கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2008.11-12

Page 1


Page 2

ஜீவநதி
பிரதம ஆசிரியர்கள்
சிeர்னராஜா விமலனி கலாமணி பரணிதரனி f556hrs earfur
துரைராஜா இராஜவேலி ஆலோசகர் குழு:
திரு.தெலரியான் திரு. தப்பிளான் ஐ.சண்முகலிங்கமீ திரு.கி.நடராஜா தொடர்புகளுக்கு :
ඝගඛ ඌlélé சாமனந்தறைஆலgப்பிள்ளையார்வீதி
நதி 02 கிளை - 03
Gagranocuosafa 077599 1949 077699 () 5
பதிப்புரிமை கலை அகம் வெளியீடு
E.mail: jeevanathy (abyahoo.com
Fax ,0212263206
வாங்கித் வதாடர்புகள்
K.Bharaneetharan & S. Vimalan
HNB- Nelliady Branch A/CNo. 18-00-02-09457() - 1
குககுமாரி விஜயரகுநாதன் 51
பா.இரகுவரன் 49
\_ථිGඩීකIffü. أص r AA N
நதியினுள்ளே.
ரிம்ஸா முஹம்மத் 06 8FLurr. 6higgurugorra Frr 03 Dsfus 14 சரவணபவாயி 07 ச.முருகானந்தன் 20 பா.தனபாலன் 12 ப.உதயசாந்தினி 23 தனலஷ்மி நகுலேசப்பிள்ளை 18 ச.கயுகரன் 24 சி.விமலன் 21 த.ஜெயசீலன் 3. விசாகரூபன் 25 ச. சிவக்குமார் 28 க. திலகநாதன் 29 எச்.எப். ரிஸ்னா 35 க.பரணிதரன் 36 கி.பி.றைநிலா 39 செ.பிரதிபன் 40 வெ. துஷ்யந்தன் 44 செ.கிருஷ்ணராஜா 45 எம்.கே. கானங்கன் 47 சிறுகதைகன (tpԱ5 நீதி வே. கமலநாதன் 09 ஏ.இக்பால் 18 LD. LuT. LD35IT65ñıa6éf@)Idib 9 考 بر கானப்பிரியன் 32
வேல்.நந்தகுமார் 53
கலை இலக்கிய நிகழ்வுகள் 55
அட்டைப்படம் - ரட்ணேஸ்

Page 3
சீவாததி (கலை இலக்கிய இருதிங்கள் ஏடு)
அறிஞர் தம் இதய ஒடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
-பாரதிதாசன்
இலக்கியமும் எதிர்காலவியலும் தமிழ் இயலின் எதிர்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கில் இலக்கியத்தில் எதிர்காலவியல் பற்றிய சிந்தனை இன்று வளர்ச்சியுற்று வருகிறது. மனிதன் சென்ற காலத்தில் திரட்டிய செய்திகளை நிகழ்காலத்தில் நடைமுறைப்படுத்தி எதிர் காலத்தை நோக்கிச் சிந்தித்துத் திட்டமிடுவது எதிர்காலவியல் என்பர். மனித சமுதாய முன்னேற்றமே எதிர்காலவியலின் அடிப்படை இலக்கு. தமிழ் இயலின் எதிர்காலம் செழிப்பாக அமையவேண்டுமெனில் இலக்கியங்களின் தாக்கம் இந்நோக்கில் பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல் இலக்கியம் இரு படிநிலைகளில் அமைவதைக் காண்கின்றோம்: 1) இன்றைய அறிவியல் வளர்ச்சியின் விரைவை மனங்கொண்டு அதன் தாக்கத்தால் நாளையசமுதாயத்தினரின் வாழ்வியல் நெறிமுறைகள் எவ்வாறு அமையும் என இலக்கியத்தினூடு உணர்த்துதல் 2) நாளைய சமூகம் எவ்வாறு இருக்கவேண்டும் என படைப்பாளி தான் காணவிரும்பும்
எதிர்காலத்தை இலக்கியமாகப் படைத்தல்.
இவ்விரு வகையினுள்ளும் அமைந்த இலக்கியங்களைப் படைத்தோரைப் பட்டியலிடும் போது சுஜாதா, கஸ்தூரிரங்கன், ஆர்னிகா நாசர் ஆகியோர் முதலாவது வகையிலும் பாரதி, சுத்தானந்தபாரதி.மு.வரதராசன் ஆகியோர் இரண்டாவதுவகையிலும் தடம்பதித்தோராக எமக்கு முதலிற் தெரிகின்றனர். ஆனால் எடுத்துக்கொண்ட பொருளை விளக்கத் துணைசெய்யும் வகையில் எதிர்காலவியல் கூறுகளை இலக்கியத்துள் கையாளுதல், தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது.
இன்று புதுமை இலக்கியம் படைப்போரும் புதிய இலக்கியப் பரிசீலனை முயற்சிகளில் ஈடுபடுவோரும் "மனிதசமுதாய முன்னேற்றமே இலக்கியங்களின் பொது நோக்காக இருக்கவேண்டும் என்ற எதிர்காலவியல் நோக்கை மறந்துவிடலாகாது. சமூக அக்கறையுள்ள, சமூக மேம்பாட்டுக்கு முயலும் படைப்பாளியின் பிரதான இலக்கியப்படைப்பு நோக்கம் இதுவே. இந்நோக்கில் அக்கறைகொள்ளாது எதிரிடையான கருத்துகளை விதைக்க விழையும் நச்சிலக்கியங்கள் காலஓட்டத்தில் நின்றுநிலைக்கா.
- ஆசிரியர்கள் இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு. - AMMurasci.
 
 

ஜீவநதி 3
ஆடலில் இசை : கலைத்திரனாய்வின்
வழியான ஒரு கண்ணோட்டம்
புறத்தெழும் இசை மற்றும் அகத்தே உள்ளிருந்து உறவாடிக் கொண்டிருக்கும் இசை என்ற இருநிலை வகைப்பாடுகள் உண்டு. அவை முறையே "புறநிலை இசை, "அகநிலை இசை (INWARD MUSIC) என்று குறிப்பிடப்படும். புறநிலை இசை பாடுவோராலும் பிறராலும் அனுபவிக்கத்தக்கது. அகநிலை இசை பாடுவோரால் மட்டும் அனுபவிக்கத்தக்கது. மேற் கூறிய இரு நிலை இசைகளும் ஆடலிலே நேரடியான பங்களிப்புச் செய்கின்றன. தொன்மையான குலக்குழு வாழ்க்கையில் அகம், புறம் என்ற உருவாக்கம் தேவையற்றதாக அமைந்தது. குழு உணர்வும் தனிநபர் உணர்வும் வேறுபடாதிருந்த நிலையில் அவ்வகைப்பாடு வேண்டத்தகாததாக அமைந்தது. ஆடல், கூட்டுணர்வின் வெளிப்பாடாகவே கூட்டுவாழ்க்கையில் அமைந்தது.
உணர்வுகளை அனுபவித்தலோடும் வெளிப்படுத்த லோடும் ஆடல் தொடர்புடையது. இசையும் அவ்வகை இயல்பைக் கொண்டதால் இலகுவாக அவை இணைந்து கொள்கின்றன. புவியீர்ப்பும் அதற்கியைந்தவாறு உடலைச் சமநிலைப்படுத்தலும் ஆடல் அசைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன.
ஆடலில் அசைவுகள் அழகுபடுத்தப்படுகின்றன வரன்முறையாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. இசையிலும் இதே செயற்பாடு இடம்பெறுகின்றது. ஒலிப்பு ஒழுங்குபடுத்தப் படுகின்றது, கட்டுப்படுத்தப்படுகின்றது. பொருத்தமான அசைவு ஒலிப்புக்களால் வளமூட்டப்படுகின்றது.
ஆடல் என்ற கலையாக்கம் செய்யும் நடவடிக்கை "ஆடலியல்" (choreography) எனப்படும். அனைத்து அசைவுகளும் ஆடல் அன்று. அழகியல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அசைவுகளே ஆடலாகின்றது. சில சமயங்களில் குறிப்பிட்ட உடலசைவு நிலையில் அசையாது உறைந்து நிற்றலும் அழகைத் தூண்டும் ஆடலாகிவிடுகின்றது. ஆடலியலாளர் போல் ரெயிலர் இந்தப் பரிசோதனையைத் திறம்படச் செய்து காட்டினார்.
தீவிரமான பரிசோதனைகளும் புத்தாக்கங்களும் மேலைப்புல ஆடற்கலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான பரிசோதனைகளுக்கு இசையும் ஒன்றிணைந்து ஈடுகொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆடல் என்பது இசை, கதை

Page 4
ஜீவநதி 4 எடுத்துரைத்தல், பாத்திரவளர்ச்சி என்ற நாடகப் பாங்கானதாக மாறும் பொழுதுதான் அழகும் அர்த்தமும் பெறுமென ஆடலியலாளர் ஜூன் ஜோர்யெஸ் நொவிரே மற்றும் மைகல் பொகினி ஆகியோர் வலியுறுத்தலாயினர்.
ஆடற் பரிசோதனைகளில் மேலும் ஒரு படி முன்னேறிச்சென்ற மர்தாகிரெகாம் சமகாலத்தைய நெருக்குவாரம் மிக்க உலகின் இயல்புகளைக் காட்டுவதற்கு மரபுவழி ஆடல்கள் இயலாமை நிலையில் உள்ளதாகச் சுட்டிக் காட்டினார். அதற்கு மறுப்பான கருத்துக்களும் ஆடலியலாளரிடத்து இடம் பெற்றிருந்தன.
உடலை கருவியாக்கி கலையாக்கம் செய்தல் ஆடலாகின்றது. உடலியக்க பாரத்தைக் கட்டுப்படுத்தலும் முக்கியத்துவம் பெறுகின்றன. வெளிபற்றிய பிரக்ஞை முக்கியத்துவம் பெறுகின்றது. இவை அனைத்தையும் ஒன்றிணைப்பதற்கும் மீளவலியுறுத்தும் விளைவைக் (RENPORCIEFFECT) கொடுப்பதற்கும் இசையானது விசையூட்டியாக விளங்குகின்றது. ஆடலும் இசையும் அரங்கும் ஒன்றையொன்று தழுவியே வளர்ந்து வந்துள்ளன. தொன்மையான கிரேக்கத் திறனாய்வு மரபிலே பயன்படுத்தப்பட்ட"மெளசிகே (Mousike) என்ற எண்ணக்கரு இசை, கவிதை, ஆடல் ஆகியவற்றின் ஒன்றிண்ைப்பின் வடிவத்தையே குறிப்பிட்டது. தொன்மையான ஐரோப்பிய "பலே ஆற்றுகையில் ஆடல், இசை, நாடகம் என்பவற்றுடன் பார்வையாளரும் பிரிக்கபடாதிருக்கும் இணைப்புத் தொகுதி காணப்பட்டது. தமிழ் மரபில் ஆடல் என்பது இசையுடன் கூடிய ஒன்றிணைப்பை புலப்படுத்தியது. ஆடலின் சிறப்பார்ந்த கூறாக இசை அமைகின்றது. ஆடல் உடலின் ஒத்திசைவையும் இசை ஒலியின் ஒத் திசைவையும் தாங்கிநிற்றலால் உராய்வற்ற இணக்கப்பாடு இரண்டினுக்குமிடையே காணப்படுகின்றது. இசையின் சீர்த்தொடர்ச்சியைப் பின்பற்றி ஆடலும், ஆடலின் சீர்த்தொடர்ச்சியைப் பின்பற்றி இசையும் இணக்கப்பாடுகொள்ளல் உண்டு. பரதநாட்டியத்தில் இந்தத் தொடர்புகள் தாளத்தினால் இறுக்கமாக்கப் பட்டுள்ளன.
ஆடல் வளர்ச்சியை உன்னதங்களை நோக்கிமுன்னெடுத்துச் செல்வதற்கு இசை தவிர்க்க முடியாது வேண்டப்படுகின்றது. ஒழுங்கமைந்த நேரக் கோலமும் ஆடற்கோலமும் நெறிப்பாடு கொண்ட இசையுடன் இணைந்தவை. இசையின் கால அளவும் ஆடலின் கால அளவும் ஒன்றிணையும்போது சுவைமேம்பாடு அல்லது அழகியல் மேம்பாடு அதிகரிக்கின்றது. அதேவேளை ஆடுபவரின் மனக்கோலங்களை வளர்ப்பதற்கும் மீளவலியுறுத்துவதற்கும் இசை பெருமளவிலே துணைசெய்த வண்ணமுள்ளது. பரத நாட்டியத்தில் நிருத்தியத்தின் அதாவது மனவெழுச்சி வெளிப்பாட்டு ஆடல்களில் இசையின் பங்களிப்பு சிறப்புமிக்க பரிமாணமாக அமைகின்றது.
மேலைப் புலத்துப் பலே நடனங்களில் கள நிலவரத்தை வலுவூட்டுவதற்கும் பாத்திரப் படைப்பை வளமாக்கி மெருகூட்டுவதற்கும் இசையின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகின்றது. ஆனால் இசை வேறு ஆடல் வேறு என்ற விவாதங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இசையை முற்றாகப் புறக்கணித்துவிட்டு ஆடலாக்கம் செய்யும் ஆடலியலாளரும் மேலை நாடுகளிலே காணப்படுகின்றனர். எடுத்துக் காட்டாக, மேர்சிகனிங்காம் என்பார் இசை அற்ற முற்றிலும் மெளனமான சூழலில் சிறப்புமிக்க ஆடல் ஆக்கங்களை உருவாக்கிக் காட்டினார்.

ஜீவநதி 5
இசையையும் ஆடலையும் இணைத்து ஆடலாக்கம் செய்யும் பொழுது யாதாயினும் ஒன்று சுவைப்போரால் தவறவிட்டுவிடப்படுகின்றது என்று கனிங்காம் கருதினார். அதாவது இசையிற் கவனக்குவிப்பை ஏற்படுத்தும் பொழுது ஆடல் தவற விடப்படுகின்றது.
ஆடலிலே கவனக்குவிப்பை ஏற்படுத்தும் பொழுது இசை தவறவிடப் படுகின்றது என்று அவர் விதந்துரைத்தார். ஜெரோம் றொபின்ஸ் என்பார் 1959ஆம் ஆண்டிலே தாம் உருவாக்கிய "அசைவுகள் (Moves) என்ற ஆற்றுகையில் எதுவித இசையையும் இணைக்காது வெற்றிகரமான ஆடலை உருவாக்கினார். எதுவித ஒசையுமற்ற நிசப்த நிலையில் அந்த ஆற்றுகை இடம்பெற்றது.
தெய்வீக நடனங்களில் மனோவசியக் கருத்தேற்றங்களை உருவாக்குவதற்கு கைதட்டல் உள்ளிட்ட இயற்கை ஒலிகளும் செயற்கை ஒலிகளும் பயன்படுத்தப்படுதல் உண்டு, உளநிலைக்கும், உடல்நிலை எழுச்சியூட்டலுக்கும் தெய்வீக நடனங்கள் ஆடலுடன் இசையின் சேர்வையையும் நாடி நின்றன.
தமிழர் ஆடல்களிலும் இந்திய ஆடல்களிலும் காற்சதங்கை அசைவோடு இணைந்த இசை ஒலி எழுப்பலை அடிப்படையாகக் கொண்டு ஆடல் நயம் மேலெழுந்தது. வேட்டையாடல் வாழ்வில் காய்ந்து உலர்ந்த வெண்டயம் எனப்படும் முற்றலைக் கால்களில் அணிந்து ஆடினர் என்றும் அதன் தொடர்ச்சியாகவே காற்சதங்கை படிமலர்ச்சிகொண்டது என்ற கருத்தும் உண்டு. அசைவுகள் பற்றி உணர்வை வளப்படுத்துவதற்கு அவை இயற்கை நிலையிற் பயன்பட்டன.
நவீன உலக ஆடல் வளர்ச்சியிலே பெரும் பங்களிப்பைச் செய்த வல்லுநராக OTTTLSLLLLLLTtCMuTTTTTS TTT TTLTTSTTTTTT SLLLLLLLL LLLLLL Bird) என்ற ஆடல் ஆக்கம் பல்வேறு பரிசோதனைகளை உள்ளடக்கிய கலைவிசையாக அமைந்தது. "அக்கினிப் பறவை ஆற்றுகையில் பொருத்தமான இசைத் துண்டங்களையும் ஒன்றிணைத்தார். அவரது புத் தாக்கங்களில் அலங்காரமற்ற அசைவுகளும் ஒன்றிணைக்கப்பட்டன. ரூசிய கிராமிய நடனங்களிலே காணப்பட்ட மெய்வல்லுனர் அசைவுகளையும் அவர் ஆடல் வீச்சுக்குள் கொண்டு வந்தார்.
நவீன உலக ஆடற்கலையில் உளவெளிப்பாட்டியலுக்கு முக்கியத்துவம் தந்தவர்களுள் இசதோராடங்கனி அவர்கள் சிறப்புப் பெறுகின்றார். உடலின் இயற்கையான அசைவுகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமேயன்றி இசை முக்கியமானதன்று என்பது அவரின் கருத்தாக அமைந்தது. அதேவேளை ஆடலின் தெய்வீக வெளிப்பாட்டுக்கும் அவர் முக்கியத்துவம் வழங்கினார். சிற்பங்களிலே காணப்படும் ஆடல் அசைவுகளைத் தமது ஆற்றுகைகளிலும் பயன்படுத்தலானார்.
1960 ஆம் 1970ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் உலக ஆடல் அரங்கில் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கு பரவலாக இடம் பெறலாயிற்று. சாதாரண அசைவுகளையும் ஆடலாக்குதல் பின்நவீனத்துவ ஆடலின் வலியுறுத்தலாக அமைந்தது. சிக்கலான மற்றும் அலங்காரமான அசைவுகள் நடப்பியலை திரிவுபடுத்தி விடுமென அவர்கள் கருதினர். மரபுவழியாக பின்பற்றப்பட்டு வந்த ஆடை அடைவுகளினை அவர்கள் நிராகரித்து எளிமையான அசைவுகளை முன்னெடுத்தனர். சிக்கலான மேலாதிக்கம் கொண்ட இசையையும் நிராகரிப்புக்கு உள்ளாக்கினர். இடைவெளி, நேரம், ஆடுபவரது உடல்நிறை மற்றும் வலிமை என்பவற்றை ஆடலில்

Page 5
ஜீவநதி 6 முக்கியப்படுத்துதல் வேண்டுமேயன்றி பாரம்பரியங்களையும் மரபுகளையும் அல்ல என்பதைப் பின்நவீனத்துவ ஆடல் வல்லுனர்கள் தீவிரமாக வற்புறுத்தினர். சாதாரண உடையுடன் ஆடல் மேற்கொள்ளலும், மாமூலான அரங்குகள் இன்றி ஆடல் புரிதலும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டன. பெருங் கதையாடல்கள் அல்லது பெரும் உரையங்கள் ஆடலில் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டன.
நவீன உலகின் ஆடற் கோப்புக்கள் புதிய இசைவகைகளை உள்ளிர்க்கத் தொடங்கியுள்ளன. ஜாஸ் இசை, டிஸ்கோஇசை, முதலியவை இலாவகமாக ஆடலில் ஒன்றிணைக்கப்பட்டு வருகின்றன.
இசையைப் பொருட்படுத்தல், இசையைப் பொருட்படுத்தாது ஆடலைத் தனித்த தூயவடிவமாக முன்னெடுத்தல் என்ற இருவிதமான கண்ணோட்டங்கள் அல்லது முரண்பாடுகள் நடனவுலகிலே தொடர்ந்த வண்ணமுள்ளன. அவ்வாறே கதை தழுவிய ஆடல் கதை. தழுவாத ஆடல் அல்லது கதையைப் பொருட்படுத்தாத ஆடல் என்ற அணுகுமுறைகளும் தொடர்ந்த வண்ணமுள்ளன. மேலும் அலங்கார ஆடை அணிகளுடன் ஆடுதலும், எளிமையான ஆடைகளுடன் ஆடுதலும் என்ற இருமைப் பாங்குகளும் வளர்ந்த வண்ணம் உள்ளன. "கலைவடிவங்கள் ஒற்றைப் பரிமாணத்தில் அடங்குதலையும், அடங்காது நிற்றலையுமே இவை புலப்படுத்துகின்றன. இவை தனித்துக் கலைசார்ந்த தூய முரண்பாடுகள் அல்ல. சிக்கலான சமூகமுரண்பாட்டின் வழியான ஒரு வழிநோக்கையும் பலவழி ஒன்றிணைப்புக்களையுமே புலப்படுத்துகின்றன.
சமூகத்தோற்றம் பெற்ற தனிச் சொத்துரிமையும் தனியுரிமைச் சிந்தனை களும் கலை பற்றிய நோக்கிலும் செல்வாக்கை ஏற்படுத்தலாயின. அதனடிப்படையிற் கூட்டு வடிவங்களைத் தனிமைப்படுத்தல் மேலெழலாயிற்றுD00
எனக்குள் உறங்கும் நான் !
கற்பனையை வளர்த்தேன் சாணேற,
கனவுலகில் மிதந்தேன் முழஞ் சறுக்கும்
காரியம் கை கூடக் சறுக்கு மர ஏற்றமாக
கடும் பிரயத்தனம் எடுத்தேன்! என் வாழ்க்கை அமைந்து
விட்டது
ஆனால் ஓயாத போராட்டத்தின்
நான் அடியெடுத்து வைக்கும் மத்தியில்
பாதையெல்லாம் உள்ளம் சோர்ந்து
துன்பமும் துயரமும் உருக்குலைகின்றேன் நான்!
என்னைத் எனக்குள் உறங்கும் நான்!
துரத்திக் கொண்டே வந்தன!
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

ஜீவநதி 7
சுந்தர ராமசாமியின் கதை உலகம்
இன்றைய நவீன தமிழ் கதை இலக்கியத்தில் முக்கியமானவராக - ஏன் முதன்மையாளராய் திகழ்பவர் சுந்தரராமசாமி. கடந்த சில தசாப்த கால தமிழ் இலக்கியப் பரப்பை தன்னகத்தே வைத்திருந்த ஆளுமை.
அவரின் பிற்காலக் கதைகள் நவீனத்தின் உருவகங்களாக மாறிய பொழுது அதற்கேற்ற படைப்பு மொழியும் அவருக்கு வசமாயிற்று. இறுக்கமும், கச்சிதமும் அதே நேரம் நிதானமுமாய் சகஜமாய் அந்தந்த இடங்களில் வந்து விழும் சொற்கள் வரிகள் அவருக்குச் சொந்தமானவை.
வரிகள் மூலமாகவும் பாத்திரங்கள் மூலமாகவும் கதை தோற்றம் பெறும் நேரத்தில் சட்டென்று அது வேறு ஒரு காட்சிக்கு வழி விடுவதை அவர் கதைகளில் பார்க்கலாம். அந்தக் காட்சி ஒரு தரிசனமாய் தன்னை இனம் காட்டி விட்டு மறையும். இதற்கு சுராவின் பள்ளம் என்ற சிறுகதையைப் பார்க்கலாம். 1முதலாளியின் மகன் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறான் வெளியேயுள்ள திரையரங்கில் திரைப்படம் பார்க்க குழுமும் சனகூட்டத்தைப் பார்க்க ஒரு விடுமுறை நாள் வீணாகிப் போகின்றதே என்ற கவலை அவனுக்கு உண்டாகிறது. அவனுக்கு உதவியாக மதுக்குஞ்சு நிற்கின்றான். அவனுக்கு கண் இல்லை அவன் தான் கண்ணிழந்த கதையைச் சொல்கின்றான அவன் 5 கைக் குழந்தையாக இருக்கும் பொழுது அவனை மடியில் வைத்துக் கொண்டு திரைப்படம் பார்த்த அவன் தாய் திரைப்படம் தந்த சுவாரஸ்யத்தில் குழந்தையின் வாயில் உள்ள கூழாங்கல்லை எடுப்பதாக எண்ணிக் கொண்டு அவனின் கண்ணை தோண்டி விட்டாளாம். இங்கே மதுக்குஞ்சின் சொற்கள் வழியாக கதை நகர்ந்து விரிகையில் சட்டென்று ஒன்று காட்சிக்கு புலப்படுகிறது. அது நம் தமிழ் சமூகம், திரைப்படம் சார்ந்த மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சி அந்த மயக்கமே பள்ளமாகிறது. அதில் மக்கள் வீழ்ந்திருக்கின்றனர்.
பல்லக்குத் தாக்கிகள் என்ற கதையில் யாரோ ஒரு முக்கியமானவர் வந்து ஏறுவதற்காயப் பல்லக்கு கொண்டு வரப்படுகிறது. திடுமென அவர் வரமாட்டார் என்ற செய்தி கிடைக்கிறது. ஆனாலும் பழக்கம் விட்டு போக கூடாததென்பது காரணமாக பல்லக்குத் தூக்கிகள் தொடர்ந்தும் பல்லக்கைத் தூக்கி திரிந்து பழகுகிறார்கள். வெற்றுப் பல்லக்கு இருக்க கூடாதென்பதற்காய் ஒரு ஆள் நிறை உள்ள கற்களை உள்ளே வைத்து சுமக்கின்றார்கள். ஏதோ ஒரு கொள்கையை, தத்துவத்தை அரசியலை பல்லக்காய் தம் தோளில் சுமந்து

Page 6
ஜீவநதி 8 திரியும் மனிதன் நமக்கு காட்சியளிக்கிறான்.நம்மனக் கண்ணில் பழக்கம் காரணமாய் மனிதர்கள் அரசியலையோ, மதத்தையோ இனத்தையோ திரைப்படத்தையோ பல்லக்குகளாக்கித் தூக்கி திரிகின்றனர்.
சுரா தமிழ் சமூகம் தொடர்பாய் கொண்டுள்ள விமர்சனம் எண்ணம் மேற்படி இரு கதைகள் வழியாக பிம்பம் பெறுகின்றன. கலை அமைதி குறையாமல் கொண்ட கச்சிதம் பிசகாமல் சு.ராவால் இந்தக்கதைகளினூடே தன் விமர்சனப்பாங்கை முன்வைக்க முடிகிறது.
காகங்கள் என்ற இவரது கதை "காகா” என இரைந்து கொண்டு தானியங்களைக் கொத்தித் தின்னும் காகங்களை படிமமாக நம் கண் முன்னே நிறுத்துகிறது. அதை நெருங்க நெருங்க அப்படிமம் வெவ்வேறு படிமங்களாய் மாறுதலடைகிறது. அப்பாவி ஏழைமக்களே காகங்களுக்கு பதிலாய் தெரிகின்றனர். பிறகு அவர்கள் பரிதாபத்திற்குரிய தலித்துகளாக மாறுகின்றதை அப்பாதையில் திரிந்தலைந்தாலும் சொந்தமாக உணவுக்கு வழி செய்யத் தெரியாத ஏழைத் தொழிலாளர்களாக மாறுகின்றனர். இவ்வாறு மளமள எனத் தெரியும் உருவங்கள் நம் நெஞ்சில் சோகத்தைத் தொற்ற வைக்கின்றன.
"மேல்பார்வை என்ற கதையில் பந்தாட்டம் நடக்கிறது நடுவராய் ஒரு பெண் இருக்கிறாள். பார்வையாளர்கள் ஆட்டக்காரர்களைப் பார்க்காமல் நடுவரையே பார்க்கக் கூடுகின்றனர். பலரும் ஆட்டம் புரியாத அடிமட்டப் பெண்கள். இறுதியில் ஒரு வம்பிற்கு நியாயம் சொல்லி தீர்ப்புச் சொல்கிறாள் நடுவராயிருக்கும் பெண். பார்வையாளரான பெண்கள் அவளுக்கு ஆதரவாளர்களாகின்றனர். கதையை அரசியல் தளத்திற்கு நகர்த்திப் பார்த்தால் இப்படிமத்தின் நிதர்சனம் தெரியும். ஆணின் தவறை சுட்டிக் காட்டி தமக்கு தீர்ப்பெழுத ஒரு பெண் இருக்கிறாள் என்ற உணர்வு பெண்களை ஒன்றாகத் திரட்டுகிறது. தம்மாதரவைச் சொல்கிறார்கள்.
தன் கதைகளுக்கு ஒரு தனி உரைநடை வேண்டுமென்ற தேவையை உணர்ந்தவர் சு.ரா. காலப்போக்கில் மாற்றமடைந்த இவரின் புதிய உரை நடை "அழைப்பு" என்னும் கதையிலிருந்து தொடங்குகிறது எனலாம். இந்த நடையில் பந்திகளின் அளவு பெரிதாய் அமைந்திருக்கும். சிறுகதையின் புதிய தேவையை உணர்த்தியது. இதனால் உரைநடை பகுதிக்கும் பாத்திரங்களின் உரையாடல் பகுதிக்கும் இடையே உள்ள வெளி தெளிவாகிறது. வாசகர் மனதில் சலனத்தை இவையும் தூண்டுகின்றன.
வெளிப்பாடும் மொழியும் வயப்பட்ட அவரது கதைகளின் வடிவப் பிரக்ஞை இயல்பாக இருந்து கொண்டே வந்திருக்கிறது. வாழ்க்கை அனுபவங்களை கலை இலக்கியங்களாக மாற்றி அமைக்கும் பொழுது கதைகளின் வீச்சு தன்மை ஆகியன நிர்ணயிக்கப்படும் பொழுது இந்த வடிவப் பிரக்ஞை முக்கியமாக ஒரு கலைஞனுக்குத் தேவைப்படுகிறது.
அவரது முனைப்பெல்லாம் சமூக கருத்தாக்கத்தை உருவாக்குவதே. இதன்படி அவரது கதைகள் அவரது சமூக அக்கறைகளை முன்னிறுத்துகின்றன. ஆனாலும் அவற்றை அவர் வலிந்து தன் கதைகளில் திட்டிக்காட்டவில்லை. ஆனாலும் கதைப்பின்னலூடே அடிச் சரடாக அதுவே இருந்து வந்திருக்கிறது.படிமக் கலைஞனாகி தான் கைக் கொண்ட படிமங்கள் வழியாக படிப்பவர்கள் மனங்களில் இன்னொரு கதையை தோற்றுவிக்கும் விந்தை சுராவின் சிறப்பு இயல்பு எனலாம்.0

ஜீவநதி
19ானுடல் வெல்லும்9ா
குழந்தை வைத்திய விடுதியின் அனுமதிநாள் என்றாலே இப்படித் தான். ஊழியர்கள் கால நேரம் பாராமல் வேலை செய்துகொண்டிருப்பார்கள். அப்படியென்றால் தான் குழந்தை நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். குழந்தை வைத்திய நிபுணர் ஒருவரும் வைத்திய அதிகாரி கள் மூவரும் உள்ளக வைத்தியர்கள் இருவரும் என மொத்தமாக ஆறு வைத்தியர்கள் உள்ள இந்த விடுதியில் வைத்தியர் களும், ஊழியர்களும் கடமை நேரத்துக்கும் கூடுதலாகத் தான் வேலை செய்து கொண்டிருக் கிறார்கள்.
உள்ளக வைத்தியரான டொக்ரர் பங்கஜன் ஆறுமாதங்களாகத் தான் அங்கு கடமையாற்றுகிறார். அவருக்குக் குழந்தை வைத்திய நிபுணராக வர வேண்டும் என்று மிகுந்த ஆசை. வெகு நிதானமாகத் தனது மேலதிகாரியான குழந்தை வைத்திய நிபுணர் சொல்ப வற்றை எல்லாம் விரைந்து நிறை வேற்றுவார்.
குழந்தை வைத்திய விடுதியில் கடமையாற்றுவதில் அனுகூலம், பிரதிகூலம்: இரண்டுமே உண்டு. அபாயக் கட்டத்திலுள்ள குழந்தை நோயாளி களைக் காப்பாற்றி அவர்களை மீட்டெடு ப்பதில் காணும் மன நிறைவு அநுகூலம்: அவ்வாறு காப்பாற்ற முடியாமல் போகும்போது அக் குழந்தைகளின் பெற்றோர்கள் எழுப்பும் அவல ஒலம் விளைக்கும் மனத்தாக்கம் பிரதிகூலம்.
“வணக்கம், தம்பி!" கடமையே கண்ணாக இருந்த டொக்ரர் பங்கஜன், குரல் கேட்டு நிமிர்ந்தார்.
- டொக்ரர் வே. கமலநாதன்
சிவானந்தம் ஏ. ஓ. சிவானந்தம் ஏ. ஓ.வின் மகன் சங்கரின் நோய்க்கான தனியாள் விபரங்களைத் திரட்டியதன் காரண மாக, அவரின் குடும்பவிபரம் டொக்ரர் பங்கஜனுக்கு மனப்பாடம்.
கல்வித் திணைக்களத்தில் நிர்வாக அலுவலராக வேலை பார்க்கும் மூத்த அதிகாரி சிவானந்தம்.
சொந்த மைத்துணியை மணம் முடித்தவர்.
இந்திரன், சங்கர், கோகுலன்மூன்று ஆண்பிள்ளைகள்.
இந்திரன் ஒ/எல் பரீட்சைக்குத் தோற்ற இருக்கிறான்.
சங்கரும் கோகுலனும் நீண்ட இடைவெளியின் பின் பிறந்தவர்கள்.
சங்கரையும் கோகுலனையும் சுமந்திருந்த கர்ப்ப காலத்தில் சிவானந்தம் ஏ. ஓ.வின் மனைவி அரக் கடி மயங்கியிருக்கிறார்.
சங்கர் ஒருவகையான குருதிச் சோகை நோயினால் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன் தான் இவ்விடுதியிலேயே உயிரை விட்டான்.
இளையவன் கோகுலன் சோர்வாக இருப்பதால், நேற்றுத் தான் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குருதி அறிக்கையைப் பார்த்த பின்புதான் கோகுலனுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியும்.
சிவானந்தம் தான் பேசினார். "தம்பி, "பிளட் ரிப்போர்ட் வந்திருக்கு. லாப்பிலை போய் எடுத்துவாறன்"
அவரை அமருமாறு இருக்கை யைக் காட்டிவிட்டு, குருதி அறிக்கை யைக் கையில் வாங்கிக் கொள்கிறார் பங்கஜன்.

Page 7
ஜீவநதி
முதற் பார்வையிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
Aplastic Anaemia BT6ST. சங்கருக்கு வந்த அதே குருதிச் சோகை நோய், ரிப்போர்ட்"டின் பிரகாரம் ஆரம்ப நிலைதான். குழந்தை வைத்திய நிபுணரின் பார்வைக்கு அறிக்கையை அனுப்பி விட்டு, அவரை நோக்கி பங்கஜன் நகர்கின்றார்.
சந்தேகமில்லை குழந்தை வைத்திய நிபுணர். பங்கஜனுக்கு நோயின் உண்மையான நிலையை விளக்குகிறார். உடனடியாகக் குருதி ஏற்றப்படவேண்டும்.
டொக்ரர் பங்கஜனுக்கு சங்கட மாக இருக்கிறது. எப்படி இதனை சிவானந்தத்துக்குத் தெரிவிப்பது? அதே நோய்க்கு சங்கரைப் பலி கொடுத்துமூன்று மாதம் மட்டுமே கடந்த நிலையில் கோகுலனுக்கும் அதே நோய் என்றால்.?
டொக்ரர் பங்கஜனுக்கு சிவானந்தத்தை நினைக்கப் பாவமாக இருக்கிறது. சங்கரை பறிகொடுத்து அவர் கதறிய கதறல் இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு பெரிய திணைக்களத்தின் நிர்வாக அலுவல ரான அவர் சங்கரை காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள், அவர் பட்ட துன்பங்கள் யாவும் கணக்கிலடங்கா.
சங்கர் ஏழு மாத காலமாக குருதிச்சோகைக்கு சிகிச்சை பெற்று வந்தவன். டொக்ரர் பங்கஜன் இவ் விடுதிக்கு வருமுன்பே அவ்விடுதி யில் அவன் ஒரு வி.ஜ.பி. கிளினிக் குக்காக அடிக்கடி அவ்விடுதிக்கு வந்த அவன் வைத்தியர்களிடமும் தாதி யரிடமும் ஊழியரிடமும் ஒட்டிக் கொண்டான்.
சங்கரைப்பீடித்திருந்த நோய் Aplastic Anaemia DaB6OT IT 6ů பிடிக்கப்பட்டவர்களின் குருதியில் செங்குருதிச் சிறுதுணிக்கைகளும் வெண் குருதிச் சிறுதுணிக்கைகளும்
10 குருதிச் சிறுதட்டுகளும் எண்ணிக்கை யிலும் அளவிலும் குறைந்து காணப்படும். இதனால் இவர்களுக்கு அடிக்கடி குருதி ஏற்றப்படவேண்டும். பின்பு விடுதியில் மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்கவைக்கப்பட்டு ஈமோ குளோபினின் 36T6) dffluTéb வந்தவுடன் விடுதியிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.
டொக்ரர் பங்கஜன் "கிளினி க்கில் சங்கரைச் சந்தித்த தினத்தில் டொக்ரர் பங்கஜனுக்கு தன் தந்தை யையும் முந்திக்கொண்டு, நோயின் சகலவிபரங்களையும் கூறினான். ஒன்பது வயதுச் சிறுவன் சொல்லிய விபரங்கள் வயதுக்கு மீறிய அவனின் கெட்டித்தனத்தைக் காட்டின.
இப்போதும் சங்கர் சொல்லியவை பங்கஜனின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.
டொக்ரர் நீங்கள் இங்கை புதிசா வந்திருக்கிறியளே எனக்கு குருதிச்சோகையாம் கிளினிக்கின் குருதி அறிக்கையை பார்த்துப்போட்டு இரத்தம் ஏத்தி அனுப்வுறவை.
"சிவானந்தம் அன்று பெருமை பட்டுக்கொண்டர். சங்கர்ரிடம் சுட்டித் தனத்தோடு கெட்டித்தனமும் நிறைய வாம். இன்ஜினியராக வந்து அப்பா வுக்கும் அம்மாவுக்கும் மாடிவிடு கட்டித் தருவேன் என்று அடிக்கடி சொல்வனாம். சிவானந்தத்திற்கு கொடுத்து வைக்க வில்லை. ஒரு அபாயகரமான கட்டத்தில் விடுதியில்சங்கர் அனுமதிக்கப்பட்டான். வாயில் இருந்து குருதி வெளியேறிக் கொண்டு இருந்தது. சங்கரை காப்பற்ற முடியாது என்பது வைத்தியர்களுக்கு நன்கு தெரிந்து இருந்தது. ஆனாலும் தம்மாலான முயற்சிகளை செய்து கொண்டு இருந்தனர். சங்கருடன் தாயையும் கூடநிற்க அனுமதித்து சிவானந்தத்தையும் தனது அறையில் நிற்கச் செய்திருந்தார் டொக்ரர்

11
ஜீவநதி
Lusalebagó01.
இரவு 8.00 மணியளவில் ஆரம்பித்த வலிப்பு அதிகாலை 3.30 மணி வரை அவன் உயிர் பிரியும் வரை வதைத்துக் கொண்டு இருந்தது. விடுதியிலுள்ள வைத்தியர், தாதியர், ஊழியர் எவருமே இரவு தூங்கவில்லை. குற்ற உணர்வுடன் தனது அறைக்குச் சென்ற டொக்ரர் பங்கஜனைப் பார்த்ததும் சிவானந்தத்துக்கு நிலவரம் விளங்கிவிட்டது. "ஓ" என்று அலறி அழுதார் டொக்ரர் பங்கஜனும் அழுதார். இப்போது கோகுலனின் நோய் பற்றி சிவானந்தத்துக்குச் சொல்ல வேண்டும். ஆனால் எப்படிச் சொல்வது? சொல்லியாக வேண்டும். கோகுலனைக் காப்பாற்றியாக வேண்டும்.
சிவானந்த்ததின் முன்வந்து நின்ற பங்கஜன் அவர் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார். சிவானந்தத்துக்கு விளங்கிவிட்டது.
"டொக்ரர், கோகுலனுக்கும் Aplastic Anaemia 35TGOTT?
"ஒம் ஆனால் இதுதான் ஆரம்பநிலை நாங்கள் எப்படியும் அவனைக் காப்பாற்ற வேண்டும். ஆரம்ப சிகிச்சையை முடித்துக்கொண்டு அவனை இந்தியாவுக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சை அளித்து அவன் உயிரைக் காப்பாற்றுவதற்கான சகல முயற்சிகளையும் நாங்கள் எல்லோரும் செய்வம்.
டொக்ரர் பங்கஜனின் குரல் தழுதழுக்கிறது. துளிர்த்துக் கொண்டு இருந்த கண்ணிரைத் துடைத்துக் கொண்டு சிவானந்தத்தை நிமிர்ந்து LuTf isśBITT.
சிவானந்தத்தின் கண்களில் உடைப்பெடுக்கும் குளமாகக் கண்ணிர் கதறி அழுது விடுவாரோ"
சிவானந்தம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கண்ணிர் சிந்தியவாறே சொன்னார்.
"டொக்ரர்! எனக்குத் தெரியும் டொக்ரர். நீங்கள் கோகுலனின் உயிரைக் காப்பாற்ற எல்லாம் செய்வீர்கள். சங்கரின் உயிரை காப்பாற்ற முடியாதென்று தெரிந்தும் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எனக்குத் தெரியும். இப்போ கோகுலனுக்கு ஆரம்ப நிலைதான் என்பதையும் லாப்பிலை நின்றவரட்டை கேட்டுத் தெரிஞ்சு கொண்டனான்."
டொக்ரர் பங்கஜன் நிதான மாகச் சொன்னார். " அது எங்கள் கடமை. இந்தத் தொழிலுக்கு வரும் போதே எங்கள் கடமையை உணர்ந்து தான் வாறம்."
சிவானந்தம் உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக்கிக்கொண்டு உறுதியாகச் சொன்னார்.
"எல்லோருக்கும் 56 இருக்குத் தான் டொக்ார். ஆனால் உங்களுடைய கரிசனை கடமை இல்லை, சேவை . அல்லது அதற்கும் மேலை."
ஒருமுறை இழுத்து மூச்சொன்றை விட்டுவிட்டு சிவானந்தம் தொடர்ந்தார். நான் என்ரை பிள்ளையஸ் கொம்பியூற்றர் இஞ்சினியரா வரவேண்டும் என்று கனவு கண்டன். இப்ப சொல்லுறன் இன்று தொடக்கம் என்னர மூத்தபிள்ளை இந்திரனை டொக்ரராக்குவதற்கு நான் என் உயிரைக் கொடுத்து முயற்சி செய்வன். கோகுலனை நீங்கள் காப்பாற்றிவிட்டால் அவனையும் டொக்ரராக்குவன். என்ரை பிள்ளையஸ் எங்கடை சமூகத்துக்குச் சேவைசெய்ய வேணும். உங்கள் எல்லோரையும் போலை வைத்திய நாதராய் வர வேண்டும்."
தன் கையை உறுதியாகப் பற்றிக் கொள்ளும் சிவானந்தத்தை நினைத்து அசந்து போய் நிற்கிறார். டொக்ரர் பங்கஜன். 000

Page 8
ஜீவநதி கலைகளுடன்
சவைகுதலில்
2ணWவு
மனிதத்துவ வாழ்வியலின் அர்த்தங்களை, இன்பங்களை உணர்வுகளை வெளிக்காட்டி அழகியல் நுகர்ச்சிக்கு வழிகாட்டும் ஊடகங்களாகக்கலைகள் உள்ளன. கலைஞர்கள் தம் கலைகளினூடாக உள்ளத்து உணர்வுகளை பார்வையாளர் களான சுவைஞர்களின் முன் வைக்கின்றார்கள். இதற்குப் பல்வேறு உத்திகள் கையாளப்படுகின்றன. பல்வேறு கலை ஊடகங்கள் இன்று முழுமையாகவே சுவைஞர்களின் திருப்திக்காகவே மக்கள் கலை ஊடகங்களாகப்பரிணமித் துள்ளன. சுவைஞர்களே மிக உயர்ந்த நுகர்வோராக மாறுகின்ற போது கலைகள் தொழிற்துறைகளாக வளர்ச்சி கண்டுள்ளன.
இன்று கலையாக்கம் என்பது சூழலுக்கும்-சுயத்திற்கும் சுவைஞர்களுக்குமிடையே நிகழும் உணர்வுகளின் வெளிப்பாடாக மிளிர்கின்றது. இவ் உருவமாற்றம் கலையாக்கக் கோட்பாடுகள், இலட்சியங்கள், விழுமியங்களுக்கு அப்பாலும் செல்லக் கூடிய நியதிகளும் உருவாகிவிட்டன. சுவைஞர்களின் அழகியலுணர்வு ரசிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக கலையாக்கச் செயன் முறைகள் மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
இக்கலையாக்கங்கள் கற்பனைகளை அடியொற்றி வாழ்வியலினூடு எழுகின்றதாகினும் அனைத்துக் கற்பனைகளும் கலையாக்கங்களாக மாறிவிடாது. இன்றைய சுவைஞர்களின் யதார்த்த நிலைகளில் இருந்து கற்பனை நிலைமாற்றங்களுடன் இணைந்து நடப்பியல் உணர்வோடு வெளிப்படும் கலையாக்கங் களின் செல்வாக்கும் பெருக்கமும் அதிகரித்து வருகின்றது.
கலையாக்கங்கள் சுவைஞர்களின் இன்ப உணர்வை பொருத்தமாக ஊட்டி பொருத்தமான சந்தர்ப்பங்களையும் சம்பவங்களையும்; 1. ஆரம்பம் 2. வளர்ச்சி 3. உச்சநிலை 4. தீர்வு அல்லது முடிவு என்றவகையில் உருவாக்கப்படுகின்றன. நிஜத்தை அறிதல், நிஜத்தை பாவனை செய்தல், நிஜத்துக்கு மெருகூட்டல் ஆகிய கலையாக்கச் செயன் முறைகள் கலைகளை சுவைஞர்களின் பால் இன்று ஈர்க்கின்றன. சுவைஞர்களின் உணர்ச்சிகளை மெருகூட்டல் செறிவூட்டல், குறியீட்டு
 
 

ஜீவநதி 13 வடிவங்களினூடாக பல்பரிமாண எண்ணக்கருக்களை விருத்தியாக்கல் கலைகளின் விளைவுகளாகின்றன. இங்கே கலைகளின் நுகர்வோராகிய சுவைஞர்களாகின்றன. இங்கே கலைகளின் நுகர்வோராகிய சுவைஞர்களின் திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. சுவைஞர்களுடன் கலைகள் உயிர்ப்பான தொடர்பை ஏற்படுத்த குறியீடுகள் உதவுகின்றன.
கலையாக்கக் குறியீடுகள் கலைப்படைப்புக்களை ஒரு விதத்தில் அருவப்படுத்தியும் அறிகைப்படுத்தியும் உணர்வூட்டியும் நிற்கின்றன. கலைத் தொடர்பாடல் குறியீடுகளால் வளம் பெறுகின்றன. உயிர்ப்பூட்டப்படுகின்றன. குறியீடுகள் இன்றிக்கலைத் தொடர்பாடல் சாத்தியமற்றதாகிவிடும். அழகியல் கலைகளின் பிறப்பாக்கம் குறியீடுகளினாலேயே விசை பெறுகின்றன என்ற வகையில் இன்றைய சுவைஞர்கள் அறிவுடையவர்களாக ஆற்றலுடையவர்களாக இருக்கின்ற நிலையில் குறியீடுகள் மூலமான கலையாக்கத் தொடர்பாடல் பல்வேறு உணர்வுப் புலங்களினுடாக விருத்தியாகின்றன.
கல்வியியலிலும், அறிவியலிலும், கணிதவியலிலும் பல்வேறு வகைகளில் குறியீடுகள் ஒரே பன் முகப்பாங்கில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் குறித்த ஒரு பொருளைக் கலைஞர்கள் வெவ்வேறு குறியீடுகளால் வெளிப்படுத்தல் கலைக் குறியீடுகளுக்குரிய விசேட சிறப்பியல்பாகும். ஒரு கலைக் குறியீடு அதனோடு தொடர்புடைய பல்வேறு உணர்ச்சிக் குறியீடுகளைத் தொடர்புபடுத்தி நிற்கின்றது. இக்குறியீடுகளே சுவைஞர்களின் பன்முக கலை தொடர்பான எழுச்சிகளுக்கு வழிகளைக் காட்டி நிற்கின்றன என்ற வகையில் கலைகளில் குறியீடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாயுள்ளன.
கலைக் குறியீடுகள் சுவைஞர்களுக்கு 1. அறிகைப்பரிமாணம் 2. தொடர்புப் பரிமாணம் 3. காட்சிப்பரிமாணம் 4. உணர்ச்சிப் பரிமாணம் ஆகிய பரிமாணங்களினூடாக கலைகளின் மெய்ப் பெறுமானத்தை எடுத்துக்காட்டுகின்றன.
ஒவ்வோர் கலை ஊடகங்களும் கலைகளும் இன்று தொழிற்துறைகளாக வளர்ந்து சுவைஞர்கள் தமது நுகர்வுக்கேற்ப பணத்தைச் செலுத்தும் நிலை பெரும்பாலும் அதிகரித்துள்ள நிலையில் சுவைஞர்களே இன்று முதன்மை ப்ெறும் மாற்றம் நிகழ்ந்து வருகின்றது. அதற்கேற்ப கலைகளினதும் கலையாக்கப் பரிமாணங்களும் விரைவாக மாற்றங்களுக்கு உள்ளாகிவருகின்றன.000
நால் அறிமுகம்
நூல் :- இலங்கையில் கல்வியின் நவீன
போக்குகள்
ஆசிரியர் :- ஆ.நித்திலவர்ணன்
விலை :- 150/-
வெளியீடு - தக்ஷனா

Page 9
14
ஜீவநதி
"மாயா"வின் இரு கவிதைகள்
வாழ்க்கை
சில வேளைகளில்.
5Tař
சிந்தித்துப் பார்ப்பேன்! எம் வாழ்வைப் பற்றி
曲 நாமீ வாழ்வதாகக் கூறுகின்றாய்.?
நாம் பிறந்த போதிலுமீ இது வரை மூச்சு விடவேயில்லை எனிற 35Hỉủufulỗ. எமக்கு மட்டுமீ தானி தெரியுமீ.
இப்போது தானி. மூச்சு விட முயற்சிக்கின்றோம் ඌරාIII6ඹී. உனது சமூகக் கோட்பாடுகளும் சட்டங்களும் எமது நுரையீரலையே. பறித்து விட்டது இருந்த போதும் நுரையீரல் இன்றி சுவாசிக்க நாமீ கூiப்படைந்து விட்டோம்.
கிழிந்த எம் கிழக்கை சுருட்டி எரித்து விட்டு. எமது இதயங்களை மேற்கிலி உரீைடாக்கப் போகினிறோமீ. எங்கள் உலகிற்கு சூரியர்கள் வேண்டாமீ. அறிவுச் சுடரும், அறிவியலி வெப்பமும் நிறையவே எங்களிடமீ இருக்கின்றன.
விரிசலிகள் நிறைந்த விகாரங்களுடன் நாம் இனி வாழப் போவதேயில்லை.
நாம், நமக்காக. முதலி முறையாக வாழப் போகினிறோமீ.! 6IIpól 86odèloඹී!
இப்போது சுவாசித்துப் பார்க்கிறேனி. எமீ வாழ்வை இது தானி බIII(ග්‍රීසීනඝ !
GgSG---
ஏய்.
எனின செய்து கொண்டிருக்கிறாய்.?
...!
தொலைந்து போனதை தேடுகின்றாயா?
தேடவேண்டும் எண்ற உணர்வு 9.adfaíDaol
ஆக்கிரமித்திருப்பது ஆரோக்கியமே
ඌගIff6). வெளிச்சத்தில் தொலைதீதுவிட்டு இருட்ஜலி தேடுகின்றாயே..! බ්‍රහ්.....?
பழமை போலவே ඛඝ|Iශනඛණ්ජ් ෆිLගීජිංගී 666ਸੰ85 இலீலை என எண்ணுகின்றாயா..? உற்றுப் பார் !
虚
தேடும் இடத்தில் 6ඛleffiජීédplචී ෆිරිහීගෙන தொலைநீததுமீ இல்லை 66:find நிதர்சனமீ புலப்படும்
முதலில்
தேடு உனக்கான வெளிச்சதீதை. Úæfu தொலைந்து போனதை,

ஜீவநதி 15
αύ (? கலியுகத்திலாசெல்கிறோம்?
"மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான். வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்தபோதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மனிதனுக்கு மனிதனாக வாழத் தெரியவில்லை இது ஒரு சினிமாப் பாடல் வரிகள், மனிதனைச் சிந்திக்க வைக்கும் அர்த்தம் பொதிந்த வரிகள். ஆனால் மனிதன் சிந்திக்கின்றானா?
ஆதி மனிதனுடன் ஒப்பிடும் போது இன்று மனிதன் சகல துறைகளிலும் விண்ணைத் தொடும் அளவிற்கு முன்னேறி விட்டான், காரணம் விஞ்ஞான வளர்ச்சி. விண்ணைத் தொட வைத்த விஞ்ஞானம் மண்ணைக் கவ்வும் அளவிற்கு அவனைப் படுபாதாளத்திற்குள் தள்ளியும் விட்டுள்ளது. ஆயினும் மனிதனுக்கு அது புரியவில்லை. எங்கோ ஆகாயத்தில் பறப்பதாகக் கனவு காண்கின்றான். சுயநலத்திற்கும் பணத்திற்கும். சுகபோகத்திற்கும், ஆசைகளை உடனுக்குடன் திருப்தி செய்து கொள்வதற்கும் என்னென்ன சூதுவாதுகளைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யத் துணிந்து விட்ட என். மனிதனது மனிதநேயம், தர்மம். நியாயம், நீதி, அன்பு நேர்மை, ஒழுக்கம் ஆகிய நல்லறங்கள் யாவும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டன. விரைந்த பயணங்கள். நிரந்தரமற்ற வாழிடங்கள், அயலவனை அறியாத வாழ்க்கை சுயநல சிந்தனை என்பவற்றால் அதர்மம் மிஞ்சிவக்கிரபுத்தி உக்கிரம் பெற்றுவிட்டது.
பண்டைய வர்ணாச்சிரம தர்மங்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மங்கி மறைந்து விட்டன. அந்தணர் ஒழுக்கம், அரசியல் நெறிமுறை, இல்லற தர்மம், துறவற தர்மம். யுத்த தர்மம் இன்னும் எத்தனை?நெறிமுறைகள். அத்தனையும் எங்கே "அந்தணர் என்போர் அறவோர் மற்றெவவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்" என்ற வள்ளுவர் காணும் சாத்துவீக குணம் கொண்ட வேதம் ஒதும் அந்தணர் இன்று தடுமாறித்தடம் புரண்டு ளி கொண்டிருக்கின்றனர். அரசியல் தர்மத்திலோ வேலியே பயிரை மேய்கின்றது. துறவற தர்மம் எங்கே ? போலிச் சாமியரால் உலகம் குட்டிச் சுவராகின்றது. இல்லற தர்மம் எங்கே? அது தொலைந்தே விட்டது.
அறிவு வளர்ச்சி - விஞ்ஞான வளர்ச்சி காரணமாக மனிதனின் வாழ்க்கை எங்கோ உயர்ந்து சென்றபோதும் யாரும் நிம்மதியாக வாழ்கின்றார்களா என்றால் அது தான் இல்லை. காரணம் எங்கும் போட்டி எதிலும் பொறாமை. ஆட்சியைக் கைப் பற்றுவதில் போட்டி, பதவியிலிருக்க போட்டிபெயர், புகழ்பெற்றுக்

Page 10
ஜீவநதி 16 கொள்வதில் போட்டி கல்வியில் போட்டி, உற்பத்தியில் சந்தைப்படுத்தலில் நுகர்வில் போட்டி மொத்தத்தில் யாவும் சுயநலத்தின் பாற்பட்ட செயற்பாடுகள் இவை ஒரு புறம். மறுபுறம் உண்ணும் உணவில் நேர்த்தியில்லை ஆரோக்கியத்திற்கு உகந்த உணவாக இல்லை. இரசாயனக் கலவைகளால் பதப்படுத்திய உணவுகளும் பைக் கற் உணவுகளும் பல்வகைப் பான வகைகளும் என உணவுகளின் தெரிவுகள் பல்கிப் பெருகி விட்டன. இயற்கையின் செழுமையை இவற்றில் காணமுடிவதில்லை. ஆடை அணிகளைப் பற்றியோ சொல்லவேண்டியதில்லை. அத்தனை கண்றாவிக் காட்சிகள். காதணியும், கங்கணமும் கூந்தலுமாக ஆடவர் உலாவர, காற்சட்டையும் ரீசேட்டும் கூட்டி முடிக்கக் கூந்தலற்ற தலையுமாக பாவையர் பவனிவர உலகம் சுழல்கிறது.
அமைதி என்ற அந்த ஆனந்த மனோநிலை இழக்கப்பட்டுவிட்டது. அளவுக்கு அதிக சத்தத்திற்கு இசைவாக்கம் பெற்றுவிட்டனர் மனிதர் வானொலி, தொலைக்காட்சி, மேடை நிகழ்ச்சி என எங்கும் எதிலும் சத்தம் இடம்பிடித்துக் கொண்டது. அந்த இனிமையான, மென்மையான, உயிர் உருகும் இசையைக் கேட்பது அரிதாகிவிட்டது. பெரியவர்கள். சிறியவர்கள் என்ற வயது வேறுபாடின்றி பேசுகின்ற வார்த்தைகளில் இதய சுத்தி இல்லை. வஞ்சனையும், ஏமாற்றமும், பழிவாங்கலும் சர்வ சாதாரணமாகிப் போயுள்ளன. குறுக்கு வழியிற் சம்பாதித்து விரைவில் செல்வந்தர்களாவதற்கான முயற்சிகளாக களவு, குந்து, கடத்தல், போதைவஸ்து, ஆயுத வியாபாரம் போன்றவற்றின் ஆதிக்கம், பஞ்சம், வறுமை, அகதி அந்தஸ்து. மரண ஒலம் என்பன பொதுவுடமையாகி எல்லோர் வாழ்க்கையிலும் தாண்டவமாடுகின்றன. குற்றமிழைக்காதவர் தண்டனை அனுபவிப்பதும், மெலியாரை வலியார் திண்டுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டன.
இவை ஒரு புறமாக மறுபுறம் இயற்கையை மிஞ்சிவிட நினைக்கும் மனிதனுக்கு அது உன்னால் முடியுமா?நான் சிற்றம் கொண்டால் உனது பணம், பதவி, அந்தஸ்து, கெளரவம், வாழிடம் எல்லாம் போய் ஒரு நிமிடத்தில் ஆண்டியாய், அகதியாய் அலைவாய் என உணர்த்தும் இயற்கையின் சீற்றங்கள். இவ்வாறுபூமியிலும் மனித சமுதாயத்திலும் முன்னொருபோதும் கண்டிராத அளவுக்கு மாற்றங்கள் இடம்பெறுகின்றன. கட்டுக்கோப்பான "வாழ்க்கைக் கோலங்கள் அலங்கோலங்களாக மாறிப் போயுள்ளன. இவற்றிற்கெல்லாம் காரணம் கலியுகம் என்பர் பெரியோர். இங்கே கலியுகம் என்பது உண்மை தானா? என்ற கேள்வி எழுகின்றது. கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என முறி கிருஷ்ணர் கூறியுள்ளவற்றைப் பார்த்தால் உண்மை விளங்கும்.
கலியுகத்தில் மக்களிடையே பொய், வஞ்சனை. தூக்கம். சோம்பல், மனவருத்தம், இம்சித்தல், பலவீனம், பயம், அறியாமை, அழுகை ஆகியவை அதிகமாக இருக்கும். மந்த புத்தி உள்ளவர்களாகவும் அளவில்லாமல் அநுபவிப்பதில் ஆசை மிக்கவர்களாகவும் இருப்பர். எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற வெறி இருக்கும். ஆனால் பணம் இருக்காது. மனிதர்கள் தத்தம் மனம் போன போக்கில் வேதங்களுக்கு விபரீத அர்த்தங்கள் சொல்வர்.
துறவிகள் பணத்தாசை பிடித்து அலைவர். இல்லறத்தார் எங்கே எது கிடைக்கும் என்று அலைவார்களே தவிர தர்மம் செய்யமாட்டார்கள். மக்களின் மனம் எதிலுமே நிலையாக இல்லாமல் எப்போதும் எதையாவது நினைத்து பயந்து கொண்டி நக்கும். சிறிதளவு சொத்து சுகத்துக்காக உறவினர்களைக் கூடக் கொல்வார்கள்.

ஜீவநதி 17
வயது முதிர்ந்த பெற்றோரைப்பிள்ளைகள் காப்பாற்ற மாட்டார்கள். வயிற்றை நிரப்புவதிலும் காமத்திலும் ஆர்வம் கொண்டிருப்பர். பணம் அதிகமாக உள்ளவன் உயர்ந்தவனாகவும் நல்லவனாகவும் திறமைசர்லியாகவும் மதிக்கப்படுவான். விற்பதிலும், வாங்குவதிலும் வஞ்சனைகள் மிகுந்திருக்கும். பேச்சுத்திறமையுள்ளவன் கல்விமானாக மதிக்கப்படுவான். திருமணத்தில் முறை இருக்காது.
தொலைவில் உள்ள கோயில்களும் தீர்த்தங்களும் மட்டுமே மதிக்கப்படும். தர்மம் செய்வது புகழுக்காகவேயன்றி ஆத்மார்த்தமாக இருக்காது.
ஆள்பவர்கள் இரக்கமற்றும் திருட்டுக் குணத்துடன் பேராசைக்காரர்களாகவும் விளங்கிநல்லவர்களைப் போல் வேடம் பூண்டுமக்களை வருத்துவர், மக்கள் வரிகட்ட முடியாமல் கஷ்டப்படுவர். மனநோய் முற்றி ஒருவருக்கொருவர் கெடுதல் செய்வர்.
"கடைசி நாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும் கொடுமையுள்ளவர்களாயும் நல்லோரைப் பகைக்கின்றவர்களாயும். வேதப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும் இருப்பார்கள்" என்று நாம் வாழும் காலத்தைக் குறித்து பைபிள் இவ்வாறு முன்னுரைத்தது.
இத்தனை கெடுத்தல்கள் மலிந்துள்ள கலி காலத்தில் மக்களுக்கு இவற்றிலிருந்துவிடுபட விமோசனமே இல்லையா என்ற கேள்வி எழுவது நியாயமானது தான். ஏன் இல்லை என்பது போல் பல ஞானியரும் பெரியோரும் வழி கூறியுள்ளனர். கலி காலத்தில் மக்களிடையே நாளுக்கு நாள் இறை நம்பிக்கை குறைந்து வருகின்றது. இறைவனிடம் ஆழ்ந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் தூய்மையான அன்பும் கொள்வதுடன் கடவுளின் நாமத்தை உச்சரித்தலும் துன்பத்திலிருந்து விடுதலையைத் தரும். பொறுமையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இல்லறத்தாருக்குத் தேவை இந்தப் பூமியில் நாம் நிலையாக இருப்போம் என்று எண்ணித் தவறுகள் செய்யாது, அகங்காரம் கொள்ளாது நம்மிடம் உள்ள சக்தி (திறமை) கடவுள் தந்த தென்றெண்ண வேண்டும். இந்த உலகத்தில் மக்கள் ஆனந்தமாக வாழவேண்டுமானால் எல்லா வசதிகளையும் தேடிக்கொள்ள வேண்டும். ஆனால் அது தான் வாழ்வென்று அதிலேயே லயித்து விடக் கூடாது.
மனிதன் எப்படியெல்லாம் வாழலாம் என்பதற்கு சுவாமி விவேகானந்தர் காட்டுகின்ற பாதை இது. "எல்லையற்ற தாய்மையும் புனிதமும் நிறைந்ததும் சிந்தனைக்கும் செயலுக்கும் எட்டாததும், குணமும் குறியும் இல்லாததுமான கடவுளைத் தியானியுங்கள். துக்கங்களும், துன்பங்களும் நம்மைப் பக்குவப்படுத்தவே ஏற்படுகின்றது. அவை நமக்கு இயற்கை வைக்கும் பரீட்சை.அவற்றை வெற்றிகரமாகக் கடந்து செல்லும் போது தான் வாழ்க்கை முழுமை அடைகிறது. தன்னலம் சிறிது மில்லாமல் பிறருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும். நிறைந்த அன்பை பிறருக்கு வழங்கும் நல்லவர்களின் உதவி இப்போது உலகத்தின் மிகப்பெரிய தேவையாக இருக்கின்றது. இரக்கம் உள்ள இதயமும் சிந்தனை ஆற்றல் மிக்க மூளையும் கடினமான வேலையையும் விருப்பத்தோடு செயலாற்றும் கைகளும் இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் உடனே முடிவுக்கு வந்துவிடும். சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைப் பின் தொடர்ந்து வரும் ஒரே நண்பன் நல்லொழுக்கமே மற்றவையாவும் மரணத்துடன் முடிந்து போகும். அதனால் ஒழுக்கத்தை உயிரை விட மேலாக மதியுங்கள் உங்கள் உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எந்த ஒரு திய செயலையும் செய்யாதீர்கள். சிறந்த லட்சியத்தை மனதிற் கொண்டு முறையான

Page 11
ஜீவநதி 18 வழிமுறைகளைப் பின்பற்றி, தைரியத்துடன் வெற்றிப்பாதையில் வீறுநடை போடுங்கள் என்றார்.
யார் எதைச் சொல்லினும் பண்டைய சாஸ்திரங்கள் கூறிய செய்திகளையே நடைமுறையில் காணமுடிகின்றது. தருமதேவதையைப் பார்த்த பிரம்மம் "நீ கிருதயுகத்தில் நான்கு கால்களில் நில், திரேத யுகத்தில் மூன்று காலில் நில், துவாபரயுகத்தில் இரண்டு காலில் நில், கலியுகத்தில் ஒரு காலிலும் நிற்காதே" என்று கூறிற்றாம். இன்று எங்கே தேடினும் தர்மத்தைக் கிஞ்சித்தும் காணமுடியாதுள்ளது.
எனவே இது தான் கலியுகமா?000
@_○5)」5与あ○○
"கூடு கட்டி வாழ்ந்திருந்தால் காலம் குதாகலமாயிருந்திருக்கும்" என்று பெண் குயில் கூறியது
“சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் வருவதெல்லாம் உணர்ந்துதான் கூடு கட்டாமல் ஒதுங்கி ஒரங்களில் வாழலாம் என்ற முடிவுக்கு வந்தேன்" என்றது ஆண்குயில்
"குந்தி வாழ்ந்த கூத்துத்தான் மழை, வெயில் யாவிலும் அகப்பட்டு எத்தனையோ தொற்றுவியாதி களுள்ளே தொலைந்து இனமே அருகிப்போய் கொண்டிருக்கிறோம்" என்று குரங்கொன்று குரல் கொடுத்தது குயில் தம்பதிகளுக்கு.
"குயிலும் குரங்கும் குறைந்து மாண்டு வருவதாக விஞ்ஞான ஆராய்ச்சி கூறுகின்றது" என்று மனிதன் அங்கலாய்த்தான்.
"இயற்கையொடு ஒட்டாததால் தான் இந்த நிகழ்வெல்லாம் நடக்கிறது" என்றது சிட்டுக்குருவி
"இயற்கையோடு ஒட்டாததால் தான்
பறவைக்காய்ச்சல் பரவியது" என்றனர் மெல்லிய குரலில் குயில் தம்பதிகள்.
மாற்றுலகு வேண்டும்
- ஏ. இக்பால் "உலகம் முன்போலில்லை. இயற்கை பெருமளவு மாறிக் கொண்டே அழிவை விளைவிக்கின்றது. பூலோகம் விட்டு வேறொருலகம் செல்லும் எத்தனத்தில் மனிதன் ஈடுபட வேண்டும்" என்று குயிலும் குரங்கும் வேண்டி நின்றன.
"யோசிப்போம்" என்றான் மனிதன். யோசித்து கொண்டிருக்கும் போதுதான் சூறாவளி, நிலநடுக்கம், பூகம்பத்தால் இலட்சக்கணக்காய் மக்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர்.
மாற்றுலகுக்கு வழி தேடுதல் அவசியமே” பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் ஒன்று கூடி ஆய்வு நடத்தினர்.
"புதிதாய்க் கண்டு பிடித்த கோளந்தான் சரி வருமோ? என்று ஊடகங்கள் உலகை குழப்பின.
"நிம்மதியற்ற உலகப் பிரச்சினைகளை உண்டாக்குவது ஊடகங்கள் தான்" என்று கூறி ஒன்று கூடிய கூட்டம் "ஊடகங்கள் இல்லாத உலகாகவும் நமதிருப்பிடம் இருக்க வேண்டும்" என பெரும் ஓசை எழுப்பியது.

19
ஜீவநதி
சாணக்கியம்
"ஆசிரியர் கழகத் தலைவர் எண்ட வகையிலை உங்களை இந்த ஸ்ராவ் றுாமுக்குள் வருக வருகவென வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்"
"அவருக்குப் பெருமையாகச் சொல்ல அதைவிட வேறை ஒண்டும் இல்லை. நீங்கள் உள்ளுக்கு வாங்கோ “என்ர பேர் மணிவண்ணன். நான் தமிழ்ப்பாடம் படிப்பிக்கிறனான்"
“உங்களோட அப்பொயின்மென்ற் கிடைச்ச ஆக்கள் எல்லாம் எப்பவோ வந்திட்டினம். நீங்கள் ஏன் லேற்?
"எனக்கு முதல்லை, வவுனியாக் கச்சேரியிலைதான் நியமனம் இப்ப இஞ்ச போட்ட உடன, அங்கத்தை வேலையள் கொஞ்சம் முடிக்கவேண்டிக் கிடந்தது. அது தான்."
"எந்த வகுப்புக்குப் போட்டிருக்கினம்? “ஐஞ்சாம் வகுப்புக்கு வகுப்பாசிரியர் ஆறு 'சீ க்கும் ஏழு டீ க்கும் தமிழ்ப்பாடம்"
" நீர் ஒரு டிகிறி கோல்டர். சின்ன வகுப்புக்குப் போட்டது கவலையோ?
டிகிறிகோல்டர் எண்டா டிகிறி அடைப்டர் ஒண்டை வாங்கிக் கொழுவிப போட்டு இருக்கவேண்டியதுதான்"
நீங்கள் சொல்லுறது விளங்குது. வவுனியாவிலை முதல் மூண்டு மாதம் சம்பளம் இல்லை. முந்நூறு ரூபாய்க் காண்டி அஞ்சு மைல் சைக்கிளோடிப் போய் நெளுக்குளத்திலை மூண்டாம். நாலாம் வகுப்புக்குப் படிப்பிச்சனான். எந்த வகுப்பெண்டாலும் சரிதான்"
"பட்டதாரியளுக்கை நீர் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறீர்
"அப்படி இல்லை. எந்த
-ம.பா. மகாலிங்கசிவம்
வகுப்புக் கிடைச்சாலும், அந்த வகுப்புப் பிள்ளையளைக் கொஞ்சம் எண்டாலும் முன்னேற்றினாப் போதும். அது சரி அஞ்சாம் வகுப்பு எங்கை இருக்கு?
"அந்த மகிழ மரத்துக்குக் கீழை. நல்ல கெட்டிக்காரப்பிள்ளையஸ் "அந்தச் சுரேஷைப் பற்றியும் சொல்லுமன்"
"ஒம், ஒம், சுரேஷ் எண்டு ஒரு பிள்ளை நல்ல கெட்டிக்காரன். ஆனால் போலியோ வந்து இரண்டு காலும் அரைவாசிச் சூம்பல். தாண்டித் தாண்டித்தான் நடப்பான். கதை கேட்டா முரடன் மாதிரித்தான் பதில் சொல்லு வான். நான் அவனை அனுதாபத்தோட தான் நடத்துறனான். அவனை கேள்வி கூடக் கேக்கிற தில்லை. இருந்தும் அசையவே மாட்டன் எண்டிட்டான். சிலவேளை அவன் சொல்லுற கதையள் ஊசியால குத்திற மாதிரி இருக்கும்."
"நானும் உண்ரை அம்மா என்னோட படிச் சவா, அப்பா என்ர ப்ரண்ட் எண்டு சொந்தங் கொண்டாடிக் கூடப் பாத்திட்டன். ஒரு பிரயோசனமும் இல்லை. வக்கிரம் பிடிச்சவன் மாதிரித் 5.T65, JBLUT65.
"நீங்க அவர் வரமுதல் ஆளை வெருட்டிறியள்.
"அந்த ஒரு பிள்ளைதான் பிரச்சினை. மற்ற படி பயப்பிடாதையும்.
女女女
"குட்மோனிங் சேர்" “காலை வணக்கம். நான்தான் பிள்ளையஸ் உங்களுக்குப் படிப்பிக்க வந்திருக்கிற தமிழ் ஆசிரியர். வகுப்பாசிரியரும் நான்தான். என்ரை பேர் மணிவண்ணன், நான் என்னைப்பற்றிச்

Page 12
20
ஜீவநதி சொல்லிப் போட்டன். எங்கை உங்களைப் பற்றி ஒவ்வொருத்தராச் சொல்லுங்கோ பார்ப்பம்."
"சந்திரகுமார். அப்பா பெயர் பரமசிவம். இருக்கிற இடம் சண்டிலிப்பாய்."
"சிவதர்சன். அப்பா பெயர் லிங்கநாதன், உடுவில்"
"மஜீபன். அப்பா பெயர் கண்ணதாசன். சுன்னாகம்"
"உம்முடைய பெயர்? "சுரேஷ்" "அப்பா பெயர்? "பரஞ்சோதி " இருக்கிற இடம்? " வீட்டிலைதான்." " சரி எனக்கு றெக்கோட்புக் எழுதிற வேலை இருக்கு. இண்டைக்கு ஒண்டும் படிப்பிக்கேல்லை. நாளைக்குத் தொடக்கம் ஒழுங்காப்பாடம் நடக்கும் என்ன?
六大火
"காலை வணக்கம் சேர்." “வணக்கம் பிள்ளையஸ் ,
இண்டைக்கு தமிழ் எழுத்துக்கள் பற்றிப் படிப்பம். சரியோ?
" ፍ§uib (SöFir. ̈ "சரி. அப்ப உயிர் எழுத்துக்கள் எத்தி னையண்டு சொல்லுங்கோ பாப்பம்?
" 12 (3. "சரி, சந்திரகுமார் வந்து எழுதிக்காட்டுங்கோ பாப்பம்?
“örf@u」(35庁所? "சரி, அடுத்து மெய்யெழுத்துக்கள். மெய்யெழுத்துக்கள் எத்தினை?
" பதினெட்டு சேர்." "நீர் வந்து எழுதிக்காட்டும் பாப்பம்." " சேர் அவருக்கு கால்லை .
"டேய் வாயைமூடு. உன்னை ஆர் இப்ப கேட்டது. நீர் வந்து எழுதும்."
" Frf(3u (8 Fir." " ஓம் கெட்டிக்காரன். சரியா எழுதி இருக்கிறீர். உம்முடைய பேர் என்னெண்டு சொன்னீர்?
" என்ன சேர். அதுக்குள்ளை மறந்து போனிங்களே? என்ரை பேர் சுரேஷ், அப்பா பேர் பரஞ்சோதி, நான் உடுவில்லை இருக்கிற நான்.000
இரவுப்பாடல்
எனது இரவுப் பாடலுக்காய் சாத்திவிடப்பட்ட அறையெங்கும் பொங்கி எழுந்து பிர்வாகிக்கிறது விரகதாபமீ - தடையேதுமின்றி ଠେଁ। ଗeciffe Diffd60ଗit களவாடக் காத்திருக்கும் காரிகை எந்தச் சந்தில் இருக்கிறாளென தேgத் திரிந்த போதெல்லாமீ 565uaLUTID65 இளைப்பாறக் கிடைத்து விடுகிறது dfoo 6L6 fibófiat 5ffe Ti5. எனக்கானவள் யாரென்று தேர்ந்தெடுக்க முடியாமலி ஒருவர் பின் ஒருவராக
ஒரக் கர்ை வெட்டும் நினைவுகள் தாக்கமீ தொலைந்த இரவிலி கலையாத கனவுகளுடன் பாஜக்கொண்டிருக்கிறேன் Cleople) of 5eofaoloаош திafறு கொர்ைடே
- ச.முருகானந்தன்
 

ஜீவநதி 21
நித்திலவர்னளின் “புத்தாக்க செருகேடு”
O () O சிநுகதைகள் குறித்த உளப்பதிவுகள்
- சின்னராஜா விமலன் பல்வகைமையில் எழுதப்பட்ட சிறுகதைகள், கவிதைகளின் * உள்ளடக்கமாக வெளிவந்துள்ளது. ஆனந்தமயில்
நித்திலவர்ணனின் கன்னித் தொகுப்பான புத்தாக்க செருகேடு. கால மாற்றத்திற்கேற்ப வாசகனின் வாசிப்பனுபவ நுகர்வும் இயைபாக்கமடைவது நடைமுறையில் பிரக்ஞை பூர்வமாக உணரப்பட்டாலும் அவ்வகை மாற்றங்களின் ஊடாக ஏற்படும் வளர்நிலையான்து சாதாரண வாசகனின் நுகர்வுத்தளத்தை எந்தளவுக்கு திருப்தியுறச் செய்கிற தென்பதில் இன்றுவரை ஏகோபித்த கருத்து நிலை இருந்ததில்லை. "புத் தாக்க செருகேடு" தொகுப்பானது 6 சிறுகதைகளையும் 12 கவிதைகளையும் உள்ளடக்கினாலும் சிறுகதைகளிலேயே சூழ்நிலைக்குத் தகுந்தாற் போன்று வேறுசில கவிதைகளையும் பொருத்தமுற இணைத்துள்ளார். சமூக அழுத்தத்தை சுமையை தன் படைப்புக்கள் மூலம் உணர்த்தும் திறன் கொண்ட ஆசிரியர் அவற்றின் ஊடுபாவாக மனித மனங்களின் சலனங்கள உள்ளத்தின் உணர்வுகள், ஏக்கச் சுழிப்புகள் என்பனவற்றை கோடி காட்டியுள்ளார். இத்தொகுப்பில் உள்ள கதைகளாகட்டும். கவிதைகளாகட்டும் அவற்றின் கருக்கள் அவை எழுதப்பட்ட காலகட்டத்திற்குரிய பின்னணியை நேர்த்தி பட பிரதிபலிப்பனவாய் திகழ்கின்றன.
அந்தவகையில் முடிவு 1, 2 என்ற சிறுகதையில் ஆசிரியர் பயன்படுத்தி இருக்கும் உத்திமுறையானது பின்நவீனத்துவக் கையாளுகையில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டை பறைசாற்றுவதாய் உள்ளது. வன்னி நோக்கி இடம்பெயர்வதற்காய் கிளாலிக்கரையில் நின்று கொண்டு படகில் ஏறிச் செல்லும் ஆநிலவன் என்ற பாத்திரம் அடையும் துர்லப நிலையை ஒரு முடிவாகவும், படகில் செல்ல மறுக்கும் ஆநிலவனுக்கு உள்ளூரிலேயே எழுது வினைஞர் பதவி கிடைத்து சிறப்பாக வாழ்வதை பிறிதொரு முடிவாகவும் ஒன்றுக் கொன்று நேரெதிரான முறையில் இரு நிலைப்பட்ட வகையில் சித்திரித்திருப்பது குறிப்பிடும் படியாக உள்ளது. இவ்வாறான பின்நவீனத்துவ உத்தி முறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் "12B என்பதும் வாசகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள்.
இச்சிறுகதையானது "பின் நவீனத்துவவாதிகள் யதார்த்தம் பற்றிய பிரக்ஞையில் ஈடுபாட்டை காட்டாமலிருப்பது இதுவரையான கணிப்பீட்டில் கவலைக்கிடமானதாகவே இருந்து வந்துள்ளது என்ற கூற்றை மறுதலிக்கும் வகையினதாகவே கருத இடமுண்டு. ஏனென்றால் 1995 இடப்பெயர்வுகால கட்டத்தில் இவ்வகை இரு முடிவுகளுக்கும் ஆட்படாமல் பெரும்பான்மையான குடும்பங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் அனுபவவாயிலாக உணர்ந்தே இருக்கிறோம்.
அதனால் தான் இவற்றை கருத்திற் கொண்டு பேராசிரியர் சபா ஜெயராசா

Page 13
ஜீவநதி 22 அவர்கள் "அணிந்துரையில் அனைத்து உதிரிகள் மீதும் ஊடுருவிநிற்கும் பொதுவான விசை பின் நவீனத்துவ வாதிகளால் உணரப்படாத நிலையில் வாழ்நிலையின் பட்டறிவோடு சங்கமித்து நிற்கும் அடிநிலைப் புலக்காட்சி கொண்ட ஆக்க வல்லுனர்களால் பொதுவிசை முன்னெடுக்கப்படுகின்றது. இவ்வகையில் சுட்டிக் காட்டப்பட்ட சிருஷ்டியாளராகவே நித்தில வர்ணனை அவர் இனம் காட்டியுள்ளார்.
இத் தொகுப்பிலுள்ள "முளையில் கருகும் காதல்கள்" என்ற சிறுகதையானது குடும்ப நட்புக்காக காதலை தியாகம் செய்யும் காண்டீபன் எனும் பாத்திரத்தின் உயர் மனப்பான்மையை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது. இது ஓர் இலக்கியவாதியின் ஆரம்ப காலப் படைப்புகள் எவ்வாறிருக்கும் என்பதற்கு சாட்சி கூறுவதாகவே அமைந்திருக்கிறது.
ஆனாலும் "ஒரு பேனாவின் கண்ணிர் வரைந்த கவிதை" சிறுகதையில் பல்கலைக்கழக மாணவர் சுற்றுலாவில் தனது காதலை நிலாவிடம் வெளிப்படுத்தும் றொபேட் அதன் போதே நிலாவை விபத்தில் மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கும் போது அதுவும் "முளையில் கருகும் காதல் ஆகவே அமைந்து விடுகிறது. இச்சிறுகதையில் குறிப்பிடத்தக்க அம்சம் இனத்துவ ஐக்கியத்தின் வெளிப்பாடும் மனிதாபிமானத்தின் மாசற்ற தன்மையும், மதங்களின் புனிதமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த வகையில் நேர்த்தியுற வெளிக் கொணரப்பட்டமை தான்.
"பதில் கடிதம சிறுகதையில் காதலித்து கல்யாணம் கட்டிய கணவன் ஆநிலவன எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டதனால் பிரிந்து வாழும் ஆர்த்தி பின்னர் எயிட்ஸ் நோய் தடுப்பு எயிட்ஸ் நோய் பராமரிப்பாளர் சங்கத்தின் இணைப்பாளராக பதவி வகிக்கின்றாள். அதன் போது எயிட்ஸ் நோயாளிகளை சமூகம் ஒதுக்காது அவர்களுடன் சகஜமாகப் பழக வேண்டும் என்று உரைப்பது பாரதியின் "வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே என்பதாயும் ஊருக்கு உபதேசம் உனக்கல்ல மகளே” என்னும் படியாகவும், சமூகத்தின் போலிமைகளை ஆசிரியர் தோலுரித்துக் காட்டுகின்றார். இதில் பிரசாரத் தொனிபடாமல் எயிட்ஸ் நோய் பற்றிய கருத்தேட்டங்களை இயல்பாக புகுத்தியுள்ளார்.
"எங்கும் இருக்கும் மனிதம்" சிறுகதையானது இனத்துவ முரண்பாடு களுக்கிடையிலும் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துவ மனப்பான்மையுடனும் நடந்து கொள்ளும் ஒருவனின் கதையை கூறுகின்றது.
"நெருப்பைச் சுமக்கும் இதயங்கள் சிறுகதை இன்று கொழுந்து விட்டு எரியும் வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினை பற்றியது. பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இல்லற வாழ்வில் இணையும் ஒருவன் மூன்று வருடங்களாக வேலை கிடைக்காததால் மனப் பிறழ்வுக்கு ஆளாகி இறுதியில் மன நோயாளி ஆகும் துயரநிலையை எடுத்தியம்புகின்றது. வேலை இல்லாத காரணத்தால் குடும்ப உறவுகளாலேயே அவலத்திற்குள்ளாகும் அகவயப்பட்ட மனோநிலையை சித்திரித்து அதன் மூலம் சமூகத்திற்கு ஒர் அபாய எச்சரிக்கையும் விடுப்பதை கண்கூடாக உணரக் கூடியதாகவுள்ளது.
நூலில் ஆங்காங்கே காணப்படும் எழுத்துப் பிழைகள் வாசிப்பிற்கு அசெளகரியத்தை உண்டு பண்ணுவதோடு மாற்று அர்த்தங்களையும் புனைவித்து பாத்திர வார்ப்புக்களிடையே முரண்பாடுகளுக்கு வழிசமைத்துவிடுகின்றது. குறிப்பாக "ஒரு பேனாவின் கண்ணிர் வரைந்த கவிதை” சிறுகதையில்.

ஜீவநதி 23
".முவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தனர். அவர்களில் நிலா என்ற பூவும் மரணித்துப்போனது
9ഖബ ഞLuffിഞ്ഞുകെuിക്രL Lffങ്ങpuി) அநாதரவாக வீசப்பட்டு கிடக்கிறது வேகமாய் வீசும் காற்று ஒவ்வொரு தாளாக வாசிக்கிறது அவள் பேனா டயரி நோக்கிநகர்ந்து இறுதிப் பக்கத்தில் கண்ணிர் சிந்தத் தொடங்கியது." என்பதில் இறந்து போன நிலாவே டயறி எழுதுவதாக தப்பர்த்தம் கொள்ள நேரிடுகிறது. அதுமாத்திரமல்லாமல் பெரும்பாலான ஆரம்ப எழுத்தாளருக்குரிய பிசிர்த் தன்மையுடன் கூடியதான மொழிநடையின் சாத்தியப்பாடுகள் நித்தில வர்ணனையும் அணுகி இருப்பது ஓரிரு கதைகளில் புலனாகவும் தவறவில்லை.
நித்திலவர்ணனின் கல்விப்புலம் விஞ்ஞான ஆற்றல்களோடு அத்வைதமாகியுள்ள கலை ஆற்றல் பண்புகளோடு தந்தை வழி கிடைத்த முதுசமும் (ஒரு எழுதுவினைஞரின் டயரி நூலை எழுதிய ஆனந்தமயில் இவரின் தந்தையே) அவரை ஒரு ஆக்க இலக்கியவாதியாக மிளிரச் செய்துள்ள தென்றால் அது மிகையில்லை.000
g) GUrGOLOGUDué leftsbGilsillb
சொல்லிவிடு உண்மையை அறியாத எனக்கு, நீ எந்த உறவென்று நான் உன் மூலமாக எண் உணர்வுகளைத் தனிமையில் பகர்கின்றேன். அரசியல் முதல் அடுக்களை வரை அனைத்தையும் அம்பலமாக்க என்னோடு நீ துணையாயிருக்கின்றாய். அதற்காக ஒருகோடி நன்றிகள் உனக்கு.
ஆனால், இதைமட்டும் நீ எனக்குச் சொல்லவில்லை எதனையும் மறைக்காமல் சொல்லிவிட எண் அம்மாவா? அனைத்துந்தரும் என் அப்பாவா? அரவணைக்கும் உடன் பிறப்பா?
நல்லது சொல்ல நண்பனா? சுற்றி வாழ்ந்து கற்றுத்தரும் நெருங்கிய உறவினனா? அல்லது எல்லாம் கடந்து எல்லாமாய் உள்ளவனா? என் வாழ்நாளில் அரைவாசியை உண்னுடனேயே இணைத்துவிட்ட என்கரம் தவழும் பேனாவே! சொற்களை அள்ளித் தரும் உன்னைச் சொல்ல உறவுச் சொல் எனக்குக் கிடைக்கவில்லை நீ எந்த உறவென்று உணமையைச் சொல்லிவிடு!
- ப.உதயசாந்தினி

Page 14
ஜீவநதி
24
புதுப்புனல்
கணிதப்பிரிவில்
சந்திரசேகரம் கயுகரள் தற்போது யா/ஹாட்லிக்கல்லூரியில் உயர்தரம்
கல்வி கற்கின்றார். வடமராட்சி காந்தியூர் கிராமத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை யா/தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலையில் கற்றார். கவிதைத்துறையில் ஈடுபாடு கொண்ட இவரிள் கவிதை நூலொன்றும் விரைவில் வெளிவர உள்ளது.
குறுங்கவிதைகள்
1) பூக்களிற்கு
கண்ணில்லாததேனோ பூமியின் கண்கள் அவை
2) சமாதானம் என்பது
பள்ளிப்பாடங்களில் கடைசி அத்தியாயம்
என்றுமே கற்பிக்கப்படாதவை.
3) வாகனத் தொடரணிக்காய்
அடிக்கடி முடிவெட்டும் நம் சாலை மரங்கள்
4) நேர்மையின் பாதையில்
முட்கள் முளைப்பதில்லை வைக்கப்படுகின்றன
5) Cs + Hcl - 660d61T6B56ïT Cs+ Ho(g) - 6jusiglò நானும் என் கனவும்
வெற்றி உனக்குத்தான்
இலட்சியம் கொள் இலக்குத் தவறாது ; இனிமேல் வெற்றி இருப்பது உனக்கு, இமைகள் மூடி இருள் என்று சொல்லாதே இன்னும் வாழ்வது ஏனென்று எண்ணாதே;
இறக்கை வேண்டி பாறைகள் சுமக்காதே சிறகு இருக்க சிலுவை தனை நாடாதே, சோகங்கள் தோல்விகள் போகங்களுக்குப் பரிச்சயம் வசந்தம் நாளை, வரும் நிச்சயம் முயற்சிதனை மூச்சுக்காற்றில் முழுநேரம் சுவாசித்திடு உன்னை நீ நம்பு உலகை வெல்ல வேறேது அம்பு.
 

ஜீவநதி 25 6225/7z/7//7záblaš52 táboř777 6upnblutýlaj7
(Body Language) upcióluóg/6/ib
தொடர்பாடல் (Communication) என்பது ஒருவர் மற்றொருவருடன் தனது எண்ணங்கள், கருத்துக்கள், செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் முதலானவற்றை வழங்குவதான செயற்பாட்டினைக் குறித்து நிற்கிறது. உடனுள்ள பிறமனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் இத்தேவை உணவு,உறைவிடம் என்ற பொருட்தேவைகளுக்கு அப்பால் முதன்மை இடம் பிடித்துள்ளது.
தகவல் தொடர் பாடல் செயற்பாட்டில் தகவல் பரிமாற்றம், தகவலைப் பதிவு செய்தல், தகவலைப் பரப்புதல், மீட்டுருவாக்கம் செய்தல் முதலான முயற்சிகளில் காலத்துக்குக் காலம் பல்வேறு மாறுதல்களும் நவீன உத்திகளும் இடம் பெற்று வந்துள்ளன. இப்பின்புலத்தில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியானது தொடர்பாடல் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்ட தொடர்பாடல் சாதாரணமாக வழக்கொழிந்து வருவதனைப் பார்க்க முடிகிறது. தகவலை எளிதாகப் பரிமாறிக் கொள்தல், தகவலை விரைவாகப் பரிமாறிக்கொள்தல் என்ற அடிப்படை களில் நவீன கருவிகள் பலவும் இன்று பாவனைக்கு வந்துள்ளன. மின்னஞ்சல் (Electronic Mail), தரல் அஞ்சல் (Voice mail), ends6Das U6060)ds (p60mp60)LD56i. (Bulletin Board systems), S6rlsforbib (Internet), Gafusib605ds (335|T6f தொடர்பாடல் சாதனங்கள், தொலைநகல் (Fax), பேஜிங்(Paging) முதலான பல்வேறு தொடர்பாடல் சாதனங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆயினும் உடல்சார் மொழியின் முக்கியத்துவம் என்பது நவீன உலகில் இன்று வரை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகவே இருந்து வருவதனைப் பார்க்க முடிகிறது. உலகளாவிய நிலையில் நடைபெற்றுவரும் ஆய்வுகளும் இதனையே குறிப்பிடுகின்றன.
Đ_L6ỏ ởTĩ QupTựệì (Body language) (5mớìgồ5 விளக்கத்தினைத் தருதல் இவ்விடத்தில் அவசியமானதா கிறது. பேச்சு மற்றும் எழுத்தைத் தவிர நமது செய்கைகள், பாவனைகள், நடவடிக்கைகள் உணர்த்தும் செய்திகளைப் பொதுவாக உடல்சார் மொழி எனக் கருதிக் கொள்ளலாம். பேசாமல் பேசுகின்ற இத்தொடர்பாடல் முறையினை Faŝ60i56ö “Non - Verbal Communication) 6T6ði mai

Page 15
ஜீவநதி 26 குறிப்பிடுவர். மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மொழிவழக்கில் இருந்து வருகிறது. ஆயினும் இம்மொழியின் முக்கியத்துவத்தினைப் பலரும் முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை என்றே குறிப்பிடலாம் போலத் தோன்றுகிறது.
லண்டன் பல்கலைக்கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின்படி வார்த்தைகள் வழியான தொடர்பாடல் என்பது வெறும் இருபது சதவிகிதம் மட்டுமே என்றும் உடல்சார் மொழியூடான தொடர்பாடல் மூலமாகவே மீதமுள்ள எண்பது சதவிகிதமும் நிறைவேற்றப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மனிதர்கள் சராசரியாக நிமிடத்துக்கு முப்பது முதல் நூர்று வரையிலான வார்த்தைகளைப் பேசுவதாகவும் ஆயினும் அதைவிட வேகமாக மனதின் (mind) ஒட்டம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறான பின்புலத்தில் உடல்சார் மொழியின் பங்கு பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒருவருடன் நாம் பேசும் போது எமது பேச்சை மட்டும் ஒருவர் கவனிப்பதில்லை. மாறாக நாம் பேசும்போது எப்படி அமர்ந்திருக்கிறோம் அல்லது நிற்கிறோம், எப்படி எல்லாம் கைகளை ஆட்டிப்பேசுகிறோம், பேசும் போது கண்களை எங்கெல்லாம் சுழல விடுகிறோம், எப்படிச் சிரிக்கிறோம் இவ்வாறான எல்லாவற்றையும் அவர் கவனித்துக் கிரகித்துக் கொள்வார். நாமும் அவ்வாறு செய்கிறோம். மேற்குறிப்பிட்ட செய்கைகள் எல்லாம் தம்மைப்பற்றிப்பிறருக்குப்பலவற்றைச் சொல்லி விடுகின்றன என்பதே உண்மை.
உடல்சார் மொழி என்பது வெறும் பார்வையும் உடல் அசைவும் மட்டுமல்ல. நாம் அணிந்திருக்கும் உடை, அதன்நிறம், பயன்படுத்தும் பொருட்கள் இவை எல்லாமே இதனுள் அடங்கும். குறிப்பாக சிலவகைக் கம்பனிகளின் பொருட்களைப் பயன்படுத்துவதே சிலருக்குக் கணிப்பைக் கொடுத்து விடுகிறது.
குறிப்பிட்ட ஒருவர் (மரியாதைக்குரியவர்) வரும்போது அவரை எதிர் கொள்ளும் நிலையில் "தரையில் முகம் புதைய ஒரு வணக்கம் செய்தலினூடே பெற்றுக் கொள்ளும் மதிப்பு என்பது தனியானது.
நம்மில் பலரும் இடத்துக்குத் தகுந்தவாறு உடை உடுத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதில்லை. எல்லாவித நிகழ்வுகளுக்கும் பெரிதும் ஒரே மாதிரியாகவே செல்கிறோம். இது தவறானதாகும். ஒவ்வொரு தரத்தினைப் பற்றியும் இந்தச்சமூகம் சிலகணிப்புக்களை வரித்துக் கொண்டுள்ளது. அதற்கேற்பவே எமது நடத்தைகளும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசேட வைபவங்கள், நேர்முகத்தேர்வு என வகைவகையாக அமையும் நிகழ்வுகளுக்கேற்ப ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் சிலவற்றை உணர்த்திக் கொள்ளமுடியும். கீழைத் தேசச் சூழலில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்கு வரும் போது இறுக்கமான "டெனிம்" காற்சட்டையும், "ரிசேட்டும் அணிந்து வந்தால் மாணவரிடத்து அது நேர் எதிர்மாறான அர்த்தத்தையே கொடுக்கும். இறுக்கமில்லாத காற்சட்டை, வேட்டி, ச்ேலை இவற்றுக்கான மதிப்பே தனியானதாகும்" உடைகள் தொடர்பில் கவனிப்புக்குரிய பிறிதொருவிடயம் அவற்றின் நிறமாகும். சமூகப் பிரபலங்களும் அரசியல்வாதிகளும் வெள்ளை மற்றும் வெளிர் நிறங்களாலான ஆடைகளை உடுத்துவதன் மூலம் பிறருக்குப் பலவற்றைச் சொல்ல நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். வெள்ளை ஆடைகளை உடுத்துவதன் மூலம் தம்மைத் தூய்மையானவர்களாகக் காட்டிக் கொள்ளப்பலரும் முனைகிறார்கள். கடும் நிறங்களை விரும்பி அணிபவர்கள்

ஜீவநதி 27 தொடர்பில் சில கணிப்புக்கள் உலவி வருகின்றன.
ஒருவருடைய சிகை அலங்காரம் கூட ஒருவரைப் பற்றி உணர்த்திவிடுகிறது. வயது, தொழில், பால்நிலை இவற்றுக்கு ஏற்ப சிகையினை அலங்கரித்துக் கொள்வதில் காட்டும் நாட்டம் புறந்தள்ளக் கூடிய ஒன்றல்ல.
அலுவலகம் ஒன்றில் ஒருவரைச் சந்திக்கச் செல்லும் போது அவர்முன் நாம் எவ்வாறு இருக்கிறோம், ஆசனத்தை எவ்வாறு கையாளுகின்றோம், சந்திப்பின் நிறைவில் ஆசனத்தை எவ்வாறு மீளவும் முன்பு இருந்ததைப்போல ஒழுங்கு படுத்துகிறோம். இவை எல்லாம் கூட உடல்சார் மொழிகளே எனலாம்.
உறங்கச் செல்லும்போது கட்டிலில் ஏறிப்படுப்பவர்களில் பலரும் துயில் கலைந்து எழும்பும் போது கட்டிலை மீளவும் தட்டி விரித்து ஒழுங்கமைத்துச் செல்லாது அவ்வாறே விட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆடை மாற்றுகையில் கூட ஆடைகளை பாம்பு செட்டை கழற்றுவது போல வட்டமாகவோ அல்லது கும்பலாகவோ அவ்வவ்விடத்திலேயே கழற்றி விட்டுச் செல்கிறார்கள். இது போன்ற செய்கைகள் எல்லாம் எம்மை பற்றிப் பிறருக்குப் பலவற்றையும் சொல்லி விடக்கூடியவையாகும். இவையும் உடல்சார் மொழிகளேயாகும்.
அரச அலுவலகங்களில் பிறருக்கு ஒடி ஒடி உதவி செய்யும் பலரும் அவ்வுதவிகளின் நிறைவில் தமது பிடரி முடியைச் சொறிதலினுடே உதவி பெற்றவருக்கு ஒருவிடயத்தைச் சொல்ல முனைகிறார்கள். தம்மைக் கவனிக்க வேண்டும் என்பதே அவ்வுடல் சார் மொழி உணர்த்தும் செய்தியாகும். இடைநிலை மற்றும் கடைநிலைக் கையூட்டுப் பேரங்களில் இதுவே பிரதான உடல்சார் மொழியாக உள்ளது.
உறவினர் மற்றும் விருந்தினர் முன்பு அடம் பிடிக்கும் குழந்தைகளை அடக்குவதற்குப் பெற்றோர் பலரும் பல்வேறு உடல்சார் மொழிகளைக் கையாளுகின்றார்கள். உதட்டைக்கடித்தல், விழியைப் பிதுக்குதல், நாக்கைக் கடித்தல், ஒற்றை விரலை ஆட்டுதல் இப்படி இவை பல வகைப்படும். இவை உணர்த்தும் அர்த்தம் "மகனே இன்றைக்கு உனக்கு இருக்கு, "இன்றைக்கு சரி, வெளுவை இருக்கு, "சாத்து இருக்கு இப்படியாக இருக்கலாம்.
மேடையில் அமர்ந்திருக்கும் பிரமுகர் ஒருவர் பக்கவாட்டில் பார்வையைச் சுழல விட்டால் அதன் அர்த்தம் அவருடைய பிரத்தியேகச் செயலாளருக்கு அல்லது அவருடைய காவலருக்குக் கட்டாயமாகத் தெரிந்திருக்கும்.
விருந்துக்குச் செல்லும்போது நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம், எவ்விதமான உணவுகளை எவ்வாறு கட்டளையிட்டுப்பெற்றுக் கொள்கிறோம், அவற்றைப் பிறரை அனுசரித்து எவ்வாறு உண்கிறோம் முதலானவை இத்தொடர்பில் பிரதானமான உடல்சார் மொழிகளாகும். முக்கியமான நிகழ்வுகளுக்குச் செல்லும் போது வெங்காயம் உள்ளிட்ட "வாடைவீசும் உணவுகளை உள்ளெடுப்பதைத் தவிர்ப்பது கூட ஒருவகையான உடல் சார் மொழியே எனலாம்.
ஒருவர் பேசும் போது அவர்கைகளை எவ்வாறு அசைத்துப் பேசுகிறார், அக்கைகளின் "பாவம்" எவ்வாறு நேரத்துக்குத் தகுந்தாற் போல அமைகிறது என்பன வெல்லாம் ஒருவருடைய மனத்தினைப் பிரதிபலிக்கும் விடயங்கள் என்கின்றார். லண்டனைச் சேர்ந்த உடல்சார் மொழி நிபுணர் ஜெப்ரி பியாற்றி
வாயில் விரலை வைத்துச் சூப்பாதே, மூக்கைத்தோண்டாதே, நகத்தைக்

Page 16
ஜீவநதி 28 கடிக்காதே, தும் மும்போது கைக்குட்டையைப்பாவி முதலானவையெல்லாம் குழந்தைகள் தொடர்பில் பெற்றோர் பயன்படுத்தும் உடல் சார் மொழிக்குறிப்புக் களாகும். உடல்சார் மொழியின் நுட்பங்களைத் தெரிந்தவர்களாக அவற்றைக் கையாளத் தெரிந்தவர்களாக குழந்தைகள் இருக்கவேண்டும்.
ஒருவர் பேச ஆரம்பிக்கும் முன்பே அவரைப் பற்றிய கணிப்பீட்டை மூளையானது மனதுக்கு அஞ்சல் செய்து விடுகிறது. இதன் அடிப்படை அங்க மொழியே எனலாம். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்", "முழிக்கிற முழியைப் பார்த்தாலே தெரியுது,"வெறும் வாய் தான்", "வாய்ச்சவடால் தான்" என்பது மாதிரியான பழமொழிகளும் மரபுத்தொடர்களும் இத்தொடர்பில் வழங்கி வருகின்றன.
நேர்முகத் தேர்வுகளில் சற்றே இறுக்கமான ஆண்தோரணை கலந்த சாயலுடன் பேசும் பெண்களைவிட பெண்களுக்கேயுரிய மென்மை இழைந்தோடப் பேசும் பெண்கள் வெற்றிபெறுகிறார்கள். நேர்முகத்தேர்வில் தேர்வாளர்களை நேருக்குநேர் எதிர்கொண்டு பேசும்பலரும் வெற்றிபெறுகிறார்கள். கேள்விகளுக்குப் பதிலளிப்பது முக்கியம். அதை விட முக்கியம் உடல்சார் மொழியாகும்.
மேலைநாடுகளில் உடல்சார் மொழிப்பயிலகங்கள் பலவும் செயற்பட்டு வருகின்றன. இப்பயிலகங்களில் உடல்சார் மொழியின் நுட்பங்கள் பலவற்றையும் கற்றுத்தருகிறார்கள். இக்கலாசாரம் கீழைத்தேச நாடுகளிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். மனிதர்கள் சாதுரியமாகவும் சூட்சுமமாகவும் செயற்படுவது அதிகரித்துச் செல்கிறது. இச்சூழலில் அச்சூட்சுமங்களை வெளிப்படுத்துவதற்கான அல்லது அம்பலப்படுத்துவதற்கான மனித முயற்சிகளும் இன்னொரு புறத்தில் நடந்து கொண்டு தானிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் உடல்சார் மொழி குறித்த தீவிரமான சிந்திப்பு எனலாம். உடலியலும் உளவியலும் கலந்த (Meta Communication) நுட்ப உடல்சார் மொழியை பொருத்தமுறக் கையாண்டால் உலகம் நாம் விரும்பியவாறு
(BLUGILò.
βδΦύδου έφτώ 5ιτονίύ
மீந்து கிடக்கும் அநீநியப்படுத்தப்பgண். வாழ் சமுத்திரத்திலி ஐனநாயகம் இளசியாகி முத்துக்கள். வாழ்வின். பார்வை நதிகளை ஒலிகளைத் தொலைத்தது ஏன்? கழிவுப் பொருளாக்கும்போது.
S.
குற்றவாளி ஆ(கிகி வலிகள். Տ 6T6f 66 T DUIrife. TIgusaš ஒரு புறாவாக மாறாததேனோ? లి பிரியம். மறக்கழக்கப்படுகிறேன். 剑 வியப்பாயிருக்கிறது. இப்போது. 8 சூரியன். கண்டுபிடிக்கப்பட்ட இடுமீபை நோய் காலம். 45 අ56කය ථl(විශේෂාං||5. @
பொறுத்திருப்பேன். f மனிதர் இல்லாதொழிக்கப்பgணி. சாம்பலை நோக்கி நகரும் 7 பூக்கள் தேடி அழிக்கப்பழன். காலம் நிறுத்தும். s/ பொமீமைகள் சிறுவருக்கு வெர்ைபுறாக்களின்
சிறீபெனிக்காக.

29
eĝo
வநதி
கிராமியக் கலைகளும்
செந்நெறிக்கலைகளும்
தமிழரிடையே குறிப்பாக இசை, நடனம், இலக்கியம், என்பன செந்நெறிக்கலைகளாகப் பயிலப்பட்டு வருவன. எல்லா இலக்கியமும் இசையும் நடனமும் செந்நெறிக்கலைகள் அல்ல. கர்நாடக சங்கீதம், பரதம், கதகளி, குச்சுப்படி, ஆகியவையே செந்நெறி கலைகளாகப் பயிலப்பட்டு வருவதைக் காணலாம். அதாவது மக்களுடைய சமூக நிகழ்வுகளுக்கேற்ப அவை பயிலப்பட்டுவருகின்ற தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஒதுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோா, முன்னிலைப்படுத்தப் பட்டோர் என்கிற சமூக நிலை கலைகளிலும் காணப்படுகின்றன. முன்னிலைப்பட்டோரே செந்நெறிக் கலைகளிலும் ஆர்வம் கொண்டவராகவும், அதனை ரசிப்பவராகவும் காணப்படுகின்றார். செந்நெறிக்கலைகளைப் பொறுத்தவரை ஒழுங்கான ஒரு பயில்வு அவசியம். பயிற்சி முக்கியம். ஒரு காலஅளவு தேவைப்படுகிறது. அங்கு புரிதல் என்பது மிக அவசியம். சரீரம், சாரீரம் ஆகிய இரண்டுமே ஒத்து வரவேண்டும். அதனுடைய மொழியை அறிந்து கொள்ள வேண்டும். ஆதலால் இங்கு அறிவு என்பது அவசியமாகின்றது. இக்கலைகளைப் பயில்வதற்கு அறிவு என்பதோடு பொருளியல் தேவையும் அவசியமாகிறது. ஆகவே நகர்ப்புறம் சார்ந்து இக்கலை வழக்கில் இருந்து வருகிறது. அரங்கேற்றம் நிகழ்த்தப்படும் போதுதான் அதனுடைய முழுமை வெளிக்கிளம்புகிறது. சிலப்பதிகாரத்தில் மாதவி நடனம் ஆடினாள். 11ஆடல்கள் 5 வயதில் இருந்து 12 வயது வரை, 7வருடப்பயிற்சி அதன் ஒழுங்கு முறைகள் என்பன பற்றி அரங்கேற்று காதையில் காணலாம்.
நாட்டுப்புற நிகழ்கலைகள் அல்லது கிராமியக்கலைகள் என நாம் அழைக்கும் கலைகள் ஒரு குறிப்பிட்ட ஒரு சில இனத்தவர்களால் நிகழ்த்தப்படுகிறது. அது இடத்திற்கிடம் வேறுபடும். ஒரு பெயர் கொண்டு அழைக்கப்படாவிட்டாலும் கூட அதனது ஆட்ட முறைமையாடல் முறைமை என்பன வேறுபடும். தமிழகத்திலும், ஈழத்திலும் இக்கலைகள் பரந்துபட்டபயில்வு நிலையில் உள்ளன.
கலை என்பது சமூக அழகியல் நிகழ்வாகும். இது சமூகத்தின் பண்பாட்டுள்நிலை கொண்டு நிற்பது. பண்பாடு என்பது அச்சமூகத்தின் வாழ்க்கை முறை. அதற்குள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் யாவும் (மதம், உணவு, சூழல், மனிதஉறவுமுறை, வாழ்க்கை நோக்கு, பொருளாதாரம்) இடம்

Page 17
ஜீவநதி 30 பெறும். பண்பாட்டின் இயல்புகள் எனப்பின்வருவனவற்றைப்பண்பாட்டு மானிடவியலாளர் முனைப்படுத்திக் கூறுவர். 1. பண்பாடு அறியப்படுவது 2. மனித வாழ்க்கையில் உயிரியல், உளவியல், சூழல்,வரலாற்று அம்சங்களுடாக வரும் 3. பண்பாடு குறிப்பிட்ட அமைப்பினைக் கொண்டது. 4. பண்பாடு குழுவிற்கு குழு மாறுபடுவது 5. அது அசைவியக்கம் கொண்டது. 6. அதன் காரணமாக வெளிப்படையானவையாவும் உய்த்துணரப்படுபவையாக உள்ளது. பண்பாடு என்பது கலைகளின் மூலம் உயிர்ப்பினை ஏற்படுத்திக் கொள்கிறது. அந்தநிலையிலேயே அச்சமூகத்தின் படைப்பியல், உந்துதலும், படைப்பியல் வன்மையும், அழகியல் தொழிற்பாடுகளும், தொழிலியல் முறைகளும் இயங்குகின்ற கலைகளில் முக்கியத்துவம். அவை பண்பாட்டின் வெளிப்படுகைத்தளமாக அமைவதே கலைக்கும் பண்பாட்டுக்குமுள்ள இந்த உறவுகாரணமாக அந்த சமூகத்தினை எடுத்துணர்த்தும் உயிர்ப்பு மையமாக அமைகிறது. கலை என்பது ஒருநடைமுறை அதன் வெளிப்படுகை காரணமாக கலைகள் வேறுபடும். இந்த இடத்திலே மேற்சொல்லப்பட்ட கலைகளும் வெளிப்படும். தமிழரிடையே பல்வேறுகலைகள் பயிலப்பட்டு வருகின்றன. வாய்ச்சொல் கலைகள், நுண்கலைகள். காட்சிக்கலைகள் ஆற்றுகைக்கலைகள், சடங்குக்கலைகள், தொழில்நுட்பக் கலைகள் என அவை விரிந்துசெல்லும்.
ஒரு காலத்தில் ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு காலப்போக்கில் செழுமைப்பட்டு மெல்ல மெல்ல கலைத்துவ அம்சங்களைப் பெற்றுக் கொண்டு கலைகளாய் வெகுசனத்தொடர்பு ஊடகங்களின் பயனால் இன்று குக்கிராமங்களிலுள்ள கலைகளைக்கூட அனைவரும் அறியும் வண்ணம் வெளிக்காட்டப்பட்டு வருகிறது? இக்கலைகள் பொதுவாகப் பரம்பரை பரம்பரையாக வருவதுமுண்டு. பொதுவாக கிராமங்களில் அவர்களுடைய மொழியினூடாக அது வெளிவரும். பேச்சுவழக்கு அதன் தொனி. இதே நேரத்தில் கிராமியக் கலைகளாய் பயிலப்பட்டு வரும் கோலாட்டம், கும்மி, கரகம், காவடி, மொம்மலாட்டம், போன்ற செந்நெறிக்கலைகள் இடம்பெறுவதையும் நாம் காணலாம். ஆனால் அவை செந்நெறிக் கலைகளுக்குள்ள தன்மைகளினுள்ளே அங்கே இடம்பெறும். ஆகவே segs செழுமைப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகவே காணப்படும். கிராமியக்கலைகளாக நிகழ்த்தப் பட்ட போது இந்த உறவுமுறை அதன் தன்மைகள் மாற்றமடைந்து விடும். அங்கு அதன் வடிவம் என்பதும் கட்டமைப்பு, தாளம், பாவம், என்பன மட்டுமே மேற்கிளம்பும். ஆகவே செந்நெறிக்கலைகள் அதன் பயில்வு முறையினால் எப்போதும் மேல்தட்டு வர்க்கத்தினருக்குரியதாக இருப்பதைக் காணமுடியும். அதற்குரிய வாத்தியங்களும் அவ்வாறுவீணை, வயலினி. மிருதங்கங்கள் வாங்குவதற்கு அவர்களால் தான்முடியும்.
நிகழ்த்து கலைகள் என்கின்றவகையிலே கிராமியக் கலைகளும், செந்நெறிக்கலைகளும்ஏதோ ஒருவகையில்மக்களுக்காகவேநிகழ்த்தப்படுவன. ஆனால் அதனுடைய ரசனை மட்டங்களில் வேறுபாடு காணப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஒரளவு கற்றவரால் தான் தெலுங்கு கிர்த்தனையைக் கேட்கமுடியும் பரதநாட்டியத்தைச் சிறிதளவேனும் கற்றுணர்ந்தவரால்தான் அதன்முத்திரைகளை விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் நாட்டுப்புறக்கலைகள் ரசிப்பதற்கேற்ற ஒருகற்றலும் அவசியமானதல்ல. படித்தவராலும் அதனை ரசிக்கமுடியும் என்பதே அதன் உண்மையாகும்.000

31
ஜீவநதி
திசையைச் சிறைப்பிடித்த
ు శ్రీf6 நேசம்
எண்ணற்ற மரங்களினை இரசித்து எனை இழப்பேன். அவற்றின் அழகுகளை, அவற்றின் எளிமைகளை, அவற்றின் அடக்கத்தை, அவைசெய்யுஞ்சேவைகளை, அவற்றினது ஈகத்தை, அவற்றினது மண்பற்றை &Süut êSÜLuiguurTui எத்தனை சிறப்புகளை நினைத்தபடி நேரம் நகள்வதனை மறந்திருப்பேன். மரங்கள் சிரித்திடுமா..? ஆம் அவற்றின் பூக்கள் தான் fifuguedrCu6or பூவாசம் அவற்றின் மொழியென்பேன். எத்தனை மொழிகள்தான் இவற்றிடம் உண்டென்று நித்தம் வியந்து சிலமொழி பயின்றிடுவேன். எவ்வெயில் மழையினிலோ எவருடலை வெட்டையிலோ அம்மரங்கள் கொள்ளும் சகிப்புதனைக் கண்டதிர்வேன். பிரதிபலன் பாராமல். சூரியனை உணவாக்கி உலகுயிர்க்களித்து விட்டு ஒரு ஞானிபோற் சரியும் இவற்றினது கருணையினை என்னோடும் ஒப்பிடுவேன். எங்களது மூச்சுக் கழிவுகளைச் சுவாசித்து தன்மூச்சை எங்களுக்குத்
தரும் அவற்றின் தரம். வியப்பேன்.
உலகிற்கே ஆதாரம் எனும் போதும்
மெளன மொன்றே பதிலாக்கி நிதம் பூக்கும் பலம். பண்பு பார்த்தெழுவேன். தனக்கு எதுஞ் சேர்க்காது தன் பூ பழம். காயை
அன்புரிமை நேசித்தேன். வேர்களுக்கு கெளரவம் கிடைக்காமல்
50
வாழதது வர. வேரை வாடாமல் பாதுகாக்கும் ஈர இதயமும் கண்டேன். LDİQLqLDÜGBLib ஒரடி கூட நகராது தவமிருக்கும் Augpub, அவற்றின் தியாகமும் நிதம் உணர்ந்தேன் மரங்களுடன் நட்பு வைத்தபின். ஆம். மனிதரது போலிப் பெருமைகளைக் கொஞ்சம் புரிந்து கொண்டேன்.
- த.ஜெயசீலன்

Page 18
32
ஜீவநதி
விதியே விதியே.
இவளின் கண்களில் இன்றும் மிரட்சி தெரிகிறது.
கொஞ்ச நாட்களாக இவளைக் கவனிக்கத் தொடங்கியதில் இருந்து, இவள் கண்களில் இந்த மிரட்சியை கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன்.
எதேச்சையாக ஒரு நாளில் இந்த மிரட்சியை அவதானித்ததாக ஞாபகம். ஆனால் அப்போது அது ஒன்றும் ଜୋurfu விடயமாக தெரியவில்லை. ஆயினும் சென்ற வாரத்தில் ஒரு நாளில் நாதன் சேர் வந்து சொன்ன பின்புதான் இவளை நான் உற்றுநோககத் தொடங்கினேன்.
வேறு ஆசிரியர்களாயின் நாதன் சேரின் கதையை பெரிதுபடுத்த மாட்டார்கள்.
"உது உப்பிடித்தான் ரிச்சர் எல்லாத்துக்கும் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கும். பிள்ளைகளை வெருட்டி வைச்சிருக்குது. நாதன் பற்றி சக ஆசிரியர்களின் விமர்சனம் (බඝl.
IBT60f L」「LーöFT6の605 @ L」@ló所 என்பதால் அப்படி அலட்சியம் செய்ய முடியவில்லை. ஒவ்வொருவரையும் பற்றி சரியாக எடைபோட்டுவிட வேண்டும் என்ற நினைப்பில் சின்னஞ்சிறிய விடயங்களையும் கூட கவனத்தில் எடுத்தேன்.
எவரையும் கவர்ந்துவிடும் அழகு இவளுக்கு. வட்டமான முகம. துருதுரு என்ற விழிகள், தொட்டால் சிவந்துவிடுமோ என்று தயங்க வைக்கும் றோஸ் நிற மேனி ஆனாலும் இவள்
- கானப்பிரியன்
முகத்தில் களை இல்லை.
காலைநேரப் பாடவேளை களில் இவள் ஆர்வமாகத்த ரான் இருப்பாள். மதியத்தின் பின்புதான் இந்த மிரட்சியும் சோர்வும்.
ஏதோ கள்ளத்தனம் செய்பவள் போல எதையோ பறி கொடுத்தவள் போல காணப்படும் இவளை விசாரிக்க வேண்டுமென உள்மனம் சொல்கின்றது. எப்படி விசாரிப்பது? இவளின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தால் என்ன?
இவளை மட்டும் விசாரித்தால் மற்றப் பிள்ளைகளிடமிருந்து இவள் அந்நியப்பட்டு விடுவாள்.
நானே வழிகாட்டலுக்கு பொறுப்பான ஆசிரியை என்ற விடயம் எனக்கு கைகொடுக்கிறது. திரள் பதி வேட்டு அட்டைகளை நிரப்பவென் எல்லாப் பிள்ளைகளிடமும் குடும்ப விபரங்களை பற்றி விசாரிக்கத் தொடங்கினேன்.
சாதாரணமான குடும்பம். தகப்பன் மேசன் வேலை செய்பவர்.
தாய் நித்திய நோயாளி. சகோதரர்கள் இருவர். ஒருவருக்கு வயது இரண்டு மற்றையவனுக்கு ஐந்து ஆகிறது
காலையிலும் பாடசாலை விட்டுச் சென்றதும் சகோதரர்களை பராமரிப்பது இவள்தான்.
இவள் இன்னும் பெரியபிள்ளை
ஆகவில்லை.
இந்த விபரங்கள் இவளின் கண்களின் மிரட்சிக்குப் பதில்

33
ஜீவநதி சொல்வதாக இல்லை.
மதியத்தின் பின்பான இவளின் சோர்வையும் மிரட்சியையும் கண்டறி வதற்கான வாய்ப்பு எனக்குக் குறைவு
இருநாட்களில் மட்டும் ஆறாம்பாடவேளைதான் இவர்களுக்கு எனக்குப்பாடம்,
இந்த இரு பாடவேளைகள் இவளை அவதானிக்கப்போதாது என்று எனக் குத் தெரிகிறது. அதிகம் விசாரிக்கவும் முடியாது.
அதிகம் விசாரிக்கப் போய் இவள் கள்ளத்தனம் எதும் செய்வதாக இருந்தால் உசாராகிவிடுவாள்.
இடைவேளைக்குப் பின்னர் என்னென்ன பாடங்கள் என்று வகுப்பு நேரஅட்டவணையை நோக்குகின்றேன். குறிப்பாக ஒரே பாடங்கள் என்றில்லாமல் எல்லாப்பாடங்களும் இடைவேளையின் பின்பு மாறிமாறி வெவ்வேறு நாட்களில் இடம் பிடிக்கின்றன.
பாடங்களில் பாட ஆசிரியர் களில் உள்ள வெறுப்பும் இவள் மிரட்சிக்குக் காரணமாக முடியாது.
குழுவேலைக்காக பிள்ளை களை இடம்மாற்றும்போது இவள் தனது இடத்திலேயே இருந்து கொள்ள வேறுபிள்ளைகள் தான் இவ்விடத்திற்கு குழுச்செயற்பாட்டிற்காக வருகின்றனர். பாடங்களில் கவனமின்றி மேசையின் மீதுள்ள தனது புத்தகங் களையும் கொப்பிகளையும் மேசை றாக்கைக்குள் வைப்பதும் மேசை றாக்கைக் குள’ இருந்த புத்தகங்களை மேசைமீது எடுத்துவைப்பதுமாக இருக்கும் இவளின் செய்கை ஆத்திரத்தை தருகின்றது.
இவளின் நடவடிக்கை பற்றி இவளருகே இருக்கும் மாணவியிடம் விசாரிக்கின்றேன்.
இப்போது கொஞ்ச நாட்களா கத் தான் இப்படியாம்.
முன்பு என்றால் எல்லோரு டனும் சேர்ந்து சாப்பிட்டு சந்தோசமாக இருப்பாளாம். இப்போதெல்லாம் அப்படியில்லையாம்.
பிள்ளைகள் எல்லாம் சாப்பாட்டுத்தட்டில் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு வகுப்பறையின் முன்னாலுள்ள பூந்தோட்டத்தில் ஸ்ரோன் சிற்றுகளில் அமர்ந்துதான் சாப்பிடுவார்களாம். ஆனால் இவள் மட்டும் வகுப்பறையிலேயே தங்கிநின்று விடுவாளாம்.
இவசாப்பிடாமல் இருக்கிறாவோ..? எனது சந்தேகத்தை அவளின் சக மாணவியிடம் கேட்டு வைக்கிறேன்.
"இல்லை ரிச்சர் சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் பார்க்கத்தான் வகுப்புக்கு வெளியேயுள்ள "பைப் பிலுள்ள தண்ணிரில் கழுவுறவ ரீச்சர்.
பிள்ளைகளுக்கான மதிய உணவுத்திட்டம் ஒருவாரப்பிரசாதம். அதிலும் சோறு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவருவது எல்லோருக்கும் திருப்தி,
இவளுக்கேன் இந்தச் சோர்வு? இடைவேளையில் சோறு உண்டபின் உற்சாகமாக இருக்கலாம்தானே. இன்று இப்பிள்ளைகளுக்குக் கிடைக்கிற வசதிகளெல்லாம் அக்காலத்தில் எங்களுக்கு இல்லையே என்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன்.
இலவச பாடப்புத்தகம், கொப்பி, பேனை, பென்சில், புத்தகப்பை யுனிபோர்ம் துணி, சப்பாத்து இல்லா தோருக்குச் சப்பாத்துமதிய உண வாய்ச் சோறு, உணவுத் தட்டு.
இத்தனை வசதிகளையும் செய்து தந்ததும் பிள்ளைகளுக்குப் படிக்க

Page 19
ஜீவநதி முடியவில்லை என்றால். பெற்றோரைத் தான் குறைசொல்ல வேண்டும். பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை வேண்டும்.
பாடசாலைக்கு அடிக்கடி வந்து தம் பிள்ளைகளின் பெறுபேறுகள் குறித்து விசாரித்தறிந்து செல்ல வேண்டும். ஏழாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கும் ஏனைய ஆசிரியர்களிடமும் இவள் பற்றி விசாரிக்க வேண்டும் என்னை விட விசேடமாக அவர்கள் எதனையும் அவதானித்திருக்க முடியும்.
நாதன் சேரை மட்டும் தவிர்த்துக் கொண்டால் நல்லதென்று என் அந்தராத்மா சொல்கிறது. அவர் குட்டையைக் குழப்பி விடலாம்.
நாதன் சேர் தான் மாணவா களின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுங்குக்கும் பொறுப்பு. கையில் ஒரு தடியுடன் சுற்றிச்சுற்றி வருவார்.
இப்பொழுதும் என் வகுப்பறைப் பக்கமாகத்தான் அவர் வருகிறார்.
வகுப்பறையின் நுழை வாயிலில் அவர் வந்து நின்றதும் பிள்ளைகள் எல்லோரும் எழுந்து நிற்கின்றனர். நாதன் சேர் வந்ததைக் கவனிக்காத இவள் மட்டும் கதிரையில் இருந்து கொண்டுமேசைறாக்கைக்குள் எதையோ திணித்துக் கொண்டி ருக்கிறாள்.
நாதன் சேரின் கழுகுக் கண்களுக்கு இது அகப்படாமலா போகும்?
சற்றுக் கோபமடைந்தவராக வகுப்புக்குள் நுழைகிறார்.
இவளின் மேசைப் பக்கமாக வந்து இவளின் மேசை றாக்கைக்குள் கையை விட்டு புத்தகங்களை இழுக் கின்றார். இழுத்த இழுப்பில் புத்தகங் களோடு இழுபட்டு வந்த சொப்பிங்பை ஒன்று நிலத்தில் விழ அதனுள் இருந்த
34
சோற்றுப் பருக்கைகள் எங்கும் சிதறிப்பரவுகின்றன.
இவள் மிரண்டுபோய் நிற்கின்றாள் "ரிச்சர் நான் நினைச் சநான் இவள் கள்ளமுளி முளிக்கும் போதே இவள் ஏதொ களவுசெய்கிறாள் என்று, இதுகளுக்கெல்லாம் கொழுப்பு ரிச்சர். இவைக்கு நாங்கள் குடுக்கிற சோறு ஒன்றும் பிடிக்குதில்லை. புழுவும் வண்டுமென்று பொய்சொல்லி சாப்பாட்டை எறியுதுகள், சீமான் வீட்டுப்பிள்ளையென்ற நினைப்பு.
நாதன் சேர் சொல்லச் சொல்ல எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. இவளை நோக்கி விரைந்து வந்து இவள் காதைப்பிடித்துத் திருகுகிறேன்.
இவள் கண்கள் குளமாகின்றன. அழுதுகொண்டே இவள் விக்கிவிக்கிச் சொல்வதையும் கேட்டுத்தான் பார்க் போமே என்று காதிலிருந்த கையை எடுக்கிறேன்.
för Fff BT6 FMTÜ Lumt 60) L. எறியிறேல்லை ரீச்சர் வீட்டுக்கு கொண்டு போய் தம்பியவையோடை சாப்பிடுறநான் ரிச்சர். அப்பா வேலைக் கெண்டு ஒருமாதத்துக்கு முன்னம் வெளிக்கிட்டுப்போய் இன்னும் வீட்டுக்கு
வரவில்லை ரிச்சர். அப்பாவுக்கு என்னாச்சோ தெரியாது ரிச்சர் அம்மாவிடம் சோறு சமைக்கக்
காசில்லை ரீச்சர்.
விக்கலுடன் இவள் விழுங்கி விழுங்கிச் சொல்லச் சொல்ல என்னையறியாமலே என் கண்கள் குளமாகின்றன.
நாதன் சேர் திகைத்துப்போய் நிற்கிறார்.000

35
ஜீவநதி
சூழ்நிலைக் கைதி
ඌlල්pජ්ඝIDIIඝ බ්‍රල් 5 6)||Iffගීගර්.පී ගොi அதரம் விட்டு வெளி வந்தாலும் இரும்புருக்கி சொருகியது போல இதயத்தில் வலியெடுக்கிறது
சூழ்நிலை கைதியாகி சுகமீ நான் கண்ட பின்பு ථiඝlé dpල්pබl65||5 வியாபித்து விட்டது அழிக்க முடியாத சோகம்
எனை நானே தேற்றிக் கொள்ள வேfைழய 6ਘBig65 ਈ5 &haাঁaআkাঁeplDাঞ্জন্টিন্ট
கொண்டிருப்பது பற்றி 6|6ଠାଞiନ୍ତି விளங்குகிறது தான்!
(8585 6] பல மைலி தாரீைg.
உ3ர்
நேசமீ மட்டும்
தேgயே ஒg வந்தேன்!
[$(But 6t୪୦୪OT ଗରାଗୀ
8ഖളെ5Iി ଠେଁଚddOff6]୪୩ 86 மோசம் செய்து துவமீசிக்காதே!
தை
| ဓါး ၊
என் நந்தவனத்து புஷ்U8ம! காதலோடு நீ என்னை பார்க்கிறபோதும் - அதனால் என் கவலைகளை தீர்க்கிறபோதும் வாழ்வின் வசந்தம் புரிந்ததம்மா!
உனைக்காணும் முன் கோழையாய் இருந்த எனக்கு காலை மாலையெல்லாம்
காதலிக்க கற்றுத்தந்தாயே..!
வாலிபக் காற்றே! 26 foTT6ő fö56öffeifen diplgujDT? நீயில்லாமல் எண் ஜீவன் இல்லையே நீ முகம் சுளித்தாலிகூட கணினிருக்கு நான் தத்துப்பிள்ளையே
காலைகளில் காதுமடலருகே இன்பமாய்த் தவழும் உன் சத்தமும். ඌlගගDIහීඝ ulg(8|J ඌ|ෙiull|f fසී දූෂdbl5 முத்தமும் தென்றலாய்மாறி எனைத் தீரீைgச்செல்லுமி
உர்ை ஸ்பரிசத்தால் நான் இன்னும் எண்ணெண்ன ஆவேனோ? உர்ை அர்ைபால் சுருர்ைடு වගIසීO6ff(8ඛll ඛ|ශ්‍රී(8ඛ(8ගIII?
என் நந்தவனத்து புஷ்பமே! நீயின்றிய எண் வாழ்வில் இதயத்துgப்பு சொற்பமே வா! வந்தென்னை
உடனே ஆக்கிரமித்துக்கொள் 8) ගIසීO6) 6Iගේ ගගI ජීසීස්(Jtර් ஒளித்துக்கொள்!

Page 20
ஜீவநதி 36
67aDrasl67UuñÜŰilař dosøWřîøff? Võõluv Po õacióav7õ
பரிணாம வளர்ச்சியில் மனிதம் தம் சமூக முன்னேற்றத்திற்காகவும் செய்திப் பரிமாற்றத்திற்காகவும் கண்டு பிடித்த கருவியே "மொழி எனப்படுகின்றது. மனிதனிற்கும் விலங்குகளிற்கும் இருக்கும் வேறுபாட்டைகாட்ட மொழி பயன்படுகின்றது. மொழியின் முக்கிய பயனாக செய்தி ப் பரிமாற்றம் காணப்படுகின்றது. உலகத்திலே எண்ணுக்கணக்கற்ற மொழிகள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு மொழிகளும் தனக்கே உரிய நடையில் வளர்ச்சி அடைந்து வருவதை அறிய முடிகின்றது. ஒவ்வொரு மொழியும் வெவ்வேறான அமைப்பை உடையனவாக காணப்படுகின்றபோதும் அம்மொழிகளை பேசும் மனிதர்கள் சிந்தனைகள் உலகப் பொதுவானவையாக ட காணப்படுகின்றன. மனித குலத்தின் வளர்ச்சிக்கு தனியே அவர்களின் மொழியில் உள்ள விடயங்களை மட்டும் கற்றால் போதாது. ஏனைய மொழியில் உள்ள விடயங்களையும் கற்றல் மிகவும் அவசியமாகின்றது. ஆனால் எல்லா மொழியையும் கற்றல் என்பது கடினமான விடயம் இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்யவே மொழிபெயர்ப்புகள் அவசியமாகின்றன.
மொழி பெயர்ப்பு என்பது "ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு விபரப்பொருளை உண்மைத் தன்மை மாறுபடாமல் மாற்றம் செய்வது, அதாவது மூலமொழியின் (Source Language) 6iugia,6061T SoldsG, GLDITguisit (Target
Language) நடை மற்றும் தன்மைக்கேற்ப மாற்றம் செய்வதே
V. மொழி பெயர்ப்பாகும எனப்படுகின்றது. இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக இருப்பினும் இன்னும் பல விளக்கங்கள் மொழிபெயர்ப்பு தொடர்பாக காணப்படுகின்றன. அவையாவன 1) "எனினார்களையோ, முலப்பொருட்களையோ பல மொழிகளின் வழி கொணரப்படுவதே மொழிபெயர்ப்பு அல்லது எணர்ணக்கருக்களை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு உருமாற்றம் செய்வதே மொழி பெயர்ப்பாகும்" -அக்நேய2) மொழி பெயர்ப்பு என்பது முத்தரிரை பதரித்த (பிரிண்ட் செய்த) துணிகளைத் திருப்பிப் போட்டுப் பார்ப்பதாகும்" 3) ஏதேனும் ஒருபாட விபரத்தை அதற்கு இணையான பாட விபரப்பொருளுடன் சமனான மொழிமாற்றத்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றித்தருவதே மொழி பெயர்ப்பாகும்"
 
 
 
 

ஜீவநதி 37 4) "மொழி பெயர்ப்பு இரு மொழிகளையும் இரு இனங்களையும் இணைத்து வைக்கும் ஒரு பாலம் ஆகும்" -மு.க.உகந்தாதராஜன்
இவ்வாறு விளக்கங்கள் காணப்படுகின்ற போதிலும் எல்லாம் மாறுபடுவதுபோல் மொழிபெயர்ப்புமுறையும் நாளுக்கு நாள் மாறியேவந்திருக்கின்றது. இன்றைய யுகம் தகவல் தொழில் நுட்பயகம். ஆகையால் நாளுக்கு நாள் மனிதனின் சிந்தனைத்திறன், மொழி வளர்ச்சி என்பன கூடிக் கொண்டே செல்கின்றது. இந்நிலை மொழிபெயர்ப்பு மொழியும் அதற்கு தக்கவகையில் மாற்றம் அடைந்து கொண்டு வருகின்றது. எனினும் மொழி பெயர்ப்பிற்கு என சில அடிப்படைகள் உள்ளன. மொழி பெயர்ப்பினை இரண்டு வகைகளாக பிரித்து கொள்ளலாம்.
1) எம் முறையில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 2) வகைமை அடிப்படை
அ) சொல்லுக்கு சொல் பெயர்த்தல் (Word to Word) ஆ) விரிவான மொழிபெயர்ப்பு (Amplitication) go) õ(bääb GLDToGLuuüu (paraphrase or Abriemont)
ஈ) தழுவல் மொழிபெயர்ப்பு (Adaptation) 9 ) (FifuT60T GLDITgGuusjL (Accurate translation) 261) GLDITguTisbib (Transcreation) மூலமொழியில் உள்ள சொற்களுக்கு இணையான சொற்களை குறிக்கோள் மொழியில் அமைத்து மொழிபெயர்ப்பது "சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பதாகும். இவ்வகை மொழிபெயர்ப்பு எல்லா நேரங்களிலும் சூழ்நிலைகளிலும் சரியாக அமையும் என்று சொல்ல முடியாது. ஒரு சில சமயங்களில் மட்டும் சரியாக அமையும். விரிவான மொழிபெயர்ப்பு” என்பது மூல மொழியிலுள்ள கருத்துக்களை மொழி பெயர்த்துச் சொல்வதோடு அவைதொடர்பான வேறு சில செய்திகளையும் சேர்த்து விரிவாகச் செய்யப்படுவதாகும. "சுருக்க மொழிபெயர்ப்பு என்பது முலமொழியில் காணப்படும் செய்திகளைக் கருத்திற் கொண்டு அது எவ்வாறு மூலமொழியில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவ்வாறே முழுவதும் சொல்லாமல் ஓரளவு அக்கருத்துக்களையெல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் வாக்கியங்களைக் குறைத்து சுருக்கமாக சொல்வதாகும். இதனால் மூலமொழியில் காணப்படும் முழுமையான நிறைவை காணமுடியாது. "தழுவல் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பின் ஆரம்பகாலத்தில் கையாளப்பட்டது. இதற்கு கம்பராமாயணம் தக்க சான்றாகும். இம்முறையில் மூல நூலாசிரியனை விட மொழி பெயர்ப்பாளரின் புலமையே அதிகமாகும். மூல நூலினை மொழிபெயர்ப்பாளர் தன் தேவைக்கேற்ப மாற்றியமைக்க வாய்ப்புண்டு. “சரியான மொழிபெயர்ப்பு " என்பது ஒரு மொழியில் சொல்லப்படும் கருத்துக்களைப் பொருள் பிறழாத வகையிலும் மொழியின் அமைப்பு சமுதாயச்சூழல் மற்றப் பண்பாட்டிற்கு ஏற்பவும் மிகப் பொருத்தமாகக் கூடுதல், குறைவு எதுவுமின்றி செய்யப்படுவது. "மொழியாக்கம் என்பது பிறிதொரு மொழியில் இருந்து மொழி பெயர்த்திருந்தாலும் கூட. நாம் மொழிபெயர்த்துள்ள மொழியின் மரபு அதில் காணப்பட வேண்டும். இதைதான் மொழியாக்கம் என்கின்றார்கள். அதாவது ஆங்கிலக் கவிதையைத் தமிழில் மொழி பெயர்த்தால் அது தமிழ்கவிதை போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மொழிபெயர்ப்பு செய்கின்ற போது மூன்று மொழி பெயர்ப்பு கொள்கைகள்

Page 21
ஜீவநதி 38 முக்கியம் பெறுகின்றன. அவையாவன, 1) மூல நூலின் கருத்துக்களை முழுமையாக மொழிபெயர்த்தல். 2) நடையும் கருத்துக்களை உணர்த்தும் போக்கும் மூல நூலில் எம் முறையில் அமைந்துள் ளனவோ, அம்முறையிலேயே அதன் மொழி பெயர் ப் பரிலும் அமைய வேண்டும். 3) மூல நூலின் எல்லா விதமான எளிமைகளையும் அதன் மொழிபெயர்ப்புப் பெற்றிருக்க
வேண்டும்.
மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மொழிபெயர்ப்பின் போது பல தகுதிகளை உடையவராக அமைதல் அவசியம். அதாவது மொழிபெயர்க்க வேண்டிய பகுதியை ஒருமுறை நன்கு படித்து செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை பல அலகுகளாக பிரித்துகொள்ள வேண்டும். அவற்றின் தன்மை, அளவு, அமைப்பு அதில் உள்ள சிக்கல் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும். வாக்கிய நிலைகளினை கண்டறிய வேண்டும்.மூலபாடம் எழுதவல்ல ஆற்றலுடையவராகவும், எம்மொழியையும் வெறுக்காதிருக்கும் தன்மை உடையவராகவும், புலமையும் படைப்பாக்க திறன் அதிகம் உள்ளவராகவும், கருத்துக்கள் சரியாக தெரிவிக்கும் ஆற்றல் உடையவராகவும், இருமொழியின் சொல்நயம், வழக்கு, தொனிப்பொருள், குறியீடு ஆகியவற்றை நன்கு அறிந்து இருக்கவேண்டும்.
பரந்து விரிந்த உலகில் வாழும் மனிதன் தனியே தன்னுடைய மொழியை மட்டும் கற்பதால் வளர்ச்சி அடைய முடியாது. அவன் மொழிபெயர்ப்பின் ஊடாகவே பயன்களை பெறுகின்றான் அவ்வகையில் மொழிபெயர்ப்பின் பயன்களாக 1) நல்ல நூல்களை மொழிபெயர்ப்பதன் மூலம் அந்நூலைப்பற்றிய சிறப்பு பிற
மொழியாளர்களுக்கு தெரிய நல்ல ஒரு வாய்ப்பாக அமைகின்றது. 2) மொழிபெயர்ப்பின் மூலம் நாட்டின் பண்பாட்டு கூறுகள் நன்கு வெளிப்படுகின்றன. 3) மொழியின் சிறப்பும், தனித்துவமும் நன்கு வெளிப்படுகிறது. 4) மொழிபெயர்ப்பின் வழியாக இரு வேறு மொழிகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவினை
மொழிபெயர்ப்பாளர் பெறுகின்றார். 5) மொழிபெயர்ப்பினால் பிறமொழித் தன்மைகள் அதன் நோக்குகளை அறியலாம். 6) புதிய புதிய சொற்களை அறியலாம். 7) கற்றலை முழுமை அடையச் செய்கின்றது. 8) நுட்பமாகக் கற்கத் தூண்டுகின்றது. 9) தாய் மொழியில் படிப்பதால் எளிதில் வேகமாக கற்க முடிகின்றது. 10) பிறமொழியை கற்க வேண்டும் என்ற சுமைகுறைகின்றது. 11) பிறமொழியின் முக்கியத்துவத்தை அறிய முடிகின்றது. 12) உலகின் பரந்துபட்ட அறிவை வளர்க்க உதவுகிறது.
மொழிபெயர்ப்பின் போது பல சிக்கல்கள் தோன்றுகின்றன. அதனை இரு பெரும் பிரிவில் அடக்கலாம். 1) எந்த மொழிக்கும் உரிய பொதுவான சிக்கல்
- இதில் மொழிகளின் இலக்கண அமைப்பு வேறுபாடுகள் காட்டப்படும் 2) ஒரு குறிப்பிட்ட மொழியில் ஏற்படும் சிக்கல்
- ஒவ்வொரு மொழியினரின் காலம், இடம் மற்றும் கலாசாரத்தின்
வேறுபாடுகள் இதில் இடம்பெறும்

ஜீவநதி 39
மொழிபெயர்ப்பின் வகைகளிற்கு ஏற்ப சிக்கல் எழுகின்றன. வாக்கிய அமைப்பு, சொல்லாட்சி எனும் அடிப்படையில் சிக்கல் தோன்றுகின்றது. அதிலும் பொதுவாக கவிதை, உரைநடை என்பவற்றை மொழிபெயர்க்கும் போது அதிக சிக்கல் ஏற்படுகின்றது. மொழிபெயர்ப்பின் போது இலக்கணச்சிக்கல், பொருள் அடிப்படை சிக்கல், கலாசாரச் சிக்கல் என்பவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். மொழிபெயர்ப்பு தற்காலத்தில் முறைசாராத மற்றும் முறைசார்ந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளினால் மொழிபெயர்ப்பியல் உத்திகளும் கோட்பாடுகளும் உருவாகி இன்று மொழிபெயர்ப்புத்துறை பயனாக்க மொழியியலின் (Applied Linguistics) ஒரு பிரிவாக வளர்ந்து வந்துள்ளது.
நம் அனைவரின் வாழ்விலும் எதிர்காலம் என்பது இன்றியமையாதாகின்றது. மொழிபெயர்ப்பு ஒரு நீண்ட நெடிய வரலாறு உடையது. உலகமொழிகள் பலவற்றில் ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் நாள் தோறும் வெளிவந்த வண்ணமுள்ளன. தற்காலத்தில் மொழிபெயர்ப்பு பிரிவு, தனித்துறையாக வளர்ந்து வந்துள்ளது. மொழிபெயர்ப்பு வரலாற்றுதுறை அறிவியல்துறை, திரைப்படத்துறை, கல்வித்துறை, அரசுஅலுவலகம் என எல்லா இடங்களிலும் இன்றியமையாததாகி விட்டது.
தமிழ்மொழி நூல்கள் பிறமொழியிலும், பிறமொழி நூல்கள் தமிழிலும் மொழி பெயர்க்கப்படுவதனால் அறிவு வளர்ச்சியும், ஒருமைப்பாட்டு உணர்வும் மக்கள் இடையே தோன்றுகின்றது. மொழி பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் மாறிமாறி இடம்பெறுவதால் அவர்களின் மொழி வளர்வதுடன் புதிதாக மொழிகற்பவர்கள் திறமைகளும் நன்குவளருமி. மொழி பெயர்ப்பில் மொழி பெயர்ப்பாளர் மூலமொழி இலகுமொழி ஆகிய இரண்டுமொழியறிவுடன் மொழிபெயர்க்கின்றபோது சிறந்த மொழி பெயர்ப்பினை உருவாக்க முடியும். ஒரு மொழி வளர்ச்சிக்கு இலக்கண இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு ஏதுவாக உள்ளன. இந்த வகையில் மொழிபெயர்ப்பின் வளர்ச்சியானது ஒரு நாட்டின் கல்வி அறிவில் முக்கியபங்கை வகித்து வருகின்றது.000
நம்பிக்கையுடன் பிரிவோம் தோழர்களே!
கருவறையின் சுவரை உரசி இனி. பூமித்தாயின்மடியில் வீழ்ந்தோம். உயர் கல்வி பெற்றோரின் அரவணைப்பில் தொழில் வாழ்க்கை அன்பின் வலிமை கண்டோம். மண வாழ்வு
குடும்பம். என்று வெகுளி, சோகம், வெறுப்பு. உலக வாழ்வுநீளும். கணத்தில் மறந்துபோகும மீண்டும் சந்திப்போம் பள்ளிபடிப்பு வாழ்வின் நம்பிக்கைநலம்தரும்!
கள்ளமிலாநட்புகொண்டோம். கி.பிறைநிலா

Page 22
ஜீவநதி 40 பெரியாழ்வார் திருமொழியும் - வாத்ஸஸ்ய பாவமும்
வையகம் எண் பொய்கைபூ தம்பே யாழ்வார் மழிசையர் கோன் மகிழ் மாறன் மதுர கவிகள் பொய்யில் புகழ்க் கோழியர் கோன் விட்டு சித்தன் பூங்கோதை தொண்டர7டிப் பெRதியானாழ்வார் ஐயன் அருட்கலியன் எதிராசர்நம்மோடு ஆறிநவர் ஒரொருவர் அவர்தாம் செய்த துய்ய தமிழ் இருபத்து நான்கிற் பர்ட்டின் தொகைநாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே(தே.பி 17) "என்ற பாடல் நாலாயிரத் திவ்விய பிர்பந்த தொகுப்பையும் அதனை அருளிச் செய்த அருளாளர்களையும் அழகாக விபரிக்கின்றது. கிருஸ்ணபகவானின் குணங்களில் அகம் மகிழ்ந்து உணர்வு தளர்ந்த அவனுக்கு வாழ்த்துக் கூறும் பேறு (மங்களாசாசனம் செய்யும் பேறு) பெற்றமையால் ஆழ்வார்கள் எனப் பெயர் பெறலாயினர். வைகுந்தப் பெருமானது திவ்விய ஆயுதங்கள், திருமார்பின் மறு முதலியவற்றின் அம்சமாய் இவர்கள் வாழ்ந்தவர்கள்.
எல்லாம் வல்ல பரம்பெTநள் முறிமத்நாராயணன் என்பதே வைணவர்களின் அருள் வாக்கு இதனையே துவய மந்திரம்
(U7uoß (B/TT/Tu/6307 Fj65ofsor FT6oILöLßrus6u/ முறி மந் நாராயணாய நம ஆறு பதங்களுடன் பத்துப் பொருள் கொண்டமை கின்றது. விஷ்ணுலோகத்தில் எம்பெருமான் பெரிய பிராட்டிக்கு உபதேசித்தமையே இதன் உள்ளடக்க கருத்தமைவாக இருப்பதுடன் இதுவே உண்மை வாக்கும் என பாகவதர்கள் (வைணவபக்தர்கள்) கருதுகின்றனர்.
எல்லாம் வல்ல பரம் பொருள் நாராயணனை அடைய ஞானயோகம்.பக்தியோகம், கர்மயோகம், பிரபக்தியோகம் என்ற நான்கு யோகங்கள் கூறப்படுகின்ற போதும் முதல் மூன்று யோகங்கள் சில நியமங்களைக் கொண்டிருப்பதால் எல்லோராலும் பின்பற்ற இயலாது. ஆனால் பிரபக்தி யோகம் எல்லோராலும் செய்தற்கு உரியதாகும். அதனாலேயே அந்நெறியை ஆழ்வார்கள் அனைவரும் கடைப்பிடித்து பிறருக்கு அதன் தாற்பரியத்தினை உணர்த்தினர் என்று கூறப்படுகின்றது.
கொண்டால் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை. (அ. ஆதிபிரான் - 10) இதனை மேற்கூறப்பட்ட பாடல் பகுதி விஷ்ணு மீது ஆறாத அன்பு கொண்டமை வெளிக்காட்டப்படுகிறது.
ஆழ்வார்கள் பல்லவர் காலத்தில் நிலவிய சமய சமூக அடக்கு முறையினை எதிர் கொண்டு சமண, பெளத்த மதங்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜீவநதி 41 எதிர்த்தும் அக்காலத்தில் நாயன்மார்களோடு தோழமை உறவு கொண்டு அவைதிக நெறி சாரும் இந்துமக்களை வைதிக நெறியான இந்து சமயத்தை நிலை கொள்ளச் செய்விக்க அரும் பணியாற்றியவர்களில் ஆழ்வார்களின் பங்கு முதன்மையானது என்றே கூறவேண்டும். இதனாலேயே பல்லவர் கால கோயில்களில் சிவனும், விஷ்ணுவும் இணைந்த நிலையிலான அரிகர வடிவம், சங்கர நாராயண வடிவம் ஆகியன ஸ்தாபிக்கப்பட்டிருந்தன என்பதும் கூறத்தக்கமை,
வைணவ ஆழ்வார்கள் அவைதிக நெறியினை எதிர்ப்பதற்காக உணர்ச்சி பூர்வமான ஆழ்வார் பாசுரங்களை பாடியமையும், வைணவனுக்கு இலக்கணம் கற்பித்தமையும், நாராயணனை உறவு முறைமை கொண்டு வழிபட்டமையும் இக்காலகட்டம் பக்தி நெறியாக உருமாறியமை மனம் கொள்ளத்தக்கமையாகும்.
இந்த வகையில் தோன்றிய ஆழ்வார்கள் பன்னிருவராவர்.
1.பொய்கையாழ்வார் 2பூதத்தாழ்வார் 3 பேயாழ்வார் 4 őkburgkoőILITg62ITi 3. நம்மாழ்வார் 6. Loż5/Urdtõ6pîILJITĝ62ITIT Z குலசேகராழ்வார் 8 பெரியாழ்வார் 9 முறி ஆண்டாள்
10 தொண்டரடிப் பொடியாழ்வார் 11. திருப்பாணாழ்வார் 12 திருமங்கையாழ்வார் இவர்கள் அருளிச் செய்த பாசுரங்களை 24 பிரபந்தங்களுள் அடக்கிய அத்தொகுப்பு நாலாயிர திவ்வியப் பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது.விஷ்ணுமீது கொண்ட ஆறாக் காதலால் அவன் புகழ் பரப்பவே ஆழ்வார்கள் பன்னிருவரும் ஊர் தோறும் அலைந்து அப்பெருமான் கோவில் கொண்ட திருத்தலங்களிலெல்லாம் தம் பாசுரங்களைப் பாடிப்பாடி உருகி உருகி செழுந்தமிழில் தோய்ந்து இன்புற்றனர். எனறே கூறலாம். எண்ணம், சொல், செயல், செல்வம், செல்வாக்கு. என எல்லாமே அவனருளாலே வந்தன வென்று அவனுக்கே அர்ப்பணம் செய்து மரணம் இலாப் பெருவாழ்வு பெற்றவர்கள் ஆழ்வார்கள் பொன்னுக்கோ, பொருளுக்கோ, புகழுக்கோ அவர்கள் பாசுரங்களைப் பாடவில்லை தாம் பெற்ற பேரின்பத்தை உலக மக்களும் பெறவேண்டும் அதாவது "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்ற திருமூலர் வாக்கினை தலைமேற் கொண்டு எளிமையான, இனியவாழ்வினை வாழ்ந்து காட்டி அருளாளர்களாவார். இவர்களில் பாண்டிய நாட்டில் புத்துார் என்ற சிறிய ஊரினிலே குரோதன வருடம் ஆனி மாதத்தில் சுக்கில ஏகாதசியன்று சுவாதி நட்சத்திரத்தில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முன் குடுமிச் சோழிய அந்தணர் முகுந்த பட்டருக்கும் பதும வல்லிக்கும் பிறந்தவர் "விஷ்ணு சித்தர்” என்னும் இளமை பெயர் கொண்ட பெரியாழ்வார். இவருக்கு விஷ்ணு மீது மிகுந்த பக்தி திருக்கோவில் மாலை கட்டுபவரிடம் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் தானாகவே சொந்தமாக பொய்கை அமைத்து ஊர் விட்டு பல தூரம் சென்று விஷ்ணு மீது பல பாடல்கள் பாடினார். பாடிய களைப்பால் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினார். அக் கணம் நகர் சோதனைக்கு வந்த பாண்டிய மன்னன் வல்லப தேவன் தூங்குபவரை எழுப்பி விசாரித்தார். இவரும் பணிவாக விடயங்களைக் கூறினார். அப்போது மன்னன் நன்நெறிக்கு வழிகாட்டும் சுலோகம் ஒன்று கூறக்கேட்டார்
மழைக் காலத்திற்கு வேண்டியதை மற்றகாலத்தில் தேடிவை இரவு வேளைக்கு வேண்டியதை பகல் பொழுதில் தேடிவை முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடிக் கொள்ள மறுமைக்கு வேண்டியதை இம்மையில் சேர்த்துக் கொள்"

Page 23
ஜீவநதி 42
இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் "வல்லப தேவன் அரச சபையில் தக்க மரியாதை கொடுத்து பொருட்செல்வம் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தான் எனக் கூறப்படுகிறது.
எனினும் மன்னன் உள்ளத்தில் ஆறாக் காயம் போல் ஒன்று வாட்டி வதைக்கத் தொடங்கியது அது “இவ்வுலகத்தில் நிம்மதி தரும் உறுதிப் பொருள் அறிய ஆவலாக இருந்தான். இதனால் புகழ் வாய்க்கப் பெற்ற புலவர்களை அழைத்து இதன் உண்மைத் தன்மையை கேட்டுணர ஆவலாக இருந்தான் ஆனால் யாரும் சரியான பதிலை கூறவில்லை இதனால் சரியான பதிலை அளிப்போர்க்கு பொற்கிழி கட்டி வைத்து ஆர்வம் உண்டாக்கினான். இக்குறை போக்க திருவல்லிபுரத்தார் வடபெருங்கோவில் பெருமான் விஸ்ணுசித்தர் கனவில் தோன்றி மன்னர் அவைக்குச் சென்று விவாதம் செய்து பொற்கிழியைப் பெற்றுவருமாறு அருளினார் அதன் படியே
எங்கும் எல்லாம் எப்போதும் நிலைத்திருக்கும் பரம்பொருள் முறி மந் நாராயணனே என்பதை விசிஸ்டாத் வைதத்தின் மூலம் விளக்கினார். இதன் போது அவர் திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடினார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணாநின்
சேவடி செவ்விதிநக்காப்பு" (திருப்பல்லாண்டு-1) இதனால் இவர் "பெரியாழ்வார் எனப்பட்டார்.
ஆழ்வார்கள் நாராயணனை தாஸ்ய, வாத்ஸல்ய, மதுர, சக்ய பாவங்கள் மூலம் போற்றிப் புகழ்ந்தனர். இதில் பெரியாழ்வார் வாத்ஸல்ய பாவமான - தந்தை மகன் உறவுமூலம் பாசுரங்களைப் பாடி போற்றியுள்ளார்.பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனின் திரு அவதாரச் சிறப்பினை ஒவ்வொரு படலமாக பாடியுள்ளார். கண்ணன் திரு அவதாரச் சிறப்பு திருப்பாதாதி கேசவண்ணம், திருத்தாலாட்டு, அம்புலிப்பருவம் இவைகளை பாடுகின்றார். இவைகளை அடியொற்றி பிற்காலத்தில் "பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கியம் உருவாகியது எனலாம். கண்ணன் திரு அவதாரச் சிறப்பினைப் பாடுகின்ற போது
வண்ணமாடங்கள் சூழ்ந்திநக் கோட்டியூர்
கண்ணன் கேசவன்நம்பிபிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர்தாவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே (1ம் திருமொழி-1)
நந்த கோபர் திருமாளிகையில் பிறந்த போது அங்குள்ள அனைவரும் எண்ணெய்யையும் மஞ்சள் பொடியையும் ஒருவருக்கொருவர் எதிர்த்து தாவியதால் அவ்விடமே சேறாயி விட்டது. எனப்பாடுகின்றார். ஒரு தாய் தன் பிள்ளையை எவ்வாறு அன்புடன் அரவணைத்து தாலாட்டி, பாலூட்டி வளர்க்கின்றாளோ அதனை காட்டிலும் பேரன்பு கூர்ந்து பெரியாழ்வார் கண்ணனை தாலாட்டுகின்ற போது.
ஒதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும்
சாதிப்பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க என்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ (3ம் திருமொழி)
கடலில் காணப்படுகின்ற அழகிய முத்துக்களையும், பவளத்தையும் தோள்களில் அணிந்து கொள்வதற்காக வருணதேவன் அனுப்பினான். எனவே சுடர்மிக்க முடியணிந்த சுந்தரத் தோழனே தாலேலோ எனப்பாடுகின்றார்.

ஜீவநதி 43
தாய் அன்புக்கு நிகராய் இவ்வுலகில் கிடைப்பது எதுவுமே இல்லை என்பார்கள் சான்றோர்கள். ஆனால் அத்தாய் அன்பினை மிஞ்சி இறைவனையே பிள்ளையாகக் கருதி மிக்க உறுதியுடன் குடித்த பால் சரிக்காது போய்விடும் அதற்காக நிலாவை அழைப்பித்து பாடுகின்ற பாடல் தாய் பிள்ளைக்கு இடையில் காணப்படுகின்ற அன்பின் வெளிப்பாடாகும். எடுத்துக்காட்டாக
"சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து.(4ம் திருமொழி) பிறந்த பிள்ளை தன்னுடைய வயது வந்தவுடன் படிப்படியாக செய்கின்ற செயல்களில் அதிக விருப்பங் கொண்டு அவற்றை பார்த்து மகிழ்வார்கள். இது சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கின்ற சொல்லமுடியாத பேரின்ப மகிழ்ச்சியாகும். இந்த வகையில் பெரியாழ்வாரும் கண்ணனின் சப்பாணிப் பருவத்தினை தாய் அன்பு கூர்ந்து மகிழ்ந்துள்ளார்.
மாணிக்கக் கிண்கிணியார்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன்னாற் செய்த ஆய் பொன் உடைமணி பேணிப்பவளவாய் முத்திலங்க பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழற் குட்டனே! சப்பாணி (6ம் திருமொழி) பெரியாழ்வார் கண்ணனின் ஒவ்வொரு பருவங்களைப் பற்றிபாடுகின்றபோது தாய் பிள்ளைக்கிடையில் இருக்கின்ற அன்பினை உலகறியச் செய்விக்கின்றார். என்றே கருத வேண்டியுள்ளது. கண்ணன் மீது வைத்துள்ள பக்தியின் அதியுயர் வெளிப்பாட்டினை வெளிப்படுத்தவே தந்தைமகனாக (வாத்ஸல்ய பாவம்) கருதி கண்ணனின் குறும்புத்தனங்களை ரசித்து சுவைத்தார் போன்று பாடியுள்ளார். அதிலும் தளர் நடைபருவம் பூச்சி காட்டுதல், கண்ணனை முலையுண்ண அழைத்தல். காது குத்தல், நீராடல் பருவம், காக்கையை கண்ணனுக்குக் கோல் கொண்டுவரல், பூச்சூடல், கண்ணுாறு கழித்தல் என்பன சிறப்பானதாகும்.
"இதில் நீராடல் பருவம்" முதன்மைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க தாகும்.
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு திண்ணென இவ்விராவுன்னைத் தேய்த்துக்கிடக்க நான் ஒட்டேன் எண்ணெயப் புளிப்பழங் கொண்டிங்கு எத்தனை போதும் இருந்தேன் நண்ணல் அரிய பிரானே! நாரணர் நீராடவாராய்! வெண்ணெய் அளைந்ததால் மொச்சைநாற்றத்தையும், விளையாடி புழுதியையும் தன் மேல் கொண்ட காரணத்தால் நித்திரைக்கு செல்வதற்கு முன்னர் எண்ணெய் புளிப்பழத்தைக் கொண்டு காத்துநிற்கின்றேன் நீராடவரவேண்டும் எனப்பாடுகின்றார். சிறுபிள்ளைகள் விளையாட்டில் நாட்டம் கொண்டவர்கள் இதனையே இன்றைய கல்விக் கொள்கையும் விளையாட்டு தொடர்பான தேர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது ஆனால் அதனை அன்றே பெரியாழ்வார் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளமை புலனாகின்றது.
சிறுவர்கள் சிறு வயதில் பல தேர்ச்சிகளை பெற்றுக் கொள்கின்றார்கள். அதிலும் குறும்புத் தனங்கள் விரும்பத்தக்கவை இந்த குறும்புத் தனங்களில் விளையாட்டுக்களும் அடங்கும். இதனையே பெரியாழ்வார் எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டி விட்டு சிறு குழந்தைகளைக் கிள்ளி எழுப்பிவிட்டு, கண்ணைப்

Page 24
ஜீவநதி 44 புரட்டி விழித்து குறம்பு செய்கின்ற பிரானே என்று பின்வரும் பாடல் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார்.
எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழித்துக் கழை கண்டு செய்யும் பிரானே உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஒதநீர் போலே வண்ணம் அழகிய நம்பிமஞ்சனம் ஆட நிவாராய் ஆழ்வார்களில் பெரியாழ்வார் என்று போற்றக்கூடியவர் கண்ணணை பெற்று வளர்த்த தாய் தன் பிள்ளைக்கு செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் தான் தன்னுடைய திருமொழி மூலம் பாடியுள்ளமை வியந்து போற்றுதற்குரியவையே.
உறவு முறையில் பாடல்கள் பாடிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் அக்காலத்தில் தாங்கள் பெற்றுக் கொண்ட இயல்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் மானிடர்களாகிய நாமும் இவ்வாறான உறவு முறையில் இறை இன்பத்தினை பெறமுடியும் என்பதாகும்.
வறியநாட்டின் செல்வந்தர்கள்
ඉගඛයී ග්‍රීgගාජිඝ6IIIIGඩී நிறைந்த கிராமம் ஒடுகளால் வேயப்பட்டு கல்வீடுகளாயின ஒரிரு துவிச்சக்கர வண்டிகள் தானி ஒய்யாரமாய் ஒழத்திரிந்த காலம் பொதுக்கினற்றில் ஆண் பெண் வேறுபாஜன்றி பவ்வியமாக நீராடி மகிழ்ந்த காலம் குலத்தொழிலுடன் முடங்கிய மக்கள் குலவிட இரவும் பகலான பொற்காலம் ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி ஏக்கங்கள் அணுவுமின்றி உறவுகள் வலைப்பின்னலாய் உரீைடான நெருக்கங்கள் கிராமம் முன்னேற்றம் கண்டு தொழிலில் மாற்றம் பெற்று ஓரிரு துவிச்சக்கர வண்டியுடன் மீதியெல்லாம் மோட்டார் வாகனமாயின சாரிை மெழுகிய தரைகளெல்லாமீ சறுக்கி விழுத்தும் பளிங்குகளாயின வேப்பமரக் காற்றினை ஒரங்கட்டி நின்றன குளிரூட்டிகள் கைவிளக்குகள் மின்விளக்குகளாயின வீட்டிற்கு வீடு கினறுகளும்
வளப்பான குளியலறைகளும் குடுமீபத்தில் இருவர் வெளிநாடு என்ற நிலை இவர்களையும் விட்டு வைக்கவில்லை L6)J(8).JTgů68UTa T 6TLö DJUTř55 வாழ்வியலில் பல முன்னேற்றங்கள் ஆலயங்கள் அழகொழிந்தன மானுட நெஞ்சங்களின் வாழ்க்கையில் பிரக்ஞை பூர்வமான அதீத மாற்றம் நிறைந்து நின்றது. இப்போது இந்தக் கிராமத்தில் வறுமையும் வறியவர்களும் இல்லாமல் விஜனும் ஏக்க உர்ைவும் முழுவில்லாத (83rd 96 Drfalls இவர்களின் நெஞ்சத்தை நிறைத்து நிற்க
dösTIJGODTLDTULJ... உலகவங்கிக்கு இவர்களின் நாடு என்றுமே கடனாளி தான்.
- வெ.துஷயந்தன்

ஜீவநதி 45 உலகின் முதல் வைத்தியரும் எகிப்தியரும் (The first Medical Doctors in the World and Egyptians)
- செ.கிருஷ்ணராஜா
வைத்தியத்துறை பிறந்த கதை மனிதம் வளர்ந்த கதை என்பார்கள். மனிதம் வளர்ந்த கதை நாகரிகம் பிறந்த கதை எண் பார்கள். இந்த மனிதத்தையும் நாகரிகத்தையும் ஒன்றிணைத்தவர்களே நைல்நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த எகிப்தியர்கள் ஆவர். எகிப்தியர்கள் இற்றைக்கு 4500 வருடங்கட்கு முன்னர் நைல் நதிக்குக் குறுக்கே அணைகளைக்கட்டி, ஒடும் நீரோட்டத்தினை பாயும் நிராகமாற்றி, கொடும்பாலை வனமான சகாராப் பாலைவனத்தினை பசியவயல்நிலங்களாகமாற்றி களனியாக்கி, நெல்விதைத்து நகரங்களை உருவாக்கி பிரமிட்டுக்களை வானுயரே எழுப்பி கட்டிடக்கலையிலும், நீர்ப்பாசன கால்வாய்கள் அமைக்கும் துறையிலும் பொறிமுறைச்சாதனைகளைப்புரிந்து உலகின் அதிசயங்களுள் ஒன்றான மம்மிகளைக் கொண்ட நிழல்விழாத பிரமிட்டுக்களை அமைத்துத் தந்தவர்கள் ஆவர். இந்த மம்மிக்களே (Mummies) எகிப்தியரின் வைத்தியத்துறைச் சாதனைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் அரும் பொருட்களாகக் காணப்படுகின்றன என்றால் அது மிகையான கூற்றாக அமைந்து விடாது. மம்மிக்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன? ஏன் அவை உருவாக்கப்பட்டன? எங்கு அவை பாதுகாத்து வைக்கப்பட்டன, என்ற oனாக்களை எழுப்பினோமாயின் எகிப்தியர்கள் முதல் 60 வத்தியர்களான ரகசியம் புரிந்துவிடும். ஆம்! எகிப்திய நாகரிகத்தினை உருவாக்கிய "எகிப்தின் தெய்வம்" எனப்பேற்றப்படும் நைல் நதிப்பள்ளத்தாக்கு அதன் இருமருங்கிலும் ஏராளமான நகரங்களைத்தோற்றுவித்திருந்தது. இந்த நகரங்களை இறந்தோர் நகரங்கள் என மக்கள் இன்றும் குறிப்பிடுவதனைக் காண்கின்றோம். காரணம் இங்கு காணப்படும் நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரமிட்டுக்களுள் அரச குடும்ப அங்கத்தவர்களை மம்மிக்களாக்கி பாதுகாத்து நிலக் கீழ் சுரங்க அறைகளுக்குள் வைத்து அவற்றுக்கான பாதுகாப்பினையும் ஏற்படுத்தி வைத்திருப்பதனாலாகும். மம்மிக்கள் ஏன் உருவாக்கப்பட்டன என்ற வினாவினை எழுப்பினோமாயின் எகிப்தியர்கள் முதல் வைத்தியர்களான ரகசியம் புரிந்துவிடும்.
அதாவது எகிப்தியமக்கள் தமது சமய நம்பிக்கையின் அடிப்படையில் உயிர்கள் (ஆன்மா) அழிவதில்லை என்பதனையும் ஓர் உயிர் உடம்பிலிருந்து பிரிந்து விட்டால் அந்த உயிரானது ஒரு சிறிது காலத்திற்கு வானவெளியில் சஞ்சாரம் செய்துவிட்டுபின்னர் பூமியில் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ள ஏதாவது ஒர் உடலுக்குள் சென்று அமர்ந்து கொண்டு வாழத்தொடங்குகின்றது என மக்களால் நம்பப்பட்டது. இப்பிரத்தியேகமான நம்பிக்கையின் வழியே உருவாகிக் கொண்ட ஓர் அறிவியற் துறையாவே எகிப்தில் வைத்தியத்துறை தோற்றம் பெற்றுக் கொண்டது. இறந்த மன்னனதும் அவனது சுற்றத்தவரதும் உடல்கள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காக இவ்வைத்தியரண சிகிச்சைமுறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலில் உயிரற்ற ஒர் உடலில் விரைவில் கெட்டு அழிந்து போகக் கூடிய மூளைப்பகுதி, வயிற்றிலுள்ள குடற்பகுதி ஆகியன ரணசிகிச்சை மூலம் வெளியே அகற்றப்பட்டு தைலம் போன்ற மருத்துவமூலிகைச் சாற்றினால் அவை தாங்கிக் கொண்டிருந்த உடற்பரப்பு முதலில் பாதுகாக்கப்பட்டது. பின்னர் உடலில் காணப்படும் சகல துவாரங்களும்

Page 25
ஜீவநதி 46 காற்றுப்புகமுடியாத படிக்கு பபிரஸ் (papyrus) தாளினால் மருத்துவ மூலிகைச்சாறு கொண்டு உட்செலுத்தப்பட்டு உள்ளடக்கப்பட்டு அவை அடைக்கப்பட்டன இதற்குப்பின்னர் உடல்முழுவதும் தைலம் தோய்த்த பபிரஸ் தாளினால் மிகவும் இறுக்கமாகச் சுற்றப்பட்டு மருத்துவப்பட்டை சாத்தப்பட்டு காற்றுப் புகமுடியாத கண்ணாடி இழையத்தாலான பேழைப்பெட்டிக்குள் வைத்து பூட்டு இட்டபின்னர், அதனை மீண்டும் தேக்கமரத்தாலான இன்னொரு பேழைப்பெட்டிக்குள் வைத்து பிரமிட்டின் நடுவேயுள்ள சுரங்கவறைக்குள் பாதுகாப்பாக வைத்துவிடுவர். இதுவே மம்மியாகும். இற்றை வரைக்கும் இந்த மம்மிக்கள் கெட்டுப்போகதபடிக்கு இருக்கின்றன என்றால் மருத்துவக்குணம் கொண்ட பல்வேறு வகையான தைலவகைகள் அங்கு உருவாக்கப்பட்டு உயிரற்ற உடல்களுக்குள் செலுத்தப்பட்டமை ஆகும். கி.பி.1876 ஆம் ஆண்டில் கெயிரோவில் (எகிப்தின் தலைநகர்) துட்டன் காமன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்து இம்மருத்துவ மூலிகைச் சாறுகள் (தைலம்) பற்றிய அறிவியல் வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டது எனலாம். துட்டன் காமன் கல்லறைக்குள்ளிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட பெருந்தொகைக் குவைகளுள் (70 தொன் தங்கம் உட்பட) தைலாப் பெட்டகங்கள் நிறைந்த மருத்துவப் பொருட்கள். உபகரணங்கள், மற்றும் அவற்றின் செய்முறைபற்றிய விபரணங்கள் என்பன உள்ளடங்கியிருந்தன பபிரஸ்தாள்களிலே அச் செய்முறைபற்றிய விபரணங்கள் எகிப்திய வரிவடிவில் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தளவிற்கு உலகின் முதல் அறிவியற்துறைச்சாதனை படைக்கப்பட்டதற்கான பின்னணியானது உயிரானது கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் தன்மையது என்ற சமயக்கோட்பாட்டு நம்பிக்கையே ஆகும்.
எனவே எகிப்தில் வைத்தியர்கள் தோற்றம் பெற்றார்கள், நோய்களுக்கு சிகிச்சையளித்தார்கள். பாம்புக்கடிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது கடித்தபாம்பினை திருப்பியழைத்து கடியுண்ட வாயிலிருந்து விஷத்தினை உறுஞ்சி எடுக்கச் செய்தனர். எகிப்திய வைத்தியர்கள் மூளைக்கோளாறு ரணசிகிச்சை முறைமூலம் மண்டையோடு களற்றி எடுக்கப்பட்ட பின்னர் கண்டுபிடிக்கப்பெற்று வைத்தியமுறை மூலம் தீர்த்து வைக்கப்பட்டது. கால்முறிவு கைமுறிவு ஆகியனவற்றிற்கு பாம் பெண்ணெய், மயிலெண்ணெய், தாவர எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்ட தைலங்களின் உதவியுடன் வைத்தியமுறையாற்றப்பட்டது. பார்வையற்றவர்களுக்கு கண்கள் பொருத்தப்பட்டன. அடிமைகளாகப் பிடித்து வைத்திருந்தவர்களிடமிருந்து உடலுறுப்புக்கள் தானமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டு வைத்தியம் செய்யப்பட்டது. இரத்தோட்டம், நரம்பு மண்டலங்கள் பற்றிய வரைபடங்கள் பபிரஸ் தாளில் வரையப்பட்ட வகையில் கிடைத்துள்ளன.
கிளி, கீரி, பாம்பு, முயல், நாய், பருந்து குரங்கு என்பனவும் மம்மிக்களாக்கப்பட்டு வரோவாவினது (Pharoah) மம்மியுடன் அலங்கரிப்புப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த வகையையும் துட்டன் காமன் கல்லறையிலிருந்து காணமுடிந்தது. இத்தகைய மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மம்மிக்களை, 19ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சியின் விளைவாக எகிப்திற்கு நீர்ப்பம்புகளை எடுத்துச் சென்று விற்றுவிட்டு திரும்பிய வர்த்தகர்கள். கடத்தி வந்து Mi11 இல் இட்டு POWder ஆக்கி மருத்துவ பஸ்பமாக சகலநோய்நிவாரணியாக வழங்கிய கதை எகிப்தியரை உலகின் முதல் வைத்தியராக நினைவு கூர வைத்த முதலாவது நிகழ்வெனலாம்.

ஜீவநதி 47
காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்
-டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
"காதுக் குடுமியை அகற்றுவது எப்படி? இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbim) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானாகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது. பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள், சிறுகாயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரலிப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. அதிலுள்ள கிருமியெதிர்ப்பு (antibacterial properties) பண்பானது வெளிக் கிருமிகள் தொற்றி, காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.
காதுக்குடுமி (Cerumen) என்பது இயல்பாக எண்ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால் (Sebaceous and Ceruminous glands) சுரக்கப்படுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மையாகவோ, பாணிபோலவோ, திடமான கட்டியாகவோ இருக்கக் கூடும. காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண்டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப்பொருளாக மாற்றமுறும். தலைமுடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்பதும், எவ்வளவு நீண்ட காலம் வெளியேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம்.
காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழமையாக எவரும் அதனை அகற்ற வேண்டியதில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழையது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும். மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளிக்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுண்டு. காதுக்குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் காரணமாகலாம்.
சிலருக்கு அது இறுகி கட்டியாகி வெளியேற மறுப்பதுண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்தை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
காதுக் குடுமிப் பிரச்சினை என மருத்துவர்களிடம் வருபவர்கள் அனேகர், வருடாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இப்பிரச்சினைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதர்வது 8 மில்லியன் பேருக்கு மருத்துவரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

Page 26
ஜீவநதி 48
இதை அகற்றுவது எப்படி?
பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல்லதா, நெருப்புக் குச்சி நல்லதா?
இவற்றைக் காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உராசிபுண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உட்புறமாகத் தள்ளி செவிப்பறையைக் காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவற்றை உபயோகிப்பது அறவே கூடாது.
காதுக் குடுமியை கரைத்து இளகவைத்தால் தானாகவே வெளியேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர் தான். உப்புத் தண்ணிர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஒயில் போன்றவையும் உதவக் கூடும். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட விசேட (Waxol, Cerumol) காதுத்துளி மருந்துகளும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ் , குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் digs if u(6556 stub.
இவ்வாறு வெளியேறாது விட்டால் மருத்துவர் அதனை R கழுவி வெளியேற்றுவார். இதற்கென விசேடமாகத்
தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலியும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும் (Suction device) உபகரணம் மூலம்
சுலபமாக அகற்றவும் முடியும்.
རིགསr་སྐྱོང་
jk af water
தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத்தியம் உண்டு.
மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா?
அதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு முறை குளிக்கும் போது கையால் ஒரு சிரங்கை நீரை காதுக்குள் விட்டுக் கழுவுவது அதனை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிருமித் தொற்றுள்ளவர்களும், செவிப்பறை துவாரமடைந்தவர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது.
அடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காதுக் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசிதமானது.
 
 
 
 

49
கே.எஸ்.சிவகுமாரனின் சினமா சினமா! ஓர் உலகவலம்
- பா. இரகுவரன் கே.எஸ்.சிவகுமாரன் நாடறிந்த பிரபலமான திறனாய்வாளர். :: சீன: கடந்த ஐந்து தசாப்தங்களாக சிறுகதை, நாவல், சினிமா, என மிே கலை இலக்கியத்தின் பல்வேறு துறைத் திறனாய்வுகளில் தடம் பதித்தவர். "திறனாய்வு என்றால் என்ன” என்பது பற்றி நூலெழுதியவர். புனைகதையாளர். ஆங்கிலப்புலமை இவரின் ஆளுமை வெளிப்பாட்டிற்கு இரட்டிப்பு வலிமையைக் கொடுத்துள்ளது. இடையறாத தேடல் மூலமாக அறிவுச் செழுமை பெற்றுவருபவர்.
சினிமா சம்பந்தமாக இவர் எழுதிய 02 வது நூல் "சினமா! சினமா! ஓர் உலகவலமி என்ற தலைப்புடன் வெளிவந்துள்ளது. 2006ல் வெளிவந்த இந்த நூலை அண்மையில் தான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. (சினிமா பற்றிய இவரது முதலாவது நூல் "அசையும் படிமங்கள்" திரைப்படத் தொழில் நுட்பம் சம்பந்தமாகச் சுருக்கமும் விளக்கமும் பொருந்திய நூலாக அமைந்தது)
இந்த 02வது சினிமா நூலில் உலகின் பல்வேறு மொழிகளில் வெளிவந்த திரைப்படங்கள். நடிக, நடிகைகள், ஆண், பெண் இயக்குனர்கள், படத்தொகுப்பாளர்கள். என சினிமாக்கள் பற்றியும், சினிமா சம்பந்தமான பல்வேறு கலைஞர்கள் பற்றியும் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கி27 கட்டுரைகளின் பத்தி எழுத்துகள் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
சினிமாக்கலைஞர்கள் அவர்களின் திரைப்பட வாழ்க்கைக்குறிப்புகள், அவர்களின் உன்னத திரைப்படங்கள் என. உலக சினிமா பற்றி பரந்த அறிவைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினை இந்நூல் வாசகர்களுக்கு அளித்துள்ளது.
எளிமையும், வலிமையும் நிறைந்த மொழிப்பிரயோகத்துடன் கூடிய சிறிய கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் என்பவற்றுடன் டயறிக்குறிப்புகள் போலமைந்த ஏராளமான பதிவுகளும் இந்நூலுக்கு வளம் சேர்த்துள்ளன.
இவ்வளவு தகவல்களையும் திரைப்படத்தினூடாக மட்டும் பெற்றிருக்க முடியாது. பல்வேறு நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் நவீன ஊடகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடினமான தேடல் முயற்சியின் மூலம் விளைந்த நூலாக உள்ளது.
திரைப்படம், திரைப்படக்கலைஞர்கள் பற்றிய தனது சொந்தக் கருத்துகள் பிடித்தது, பிடிக்கவில்லை, பொறுமையாக இருந்து பார்க்க முடியவில்லை. இவரின் தனித்துவத்தை நிறுவுகின்றன. உதாரணமாக “மீராநாயர்" ஓர் இந்தியப் பெண் நெறியாளராக இருந்த போதிலும் வெறும் சலசலப்பை ஏற்படுத்துபவர் "பண்டிற்குயின்" பிரச்சாரப் படுத்தியமாதிரி கலைத்துவப்படமல்ல. ஒரு நல்ல வறிந்திப்படம் என்று கூறவும் முடியாத அளவிற்கு சாதாரணமாக இருந்தது.
"திரைப்படம் என்றால் என்ன என்று ஒரு சில வரிகளில் கூறுவதாயிருந்தால், இப்படிச் சொல்லலாமே..? காட்சியும் ஒலியும் நிழலும் இணையும் அசையும் படிமம். சொன்னாற் போல Video வின் சரியான உச்சரிப்பு "வீடியோ" அல்ல விடியோ என்பதுதான் சரி போன்ற கருத்துக்கள். தகவல்கள் பல இந்நூலில் இடம்

Page 27
ஜீவநதி 50 பெற்றுள்ளன. (சினிமாவின் சரியான உச்சரிப்பு சினமா என்பதாய் இருக்கலாமோ? அதனால்தான் சினமா சினமா. என்று கே.எஸ் சிவகுமாரன் இந்நூலுக்கு தலைப்பிட்டும் நூலில் வார்த்தையாடல் செய்தும் உள்ளாரோ. சினமா என்னும் போது சினம் கோபம். சினமா - கோபமா என்று உடன் விளங்கவும் தோன்றுவதையும் மறுக்க முடியாது.)
ரைட்ரானிக் திரைப்படம் பற்றி அறியாதார் எவரும் இருக்க முடியாது. இதன் பிரமாண்டம், தொழில் நுட்பத்திறன் என்பவற்றைக் குறிப்பிட்டு மேலும் பல காரணங்களைக் குறிப்பிட்டு ரைட்ரானிக் ஒரு கலைத்துவ படம் என நிறுவும்வேளை கே.எஸ். சிவகுமாரனில் ஒரு தயக்கம் தெரிகிறது"இவைகாரணமாக "ரைட்ரானிக் ஒரு கலைத்துவமான படம் எனக் கூறலாம் போல இருக்கிறது (பக் -75) போல இருக்கிறது என்ற சொற்பிரயோகம் உறுதியாகக் கூறும் பண்பை மழுங்கடித்து விடுகிறது. அதுமட்டுமன்றி "ரைட்ரானிக் கலை என நெருங்கத்தக்க ஒரு மகத்தான படம் (பக் - 77) என்று குறிப்பிடுகையில் நெருங்கத்தக்க - மகத்தான என்ற இரு சொற்களும் முரண்நிலையில் நின்று வாசகரை குழப்பத்திற்கு உள்ளாக்குகின்றன.
கன்னட சினிமா பற்றி குறிப்பிடும் போது, தமிழ் திரைப்படத்துறைக்கு பங்களிப்புச்செய்த பல கன்னடக் கலைஞர்களின் பெயர்ப்பட்டியல் எமதுஅறிதலுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. உதாரணமாக ரஜனிகாந் (கன்னடம் பேசும் மராட்டியர்) ஜெயலலிதா அவரதுதாயார் சந்தியா, கல்யாண்குமார் (நெஞ்சில் ஓர் ஆலயம்) பாடகர் பி.பி முறிணிவாஸ் . இவ்வாறு பெயர்ப்பட்டியலுக்குள் பிறதகவல்களையும் இணைத்துத் தந்துள்ளார். கன்னட இயக்குனர் க்ரிஸ் கஸ் ஸரவல்லி, இவரின் திரைப்படமான க்ரெளர்யா, மலையாள இயக்குனர் ஜி.அரவிந்தன், அவரது திரைப்படங்கள், வரியாம் பெனகலின் பல மொழி படநெறியாள்கை மராட்டிய நடிகை ஸ்மிதா பட்டேலின் பன்மொழிப்படங்கள் அயர்லாந்து நடிகர் டானியஸ் டேலியவிஸ், எச்.டி.பிறேமரத்தனவின் சிங்களத் திரைப்படம் என்பன பற்றிசற்று விரிவாக சுவைபட எழுதியுள்ளார். தமிழில் பூமணியின் கருவேலம் பூக்கள் திரைப்படம்பற்றி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கே.எஸ்.சிவகுமாரனின் இந்தநூல் திரைப்படத்தின் திவிர ரசிகர்கள் இவர் குறிப்பிட்ட திரைப்படங்களை தேடி எடுத்து பார்க்க உந்தலைக் கொடுப்பதுடன் பிறமொழிப் படங்களின் கலைஞர்களை சிறப்பாக விளங்கிக் கொள்ளவும் திரைப்படங்களின் கதையைச் சுருக்கமான முறையில் அறிந்து கொள்ளவும் உதவும். பன் முகப்பட்ட பயன்பாடுகள் கொண்ட இந்நூலில் திரைப்படத்தை கமெராவின் கலையாக, கமெரா கூறும் கதையாகவும் திரைப்படக்கலை நுட்பங்களின் மூலம் வெளிப்படும் உன்னதத்தன்மை பற்றியும் பேசப்பட்டது மிகக்குறைவாகவே இருக்கிறது. ஆங்கிலப் புலமையும், சிறந்த திரைப்பட நயப்பும் அனுபவ முதிர்ச்சியும் கொண்ட இந்நூலாசிரியருக்கு இவற்றைப் பற்றி விளக்கி எமக்கு உதவுவது ஒன்றும் சிரமமான காரியமாக இருக்காது. இந்நூலின் அட்டைப்படம் கூட கமெராக்கண் ஆக அமைந்திருப்பது உள்ளடக்கத்திலும் இதன் அவசியத்தை நூலாசிரிரே வற்புறுத்துவதை வெளிப்படுத்துகிறது.
113 பக்கங்களில் அமைந்த இந்நூல் மீராப்பதிப்பகத்தாரின் 57வது வெளியீடாகும், எஸ் , ரஞ்சகுமாரின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. கே.எஸ்.சிவகுமாரனிடம் இருந்து உலகத் திரைப்படங்கள் பற்றி மேலும் எதிர்பார்ப்புக்களுடன் பேனாவை சற்று மூடிவைக்கிறேன்.000

ஜீவநதி 51 “69iji jlaoпшаоflešuj” 39т беiијатij LJeotiji!
-குககுமாரி விஜயரகுநாதன்
溪
மனிதன் வாழ, மனிதத்துவம்நிலைக்க மகத்தான பணிசெய்யும் ஆசிரியத்துவத்தைப் போற்றும் ஒர் அற்புதப்படைப்பாக "ஒப்பிலாமணியே குறுந் திரைப்படம் அமைந்துள்ளது. ஒரு ஆசிரியரின் பல்வேறுநடிபங்குகள்நயம்படக் கூறப்பட்டுள்ளன. இத்திரைப்படத்தைத் தயாரித்து வழங்கியுள்ள யாழ்-வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி M **ை அருளேஸ்வரிவேதநாயகம் தான் கல்விப்பணிப்
பாளராக அல்லாது கல்விப்பணியாளராகவே அறிமுகமாகிறார். இக் குறும் படத்தயாரிப்பினைப் பற்றி முகவுரை கூறும் போது நான் ஒவ்வொரு ஆசிரியரையும் ஒப்பிலாமணியாகவே காண்கிறேன்" என மலர்ச்சியோடு கூறினார். இக்கூற்று ஒவ்வொரு ஆசிரியரையும் சிந்திக்க செயற்படத்தூண்டும் கூற்று ஒவ்வொருவரும் தம்மை சுயமதிப்பீடு செய்துநம் கல்விப்பணிப்பாளர் கூறிய இடத்தில் நான் உள்ளேனா? என சிந்திக்க வைக்கும்.
மணியோசையுடன்மங்களகரமாக ஆரம்பிக்கும் திரைப்படத்தில் ஒரு ஆசிரியை பின்பற்றும் சமய விழுமியமாக துளசி வழிபாடு அமைகிறது. மிக வயோதிப காலத்திலும் ஆசிரியர்கள் தம் வாழ்க்கை ஒழுங்குகளைப் பேணுவர் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நாகுக்காகப்புலப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின்வழிகாட்டியான ஆசிரியர் நடை,உடை, பாவனை ஒவ்வொன்றிலும் என்றும்நிதானமாக இருப்பார் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. இறுதிக் கடமைகளுக்காக சுற்றம் சூழ்ந்திருக்கும் வேளையிலும் தன் மாணவர்களைக் கண்ட ஒப்பிலாமணி ஆசிரியர் கம்பீரமாக நின்று அக்கறையோடு நலம் விசாரிக்கிறார்.60வயது நிரம்பி ஓய்வு பெற உள்ள தனது மாணவனை "ஏன் அதுக் கிடையில்கிழட்டுகோலம் கொள்கிறாய்? என்று தன் மாணவனை என்றும் இளைஞகாகவே உசார் கொடுத்து பேசுகிறார். பீட்டப் பிள்ளையின் படிப்பு, அவளது ஆசிரியையின் சிறப்பு என்பவற்றை ஆவலாக விசாரிக்கிறார். ஒப்பிலாமணி நல்லாசிரியரின் அவயங்கள் செயலிழக்கும் போதும் இறுதிவரை அறிவுமங்காது என்ற ஒரு செய்தியையும் இக்குறும் படம் கூறிநிற்கின்றது. யமதர்மராஜனையும் பணிய வைக்கும் ஆசிரியத்துவத்தை முழுமையாக இக்குறுந்திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது. அதாவது சேவையின் ஆரம்ப காலத்திலிருந்தே ஒப்பிலாமணிஆசிரியரும் அவரது மனைவியான ஆசிரியையும் இணைந்து ஆற்றிய கல்விப்பணி சமூகப்பணி, அர்ப்பணிப்பு மிக்க அரிய சேவைகள் அனைத்தும் படமாக்கப்பட்டு ஆசிரியத்துவத்தை ஆசிரியரும் சமூகமும் உணர வழிவகுத்துள்ளது. ஒரு ஆசிரியர் பாடசாலை நேரத்தில் மட்டுமன்றி 24 மணிநேரமும் ஆசிரியராகவே வாழ்வார் என்பதும் நலிந்தவரை நாடி உதவுவார் என்பதும் அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இக்குறுந்திரைப்படத்தின் கதாபாத்திரங்களும் மிக அற்புதமான பொருத்தப் பாடுடையோராக அமைந்தமை அதிஷ்டவசமே. கதாநாயகனான ஒப்பிலாமணி ஆசிரிய ராகப் பாத்திரமேற்ற யாழ். பல்கலைக்கழக சிரேஸ்டவிரிவுரையாளர் கலாநிதி கலாமணி அவர்கள் இத்திரைப்படம் வெளிவந்ததிலிருந்து ஒப்பிலாமணி யென்றே பலராலும் அழைக்கப்படுகின்றார். கணேசன்"சிவாஜி பாத்திரமேற்று சிவாஜிகணேசனானது போல கலாமணி ஒப்பிலாமணியாகிவிட்டார். இயல்பாகவே பல்துறை ஆற்றலுள்ள கலாநிதி

Page 28
ஜீவநதி 52 கலாமணி அவர்கள் மிக இயல்பாக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.நல்ல குரல்வளமும் நல்லாசிரியருக்குரியநயம் படப்பேசும் திறனும் ஆசிரியருக்குரிய நிறைகுடமான தோற்றப் பொலிவும் ஒப்பிலாமணியாகவே திரு.கலாமணியை மிளிர வைத்துள்ளன. கதாநாயகியாக இணைந்து நடித்த ஆசிரியை தனக்குரிய பாத்திரத்தை சிறப்பாக அமைதியாக நடித்துள்ளார். ஒப்பிலாமணியின் குடும்ப உறுப்பினர்களாக நடித்த ஒவ்வொருவரும் தத்தமக்குரிய பாத்திரங்களைக் கருத்துடன் ஏற்று செயற்பட்டுள்ளனர். ஒரு ஆசிரியரின் குடும்பத்தவர்கள் எவ்வாறு கூட்டாகச் செயற்படுவர் என்பதையும், திட்டமிட்டு ஒழுங்காக வேலைகளைப் பகிர்ந்து செய்வர் என்பதையும் கூட இத்திரைப்படம் புலப்படுத்துகிறது. உணர்ச்சிவசப்படும் பாசப் பிணைப்புகளுக்கு இடமளிக்கப்படவில்லை. ஒப்பிலாமணியின் இறுதி நிகழ்விற்காகக் காத்திருக்கும் வேளையிலும் மருமகன் பாத்திர மேற்ற யாழ். கல்வியியற்கல்லூரிவிரிவுரையாளர் திரு.பிரபாகரன் பக்குவமாகக்கூறும் சில வார்த்தைகள் நம் சமூக யதார்த்த ஒலியாக உள்ளது. மிக அமைதியாக அழுத்தமாகப் பேசும் பாங்கு அவரது தனித்துவமே.
அடுத்து குழந்தை நட்சத்திரங்கள் ஒவ்வொருவருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். "அண்ணா நீங்கள் கள்ளன் இல்லை" என்ற வார்த்தை குழந்தையைத் தெய்வமாகக் காட்டுகிறது. ஆனந்தி ரிச்சர் ஆனந்தமானவராக அரவணைக்கும் நல்லாசிரியையாக இயல்பாக நடித்துள்ளார்.
யமதர்மராஜனாகப் பாத்திரமேற்ற யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி உய பீடாதிபதி திரு.பா.தனபாலன் உணர்வுபூர்வமாக நடித்துள்ளார். வெறுமனே காலத்தைக் கணிப்பவனாo அன்றி கல்வித்தர்மத்தையும் கணிக்கும் தர்மராஜனாக, சு கருத்துடன் பேசுகிறார். அவரது உதவியாளராக சித்திரபுத்திரர் பாத்திரமேற்றுவந்த வரும் இசைந்து நடித்துச் சிறப்பித்துள்ளார். யமதூதர்களும் பொருத்தமாக இணைந்துள்ளனர். யமலோகத்திலும் கணினிப் பாவவை அறிமுகம் சிறப்பாக அமைந்துள்ளது. ஒப்பிலாமணி ஆசிரியரின் மதிப்பார்ந்த மாணவப்பாத்திரமாக வரும் டொக்டர், மாவட்ட செயலர் யாவரும் பாத்திரமறிந்து நடித்துள்ளனர். துணைப் பாத்திரங்களாக வருவோரும் தத்தம் அளவில் சிறப்புற நடித்துள்ளனர்.
யாவற்றிற்கும் மேலாக இந்த நல்ல கருத்தாழமிகு திரைக்கதையை சிறப்பாக நெறியாள்கை செய்த விரிவுரையாளர் திரு.கமலநாதனின் தனித்துவமான திறமை பாராட்டுக்குரியதே. எல்லாப் பாத்திரங்களையும் தன்னுள் உள்வாங்கி உத்தமமாக நெறியாள்கை செய்துள்ளார்.
அடுத்து இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இனிய பாடல்கள் கதைப்போக்கை கதைக் கருவைத் தெளிவுபடுத்துவனவாக அமைந்துள்ளன.பாடல்களை மிகப் பொருத்தமாக யாத்த மானியூர் இரட்னேசின் கவித்துவம் வாழ்க, இப்பாடல்களுக்கு ரம்மியமான இசையமைப்புச் செய்துதவிய கேதீஸ்" கலைமகள் கடாட்சம் நிரம்பப் பெற்றவரே. அவரது இசைவான இசையமைப்பை இனிய குரலில் வெளிப்படுத்திய இசைக்கலைஞர்களும்பாராட்டுக்குரியவர்களே. திரு.கலாமணிசொந்தக்குரலில் கனிவாக பாடி நடிப்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பாளரின் பக்குவமும் சிறப்பு ஆரம்பத்திலிருந்து நிறைவுவரை சீராக அமைந்தமை பாராட்டுக்குரிய விடயமே. பாத்திரங்களுக்கேற்ப பக்குவமான ஒப்பனைகளைச் செய்து சிறப்பித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக நோக்கின் நல்லதோர் செய்தியை யாவரும் மனங்கொள்ள உதவும் நற்பணியாக இத்திரைப்படத்தயாரிப்பு அமைந்துள்ளது,000

ஜீவநதி 53
e கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்ட “அமிக்ஞான சாகுந்தலர்” நாடக ஆற்றுகை பற்றிய சில ரசனைக் குறிப்புக்கள்
- வேல். நந்தகுமார்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நாடகமும் அரங்கக்லைகளும் துறையைச் சார்ந்த விரிவுரையாளராகிய திருமதி நவதர் வரினி கருணாகரன் அவர்களின் நெறியாள்கையில் நாடகஅரங்கக்கலை மூன்றாம் வருட மாணவர்களால் 13.11.2008 அன்று கைலாசபதிகலையரங்கில் ஆற்றுக்ை செய்யப்பட்ட மகாகவி காளிதாசரின் அபிக்ஞான சாகுந்தலம் என்ற இந்த வடமொழி மொழிபெயர்ப்பு நாடககத்தினை பாடசாலை மாணவர்களுடன் சென்ற ஆசிரியர் என்ற முறையில் பார்க்கும் வாய்ப்புஎனக்கு கிடைத்தது. நாடகத்தினுள் நுழையுமுன் மகாகவி காளிதாசன் பற்றியும் அவரது நாடகத் தனித்துவங்கள் பற்றியும் சில விடயங்களை குறிப்பிடலாம் என எண்ணுகிறேன். இந்திய நாடக மரபில் வடமொழிமரபின் சிறந்த நாடக ஆசிரியராக விளங்குபவர் மஹாகவி காளிதாஸ்ராவார். இவரால் எழுதப்பட்ட சிறந்த நாடக நூல்களாக மாளவிகாக்கினி மித்திரம் அபிக்ஞானசாகுந்தலம். விக்கிரமோர்வசியம்என்பன விளங்குகின்றன. இவ்வகைச் சிறந்த நாடக நூல்கள் வேறெந்த மொழிகளிலும் இல்லையென ஆய்வாளர் கூறுவர். இதனால்த்தான் இந் நாடகங்கள் ஏறத்தாழ 12 மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன. இந் நாடக நூல்களை விட காளிதாசர் இயற்றிய ரகுவம்சம், மேகதூதம். குமாரசம்பவம் போன்ற நூல்களும் கியாமனாதாண்டகம், கவுரிசதகம், சுருதபோதம், நாநார்த்த சுப்தரத்தினம். சந்திராலோகம் சுத்தசந்திரிகா, வியாக்கியானம், ஆகிய நூல்களம்காளிதாசரின்கவியாற்றலுக்குசான்றாகவிளங்குகின்றன. இவ்வகையில்இவரால் இயற்றப்பட்ட "அபிக்ஞான சாகுந்தலம்" என்பது நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள அரங்கியல் நுட்பங்களை அனுசரித்து ஆக்கக்கப்பட்ட நாடகத்திற்கு சிறந்த உதாரணமாகக் கூறப்படுகின்றது. இந்நாடக அளிக்கை தனக்கெனத் தனித்துமான ஒரு மேடை அமைப்புமுறையையும் கொண்டுள்ளது. கண்ணுவ முனிவரின் வளர்ப்பு மகளாக விளங்கிய சகுத்தலை வனத்திலே வேட்டையாட வந்த துஷ்யந்தமகராசாவைக் கண்டு இருவரும் காதல் கொண்டு காந்தவர்வமணம் புரிந்துகணையாளி அணிநது, பின் தன்நாடு சென்றுவிட பின் கண்ணுவரின் ஆசிபெற்று சகுந்தலையும் அங்கு செல்ல துருவாசரின் சாபத்தால், துஷ்யந்தன சகுந்தலையை மறக்க கணையாழி தொலைந்துபின் கிடைத்த போது துஷ்யந்தன் சகுந்தலையை நினைக்க சகுந்தலையை மேல் உலகம் அழைத்துச் சென்ற இடம் தேடிச் சென்ற துஷ்யந்தன் அங்கு தன் மகனைக் கண்டு மகிழ்ந்து, சகுந்தலையும் கண்டு இருவரும் மீண்டும் ஒன்றுசேருவதாய் அமையும் இக்கதையை தமது குறுகிய கால முயற்சியிலே நாடக அரங்கியற்கலை மாணவர்கள் தமது குறுகிய காலப்
பயிற்சியிலே சிறப்பான ஒரு அரங்க அளிக்கையாக வெளிப்படுத்தினர்.
ஒரு இனிமையான புல்லாங்குழல் இசையுடன் தொடங்குகின்றநாடகத்தில்மேடை அமைப்பு. பாத்திரம் உள் நுழையும் அரங்க அமைப்பு என்பன சிறப்பாகவும் வித்தியாசமானதாகவும் அமைக்கப்பட்டிருந்தன. துஸ்யந்தன் குதிரை பூட்டியதேரில் வரும் முதற் காட்சியிலேயே பார்வையாளரை நாடகம் தன்வசம் ஈர்த்துக் கொள்கிறது. தேருக்காக அவர்கள் கையாண்ட உத்திஉண்மையிலேயே ஒருகுதிரை தேரின் அசைவாக அமைந்து பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தியது. அந்த தேரின் அசைவுக்கு ஏற்ப அண்மக்கப்பட்டிருந்த வசனங்கள் சூத்திரதாரரின் நாடக அறிமுகம் அவர்களது ஒப்பனை

Page 29
ஜீவநதி 54 மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ஒட்டு மொத்தத்தில் பாத்திரத்தெரிவு பாத்திர உணர்வுகள் என்பன சிறப்பாக அமைந்திருந்தன. எல்லாப் பாத்திரங்களும் தமது பாத்திரத்தை அதன் பாணியை உணர்ந்து இயங்கின. உரையாடல்கள் தெளிவாகவும் எல்லோருக்கும் கேட்கக் கூடியதாகவும் இருந்தது. பாத்திரங்களின் அசைவுகள் முகபாவங்கள் நளின உணர்ச்சிகள் என்பனவும் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக சகுந் தலை, தோழிகளான பிரியம் வதை, அநுசூயைப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் மெய்ப்பாடுகள், நளின, காதல் உணர்ச்சிகள் சிறப்பாக வெளிப்பட்டு பார்ப்பவரை ஒருரம்மியமான உணர்வுலகிற்கு அழைத்துசென்றன.விதுசகன்பாத்திரத்தின் நகைச்சுவைநடிப்பும் இடையிடையே கொட்டாவிவிடுவதும் நகைச்சுவையை ஏற்படுத்தின. பாத்திர உரையாடல்களில்நேரடியாக வெளிப்படையாக சொல்லமுடியாதசில விடயங்கள் குறிப்புணர்த்தலாக இடம்பெற்றன.
நாடகத்தின் ஒப்பனைகள், ஒவ்வொரு பாத்திரமும் மாறிமாறி ஒப்பனை செய்து வரும் வேகம் என்பன சிறப்பாக அமைந்திருந்தன. தவமுனிதமாரிகள் என்பதால் அவர்களது வேட உடைகள் மஞ்சளாக காவி நிறத்தில் அமைந்தமை சிறப்பு ஏனைய அரசனது தவசிரேஸ்டர்கள் கெளதமித்தாய், முனிவர்கள் ஆகியோரின் ஒப்பனைகளும் சிறப்பாக அமைந்திருந்தன. இவ் வகையில் இவ் ஒப்பனைகளுக்கு உதவிய முதலாம், இரண்டாம் வருட மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். சகுந்தலையுடன்ஒப்பிடும் போது ஆரம்பத்தில் துஸ்யந்தனது முகத்தின் பிரகாசம் கம்பீரம் போதியதாக அமையவில்லை வசனங்களில் கம்பீரம் தொனித்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ நாடக முழுமையிலோ அரசனுக்கு கிரீடம் அணிவித்திருந்தால் இன்னும் கம்பீரமாய் இருந்திருக்கும். வாழ்த்துப்பாடல் இன்னமும் கம்பீரமாய் அமைக்கப்பட வேண்டும். இடையிடையே பாடல்களை அமைத்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். நாடகத்தின் இசை பாத்திர அசைவுகளுக்கும் நாடக உணர்வுக்கு ஒத்திசைவாக அமைந்த போதும் சிற்சில இடங்களில் அசையை சற்றுமாற்றி அமைத்திருக்கலாம்.
பாத்திரங்களின் உரையாடல் மொழியில் சிற்சில இடங்களில் பேச்சுத்தமிழ் கலந்த சமூகநாடகத்தன்மைகள் பிரதிபலித்தன. அவற்றை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக தோழிப்பெண்கள் இருவழக்கு மொழியிலும் உரையாடும் தன்மையை அவதானிக்க முடிந்தது. கடிதம் என்ற சொற்பயன்பாடு தவிர்க்கப்பட்டிருக்கலாம். துருவாச முனிவரை காட்டியிருக்கலாம். கதைகளை சுருக்கிஎடுத்த இடங்கள் சிலவற்றில் அப்பாத்திரங்களை சிறிது பேச அனுமதித்திருக்கலாம். சகுந்தலையின் சிறுவனாக நடித்த குழந்தை பாத்திரம் சிறப்பாக அமைந்திருந்தது. சிற்சில குறைபாடுகளைத் தவிர்த்துப் பார்க்கின்றபோது இந் நாடக ஆற்றுகை சிறப்பான ஒருகூட்டு முயற்சி என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் இந்நாடகம் ஒரு இசை,நாட்டியநாடகத்தினை பார்க்கின்ற அனுபவத்தை எமக்குள் ஏற்படுத் தியதுடன்சிறிதுநேரம்சகுந்தலை வாழ்ந்த காலத்திற்கும் இடத்திற்கும் எம்மை அழைத்துச் சென்று அவர்களோடு ஒன்றித்து வாழும் அனுபவத்தைத் தந்தது. இவ் வகையில் இந் நாடகமும் அதன் நெறியாளரும் வெற்றி பெறுகின்றனர். மொழிபெயர்ப்பின் வசனங்கள் புதியகற்பனைகளை மனதில் தூண்டுவனவாகவும், உணர்வுப் பிழிவுகளாகவும் அமைந்து எம்மை ரசிக்க சிந்திக்க தூண்டின. இன்னமும் சில நவீன நாடக உத்திகளையும் இணைத்துக் கையாண்டால் இன்னும் சில வகையான உணர்வுத்தளங்களுக்கு இந் நாடகத்தை இட்டுச் செல்ல முடியும். இத்தனை நெருக்கடிச் சூழலிற்குள்ளும் பல்கலைக் கழக நாடகத்துறை இன்னமும் உயிர்ப்புடனும் வீச்சுடனும்தான் இயங்குகின்றது என்பதையும் மெய்ப்பிப்பதாக அமைந்தது. நாடக அரங்கியல் மாணவர்களுக்கும், நாடக ரசிகர்களுக்கும். அரங்கியல் தேடல் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாய் அமைந்தது. இன்னமும் சிறந்த நடகப்படைப்புக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.0

ஜீவநதி 55 మిగాను దినాడు గీagaach
1) ஆசிரியத்துவத்தின் மனித மாண்பின் மகத்துவத்தை விளக்கும் வகையில் வலயக் கல்விப் பணிப்பாளர் யாழ்.வலயம் திருமதி அருளேஸ்வரி வேதநாயகம் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஒப்பிலாமணியே குறும்பட வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் 2008 - 10 - 11 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வைத்தியகலாநிதி லயன் வை.தியாகராஜா தலைவராகவும், பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எனி. சண்முகலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர். மதிப்பீட்டுரையை விரிவுரையாளர் கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் நிகழ்த்தினார். பதிலுரையை இயக்குனரும் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமான க.இ.கமலநாதன் நிகழ்த்தினார். நன்றியுரையை திருமதி.புவேல்நிதி நிகழ்த்தினார்.
2) அமரர் பொலிகை ச.திருப்பதியின் "காதோடு வாய்புதைத்து." கவிதைத் தொகுதி வெளியீட்டுவிழா யா/கொற்றாவத்தை அமெரிக்கமிஷன் கல்லூரியில் அதிபர் பா.வெற்றிவேல் தலைமையில் 2008.10.17 அன்று நடைபெற்றது. இந்நூலின் வெளியீட்டுரையை மூத்த எழுத்தாளர் கலாபூசணம் தெணியான் நிகழ்த்தினார். நூலின் மதிப்பீட்டுரையை திரு.வே.இளையகுட்டியும், சிரேஷ்டவிரிவுரையாளர் யாழ். "ல்கலைக்கழகம் கலாநிதி த.கலாமணியும் நிகழ்த்தினர். ஏற்புரையை திரு.தி.சுபாகரன் நிகழ்த்தினார். நன்றியுரையை இந்நூலை பதிப்பித்த வங்கி முகாமையாளர் திரு.பி. கிருஷ்ணானந்தன் நிகழ்த்தினார்.
3) க.சுதர்சனின் 'மெளனமே வாழ்வாக!. கவிதை தொகுதி வெளியீட்டு விழா ஆசிரியர் பா.இரகுவரன் தலைமையில் யா/தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் 2008.10.19 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அதிபர் திரு.ந.தெய்வேந்திரராஜா கலந்து கொண்டார். வரவேற்புரையை திரு.யோகநாதன் அவர்களும், அறிமுக உரையை ஜீவநதி இணை ஆசிரியர் க.பரணிதரனும் வெளியீட்டு உரையை திரு.குலசிங்கமும், மதிப்பீட்டுரையை ஆசிரியை செல்வி. கல்யாணி நமசிவாயமும், ஆசிரியர் திரு.கந்தையாவும் நிகழ்த்தினர். ஏற்புரையை க.சுதர்சன் நிகழ்த்தினார். நன்றியுரையை செல்வி. தி.சிவதர்சினி நல்கினார்.
4) அவை கலை இலக்கிய வட்டத்தின் 15 ஆவது ஒன்றுகூடல் அதன் அமைப்பாளர் கலாநிதி த.கலாமணி அவர்களின் இல்லமான அல்வாய் கலைஅகத்தில் 2008.10.19 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் "ஒப்பிலாமணியே குறும்பட அறிமுகம் இடம்பெற்றது. குறும்படம் காண்பிக்கப்பட்டு பின்னர் அது பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. ஒப்பிலாமணியே பற்றிய ஆய்வை ஆசிரியர் திரு.க.தர்மதேவன் நிகழ்த்தினாாட் திரு.க.இ.கமலாநாதனும், நடிகரும், யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் உபபீடாதி பதியும் ஆகிய பா.தனபாலனும், கலாநிதி.த.கலாமணியும் இப்படத்தின் சுவையான தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நன்றியுரையை மூத்த எழுத்தாளர் தெணியான் நிகழ்த்தினார்.

Page 30
ஜீவநதி 56
5) கலைமாமணி அண்ணாமலை மகாதேவன் எழுதிய ‘Poetical World’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 2009.2008 தேவரையாளி இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.பலாலிஆசிரிய பயிற்சிக்கல்லூரிவருகை விரிவுரையாளர் செ.பரராஜசிங்கம் தலைமையில்நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை வதிரி தமிழ் மன்ற செயலாளர் திவரதராஜனும் வாழ்த்துரைகளை கலாபூஷணம் தெணியான் இளைப்பாறிய ஆசிரியர் சிகலோகநாதனும் நிகழ்த்தினர்.
மா.கிருஷ்ணகாந்தன் அறிமுக உரையையும் யாழ்தேசிய கல்வியியற் கல்லூரி ஆங்கில விரிவுரையாளர் த.மோகன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர்.
நூல் ஆப்வுரையை யாழ் பல்கலைக்கழக கல்வியியற்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சார்பாக இளைப்பாறிய அதிபர் அ.விஜயநாதன் நிகழ்த்தினார்.
கதிரவன்ஸ் பாதணி நிலையம்
JFikr, DSL, paüur,
மற்றும் உள்ளூர் உற்பத்திப் பாதணி வகைகளை
வெற்றுக் கொள்ள நாடி வேண்டிய ஒரே இடம்
கட்டைவேலி- நெல்லியடிu.6ரு^.உ.சங்கம்.
எமது சங்கச் சேவைகள் :
நுகர்ச்சிச் சேவை தரமான நூலக சேவைகிராமிய வங்கிச் சேவை புலமைப்பரிசில் வழங்கல்வாடகைச் சேவைகள் தரமான திரைப்படக்காட்சிக்கூடாக புதிய ரசனையை ஏற்படுத்துதல் எரிபொருள் சேவை விவசாய சேவை நூல்வெளியீடும் விமர்சனங்களும் கூட்டுறவுக் கலாசாரப் பெருமன்றம் “சங்கம் செய்தி” மாதாந்த
வெளியீடு. தொலைபேசி இலக்கம் :- 02:12263268 தொலைநகல் 02:12263283
0212264474 0212264,725 கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம் கரவெட்டி,
இச்சஞ்சிகை அல்வாய் கலைஅகம் வெளியிட்டு உரிமையாளர் கலாநிதி த.கலாமணி அவர்களால் சதாபொன்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
 
 
 
 


Page 31
@匣丽鸥)
 

早aGAL、
ர்கரப் பொருட்கள் 。六,_汇_
0.8625623a.Weib.
Oggi65.555.635006)