கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2012.02

Page 1
2012
o (72) 22.
 


Page 2
மலர்- 44 Q இதழ் 02
ஆசிரியர்
லெஸ்லி ஜெயகாந்தன்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லீயோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S. யோகராஜா
கணினி வடிவமைப்பு
சுபாஜெனி சங்கர்
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம். திரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு. பதிப்பகம்
வணசிங்கா அச்சகம் மட்டக்களப்பு.
ஆக்கங்களுக்குப் பொறு SOCIALCOMMUNICATIONSCENTRE P. O.BOX-44 BATTICALOA. 氢 TEL: 065 - 2226486 E.mail: scCtribattiGDgmail.com
 
 
 
 
 
 
 
 

அன்புடன் உங்களோடு . 01
இயேசுவில் நம்பிக்கை . O2
அன்பின் அரசி அன்னை ... 03
&Sò6ör6Oopuu o Goaślaö . . . . . . . . . . . . . . 04
இலக்கிய மஞ்சரி . . . . . . . 05
தத்துவ போதக சுவாமி ... 06
புதுக் கவிதையாளர்களே ... 07
தமிழில் கிறிஸ்தவ . . . . . . 08
6NaFui Seits Gir . . . . . . . . co o o el o e e e o o . . . . . . 12
ஆசியாவில் முதன் முதலாக ... 13
தொண்டனின் சில நிமிடங்கள் .15
56.5ds 3560,5 . . . . . . . . . . . . . . . . . . 16
காலடித் தடங்கள் . e o do O eo e O eo 17
GIgby Urrivil . . . . . . . . . . . . . . . . . . . . . 19
LDUbis biolb . . . . . . . . . . . . . . . . . . . . . . 20
(35(t) os e o os e o so e o so e o e o o e o so a . . . . . . . 21
முகாமைத்துவம் பற்றிய . 22
இலங்கைக்கு வருகை . 24
விவிலியம் கற்போம் . . . . . . . . 27
அறிவை வளர்ப்போம் . 28
ப்பு அளித்தவர்களே (eSф-ії)
விலை : 30/= ஆண்டு சந்தா : 500/=
(தபாற்செலவு உட்பட)
劃 濠
劃

Page 3
ஒவ்வொரு மனிதனும் சுதந்தி ஆசிக்கின்றான். ஆனால் கிடைக்கின்றதா? மக்கள் எ விரும்புகின்றனர்.
"கல்யானந்தான் கட்டி இல்ல ஓடிப் போயி கல் 49 தாலி கட்டி பிள்ள குட் உe 99 பிள்ள குட்டி பெத்துக்கி என்று பாடும் அளவிற்குச் சுதந்திரம் இன்று இறக் கட்டுப்பாடு இல்லாத வாழ்வு பகுத்தறிவின் கடிவாளத்தில் இல் விலக்கி நன்மையின் பால் செலுத்துவதாகும். சுகத்தை நாடி இருக்கலாம் அல்லது அரசியல் களமாக இருக்கலாம்.
இன்று அரசியல்வாதிகள் தங்கள் சுகபோகத்துக்காக ம தீர்த்துக்கொள்கிறார்கள் ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் ே அவர்களது தாரக மந்திரமாகவும் கோட்பாடாகவும் வைத்துள்ள திணிக்கப்படுகின்றது. "நான் சொல்வதை மட்டுமே உலக மடியில் அமர்ந்திருப்பவர்கள” என்பர் தத்துவியலாளர் 6 இன்று நமது நாடும் இப்படிப்பட்ட ஒரு போக்கிே இவழங்கவேண்டிய அரசே இன்று மனிதர்களைப் பல்வேறு அ துெ சுதந்திரம்? “உலகம் முழுவதும் ஒவ்வொரு வாழ்வை வழங்குவதும் அவர்களது தேவைக ருஸ்வெல்ட் கூறுகின்றார்.
நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளை
நாட்டுத்தலைவர்கள் முன்வர வேண்டும் மக்கள் சுதந்திரக்க
"குழந்தைகளின் ஆயுதம் அழுகை மாணவர்களின் ஆயுதம் அறிவு இளைஞர்களின் ஆயுதம் கண்ணிர் கயவர்களின் ஆயுதம் அரசியல் அரசியல்வாதிகளின் ஆயுதம் மதம் மதவாதிகளின் ஆயுதம் கடவுள்'
என்று திண்டுக்க உண்மையான சுதந்திரம் கடவுளின் பிடியிலிருந்து சுதந்திரப் பள்ளு பாடிய பாரதி “பாரினில் எவர்க்கும் இனி அ என்று பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ் உண்மையான சுதந்திரத்தைப் பெற இலங்கை அன்னையை
“என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரமாக வாழ ஆசைப்படுகின்றான். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க எல்லா மனிதர்களும் தேடும் சுதந்திரம் அவர்களுக்கு வ்வித கட்டுப்பாடுமின்றி சுதந்திரப் பறவையாகப் பறக்க
đồđồ) (5 gọiọỦ(8) IIGòTLDIT? பாணம்தான் கட்டிக்கலாமா? டி பெத்துக்கலாமா? (6 fligó356) TLDIT? கை கட்டிப் பறக்கிறது. 矮 லை பகுத்தறிவின் பயன்பாடு என்ன? மனதைத் தீமையிலிருந்து 2 சுதந்திரத்தை இழக்கக் கூடாது, அது நமது வாழ்க்கையாக 2
க்களின் சுதந்திரத்தை விழுங்கி தங்களுடைய வேட்கையைத் கட்கக் கூடாது, “செய் அல்லது செத்துமடி என்பதை : ர்கள் இங்கு சுதந்திரம் செயற்படவில்லை மாறாக மக்களுக்குள் ம் ஆமோதிக்க வேண்டும் என்பவர்கள் ஆணவத்தின் ព្រៃផ្សៃ லயே போய்கொண்டிருக்கிறது மக்களுக்கு விடுதலை வாழ்வு க்கு முறைகளால் கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறது. ளும் மக்களுக்கு ஆரோக்கியமான சமாதானமான
நிறைவேற்றுவதுமே சுதந்திரம் என பிராங்கிளின் டி
நம்மை விடுவிப்பதன்று மாறாக கடவுளிடம் சரணடைவதாகும். மை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’
வேளையில் அனைவரும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாக வாழ்ந்து வேண்டுவோம்.
- ஆசிரியர் -
బ్లో es
کیسے یہ حصہ ہے
ஆண்டவருடைய அடிமை சாற்படி எனக்கு நிகழட்டும்"
O (லூக்கா 1:38)

Page 4
ஜனவரி
அவை,
இଝୁଣ୍ଡି
ம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மை தீர்ப்பு என்பார்கள். நம்பிக்கை நம் வாழ்வி ஆதாரமாக அமையட்டும். எமக்கு வாழ்ை பெற்றுத் தரட்டும்.
எந்தப் பெரிய மரமானாலும் அதன் சரிதை சிறிய வித்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. பாடக வாழ்வின் போது வித்தொன்று முளைப்பது பற்றி பெரும்பாலும் போஞ்சி விதைகள் முளைப்பதைத எடுத்துக்காட்டாக கொள்வார்கள். அதன் பரிமாணம் உறிஞ்சி பருமனடைதலும், வித்தினின்று முளை ே முன்னம் வேர் தோன்றுவது, பிறகு நாற்றாவது பின்னர் பயன்படுத்தப்பட்ட வித்து அழிந்து போவது எ மிகத் தெளிவாகக் கண்டுணரக் கூடியதாக இரு மரமானது முளையாக உருவாகி உலகிற்குத் தன் அறிமுகப்படுத்திக் கொள்ளுமுன் அதன் வேர்தான் வாகின்றது. அதன் வேர் மண்ணில் தன்னை நிறுத்திக்கொண்ட பின்னர்தான் முளையை ெ கொணரப்பண்ணுகின்றது. அதற்குப் பின்னரே தாவரமாக, மரமாக வளர்கின்றது.
எம் மானிட வாழ்வில் நமது வாழ்வும் தன உயர்வாகப் பலர் வியக்கும் வண்ணம் அமைய வே என்றால், நமக்கென்று ஓர் உறுதியான-நிலை நாட்டப் விசுவாசம் என்கின்ற வேர் தேவை. எந்த அளவுக்கு விச என்கின்ற வேர் ஆழமாக ஊன்றியிருக்கிறதோ அந்த அ குப் பலமுள்ளதாக எம் வாழ்வு அமையும் என்பது நிச் அதற்கென்று விசேடமாக அழைப்பிதழ் வைத்து ருக்கத் தேவையில்லை.
நம் வாழ்வின் அடித்தளமாக-அடிநாதமாக அ வேண்டியது கிறிஸ்து மீது நாம் கொள்ள வே6 நம்பிக்கை- அவரே எம் மீட்பு அவரை நாம் நம்பாத யில் மீட்பு என்பது நமக்கில்லை என்பதுதான் உை அவர் தந்த மீட்பின் மீது தாகம் கொண்டு தேடின் (UPI) UlITS).
சாதாரண சமூக வாழ்வில் ஒரு நாட்டுக்கும் அறிந்து கொண்டிருக்க வேண்டியது அவனது கடை தன் வாகனத்தை இடப்பக்கமாக ஓட்டிச்செல்ல வே என்று கருதுவது தப்பாகும். ஏதாவது ஒரு குற்றச்ச "ஐயா அப்படி ஒரு சட்டம் இருப்பது எனக்குத் தெ போக்குச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது. போக்குமல்ல என்றோர் எழுதப்படாத விதி இருக்கிற அதைப் போன்றுதான் இயேசு என்கின்ற மீட்பன அறியாதவர்களாய் நடந்து கொள்ள முற்படுவதும், அ சிக்கலுக்குள் மாட்டியே ஆகும் என்பதை நாம் தெளிவு தெரியாத மக்கள் மத்தியில் அவரை ஏற்றுக்கொள்வ போன்றவர்கள் மத்தியில் அவர் ஏற்றுக்கொள்ளப்படாம6 ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த இடத்தில் ஏற்றுக்கெ அவரை ஏற்காதிருந்தால்..?
-—E
 
 
 
 
 

ர நம் சிறு பருவம் முதல் அறிந்துள்ள நாம் அவரை வர் வழியில் வாழ மறுப்பதும், மறப்பதும் நம் வாழ்வை றத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் அவரைத் திலும் பார்க்க அவரைத் தெரிந்து கொண்டுள்ள நம் Sருக்கின்ற சந்தர்ப்பங்களே அதிகம் அவரே கூறினார்: ாள்ளப்படுவதில்லை என்று அவரது மக்கள் நாமே

Page 5
ஜனவரிணஇணஇ
தான் கொண்டு செல்லுமந்த மதிய உணவினையே வறிய மாணவர்க்கு வழங்கியே சேவை செய்தே சிறிய வயதிருந்தே சேவை மனம் கொண்டவராய் மாறிய மாணவிதான் கோன்ஸாவும் அம்மானை பட்டியலிட்டே பணியாற்றுகின்ற பழக்கமதை கெட்டியாயக் கடைப்பிடித்தே கெடுதியின்றி வாழ்ந்தே மற்றவர்க்கு முன்மாதிரியான மங்கையிவள் திகழ்ந்ததால் மதிப்புதனைப் பெற்றாள் அறிவீரோ அம்மானை
பதினெட்டு வயதான பருவத்தை எட்டியதும் கிறிஸ்தவ மிஷனரியில் இணைந்தாளே சகோதரியாய் லொரெட்டொ என்னுமந்தத் துறவியர் மடம் சேர்ந்து கோன்ஸா என்றவளும் மாறினாள் ஆக்னஸாக அங்குள்ள துறவிகளில் அதிகம் பேர் வங்காளிகள் அதனாலே அவளுக்கு வங்காள எண்ணமாகி அடிமனதில் ஆசை குடியேறி இருக்கையிலே வங்காள தேசம் செல்ல மனமானாள் அம்மானை
இந்த எண்ணமதை இசைவாகத் தாயாரிடம் இயம்பிட வந்தனளே ஆக்னஸ் கன்னியிவள் எந்த மறுதலிப்பும் அவள் தாயார் இயம்பாமல் வந்த மகளவர்க்கு சம்மதமும் சொன்னாரே வங்காளத்திலுள்ள லொரெட்டாவுக்கு விண்ணப்பித்து அயர்லாந்து தேசத்தில் ஆங்கிலமும் கற்றறிந்து
 
 

அதிலே தேர்வானால் வங்காளம் கிடைக்குமென வந்திட்ட மறுமொழியைக் கண்டாளே அம்மானை
கன்னியவள் கண்ட கனவு பலித்திடவே கைதுக்குப் பெட்டி கனதியற்ற பொருளுடனே தாயோடு கூட தமக்கையை அழைத்தபடி அயர்லாந்து தேசமது புறப்படச் சித்தமாகி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்து எட்டது செப்டம்பர் இருபத்தாறான தேதியிலே ரயிலேறி அவளும் சாக்ரம் இடம் சேர்ந்து அங்கிருந்தே அயர்லாந்து சென்றாளே அம்மானை
அயர்லாந்து தேசமதன் ராத்பீமன் பட்டணத்தில் லொரேட்டோ சேவை மையம் சேர்ந்த கன்னியவள் முஃபோர்ஜியோ என்ற முதிர்ச்சி பெற்ற ஆசானிடம் முறையாக இங்கிலிசு கற்றவளும் தேறினாளே படிப்பிலே ஆர்வமுடன் குறிப்புகள் பலவெடுப்பாள் பயிற்சியும் சேவைதன்னில் பலமாக எடுத்தவளும் பார்ப்பேர்கள் ஆச்சரியப் பார்வையது கொண்டிடவே பல பாடம் கற்றனளே கன்னியவள் அம்மானை
கல்வியில் தேறிய பின் கல்கத்தா செல்வதற்கு கட்டளை கிடைத்ததுமே களிகூர்ந்த கன்னியவள் கப்பலது வழியாக இந்தியா செல்வதற்கே கடல் பயணமதைக் கைக்கொண்டாள் அம்மானை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தெட்டு நவம்பரில் ஆக்னஸின் பயணமோ ஐம்பது நாளாகி பம்பாய்த் துறைமுகத்தை வந்திறங்கிக் கன்னியவள் கடுகதி ரயிலேறி கல்கத்தா சென்றனளே
கலைக்கோட்டன்
அ. இருதயநாதன்

Page 6
  

Page 7
6. ܀ శgāశనిశian? قمةجاكرة : fJua) இலக்கியவாதி “வாகரைவானன்”
அவர்கள் எழுதிய கிழக்கிலங்கைத் 2 தமிழகம்” என்னும் நூலை வாசிக்கக்
அவர்களின் சொந்தப் பெயரைச் சொல்லி விழித்தால் அநேகம் பேருக்குத் தெரியுமோ என்னவோ எனக்குத் தெரியாது? ஆனால் வாகரைவானன் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்.
அவர்களின் பாணியில் வரலாற்றுத் திரிபுகளையும் மறைத்தல்களையும் முற்றாக நிராகரித்து தன்னுடைய துணிச்சலான எழுத்துகளை இந்த வெளியீட்டில் தந்துள்ளார்.
இ e இலங்கை என்னும் பெயர்ச் சொல்
e இலங்கைத் தமிழர்களின் பூர்வீக இருக்கை
கிழக்கிழங்கைத் தமிழகம் e கிழக்கிழங்கைத் தமிழகம்-ஊரும் வேரும் e கிழக்கிழங்கைத் தமிழகத்தில் தமிழர்
பண்பாடு தமிழர் தொன்மையை உறுதிப்படுத்தும் பெருங்கற்காலப் பண்பாடு தமிழ்ப் பெளத்தம்- சில குறிப்புகள் தமிழர் நாட்டுப்பாடல்கள் நாட்டுக் கூத்து-ஒரு நோக்கு காயான்கேணி முதல் கதிரவெளி வரை வரலாற்றில் இருந்து சில வாசகர்கள்
போன்ற தலைப்புகளில் - பிரிவுகளில் 藝 விடயங்களைக் கூறியுள்ளார்.
χνάχα καταλές
கிழக்கிலங்கையின் வரலாறு தொடர் பாக அனைத்து அத்தியாயங்களும் முறை யாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது சிறப்பம் சமாகும். முதலிரண்டு அத்தியாயங்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

● 2-?ܒܒ`ܒ"=N
ഋ=♔
கிழக்கிலங்கைப் பிரதேசத்தை அறிமுகஞ் செய்யும் வகை யில் அமைந்துள்ளன.
சங்க இலக்கியம் தொடக்கம் நவீனகால ஆய்வு முடிவுகள் வரை பல்வேறு ஆதாரங்களை ஆணித தரமாக எடுத்துக் காட்டி யுள்ளார். திருகோணமலை மாநிலம், மட்டக் களப் பு மாநிலம், அம்பாறை மாநிலம் என்பன கிழக்கிலங்கை தமிழ கத்துள் அடங்குவதாக அவர்
குறிப்பிடுகிறார்.
ஆசிரியர் சில இடங் களில் தனது நெற்றிக் கண்ணைக் காட்டியுள்ளார். கிழக்கிலங்கையில் ஆதிக்குடி | களாக தமிழர் வாழ்ந்தமையை வாகரை வாணன் உறுதிப்படுத்துகின்றார்.
நிலங்கள் பறிபோகும் பறிக்கப்படும் இச்
சந்தர்ப்பங்களில் இவ்வாறான ஆதாரங்கள் இ
எமக்கு அவசியம்.
அவர் ஓர் இடத்தில் இப்படிக் குறிப் பிடுகின்றார்: “மட்டக்களப்புத் தமிழகத்தின் தென்மேற்கு எல்லையில் காடுகளின் மத்தியில் உள்ள "லகுகல” என்னுமிடத்தில் காணப் படும் தாதுகோபுரங்கள் தமிழர்களின் ஒரு :
குழுவினர் பெளத்தர்களாக வாழ்ந்ததின் இ
அடையாளமாக விளங்குகின்றன. ஆனால் அந்த வரலாறு எல்லாம் இன்று முழுமையாக மாற்றப்பட்டு வருகின்றது” என்பதை
மட்டக்களப்புத் தமிழகம் குறிப்பாகக் காயான் s
கேணி முதல் கதிரவெளி வரையுள்ள பிர தேசங்களில் வாழும் தமிழர்கள் உணர்ந்து : விழிப்புடன் செயற்படவேண்டும்.
இவ்வாறான விடயங்களை உள்ள டக்கியுள்ள இப்புத்தகத்தை அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டும், அதுவும் காசு கொடுத்து வாங்கி

Page 8
6)
-—E
மிழின் செழுமைக்கும், அதன் வளர்ச்சிக் கும் கிறிஸ்தவர்கள் பங்களிப்புச் செய்துள் ளார்கள் என்பது வெள்ளிடைமலை, அவ்வாறு சமயப்பணியினூடாக தமிழ்ப்பணி புரிந்த கிறிஸ்தவத் தமிழ்ப் பெரியார்களை (ஐரோப்பிய மற்றும் உள்ளூர்) அறிமுகம் செய்வதே இத் தொடரின் நோக்கமாகும். இதனுடாக அவர்களை அறிந்துகொள்ள முயல்வோம். தத்துவ போதக சுவாமி இத்தாலி நாட்டைச் சார்ந்த தகஸ்கனி மாகாணத்தின் ஓர் உயர்ந்த பிரபுக் குடும்பத்தில் பிறந்தவர். நேப்பில்ஸ் நகரத்திலிருந்த இயேசு சபையில் இணைந்து இறையியல் கல்வி பயின்று கத்தோலிக்கக் குருவாகி 1606ம்
நாட்டிற்கு வந்தார். கிறிஸ்தவ மறையைப் பரப்பும் நோக் கில் தமிழ் நாட்டிற்கு வருகை தந்த இவர் ,
و-j] = [b 605)Lت j5LDت 7 9 160) L, LITT 6) 160) 600 களை முழுவதும் மாற் ae றிக் கொண்டு இந்துத் துறவிக்கோலந் தரித்து வாழ்ந்து வந்தார். புலால் உணவை நீக்கி சைவ உணவை ஒரு வேளை உண்டு வந்தார். நெற்றியில் சந்தனம் அணிவார், மார்பில் பூனூலைத் தரித்துக் கொள்வார். ஐந்து புரியாக அமைக்கப்பட்டிருந்த அப்பூனூலில் மூன்று புரிகள் பொன்னாலானவை. மற்ற இரண்டு புரிகளும் வெள்ளியிலானவை. மூன்று பொற்புரிகளும் கிறிஸ்த வர்களின் மூவொரு இறைவனை குறிப்பதென்றும், இரண்டு வெள்ளிப் புரிகளும் இயேசு கிறிஸ்துவின் உடலையும், உயிரையும் குறிப்பன என்றும் இவர் விளக்கம் அளித்தார். அப்பூனூலில் சிலுவையொன் றைக் கட்டித் தொங்க விட்டிருந்தார்.
6.DTLIL 1g 65Ti6S (Robert De Nobili) 616òD 5601g5 இயற்பெயரையும் மாற்றி "தத்துவ போதகர்' என்று அழைத்துக் கொண்டார். தத்துவ போதக சுவாமி மதுரையில் வாழந்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம் என்னும் மொழிகளைக் கற்றுத்தேர்ந்து அவ்விரு மொழி களிலும் நன்றாகப் பேசவும், சொற்பொழிவு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ঔਲ.2
நிகழ்த்தவும், நூல் இயற்றவும் வல்லவராய் இருந்தார். தமது சமஸ்கிருத மொழித்தேர்ச்சியினால் அனேக உயர் குடி பிராமண இந்துக்களுடன் “இயேசு வேதம்” குறித்துத் தர்க்கித்தார். அவரது போதனையின் பயனாக அனேகர் கிறிஸ்தவ நெறியில் இணைந்து கொண்டார்கள். மதுரை, திருச்சி, சேலம் போன்ற பகுதி களில் நற்செய்தித் தூதுரைப் பணியில் ஈடுபட்டார்.
இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், நூல் இயற்றுவதிலும் வல்லவர். பல தமிழ் உரை நடை நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவர் தமிழில் எழுதிய நூல்கள் எல்லாம் உரைநடையே. செய்யுள் கிடையாது. இவர் காலத்தில் தமிழ் நாட்டில் அச்சுப் பொறி இல்லாமையாலும், நூல்களைப் போற்றுவார் குறைவாகக் காணப்பட்டமையினாலும் இவருடைய நூல்கள் பெரும்பாலும் மறைந்து விட்டன. இவர் இயற்றிய நூல்களாவன:
1. ஞானோபதேச காண்டம் 2. மந்திர மாலை
கலைக்கழகம்,
விரிவுரையாளர், கிழக்குப் பல்
மட்டக்களப்பு.
3. ஆத்தும நிர்ணயம் 4. தூஷண திக்காரம் 5. சத்திய வேத லஷணம் 6. சகுன நிவாரணம் 7. பரம சூட்சுமாபிப் பிராயம் 8. கடவுனிருணயம் 9. புனர் ஜென்ம ஆட்சேபம் 10. நித்திய ஜீவன் சல்லாபம் 11. தத்துவக் கண்ணாடி 12. ஏகநாதர் சரித்திரம் 18. தத்துவச்சபதம் 14. ஞானதீபீகை 15. நீதிச்செயல் 16. அநித்திய நித்திய வித்தியாசம் 17. பிரபஞ்ச விரோத வித்தியாசம் 18. தமிழ் போர்த்துகீச அகராதி
செல்வம் மிக்க பிரபுக் குடும்பத்திற் பிறந்தும் அச்செல்வப் பயனை தூர விலக்கி விட்டு தூர தேசத்தி லிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து, தமது வாழ்நாள்
6 డ్ర

Page 9
ஜனவரிணஇணஇன்
முழுவதையும் சமயப் பணி ஆற்றுவதில் செலவிட்ட த இவர் 42 ஆண்டுகள் தமிழ் நாட்டில் சமயப் பணி அ சில காலம் இலங்கை வந்தார் என்றும் சொல்லப்படுகி மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார். இறுதியாக தம்முை மாதம் 16ம் நாள் காலமானார்.
இவர் பணியும் வாழ்வும் இன்று கிறிஸ்தவ, தமிழ் ந
நாம் ஒரே தாய் மக்களாக வாழ வேண்டும்/
என அமைச்சர் கூறியிருக்கிறாரே'
"ஒரு தாய் பிள்ளைகள் 叙 எந்நேரமும் சண்டை போட்டுக்/ {\
கொண்டிருப்பதைப் பார்த்திருப்பார்"
 
 
 
 
 
 

த்துவப் போதக சுவாமிகளின் பணி பாராட்டத்தக்கது. தனூடாக தமிழ்ப் பணியாற்றினார்.தமது முதுமையில் ன்ெறது. ஆயினும் தமது இறுதிக்காலத்தில் சென்னை டய முதிர்ந்த வயதில் கி.பி.1656ம் ஆண்டு பெப்ரவரி
ல்லுலகில் மதிக்கப்பட்டு வருவது கண்கூடு. 9
பாரதியின் கவிதையினைப் படிக்கின்றோம் Ε. ΕΞ - 3 புளகாங்கிதம் அடைகின்றோம் பாரதிதாசன் 靈 கவிதைகளைப் படிக்கின்றோம் 鲁
கண்ணதாசனைப் படிக்கின்றோம்
வைரமுத்துவைட் க்கின்றோம். 量 இறும்பூ தெய்துகிறோம் ஏன்?
பொருள் புரிகிறது.கற்பனைவளம் புரிகிறது
கவிநயம் புரிகிறது.மகிழ்கின்றோம். N ஆனால் உங்கள் கவிதைகளைப் படித்தால் (S அப்படி ஏற்படவில்லையே
எங்களுக்குப் புரியவில்லை
என்ன சொல்கிறீர்கள் என்பதே எங்களுக்கு விளங்கவில்லை இந்தநிலையில்FITGö மைக்கிறீர்கள் ன கவித்துவம் உள்ளது?
பக்கத்தில் முக்கால் Litigo).5 வெறுமையாக விட்டு கால்பக்கத்தில் மட்டும்
கவிதை எழுதுகிறீர்கள்
இதில் என்ன கவித்துவம் உள்ளது?
இ உங்களுக்குப் புரிகிறது என்று நீங்கள் மர்தட்டி மகிழலாம்
அப்படியானால் உங்கள் வாசகர் எண்ணிக்கை ரு கைப்பிடிக்குள் அடங்கிவிடும்
பரவாயில்லையா?

Page 10
لینےکےپیچھےسےجیے
ൈ-♔-—
GFLDULJĖ 55 TIL U JIE GE56 பெரும்பாலும் மனிதனோடு கடவு ளுக்குள்ள உறவுகளையும் கடவுள் மனிதனை வழி நடத்தும் வழி முறைகளையும் விரித்துக் கூறு வனவாக அமைந்திருக்கும். தேம்பாவணியிலும் இப்பண்பினைக் காணலாம். கிறிஸ்தவ சமயக் காப்பியமான தேம்பாவணி தண்டி யலங்கார இலக்கணத்தில் கூறப் பட்ட காப்பிய இலக்கணத்தை அவ்வாறே பின்பற்றி இயற்றப் பட்டதல்ல. பெருங்காப்பியத்திற் குரியவற்றுள் கடல் வருணனை, மதுக்களி, புலவி முதலானவும் சருக்கம், இலம்பகம் என்ற பிரிவும் தேம்பாவணியில் இல்லை. இந்திய நாட்டு மரபுகளைப் பெரும்பாலும் பின்பற்றும் வீரமாமுனிவர் மேனாட்டு மரபுகளை சிறுபாண்மையாகப் பின்பற்றியும் இக் காப்பியத்தை ஆக்கியுள்ளார். இந்நூல் பற்றிக் கூறுகையில் "தேம்பாவணி என்னும் ஏரியில் கிழக்கு மேற்கு ஆகிய கலையாறுகள் சங்கமமாவதைக் காணலாம்” என தனிநாயகம் அடி கள் குறிப்பிடுவார்.
தமிழ் மரபு இக்காப்பியத்திற் பல இடங்களில் பின்பற்றப்பட் டுள்ளமையைக் காணலாம்.
தமிழ்இலக்கிய நூல்களை மங்கலகரமாகத் தொடங்கும் முறைமையை குறிப்பாக உலகம் என்ற சொல்லை முன்னிறுத்தித் தொடங்கும் முறைமையை தேம்பா வணியில் அதன் ஆசிரியர் பின் பற்றியுள்ளார். “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ என திரு முருகாற்றுப்படையும், “உலகெ லாம் உணர்ந்தோதற்கரியவன்’ என பெரியபுராணமும், "நனந் தலையுலகம்’ என முல்லைப் பாட்டும், “மூவா முதலா உலகம்’
என சீவகசிந்தாம uJITGO)6).jub' 6T6. மும் தொடங்குள் தேம்பாவணி "சீரி என ஆரம்பிக்கி அச்செய்யுள் வ
“சீரிய உல செய்தளித் த நேரிய வெ நீந்தவோர் (36) fu G5LD6OLIII பணிந்து
 
 
 

இளுஇ SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSSSSS SSASSASSASSASSASSLALLSAAA 豹 :) 2012
e کس حصے o றுாபி வலஞ்ரீனா 髄*っ പേ முதுநிலை விரிவுரையாளர்
(56) LD
>ணியும், “உலகம் T 85LÍÐL IJITLDITU_j60ŬT வதைப் போலவே UJ66)85 மூன்றும்’ ன்றது.
(5L DITUB:
கம் மூன்றும் ழிப்ப வல்லாய் திராப் பின்றி கடவுள் தூய தம் வினையறப்
போற்றி
ஈழித்துறை ஜிழக்குப்பிலகலைக்கழs
こ子"_ー*
r
பாரிய வளன்றன் காதை
(QGF TGÖGJITLD”
நோக்கம்:
"ஆரிய வளன் தன் காதை
அறமுதல் விளங்கச் சொல்வாம்’
என்பதன் மூலம் சிறந்த வளன் என்னும் சூசை முனிவனது வர லாற்றை அறம் முதலிய பயன்கள் நான்கும் (அறம், பொருள், இன்பம், வீடு) விளங்குமாறு சொல்லுவதே ஆசிரியரின் நோக்கமெனத்
தர்மங்களைக் கடைப்பிடித்து யாவரும் உய்தல் வேண்டும் என்பதும் இவரது நோக்கமாகும். அவையடக்கமாக தேம்பாவணி யில் அமையும் செய்யுள் கம்ப ராமாயணச் செய்யுளினை நினை வூட்டும் வகையில் அமைகின்றது. கம் பராமாயணச் செய்யுள் 6)ICHLDTO):
“ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக் காசில் கொற்றத்து இராமன்
கதையரோ’ இதில் பாற்கடலை ஒரு பூனை முழுவதுமாக நக்கிக் குடித்து முடிக்கவென முற்பட்டதை ஒப்ப குற்றமற்ற இராமனின் கதையைத்

Page 11
வேணஇணஇல் தான் சொல்ல விழைந்ததாகக் கம்பர் கூறுவார். தேம்பாவணிச் செய்யுள் வருமாறு:
"சூசையுற்றன வரங்கட்டுய்க் கடல் கடக்கலில்லா ஓசையுற்றொழுக மிர்தமுடை கடலென்ன நண்ணிப் பூசையுற்றதனை நக்கப் புக்கென உளத்தைத் துாண்டும் ஆசையுற்றுா மனேனு மருங்கதை அறையலுற்றேன்’
இதில் கடலை நக்கிக் குடித்து முடிக்க எண்ணும் பூனையைப் போல வரங்களால் நிரம்பப் பெற்ற சூசையின் வரலாற்றை ஆசையினால் கூற எண்ணுவதாக வீரமாமுனிவர் கூறுகின்றமையைக் 35T6006) Tib.
கம்பரில் அவர் கொண்ட ஈடுபாட்டினைப் பின்வரும் பாடலும் உணர்த்துகின்றது. மிதிலையில் சீதையை மணம் முடிப்பதற்காக இராமன் வில்லை வளைத்தமை பற்றிய நிகழ்வி னைக் கூறுகையில் கம்பர் வருமாறு கூறுவார்:
“தடுத்திமையாமல் இருந்தவர் தாளின் மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார் கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’
அதாவது இராமன் வில்லை எடுத்ததைக் கண்டார்கள் உடனே ஒடிந்து விழும் ஓசையைக் கேட்டார்கள் வில்லை எடுத்ததற்கும் ஒடிந்ததற்கும் இடையில் என்ன நடந்தது என்பதை எவருமறிந்திலர் எனக் கம்பர் வருணித்துள்ளார்.
தேம்பாவணியில் கொடியவனாகிய கோலி யாத்தை எதிர்த்து நின்ற சிறுவனான தாவீது அவனை வென்ற விதம் பற்றிக் கூறுகையில் வீரமாமுனிவர் வருமாறு கூறுவார்,
“கல்லை ஏற்றலும் கவணினைச் சுழற்றலும் அக்கல் ஒல்லை ஒட்டலும் காண்கிலர் இடிக்கும் செல்லை ஒத்தன சிலைநுதல் பாய்தலும் அன்னான் எல்லை பாய்ந்திருள் இரிந்தென வீழ்தலும் கண்டார்’
என்பதில் தாவீது கொடியவனான கோலியாத்தை எதிர்த்து நிற்கிறான். கவணையும் கல்லையும் கையில் எடுத்தான். கவணில் கல்லை ஏற்றியதையும் கவணைச் சுழற்றியதையும், அக்கல் சென்றவிதம்
సమై
 
 

ஆஜ்ணஇ
பற்றியும் எவரும் காணவில்லை. கோலியாத்தின் நெற்றியில் அக்கல் பட்டதனால் அவன் நிலை குலைந்து தரையில் வீழ்ந்ததையே கண்டார்கள் எனக் கூறப்படுகின்றது. 籌
p இலக்கியங்
2012.
-—
செய்மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை 'ஒல்லை வா’ என் றழைப்பது போன்றதம்மா”
(கம்ப; பால: மிதிலை:1)
இச்செய்யுளில் திருமகளான சீதையின் இருப்பிடமான மிதிலைக்கு வரும் இராமனின் வரு கையை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் முகமாக அவனை “வா’ என அழைப்பதைப் போல கொடிகள் அசைந்ததாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மாறு பட்ட நிகழ்ச்சியினைக் குறிப்பிடுகின்றார்.
“கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் தையலும் கணவனும் தனித்து உறுதுயரம் ஐயமின்றி அறிந்தன போல . போருழந்து எடுத்த ஆரெயில் நெடுங்கொடி “வாரல்’ என்பன போல் மறித்துக் கை காட்ட’
(சிலம்பு மதுரை: புறஞ்சேரி: 184 - 186, 189 - 190) மதுரையில் கண்ணகியும், கோவலனும் எதிர்கொள்ள விருக்கும் அவலத்தை அறிந்தன போல (கோவலனின் இறப்பு) மதுரைநகர வாயிற் கொடிகள் "இங்கே வர வேண்டாம்" என அவர்களை மறிப்பன போன்று அசைவதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். தமிழ்க்காப்பிய மரபையொட்டி கோட்டை மதிலின் கொடிகள் அசைவதை வீரமாமுனிவரும் குறிப்பிட் (86ৗগোT্যি.

Page 12
- 羲 ணடுSஇ
மகனேர்ந்த படலத்திலே பெத்லகேமிலிருந்து சூசையும் மரியாளும் இயேசு பாலனும் எருசலேம் நகர வாயிலை எட்டியபோது நகர மாடங்களிலிருந்த கொடிகள் அந்நாட்டு அரசனான ஏரோதின் கொடுமை யைக் குறித்து இந்நாட்டினுள் வரவேண்டாமென்பது போல் அசைந்தன என்கிறார்.
"அல்லுமிழ் இருளின் இருண்ட நெஞ்சவன் செய்ய ரந்தையின் வெவ்வழலாற்ற வில்லுமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி
விரிந்த பூங்கொடிகள் தம்மீட்டம் எல்லுமிழ் மூவர் வருவ கண்டரசன்
இயற்றிய வஞ்சனைக்கஞ்சி நில்லுமின் நின்மினென இடைவிடாது
நீண்டகை காட்டுவ போன்றே”
என்பது அச் செய்யுளாகும் பன்னிரண்டு வயதில் ஜெருசலேம் தேவால யத்திற்குத் தன் தாயுடனும் வளர்ப்புத் தந்தையான சூசையுடனும் இயேசு செல்கின்றார். அங்குக் காணாமற் போகும் அவரை சூசையும் மரியும் தேடி அலைகின்ற நிகழ்வினை அவலச் சுவை ததும்ப புலவர் சித்தரித்துள்ளார். வளனின் புலம்பலாக அமைவது பின்வரும் பாடல்,
"குயிலே கிளியே வெண்குருகே கோவனமே மயிலேஇனைந்தென் மனங்குளிர்ப்ப
அன்னான்கொள் எயிலே வனமே இயம்பீரேல் போயவற்கே துயிலே இலநான் துஞ்சுவனென்பீர்"
என்றான். (தேம்: பிரிந்த மகவைகட்காண் படலம்: 44)
சோலையெங்கும் திருமகனைத் தேடிய லைந்த வளன் அங்கிருந்த பறவைகளிடமும் அவரைக் கண்டீர்களா எனக் கேட்டு அழுகின்றான். அதற்குப் பதிலேதும் கிடைக்காததால் இவ்வாறு கூறுகின்றான். குயிலே, கிளியே, வெண் நாரையே, அரச அன்னமே திருமகனின் பிரிவினால் வருந்திய என் மனம் குளிரும் வண்ணம் அவன் உள்ள இருப்பிடத்தை நீங்கள் எனக்குச் சொல்லா விட்டாலும் அவனைப் பிரிந்தது முதல் துாக்கமே கொள்ளாத நான் இறந்து போவேன் என்றேனும் சொல்லுங்கள் எனக் கூறினான்என்பது பொருள்.
 
 
 

தமிழ் மரபினையொட்டிய உவமைகளும், உருவகங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் மேல் நாட்டுப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியுமுள்ளார்.
கதையைத் 影 இந்தியக் காப் யுள்ளார். மேனாட்
இந்த உத்தியி ன காப்பியத்தின் இடையில் அவர் பயன்படுத்திய গোব্যি,
நாட்டுப் பட தி பாய்ந்தோடுவ தனைக் குறிப்பிடும் புலவர் முல்லை, மருதம், நெய்தல், ஆகிய நிலங்களுக்கு ஊடாக பாய்வதாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் நெல் வேளாண்மை பற்றிக் குறிப்பிடுகையில் “ஒரு நெல் பல கோடியாகுக' என்று கூறி உழவர் விதைக்கும் ஒலியும் உழத்திய ரின் குரவை ஒலியும் தேர்விழாவில் எழும் ஒலி போன்றது என்கிறார்.
இவ்வாறு தமிழ்க் காப்பிய மரபினைப் பின் பற்றும் அதேவேளை கிறிஸ்தவ சமயக் கருத்து களைச் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் வீரமாமுனிவர் வலியுறுத்திச் செல்கின்றார். இயேசு இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகின்றது. முப்பொழுது ஒருபொழுதாக முற்றுணர்ந்த எப்பொழுது அனைத்தும் எப்பொருள் யாவினும் மெய்ப்பொருள் தெளித்த அவர் காட்சி மேன
(தேம்: பைதிரம் நீங்கு படலம்:12)
படுவதுண்டென்பர்
என்பதில் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக் காலங்களையும் ஒருகாலமே போல முற்றிலும் உணர்ந்தவராகவும் எப் பொருளாயினும் யாவற்றிலும் உண்மைப் பொருளைத் தெரிவித்து விளக்கும் முற்றறிவினால் மேம்பட்டவராகவும் இயேசு குறிப்பிடப் படுகின்றார்.
"மாறுபட்டு அழிந்த மனுக்குலத்து அறநூல் வகுத்தளித்து உற்றபின் உலக நீறுபட்டிடு நாட்பயன்தர வருவான் நிமலன் என்றது மறையன்றோ (தேம்: பிரிந்த மகவைக் காண் படலம்; 89)
என்பதில் பாவத்தில் அமிழ்ந்த மனுக் குலத்தை மீட்டு இரட்சிக்க ஆண்டவன் மனிதனாய்
%مجھے کی 0

Page 13
இSS
ஜனவரி = இ
இவ்வுலகில் அவதரிப்பான் என்பதும் பின்பு உலகம் வெந்து அழியும் நடுத்தீர்வை நாளில் (உலகம் நீறு பட்டிடும் நாள்) எல்லோர்க்குமுரிய பலனைத் தருவ தற்கு இரண்டாம் முறை வருவான் என்பதும் மறை நூலில் சொல்லப்பட்ட விடயங்கள் என்பதை இயேசு இப்பகுதியில் நினைவூட்டுவதாக இச் செய்யுள் அமைகின்றது. இதன் மூலம் கிறிஸ்தவத்தின் தத்துவம் வெளிப்படுத்தப்படுகின்றது.
மூவொரு கடவுள் தத்துவமான திரித்துவ - ஏகத்துவ விசுவாசம் பல இடங்களில் வலியுறுத் தப்படுகின்றது. (பிதா, சுதன், துாய ஆவி) பழைய ஏற்பாட்டுச் செய்திகளை இரண்டாம் காண்டத்தில் திருக்குடும்பம் எகிப்திற்குத் தப்பிச்செல்லும் நிகழ் வோடு நினைவூட்டிச் செல்கிறார் வீரமாமுனிவர். விடுதலைப் பயண நிகழ்வுகளை அவர் இதில் சித்த ரித்துள்ளார். மறுபிறப்புப் பற்றி கிறிஸ்தவம் கொண் டுள்ள கொள்கை வலியுறுத்தப்படுகின்றது. மறுபிறப்பு உண்டோ என சூசையிடம் ஒருவர் வினவியபோது அதற்கு சூசை பதிலாக வருமாறு கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
“பிரியமாண்டுயிர் பின்பு பிறத்தலே கரியகங்குல் கனா என ஒதினான்’
என்பதன் மூலம் மறுபிறப்புக் கொள்கை கிறிஸ்தவத்தில் இல்லை என்பது குறிப்பிடப்படுகிறது. வேதாகமச் செய்திகளோடு வளன் குறித்து வாய் மொழியாக நிலவிய வாய்மொழிக் கதைகளையும் இணைத்துத் தன் காப்பியத்தைச் சுவைபட நகர்த்திச் செல்கின்றார் புலவர். உதாரணமாக திருமண நிகழ்வின்போது வளனின் கையிலிருந்த கோல் தழைத்தமை பற்றிய செய்தியைக் குறிப்பிடலாம். அத்துடன் இக் காவியத்தின் நாயகனாக அமையும்
"என்னதான் நடக்கும்
இருட்டினில் நீதி மை
 
 

Sస్ வளன் குற்றமற்றவராகக் காட்டப்பட வேண்டும் என்னும் நோக்கில் வளனும் சென்மபாவமில்லாமல் பிறந்தார் எனக் குறிப்பிடுகின்றார். வேதாகமத்தில் மரியாளும் இயேசுவும் மாத்திரமே செண்ம பாவமில்லாமல் பிறந்தார்கள் என்பது கூறப்படுகின்றது. சென்மபாவம் என்பது ஆதாமும் ஏவாளுமாகிய முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறியதால் மனுக்குலம் முழுவதுமே தன் பிறப்பில் அதனைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதைக் குறிக்கும்.
(p19.660) J:
இவ்வாறு தமிழ்க் காவிய மரபினையும் செய்யுள் யாப்பினையும் வர்ணனை முறைகளையும் பின்பற்றியுள்ள வீரமாமுனிவர் தமிழ் இலக்கிய மரபிற்குப் புதிய கருப்பொருளான கிறிஸ்தவ சமயக் கருத்துகளை அவற்றின் தனித்துவமும் புனிதத்து வமும் குன்றாத வகையில் வெளிப்படுத்தியதன் மூலம் மேனாட்டு மரபினையும் தமிழ் மரபினையும் ஒன்றிணைக்கும் பாலமாகத் தேம்பாவணியைத் தந்துள்ளார்.
"வீரமாமுனிவருடனேயே தமிழ்க் கத்தோ லிக்க இலக்கிய நடவடிக்கைகள் தமிழ் இலக்கியப் பாரம்பரிய முழுமையுடன் இணையத் தொடங்கு கின்றன’ என்னும் பேராசிரியர். கா.சிவத்தம்பி அவர்களின் கூற்று (1988 தமிழில் இலக்கிய வரலாறு: பக்.53) தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரமாமுனிவரின் பங்களிப்பினையும் இடத்தையும் மட்டிடும் மதிப்பீடாக
அமைவது.

Page 14
"கொழும்பு மறைமாவட்டத்
இதி
வEAE
கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் ட இம்மானுவேல் பெனான்டோ அவர்களையும், அருள் திருத்தந்தை 16ம் பெனடிக்ற் அவர்கள் நியமித்துள்ள வாழ் தமிழ் மக்களிடையே நன்கு அறியப்பட்டவரும் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் 1948ம் ஆண்டு பிறந்தார். 1978ம் ஆண்டு குருவாக திருநிலை மறைமாவட்டத்தில் குருமுதல்வராக (தமிழ்ப்பிரிவு) உயர்த்தப்படுவது கொழும்பு வாழ் மக்களிடையே யுள்ளது.
துணையாயராக நியமிக்கப்படவுள்ள மற் மெக்ஸ்வல் சில்வா அவர்கள் கொழும்பு வில்லோரவ செப்டெம்பர் மாதம் 27ம் திகதி பிறந்தார். 1981 ஜூலை திருநிலைப்படுத்தப்பட்டார். தற்போது கோட்டை கல்லூரியில், தலைவராகப் பணிபுரிகின்றார்.
ിഖി நூலுக்கு வ யாட்டுத் துன் திணைக்களம் சிறர் ஆண்டும் பல்வேறு து வழங்கும் பண்பாட்டு அ நூல் தெரிவில் பொதுவான நு நூலாகத் தெரிவு செய்திருப்பது
“புதிய இணையதளம்’
இலங்கையின் முதல் தமிழ் கத்தோ6 செய்தி லங்கா’ இணையதளம் இலங்ை செய்திகளை அறிக்கையிடும் பனியைக் க
இலங்கைச் செய்திகள், உலகச் செய் இணைப்புகள், காணொளிகள், படங்கள் அம்சங்களுடன் வெளிவரும் இவ் இணைய எனும் முகவரியில் பார்வையிட முடியும். கு கு
པོ་སྐུ་བློ་ 12
 
 
 
 
 
 
 
 
 
 
 

竺 ఏప్రినీ- 2012,
திற்குப் புதிய துணை ஆயர்கள்’
திய துணை ஆயர்களாக அருள்தந்தை தந்தை மெக்ஸ்வல் சில்வா அவர்களையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு விரும்பப்படுபவருமான அருள்தந்தை / மே மாதம் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் / >ப்படுத்தப்பட்ட இவர் கொழும்பு விளங்குகின்றார். இவர் ஆயராக மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி /
றவரான அருட்தந்தை த்தவில் 1953ம் ஆண்டு 25ம் திகதி குருவாக புனித தோமஸ்
“சிறந்த நூலுக்கான விருது’ UUTாழி மறை மாவட்டத்தைச் சேர்ந்த ருட்பணி இராஜேந்திரம் ஸ்ரலின் அடிகள் ட்ட 'ஆளுமை மலர உள ஆற்றுப்படுத்தல்’ எனும் ட மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளை றை அமைச் சின் பண்பாட்டு அலுவல்கள் த நூலுக்கான விருதை வழங்கியுள்ளது. ஒவ்வோர் வறைசார்ந்த நூல்களைத் தெரிவு செய்து விருது லுவல்கள் திணைக்களம் 2010ம் ஆண்டுக்கான ால்கள் என்னும் வகைக்குள் இந்நூலையும் சிறந்த து குறிப்பிடத்தக்கது. e e o
Sக்க இணைய தளமான “தமிழ்க் கத்தோலிக்கச் கை மறைமாவட்டங்களின் தமிழ்க் கத்தோலிக்கச் கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் ஆரம்பித்துள்ளது. திகள், இணையதள , விளம்பரங்கள் என g5GTg560g tinlnet.com
O

Page 15
Balaj=@@
ஆசியாவிலேயே முதன் (ypa LUITTypûum600 FIFI GÜLDElü öHpahalifi
ணஇதி
தோலகட்டி சுவாமி என யாழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட வணக்கத் திற்குரிய பி. ஏ. தோமஸ் அடிகளாரின் குருத்துவ நூற்றாண்டு தினம் கடந்த மாதத்தில் நினைவுகூரப் பட்டது (1912, 01.06 - 2012.01.06). செபமாலை மாதா துறவற சபையின் நிறுவ னரான இவர் ஆசியாவிலேயே முதன் முதலாக தியான யோக சபையை நிறுவியவர் (The Founder of the First Asian Contemplative Congregation) என்ற பெருமைக்குரியவர். கத்தோ லிக்க திருச்சபையில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு ஆரம்ப 560)Glouri G0I '960)p 3 ligurf (Servant of God) என்ற நிலையைத் திருச்சபையின் உயர் பீடத்திடமிருந்து பெற்றவர். ஈழத் தமிழ்த் திருச்சபை முதல் புனிதர் ஒருவரைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுமானால் அது தோமஸ் அடிகளாராகவே இருக்க முடியும்.
இலங்கை நாட்டில் யாழ் நகளிலே பாண்டியன் தாழ்வு என்ற கிராமத்தில் வஸ்தியாம்பிள்ளை லூயிஸ் அம்மாள் என்ற தம்பதிகளுக்கு இரண் டாவது கனியாக இறைவனால் கொடுக்கப்பட்ட வர். சிறந்த விசுவாசம் நிறைந்த குடும்பத்தில் 07.03.1886 இல் பிறந்தவர். 06.01.1912ல் குருத்துவ திருநிலைக்கு உயர்த்தப்பெற்றவர். ஞான வாழ்வில் முற்றிப் பழுத்தப் பழமாக இறைவனால் உருவாக்கப்பட்டு 26.01.1964ல் இறைவனிடம் தன் ஆன்மாவை ஒப்படைத்தார்.
தோமஸ் அடிகளார் கிறிஸ்தவ சமயத்தின் தவசி அவர் ஒரு சந்நியாசி இறைவனை முழு அன்புடனும் முழு உரிமையுடனும் அப்பா! தந்தாய் என அழைத்து வாழ்ந்தவர் இறைமகன்
e ଜୂ
影
--ས་
哈
မြို့
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

象 کے سر sYستحصحSN huஇ 《་8 ད་ 2012,
56ᏓᏍTr85; தியானயோக 866LU ரத்தில் நிறுவிய
குருத்துவ நூற்றாண்டு விழா
இயேசுக் கிறிஸ்துவின் இதயத்திற்குள் வாழ்ந்தவர். தூய ஆவியின் இருப்பிடமானவர். அவரது கனிகளால் நிரப்பப்பட்டவர். பரிசுத்த கன்னி மரியாளின் அன்புக் குழந்தையாய் வாழ்ந்தவர். இறைவனின் மகிமைக் காகவே வாழ்ந்தவர். “கடவுளுக்கு நிகர் யார்?’ என்ற கோட்பாட்டைத் தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர். இரவும் பகலும் செப தவத்தால் இறை பிரசன்னத்தில் இயேசுவின் இதயத்தில் ஒன்றித்து இறைவனில் மறைந்து வாழ்ந்தவர். இயேசுக் கிறிஸ்துவின் அன்பால் தூண்டப்பட்டு அவருக்காக ஒரு பைத்தியக்காரனைப்போல் வாழ்ந்தவர்.
இரவில் பல மணிநேரம் கண்விழித்து செப தவம் செய்து தன் கடமையை ஆற்றியவர். இடுப்பு முள் ஒட்டியாணம், சங்கிலி, சாட்டை, தவ உடை மற்றும் தவக்கருவிகளால் தன் உடலை ஒறுத்து தவம் செய்தார். இந்தியா, இலங்கை மனம் திரும்ப சொல்லாலும், செபத்தாலும் எழுத்தாலும் போதித்து வாழ்ந்தவர். இறுதி ஆண்டுகளில் இயேசுவின் காட்சியைப் பெற்றவர்.
ஆயர்கள், குருக்கள், துறவியர், கன்னியர்க ளுக்கு ஞான வழிகாட்டியாய் இருந்தவர். தினமும் பாவ மன்னிப்பு வழங்க மணிக்கணக்காய்த் தன்னை ஒப்புக்கொடுத்தவர். குருக்கள், துறவியர், கன்னியர், குருமானவர்கள், பொதுநிலையின ருக்குத் தியானம் கொடுத்தவர்.
இந்து புத்த துறவிகளின் தலைவர்களுடனும் மற்றவர்களுடனும் உரையாடி இயேசுவைப்பற்றியும் போதித்தவர். இளைஞர்களின் தந்தையாய் இருந்து இந்து, கிறிஸ்தவ மத இளைஞர்களை பாகுபாடின்றி அன்பு செய்தவர்.
மக்களில் நிலவிவரும் ஞான, சமுதாய, பொருளாதார, சீர்கேடுகளைச் சீர்திருத்தி நல்வழி காட்டியும் போதித்தும் வாழ்ந்தவர். மனிதனுக்கு வரும் சிலுவைகளில் அவன் வாழவேண்டிய முறையைக் காட்டி இறைவனின் அன்பிலும்,

Page 16
இணஇ
பனிக்காலம் பலரு
uffgru @g.
இனிக்காலம் ஆே
வருங்காலம்வை;
ஞானத்திலும், வல்லமையிலும், இரக்கத்திலும் முழு நம்பிக்கை வைத்து இயேசு மரியன்னையின்
இதயங்களில் ஒன்றித்து வாழ வழிகாட்டியவர்.
நோயாளர்களை தன் செபத்தால் குணப் படுத்தியவர். பிள்ளைப்பேறு அற்றவர்களுக்குச் செபத்தால் குழந்தைப் பாக்கியம் இறைவனிட மிருந்து பெற்றுக்கொடுத்தவர். பேய்களை இறைவனின் கரத்தால் விரட்டியவர். இளைஞர்களுக்குப் பல கைத்தொழில்களும், பள்ளிப் படிப்பும் மறைக்கல்வி யும் ஊட்டி, ஊண், உடை கொடுத்து அவர்களில் கிறிஸ்துவை உருவாக்கியவர். திருச்சபைத் தலைவர், உறுப்பினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழ்ந்தவர். திருச்சபையின் ஐக்கிய உறவின் கருத்தை உணர்ந்தவர். மரித்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணகம் அடைய செபத்தால் உழைத்தவர்.
தந்தை தவத்திரு தோமஸ் அடிகளார் தாழ்ச்சியின் உருவம், விசுவாசத்தின் தந்தை, நம்பிக்கையின் நங்கூரம், அன்பின் நிறைமை, ஏழ்மையின் முழுமை, தூய்மையின் வெண்மை, கீழ்ப்படிதலின் உயர் நிலை, பிறர் அன்பால் எரியும் திரி, தூய ஆவியால் நிறைந்தவர், நற்செய்தியில்
●ና · මූ_t5, Li666H5, ආබර්ග් அ எக்கை: *து அனைவரிலும் இயேசு மரியன்னையைப் பார்த்தவர். தொழிலாளியின் நண்பன், கல், மன், மரம் வெட்டி வாழ்ந்து காட்டியவர். தலைவர்களுக்கு ஆட்சி முறையின் ஒளியாக பத்துக் கட்டளைகளைக் கொடுத்தவர்.
க்கான் சங்கக் கருத்து
கயில் செயல்படுத்
 
 
 
 
 
 
 
 

e #ES
மேல் (క్లె 2012
குறும்(புப்பா - 79
க்கும்பிணிக்காலம்
குச் சளிக்காலம்
ராக்கியம்பேணுங்கள் இல்லையேல்
ந்தியரின் பொற்காலம் 上 6oآ
யவர். கடவுள் மறுப்புக் கொள்கையை எதிர்த்து அவர்களை மனம் மாற்றி கடவுளை ஏற்க செபித்து வந்தவர். இதற்காகத் தம் துறவிகளைச் செபிக்கத் தூண்டியவர். இவர் நோயாளிகளின் மருத்துவர், துன்புற்றோரின் கண்ணிரைத் துடைத்தவர். ஊர்வன, பறப்பன, நடப்பன அனைத்து உயிர்க ளோடும் உரையாடி மகிழ்ந்தவர்.
ஆசியாவின் முதல் தியான யோக சபையான "செபமாலைத்தாசர் சபையை இலங்கை நாட்டில் யாழ். மறைமாவட்டத்தில் தோலகட்டி என்னும் இடத்தில் 1928ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் தேதி ஆரம்பித்தார். தற்போது இலங்கையில் கொச்சிக் கடை, யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, வவுனியா ஆகிய இடங்களில் நான்கு ஆச்சிரமங்களும் இந்தியா வில் பதினொரு ஆச்சிரமங்களும் செப, தப, வாழ் வின் ஊற்றாகவும் இறை அருளின் வாய்க்கால்க ளாகவும் திகழ்கின்றன.
இதேபோன்று செபமாலைக் கன்னியருக்கும் ஒரு துறவு சபையை 1948ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஆரம்பித்ததார். இன்று இலங்கையிலும், இந்தியாவிலும் இவர்களின் பணி சிறந்து விளங்கு கின்றது.

Page 17
*
இம்முறை தொண்டனின் சில நிமிடங்களுக்காக சட்டத்தரணி திருவேலு சண்முகம் அவர்களைச் சந்தித்தோம். இவர் சட்ட உதவி தேவைப்படுவோர் தொடர்பாக ஆர்வம் காட்டுபவர்களில் ஒருவர். கிராமம் கிராமமாகச் சென்று கருத்தரங்குகள் நடத்துபவர். எனவே இவரை இம்முறை தொண்டன் சார்பில் செவ்வி கண்டோம்.
யாருடைய ஏற்பாட்டின் பேரில் சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்கின்றீர்கள்? என்று நாம் கேட்ட போது,
இலங்கையின் நிதி உதவி ஆணைக்குழு, நோர்வேயின் அகதிகள் நிறுவகம், சட்டத் தரணிகள் சங்கம் என்பன இவ்வாறான நடவடிக்கைகளுக்கு உதவி செய்கின்றன’ என்று பதிலளித்தார்.
இவி வாறான விழிப் புணர்வுகி கருத்தரங்குகள் ஏன் அவசியம் என்று நாம் வே.சண்முகம் அவர்களிடம் கேட்டோம்.
இவ்வாறான விழிப் புணர்வுக் கருத்தரங்குகள் பெண்கள், சிறுவர்கள் ஆகியோரை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. கருத்தரங்குகள் நடைபெறும் இடங்களில் பெண்களே அதிகம் வருவது குறிப்பிடத் தக்கது. ஆண்கள் அரிதாகவே வருவர். பாதிக்கப் பட்ட பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள் போன் றோருக்கு உதவும் வண்ணமே இச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
பெண்கள் தொடர்பாக நீங்கள் இனங் கண்டுள்ள பிரச்சனைகள என்ன? என்று கேட்ட போது அவர் பின்வருமாறு கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே 28000க்கு மேற்பட்ட பெண்கள் இளவயதுள்ள விதவைகளாக உள்ளனர். அதிலும் அதிகம்பேர் 20 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களே. இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சி னைகள் அதிகம். வாழ்வாதாரப் பிரச்சினைகளே
 
 
 
 
 

அதிகம் இவர்களைப் பாதிக்கின்றன. அத்துடன் இளவயதுத் திருமணங்கள் அதிகமாக- குறிப்பாகப் படுவான்கரைப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் காணப்படுகின்றன. பயங்கரவாதப் பிரச்சினை உக்கிரமாக இருந்த காலத்தில் கைதுகள் செய்யப் படுவதைத் தவிர்த்துக்கொள்ளவும், பலவந்தமான ஆட்சேர்ப்புகளைத் தடுத்துக்கொள்ளும் உபாயமாக வும் அவசர அவசரமான திருமணங்கள் நடைபெற்ற மையால் இளவயதுத் திருமணங்கள் நடைபெற வாய்ப்பாயிற்று.
இருதார மணங்கள் தொடர்பில் விழிப் புணர்வு மிகவும் அவசியமானதாக இனங்காணப்பட் டுள்ளன. ஆண்களின் எண்ணிக்கையிலும் பார்க்க பெண்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப் படுதல், பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் பொறுப்புணர்ச்சியின்மை, இருதார மணம் பற்றியும் அதன் பாரதூரத் தன்மை பற்றிய அறிவின்மை என்ப வற்றினால்தான் இருதார மனங்கள் நடைபெறுகின் றன. எம்மால் நடத்தப்படும் கருத்தரங்குகளில் இவை தொடர்பாகவும் விழிப்புணர்வுகள் வழங்கப்படுகின்
ഇങ്ങT.
குடும்பப் பிரிவினைகள் தொடர்பாக நீங்கள் ன்டுள்ளவைகள் பற்றிக் கூற முடியுமா? என்று
கேட்டோம்.
நமது நீதிமன்றங்களில் கணிச மான வழக்குகள் விவாகரத்து வழக்கு களாகவும், தாபரிப்பு வழக்குகளாகவும் உள்ளன. நீதிமன்றங்கள் குடும்பங்களை ஒன்றிணைக்கவே பாடுபடுகின்றன.
வலுக்கட்டாயத் திருமணங்கள், இருதாரத் திருமணங்கள், கணவன் அல்லது மனைவி தூர இடங்களில் தங்கியிருந்து தொழில் பார்த்தல் போன்ற காரணங்களினாலும் குடும்பப் பிரிவினைகள் உண்டாக ஏதுவாகின்றது. நாம் இவற்றை அனுமதிக்க இயலாது. நீதிமன்றங்களில் இளங் குடும்பங்களைக் காணும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
இருதாரதி தருமணங் கள் என் பது ܕܘ ܐ விபச்சாரம் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டதா? என்றும் நாம் கேட்டோம்.
ஒருவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை சட்டப்படித் திருமணம் செய்ய இயலாது, ஆனால் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வயது வந்த ஒரு பெண்ணுடன் அவளின் அனுமதியுடன் உறவு கொள்வதைக் குற்றமாகக் கருத இயலாது. விபசாரம் என்பது திட்டமிடப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட நோக்கில் ്ടിട്ടു് நிதித்து ܐ ܕ

Page 18
ൈ =E-—ള്ള சட்டவிரோதமாக இடம்பெறுவதாகும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் உரிமை களைப் பெற எத்தகைய அமைப்புகளை நாடுவதன் மூலம் சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்? நீதி உதவி ஆணைக்குழு, சட்டத்தரணி கள் சங்கம், மனித உரிமை ஆணைக்குழு என்பன மூலம் சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம். எவ்வித கட்டணமும் இன்றி சட்டத்தரணிகள் வழக்கு களை நடத்துவார்கள். மேலதிக விபரங்களை எந்த வொரு சட்டத்தரணிகளிடமும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தன்னுடைய அனுபவங்கள் பற்றி அவர் தெரிவிக்கையில் தான் வாதிடும் வழக்குகளில் குடும்பங்களை ஒற்றுமைப்படுத்துவதே தன் முக்கிய பணியாகும் என்றார். குடும்பங்கள் பிரியும்போது பிள்ளைகளின் நிலை பற்றி தான் அதிகம் சிந்திப்ப
స్టోన్స్త
முதலாவது மாகாணசபைத் தேர்தல். அன்ரன் வாக்களிக்கும் முதலாவது தேர்தல். பிப2.00 மணியிருக்கும் வாக்குச் சாவடியின் நீண்ட வரிசையில் அன்ரனும் நின்றிருந்தார். வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தது. வரிசைக்குப் புறம்பாகவும் சிலர் வாக்குச் சாவடிகளுக்குள் மீண்டும் சென்று வந்தனர். சுற்றிலும் துப்பாக்கிக ளுடன் இந்திய அமைதி காக்கும் (?) படை யினர். அவர்களது கனரக வாகனங்களின் எண்ணை நெடி வேறு.
பிப2.30 மணியிருக்கும் “ஓட்டெல்லாம் முடிஞ்சிரிச்சி, எல்லாரும் பொயித்து வாங்க.” இந்தியப் படைவீரனொருவன் எல்லாரிடமும் சொன்னான்.
முதன் முதல் விஜயா தியட்டரில் "வசந்த மாளிகை’ படம் பார்க்க வந்து வரிசையில் நின்று ரிக்கட் முடிந்து “கவுஸ் புல்” என்ற அட்டையைப் பார்த்த ஞாபகம் அன்ரனுக்கு வந்தது.
வாக்குச்சாவடியில் அன்ரனுக்கு முன்னால் நின்ற டொக்டர் ரகுநாதன் சொன்னார்:
“இது தான் உண்மையான சுதந்திரம், எவரின் வாக்கையும் எவரும் போடலாம், ஒருவர்
99
எத்தனை தடவையும் போடலாம்.
 
 
 
 

தாக அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட வழக்கொன்றில் பிள்ளையின் டீ.என்.ஏ யையும், தகப்பனாரின் டீ.என்.ஏ.யையும் பரிசோதிக்க தகப்பனார் விரும்பி னார், என்றாலும் தகப்பனாரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்க வைப்பதன் மூலம் சிக்கல் தீர்த்துவைக்கப்பட உதவியதாக அவர் கூறினார்; ஏனென்றால் பிள்ளையைப் பாதுகாப்பதே தன் சிந்தனையாகும் என்றார்.
இணஇண 2012
பழகுவதற்கு இனிமையான எளிமையான சுபாவம் மற்றும் நீதியின்பால் தாகம் கொண்டவரான சட்டத் தரணி திரு வேலுப்பிள்ளை சண்முகம் அவர்க ளிடம் தொண்டனின் சார்பில் நன்றி கூறி விடை
பெற்றோம் ஆழியோன்
மறுநாள் அதிகாலையில், மக்களின் அதிகப் படியான வாக்குகளால் வென்ற( ?) முதலமைச்ச ரின் பெயரை வானொலியில் அறிவித்தார்கள். இதற்குப் பிற்பாடு அன்ரன் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கப் போவதேயில்லை. அது அன்ரன் தானாக எடுத்துக்கொண்ட சுதந்திரம்
1632

Page 19
ஜனவரிணஇணஇ
ஆசிர்வாகுப்பரின்வாழ்க்கைவரலாறு
iańumuń 05
விஷமிடப்பட்ட இரசம் 擂° துறவிகளின் பணிவான வரவேற்புடன் ஆச்சிரமத்தை அடைந்தார் பெனடிக்ட் தான் முன்பு சுபியாக்காவைப் போன்ற ஒரு காட்டுப்பகுதி ! தொடர்களால் சூழப்பட்டு இடையே அனியோ ஆச்சிரமத்தைப் பார்வையிடுவதற்காக பெனடிக்ட் செல்லப்பட்டார். 6அடி நீளம், 4அடி அங்குலம், 8அடி உ செய்யப்பட்ட அறைகள். ஒவ்வொன்றினதும் ய: காணப்பட்டதுடன், அறையின் வாயில்கள் மேல் வெளிச்செல்வதற்கும் சிறிய படிகளும் காணப்பட்டன போன்ற அமைப்பைத் தவிர வேறு எந்தத் தளபாடங்க வில்லை. அப்பலகை விளக்கு வைப்பதற்கு பயன்ட எளிமையான வாழ்க்கை வாழுதலே இறைவனுக்கு அத்துறவிகள் பெனடிக்ட்டிடம் “நாங்கள் வசிக்கும் மிகவும் வசதி குறைந்தவை. இவ் எளிய வாழ்க்கை இறைவனுக்குச் சேவை செய்கின்றோம்” என்றனர். வாழ்க்கை முறையை மெச்சிய பெனடிக்ட், “உங்களுடைய ஆச்சிரமச் சட்ட ஒழுங்குகள் என்ன கூறுங்கள்’ என்றார்.
“சட்ட ஒழுங்குகளா? அப்படி என்று எதுவும் எங்களிட தனிப்பட்ட முறையில் இறைவேண்டலில் ஈடுபடலாம். உடலைக் கடினப்படுத்தி வாழ வேண்டும்” என்றனர் "ஆண்மா இறைவனை விட்டு விலகியிருக்கும் நி உடலால் மட்டுமே அவருக்குப் பணிசெய்வது எவ்வை ஒருவருக்குப் பயனளிக்கும்? தன்னடக்கமும், கீழ்ப்ப மற்ற வாழ்க்கை உயிரற்ற உடல் போன்றது. கூட்டு வாழ்க்கை வாழும் போதே இவற்றை நாம் கடைப் பிடிக்க முடியும் அதற்குக் குழுவாக ஒருமனதுடன் இறைவனிடம் வேண்டுதல் வேண்டும்” விளக்கமளித்தார் பெனடிக்ட்.
துறவிகள் அனைவரையும் ஆலயத்தி னுள் ஒன்று கூடுமாறு பணித்தார். துறவிகள் அனைவரும் முதன்முறை யாக ஒன்று கூடினர். அவர்களில் பலருக்குப் பலரைத் தெரியவில்லை. ஒரே இடத்தில் வாழ்ந்தாலும் ஒரு வரையொருவர் அறிந்திருக்க ဓါoင်္သ60)ဓ\o.
ஆலயத்திற்குள் சென்ற பெனடிக்ட் முழந்தாழ்ப் படியிட்டு, சிரந்தாழ்த்தி பீடத்தை நோக்கி
 
 
 
 
 
 
 
 
 

2012,
என2த்த்
இ2
ہے (جیسے جمہوریہ g5g5اتld.60
ஆற்றைக் ஓடவிட்டுக்கொண்டிருந்தது. மூத்த துறவியொருவரால் அழைத்துச் யரங்கொண்ட பாறைகளைக் குடைந்து ன்னல்கள் ஆற்றை நோக்கியவாறு
நோக்கியும், உட் செல்வதற்கும், ! . கல்லில் செதுக்கப்பட்ட பலகை ளும் அவ்வறையினுள் காணப்பட டுத்தப்பட்டது.
ஏற்புடையதெனக் கொண்ட இடத்தைப் பார்த்தீர்களா? வாழ்வதன் மூலமே நாம் அவர்களின் கடினமான
எ? செபங்கள் பற்றிக்
மில்லை.அவரவர் ஆனால் நமது
துறவிகள்.
துரி மேரி ஜெனா (osb)

Page 20
ஜனவரின(இணஇதி
வணங்கினார். அவரின் செயலைக்கண்ட துறவி களும் அவ்வாறே செய்தனர். பெனடிக்ட் செபிப்ப தற்கு ஆயத்தமானார். தனது புதிய பணிக்காகவும், துறவிகளுக்காகவும் எல்லாம்வல்ல இறைவனிடம் தூய ஆவியின் வரங்களை வேண்டி மன்றாடினார். பெனடிக்டின் இச் செயல் அவர்களுக்குப் புது விதமாக இருந்தது. அவர்கள் ஒரு போதும் கூட்டாக செபித்ததே இல்லை. பின் பெனடிக்ட் அவர்களை இருக்கைகளில் அமருமாறு கூறினார். “கிறிஸ்துவின் அன்பார்ந்த சகோதரர்களே இறைவன் எம்மிடம் புதியதொரு வாழ்க்கை முறைை எதிர்பார்க்கிறார். அதுவே கூட் வாழ்க்கை. நாமனைவரும் ஒரே குடும்பமாக வாழ வேண்டும். அதற்குச் சில ஒழுங்கு விதிகள் இருப்பது அவசியமே! நான் உங்க ளுக்குச் சில சட்ட ஒழுங்குகளைத்
“இறைவன்
எம்மை ஆசீர்வதிப்பாராக”. புதியதொரு s o o முறையை எதி வாரம ஒன்று கடநதது. e
ဤငါး\) 6.56 அதுவே கூட்(
gjD656T d'LL 3(pblöö60)GT
உதாசீனம் செய்தனர். நேரத்திற் நாமனைவ குச் செபிப்பதற்கு, உணவிற்கு குடும்பமாக 6. வரத் தவறினர். அதற்குச்சி பெனடிக்ட் அவற்றைச் விதிகள் இ சுட்டிக் காட்டினார். அவசிய
“சகோதரர்களே! உங்களுக்கு வானதூதர் லூசிபரைத் தெரியுமா? முக்கியமான தூதர்களில் அவனும் ஒருவன், மிகவும் அழகானவன், இதனால் அவன் தலைக் கனம் கொண்டான், இறைவனுக்குக் கீழ்ப்படிய மறுத் தான். இறைவன் அவனைக் கடிந்து, பரலோகத்திலிருந்து நித்திய நரகத்துக்கு விரட்டி விட்டார். அவனுக்கு இன்று நீங்கள் உங்கள் உள்ளங் களில் இடம் கொடுத்தல் ஏற்புடையதல்ல. சிறிய காரியங்களில் கீழ்ப்படிவுடன் நடப்பதையே இறைவன் மிகவும் விரும்புகின்றார்
பெனடிக்றின் இவ்வார்த்தைகள் துறவிக ளுக்குக் கோபமூட்டியது.
“நாங்கள் லூசிபரின் ஆட்களா? இவனைப் பற்றி
எங்களுக்குத் தெரியாதா? பாதியில் படிப்பை விட்டு விட்டு காட்டுக்கு ஓடியவன். எங்களுக்குப் பாடம் புகட்ட வந்துவிட்டான்? காட்டில் மிருகங்களுடன்
&
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ت¥ސޭ-ސ-ޙބތتميمتمحمتނبނބ{{{
ஆஇணஇ= 2012.
வாழ்ந்தவனுக்கு எங்களைப் பற்றி என்னதெரியும்? இவனை இங்கு அழைத்து வந்தது பெரிய தவறாகி விட்டது” எனக் கூட்டங் கூட்டமாகக் கூடிப்பேசினர். நடப்பவை அனைத்தையும் அறிந்திருந்த பெனடிக்ட் சோகத்தில் ஆழ்ந்தார். "அன்பு இறைவா! உம்முடைய பார்வையில் நானேதும் பிழைகள் செய்திருப்பின் என்னை மன்னியும். இவர்களுக்கு மடாதிபதியாக வேண்டுமென ஒருபோதும் விரும்பியதில்லை. இவர்களிடம் கண்டிப்பாகவோ, கடுமையாகவோ நடந்து கொள்வதற் கும் எண்ணியதில்லை. நான் விரும்பியதும் எண் ணியதும் உம்மைப் பற்றி அறியச் செய்யவும், உம்மை மேலும் அன்பு செய்யக் கற்றுக் கொடுப்பதற்குமே! ஆனால் அவர்கள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுடைய தவறுதல்களை மன்னித்தருளும்.
எம்மிடம்
எனக்கு உதவியருளும். உமது
வாழ்க்கை திட்டத்தைத் தெரியப்படுத்தினால் iபார்க்கிறார் போதும். எனக்கு நடக்க வேண்டு
றா. ...-- e e டு வாழ்க்கை ରାdତ୍ଵ 酶 விரும்புவதை நானஅனபு
o டன் ஏற்றுக்கொள்கிறேன்’ என ரும କୃଷ୍ଣା s வேண்டிக்கொண்டார். Tg வேண்டும். நாட்கள் மகிழ்ச்சியற்றவையாக ல ஒழுங்கு நகர்ந்தன. ವ್ಹಿ ஒரு நாள் இரவின் போது வழக்கம் 岛匣D具
போல் இரசம் பறிமாறப்பட்டது. சட்ட ஒழுங் கிற்க மைய சமையலறைப் பணியாளன் இரசம் நிறைந்த குவளையை மடாதிபதியான பெனடிக் டிடம் கொண்டு வந்தான். உணவிற்கு முன் சிறிய செபமொன்றைக் கூறி இரசக் குவளையை சிலுவை அடையாளமிட்டு ஆசீர்வதித்தார் பெனடிக்ட் அனைவரும் வியக்கும் வகையில் பணியாளன் கையில் இருந்த குவளை சுக்குநூறாக வெடித்து இரசம் நிலத்தில் சிந்தியது. சிந்திய இரசத்தை உற்று நோக்கினார் பெனடிக்ட், சந்தேகமேயில்லை அதில் விஷமிடப்பட்டடிருந்தது. “சகோதரர்களே! உங்களுடைய இந்தப் பாவச் செயலை இறைவன் மன்னிப்பாராக! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’
தங்களின் திட்டம் தோற்றுவிட்டதை உணர்ந்த $5«i'al மன்னியுங்கள், இது ஒரு விபத்தே, இவை மிகவம் பழமை வாய்ந்த குவளைகள். வெடிப்புகளும் காணப்படுகின்றன என மழுப்பினர்.
لڑکیوبی کی 8

Page 21
ൈ =E=
காணாத ஒன்றைக் காண்பதற் மனதோடு காத்துக் கொண்டிருப்பதுதா ஆகும். எதிர்பார்ப்பு என்பது எதிரில் வருபவரை வது அல்ல, கண்ணுக்குத் தெரிவதை நோக்குத எதிர்பார்ப்பு ஆகாது. மாறாக காணாத ஒன்றைக் கா: தற்குத் தாராள மனதோடு காத்துக் கொண்டிருப்ப எதிர்பார்ப்பு (உரோ,8:24-25)
ஆம், பழைய ஏற்பாட்டில் "உன் வழிமரபின வர்களாய் இருப்பர்’ (தொ.நூ 17:5) என்று கட6 வாக்குறுதி அளித்தார். அவர் எதிர்பார்ப்புப் போலே வழியாகத் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். "ஆண்டவரே உமது இரக்கத்தைய நினைத்தருளும் ஏனெனில் அவை தொடக்கம் வையே” (திபா 25:6) யூத மக்கள், மனிதனுடை மண்னோடு முடிந்து விடுவதல்ல கடவுள் இறந்தோை செய்வார் என எதிர்பார்த்திருந்தனர். “கடவுள் மீ தெழச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கிருப் விரும்புகின்றேன்” (2மக்.7:14)
புதிய ஏற்பாட்டில் கடவுள் ஏற்படுத்திய வாக்கு கிறிஸ்து வழியாக நிறைவேறியது. இயேசு மனித எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், அது நிறைவேறி எழுப்பப்பட்டார்; இது அனைவரும் உயிருடன் படுத்துகின்றது (1கொரி15:20). எனவே, நம்முடை மீடபருமான இயேசுக் கிறிஸ்துவில் இருக்க வேண் ஏமாற்றம் தராது. எதிர்பார்ப்புக் கிடைக்கும் என்ற தொடர்ந்து இருக்க வேண்டும். நமது செபத்தில் ச வேண்டும். ஏனெனில் “கேளுங்கள் கொடுக்கப்படு நாம் இறைவனிடம் கேட்கும் போது நிச்சயம் கிை கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில் இறைவனு நாம் செபிக்கும் பொழுது கடவுள் கொடுப்பார் நீங்கள் கேட்குமுன்னரே உங்கள் தேவையை
ܐܸ ܨ
பெனடிக்ட் தரையை நோக்கியவாறு “என்னிடம் கூறியிருந்தால் நானே இங்கிருந்து
வைத்துக் கொல்லுமளவிற்குத் ணிந்துவிட்டீர் கள் முன்பே நான் கூறினேன். எனது வாழ்க்கை முறை வேறு, உங்களுடையது வேறு; நான் உங்க ஞக்குப் பொருத்தமற்றவன். உங்களுக்குப் பொருத்தமான வேறொரு மடாதிபதியை தேர்ந் தெடுத்துக் கொள்ளுங்கள். நான் இன்றே இங்கிருந்து செல்கின்றேன். இறைவன் உங்களை வழி நடத்தட்டும்” எனக் கூறி அன்றே ஆச்சி மத்தை விட்டு இெளியேறினார்.
 
 
 
 
 
 
 
 
 

前 எண்னற்ற வுள் ஆபிரகாமுக்கு வ கடவுள் ஈசாக்கின்
பும் பேரண்பையும்
முதல் உள்ள டய வாழ்க்கை ர உயிர்த்தெழச் ண்டும் உயிர்த் பதால் மனிதர் கையால் இறக்க
றுதி கடவுளும், மனிதருமான இயேசுக் ாகப் பிறந்து எம்மை மீட்பார் என யது. இயேசுவே முதலில் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப் ப எதிர்பார்ப்பு உயிர்த்த ஆண்டவரும் ன்டும். அந்த எதிர்பார்ப்பு ஒருபோதும் உறுதியான மனநிலை நம்மிடையே கூட இத்தகைய மனநிலையே இருக்க ம்" (மத், 77) என்றார் இயேசு, எனவே டக்கும் என்ற நம்பிக்கை மட்டுமல்லாது, க்குத் துதிபாடுவோமாக,
என்ற நம்பிக்கையில் செபிக்க வேண்டும். "ஏனெனில் உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்" (மத்.6:8).
Σ "Z\
பொதுநிலையினருக்கான புதிய இறையியல் கல்லூரி
யாழ். மறை மாவட்டத்தின் நீண்ட காலத்தேவையும், கனவுமாக இருந்த பொதுநிலையினருக்கான தமிழ் இறையியல் கல்லூரி இம்மாதத்திலிருந்து ஆரம்பிக்கப் படவுள்ளது. இம் மாதம் 16 திகதி அருளாளர் யோசவ் வாஸ் அவர்களின் திருவிழாவையொட்டி ஆரம்பிக் கப்படவுள்ள இக்கல்லூரியில் இறையியல் சான்றிதழ் மற்றும் இளமாணிப் பட்டத்திற்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இக்கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கு
9 =

Page 22
ଝୁରା]]
நாளமில்லாச் சுரப்பிகளும்
IIII60.III(556-5)
ணடுஇ
அட்ரினல் சுரப்பி >
இ வை இரண்டு சிறுநீரகங்களின் உச்சியிலும் ( போல் அமைந்துள்ளது. இவற்றிலிருந்து "அட்ரீனலின்' சுரக்கிறது. இது உடல் மற்றும் மூளையின் செயற்பா கவனிக்கின்றது. அத்துடன் ஆண்-பெண் இனப் உறுப்புகளைத் தூண்டுகிறது. இச்சுரப்பிகளின் குை செயற்பாட்டினால் 'அடிசன்” என்ற நோய் ஏற்படுகி இதனால் எடை இழப்பு, பசியின்மை, குறைந்த அழுத்தம், சருமம் கரடுமுரடாக இருப்பது போன்ற நி முன்பெல்லாம் இந்நோய் ஏற்பட்டவர்கள் ம தற்காலத்தில் அட்ரினல் சுரப்பியின் திரவத்தைக் தருகிறார்கள். இதனால் இந்நோயின் துரித வளர் தடைப்படுத்தப்படுகின்றது.
மேலும் குழந்தைகளின் குண இயல்புகை பண்புகளை அமைக்கும் பணியையும் இந்தச் சுரப்பிக செய்கின்றன. அத்துடன் கல்லீரலைச் சுத்தப்படுத்த செய்கின்றன. இதன்போது அட்ரினல் சுரப்பியி மிகையான பணியினால் பித்த நீர் உடலில் அதிகமா சேர்ந்து பித்த வாந்தி, ஏப்பம், அஜீரணம் போன்றவை ஏற்படுவதுண்டு
நோய்கள் வந்த பின் மருந்துகளுக்கும் வைத் ருக்கும் பணத்தை செலவழித்து நோயாளியாகத் துன் வதை விட நோய்கள் வரமால் தடுக்கும் முறைகள் அன்றாட வாழ்வில் பழக்கப்படுத்திக் கொள்வதே சிறப்ப தாகும்.
அட்ரினல் சுரப்பிகளைச் சீராக இயங்கவைக்கும் ஆச பயிற்சிகள் உள்ளன.
யோகமுத்திரா, உத்திஸ்டாசனம், ஜானு சிரச சனம், மத்ஸ்சாசனம், பிறையாசனம், பாதஹஸ்தாசன அட்ரினல் சுரப்பிகள் மட்டுமன்று ஏனைய பல சுரப்பிக எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி நோய் வராமல் பாதுக அக்யுபிரஷர் பயிற்சிகள் மூலம் அழுத்தங்கள் கைகளில் சுட்டுவிரல்களின் கீழுள்ள அட்ரினல் சுரப்பிக் உட்புறமாக உள்ள அட்ரினல் சுரப்பிக்கான புள்ளி அட்ரினல் சுரப்பிகள்ைச் சீராக இயங்க வைத்து குணப்படுத்தவும்
 
 
 
 

தொப்பி அணிந்தது Ο
என்ற திரவம் ாடுகளைக் பெருக்
Ο6) Π6OI ன்றது.
இரத்த லைகள் ஏற்படுகின்றன. ரணமடைய நேரிட்டது. * கொடுத்து சிகிச்சை
Ådrenal glands GT, (861 5pb iன் கச் கள்
Kidneys
GoT
ாசனம், பச்சிமோத்தானாசனம், ஹலாசனம், சர்வாங்கா ாம் போன்ற பயிற்சிகளை ஒழுங்காகச் செய்து வந்தால் ளும், நாடி நரம்புகளும் சீராக இயங்குவதுடன் நோய் Testsa) Ib.
ள் கொடுத்து உடல் இயக்கத்தைச் சீராக்க முடியும். குரிய புள்ளிகளிலும் கால் பாதங்களில் நடுப்பக்கத்தில் 5ளிலும் ந்து விலக்குவதன்

Page 23
திருப்பீடத்தில்.
இவர் உங்கள் செபங்களை ஈ இவர் உங்களுக்காக மட்டுமல்ல உ ளுக்காகவும் செபிக்கிறார்- இறைவனிடம் இவருக்கு
ஒப்புரவுசாதனம் மூலம்.
இவர் உங்கள் ஆன்மீக மருத்துவர்- இவரிடம் உங் இவர் இறைவனிடம் உங்களை வழிநடத்துகிறார்இவர் ஒரு நடுவராகவும் இருக்கிறார் - இவரின் தீர்ப்
இவரின் நாளாந்த வாழ்வில் இவர் ஒரு மனிதர்-அவ இவர் ஒரு மனிதர்- ஓர் இவரைப் பற்றி ஏதும் கு இவருக்கு மாபெரும் பொ வழிநடத்துமாறும், சாவிலு இறைஞ்சுவோம்.
(குருத்துவ வ அருட்தந்தை ஜே.எ
வளிநாட்டில் உள்ள உங்கள் உறவுக அறிமும் செய்யுங்கள் வெளிநாடுகளு மேலும் புத்தாண்டில் புதிய பக்கங்களுடன் தொடங்கியுள்ளது. அத்துடன் இலங்கையின்
இவ்வாண்டை மறைக்கல்வி அது தொடர்பான சிந்தனைகளையும் தொ6
உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் Hបារាំង
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் ஒரு மறு கிறிஸ்து- இவருக்கு மதிப்பு அளியுங்கள் வர் இறைவனின் பிரதிநிதி-இவரை நம்புங்கள் வர் ஒரு புரவலர்- இவருக்கு என்றும் நன்றியுடையவராய் ருங்கள்
சனுக்கு ஒப்புக்கொடுக்கிறார் - இவரை என்றும் மறவாதீர் உத்தரிப்புத் தலத்தில் வேதனைப்படுகிற உங்கள் அன்புக்குரியவர்க க் கருணை காட்டும்படி வேண்டுங்கள்.
கள் பாவங்களை வெளிப்படுத்துங்கள். இவரின் அறிவுரையைப் பின்பற்றுங்கள். பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சரப்பட்டு அவருக்குத் தீர்ப்பிடவேண்டாம். ஆதரவான வார்த்தை இவரை மகிழ்விக்கும். றைகள் கூற விரும்பினால் - இறைவனிடம் கூறுங்கள். றுப்பு உண்டு- இறைவனிடம் இவரின் வாழ்வை வளப்படுத்தி ம் இவருக்குக் கருணை காட்டும் படியும் நாம் உள்ளம் உருகி
ாழ்வில் அறுபது ஆண்டுகள் நிறைவு கண்ட ாஸ் அரசரெட்ணம் அடிகளாருக்குச் சமர்ப்பணம்)
e துரை ஆரோக்கியதாசன் முன்னால் பிரதி அதிபர், பலாலி ஆசிரியர் கலா
繳 E.
FT66).
ட்டீர்களா? இல்லையென்றால் இட்டி யாகத்தை நிச்சயப்படுத்திக் கீெஞ்ஞ் ஆசிரியர் - தொண்டன் என்ற பெரு டுத்து அனுப்பி வையுங்கள் உங்கள் வீடு தேடி வருவான். ளுக்கும் நண்பர்களுக்கும் தொண்டனை க்கான ஆண்டு சந்தா ரூபா. 3000/=
புதிய விடயங்களுடன் தொண்டன் மலரத் மூன்று மறைமாவட்டங்களும் இணைந்து ஆண்டாக அறிவித்துள்ளன. என்டன் உங்களோடு பகிர்ந்து கொள்வான். அவ்வப்போது நீங்கள் எங்களுடன் பகிர்ந்து B][B}
களே!
ಆ6feು பூக்கவைப்போம்!

Page 24
இ ன்றைய காலகட்டத்தில் நிறுவனங்களுக் ஈடுபடுவோர்க்கும், சாதனையாளர்களுக் தனிமனிதனுக்கும் கூட முகாமைத்துவம் பற்றி மாணவர்களுக்கும், தொழிநுட்பக்கல்லூரி மான மாணவர்களுக்கும் மட்டுந்தான் முகாமைத்துவம் அவர்கள்தான் பரீட்சையில் சித்தியடைந்து உ கருத்து முற்றும் தவறானது.
படிக்காத மேதைகள் பலர் நம் மத்தியில் றோம் பட்டதாரிகள் பலர் வேலையின்றி அலை இடை விலகிய மாணவன் முதலாளியாக, தொழில் லையா? மாதம் இலட்சக்கணக்கில் வருமானம் ஈட் றையில் பிரகாசிப்பவனை விட வாழ்க்கையில் பிரச இவ்வாறனவர்கள் முகாமைத்துவ அறிவை கொண்டால் சுயதொழிலில் இன்னும் மேலோங்க பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மு கருத்துகள் காணப்பட்டதை பல வரலாற்றுச் சான் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. முகாமைத்து பற்றிய தத்துவங்கள் கி.மு. 3000-4000 ஆண் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வந்துள்ளதாக சான்றுகள் சாட்சி பகர்கின்றன. பின்வரும் இந்த 4 நிகழ்வு கூட ஒரு சான்றாகும்.
கி.மு.2900 ஆண்டளவில் எகிப்தில் மான பிரமிட் ஒன்று கட்டப்பட்டது. வதற்கு 100,000 தொழிலா 叙 இரண்டரைத் தொன் மில்லியன் சதுரக் لاکھ படுத்தப் பட்டன. தி
LDТ6075ј 20 然
முகாமை: தொழில் மு போக்குவரத்
போன்றவற்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒ=ே 《《་ཀྱི་ 2012,
Asa S4 கு மட்டுமல்ல எந்தவொரு செயற்திட்டத்திலும் கும், ஏன் குடும்பங்களுக்கும், குழுக்களுக்கும், ப அறிவு நிச்சயம் தேவை. பல்கலைக்கழக ாவர்களுக்கும், உயர்தரம் வணிகம் கற்கும் b கற்க வேண்டிய அவசியம் உள்ளது, யர்தொழில் பார்க்க வேண்டும் என்ற
b உலா வருவதை நாம் காண்கின் பும் அதேவேளையில் தரம் 10ல்
அதிபராப் பிரகாசிக்கவில் டவில்லையா? 'வகுப்ப ாசிப்பவனே மேதை." 紛
யும் தமதாக்கிக் 级 லாம் அல்லவா? 32), மகாமைத்துவக்
1றுகள்
481 9tG 2 till இதனைக் கட்டு ளர்களும், சராசரி T៣Lu១៣ 2.3 கற்களும் பயன் இப்பாரிய திட்ட ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்பட்டதாம். முகாமைத்துவ செயற் / பாடுகளான திட்டமிடல், ஒழுங்க மைத்தல், கட்டுப்படுத்தல், தீர்மானம் எடுத்தல், அதிகாரமளித்தல், ஊக்கு வித்தல், மதிப்பீடு செய்தல், பின் னுாட்டல் போன்ற செயற்பாடுகள் / ஊடாகத்தான் இப்பாரிய திட்டத்தைக் குறித்த காலத்தில் குறையின்றி முறை யாக நிறைவேற்றியிருக்க முடியும்.
கிஸ்துவுக்குப் பின் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் கூட முகாமைத்துவக் கோட் பாடுகள் பின்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதே. த்துவமானது பொருளியல் வளர்ச்சிக்கும், கைத் pன்னேற்றத்துக்கும், வங்கித்தொழில், காப்புறுதி, து. தொடர்பாடல், அரசதனியார் நிறுவனங்கள் ற்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் வெற்றிக்
<ڑی تھی کی 2

Page 25
இதி
சுதந்திர நாள்
சுதந்திரம் வ
வதங்கள் வ
இதங்கள் தே
கும் இன்றியமையாதது. அதுமட்டுமல்ல நலன்புரி கழகங்களுக்கும், மத நிறுவனங்க ளுக்கும், எந்தவொரு அமைப்பிற்கும் முகாமைத் துவம் மிக மிக அவசியமானது. தனிமனிதனுக் கும் முகாமை அவசியமே.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து,அதனை அவன் கண் விடல்” எதை எவரிடம் கொடுத்தால் வெற்றி கிட்டும் என்பதை முகாமை ஆரம்பத்திலேயே திட்ட மிடுகிறது எது எப்படி இருந்த போதும் காலத் திற்குக் காலம் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களைப் பகிர்ந்துள்ளார்கள். நிலம் - உழைப்பு - முதல் - முயற்சி போன்ற வளங்களைக் கொண்டு செலவை கட்டுப்படுத்தி உச்சப்பயனை அடையும் செயற்பாடுகள் முகாமையாகும்.
LD675 6.67TD(Man Power), LIGOOTib (Money), மூலப்பொருட்கள் (Materials), இயந்திரங்கள் (Machines) போன்ற வளங்களின் உச்சப் பயனை அடையும் முயற்சி முகாமையாகும். பெளதீக வளங்களின் நடத்தை சிக்கலற்றது. தவறுகளை இலகுவில் இனங்கண்டு நிவர்த்தி செய்யலாம். ஆனால் மனித வளங்களை அவ்வாறு பயன் படுத்த முடியாது பயிற்சி அளித்துதிறன்-ஆற்றல் களை வளர்த்து ஊக்குவித்து-கட்டுப்படுத்தி வழி நடத்தியே வெற்றி காண முடியும். மனித வளத்தை செப்பனிட்டு வழிநடத்த முகாமை மிக மிக அவசியம்.
18ம் 19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியானது முகாமைத்துவம் பற்றிய சிந்தனைகளைத் தூண்டியதுடன், புதிய கருத்துகள் தோன்றுவதற்கும் அத்திவாரமாக அமைந்தது. கைத்தொழில் புரட்சியினைத் தொடர்ந்து ஊழியர்களின் வினைத்திறனை அதிகரித்து உற்பத்தியினை அதிகரிக்க ஆய்வுகள்
పమై2
 

மூ=ே ప్రక్లె 2012,
5) D(III) LITT — 80 பெருங் கொண்டாட்டம் தபின் திண்டாட்டம்
தங்கள் வகைவகையாய்த் துன்பங்கள்
டிப்பெரும் போராட்டம். مصر o6 میبیسی اهل
மேற்கொள்ளப்பட்டு இதன் பயனாகப் புதிய சிந்தனைகள் புதிய கோட்பாடுகளுக்கு வித்திட்டது.
முகாமைத்துவக் கோட்பாடுகள் கீழ் வருமாறு வகுக்கப்பட்டன.
அ பழமை வாய்ந்த கோட்பாடு (Classical management theory) 9 மானிடவியலுறவுக்கோட்பாடு
(Human relations theory) O BL 5605565ITUTG) (Behavioural theory) e கணியவியல் முகாமைத்துவக் கோட்பாடு
(Quantitive theory) 9 நெகிழத்தக்க கோட்பாடு
(Scientific management)
முகாமைத்துவ நிர்வாகம், (Management and Administration) என்ற பதங்கள் ஒரே பொருளுள்ள பதங்களாகவே, பொதுவாகக் கருதப்பட்ட போதும் நிறுவனத்தின் திட்டங்கள், கொள்கைக ளைத் தீர்மானிக்கும் செயற்பாடு நிர்வாகம் எனவும். அவற்றினை நிறைவேற்றும் செயற் பாடு முகாமை எனவும் கூறப்படுகின்றது. நிர்வா கம் என்ற பதத்தை விட முகாமைத்துவம் என்ற பதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. O. O. O.
-

Page 26
美 ~~~~—G
அன்டன் செகோப் ரஷ்யாவில் உக்ரேனில் தகநென்ரோக் என்ற சிறிய துறைமுக நகரில் 1860ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் திகதி பிறந்தார். அவர் எழுத் தாளராகவும் நாடக ஆசிரியராகவும் சிறுகதை எழுத்தாளர்களின் உயர் ஆசிரியராகவும் திகழ்ந்தார். சிறுபராயத்தில் தந்தையுடைய அலுவலகத்தில் நீண்ட நேரம் தங்கியிருந்து தீவிரமான சமய சிந்தனையில் நேரத்தைச் செலவிட்டார். * சிறுபராயத்தில் கிரேக்கமொழி இலக்கணம் கற்றார். தொடர்ந்து இலக் * கணப் பாடசாலையில் சேர்ந்து கல்வி கற்றார். அவருக்குப் பதினாறு வயது நடக்கும்போது தந்தை தொழிலில் நஷ்ட பட்டதன் காரணமாக சொந்த ஊருக்குச் சென்று பிரத்தியேக வகுப்புகளை நடாத்தி அதன் வருமானத்தைக் கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் உயர்கல்வி கற்றார். அதன்பின்பு மொங்கோ பல் கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் சேர்ந்து ஒரு வைத்திய கலாநிதியானார். அவருடைய மருத்துவ விஞ்ஞான அனுப வம் எழுத்துகளிலும் வாழ்க்கை அனுப வங்களிலும் இருந்து புலப்படுகிறது.
அவர் மருத்துவபீடத்தில் இருக் கும் போதே பல சிறுகதைகளை எழுதி தன்னுடைய படிப்புக்கும் குடும்பத்தை வழிநடத்துவதற்கும் பயன்படுத்தினார். 1886ல் உலகரீதியில் ஓர் எழுத்தாளராகப் பிரபல்யமானார். அவருடைய பல படைப் புகள் புனித பீட்டர் வோக்ஸ் பத்திரிகை யில் பிரசுரமாகின. செகோப் 1884ல் இருந்து 1892 வரையில் மருத்துவராகப் பணியாற்றினார். அவருடைய எழுத்து களைக் கண்டு பிரபல்ய ரஷ்ய எழுத்தாளர் "லியோடால்ஸ்டோய்” மற்றும் “நக்கலோ லெஸ்கோ’ போன்றவர்கள் பாராட்டினார் கள். 1888ல் புஸ்கின் விருது செகோபிற்கு வழங்கப்பட்டது. சிறிது காலத்துக்கு இலக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

琶三兰 கியத் துறையிலிருந்து ஓய்வு பெற்று மீண்டும்
மருத்துவ விஞ்ஞானத் துறையில் ஈடுபட்டார். பல பயணங்களை மேற்கொண்டார். குற்றவாளிகளு டைய குடியிருப்புகளான சக்கலின் தீவு மற்றும் வட சைபீரியாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளைக் குறித்து அவருடைய கலாநிதிப் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்தார். அதனை முடித்துக் கொண்டு உலகத்தைச் சுற்றிப் பார்க்கும் பயணத்தை ஆரம்பித்தார். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், மத்தியகிழக்கு போன்ற நாடுகளுக்குச் சென்றார். அப்போதுதான் இலங்கைக்குத் தனது விஜயத்தை மேற்கொண்டார்.
செகோப்பின் இலங்கை விஜயம் :
இளைஞன் செகோப் பீட்டஸ் பேர்க் எனும் பாய்க்கப்பலில் 1890ம் ஆண்டு நவம்பர் 26ம்திகதி இலங்கைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு வயது முப்பது. இலங்கையில் அவர் மூன்று நாட்கள் இருந்ததாகச் சான்றுகள் உள்ளன. அவரது விஜயத் தின் முக்கிய காரணம் சகலின் தீவைத் தரிசிப்பது. அதற்காகத் தன்னை நன்கு ஆயத்தப்படுத்தினார். அவரின் இலங்கை விஜயம் தற்செயலாக நடந்த தல்ல. இலங்கையின் கிரான்ட் ஒரியன் (Grand Orien hotel) இல் தங்கியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் கண்டிக்குச் சென்ற போது குயீன்ஸ் (Queens) இல் தங்கியதற்குச் சான்றுகள் உள்ளன. மேலும் இலங்கையில் கீரிப்பிள்ளை வாங்கியதாகவும் மாயா ஜால வித்தைக்காரனைக் கண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். முதன் முதலாக ரஷ்யர்கள் அப்போதுதான் கீரிப்பிள்ளையைக் கண்டனர். கொழும்பிலிருந்து குசேவ் (Gusafe) என்ற சிறு

Page 27
கதையை எழுத ஆரம்பித்தார். அதில் Colombo November 24-1890 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சிறுகதை கப்பலில் இறக்கின்ற சிப்பாய்களின் சோகக் கதையாகும்.
ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் “நகமோதா” செகோப் பற்றிய ஓர் ஆராய்ச்சியாளராவார். ஜப்பானின் பல்கலைக்கழக மாணவர்களுக்குச் செகோப்பைப் பற்றிய கல்வி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
செகோப் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் இலங்கை ஒரு சொர்க்கம் எனக் கூறியுள்ளார். இவர் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பின் நோபல் பரிசு பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை என வரலாற்று நிபுணரும் தத்துவஞானியுமான பேராசிரியர் திமித்ரிகபஸ்தின் கூறுகின்றார். 1901ல் செகோப் இறுதியாக தனது நாடகங்களில் நடித்த நடிகையான Olga Kinpper என்பவரை திருமணம் செய்தார். ஆனாலும் இவரது திருமண வாழ்க்கை நீடிக்க வில்லை. ஏனெனில் 1904.07.15ல் அவர் காசநோயி னால் பாதிக்கப்பட்டு தன்னுடைய 44ம் அகவையிலே காலமானார். அவர் இலங்கை வந்தபோது அவரு டைய தொண்டை நோய்க்கு ஆயுள்வேத வைத்தியம் செய்ததாகவும் அதன் பின்னர் சற்றுக் குணமடைந் ததாகவும் கூறப்படுகின்றது.
செகோப், வைத்தியம் தன்னுடைய சட்ட ரீதியான மனைவியென்றும் இலக்கியம் தன்னுடைய இன்னொரு மனைவியென்றும் கூறியுள்ளார். இவர் இரக்கமுள்ள, நட்புடைய மனிதராவார்; மேலும் திறந்த மனதுடையவராகவும் இருக்கிறார். சொல்ல வேண்டிய கருத்தை வெளிப்படையாகக் கூறுபவர். இலக்கிய உலகம் என்றும் அவருக்கு நன்றியு டையதாக இருக்க வேண்டுமென்றால் அது மிகையாகாது. s
இயேசுவில் நம்பிக்கை 9ம் பக்க.
பொருளாதார ரீதியில் மிகவும் நேர்மையான முறையில் நாம் உயர வேண்டுமானால் சிறுகச் சிறுக சேமிப்பதுவே சிறந்த முறை என்பார்கள். உள்ளவ னுக்கும் இல்லாதவனுக்கும் இது பொருந்தும். எம் வாழ்வில் இது போல நாம் அவ்வப்போது சிறுகச் சிறுக செய்துவரும் தவறுகளும், பாவங்களும், அவற்றை நியாயப்படுத்த நம் சுயநல நாட்ட்ங்களால் முனைந்திருப்பதும் நம் மடியைக் கணக்கப்பண்ணி நம்மை இயேசுவின் மீட்பிலிருந்து தள்ளிப்போக வைத்திருக்கும் என்பது சர்வ நிச்சயம் மீட்புக்குக் கால எல்லையை இறைவன் வகுப்பதில்லை. உன் காலம் கடக்கும் முன்னம் நீ அதைக் கண்டு கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது மீட்பின்திட்டமும் நோக்கமுமாகும். அது
 
 
 

இழுகி, இ 2012.
ട്ട്)--—
.இன்றைய உலகில் 4ம் பக் ܬܠܓܐ
مجھیے
சிந்தனையை வாழ்வாக்குகிறது. அதேபோன்று இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர் களுக்கு எதிராக வெகுண்டெழுந்து அவர்களை முற்றாக அழித்து விட எண்ணிய சீடர்களை இயேசு கடிந்து கொண்டதையும் திருச்சபை மறக்கவில்லை (லூக்.9:51-56)
நமக்கு எதிரானவர்களை இல்லாமல் செய்வோம், அழித்து விடுவோம் என மனிதர் நினைக்கின்றார்கள், ஆனால் இறைவனின் பார்வை வேறு, மனிதன் பார்க்கும் விதம் வேறு. தொலைந்து போனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்தார். கிறிஸ்தவ அடிப்படை வாதிகளை முற்றாக இல்லாமல் செய்ய இயேசு ஒருபோதும் விரும்பமாட்டார். அதுபோன்றுதான் திருச்சபையும் கிறிஸ்தவ அடிப்படைவாதிக ளைப் பொறுத்தளவில் நடந்து கொள்கின்றது. அவர்கள் எவ்வளவுதான் திருச்சபையைத் தூற்றினாலும் திருச்சபை பொறுமையாக இருக் கின்றது. ஆயினும் இவர்கள் மட்டில் விழிப்பாய் இருக்கும்படி தன் அங்கத்தவர்களை எச்சரிக் கின்றது.
தீமைகள் வழியாகவும் நன்மை செய்ய வல்லவர் நம் ஆண்டவர் என்ற உண்மைக்குத் திருச்சபை கிறிஸ்தவ அடிப்படை வாதத்தின் மூலம் சான்று பகர்கின்றது. பொன் நெருப்பில் இடப்படும்போதுதான் மேலும் தூய்மையடை கின்றது. கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் சவால் மூலம் திருச்சபை தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றது. அவர்களிடம் காணப்படும் நல்ல அம்சங்களை எடுத்துக்காட்டாக, இறைவார்த் தையின் மீது தனியாத தாகம், செபப்பற்று, நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபாடு, சபையி லுள்ள அனைவரோடும் சகோர உறவை வளர்த் தல் போன்றவற்றை அடையாளம் கண்டு அவற்றைப் பாராட்ட, கற்றுக்கொள்ள திருச்சபை அழைப்பு விடுக்கின்றது.
"இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவதே மேல்” என்ற தத்துவத்திற்கு வித்திடுகின்றது.

Page 28
'தன்னார்வப்பணி கிறிஸ்துவைத் தனிப்பட்ட வாழ்வில் அனுபவிப்பதை அடிப்படையாகக்
கொண்டது’ - திருத்தந்தை
கிறிஸ்தவர்களுக்குத் தன்னார்வப் பணி என்பது நன் மனத் தின் வெறும் வெளிப்பாடு மட்டு 畫彗葦箏 மல்ல, மனித சமுதாயத்திற்கு முதலில் பணிவிடை செய்த கிறிஸ்துவைத் தங்களது தனிப்பட்ட வாழ்வில் அனுபவிப்பதை அடிப்படையாகக் கொண்டது என்று திருத் தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். பிறரை அன்பு கூருவதற்குரிய நம்மிலுள்ள அடிப்படையான அழைப்பைக் கண்டு கொள்வதற்கும் கிறிஸ்துவின் திருவருளே எமக்கு உதவுகின்றது என்று கூறிய திருத்தந்தை மனிதத் தேவை களை நிறைவேற்றுவதற்கு நாம் செய்யும் சிறிய செயலானது கிறிஸ்துவின் அன்பு மற்றும் அவரின் பிரசன்னத்தின் அடையாளமாக இருக்கின்றது என்றும் தெரிவித்தார். கிறிஸ்தவர்கள் பொது வாழ்வில் உற்சாகத்துடன் பங்கு கொண்டு உண்மையான சுதந்திரம், நீதி, ஒருமைப்பாடு ஆகிய பண்புகள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் வழிகளை அதிகமாகவே தேடவேண்டும் என்று திருத் தந்தை வலியுறுத்தினார். e e e
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி “ஆன்
மட்டுநகர் சி தம்பதிகளின் அன்பு மனை: முடித்து, மட் மரியாள் கல்லு வெற்றிகரமாக
ஓய்வு பெ பணியேற்று த தலைவியாக திகழ்ந்தவர். பொன்னாடை
இவரது ஆ காலை 5 ஒப்புக்கொரு
"அன்புக்கு லூர்த்துமேரிஜோண்பிள்ளை சென்ற அன் (ஆசிரியை) ஆசிரியர் தோற்றம் : 03.05.1926 உவர்மல6
: மறைவு 03.02.2011 திருகோ6
 
 
 
 
 
 
 
 

“இயற்கையைக் காப்பது
இளையோரின் கடமை என்கிறார் திருத்தந்தை”
இறைவனின் அழகையு நன் மைத் தனத்தையுமீ நமக்குக் கற்றுத்தரும் புத்தகமே இயற்கை என்பதை புனித பிரான்சிஸ் அசிசி நமக்குக் கற்பிக்கிறார் என “இயற்கை எனும் சகோதரி” என்ற இத்தாலிய மாணவர் அமைப்பு ஒன்றிற்கு உரையாற்றிய போது திருத்தந்தை 16ம் பெனடிக்ற் கூறினார். இன்றைய உலகின் முக்கிய ஆய்வுகளையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பாராட்டும் திருச்சபை, அதேவேளை இயற்கையில் இறைவனின் கைவண்ணத் தைக் கண்டு ஏற்பது, நம் உண்மையான தனித்தன்மை யைப் புரிந்து கொள்ள உதவுகிறது என்பதிலும் உறுதியாக உள்ளது என்றார். படைப்பில் மனிதன் இறைவனோடு ஒத்துழைக்க மறந்தால் அது இயற்கைக்கும் அதன் வழி மனித குலத்திற்கும் எதிர்மறை விளைவுகளைக் கொண ரும் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டினார். இயற் கையை மதித்தலும் மனிதனை மதித்தலும் ஒன்றே என்ற திருத்தந்தை, வாழ்வு மற்றும் இயற்கையின் பாதுகாவல ராகச் செயல்பட வேண்டியது இளையோரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார். e e e
^^^= ို၍
తూత్ర్య లింg
ண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் ';
மதிப்புக்குரியது” (gŚ(5. Lu TT. 116.15)
ன்ன உப்போடை காலஞ்சென்ற குருசுப்பிள்ளை மகதலேனா அன்புப்புதல்வியும், காலஞ்சென்ற திருசவரிமுத்து ஜோண்பிள்ளையின் வியுமாவார். மட்/புனித தெரேசா வித்தியாலயத்தில் தனது கல்வியை /கேணியடி வித்தியாலயம், தி/புனித வளனார் பாடசாலை, திபுனித ாரி ஆகியவற்றில் ஆசிரியப் பணியை மேற்கொண்டு வருடங்கள் 32ஐ
முடித்து ஓய்வு பெற்றார். ற்ற பின்பும் புனித இயேசு ஆலயத்தில் மறைக்கல்வி ஆசிரியராகப் நிறம்பட மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும், மரியாளின் சேனைத் த் துடிப்புடன் தொண்டாற்றுவதிலும் சிறப்புமிக்க ஆசிரியராகத் அவரது அயரா சேவையைப் பாராட்டி ஆயர் அவர்களினால் போர்த்தி கெளரவிக்கப்பட்டவர் என்பது ண்ம சாந்திக்கான திருப்பலி 03.02.2012 வெள்ளிக்கிழமை
45 மணிகி கும் புனித ம பேராலயத் தில் க்கப்படும். 量
இலக்கணமாய், பண்புக்கு னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்ச
கலமாய் வாழ்ந்து வானகம்
சலுத்தும்”
ć9ієїч цовsєїшопії
சதுக்கம்
UDG ಊಹಣtom)
TOGODGMO OUBLO865ΘΙΤΙΟΠΠ,
பேரப்பிள்ளைகள்

Page 29
نتی%85ھ ہسس<یخ تقسیم= [[883
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்ததிகதி 29-02-20雀2
Golai N– – இணைச்சட (பொருத்தமான சொற்களைத் திெ
மோசே, இஸ்ரயேலரிடம் நாம் திரும்பி பாசானுக்குப் ஓகு, தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண் ஆண்டவர், என்னை நோக்கிக் கூறியது, “அவனுக்கு மக்களையும், நாட்டையும் உன்னிடம் ஒப்படைத்து சீகோனுக்கு நீ செய்தது போலவே, அவனுக்கும் தாக்கி, ஒகினது . கைப்பற் பெண்கள், குழந்தைகளை அழித்துக் கால்நடை இரு ம அரக்கர்களில் ஒகு மட்டுமே எஞ்சியிருந்தான். ந
0S L S S 0S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L L L S S 0L SLLL ஓடைக் கரையிலுள்ள அ நகர்களையும் ரூபன் குலத்திற்கும் காத்துக் குலத்தி குலம், இவன் மகன் யாயிர் . கொண்டான். நான் உங்களிடம் “உங்கள் கடவுளாக போர்வீரர்கள் . தாங்கியவர மந்தைகள் மட்டும் நகர்களில் தங்கட்டும். ஆண்டவர் மேற்கே அவர்களுக்குக் கொடுக்கும் நாட்டை உரிமைய பகுதிக்குத் திரும்பலாம்” என்றேன். பின் யோசுவ அரசர்களுக்கும் செய்தவைகளைக் கண்டாயே. நீ ( அஞ்சாதே. ஆண்டவர் உங்களுக்காகப் போர் புரிவு நீர் உம் . கைவன்மையையும் மேற்கிலுள்ள நல்ல நாடு, மலைப்பகுதி, லெபனோ6 என்மேல் சினம் கொண்டு “போதும், எதுவும் பேச வே6 ஏறிப்போய் நான்கு திசைகளிலும் கண்குளிரப் பார், ஏன்ெ யோசுவாவைத் திடப்படுத்து அவனே செல்வான்: நீ கொள்ளச் செய்வான்’ பின் நாம் .
ଗର୍ରାଡ୍‌lasଗit: அறுபதுநகர்களைக் போர்க்கள் எமோரியரின், பிஸ்கா,பெத்பகே
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதா
(మై 2

$@zခိ$) இ 2012.
}—~~~~--
వA-4-AE
LLD, 3, 1-29 நரிந்து இடைவெளிகளை நிரப்புக)
போகும் வழியில் சென்றோம். பாசானின் மன்னன் டு எதிரேயில் போரிடப் புறப்பட்டு வந்தான். அப்பொழுது , ஏனெனில், அவனையும், ள்ளேன். எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் செய்’ என்றார். அவ்வாறே, நடந்தது அவர்களைத் றினோம். அவற்றை அழித்தொழித்தோம். ஆண்கள், டகளையும் பொருள்களையும் சூறையாடினோம். ன்னர்களிடமிருந்தும், நாட்டைக் கைப்பற்றினோம். ாம் உடைமையாக்கிக் கொண்ட இந்த நாட்டில், ரோயேல் முதல் கிலயாது நாட்டின் ஒரு பகுதியையும், நிற்கும் கொடுத்தேன். இவ்வாறே மனாசேயின் பாதிக் பகுதி முழுவதையும் தனக்கு உடைமையாக்கிக் கிய ஆண்டவர் இந்த நாட்டை தந்துள்ளார், உங்கள் ாய் மக்களுக்கு முன் செல்லுங்கள். மனைவி, மக்கள் அனைவர்க்கும் அமைதி அளிப்பார். யோர்தானுக்கு ாக்கிக் கொள்ளும் வரை பின் . ாவிடம் "உன் கடவுளாகிய ஆண்டவர் அந்த இரு செல்லும் எல்லா நாடுகளுக்கும் அவ்வாறே செய்வார், பார் என்று கட்டளையிட்டேன். நான் ஆண்டவரிடம் மாண்பையும் காட்டினீர். நான் சென்று, யோர்தானுக்கு னையும் கண்டிட அனுமதியும்’ என்றேன். அவரோ তৈতো L_TLib ............................... மலை முகட்டுக்கு எனில் நீ இந்த யோர்தானைக் கடந்து செல்லமாட்டாய். காணும் நாட்டை அவர்கள் உரிமைச் சொத்தாக்கிக் as எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.
Dன், உரிமை, ஊழியனுக்கு, அஞ்சாதே, ாருக்கு, அர்னோன், அர்கோயினது
5 அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது)

Page 30
HiSiSiS MSiS S SiSSiS SSiSiSS SiSiSS SiS SS iSiiiS SSiiS
பரிசுப் போட்டி しつつみつつレイ乙イ乙イ2イア
7
அறிவை 56mTñTLIG TIL D-1
(பொருத்தமான சொற்களின் கீழ் அ
星。 உலகில் மிகப் பெரிய நகரம்?
(மவுண்ட் இசர், டோக்கியோ, வாசிங்
2. My Truth என்னும் சுயசரிதையை எழு
(மாக்கிறட் தாட்சர், இந்திரா காந்தி,
3. உலகிலே அதிகமான நிலங்களில் பயிர்
(நெல், சணல், கோதுமை)
4。 தவளைகள் தண்ணீர் குடிப்பதில்லை க (தோலிலுள்ள துளைகள் ஊடாக தண் தண்ணீர் குடிக்க முடிவதில்லை)
அது
5. 'அடம்பன் கொடியும்.
(அறுந்தால் போச்சு, திரண்டால் மிடுக்
6. வல்லெழுத்து மிகும் இடங்களில் ஒன்று (எழுவாய்த் தொடர், உம்மைத் தொை
விவிலியம்
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
T S M S S S S S S S S S SY S ss T S S S S S S S SYSMS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S SS S SS S SS SS SS SS
 

ஆபிரகாம் லிங்கன்)
டப்படுவது
ாரணம்? ணிர் நுழைவதால், தாகம் எடுப்பதில்லை,
கு, முளைத்தால் பிடுங்கு)
க, உவமைத் தொகை)
47லகது.
அனுப்பவேண்டிய முகவரி: . கற்போம் / அறிவை வளர்ப்போம்- 106
தொண்டன் அ, பெ, எண் - 44 மட்டக்களப்பு.
لاڑی تھی کہ 8

Page 31
விவிலியம் கற்ப்ோ
காதேசுபர்னேயா, பாசானின், குன்று உரிமையாக்கி, நல்ல நாடு, ே
அறிவை வளர்ப்பே
勢 1. சிலிக்கான் 2. 98.4 藝 5. தானியாகு பெயர் 6. அவள்தா
囊 பரிசுகள் - அனுசரணை அரு
இரு பிரிவுகளுக்கும் சரியான வி
> ஜோன் ஜிதேவ #65/2, திருச்ெ கோயில் வீதி,
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
> ஜே. ஏ. ஐ. செஷான் 99, கிறீன் வீதி,
திருகோணமலை.
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= > இரண்டாம் பா ఫ ஆர்.டினோ ராகல் செல்வி எஸ்.வி I, பனிச்சையடி மே/பா. திருமதி ܥܡܢ சத்துருக்கொண்டான் 1024, பாலையூ மட்டக்களப்பு. திருகோணமை
போட்டியில் ப
 
 
 
 
 
 
 
 

b - 104 விடைகள்
றுகளின், யாக்கோபுக்கும், துன்பம், பார் புரிவார், நீங்கள், குரலை
ாம் - 104 விடைகள்
3. டெனிஸ் 4. திருமூலர் னே பெறவேனும்
ள்தந்தை. அன்ரனி குரூஸ் CRS
டை எழுதி 300/= பரிசு பெறுபவர்:
டின் ஜெயராஜ்
சந்தூர் முருகன் கல்லடி- மட்டக்களப்பு.
களை எழுதி 200/= பரிசு பெறுவோர்
> எஸ். சாதனா
கிறிஸ்டி இல்லம், தம்பிலுவில் 01.
繁
勢
ம் திட்டும் போட்டி 56 முடிவுகள்
fai — 300/= > மூன்றாம் பரிசு -200/= ஸ்மிதா க.அஸ்வின் 警 .எஸ்.என்.தெய்வேந்திரன் 51/1, கதிர்காமர் வீதி اور ற்று

Page 32
கத்தோலிக்க நற்சிந்தனை - Σ -- நாள்: 0, 02, 03, 11, 12, 13, 14, 1
புதிய உலகம் (வளர்ந்தோர் நிக
நாள்- 05, 19
வழிபாடு, வேரைத்தேடி, திரு பாடல்கள் இன்னும் .
சிறுவர் உலகம் (சிறுவர் நிகழ்ச்
நாள்:- 07, 28
கதையும் கருத்தும், கவிை
-O
நிகழ்ச்சித் தொகுப்பு வாழுமபுது
انتم ہوئ,hلGrؤدos
 
 

காலை 5.55 மணி
5, 16, 17, 25, 26, 27, 28, 29
ழ்ச்சி) - மாலை 100 மணி
சி) - மாலை 7.00 மணி
த, பாடல்கள் இன்னும்.
ழ்ச்சங்கதோடர்பு: 3. ܡܨܪܝܢ
øပ္ႀက္ကို၊ Óါၾwü-ဟံပျံ၊ ဂ်ဇာလံမJō,
.ெபெ. சென் - 44,
toCC-22-cyngby.
கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்
திரும்பி வாருங்கள்