற்றைவிட முன்புறம் கச்சர்கொடி சுவாமிமலை, மாவடி முன்மாரி, பணிக்கையடி முன்மாரி, கொறுக்காபுளி ஊற்று, நல்லதண்ணி ஒடை (மடு) புழக்குநாவி, குருந்தையடி, அடைச்சார், நெடுஞ்சேனை போன்ற பல கிராமங்கள் உள்ளன. இவற்றில் பல கிராமங் கள் பண்டு சிறப்புற்றிருந்த இடங்களாகும். இன்று இயற்கை அனர்த்தங்களால் சனத்தொகை அருகி சிதைவுற்று விட்டன. மாவடி முன்மாரி போன்ற கிராமங்கள் பண்டைய சிற்றரசுகளின் ஆட்சிப் பிரதேசங்களாகவும் வன்னிமைகளுக்கு உட்பட்டவையாகவும் இருந்துள்ளன.
தந்தாமலையை சூழவுள்ள தொன்மைக் குன்றுகள்
புவியியல் அடிப்படையில் மத்திய மலைநாட்டின் தொடர்ச்சியான இப்பிரதேசம், இங்குள்ள குன்றுகள் என்பன மிகவும் தொன்மை வாய்ந்தன. இவை மத்திய
மலைநாட்டின் பழைமையை உடையன. அதேநேரம்
பழைமையான வரலாற்றினையும் உடையன. தென் கீழ் தாழ் நிலத்தில் காணப்படும் பல குன்றுகளில் தாந்தாக் குன்றும் ஒன்றாகும். தாந்தாவின் மேற்குப் புற எல்லையான அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் விகாரகல

Page 23
(விகாரைமலை) ரஜகல(ராசக்கல) கோணக்கல, தியந்தவரகல, ஒமுனுகல போன்றன தாந்தாக் குன்றின் தொடர்ச்சியான குன்றுகளாகும். மதுறுஒயாவின் பல இணையாறுகளை சில்லிக்கொடியாறு, வாழைக்காலை egb(0/ கண்டியனாறு, நல்லதண்ணிஓடை s240)), நெடுஞ்சேனை ஆறு, சாமந்தியாறு போன்ற பல சிற்றாறுகள் இப்பிரதேசத்தை வளமூட்டுகின்றன. இதனால் இது குறிஞ்சியும், மருதமும் சேர்ந்த அழகிய பிரதேசமாகக் காட்சியளிக்கின்றது. அடர்ந்த காடும் குளம் குட்டைகளும் கொண்ட இயற்கை எழில் வாய்க்கப் பெற்றதுமான பகுதியாகவும் உள்ளது.
மேற்கூறிய ஒவ்வொரு சிற்றாறுகளும் ஒவ்வொரு குளத்தை அடைவதையும் அக்குளங்கள் இவ்வாறுகளின் பெயராலே அழைக்கப்படுவதும் பாரம்பரியமாகும். தாந்தாமலையின் அடிவாரத்திலே பெரியதொரு குளமான புழகுநாவிக்குளம் உள்ளது. மேலும் சிறிய குளங்களான தாந்தாக்குளம், அடைச்சகல் குளம், கண்டியனாறுக் குளம், கங்காணியார் குளம் என பல சிறிய குளங்களும் நீரைத் தருகின்றன. பண்டு பல சிற்றரசுகள், வன்னிமைகளின் ஆட்சிக்குட்பட்டிருந்த இப்பிரதேசம் இன்று சிதைவுற்றுக் காணப்பட்டாலும் முருகனின் பெயர் தாந்தாமலையின் புகழை இன்றும் பரப்புகிறது. 'சின்னக்கதிர்காமம்’ எனப்படும் சிறப்புப் பெயரைப் பெற்றதும் தாந்தா மலையாகும். இன்று இங்கு முருக வழிபாடு சிறப்புக்குரியது.
மேலே கூறப்பட்ட பல
கிரா ம ங் க ளு ம்
 
 

3 issous, អ៊ែអ្វី
23
தொன்மையானவை என்பதுடன் முருக வழிபாடுடனும் கதிர்காமத்துடனும் தொடர்புடையன.
தாந்தாமலையின் தொன்மை
மிகப் பழங்காலத்தில் இம் (LPD (LA? மலைப் பிரதேசத்தினதும் பெயர் கந்தகம என இருந்துள்ளது. பரந்ததொரு மலைப் பிரதேசம் மகாஒயா வரை காணப்பட்டது. அது கந்தகம எனப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. 1970ஆம் ஆண்டு இலங்கைத் தொல்பொருளியல் திணைக்கள வெளியீடான Inscriptions of Ceylon எனும் பாரிய கல்வெட்டியல் நூலிலே தொல்பொருளியல் திணைக்கள தலைவராக இருந்த டாக்டர் பரணவிதான இப் பிரதேசத்தை கந்தகம எனச் சுட்டியுள்ளார். கந்தகம என்ற சிங்களச் சொல் குறிப்பது. கந்தன் கிராமம் என்பதாகும். இன்று கிராமம் கம (Gama) வாகியும் குளங்கள் எல்லாம் வெவ' வாகியும் உள்ளதை அறிகிறோம். இந்த கந்தகம பின்னர் ரந்தகம வாகி பின்னர் சாந்தமலை எனவும் சாந்தா மலையாகவும் வழங்கப்பட்டது.? ,
1972ஆம் ஆண்டுக்குரிய நில அளவைப் படத்தில் மகாஒயாவுடன் தொடர்புடைய பரந்ததொரு மலைப் பிரதேசத்தில் கந்தகம எனக் காட்டப்பட்டுள்ளது.8 அதுவே இன்றைய தாந்தாமலைப் பிரதேசமாகும். பெரிய வெள்ளம் ஒன்று ஏற்பட்டதாகவும் அதன் • 5ΠΠGδOTL ΟΠΕΕ தாழ்ந்ததாகவும் அதனாலேயே தாந்தமலை என்பதற்கு தாந்தாமலை என்ற பெயர் ஏற்பட்டது எனவும் கூறப்படுகின்றது. சிவன் தாண்டவம் ஆடியதால் தாண்டவ
மலை எனக் கூறப்பட்டு பின்னர் தாந்தாமலை எனக்
கூறப்பட்டு வருகின்றது. தான்தோன்றீஸ்வரருடைய

Page 24
24
பொக்கிஸமலை எனவும் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
மிகப் பழங்காலத்தில் கதிர்காமம் கதிர்காமகிரி எனவும் அழைக்கப்பட்டது. மேலும் சமனாலயம் என்பது சிவனொளிபாதம் எனவும், கண்டகி என்பது காந்தாரம் எனவும் சம்மோதகிரி என்பது உகந்தகிரி எனவும் அழைக்கப்பட்டு மாற்றம் பெற்றுள்ளது போல கந்த மலையாகிய தாந்தாமலை ரந்தகலவாகி பின்னர் சாந்தமலை எனவும் தாந்தாமலை எனவும் வழங்கப்படுகிறது. மேற் கூறப்பட்ட அனைத்து மலைகளுமே பண்டைய முருக வழிபாட்டுத் தலங்களாகும். அப்பிரதேசங்கள் கதிர்காம ஷத்திரியருடைய ஆட்சியில் இருந்த பிரதேசங்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேற்கே உள்ள குகை இடிபாடுகள் தாந்தாமலையின் மேற்குப்பகுதியில் தற்போதைய மடத்தின் பின்புறம் சுமார் 100 யார் தூரத்தில் இன்னுமொரு சிறிய குன்றுப்பகுதியும், அதிலே பெரியதொரு குகை, கிணறு போன்ற பல இடிபாடுகள் காணப்படுகின்றன. இக் குகையானது தண்ணிர் வழிந்தோட அமைக்கப்பட்ட வடிவிளிம்பு (குகைப்பீலி) அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே மலையில்
அமைக்கப்பட்ட கிணறு போன்ற தண்ணிர் நிரம்பிய
பாரியகுழி ஒன்றும் இங்குள்ளது. இதனோடு தொடர்புடைய கற்படுக்கை, மேலும் பல கருங்கல் அமைப்புகள்
 

இங்குள்ளன. இங்கு சில காலம் தங்கி இருந்த முத்தையா முனிவர் என்னும் சாமியார் இதனை வாழ்வதற்கு ஏற்ற முறையில் மாற்றி அமைத்துள்ளார். இங்கிருந்து அடிப்ப குதிக்கு சென்று வருவதற்கான படிகள், வழிகள் காணப்படுகின்றன. முன்பு கூறப்பட்ட குளக்கரை இடிபாடுகளுக்கும் இதற்குமிடையில் போக்குவரத்து செய்யக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.
பிள்ளையார் முருகன் மலையின் இடிபாடுகள் இன்று பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள மலை சுமார் நூறு அடி உயரம் எனலாம். இங்கு ஏறிச்செல்ல படிக் கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இன்று செப்பனிடப்பட்டுள்ளன. அனுராதபுர கால முறையை ஒத்த சந்திரவட்டக்கல், கைப்பிடிச்சுவர் (Parapet) போன்றன இருந்துள்ளன என அறிய முடிகிறது. இன்று இவை காணப்படவில்லை. மேலும் இம்மலையின் மேல் இரு குளங்கள் கிணறுகளாக அமைந்துள்ளன. இவை வற்றாத நீரூற்றை உடையன என அறிய முடிகிறது.
மிகப் பழங்காலத்தில் இருந்து லிங்க வழிபாடு காணப்பட்டது. குளக்கோட்ட மன்னனும் ஆடகசவுந்தரி அரசியும் இந்த லிங்க வழிபாட்டை செய்தனர். இவ்விரு குழியிலிருந்து நீர் எடுத்து அந்த நீரிலே அபிசேகம் செய்தனர் என்றொரு ஐதீகம் உண்டு. பின்னரே சிலிந்தி மரத்தடியில் பிள்ளையார் வழிபாடு உருவாயிற்று என அறிய முடிகின்றது. திறந்த வெளிக்கோயிலாக வழிபாடு நிலவிய இடமாகும். போர்த்துக்கேயர் காலத்துடன் அழிவுற்று காடு அடர்ந்து போயிருந்த இடம் 1956 ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு பொலிவு பெற்றது.
தங்கவேலாயுதமும் முருக விக்கிரகமும் காடு மண்டிக் கிடந்த இப்பிரதேசம் 1956 ஆம் ஆண்டு துப்புரவாக்கப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. மக்கள் ஒன்று கூடி துப்புரவு செய்யும்போது
அதிசயம் ஒன்று நடைபெற்றுள்ளது. பெரியதம்பிப்

Page 25
போடியார் தலைமையிலான பெரிய குழுவொன்றும் இளைஞர்கள் குழு ஒன்றும் ஆயுதங்களுடனும் உணவுப் பொருட்களுடனும் மாட்டு வண்டியில் ஏறி மாவடி முன்மாரிக் கிராமத்தினூடாக சென்று, கொறுக்காப் புளியூற்றினை அடைந்து, சமைத்து உண்ட பின் மரம் ஒன்றின் கீழ் அயர்ந்து தூங்கினார்கள். பெரியதம்பிப் போடியாரின் கனவில் முருகன் தோன்றி, மலை அடிவாரத்தில் இருக்கிறேன் எனப் பணித்ததாக அறிய முடிகிறது.
1956 ஆம் ஆண்டு வைகாசி விசாகத்தில் மலையடிவாரம் வரையும் காடு வெட்டி வெளியாக்கினர். மலை அடிவாரத்தில் உள்ள பெரிய காட்டை வெட்ட எத்தனித்த போது யாவரையும் அதிர வைக்கும் பெரும் ஒலி எழுந்தது. பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் வெட்டி முடித்தனர்.
இன்று முருகன் ஆலயம் இருக்கும் அடர்ந்த காட்டினை வெட்டும்போது ஒரு மேடையினைச் சாதுக்கள் கண்டனர். நில மட்டத்திலிருந்து ஏழு அடி உயரம் கொண்ட கருங்கல் மேடையாக இது இருந்தது. அதில் ஆறு அங்குல உயரமுடைய தங்க வேல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதே நேரம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய கற்பாறைகள், பல கற்தூண்கள் மண்ணில் புதையுண்டு காணப்பட்டன. மண்ணால் மூடப்பட்ட நிலையில் முருக விக்கிரகம் ஒன்றும் காணப்பட்டது. புதையுண்டு கிடந்த கற் தூண்களையும் பாறைகளையும் மேடையோரமாக அமைத்து கம்புத் தடிகளைக் கொண்டு ஒலையினால் கோயிலையும் கொத்துப் பந்தலையும் அமைத்தனர். அக் கோயிலுக்குள்ளே தங்க வேலாயுதம், முருக விக்கிரகம் என்பவற்றை வைத்து வழிபட்டனர். அந்த செய்தி
பரவியதும் மக்கள் வரத் தொடங்கினர். கதிர்காமத் தீர்த்தத்தன்று இங்கும் பூசையும் தீர்த்தமும் நடந்தது.
 

& கலைக்கேசரி 25
தாந்தாமலையும் மன்னர்களின் வரலாறுகளும் முன்பு குறிப்பிட்ட இடிபாடுகள், கற்தூண்கள், வாசஸ்தலம், விக்கிரகங்கள், வேலாயுதம், கற்படுக்கைகள் எல்லாம் 1956 ஆம் ஆண்டு காடு வெட்டி துப்புரவாக்கப் படுவதற்கு முன்னரே காலங்காலமாக புதையுண்டு அழிவுற்றுக் கிடந்தவை என்பது தெளிவாகின்றது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களில் கருங்கல்லினால் கட்டிடம் அமைக்கும் வழக்கம் இருந்தது. எனவே கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களில் இப்பகுதியை ஆண்டவர்களினால் இவ் வாசஸ்தலம், வழிபாட்டுத்தலம் ஆகியன அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது
உறுதியாகிறது.
கதிர்காம ஷத்திரியர்களும் தாந்தாமலையும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களில் (கி.மு. 200 தொடக்கம் கி.பி. 400 வரை) பல தலைமுறையினராக கதிர்காமம் தொடக்கம் வெருகல் வரை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னர் பரம்பரையினர் கதிர்காம ஷத்திரியர் வம்சமாகும். இவர்கள் பாண்டியத் தொடர்புடைய தமிழ்ச் சிற்றரசர்கள். கதிர்காமம், வோவத்தகல, கொட்டவேதனமுல்ல, சங்கமான்கண்டி, குருலான்கந்த போன்ற இடத்து பிராமிக் கல்வெட்டுகள் இவர்களது ஆட்சி பற்றிக் கூறும்.9 இக்கதிர்காம ஷத்திரியர்களது இராஜதானியாக கதிர்காமம் சந்தணகாமம், தாடகிரி, சங்கமான்கண்டி, குசலான்கந்த போன்ற இடங்கள் இருந்துள்ளன. இவ்விடங்களில் காணப்படும் வாசஸ்தல இடிபாடுகள், பிராமிக்கல் வெட்டுகள் போன்றன இவற்றுக்கு சான்று பகர்கின்றன. இக்கல்வெட்டுகளில் காணப்படும் மஜி, மற்சய, மஜிமரஜ போன்ற சொற்களின் பொருள் மீனவராஜன் என்பதாகும்.
இதனோடு மீன் சின்னங்களும் பொறிக்கப்பட்டு

Page 26
頭產
卧
if; 2
6
 
 

இருந்தமையினால் பரணவிதான இவர்களை பாண்டிய குறு நில மன்னர் எனக் கருதுவர். இத்தகைய சிற்றரசுகள் உரோகனைப் பிரதேசத்தில் குறிப்பாக கதிர்காமம் தொடக்கம் திருகோணமலை வரையும் காணப்பட்டுள்ளன. விகாரமலை, முள்ளிக்குளம் மலை போன்ற இடங்களில் காணப்படும் பிராமிக் கல் வெட்டுகளில் காணப்பட்ட வேள், வேளிர் போன்ற பெயர்களும் சங்ககால குறுநில மன்னர்களைக் குறிப்பன. இவர்களே தமிழ் நாட்டில் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள். கிழக்கு இலங்கையில் குறுநில மன்னர்களாகவும் கதிர்காம ஷத்திரியர்களாகவும் ஆட்சி செலுத்தியவர்களும் இவர்களே. இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினர் என பேராசிரியர் சிற்றம்பலமும் கருதுகிறார். எனவே பாண்டிய தொடர்புடைய கதிர்காம ஷத்திரியர்கள் ஆதிக்கமும் வழிபாடும் இங்கிருந்துள்ளது என்பது தெளிவாகிறது. தாந்தாவிலிருந்து சிறிது தூரத்தில் விகாரமலை காணப்படுகிறது. எனவே இங்கு காணப்பட்ட பிராமிக்கல் வெட்டுக்கள் மூலம் அங்கு இச்சிற்றரசுகளின் ஆட்சி இருந்துள்ளது என ஊகிக்க முடிகிறது. மேலும் சில மைல் தூரத்தில் உள்ள குசலான்கந்த (குருலான்மலை)வில் பத்திற்கும் மேற்பட்ட பிராமிக்கல் வெட்டுக்கள் கதிர்காம ஷத்திரியர்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றை பரணவிதான ஆய்வு செய்து பதித்துள்ளார். இவர்கள் ஏழு பரம்பரையினர் என்பதை இக்கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
கதிர்காம ஷத்திரியரின் இன்னோர் பரம்பரையினரும் தாந்தாமலையும் இக்கதிர்காம ஷத்திரியரின் இன்னோர் பரம்பரையினர் கி.பி. 429 - 455 வரை ஆட்சி செய்தனர். இவர்கள் இந்து மதத்தைப் பேணியவர்கள். முருக வழிபாடு உடையவர்கள். இவர்கள் பெளத்தத்தையும் அனுசரித்ததை இவர்களது கல் வெட்டுகள் காட்டுகின்றன. இவர்கள் கொடுத்த நன் கொடைகளையும் இக்கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது.
எனவே தாந்தாமலையில் காணப்படும் இடிபாடுகள் முதலில் பொய்கையை (தற்போதைய தீர்த்தக்குளம்) மையமாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளன. சாதாரண கட்டிடம் அளவான கற்தூண்கள், கற்படுக்கைகள், கல்நிலைகள், படிகள், தூண்கள் நடும் துளைகள், கற்கள் ஆகியவற்றுடன் இடிபாடுகளும் அரசர்கள் தங்கும் வாசஸ்தலம் ஒன்றும் இருந்தமைக்கான சான்றாக இருக்கின்றன. இது கதிர்காம யாத்திரீகர்களின் வாசஸ் தலமாயிருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. து
க. தங்கேஸ்வரி பி.ஏ தொல்பொருள் சிறப்பு அடிக்குறிப்புகள் - 1. Inscriptions of Ceylon by Dr. Paranavithna 1972 PP 2. Inscriptions of Ceylon by Dr. Paranavithna 1972 3. Ceylon Survey map - Rugam. Dept of Land 4. பண்டைய ஈழத்தில் தமிழர் ஒரு பார்வை - பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் PP 2001
PP 28 5. மேலது -------------- 28
ஈழத்து இந்து சமய வரலாறு சி.க. சிற்றம்பலம் 1996 பக் 198, 199 6. Inscriptions of Ceylon by Dr. Paranavithna 1972 PP

Page 27

வித் தத்துவத்தை ரின் தொன்மையான

Page 28
மொழிக்கும் குறிப்பிட்ட சில பண்புகளிலே ஒப்புமை
காணப்படுதல் தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிலே மணிவாசகரின் திருவெம்பாவை பாடப்படுதல் 3& தாய்லாந்து வியட்நாம் இந்தோனேசியா முதலான நாடுகளிலே தமிழ்ப் பண்பாட்டின் எச்சங்கள் காணப்படுதல் : 徽 ஐரோப்பிய மொழிகளில் வெளிவருதல் போன்ற கனதியான ஆய்வுச் சஞ்சிகைகள் போன்று தமிழியலை அடியொற்றி வெளியிடத் துணிந்தார். உயர்கல்வி நிலையிலும், புலமை நிலையிலும் உலகளாவிய வகையிலும் தமிழின் அங்கீகாரத்தை அடையாளப்படுத்த முடியும் என்ற நோக்கில் அவர் தமிழ் பண்பாடு (TAMIL CULTURE) மற்றும் தமிழ்க் கற்கைகளுக்கான ஆய்வு இதழ் (JOURNAL OF TAMIL STUDIES) -9,5uijsijgit 9,5ifui பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அச்சஞ்சிகையிலே புலமை ஆழம் மிக்க கட்டுரைகளைத் தாம் எழுதியதுடன் தமிழியல் ஆய்வாளர்களைக் கட்டுரைகள் எழுதுமாறும் உற்சாகப்படுத்தினார். نیرویی
அவர் தெரிந்தெடுத்த ஆய்வுத் தலைப்புகளும், அவற்றை அடியொற்றி அவர் மேற்கொண்ட ஆய்வுகளும், தமிழியல் பற்றிய புலக்காட்சியை ஆழமும் விரிவும் பெறச்செய்து ஆய்வாளர்களின் கவன ஈர்ப்பைப் பெற்றன. அவ்வகையில் அவர் தெரிந்தெடுத்த ஆய்வுத் தலைப்புக்கள் சில வருமாறு 1. சங்க இலக்கித்தில் மெய்யியல் வளர்ச்சி.
தமிழ் மனித நேயம்.
தெற்கு ஆசியாவில் தமிழ்ப் பண்பாட்டின் செல்வாக்கு. தமிழ் மற்றும் கிரேக்க அறக் கொள்கைகள். இருபது ஆண்டுகளிலே தமிழாய்வுகள் தமிழ்க் கையெழுத்துச் சுவடிகள் தமிழில் அச்சேறிய முதல் நூல். செவ்வியற் காலகட்டத்தில் தமிழகம் 6) UGODiffEl fò. தமிழகத்தில் பண்டைய ஜைன பெளத்த போதனைகள் 10. தொல்காப்பியம் தொன்மையான ஆவணம் গুপ্ত
கல்வி உலகில் வளர்ச்சிபெற்று வந்த நவீன ஆய்வு முறைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தலும், அவற்றை அடியொற்றி தமிழியல் ஆய்வுகளை முன்னெடுத்தலும் அடிகளாரின் நோக்கங்களாக இருந்தன. ஆய்வு என்பதை மெய்மையைக் கண்டறியும் புலமைப்பயிற்சியாக அவர் கருதினார்.
ஆய்வின் முடிவற்ற வெளியையும் அவர் உணர்ந்து 6).g:T6ծTլրի, தமிழியல் ஆய்வுகளை உலகத் தரத்துக்கு எட்டச் செய்யும் முயற்சியில் முதற்கண் முதன்மை 9,61600Ti5@iait (PRIMARY SOURCES) யத்துத்தை வலியுறுத்தினார். ஒப்பியல் ஆய்வு வரலாற் யல் -9,1161, விபரண ஆய்வு, பகுப்பு நிலை ஆய்வு, மூலப்படத் திறனாய்வு முதலிய அனைத்துக்கும் முதன்மை ஆவணங்கள் அ டையானவை என்பதை உணர்ந்த
 


Page 29
1974ம் ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழர மாநாட்டின் போது நிகழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு
 

சார்ந்தோருக்குமுரிய இலக்கியங்களைக் கொண்ட தமிழன் அக நிலைப் பன்மையைத் தமது கட்டுரைகள் வாயிலாக மொழிக்குரிய பலத்தையும் உள்ளடக்கல் (INCLUSIVE) என்ற பண்பினையும் வெளிப்படுத்தினார்.
கத்தோலிக்க மதத் துறவியாக இருந்த அவர் இந்து சமயப் பனுவல்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு கற்றமையும் அவற்றிலே பொதிந்திருந்த ஒப்புயர்வும் அற்ற பக்தி மற்றும் இரக்க நிலைகளின் ஆழ்ந்து ஈடுபாடு கொண்டு கற்றமையும் தமிழ் அடையாளத்தின் உள்ளடக்கத்திலே சமய அடையாளங்கள் தனித்து நிற்றலையும் புலப்படுத்தியது. தமிழ் இனக்குழுமக் கோட் X:: நிலையிலும், உலகத் தளத்திலும் வலிமை சேர்ப்பதற்குரிய பல்வேறு நடவடிக்கைகளை அடிகளார் மேற்கொண்டார். 键 தமிழ் இலக்கியத் திறனாய்விலே பின் இனக்குழும நிலவரம் தோற்றம் பெறுவதற்குரிய புலமை விசைகளின் உருவாக்கத்தில் அடிகளாரின் பணிகள் தனித்துவமாக அமைகின்றன. முன் இனக்குழும காலத்திலே தமிழின் அடையாளங்கள் தேடப்பட்டன.
பின் இனக்குழும நிலவரத்தில் தமிழின் உலகளாவிய வியாபகத்தை நோக்கிய செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன. சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் செயற்பாடுகள் முன்னைய இயல்பையும் அடிகளாரின் செயற்பாடுகள் பின்னைய இயல்பையும் புலப்படுகின்றன.
தமிழ் இலக்கியத் திறனாய்வில் மேலைப்புலக் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட அடிகளார் , தமிழ் மரபிலே வளர்ச்சியுற்று வந்த திறனாய்வுக் கோட்பாடுகளின் தனித்துவங்களையும் சுட்டிக்காட்டினார். பண்டைய தமிழ் மக்களின் திறனாய்வு நோக்கினைத் தொல்காப்பியம் புலப்படுத்தியது. அந்நிலை யிலே தொல்காப்பியத்தை உயர் நிலையான விரிந்த ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். & அவ்வாறே தமிழ் உரையாசிரியர்களிடத்துக்
காணப்பெற்ற திறனாய்வு நோக்கினையும்
சுட்டிக் காட்டினார். அந்நிலையில் இலக்கிய திறனாய்விலே உலக மரபையும் தமிழ் மரபையும் ஒருங்குசேர நோக்கும் சம நிலைப்பாடு அடிகளால் வலியுறுத்தப்பட்டது.
தமிழ் மொழியின் நவீனமயப்பாட்டுக்குரிய பரந்த தளத்தையும் LGOLDIT 3.1 அறிகைத் தளத்தையும் உயர் கல்வியில் ஏற்படுத்திய புலமையாளர்களுள் அடிகளார் தனித்துவம் ೧-ಝರಾಣಿಗ್ಮ

Page 30
ញ៉ា 墓 30 ស្វេអ៊ែណៃ ស៊ី
தமிழர் வாழ்வில்
மிழர்களின் வீடுகளிலும், சமை கிருமிநாசினியான மஞ்சளைக் இல்லாது ஒழிக்கும் வழக்கம் பொருளுக்கு நிறம் சேர்ப்பதற்காக ஆனால் உணவுப் பண்டங்களில் உள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
நிறைந்த மருத்துவக் குணம் கொ திகழ்கிறது. இறை வழிபாட்டிலும், ஆ காரியத்தைத் தொடங்கும் முன்னர் வ ஆகும். பிள்ளையாரை சாணம் அல்ே வணங்குவதன் மூலம் மஞ்சளுக்கு உ6 போது மஞ்சளைக் குழைத்து உடலி நிறமும், தோல் பாதுகாப்பும் கிடைக்கி நாற்றம் நீங்கி, உடலில் உரோம வ வழக்காறு தற்காலத்தில் மிகவும் அருகி
குழந்தை பிரசவித்த குழந்தை பிரசவித்த பெண்களுக்கு உண்டு. சரக்கு அரைத்துக் கொடுப்பு கர்ப்பாசயக் கழிவுகளை வெளியேற்றி, கொத்தமல்லி, அரை சிறங்கை நற்சீரக தேங்காய்), சிறுதுண்டு மஞ்சள் ஆகிய வேண்டும். தாச்சியில் போதியளவு கத்தரிப்பிஞ்சுகளை இட்டு நன்கு வதக் உப்பு ஆகியவற்றைப் போட வேண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மங்கலச் சின்னம் மஞ்சள் க்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன் M.D (Siddha) India
யல் அறைகளிலும் மஞ்சளுக்கு சிறப்பான இடம் உண்டு. கரைத்து, வீடு முழுவதும் தெளித்து, நோய்க் கிருமிகளை மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. சமைக்கும் மஞ்சள் பயன்படுத்தப்படுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ள நுண்ணிய நச்சுக் கிருமிகளை அழிப்பதற்காகவே மஞ்சள்
ாண்ட மஞ்சள், தமிழர் வாழ்வின் மங்கலச் சின்னமாகவும் ன்மீகத்திலும் மஞ்சளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஒரு நல்ல வினைகள் தீர்க்கும் விநாயகனை வணங்குவது நம் வழக்கம் லது மஞ்சள் கொண்டு பிடித்து அதில் அறுகம்புல் வைத்து ஸ்ள முக்கியத்துவம் நன்கு புலப்படுகிறது. பெண்கள் நீராடும் ல் பூசுவார்கள். அதனால் அவர்களுக்கு கவர்ச்சியான உடல் றது. மேலும் பளபளப்பான மேனி கிடைப்பதுடன், வியர்வை ளர்ச்சி தடைப்படுகிறது. ஆனாலும் மஞ்சள் பூசி நீராடும்  ெவிட்டது.
பெண்களின் பத்திய உணவில் மஞ்சள்
'சரக்கு அரைத்துக் கொடுக்கும் வழக்கமும் பெருமளவில் பதன் மூலம் கர்ப்பாசயத்துக்கு வலுவைக் கொடுப்பதோடு, தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்ய முடியும். ஒரு சிறங்கை 5ம், சிறிதளவு மிளகு, சிறுதுண்டு தேங்காய்ச்சொட்டு (துண்டு பவற்றை அம்மியில் வைத்து, பட்டுப்போல அரைத்து எடுக்க நல்லெண்ணெய் விட்டுச் சூடாக்கி, சிறுக நறுக்கிய கி, வெந்து வரும்போது அரைத்து வைத்த சரக்கு, தேவையான ம்ெ. சிறு இஞ்சித்துண்டு, வெங்காயம், உள்ளி ஆகியவற்றை

Page 31
தட்டிப்போட்டு இறக்கி, சாற்றைக் குடிக்கக் கொடுப்பார்கள் கொடுப்பார்கள்.
மேலும் காயம் அரைத்துக் கொடுக்கும் வழக்கமும் உண் நற்சீரகம், சிறுதுண்டு வேர்க்கொம்பு ஆகியவற்றைத் தண்ணிர் ( பசுந்தாக அரைத்துப் பனங்கட்டியுடன் கொட்டைப் பாக்களவு : கொடுப்பார்கள். எனவே பிரசவகால உணவு முறைகளிலும் உள்ளமை புலனாகிறது.
உடலைப் பொன்மயமாக்கி, புலால் நாற்றத்தைப் போக்கு பசியும் உண்டாகும். பித்த கபவாத ரோகங்கள், தலைவலி, ஐ வண்டுக் கடிவிஷம் முதலியன நீங்கும் எனப் பண்டைய நூல்க
பொன்னிறமாம் மேனிப் புலானாற்ற முப்போகும் மன்னு புருட வசியமாம் - பின்னியெழும் வாந்திபித்த தோடமையம் வாதம்போந் தீபனமாங் கூர்ந்தமஞ்ச எரின்கிழங்குக் கு.
தலைவலிநீரேற்றஞ் சளியாத மேகம் உலைவுதரு பிநீசத்தினூடே - விலிசுரப்பு விஞ்சு கடிவிடமும் விறுவிர ணங்களும்போம் மஞ்சட் கிழங்குக்கு மால்.
ஆங்கிலத்தில் Turmeric என அழைக்கப்படும் மஞ்சளின் தாவ ஆகும். மஞ்சளுக்கு அரிசனம், காஞ்சனி, நிசி, பீதம் போன்ற ே கூறுகின்றன. மஞ்சள் பல வருடங்கள் வளரக் கூடிய (80 செ இச்செடியில் Rhizome எனப்படும் தண்டு தரையடியில் காண நிறம் கொண்ட ஈட்டி போன்ற வடிவமானவை. மடலில் உ மலர்கள் மஞ்சரியாகக் காணப்படும். மஞ்சள் செடிகளை வீடு வளர்க்கலாம். அவை நல்ல பச்சை நிறத்துடன், கவர்ச்சிக
காட்சியளிப்பதுடன், சுற்றுப்புற சூழலில் உள்ள மாசுக்கண
 

ញ៉ាម៉ែត្រែអ្វី
31
ள். மிகுதியை சோற்றுடன் உண்ணக்
டு. மஞ்சள் ஒரு துண்டு, 1/2 சிறங்கை சேர்க்காமல் (நல்லெண்ணெய் சேர்த்து) தினம் இரு தடவை 3- 5 நாட்களுக்குக் மஞ்சளுக்கு மிக நெருங்கிய தொடர்பு
கின்ற மஞ்சளினால், புருட வசியமும், ஜலதோசம், ஐவகை வலிகள், வீக்கம்,
5ள் எடுத்துரைக்கின்றன.
ர விஞ்ஞானப் பெயர் Curcuma Longa வறு பெயர்களும் உண்டு என நூல்கள் .மீ உயரம் வரை) குறுஞ்செடியாகும். ப்படும். இதன் இலைகள் கரும் பச்சை ள்ள மைய நரம்பு தடித்து இருக்கும். டுகளிலேயே
TIL DITJ5j,
) (6ΥΤ

Page 32
ឆ្នាអ្វី
 

அகற்றுகின்றன. மஞ்சளில் விரலி மஞ்சள் அல்லது கறிமஞ்சள் மற்றும் கப்பு மஞ்சள் என இரண்டு வகை உண்டு. இருவகை மஞ்சளும் ஒரே இனச் செடியில் விளைந்தாலும், உருண்டை வடிவ மட்ட நிலத்தண்டு கப்பு மஞ்சள் என்றும், விரல் வடிவ கிளை மட்ட நிலத்தண்டு கறி மஞ்சள் என்றும் அழைக்கப்படும்.
மேலும் கிழங்கின் பெரும் பாகங்களை எடுத்து, உலர்த்தி, நல்லெண்ணெயில் பக்குவம் செய்தால் அது கப்பு மஞ்சள் என்றும், கிழங்கின் பக்கங்களில் கிளைக்கும் விரல் போல் உள்ளவற்றை வேறுபடுத்திச் சாணப்பாலில் வேகவைத்துப் பக்குவப்படுத்தினால், அது கறி மஞ்சள் எனவும் பண்டைய நூல்களில் குறிப்புக்கள் உள்ளன. கைப்பும், கார்ப்பும் மஞ்சளின் சுவைகளாகும். அகட்டுவாய்வகற்றல், வெப்பம் உண்டாக்குதல் ஆகியவை மஞ்சளின் செய்கைகளாகும்.
மஞ்சளின் மருத்துவ குணங்கள் இடித்து வடிகட்டிய மஞ்சள் தூளை புண்கள் மேல் தூவினால் அவை விரைவில் குணமடையும். சேற்றுப்புண், நீரினால் வரும் புண்கள் ஆகியவற்றை மஞ்சள் தூள் பூசுவதால் குணப்படுத்த முடியும். பச்சை மஞ்சள் கிழங்கை இடித்து சாறு எடுத்து, அச்சாற்றை புண், வீக்கம், நச்சுப்புண் ஆகியவற்றின் மேல் பூசினால் அவை விரைவில் குணமடையும்.
மஞ்சளைச் சுட்டு முகர்ந்தால் நீரேற்றம், தலைப்பாரம் ஆகியவை தீரும். அம்மைக் கொப்பளங்கள் மேல் வேப்பிலையுடன் சேர்த்து அரைத்த மஞ்சளைப் பூசி வர விரைவில் குணமாகும். மஞ்சள் நீரில் நனைத்து நிழலில் உலர்த்திய வெண்சீலைத் துண்டால் கண்நோய் உள்ளவர்கள் கண்களைத் துடைத்து வர கண்சிகப்பு, கண் வலி ஆகியன தீரும்.
மஞ்சள், பச்சைப் பயறு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சமமாக எடுத்து, அரைத்து, பொடியாக்கி, குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்து வர உடல் தோல் மென்மை அடையும். தோலில் உள்ள இறந்த, தேவையற்ற தோற்பாகங்கள் நீங்கும். தோல் புதுப் பொலிவு பெறும்.
மஞ்சளில் உள்ள Curcumin என்ற இரசாயனப் பொருள் பக்றீரியாவுக்கு எதிராக செயற்படக்கூடியது. அதைத் தோலில் தடவி, வெய்யில் காட்டினால் பக்றீரியாக்கள் கொல்லப்படும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை ஆகும். 1987 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மஞ்சளுக்கு கொலஸ்ரோலைக் குறைக்கும் திறன் உள்ளதை உறுதி செய்துள்ளன. மேலும் புற்றுநோய்த் தாக்கத்தில் இருந்து தடுப்பாக (Antioxident) மஞ்சள் பயன்படுகிறது எனவும் கூறப்படுகிறது
தொகுப்பு - பிரியங்கா

Page 33
இணையத்தளத்தி
Voir Mcinn
WWW.yar
6pagळ ऊ०alab०७p*
 
 
 
 
 
 
 
 
 
 

" விருது வென்ற யாழ் மண்
ற்கு சிறு விளம்பரதாரர்களை
அன்புடன் வரவேற்கிறோம்!
Connect with Jaffnd
mann.lk
9473-1860s,

Page 34
Aa
E *– 西 # 击 创 虽 父9
Lu 5:
(3g5JTIaOITidi;
 

நலந்தரும் நவநாயகர்கள் :
கசூரியன்
“காசினி இருளை நீக்கு கதிரொளியாகி எங்கும் பூசுரர் உலகோர் போற்றப் போசிப்புடன் சுகத்தை நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா/ எனை இரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!'
நவக்கிரகங்களில் நடு நாயகமாக விளங்குபவன் சூரிய பகவானாகும். இவனே அனைத்துக் கிரகங்களுக்கும் முதன்மை வாய்ந்தவன்; முக்கியமானவன். 'ஓம்' என்ற ஒலியிலிருந்து உதித்தவன். மும்மூர்த்திகளின் ஒருமித்த அம்சம். காசியப்ப முனிவருக்கும் அதிதிக்கும் பிறந்தவனாதலால் 'ஆதித்தியன்’ எனப்பட்டான். காசியப்பருக்கும், அதிதிக்கும் பிறந்தவர்கள் தைத்யர்கள். தசரதனின் மகன் தாசததி: கேகயன் மகள் கைகேயி. இப் படிப் பெயரோடு ஒட்டிப் பிறக்கும் நாமாக்களை வட மொழியில் தத்திதாந்த நாமம்’ என்பர்.
உலகத்திற்கே ஜீவாதாரமாக விளங்கி ஒளியும் உயிரும் வழங்குபவன் பகலவன். பல புலவர்கள் கதிரவனைப் போற்றி இலக்கியங்களில் பல குறிப்புகளைப் பொறித்து வைத்துள்ளனர்.
'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு' என்று நக்கீரர் பெருமான் திருமுருகாற்றுப் படையை 'உலகு என்ற மங்கலச் சொல்லால் தொடங்குகின்றார். சிலப்பதிகாரத்தில்,
“ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல், பொற் கோட்டு மேரு வலந் திரித லான்' எனவும் சாத்தனார் தனது மணிமேகலைக் காப்பியத்துள் புத்த தேவனை, 'புத்த ஞாயிறு" எனவும், அபிராமிப்பட்டர் ‘உதிக்கின்ற செங்கதிர் என்று முதல் வரியிலேயே ஞாயிறைப் போற்றிப் புகழ்ந்திருப்பது எண்ணத்தக்கதாகும்.
மந்திரங்களிலேயே மிக சக்தி வாய்ந்த மந்திரமான காயத்திரியும் நம்முடைய அறிவை யார் தூண்டுகிறாரோ அந்தச் சுடருடைய இறைவனின் போற்றுதற்குரிய ஒளியை தியானிப்போம் என்று பகலவனையே பரவுகின்றது. வாரத்தின் முதல் நாளும் ஆதித்தியனை நினைத்தே ஆதிவாரம்' என அமைகிறது. தொல்காப்பியம், புறநாநூறு போன்ற நூல்களும் கதிரவனின் புகழ் பாடுகின்றன.
ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முனிவர் பெருமக்கள் விஞ்ஞான உண்மைகளை கண்டு கூறியிருக்கிறனர். சூரியன் ஒரே இடத்தில் நின்று பிரகாசிக்கிறது. அதற்கு உதயமோ அஸ்தமனமோ இல்லை. உதயம் என்பதும் அஸ்தமனம் என்பதும் சூரியனைப் பார்க்க முடிவதும் முடியாததுமே ஆகும். பூமியிலிருந்து சுமார் ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல்கள் தூரத்தில்

Page 35
அட்டைப்பட விளக்கம்: இந்தியாவில் ஒரிசா மாநி
வங்கக் கடலோரம் ઉઠ
கிரனைட் Ꮡ6Ꮩ0 6T60TL6T6 கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் வேலைப்பாடுகள் மிகவும்
கடவுளுக்காக நிர்மாணிக்க கோவில்களில் காலத்தால் அ இன்றும் எஞ்சியிருக்கும்
கோவில் என்ற சிறப்பு இதற்குரிய
நெருப்புக் கோளமாகக் கதிரவன் காணப்படுகிறான். அவனது வெளி வட்ட உஷ்ணநிலை சுமார் 6000 டிகிரி சென்டி கிரேட் ஆகும். மைய உஷ்ண நிலை நான்கு கோடி சென்டி கிரேட் ஆகும். சூரிய வெப்பம் இல்லையென்றால் உலகில் எந்த ஜீவராசியுமே வாழமுடியாது. உலக இயக்கத்தின் காரண கர்த்தாவே கதிரவன் தான்.
ஆரோக்கியம், செல்வம், நன் மக்கட் பேறு, நீண்ட ஆயுள், உடல் வலிமை, செளபாக்கியம் ஆகியவற்றை பெற விரும்புகின்றவர்களும், ஜாதகத்தில் சூரியன் நீசனாகே தோஷம் பெற்றவனாகவோ அமையப் பெற்றவர்களு ஆஸ்துமா, நேத்திர ரோகம், நரம்புத் தளர்ச்சி, உஷ்ண ரோகம் உள்ளவர்களும் சூரியனை வணங்கி வழிபாடு
செய்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, சூரிய கவசத்தையோ அல்லது ஆதித்திய ஹிருதயத்தையோ பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அகன்று சகல நன்மைகளும், சிறப்பான உதவிகளும் கிடைப்பது உறுதி என்பது ஆன்றோர் வாக்கு.
மயூரகவி என்பவர் சூரிய சதகம்’ என்ற சிறப்பான நூலை இயற்றியுள்ளார். வால்மீகி இராமாயணத்தில் இராமன் போரில் சோர்வடையாமல் இருப்பதற்காக அகத்தியரால் உபதேசிக்கப்பட்ட மந்திரமே ஆதித்ய ஹிருதயம் ஆகும்.
புராணங்களில் மார்க்கண்டேய புராணமும், பிரம்ம புராணமும் பகலவனின் வரலாற்று விரிவைக் கூறுகின்றன. வேதங்களில் யஜுர், ஸாம, அதர்வண வேதங்கள் கதிரவனைப் புகழ்கின்றன.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் நவக்கிரக கீர்த்தனைகளை நவ நாயகர்கள் மீது மாலையாகச் சூட்டியிருக்கிறார். அதில் சூரியன் சூரிய மூர்த்தே நமோஸ்துதே' என்று தொடங்கிப் பாடியுள்ளார்.
சூரியன் பாலை நிலக் கடவுள். இவன் ஸவிதா, பாஸ்கரன், பரிதி, பகலவன், ஞாயிறு, மார்த்தாண்டன், கதிரவன், ககன் பூஷா, ஆதித்தன், பானு, கபஸ்திமான், ஹிரண்ய ரேதஸ், இரவி, பிங்களன், ஸப்தஸப்தி எனப் பல நூறு நாமங்களால் போற்றப்படுகின்றான்.
சூரியன் மிக்க தவம் செய்து கிரகங்களில் வலிமை பெற்றான். மற்றைய எட்டு கிரகங்களுக்கும் ஒளி கொடுப்பவன் இவனே. சூரிய கிரகங்களினால்தான்
 
 
 
 
 

லத்தில் கானார்க் சூரிய வாகும். கறுபட வறறால சிற்ப புகழ் ) சூரிய $ப்பட்ட அழியாது சூரியக் gil.

Page 36
ញ៉ាម៉ាអៃ 虚 36
வெயில், பனி, மழை உண்டாகின்றது. ஒற்றைச் சக்கரமுடைய இரதத்தில் ஏழு குதிரைகளைப் பூட்டி, அருணன் சாரத்தியம் செய்ய உலகை வலம் வருபவன். அஞ்சனை புதல்வனுக்கு வட மொழி ஒன்பது வியாகர்ணங்களையும் கற்றுக் கொடுத்த கல்வி வல்லோன். சுக்ல யஜுர் வேதத்தை யாக்ஞவல்கியருக்கு வழங்கியவன்.
துவட்டாவின் மகளான சஞ்சிகையை மணந்து அவள் மூலம் வைவஸ்வதமநு, யமன், யமுனை என்ற மூன்று குழந்தைகளைப் பெற்றான்.
ஒரு சமயம் சூரியனுடைய வெப்பத்துக்கு ஆற்றாத சஞ்சிகை தன்னுடைய நிழலையே ஒரு பெண்ணுருவாக்கி சூரியனுடன் வசிக்குமாறு கூறிவிட்டு மறைந்து விட்டாள். சாயாதேவி தான் யார் என்பதைக் கூறாமலேயே அவனுடன் வாழ்ந்து, சாவர்ணிமநு, சனி, பத்திரை என்ற மூவருக்கு தாயானாள்.
பிருகு, வான்மீகர், அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன் முதலியோரும் ஞாயிறு தேவனின் புதல்வர்களாகக் கூறப்படுகின்றார்கள். சூரியன் வெண் தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டவன். இரண்டு கரங்களும் ஒரு முகமும் கொண்டு சூரிய மண்டலத்தின் நடுவே சிவனாக விளங்குபவர் சிவ சூரியன். சூரிய மண்டலத்தின் நடுவில் விஷ்ணுவாக விளங்குபவர் சூரிய நாராயணன். தை மாதப் பிறப்பாகிய மகர சங்கராந்தி காலத்தில் சைவர்களும்
வைணவர்களும் சூரியனை பூசித்து வழிபடுகின்றனர்.
 

சூரியன் ஒரு இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லும் பொழுது மாதம் பிறக்கின்றது. இதனை 'விஷ" புண்ணிய காலம் அல்லது 'சங்க்ராந்தி என்கிறோம். தை மாதப் பிறப்பு உத்தராயணம், ஆடி மாதப் பிறப்பு தகூSணாயணம். மேலும் அர்த்தோதய, மஹோதய காலங்களை புண்ணிய காலங்கள் என்கிறோம். சூரியனும், சந்திரனும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் காலம் அமாவாசை தினமாகும். இராகு, கேது ஆகிய இரண்டும் சூரிய, சந்திரனைப் பிடிப்பதால் கிரகணம் ஏற்படுகின்றது. இதனை அறிவியலாளர்கள் ஒத்துக் கொள்வதில்லை.
சூரியன் சிம்ம இராசிக்கு அதிபதி. அதி தேவதை அக்னி. பிராதி அதிதேவதை உருத்திரன். இராசிச் சக்கரத்தில் மேஷ இராசிக்கு உச்சமான சூரியனுக்கு சொந்த வீடு சிம்ம இராசி ஆகும்.
ஆதி சங்கரர் ஏற்படுத்திய ஷண் மதங்களுள் சூரியனை வழிபடு கடவுளாகக் கொண்டது செளரம். இதய நோயையும், மஞ்சள் காமாலை நோயையும் சூரிய வழிபாடு போக்கும். பசுவின் மடியிலுள்ள கிருமிகளை சூரிய கிரகணங்கள் அழிக்கின்றன என்று அதர்வ வேதம் கூறு கிறது.
'உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்யும் ஒளியை வழங்குபவனே! உனக்கு வெற்றி!” என வாழ்த்து கூறுகின்றது யஜுர் வேதம். துர்வாசர் உபதேசித்த மந்திரத்தை சோதித்துப் பார்க்க விரும்பிய குந்திதேவி அம்மந்திரத்தை உச்சரிக்கிறாள். அம்மந்திரத்துக்கு உரிய கதிரவன் தோன்றி கர்ணனை மகவாகத் தோற்றுவிக்கிறான். கன்னிப் பெண்ணான குந்தி உலகப் பழிக்கு அஞ்சி அக்குழந்தையை ஆற்றில் விடுகிறாள்.
இதேபோன்ற ஒரு கதை கிரேக்க இலக்கியத்திலும் உண்டு. தாஸே என்ற கிரேக்க இளவரசி தந்தையால் சிறைப்படுத்தப்படுகின்றாள். பொன் நிறம் கொண்ட குரு பகவான் மூலம் ஒரு மகவைப் பெறுகிறாள். அவனே பெர்ஸியூஸ்.
வட இந்தியாவில் கோனார்க் என்ற இடத்தில் சூரியனுக்குத் தனிக் கோயில் உள்ளது. இது சூரியனுக்கான ஆலயம் என்பதோடு, கட்டிடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் சிறப்பு மிக்க இடமாகவும் விளங்குகின்றது. இக்கோயில் 13 ஆம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம தேவனால் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய 24 சக்கரத் தேரில் சூரியன் எழுந்தருளுவது போன்று இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 7 குதிரைகள் 7 நாட்களையும், 24 சக்கரங்கள் 24 மணித்தியாலங்களையும் குறிக்கின்றது. பாரத நாட்டில் பூரி, கயா, துவாரகை, மகாராஷ்டிரம், பஜா குகைகளிலும் எல்லோரா, கோண்டாகி, குஜராத், மேதோரா போன்ற இடங்களிலும் ஆந்திராவில் ஆரவல்லியில் தேவிகளுடன் கூடிய சூரியச் சிலைகளும் கஜகஸ்தானில் சிரோஹி, காஷ்மீரில் மார்த்தாண்டன் கோயிலும் கதிரவனுக்காக
அமைக்கப்பட்ட ஆலயங்களாகும்.

Page 37
தமிழ்நாட்டில் ஆடுதுறைக்கு அருகிலுள்ள 'சூரியனார் கோயில் என்ற தலத்தில் சூரியனுக்குத் தனிக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவாடுதுறை ஆதீனத்தைச் சார்ந்தது.
சிதம்பரத்திற்கு பதினாறு கல் தொலைவில் உடையார்குடி உள்ளது. இங்கு செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட கோயிலில் ஞாயிறு தேவனின் விக்கிரகம் உள்ளது. இதே போன்று திருக்கோவிலூரை அடுத்த கீழுர், திருச்சி மாவட்டத்திலுள்ள அன்னூர், ஆலம்பாக்கம், கும்பகோணத்தை அடுத்த சித்தநாத சுவாமி கோயில், திருக்கோடிக் காவல் திருக்கோயிலூர் வீரட்டானம், தென்னாற்காடு எறும்பூர், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள நீர் பழனி, திருச்சி, கரூர் பாதையிலுள்ள அள்ளுர், நாவலூர், திருமெய்ஞானம், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், கும்பகோணம் திருநாகேஸ்வர சுவாமி ஆலயம், திருச்சி மாவட்டம் திருக்கட்டளை, பூம்புகார் முதலியன பானுதேவனுக்குரிய சிறப்பான இடங்கள். பூம்புகாரில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வழிபாடு நிலவி வந்ததை இளங்கோவடிகள் 'பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டமாக’க் குறிப்பிடுகிறார்.
உலகத்தினர் முதன் முதலாக சூரிய வழிபாட்டையே நிகழ்த்தியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள நவக்கிரக அமைப்பு அற்புதமானது. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தில் அருணன் தேரோட்ட பதும பீடமாக அமைக்கப்பட்ட ஒரே
கோனார்க் சூரியக் கோயில்
 
 
 
 

& கலைக்கேசரி 37
வட்டக்கல்லில் சூரியனும் அவனைச் சுற்றி எட்டுக் கிரகங்களுமாக அமைக்கப்பட்ட அமைப்பு வேறெங்கும் காண முடியாததாகும். புள்ளிருக்கு வேளூரில் கல்லில் செதுக்கப்பட்ட நவக்கிரக யந்தவம் காணப்படுகிறது.
சூரிய ஒளி பட்டால் சூரிய ஒளியைக் கக்கும் சூரிய காந்தக் கல்லும் காணற்கரியதொன்றாகும். சூரியக் கோள் என்றுமே அழியாதது என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும்.
சூரிய காயத்திரி, சூரிய மந்திரம், சூரிய கவசம், ஆதித்ய ஹிருதயம், சூரிய ஸ்தோத்திரம் அனைத்துமே ஆதித்யனைப் பரவி வழிபட உகந்தது. இத்துதிகளைக் கூறி வணங்கினால் மலையளவு வரும் இடர்களும் பனி போன்று விலகிடும் என்பது நமது முன்னோர் துணிபு.
சூரிய காயத்ரி:- "அச்வ த்வஜாய வித்மஹே பாச வுறஸ்தாய தீமஹறி தன்னோ சூரிய ப்ரசோதயாத்' *
வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன்

Page 38
តែក្លាញតែផ្លែអ៊ែ ់ 38 இசைக்கலை
சைக்கருவிகளின் பாவனையில் பழைமை வாய்ந்தது ஜலதரங்கம் ஆகும். இக்கருவி நீர் அலைகள் எனவும் பொருள்படும். ஏறத்தாழ 18 வெவ்வேறு அளவிலான (Porcelain) பீங்கான் பாத்திரங்களின் தொகுப்பு அரைமதி போன்ற வடிவமைப்பில் அடுக்கப்பட்டிருக்கும். கிண்ணங்களின் அளவானது பெரிது சிறிது எனப் படிப்படியாக அடுக்கப்பட்டிருக்கும். சிறிய மூங்கில் தடிகளால் தட்டியே ஒலி, நாதம் எழுப்பப்படுகின்றது. முற்காலத்தில் இவ்வாத்தியம் ஜலவாத்தியம் எனப் பெயர்பெற்றது.
குறிப்பிட்ட வாத்தியம் ஒருபோதும் பக்க வாத்தியமாகப் பயன்படுத்தப்படவில்லை. இவ்வாத்திய பயன்பாடானது என்றும் தனி வாத்தியமாக வயலின், மிருதங்கம் ஆகியவற்றுடன் ஒன்று கூட்டியே பயன்படுத்தப்பட்டது. நீர் g-flu_ToT அளவிற்கு நிரப்பப்பட்டே ஒலிநாதம் ஏற்படுத்தப்படுகின்றது. நீர் நிரப்படாத பாத்திரங்கள் வேறுபட்ட ஒலி அதிர்வுகளைத் தரவல்லனவாக விளங்குகின்றன.
 
 

Isöö 6)IIIööLIDIT60I Iங்கம்
நீர் நிறைக்கப்பட்ட பீங்கான் கோப்பையைத் தட்டும் போது ஏற்படும் நாத ஒலியே இவ்வாத்தியங்களின் ஒலி அதிர்வுகள் ஏற்பட மூலகாரணமாக அமைகின்றது.
மிகவும் இனிமையான ஒலிநாத அமைப்பைக் கொண்ட இவ்வாத்தியமானது பொதுப்படையில் பிரபல்ய ரீதியில் பெரிதும் மக்களிடையே சென்றடையாத ஒரு வாத்தியமாக மிளிர்கின்றது. மிகவும் நுண்மையாகத் தட்டும் போது ஏற்படும் அதிர்வலைகளில் இருந்து ஏற்படும் நாதமானது கேட்பதற்கு இதமாகவும் அது வாசிப்பதைக் பார்க்கும்போது மிகவும் கண்ணுக்கு விருந்தாகவும் காட்சி அளிக்கும்.
சிறிது பெரிதாக ஒழுங்கமைப்பாக்கப்பட்ட பீங்கான் கிண்ணங்கள், இடமிருந்து 6) JGR) LOITE ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களில் சுருதி
நிலைப்பாட்டை சேர்க்க, சுருதி நிலைப்பாட்டை ஊட்ட நீண்ட நிலை ஏற்படும்.
குறைந்தளவு நீர் விடப்பட்ட கிண்ணங்கள் குறைந்த சுருதி நிலைப்பாட்டையும் கூடுதலான நீர் நிறைக்கப்பட்ட கிண்ணங்கள் உயர்ந்த சுருதியமைப்பையும்

Page 39
வழங்குவதாகவும் அமைகின்றது. தமிழ் இலக்கியங்களில் பண்டைக் காலத்திலேயே இக்கலை வடிவம் பயன்பாட்டில் இருந்து வந்ததாக அறிகின்றோம். இந்தவகையில் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் இக்கலை வடிவம் ஒன்றாக விளங்கியது என அறியமுடிகின்றது. ஆரம்பகாலத்தில் வெண்கலப் பாத்திரங்களே புழக்கத்தில் இருந்தன. ஆயினும் காலக்கிரமத்தில் வெண்கலப் பாத்திரத்திற்கு ஈடாக, வேறு பல பாத்திரங்கள் வழக்கத்தில் வந்தன.
மிகப் பழைமையான இந்திய வாத்தியமான ஜலதரங்கம் மிருதுவானதும், இனிமையானது மான ஒரு வாத்தியமாகும். ஜலதரங்கம் என்றால் நீரில் தோன்றும் அலைகளின் ஓசை' என்று கூற லாம். அலை வாத்தியங்களுள் மிகவும் பழைமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததும் ஜலதரங்கம் ஆகும்.
மூங்கில் பிரம்புக் குச்சிகளே பெருமளவு இவ்வாத்தியப் பயன்பாட்டிற்கு தட்டி வாசிக்கும் ஊடகமாக விளங்கியது. ஜலதரங்கம் எனக் குறிப்பிட்டு நீர் அலைகளின் ஒலியிலேயே இக்குறிப்பிட்ட வாத்தியம் அழைக்கப்படுவதினால் பாத்திரங்களில் நிரப்பப்படும் நீரின் கனமானது பாத்திரங்களை திடமாக, ஸ்திரமாக, கச்சிதமாக உறுதியாகப் பாதுக்காக்கவும் உதவுகின்றது.
GET 5606uó(35éff, DEL
Please complete the form given below, along with your Cheque, (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.185 Tel:+94-11-5322700/5738046 Fax:+94-11-5517773 For more details, please contact: Overseas Subscriptions Arju Local Subscriptions S. Sa
Online Polyment: www.kalaikesari.com/Subscr
ORDER FORM : Title
First Nom ܨܝܢܝܗܝܒ
KALAKESAR సeజి ថាចយាបាលប៉ាថ៌f an エー Institution
Manager Subscriptions * Apartme
Z Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, a Street / R. Sri Lanka. nc Te: +94-11-5322783 / +94-11-5738046 Count Fax : +94-11-5517773 Country E-mail: subscription(akalaikesari.com AmoUnifo !
Cheque should be drawin in favour of Mode of Express Newspapers (Ceylon) (Pvt) Limited
Online PC
 
 

達。 ក្តញអ្វីម្ល៉ោះ
39
இற்றைய காலகட்டத்தில் நடைமுறையில் மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் இப்பாத்திர வாத்தியமானது உயர்ந்த கமகங்கள், ஏற்ற இறக்கங்கள், நெளிவு, சுளிவுகளுடன் வாசிக்கக் கூடிய ஒர் அறிய வாத்தியமாக மிளிர்கின்றது. மிகவும் உயர்ந்த துரித கதியிலான தாளத்திற்கு வாசிக்கக் கூடிய ஓர் வாத்தியமாகவும் அதே சமயம் மத்திய கதியிலும் வாசிக்கக் கூடியதான ஒரு வாத்தியமாகவும் இது மிளிர்கின்றது.
பண்டைய வாத்தியமாக இவ்வாத்தியம் விளங்கிய போதும், இதனைப் பற்றிய தகவல்கள், பயில்வோர் எண்ணிக்கை, பயிற்றுவிப்போர், நடைமுறையில் குறைவே. அதன் பெருமளவு பிரபல்யம என்பன பெரிதும் மந்த நிலையிலேயே காணப்படுகின்றது. மேலும் இதன் மேடைப் பக்க வாத்தியப் பாவனைப் பிரயோகம் ஒட்டுமொத்த கச்சேரி எண்ணிக்கை அண்மைக் காலத்தில் பெரிதும் அருகி வருவது கவலைக்குரியது.
தனித்துவம் பெற்ற இவ்வாத்தியமானது ஒட்டு மொத்தத்தில் புத்துயிர் பெற்று இலங்கை மண்ணில் இதன் பாவனை வளர்க்கப்பட்டு வரவேண்டியது இன்றைய தலை முறையினரதும் எதிர்காலத் தலைமுறையினரும் கடமையாகும்.
- மதுரா மதுசூதனன்
IVERED TOYOUR HIOME
"Money Order written in favour of "Express Newspapers 5, Grandpass Road, Colombo 14,Sri Lanka.
in -on arjun(a)expressnewspapers.net/Mobile:+94777 801034 andrasegar - +94 77 5359106 / +94 -11 - 5322783
夔
Тртion
: Mr. Mrs. / Miss D Prof
多 1S . o
e
S00SL0SLSLSLSLSLLLLLSLLLS0S0LL00SLLLSLL0S00S LSL00000L000LSLLLSSLLSLL0000000000000S0S0Y0 00000000000 S 0000L SLL0L0LLLL LS L L L S LSLLLSL00 LS0 L S L LLLLLLLL0L
e . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
SLS0SLS0 0S0SLLSLLLS0000YY0YY0S0SYY00Y0S0YS0S0Y000Y00Y 00SSSS000S0LL L S S SL L SLSLS S SLS S S S CCC S0SYS0SYYYSLS SSSSS S S S S S S S
ht/Other Nos !...........................................................................................
Odd :...........................................................................................
łote
L00LL00S000S000L00S0L00S0S0S0S YY00000000LL000000000LL S 0 LLSL L S S S S S LS C L SL L L L S L L C L S L 0LY0L0S0C 00000 L zCCCZYCL0C0CLS 00 C
SSLSLSYYYY000YYY00YYLSLS LS00 S SS SL00LS L000 S S00000000000Y0000LSS S S00SS S S SSYYYC S CY S CYC 0 CCY0 C CCLCC0C0 C CC LC0C0C0
inclosed : 12 / 6 issues
LSSSSLSL00SSSLSLLLSL0S0SSSSSLSYLLL0SLLS S LS SLLLSY0LS0S0LSS0S0LLS L00000LS0 00Y00000 0 000000LL00000 YY S L S
payment : Cheque / Money Order
yment : www.kalaikesari.com/Subscription

Page 40
கிறிஸ்துவின் மீள்வ
விபத்தல6
 
 
 

ருகையின் வெளிப்பாடாகும் $ம்ை குறவஞ்சி
(ଗ) த்தலேகம் குறவஞ்சி என்பது ஒரு
சிற்றிலக்கியமேயாயினும் இதனைக் கற்றிடும் போது இது ஒரு பேரிலக்கியமோ எனும்
மலைப்பு நம்முள் ஏற்படவேசெய்யும். கடல்போல் அகன்றும் ஆழ்ந்தும் விளங்குகின்ற இம்மாபெருஞ் சிற்றிலக்கியத்தின் ஆசிரியர் வேதநாயகம் சாஸ்திரியார் ஆவார். இவர் தஞ்சை சுவிசேகரக் கவிராயர் வேதநாயகம் சாஸ்திரியார் என்றே பொதுவாக அழைக்கப்பட்டவர். நூலின் பாயிரம் இவரைத் திருநெல்வேலி மேவும் செஞ்சொல் மகாஞான கவிச்சக்கரவர்த்தி எனப்பாடிச் செல்கிறது.
வேதநாயகம் 1774 செப்ரம்பர் 7 இல் திருநெல்வேலியில் கிறிஸ்தவத்தில் விசுவாசம் மிக்கவரான புலவர் தேவசகாயம் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். பேரின்பசித்தன், கங்கை குலாதிபன், நெல்வேலித் தமிழ்க்காவலன் என்னும் சிறப்புப் பெயர்களும் புலவர் தேவசகாயத்திற்குண்டு. இவருக்கு மகனாகப் பிறந்தமையால் வேதநாயகம் ஒரு பெருங் கவிஞராகத் திகழ்ந்து கவிராயர் எனச் சிறப்புற்று இருந்ததில் வியப்பொன்றும் இல்லை.
ஜேர்மன் மிசனெறியைச் சார்ந்தவரான அருட்திரு சி.எவ். சுவாற்சு பாதிரியார் பன்னிரெண்டு வயதினனாக இருந்த வேதநாயகத்தைத் திருநெல்வேலியிலிருந்து தாம் வாழ்ந்து வந்த தஞ்சாவூருக்கு அழைத்து வந்தார். இது நிகழ்ந்தது 1785ஆவது ஆண்டில். அது முதல் பாதிரியாரவர்கள் வேதநாயகத்தைத் தம்முடைய மகனாகவும் மாணாக்கனாகவும் வைத்துக்கொண்டு சமய நூல்கள், புவியியல் மற்றும் வரலாற்று நூல்கள், ஏனைய அறிவு நூல்கள் எனப் பலவற்றினும் பயிற்றுவித்தார். தஞ்சையில் வேதநாயகம் பயின்ற காலத்தில் தஞ்சை மன்னராகப் பின்னர் முடிசூடிக்கொண்ட சரபோஜியும் இளம் மாணவராக குருகுல முறையில் பயின்றுகொண்டிருந்தார்.
பின்னர் வேதநாயகம் கிறிஸ்து சமய சேவியற் கல்வியில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக அக்காலத்தில் தரங்கம்பாடியில் நன்கு புகழ்பெற்றிருந்த உலூதரன் இறையியல் கல்லூரிக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவர் வேத சாஸ்திரம் கற்றுத் தேறியதால் "வேதசாஸ்திரி என்னும் பட்டத்திற்கு உரியவரானார். "வேதசாஸ்திரி வேதநாயகம்' என்ற தொடர்தான் நாளடைவில் வேதநாயக சாஸ்திரி 6 T6ÖT வழங்கப்படலாயிற்று. சாஸ்திரி எனும் பட்டம் இக்காலத்து டாக்டர் என்னும் பட்டத்திற்கு ஈடானதாகும். மற்றும் அவர் திருச்சபையில் குருவாக அமைந்து திருப்பணி செய்திடும் அதிகாரத்தையும் பெற்றிருந்தார். வேதநாயகம் சாஸ்திரியார் 133 நூல்களை எழுதிப் புகழ்பெற்றவர்.

Page 41
தனது 19ஆவது வயது முதலே வேதநாயகம் தஞ்சாவூரை சூழுவுள்ள கிராமங்களின் மிசனெறிப் பாடசாலைகளில் ஆசிரியப்பணி புரிந்ததோடு தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது வகுப்பு தோழனாகவிருந்த வேதநாயகத்தை சரபோஜி மன்னர் தஞ்சை அரண்மனையின் ஆஸ்தான கவிஞராக நியமித்து அவரைக் கெளரவப்படுத்தினார். வேதநாயகம் ஆஸ்தான கவிஞராக பணியாற்றிய போதிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் தனது மத விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவில்லை. வாய்ப்பு வரும்போதெல்லாம் கிறிஸ்தவக் கோட்பாடுகளையே அவர் அச்சமின்றி வெளிப்படுத்தினார். இயேசுவின் விசுவாசி என்பதிலிருந்து அவர் அணுவளவும் விலகியதேயில்லை.
திருக்குற்றாலக் குறவஞ்சியைக் கற்றறிந்து அதன் நாடகப் பாங்கினை உணர்ந்த பின்னர்தான் தாமும் ஒரு குறவஞ்சி நாடகத்தை இயற்ற வேண்டும் என்னும் எண்ணம் வேதநாயகருக்கு ஏற்படலாயிற்று. நூலின் முன்னுரையில் இதனை அவரே சொல்லியிருப்பதை நம்மால் காணமுடிகின்றது. எனினும் குற்றாலக் குறவஞ்சியின் அடிகளையும் தொடர்களையும் வேதநாயகர் தம்முடைய நூலில் அப்படியே வாரிக் கொட்டிக்கொண்டார் எனச் சிலர் கருதுவது தவறானதாகும். குற்றாலத்தில் பேச்சுவழக்கிலுள்ள சில சொற்றொடர்களும் வண்ணங்களும் பெத்தலகேம் குறவஞ்சியில் வந்து சேர்ந்திருக்கின்றன என்பது உண்மையேயாயினும் இவை அங்கொன்றும் இங்கொன்று மாகவேதான் தென்படுவதை நம்மால் காணமுடியும். ஓராண்டு சிந்தனை செய்த பின்னர் தான் 1800 ஆவது ஆண்டில் இந்நூலைப் படைத்ததாக அவர் தெரிவிக்கிறார்.
உருவகச் சிறப்பு குறவஞ்சி நாடக நூல்களில் பொதுவாகத் தங்கள்
பெயரால் குறிப்பிடப்படுபவர்கள் தலைவனும் அவன்பால்
 

& கலைக்கேசரி
41
மையல் கொள்கின்ற தலைவியுமேயாவர். ஏனைய பாத்திரங்களாக வருகின்றவர்களுக்குக் கட்டியக்காரன், குறத்தி, சிங்கி, சிங்கன், நூவன், குளுவன் ஆகிய பொதுப்பெயர்களே நாடகத்தின் கண் வழங்கப்படுகின்றது. பெத்தலகேம் குறவஞ்சியிலோ நாடக மாந்தர் அனைவருக்குமே சீயோன் மகள் எனவும் விசுவாசச் சிங்கி எனவும் மற்றும் கட்டியக்காரன், சிங்கன், நூவன் ஆகியவர்களுக்கு முறையே யோவான், ஞான சிங்கன்,
மறைப்பலி எனவும் சிறப்புப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. வெண்ணிலா, தென்றல் ஆகியவைகளுக்கும் சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெத்தலகேம் குறவஞ்சியின் கதை
பெத்தலகேம் குறவஞ்சியினை ஆய்வு செய்த மதுரை இறையியல் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் போ.ஆ. சத்தியசாட்சி இது பற்றிக் கூறும்போது - பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் தலைவன் கிறிஸ்து பெருமான். தலைவி திருச்சபை. இவள் சீயோன் மகள் எனவும் தேவமோகினி எனவும் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறாள். நாடகத்தின் திறப்பில் தோன்றிடும் கட்டியக்காரன் யோவான். இவருக்குத் திருமுழுக்குக் காட்டிய யோவான் எனும் சிறப்புப் பெயருண்டு. உலகின் நிலையாமை என்பது சந்திரன் எனவும் உருவகம் செய்யப்பட்டுள்ளான். விசுவாசம் எனும் நம்பிக்கையே சிங்கி என்னும் குறத்தி. திருச்சபையில் பணி செய்கிற குருவானவரே சிங்கன். அவருக்குத் துணையாகச் செல்கின்ற திருப்பணிவிடையாளனே நூவன். இத்தகு உருவகக் கோப்பில் பெத்தலகேம் குறவஞ்சி எனும் நாடகத்தைத் திறமையாக நடத்திச் செல்கிறார் கவிஞர் எனக் குறிப்பிடுகின்றார்.
கிறிஸ்துவை மணமகனாகவும் திருச்சபையை மணமகளாகவும் கொள்கின்ற அகத்துறைப் பாங்கு விவிலியத்திலேயே விபரிக்கப்படுகின்றது. அந்த உண்மையினையே வேதநாயகர் தமது குறவஞ்சி நாடகத்தின் கருப் பொருளாக அமைத்துக்கொண்டார். கிறிஸ்துவாம் தலைவர் பெத்தேலகத்துக்கு அரசர் எனவும் எருசலைக்கு அரசர் எனவும் விளங்குகின்றவர், அவர் பெத்தலை மாநகரின் தெருக்களில் உலா வருகிறார். மகளிர் திரள் தெருவெலாம் குழுமி அவருடைய அழகினைக் கண்டு வியந்து நிற்கின்றது. திருமுழுக்குக் காட்டிய யோவான் இவர் உலக மீட்பராம் கிறிஸ்து; உலகினை
மீட்பதற்கான பலிப் பொருளாக சிலுவையில் அறையப்படுவதற்காக வரப்போகிறார் என்னும் செய்தியை முன் கூறுதற்காகவே உலகிற்கு அனுப்பப்பட்டவர் என்று விவிலியம் கூறுகின்றது. அவ்வாறே அவர் கிறிஸ்துவிற்கு முன் தோன்றி அவருடைய வருகையை அறிவித்தார். எனவே இந்த மாமுனிவரையே கட்டியங் கூறுகின்றவனாக வேதநாயகர் உருவகித்துக்

Page 42
கலைக்கேசரி தீ 42
கொண்டார். ஆக மாமுனி யோவான் கட்டியம் உரைத்திட கிறிஸ்து அரசன் கோவேறு கழுதையின் மீது இருந்து உலாச் சென்றிட பெத்தலையூர் பெண்கள் அவரை வியந்து நோக்கி மயக்குகிற தேவ மோகினி எனவும் சீயோன் மகள் எனவும் கூறப்படுகிற இளநங்கை பந்தடித்துக்கொண்டே அக்காட்சியின் நடுவில் நுழைந்துவிடுகிறார். சூரியனும் சந்திரனும் ஏனைய உடுக்களுமே அவளுக்கு பந்துகளாக வருகின்றன. சங்கீத ஞானப் பதம்பல பாடி வருகிறாள். வந்தவள் தலைவனைக் கண்டு மையல் கொள்கிறாள். இது ஆன்மீக மையல், அவளை வெண்ணிலாவும் தென்றலும் துன்புறுத்துகின்றன. பொருளாசையே இங்கு உருவகம் செய்யப்பட்டுள்ளது. மனித உடம்பிற்குள் மறைந்திருந்து செயற்படக்கூடிய புலைமை உணர்ச்சிகள் இங்கே பழைய ஆதாம் என உருவகம் செய்யப்பட்டுள்ளது. விவிலியக் கருத்தின் படி புதிய ஆதாம் என்பது புதிய நோக்கு, புதிய மனமாற்றம் பெற்றிருக்கின்ற ஒரு புதிய மனிதன். பழைய ஆதாம் மனமாற்றம் பெறாத மானிடத்தைக் குறிப்பது.
தலைவன் மீது மையலுற்று வெண்ணிலா முதலியவற்றால் துன்புறுத்தப்பட்டு நலியும் தலைவிக்கு நற்செய்தி சொல்லக் குறத்தியாகிய குறவஞ்சி தோன்றுகின்றாள். கிறிஸ்தவத்தில் மிக இன்றியமையாத பேறு பற்றியபற்று என்று சொல்லப்படக்கூடிய விசுவாசம் ஆகும். பற்றிய பற்றாவது ஏன் எப்படி என்ற வினாக்களை எழுப்பி இறைவன் மீது மாறாத அன்பு வைத்து அவருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டுவிடுவது. இந்தப் பேறு இங்கு குறவஞ்சியாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கி வந்தனளே விசுவாசச் சிங்கி வந்தனளே என இங்கு அவளுடைய வரவு கூறப்படுகின்றது.
வந்த சிங்கி தலைவனின் மலை, ஆறு, நாடு, யானை, குதிரை, கொடி, மாலை, முரசு, செங்கோல் ஆகியவற்றை விதந்து பாடுகின்றாள். யூதேய நாட்டிலுள்ள பெத்தலை நகர் பேரரசனுக்கு யானையும் முரசும் வந்தது எப்படி என நமக்கு ஜயப்பாடு ஏற்படுகிறது. எனினும் பத்துக் கட்டளை பிறந்த மலையே அவன் மலை எனவும் ஜோர்தான் அவனுடைய ஆறு எனவும் கலீலியா அவனுடைய நாடு எனவும் நாசரேத்து அவனுடைய நகர் எனவும் அவர் இருந்து சென்ற கழுதையே யானை எனவும் மேகங்கள் குதிரை எனவும் சிலுவைக் கொடியே அவன் கொடி எனவும் செபமே மாலை எனவும் வரலாற்றுப் படிகளை உணர்த்துகின்ற தூதர்களின் முழக்கமே முரசொலி எனவும் இந்நாடகத்தின் தத்துவார்த்தநிலை வெளிப்படுத்தப் படுவதன்மூலம் ஒரு முழுமையான தெளிவினை நம்மால் எட்டமுடிகின்றது.
மேலும் ஞானசிங்கன் நானே குறப்பயல் - ஞானசிங்கன் நானே எனப்பாடிக்கொண்டு சிங்கன் தோன்றுகின்றான். திருச்சபையில் போதகர் எனவும் குருவானவர் எனவும் ஜயர் எனவும் வழங்கப்படுகின்ற கடவுட் பணியாளர் இங்கே
ஞான சிங்கனாக உருவகம் செய்யப்பட்டுள்ளமை இதன் சிறப்பான வெளிப்பாடாக அமைகின்றது.
இதில் மேலுமொரு சிப்பம்சமாக வலைகளை விரித்திடுவதற்குச் சிங்கனுக்குத் துணையாக நூவன்
 
 
 
 
 

வருகிறான். அதாவது குருவானவர்க்குத் துணையாக உபதேசி (நற்செய்தியாளன்) வருகிறான். மறைப்புலி எனக் குறிப்பிடப்படுகின்ற நூவனும் சிங்கனுமாக (நற்செய்தி) வலைகளை விரிக்கிறார்கள். இந்த ஞானவலைக்குள் சிக்குகின்ற மக்களாகிய பறவைகள் இன்ன இன்னவை எனப் பாடப்படுகிறது. உலக நாடுகள் அனைத்திலுமிருந்து வந்த பறவைகள் இந்த ஞானவலைக்குள் வீழ்கின்றன.
ஒரு கிறிஸ்தவனின் வாழ்வில் பற்றிய பற்று எனும்
விசுவாசம் குறைதலோ மறைதலோ கூடாது. அது குறைந்தாலும் மறைந்தாலும் கிறிஸ்தவ வாழ்வு சிறக்காது எனும் உண்மை விசுவாசச் சிங்கியை காணாமல் சிங்கன் புலம்புகின்ற காட்சியாக அமையும் உருவக நிகழ்ச்சியின் மூலம் உணர்த்தப்படுகிறது.
திச்சைக் கண்ணாட்டியைப் பட்சைப் பெண்டாட்டியை சிங்கி என்று பலப்பல சொல்லிப் புலம்புகிறான் சிங்கன். இங்கே தமக்குள் விசுவாசக் குறைவு ஏற்பட்டிருப்பதை தம் முள்ளே உணர்ந்து வருந்துகிறார் குருவானவர். அவர் பற்றிய பற்றினை (விசுவாசத்தை) மீண்டும் உற்ற போது மிக்க மகிழச்சியுற்றார் என்னும் உண்மை சிங்கியைக் கண்டு பிடித்துக் கொண்ட சிங்கனின் பாட்டிலே எதிரொலிக்கின்றது. డ్డ
திருமதி. ஷாமிளா றஞ்சித்குமார் விரிவுரையாளர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகம்

Page 43
நிகழ்வுகள்
நடன வித்தகி சுபாஷிணி பத்மநாதன் அவர்களை விமலோதயா கலாசார பரதநாட்டிய கேந்திரா வழங் பரத நாட்டிய நிகழ்வு 21-01-2012 அன்று மான இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்ப இந்நிகழ்வு காலஞ்சென்ற பிரபல நடன ஆசிரி இராமையாபிள்ளை அவர்களின் நூற்றாண்டைக் கொன செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வி அவரது மாணவிகளும் வழங்கிய நடன விருந்
 

அதிபராகக் கொண்ட பகிய அபிநய தர்ப்பண லை வெள்ளவத்தை ாக நடைபெற்றது. பர் பத்மபூரீ வழுவூர் ண்டாடும் முகமாக ஒழுங்கு ல் சுபாஷிணி பத்மநாதனும் தில் சில காட்சிகள்

Page 44
55ញញម៉ាស៊ែប៊ី
4493 TITUDI
விபீஷணனுக்கு முழகருட்
ஆற்றங்கரையில் 7000 ஆண்டு பாரம்
ப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் அBITபடைப்பு இலக்கிய நயம் முதலியவற்றால் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடத்தை கம்பராமாயணமே பெற்றுள்ளது என்பர். மேற்படி அம்சங்களில் வால்மீகியின் மூலநூலையே மிஞ்சும் அளவுக்குக் கம்பரின் கம்பராமாயணத்தில் ஆழமான கற்பனைத்திறன் அமைந்து உள்ளதாக அறிஞர்கள் புகழ்வதுண்டு.
கம்பராமாயணத்தில் ஆரம்பத்திலுள்ள ஐந்து காண்டங்களின் பாடல்களின் எண்ணிக்கைக்கு சமமாக ஆறாவதாக உள்ள யுத்த காண்டத்தின் பாடல்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது. இதில் முதல் ஐந்து காண்டங்களின் பாடல் தொகை 6058 ஆகும். யுத்த காண்டத்தில் மட்டும் 4310 பாடல்கள் உள்ளன.
இந்த யுத்த காண்டத்திலேயே விபீஷணன் முடி சூட்டு வைபவமும் இடம்பெற்றுள்ளது. கம்பராமாயணத்தில் விபீஷணனுக்கு இரண்டு தடவை பட்டாபிஷேக நிகழ்வு நடைபெற்றுள்ளது. முதலாவதாக இராமேஸ்வரத்தில் அச்சாரமாக ஒரு தடவையும் இன்னொரு தடவை இராம - இராவண போர் ஓய்ந்த பின் களனி இராட்சியத்திலுள்ள ஆலயத்திலும் முடிசூட்டி வைக்கப்படுகின்றன.
 
 
 

யத்தின் முகப்பு க்கத் தோற்றங்கள்
GUTTroTu sojfá இலங்கை 16
டப்பட்ட களனி ஆலயம் பரியத்துடன் வரலாற்றுப் பெருமையுடன்
இராவணனுடன் சண்டையிட்டு இராமனிடம் சரணடையும் விபீஷணன் இராமனுடன் சமாதானமாகச் செல்லுமாறு விபீஷணன் இராவணனுக்கு ஆலோசனை கூறுகின்றான். ஆனால் இராவணன் விபீஷணனைக் கடிந்துகொள்கின்றான். இதையடுத்து, விபீஷணன் இலங்கையிலிருந்து புறப்பட்டு, இராமேஸ்வரத்தில் இராமன் இருந்த கடற்கரைக்கு வருகின்றான். விபீஷணனைக் கண்ட வானர வீரர்கள் அவனைச் சூழ்ந்து எதிர்க்க முனைந்தார்கள்.
சுக்கிரீவன், இலட்சுமணனோடு இராமர் இருக்கும் இடத்தை அடைந்து 'இராவணனின் தம்பி விபீஷணன் உங்களிடம் சரண்புக வந்திருப்பதாகக் கூறி, நாம் 6Tigrid;60).5LLJIT5 இருக்க வேண்டும்; இவர்கள் இராவணனின் ஒற்றர்களாக இருக்கலாம். நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொள்ளவே இங்கு வந்து இருக்கிறார்கள். இவர்களை இப்போதே பிடித்துக் கொன்று விட வேண்டும் எனக் கூறினார்கள். இதைக் கேட்ட இராமர் அனுமான் பக்கம் திரும்பி நீங்கள் உங்களுடைய அபிப்பிராயங்களைக் கூறுங்கள்' என்றார்.
உடசூஎத்தனை உளர், தெரிந்து எண்ண ஏய்ந்தவர், அத்தனைவரும், ஒரு பொருளை அன்று' என

Page 45
உத்தமர், அது தெரிந்து உணர, ஒதினார் வித்தக / இனி சிவிளம்ப வேண்டுமோ? அனுமார் 'விபீஷணன் இங்கு வர வேறு காரணமே இருக்க வேண்டும். வாலியை இராமர் கொன்று சுக்கிரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்ததை விபீஷணன் அறிவான். அது போல தனக்கும் இலங்கை கிடைக்கலாம் என நினைத்தே அவன் இங்கே வந்திருக்க வேண்டும். அவனை நான் ஒற்றனாகக் கருதவில்லை. நாடு தனக்கு வேண்டும் என்ற ஆசையால் அவன் நம்மிடம் சரண்புக வந்திருக்கிறான். எனவே அவனுடன் பேசிப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்’ எனக் கூறினார். அனுமன் கூறியதைக் கேட்டு, இராமன் விபீஷணனை ஏற்றுக்கொண்டார்.
இராமன் விபீஷணனை ஏற்றுக் கொண்ட பிறகு, அருகில் நின்றிருந்த இலட்சுமணன் கையாலேயே பக்கத்தில் ஒடிக் கொண்டிருந்த நதியின் தண்ணிரைக் கொண்டுவரச் செய்து விபீஷணனின் தலையில் அந்தத் தண்ணிரைத் தெளித்து நடக்கப்போகும் போரில் நான் உன் சகோதரன் இராவணனை வெல்வேன். உன்னை இலங்கையின் அரசனாக்குவேன்’ என்று விபீஷணனுக்கு அச்சாரமாக அந்த நதியின் நீரால் பட்டாபிஷேகம் செய்தார். விபீஷணன்
இராமனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். இராமன்
 

& கலைக்கேசரி
45
விபீஷணனைத் தம்பியாக ஏற்றுக்கொண்டு, அவனுக்கு இருக்கை கொடுத்தார்.
குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு, பின் சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனோம் எம்ணிழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்.
வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் உட்பட இராமாயண இதிகாசத்தில் பல்வேறு பிரச்சினைக்குரியதாக விளங்குவது விபீஷணன் என்ற கதாபாத்திரம்தான். ஒவ்வொருவருடைய வாழ்விலும் சிற்சில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத இரண்டு கடமைகள் முன்னிற்கக் காணலாம். இந்தத் தர்மசங்கடமான சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்டவன் விபீஷணன். இந்தப் பாத்திரத்தைப் பொறுத்தவரையில் இரண்டு வினாக்கள் இன்றும் வினாவப்படுகின்றன. அண்ணனுக்குக் காட்ட வேண்டிய நன்றியை மறந்து சந்தர்ப்பம் கிடைத்த பொழுது பகைவனிடம் சேரலாமா என்பது முதல்வினா. அப்படியே சேர்ந்தாலும் அண்ணனைக் காட்டிக் கொடுக்கின்ற
முறையில் பல உளவுகளை இராமனுக்குக் கூறலாமா என்பது இரண்டாவது வினா.

Page 46
ថាញ៉ាម៉ាហ្វ្រី 46
இராவணன் வதம் உயிரிழந்த இராவணனின் உடல் தேரிலிருந்து தலை
கீழாய் தரையில் விழுகிறது. தேரிலிருந்து கீழே இறங்கி வந்து, அருகில் நெருங்கி, இராவணனுடைய உடலைப் பார்த்தார் இராமன். இராவணனது முதுகில் திசை யானைகளின் கொம்புகள் குத்திய வடுக்கள் தெரிந்தன. இவைகளைப் பார்த்த இராமன் இது புறமுதுகிட்டதால் L. IL TIL வடுக்களோ என்று ஐய்முற்றான்.
இராமன் விபீஷணனை அழைத்து, இந்த வெற்றி சிறப்புடையது அன்று என்றான். விபீஷணன் மனம் வருந்திச் சொல்கிறான். செல்வனே! நீ சொல்லும் சொற்கள் பொறுத்தமற்றவை. இராவணன் பேரர் செய்யும் இ விருப்பத்தால் உலகத்தில் எங்கெங்கோ போய்த் தேடியும் பகைவர் இல்லாமையால், பெரிய திசை யானைகளோடு பொருதினர்ன் அவற்றின் கொம்புகள் மார்பில் குத்தி ஆழப் பதிந்து ஒடிந்தன. அந்த வடுக்களையே நீ முதுகில் பார்த்தாய் அன்றி, அது போர்க்கள் வடுக்கள் அல்ல என்றான். ့် ဗွို’
தேவர்கள் எல்லாம் இவனுக்குப் பயந்து கிடந்தவர்கள் இவன் இன்று "இறந்து விட்ட்ான் என்று சொன்னாலும், அவர்கள் நம்பாமல் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
என்றான் விபீஷணன்.
 

அதற்கு இராமன், அப்படியா?" என்று கேட்டுவிட்டு, இராமனும் தன் மனதில் தோன்றிய ஐயங்களுக்காக வெட்கம் நீக்கி, விபீஷணனை நோக்கி, விபீஷணா நீ இவனுக்கு ஈண்டு ஈமக்கடன்களைச் செய்வாயாக!' என்று பணித்தான்.
இறந்து கிடந்த அண்ணனின் உடலைக் கண்டு விபீஷணன் அதன் மேல் விழுந்து கதறுகிறான். சீதையை விட்டுவிடு, இவள்த்ான் ப்ெண்ணின் வேதவதி என்று சொன்னேனே, இவளால் உனக்கு மரணம் நேரும் என்று எச்சரித்தேனே, அதைக் கேட்காமல் 'உன் குடும்பம் முழுவதும் இறந்துபடப் போனாயே ! ஜானகி எனும் நஞ்சு உன்னைத் தன் கண்ணால் பார்த்த மாத்திரத்தில் உன் உயிர் போய்விட்டதே! அண்ணா அண்ணா! நீ எங்கு போனாய்? பாட்டனாம் பிரமனுடைய நாட்டை அடைந்தாயோ? பிறைசூடிய சிவபிரான் தன் சிவலோகம் அடைந்தாயோ? எமனும் அஞ்சும், உன் உயிரைக் கவர்ந்து போனவர் எவரோ? கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று தங்கை சூர்ப்பனகை உன்னை பழி தீர்த்தாளோ? சொர்க்கத்திலும் நரகத்திலும் அனைவருமே நம்மோடு பகைமை கொண்டார். நீ போன இடத்தில் யார் முகத்தில்
விழிப்பாய் ?
விபீஷணன் ஆலயத்திற்கு அருகில் விகாரை

Page 47
இராவணனுடைய ஈமக் கடன்களை விபீஷணன் செய்து முடிக்கிறான். அனைத்துக் காரியங்களும் முடிந்த பிறகு, அனைவரும் இராமனிடம் வந்து சேருகின்றனர். இராமன் தன் தம்பி இலக்குவனை அழைத்து, நீ போய், சுக்ரீவன், அனுமன் மற்றும் வானர வீரர்களை அழைத்துக் கொண்டு, விபீஷணனுக்கு வேதமுறைப்படி இலங்கை அரசின் முடிசூட்டி பட்டாபிஷேகம் செய்து வருவாயாக’ என்று பணித்தான்.
விபீஷணன் முடிசூட்டு விழா இதனைக் கேட்டு தேவர்கள் விபீஷணனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர். இலக்குவன் அனைவர்களது முன்பாகவும் விபீஷணனுக்கு வேத கோஷங்கள் முழங்க மங்கள ஸ்நானம் செய்வித்து, புத்தாடைகள் அணிவித்து, முடிசூட்டி இலங்கைக்கு அரசனாக்கினான்.
இந்த முடிசூட்டும் நிகழ்வில் இராமன் கலந்து கொள்ளவில்லை. காரணம் 14 ஆண்டுகள் நிறைவடைய வில்லை என்பதனால் அவர் காட்டிலிருந்து நகருக்கோ அல்லது கிராமத்திற்குள்ளோ பிரவேசிக்க முடியாது என்பது
இலங்கையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட விபீஷணன் முதலில் இலக்குவனை வணங்குகிறான். பிறகு இராமன் இருக்குமிடத்திற்கு சென்று அவரை வணங்கி ஆசி பெறுகிறான். இராமன் விபீஷணனைத் தழுவிக் கொண்டு ராஜ நீதிகள் பலவற்றை எடுத்துச் சொல்கிறார்.
இன்றே நான் அயோத்தி செல்ல யாதேனும் மார்க்கம் உண்டோ?' என்று இராமன் விபீஷணனிடம் வினாவினான். அதற்கு விபீஷணன் இராமனை வணங்கி, ஜயனே! இன்றே விரைந்து சென்று சேரும்படியான விமானம் இங்கே இருக்கிறது. இந்த விமானத்தை குபேரனிடமிருந்து இராவணன் கவர்ந்து கொண்டான். இந்த விமானம் எழுபது வெள்ளம், பெரும் சேனை ஏறி அமர்ந்தாலும் தளராது பறந்து செல்லக் கூடியது. நீங்கள் இதில் ஏறி உட்கார்ந்து இன்றே அயோத்தி போய்ச் சேர்ந்துவிடலாம்' என்றான்.
விபீஷணன் குறிப்பிட்ட அந்த புஷ்பக விமானம் வந்து சேர்ந்தது. விமானத்தில் இராமனுடன் சீதையும் இலக்குவனும் மற்றும் இராமனின் பட்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக விபீஷணன், சுக்கிரீவன் மற்றும் வானரப் படைகள் அமர்ந்து கொள்கிறார்கள்.
களனி விபீஷணன் ஆலயம் இந்த முடி சூட்டும் நிகழ்வு தற்போது களனி ரஜமகா விகாரை என்று அறியப்படும் ஆலயத்திலேயே நடைபெற்றதாக சரித்திர சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயத்தில் விபீஷணன் தெய்வத்திற்கு ஆலயம் உண்டு. ஆலயத்திற்கு அருகில் விகாரையும் காணப்படுகின்றது. ஆலயத்தின் பின் பக்கச் சுவரில் விபீஷணனுக்கு இலக்குமணன் பட்டாபிஷேகம் செய்யும் காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இலட்சுமண

பட்டாபிஷேகம் நடைபெறு g. Té

Page 48
អ៊ែងហ្គ្រាម៉ារ៉ៃរឺ 48
 
 
 
 

முழுமையாக, இராஜ கம்பீரத்துடன் ஆயுதம் தரித்து, சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் விபீஷணனுக்கு மலர் தூவி பட்டாபிஷேகம் செய்வதையும் அருகில் பெண் ஒருவர் அமர்ந்திருப்பதையும் குறித்த அந்த சிற்பத்தில் காணலாம்.
இந்தப் பெண்ணை சில சிங்கள வரலாற்றாசிரியர்கள் மண்டோதரி எனக் குறிப்பிடுகின்றனர். இராவணன் இறந்த செய்தியைக் கேள்வியுற்ற மண்டோதரி போர்களம் விரைந்து இராவணனின் உயிரற்ற உடல் மீது விழுந்து தனது உயிரையும் மாய்த்துக் கொண்டதாக கம்பராமாயணம் தெரிவிக்கின்றது. மேற்குறித்த ஆலயத்தில் காணப்படும் பட்டாபிஷேக சிற்பத்தில் பெண்ணின் சிற்பம் விபீஷணனின் மனைவியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வர அறிஞர்கள் தலைப்படுகின்றனர். விபீஷணன் இல்லறத்தில் ஈடுபட்டவன் என்றும் அவனுக்கு திரிஜாதகி என்ற மகள் இருந்ததாகவும் ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் களனி பிரதேசத்தில், அதாவது களனி ஆற்றங்கரைக்கு அருகில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 2363 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டதாக மகாவம்சம் கூறுகின்றது. மகாவம்ச குறிப்புகளின்படி கி. மு. 523ஆம் ஆண்டில் கெளதம புத்தர் ஞானம் பெற்று எட்டு வருடங்களின் பின்னர் மூன்றாவது முறையாக இலங்கைக்கு விஜயம் செய்த போது குறிப்பிட்ட ஆலயத்திற்கும் விஜயம் செய்து களனி ஆற்றில் நீராடிச் சென்றதாக ஆலய வரலாற்று ஏடுகள் எடுத்தியம்புகின்றன.
7000 வருடங்களுக்கு முற்பட்ட விபீஷணன் இராட்சிய காலகட்டத்திலிருந்து உள்ளூர் மக்களின் மத்தியில் வழி வழியாக வரும் பழக்க வழக்கங்கள் சில இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக விகாரையில் வசிக்கும் பெளத்த குருமாருக்கு இரவு வேளை உணலு உள்ளூர் மக்களாலேயே வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட கால வழக்கு விசாரணைகளுக்குத் தீர்ப்புக் கிடைக்கவும், நோய் நொடிகளிலிருந்து சுகம் பெறவும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு நம்பிக்கையுடன் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
10 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நாகர் இனத்தை சேர்ந்த மன்னனான மணியக்கிய அரசன் இந்த விகாரையை நிர்மாணம் செய்த போதிலும், இதை முதன்முதலாக தேவ நம்பிய தீசனுடைய தம்பி யுத்திய என்ற மன்னன்
புனருத்தாரணம் செய்தான்.
1510 ஆம் ஆண்டுகளில் போர்த்துக்கேயர் கோட்டை அரசுடன் வர்த்தக உறவுகளைப் பேணிவந்திருந்த போதிலும் அவர்களால் ஆலயம் சுக்குநூறாக உடைக்கப்பட்டது. மீண்டும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் போது புதிதாக ஆலயம் நிர்மாணம் செய்யப்பட்டது.
- மிருணாளினி

Page 49
6603-6DGD 5ura)
நழகர் Gangan
னிதர்கள் சிலர் பிறக்கும் போதே மேதைகளாகப் பிறக்கின்றார்கள். சிலர் பிறந்த பின்னர் வருத்தியும் வலிந்தும் மேதைமையைப் பெற்றுக் கொள்கின்றார்கள். சிலர் மீது இம்மேதைமை வலியவே திணிக்கப்படுகின்றது என ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. இவ்வாக்கியத்தில் முதலாவதாகக் குறிப்பிட்டுள்ள கருத்திற்கமைவாகப் பிறக்கும்போதே கர்நாடக இசைக்குரிய மேதைமையோடு பிறந்தவர்தான் எஸ்.ஜி. கிட்டப்பா. ஆனாலும் இந்த இசை மேதையின் அறிவையும் ஆற்றலையும் முற்றுமுழுதாக இம்மண்ணிலும் மக்கள் மீதும் பரந்து செறிந்து சுவற விடாமல் குருத்திலே கொய்யப்பட்ட விருட்சம்போல இவர் வாழ்நாட்கள் இருபத்தெட்டு ஆண்டுகளோடு நிறைவாகியது, எமக்கெல்லாம் ஏற்பட்ட துர்ப்பாக்கியம் என்றே கருத வேண்டும்.
இசையுலகில் புலமை மிக்கவராக மட்டுமன்றி, நாடகத் துறையிலும் மிகுந்த புலமைமிக்க நடிகராக ஒளி விட்டு பிரகாசித்த கிட்டப்பா முன் இவ்விரு துறைகளிலும் எளிதில் யாருமே கிட்டப்போக முடியாதென இசைமேதைகளும் நாடகக் கலைஞர்களும் பெருமையாகக் கூறி மகிழ்வர். அத்தனை தூரம் இசையுலகிலும் நாடகக் கலையிலும்
 

பேற்றையுடையவரே இந்த மேதை விஷ்ணு திகம்பரர்
என்பவர் வடநாட்டுச் சங்கீதமேதை. அவர் பல வடநாட்டுச் சங்கீத மணிகளின் குரு பீடமாகவும் நடுநாயகமாகவும் விளங்கிய பேரறிஞர். அவர் ஒரு தடவை கிட்டப்பா கண்ணனாக நாடகமேடையில் நடித்துக்கொண்டே பாடிய
திறமையை மேடையிலிருந்தபடியே ரசித்து மகிழ்ந்தவர்.
அவருடைய நடிப்பால் கவரப்பட்டு உள்ளம் முழுவதும்
உவகையால் ததும்ப நம்பிரான் கண்னனின் புல்லாங்குழலே இது என்று பிரமிப்புடன் மேடையிலிருந்து உடனே எழுந்து தனக்கு இடப்பட்டிருந்த மாலையைக் கழற்றிக் கிட்டப்பாவின் கழுத்தில் அணிந்து நீ நிஜமாகவே கண்ணனேதான் என்று பயபக்தியோடு பாராட்டிப் பெருமை சேர்த்தார். இப்படிப் பார்த்தோர் பரவசமுறும் வகையில் பாடியும் நடித்தும் பலருடைய உள்ளங்களையெல்லாம் கவர்ந்தவர் எஸ். ஜி. கிட்டப்பா அவர்கள்.
இசையுலக மேதைகளின் பாராட்டுக்கள் மட்டுமன்றி முதுபெரும் தமிழறிஞரான பி. பூரீஅவர்கள், நான் கண்ட கிட்டப்பா என்ற தன் கட்டுரைத் தலைப்பிலே ஒரு தடவை கிட்டப்பாவின் நடிப்புத்திறனுக்கும் இசைப் புலமைக்கும் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்ட நான், இவர் நந்தனாராக நடித்ததையும் பார்த்திருக்கின்றேன். அரிச்சந்திரனாக வந்து தோன்றியதையும் கண்டிருக்கிறேன். 'காண்பது வேடமல்ல.

Page 50
நடித்ததையும் கண்டேன். நடிகர் தம் நடிப்புத் திறனைக்
காட்டிலும் இசைத்திறனாலே கண்ணனாகி விடுகிறார். முருகனாகி விடுகிறார் என்ற இந்த இரகசியத்தையும் தெரிந்து கொண்டேன் எனப் புகழ்கின்றார்.
இவை வெறும் வெளித்தோற்றத்தால், நடிப்புக் கவர்ச்சியால், இரசனையால் மட்டும் கவரப்பட்ட சாதாரண
மக்களின் வார்த்தைகளாகவன்றி, இவையெல்லாம் பெரும் பெரும் மேதைகள், அவ்வத்துறை நிபுணர்கள், புலமை
அவர்களின் மேதைமையின் உச்சநிலை எம்மை பிரமிக்க
கோரின் கூற்றுகள் எனப் பார்க்கும்போது கிட்டப்பா
வைக்கின்றது.
1905ஆம் ஆண்டு செங்கோட்டையிலே பிறந்த கிட்டப்பாவிற்கு எஸ். ஜி. ஐயாத்துரை, எஸ். ஜி. சுப்பையா, எஸ். ஜி. செல்லப்பா, எஸ். ஜி. காசி ஐயர் என நான்கு சகோரர்களிருந்தனர். இவருட்படச் சகோதரர்கள் யாவருமே 3: இசை ൈ என்பவற்றோடு மிக்க ஈடுபாடுள்ளவர்களாக இருந்தாலும் கிட்டப்பா அளவிற்கு உச்சத்தைத் தொட்டவர்களென்று குறிப்பிட முடியாது. சுப்பையா இரண்டாவது ராஜபார்ட் வேஷங்களிலும் காசி ஐயர் சிறு சிறு வேடங்களிலும் செல்லப்பா தசாவதாரம் போன்ற நாடகங்களில் தோன்றித் தம் கலைத்துவத்தைப் பதிவு செய்திருந்தனர். செங்கோட்டைச் சகோதரர்கள் எனச் செல்லமாக அழைக்கப்பட்ட இந்த ஐவருள் நடிப்புப் புலமையாலும் இசை நிபுணத்துவத்தாலும் சிகரம் தொட்ட சிறப்பைப் பெற்றவர் எஸ்.ஜி. கிட்டப்பாவே ஆவார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்திப்பு இவருக்கு மகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் அளித்தது. தொழில் நிமித்தம் கூடிப்பழகும்

Page 51

சில மாதங்களால் கேபிஎஸ் அம்மா அவர்கள் ஒரு பெண் குழந்தைக்குத் தாயான
இவர்களைப் போய்ப் பார்க்கவோ
செய்யவில்லை. அவரும் 6 படுக்கையானார். காலன் விரைந்தெழுந்துவந்து அவரை எடுத்துச் சென்று விட்டான். அவரது மறைவு அம்மையாரை
மிகவும் வருத்தியது. அவர் கணவன் மறைவின் பின் வெள்ளைச் சேலை உடுத்தி முருகபக்தையாக தன்னை உருவாக்கிக்கொண்டு இறைபணியோடும்
கலையோடும் தன் வாழ்நாளைக் கடத்தினார்.
ສຄນ ஜி. கிட்டப்பா இவ்வுலகில் 28 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தபோதிலும் அவரது வாழ்க்கை முன்னுதாரணமானது.
28 ஆண்டுகள் மாத்திரமே வாழ்ந்த கிட்டப்பா நாடக, இசைத்துறைகளில் வழிவந்த மேதைகள் பெரியோர்களை எல்லாம் மிக விசுவாசத்துடன் பேணி மதித்து மரியாதை செய்யும் பணியில் முன்னணிவகிப்பவர் தியாகராஜ சுவாமிகளின் உற்சவம் வருடாவருடம் வழமையான சிறப்புக்களுடன் நடந்தேறும். அதற்கான உற்சவ நிதிக்காக கிட்டப்பா - சுந்தராம்பாளின் நாடகம் காஞ்சிபுரத்தில் ஆடப் பெற்றபோதெல்லாம் இவருடைய பாடல்கள் உணர்ச்சி பூர்வமாகப் பாடப்பட்டபோது பிடில், மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல் என்ற சகல பக்கவாத்திய வித்துவான்களும் தாம் கலையின் உச்சக்கட்டத்தைத் தொட்டு வந்ததாகப் LJITUTITL ʼ Lq வியந்தனர். மாமேதைகளான திருச்சி கோவிந்தசாமிபிள்ளை, காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை, மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர், லட்சுமி ரத்னம்மாள் போன்ற பெரும்புள்ளிகலெல்லாம் g)LLLjLITசுந்தராம்பாளின் இசை, நாடகவலையில் விழுந்தவர்கள் என்றால் சாதாரண மக்களை என்னவென்பது?
வெறும் பாராட்டுக்கள் மட்டுமன்றி இந்நாடக, இசை மேதையை நாடிப் பல பரிசில்களும், தங்க மெடல்களும்
ஏராளமான பரிசுப் பொதிகளும் குவிந்த Σ வண்ணமிருந்தன. கிட்டப்பா என்றால் நாடகம், இசை எனவும் இசை, நாடகம் என்றால் கிட்டப்பா ஜோடியே எனவும் மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொண்டனர். இன்னும் சில ஆண்டுகள் வாழும்பேறு பெற்றிருந்தால் கலைத்துறையில் கிட்டப்பா ஒரு சகாப்பத்தத்தையே உருவாக்கக் 5F6).L q-ULI மேதாவியாயிருப்பார் என்பதில் கிஞ்சித்தும்
- பத்மா சோமகாந்தன்

Page 52

பல்கலாசார மரபுரிமை நகரங்கள் மெலாக்கா மற்றும்
ஜோர்ஜ் டவுண்
லாக்கா நீரிணையில் (மலேசியா) உள்ள வரலாற்று நகரங்களாக விளங்கும் மெலாக்காவும் (Melaka) ஜோர்ஜ்டவுனும் (George town) பல்கலாசார விழுமியங்களுடன் சிறப்புற்று விளங்குபவையாகும். நீரிணையில் உள்ள இந்நகரங்களுடன் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் கலாசாரப் பரிவர்த்தனைகள் 500 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்பதிலிருந்து அவற்றின் பழைமை புலனாகும்.
மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளின் பல்கலாசார செல்வாக்குகள், இந்நகரங்ளுக்கு ஒரு தனித்துவமான பல்கலாசார மரபுரிமையை அளித்திருக்கிறன. இது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் துலங்குகின்றது. மெலாக்கா தனது அரசாங்க கட்டிடங்கள், தேவாலயங்கள், சதுக்கங்கள் மற்றும் கோட்டைகள் ஆகியவற்றின் மூலம், 15 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகும் மலே சுல்தானின் ஆட்சி, மற்றும் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் போர்த்துகேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆட்சிகளின் வரலாற்றுகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
அதேவேளை ஜோர்ஜ் டவுண் நகரம் வதிவிடங்கள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் மூலம், 18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உருவான பிரிட்டிஷ் சகாப்தத்தைப் பிரதிபலிப்பதாக விளங்குகின்றது. அதேபோன்று இரு

Page 53
கலை சார்ந்ததும், கலாசார ரீதியில் அமைந்ததுமான நகரக் காட்சிகள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் எங்கும் காண முடியாதவையாகும்.
கிழக்கையும் மேற்கையும் இணைக்கின்ற வர்த்தகத் துறைமுகங்கள் என்னும் அதன் முன்னாள் கடமைகளின் போது ஏற்பட்ட வரலாற்று ரீதியானதும், கலாசார ரீதியானதுமான செல்வாக்குகளை மலாக்கா நீரிணையில் எடுத்துக் காட்டும் காலனித்துவ நகரங்களுக்கு இவை இரண்டும் குறிப்பிடத்தக்க உதாரணங்களாகும். பெரிய பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து மத்திய கிழக்கு இந்திய உப கண்டம் மலே தீவுக் கூட்டங்கள் ஊடாக சீனாவுக்குச் செல்லும் வர்த்தகப் பாதையிலிருந்து உருவான பல்கலாசார மரபுக்கு இன்றும் இவை மிகப் பூரணமான வரலாற்று நகர இடங்களாக விளங்குகின்றன. இதன் காரணமாக இவ்விரு நகரங்களும் மலே தீவுக் கூட்டங்கள், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வந்த கலாசார அம்சங்களுடன் இணைந்து தனித்துவமானதொரு கட்டிடக்கலைக் கலாசாரம், நகர கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றன.
இரு நகரங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளின் மதிப்பு தனித்துவமான சர்வதேச விழுமியத்தை வெளிப்படுத்துவதற்கு தேவையான அம்சங்களின் பிரசன்னத்தோடு தொடர்புடையதாக உள்ளது. பொருட்கள் அதன் அதிகாரபூர்வ தன்மையைக் கொண்டிருக்கின்றன. அத்துடன் நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள், மாதிரிகள், பொருட்கள், வழிமுறைகள், தொழில் நுட்பங்கள் மற்றும் வேலை நுணுக்கங்கள் ஆகியன தொடர்பாக, உகந்த செயற்பாடுகளுடன் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணைவாக உள்ளன. சொத்துக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும்
போதுமானவையாக உள்ளன. வரலாற்றுக் காலத்தில்
இருந்து மலாக்கா நீரிணை கிழக்கிற்கும்
 


Page 54

மேற்கிற்குமிடையில் கடல் வாணிபத்துக்கும் மற்றும் தொடர்புகளுக்கும் ஒரு வழியாக இருந்து வருகின்றது. இதனால் செல்வாக்குமிக்க இராசதானிகளும் நகரங்களும் எழுந்தன. அத்துடன் பெருமளவில் குடிவரவுகளும் ஏற்பட அண்டைய நாடுகள் மற்றும் தூரதேசங்களின் செல்வாக்குகளும் தோன்றி ஒரு பல்கலாசார அடையாளம் தோன்றியது.
14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகரமும் மெலாக்கா அரசும் உருவானது. ஒரு சிறிய மீன்பிடி கிராமம், துரிதமாக பெரும் துறைமுகமாக உருவெடுத்து அப்பகுதியின் பழைய துறைமுகங்களை மறைத்தது. சீன மன்னரின் ஆதரவினால்
அரசன் சுயேச்சையாக இயங்கினான். பல இனங்கள் அங்கு குடியேறின. அங்கு சுமார் 80 மொழிகள் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. ஒவ்வொரு இனத்தவரும் தமக்குரிய பகுதிகளில் வசித்தனர். இஸ்லாம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அரசன் சுல்தான் என்னும் பட்டத்தைப் பெற்றான். மெலாக்கா இஸ்லாம் கற்பதற்கான நிலையமானது.
1511 ஆம் ஆண்டு மெலாக்கா நகரம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது. தற்போதுள்ள சென்ற். போல்ஸ் மலையைச் சுற்றி ஒரு கல் கோட்டை கட்டப்பட்டது. இந்த அரணுக்குள் ஆளுனர் மற்றும் ஆயர் ஆகியோருக்கான மாளிகைகள், 5 தேவாலயங்கள், இரு வைத்திய மனைகள், ஒரு கல்லூரி மற்றும் பொதுக் கட்டிடங்கள்

Page 55
கட்டப்பட்டன. பள்ளிவாசல்களும் கல்லறைளும் இஸ்லாத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் அழிக்கப்பட்டன. இருப்பினும் வெவ்வேறான இனத்துவப் பகுதிகள், பல்கலாசாரம் ஆகியன தொடர்ந்தன. மெலாக்கா அதன் அயலில் உள்ள மலேயர்களால் அடிக்கடி தாக்கப்பட்டது. மலாக்கா நீரிணையின் ஊடாகப் பயணம் செய்யும் ஐரோப்பியர்களுக்கும் அவ்விடத்தைக் கைப்பற்ற ஆர்வம் ஏற்பட்டது. 1641 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் நகரத்தைக் கைப்பற்றினார்கள். 1619 ஆம் ஆண்டில் அவர்கள் ஜாவாவைக் கைப்பற்றினார்கள். மெலாக்கா அவர்களது பிரதான தளமானது. பின்னர் அவர்கள் சென்ற். ஜோன்ஸ் மலையில் கற்கோட்டை ஒன்றைக் கட்டினார்கள். கத்தோலிக்க சென்ற்.பீட்டஸ் தேவாலயம் 1710 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ தேவாலயம் 1753 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது தற்போ தும் பாவனையில் உள்ளது.
1795 - 1818 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மெலாக்கா பிரிட்டிஷாரின் கைக்கு வந்தாலும் 1824 ஆம் ஆண்டு மெலாக்கா முழுமையாக பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் வந்தது. 1786 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் ஜோர்ஜ் டவுணை உருவாக்கினர். அவர்கள் போர்த்துக்கேயர் மற்றும் டச்சுக்காரர்கள் போலன்றி, சுதந்திர வர்த்தகக் கொள்கையைப் பின்பற்றினர். புதிய நகரத்தில் வந்து குடியேறி ஏற்றுமதிப் பயிர்களை உற்பத்திச் செய்யுமாறு உலகம் முழுவதிலும் வாழும் மக்கள் பிரிட்டிஷாரால் தூண்டப்பட்டார்கள். தீவைப் பரிபாலனம் செய்வதற்கு வங்காளத்தில் உள்ள கிழக்கிந்தியக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது. 1826ஆம் ஆண்டு சிங்கப்பூர், மெலாக்காவுடன் நீரிணைக் குடியேற்றத்தின் ஒரு பகுதியானது. சில நூற்றாண்டுக் காலமாக இவ்விரு நகரங்களின் வளர்ச்சி, மலே, ஐரோப்பிய, முஸ்லிம், இந்தியா மற்றும் சீன செல்வாக்கு உட்பட பல்வேறு இனத்துவ மற்றும் கலாசார மரபுகளின் கலப்பின் அடிப்படையில் அமைந்தது. இவற்றின் காரணமாக மொழிகள், சமய நடைமுறைகள், வைபவங்கள் மற்றும் விழாக்கள் உட்பட ஒரு பல்கலாசார மரபு முகிழ்த்தெழுந்தது.
மெலாக்காவில் 1979 ஆம் ஆண்டில் ஒரு பாதுகாப்புப் பகுதி முதன் முதலாக அடையாளங் காணப்பட்டது. இது 1985 ஆம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டது. 1988 ஆம் ஆண்டு சர்வதேச கருத்தரங்கொன்று நடத்தப்பட்டு, சென்ற்.போல்ஸ் மலைப்பகுதி ஒரு LDTL/ வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1970 களின் முற்பகுதியில், ஜோர்ஜ் டவுணின் பாதுகாப்பு பகுதிகள் பற்றி ஓர் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலும் சீன கடை வீடுகளும் காலனித்துவ கட்டிடங்களும் கொண்டு விளங்கும் பினாங்கில் உள்ள இவ்விரு வரலாற்று நகரங்களும் யுனெஸ்கோ உலக மரபு இடங்கள் பட்டியலில் 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி
சேர்க்கப்பட்டது.
 


Page 56

ஆகவே மலேசியா இப்பட்டியலில் நான்கு இடங்களைக் கொண்டிருக்கிறது. குனுங் முலு தேசிய பூங்கா (SaraWak, tropical karst area) மற்றும் கினாபலு பூங்கா ஆகியன மற்றைய இரு இடங்களுமாகும். பினாங் அரசின் தலைநகராக விளங்கும் ஜோர்ஜ்டவுண் என்னும் பெயர் பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் ஜோர்ஜின் நினைவாக சூட்டப்பட்டது. இங்குள்ள மக்கள் தொகை சுமார் பன்னிரெண்டு இலட்சத்து 53 ஆயிரத்து 748 பேர் எனவும், மலேசியாவில் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நகரமெனவும் கூறப்படுகிறது. இந்நகரின் வரலாற்று இடங்களை உள்ளடக்கிய முக்கிய பகுதிகளில் லெபு அஷே மலே பள்ளிவாசல், ஜலாம் மஸ்ஜித் கப்பித்தான் அரச பள்ளிவாசல், கருணை மாதா ஆலயம், பூரீ மாரியம்மன் ஆலயம், குஹ" கொங்ஸி, சென்ற்.ஜோர்ஜ் தேவாலயம், அஸம்சன் தேவாலயம், சென்ற். சேவியர் அமைப்பு, கொன்வென்ற் லைட் வீதி, சிறிய இந்தியா, நூதனசாலை, நீதிமன்ற கட்டிடம், கடற்கரை வீதியின் வர்த்தகப் பகுதி, கோர்ன் வல்லிஸ் கோட்டை, முற்றவெளி, நகர மண்டபம் மற்றும் துறைமுகப் பகுதிகள் ஆகியன அடங்கும்.
மெலாக்காவில், சென்ற்.போல்ஸ் மலைக்குப் பக்கத்தில் உள்ள சரித்திர இடங்கள், 17 ஆம் நூற்றாண்டு டச்சு ஸ்ரட்ஹஸ் கட்டிடங்கள், டச்சுக் காலத்துக் கட்டிடங்களைக் கொண்ட ஜொங்கர் வீதி, ஜாவன் ருகங் பெஸி, கம்புங் மோர்ரென் மற்றும் மலாக்கா நதி ஆகியன உலக மரபுரிமை இடங்களின் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1857 ஆம் ஆண்டு ஜோர்ஜ்டவுண் மாநகரசபை உருவாக்கப்பட்டது. இது மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதலாவது உள்ளூராட்சி சபையாகும். கடந்த காலத்தில் ஜோர்ஜ்டவுணில் மின்சார டிராம்கள், ட்ரொலி பஸ்கள், இரண்டு தட்டு பஸ்கள் ஆகியவற்றுடன் சிறந்த போக்குவரத்து சேவைகள் இருந்தன. ஆனால் 1970 இல் இவை நிறுத்தப்பட்டுள்ளன. இன்று ஜோர்ஜ் டவுண் வீதிகள், பஸ்கள் ஆகியவற்றால் நன்கு தொடர்பு படுத்தப்பட்டதாக இருக்கிறது. ஜொலுரொங் அதிவேக பாதை, நகரத்தை பாயான் லெபாஸ் மற்றும் பினாங் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவதாக உள்ளது. மலேசியாவின் வட பகுதிக்கு பினாங் சர்வதேச விமான நிலையம் பிரதான விமான நிலையமாக விளங்குகின்றது.
பினாங் துறைமுகம் நான்கு வெவ்வேறு துறைமுகங்களைக் கொண்டிருக்கிறது. அத்துடன் இங்கு இலகுரக கைவிடப்பட்ட விரைவுச் சண்டைக் கப்பல் ஒன்றும் உள்ளது. இது பலரையும் கவரக்கூடிய ஒன்றாக விளங்குகின்றது. அது ஒரு கட்டிடக்கலை முத்து எனவும் கருதப்படுகிறது. உல்லாசப் பயணிகள் இந்நகருக்கு பெருமளவில் விஜயம் மேற்கொள்ளுகின்றனர். vక్త
- கங்கா

Page 57
தட்டச்சு இயந்திரத் அதன் வ
ன்றைய நடைமுறையில் ஊடகத்துறை வளர்ச்சிக்கு
உலகளாவிய ரீதியில் அரும் பணியாற்றிய இயந்திரம் தட்டச்சு இயந்திரம் என்றால் அது மிகையாகாது. ஆரம்பகாலத்தில் சில அடிப்படைத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யுமொரு இயந்திரமாக விளங்கிய தட்டச்சு இயந்திரமானது காலக்கிரமத்தில் பரிணாம வளர்ச்சிபெற்று அதிஉபயோகம் மிக்க ஓர் இயந்திரமாக விளங்குகின்றது.
இன்று கணனிமென்பொருள், தொழில்நுட்பவியலுடன் ஒன்று கூடி பலதரப்பட்ட எழுத்து உரு அமைப்புகள், வகைகள், மாதிரிகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு தனித்துவக்கலை வடிவமாக தட்டச்சுக்கலை மிளிர்கின்றது. கணனித் தொழில்நுட்பம் இணையத் தளம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒர் இன்றியமையா பொதுஜன ஊடகக் கலையாக வளர்ச்சியடைந்துள்ளது. பொதுவாக இன்று நாளாந்த நடைமுறை வாழ்க்கையுடன், இரண்டறக் கலந்துள்ள அதி முக்கிய ஊடகமாக தட்டச்சுக்கலை வளர்ந்து வருகின்றது.
சாதாரண வீடுகள் தொடக்கம் உயர் நிர்வாகப் பீடங்கள்,
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற
 

ந்தின் அறிமுகமும் ளர்ச்சியும்
நடைமுறைத் தேவைகளுக்கும் தொலைத்தொடர்பு பரிவர்த் தனங்களுக்கு இக்கலை வடிவம் உன்னத பங்களிப்பை நல்கி வருகின்றது.
1714ஆம் ஆண்டளவிலே தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமை வழங்கப்பட்டது. மேற்கிந்திய நாடுகளில் ஆரம்ப காலத்தில் ஆங்கிலமொழி எழுத்துக்களைக் கொண்ட தட்டச்சு இயந்திரங்களே பெரிதும் பாவனையில் இருந்தன. ஆயினும் காலக்கிரமத்தில் உலகில் வழக்கிலுள்ள மொழிகளுக்கும் தட்டச்சு இயந்திரங்கள் பா வனைக்கு வந்தன. இருந்தபோதிலும் பெரும்பாலான எழுத்துக்கள் ஆங்கில மொழி எழுத்துக்களைக் கொண்டிருந்த அதே வேளை தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி எழுத்துக்களுடன் தொடர்புபடுத்தி, ஆங்கில எழுத்துப் பொத்தான்களை அழுத்தும்போது அதனில் மாற்றீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட வேற்று மொழி எழுத்து பதியப்படும்.
மொழி மாற்றீடு வடிவமைக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் புழக்கத்தில் வந்தமையினால் ஆங்கிலம் தவிர்ந்த வேற்று மொழிகளிலும், தட்டச்சு இயந்திரப் பயன்பாடு பரவி பிரபல்யம் பெற்றது. மொழி மாற்றீடு மூலம் தட்டச்சு

Page 58
இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும், அதன் அடிப்படை தொழில்நுட்பம் ஒன்றாகவே மிளிர்ந்தது.
தட்டச்சு இயந்திரத்தின் வரலாற்று வளர்ச்சிப் படிநிலையினை எடுத்து நோக்கும்போது தட்டச்சு இயந்திரமானது, LIG) வகையிலும் L ᎫᎶu) வடிவமைப்புகளிலும் ஆரம்ப காலம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக கிறிஸ்ட்டபர் லாத் ஷேல்ஸ், கார்பஸ் கிளிங்டன், சூலே ஆகியோர் இன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் தட்டச்சு இயந்திரங்களின் ஆரம்ப வடிவமைப்பாளர்களாவர். தட்டச்சு இயந்திரத்தின் ஆரம்ப அடிப்படை வடிவமைப்பானது I868 ஆம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் வந்தன.
1874 ஆம் ஆண்டளவில் றெமிங்டன் எனும் ஒரு குறிப்பிட்ட கம்பனி பெரும்பாலும் இன்றைய வழக்கத்தில் உள்ள தட்டச்சு இயந்திரத்தின் வடிவமைப்பை ஒத்த தட்டச்சு இயந்திரத்தை வடிவமைத்தது. இத்தகைய அடிப்படை வடிவமைப்பைக் கொண்ட தட்டச்சு இயந்திரங்களே இன்று பெரிதும் தனிப்பட்டவர்களிடமும் நிர்வாகப் பீடங்களிலும் வழக்கத்தில் இருந்து வருகின்றன.
ஆரம்பகால அடிப்படை தட்டச்சு இயந்திரமானது ஒரு முனையில் எழுத்துக்கள் உலோகத் தகடுகளில் பொருத்தப்படும். வரிசைக்கிரக 6) JG65) G6NTUL I வடிவமைப்பிலான வளையத்துடன் இயங்கும் வகையில் கச்சிதமாக இணைத்தும் காணப்படும். அச்சுத் தண்டானது நெம்பு கோலுடனும் பொத்தான்களில் பொறிக்கப்பட்டு இருக்கும் எழுத்துகளுடனும் இணைக்கப்பட்டு இருப்பது வழமையாகும். பொத்தான்கள் எழுத்துக்களைத்
தாங்கிக் காணப்படும் இவ்வெழுத்துக்களாவன ஆங்கிலத்தில் 'கீபோர்ட் எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. பொத்தான்களை " அழுத்தி அமுக்கும்போது நடுவில் அமைந்துள்ள உருளைத் தாண்டி தட்டச்சு இயந்திர நடாவில் படும். தட்டச்சு இயந்திர நாடாவானது இயல்பாக மையூட்டம் அளிக்கப்பட்ட நாடாவாக விளங்கும். இதன் மூலம் எழுத்துவடிவங்கள் தாளில் பதிவுறும்.
தட்டச்சு இயந்திரத்தை பயன்படுத் துமிடத்து பொத்தான்களை அழுத்தி அடிக்கும்
எ முழ த து க  ைள த த ரா வி ல்
 
 
 
 
 
 
 
 

盡 ថាចាញ់
58
பார்க்கக் கூடியதாகவிருக்கும். ஆயினும் ஆரம்பகாலத் தட்டச்சு இயந்திரத்தை எடுத்து நோக்கும் போது தட்டச்சில் அடிக்கும் எழுத்துக்களைப் பார்வையிடுவது என்பது இயலாததாகக் காணப்பட்டது. தட்டச்சில் ஆவணங்களை அழுத்தி அடிக்கும்போது நடுவில் இடப்படும் றப்பர் உருளையானது நகர்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
காலக்கிரமத்தில் காலத்தின் தேவைக்கு அமைய ஒரு வகை ஆங்கில எழுத்துக்களையும் மட்டும் தட்டச்சு இயந்திரத்தில் அடிப்பது வழமையாகியது. காலக்கிரமத்தில் முதன்மை எழுத்துக்கள் (Capital Letters) சிறிய 6 TQLpgjigJjš56řT (Simple Letters) – g2,86 ULU 6 TQLpgjigJjš5GOOGITěji 55.L அடிக்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டியது.
பொத்தான்களை அழுத்தி அடிக்கும் போது ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டில் மணியோசை எழும். இது குறிப்பிட்ட தாளின் ஓர் எல்லை தாண்டப்படுகின்றது
என்பதை எமக்கு எடுத்தியம்பும் எச்சரிக்கை மணியோசையாகக் கருதப்படுகின்றது.
மேலும் ஆரம்பத்தில் வெறும் எழுத்து வடிவங்களை மட்டும் தட்டச்சு இயந்திரத்தில் அச்சிடமுடிந்தது. ஆயினும் காலக்கிரமத்தில் எண்கள், கணிதக் குறியீடுகள், கேள்விக்

Page 59

குறியீடு, ஆச்சரியக் குறியீடு போன்ற விகிதாசாரக் குறியீடுகள் போன்றனவும் தட்டச்சு இயந்திரத்தில் கையாளும் வகையில் தட்டச்சு இயந்திரம் வடிவமைக்கப்பட்டது.
தட்டச்சு இயந்திரத்தின் தொழில்நுட்ப அபிவிருத்தி காரணமாக, ஆரம்பத்தில் இடம்பெற்ற தட்டச்சு இயந்திரங்கள் பயன்படும்போது ஒலி கூடியவையாக் காணப்பட்டன. ஆயினும் படிப்படியாக காலக்கிரமத்தில் ஒட்டுமொத்த ஒலி குறைந்திருப்பதையும் காண முடிகின்றது. அளவு ரீதியில் கூட ஆரம்பத்தில் அதன் எடையின் அளவு கூடியதாகவும், படிப்படியாக அதன் எடையின் அளவு குறைந்ததாகவும் காணமுடிகின்றது.
1909 ஆண்டளவில்யே எடை கூடிய தட்டச்சு இயந்திரங்களுக்குப் பதில் எடை குறைந்த இலகுவில் பெட்டி அமைப்பிலான கையில் எடுத்துச் செல்லக் கூடிய தட்டச்சு இயந்திரங்கள் பாவனைக்கு வந்தன எனலாம்.
பெட்டி அமைப்பிலான தட்டச்சு இயந்திரத்தில் ஒட்டுமொத்த எடை குறைந்ததாகவும் அவற்றுள் பொருத்தப்பட்டுள்ள பொத்தான்களின் விட்ட அளவு சற்றுச் சிறியவையாகவும் காணப்பட்டன. எழுத்து ஒழுங்கு அமைப்புக்கூட ஒரு குறிப்பிட்ட வரிக்கிரக ஒழுங்கமைப்பைக் கொண்டதாக அமைந்திருந்தன.
ஆரம்பத்தில் கைகளால் மட்டுமே இயக்கும் தட்டச்சும், காலக்கிரமத்தில் மின்னியல் தட்டச்சும் பிற்காலத்தில் இலத்திரனியல் என்றும் உயர் தொழில்நுட்பவியல் தட்டச்சு இயந்திரமும் வழக்கத்தில் இருந்தன.
அவ்வாறே காலக்கிரமத்தில், தொழில்நுட்ப அபிவிருத்தியுடன் தொடர்புபட்டதாக தட்டெழுத்துத்துறை வடிவமைக்கப்பட்டது. இது பல வகையிலும் பரிமாண வளர்ச்சி பெற்ற ஒரு துறையாக விளங்குகின்றது.
கணனித் தட்டச்சு எழுத்தில், பல உத்திகள் உபாயங்கள் மேற்கொள்ள முடிகின்றது. குறிப்பாக புதியவைகளை புகுத்தல், வரிசைகளைச் சேர்த்தல் - பிரித்தல், ஒரு பகுதியில் இருந்து வெட்டி மற்றுமொரு பகுதியுடன் ஒட்டுதல், தேவை ஏற்படின் அழித்தல் போன்றவற்றுக்கு இக்கணனித் தட்டெழுத்துத் துறை பெரும் சேவையாற்றுகின்றது. கணனியுடன், கணனியில் இணைக்கப்பட்டுள்ள அச்சு இயந்திரனுடன் தேவையான அளவு பிரதிகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.
தட்டச்சு இயந்திரத்துடன் ஆரம்பமான தொடர்பாடல்த் துறையின் பரிமாண வளர்ச்சியே இன்று கையடக்க தொலைபேசி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் முறைமைக்கு வழிவகுத்தது என்றால் மிகையாகாது.
- சுபாஷினி பத்மநாதன்

Page 60
}ញយ៉ាវែ
யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி மற்றும்
ஆய்வுக் கருத்தரங்கின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. திருமதி. இ. கயிலைநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.
 

ாழிக்கூறுகள் புலப்படுத்தும் யாழ்ப்பாணப் பண்பாடு
முதாயத்தில் மொழியின் பங்கு சிறப்பானது. வேகமாக Ժ: , இன்றைய அறிவியல் உலகில் மொழியின் பங்கு தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. சமுதாயத்தின் இயக்கத்திற்கு மொழியே அச்சாணி போன்றது. சமுதாயத்தின் உண்மையான பண்பாட்டின் நிலையைத் தெளிவாகவும், வெளிப்படை ஆகவும் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது மொழியே என்றும் வர்ணிக்கப்படுகின்றது.
மனிதன் தன் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள மொழியைப் பயன்படுத்துகின்றான். மொழியைத் தான் வாழும் சமுதாயத்திடமிருந்து கற்றுக் கொள்வதைப் போன்று பண்பாட்டையும் சமுதாயத்திடம் இருந்து கற்றுக் கொள்கின்றான். பண்பாடு எவ்வாறு இருப்பினும் அது வளர மொழியும் அதனைப் பரப்பச் செய்தித் தொடர்புக் கருவிகளும் தேவைப்படுகிறது. சமூகம் தனது சந்ததியினருக்கும், பிறருக்கும் மொழி மூலம்தான் தன் பண்பாட்டை வெளிப்படுத்திக் காட்ட முடியும்.
சமயம், மொழி, கலைகள், சமுதாய அமைப்பு, பொருளியல், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவைகளே பண்பாட்டின் அம்சங்களாகும். பொதுவாகக் கூறினால் மக்களுடைய சமுதாய வாழ்க்கை முறைகளின் பண்பாட்டுச் சாயல் காலப்போக்கில் அவர்கள் பேசும் மொழியிலும் பிரதிபலிக்கப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
மொழிக்கும் பண்பாட்டிற்கும் இடையே உள்ள உறவு மிகவும் நெருக்கமானதும், ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததாகவும் காணப்படுகிறது. மொழியில்லையேல் மனித சமுதாயம், மனிதப் பண்பாடு, நாகரீகம் என ஒன்றும் இல்லை என்றே கூறிவிடலாம். காரணம் மொழியின்
மூலமே சமுதாயத்தில் எல்லா வகையான செய்திப் பரிமாற்றங்களும் ஏதாவது ஒரு வகையில் நடைபெற்ற

Page 61
வண்ணம் உள்ளன. சமுதாயத்தில் மொழி அவ்வப்போது ஆங்காங்கே ஏற்படும் சமுதாயச் சூழலுக்கு ஏற்றவாறு அதனுடைய அமைப்பு, இயக்கம் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு வழங்கப்படுவதை நம்மால் காணமுடிகிறது. இம்மாற்றங்களுக்குச் சூழ்நிலை மட்டுமல்லாது அம்மொழி பேசும் சமூகத்தின் பின்னணி, மொழிப் பின்னணி, சமுதாயக் கட்டுக்கோப்பு, சமுதாயப் பழக்க வழக்கங்கள், நாகரீகம் போன்ற பல சமூக மொழியியல் அம்சங்கள் காரணமாக அமைகின்றன.
மொழிக்கும், பண்பாட்டிற்கும் இடையே உள்ள உறவு முறைகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சிறப்பாக நாம் பேசும் யாழ்ப்பாணத் தமிழ் மொழிக்கூறுகள் எவ்வாறு நமது சமுதாயப் பண்பாட்டினை ஒரளவு புலப்படுத்திக் காட்டுகின்றது என்பதனைச் சுருக்கமாக விளக்கிக்கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். நமது சமுதாய அமைப்பில் தற்போது நன்கு ஊறிப்போன சில மொழிக் கூறுகள் எவ் வாறு எமது பண்பாட்டினை வெளிப்படுத்திக் காட்டுகின் றது என்பதனையே இங்கு ஆராய்வோம்.
முதலில் யாழ்ப்பாணத் தமிழ்மொழி வழக்கிலுள்ள முன்னிலைப் பெயர்களினைப் பார்ப்போம். நீ, நீர், நீங்கள் என்பன முன்னிலைப் பெயர்களாகும். சமூக ஏற்றத்தாழ்வு இல்லா நிலையிலேயே அச்சமூகத்தின் பேசும் மொழியில் தன்மை ஒருமைக்கு ஒரு சொல்வடிவமும், முன்னிலை ஒருமைக்கு ஒரு சொல்வடிவமுமே காணப்படுகின்றன. இன்றைய ஆங்கில மொழியில் தன்மை ஒருமைக்கு' என்ற வடிவமும், தன்மைப் பன்மைக்கு We' என்ற வடிவமும், முன்னிலை ஒருமைக்கு You என்ற வடிவமும் பயன்படுத் தப்படுகின்றன. ஆனால் பல்வேறு சமூகக் காரணிகளினால் U GoNU) மொழிகளிலே இந்நிலை மாற்றமடைந்து காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத் தமிழ் மொழியில் நீ, நீர், நீங்கள் ஆகிய
வடிவங்கள் முன்னிலை ஒருமையாகும். நீங்கள் என்னும்
வடிவம் முன்னிலைப் பன்மையைச் சுட்டவும் பயன்படுத்தப்படுகின்றது. இன்று யார் யாரிடம் நீ, நீர், நீங்கள் என்னும் வடிவங்களைப் பயன்படுத்துவது என்பது
 

塾 យាយម៉ាវែ
61
ஒருவர் காட்ட விரும்பும் மதிப்பளவைப் பொறுத்துள்ளது. மதிப்பளவு என்பதனையும் வரையறுத்துக்கூற முடியாது. யார், யாரிடம் நீ, நீர், நீங்கள் என்ற முன்னிலை ஒருமைப் பெயர்களைப் பயன்படுத்துவது என்பதனைத் தெளிவாக வரையறுத்து விளக்குவது என்பது எளிதன்று. ஒருவரைவிட வேறு ஒருவர் சாதியில் தாழ்ந்தவராக அல்லது உயர்ந்தவராக இருக்கலாம், தொழில் ரீதியில் குறைந்த நிலையில் உள்ளவராக அல்லது உயர்ந்த நிலையில் உள்ளவராக இருக்கலாம், வேலைக்காரனாகவோ அல்லது முதலாளியாகவோ இருக்கலாம். பெற்றோருக்குப் பிள்ளைகளாக இருக்கலாம். அண்ணனுக்குத் தம்பியாக இருக்கலாம். ஆனால் சமுதாயத்தில் ஒருவனாகப் பிறந்து வளர்ந்து வாழ்பவனுக்கு எந்த எந்த நிலைகளில் யார் யாரிடமெல்லாம் இந்த முன்னிலைப் பெயர்களைப் பயன்படுத்தலாம் என்பது தெரிந்திருக்கக்கூடும்.
இன்றைய யாழ்ப்பாண சமுகத்திலே வழக்கிலுள்ள முன்னிலைப் பெயர்கள் ஒருவர் தான் காட்டவிரும்பும் மதிப்பளவினைப் பொறுத்து மாற்றம் பெறும். யாழ்ப்பாணச் சமூகத்தில் நீ என்பது மரியாதை அற்ற (Non - Honorafic) வடிவமாக ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால் இன்றைய சமூகப் பண்பாட்டில் நீ என்பது மரியாதையற்ற வடிவமாகக் கொள்ளப்படுவதில்லை. இன்றைய பண்பாட்டுச் சூழலில் 'நீ என்பது குழந்தையை அழைப்பதற்கும் ஒருவர் தன் மனைவியை அழைப்பதற்கும், மிகவும் நெருங்கிய நண்பர்களை அழைப்பதற்கும், நெருங்கிய உறவினர்களை அழைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் இவர்களை முன்னிலைப்படுத்திக் கூறும்போது மரியாதைக் குறைவாக எண்ணமாட்டார்கள். நீர் என்னும் வடிவம் தம் வயதில் ஒத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும், சில சமயங்களில் கணவன் மனைவியை முன்னிலைப்படுத்திக் கூறுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
மரியாதை வடிவமான நீங்கள் என்னும் முன்னிலை ஒருமை வடிவமானது கல்வியால் உயர்ந்த நிலையில் உள்ள
வரை சில சமயங்களில் கீழ்ப்படி நிலையில் உள்ள வயது

Page 62
ញ៉ាម៉ារ៉ៃរឺ 彦 62
முதிர்ந்தவரை அல்லது கல்வி கற்பித்த ஆசிரியர்களை, சமயப் பெரியார்களை முன்னிலைப்படுத்திக் கூறுவதற்குப் பயன்படுத்தப்படும். பிள்ளைகள் பெற்றோரையும் மனைவி தன் கணவரையும் அழைப்பதற்கும் பயன்படுத்தலாம்.
படிக்காத கிராமப்புற மக்கள் பெரும்பாலும் எல்லோருடனும் பேசும்போது நீ என்ற முன்னிலைப் பெயர் கொண்டே பேசுவர். ஆனால் அவர்கள் நீ என்று விளித்துப் பேசும்போது நீ என்பதனைத் தனித்துக் கூறாமல் சில உறவுமுறைப் பெயர்களை நீ என்ற வடிவத்தோடு சேர்த்துப் பேசுவர். அதாவது நீ தம்பி, நீ பிள்ளை, நீ ஐயா என்று கூறுவதன் மூலம் மதிப்புணர்ச்சியைக் காட்டுவர்.
காலப்போக்கில் சமுதாயம் மாற்றம் அடையும்போது இம்மதிப்பளவு நிலைகளும் மாறும் என்பதில் ஐயப்பாடு எதுவும் இல்லை. யாழ்ப்பாணப் பண்பாட்டில் இம் மூன்று வடிவங்களும் எங்கு, எப்படி, யார், யாருக்காகப் பயன்படுத்தலாம் என்பது அந்தச் சமுதாயத்தில் வாழும் ஒருவனுக்குத்தான் தெளிவாகப் புலப்படும்.
தமிழ்மொழிக் கூறுகளுக்கும் பண்பாட்டுக்குமுள்ள நெருங்கிய தொடர்பினை வெளிப்படுத்திக்காட்ட உறவுப் பெயர்களும் உதவுகின்றன. தமிழ் சமூகத்திலே உறவு முறைச் சொற்களான அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கச்சி, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மச்சான், மச்சாள், தாத்தா, அம்மம்மா, ஆச்சி, மருமகன், மருமகள், அண்ணி முதலியன யாழ்ப்பாணச் சமூகத்தில் காணப்படும் குடும்ப நிலையைப் பிரதிபலிப்பனவாகவே மேற்கூறப்பட்ட உறவுப் பெயர்ச் சொற்கள் அமைகின்றன. இவ் உறவுமுறைச் சொற்களில் மாமா, மாமி போன்ற சொற்கள் ஆங்கிலமொழி உறவுச் சொற்களுடன் ஒப்பிட்டு நோக்கினால் உறவுமுறைச் சொற்கள் எவ்வாறு அந்தந்தச் சமூக பண்பாட்டுக்கு ஏற்ப அமைகின்றது என்பது புலப்படும்.
தமிழ் மொழியிலே ஆங்கில உறவு முறைச் சொல்லான Uncle, Father-in-Law போன்ற சொற்கள் மாமா என்ற ஒரே சொல்லாலும், Aunt, Mother-in-Law போன்ற சொற்கள் மாமி என்ற ஒரே சொல்லாலும் பயன்படுத்தப்படுவதை நோக்குமிடத்து சமூக வேறுபாடு எவ்வாறு மொழியிலே
 
 

பிரதிபலிக்கின்றது என்பதை உணரக்கூடியதாக உள்ளது. ஆங்கிலமொழி பேசும் சமூகத்தினரின் குடும்பநிலை தமிழ் சமூகத்தினரைப் போன்றதல்ல. இப்பண்பினை இவ்விரு மொழிகளிலும் காணப்படும் உறவுமுறைச் சொற்கள் புலப்படுத்துகின்றன.
யாழ்ப்பாண சமூகத்தில் கணவன் மனைவியை அழைக்கப் பயன்படுத்தும் இஞ்சாரும் என்ற வடிவமும் மனைவி கணவனை அழைக்கப் பயன்படுத்தும் இஞ்ாருங்கோ’ என்ற வடிவமும் கணவனையோ அல்லது மனைவியையோ பெயர் சொல்லி அழைத்தல் கூடாது என்ற பண்பாட்டை ஒட்டி அமைந்ததேயாகும். இது போன்ற பண்பாட்டுத் தொடர்புடைய சொற்கூறுகள் இன்றைய விஞ்ஞான தொழில் நுட்பப் பரவலின் காரணமாக பல நாட்டுப் பண்பாடுகள் நமது சமூகத்திலும் ஊடுருவக் காணலாம். இதனால் கல்வியறிவு பெற்ற மக்கள் கணவனைப் பெயரிட்டு அழைக்கும் முறையும் பெருகி வருகிறது.
இதிலிருந்து மொழியும் பண்பாடும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. ஒரு குறிப்பிட்ட மொழியின் சொற் கூறுகளின் சொற்பொருள் அம்மொழி பேசுவோரின் பண்பாட்டிலே பெருமளவு தங்கியுள்ளது என்பது திண்ணம். மொழியிலிருந்தும் அது பேசும் சமுதாயத்திடமிருந்தும் நாம் பண்பாட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதனையும் அறிய முடிகிறது. து
உசாத்துணை நூல்கள் 1. கருணாகரன் . கி, 1975 சமுதாய மொழியியல், சிவகாமி அச்சகம் அண்ணாம
லைநகர், 608101. 2. சண்முகதாஸ் அ, 1989, தமிழ்மொழி இலக்கண இயல்புகள், முத்தமிழ் வெளி
யீட்டுக் கழகம், யாழ்ப்பாணம். 3. Balasubramaniam, K, Kailainathan, R, Ramesh, S. (eds), 1998, 'Studies in SriLankan tamil Linguistics and Culture ", selected papers of professor S. Suseendirarajah, Madras. 4. Suseendirarajah.S. 1974, Tamil language in Sri Lanka', Souvenir, Fourth International Conference Seminar of Tamil Studies, Jaffna, SriLanka, PP 55-58. δ. . ........... 1974, 'Some Archaisms and peculiarities in Sri Lanka Tamil' Proceedings Of the Fourth International Conference Seminar of Tamil Studies, Vol.11, Sri Lanka, PP221-236.

Page 63
ក្រុងព្រួញយ៉ាងែ 墓 63 வழிபாட்டு Li Bij
 
 

களுத்துறை நகரில் சிறப்புமிகு கதிர்வேலாயுதசுவாமி கோயில்
லங்கையின் மேற்கு கரையில் வடக்கே கொழும்பு இ மாவட்டத்தையும் தெற்கே காலி மாவட்டத்தையும் கிழக்கே இரத்தினபுரி மாவட்டத்தையும் மேற்கே
இந்து LDUSIT சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்டதாகக் களுத்துறை மாவட்டம் விளங்குகின்றது. இம்மாவட்டத்தின் தலைநகரம் களுத்துறை நகரமாகும். களுகங்கை என்னும் ஆறு கடலில் கலக்கும் கழிமுகம் இங்குள்ளதால் இதற்குக் களுத்துறை என்ற காரணப்பெயர் வந்துள்ளது.
களுத்துறையின் பண்டைய பெயர் வேலாபுரம் என்பர். இன்று அப்பெயர் படிப்படியாகப் பாவனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. வேலைத் தாங்கி நிற்பவன் முருகன் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த வேலைத் தாங்கி நிற்கும் முருகப் பெருமானின் சிறப்புக்கள் நிறைந்த புண்ணிய பூமியாக ஆதியில் களுத்துறை பெயர்பெற்று போற்றப்பட்டிருத்தலை வேலாபுரம் என்ற பெயர் வெளிப்படுத்துகின்றது என்கின்றனர். வேலன் என்ற அரசனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி என்பதால் வேலாபுரம் என்ற பெயர் ஏற்பட்டதென்கின்றனர் ஒருசாரர்.
எவ்வாறாயினும் வேலாபுரம் என்ற தமிழ்ப் பெயரைக் கொண்டதாக அப்பிரதேசம் விளங்கியது என்பது மட்டும் உறுதியாகின்றது. அதன் மூலம் பல பண்டைய வரலாறுகளும் உரியபடி ஆய்வுகள் செய்யப்பட்டால் வெளிவரும் சாத்தியங்களுமுண்டு.
வேலாபுரம் என்ற களுத்துறை நகரிலே பழைய காலி வீதியையொட்டியதாக பூரீ கதிர்வேலாயுத சுவாமிகோயில் அமைந்துள்ளது. வேலாயுதபுரத்தில் வேலாயுதசுவாமியின் திருக்கோயில் அமையப் பெற்றிருப்பது கருத்திற் கொள்ளத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இலங்கையின் மேற்குக்கரை வழியாக கால் நடையாகவும் வண்டி, வாகனங்களிலும் கதிர்காமகந்தனைத் தரிசிக்க ஆண்டு தோறும் பக்தர்கள் செல்வது ஆதிமுதலிருந்து வரும் வழக்கமாகும். தற்போது கால்நடையாகச் செல்வோர் அருகி விட்டனர்.
யாழ்ப்பாணத்திலிருந்தோ வேறு எப்பகுதியிலிருந்தோ கொழும்பை அடைந்து அங்கிருந்து களுத்துறை, காலி, மாத்தறை வழியாகக் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும். இவ்வாறு யாத்திரை செய்பவர்களுக்காக கொழும்பில் மருதானை கப்பித்தாவத்தையில் நிறுவப்பட்டது கதிர்காம யாத்திரிகர் மண்டபம். இன்று அது நோக்கிழந்த நிலையில் பயன்படுத்தப்படாமலுள்ளது. அதே

Page 64
போல் மாத்தறை நகரிலே அமைக்கப்பட்டிருந்த யாத்திரீகர் மடமும் செயலிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
களுத்துறை நகரிலே கதிர்காமக் கந்தப்பெருமானைத் தரிசிக்கச் செல்வோர் ஆதியில் தங்கி இளைப்பாறிச் சென்ற புண்ணிய பூமியிலேயே இன்று பூரீ கதிர் வேலாயுத சுவாமி கோயில் கொண்டுள்ளார். வேலாயுதனுக்கும், கதிர்காம கந்தனுக்கும் உள்ள பண்டைய பாரம்பரிய இணைப்பு இத்திருக்கோயில் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.
களுத்துறை பூரீ கதிர் வேலாயுதசுவாமி கோயிலின் மூல மூர்த்தியாக இருப்பது வேலாகும். யாழ்ப்பாணச் செல்வச் சந்நிதியினும், நல்லூர் கந்தசுவாமி கோயிலிலும் கதிர்காம கந்தன் திருக்கோயிலிலும் மூலமூர்த்தியாக வேல் இருப்பதைப் போன்றே இங்கும் மூலவராக வேல் உள்ளது. வேலைத் தாங்கி வந்தவன் தான் வேலவன் என்பது ஒரு பாடல்வரி.
அந்த வேலைத் தாங்கி நிற்பவனான வேலவன், முருகப் பெருமான் வேலாபுரத்தில் கோயில் கொண்டுள்ளமை அதுவும் வேல்வடிவில் கோயில் கொண்டுள்ளமை பல்வேறு ஆய்வுகளுக்குரிய சிறப்புக்கும், சிந்தனைக்குமுரிய விடயங்களாகும்.
இத்திருக்கோயிலிலே மூல மூர்த்தியாக வேல் வடிவிலே இருந்து முருகப்பெருமான் அருள் புரியும் அதேவேளை, அங்கே விநாயகப் பெருமானும் தனிப்பீடத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார். விநாயகப் பெருமானின் திரு
வுருவமானது கண்களுக்கூடாக உள்ளத்திலே புகுந்து புதுப்பொலிவு, நம்பிக்கை ஊட்டும் வண்ணம் அமைந் திருப்பது சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
துர்க்கை அம்மனுக்கும், காளியம்மனுக்கும், ஐயப்ப சுவாமிக்கும், வைரவருக்கும், ஆஞ்சநேயருக்கும் தனிப் பீடங்கள் அமையப் பெற்றுள்ளன. நவக்கிரகங்களுக்கான தனிப்பீடம் உள்ளபோதிலும், சனீஸ்வரனுக்கு தனியான பீடமொன்று உள்ளது. அழகிய, அமைதியான சூழலிலே இக்களுத்துறை பூரீகதிர்வேலாயுத சுவாமி கோயில் சிறப்புற அமைந்துள்ளது.
மடப்பள்ளியுடன் கூடியதாக விளங்கும் இக் கோயிலுக்கு தேரும் உள்ளது. அத்துடன் 羲 கோயிலோடொட்டியதாக கலாசார மண்டபமும் உள்ளது.
இக்கலாசார மண்டபத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் அறநெறிப் பாடசாலை நடைபெற்று வருகின்றது.
ஆரம்பத்தில் இக்கோயில் கட்டுமானத் திருப்பணியை இந்திய சிற்பச்சாரியார் செல்லக்கண்ணு என்பவர் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். இலங்கையின் வடபுலத்தைச் சேர்ந்த பலர் அரச உயர் பதவிகளிலும், வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தபோது இக் கோயில் திருப்பணிக்காக பல்வேறு நிலைகளில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

យ៉ាងប្រថាម៉ាវែ
64
உதவிகள் செய்துள்ளனர். இவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒவசியர் செல்லையா குறிப்பிடத்தக்கவர்.
காலத்துக்கு காலம் நாட்டில் தமிழருக்கெதிராக இடம் பெற்ற இன வன்முறைச் சம்பவங்களினால் இப் பகுதியிலிருந்த வட புலத் தமிழர்கள் வெளியேற வேண்டிய துன்பியல் நிலை ஏற்பட்டது. வட புலத் தமிழர்களின் நிர்வாகத்திலிருந்த கோயில் நிர்வாகப் பொறுப்பு தற்போது ஒரு பரிபாலன சபையின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பணியை தொடர்ந்து சிறப்பாக இந்நிர்வாக சபை செய்து வருவதன் மூலம் களுத்துறை மாவட்டத்தில் இன ஐக்கியத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்கி வருகின்றனர். களுத்துறை நகரில் அமைந்துள்ள் பூரீகதிர்வேலாயுத சுவாமி கோயிலுக்கு மாவட்டத்தின்

Page 65
பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்துக்கள் வந்து வழிபடுகின்றனர். ஏதாவது தேவைக்காகக் களுத்துறை நகருக்கு வரும் இந்துக்கள் தவறாது இக்கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்வதைக் காணமுடிகின்றது.
இன வன்முறைச் சம்பவங்களின் விளைவால் செயலிழந்த இக்கோயில் செயற்பாடுகள் மீளவும் 2003ஆம் ஆண்டு ஆனிமாத பூர்வபட்ச அனுச நட்சத்திர நன்னாளில் கும்பாபிசேகம் செய்யப்பட்டது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. கொடி மரம் இல்லாத நிலையில் வருடாந்த மகோற்சவத்தின் போது கொடியேற்றும் சடங்கு நடைபெறுவதில்லை. அத்துடன் தீர்த்தோற்சவமும் நடைபெறுவதில்லை.
இருந்தபோதிலும் ஆண்டுதோறும் மகோற்சவம் சிறப்பாக மூன்று தினங்கள் கொண்டாடப்படுகின்றது. வேலவன் தேரேறி வரும் இந்த உற்சவ காலம் களுத்துறை நகரம் வேலனின் புரமாக ஒளிபெற்று விடுகின்றது.
மேற்கு வாயிலைக் கொண்டதாக பழைய காலி வீதியை நோக்கியதாக இக்கோயில் உள்ளது. மேற்குத் திசையில் வாயில் கொண்டதாகவும் மூலமூர்த்தி மேற்கு திசை நோக்கி இருப்பதாகவும் உள்ள இந்து ஆலயங்கள் மிகவும் குறைவாகவேயுள்ளன.
ஆண்டு தோறும் இந்துக்களால் கைக்கொள்ளப்படும் சிறப்புத் தினங்கள் சகலதும் இக்கோயிலில் உரிய முறையில்
 
 
 

வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. செவ்வாய், வெள்ளி தினங்களில் சிறப்பான பூசை வழிபாடுகள் நடைபெற்று வருவதுடன் நித்திய பூசைகளும் கிரமமாக நடந்தேறுகின்றன.
மீளவும் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்ட நன்னாளான ஆனி மாதம், அனுச நட்சத்திரம் கூடிய தினத்தில் கதிர்வேலாயுத சுவாமி தேரேறி வீதி வலம் வரக் கூடியதாக வருடாந்த மகோற்சவம் அமைகின்றது. மூன்று தினங்கள் நடைபெறும் இம்மகோற்சவத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி, கணபதி ஒம், ஆயிரத்தெட்டு சங்கிலி சேகம், பாற்குடப் பவனி, மகேஸ்வர பூசை என்பனவும் நடைபெற்று வருகின்றன.
பாற்குடப் பவனி கோயிலில் இருந்து ஆரம்பமாகி களுத்துறை நகர வீதியினுரடாகச் சென்று மீண்டும் கோயிலை அடைந்த பின் சுவாமிக்குப் பாலாபிசேகம் நடைபெறுகின்றது. காவடி, கரகம் என்ற கலாசார, பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கதிர்வேலாயுத சுவாமி தேரேறி களுத்துறை நகர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி அருள் தருகிறார். இன, மத, மொழி வேறுபாடின்றி வேலவனின் அடியார்கள் புடைசூழ இத்தேர்த் திருப்பவனி இடம்பெற்று வருகின்றது. மகோற்சவ காலத்தின்போது திருக்கல்யாணம், திவூஞ்சல் என்பனவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

Page 66
களுத்துறை மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் தமிழர்கள் செறிந்தும் ஏனைய பகுதிகளில் பரவியும் வாழ்ந்து வருகின்றனர். பெருந்தோட்டப் பகுதிகளில் அம்மன் கோயில்களும், முருகன் கோயில்களுமாகப் பலவுள்ளன. பேருவளைப் பகுதியில் பழம்பெரும் விஷ்ணு கோயில் உள்ளது. விநாயகர் கோயிலும் உள்ளது. நித்திய, நைமித்திய பூசைகளுடன் வருடாந்த மகோற்சவங்களும் அக் கோயில்களில் இடம் பெற்று வருகின்றன.
இம்மாவட்டத்தின் கட்டுக்குருத்தை எனும் இடத்தில் பழைமை வாய்ந்த முருகன் கோயிலொன்று உள்ளது. தமிழ், சிங்கள மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டுத் தலமாக அது விளங்குகின்றது.
களுத்துறை போதி என்று பெளத்தர்களால் சிறப்பித்து வழிபடும் காலி பிரதான வீதியில் களுத்துறை ஆற்றைக் கடக்கும் பாலத்துடன் அரசமரம் உள்ள இடத்தில் ஆதியிலிருந்து பத்தினி அம்மன் கோயில் இருந்து வருகின்றது. பெளத்த தலமாக இவ்விடம் பிரகாசிக்கும் முன்னரே பத்தினி அம்மனின் அதாவது தமிழச்சி கண்ணகியின் கோயில் இருந்தமை வெளிப்படுகின்றது.
இம் மாவட்டத்லுள்ள பாணந்துறையும் இந்துக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடமாகும். பாணம் என்பதன் கருத்துகளில் ஒன்று பொருள் என்பதாகும். பொ ருட்களை ஏற்றி இறக்கும் வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்ற துறைமுகம் என்பதால் இக்கடல் முகத்துறை பாணந்துறை என்ற பெயரைப்பெற்றுக் கொண்டது.
நல்லூருவ' என்று குறிப்பிடப்படும் ஒரு ஊர் பாணந்துறை நகருக்கு அண்மையில் உள்ளது. யாழ்ப்பா ணம் நல்லூரிலிருந்த பித்தளை வேலை செய்பவர்கள் தொ ழில் வசதிக்காக குடியேறிய இடமாகப் பாணந்துறை நல்லூ ருவ கொள்ளப்படுகின்றது. அதேபோன்று களுத்துறை நகரிலுள்ள பரியோவான் கல்லூரிக்கு தமிழர் தொடர்பு இருந்த போதிலும் இன்று அங்கு தமிழ் மொழி மூலம் போதனைகள் இடம்பெறுவதில்லை.
தமிழ்ப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட களுத்துறை பரியோவான் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ள நிலையில் களுத்துறை நகர தமிழ் மக்களின் வரலாறும் நூற்றாண்டு கடந்ததாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் பதியப்பட்ட தோம்பு என்ற ஆவணப் பதிவுகள் பலவும் இம்மாவட்டத்தில் தமிழிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
இவற்றையெல்லாம் நோக்குமிடத்து வேலாபுரம் என்ற களுத்துறையின் பண்டைய பாரம்பரிய இருப்பில் வேலனை வழிபடும் தமிழ் மக்களுக்கும் நெருங்கிய பங்குண்டு என்பது தெளிவாக வெளிப்படுகின்றது.
இலங்கையிலுள்ள குறிப்பிடக்கூடிய பிரசித்திபெற்ற முருகன் கோயில்களில் களுத்துறை பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயிலும் இடம்பெற்றுள்ளது. து
- த. மனோகரன்
 
 
 


Page 67
후_, / "-" "-" "-" - -聲響„”
きェ
(stoso@ (1998-/So oo@sooo solos
:-/OOOoooo @@őigos? E
き**
(stoso@ (also 88-79, osigoo ŋƆŋos)
:-/OOOŻ-Q ogsőılç09ft), JAJ jųogų įghĮTills possiġi
ĢĢĒølg hollsmaņols @Ų@mssing Īhņus -ihs-/ooooooool's
 

0LLLLLL LLL LL LLL LLLLL 0LL LLLLLL LLL LLL@gogio)org,
± = 科; 義 Ç 攀 *** 锋 桑 辯 译 Ở P 州F
uuoooeysue||os|^^^^^^ :qılı9$$rn100909€. ç6° 06ç ZILO :ọ9ogiqoqo loĝo)
8 – 96ç £çç ZILO {{Tīg)0.909 loĝo) LLZ Zçç ZILO :HTJđidoos@ 61109Tā
Z87 G/9 € //0 +4XƏL/||2O
(soos woo (1998-//lo
;-/^^^o-(T) @
@@@1969 solos)
QŪől 1000 sē> [7]
opij (www.wj) now wodao: »ouw.answe
ほ
! !!

Page 68
議 .議
議
議識 壽·霹 識凝 議腿 sae
重
ŝuo
ரஹேண்பிடிய
மணடல மலைததை,
避
輕
隱
O5
@g,
f1, ಛೀ!
55
Printed and published by Express Newspapers (Ceyl
 
 
 
 
 

鑿 蒙 囊 நைன் வெல்ஸ் 35(53585LL6)
ܐ݇ܢ
கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கருக்கட்டலுக்கான சாத்தியக் கூறுகளையும் (Sub Fertility) அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக்
கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களினுாடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
on)(Pvt) Ltd, at No.185, Grandpass road,Colombo -14, Sri Lanka.