கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2012.03

Page 1


Page 2
#x
劃
ஆசிரியர்
லெஸ்லி ஜெயகாந்தன்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லீயோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S. யோகராஜா
கணினி வடிவமைப்பு
சுபாஜெனி சங்கர்
வெளியீடு 囊 சமூகத் தொடர்பு நிலையம்.
திரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு. பதிப்பகம்
வணசிங்கா அச்சகம் மட்டக்களப்பு.
ஆக்கங்களுக்குப் பொறு
SOCIALCOMMUNICATIONSCENTRE P. O.BOX-44 BATTICALOA.
TEL:065-2226486 E.mail: scCtribattiGDgmail.com
 
 
 
 
 

ப்பு அளித்தவர்களே (esbi)
அன்புடன் உங்களோடு .
56).ldsassTalib . . . . . . . . . o Deo e go go o D. O o eo es o
சிலுவை மனிதன் . 0 0 e O
நமக்குள் நம்மைத் தேடி .
அன்பின் அரசி அன்னை .
இன்றைய உலகில் .
இயேசுவின் பாடுகளில் .
இலக்கிய மஞ்சரி . - - - - - - - -
முதல் கல் .
மருத்துவம் . LS S S S S S S S S S S S S S S S S S S S S
ஆசையே அலைபோலே .
தொண்டனின் சில நிமிடங்கள் .
இலக்கியத்தின் முன்னோடி .
தமிழில் கிறிஸ்தவ இலக்கிய .
கல்வாரிப் பேராலயம் .
பாவ உணர்வும் பாவத்தின் .
காலடித் தடங்கள் .
GifafaÔuulub 35bGLJITb . . . . . . . . . . . . . . .
SOMÓGOGI GIGITÜŮIGU Tid . . . . . . . . . . . .
விலை : 30/=
(தபாற்செலவு உட்பட)
01.
02
O3
04
O5
O6
OS
10
11
12
13
1.
15
17
20
25
27
28
ஆண்டு சந்தா 500/=

Page 3
- سمخينه 를 萎
தவக்காலம் இறை மனித உறவைப் புதுப்பிக்கும் ܮ݂ܬ காலம் சுயநலத்தால், ஆணவத்தால், அதிகாரத்தில் மாற்றும் காலம். இந்த நாற்பது நாட்களும் நம்பை இறைவனின் அருளைப் பெறும் காலமாகும். இக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இதைத்தான் புண் 'இதுவே தகுந்த காலம்' என்று. இக்காலமானது அழைக்கின்றது.
“இராமாயணம்' என்கின்ற காப்பியத்தை எழு திருடனாக இருந்தவர். மனமாற்றம் பெற்று முனிவ பாவ நிலையில் உழன்று, ஒழுக்கமின்றி பாவ அழு பெற்று, துறவற வாழ்வை மேற்கொண்டு இன்று 1
மனமாற்றம் என்பது மனிதன் நினைத்தால் பெற்று புதிய மனிதர்களாய்ப் புதிய பாதையில் காண்கின்றோம்.அவர்களை மூன்று வகைப்படுத்த
1. தாங்களாகவே மனம் மாறியவர்கள் 2. பிறர் சுட்டிக்காட்டியதால் மனம் மாறியவ 3. பிறர் சுடடிக்காட்டியும் மனம் மாறாதவர்க நாம் எமது வாழ்க்கையில் இந்த மூன்றாம் தர இன்று எமது நாட்டுத் தலைவர்கள் இந்தத் தரத்ை பாரமான சுமைகளைச் சுமத்திய வண்ணமே தக்கவைப்பதற்காக மக்களைப் பிழிந்தெடுக்கின்ற அறிவு காட்டும் பாதையில் செல்லாமல் ஆ குலைக்கின்றனர். நன்மை செய்யவேண்டியவர்களே சுயநலவாதிகள் கவிஞர் கண்ணதாசன் கூறுவார்.
எவனுக்குத் திறமை ( ஆசை அதிகமாகவும் அவன் சுயநலக்காரன் எனவே சுயநலம் களைந்து நன்மையே செய்ய மனமாற்றமும் வேண்டும். தவக்காலத்தில் மனம அன்னையாம் திருச்சபை அறை கூவல் விடுகின் நாம் மனமாற்றம் பெற்றிடத்தயார்தானா? அல்லது தொடர்ந்து வாழ்ந்திடும் நிலையி
 
 
 
 
 
 

யே சுய ஆய்வுெ 5 ாலத்தில் நம்மையே புதுப்பித்து த பவுல் அடிகளார் சொல்லுவ
நாம் நோன்பிருந்து செபித்து ம
தியவர் வால்மீகி முனிவர். இவர் ஒரு 8 ராகி மாபெரும் காப்பியத்தை எழுதியிருக்கின் க்குடன் வாழ்ந்தவர் அகுஸ்தீனார். இவர் மனம பாரெங்கும் புனிதராகப் போற்றப்படுகின் நிறைவேற்றக் கூடிய ஒரு பண்பாகும். ம
நடை பயின்றவர்களை நாம் விவில்
6)Tib: పై
ர்கள் :ள் த்தைப் போன்றவர்களாய் இருக்கக்கூடாது.
சை காட்டும் பாதையில் சென்று அை
தீமை செய்கின்றனர். இவர்கள்தான் உ
குறைவாகவும்
இருக்கின்றதோ ாக இருப்பான் - என்று. 幫 நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டும் அதற்கு N ாற்றம் பெற்று புதிய வாழ்வைக் கைக்கொள்ள டு" றது. 壹 இ=

Page 4
ணஇஇ
து தவக்காலம் மீண்டும் ஓர் அருளின் காலம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனிப்பட்ட ரீதியாகவும், குழுமங்களாகவும் மனமாற்றத்திற்கு அழைக்கப்படுகின்ற காலம். அவசரமான, இயந்திர மயமான இந்த உலகில் சற்று நின்று சிந்திக்கவும், நம்மில் காணப்படக்கூடிய அவசியமற்ற விடயங்க ளைக் களையவும், நம்மை நன்மையான விடயங்க ளுக்கு மாற்றவும், செபிக்கவும் வேண்டிய காலம்.
தவக்காலமானது, தியானிக்க வேண்டிய காலம். நம்மை நாமே பல கேள்விகள் கேட்க வேண்டிய காலம். செல்வம் நிறைந்த உலகில், எவ்வாறு பலர் வறுமையிலும் வியாதியிலும் மடி கின்றனர்? சமுதாயத்தில் ஒரு சிலர் மட்டும் வசதி படைத்தோராக வாழ பலர் ஏன் வறுமையில் வாடுகின்றனர்? எல்லோரும் இறைவனால் படைக் கப்பட்டவர்களாயின், இறைவனின் பிள்ளைகளாயின் ஏன் இந்த வேறுபாடுகள், வித்தியாசங்கள், ஏற்றத் தாழ்வுகள்?
தவக்காலமானது எம்மைச் சிந்திக்கவும், செயற்படவும் அழைக்கின்றது. சிறிதளவிலேனும் எம்மில் மாற்றத்தை, மனமாற்றத்தைக் கொண்டுவர, எம் நடத்தையில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவர கேட்கின்றது. ஏனென்றால், சமூகப்பிராணிகளாக வாழும் நாம் ஒவ்வொருவரும் சமூகத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றோம். இதனால், சமுதாயத்தில் ஏற்படுகின்ற ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் நாம் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் பங்காளிகளாகின்றோம். ஆகவே எம்மை நாம் மீளாய்வு செய்யவும், திருத்திக்கொள்ளவும் இந்தத் தவக்காலம் ஓர் அருளின் a statDids அமைகின்றது. எம் பிழைகளை, தவறுகளை திருத்திக் கொள்வதென்பது அவ்வளவு இலகுவானதல்ல, ஆனால் அவசியமானது. இது சாத்தியப்பட வேண்டு
 
 
 
 
 

ਭੰ=ਉ= 2012 மென்றால், அது செபத்தினாலும், தபத்தினாலும், நாம் செய்யக்கூடிய சிறு சிறு ஒறுத்தல் முயற்சிகளினா லும் மட்டுமே முடியும். செபம் மட்டுமே இறைவனுடய பிரசன்னத்தை உணரச் செய்யக்கூடியது. செபம் O மட்டுமே எம்மை இறைபதத்தில் தஞ்சமடையத்
செய்யக்கூடியது.
செபத்தின் உதவியுடன் இறைவனின் கரங்களில் நம்மை ஒப்படைப்போம். அவரது உதவியு டன் எம் பிழைகளைத் திருத்த முயல்வோம். எம்மை நாம் திருத்துவதன் மூலமாகப் பிறரும் திருந்த வழி செய்வோம். இத்தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். இவ்வருளின் காலத்தை நாம் நம்பிக் கையுடனும் அர்ப்பணிப்புடனும் வாழுவோம், பயன் பெறுவோம். செபத்தின் உதவியுடன் நீதி நெறி வழுவாது வாழ முயல்வோம். அதுவே எம்மிடையே உண்மையான, நிலையான சமாதானத்தை நிலைநாட்ட உதவுவதாய் அமையும்.
"நீதியும், மன்னிப்பும் இல்லையேல், சமாதானம் இல்லை” (ஜோன் போல் I) நீதியான தொரு சமுதாயத்தை உருவாக்க, மன்னிக்கும் மனதை எம் ஒவ்வொருவரிலும் ஏற்படுத்த கிறிஸ்த வர்களாகிய நாம் கடுமையாக உழைக்க அழைக்கப் படுகின்றோம். திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல் கூறுவது போல் சமாதானத்தின் அத்திவாரம் நீதியும் மன்னிப்பும். இவை இரண்டும் இல்லை யெனில் சமாதானம் என்பது வெறும் பகற்கன வாகவே இருக்கும். 드
ஆகவே, எமது நோன்பும் ஒறுத்தல்களும் தவமுயற்சிகளும் எம் ஐம்புலன்களையும் வளப் படுத்தி கிறிஸ்துவின் உண்மைச் சீடர்களாக, அன்புப் பிள்ளைகளாக வாழ வழிசமைப்பதாக கு

Page 5
IDIjj
தோளிந் சிலுவை தொலை துறப் பயணம். ஆள் அரவமில்லா அதர் அதில்
୫୫) ସ୍ମୃତି ଓpଶୀfଞib នា8e8បើខើញព្រំ விண்ணிலிருந்து வெயில் மழை. மண் பற்றினரியும் (dly['୫୮ ର ରାଜୀf
அந்தப் பாதையில் சிலுவை மளிதன் அடியெடுத்து வைக்கின்றான் நொந்த உடல். ஆனாலும் eĢti ģītāšas es) siturp?
சிரசிலிருந்து சிவப்பு மலர்கள் asb.....8s Divas..... உதிர்கின்றன 8898 blk99TUMglVäMWb கன்றிச்.சிவந்து. இரத்தாபிஷேகம் எங்கும்.எங்கும். Utgå fặp)-GFS) GIJSAAVUTCb ஒரு பலிக்கடா.
பாதயாத்திறை செய்கின்றது.
ஒரமில்லா மனிதர் ஏன் என்று கேள்விகேட்க முடியாத கிழட்டு மரங்கள்.
y==========S> இத்
* Datsu sco D. அந்த மEதன் ତନୂର୍ଦ () ଗଞ୮ ୭s[i] (Fridä FGNITrầafiast கண்டு இதைக் យfរៃយ៍នៃទ្វr ඕෂු) ප්‍රීttබ්r assast Boept?
என் குற்றம் செய் ඕබ}බ්r?
அதிகாரத்தை எத அதர்மத்தைத் த8 ஏன் என்று கேட் எல்லோரும் சமம் ஏழையின் பக்கம்
குற்றங்கள் இsை இதற்கு. குருர மரணதண் ରଞ[[ଷ୍ଟ୍ (Défluid குறித்துக் கொண் முற்றும் இதை ஏ ଧୂpfloଞ ୫୫୮ ନିର୍ମାଥ
• গ্ল্যােণ্ডচপ্তে)সূত্র্যােঞ্জস্তাষ্ট্যে
 
 

}}>\A المتخصصخ
,2012 sNیتیم گہر
5(VGT
tத்தது ர்த்தது
என்றது இருந்தது

Page 6
= ~~~~~={6 褒 >&(;sނ= 象 轉 羲 qTSeLSSSeSTLSLeLTTTLSSTLA LSATAASASAASATSTAA ASASASASA asa
羲 2. இ
 
 

னோத் தேடி.
ମtrí୫୭୫୮ ଔଛould ଗ୍[\$) ?(୭tଞr? ள்வடிவம் கொடுக்கலாம். ஞானத்திற்கும் மதத்திற்கும் ர்பே இல்லை. இது முழுமனித குலத்திற்கும் வானது. ஞானத்துடன் ஒரு செயலை நான் செய்தால் குப் பெயர் 'புனிதம் இதை அடைபவன் 'நான் கிறேன்’ என்று கூறத்தக்கவன்.
உயிரோடு இருக்கிறேன்” என்பவர் உணர்வில்லாமல் ராடு இருப்பவர்கள். நான் யார்? என் மூலம் எது? பில் இருக்கும் சுயம் எது? என்னும் தன்னை அறியும் ம் அற்றவர்கள். வாழும் வரை சுவாசிப்போம் அல்லது சிக்கும் வரை வாழ்வோம் என்பவர்கள் வாழ்வில் ற்ற, நடமாடும் பினங்கள். ஞான உணர்வு இல்லாமல் ததைத் தின்றுவிட்டு விதிவந்தால் செத்துப் போவேன்’
வாழ்நாளைக் கழிப்பது மூடத்தனம்.
ன அடையும் வழியில் என் மனம் அற்புதமான ஒரு கூறு. இது உலகில் அத்தனை உயிர்களிலும் உள்ள அபார உந்து சக்தி. ஆனால் மனிதரைத் தவிர மற்ற உயிர்களில் அது இதமாக இல்லை. அதனால் தான் இதமான மனமுடையவன் மனிதன் (மனிதன்,மனம்,இதம்). விலங்குசுயமாக தன்னிச்சையாக இயங்க முடியாத நிலை. இதனால் தான் கைதிகளுக்குக் கையில் போடும் வளையத்தை விலங்கு என்பார்கள் போலும். விலங்கு, தாவரம்
୯୬ அனைத்திலும் மனம் செயல்படுகின்றது. ஆனால் பக்குவப்பட்ட இதமான நிலையில் மனிதரில் செயல்படுகின்றது என்பது அறிவியல் உண்மையாகும். எனினும் சில மனிதரில் இப்பக்குவமான மனம் இல்லாமல் இருப்பது
என்பது அவர்களின் அறியாமையே.
அழகான ரோஜா மலர். அதன் இரத்தச் சிகப்பு நிறம், நறுமணம், சில துளி தேன் இவை எல்லாம் எங்கிருந்து வந்தன? ரோஜா மொட்டுக்குள் இருந்துதானே. நம் வாழ்விற்கும் மலர்ச்சி, மகிழ்ச்சி, நிறைவு மற்றவர்கள் தரமுடியாதது. அது நம் இதமான மனதில் இருந்தே வரவேண்டும். மகிழ்ச்சி என்பதன் இரகசியமே நம் மனம்தானே.
O
என்னைத் தேடும் பயணம் தொடரும்.

Page 7
1ணஇணஇ
ஹௌரா என்றதொரு ரயிலது நிலையமதில் தளரா மனதுடனே தானிறங்கியே அவளும் கன்னியர் மடஞ்சென்று கடிதமதை சமர்ப்பித்தே கர்த்தரின் கிருபையாலே கடமையது ஏற்றனளே அங்குள்ள சட்டப்படி புதிதாக வருவோர்கள் புதிய பெயரொன்றைச் சூடுதல் அவசியமே தெரேசா மாட்டின் என்ற பிரான்ஸிய கன்னியரின் பெயர்தனையே விரும்பி தரித்தாளே அம்மானை
காரணத்தைக் கூறுகின்றேன் கணப்பொழுது கேட்பீரே பிரான்சு நாட்டவராம் தெரேசா மாட்டின் என்ற கன்னியர் வாழ்ந்த வேளை கடும் பணி ஆற்றியதால் கருணைக் கடலான நற்பணியின் சிகரமானர் காச நோய் கண்டு கடு மரணம் அடைந்தார்
அவரால் ஈர்க்கப்பட்ட கன்னி அக்னசும்
கர்த்தரைத் தோத்தரித்தே அக்னஸ் என்ற பெயரை தெரசா என்றேயவர் மாற்றினரே அம்மானை
கல்கத்தாவில் சில நாள் கன்னித் தெரசா இருக்கையிலே சொல்லொண்ணொத் துயரங்கள் மக்களை சூழ்ந்ததங்கே வேலையில்லாத் திண்டாட்டம் ஏழைகளைத் தாக்கிடவே வேதனை பசித் துயரில் வாடினரே அம்மானை கூழைக் குடிக்கக் கூட குடி மனைகள் தத்தளித்து குழந்தைகள் நோய் நொடியில் துவண்டுமே துடித்தனரே
 

oಷ್ಣ 2
—— கன்னி தெரசா துயரக் கண்ணி மல்கியே கர்த்தரையே துதித்துமே கலங்கினர் அம்மானை
வறு இருக்கையிலே டார்ஜிலிங் என்ற இடம் செல்ல உத்தரவை - மடத்தினர் போட்டாரே வந்திருந்த தெரசாவுக்காய்
உடனே புறப்பட்டே சென்றாரே அம்மானை பனிமலைத் தொடர்களின் குளிர் காற்று வீசிடவே நானூறு மைல் தாண்டி நகர்த்தினாள் பயணமதை
கஞ்சன் ஜங்கா என்னும் பெயர் கொண்ட இடமதிலே கடும் பணி ஆற்றியே இருந்திட்டர் அம்மானை
கன்னி தெரசாவும் வந்த அந்த வேளைதனில் கல்வி நிலையங்கள் அங்கே இருக்கையிலே ஆங்கிலேய மக்களின் குழந்தைகள் உடன் கூடி அதிக செல்வச்செழிப்புள்ள குழந்தைகளும் அங்கே படித்திருந்தர் அதனையும் அறிவீரே அப்படி இருக்கையிலே ஆசிரியர் பலர் இருந்தும் வரலாறு.புவியியல் உடன் மறைக்கல்வி கற்பிக்கவே ஆசிரியர் இல்லாமலே இருந்ததே அம்மானை
சகல பாடங்களிலும் சகல கலா வல்லியான கன்னியவர் தெரசா கையேற்றர் பாடங்களை எழுத்தறிவித்தவன் இறைவனவன் என்பது போல் ஏற்றமுடன் கல்விப்பணி ஆற்றினர் அம்மானை காலை ஒன்பதிலிருந்து மாலை மணி மூன்று வரை கல்விப் பணியதனை களைப்பின்றிச் செய்தாரே தேனியைப் போன்றதான சுறுசுறுப்பு உடைய கன்னி தேடிய பணி முழுதும் செய்தாரே அம்மானை N தொடரும் .
கலைக்கோட்டன்
அ. இருதயநாதன்

Page 8
திருச்சபைலின் முறுைக்கல்லி பு
క్టీ *
ച്ച 3 'மறைந்த திருச்சபையை திருத்தந்தை 2ம் \ \ அருள் சின்னப்பர் தமது வாழ்வின் ஏக்கங்களில் முதன்மையானதைப் பின்வருமாறு வெளியிட்டார்: “இன்றைய உலகில் கிறிஸ்துவை அறியாதவர் தொகை பெரிதாக உள்ளது. ஆனால் அதைவிடப் பெரிது கிறிஸ்துவை அறிந்தும் அறியாதவர்கள் போன்று வாழ்பவர்களின் தொகையாகும்”. இதன் அர்த்தம் பின்வரும் வினாவில் எதிரொலிக்கிறது: “பிள்ளைகள் பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர் களைப் பேணி வளர்க்க வேண்டாமா? அதாவது நற்செய்தியை அறிவித்து திருச்சபையில் அங்கத் தவர்களைப் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அவர்களது விசுவாச வளர்ச்சியில் அக்கறை எடுக்க வேண்டும். அதுவே திருச்சபையின் மறைக்கல்விப் பணியாகும்.
திருமுழுக்கின் போது நாம் பெற்றுக் கொண்ட இறைநம்பிக்கை என்ற விதையானது சிறியோர், இளையோர், வளர்ந்தோர், முதியோர் என மனித வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் படிப் படியாக வளர்ச்சி பெற்று, முதிர்ச்சியடைந்து கனிதரச் செய்யும் கல்வியே மறைக்கல்வியாகும். அதாவது ஒவ்வொருவரும் “கிறிஸ்துவோடு இணைந்து முதிர்ச்சி நிலைபெற வேண்டும்” (கொலோ:1:28). மறைக்கல்வி திருச்சபையின் வளர்ச்சிக்குக் கருவூல மாக அமைந்துள்ளது. தொடக்க காலத்திலிருந்தே திருச்சபை மறைக்கல்விக்கு மிக முக்கிய இடத்தை அளித்து வந்துள்ளது. மறைக்கல்வி வரலாற்றில் முதல் 5 நூற்றாண்டுகளில் மலர்ச்சிநிலை இருந்தது. இக்கால மறைக்கல்வி ஒரு நற்செய்தி முழக்கமாக அமைந்துள்ளது. கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவையே திருத்தூதர் கையளித்த மறைக்கல்வியின் உள்ளடக்கம். (திப 2:22).
ఫ్రె
 
 
 
 

6 ●圭
இன்றைய உலகில்
を、
': }; \">
துகொள்வது
6 - ܢ . திருத்துTதர் 67IIIB/COTIO காலத்து மறைக் /- / கல்வியின் நோக்கமெல்லாம் புனித பவுலின் வார்த்தைகளில் வெளிப்படுகின்றது: “என் குழந்தை களே, குழந்தை பெற்றெடுக்கும் தாய் போல உங்க ளில் கிறிஸ்து உருவாகும் வரை, மறுபடியும் உங்களுக்காக நான் வேதனையுறுகின்றேன்’ (கலா:4:19). மறைக்கல்வியின் பொற்காலம் என அழைக்கப்படும் 4ம் நூற்றாண்டில் புனித அக்குளில்தீ னார், புனித சிரில் போன்றவர்களின் பங்களிப்பு முக்கிய இடம் வகித்தது. இவர்கள்தான் மறைக் கல்வியின் பொருளடக்கத்தை மீட்பின் வரலாற்றுக் கோர்வையாக வழங்கியவாகள். கி.பி 6 முதல் 16ம் நூற்றாண்டு வரை மறைக்கல்வி வரலாற்றில் தளர்ச்சி நிலையைக் காண்கின்றோம். திருமுழுக்கு ஆயத்த மறைக்கல்வி, முதியோர் மறைக்கல்வி ஆகியவை வழக்கொழிந்து மேலெழுந்தவாரியான விசுவாசம் பரவலானது. புறவாழ்வு மட்டுமே கிறிஸ்தவ மயமாக இருந்தது. அக வாழ்க்கை ஆழமற்றிருந்தது. அதுபோன்று 16ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை பிரிவினைச் சபையாருக்கு எதிராக, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட நூல்களில் மறையுண்மைகள், கற்பனைகள், கட்டளைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கேள்வி-பதில் முறை, மனப்பாடம், வாய்ப்பாடு இவைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப் பட்டது. ஏனைய பாடங்களைப் போன்று ஒரு பள்ளிப்பாடமாக மறைக்கல்வி கருதப்பட்டது.
புரிந் ra ܠܐܠ

Page 9
  

Page 10
ஒழித்துக்க யற்சித்தார்கள். அவரைத் தெரிந்து கொண்டவர் இகளுமல்ல. முதலில் திருமுழுக் இயேசு என்கின்ற மனிதன் கிள முன்னிலைப்படுத்தி, ஆண்டா ஆபத்தென்பதைக் का56öö(8 9_F[]
e f g ÄS Ä on கட்ட தலைகீழாய் நின்றார்க ஆட்சியாளர்களிடம் கையளிக்க அவர்கள் அவரது பிறப்பு முதலே பின்னணியில் அவர்களது கொடு ஆனால் அவருடன் கூட செய்யப்பட்டவர்கள், அவரது பே இருந்தவர்கள், கடைசி நேரத்தி தெரியாதென்று மறுதலித்ததும் அ என்று நிச்சயமாக நம்பலாம்.
அவரால் தனக்குப் பின்ன | மக்களை வழிநடத்தும் படியாக என்று கருதப்பட்ட பேதுரு, தன் 1
3. உமக்கொரு கெடுதியும் வரவிட °Gāan?。。。。 அப்படியென்றால்
துரோகமானதல்லவா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

క్షా@2 وهي كبير يحيطلق
ஆனந்தா ஏஜி. இராஜேந்திரம்
ஸ்துவின் துன்பமிகு பாடுகளில், மரணத்தில், அவரைக் அவருடைய அன்புக்குரியவர்களின் செயல்கள் தான். நம், அவரைத் தம் சொகுசு வாழ்க்கைக்கும், அந்தஸ் 1ற ஒருவராக இனங்கண்டு, அதனால் சினங்கொண்டு, ரது நலனுக்காக ஒருவர் இறப்பது நன்மையானது? யைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி அவரை அவர்கள் என்றைக்கும் அவரோடு இருந்தவர்களல்ல, 5ளுமல்ல, அவரைப் புரிந்து கொள்ள முயற்சித்தவர் த யோவானைத் தீர்த்துக் கட்டிய கையோடு இதோ ம்பி விட்டான் தலையிடி கொடுக்க என்று தங்களை ண்டு காலம் அனுபவித்து வந்த வாழ்க்கைக்கு ாகிப் போனார்கள். அதனால் அவரைத் தொலைத்துக் ள். தங்கள் இனத்தவரென்றும் பாராது அந்நிய ச் செய்து அவரைக் கொன்றார்கள். மொத்தத்தில் அவருக்குப் பரம விரோதியாய் இருந்தவர்கள். இந்தப் மையை ஓரளவாவது சீரணித்துக் கொள்ளலாம்.
இருந்தவர்கள், அவருடைய சீடர்கள், அவரால் அன்பு ாதனைகளுக்கும் சாதனைகளுக்கும் சாட்சிகளாய் தில் அவரை கைவிட்டதும், காட்டிக்கொடுத்ததும், வரது வேதனையைப் பல மடங்கு உயர்த்தியிருக்கும்
எர் தன்னைப் பின்செல்லவிருக்கின்ற கோடானு கோடி த் தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர், தலைமைச் சீடன் பங்கிற்கு அவரது இதயத்தில் இன்னுமொரு வாளைக் கின்றார். ஒரு காலத்தில் "நான் இருக்கும் வரை மாட்டேன்’ என்று சூளுரைத்த பேதுரு, இப்போது யார்? என்பது போல் மேடையேற்றிய காட்சி
ஒரு பலசாலியான மனிதர் அவர் தன் தொழிலை சிரமத்தோடு சிறுவயது முதலே செய்ததினால் முறுக்கேறிய உடல் கொண்ட ஒருவர். ஆனால் அடுத்தவருக்கு அஞ்சி நடுங்குகின்றார். தன் குருவை ஒருநாளும் கண்டதேயில்லை என்று
S. 6 மறுத்துச் சொல்லித் தப்ப முயல்கின்றார். 16Ꮥ) தன்னைக் காத்துக்கொள்ளப் பார்க்கின்றார். பேதுரு ஒன்றும் வானிலிருந்து பூமிக்கு வந்த வரல்ல, எம்மைப் போன்ற சாதாரண ரம் மனிதர்தான். அவரைப் பற்றித் தெரிந்த 胃 வர்கள் அவர் ஒரு அவசர புத்திக்காரன், பின்விளைவு பற்றி யோசியாமல் எதையும் ஆத்திரப்பட்டு செய்து விடுகிறவர், எதற்கும் முந்திக்கொண்டு நிற்பவர், இயேசுவை முழுமை யாக ஏற்றுக்கொண்ட ஒருவர்- அதனால்தான்

Page 11
-S(22 بسيسون في اD
=இத்
தன் மனைவி, மாமியார் உட்பட தன் குடும்பத்தார் அனைவருடனும் இயேசுவின் பணிகளில் பங்கு கொண்டிருந்தவர் என்றெல்லாம் அவரை வர்ணித்தி ருக்கின்றார்கள். நற்செய்திகளில் அவரைப் பற்றிய பகுதிகளை வாசிக்கின்ற போது, எமக்கு அவை, அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்கின்ற உருவகம் ஒன்றைத் தருகின்றன.
இயேசு பேதுருவில் இருந்த நன்மைத் தனங்களைக் கண்டு, துணிந்து செயற்படுகின்ற தலைமைத்துவப் பண்புகளைப் புரிந்து கொண்டு, அவரைத் தன் ஆடுகளை மேய்க்கின்ற மேய்ப்பனாக நியமிக்கவும் முடிவு செய்திருந்தார். இத்தனை பெரிய பொறுப்புக்குப் பொருத்தமானவராக இருந்த மனிதர், தன் உயிரைக் காத்துக் கொள்ள, தன் தலைவ னையே தெரியாது என்று வாய்விட்டுச் சொல்லுகின்ற நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றார். தன் மனித பலயினத்திற்குத் தன்னை அடிமை யாக்கிக் கொளவதன் மூலம் வாழ்வில் வீழ்ச்சி காணு கின்றார். இயேசுவோடு அவரது பகிரங்க வாழ்வில் அதிக காலம் பங்காளியாக இருந்தவர் பேதுரு. இயேசுவின் இறைவல்லமையை அதிகம் அனுப வித்துமிருக்கின்றார். அப்படியிருந்தும் தமக்கொரு ஆபத்து நேரலாம் என்றொரு சூழலில், தன் பெறுமதியைக் குறைத்துக் கொள்கின்றார்.
இறைவனின் அருளினால் நிறையவே நன்மைகளை அனுபவித்திருந்தும் நாமும் சில சமயங்களில் கடவுளை நிந்தித்ததில்லையா?
வார்த்தைகளை ஆயிரம் ஆயிரமாய்க் கொட்டி, என்னதான் நம்மை உயர்வாகச் சொல்லிக் கொண்டாலும், நம் செய்கைகள்தான் நம்மை யார் என்று உலகிற்கு அறிக்கையிடுகின்றன. “உமக்கு என்ன நேர்ந்தாலும், கடைசி வரை உம்மோடு இருப்பேன்’ என்று ஒரு தடவை அறிக்கையிட்ட பேதுருவைச் சரியாகக் கணக்குப் போட்டிருந்த இயேசு, பேதுரு இந்தப் பாவமான நிலைக்கு-மனித பண்புகளில் விழுகின்ற நிலைக்குத் தன்னை
ংক্রািস ।
 
 
 

உட்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றுதான் முன் கூட்டியே அவரை எச்சரித்தார். “இன்று இரவு சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று சொல்லி வைத்தார். வழமை போல தன் அவசரப் புத்தியின் வேகத்தில், அந்த எச்சரிக் கையை அசட்டை பண்ணிய பேதுரு, அன்று தன்னைக் காத்துக்கொள்ள தன் ஆண்டவரையே தெரியாதென்று சொல்லிவிடுகிறார். உலகார்ந்த வாழ்வின் சுகபோகத்திற்காக இன்று கிறிஸ்துவை மறுத்துவிடத் துணிகின்ற, அவரது வழியைப் புறக்கணித்து வாழ முற்படுகின்ற நம்மைப்போல அன்று அவர் செயற்பட்டார் அல்லவா?
புதினம் பார்க்கவோ அன்றி என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவோ இயேசுவை இழுத்துச் சென்றவர்களின் பின்னால் சென்றவர் பின் விளைவை என்னிப்பாராமல் செய்த கருமத்தினால் தன்னை ஓர் ஆபத்தான சூழ்நிலைக்குள்ளாக்கிக் கொள்கிறார். அதன் மூலம் பெரும் தவறையும் புரிந்து நிற்கின்றார். பாவத்துக்குரிய சூழ்நிலைகளை, காரணிகளைத் தேடிச்சென்று அழிவுக்குள்ளாகும் நம்மை அவர் அன்று பிரதிநிதித்துவம் செய்து நிற்கின்றார்.
எலும்பும், தசையும் கொண்ட மனித உடல் பலமானதாக இருக்கலாம் ஆனால் எமது உள்ளம், பலயினமடைந்து விட்டால் நமது உடற் பலம் நமக்குக் கொஞ்சமும் உதவாது என்பதை அந்தப் பலசாலி மனிதன் பேதுருவின் செய்கை நமக்கு உணர்த்தி நிற்கின்றது. உடலைப் பார்த்துக் கொள்வதை விட பல மடங்கு அதிகமாக நம் ஆன்மா வைக் கவனித்துக் கொள்வதுதான் கடவுளை விட்டுப் பிரியாத நிலையில் எம்மை வைத்திருக்கச் செய்யும் என்று பேதுரு தன் செயல் மூலம் நமக்குக் காட்டித் தருகின்றார். e e e
●

Page 12
பதிப்பு இப்புத்தகம் முதற்ப ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்டி ருந்தது. 27.06.1996ம் ஆண்
தில் முதலாவது சிறுகதை "இவர்களும் அவர்களும் 1954ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் நாளன்று வெளிவந்த சிறுகதையிது. இதை வாசிக்கும் போது தென்னிந்தியப் பாணி எழுத்து *८ خیبر پہنچی|FFپہنچےri?id=i; * நான் பிறப்பதற்கு என்பதால் ஆவலோடு
ஆறுமுகம் பிள்ளை ஆறுமுகம் பிள்ளை ’ என்றவாறு
 
 
 
 
 
 
 
 

ரவர் மற்றவர் கந்தையா, ஆறுமுகம் புத்தம் புதிய நவீன மொடல் பிளிமவுத்
விசுவாசம் காரணமாக பகையாளிகள் ஆகிவிட்டனர். மணியமும் கந்தையாவும் ஒரு தடவை கட்டிப்பிடித்து உருண்டு சண்டை போட்டவர்கள். முதலாளிகள் இருவரதும் அரசியல் பிரவேசம் மேலும்
தலில் இருவரும் கோட்டை கார்த்திகேசன் மாஸ்டர்
பேசினர். எல்லோருக்கும் தெரிந்த பாசையில் அவர்கள் வாய்விட்டுப் பேசவில்லை. "காதலர்களின் தனியுடைமை என்று கவிஞர்களால் கொண்டாடப் படும் விழி மொழி மூலம் அவர்கள் பேசிக்கொண்டனர். அவர்களுடைய பார்வையில் இதுவரை பேச்சிலும் தொனிக்காத ஒரு புதிய ஒலி-எழுச்சி வியாபித்திருந்தது. பழைய குரோதம் சாம்பராகி, அதன் மேட்டிலே குளுமை தோன்றி. அவர்கள் அவர்கள்தான். இவர்கள் இவர்கள்தான்'
柔。 Sfi

Page 13
மட்டுமேகற்றவர்கள்
 

மரபு தவறலாம் என்பவ
ஒழுக்கம் தவறியவர்கள்
என்று சொல்லெறிந்தார்கள்
தானே சொல்லாயிருந்தவர் அவ அவருக்கு முன்னே சிதறிப்போயின
அவர்களுடைய ஒலிகள்
-ஊமையாய் நின்றாள் அவள்
-மணலைக் கயிறாய்த் திரிப்பவர்கள் அவர்கள்
-சமுதாயத்தால் பிசையப்பட்ட பச்சை மண் அவள்?
-ឃិ கிடந்த நியதிகளைச் சுட்டு
நீதி வனைந்தவர் அவர்
-மனலில் எழுதினார்
உங்களில் தற்றமற்றவர் எவரே
-உடைக்கநினைத்தவர்கள் உடைந்து போனார்கள்
நினைவுகளால் குடைந்து
மனச்சாட்சியைத் துறவிப் பார்த்தும் எவருக்கும் கிடைக்கவில்லை அந்த முதல் கல்
வருமில்லாத நகரந்தத்தில் கவனித்தாள் அவள் அந்த முதல் கல் அவரருகில் தலைவனே நீயே அந்த முதல் கல்லை
எறிந்திருக்கலாமே என்மேல் என்றாள்.
தேவன் ஒருபோதும்

Page 14
மார்ச் ♔ത്തെ
நாளமில்ாைசி சுரப்பிகளும் IUGGS6565)
பால் சுரப்பிகள் >
இ னப்பெருக்கச் சுரப்பிகளான சூலகங்களும் சுரப்பிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை கரு உருவாக்கும் உறுப்புகளாகும். அத்துடன் இவை திரவம் இரத்தத்தில் கலந்து பல பணிகளைச் செய் விதைகள் உயிர் அணுக்களை உற்பத்தி செய்வது மன்று டெஸ்டோஸ்ரிரோன் (Testoesterone) என திரவத்தையும் சுரக்கின்றன. இத் திரவமே ஆண் 1 காணப்படும் தன்மைகளுக்குக் காரணமாகும்.
அதேபோல் சூலகம் என்னும் சினைப்பைத காணப்படும் பெண்மைக்குப் பொறுப்பாகும். இதிலி அணு(முட்டை) முதிர்ச்சி பெற்று வெளிவருகிறது அத்துடன் இது ஈஸ்டோஜன் என்னும் திரவத்துட இன்னுமொரு திரவத்தையும் உற்பத்தி செய்கின்றது இவை பாலுறுப்புகளின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்து கும் உதவுகின்றன.
இச் சுரப்பிகளின் செயற்பாடுகள் இரு பாலாரிை யேயும் 12 முதல் 15 வயதளவில் ஆரம்பிக்கிறது. அ. இளமைப் பருவத்தின் தோற்றுவாயாகும். இதனா உள்ளத்திலும், உடலிலும் இருபாலாருக்கும் பல்வே மாற்றங்கள் உருவாகின்றன. இச் சுரப்பிகள் சரிவு இயங்கினால் உடல் வளர்ச்சியில் நல்ல செழுமையு வனப்பும், கவர்ச்சியும் ஏற்படும். பிள்ளைகள் இந்த பருவத்தில் தங்கள் விருப்பத்துக்கு நடந்து கொள் விரும்புவார்கள். பெற்றோரின் கட்டுப்பாடுகை வெறுப்பார்கள், முரண்டுபிடிப்பார்கள், நண்பர்கள் உற எதிர்ப் பாலினக் கவர்ச்சி போன்றவை ஏற்படும். இ அவர்களைப் பக்குவமாக நடத்தி அவர்களுக்கு வ செய்வதோ, வெறுப்படையச் செய்வதோ நல்லதல்ல.
மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் வோல் பிள்ளைகளுக்கு இப் பருவத்தில் ஏற்படும் கோளாறுக அது ஏற்படுத்தும்.
மற்றுமொரு மருந்தான செஸ்நட்பட் (Chestm வேலைகளை காலந்தவறாது ஒழுங்காகச் செய்வா ஏற்படாது.
யோக நூல்களின் படி பால் சுரப்பிகள் ஸ்வாதி இவைகளைச் சீராக இயக்கக் கூடிய ஆசனப் பயிற்சி பால் சுரப்பிகள் நன்றாக இயங்கி அழகும், இளமையும் உண்டாகும். செய்யக்கூடிய சில ஆசனங்கள்:
པོ་སྒོ་ལ་བློ་
 
 

s t్య
விதைகளும் பால்
Ο ச் செல்களை ඉ
S ရှို့ခိ
சுரக்கும் கின்றது.
LDL (6 ன்னும் Dỡ56ốỉì tỏ
நான் ஒரு பெண்ணிடம் ருந்து மாதம் ஒரு கரு bl
দুটো । து. Ovary க்
ଗT
), ச் சமயத்தில் பெற்றோர் மிகாட்ட வேண்டுமேயன்றி அவர்களை மனம்நோகச்
ட் (Walnut) என்னும் மருந்தைக் கொடுத்து வந்தால் ளைச் சரிப்படுத்துவதோடு நல்ல பழக்கங்களையும்
tbud) கொடுத்தால் தங்கள் கடமைகளை உணர்ந்து ர்கள். அவர்களைத் தூண்ட வேண்டிய அவசியமே
ட்டான சக்கரத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. கள் உண்டு. அவற்றை ஒழுங்காகச் செய்து வந்தால் பொலிவதோடு ஆரோக்கியமும் அமைதியும் நிதானமும்
தொடர் 19ம் பக்.
<ڑی تھی کی 2

Page 15
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஒடம் போலே ஆடிடுவோமே வாழ் நாளிலே.
என்ற பாடல் வரிகள் ஒலித்த போது செவிக்கு இன்பம் மட்டுமல்ல, பெரியவர்கள் எவ்வளவு யதார்த்த மாகச் சொல்லி வைத்திருக்கின்றனர் என்ற வியப்பும் ஏற்படுகின்றது. கடலோரம் காலாற நடக்கும் போது, அலைகளைக் கவனித்தால், ஓர் அலை வரும், அதனைத் தொடர்ந்து இன்னொரு அலை வரும். அதே போல நமது ஆசைகளும் ஓயாது. நாம் ஆசைப்பட்டது கிடைத்து திருப்தி ஏற்படமுன் மற்று மொரு ஆசை முளைத்துவிடும். பொம்மைக்கு ஆசைப்பட்டு விளையாடும் குழந்தை சொக்கிலேட் பெட்டியைக் கண்டதும் பொம்மையை வீசி விட்டு சொக்கலேட்டை எடுப்பதுபோல நம் ஆசைகளும் ஓயாது. அது மட்டுமல்ல கடலோரம் நமது காலை லேசாக வருடுகின்ற அலை கள் திடீரெனப் பொங்கி நம்மை அமுக்கி விடுவதுபோல அடக்க முடியாத ஆசைகளும் நம் மையே அழித்து விடுவதுமுண்டு. பணம் சேர்ப்பவனுக்குப் பணமும், வீடு சேர்ப்பவ னுக்கு வீடும், நகை சேர்ப்பவனுக்கு நகையும், நாடு சேர்ப்பவனுக்கு நாடும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. இராவணன் சீதைக்கு ஆசைப்பட்டு அழிந்ததும், துரியோதனன் மண் ணுக்கு ஆசைப்பட்டு ஒழிந்ததும், தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென வரங்கேட்டு பசிக்கு புசிக்காத நிலை ஏற்பட்டதும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த ஆசைகள் வாழ்க்கையையே மாற்றிப் போடுவதையும் இதிகாசங்களில் மட்டுமல்ல கண் கூடாகவும் காண முடிகிறது. அதனைப் பற்றி
 
 

பூரீ இராமகிருஷ்ண பரமகம்சர் ஒரு சிறுகதை மூலம் விளக்குகின்றார்.
குருவிடம் சன்னியாசம் பெற்ற சீடன் தன்னந் தனியாக ஒரு குடிசையில் தவம் செய்து வருகின்றான். அவன் குளித்துவிட்டுத் தன் கோவணத்தைக் காயப்போட்டபோது, அதனை எலி கள் பதம் பார்த்தன. தினமும் அவன் கோவணத் திற்கு இக்கதி நடக்கவே, பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனைக்குப் பால் வேண்டுமே பக்கத் துக் கிராமத்தில் ஒரு பசுவை யாசகமாகப் பெற்று அதனை வளர்த்தான். பசுவுக்கு வைக்கோல் வேண்டும் எனவே குடிசை அருகில் நெல் விதைத் தான். வைக்கோலுடன் தானியமும் கிடைத்தது. தானியத்தைப் பாதுகாக்க பட்டறை அமைத்தான். இவைகளைப் பராமரிக்க ஓர் ஆள் வேண்டாமா? கல்யாணமும் பண்ணிக்கொண்டான். குரு வந்தார். குடும்பஸ்தனாக வாழும் சீடனைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். "என்னப்பா இதெல்லாம்” என்று ஆச்சரி யத்துடன் கேட்டார், அதற்கு சீடன் வெட்கம் பிடுங்கித் திண்ன குருவே கோவணத்தின் மேல் ஆசை வைத் தேன் சன்னியாசியாக இருந்த என்னை சம்சாரியாக மாற்றி விட்டது என்று நானிக் கோனி பதில் 6ী:ভা6ক্টো6তা6টো,
புத்த பகவான் கூட தமது போதனையில் ஒரேயொரு வார்த்தையில் ஆசைக்குத் தீயை ஒப்பிட்டு விடுகிறார். ஆசை, தனியாமல் கொழுந்து விட்டு எளியும் தீயைப் போன்றது. ஆசைகளை விட்டு விட வேண்டுமாயின் ஆசையே இல்லாத கடவுளைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு
என்றார் வள்ளுவர்.

Page 16
மர் கணஇணஇ
திருமதி. அமரா தேவகாந்தன் அவர்களே! உங்களைப் பற்றி வாசகர்கட்கு சற்று
எடுத்துச் சொல்லுங்கள்
என்னைப் பற்றிச் சொல்ல பெரிதாக எதுவும் இல்லை. நான் விவசாயத்தறை விஞ்ஞானப் பட்ட தாரி. 1981ல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (அப்போது மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி முதற் தொகுதி மாணவி. பட்டம் பெற்ற பின் விவசாய ஆசிரியராகத் தெரிவுசெய்யப் பட்டேன். க.பொ.த. (உத) மாணவர்கட்கு விவசாயப் பாடத்தைக் கற்பித்தேன். அத்துடன் பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாவையும் பெற்றுக்கொண் டேன். தற்போது மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கடமை புரிகின்றேன்.
? நீங்கள் ஆங்கில மொழி மூலமாக விஞ்ஞானப்
பாடங்களைக் கற்பிப்பதில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளதாக அறிகின்றோம். அது பற்றி சில வார்த்தைகள்.
 
 
 
 

இணஇண 2012 / எமது பகுதிகளில் 2003ம் ஆண்டளவில் ஆங்கில மொழி மூலமான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. 2004ம் ஆண்டில் இருந்து நான் ஆங்கில மொழிமூலமாக விஞ்ஞானப் பாடத்தை இடைநிலை வகுப்புகளில் கற்பித்து வருகின்றேன். gybuggis Top (Training Of Trainer Programme) திட்டத்தின் கீழ் பாங்கொக் நகரிலுள்ள கலாநிதிப் பட்டம் வழங்கும் AT என்னும் நிறுவனத்தில் 11 வாரங்கள் விஷேட பயிற்சியும் பின்னர் மலேசியா வில் ஒருவாரப் பயிற்சியும் பெற்றுக் கொண்டேன். அவற்றின் பயனாக கிழக்கு மாகாணத்தின் பயிற்று விப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டேன். கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்கள் தோறும் சென்று பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளேன்.
நீங்கள் கணினி மென்பொருள் புத்தாக்கப் போட்டி களில் விருது பெற்றமை தொடர்பாக எண்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
,2005ம் ஆண்டு மைக்கிரோ சொப்ட் நிறுவனமும் محر கல்வியமைச்சும் இணைந்து கணினி மென்பொருள் மூலமாகக் கற்பித்தல் தொடர்பான புத்தாக்கப் போட்டியொன்றை முதன்முதல் நடத்தின. அதில் முதற் பத்துப்பேர் விருதுக்காகத் தெரிவுசெய்யப் பட்டனர். அதில் நானும் ஒருத்தி (அடக்க மாகக் கூறினார்)
2. நீங்கள் ஏதாவது ஆராய்ச்சிக்
கட்டுரைகள் வாசித்துள்ளிர்களா?
A^ ஆமாம் . ஆமாம், சார்க் நாடுகளின் ஆசிரியர்கள் தொடர்பான மாநாடு ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் நான் எழுதிய Instructional Practices என்னும் ஆங்கில மொழி மூல ஆய்வுக் கட்டுரையொன்று வாசிப்பதற்காகப் பலத்த போட்டி கள் மத்தியில் தெரிவுசெய்யப்பட்டது. அவ்வாய்வுக் கட்டுரையை அம்மகா நாட்டில் வாசித்துப் பாராட்டும் பெற்றேன்.
Essassesses
Connecting Class room Project ugby argasirass டன் பகிர்ந்து கொள்ளுங்களேன்
இதனை வகுப்பறைகளை இணைக்கும் செயற் محر றிட்டம் என்று குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இது எங்கள் வகுப்பறைகளை இன்னோர் தேசத் தின் கல்லூரியொன்றின் வகுப்பறையுடன் இணைப்பதைக் குறிக்கும். இணையம், ஸ்கைப் என்பவற்றின் மூலம் இவ்விணைப்புச் செயற்பாடு இடம்பெறும் கல்வி கலை, கலாசாரம் என்பவற்றை
4. උණුම්

Page 17
மார்ச்
=®-—ള്ള
சர்வதேச மட்டத்தில் பகிர்ந்து கொள்ளல் இதன் மூலம் இடம்பெறும். மட்/புனிதமிக்கேல் கல்லூரி எட்டுத் தலைப்புகளின் கீழ் இத் திட்டத்தைச் செயற் படுத்துகின்றது. எங்கள் உணவு விழாக்கள், வீதிச் சமிக்கைகள், எம்மைக் கவர்ந்தவர்கள், கல்வி முறை கள், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளல், மூட நம்பிக்கை, அறுவடை விழா என்பவையே அத் தலைப்புகள். இவை தொடர்பான சர்வதேச தகவல் களைத் திரட்டி பரிமாற்றம் செய்ய வேண்டும். அவை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டி கள் என்பவற்றையும் நடத்தியுள்ளோம்.
எமது பாடசாலையானது வேல்ஸில் உள்ள Moumoshire 6T63rgoL6-5gsj6ft 6T King Hentry Vill என்னும் பிரமாண்டமான கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இரண்டு ஆசிரியர்கள் இங்கு வருகை தந்திருந்தார்கள். நமது ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கு செல்லும் வாய்ப்பைப் பெறுவர்.
இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இத்திட்டத்தின் கீழ் சோமாலியா விற்கு மிக்கேல் கல்லூரி மாணவர்களிடமிருந்து உண்டியல் மூலம் திரட்டப்பட்ட ரூபா 58422/= வழங்கப்பட்டமையைச் சொல்லலாம். இப் பணமா னது உலக உணவுத் திட்டம் (WFP) மட்டக்களப்பு அலுவலகத்திற்கூடாக கொழும்பு தலைமைய கத்துக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அவர்களுடாக
ஆசையே அலைபோலே தொடர் .
ஒரு ராஜா, தன்னால் காலையில் முதல் முதலாகப் பார்க்கப்படுபவனுக்கு இரண்டு தங்கக்காசுகளைக் கொடுப்பது வழக்கம். இதை அறிந்த ஒருவன் இக்காசைப் பெறுவதற்காக நடுநிசியில் அரண்மனைக் குள்ளே நுழைந்து விட, காவலர்கள் அவனைச் சிறையில் அடைத்தனர். காலையில் அவனை அரசன் முன்நிலையில் கொண்டுவந்தனர். அவன் அழுது கொண்டு நடந்தவற்றைக் கூறினான். அவனிடம் பரிதாபப்பட்ட அரசன் "உன் ஆசை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றித் தருகிறேன்” என்றார். சற்று நேரம் யோசித்த அவன் "இரண்டு தங்கக் காசுகளுக்கு ஆசைப்பட்டு அடைந்த துன்பம் போதும் இன்னும் பெரிய ஆசை வைத்தால் என் னென்ன துன்பம் வருமோ, துன்பத்தை விட ஆசைப் படாமல் இருப்பது ஆனந்தத்தைத் தரும் என்ற உண்மையை உங்களால் உணர்ந்து கொண்டேன் நன்றி ராஜாவே' என்று கூறிச் சென்றானாம்.
ஆசை அதிகமாக இருப்பவர்களுக்கு எவ்வளவு இருந்தாலும் திருப்தியில்லை, வித விதமான ஆசைகள். அதிலும் நல்ல ஆசைகளும்
 

ਭੰਬ-ਉਸ਼ 2012
சோமாலியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இப் பணத்தைப் பொறுப்பேற்ற உலக உணவுத்திட்ட அதிகாரி, இலங்கையிலிருந்து சோமாலியாவிற்கு உதவித்தொகை அனுப்பப்படுவது இதுவே முதற் தடவை என்று குறிப்பிட்டது எம்மால் மறக்க முடியாதவொன்றாகும்.
இந்த வகுப்பறையை இணைக்கும் செயற்றிட்டத் திற்கு ஏதேனும் விருதுகள் கிடைக்க வாய்ப்பு
களுண்டா?
/ஆம் சிறப்பாகச் செயற்படும் பாடசாலைக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும்.அத்துடன் ISAVd;Dk; Internatioal School Award 8-retirrigp alsoLieb. இது SLS, ISO போன்ற தரச்சான்றிதழ்களுக்கு ஒப்பானது. இச்சான்றிதழ் பெற்றால் எமது மாணவர் களுக்கு நேரடியாக பிரித்தானியக் கல்லூரிகளில் அனுமதி கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. ISA சின்னத்தை கடிதத்தலைப்புகள், நற்சான்றுப் பத்திரங்கள் என்பவற்றில் பொறிக்கவும் அனுமதி யுண்டு.
இறுதியில் தொண்டனின் சார்பில் நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டோம்.
e- ஆழியோன் -
உண்டு, கெட்ட ஆசைகளும் உண்டு. ஒரு கொசு கடவுளிடம் கடவுளே! எனக்கொரு ஆசை நான் கடித்தவுடனே சாகவேண்டும் என வரம் கேட்டது. கடவுளும் சரி எனக் கூறிவிட்டார். கொசு கடித்தால் நாம் அடிக்கின்றோம் அது சாகிறது. கொசு கேட்டது கடிக்கப்பட்டவன் சாக வேண்டும் என்று. நல்ல வற்றுக்கு ஆசைப்படுவதே தப்பு. அதை விடத்தப்பு கெட்டவற்றுக்கு ஆசைப்படுவது. ஆசைகள் சங்கிலி போன்றது என்று அருணகிரிநாதர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். சங்கிலியில் பல வளையங்கள் உண்டு, அது போலவே பல பொருட்களின் மேல் வைத்திருக்கும் ஆசைகளும் வளையங்கள்தான். இவ்வாசை வளையங்கள் மிக நீளமானவை. ஒவ் வொரு வளையங்களாகக் கழற்றி எறிவதைப்போல் ஆசைகளைக் கழற்றி எறிந்து ஆசைகளை ஒழித்து விட்டால் நிலை வாழ்வு அடையலாம். இத்தகைய ஆசைகளை வளர்த்து வாழ்நாளில் துன்பப்படாமல், இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழப்பழகிக் கொள்வது நல்லதல்லவா.

Page 18
— SAత్ర
2009 bg,60ůTG bujarů Giáš (Newsweek) j சிறந்த நாவலாக “யுத்தமும் சமாதானமும்’ (Wal தெரிவுசெய்தது. அந்த நாவலானது பிரபல்யமான ரஷ்ய ஆக்கமே. லியோடோல்ஸ்டோய் அவர்களை ஒரு இலக்கியத் துறையிலும் இன்னும் வேறு பல துறைக் இவர் வாழ்ந்த வாழ்க்கைப் பின்னணி அதற்குச் சி ரஷ்யாவிலே ஏற்றத்தாழ்வு மேலோங்கி இரு “யஷ்னயா தொழியானா' என்ற நிலம் 500 ஏக்கர் விவசாயிகள் அனைவரும் அடிமைகளாகப் பயன்படுத் பிள்ளைகளுக்கு உரிமையான ரஷ்யாவிலே அவர் யடைந்த ஒரு பெரிய சாம்ராஜ்யமான ரஷ்யாவிலே வாழ் அநீதிகள், அக்கிரமங்கள் ரஷ்யாவிலே நிரம்பியிருந்த இவற்றிற்கு எதிரான போராட்டத்தின் அை பணம் பொருள் நிலபுலன்களுக்கு உரிமையான வேதனைகளுக்கும் உள்ளான ஏழை விவசாயிகள் ட இரத்து செய்யுமாறு "சார்’ மன்னனிடம் வலியுறுத்தி
தன்னுடைய தோட்டங்களில் பணியாற்றிய வழங்கினார். சமூகப் பணியாளரான இவர் ஒருத சமாதானவாதியும் காந்தி (Gandhi), மார்ட்டின் லூதர் அகிம்சை வாதத்தின் பிள்ளைகள் என்பதிலும் ஐய ரஷ்ய தேசத்தின் நிறுவனர் ஏ.ஐ.லெனின் வர்ணிக்கிறார். அது இலக்கியத் துறைக்கு அவர் முன்னதாகவே சமுதாயத்துக்குப் பல துறைகளிலு குறிப்பிட்டார். எவ்வாறாயினும் உலகம் டோல்ஸ்ே
- கருதுகிறது.
GSGUITCELTGÖGMůóG.
3. அவர் குடும்பத் யிருக்கும்போதே உறவினர்களிடே ஆரம்பித்தார். சட் "(Hassan) LIG535 ஒரு பட்டமும் பெ - ஆகவே, கல்: ஊருக்குச் 6 & பின்பு இவர் கிலும் செ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

۔۔۔۔۔۔۔۔۔۔۔ 90حSzA SSSSS SS
ஞ்சிகையானது இதுவரையில் வெளியான நாவல்களில் & peace) என்ற நாவலை முதலாம் இடத்திற்குத் எழுத்தாளர் “லியோடோல்ஸ்டோய்”அவர்களினுடைய நாவலாசிரியராக மட்டும் கருதக் கூடாது. ஏனெனில் 5ளிலும் இவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். றந்த சான்றாகும். நந்த காலத்திலே அவர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த நிலப்பரப்புக் கொண்டது. மேலும் சட்டத்தினாலே ந்தப்பட்ட காலமது. மேலும் கல்வி, பணபலம் படைத்த வாழ்ந்தார். ஜப்பானோடு போர் தொடுத்துத் தோல்வி ந்தார். உலகனைத்திலும் காணப்பட்ட அட்டூழியங்கள்,
56ծI. டயாளமாக அவர் திகழ்ந்தார். உயர் குடிவம்சத்தில் ண் லியோடோல்ஸ்டோய் பல துன்பங்களுக்கும், க்கம் சார்ந்தார். ஏழைகளுக்கு எதிரான சட்டங்களை க் கூறினார்; அதில் பாரிய வெற்றியும் கண்டார். விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியை த்துவ ஞானியும் கூட. இவர் யுத்தத்திற்கு எதிரான disti (Martin Lutherar King) (UT66 (Spirit SolbóOLu
ിഞ്ഞു.
“புரட்சியின் கண்ணாடி’ என்று டோல்ஸ்டோயை ஆற்றிய பணிக்காக மட்டுமல்ல, ரஷ்யப் புரட்சிக்கு லும் அவர் ஆற்றிய பணிகளின் பொருட்டே இவ்வாறு டாயை எழுத்தாளர் களில் முதன்மையானவராகவே
டாய் 1828ம் ஆண்டு ஆவணிமாதம் 28ம் திகதி பிறந்தார். த்தின் 4வது புதல்வராவார். இவர் சிறுவயதா தமது பெற்றோரை இழந்தார். இவர் தன்னுடைய ம வளர்ந்தார். 1844ல் தனது ஆரம்பக் கல்வியை டத்திலும் மொழியியலிலும் தேர்ச்சி பெற்றவராக “கஸான் லைக்கழகத்தில் திகழ்ந்தார்; இருப்பினும் இவர் எந்த றவில்லை; கல்வித் தரத்திலே திருப்தி அடையவில்லை; வியை இடைநடுவில் நிறுத்திக் கொண்டு தனது சொந்த சென்றார்.
அதிக காலத்தை மொஸ்கோவிலும் பீட்டர்ஸ்பேர்க் லவழித்தார். பின்பு 1851ல் இராணுவத்தில் பீரங்கிப் b சேர்ந்துகொண்டார். 1850ம் ஆண்டிலே அவர் இலக்கியத் பில் நுழைந்தார். ஆண்டில் அவருடைய சுயசரிதையில் பாலர் பருவத் 1854ல் தனது சிறுபராயத்தையும் 1857ல் இளமைப் த்தையும் எழுதினார். 1857ல் பிரான்ஸ், ஜேர்மன், Fலாந்து போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்தார். மீண்டும் திரும்பி லியோடோல்ஸ்டோய் “யஸ்னா பொஸ்வானா' எனும் இடத்தில் வசித்துவந்தார். அங்கே பாமரப்
பிள்ளைகளுக்குப் .
தொடர் 19ம் பக்.

Page 19
LDIT jğ
கித்தேரியம்மாள் அம்மானை.
தமிழில் கிறிஸ்தவ இலக்கி யங்களின் வரிசையில் அடுத்து 'கித்தேரியம்மாள் அம்மானை' நோக்கப்படுகின்றது. இதனை இயற்றியவர் வீரமாமுனிவர் ஆவார். சமய பழமரபுக் கதைக ளுள் ஒன்றாகக் கத்தோலிக்கரால் நினைவுகூரப்பட்டுவரும் இக்கதை போர்த்துக்கல் நாட்டில் பிரல்யம் உடையதாக வழங்கி வந்தது. உண்மை நிகழ்ச்சியும் இயற்கை பிறழ்ந்த நிகழ்ச்சியும் இணைந்த தாக இக்கதை பயிலப்பட்டு வந்தது. கித்தேரியம்மாள் பக்தியினைத் தமிழகத்திலும் பரப்ப ஆவல் கொண்ட வீரமாமுனிவர், அதற்குப் பொருத்தமான தளமாக ஏலாக் குறிச்சி என்னுமிடத்திலுள்ள திருக் காவலுாரினைத் தெரிந்து கொண் டார். இத் தெரிவும், கித்தேரியம் மாள் புகழை அங்கு அவர் நிலை நிறுத் தவ தறி கு ஏதுவான காரணிகளும் சுவாரசியமானவை யாகவும் அதேவேளை பக்தியு ணர்வு மிக்கதுமாகவும் அமைவன. தஞ்சாவூர்ப் பகுதிகளிலிருந்த சபைகளின் பொறுப்பாளராகப் பதவியேற்ற வீரமாமுனிவர், அவற்றை நிர்வகிப்பதற்காக 1716 இல் கொள்ளிடத்தின் கரையை அடுத்து அமைந்திருந்ததும் கும்ப கோண மறைமாவட்டத்தைச் சேர்ந் ததுமான ஏலாக்குறிச்சி என்னும் சிற்றுாருக்கு வந்தார். இவ்வூர் தஞ்சை எல்லைக்கு வெளியே அமைந்திருந்தது. இக் காலத்தில் தஞ்சாவூரை ஆண்டு வந்த மராட் டிய மன்னன் சரபோஜி கிறிஸ்த வர்களைத் துன்புறுத்தியதால் தஞ்சை எல்லையில் புளியங்
மார் மணஇணஇ
திரு
குடியிலிருந்த
அங்கிருந்து விெ குறிச்சிக்கு வந்த வந்த அம்மக்கை வீரமாமுனிவர், அ ஆறுதலுக்காக ே களிலும் தன் உ வந்த போதும் கிறிஸ்தவளாக
டன் செயற்பட்டு றாண்டில் (கி.பி
யாக இறந்த புல் மாளின் வரலாற்
ெ
 
 
 
 

இதி
তেঁইট) 2012,
றுபி வலன்ரீனா பிரான்சிஸ் முதுநிலை விரிவுரையாளர், - மொழித்துறை - கிழக்குப் பல்கலைக்கழகம்.
கிறிஸ்தவர்கள் |ளியேறி ஏலாக் னர். அகதிகளாக ள அரவணைத்த ம்மக்களின் மன Fாதனை வேளை யிருக்கு இறுதி
பற்றுறுதிமிக்க வாழ்ந்து துணிவு
கி.பி 2ம் நூற் 35) வேத சாட்சி த கித்தேரியம் றைக் கூறினார்.
கித்தேரி 1716இல் புனிதையாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பி டத்தக்கதாகும்.
ஏலாக்குறிச்சியிலுள்ள திருக்காவ லுாரில் மரியன்னைக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. (இவ்வாலயம் அடைக்கல மாதா கோயில் என வழங்கப்படும்) இவ்வாலயத்தி லுள்ள அடைக்கல மாதா பேரி லேயே அவர் 'அடைக்கல நாயகி வெண்கலிப்பா”, “அடைக்கல நாயகி அந்தாதி” ஆகிய நூல் களை இயற்றினார்) இவ்வாலயத் தினுள்ளேயே மணிலாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித கித்தேரி யின் திருவுருவச் சிலையை வீரமாமுனிவர் நிறுவினார்.
அம்மானை என்பது தமிழி லுள்ள பிரபந்த வகைகளுள் ஒன் றாகும். இதன் தோற்றம், வளர்ச்சி பற்றி நோக்குகின்றபோது அது ஆரம்பத்தில் விளையாட்டு வகை களுள் ஒன்றாக இருந்தமை பற்றி அறியமுடியும். மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ("அம்மா னைக் காய்கள் பெரும்பாலும் சுமை இல்லாத மரக்கட்டையால் உருணி டை வடிவினதாகச் செய்யப்பட்டு பல்வேறு வண்ணங் கள் தீட்டப்பெற்றவை’ என தமிழ்க் கலைக் களஞ்சியம் கூறு கிறது) வைத்துக்கொண்டு விளை யாடுவர். இதன் போது பாடப்படும் பாடல் 'அம்மானை வரி' எனப் படும். ஒரு பெண் ஒரு கருத்தை அல்லது செய்தியை அல்லது வினாவை வெளியிடுவாள். மற்றை
யவள் அதற்கு விளக்கம் அல்லது

Page 20
இணீஇ
விடையை அளிப்பாள். மூன்றாம வள் சமாதானம் கூறி அல்லது முன்னைய இரண்டை யும் இணைத்துப் பாடலை முடிப்பாள். இப்பாடல்கள் சிலேடை நயம் பொருந்தியவை.
அம்மானை என்னும் சொல்லின் பொருள் குறித்துப் பல்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன. அம்மானை என்பது தாய் என்னும் பொருளுடையது என்றும் பெண்களை அம்மா என்றழைப்பது போல அம்மானை என்று அழைப்பது இலக்கிய மரபென்றும், பாட்டின் இறுதியில் பெண்களை விளிக்கும் முறையில் அம்மானை என்பது அமைந்ததென்றும், அவ்வாறு அம்மானை என்னும் சொல் இறுதியில் அமையப்பெற்ற பாடல்களே அம்மானை எனப் பெயர் பெற்றதென்றும் பல்வேறு விளக்கங்கள் தரப்படு கின்றன.
தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரத்தில் அம்மானை பற்றிய தகவல்கள் முதலில் கிடைக்கப் பெற்றுள்ளன. சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் பெண்கள் அம்மானை பாடி சோழனின் புகழைக் கூறுவதாக அம்மானைவரிப் பாடல்கள் உள்ளன. மூன்று பெண்கள் சேர்ந்து ஆடிப் பாடுவதாக இவை அமைந்துள்ளன.
உதாரணம்:
“புறவு நிறை புக்கு பொன்னுலம் ஏத்த குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை? குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன்வந்த கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை'
(சிலம்பு வஞ்சி வாழ்த்து 18)
கலம்பக இலக்கியத்தில் அம்மானை என்பது ஒரு பகுதியாக உள்ளது. மூன்று பெண்கள் பாடும் முறையிலேயே இதுவும் அமைந்துள்ளது. பின்னர் பிள்ளைத்தமிழ் இலக்கியத்திலும் அம்மானை என்னும் பகுதி அமைக்கப்பட்டது. குறிப்பாகப் பெண்பாற்பிள்ளைத்தமிழின் பருவங்களில் ஒன்றாக இது அமைந்தது. (காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் ஆகியன பெண்பாற்பிள்ளைத்தமிழில் இடம் பெறும் பத்துப் பருவங்கள் ஆகும். அம்மானை, நீராடல் என்பவற்றிற்குப் பதிலாக சிற்றில் இழைத்தல், சிறுசோறாக்கல் என்பனவும் சில புலவர்களால் பயன் படுத்தப்படுவதுண்டு) இவ்விலக்கியத்தில் பாடப் பெறும் தலைவியை தாயும் செவிலியும் அம்மானை ஆடும்படி சொல்வதாக இது அமையும்.
 
 

சோழர் காலம்வரை தொடர்நிலைச் செய்யுள்களிலும், பிரபந்தங்களிலும் ஒரு பகுதியாக இருந்த அம்மானைப் பாடல்கள் பின்னர் நெடும்பாடல்களாக வும், தனிப்பிரபந்தங்களாகவும் மாற்றமுற்றன.
ஒரு செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், நாட்டார் இலக்கியப் பண்புகளைக் கொண்டிருத்தல், எளிமையான வடிவில் இருத்தல், பேச்சுவழக்கு இடம்பெறுதல் ஆகியன அம்மானை யின் பொதுப்பண்புகளாகும்.
இத்தகைய வடிவத்தினை வீரமாமுனிவர் கித்தேரியின் கதையினைக் கூறுவதற்குத் தெரிந் தெடுத்தார். சிறப்பாக பாமர மக்களுக்குப் பரிச்சய மானதும், எளிமையாய் அமைந்ததுமான கதை கூறல் முறைமையினை அவர் தெரிந்தெடுத்தமை முக்கிய கவனத்திற்குரியதாகும்.
கற்றோர்க்குப் புரியும் வகையில் காப்பிய நடையில் செந்தமிழ் மணம் கமழ தேம்பாவணியைத் தந்த வீரமாமுனிவர் கிராமிய மக்களை மனதிருத்தி அவர்களது சூழலுக்குப் பொருத்தமாகக் கித்தேரியம் மாளின் வரலாற்றை அம்மானையிற் பாடியமை வியப்பிற்குரியதல்ல.
நோக்கம்
புனித கித்தேரியின் வரலாற்றினை இவ்விதம் இலக்கியமாகப் படைப்பதற்குரிய நோக்கங்களுள் ஒன்றாக முன்னர் குறிப்பிடப்பட்ட விடயமாகிய ஏலாக்குறிச்சிக்கு கிறிஸ்தவர்கள் அகதிகளாக வந்த விடயத்தைக் குறிப்பிடலாம். அத்துடன் இன்னுமொரு விடயமும் குறிப்பிடப்படுகின்றது. ஏலாக்குறிச்சிக்கு வந்த மக்களுக்கு அங்கும் சோதனை உண்டாயிற்று. கொடிய பஞ்சத்தால் மக்கள் அல்லலுற்றனர். இதனால் Danish Mission 6T6örglub d536mbgb6). FLDugg56 மறுசீராக்கச் சபையில் சேரத் தொடங்கினர். எனவே மீண்டும் கத்தோலிக்க விசுவாசத்தை அவர்கள் மத்தி யில் முன்னெடுத்துச் செல்வதற்காக, வேண்டும் வரங் களைத் தருபவளும், துன்புறும் மக்களுக்கு ஆறுதல் தருபவளாகக் கருதப்பட்டவளுமான புனித கித்தேரியை முன்னிறுத்தி அவளது வாழ்க்கைச் சரிதத்தை அவர் எழுதினார். கித்தேரியின் வீரதீர மிக்க வாழ்வு அவர்களை விசுவாசத்தில், உறுதியில் நிலைபெற வழிவகுத்தது.
கதைச்சுருக்கம்:
Bolandists எழுதிய கித்தேரியின் வரலாறு பற்றிய கதையினை (இதுவே மூலக் கதையாகக் குறிப்பிடப்படுகின்றது) ஆதாரமாகக் கொண்டு சிற்சில மாற்றங்களுடன் வாய்மொழியாக நிலவி வந்த கித்தேரியம்மாள் பற்றிய கதைகளையும் இணைத்து
<{&ބަބަe 18

Page 21
Ejj = 33) “கித்தேரியம்மாள் அம்மானை' யினை 1732இல் வீரமாமுனிவர் இயற்றினார். இதில் கூறப்பட்டுள்ள கதையினை சுருக்கமாக நோக்கலாம்.
ലേ൫:
இலுசித்தானியா - போர்த்துக்கல் - நாட்டில் பிராகம் என்னும் நகரில் காயன் என்னும் கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். அவன் கிறிஸ்தவ சமய வெறுப்பாளனாகவும், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்து பவனாகவும் இருந்தான். (மூலக்கதையில் ஸ்பெயின் நாட்டின் கபில்லியா மாகாணத்தில் அரசன் காயூஸ் அட்டிபியுசும் அவன் மனைவி செல்சியாவும் வாழ்ந்து வந்தனர் எனக் குறிப்பிடப்படுகின்றது) அவனது தேவி ஒரே சூலில் ஒன்பது பெண் மகவுகளைப் பெற்றாள். இதனால் நாணமடைந்த அவள் சீலதி என்னும் தனது சேடிப்பெண்ணிடம் அச்சேய்களை ஆற்றில் வீசி விடுமாறு கட்டளையிட்டாள். அப்பெண் குழந்தை களைக் கொல்ல விரும்பாமல் அவர்களை ஆயரிடம் ஒப்படைத்தாள். ஆயரும் அவர்களுக்குத் திருமுழுக்கு அளித்து திருமறையில் சேர்த்து கித்தேரி, பாசிலி, செனவரியே, வித்தோரி, எப்பேமி, விபிராத்தை, செருமானி, மாரினை, மார்சியாள் என்னும் பெயர்க ளைச் சூட்டினார்.
அவர்கள் கன்னிப் பருவத்தை அடைந்த போது அருமறை முனிவர் ஒருவர் அவர்களைக் கண்டு அவர்களது வரலாற்றைக் கூறியதுடன் உலக வாழ்வின் நிலையாமையை உளங்கொளச் செய்தார். அவர்களும் துறவறத்தைக் கைக்கொண்டு மெய்மறை யைப் பரப்பி வந்தனர்.
 
 

N=ܒܣ`ܒ6ܚ2 feمصر سيخb இணஇண 2012
16úb uš.
பாடசாலை ஒன்றை நிறுவினார். கல்விக்கு முன்னுரிமை கொடுத்தார். கல்வியோடு உலகம் மாறுவதை அவதானித்தார். ஐரோப்பாவில் பிரயாணங்களின் போது ஆராய்ச்சி செய்து பல பாடப் புத்தகங்களை வெளியிட்டார்.
1862ல் இவர் தன்னைவிட பதினாறுவயது இளமையான "சோபியா அன்ரிவ்னாவை Andrivna) திருமணம் செய்தார். இவருக்குப் பதின்மூன்று பிள்ளைகள் பிறந்தன அதில் ஐந்து
ராகவும் செயற்பட்டா ་་་་་་་་ ་་་་་་། - Joo "போரும் சமாதனமும் என்ற நாவல் 1865-1869க்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் எழுதப்பட்டது.
இந்நூலானது நெப்போலியனின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஐந்து குடும்பங்களின் சிந்தனையாக அமைந்துள்ளது. இந்த பிரமாண்டமான படைப் பில் ஐநூற்றி என்பது கதாபாத்திரங்கள் அடங்கு கின்றன. இவற்றுள் சில வரலாறும் சில கற்பனை களும்,
அடுத்து இவருடைய படைப்பாகக் கருதப்படு வது "அனாகளினா’ என்ற நாவல். இது பலமுறை Holy Wood திரைப்படங்களாகவும் எடுக்கப் பட்டது. 1880ம் ஆண்டு இவருடைய தத்துவப் படைப்பான பாவசங்கீர்த்தனமும் அதன் நம்பிக் கையும் இது 1884ல் தடைசெய்யப்பட்டது.
லியோடோல்ஸ்டோய் தன்னை அதிகமாக ஒரு கலைஞன் என்பதை விட ஒழுக்கவாதியாக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பினார். 1884ல் தன்னுடைய வீட்டை எளிமையாக வாழ முற்பட்டார். அவருடைய வாழ்க்கையைக் கண்டு அவரைச் சந்திக்க உலகின் பல எல்லைகளிலிருந்தும் மக்கள் வந்தார்கள். இந்தக் காலகட்டத்திலேயே தனது நாட்குறிப்பை ܬ ܢ .Upg5]6oIIIj)61
லியோடோல்ஸ்டோய் 1910ல் தன்னுடைய 32ம் வயதில் இளையமகள் அலெக்சான்ரா “Alexandra' உடன் குறிப்பிடப்படாத இலக்கை நோக்கி புகையி ரதத்தில் பயணமானார். வழியில் அவர் கடும் நோயுற்றார். புகையிரதப் பாதையிலுள்ள "Asiapovo" எனும் இடத்தில் தரிப்பிட அதிகாரியின் (Station Master) இல்லத்தில் தனது வாழ்க்கைப் பய னத்தை முடித்துக் கொண்டார். அண்மையில் 2009ல் எடுக்கப்பட்ட Theiaststation எனும் Hol
Wood படமானது அவரின் இறுதி வாழ்வினை நன்கு சித்தரிக்கின்றது.
இ அருட்பணி ஜோர்ஜ் திசாநாயக்கா

Page 22
ଓSøଓ
ண்டவர் இயேசு தன்னையே 2தனை பலியாக்கிமீட்டு இரட்சித்த இடத்தில் ஏராளமான மக்கள் வந்து தரிசித்துச் சென்றனர். இயேசுக் கிறிஸ்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்த புனிதமான கல்வாரிக்குன்றும் அருகிலி
ருந்த அவரது கல்லறையும் இளந் திருச் சபை அன்று புத்துணர்ச்சி பெற்று வேக
மீட்டு புதி
மாக வளர உந்து சக்தியாகத் திகழ்ந்தது.
ਵੈ
இஇ இதனைக் (8_jra) { குன்றின் மே கும் கல்ல6 கடவுளுக்கு 4丘 6565tan)|Jé னாக மாறி தலத்தில் ே பட்ட கோயி அப்புறப்படு: L*L 35Tu திலிருந்த
924, 6ÖÖT L — @)..] கண்டுபிடி மீண்டும் ரைத் தல இடத்தில் ஆ
LDs ILO606GI60 கட்டினான் Laಾ5Qf L. பாழாக்கப்பு நூற்றாண்
 
 
 
 

கண்டு வெறுப்புற்ற ஹட்றியன் கல்வாரிக் ல் ஜூபிட்டர் கடவுளுக் றையின் மேல் வீனஸ் ம் சிலை வைத்தான். நூற்றாண்டில் பேரரசன் ன்ரைன் கத்தோலிக்க ய பொழுது புனிதத் ஹட்ரியனால் எழுப்பப் ல்களும், சிலைகளும் த்தப்பட்டன. அகற்றப் ல்களின் அடித்தளத் கல்வாரிக் குன்றும், ரின் கல்லறையும் க்கப்பட்டு அவை பக்தர்களின் யாத்தி ங்களாயின. இதே அழகிய பேராலயத்தை கொன்ஸ்ரன்ரைன் 7ம் நூற்றாண்டில் 1டையெடுப்பால் இது பட்டது. மீண்டும் 12ம் டில் சிலுவை யுத்த இத்திருத்தலத்தை கோயிலை எழுப்பி
னர். இவர்களது பேராலயம் சிதைந்து போன கொன்ஸ்ரன் ரைன் கட்டிய பேராலயத்தை மையமாக வைத்து கல்வாரிக் குனி றையும், கல்லறைத் தோட்டத்தையும் அடுத்துள்ள பல்வேறு சிற்றாலயங்களையும் இணைக்கும் வகையில் எழுப் பப்பட்டது. இதுவும் பிற்காலத் தில் பல மாறுதல்களுக்குள் ளானது. இன்றுள்ள அழகிய ஆலயம் பல நாடுகளின், பல சபைகளின் கூட்டு முயற்சி யாகும்.
ஆலயத்தின் நுழை வாயிலுக்கு முன் சிறிய முற்றம் உள்ளது. பழங்காலக் கட்டிடத் தின் சின்னங்களை இங்கு காணலாம். இப் பேராலயத்தின் முகப்பு சிலுவை யுத்த வீரர்க ளின் கட்டிடக் கலைக்குச் சான்று பகர்கின்றது. இப் பேரா லயம் அதிகாலையில் நான்கு மணிக்குத் திறக்கப்படும். இது திறக்கப்படும் போது ஆலயத்

Page 23
தின் அனைத்து மணிகளும் ஒலிக்கும். ஒவ்வொரு நாளும் காலை 11.30 முதல் நண்பகல் 12.30 வரை இப் பேராலயம் மூடப்படும். இரவில் பருவ காலங் களுக்கேற்பவும், பயணிகளின் வசதிக்கேற்பவும் நீண்ட நேரம் திறந்திருக்கும்.
ஆலயத்திலுள்ள மாடிப்படிகளில் ஏறிச் சென்றால் மேலே ஒரு சமதளத்தை அடையலாம். அது இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவே அதிபரிசுத்தமான கல்வாரிக் குன்றாகும். இத்தளம் 36 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்டது. தரை முழுவதும் சலவைக்கல்லும், பளிங்குக் கல்லும் பரவப்பட்டுள்ளது. இங்கு 10 முதல் 13 வரை திருத் தலங்கள் உள்ளன. பன்னிரெண்டாம் திருத்தலம் கிரேக்க சபைக்கும், ஏனைய மூன்றும் கத்தோலிக்க திருச்சபைக்கும் உரிய இடங்களாகும். இடது பக்கத்தின் தரையில் பொருள் பொதிந்த மொசேயிக் ஓவியம் ஒன்றுள்ளது. ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடும் நிகழ்ச்சி அங்கு அற்புதமாக வடிவமைக்கப்பட் டுள்ளது. பலியாகப் போகும் மாசற்ற செம்மறியாம் ஆண்டவரை அது நினைவூட்டுகிறது.
இங்குள்ள பீடத்தடியில் ஒரு குழியுள்ளது அது வெள்ளித்தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இ குழியே நமதாண்டவரின் சிலுவை நின்ற இடமாகும் இதையொத்த இரு குழிகள் இதன் இரு மருங்கிலு
தூக்கியது. பார்ப்பவர்
ஆக்கினை
ஆக்குவோர்
 
 
 
 
 
 

變 象 ܗ പ്രേ
ਸ਼-ਉ-2012
காணப்படுகின்றன. இக்குழியில் உள்ள பகுதியில் கல்வாரிக் குன்றை அதன் இயற்கை வடிவில் நன்கு பார்க்கமுடியும், தங்கம், வெள்ளி, முலாம் பூசப்பட்ட ஏராளமான எண்ணெய் விளக்குகள் இவ்விடத்தை அலங்களிக்கின்றன. மெழுகுதிரிகள் என்றும் எரிந்த வண்ணமாய் இருக்கின்றன. எம் மறையைச் சார்ந்த வராயினும் இங்கு வந்தவுடன் தெய்வ மனத்தை நுகர்கின்றனர். இறைவனின் சந்நிதானத்தில் இருப் பதை உணர்கின்றனர். இயேசு இறந்த வேளையில் இருள் சூழ்ந்தது, நிலம் நடுங்கியது, பாறைகள் வெடித்தன. அன்று கல்வாரி மலையில் தோன்றிய வெடிப்பும் பத்திரமாகப் பேணப்பட்டு வருகிறது. இதைப் பீடத்திலிருந்தே காணலாம்.
“இறைவனை நாம் கொன்று விட்டோம், இதுவரை இவ்வுலகம் பெற்றிருந்த எல்லாப் புனிதமும் வல்லமையும் நிறைந்த அந்த மாபெரும் சக்தி நம் பாவம் என்னும் வாள் முனையில் பலியானது.ஆம் நாம் இறைவனைக் கொன்றவர்கள் - G
இன்பம் JSOID(III) LITT - 82
அவர்தோளில் பாவச்சிலுவை ಟ್ತಿ:
கண்களுக்கோ பாரச்சிலுவை
கள் அநீதிகள் அதிகார மீறல்கள்
مجھتے
言 வேறில்லைச் சிலுவை - apمoسے آز

Page 24
வ உணர்வு இல்லாமல் போனதே இந்த | மிகப்பெரிய பாவம் என்றார் முன்னாள் திருத்தந்தை 6ம் சின்னப்பர். உரோமையருக்கு எழுதிய திருமுகம் 3ம் அதிகாரம் 10ம் வசனம் சொல்கின்றது, "நேர்மை யாளரே இல்லை, ஒருவர் கூட இல்லை. மதி நுட்பம் உள்ளவர் ஒருவருமில்லை. கடவுளைத் தேடுபவர் எவராவது உண்டா? எல்லோரும் நெறி பிறழ்ந்தனர். ஒருமிக்கக் கெட்டுப்போயினர் நல்லது செய்பவர் யாருமில்லை, ஒருவர் கூட இல்லை. உரோமையர் 3ம் அதிகரம் 23ம் வசனம் சொல்கிறது, "எல்லோருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர் என்று.
நமது LT65, 5566TL பற்றி நமது மனநிலை. என்ன என்று சிந்திக்க நாம் அழைக்கப்படு' கின்றோம்.
"நான் பாவியா? என்னில் என்ன குறை இருக்கி றது? நான் சரியாகத் தானே வாழ்கின்றேன்' என்ற நிலைப்பாடுதான் : நம்மில் பலருக்கும் உண்டு. ன்றைய நுகர்வுக் கலா . சார சூழ்நிலையிலேயே
நம்முடைய பாவங்களை,
ప
ჯ=შეჯჯ Σ 2
3ଓଁ
குற்றங்களை நியாயப்படுத் : କ୍ଷୁ துகின்ற மனநிலை பொது & § வாகக் காணப்படுகின்றது. ફું
யோவான் எழுதிய முதல் 1:
ழுதிய முதல் அருட்தந்தை து
கடிதம் 1ம் அதிகாரம் 8-10 வசனங் களில் இப்படிச் சொல்லப்படுகின்றது: 'பாவம் நம்மில் இல்லை என்போமாமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம் உண்மையும் நம்மிடம் இராது மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து குற்றம் அனைத்திலிருந்தும் நம்மை தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக் கைக்குரியவர், நேர்மையுள்ளவர் நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை."
பாவம் என்றால் என்ன என்பதற்கு திரு விவிலியம் விடை தருகின்றது.
யோவான் எழுதிய முதல் கடிதம் 3ம் அதிகாரம் 3ம் வசனம் சொல்கின்றது, “அவரை
《གས་སྐུ་བློ་
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

● േ மூன் @క్లే 2012, எதிர்நோக்கியிருக்கிற அனைவரும் அவர் தூய வராய் இருப்பது போல் தம்மையே தூயவராக்க வேண்டும். பாவம் செய்யும் அனைவரும் சட்டத்தை மீறுகின்றனர். சட்டத்தை மீறுவது பாவம்" கட்டளைகளை மீறுவது - அதாவது செய்யக்கூடாததைச் செய்வது மட்டும் பாவம் அல்ல, செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யாமல் விடுவதும் பாவம்தான். முதலாவது - மனமுவந்து தீமை செய்வதுஅதாவது செய்யாதே செய்யாதே என கட்டளை கள் தவிர்க்கின்றவற்றைச் செய்வது ஒரு வகை ULIT 601 LITT6, LD, இரண்டாவது செய்யவேண்டிய நன்மையைச் செய்யாமல் விடு தன்NைAN2 வது அதாவது 夺芷星G星打LL盟sā "سمي ," செய்வாயாக எனக் கட்டளைகள் கூறு கின்றவற்றை செய் யாமல் விடுவது. SR3 * மத தேயு 19ம் ဗွီဒ္ဒိ၊ 'அதிகாரம் 16-22
^ வ ச ன ங் களி ல
இயேசுவைப் பின் பற்ற விரும்பிய செல் வரான இளைஞனின் கதை நமக்குச் சொல் லப்படுகின்றது.
இளைஞன் கட்டளைகளைச் சரிவரக் கடைப்பிடித்து வரு * கின்றான். ஆனால் இயேசு அவனிடம், "உனக்கு இன்னும் ஒன்று தமிழ் நேசன் குறைவாக இருக்கிறது. உன்னிடம் உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு” என்று சொன்ன போது அவன் வருத்தத் தோடே திரும்பிச் சென்றான்.
இயேசுவைச் சந்திக்க வந்தவர்கள் எல்லோரும் கவலையோடு வந்து இயேசுவைச் சந்தித்த பின்னர் மகிழச்சியோடு திரும்பிச் சென்றார்கள் ஆனால் இந்த இளைஞன் மட்டுந்தான் மகிழ்ச்சி யோடு இயேசுவைச் சந்திக்க வந்து கவலையோடு திரும்பிச் செல்கின்றான்.
இங்கே இந்த இளைஞன் செய்யக் கூடாத வற்றைச் செய்யவில்லை, ஆனால் செய்ய வேண்டிய நன்மையை அவன் செய்ய வில்லை. இதுதான் அவனுடைய பாவம்.
مجھے

Page 25
Iji =
இணஇதி
سستی ہے۔ سبتہ آہستہ یہ سبز...............................................\se). (م کیتھیئم کی تینتیس سے یہsYھی کہ سرخی ஆசிர்வாதப்பரினிவாழ்க்கைவரலா
குருககுகளானது r
M.
சுபியாக்கோவில் புதிய ஆச்சிரமப பெனடிக்ட் சுபியாக்கோவில் மீண்டும் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். செபத்திலும், ஒறுத் ஒரு வாரம் கடந்து சென்றது. அங்கிருந்த கிராம வாச் இடையர்களும் பெனடிக்டின் வருகையைத் தெரிந் ஒன்று திரண்டு பெனடிக்டைச் சந்திப்பதற்காக மன சுக நலன்களை விசாரித்தனர். அவருடைய பிரி இருந்ததாகவும், மீண்டும் வந்தது பெரும் மகிழ்ச்சியுெ போல் தங்களுக்கு இறைவனைப் பற்றியும் அவரு சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டனர்.
பெனடிக்ட் இக் கிராமவாசிகள்பால் வியப்பி தம்மை அர்ப்பணித்த துறவிகளிடம் காணப்படாத மக்களிடம் காணப்படுகிறதே, இவர்களைப் போன் வேண்டுமென எண்ணினார். அவர்களுக்குச் செபிட் வாசிப்பதற்கும் கற்றுக்கொடுத்தார். சங்கீதங்கள் மூலம் ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் பழக்கினார் அப்போஸ்தலர்கள், விசுவாசிகள் பற்றிக் கூறினார். வன வரலாற்றை விளக்கினார். அங்கிருந்த சில இளை வார்த்தைகளால் தூண்டப்பட்டனர். ஓர் இனந்தெரி ஏற்பட்டது. தாங்களும் வன பிதாக் களைப் போன்று துறந்து பாலைவனத்துக்குச் செல்ல வேண்டுமென ஆனால் சுபியாக்கோவுக்கு அருகில் பாலைவனா காணப்படவில்லை. அத்துடன் கிறிஸ்தவ சமயத் ஆழமான அறிவு அவர்களிடம் காணப்பட்டவில்லை. தங்கள் எண்ணங்களை பெனடிக்டிடம் வெளிப்படுத் “இதைப்பற்றி நானும் சில நாட்களாக யோசித்து வந்தே அதுமட்டுமின்றி இறைவனிடம் உங்களுக்கும், எனக்கு ஒரு நல்லதொரு வழியைக் காட்டுமாறு வேண்டி னேன். அன்பு இறைவன் இறுதியாக எனக்கொரு யோசனையைத் தந்துள்ளார்’.
இளைஞர்கள் அனைவரும் பெனடிக்டின் யோசனையைக் கேட்பதற்காக அவரை ஆர்வத்துடன் நோக்கினர்.
“எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடனும், உதவியுடனும் நாமனை வரும் சுபியாக்கோவிலேயே ஒரு சிறு குழுவாக ஒற்றுமையுடனும் சமாதா னத்துடனும் வாழுவோம். ஆனால் நாங்கள் சன்னியாசிகள் அல்லர், நாங்கள் துறவிகள். நாம் ஒருவ ருக்கொருவர் செபத்திலும், கல்வி யிலும், வேலையிலும் உதவி செய்து வாழுவோம்.'
 
 
 
 
 
 
 
 
 

5 Tagg,
தடங்கள் புதிய
5லிலும் களும், ! து கொண்டனர். அவர்கள் அனைவரும் லயடி வாரத்தில் கூடினர். அவருடைய வு அவர்களுக்குப் பெரும் இழப்பாக மனத் தெரிவித்தனர். முன்னையதைப் க்காக வாழ்வது எவ்வாறு எனவும்
ல் ஆழ்ந்தார். இறைவனுக்காகத் ஆர்வம் இச்சாதாரண கிராம றோரையே நான் வழிநடத்த பதற்கும், திருவிவிலியத்தை இறைவனைத் துதிக்கவும், . இயேசுவுக்காக மரித்த பிதாக்களின் வாழ்க்கை ஞர்கள் பெனடிக்டின் யாத உந்தல் ஒன்று | அனைத்தையும் நினைத்தனர், வ்கள் எதுவும் தைப் பற்றி அவர்கள் தினர். 6.
மேரி ஜெனா (osb)

Page 26
ق%35 کہ..............................<نحققیجہ= gujj
சிலர் இதனை விரும்பாது திரும்பிச் சென்றனர், ஆனால் சிலர் இவ்வாலோசனையை முழுமனதுடன் ஏற்று குழுவாக வாழ ஆரம்பித்தனர். துறவிகளின் எண்ணிக்கை பன்னிரண்டாக அதிகரித் g5gol.
“எந்தவொரு புனிதராயினும் தமது தூய வாழ்க்கையை நடத்துவதற்கு உணவு தேவை. சாதாரண துறவிகளாகிய நாம் மாத்திரம் அதற்கு விதிவிலக்காகிவிட முடியாது, ஆகவே எமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய நாமே உழைக்க வேண்டும். புனித பவுல் கூறியுள்ள தைப்போல நாமனைவரும் இணைந்து இப் பகுதிகளைச் சுத்தம் செய்து பயிர் செய்வோம்” என்றார் பெனடிக்ட்.
"இருப்பினும் சகோதரர்களே, சாத்தான் எம்முடைய இத்திட்டத்தை தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள முடி ) யும். அவன் எமது வேலை நேரத்தை அதிகரித்து எம்மை செபிக்க விடாமல் இருக்க முயற்சி செய்வான், நாம் அதற்கு இடம் கொடுக்கலாகாது செபமும், வேலையும் சமனாகச் செல்ல வேண்டும்’ என்றார். மேலும் இதனையே இலத்தீனில் "ஒரா எட் 6 லபேரா (Ora et labora) என அழைத் செபிப்பதற்கும். தி தார் பெனடிக்ட். வாசிப்பதற்கும் கர் துறவிகளுடைய எண்ணிக்கை சகிதங்கள் மூல நாளுக்கு நாள் அதிகரித்தது. அவர் துதிக்கவும், ஒறுத்த கள் பெனடிக்ட்டை தந்தை எனவும் ஈடுபடுவதற்கும் ஒருவரையொருவர் சகோதரர் எனவும் இயேசுவுக்க அழைத்துக் கொண்டனர். துறவிக 99ால்க"
e பற்றிக் கூறினார். ளுக்கு வசிப்பதற்கான இடவசதி ඛjrīśෂීෆාඝ { போதவில்லை. எனவே அவர்கள் மரப் ☎ါe\rီ&န္တီ பலகையிலான சிறிய கூடாரங்களை அமைத்தனர். பன்னிரண்டு பேரடங்கிய சிறிய சிறிய குழுக்களாகப் பிரிந்து ஒரு தலைவரின் உதவியுடன் தம் துறவற வாழ்க் கையைத் தொடர்ந்தனர். சுபியாக்கோவின் பெரும்பாலான காட்டுப்பகுதி வெகு விரைவில் பயிர் நிலமாக மாற்றமடைந்தது. துறவிகளுடைய உணவுத் தேவை மட்டுமின்றி பல ஏழைகளினுடைய உணவுத் தேவையையும் இலவசமாகப் பூர்த்தி செய்தனர். தந்தை பெனடிக்டைப் பற்றியும் அவருடைய துறவிகள் பற்றியும் செய்திகள் வெகுவிரைவில் உரோமைய நகர் முழுவதும் பரவியது.
இத்தாலிய நாடானது வறுமையில் வாடிய காலமது. அதன் அயல் நாடுகளின் பல படையெடுப் புகள் காரணமாக கடந்த பல வருடங்களாக மக்கள்
எந்தவிதத்திலும் தங்கள் அபிவிருத்தி வேலைகளில்
1 sܗ݈ܺܓܰ
 
 
 
 
 
 
 

2012,
ஈடுபடவில்லை. விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக்கப்பட்டதால் உணவுக்கான தட்டுப்பாடு மிக அதிகமாகக் காணப்பட்டது. பல சொத்துகள் சூறையாடப்பட்டன. மக்களுக்குக் கல்வி வசதிகள் தடுக்கப்பட்டு, படைவீரர் ஆவதற்கான பயிற்சி வழங் கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையில் எதுவித பிடிப்புமின்றி ஏனோதானோ என வாழ்ந்த னர். படையெடுப்புகள் போர்ச்சூழல்கள் முடிவுற்றுப் பல வருடங்களாகியும் மக்கள் அதே வாழ்க்கை யையே வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பெனடிக்டையும், அவரது துறவிக
ளையும் பற்றி கேள்வியுற்றவர்கள் அவர்கள் எவ்வாறு ஒரு காட்டுப்
பகுதியை விவசாய நிலமாக மாற்றின
முழுவதும் உணவுக்கான பற்றாக் குறை கணிசமான அளவு குறை வடைந்தது.
இதனைக் கேள்வியுற்ற பல செல் வந்தர்கள் பெனடிக்டின் ஆச்சிரமத் தைப் பார்வையிட வந்தனர். நூற்றுக் கணக்கான துறவிகள் ஒரே இடத்தில் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் : apalóಯ್ಕಿ ತ್ರಿಕೆಆಗ್ಗಿ!:೧ಹ9ಣೆ: 8 இறைவனைத் ாே, அததுடன அவாகள தங்கள இறுதி.3 அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி பழக்கினார். செய்து கொள்ளும் முறைகள், ஏழைக 5ாக மரித்த ளுக்கு உதவும் முறைகள் என்பன ள் விசுவாசிகள் அவர்களை வியப்பில் ஆழ்த்தின. வன பிதாக்களின் வருகை தந்த அனைவரும் புதிய ಇಂಗ್ಲೆರಾ மனமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். i.e. ஆனால் சிலரோ “ஏன் பெனடிக்ட் புதிய ஆச்சிரமத்தை அமைக்க வேண்டும், உரோமையில் பல ஆச்சிரமங்கள் காணப்படு கிறதே, அவற்றில் ஒன்றில் இப்பணியை மேற் கொண்டிருக்கலாமே என்றனர். ஆனால் வெகு விரை விலேயே பெனடிக்டின் ஆச்சிரமமானது ஏனைய ற்றைப் போல சாதாரணமானவையல்ல. எல்லா யிலும் தனித்துவமானதும், சிறந்ததுமாகும் அறிந்து கொண்டனர். தாழ்ச்சி, கீழ்ப்படிவு, ாதானம் என்பன அவர்களின்

Page 27
LDLjilja
2ணஇல் ன்ஸ்ரன்ரைன் ஜோசப் பெஸ்கி என்கின்ற (ါ{#5Tရွေးကြီးမျိုးရိုး நாட்டின் இயேசு சபைத் துறவி தமிழில் வீரமாமுனிவர் என்று மிகவும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றார். தென் இந்தியாவில் உள்ள மதுரை இயேசு சபை மிஷனில் இணைந்து பணியாற்றுவதற்காக 1710ம் ஆண்டு ஐப்பசி மாதம் இந்தியாவின் மேற்கே அமைந்துள்ள் கோவா பட்டணம் வந்தடைந்தார். அங்கிருந்து உடனடி யாகத் தென் இந்நியாவுக்குப் பயணமாகி 171ம் ஆண்டு வைகாசி மாதம் மதுரை வந்தடைந்தார். அவரது வருகைக்கு மிஷன் நோக்கம் சடுதியாக அமைந்திருந்ததாலும் தமிழ் நாட்டிற்கான அவரது வருகையுடன் தமிழ் மொழியின் மீது தீவிர பற்றும் கொண்டவரானார்.
அவர் முதல் ஆறு ஆண்டுகளில் திருச்சி பட்டனத்திற்கு அருகிலுள்ள ஏலாக்குறிச்சி என்னுமிடத் தில் மறை இ பணியாற்றி
6তা IT If .
தொடர்ந்து காமநாயக்கன்பட்டி என்னுமிடத்தில் பணியைத் தொடர்ந்தார். தமிழ் மொழியைக் கற்பதற்காக தமிழ் நாட்டிலுள்ள பிரதான நகர்களா கிய திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை போன்ற பட்டினங்களைத் தரிசித்தார். 171415 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட வேதபோதகப் பணியில் உள்ளுர் மன்னர்களால் அவருக்கு ஏற்பட்ட தடைகாரணமாக மறைந்து வாழவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. அச்சந்தர்ப்பத்தைத் தமிழ் மொழித் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெறும் காலமாக மாற்றிக்கொண்டார்.
தான் வாழ்ந்த தமிழ் நாட்டு (இந்து) பாரம் பரியத்திற்கு ஏற்ற வகையில் தன்னையும் மாற்றிக் கொண்டார். அவர் அமைத்த ஆலயங்களாகிய


Page 28
மார்ச் அணஇணஇ6
"தொன்னூல்’ எனும் இலக்கண நூல் படைத்தார், மறையாசியர்களுக்கான (வேதியர்) வழிகாட்டியாக “வேதியர் ஒழுக்கம்’ எனும் நூலையும், இலகு தமிழில் சமய நெறிகளைப் போதிக்க, பரமார்த்த குருவின் கதையினையும் எழுதினார். (இது ஒரு புத்தி குறைந்த சீடர்களும், குருவினது கதையுமாகும்.) உரைநடை இலக்கியத்தில் லூத்தரன் மிஷனரிமாரின் போதனைகளுக்கு எதிராக கத்தோலிக்க விசுவாச நெறியினை விளக்கி எழுதினார். அத்துடன் கத்தோலிக்கருக்கு விசுவாச அறிவினைப் போதிப்ப தற்கான சமய போதனை நூல்களையும் எழுதினார். புதிதாக வருகை தந்த மிஷனரிமார்களுக்கான வேத ஒழுக்கம் ஒன்றைத் தயாரித்தார்.
இந்து சமயத் துறவிகளுடன் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களிலும், வாதங்களிலும் ஈடுபட்டார். அவரது தேம்பாவனிக் காப்பிய இலக்கியத்தில் அவர் எடுத்தாள்கின்ற எண்ணங்கள், புராணங்கள், சொற்றொடர்கள் அவர் இந்து தர்மம் மட்டில் கொண் டிருந்த நேர்மறைப் பண்பினை எண்பிக்கின்றது. அவ்வாறே 1730ம் ஆண்டில் உலகப் பொதுமறை யெனப் போற்றப்படும் தமிழின் சிறப்பு நூலாகிய திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். இது அவர் தமிழ்ப் பண்பாட்டின் மீது கொண்டிருந்த மதிப்பினைச் சுட்டுகின்றது. இவரது இப்பணியானது ஐரோப்பிய பேரறிவாளர்கள் தமிழ் இலக்கியத்தின் அழகினையும் சிறப்பினையும் உணர்ந்து கொள்ள வரப்பிரசாதமாகியது. அத்தோடு இந்நூல் கிறிஸ்தவத்திற்கு அடியொத்த கருத்துக ளைக் கொண்டுள்ளது என்று கண்டுகொள்ள முடிகிறது.
பெஸ்கி 18ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த துறவிகளுள் ஒருவர் என்றால் மிகையாகாது. அவர் தமிழ் மொழிக்கும், இலக்கி யத்திற்கும் ஆற்றிய பாரிய பங்களிப்பினைக் கெளர வித்து 1968ல் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், தமிழ் நாட்டு அரசினால் மெரினா கடற்கரையில் நிறுவப்பட்ட தமிழ் அறிஞர் களின் சிலைகளுள் ஒன்றாக அடிகளாரும் வைக்கப் பட்டார். இத்தகைய சிறப்புமிக்க ஐரோப்பிய கத்தோ லிக்க துறவியால் தமிழ்க் கிறிஸ்தவம் பெருமைய டைகிறது.
 
 

OO O 参 S) நம்பிக்கை ஆண்டைக் (్యసా கொண்டாடுவதற்கு உதவும் வத்திக்கானின் அருட்பணி சார்ந்த பரிந்துரைகள்
O O
●
இவ்வாண்டு தொடங்கும் நம்பிக்கை ஆண்டை உலகளாவியத் திருஅவையின் அனைத்து நிலை களிலும் கொண்டாடுவதற்கு உதவும் அருட்பணி சார்ந்த பரிந்துரைகளை வெளியிட் டுள்ளது வத்திக்கான் கத்தோலிக்கர் தங்களது நம்பிக் கையை நன்றாகவும் சரியாகவும் புரிந்து கொண்டு கிறிஸ்துவுக்கு உண்மையான சாட்சிகளாக மாறுவதற்கு உதவும் நோக்கத்தில் வத்திக்கான் நம்பிக்கைக் கோட்பாடுப் பேராயம் இப் பரிந்துரைகள் கொண்ட ஏட்டை வெளியிட்டுள்ளது. உலகளாவிய திருஅவை, ஆயர் பேரவைகள், மறைமாவட்டங்கள், பங்குகள், இயக்கங்கள், பக்திச் சபைகள் என எல்லா நிலைகளிலும் இந்நம்பிக்கை ஆண்டைக் கொண்டாடுவதற்கென ஒவ்வொரு நிலைக்கும் பத்துப் பரிந்துரைகளை இவ்வேடு வழங்குகிறது.
"கிறிஸ்தவ நம்பிக்கையைப் பரப்புவதற் குப் புதிய நற்செய்திப் பணி” என்ற தலைப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 13 வது அனைத்துலக ஆயர் மாமன்றத்தைக் கூட்டுவது, இந்நம்பிக்கை ஆண்டின் தொடக்கமாக உலகளாவியத் திரு அவையின் முக்கிய நிகழ்வாக இடம்பெறும் எனவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பமானதன் ஐம்பதாம் ஆண்டை நினைவு கூரும் விதமாக, வருகிற அக்டோபர் 11 அன்று ஆடம்பரத் திருவழிபாட்டுக் கொண்டாட்டம் இடம் பெறும் எனவும் இவ்வேடு கூறுகின்றது.
மேலும் இந்த நம்பிக்கை ஆண்டில் வத்திக்கானுக்கும் புனித பூமிக்கும் திருப்பயணங் கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும், 2013ம் ஆண்டு ஜூலையில் ரியோ டி ஜெரிரோவில் இடம் பெறும் அனைத்துலக இளையோர் தினம், இளையோர் இயேசுவில் நம்பிக்கை கொள்வதால் பெறும் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், திருத்தந்தை மற்றும் திருஅவை என்ற பெரிய குடும்பத்தோடு ஒன்றிப்பு உணர்வு கொள்ளவும் அவர்களுக்கு வாய்ப்பை வழங்கும் எனவும் இவ்வேடு தெரிவிக் கிறது.
திருஅவைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அன்னை மரியா மீது ஆழ்ந்த பக்தி கொள்ளவும், புகழ்பெற்ற மரியன்னையின் திருத்தலங்களுக்குத் திருப்பயணங்கள் மேற்கொள்ளவும் இவ்வேடு பரிந்துரைக்கிறது. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் ஆரம்பமானதன் ஐம்பதாம் ஆண்டை யொட்டி இந்நம்பிக்கை ஆண்டு அறிவிக்கப்பட் டுள்ளது. 2012ம் ஆண்டு அக்டோபர் 11அன்று ஆரம்பமாகும் இந்நம்பிக்கை ஆண்டு 2013ம் ஆண்டு நவம்பர் 24 அன்று நிறைவடையும் 3 O O. O. - O
263

Page 29
LDIIjğ 三倭羧 AMMSAiSeA eeSAhMS
இ
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்திகதி 30- 03 - 2012
ofola II, a
இணைச்ச
(பொருத்தமான சொற்களைத் த்ெ
மோசே இஸ்ரயேலரிடம் “இஸ்ரயேலரே! கேளுங்கள்;
கொடுக்கும் நாடு சென்று, அதை உரிமையாக்குவீர்கள் நீக்கவும் வேண்டாம். அவற்றை . ஞானமும், அறிவாற்றலுமாகும். கவனமாயிருங்கள். உ உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் நீங்கள் நின்றபோது, மலையினின்று நெருப்பு எழும்பி மேகமும் சூழ்ந்தன. நெருப்பிலிருந்து ஆண்டவர் ே ஆணையிட்டார். அதை .
உருவத்தையும் காணவில்லை. எனவே, நீங்கள் அபூ இரும்புச் சூளையான எகிப்திலிருந்து உங்களைக் உங்கள் செயல்களுக்காக அவர் சினங் கொண்டு என Gee see . கவனமாய் இருங்கள். ஏெ நெருப்புப் போன்றவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் உங்களுக்கு எதிரான . ஏ போவீர்கள். மாறாக அங்கு இருக்கையில் ஆண்டவன கண்டடைவீர்கள். உங்கள் கடவுள் இரக்கம் மிகுந்த செய்த . o e a e se a e o e o se se e o o ou o மறக்கவும் மாட்ட யாவும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு 6 நிறைவேற்றப்பட்டன. எனவே, கட்டளைகளையும், நி வாழ்வீர்கள்’ என்றார் மோசே, பின் யோர்தானுக்கு தவறுதலாகத் தன் ...................... அ
S LS LS LS 0S LS SSLL LS S 0S LLS LS 0 LS0 LL LLSS SS LS S 0S SS 0S S 0S0 LSL SS L S S S S LS S 0 LLL LS 0S SS S எல்லையில் பாலை நிலச் ச கிலயாதின் இராமோத்து, மனாசே எல்லையில் உ நகர்களே அவை.
afkoLæí: உடன்பழக்கை, நெடுநாள்,தோ 草。 ●ーリ
g5шаofluш
 
 
 
 
 
 
 
 

● േ 2012. ستينية كسرتقيقة
" Lib 4:1-49
நரிந்து இடைவெளிகளை நிரப்புக)
நான் தரும் முறைகளின் படி வாழுங்கள். ஆண்டவர் நான் கட்டளையிடுபவையோடு எதையும் சேர்க்கவும், O DO SO OOOOOOOOO அதுவே மக்களினங்கள் முன் உங்கள் உங்கள் கண்களால் கண்ட அனைத்தையும் மறவாது கூறுங்கள். மலையடிவாரத்தில் வானம் மட்டும் எட்ட, மலை முகட்டைக் காரிருளும் பசினார். பத்துக் கட்டளைகளைத் தந்து பின்பற்ற கற்பலகைகளில் எழுதினார். இங்கு நீங்கள் எந்த மிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள். கூட்டிக்கொண்டு வந்தவர் ஆண்டவரே. ஆனால் க்குத் தண்டனை கொடுத்தார். நான் இப்பகுதியிலேயே னனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் சகிக்காதவர். இன்றே விண்ணையும், மண்ணையும் ற்படுத்துவேன். நீங்கள் செல்லும் நாட்டில் அழிந்து ர உங்கள் முழு உள்ளத்தோடும் தேடினால் அவரைக் வர், உங்களைக் கைவிடமாட்டார். மூதாதையரோடு ர். இவ்வளவு நாட்களும் உங்களுக்கு நடந்தவை வரும் இலர் என நீங்கள் அறியும் படி உங்கள் முன் பமங்களையும் பின்பற்றினால் . கிழக்கே மூன்று நகர்களையும், முன் பகையின்றி 1டைக்கலம் பெற்று உயிர் தப்புமாறு குறித்தார்.
மவெளியிலுள்ள பெட்சேர், காத்தியர் எல்லையிலுள்ள
ள்ள பாசானின் . . ஆகிய
அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டது
*

Page 30
fiôIjğ (32) asa
-<@@డాஇ89
HSiiiSiiS S SiiiiiSL S LS SiSS SiSSiS S SiiiiiS SiiS SiiiiiS S SqS பரிசுப் போட்டி しつイエイ2イ2イZイエイ2イ"
7
அறிவை வளர்ப்போம்-1
(பொருத்தமான சொற்களின் கீழ் அ
1. உலக அளவில் அதிகம் பார்த்து இரசி
(கால் பந்து, கிரிக்கட், டென்னிஸ்)
2. உலகில் மிகப்பெரிய மலைக்காடு
(இமயமலைக்காடு, அமேசான் காடு,
3. பழங்கால இலக்கியங்களில் முக்கியம
(சாகுந்தலம், இலியட், விவிலியம்
4. பூமிக்குச் சந்திரனைப்போல் வியாழனு (பதினாறு, ஐந்து, இருபது)
5. அறக்கப் பறக்க உழைச்சாலும்
(தின்னச் சோத்துக்கு வழியில்லை, ஆசைக்கு மட்டும் அளவில்லை)
6. இச் சொல்லின் பின் வல்லெழுத்து மி
(முன்னர், இவ்வகை, எத்தனை)
விவிலிய
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
S S S S S S S S S S S S L S L S L S L C S S S S S S C S C C C C C 0 S
 

91,669 2ܒܒܼܹܝyܔ
gé=SE 2012.
ஆல்ப்ஸ் மலைக்காடு)
ானதாகக் கருதப்படுவது (பழைய ஏற்பாடு)
க்கு இருக்கும் சந்திரன்களின் எண்ணிக்கை
படுக்கப் பாய்க்கு வழியில்லை,
காது
S S S S S S S S S S S S S S S L S S S S S S S S LSL S SL S S S S S L SS SS SS SS SS SL SL SL SL S SL S S S S S S S S SSL S S
S S S S S S S S S S S S S S S S LSL SL S S S S S S LSL LSL LSL L SL S S S S S S S LSL L S L S S SL S LS SL S S SL L SL S S SL S S S S S SL S LS SL S S S
SL S LS S S S S S S S S S S S S S S S S S S S S S LSL L LSL S S LSL S SL SL LSL LS S LSL S LSL S LSL LSL SLL LSL SL SL SL S SL S LS LS LS LS LSLL L LLLLL LSL LSL LS
அனுப்பவேண்டிய முகவரி: ம் கற்போம் / அறிவை வளர்ப்போம்-107
தொண்டன் அ. பெ. எண் - 44 மட்டக்களப்பு.
28 උණු)

Page 31
( ܝܓ
போடி
விவிலியம் கற்போம்
ஏசாவின், ஓரடி நிலம், அரபா, ஆர், அ அரோயேரும், ஆன
அறிவை வளர்ப்போ
1. பம்பரகந்ந 2. மதுரை 4. சாமிநாதையர் 5. 72
பரிசுகள் - அனுசரணை அருள்
இரு பிரிவுகளுக்கும் சரியான விை
> செல்வி.அ.Sரோமி
‘இனிக்கோ’ புதுமுகத்துவாரம், கல்லடி- மட்டக்களப்பு.
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
> செல்வன். சு.விக்டர்
117, பாலையூற்று, திருகோணமலை.
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= ) இரண்டாம்ப
வி.ஹரிகரன் கி.ஷெரின்
இல:194, 3 ஒழுங்கை, 9 ஒழுங்கை ஆனந்தபுரி, 93/2, நீதிமன் திருகோணமலை, திருகோணம6
கி. பிரசாந்தி T.V.S.Sab of
 
 

鲇
>Fà Հ53
r |yစဲန္ဓါး၊
D - 105 விடைகள்
(o
ー
طصح
}
ம்மோனின், கெதமோத்து, யாகசுவில், ன்டவர், யாபோக்கு
ம் - 105 விடைகள்
8, 80,00 000 ടി. 6. வியங்கோள் வினைமுற்று
葯
தந்தை. அன்ரனி குரூஸ் CRS
வட எழுதி 300/= பரிசு பெறுபவர்;
> லிவின்ஸ்டன் சுசந்திகா
s
1207, பாலையூற்று, வி திருகோணமலை. శ్లే
களை எழுதி 200/= பரிசு பெறுவோர்
> நே.லிக்சன்
101/10, 4ம் குறுக்கு, மாமாங்க வீதி, புன்னைச் சோலை, மட்டக்களப்பு.
ம் திட்டும் போட்டி 57 முடிவுகள்
ரிசு - 300/= > மூன்றாம் பரிசு -200/=
அஸ்லினா எல்டன்
12. முதல் தெரு, பாரதிபுரம் ற வீதி, திருகோணமலை
ᏈᎠᎧᏕᎩ.
தினி
தி,

Page 32