கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2012.03

Page 1
CULTURE
WOLUME: 03
இலங்கையில் தமிழர் பிரதேசங்கள்
சிங்கப்பூர் செண்பகவிநாயகர் திருக்கோயில்
NDA. NRK 100.00 CANADA. SRI LANKA...SLR 200.00 AUSTRALIA. SINGAPORE.SGS 14.00 SWISS.
 

N
OOO USA............. US$ 10.00
0.00 UK. GB£ 6.00
EUROPE.EUG 7.00

Page 2
*வெண்கல
இணையத்தளத்திற்
அனைத்து சிறு விளம்பரங்க
22 (U
Yar Mann
WWWyar
மேலதிக தகவல்களுக்
 
 
 

விருது வென்ற யாழ் மண்
萄 囊
翼
கு சிறு விளம்பரதாரர்களை
Connect with Jaffna
mann.Ik
94-773-186-987

Page 3
→→< eertified -<-< 5 sian Altino
Kingfisher Air Colombo to in
You can now experience our consistent on-time pe enjoy the benefits of King Club, India's most rewa Flyer Program, when you fly India's favourite airlin
you can also plan your vacation with Kingfishe
discover breathtaking delights of India.
 

nes connects Lia Via Chennai.
rformance and ding Frequent What's more
Holidays and

Page 4

(O'60LLD
மாயன் கலைத்துவத்தை வெளிப்படுத்தும் முகமூடி
உள்ளடக்கம்
17 பகவத்கீதையை விரும்பிய
அணுகுண்டின் தந்தை
51 பருவகால மாற்றங்களுக்கு ஏற்ற
பாரம்பரிய உணவுகள்
56 தமிழ் பண்பாட்டுத் தளத்தில்
பெரியார் சிவபாதசுந்தரனார்
60 கோட்டு வரைபட ஒவியங்கள்

Page 5
ܡ ܢ
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
T.P. +94. 11 5234.338 WWW. kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai editor(CDkalaikesari.com
SUB EDITOR Bastiampillai Johnsan editor(CDkalaikesari.com
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. C. Pathmanathan Prof. S. Sivalingaraja Prof. P. Pushparatnam Prof. Saba Jeyarasa Dr. Viviyan Sathyaseelan Mrs. Vasantha Vaithyanathan Mrs. Shamila Ranjithkumar K. Thangeswary Subashini Pathmanathan Pathma SOmakanthan D. Manoharan Irasi Jayapathi (Australia)
PHOTOS J. Harish Mirunalan Bala - Murugan (India) LAYOUT
S. A. Eswaran
ICT
S. T. Thayalan
ADVERTISING A. Praveen marketing(G)virakesari. Ik
CIRCULATION K. Dilip Kumar
SUBSCRIPTIONS Arjun Jeger arjun(G)expressnewspapers.net
PRODUCTION L. A. D. Joseph ISSN 2012 - 6824
அன்பார்ந்த கலை
உங்களை கலை
அடைகிறோம். நூல்களும், பத்தி றைய இளம் சமு ரித்துக் காணப்படு கத் தோன்றவில்ை டத்திலேயே இருப் தெரிவிக்கும்போது
துரதிர்ஷ் தமான குறிப்புகை துவான வாசிப்பி
உண்மையே. அ6
சக்தி வாய்ந்த பெ எனினும் மாண6 ஈடுபடுத்துவது மிக பிள்ளைகள் ஆழ் மனிதர்களாக வில் சீரான ஓட்டத்திற் கொள்ளவும் பெரி களுடன் பெற்றோ
டியதில்லை அல்ல
மீண்டும் சந்திப்ே
வணக்கம்
○。 C དེ་ཤོ་ལྟ་ང་རང་བྱིང་
ལྟ་
 
 

ஆசிரியர் பக்கம்
வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்போம்
)க்கேசரி வாசகர்களே!
க்கேசரியின் 27ஆம் இதழின் மூலமாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி
ரிகைகளும், சஞ்சிகைகளும் பெருகிவரும் அளவுக்கு, இன் தாயத்தினரான மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் அதிக }கின்றதா என்ற கேள்வி எழும்போது, பதில் திருப்திகரமானதா லை. மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் மிக குறைந்த மட் பதாக கல்வி விற்பன்னர்களும் மற்றும் அறிஞர்களும் கருத்துத் து, கவலைப்படாதிருக்க முடியாது.
டவசமாக மாணவர்கள் தமது ஆசிரியர்கள் தரும் பாடம் சம்பந் ளைத் தவிர, அதற்கு மேலான வாசிப்பினையோ அன்றிப் பொ னையோ மேற்கொள்ள ஆர்வம் காட்டாதிருக்கின்றனர் என்பது வர்களது கண்ணையும் கருத்தையும் திசை திருப்பச் செய்வதில் ாழுதுபோக்கு சாதனங்கள் சில முக்கிய பங்கு கொள்கின்றன. வர்களை 'மனிதனைப் பூரணமாக்கும் வாசிப்புப் பழக்கத்தில் 5 முக்கியமாக ஆசிரியர்களின் கையில் தான் தங்கி நிற்கின்றது. ந்த அறிவினைப் பெற்று எதிர்காலத்தில் பண்பாடுடைய சிறந்த ாங்கவும், உத்தியோக நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கையின் கும் தேவையான பொது அறிவுச் செல்வத்தைப் பெற்றுக் தும் உதவுகின்ற இந்த அரிய பழக்கத்தை ஊக்குவிக்க ஆசிரியர் ரும் முன்னிற்றல் அவசியமானது என்பதைக் குறிப்பிட வேண்
6) IT?
பாம்
آتومf

Page 6
யாழ்ப்ப 1DDfba
(சென்ற இதழ் ெ ஆலய திரு மாற்றம் ஏற் ஏற்படும். சிக நடிகர்களின் உ சிறுபா
கூறுகின்றன தேர், தீர்த்த வழக்காறு நி பெரும்பாலும் நிகழ்வுகளும் திருவிழாவிே யாழ்ப்பான நிறைவுற்று முன்னொரு பிற்காலங்களி கூத்துகள் நே இன்று வடம வழக்கம் உண் என்பனவும் பெற்றமையும் திருவிழாக் சாதாரண தி வேறுபாடுகள் சாத்துப்படிக் தெரியவில்ை மனப்பான்டை
குருமார்கள்தா சிலரும் சாத்து இலை, சரிை
முதலான ப
பூர்வமாகவும்
 

ாணப் பண்பாடு:
5ഞഖub 1pങ്ങppgഞഖub பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
ழ்ப்பாணத்துக் கோயில்களிலே திருவிழாக்கள் தாடர்ச்சி.) *விழாக்களில் கட்டப்படும் சிகரத்தின் அமைப்புகளில் அதிக படுவதில்லை. அதன் அலங்காரங்களிலேயே மாற்றங்கள் ரத்திலே கடவுளர்களின் உருவங்கள் மாத்திரமன்றிச் சினிமா உருவங்களும் வைக்கப்பட்டிருக்கும். இன்றும் இந்த மரபு மிக ன்மையாகக் காணப்படுகின்றது. கரம் போலவே பல வகையான சப்பரங்களும் ஆடம்பரத் விழாக்களுக்கு அழகூட்டும். முத்துச்சப்பரம், மணிச்சப்பரம், Fப்பரம் என்றும் ஓர் அறைச்சப்பரம், இரண்டறைச்சப்பரம், 1றறைச் சப்பரம் என்றும் பல வகையாகச் சப்பரங்கள் மையும். பெரும்பாலும் இரவுத் திருவிழாக்களுக்கே இந்தச் பரங்களை பயன்படுத்துவர். இச்சப்பரங்களுக்கு மின்ஒளி ன்ெசார தீபம்) தாராளமாக வழங்கப்பட்டிருக்கும். பகல் நவிழாக்களுக்கு அன்னச்சப்பரம், மயில் சப்பரம் என ழைக்கப்படும் சப்பரங்களிலே இறைவன் எழுந்து அருளுவார். ம் என்பது சப்னபரதம் என்பதிலிருந்து மருவியது என்று 方。 நம் என்பவை பக்தி பூர்வமாகவே இருக்கும். இன்றும் இந்த ன்று நிலவுகின்றது. பூங்காவனம் அல்லது திருக்கல்யாணம் ) ஆடம்பரமாகவே நிகழும். பல்வேறு வகையான (இசை, நடனம், தவில் முதலியவை) திருக்கல்யாண ல நிகழும். னத்துப் பெரும்பாலான ஆலயங்களிலே பூங்காவனம் அடுத்தநாள் கோயில் விதிகளிலே கூத்துப் போடுவார்கள். காலங்களில் கிராமத்து மக்களே பழகிக் கூத்தாடினர். ல் கலைஞர்களைக் கொண்டு போடுவிப்பர். பெரும்பாலான 5ர்த்திக் கடனுக்காகவே போடப்படும் (ஆடுவிக்கப்படும்). ராட்சிப் பகுதியில் நேர்த்திக் கடனுக்காகக் கூத்தாடுவிக்கும் ாடு. இசைக்கச்சேரிகள், பொப்பிசை, மெல்லிசை நிகழ்ச்சிகள் இடைக்காலத்திலே ஆடம்பரத் திருவிழாக்களில் இடம் குறிப்பிடத்தக்கது. காலங்களிலே எழுந்தருளிக்கச் செய்யும் சாத்துப்படிகளிலும் ருவிழாக்களுக்கும் ஆடம்பரத் திருவிழாக்களுக்குமிடையே நிறைய இருக்கும். சாத்துப்படியும் ஒரு கலைதான். கலைப்பற்றி விரிவான ஆய்வுகள் வெளிவந்ததாகத் 3u) . சாத்துப்படிக் கலைஞர்களிடையே போட்டி மயும் உண்டு. பெரும்பாலும் பிராமணர்கள், சைவ ான் சாத்துப்படி செய்வர். இன்று ஆசார சீலர்களான வேறு நுப்படிக் கலையைப் பழகிச் செய்து வருகின்றார்கள். மலர், ககள், பட்டு, கஞ்சல் தகடு, வர்ணக் கலவை, கடதாசிகள் லவற்றைப் பயன்படுத்தியே சாத்துப்படி செய்வர். பக்தி
அலங்காரமாகவும் 'சாத்துப்படி அமையும்.

Page 7
பொய்க்கால், பொய்க்கை, பாவைகள் முதலாயின வைத் செய்வதுமுண்டு.இவைபற்றி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வாதப்பிரதி வாதங்களும் நடந்துள்ளன. சைவசமயப் பாரம்பரிய அம்சங்களிலே சாத்துப்படியும் ஒன்று என்பதை மறந்து ஆடம்பரத் திருவிழாக்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக நாதஸ்வரக் கச்சேரியாகும். தவில் நாதஸ்வரத்தை 'மேல் அழைக்கும் வழக்கமும் உண்டு. யாழ்ப்பாணக் குடாநாட்டிே தவில் நாதஸ்வர மேதைகள் வாழ்ந்துள்ளனர். அளவெட்டி, இ முதலான இடங்கள் தவில் நாதஸ்வரக் கலைக்குப் பேர்போன
தவில், நாதஸ்வரம் ஆலயங்களில் மங்கள வாத்தியமாகக் க வேளை மிகப் பெரிய இசைக் கச்சேரிக்குரியவையாகவும் க( கோயில்களில் தவில் நாதஸ்வரக் கச்சேரிகள் மணிக்கணக்கிே கலைஞர்களிடையே போட்டியாகக் கச்சேரிகள் நடைபெறுவது
ஈழநாட்டுக் கலைஞர்களோடு இந்தியத் தவில் கலைஞர்களையும் அழைப்பித்து ஆடம்பரத் திருவிழாக் நடத்தியதும் உண்டு. உதாரணமாகத் தில்லானா மோகனாம் நாதஸ்வரம் வாசித்த சேதுராமன் பொன்னுசாமி சகோரர்கள் கர விநாயகராலயத் திருவிழாவிலே நாதஸ்வரம் வாசிக்க அவர்களு மூர்த்தி தவில் வாசித்தார். அவ்வாறு கருக்குறிஞ்சி அருணாசல மெளலானா, திருவாடுதுறை இராஜரட்ணம் பிள்ளை வடமராட்சியிலுள்ள ஆலயத் திருவிழாக்களிலே நாதஸ் நிகழ்த்தியுள்ளார்கள். இசைத்துறையிலே சாதனை நிகழ்த் கலைஞர்களைப் பெரும் பொருள் செலவு செய்து யாழ்ப்பாண திருவிழாக்களுக்கு அழைத்தமை குறிப்பிடக்கூடிய முக்கிய அட
கவிஞர் யாழ்ப்பாணன் அவர்கள் தமது அந்த நாள் கவிதையிலே 5LDg/ இளமை நினைவைப் வெளிப்படுத்துகின்றார்.
குமுக்காக் கணபதியும்
குழல் அண்ணாச் சாமியுமாய்
தமுக்குத் தமுக்கென்று
தாளங்கள் போடுகையில்
நமக்குள் சபாஸ்' போட்ட
நாளுமினி வாராதோ'
தவில் நாதஸ்வரக் கச்சேரியை மேல்மேளக் கச்சேரி என வழக்காறு பின்னர் நிகழும் நடன நிகழ்ச்சியை "சின்ன மேளக் அழைக்கும் வழக்காறினாலே உண்டானதோ தெரியவில்லை. கட்டத்திலே யாழ்ப்பாணத்துக் கோயில்களில் பெரிய திருவிழா அதில் சின்ன மேளம் நிச்சயம் இடம்பெறவேண்டும்.
சின்னமேளம் (நடனமாடும் இளம் பெண்கள்) பெரும் இந்தியாவில் இருந்தே இங்கு வந்து தங்கி இருந்து ந கச்சேரிகளை நிகழ்த்தினர். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி இருந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தியாவி இருந்து நடன மாதர்கள் வந்து (கோஷ்டி) குழுவாக யாழ்ப்பான திலே குடியேறினர். தமிழ் மக்களின் பண்பாட்டம்சங்களோ தொடர்புபட்டு வந்த தேவதாசி மரபே பின்னர் சின்னமே மரபாக மாறியது என்பர். தேவதாசி பாரம்பரியம் ஒழுக் விழுமியங்களுக்கு ஊறு விளைவிப்பது என்ற ஒரு கருத்து நிலையும் யாழ்ப்பாணத்திலே நிலவியது. உயர் சைவ பாரம்பரியம் சின்னமேள மரபை எதிர்த்து கண்டனங்கள்,
துண்டுப் பிரசுரங்கள் என்பனவும் கவிதை இலக்கியங்களும்

ந்துச் சாத்துப்படி தசாப்தங்களிலே பத்தின் அழகியல் விட முடியாது. அமைவது தவில் மேளம்' என்று லே மிகச் சிறந்த ணுவில், கைதடி இடங்களாகும். ருதப்படும் அதே ருதப்படுகின்றன. ல நடைபெறும். ம் உண்டு.
3. நாதஸ்வரக் களிலே கச்சேரி பாள் படத்திலே வெட்டியார்க்கரு வருக்குத் தட்சணா )ம், ஷேக் சின்ன முதலானோர்
ஸ்வரக் கச்சேரி திய இத்தகைய ாத்தவர்கள் தமது ம்சமாகும். வராதோ’ என்ற பின்வருமாறு
T அழைக்கும்

Page 8
தோன்றியமை பெறும் பின்வ நட்டுவன் ஒ செட்டியில் மட்டுவில் கு மட்டிகள் ப6 இக்கட்டுை நாட்டிலே 'புத் திரைச்சந்தை இன்னமேளச் ( கோஷ்டி இருற சின்னமேள பிரமுகர் ஒருெ சண்டைகள் யாழ்ப்பாணத்தி இருபதாம் பேசப்பட்ட ே என்று கூறப்ட அரைவாய் ெ மாதிரிக்கு சுட் 'வழுவிலா ( வந்தவர்கள் குழுவினர் ம குந்தியிருந் அண்டையி
ஆசையுறு ர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப்பிடத்தக்கது. உதாரணமாக கண்ணகி புராணத்தில் இடம் ரும் கவிதையைச் சுட்டிக் காட்டலாம். ஒருவனாலே நாடக சாலை வந்தாள் ஒருவன் பட்டான் சேணியர் இருவர் பட்டார் iருக்கள் பட்டார் கொக்குவில் சுப்பர் பட்டர் Uபேர் பட்டர் ---------- ர ஆசிரியர் சிறுவனாக இருக்கும்பொழுது யாழ்ப்பாணக் குடா த்தூர் மார்கண்டு செற், ஆவரங்கால் சின்னதுரை செற், முத் செற், இணுவில் செற், 'பத்துவாட்டி சோமர் செற்" எனப் பல கோஷ்டிகள் இருந்தன. இத்துடன் இந்திராகாந்தி செற்" என ஒரு ந்ததாகவும் நினைவு. ாம் நடைபெறும்போது ஆலய உரிமையாளர் அல்லது அந்த ஊர் வர் 'ஆளடக்குதல்’ என்னும் பணியைச் செய்வர். இதனால் பல நடைபெற்றுக் கொலைகளில் முடிந்த வரலாறும் திலே ஆடம்பரத் திருவிழாக்களால் ஏற்பட்டதுண்டு.
நூற்றாண்டின் முற்பகுதியிலே மிகவும் பரப்பரப்பாகப் சனாதிராசா கொலை சின்னமேளக் கச்சேரியினால் ஏற்பட்டதே Iடுகின்றது. சேனாதிராசா கொலைப்பற்றி அக்காலத்திலே பல மாழிப்பாடல்கள் தோன்றின. அவற்றுள் ஒன்றினை வகை டிக்காட்டலாம். மண்டபத்தில் - அங்கு
தாசிகள் ஐந்தாறு பேர்கள் த்தியிலே - வந்து தெழும்பி யாடும் பொழுது லவர்களுக்கு - சோர
நாயகர்கள் காவலாய்நின்றார்’

Page 9
இவ்வாறு பாடல்கள் சின்னமேளத்தினைப் யாழ்ப்பாணத்திலே எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அக்காலத்து திருவிழாக்களிற் சின்னமேளம் ஆடு பற்றிப் பல நையாண்டிப் பாடல்களுக்கும் தோற்ற பெற்றுள்ளன. தற்கால நாகரீக வேடிக்கைப் பாடல்கள் என் நூலில் இருந்து ஒரு பாடலைச் சுட்டிக் காட்டலாம்
திருவிழாவில் தேவடியாள் இல்லை - என்றால் தெய்வம் எழுந்தருளுதலும் தொல்லை- இரவு சின்னமேளம் என்று சொன்னால் - என்ன பாடுபட்டுஞ் சபை திரளும் சல்லி புரளும்
இவ்வாறே உரை நடையில் இலக்கியங்களிலும் சின்ன
9
மேளத்தோடு தொடர்புடைய விடயங்கள் இடம்
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மொழியில் சொற் பொருள் காலத்திற்குக் காலம் மாறி வழங்குவதுண்டு. உயர் நிலையிலே இருந்த தேவடியாள், தேவதாசி முதலான சொற்கள் நாளடைவில் இழிநிலையை உணர்த்தப் பயன்படுவதை அவதானிக்கலாம். இவ்வாறே 'சின்னமேளம்' என்ற சொல்லும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்னும் பொருளில் வழங்குவதையும் அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணத்துக் கோயில்ளுடன் ஆடம்பரத் திருவிழாக்களின் இன்னொரு பிரதான அம்சமாக இடம்பெறுவது வாண வேடிக்கை ஆகும். வெடி, வாணம் இவை தாராளமாகப் பயன்படுத்தப்படும்.
வாணங்களிலும் பல வகை உண்டு. அவ்வாறே
வெடிகளிலும் பல வகை உண்டு. விறிசு வாணம் இ (வெள்ளிவிறீசு), ஈக்கு வாணம், புறா வாணம், சுழல் வாணம், கொட்டு வாணம் எனப் பல வகை வாணங்களும் வெடிகளிலே கெர்ப்பங்கலக்கி’ என்ற ஒரு வகை (பெரிய சத்தமுடைய) வெடியும் கொழுத்துவார்கள் .
வெடி, வாணம் முதலியவற்றால் பெரிய விபத்துக்களும் நடைபெறுவது உண்டு. 1879 ஆம் ஆண்டு கரவெட்டியில் உள் வெல்லனிற் பிள்ளையார் கோயில் வாண வேடிக்கையா ஏற்பட்ட தீ விபத்தில் பல பேர் இறந்துள்ளனர். அக்காலத்து பத்திரிகைகளில் இச்செய்தி அக்கினியால் வந்த அபாயம் 6 விரிவாக எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெடி, வான் இவற்றினால் காயப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் கண், கால் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்ந்தமையும் குறிப்பிடத்தக வெடி, வாணம் யாழ்ப்பாணத்துக் குடிசைக் கைத்தொழில் ே செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்றும் சில ஊர் உள்ள குடும்பத்தினரை 'வாணக்கந்தப்பு வீட்டார் '6ெ செல்லையா வளவார் என்று அழைக்கும் வழக்காறும் உண்டு.
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டின் மிக பிரதானமான அம்சங்கள் ஒன்றாகத் திருவிழாவும் அமைந்திருந்தது. சமூக, பொருளாத அரசியல் மாற்றங்களினால் திருவிழாப் பண்பாடும் ப
மாற்றங்களைக் கண்டுகொண்டது.து
 
 
 
 


Page 10

ஒப்பற்ற கலைப்படைப்பாக விளங்கும் ܓܠ
மாளிகைகள்
ரானடாவில் அல்ஹம்ரா நகரமும் ஜெனரலைப் இ நகரும் தமது தனித்துவமான கலைப்படைப்புகளின்
காரணமாக 16 ஆம் நூற்றாண்டின் முஸ்லிம் ஸ்பெயினின் பெரும் சிறப்புக்கு உதாரணங்களாக விளங்குகின்றன. மத்திய காலப்பகுதியின் அரபு வாழ்வின் தனித்துவத்தை அவை பறைசாற்றுகின்றன. இவை அடிப்படையிலான பாதுகாப்பின் மாற்றங்களினால் அழியவோ அல்லது மாறவோ செய்யாது, அல்ஹம்ராவும் ஜெனரலையும் காலத்தின் சுழற்சியிலும் நிலைத்து நின்று வாழ்கின்றன.
கண்கவர் அழகிலும் அதி சிறந்த கட்டிடக்கலை வனப்பிலும் ஒப்புவமை இன்றி விளங்குகின்ற அல்ஹம்ரா நகரம் முழுவதுமே தேசிய நினைவுச் சின்னமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நகரின் மிகப் பலம் பொருந்திய மலைச் சிகரங்களின் அடிப்பகுதியில் உள்ள சீர்ரா நெவாடா (Sierra Nevada) வில் மிகவும் ஈரலிப்பான பீடபூமியின் ଚର୍ଚିତi୩l bl୩ର) இந்நகரம் அமைந்திருக்கின்றது. நிலத்தின் கீழாக நகரின் மத்தியில் ஒடும் டாரோ (Darro) நதி இந்நகரை இரு பகுதிகளாகப்

Page 11
பிரிக்கிறது. நகரின் வலது புறத்தில் அதன் மிகப் பழைய பகுதியான அல்பைசின் நகரமும் இடது புறத்தில் வீறார்ந்த அல்ஹம்ரா நகரமும் காணப்படுகின்றன. நகரத்தின் தெற்குப் பகுதி எல்லையாக றியோ ஜெனில் அமைந்துள்ளது. இங்கு தான் டாறோ நதி வீழ்கின்றது.
அரபுமொழி வேரில் இருந்து தான் அல்ஹம்ரா வருகிறது. இதன் அர்த்தம் சிவப்பு அல்லது மிக்க சிவப்பான மாளிகை என்பதாகும். லா சபிக்கா மலையை முழுவதுமாகச் சுற்றி அமைந்துள்ள சுவர் மற்றும் ஏராளமான கோபுரங்கள் அங்கு அமைந்திருப்பதன் காரணமாகவும் நட்சத்திர வெளிச்சத்தில் இம்மலை வெள்ளி நிறமாகவும், சூரிய வெளிச்சத்தினால் அது தங்கம்போல் பிரகாசிப்பதினாலும் இப்பெயர் வந்திருக்கலாம். ஆனால் முஸ்லிம் ஆய்வாளர்கள் கூறிய கருத்தினை வைத்து வேறொரு கவித்துவமான வசனத்தை யும் கூறுகிறார்கள். அதாவது தீப்பந்தத்தின் வெளிச்சத்தினை வைத்து இக்கோட்டை கட்டப்பட்டதினால் அதன் ஒளிப் பிதிபலிப்புகளே அச்சுவர்களுக்கு குறிப்பிட்ட வர்ணத்தைக் காட்டுகிறது எனக் கூறிக் கொள்கிறார்கள்.
இராணுவ நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்ட அல்ஹம்ரா நகரம் ஒரு கோட்டை, மாளிகை, ஒரு சிறிய நகரம் என எல்லாம் ஒன்று சேர்ந்து அமைந்திருக்கின்றது. இந்த மூன்று குணாம்சங்களும் தான் இப்புகழ் பெற்ற சின்னத்தின் பல தனித்துவமான சிறப்புகளை எடுத்துக் காட்டுபவையாக இருக்கின்றன. கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இருந்து இக்கோட்டை இருந்து வரினும் கி.பி. 13ஆம் நூற் றாண்டு வரை மன்னர்கள் அங்கு வசித்ததற்கான சான்றுகள் இல்லை. கிரனடாவின் ஆரம்ப கால மன்னர்களான ஸிறிட் டிஸ்களின் (Zirites) மாளிகைகளும் வாசஸ்தலங்
 
 

ម៉ាស្យ ܔܰܛ 11
பைசின் மலைமீது இருந்தபோதும் அவற்றின் எச்சங்கள் ஏதும் அங்கில்லை. 1238ஆம் ஆண்டில் இருந்து எமிர்ஸ் எனக் கருதப்படும் நஸிறிட்டுகள் தான் அல்ஹம்ரா நகரை உருவாக்கி இருக்க வேண்டும்.
6 TIL ÍS)rf Gyu) வம்சத்தின் ஸ்தாபகரான முகம்மட் அல்-அஹ்மர் தான் பழைய கோட்டையைப் புதுப்பிக்க ஆரம்பித்தார். அவரது வேலைகள் பின்னர் அவரது மகனான 2ஆம் மொகமட்டினால் பூரணமாக்கப்பட்டது. பின்னர் வந்தவர்கள் திருத்த வேலைகளை மேற் கொண்டார்கள். அரச மாளிகைகளைக் கட்டும் வேலைகள் 14ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்துள்ளன. முதலாம் யூசுப் மன்னன் மற்றும் 5ஆம் மொகமட் ஆகிய இரு மாமன்னர்களே இவற்றை மேற் கொண்டனர். யூசுப் மன்னன் கொமராஸ் மாளிகையையும் நீதிவாயிலையும், குளிக்கும் இடங்களையும் சில கோபுரங்களையும் உருவாக்கினான். அவனது மகனான 5ஆம் மொகமட் மாளிகைகளை அழகு படுத்தியதுடன் 'சிங்கங்கள் மாளிகை கோபுரங்கள் மற்றும் கோட்டை அமைப்புகள் ஆகியவற்றினை நிர்மாணித்தான்.
ஆனால் கிரனடா நகரினை 1492ஆம் ஆண்டில் கத்தோலிக்க மன்னனான பேர்டினன்ட்ஸும் இஸபெல்லாவும் கைப்பற்றியதையடுத்து அல்ஹம்ரா ஒரு கிறிஸ்தவ அரச மாளிகையாக மாறியது. பின்னர் அங்கு இராணுவக் கொத்தளங்கள் பிரதானிகளுக்கான மாளிகைகள், ஒரு தேவாலயம் ஆகியன கட்டப்பட்டன. கிரனடாவில் சில மாதங்களைக் கழித்த 5ஆம் சார்ல்ஸ்
மன்னன், மாளிகை ஒன்றினைக் கட்டுவித்து அதற்கு தனது பெயரை வைத்தான். அத்துடன் கட்டிடத்தின் உட்பகுதியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டான். அதன் பின்னர்

Page 12
ឆ្នាអ្វីឆី 12
வந்த ஆஸ்திரிய மன்னர்களும் இந்த நினைவுச்சின்னத்தை மறக்காது தமது அடையாளங்களை அதில் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் 18ஆம் நூற்றாண்டிலும் 19ஆம் நூற்றாண்டின் சில காலப்பகுதியிலும் அல்ஹம்ரா முற்றாகவே கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. திருடர்களாலும் பிச்சைக்காரர்களாலும் சூழப்பெற்ற நகரம், மதுபான சாலைகளும் மற்றும் கழிவுகளும் நிரம்பிய இடமாக விளங்கியது.
1802ஆம் ஆண்டிலிருந்து 1812ஆம் ஆண்டுவரை நெப்போலியனின் துருப்புக்கள் மாளிகைகளைக் கைப்பற்றி அங்கு இராணுவ காவல்படைகளை நிறுத்தும் கோட்டைகளாக மாற்றினார்கள். அவர்கள் போரில் பின்
 

வாங்கிய வேளையில் கோபுரங்களை இடித்து அழிவு செய்தனர். அதில் இரண்டு கோபுரங்கள் இடிபாடுகளுடன் மிஞ்சின. 1870 ஆம் ஆண்டுவரை இந்த புறக்கணிப்பு நிலை இருந்ததன் பின் தேசிய நினைவுச் சின்னமாகப் பிரகடனப் படுத்தப்பட்டது. இம்மகத்தான கலைப்படைப்புகள் அழிவுற்ற நிலையில் இருப்பதைக் கண்டு யாத்திரீகர்களும் அனைத்து நாடுகளிலும் உள்ள கலைஞர்களும் அதிருப்தி கொண்டனர். அதனையடுத்து தனித்துவங்களைக் கொண்ட சிறப்பு மிக்க அல்ஹம்ரா கட்டிடங்கள் பாதுகாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு, பேணப்பட்டு வருகின்றன. அத்துடன் உலக மக்கள் அனைவரினதும் பாராட்டுக்குரிய இந்நினை வுச்சின்னம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டும் உள்ளது. 1884ஆம் ஆண்டு அல்ஹம்ரா யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
14ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்ட பிரமிக்கத் தக்க அல்ஹம்ரா நகர மாளிகைகள் ஏராளமான அழகிய அறைகள், பளிங்குத் தூண்கள், மிக நேர்த்தியான உலோகப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட காரை, மிகப் பெறுமதி யான மரத்தாலான வேலைப்பாடுகள், சிற்பங்கள், மிகப் பெரும் சுனைகளில் மினுமினுக்கும் தண்ணிர், வெளியே சிங்கங்களின் மாளிகையில் உள்ள வட்ட வடிவ சுனைக்கு ஒடிச்செல்லும் அழகும். இயற்கைச் சூழலும், தோல்களின் மீது வரையப்பட்ட ஒவியங்களின் நேர்த்தியும் கொண்டவையாக மிளிர்கின்றன.
1492ஆம் ஆண்டின் பின் கத்தோலிக்கரின் ஆதிக்கம் ஏற்பட்டதைக் தொடர்ந்து பெரும்பான்மையான முஸ்லிம்கள் வெளியேறினர். கணிசமான கிறிஸ்தவ மக்களின் குடியேற்றத்தைக் தொடர்ந்து கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மடாலயங்கள் அங்கிருந்த கட்டிடக் கலையுடன் ஒத்துப் போவதாக விளங்குகின்றன. கோட்டைகள், வசிப்பிடங்கள், அல்ஹம்ரா மாளிகைகள், காவல் அறை, தோட்டங்கள், வேலைத்தளங்கள், கடைகள், குளிக்குமிடங்கள் கூட்டமைப்பாகச் சேர்ந்திருந்தன. அவை கோபுரங்கள் கொண்டதும் மிகவும் பாதுகாப்பானதுமான வடக்கு முதல் தெற்கு வரை விஸ்தரித்திருந்த மிகப்பெரும் சுவரினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன.
பல நூற்றாண்டுக்காலமாக கிரனடாவில் உள்ள அல்ஹம்ரா கோட்டை மாளிகைக்கு விஜயம் செய்யும் பார்வையாளர்கள் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட மத்திய காலத்துக்குரிய சுவர்களில் மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டதும் தரையிலிருந்து கூரை வரை அலங்காரமாகக் காணப்பட்டதுமான அரபு எழுத்தாக்கங்களைப் பார்த்து வியந்தனர். சாஸ்திரீய அரபு மொழியில் சுவர் வளைவுகளில் உலோகத்தால் செய்யப்பட்ட அலங்கார நுணுக்க வேலைகள், தூண்களில் ஏழுதப்பட்டவை ஆகியவற்றை வாசிப்பது மிக கஷ்டமாக இருந்தது.
ஆனால் தற்போது அந்த எழுத்து வடிவங்கள்

Page 13
முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டதினால் அந்த வசனங்களின் கருத்துக்கள் தெரியவந்துள்ளன. 10,000 எழுத்துக்களில் 3116 எழுத்துக்கள் தற்போது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்பெயின் நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிய முஸ்லிம் ஆட்சி யைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அல்ஹம்ரா மாளிகைகளிலும் சுவர்களிலும் திருக் குர் ஆன் வாசகங்கள் தான் எழுதப்பட்டிருக்கும் எனப் பொது வாக கருதப்பட்ட போதும் அவை மிகக் குறைந்த சதவீதத்தி ல்தான் உள்ளது என அரபுக் கற்கை நெறி ஆய்வாளரான கலாநிதி. கஸ்ரில்லா தெரிவித்தார். அதற்குப் பதிலாக சுவர் கள், வளைவுகள் மற்றும் தூண்களில் நூற்றுக் கணக்கான தடவைகள் திரும்பத் திரும்ப பொறிக்கப்பட்டிருந்தவை நஸ்ரிட் ஆட்சியாளரின் தாரக மந்திரமான அல்லாவைத் தவிர வேறு வெற்றியாளன் இல்லை என்பதாகும்.
மகிழ்ச்சி, ஆசீர்வாதம் போன்ற சொற்களும் ஆங்காங்கு காணப்படுகின்றன. அத்துடன் நல்லதிர்ஷ்டம் வந்த வேளை மகிழ்ச்சியாக இருங்கள். ஏனெனில், அல்லா உங்க ளுக்கு உதவுகிறார்', 'வார்த்தைகளைக் குறைவாகப் பாவியுங் கள் அப்போது நீங்கள் மன அமைதியுடன் இருப்பீர்கள் போன்ற பொன் மொழிகளும் காணப்படுகின்றன.
நஸ்ரிட் ஆட்சியாளர்களை 500 ஆண்டுகளுக்கு முன்பு முறியடித்தவர்களே இங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்.
 

1492ஆம் ஆண்டு முஸ்லிம்களை ஸ்பெயினை விட்டுத் துரத்திய கத்தோலிக் க ஆட்சியாளர்களான பேர்டினன்டும்
இஸபெல்லாவும் தமது எதிரியின் பாரம்பரியத்தை அறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். அதற்குக் காரணம் அவர்கள்
அல்ஹம்ராவின் தனித்துவமான அழகில் மிகவும் மயங்கி அல்ஹம்ராவின் மூலை முடுக்கெல்லாம் பொறிக்கப்பட்ட வாசகங் கங்களை அறிய விரும்பி அவற்றை வாசிக்க விசேட மொழிபெயர்ப்பாளர்களை நியமித் தார்கள். பல நூற்றாண்டுகளாக இந்த மொழி பெயர்ப்பு முயற்சி ஆய்வாளர்களால் மிக நுணுக்கமாக மேற்கொள்ளபட்டது. இதன் பய னாக அந்தப் பழைய கால வாசகங்களை இப் போது இலகுவில் அறியக் கூடியதாக உள்ளது.
உலகப் பிரசித்திபெற்ற அல்ஹம்ரா கோட்டை யைக் கண்டுகளிக்கும் உல்லாசப் பயணிகள் தொகை வருடாந்தம் அதிகரித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில் இருபது இலட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் இக்கவினுறு காட்சியைக் கண்டு களித்திருக்கின்றார்கள்

Page 14
ខ្សញញ៉ាមៃថី្ម 鑫 14 អ៊ែរត្រៀម
355 fray5IIID 6p.55rful குளத்து இ
தாது மலையில் காணப்படும் பல இடிபாடுகள் தற்போது தீர்த்தமாடும் தீர்த்தக் குளத்தை GOLDULJIL DIT5.j; கொண்டு காணப்படுகின்றன. இத்தீர்த்தக்குளம் இன்று புணரமைக்கப்பட்டு தீர்த்தமாட பாவிக்கப்பட்டாலும் இது பண்டைய குளமேயாகும். இக்குளத்தை அண்மித்தும் குளத்தை மையமாகக் கொண்டும் பல்வேறு இடிபாடுகள் காணப்படுகின்றன. வாசஸ்தலம் எனக் கருதக்கூடிய கருங்கல்லாலான அரண்மனை எனக் கருதக்கூடிய இடிபாடு ஒன்று குளத்திற்கு மேலே காணப்படுகின்றது. இதில் இரு புறமும் கைப்பிடிச்சுவர் (Balustrade) நீண்ட அமைப்புடன் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது. இதன் இடையே காணப்படும் வாசல்படி மிகவும் நீண்டதாகும். இதனிடையே கற்படுக்கைகள், கற்தூண்கள், படிக்கட்டுகள் என்பதை புதர், காடு மண்டிய நிலையில் புதையுண்டு கிடக்கின்றன.
இங்கு காணப்படும் தூண்கள் பெரும்பாலும் சதுரத் தூண்களாகவே உள்ளன. தூண்களில் பொருத்துவதற்கான
துளைகளும் உள்ளன. பல கற்படுக்கைகள் என கருதப்படும்
கல் தட்டு போன்ற அமைப்பு உடைய பல கற்தட்டுகள் காணப்படுகின்றன. இவை உச்சியில் ஒரு தலையணை
 

ாரின் வாசஸ்தலமே IpIIT(6356ir
க. தங்கேஸ்வரி பி.ஏ தொல்பொருளியல் சிறப்பு
அளவு பதித்து வெட்டப்பட்டுள்ளது. இவ்வாசஸ்தல இடிபாட்டு பகுதி உயர்ந்த இடத்தில் அமையப்பெற்றுள்ளது. இதிலிருந்து குளத்தில் இறங்கி வர படிக்கட்டுக்கள் அமையப்பெற்றுள்ளன. படிக்கட்டுக்கள் ஆரம்பிக்கும் உயர்ந்த இடத்தில் பாரியதொரு உருண்டை 6) IL QLG) IL DIT@OT நீர்த்தொட்டி ஒன்று கல்லிலே செதுக்கப்பட்டுள்ளது. குளத்தினுள் இறங்கி நீராட முடியாதோர் நீராடும் முகமாக அமைக்கப்பெற்றுள்ளது எனலாம். இவை சங்கமன்கண்டியில் காணப்படும் இடிபாடுகளை ஒத்தன எனலாம். இத்தகைய கருங்கற் கட்டிடங்கள் பெரும்பாலும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலங்களில் (கி.மு.200) காணப்பட்டன.
கூத்திகன் சேனன் கால தாந்தாமலை பிரதேசம்
கதிர்காம ஷத்திரியர் எனப்படும் பாண்டியத் தொடர்புடைய இரு வம்சத்தினரையும் தொடர்ந்து கிழக்குப் பகுதியில் தமிழ் மன்னன் என இனங்காணப்பட்ட மன்னன் கூத்திகன் ஆவான். இவனை குதிரை வணிகன் எனவும் அனுராதபுர பகுதியையும் ரோகண பகுதியையும் கைப்பற்றி

Page 15
ஆண்டான் எனவும் மகாவம்சம் குறிப்பிடும். அதனை மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு பூர்வீக வரலாறு எனப்படும் நூல்கள் கூறும்." கூத்திகன் மட்டக்களப்பு தொடக்கம் வெருகல் வரை ஆட்சி செய்தான் எனப்படும். மட்டக்களப்பு என்பது இன்று மட்டக்களப்பு எனப்படும் பிரதேசம் அல்ல; சம்மாந்துறை, மலுக்கம்பிட்டி, அட்டப்பள்ளம், வீரமுனை, நிந்தவூர் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதியே மட்டக்களப்பு என வழங்கப்பட்டது. அக்காலத்தில் திருக்கோயில் முக்கிய துறைமுகமாக இருந்தது. உன்னசுகிரி (உகந்தை) நாகர்முனை (திருக்கோயில்) சங்கமன்கண்டி, தாண்டவகினி (தாந்தாமலை) என்பன முக்கிய இடங்களாகும். கூத்திகனது மண்டபம் இருந்த இடம் (இன்றைய அட்டாப்பள்ளம்) சிங்கார மண்டபம் எனப்பட்டது. இவன் மாளிகை அமைத்து இருந்த இடம் மாளிகைக்காடு என வழங்கப்பட்டது. இவனது வழிபாட்டு இடமான மரியன் கோயில், சிங்காரபுர மாரியம்மன் எனப்படுகிறது. இவை எல்லாம் இன்றும் வழங்கப்படுகின்றன.
இவற்றை வீரமுனைச் செப்பேடு, சீக்பாதகுல கல் வெட்டு, கண்ணகி வழக்குரை போன்றன கூறுகின்றன.8 கூத்திகன் காலத்தில் தாண்டவகிரி எனப்பட்ட தாந்தா பிரதேசமும் சிறப்புற்று காணப்பட்டது. இக்காலத்தில் மண்டுர், திருக்கோவில், போரதீவு, உகந்தை, தாண்டவகிரி போன்ற முருகன் கோயில்கள் சிறப்புற்றிருந்தன என அறிய முடிகின்றது. அவனது காலம் கி.மு. 296. (கலிஆண்டு 2806) ந்தாமலை இவனது வழிபாட்டு இடங்களில் ஒன்று எனக் து பொருத்தமானது. 22 வருடங்கள் இவனது
 

蚤 យម្បិញម៉ាអៃ
15
ஆட்கிக் காலம் என மகாவம்சம் குறிப்பிடும். (Mahavamsach Xx1 — Nates 10,11 PP — 142 — 143)
உலகநாச்சி காலத்தில் தாந்தாமலை பிரதேசம் உலகநாச்சி பற்றிய வரலாறு மட்டக்களப்பு மக்களின் நாவில் என்றுமே கூறப்படுகின்ற ஒரு வரலாறு. மண்முனை இராச்சியத்தை ஆட்சி செய்தவள். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை புனரமைத்தவள். கோயில் குளம் சிகரக் கோயிலைக் கட்டுவித்தவள். வன்னியர்களை குடியேற்றியவள். குடிமுறைகளை வகுத்தவள். எனப் பலவாறாக புகழ்பாராட்டும் உலகநாச்சி காலம் தாந்தாமலை உட்பட பல பிரதேசங்கள் இவள் ஆட்சியில் இருந்தன.
குணசிங்கன் என்பவள் (கலி ஆண்டு 3500) கி.பி. 398. மட்டக்களப்பை ஆட்சி செய்தபோது இந்தியாவின் ஒரிசா மாநிலத்தை (கலிங்கம்)ஆட்சி செய்த குகசேனனுடைய புத்திரி உலக நாச்சி என்பவள் கெளதம புத்தரின் தசனத்தை (பல்) தனது கூந்தலுக்குள் மறைத்துக் கொண்டு, கைலங்கிரியில் குக வம்சத்தவர் வைத்திருந்த சிவலிங்கத்தையும் எடுத்துக்கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் இலங்கை வந்தாள். இதனை இலங்கை அரசன் மேகவர்ணனிடம் புத்தபூன் தசனத்தைக் கொடுத்து அவன் பணிப்பில் பேரில் குணசிங்கனிடமிருந்து மண்முனைப் பிரதேசத்தைப் பெற்றாள் ତTତ୪T கூறப்படுகிறது. மட்டக்களப்பு மான்மியம் கூறும் இத் தகவல் மகாவம்சத்திலும் காணப்படுகின்றது.10
பிராமணப் பெண் ஒருத்தி தனது கூந்தலுக்குள் மறைத்துக் கொண்டு வந்தாள் என மகாவம்சம் சற்று
மாறுபடக் கூறும் இத் தகவல் ஏற்கக் கூடியதே. உலகநாச்சி

Page 16

தான் கொண்டு வந்த படிகலிங்கத்தை கோயில் குளத்தில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தாள். மலைகள் எதுவுமற்ற கோயில் குளத்தில் பாரிய கோயில் கட்ட தாந்தாமலைப் பிரதேசத்திலிருந்து கற்களை தருவித்து பாரிய கோயிலை அமைத்துள்ளாள். மண்முனை இராச்சியம் என்பது ஆரையம்பதி, கோயில் குளம், மண்முனை, தாழங்குடா போன்ற பிரதேசங்களுடன் ஆற்றின் மறுபுறம் முனைக்காடு, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, அம்பிலான்துறை, தாந்தாமலை, கொத்தியாமலை, மணப்புட்டி போன்ற இடங்களையும் உள்ளடக்கி அமைந்துள்ளது. தாந்தாமலை பிரதேசத்தைச் சுற்றிவர அமைந்துள்ள வயல்வெளிகள் எல்லாம் பழைமையை பிரதிப்பலிப்பதோடு பெருந்திரளான மக்கள் இருந்த இடமுமாகும்.
தாந்தாமலையை அண்மிய, சூழவுள்ள மாவடி முன்மாரி, பணிச்சையடி முன்மாரி போன்ற இடங்கள் அக்காலத்தில் பல ஏக்கர் வயல்களுக்கு சொந்தமான போடிமார் குடியிருந்த பகுதிகளாகும். உலகநாச்சியின் மாளிகை இருந்த இடம் இன்றைய தாழங்குடா பகுதி எனக் குறிப்பிட்டாலும் தாந்தாமலை இவளது ஆட்சிக்குட்பட்ட இடம் என்பதற்கும் இவளால் வழிபட்ட இடம் என்பதற்கும் மணல் புட்டி, கொத்தாபுனை போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற பண்டையப் பொருட்கள் சான்றாகும். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை உலகநாச்சி செப்பனிட்டாள். தான்தோன்றீஸ்வரரின் பொக்கிச மலை தாந்தாமலை எனப்பட்டது. இவளது கால நடைமுறைகள் இப் பிரதேசங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளன. ஆடகசவுந்தரியின் காலத்தில் தாந்தாமலை
உலகநாச்சி போலவே ஆடகசவுந்தரி பற்றிய கதையும் மட்டக்களப்பு மக்கள் மனதில் ஆழப்பதிந்த ஒரு வரலாறாகும். ஆடகச்சவுந்தரி என்ற அரசி உகந்தையை தலைநகராகக் கொண்டு ஆண்டாள். இவள் மனுகேய கயபாகுவின் மகள். மகாசேனனை திருமணம் செய்தாள். மகாசேனன், தூர்ந்துப் போன குளங்களைப் புனரமைத்தான். விவசாய வளர்ச்சிக்கு உதவினான். இது மட்டக்களப்பு மக்கள் வாழ்வில் நடைமுறையிலிருக்கும் ஒரு கர்ண பரம்பரைக்கதை. இதற்கு மட்டக்களப்பு மான்மியத்தை ஆதாரங்காட்டுவர்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விடயம் குளக்கோட்டன் ஆடகசவுந்தரி பற்றிய கோணேசர் கல்வெட்டு, தெட்ஷண கைலாயபுராணம், திருகோணமலை வைபவம், யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் வையாபாடல், கைலாய மலை, கோணமலை அந்தாதி போன்ற இலக்கியங்களில் வெவ்வேறு விதமாக, வெவ்வேறு காலங்களில் கூறப்படுகின்றது. பெயர்களும் வேறுபடுகின்றன. அதற்கான விளக்கம் எனது குளக்கோட்டன் தரிசனம் என்னும் நூலில் 34, 35, 37, 38, 39, 40 ஆம் பக்கங்களில் மிகவும் 656 TaigsLDT.g5d,
கூறப்பட்டுள்ளது."
*

Page 17
பகவத்கீதையால்
அணுகுண்டின் தர்
LO fig36 வரலாற்றையும் சிந்தனையையும் பாரிய
தூரம் மாற்றியமைக்க எதுவாக அமைந்தது
இரண்டாம் உலக யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட அணுகுண்டு ஆகும். ஆயிரக்கணக்கான அமெரிக்க - நேச நாட்டு அதி சிறந்த விஞ்ஞான குழாத்தினரின் மிக மிக இரகசியமான மான்கட்டன் திட்டத்திற்கு (Manhattan Project) தலைமை தாங்கி வெற்றிகரமாகத் தனது கடமையைச் செய்து முடித்தவர் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஒப்பன்ஹைமர் (J.Robert Oppenhemerr)
 

& கலைக்கேசரி
17
மிகவும் கவரப்பட்ட
நதை ஓப்பன்ஹமர்
இராசி ஜெயபதி (சிட்னி)
சமஸ்கிருத மொழியில் நல்ல பாண்டித்தியம் பெற்றிருந்த இந்த விஞ்ஞானி கீதையை அதேமொழியில் படித்து அதன் கருத்துக்கள் சிலவற்றை தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு.
அவர் வேறெந்த மொழியிலும் இல்லாத மிக அழகிய தத்துவப் பாடல் பகவத்கீதை' என்று தனது ஒரே தம்பி பிராங்கிற்கு (Frank) ஒரு முறை கடிதம் எழுதியிருந்தார். சித்தர்கள் போல இவர் மறைபொருளியல்புகளில் (Mystic Ideas) நல்ல ஈடுபாடுடையவர். அபார மூளை சாலியான இவரிடம் பல விடயங்களில் பலமும் அதேபோல பலவீனமும் ஒருங்கே நிறைந்திருந்தன.
அமெரிக்காவில் நியூ மெக்சிக்கோ பாலைவனாந்தரப் பகுதியில் 1945ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்ட அணுகுண்டையடுத்து இவரது புகழ் உச்சக் கட்டத்தை எய்தியது. இவரும் இவரது பல சக விஞ்ஞானிகளும் பின்னர் ஜப்பானில் பொது மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அணுகுண்டு வீசப்பட்டதை சிறிதளவும் விரும்பவில்லை. எனினும் அதிகாரத்திலிருந்த A. L'spITLD6ðTTGö (Harry Fruenam) - 9|g] நிறைவேற்றப்பட்டது. யுத்தம் முடிவுற்றபின் இவர் அமெரிக்க அணுசக்தி ஆணைக் குழுவின் ஆலோசகராகவும் பிறின்ஸ்டனில் அமைந்த உயர் 91s565ugi 5-p3556öT (Institute of Advanced study, Princeton) தலைவராகவும் இருந்தார்.
ஆணைக்குழுவின் ஆலோசகர் என்ற முறையில் ஓப்பன்ஹைமர் அணு சக்தியை சமாதான உபயோகத்திற்கு ஊக்குவித்தார். அத்துடன் முக்கிய மாக வல்லரசாக வளர்ந்து வரும் சோவியத் ரஷ்ய அர சாங்கத்துடன் போட்டிகளைத் தவிர்க்க ஒளிவு மறை வின்றி திறந்த அணு ஆயுதக் கொள்கையைக் கடைப்பி டிக்குமாறு அமெரிக்கர்களுக்கு ஆலோசனை கூறினார்.
அன்று அரச அதிகாரத்திலிருந்து அணுசக்தி ஆணைக்
போன்றவர்களுக்கு இந்த ஆலோசனை எரிச்சலை ஏற்படுத்தியது. இவர்கள் ஒப்பன்ஹைமர் முன்பு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டினார். இவரால் அரச பாதுகாப்புக்கு பங்கமேற்படும் என்று கூறி இவரிடமிருந்து தேசிய உயர் பாதுகாப்புக்குரிய உத்தரவுச் g'GOL (Highest National Security Clearance Certificate pass) பறிமுதல் செய்ய விசாரணை நடத்தினர்.
முன்பு உச்சக்கட்டத்தில் புகழாரம் சூட்டியவர்கள் ஒன்பதே ஒன்பது ஆண்டுகளின் பின் இவரது சேவையை

Page 18
តែបាតាវ៉ៅ ខ័ 18
மறந்ததுமல்லாது இவர் மேல் பாரதூரமான குற்றச் சாட்டுக்களை வைத்து இவரது முகத்தில் கரி பூசினர். 1954இல் நடத்தப்பட்ட உலகப் பிரசித்தி பெற்ற விசாரணையில் ஹைமர் வெற்றியும் கண்டார். ஆனால் ஆணைக்குழுத் தலைவர் இஸ்தாவுஸ்சின் தனிப்பட்ட கோபதாபத்தினால் ஏற்பட்ட இந்த விசாரணையில் நடைபெற்ற தில்லுமுல்லுகள் பிற்காலத்தில் வெளிச்சத்திற்கு வந்தன.
அமெரிக்காவில் அந்நாட்களில் மக்காதிவாதம் (McCarthyism) கடைப்பிடிப்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்ற சிறு ஐயப்பாட்டில் பல பெரும் பிரமுகர்களை வேட்டையாடினார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் முதலிடம் வகிப்பவர் ஒப்பன்ஹைமர் தனக்கு இழைக்கப்பட்ட கெடுபிடிகளை அமைதியாக ஏற்று சிறகு ஒடிந்த பறவை போல, ஒரு புறமாக இவர் சிறிதுகாலம் ஒதுங்கியிருந்தார். அவர் முன்பு அறியுறுத்திய ஆலோசனைகளில் பொதிந்திருந்த உண்மைகளைக் காலம் கடந்து புதிய ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தனர்.
அதன் காரணமாக 1962இல் ஜனாதிபதி ஜோன் எப் கெனடி 49 நோபல் பரிசு பெற்றவர்களை வெள்ளை மாளிகையில் கெளரவிக்கும் உபசாரத்தில் ஒப்பன்ஹைகமரையும் அழைத்திருந்தார். அவருக்கு நோபல்
பரிசு கிட்டவில்லை என்பது உண்மை. ஒப்பன்ஹைமர்
பொறுமையாக இருந்து விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால் நோபல் பரிசைப் பெற்றிருப்பார் என்று நம்பப்படுகின்றது. அதற்கு ஈடுசெய்யும் முகமாகவோ என்னவோ பொது சேவைக்காக வழங்கப்படும் என்றிக்கோ பேர்மி (Endrico Fermi) பரிசு 1963இல் இவருக்கு கொடுக்கப்பட்டது. மதிப்புமிக்க இப்பரிசில் 50,000 வெள்ளிகளும் பதக்கங்களும் அடங்கும். திட்டமிட்டவாறு ஜனாதிபதி கெனடி இப்பரிசை இவருக்கு கொடுப்பதற்கு முன் கொல்லப்பட்டார். அப்பணியை ஜனாதிபதி யோன்சன் நிறைவேற்றினார். எனினும் இக்கெளரவிப்பு காலம் கடந்த நிகழ்வாக அமைந்தது. ஓப்பன்ஹைமரை அமெரிக்காவின் புறமீத்தியஸ் (American Prometheus) என்றழைக்கின்றனர். கிரேக்க புராணத்தில் தோன்றும் புரட்சிக்கார புறமீத்தியஸ் என்ற அசுரவீரன் நெருப்பை ஒலிம்பஸ் என்னும் தெய்வத்திடமிருந்து களவாகத் திருடி வந்து மானிடர் நலனுக்காக கொடுத்துதவியதன் காரணமாக ஜிகஸ் (Zeus) என்ற தெய்வத்தின் கட்டனைப்படி காக்கஸ் மலையில் (Mount Carcus) உயிருடன் பல வருடங்களாக அறையப்பட்டிருந்தான்.
தினமும் பகற்பொழுதில் ஒரு கழுகு வந்து அவனது ஈரலைக் கொத்தித் தின்றது. இரவு வேளையில் ஈரல் வளர்ந்து விடுமாம். சில காலம் சென்ற பின் கேக்குலீஸ் (Hercules) என்ற வீரன் அக்கழுகைக் கொன்று புறமித்தியஸ்சின் வேதனையை முடிவுக்குக் கொண்டு வந்தான். இக்கிரேக்கக் கதையில் நடந்தது போல
 
 
 

சின்னப்பையன் ( ஹரோசிமா

Page 19
அணுவுக்குள் மறைந்து அடங்கியிருந்த சக்தியைப் பயன்படுத்திப் பெரும் தீச்சுவாலை ஏற்படுத்தும் அணுகுண்டை கண்டுபிடித்துக் கொடுத்த ஒப்பன்ஹைமர் அமெரிக்கர்களினால் அன்று தண்டிக்கப்பட்டார். காலம் கடந்த பின்னர் இவருக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்கு அவர்கள் பரிகாரம் காண முற்பட்டனர்.
ஜேர்மனியிலிருந்து புதிதாக அமெரிக்காவின் நியூயோக் பகுதியில் வந்து குடியேறிய வசதி படைத்த யூதக் குடும்பத்தில் ஓப்பன்ஹைமர் மூத்த பிள்ளையாக 1904இல் பிறந்தார். சமயத்திற்கு மேலாக ஒழுக்கத்திற்கும் யூத கலாசாரத்திற்கும் முதலிடமளிக்கப்பட்ட சன்மார்க்க 5G)ITSETITL LITL g|T60)Guigi) (Ethical Cultural School) 18 6 Jug, வரை படித்தார். இந்த சன்மார்க்க பாடசாலை மாணவரின் கண்டுபிடிப்பு 25 வருடத்தின் பின் சுமார் மூன்று இலட்சம் யப்பானிய மக்களின் உயிரைப் பறிக்குமென்று அன்று ஒருவரும் ஆரூடம் சொல்லியிருக்க மாட்டார்கள்.
மாணவப் பருவத்தில் இவருக்கு இசையிலும் கனிமப் பொருட்களிலும் (Mineral Rocks) கவிதை இயற்றுவதிலும் வாசிப்பதிலும் அதிக ஆர்வமிருந்தது. பின்னர் குதிரைச் சவாரியிலும் உல்லாச மரக்கல பிரயாணங்களிலும் ஈடுபட்டார்.
இவர் 12வது வயதில் எழுதிய கட்டுரையைக் கண்ணுற்ற நியூயோர்க் கனிமப்பொருள் சங்கத்தினர் இவரது வயதை அறியாது தமது சங்கத்தில் பேசும்படி அழைப்பு விட்டனர்.
ஹைமரும் அல்பேர்ட் ஐன்டீனும்
 

க் கலைக்கேசரி 19
அங்கு பெற்றோருடன் பதற்றமாகச் சென்று ஒப்பன்ஹைமர் பேச எழுந்ததும் சபையிலுள்ளோருக்குச் சிறுவனைக் கண்டதும் சிரிப்புத்தான் வந்தது.
குழுமியிருந்தோருக்கு அவரது முகம் தெரியும் வண்ணம் இவர் பேச்சு மேசைக்கு (Lectern) பின் ஒரு மரப்பெட்டியில் ஏறி நின்று உரையாற்ற வேண்டியிருந்தது. ஆனால் வெட்கப்பட்ட சிறுவனின் பேச்சை செவியுற்ற பின் சபையோரின் கரகோசம் பலமாகவிருந்தது. இந்நிகழ்வு 'விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பதனை முன் கூட்டியே அறியத்தந்தது.
தனது 19வது வயதில் ஹவார்ட் (Harvard) பல்கலைக்கழகத்தில் சேர்ந்த இவருக்கு வழங்கப்பட்ட புலமைப் பரிசை செல்வக் குடும்பத்திலிருந்து வந்த ஒப்பன்ஹைமர் ஏற்க மறுத்து விட்டார். அதற்குப் பதிலாக பல்கலைகழகத்தினர் விஞ்ஞானி கலிலியோ (Galleo) ஆரம்ப காலத்தில் எழுதிய ஒரு தொகுதியை இவருக்கு கொடுத்துதவினர்.
I920 ஐரோப்பாவில் குவாண்டம் இயற்பியல், GLJGT34567 u 16v (Quant Physics of Quantum Lecheries) GTGöтр ஒரு புது இயல் பிரிவு வேகமாக உருவாக்கம் கண்டது. அணுவையும் அதன் உட்பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்ட பெளதீகப் படிப்பு குவாண்டம் இயற்பியல். இந்தப் புதுப் பிரிவு அணுகுண்டு உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறை சமிக்கை காட்டியது.
அந்நாட்களில் உலகில் குவாண்டம் படிப்பில் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்தும் ஜேர்மனியும் முன்னணி வகித்தன. அமெரிக்காவிலிருந்து சென்று முதலில் இங்கிலாந்திலும் பின்னர் ஜேர்மனியிலும் ஒப்பன்ஹைமர் குவாண்டம் இயற்பியலை நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் இப்புதிய இயலை இவர் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தினார். சில வருடங்களின் பின் உலகிலே சிறந்த இயற்பியல்
ஸ்தாபனத்தை அமெரிக்காவிலே உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.
மகாபாரதத்தில் துரோணர் ஆச்சாரியராக இருந்து கர்ணன் அருச்சுணன் ஆகியோருக்குப் பயிற்சி கொடுத்தார். அதே போல குவாண்டன் இயற்பியலில் முதுபெரும் அறிஞரான நயில்ஸ் போர் (Niels Bohr) ஜேர்மனியைச் சேர்ந்த வேணர் கெயின்ஸ்பேக் (Werner Heisenberg) அவர்களுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பஹைமர் அவர்களுக்கும் விஞ்ஞான வழிகாட்டியாக இருந்தார். இவ்விரு சிறந்த அபார மூளை படைத்த மாணவர்களும் பிற்காலத்தில் எதிரணியிலிருந்து அணுகுண்டு ஆராச்சியில்
கடுமையாகப் போட்டி
றொபேட்
போடுவார்கள் என்று அப்போது

Page 20
ក្រុងហ្គ្រាម៉ាអៃ 彦
20
எவரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.
இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்ற வேளை நயில்ஸ்
போரை டென்மார்கிலிருந்து பிரித்தானிய உளவுப் பிரிவினர்
ஜேர்மன் உளவுப் பிரிவினரின் கொலைத் திட்டத்திலிருந்து
தப்பச்செய்து, பேராசிரியரை மான்கட்டன் திட்டத்தில்
வேலை செய்யும் பொருட்டு அமெரிக்கா கொண்டு
வந்து சேர்த்தனர். ஒட்டை வாயனான பேராசிரியர்
தெரியாத்தனமாக மிக இரகசிய அணுகுண்டுத் திட்டத்தை வெளியில் கக்கி விடுவாரோவென்று திட்ட அமைப்பாளர்கள் பயந்தனர்.
அதனால் அவர் புகைவண்டியில் நியூயோக்கிலிருந்து லொஸ் ஆல்மஸ் நியூ மெக்சிக்கோ வந்திறங்கும் வரை ஒருவர் பின் ஒருவராக அவருடனேயே எப்போதும் காவலாயிருந்தனர். ஆரம்பத்திலிருந்து ஒப்பன்ஹைமர் போல நாடுகளுக்கிடையில் அணு ஆயுதப் போட்டிகளைத் தவிர்க்க திறந்த வெளிப்படையான கொள்கையைத் தீவிரமாக ஆதரித்தவர் பேராசிரியர் நயில்ஸ் போர் கலிபோனியாவிலுள்ள பேக்ளி (Berkley) பல்கலைக் கழகத்தில் இயற்பியல் கோட்பாடு (theoretmal physics) ஆசானாக ஒப்பன்ஹைமர் சேர்ந்தபோது அங்கு சமஸ்கிருத மொழியிலும் இவருக்கு நல்ல ஈடுபாடு ஏற்பட்டது. மிகக் கடினமான விடயங்களில் தேர்ச்சி பெறுவதில் இன்பம் காணும் ஒப்பன்ஹைமருக்கு பேராசிரியர் றயிடரிடம் சமஸ்கிருதம் படிப்பதில் சுகம் கண்டார். சமஸ்கிருதத்தில் காளிதாசரின் மேகதூதத்தை மற்றும் பகவத்கீதையை ஆசானின் உதவியுடன் கற்று அம்மொழியில் நல்ல பாண்டித்தியம் பெற்றதுமல்லாது கீதையின் தத்துவக் கருத்துக்கள் இவரை மிகவும் கவர்ந்தன. இவருக்கு கீதையில் விருப்பமான ஒரு பகுதி :
ஆயுதமேந்தும் எதிரிகளை வெற்றி கொள்ளலாம் விஞ்ஞான அறிவிலும் கலை நுணுக்கங்களிலும் தேர்ச்சி காணலாம், இருப்பினும் கர்மவினைப்பயன் ஒன்றின் தாக்கம் ஒன்றே நடக்க வேண்டிய விவகாரப்படி விவகாரங்களை நடத்தித்திரும்’ இவர் தனது தம்பி பிராங்கிற்கு எழுதிய கடிதத்தில் தான் விரும்பிய கவிஞர்களான யேற்ஸ் (YB.Yates) மற்றும் எலியட் (T.S.Eliot) ஆகியோரும் இந்திய தத்துவம் போதிக்கும் மகாபாரதத்தை விரும்பிப் படித்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பேக்ளி மாணவர்கள் இவரைச் செல்லமாகவும் சுருக்கமாகவும் 'ஒப்பி என்றழைத்தனர். அந்நாட்களில்
தாயின் மறைவுக்குப் பின் தந்தையார் இவருடன் தங்கினார்.
தந்தையார் ஒரு முறை இவருக்கு ஒரு புதிய கிருஸ்லர் மோட்டார் வாகனத்தை அன்பளிப்புச் செய்தார். அதற்கு பகவான் விஷ்ணுவின் வாகனமாக கருடனின் பெயர் கொண்டு கருடா என்று அவர் அழைத்தது, கீதை இவரை எந்தமட்டும் கவர்ந்தது. என்பதைக் காட்டுகிறது. தி
- தொடரும்
 
 
 
 
 

அணுகுண்டு வெடிப்பின் பாரதூரத் தன்மையை
திரையில் விளக்குகின்றார்.

Page 21
జిణage
ஆவிண்றி வளர்வது
ಟ್ವಿಟ್ತಿà:ೞ4:
ஆ: லண் தரும் என்று பொருள்
:தம் அமாவாலையை ஆதித்துவரும் மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தில்தான் கிருதயுகத்தை பிரம்மண் படைத்ததாகச் சொல்கிறது பவிஷ் புராணம் ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை யுகதி என்பர் மலோடு தி :ே rவிலஜ் திருமில் ஆன தினம் என்பதால் திருதியை தி பொதுவாக
லக்ஷ்மி காட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்
சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வ
fiဒျုရှ်၏ အရေး என்பது ஐதீகம் ஆக்ஷய திருதியையன்று அதிகாலையிலேயே எழுந் நீராவிட்டு பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி மஹாவிஷ்ணு இருவரு
ந்ேதயம் இருப்பின் விளக்கேற்றிபக்தியோடு பூஜை செய்து தூப தீபம் காட்டி காய்ச்சி
ால் : நிவேதனம் செய்து திருமாலை வழிபடுக்கள்
இல் செய்யும் பூஜைத்தவிர அன்றைதினத்தில் நாம் வழங்கு தானத்து ee e eO kk e eeeOe eOeOMOeeTTOLTTi i ekkkLeLemmeT eTOTkTTTTT TTTTTTTS TseeTTTsS S TTTTTTTTTT Te திருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால முன்னோர்களின் ஆசியைப் பெற்று வறுை நீக வளம் பெறலாம் மகத்துவ நிறைந்த அக்ஷய திருதியை தாளில் எந்த ஒ சேலைத் துவங்கினாலும் பொன்னும் வெள்ளியும் பொருளும் வாங்கினாலும் அை மென்மேலும் வளந்து வளமைதரும் என்பது தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரு நம்பிக்கை இந்த நம்பிக்கை வளர காரணமாயிருப்பது பல புராணங்களில் திகழ்ந்துள் சம்பவங்களும் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும்தான். அவற்றில் சில.
திருமகளின் எட்டு அவதரங்களுள் ஐஸ்வர்ய லக்ஷ்மி மற்றும் தன்ய லக்ஷ்மி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.
2. இந்த புண்ணிய நாளில்தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம்
நிகழ்ந்தது.
3 மஹேதம் எனும் நகரில் வணிகன் ஒருவன் அக்ஷய திருதியை தினத்தின்
மகிமையைக் கேள்வியுற்று அந்நாளில் கங்கையில் நீராவிட்டு பித்ருத்தப்பணம் செய்வதுடன் கேதானம் சுவர்ணதானம். பூமிதானம் போன்றவற்றைச் செய்து மறுபிறவியில் குகாவதி நாட்டின் அரசனானது திருதியை தினத்தின் மத்துவத்தை இனத்து: ஒரு கதைதான். எனவே இந்த தினத்தில் விசிறி கு ைகணம் ஆகியவற்றை தானம் செய்வது அறியப்பலனைத்தரும் என்பது விசேஷம்
அக்ஷய திருதியை சிறப்
Premi: 0724823725 || III: 011 52382811 -5 ||
 

4. ஹrதக்கதையில், கெளரவர் சபையிலே கெளரவம் பறிபோய் அவமானம் நேர்ந்துவிட் அச்சத்தில், அவலக்குரலில் ஆயம்:அபயம் என்று அலறினாள் திரெளபதி இருந்த இத்திலிருந்தே அக்ஷயம் என்றார் கண்ணன் குறையாமல் வளர்ந்தது திரெளபதியின் சேலைகாக்கப்பட்டது பாஞ்சாலின் கற்பு இது நிகழ்ந்ததும் ஒரு திருதியை தினத்தில்தான்
5 பாற்கடல் கடையப்பட்டபோது அழுத்தோடு அவதரித்த மலைமகள்
அகலுமில்லேன் என்று மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது திருதியை திநாளில்தான்
s மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டதால் பிறைநிலவாகப் பிறந்த சந்திரன்
அக்ஷயமாகப் பெருகி வளர்ந்த முழுமதியாகப்பிரகாசித்தவன் ஒருசமயம் மிதிகெட் கைலால் சாபம் பெற்று (ஷயரோக) அவன் உடல் தேர்ந்தபோது en என்று இறைவனைத் தஞ்சமடைந்து சாப விமோசனமாக அக்ஷயவரம் பெற்றதும் இந்த திருதியை தினத்தன்றுதான்
7 ஈஸ்வரன் பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்து காசியில் அன்னபூரணியான
அம்பிகையிடம் பிட்சை பெற்ற பின் தங்கத்திலான அட்சய பாத்திரத்திலிருந்து
உணவை கொடுத்துஇ அகிலாண்டநாயகி உலகுக்கு ಇಂ: வழங்கத் தொடக்கியதும் இத்திருநாளில்தான்
3. சகோதரன் ராவணனால் விரட்டப்பட்டு வறுமையில் வாடிய குபேரன் இயற்ற
தவத்தால் கண்வரனின் ஆக்ஞைப்படி திருமகளை வழிபட்டு சங்கநிதி துறநிதி என்ற ஐஸ்வர் கலசங்களைப் பெற்ற நாளும் அக்ஷய திருதியை நாளன்றுதான்
9. வனவகத்தின்போது கடும் தவழி செய்த தர்மரின் முன்னால் காட்சிதந்த ஆரியபகவான் அன்னவளம் குன்றத அக்ஷயப்பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்
0 ஏழ்மை என்பதற்கே எடுத்துக்காட்டாக இருந்த குசேலர் கண்னன் கூறிய அக்ஷயம் என்ற சொல்லால் குவோழ்வு பெற்றதும் திருதியை தினம் ஒன்றில்தான்
தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். பிரவ எனத்தொடங்கி அக்ஷய
TTTBT L TTTTTTT kTTkBk LGSJTTTTeOLkTeTTkeTkk kTTTTTTTTTTTTTkTT TTTTTTTTTTTTTTTS TkGCTTTTTTTT அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்ற உணர்த்தவே தான்.
ருதியை பற்றிய மேலு
திர்பாருங்கள்
பிதழ் விளம்பரத்தொடர்புகளுக்கு
F: 011 5519222 E. premenclogmail.com

Page 22
យម្បិញម៉ាឃី 22 இசைக்கலை
ஹார்மோனியத் அதன் வள
றிஸ்டியன் கோட்டிலிப் கிறட் சில்டன் என்னும் பேராசிரியர் ஒருவர் காற்று இசை வாத்தியமொன்றை உருவாக்கினார். அவரது அரிய கண்டுப்பிடிப்பினை கெளரவிக்கும் முகமாக கி.பி.1780ஆம் ஆண்டளவில் அவ ருக்கு அவ்வருடத்தின் உயர் விருதினை, இப்பிரிவில் அக்கடமி வழங்கிக் கெளரவித்தது.
இதனைத் தொடர்ந்து காப்பிறயல் ஜோசப் கிறனை என்பவர் ஏறத்தாழ மற்றுமொரு காற்று வாத்தியத்தினை இசை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இத்தகைய அரிய இசை வாத்தியமானது இயல்பாகவே மனித மனத்தைத் தொட்டு நெகிழ வைக்கும் பாவரசம் மற்றும் ஏற்ற இறக்கம் ஆகியவற்றுடன் கூடியதாகவும் உணர்வியல் பூர்வமானதாகவும் விளங்கியது.
காலக்கிரமத்தில் கார்பியல் ஜோசப் போல், வடிவமைக்கப்பட்ட காற்று இசைக்கருவியினை மேலும் மெருகூட்டி தொழில்நுட்பவியல் ரீதியில் உயரிய உத்தியியல் உபாயங்களுடன் தொழில் நுட்ப வல்லுனர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட ஒர் அரிய கருவியினைக் கண்டுபிடித்தார். அக்குறிப்பிட்ட கருவியே ஹார்மோனியம் எனப் பெயர் பெற்றது. அடிப்படையில் ஹார்மோனியம் எனப் பெயரிடப்பட்ட அக்குறிப்பிடப்பட்ட வடிகமைப்பை மேற்கொண்ட இத்தொழில்நுட்பவியலாளர் காலக் கிரமத்தில் பாரிஸ் மா நகரில் இருந்து அமெரிக்காவிற்கு பயணத்தை மேற்கொண்டு குடியேறினார் என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
அடிப்படையில் ஹார்மோனியம் என்னும் பெயரானது 40ஆம் ஆண்டளவிலேேய பிரபல்யமாகியிருந்தது. காலக்கிரமத்தில் காலத்தின் தேவைக்கும் சமூக பாவனை நிலைப்பாட்டிற்குமைய பல வகைப்பாட்டில் பரிமாண படிமுறை வளர்ச்சியினைப் பெற்றுக் கொண்டது என்றால் அது மிகையாகாது.
காற்று வாத்தியமான ஹார்மோனியமானது காற்றினை உள்வாங்கி உள்விசை மூலம் காற்றை வெளித்தள்ளி, கட்டைகள் மூலம் அமுக்கி, அக்கட்டைகளின் ஒலிநாதத் தின் மூலம் பலதரப்பட்ட ஒலி அதிர்வு நாதங்களைத் தருகின்றது.
ஹார்மோனியமானது 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்கிய ஓர் ஆதாரபூர்வமான இசையுரு பெற்ற கருவியாக விளங்கியது. இக்கருவி பாரிய பாரமற்றதாகவும் எடை, உயரம் ஆகியவற் றில் மேற்கத்திய இசைக்கருவியான பியானோவிலும் பார்க்க குறைவானதாகவும் காணப்பட்டது. இலகுவில் எடுத்துச் செல்லக் கூடியதாகவும் இலகுவில் கையாளக்கூடிய கருவியாகக் காணப்பட்டதன் காரணத்தால் இக்குறிப்பிட்ட

தின் வருகையும் Ifáféflu. IíD
கருவியின் பாவனைப்பயன்பாடானது உலகளாவிய ரீதியில்
- சுபாஷினி பத்மநாதன்
பல பாகங்களிலும் பரவி வளரலாயிற்று. குறிப்பாக கீழைத்தேய நாடுகளில் அதன் சீதோஷண கால நிலைபாட்டிற்கமையவும் கையாளும் முறைமைக்கு ஏற்ற வகையிலும் படிப்படியாக ஹார்மோனியத்தின் பயன்பாடு அதிகரித்தது.
காலவோட்டத்திற்கமைய ஏராளமான பலதரப்பட்ட வடி வமைப்பினை, மாதிரியினைக் கொண்ட ஹார்மோனியம் வழக்கத்தில் வந்தன எனலாம். சிறிய அமைப்பிலான ஹார் மோனியமானது கீபோர்ட் அமைப்பிலான வடிவமைப்பைக் கொண்டது. இது அடிப்படையில் கீபோர்ட் வடிவமைப்பு வளர்ச்சிக்கு உதவியது எனலாம்.
சில ஹார்மோனியங்களாவன கால்களால் அமுக்கி, அழுத்தி காற்றை உள்வாங்கி நாத ஒலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. மேலும் சில மின்னியல் ரீதி யில் இணைக்கப்பட்டனவாகவும் விளங்கின.
தமிழில் ஹார்மோனியப்பெட்டி எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. காலக்கிரமத்தில் புதிய புதிய பல கண்டுபிடிப்புகள் இசைத்துறையில் எழுந்தன. குறிப்பாக 1930ஆம் ஆண்டளவில் ஒர்கன்’ என்னும் இலகுவில் ஊதிக் கையாளும் காற்று வாத்தியமொன்று மேற்கத்திய இசை உலகில் எழுந்தது. இவ் ஒர்கன் வாத்தியமான மேற்கத்திய இசையுலக வளர்ச்சி படிக்கல்லில் எழுந்த மற்றுமொரு படிகல் வளர்ச்சி எனலாம்.
பல வகையான பியானோ கட்டைகளை வரிசையாக வடி வமைக்கப்பட்ட ஆனால் ஊதுகுழல் வாத்தியமாக ஒர்கன் பல நாத ஒலி அம்சங்களை வெளிப்படுத்துவதாக விளங்கியது.
ஹார்மோனியத்தின் மேலும் ஒரு படிமுறை வளர்ச்சியாகவே பெரிதும் ஒர்கன் கணிக்கப்பட்டது. சிறிது சிறிதாக ஹார்மோனியத்தை அடிப்படையாகக் கொண்டு கா லக்கிரமத்தில் வளர்ச்சியுற்ற ஒர்கன், கீபோர்ட் என்பன கா லக்கிரமத்தில் ஹார்மோனியத்தின் இடத்தைப் படிப்படி யாக ஆட்கொண்டன.
ஹார்மோனியத்தின் உற்பத்தியில் ஈடுபட்ட ஏராளமான மேற்கத்திய கம்பனிகள், காலக்கிரமத்தில் பல சிரமங்களை எதிர் கொண்டன. குறிப்பாக மட்டுப்படுத்தப்பட்ட உதிரிப்பாக உற்பத்தி இதனால் இயல்பாக ஏற்பட்ட உதிரிப்பாகத் தட்டுப்பாடு என்பனவும் அடிப்படை ஹார் மோனிய உற்பத்தியினைப் பெரிதும் பாதித்தன எனலாம்.
தென்கிழக்கு நாடுகளில் ஹார்மோனியப் பயன்பாடு காலக்கிரமத்தில் பல தாக்கங்களையும் மாற்றங்களையும் எதிர் கொண்டன. தென்கிழக்காசிய நாடுகளில் ஹார்மோனி யம் பெரிதும் நிலத்தில் வைத்தே இசைக் கலைஞர்களால்

Page 23
கையாளப்பட்டன. பெரும்பாலும் வாய்ப்பாட்டு இசைக்கு உதவும் முக்கியத் துணை வாத்தியமாக ஹார்மோனிய இசை வாத்தியம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பெரிதும் முற்பக்கத் தில் பியானோ அழுத்தக்கட்டைகளும் பின் பகுதியானது தோல்கள் உள்வாங்கி விரிவிசை அழுத்தப் பகுதியும் கொண்டு கையாளப்பட்டது.
கீழைத்தேச நாடுகளில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இசைப் பாரம்பரியத்தில் ஹார்மோனியத்தின் பாவனை பயன்பாடு கணிசமாக இடம் பிடித்திருந்தது. குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் இந்திய இசை உலகில் ஹார்மோனியப் பயன்பாடு பெரிதும் கையாளப்பட்டது. அத்துடன் இலகுவில் எடுத்துச் செல்லக் கூடிய ஒர் வாத்தியமாகவும் அதேசமயம் இலகுவில் கையாளக் கூடிய வாத்தியமாகவும் ஹார்மோனியம் கருதப்பட்டது. பெரும்பா லும் இந்தியாவில் பாவனையில் கையாளப்பட்ட ஹார்மோ னியம் பெரிதும் பிரான்ஸ் நாட்டு ஹார்மோனியத்தை அடிப் படையாகக் கொண்டு எழுந்தது எனலாம்.
கல்கத்தாவை அடிப்படையாகக் கொண்ட கோஸ் என்ப வர் ஹார்மோனியத்தைப் பெரிதும் இந்திய இசை உலகில் நவீனப்படுத்தினார். இந்தியக் கலை பாரம்பரியத்தில் தனக் கெனத் தனியிடத்தைப் பிடித்த ரவீந்திரநாத் தாகூர் தனது தனிப்பட்ட கலை நிகழ்வுகளுக்கு இவ்வரிய இசை வாத்தி யக்கருவியினை உணர்வியல் உள் உணர்வு ஊட்டப்பெரி தும் பயன்படுத்தினர். இந்திய ஹார்மோனியங்கள் ஒட்டு மொத்தத்தில் கைகளால் இராகச் செறிவுக்கும் இராக நுணுக் கங்களுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் ஒரு கையால் அழுத்தப்பட்டு மறுகையால் காற்றுவிசை வாங்கியான
தோல் வாங்கி முன்னும் பின்னும் ஆட்டப்பட்டு வாசிக்கப்ப டுகின்றது.
ஹார்மோனியம் ஏறத்தாழ வட இந்திய இசை பாரம்பரி யத்திலும் விட தென்னிந்திய பாரம்பரியத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மராட்டி இசையிலும் இதன் பங்களிப்பு கணிசமாக இடம் பிடித்திருக்கின்றது. 20ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய ஆதிக்கத்தின் பிடியில் இருந்து
 

ថាហ្វ្រប៉ារ៉ៃរឺ
23
இந்தியாவை விடுவிக்கும் விழிப்புணர்ச்சி பேரணியினரின் தூண்டுதலினால் ஹார்மோனியப் பாவனைப் பயன்பாடு ஒரு குறிப்பிட்ட அளவு தவிர்க்கப்பட்டது அல்லது பின் தள்ளப்பட்டது எனலாம். ஹார்மோனியம் தமிழ் நுட்ப ரீதி யில் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள்ளேயே வடிவமைக் கப்பட்ட விசைக்கருவியாகும். சுருதி நிலைப்பாட்டை தேவைக்கும், சந்தர்ப்பத்திற்கும் அமைய மாற்றி அமைப்ப தென்பது கடினமானது அல்லது முற்றிலும் மாற்றியமைக்க முடியாததொன்றாக விளங்குகின்றது. இத்தகைய சில அடிப் படை சுருதி மாற்றீட்டில் எழுந்த சில அடிப்படை அசெளகரியங்களால் காலக்கிரமத்தில் இதன் பயன்பாடு கணிசமான அளவு நலிவடைந்தது எனலாம். மேலும் ஹார்மோனியத்திற்கு பதில் மாற்றீடு கருவிகள் வழக்கத்தில் புகுந்து கொண்டன.
எது எவ்வாறாயினும் இன்றுவரை ஹார்மோனியப் பாவனைப் பிரயோகமானது இந்து, சீக்கிய மக்களின் பக்தியியல் சார் பாடல்கள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை ஆகிய பஜனைகளில் அதிமுக்கிய இடம் பிடித்துள்ளது.
ஹார்மோனியத்தின் பாவனைப் பயன்பாடானது ஒட்டு மொத்தத்தில் தபேலா மற்றும் டோலக் ஆகிய தாளலய வாத் தியங்களுடன் ஒன்று கூடியே பயன்படுத்தப்படுகின்றன.
வித்தியாக்கர் என்பவர் இந்திய இசை அமைப்பில் இருபத்தியிரண்டு சுருதி நிலை தேவைக்கமைய ஹார்மோனியத்தை வடிவமைத்து இந்திய இசை உலகிற்கு அளித்தார். கீழைத்தேய இசைவடிவங்களாக இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தானிய சுதேச இசைவடிவங்களில் இதன் பயன்பாடு இன்றியமையாத கருவி இசை வாத்திய மாக விளங்குகின்றது.
குறிப்பாக கிராமிய இசை வடிவங்களுக்கும் சாஸ்திரீக இசை வடிவங்களுக்கும் மெல்லிசை வடிவங்களுக்கும் வெறும் மெட்டு இசை வடிவங்களுக்கும் ஹார்மோனியம்
உயர்நாதம் அளித்து உணர்வு ரீதியான உத்வேகம் அளித்து வரும் அரிய இசை கருவி எனலாம்.
త్ర

Page 24
聽
 

நவநாயகர்கள் - 2
சந்திரன்
கலாபூசணம் வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
அலைகடல் அமுதந்தன்னில் அன்று வந்துதித்து மிக்க கலைவளர் திங்களாகிக் கடவுளோர்க் கமுதம் ஈயும் சிலைநுதல் உமையாள் பங்கன் செஞ்சடை பிறை யாய மேரு மலை வலமாக வந்த மதியமே போற்றி! போற்றி!
சூரியனுக்கு அடுத்தபடியாக நவக்கிரக மண்டலத்தில் முக்கிய இடம் பெறுபவன் சந்திரன். சந்திரனை விரும்பாதவர்கள் யாருமிலர். சந்திரனின் தண் கதிர்களே பயிர்களின் வளர்ச்சிக்கு உதவிசெய்கிறன. அதனால் ஒஷதீசன்" என்று பெயர் பெறுகின்றான். சந்திரனின் தண்ணொளியைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். குழந்தைகள் முதல் பெண்கள், ஒவியர்கள், கவிஞர்கள் எல்லோராலும் 'லோகப்ரியனாகப் பாராட்டப் பெறுகிறான். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் புகார்க்காண்டம் மங்கல வாழ்த்துப்பாடலில் முதற் பாடலாக சந்திரனை வணங்குமுகமாக;
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண்குடைபோன்றிவ் வங்கண் உலகளித்த வான்' இத்தொடர்நிலை செய்யுட்குச் சிறந்த மங்கல மொழியாதலின் திங்களை முற்கூறினார் என்று அடியாருக்கு நல்லார் சந்திரனுக்குச் சிறப்புச் சேர்ப்பார்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது பல பொருட்கள் தோன்றின. அதில் அமிர்தத்துடன் வெளி வந்தவன் சந்திரன். வாசுகி நஞ்சைக் கக்கிய பொழுது தனது அமுத கிரணத்தால் அமரர்களைக் காத்தவன் சந்திரன். சிவபெருமானின் திருமுடி மீது அமரும் பேறுபெற்றவன்.
அந்தியாரண மந்திரத் தன்புடன் இவனை வந்தியாதவர் மண்ணிலும் வானிலும் இல்லை’ என்று வேதமும் வணங்கும் பெருமை படைத்த இவனின் பெருமையை வில்லி புத்தூரார் பாடுகிறார்.
வேதம் சந்திரனை ‘ஸோமன் என்றும் 'சந்திரமா’ என்றும் அழைக்கிறது. தக்ஷப்பிரஜாபதி கதை யாவரும் அறிந்ததே. தக்ஷனின் சாபத்தால் தேய்ந்து வளரும் நிலை சந்திரனுக்கு வந்ததால் தேய்பிறை, வளர்பிறை ஏற்பட்டது. கந்தபுராணத்தில் சந்திரனின் வரலாறுகளைக் காணலாம். சந்திரன் தூய வெண்ணிறமுடையவன். அமுத கலைகளே அவனது கிரகங்கள். "சிற்பரத்தினம்’ என்னும் நூல் சந்திரனைத் தேரில் அமர்ந்த கோலத்தில் காட்டுகிறது. ஆலயங்களில் சந்திரன் பரிவார தேவதைகளில் ஒருவன். நவக்கிரக தோத்திர சங்கிரகம்’ என்னும் நூலின் இவனுக்கு இருபத்தெட்டு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாழ்விற்கு வேண்டிய அமுதத்தை அளிப்பதால் சுதாகரன், குமுத மலரை மலர்த்துவதால் குமுதப்பிரியன், மானாகிய

Page 25
மறு உள்ளதால் 'சசாங்கன், பணியை உண்டாக்குவதால் 'ஹிமகரன், ரோஹிணியிடம் அதிக அன்பு கொண்டவன் ரோஹிணிபதி, அந்தணர்களின் தலைவன் தவிஜராஜர், இரவிற்கு உரிமையுடையவன் நிசாகரன், மூலிகைகளுக்கு
உயிரூட்டுவதனால் 'ஒளஷதீசன்", இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் சந்திரனே கணவன் ஆகையால்
நட்சத்திர நாயகன்.
இராசிச் சக்கரத்தில் கடகம் சந்திரனின் ஆட்சி வீடு, இடபம் உச்ச வீடு, துலாம் நீச வீடு. தகரம் சந்திரனுக்கு உகந்த உலோகம். சந்திரன் ஆதிக்கம் வேண்டுபவர்கள் மோதிரத்தில் நல்முத்தைப் பதித்து அணிந்தால் நன்மை gD L6ÖÖTL—IT(55LD.
உபநிடதங்களிலும் புராண நூல்களிலும் சந்திரனைப் பற்றிய சுவையான செய்திகள் உள்ளன. கந்தர்வ மன்னன் ஒருவன் சந்திரனை சிறைப்பிடித்து விட்டான். அமிர், தாரை இல்லாமல் தேவர்களும் முனிவர்களும் வாடினார்கள். வாக்கையே (சொல்) ஒர் அழகிய மங்கையாக்கி கந்தர்வ வேந்தனிடம் அனுப்பி வைத்தார்கள். மங்கையின் எழிலிலும், வாக்கு வன்மையிலும் கட்டுண்ட மன்னன் சந்திரனை விடுவித்ததாக ஒரு செய்தி ஐதரேய பிராம்மணத்தில் காணப்படுகின்றது.
காயத்திரி தேவியின் உதவியால் சந்திரனை விடுவித்ததாக 'சதபத பிராம்மணம் கூறும்.
தைத்ரிய உப நிடதத்தில் சந்திரனைப் பற்றிய வேறொரு குறிப்பும் உண்டு. தக்கனின் இருபத்தேழு பெண்களையும் சோமன் மணந்து கொண்டு உரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டினான். இந்த பாரபட்சச் செயலை தக்கனின் பெண்கள் தந்தையிடம் முறையிட, தக்கன் சந்திரன் ஒளி மங்கி அழியுமாறு சாபமிட்டான். பதினாறு கலைகளைக் கொண்ட சந்திரனின் கலைகள் நாளுக்கு நாள் குறைந்தன. இதனை உணர்ந்து மூன்று கலைகளுடன் சந்திரன் சிவனின் திருவடிகளில் விழுந்து தன்னைக் காக்குமாறு வேண்ட கருணை உள்ளம் கொண்ட மகாதேவன் தன்னடியில் வீழ்ந்த சந்திரனை எடுத்து முடியில் சூட்டிக் கொண்டு
 

25
சந்திரசேகரனாக, பிறைமுடிப் பெம்மானாக விளங்கினான். மேலும் பதினைந்து நாட்கள் தேய்ந்து பதினைந்து நாட்கள் வளரும்படியாகவும் வரம் தந்தான். இதனால் வளர்பிறை, தேய்பிறை தோன்றியது.
நாரதர், சிவபெருமானிடம் கிடைத்தற்கரிய மாம்பழத்தைக் கொடுக்க சிவபெருமானோ அப்பழத்தை தன் இரு புதல்வர்களில் யாருக்குக் கொடுப்பது என்று சிந்தித்து உலகை யார் முதலில் வலம் வருகிறார்களோ அவர்களுக்கே இவ்வரிய கனி உரிமையாகும் என்று அறிவிக்க, இளைய குமாரன் முருகன் தனது மயில் மீது ஏறி உலகை வலம் வரப் புறப்பட்டான். ஆனால் அறிவு கூர்மை மிக்க கணபதியோ தனது தாய் - தந்தையே உலகம் என்று அவர்களைச் சுற்றிக் கனியைப் பெற்றான். பெற்ற கனியை சுவைத்து உண்டான். இதனை விண்ணில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த சந்திரன் கேலியாகச் சிரித்தான். சந்திரனின் இச்செயலைக் கண்ணுற்ற விநாயகன் சந்திரனின் ஒளி மங்கி அழியுமாறு சாபமிட பின்பு தேவர்கள் அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சாபத்தை மாற்றி ஆவணி விநாயக சதுர்த்தியன்று மட்டும் நான்காம் பிறையாகிய சந்திரனைப் பார்த்தவர்கள் துன்பம் அடைவர் என்று மாற்றி அருளினார்.
அதிர்ஷ்டத்தையும், வீரர்களுக்கு வீரத்தையும், மூலிகைகளுக்கு வீரிய சக்தியையும் ஊட்டுபவன் ஸோமனே என்று யஜுர் வேதம் கூறுகிறது.
நவகோள்களில் பூமிக்கு மிக அருகில் இருப்பது சந்திரன்தான். பூமியின் உப கிரகமான அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றி வருகின்றது. அதனால் சந்திரனின் ஒரு பாகமே பூமியில் தெரியும். மற்றைய பகுதி தெரிவதில்லை. பூமியிலிருந்து சுமார் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் மைல் தொலைவிலுள்ளது.
அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் 1965 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் நாள் சந்திரனில் தடம் பதித்தார்கள். அங்கு பிராண வாயுவும், தண்ணிரும் இல்லாததால்
உயிரினங்கள் வாழ முடியாது என்பது அறிவியலாளர்

Page 26

முடிவு. சந்திரனிலிருந்து கொண்டு வந்த மண், கல் போன்ற பெளதீகப் பொருட்களைச் சோதித்துப் பார்த்ததில் அங்கு தங்கமும் வெள்ளியும் அதிக அளவில் இருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள்.
மேலும் சந்திரன் மனித உடலில் அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகிறான் என்று நம்புகிறது மருத்துவ உலகம்.
கோள்களின் நிலையை அறியாமல் எந்த ஒரு மருத்துவராலும் மருத்துவம் செய்ய முடியாது என்பது மருத்துவத் தந்தை என்று போற்றப்பெறும் 'ஹிப்போகிரடிஸின் கூற்று. இன்றும் முழுமதி நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் துன்புறுகின்றார்கள். நோயின் தாக்கமும் அதிகரிக்கிறது. இது கண்கூடான உண்மை. நிலவைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான லூனா (Luna) என்பதிலிருந்து தான் லூனடிக் (Lunatic) 'சித்தப்பிரமை என்ற சொல் உருவாயிற்று.
சூரியனிடமிருந்து சந்திரன் பிரிந்து நிற்கும் நாள் நிறைமதி நாளாகும்.
2500 ஆண்டுகளுக்கு முன் பூம்புகாரில் நிலாக்கோட்டம் இருந்தது. சந்திர வழிபாடு நிலவி வந்தது. மக்கள் பிறையைத் தொழுவதைப் பற்றிக் குறுந்தொகை கோவை நூல்கள் பேசும். திருக்கோவையாரில் ‘மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு என்ற பாடலில் தோழி தலைவியைப் பிறை தொழுமாறு கூறுவதிலிருந்து பெண்கள் பிறை தொழும் வழக்கத்தைப் பேணி வந்தார்கள் என்பது புலனாகின்றது. இஸ்லாமிய பெரு மக்கள் பிறைத் தொழுதலை சிறப்பாகக் கொண்டுள்ளார்கள்.
'பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்தத்தில் பத்துப் பருவங்களும், அம்புலிப் பருவம், சாம, பேத, தானம், தண்டம் என்ற நான்கு பகுதிகளைப் புகுத்திப் பத்துப் பாடல்களால் சுவைபடப் புலவர்கள் பாடும் கவின் மிகு
பகுதி. பாரதியார் ஸோமதேவன் புகழ்' என்ற கவிதையைப் பாடி மகிழ்ந்துள்ளார்.

Page 27
பிறைச் சந்திரனை ஆயுள் வளரும் பொருட்டு வணங்குவார்கள். 1000 பிறை கண்டவர்களுக்கு (சஹஸ்ர சாந்திர தரிசனம்) 'சதாபிஷேகம் என்னும் சாந்தி செய்வார்கள்.
சந்திரனை முதலாகக் கொண்டு 'சாந்திரமானம் என்னும் காலக் கணிப்பை தெலுங்குமொழி பேசும் மக்கள் கைக்கொள்கிறார்கள்.
'சந்திரகாந்தக் கல்’ என்ற ஒரு கல் உண்டு. சந்திரனின் ஒளிபட்டால் நீர் துளிர்க்கும். எந்நேரமும் தண்மையாக இருக்கும் பொருட்டு முற்காலத்தில் மன்னர்கள் இக்கற்களினால் மாளிகைகள் அமைத்து வாழ்ந்தார்கள் என்பது செய்தி.
பிரகஸ்பதியின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்தவன் புதன். சந்திர பகவானின் திருத்தலமாக விளங்குவதில் முதன்மை பெற்றுத் திகழ்வது திருப்பதி வேங்கடவனின் திருமேனியில் சந்திரனின் அருளும் இணைந்துள்ளது. திருப்பதிப் பெருமானை தரிசித்து அருகிலுள்ள திருச்சானூர் சென்று அலர்மேல்மங்கைத் தாயாரையும் தரிசித்தால் எண்ணிய காரியம் நிறைவேறும். ஜாதகத்திலோ, கோசரத்திலோ சந்திரன் நன்றாக அமையாத தோஷமும் நீங்கும்.
சந்திரத் தலங்களாக, திங்களூர், திருவக்கரை, திருக்கருகா வூர், திருத்திலதைப்பதி, திரு இடைமருதூர், திருக்கோவ லூர், நீர்பழனி முதலிய தலங்களும் சிறப்பானவைகளாகும்
சந்திரனுக்குரிய காயத்திரி: 'பத்மத்வஜாய வித்மஹேற வுேறமருபாய தீமஹறி தந்ந ஸோம, பிரசோதயாத்'
சந்திரனுக்குரிய துதி
ததிஸங்க துஷாராபம் கூழிரோதார்ணவ ஸம்பவம் நமாமி சசிநம் ஸோமம் சம்போர் மகுட பூஷணம்’
 
 
 
 
 
 
 
 
 
 
 

& கலைக்கேசரி

Page 28

இலங்கையில் தமிழர் பிரதேசங்கள்
கலாநிதி சி.பத்மநாதன் தகைசார் பேராசிரியர், வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திகாலம் முதலாக இலங்கையின் மூன்றிலொரு பகுதியிலே தமிழர் வாழ்ந்துள்ளனர். அந்நிலப் பகுதி வடமேற்கிலே புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றிலிருந்து வடக்கு நோக்கிப் பரந்து, யாழ்ப்பாணக் குடாநாடு, அதனைச் சார்ந்த தீவுபற்று என்பவற்றை உள்ளடக்கி, அங்கிருந்து தென்கிழக்காகத் திரும்பிக் குமணமுனை வரையான கிழக்குக் கரையோரம் முழுவதும் பரவியுள்ள, தொடர் நிலப்பரப்பாகும்.
இந்நிலப் பகுதியிலே தமிழ் மொழியே வழங்கியது என்றும் அம்மொழியைப் பேசும் சமூகங்களைச் சேர்ந்தவர்களே அங்கு வாழ்ந்தனரென்றும் அங்கு ஒரு காலகட்டத்தில் ஆட்சி புரிந்த போர்த்துக்கேய, ஒல்லாந்த அதிகாரிகளும் அவர்களின் தேசங்களைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானியர் ஆட்சியிலும் அதற்குப் பின் 1956 ஆம் ஆண்டு வரையிலும் இந்நிலை தொடர்ந்தும் காணப்பட்டது என்பதைக் குடித்தொகை மதீப்பீட்டு விபரங்கள் உறுதிப் படுத்துகின்றன.
இங்கு வழங்கும் தமிழ் மொழியிலே சிங்கள மொழிக்கலப்பு சிறிதளவேனும் ஏற்படவில்லை என்பது மொழியியல் ஆய்வுகளின் முடிவாகும். புத்தளம், கற்பிட்டி, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு என்பன இந்நிலப் பகுதியில் அடங்கிய தனித்துவமான பிரதேசங்கள் ஆகும். புவியியல் சார் நிலைகளும் வரலாற்று அம்சங்களும் ஒவ்வொரு பகுதியின் சிறப்புகளுக்கு ஏதுவானவை. வாணிபம், பண்பாடு, சமயநெறிகள், சமூக வழமைகள் ஆகிய துறைகளில், இந்நிலப் பகுதியிலே தென்னிந்தியச் செல்வாக்கு காலாகாலம் ஏற்பட்டுள்ளது. அது ஆதிகாலம் முதலாகத் தொடர்சியாக ஏற்பட்ட ஒன்றாகும்.
இங்கு வரையறை செய்யப்பட்ட ஐந்து நிலப்பகுதிகளிற் புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றிலே தமிழ் மொழி பேசுவோரின் நிலை பெருமளவிற்குப் பலவீனமாகி விட்டது. மொழி மாற்றம், குடியேற்றத் திட்டங்களின் மூலம் குடித்தொகையில் எற்பட்ட மாற்றம், சமய மாற்றம் முதலியன இதற்கான காரணங்களாகும். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளின் விளைவாக இத்தகைய மாற்றம் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மையப் பகுதிகளிலும் ஏற்படக்கூடிய சாத்தியம் தென்படுகின்றது.
பூர்வகாலச் சிற்றரசுகள் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலம் முதலாகவே இப் பகுதிகளிற் சுயாட்சி உரிமை கொண்ட குறுநில அரசுகள்
-

Page 29
இருந்தன. ஐரோப்பியரின் ஆட்சிக் காலங்களில் அவை பலவீனமாகிக் காலப் போக்கில் அழிந்துவிட்டன. இப்பகுதிகளில் விளங்கிய குறுநிலங்களைப் 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம், தமிழக வழமையினை அடிப்படையாகக் கொண்டு, வன்னி என்றும் அவற்றின் அதிபர்களை வன்னியனார் அல்லது வன்னிபம் என்றும் குறிப்பிட்டனர். அதனால் வன்னிகள் 13ஆம் நூற்றாண்டில் உற்பத்தியானவை என்ற கருத்து வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வந்துள்ளது. அந்தக் கருத்தினை முற்றாக நிராகரிக்க வேண்டிய நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்நிலை புதிய ஆய்வுகளின் விளைவாக உருவாகியுள்ளது. வன்னிகளின் வரலாறு பூர்வ காலத்துச் சிற்றரசுகளின் உற்பத்தியோடு தொடர்புடையதாகும். அது கிறிஸ்து சகாப்தத்திற்கும் முற்பட்டது.
ஆதிகால இலங்கையில் பண்பாட்டு மாற்றமும்
மொழிமாற்றமும் இலங்கையில் வரலாற்றுக் காலத்திற்கு முன்பு, நெடுங்காலமாக, பல்லாயிரம் ஆண்டுகளாக, நுண்கற் காலப் பண்பாட்டு மக்களே வாழ்ந்தனர். அவர்கள் இரும்பு, செம்பு முதலான உலோகங்களை அறிந்திருக்கவில்லை. நுண்ணிய, கூரான கற்களை விலங்குகளின் எலும்புகளிலும் மரத்தடிகளிலும் பொருத்திப் பயன்படுத்தினார்கள். நிலத்தைக் கிளறி, இயற்கையாக உற்பத்தியான கிழங்கு வகைகளை எடுப்பதற்கும் காய்கனிகளை வெட்டுவதற்கும் வனங்களிலே துரத்தி வளைத்துப் பிடிக்கக் கூடிய சிறிய விலங்குகள், பறவைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை வெட்டுவதற்கும் அவற்றைப் பயன் படுத்தினார்கள். அவர்கள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவில்லை. மட்கலங்களை உற்பத்தி செய்யும் விதங்களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
கடற்கரைகளிலே பிடிக்கக்கூடிய கடற் பிராணிகளையும் ஏரிகளிலும் ஆறுகளிலும் வாழும் மீன்களையும் அவர்களாற் பிடிக்க முடிந்தது. அவர்கள் ஆறுகள், அருவிகள், சுனைகள் அமைந்துள்ள இடங்களில் வாழ்ந்தனர். மழை, குளிர், கொடிய விலங்குகள் ஆகியவற்றிலிருந்தும் தம்மைப் பாதுகாப்பதற்காக அவர்கள் குகைகளில் வாழ்ந்தனர். குகைகளும் ஆறுகளும் இல்லாத யாழ்ப்பாணத்திலும் அதற்கண்மையிலுள்ள தீவுப்பற்றிலும் நுண்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. இலங்கையிலுள்ள வேறெல்லாப் பகுதிகளிலும் அவை கிடைத்துள்ளன. இங்கு நுண்கற்காலப் பண்பாடு புதிய கற்காலப் பண்பாடாக (Neolithic Culture)ப் பரிணாம வளர்ச்சி பெறவில்லை.
அண்மையில் அமைந்துள்ள நாவலந்தீவிலிருந்து புதிதாகப் பரவிய பெருங்கற் பண்பாட்டின் மூலமாகவும் அதற்குப் பின் அறிமுகமாகிப் பரவிய பெளத்த சமயம் காரணமாகவும் மிக முன்னேற்றமான பண்பாட்டு வளர்ச்சியும் சமுதாய மாற்றமும் உருவாகின.
ஆதி இரும்புக் காலத்திற்குரிய பெருங்கற்பண்பாடு

கலைக்கேசரி 29
தென்னிந்தியாவில் கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தோன்றிக் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், தெலுங்கு தேசம் ஆகியவற்றிலே துரிதமாகப் பரவியது. நிலையான குடியிருப்புகள், தானிய உற்பத்தி, வயல்கள், தோட்டங்கள் ஆகியவற்றின் உருவாக்கம், உலோகப் புழக்கம் என்பன இந்தப் பண்பாட்டிற்குரிய பொதுவான அம்சங்களாகும். பெருமளவிலே மட்கலங்களை உற்பத்தி செய்து அவற்றைப் பயன்படுத்தினார்கள். கரும்-செம் மட்பாண்டங்கள் இவர்களுக்குரிய சிறப்பான பண்பாட்டு அம்சம்.
பெருங்கற்பண்பாட்டு மக்கள் சரிவான மேட்டு நிலங்களிலே குடியிருப்புகளை அமைத்தனர். அவற்றுக்கு அண்மையில் அவர்களின் விளைநிலங்கள் தாழ்வான பகுதிகளில் அமைந்திருந்தன. தங்கள் அன்றாடத் தேவைக்கும் பயிர்ச்செய்கைக்கும் வேண்டிய நீர்நிலைகளை அமைக்கப் பழகிக் கொண்டனர். தென்னிந்திய தீபகற்பத்திலே இப்பண்பாட்டு மக்களின் குடியிருப்புகளுக்கு அண்மையில் சிறிய ஏரிகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெருங்கற் பண்பாட்டு மக்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் அதாவது இற்றைக்கு 2700 வருடங்களுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைக்கு வரலாயினர். கட்டங்கட்டமாக, நெடுங்காலமாக வந்து கரையோரப் பகுதிகளிலும் உள்ளூர்ப் பகுதிகளிலும் பரவினார்கள். யாழ்ப்பாணத்திலும் தீவுப்பற்றிலும் அவர்களுடைய வருகையோடுதான் ஜனசஞ்சாரமும் மக்கள் குடியிருப்புகளும் ஏற்பட்டன.
வடமேற்கு, வடகிழக்குக் கரைகளில் வந்திறங்கி, உட்புறமாகப் பரவிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் பூர்வ குடிகளான நுண்கற்கால மக்களோடு கலந்து வாழ நேர்ந்தது. இவ்விடத்திலே தென்னிந்தியப் பிராந்தியங்களில் இக்காலமளவில் ஏற்பட்ட சமுதாய உருவாக்கத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அங்கு வடக்கிலிருந்து, கர்நாடகத்திலிருந்து, பரவிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் அங்குள்ள ஆதிவாசிகளான நுண்கற்காலப் பண்பாட்டு மக்களையும் புதிய கற்காலப் பண்பாட்டு மக்களையும் எதிர்கொண்டனர். அதனால் இனக்கலப்பும் பண்பாட்டுப் பரிமாற்றமும் ஏற்பட்டன. அந்தக் கலப்பும் பழந்தமிழ் இலக்கிய LDULI உற்பத்தியாவதற்கு முன்பே நிறைவேறிவிட்டது. முன்னேற்றமடைந்த பெருங்கற் பண்பாட்டு மக்களின் ஆதிக்கத்தில் அடங்கிய புதிய சமுதாயக் கட்டமைப்பொன்று உருவாகியது. அது பல்லினப் பண்பாட்டுச் சார்புடையது. நாகரும் அதில் அடங்குவர்.
ஆதிகால நாகர் அகில இந்தியப் பரிமாணம் உடையவர்கள். இந்தியக் குடியரசின் வடகிழக்கில் நாகலாந்து என்னும் மாநிலமுண்டு. முற்காலங்களில் நாக வம்சத்தவர் கங்கைச் சமவெளியின் தென்பால் அரசு புரிந்தனர். குப்தப் பேரரசனான சமுத்திர குப்தன் அவர்களிற் சிலரின் இராச்சியங்களைக் கைப்பற்றினான். அவனது மகன் இரண்டாம் சந்திரகுப்தனின் தேவியரில் ஒருத்தி
குபேரநாகை. அவள் நாக வம்சத்தவள்.

Page 30
கலைக்கேசரி கி 30
நாகர் எக்காலத்தில் வடக்கிலிருந்து தென்புலம் வந்தனர் என்பது பூர்வீக இந்திய வரலாற்றிலே இன்னும் தெளிவுபடுத்தப்படாத விடயம். ஆனால் புறநானூறு, அகநானூறு, பட்டினப்பாலை முதலிய பழந்தமிழ் நூல்கள் தோன்றிய காலத்திலே நாகரும் தமிழர் சமுதாயத்துடன் கலந்து விட்டனர். அவர்களும் தமிழ் மொழி பேசினர். ஆதிகாலத் தமிழ்ப் புலவரிற் சிலர் நாகனார் என்னும் பெயர் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் இளநாகனார். நாகர் தமிழர் சமுதாயத்திற் கலப்புற்ற பொழுதிலும் தாங்கள் பூர்வீகத்தில் ஒரு தனியான இனக்குழுவினர் என்பதை இன்னமும் மறந்து விடவில்லை.
பெருங்கற்பண்பாட்டு மக்களின் ஈமச் சடங்குகள் பழந்தமிழ் நூல்கள் தோன்றிய காலம் தென்னிந்தியாவிலே பெருங்கற் பண்பாட்டுக் காலத்தின் இறுதியான காலகட்டமாகும். பெருங்கற்பண்பாட்டிற்குரிய ஈமச்சின்னங்களை விளக்கும் பாடல்கள் பல புறநானூறு, அகநானூறு போன்ற நூல்களில் உள்ளன. கல்லறை, நிலவறை, தாழ்வை, ஈமத்தாழி ஆகியன மேற்குறித்த பண்பாட்டிற்குச் சிறப்பாகவுள்ள ஈமச்சின்னங்கள். இவற்றையும் வேறு சில ஈமச்சடங்கு முறைகளையும் பிற்காலத்துப் பெளத்த சமயப் பிரசார நூலான மணிமேகலையில், அதன் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையில் நூலாசிரியரான சாத்தனார் விளக்குகின்றார்.
பெருங்கற்பண்பாட்டு மக்களின் ஈமச் சடங்குகள் தனித்தன்மை வாய்ந்தவை. ஈமத்தாழிகளை முதுமக்கட் தாழி என்றனர். முதுமக்கட் தாழி செய்தல் போற்றுதற்குரிய கடமையென்றும் அந்நாட்களிற் சிலர் கருதினார்கள். பிற்காலச் சோழ மன்னரில் ஒருவனைப் பற்றிய உலாவொன்றிலே அவனது முன்னோர்களில் ஒருவன் முதுமக்கள் தாழி செய்தோனென்று பெரும் புலவரான ஒட்டக்கூத்தர் புகழ்ந்துரைக்கின்றார். இந்தப் பண்பாட்டு மக்களின் கல்லறைகள் பல சதுரமானவை; சில வட்டமானவை. இலங்கையிலே இவ்விரு வகையான கல்லறைகளும் காணப்பட்டன. கந்தளமவில் உள்ளவை சதுரமானவை. சாட்டி என்னும் தலத்தில் உள்ளவை வட்ட வடிவமானவை. ஆனைக்கோட்டையில் அமைந்திருந்த கல்லறைகள் சதுரமானவை. மட்டக்களப்பில் வாகரையிலே பெருங்கற் பண்பாட்டுக் காலத்துக் கல்லறைகளின் சிதைவுகளைத் தங்கேஸ்வரி கதிர்காமன் அவதானித்து உள்ளார். சில தினங்களுக்கு முன்பு மண்டூரில் அவ்வாறான கல்லறையொன்று இருப்பதாக திருக்கோயில் வாசியான திருவேனிசங்கமம் எமக்குச் சொன்னார்.
பெருங்கற் பண்பாட்டு மக்களிடம் புராதன கால எகிப்தியரிடம் காணப்பட்ட நம்பிக்கைகளை ஒத்த சிந்தனைகள் காணப்பட்டன. எகிப்திய மன்னர்களின் பள்ளிப்படைகளான பிரமிடுகள் பிரமாண்டமானவை. அவை மனிதகுல வரலாற்றில் அதிசயங்களாகிவிட்டன. பண்டைக்கால எகிப்திய மன்னர்கள் சர்வாதிகாரிகள்;
கொடியவர்கள். தங்கள் தேவியரையும் ஆசை

நாயகிகளையும் தமக்கு மிகவும் விசுவாசமான அதிகாரிகளையும் பணிமக்களையும் கொலை செய்வித்து அவர்களின் சடலங்களைத் தங்கள் சடலங்களோடு அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். ஒருவன் இறக்குமிடத்து அவனது ஆவி அங்கும் இங்குமாக அலைந்து சென்ற பின் உடலோடு மீண்டும் வந்து கூடிவிடும் என்பது அவர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் மூலமாகவே மீளுயிர்ப்பு என்னும் கருத்து உலகிற் பரவியது.
பெருங்கற் பண்பாட்டு மக்களும் அவ்வாறு நம்பினார்களா என்பதை அறியுமாறில்லை. ஆயினும் வைதீக மரபிற் போல உடம்பு அழியுமிடத்து உயிர் அழிவதில்லை என்று நம்பினார்கள் போலத் தெரிகின்றது. பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களிற் சில பள்ளிப்படைகளாகும். அவை அளவிற் பெரியவை. சில சமயங்களில் மிக நீளமான வாள்களைக் கிடப்பில் வைத்து, அவற்றின் மேல் இறந்தோரின் சடலங்களை வைத்தனர். நடுவில் அமைந்த கல்லறையினைச் சுற்றி வலம் வரும் பாதையும் அதன் மேற்பகுதியும் மூடப்பட்டுக் காணப்படும். சாந்தாரக் கோயிலமைப்பிற்குப் பெருங்கற் பண்பாட்டுக் கல்லறைகள் மூலமானவை என்ற கருத்து அறிஞரிடையிலுண்டு. அக்காலத்திற்குரிய சில பள்ளிப்படைகளில் வீரக்கல், நடுகல் போன்ற உயரமான கற்களையும் நாட்டியிருந்தனர். தமிழிலே சாசனம் எழுதிய வீரக்கல் புலிமான்கொம்பை என்னுமிடத்திலே காணப்பட்டது. அது பெருங்கற்பண்பாட்டுச் சின்னங்களோடு காணப்பட்டது. அக்கல்வெட்டும் ஆகோள் பூசலில் இறந்தவனைப் பற்றியது. பெருங்கற் பண்பாட்டு மக்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதும் பழந்தமிழ் நூல்களிற் சொல்லப்படும் சமூக வழமைகள் சில அப்பண்பாட்டின் அம்சங்கள் என்பதும் இப்பொழுது தெளிவாகியுள்ளது. வீரரைப் போற்றும் பண்பு, வீரக்கல் அமைக்கும் வழமை என்பன அதிலிருந்து வந்த மரபுகளாகும். பெருற்கற் பண்பாட்டு மக்கள் ஈமத்தாழிகளிலும் கல்லறைகளிலும் உயிர் நீத்தோரின் ஆவிகளுக்குப் பலவகை உணவுகளைப் படையலாக வைத்தனர். சில கல்லறைகளிற் காலாகாலமாகப் போய்ப் படையல் வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்தனர். சவ அடக்கங்களில் வாள், அம்பு, கோடரி, கத்தி முதலிய கருவிகளையும் வைத்தனர். இப்பண்பாட்டு மக்களின் உற்பத்தி முறை, வாழ்க்கை முறை தொடர்பான விபரங்கள் எல்லாம் அவர்களின் ஈமக்காடுகளிலும் குடியிருப்புகளிலும் நடைபெற்ற அகழ்வாய்வுகள் மூலம் கிடைத்தனவாகும். மட்கலங்களும் உலோகப் பொருட்களும் விதவிதமான மணிகளும் கிடைத்தன. மீன், சுறாமீன், சங்கு, நத்தை, மட்டி முதலானவற்றின் எச்சங்களும் ஆடு, செம்மறி, மாடு, குதிரை போன்ற விலங்குகளின் எலும்புகளும் ஈமத்தலங்களிற் கிடைத்துள்ளன. நெல், சாமை, தினை, எள், வரகு முதலிய தானியங்களின் அடையாளங்களும்

Page 31
அவற்றிலே காணப்பட்டன.
பெருங்கற் பண்பாட்டு மக்கள் மந்தைமேய்க்கும் நிலையிலிருந்து முன்னேறி உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு மாற்றமடைந்து விட்டனர். அவர்கள் வயல்களையும் தோப்புகளையும் உருவாக்கி வேளாண்மை செய்தனர். ஏரிகளை அமைத்துச் சிறிய அளவில் நீர்ப்பாசனஞ் செய்யக் கற்றுக்கொண்டனர். பருத்தியினை உற்பத்தி செய்து பஞ்சினை நூலாக்கி ஆடைகளை உற்பத்தி செய்தனர். உலோகப் புழக்கத்தின் காரணமாகச் சமூகத்தில் உலோகத்தொழில் வினைஞர் தோன்றினார்கள். குடியிருப்புகள் ஊர்களாகி அவற்றிற் சில நகரங்களாக வளர்ச்சிபெற்றன. உற்பத்திப் பொருட்களைப் பண்டமாற்றின் மூலம் பரிமாறிக் கொண்டனர். காலப்போக்கில் நாணயங்களும் புழக்கத்தில் வந்தன. ஏராளமான மணிகளையும் உற்பத்தி செய்தனர். தொழில் வழியாகச் சமூகப் பாகுபாடுகளும் தோன்றின. அவர்களிற். கடற்பிரயாணங்களை மேற்கொள்ளும் மாலுமிகளும் காணப்பட்டனர். இவர்கள் இலங்கையிற் சென்று அங்கு குடியிருப்புக்களை ஏற்படுத்தியதன் விளைவாக அங்குள்ள நுண்கற்கால மக்களோடு தொடர்பு கொண்டனர். நுண்கற்கால மக்களிடையே ஒரு வளர்ச்சி பொருந்திய பண்பாட்டின் அம்சங்கள் அறிமுகமாகிப் பரவத் தொடங்கின. அம்மக்கள் ஒரு நாகரிகமுற்ற சமூகமாக மாறிவிட்டனர். அவர்கள் தங்கள் இருப்பிடங்களான குகைகளை விட்டு, வெளியேறிக் குடிசைகள், குரம்பைகள் (சிறுகுடில்) என்பவற்றை உருவாக்கினார்கள். அவற்றின் தொகுதிகள் ஊர்களாயின. பண்டமாற்று நிலையங்கள் சந்தைகளாயின. பெறுமதிமிக்க முத்து, மணி, சங்கு ஆகியவற்றைக் கொள்வனவு செய்தற் பொருட்டு இந்திய வணிகர் சிலர் இலங்கைக்கு வரத்தொடங்கினார்கள். வட இந்தியக் கரையோரப் பட்டினங்களிலிருந்தும் வந்த வணிகர் மூலமாகப் பிராகிருத மொழியும் அறிமுகமாகியது.
பெளத்தம் பரவியமை
இலங்கையிற் பெருங்கற்பண்பாடு பரவியதன் விளைவாகப் பூர்வீகக்குடிகள் ஒரு முன்னேற்றமான, நாகரிகந் தெரிந்த, சமுதாயமாக மாற்றமடைந்த காலத்திலே பெளத்த சமயம் அறிமுகமாகிப் பரவியது. அக்காலத்தில் இலங்கையிலே பல்லினப் பண்பாடு காணப்பெற்றது. தமிழும் வேறு மொழிகளும் வழக்கில் இருந்தன.
பெளத்தம் பற்றிய விபரங்களைக் குறிப்பிடும் மூலங்களில் முதன்மையானது மகாவம்சம். அது இராசதானியை மையப்படுத்திப் பெளத்தம் பரவிய வரலாற்றை விளக்குகின்றது. அது மகாவிகாரையிலே பேணப்பட்ட குறிப்புகளை, அநுராதபுர மன்னர்களின் செயற்பாடுகள் பற்றிய குறிப்புகளை, ஆதாரமாகக் கொண்டு உருவாகிய நூலாகும். அது அரச வம்சத்து வரலாறுகளை மகாவிகாரையினர் கண்ணோட்டத்திலே கூறுகின்ற நூல். அநுராதபுரத்திற் பெளத்த சங்கம் நிறுவப்பட்ட பின்பே மகாவம்சத்துக்கு மூலமான வரலாற்று மரபு உருவாகியது.
 

தஸபி(ட்)டன்"
LD5ITGIT5 அன்
தாட ணாக ர(ா) சந்

Page 32
}ញម៉ាស៊ែប៊ី 32
(No - 6
பருமக மித ஜ(ா)ய (ா)பறுமக ஸதநஸ் அகத - அநக,த
அதற்கு முற்பட்ட காலம் பற்றி எந்தவிதமான ஆதாரங்களும் இருக்கவில்லை. எனவே அந்தக் காலம் பற்றிப் புனைகதைகள் இயற்றப்பட்டன.
விஜயன் கதை, பாண்டுவாசுதேவன் கதை என்பன புனைகதைகள். இதனை வரலாற்றாய்வாளரும் பல்கலைக்கழகப் போதனாசிரியருமான ஜி.சி. மெண்டிஸ் இற்றைக்கு அறுபது வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரைகள் மூலம் நிரூபித்து விட்டார். அக்கட்டுரைகளும் இலங்கைப் பல்கலைக்கழகத்து வெளியீடான சஞ்சிகையில் வெளியிடப்பட்டன. தேவதம்ம ஜாதகம், பதகுஸலமானவ ஜாதகம், வளாஹஸ் ஜாதகம், கடஜாதகம் என்பவற்றிலுள்ள அம்சங்களைச் சேர்த்து இக்கதைகளை உருவாக்கியுள்ளனர் என்பது அவரின் முடிபாகும். ஆயினும், இன்றும் வெளியிடப்படும் இலங்கை வரலாறு பற்றிய நூல்கள் ஆரியர் குடியேற்றம் என்ற அத்தியாயத்துடனே ஆரம்பமாகின்றன. இத்தகைய வரலாறு கறை படிந்தது, முற்றிலும் ஆதாரமற்றது. மகாவம்சம் இலங்கையில் வாழும் எச்சமூகத்தவரையும் ஆரியரென்று குறிப்பிடவில்லை. இது வரை நடைபெற்ற தொல்பொருளியல் ஆய்வுகளில் இலங்கையில் ஆரிய குடியேற்றம் நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பெளத்தம் பரவியதன் விளைவாகப் பிராகிருத மொழி வழக்கும் பரவியது. அதனாற் பேராசிரியர் கா. இந்திரபாலா குறிப்பிடுவதைப் போல மொழிமாற்றம் ஏற்பட்டது.
பெளத்தமும் பிராகிருதமும்
இலங்கையிலே தேவநம்பிய தீசனின் காலத்திற் பெளத்தம் அறிமுகமாகியது. பாடலிபுரத்தில் அசோகனது ஆட்சி நடைபெற்ற காலத்தில் நிகழ்ந்த மூன்றாவது பெளத்த சங்கத்தார் மாநாட்டிலே பல தேசங்களிற் பிடக நெறியைப் போதிப்பதற்குக் குழுக்களை அனுப்புவதென்று தீர்மானித்தனர். அதன்படி மகிந்த தேரர் தலைமையிலான குழுவினை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். அவர் எவ்வாறு அந்நாட்டை அடைந்தார் என்பதை மகாவம்சம் தெளிவாகக் குறிப்பிடவில்லை. கடல் வழியாகவுமன்றி தரைவழியாகவுமன்றி (not by and nor by sea) அவர்கள்
 
 

ஸஜித பருமகள புஸாய லெணெ ಆg GrುಹGrು
இலங்கையினை அடைந்தனர் என்று அந்நூல் கூறும். அவ்வாறாகில் வான்வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால் அந்நாட்களில் ஆகாய விமானங்கள் எங்கிருந்தன? இங்கு மகாவம்சம் கூறும் கதையிற் கற்பனாம்சங்கள் கலந்து விடுகின்றன.
அசோகனின் தேவிகளில் ஒருத்தியான விதிஸாதேவியின் குமாரர் என்று சொல்லப்படும் மகிந்தர் மிகுந்தலைக்கு வந்து, அங்கே தேவநம்பியதீஸனைக் கண்டு, அவனது வேண்டுகோளின்படி அநுராதபுரமான இரசாதானிக்குச் சென்றார் என்பது மகாவம்சக்கதை. அங்கே மகிந்த தேரர் பெளத்த சாசனத்தையும் அதன் நிலைக்களமான மகாவிகாரையினையும் நிறுவினார். அவரோடு கூடி வந்த சங்கத்தார் பிராகிருத மொழி பேசுவோர். பெளத்த சமயத்திற்கு ஆதாரமான இலக்கியம் மிகப்பரந்தது. புத்தர் பெருமானின் போதனைகளையும் ஆதியான சங்கத்தாரின் விஞ்ஞாபனங்களையும் உள்ளடக்கியது. அது மிகவும் விசாலமான இலக்கியத் தொகுப்பு. பிராகிருத மொழியின் செல்வாக்கு அதன் மூலமாகப் பரவியது. ஒரு கலப்பு மொழியான பிராகிருதம் உருவாகியது. பெளத்தம் நுண்கற்காலப் பண்பாட்டு மக்களான ஆதிவாசிகள், அவர்களோடு கலப்புற்ற பெருங்கற்பண்பாட்டு மக்கள் ஆகியோரிடையிற் பரவியது. பெளத்த இலக்கியம் பிராகிருத மொழியில் அமைந்திருந்தமையாற் சமய போதனைகளில் ஈடுபட்ட சங்கத்தார் பிராகிருத மொழியினையே கையாண்டனர். அதனால், அதன் செல்வாக்கு இலங்கையில் நிலவிய பல்லினப் பண்பாட்டுச் சமுதாயத்திலே பரவிப் பொது வழக்காகியது. ஆதிவாசிகளான நுண்கற்கால மக்கள் மிகக் கூடுதலாக வாழ்ந்த இடங்களில் மொழிமாற்றம் ஏற்பட்டது. பிராகிருதம் காலப்போக்கிலே பேச்சு மொழியாகியது. அவர்கள் மத்தியில் வாழ்ந்த தமிழ்/திராவிட மொழியினைப் பேசுவோரும் பிராகிருத மயமாக்கத்திற்குள் அகப்பட்டுவிட்டனர். இலங்கையில் உருவாகிய பிராகிருதம் ஒரு கலப்பு மொழி. அது தமிழ்/ ஆதித் திராவிட மொழிச் சொற்களும் ஆதிவாசிகளின் மொழிகளிலுள்ள சொற்களும்

Page 33
கலந்த மொழி. அந்தக் கலப்பு மொழியின் அம்சங்களை இலங்கைப் பிராமிச் சாசனங்கள் பிரதிபலிக்கின்றன.
இந்தக் கலப்பான பிராகிருதத்திலிருந்து உற்பத்தியானதே சிங்கள மொழி. அதனால் ஒரு கலப்பு மொழிக்குரிய சில அம்சங்கள் அதிலுங் காணப்படுகின்றன. அதிலுள்ள உறவு முறையினைக் குறிப்பிடுஞ் சொற்கள் பெரும்பாலும் தமிழ் மொழி மூலமானவை. அம்மா, தாத்தா, அய்யா, மாமா, அக்கா, நங்கி என்பன அவை. தாய் தந்தையரை LDIT5IT, பிதா என்று சொல்வதே பிராகிருத/சமஸ்கிருத மொழி வழக்கு. பிராமிச் சாசனங்களிலும் அச்சொற்களே வருகின்றன. ஆயினும் பிராகிருதத்தை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியான சிங்கள மொழி வழக்கில் மாதா, பிதா என்பவற்றிற்குப் பதிலாக அம்மா, தாத்தா என்ற சொற்களே இடம்பெறுகின்றன. தந்தை, தாதை என்ற தமிழ் சொற்களை மூலமாகக் கொண்டது தாத்தா. அது சப்தோற்பத்தி அடிப்படையில் சமஸ்கிருத மூலமானதென்று பரணவிதான போன்றவர்கள் வலியுறுத்தக் கூடியதெனினும் பிராகிருத/சமஸ்கிருத மொழி வழக்கில் தாத்தா என்ற சொல் தகப்பனைக் குறிக்கும் சொல்லாக வழங்கியமைக்குச் சான்றில்லை. அது பழந்தமிழ் நூல்களில் வரும் தாதை என்பதற்குச் சமனானது. தாதாக்கள் என்னும் சொல் முக்குவர் வழமையில் 19ஆம் நூற்றாண்டு வரை நிலைபெற்றமை குறிப்பிடற்குரியது.
அக்கா என்பது சுத்தமான தமிழ்ச் சொல். இளம் பெண்களை நங்கை என்பது தமிழ் வழக்கு. சிங்களத்தில்
பரத ஸாகரிகஸ்ஸலிணே
பருமகதிபரே
 
 

& கலைக் និងអ្វី
33
இளைய சகோதரியை நங்கி என்பர். அண்ணனைக் குறிக்கும் அய்யா என்னும் சிங்களச் சொல் அய்(ஜ) என்னும் தமிழ்ச் சொல்லினின்றும் பிறந்தது. பழந்தமிழ் வழக்கில் ஐ(அய்) என்னுஞ் சொல் தலைவன், இறைவன், முதியவன் என்ற பொருள்களைக் குறித்தது. அவ்வி (ஒளவை) என்பது அதன் பெண்பால் வடிவம். ஐ, அவ்வி என்னுஞ் சொற்கள் இலங்கைப் பிராமிச் சாசனங்களிற் பிராகிருத மயமாகி அய, அபிஜ என்ற கோலத்தில் வருகின்றன. தமிழ் மொழிச் செல்வாக்கு உண்டென்பதை ஒப்புக்கொள்ளாதவர்கள் ஆர்ய என்ற சமஸ்கிருதச் சொல்லே அய என்பது என விளக்குவர். ஆனால் உறவு முறையினைக் குறிப்பிடும் சொல்லாக ஆர்ய என்பது பிராகிருத மொழிகளில் வருவதில்லை. ஆர்ய என்பது இனம், வைதிகப் பண்பாட்டு நெறி, சான்றாண்மை என்ற பொருளில் வரும். ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் என்பது மணிவாசகம். ஆர்ய என்ற சொல்லின் பிராகிருத/பாளி மொழி வடிவம் அரிய என்பதாகும். அரிய என்ற சொல்லே மகாவம்சத்தில் உள்ளது. எனவே, பிராமிச் சாசனங்களிற் காணப்படும். அய என்பது அய்(ஜ) என்ற தமிழ்ச் சொல்லின் பிராகிருத வடிவம் என்ற கருத்தை இலங்கை வரலாற்று ஆய்வாளருள் முதன்மையானவர்களில் ஒருவரான லெஸ்லி குணவர்தனா முன்வைத்துள்ளார். இதன் பின்னரே, பல்கலைக்கழக மட்டத்திலுள்ள வரலாற்றுப் போதனாசிரியர்களிற் சிலர் பிராமிக் கல்வெட்டுகளிலே தமிழ் மொழிச் சொற்கள்
இருக்கக் கூடும் என்பதை ஒப்புக்கொள்ள முற்பட்டனர்.
a

Page 34
Runuuëh SFLMÄN முக்கியத்துவ
Ա Ո| Ա | | | Տ ,
(ଗ) ற்கு மெக்ஸிக்கோ மற்றும் all மத்திய
அமெரிக்காசைச் சேர்ந்த மாயன் இன மக்களுக்கு
சுமார் மூவாயிரம் ஆண்டு கால சிறந்த
வரலாற்றுப் பாரம்பரியமுள்ளது. மெலேபா அமெரிக்காவின்
மிகச் சிறப்பு வாய்ந்த கலாசாரத்தைக் கொண்ட மக்களில் மாயன்கள் மிகவும் பேசப்பட்ட ஒர் இனமாக விளங்குகின்றார்கள். கிறிஸ்துவுக்கு முன் சுமார் 2600ஆம் ஆண்டுகளில் யுகாதானில் உருவானதாகக் கூறப்படும் இவ்வினம் கி.பி. சுமார் 250ஆம் ஆண்டுகளில் பிரசித்தி பெற்றவர்களாகி தற்போதைய மெக்ஸிக்கோ, கெளதமாலா
வட பொலிஸ் மற்றும் மேற்கு வெறான் டுலாஸ் ஆகிய இடங்களில் வாழ்ந்துள்ளனர்.
மாயன் மக்கள் 'மறைந்து விட்டார்கள் எனப் பொதுவாக கருதப்பட்டு வந்தாலும் மேற்குறிப்பிட்ட பிராந்தியங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அத்துடன் அவர்கள் இன்றும் மாயன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியையே பேசி வருகிறார்கள். மாயன்களின் மிகச் சிறந்த நாகரீகம் நிலவிய காலம் கி.பி. 200ஆம் ஆண்டில் இருந்து 900ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி என கூறப்படுகிறது. இச்சிறப்பான நாகரீக யுகத்தின் கலை
மற்றும் புதிய உலகின் மிக அழகியதுமாகும் எனப் பலர் கருதுகின்றார்கள்.
ஆலயங்களில் காணப்படும் சுண்ணாம்புச் சாந்து
பூசப்பட்ட சுவர்ச் சிற்பங்களும் கோபனின் சிற்பங்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குகளுக்கு Juh Sisyfišišti
allmerրպմո
மிகச் சிறந்தவையாகும். இவை மனித உருவின் எழிலையும் மிகச் சரியான கணிப்பையும் எடுத்துக் காட்டுவதுடன் பழைய உலகின் சிறந்த நாகரீகப் பின்னணியில் வாழ்ந்த புதைபொருளாய்வுகளையும் ஞாபகப்படுத்துகின்றன. சிறப்பு வாய்ந்த மாயன்களின் அபிவிருத்தியடைந்த ஒவியக்கலை குறித்த எடுத்துக் காட்டுகளை அதிர்ஷ்டவசமாக இன்றும் நிலைத்திருக்கின்ற மட்பாண்டங்கள் மற்றும் பொனாம்பக்கில் உள்ள கட்டிடம் ஆகியவற்றில் மூலமாகவே காணக்கூடியதாக உள்ளது.
நாகரீகம் அடைந்த மக்கள் குழுவினரில் உள்ள கலைஞர்கள் தமது பணியில் தமது பெயர்களையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். அத்தகையவர்களில் மாயன்களும் அடங்குவர் என்பதனை அவர்களின் இரகசிய மொழியில் உள்ள விடயங்களைக் கண்டுபிடித்தபோது தெரிய வந்தது. மாயன்களுடைய எழுத்துமுறை உச்சரிப்புக் கலை பற்றிய சாஸ்திரக் குறியீடுகள் (Phonetic symbols) மற்றும் கையெழுத்தின் விசேட பேதம் (Ideograms) ஆகியவை கலந்த ஒன்றாக விளங்குகின்றது.
LDTTULITT. எழுத்துக்களில் சங்கேத வசனங்களை மொழி பெயர்ப்பதென்பது மிகக் கஷ்டமான ஒரு நடவடிக்கை ஆகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அதில் ஒரு சில முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. அவற்றில்
பெரும்பாலானவை

Page 35
2
சாஸ்திரம் ஆகியவை சம்பந்தப்பட்டு இருந்தன. ஆனால் 1960ஆம் ஆண்டுகளிலும் 1970ஆம் ஆண்டுகளிலும் இருந்து பிரதான திருப்பம் ஏற்பட்டது. அதன் பின்னர் துரிதமாக வாசிக்கப்பட்டது. அதனால்
தற்போது, பெரும்பாலான மாயா சாஸ்திரங்கள் அவற்றின் மூலமொழியில் கிட்டத்தட்டப் பூரணமாக வாசிக்கப்படக் கூடியதாக உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக பொறாமை கொண்ட ஸ்பானிய குருமார்கள், அப்பகுதியை பிடித்த சிறிது காலத்திலேயே, மாயா நூல்களை எரிக்க உத்தரவிட்டனர். ஸ்பானியர்கள் வந்து சேர்ந்தபோது மாயர்கள் விட்டகன்று சென்ற நகரங்களில் L ᎱᎶu) கல்வெட்டுக்கள் அழியாது
நிலைத்திருக்கின்றன. அத்துடன் பண்டைய நூல் - நிலையங்களில் இருந்து மூன்றே மூன்று நூல்களும் நான்காவது நூலின் சில பகுதிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. மாயா புதைபொருள் ஆய்வில் சற்சதுர வடிவிலான பிலாஸ்டர் வகையான துண்டுகளும் ஒவியச் சீவல்களும் அடிக்கடி கிடைக்கக் கூடியதாகவுள்ளன.
மாயன்கள் அல்லது அவர்களது ஒல்மெக் முன்னோர்கள் பூச்சிய (0) கோட்பாட்டை சுதந்திரமாக அபிவிருத்தி செய்ததுடன் ஒர் அடிப்படை 20 எண்ணும் முறையைப் பாவித்துள்ளனர். இலட்சக்கணக்கான அளவு கொண்டதான
கணக்குகளை அவர்கள் செய்து கொண்டிருந்த
சம்பவங்களைக் காட்டும் கல்வெட்டுகள் உள்ளன. அவர்கள் மிக மிக நுணுக்கமான வானியல் அவதானிப்புகளைச் செய்துள்ளனர். சந்திரன் மற்றும் கிரகங்களின் அசைவுகள் குறித்த அவர்களது கணிப்புக் குறிப்புகள் வெறும் கண்களால் பார்த்து அவதானித்து கணக்குக் குறித்தமை வேறு எந்த நாகரீக மக்களின் செயற்பாட்டுக்கும் சமானமாக அல்லது அதற்கு மேலானதாக இருந்துள்ளன.
சூரிய வருடத்தின் நீளம் குறித்த மாயன்களின் கணிப்பீடு கிரகோரியன் நாட்காட்டியை (கலண்டர்) விட எவ்விதமோ உயர்ந்ததாக உள்ளது. கிறிஸ்துவுக்கு முன் சுமார் 1800ஆம் ஆண்டுகளில் முற்கால மாயன் குடியிருப்புகள் இருந்துள்ளன. இம் மாயன்கள் தேர்ந்த விவசாயிகளாகவும் விளங்கியுள்ளனர். சோளம், அவரை வகைகள், ஸ்டுயாஸ் மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவற்றைப் பயிரிட்டுள்ளனர். கி.மு. 300ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் பெரிய உஷ்ண வலய மலைக்காடுகளை வெட்டித் திருத்தியதுடன் நிலத்துக்கு அடியிலான நீர் குறைந்து காணப்பட்ட இடங்களில் நீரைச் சேமித்து வைக்க,நிலத்துக்கு அடியிலான பெரிய நீர்த் தேக்கங்களையும் கட்டியுள்ளனர். நீர்பாசனத்திலும் சிறந்து விளங்கி உள்ளனர்.
விவசாயத்துறையுடன் மட்டும் நின்றுவிடாது இம் மக்கள் கோவில் பிரமிட்டுகளைக் கட்டுதல் நகரக்
 
 
 
 
 
 

அட்டைப்பட விளக்கம்:
மாயன்கள் கலைரசனைமிக்கவர்கள். தற்போது பிரித்தானிய நூதன சாலையில் இருக்கும் இந்த முகமூடி பளிங்குக் கல்லினால் செய்யப் பட்டதாகும். ஆராய்ச்சியாளர்கள் இதை ஆய்வுக்குட்படுத்தியபோது, இன்றையதொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல்வேறு உலோகங்கள் கலந்து 18OO ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப் பட்டுள்ளமை தெரிய வந்தது.

Page 36

கட்டுமானம், கல்லினாலான நினைவுத் தூபிகள் প্রচণ্ড
ஆகியவற்றையும் கட்டுவதில் சிறப்புப் பெற்றிருந்தார்கள்.
கி.பி. 250ஆம் ஆண்டளவில் ஆரம்பமான சிறப்பான காலகட்டம் மாயன் ராச்சியத்தின் பொன்னான காலமாகும். அக்கால கட்டத்தில் 40 நகரங்கள் எழுப்பப்பட்டன. ரிகல், கோபன், பொனம்பக், டொஸ் பிலஸ், கலக்முல், பலென் கியூ ரியோபெக் உட்பட பல நகரங்கள் இதில் அடங்கும். இந்த ஒவ்வொரு நகரத்திலும் 5 ஆயிரத்திலிருந்து 50,000 மக்கள் வரை வாழ்ந்தனர். அதன் உச்சக் காலத்தில் மாயன் மக்கள் தொகை சுமார் 20 லட்சம் பேர் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
மாயன்கள் வாழ்ந்த இடங்கள் அகழ்வாராய்ச்சிக்கு உள்ளானபோது நகரத்தின் பொது சதுக்கங்கள், மாளிகைகள், ஆலயங்கள், பிரமிட்டுகள், பந்து விளையாடும் விளையாட்டமைப்புப் பகுதிகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. இவை மாயன் கலாசாரத்துக்கு மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பல நகரங்களைச் சுற்றி விவசாயிகள் வாழ்ந்தனர்.
மாயன்கள் மதங்களில் தீவிர ஈடுபாடு உடையவர்கள்.
இயற்கையுடன் தொடர்பு L JILL பல்வேறு தெய்வங்களையும் அவர்கள் வணங்கினர். சூரியன், சந்திரன், மழை மற்றும் LJu flij5GOGIT அவர்கள் வனங்கினார்கள்.
மாயன் சமூகத்தின் உச்ச இடத்தில் இருந்தவர்கள் அரசர்கள் அல்லது குஹால் இஜோ (புனித எசமான்கள்) எனப்படுவார்கள். தாம் கடவுளர்களுடன் தொடர்பு உடையவர்கள் எனக் கூறிவந்த இவர்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சிக்கு வந்தவர்கள். கடவுள்களுக்கும் பூமியிலுள்ள மக்களுக்கும் இடையில் தரகர்கள் போன்று சேவை புரிபவர்கள் என நம்பப்பட்ட இவர்கள் மாயன் கலாசாரத்துக்கு மிக முக்கியமான சமயச் சடங்குகளையும், கிரியைகளையும் மிக விரிவான முறையில் நடத்தி வந்தார்கள்.
மாயன்கள் குருமார் மற்றும் நகல் எழுதித் தயாரிப்பவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு சமாதானமான சமுதாயம் என முன்னைய ஆய்வாளர்கள் முடிவு செய்தாலும் கலைப் படைப்புகள் மற்றும் கோயில்
சுவர், கல்வெட்டுகள் உட்பட மேலும் பல ஆய்வுகளை பின் வந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட போது L DITUL JGðIT
கலாசாரத்தின் கொந்தளிப்பான \ பக்கங்களும் தெரிய வந்தன. மாயன்களுக்கு எதிரான நகர ராஜ்யங்களுக்கு இடையில் ஏற்பட்ட யுத்தங்கள் மற்றும் அவர்களுடைய 3FL DULJiji;
*

Page 37
盒 யைகளுக்கு இம்சைகள் மற்றும் மனிதர்களைப் பலி கொடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் ஆகியன இந்த அமைதியற்ற தன்மைகளுக்குக் காரணமாகும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
மாயன்களைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கண்டு பிடித்த எல்லாம் அவர்கள் விட்டுச் சென்ற கலைப் பொருட்கள், கட்டிடக்கலை, கல்வெட்டுகள் மற்றும் நினைவுத் தூபிகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துத் தான். மரப்பட்டையில் இருந்து மாயன்கள் கடதாசிகளைச் செய்தார்கள். அதில் நூல்களை எழுதினார்கள். இவை கொடிசஸ் (Codices) எனப்பட்டன. இவ்விதமாக நான்கு கொடிசஸ் இன்றுமுள்ளன.
மாயன்களுடைய வாழ்க்கை நேரக் கோட்பாட்டைச் சுற்றி நிற்பதாக உள்ளது. அவர்கள் தமது குடியுரிமை, G926)JJEITULb மற்றும் GFL DIE விடயங்களையிட்டு குருமார்களிடம் ஆலோசனை நடத்தி புனித நாட் காட்டிகளை வாசிப்பதன் மூலம் ஆலோசனைகளைப் பெறுவார்கள். பிள்ளைகளுக்கு பிறந்த திகதியைப் பெயராக வைக்கும் அளவுக்கு நேரம் அவர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.
மாயன் கணக்கு ஆக மூன்று குறியீடுகளை மட்டும் கொண்டதாக இருக்கிறது. பூச்சியத்துக்கு g)լյլ ց) உருவத்திலேயே Glyph உபயோகிக்கின்றனர். ஒன்றுக்கு ஒரு புள்ளி இடுவர். ஐந்துக்கு ஒரு தடைக்கோடு இடுவர். உதாரணத்திற்கு 13 எனும் எண்ணைக் குறிக்க மூன்று புள்ளிகளும் இரண்டு தடைக்கோடுகளும் இடுவர்.
அந்தக் காலத்தில் பூச்சியம் என்பது ஒரு முன்னேற்றகரமான கோட்பாடு ஆகும். இதனை
றோமானியர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. இருப்பினும் மாயன்கள் சிப்பி ஒட்டினைப் பாவிப் பதன் மூலம் செய்து வைத்துள்ளனர். அத்துடன் மாயன்கள் மீட்டர் ரீதியான கணக்கினையும் உபயோகித்துள்ளனர்.
எட்டாம் நூற்றாண்டில் பிற்பகுதியிலும் 9ஆம் நூற்றாண்டு முடியும் வரையாக காலத்திலும் விளங்காத ஏதோ ஒன்று நடைபெற்று மாயன் நாகரீகம் வீழ்ச்சிய டைய வைத்தது. ஒன்றன் பின் ஒன்றாக தெற்கின் தாழ்நில பிரதேசங்களில் உள்ள சிறப்பு வாய்ந்த நகரங்கள் கைவிடப்பட்டன. கி.பி. 900 ஆண்டில் அப் பிராந்தியத்தில் LDITL165T கலாசாரம் வீழ்ச்சியுற்றது. இப்புதிரான வீழ்ச்சிக்கு என்ன
காரணம் என்பது கண்டறியப்படவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருப்பினும் சில அறிஞர்கள் இவ்வீழ்ச்சிக்குச் சில காரணங்களைக் கூறுகின்றனர்.
9ஆம் நூற்றாண்டளவில் மாயன்கள் தமது சுற்றுச் சூழல் வளத்தை முற்றாக உபயோகித்து விட்டதால் மிகப் பெரும் சனத்தொகையைப் பேண முடியாது போய்விட்டது என ஒரு சாரார் கூறுகின்றனர்.
போட்டியிட்ட நகர ராஜ்யங்களுடன் ஏற்பட்டு வந்த இடையறாத GLumi இதற்கு காரணம் என மற்றொரு சாரார் கூறினர். அத்துடன் புனித எசமான்களின் செல்வாக்கு சரிந்ததுடன் அவர்களது சிக்கலான சமயச் சடங்குகளும், கிரியைகளும் குறைந்து சீரழிந்து விட்டன. இறுதியாக இந்த நீண்ட கால வரட்சி நிலை, சிறப்பு வாய்ந்த மாயன் நாகரீகத்தை அழித்து விட்டது எனவும் கூறப்பட்டது.
யுகாதனின் உயர் பூமிகளில், சிஷென், இற்ஸா, உக்ஸ் மல்மாயபான் போன்ற சில மாயன் நகரங்கள் கி.பி. 900இல் இருந்து 1500ஆம் ஆண்டு வரையான காலத்தில் செழிப்புற்று இருந்தது. ஸ்பானிய ஊடுருவல்காரர்கள் வந்து சேர்ந்த போது விவசாயக் கிராமங்களில் வாழ்ந்த மாயன்களும் வீழ்ச் இசியைக் கண்டார்கள்.
மாயன்கள் அன்று குறித்து வைத்த நாட்காட்டியின்படி 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இந்த யுகம் முற்றுப் பெறுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது:
இத் கங்கா

Page 38


Page 39
OY சிங்கப்பூரில் சி 6najdbrU665gbtu
லோக கைலாசம் என்று போற்றப்படும் சிங்கப்பூர் பூரீ செண்பகவிநாயகர் கோயில் அந்நாட்டின் வரலாற்றுத் தலமாகவும் சிங்கப்பூர் நாட்டின் தேசிய பாரம்பரிய வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்துக்களின் ஒரு திருத்தலமாகவும் விளங்குகின்றது. தென்கிழக்காசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்து சமயம் வேரூன்றி, வளமுற்று பெருமையுடன் துலங்கியது என்பதற்குப் பல வரலாற்றாதாரங்கள் உள்ளன.
தாய்லாந்து, மியன்மார், கம்போடியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்துசமயம் நிலை பெற்றிருந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. குறிப்பிட்ட நாடுகளிலிருந்து கொண்டு செல்லப்பட்ட நடராஜர், விநாயகர் உட்பட்ட பல தெய்வத்திருவுருவங்கள் இங்கிலாந்தில் இலண்டன் தொல்பொருட்காட்சியகத்தில் வைத்துப் பேணப்படுவதும் அதில் கால அளவு காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையிலே சிங்கப்பூர் நாட்டில் சிறப்புற்று விளங்கும் இந்துசமயம் உலக அளவில் போற்றப்படும் நிலையில், பெருமைப்படும் நிலையில் உள்ளமைக்கு சிங்கப்பூர் செண்பகவிநாயகர் கோயில் தக்க சான்றாகவுள்ளது. செல்வ வளம் பொருந்திய சிங்கப்பூர் நாட்டில் வினை தீர்த்து அறங்காக்கும் விநாயகப் பெருமான் குடிகொண்டுள்ள கோயில் உலகம் முழுவதும் பரவி வாழும் இந்துக்களுக்கு பெருமை தருவதாகும்.
1850ஆம் ஆண்டளவில் நறுமணங்கமழும் செண்பக மரத்தடியில் விநாயகர் சிலையொன்று கண்டெடுக்கப் பட்டது. செண்பக மரத்தடியில் கண்டெடுக்கப் பட்டமையால் அவ்விநாயகர் பெருமானுக்கு செண்பக விநாயகர் என்ற பெயர் அமைந்தது. கண்டெடுக்கப்பட்ட விநாயகப் பெருமான் திருவுருவை அதே செண்பக மரத்தடியில் சிறு கோயில் அமைத்து வழிபடத் தொடங்கியமை வரலாறு. அவ்விடத்தில் கோயிலை நிறுவ முன் முயற்சி மேற்கொண்டு செயற்பட்ட பெருமை இலங்கைத் தமிழரான எதிர்நாயகம்பிள்ளை அவர்களையே சாரும். இற்றைக்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேல் பழைமை கொண்ட இத்திருக்கோயிலைப் புதுப்பித்து விரிவுபடுத்தும் பணியை 1909ஆம் ஆண்டு சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கத்தினால் தொடங்கப்பட்டது. திருக் கோயிலை விரிவுபடுத்தும் நோக்கில் குறிப்பிட்ட சிங்கப்பூர் இலங்கை தமிழர் சங்கம் 1923இல் தற்போது கோயில் உள்ள காணியைக் கொள்வனவு செய்தது.
1929இல் இக்கோயில் திருப்பணி நிறைவடைந்தது. செண்பக மரத்தடியில் சிறு கோயிலாக உருவாகிய விநாயகர்

& கலைக் ក្រុ
39
றப்புடன் திழுைம்
கர்திருக்கோயில்
திருக்கோயில் கற்கோயிலாக உருமாற்றம் பெற்றது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோயிலில் விநாயகப் பெருமானுடன் சிவன், அம்மன், முருகன், வைரவர், நாகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1930ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாவது குடமுழுக்கு சிறப்பாக நடந்தேறியது.
இந்நிலையிலே இரண்டாம் உலகப் போரின்போது வீசப்பட்ட குண்டொன்றினால் திருக்கோயில் சேதத்திற்குள்ளானது. 1949இல் இக்கோயில் சீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1955 ஜூலை மாதம் 7ஆம் திகதி புதுப்பிக்கப்பட்ட கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
தேவைகளைக் கருத்திற் கொண்டு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் கோயில் வளாகத்தில் மேற் கொள்ளப்பட்டன. மண்டபங்கள், சமையல் அறைகள், வகுப்பறைகள், நூல்நிலையம், திருமணமேடை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதியுடன் கூடிய மூன்று மாடித்தொடர் கட்டமாகத் திருமண மண்டபம் விளங்குகின்றது.
இன்று புதுப் பொலிவுடன் திகழும் புதிய செண்பக விநாயகர் திருக்கோயில் பல்வேறு சிறப்பு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாக விளங்குகின்றது. இங்குள்ள நான்கு கருங்கற்தூண்கள் சிறப்புக் கொண்டவையாயுள்ளன. ஒவ்வொரு தூணிலும் எட்டெட்டாக மொத்தமாக முப்பத்தி இரண்டு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட விநாயகர் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மிக அழகாகவும், அற்புதமாகவும் இத்திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன. காண்போரை மெய்மறக்கச் செய்கின்றன.
கூரையின் வடிவமைப்பும் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் இருந்தபடியே கோயிலின் கோபுரத்தையும், மூலவராக வீற்றிருக்கும் விநாயகரின் விமானத்தையும் பக்தர்கள் பார்த்துப் பரவசமடையக் கூடியதாக அதன் அமைப்புள்ளது. அறுபத் தெட்டடி உயரமும் ஐந்து தளங்களும் கொண்டதாக இராஜ கோபுரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது. நுழைவாயில் காப்பாளராகக் கொள்ளப்படும் ஒன்பது அடி உயர துவாரபாலகர்கள் கோபுர அடித்தளத்தில் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். பண்டைய சோழ அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில்களில் உள்ளது போன்று கமலபாதம் இக்கோயிலில் உள்ளமை சிறப்பம்சமாகும். இக்கமலபாதமானது கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
மூலஸ்தானத்திற்கு மேலுள்ள கோபுரத்தின் விமானம் சோழர்கால கட்டிட வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டிலே உள்ள இந்துக் கோயில் விமானங்களில் இதுவே தற்போது

Page 40
ឆ្នាតែវ៉ែ 廖 40
அளவில் பெரிதாக இருப்பதுடன் அதன் மேற்புறம் தங்க மூலாம் பூசப்பட்டு கண்கவரும் வண்ணம் விளங்குகின்றது.
இச்செண்பக விநாயகர் திருக்கோயிலின் மூல மூர்த்தியாக வீற்றிருக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மூலவராக இருக்கும் விநாயகப் பெருமான் திருவுருவங்களிலே அளவில் பெரியவராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மூல மூர்த்தியான விநாயகப் பெருமான் ஐந்து அடிக்கும் மேலான உயரம் கொண்டவராக விளங்குகிறார்.
கோயிலின் மூலவராக எழுந்தருளும் விநாயகப் பெருமான் சந்நிதிக்கு இடது பக்கத்திலே சிவபிரான் சிவலிங்க வடிவிலே வீற்றிருக்க வலது பக்கத்திலே பார்வதி தேவியார் எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்தில் பின் இடப்புறத்திலே தமிழ்த் தெய்வம் முருகப்பெருமான் தனிக் கோயில் கொண்டுள்ளார். விண்ணுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கோயில் கொடிக் கம்பம் தங்க மூலாம் பூசப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலிலுள்ள சுவரோவியங்கள் மிகச் சிறப்பானவை. தமிழ் நாட்டின் பிரகதீஸ்வரர் கோயிலை சோழ மாமன்னன் கட்டுவித்தான். சிங்கப்பூர் செண்பக
விநாயகர் கோயிலிலுள்ள சுவரோவியமொன்றில் சோழ மன்னன் விநாயகப் பெருமானை வணங்கும் காட்சி
தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. அத்துடன் பஞ்ச
JAGAJÄRJÄÄš
அருள்மய
 

பூதங்களெனக் கூறப்படும் ஐந்து சிவாலயங்களான காஞ்சிபுரம், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளஹத்தி, சிதம்பரம் ஆகியவற்றின் காட்சியும் சித்திரிக்கப்பட்டுள்ளன. மேற்படி பஞ்ச பூதங்கள் முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியனவும் முன்னிலைப்படுத்தி வழிபடும் சிவாலயங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பார்வதிதேவியார் மனோன்மணி அம்மன் என்ற திருநாமம் கொண்டுள்ளார். மனோன்மணி அம்மன் எழுந்தருளியுள்ள வலப் பக்கத்திலிருக்கும் உட்பக்க கூரைச் சுவரில் கன்னியாகுமாரி தொடக்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரையுள்ள சிறப்புகள் பொருந்திய கோயில்களின் தோற்றங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் இலங்கையில் இந்துக்களின் பழம் பெரும் வழிபாட்டுத் திருத்தலமான யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் என்பனவும் அழகுற காட்சி அளிக்கின்றன. * திருக்கோயில்களின் தோற்றங்கள் மட்டுமல்லாது இக் கோயிலின் ஒவியங்களுக்குமிடையே இந்துமத போதனைகள் மற்றும் இந்துசமய புனித சின்னங்கள், அவற்றின் அர்த்தங்கள் கற்காளச் சட்டங்களில் பதியப்பட்டு காட்சியளிக்கின்றன. கோயில் கட்டிடக்கலை புதுமைப்
படைப்பாகவுள்ளது. கூரைச் சாளரம் நவீன அம்சங்கள்

Page 41
கொண்டதாகவுள்ளது. கோயிலுக்குள் இருந்து மேலே மேற்கு நோக்கிப் பார்க்கும் பொழுது கருவறையின் விமானத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தூபியைக் காண முடிகின்றது. அதேபோல் கிழக்குத் திசையில் நோக்குமிடத்து இராஜகோபுரத்தைக் காணலாம். கோயிலின் உள்ளே இருந்து பார்க்கும்போது விமானத்தையும், இராஜ கோபுரத்தையும் காணும் வண்ணமுள்ளவை இக்கோயிலின் சிறப்பம்சமாகும். விமானத்தின் தூபி மாடம் நான்கு பக்கங்கள் கொண்டு தங்கத்தால் மூடப்பட்டுள்ளது.
இச்செண்பகவிநாயகர் கோயிலின் பிரதான மண்டபத்திற்கு வலது புறத்தில் நடராஜர் சபை அமைந்துள்ளது. நடனத்திற்கே அரசனான நடராஜப் பெருமான் திருச்சபையிலே திருமறை ஆலயங்கள் என்ற புனிதப் பலகையிலான பெட்டகத்தில் பன்னிரு திருமுறைகள் பேணப்பட்டு வருகின்றன. சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன. வசந்த மண்டபத்திலே பஞ்சமுக விநாயகரின் திருவுருவம் வீற்றிருக்கின்றது. இந்த வசந்த மண்டபத்திலே உற்சவ மூர்த்திகளும் சிறப்புத் தினங்களில் நடைபெறும் ஊர்வலங்களில் பயன்படுத்தப்படுகின்ற வெண்கலத் திருவுருவங்களும் வீற்றிருக்கின்றன. இம்மண்டபத்தின் முன்னாலுள்ள உட்கூரையில் இலக்குமிதேவியின் எட்டு அம்சங்களான அஷ்டலட்சுமிகளின் அழகோவியங்கள் கொண்ட கவிகை மாடம் காணப்படுகின்றது.
வசந்த மண்டபத்தின் வலதுபுற யாகசாலையின் சுவிரில்
பதினெண் சித்தர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்துக்களால் போற்றப்படும் சித்தர்கள் ക്രഞഖ சிறந்த ஞானிகளாகவும்
கொள்ளப்படுகின்றனர். இவர்கள் விஞ்ஞான, இலக்கிய மேம்பாட்டின் அடிப்படைகளை ஆராய்ந்தவர்கள். மருத்துவம், இரசவாதம், GuLIT3L", பயிற்சிகளில் சிறந்தவர்களாகவும் இச்சித்தர்கள் இருந்துள்ளனர்.
வைரவர் தனக்குரிய இடத்தில் கோயில் கொண்டுள்ளார். தேவாரம், திருவாசகம் ஆகிய இறை புகழ் பாடல்களை ஆக்கிய சைவக் குரவர் நால்வரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளது திருவுருவங்களுடன் ஒளவையார், காரைக்காலம்மையார் ஆகிய இரு புகழ் பெற்ற பெண் புலவர்களது திருவுருவங்களும் கோயிலின் நுழைவாயில் மணிக் கோபுரத்திற்குப் பக்கத்திலே உள்ளன. இறை தூதர்களென இந்துக்கள் அவர்களைப் போற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலிலுள்ள விசேட அம்சமாக விளங்குவது விநாயகர் கண்காட்சி பெட்டியாகும். உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விநாயக அடியார்களால் வழங்கப்பட்ட தன்மையான விநாயகரின் பல்வேறு அம்சங்கள் கொண்ட திருவுருவங்கள் மேற்படி கண்காட்சிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. செண்பகவிநாயகர் திருக்கோயில் நிர்வாகத்தின் வெவ்வேறு அம்சங்கள் கொண்ட விநாயகப் பெருமான் திருவுருவங்களை ஒருங்கு சேர்த்து மேற்படி கண்


Page 42
1560605 (BöğFriq be 42
காட்சிப் பெட்டியில் வைத்துப் பேணுவதைக் குறிக் கோளாகக் கொண்டுள்ளனர். அவர்களது மேன்மை மிக்க புனித நோக்கம் நிறைவேற அகில உலகிலுமுள்ள இந்துப் பெருமக்கள் உதவ வேண்டும்.
மேலும் இச்சிங்கப்பூர் செண்பகவிநாயகர் திருக்கோயிலில் தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர் திருவுருவங்களுடன் விநாயகப் பெருமானின் சுவர்மாடச் சிலைகளாக லட்சுமி கணபதி, வீரகணபதி, மும்முகக் கணபதி ஆகிய திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. அம்பாள் சந்நிதானத்திற்குப் பக்கத்தில் விஷ்ணு, துர்க்கா மற்றும் பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் காட்சியளிக்கின்றன. தீய சக்திகள், தீய ஆவிகளிலிருந்து மனித குலத்தைக் காக்கும் கடவுளாகக் கொள்ளப்படுவர் நாக தம்பிரான் ஆவார். அவருக்கும் இவ்விநாயகர் திருக் கோயிலில் தனிச்சந்நிதி உள்ளது.
தமிழ்த் தெய்வமென்று போற்றப்படும் முருகப் பெருமானுக்கும் இக்கோயிலில் தனிப்பீடம் உள்ளது. குகன், தண்டாயுதபாணி, கார்த்திகேயன் என்று பல பெயர்களைக் கொண்ட முருகப்பெருமான் தன்னிரு தேவியரான தெய்வயானை, வள்ளியம்மை ஆகியோருடன் தனக்குரிய பீடத்தில் வீற்றிருக்கின்றார். அத்துடன் சண்டேசுவரர் தனக்கு நியமமான இடத்தில் தவக் கோலத்திலமர்ந்திருக்கின்றார். செண்பகவிநாயகர் திருக் கோயிலுக்குச் சிறப்பளிக்கும் மேலுமொரு அம்சமாக
 
 

இருப்பவை இசைத் தூண் மாதிரிகளாகும். உரிய முறையில் தட்டினால் கனிவான ஒலியை எழுப்பக்கூடிய சக்தியைக் கொண்டவையாக இசைத் தூண்கள் உள்ளன.
தமிழர்கள் விநாயகப் பெருமானைப் பிள்ளையார் என்று அழைப்பதைப் போன்று சீனர்கள் (HO TE) ஹோதை என்றும், திபேத்தியர்கள் (TSOGSB - DAG) திஸ் ஒக்ஸ்பி டேக் என்றும் ஜப்பானியர்கள் (SHO - TEN) ஷோடென் என்றும், மங்கோலியர்கள் (TOTKHAROUR KHAGHAN) டொட்காரூர்காகன் என்றும் கிரேக்கர்கள் (JAMUS) ஜாமுஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். பெளத்தர்களும், சமண மதத்தவர்களும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்கின்றனர். இன, மொழி, நாட்டு வேறுபாடுகளுக்கு அப்பால் விநாயகப் பெருமான் வழிபாடு பரவியுள்ளமை நோக்கத்தக்கது. சிந்தனைக்குரியது.
வளமான நலமான வாழ்வின் வழிகாட்டியாக எங்கும் நிறைந்த பரம்பொருளாக விநாயகப்பெருமான் விளங்குகின்றார். உலக நாடுகளில் சிறிதாக இருப்பினும் பல்வேறு வழிகளில் கீர்த்தி பெற்ற நாடாக விளங்கும் சிங்கப்பூர் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே தாங்கி" இந்துக்களினதும், தமிழர்களினதும் பெருமைக்கு மென்மேலும் பெருமை சேர்த்து உயர்ந்த கோபுரத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது. பெருமைக்குரிய இத்திருக்கோயில் உலக இந்துக்களின் முக்கிய வழிபாட்டிடமாகவும், யாத்தி ரைத் தலமாகவும் பிரசித்தி பெறவேண்டும்.

Page 43
தமிழர் ஆடற்கலை
விரிவுரையாளர் - சுவ
டற்கலையின் தோற்றம் மிக்க தொன்மையானது. இது சமயம், புராணம் மற்றும் கலை இலக்கியங்களோடு ஆழமான தொடர்புடையது. உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டே கண்ணின் மூலமாகவும் கைவழியாகவும் ១__គាលំនាំ மெய்ப்பாட்டுடன் வெளிப்படுவதே ஆடற்கலையாகும்.
தமிழரது ஆடற்கலையானது தொல்காப்பியத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே பின்பற்றப்பட்டு வந்திருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்களது பொதுவான கருத்தாகும். நாட்டிய மரபின் 'நெஞ்சுகொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்ப" என்கிறார் தொல்காப்பியர். மரபு என்பது பன்னெடுங்கால வழக்கு பற்றியது என ஆய்வாளர்கள் கூறுவார்கள். ஆகவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழகத்தில் ஆடற்கலை நன்கு பயிலப்பட்டு வந்திருக்கிறது என்றும் அதற்கென்று ஒரு மரபு தோன்றியிருக்கிறது என்னும் கருதலாம். மேலும் தொல்காப்பியர் நடனத்தின் மிக மிக இன்றியமையாத பாவமாகிய சாத்வீகபாவத்திற்கு மிகப் பொருத்தமான இயலான மெய்ப்பாட்டியலை விளக்கிச் சொல்கின்றார். மெய்ப்பாட்டியலில் பொதுவாகத் தோன்றும் எண்வகை மெய்ப்பாடுகள் மற்றும் அவை தோன்றும் சந்தர்ப்பங்களை தொல்காப்பியர் மிகச் சிறப்பாகக் கூறுகின்றார்.
நாட்டியக் கலைஞர்களைக் குறிக்கும்
கூத்தர் பொருநர், விறவியர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில்
ఇస్తా 穹 இடம் பெற்றுள்ளதைப் - பார்க்கின்றோம். ஆடல் ஆசிரியர் நட்டுவனார்) பற்றிய செய்திகள்( ܥ 13 ]
. ܢܥܘܠ அதில் விரிவாகவே
கூற ப் ப டு கி ன்ற து . இன்றைய பரத நாட் டி யத் தி ன்
மு க் கி ய
 
 
 
 
 
 
 
 

* BSGOGOő, fl நடனக்கலை 43
ܬ4 ܬ݂ܶܐ
யில் நட்டுவாங்கம்
திருமதி. ஷாமிளா றஞ்சித்குமார் மி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்
அங்கமாசுத்திகளுடன் நட்டுவாங்கம் பற்றிச் சிலப்பதிகாரமும் எடுத்து மொழிந்துள்ளது. அத்துடன் இசையாசான், மத்தள ஆசிரியன், குழலாசான் பற்றிய குறிப்புகளும் கூறப்பட்டுள்ளன. அைெ)ெ
நட்டுவாங்கத்திற்கே உரிய தாள வகைகளைப் பற்றியும் அக்காலத்திலிருந்த தாள வழக்குகள் பற்றியும் எமக்கு எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
வரலாற்று ஆதாரங்கள் ஆடற்கலையின் வரலாற்றை எடுத்து நோக்கின் கி.பி 5ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பல்லவர் ஆட்சிக்காலத்தில்

Page 44
ខ្សរិ៍
44
கோயில்களிலும் அன்றாட வழிபாட்டு நிகழ்சிகளிலும் திருவிழாக்களிலும் ஆடல் பாடல் நிகழ்வுகளை நிகழ்த்த
வேண்டிய நடனமாதர்கள் கோயில் ஊழியர்களாகவே
நியமனம் பெற்றிருந்தனர். இவர்கள் மாணிக்கத்தார்
தலைசேரி பெண்டுகள், தேவரடியார்கள் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் முத்தீஸ்வரர் கோயிலில் நடனமாடுவதற்கு இருபத்தியேழு ஆண்களும் பெண்களும் அமர்த்தப்பட்டிருந்தனர். ஆண்கள் தட்டளிவு கலையில் வல்லவர்கள். தட்டளி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இருவேறு கருத்துக்கள் உண்டு. ஒசையெழுப்பும் தட்டு போன்ற இசைக் கருவிகளையும் கைத்தட்டுகளையும் அது குறிக்கின்றது. தட்டு போன்ற மேளத்தைக் கொட்டியோ கைகளைத் தட்டியோ நடனக்கலையை இயக்குபவரோ மேற்பார்வையிடுபவரோ செய்யும் செயலையே இது குறிக்கின்றது. தற்காலத்தில் நட்டுவனார் 6T65T அழைக்கப்படுபவரே அக்காலத்தில் தட்டளிவு கொட்டுவார் என அழைக்கப்பட்டிருப்பது இதன்மூலம் புலனாகிறது.
தட்டளிவு கொட்டுவார்கள் ஆயுட்காலம் முழுவதும் கோயில் பணியிலேயே ஈடுபட்டிருப்பார்கள். அவருக்குப் பின் அவரது சந்ததியினர் அப்பணியைத் தொடர்வர் என பரதக் கலையைப் பற்றி ஆய்வினை மேற்கொண்ட முனைவர் ரா.கலாரானி கூறுகிறார். இவற்றை எடுத்து ஆராயும் போது பல்லவர் காலத்தில் தான் தேவரடியார்கள் @gTuគ្នាគ្រា៦ பணியமர்த்தப்பெற்று அவர்களுக்கு நட்டுவாங்கம் செய்வதற்கு நாட்டிய ஆசிரியர்களும் அமர்த்தப் பட்டனர் என்பது புலனாகின்றது.
இதைத் தொடர்ந்து சோழர், நாயக்கர், மராட்டியர் காலத்தில் நடனத்திற்கென்று பலர் பணியாற்றினர். தஞ்சை நால்வர்கள் இதில் முக்கியமானவர்கள். இவ்வாறு தமிழர் தோற்றுவித்த ஆடற்கலையில் நட்டுவாங்கமே முதன்மை இடத்தைவகிக்கின்றது. பரதக்கலையின் சிறப்பிற்கு முக்கிய அங்கமாகவும் நட்டுவாங்கம் அமைகிறது. ஜதிகள் நாட்டியத்திற்கு ஒரு சிறப்புப் பகுதியாகிய அங்கம் ஆகையால் இது நடு அங்கம் - நட்டுவாங்கம் எனப் பெயர் பெற்றுள்ளது.
ஆடற்கலையில் நட்டுவாங்கம்
கொட்டு பாதி, கூத்து பாதி என்பதுவும் கொட்டின்றி கூத்தில்லை என்பதுவும் நடன
வழக்கில் உள்ள பழமொழிகள். கொட்டு கூத்து என்பது முறையே தாளத் தட்டுடன் வரும் நட்டுவாங்கமும் நிருத்தம் நிருத்தியம் என வரும் நாட்டியமும் ଗTର୪15 கொள்ளப்படும். இவ்வாறு நட் டு வாங்கத் தைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா. மாதவி கூறுகின்றார்.
ஆடற்கலையின் சிறப்பிற்கு முக்கிய அங்கமாக
 
 
 
 

நட்டுவாங்கம் அமைகிறது என்றும் நட்டுவாங்கம் நடு அங்கம் எனவும் அசைவுகளுக்கு ஏற்ப ஆங்காங்கே பொருத்தமான வகையில் தாளக்கட்டினால் அடிப்படை பிரமாணத்தை நிலைநாட்டி வரும் ஒர் அங்கமே நட்டுவாங்கம் எனப்படுவதாகவும் இது பற்றி மேலும் சிறப்புறுத்தப்படுகின்றது. இந்த முக்கிய அங்கத்தை ஏற்று நிருவகிப்பவர் நட்டுவனார் எனப்படுவார். தாளத்தை தட்டியும் கொட்டியும் அரங்கத்தில் உள்ள அனைவரின் உள்ளத்திலும் லயத்தை நிலைநாட்டுவதனால் நட்டுவனார் அங்கமே சிறந்ததாக கருதப்படுகிறது.
நட்டுவனார்
ஜதிகள் நாட்டியத்திற்கு ஒரு சிறப்புப்பகுதியாகிய அங்கம் ஆகையால் நட்டுவாங்கம் என பெயர் பெற்றது. நட்டுவாங்கம் செய்பவர் நட்டுவனார். நட்டுவனாருக்கு இன்றியமையாத ஒன்றாக தாளப்பிடிப்பு தேவைப்படுகிறது. தாளப்பிரமாணத்திற்கு ஏற்ப நட்டுவாங்கம் செய்ய வேண்டும். நட்டுவனாரின் இன்னுமொரு பணி ஜதி சொல்லுதல் ஆகும். தாளத்திற்கு ஏற்ப ஜதிகளை சொல்லி நட்டுவாங்கம் செய்வது ஒரு கடினமான விடயமாகும். இதற்கு பயிற்சி முக்கியமானதொன்றாக காணப்படுகிறது. ஆடற்கலையின் உயிராக நிற்பது தாளக்கட்டுமான சொல் மற்றும் ஜதி ஆகும். இவை பிற நாடு காணாத தமிழக கலை ஆடலும் இசையும் ஒரு கால எல்லைக்குள் அடங்கும் போது அவை ஒழுங்கு முறையை பெறுகின்றது. ஒரு நடன நிகழ்வை எடுத்து நோக்கின் அந்த நடனத்தை லயத்திற்கு ஏற்ப கொண்டு செல்வது நட்டுவனாராகவே காணப்படுகிறார் எனக்கூறின் வியப்பே இல்லை.
நட்டுவாங்கத்தின் சிறப்பியல்
பல்வேறுபட்ட கலைநுட்பமும் லயவேலைப் பாடுகளுடனும் கூடிய பரதக்கலையை நிகழ்த்துவோரும் சுவைப்போரும் உணர்வுபூர்வமாக அதனை அனுபவிப்பதே

Page 45
சிறப்பு எனக் கூறும் முனைவர் இரா. மாதவி நாட்டிய அரங்க நிகழ்ச்சி என்பது ஒரு கூட்டு முயற்சியாகும் எனவும் ஆடல், நட்டுவாங்கம், பாட்டிசை, தாளக்கருவி இசை ஆகிய அனைத்தையும் ஒழுங்குபடுத்தி நிருவகிப்பது நட்டுவாங்க கருவியாகும் எனவும் நட்டுவாங்கத்தின் மூலம் லயப்பிரமாணத்தை நிலைநாட்டி ஒட்டுமொத்தமாக ஒரு
முழுமையான நிகழ்ச்சியை உருவாக்குவது நட்டுவாங்கத்தின் சிறப்பாகும் எனவும் அத்துடன் நட்டுவாங்கத்தின் முக்கிய பணிகள் ஜதிகள்
சொல்லுதலேயாகும் எனவும் தனது ஆய்வில் மேலும் குறிப்பிடுகின்றார்.
நட்டுவாங்க கருவிகள்
ஆடலின் அழகு நட்டுவனாரிலே தங்கியுள்ளது. நட்டுவனார் பாவ இராக கற்பனையில் தன்னை மறந்து நிற்காமல் கற்பனை மிக்க அசைவுகளின் கட்டுக்கோப்பை தாண்டாமல் பிரமாணத்தில் நிற்கவும் அதே நேரத்தில் பாடுபவர் மற்றும் பக்க வாத்திய கலைஞர்கள் அனைவரும் தாளக்கட்டை மாற்றாது பிரமாணத்தில் நிறுத்தி ஒன்று படுமாறு செய்தல் வேண்டும். நட்டுவாங்கம் சிறப்புப் பெறுவதற்கு நட்டுவக்கருவிகள் பெரிதும் துணை செய்கிறது. நட்டுவக்கருவிகள் இரண்டாகும்.
1. தட்டுகழி 2. நட்டுவாங்கம் (கைத்தாளம்)
சிலப்பதிகாரம் இதனை தண்டியம் பிடித்து என்று கூறுகிறது. பஞ்சமரபில் அபிநய மரபு பிரம்பிலக்கணம் பற்றி கூறுகிறது. நாட்டியம் ஆடும் கால் ஆடுபவரை ஆட்டுவிக்க நட்டுவன் கையில் உள்ள பரதப் பிரம்பைப் பற்றியே இங்கு கூறப்பட்டுள்ளது. இது 2% சாண் நீளமுள்ளது. இப்பிரம்பு அளவில் குறைந்தால் கேடு உண்டாகும் என்பது நம்பிக்கை. இதற்கான காரணம் பிரம்பில் கீழ்கண்ட அளவில் தெய்வங்கள் உறைவதாகும் என்பதே.
 

860ut
45
முதல் சாண் - சிவன் அடுத்த சாண் - திருமால் அடுத்த % சாண் - பிரம்மா
தண்டு என்றால் தாளமுழக்கிக்காட்டும் கோல். தண்டியம் பிடிப்பித்தல் என்றால் நடனப் பயிற்சியின் தொடக்க விழா தண்டியம் செய்வித்தலுக்கு மூங்கிலில் மாலை சூட்டி பொட்டிட்டுச் சந்தனம் பூசி நட்டு வைப்பது மரபு. கோலடிக்குத் தக்கவாறுதான் காலடிகள் இயங்க வேண்டும். பிரம்பிலக்கணம் அறம் வளர்த்தான் இயற்றிய பிற்காலத்து நூலாகிய வரத சங்கிரகத்திலும் மகாபத சூடாமணியிலும் எடுத்தாளப்பட்டுள்ளது.
நாட்டியம் பயிலத் தொடங்கும் போது தட்டுக்கழியில் ஒலி எழுப்பி அடவு வகைகளைப் பயிற்றுவிப்பர். இம்முறை பயிற்சியின்போது மட்டும் நடைமுறையில் உள்ளது. மேடையில் கைத்தாளத்தால் தட்டி ஐதிகளைத் வெளிப்படுத்துவார்கள். தட்டுக்கழியின் ஒலி மிக மெல்லியதாக இருப்பதால் மேடையில் இதனைப் பயுன் படுத்துவதில்லை. தட்டுக்கழி நட்டுவக்கோல் என்றும், பிரம்பு என்றும் தண்டியம் என்றும் பலவகையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மரக்குச்சியினால் தட்டித்தாளம்
போடும் முறையும் முன்னர் காணப்பட்டது.

Page 46
រួបរៃវែង 鑫 46
நட்டுவத்தாளம்
நாட்டியத்திற்குரிய முக்கிய கருவி நட்டுவத்தாளமாகும். நடன வகைகட்கும் பாடல்களுக்கும் முழக்கட்டுக்கும் அடிப்படையானது தாளம். இத்தாளத்தில் ஒன்று இரும்பினாலானது. இது இடது கையில் பிடித்த மற்ற தாளத்தினை அணைப்பதாக செயல்படுவது. அதனால் இது அணைப்புத்தாளம் எனப்படும். இதன்விட்டம் 2% முதல் 3 அங்குலம் வரையாக இருக்கும். நடுப்பாகம் ஆழமாகக் குழிந்து விளிம்பு வரை கருகலாக அமைந்திருக்கும். இதன் விளிம்பு அகலமாகவே இருக்கும். குழிப்பகுதியின் மையத்தில் இருக்கும் துளை வழியாக கைபிடிப்பதற்கு ஏற்றவாறு நூல் கயிற்றினால் இறுக்கப்பட்ட கைப்பிடி சுமார் 4 அங்குல நீளத்தில் அமைந்திருக்கும். தாளத்தில் மற்றொன்று வலது கையில் பிடிக்கும் இரும்புத் தாளத்தின் மேல் தட்டும் தட்டுத்தாளமாகும். இது வெண்கல தாளம். இதன் விளிம்பு (உதடு) முதல் குழியாக அமைந்து மத்தியில் உள்ள துளையில் நூற்கையிற்றுக் கைப்பிடி சுமார் 4 அங்குல நீளத்தில் இறுக்கிக் கட்டியிருக்கும். அதன் விட்டம் 1% முதல் 2 அங்குலம் வரையிருக்கும். தட்டும் பொழுது இதன் அதிர்வு இதன் விட்ட அளவு கனம் (thickness) இவற்றை பொறுத்து அமைந்திருக்கும். ஆடலின்போது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி வழி நடத்திச் செல்வதற்கு உதவியாக இத்தகைய கஞ்சக் கருவிகள் என்னும் தாளக் கருவிகள் அமைந்துள்ளன.
GET 560Guð (35éff, DEL
Please complete the form given below, along with your Cheque/N (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.185. Tel:+94-11-5322700/5738046 Fax:+94-11-5517773 For more details, please contact: Overseas Subscriptions Arjur Local Subscriptions S. Sar
Online Polyment: www.kalaikesari.com/Subscri
ORDER FORM: Title
- First Nome KAA KEISAR ܬܐ . យ៉ាញបាញ់ចំប៉ារី, a km -ー Institution
Manager Subscriptions 器 Apartment Kalaikesari 蜀 No. 185, Grandpass Road, Colombo - 14, a. Street / Rot
o R Sri Lanka. loci, Tel : +94-11-5322783 / +94-11-5738046 Count Fax :--94-11-5517773 гу E-mail: subscription(a)kalaikesari.com Amount En
Cheque should be drawin in favour of Mode of p
Express Newspapers (Ceylon) (Pvt) Limited Online Pay
 
 

எந்த ஒரு கலையும் தோன்றிய காலத்தில் எவ்வாறு இருந்ததோ அப்படியே GTQ)@Tឆ្នាំ காலத்திலும் இருப்பதில்லை. காலத்தால் e 9lᎶᏡᎶᎧ l புதுப்புது மாற்றங்களைக் காணவே செய்கின்றன. எனினும் மாற்றங்கள் மரபை வளப்படுத்த வேண்டுமே தவிர அதனை முற்றாக மாற்றி விடக்கூடாது.
தற்காலத்தில் பெரும்பாலான நட்டுவனார்கள் வெறும் தட்டுவனார்களாக மட்டுமே செயல்படுகின்றனர். அதிகமான நடன ஆசிரியர்கள் முறையாக பயிற்சி எடுக்காமல் மேடையில் நட்டுவாங்கம் செய்யாமல் கைத்தாளத்தை மட்டும் வெறுமனே தட்டிக் கொண்டே இருக்கின்றனர். இன்று நவீன நாகரீக மாற்றங்களால் பல மேடை நிகழ்வுகள் இறுவெட்டுக்கள் மூலமே நடாத்தப்படுகின்றன. இது இலகு வழியாகக்கூட இருக்கலாம். எனினும் இது தொடருமானால் நமது மரபுவழிப்பட்ட ஆடற்கலையின் பாரம்பரியச் சிறப்பியல்புகள் மங்கி காலச் சூழலில் அடியழிந்துபோக வாய்ப்பாகவும் அமைந்துவிடும். பழைமைக்குள் புதுமையைப் புகுத்தல் என்பது மரபை மாற்றுதல் ஆகாது. நமது இன்றைய சந்ததியினர் நாளைய சந்ததியின் வழிகாட்டிகள் என்பதால் பாரம்பரியத்தை முன்னெடுத்தல்
அவர்களது கட்டாய கடமையாகவே அமையும்:
VERED To YoUR HOME
Money Order written in favour of 'Express Newspapers Grandpass Road, Colombo 14, Sri Lanka.
t
-on arjun(o)expressnewspapers.net/Mobile:+94777 801034 ndrasegar – +94 77 5359106 / +94 - 11 – 5322783
Ofion
: Mr. Mrs. / Miss Dr. Prof.
/Other Νos ...........................................................................................
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . dג
State ............................................................................................
closed ........... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (12 / 6 issues)
ayment : Cheque / Money Order
ment : www.kalaikesari.com/Subscription

Page 47
யாழ்ப்பாணம்
நகுலேஸ்வரம்
விஜயன் இலங்கைக்கு வந்தபோது ஈழத்தில் இருந்த ஐந்து சிவாலயங்கள் தொடர்பாக இலங்கையின் வரலாற்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு கூறப்படுகின்ற சிவ ஆலயங்களில் ஒன்றாக நகுலேஸ்வர ஆலயம் விளங்குகிறது. பாளி மொழி இலக்கியங்களில் இவ் ஆலயம் சுட்டிக்காட்டப்படுவது, இவ்வாலயத்தின் தொன்மைக்கு ஒரு மிக முக்கிய சான்றாகக் காணப்படுகிறது. மேலும் யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் உக்கிரசிங்கன் என்னும் மன்னன் சோழ அரசியான மாருதப்புரவீகவல்லியைத் திருமணம் செய்து, சிங்கை நகரில் ஆட்சி புரிந்த காலத்தில் இவ்வாலயத்தை
அமைத்ததாக கூறப்படுகின்றன. அவ்வாறு இவ்வாலயத்தை
அமைத்து வழிபட்டமைக்கான முக்கிய காரணம்
என்னவெனில், உக்கிரசிங்கனின் பட்டத்து அரசியான மாருதப்புரவீகவல்லி இளமையில் குதிரை முகம் கொண்டிருந்ததாகவும், அக்குதிரை முகம் நீங்கி அழகிய
 

) ஓர் அறிமுகம்
உக்கிரசிங்கனைத் திருமணம் செய்து, இறைவனிடம் ஆசி
塞 កែប្រញាំរ៉ៃរឺ தொல்லியல் 47
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
முகம் பொருந்திய பட்டத்து அரசியாக மாறுவதற்கு இவ்வாலய தரிசனமே முக்கிய காரணம் ஆகும் எனவும் அந்நம்பிக்கையின் காரணமாகத்தான் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்துத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன.
நகுலேஸ்வரர் ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அவ்வாலயக் கர்ப்பக்கிரகப் பகுதிக்கு அண்மையில் பல சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மாருதப்புரவீகவல்லி குதிரை முகத்துடன் இருக்கும் காட்சியைப் புலப்படுத்தும் சிற்பம் முதலாவதாக உள்ளது. மாருதப்புரவீகவல்லியின் நோய் தீர்ந்து, குதிரை முகம் மாறி, அழகிய தோற்றத்துடன் கூடிய பெண்ணாக மாறிய சிற்பம் இரண்டாவதாக உள்ளது. மாருதப்புரவீகவல்லி

Page 48
ឆ្នាអ្វី 48
பெறும் காட்சியைச் சித்தரிப்பதாக உள்ள சிற்பம்
மூன்றாவதாக உள்ளது. ஆகவே இவ்வாலயத்தின் வரலாற்றுப் பெருமை உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி கதையோடு பிணைந்து சித்திரிப்பதாகக் காணப்படுகின்றது.
இலங்கையில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொன்மையான ஆலயம் என்பதோடு, மிகப் பெரிய ஒர் ஆலயமாகவும் இந்நகுலேஸ்வரர் ஆலயம் காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் தொடர்ச்சியாக பல மடங்கள் காணப்படுகின்றன. அத்துடன் புனித தீர்த்தக் கேணியும் அதனை அண்டி பெரிய மண்டபங்களும் காணப்படுகின்றன. அம்மண்டபங்களுக்கு அண்மையிலே உக்கிரசிங்கன் - மாருதப்புரவீகவல்லி ஆகியோரைச் சித்திரிக்கின்ற பல காட்சிகள் காணப்படுகின்றன.
மாவிட்டபுரம் நகுலேஸ்வரம் போன்று ஒரு வரலாற்றுப் பழைமை கொண்ட ஆலயமாக மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் காணப்படுகின்றது. இம்மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் உக்கிரசிங்கன் - மாருதபுரவீரவல்லி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. போர்த்துக்கேய ஆவணங்கள், யாழ்ப்பாண அரசு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து, போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் மீது படையெடுத்து வெற்றி கொண்ட காலப் பகுதியில்
 

பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றாக இம்மாவிட்டபுரம்
கந்தசாமி கோயில் கூறப்படுகின்றது. மேலும் போர்த்துக்கேயர் ஆட்சியில் இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டபோது இக்கோயிலில் இருந்த விக்கிரகங்கள் கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டதுடன், பின்னர் அவை கிழக்கிலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இங்கு காணப்படும் ஒவியங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியன மாருதப்புரவீரகவல்லி - உக்கிரசிங்கன் காலக் கதைகளைச் சித்தரிப்பனவாக உள்ளன. இவை இவ்வாலயத்தின் பெருமைக்கும், பழைமைக்கும் வலுச்சேர்ப்பதாக அமைகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள பல ஆலயங்களோடு ஒப்பிடும்போது, மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்ட ஆலயமாக இம்மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் விளங்குகிறது. பொதுவாக யாழ்ப்பாணத்துச் சைவப் பாரம்பரியத்தில் மிக பழைமை வாய்ந்த ஆலயங்களாக நகுலேஸ்வரத்திற்கும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கும் மிக முக்கிய இடம் உண்டு.

Page 49
சக்கோட்டை தேவாலயம்
யாழ்ப்பாணத்து அரசு காலத்தில் இருந்த பல ஆலயங்கள் அழிக்கப்பட்டு, அவ்வாலயங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரால் தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டமை, அவர்களின் வரலாற்று ஆவணங்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களின் ஆவணங்களில் இருந்து, யாழ்ப்பாண அரசு காலத்தில் பல இந்து ஆலயங்கள் இருந்தமை தெளிவாகின்றது. இவ்வாலயங்கள் முதலில் போர்த்துக்கேயராலும், பின்னர் வந்த ஒல்லாந்தராலும் அழிக்கப்பட்டமையும் தெரியவருகிறது. அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயக் கற்களைக் கொண்டே போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோர் பல கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டினார்கள். முதலில் போர்த்துகேயர் பல கத்தோலிக்க தேவாலயங்களை அமைத்தார்கள். ஆனால் அவர்களை வெற்றி கொண்ட ஒல்லாந்தர்கள் அக்கத்தோலிக்கத் தேவாலயங்களை அழித்து அல்லது மாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களாக உருவாக்கினார்கள். யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய தேவாலயங்கள் கடற்கரைப் பிரதேசங்களை அண்டியே அமைக்கப்பட்டன. அப்பிரதேச மக்களே பெரும்பான்மையாக அம்மதத்தை ஏற்றுக் கொண்டதே அதற்கான பிரதான காரணமாகும்.
அவ்வாறான வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் காணப்படும் இடங்களில் ஒன்றாக
சக்கோட்டை தேவாலயம் காணப்படுகின்றது.
 
 

& கலைக்கேசரி 49
யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். இது 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதன் കഞഖ மரபானது முற்று முழுதாக ஒல்லாந்தர் கலை மரபை பிரதிபலிப்பதாக உள்ளது. கடலில் இயற்கையாகக் கிடைத்த கோறல் கற்களையும், செங்கட்டிகளையும், சுதையையும் கொண்டு இத்தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தேவாலயமாக இருந்த சக்கோட்டை ஆலயம், ஆங்கிலேயர் வருகையின் பின்னர் கைவிடப்பட்டதோடு தற்போது இடிந்த நிலையில் காணப்படுகின்றது.
மணற்காடு தேவாலயம் சக்கோட்டைத் தேவாலயத்தைப்போல் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயமாக மணற்காடு கிறிஸ்தவ தேவாலயம் காணப்படுகின்றது. சுனாமி அனர்த்தத்திற்கு முன்னர், ஒரளவு முழுமையான நிலையில் இருந்த இவ்வாலயம் தற்போது பெருமளவு இடிந்த நிலையில், மண்ணில் புதைந்து காணப்படுகின்றது. மிகுந்த கலை வேலைப்பாடும் அழகும் பொருந்திய பழைமையான கிறிஸ்தவ தேவாலயங்களில், மணற்காடு கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. பல்வேறு வகையான ஜன்னல்கள், பல அடுக்குக் கதவுகள் ஆகியவற்றைக் கொண்ட இக்கிறிஸ்தவ ஆலயம் அப்பிரதேசத்தின் மக்கள் வாழ்வதற்கான சூழல் இல்லாமையாலும், அங்கு ஏற்கனவே குடியேறியிருந்த
சாக்கோட்டை தேவாலயம்

Page 50
கலைக்கேசரி கி 50
மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்த காரணத்தாலும் இடிபாடுகளுடன் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
ஆனால் சக்கோட்டை தேவாலயம், மணற்காடு தேவாலயம் ஆகியவற்றை இலங்கைத் தொல்லியல் திணைக்களம் வரலாற்றுச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தி, தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மேலும் தற்போது அவற்றை புனரமைத்து பழைமையான நிலையுடன் கூடிய வழிபடுவதற்கு உரிய தேவாலயங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சங்கானை கிறிஸ்தவ தேவாலயம் யாழ்ப்பாணத்திலே வரலாற்றுப் பழைமை மிக்க ஓர் இடமாக வலிகாமம் விளங்குகின்றது. அவ் வலிகாமத்திலேதான் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் தமது சமய நடவடிக்கைகள், கவ்வி, அச்சகம் போன்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்திலே புரட்டஸ்தாந்து மதத்தை ஏற்றுக் கொண்ட மக்களில் கணிசமானவர்கள் வலிகாமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவ்வலிகாமத்திலேதான் முதன்
முதலாக பெண்களுக்கான கல்விப் LITL9FITG)(6) ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில், அதிலும் வலிகாமத்தில்
காணப்படுகின்ற முக்கிய பிரதேசங்களில் ஒன்றாக
சங்கானை கிறிஸ்தவ தேவாலயம் காணப்படுகின்றது.
 

இக்கிறிஸ்தவ தேவாலயத்தின் அமைப்பானது, யாழ்ப்பாணத்தில் உள்ள GT60)6OTLI கிறிஸ்தவ தேவாலயங்களை விட முற்று முழுதாக வேறுபட்டுக் காணப்படுகின்றது. தேவாலயத்தின் முகப்பு, ஏனைய நான்கு பக்கங்கள், வாசல் பகுதி, ஜன்னல்கள் என்பன பிறை வடிவம் போன்ற தோற்றத்திலே காணப்படுகின்றன. ஏறத்தாழ 150 மீற்றர் நீளமுடைய இக்கிறிஸ்தவ தேவாலயமானது, இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயக் கலை மரபிலே மிக உன்னதமாகப் போற்றப்படுகிறது. இக்கிறிஸ்தவ தேவாலயமானது கிட்டத்தட்ட 1970 ஆம் ஆண்டுகளில் இருந்து இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தால் வரலாற்றுச் சின்னமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பேணப்பட்டு வருகின்றது. பூ
தொகுப்பு: உமா பிரகாஷ்
மணற்காடு தேவாலய th

Page 51

& கலைக்கேசரி LITរៃ fuវើ 51
பருவகால மாற்றங்களுக்கு ஏற்ற LIITIDLIIfuI 2 60T6ö6
ழ்ப்பாண மக்களில் பலர் பண்டைய காலங்களில் UL I பருவ காலங்களை அனுசரித்து அவ்வக்
காலங்களில் தவிர்க்க வேண்டிய உணவு முறைகளைத் தவிர்த்து ஆரோக்கியத்தைப் பேணி வந்தது யாவரும் அறிந்ததே. சூழல் காரணிகள் அல்லது சூழ் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மனித உடல் உள நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்த வல்லன. பருவ காலங்களால் ஏற்படும் மாறுதல்கள் சூழல் மாறுபாட்டை ஏற்படுத்துவதனால் அதற்கு இயைந்து வாழத் தவறுமிடத்து நோய் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது போய்விடும்.
யாழ். கலாசாரமும் பாரம்பரிய உணவுகளில், சூழலியல் சார்பான மூலிகைகளின் பயன்பாடுகளும் மருத்துவ முக்கியத்துவமும்
சூரியன் சஞ்சரிப்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வருடமானது உத்தராயனம், தட்சணாயனம் என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாத காலத்தை உத்தராயனம் என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி வரையுள்ள ஆறுமாத காலத்தை தட்சணாயனம் என்றும் கொள்வர். இதில் உத்தராயனம் தைப் பொங்கலுடன் ஆரம்பமாகும். தட்சணாயனம் ஆடிப்பிறப்புடன் ஆரம்பமாகும். எனவே இவ்விரு காலங்களும் உணவுடன் தொடர்புடையதாய் பண்டிகைகளுடன் ஆரம்பமாவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு வருடத்தைப் பின்வருமாறு ஆறு பருவ காலங்களாகப் பிரித்துள்ளனர். ஆறு காலங்களில் இளவேனில் காலமாகிய சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கபம் அதாவது நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சித் தன்மை அதிகரிக்கும். எனவே அந்த சீததன்மை சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு எனவே அதனை சமநிலைக்கு கொண்டுவர இலகுவானதும் கைப்பு, கார்ப்பு சுவை உள்ளதுமான உணவுகள் சிறந்தவை.
உணவுப் பழக்க வழக்கம், சமூகப்பின்னணி கொண்டதாக அமைவதைக் காணலாம். எந்த நாட்டிலும் சமூகத்தின் தேவைகளுக்கு அமைய அடிப்படையான வளங்கள் உள்ளன. ஆனால் எமது நாட்டில் அண்மைக் காலமாக மேலைநாட்டு கலாசாரங்கள் அவை தொடர்பான விளம்பரங்கள் உயர்வடைந்த தன்மையை அவதானிக்கலாம். இதனால் குழந்தைகள் உட்பட முதியோர் வரை சுவை ஊட்டிய உணவுகளின் பாவனைக்கு அடிமையாகி விட்டனர். இன்று நகர்ப்புற பாடசாலைகளில் 30 - 40 வீதமான மாணவர்கள் உடற் பருமனுக்கு ஆளாகி விட்டனர். பாதகமான உணவுப்பழக்கம் 15 - 20 வருடங்கள்

Page 52
கலைக்கேசரி கி 52
தொடரின் இலகுவில் நோய்கட்கு இலக்காகும் பரிதாப நிலை ஏற்படலாம். நடுத்தர வயதை அடைய முன்பே நோயாளியாகி உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஏற்படலாம்.
எளிமையானதும், நிறைவானதுமான உணவைத் தெரிவு செய்யும் மனப்பான்மையும், சாதகமான உணவு பழக்கவழக் கங்களும் இன்றியமையாதன. இவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி சமைக்கும்.
யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி மற்றும் ஆய்வுக் கருத்தரங்கின்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர், திருமதி, விவியன் சத்தியசீலன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை
வேப்பம்பூ மக்களின் உணவுப் பயன்பாட்டில் வேப்பம் பூ முக்கிய இடம் வகிக்கின்றது. எமது பாரம்பரிய உணவில் வேப்பம்பூ வடகம், வேப்பம் பூ பச்சடி கட்டாயம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. வேப்பம் பூவானது கபத்தைச்
சமப்படுத்தும்; இரத்தத்தை சுத்திகரிக்கும்; கொலஸ்ரோலைக் கட்டுப்படுத்தும் எனக் கருதப்படுகின்றது.
சித்திரைக்கஞ்சி
சித்திரை மாதத்தில் அந்த பருவ காலத்திற்கேற்ப பெளர்ணமி சித்திரைக் கஞ்சியை பயன்படுத்துவது ஒர் பாரம்பரிய முறை. இது இலகு தன்மை உள்ளதென்பதால் கபமான நெய்ப்பு தன்மையைச் சமம் செய்யும். அதே சித்திரை மாதத்தில் கோவில்களில் குளிர்த்தி செய்து கூட்டான் சோறு வழங்குவது தனி இனிமையாகும்.
இதில் சிவப்பு பச்சரிசி, பல்வேறு வகையான காய்கறிகள் முதலியன சேரும். இது சமவிகித உணவாக விளங்குகின்றது. சமூக ரீதியில் சத்துஉணவு முறை வழங்கும் நெறிமுறையாக இருந்திருக்கலாம். ஏனெனில் கோவில்களில் இது வழங்கப்படுவதனால் ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் கிடைக்கும்.
காய்பிட்டு
பங்குனி மாதத்தில் சில பிரதேச மக்கள் காய்பிட்டு எனும் ஓர் ஆரோக்கிய உணவைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இங்கு சிவப்புப்பச்சை அரிசியை வறுக்காது நீரில் நனைத்து காயவைத்து இடித்து மாவாக்கி வழமையான பிட்டு போல குழைத்து தேவையானளவு
உப்பும் சேர்த்து அதற்கு வெங்காயம், பச்சை மிளகாய், பயிற்றம் பிஞ்சு, கத்திரிப்பிஞ்சு, தேவையெனின் தேங்காய்பூ சேர்க்கலாம். ஆனால் அதனைத் தவிர்ப்பது நல்லது. பின்னர் அதனை அவிக்கவேண்டும். இதன் போது வெண்டைக்காயையும் தனியே அவித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிட்டினை
 
 
 
 
 


Page 53
கொட்டிக்கிளறி அதனுடன் வெண்டைக்காயையும் சேர்க்க வேண்டும். இது ஓர் சமவிகித உணவாக விளங்கும். சிவப்புப் பச்சரிசியானது போலிக் அமிலத்தை கொண்டுள்ளது.
இலுப்பைப் பூ
இளவேனில் காலங்களில் இலுப்பைப் பூவும் மிக முக்கிய இடம் வகிக்கின்றது. இலுப்பம் பூக்களை சேகரித்து அல்லி தட்டி, வறுத்து, இடித்து, பனை வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து துவைத்து உண்பது மக்களின் பழக்கம். சிலர் இனிப்பு சுவையை கட்டுப்படுத்தி கார்ப்பினை சேர்த்து செத்தல் மிளகாய் சேர்ப்பதுண்டு. இலுப்பைப் பூவானது கபத்தைக் கட்டுப்படுத்தி இளவேனில் காலத்தை அடுத்து வரும் முதுவேனில் காலத்தில் வாதத்தை தடுக்கவும் உதவுகின்றது. இலுப்பைப்பூவில் சுக்குரோசு, பொசுபரசு, கல்சியம், இரும்பு சத்து உண்டு.
மூலிகைக் குளியல்
இன்று மூலிகைக் குளியல் எனும் சிகிச்சை முறை உலகளாவிய ரீதியல் முக்கியத்துவம் அடைந்து வருகின்றது. சித்திரை வருடப்பிறப்பன்று விஷ புண்ணிய காலத்தில் மருத்து நீர் தேய்த்து தோய வேண்டும் என்று விதித்திருக்கிறார்கள். மருத்து நீர் ஒரு மருத்துவ நீராகும். அதில் LIGR) மருத்துவ மூலிகைச் சரக்குகள் இடம்பெறுகின்றன. இவை இருமல், காய்ச்சல் மற்றும் தோல் வியாதிகளைப் போக்க வல்லனவாகவும் தேகத்துக்கு குளிர்ச்சியையும் நறுமணத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்க வல்லனவாயும் உள்ளன. சித்திரை மாத இளவேனில் காலத்தை எதிர் கொள்ள உதவும் மூலிகை குளியலாக இது அமையும்.
மருத்துநீரில் சேரும் மூலிகைச் சரக்குகள்: தாழம்பூ மா துளம் பூ, தாமரைப் பூ வில்வம் பூ விஷ்ணுகிராந்தி, அறுகு, சீதேவியார் செங்கழுநீர், பீர்க்கு இலை, சுக்கு, மிளகு,
திப்பலி, மஞ்சள், L IΠου, கோசலம், கோமயம்,
கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம்.
 

& கலைக்கேசரி 53
கருப்பணிக்கஞ்சி
முது வேனில் காலமாகிய ஆனி - ஆடி மாதம் வெயில் மிகுந்த காலமாகும். இக்காலத்தில் குளிர்ச்சித் தன்மையான கபம் விருத்தியடைந்து, தன்னிலையடைய ஆரம்பிக்கும். அதே வேளை வாதம் தன்னிலையிலிருந்து விருத்தியடைய ஆரம்பிக்கும். ஆகவே வாதத்தைக் கட்டுப்படுத்த இனிப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் பயன்படுத்தப்பட்டது.
இதில் முக்கிய இடம் பெறுவது கருப்பணிக்கஞ்சி ஆகும்.
கருப்பணிக்கஞ்சியில் சேர்வன: சிவப்பு பச்சரிசி - 1 கிலோ, பயறு - 2 சிரங்கை, வடித்த கருப்பணி - 3 போத்தல்; சிவப்பு பச்சரிசியை வேக வைத்து, பயறு சேர்த்து வெந்து வரும் வேளையில் கருப்பணியையும் சேர்த்து வேக வைத்து எடுப்பதாகும். கஞ்சியைக் கலத்தில் விடும்போது தேங்காய்பால் சீனி சேர்த்து வடிக்கவும். இது குளிர்ச்சி கொடுப்பதுடன் உடல் வெப்பத்தை தணித்து உடலுக்கு
ஒரு போசணகாரியாக அமையும்.
அம்மைநோய் உணவு முறை 蚤
இக்காலத்தில் அம்மைநோய் (வைரஸ்) உணவு முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு வெள்ளைப்பச்சரிசி நன்கு சமைத்து சாதமாக்கப்பட வேண்டும். புளிக்காத தயிர், சிறிய வெங்காயம் (சிறிதாக அரிந்து ), கடுகு என்பவற்றை சாதத்துடன் பிசைந்து கொடுக்கப்பட்டது. இது இலகுவில் சமிபாடடையக் கூடியதும், அகத்துறிஞ்சப்படக்கூடியதும் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியதுமான உணவு முறை ஆகும்.
ஆடிக்கூழ் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்பன சத்துணவாகும். இரைப்பையில் அக்கினியை (பசித்தீயை) சாந்தப்படுத்தி பசியையும் போக்க வல்லனவாக அமைகின்றன.
ஆடிக்கூழ்: அரிசிமா- 200 கிராம், பனங்கட்டி - 1 பெரிய குட்டான், பயிற்றம் பருப்பு - 50 கிராம், தேங்காய் - 1, நற்சீரகம் - 1 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு
இந்த உணவுப் பொருட்கள் காபோவைதரேற், புரதம், இரும்பு சத்து என்பவற்றை கொண்ட ஒரு சமவிகித

Page 54
អ៊ែងហ្គ្រាម៉ាឃី 54
உணவாக அமைவதுடன் மலமிளக்கிச் செய்கை உடையதாகவும் காணப்படுகின்றது.
கொழுகட்டை : பயிற்றம் பருப்பு - 250 கிராம், சர்க்கரை - 250 கிராம், அரிசி மா - 500 கிராம், தேங்காய் - 1 பாதி, நற்சீரகம் - 1 தேக்கரண்டி, ஏலரிசி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
ஆடி அமாவாசை இந்துக்களைப் பொறுத்த வரையில் விசேட தினமாகும். இத்தினத்தன்று காற்றோட்டிக்காயை உணவில் சேர்ப்பது வழமையாகும். காற்று ( வாயு), ஒட்டி (அகற்றி) என்று இதிலிருந்து பொருள் கிடைக்கின்றது. அதாவது உடலில் விருத்தியடைந்துள்ள வாயுவை (வாதத்தை) இது கண்டிக்கும் அல்லது சமப்படுத்தும். எமது மருத்துவத் தத்துவப்படி ஆவணி, புரட்டாதி மாதங்களில் வாதம் கூடும் காலமாகக் குறிப்பிடுவர். இவ்வாறு அதிகரித்த வாதத்தினை காற்றோட்டி அகற்றும். காற்றோற்டியானது ஆடி, ஆவணி, புரட்டாதி மாதங்களில் கிடைக்கக் கூடியதாக இருப்பதால், ஆடி அமாவாசை அன்று மட்டுமன்றி கிடைக்கும் காலங்களில் நெய்யில் வாட்டி உணவுப் பொருட்களுடன் கலந்து சாப்பிடலாம். சிலர் இதனை கிடைக்கும் காலங்களில் சிறு சீவல்களாக வெட்டி காய வைத்து வற்றலாகவும் உபயோகிப்பர்.
அரைக் கிலோ கிராம் அரிசி மாவை அரைப்பதமாக வறுத்தெடுத்து, பயற்றுடன் 150 கிராம் மா போல உலர்த்தி, அரிசி மாவுடன் குழைத்து, தேங்காய்ப் பூவும் சீனியும் சேர்த்து பிசைந்து, தேன், நெய் கலந்து கொழுக்கட்டை அவிப்பது போல அவித்துப் பயன்படுத்தலாம். இதில் புரதம், காபோஹைதரேற்று இருப்பதால் உடலுக்கு பலம் தரும். தேன், நெய் பாதுகாப்பான உணவாகவும் பசியினை ஏற்படுத்துவதாக உள்ளன.
ஒடியல் பிட்டு தை மாதம் தைப்பொங்கலன்று இரவு ஒடியல் பிட்டு உண்பது வழமை. இதற்கு ஒடியல் மாவினை தயாரித்து அதனைப் பிட்டு மாவாகப் பாவிக்கலாம். இதனுடன்
கத்தரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் என்பன சேர்த்து
வெங்காயத்தினை சிறிதாக வெட்டி அவித்து இறக்கி
 
 

அதனுடன் தேங்காப்பூவும் கலக்க வேண்டும். இதுவே ஒடியல் பிட்டாகும்.
ஒடியற்கூழ்
ஒடியல் மாவினை எடுத்து நீர் விட்டுக் கரைத்து தெளிவெடுத்து, ஆரம்பத்தில் சிரங்கை அரிசி சேர்த்து கூழாகக் காய்ச்சி, பழப்புளி நீர் விட்டுக் கரைத்து, செத்தல் மிளகாய், உள்ளி, மிளகு, நற்சீரகம், மல்லி, தேங்காய் சொட்டு என்பனவற்றை தேவையான அளவு எடுத்து அரைத்து, நீர்புளிக்கலவையுடன் சேர்த்து எருமைமுன்னை அல்லது முருங்கையிலை இறுதியில் சேர்க்க வேண்டும். இது சளிக்கான சிறந்த உணவு ஆகும். பசியைத் தூண்டும். இலகுவில் சமிபாடடைந்து அகத்துறிஞ்சப்படக்கூடிய உணவு முறை ஆகும். குழந்தையிலிருந்து வயோதிபர் வரை குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாருக்கு சிறந்த உணவாக அமையும். எனவே கூழை இடையிடையே பருகி வருவதால் மலம் நன்கு வெளியேறி, வாதம் முதலிய முத் தோஷங்களின் சமநிலை பேணப்படுவதால் சரீர ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
உடலுழைப்பை நம்பி வாழ்ந்த காலத்தில் நெய்யை கூடுதலாக உணவில் பயன்படுத்திய போதிலும் மேலதிகமான சக்தி உடலிலிருந்து வெளியேற்றப் படுவதற்கும் வழியிருந்தது. இதனால் கொழுப்பு படிந்து உடற்பருமன் அதிகரிப்பதும் அதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதும் தவிர்க்கப்பட்டது.
மேலும் எமது மக்கள் வாழைத்தண்டு சுண்டல் செய்து சாப்பிடும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். தானியத்தை கடலை போன்று அவித்து இரசமாக செய்து உண்ணும் வழக்கத்தையும் கொண்டிருந்தனர். இவை உடலில் கொழுப்பு மிகையாகாமல் இருப்பதற்கும் உடற்பருமன் அதிகரிக்காமல் இருப்பதற்கும் உதவக்கூடியன.
பனங்காய் பிட்டு பனங்காய் பிட்டு மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிட்டு மாவுடன் பனங்களியைச் சேர்த்து பிசைந்து
உருண்டைகளாக செய்து ஆலம் இலையில் வைத்து அவித்து, ஆலம் இலைகளுடன் சேர்த்து உருண்டைகளை

Page 55
(ශ්‍රී L.J IT බ) உண் ணப் படு கின்றது. இதுவும் மலத்தை இளக்கக் கூடிய சத்துக்களை வழங்கக்கூடிய ஒர் உணவாகும்.
பனங்காய் சேர் பலகாரம் பனங்காய் சேர் பணியாரத்தில் பனங்களியுடன் சாமை, அரிசிமா சேர்க்கப்படும். இதில் உயிர்ச்சத்து ஏ, சி, கல்சியம், இரும்புச்சத்து, பொஸ்பேற் உள்ளதுடன் மலத்தை நன்கு இளகப்பண்ணி குடலை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அத்துடன் நார்த்தன்மையும் அடங்கியுள்ளது. இதுவும் மலத்தை இளக்கச் செய்யும். இது முத்தோச சமனியாக செயற்பட்டு உடலிலுள்ள தாதுக்களையும் தோசங்களையும் சமனிலையில் வைத்திருக்கும்.
ஐப்பசி, கார்த்திகை காலங்களில் வெயிலும் மழையும் சேர்ந்து காணப்படும். இக்காலத்தில் பித்த தோஷம் அதிகரிப்பதாக கருதப்படுகின்றது. இலகு குணமுள்ள உணவுகளை உட்கொள்வது உடல்நலத்திற்கு நன்று.
மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள் குளிரும் பணியும் மிக்க காலப்பகுதியாகும். இக்காலத்தில் பசி தீவிரமாக இருக்கும். அதனைக் கருத்திற் கொண்டு நெய் முதலிய குரு குணமுள்ள உணவுகளை உள்ளெடுக்க வேண்டும்.
பாரம்பரிய சத்துணவுகள்
உளுந்து, பயறு, கைக்குத்தரிசி ஆகியவற்றை திரித்து மாவாக்கி தேங்காய்ப்பூ சர்க்கரை அல்லது சீனி சேர்த்து சத்து மாவாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதேபோன்று புளுக்கொடியலை மாவாக்கி அரித்தெடுத்து அதற்கு சிறிது தேங்காய்பூ, சர்க்கரை அல்லது சீனி சேர்த்து குழைத்து உண்ணக் கொடுப்பார்கள். இது குடலை நன்கு சுத்தப்படுத்தி மலத்தை இளக்கி வெளியேற்றும்.
அதே போன்று மக்களின் பாரம்பரிய உணவாக கூழ், களி, பழஞ்சோற்றுத் தண்ணீர், மோர் இவை வயோதிபர் உண்பதற்கு இலகுவான உணவாகும். இலகுவாக செரிக்கும்; சத்துணவாகவும் அமையும். இவ்வாறே இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்க இரத்தத்தை விருத்தி செய்ய எள்ளுப்பாகு பயன்பட்டது.
எள்ளுப்பாகு எள்ளு - 1 கிலோ, உளுத்தம்மா - 1 சுண்டு, சீனி - 500 கிராம், மிளகு, நற்சீரகம்.
எள்ளு, மிளகு, நற்சீரகம், உளுந்து இவற்றை ஒன்றாக
 
 

சேர்த்து இடித்து, சீனிப்பாணியை அத னுள் சேர்த்து எடுத்தல் வேண்டும். குழந் தைகளுக்கு சிறந்தது. மற்றும் கர்ப்பிணி தாய் மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்க்கும் இரத் தத்தை விருத்தி செய்வதுடன் பால் சுரப்பதை கூட்டும்.
இதில் இரும்புச் சத்து கல்சியம் உள்ளதால் தாய்க்கும் சேய்க் கும் போசாக்கான உணவாகும்.
உளுந்தானது கர்ப்பாசய உறுப்புகளையும் இடுப்பென்புகளையும் உறுதியாக்கும். உளுத்தங்களியை கர்ப்பகாலம், பூப்பெய்தும் காலம், குழந்தை வளர்ப்புக் காலங்களில் முக்கியமாக உண்ணக் கொடுப்பர். இதில் நல்லெண்ணெய் சேர்வதால் உறுதியான வளர்ச்சிச் செயற்பாடு அதிகரிக்கும். உணவுகளில் சில குறிப்பிட்ட இலைகளை சேர்த்து உணவு தயாரிக்கும் முறைகள் உண்டு.
இலைப்பிட்டு பொருத்துமான் கொடியிலைகளை சிவப்பு பச்சரிசி
மாவுடன் சேர்த்து பிட்டு தயாரிக்கப்படும். இது எலும்பு
முறிவு -நெரிவுகளை பலப்படுத்தும். பொருத்துமான்கொடி இலையில் போலிக்அமிலம் அதிகமாக உள்ளது. இது செல்களின் முதிர்வுக்கு தேவையானது. எனவே கர்ப்பாசய நோய்களில் பெரும்பாட்டில் மாதவிடாய் வலிகளின் போது இது பயன்படுகிறது.
குளிரான காலங்களில் பயன்படுத்தக்கூடிய உணவு முறைகள்
தூதுவளை சூப்
தூதுவளை சூப் செய்வதற்கு வெண்ணைய், தூதுவளை, வெங்காயம், தக்காளி, சீரகம், ஓமம், தேங்காய் துருவல், துவ ரம் பருப்பு, உள்ளி, மல்லி, உப்பு, மிளகு ஆகிய பொருட்கள் தேவையாகும். முதலில் மல்லியை அரைத்து, தேங்காய் ப்பால், தூதுவளை என்பவற்றை சேர்த்து வேகவிடவும். உப்பு, வெங்காயம், துவரம் பருப்பு என்பவற்றை சேர்த்து வெண்ணையுடன் ஓமம், சீரகம் சேர்த்து உலர்த்தி கிளறி விடவும். மிளகு சேர்த்து உண்ணலாம்.
மொசுமொசுக்கை அடை
மொசுமொசுக்கை அடை செய்வதற்கு தேவையான பொருட்கள் மொசுமொசுக்கை இலை, மிளகு, வெங்காயம், உப்பு, அரிசி ஆகும். அரிசியினை ஊறவைத்து, மாவாக்கி மொசுமொசுக்கை இலைகளை வெங்காயம் சேர்த்து அரைத்து, உப்பு, மிளகு சேர்த்து அரைத்து, அதனை தோசை போல வார்த்து உண்ணலாம்.
பாரம்பரிய உணவு முறைகளில் பல மூலிகைகள்
பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் இப்பொழுது மூலிகைகளின் பயன்பாடு குறைந்தமையால் அவற்றை பாதுகாத்து வருவதும் குறைந்து அழிவு நிலை அதிகரித்துள்ளது. இவ்வரிய இயற்கை கொடைகளை அழி வடையாது பாதுகாத்து அவற்றின் உயர்ந்த பக்கவிளைவற்ற பலனை பெற்று நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.
50ញត្អែ
55

Page 56
អ៊ែងហ្គ្រាម៉ារ៉ៃរឺ 廖 56 ஆளுமை
பண்பாட்டுத் தளத்தில் நவீன கல்வியை முன்னெடுத்த புலமையாளர் பெரியார்
சிவபாதசுந்தரனார்
பேராசிரியர் சபா. ஜெயராசா ங்கில மொழியின் நவீனத்துவத்தைத் தமிழ் ஆ மொழிக்குக் கொண்டு வந்த கல்வியாளருள் சைவ பெரியார் சு.சிவபாதசுந்தரனாரின் (1878 - 1953) பங்களிப்புக்கள் தனித்துவமுடையவை. தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலே ஆழ்ந்த புலமை படைத்த அவர் ஆங்கிலம், தமிழ் என்ற இரு மொழிகளின் ஊடாட்டங்களினூடே மொழி பெயர்ப்பு மற்றும் உரை பெயர்ப்பு என்ற கலைகளை தமிழில் மேலெழச் செய்த
புலமையாளராகவும் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
நவீன தமிழ் வேண்டி நின்ற புத்தம் புதிய மேலைப் புலச் சிந்தனைகளை புலமை நிமிர்வுடன் வழங்கிய அவரது செயற்பாடுகள் விதந்து குறிப்பிடத்தக்கவை. அவரைச் 'சைவப் பெரியாராகத் தரிசித்துச் சிறப்பித்த நிலையில் அவரின் கல்வி ஆளுமையின் மறுபக்கம் ஆழ்ந்து
நோக்கப்படவில்லை.
புலோலி ஆங்கிலப் பாடசாலையிலே தமது ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த தமது சிறிய தந்தையாருடன் தங்கியிருந்து மேற்படிப்பைத் தொடரலானார். தொடர்ந்து திருச்சியில் உள்ள சென். ஜோசப் கல்லூரியிலே படித்துச் சென்னைப் பல்கலைக் கழகத்திலே பி.ஏ. பட்டம் பெற்றார். அங்கே இருந்த வேளை
 

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலே ஆழ்ந்த புலமையை வளர்த்துக் கொண்டார்.
அவர் வாழ்ந்த காலத்திலே ‘கல்வி இயக்கம்’ என்பது இலங்கையிலே எழுச்சி கொள்ளத் தொடங்கியது. சேர்.பொன் இராமநாதன் அவர்கள் 1921ஆம் ஆண்டிலே பரமேஸ்வராக் கல்லூரியைத் திருநெல்வேலியில் நிறுவியமை நவீன கல்வி வளத்தைத் தமிழ்ச் சூழலுக்கும் சைவச் சூழலுக்கும் கொண்டு வரும் செயற்பாடுகளின் தொடர்ச்சியில் நிகழ்ந்த முக்கியமான எழுச்சியாகும்.
கல்வி இயக்கத்தில் நிகழ்ந்த முக்கியமான செயற்பாடு ஆசிரியர் கல்வி தொடர்பானதாக அமைந்தது. அறிவும், ஆற்றலும், வாண்மை நியமங்களும் கொண்ட ஆசிரியர்களை உருவாக்கும் செயற்பாடுகள் முன்னுரிமை பெற்றன. ஆங்கில மொழியிலே சிறப்புப் பெற்றிருந்த கல்வியியற் சிந்தனைகளை தமிழுக்குப் பெயர்த்தெடுக்கும் செயற்பாடுகளைச் சிவபாதசுந்தரனார் மேற்கொண்டார்.
கல்வி உளவியல், கற்பித்தலியல், கல்வித்துவம் முதலாம் துறைகளிலே தனித்துவமான மொழி பெயர்ப்புக்களை மேற் கொண்டதுடன் தமிழிலே புதிய சொல்லாக்க முயற்சிகளையும் முன்னெடுத்தார். Psychology என்பதற்கு மனோதத்துவம் என்ற சொல்லை அக்காலத்து ஆசிரிய கலா சாலைகளிலே பயன் படுத்திய வேளை அவர், தமிழ் மொழியின் தளத்திலே நின்று அக நூல் என்ற சொல்லுக்கு வலுவூட்டினார். மொழி பெயர்ப்புக்களை மேற் கொண்டதுடன் நின்றுவிடாது புதிய அறிவுச் செல்வங்களை உள்ளடக்கிய தமிழ் நூல்களையும் எழுதினார்.
ஆங்கிலக் கல்வியின் எழுச்சியுடன் கணிதம், தருக்கம் முதலாம் பாடங்கள் முன்னரிலும் அதிக முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கின. அந்நிலையில் அப்பாடங்களைத் தாம் ஆழ்ந்து கற்றுப் புலமை நிலை எய்தியதுடன் அவற்றைக் கற்பிக்கவல்ல ஆசானாகவும் முகிழ்த்தெழுந்தார்.
அக்காலத்தைய கணிதக் கல்வி பற்றிய சுவையான தகவல் ஒன்றினை பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (1978 விழா மலர்) அக்காலத்தில் பிராமணரல்லாதாருக்குக் கணிதம் வராது என்ற திட நம்பிக்கை அங்கே (இந்தியாவில்) இருந்தது. பெரியார் அந்நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கணிதத்தில் மிகத் திறமையோடு B.A பரீட்சையிற் சித்தியெய்தினார்.
மாணவரின் இயல்பறிந்து கணித பாடத்தை உரிய முறையிலே கற்பித்தால் எவராலும் அப்பாடத்தை எளிதிற் கற்க முடியும் என்ற தத்துவத்தை கற்பித்த பாடசாலைகளாகிய திருகோணமலை சென்ஜோசப் கல்லூரி, திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, சுளிபுரம் விக்டோரியாக் கல்லூரி ஆகியவற்றிலே நிறுவிக்காட்டினார்.
கணிதப் பண்பாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் வளர்ந்து மேலெழுவதற்கும், கணித ஆசிரியர்கள் பலர் தோற்றம்

Page 57
பெறுவதற்கும் சிவபாதசுந்தரனாரின் கல்விப் பணிகள் முக்கியமாக அமைந்தன. அவர் வளர்த்த கணித அறிவு ஆகியவற்றின் ஊட்டங்களைப் பெற்றோர் மலாயாவில் தொழில் பெற்றுச் செல்லும் வாய்ப்பினையும் அடைந்தனர்.
கணிதப் பண்பாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் வளர்ந்து மேலெழுவதற்கும் கணித ஆசிரியர்கள் பலர் தோற்றம் பெறுவதற்கும் சிவபாதசுந்தரனாரின் கல்விப் பணிகள் முக்கியமாக அமைந்தன.
விக்டோரியாக் கல்லூரியிலே கல்வி கற்று மலேயாவிலே தமிழ்ப்பணி மேற்கொண்டவர்களுள் காரைநகர் இ.வே.கந்தையா, சுளிபுரம்அ.சிவகுருநாதன், வட்டுக் கோட்டை த.சிவப்பிரகாசம், சுளிபுரம் அ.ஆறுமுகம், காரைநகர். கே.இலகுப்பிள்ளை, சுளிபுரம் செ.இராசபட்சம், ஊரெழு ந.அழகானந்தம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் ஆகியவற்றுக் கிடையே சமநேர உரைபெயர்ப்பு பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் தமிழ் பிரதேசங்களுக்குத் தவிர்க்க முடியாத தேவையாக இருந்தது. அதன் பின் புலத்திலே சமநேர d 60JGULil'IL (Simultaneous Translation) என்ற கலை வளரலாயிற்று. அந்தக் ᏧᏠ5ᎶᏡ0ᎶNᎧᎶᏡ0ᏓᏆ ] முன்னின்று
வளர்த்தவர்களுள் சிவபாதசுந்தரனார் தனித்துவமானவர்.
 

& கலைக்கேசரி 57
அவரைத் தொடர்ந்து சமநேர உரை பெயர்ப்பு மரபு யாழ்ப்பாணத்திலே செழிக்கத் தொடங்கியது. அந்த மரபைப் பின்னர் ஆசிரியர் பானுதேவன், வி.பொன்னம்பலம் முதலியோர் சிறப்பாக முன்னெடுத்தனர்.
சிவபாதசுந்தரனாரது சமநேர உரைபெயர்ப்புத் திறனையும் அதற்கு அடிப்படையான இரு மொழித் திறன்களையும் கேட்டு நினைவிற் பதித்து இயக்க வேண்டிய ஞாபகத் திறனையும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் விதந்து பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சுவாமி இராமகிருஷ்ணரின் சீடராகிய சுவாமி சர்வானந்தாவின் ஆங்கில உரையை தமிழிற் பெயர்த்த நிகழ்ச்சி உரைபெயர்ப்பின் உன்னத நிலையை வெளிப்படுத்தியது. ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குக் கூட அவரது உரை பெயர்ப்பு நல்லதொரு மீட்டற் பாடமாக அமைந்திருந்தது என பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில மொழியில் இந்து 5FLDULJLb பற்றி எடுத்தியம்பப்பட்ட அளவுக்கு சைவம் பற்றிய விளக்கங்கள் விரிவாகப் பேசப்படவில்லை. இந்து சமயம் பற்றி ஆங்கில மொழியில் எழுதியோர் சைவ சமயம் பற்றிய மேலோட்டமான அறிமுகவுரைகளையே பெருமளவில் வழங்கினர். அத்தகைய சூழலில் சைவ மெய்யியல், மற்றும்
. . . . . . . . . .

Page 58
អ៊ែងហ្វិញម៉ារ៉ៃរឺ 度 58
சைவத்தருக்கம் முதலிய துறைகளை உள்ளடக்கிய நூல்களை சிவபாதசுந்தரனார் எழுதி வழங்கினார். -96) pDJGT The Saiva School of Hinduism” 6T6TLg/ L656) b முக்கியமான ஓர் ஆக்கம்.
சமநேர உரை பெயர்ப்புக் கலையை முன்னின்று வளர்த்தவர்களுள் பெரியார் சிவபாதசுந்தரனார் தனித்துவமானவர்."
அந்நூலைப் பற்றிய விதந்துரைப்புக்களை இலண்டன் ரைம்ஸ், லிவர்ப்பூல் போஸ்ட், இலண்டன் குவாட்டலிறிவியு, ரைம்ஸ் ஒப் இந்தியா, கல்கத்தா றிவியு, ஹிந்துஸ்தான்றிவியு மற்றும் இந்து இதழ் ஆகியவை தருக்க நிலையில் விதந்துரைத்தன. ஒரு புறம் ஆங்கில மொழியில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமையினையும் மறுபுறம் சைவ நெறியில் ஆழ்ந்து ஊறிய தரிசனங்களையும் அவரது ஆங்கில எழுத்தாக்கங்கள் புலப்படுத்தின.
அவரது கல்வித் தரிசனம் மனிதநேயம், தாராண்மை நெறி, நவீன உளவியல் ஆகியவற்றை ஒரு சேரத்தழுவிய அணுகு முறையாக அமைந்தது. 'கற்க முடியாத மாணவர் எவருமிலர் என்ற கருத்தை அவர் தாம் அதிபராகவிருந்த விக்டோரியாக் கல்லூரியில் நடைமுறையில் நிரூபித்தார். அவரிடம் கற்று B.A மற்றும் B.SC பட்டங்களைப் பெற்ற ச.சிதம்பரப்பிள்ளை அவர்கள் ஒரு முக்கியமான சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
瀏
 

அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பிலே சித்தியெய்த முடியாத ஒரு மாணவன் இருந்தான். வகுப்பேற்றப் பரீட்சைகளில் அவன் மிக குறைந்த அடைவு மட்டங்களைப் பெற்றிருந்தமையால் அடுத்த வகுப்புக்குச் செல்ல முடியாமல் எட்டாம் வகுப்பில் ஈராண்டுகள் தங்க நேரிட்டது. ஆங்கில மொழியில் சரியாக ஒரு வசனம் கூட எழுத முடியாத நிலையில் அவன் இருந்தான். கணிதம் என்பது அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. விஞ்ஞான பாடத்தின் ஆரம்ப அடிப்படைச் சொற்களையே அறிய முடியாத நிலையில் அந்த மாணவன் சிவபாதசுந்தரனாரிடத்து ஒப்படைக்கப்பட்டான். சரியாக ஓராண்டு வீச்சில் அவரிடம் கற்று அவன் இலண்டன் மெற்றிக்குலேஷன் பரீட்சையில் ஆங்கிலம், கணிதம், இரசாயனம் ஆகிய பாடங்களிலே திறமைச் சித்தியைப் பெறக் கூடியதாக இருந்தது. அந்த நிகழ்ச்சி சுளிபுரம் பிரதேசத்தில் ஆக்கபூர்வமான பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. அக்காலத்தில் வட்டுக்கோட்டையில் புகழ் பெற்று விளங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு புறம் கிராமப்புறக் கல்வியை மேலோங்கச் செய்ய மறு புறம் சிவபாதசுந்தரனாரின் விக்டோரியாக் கல்லூரி கிராமப்புறக் கல்வியின் எழுச்சிக்குத் தூண்டுதலளித்தது.
அக்காலத்திலே இலங்கையின் பிற பாகங்களிலே கிராமப்புறக் கல்விக்கும் நகரப்புறக் கல்விக்குமிடையே
பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன. நகர்புறப்

Page 59
பாடசாலைகள் வளமும் வசதிகளும் கொண்டிருந்தன.
பட்டதாரிகள் அக்கல்லூரிகளிலே கற்பதற்கு அமர்த்தப்பட்டனர். ஆங்கில இலக்கியம், தூய கணிதம், பிரயோக கணிதம், இரசாயனவியல், பெளதிகவியல் முதலாம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
கிராமப்புற பாடசாலைகளுக்கு அத்தகைய வசதிகள் கிடைக்கப்பெறவில்லை. மேற்குறித்த பாடங்கள் பெரும்பாலான கிராமப்புறப் பாடசாலைகளிலே கற்பிக்கப் படவில்லை. ஆனால் யாழ்ப்பாணப் பிரதேசக் கல்வியைப் பொறுத்தவரை அத்தகைய பாரிய வேறுபாடுகள் காணப்படவில்லை. அதற்கு அக்காலத்தைய எழுகுழாத்தினரது பங்களிப்பும் பங்குபற்றலுமே அடிப்படைகளாக இருந்தன.
சிவபாதசுந்தரனார் சிறந்த கல்வி நிர்வாகியாக இருந்தார். சிறந்த கல்வி நிர்வாகத்தின் வழியாகவே தரச் சிறப்பு மிக்க கல்வியை வழங்க முடியும் என்று கருதினார். அவரது கல்வி நிர்வாகச் சிறப்புத் தான் சுளிபுரத்துப் பாடசாலையை தேசிய மட்டத்தில் உயர்ந்த கல்லூரியாக மேலெழச் செய்தது.
அவர் மேற் கொண்ட ஒரு சிறப்பான கல்விப் பங்களிப்பு தரச் சிறப்பு மிக்க ஆசிரிய அணியை உருவாக்கியமையும் ஒரு சிறந்த ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குரிய காட்டுருவினராக தம்மை உருவாக்கிக் கொண்டமையுமாகும். எளிமை, தூய்மை, ஒழுக்கம், சைவசீலம், ஆழ்ந்த புலமை, பல துறை ஆற்றல்கள்,
 

கற்பிக்கும் பன்முகத் திறன்கள் அனைத்தும் அவரது ஆசிரியத்துவ ஆளுமையில் உட்பொதிந்திருந்தன.
‘ஒரு சிறந்த கல்வி நிர்வாகியாகவும் விளங்கியவர் சிவபாதசுந்தரனார். சிறந்த கல்வி நிர்வாகத்தின் வழியாகவே தரச்சிறப்பு மிக்க கல்வியை வழங்க முடியும் என்று கருதினார்.
சைவ சமயத்துக்கும் நவீன அறிவியலுக்குமிடையியே இணக்கப்பாடு கண்டறியப்பட்டமையும் அவற்றை உள்ளடக்கிய சமநிலைக்கல்வித் திட்டத்தை (Balanced Curriculum) உருவாக்கிக் கற்பித்தமையும் அவரின் புலமை ஆளுமையின் பிறிதொரு பரிமாணமாயிற்று. சைவ சமயத்தின் சாராம்சத்தை நவீன கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்க்குக் கையளித்தார். அவ்வாறே கணித அறிவை எளிதிலிருந்து சிக்கல்களுக்குச் செல்லும் தொடர் படிநிலையாக்கங்கள் வாயிலாகக் கற்பித்து அந்தப் பாடத்தைச் சுவையுள்ள பாடமாகக் கையளித்தார்.
ஆறுமுகநாவலருக்குப் பின் சைவ நெறியையும் கல்வியையும் நவீன உலகின் அறிவுத் தளங்களுக்கு விரிவாக்கிச் சென்றவர்களுள் பெரியார் சிவபாதசுந்தரனார் தனித்துவமானவர்.
Y

Page 60
ព្រូញត្អែថ្ងៃ ខែ 60ួយឆ្នា
கோட்டு வடை
ண்டைய காலம் முதல் மனித நாகரீகத்தின் பண்பாட்டில் எழுந்த கற்பனை வளத்தைப் பலவகை நுண் கலைகள் மூலம் வெளிப்படுத்தினர். இந்த வகையில் அடிப்படையில் எழுந்த நுண்கலையின் ஓர் அம்சமே கோடுகளால் வரையப்பட்ட ஒவியங்களாகும். இக் கோடுகளிலான ஒவியங்களாவன, ஓர் சிறந்த கலைஞரின் உள்ளத்தின் எழுச்சியினை தன் கற்பனை வளத்தினூடாக கைவண்ணத்தில் வரைந்து பண்டைக்காலம் முதல் வெளிப்படுத்தினான். பல தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பெறுபேறுகள் அத்தகைய கோட்டிலான ஒவியங்கள் வரலாற்றை அவற்றின் தொன்மையினைப் பறைசாற்றும் ஊடகங்களாக விளங்குகின்றன.
பண்டையக் கால மட்பாண்டங்கள், பண்டைய நாணயங்கள், உலோகங்கள், சுவர்கள், குகைகளில் வரையப்பட்ட வர்ணம் தீட்டப்படாத கோடுகளால் மட்டும் வரையப்பட்ட பண்டையத் தனித்துவம் மிக்க ஓவியங்களின் பண்பினை மற்றும் அவற்றின் பாங்கினை இன்றும் எம்மால் காண முடிகின்றது.
 

IL ஒவியங்கள்
- மதுபாஷிணி மகாதேவன்
இக்கோட்டு உருவமைப்பால் மேற்கொண்ட ஒவியங்கள், அன்று பல துறைகளில் உலகளாவியரீதியில் எம்மால் காணமுடிகின்றது. நாட்டிற்கு நாடு, பிரதேசத்துக்குப் பிரதேசம் பலவகையான மொழிகள் பொதுவாக வழக்கத்தில் இருக்கின்றன. இம்மொழிகளின் எழுத்து உரு வடிவமைப்புகள் ஏறத்தாழ கோட்டு வரைதல் வடிவமைப்பை ஒத்ததாக விளங்குகின்றன. ஒவ்வொரு எழுத்து உருவ வடிவமைப்பும் தனித்துவமான கோட்டு உருவ அமைப்பைக் கொண்டனவாக விளங்குகின்றன. இவை யாவும் கோட்டு வடிவமைப்பு, மொழி, கலாசார அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.
மனிதனால் ஆதியில் கோட்டுவரைப்பட ஒவியங்கள், மண்ணிலும், களி மண்ணிலும் கற்களின் மேலும் உலோகத்தின் மேலும் பொறிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வந்தன. ஆயினும் காலக்கிரமத்தில் காகிதம் அறிமுகமானதை அடுத்து பென்சில் என்னும் காரியத்தாலான கணிப்பொருளால் கோட்டு உருவங்கள் பெரிதும் வரையப்பட்டன. இவை எடுத்துக் கொண்ட அம்சத்தைப் பெரிதும் துல்லியமாகத் தெளிவாக ஒவியனால் வரையப்பட்டன.
பண்டையக் கால கோட்டு ஒவியங்களாவன பல வகை அம்சங்களை எடுத்தியம்புவனவாக விளங்கின. குறிப்பாக மனித உருவங்கள், தேவதைகள், ஊர்வனங்கள், மிருகங்கள், பறவைகள், செடி கொடிகள், இயற்கைக் காட்சிகள், வழிபாட்டு உருவங்கள், சின்னங்கள், சமூகக் காட்சிகள், சரித்திரக் காட்சிகள் என்பவற்றை இக்கோட்டு வரைதல் ஒவியங்கள் பெரிதும் வெளிப்படுத்தின.
ஆரம்பத்தில் காகிதங்களில் வெறும் பென்சிலால் மட்டும் வரையப்பட்ட ஒவியங்களுக்கு மேல் காலக் கிரமத்தில் கறுப்பு மையால் மீண்டும் மீண்டும் கண்ணுக்குத் துலக்கமான வகையில் அழுத்தமாக வரையப்பட்டது. இந்திய மை’ எனக்குறிப்பிட்டு அழைக்கப்படும் ஒரு வகை குறிப்பிட்ட மையே ஒவியத்தை துலக்கப்படுத்தப் பாவனை மேற் கொள்ளப்பட்டது.
கோட்டு வரைதலுக்குப் பெரிதும் நேர்கோட்டு வரைதல், நெளிவு, சுளிவு வளைவுகள் நிறைந்த கோட்டு வரைதல் பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப காலத்தில் பெனிசிலால் வரையப்பட்ட ஒவியங்களுக்கு இசில 5FLDuLJL b அல்லது பெரும்பாலும் நிழல் ஊட்டம் செய்யப்பட்டது. காலக்கிரமத்தில் கோட்டு உருவால் மேற் கொள்ளப்பட்ட வரைதல்களுக்கு ஓவியக் கலைஞரால் வர்ணம் தீட்டப்பட்டு நிற ஊட்டம்
கொடுக்கப்பட்டது. ஆங்காங்கே அவற்றை

Page 61
மேலும் மெருகூட்ட பொன் மற்றும் வெள்ளி கற்கள் பயன்படுத்தப்பட்டன.
கோட்டு ஓவியக் கலையானது அடிப்படையில், எடுத்து நோக்குமிடத்து புகைப்படக் கலைத்துறையுடன் ஒப்பிட்டு நோக்குகையில் காலத்தால் மிகவும் தொன்மையானதாகவே
விளங்குகின்றது. இந்த வகையில் பத்திரிகைத் துறையில் புகைப்படக் கலைத்துறை புகு முன்பே கோட்டினால் வரையப்பட்ட ஒவியங்கள் முக்கிய இடம் பிடித்துக் கொண்டன. இன்று கூட ஊடகத்துறை பரிமாண வளர்ச்சிபடி முறைகளை அடைந்துள்ள போதும், கோட்டு ஓவியக்கலைத்துறை கணிசமான பங்களிப்பினை வகிக்கின்றன. கார்டுன் ஒவியங்கள், கேலிச் சித்திரங்கள், சிறுகுறுந் தொடர்கதை ஒவியங்கள் ஆகியன முக்கியமாக கோட்டு வரைப்பட ஓவியங்களாகவே விளங்குகின்றன.
அவ்வாறே கட்டிட நிர்மாண வடிவமைப்பிற்கு கட்டிடக்களை அளவியல் ரீதியில் மதிப்பிட்டு வடிவமைக்க, கோட்டு வரைதல் கலை முக்கியஇடம் பிடித்துள்ளது. மேலும் அத்திவார வடிவமைப்பு, தூண்களின் வடிவமைப்பை விளக்க அவற்றின் உயரம், அகலம், ஆகியவற்றை விளக்க 96T60)(6) Igb(60) 6T எடுத்தியம்ப இவ்வரைதல் முறைமை பெரும் பணி புரிகின்றது.
கேந்திர கணிதப் பயன்பாடு அளவீட்டு முறைமைகளை கணிப்பிட பொருளியல் பெளதீக விஞ்ஞானம், இரசாயண கூட்டு அம்சங்களை விளக்க, விளங்கிக் கொள்ள, தாவரவியல், விலங் கியல் விஞ்ஞான நுட்பங்களை விளக்க, மருத்துவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- sift 61
பொறியியல் படிப்பினை விளக்க, புள்ளி விபரவியல், பொருளாதாரவியல் ஆகிய கல்வித்துறைகளுக்கு "கிறப் கோடுகளால் விளக்க இக்கோட்டு வரைதல் முறை பெரிதும் பயன்படுகின்றது.
தையல் கலைத்துறையில் கூட கோட்டு ஒவியத்துறை முற்காலம் தொடக்கம் முக்கிய பங்களிப்பினை வகித்து வந்துள்ளது. அழகிய கோட்டு வரைதல் ஒவியங்களால் ஆடைகளில் அழகிய அலங்கரிப்பினை மேற் கொள்ள, தலையணை உறைகள், கதிரையின் கவச உறைகளை அழகுபடுத்தி தைக்கப் பெரிதும் கோட்டு வரைதல் ஒவியங்களின் மேற்கொள்ளப்பட்டன. அதன் நிலைப்பாட்டிற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் வர்ண நிற நூல்களால் அக்குறிப்பிட்ட ஒவியங்கள் தைக்கப்பட்டு மெருகூட்டப்பட்டன.
அவ்வாறே ஆடை வடிவமைப்பிற்கும் ஆபரண வடிவமைப்பிற்கும் கோட்டு ஓவியக்கலைகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவ்வாறே பாரசிக கம்பளங்கள், மேசை விரிப்புகள், கட்டில் விரிப்புகள் ஆகியவற்றுக்கும் இக்கலைத்துறை கணிசமான பங்களிப்பினை நல்கி வருகின்றன. இன்றைய நவீனக் கணனி ஊடகத்துறையியல் மேற்கொள்ளப்பட்டு வரும் "கிறாபிக்ஸ் வரைதல் முறைக்கும், வடிவமைப்பு முறைக்கும் இவ்வரிய கலைத்துவம் செறிந்த கலையம்சம் கணிசமான
பங்களிப்பை நல்கி வருகின்றது.

Page 62
சொல்லாக மாறி சிதம்பரம் எனப் பெருமான் ஆலய நாட்கள் நடைடெ என்றாலே சிதம்
பழமையான சை இல்லை. அப்பா நாயன்மார்களும், உடையவன் ஆட திருமுறைகளும் அதனாலேயே எ சொல்லியே தெ தோறும் தமிழ் தொடங்கி
6) IITGST6NTITc
அண்ணாமை காரணமாயிற்று. கணத்தை (108
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UITGbởR
லி எனும் இந்தச் சொல் இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள
ரம்பரிய ஆடல் கலைஞர்கள் பரவச உணர்வை ஏற்படுத்தும் விட்டது. இதற்கு காரணம் திருச்சிற்றம்பலம் - தில்லை - பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும், சிதம்பரம் நடராஜப் த்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் தொடங்கி ஐந்து பறும் ஆடல் பெருவிழா. சைவ சமயம் சார்ந்தவருக்கு 'கோயில் பரம் என்றே பொருள். 2000 ஆண்டு காலத்திற்கு மேல் வ வழிபாட்டுத் தலமான இந்த ஊரின் பெருமைக்கு அளவே ர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசர் உள்ளிட்ட எண்ணற்ற வள்ளலாரும் மற்றும் பலராலும் பாடப்பெற்ற பெருமை டல் வல்லான். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு தமிழுலகிற்கு கிடைக்கப் பெற்றமைக்கு சிதம்பரமே காரணம். ந்த ஊரில் திருமுறை ஒதினாலும் திருச்சிற்றம்பலம்’ என்று ாடங்குவர். சிதம்பர தலத்தின் பெருமையினால் காலங்கள் ழகத்தை ஆண்ட மன்னர்கள் பலரும் 10ஆம் நூற்றாண்டு 16ஆம் நூற்றாண்டு வரை செய்த பல்வேறு திருப்பணிகளால் விய கோபுரங்களுடன் கூடிய பெரிய கற்கோயிலாக வடுத்தது. பின்னாளில் நாட்டுக் கோட்டை நகரத்தார்களும், யாழ்ப்பாணத் தமிழர்களும், சிதம்பரம் பகுதியைச் சார்ந்த வேளாளர்களும் தொடர்ந்து கொடுத்து வந்த
கொடைகளால், என்றும் மாறாத வழிபாட்டுத் தலமாக உயிர்ப்போடு இயங்கும் திருக்கோயிலாக உள்ளது.
கோயிலின் பெருமையே அறிவுக்கோயிலாம் லைப் பல்கலைக்கழகமும் இம்மண்ணில் அமையக் ஆன்மீகக் கோயிலாக மட்டுமின்றி ஆடல் கலையின் இலக் கரணங்கள்) சிற்பமாக வடித்து அழியாத கலைக்கோயிலாக

Page 63
அமைந்துள்ளது. இவ்வாறு தமிழும், இசையும், கலையும் இம்மண் தமிழர்களின் பண்பாட்டுச் சிகரமாய் விளங்கும் தெய்வீகத் தன்மையை மீண்டும் உணர்த்த எழுந்த நாட்டியாஞ்சலிப் பெருவிழா.
இசையும், ஆடலும் இறைவனுக்கே அர்ப்பணிக்கத்தக்க வழிபாட்டிலும், விழாக்களிலும் நிகழ்த்தப் பெற்ற பண்பாடு : அப்பொழுது அதனை நுகரும் மக்களும் இறை உணர்வோ அனுபவத்தினைப் பெறுவர். மேலை நாடுகளில், இசையும், ஆ பத்திற்கென்றே ஏற்பட்டவை. ஆனால் தமிழர் பண்பாட்டில் மையமாக வைத்து ஏற்படுத்தப்பட்டவை. நாள்தோறும் ஆலய வழிபாட்டில் நிகழ்த்தப் பெறும் 16 வகை உபசாரங்களில் நிருத்தம்' என இசையும், பாடலும், ஆடலும் இடம் பெறும்.
இவ்வாறு தெய்வீக உணர்வு நிலைக்கு அழைத்துச் ( முன்னோர்களால் உருவாக்கப்பட்டு ஆலயங்களிலே படைக்கட் மக்களை அடைந்த ஆடல் கலை சென்ற நூற்றாண்டின் பிற்ப அரசியல், சமூக மாற்றங்களால், சட்ட நெருக்கடிகளால் ஆ வெளியேறி பெருநகரங்களிலே அரங்குகளிலே ஆடப்பெறும் (from temples to theatres). 3560TTG) 62(15 Lld 5Lib -9, 6) 5606. சமூகக் கட்டுப்பாட்டு எல்லைகளைக் கடந்து எல்லைகளை அதனைப் பயில முன் வந்தனர். ஆனால் மறுபக்கத்தில் தெt உணர்வுகள் மெல்லக் குறைந்து. இந்தக் கலை மற்றவர்கை புகழ் பெறவும் கையாளப்படும் நிலையும் ஏற்பட்டது.
இந்த மாற்றத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற உணர்வே டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர். நாகசுவாமி நகரத்தைச் சார்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்க அமைந்து 1981ம் ஆண்டில் நாட்டியாஞ்சலி விழாவினைத் அதிலே ஆடல் கலைஞர்கள் இனம், மொழி, சமயம் கட நாட்டியத்தை அஞ்சலியாக செலுத்தும் நாட்டியாஞ்சலி இன்றைக்கு பாரத நாட்டின் அனைத்து வகை ஆடல் கலைஞர் நாட்டியம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், ஒடிஸி, சத்தி கதக்களி, யட்சகானம், ச்சாவ்) ஆடல் வல்லான் திருவடியில் அ தும் மாபெரும் பண்பாட்டுக் கலை விழாவாக உருவெடுத்துள் தோறும் மஹா சிவராத்திரி நாளில் தொடங்கி ஐந்து நாட்களு வளாகத்தினுள் திறந்தவெளி மேடையில், பல்லாயிரக்கண மக்கள் பார்த்திருக்க 400க்கு மேற்பட்ட ஆடல் கலைஞர்களும் 300க்கு மேற்பட்ட இசைக்கலைஞர்களும் கலந்து கொள்ளும் விழா இது. இந்த வகையில் பண்பாட்டுக்
குறிக்கோள்களையும் மரபுகளையும் மீட்டெடுக்கும் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் முயற்சி பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும். இதன் தாக்கம் தமி பரவி பல்வேறு ஆலயங்களிலும் இத்தகைய முயற்சிகள் எடுக் என்பது இந்த விழாவின் நோக்கமும் எங்கள் முயற் கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கு சான்று.
உயரிய நோக்கங்களில் தூய்மை, நாட்டியாஞ்சலி நெறிதவறாத உறுதி, ஆடல் கலைஞர்களின் முழுமையான ஒ உள்ளங்களின் பொருளுதவி மைய, மாநில அரசுகளின் ஆ! மக்களின் பேராதரவு இவற்றோடு ஆடல்வல்லான் திரு. கோயிலாய் நாட்டியாஞ்சலி திகழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற - சிதம்பரம் நாட்டியாஞ்சலி நிகழ்வின் தொகுப்பும் முத நிகழ்க்கிகளின் படங்களும் தந்து உதயவியவர்கள் பாலா -

உயிராய் கலந்த ஆடல் கலையின்
ஒரு முயற்சியே
தது என கோயில் தமிழர்களுடையது. டு ஒன்றியிருக்கும் பூடலும் புலன் இன்
இறை உணர்வை த்தில் நடைபெறும்
'கீதம், வாத்தியம்,
செல்வதற்காக நம் பெற்று அதன் வழி குதியில், பல்வேறு லயங்களை விட்டு
நிலை ஏற்பட்டது பயிலுவதற்கிருந்த ாக் கடந்து பலரும் ப்விக அர்ப்பணிப்பு ள மகிழ்விக்கவும்,
பாடு அறிஞர்களான மற்றும் சிதம்பரம் 5ள் ஒரு குழுவாக
தொடங்கினர். ந்து தங்கள் மலர்ந்தது. களும் (பரத பா, மணிப்புரி, ஞ்சலி செலுத் ளது. ஆண்டு நக்கு ஆலய
IB555 T65T
வெற்றி ழகமெங்கும் கப்பட்டுள்ளன ற்சியும் ஏற்றுக்
அறக்கட்டளையின் 2த்துழைப்பு, அன்பு தரவு, ரசிகப் பெரு வருளால், கலைக்
Dgs. தல் இரண்டு நாள் முருகன -

Page 64
BE) 64 SunTuanmuusaariiħ
கடலுக்குள் மூழ்கிய இர
டல்கோள்கள், மண்சரிவுகள் போன்ற இயற்கை c55 அனர்த்தங்கள் காலத்திற்குக் காலம் ஏற்பட்டு, தரைத்தோற்றங்களில் பாரியளவு மாறுதல்களை ஏற்படுத்தி விடுகின்றன. தப்ரபேன் எனப் பெயர் குறிப்பிட்டு தொலமி வரைந்த இலங்கையின் தேசப்படத்தின் கீழ்ப்பகுதியில் பல தீவுக்கூட்டங்கள் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் இப்பொழுது இந்தத் தீவுக்கூட்டங்களைக் காண முடியாது. இவற்றைக் கடல் காவு கொண்டுவிட்டது. ஆனாலும் சில தசாப்தங்களுக்கு முன்னர் வெளிவந்த இலங்கையின் தேசப் படத்தில் அதன் தென்கிழக்குப் பகுதியில் இரண்டு சிறிய புள்ளிகளாக இரண்டு பாரிய கற்பாறைகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கற்பாறைகள் இரண்டும் இராவணனின் கோட்டையின் எஞ்சிய பகுதியாக நம்பப்படுகின்றது. கடல் மட்டத்துடன் தெரியும் இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை, பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு பாறைகளிலும் கலங்கரை வெளிச்ச வீடு கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகவும் பிரசித்தமான கலங்கரை வெளிச்ச வீடாக இவை மதிக்கப்படுகின்றன. பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தின் போது அலெக்சாண்டர் கோர்டன் மற்றும் சேர். ஜேம்ஸ் நிக்கிலாஸ் டக்ளஸ் ஆகிய இருவரின் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி 1873ஆம் ஆண்டு இந்த கலங்கரை வெளிச்ச வீடுகள் கட்டப்பட்டன.
யால வனவிலங்குகள் சரணாலய காட்டுப்பகுதியை ஒட்டிய கடற்கரையிலிருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த பாறைகளும் சிறிய, மற்றும் பெரிய பாறைகளும்
 

ாவணனின் கோட்டைகள்
காணப்படுகின்றன. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியின்போது ஓரளவு பாதிக்கப்பட்ட இந்த இரு கலங்கரை வெளிச்ச வீடுகளும் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் கலங்கரை வெளிச்ச அதிகார சபையினால் திருத்தப்பட்டு, இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கதிர்காமத் திருத்தலத்திலுள்ள கதிரைமலை மீது (ஏழுமலை) நின்று தென்கிழக்குப் பகுதி கடலை நோக்கினால் கடலின் நடுவில் இரண்டு வெளிச்ச வீடுகள் தென்படுவதைக் காணலாம். இலங்கையின் தென்கரையோரப் பகுதிகள் பெரும்பாலும் இராமாயண சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளன. குறிப்பாக அம்பாந்தோட்டையை அண்மித்த உசன்கொட என்ற இடத்தில் அனுமனின் வாலில் பற்றவைக்கப்பட்ட தீயினால் சிவந்துபோன கடற்கரையோரம் (இப் பகுதியிலுள்ள மண் செந்நிறமாக) காணப்படுகிறது. இப்பகுதிக்கு அருகிலுள்ள மேடான பகுதியில் இராவணனின் ஆயுத களஞ்சிய சாலை இருந்ததாகவும் அது எரியூட்டப்பட்டதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் எந்தவித தாவர இனமும் முளைப்பதில்லை என்பதுடன் குறிப்பிட்ட அப்பகுதியின் மண் செந்நிறத்தில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (இவை குறித்த விபரமான தகவல்கள் கலைக்கேசரி 2011ஆம் ஆண்டு ஜூன் மாத இதழில் பிரசுரமாகியுள்ளன.)
இலங்கையின் தென்பகுதி நிலம் மேற்கே மடகாஸ்கார் வரையும் கிழக்கே அவுஸ்திரேலியா வரையும் நீண்டு பரந்திருந்ததாக இலக்கிய குறிப்புகளில் இருந்து அறிய
இராமாயணத்தில் இலங்கை - 17

Page 65
முடிகின்றது. இந்தப்பரந்த நிலப்பகுதி குமரிக்கண்டம் அல்லது லெமூரியாக் கண்டம் எனவும் அழைக்கப்பட்டது. குமரிக்கண்டம் பண்டையக்காலத்தில் கடல்கோளினால் அழிவிற்குட்பட்டதாக சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழறிஞர்கள் பலர் நம்புகின்றனர்.
புவிஓடு அசைவுகள், கண்ட ஒட்டங்கள் போன்ற புதிய புவியியல் ஆய்வுக் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், புதிய கடலாய்வுகள் இந்துமாகடலில் செய்யப்பட்டு, அதன் விளைவாக 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்கு இந்து மாகடலில் இருந்த நிலப்பாகம் நீருக்கடியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று நம்பப் படுகின்றது. இதற்குகாரணமாக மாபெரும் சுனாமி பேரழிவு குறிப்பிடப்படுகின்றது.
லெமூரியாக் கண்டத்தின் பகுதிகளை ஆட்சி செய்தவர்களில் மனுச் சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை அரசாட்சி செய்து வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகள் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிகுமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலைநகராக விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி ஆட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்து விட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர். அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமர், கருடர், முனிவர். சித்தர், கந்தருவர், வானரர் என LIG) பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது இராட்சதர்கள் எனக்கூறப்படுகின்றது. இவர்கள் அந் நாட்களில் மிக உச்ச அறிவு வளர்ச்சி மற்றும் நாகரீகம்

அடைந்தவர்களாக காணப்பட்டார்கள். சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள்.
இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை
உள்ளவன் என்பதை கம்பராமாயணம் கூறியுள்ள போதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக் குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு இருந்த பகை இராமாயணத்தில் துலங்குகிறது எனவும் இதன் காரணமாகவே இராவணனையும் அவனுடைய சுற்றத் தாரையும் தீயவர்களாக இராமாயணம் சித்திரிப்பதாகவும் திராவிட இயக்கங்கள் நம்புகின்றன.
இலங்கையின் ஆதிக்குடிகள் என, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் - நாகரின் ஆட்சிகள் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம்,

Page 66
姿
អ៊ែអ្វី
អ៊ែងហ្វិញ 66
 

திருக்கோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் அமைகின்றது. இதற்கு கட்டியம் கூறுவதுபோல் இன்றும் இலங்கை முழுவதும் இராவணனின் கோட்டை கொத்தளங்கள் மற்றும் விமான நிலையங்கள் காணப்படுகின்றன.
இராவணன் வீணை இசைப்பதில் தேர்ந்த ஞானம் உடையவன் என்றும் அவனது கொடியில் வீணைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் இராமாயணம் கூறுகின்றது. 'சாம கானப் பிரியன்’ எனப்பட்ட இராவணன் சாம வேதத்தின் இசை நுட்பங்களைக் கற்றறிந்திருந்த வைதீகனாவான். தவிரவும் கம்பன் இராவணனைக் குறிக்க , ‘ஆரிய' எனும் சொல்லையே பயன்படுத்துகிறான். கும்பகர்ணன் போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் இராவணனின் காலைத் தொட்டு வணங்கி 'ஆரியனே! விடைபெறுகிறேன்’ என்று சொல்வதாகக் கம்பன் குறிப்பிடுகிறான். (கும்பகர்ணன் வதைப்படலம், பா. 98)
இராவணனுக்கும் அகஸ்தியருக்கும் வீணை இசைப்பதில் போட்டி நிகழ்ந்துள்ளதாயும் அந்தப் போட்டியில் இராவணன் தோற்றுவிட்டதால் அவன் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றுவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் இக்கதையைக் குறிப்பிட்டுள்ளார். இக்கதை முழுமையான கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால், இக்கதையிலிருந்து நாம் பெறக்கூடிய ஒரு செய்தியுண்டு. தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் செய்தவராகக் கருதப்படுபவர் அகஸ்தியர் ஆவார். அகஸ்தியரின் இசை மரபும் இராவணன் இசைமரபும் ஒன்றையொன்று பாதித்து வளர்ந்த மரபுகளாகும். அகஸ்த்ய என்ற சொல்லின் வேர்ச் சொல்லாகிய அக் அல்லது அஜ், எகிப்து அல்லது எஜிப்ட் என்னும் பெயர்களுடன் ஒலியொப்புமை உடையதாகத் தெரிகிறது. அது மட்டுமின்றி, மத்தியத் தரைக் கடல் தீவுகளில் ஏஜியன், த்ரமிளாய் என்ற இரு மொழிக் குழுக்கள் வாழ்ந்தனர். இம்மொழிகள் திராவிட மொழிகளுடன் ஒற்றுமை உடையன என்று மொழியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ‘ஏஜியன், த்ரமிளாய்” என்ற இரு மொழிக் குழுக்களுடன், யது குலத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களாக இந்தியப் புராணங்களில் குறிப்பிடப்படும் அஜாமிளன், துவிடமிளன் என்போரை நாம் ஒப்பிடலாம். துவிடமிளன் என்ற பெயருக்கும் தமிழன் என்ற பெயருக்கும் இடையிலான ஒப்புமையும், த்ரமிளாய், தமிழ் என்ற பெயர்களுக்கு இடையிலான ஒப்புமையும் தற் செயலானவையாகத் தோன்றவில்லை. அஜாமிளன் வம்சம் அல்லது அகத்தியர் மரபு என்பது எகிப்திய மரபுடன் தொடர்புடையதாகத் தோன்றுவதும் தற்செயலான ஒப்புமையன்று என்று கூறப்படுகின்து. இ.
- மிருணாளினி

Page 67
©_o / ~ ~ ~ ~。蒙擬 - ae” (Nooo , Isso & -760 @@@@@ polos)
:-/OOOoooo @@jóIlgoso
(Noo@ (also 8-79, osigoo sols)
永
:-/OOOZ, QD QQŪőlıç09f@ ZJ
dwg별w활떨hm털ma lig道철활 ĢģĶĒølg hollsmaņols @Ų@mssing ĪhŲIIae This -/ooooooool's
 

LLYLLLL LLLL LLLLLLLSLLLLS LLL KK LLLL LL LLL LLLL LLL KK
uuooo exsuelo||row^^^^ :quo@$rmiqoooo @ :nowe assy ç6* 06ç ZILO :ọ9oqiaocoolise) ||-*
8 – 96ç ɛçç ZILO ogong)doceouse) LLZ Zçç ZILO :hr}điqoło 61109-Tas
Z87 G/9 € / ZO SIXƏL/||BO
Įılmáis spulsoņi-a Ấollod ɔJIT ɔund
魔 魔 = 田 Ķx 攀 «*» 禱 義 變 译 «C) ɔ 州F
گیت
(sooŪ09@ (also o -//logo osisigoo ŋƆŋos)
;-/^^^o-(1) QQŪőIloOooo [2]

Page 68
முகவரி
த்தியசாலை
tbւկ 05.
*
U 606
கொழு
பிடி
NineWellsCare.com
Ան (8ց நாரஹேன்
李
ர்பு கொள்ள வேண்டிய
4520999 வெல்ஸ் கெயார் தா
55/1, கிரிமண்டல மாவ
靈隱 輕鬆隱 km認識
தொட
நைன்
避
隱
Printed and published by Express Newspapers (Ceyl
 

வளநிலையம்
கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான சாத்தியக் கூறுகளையும் (Sub Fertility) அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக்
கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களிாைடாக எல்லா வயதுடைய பெண்மணிகளையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
on)(Pvt) Ltd, at No.185, Grandpass road,Colombo -14, Sri Lanka.