கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2012.02

Page 1
6) || sig
Health GI
III RS 50/- (6), ПТТčђč
Registered at the Department of P. t
A
 

நிய சஞ்சிகை
February 2012
No. GDIANews/2012

Page 2
40C
శాస్త్రజ్ఞ *ஜ்
:வார்த்தை
#་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་རྒྱ་མཚོ་
جي
* قاعة مياه عيسمعه
"ஆாது تمیمټټa
திே ஆ
 

ITA)5ägu GNäitstar
கையின் 80வருட கால பயணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் பக்கங்களை புத்தகவடிவில் உங்களுக்கு சமர்ப்பிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம்.
வீரகேசரி பத்திரிகை தன் நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் உங்களுக்காகவும் உங்கள் சந்ததியினருக்காகவும் உருவாக்கியுள்ள இந்நூல் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய ஒரு வரலாற்றுப்பொக்கிஷம்.
மேலதிக தகவல்களுக்கு 015322783 எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் வெளியீடு வீரகேசரி கிளைக்காரியாலயங்களிலும் கிடைக்கும்

Page 3
GGIGEOSTOG
ஆசி ම[Im.ඵ්
EUITISlă6u. Le
S.G.
கே.விஜ பி.தேவிகாகுமா ଗଅନ୍ତୁ.S.:
 

இருஇருந்) in Gees J. Gorium, لٹلانٹسٹ (
ক্টোGlgui
sa
2

Page 4
இலங்கையில் சுகாதாரத்துக்கொரு சஞ்சிகையென்றால் அது 'சுகவாழ்வு' தான். இதில் வரும் அனைத்து ஆக்
கங்களும் சுறுசுறுப்புத் தான். சிரித்து
வாழ்ந்தால் நோய் விலகிவிடும், என்ப ஒன் தற்கு அமைய நகைச்சுவை படங்களு இழு டன் சிரிக்க வைக்கிறது. குறுக்கெழுத் ஆ துப் போட்டியும் வைத்திய குறிப்பாக 蠶
அமைகிறது. வைத்தியர்களின் ஆலோச னைகளும் இடம்பெறுவது மகிழ்ச் சியே. மொத்தத்தில் சுகவாழ்வு சுகமா | ණෙක இருக்கிறது. இச்சேவை இடை
விடாது தொடர வேண்டும். தொடர
எங்கள் பங்களிப்பு நிச்சயம்.
கே.எல். அப்துல் றசூல்,
நிந்தவூர்.
சுகவாழ்வாழ்வு சஞ்சிகையில் இடம்ெ அனைத்து ஆக்கங்களும் உள்ளன. குறுக்கெழுத்துப் ஒடிசம், யோகா என்பன உள்ளன. சுகவாழ்வு சஞ்சின் மேலும் சிறக்க என் வாழ்த்
லாவண்யா, கொழும்பு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவாழ்வு சஞ்சிகை ஆசிரியருக்கு என் ற்கண் வணக்கங்கள். உங்கள் சஞ்சிகையில் ளிவரும் அனைத்து விடயங்களும் நன்றாக
ளன. ஆனால் டொக்டரின் கேள்வி, பதில் 1றை ஆரம்பித்தால் இன்னும் சிறப்பாக நக்கும். புதிய புதிய விடயங்கள் பற்றிய க்கங்களை வாசிக்க உங்கள் வாசகர்கள் வலாய் காத்திருக்கிறோம். பலர் அறிந்தி த நோய்கள் சம்பந்தமாகவும், அவற்றை க்கும் வழிகள் போன்ற ஆக்கங்களை நவீர்கள் என்பது எமது எதிர்பார்ப்பு. இனி ரும் காலங்களிலும் உங்கள் சேவை
தாடர என் வாழ்த்துக்கள்.
சுமையா, மட்டக்களப்பு.
ள்ள ஆசிரியர் அவர்கட்கு, கம். ஆரோக்கிய சஞ்சிகை மூலம் அனேக கியமான விடயங்களை அறிந்துகொள்கிறோம். நோய்களுக்குரிய காரணிகளையும், அதற்குரிய சிகிச்சைகளையும், நோய் களைத் தடுப்பதற்குரிய ஆலோச
݂ ݂
பறும்
சிறப்பாக னைகளையும் பெற்றுக்கொள் போட்டி, கிறோம். இவை அனைத்தும் இறப்பாக மருத்துவர் கொடுக்கும்
கை மேலும் ஆலோசனையாகவே இருக்
கின்றன. சிபிலிஸ் நோயை பற்றி அறிந்துகொண்டோம். பலவித குறிப்புகள் தந்துள்ளீர் கள். குறுக்கெழுத்துப் போட்டி அறி வுக்கு விருந்தாகவும், நேயர்களை ஊக்க முட்டுவதாகவும், அரிய பெரிய பரிசுகளை கொடுத்து உற்சாகமூட்டி வருகின்றது. எந்த போட்டியிலும் இவ்வளவு பெரிய தொகை கிடையாது. ஆரோக்கிய சஞ்சிகையே தொட
ரட்டும் உன் தொண்டு.
மேரி டொவ்சன், லாங்கொடை ܕ ܬܐ
துக்கள்.

Page 5
அன்பை பரிணமிக்கச் செய்தல்
மனிதனையும் மனித வாழ்வையும் அவனது உருவாக்கத்தையும் புரிந்து கொள்வது இன்ன மும் புதிராகத்தான் உள்ளது. மருத்துவ விஞ்ஞா னம் இவ்வளவு வளர்ந்துவிட்ட நிலையிலும் மனித ஆரோக்கியம் என்றால் என்ன? என்ப தனை மருத்துவர்களால் கூட வரைவிலக்கணப் படுத்த முடியாதுள்ளது. மனித ஆரோக்கியம் என்றால் என்ன என்று மருத்துவ உலகத்தைக் கேட்டால் அவர்கள் நோய்களைப் பற்றியும் அவற்றுக்கான காரணங்கள் பற்றியும் நோய் அறிகுறிகள் தொடர்பாகவும் கூறுவார்கள். அதற்கு மேலும் ஒவ்வொரு நோயைப் பற்றியும் அவற்றை சுகப்படுத்துவதற்கான வழிமுறைக ளையும் கூட அவர்கள் கூறுவார்கள்.
ஆனால் உடல் நலம், ஆரோக்கியம் என்பது என்ன என்பதற்கு இப்போதும் விடை கிடைத்தி ருக்காது. சிலவேளை உடம்பில் நோய்களை யெல்லாம் நீக்கிவிட்டால் அதுதான் ஆரோக்கி யம் எனக் கூறலாம். ஆனால் இது பதிலாகாது. ஏனென்றால் ஆரோக்கியம் என்பது மனிதனுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அது மனிதனால் முன் வைக்கப்படும் வரைவிலக்கணங்களுக்கு அப்பால் வெகு தூரத்தில் உள்ளது எனலாம்.
நோய் என்றால் என்ன என்பதனை வரைவி லக்கணப்படுத்த முடியும். காரணம் அது வெளி யில் இருந்து ஏற்படுகின்றது. ஆனால் ஆரோக்கி யம் என்பது மனிதனுக்குள்ளிருந்து வர வேண் டும். ஒரு முறை ஒரு சிற்பி கருங்கல்லொன்றை வைத்து சிற்பம் வடித்துக் கொண்டிருந்தான். அவன் சிற்பம் செதுக்குவதைப் பார்க்க ஒரு மனி தன் வந்தான். அவனுக்கு சிற்பி கருங்கல்லில் அங்கும் இங்கும் உளியாலும் சுத்தியலாலும் கல்லை உடைப்பது தெரிந்ததே தவிர சிற்பம் தெரியவில்லை. அவன் சிற்பியிடம் கேட்டான் “என்ன சிற்பியாரே கல்லைக் குடைகிறீர்களே தவிர சிற்பத்தைக் காண முடியவில்லையே? அதற்கு பதிலளித்த சிற்பி "இந்த கல்லுக்குள் சிற்பம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனை யாரும் உருவாக்கத் தேவையில்லை. ஆனால் அதனை மறைத்துக் கொண்டிருக்கும் தேவை யற்ற கல் மேற்பரப்பை மாத்திரம் அகற்ற வேண் டும். அப்போது சிலை தானாகவே தோன்றும். ஒரு சிலையை யாராலும் வடித்தெடுக்க முடி யாது. அது கண்டு பிடிக்கப்பட வேண்டும். அத னைக் கல்லில் இருந்து பிரித்தெடுக்க வேண்
பெப்ரவரி - 2012

anggunian
Health Guide
ஆரோக்கிய சஞ்சிகை
இதழ் 10
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP: 0 1 1 - 5375945 011 - 5516531 Fax: 011 — 5375944
LLLLSYLLLLL YLLLLTTLYGLCLCLTTLTLSLLLL
டும். அதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். அதனைத் தான் நான் செய்கிறேன்’ என்று கூறினார்.
மனிதர்களின் "ஆரோக்கியம்’ என்பதும்
அத்தகையது தான். அது அவனுக்குள்ளேயே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் தான் கண்டு பிடித்து வெளியில் கொண்டு வர வேண்டும். உண்மையில் ஆரோக்கியத்தை எவ் வாறு ஏற்படுத்துவது என்பதல்ல கேள்வி. அதனை எவ்வாறு கண்டு பிடித்து வெளிக் கொணர்வது என்பது தான் கேள்வி. அப்படியா னால் எம்மை மறைத்துக் கொண்டிருப்பது என்ன? ஏன் அது அவ்வாறு மறைத்துக் கொண் டிருக்கின்றது?
அன்புக்கும் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. அன்பை நாம் உடம்பெங் கும் மறைத்து வைத்துக் கொண்டு அதனை வெளிப்படுத்த மறுக்கின்றோம். அன்பு என்பது நாம் வழிவழியாக வரித்துக் கொண்ட இயற்கை யின் வடிவம். ஆதலால் அன்பை உருவாக்கு என்று யாரும் கூற முடியாது. பிரச்சினை என்ன வென்றால் அதனை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான். இதற்கான தடைகள் என்ன? யார் கட்டிய மதில் இது? ஏன் எம்மால் இவற்றை உடைத்தெறிய முடியவில்லை.
ஆதலால் அன்பும் ஆரோக்கியமும் மடை திறந்து கொண்டு பாய்ந்து வர வேண்டும். அவற்றுக்கு யாராலும் வழிகாட்ட முடியாது. எமக் குள் ஒளிந்து கொண்டிருக்கும் அவற்றை வெளியே பரிணமிக்கச் செய்து நலம் பெற அழைக்கின்றேன்.
nson

Page 6
Se GRAN
D முருகானந்தன்
6oi (Alergy) என்று அழைக்கப் படும் ஒவ்வாமையினால் இன்று கணிசமா னோர் பாதிப்புக்கு உள்ளாகி வருவதை அவ தானிக்கலாம்.
ஒவ்வாமையினால் தோல் நோய்கள், ஆஸ்மா, பீனிசம் முதலான சில நோய்கள் ஏற்படுகின்றன. ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களாக உணவு, இரசாயனப் பொரு ட்கள், சில பூச்சி வகைகள் உள்ளிட்ட விலங்குகள் சூழலிலுள்ள தாவரங்கள், கால நிலை மாற்றங்கள் சூரியக் கதிர்கள் என் பவற்றைக் குறிப்பிடலாம். எல்லாப் பொருட் களும் எல்லோருக்கும் ஒவ்வாமையை ஏற் படுத்துவதில்லை.
இவ்வாறு ஏற்படும் ஒவ்வாமைகளுக்கு ஒரு வரின் பரம்பரை அலகிலுள்ள அம்சங் களும் காரணிகளாக இருப்பது
Jo 395
 
 
 

ஒவ்வாமையின் பாதிப்புக்கு உள்ளாகின்ற வர்கள் அதற்கான காரணங்களை இனங் கண்டு அவற்றிலிருந்து விலகியிருக் கின்றமையே சிறந்த தீர்வாகும். ஒவ்வாமை யைத் தீர்ப்பதற்கு உடனடி மருந்துகள் இருக்கின்ற போதிலும் அதை வராமல் தடுப்பதற்கு மருந்து வகைகள் அரிதாகவே உள்ளன.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு வகைகளில் இறால், நண்டு, கணவாய் உட்பட சில மீன் வகைகள் சில இறைச்சி வகைகள் என்பவற்றுடன் தக்காளி, கத்தரி முதலான
மரக்கறி வகைகளும் அடங்கும். இவ்வுணவு வகைகள் நேரடியாக ஒவ் வாமையை ஏற்படுத்தும் அதேவேளை இரசாயனப் பொருட்கள் கலந்த உணவு வகைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்த வல்லன.
இரசாயனப் பொருட்கள் கலந்த Fast Food மற்றும் பானங்கள் என்பனவும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியன. பூசும் கிறீம், சோப், சாம்பு, போன்ற இரசாயனப் பொருட்களும் நிற மூட்டிகளும் (Dye) பாதணி லெதர்களும் பொட்டு வகைகளும் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சில மருந்துகளும் ஒவ்வா மையை ஏற்படுத்தும். நமது சூழலில் உள்ள தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், புகை, தூசுகள், உலோகங்கள், மகரந்த மணிகளைக் கொண்ட காற்று என்பனவும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
பெப்ரவரி -2012

Page 7
இவ் 6I II D IT 60T ஒவ்வாமை நோய்கள் எந்த வயதினரையும் தாக்கலாம். அத்துடன் இரு பாலாரையும் தாக்கலாம்.
ஒவ் வாமையால் ஏற்படும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சி ால் பெண் கள்
அழகு பற்றிய அதிக அக்கறையும் அழ கூட்டிகளின் அதீத பாவனையும் பெண்கள் மத்தியிலே ஆண்களை விட அதிகமாக
வ்வாமை, தோல் அதிகம் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுகிறார்கள்
கிறீம் பூசினால் ஒவ்வாமை, பொட்டு வைத்தால் ஒவ்வாமை, தலை முடிக்கு grufto (Dye) பூசினால் ஒவ்வாமை, நகை அணிந் தால் ஒவ்வாமை, செருப்பு அணிந்தால் ஒவ்வாமை என்றும் யார் தான் குழம்பிப் போய் விட மாட்டார்கள்? இது தவிர ஆசைப்பட்டதை எல்லாம் உண்ண முடிவதில்லை. வெயிலில் போக முடிவதில்லை, வியர்வையால் ஒவ் வாமை, குளிரால் ஒவ்வாமை என்றால் வாழ்வே வெறுத்தது போல் ஆகி விடு LD606)6. It?
இவ்வாறான ஒவ்வாமைக்கு காரணம் எமது உடலில் சுரக்கப்படும் கிஸ்ரமீன் (Histamine) என்ற பதார்த்தம் தான். ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணிகள் எமது உடலில்
பெப்ரவரி -2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிஸ்ரமீனை சுரக்க வைக்கின்றன. இதுவே ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
எனவே ஒவ்வாமை ஏற்படாதிருக்க வேண்டுமானால் முன் அனுபவ அறிவினைக் கொண்டு ஒருவர் தனக்கு ஒத்து வராத வற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். இவற்றில் ஒவ்வாத உணவுகள், பூச்சு வகைகள், அணிகலன்கள் என்பன அடங்கும்.
இவற்றிற்கான மாற்றுப் பொருட்களைப் பாவிக்கலாம். உதாரணமாக கைக்கடிகார லெதர்பட்டி, ஒத்துவராதவர்கள் உலோகப் பட்டியைப் பாவிக்கலாம்.
உலோகப் பட்டி ஒத்துக் கொள்ளாதவர்கள் லெதர் பட்டிகளைப் பாவிக்க முடியும். பாதணி லெதர்கள் ஒவ்வாமையை எற்படுத்தினால் பாதணிகளை சொக்ஸ் அணிந்த பின் அணியலாம்.
நைலோன் சொக்ஸ் ஒத்துக்கொள்ளா தவர்கள் பருத்தி பாத உறைகளை அணியலாம். உலோக நகைகள் ஒத்துக் கொள்ளாதவர்கள் மாற்று நகைகளை அணியலாம்.
தோலில் ஏற்படும் ஒவ்வாமை தற்காலிக மான உக்கிரமானவையாகவோ (Acute) அல்லது நீண்ட நாட் தாக்கமுடைய0தாகவோ (Chronic) ஏற்படலாம். அரிப்பு ஏற்படுதல்,
) n
,

Page 8
வீக்கம் ஏற்படல், சிறு சிறு தழும்பு ஏற்படுதல், சொறிச்சல் புண்கள் ஏற்படுதல், நிறம் மாறி தோலில் செம்மை அல்லது கருமை படருதல், செதில் போல வருதல் என்பனவற்றை அவதா னிக்கலாம். இவற்றை விட மிகவும் ஆபத்தான Shock என்ற நிலையும் அரிதாக ஏற்படலாம்.
இந்நிலையில் குருதிச் சுற்றுப் பாதிக்கப் பட்டு படபடப்பு, வியர்வை, மயக்கம் என்பன வும் ஏற்படலாம். இந்நிலையில் துரித சிகிச்சை அவசியமாகிறது.
அநேகமாக பென்சிலின் போன்ற மருந்து களுக்கு ஒவ்வாமை ஏற்படும் போது இவ் வாறான நிலை ஏற்படுவதுண்டு.
சூரியனிலிருந்து வரும் கதிர்களில் ஊதா நிற Ultra நிற கதிர்கள் தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியன.
ஓசோன் படலத்தைத் தாண்டி இக்கதிர்கள் அபூர்வமாக மிகச் சிறிதளவே வரக் கூடியன. எனினும் சிலரில் இந்த மிகச் சிறு அளவே ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுவதுண்டு. இதனால் தோலின் மேற்புறம் மங்கலாகி சுருங்கி விடுவதுண்டு. இதனால் தோலின் அழகு குறைவடைந்து முதுமைத் தோற்றம் ஏற்படும். இன்னும் சிலரில் கொப்புளங்களும் அரிப்பும் ஏற்படலாம்.
இவ்வாறான ஒவ்வாமை உள்ளவர்கள்
ܬܐ ܦܘܦܛ ܨܦ91ܦܬܐ ܬܐܪܬܐ ܕܠܦܦܐ
 

வெயிலில் வெளியே செல்ல வேண்டுமாயின் புறப்பட சில நிமிடங்களுக்கு முன்னதாகவே சன் ஸ்கிறீன் லோசனைத் தடவிய பின் பயணிக்க வேண்டும். கைகளில் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் கையுறையை அணிந்து கொண்டு வேலை செய்யலாம்.
உலக மயமாதலினால் இன்று விளம்பரங்கள் பல்கிப் பெருகி சந்தையில் அளவுக்கதிகமான வகைகளில் அழகூட்டல் பொருட்கள் விற் பனைக்கு வருகின்றன. அவ்வாறே தயாரிக்கப் பட்ட உணவுகளும் வருகின்றன.
விவசாயத்திலும் பொருட்களைப் பாதுகாப்பதிலும் கூட பலரக இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளன.
இவை ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். உடன் தயாரித்து உண்ணும் உணவே எப்போதும் நல்லது.
Ligigis Gigapao 6TIGAĝiĝGUjiĝGGI. இது உன் புருஷனுக்குத் தெரியுமா?"
9j - Ĝi Tig... நான் எடுத்தது GLBT@శ్(35 GU
பெப்ரவரி 2012

Page 9
நம்மில் பலருக்கு எவற்றையெல்லாம் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதென்ற வரைமுறையே கிடையாது. கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக குளிர்சாதனப் பெட்டி யில் வைக்கத் தகாதவற்றையெல்லாம் கூட வைப்பதை அடிக்கடி காணக்கூடியதாயுள்ளது. தவிர அப்படி வைக்கப்படும் உணவு பொருள் பல நாட்களுக்கு அதிலேயே கிடந்து இறுதியில் கெட்டுப்போய் சில சமயங்களில் நஞ்சாகக் கூடிய சந்தர்ப்பங்களும் இப்போது அதிகமாகவே காணப்படுகின்றது.
குறிப்பாக பால், காய்கறி, முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், பழையகறிகள், ரசம், அரைத்த மா என சகலதையும் நெடுநாட்கள் வைத்து குளிர்சாதனப்பெட்டியையே நாசமாக்கிவிடு
உரவை துெ
- ரி - ன =ா •
குளிர்அணு
*ص= "می", "برص
ത്രു ീ
سب-"مZ"برابر
கிறார்கள். இது எ ந் த ள வு க் கு பாதிப்பை உண்டு பண்ணும் என் பதை அவர்கள் சற் றும் உணர்ந் திருக்கமாட்டார் கள். அத்தகையவர் கள் இதுவிடயத் தில் மிகவும் எச் ச ரி க் கை யுடன் இருப்பது சாலச் சிறந்தது.
பலரின் இந்த
daarna S S S SLSLSLSLS
 

நடவடிக்கைகளுக்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் கண்டிப்புத் தெரிவிக்கிறார்கள். பொதுவாக காய்கறி, கீரை மற்றும் இறைச்சி, அரைத்த மா போன்றவற்றை வார கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்காமல் கூடிய வரையில் புதிதாக பயன்படுத்துவதே நல்லது என்கிறார்
856IT
இவற்றை நெடுநாட்கள் குளிர்சாதனப் பெட்டியிலேயே வைத்திருப்பதால் நோயை நாமே விலைகொடுத்து வாங்கிக்கொள்கிறோம். குறிப்பாக இறைச்சியை குளிர்சாதனப் பெட்டி யில் வைத்து பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் நிபுணர்களின் முக்கிய மான வேண்டுகோள். அதிலும், கூடியவரை
பெப்ரவரி-2012

Page 10
இறைச்சியை உடனடியாக வெட்டி வாங்கி சமை யலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்குமாம்.
அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச் சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதனால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல் லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சில சமயங்களில் அது விஷ உணவாக கூட மாறவும் வாய்ப்புண்டு என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர் கள்.
நீண்ட நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கும் மாமிசத்தில் பக்டீரியா உடனடி யாகவே உருவாகிவிடும். அத்தகைய பக்டீரியா
உருவான இறைச்சியை சரிவர சமைக்காமல்
உண்டுவிட்டால், சீக்கிரத்திலேயே இரைப்பை யில் நோய்தாக்கி விடுகிறது. இதுபோன்ற இறைச் சியை உண்பதனால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறுநீரகம் மற்றும் மூளை ஆகியவற்றின் செயற் பாடும் பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
பெப்ரவரி-2012
 

ஈரல் தொடர்பான நோய் மஞ்சள் காமாலையை ஏற் படுத்திவிடலாம். அதே போன்று நோய் தாக்கிய ஆடுமாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் புர தங்கள் மற்றும் விட்டமின் சத்துக்கள் இழந்திருக்க ݂ ݂ A orie. அப்படியான ஒரு நிலையில், இத்தகைய இறைச்சியை குளிர்சாத னப்பெட்டியில் வைத்து உண்பதனால் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை நோய்தான் வரும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மொத்தத்தில் ஒட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் குளிர்சாதனப்பெட்டி யில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால் ஒட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்த வெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!
- äæssroof)
LL S S
. . ബ

Page 11
கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த விட யமே. குறிப்பாக நமது நாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகள் அதிக வெப்பத்தை கொண்டுள்ள பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. அத்தோடு இப்பிரதேசங் கள் வருடத்தில் கூடிய காலம் வெயிலோடு போராடுகின்றன. வெயில் காலத்தில் நமது சருமம் அதிகளவு பாதிக்கப்படும் என்பது உண்மையே. எனவே, வெயில் கொடுமையி லிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க பல எளிய வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றில் சில இதோ:-
* நல்ல காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
V
இது ତ୯୬ ଗuffili ရှူးကြီးဌ၉၈၈ இல்லையே! இதுக்குப் போய் ஏன் பயப்படுறிங்க?
ஆமா டொக்டர் எனக்கு திருமண
ம் நடக்கிற மாதிரி
திருமணம் நடக்கிற மாதிரிதானே. அதை ஏன் பயங்கர கனவுன்னு சொல்றிங்க?
பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 

SS
O
PULOLU UN MØTT LILLA||||
* குறைந்தபட்சம் ஒருநாளைக்கு ஆறு மணி நேரமாவது நித்திரை கொள்ளவேண்டும்.
* உடலையும் தலைமுடியையும் தூசு படி யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* அளவுக்கு அதிகமாக குளிர் பானங்கள், சூடான பானங்கள் அருந்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் உட் கொள்ளக் கூடாது.
* முகப்பவுடர், கிரீம், லோஷன்கள் போன்ற வற்றை முடிந்தவரை குறைவாகப் பயன் படுத்த வேண்டும்.
வந்து டொக்டர், திருமணம் எனக்கும் என் மனைவிக்கும் நடக்கிற மாதிரி கனவு வருது. அதுதான்.
ബ

Page 12
ஜபனரீஸ் Japanes
GLVII
ஜபனிஸ் என்சபாலிடிஸ், மூளைக்காய்ச்சல்
JUT) 'ஜபனிஸ் என்சபாலிடிஸ் னும் வைரஸினை கொண்ட (நெல் வய வளரக்கூடிய) நுளம்புகள் பரவப்படுகிறது.
நுளம்பின் வகை கயுலெக்ஸ் 甲 (MILIJOM,6% Anitt
digpapalop:
நுளம்புகள், பன்றிக6ை வைகளையும் கடித்தல்
அவற்றில் உள்ள ஜப5 செபலைடிஸ் எனும் நுளம்புகளுக்குள் செல்
அந்த வைரஸ் நுள (6lტr6ზ6დ6ხ.
panese Ence;
 
 
 
 
 
 
 
 
 
 
 

TTGÜTEFLIGIÚILGIO i.e. Encephalitis
| வைரஸ் முடிவு - வைரஸை தன்னுள் 606). கொண்ட நுளம்பு, மனிதர்களை
ம்பினுள் யோ மற்றும் விலங்குகளையோ கடிக்கும்போது வைரஸ் இவர்க ளுக்குள் செல்லும்.
இந்துளம்புகள்
பெருக்கமடையும் விதம் வைரஸ் குடியிருப்புப் பகு திகளில் உள்ள பன்றிகள் மற்றும் காட்டுப்பறவைக ளின் இரத்தத்தில் பெருக்க
மடைகின்றன.
தொற்று
இது ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு
கடத்தப்படாது.
பெப்ரவரி-2012

Page 13
உதாரணமாக இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை தொடுவதாலோ, முத்தமிடுவ தாலோ அல்லது நோய்கண்ட நபருக்கு சிகிச்சை அளிப்பதாலோ இவ்வகை வைரஸ் நோய்கண்ட நபரிலிருந்து மற்றவர்களுக்கு செல்வதில்லை.
அறிகுறிகள்
தலைவலி
அதிகப்படியான காய்ச்சல் கழுத்துப்பகுதியில் விறைப்புதன்மை கோமா
நடுக்கம்
சில வேளைகளில் வலிப்பு விறைப்புத்தன்மையுடனான பக்கவாதம் * ஒரு சிலருக்கு வேறு எந்த அறிகுறிகளும்
காணப்படாது.
இந்துளம்பின் இனப்பெருக்கக்கால அளவு:
5 முதல் 15 நாட்கள்.
இந்நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம்
0.3% இலிருந்து 60% வரை.
RREGDJ :
இந்நோயினை குணமாக்கக் கூடிய மற்ற தீவிர உதவி சிகிச்சை முறைகள் மேற்கொள் 6T6)Tib. -
நோய் ஏற்படுவதற்கான கால சூழல்
இந்நோய் ஏற்படும் காலம் நாட்டிற்கு நாடு - மாறுபடும்.
பெப்ரவரி-2012
 
 

Amplyfying Cycle
If
அதிகமாக பாதிக்கப்படுபவர்கள்
இந்நோய் உண்டாகும் சூழலில் உள்ள பகுதியில் வசிக்கும் நாட்டுப்புற மக்கள்.
அப்பகுதியை சுற்றிப்பார்க்க செல்லும் நபர்கள்.
தடுப்புமருந்து
செயலிழக்கப்பட்ட எலியின் மூளையிலி ருந்து எடுக்கப்படும் ஜபனீஸ் என்செபலை
.ണ്ഡ്.
தொகுப்பு : ராஜலிங்கம் சுபாஷினி
'உங்களுக்கு ஏதாவது பணப் பிரச்சினையா டாக்டர்?? "ஆமா. ஏன் கேட்கிறீங்க?" “என்னோட சொத்தைப் பல்லை எடுக்கச் சொன்னா, நைஸாதங்கப் பல்லை
எடுத்துட்டீங்களே!'
■

Page 14
ایشیا
N
iwas
உடலின் சகல பாகங்களும் இயங்க உட லின் ஆரோக்கியம் புத்துணர்ச்சி இவற்றிற்கு | வாக்கிங் அவசியமானது. உடலை அசைத்து நாம் வேலை செய்வதெல்லாம் பயிற்சியாகிவி டாது. வேலை செய்வது வேறு உடற்பயிற்சி என்பது வேறு. என்னதான் வீட்டு வேலை செய்தாலும் அது நீங்கள் 34 மணிநேரம் நடப்ப தற்கு ஈடாகாது. ஒரு முறை Walking சென்று பாருங்கள். அப்புறம் தான் புரியும் அது தரும்
 
 
 
 
 

பயன். வாக்கிங் போக சிலருக்கு சோம்பேறித்த னம். காலையிலிருந்து இரவு வரை வேலை இதனால் Walking போவதில் கிடைக்கும் நன்மை அப்படியே கிடைக்கிற மாத்திரை ஏதா வது உண்டா என தேடுகிறார்கள். ஆனால் உடற்பயிற்சியினால் விளையும் நன்மையை நாம் எந்த மாத்திரை மருந்து மூலமும் பெறமுடி UT5.
நடப்பதற்கு உகந்த சரியான நேரம்
காலையில் எழுந்து ஒரு டம்ளர் தண் ணிரோ, பாலோ, பழச்சாறு (Fruit Juice), ஏதாவது மிதமான திரவ ஆகாரமோ சாப்பிட்டு விட்டு நடக்கலாம். இதய நோயாளிகள் காலை நேரத்தை விட மாலையில் நடப்பது நல்லது. ஏனெனில், மருத்துவ வல்லுனர்களின் ஆய் வின்படி காலை நேரத்தில் இதயத்துடிப்பு இரத்த அழுத்தம் எல்லாமே சிறிது அதிகமாக காணப்படுகிறது. மாலை நேரத்தில் இவை இயல்பான அளவில் காணப்படுகின்றன.
இரவு உணவுக்குப் பின் Walking போவது கூடவே கூடாது. பலர் இந்த தவறை செய்கிறார் கள். சாப்பிட்டதும் நம் உடலின் ரத்த ஓட்டம் ஜீரண மண்டலத்திற்கு செரிமான வேலைக ளுக்கு தேவைப்படுகிறது. அப்போது Walking போனால் ரத்த ஓட்டம் கால்களுக்கு போகும்.
பெப்ரவரி-2012

Page 15
அதனால் செரிமான வேலை பாதிக்கப்படும். Walking போகும் போது கூடுமானவரை வயிறு காலியாகவோ அரை வயிறாகவோ இருப்பது நல்லது. தினமும் குறைந்தது 45 நிமிடம் நடக்க வேண்டும். வாரத்தின் எல்லா நாட்க ளும் நடக்க வேண்டும்.
நடைப்பயிற்சி கூடாதவர்கள்
இதயநோய் உள்ளவர்கள் இதயத்தில் குறை பாடு உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையின்றி Walking போகக் கூடாது. அதிகமான முதுகு வலி, கால் முட்டி வலி உள்ளவர்களும் கால் ஆணி பிரச்சினை உள்ள வர்களும் Walking செல்வதை தவிர்ப்பது நல் லது கால்களில் எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களும் நடப்பதில் சிறிய மாற்றம் இருக்கும். அவர்கள் அதற்கான நிபுணரிடம் அறிவுரையை பெற்ற பின்பே Walking போகலாம்.
பெப்ரவரி 2012
 
 
 
 
 
 

எப்படி நடக்க வேண்டும்?
மிகவும் மெதுவாகவும் இல்லாமல் மிகவும் வேகமாகவும் இல்லாமலும் உற்சாகமான நடை தான் உகந்தது. முதலில் மெதுவாக ஆரம்பித்து பிறகு சற்று வேகமாக நடக்க வேண்டும்.
நடக்கும் போது சிலர் எதையோ அவசரமாக முடிக்கப் போகிறவர்கள் போல முகத்தை இறுக் கிக் கொண்டு நடப்பார்கள். அது தேவை யில்லை. ஆறுதலான மனநிலையில் முகத்தில் ஒரு புன்னகையோடு நடந்து பாருங்கள் மன தும் உடலும் புத்துணர்ச்சி பெறும் வாக்கிங் போவதற்கு முன்பு சில எளிய உடற்பயிற்சி களை செய்து கொண்டு நடக்க தொடங்குவது நல்லது. எந்த இடங்களில் Walking போவது நல்லது?
கரடுமுரடான தரையாக இல்லாமல் சமதள மாக இருக்க வேண்டும். குதிக்கால் வலி, கால் தசைவலி இருப்பவர்கள் கடற்கரை மணலில் நடப்பது நல்லது கால் சிலந்தி எனப்படும் வெறிகோஸ் நோய் இருப்பவர்களுக்கு Walking ஒரு அற்புதமான பயிற்சி ஆகும். செருப்பு அணிந்து கொண்டு நடக்கலாமா?
செருப்புகள் அணிந்து நடக்கக்கூடாது.
செருப்புகள் வழுக்கக் கூடும் வேகமாக நடக் கும்போது தவறி விழுந்துவிடக்கூடும். அத னால் நல்ல அதாவது Walking க்கு உகந்த சப்பாத்துக்களை அணிந்து நடப்பதே சிறந்தது.
நடந்து பாருங்கள் உங்கள் வாழ்வும் சுகமாக அமையும்
எஸ். குகனேஸ்வரி தாதியர் பயிற்சி நிலையம், கொட்டகலை,
5 |
-
-—

Page 16
Genren gasos Baron [GLIT: , Girl II , ! இளைஞர் கழகம்
ാ--ബ്
வக்கராசனத்தின் பய
* உடலின் நாளமில்லாச் சுரப்பிகளின் (Endocrine Glands) şQupril 83göD GöFULu6oLum"GB) காரணமாகவே பல்வேறு நோய்கள் ஏற்படுகின் றன. வக்கராசனம் இவற்றின் செயற்பாட்டை மேம்படுத்தும்.
* குடலிறக்கம் (Hernia) அகலும். % அல்ரினல் சுரப்பியின் (Adrenal Gland) தாறுமாறான செயற்பாடுகள் காரணமா கவே மன உளைச்சல் ஏற்படுகிறது. மார
சென்றவார தொடர்ச்சி.
டைப்பு ஏற்பட வும் தூண்டும். வக்கராசனம்
இதை தடுக்கிறது.
 
 
 
 
 
 
 
 

றம், மன உளைச்சல், மன அழுத்தம் போன் றவை அகன்று குதூக லம் அதிகரிக்கும்.
% ஆண் க ளின் ஆண்மைக் குறைபாடு (Impotency) ej56öTg) மணவாழ்க்கை மயான வாழ்க் கை யா காமல்

Page 17
* தெ ரையும்
* கண்பார்வை தெளிவடையும்
* இளமை மேலோங்கும்.
* குண்டலினி சக்தியை எழுப்பிவிடும். இதனால் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும்.
* பெண்களுக்கு அபரிமிதமான பலன் களை அள்ளி வழங்கும் ஆசனம் இதுவாகும். மாதத்தீட்டுப் பிரச்சினைகள் அகலும், மலடி என்ற பட்டம் கிடைப்பதைத் தடுக்கும். இடை மெலிந்து இடையழகு அதிகரிக்கும். மார்பழகு அதிகரிக்கும். மாதத்தீட்டு நின்ற பின் (Menopause) பெண்களைத் தாக்கும் மன உளைச்சல் (Stress) எலும்பரிப்பு நோய்
நிலை
(Osteoporosis) கூன் விழுதல் போன்றவை தடுக்கும்.
செய்முறை உடல் நிலை
விரிப்பின் மீது கால்களை நீட்டி அமரவும். வலது காலை கைகளால் மடக்கி வலது முழங் காலின் பக்கத்தில் பாதத்தை வைக்கவும். வலது கையை முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்து கை விரல்களை வெளி நோக்கி இருக்கும்படி விரிப்பின் மேல் வைக்கவும். இடது கையை வலது முழங்கள் லின் வழியாகக் கொண்டு வந்து வலது கால் கட்டை விரலை அல்லது கொண் டைக் காலை பற்றிப் பிடிக்கவும். தலை, தோள்பட்டை ஆகியவற்றை வலது பக்கம்
பெப்ரவரி.2012
 
 
 
 
 
 
 


Page 18
நன்கு திருப்பி வலது தோள்பட்டையைப்
LInTITé55é556).qLD.,
சாதாரண மூச்சில் ஒரு நிமிடம் வரை இருக் கவும். (50 எண்ணிக்கை) தலையைத் திருப்பி கையைப் பிரித்து காலை நீட்டி அமரவும். பின் | னால் வைத்த கையை எடுத்து இடுப்புக்குப் பக்கத்தில் வைத்து ஓய்வு எடுக்கவும். இவ் வாறு இடது பக்கமும் செய்ய வும். இடம், வலமென இரண்டு தடவைகள் செய்யவேண்டும்.
மூச்சு நிலை
சாதாரண மூச்சு மன நிலை எனது உடல் நன்கு முறுக்கப்பட்டு முள்ளந் தண்டு மற்றும் உடலினுள் உள்ள சகல உறுப் புக்களும் பலனடைகின்றன என நினைக்க வேண்டும்.
இவ்வாசனத்தை சகலரும் செய்ய முடியும்.
நாட்பட்ட குடற்புண் (Ulcer), கல்லீரல் வீக்கம் (Enlargement of Liver), SGI'll 616S), eLGS) pës5ib (Hernia of Liver) &LSu556) வயிற்றில் சத்திர A. ငါ့..ငါ့ခြံ-60og- மேற்
கொண்டோர், கர்ப் பிணிகள் ஆகியோர் இவ் ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
 
 
 
 
 
 

"எங்கம்மாவுக்கு மூச்சு விட ரொம்ப
சிரமமா இருக்கு கமலா
அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன்!
பெப்ரவரி-2012

Page 19
வீட்டில் இடம்பெற்ற ஏதேனும் விபத்து போன்றவற்றின் போது இல. 110 உடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் மூலம் உடனடியாக இச்சேவையைப் பெற்
அவசரஅனர்த்தத் 6ÁNGBEFIL KOHLÍDLIG
o இலக்கத்துடன் தொடர்புெ
கொழும்பு மாநகர சபை எல்லைப் பிரதே
சத்துக்குள் நடைபெறக்கூடிய ஏதேனும் திடீர்
அனர்த்தத்தின் போது உதவக்கூடிய வகையில்
கொழும்பு மாநகர சபையால் அம்புலன்ஸ்
சேவையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 கட்டிட இடிபாடு, தீ விளையாட்டின் போது அனர்த்தம் நீச்சல் குள விபத்து,
றுக்கொள்ளலாம் என கொழும்பு மாநகரசபை
தீயணைப்புப்படை பயிற்சி மற்றும் ஏற்பாட்டு அதிகாரி ஆர். ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
மேற்படி அவசர அம்புலன்ஸ் சேவையின்
இல. 110 உடன் 24 மணி நேரமும் தொடர்பு
கொள்ள முடியும். இந்த சேவையில் ஈடுபடுத்
துவதற்கென கொழும்பு தேசிய வைத்தியசா
லையில் பயிற்சி பெற்ற விசேட குழுவினர் ஈடு
படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எத்தகைய
அனர்த்தத்தின்போதும் நிலைமையை உரிய
விதத்தில் சமாளிக்கும் பயிற்சிகளைப் பெற்றி ருக்கின்றனர். அத்துடன் இந்த அம்புலன்ஸ் சேவை குறைந்த நேரத்தில் விபத்து நடந்த
இடத்தை அடையும் வல்லமை கொண்டது. தற்போது கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட
பிரதேசத்துக்குள்ளே மட்டும் என மட்டுப்படுத்
தப்பட்டிருந்த போதும் விசேட நிலைமைகளில் வேறு இடங்களுக் கும் விஸ்தரிக்கத் திட்டமிடப்பட்டுள் துெ.
அண்மைக்கால
அனுபவங்களில் இருந்து
- G
 
 
 
 
 
 

தின் போது உதவ GÖTIGO GBEFGODGO
TGsbTGS GessODeQIGODILILI QupQ)nTilib
போது பொது மக்கள் பெருந்திரளாகக் கூடி தம்மால் முடிந்த உதவிகளை செய்யப் போய் நிலைமை மேலும் மோசமாக்குகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள் ளன. குறிப்பாக விபத்து நடந்த இடத்தில் பொது மக்கள் பெருந்திரளாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
விபத்துக்கள் வேடிக்கை பார்ப்பதற்கு உகந்த இடங்கள் அல்ல என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. குறிப்பாக விபத்தின் போது உடல் சேதமடைந்தவர்களை அப்புறப் படுத்தும்போது மிகவும் நிதானம் அவசியம். காப்பாற்றுகிறோம் என்ற ஆர்வத்தில் அவசர மாக காயப்பட்டவர்களை இழுத்தெடுத்தல் என்பன மரணத்தையும் வரவழைக்கும். ஆத லினால் இத்தகைய அவசர அம்புலன்ஸ் சேவையை மக்கள் உரிய முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமென திரு. விஜே சூரிய மேலும் தெரிவித்தார்.
- எஸ்.ஷர்மினி
|
ܒܡܘܡܬܐܝܠ ܕܡܢ ܪܡܬܐ ܬܐܪܬܐ ܕܠܦܦܐ

Page 20
மாரடைப்பு ஒர் ஆட்கொல்லி நோயென பர
கருத்து நிலவுகின்றது. பெரும்பாலான இறப்புக்க மாகவே இடம்பெறுவதாக கொழும்பு தேசிய வைத் நோய் சிகிச்சைப்பிரிவின் மருத்துவ நிபுணர் L சுகவாழ்வுக்கு வழங்கிய நேர்காணலின்போது சு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணவு, பழக்க மூலமும், பதற்றம், மன அழுத்தம் என்பவற்றை தவி மட்டுமன்றி ஏனைய நோய்களிலிருந்தும் பாதுகாப் ன அவர் மேலும் கூறினார். அவர் அளித்த செவ்வி
A மாரடைப்பு ஏற்பட காரணம்? அதை ஆரம்பத்திலேயே தடுக்கமுடியுமா?
இரத்தக் குழாயில் அடைப்பு அதாவது இதயத்தின் ஒரு பகுதிக்கு குருதியோட்டம் தடைப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. பொதுவாக இது இதயக் கோளாறு, மாரடைப்பு என அழைக்கப்படுகின்றது. மாரடைப்பானது பெரும்பாலும் இதயத் தமனியில் தடை ஏற் படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின்
2000s,
சுவர்களில் கொலஸ்ட்ரோல் எனப்படும் கொழுப்புப் பொருட்களும், வெள்ளைக் குருதி அணுக்களும் சேர்வதால் அத் தமனியின் உட்புறம் குறுகிவிடுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு குருதியே செலுத்தப்படுவதால் சுவாசிக்க ஒட்சிசன் பற் றாக்குறை ஏற்படுகிறது. இதை உரிய காலத் தில் கவனிக்காமல் விடும் போது மரணம் ஏற்படுகின்றது.
A. யாருக்கெல்லாம் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது?
பொதுவாக நீரிழிவு
நோ யா ள ர் க
ElböGlb, 2-uf குருதி அமுக்க முடையோருக்
கும் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ட் புள்ளது. அது தவிர மன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலாக மக்கள் மத்தியில் ஒரு அச்சம், பதற்றம், காரண நியசாலையின் இருதய, மார்பு 1. எஸ்.திருமால் அவர்கள் கூறினார். தியானம், யோகா, வழக்கங்கள் என்பனவற்றின் ர்ப்பதன் மூலமும் மாரடைப்பு பெற்று நலமாக வாழலாம் வருமாறு.!
அழுத்தமுடையோர்கள், அதிக பதற்றக் காரர்கள், மது, புகைபிடித்தல் போன்ற போதை வஸ்துக்கு அடிமையானோருக்கும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அத்துடன் மார டைப்பு பரம்பரையாக ஏற்படவும் சந்தர்ப்பங் கள் அதிகம்.
A. மாரடைப்பு ஏற்படாமல் தவிர்த்துக்
கொள்வதற்கான வழி என்ன?
நீரிழிவு நோயாளர்கள் அதை கட்டுப்பாட்
origó830
பாக இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்க விடாமல் தவிர்த்துக்கொள்வதால் மாரடைப்பு
ஏற்படுவதை கூடியளவு தவிர்த்துக்கொள்ள லாம். அதுபோலவே உடம்பில் கொழுப்பு சத்து கூடுவதால் தான் உயர்குருதி அமுக்கம் ஏற்படுகிறது. கொழுப்பு சத்தை கட்டுப்பாட் டுக்குள் வைத்திருப்பதால் உயர் குருதி அமுக் கம் தடுக்கப்படும். இது மாரடைப்பு ஏற்படா மல் தடுக்க உதவுகிறது. அது மட்டுமன்றி பல நோய்களை உண்டு பண்ணக்கூடிய போதை வஸ்து பாவனைகளை தவிர்த்தலும், வீணான பயம், மன பதற்றம், மன உளைச்சல் போன்ற வற்றையும் தவிர்த்துக்கொள்வதோடு, சத்தான காய்கறி, கீரை, பழ வகை போன்றவற்றை உண்ணுவதன் மூலமும் மாரடைப்பு நோய் உட்பட பல நோய்களிலிருந்தும் நம்மை பாது காத்துக்கொள்ளமுடியும்.
A "இருதய நோயானது நிச்சயமாக ஓர் உயி
29 பெப்ரவரி-2012

Page 21
ராபத்தான நோய். இருதய நோய் ஏற்படுமிடத்து கண்டிப்பாக மரணத்தை தழுவ நேரிடும்' இது மக்கள் மத்தியில் காலம் காலமாக நீடித்து வரும் பயம். இது சரியா? அல்லது வீணான பயமா?
இதை உறுதியாக கூறமுடியாது. இருதய நோய் என்பது ஆபத்தான நோய்களில் ஒன்று தான். சரியான நேரத்தில், sfuT60T 35.60s. அளிக்கப்படாமல் விடுமிடத்து இருதய நோய் ஆட்கொல்லி நோயாகவும் மாற்றப்படுகின் றது. ஆனால் பிறப்பு என்று ஒன்று இருக்கும் போது இறப்பு என்பது நிச்சயம். மாரடைப்பு இல்லாவிட்டால் இன்னொரு காரணத்தால் மர ணத்தை தழுவ நேரிடும். இது தான் விதி. அத னால் மரணம் என்பதை தவிர்த்து விட்டுப் பார்க்கும் போது இதய நோயால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
உதாரணமாக இருதய நோயாளி சரியான சிகிச்சை மேற்கொள்ளாதவிடத்தும், இரத்த கட்டிகள் வெளியேறும்
சந்தர்ப்பங்களிலும் பக்க
வாதம் போன்ற வேத னைமிகு சூழ் நிலைக்கும் தள்ளப் படுகின்றனர். தவிர (86606) செய்த சிறிது நேரத்திலேயே களைத்து விடல், தமது வேலை களை தாமே செய்துகொள்ள சிர மப்படுதல் போன்ற நிலைகளுக் கும் இருதய நோயாளர்கள் உட் படுகின்றனர். இன்னும் சிலர் சாதாரண சிகிச்சை, மருந்து வகைகள் மூலம் பூரணமாக சுகப்படுத்தப்படுகின்றனர். அதா வது நான் கூற வருவதென்னவென்றால் வீணான பயங்கள், அச்சங்களைத் தவிர்த்து விட்டு நோயின் ஆரம்பத்திலேயே மருத்து வரை சந்தித்து, அவர் வழங்கும் மருந்துகளை வேளா வேளைக்கு எடுத்துகொள்வதும், சிறந்த பழக்கவழக்கங்களை பேணுவதும் உங் களை சுகதேகியாக வாழ வைக்கும்.
A. இதய துடிப்பு அதிகரிப்பது இதய நோயின் அறிகுறியா?
அப்படி கூறமுடியாது. பலவித காரணங்
G
பெப்ரவரி-2012
 
 
 
 
 
 
 

களால் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம். பார
மான பொருட்களை தூக்குதல், பயம் போன் றவற்றாலும் இருதயத் துடிப்பு அதிகமாகலாம். ஒட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சியின் போது இரத்தத்தை உடம்புக்கு அதிகளவு கொடுக் கையில் இதய துடிப்பு அதிகரிக்கும். ஆனா லும் இது நீடிக்கும் சந்தர் பத் தில் உரிய மருத்து 6.1600 egg09). (5
புற்றுநோய் போன்ற நோய்கள் உயிர் கொல்லி நோய்களாக அறியப்ப டுகின்றன. அதாவது புற்று நோயிலி ருந்து மீண்டு வருவதென்பது மறு ஜென்மம் எடுத்தல் போன்றது. மாரடைப்பும் இது போன்ற பயங்கர நோயா? இதய நோய்களை பொருத்த மட்டில் இத யத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அது கொஞ்சம் ஆபத்துள்ளது தான். ஆனால் மற்ற இதய நோய்களுடன் ஒப்பிடும் போது மார டைப்பு நோய் அதிக உயிராபத்தானது. வால்வு கள் பாதிக்கப்படும் போதும் பல சந்தர்ப்பங் களில் மரணம் ஏற்படலாம்.
A சிறியோர் முதல் பெரியோர் வரை திடீர் திடீர் என நெஞ்சுப்பகுதியில் சிறு வலி தோன் றல், மூச்சுவிட சிரமப்படுதல் போன்றவற்றுக் குள்ளாகின்றனர். இவற்றின் காரணம் என்ன?
இது சாதாரணமாகவும் தோன்றலாம். நெஞ்சு பகுதியில் வலி தோன்றலானது பார தூரமாகவும் மாறலாம். அதனால் உடனடியாக
மருத்துவரை அணுகி காரணத்தை அறிந்து
na ay
வது சாலச்சிறந்

Page 22
கொள்வது நல்லது. காரணம் இது மாரடைப்புக்கு அறிகுறியா கவும் அறியப்படுகிறது. தவிர ... இது அல்சருக்காகவும்கூட இ ஏற்பட கூடும். மூச்சுவிட N சி ர ம ப் ப டு த  ைல பொறுத்தமட்டில் இது சுவாச நோய், நுரையீரல் சம்பந் தப்பட்ட நோயா கவும் இருக்க லாம். இல்லை யென்றால் இருதயம் சம்பந்தபட்ட நோயாகவும், தசைகளில் ஏற் படுகின்ற பிரச்சினையாகவும்கூட இருக்க லாம். நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்றவை மாரடைப்புக்கான அறி குறிகள் ஆகும். எது எப்படியாகிலும் காலம் தாழ்த்தாது மருத்துவரை அணுகி அதற்குரிய கார ணத்தை கண்டறிந்து சிகிச்சையை மேற் கொள்ள வேண் டும்.
為 ஆண்கள் - பெண்கள் இதில் மார டைப்பால் பெரிதும் பாதிக்கப் படுபவர் யார்?
ஆண்கள் பெரிதும் பாதிப் படைகிறார்கள். பெண்களை பொறுத்தமட்டில் மாதவிடாய் காலமானது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான காலமென்று தான் கூற வேண் டும். அதாவது சுமார் ஐம்பது வயது வரையில் பெண்களுக்கு மாதவிடாய் தோன்றும். இந்த காலப்பகுதியில் ஈஸ்ரஜின் ஹோமோன்கள் சுரக்கப்படுகின்றன. இது பெண்களுக்கு ஒரு வித பாதுகாப்பை வழங்குகின்றது. அப்போது பெண் கூடியளவில் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதிலிருந்து காப்பாற்றப்படு கிறாள். ஆனால் மாதவிடாய் காலப்பகுதி முடிந்தவுடன் ஆண்களும் பெண்களும் சம
SS d
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளவில் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.
A மாரடைப்பை பொறுத்த வரை அண்மை யில் அறிமுகப்படுத்தப்பட்ட சிகிச்சை முறை கள், சிகிச்சை கருவிகள் பற்றி.?
பொதுவாக சிகிச்சை முறைகளும், சிகிச்சை கருவிகளும் நாளுக்கு நாள் வளர்ச் சியடைந்து கொண்டுதான் போகின்றன. உதா ரணமாக மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இரத்தம் கட்டிபடுதலைக் கரைக்கக் கூடிய மருந்துகள் உள்ளன. இது அண்மையில் கண் டுபிடிக்கப்பட்ட ஒன்று என கூற முடியாது. இது பல வருடங்களுக்கு முன்னரே கண்டு பிடிக்கபட்டதொன்று. ஆனால் இம்மருந்துகள் நாட்கள் செல்லச் செல்ல புதுபுது மாற்றங் களுடன், நன்மைகளுடன் உருவாகி வருகின் றன. முன்னைய காலத்தோடு ஒப்பிடுகையில் முன்னர் மாரடைப்பு மருந்துகள் மூலம் குணப் படுத்தப்பட்டது. பின் 6তাীি 60D LI LI T6iħ) சிகிச்சை முறை. இப்போது அஞ் சியோ பிளாஸ்டி, அஞ்சியோ பிளாஸ் டிக் சிகிச்சை என்பது இரத்தத்தை வழங்கும் இரத்தக்குழாய்களுக்கிடையில் அது சுருங்காமல் இருக்க செயற்கை யாக குழாய் ஒன்றை பொருத்துவதாகும். இந்தக் குழாய்களும்கூட இன்று பற்பல மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டு
கொண்டுதான் வருகின்றன.
今 இந்த சிகிச்சைகளை இலங்கையில் பெற்றுக்கொள்ள முடியுமா?
ஆம் நிச்சயமாக, அரச வைத்தியசாலைகளி லும் இச்சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடி պլԻ.
A மூன்றாவது முறை மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் மரணம் நிச்சயம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா?
இல்லை அப்படி கூற முடியாது. அது பாதிப்படையும் பகுதியை பொறுத்தது. சில சந்தர்ப்பங்களில் நெஞ்சு வலி இல்லாமலேயே, ஒரே தடவையில் இறப்பு ஏற்படுவதும் உண்டு. முழுமையாக சுகமடைபவர்களும்

Page 23
இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் மார
டைப்பு ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் பாதிப்புகள் அதிகமாகி, இருதயம் அதிக பலவீனமடையும்.
A சுகவாழ்வு வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
நான் கூற விரும்புவதென்னவென்றால், நல்ல சத்தான காய்கறி, பழங்களை அதிகள வில் உண்பது, உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளல், மது பானம், புகைத்தல் போன்றவற்றை தவிர்த்தல், நமது வேலைகளை திட்டமிட்டு செய்தல் போன்றவற்றின் மூலம் பதற்றத்தை குறைத்து கொள்ளல், தனிமனித ஒழுக்கம், உணவுக் கட்டுப்பாடு சுத்தமான சிந்தனை போன்ற |வற்றை பேணுவோமாகில் இருதய நோய் மட்டுமல்ல எந்த நோயும் நம்மை அணுகாது. ஆகவே நோய் வந்தவுடன் அள்ளாடுவதை விட்டு விட்டு வருமுன் காப்போம். சுகதேகி யாக வாழ்வோம்.
நேர்காணல் : ராஜலிங்கம் சுபாஷினி
'தலைவர் கோபமா இருக் காறே, என்னாச்சு?
த ன் மா ன த் தோ டு வாழ்வதே எங்கள் குறிக்கோள்னு தலைவர் சொன்னதை சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்னு
பிரசுரம் செய்துட்டாங்களாம்"
பெப்ரவரி-2012
 
 
 
 
 
 
 
 

நாள்தோறும் கறுப்பு சொக்லெட்கள் சில வற்றை உண்பது இதய ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. சொக்லெட் தயாரிப் பிற்கு அடிப்படையானதொரு பொருள்தான் கொக்கோ, கொக்கோவில் காணப்படும் ஒரு வகை இரசாயனப் பொருளே குருதி உறை வைத் தடுக்கிறது என அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுக் குழு தெரிவிக்கின்றது.
தினந்தோறும் சிறிது கறுப்பு சொக்லெட் உண் டால் மன அழுத்தமும் நெருக்கடியான மனநிலை யும் குறையும். அதற்குரிய ஓமோன் களை விடுவிப்ப
తయాంటి
தற்கு அடிப்படை யாக இருக்கும் என சுவிற்சர்லாந்து நஸ்லே ஆய்வு மையத்தைச் சேர்ந்த சுனில் கோச் ர் தலைமையிலான ஆய்வுக் குழு கூறுகிறது.
சொக்லட்டை அதிகளவில் சுவைப்பதால் உட லின் நிறை அதிகரிக்கும். அத்தோடு பற்கள் பழுத டையும். இவை பொதுவாக நாமறிந்த விடயங் களாகும்.
இவை தவிர சிலருக்கு மிக்ரேன் போன்ற தலைவலிகளை சொக்லட் ஏற்படுத்தும். அதற்கு சொக்லெட்டில் உள்ள பினைல் எத்திலமைன் என்ற இரசாயனப் பொருள் காரணமாகின்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சொக்லட் அதிகளவில் உண்டால் சிறுநீரகக் கற்கள் உற்பத்திக்குக் காரணமாக அமையலாம் என உறுதிப்படுத்தாத ஆய்வுகள் தெரிவிக்கின்

Page 24
இயந்திரமயமான, 96).J&T இவ்வுலகத்தில் வாழ்வின் ஒவ்ெ அம்சமும் நம்மையறியாமல்தான் கின்றன. அநேகமான நிகழ்வுகள் கட்டுப்படுத்தும் திராணி நம் ளில் இல்லை.
蠶 葛
*毽-
 
 

LDT60T
5)ΙΠΟΠ) நிகழ் ளைக்
5)555
இந்திராணியும் சிவராஜாவும் கிரா மத்தில் பிறந்து, கிராமத்தில் வளர்ந்து படித்து ஆளானவர்களாக இருந்த போதும் கிராமத்தில் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இரண்டு பேருமே கொழும்பில் தனியார் நிறு
பெப்ரவரி-2012

Page 25
வனத்தில் வேலை செய்யும் போதுதான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் தமது குடும்ப வாழ்வை கொழும்பில் நடத்த வேண்டியிருந்ததால் கொழும்புக்கருகாமையிலேயே வாடகைக்கு வீடொன்றை எடுத்து அதில் குடியேறினார்கள்.
பெப்ரவரி-2012
 

வேலைக்குப் போகவும், வேறு போக்கு வரத்துக்குமென சிவா மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வங்கிக் கடன் அடிப்படையில் வாங்கிக் கொண்டான்.
அவர்கள் கொழும்பில் குடும்பமாக வாழத் தொடங்கியபோது சிவாவுக்கிருந்த மிகப்பெ ரிய கவலை அவனது 80 வயதான தந்தையை கிராமத்தில் தனியாக வசிக்க விட்டுவிட்டு வந்தமையாகும். சிவா பல தடவைகள் தனது தந்தையை கொழும்புக்கு வந்து தம்முடன் தங்கும்படி வற்புறுத்தினான். என்றபோதும் கிராமத்தில் தன் இளமைக்கால கனவுகளுடன், தானே கட்டிய வீட்டைவிட்டு பிரிந்துசெல்ல தந்தை மறுப்புக் கூறி வந்தார்.
எனினும் சனி, ஞாயிறு கிழமைகளில் சிவா கிராமத்துக்குச் சென்று தன் தந்தையை பார்த்து வர தவறமாட்டான். ஒவ்வொரு முறையும் தந்தையிடம் விடை பெற்றுச் செல்லும் போது அவரை தம்முடன் வந்துவிடும் படி வற்புறுத் துவான்.
"அப்பா. நீங்கள் இங்கே தனியாக வசிப்பதால் ஒருபயனும் இல்லை. உடம்புக்கு ஏதாவது ஆனால் எங்களினால் உடனடியாக வந்து பார்க்கவும் முடியாது. இந்திராணியும் உங்களை அங்கே கூட்டிவந்து விடும்படி வற்புறுத்துகிறாள். அதைப்பற்றி யோசியுங் கள். தந்தையும் மகனின் கூற்றை பலமுறை யோசித்துப் பார்த்தார். ஒரு விடுமுறையில் சிவாவும், இந்திராணியும் கிராமத்துக்குச் சென்றபோது அவர்களுடன் கொழும்புக்கு வர சம்மதம் தெரிவித்தார்.
இந்திராணி சிவாவின் தந்தையை தன் தந்தை போலவே கவனித்துக் கொண்டாள். ஆனால், இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் இந்திராணியின் வேலைப்பளு மிக அதிகமாகக் காணப்பட்டது. அன்றும் அப்படித்தான் காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தார்கள்.
"இந்திரா, அப்பாவுக்கு சாப்பாடு, மருந்து எல்லாம் எடுத்துவைத்து விட்டாயா? சிவா (85 LT6T.

Page 26
இல்லை glor. எழுந்திருக்க நேரமாகி விட்டது. பாண் ஏதாவது வாங்கிக் கொண்டு வாங்க."
“சரி.சரி. நீ ரெடியாகு. சிவா தன்
பைக்கை உதைத்து அதனை உயிர்ப்பித்து
கடைக்குப் போகத் தயாரானான். அவர்களின் காலைக்கலவரம் ஆரம்பமானது. வேலைக்குப் போகும் அவசரம். பகல் சாப்பாடு சமைக்க வேணும்.
ஒருவாறு அவர்கள் தயாராகி தந்தைக்கு பாண் இரண்டு துண்டு பட்டர் தடவி மேசையில் வைத்துவிட்டு சாப்பிடுமாறும், மருந்து குடிக்குமாறும் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
ஓய்வு நாட்களில் ஒய்வெடுத்துக் கொண் டிருந்த சிவாவின் தந்தை நேரம் வந்ததும், பசி இல்லாதிருந்த போதும் வேளைக்கு மருந்து குடிக்க வேண்டுமென்பதால் எழுந்து சென்று மேசை முன் அமர்ந்து ஒரு துண்டு பாணை பிய்த்து வாயில் போட்டார்.
வயது போனகாலத்தில் இப்போதைய கரடுமுரடான காய்ந்த பாணை கடித்து சப்பி விழுங்குவது கூட கடினமான செயலாக இருந்தது. அவர் மெதுமெதுவாகவே சப்பி சுவைத்து பாண் துண்டை முழுங்கியபோதும் அது தொண்டையில் சென்று இறுகிக்கொண் டது. அவர் செருமி பாண் துண்டை வெளியே துப்பப்பார்த்தார். முடியவில்லை. மெதுவாக எழுந்து நீர்குடிப்பதற்கு முயற்சி செய்தபோது
கண்கள் இருண்டு கொண்டுவந்தன. அவர்
தட்டுத்தடுமாறி கீழே தடார் என்று விழுந்தார். அவருக்கு உதவ அங்கு யாரும் இருக்க வில்லை.
அன்றுமாலை இலேசாக இருளடைந்து கொண்டு வந்தபோதே சிவாவும் இந்திராணி யும் வீடு திரும்பினர். சிவா முதல் வேலையாக தன் தந்தையைத்தான் தேடிச் சென்றான்.
அவன் முன்னறையில் கண்ட காட்சி அவனை
பேச்சுமூச்சு அற்றவனாக்கியது. அவன் தந்தை அசைவற்று நிலத்தில் விழுந்து கிடந்தார்.
 
 
 
 
 
 
 

அவர் இறந்து போய் பல மணித்தியாலங்கள் கடந்து போயிருந்தன.
பிள்ளைகள் தம் வயது முதிர்ந்த தாய், தந்தையர் மீது எவ்வளவுதான் பாசம் கொட்டிக் கவனித்தாலும் அவர்களின் இயலாமையைப் புரிந்துகொள்வதில்லை. பெரியோர்கள் வயத டைய வயதடைய சிறு குழந்தைகள் போல பலவீனமடைகிறார்கள். அவர்களின் உணவில் கூட குழந்தைகளுக்கு எவ்வாறு கவனித்து உணவூட்டுகிறோமோ அந்த அளவுக்குக் கவ னம் தேவை. இந்த சிறுவிடயத்தில் உதாசீன மாக இருந்ததால் சிவா தன் அன்பான தந் தையை இழந்தான்.
– 6I6ň). gÍL66of
தலைகால் புரியலை!"
'ஏன் என்ன செஞ்சார்? 'கழுத்தில விழுந்த மாலையை கழட்டி
வீசுறதுக்கு பதிலா வேட்டியை 瞿
அவிழ்த்து வீசுறாரே..!"

Page 27
குருதி நாளங்களைத் தைப்பது மற்றும் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை ஆகியனவற்றில் சிறப் பான பங்காற்றியதற்காக 1912ம் ஆண்டிற்கான மருத்துவத்துறை சாதனைக்குரிய நோபல் பரிசு அலெக்ஸிஸ் கர்ரெல் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அது மட்டுமா? மேற்கூறிய இரண்டு பங்களிப்புகளையும் தாண்டி அவர் மூன்றா வதாகவும் ஒரு பரிசோதனையை வெற்றிகரமாக
அலெக்ஸிஸ் தடு)
VA EXIS (CARRE (1873 - 1944)
பெப்ரவரி -2012
 
 
 
 

முடித்துள்ளார். அதுதான் AGEING. 95 T6 ug5 || || வயதாகுதல் , வயதாவதைத் த டு ப் ப து எப்படி? என்பது உட்பட பல அரிய ஆராய்ச்சி முடிவுகளை தந்தார் கர்ரெல்.
GIÓDlh
1873 ஜூன் மாதம் 28ஆம் திகதி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார் அலெக்ஸிஸ் கர்ரெல்.
இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய இவர் மனித உடலில் இரத்த நாளங்களின் பங்களிப்புகளைப் பற்றியும் மாற்று e|ഇഞഖ சிகிச்சை குறித்தும் அர்ப்பணிப்போடு ஆய்வுகளை மேற் கொண்டார்.
இரத்த நாளம்
உடல் முழுவதும் இரத்தத்தைக் கொண்டு போய் செலுத்தி உடல் இயக்கத்திற்கு வழிவகை செய் பவையே இந்த இரத்த நாளங்கள் திசுக்களுக்கு இடையே, திரவ மற்றும் இரசாயன பொருட்கள் பரிமாற்றத்தி ற்கு உதவும் Capilary எனப்படும் நுண்ணிய இரத்தநாளங்கள் மேலும் அத்தியாவசியமானவை.
இவற்றில் சிரை எனப்படும் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு போகும் Vein களும் இதயத்திலிரு ந்து இரத்தத்தை வெளிக்கொண்டு வந்து உடலெங்கும் பரப்பும் தமனி எனப்படும் Artery ம் அடங்கும்.
ബ

Page 28
சிரை மற்றும் தமனிகளில் அடைப்புகள்
உண்டாகலாம். இல்லையென்றால் பழுது ஏற்படலாம். இரத்த நாளங்களைச் சுத்தம் செய்து வெட்டி ஒட்ட வழியில்லாமல் இருந்த காலகட்டம் அது. நூலிழையிலும் பன்மடங்கு மெல்லிய இழைகளில் தைப்பது, கைகூடாத ஆனால் மிகத் தேவையாக மருத்துவ உலகில் நீடித்தது. இந்த தேவையைப் பூர்த்தி செய்தார் கர்ரெல். இரத்த நாளங்களின் சிகிச்சையின் போது அவற்றை தைக்க வழிவகை தந்தார் இவர்.
பழுதடைந்த இரத்த நாளப் பகுதியை எடுத்துவிட்டு அங்கு நல்ல நாளத்தை இணைத்து தைத்து உடலை சீர்செய்யும் சிகிச்சை வெற்றி பெற்றது.
o pusių LDT puffi#GDJ
இந்த வெற்றியைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாகவே உடற்பாகங்களையே ஒட்டி வெட்டும் அல்லது மாற்றும் வெற்றிக்கனி எட்டப்பட்டது. சிறுநீரகம் பழுதாகி விட்டால் அதற்கேற்ற மற்றொரு சிறுநீரகம் பெறப்பட்டு மாற்றப்படுகிறதல்லவா? இத்தகைய உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முதல் வெற்றிக் கொடி நாட்டியவர் கர்ரெல் அவர்களே. உடலின் வெளிப்புற மற்றும் உட்புறப் பகுதிகள் எதுவாக இருந்தாலும் அதனை மாற்று அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம் என்ற வியத்தகு மருத்துவ மைல்கல்லை எட்டினார் இவர்.
எவ்வாறாயினும் 39(5 உறுப்பினை அறுத்தெடுத்து, அந்த இடத்தில் மாற்று உறுப்பினை வைக்கும் போது அனைத்து இரத்த நாளங்களும் சரியாக தைக்கப்பட
 

வேண்டுமல்லவா? ஏற்கனவே இரத்த
நாளங்களைத் தைப்பது பற்றி இவரின் ஆய்வு வெற்றிகண்டதால் அதன் தொடர்ச்சியாக
உறுப்பு மாற்று சிகிச்சையும் சாத்தியமானது.
QiiiaiTSIIDID
உறுப்பு மாற்றத்தின்போது ஒவ்வாமை
உண்டாகும் என்ற முக்கியமான நிலைப்
பாட்டினை முன் வைத்ததுவும் இவர்தான்.
யாருடைய சிறுநீரகமும் யாருக்கும் பொருந்திப்
போய்விடுவதில்லை. அவரவர் உடலுக்கு
ஏற்றாற்போல உள்ள உடல் கட்டமைப்போடு
மாற்றப்படும் புது உறுப்பு பொருந்தாவிட்டால
அந்த மாற்று உறுப்பினை நோயாளிக்கு
பொருத்துவது நடைமுறையில் சாத்தியப் படுவதில்லை. உடல் மாற்றின் முக்கிய சிக்கலான இதனையும், மருத்துவ ரீதியில்
இதற்கான தீர்வையும் தந்தார் கர்ரெல்.
நெஞ்சுக்கட்டுத்திர சிகிச்சை பற்பல வகையான நவீன உடலுறுப்பு மாற்றுகள் வந்துவிட்டாலும், இவை
அனைத்தின் அடிப்படையும் கர்ரெல் பதித்தவையிலிருந்து உருவானதாகும்.
உடலுக்குள் சத்திர சிகிச்சை சார்ந்த நிவாரணங்களிலேயே ஆய்வினை செலுத்தினார் கர்ரெல். அதன் பயனாக இரத்தநாளங்களைத் தைத்தல், மற்றும் உறுப்பு மாற்றம் ஆகிய புதுமைகளை செய்த கர்ரெல்லின் மற்றுமொரு மைல்கல் சாதனை நெஞ்சுக்கூட்டு அறுவை சிகிச்சையாகும்.
பெப்ரவரி-2012

Page 29
நெஞ்சகம் இதயம் நீங்கலாக உள்ள நுரையீரல் மற்றும் அதன் இயக்கப் பகுதிகளுக்கு 'நெஞ் சகம்’ என்று பெயர். இங்கு ஏற் படும் நோய்கள் மற்றும் ஒவ் வாமைகளுக்கு அளவே கிடை UTS).
ஆஸ்(து)மா, புற்றுநோய் உட்பட பல ஒவ்வாமைகளின் கூடாரமாகவுள்ளது இந்த நெஞ் சகம். இந்தப் பகுதியில் கத்தியை வைத்து சத்திர சிகி ச்சை மேற்கொள்வது கற்பனை யில் கூட காணப்படாத அந்தக் காலத்தில் அதனை சாதித்துக் காட்டினார் அலெக்ஸிஸ் கர்ரெல்.
உடலுறுப்புகளின் ஒன்றிணைந்த @III,II,III) உடலுறுப் புக ளின்
BESTIONSTIT)
இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை
· na வேண்டும் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது ി. ീട് ഇിട്ട് ിന്റെ
| பெப்ரவரி -2012 628
 
 

மருத்துவ உலகிற்கு பேருதவியாக 3(1555g). "Open Heart Surgery என்ற பிற்காலத்தில் இதய அறுவை சிகிச்சை வெற்றிக்கான அடிப்படை தத்துவத்தை அலெக்ஸிஸ் கர்ரெல் தெளிவாக மேற்குறித்த கட்டுரை யில் எழுதியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் மேலும் L6) அறிவியலாளர்களுடன் இணைந்து கர்ரெல் கோடிட்டு காட்டியிருந்த செயற்கை இதயம், செயற்கை வால்வு போன்ற முன்னுரைகளும் முன்னேற்பாடுக ளும் பின்னாளில் உண்மையாகவே உருவாகி நிலை பெற உதவின.
மருத்துவத்துறையில் Lue) it பல்வேறு ஆய்வுகள் செய்திருக் கலாம். ஆனால் செய்த அனைத்து ஆய்வுகளும் பல நூற்றாண்டு களுக்கும் மேலாக உதவும் விதத்
தில் அமைந்தது என்னவோ அலெக்ஸிஸ் கர்ரெல்லின் மாபெரும் சாதனைகள்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
'டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு" 'இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்"
- elin.

Page 30
பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட உடனடி உணவுகள், நொருக்குதீனிகளை உட்கொ6 ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப் ஏற்படும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆ పోవు தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறு கின்றது. தவிர டிரான்ஸ் ஃபேட் அதிக
முள்ள கேக். பீட்சா, பர்கர், சொக்கோ டிரிங்க், சிப்ஸ் ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்றும் எச்சரிக் கப்பட்டுள்ளது. எனவே இவற்றை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறு வகை
களை உணவாக எடுத்துக்கொள்ள வேண்
டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை.
ஆழ உணவியல் Uly
 
 
 
 
 
 

H O
பாலியல் என்பது உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்த வரம், இனப் பெருக்கத் தின் ஆதாரம். பாலியல் என்பது அருவருக் கத்தக்க விடயமோ வேண்டத்தகாத விடய மோ அல்ல. பாலியல் என்பது ஆபாச விடய மும் அல்ல. மனித இனப்பெருக்கத்துக்கும் மனிதனின் உடல், உள தேவைகளுக்கும் பாலியல் செயற்பாடுகள் அவசியமாகின் றன. அனுமதிக்கப்பட்ட அல்லது சட்டரீதி யான அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட துணையுடன் பாலியலில் ஈடுபடுவது ஒரு வரை அமைதிப்படுத்தும் புத்துணர்ச்சியை தரும். ஆனால் ஏனைய உயிரினங்கள்
போன்று பாலியல் சார்ந்த விடயங்களில்
மனிதன் அநாகரிகமாகவோ முறைத வறியோ நடக்கும் போதே பல்வேறு பிரச்சி னைகள் தோன்றுகின்றன.
பாலியல் என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும். பாலியல்
தொடர்பில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையின் நோக்கம் பாலியல் செயற்பாட்டைத் தூண்டும் மருந்து வகை
கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களை அறிவுறுத்துவதாகும். இயற்கை உணவின் மூலமாக பாலியல் ஆற்றலை அதிகரிப்பது தொடர்பாக விழிப்பூட்டுவதா கும். பாலியல் ஒரு கலை. இந்தக் கலையில் எல்லோரும் முழுமையாக வெற்றி பெறுவ
தில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
) பெப்ரவரி-2012

Page 31
பாலியல் குறைபாடு என்பது அதில் ஒரு முக்கிய ஒரு விடயமாகும். சிலர் இயற்கையா கவே பாலியல் குறைபாடுடையவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் நோய்கள் கார ணமாக குறைபாடுடையவர்களாகவும் ஆர்வம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இன்னும் சிலர் உளவியல் சார்ந்த பாதிப்புக்கள் காரண மாக பாலியலில் ஈடுபட முடியாதவர்களாகவும் அல்லது பூரண திருப்தி பெற முடியாதவர் களாகவும் அல்லது ஆர்வமற்றவர்களாகவும் இருக்கலாம். இன்னும் சிலர் பாலியல் தொடர் பான அச்சம் காரணமாகவும் ஏற்கனவே பாலி யல் ரீதியில் துன்புறுத்தல்களுக்கு அல்லது பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் இருப்பதன் காரணமாக தனது பங்காளியுடன்
(துணையுடன்) இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாதவர்களாக இருக்கலாம். அல் லது விருப்பமற்று இருக்கலாம்.
இன்னும் சிலர் ஓரினச் சேர்க்கைக்கு அடிமையாகியுள்ளதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையில் தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்தவர்களாகக் காணப்படலாம். இன்னும் இது போன்ற பல காரணங்களை குறிப்பிட லாம். எது எப்படி இருந்த போதிலும் பாலியல் செயல்பாட்டை தூண்டும் மருந்து வகைகளை உட்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது.
பெப்ரவரி-2012
 
 
 

ணுவும், பெண்ணின் கரு முட்டையும்
இணையும்போது
கரு உருவாகி, அது தாயி ன்
வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்தணு /48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை 24 மணி நேரம் தான் உயிருடன் இருக்கும். கருமுட்டை வெளியான 24 மணி நேரத்திற்குள், அதை ஆணின் உயிரணு சந்தித்து இணைந்து கொண்டால்தான் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும். இதனால், கரு முட்டை எப்போது வெளியாகிறது என்ற ஆர்வமான கேள்வி எழுகிறது. மாதவிலக்கு நின்ற 10 முதல் 20 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கருமுட்டை வெளிவரலாம். இந்த காலக்கணக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்துகிறது என்று பெண் | ணியல் நோய் ஆய்வாளர்கள் கூறுகின்ற

Page 32
WeyWV INNITURUTydedd குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்
நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்திய காருக்குள் குழந்தைகள் சிறிது நேரம் / இருந்தாலும் மூளை பாதிக்கப்படலாம் / என்று ஆஸ்திரேலிய ஆய்வு எச்சரித் துள்ளது. வெளியே 29 டிகிரி வெப்பம் \ நிலவும் நாளில் காருக்குள் ஏர் கண்டிஷன் \ மூலம் 20 டிகிரி வெப்ப நிலையாக குறைந்தால், அடுத்த 10 நிமிடங்களில் வெப்பம் இரு மடங்காக உயரும். கார் நின்ற அடுத்த 10வது நிமிடம் 3 மடங்காக அதிகரிக்கும். இந்த திடீர் வெப்ப நிலை அதிகரிப்பால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படலாம். நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்தப்பட்ட காருக்குள் குழந்தை,
செல்ல பிராணிகள் அதிக நேரம் இருக்க
நேர்ந்தால் உயிரிழக்கும் அபாயம் உண்டு.
நீண்ட நேரம் காருக்குள் வெப்பத்தில் இருக்கும் குழந்தைகள் சுயநினைவிழந்து பிறகு மீள முடியாத கோமா நிலைக்கு செல்லும் ஆபத்தும் இருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடைகளிலும் பார்மஸிகளிலும் தனிப் பட்ட முறையிலும் பாலியல் செயற்பாடு களை அதிகரிக்கக் கூடிய மருந்து மாத்திரை வகைகள் லேகியங்கள் இரகசியமாகவும் பரக சியமாகவும் விற்பனை செய்யப்பட்டு வரு
கின்றன. ஏன் ஊடகங்களில் கூட இது தொடர் பாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின் றன. இந்நிலையில் சுகாதார அமைச்சு ஒரு எச் சரிக்கை விடுத்துள்ளது. பாலியல் செயற் பாட்டை ஊக்குவிக்கும் என விளம்பரப்படுத் தப்பட்டு பல்வேறு பெயர்களில் மாத்திரைகள் மற்றும் அவற்றுடன் தொடர்பான மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுகா தார அமைச்சின் வாசனைத் திரவியம் மற்றும் ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான 500ற்கும் மேற்பட்ட மருந்துப்
பாருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் ஆறு வகையான மருந்துப் பொ ருட்களே அதிகாரசபையில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக ஒளடத ஒழுங்குபடுத்தும் அதி கார சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே பாலி யல் செயற்பாட்டைத் தூண்டும் மருந்து வகைகளை உட்கொள்ளுவதில் அவதானம் அவசியம் என்று சுகாதார அமைச்சு குறிப்பிடு கிறது. பாலியல் செயற்பாட்டைத் தூண்டும் மருந்துகளால் மனச்சோர்வு, வாந்தி, குருதி அமுக்கம், மாரடைப்பு, நரம்புக் கோளாறுகள், வலிகுணங்குறிகள், நிறைகுறைவு, வயிற்று வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுத்தப்ப டுவதாகவும் இவ்வகை மருந்துகளை உட் கொள்ளுமுன் வைத்தியர்களின் ஆலோசனை களைப் பெற்றுக் கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
பாலியல் பிரச்சினைகள் காரணமாக கன வன் மனைவிக்கிடையில் பிளவுகள் ஏற்படு கின்றன. குடும்பப் பிரச்சினை ஏற்படுகின் ன. ஏன் முறையற்ற தொடர்புகளும் ஏற்படு கின்றன. சிலர் இப் பிரச்சினை தொடர்பில் வெளியில் சொல்ல முடியாதவர்களாகவும் ஆலோசனை பெற தயங்குபவர்களாகவும்
2 பெப்ரவரி-2012
SS

Page 33
சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் சிலர் சந்
தையில் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்
திரைகளை வாங்கிப் பயன்படுத்துகின்றார்கள். இன்னும் சிலர் நீண்ட நேரம் சுகம் அனுபவிக்க வேண்டும். அல்லது பாலியல் ஆற்றலை அதி கரித்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற நோக்கங்கள் காரணமாக பாலியல் மருந்து வகைகளை பயன்படுத்த ஆரம்பித்து பின்னர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
தங்கபஸ்பம், வயகரா மாத்திரை, சிட்டுக் குருவி லேகியம், மதனலேகியம், ஸ்ப்ரே (SPRAY) வகைகள் மாத்திரை வகைகள், கிரீம் வகைகள் என பல்வேறு மருந்து மாத்திரைகள் சந்தையில் விற்பனையில் உள்ளன. தொலை பேசி அல்லது நேரில் சந்தித்து ஆலோசனை பெற்ற பின்னர் தபால் மூலமாக லேகியம் மற்றும் மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகின்றன. இவை எல்லாம் எந்தளவு வெற்றியளித்துள்ளன? பாதிப்புக்களை ஏற்ப டுத்துகின்றனவா? உண்மையா? பொய்யா? என்பது பற்றி அந்த மருந்து வகைகளை பயன் படுத்தியவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்நிலையில் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ள விடயம் தொடர்பாகவும் கவனம் எடுப்பது நல்லது.
பாலியல் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள செயற்கையான மருந்து வகைகளை நாடாமல் இயற்கையான மருந்துகளையும் உணவு வகை களையும் பயன்படுத்துவதே நன்று. உண வுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா? விஞ்ஞானத்தின் பதில் ஆமாம் என்பது தான் ஊருக்கு அல்லது நாட்டுக்கு ஏற்றபடி காதல் உணர்வுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும், குங்குமப் பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத் தவர்களுக்கும், பறவை கூடு சூப் சீனர்களுக்
கும் ஆண்மையை அதிகரிக்கும் உணவாக
கருதப்படுகின்றன.
கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed 萎
நீர்கொழும்பு.
பெப்ரவரி-2012
 

பல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த கிருமிகளுக்கும், குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர். இந்த புற்று நோய் வருவதை முன் எச்ச ரிக்கையுடன் தடுக்க முடியும். உடல் \எடை அதிகரிக்காமல் பார்த்து கொள் /ளுதல், இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல், நார்சத்து உணவை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Page 34


Page 35

| El G. Ejii (latill:Illé.
EST Gli ini
film ffilián IIIDIT, STERGROOTin Stijgiá
| img
EğÜ KÜ)
Burmur lig
| nau nga
धा
film Gunung lumtimi
animatan inféria

Page 36
வளரும் குழந்தைகளுக்கு ஏற் நோய்களைத் தடுப்பது எப்ப
பிறந்த நாள் முதற் கொண்டு ஒவ்வொரு ந யொன்றின் வளர்ச்சி காணப்படுவதனை அ இவ் வளர்ச்சியானது வயது வந்தோர் வரைக் வயது முதிர்ந்து செல்லும் வரைக்கும் தொட மனித வாழ்க்கையை எடுத்து நோக்கும்போது வத்தில் ஏற்படும் வளர்ச்சி வேகமானது சில ே கள் காரணமாக தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றனர். பிள்ளைப் பருவத்தில் ஏற் ஆரோக்கியமானது முழு வாழ்க்கையிலும் செல் துகின்றது. இது எதிர்காலத்தில் சுகதேகியான பி லது சுகமான பிரஜையாக உருவாக பெரும் பங் மான நிலை சமூக மற்றும்பொருளாதார அபி னும் இத்தகைய ஆரோக்கியமான நிலைக்குத் த குழந்தை நோய்களுக்கான விசேட வைத்தியர் !
விடயங்களைக் குறிப்பிட்டார்.
மலத்துடன் இரத்தம் வெளியேறல்
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் களிலொன்று வயிற்று வலியாகும். சில சமயம் வயிற்று வலியுடன் மலமும் வெளியேறும் நிலையேற்படுகின்றது. வைரஸ் அல்லது பக் றிரியா உடலுக்குள் சென்றதன் காரணமாக இத் தகைய அஜீரண நிலை காணப்படலாம். முக் கியமாக "ரோடா வைரஸ்" ஊடாக அல்லாவி டில் ஈகோலாயிஷிகெல்லா, சல்மெனெல்லா என்றழைக்கப்படும் Lë, fifurtë, 56f6OTIT6) வயிற்று வலியுடன் மலம் வெளியேற்றல் நடைபெறலாம். சிலவேளைகளில் மலத்து டன் இரத்தமும் வெளியேறலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் உடனடியாக வைத்தியரை நாட வேண்டியது அவசியம்.
சிறு பிள்ளைப் பருவ ஆஸ்துமா மேற்படி சிறு பருவத்து ஆஸ்துமா வளரும் குழந்தைகளிடம் பரவலாகக் காணப்படும் ஒரு நோயாகும். இதனை Childhood Asthma என்று அழைப்பர். இத்தகைய ஆஸ்துமா 1213 வயதாகும் போது அநேகமாக இல்லாமல் போய்விடும். சிலவேளை அலர்ஜி காரணமாக இளைப்பு போன்ற நிலை ஏற்படலாம். இத னை அடையாளம் கண்ட பின்பு உடனே அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும். இதற்கு சிறந்த சிகிச்சை முறையாக Inhaler பயன்ப
an
 

வதானிக்கலாம். கும் இறுதியில் ர்ந்து செல்லும். பிள்ளைப் பரு நாய் நிலைமை வைத்தியர்கள் படும் சுகமான வாக்கு செலுத் ள்ளையாக அல் களிப்பு செய்கின்றது. இத்தகைய ஆரோக்கிய விருத்திக்கு பெரும் துணை புரிகின்றது. எனி நடையாக இருக்கும் சில நோய்கள் தொடர்பாக
Dr. தீபால் பெரேரா அவர்கள் முக்கியமான பல
டுத்துதல் ஆகும். குளிசைகளை பயன்படுத்து வதை விட உடனடி நிவாரணியாக Inhaler சிகிச்சை சிறந்த பயனை அளிக்கக் கூடியதா
கும்.
சிறுநீரில் எண்ணெய் மற்றும் மா தன்மை உள்ளதா? குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் சிறுநீரக நோய் அண்மைக் காலத்தில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பிள்ளைகளின் உடல் வீங்குதல், சிறுநீர் வெளியேறும்போது சிறுநீருடன் மா தன்மை கொண்ட அல்லது எண்ணெய்த்தன்மை கொண்டதாக இருந்தால் சிறுநீரக நோய் என அறிந்து கொள்ளலாம். Nephrotic Syndrome என இந்நோய் அழைக்
பெப்ரவரி-2012

Page 37
கப்படுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் L6) அதிகளவில் வீங்கிக் காணப்படும். அவ் விதமான வீக்கம் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரிடம் காட்ட வேண்டும்.
சிறுநீரக பரிசோதனை செய்து நோயைக் கண்டறிந்த முதற் கட்டத்திலேயே சிகிச்சை செய்யலாம். இந் நோயின்போது உடலுக்குத் தேவையான புரதம் சிறுநீருடன் வெளியேறி விரயமாகின்றது.
சிறுநீர் சிவப்பு நிறமாக உள்ளதா?
Acute Glomerulo Nephrities 6T6öTug இன்னுமொரு வகை சிறுநீர் சம்பந்தப்பட்ட நோயாகும். இந்த நோயின் போது சிறுநீருடன் இரத்தம் வெளியேறும் சாதாரணமாக சிறுநீர் வெளியேறும்போது மீன் கழுவிய நீர் போல சிவப்பு நிறமாக சிறுநீர் வெளியேறும். இத்த கைய நிலையின்போது நோய் பீடித்துள்ள குழந்தைக்கு கட்டாயம் இரத்த அழுத்தம் ஏற் படும். இதற்கு முக்கிய காரணம் Blood uria, அதாவது இரத்தத்தின் யூரியாவில் ஏற்படும் அதிகரிப்பாகும். மிக விரைவில் வைத்தியரி டம் அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் நோயைக் குணமாக்கலாம். லியூகேயோ (இரத்தப் புற்றுநோய்) சிறு குழந்தைகளை தாக்கும் இன்னுமொரு நோயாக லியூகேமியா நோய் உள்ளது. ஆனா லும் ஒரு சிலரே இந்நோயால் பெரிதும் பாதிக் கப்படுகின்றனர். லியூகேமியா இரண்டு
பெப்ரவரி-2012
 

வகைப்படும். AML மற்றும் AL எனும் இருவ கையாகும். AML வகை லியூகேமியாவின் போது நோய் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச் சல் ஏற்படல், இரத்த செங்குருதி துணிக்கை கள் குறைதல், களைப்பு, நிணநீர் சுரப்பிகள் பெரிதாகுதல் என்பனவற்றைக் குறிப்பிட லாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் உடனடி யாக வைத்தியரிடம் கொண்டு சென்று பரி சோதனை செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து விரைந்து சிகிச்சையளிக்க வேண் டும்.
ALL எனப்படும் இரத்தப் புற்று நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், நிணநீர் சுரப்பி பெரி தாக்குதல், ஹீமோகுளோபின் குறைவடை தல், கண்கள் வாடியது போன்ற நிலை என்ப வற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய சந்தர்ப் பத்தில் FBC என்றழைக்கப்படும் இரத்தப் பரி சோதனை மற்றும் Blood Picture மற்றும்
ܕ .
Bone மெரோ (எலும்பு மச்சை) பரிசோதனை செய்வதன் மூலம் இந்நோயைக் கண்டறிய லாம். நோயை கண்டறிவதன் மூலம் 80% சுகப்படுத்தலாம். இத்தகைய நோயுள்ள குழந் தைகளுக்கு பக்ரீரியா தாக்கம் ஏற்படுமிடத்து சரியான விதத்தில் சிகிச்சையளிக்கப்படாதவி டத்து நிலைமை மோசமாகலாம்.
கூடியளவான போசணையும் மந்த போசணையும் குழந்தைகளைப் பீடிக்கும் இன்னுமொரு பிரச்சினை கூடிய போசணை ஏற்படுதல் மற் றும் குறைவான போசனை நிலை உருவாதல் கூடுதலான போசணை இன்று சமூகத்தில் தொற்றாத ஒரு நோயாக இருந்தபோதும் அதிக மாக பரவிச் செல்லும் நோயாக உள்ளது. உட
-

Page 38
னடி உணவு, சைனீஸ் உணவு, பேஸ்டி சிற் றுண்டி வகைகள் பிஸ்கட், குளிர்பானம் என்ப னவற்றின் காரணமாக இன்று குழந்தைகளு க்கு கொலஸ்ரோல் உண்டாகுதல் குழந்தைக ளின் நுரையீரல் பெரிதாகுதல், நீரழிவு, இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் உண்டாகின் AD60T.
குறிப்பாக நகரப் பகுதியில் வாழும் குழந் தைகள் இத்தகைய நோய்களினால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் அதிக ரிக்கின்றது. அதிக போசணை காரணமாக ஆரோக்கியமற்ற நோயுள்ள குழந்தைகள் பரம் பரையொன்று தற்போது உருவாகி வருகின் றது. இந்த நோய் நிலைமையானது நீண்டு காலமாக காணப்படுகின்றது. இந்நிலையிலி :ருந்து மீள வேண்டுமாயின் சரியான விதத்தில் அமைந்த உணவு முறை யொன்றைக்  ைட ப் பி டி க்க வேண்டமென வலி றுத்தப் படுகின் றது.
போசனை குறை தல் 55 TOT 6OOTLDT55 மந்த Guits 60600T ஏற் ப டு கின்றது. இதன் காரணமாக குழந் தை க ளின் நுரையீரல் வீக்கமடைகின்றது. விற்றமின் "C" குறைபாடு காரணமாக கண் பார்வை குறை கின்றது. தோல் காய்ந்து வரண்டு போகின் றது. சில பிள்ளைகள் உயரம் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். குழந்தைகள் வளர்வதற்கு தேவையான ஹோர் மோன் வகைகள் குறைவடைவதனால் இந் நிலை ஏற்படுகின்றது. அத்துடன் தைரொக் ஸின் அல்லது வளர்ச்சி ஹோர்மோன்களில் குறைபாடும் இதற்கு காரணங்களாக அமை கின்றது. *, தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கா தவர்கள் குட்டையாக இருப்பார்கள் என புதிய கண்டு பிடிப்பொன்றில் கூறுகின்றது. இத்த கைய குட்டையான குழந்தைகள் தொடர்பாக ஆய்வு நடாத்தும்போது இது கண்டு பிடிக்கப் பட்டது. இத்தகையவர்கள் Growth Negative
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். மேலும் சிறுநீரக பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும் குழந்தைகள் குட்டையானவர்களாக இருக்கின்றனர் என் றும் தெரியவந் துள்ளது. பெண் குழந் தை க ளின் குட்டையாக இருக் கும் நோயானது Tyrners Syndro me என்ற பெயரில் رZZ அழைக்கப்படுகின் றது. அதிகளவான உயரமாக வளருவ தும் ஒரு நோயாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு
இன்று அநேகமான குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு Insulin depended வகையைச் சேர்ந்தது. இன்சுலின் ஏற்றுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த லாம். ஆனால் இன்று வளரும் குழந்தைகள் அதிகளவான இனிப்பு கலந்த உணவு வகை களை பயன்படுத்துவதன் காரணமாக Non Insulin dependent நிலை காணப்படுகின் D5. இத்தகைய நிலை பொதுவாக
6) JUg. வந்தோ ருக்கே ஏற்படுகின் Dġill. எனினும் இன்று குழந்தைகள் மத்தியில் பரவலாக இது காணப்படுகி
Ogil. குழந்தையின் தலை முடி உதிர்கின்றதா?
இன்று அதிக ரித்து செல்லும் இன்னுமொரு பிரச்சினை பிள்ளைகளின் தலைமுடி உதிர்தலாகும். நோய்க் கிருமியொன்று உடலிற்குள் சென்ற தன் காரணமாக தலைமுடி உதிரத்தொடங் கும். இதனை கண்டு பிடித்து சிகிச்சை மூலம் தடுத்து நிறுத்தலாம்.
பெப்ரவரி-2012 a

Page 39
குழந்தை அதிகமாக துடிதுடிப்புடன் உள்ளதா? இதற்கிடையில் பிள்ளைகள் மத்தியில் ADHD எனப்படும் மனநோய் ஒன்று பரவலாக உள்ளது. அதிமாக துடி துடிப்புடன் செயற்ப டல், விரைவில் கோ பப்படல், மற்றவர்க ளுக்கு இடையூறு விளைவித்தல், தன் பொருட் க ைள தொலைத்துவிடல், பாடசாலையில் மற் றும் வீட்டிலும் இந்த நிலை காணப்படு LDIT60TT6) gD.—L—60TLqயாக வைத்தியரை நாடி ஆலோசனை பெறவும், இத்த 60055 ULI நிலைக்கு முக்கிய காரணம் குழந்தையின் கவனயீன குறைபாடாகும். சரியான சிகிச்சை வழங்காவி டில் இவர்கள் பிற்காலத்தில நடத்தை பிறழ் வுள்ளவர்களாக மாற இடமிருக்கின்றது.
உள நோய்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள் ளான சில குழந்தைகள் தமது உளத்தாக்கங் களை ஒரு சில உடல் உபாதைகள் வாயிலாக வெளிக்காட்டுவார்கள். தலையிடி, வயிற்று வலி, இரவில் சிறுநீர் கழித்தல், இடைக்கிடை சிறு நீர் கழித்தல், தமக்கு தெரியாமல் பகல் நேரங்களில் சிறுநீர் கழித்தல், கற்றல் செயற் பாடுகளில் ஆர்வம் குறைதல் மற்றும் ஒளிந்து இருக்க விருப்பம் காட்டல் என்பன இத்தகைய வர்களிடம் காணப்படும் அறிகுறிகளாகும். இத்தகையவர்களை பரிசீலிக்கும் வைத்தியர் கள் இது தொடர்பாக அறிந்து கொள்ள கவன மெடுக்க வேண்டும். இல்லாவிடில் உடல் வியாதிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிக்க நேரிடும்.
பகல் நேரத்தில் சிறுநீர் கழிப்பது என்பது இத்தகைய குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப டும்.
வயிற்று வலி குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில்
(
பெப்ரவரி-2012 1. ¬2 :7 ܐܠܐ ܠܐ ܢܐܬܐ 1:
 
 
 
 

பொதுவான ஒன்று வயிற்றுவலியாகும். வயிற்றோட்டம் இதில் குறிப்பிடத்தக்கது. வைரஸ் அல்லது பக்றீரியா உடலிற்குள் சென்றதன் காரணமாக இத்தகைய அஜீரண நிலை ஏற்படும். குறிப்பாக ரோட்டா வைரஸ் ஊடாக அல்லது ஈ கோலாயி, ஷிகெல்லா செல்மெனெல்லா என்றழைக்கப்படும் பக்ரீரி யாக்கள் மூலம் இத்தகைய வயிற்று உபாதை கள் ஏற்பட்டு, வயிற்றோட்டம் உண்டாகும். உடனடியாக வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெறல் வேண்டும். இத்தகைய சந்தர்ப்பங்க ளில் அதிக வயிற்றோட்டம் காரணமாக வாந்தி பேதி ஏற்படலாம். வாந்தி பேதி பயங்கரமான நிலைக்கு இட்டுச் செல்லலாம். வாந்தி பேதி யின் போது தோல் வரண்டு போகும். தாகம், நாவரண்டு போதல், சிறுநீர் குறைவாக வெளியேறல் என்பன ஏற்படலாம். வாந்தி பேதியின் போது 'ஜீவனி பானம் அருத்தக் கொடுக்க வேண்டும். வறுத்த அரிசிக் கஞ்சி, வாழைப்பழம், தேசிக்காய், தோடம்பழம், மாதுளம்பழம் போன்ற பழங்களின் சாற்றை அருந்தக் கொடுப்பதன் மூலம் வாந்திபேதியை நிறுத்தக் கூடியதாக இருக்கும். வறுத்த அரிசிக் கஞ்சி, சீரகம் போன்றவை மிகவும் சிறந்தன. வாந்திபேதியின்போது Antibiotic பெற்றுக் கொடுக்கக் கூடாது. எப் போதாவது ஒரு சந்தர்ப்பத்தின்போதே Ant biotic வழங்கப்படும்.
மலச்சிக்கல்
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் களில் ஒன்று மலச்சிக்கலாகும். இது மிகவும் கஷ்டமான நிலையாகும். உடனடி உணவு வகைகள், நீர் குறைவாக அருந்துவது மற்றும் உடற்பயிற்சி இன்மை என்பன மலச்சிக்கல் ஏற்படக் காரணங்களாக உள்ளன. மரக்கறி வகைகளை குறைவாக உட்கொள்வதும் மலச் சிக்கல் ஏற்பட ஒரு காரணமாக அமைகின்றது. இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க குறிப் பிட்ட நேரத்தில் சரியான உணவுகளை உட் கொள்ள வேண்டும். இதனைத் தவிர்க்க முறையான உணவு முறைகளைக் கடைப்பி டிக்கப் பழக வேண்டும். அத்துடன் நீரை அதி களவில் அருந்துவதன் மூலம் மலச்சிக்கலை ஏற்படாமல் கட்டுப்படுத்தலாம்.
s

Page 40
பெயர் = சுண்டைக்காய் of GIII - TURKEYBERRY
IAITINGINI - SOLANUM TARVUM. hifadhah (Philih - SOLANACEAE. வேறு பெயர்கள் கடுகிபலம், பீதித் தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி.
பயன் தரும் பாகங்கள் - இலை, காய், மற்றும் வேர் முதலியன.
இனம் - சுண்டை ஒரு பெருஞ்செடி இனத் தைச் சேர்ந்தது.
জGঠতG©l
Il filiò i suori 5 அடி முதல் 10 அடி உயரம் கூட வளரக்கூடியது.
இது எல்லா வித மண் வளத்திலும் வளரக் கூடியது.
வகைகள் சுண்டையில் இரு வகையுண்டு. மலை காடுகளில் தானே வளர்வதை மலைச் சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம வெளியிலும் வளர் வதை ஆனைச்
சுண்டை அல்லது LIT6) 360T60) 6T661 றும் சொல்வர்.
தாயகம் இதன் தாயகம் புளோரிடா என்றும் மேற்கிந்தியா விலும் பின் ஆப்பி ரிக்கா, ஆசியா, ஆஸ் திரேலியா, அவாய், பசுபிக் தீவுகளிலும், நடு அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும், பிரேசிலிலும் பரவியதாகக் கூறுகின்றனர்.
தன்மை = 6 அகன்ற இறகாக உடைந்த நேர் அடுக்கில் அமைந்த இலைகளையும் வெண் நிறப் பூங்கொத்துக்களையும், உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும்.
* பச்சைக் காய்கள் பழுத்தால் மஞ்சள்
 
 
 
 
 
 
 

நிறமாக மாறிவிடும்.
* ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும். காய் சற்று கசப்புடையது.
* இது உலகெங்கும் உள்ளது. இதை இன விருத்தி செய்ய விதை மூலமாகவும், கிளை களை வெட்டி வைத்து முறைப்படி பயிரிடு
வார்கள்.
INGGILIIIIor;
பல் அகற்றியாகவும் வயிற் று ப் பூச் சிக் கொல் லியாகவும் பயன்படுகிறது.
* சுண்டைக் கசா யம் பாம்புக்கடி வீரி யம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கவும் கூடியது.
* மலேசியாவில் இதன் விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள்.
* வியட்னாமில் இதன் இலையை மாத விடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
* இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.
பெப்ரவரி-2012
* சுண்டை சோம்

Page 41
* பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச் சூடு, மூலக்கடுப்பு முதலியன தீரும்.
* உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்புச்சளி, ஆஸ் துமா, காச நோய் தீரும்.
* வயிற்றுப் போக்கு நின்று விடும்.
* சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு,
வெந்தயம், ஓமம், மாதுளை ஒடு, மாம்பருப்பு, கறிவேம்பு, சீரகம் ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து இடித்து காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசி யின்மை, மார்புச்சளி, நீரிழிவு தீரும்.
* சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் இலேசாக வறுத்து உப்பு சேர்த்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.
* சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப்
பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.
* இதன் வற்றலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.
*,*-*。 . ܬ ܒ ¬ ܗܘ s
“கண்ணகியும், கோவலனும் பஸ்ல
போனாங்க. எறங்கிற இடம் வந்தததும் கோவலன் படி வழியா எறங்கிட்டான்.
கண்ணகி எறங்கல. ஏன்?
“கண்ணகி தான் படிதாண்டா பத்தினி ஆச்சே. அதான்!”
< ശ് ട്യൂ, 1

Page 42
|鄂鼩、s(B (吋LL、酉。 ni Ghiff.js) 55ma III
மனிதனின் 2D LL60)60 இறைவன் ஒரு அற்புதமான முறையில் மிகமிக நுணுக்கமாக படைத்திருக்கின்றான். இதைப்பற்றி அந்த மனிதனே சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு உறுப்புக்களின் ஆக்கங்களைப் பற் றியும் சற்று சிந்தித்துப் பார்த்தால் அந்த இறை வனுக்கு எப்படி நன்றி செலுத்தினாலும் அதை எவ்வாறும் ஈடு செய்ய முடியாது என்பதை மனிதன் உணர்வான்.
இதன் அடிப்படையில், மனித உடலின் பல்வேறு உறுப்புக்களின் செயற்பாடு களுக்கு உணவும், ஒட்சிசன் எனும் வாயுவும் மிகவும் அவசியமாகும். இவற்றை, உயிருள்ள உடலின் உரிய பகுதிகளுக்கு எடுத்துச்
SS
 
 

செல்லப்படுவது குருதியின் மூலமேயாகும். இதயம் உடலிலுள்ள உறுப்புக்களுக்குக் குரு தியை அனுப்புகின்றது. குருதியமுக்கம் எனப் படுவது குருதியை எடுத்துச் செல்வ தற்காக, இதயத்தின் மூலமாகச் செய் யப்படும் செயலாகும். இச்செயற்பாட் டிற்காக இதயம் சுருங்கி விரிகின்றது.
மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. மேற் பகுதியிலுள்ள இரு - அறைகளும் "சோனை அறைகள் எனவும், கீழ்ப்பகுதியிலுள்ள இரு அறைகளும் இதயவறைகள் எனவும் அழைக்கப்
படுகின்றன. இந்த சோனை அறைகளும் இதயவறைகளும் தசையினாலான சுவர்களினால் பிரிக்கப்பட்டுள்ளன. இதயத்தி னுள்ளே குருதி சோணையறையி லிருந்து இதயவறைக்குச் செல்கின்றது. இத யம் ஒரு பம்பியாக இருப்பதால், குருதியை
A. HEOS/L.) 51,1)
di.

Page 43
யமாகின்றன. எனவே இதயத்திற்குக் குருதி யைக் கொண்டுவரும் குழாய்கள் நாளங்கள் என அழைக்கப்படுகின்றன. இதயத்திலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் குருதியை எடுத்துச் செல்வது நாடிக்குழாய்கள் என்று அழைக்கப்படுகின்றது. கையில் மணிக்கட்டுப் பகுதியின் நாடியைப் பிடித்துப்பார்க்கும் போது குருதி செல்லும் விதத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றதல்லவா? அதுவே நாடித்துடிப்பு எனப்படுகின்றது. உயர் குருதியமுக்கம் என்றால் என்ன? உயர் குருதியமுக்கம் அல்லது ஹைப டென்ஷன் என கூறப்படுவது ஒருவரின் உட லில் இதயத்திலிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாடிகளிலுள்ள குருதியின் அமுக்கம், ! ஒவ்வொருவரினதும் வயதிற்கும், பால் வேறு பாடுகளுக்கும் பொருத்தமற்ற முறையிலே உயர்வதேயாகும். யாவருக்கும் பொதுவான குருதியமுக்கம் இல்லாததே அதற்குக்காரண மாகும். குருதியமைப்பைக் காட்டும் வரைபு வயது, பால் வேறுபாடுகளுக்கமைய வித்தியா சமாக இருக்கும். ஒரே நபரின் குருதியமுக்க மானாலும் நேரம், மனநிலை, மதுபானம் அருந்துதல், நோய்வாய்ப்படல் போன்ற கார
னங்களினால் வேறுபட்டிருக்கும் என்பதை நாம் தெரிந்திருத்தல் நல்லது. குருதியமுக்கமானது இரசத்துட னான குருதியமுக்க அளவுமானி மூலமாகவே அளவிடப்படு கின்றது. அளவிடும் முறை இலகுவானது. வலி இருக்க மாட்டாது. குருதியமுக்கத்தை அளவிடுவதற்கு முன்பு, சுமார்
பெப்ரவரி-2012
 
 
 
 
 
 
 
 

15 நிமிடங்கள் ஒய்வாக இருப்பது அவசி கோப்பி அருந்துதல், படிகளில் ஏறி இறங்கு தல், பாரமான உணவுகளை உண்ணுதல், மன நிலை பதட்டமாக இருக்கும் சந்தர்ப்பங்களிலே சரியான அளவை அளவிட முடியாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குருதியமுக்கத்தை அளவிட்டுக் காட்டும் போது அதன் அளவுகளை இரு வகைகளிலே காண்பிக்கப்படுகின்றதை பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம்.
உயர் குருதியமுக்கம் சில ஆய்வுகளுக் கேற்ப, மொத்த சனத்தொகையில் 20 வீதத்தி னர் குருதியமுக்கத்தினால் பீடிக்கப்பட்டுள்ள னர். எனவே அது சுலபமாகவுள்ள சுகாதாரப் பிரச்சினையுமாகும். 40 வயதினைத்தாண்டிய பின்னர் ஆண்டிற்கு ஒரு தடவையாவது குரு தியமுக்கத்தைப் பரிசீலிக்கும்படி ஆலோசனை வழங்குவது இவ்வமைதியான ஆபத்தை இனங்காண்பதற்குள்ள ஒரேவழி அது என்பத னாலேயாகும்.
குருதியமுக்கம் உண்டாவதற்கான காரணம் 90 வீதமான நோயாளிகளுள் குருதியமுக் கம் கூடுவதற்குத் தெளிவான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாதுள் ாது. இது அவசியமான உயர் குருதியமுக்க மாகக் கருதப்படுகின்
றது. சில வேளை இது
பாரம்பரியமாகவும் உண்டாகலாம். பெற் றோர் உயர் குருதிய
முக்கம் Đ L6T6T6) JIJ T55
ܥ ܡܘܬܐ ܠܐ ܬܐ ܒܝܠ ܐܬܐܕ ܡ ܬܐ ܬܐ

Page 44
இருப்பின் பிள்ளைகளுக்கும் அது ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகலாம்.
குருதியமுக்கம் ஏற்படுவதற்கான அடிப் படை காரணிகளாக பின்வருவனவற்றை குறிப் LGL60ITib.
* அதிகமான அளவு நீரும் உப்பும்
குருதியுடன் சேர்தல். * இதயத்திலிருந்து குருதியை எடுத்துச்
செல்லும் நாடிகளின் சுவர்கள் விரிவடைவதன் மூலம் துவாரம் ஒடுக்கமடைதல். * இதயத்திலிருந்து குருதி மிக வேகமாக
செல்தல்.
உயர்குருதியமுக்கம் ஏற்படக்கூடியவர்கள்
பால் வேறுபாடு, அல்லது வேறு எந்த ஒரு வேறுபாடுகளுமின்றி எவருக்கும் இது ஏற்பட லாம் என்பதை ஞாபகத்திற்கொள்ள வேண்
சிகிச்சை இல்லையேல் உ குருதி அழுத்தம் ஹை டென்சன் போன்றவற் தோற்றுவிக்கும்
இரத்த நாடி, நாள
மாரடைப்பு அ4 இதயம் செயற்பட
சிறுநீரகம் செயற்படாமை
டும். ஆனால் பின்வரும் காரணங்களும் உயர் குருதியமுக்கம் உண்டாவதற்குக் காரணமாகு மென்பதையும் மறந்துவிடக்கூடாது.
பரம்பரை ரீதியாக சில குடும்பங்களில் உள்ளவர்களுக்கு உயர் குருதியமுக்கம் ஏற் படும் வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன. பெற் றோர்கள் உயர் குருதியமுக்கத்தினால் பீடிக்கப் பட்டிருந்தால் அவர்களது பிள்ளைகளுக்கும் 50% அளவிற்கு உயர் குருதியமுக்கம் உண் டாக சந்தர்ப்பங்கள் உண்டு என்பதையும் தெரிந்து வைத்திருத்தல் நலம்.
anggunian
 
 
 

வயது அடிப்படையில் நோக்குமிடத்து, குருதியமுக்கமானது எந்த வயதிலும் ஏற்பட லாம் என்றாலும் முதியோருக்கு ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவுள்ளன. அனேகமா னோர்களில் 35 - 50 இற்கு இடைப்பட்ட வயதிலேயே குருதியமுக்கம் உடையவராக முதலிலே இனங்காணப்படுகின்றனர். 65 வய திற்கு மேற்பட்டவர்களில் இருவரில்
Lii ஒருவருக்கு உயர்குருதியமுக்கம்
DL u fi
றை
உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
ஆண் பெண் எனும் ரீதியில் நோக்கு மிடத்து 50 வயதிற்கு முன்னரே, பெண் களை விட ஆண்களே உயர் குருதிய முக்கத்தினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் 50 - 60 வயதிற்கு இடைப்
ம் சேதம் பட்டோர்களில் பெண்களே அதிகமாக
உள்ளனர் எனவும் புள்ளி விபரங்கள்
ல்லது சுட்டிக்காட்டுகின்றன. T63)LD உடற்பருமனும் நிறை அதிகரிப்பும்
உள்ளவர்களுக்கு, உடல் பூராவும் குரு தியை அனுப்புவதற்கு இதயத்திற்கு கூடிய சக்தி தேவைப்படுகின்றது. இத னால் இவ்வாறானவர்கள் உயர் குருதிய முக்கத்தினால் பீடிக்கப்படும் வாய்ப்பு அதிக முண்டு என்பதை நினைவில் வைத்துக்துக் கொள்வது மாத்திரமல்ல மேற்குறிப்பிட்ட விடயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப தமது வாழ்க்கையை சீராகவும் சிறப்பாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும். நோயற்ற சுகதேகியாக வாழ்ந்து, தனக்கும் தன்னை நம்பி வாழ்வோருக்கும், ஏனையவர்களுக்கும் பொது வாக அனைத்து சமூகத்தினருக்கும் ஏன் தனது நாட்டிற்கும் பிரயோசனமான மனிதனாக வாழ்ந்து பயனடைய முயற்சிக்கவேண்டும்.
(தொடரும்.)
பெப்ரவரி-2012

Page 45
இரு பிள்ளை Autism என்று கண்
டறியப்பட்டவுடன் அல்லது அவ்வாறு இனம் காணப்படாது அந்தப்பிள்ளையின் பழக்கவழக் கங்களில் (Behaviours) இல் பலவிதமான மாறுபாடான செயற்பாடுகள் காணப்படுகின்ற போது, பெற்றோர் மனம் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றது மாத்திரமின்றி ஏன் இப்படி நடந்தது, ஏன் இறைவன் எங்களுக்கு இவ் வாறான குழந்தையை கொடுத்தார்? நாம் என்ன பாவம் செய்தோம்? என்ன காரணம்? இவ் வாறான குழந்தை பிறப்பதற்கு என்று குழப்பம் அடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
இங்கு இவர்கள் முக்கியமான ஒன்றை சிந் திக்க வேண்டும். ஒடிசம் குழந்தைகள் பிறப்ப தற்குரிய பலவிதமான காரணங்கள் கூறப்படு கின்ற போதிலும் சரியான காரணம் இதுவரைக் கும் யாருக்கும் தெரியாது. இவ்வாறான பிள்ளை கள் யாருக்கும், எந்த நேரத்தில் வேண்டுமானா லும் பிறக்கலாம். எனவே இவர்களுக்குத் தான், அவர்களுக்குத்தான் பிறக்கும் என்ற நியதி ஒன் றும் இல்லை. இவ்வாறான பிள்ளைகள் ஏன் பிறந்தார்கள் என்று சிந்தித்து காலத்தை வீணடிப்பதை விட்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதே சிறந்தது.
அதாவது வாழ்வெனும் புத்தகத்தில் நேற்று என்கிற பக்கம் புரட்டப்பட்டுவிட்டது. நாளை என்ற பக்கம் வெற்றாக உள்ளது.
 
 

ஒடிசம் குழந்தைகளும் III (GU
An ni in Otto
இன்று என்பது எழுதப்படுகிறது. உங்களால் முடிந்தவரை மிகச் சிறந்ததையே எழுதுங்கள். காரணம் இந்த புத்தகத்தில் அழிப்பானை (Eraser) இப் பயன்படுத்த முடியாது.
ஒடிசம் குழந்தைகள் கை, கால் சொத்தியாக வலது குறைந்து பிறக்கவில்லை. உருவத்தில் எந்த வித மாற்றங்களும் இல்லை. சாதாரண குழந்தைகள் போல் இருப்பார்கள். மேலும் சொல்வதானால் சாதாரண குழந்தைகளை பார்க் கிலும் அழகானவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களது பழக்கவழக்கங்களிலும் (Behaviours) பேச்சுத்திறனிலுமே முக் கியமாக பிரச்சினைகள் காணப்படு கின்றன. இங்கு பேச்சுத் திறன் என்னும் போது இவர்கள் ஊமை
யல்ல. காது கேட்காதவர்கள் அல்ல. எல்லாவற்றிலும் சாதார ணமாகவே காணப்படுவர்.
அதாவது இப்பிள்ளைகளு க்கு எந்தவிதமான பரிசோ 56060T (Investigation Test)
பெப்ரவரி 2012

Page 46
செய்து பார்த்தாலும் எல்லாம் சாதாரணமாகவே காணப்படும்.
எனவே பெற்றோர்களாகிய உங்களது விடா முயற்சியும், பொறுமையும், தன்னம்பிக்கையும், மன உறுதியுமே உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தை நல்லதாக மாற்றக்கூடிய அடிப்ப டைக் காரணிகளாகும். எத்தனையோ பேர் எதை எதையோ சொல்லி உங்கள் தன்னம்பிக்கை யையும், முயற்சியையும் மலுங்கடிக்கலாம். ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
யார் என்ன சொன்னாலும் பொறுமை யாக எல்லாவற்றையும் கேளுங்கள். அவற் றில் நல்லவையும் இருக்கலாம். கெட்ட வையும் இருக்கலாம். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து இறுதியாக முடிவெடுக்க வேண்டிய வர்கள் நீங்களாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் பிள்ளையின் வாழ்க் கைப் பிரச்சினை சொல்பவர்கள் யாரும் நீங் களோ உங்கள் பிள்ளையோ கஷ்டப்படும்போது உதவப் போவதில்லை.
எனவே பெற்றோர்களாகிய நீங்கள் திடமாக இருக்கவேண்டும். எனது பிள்ளைக்கு எந்தவித மான குறைபாடுகளும் இல்லை. நிச்சயமாக எனது பிள்ளையையும்
நாளடைவில் சாதாரண நிலைமைக்கு என்னால் மாற்ற முடியும் என்ற மன உறுதி இருந்தால் போதும். நிச்சயமாக அது நியாய மாகமாறி விடும்.
"எதனை நினைக்கின் றாயோ அதுவாகவே ஆகி றாய்” என்பது முழு உண்மை அல்ல. நினை ப்பு நிஜ நினைப்பாக இருக்க வேண்டும். ஆழ்ந்த நினைப்பு, அசை யாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரை କ୍ଷୌଦ୍ଦି) g 6basib
பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறியத்தக்க வெளி உண்மையாக மாறிவிடும் என்று தனது கட்டுரையில் கூறியுள்ளார் பார தியார். (நன்றி - பாரதியார் கட்டுரை களஞ்சி யம்) மனதில் சக்தியை கண்டுபிடித்த வில்லி யம் ஜேம்ஸ் முன்னூறு பக்கங்களில் சொன்ன உண்மைகளை நமது பாரதியார் 27 வார்த்தை களில் சொல்லியுள்ளார். இந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப படித்து பாருங்கள் சக்தி பெருகும்.
இந்தப் பூவுலகில் உள்ள அனைவரும் முன் னேர வேண்டும். அதற்காக ஒவ்வொரு தனி மனிதனும் தனித்தனியாகத் தான் முயற்சி செய்ய வேண்டும். அப்படி முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் சிந்திக்கக் கூடாத இரு வார்த்
தைகள் உள்ளன. அந்த வார்த்தைகளை அடிக்
கடி நினைத்தால் நாம், அதுவாகி முயற்சி செய் யாமலேயே இருந்து விடுவோம். அந்த இரு
வார்த்தைகள், "முடியாது”, “தலைவிதி' ஆகிய
ഞഖu.
தவிர்க்க வேண்டிய இருவார்த்தைகளை தவிர்த்து நிஜமான நம்பிக்கையும் "வெற்றி
வெற்றி” என்று உறுதியுடன் ஒவ்வொரு அடி
யையும் எடுத்து வைத்து இந்த நொடி முதல் வாழ ஆரம்பியுங்கள். இது எமது மனதுக்கு உள்ள அரிய சக்தி.
web:www.osilimo.com |- (தொடரும்)
இே

Page 47
ਉp எம்மில் பலர் தமது உடலில் தலைமயிருக்குச் செலுத்தும் அக்கறை மிக அதிகமாகும். தமது தலைமுடியை பல்வேறு நவீன வடிவமைப்பிற்கேற்ப வெட்டி அலங்க ரிப்பதில் பெண்களுக்கு ஆண்கள் சளைத்த வர்கள் அல்ல எனும் அளவிற்கு இருபாலாரும் மிகுந்த கவனத்தைச் செலுத்துகின்றனர். குறிப்பாக இளம் சமுதாயத்தினரிடையே இத்த கைய பழக்கம் அதிகம் காணப்படுகின்றது. அதேவேளை தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்தவர்கள் தலைமுடியை மீண்டும் வளர்ப் பதற்காக படும் அவஸ்தை இன்னொரு விடய மாகும். இது போதாதென்று வயது முதிர்ச்சி யின் காரணமாக தமது நரைமயிரை மறைக்க தலைமயிருக்கு நிறப் பூச்சுகளை (டை) பூசும் பழக்கம் நம்மில் பலரிடையே உண்டு.
மெலனின் V தலைமயிரில் நிறங்கள் ஏற்படுவதற்கு மெலனின் என்ற நிறப் பொருளே முக்கிய காரணமாகும். இந்நிறப் பொருளின் நிறைந்த மற்றும் குறைந்த தன்மையை பொறுத்து தலைமயிரின் நிறம் தீர்மானிக்கப்படும்.
அதாவது நிறம் மாறுபடும். உதாரணமாக ஆசிய மக்களின் தலைமயிரின் நிறம் கடுமை யான கறுப்பு நிறமாகக் காணப்படுகின்றது.
அவர்களின் தலைமயிரில் மெலத்தின்’ எனும் நிறப் பொருளின் அளவு அதிகமாகக் காணப்ப டுவதே அதற்குக் காரணமாகும். பொதுவாக தலைமயிர் ஒரு மாதத்தில் அரை அங்குலம் அளவு வளர்ச்சி அடையும். எனினும் சிலருக்கு தலைமயிரோ இரண்டு அல்லது மூன்று அங் குலம் வரை கூட வளரும். தலைமயிர் உதிர்தல் தலைமயிர் அதிகம் உதிர்வதற்கு பல்வேறு
பெப்ரவரி-2012
6.
 

காரணங்கள் உள்ளன. குறிப்பாக தோல் சம்பந் தப்பட்ட நோய்கள் ஏற்பட்டால் தலைமயிர் அதிகமாக உதிர்ந்து விடும். “லைக்கன் ப்ளே னுஸ் மற்றும் 'டிஸ்கொய்ட் லுப்பஸ் போன்ற சர்ம நோய்களால் தலையில் ஆங்காங்கே தலைமயிர் உதிர்ந்து விடுவதுண்டு. அதே போல் பற்றீரியாவின் தாக்கத்தாலும் இவ்வாறு நிகழலாம். விசேடமாக தலையில் பொடுகு பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு தலைமயிர் உதிர்தல் அதிகமாக நிகழும். மிக அதிகளவு எரிகாயங்கள் ஏற்பட்டாலும் தலைமயிர் உதிர், வது அதிகரிக்கும். ... .
ബ

Page 48
ஆண்களும் ஹோமோன்களும்
ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்க ளின் ஹோமோன் செயற்பாடுகள் குறைவடை யும் போது தலைமயிர் உதிர்வது அதிகமாகும். ஆண்களின் டெஸ்டஸ்டரோன் மற்றும் என்டிர ஜன் ஆகிய ஹோமோன் வகைகள் இரண்டும் ஆண்களின் தலைமயிர் உதிர்வதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பெண்களும் தலைமயிரும்
பெண்களைப் பொறுத்தவரையில் அவர்க ளின் கர்ப்பக் (கர்ப்பிணி) காலத்தில் அதி களவு தலைமயிர் உதிரும். எனினும் இது ஒரு தற்காலிக நிலைமையே. குழந்தையைப் பெற் றெடுத்த பின் தாய் சாதாரண நிலைக்கு திரும் பியதும் படிப்படியாக தலைமயிர் உதிர்வது குறைந்து மீண்டும் முன்னைய நிலைக்கு தலைமயிர் வளர ஆரம்பிக்கும்.
மருந்துகளும் தலைமயிரும்
நீண்ட காலமாக எடுத்துவரும் சில வகை ஆங்கில மருந்து வகைகளும் தலைமயிர் உதிர் வதற்கு காரணமாக அமைகின்றது என மருத் துவ ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் அத்த கைய மருந்து வகைகளை அருந்துவதை நிறுத்திய பின் படிப்படியாக தலைமயிர் வள ரும். மலேரியா, டெங்கு போன்ற நோய்க ளுக்கு எடுக்கப்படும் மருந்துகள் மூலமாகவும் தலைமயிர் உதிர வாய்ப்புகள் அதிகமாகும். அத்தோடு புற்றுநோய்க்காக அருந்தும் மருந்து களினாலும் அந்நோய்க்காக வழங்கப்படும் கதிரியக்க சிகிச்சை காரணமாகவும் மிக விரை வாக தலைமயிர் உதிர்ந்து விடும். இத்தகைய மருந்துகள் அல்லது கதிரியக்க சிகிச்சை ஆரம்
 

பித்து சில தினங்களிலேயே தலைமயிர் உதிர்ந்து தலை வழுக்கை 960L-U-LD6T. விற்கு சென்று விடும்.
தலைமயிர் வளர்வதற்கான சிகிச்சை இன்று வர்த்தக சந்தை யில் தலைமயிர் வளர்ச்சிக் கான மருந்துகள் என்ற வகையில் பல்வேறு கவர்ச்சிகர வார்த்தை களால் விளம்பரப்படுத்தப்பட்ட பல்வேறு மருந்து வகைகளும் விற்றமின் வகைகளும், எண்ணெய் வகைகளும், மேல் பூச்சு வகைக ளும் ஏராளமாக விற்கப்படுகின்றன. எனினும் அவற்றை பயன்படுத்துவதால் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கின்றதா என்பது சந்தே கமே. அத்தோடு அவற்றை பயன்படுத்துவ தால் நீண்ட கால தீர்வோ அல்லது பூரணமான நன்மையோ கிடைத்ததாக இதுவரை மருத் துவ உலகில் நிரூபிக்கப்படவில்லை. இவற் றில் சில மருந்து வகைகளை பயன் ܠ . படுத்துவதால் இருந்த தலைமயி | ரும் ஒழிந்து தலை வழுக்கை ஏற்ப டும் வாய்ப்புகளும் உண்டு. இத னால் நீங்கள் அத்தகைய மருந்து வகைகளை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையும் அவதான மும் தேவை.
- ஜெயகர்
பெப்ரவரி-2012

Page 49
என்றால் அது மிகை
பற்றிக் கொண்டுள்ளது.
சீமையலில் இன் フ றியமையாதவற்றில் ス வெங்காயமும் ஒன்று
யாகாது. அந்தளவுக்கு அதன் சுவை நம்மை
வெங்காயம் இல்லாமல் சமைத்தால் அதை சாப்பிடவே சிலர் தயங்குகின்றார்கள்.
இந்த வெங்காயம் அரிய பல நல்ல குணங்களை உள்ளடக்கியது. இதனால் வெங்காயத்தை நாம் தினந்தோறும் உண வில் சேர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.
குறிப்பாக பச்சை வெங்காயத்தில் விட்ட மின் C அதிகளவில் உண்டு. இதனால் பச் சையாகவே வெங்காயத்தை உண்ணுவதன் மூலம் நமக்கு எளிதாகவே விட்டமின் C யை பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலும் பச்சை வெங்காயத்தை முழுமையாக உண்பதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமை யாக பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சக்தி ஒத்துக்கொள்ளாதவர்கள் பிஞ்சு Glenurijgsmuub en ULGll_6\Om Lb.
உடலில் கொழுப்பு சக்தி அதிகரித்து, உடல் பருமனானவர்களுக்கு வெங்காயம் மிகவும் சிறந்தது. வெங்காயத்தில் கொழுப்பு சக்தி மிகமிக குறைவாகவே உள்ளமையி னால், வெங்காயத்தை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடற்பருமனை யும் குறைக்க முடியும்.
தவிர ஊட்டச்சத்துகள் நிறைந்த வெங் காயமானது, இரத்த விருத்திக்கும், இரத்
பெப்ரவரி 2012
 
 
 
 
 

தத்தை சுத்திகரிப்பதற்கும் ஓர் சிறந்த மருந் தாகும். வெங்காயம் நிறைய சாப்பிடுவதன் மூலம் உடல் பொலிவு பெற்று, அழகாக ஜொலிக்கலாம்.
நாம் திடீரென விஷ கடிகளுக்கு உள்
ளாக்கப்பட்டால், அதாவது தேள், பூரான், குளவி போன்ற விஷ தன்மையுள்ள பூச்சிகள் கடித்துவிட்டால் உடனடியாக வெங்கா
யத்தை கடிபட்ட இடத்தில் அழுந்த
தேய்த்தால் வலி குறை இற இலும் குறிக்
.கப்பட்டுவிடும் محمص سے
சாதாரணமான இருமல் கொண்ட வர்கள் மோருடன் வெங்காயச்சாறு கலந்து
ஆUற்ற
குடித்து வர நாளடைவில் இருமல் குண மாகும். வயதானவர்களுக்கு உண்டாகும்
கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை
வதக்கி அதனுடன் வெல்லம் கலந்து உண்டு வர நல்ல பலன் உண்டு.
அடிக்கடி தலைவலி ஏற்படுகின்றவர்கள் வெங்காயத்தை நசுக்கி அதை முகர்ந்து பார்த்தால் உடனே குணம் தெரியும். வெங் காயம் மூளை வளர்ச்சிக்கும், புத்தி கூர்மைக் கும், நினைவாற்றலை அதிகரிக்கவும் கூட பயன்படுகிறது.
பல்வேறு காரணங்களுக்காக உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு வெங்காயம் ஒரு அரிய மருந்து காரணம் உடல் உஷ்ணத்தை சமனப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டாம்.
மேலும் நாடித் துடிப்பை சீராக வைத்திருக்க வும் கூட Glourie, Tub பயன்படு
கிறது.
- சத்யா

Page 50
இன்று எமக்கெல்லாம் இருக்கும் கஷ்டம், துன்பம் எது? ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு ஆரோக்கியக்
கேடு. காலம் போகப் போக
எங்கள் பழக்க வழக்கங்கள், தேவைகள், சுற்றுச் சூழல்கள் யாவும் முற்றாக மாறி விட்டது. அதில் முக்கி
யமானது எம் உண
வுப் பழக்க வழக்கங் கள்.
ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல் இருப்பது நேரம் தான். ஒரு நாளில் 24 மணி நேரத்தை நாம் மாற்ற முடி யுமா? யாரைப் பார்த்தாலும் ஒரு வேகம், அவசரம், பதற் றம். இதனால் அவர்கள் எந்த ஒரு வேலையையும் நிதான மாக செய்ய முடியாமல் திண 1றுகிறார்கள்.
மாறி வரும் யுகத்தில் எத்த னையோ பெளதீக வசதிகளை நாம் பெற்று இருக்கின்றோம். இருந்த போதிலும் நாம் அமைதியாக இல்லையே? நிதானம் இல்லையே? படிக்காத பாமரர்கள் வா யிலும் இப்போது, "எனக்கு அல்சர், எனக்கு டயபிடீஸ், கொலஸ்ட்ரோல், வோக் போகட் டாம்” என்று சொல்கின்ற அளவிற்கு மக்கள் இந்த தொற்றா நோய்களுக்கு ஆளாகிவிட்டார் கள். ஆஸ்த்துமா என்ற வியாதி அந்தக் காலத்
O பெப்ரவரி-2012

Page 51
தில் வயது போனவருக்கு இறுதிக் காலத்தில் தான் வரும். ஆனால் இன்று சிறு குழந்தைகள் கூட எனக்கு வீஸ் என்று சொல்கின்ற அள வுக்கு இருக்கின்றார்கள். சிறியவர் முதல் பெரி யவர் வரை கையில், அந்த மருந்தை உள்ளெ டுக்கும் பம்ப் தான். ஆனால் மறுகையில் கைய டக்கத் தொலைபேசி. இந்த யுகத்தில் எமக்கு கிடைத்த நவீன நோய் பரப்புவோன் இவன் தான். அன்பர்களே சிந்தித்துப் பாருங்கள். சென்ற வருடத்தில் ஆற அமர உட்கார்ந்து வீட்டு சாப்பாட்டை குடும்ப அங்கத்தவருடன் சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் எத்தனை?
அதை விட பெரிய மன வருத்தம் என்ன வென்றால், ஒரு கல்யாணம் என்று சொன் னால் ஆகா நல்ல ஒரு விருந்தை மூக்குப் பிடிக்க சாப்பிட்டு வருவோம் என்று நினைத்த காலம் போய் விட்டது. இன்று நாம் ஒரு திருமண அழைப்பிதழ் கிடைத்தால் உடனே ஒரு சலிப்புடன் என்ன திகதி, கிழமை பார்க்கிறோம், எங்கே என்று பார்க்கிறோம். பாவம் அவர்கள் சுப நேரம், கல்யாண மண்ட பம், சாப்பாடு, சமையல் என்று பார்த்து பார்த்து எல்லா ஒழுங்குகளும் செய்வார்கள். ஆனால் நாம் முகூர்த்த நேரம் எப்போ என பார்த்து அவச ரமாக அந்த நேரத்துக்கு ஓடி முதல் பந்தியில் கியூவில் நின்று இருப்பதை விழுங்கி விட்டு ஒரு என்வலப்பை தம்பதிகளிடம் கொடுத்து விட்டு சொரி (Sorry) அவசர வேலை என்று போய் விடுவோம். அப்புறம் எப்படி நாம் தம்பதிகளை வயிறு குளிர்ந்த பின் மனம் நிறைந்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது?
மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. உணவு, உடை, உறையுள். இதில் முதலிடம் வகிப்பது உணவு. இந்த உணவை நாம் பல்வேறு வகைகளில் உண்கின்றோம். சமூகம், சமயம் இவற்றிற்கேற்ப வேறுபாடுகள் காணப்பட்டாலும் நாம் நிறையுணவை உட் கொள்வதில் சிரத்தையாக இருக்க வேண்டும்.
தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறி கள், கிழங்கு வகைகள், கீரை வகைகள், பழங் கள், வித்து வகைகள், வெல்லம், கருப்பட்டி,
பெப்ரவரி-2012 5)

பால், பால் உணவுகள், மீன், இறைச்சி என எல்லா உணவு வகைகளும் கலந்து சாப்பிட வேண்டும் பாரம்பரிய உணவுகள் சிலவற்றை நினைத்துப் பாருங்கள். சர்க்கரைப் பொங்கல், இடியப்பம், முட்டைச் சொதி, பிட்டு, சுவை பான கறியுடன் சோறு நல்ல மூன்று கறிகளு டன் வெண்பொங்கல், சாம்பார் அப்பப்பா இந்த சாதாரண உணவுகளின் சுவை தான் என்ன? சத்தும் அப்படித்தான். நேரம் இல்லா விட்டால் மோதகம் அவிக்க வேண்டாம். பயறு அவித்து தேங்காய்ப்பூ சீனி சேர்த்து மசித்து உண்ணுங்கள். காலை மாலை சிற்றுண்டியாக பொங்கல் செய்யுங்கள். மரவள்ளி அவித்து சம்பலுடன் சாப்பிடுங்கள். இதனால் மன நிறைவு, பொருட் செலவு குறைவு நோய் அற்ற வாழ்வு காய்கறி எல்லாம் சேர்த்து சுவை யான சாம்பார் செய்யுங்கள். பிள்ளைகள் விரும் பும், விரும்பாத மரக்கறி யாவும் இங்கே சேர்ந்து விடும்.
SS S S S S S S

Page 52
இன்று பிரசர் குக்கர், கிரைன்டர் பாவிப்பது பலர் காரமான ஒரு சம்பல் முடியாவிட்டால்
அம்மி வேண்டாம். கிரைன்டரில் அரைத்து
எடுங்கள். பரவாயில்லை ஆனால் அரைக்கும் போது அத்துடன் ஒரு பிடி வல்லாரையை அல்லது கறிவேப்பிலை, தூதுவளை, புதினா, கொத்தமல்லிக்கீரை சேர்த்து அரையுங்கள் சுவைக்கு சுவை சத்திற்கு சத்து சேர்ந்து விடும். பொலித்தீன் பாவனையின் கேடு எத்தகை யது என்று தெரிந்தாலும் அதனைக் கைவிட முடியாமல் தவிப்பது போல் நாம் இன்று உடன் உணவுகள் Fast Food, பாதுகாப்புப் பொருள் என்ற பெயரில் இரசாயனங்கள் கலந்த பொதி செய்யப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள் போன்றவற்றின் பாவனையால் பாதிக்கப்பட்டு உள்ளோம். இவற்றை உட்கொள்வதால் நம் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் உடனே தெரியாது. ஆனால் விளைவுகள் மோசமா 6T66.
புது புது நோய்கள் வருவதைக் குறை கூறு கிறோம். ஆனால் நாம் விதவிதமான உணவு கள், கண்ணில் கண்டவை, வர்த்தக விளம் பரங்களைப் பார்த்து கொள்வனவு செய்வது, வெளிநாட்டுப் பாணியில் சில பழக்க வழக்கங் களை பின்பற்றுதல் போன்ற காரணங்களால் நாமே நோய்களை விலை கொடுத்து வாங்கு கின்றோம்.
மேலும் எங்கள் பதற்றத்தையும், அவசரங்க
segungen
இக
 

6ຫenuມີ தவிர்க்க எந்த ஒரு வேலை யாக இருந்தாலும் அதைத் திட்டமிடு வோம். முடிந்தவரையில் தேசிய உற் பத்தி பொருட்களைச் சமைத்து உண்போம்.
உள்ளூர் உணவுப் பொருட்களில் சமையல் முறைகளைப் பேணுவோம். வீட்டுக்கு ஒரு தோட்டம் அமைப் போம். அதனால் நல்ல உடற்பயிற் சியும் பேணப்படும். இயற்கையை ரசிப்போம். காலாற நடப்போம். கடற் காற்றை சுவாசிப்போம். நேரத்தை ஒதுக்கி ஆலய வழிபாடு, பஜனை, தியானம் போன்ற ஆன்மீக வழி களில் ஈடுபடுவதால் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம். இப்புத்தாண்டில் எமது ஆரோக் கியம் பேண நல்ல வழிகளைத் தேர்ந்தெடுப் (8L UITLò.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"
- அருந்ததி வேல்சிவானந்தன்
“உங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா?
'இல்லை, குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன”
62 பெப்ரவரி-2012

Page 53
Po M. W.
நாட்டு மக்களின் உண سيږي ښوونه வில் அரிசி மிக முக்கிய இடத்தை வகிக் கின்றது. மேலைத்தேய மக்களின் பிரதான உணவாக கோதுமை விளங்கினாலும், அவர்களின் அன்றாட உணவில் அவர்கள் அதனை ஏறக்குறைய 40% மாத்திரமே உணவாக உட்கொள்கின்றனர். ஆனால் கீழைத்தேய மக்களில் அரிசி 70% முதல்
зfilцтал of foolu (ili fia (larii Gani. எனவே அரிசியை பிரதான உணவாக உட் " கொள்ளும் நாம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த சரியான அரிசியை தெரிவு செய்வது அவசியமாகும். சந்தையில் பல்வேறு விதமான அரிசி வகைகள் விற்பனைக்கு வருகின்றன. நம்மூர் வயல்வெளிகளில் பல்வேறுவிதமான அரிசி வகைகள் அறுவடையாகின்றன. இவற் றில் எது மிகச்சரியான அரிசி வகை என்பதை அறிந்து அவற்றை சமையலுக்கு எடுப்பது மிக முக்கியமானதாகும்.
ஒவ்வொரு வகை அரிசியிலும் ஏதோ ஒரு சில மருத்துவ குணங்கள் இருக்கத்தான் செய் கின்றன. எனினும் அதிக மருத்துவ குணங்களு டைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் அரிசி வகைகளில் பச்சரியும் புழுங்கலரிசியும் முன்னணி வகிக்கின்றன.
Etterfassun TT 2 Ignassanorifiadur? உடலுக்கு மிகுந்த பலத்தை அளிப்பது பச்ச ரிசியே. உடல் பலவீனமானவர்கள் நோயால் சி மீண்ட பொழுதிலும் உடல் சக்தியை இழந்தவர் ச்
 
 
 

|
. 1 : 1 1
ள் மீண்டும் உடல் பலம் பெறபச்சரிசி மிகவும் உகந்தது. எனினும் பச்சரிசி பத்தியத்திற்கு கந்ததல்ல. வாத பித்த, கப நோய்களை உண் ாக்கும் தன்மை கொண்டது. பித்தத்தைக் ட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
ஆனால் புழுங்கல் அரிசி சிறுவர் முதல் பரியோர் வரை அனைவருக்கும் நல்ல உண ாகும். வயிற்றுக்கு எந்தவிதமான கெடுதலை ம் செய்யாது. மனநோயாளர்களுக்கு இந்த ரிசியில் சமைத்த உணவையே கொடுக்க வண்டும். புழுங்கலரிசி உடலுக்கு போதிய லிமையைத் தராது என்றாலும் உடல் நலத் தப் பொறுத்தவரையில் புழுங்கல் அரிசியே கவும் சிறப்புடையதாகும்.
எனவே பச்சரிசியை விடவும் புழுங்கல் அரி யில் தயாரித்த உணவையே உண்ணுவது றப்பானதாகும். வாத, பித்த, கப நோய்களைக்
பெப்ரவரி-2012
L – af-S-

Page 54
குணப்படுத்தும் ஆற்றல் புழுங்கல் அரிசிக்கே உண்டு. ஆதலால் நோயாளிகள், குறிப்பாக வாத நோயாளிகள் புழுங்கல் அரிசியில்
kkkLLMLTTTTTLLLLLLL LLL S LL0LOL0MMOMM M Or0LLL SeMMLLLLL
டும். 。 。
பழைய அரிசியை சமையுங்கள் எந்த உணவுப் பொருளானாலும் நாட்பட்ட உணவாயின் அது நமது உடலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என்பது நாம் அனைவ ܕ ܐ . ரும் அறிந்த உண்மை. அதனால்தான் உண வைப் பொறுத்தவரை சமைப்பதற்கு எடுக்கும் காய் கறிகளோ |- -
கிழங்கு வகை களோ, பழ வகை ளோ, பலசரக்கு களோ, வாசனைத் திரவியங்களோ மீன், முட்டை, இறைச்சி வகை : களோ, தானியங் களோ எதுவாக இருக் கட்டும் அவை புத்தம் புதிதாக இருப் |பதே சிறந்தது ஆரோக்கியத்திற்கும் உகந்தது ஆனால் அரிசியை பொறுத்தவரையில் இது நேர் மாறானது. ஏனெனில் நெல்லை உடன. யாக அவித்துக் காய போட்டுக் காய்ந்ததும் காயாததுமாக இருக்கும்போது இதைக் குத்தி அரிசியாக்கிச் சூட்டோடு சூடாக உலையில் போட்டு சமைப்பது என்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. நெல்லைக் குத்தி, பெரிய மண்ப னையில் இந்த அரிசியை குறைந்தது மூன்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதங்களாவது வைத்திருக்க வேண்டும். எந்த வகை அரிசியானாலும் பழைய அரி சிக்கே குணம் உண்டு
இவ்வாறு பழைய அரிசியில் சமைத்த உணவை உண்டு வந்தால் நோயில் அவ திப்படுவோர் கூட நோய் நீங்கி இன்பமுறு வார்கள். நல்ல குளிர்ச்சியை உடலுக்கு அளிக்கும் திறன் பழைய அரிசிக்கே உண்டு நோயைப் போக்கும் தன்மையும் பழைய அரிசிக்கு உண்டு.
ஆனால் அரிசியை பூச்சு புழுக்கள் அண் டாதவாறும், ஈரம் படாதவாறும் பாதுகாப்பது அவசியம். அத்தோடு சுத்தமான பானையில் இட்டு சுத்தமான இடத்தில் வைத்து பேணுவ தும் மிக முக்கியமானதாகும்.
-ஜெயகர்
營蠶
リ
17 1

Page 55
02. முக்கனிகளில் ஒன்று. 03. மனதை ஒரு நிலைப்படுத்துவது. 04. பறவைகள் இதை தேடி உண்ணும். 05. யானையை கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பவன். 06. இதற்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் கிடைக்கிறது. | QI. இதனால் அடிக்கும் தண்டனையும் உள்ளது.
08, இந்துக்களின் திருமண விருந்தில் இதுவும்
வெற்றி அடைந்தோர் 1000/- வெல்லும் அதிர்ஷ்டசாலி பூ தயாளகெளரி, இரத்மலானை. 500/- வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஜூலியஸ் ஆர்தர், மானிப்பாய்.
வெல்லும் அதிர்ஷ்டசாலி எம். எல். ஏ. அமீர், கண்டி
பாராட்டுக்குரியோர் 01. ஏ. என். எம். அர்ஷான், சம்மாந்துறை. 02. எஸ். அகிஃப் அஹமட், புத்தளம். 03. லீலாவதி கணபதிபிள்ளை, மட்டக்களப்பு. 04. ஏ. வி. எம். உமைர், வெலிகம. 05. ஏ. வி. இமானுவேல், கொழும்பு - 13. 06, டி. எம். ஜிஃப்ரி, தெஹிவளை. 07. கே. சுப்ரமணியம், ஹட்டன். 08. ஜே. மனோகர், மட்டக்களப்பு. 09. எம். ஜே. சுபிதா, நிலாவெளி. 10. எஸ். சின்னராசா, பெரியபோரைதீவு.
பெப்ரவரி 2012 ●
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல10
இடமிருந்து வலம்
01. குற்றமற்றவரைக் குறிக்கும். 04. முத்தமிழில் ஒன்று. 05. தாகம் தீர்க்க உதவுவது. 07. குழப்பத்தைக் குறிக்கும். 08. பழகப் பழக இதுவும் புளிக்குமாம். 10. பயிர்கள் செழித்து வளர தேவையானது. 11. இது சிறுத்தாலும் காரம் பெரிது என்பர். 13. பெண்கள் இதில் நீர் கொண்டு செல்லும்
அழகை வர்ணித்தும் கவி பாடியுள்ளனர்.
14. கூந்தலில் பின்னப்படுவது. (திரும்பியுள்ளது)
முடிவுத் திகதி 18.02.2012
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
குறுக்கெழுத்துப்போட்டி இல46
2
10
C
"குறுக்கெழுத்துப்ப்ோட்டி இல46,T
சுகவாழ்வு, Virakesari Branch Office, 12-1/1, St.Sebastian Mawatha, Wattala.

Page 56
  

Page 57
தேவையான் பொருட்கள் கேரட்- 100 கிராம் கோவா - 100 கிராம் குடைமிளகாய் - 1 போஞ்சி - 100 கிராம் வெள்ளரிக்காய் - 1 தக்காளி - 100 கிராம் லீக்ஸ் - 100 கிராம் லீக்ஸ் - 100 கிராம் மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மரக்கறி எண்ணை -1 தேக்கரண்டி
മ മ
മ്
بربر
/
മ്
/
/
/
"
.
ܬܐ .
எலுமிச்சம்பழம் - பாதி
பெப்ரவரி-2012
 

எல்லாக் காய்கறிகளையும் சுத்தம்செய்து மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். D வெள்ளரிக்காயையும் அதேபோல் நறுக்கி
தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணைவிட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு சிறுதீயில் வதக்கவும். காய்கறிகள் பாதிவெந்தால் போதும். உப்பு, மிளகுதூள்தூவி நறுக்கிய வெள்ள ரிக்காயையும் போட்டு பிரட்டி இறக்கி வைத்து சற்று சூடு ஆறிய பின் தக்கா ளியை வட்டவட்டமாக வெட்டி அத்து டன் சேர்த்து எலிமிச்சசை சாற்றையும் அதில் பிழிந்து இலேசாக கிளறி பரிமாற 6υ Πιρ. இதை சோற்றுடனும் வேறு சில ரொட்டி வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
злога, தாஸ்

Page 58
Dr. எம்.கே.முருகானந்தன்
நான் கூறிய விளக்கத்தை பொறுமை யுடன் கேட்டுக்கொண்டிருந்தாள்.
சற்று ஆர்வமும் நம்பிக்கையும் அவளது முகத்தில் நிழலாடின.
"மெலியுறதற்கு என்ன செய்ய வேணும்? உணவுமுறைகள் உடற்பயிற்சிகள் பற்றி விபரமாகக் கூறினேன்.
ஆறு மாதத்திற்குப் பின் வைத்தியச லைக்கு வந்த அப்பெண்மணியை மட்டுச் கட்ட எனக்குச் சில கணங்கள் தேவைப்பட் டது. தேர் அசைந்தது போலிருக்கும் அரங் கல் நடையைக் காணவில்லை. துள்ளல் நடையோடு வந்தாள். அறுபத்தைந்து வயது நாற்பதாகக் குறைந்துவிட்டது போன்று புதிய தோற்றம். ஆள் அரைவாசியாகச் குறைந்து விட்டதுதான் காரணம்
நடந்து வந்த இளைப்பும் இல்லை. “எனக்கு இப்ப எல்லாமே சுகம் உடம் ” * NA லேசா இருக்கு லிப்ட்
தேவையில்லை. மாடிப்படியில் ஏறியே வீட்டிற்குப் போறன் முழங்காலு நல்ல திருத்தம். வலிக் குளிசைகள் போடு தில்லை" திருப்தியோடு கூறினாள்.
இருபத்தைந்து கிலோ குறைய வேண்டு Η σταυτό, கூறியிருந்தேன். ஏற்கனவே பதினெட் டுக் கிலோ குறைந்துவிட்டது. மிகுதியு குறைய மேலும் சுகம் தெரியுமென்பை
 
 
 
 
 
 
 

எடுத்துக் கூறி (36167
மகிழ்ச்சியோடு
பெண்மணி விதிவி முழு முயற்சி எடுத்து எடையைக் குறைத் தாள் இவள்.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு எடை யைப் பற்றிய எந்தவித அக்கறையும் கிடை
UT5.
எடையைக் குறையுங்கள் என ஆலோ சனை கூறினால் அடுத்த முறை வரும் போது இன்னும் இரண்டு கிலோ அதிகரித்திருக்கும். ஏன் இ எனக் கேட்டாள் அசட்
டுச் சிரிப் |
லந்தஇெ
च"
புடன், 'நான் எவ்வளவோ தெண் டிச்சுப் பார்த்தேன். ஆனால் குறையு தில்லை” என்பார்கள்.
சாய்வு நாற்காலியில் சரிந்து கொண்டு கடையில் வாங்கி வந்த மிக்சர் பைக்கற்றுக் b களை அரைத்து உள்ளே தள்ளிக் கொண்டே ரீவி. பார்ப்பார்கள். அப்பொழுது டொக்டர் b எடையைக் குறைக்க வேணும் என்று சொன் த னவர் என்ற நினைவு கனவு போல வந்து
58 Gilučivaluña - kon

Page 59
மறையும் அதுதான் அவர்களின் ெ
பரந்த காணிகளில் நடந்து, விரிந்த வீதிக ளில் சைக்கிளில் ஓடி, வரண்ட பூமிகளில் உழைத்தவர்கள் இப்பொழுது நகரத்தின் பன் னிரண்டு அடி அறைக்குள் ஒடுங்கிவிட்டார் கள். சுழன்றடிக்கும் மின் விசிறியின வெக கைக் காற்றுக்குள் சுருண்டு கிடக்கிறார்கள். பவுண்டும், டொலரும், பிராங்கும் டெலிபோ னிலிருந்து கொட்டுகிறது. ஆனந்தமாகச் சாப் பிட்டுப் படம் பார்த்துத் தூங்கிக் கொண்டிருக் கிறார்கள். இவற்றிலிருந்து ஓய்வு கிடைத் தால் ஆட்டோவில் கோயிலுக்குப் போய் ஓர் அர்ச்சனை செய்வார்கள். அவ்வளவுதான். எடை கூடாமல் வேறு என்ன நடக்கும்? எடையைக் குறைக்க வேண்டும் என முயற்சி செய்தும் எடை குறையாதவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அது எப்படி என்கிறீர்களா? அந்தக் குடும்பமே பூசணிக் காய்க் குடும் பம்தான். உருவத்தில் அப்பா, அம்மா, மகன் மூவருமே கட்டையாக உருளையாக, குண் டாக உயரத்திற்கும் சுற்றளவிற்கும் வித்தியா சம் இல்லாதவர்கள். அப்பாவிற்கு ஹார்ட் அட் டாக் வந்தது. ஆசிரி, நவலோக வைத்தியசா லைகளை வலம் வந்து இறுதியில் இந்தியா வில் பைபாஸ் சத்திர சிகிச்சையில் முடிந்தது. பல லகரங்களை இளக்கியும் நல்ல சுக மில்லை.
அம்மாவிற்கு பிரஷர், நீரிழிவு கொலஸ் ரோல் என மருத்துவ அகராதியிலுள்ள அவ் வளவு நோய்களும் அடைக்கலம். முப்பது
வயதை எட்டாத மகனுக்கும் பிரஷர் உண வுக்கட்டுப்பாடு, உணவுக்கட்டுப்பாடு, உண வுக்கட்டுப்பாடு இதுதான் வைத்தியர் முழுக் குடும்பத்திற்கும் விதித்த கட்டளை. அம்மா டொக்டரின் கட்டளையை அக்கறையோடு அமுல் நடத்த ஆரம்பித்தாள். சற்று அதி தீவி ரத்துடன், கேக், புடிங், ஐஸ்கிறீம், சொக்கிலற் யாவும் வீட்டிலிருந்து நிரந்தர விடை பெற் றன. சமையலில் எண்ணெய், வதக்கல், தாளித்தல், பொரியல் எதுவும் கிடையாது. இறைச்சி, நண்டு, இறால், முட்டை எதுவும்
பெப்ரவரி 2012
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ե16ծtքեւ (ԼքԼԳաո5l. அப்பீல் அற்ற தடை சிவத்தப் பச்சை அரிசி, ஆட் டாமா, குரக்கன
LDT, தவிட்டு
டிற்கு மா குழைக்கும்போது தவிடும் சேர்த்துக் குழைப்பாள் என்றால் பாருங்களேன்.
கீரை மசியல் முருங்கையிலைச் சுண்டல், அகத்திக் குழம்பு எனத் தினசரி இரண்டு மூன்று இலை வகைகள் தப்பாது அதுவும் கொழுப்பு நீக்கிய பால்மாவில், சாம்பிராணிப்
புகை பிடிக்கக்கூட தேங்காய் சிரட்டை வீட்
டில் கிடையாது. அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் கொஞ்சமாக இளைக்கத் தொடங்கி னார்கள். ஆனால் மகனில் எந்த மாற்றமும் கிடையாது. அம்மாதான் எனக்கு இந்த விபரங் களைத் தந்தார்.
"இவன் சாப்பிடுகிறதே கொஞ்சம். சில வேளைகளில் பசிக்கவில்லை எனச் சாப்பிடா மலும் விட்டுவிடுவான். ஆனால் கொஞ்சங் கூட மெலியிறான் இல்லை” என ஆதங்கப் பட்டாள். அவளுக்குக் காரணம் புரிய வில்லை. எனக்குப் புரிவது போலிருந்தது. ஆனால் எதுவும் பேசவில்லை. அடுத்தமுறை மகன் தனிய வந்தபோது விசாரித்தேன்.
'அம்மாவின்ரை சாப்பாட்டை எப்பிடிச் சாப் பிடுகிறது? ஆடு மாடுகளுக்குத்தான் சரி. நான் ஹோட்டல்களிலை முடிச்சிடுவேன். வீட்டிலை அம்மாவிற்குக் கொஞ்சம் சாக்குப் போக்குக் காட்டிறதோடை சரி
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு புதிய அர்த்தங்களும் இருக்கும் என்பதை விளங்கிக் கொண்டேன்.
என்றாலும் இன்னுமொரு ஹார்ட் அட் டார்க்கை விரைவில் அந்தக் குடும்பத்தில் எதிர்பார்க்க வேண்டும் என்பதை விசனத் தோடு புரிந்து கொண்டேன்.
இவ்வாறு குண்டால் தொலைபவர்கள் எத் தனை ரகம்.

Page 60
என்ற மூன்றெழுத்து முக்கால قی'گی திற்கும் கேடு செய்யும். சினம் எப்பெ தெல்லாம் நம்மிடம் தலைதூக்குகிறதே அப்போதெல்லாம் அது பிறர் உள்ளத்ை புண்படுத்துகிறது. தன்னையும் த6 உடலையும் தன் மனதையும் கேடுற செய்கிறது.
தன்னையும் கெடுத்துப் பிறரையும் கெ( த்து, தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கி பின்னரும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒ உணர்ச்சிவயப்பட்ட ஒரு பகை உணர்வுக்ே சினமென பட்டம் சூட்டப்பட்டிருக்கிற சினம் தவிர்த்தல் என்ற சிந்தனை மணி குலத்திற்கு மிக மிக அவசியமானது. நெரு கிய நண்பர்களிடத்திலே, சுற்றத்தார்களிட திலே நம்மோடு அன்பு கொண்டு நம நலத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருப்ப6 களிடத்திலே தான் அதிகமாக அடிக்கடி சிை வருவதைப் பார்க்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H இந்த சினத்தை ஒழிக்கவே மனித இனம் முயல வேண்டும்.
சினம் ஒழிய மனம் அடையும் நிலைதான் பொறுமை. எந்தச் சூழ்நிலை யிலும் ஒருவனைச் சினம் அணுகவில்லையானால் அவன்
ஞானம் பெற்றுவிட்டான் என்று கொள்ளுங்கள். அவனே ஞானி என்று கொள்ளுங்கள். கோபம் ஒவ்வொருவருக்கும் வருகிறது. அதை ஒழித்து விட வேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகிறார்கள். ஆனால் வெற்றி
ܬܹܐ لم يسمع حمام ) 2ஆ وكردي ريوكى த் பெற்றவர்கள் மிகச் சிலரே! T சினத்தைக் கட்டுப்படுத்த முயலும் முன் சினத்தைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க 函 வேண்டுமே சினம் என்றால் என்ன? அது எழும் காரணம் என்ன? என்பதை சிந்திக்க வேண்டும். சினத்தை ஒழித்துவிட வேண்டுமெனில் அதன் தோற்றுவாயை B இனம் கண்டு அதிலிருந்தே செயல்படுத்த
வேண்டும். 5. எனக்குக் கோபம் வருகிறது என்று . சொல்லுகிறோம். கு அப்படியானால் நாம் வேறு, கோபம் த் வேறா? அதுவல்ல Bl அதன் பொருள்.
நாமே (35 TLILDIT5
尚
மாறுகிறோம். தன் நிலையில் தானே

Page 61
மாறுதல் அடைகிறோம் என்பதே பொருள்.
சினமானது பிறரை எவ்வாறெல்லாம் துன்புறுத்துகின்றதென முதலில் பார்க்க வேண்டும்.
சொந்த மகன், மகள், மனைவி என்று வைத்துக் கொள்வோம். மகன் படித்துத் தேர்வு பெறவேண்டும் என்பது தந்தையின் ஆசை ஆனால் மகனோ ஊர் சுற்றுகிறான். தந்தைக்கு சினம் வருகிறது.
காலத்தோடு அலுவலகம் சென்றாக வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் பஸ் பிடித்தாக வேண்டும். இதற்கெல்லாம் குறிப்பிட்ட மணிக்குள் சாப்பிட்டாக வேண்டும். ஆனால் மனைவி சாப்பாடு தயார் செய்யாத நிலையில் கணவனுக்கு மனைவி மீது சினம் வருகிறது.
பரிசுச் சீட்டில் தனக்கே ஒரு லட்சம்
கிடைக்க வேண்டுமென்று லொத்தர் ரிக்கெட்
வாங்கியவருக்கு பரிசு விழாதபோது, யார் மேல் எதன் மேல் என்று தெரியாமலே கோபம் வருகிறது. பாவம் செய்தித்தாளைப் பிடித்துக் கிழிக்கிறார். இப்படியாகிய சினம் முதலில் ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு வந்தாலும், பிறகு பழக்கத்தின் காரணமாக காரணம் இல்லாமலே கூடச் சினம் வரும்.
பிறர் நம் மீது சினம் கொள்ளும்போது நம் மனம் எவ்வாறு நோகின்றது, வருந்துகின்றது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதுபோன்று தானே பிறர் மீது நாம் கொள்ளும் சினம் அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும் என்று கண்டுகொண்டால், கோபம் வருவது
பெப்ரவரி 2012
 

தவிர்க்கப்படும். ஒருவர் மீது சினம் கொள்ளும் போது அவர்கள் படும் வருத்தம் சாபமாகவே அமைந்து விட வாய்ப்புண்டு.
சினத்தால் உடலிலே உள்ள உயிர்ச்சக்தி விரைவு கொள்கிறது. குருதி அழுத்தம் ஏற்பட்டு இரத்த வேகம் அதிகரிக்கின்றது. கண்கள் சிவக்கின்றன. நரம்புகளில் படபடப்பு ஏற்பட்டு அவை பலவீனமடைகின்றன அது மட்டுமா?
சினம் வரும்போது முகம் விகாரமாகிறது. எவ்வளவுதான் அழகனாயினும் அழகியேயாயினும் சரி, சினம் வரும் போது அவர்கள் முகம் கோணலாகிப் பார்க்கச் ஈகிக்காததாகி விடுகிறது. எல்லோர் முகமும் அப்படித்தான். இதனால் முக அழகு கெடுவது bட்டுமன்று, உடல் நடுங்கும், கண் சிவக்கும், தடுதுடிக்கும், நா குழறும், மனம் தடுமாறும், ன்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்ற நினைவு பேதலித்து விடும்.
சினம் கொடியது என்பதை அறியாதவர்
யாரும் இருக்க முடியாது.
Drநிதர்ஷனோதயன் BSMS (Hons) (SL) Ad. Dip, in Counselling Psychology (UK)

Page 62
கு) ழந்தைகள் அல்லது சிறுவர் S-27 களைப் பொறுத்த வரையில்
விளையாட்டு என்பது ஒரு விளை
யாட்டான அதாவது வெறுமனே ஒரு பொழுது போக்கான விடயமே இல்லை. பொதுவாக குழந்தைகளைப் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுப டுத்துவதும், உரிய பொம்மைகள் அல்லது பொருட்களைக் கொடுத்து விளையாடச் செய்வது பெற்றோரி னது அல்லது வீட்டில் உள்ள பெரி
யோரது கடமையாகும்.
குளிர்காலத்தில் அல்லது மழை காலங்க ளில் குழந்தை வீட்டைவிட்டு வெளியே போய் விளையாட வேண்டும் என அடம்பி டித்தால் அதைத் தடுப்பதற்கு சுலபமான வழி, வீட்டுக்குள்ளேயே குழந்தைக்குப் பிடித்த பொம்மைகளையும் விளையாட்டுப் பொருட் களையும் வாங்கி வைக்க வேண்டும்.
ஆரோக்கிய வடிகால்கள்
எப்பொழுதும் படி படி என குழந்தைகளை, சிறுவர்களை பெற்றோர்கள் வற்புறுத்துவது உண்டு. நவீன உலகில் பிள்ளைகளுக்கு பாட சாலையிலும் பாடச் சுமைகள். இதனால் குழந் தையின் மன அழுத்தம் கூடுகிறது. அந்தச் சம யத்தில் அவர்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான வடிகாலாக விளையாட்டுகள் விளங்குகின் D60T.
■
 
 
 
 
 
 

அற்புதமான பயிற்சி பந்தை தரையில் தட்டி தட்டி விளையாடு வது ஒரு சிறு விடயம் என நாம் கருதலாம். ஆனால் இதில் எவ்வளவு பெரிய விடயங்கள் இருக்கின்றன தெரியுமா? கைகளையும் கண்
களையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான பயிற்சி இது. ‘பெட்டர் சைட் வித்தவுட் கிளா ஸஸ் என்பது ஒரு பிரபலமான நூலின் பெயர். இந்நூலில் ஓர் உறுதியான குறிப்பு காணப்படுகின்றது. அதாவது, ஒரு கையால் பந்தைக் கீழே தட்டி மறுகையில் பிடிக்கும் விளையாட்டு அறிவுக் கூர்மையையும், பார் வைத் திறனையும் வளர்க்கிறது என்பதை உறுதியாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இயந்திர விளையாட்டு பொருட்கள்
துப்பாக்கியால் சுடுவது போன்ற இயந்திரத் தால் ஆன விளையாட்டுப் பொருட்கள் குழந்
பெப்ரவரி-2012
ܠܝܼ .

Page 63
தையின் அறிவுத்திறனை அதிகமாக்குவ தில்லை. கற்பனைத் திறனை வளர்ப்பதுவும் இல்லை. அத்தோடு வன்முறை எண்ணங்க ளையும் தோற்றுவிக்கிறது. பெட்டரியால் இயங்கும் விளையாட்டு சாதனங்களும் பிள் ளைகளின் அறிவாற்றலை கற்பனை சக்தியை தூண்டுவதில்லை. எனவே நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகளும் கற்பனை சக் தியைத் தூண்டும் பொம்மைகளும் மிகவும் அவசியம்.
உதாரணமாக ஸ்நேக் என்ட்லடர் விளை யாட்டில் கூட இரண்டு விழுந்தால் இரண்டு கட்டங்கள் தாண்டி ஏணியில் ஏறி முப்பது கட் டங்களுக்கு அப்பால் இருக்கும் கட்டத்திற்கு போய்விடலாம். இன்னும் பத்து கட்டங்களில் பாம்பு காத்திருக்கிறது என்றெல்லாம் மனதில் எண்ணிக் கொண்டே விளையாடுவதால், விளையாடும் போது விழிப்புணர்வும் கணிப்பி டும் திறனும் அதிகமாகின்றன.
நட்பும் கூட்டு முயற்சியும் விளையாட்டுக்கள் பிள்ளைகளின் மனதில் ஒரு முனைப்பை வளர்க்கின்றன. இப்பொழு தெல்லாம் பல குடும்பங்களில் ஒரே குழந்தை தான் காணப்படுகின்றது. இதனால் அக் குழந் தைக்கு பகிர்ந்து கொள்ளும் உணர்வு இல்லா மல் போய்விடுகிறது. ஒருவித சுயநலம் குழந் தைகளிடையே படிந்துவிடுகிறது.
பிறகுழந்தைகளுடன் சேர்ந்து விளையா டும் போது இந்த சுயநலக் குணம் அகன்று விடுகிறது. நட்பை வளர்த்துக் கொள்வதுடன் நேர்மையான கூட்டுமுயற்சியையும் விளை யாட்டுகள் வளர்க்கின்றன. வளர்ந்து பெரியவ னான பின் குழு விவாதம் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட இது உதவுகின்றது. அதேவேளை, வேலை வாய்ப்பிற்கான நேர்முகப் பரீட்சையில் சரியாக பதில் அளிக்காமல் மெளனமாக இருப்பவர் களுக்கு வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. அதேவேளை பிறரை பேசவிடாமல் தானே பேச்சை ஆக்கிரமித்து கொள்பவர்களுக்
பெப்ரவரி-2012
 
 

கும் வெற்றி வாய்ப்பு இருக்காது. இந்த இரு முரண்பாடான எல்லைகளிலும் இல்லாமலி ருக்க, சிறுவயதில் இருந்தே கூட்டாகச் சேர்ந்து விளையாட அவர்களை அனுமதிப்பது மிகவும் உதவும். திறந்த வெளியில் விளையா டுவது குழந்தையின் உடல் ஆரோக்கியத் திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
வேறு கோணங்களில் பார்த்தாலும் விளை யாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது நன்மை பயக்கும். ஒரு குழந்தை வேகமாக விளையாடுகிறது என்றால் அது உணவருந்து தல் போன்ற பிற செயல்களிலும் இக்குழந்தை யின் வேகம் அதிகரித்து காணப்படும்.
செஸ், கெரம் செஸ் எனும் சதுரங்க விளையாட்டும் கெரம் போன்ற உள்ளக விளையாட்டுகளும் குழந்தையின் அறிவுத்திறனை பெரிதும் அதி கரிக்கச் செய்கின்றன. பல்லாங்குழி போன்ற விளையாட்டுக்கள் கிராமங்களில் இன்றும் இருந்தாலும் நகரப்புறங்களில் வழக்கொழிந்து போனது வருத்தமான விடயமாகும். இதில் நினைவாற்றல், மனக்கணிதம் ஆகிய இரண் டும் நன்கு வளரும் வெளிநாடுகளில் இப் போது பல்லாங்குழியாட்டம், சற்றே மாறு பட்ட வடிவத்தில் பரவலாகி வருவதாக

Page 64
தெரிய வருகிறது.
வெற்றி தோல்வியின் சகஜம் குழந்தைகளின் வழக்கமான வயதை மட் டும் மனதில் கொள்ளாமல், அவர்கள் அறிவுத் திறனுக்கேற்ப பொம்மைகள் மற்றும் விளை யாட்டு பொருட்களை வாங்கி வழங்குவதோடு அறிவுத்திறனை வளர்க்கும் விளையாட்டுகளி லும் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். விளையாட்டு என்பது மிகவும் உற்சாகமளிக் கும் ஒரு விடயம் என்பதை குழந்தைகளை விட பெற்றோர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல விளையாட்டுக் களில் வெற்றி தோல்வி மாறி மாறி வருவது சகஜமே என்பதனையும் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எக்
கச்சக்கமாக பொம்மைகள் மற்றும் விளை
யாட்டு பொருட்களை அள்ளி வந்து வீட்டில் குவித்துவிடுவார்கள். ஒரு புது விளையாட் டுப் பொருளை வாங்கிக் கொடுத்தாலும் அது குழந்தைக்கு நிறைவான மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். பத்தோடு பதினொன்று என்பது போல இன்னொரு விளையாட்டு பொருள் புதிதாக வந்து சேர்ந்தால் மட்டும் அத னால் பயன் எதுவும் கிடைக்கப் போவதில்லை. நான்கு அல்லது ஐந்து மாதங்களில்
குழந்தைக்கு நான்கைந்து மாதங்களாகும் போதே, மூடிய டப்பா போன்ற ஒன்றினுள் சிறு சிறு கூழாங்கற்களை நிரப்பி அதை ஆட்டுவ
 
 
 

தன் மூலம் குழந்தையின் கவனத்தை கவரலாம். ஆறுமாதத்தை தாண்டும் போது குழந்தையின் கைகளுக்கும் வேலையிருப்பது போன்ற கிலுகி லுப்பை, மரபொம்மைகள் போன்ற வற்றை அளிக்கலாம். ஆனால், குழந் தைகளுக்கு எந்த விதத்திலும் அபா யத்தை ஏற்படுத்தாத அளவுக்கு அவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தையின் ஒன்பதாவது S
மாதத்தில் குழந்தைக்கு சுமார் ஒன்பது மாதம் ஆகும் போது, பிளாஸ்டிக்கில் உள்ள பில்டிங்
செட் விளையாட்டு பொருட்களை கொடுக்க லாம். இதனால் நிறங்களைப் பற்றிய ஓர் உணர் வும் இந்தக் காலகட்டத்தில் தான் குழந்தைக ளுக்கு உருவாகும். குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் போது புத்தகங்களை அம்மா அறிமு கப்படுத்தலாம். அதாவது, படங்களைச் சுட்டிக்
காட்டியபடி புத்தகத்தில் உள்ளவற்றை விளக்க வேண்டும். குழந்தையின் பேச்சுப் பயிற்சிக் கும் இது உதவும்.
இரண்டு அல்லது மூன்று வயது GIG)g" | Lub இரண்டு, மூன்று வயதாகும் குழந்தைக ளின் பெற்றோர்கள் ஒரு ஆலோசனையைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கடைக ளில் வெவ்வேறு கதைகளைப் படங்களாக
பெப்ரவரி-2012

Page 65
விபரிக்கும் சார்ட் (CHART) களை விற்பனை செய்கிறார்கள். அவற்றை வீட்டிற்கு யாராவது வரும்போது, குழந்தையை
விட்டு படங்களைப் பார்த்தப்
படியே கதையை கூறவைக்க
லாம். இதன்மூலம் பேச்சு பயிற்சி வருவதோடு அதற்கடுத்தது இது என்ற தொடர் சிந்தனையும் நன்கு வளர்கின்றது.
இக்கால கட்டத்தில் பூங்கா போன்ற வெளி யிடங்களுக்கு குழந்தையை அழைத்தும் செல்ல வேண்டும். ஏதோ குழந்தை கேட்டதற் காக அரைமணிநேரம் அங்கிருந்து விட்டு சிறிது நேரம் சறுக்குமரம் ஆட விட்டு சந்தோ ஷப்படுவதோடு பெற்றோரின் கடமை நின்று விடக்கூடாது. இதுபோன்ற இடங்களுக்குச் சென்று வந்தவுடன் அங்கே என்ன இருக்கி றது? எதையெல்லாம் நீங்கள் பார்த்தீர்கள்? போன்ற பல்வேறு வினாக்களை குழந்தையி டம் கேட்க வேண்டும். இதனால் குழந்தையின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு அடுத்தமுறை வெளியே போகும் போது, பெற்றோரிடம் கூறவேண் டுமே என்பதற்காக குழந்தை பார்க் கும் விநோதங்களை எல்லாம் மன தில் பதிய வைத்துக்கொள்ள முயற் சிக்கும்.
தொடர்புள்ள விடயங்கள் குறித்த ஞானம் இந்த, இரண்டு மூன்று வயது காலகட்டத்தில் தொடர்புள்ள விட யங்கள் குறித்த ஞானத்தை குழந்தை
பெப்ரவரி-2012
 
 
 
 
 
 
 

யிடம் அம்மா நிறைய வளர்க்க வேண்டும். இது அறிவாற்றலை வளர்க்க பெரிதும் உதவும். உதாரணமாக காலில் போடும் சொக்ஸ் ஐ கையில் வைத்துக்கொண்டு சப்பாத்து எங்கே என்று கேட்பது பேனையை கையில் வைத்துக் సా கொண்டு அதன் மூடியைத் தேடி 《་དང་། எடுத்துக்கொண்டு வர வைப்பது போன்ற அன்றாடம் வாழ்வில் இடம் பெறும் தொடர்புள்ள விடயங்கள் குறித்து குழந்தைக்கு மனப்ப யிற்சி அளிப்பது நல்
- - - லது. - சுமார் ஒன்றரை வய தில் இருந்தே வீட்டில் உள்ள உண் மையான பொருட்களுக்கு பதிலாக நகல் போன்றிருக்கும் விளையாட்டுப் பொருட்க ளின் மீது குழந்தைக்கு மிகுந்த ஆர்வம் தோன் றும். உதாரணமாக சமையலறையில் உள்ள சட்டி, பானை உள்ளிட்ட பல்வேறு பொருட்
களைப் போன்ற நகல் சமையலறை பொருட்க ளின் செட்டை குழந்தை மிகவும் விரும்பும். அதன்பின் இருக்கவே இருக்கிறது. மூன்று சக் கர சைக்கிள் வண்டி, அது இப்பொழுது பாது காப்பாக பிளாஸ்டிக்கிலேயே வர ஆரம்பித் துள்ளது. அதனை குழந்தைகள் விரும்பி ஒட் டும்.
- இரஞ்சித் ஜெயகர்
L JLLL LI Luisaibao நடினே?
த மாலைக்கண் தி, நைட்டுல டர் வெளியில க்கூடாதுன்னு ... baS). Trio
ബ

Page 66
/>こ冬//
செவிப்பறை
நடுச்செவி
.ேஎன்.டி (ENT) என்றால் மருத்துவர் களுக்கு மட்டுமல்ல பொதுமக்களாகிய நமக் கும் இது பரிச்சயமான வார்த்தைகள் தான். 3. Tg5 (Ear) eupée (Nose) 65T600T60L (Throat) என்பது தான் இதன் விரிவாக்கமாகும்.
பொதுவாக நம் உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனி மருத்துவப் பிரிவு இருக்கிறது. அந்தப் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குறிப்பிட்ட உறுப்புக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் கண்டு அறிந்து அதற்குரிய சிகிச்சைகளை வழங்குகின்றனர். ஆனால் காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புக்களை மட்டும் ஒரே கூட்டணியாக்கி அதை ஈ.என்.டி. என்ற பிரிவின் கீழ் கொண்டு
貫リ。G『@『。覧
6 ● ■
ZA 2 85Ս0085
வந்து விட்டார் கள். இதற்குக் காரணம் என்ன?
இந்த மூன்று உறுப்புக்களுமே காற்றை அடிப்ப 60) L .. u it is 8, கொண்டு செயல்படு
கின்றன என்பதே
 
 
 
 
 
 

முதல் காரணமாகும். செயல்படும் விதத்திலும் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்பில் இருக்கின்றன என் Hg、 இன்னொரு காரணமாகும். உதாரணமாக நமக்கு காது நன்றாகக் கேட்க வேண்டும் என் றால் அதற்குத் தொண்டையின் பங்களிப்பும் அவசியமாகும். மூக்கில் இருந்து ஆரம்பிக்கும்
நமது சுவாசப் பாதை தொண்டை வழியாகத்
தான் பயணிக்கிறது. எனவே நமது சுவாசம் சரி
al ●4 දීර්‍ණ_1)^2
வர நடைபெற இந்த இரு உறுப்புக்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு இந்த மூன்று உறுப்புக்களுமே பல வகைகளில் கூட்டணியாக பணியாற்றுவதா லும் இவை ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
அமைப்பு ரீதியாகப் பார்த்தாலும் இவை அருகருகே பக்கமாக நெருக்கமாக அமைந் துள்ளன என்பது மூன்றாவது காரணமாகும்.
- ஜெயா
56 பெப்ரவரி-2012
-

Page 67
இ-பேப்பர் வடிவில்
www.sooriyakanthi.lk
Contact; +94-11-5738055
 
 
 

Powered by Virakesari Online

Page 68
uJTÜ
நாரஹேன்பிடிய
ിഖൺൺ (5 ய் வைத்தியசாலை
கொழும்பு 05
ன்
நை தாய் சே
, கிரிமண்டல மாவத்தை
55/1
ஸ் (சிலோன்) ல ல் 2012 ஆம் ஆண்டு பெ
ஸ் நியூஸ் பேப்பர்
ழ் எக்ஸ்பிர 185ஆம் இல
இந்த இத
க்கத்தி
 
 

னரும் தாயின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
55uld gogg,006 Tub (Sub Fertility) அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறு ளையும் வழங்குவதன் மூலமும்
தாடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
லிமிட்டெட்டாரால் கொழும்பு-14, கிராண்ட்பாஸ் வீதி, ப்ரவரி மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.