கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2004.01-02

Page 1

&
繆
溪

Page 2
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
墨
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
ஜூ மகாகவி ulimi »
பாரதி
s
SS S SS S SSASSMSSSLSS SS0 O
வெளியீடு : PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRd
BARCALORA
 
 
 
 
 
 
 

** 敬豪基兹邀敬 ஆ
兼
兼 兼
போது -1
இதழ் -35
&
*தை-மாசி 2004
தோற்றம் 5-5-1998
3. ppcC0diamond.lanka.net
兼 **********端
養
秦
養
兼
*நிர்வாகம் 3 (Managing Editor) 崇
போல் சற்குணநாயகம்.யே.ச.
费
త్తిత్తht (Editor) 兼 ஆவாகரைவாணன் 崇 兼 奏 *நிர்வாகம்: 誉 *(Management) 誉 མ་ཧཱ་ சி.எம்.ஒக்கஸ் 兼 兼 #ಣಾ... * 兼 ஜஸ்கொமஅசசகம, *இல. 1, யேசுசபை வீதி, 誉 *மட்டக்களப்பு. 奏
*தொலைபேசி: 拳 兼065-2223822,065-222983 誉 秦 養 奏 3. E-mail 秦 養
養
*
MMSggS S S gL LS gM LT T T T LMLS LLLSLSSLSSSgSSMSgSgS gS gSL gLS ggL gTSBBTSBTT T MSiMS *; 8
 ை
& 棠 ×স্থ 裘 雾 ۔۔۔۔۔ 誉 »a- sht. 8 *ž. * *
· - فهیم. - - - - - - -ة
இருக்கின்ற இனவாதம் இந்நாட்டிற்குப் போதாதென்று தீர்மானித்து விட்ட அரசியல் சக்திகள் சில, இன்னுமொரு பயங்கர(மத) வாதத்தையும் பயிரிட்டு வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன, என்பதையே கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட கீழ்த்தரமான தாக்குதல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
அரசியல் ஆதாயத்துக்காக ஒரு கையில் இனவாதத்தையும், மற்றொரு கையில் மதவாதத்தையும் ஏந்திக் கொண்டு இந்தத் தேசத்தை 'இரத்தபுரி யாக்கிக் கொண்டிருக்கும் கபோதிகளுக்கு நாம் சொல்லிக் கொள்கிறோம்.
போர்த்துக்கீசரின் வருகைக்குப் பின்புதான் இந்த மண்ணில் புத்தகக் கலாசாரம் உதயமாகியது. பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், கல்லு"ாரிகள்,நூலகங்கள் என்பன பரவலாகத் தோன்றின. இதன் விளைவாக அறிவொளி எட்டுத் திசையும் எட்டி நடந்தது. இருட்டிற்குள் இருந்த மனிதர்க ளெல் லாம் வெளியே வந்தார்கள் .
ஆங்கிலக் கல்வி அபரிமிதமான

Page 3
நன்மையை இந்நாட்டிற்கு அள்ளித் தந்தது. இலங்கையர் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் அது அரியாசனம் போட்டு அமர்ந்தது. இழுத்து மூடப்பட்டிருந்த இலங்கை’ என்னும் வீட்டின் யன்னல் கதவுகளை இந்த ஆங்கிலம்தான் திறந்து விட்டது. அதனால்தான் வெளிச்சத்தையும், காற்றையும்நாம் வேண்டுமட்டும் அனுபவிக்கின்றோம்.
இவற்றை விட,
கிறிஸ்தவத்தை நம்பும் மேற்குலக நாடுகளிடமிருந்து நமக்குக் கிடைக்கும் உதவிகள் கொஞ்சமா? மனிதாபிமானம் என்றபேரில் இந்த நாடுகள் நமது மண்ணில் கொண்டுவந்து கொட்டும் பொருட்களும் கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களும் மதமாற்றத்திற்காகவா பயன்படுகின்றன?
கட்டாய மதமாற்றம்’ என்பது முன்னாள் நடிகை ஜெயலலிதா அரசியலுக்காகத் தமிழ் நாட்டில் அவிழ்த்துவிட்ட கதை. இந்தக் கதையைப் பிடித்துக் கொண்டு இங்கேயும் சிலர் தொங்குவதால் நல்ல பயன் எதுவும் விளையப் போவதில்லை. கட்டாய மதமாற்றத்தை கடந்த காலங்களில் எந்த மதம்தான் மேற் கொள்ளவில்லை? சரித்திரம் படித்தவர்களுக்கு அந்த சங்கதிகள் நன்றாகத் தெரியும். இறுதியாக -
சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை. இந்த உரிமை ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கும்வரை அவனால் ஏற்றபணி செய்ய முடியும். இன்னொருவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமல் 1 சட்டமும் இதில் சம்மந்தப்
Lill.
அன்புடன்
வாகரைவானன்.
 

இந்தச் சமுதாயத்தோடு அவனுக்கு இணங்கிப் போகவே முடியவில்லை. அதனால், அவனுக்கு எப்போதும் யுத்தம்தான். இந்த யுத்தத்தைத் தனி ஒருவனாகவே நின்று செய்தான்.
அவனது எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. பெரிய பெரிய மனிதர்கள். அதிகாரமும் அந்தஸ்தும் உள்ளவர்கள். உயர்ந்த இடத்தில் பசையாக ஒட்டிக் கொண்டிருப்பவர்கள். இந்த மனிதர்களை எதிர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்று அவனுக்கு நன்கு தெரியும். ஆனாலும், எதிர்த்தான். அவனது சத்திய வேட்கை அவனை ஓர் அர்ச்சுனனாகவே ஆக்கியது.
காண்டீபத்திற்குப் பதிலாக அவனது கையில் பேனா இருந்தது. அதனிடமிருந்து எந்த நேரத்திலும் அம்புகள் பாய்ந்து செல்லும், துரோணர், பீஸ்மர் போன்ற பலசாலிகளைக் கூட அந்த அம்புகள் துளைத்தெடுத்தன. ஆனாலும் அவனது குறி துரியோதனர்கள்தான். அதுவரை அவனது பேனா என்னும் காண்டீபம் அவனது கையில் சுழன்று கொண்டே இருக்கும்.
நீதி நியாயத்தின் பக்கம் அவன் நிற்கின்ற காரணத்தினால் தான் குழப்பக்காரன், பிரச்சனைக்காரன் என்ற பட்டங்கள் அவனைத்தேடி வருகின்றன. இந்தப்பட்டங்கள் அவனது சொந்த மக்களையும், அவனைஒரு மாதிரியாகப் பார்க்க வைத்தன. ஆனாலும்அவன் சோர்ந்துபோகவில்லை. இலட்சியமா? இனசனமா? என்ற கேள்வி எழுந்த போது அவன் இலட்சியம் என்றே பதிலிறுத்தான்.
இந்தப் பதில் , அவனைப் பிழைக்கத் தெரியாதவன் என்றே காட்டியது. பலரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள:
ܐܚܧܫܦܥܣܝܣ
幸互彦

Page 4
பரிகாசம் பண்ணினர்கள். ஆனாலும் அவன் சாதாரணமாகவே சொன்னான் எனது நிறம் எப்போதும் ஒன்றுதான். குறுக்கு வழிகளுக்குள் நான் என்னை என்றுமே கொண்டு செல்வதில்லை. பள்ளம், குழிகள் இருந்தாலும் பாதை ஒன்றுதான், பயணம் மட்டும் நிற்காது.
அவனது இந்தப் பிரகடனத்தைக் கேட்டவர்கள் இன்னும் அதிகமாகவே சிரித்தார்கள். பெரிய மகாத்மா.
எந்தப்பட்டமும் பரிகாசமும் அவனை எதுவும் செய்யவில்லை. அவன் தன் நோக்கத்தில் உறுதியாகவே நிற்கின்றான்.
சின்னஞ் சிறு வயதிலேயே சிந்தனையில் ஊறியவன் அவன். புத்தகங்களையும் அவன் நிறையவே படித்தான். ஆனாலும் அவனுக்கு அவற்றில் போதிய நம்பிக்கை இருக்கவில்லை. திட்டவட்டமான சில கொள்கைகள் மக்களிடம் திணிக்கப்படுவதாகவே அவன் உணர்ந்தான். அப்படியானால் சுதந்திரம். விடுதலை.சுயதேடல் என்ற சொற்களுக்கு என்னதான் பொருள்?
(சிறப்புச் சிறுகதை N محك كك -- --ک س- -- - - -- ۷
அன்று அவன் தனிமையிலே இருந்தான். அவனைப் பற்றி ஒரு பெரியவர் சொன்ன வார்த்தைகள் அவனை அரித்துக் கொண்டிருந்தன. அவற்றை அவனால் சீரணிக்க முடியவில்லை. எப்படிப்பட்ட வார்த்தை? அதை எவ்வளவு எளிதாக அவர் சொல்லிவிட்டார்? அதுவும் இன்னும் ஒருவர் முன்னால்.
சுயமரியாதைக் காரன் அவன்- அதனால் அந்த வார்த்தைகள் அவனை அதிகமாகவே சுட்டுப் போட்டன. அவன் படித்தவன். அதனால் அந்தப் பெரியவர் அன்று தப்பித்துக் கொண்டார். பெரியவருக்கு அவரது அந்தஸ்தும் ஒரு பெரிய அரணாகவே இருந்தது.
இப்போது அவனுக்குத் தன் படிப்பு மீதே கோபம் ஏற்பட்டது.
奉芷库

இந்தப்படிப்பு எதற்கு? ஆமையாக அடங்கிப் போகவா? அவன் தன் னைத்தானே கேட்டுக்கொண்டான்.
பொருளாதாரம் தான் இந்தச் சமுதாயத்தின் அனைத்துப் பாவங்களுக்கும் பொறுப்பு என்பது அவனுக்குத் தெரியும். அவன் அந்தப் பெரியவர் முன் அடங்கிப் போனதற்கும் அந்தப் பொருளாதாரம்தான் காரணம். ஆனாலும் - அப்படி அடங்கிப் போனதற்காக உண்மையிலேயே அவன் வெட்கப்பட்டான்.
இந்தச் சமுதாயத்தை மீட்க, இனி எந்த யேசுநாதரும் வரமாட்டார் என்று அவன் நன்றாகவே உணர்ந்திருந்தான். பொருளாதார சிக்கலில் இருந்து மக்களை மீட்கப் போராட்டம்தான் ஒரே வழி. அதுதான் அவன் வழியும். அந்த வழி எந்த மாதிரியும் இருக்கலாம்.
இப்போதெல்லாம் படியாதவர்களை விடப் படித்தவர்கள்தான் பெரிய ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கின்றார்கள். உயர்ந்த இடங்களில் இருந்து கொண்டு இந்த மனிதர்கள் எப்படியெல்லாம் வேசம் போடுகின்றார்கள். பொய்யும் புரட்டும் இவர்களுக்கு எப்படியெல்லாம் சேவகம் செய்கின்றன? ஏன் நான் படித்தேன்? அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.
அவன் தனிமையில் அமர்ந்திருந்தான், மாலை இரவைப் பிரசவித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அந்தப் பிரக்ஞை அவனுக் கில்லை. எழுந்து சென்று மின்விளக்கை ஏற்றவும் அவன் விரும்பவில்லை.
. அவன் கேட்டான்.
என்வீடு மட்டும்தானா இருளில் இருக்கின்றது? இந்த உலகமே இருளில் இருக்கின்றது. செயற்கையான இருளால் என்ன செய்திட முடியும்?
இந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது. என் மனைவி, இவனுக்கு என்ன 'தட்டித்தோ' என்று கூடச் சந்தேகப்படுவாள். இப்படி நினைத்தபோது, அவனுக்கு மீண்டும்சிரிப்பு வந்தது.
奉艾库

Page 5
உண்மைதான். இந்த உலகம் ஆழமாகச் சிந்திப்பதே இல்லை. அது மேய்வதெல்லாம் நுனிப்புல்தான். அநீதி அக்கிரமங்களைக் கண்டால் ஒதுங்கி ஓடிப்போகின்றது. ஏன் என்று கேட்பதில்லை. கேட்பவனைக் கண்டால் பிழைக்கத் தெரியாதவனாய் இருக்கின்றாயே . பேசாமல் இரு என்கிறது.
நரித்தனமான அதன் ஆலோசனைக்கு செவிமடுக்க மறுத்தால் நீ என்ன புத்தனா. யேசுவா. என்று கேலி செய்கின்றது. அப்படியானால் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒரே ஒரு வழி "ஆமாம் போடுவதுதானா?
இந்தமாதிரி எண்ணவே அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. அப்படி ஆமாம் போட்டு யாசகனாக வாழ்வதைவிட, அகால மரணம் அடைவது எவ்வளவோ மேல் . அவன் மனம் தெளிவாகச் சொன்னது.
இருள் - குழந்தை பிறந்து பல கணங்ளாகி விட்டன. ஆனாலும் அவன் அந்த இடத்திலேயே இருந்தான். பக்கத்து வீடுகளிலெல்லாம் மின்சாரம், தன்னை பளிச்செனக் காட்டிக் கொண்டிருக்கின்றது. அவன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை. ஏனெனில் இந்த வெளிச் சத்தால் எந்தப் பலனும் இல்லை என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
அன்று, அவன் மனைவியும் மக்களும் எங்கேயோ போயிருந்தார்கள். எங்கே போனதென்றே அவனுக்கு நினைவில்லை. அவனும் நாயும் தான் இப்போது வீட்டில். நாய், அவனுக்குப் பக்கத்தில் படுத்திருந்தது. அதுவும் அவனைப்போல வெளிச்சத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்கு எல்லாமே ஒன்றுதான். ஆனாலும் ஒரு வித்தில் அதிஸ்டசாலி. ஆமாம்; அது அவனைப்போல சிந்திப் பதில்லை. சிந்திப்பதால்தானே இத்தனை சித்திரவதைகளும். உண்மையிலேயே சிந்திக்காதவன் பாக்கியசாலிதான். யேசுநாதருக்கு இது தெரியவில்லைப் போலும். இல்லாவிட்டால் சிந்திக்காதவர்கள் பாக்கிய சாலிகள். ஏனெனில் அவர்கள் எப்போதும் சந்தோசமாக இருப் பார்கள் என்று திருவுளம்பற்றியிருப்பார்.
3óE

வீதியில் ஜனநடமாட்டம் நன்றாகக் குறைந்திருந்தது. பொதுவாக இருட்டுப்பட்டால் அந்தவிதியில் ஜனங்கள் போக விரும்புவதில்லை. இருட்டில் பள்ளம், குழிகளில் விழுந்தெழும்ப யாருக்குத்தான் விருப்பம் வரும்.? அப்படி விழுந்தெழும்புபவர்கள் பெரும்பாலும் குடிகாரர்க ளாகத்தான் இருப்பார்கள் - அந்த நேரத்தில் முனிசிப்பல் காரர்களுக்கு நல்ல அபிஷேகம் கிடைக்கும்.
அப்படி அபிஷேகம் செய்பவர்கள் அடுத்தநாள் அதே றோட்டில் எதுவும் தெரியாதவர்கள் போலப் போவார்கள். ஆமாம். குடித்தால்தான் சிலருக்கு வீரமும், ரோஷமும் பொத்துக் கொண்டு வரும்
~ அரவிந்தண் -
அவன் இருட்டுக்குள்ளேயே இருந்தான். அவனுக்கு எழும்பவே விருப்பமில்லை. இந்த உலகம் புற இருளுக்குத்தான் பயப்படுகின்றது. இதைவிட மோசமான அக இருள் பற்றி அது கவலைப்படுவதே இல்லை. அப்படி ஒன்று இருப்பதுகூட அதற்குத் தெரியாது. அவன் சிந்தித்தான்.
இந்த உலகத்தின் தீமைக்கெல்லாம் எது காரணம்? புற இருளா..? இல்லை . இந்த அக இருள் அவனைப் பொறுத்தவரையில் அறியாமையே தவிர ஆத்மாவோ, ஆன்மீகமோ அல்ல - அதில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இந்த உலகத்தில் வாழத் தெரியாத மனிதன், அடுத்த உலகம் பற்றியெல்லாம் சிந்திப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்று அவன் பலரோடு வாக்குவாதப்பட்டிருக்கின்றான்.
அக இருள்தான் பிரச்சனைகளுக்கு அத்திபாரம். இது இருக்கும்வரை தீமைகளும் இருந்து கொண்டே இருக்கும். இந்த இருளைப் போக்கத்தான் ஆராரோ எல்லாம் அவதாரம் எடுத்ததாகச் சொல்கின்றார்கள். ஆனாலும் அவர்களால் அதனை அழிக்கவே முடியவில்லை. மாறாக அந்த முயற் சியில் அவர்கள்தான் முடிந்து போனார்கள்.
" என்ன இன்னும் லைற் போடாம இருக்கிங்க.“ கேற்றைத் திறந்து கொண்டு, அவன் மனைவிதான் கேட்டாள். அதற்குப் பின்பும் அவன் எழும்பவேயில்லை. அவனைப் பொறுத்தவரையில் இந்த இருள் இருளே அல்ல ; அவன் வெளிச்சத்தில்தான் இருக்கின்றான் !

Page 6
சின்னச் சின்ன வீடு கட்டி சிற்றாடை கூட இடையிலின்றி மண்ணைக் கொண்டு கறிசோறாக்கி மாறி மாறி அதனை உண்டு கண்ணைக் கட்டி கல் ஒழித்து கண் திறந்து அதை எடுத்து வண்:ன வண்ணப் பூக்கள் கொண்டு வகை வகையாய் மாலை கட்டி திண்ணைக் குந்தில் அமர்ந்திருந்து திருமணம் செய்து பார்த்து மாங்காய் வெட்டி உப்பு விட்டு துாளும் சேர்த்து சம்பல் போட்டு கண்ணீர் சிந்த அதனை உண்ட காலம் மீண்டும் இனிவருமோ
R - புதுக்கவி கண, மனோகரன்,
俊
德苑 魏
葵 線義
Oxaal
奉蓝[旨
 
 
 

མ་ཡས་གཡོས་
イ-/十s
ஏன் இந்தச் சிலுவை எனக்கென்று.?
பெற்ற தாய்க்குப் பாசமில்லை
உடன்பிறப்புப் பொய்களிங்கு
சுற்றத்தில் உண்மையில்லை
சொந்தங்கள் உறவுமில்லை.
இருந்தாலும் எனது மனம்
ஏங்குது இந்த உறவுகளுக்காக.
எனக்கோ புரியவில்லை ஏன் இந்தச் சிலுவை எனக்கென்று.?
ーデ一っ_、 எனக்கோ புரியவில்லை
மாடாக உழைத்தேன்
தாயின் துன்பம் துடைத்தேன் ஆணாகப் பொறுப்பேற்றேன்
வேலைக்காரியாய் வேலைசெய்தேன் எனது அன்பை ஏற்கவில்லை,
இவை எதையும் மதிக்கவில்லை. எனக்கோ புரியவில்லை ஏன் இந்தச் சிலுவை எனக்கென்று
அன்பினாலே கூறும் மொழி
பொறாமையினால் வருகுதென்று சேர்ந்திருந்து மட்டம் தட்டும்
சகோதரரின் கூட்டுச் சேர்க்கை சோரவைக்கும் எனது உள்ளம் இருந்தும் நான் ஏங்குகின்

Page 7
எனக்கோ புரியவில்லை ஏனிந்தச் சிலுவை எனக்கென்று.?
சிலுவையிலே நீர் மரித்தீர்
ஒரு தரமே யேசு ஐயா
தினம் நான் மரிக்கின்றேன்
உமக்கு இது நியாயம்தானோ ?
M என்ன இது சோதனையோ
வேதனையோ முடியவில்லை.
எனக்கோ புரியவில்லை
ஏன் இந்தச் சிலுவை எனக்கென்று.?
அடுக்கடுக்காய் வீடுகளும்
காசளவே பாசங்களும்
அழகழகாய் நகை நட்டும் 滋 பறக்கும் பணமும் எனக்கிருந்தால்
g5'Tu 16öI Ởng 6)J(bLDIT..?
பாசங்களும் தேடிவருமா..?
எனக்கோ புரியவில்லை ஏன் இந்தச் சிலுவை எனக்கென்று.?
- ஹரீஷ்நாத் -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம்யூனிஸம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் உலகத்தின் பாதி ஜனத்தொகையே செங்கொடியின் கீழே இருந்தது! நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, இனங்களையும் மதங்களையும் தாண்டி, சூரியனின் ஒளியைப்போல பூமியெங்கும் ஒரு காலத்தில் ஊடுரு வியிருந்தது ஓர் இயக்கம் என்றால் அது கம்யூனிஸ் இயக்கம் மட்டுமேதான்
இதற்கு மூலவிதை கார்ல் மாக்ஸ் லெனின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, மாவோ, கோசிமின், காஸ்ட்ரோ போன்ற மாபெரும் உலகத் தலைவர்களுக்கெல்லாம் தலைவன் கார்ல்மாக்ஸ்
உலகில் நடந்த பல புரட்சிகளுக்கு ஆரம்ப நெருப்பாக இருந்த மார்க்ஸ், பிறவியிலேயே ஒரு புரட்சிக்காரர் இல்லை. அவர் பிறந் தது ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் குடும்பத்தில் இவர் பிறந்த நேரம் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி முழுமூச்சோடு முன்னேறிக்கொண்டிருந்தது. பசுமைப் புரட்சியின்போது நிலப்பிரபுக்கள் விவசாயக் கூலிகளை எப்படி அடிமைகள் போல நடத்தினார்களோ. அதேபோல தொழிற்புரட்சி நடந்த இந்தச் சமயத்தில் முதலாளிகள் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி கொடுத்துவிட்டு, கசக்கிப்பிழிந்து வேலைவாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்தக்காலத்தில் மார்க்ஸ் பட்டப்படிப்புப் படித்தார். பிறகு தத்துவ இயலில் டாக்டர் பட்டம் வாங்கினார் . அப்போது ‘ ஹெகல் ’ என்ற அறிஞரின் சோஷலிஸக் கருத்துக்களால் மார்க்ஸ் தூண்டப்பட்டார்.
ஆனால் தொழிலாளர்களுக்குச் சாதகமான ஒரு நிலை காலப்போக்கில் மெல்ல மெல்ல உருவாகும் ' என்ற சோஷலிஸ்ட்டுக்களின் கருத்தை மார்க்ஸ் ஏற்கவில்லை. திடீர் என்று தொழிலாளர்கள் பொங்கி எழுவார்கள்! புரட்சி வெடிக்கும் இந்தப் புரட்சியின் இறுதியில் தொழிலா ளர்களின் ஆட்சி. அதாவது கம்யூனிஸ்ட்டுக்களின் ஆட்சி மலரும்! என்று மார்க்ஸ் உறுதியாகச் சொன்னார்.

Page 8
மார்க்ஸின் இந்த உறுதியான வார்த்தைகளை ஒரு தியரி என்று மட்டுமே உலகம் அப்போது சொன்னது. ஆனால் 1917 - ம் ஆண்டு ரஷ்யாவில் ஆகஸ்ட் புரட்சி நடந்தது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போது மார்க்ஸின் வார்த்தைகள் உண்மையாகின. மார்க்ஸ் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுக்களின் பிதாமகர் ’ ஆனார்! அவர் எழுதிய மூலதனம் என்ற புத்தகம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பகவத் கீதை ஆனது.
மூலதனம் எழுதிய மார்க்ளில் வறுமையைத்தவிர வேறு எதையும் அனுபவிக்கவில்லை என்பது மிகப் பெரிய சோகம்!
மார்க்ஸின் மனைவி ஜென்னி எழுதிய சிறு குறிப்பைப்
LjLQg55s fol) ..... மார்க்ஸ் எவ்வாறான வாழ்க்கை வாழ்ந்தார் என்பது ஓரள
விற்குப்புரியும்.
அலைக்கழிக்கப்பட்ட நிலையில் அன்று நான் வீடு
திரும்பினேன். எங்கள் குட்டித் தேவதை . பிரான்சிஸ்கா மார்புச்
சளியால் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தாள். வாழ்விற்கும் மரணத் துக்குமிடையே மூன்று நாட்கள் அவள் போராடிக் கடைசியில் தோற் றுப்போனாள். தாய்ப்பாலோடு என் நெஞ்சின் வேதனையையும், வருத் தத்தையும் சேர்த்துப் பருகியதால் அவள் இறந்துவிட்டாள் என்று நினைக்கின்றேன்.
அவள் பிறந்தபோது தொட்டில் வாங்கக்கூட எங்களிடம் காசு இல்லை. இறந்தபோது சவப்பெட்டி வாங்கக் காசு இல்லை.
நெஞ்சிலே ஆணி அறைந்ததுபோல ஜென்னி எழுதி வைத்து விட்டுப் போயிருக்கும் அத்தனை வார்த்தைகளும் உருக்கமானவை!
முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து சிந்தனை எழுப்பிக் கொண்டிருந்த மார்க்ஸ் எப்போதும் எந்த முதலாளியின் கீழும் வேலை புரியத் தயாராயில்லை. அதனால் எழுத்தாளராகவும், சிந்தனையா ளராகவுமே தனது வாழ்க்கையை நடத்தினார். ஆனால், தனது குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போவதைக்கண்டு வேதனை தாங்காமல் மார்க்ஸ் ஒருமுறை ரயில்வே கம்பனியொன்றில் குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்தார்.!
கொஞ்சநாளில் உன்னுடைய கையெழுத்துச் சரியில்லை என்று அவர்கள் கதவைச்சாத்த மார்க்ஸிக்கு இந்த வேலையும்
தொடர்ச்சி 30ம் பக்கம் .
美蓝隆

%ॐ
ஜ்
எனக்குப் பிடிக்கவில்லை
சுதந்திரமாகப் பேச முழயவில்லை
அதற்கு சட்டத்தில் இடமில்லையாம்
சட்டப் புத்தகத்தில் எழுத்துக்கள் எல்லாம் அழிந்து விட்டது போல
திருப்பி அச்சிட எழுத்துக்ளை தேடிய்யார்த்தனராம் கிடைத்ததால்
எழுதினர்
ஒரு இனம் அழிய
எல்லா சட்டமும் மாற்றப்பட்டது
நீதிதேவதையின் கண்கள் பிருங்கப்பட்டு எழுதப்படுகிறது. வாதிடப்படுகிறது.
இந்தத் துர்ப்பாக்கிய வாழ்க்கை

Page 9
苓 உண்மைகள் புதை குழிகளில்
புதைக்கப்பட்டு புல் வளர்ந்து விட்டது.
தேடித்தேழயும் கிடைக்காத
அந்த வெள்ளைய் புறாவின்
குறிக்கோள்
கசாய்புக் கடைகளில் தொங்குகிறது.
அவர்களால்
நாளை என்ன நடக்கும் என்பது பற்றிச் சொல்ல தீர்க்க தரிசி கூட இல்லையே.
மழுங்கியதாகய் புல்லாங்குழல் ஒசை . எல்லாம் நடந்தாலும்
இன்னும் நம்பிக்கையுடன் ஒரு சமூகம் காத்துக் கிடக்கின்றது
எனக்குள்ளும் மரணித்துக் கொண்டிருந்த சந்தோசம் மீதும்
நம்பிக்கை துளிர்க்கின்றது. ஆனால் நடக்கும் அரசியலை நினைத்தால்
གྱི་ O GO GO GO, GO GO, GO GO, GO GO எஸ். பி.பாலமுருகன்
拳J本彦
轉 彎
 
 
 

அதிகாரம் 10
அதிராஜேநதரனன குறுகய ஆடசககாலததல் விஸ் ணுவர்த்தன் என்னும் குலோத்துங்கன் திட்டமிட்டு மறைமுகமாக உருவாக்கிய சமய அரசியல் குழப்பங்களினால், நாட்டில் தோன்றிய பொருளாதார பற்றாக்குறை - அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசனின் திடீர்மரணம் - குலோத்துங்கன் முடிசூடல் - மேலைச்சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும் குலோத்துங்கனுக்கும் இடையே நீண்ட காலமாக நிலைத்துவிட்ட பகைமை - சடையவர்மன், சீவல்லபன் உள்ளிட்ட பாண்டியரும் சேரரும் சேர்ந்து சோழருக்கெதிராக நடத்திய கிளர்ச்சி - குலோத்துங்கனின் தென் கலிங்க - வடக லிங்கப் போர். இவற்றையெல்லாம் நன்கு அவதானித்துக் கொண்டிருந்த விஜயபாகு - ஈழத்தின் விடு தலைக்கான காலம் இனி வெகு தூரத்தில் இல்லை என்றே நம்பினான்.
சோழ நாட்டின் அரசியல் நிலை ஒருபுறமிருக்க - இராஜ ரட்டையில் சோழருக்கெதிராக வளர்ந்துவரும் எதிர்ப்புணர்ச்சி - அடிமைத் தனத்தை ஈழம் தொடர்ந்து அனுமதிக்கப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகவே உணர்ந்து கொண்ட விஜயபாகு, ஈழவிடுதலைப்போராட் டத்திற்கு ஒருவித அசுரவேகத்தை அளித்தான்.
விருதலைப்போரின் வெற்றி
ஒரு தேசத்தின் விடுதலைக்கான முதல் உந்துசக்தி மக்களின் ஒன்றுபட்ட எண்ணங்களிலிருந்தும் செயற்பாடுகளிலுமிருந்தே தோன்றுகின்றது என்பதைத் தனது குறுகிய கால அனுபவவாயிலாக அறிந்திருந்த விஜயபாகு - தனது நாட்டு மக்களை எத்தகைய வேறுபாடுமின்றி நடத்த வேண்டும் என உறுதி பூண்டான். அத்தோடு, பல்லாண்டுகாலமாக, பாண்டியரோடு சிங்களப்பரம்பரைக்கு இருந்துவரும் இரத்த உறவின் மூலம், அவர்களின் ஆதரவை மட்டுமன்றி , மேலைச் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித் தன்னிடமிருந்து

Page 10
உதவியைப்பெற்று சோழ ஏகாதிபத்தியத்திற்கு இந்த நாட்டில் இறுதியை ஏற்படுத்திவிட வேண்டுமென்ற ஆவேசம் அவன் உள்ளத்தில் இயல்பாகவே மூண்டெழுந்தது.
போர்ப்பாசறையாகிவிட்ட பலட்டுப்பாண மலைக்குன்றின் மீது தனது சகோதரனும் படைத்தளபதியுமான வீரபாகுவோடும் ஏனைய தளபதிகளோடும் மந்திராலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான் விஜயபாகு.
சோழநாட்டில் மட்டுமன்றி ஈழத்திலும் தமக்குச் சாதகமாக மாறிவரும் சூழ் நிலையைச் சரியாகப்பயன்படுத்த வேண்டுமென்ற சாணக்கியமும் ஆர்வமும் அவர்களின் உரையாடலை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
இந்த உரையாடலின் போது ஈழவிடுதலைப்போரில் எவ்வித இனபேதத்திற்கும் இடமில்லை என்று தனது படைத்தளபதிகளுக்குத் திட்டவட்டமாகக் கூறிவிட்ட விஜயபாகு, படைத்தளபதிகளாகத் தமிழர்களையும் நியமித்திருப்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினான். பொலநறுவை, மாதோட்டம், பதவியா, கந்தளாய், போன்ற இடங்களில் பரவலாக வாழ்ந்துவரும் தமிழர்களின் ஆதரவையும் தனது விடுதலைப் போருக்குப் பெற்றிருந்த விஜயபாகு குலோத்துங்கனின் இராஜதந்திரத்திற்குப் பலியான குறிப்பிட்ட எண்ணிக்கையான வேளைக் காரரைத் தவிர மற்றவர்களையும் தன்பக்கமே வைத்திருந்தான்.
விஜயபாகுவின் இந்த அணுகுமுறை, ஈழத்து மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் அவர்களின் ஏக அரசனாக அவன்முடிசூடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை முழுநாடும் உணர்ந்திருந்தது.
தனது படைத்தளபதிகளோடு நடத்திய மந்திராலோச னையின் பின் சோழருக்கெதிரான ஈழத்துப்படையணி மூன்று வியூக மாக்கப்பட்டது.
ஒன்று - மேற்குப்புறமாக - தக்கிண தேசத்தில் இருந்து முகுன்னரு, படத்தலை , வாபிநகரம், புத்தகாமம், தல்குல்ல, மண்டகல்ல, முதலான இடங்கள் வழியாக அனுராதபுரத்தை அடைதல் - அதன்பின் -
SIF

தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய சோழர்படையை எதிர் கொள்ளும் வண்ணம் மாந்தையை நோக்கி அணிவகுத்தல்.
இரண்டு - கிழக்குப்புறமாக முன்னேறும் படை, சக்ககாமத் திலும் ஏனைய ஊர்களிலும் நிலை கொண்டுள்ள சோழர்படையை முறியடித்து முன்னேறுதல்.
இறுதியாக - விஜயபாகு தலைமையில் மாகநாகூ என்னும் இடத்திலிருந்து புறப்படும் படை மகியங்கனையில் தங்கி மகாவலிகங்கை ஒரமாகச் சென்று பொலநறுவையைக் கைப்பற்றல்.
இந்த வியூகத்தின்படி முதல் இரண்டுவழிகளிலும் முன்னேறிய விஜயபாகுவின் வீரர்கள் எதிர்பார்த்தது போல சோழர்படையைச் சின்னபின்னமாக்கித் தமது இலக்குகளை எட்டிய செய்தி அறிந்த றோகணையின் அரசன், பொலநறுவையை நோக்கி மின்னலெனப் பாய்ந்தான். விஜயபாகு நினைத்ததைப்போல, இரண்டொரு நாளில் கைப்பற்றக்கூடிய நிலையில் பொலநறுவை இருக்கவில்லை. இது சோழவீரர் களால் சுற்றி வளைக்கப்பட்டடிருந்தது. தங்கள் தலைநகரைக் காப்பாற்ற சோழர்படை தனித்து நின்று வீராவேசமாகப்போராடியது. ஏறக்குறைய ஒன்றரைத் திங்களுக்கு மேலாக நீடித்த இப்போர் - இதுவரை ஈழம் காணாத இரத்தக் களமாகவே காட்சியளித்தது.
ஆயிரக்கணக்கில் மாண்டு மடிந்த குதிரைகளும் ஆனைகளும் ஒருபுறம் கிடக்க, வேல்களாலும், வாள்களாலும், தாக்குண்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களும், முண்டங்களும் இன்னொருபுறமிருக்க - வானத்தில் கழுகுகளும் பருந்துகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எங்கும் ஒரே பிண நாற்றம். காற்று அசுத்தமாகிக் கொண்டிருந்தது.
ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தத்தை அறிந்த குலோத்துங்கன் வல்லடிப்போர்களினால் சோழசாம்ராச்சியத்தை தொடர்ந்து வைத்திருக்க முடியாதென்பதை நன்கு உணர்ந்ததினால் ஈழத்துக்கு மேலதிக மாகப்படைகளை அனுப்புவதை உடனடியாகவே நிறுத்திக் கொண்டான். சோழனின் இந்தச் செயற்பாடு, விஜயபாகுவிற்கும் களத்தில்
N67

Page 11
சாதகமான நிலையைத் தோற்றுவிக்கவே வெற்றிக்கனி அவன் கைகளிலேயே விழுந்தது.
களத்தில் வெற்றி பெற்ற விஜயபாகு களிப்புக்கடலில் மூழ்கினான். நீண்டகாலக் கனவு நிறைவேறியதில் அவனுக்குச் சொல் லொண்ணா மகிழ்ச்சி. இனிமேல் ஈழத்து அரசன் தானே என்ற எண்ணம் அவன் இதயத்தில் மேலோங்கி நின்றது. சிங்களவர் - தமிழர் என்ற பேதமில்லா அவன் ஆட்சியில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதை ஒரு பெரும் பேறாகக் கருதிய மக்கள் தங்கள் வெற்றியை ஒரு பெருவிழாவாகவே கொண்டாடினர்.
சோழர்களினால் நிர்மூலமாக்கப்பட்ட அனுராதபுரம், விஜய பாகுவினால் அனைத்து சோபிதங்களும் பெற்றுத் திகழ்கின்றது. இந்தப் பழம்பெரும்நகரில் அமைக்கப்பட்ட அழகிய அரண்மனை மண்டபத்தில் முதலாம் விஜயபாகுவின் முடிசூட்டுவிழா அமோக சிறப்போடு நடைபெற்றது. மகுடாபிஷேகம், முடிவுற்றதும் ஈழமன்னன் விஜயபாகுவின் இருமருங்கிலும் அவனது பட்டத்து ராணிகளான அயோத்திய இளவரசி லீலாவதியும் - கலிங்க இளவரசி திரிலோகசுந்தரியும் - அமாந்திருக்கின்றனர். காம்போஜத்தில் இருந்து அரசனால் வரவழைக்கப்பட்ட பிக்குகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதவிற்பன்னரான பிராமணர்களும் மன்னனை வாழ்த்தி நிற்க மக்கள் கடல் மலர் அள்ளித் தூவி மகிழ்கின்றது.
அடுத்த இதழில் முடியும் இலங்கையில் முஸ்லிம்கள். ཡོད
இலங்கையில் இஸ்லாமியரைப்பற்றி நாம் முதன்முதலாக ( கி.பி )எட்டாம் நாற்றாண்டின் தொடக்கத்திலேயே கேள்விப்படுகின்றோம். அக்காலம் தொடக்கமுள்ள எகிப்திய குலமுறைகளினதம் அயல் ஆசிய நாடுகளின் குலமுறைகளினதம் தங்க நாணயங்கள், முக்கியமாக பன்னிரெண்டாம், பதின்மூன்றாம் நாற்றாண்டுகளுக்குரிய தங்க நாணயங்கள் தீவின் மேற்குப்பகுதியில் காணப்படுகின்றன. இவ்விரண்டு நூற்றாண்டுகளிலேயே முஸ்லிம்கள் தென்னிந்தியாவில் வணிகச் செழிப்பிலும் அரசியல் ஆதிக்கத்திலும் மிகவுயர்ந்த நிலையை அடைந்தனர்.முஸ்லிம்கள் போர்த்துக்கீசரால் மூர் என்று அழைக்கப்பட்டனர்.
ر( 6ه - H. W. கொடிறின்றன் ~ (இலங்கையின் சுருக்கவரலாறு பக் - ! ܢܠ
奉芷睡

鬱 翁 發 கண்ணிர் சிந்தும் கிறிஸ்தவம் ത്ര අම්,
நாங்கள் மிகப் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியாது. நாங்கள் உங்களுடன் பேசியதை அறிந்தால் அவர்கள் எங்களைக் கொன்று விடுவார்கள். தமி ழர்கள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பது இப்போது எங்களுக்குப் புரிகின்றது என சிங்கள பெளத்த குழுவொன்றினால் புதன் இரவு எரிக் கப்பட்ட கட்டுவான கத்தோலிக்கத் தேவாலயத்தை சேர்ந்த ஒரு பெண்மணி கூறினார்.
கட்டுவானை தேவாலயத்தின் ஆராதனைப் பீட வழிபாடு செய்பவர்கள் அமரும் இடங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்ட பின்னர் தீயிடப் பட்டன. தேவாலயத்தின் பக்க மதிலின் மேலாகப் பாய்ந்து வந்த கும்ப லொன்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. அவர்களது நோக்கம் தேவாலயத்தை முற்றாக எரித்துச் சாம்பராக்குவதேயாகும். ஆனால் அதிஸ்டவசமாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் போய் விட்டார்கள் அவர்கள் விட்டுச் சென்ற பெற்றோல் நிரம்பிய கொள்கலன்களைக் கண்டபோது அவர்கள் எல்லாவற்றையும் பொசிக்கிவிடும் நோக்கிலேயே இங்கு வந்தார்கள் என்பது எங்களுக்குப் புரிந்தது.தக்க சமயத்தில் நாங்கள் நெருப்பை அணைத்திராவிட்டால் விளைவு பயங்கரமாக இருந்திருக்கும், என சம்பவ நேரம் கட்டுவனை புனித மிக்கேல் தேவாலயத்தில் தங்கியிருந்த ரஞ்சித் என்பவர் கூறினார்.
அண்மைக்காலத்தில் சிங்கள பெளத்த கும்பல்களால் எரியூட்டப்பட்ட ஆறாவது கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவானைத் தேவாலயமாகும். புதிதாகத் தோன்றிய சிங்கள பெளத்தரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டுவரும் தேவாலயங்களுக்கெதிராகவே பெளத்த அமைப்புக்கள் செயல்படுகின்றன எனவும் அதைத் தானும் எதிர்ப்பதாகவும் தென்னிலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை கூறிவந்துள்ளது. ஆனால் கட்டுவானையிலும் அதற்கு இருவாரங்களுக்கு முன்னர் தாக்கப்பட்ட திக்ஹத்தகம என்ற இடத்தைச் சேர்ந்த தேவாலயமும் கத்தோலிக்கத் தேவாலயங்கள் என்பது திருச்சபைக்கு அதிர்ச்சியைக்
கொடுத்துள்ளது.
sliš

Page 12
கட்டுவானைத் தேவாலயத்தின் மீது ஏற்கனவே நவம்பர் மாதம் 30ஆம் திகதி பட்டப்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று ஞாயிற் றுக் கிழமை.காலை ஆராத னையின் பின் நாங்கள் தேவா லயத்தையும் அதன் வளாகத் தையும் நத்தாருக்காகத் துப்பரவு செய்து கொண்டிருந் தோம். அப்பொது 20 பெளத்த பிக்குகளும், 10 க்கு மேற்பட்ட காடையர்களும் பொல்லுகள், கம்பிகளுடன் வந்து எங்களை மிரட்டினார்கள். தேவாலயத்தின் சிலுவையை அவர்கள் உடைத்தெறிந்தார்கள். அந்த இடத்தில் பெளத்த கொடியைப் பறக்கவிட்டார்கள். தேவாலயத்திற்கு ஆராதனைக்காக வருகின்றவர்களுடைய குடும்ப விபரங்கள் தொலைபேசி எண்கள் என அனைத்து தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் அபகரித்துச் சென்றுவிட்டார்கள்.
இது பற்றி நாங்கள் ஹோமகம பொலிசாரிடம் முறையிட்டோம்.அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கட்டுவானை தேவாலயத்தின் அருகில் பரம்பரையாக வாழ்ந்துவரும் ஒரு கத்தோலிக்கப் பெண்மணி கண்கலங்கக் கூறினார். தேவாலயத்திற்கு நான் சென்றபோது அங்கு இருந்தவருக்கு ஆங்கிலம் தெரியாததாலும் எனக்குச் சிங்களம் தெரியாததாலும் நடந்தவற்றை விளக்கவும் , எனது கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் அப்பெண்மணியை அருகிருந்தவர் அழைத்து வந்தார்.
சோமதேரோவின் மரணத்தின் காரணமாக சிங்கள பெளத்தரிடையே ஏற்பட்ட ஆத்திரத்தின் விளைவாகவே தென்னிலங்கையில் பல கிறிஸ்தவ
தேவாலயங்கள் தாக்கப்பட்டன என கூறப்பட்டது தவறு என கட்டுவானைத் தேவாலயத்தைப் பார்வையிட வந்திருந்த வண. லட்ஸ்மன் பீரிஸ் என்ற அங்கிலிக்கன் போதகர் தெரிவித்தார். கிறிஸ்தவர்கள் மீது தீவிரமாக சிங்கள் பெளத்த குழுக்கள் பல அபாண்டங்களையும், பொய்களையும் பரப்பிவருகின்றார்கள். தென்னிலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்தும் புலிகளின் பங்கர் என எல்லேவல மேத்தானந்த என்ற தேரோ வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். இதை அரச தொலைக்காட்சி இலங்கை முழுவதும் ஒளிபரப்பியது. உண்மை நிச்சயம் வெளிவரத்தான் போகின்றது. ஆனால் அது வெளிவரும்போது காலம் ஒரேயடியாகப் பிந்திவிடுமோ தெரியாது என வெள்ளவத்தையில் உள்ள புனித திரித்துவ தேவாலயத்தைச் சேர்ந்த அந்தப் போதகர் கூறினார்.
事塞库
 

தேவாலயங்களுக்கு எரியூட்டுபவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் அவர்கள் சிங்கள பெளத்த மக்களின் ஆத்திரத் தையே வெளிப்படுத்துகிறார்கள் எனவும் கண்டியில் இயங்கிவரும் சக்சஸ் என்ற சிங்கள பெளத்த தீவிரவாதக் குழு பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதம் பிரசுரிக்கப்படவில்லை எனவும் அப்போதகர் தெரிவித்தார். கடந்த வாரம் தென்னிலங்கையெங்கும் புலிகளின் உதவியோடு சிங்கள பெளத் தத்தை அழிக்கப் புறப்பட்டுள்ள பெளத்த விரோதிகளை முறியடிப்போம். என்ற கோசத்தோடு பல்லாயிரக்கணக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சிங்களப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிரான தாக்குதல்கள் புலி - தமிழ் விரோத உணர்வுகளையும் சிங்களவர் மத்தியில் தூண்டும் வகையில் செய்யப்படுகின்றன. இவற்றிற்குப் பின்னணியில் பெரும் அரசியல் சக்திகள் செயற்படுவதாக கட்டுவானையில் நான் சந்தித்த சாதாரண சிங்கள கிறிஸ்தவ மக்களும் கொழும்பிலுள்ள சில விடயமறிந்த அரசியலாய்வாளர்களும் கூறிவருகின்றனர்.
எங்களுடைய பெயர்களைப் பயன்படுத்தாதீர்கள். எங்களுடைய படங்களைத் தயவுசெய்து போட்டுவிடாதீர்கள் என அங்கு நடந்தவற்றை எனக்கு ஆங்கிலத்தில் விளங்கப்படுத்திய பெண்மணியும் தேவாலயத்தில் உதவிக்கு நின்றவரும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார்கள்.
i"
I

Page 13
செய்தியாளர்களுடன் தான் வந்து பேசுவதை தன் குடும்பத்தினர் அனைவரும் எதிர்த்ததாகவும் ஆனால் நடந்த கொடுமைகளை எப்படியாவது வெளியுலகிற்குத் தெரியப்படுத்த வேண்டுமெ ன்ற வேகத்திலேயே தான் வந்ததாகவும், ஜெர்மனியின் மலைச்சாரல்களில் வசந்தம் வரும்போது பூத்திடும் ஒரு அழகிய சிறுபூவின் பெயரைக் கொண்ட அப்பெண்மணி கூறினார்.
இவ்வளவு அச்சங்களுக்கு மத்தியிலும் சிங்கள பெளத்தக் காடையரின் அடாவடித்தனம் அவருடைய உறுதியைக் குலைக்கவில்லை என்பது தெரிந்தது. நிலமை இவ்வாறிருக்க இலங்கையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் புலிகளே. அவர்களை ஒழித்துவிட்டால் இலங்கை அமைதியின் உறைவிடமாக, ஜனநாயகத்தின் அச்சாணியாக திகழ்ந்திடுமென எம்மத்தியில் பல படித்த முட்டாள்கள் இன்று நுட்பமாகவும் வெளிப்படையாகவும் கூறிவருகின்றார்கள்.
கட்டுவானையில் உள்ள சிங்கள கிறிஸ்தவக் குடும்பங்களிடம் இந்தத் தமிழ்ப் பம்மாத்தர்களை பாடம் கற்க அனுப்பிவிட வேண்டும். கிறிஸ்தவ எதிர்ப்பை சிங்கள பெளத்தர்களிடம் தூண்டிவிட்டால் பயனடையப் போவது யார்? அமைதிப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் காலூன்ற வழிவகுத்திடும் ஒரு சக்தி என்பதே ஜே.வி.பி.யின்
பிரசாரம். புலிகளினுடாக இலங்கையில் தனித் தமிழ் ஈழத்தை நிறுவி அதன் மூலம் இந்தியாவைத் துண்டாட அமெரிக்கா சதி செய் கின்றது எனவும் அக் கட்சி கூறிவருகின்றது. இலங்கையில் மேலைத்தேய ஏகா திபத்திய ஊடுருவலுக்கு 16ம் நூற்றாண்டிலிருந்து கிறிஸ்தவமே வழி வகுத்துக் கொடுத்தது என்பது சிங்கள பெளத்த கோட்பாட் டாளரின் பரவலான கருத்து. எனவே கிறிஸ் தவ மதத்தைச் சார்ந்த வர்கள் ஏகாதிபத்தியத் தின் கைக்கூலிகள் என்ற கருத்தும் உட் கிடையாக உள்ளது. இந்த அடிப் படையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங் காவை ஜே.வி.பி. யினர் புதிய 'தொன்யூவான் தர்மபால” எனத் தாக் கிப் பேசிவருகின்றனர். 16ம்நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய கோட்டை இராட்சிய மன்னனே தர் மபால. அவன் மதம் மாறியது மட்டுமன்றி தனது இராட்சியத்தைப் போர்த்துக்கீசருக்குத் தாரைவார்த்துக் கொடுத் துவிட்டான்
拳茎库

ரணில்விக்கிரமசிங்கவை ஒரு நவீன தொன்யூ வானாக ஜே.வி.பி. மட்டு மல்ல, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பேச்சாளர்களும் சித்த ரிக்கத் தொடங்கிவிட்டனர். ரணிலின் தந்தை எஸ்மண்ட் விக்கிரமசிங்கா ஒரு கத்தோலிக்கர். அவர் இறுதிவரை கத்தோலிக்கராகவே இருந்து மரித்தார். ரணிலின் சகோதரர் ஒரு உயர் கத்தோலிக்கப் பாதிரியார். வெளியில் இருக்கிறார். இவர் பற்றி இப்போது யாரும் மூச்சுவிடுவதில்லை. அரசியலுக் காகவே ரணில் பெளத்த ரானார் என்பது அனை வரும் அறிந்த கதை. ஆனால் யாரும் அறியாதவிடயம்,மிலிந்த மொற கொடவும்கத்தோ லிக்கப் பின்னணியைச் சேர்ந்தவர் என்பதே. அவருடைய அப்பா கிறிஸ்தோபர் பின்டோ நல்ல கத்தோலிக்கர் ரணிலின் உள்துறை அமைச்சர் ஜோன் அமர துங்க அப்பழுக் கற்ற கத்தோலிக்கர்.
இ வ’ வ |ா று கத்தோலிக்கரும் புலிக ளும் இணைந்து சிங்கள பெளத்த தேச த்தை எகாதிபத்தியத் திடம் அடகு வைத் திருக் கிறார்கள் என்பதே இன்று ஜே.வி.பி, சிகல உறுமய, சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்பன வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் முன்வைக்கும் பிரசாரமாகும். இதைச் சொல்பவர்கள் அனைவரும் ஏதோவகையில் கிறிஸ்தவப் பின்ன ணியைக் கொண்டவர்கள் என்பது வேறுகதை.
(வீரகேசரி 18/01/2004)
Hill
IIIIIIIIIIIIIIIIIIII

Page 14
தனது விட்டிற்கு முன்னால் வேப்பமரம் தானாகவே போட் டிருக்கும் இயற்கையான நிழல் பந்தலின்கீழ் ஆசுவாசமாக அமர்ந்திருக் கின்றார் பேதுருப்பிள்ளை உடையார். ஊரின் நிழல் மரமான உடையார் இன்னுமொரு நிழல்மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதை அந்த வழியில் செல்லும் ஒவ்வொருவரும் ரசிக்கத்தான் செய்கின்றனர். " ஒரு நிழல்மரம் இன்னொரு நிழல்மரத்தின் கீழ் இருக்குது ' என்று அவர்கள் தமக்குள்ளேயே மெது வாகக் கதைத்துக் கொண்டு செல்வது உடையாருக்குக் கேட்கத்தான் செய்கின்றது. அவர் தனக்குள்ளே சிரித்துக் கொள்கின்றார். இடுப்பில் எட்டுமுழ வேட்டியும், தோளில் கரைபோட்ட சால்வையும், காதில் கடுக்கனும் மினுங்க ஓர் அரசனுக்குரிய பொலிவோடு கிராமத்துச் சொரிமணலில் வீற்றிருக்கும் உடையார் இன்றோ, நாளையோ தனது வாழ்க்கைப் பயணத்தில் எண்பதாண்டுகளோடு இன்னுமொரு ஆண்டைக் கூட்டிக்கொள்ளப் போகின்றார்.
கடின உழைப்பு எனும் ஏணியில் கால்வைத்து ஏறி உயர்ந்து நின்று உடையார் எனும் 'சோழர் கால விருதை அந்தக் கிராமத்தில் பெற்றுக் கொண்ட ஒரேஒரு பாக்கியசாலியான பேதுருப்பிள்ளை, உண்மையிலே ஒரு அரசர்தான் என்பதை அவர் சம்பாதித்து வைத்திருக்கும் பெரும் சொத்து அந்தஸ்து மட்டுமன்றி அவரது அசாதாரண ஆளுமையும் கட்டியம் கூறும்.
உடையார் ஒரு பெரிய பரோபகாரி. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளமை செய்து, நெல்லை சாக்குக்கணக்கில் வண்டில்களில் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்ததும் அவர் செய்யும் முதல் காரியம் 'வந்து நெல் எடுத்துக் கொண்டு போங்க’ என்று தனது சகோதரங்களுக்கு விசளம் சொல்லி அனுப்புவதுதான்.
சகோதரர்களும் உரிமையோடு வந்து தங்களது தேவைக்களவாக நெல்லை எடுத்துக் கொண்டு மச்சாள் சின்னக்குட்டி போட்டுத்தரும் தேத்தண்ணியை சந்தோசமாக வாங்கிக் குடித்து வாயை வெத்திலையால் சிவக்க வைத்தபடி கலகலப்ாக வீடு திரும் புவார்கள். மூத்ததமையன் உடையாருக்கு இது ஒரு புதுவருடக் கொண் டாட்டம் போலவே இருக்கும். உடையார் வீட்டில் எப்போதும் பால், தயிர்தான். பசுமாட்டுப்பட்டி, எருமைப்பட்டியில் இருந்து மாட்டுக்காரன் காவுதடியில்
拳这旨
 
 

கொண்டுவரும் பால் முட்டிகள் மெல்ல இறக்கிவைக்கப்பட்டதும் வேலைக்காரி பொன்னம்மா இரண்டு பெரிய சட்டிகளில் பால் காய்ச்சத்தொடங்கிவிடுவாள். அடுப்பில் பாலைக் கொள்ளி தீ நாக்குக் கக்கும்.
வெள்ளாமை வெட்டி வீட்டிற்கு நெல் வந்ததும் கிராமத்து மக்களின் வீடுகளில் நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி, புதிர் உண்ணுதல்தான். உடையார் வீட்டில் இந்தப் பண்பாடு கல்யாண வீட்டு விருந்து போலவே பிரமாதமாக நடக்கும். மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர் வேலைக்காரர் என்று ஒரு பெரும் பட்டாளமே உடையார் வீட்டை முற்றுகையிடும்.
இந்த முற்றுகைக்காளான உடையார் முகமெல்லாம் ஒரே பூரிப்பாக இருக்கும். பேரப்பிள்ளைகள் செய்யும் குறும்பை நன்றாகவே ரசிக்கத்தெரிந்த அவர், அவர்களில் ஒருவராகிவிடுவார். பிறகு கேட்கவே வேண்டாம், ஒரே முஸ்பாத்திதான்
உடையாருக்கு எப்போதும் ராஜமரியாதைதான். ஊரில் என்ன நடந்தாலும் அவர்தான் பிரதம விருந்தினர்.எப்படிப்பட்ட சண்டை சச்சரவையும் அவரது ஒரே ஒரு சொல் சட்டென்று நிறுத்திவிடும். ஊர் மக்களைப் பொறுத்தவரையில் உடையார்தான் எல்லாம். அவர் சொல்தான் எங்கும் அரங்கேறும்.
கிராமத்துக்கு வெளியே இருந்துவரும் எப்பேர்ப்பட்ட மகாராசாவும் சந்திக்கும் முதல் மனிதர் உடையார்தான். இத்தனைக்கும் அவர் பெரிய படிப்பாளி அல்ல. ஏதோ அந்தக்காலத்து ஏழோ, எட்டோதான். ஆனால், இந்தப்படிப்பைவிட அவர் கட்டிக்காத்துவரும் கெளரவம்தான் அவருக்கு மிகப்பெரிய சொத்து. எதை இழந்தாலும், இதைமட்டும் இழக்க அவர் என்றைக்குமே தயாரில்லை.
உடையார் வீட்டில் கலகலப்பிற்கு குறைவு இல்லை. வேலைக்காரி பொன்னம்மா ஒரு அடுப்பில் தேத்தண்ணிப்பானையும், மற்றோர் அடுப்பில் உலைப்பானையும் ஏற்றி இறக்கிக் களைத்துப் போவாள். உடையார் வீட்டில் வெற்றிலை வட்டா, உலாவருவது ஒரு தனி அழகுதான்.
ஊரில் முதல் முதல் கல்வீடு கட்டியவர் உடையார்தான். ஒன்று அல்ல இரண்டு வீடுகள். இரண்டிலும், காற்றுவரும் நுழைவாயிலில்
зŽBE

Page 15
கட்டிய அந்த ஆற்றங்கரை வீடுதான் அவருக்குப் பிடிக்கும்.கமுகுகளும் தென்னைகளும் சேர்ந்து உறுதியாகக் கால் ஊன்றி நிற்கும் அந்த வளவு - முற்றத்தில் மாலைப்போதில் அமர்ந்திருக்கும் உடையாரின் கண்களுக்கு கடலும் ஆறும் நல்ல குளிர்ச்சி. ஆறு அரவம்போல அசையும். ஆனால் கடல் அலைகள் ஒன்றோடொன்று மோதிக் கட்டிப்புரளும். இந்தப் புதினம் பார்ப்பதற்கென்றே நெய்தல் பறவைகள் அங்கு நெருக்கி அடிக்கும். கானல் பூக்கள் கண் திறந்தபடி இருக்கும்.
உடையாரின் அழகுணர்ச்சியை அவர் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களிலும் காணலாம். அதிலும் மிகுந்த கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்ட தைலாப் பெட்டியை அவர் கையாளும்விதமே தனி உண்ணும் வட்டிலும் எப்போதும் பளபளவென்றே இருக்கும். வேலைக்காரி பொன்னம்மா தினமும் அதனை சாம்பல் போட்டு மினுக்காவிட்டால் உடையாருக்கு அன்று சோறு இறங்கவே இறங்காது
நல்ல வேலைப்பாட்டோடு முதிரை மரத்தில் செய்த சோபாவில்தான் உடையார் உறங்குவார். சோபாவின் தலைமாடு நன்கு உயர்ந்து அரசர்களின் முரசுகட்டில் போலத் தோற்றம் அளிக்கும். பின்னேரங்களில் பெரும்பாலும், உடையாரை சாய்மனைக் கதிரையில்தான் காணலாம். பக்கத்தில் படிக்கம் இருக்கும். குட்டான் அவிழ்த்து அடிக்கடி வெற்றிலை போடும் அவர், அதில்தான் எச்சில் உமிழ்வார். அந்தப் படிக்கத்திலும் பளபளப்பிற்குக் குறைவிருக்காது.
உடையாருக்குத் தீவு என்ற பெயரில் ஒரு பெரிய தென்னந்தோட்டம். நாற்பது ஏக்கருக்கு மேலே. தினமும் காற்றில் மிதக்கும் இந்த தென்னஞ்சோலை பணிச்சங்கேணி ஆறு தனது மார்பில் அணிந்த அழகிய மரகத மாலையாக ஜொலிக்கும்.
器
இந்தச் சோலைதான், ஒவ்வொரு பறியலுக்கும் ஐம்பதா யிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய் களை உடையாருக்கு அள்ளித்த ரும். இந்தக் கணக்கு, வேறு சிறு தோட்டங்களில் இருந்துவரும்தேங் காய்களோடு பதாயிரத்தையும் தாண்டி ஒரு மலை போலக் குவிந்திருப்பது பார்க்க அழகுதான்.
拳茎售
 
 
 
 

உடையாரின் தேங்காய்களைக் கொள்வனவு செய்வதற் காகத் தூத்துக்குடியில் இருந்து வந்து ஊர்க் கழிமுகத்தில் நங்கூரமிடும் வாடாக்கள், தெப்பத்திலும், தோணிகளிலும் கொண்டுவரப்படும் தேங் காய்களை ஏற்றிக் கொண்டு தமிழகம் நோக்கி நகரும். அப்போது அது கடற்கரை அல்ல, தீர்த்தக்கரை!
தனது தோட்டங்களைப் பார்வையிட உடையார், 'வக்கி’ எனும் சிறிய வண்டிலில்தான் பயணமாவார். அவரது நம்பிக்கைக்குரிய ஊழியன் வயிரமுத்துதான் சாரதி. வண்டில் றோட்டில் வருவதைக் கண்டாலே சனங்கள் ஒதுங்கி நிற்பார்கள். உடையார் சிரித்துக் கொண்டே தன் பயணத்தைத் தொடர்வார்.
ஒவ்வொரு வாரத்திலும் வரும் புதன்கிழமை உடையார் வீட்டை அமளிதுமளிப்படுத்தும். அன்றுதான் மாட்டுக்காரன், தோட்டக்காரன், என்று பல "காரன்கள் கூப்பன் எடுப்பதற்காக ஒன்றுகூடுவார்கள். உடையார் கையில் பணநோட்டுக்களோடு ஒவ்வொருவரையும் சந்திப்பார். கூலியை வாங்கிக் கொண்டவர்கள் உடையாருக்கு ஆயிரம் கும்பிடு போடுவார் கள். ஆனால், உடையார் அதையெல்லாம் கவனியாதவராய் இன்னும் என்ன வேணும்' என்று கேட்டு அவர்களை வழியனுப்பிவைப்பார்.
உடையார் தனது காலத்திலேயே இரண்டு ஆலயங்களைத் தனது ஊரில் உருவாக்கியிருந்தார். ஒன்று - புனித - இராயப்பர் கோயில் என்று சொல்லப்படும் தேவாலயம் மற்றது - வித்தியாலயம். ஊர்முழுவதுமே அவரை மறந்துவிட்டாலும் இந்த இரண்டு ஆலயங்களும் அவரது நினைவாலயங்களாக எதிர்காலத்தில் பிரகாசிக்கும். வேப்பமர நிழல் பந்தலின் கீழ் வீற்றிருந்து தனது பேரப்பிள்ளைகள், பிள்ளையார் கட்டை விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த உடையார் எழுந்து வீட்டுப் பக்கம் நடக்கின்றார். அந்த நடை, அவரை ஓர் அரசரென்றே மீண்டும் மீண்டும் உலகிற்குப் பிரகடனம் செய்கின்றது.
拳立售

Page 16
( 14ம் பக்கத் தொடச்சி.)
நிலைக்கவில்லை. தான் எழுதியதைத் தானே படிக்கமுடியாமல் திணறுகிற அளவிற்கு மோசமான கையெழுத்து அவருடையது. அந்தமாதிரிச் சமயங்களில் மார்க்ஸ் எழுதியவற்றை கவனமாகக் கூர்ந்து படித்து மார்க்ஸிக்கு திரும்பச் சொல்பவர் அவர் மனைவி ஜென்னிதான் !
மார்க்ஸ் இறந்து நூறு ஆண்டுகளிற்கு மேலாகிவிட்ட நிலையில், உலகம் இன்று அவரைச் சிலாகித்துப் போற்றுகின்றது. ஆனால், அவர் வாழ்ந்த போது அவரை ஆதரித்தது இரண்டே இரண்டு ஜீவன்கள் தான்!
ஒருவர் பிரட்ரிக் ஏங்கல்ஸ், இவர் மான்செஸ்டர் நகரில் ஜவுளி வியாபாரம் செய்த ஒரு செல்வந்தரின் மகன். கம்யூனிஸ்ட்டுக்களின் கொள்கை சாசனமான மார்க்ஸின் மூலதனம் ' என்ற புத்தகத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் தொகுதிகளை தொகுத்தது இவர்தான். மார்க்ஸ் வறுமையில் தவித்த நேரங்களில் பொருள் உதவி செய்தவர் இவர் மட்டுமே.
ஏங்கல்சைவிட அவரது அருமை தெரிந்த மற்றவர் அவர் மனைவி ஜென்னி. இவர் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். என்றாலும் அத்தனை சொத்து சுகங்களையும் உதறிவிட்டு மார்க்ஸ் கரம்பிடித்தவர் ஜென்னி. ஜென்னி தனது கடைசிக் காலத்தில் கான்ஸ்ரோடு போராடிய போது அவரிற்கு மருந்துவாங்கிக் கொடுக்கக்கூட வழியில்லாமல் தவித்தார் மார்க்ஸ் வேதனையிலும், வலியிலும் துடித்த போது ஜென்னி தனது கணவர் மீது கொண்ட காதலைக் குறைக்கவில்லை !
கடைசியில் 1881 -ம் வருடம் ஜென்னி இறந்து போய் இரண்டு வருடங்களிற்குள்ளாகவே மார்க்ஸிம் லண்டனில், இறந்து போனார்.
மார்க்ஸ் மரணமடைய ஒன்று இரண்டு நிமிடத்திற்கு முன்பு அவரிடம் ஒருவர்,
உலகத்திற்கு நீங்கள் சொல்லும் கடைசிச் செய்தி
என்ன என்று கேட்டார்.
இதற்கு மார்க்ஸ் சொன்ன பதில் -
மூடனே வாயை மூடு ! தான் வாழும் போது உலகுக்கு எந்தச் செய்திகளையும் சொல்லாத முட்டாள்கள்தான் இறக்கும்போது கடைசியாக ஏதாவது சொல்ல வேண்டும். - வாவ் 2000
言茎售

தையே வருக. தமிழே வருக.
தையே வருக, தமிழே வருக வையம் புரக்கும் வாழ்வே வருக
வண்ணக் கோலம் வாசலில் இட்டு கண்ணாய் உண்னைக் கருதியே ஏற்
பூவும் கரும்பும் பொண்ணிறப் பழமும் பாவாய் வைத்துப் பணிந்து நின்றோம்.
நல்ல காலம் நங்கை நீ தருக எல்லாம் வல்ல இறைவன் நீ வருக
ஒளியே வருக, ஒடி நீ வருக அழியா இண்பம் அள்ளி நீ தருக
ஈழத் தமிழர் இன்னல் யாவும் வீழச் செய்க வேண்டி நின்றோம்
போர்கள் என்றும் பொய்யாச் செய்க ஊர்கள் தோறும் உவகை பெய்க
ஒன்றே மக்கள் ஒருவனே தேவன் என்றே நீயும் இயற்றுக சட்டம்
துன்பம் எல்லாம் தொலைந்து போக அண்புப் பாவாய் அடிமலர் வைப்பாய்
உரிமையோடு ஒவ்வொரு உயிரும் பெருமையாய் வாழப் பேரருள் புரிக
அடிமைத் தனத்தை அழித்தே போடு குடிகள் எல்லாம் கொற்றவனாக்கு
ஏழை என இங்கே எவரும் வேண்டாம் நாளை உலகை நலமாய்ச் செய்க
கைகளிர் சுப்பிக் கனிவாய்க் கேட்டேன் - ஐயை வருக அமைதியைத் தருக. - கம்பதாசன்

Page 17
IDEGOGI GÖT மகுடம் சூடமுை அரசியல்வாதி
LIDLGOJů. பதவியைத் தக்க அதிகார பீடங்க
நாட்டைக்காக்க தம்மைக்காக்க GIIIff6ff6ổi
9 Tsig)]û LICPPI, உரிமைக்காகப் θεότηΠρή
ஊழியரைப் பணி உப்பரிகை ஏற 9.Ugi 35 IfaaTT A
E5T UTGITTSS) Jii i
FILGOREGOanTI LI பணி நிறுத்தம் ( SITEGI 9 faDLE ஒட்டுமொத்தமா GLL QILutufi G.
2315T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னகின்றான்
1ணயம் வைத்தே வைக்கின்றன
霜
ஆயுதம் தரித்து அரணறைப்பான்
ம் வைத்தே BLITTINGGITgi
IIIf coalici.
ஊழியன்
1ணயம் வைத்தே ഖണ്ണേ
LATGM
ଶ୍[i] @ରାଣ୍ଡି65 = }
TingGQITS:
க இத்தனைக்கும்