கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2007.07-08

Page 1
-
 


Page 2
எண்ணிய முழுதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
– LDöTö6í LITUőluITf -
வெளியீடு: PROFESSIONALPSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA:
 

delę - e66Oof 2007 தோற்றம் * 5-5-1998
றிவேகை εώάδα ως νό (Managing Editor)
சுவாமிஜி
போல் சற்குணநாயகம். யே. ச.
Sebaldsovið
(Editor)
வாகரைவாணன்
நிர்வகைத்; (Management)
சி.எம். ஒக்கஸ்
பணிைை8ை
உளநல உதவி நிலையம், 15, வெபர் வீதி,
மட்டக்களப்பு.
தொலைபேசி:
O6O - 2651412
O65 - 2222842
E-mail: ppccpalGDsltnet.lk 蠶,賺囊劃劃 g
உறவையையே அர்த்தப்படுத்தும்
பிரிக்கப்பட முடியாத உறவுகளால் | பின்னிப் பிணைக்கப்பட்ட மனிதன் ஏதோ ஒரு விதத்தில் தன்னைச் சார்ந்திருப்போருக் குத் தன்னைத் தந்தே வாழவேண்டியவனா கின்றான். இதனையே தியாகம் என்கின் றோம். பெற்றோருக்காகப் பிள்ளைகளும், பிள்ளைகளுக்காகப் பெற்றோரும், அண்ண னுக்காகத் தம்பியும், தம்பிக்காக அண்ண னும் வாழ்வதுதான் அந்தத் தியாகம். இதில் எள்ளளவும் சுயநலம் இருப்பதற்கில்லை. அதனால்தான் அன்றையக் குடும்ப உறவு ஆரோக்கியமாக இருந்தது; ஆலமரமாக அது வளர்ந்து அனைவருக்கும் அமுத நிழல் தந்தது.
இன்றைய மனிதனின் நிலை அப்படியா? இல்லை. சுயநலத்திற்குள் இவன் சுருண்டு போய்க்கிடக்கின்றான். தான் - தனது குடும்பம். இதுதான் அவன் தனி உலகம். பெற்றவர்கள் கூட அவனுக்குப் பெரும் சுமை, சகோதரர்களோடு சதா சண்டை, உறவு என்று சொல்ல அவனுக்கு ஒருவரும் இல்லை. இதனால் அவன் அந்நியனாகின் றான். விலாசம் கூட அவனை விட்டுப் போய் விடுகின்றது.
இரத்த உறவில், இயற்கையான பந்த பாசத்தில் இருந்து விடுபட்ட மனிதன்
ஆசிரியர் பக்கத்
C 01 ) Ommu
لصالح

Page 3
AVng AR பிறந்த மண்ணுக்கும் பிரியாவிடை தந்துவிடுகின்றான். பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் அவனுக்கு வெறும் பேச்சுக்கள், பிதற்றல்கள். சுயநலம் அவனது சொத்தாகி விடு கின்றது. அதுவே சுகமும் ஆகின்றது. சூழலைக் கூட இன்றைய மனிதனின் சுயநலம் கெடுத்தே விட்டது. அதனால்தான் சுனாமி, பூகம்பம், சூறாவளி அவனை அடுத் தடுத்து அல்லற்படுத்துகின்றன. ஆனாலும் அடுத்த கணம் அவற்றை மறந்தே விடுகின்றான்.
ஈழத்தில் தமிழன்படும் இன்ன லுக்கும் இந்தச் சுயநலம் தான் காரணம். சேரசோழபாண்டியர் காலத் திலேயே சேர்ந்து வாழாதவர்கள் நாம். இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே நிலையில் தான்
LLLLL
LuLuuLLLLLLLLLLLLLLLLLL
இருக்கின்றோம். இவை போன்றே வடக்குக் கிழக்கில் தமிழர் வாழ் விழந்து வீதிகளிலும் விருட்சங் களின் நிழலிலும் ஒதுங்கிய நேரத் தில் கொழும்பில் குதூகலமாக விழாக்கள் கொண்டாடியவர்கள் நாம். இது எதைக்காட்டுகின்றது? சுயநலம் தான் தமிழனின் சுதந்திரத் தையும் பறித்தெடுத்து விட்டது என்று நாம் எத்தனை முறையும் சொல்ல லாம் என்பதைத்தானே.
சொர்க்கத்தை இந்த உலகில் மனிதன் படைத்தால் கூட அவன் சுயநலம் அதை நரகமாகவே ஆக்கி விடும். இதுதான் உண்மை.
ീര്qLര് வாகரைவாணன்
7
|குமா
செய்யவில்லை.
வால்மீகி ரிஷியின் காவியத்தில் இராமருடைய நடவடிக்கைகளை ஈசுவர அவதாரமாக வைத்து எழுத வில்லை. சில அதிகாரங்களிலும் இங்குமங்கும் சுலோகங்களிலும்_N
அவதார விஷயத்தைச் `ஆ
சொல்லி வந்தாலும் மொத்தத்தில் வால்மீகி இராமாய ணத்தில் காணப்படும் இராமன் ஒரு சிறந்த இராஜ ன், வீர புருஷன், அபூர்வமான தெய்வீக நற்கு ணங் கள் பெற்றவன்; அம் மட்டே, கடவுளாக ே
சேக்கரவர்த்தித் திருமகன் - பக்கம் سہ o 4(
(02Y
லை
اسہ : ?gلاggلاyIا س~
 
 
 
 
 
 
 
 
 
 

முல்லயன் உனக்கு முட் குறிக்கத்தானி ஆல்வின்ே ஆவுத்தில் ஆலன்ஹின்ரிறேன்?
பணி தன்ன்ைசி செய்ய பயணம் ரீசெய்தையில் அணி'உன்னிைதி ஆஹிடுத அசுரன்ஹின் யார்?
ஏழைகளுக்குணவு இடசிசென்று உன்னை கே4ழையவின் ஏன் குறிவைத்துதி தெரிகிறான்?
அரிஸ்பணி என்றும் ஆற்றின்(ய், அதனால் பெரிஸ்ஹின் என்னும் 304ஆடிசி கொண்ட40
இவுைளுகிரீஅந்த இமய முென் எழுந்தாய் அழுதென் உன்தன் அருங்குணசி ஒளிரும்
mO
உண் வாழ்க்கை ஒரு வரலாறு
M
কৃষ্ণু
அனில்த்தில் உனக்கு நாற்பதtண்டென்று உனில்த்தில் இறைவன் ஹைத்த தென்னி கணக்கு?
பத்தாண்டுகி ஆ4லம் பரிச்த்த குருதில் இத்தலத்தில் உழுந்தாய் இது 304து943:94?
ஆ4 வுெல்லம் முரணம் நம் தமிழ்(வீட்டில் வழிஹ்ெரு முடியம் உந்ததேன் இங்கு?
வினைதன்னை விதைத்தf விவுைவுதவுைதி ஆண்of பின94ஆம் தமிழ்!
бóóäы ОФѣ сиgбо4й
உன் விடுதிகை இங்கு ஒரு பெரும் சரித்சி முண்ணுலகம் இதனை முன்தரசி செல்லும்!

Page 4
rேதந்திரமாகத் தமது கருத்துக் களை வெளியிட முடியாதிருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தது மாத்திரமன்றி அத்த கைய மக்கள் தமது எண்ணக் கருத்துக்களை எந்தவித பயபிதி யின்றி ஒலிக்க வழிவகை செய்த பெருந்தகை தான் மகிமரோ ராமாஜி அம்பேத்கார். இந்திய அரசியலில் ஒப்பீடு இல்லாத தலைவர். இந்தியா வின் மத்திய பிரதேசத்திலுள்ள மாேவ் என்ற கிராமத்தில் சுதந்திரப் போராட்டம். மறுபுறத்தில் சாதி வேற்றுமை தலை விரித்தாடிய காலக் கட்டத்தில் தான் இவரது பிறப்பும் இடம்பெற்றது. இவரது தாய் தந்தையர் மிகவும் வறுமையில் வாடியவர்கள். ஆனால் இத்தகைய வறிய குடும்பத்தில் பிறந்த அம்பேத்கார் அனைவரும் வியக்கும் அளவுக்கு சகலரினதும் நன் மதிப்பை பெற்றது மாத்திரமின்றி, இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ என்ற விருதையும் பெற்று தனது பெற் றோர்க்கும் பெருமை சேர்த்த பெருந் தகை. அம்பேத்காரின் தந்தை பிரிட்டிஷாரின் இராணுவத்தில் தொழில் செய்ததினால் அம்பேத்காரி னால் அரசாங்கப் பாடசாலையில்
mO
கல்வி கற்க முடிந்தது. ஆசிரியரின் அன்பு அரவணைப்போடு எல்லாப் பிள்ளைகளும் போன்று இவர் தனது கல்வியைக் கற்கவில்லை. எல்லாப் பிள்ளைகளும் பாடசாலையில் கல்வி கற்கும்போது வெகு தொலைவில் இருந்தவாறு தான் இவர் கல்வி கற்க வேண்டிய துர்பாக்கிய நிலையிலி ருந்தார். அம்பேத்கார் கீழ்சாதியைச் சேர்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர். இதனால் இவருக்கு வகுப்பறையில் அனுமதி மறுக்கப்பட்டது. இவருடன் கல்வி பயின்ற ஏனைய பிள்ளைகள் இடைவேளையின் போது உணவு வகைகளை இரசித்து உண்டபோது அவருக்கு பாடசாலை நாட்களில் சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை. இவற் றுக்கெல்லாம் மேலாக குடிநீர் குழா யில் கூட இவருக்கு தாகத்திற்கு தண்ணிர் அருந்துவதற்கு இடமளிக் கப்படவில்லை.
அம்பேத்காரின் தந்தை தனது வாழ்நாள் அனுபவங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத் தார். இந்தியாவின் முக்கிய இதி காசங்கள், சரித்திர நூல்களை யும் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத் தார். அம்பேத்கார் வாழ்க்கையின் தத் துவங்கள், அனுபவங்கள்
1N C04)
Omnium
 
 

sâVan
சிலவற்றை அறிந்து புரிந்து கொண்டு இருக்கும் வேளையில் தான் அவரது தந்தை தொழிலிருந்து ஓய்வு பெற்றார். தாயையும் இழந்தார். சகோதர, சகோதரிகளையும் இழந் தார். பட்டினியால் வாடினார். இப்ப டிப் பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் முகங்கொடுத்தார். இவற் றுக்கு மத்தியில் அவருக்கு ஒர் அதிஷ்டம் கிடைத்தது. அது அவரது சாதியின் அடிப்படையில் மீண்டும் முதல் முறையாக அரசாங்கப் பாட சாலையில் கல்வி கற்க அவருக்கு வாய்ப்பு கிட்டியமையே. நான் இங்கு எழுதும் கதாநாயகனின் கதை இப்ப டித்தான் அமைந்தது.
குலகோத்திர சம்பிரதாயப்படி இளம் வயதிலேயே அம்பேத்கார் திருமணஞ் செய்து கொண்டாரா யினும் மனத்தைரியத்துடன் கல்வி கற்று பட்டம் பெற்றார். திருமண வாழ்க்கையில் இணைந்தவுடன் பல்வேறு சிந்தனை. அதற்கு மத்தி யில் மணவாழ்வில் மயங்கிப் போவது பலரது இயல்பான பண்பு. அதுவும் இளம் வயதில் இப்படி இல்லறத்தில் ஈடுபட்டால் மனதை ஒரு நிலைப் படுத்தி வைத்திருப்பது எத்தகைய சிரமம் என்பது எமக்குப் புரியும். ஆனால் அம்பேத்கார் கல்வியில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக அமெரிக்கா, லண்டன் சென்று கல்வி யைத் தொடர்வதற்கான புலமைப் பரிசிலைப் பெற்றார். தனது மன வலிமை, காரணமாக இந்தப் பயணத்தை அவரால் தொடர முடிந்
LOeOOLLLLLLLL
it.
தது. சவால்களை வெற்றி கொண்டு கல்வியின் உச்சத்தையே கண்டார் 6T60T6)Tib.
மேற்குலகில் கற்றகாலத்தில் அம்பேத்கார் அதனை ஒரு சந்தர்ப் பமாகவே கருதினார். தன்னைப் போன்று சுமைகளுக்கு மத்தியில் வாழும் மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களுக்கு சுபிட்சமான வாழ்வுக்கு வழிகாட்டுவதற்காகவே அம்பேத்கார் மீண்டும் இந்தியா வரலாயினார்.
பரோடா மாநிலத்தின் பாது காப்புச் செயலாளராகக் கடமையாற் றியபோது, வசதிகளற்ற வறிய பிள் ளைகளுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார். தம்மைப் போன்று அல்லலுறும் மக்கள் மத்தியில் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட விரும் பியோருக்கு உதவிகளைச் செய்து தவினார். அத்தோடு நின்றுவிட வில்லை. தமது இனத்தின் உரி மைக்காகக் குரல் எழப்ப முடியா திருந்தவர்களுக்காக நாட்டில் அவர் களுக்கென பொதுவான கருத் தொன்றைக் கட்டியெழுப்புவதில் பெரும் ஈடுபாட்டுடன் செயற்பட்டார். 'மெளனமான தலைமைத்துவம்’ என்ற தலைப்பில் வாரந்தோறும் தமது இனத்தவர் தொடர்பான வெளி யீடுகளை ஆரம்பித்தார்.
இந்தியாவின் சுதந்திரத் துக்கான போராட்டம் நடைபெற்ற கால கட்டம் அது. இந்து, முஸ்லிம் களின் கலாசாரங்களை மட்டும் கவனத்திற் கொண்டு நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை அம்பேத்
mO (105Y m
ܐܝܓܠ

Page 5
Uேnது
கார் விமர்சித்தார். இந்தியா, முளல் லிம் சமூகங்களை நினைவு கூரும் அதேவேளை இந்து அல்லது முஸ்லிம் மதங்களை மட்டுமல்ல எமது சமூகத்தவர் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்ற செய்தியை நாடு முழுவதும் கொண்டு சென்றார். தமது சமூகம் தீண்டப்படக்கூடாத சமூக மல்ல. அவர்கள் மன ரீதியில் பாதிப் புகளுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்பதினை சுதந்திரப் போராட்ட வீரர்களான காந்தி, நேரு போன் றோருக்கு விவாதங்கள் மூலமாக உணர்த்தினார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிட்டியபோது, அம்பேத் காரின் சாதியினருக்கென தனியான தேர்தல் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதுமாத்திரமின்றி இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு அம்பேத்காரின் பெயரும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. ஒதுக்கப்பட்ட தமது சமூகத் தின் நலனுக்காக அம்பேத்கார் பெரும் போராட்டத்தை மேற்கொள்வ தற்கு புத்தர் போதித்த சித்தாந்தங் களையே கடைப்பிடித்தார். ஒருவரின் உணர்வும், தாழ்வும் அவரது பிறப் பால் அல்ல, அவரவர் செயற்பாட்டி லேயே என்பதற்கு இவர் ஒர் உதார ணமாகத் திகழ்ந்தார்.
பாடசாலையில் அனுமதி கிடைக்காத காலப்பகுதியில் ஆசிரி யர்கள் மற்ற மாணவர்களுக்கு சொல் லிக்கொடுக்கும் பாடங்களை செவி மடுத்து பட்டம் பெறுமளவுக்கு உயர்ந் தார். 1935ம் ஆண்டில் இந்திய
m)
LLLLL
1N C06)
சட்டக் கல்லூரியின் அதிபராக நியம னம் பெற்றார். இருவருட காலம் இப்பதவியில் நீடித்தார். இக்காலப் பகுதியில் தான் சேகரித்த சுமார் 50 புத்தகங்களைக் கொண்டு வாசிக சாலை ஒன்றை உருவாக்கினார். வாசிப்பாற்றலைப் பெருக்கிக் கொள் வதன் மூலம் மனிதனின் அறிவு வளர்ச்சியடையும். அதன் மூலம் சமூகத்தின் வளர்ச்சி மாத்திரமன்றி மூடப்பழக்கங்கள் நீங்கும் என்ற சிந்தனையில் அம்பேத்கார் செயற் பட்டக் காலப்பகுதியில் தான் சுதந்திர தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார்.
தாம் அங்கம் வகிக்கும் சமூகத்திற்கு அரசியல் தலைமைத்துவம் ஒன்று அவசியம் என்பதினைக் கருத்திற் கொண்டு இவ்வாறு அவர் செயல் பட்டிருக்கக்கூடும். இதன் எதிரொலி தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி 15 தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. சிறு பான்மை மக்களின் உணர்வுகள்
மதிக்கப்படாத போது அது குறித்து அவர் வேதனையடைந்தார். தொடர்ந்து இந்து மதத் தலைவர்களை விமர்
சித்தார். இந்திய காங்கிரஸிற்குள்
தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்கு
பதிலாக ‘தெய்வத்தின் குழந்தைகள்'
என்ற கருத்தை வலியுறுத்தும்
'ஹரிஜனங்கள்' என்ற பதத்தினை
நிலை நிறுத்த பெரும்பாடுபட்டார்.
தான் அங்கம் வகிக்கும் மக்களும் ஏனைய சமூக மக்களைப் போன்று ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் அவர்க
ளும் சமமாக நடத்தப்பட வேண்டும்
Om
 
 

இUnது
என்பதற்காகப் பெரும் போராட்டம் நடத்தினார். ஒருபுறத்தில் காந்தி, நேரு, பட்டேல் போன்ற தேசிய வீரர்களின் திறமைகளுக்கு இவர் பெரும் சவாலாக அமைந்தார். இத் தலைவர்கள் சிறுபான்மை சமூகத் திற்கு என்ன செய்தார்கள்? என்று கேள்வி எழுப்பி தொடர்ந்து கட்டுரை களையும், நூல்களையும் அம்பேத்கார் எழுதினார்.
பல்வேறு துயரங்களைக் கடந்து சுதந்திர இந்தியாவின் முதலா வது நீதி அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்தார். ஜாதி, மதம் என்ற அடிப்படையில் பிளவுபட்டு பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கிய இந்தியாவுக்கென புதிதாக அரசியல் யாப்பு ஒன்றை வரையக் கூடிய தகுதியானவர் இவரே என்று பலரும் அம்பேத்காரை தெரிவு செய்தனர். உயர் குலத்திலும் பார்க்க சிறுயான்மை சமூக இந்திய மக்கள் அனைவருக்கும் நேர்மையான நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் அரசியல் யாப்பொன்றை இவர் வரை வார் என்று பலரும் நம்பினர். அம்பேத்கார் மீது மக்கள் கொண்டி ருந்த நம்பிக்கைக்கு ஏற்ப நேர்மை யான முறையில் அம்பேத்கார் தனது கடமைகளை நிறைவேற்றினார். இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு பிரிவுகள் இருந்த போதி லும் சிறுபான்மை மக்களின் உரிமை கள் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதைப் பலரும் ஏற் றுக்கொள்வர்.
17N ( 07)
பெளத்த மதத்துக்கு மதிப்ப ளிக்கும் இவர் வாழ்நாளின் இறுதி யில் ஐந்து ஆறு வருடங்கள் பெளத்த ரைப் போன்றே வாழ்ந்தார். இலங் கைக்கு வந்து பெளத்தத்தை வளர்த் தார். பெளத்த பிக்குமார்களைத் தரிசித்தார். அது மாத்திரமின்றி பெளத்தத்தை தேடி பல்வேறு நாடுக ளுக்குச் சென்று பெளத்தம் தொடர் பான நூலொன்றையும் எழுதினார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்த அம்பேத்கார் உலகம் வியக் கும் அளவுக்கு உன்னத வீரராக உயர்ச்சி அடைந்தார். அவர் பல் வேறு நூல்களை எழுதிய போதிலும் இறக்கும் தறுவாயில் கூட பல்வேறு குறிப்புக்கள் நூல் உருவில் வெளி வராது மேசையிலேயே இருந்தன. இந்திய மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்த அம்பேத்காரின் நினைவாக டில்லி நகர் உருவா கியுள்ளது. அதுமாத்திரமின்றி அவரது ஜனன தினம் இந்தியாவின் விடு முறை தினமாக அனுஷ்டிக்கப்பட்டு அவர் கெளரவிக்கப்படுகிறார்.
(தினக்குரல்)

Page 6
lầvng ta
Bia
தேனது ஓடும் தேசம்
திராவிடர் வாழும் தேசம் மீனது பாடும் தேசம்
மேகங்கள் குவியும் தேசம் ஆனதன் பாலும் அந்த
அருவியாய்ப் பெருகும் தேசம் கோனது அரசில் நந்திக்
கொடியது பறந்த தேசம்
கவியது கேட்கும், அள்ளல்
கழனிகள் ஆற்றிலெல்லாம்
செவியது இனிக்கும் எங்கள்
செந்தமிழ் தோற்றுப் போமோ?
புவியது புகழும் கேட்டு
பூர்வீகத் தமிழர் தேசம்
குவிந்திடும் கைகள் எல்லாம்
கும்பிடும் தெய்வமன்றோ!
mO C08) Oms
 

Avangi
LLLLL
gjjjjjjjjjjjjjjjjjjjjjjjiiiiiiiiiiiiiiiiiiiiiii w a R
குளம், மடு, வாவி தோறும்
குளித்திடும் கமலப் பெண்கள் பழம் என இனிக்கும், பானு
படு மொரு திசையின் பக்கம் அழகது இன்பம், இன்பம்
ஆயிரம் கண்கள் வேண்டும் வளம் மிகு மட்டக்களப்பு
வான் புகழ் தேசமம்மா!
கடலதன் கரையின் மீது
கால் நடைபழகும் நண்டு இடமது நெய்தல் மண்ணில்
எடுத்தடிவைக்கும் கொக்கு தொடர்ந்திடும் அலைகள் ஒன்றின் தோளினில் ஏறிக் கொள்ளும் கடவுளே வாழும், அந்தக்
கைலாயம் எங்கள் தேசம்!
நிழலது சொரியும் தென்னை
நிறை குடம் போலும் இளநீர் தழலதன் வண்ணம் போலும்
தாழம் பூ வாசம் பொங்கும் குழலதன் இனிமை போலும்
கொஞ்சிடும் காற்றுப் பெண்ணாள் விழலென ஏதும் இல்லை
விரி அலை கடலின் ஒரம்!
(109) Omma
الصحيح"

Page 7
பொன்னதன் ஒளியைப் போல
புன்னையின் பூக்கள், பட்டு மண்ணதில் சங்கு, சிப்பி
மாலைகள் தொடுத்தல் போலாம் விண்ணதன் நீலம் தன்னை
விரும்பியே பூசிக் கொள்ளும் வன் கடல் பூமி எங்கும்
வனப்புறு கானல், பூக்கள்!
நாடிது எங்கள் பூமி
நற்றமிழ் மொழியின் பண்டை வீடிது! இதனை ஈங்கு
வேற்றவர் கொள்ளலாமோ? கூடுக தமிழரெல்லாம்
கோயிலாம் தேசம் தன்னைச் சூடுக பூக்கள் அள்ளி
சொத்திதைப் பாதுகாப்போம் !
- வாகரைவாணண் -
 
 
 

கழ்பெற்ற அணு விஞ்ஞானி ஜன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்; "மூன்றாவது உலகப் போரில் என்ன
ஆயுதம் பயன்படுத்தப்படும்?. அதற்கு அவருடைய பதில் மூன்றா வது உலகப் போரினைப் பற்றி எனக் குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்."
இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர் கள் உருவாக வேண்டும். அந்தக் கற் காலத்தில் கல்லும், வில்லும் தான் கருவிகளாகும்.
அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப் பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால்
இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம் போன போக் கில் போய்க் கொண்டிருக்கின்றன.
ஹிரோவழிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உட னேயே அணு ஆயுத அழிவு தான் கண் முன்னே காட்சி தரும். இரண் டாம் உலகப் போரின் போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய திகதிக ளில் இந்த இரு நகரங்களும் பொடியன்', 'தடியன்', என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்த னைக்கே அப்பாற்பட்டதாக இருக்
கிறது.
அணுகுண்டு வீச்சின் விளை வாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இரு பெரு நகரங்களும் இருந்த இடம் தெரியா மல் அந்த நொடியே அழிந்து நாசமா யின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்
மூதலாவது மகா யுத்தம் நான்கு ஆண்டுகளும்
(94 - 1918), இரண்டாவது மகாயுத்தம் ஆறு ஆண்டுகளும்
(939 - 1945)
நடைபெற்றன.

Page 8
Uேரிது ணு
துக்கும் மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சத விகிதம் அவ்வாறு அழிந்து நாச LDITulsoT.
ஆகஸ்ட் 6 அன்று ஹறிரோ வழிமா நகரில் இருந்ததாகக் கணக்கி டப்பட்ட மூன்றரை இலட்சம் பேரில் 2 இலட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகி யில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததா கக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயி னர்.
இலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண் மூடித்தனமாக நடந் தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத் துவமனைகள், பள்ளிகள் எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியான வர்களில் 90 சதவிகிதத்தினர் பொது மக்கள். இப்போது, அந்தக் குண்டு வீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டு தான் இருக்கிறது.
ஹிரோஷிமாவில் அணு குண்டு வெடித்த அரைமணி நேரம் கழிந்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியி லிருந்து காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர் காற்று உள்ளே புகுந்தது. ‘தீப்புயல் விரை வில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ.வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல் காற்று நகர மையத்திலிருந்து வட மேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்து விட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கிமீற்றர்
i ini LLyLeLLLLSLLLLLL
தூரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. நாகசாகியில் குண்டு வெடித்து ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது. அது பரந்து பரவி பெருந்தியாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரட்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.
விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்த மாக இருந்த போதிலும் அணுகுண் டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்த
வர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றி
னால் வெந்து போனார்கள். இத னால் அதிகப்படியான சாவுகள் ஏற் பட்டது என்று கூறலாம்.
ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களி லும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் கருமழை பெய்தது. "கருமழை பெய்த இடங் களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.
அது போலவே நாகசாகியி லும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில் அழிவுக் குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் கருமழை பெய்தது. இவ்வாறு அணுஆயுத மேல்படிவின் தீங்குக
ENνα ( 12 Y Ommmmmmm
محصہN
 
 

Uேnது ໃ
ளினால் ஏராளமான மக்கள் பாதிக் கப்பட்டார்கள்.
கதிர்வீச்சின் பிந்தைய விளை வுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள். அல்லது இறந்தார் கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று, உயிருக்கு ஆபத்தான இரத்த வெள்ளையணுப் புற்று கண்படலம் உருவாதல்; வய துக்கு முந்தி கிழட்டுத் தன்மையடை தல் போன்றவை.
இவை தவிர, பிறவிக் குறை பாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ, முட்டை யையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனி மயக் கதிர்வீச்சின் மரபின் / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக்கால அறிவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
அணுக் கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டி ருக்கின்றன. பெருமளவில் உடனடி யாக சாவையும் அழிவையும் உண் டாக்குகின்றன. மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தன மாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன. பாலைவன மாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்த துமான சமூக, உளவியல் விளைவு களை உருவாக்குன்றன.
அணு குண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர் களைக் காவு வாங்கிக் கொண்டு
தான் இருக்கிறது. ஹிரோஷிமாவில்
உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவகத்தின் தலைவர் டாக்டர் வழிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?
"இவர்களுக்கும், குண்டு வெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக் கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா? எப்போது தீரும்? என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்." போர், நாசத்தை விளை விக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர் களையே அழித்துவிடும். உலகத் தையே சுடுகாடாக மாற்றிவிடும். யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள். வெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண் புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின் தொடர்ந்து வேட்டை யாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத் தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை
(தினமணி)
( ހަހަށަހަށަހަށިހަ

Page 9
羲*鬣蜥
னத்துது ;
ன் ந்திரம் நோக்கி துவாரகைக் கண்ணன் செல்வான் அரிய நற் காலைப் போது ஆகாயத் திரையில் எங்கும் பரிதியின் வர்ண ஜாலம் பற்பல வியக்க வைக்கும் கரியவன் உள்ள மெல்லாம் களிப்பினில் மூழ்கிப் போகும்
புட்களும் பாட்டுப்பாடும் புலரிளம் காலை வேளை கற்களை ஒளிரச் செய்யும் கண்களில் வயிரமாகும் சொற்களில் அடங்குமாமோ சோதியின் ஜால மெல்லாம்? அற்புதம் என்பான் கண்ணன் அவனதில் தோய்ந்து போவான்
எத்தனை வர்ண ஜாலம் எழில் மிகு வானத்தட்டில்? புத்திக்கு அடங்குமாமோ? புரிந்தவர் யாரும் இல்லை அத்தனின் செய்கை இந்த அதிசயக் கோலமெல்லாம் சித்தத்தில் அவனும் சொல்வான் செய்பவன் அவனேயன்றோ!
-C1)-
 
 
 
 
 
 
 

oS ms
விருட்சங்கள் வரிசையாக வீதியில் நின்றவாறு திருமலர் துவும் கண்ணன் திகழ் முகில் மேனி மீது நறுமலர் வாசம் எங்கும் நாடதில் மூழ்கிப் போகும் அரியவன் நெஞ்சமெல்லாம் ஆனந்த வெள்ளம் பாயும்
மலரள்ளித்துவும் நீண்ட மரமெலாம் வெயிலைக்கண்டு இலை குழை என்னும் அந்த ஏற்றதோர் குடையை ஏந்தி தலையின் மேல் தாங்கக் கண்டு, தக்கதோர் உதவி என்று அலை கடல் துயிலும் கண்ணன் அமைதியில் நிலைக்கலானான்!
வெட்டைவெளியெல்லாம் வீசிவரும் காற்று கட்டை, முள், கல்லில் கால் வைத்து நடக்கும் நெட்டை மரம் காட்டில் நின்று கிளை உசுப்பும் பெட்டையது அதனால் பேரின்பம் ஊட்டும்
/^N C15)

Page 10
இயாது
காற்றதன் செயலைக்கண்டு கண்ணனும் வியக்கலானான் ஆற்றலுக்களவேயில்லை ஐந்தினில் ஒன்று ஆகும் ஊற்றது உயிர்கட்கெல்லாம் உலகெலாம் ஆட்சி செய்யும் பேற்றினை அளக்கலாமோ? பீமனின் தந்தையன்றோ!
கார்முகில் வண்ணன் செல்லும் கதையது கேட்டதாலே ஊரெல்லாம் ஓடிச்செல்லும் உற்றவன் பார்த்துக் கொள்ளும் பேர் பெறு அருவி என்னும் பெண்ணவள் மலையின் மீது ஆர் எனப் பார்க்கலானாள் அழகினில் மயங்கிப் போவாள்
நீண்டதோர் பயணம் மெல்ல நிறைவுறும் வேளை ஆங்கு தீண்டிடும் அரவின் தோற்றம் தெரிந்திடும் கொடியின் மீது ஆண்டிடும் துரியன் தேசம் அது என அறியார் உண்டோ? பாண்டவர் துணைவன் நெஞ்சில் பற்பல எண்ணம் ஓடும்
 
 

பேரிது ஐ
கொடியது அசையும் கையால் கூப்பிடும் சைகை போல வடிவுற அதனை நோக்கி வைகுந்தன் சொல்லலானான் முடிவது நேரும் உன்தன் மூர்க்கமும் அற்றுப் போகும் விடிவது இல்லையென்றால் வேறென்ன? யுத்தம் தானே!
அழகது பூணும் நன்கு அத்தினபுரமும் அன்று குழலிசைக் கண்ணன் நெஞ்சம் குளிர்ந்திடும் வண்ணம் அந்த கழலணி துரியன் என்பான் கவின்மிகச் செய்தபோதும் மழை முகில் வண்ணன் ஏனோ மயங்கிடவில்லை அம்மா!
தோரணப் பந்தல் எங்கும் தொட்டதை ஆட்டும் காற்று வாரணக் கொம்பு அந்த வாயிலில் ஒளிரும் நன்கு ஆரணம் முழங்கும் வேத அந்தணர் கூட்டம் கழும் காரணன் யாவும் கண்டு கனிவுடன் வாழ்த்தலானான்
%^17N C17)

Page 11
இUnது
சங்கொரு கையில் ஒளிர
சக்கரம் மறுகை சுழல பங்கயக் கண்ணன் கண்டு பரவசமடைந்த மக்கள் தங்கை குவிக்கலானார் தலையது தாழ்த்தலானார் மங்கையர் உள்ள மெல்லாம் மாதவன் கவர்ந்து கொள்வான்
கண்ணனும் வந்தான் என்று களிப்பினில் மக்கள் எல்லாம் அண்ணலே வருக என்று ஆலாத்தி எடுக்கலானார் பண்ணிசை முழங்கும் அங்கு பரதமும் கூத்தும் சேரும் தண்ணமும் சாந்தும் நல்ல சுகந்தத்தை அள்ளிக் கொட்டும்
(தொடரும்)
 
 

o
ஆங்கில இலக்கியமேதை பேர்னாப் லுற
பேர்னாட் ஷா அவர்கள் தனது ஹாஸ்யப் பேச்சினால் பலரைச் சிந்திக்கவும், சிரிக்கவும் செய்த ஒரு மாமனிதர் ஆவார்.
அயர்லாந்தில் இவர் பிறந்தாலும், இங்கிலாந்திலேயே வாழ்ந்தார். மிகவும் துடிப்புள்ள சிறுவனாக இவர் வாழ்ந்த பராயத்தில் மிகுந்த இரக்க சிந்தையுள்ளவராக விளங்கினார். எதற்கும் அஞ்சமாட்டார். மெல்லிய
உயரமான தோற்றமுடையவர். மாமிசம் உண்பதில்லை. மதுபானம் குடிப்பதில்லை. இங்கிலாந்தில் இப்படி ஒருவர் உள்ளாரா என மகாத்மா காந்தியடிகள் ஆச்சரியப்பட்ட பெருமைக்குரியவர். இவர் சிறுவயது முதல் புரட்சிக்கொள்கையை உடையவர். "fபியன் சொசைட்டி என்னும் சோஷலிசக் கொள்கையுடைய சங்கத்தில் அங்கத்தவராக விளங்கினார்.
20 நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்தவர். இவரது நாடகங்கள் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. இவரின் 'அலி த கொப்லர்’ (Ali the Cobbler), “பிக் மேலியன்’ (Pigmaliyan) என்ற நவீன நாடகங்கள் பாடசாலைகளில் உயர் வகுப்பு மாணவர்கட்கு ஆங்கில இலக்கியப் பாடமாக இருக்கிறது. முற்காலத்தில் வாழ்ந்த சீமான்களின் வாழ்க்கை நிலை கீழ்ச்சாதி மக்களின் வாழ்க்கை நிலை, நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை பற்றிய சமுதாய சீர்திருத்தங்களை, சாதிப் பாகுபாடுகளை நன்கு விளக்கி எழுதியுள்ளார். உயர்வகுப்பு மாணவர்கள் இந்நாடகங்களை மேடைகளில் நடித்து வருகின்றனர்.
இவரது நாடகங்கள் இக்கால சமூக அமைப்புக்களைக் காட்டுவ தோடு, சிறந்த மொழியாற்றல் மிகுந்தவையாகவும் உள்ளன. இவர் ஆங்கில மொழியிலுள்ள 26 எழுத்துக்கள் மட்டும் போதாது. குறில், நெடில் எழுத்துக் களை உள்ளடக்கி 42 எழுத்துக்கள் ஆக்கினால் படிப்பவர்கள் இடர்ப்படாமல் படிக்க முடியும் என்று ஆலோசனை கூறினார். ஆனால், ஒருவரும் அதை ஏற்று நடைமுறைப்படுத்தவில்லை.
வில்லியம் சேக்ஸ்பியரின் கற்பனை வளத்திற்கு ஏற்ப நாடகங்கள் எழுதாவிட்டாலும், சேக்ஸ்பியர் சிறந்த படைப்பாளி என போற்றும் குணம் படைத்தவர். இவர் வாழ்ந்த காலத்தில் தான் துப்பறியும் நாவல்களை எழுதி புகழ் பெற்ற ஜி.கே. செஸ்ரன் (GK. Chesterten) என்பவரும் வாழ்ந்தார்.
zN simmmmmm) 19 (asmas

Page 12
HIERDIE jjji o
lầvng a
அவர் ஒருமுறை ஷோ பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா என நினைப்பார்கள். எனக் கூறிய போது, ஷோ கொஞ்சமும் சிரிக்காமல் உம்மைப் பார்த்தாலே அதற்கு விளக்கம் கிடைத்து விடும் எனப் பதிலளித்தார். ஏனெனில் செஸ்ரன் மிகுந்த தோற்றப் பொலிவுடையவர். இரட்டை நாடிச் சரீரம் பொருந்திய செஸ்ரன் இவரது நகைச்சுவையை நினைத்துச் சிரித்ததோடு அன்புடன் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டார்.
வக் கண்ட போது 'உமது தோற்றத்தை யாரும்
60)
இன்னொரு முறை மிகவும் அழகு வாய்ந்த பிரபல நடிகையொருவர் இவரைப் பார்த்து, “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை என்னைப் போல் அழகாகவும், உங்களது அறிவையும் உடையதாகவும் பிறக்கும்’ என்ற போது, ஷோ தற்செயலாக என்னுடைய அழகும், உம்முடைய அறிவும் பெற்றுப் பிறந்து விட்டால் என்ன செய்வது என பதிலுரைத்தார்.
இவர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார். எப்போதும் நாடகங்கள் மூலம் மக்களுக்கு நல்வழி காட்டி வந்தார். இந்த மேதாவியை ஆங்கில மக்கள் வியப்போடு பார்த்தனர்.
நல்ல வெண்ணிறம் பொருந்திய தாடியுடனும், அறிவு நிறைந்த கண்களுடனும் எல்லா இடங்களுக்கும் சென்று சீர்திருத்தக் கொள்கையைப் பரப்பினார். குழந்தைகளென்றால் கொள்ளைப் பிரியம் உடையவர். இவர்
92 வயது வரை வாழ்ந்ததாக அறியமுடிகிறது.
மரகதா சிவலிங்கம்
கத்தோலிக்கம் (CATHOLICISM) என்னும் சொல்லுக்கு உலகளாவிய (UNIVERSAL)
ܝ
என்று பொருள். இச் சொல் HOLOS து (WHOLE) என்னும் கிரேக்கச் சொல்லில்
இருந்து பிறந்தது.
இஸ்லாம் (ISLAM) எனும் சொல் ஓர் அரபுச் சொல்லாகும். இதற்குச் சரண
 
 
 
 
 
 
 

‘மந்திரம் கால், மதி முக்கால்’ என்றொரு வழக்கு எம்மிடையுளதே!
மந்திரமென்பதுதந்திரமன்றி வேறாமோ? தந்திரமென்பது சூழ்ச்சியதாமே!
சிறுபிள்ளைதவறிழைத்தால் "கொதிக்கும் எண்ணெய்யில் கை வை’ என்பார். பயத்தில் பிள்ளையைப் பணியவைக்கும் தந்திரமன்றி இஃதென்ன - ?
இராஜதந்திரம் அரசியல் சூழ்ச்சி.! அரசவையில் மந்திரியிருப்பான், மதகுருவிருப்பான் மதகுருவோ'இராஜகுருவெனப் பேர்பெறுவான்.
இந்நிலைமை ஈழத்திற்கு இன்னமும் பொருந்தும்!
பெளத்த துறவியர் பகரும் மந்திரம் தலைமையைக் கூடதலைசாய்க்க வைக்கும்! இதனால்தானே இங்குளதமிழர் இன்னுயிர்நீக்கிறார், மண்ணுரமாகிறார்!
தந்திரமென்பதே தனிப்பெரும் சூழ்ச்சி! சதுரங்க விளையாட்டின் காய்நகர்த்தும் உத்தி!
1N
21 Omma

Page 13
avrøy ISBESONEOS
Uல்லாண்டு காலப் பழமையும் பெருமையும் உடையது நமது நாடு. இந்தியாவின் தெற்கில் ஒரு சிறு பகுதியாக இருந்து கடல் கோளால் பிரிக்கப்பட்டு ஒரு தீவாகப் பரிணமித்த இந்நாட்டிற்கு மக்கள் பல்வேறு பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். அப்பெயர்களில் இலங்கை என்பதும் ஒன்று.
இப்பெயர் (இலங்கை) சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியத்தில் தான் முதன்முதலில் இடம் பெற்றுள்ளது என்று கூறும் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் தமது கூற்றுக்குச் சான்றாக அவ்விலக்கியத்தில் வரும் “கடல் சூழ் இலங்கைக் கயவாகு” எனும் பாடல் அடியை எடுத்துக்காட்டுவார். பேராசிரியரின் ஆய்வின்படி இலங்கை எனும் சொல் லங்கா எனும் சங்கதச் சொல்லின் திரிபாகும். (இளங்கதிர் - 1979)
இளங்கதிரில் பேராசிரியர் இவ்வாறு எழுதியிருப்பினும் இளங்கோவடி களின் சிலப்பதிகாரத்திற்கு முன் எழுந்த சிறு பாணாற்றுப்படை, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் இலங்கை எனும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளமையைப் பின்வரும் பாடல்கள் காட்டும்.
தொன்மாவிலங்கைக் கருவொடு பெயரிய நன்மாவிலங்கை மன்னருள்ளும் -
(சிறுபாணாற்றுப்படை)
பெருமாவிலங்கைத்தலைவன் சீறியாழ் இல்லோர்சொன்மலை நல்லியக் கோடனை.
(1/gpló - 176) நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லியாதன்.
(புறம் - 379)
இப்பாடல்களில் காணப்படும் இலங்கை என்னும் பெயரைக் கொண்ட ஊர்கள் இன்றும் தமிழ் நாட்டிலுள்ளன. எனவே, இலங்கை என்னும் பெயர், நம் நாட்டிற்கு மட்டும் உரியதல்ல. இது தொடர்பாக ஆய்வறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் இவ்விதம் எழுதுவார்.
கடற்கரை ஓரமாக நீரும் நிலமுமாக அமைந்த இடம் இலங்கை, என்று பெயர் பெறும். ஆறுகள் கடலில் கலக்கின்ற இடத்தில் கிளைகளாகப்
/エへ monum) O 22) mu
 
 
 
 
 
 
 

âVfiği
பிரிந்து இடையிடையே நீரும் திடலு மாக அமைவதுண்டு. அன்றியும் காயல் என்னும் பெயருள்ள நீர்த் தேக்கமும் கடற்கரை ஓரமாக அமைவதும் உண்டு. இவ்வாறு திடலுமாக அமைந்த இடத்தை லங்கா (இலங்கை) என்று ஆந்திர நாட்டார் இன்றும் வழங்கு வர். நீரும் திடலு மாக அமைந்த பட்டினநாடு மாவி லங்கை என்னும் பெயர் பெற்றிருந் தது. (லங்கா அல்லது இலங்கை என்பது பழைய திராவிட மொழிச் சொல் என்று தோன்றுகிறது) இப் போதும் ஒய்மா நாட்டு மாவிலங் கைப் பகுதியில் ஏரிகளும் ஓடைக ளும் உப்பளங்களும் காணப்படு கின்றன. (மயிலை. சீனி. வெங்கடசாமி ஆய்வுக்கட்டு ரைகள் பக் - 113)
மயிலையாரின் இவ் விளக் கம் ஒரு புறம் இருக்க இலங்கை என்னும் சொல், இலங்கு என்னும் சொல்லில் இருந்து தோன்றியிருக்கக் கூடும் என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் இச் சொல்லுக்கு (இலங்கு) குளம் என்னும் பொருள் உண்டு. அதாவது குறைந்த அளவு நீரினிடை அமைந்துள்ள ஊர் இலங்கை என்று இதற்கு நாம் பொருள் கொள்ளலாம். மேலும், இலங்கை எனும் சொல ‘லுக்கு ஆற்றிடைக்குறை என்று தமிழ் அகராதி, நிகண்டு ஆகியன பொருள் தந்திருப்பதும் நமது கவனத்திற்கு ரியது.
இவ்விளக்கம் தமிழ்நாட்டில், இலங்கை என்னும் பெயர் பெற் றுள்ள ஊர்களுக்கு ஏற்புடையது எனினும் நமது நாட்டிற்கு (கடல் சூழ்
O
خصصي C 23)
இலங்கை) இது எவ்விதம் பொருந் தும் எனக் கேள்வி எழலாம். எனவே, இதுபற்றி இங்கு சிறிது விளக்குதல் அவசிய மாகின்றது.
இலங்கையையும் தமிழகத் தையும் இன்று பிரித்துக் கொண்டி ருக்கும் ‘பாக்கு நீரிணை’ ஒரு காலம் தரையாக இருந்ததாகவும் பின் அதனைக் கடல் கொண்டதா கவும் நில நூல் வல்லார் கூறுவர். இதனை, கி.பி. 2ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற செந்தமிழ்க்காப்பியம் சிலப்பதிகாரம்.
“பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று கூறும்.
சிலம்பு தரும் இந்த வரலாற் றுச் செய்தி இலங்கைக்கும் தமிழகத் திற்குமிடையே ஆறு ஒன்று ஓடியதை உறுதி செய்யும். இந்த ஆறு, பஃறு ளியாகவோ அல்லது குமரிக்கோடு (கோடு என்பதற்கு. நீர்க்கரை என்றும் பொருள்) ஆகவோ இருக்கலாம். அதே நேரம் இவ்வாறுகள் காலநிலை காரணமாக ஆழம் குன்றி, இலங்கு எனத் தோற்றம் தந்திருக்கக் கூடும். இவ்விதம் ‘இலங்கு’ என ஆறு வற்றியிருந்த காலத்திலேயே வால்மீகி கூறுவது போன்று இராவ ணன் சீதையுடன் கழுதை பூட்டிய வண்டி மூலம் அந்தச் சாகரத்தைக் கடந்து இலங்கையை அடைந்திருக்க வேண்டும்.
சாகரம் என்னும் சொல் லுக்கு இன்று கடல் என்றே பொருள்.
Omu

Page 14
Uேnது
ஆனால், ஆதிகவி வால்மீகியின் காலத்தில் அதற்கு ஏரி என்று பொருள் இருந்ததாகத் தெரிகின்றது. இதனை, இந்தியாவில், கிருஸ்ணராஜ சாகரம், இராம சாகரம், இலட்சுமண சாகரம், என்னும் பெயரில் உள்ள ஏரிகள் எடுத்துக் காட்டும் என்பார் ஆய்வறிஞர் மயிலை. சீனி. வேங்கட சாமி அவர்கள். (ஆய்வுக் கட்டுரை கள், பக் - 69).
கடல், எரியாகியமை பல ருக்கு ஆச்சரியத்தைத் தருதல் கூடும். ஆனால், ஒரு சொல் தனது பழைய பொருளை உதறிவிட்டு புதிய பொருளை உள்வாங்கிக் கொள்ளல் மொழிவளர்ச்சியில் ஒரு இயல்பான நிகழ்வு. உதாரணத்திற் குக் கதலி என்னும் சொல்லை எடுத் துக் கொள்வோம். இதற்கு (கதலி) முன்பு வாழை என்றே பொருள் இருந் தது. ஆனால் இன்று வாழையின்
烹
- 鷺 ஓர் இனத் தையே இச் சொல் குறிக்கும்.
இலங்கை, லங்கா என்ற
இரு சொற்களும் பழந்திராவிட மொழிச் சொற்கள் என்று அறிஞர் சீனி. வேங்கடசாமி அவர்கள் கருதுதல் சரி என்றே படுகின்றது. ஏனெனில் லங்கா என்னும் பெய ருடை ஊர்கள், மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகள் பேசப் படும் மாநிலங்களிலும் இருப்பதாக அறிஞர் அவர்கள் அதே ஆய்வுக் கட்டுரையில் தெரிவித் துள்ளார். எனினும், இச்சொற்களில் நிறைவு டைய இலங்கை என்னும் சொல்லே பேச்சு வழக்கில் இகரம் கெட்டு ‘லங்கை’ ஆகி, பின், லங்கா’ என வழங்கி வருகிறது எனலாம்.
வாகரைவாணன்
மகாத்மாகாந்தி விமானத்தில் பயணம் செய்ததே 7 இல்லை. அமெரிக்கா அழைத்தும்கூட அமெரிக்கா
சென்றதே இல்லை.
ஆங்கில இலக்கியநூல்களில்தான் கி.பி. கி.மு என்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு ஆண்டுகளை எழுதும்
முறை எட்டாம் நூற்றாண்டில் அறிமுகமாகியது.
 
 
 
 
 

இவ்வகிைலுலகி3 விருஆலு Oொறுன் கவிஞர் ஆ.மு.சி. வேலழகன்
இவ்வாண்டு சாகித்தியப் போட்டியில், கவிதை நாலுக்கான பரிசைப் பெறும் கவிஞர் ஆ.மு.சி. வேலழகன் திருப்பழுகாமத்தைச் சேர்ந்தவர். பஸ் சாரதியாகக் கடமை ஆற்றி ஓய்வு பெற்றவர். 1952 காலப்பகுதியிலிருந்து பல மன்றங்களை அமைத்த இடைவிடாத சமூக சேவைபுரிபவர். 1972ல் இருந்து இலக்கியத் துறையில் ஈடுபட்டு, கவிதை, சிறுகதை நாவல் முதலிய வற்றில் முத்திரை பதித்தவர். இதுவரை 12 நால்களை எழுதியுள்ளார்.
அவை
خھ
朝
8
தீயும் தென்றலும் (கவிதைத் தொகுதி) 1972 சாதியாசதியா? (உரைச்சித்திரம்) O 1973 உருவங்கள் மானிடராய் (கவிதைத் தொகுதி) 1994. கமகநிலா (சிறுகதைத் தொகுதி) D 1996 வேலழகன் கவிதைகள் (கவிதைத் தொகுதி) 1996 மூங்கில்காடு (சிறுகதைத் தொகுதி) 2OO. விழியும் வழியும் (கவிதைத் தொகுதி) r 2OO. சில்லிக் கொடி ஆற்றங்கரை (நாவல்) O 2004. கோடாமை சான்றோர்க்கணி (நாவல்) 2OO6 செங்காந்தள் (கவிதைத் தொகுதி) 2006 சாகித்தியப்பரிசு பெற்றது இவர்கள் மத்தியிலே (நாவல்) s 2006 கேட்டுப் பெற்ற வரம் (சிறுகதைத் தொகுதி) O 2OO7
இவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கெளரவங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக “மூங்கில்காடு நாவல், தமிழ்நாடு பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் இளங்கோ ஆய்வுசெய்து M.phiபட்டம்பெற்றுள்ளார் “சில்லிக்கொடி ஆற்றங்கரை” நாவலை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் இரா. கோவிந்தன் ஆய்வு செய்து M.Phil பட்டம் பெற்றார்.
தகவல் : அன்புமணி
α. (125Y Amama

Page 15
'o யிரால் மாங்காய் எறிந்தால் மாங்காய் விழுந்தாலும் சரி, மயிர் விழுந்தாலும் சரி” என்பது பண்டு தொட்டு நம் நாட்டில் வழங்கி வரும் பழமொழியாகும். இஃது ஒரு மனிதனின் உத்வேகத்தைக் காட்டும் பழமொழி யேயன்றி வேறில்லை. மக்களில் பெரும்பாலோர்தோல்விமனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இதனை நாம் செய்ய விரும்புகின் றோமே, இதனால் நமக்கு நற்பலன் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஐயச் சகதியில் கிடந்து தத்தளிக்கி றார்களே தவிர இதனைச் செய்வத னால் நமக்குச் சிறு உழைப்பும் சிறு செலவும் தாமே ஆகின்றன, இதனைச் செய்து தான் பார்ப்போமே என்று அவர்கள் எண்ணுவதே இல்லை. அவ்விதம் அஞ்சுபவர்களால் எவ்விதம் செயலாற்ற முடியும்? எவ்விதம் பெரு வெற்றி பெற இயலும்?
ஒருவரை நாம் ஒரு விஷயம் பற்றி அணுகுவோமா, வேண்டாமா என்று அவர்கள் ஆயிரம் தடவை சிந்தித்துக் கொண்டிருப்பார்களே தவிர, அணுகித்தான் பார்ப்போமே, நடந்தால் நடக்கிறது, நடக்கா விட் டால் போகிறது. நடந்தால் நிறைய
லாபம், நடக்காவிட்டால் ஒரு நட்ட
·O·i
Yan C26)-
முமில்லை? என்று அவர்க்ள் எண்ணு வதில்லை.
உலக வரலாற்றைப் பார்க்கப் போனால் துணிச்சலுடனும் நம்பிக் கையுடனும் செய்யப்பட்ட ஒரு சிறு செயல் எதிர்பாராத நற்பலன்களை உண்டு பண்ணியுள்ளது என்பதையும் ஒருசிறு அஞ்சலட்டை, பேச்சின் நடுவே ஒருசிறு சொல் எவ்வளவோ மகத்தான செயல்களை ஆற்றியிருக் கின்றன என்பதையும் நாம் அறியலாம். பர்மாவுடன் மர வாணிபம் செய்து வந்த வணிகர் ஒருவர் இரண் டாவது உலகப் போர் தொடங்கியதும் அங்கிருந்து மரத்தை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கு நீராவிக்கப்பல் கிடைக்காததை உணர்ந்ததும் சில அஞ்சலட்டைகளைத் தாம் பயன்படுத் தினார். இந்தியாவுக்கு வரவேண்டிய மரம் ரங்கூனில் கப்பல் வசதியின் மையால் தேங்கிக் கிடப்பதாகவும் உடனே நீங்கள் உங்கள் பாய்மரக் கப்பலுடன் அங்கு செல்லின் உங்க ளுக்கு நல்ல கேழ்பு கிடைக்குமென்றும் அவர் யாழ்ப்பாணத்திலுள்ள பல பாய்
Omnium
 
 

இயமது
மரக் கப்பல் அதிபர்களுக்கு அஞ்ச லட்டை தீட்டினார். அவர் அவ்விதம் செய்தது மயிரால் மாங்காய் எறிந்தால் மாங்காய் விழுந்தாலும் சரி, மயிர் விழுந்தாலும் சரி என்ற தத்துவத்தில் தான.
ஆனால் என்ன வியப்பு மாங் காயே விழுந்து விட்டது. யாழ்ப் பாணத்திலிருந்த பாய்மரக் கப்பல் அதிபர்களெல்லாம் அஞ்சலட்டை கிடைத்ததும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு பர்மாவுக் குச் சென்று அங்கிருந்த மரங்களை இந்தியாவுக்குக்கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள். சில அஞ்சலட்டைகள் செலவில் அவ்வணிகரும் பெரும் செயலைச் சாதித்துவிட்டார்.
ஒரூருக்குச் செல்ல விரும்பிய பிரயாணி ஒருவர் ஒரு ரயில் நிலையத் திற்கு மாலை ஏழு மணிக்குச் சென்று, *தாம் செல்ல விரும்பும் ஊருக்கு எத் தனை மணிக்கு ரயில் இருக்கிறது?’ என்று ரயில் நிலைய அதிபரிடம் விசாரித்தார்.
சற்று நேரத்திற்கு முன்தான் அவ்வூருக்குச் செல்லும் ரயில் வண்டி புறப்பட்டதாகவும் இனிமேல் காலை ஆறுமணிக்குத்தான்.அங்கு அந்த ரயில் வண்டி வரும் என்றும் இதன் நடுவே இரவு இரண்டு மணிக்கு ஒரு கூட்ஸ் வண்டி வரும் என்றும், ஆனால் அது அந்த நிலையத்தில் நிற்காது என்றும் அந்த ரயில் நிலைய அதிபர்கூறினார். அதைக் கேட்டதும், பெரிதும் மனச்
minimumO
<7=5صي C27)-
சோர்வடைந்த அந்தப் பிரயாணி, ‘சரி இரவு இரண்டு மணிக்குத்தான் கூட்ஸ் வண்டி வருகிறதே. அதனை எப்படி யாவது நிறுத்தி அதில் ஏறிச் சென்று விடுவோம் என்று முடிவுக்கு வந்தார்.
இரவு இரண்டுமணிக்குகூட்ஸ் வண்டியும் மெதுவாக வந்து கொண்டி ருந்தது. உடனே அந்தப் பிரயாணி ரயிலில் ஏறிவிட்டார். அங்கிருந்தவர் களிடம் இதமாகப் பேசித்தாம் போக வேண்டியஊருக்கு அவ்விரவே போய்ச் சேர்ந்து விட்டார்.
அவரைப் பார்த்து அந்த வண்டி ஒட்டி, “நீ பலே ஆளப்பா! நானும் இவ்வழியே 27ஆண்டுகளாக கூட்ஸ் வண்டி ஒட்டி வந்து போய்க் கொண்டுள்ளேன். இவ் ஊரில் முதன் முறையாக இவ்வண்டி நின்றதும் இப்பொழுதுதான்முதன்முதலாக இவ் வண்டியில்ஏறிய பிரயாணியும் நிதான் என்றான். அந்தப் பிரயாணியின் மனோவேகம் நடக்க முடியாத செய லையும் நடக்க வைத்துவிட்ட புதுமை யைப்பார்.
நான் இவ்விதம் கூறும்போது பெரும் பிரயாசையுடன் பெரும் பொருள் செலவிட்டு முரட்டுத்துணிச் சலுடன் லாப நஷ்டம் எதிர்பாராது செயலாற்ற வேண்டும் எனப் பொருள் படாது. அற்ப செலவுடன் சொற்ப பிரயாசையுடன்கூடியதுணிச்சலையே குறிப்பிடுகிறேன் என்பதை எவரும் மறக்கக்கூடாது.
அப்தற் ~ றகீம் ~

Page 16
αO
இந்தப் பூமிக்கு இப்போது பாவக்கிரகம்
என்று பெயர்
நீதி நியாயத்தின் நிழல் கூட இந்த நிலத்தில் படுவதில்லை போதிப்பவரின் வாழ்க்கையும் பொய்த்துப் போனது
கோயில்களிலும் தெய்வங்கள் குடியிருப்பதில்லை வெறும் கூட்டம் மட்டுந்தான்.
அத்திபாரம் அற்றவனும் தன்னை அரண்மனை எண்கிறான் அனைத்தம் அடிதலை மாற்றம்
சட்டம் முறைமை சமாதியாயிற்ற இன்று சரித்திரமே வேறு
பணக்காரனுக்கு இதர பரலோகம் ஏழைக்கு இடுகாடு
எமதர்மன் கையில் அரசு! அதனால் எந்த நேரமும் கணக்குத் தீர்க்கும் கதைதான்
மாவக்கிரகம் விரைவில் பற்றி எரியும்.
- குயிண்ை -
(28)
 

றைவன் எண்ண செய்வான்
iš SSABABAGO SA HÄKKING
சூழல். சுற்றாடலை மனிதனின் சுயநலம்தான் கெடுத்தத சுனாமி. பூகம்பம்
சூறாவளி அதன் அறவடைகள்
இருக்கும் பகையோடு இப்போது இயற்கையும் மனிதனின் எதிரி இனி என்ன செய்யப் போகின்றான்?
இது. மானிடத்தின் இறதிக்காலம்.? அவனே ஈன்றெடுத்தத இறைவன் என்ன செய்வான்? பாவம். அவன்!

Page 17
வித்தியாசம் ெ
விஞ்ஞானம்
ஒரு பெரிய
விந்தைதான் ஆனால் அ. எல்லாவற்றுக்குப் விடை அல்ல!
எதற்கும் ஒரு
எல்லை இருக்கிற
விஞ்ஞான இதற்கு விதிவிலக்கல்ல!
விஞ்ஞானம் என்பதே
ஒரு பெரிய
வெளிச்சம் : அதேவேை இருட்டும் அதனே இருக்கவே செய்கிறது
வெளிச்சம் எது
இருட்டு எது
மனிதனுக் வித்தியாசம் தெரியவில்லை!

தரியவில்லை!
மும்
༽།
لمحے
Z,
༽