கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மழலைப் பாடல்கள்

Page 1


Page 2


Page 3

கோவன்
இளங்
பத்மா
研 乐 3 - |- ~ ~ 3 Ģ 印 o
9
id
பதிப்பக , காலி வீதி
கவிஞன்
9
521/1B
கொழும்பு - 06, இலங்கை.
Y

Page 4
நூல் விவரக் குறிப்பு
நூல்
6)60)B.
ஆசிரியர்
முதற்பதிப்பு
C பதிப்புரிமை
நூல் அளவு
வெளியிடுவோர்
ஒவியம்
விற்பனையாளர்
இலங்கையில்
ஐரோப்பாவில்
மழலைப் பாடல்கள்
சிறுவர் இலக்கியம்
பத்மா இளங்கோவன்
ஏப்ரல், 2003.
: நூலாசிரியருக்கு.
1/8 டெமி
கவிஞன் பதிப்பகம், 521/1B, 5|T65 6ig5, கொழும்பு - 06, இலங்கை.
“அருண்”
லங்கா புத்தகசாலை, FL.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, கொழும்பு - 12. தொலைபேசி : 341942
CD C Europe Orient, BP 229, 31000 TOULOUSE, FRANCE. Tel: 0561550013,
0561999440
III
 

திருமதி பரமேஸ்வரி மகேசு.
சிந்திப்பதை நிறுத்தும் வரை சிந்தையில் எம்மையே சுமந்த சத்தியம் தவறாச் சற்குணவதியே பத்தாண்டு கடந்தும் பார்க்க முடியாத மூத்த மகளின் முத்துக்களாக இவை . காணிக்கை.

Page 5

முனனுரை
மழலை பேசும் குழந்தைகள் மகிழ்ந்து பாடி ஆடிட மழலைப் பாடல் நூலிதனை மகிழ் வுடனே படைத்துள்ளேன்.
மலர்கள் போன்ற மழலைகள் மனதில் நல்ல எண்ணங்கள் நாளும் நன்கு பதிந்திட நல்ல பாடல் பலவுண்டு.
அன்பும் பண்பும் வளர்ந்திட அறிவு ஆற்றல் பெருகிட நல்ல குணங்கள் நிறைந்திட நாளும் இதனைக் கற்றிடுவீர்!
கதையும் கவியும் பலசொல்லிக் கவிதை புனையக் கற்பித்த அன்னை பரமேஸ்வரியின் அன்பின் நினைவாய் மலர்ந்திட்ட மழலைப் பாடல் நூலிதனை மகிழ்ந்து கற்று உயர்ந்திடுவீர்! நன்றி.
அன்புடன்
பத்மா இளங்கோவன்.
V

Page 6
பதிப்புரை
கொஞ்சு தமிழ் பேசும் பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சம் மகிழ்ந்து பாடி ஆடிக் களித்திட மழலைப் பாடல்கள் என்னும் அருமையான பாடல் தொகுதி ஒன்றினை பத்மா இளங்கோவன் படைத்துள்ளார். ஒலி நயமும் ஓசை அழகும் கொண்டு அரும்புகளின் நாவில் கரும்புச் சாறாக இனிக்கும் சிறப்புடையது இந்நூல்.
குழந்தைகளின் உளவியல்புகளை நன்குணர்ந்து பாடல் புனைவதில் முன்னணியில் திகழ்பவர் இந்நூலாசிரியை. ஆசிரியையாகப் பல்லாண்டு காலம் பணியாற்றிப் பெற்ற அனுபவத்தின் மூலம் குழந்தைகளின் உள்ளங்களை ஊடுருவிப் பார்த்து அவர்களுக்குப் பெரிதும் விருப்பமான தலைப்புக்களில் பாடல்களை ஆக்கியளித்துள்ளார்.
ஈழத்தில் மட்டுமன்றிப் புலம்பெயர்ந்த நாடுகளில் வதியும் சின்னஞ் சிறுவர்கள் விரும்பிப் பாடிடக் குழந்தைப் பாடல்கள் பல படைத்தவர் பத்மா இளங்கோவன். இது அவரது நான்காவது குழந்தைப் பாடல் நூலாகும்.
அமுதூட்டி வளர்த்த தன் அன்பு அன்னையின் நினைவாக அவர் ஆக்கியுள்ள இந்நூலினை எமது பதிப்பகத்தின் சார்பில் வெளியிடுவது குறித்துப் பெரிதும் மகிழ் கிறோம். நூலாசிரியைக்கு எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம்.
மொட்டுப் பருவத்துச் சிட்டுக் குழந்தைகளே1 மழலைப் பாடல்களைப் பாடி மகிழுங்கள். உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புடன்
பதிப்பாளர்.
 

பாட்டும் பக்கமும்
பாட்டு
சிவன் அம்மை அப்பன் இயேசு அன்பே கடவுள் வீடு
அம்மா அப்பா
பாட்டி தாத்தா குட்டித்தம்பி பாடு தமிழ் கோழிக்குஞ்சு
L5 ஆட்டுக்குட்டி நாய்க்குட்டி பூனைக்குட்டி முயல் குட்டி பூக்கள் வண்ணத்துப்பூச்சி ரோசா பூந்தோட்டம் காகம்
கிளி
LDujo)
புறா
குயில் புள்ளிமான் குரங்கு
LT606) சட்டை அப்பிள்

Page 7
முறுக்கு
பந்து
புத்தகம்
சூரியன் அழகு நிலா கடல்
காற்று
பூமி
வானவில்
LᎠ60Ꭰup பனிப்பூக்கள் ஊஞ்சல் பள்ளி செல்வோம் ஆசிரியர்
ԼlԼՔ(5
கற்றிடு
கணினி
விமானம் தொலைபேசி தொலைக்காட்சி காற்றாடி நம்பிக்கை "ஈபிள்” கோபுரம் "பிசா’க் கோபுரம் எங்கள் பாட்டி புதுச்சட்டை சேவல் சின்னக் குருவி பாடிப் பழகுங்கள் மலர்த் தோட்டம் வண்ணப் பூக்கள் எங்கள் ஆசிரியர் பாடி மகிழுவோம
VIII
 

கங்கையைச் சடையில் கொண்டிட்டார்
கழுத்தில் பாம்பைச் சுற்றிட்டார் காலம் எல்லாம் எங்களைக் காத்திடுவார் எம் சிவனாரே.
பத்மா இளங்கோவன்

Page 8
அம்மை அப்பன்
அம்மை அப்பனாய் எங்களுக்கு அரிய காட்சி தருகின்ற சிவனை உமையை வணங்கிடுவோம் சிறப்புகள் வாழ்வில் பெற்றிடுவோம்.
மழலைப் பாடல்கள்
 

பாலர் நேசன் யேசு பாதை நீயும் பேசு கவலை உனக்குத் தூசு
கழுவிப் போகும் மாசு.
பத்மா இளங்கோவன்

Page 9
-
ތިހހހހހހހހހހ///ޗހިހ%///
அன்பே கடவுள்
அல்லா புத்தர் சிவன் யேசு என்றே கடவுள் பல இருந்தும் எல்லார் வழியும் ஒன்றே யாம் அன்பே கடவுள் அறிவோம் நாம்.!
மழலைப் பாடல்கள்
 

வீ
அழகிய சின்ன வீடு அதுவே எமது கூடு அப்பா அம்மா வோடு அன்பாய் வாழும் வீடு.
பத்மா இளங்கோவன்

Page 10
6ibLDIT
அம்மா எந்தன் அம்மா அன்பு முத்தம் தருவா அன்பாய் உணவு சமைத்து
அள்ளி உண்ணத் தருவா.
மழலைப் பாடல்கள்
 

எங்கள் அப்பா நல்லவர் எம்மைக் காக்க உழைப்பவர் நல்ல பழக்க வழக்கங்கள் நமக்குச் சொல்லித் தந்திடுவார்.
பத்மா இளங்கோவன்

Page 11
பாட்டி எங்கள் பாட்டி
பொக்கை வாய்ப் பாட்டி
பாட்டும் கதையும் சொல்லும் பாசம் உள்ள பாட்டி,
மழலைப் பாடல்கள்
 

தாத்தா
தாத்தா நல்ல தாத்தா தடியை ஊன்றி நடப்பார்
பாப்பா என்னைத் தூக்கியே பாட்டும் பாடிக் காட்டுவார்.
பத்மா இளங்கோவன்

Page 12
SSS
குட்டித்தம்பி
குட்டித் தம்பி குட்டித்தம்பி குறும்பு செய்யும் குட்டித்தம்பி அம்மா அப்பா எங்களுக்கு அவனே அரிய செல்லப் பிள்ளை
மழலைப் பாடல்கள்
݂ ݂
 
 
 

ܙ\[ܠ ܐܛܥܨܓܓ1
"Y NY
பாடு தமிழ்
பாப்பா பாப்பா நீபாடு
பாடிப் பாடி நீயாடு சிந்தை மகிழ இசையோடு
சித்திரப் பூவே தமிழ்பாடு.
பத்மா இளங்கோவன்

Page 13
கோழிக்குஞ்சு
பஞ்சு போல மென்மையாம் பந்து போலும் இருக்குமாம் கையில் எடுத்துப் பாருமே கோழிக் குஞ்சு தானதே.
மழலைப் பாடல்கள்
 

பசுவே பசுவே வருவாயா? பாலும் எமக்குத் தருவாயா? கன்றும் குடித்த பின்னரே கனிவாய் எமக்கும் தருவாயா?
பத்மா இளங்கோவன்

Page 14
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி அருமையான ஆட்டுக்குட்டி தேடிப் புல்லை மேய்ந்திடுவாய் தேடி என்னை வந்திடுவாய்.
மழலைப் பாடல்கள்
 
 
 
 
 
 
 
 
 
 

நாய்க்குட்டி
நல்ல நல்ல நாய்க்குட்டி
நான் வளர்க்கும் நாய்க்குட்டி வாலை ஆட்டிக் கதைபேசும் வடிவு மிக்க நாய்க்குட்டி
பத்மா இளங்கோவன்

Page 15
மியா மியா பூனைக்குட்டி மீசைக்காரப் பூனைக்குட்டி
எலி பிடிக்கும் பூனைக்குட்டி
எந்தன் செல்லப் பூனைக்குட்டி.
மழலைப்
 

[2==
s A)
/
3RS S
\)
E%. ás 4//
துள்ளித் துள்ளிப் பாய்ந்திடும் வெள்ளை முயல் குட்டியே பவளம் போன்ற கண்களை பார்க்கப் பார்க்க ஆசையே.
பத்மா இளங்கோவன்

Page 16
சின்னச் சின்னப் பூக்கள் சிரிக்கும் அழகைப் பாரு வண்ண வண்ண நிறங்கள்
கண்ணுக்கு இனிமை தானே.
மழலைப் பாடல்கள்
 

வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி வண்ணம் பலவும் மின்னும்பூச்சி பூக்களில் தேனைக் குடிப்பாயே பறந்து மகிழ்வாய்ச் செல்வாயே.
பத்மா இளங்கோவன்
:"

Page 17
(3JTefT
அழகிய சிவப்பு ரோசாவே எனக்குப் பிடித்த மலர்நீயே மலரே உன்னைப் பறித்திட்டால் முள்ளும் என்னைக் குத்திடுமோ..?
மழலைப் பாடல்கள்
 

ଝୁ $მჭწჭწ.
፶፰፻፹፱፻፰፻፷፮፻! 嵩 ဇွို၊ : : الغ స్ట్రీ ***F'{{ل?***** ஜி ##
A?
A}GAR
・二 *** |
:
、广门曹、 - リ士はエ Z - $. 愛塁リ営
リ三。 JAWA باقی یقینی
எங்கள் வீட்டுப் பூந்தோட்டம் எங்கும் நிறைய மலர்க்கூட்டம் இங்கு தானே என்நாட்டம்
இதனால் இல்லை மணவாட்டம்.
பத்மா இளங்கோவன்

Page 18
காகம்
கா. கா. என்றே கரைந்திடுவாய் காலையில் எம்மை எழுப்பிடுவாய்
கூட்டம் சேர்த்தே உணவதனைக்
கூடி உண்பாய் அழகாக.
மழலைப் பாடல்கள்
 

கிளியே கிளியே கதை பேசு கேட்க இனிக்கும் கதை பேசு
பவள வாயால் கதை சொன்னால் பழங்கள் நிறைய நான் தருவேன்.
பத்மா இளங்கோவன்

Page 19
மழலைப் பாடல்கள்
|-|-*授|- 《影
மயில்
@@ 颜颜 師暗 行列, 홍콩 3
历 鲷 历历 ) { 伽雕
வடிவை நானும் இரசிப்பேனே.
G€) H= 山 *历 63 e9 3세 3 63 e9 3= 3
 

2。
༡《་ཉིད་
A
స్త్రీ
3,
சின்னச் சின்னப் புறாக்களே செல்ல நடைப் புறாக்களே அருகே நானும் வந்தாலே எழுந்து ஏனோ பறக்கிறீர்.?
பத்மா இளங்கோவன்

Page 20
குயில்
குக்கூ. குக்கூ. குயிலம்மா கறுப்பு அழகி நீயம்மா காதில் தேனும் பாயுதே கானம் நீயும் பாடவே.
மழலைப் பாடல்கள்
 

" *வி &க்கண்ணஐg&.
... همه مهاMWWها *** السی - ...
புள்ளிமான்
புள்ளிப் புள்ளி மானே துள்ளி எங்கே போகிறாய்? கிட்ட நீயும் வாராயோ குட்டிக் கதைகள் பேசவே.
பத்மா இளங்கோவன்

Page 21
குரங்கு குட்டிக் கரணம் போடுது
குதித்துத் தாவி மகிழுது கண்ணை உருட்டிப் பார்க்குது
குரங்குப் பிள்ளை தானது.
மழலைப் பாடல்கள்
 
 
 

T60)(6)
சின்னச் சின்னப் பாவை
சிரிக்கும் என்னைப் பார்த்து ரோசா என்ற பேரு
நானே வைத்தேன் பாரு!
பத்மா இளங்கோவன்

Page 22
சட்டை
அம்மா தைத்துத் தந்தாவே அழகிய நல்ல சட்டைய்ே
அணிந்தே நானும் மகிழ்ந்தேனே
அம்மா பார்த்து இரசித்தாவே.
மழலைப் பாடல்கள்
 

SDĚLîG
அப்பிள் பழமாம் அப்பிள் பழம்
அழகு மிக்க அப்பிள் பழம் நான் விரும்பி உண்ணும் பழம் நல்ல சத்து உள்ள பழம்.
பத்மா இளங்கோவன்

Page 23
முறுக்கு
அம்மா சுட்ட முறுக்கு அருமை யான முறுக்கு வட்ட மான முறுக்கு வாயில் போட்டு நொறுக்கு
اسہا
 
 
 
 

பந்து
வட்ட வட்டப் பந்து வண்ண வண்ணப் பந்து அடித்து விளை யாட அப்பா வாங்கித் தந்தார்.
பத்மா இளங்கோவன்

Page 24
புத்தகம்
புத்தகம் நல்ல புத்தகம் புத்தம் புதிய புத்தகம்
படித்து நாமும் உயர்ந்திட பாதை காட்டும் புத்தகம்.
மழலைப் பாடல்கள்
 

சூரியரே சூரியரே நீரெழுந்து வாரும் நீரெழுந்த பின்தானே ஊர்விழித்துக் கொள்ளும்.
பத்மா இளங்கோவன்

Page 25
இ
漩
リWリ NNK
དེ་
எங்கள் வீட்டு முற்றத்திலே எறிக்குது பார் அழகு நிலா தென்னங் கீற்றின் இடையூடே தெரியும் அழகு நிலாவைப்பார்.
மழலைப் பாடல்கள்
 
 
 
 
 

55 (6)
நீலக் கடலின் அழகைப்பார்
நெளிந்து செல்லும் அலைகள் பார் வானம் கடலைத் தொடுவது போல் வண்ணம் காட்டும் அழகைப்பார்.
பத்மா இளங்கோவன்

Page 26
% 驗 క్ష్
மெல்லச் சென்றால் தென்றலாம் மோதிச் சுழன்றால் புயலாகும்
உயிர்கள் வாழ மூச்சாகும்
அதுவே வீசும் காற்றாகும்.
 

பந்து போல உருண்டையாம் பார்க்க அழகாய் இருக்குமாம் ஆறும் கடலும் மலையுமாய் அழகு மிக்க பூமியாம்.
பத்மா இளங்கோவன்

Page 27
նցմանական '፡- Эexttјиштптпацаа
வான வில்லாம் வானவில்
வர்ணம் ஏழு எண்ணிப்பார்
பாதி வட்டம் போலது
பார்க்க அழகாய் இருக்குமே.
மழலைப் பாடல்கள்
 

7 7. //, 7/ / / //, / // ീ/ീ % / / / / / /
/// / ///,/ 0ሕይ74
/ N'
மழை
மழையே மழையே நிறையப் பெய் மண்ணில் வெள்ளம் ஒடப்பெய் வெள்ளம் கண்டால் போதுமே விரைவாய் கப்பல் விடுவோமே.
பத்மா இளங்கோவன்

Page 28
பார்க்கும் இடம் எங்கனும் பறந்து பறந்து சிரிக்குது வானில் பூத்துச் சொரிந்திடும்
வண்ணப் பனிப் பூக்களே.
மழலைப் பாடல்கள்
 

ஊஞ்சல் ஏறி ஆடுவோம் உந்தி உந்தி ஆடுவோம் உயர உயரச் செல்லுவோம் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளுவோம்.
பத்மா இளங்கோவன்

Page 29
பள்ளி செல்வோம்
பள்ளி செல்வோம் வேகமாய் பாடம் படிப்போம் ஆசையாய் துள்ளிப் பாடி ஆடியே தோழர் நாமும் மகிழ்வோமே.
மழலைப் பாடல்கள்
 

பாடம் சொல்லித் தந்திடுவார் பாட்டும் பாடிக் காட்டிடுவார் அம்மா போலே அணைத்திடுவார் அவரே எங்கள் ஆசிரியர்.
பத்மா இளங்கோவன்

Page 30
LUP (SÜ5
காலையில் எழுந்திடப் பழகு கடவுளை வணங்கிடப் பழகு மாலையில் விளையாடப் பழகு மற்றவர்க்(கு) உதவிடப் பழகு.
மழலைப் பாடல்கள்
 
 
 

வண்ண வண்ணப் படங்களை
வடிவாய் வரையக் கற்றிடு
எண்ணம் போல வரைந்திட என்றும் நீயும் பழகிடு.
பத்மா இளங்கோவன்

Page 31
கணினி
பாடம் சொல்லித் தந்திடுமாம்
படமும் கீறிக் காட்டிடுமாம் தட்டித் தட்டிக் கேட்பதை தந்தே உதவும் கணினியாம்.
மழலைப்
 

விமானம்
வானத்திலே வருகுது பார் வட்டம் போட்டுப் பறக்குது பார் பறவை போல இருக்குது பார் பறந்து செல்லும் விமானம் பார்.
பத்மா இளங்கோவன்

Page 32
தொலைபேசி
கிறீங். கிறீங். என்றே கூவி எம்மை அழைக்கும்
எடுத்து எங்கும் பேசலாம் அதுவே தொலை பேசியாம்.
மழலைப் பாடல்கள்
 

தொலைக்காட்சி
சின்னத் திரையில் காட்சிகள் சிந்தைக்கு இனிய பாடல்கள் விரும்பும் நல்ல நிகழ்ச்சிகள்
வீட்டில் காட்டிடும் தொலைக் காட்சி.
பத்மா இளங்கோவன்

Page 33
ಇಂಗ್”
காற்றாடி
வண்ண வண்ணக் காற்றாடி
வானில் பறக்கும் அழகைப்பார் காற்றில் மெல்ல அசைந்தாடும் கண்ணுக்கு இனிய காற்றாடி.
மழலைப் பாடல்கள்
 

சின்னச் சின்னக் கைகளில்தான் சுழன்று வரும் உலகமப்பா நெஞ்சில் உரம் கொண்டிருந்தால் நொருங்கி விழும் துயர்களப்பா.
பத்மா இளங்கோவன்

Page 34
உலக மக்களைக் கவர்ந்திடும் உயர்ந்த அதிசயக் கோபுரம் பாரிஸ் நகரில் உள்ளதுவாம்
9
பாரும் "ஈபிள்” கோபுரமே.!
மழலைப் பாடல்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

‘பிசாக் கோபுரம்
இத்தாலி நாட்டில் உள்ளதுவாம் அழகிய சாய்ந்த கோபுரமாம் அதிசயம் ஏழில் ஒன்றாகும் அதுவே "பிசா"க் கோபுரமாம்.!
பத்மா இளங்கோவன்

Page 35
எங்கள் பாட்டி
பாட்டி எங்கள் பாட்டி பாசம் உள்ள பாட்டி கேட்க நல்ல கதைகள் கூறும் எங்கள் பாட்டி.
கரும்பு போல இனித்திடும் கதைகள் பலவும் கூறுவார் விரும்பி நாங்கள் கேட்டிட வீரர் கதையும் கூறுவார்.
ஒளவைப் பாட்டி சொன்னதை அழகாய் எடுத்துக் கூறுவார் செவ்வை யாக வாழ்ந்திடும் செயல்கள் பலவும் கூறுவார்.
அம்மா அப்பா சொற்படி அன்பாய் நடக்க வேண்டுமென்பார் எம்மால் இயன்ற உதவிகளை எவர்க்கும் செய்ய வேண்டுமென்பார்.
கெட்டது கோபம் ஒழியென்பார் கேட்டது கிடைக்கும் படியென்பார் பாட்டி சொல்லைக் கேட்டேநாம் பண்புடன் வாழப் பழகுவோம்.
மழலைப் பாடல்கள்
 

புதுச்சட்டை
அழகிய புதிய சட்டையே அம்மா தைத்துத் தந்தாவே அணிந்தே அழகு பார்த்தேனே அம்மா அள்ளி அணைத்தாவே.
அப்பா வந்து பார்த்தாரே ஆகா! அருமை என்றாரே அணைத்து முத்தம் தந்தாரே அழகிய குட்டி என்றாரே.
எந்தன் புதிய சட்டையை எனது தோழியர் யாவர்க்கும் அணிந்து சென்று காட்டுவேன் அன்பாய்ப் பேசி மகிழுவேன்.
பத்மா இளங்கோவன்

Page 36
சேவல்
சேவல் நல்ல சேவல் சிவப்புக் கொண்டைச் சேவல்
ஆசை யோடு நாங்கள் அன்பாய் வளர்க்கும் சேவல்
கொக்கரக்கோ. என்று நாளும் குரல் கொடுக்கும் சேவல்
காலை வேளை நாமும் கண் விழிக்கச் செய்யும்
தூக்கம் நீங்கி நாமும் துரித மாக எழுந்திட
ஊக்கம் தரும் சேவலை உளம் மகிழ்ந்து வாழ்த்துவோம்.
மழலைப் பாடல்கள்
 

சின்னச் சின்னக் குருவி சிறிய சிட்டுக் குருவி வண்ண வண்ணக் குருவி வானில் பறக்கும் குருவி
குச்சி சேர்க்கும் குருவி கூடு கட்டும் குருவி பட்டுப் போன்ற உடலைப் பாது காக்கும் குருவி
குருவி யோடு சேர்ந்துமே குழந்தை நானும் பறந்திட ஆசை மிகவும் உண்டுதான் ஆனால் சிறகு இல்லையே!
பத்மா இளங்கோவன்

Page 37
பாடிப் பழகுங்கள்
குழந்தைகளே குழந்தைகளே
ஓடி வாருங்கள் கொஞ்சு தமிழ்ப் பாட்டுக் கேட்கக்
கூடி வாருங்கள். �);
粤
பாரதியின் பாட்டுக்களைப்
பாடக் கேளுங்கள்
பாப்பாப் பாட்டின் அருமையினைக்
கேட்டுப் பாருங்கள்
கவிமணியின் பாட்டுக்களைக்
கேட்டுப் பாருங்கள்
கரும்பைப் போல இனிக்கும் அவை
சுவைத்து மகிழுங்கள்.
தங்கத் தாத்தா பாடல்களைப் பாடக் கேளுங்கள் தமிழின் சுவை தெரிந்து நல்ல தாளம் போடுங்கள்
இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பழகுங்கள் இன்பமுடன் என்றும் பாடக்
கற்றுக் கொள்ளுங்கள்.
(* தங்கத்தாத்தா - நவாலியூர் க. சோமசுந்தரப்புலவர்)
மழலைப் பாடல்கள்
 

மலர்த்தோட்டம்
எங்கள் வீட்டு மலர்த்தோட்டம் எங்கும் நிறைய மலர்க்கூட்டம் எட்டிக் கொஞ்சம் பாருங்கள் எங்கும் வீசும் பூவாசம்.
வண்ண வண்ண ரோசா வாசம் வீசும் மல்லிகை கண்ணைக் கவரும் கடதாசி காண இனிய கனகாம்பரம்.
சின்ன இதழ் முல்லை சிவந்த அடுக்குச் செவ்வந்தி என்னைத் தினம் இழுக்கும் எழுந்து காலை போவேன்.
கொய்து மலர் வைப்பேன் கூடம் அழகு சிறக்கும்
பார்த்து அம்மா இரசிப்பார் பாப்பா நானும் மகிழ்வேன்!
I W /

Page 38
வண்ணப் பூக்கள்
வண்ண வண்ணப் பூக்கள் வகை வகையாய்ப் பூக்கள் எண்ண முடிய வில்லை எங்கும் நிறை பூக்கள்,
மண்ணில் வசந்தம் வந்தால் மலர்ந்து சிரிக்கும் பூக்கள் கண்ணைப் பறிக்கும் அழகு காண இனிய நிறங்கள்,
பட்டாம் பூச்சி பூவில் பறந்து வந்து அமரும் பருகும் தேனை நன்றாய் பறந்து போகும் விரைவாய்,
பாடும் தேனி கூட
பூவில் தேனைக் குடிக்கும்
கூடு கட்டி எமக்கு குடிக்கத் தேனைக் கொடுக்கும்,
மண்ணை அழகு செய்யும் மலர்ந்து வாசம் வீசும்
வணக்கத் திற்கும் வருமே வாழ்த்த உதவும் பூக்கள்!
மழலைப் பாடல்கள்
 

எங்கள் ஆசிரியர்
எங்கள் ஆசிரியர் நல்லவர் எங்களில் அன்பு கொண்டவர் எளிதாய் விளக்கம் தருவதிலே என்றும் அவரே வல்லவர்,
அம்மா போலே அணைத்திடுவார் ஆசை பொங்கப் பேசிடுவார் வெளியே அழைத்துச் சென்றிடுவார் வேடிக்கை பலவும் காட்டிடுவார்,
கதைகள் எமக்குச் சொல்லிடுவார் கணக்கும் சொல்லித் தந்திடுவார் பிழைகள் செய்தால் பொறுப்புடனே பார்த்துத் திருத்தம் செய்திடுவார்,
நன்றாய்ப் படிக்க வேண்டுமென்பார் நல்லது செய்யச் சொல்லிடுவார் அன்பாய்ப் பழகுதல் நன்றென்பார் அவர் சொற்கேட்டல் எமக்கின்பம்!
பத்மா இளங்கோவன்

Page 39
ܢ ܡ
ART2
ሌ
ಸ್' - -" や夢 - - ଐଂ\\', . .
(7 (USA, !!!
N'
S.
f s
宠W 2:܃
SSN గొట్ట էկ:
sys/35& 9... "
பாடி மகிழ்வோம் மழலைப் பாடல் பாடிடுவோம் மகிழ்ந்து நாமும் ஆடிடுவோம் இசையும் அசைவும் இணைந்திடவே இனிதாய்ப் பாடி மகிழ்ந்திடுவோம்,
அமுதைப் போல இனித்திடும் அழகுப் பாடல் நூலிது மழலைத் தமிழில் ஆனது மகிழ்ந்து நாமும் பாடிடுவோம்.
மழலைப் பாடல்கள்
 


Page 40


Page 41