கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2007.05-06

Page 1


Page 2
எண்ணிய முழுதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் தண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
- மகாகவி பாரதியார் -
வெளியீடு: PROFESSIONALPSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA.
 

LLLLL
அனுமானமும்
ASL-35F50 GbE 6ುಆ: ஊரெல்லாம் புகுந்து விளையாடும் இந்த மக்கள் தொடர்புச் சாதனங்களில் இலங்
கச் சக்தி 2. LU 9)Lib Dababa 601 El ம்ராச்சியத்தை
வைகாசி - ஆனி 2007 >mm.. (ፍለ 9 தோற்றம் * 5-5-1998 அமைத்திருக்கும் சக்தி நிலை யில் இருந்து தாழ்ந்து விடக்கூடாது
றிவேகை εώρα αδιανό (Managing Editor) ஆனா இந்த எதி பார்ப்பை ऊंl சுவாமிஜி உதாசீனப் படுத்தி விட்டமையையே
போல் சற்குணநாயகம். யே. ச. அதில் வெளி
விள βώάδα (ανδ 變繩斷 (Editor) வின் ‘செல்வி தற்போது சக்தியில் ஒளி வாகரைவாணன பரப்புச் செய்யப்படுகின்றது. அந்த நடிகையை இதில் புதுப்புதுச்சேலைகள் றிவேகைஞ்: அலங்கரிக்கின்றனவாம். அப்படி அலங்க (Management) ரிக்கும் சேலைகளின் எண்ணிக்கையைச் சி.எம். ஒக்கஸ் சரியாகக் கணக்கெடுக்கும்படி தனது Ugojlog)2): ரசிகர் பட்டாளத்தைக் கேட்டுள்ள நடிகை,
அதில் வெற்றி பெறுபவர்களுக்கு வீடு தேடிவந்து தாமே விருது வழங்கப் போவதாகவும் பிரகடனம் செய்திருக்கின்
உளநல உதவி நிலையம், 15, வெபர் வீதி,
மட்டக்களப்பு.
றாா. தொலைபேசி: அடிமை ரசிகர்களுக்கு இது ஓர் O6O - 2651412 ஆனந்தத் தேன்மாரிதான். ஆனால் தன் O65 - 2222842 மானத்தை இழக்க விரும்பாத தமிழர் E-mail: ppccpalasitnet.lk களுக்கு இது அருவருப்பு. அவமானம்.
01 Om
Nyu-17

Page 3
பேரிது இ
புகழ் பெற்ற நடிகர் எம்.ஆர். ராதாவின் புத்திரிதான் இந்த ராதிகா. இவர் தாயார் ஓர் இலங்கைத் தமிழ்ப்பெண். இந்த உறவின் நிமிர்த்தமோ, என்னவோ நினைத்த போதெல்லாம் இவர் இலங்கையில் நிற்பார். வெள்ளவத்தையில் வாழும் சில தமிழ்க் குடும்பங்களுக்கு விரும்பித் தரிசனம் தருவார். விதம் விதமாக “சக்தி’க்கு விஷேட போஸ் (Pose) G35|TGILITs.
நடிகையின் இந்த தனிப் பட்ட சங்கதிகளில் நாம் தலையிட வில்லை. அடிப்படை உரிமை ஒரு வருக்கு அளித்திருக்கும் வரங்கள் தான் அவை. ஆனால் தாம் ஒரு சின்னத்திரையில் அணிந்து வரும் சேலைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும்படி கேட்பதுதான் நமக்கு அருவருப்பாகவும் அவமா னமாகவும் இருக்கின்றது. சுய மரியாதையை மதிக்கும் ஓர் இனம் இந்தச் சுணைகெட்ட வேலையைச் செய்யுமா என்ன?
இலங்கைத் தமிழ்மக்கள் மீது பற்றும் பாசமும் இருப்பது போல் காட்டிக் கொள்ளும் இந்தக் கோடீஸ்வர நடிகை அல்லது இன்று ஓர் அரசியல் தலைவராகிவிட்ட
இவரது கணவர் எனப்படும் சரத் குமார் இடிமேல் இடிகளைத் தாங் கிக் கொண்டிருக்கும் எங்கள் தமிழ் மக்களுக்கு இதுவரை செய்தது தான் என்ன? வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசியிருக்கிறார் களா? இல்லயே.
இந்நிலையில் தாம் அணி யும் சேலைகளை கணக்கெடுக் கும்படிக் கேட்கும் இவர், இலங்கைத் தமிழர்களை இளிச்ச வாயர்கள் என்றா நினைக்கிறார்? இன்று சேலைகளை எண்ணும்படிக் கேட் கும் இந்த நடிகை, நாளை தான் அணியும் செருப்புக்களையும் எண் ணும்படிக் கேட்கமாட்டார் என்பது என்ன நிச்சயம்? தமிழர்களே, தயவு செய்து சிந்தியுங்கள்.
கலை - கைகூப்பி வணங் கப்பட வேண்டியதொன்றுதான். ஆனால் அதன் பேரால் நடாத்தப் படும் கயமைகளுக்கெல்லாம் "சலாம்’ போடுவது சரிவராது. இது வேண்டுமானால் தமிழ் நாட்டோடு இருக்கட்டும். எங்களுக்கு வேண் டாம்.
മീര്qLര് வாகரைவாணன்
C02)
 

இயாது
சஞ்சயன் தூது சரிவரவில்லை தளர்ந்து போயினன் திருத ராட்டினன் வெஞ்சமர்தானோ? இது விதியாமோ? வினாக்கள் எழும்; விடைதான் இல்லை கெஞ்சிக் கேட்டும் கீழ் மகன் இசையான் கிழவன் நான் எண் செய்வேன்? வஞ்சகச் சகுனி வார்த்தையே வேதம் வருமொரு காலம் உண்டாமோ?
போரது வேண்டா! போற்றிடும் அமைதி பூமியில் நிலைத்திட வேண்டும் ஊரெல்லாம் உறவு ஓங்கிட வேண்டும் உள்ளத்தில் வர்மம் எதற்காமோ? வேரது அன்பு வெட்டிடலாமோ? விருட்சம் இல்லாப்பாலை ஏனோ? சீராகத் திருதன் சிந்திக்கலானான் செவியது கொள்வார் யாருமில்லை.
ஆண்டதோர் பரம்பரை அதனால் அந்த ஐவர்க்கரசு தந்திட வேண்டும் கூண்டுக்கிளியோ குந்தியின் புதல்வர்? கொற்றம் அவரது உரிமையே! மாண்டிரும் யுத்தம் மண்ணினில் வேண்டாம் மனிதர் நாம் எல்லாம் ஒன்றல்லோ? மீண்டதோர் உரையை நிகழ்த்தினன் விதுரன் மீதியின் வழியில் நிற்கும் ஞானி
ܠ75ܐ2 ongau) O3 Ommi

Page 4
Uேnது
விதுரன் வார்த்தை வீணாய்ப்போகும் வினைப்பயன் யாரையும் விட்டதில்லை அதிர முழங்குவான் அரவக் கொடியோன் ஐம்புலன் யாவும் கெட்டுப் போகும் வதிவிடம் ஐந்து வழங்கவே மாட்டேன் வரும்பகை முடித்தே தீர்வேன் நான் உதிரும் வார்த்தை ஒவ்வொன்றும் உளறல் உன்மத்தன் வார்த்தை அதுதானே!
மைந்தன் பேச்சைக் கேட்ட தந்தை மார்பில் அடித்துக் கொள்வான் பந்தம், பாசம் எல்லாம் போகும் பாரத யுத்தம் நடந்திருமோ? சிந்தனை ஏதும் இல்லாச் சிறியோன் சீச்சி. ஏன்தான் பிறந்தானோ? இந்த நாட்டின் அரசன் எமனோ?
இதுதான் விதியின் விளையாட்டோ?
என்றவன் ‘திருதன்’ ஏங்கலானான் எனினும் என்னவன் செய்வான்? மன்றினில் நடந்த சம்பவமெல்லாம் மாசில்லாத் தருமன் அறிவான் அன்றந்தத் துளியன் ஆயிரம் செய்தான் அனைத்தையும் நாங்கள் பொறுத்தோம் இன்றும் அவனுளம் இளகவேயில்லை
என்ன நான் செய்வேன் அய்யோ!
%^17N C04)
 
 
 

போது
தனி ஒரு மரமாய் நின்று தருமனும் புலம்பலானான் மனிதரில் பெரியோன் அந்த மாதவன் இதனைக்கண்டு பனித்திரும் கண்களோடு பக்குவமாகச் சொல்வான்
இனி ஒரு வழியே உண்டு இதையும் மீ கேட்கவேண்டும்,
தூது நான் செல்வேன், அந்தத் துரியனைக் கண்டு பேசி தீதினைத் தவிர்க்க வேண்டில் தேசத்தில் பாதி வேண்டும் மீதியின்படியே செய்க மீ இதைச் செய்யாவிட்டால் பாதக யுத்தம் ஒன்றே பரிகாரம் ஆகும் என்றே,
தெளிவுறச் சொல்வேன், கண்கள் தெரியாதோன் மகனின் முன்னம் பழி அவர் பக்கம் போகும் பாண்டுவின் மக்கட் கெல்லாம்
வழியது வந்து சேரும் வசந்தமும் வீசும் என்பான் ஒளியெனத் திகழும் கண்ணன் உண்மையே அவனும் சொன்னான் )2/677)ے ے تروی(
ܠܒ7sܐ2 O C05) Drugiau

Page 5
விற்சர்லாந்தை தளமாகக் கொண்டியங்கும் தனியார் அமைப்பொன்று
தாம் நடாத்திய வாக்கெடுப்பொன்றின் மூலம் ‘புதிய 7 உலக அதிசயங்களை’ (7New Wonder ofthe World) தெரிவுசெய்துள்ளதாக 07.07.2007 அன்று போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பனில் அறிவித் துள்ளது.
இந்தியாவின் தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர், மெக்சிகோவின் சிஜன் இட்சா பிரமிட், பிறேசிலின் றிடீமர் இயேசு சிலை, பெருவின் மசூ பிக்சூ (பழைய மலை), ஜோர்தானின் பெற்றா, இத்தாலியின் றோமன் கொலொஸ் ஸியம் ஆகியவையே மக்களின் விருப்புகளுக்கமைய புதிய உலக அதிசயங் களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
புகழ்பூத்த கட்டடக்கலை நிபுணர்களின் சபையொன்றினதும் யுனெஸ்கோவின் (ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசாரத்துக்கான அமைப்பு) முன்னாள் தலைவரான பெடிறிகோ மேயரின தும் தெரிவாக 77 பகுதிகளிலிருந்து 21 பகுதிகள் முதலில் தெரிவாகி யிருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த 21 பகுதிகளிலிருந்தும் 7 அதிசயங்களைத் தெரிவுசெய்வதற்கான ‘சர்வதேச வாக்கெடுப்பொன்றுக்கு இவ்வமைப்பு அழைப்பு விடுத்தது.
(WWW.new7Wonders.com)
இணையத்தளத்தினுடாகவும் செல்லிடத் தொலைபேசியின் குறுஞ் செய்தி முறைமையூடாகவும் (எஸ்.எம்.எஸ்.) நடைபெற்ற இவ்வாக்கெடுப்பு கடந்த 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. மறுநாள் புதிய உலக அதிசயங்கள் வெளியாகின.
கிரேக்கத்தின் அக்றோபொலிஸ் (Acropolis), ஸ்பெயின் அல்ஹம்றா, கம்போடியாவின் அங்கூர், மெக்சிகோவின் சிஜன் இட்சா, பிறேசிலின் றிடீமர் யேசு, இத்தாலியின் கொலோஸ்ஸியம், சிலியின் ஈஸ்ரர் தீவுச்சிலைகள், பிரான்ஸின் ஈபிள் கோபுரம், சீனாவின் பெருஞ்சுவர், துருக்கியின் ஹஜியா ஷோபியா, ஜப்பானின்கியோமிஷ" கோயில், ரஷ்யாவின் கிறைம்லின்,
 

Uேnது
பெருவின் மசூபிக்சூ, ஜேர்மனியின் நியஸ்ச்வன்ட்ஸ்ரீன் காஷில், ஜோர்தானின் பெற்றா, எகிப்தின் ஜிஷா பிரமிட்கள், அமெரிக்காவின் சுதந்திரச் சிலை, இங்கிலாந்தின் ஸ்ரோன் கென்ஜ், அவுஸ்திரேலியாவின் சிட்னி ஒபேராகவுஸ், இந்தியாவின் தாஜ்மஹால் , மாலியின் திம்புக்ரு ஆகியவையே அதிசயங்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட சின்னங்கள் அல்லது பகுதிகளாகும்.
இவ்வாக்கெடுப்பில் சுமார் 10 கோடிபேர் பங்குபற்றியிருந்ததாகவும் தெரிவுசெய்யப்பட்ட அதிசயங்களில் அதிகளவாக விருப்பு வாக்குகளை
தாஜ்மஹால்’ பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உலக அதிசயங்களை அறிவிக்கும் பிரமாண்டமான நிகழ்வு போர்த்துக்கல் லின் தலைநகர் லிஸ்பனிலுள்ள "லைட்' அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வு 170க்கும் அதிகமான நாடுகளில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
நிகழ்வில் நீல் ஆம்ஸ்ரோங்:-
இதேவேளை, தொடர்ந்தும் உலக அதிசயங்களிலொன்றாக எகிப்தின் பிரமிட்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதைக் கொண்டாடும் முகமாகவும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் நிலவில் முதன் முறையாக காலடிவைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ரோங், போர்த்துக்கல் பிரதமர், பாடகி ஜெனிபர் லொபிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர். எகிப்தின் பிரமிட் மாத்திரமே தொடர்ந்தும் இம்முறையும் உலக அதிசயங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
புதிய 7 உலக அதிசயங்களை தெரிவுசெய்வதற்கான முயற்சி 1999ஆம் ஆண்டில் சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த வீரதீர செயல்களிலீடுபடும் பேனாட் வெபர் என்பவரால் தொடங்கப்பட்டது. சுமார் 200 சின்னங்கள் அல்லது பகுதிகள் உலகம் முழுவதிலிருந்தும் போட்டிக்காக விண்ணப்பிக்கப் பட்டிருந்தன. 2006ம் ஆண்டில் இவற்றில் 21 சின்னங்கள் அல்லது பகுதிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.
“முன்னைய உலக அதிசயங்கள் பிரதானமாக மத்திய தரைப் பகுதியை மையமாகக் கொண்டதாகவே தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், உலக அதிசயங்கள் நவீன உலகின் ஒற்றுமையின் சின்னங்களாக திகழவேண்டும். முன்னைய உலக அதிசயங்கள் ஆதிகாலத்துக் குரியவையே” என இம்முயற்சியின் ஆரம்ப கர்த்தாவான வெபர் தெரிவித் துள்ளார்.
17N mO O7 Om

Page 6
Uேரிது ணு §ಷ್ರ
புதிய உலக அதிசயங்களுக்கான நிபந்தனை:-
உலக அதிசயங்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்முறை கோரப்பட்டபொழுது விண்ணப்பிக்கப்படும் சின்னம் அல்லது பகுதி 2000 ஆண்டுகளுக்குள் மனிதனால் உருவாக்கப்பட்டதாயிருக்க வேண்டு மெனவும் குறித்த 'அதிசயம்’ அரசினால் பாதுகாக்கப்படுபவையாக உள்வாங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் அதிருப்தி:-
இது இவ்வாறிருக்க, சுவிஸ் நாட்டுதனியார் அமைப்பின் இந்த உலக அதிசயங்களுக்கான தெரிவு நடவடிக்கையை யுனெஸ்கோ கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த முடிவுகள் உலக மக்கள் அனைவரது விருப்பு வெறுப்பு களை பிரதிபலிப்பதாகக் கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள யுனெஸ்கோ, இவ்வகையான நடவடிக்கைகள் புராதான - மரபுரிமை சின்னங்களைப் பேணும் தமது நோக்கங்கள் மற்றும் திட்டப் பரிமாணங்களிலிருந்து முரண்பட்டு நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.
உலகில் அதிகளவான சனத்தொகையைக் கொண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகள் தமது நாட்டுச் சின்னங்கள் உலக அதிசயங்களாக மிளிர வேண்டும் என்பதற்காக தமக்குள்ள மக்கள்தொகையை சாதகமாகப் பயன்படுத்தி அதிகளவு வாக்குகளை அளித்திருக்கலாமென தெரிவித்துள்ள யுனெஸ்கோ, வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நாடுகளுக்கு இது எதிர் மறையானதொரு செய்தியையே வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், தற்பொழுது உலக அதிசயங்களாக தெரிவு செய்யப்பட் டுள்ளவைக்கு ‘உலக அதியங்கள்’ என்ற பட்டியலுக்குள் வருவதற்கான தகுதிகள் இருப்பதாகவும் ஆனால், 7 அதிசயங்களுடன் பட்டியல் மட்டுப் படுத்தப்பட்டிருப்பதானது தமக்கு நெருடலை ஏற்படுத்துவதாகவும் யுனெஸ் கோவின் ஊடகப் பேச்சாளர் கிறிஸ்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிசயம் ஆனால் உண்மையென படித்திருப்போம். இது சற்று வித்தியாசமான அதிசயங்கள். ஆனால், சர்ச்சை என்றாற்போலல்லவா உள்ளது. இவை இவ்வாறிருக்கையில் ‘உலக இயற்கை அதிசயங்கள் 7’ இனைத் தெரிவு செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்றே வருகின்றன. WWWnatural7Wonders.com எனும் இணையத்தளத்துக்கு சென்றால் விபரங்க ளைப் பெற்றுக் கொள்ளலாம்.
 
 
 

(AV(η
ஜோர்தானின் 7மற்றா
அரேபிய பாலைவனத்தின் ஒரு எல்லையிலுள்ள இவ்அதிசயம், நபரேயன்
பேரரசின் தலைநகராக விளங்கியுள்ளது. மத்திய கிழக்கின் கலாசாரத்துக்கான உதாரணமாக விளங்கும் இச்சின்னம், நீர்
வழங்கல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை யும் வேறுபல நகர்ப்புற கட்டமைப்புகளை இ யும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. கி.மு. 9 முதல் கி.பி. 40 வரையிலான காலப்பகுதிக்கு இவ் அதிசயம் சொந்தமானது.
இத்தானியின் ரோமன் கைானோன்னியம்
ம்ே இத்தாலியின் ரோம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இவ் அதிசயம், ரோமப் பேரரசின் வெற்றியைக் கொண்டாடும்
பகுதியாக விளங்கியதாக கூறப்படு கின்றது. கி.பி. 70-82 காலப்பகுதிக்குச் சொந்தமான இச்சின்னம், நவீன விளை யாட்டு அரங்குகளுக்கு இணையாகத்திகழ் வதாகதெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின்தாஜ்மஹான்
சி.பி.1630இல் சாஜஹான் . மன்னனால் காலஞ்சென்றதனது அன்பு மனைவி மும்தாஜின் : நினைவாக கட்டப்பட்டஇச்சின்னம் இந்திய முஸ்லிம்களின் கலைத் துவத்தை எடுத்தியம்புவதாக கூறப்படுகின்றது.
இந் நினைவுச்சின்னத் தின் பின்புலத்தில் உயிரைத் தொடும் காதல் கதையுள்ளதென்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பதோடு இது காதலின் அல்லது அன்பின் சின்னமாகப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக விளங்குகின்றது. அன்பு மனைவியால் எழுந்த அதிசயமாகக்கூட இதனைக் கொள்ளலாம்.

Page 7
Uேரிது
சீனப்பைருஞ்சுவர் ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்புக்
கட்டமைப்பொன்றுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலும் மொங்கோலிய பழங்குடியினர் சீனாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காகவும் கட்டப்பட்ட இப்பெருஞ்சுவர் மனிதனால் கட்டப் பட்ட மிகப்பாரியநினைவுச்சின்னமாக கருதப் படுகின்றது.
இந்தமாபெரும் சுவரைக்கட்டுவதற்கு பல்லாயிரக்கணக்கானோர்தமது உயிர்களை கொடுத்திருக்கிறார்களெனக் கூறப்படுகின் றது. வானத்திலிருந்து பார்க்கும் பொழுது மாத்திரமே இதன் அதிசயம் புரியுமென்பதுடன் இது கி.மு. 220 மற்றும் கி.பி. 1368-1644 ஆகிய காலப்பகுதியில் கட்டப்பட்டது. மைக்சிகோவின்சிஜன் இட்சா பிரமிட்
8
ಹಣಾ
அதிட்டடக் கலைக்கு சிம்ம
சொப்பனமாக விளங்கும் இப் பிரமிட் கி.பி. 800க்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. மெக்சிக்கோவின் யுகாரன் தீப கற்பத்தில் சிஜன் இட்சா நகரில் அமைந்துள்ள இப்பிரமிட்டில் பல்வேறு கட்டமைப்புகளை இன் றும் தெளிவாக காணக்கூடியதா கவுள்ளதாகவும் இதனைக் கட்டு ே SSRS S. வதற்கான ஈடுபாடு எப்படியிருந்திருக்கும் என்பதனை சிந்திக்கும் பொழுது வியப்பாக இருப்பதாகவும் கட்டடக்கலைநிபுணர்கள் கூறுகின்றனர்.
dിത്രgിയിര്ബ്രിte0് മേല്ക്ക് ക്ലിഞ്ച
38 மீற்றர் உயரத்துக்கு எழுந்துநிற்கும் இச்சிலை, பிறேசிலின்றியோடீ ஜெனிறோபகுதியிலுள்ள கொகோவாடோ மலையின் உச்சியில் அமைந்துள்ளது. பிறேசிலின்ஹிற்றர்பாசில்வாகோஸ்ரா என்பவரால் வடிவமைக்கப்பட்ட இச்சிலை, பிரான்ஸைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் போல் லன்டவுஸ்கியினால் செதுக்கப் பட்டது.
1N mO 10 Om
 
 
 
 
 

Uேnது
உலகிலுள்ள நினைவுச் சின்னங்களில் ஒன்றான இச்சிலையைச் செதுக்குவதற்கு 5 வருடங் கள் எடுத்ததாகவும் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி இது திறந்து வைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருவின் “பழைய மனை’ (மது விக்ஆ)
ܘܣܡܘܣܐܫܠܡܫܡܫܥܣܫܗܣܝܘܣܘܝܕ
15ஆம் நூற்றாண்டில் இங்கன் பேரரசால் மலையில் கட்டப்பட்ட இந் நகரம் மசூ பிக்க என அழைக்கப்படு கின்றது. இதன் பொருள் பழைய மலை என்பதாகும்.
இந்நகரம் 1911 இலேயே மீளவும் ஹிறாம் பின்காம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சேனைசேகரன் ஜெயமுறணி (தினக்குரன் 15/07/2007)

Page 8
நீதிநெறிமுறை நிற்போர் மேலோர் கீழோர் மற்றோர்!
ஒளவை வகுத்த சாதியும் பொய்யோ - ?
அஃதிங்கிலவோ ?
இன்றளவும் இங்கிருப்பதெல்லாம் அந்தணர் வகுத்த சூத்திரர்தானோ - ?
சூத்திரருள்ளும் கோத்திரம் பலவோ. கோத்திரத்துள்ளும் குணம்பலவுளவோ. ?
யார் வகுத்த சாதி ? யார் வகுத்த நீதி ?
ஆத்திரம் கண்ணை மறைக்கையிலே அந்தணன் கூடக் கீழவனே! ஆத்திரமூட்டல் நிகழ்ந்திடினும்
அமைதி காப்பவன் மேலவனே!
நீதியிங்கு எங்குண்டு கண்டீர் - ? நீதி பிறழ்ந்து பெயர்ந்ததாலன்றோ மோதல் இங்கு வெடித்தது கண்டீர்!
ஆளும் ஆசை உள்ளவரை நீதி செத்த பாம்பே தான் !
ஆளும் ஆசை உள்ளவர்க்கே அரசுகள் தாமும் கைகொடுக்கும்.
1N mO C 12)
p
அகத்தின் தேடல் - 7
ဇွို2.
நீதி கேட்டுப் போராடி நீ செத்து மடிந்தே போயிடினும் கேட்கவோர்நாதியில்லை. உணர்வாயே!
சாதித் திமிரே போலிதுவும் ஆளும் தந்திரம் அறிந்திடுவாய் !
همگي తో *گي
عي
 
 

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவரின் இயற்பெயர் கொன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ஆகும். இவர் இத்தாலியில் கி.பி. 1680ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 8ஆம் திகதி பிறந்தார். இவர் இத்தாலியம், கிரேக்கம், இலத்தீன், போர்த்துக்கீசியம் முதலான மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் 1710 ஆம் ஆண்டளவில் இந்தியாவுக்கு வந்தார். தமிழ் நாட்டில் மதுரையில் வாழ்ந்த சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் கற்றார். தமிழ் மொழியில் இவருக்கு ஏற்பட்ட ஆராக் காதலினால் தைரியம் என்ற பொருள் கொண்ட தனது கொன்ஸ்டன்ஸ்போ என்ற இத்தாலியப் பெயரை மாற்றித் தைரிய நாத சுவாமி எனத் தனக்குப் பெயரிட்டுக் கொண்டார். யேசுநாதர் பணியில் அவர் காட்டிய ஆர்வத்தையும், தமிழ்மொழி மேல் அவருக்கிருந்த ஈடுபாட்டையும் அறிந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அவருடைய பெயரை வீரமாமுனிவர் என மாற்றினர். அப்பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
1698ஆம் ஆண்டு தமது 18 ஆவது வயதில் கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்தார். அங்கு 12 வருடங்கள் குருப்பணிக்கு தொண்டாற்றினார். யேசுசபைக் கல்லூரியில் கல்வி போதித்தார். 1709இல் அவருக்கு குருப்பட்டம் கிடைத்தது. பின் அவர் தமிழ கத்திற்கு வந்து 1911 ஆம் ஆண்டு பாண்டிய நாட்டில் தொண்டு புரிந்து கொண்டு இருந்த இயேசு சபைக் குருமாருடன் இணைந்து தாமும் தொண்டு புரியத் தொடங்கினார்.
சமய நூலைத் தமிழர்களுக்குத் தாமும் ஒரு தமிழனாய் இருந்து கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்
தினால் தமிழை ஆழமாகப் பயின்றார். அத்தோடு சமஸ்கிருதம், உருது, தெலுங்கு முதலான மொழிகளையும் கற்றார். 30 வயதின் பின் பிறமொழிகளைக் கற்று அதில் அளவற்ற புலமை பெற்று விளங்கிய வீரமாமுனிவரைத் தவிர இன்னொருவரை உலக வரலாற்றில் காண முடியாது என்று வண. தனிநாயகம் அடிகளார் ஓரிடத்தில் குறிப்பிட் டுள்ளார்.
AN mO C13) Oml

Page 9
போது
தமிழ் மொழியை வளர்த்த, தமிழுக்குத் தொண்டாற்றிய ஐரோப்பி யர்களில் சென்னை மாவட்ட ஆட்சியாளராக இருந்த எல்லீஸ் துரை தமிழ் மீது ஆர்வங்கொண்டு நல்ல முறையில் தமிழ் கற்ற பொழுது தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தேடிச் சேகரித்தார். அப்படி அவர் தேடிய பொழுது அத்தேடலில் கிடைத்தது தான் வீரமாமுனிவரின் “தேம்பாவணி” எனும் காவியம். அதை ஆவூர் எனும் சிற்றுாரில் கண்டெடுத்தார். முத்துச்சாமி என்பவரைக் கொண்டு முனிவரின் வரலாற்றையும் எழுதி இருக்காவிட்டால் இப்போது எமக்கு இவரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்திருக்கும்.
வீரமாமுனிவர் யாத்த பெருங்காப்பியம் “தேம்பாவணி” இது கிறிஸ்து நீதி நூலாக விளங்குகிறது. இயற்கையோடு இணைந்த இறைவனின் தோற்றம், தொழிற் சிறப்பு, இல்லற துறவற விளக்கம், அறத்தின் அருமை, காமத்தின் தீமை என்று பலதரப்பட்ட சிறப்பு பொருந்தியது. “தேம்பாவணி’ முனிவர் போதித்து வந்த அறக் கோட் பாடுகளும், தத்துவங்களும், நீதிகளும் நிறைந்த அரும் பெருங் களஞ் சியம் ஆகும். தொடர்நிலைச் செய்யுள்களாலான “தேம்பாவணி’ 3 காண்டங்களாகவும், 36 படலங்களாகவும் 3615 பாடல்களில் எழுதப்பட் டுள்ளது.
வீரமாமுனிவர் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்தில் மதுரை, தஞ்சாவூர், அரியலூர், கயத்தாறு, காமநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் பணி புரிந்தார். தமிழ் மொழியைத் திறம்பட பேசவும் எழுதவும் பயின்றார். அத்தோடு மிகுந்த ஆர்வங்கொண்டு ஐம்பெருங்காப்பியங்களைக் கற்றார். தொல்காப்பியம் போன்ற இலக்கண, நூல்களைக் கற்றார். மேலும் தாமும் அந்நூல்களை இயற்றத் தலைப்பட்டார். தமிழ் இலக்கணத்தில் ஏ.ஓ போன்ற எழுத்துக்களின் வரிவடிவங்களில் மாற்றம் செய்து தமிழ் எழுத்துக்களில் நல்ல சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார். வரிவடிவ அமைப்பை எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் மாற்றினார். தமிழ் இலக்கணத்தில் வரிவடிவத்தைத் திருத்திய ஒரேயொரு வெளிநாட்டவர் விரமாமுனிவர் அவர்களே. கிரேக்கம், இலத்தீன் மொழிகளில் மிகுந்த பரிச்சயமுடைய முனிவர் இனிய தமிழில் தன் மனத்தைப் பறிகொடுத்தார்.
இவர் இயற்றிய நூல்கள் மிகப்பல. தமிழ்ச்சொற்களை அகரவரி சைப்படி ஒழுங்குபடுத்தி “சதுரகராதி’ என்ற நூலை ஆக்கினார். இதுதவிர தமிழ் இலத்தீன் அகராதி போன்ற நூல்களை ஐரோப்பிய ருக்காக ஆக்கினார். மேலும், திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்
<7حصي O C 14) O

தேம்பாவணி தவிர”, அன்னை அழங்கல அந்தாதி, ‘கித்தேரியம்மாள் அம் மானை”, “அடைக்கலமாலை”, “திருக்காவலூர்க்கலம்பகம்”, “கலி வெண்பா’ ஆகிய நூல்களை ஆக்கியருளினார். “பரமார்த்தகுரு” நகைச்சுவைக் கதை, பாமரராலும் பாராட்டப் பெற்றது. வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானம் உணர் தல் முதலியவை வசனநடை நூல் களாகும். ஐந்திலக்கணம் கூறும் தொன்னுல் விளக்கம் சிறந்த இலக்கண நூலாகும். கத்தோலிக் கக் கருத்துக்கள் நிறைந்த நீதி பொருந்திய கிறிஸ்து பெருமானின் வரலாற்றைக் கூறும், தேம்பாவணி மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பெரும் புலவர்கள் முன்னிலையில் அரங் கேற்றம் செய்யப்பட்டது. விவிலிய
நூலில் வரும் பல வரலாறுகளை
யும் தமது சொந்தக் கருத்துக்க ளையும் தேம்பாவணி மூலமாக முனிவர் வெளிக்கொணர்ந்துள்ளார். பிற்காலத்தில் எழுந்த கிறிஸ்தவ நூல்களுக்கு அவரே வழிகாட்டி யாகத் திகழ்ந்தார். மேலும் 1734ம் ஆண்டு மாதா கோவில் ஒன்றையும் மயிலாப்பூரில் கட்டுவித்துள்ளார். தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் நாட்டிலேயே உயிர்நீத்த வீரமாமு னிவர் தமிழ் நாட்டில் ஒரு கிறிஸ் தவச் சூழலை உருவாக்கியுள்ளார்.
Ombo)
வீரமாமுனிவர்தைரியநாதர் விரிதமிழ்க்கலைமனாங்கமழும் ஆரமாமுனிவர் அகத்தியர் போலவே, அருளினார் அரியநன்னூல்கள்
சாரமாந்தேம்பாவணியினைத் தொழனுந் தமிழ் மனங்கமழுமென்கரமே. ஈரமாநெஞ்சில் இடம்பெறநட்டால் இண்பமாய்மஸ்ருமெண்வாழ்வே
என்று சுத்தானந்த பாரதியார் புகழ்ந்துள்ளார்.
- மரதைா சிவலிங்கம் -
t" SØ
ஒரு காலத்தில் இரண்டு \ பகுதிகளும் (தமிழகம் NA) இலங்கை) ஒன்றாகவே *4இருந்திருக்கக்கூடும். காலப்போக்கில் கடல்,
இருநிலப்பகுதிகளாக அந்தப் பகுதியைப் பிரித்திருக்கலாம். இப்போது இராமர் பாலம் என்று சொல்லப்படும் நீண்ட மேட்டுப் பகுதி தனுஸ் கோடியிலிருந்து மன்னார் தீவுப்பகுதிவரை இருக் கிறது. இது கடலுக்குள் ஏற்பட்ட மாற்றத்தால் இயற்கை யாகவே உருவான மேட்டுப்பகுதி.
(கல்சு) 17.06.2007)
ܔzܐ2 C15)
namumam

Page 10
ijiUilobir
N ށިI'
al #ಇಂ اول ۴
ான
مي
برای گرم
 

சென்ற இதழின் தொடர்ச்சி.
உலக யதார்த்தத்தில் நீண்டகால மரபுப் பின்னணியை உடைய யூத, ஜெர்மனிய, Uரானிசிய, ஆங்கிலேய, றோம, இத்தாலி சமுதாயங்கள் மேற் கூறிய சுயகெளரவத்தையும், பெருமை யையும், தன்னம்பிக்கையும் பெறுகின் றனர். இருப்Uனும் இவ்வாறான மரபியல்சார்ந்த அம்சங்கள் சிலவேளை களில் எதிர் மறையாக (negative) உயர்வுச் சிக்கலையும் தற்பெருமை யையும் நீண்டகால மரபுகளைக் கொண்ட மக்களிடையே தோற்றுவித்து விடுவது உண்டு. இதனர் பேறாக ஏனைய சமூகங்களை அடக்கியொடுக்
mO
LLLLLLLLLLLLLSLSSLLSSSLL
கவும் அழிக்கவும் இவர்கள் முற்படுவ துண்டு. தமது மரபுகளில் கொண்ட பற்று, வெறியாகிதமது மரபுகளும் அவற்றைப் பின்பற்றும் தமது சமுதாயமுமே உயர்ந்த தென்ற எதிர்மறை மனநிலைக்கு வந்து ஏனைய மரபுகளைப் பின்பற்றுவோரை குறைவாகக் கணிக்கவும் அவர்களுக் குரிய இடத்தைக் கொடுக்காது புறக் கணிக்கவும் தலைப்படுவர்.
இத்தகைய தன்மையே இன்று அனேக அமெரிக்கர்களிடத்தில் தோன்றி யுள்ளது.உலகின்ஒட்டுமொத்த பொலிசா ராகத் தம்மைக் காட்டிக்கொள்வதும், நீதிவழங்கும் நடுநிலையாளர்களாகத் தம்மை எண்ணிக்கொள்வதும் இவ்வா றான மனநிலையினர் அடிப்படையி லேயே ஆகும். பழைய உலக வரலாற் றைப் புரட்டினால், ஜெர்மனியர்கள் யூதர் களை அழிக்க முற்பட்டு ஈற்றில் 2ம் உலகப் போரைத் தோற்றுவித்ததும் ஓர் வகை மரபு வாதத்தினடிப்படையில் என்றால் மிகையாகாது. அன்றைய ஜெர்மனிய தளபதி ஹரிட்லர் தமது இனமே உலகில் சிறந்ததென எண்ணத் தலைப்பட்டதும் ஈற்றில் மில்லியன் கணக்கான மக்கள் அழிந்ததும் உலக வரலாற்றில் கறைUழந்த நினைவுக ளாகும். இன்று கூட அனேக நாடுகள் அல்லது பிராந்தியங்கள் இவ்வாறான இழிமன நிலையினால் தமக்குள் பிளவு பட்டு உள்நாட்டுக் கலகத்தில் சிக்கியி ருப்பதைக் காணலாம்.
1N C17)

Page 11
Vng R.E.
உலக யதார்த்தத்தை நோக் கினி இன்று பல வேறு மரபுகளைப் பின் பற்றும் மக்களைக் கொண்ட நாடுகளில் அம்மரபுக் குழுக்களிடையே இனமத அழப்படையில் முறுகல் நிலை தோன்றி யுள்ளது. இவ்வாறான பூசல்களும் அதன் விளைவான Uதற்ற நிலையும் தோன்றக் காரணம் ஒவ்வொரு இனக் குழுவும் தத்தமது சுய மரபுகளின் பால் கொண்ட பற்று வெறியாகும். எனவே முதிர்ச்சியுற்ற மனிதர்களி டையே மரபுகள், நெறிபிறழ்ந்த நடத்தைகளின் தூண்டல்களை தோற்றுவித்து அவர்க ளைக் கொலைகாரர்களாகவும், கலகக் காரர்களாகவும், சூறையாடுபவர்களா கவும், அடிமைப்படுத்துபவர்களாகவும் மாற்றிவிடுகினர்றன. அதேவேளை பணிUட்டவர்கள் கூட மரபு வாதிகளாக மாறும் போது அல்லது ஆக்கப்படும் போது சமூகத்துக்குப் புறம்பான எதிர் மறை நடத்தைகளைக் கைக்கொள் கின்றனர். எனவே மரபுகள் சில வேளைகளில் மக்களை வெறி கொள் ளச் செய்யும் போதையாகவும் மாறி விடுகின்றன.
மரபு ஒரு மனிதனின் மூலத்தை (Root) அவனுக்கு வெளிப்படுத்து கின்றது. தமது சந்ததியின் ஆரம்பத்தை அவன் கண்டுணர்ந்து கொள்ளவும்,அச் சந்ததியினர் அருமை பெருமைகள், சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளவும், இதனி வாயிலாகத் தனது நேரடிச் சமூகத்தில் (சந்ததியில்) ஓர் உயர்வான
அUப்பிராயத்தை ஏற்படுத்தவும் மரபு பேருதவி புரிகின்றது. அத்துடனர் ஓர் மனிதனி தனது சுய உருவத்தை - தனினைப் பற்றிய உயர்வான மனப் படத்தைத் தனக்குள் உருவாக்கி தனது சமூகத்தில் கெளரவத்துடன் வாழவும் தூண்டுகோலாக மரபு அமைகின்றது.
மரபுகள் மனிதனை குறிக்கப் Uட்டதோர் சமூகத்துடனர் இணைப்ப திலும் பங்கெடுக்கின்றன. “இது எனது சமூகம், நான் தனியனல்ல; இச்சமூகத் தின் ஓர் அடிப்படைக் கூறு” எனும் மன நிலையைத் தனி மனிதர்களிடையே தோற்றுவித்து, அம்மனிதர்கள் தாம் வாழும் சமூகத்தில் ஈடுபாடு, அக்கறை, உடனிபாடு போன்ற சமூகப் பணிபு களைக் கொணர்டு வாழவும் “நானிர் இச்சமூகத்திற்குரியவன்” என்றஉண்னத s 600TfGO)6/U (Sense of belonging) பெறவும் அச்சமூகத்தில் உள்ள மரபுகள் அனைவருக்கும் இடையில் ஒர் ஊடக மாகித் துணைபுரிகின்றன. மேலும் இத்தகைய சமூக அங்கத்துவ உணர்வு மனிதனினர் உள்ளே உறைந்துள்ள படைப்பாற்றல் அல்லது ஆக்கத்திறனை வெளிக் கொணர்ந்து அவனது வினைத் திறனை மேனிமையடையச் செய்கினர் றது. அத்தோடு அவனது புத்தாக்கத் தின் வாயிலாக அவன் வாழும் சமுதா யத்தினர் வளர்ச்சியையும், மேனிமை யையும் உறுதிப்படுத்துகின்றது. ஒட்டு மொத்தத்தில் கூறுவதென்றால் மரபுகள்
mina)
(18Y. ܐܝLܓ݂ܠ
 

Uேரிது () மனிதனை மனிதனோடு பிணைப்பதில் ஓர் சக்தியாகத் திகழ்கின்றன.
இக்கருத்தினை நாம், இரணி டாம் உலகப்போரில் சிதைந்து இன்று வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசை யில் முதலாம் இடத்தில் இருக்கும் ஜப்பானுடனர் இணைத்துப் பார்த்தால் அக்கருத்தினர் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம். அவர்களிடையே இருந்த ஓர் இன மரபுகள் அவர்கள் அனைவ ரையும் இணைத்து “நாம் அனைவரும் ஜப்பானியர்கள்” எனும் மனநிலைக் குட்படுத்தி சிதறியிருந்த அனைத்து திறனர்கள் ஆற்றல்களையும் ஒனர்றி ணைத்து கடந்த 50 வருடங்களில் வசதி மிக்க வளர்ச்சியடைந்த நாட்டினி பிரஜைகளாக மாற்றியுள்ளது.
இவ்வாறே இருநூறுவருட வரலாற்றினைக் கொண்ட அமெரிக்கா கூட புதியதொரு அமெரிக்க மரபு வாதத்தினால் பல்வேறு நாடுகளிலும் இருந்துவந்து குடியேறிய வேற்று இனத்தவர்கள் யாவரையும் ஓர் குடை யின் கீழ் கொணர்ந்து அவர்கள் அனை வருமே தம்மை அமெரிக்கர்கள் எனக் (3.g6.jggub (we all are Amarican boys) செல்லுமிடமெல்லாம் தம்மை அமெரிக்கர் எனப் பெருமையுடனர் வெளிக்காட்டிக் கொள்வதிலும் ஓர் அமெரிக்க அங்கத்துவ உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இப்புதிய அமெரிக்க மரபு வாதத்தில் ஒவ்வொரு இனத்தை சார்ந்தவர்களும் தமது சுய மரபுகளை
quuuuuuuuO
Nح65 سمص C19)
ZZZO e ZLLLLLLL L LLLLLLLO L Ok uk kk ZkLkOk
விரும் Uரினால் Uனர் பற்ற முடியும். ஆயினும் அவையனைத்தும் அமெரிக் காவின் தனித்துவ மரபுக்குட்பட்டதாக அமையவேண்டும். அத்தனித்துவ மரபு கள் ஏனைய நாடுகளில் உள்ளதைப் போன்று நீண்ட வரலாறு விசேடத் துவம் அடிமைத்தன்மை, ஓர் குறிக்கப் பட்ட இனத்தை பிரதிபலிக்கும் தனித் துவம் போன்ற அம்சங்களைக் கொண்டி ருப்பதில்லை.
இவ்வாறான மேற்குறித்த குணாதிசயங்கள் இடம்பெறாமைக்குக் காரணம் அமெரிக்கா ஒர் பழமை மிக்க நாடாக இல்லாததும், பல இனங்கள், தேசியங்கள் வந்து குடியேறியதோர் குடியேற்றநாடெண்பதும், அதன் ஆரம்ப கால வரலாற்றில் பல்வேறு வெளி அரசுகளின் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்றதும் ஆகும். இன்று உலகினர் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடு கையில் இளமையாகத் திகழும் அமெரிக்க மரபுகள் உலகில் கவர்ச்சி மிக்கதாகி அனைவரையும் தனி ஆளு கைக்குட்படுத்தும் விந்தை உண்மையில் அம்மரபினர் தனித்துவத்தில் மாத்திரம் தங்கியிராமல் பொருளாதாரக் காரணி களிலும் தங்கியிருப்பதாகும்.இத்தகைய ஈர்ப்புத் தனிமையே பழமைமிக்க மரபு வாதிகளையும் அமெரிக்க மரபு வாதத் தில் ஒட்டியிருக்கச் செய்கின்றன.
ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை எடுத்தால் தனித்து வமும் பழமைத் தனிமையும் நீண்ட
O

Page 12
போது 羲
வரலாறும் கொண்ட orict இருந்தும் அவை இந்நாடுகளினர் மனிதர்களை இணைக்காது, ஓர் குடையினி கீழ் கொண்டுவராது ஒருவரை ஒருவர் பிரிக்கவும் சிதறடிக் கவுமே செய்கினர் றன. இதனடிப்படையிலேயே ஏராள மான மூலவளங்களை இந்நாடுகள் கொண்டிருந்தும் வளர்ச்சியினர் முதல் Uழயினையே கடக்கமுடியாமல் திண்டா டுகின்றன.
மரபுகள் எப்போதுமே அவற் றைப் பின்பற்றுவோரை “இப்பழத் தான் வாழ வேண்டும்” என்று வற்புறுத் துவதில்லை. ஆனால் ஒர் தனித்துவ மான வாழ்க்கை முறையினை அவர் களுக்கு வழங்குகின்றன. அவ்வாழ்க்கை முறையில் எழுதப்படாத சட்டங்களும் வற்புறுத்தப்படாத வரை யறைகளும் ஏராளமுணிடு. இவை போதிக்கப் படாததினால் சிந்தித்துக் கடைப் பிடிக்கும் நிலைக்கு மக்களை இட்டுச் செல்வதில்லை. பார்வை, கேள்வி ஞானத்தினால் மக்களைச் செனர்ற டைவதனால் இலகுவாகவே அவர் களைத் தமது ஆளுகைக்குட்படுத்தி தனித்துவம் மிக்கதும் ஏனைய சமூகங் களில் இருந்து பிரித்து இனம் காணத் தக்கதுமான ஓர் வாழ்க்கை முறையை தோற்றுவிக்கின்றன. இவ்வாழ்க்கை முறையானது அதனைப் Uனர்Uற்று வோரிடையே ஒருங்கிணைவினையும், ஒற்றுமையினையும், இணக்கப்பாட்டி னையும் ஏற்படுத்துகின்றது. தம்மி
டையே பல்வேறு கருத்து முரண்பாடு
களையும், சித்தாந்த வேறுபாடுகளை யும், சாதிப்பாகுபாடுகளையும், தொழில் நிலை வித்தியாசங்களையும், இணக்க மற்ற அரசியல் அUலாசைகளையும் கொண்டிருந்தபோதிலும் ஓர் கிராமமாக அல்லது சிறு நகரமாக மக்கள் ஒன்றி ணைந்து வாழ்வதற்கு மரபுகளே மறைமுகமாக பசை போன்று இருந்து அனைவரையும் ஒருவர் ஒருவருடனர் இணைத்து நெருக்கமாக்கி வைத்துள் ளன. இலங்கையை எடுத்துக் கொணி டால் இன வித்தியாசங்களுக்கமை வாக மக்கள் கிராமம் கிராமமாகவும் சிறு நகரங்களாகவும் கூடி வாழ்கினர் றனர். இவ்வாறு கூடிவாழ வேண்டு மென யாரும் கட்டளை இடவில்லை. ஆனால் மரபுகளே இப்பணியினைப் புரிகின்றன. எழுதப்படாத சட்டமாக ஓர் வாழ்க்கை முறையினை வழங்கி இப்பணியினை நிறைவேற்றுகின்றன.
சில மரபுகள் கருத்துநிலையில் விளக்கப்பட முடியாதனவாகத் திகழ் கின்றன ஏனர்? எதற்கு?
தொடரும்.
மகாவம்சம் கூறும் கடல் கோள்கள்
1. - கி.மு - 2387 2. - கி.மு - 564 5 - கி.மு - 306
/エハ C 20)
 
 
 

ംബ്രിഡ്വൈര ക്ര0ിമ
அதர்மம் என்னும் அரசியன் நரகமாகத் தேசத்தை
മ്രസ്ത്രീ ബീff) ബ്രിശ്
arazugsø oøf&gsãøafhør
விசார்க்கம் இந்த அரசியன் @0ിy cെg/ @ളീബ്ര
தத்துவம் இந்த அரசியன்
ஆழ்ச்சி என்னும் கணையினைச் சைாந்தமாகக் கொண்டு ஆட்சி மீடம் ஏறும் ംബ്രിബിര് ബ്രിഗ്
அடுத்தவனைக் கொன்றேனும்
aftëurdy மனிதரின் வித்தை இந்த அரசியன்
ஏழைக்கிந்த அரசியன்
என்ன பயன் தந்தது ? Øണു ക്രിസ്തുf ഖിമqnor ? நம்பும் நிைை தோன்றுமோ ?
-12YNI/

Page 13
徽
吸
绍 娜
-镰魔 警 级。 ș S
�份人 "娜
颂缪盛衡 @
概额源移动娜德兹
S§の 忽孩必 函 动 初沥动动 须缴仍激私• šs ķi
•S•S •0 $ $ $ $ $ $ $ 历
弘 吸
历 ğ
S 历 仍
 
 
 

இUnது
வறலnற்றுச் சிறுகதை
கந்தளாய்க்குளம் முழுவதும் செந்தாமரைகளால் அலங்கரிக் கப்படும் இளங்காலைப் பொழுது அது. கண்கொள்ளா இந்தக் காட்சியைக் கண்டு களிக்க கருவண்டுகளும், பொன்வண்டுகளும் வரிசை வரிசையாக வருகின்றன. அற்புதமான இந்த அழகால் கவரப்பட்ட பறவை இனங்கள் தமக்குள்ளே ஏதேதோ பேசி மகிழ்கின்றன. காற்றின் உரசலால் கமலமங்கையின் முகங்கள் நாணி இன்னும் அதிகமாகச் சிவந்து போகின்றன.
தமிழினத்திற்கே பெருமை தரும் சோழர்கால கலைவண்ணத் தோடு கந்தளாய் ராஜராஜ சதுர் வேதி மங்கலம் என்னும் பிரம்மதேயத் தில் கம்பீரத்தோடு தலைநிமிர்ந்து நிற்கின்றது சோழன் இலங் கேஸ்வரனின் அரண்மனை. அண்ணாந்தே பார்க்க வேண்டிய அலங்கா ரமான அந்த மாளிகையின் உப்பரிகையில் நின்றவாறே கந்தளாய்க் குளத்தின் கண்ணுக்கினிய காட்சியை நன்கு உற்றுப்பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் முதலாம் இராஜேந்திரனின் குமாரர்களில் ஒருவனான இலங்கேஸ்வரனின் கவனத்தைத் தென்கைலாசம் என்று போற்றப்படும் சிவன் கோயிலில் இருந்து காற்றில் கலந்து வரும் தேவாரங்கள் தம் பக்கம் இழுத்துக் கொள்கின்றன.
காலைப் பொழுதில் காதினை மட்டுமன்றி இதயத்தையும் இனிக்கச் செய்யும் அந்தத் தெய்வீகப் பாடல்களில் ஒன்று இந்த நாட்டில் சிங்கள இனம் தோன்றுவதற்கு முன்பே பெரும் சிறப்போடு விளங்கிய திருக்கோணேஸ்வரனைப் போற்றி, திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது என்னும் வரலாற்றுண்மையை நினைவு கூர்ந்த சோழன் அதனால் உணர்ச்சிவசப்பட்டவனாய் சற்று உரத்த குரலில் அப்பாடலைப் பாடுகிறான். அவனது உடலின் ஒவ்வொரு உரோமமும் நிமிர்ந்து நிற்கின்றது.
கந்தளாயின் தென் கைலாசத்தைப் போல் அங்குள்ள ஏனைய
1N m) 23 Om

Page 14
Uேnது
சிவாலயங்களிலும் முத்தங்கை என்னும் அம்மன் கோயிலிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். அப்போது அங்கு அவர்கள் ஏற்றும் கற்பூர ஒளியும், பூசும் சந்தனக் குழம்பும், எரிக்கும் அகில் புகை யும் கோயில் களுக்குள் மட்டு மன்றி அவற்றைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும் இனிய சுகத்தை அள்ளி நிரப்புகின்றன.
இதுபோன்று, கந்தளாயில் எழுந்து நிற்கும் ராஜராஜப் பெரும் பள்ளி என்னும் பெளத்த வணக்க ஸ்தலத்தில் தமிழ்ப் பெளத்தர்கள் பூச்சொரிந்து ஒளி விளக்கேற்று வதைக் கவனித்த சோழ இலங் கேஸ்வரன் தனது பாட்டன் முத லாம் ராஜராஜ சோழனின் காலத் தில் இருந்து கட்டிக்காக்கப்பட்டு வரும் சமயப் பொதுமையை எண்ணி இறும்பூதெய்துகின்றான்.
அழகையும் வீரத்தையும் தெய்வமாகப் போற்றி உலகிய லுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த சங்ககாலத் தமிழர் வழி வந்த இன்றையத் தமிழர் இப்படி யொரு சமயப் பொதுமையோடு வாழ்வதையிட்டு ஆச்சரியப்படாத சோழன் தனது ஆட்சியிலும் இப் பண்பாட்டைக் கட்டி வளர்க்க வேண்டுமென்று உறுதி எடுத்துக் கொள்கின்றான்.
அரண்மனையின் அரமி
யத்தில் நின்றவாறு நீண்ட சிந்த னையில் ஆழ்ந்திருந்த இலங்கேஸ் வரனிடம் கந்தளாய்ப் பெருங் குறிப்பெருமக்கள் சபைத் தலைவர் தரிசிக்க வந்திருக்கும் செய்தி சொல்லப்பட அவன் மெல்ல அத் தாணி மண்டபம் நோக்கி நடக்கின் றான்.
அது - சோழன் இலங்கேஸ் வரன் அரியணையில் அமர்ந்து பத்தாவது ஆண்டு நிறைவுறும் வேளை. மாசி மாதத்துப் பூர்வ பட்சத்து துவாதசியான செவ்வாய்க் கிழமையும் ஆயிலிய நட்சத்திரமும் கூடிவரும் தினம்.
மகிழ்ச்சி நிறைந்த இந்த நல்ல நாளின் நினைவாக மச்ச கேஸ்வரம் என்று அழைக்கப்படும் திருக்கோணேஸ்வரத்தின் மூலஸ் தானத்தையும் மற்றுமொரு சிவன் கோயிலையும் புதுப்பிக்கும் நோக் கத்தோடு அங்கு வருகை தந்த பெருங்குறிப் பெருமக்கள் சபைத் தலைவர் தங்கள் விருப்பத்தை அரசன் முன் தாழ்வாகத் தெரியப் படுத்துகின்றார்.
சபைத்தலைவரின் வேண்டு கோளுக்குச் செவிமடுத்த சங்க வர்மன், உடையார் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இலங்கேஸ்வரன், உடனடியாகவே அதனை ஏற்றுக் கொள்கின்றான். அத்தோடு தனது விவசாய நடவடிக்கைகளை விஸ்த
1N mO 24 Omma
 
 

இUnது
ரிப்பதற்காக கந்தளாய்க் குளத்தின் விக்கிரம சோழ வாய்க்கால், வாசு தேவ வாய்க்கால் ஆகிய இரண் டையும் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளும்படி ஆணை பிறப் பிக்கின்றான்.
அன்றிரவு. சோழன் இலங் கேஸ்வரனின் பத்தாண்டு கால ஆளுகையை வாழ்த்திப் பாராட்டும் வண்ணம், கந்தளாயில் மாபெரும் கலைநிகழ்வு ஒன்று நடைபெறுகின் றது. கந்தளாய் மக்கள் மட்டு மன்றி, பதவியா, திருகோணமலை, வளநாட்டைச் சேர்ந்த சைவ, பெளத்த தமிழ் மக்கள் அணி அணியாகக் கலை நிகழ்வு நடை பெறும் மகா மண்டபத்தை நோக்கி நகர்கின்றனர். அருந் தமிழ்க் கலைகளை அரங் கேற்றம் செய்வ தற்காக சோழன் இலங்கேஸ்வ ரனால் கந்தளாயில் அமைக்கப் பட்ட அந்த மகா மண்டபத்தின்
ழர்களு H
கொண்டு வாழ்ந்தத முஸ்
முன்வாயிலின் மேலே அசையும் சோழர் கொடி, இது தமிழர் தேச மென்று சொல்லிக் கொண்டிருக்க மக்கள் கடல் மகா மண்டபத்தினுள் பிரவேசிக்கின்றது.
அந்தச் சைவ, பெளத்தத் தமிழ்க் கடலில் திருகோணமலை, பதவியா, கந்தளாய் ஆகிய நகரங் களை செல்வத்தால் அலங்கரித்துக் கொண்டிருக்கும் நான்கு நாட்டுத் தமிழர், நானாதேசி, ஐந்நூற்றுவர், அய்யாவொளே, வளஞ்செயர், செட்டிமார்கள் எனும் வணிக கணத் தாரோடு புரோகிதர், அந்தணர், கம்மாளர், வாத்தியக்காரர் என்போ ரும் சங்கமமாகின்றனர்.
இந்தச் சங்கமம் சோழன் இலங்கேஸ்வரன் உள்ளத்தில் பேரின்ப அலையை எழுப்புகின்றது.
- வாகரைவாணன் -
键、鳕- 冢 *葵毅

Page 15
சொர்க்கம் கூட
சோர்ந்து போகும்
இந்த மழையில் இனியும் இங்கே எந்தப் பயிரும் எழவே எழாது !
மனித உயிர்களும் மழை இதனாலே பிணமாய் வீழும் பேய்கள் மகிழும்
பசுமை மிக்க
பண்ணை எம் பூமி
இசைவை இழக்கும்
எதிர்காலம் இல்லை !
சூழல் மாறும் சொர்ணபூமி பாழாய்ப் போகும்
பதறும் நெஞ்சம்
கெந்தகத்தாலே
கிரோஷிமா போல
சொந்த மண் ஆகும்
சொல்வது யாரிடம் ?
(26Y
t NYI/ Omm
 

போது fill
கிழக்கிலங்கை முஸ்லிம்கள் ஏனைய மாகாண முஸ்லிம்களுடன்
D35, ஒன்றித்துள்ளனரேனும், பழக்க வழக்க பாரம்பரியங்க ளால் கிழக்கிலங்கைத் தமிழ் மக்களுடன் பெரிதும் இணைந்த வர்களாய் இருத்தல் இவர்கட் குரிய ஒரு சிறப்பியல்பாகும்.
மட்டக்களப்புப் பகுதியில் வாழும் முக்கிய தமிழினத்தவர் முக்குவ குலங்கள். முக்குவர் என்பார் தொழிலால் உழவரே கலிங்க சோழ நாடுக ளின் தொடர்பினர் இவர்கள். ஈழத்திலே சோழப் பேரரசு நிலை கொண்டிருந்த காலத்தே இவர்க ளின் செல்வாக்கு உச்ச கட் டத்தை எய்தியிருத்தல் கூடும். குறுநில மன்னர்களாம் வன்னி மைகளாக இவர்கள் பரிபாலனத் துறையிலே சிங்கள வேந்தருக்கு உறுதுணையாயிருந்தமையை வரலாறு கூறும்.
கலாசாரப் பிணைப்பினால்
சமூகப்
usT6...If.
முக்குவர் தம் குலப் பகைவ ராகிய திமில குலத்தவரை அரபி யரின் துணைகொண்டு மட்டக்க ளப்பை விட்டே ஓட்டிக் கலைத்தனர். இவ்வரபு முஸ்லிம்களை அவர்கள் பட்டாணியர் எனக் கூறுவர். அரபிக ளுடன் தமது நட்பினையும் ஒற்றுமை யினையும் உறுதிப்படுத்தித் தம் நாட்டுப் பாதுகாப்பினை நிலைநிறுத்த விழைந்து அவ்வீரர்களுக்குத் தமது குலமங்கையரை மணம் முடித்துக்
N
s s SS S. SS
(127)
கொடுத்து மகிழ்ந்தனர் என்பது பரம்பரை வரலாற்றுச் செய்தியாகும். இத்தமிழ் மக்களிடையேயும் முஸ் லிம்களிடையேயும் வழங்கி வரும் குடிமரபுகளுட் பல ஒத்த பெயருடையனவாயிருப்பது இதற் குச் சான்றாகலாம்.
முக்குவ, வேளாளகுல மக்க ளிடையே வழங்கிவரும் குடிமரபு என்னும் குலப்பிரிவுகள் முஸ் லிம் மக்களிடையேயும் காணப் படுகின்றன. இலங்கையின் ஏனைய முஸ்லிம்களிடையே இத்தகைய கோத்திரப் பிரிவுகள் இல்லை என்பது கருதத்தக்கது. தாய்வழி மரபினரே ஒரு குடி மக்கள் என வழங்கப் பெறுகின் றனர். மகன் தனது தாயின் குடி யைச் சேர்ந்தவனேயன்றித் தந்தையின் குடியைச் சேர்ந் தவன் ஆகான். தாய்வழிமரபில் வரும் ஒரு குடியைச் சேர்ந்த யாவரும் தந்தை வழி மரபி னரை விட நெருங்கிய இனத்த வராகக் கருதப்படுகின்றனர். ஒரு குடிக்குரிய பொதுச் சொத்துக்கள் பொதுப் பதவிகள் மருமக்கள் வழியிற் சென்றடைகின்றன.
பெண்மகளுக்கு முதன்மை தரப்படுதல் இக்குடி முறையின் முக் கிய பண்பாகும். மட்டக்களப்பாரின் வழக்கில் பிள்ளை என்னுஞ் சொல் பெண்மகளையே குறிப்பதாகும். மணம் முடித்த பின்னரும் அவள் கணவனுடன் தனது பெற்றாரின்
O
المسيح .
Oum

Page 16
Uேnது
வீட்டிலிருந்தே வாழ்கின்றாள். ஆண் மக்களை விடப் பெண் மக்களே தமது பெற்றாரின் சொத்துக்களிற் இஸ் லாத்தின் பாகப் பிரிவினைச் சட்டங் கள் எவ்வாறிருந்த போதினும் தம் சொத்துக்களிற் பெரும் பாகத்தினைப் பெண்மக்களுக்கே சீதனமாக வழங் குவதும், பெண் சந்ததியினரே அவற்றை எப்பொழுதும் உரிமையாய் அடையுமாறு பெண் ணடி முது சொமாக எழுதிவைப்பதும் மிகப்
கூடிய பங்கினைப் பெறுவர்.
பரவலான வழக்கங்களாகும்.
மட்டக்களப்புப் பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் பலவற்றின் ஆளுநர் உரிமையும் பெண்ணடி வழியாகவே வருதலை இன்றும் காணலாகும். ஒருவர் வகிக்கும் பதவி அவருக்குப் பின் சகோதரன், மருமகன், சிற்றன்னை, பெரியன்னை மக்கள் ஆகிய தாய் வழியினருக்கு உரிமையாதலன்றி, அவரது மகனுக்கோ உரித்தாதல் இல்லை. மலையாளம் நாட்டு மரு மக்கட் தாய் மரபினரை இது ஒத்த தாகும்.
இங்குள்ள முஸ்லிம் மக்க ளின் திருமணச் சம்பிரதாயங்கள் கூடத் தமிழ் மக்களின் சம்பிரதாயங் களைப் பெரிதும் ஒத்துள்ளன.
மங்கல நிகழ்ச்சிகளின் போது பெண்கள் குரவையிட்டு மகிழ் தல் மட்டக்களப்புத் தமிழர் முஸ்லிம் களிடையே மட்டும் நிலவு வதாகும். ஏனைய மாகாண முஸ்லிம்களிடமோ பிறரிடமோ
mO
இதனைக் காண்டல்
1N C28)
இயலாது. மட்டக்களப்புக்கு வரும் புதியவர் எவரும் குரவை யொலி கேட்டு மகிழ்வுறத்தவறார்.
மணவினையை அறிவிக்க மரைக்காய மார்களுக்கு ‘வெற் றிலை பாக்கு வைத்தல், பெண் வீட் டார்’ மாப்பிள்ளை கேட்டுப் போதல் பணியாரப் பெட்டி கொண்டு போதல். மாபிள்ளை பெண்ணுக்குப் பெட்டி அனுப்புதல், மருதோன்றி இடல், “நிறை குடம் வைத்தல்’, ‘ஆலாத்தி எடுத்தல், கண்ணுறு கழித்தல் மைத்துனன் மாப்பிள்ளைக்குக் கால் கழுவுதல்’ கால்கழுவிய மைத்துன னுக்கு மாப்பிள்ளை மோதிரம் போடு தல், தாலி கட்டுதல், கால்மாறிப் போதல், பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற் பூதக்கலம்’ உண்ணுதல், முதலாம் நிகழ்ச்சிகள் மட்டக்களப்பு மக்களுக்கென்றே உரிய பாணியில் நிகழ்த்தப்படுவனவாம். அவற்றிலெல் லாம் கமழ்வது தமிழ்மணமே எனின் மிகையாகாது. இப்பழக்கங்களுட் சில காலப் போக்கில் மறைந்தும் மாறியும் வருகின்றன.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே’ என்பர் இலக்கண நூலாரும்.
பேராசிரியர். சு. வித்தியானந்தன்.
('ஈழத்தில் வளர்ந்த தமிழ்' பக்கம் 256 - 257)
 

1947ல்பி)/2 எம்கு റ്റൂ مؤيد 2 إلى الصدمواO
تلاوطی لکھl)
பெரெழுத்த
ర్గంon
இ% ைெதக் கட்டுகி%?
- வாகரைவாணன் -

Page 17
முன்னேறு !
(8ցրrrio06)յ சோம்பலைத் தூக்கி எறி
ծՈ/... ՑվՈ/.... வேர்வை சிந்து வேகத்தோடு விவேகம் வீற்றிருக்கட்டும்
நிமிர்ந்து நட நெடு வான் குை குனிந்து நடத்த நமது குலத்திற்கிழுக்கு
தன்னம்பிக்கை உன் தாய் தந்:ை தயங்காதே தாண்டு.!
பிறந்த மண் உன் பெறற்கரிய செ பெருமை கொல்
ஞானம். உனது நாடி நரம்பெல் ஒடட்டும் ஞாலம் உன்னை நோக் நடந்து வரும்!