கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2006.05-06

Page 1


Page 2
எண்ணிய முழதல் Bਕ
லை 10/=
PROFESSIONALPSYCHOLOGICAL COUNSELLIN
 

வைகாசி - ஆனி 2006 தோற்றம் * 5-5-1998
றிவேகை ஆசிரியல் (Managing Editor) சுவாமிஜி
போல் சற்குணநாயகம். யே. ச.
SBá doð
(Editor)
வாகரைவாணன்
றிவோகல்: (Management)
சி.எம். ஒக்கஸ்
овојloаоaos
உளநல உதவி நிலையம், 15, வெபர் வீதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி:
Օ65 - 2222842
E-mail: ppccpalG).sltnet.lk
VI போது-7 இதழ்-48
எங்கே செல்கின்றது
இந்த உலகம்?
இன்றைய உலகு எங்கே செல்கிறது? அழிவை நோக்கியா? இந்தக் கேள்வியே சாதரண மனிதனைக்கூட இன்று ஆட்டிப் படைக்கிறது. இதற்கான காரணம் தான் என்ன? மனம் என்று ஒரே வார்த்தையில் மறுமொழி தரலாம்
பூப்போல விளங்க வேண்டிய மனிதமனம் பொல்லாத நாகம் உறையும் புற்றுப் போலாகிவிட்டது. போட்டிபொறாமை-வஞ்சம் - வைராக்கியம் -பகைமைபழிக்குப்பழி என்னும் அசுரத்தனங்களின்நிலைக்களம் அது.
இதிகாச புராணகாலத்து அரக்கர்கள் அசுரர்கள் என்போர் இந்த மனித மனத்திற்குள் தான் இப்போது ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.அவ்வப் போது இவர்கள் வெளிவரும் போது தான் உலகம் முழுவதுமே அமர்க்களமாகி விடுகிறது.
இதன் காரணமாகவே, அன்பு, அறம், இரக்கம், நீதிநியாயம், அமைதி, சமாதானம், மனிதாபிமானம் எனும் தெய்வீகப் பண்புகள் மனிதனிடமிருந்து முழுமையாக விடைபெற்றுச் சென்று விட்டதாகத் தெரிகின்றது.
மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையே எத்தகைய வித்தியாசமும் இல்லை. சில சமயம் வெறித்தனத்தில் அவன் விலங்கையே விஞ்சிவிடுகின்றான். இதனை நாம் அன்றாடம் காண்கின்றோம்.

Page 3
====================== Gīģī
மனிதனின் எல்லை மீறிய சுயநலமே அவனிடமிருக்க வேண்டிய மாசு மறுவில்லாத தெய்வீகப் பண்புகளை முழுமையாக எடுத்து விட்டது. பெற்ற தாய் தந்தை, கூடப் பிறந்த சகோதரர்களைக்கூட இந்தச் சுயநலம் பெரிதுபடுத்துவதேயில்லை.
உயர உயரப் பறந்தாலும் அவன் ஊர்க்குருவி தான். கழுகுபோல, கிரகங்களைச் சுற்றிவந்தாலும் அவன் கண்கள் என்னவோ பூமியில் கிடக்கும் பிணத்தைத் தான் கவனமாகப் பார்க்கின்றன.
இப்படி ஒரு நிலையில் இந்த உலகம் அழிவை நோக்கி விரைவதில் என்ன அதிசயம் இருக்கிறது? இந்த மனிதனின் அரக்கத்தனத்தைப் பொறுக்க முடியாமல் தான் இயற்கை சுனாமி, சூறாவளி என்று விளையாட்டுக் காட்டுகின்றது. ஆனாலும் மனிதனின் மனத்தில் மாற்றம் ஏற்படவே இல்லை
எனக்கு . எனக்கு. எல்லாம் எனக்கு என்னும் சுயநலம்.நான். நான் அனைத்தும் நானே என்னும் ஆணவம். மனிதனை ஆட்டிப்படைக்கும் வரை உலகத்தின் தலைவிதியை யாராலுமே மாற்றி அமைக்க முடியாது. அவன் தான் அதன் ஏகபோக எஜமான்!
ീര്qLര് வாகரைவாணன்
பண்புடையார்ப்பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வதுமன்.
(குறள்)

്കൂ/ക്രര് 20aമ
பர்ை நிதம் வாட ufugaofurai distas சிர்ை மட்ரும் இங்கே சீரோரு வாழ்வார்!
அதிகாரம், பதவி அந்தஸ்தைக் கண்டால் விதிகடட அஞ்சி விரண்டோடிச் செல்லும்!
கடவு7ைவன்தானும் கண்மூடித் துயில்வான் /நடப்படுதாைம் கண்கு! நரகம்தான் உகைம்!
offiliidstióndpi) சம்பத்தில் மிதப்Uார் பூமியிலே இது (Витао புதினம் மிகவுண்கு!
பெரியோரென மக்கள் பெரிதும் மதிப்போரும் உரியபடி இல்ைை உண்மையிது கசக்கும்

Page 4
‘நாக்கனியம் புழுவும் /5/7á5 Unibumajő தூக்கும் தன் தைையைத் துாைங்கும் அதன் சாயம்!
தன்னேைம உைைதத் øntæmidf66rtinusio இந்ாகந்ைதால் நமக்கு எதிர்காம்ை இல்ைை!
மனிதன் என ஒருவன் மண்ணுகிைல் இல்லை கணவுகிைல் தானும் கானல் மிக அரிது!
தலை வீழாய் போகும் தரணியிது, பெரிய
மைைதன்னைப் பார்த்து மரு கேலிசெய்யும்
நாகரிக வாழ்க்கை /காறும் மிகஅசிங்கம்! சாகும் வரை இந்தச் சாக்கடையே இனிக்கும்!
பண்பாகு இன்று பழைய கதை ஆகும் upazövegpugiu 6Bundüio மறுபெல்ாைம் அழியும்!

(வட - கிழக்கு மாகாண ஆளுநரின்
செயலாளர்)
ஆர்வம் என்பது ஒரு செய்கையைத் தூண்டுவதும் ஊக்குவிப்பதுமான ஒரு முயற்சியாகும். இது மனிதர்களின் மனதில் உதயமான ஒன்று. எனவே, ஆர்வமானது ஆற்றலுடன் செயற்படவேண்டியதாகும். எங்கள் குறிக்கோளை நிறைவேற்ற முற்படும் போது ஆர்வம் வளரும். எமது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும. எனவே, எமது வேலையில் நாம் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஆர்வம் எமக்கு எமது வேலையில் ஏற்பட்டால் குறிக்கோளை, நோக்கத்தை ஈட்டுவது சுலபமாக முடியும். ஆர்வமானது எமது மனநிலையி லேயே ஏற்படுகின்றது.
எனவே, செய்யும் வேலையைச் சரிவரப் புரிந்து தொடர் முயற்சியாக ஈடுபடஆர்வம் உதவுகிறது. வேலை செய்யும் போது ஆர்வம் ஏற்பட்டால் எமது வேலையும் கடினமாகத் தெரியாது. செய்யும் செயல்கள் யாவும் மகிழ்ச்சிகரமாக, வெற்றிகரமாக முடிய இது ஒரு உந்து சக்தியாக அமையும். எரிபொருளின்றி வாகனங்கள் ஓட முடியாது. எனவே, இது எம்மிலே யுள்ள ஒரு எரிபொருளாகும். இந்த எரிபொருளை எமது வேலைத்தளத்தில் பிரயோகித்தால் வேலை செய்வோர்துரிதமாக சிறப்பாக வேலையைச் செய்வர். இந்த ஆர்வமானது எவருக்கும் ஒரு ஊக்குவிக்கும் சக்தியாகும்.
எனவே, நாம் வாழ்வில் எதிலும் வெற்றி பெற வேண்டுமாயின் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். இந்த ஆர்வத்தை நாம் ஆங்கிலத்தில் (ENTHUSIASM) என்போம். ஆர்வத்தைப் பற்றி வெப்ஸ்டர் அகராதியைப் புரட்டிப் பார்ப்போமாயின் அதில் உணர்வின் வலுவான எழுச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இது ஆர்வத்தைப் பற்றி நன்கு விளக்குகின்றது. எனவே, எமது உணர்வின் வலுவான உணர்ச்சியே ஆர்வமாகும்.
ஆகவே, ஆர்வத்தின் தொடக்கம் உணர்வு. இது எமது மனநிலையில் தங்கியுள்ளது. ஆர்வம் இல்லாமல் எதையும் சாதித்து விட முடியாது. ஆர்வம் ஏற்பட்டால் மனதில் சோர்வா னது இருந்த இடம் தெரியாமல் அகன்று விடும். ஆர்வம் இருந்தால் சோர்வை முறியடித்து வெற்றிபெறலாம். எமக்கு ஆர்வம் இல்லாதிருப்பின் அதை நாம் பிறர் மீது செலுத்தமுடியாது. எனவே, எமது நம்பிக்கையில் நாம் துணிவை ஏற்படுத்தி எமது திட்டங்களைச் சரி வரச் செயல்படுத்த ஆர்வத்தை நாட முடியும். நம்பிக்கையை நாம் முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கையானது துணிவை ஏற்படுத்தி ஆர்வத்தை எமது மனதில் ஊட்டி செய் தொழிலில் உந்து சக்தியாக அமையும். ஏனையோரையும் செயலில் ஊக்குவிக்கும் கருவியாகவும் இது அமையும்.
ஆர்வத்தைக் கொண்டு வெற்றியடைந்தோர் பலர். எனவே, அவர்களது வெற்றியை
5

Page 5
விளக்கும் போது ஆர்வம் பற்றி அறிந்து கொள்ள முடியும். ஆர்வம் இருந்திருக்காவிஷன் அவர்கள் தாம் எடுத்துக் கொண்ட விடயங்களில் வெற்றியைடந்து தமது குறிக்கோளை நோக்கங்களை நிறைவேற்றியிருக்க முடியாது.
வெர்ண்வான் பிரான் 1912 ஆம் ஆண்டு கிழக்கு ஜேர்மனியில் பிரான் என்பவர் பிறந்தார். தந்தையார் குடி போதையில் தவழ்ந்தார். தந்தை தன் மகனை அறிவியல் துறையில் ஈடுபடுத்த விரும்ப வில்லை. ஆனால் பிரான், தன் ஆர்வத்தால் வான நூற் பயிற்சியைப் பொழுது போக்காகக் கொண்டு செயற்பட்டார். பிரான் தன் ஊரில் கல்வி கற்று பின்னர் சூரிச் சென்று தொழில்நுட்ப நிலையத்தில் சேர்ந்து பயின்றார். விண்வெளி ஆய்விலேயே நாட்டம் கொண்டார். இவர் ஜேர்மன் நாட்டின் விண்வெளிக் கழகத்தின் இயக்குநரானார்.
பின்பு நீர்ப் பொருளால் இயக்கப்படும் விண்வெளி ஊர்தி ஆராய்ச்சிசாலையின் இயக்குநராக இருந்தார். 1933இல் பிரான் முதற்சோதனையாக விண்ணில் ஊர்தி விட முயன்றார். அது வெடித்துச் சிதறியது. இரண்டாம் முறையும் முயன்றபோது அந்த ஊர்தி வெடிக்கவில்லை. ஆனால், எரிந்தது. எனினும், பிரான் ஆர்வத்துடன் விடாமுயற்சியாக பிறகும் முயற்சி செய்தார். ஏ1 என்ற பெயரில் விண்வெளிக்கலம் அமைத்து நிறுத்தியபடி ஆராய்ச்சி செய்தார். அது வெற்றியளிக்கவே ஏ2 என்ற விண் ஊர்தியைப் பறக்கச் செய்தார். ஏ3 ஊர்தியை அமைத்தபோது அது தோல்வியுற்றது. 1938ல் ஏ5 என்ற ஊர்தியை ஏவினார். அது ஐந்து மைல் தூரம் வரை சென்று, ஒலியின் வேகத்தையும் பெற்று வெற்றியளித்தது. 1942 இல் ஏ4 ஊர்தியானது 60 மைல் உயரத்திற்கு எழும்பி மணிக்கு 3,300மைல் வேகத்தில் பறந்தது. இது ஒரு சாதனையாகும்.
இதைக் கண்ட ஹிட்லர் வியந்து பாராட்டினார். பிரானைப் பயன்படுத்திப் போர் விமானங்களை விண்ணுக்கு விட்டு எதிரியையழிக்க முனைந்தார். அப்போதுதான் உலகப் போரும் மூண்டது. இந்த நேரம் எதிரியின் போர் விமானங்கள் பீனிமென்ட்டோ ஆராய்ச்சி நிலையத்தைக் குண்டு போட்டுத் தகர்த்தன. பிரான் தன் ஆராய்ச்சி போருக்கல்ல என கூறியதன் காரணமாக சிறையிலிடப்பட்டார். பின்பு படைத்தலைவரான பெக்கர் என்பவர் குறுக்கிட்டு பிரானைக் கொன்றால் ஏ4 விண்வெளி ஊர்தி வானில் செல்லாது எனவும், அதை யாராலும் செலுத்த முடியாது எனவும் கூறியதற்கிணங்க பிரான் விடுவிக்கப்பட்டு மூன்று மாதம் நன்னடத்தையிலிருந்தார். பின்பு மேலும் 3 மாதம் நன்னடத்தை நீடிக்கப்பட்டது. 1944இல் ஏ4 என்ற பழிவாங்கும் படையானது வி2 என்ற பெயரில் வானுக்கு அனுப்பப்பட்டது. அது இங்கிலாந்தின் மேல் சென்றது.
உலகப் போரில் ரஷ்ய நாடானது பிரானின் ஆராய்ச்சி நிலையமான பீனி மண்டோவைக் கைப்பற்றியது. இதனால், பிரான் அமெரிக்காவிடம் அடைக்கலம் புகுந்தார். பின்பு அமெரிக்க வைற்சாண்ட ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். 1946ஆம் ஆண்டு அமெரிக்காவில் கட்டுப்பாட்டுக்குரிய ஏவுகணை வளர்ச்சிப்பிரிவின் தொழில்நுட்ப இயக்குநரானார். 1958இல் எக்ஸ்பிளோரர் என்ற முதற்செயற்கைக்கோளை ஏவி உலகை வலம் வரச்செய்தார். அடுத்து, 1961இல் விண்வெளி ஊர்தியில் ஷெப்பர்ட் என்ற முதல் மனிதனை அனுப்பினார். 1969ல் முதல் முறை நிலவில் மனிதனில் கால்சுவட்டைப்பதியச்
6

S S S S S SSSS S S SS SS SS SSL SuDu SSSS SSLL SS S SS SDD S LS SS S SS SS SS SS
செய்தார். பின்பு நாசா என்ற தேசியவிண்வெளி ஆய்வுநிலையத்தின் துணைத் தலைவரானார். இவர் எழுதிய செவ்வாய்த் திட்டம் என்ற நூல் பூமிக்குமேல் 1,075மைல் தூரத்தில் ஒரு செயற்கைக்கோளை அமைத்து அங்கிருந்து விண்வெளி ஊர்தியை ஏவி செயற்கைக்கோளை அடையும்படி செய்யக்கூடிய திட்டமாகும்.
எனவே, சிறைப்பட்டபோதும் அமெரிக்காவிடம் அடைக்கலம் புகுந்தபோதும் பிரான் தன் ஆர்வம் காரணமாக இன்று உலகில் புகழ்பெற்றுத்திகழ்கிறார். விண்வெளிக்கலம், விண்வெளி ஊர்திதந்த உலகப் பெருமை மகனானார். எனவே. இன்று உலகம் சுற்ற, கோள்களில் காலடி வைக்க வழிவகுத்தவர் வான் பிரான்.
நிக்கலஸ் கொய்யர்நிக்கஸ்
நிக்கலஸ் கொப்பர்நிக்கஸ், போலந்து நாட்டில் டோரன் நகரில் நிக்கலஸ் கொப்பர் நிக் என்பவருக்கு 1473ஆம் ஆண்டில் மகனாகப் பிறந்தார். கொப்பர்நிக்கஸ் கிராகெள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கற்றார். அங்கு ஆல்பர்ட் புரூட்ஸ் வஸ்கி என்பவரால் வானவிய லில் ஊக்குவிக்கப்பட்டார். அன்றைய காலத்தில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தது முதல் பல கடற்பிரயாணங்களுக்கு வானவியல் கருவிகள் தேவைப்பட்டன. இவர் பெர்ராரா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். மருத்துவத்திலும் வானவியலிலும் இவர் பாண்டித்தியம் பெற்றார். எனினும், வானவியலிலேயே கூடியநாட்டம் ஏற்பட்டது. கி.பி.150இல் டொலமி என்ற கிரேக்கர் சூரியனே பூமியைச் சுற்றுகிறது என்று கூறினார்.
சில நூற்றாண்டுகளின் பின் அரிஸ்டோட்டில் சூரியனைச் சுற்றியே உலகமும் மற்றக்கோள்களும் சுற்றிவருகின்றன என்றார். இக்கருத்துகளை கொப்பர் நிக்களில் முறியடித்தார். உலகமே சூரியனை வட்டவடிவமான பாதையில் வலம் வருகின்றது எனக் கண்டுபிடித்தார். பின்பு இப்பாதை முட்டை வடிவமானது என கெப்ளர் என்ற அறிஞரால் திருத்தப்பட்டது. கொப்பர்நிக்கஸ் தனது கருத்துகளை லிற்றில் கொமென்றரிஎன்று பெயரிட்டு கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டார். இதை ரெடிக்ஸ் என்னும் கணிதப் பேராசிரியர் ரெவெலியுஷன் என்று நூலை வெளியிட முனைந்தார். பின் வேலைகாரணமாக தன் ஆசிரியரிடம் கொடுத்து பதிப்பித்தார். இது கொப்பர் நிக்கஸ் இறக்கும் தறுவாயில் வெளியிடப்பட்டது. இன்று நிலவிலுள்ள ஒரு எரிமலையின் சிகரத்திற்கு கொப்பர் நிக்கஸ் என பெயர் கட்டப்பட்டது. இன்று கொப்பர் நிக்கஸ் வானவியலின் தந்தையாக போற்றப்படுகிறார். இவரது ஆர்வம் காரணமாகவே இவர் வானவியலின் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார்.
லூயி பாஸ்டர்
1822ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் முன்னாள் போர் வீரனான ஜுன் ஜோசப் பாஸ்டருக்குமகனாகப் பிறந்தார். பள்ளியில் படிக்காதுதன்முயற்சியினால் கற்றதந்தையார், மகனை ஒரு ஆசிரியராக்க அவா கொண்டார். இளம் வயதில் லூயி பாஸ்டர் ஓர் ஓவியராக மிளிர்ந்தார். பாடசாலைப் படிப்பு முடித்து ஆசிரிய பயிற்சி பெற்றார். அறிவியலில் பின்பு அடிவைக்கலானார். அறிவியல் மேதையான பாலார்டு என்பவரின் சொற்பொழிவுகளில் நாட்டம் கொண்டார். பாலார்டு என்பவர், தானே தயாரித்த கருவிகள் மூலம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் லூயி பாஸ்டரைத் தனது ஆய்வகத்தில் உதவியாளாகச்
7

Page 6
= = = = = = = = = = = = = = = = = = = = = = GISKA சேர்ந்தார். பாடசாலை ஆசிரியராக, பின்புகல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பாஸ்டரின் வாழ்வில் துயரங்கள் மலிந்து காணப்பட்டன. மூத்த மகளை ஒன்பதாம் வயதில் இழந்தார். அடுத்த குழந்தையையும் இழந்தார். கடைசி மகனான ஜீன் பாப்திஸ்கே ஜேர்மனியருடனான போரில் காணாமல் போய் குற்றுயிருடன் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார்.
துன்பங்கள் பல மலிந்து காணப்பட்ட போதும் லூயி தனது ஆர்வத்தின் மூலம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். லூயிபாஸ்டர் படிகங்களைப் பற்றி ஆராய்ந்து பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தார். உயிரை உண்டாக்கும் முயற்சியில் வெற்றி பெற முடியாத போதும் பாலைப் பதனிடுதல் பற்றிய ஆராய்ச்சி வெற்றியளித்தது. பிரான்சிலே பாலைப் பதனிடுதல் பற்றிய ஆராய்ச்சியினால் தொழில்கள் மேன்மையடைந்தன. பாலைப் பதப்படுத்த இன்று அவர் பெயரில் பாஸ்டரைசேஷன் என்று பெயர் பெற்றுள்ளது. விசர் நாய்கடிக்குக் கூட அதற்கு எதிராக செயற்கை முறையில் நோய் எதிர்ப்பு மருந்து (IMMUNITY) முறையை கண்டுபிடித்தார். சிறுவனாயிருந்த போது விசர்நாய் கடித்தவனுக்கு அவனது புண்மீது பழுக்கக்காய்ச்சிய இரும்புக் கம்பியை வைத்துச் சுட்டதனால் கடிபட்டவன் பட்ட துன்பத்தை மனதிற்கொணர்டு தனது முழு ஆர்வத்தையும் செலுத்தி அதனால் ஊக்குவிக்கப்பட்டு விசர்நாய்க்கடி எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். இதனால் இன்று பல மனிதர்களின் உயிர் பிழைக்க லூயிபாஸ்டர் காரணமாகியுள்ளார்.
எனவே எமது ஆளுமையின் உந்துசக்தி ஆர்வமாகும். ஆர்வத்தினால் ஏற்படுவது ஊக்கம், (MOTIVATION) ஊக்கத்தினால் எமது குறிக்கோளை அடையலாம். எனவே, எமது ஆளுமைக்கு உந்துசக்தியாக விளங்குவது ஆர்வம் எனலாம்.
கிரான் ஜீ கார்ட் என்பவர் சிறந்த முகாமையாளர். தன்னுடைய சம்பியன்ஷிப் செல்விங் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
உங்கள் ஆர்வத்தை கிளர்ந்தெழச் செய்யவும் வைத்திருக்கவும் உங்களால் முடியும். விற்பனைத்துறையில் கடமைபுரியும் பலரும் வெற்றிக்குத் தேவையான ஆர்வத்தைப் பெறவும் தூண்டிவிடவும் தங்களுடைய முகாமையாளரையே சார்ந்திருக்கிறார்கள் என்றார். எனவே, எமது நம்பிக்கையில் துணிவிருந்தால், ஆக்கபூர்வமாக சிந்திக்கும் பழக்கம் இருந்தால் ஆர்வம் தானாகவே கிளர்ந்தெழும். எனவே எம்மீதும், எமது உற்பத்திகள் சேவைகள் மீதும், எமது நிறுவகம் மீதும், நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆக்கபூர்வமான மனப்பாங் குடன் செயற்பட்டால் ஆர்வம் வரும். அந்த ஆர்வம் எமது மனித ஆளுமைக்கு ஒரு உந்துசக்தியாக அமையும்.
(தினக்குரல் 25/05/2006)

GISK SS SS SS S SS SS SS S S S S S Sq S SS SS S S S S SSS SSS S SSS SS S
அகத்தின் தேடல்-1
Maes-yr-~w
“அகத்தினழுகு முகத்தில் தெரியும்! ஆன்றோரன்று உரைத்ததும் பொய்யோ..? முகத்திடை அகத்தைக் காணுதல் கூடுமோ?
கன்னங் குழிபடச் சிரிப்போர் தம் உள்ளமும் உவகையில் பூரிக்குமாமோ..? வஞ்சச்சிரிப்பு இவரிடையிலதோ?
சோதரரிடையே காணிக்குச் சண்டை. சுயநலப் பிசாசுகள் வாழும் உலகிழடை சுகந்தம் வீசுமோ, உள்ளத் தடத்திடை?
இரத்தக் களரிக்குள் இயல்பு வாழ்க்கை இருந்திடல் என்றும் சாத்தியமாமோ..?
சகதிக்குள் மக்கள் திணறும் காலமிது
இருப்பே கேள்விக்குறியாய் நிற்கும்!
6ഞf. O86ൺഖffങ്ങf

Page 7
தொல்லெழுத்தில் என்றால் தொன்மையான எழுத்துக்களது வளர்ச்சியை
ஆராய்வதாகும். தொல்லெழுத்து என்பது இன்று வுழங்கி வரும் எழுத்துக்களின் முந்தைய வடிவங்களையும் வுழக்கொழிந்த எழுத்துக்களின் வடிவங்களையும் குறிக்கும். எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு’ என்பது ஏலாதி பண்டைய மக்கள் எழுத்து கடவுளின் தோற்றம். கடவுளே அதனைத் தோற்றுவித்தார் என்பர்.
ஆயினும் சித்திரம் வரைத8ல எழுத்துக்களின் தோற்றத்திற்கு அடிப்படையாகும். எனினும் ஒவியங்களை எழுத்தாகக் கொள்ளமுடியாது. அதற்குக் குறியீடு தேவைப்பட்டது. உதாரணமாக பத்து மாடுகள் என்றால் மாட்டின் தலையைக் குறித்து புள்ளிகளி இடுவது வுழக்கமாகக் காணப்பட்டது. இவற்றைச்சித்தி எழுத்துக்கள் என்பர். மெசபடோமியா. மினோஆண் கிரீடே பகுதிகளில் இவ்வாறான எழுத்துக்களைக் காணலாம்.சித்திர எழுத்துக்கள் பின்னர் கருத்தெழுத்துகளாகப் பரிணமித்தன. உதாரணமாக இரு கொம்பு தலைமட்டும் வரைந்தால் மாடு என அறியலாம். எழுத்துக்களை IDEOGRAM என்பர் .இதிலிருந்து எழுந்த புரட்சிகரமான மாற்றமே ஒலிஎழுத்துக்களாகும்.
ஒலி எழுத்தை அகர வகை எழுத்து, உயிர்மெய்வகை எழுத்து எனப்பிரிப்பர். 'க' என்ற உயிர்மெய்யை ஆங்கிலத்தல் Ka என எழுதுவோம். இது அகர வகை என்று பெயர். தமிழில் க்+அ=க என்ற உயிர்மெய்யை ஒரே வரிவடித்தில் எழுதுகிறோம். இதனை உயிர்மெய் என்பர். அல்சீரிyா, சீனா,%ப்பான், நாட்டுத்தொல்லெழுத்துக்கள் இவ்வகையைச் சார்ந்தன. இதன் பின்னரே அகர எழுத்துக்கள் தோன்றின. சிரியாவிலும்,பாலஸ்தினத்திலும் வாழ்ந்த வடசெமிடிக் மக்களே இப்புரட்சிகரமான அகர வகை எழுத்துக்களை(ALPHABETC) தோற்நுவித்தனர்.
இவர்கள் உயிர் எழுத்துக்களையே எழுதவில்லை. 22 குறியீடுகளே எழுத்துக்களாக இருந்தன. இந்தியநாட்டின் மிகத் தொன்மையான எழுத்துக்கள் மொஆத்சதாரோ, ஆரப்பா பகுதிகளில் கிடைத்தவை யாகும். இதன் காலம் கிமு 3OOO அதாவது வடசெமிட்டிக்மக்கள் தோற்றுவித்த ஒலி எழுத்துப்புரட்சிக்கும் காலத்தால் முற்பட்டது. அசோகன் காலத்தில் வட
10
 

SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
இந்தியாவில் பிராமி கரோகூழ்டி என்ற இருவகை எழுத்துக்கள் வுழக்கிலிருந்தன.
கிபி 5,6 ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் “லலிதவில்ரம்” என்ற பெளத்த நூலில் அநுபத்தாரு வகை எழுத்துக்கள் குறிக்கப்படுகின்றன. அவற்றுளி ஒன்று திராவிடி இது பண்டைய தமிழ் எழுத்துக்களுக்குப் பொருந்தாது. தமிழ்நாட்டில் ‘தமிழி எழுத்துக்களை 1903 இல் முதன் முதல் கீழவளவு எனும் இடத்தில் வாழ்ந்த வெங்கோபராவ் என்பவர் கண்டுபிடித்தார். இவ்வாறன எழுத்துக்கள் நெல்லை மாவட்டத்தில் மறு கால் தலை எலும்இடத்திலும் அரச்சலூர்,திருவாதவூரிலும் இத்தகு எழுத்துக்களைக் கண்டுபிடித்தனர்.
திருமதி. புஸ்பலதா அனிர்ரனி விரிவுரையாளர்கல்வியல் கல்லூரி தாழங்குடா
சிந்துவெளி எழுத்துக்களில் இருந்தே பிராம்மி எழுத்துக்கள் தோன்றின என சிலர் கூறுவர். இது முதலில் வலமிருந்து இடமாக எழுதப்பட்டு வந்தது. பின்னரே இடமிருந்து வலமாக எழுதப்படலாயிற்று. இவற்றின் காலம் கி.மு. 3ம் நுாற்றாண்டு எனலாம். தொல்காப்பியத்தில் தமிழ் எழுத்து வரிவடிவம் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
-96T606juriff
11

Page 8
இந்தியாவே . நீதான்
எங்கள் இரட்சகன் !
எங்கள் பாரச்சிலுவையை நீ எப்போது இறக்கி வைக்கப் போகின்றாய்?
யேசுவுக்கு சில மணித்தியாலங்கள் ஆனால் எங்களுக்கு . பொன் விழாக் கொண்டாடப் போகின்றோம் போதாதா?
வீட்டில் அல்ல
இது வீதியில் நடக்கும் சண்டை
விலக்குப் பிடிக்க வேண்டாமா? பக்கத்து வீட்டுக்காரன் நீ பார்த்துக்கொண்டா இருப்பது?
எங்களுக்கும் உனக்கும் இடையே இருப்பது தொப்புள்கொடி உறவு இது எப்படி இற்றுப் போகும்?
12
 

SM SS SS S S S S SSS SS SDD SS SS SS SSS SS SS SS SS
ஞானபூமி நீ அதற்கு ஊனம் ஏற்படலாமா?
வடக்கில் திலகரும் தெற்கில் வ.உ.சியும் வலம் வந்த பூமி நீ வாய் மூடி இருப்பதா?
பாரதி பிறந்த பாரதம் இப்படியா பதுங்குவது?
பார்த்த சாரதி நீ நாங்கள் பாஞ்சாலி துச்சாதனர்கள் துகிலுரிகிறார்கள். அச்சுதானே அபயம். அபயம்
நீ நினைத்தால்
எங்களுக்கு நியாயம் கிடைக்கும்
இது துரியோதனனுக்கு மட்டுமல்ல துரோணர் பீஸ்மருக்கும் தோல்வி தான்
-காண்டீபன்
13

Page 9
= = = = = = = GJISTS}
D/Dunoburaanafunab DREAMCATCHERBlasuba)
26.07.2006ல் இடம்பெற்ற மேற்படி நிகழ்வின்போது பெயர்ப்பலகையின் அருகில் மட்/ உளநல நிலையப்பணிப்பாளர் வண. பிதா, போல் சற்குணநாயகம் அடிகளாரும் உதவிப் பணிப்பாளர் திரு. மக்ஸி ஒக்கஸ் அவர்களும் காணப்படுகின்றனர்.
மக்கள் மனக்காயத்தை ஆற்றும் மையமாகத் திகழவிருக்கும் DREAMCATCHER க்காக அமைக்கப்படவிருக்கும் கட்டிடத்துக்கான அத்திபாரக்கலை நட்டு அதனை வணபிதா. போல் சற்குணநாயகம் அடிகளார் ஆசீர்வதிப்பதை இப்படம் காட்டுகின்றது.
 
 

GLISggðga = = = = = = = = = = = = = = = = = = = = = =
இறியவேண்டுயஇரியமனிதர்=23
நாவாலியூர் சோமசுந்தரப் புலவர்
தமிழ் கூறும் நல்லுகம் பெற்றெடுத்த நல்முத்துக்களில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் ஒருவராவர்.
இவர் 1876ம் ஆண்டு ஆனி மாதம் 28ம் திகதி யாழ்ப்பாணத்து நாவலியூரிலே கதிர்காமருக்கும் இலக்குமிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தார். மானிப்பாய் அருணாசலப்புலவரிடம் செந்தமிழையும் மாரிமுத்து உபாத்தியாரிடம் ஆங்கிலத்தையும் கற்று ஆசிரியர் பணியைத் தொழிலாக கொண்டார்.
சித்தங்கேணியிலுள்ள கலட்டி ஆங்கிலப் பாடசாலையில் ஆங்கிலம்,தமிழ் சமயம் ஆகிய பாடங்களை மாணவர் நன்கு விளங்கிக் கொள்ளுமாறு கற்பித்தார். இவர் பிறந்த மண்ணின் பெருமையினை அழகுற இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய அழகு தமிழில் பாடல்களாக அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். இயல்பாகவே கவிதையாற்றல் மிக்கவரான இப் புலவர் தம் வாழ் நாளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தங்கமயமான தோற்றத்தோடு களங்கமில்லா உள்ளத்தோடும் அகத்தி னழகு முகத்தில் தெரிய தன் வெண் தாடியினை மென்விரல்களால் தடவிக் கொண்டு இவர் இயற்றிய பிரபந்தங்கள், “சிறுவர் செந்தமிழ்’ சிறுவர்களுக்கான பாடல்கள் பொதுநூல்களென இவர் பல துறைகளிலும் பாடல்களை இயற்றியுள் ளனர்.
பெங்களுரிலிருந்து வந்த பெரியார் சுப்பிரமணிய சுவாமியாரை தமது குருவாக ஏற்றுக்கொண்டார். தமது தாய்மாமன் வேலுப்பிள்ளையின் மகள் சின்னம்மையை மணந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். இவருக்கு 3 பிள்ளைகள் உண்டு. அந்நியர் ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழ் மக்கள் மேனாட்டு மோகத்தில் நமது கலாசாரங்களை மெல்ல மெல்லக் கைவிடுவதைக் கண்டு மனம் நொந்தார். எதிர்காலச்சந்ததியினர் நாம் போற்றுகின்ற பழக்க வழக்கங்களை அறவே மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தால் குழந்தைகளும் விளங்கி மகிழக்கூடிய வகையில் இனிய தமிழ் நடையில் நமது வாழ்க்கை முறைகளை அழகாகப் பாடியுள்ளார். மென்மையுள்ளம் படைத்த புலவரும் சிறுவர் செந்தமிழ்' என்ற நுாலினை படைத்து எமக்கு அளித்துள்ளனர்.
“தெள்ளமுதே தேனே தெவிட்டாத நறும்பாகே உள்ளம் குளிரவரும் ஓவியமே கண்வளராய்’ என்று குழந்தைளை தாலட்டுகிறார். பனங்கள்ளும் பனங்கட்டியும் தரும் பனை மரம் நிறைந்த நம் யாழப்பாணத்துப் பெருமையினை 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை’ என்ற பாடல் மூலம் பனைமரம் எமக்கு வாழ்வளிக்கும் கற்பகதரு எனக்கூறுகின்றார். ஆடி மாத்தில் பழங்களும் பனங்கட்டியும் மலிந்து இருக்கும். அக்காலத்தில் இனிய தின்பண்டங்களும் பழவகைகளும் தெய்வங்களுக்கு படைத்து சுற்றம் சூழ உண்டு மகிழ வேண்டும்
15

Page 10
= = = = = = = = = = = = = = GJISTS} என்ற அவாவை அவரது பாடலில் காணக்கூடியதாக உள்ளது. இப் பாடலில் கூழ்காய்ச்சும் விதமும் கொழுக்கட்டை அவிக்கும் விதமும் அழகாக விபரிக்கப்பட்டுள்ளன. சிறுவர் முதல் பெரியோர் வரை பாடிப்பாடி சுவைக்கக்கூடிய கவிதைகள் அவர் புகழை இன்றும் நிலை நாட்டுகின்றன. கற்பனையும் கருத்தாழ மும் மிக்க பாடல்கள் ஏராளம். யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படும் பண்டிகை களில் ஆடிப்பிறப்பு சிறப்பு வாய்ந்தது. நெடுநாளைப் பயிர்களான பனை, தென்னை, மா, பலா போன்ற கனி தரும் மரங்களை நமக்காக நாட்டி வளர்த்துத் தந்த நம் மூதாதையர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி கடனையும் இப்பண்டிகை விளங்குகிறது.இந்த உண்மையை என்றும் மறக்காதிருக்கவும் இப்பாடல் உதவுகிறது. பனை பல நாட்டி நாட்டின் வளம் பெருக்க வேண்டும் என்றும் எமக்கு போதிக்கிறது. இது தவிர ‘மாம்பழம் புழுக்கொடியல் “கொழுக்கட்டைப் பொன்னன்”, ’கத்தரிவெருளி” “பவளக்கொடி’, வெண்ணிலா, “எலியும் சேவலும்’ போன்ற பாடல்கள் குழந்தையோடு அவர் உள்ளம் எவ்வளவு துாரம் ஒன்றியிருந்த தென்பதை அழகாக எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் இப் பாடல்களில் யாழ்ப்பாண மணம் கமழுவதையும் அவதானிக்கலாம். “தாடி அறுந்த வேடன்’ “அம்புலி’, ‘இலவு காத்த கிளி”, “விறகுவெட்டி” போன்ற பாடல்களும் சிறுவர்க ளுக்காகப் பாடிய இனிய பாடல்களாகும். “தாலாட்டு”, “சாய்ந்தாடம்மா’ போன்றவை எளிய சந்தம் நிறைந்த நாட்டு பாடல்கள் போன்றவை.
இலங்கை சுதந்திரம் அடைந்ததையொட்டி இவர்பாடிய இலங்கை வளப் பாடல்கள் கற்பனை வளம்மிக்கவை தேசிய உணர்வு ஊட்டவல்லவை இசை நயமும் செந்தமிழ்ப் பிரயோகமும் மலிந்தவை.மகாவலி கங்கைஆறும், கன்னியா வெந்நீருற்றும் இவரது பாடல்களால் சிறப்பை அடைகின்றன.
கண்ணன், புத்தர், யேசு, காந்தி போன்ற பெரியார்கள் ஆடுகள் மீது தனியன்பு கொண்ட அவர்களைப் போல் இவரும் ஆட்டைப் பற்றி பாடி உள்ளார். “ஆடு கதறியது” என்ற பாடலைப் படிக்கும் மக்கள் கண்ணிர் விடாமல் இருக்க LDTC LIIfæ56st.
"ஆசைமகனே என் அன்பான கண்மணியே நேசத்துரையே நெடுந்துாரம் போனாயோ உந்தன் தலையரிந்து ஒலைக்குடலைகட்டி சென்று சென்று விற்றனரோ இன்று பசி ஆறினரோ அம்மாவெனவழைக்கும் ஆசைத்திருக்குரலை எம் மாதுளங்கொழுந்தே நான் கேட்டதென்னாளோ ஓங்கிய கத்தி விழும் போது உடல் நடுங்க ஏங்கியெனை நினைத்தென்னம்மாவோ என்றாயோ'
என்ற வரிகளை நாம் படிக்கும் போது நாம் தாய் ஆடாக மாறி கதறி
16

(Ĝisĝa = = = = = = = = = = = = = = = = = = = = = = அழ வைக்கிறது. புலவரது அருள் நிறைந்த நெஞ்சத்தை “ஆடு கதறியது” என்ற பாடல் எமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
உத்தியோகம் புருஷலட்சணம் என்று எண்ணி ஏமாறாது “அடவி கொன்று வீடெழுப்பி அங்கிருக்கப் போவமே” என்ற பாடல் மூலம் காடு வெட்டி நாடாக்க வேண்டும் என்றும் வாணிபம்,கைத்தொழில்கள் பலவற்றில் நாம் ஈடுபடவேண்டும் என்றும் எம்மை யாசிக்கிறார்.
தமிழோடு சைவத்தையும் போற்றிய புலவர் “கந்தபுராண தத்துவ விளக்கம்” என ஒரு நூலையும் இயற்றியிருக்கிறார்.சைசித்தாந்தத்தில் இவருக்கு இருக்கும் பரந்த அறிவை இந்நுால் நன்கு வெளிப்படுத்துகின்றது.
தனது வயோதிய காலத்தில் நலிந்திருந்த வேளையில் தன்னை அன்போடு கவனித்த மனைவியின் செயல் கண்டு மனம் நெகிழ்ந்து “தாரமாகித் தாயாக’ என்ற கவிதையைப்பாடி தனது அன்பினை வெளிக்காட்டுகின்றார். கற்பகத்தரு எனப்போற்றப்படும் பனையைப் பற்றிச் சிறுவர் பாடல்களிற் சொன்ன புலவர், 'தால விலாசம்” என்று தனியாகவே ஒரு கவிதை நுாலையும் இயற்றி இருக்கிறார்.
அன்னியர் ஆதிக்கத்தில் இருந்து இந்திய பண்பாட்டையும் கலாசாரத்தையும் மீட்க பாரதியார்,கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை போன்றவர்கள் எழுச்சிப் பாடல்களைப் பாடியது போல் எமது புலவரும் யாழ்ப்பாணத்திலிருந்து பாடிய பாடல்களும் மாணவர்களின் தமிழ் புத்தகங்களிலே தவறாது இடம்பெறுகின்றன.இது இவருக்கு தமது அரசாங்கம் கொடுக்கும் பெரிய கெளரவமாகும்.
எம்மொழியின் பெருமையினை உணர்ந்த புலவர் “தெய்வத் தமிழை, சிங்களத்தைத் தேசிய மொழியாக்குவோம்” என்று பாடியிருப்பது ஒரு அரசியல் அறிஞராக,தீர்க்கதரிசியாக இவர் விளங்கினார் என்பதை எமக்கு இன்று புலப்படுத்துகின்றது.
இரு மொழிகளையும் ஈழத்தில் இரு கண்களாகக் காணவிருப்பிய புலவர் “எம்மில் யாரும் சிறியரல்லர் என்று நினைந்து போற்றுவோம்” என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். மேலும்
'அஞ்சி விரலும் சேர்ந்திடில் அரிய கருமம் புரியலாம் கொஞ்சம் ஒன்று நோவுறின் கூடுங் கருமம் இல்லையே’
என அறிவுரை கூறுகிறார். ஈழத்துப் பூதந்தேவனரைத் தொடர்ந்து புலவர் சின்னத்தம்பி, அரசகேசரி, சேனாதிராய முதலியார், முத்துக்கவிராய சேகரர், குமாரசுவாமிப்புலவர், நவநீத கிருஷ்ண பாரதியார் ஆகியோர் வழியில்
| 17

Page 11
= = = = = = = = = = = = = = = = = = = = = = (ĝis ĝia தனக்கெனத் தனியிடம் பெற்று விளங்கும் புலவர் அவர்கள் “ தங்கத்தாத்தா” என்ற சிறப்பினைத் தனதாக்கிக் கொண்டார்.
இப் புலவர் 1953ம் ஆண்டு ஆடி மாதம் 10ம் திகதி தமது 77வது வயதில் எம்மை விட்டுப்பிரிந்து விட்டார்.இருந்தும் கண்ணாடியும் , வெண்தாடியும் துலங்க சிவன் ரூபமாக யாழ்ப்பாண நகர மத்தியிலே இன்றும் நமக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.இப் புலவர். இவர் பாடிய அச்சேறியநூல்களில் “கதிரைச்சிலேடை வெண்பா”, “சிறுவர் செந்தமிழ்”, “தால விலாசம்”, “இலங்கை வளம்” என்பன பிரசித்தமானவை. நுால் வடிவு பெறாதவற்றை தமிழ் மக்கள் நூலுருப்பெற வைப்பது இப்புலவருக்குச் செய்யும் பெருந்தொண்டாகும்.
மரகதா சிவலிங்கம்
(இலங்கையில் முஸ்லிம்கள்)
* 1881ன் குடிசன மதிப்பீட்டின்படி இலங்கைச் சோனகர்களின் (முஸ்லிம்கள்) மொத்த எண்ணிக்கை 1,85,000 ஆகும்.
* 1901ல் இவ்வெண்ணிக்கை 2,28,034 ஆக அதிகரித்துக் காணப்
பட்டது.
* இந்தியாவில் முஸ்லிங்கள் 9ம் நூ. ஆண்டிலும் பின் 11ம் நூ.
ஆண்டிலும் நுழைந்தனர்.
(இலங்கைச் சோனகர் இன வரலாறு - பக்கம் 44)
18

“உலகம் முழுவதும் தற்போது பேசப்படும் ஏழாயிரம் மொழிகளில், மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால், இன்னும் 100 ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து இரண்டாயிரத்து 500 மொழிகளே எஞ்சியிருக்கும் நிலை ஏற்படும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுச் சூழல் அறிவியல் கண்காணிப் பகம், உலக அளவில் பேசப்படும் மொழிகள் குறித்து முக்கிய ஆய்வு ஒன்றை நடத்தியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது:- “உலகில் அதிகமாகப் பேசப்படும் பத்து மொழிகளில் இந்தி மற்றும் வங்காள மொழிகள் இடம் பெற்றுள்ளன. மாந்தரின், ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷ்யன், அரபிக், போர்ச்சுகீஸ், மலாய் - இந்தோனேசியன் மற்றும் பிரெஞ்ச் ஆகியன மீதமுள்ள எட்டு மொழிகள். உலகம் முழுவதிலும் தற்போது 49 கோடியே 60 இலட்சம் மக்கள் இந்தி பேசுகின்றனர். மேலும் 21 கோடியே 50 இலட்சம் பேர் வங்காளம் பேசுகின்றனர். நூறு கோடிக்கும் மேலான மக்கள் மாந்தரின் மொழியும், 51 கோடியே 40 இலட்சம் பேர் ஆங்கில மொழியும் பேசி வருகின்றனர். உலகம் முழுவதும் ஆங்கில பயிற்சி வகுப்பு களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டில் மட்டும் நூறு கோடியே 20 இலட்சம் பேர் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று ஆங்கிலம் கற்றுள்ளனர். குறிப்பாக, சீனாவில் ஆண்டிற்கு இரண்டு கோடி பேர் ஆங்கிலம் பயின்று வருகின்றார்கள். ஆபிரிக்க மற்றும் பசுபிக் கண்டங்களை அடுத்து ஆசியாவில் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. பப்புவாநியூகினியா நட்டில் 820 மொழிகளும், இந்தோனேசியாவில் 742 மொழிகளும் பேசப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக நைஜீரியாவில் 516, இந்தியாவில் 427, அமெரிக்காவில் 311, மெக்சிகோ, கேமரான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தலா 300 மொழிகளும் பேசப்படுகின்றன. பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்ன தாக,50 இலட்சம் முதல் ஒரு கோடி மக்கள் வாழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் 12 ஆயிரம் மொழிகள் பேசப்பட்டுள்ளன. தற்போதைய உலக மக்கள் தொகை 600 கோடி. ஆனால், பேசப்படும் மொழிகள் எண்ணிக்கை ஏழாயிர மாகக் குறைந்து விட்டது. சராசரியாக மாதத்திற்கு ஒரு மொழி வீதம் அழிந்து வருகி றது. இந்த நிலை நீடித்தால், இன்னும் 100 ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து இரண்டாயிரத்து 500 மொழிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலை ஏற்படும். இந்தியாவில் பேசப்படும் 427 மொழிகளில் பெரும்பாலானவை அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகில் அதிகமாக பேசப்படும் முதல் பத்து மொழிகளைப் பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19

Page 12
நூறாயிரம்
/VA V/VA"“a”a Z
தான் மற்ற மொழிகள் பிறந்தன!”
என்று மொழியியல் நிபுணர் சாத்தூர் சேகரன் கூறுவது உண்டு.
அதை மெய்ப்பிக்கும் ஆதாரம் சமீபத்தில் கிடைத்திருக்கிறது! சென்ற வாரம் தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டு நாலாயிரம் ஆண்டு பழமையானது என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!
அதாவது, தமிழ் எழுத்துத் தோன்றி நாலாயிரம் ஆண்டு ஆகிறது! எழுத்துத் தோன்றுவதற்கு முன்பே பேச்சு மொழி தோன்றியிருக்கும்! நாலாயிரம் ஆண்டுக்கு முன்பே எழுதப், படிக்கத் தெரிந்தவர்களாகத் தமிழ் மக்கள் இருந்தார்கள் என்றால், தமிழ் மக்கள் பண்பாட்டில் எவ்வளவு சிறந்தவர்களாக இருந்திருப்பார்கள்? தமிழ் இனம் எவ்வளவு பழமையானதாக இருந்திருக்கும்? “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழினத்தைக் கூறுவது, வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட உண்மையான கருத்து என்பதும் இப்போது உறுதிப்படுகிறது!
 ெகண்டெடுத்த கல்!
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்பியன் கண்டியூர் என்ற சிற்றூர் இருக்கிறது. அங்கு சண்முகநாதன் என்ற ஆசிரியர் வசிக்கிறார். அவர் தனது வீட்டுக் கொல்லையில் தென்னை நட குழி தோண்டினார். அப்போது ஒரு கல் கிடைத்தது.
மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில், மிருகங்களை குத்திக் கொல்லக்கையில் பிடித்துக்கொள்ளும் கருங்கல் அது பளபள என்று தீட்டப்பட்டிருந்தது.
அந்தக் கல்லில் சில எழுத்துக்கள் தெரியவே ஆசிரியர் சண்முக நாதன் ஆச்சரியப்பட்டார். அவருக்குக் கல்வெட்டுகளில் ஆர்வம் உண்டு. எனவே, இந்தக் கல்லை சென்னையிலுள்ள தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் இக்கல் புதிய கற்காலத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடித்தார்கள். “புதிய கற்காலம்” என்பது, இன்றைக்கு
20
 
 
 
 
 

(ŠLISrgie ======================
நாலாயிரம் ஆண்டுக்கு முந்தியது)
 ெசிந்துவெளி எழுத்து
கல்லில் உள்ள எழுத்துகளைப் படித்துக் கூறும்படி ஐராவதம் மகாதேவனிடம் கொடுத்தார்கள்.
எழுத்துகளைப் பார்த்ததும், அவர் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்! ஏனென்றால், அவை சிந்துவெளி எழுத்துகளை ஒத்திருந்தன! சிந்துவெளி நாகரிகம் என்பது நாலாயிரம் ஆண்டு பழமையானது. அங்கு திராவிட மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் திராவிட மொழியைப் பேசினார்கள், எழுதினார்கள்.
அவர்கள் பட எழுத்துகளால் எழுதினார்கள். (இன்றும் சீன எழுத்துக் கள் பட எழுத்துகளே) ஒவ்வோர் படமும் (எழுத்தும்) ஒரு சொல்லைக் குறிக்கும். சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய ஏறத்தாழ 500 பட எழுத்துகள் இதுவரை கண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன.
கல்லில் இருந்த எழுத்துகளைப் படித்துவிட்டு, ஐராவதம் மகாதேவன் கூறியதாவது
நாலு எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. வலமிருந்து இடமாக எழுதப்பட்டு இருக்கின்றன.
முதல் எழுத்து “முருக” 2-ம் எழுத்து “ன்” இரண்டும் சேர்வதால் “முருகன்” அடுத்துள்ள இரு எழுத்துகள் புரியவில்லை. ஆனால், அவை சிந்துவெளி எழுத்துகளே. பொருள்தான் தெரியவில்லை.
கி. முதல் கண்டுபிடிப்பு
இந்தக் கல் கி.மு. 1500-2000 ஆண்டு பழமையானது. எனவே இந்த எழுத்துகளும் அவ்வளவு காலம் பழமையானவை.
இவைசிந்து சமவெளி எழுத்துக்கள். “முருகன்” என்ற எழுத்துகள் சிந்து சமவெளியில் குறிப்பாக அரப்பாவில், ஏராளமாகக் கிடைத்துள்ளன. “முருகன்” என்பது வீரனை, வேட்டைக்காரனைக் குறிக்கக்கூடிய சொல்.
இவ்வளவு பழமையான சிந்துவெளி எழுத்துகள் தமிழ் நாட்டில் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. இங்கு வாழ்ந்த மக்களும் திராவிடமொழியைப் பேசினார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்!
தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்பு, இது.
(ராணி 14.5.2006)
21

Page 13
திமிழ் மொழியினை முத்தமிழ் என்று சிறப்பிக்கும் ஒரு புதுச் சொல்லாட்சியினைத் தந்தவர் அப்பர் என்று போற்றப் படும் திருநாவுக்கரசராவார்.
“மூலநோய்தீர்க்கும் முதல்வன்கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்”
என்று அவர் அருளிய தேவாரமே தமிழுக்கு முத்தமிழ் என்னும் முத்திரையைப் பதித்தது.
நாவுக்கரசரால் சிறப்பித்துப் பேசப்பட்ட முத்தமிழில் கூத்தும் ஒன்று. ஏனையவை இயல், இசை என வழங்கும். கூத்து ஒரு பழந்தமிழ்க்கலை என்பதற்கு சங்க இலக்கியங்களுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியமே சான்று ஆகும். அந்நூல் புறத்திணையில் ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறவந்த தொல் காப்பியர்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத்தோன்றி.
எனும் சூத்திரத்தின் வாயிலாக கூத்தில் பங்கேற்கும் கலைஞர்களில் ஒரு கூட்டத்தினரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றார்.
தொல்காப்பியம் போல் சங்க இலக்கியங்களும் கூத்து பற்றிக் குறிப்பிடுகின்றன. இதற்கு ஒரு காட்டாக குறுந்தொகையின் பின்வருபாடல் அடிகளை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
கையும் காலும்தூக்கத்துக்கும் ஆடிப்பாவை போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கரிதே.
இப்பாடல் அடிகளைப் படிப்பவர்கள் அக்காலத்தமிழர், மரப்பாவைக் கூத்து, துணிப்பாவைக் கூத்து எனும் கூத்துக்களை ஆடி மகிழ்ந்தமையை அறிந்து கொள்வர். இக் கூத்துக்களைப்போல துணங்கைக்கூத்து, குரவைக்கூத்து, வெறியாட்டு, வாடா வள்ளி (ஆடவரும் மகளிரும், சேர்ந்து ஆடுவது) முதலான
22
 
 
 
 

(ĜISĝa = = = = = = = = = = = = = = = = = = = = = = கூத்துக்களும் தமிழகத்தில் ஆடப்பட்டமையை மதுரைக் காஞ்சி, நற்றிணை, பத்துப்பாட்டு ஆகியநூல்கள் காட்டி நிற்கும். மேலும், பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம், கூத்தராற்றுப்படை என்று குறிக்கப்படுவதிலிருந்து பண்டைத் தமிழகத்தில் கூத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் நன்கு புலனாகும்.
ஆட்டும் பாட்டும் இணைந்ததே கூத்து என்பர். கூத்தின் இப்பண்பினை இன்றைய நமது நாட்டுக் கூத்துக்களிலும் காணலாம். அன்றையத் தமிழர்களின் எண்ணம், விருப்பிற்கேற்பவே உருவான கூத்து எனும் கலைவடிவம் ஒரு பொது நிகழ்ச்சியைச் சிறப்பிக்கவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ பயன்பட்ட ஒன்று என்பது தெளிவு. (உ+ம்) வெறியாட்டு)
பழந்தமிழ்க்கூத்தினை சிலப்பதிகாரம், வேத்தியல், பொதுவியல் என்று இரண்டாகப் பகுக்கும். (அரங்கேற்றக்கதை) இதில் முதலாவது மேல்மட்ட மக்களுக்கும், இரண்டாவது சமூகத்தின் அடிமட்ட மக்களுக்கும் உரியது. எனினும் இக்கூத்து அடிமட்ட மக்களுக்காகவே ஆக்கப்பட்டது என்ற கருத்து, அன்று மேலோங்கி இருந்தமைக்கு,
எழுவகைக் கூத்தும் இழிகுலத்தாரை
ஆட வகுத்தனன் அகத்தியன்தானே.
எனும் கலிப்பாவே சான்றாக அமையும்.
இது போன்று கூத்துக்கலைஞர்களாக விளங்கிய பாணர், விறலியர், பாடினியர் எனும் கலைஞர்களை இழிசனர் (தாழ்த்தப்பட்டடோர்) என்று புறநானூறும் (பாடல்கள் 285,289) குறித்து நிற்கும்.
கூத்து எனும் ஆடற்கலை இன்று பல்வேறு வகைகளாக இயங்கும். இதற்கு, மக்களின் மனோபாவத்திலும். சிந்தனையிலும் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்?
கூத்துக்களில் ஒன்று விலாசம். இதனை நாட்டுக் கூத்தின் ஒரு வகை என்று கூறும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள், 17ம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் இருந்து ஆட்சிபுரிந்த நாயக்க மன்னர்களின் காலத்திலேயே விலாச நாடகம் எனும் கூத்தினைப் பற்றிக் கேள்விப்படுகின்றோம் என்பார். (ஈழத்து வாழ்வும் வளமும் - பக்.80)
17ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்களின்
23.

Page 14
==================== == GLIFS ஆட்சியில் விலாசம் தோற்றம் பெற்றது போல 18ம்நூற்றாண்டில் அங்கு உருவான போரும் பூசலும் நிறைந்த அந்நியர் ஆட்சிச் சூழலிலேயே தெருக்கூத்துப் பிறந்ததாகத் தெரிகின்றது. இது பற்றி டாக்டர் பழனி அரங்கசாமி அவர்கள் இவ்விதம் எழுதுவார்:-
இந்தச்சூழ்நிலையில் இசையோ, நடனமோ நாடகமோ எப்படி வளர முடியும்? நாட்டில் அதுவரை புழக்கத்தில் இருந்த இசையும் கூத்தும் இழிசனர் கைப்பட்டு தெருக்கூத்தாக மாறிவிட்டது எனலாம். (தமிழ் நாடகம் - தோற்றமும் வளர்ச்சியும் பக்.19)
இது போன்றதோர்நிலை, சமண பெளத்த சமயங்களால் சங்க காலத்தின் கடைசிப்பகுதியில் உருவாக்கப்பட்டமையால், பூரணநிலவாகப் பிரகாசித்த, கூத்துக்கலை, பொலிவிழந்து, தேய்பிறையாகத் தொடங்கியது. பின் இது தன் முகத்தைக் காட்டவே ஆண்டுகள் பல ஆயின. காஞ்சிப் பல்லவர் காலத்திலும் (கி.பி.6ம் நூற்றாண்டு) பின் சோழர் காலத்திலும் (கி.பி. 9ம் நூற்றாண்டு) தனது முகத்தைக் காட்டிய கூத்து, 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பழைய நிலையிலிருந்து மாறுபட்டு, சற்று வித்தியாசமான பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியது எனலாம்.
கூத்தும் நாடகமும் இன்று வெவ்வேறு கலைவடிவங்கள். ஆனால், இச்சொற்கள் (கூத்து, நாடகம்) இரண்டும் தொல்காப்பியத்திலும் (நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்) சங்க நூல்களிலும் ஒரே அர்த்தத்தில் கையாளப்பட்டிருப்பதோடு, அவற்றின் வினை அடிகளும் (குதி, நட) பெரும்பாலும் ஒரே பொருளையே சுட்டி நிற்கும். இந்தக் காரணங்களின் அடிப்படையிலேயே அன்று நாடகமும் கூத்தும் அவற்றின் அனைத்து அம்சங்களிலும் ஒன்றாகவே விளங்கின என்று நாம் கொள்ள முடிகின்றது. இதனை இங்கு சற்று விரிவாக விளக்குதல் பயன்தருவதாகும்.
கூத்து எனும் சொல்லின் வினை அடியாக இருப்பது குதி எனும் உரிச் சொல் . இச்சொல்லின்படி குதித்து ஆடுதலே கூத்து என ஆகின்றது. ஒருவர் மனத்தில் சந்தோசம் நிறையும் போது சிலசமயம் அவர் உணர்ச்சி வசப்பட்டு ஆட்டம் போடுதல் இயல்பு. எனினும், குழந்தைகளிடத்திலேயே இப்பண்புகளை நாம் பெரிதும் அவதானிக்க முடியும்.
கூத்து ஒரு தமிழ்ச்சொல். ஆகையால், யாரும் அதன் பொருளில் கருத்து வேறுபாடு காட்டுவதில்லை. ஆனால், நாடகம் எனும் சொல் அப்படியன்று. அது
24

S SS SS SS SS Li S Y S S SS SS SS Y SS SSSS M S AAA
வடசொல் என்ற கருத்தும் உண்டு. இக்கருத்திற்கு உரியவர்களில் ஒருவரான பேராசிரியர். எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் பரத சாத்திரத்தில் உள்ள நாட்டிய தர்மி என்னும் சொல்லின் தமிழ்ப் பெயர்ப்பே நாடகம் என்னும் சொல் என்பார். வேறு அறிஞர் சிலர், நிருத்தம் என்னும் வடசொல்லோடு, நாடகம் எனும் சொல்லுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு எனக் குறிப்பிடுவர்.
எனினும், நாடகம் என்பதனை ஒரு தமிழ்ச் சொல்லாகக் கொள்ளுவோர் அதனை நாடு+அகம் எனப் பிரித்து நாட்டு மக்களின் மனத்தைக் காட்டும் கண்ணாடி என்பர்.
இச்சொல் ஆய்வு, எப்படியிருப்பினும் நாடகம் எனும் சொல்லை ஊன்றிக் கவனிப்போர் அச்சொல், தமிழில் தொழிற்பண்பை உணர்த்தும் நட எனும் உரிச்சொல்லின் அடியாகவே பிறந்துள்ளது என்னும் கருத்தினை உணர்ந்து கொள்ளுதல் கூடும்.
நாடகம் எனும் சொல்லைப் போலவே நடை, நடத்தல், நடிப்பு நடனம், நாட்டியம், நட்டு, நட்டுவம், நட்டுவன், ஆகிய சொற்களுக்கும் நட எனும் உரிச் சொல்லே தாயாக விளங்குவதும் கண்கூடு. இவற்றில் நட’ எனும் சொல்லுக்கு கூத்து என்று தமிழ் அகராதி பொருள் தந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்சொல் (நடை) ‘நட’ எனும் சொல்லோடு ஐ உருபு இணைந்ததால் (நட+ஐ) உருவானது. மனிதன் ஒருவனைப் பொறுத்தமட்டில் அவனது நடையும் அவனது மணஇயல்பை வெளிப்படுத்தும் என்பர். இக்கருத்தின் அடிப்படையில் ‘நட’ எனும் சொல்லோடு மனத்தைக் குறிக்கும் மற்றுமொரு சொல்லான‘அகம்' புணரும் போது (நடை+அகம்) நடையகம் என்றாகின்றது. இதுவே காலகதியில் திரிந்து நாடகம் என உருமாறியிருக்கலாம்.
எனினும், மொழியறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் நாடகம் எனும் சொல் உருவான விதத்தைப் பின்வருமாறு விளக்குவார். நடி என்ற சொல்லும், அகம் என்ற சொல்லும் புணர்ந்துநாடகம் என முதல்நிலை திரிந்த தொழிற் பெயராயிற்று. இதில் நட என்பது நடி என்பதன் திரிபு ஆகும் என்பார். (பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும் பக்-153)
இன்னும், நாடகம் எனும் சொல் நட அல்லது நடை எனும் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றமைக்கு மக்களிடையே நிலவும் சாதாரண பேச்சு வழக்குக்
25

Page 15
=== = = = = = = = = = = = = = = = = = = = šIsog
கூட உதவியாக அமைந்திருக்கலாம். அதாவது யாராவது ஒருவரின் நடத்தையை உற்றுக் கவனிப்போர் அதனால் வெறுப்புற்று அல்லது மகிழ்ச்சியடைந்து, இது நல்ல நாடகம் தான் என்று சொல்லுதல் இன்றும் நம்மிடையே உண்டு. இது போன்று சிலரின் வித்தாரமான நடையை நாடகம் என்றும் வர்ணிப்போரும் நம்மிடையே இல்லாமல் இல்லை. இதற்கு உதாரணமாக, நடையா. இது நடையா. நாடகம் அன்றோ நடக்குது எனும் திரைப்படப் பாடல் வரியை இங்கே காட்டலாம்.
மக்களிடையே நிலவும் இந்தச் சாதாரண பேச்சு வழக்குகள் மட்டுமன்றி சைவப் பெருமக்களின் முழுமுதல் கடவுளாகிய சிவவெருமான், நடராஜன், நடேசன், கூத்தர் பிரான், தாண்டவராயன் எனும் திருநாமங்களைச் சூடிக் கொண்டமைக்கு அவனது நடையும் அதில் நின்று எழுந்த நடனம், கூத்து, தாண்டவம் என்பனதான் காரணங்கள் ஆயின என நாம் கூறலாம் அல்லவா? இவற்றில் இருந்து நாடகம் அல்லது நடனம் என்பது நடையின் அலங்காரம் என்று நிச்சயம் நாம் சொல்லமுடியும்.
நாடகம் ஆங்கிலமொழியில் PLAY என்றும் DRAMA என்றும் வழங்கும். இவற்றில் PLAY எனும் சொல்லிற்கு Move adout in lively என்று ஒக்ஸ்போட் அகராதி பொருள் தந்திருப்பதைக் கவனிக்கையில், நட என்னும் சொல் நம் நினைவிற்கு வராமல் போகாது. இது போன்றதே DRAMA என்னும் சொல்லும் இதற்கு, ஒரு செயலை மேற் கொள்ளல், சுறுசுறுப்பாகச் செயற்படல், என்னும் 35(55g/556061T THE UNIVERSAL DICTIONARY OF THE ENGLISH LANGUAGH (எனும் ஆங்கில அகராதி) தந்துள்ளது. இக் கருத்துக்களும், மனித நடையின் முக்கியத்துவத்தையே வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
இறுதியாக - மேலே தரப்பட்ட ஆய்வுகளும் அவற்றின் முடிவுகளும் மனிதனின் இயல்பான சில செயற்பாடுகளில் (நடத்தல், குதித்தல்) இருந்தே நாடகம், கூத்து எனும் ஆடற்கலைகள் தோற்றம் பெற்றிருத்தல் வேண்டும் என்னும் சிந்தனையைக் காட்டிநிற்கும். இதனை விடுத்து நாடகத்துக்கென ஒரு பெரும் இலக்கண நூலினைப் (1897) படைத்துத் தந்த நாடகப் பேரறிஞர் பரிதிமாற் கலைஞரும், அவர் போன்றோரும் கோயில் சடங்குகளில் இருந்துதான் நாடகம் தோற்றம் பெற்றிருத்தல் வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்தமை எந்த விதத்தில் ஏற்கக் கூடியது என்று கேள்வி எழுப்புவதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?
- வாகரைவாணன் -
26

தேலிஸ் (640 - 546 BC)
தூய அறிவைப் பயன்படுத்திய முதல் கிரேக்கச் சிந்தனையாளர். தேலிஸ், கிரேக்க மைலிட்டஸ் நகரில் கி.மு. 6ம் நூற்றாண்டில் பிறந்தார். மைலிட்டஸ் சின்னாசியாவின் கரையோரத்தில் (தற்போது துருக்கி) இருந்தது. இவரதும் இவரது சீடர்களினதும் சிந்தனைகள் இவர்வாழ்ந்த மைலிஸிய நகரின் பெயரால் மைலிலியப்பள்ளி (Milesian School) என அழைக்கட்டது. அவர் பிறந்த இறந்த தினங்கள் திட்டவட்டமானதாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் கி.மு 580களில் தேலிஸ் தீவிர சிந்தனைச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமைக்குரிய சான்றுகள் உள்ளன. மைலிஸிய கழகத்தை ஸ்தாபித்ததோடு அதன் விஞ்ஞானியாகவும் தேலில் விளங்கினார். இவர் எதிர்வு கூறிய கிரகணம் கி.மு 585ல் நிகழ்ந்தது. சூரியனின் ஒழுங்கமைப்பின்மையால் ஏற்படும் 4 பருவ வேற்றுமைகளையும் தேலிஸ் கண்டு பிடித்தார் என்றும் கருதப்படுகிறது. எதென்ஸ் நகரில் டமாசியஸ் நீதிபதியாகஇருந்த காலத்தில் “ஞானி’ என பட்டம் சூட்டப்பட்டார். மிலிட்டஸ் இல் கண்டெடுக்கப்பட்ட ஆண்டுமானம் அவருடையதென்று கருதப்படுகிறது. தேலிஸ் இன் கடவுள் கொள்கை திட்டவட்டமாகத் தெரியவில்லை. “உலக ஆன்மா” அல்லது ‘நீர்க்கடவுள்' பற்றிய நம்பிக்கை அவருக்கு இருந்திருக்கலாம்.
அனெக்ஸிமாந்தர் (610 - 546 BC)
அனெக்ஸிமாந்தர் மிலிட்டஸ் நகரில் பிறந்தார் (610 - 546 BC) மைலிஸியப் பள்ளியின் இரண்டாம் வாரிசான இவர் தேலிஸ் இன் மாணவர். தேலிஸ் போலவே புதுக்கண்டுபிடிப்புக்களினால் புகழ் பெற்றிருந்தார். மைலிஸிய கடலோடிகளுக்கான தேசப்படத்தை வரைந்தார். எல்லாப் பொருள்களும் நீரில் இருந்து தோன்றின என்ற கருத்தை அவர் நிராகரித்தார். ஏனைய மூலக்கூறுகளையும் முதன்மைப் பொருள்களாக அவர் ஏற்றுக் கொள்ளவில் லை. உலகம் படைக்கப்பட்டதல்ல அது பரிணாமம் உறுவது. விலகு உலகிலும் பரிணாமம் உள்ளது. மூலப் பதார்த்தம் வரம்பற்றது. என்று அவர் கருதினார். பூமி நீரில் மிதப்பதாகத் தேலிஸ் கருதினார். ஆனால் அது தனியே அந்தரத்தில் நிற்பதாகவும், அதனைத் தாங்குவதற்கு
27

Page 16
====================== Gīrģ எதுவும் வேண்டியதில்லை என்றார். அவர் பூமி கோளவடிவானதென்று கூறவில்லை. பூமியை அவர் உருளை (Cylinder) வடிவான தென்றார். அனெக்ஸிமாந்தர் மூலப்பதார்த்தத்தை வரம்பற்றதாக்கினார். வரம்பற்றதனுள்ளே எண்ணிறந்த உலகங்கள் இருந்தன என அவர் கூறுகிறார். இவ்வுலகங்கள் தோன்றுவதும் அழிவதும் முடிவில்லாது நிகழ்வதாகவும் கருதப்பட்டது. பைத்தகரியவாதிகள் பிரபஞ்சவியல் தொடர்பாக அனக்ஸிமாந்தரையே பெரிதும் பின்பற்றினர்.
தொடரும்.
(கலாநிதி. எம். எஸ். எம். அனஸ் எழுதிய “மெய்யியல்” நூலிலிருந்து)
ஒளவையார் பாடல்கள்
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்விமனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும், தயையும்
கொடையும் பிறவிக்குணம்
வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன் சிலம்பியாவர்க்குஞ் செய்யரிதால் - யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொலவேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.
28

ONUMrót
குண்டு மழைக்குள் லெபனான்
கொடுகிப் போனது
இஸ்ரவேல் இருக்கும் வரை இந்த மழை பெய்யும் ஆனாலும் அமெரிக்க முகில்தான் இதன் ஆதாரம்
பாலைவனத்தில் இந்த மழை
பாவம். பாவம்
அரேபியரும் யூதரும் அண்ணன் தம்பி
ஆபிரகாமின் மக்கள்
சண்டை பிடிப்பது இந்தச் சகோதரர்கள்தான்
பலஸ்தினம் இவ்விருவரினதும் பரம்பரைப் பூமி

Page 17
மனித ஜாதி விலங்கு
மாற்றமின் லை இரணி
புனித ஜாதி தெய்வ ஜ
நமிதன்னில் எங்கும்
உருட்டும் புரட்ரும் உை
உதட்டில் தானும் உர்ை
இருட்ரும் ஒன்றே எாங்
எளியம் நீயம் எவரும்
குறுக்கு வழியில் குே
கொஞ்சமல்ல கோடி,
அறக்குறிந்த மனிதர்
அறியாதென்ன?அறிச
அதர்மம் எங்கும் ஆட்
அகால மரணம் அடை நிதமும் இதுவே நிகரு
நிலத்தில் மயான நெ
இனத்தின் பேரால் எ
இரண்ரு மூன்றாய் உை
மனத்தில் மாற்றம் நி
மணிதம் இங்கே மீண்
 
 

f
இாதி
ாரும் ஒன்று
Berg
} GSGüj GOOGIAJ
கதின் பண்பு
ff EOLD 665 600Gay
கும் சூழும்
ā[童奥
பரனானோர்
sassassas ēES2
ULIEBIED
af GNEJFufutb
Lub 9 uflfa SGi
pம் இங்கு
ருப்பே மூளும்!
ரங்கும் சண்டை
டயும் தேசம்
கழுமானால்
நம் வாழும்