கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2010.06

Page 1

7 RANSMITTER

Page 2

g ༣
ரேவுேம் ஆயிரம்"
(இ)(0)
அறிவியல் பல்சுவை ம்ாசிகை
உள்ளத்தில் உணர்மையொளி உணர்டாயின் வாக்கினிலே ஒளியுணர் டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயினர், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவிகொள்வர்; தெள்ளுற்ற தமிழமுதின் கவைகணிடார் இங்கமரர் சிறப்புக் கணிடார்.
-шулд657
உள்ளே.
எதுவரை.? (தொடர் கட்டுரை) மதில் மேல் பூனை தமிழ் வட்டம் புரட்சிக் கவி (தொடர்)
03
05
07 08
போர்க்கால நெருக்கடியில் பெண்ணின் வாழ்வியல் போக்குகள் Let's Learn to speak in English உயிர்வேலிக்கு உயிர் கொடுக்கும் பூவரசு தொலை நகரங்களை இணையத்துடன் இணைக்கும் WiMax சர்வதேச கிரிக்கெட்டில் சில சுவையான தகவல்கள்
11
8
21
25
30
31
36
கைத்துப்பாக்கிகள் மனதின் ஒசைகள் ஜப்பானியர்களின் கல்வி முறை (G5ITLs)
37
கேளிக்கை விழாக்கள்
முன்னைய காலங்களில் எம்மணிணில் ஒருவன் உழைத்து கொஞ்சம் முன்னேறி, கையில் கொஞ்சம் காசு புழங்கும் போது "மச்சான் உனக்கென்னடாப்பா நல்லா உழைக்கிறாய். வாற திருவிழாவில ஒரு கூத்தொன்ற போடவேண்டியதுதானே. அப்பதானே ஊருக்க ஒரு மதிப்பு வரும்” தூண்டிவிடுபவர்கள் தங்களிடமுள்ளதை வெளிப்படுத்துவதுமில்லை; மற்றவன் முன்னுக்கு வருவதை விரும்புவதுமில்லை.
குறுகிய சிந்தனையுடையவர்களின் பார்வையிலிருந்து விலகத் தெரியாமல், இதுதான் கெளரவமென்று எண்ணி கூத்துக்கள் கேளிக்கைகள் என்று தம் குடும்பத்தையோ அல்லது சமூகத்தையோ சிந்திக்காமல் பொருளாதாரத்தை நாசமாக்கி சீரழிந்தவர்கள் ஏராளம்.
யுத்தகாலங்களில் சற்று தணிந்திருந்தாலும் சந்ததி சந்ததியாக இது தொடர்வது வேதனைக்குரியது.
இன்னும் எத்தனையோ ஆலயங்களில் அயல்நாட்டிலிருந்து சினிமா கலைஞர்களை அழைத்து தங்களின் ஊர் கெளரவத்தை வளர்த்துக்கொள்ள பலரும் தயாராகிவருவது தெரிகிறது. கோடி கோடியாக வெளியில் கொட்டும் இந்தப் பணத்தை நல்ல தொழில் முயற்சிகளுக்கு பயன்படுத்தினால். பணமும் பெருகும் நமது சமூகமும்
வலுப்பெறுமே..! *ரை குடிறல்

Page 3
^
சிந்திய குறள்கள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பைாவ்வா செய்வதாழில் வேற்றுமை யான்.
பிறப்பினால் அனைவருமே சமம். செய்யும் தொழிலில் காட்டுகின்ற திறமையினால் மட்டுமே வேறுபாடு காணமுடியும். (தொழிலை வைத்து உயர்சாதி, தாழ்ந்த சாதியென்று கொள்வது ஏற்புடையதன்று All life on earth is same in origin. But each one's marit varies according სასo avocations and skills not by birth. இரா வண்ணன் )
QUOZ
These words have something in common. Can you figure it out?
* Banana
X Dresser 2. Grammar 2. Potato 2. Revive
* Uneven
Are you peeking or have you already given up? Give it another try. Look at each word carefully.
You'll kick yourself when you discover the answer.
(Answer: Take out the first letter and place it at the end and you
can read the same work in the reverse order)
O2
 
 

(6) எதுவரை?
அன்பிற்கினிய இளைய தலைமுறையினரே!
மீண்டும் உங்களை இந்த மடலில் சந்திப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். இனிய நினைவுகளும், கனவுகளும், ஏக்கங்களும், இலக்குகளும் தமது இதய அந்தரங்கங்களுமே புயல் வீசும் பிரபஞ்சமாகி உங்களை உணர்வுச் சுழலுக்குள் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கின்றன. அற்புதமான கட்டிளமைப்பருவத்து இனியவர்களே!
சென்ற மடலில் உணர்வு வெளிப்பாடுகள் பற்றிப் பார்த்திருந்தோம்.இன்றைய சந்திப்பிலே அதன் தொடர்பாக *கோபம்” என்னும் மன எழுச்சி பற்றிப் பார்க்கலாம் என்று எண்ணியுள்ளேன்.
கோபம் என்பது நல்ல உணர்வா? கெட்ட உணர்வா? நேரானதா? மறையானதா? கோபம் உங்களுக்கு வந்திருக்கிறதா? வாழ்க்கையில் ஒரு நாளும் கோபம் வரவில்லை என்று யாராவது கூறுகிறீர்களா? இப்படிக் கேள்விமேல் கேள்வி கேட்டால்
கோபம் வராமல் ?. என்ன முணுமுணுக்கிறீர்களா? கோபம் என்பது நல்ல " உணர்வுதான்.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே இந்த தடையைத் தாண்டித்தான் பயணம் செய்கிறோம். முற்றும் துறந்த முனிவர்களுக்கே
cuRFహా కీ"
༡. སྟོད་་་་་་་་་་་ *
*鳕° வரை
கோபம் ஏற்பட்டுச் சாபம் போட்டதாக இதிகாசபுராணங்கள் கூறுகின்றன.அப்படியிருக்க பற்றும் பாசமும் கொண்ட எமக்குக் கோபம் வருவதொன்றும் பெரிய விடயமல்ல.அந்தக் கோபனழுச்சியால் உறவுகள் விரிசலடைகின்றன. குடும்பத்தின் குதுரகலமே தொலைந்து போகின்றது. குழந்தைகள் பயத்தினால் மனநிலை குழம்பி மூலைக்கொருவராக முடங்கிக் கொள்கின்றார்கள். வன்முறைகள் வெடிக்கின்றன. உயிரைக் கூடப் பறித்து விடுகின்றார்கள்.
இத்தனை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் கோபமானது கோபம் கொள்பவரை என்ன பாடுபடுத்துகிறது தெரியுமா? அவரது முகம் சிவக்கின்றது, சுவாச வேகம் அதிகரிக்கின்றது, விழிகள் பிதுங்குகின்றன. நாக்கு வரண்டு விடுகின்றது, உடலில் சூடு
அதிகரிக்கின்றது, இதயம்
படபடக்கின்றது, பேசமுடியாமல் சொற்கள் தடுமாறுகின்றன, சுயநினைவை இழந்து என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்பதே புரியாமல் வாய்க்கு வந்தபடி சொற்களை வாரிவிச அமைதியையே இழந்து விடுகின்றார்கள்.இதனால் இரத்த அழுத்தம், மூச்சிளைப்பு, இருதய நோய், தூக்கமின்மை, போன்ற ஆபத்தான நோய் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.மிகவும்
O3

Page 4
பரிதாபகரமான நிலைக்குள்ளாகும் இவர்கள் மிகவும் உரத்த குரலிரல் பேசித் தமது கருத்தை நியாயப்படுத்த முனைவதால் மிக விரைவில் களைத்துச் சோர்ந்து விடுகிறார்கள்.பாவம் இவர்கள் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.இவர்களின் கோபத்திற்கு ஏனையோர் மெளனமாகி விடுவதால் இவர்கள் திருப்தியடைந்து இதனை ஓர் உளவியல் விளையாட்டாக
நடைமுறைப்படுத்தும் பழக்கத்திற்கும் அடிமையாகிவிடுகிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமானதல்ல! இந்தப்பாடுபடுத்தும் கோபம் எப்படி நல்ல உணர்வாக இருக்கலாம் என்று எண் மேலி கோபப்படுகிறீர்களா?. அமைதி அமைதி! கோபம் வந்துவிட்டால் அதனை முதலில் இனங்காணுங்கள். எனக்கா? கோபமா? என்று சாதிக்கிறீர்கள்.ஏற்றுக்கொள்ளுங்க ள் அதனை அடக்காதீர்கள். ஆரோக்கியமான வழிகளில் கோபத்தை கையாளப் பழகிக் கொள்ளுங்கள்.பிறர் மீது அதனைத் திருப்பி விடாமல் அதனை அனுபவித்துக் கையாள்வதே ஆரோக்கியமானது. இதோ அதற்கான சில வழிகள் மடமட வென்று குளிர்ந்த நீரை உடனடியாகப் பருகுங்கள்,அந்த இடத்தை விட்டு விலகிச்
வரை
சென்றுவிடுங்கள்,ஆழமாக
மூச்செடுத்து விடுங்கள், எண்களை
இறங்குவரிசையில் எண்ணுங்கள், கவிதை எழுதுங்கள், கலைப்படைப்பாக உருவாக்குங்கள், நம்பகமான நல்லவர்களுடன்
அமைதியாக இருந்து பகிர்ந்து
கொள்ளுங்கள். காலார நடந்து இயற்கையை இரசியுங்கள், நல்ல இசையைக் கேளுங்கள், துள்ளல் இசைக்கு நடனமாடுங்கள்,நன்றாக விளையாடுங்கள், இலக்கை நோக்கிப் பந்து வீசுங்கள் கணிமூடி அமர்ந்து அந்த நிகழ்வை ஆய்வு செய்யுங்கள், இவற்றில் ஏதாவது ஒரு முறையைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கோபம் கொள்வதென்பது நோயல்ல ஆனால் நோயை ஏற்படுத்தும். உங்கள் மன அமைதிக்கும் உடல் நலத்திற்கும் நீங்கள்தான் பொறுப்பு நிரந்தரம் ஒரு புன்னகையோடு உலாவருவீர்களேயானால் உங்கள் வாழ்வே சொர்கமாகிவிடும். ம் மீண்டும் கோபவிளைவுகள் பற்றி விரிவாக . . அடுத்த மடலில் . . அது வரை . அன்புடன் விடை பெறும்.
Jகீரதி கணேசதுறை
ஆசிரியூை யா/மகாஜனக் கல்லூரி விமர்ச்னங்கள் வரவேற்கப்படும்.)
ஆகுக! ஆக்குக!
சுவாறி விவேகானந்தர்
04
 

சிறுவர் கேரி)
வரை மதில் மேல் பூனை மகாபாரதப் போர் நடந்து அவன் தன்னிடம் இருக்கும் கொண்டிருந்தது. ஒரு வீரன் வில்லையும், மூன்று அம்புகளையும் போர்க்களத்திற்குள் காட்டி . வந்துகொண்டிருந்ததை கிருஷ்ணர் “இதில் ஒன்றால்
கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்ந்த நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி
"வீரனே எங்கு வந்தாய்” என்று
பாண்டவர்களையும், மற்றொன்றால் கெளரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.
கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்” என்றான் அவன்.
“உனக்கு என்ன தகுதியிருக்கிறது?” என்றார் கிருஷ்ணர்.
“எப்படி உன்னை நம்புவது?" என்றார் கிருஷ்ணர் அவன் அவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள்
05

Page 5
அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவாதாகக் கூறினான். விளையாடிப்பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர்,
"சரிசெய் பார்க்கலாம்” என்றார். அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழ் மறைத்துக் கொணர்டார்.
வீரன் நாணி ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்துவிட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.
கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார்.
“சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன்
"எண் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாக போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி வெல்ல ஆரம்பமாகும், உடனே இவன் எதிர்க்கட்சிக்கு போய்விடுவான். பிறகு அது வெற்றிபெற ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே”
வரை
என்று கிருஷ்ணர் யோசித்தார். "வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆகவேண்டி இருக்கிறது” என்று அவனிடம் சென்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாக தலைவணங்கினான். “இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர், யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றாண் வீரன். “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உண் திறமைக்கு சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதானி அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கணிணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான் வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர், எந்த பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு
திறமையிருந்தாலும் காரியத்திற்கு
உதவமாட்டார்கள்.
நன்றி. ந. உதயகுமார் (சென்னை)
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே அதிவிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது - லெனின்
O6

வரை
திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
அன்னதாழம் பழம் (அண்ணாசி)
நாம் அன்னாசிப் பழம் என்று கூறுகின்றோம். அன்னாசி என்பது
தமிழ்ச் சொல் அல்ல. நம் பழந் தமிழர்
சிலர் இன்னும் இந்த அன்னாசிப் பழம் என்ற சொல்லை "அன்னதாழம் பழம்" என்றே கூறுகிறார்கள். சாப்பிடக்கூடிய பொருளுக்கு "அன்ன" என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சில கடற்கரையோரங்களில் தாழை மரங்கள் உண்டு. அதனுடைய காய் பார்வையில் அன்னாசி போன்றுதான் இருக்கும். ஆனால் அதைச் சாப்பிட முடியாது. அதனைத் தாழங்காய் அல்லது தாழம்பழம் என்று சொல்லுவார்கள். அன்னதாழம் (அன்னாசி, நாங்கள் சாப்பிடுகிறோம். தாழை உண்ண முடியாதது. உண்ணக்கூடிய தாழைக்கு "அன்னதாழை” என்று நம் மூதாதையர் சொல்லியிருக்கிறார்கள். இந்த அன்னதாழம் பழத்தைத்தான் சிங்களக் கலப்பினால் அன்னாசி என்று பேசப் பழகிவிட்டார்கள்.
அன்னாசி என்ற சொல் எந்தத் தமிழ்ப் பாடலிலுமோ அல்லது தமிழ் இலக்கியத்திலோ முன்பு வந்ததில்லை. இப்பொழுதுதான் அன்னதாழம் பழம்
அன்னாசியாக மாறிவிட்டது வருந்தத்தக்கது. இவற்றையெல்லாம் தமிழ் வாசகர்கள் அன்னதாழம் பழம் என்ற சொல்லை தமிழ் மரபில் இருந்து அழியாமல் காப்பாற்ற வேண்டியது ஒரு தலையாய கடமையாகும்.
உாழ்தின் ஒவ்வொரு නිශorégé ஆதிசயமும் ιρήιρώριόநிறைந்தது என்பதை கடிகாரமும்நாட்காட்டியும் எமது கண்ணிலிருந்து மறைத்துகிடநாம்
அனுமதிக்கக்கூடாது.
H.G. G6166t)
O7

Page 6
புரட்சிக் கவி
தொடர் 2
திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
பாரதிதாசன் பில்கணியம் என்ற வடமொழிநூலைத் தழுவி "புரட்சிக்கவி" என்ற காவியத்தை அழகு தமிழில் கவிதையாகத் தருகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து நெருங்கிடவும் முடியாத கதிரோன் றன்னில்
நீள்பிளவு ஏற்பட்டுச் சிதைந்த பங்கு இருந்திடவே இயற்கையினாற் குளிரு மூட்டி
ஏற்றமிகு பூமியதாய் தோன்றி யாங்கே திருத்திய தோர் சமுதாயம் முருவெடுக்க
தீந்தமிழே அன்னவர் முதல் மொழியாய் வருந்திமிக வளர்ந்ததோர் முத்த மிழ்நீ
வாயாய வாழ்த்தியுனை மனதில் வைத்தேன்.
அரசன் அமைச்சர்பால் அறிவிக்கின்றான்
"அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண் தமிழ் இலக்கியங்கள் தமிழிலக்கணங்கள் அமைவுற ஆய்ந்தாள். அயல்மொழி பயின்றாள் ஆர்ந்த ஒழுக்க நூல், நீதிநூல் அறிந்தாள்; அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள் கவிதை புனையக் கற்றா எளில்லை. மலரும், பாடும் வண்டும், தளிரும், மலையும், கடலும், வாவியும், ஒடையும், விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும், மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும், தமிழின் அமுதத் தன்மையும், நன்மையும், காலை அம் பரிதியும், மாலை மதியமும், கண்ணையும் மனத்தையும் கவர்வன, அதனால், என்மகள் அகத்தில் எழுந்த கவிதையை புறத்தில் பிறர்க்கும் புலப்படுத்துவதற்குச் செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்! ஏற்றஒர் ஆசான் எங்குள்ளான்? தோற்றிய வாறு சொல்க அமைச்சரே
08
 
 

வரை
மாமன்னனுக்கு மனதிலே ஒரு குறைபாடு இருந்தது. மகள் அமுதவல்லி மன்னனின் ஒரே பெண். அவள் தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்கள், இலக்கணங்கள் எல்லாம் கற்று விட்டாள் ஆர்ந்த ஒழுக்க நூல்களையும், நீதி நூல்களையும் கற்ரறிந்து கொண்டாள். இருப்பினும் அன்னாள் கவிதை புனைவதற்குரிய யாப்பிலக்கணத்தை இன்னும் கற்கவில்லை. மலரையும்,பாடும் வண்டினங்களையும், மலைகளையும், கடலையும், வானின் விரிவையும், மண்ணின் வனப்பபையும், மேலோர்களுடைய சிறப்பையும், நலிந்தவர்களுடைய நலிவையும், தமிழின் அமுதத் தன்மையையும், கவிதை மூலம் சொல்வதனால் அவை அழகு பெறும். எனவே, இளவரசியின் மனத்தில் எழுகின்ற உணர்வுகளை பிறருக்கு புலப்படுத்துவதற்கு செய்யுள் இலக்கணம் தெரிய வேண்டும் என்பது மன்னனின் கருத்து.
எனவே, மன்னர் அமைச்சரை அழைத்து "என்மகள் அமுதவல்லிக்கு செய்யுள் இலக்கணத்தை செவ்வையான முறையில் கற்பிக்கக் கூடிய சிறந்த ஆசான் தேவைப்படுகின்றது. ஏற்றதோர் ஆசிரியன் எங்கு இருக்கிறான்? உங்களுக்குத் தெரிந்த வகையில் சொல்லுக” என வினாவுகிறான்.
எண் சீர் ஆசிரியர் விருத்தம்
தலைமை அமைச்சன் புகல்வான் எனது மன்னா
சகலகலை வல்லவன்; இவ்வுலகோர் போற்றும் புலவன்; உயர் கவிஞன், அவன் பேர் உதாரன்!
புதல்விக்குத் தக்க உபாத்தியாயன் அன்னோன் இலையிந்த நாட்டனிலே அவன் ஒப்பார்!
எனினும், அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன். குலமகளை அன்னவன் பால் கற்கவிட்டால்
குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!
ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்; அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது தேனிதழாள் தனை அவனும், அவனைப் பெண்ணும்
தெரிந்து கொள்ள முடியாமல் திரை விடுக! பானல் வழி மங்கையிடம் “உதாரனுக்குப்
பார்வையில்லை குருட” னென்று சொல்லி வைக்க! ஞானமுறும் உதாரனிடம் "அமுதவல்லி நலி குஷ்ட ரோகி” என எச்சரிக்க
09

Page 7
வரை
தார் வேந்தன் இது கேட்டான்; வியந்தான்! "ஆம் ஆம் தந்திரத்தால் ஆகாத தொன்றுமில்லை; பேர் வாய்ந்த உதாரனைப் போய் அழைப்பீர், என்றான்.
பேச்சுவல்ல அமைச்சர் பலர் சென்றழைத்தார் தேர் வாய்ந்த புவிராஜன் போலே யந்தச்
செந்தமிழ்த்தீங்கவிராஜன் உதாரன் வந்தான் பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப்
"பைந்தமிழுக்குத் தொண்டு செயக்கடவோம்” என்றான்.
முதலமைச்சன் சொல்லுகிறான் "மன்னா! எனக்கு ஓர் தலைசிறந்த புலவனைத் தெரியும். அவன் பெயர் உதாரன். இவ்வுலகோரில் போற்றப்படுபவன். உயர் கவிஞன். அவனுக்குச் சமமான புலவன் இந்த நாட்டிலே இல்லை. இளவரசிக்கு ஏற்ற ஆசிரியன். ஆனால் ஒன்றிற்கு அஞ்சுகிறேன். உதாரனோ இளவயதும் அழகும் வாய்ந்தவன். இளவரசியை அவன்பாற் கற்கவிட்டால் ஏதாவது குறைவந்து சேர்தல் கூடும்.
இருப்பினும் நான் இதற்கோர் வழி சொல்வேன். எங்களுடைய அரச சம்பிரதாயப்படி இளவரசர்கள் (அரச குடியில் பிறந்தவர்கள்) பிறவிக் குருடரைப் பார்க்கக்கூடாது. அதேபோல புலவர்களுக்கும் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. புலவர்கள் என்ன காரணம் கொண்டும் தொழுநோய்க்காரரைப் பார்க்கக் கூடாது. புலவன் அரண்மனைக்கு செய்யுள் இலக்கணத்தை ஆரம்பிப்பதற்கு முன் இருவருக்குமிடையே ஓர் திரைச் சீலை போடப்படவேண்டும். அதற்கு முன்பு நாம் செய்யவேண்டியது"இளவரசி முன்செய்த தீவினையோ என்னவோ குஷ்டரோகியாகப் பிறந்து விட்டாள் என்று புலவனிடம் கூற வேண்டும். இளவரசிக்கு நாம் சொல்லிவைக்க வேண்டியது கற்பிக்க வந்திருக்கும் புலவன் பிறவிக் குருடன் என்று. இப்படி இருவருக்குமிடையே திரை விடுத்தால் நாம் சுலபமாக இந்தப் பிரச்சனைக்கோர் விடிவுகண்டுவிடலாம்.
மன்னன் முதலமைச்சரின் சாதுரியத்தைப் பார்த்தான்; வியந்தான். தந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை. பேச்சிலே வல்லமையுள்ள சில அமைச்சர்களிடம் உதாரனை அழைத்து வரும்படி அனுப்பினான். உதாரனிடம் எல்லாவற்றையும் சொன்னார்கள். அந்த செந்தமிழ்தீங்கவிராசன் அரண்மனைக்கு வந்தான். வேந்தன் தன் புதல்விக்கு செய்யுள் இலக்கணம் கற்றுத்தர வேண்டும் என வேண்டினான். உதாரனும் அதைக் கேட்டு "எம் பைந்தமிழுக்கு தொண்டு செய்ய கடமைப்பட்டுள்ளோம்" என்று சொன்னான்.
(தொடரும்)
என்ைோருக்குமே உங்கள் காதைக் கொருக்காைம். ஆனான் ஒரு சிரிைடம் மட்குமே வாயைத் தொருக்காைம்.
10

*
戟
羲薯 ...බ්‍රොෆ් :% ృ్నఫ్ట్వేవ్లో** வரை ܐܝܠ ܐܝܠ ܐܲܬ݂ܬܹܐܩܸܛܬ݂܂
போர்க்கால நெருக்கீடுகளில்
கிளி வேலூர் இ.மு.வி
បាបពុំហ៊ានយំ வாழ்வியல் போக்குகள் வசசி0ைர் ஆசீர்தி
贊 * . *
GB LI TIŤ iš EST6No நெருக்கீடுகளிலி பெண்களின் வாழ்வியல் போக்குகள்
இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் போரியல் நிலைமை களும் அதனூடாக வாழ்வை மேற்கொள் ளும் பெண்களின் நிலமைகளும் பற்றிய பார்வைகள் இன்றைய கால இலக் கியங்களில் செல்வாக்கு செலுத்துகின்ற தொரு விடயமாக மாறி வருகின்றது. கொடுரமான யுத்த நிலமை என்பது எண்ணிப்பார்க்க முடியாததொரு விடய மாகும். அதே நேரம் இவற்றின் அழிவு களை எவராலும் கணக்கில் அளந்து கூறிவிடவும் முடியாததே. அத்தகைய நெருக்கீட்டைக் கொண்ட சுற்றுச்சூழலில் வாழ்கின்ற பெண்களின் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் பற்றி பெண்ணியம் சார்ந்த அமைப்புக்கள் பேசிக்கொள்கின்றன. பெண்களின் உடல் சார்ந்த, உளம் சார்ந்த பிரச்சினைகள் எமது சமுதாய வரம்பில் அதிகமாகக் காணப்படுகின்ற போதிலும் உளரீதியான மனவடுக் களைத் தீர்க்க முடியாத நிலமையையே அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.
பொருளாதாரம்
இன்றைய கால கட்டமானது
பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த
காலமாகவே மாறியுள்ளது. எரிபொருட் செலவுகளின் அதிகரிப்பானது ஏனைய பொருட்களது விலையேற்றத்திற்கு அடித்தளமிட்டதொரு நிகழ்வாகிறது. தாம் பெற்ற பிள்ளைகளைக் காக்க வேண்டும் என்பதற்காக வாயை, வயிறைக்கட்டிச் சீவிக்கின்ற எத்தனை யோ தாய்மார்களை வதிவிட முகாம் களில் நாம் காண்கின்ற அதேசமயம் அவற்றினுள்ளே கணத்திற்கு கணம் தோன்றி மறையும் கலாச்சார சீரழிவு களுக்கு அப்பெண்ணானவள் முகம் கொடுக்கத் தவறியதில்லை. முக்கியமாக கணவனை இழந்த பெண்கள் பாதுகாப் பிற்காக ஏங்குவதும், அன்றாட பொருளா தார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வாடுவதும், எதிர்காலம் பற்றிய கேள்விக் குறிகள் போன்றன முக்கியமான பாதிப்புக்களாக அவர்கள் சார்பாக நாம் கூறிக்கொள்ளலாம். இழப்புக்கள்
முற்பட்ட காலங்களில் பொருளா தார, செல்வந்த நிலமைகளில் உயர் வாகக் காணப்பட்ட பெண்கள் போரின் கொடுங்கோலால் அவற்றினை இழந்து,
பாதிப்புற்று நிர்க்கதியான கதைகள்
ஏராளம். குடும் பத் தலைவனின் பிரிவுகளிலும் மனம் தளராத பெண்கள் தனிமரமாக நின்று தங்களால் இயன்ற வேலைகளைச் செய்து வாழ்வில் முன்னேறியிருக்கின்றனர். அத்தகைய வாழ்க்கையில் மீண்டும் விதிவிளையாடி அவர்களை ஏழ்மைப்படுத்தியுள்ளது. முக்கியமாக நாளுக்கு நாள் வாழ்க்கை
11

Page 8
பற்றிய போராட்டம், இயலாமை போ ன்ற காரணங்களினால் அவர்களின் உள்ளத்தில் பாரிய உளத்தாக்கங்கள் ஏற்படுவது இயல்பான விடையமா கிவிட்டது. எப்படித்தான் அவள் தனிமனிசியாக கஷ்டப்பட்டு வாழ்ந்த பின்னும் கூட சமூகப் பார்வைகள், கதைகள், பார்வைகள் போன்ற கூரிய அம்புகளாகத் தாக்கவே செய்யும். அதை மாற்றுவது என்பது அல்லது அதனையும் மீறி கவலையற்று வாழ் கின்ற பெண்கள் நம்மத்தியில் அதிகம் எனக் கூறிவிடவும் முடியாது.
பாதுகாப்பு போர்க்கால நிலைமைகள், ஆண், பெண் என்ற வேறுபாடுகளற்று அனை வரையும் குற்றவாளிகள் எனக் கருது வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றன. திடீர் திடீர் என வெடிக்கும் குண்டுச்சத்தங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் தேடுதல் வேட்டைகள், சோதனைகள் போன்றன மக்கள் மத்தியில் பயப்பீதியினை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக மாறியுள் ளது. அந்த வகையில் இவ்வேதனைக் குள்ளாகும் பெண்களும் விதிவிலக் கல்ல முக்கியமாக தனிமை, யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில் பாதுகா
வரை
ப்பிற்காகத் தவிக்கின்ற, “யாரும் உதவிக்கு வரமாட்டார்களா?” எனக் கேட்கின்ற மனங்கள் பெண்ணின் பால் மிகுந்த வேதனையையும் அளவற்ற பயப்பீதிகளையும் கொடுக் கின்றன. இந்நிலைமை இரவு வேளை களிலும் சரி, பகல் வேளைகளிலும் சரி பாரிய பின்னடைவுகளையே ஏற்படு த்திக் கொள்கின்றன.
சமூகம் -
முக்கிய நிலைமைகளிலி சமூகம் என்ற கட்டமைப்புக்கள் பெண்களின் பல்வேறு ஆற்றல்கள், உணர்ச்சிகளை கட்டிப் போட்டு விடுகின்றன. "அவள் அடங்காப்பிடாரி,
புருசனை இரை கொடுத்து சுத்தித்
திரிகின்றாள்." இத்தகைய பல விமர் சனங் களி பெண் களை கட்டிப்போடும் வசனங்க ளாகவும், அவளை நோகடிக்கச் செய்யும் வார்த்தைகளாகவும் இச் சமூகத்தின் பால் காணப்படுவதை நாம் மறைக்க முடியாது. போரின் இழப்புக் களும், துயரங்களும் ஒரு பக்கமிருக்க சமூகத்தின் வேட்டொலிகள் மறுபக்க மாக பெண்ணை மீண்டும் மீண்டும் வாட்டுகின்ற போது அவளால் என்ன தான் செய்ய முடியும்? “உலகத்தின் தாய், அன்னை, பொறுமையின் சிகரம், மென்மையானவள்.” என்றெல்லாம் பாராட்டிப் புகழ்கின்ற இச் சமூகம் இன்னோர் பக்கமாக அவளை ஏன் துயரத்திற்கு இட்டுச்செல்கின்றது? இவை எல்லாவற்றிற்கும் தீர்வாக, பெண் தன்னடக்கத்துடன் வாழ நாம் என்னத்தைச் செய்துவிட முடியும்? இக் காலச் சமூகமே நீ இதற்கு பதிலைச் சொல்லித்தான் ஆகவேண்டும்?
12
 

Friends!
வரை
Every action has an equal and an opposite reaction. Proverbs also
follow that path. How? Here are some Examples:
1. All good things come to those
who wait. But, Time and tide wait for no
1a. 2. The pen is mightier than the
sword. But, Actions speak louder than words. 3. Wise men think alike.
But, Fools seldom differ. 4. The best things in life are
free. But, There is no such thing as a free lunch. 5. Slow and steady wins the
1raCᎾ. - But, Tine waits for no man. 6. Look before you leap.
But, Strike while the iron is hot. 7. Do it well, or not at all.
But, Half a loaf is better than
ՈՕՈՇ- . 8. Birds of same feather flock together. , * But, Opposites attract.
9. Doubt is the beginning of
wisdom But, Faith will move mountains.
10. Great starts make great
finishes. But, It is not over until it is over. 11. Silence is golden.
BUT The squeaky wheel gets the grease. 12.You're never too old to learn.
BUT You can't teach old dog new tricks 13.What's good for the goose is
good for the gander. BUT One man's meat is another man's poison. 14.Too many cooks spoil the
broth. BUT Many hands make light work.
15. Hold fast to the words of
your ancestors.
BUT Wise men make proverbs and fools repeat them. "... "
Sathananthan
13

Page 9
வரை
aaos GUCuad
&முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தீன் மொழிதான். இகைரேகையை வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக்
கண்டறிந்தவர் எட்வேட் ஹென்றி. &மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். $பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம், அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி?
அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும். $நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியைப் பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது
பால் உற்பத்தியைக் குறிப்பதும் ஆகும். இமஞ்சல் புரட்சி என்பது எண்ணை வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்குவதாகும்.
O O OUT மாறுறுபபடட நாடுகள R டச்சு கயானா - சுரினாம் * பர்மா - மியான்மர்
R அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ * கிழக்கு பாகிஸ்தான் - பங்களாதேஷ்
P அபிசீனியா - எதியோப்பியா P சிலோன் - ரீலங்கா Pகோல்டு கோஸ்ட் - கானா * கம்பூச்சியா - கம்போடியா *தென்மேற்கு ஆப்பிரிக்கா - நமீபியா * சயாம் - தாய்லாந்து R வட ரொடீஷியா - ஜாம்பியா Pபார் மோஸ - தைவான் P டாங்கனீகாமஇசன்சிபார் - Fஹாலந்து - நெதர்லாந்து தான்சானியா R மலாவாய் - நியூசிலாந்து Pகோட்டே டி ஐவோயர் - ஐவரி கோஸ்ட் P மலகாஸி - மடகஸ்கார் *சாயிர் - காங்கோ Pugust);560Tib - இஸ்ரேல் f>சோவியத்யூனியன் - ரஷ்யா Rடச் ஈஸ்ட் இண்டீஸ் - இந்தோனேசியா
தெண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் கருவியின் பெயர் Grosslyurt getb. (SCUBA-Self Cointained Underwater Breathing Apparatus)
முெதன் முதல் 1893ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு
அமெரிக்கா.
ெெதாலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம்,
சிகப்பு.
0ெ கணினியின் வேகம் வினாடிக்கு ஃலொப்ஸ் (Flops) என்ற அடிப்படையில்
கணக்கிடப்படுகிறது.
14
 

நேர்த்தியாய் எழுதுவோம் ༽
போட்டி இல. 06
திருவழ்ழுவரால் இயற்றப்பட்ட திருக்குரலானது உலகப் புகழ்பெற்ற ஓர் இலக்கியமாகும். இற்றைக்கு 2000 வருடங்கள் பழமையானது. இதில் இருபதிருபதாக 133 அதிகாரங்களில் 1330 குரள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் குறள்வெண்பா எனும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்து பல பெயர்களில் அளைப்பர். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால்களும் கொணர்டமையால் முப்பாள் என்றும், உத்தரவேதம், தெய்வ நூல், பொதுமறை, பொய்யாமொளி, வாயறை வாழத்து, தமிழ் மறை, திருவள்ளுவம் போன்றன அவற்றில் சில. கருத்துக்களை இன, மொழி, சமய பேதங்களின்றி காலங்கடந்தும் பொருந்துவன போல் கூறியமையால் இதை “உலகப் பொரு மறை” என்றும் கூறுவர். திருக்குறளுக்கு பளங்காலத்தில் பலரும் உறையெழுதியிருக்கிறார்கள். அவற்றில் அவற்றில் புகழ்வாய்ந்ததாகக் கருதப்பட்டது பரிமேலளகர் உரைதான். தற்காலத்தில் எழுதப்பட்ட உரைகளில் மு.வரதராசனார் எழுதிய உரை சிறப்பாகக் கருதப்படுகிறது. உலகில் அதிக மொளிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறள் மூன்றாவது இடத்திலுள்ளது. இதுவரை 80 மொழிகள் வரையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மாணவர்களே! மேலே தரப்பட்டுள்ள பத்தி எழுத்துப் பிழைகளையோ அல்லது இலக்கணப் பிழைகளையோ கொணர்டவை. இவற்றைத் திருத்தி எழுதி, மறுபக்கத்தில்
உள்ள நறுக்கினையும்
பூரணப்படுத்தி எமது முகவரிக்கு 10.08.2010 இற்கிடையில் அனுப்பிவையுங்கள். சரியான விடை எழுதி அனுப்பும் அதிஷ்டசாலி மாணவருக்கு ரூபா 500/- வழங்கப்படும்.
15

Page 10
Qiang
நேர்த்தியாய் எழுதுவோம்" போட்டி இல. - 4 இற்கான பரிசைப்பெறும் அதிஷ்டசாலி மாணவர் செல்வன். கனகரத்தினம் மதுராகரன், யா/இந்துக்கல்லூரி பாராட்டுக்குரியவர்: செல்வன். இரத்தினசிங்கம் பூரீராம், யா/அச்சுவேலி மத்திய கல்லூரி செல்வி மேனுஷா கனகலிங்கம், யா! மகாஜனக் கல்லூரி தெல்லிப்பளை, நேர்த்தியாய் எழுதுவோம் போட்டி இல.04 இற்கான
நேர்த்தியாய் எழுதிய வடிவம்
*எப்படி நுாற்றுக் கணக்கான புது இயந்திர சாதனங்களைக் கணிடுபிடித்தீர்கள்” என்று ஒருவர் தோமஸ் அல்வா எடிசனைப் பார்த்துக் கேட்டபோது, “படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்” என்று அவர் பதிலளித்தார். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்திற்கும் மேலானவை! நவீன மின்சார இயந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர் எடிசன் உலகில் முதல் தொழிற்றுறை ஆய்வுகூடத்தை அமெரிக்காவில தோற்றுவித்தவர். 18-19 நூற்றாணர்டுகளில் அமெரிக்காவிலும் ஐரோப்பியாவிலும் மின்சக்தி இயந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர். அவரது முதலாவது உயர்ந்த படைப்பு மின்சாரக்குமிழ். ஒழுங்கான கல்விப் படிப்போ, உயர்ந்த பட்டப்படிப்போ எதுவும் அற்றவரான எடிசன் கடின உழைப்பாலும் ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்த ஒரு மாமேதையாவார்.
நேர்த்தியாய் எழுதுவோம் போட்டி இல. 06 }}
LLLLS LLL LLS L0L LL L0 LL L00 L0 LLL LLLL LL 00 LLSLS LS LLL LLLS LLS LLL LL LLL LLL LLLL LL LL SL LLLLL LLSL LS LSL SLL L LLLLL LL LLL LLLLL LL0 LLL LLLL LS LL LS LS LSS S SS LL LLLS LLL LL LLL LLL LLLL LL LS LL LS LS LSS
LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L 00 L L L L 0L L L L L L L L L L L L L L L S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
16

வரை
Proverbs and their meanings:
I Better be the head of a dog than the tail of a lion.
It is better to be a leader of a small group than to be a subordinate in a bigger one.
I Better flatter a fool than fight him.
It is better to avoid disputes with stupid people.
Better late than never. Better to do Good things, even it is late, than not to do it at all.
I Better to lose the saddle than the horse.
It is better to stop and accept a small loss, rather than continue and risk losing everything.
I Birds of same feather flock together.
People of the same sort are usually found together:
Blood is thicker than water. Family relationships are stronger than relationships with other people.
Charity begins at home. A person's first duty is to help and care for his own family.
I Clothes don't make the man.
Appearances can be deceiving.
I Constant occupation prevents temptation.
When you work you avoid temptation.
I Diligence is the mother of good fortune.
Hardwork brings rewards.
I Dogs of the same street bark alike.
People from the same background have the same behaviour:
Don't bark if you can't bite. Don't complain if you can't enforce your point of view.
LDon't count your chickens before they're hatched.
You must not be too sure that something will be successful. (In matters, you do not have full control)
Don't judge a book by its cover. Don't judge a person (or anything) by appearance.
IEasier said than done.
What is suggested sounds easy but it is more difficult to actually do it.
17

Page 11
வரை
LET'S LEARN TO SPEAKN ENGLISH
By:
ஆங்கிலத்தில் பேசப் பழகுவோம்
4 , மாதமொரு உரையாடன்
தொடர். 2
Monthly Conversation
Professor A.V. Manivasagar, Ph.D. Head/Dept. of Political Science, University of Jaffna
At the Braeakfast Table
In this lesson Mrs. Barathy has prepared the breakfast for her family and she serves that at the dining table.
Mrs. Barathy : Renu, telyour
Appa (Daddy) that the breakfast is ready. Ask him to come to the dining room. Also bring Ravi and Ramesh to the dining
ΠOOI, Renu : O.K. Amma (Mummy).
We are all just coming. Mr. Barathy: Renu, is the
breakfast ready? Renu: Yes Appa (Daddy).
Amma is calling
everybody to the dining
fOOrT.
Mr. Barathy: Come on, Ravi and
Ramesh, let's have our breakfast. Mrs. Barathy: Renu, Ravi and
Ramesh, please take your seats. Renu, don't trouble your Appa (Daddy). Let him sit on his chair. Mr. Barathy: It seems that you
have prepared a lot of things for breakfast today. Mrs. Barathy: Dear children, First all of you should drink your milk, and then I'll give you the other things. Renu: Amma (Mummy), I have
finished my milk, now give me two slices of bread with
butter. I also want one
banana. Mrs. Barathy: You are a good
girl, Renu.You have already finished your milk.
18
 

Now here are your two slices of bread with butter. Also take this banana. I have also put
some jam on your plate.
Renu: Thank you, Amma. .
Mrs. Barathy: Now Ravi and
வரை
also want one apple. Mrs. Barathy: Here is your
plate. I have put
everything you want in
your plate. - Ramesh: Amma 6Mu溫蠍"
have also finished my "r
Ramesh, both of you should also drink your milk quikly. Ravi: Amma (Mummy), I have
also finished my milk. Give me two slices of bread with jam only. I
milk. I want bread with butter only. I don't like jam. Also give me one banana.
Mrs. Barathy: Ramesh, I am
also putting one apple in your plate.
19

Page 12
Mr. Barathy: Ramesh, you must
eat apple. It is very good for the health. - Ramesh: O.K. Appa (Daddy). Mrs. Barathy: What would you
like dear? - Mr. Barathy: Please give me
three slices of bread with sambaland banana. That's enough for me. Mrs. Barathy: Have it dear. Mr. Barathy: Renu, passon the
salt and pepper container to me. Give me that source bottle also. Renu: Haveit Appa (Daddy). Ravi: Amma (Mummy), I also
want some sambal. Mrs. Barathy:O.K. Have it,
Ravi. Mr. Barathy: Dear, give me a
cup of hot tea. Mrs. Barathy: Have it please. Ranu: Amma (Mummy'), now
you should also start eating. We have already finishd our breakfast, but you have not even started.
Mrs. Barathy: Oh! I am going to
வரை
Start. -
Mr Barathy: Renu, give me a
piece of cheese.
Renu: Have it Appa (Daddy). Mrs. Barathy: Would you like
- another cup of tea. Mr. Barathy: Please give me.
Mrs. Barathy: Pass on your
cup to me. Mr. Barathy: Ravi, pass on my
cup to Amma (Mummy). Ravi : Amma (Mummy), here is my Appa's (Daddy's) cup for tea. Mrs. Barathy : Ravi, now give
this cup of tea to your Appa (Daddy). Be careful it is quite hot. Don't spill it on the table. - Mr. Barathy: Thank you dear. Mrs. Barathy: O.K. Now we
have all finished our breakfast. Who is going to help me to clean the table? Renu : Amma (Mummy), I'll
help you. Mrs. Barathy: You are really a
good daughter!
We are what our thoughts have made us, so take care about what you think. Words are secondary. Thoughts live; they travel far.
20
 
 

உயிர்வேலிக்டு உயிர் கொடுக்டும் பூவரசு
இலங்கைத் திருநாட்டின் வட பகுதி மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்த பல் பயன் தரு(ம்) மரங்களுள் பூவரசும் ஒன்றாகும். குறிப்பாக இந்து சமயத்தவரது பிறப்பில் தொட்டிலாகி பின் நாலுபேர் சுமந்து இறுதியில் மாயனத்தில் எரியூட்டப்படும்போது நெஞ்சாக் கட்டையாகிச் சேர்ந்தெரியும் வரை பூவரசு மரத்திற்கும் எமக்குமிடையலான தொடர்பு மனித உறவுகளுக்கு மேலாக மேன்மையானது எனலாம். இடையில் உயிர்வேலிகளுக்கு உயிர் கொடுக்கும் உன்னதமான கைங்களியத்திலும் இதனது பங்களிப்பு காத்திரமானது. பூவரசு என்பது ஒரு முத்தாய்ப்பான சொல். பூ என்பதில் அதன் மென்னையும் அரசு என்பதில் அதன் வன்மையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதிலிருந்து ஒரு மனிதனுக்குரிய பண்பியலை துலாம்பாரமிட்டு காட்டுகிறதல்லவா. இதிலிருந்து இப்பெயர் ஒருவகையில்
கலாநிதி குமிகுந்தன், தலைவர், விவசாய உயிரியல் துறை, விவசாயபீடம், யாழ். பல்கலைக் கழகம்.
காரணப்பெயர்தான்.
தாவரவியலின் பக்கத்திலி இதனை ஆங்கிலத்தில் Portia tree அல்லது tulip tree என அழைப்பர். பூக்களுக்கே அதிபதியாகிய மல்வேசியே (malwaceae) கும்பத்தின் உறுப்பினர் தாவரவியலாளர்களின் இரு சொற்பெயரீட்டில் தெஸ்பீசியா GusTÜL6ð6ósuur (thespesia populnea) என அழைப்பார்கள். கடற்கரைகளும் 600 மீற்றர் உயரம் வரையும் உலர் வலயத்திலும் செறிந்து காணப்படும். மரம் வட்டித்த தலை என்றும் பச்சையாக இருப்பது இதனது சிறப்பியல்பு. பட்டை ஆழமாக வெடிப்புள்ளதாக இருக்கும்.ஆனால் இளம்பருவத்தில் அழுத்தமானதாக இருக்கும். மரத்திலுள்ள பொருக்குகள் 2.5 செ.மீ அகலமானவை. பட்டை வாய்கள் பெரிதாகவும்
தெளிவாகவுமிருக்கும். இலைகள்
தனியிலைகளாக ஒன்றுவிட்ட ஒழுங்கில் பெரியவையாகவும் அகலமானவையாகவும் இதயவுருவிற்கு உதாரணமாகவுமிருக்கும் இலைகள்
21.

Page 13
அங்கையுரு நரம்பமைப்பையும் உச்சி கூரானதிலிருந்து நீண்டு கூர்ந்தது வரை தொடர் விளிம்பு உடையதாகவும் நெடிய காம்பையும் கொண்டிருந்து கரும்பச்சை நிறமுடையதாகவுமிருக்கும்.
பூக்கள் தனித்தும் இலைக்காம்பின் கக்கங்களிலும் காணப்படும். அளவில் பெரியனவாக மஞ்சள் நிறத்துடன் கவர்ச்சியாக காணப்படுவதால் புவூக்கு அரசன் என்றார்களோ எனவும் எண்ணத்தோன்றுகிறது. ஆனால் பூ வாடும் போது முகம் மாறும் மனிதரைப்போல நிறம்மாறி ஊதா அல்லது செஞ்சிவப்பாக மாறிவிடும். உயிர் வேலிக்கு உரமாக இயற்கையுடன் இயற்கையை அனுசரித்து நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து விலகி நாகரிக மோகத்தினுள் சிக்குண்டு அபிவிருத்தி என்ற மாயைக்குள் எம்மை நாமே வசப்படுத்திக் கொண்டதால் நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் நியாயங்கற்பிக்க முனைந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இயற்கை சீறிச்சினந்தெழும்பும் போதே எங்கள் தவறுகளை எங்களால் இனங்கான முடிகிறது. "நிஷா” என்னும் பெயர் கொண்டு அடித்துவீசிய புயலுடன் கனமழையும் சேர்ந்து யாழ்ப்பாணமே வெள்ளக்காடகிய நிகழ்வை எவரும் மறந்திரார். புயலும் மழையுமாக ஆடிய கோரத்தாண்டவத்தில் பல நிழல்தந்து பாரம்பரிய கதைகளைப் பறைசாற்றிய மரங்களும் சரிந்தனவே. சரிந்தவை சிலவென்றால் இதே காரணத்தை சாட்டாக வைத்து சரிக்கப்பட்டவை பல. மரங்களுக்கிருந்த மெல்லியமனங்கூட மனிதருக்கில்லாமல் இருந்ததை கட்டியங்கூறிய துன்பியல் நிகழ்வு இது.
இந்த இயற்கையனர்த்தத்திற்கு காரணமாக பல கதைகள்
புனையப்பட்டாலும் இயற்கையை - உயிர்வேலிகளை - மாற்றி செற்கையை - சிமேந்து மதிலை - உருவாக்கியதன் விளைவும் அதிலொன்று. உயிர்வேலிகளின் உயர்வை உதவியை உயிர்ப்பை அறியத் தவறிய மனிதருக்கு இயற்கை தந்த பாடம் இதுவல்லவா. உள்ளிருந்து நீர் வெளியேற சீமெந்து மதிலில் இடமில்லாததால் அந்த செயற்கை வேலியில் உயிர்ப்பு இல்லாததால் முழு வீடுமே நீரில்
மிதந்தது. வேலியே பயிரை மேய்ந்த
கதை போல செயற்கை மதிலால் உயரத்திலிருந்த வீடு கூட வெள்ளக்காடாகியது. பாதுகாப்பு பாதகமான நிகழ்வு இதுவல்லவா. ஆனால் உயிர்வேலிகளைத் தக்க
வைத்திருந்தவர்களின் வீட்டினுள் பெய்த
மழை வேலியினூடாக பாய்ந்தோடியதால் வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டது. பல நாட்களாக
22
 
 

எங்குமே வழிந்தோட முடியாது தேங்கி நின்ற வெள்ளத்தில் மண் இளகி செயற்கை மதில்களும் சாய்ந்த செய்திகளுக்கிடையில் உயிர்வேலிகளுக்கு வரம் கொடுத்த மரங்களுள் பூவரசு மரமும் தங்கி தாக்குப் பிடித்த விந்தையை இந்த விந்தை மனிதர்கள் அனுபவமூடாக கண்டும் தொடர்ந்தும் உயிர்வேலிகளின் தடயங்களை அழித்துக் கொள்கிறார்களே! இயற்கை இதைக் கண்டபின்பும் எப்படி சீறிச் சினக்காது இருக்கும்? அதனால் இவ்வருடம் அகோர வெய்யிலாக எரித்துக் காட்டியிருக்கிறது.
பல் பயன் தரு(ம்) மரத்திற்கொரு உதாரனம்
பல பயன்களைத் தரக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்றாகும். உயிர்வேலிகளுக்கு உரமூட்டும் கைங்கரியத்துடன் இதனது கதிகால்கள் பல தேவைகளுக்கும் பயன்படுகிறது. பதிய முறை இனப்பெருக்கம் ஒன்றையே தன்னினம் பெருக்கும் பொறிமுறையாக வைத்திருக்கும் பூவரசிற்கு பூவினால் அதற்கு மேல் ஏதும் பயனில்லை. ஆனால் பூவரசினால் எமக்கு கை மேல் பலன். நல்ல மரம் தளபாடத் தேவைகளுக்கு பயன்படுகிறது. எஞ்சியது மிஞ்சியது என அனைத்தும் விறகாகும் விந்தையும் இதில் காணலாம். இதை விட இலைகள் பசுந்தாள் இலைப் பசளைகளாகப் பயன்படுகின்றன. உயிர் வேலிகளில் வளர்ந்திருக்கும் பூவரசு மரங்களிலிருந்து கிளைகள் முழுவதும் வெட்டப்பட்டு கதிகால்கள் தனியாக்கப்பட்டபின் கதிகால்களை சிறகடித்து பெறப்பட்ட இலைகளை வெங்காயம் புகையிலை நடவு செய்யும்
விளை நிலத்தினுள் தாழ்த்து விடுவர்.
இலைகள் உக்கிய பின் நிலத்தைச் சாறி
நாற்று நடவு செய்வர்.
நெஞசாங்கட்டையாக
இப்போதெல்லாம் உயிர்வேலிகளை தவிர்த்து சீமெந்து மதில் கட்டுபவர்கள் ஏறக்குறைய வேலியிருந்து ஒரு அடி உள்ளேயே மதில் கட்டுவது வழக்கம். இப்படி மதில் கட்டும் போது உயிர்வேலியிலுள்ள பூவரசு மரங்களை அப்படியே விட்டுவைப்பர். ஒன்று கட்டிய மதிலின் மேல் வாகனமேதும் முட்டிவிடாமல் பாதுகாப்புக்கென விட்டு வைக்கின்றார்களெனின் செயற்கை மதிலை பாதுகாக்க இயற்கை உயிர்வேலி மரங்கள் தேவையென்றாகிறதல்லவா? இப்போது எது எதற்கு பாதுகாப்பு? இன்னொன்று அந்த வீட்டிலுள்ளவர்கள் எண்ணிக்கைக்கேற்ப இந்த பூவரசு மரங்கள் நரபலிக்கு வளர்க்கப்படும் கடாக்கள் போல. இருப்பவர் திடுதிப்பென இறந்து விட்டால் அதாவது இயற்கை எய்திவிட்டால் அங்கே சேர்ந்திருந்து நெஞ்சாங்கட்டையாக இயற்கை எரிவதற்காக இப்பூவரசு மரங்களைப் பயன்படுத்துவர். இதிலொரு சுவாரஸ்யமான
23

Page 14
அம்சமொன்று உண்டு. கவியரசர் கண்ணதாசன் எழுதி வைத்தபடி, வீடு வரை உறவு, வீதி வரை மனைவி காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ? என எழுதியதன் மர்மம் இப்போது தானே புரிகிறது. இதனை இறந்த உடலுடன் நெஞ்சாங்கடடையாக இருக்கும் பூவரசு மரம் சொல்லக்கேட்கும் போது புல்லரிக்கின்றது. இறந்த உடலைப் பார்த்து இப்படிக் கூறுமாம் பூவரசு "அங்கே பார்! உன்னுடைய வீடு வரை அனைத்து உறவுகளும் அடங்கிவிடும், வீதி வரையும் உன் மனைவியும் வந்தாள், சுடுகாடு வரையும் உனது பிள்ளையும் மூன்று தரம் பானையைக் கத்தியால் கொத்தி சுற்றி வந்து கொள்ளி
வரை வைத்தவுடன் உன்னைத் திரும்பிப் பார்க்காமலே செல்கின்றாரே. ஆனால் நான் இங்கே உன்னுடன் கிடந்து நீ எரிய நானும் எரிந்து உனக்காக நானும் எரிந்து எரிந்தெடுத்த ஒரு பிடி சாம்பலில் அரைப்பங்கு நானெரிந்த சாம்பலாகி என்னையுஞ் சேர்தல்லவா கிரியை செய்து பிதிர் கடன் செலுத்துகிறார்கள். இவ்வளவுக்கும் இறந்த பின் இவ்வளவு தூரம் உன்னுடன் அலையும் எனக்காக உனது வாழ்நாளில் ஒரு பூவரசு மரத்தையாவது நட்டாயா? கேள்வி நியாயமானதுதான் ஆனால் பதிலை இங்கேயே தேடிக்கொண்டிக்கிறேன். உங்களுக்காவது இந்தக் கேள்விக்கான பதில் தெரிகிறதா? முயற்சித்துப் பாருங்களேன்!
Ôl-9) efi Blegydd...
நம் நாட்டவர் ஒருவரும் வெளிநாட்டவர் ஒருவரும் ஒருநாள் கடவளைச் சந்திக்கச் சென்றனர். கடவுள் அவர்களை வரவேற்று “உங்களுக்கு எண்ன வேண்டும், கேளுங்கள்” என்றார். அதற்கு அந்த வெளிநாட்டவர்: “கடவுளே! என்நாடு எப்போது அபிவிருத்தியடையும் என்று கூறவேணர்டும்” என்று கேட்டார்.
“உங்கள் நாடு அபிவிருத்தியடைய ஐம்பது வருடமாவது செல்லும்” என்று கடவுளும் கவலையோடுதான் சொன்னார். உடனே அந்த வெளிநாட்டவர் "கடவுளே! அதைப் பார்க்க நான் உயிரோடு இருக்கமாட்டேனே!” என்று அழத்தொடங்கிவிட்டார். - பின் நம்நாட்டவர் கடவுளைக் கேட்டார்: "கடவுளே எங்கள் நாடு எப்போது அபிவிருத்தியடையப்போகிறதென்று கூறுங்கள்” என்றார். இதைக்கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கடவுள் ஓவென்றழுதுவிட்டார். பின் "நீங்கள் அபிவிருத்தியடையிறத பார்க்க நான் உயிரோட இருக்கிறனோ தெரியேல்ல” என்றார்.
24
 

வரை தொலை நகரங்களை இணையத்துடன் இணைக்கும் WவX
தொலை நகரங்களை இயையத்துடன்
26o600Tée5ò WiMax இன்று உலகளாவிய ரீதியில் மூன்று அடிப்படை முறைகளில் நாம் இணையத்தில் எமது கணினிகளை இணைத்து உலவ முடிகின்றது.
1. Broadband access: 65656fs) அல்லது காரியாலயங்களில் ADSL/DSL96bsog Cable Modem களின் உதவியுடன் Broadband Ggb|Tai) நுட்பத்தினை பயன்படுத்துவதானால் 2. WiFi Access; வீடுகளில் அல்லது காரியாலயங்களில் WiFi தொழில் நுட்ப முறைமையில் வலையமைப்பு செய்யப்பட்டு அவ் வலையமைப்பு இணையத்துடன் இணைக்கப்பட்டிருத்தல் அல்லது WiFi தொழில் நுட்ப முறைமையில் அமைந்துள்ள HotSpot களில் கணினிகளை இணைப்பதன் மூலம்
3. Dial-up சாதாரண தொலைபேசி இணைப்புக்களின் உதவியுடன்
இணையத்தில் கணினிகளை இணைப்பதன் மூலம் (இதில் Broadband வசதியினை பெற முடியாது) இம் மூன்று முறைமைகளிலும் உள்ள பிரச்சினை என்னவென்றால் Broadband S60600TL முறைமையானது சாதாரண இணைய இணப்பு முறைமைகளிலும் பார்க்க செலவு அதிகமானது. அத்தோடு இவ் வசதியானது எல்லா இடங்களிற்கும் கிடைப்பதில்லை. WiFi முறைமையில் அதன் உள்ளடக்கப்பரப்பு (Coverage Area) மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது ஆகும். ஆகவே இக் குறைபாடுகளை நீக்கி இணையத்தில் உலவுவதற்கு இன்றைய பயனாளர்கள் புதிய தொழில்நுட்பத்தினை எதிர்பார்க்கின்றனர். அத் தொழில்நுட்பமானது பின்வரும் பண்புக் கூறுகளை உடையதாக இருக்க வேண்டும்.
25

Page 15
1.9536.5cup6OLu Broadband
சேவை
2. ADSL/DSL/ Cable
modem போன்றவற்றை விட சிறிது செலவு அதிகமானலும் தொலை நகரங்கயைம் கிராமங்களையும் வடமற்ற முறையில் இணையத்துடன் இணைக்கும் தொழில் நுட்பம்.
3. அதிகளவு
உள்ளடக்கப்பரப்பு
இவ் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது அறிமுகமாகி பயன்பாட்டில் உள்ள தொழில் நுட்பம் தான் WiMAX, Worldwide Interoperability for Microwave Access 6T6drugs6d si(5is(3LD WiMAX ஆகும். இத் தொழில் நுட்பமானது IEEE இனால் 802.16 என நியமபடுத்தப்பட்டுள்ளது. இன்றைய தொலைபேசிப் பாவனையாளர்கள் Land line தொலைபேசி பாவனையை புறந்தள்ளி கைத்தொலைபேசிகளை அதிகம் உபயோகிப்பது போன்று இன்றை இணைய பயனாளர்கள் தமது கணினிகளை இணையத்தில் (S60600TLugsfög uugiru(65gib ADSL/DSL/Cable modem போன்றவைக்கு பதிலாக WiMAX தொழில்நுட்பம் முன்னிடத்திற்கு வரப்போகின்றது.
WiMAX QILLocö(D QJaDGDULIGODKOL தொழில்நுட்பரீதியில் WiMAX ஆனது WiFi போன்று தொழிற்பட்டாலும் அதன் சிறப்பம்சங்களாக அதிவேகம், அதிதூரம், அதிக பயனாளர் பயன்டுத்தத்தக்க இயலுமை என்பவற்றை குறிப்பிடலாம். தொலைத் தொடர்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் வடங்களின் மூலம் இணைய சேவையை வழங்கமுடியாமல் இருக்கும் இடங்களிற்கு அதிவேக Broadband இணைய இணைப்பினை வழங்குவதற்கு பதிலீடாக WiMAX அமைகின்றது. WiMAX முறைமையானது இரண்டு பிராதான பகுதிகளைக் கொண்டிருக்கும்.
26
 

வரை
WiMAX கோபுரம் - கைத் தொலைபேசி வலையமைப்பு கோபுரங்களைப் போன்று இது காணப்படும். இதன் உள்ளடக்கப்ப பரப்பானது (Coverage area) 3000 சதுர மைல்களாகும். 2. WiMAX அலை வாங்கி - இது அலைவாங்கியையும் அலை - பரப்பியையும் கொண்ட ஒரு பெட்டியாகவோ அல்லது மடிக்கணினிகளில் நிரந்தரமாக WiMAX உடன் இணைக்க கூடியவாறு நிறுவப்பட்டிருக்கும்.
பொதுவாக பிரதான WIMAX கோபுரம் அதிவேக தகவல் பரிமாற்ற கொள்ளவு உடைய வட இணைப்பு முறை மூலம் (உதாரணமாக T3 Line) இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இக் கோபுரத்துடன் நேரடி இணைப்பு முறை மூலம் (Line of Sight) இணைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது கோபுரம் Backhaul என அழைக்கப்படும். இக் கோபுரத்தின் உள்ளடக்கப்பரப்பானது 3000 சதுர மைல்களாகும்.
உண்மையில் WiMAX ஆனது இரண்டு வடிவங்களில் அதன் வடமற்ற சேவையினை வழங்குகின்றது.
O Non Line of Sight - Q5i (p6op6oLDuLITg5 WiFi (Gg5 Gg5Tfl6ò
நுட்பம் பற்றிய விபரங்களை கடந்த வரை வெளியீட்டில் பார்க்கவும்) போன்று குறுந்தூர வடமற்ற சேவையினை வழங்குகின்றது. இது தகவல் பரிமாற்றத்திற்கு 2 11 GHz வரையான குறைந்த அதிர்வெண்ணையே பயன்படுத்துகிறது. Line of Sight கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையான அலை உணரி (Antennaவிட்டின் கூரைமீதோ அல்லது தனியாகவோ) நேரடியாக WiMAX கோபுரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். தகவல் பரிமாற்றத்திற்கு 66GHz வரையான உயர் அதிர்வெண்ணை பயன்படுத்துவதனால் அதிகளவு தகவல் பரிமாற்ற கொள்ளளவை (bandwidth)Ð L6ODLuug51T85
இருக்கும். . . . . . முதலாவது இணைப்பு முறையானது A WiMAX USB modem for WiFi இனைப் போன்று mobile internet
27

Page 16
Qiang
அமைவதினால் அதன் உள்ளடக்கப்பரப்பானது 4-6 வரையாகும் (வட்டவடிவில்). இரண்டாவது இணைப்பு முறையின் உள்ளடக்கப்பரப்பானது 30 மைல்களாகும். WiMAX (S6060T (3LDLbuGiggslugs LLDITEs Global Area Network (up6ir மொழியப்பட்டுள்ளது. இதனை IEEE 802.20 என நியமப்படுத்தியுள்ளது. இதனால் கைத்தோலைபேசி வலையமைப்பினைப் போன்று இடத்திற்கு இடம் நகர்ந்துகொண்டிருக்கும் போதும் ஏன் நாடுகளைக் கடந்து கொண்டிருக்கும் போது நமது கணினிகள்ை இணையத்துடன் இணைத்திருக்க கூடியதாக இருக்கும்.
WiMax உள்ளடக்கப்பரப்பும் வேகமும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது WiMAX ஆனது WiFi தொழில் நுட்பத்தினைப் போன்றே தொழிற்படுகிறது. இங்கு இரண்டு சாதனங்களிற்கிடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு வானொலி அலைகளே பயன்படுத்ப்படுகிறது. சிறந்த சூழ்நிலையில் இயங்கக் கூடிய WiFi வலையமைப்பின் தகவல் பரிமாற்ற வேகம் 54 Mbps ஆகும் அதே வேளை WiMAX இன் தகவல் பரிமாற்ற வேகம் 70Mbps ஆகும். இவ் இரண்டு தொழில் நுட்பங்களிற்கிடையிலான பிரதான வேறுபாடு இவற்றின் வேகம் அல்ல இவற்றின் தகவல்களை கொண்டு செல்லும் தூரம் ஆகும். WiFi வலையமைப்பின் தகவல் பரிமாற்ற உள்ளடக்கப் பரப்பானது 100 சதுர அடிகளாகும் (30மீற்றர்) அதே வேளை WiMAX இன் உள்ளடக்கப் பரப்பானது 30 மைல்களாகும் (50கி.மீ). வீட்டில் WiMAX தொழில் நுட்பம் வீட்டில் உள்ள உங்கள் கணினியை
WiMAX தொழில் நுட்பம் மூலம் இணையத்துடன் இணைப்பதற்கு A WiMAX Gateway which provides விரும்புகின்றீர்களா அப்படியாயின் VoIP. Ethernet and WiFi connectivity
உங்கள் மடிக்கணினி அல்லது
தனிநபர் கணினி WiMAX தொழில் நுட்பத்தினை பயன்படுத்தக்க வகையில் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உங்கள் மடிக்கணினி WiMAX அலைவாங்கியினைக் கொண்டிருக்க வேண்டும். அத்தோடு உங்களுக்கு இணைய சேவையை வழங்கும் சேவை வழங்குனரின் WiMAX கோபுரம் உங்கள் வீட்டில் இருந்து 10 மைல்
28
 

வரை
அண்மையில் இருக்க வேண்டும். நீங்கள் சேவை வழங்குநரிடம் பதிவு செய்து அவரின் கோபுரத்துடன் உங்கள் கணினியை இணையத்துடன் இணைப்பதற்கு அவரால் வழங்கப்படும் பயனாளர் பெயர் கடவுச் சொல் வேறு விசேட மறைக்குறியீடுகள் (code) என்பவற்றை பெற்றிருக்க வேண்டும். எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதை உங்கள் சேவை வழங்குநர் வழிகாட்டுவர். உங்கள் வீட்டில் சிறிய வடமற்ற வலையமைப்பு காணப்படுமாயின் அவ் வலையமைப்பில் உள்ள கணினிகளை இணையத்துடன் இணைக்க வேண்டுமாயின் நீங்கள் WiMAX தொழில் நுட்ப தகவமைவு உள்ள route உடன் உங்கள் வலையமைப்பை இணைத்து உங்கள் WiMAXRouter இனை சேவை வழங்குநரின் WiMAX கோபுரத்துடன் இணைப்பதன் மூலம் உங்கள் வலையமைப்பை இணையத்துடன் இணைக்கலாம். இரA. தி
சிந்தனைக்கு.
நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதமும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான். மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சியடையாதவனால் நல்ல செயல்களைச் செய்ய இயலாது.
A A JIIID55s).5läIIIð தொலைத்தொடர்புநிலையமும் கணனி திருத்தகமும் கணனி தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) \ CD, DVD Writing ஒவ்(t) செற் பிறின்டிங் போட்டோக் கொப்பி, லெமனெற்றிங் (களின்கட்)
புத்தகம் கட்டுதல். - -3. T.P. o2 17529155 ܠ
02151.00013
Fax: 0212240871 E-mail: raamnetcom Gyahoo.com K.K.S Rd, Malakam
29

Page 17
வரை
சர்வதேச கிறிக்கெட்டில் சில சுவையான தகவல்கள்
* “முகம்மட் அஸ்ரபுல்" என்ற இராஜசிங்கம் பிரசாந்தன்
பங்களாதேஸ் வீரர் செப்ரெம்பர் 2001 இல் தன்னுடைய அறிமுக போட்டியில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் பெற்ற114 ஓட்டங்களே மிகக் குறைந்த வயதுடைய வீரரால் பெறப்பட்ட சதம் ஆகும். அப்போது அவருக்கு வயது 17 வருடம் 63 நாட்கள்.
* கடந்த வருட இறுதியில் கான்பூரில் தாண்டாத சந்தர்ப்பங்கள்
இந்தியா தனது 100 வது டெஸ்ட் அபூர்வமாக நிகழ்வதுணர்டு. இதில் வெற்றியை பதிவு செய்தது. முதலாவதாக (அல்லது இந்தியா வெற்றி பெற்ற கடைசியாக) இருப்பது 1962-63 ல் போட்டிகளில் அதிகமாக கிறைல் சேர்ச்சில் அணிதலைவர் பங்கேற்ற வீரர் சச்சின் ஜோண்ரீட் உடைய 100 டென்டுல்கர். இவர் 52 அடங்கலாக நியூசிலாந்தின் 159. வெற்றிபெற்ற டெஸ்ட் 2006-07ல் குமார்சங்கக்காரா போட்டிகளில் விளையாடுகிறரர். ஆட்டம் இழக்காது 100 இவரை தொடாந்து ராகுல் ஓட்டங்களை எடுத்தும் இலங்கை டிராவிட்-45, அனில்கும்ளே-43, நியூசிலாந்துக்கு எதிராக அதே சரவ் கங்கூலி, கிறைஸ்சேர்ச் மைதானத்தில் 170 வி.வி.எஸ்.லட்சுமணன்-37, 2000ம் ஜ மட்டுமே பெற்றது. ஆண்டுக்கு முன்னரே ஓய்வு * ஒரு அணி வெற்றிபெற்ற பெற்ற வீரர்களில் கபில்தேவ் டெஸ்ட்போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்ற 24 விளையாடிய வீரர்களில் அதிக போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். வெற்றிகளில் பங்கேற்ற இது சுனில்கவாஸ்கரை விட ஒன்று வீரர்களின் பட்டியலில் அதிகம். முன்னிற்பவர்கள் அனைவரும் * ஒரு சதம் உள்ளடங்கியிருங்தும் அணர்மைக்கால -
(டெஸ்ட் அரங்கில்)ஒரு இனிங்சில் அவுஸ்திரேலியர்களே.
ஒரு அணி 200 ஓட்டங்களை இன்னும் வரும்
30
 

கைத்துப்பாக்கிகள் என்பவை துப்பாக்கி (fiream) வகையை சேர்ந்தவையாயினும் ஒரு கையைப்பாவித்து அவற்றை இயக்க முடியும் என்பதனால் நீளமான பெரிய துப்பாக்கிகளிலிருந்து சிறப்புற்றிருக்கிறன. இதைப் பயன்படுத்துபவர் தன்னுடைய இரண்டாவது கையைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லையாயினும் தேவையைப் பொறுத்து சமநிலையை பேணவும் குறியை பிசகாமல் காக்கவும்
இரண்டாவது கை உதவலாம். துப்பாக்கி (fiream) களில் நீளமான துப்பாக்கி (long guns) 61605upris856ssi) றைபிள் (rifle) குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள் (shot gums) என்பவற்றை இயக்க இருகைகளும் பயன்படுத்துவதோடு சிலசமயங்களில் அற்றின் எதிர்தாக்கத்தை சமாளிக்க சுடுபவர் தனது தோள் பட்டையால் முண்டு கொடுக்க வேணடியும் ஏற்படும். இவை தவிர ஒரு நிறுத்தியில் பொருத்தி
வரை
கைத்துப்பாக்கிகள் "ே
வைத்து இயக்கப்படும் துப்பாக்கிகள் உள்ளன. இவற்றை mounted
weapons என அழைப்பர். இவற்றில்
இயந்திரத் துப்பாக்கிகள் (mechine guns)gs.T6fluid di(Gesp6)56ft (auto cannons) பாரிய வகையிலான artillery மற்றும் பல்குழல் 6J6has606OTassi (multi-barral misiles) என்பன அடங்குகின்றன.
கைத்துப்பாக்கிகளுக்கான பெயரீடுகளும் வேறுபாடுகளும்
pistol 6T6ðıp GaFT6ðuð handgun என்ற சொல்லும் ஏறக்குறைய இன்றைய சூழலில் ஒத்த கருத்துள்ளதாக இருந்தாலும் கைத்துப்பாக்கிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள் pistol என்பது handgun களின் ஒரு உப பிரிவே (subdivision) என வாதாடுகின்றனர். அமெரிக்க ஆங்கில மொழிப் பயன்பாட்டில் pistol எனும் போது குண்டுகளைத் தாங்கும் அறை (chamber) siG5p6ð (barral) d LL6ð இரண்டற இணைந்ததாக கொள்ளப்படுகின்றது. ஆனால் revolver கள் குண்டுகளை தனித்தனியாக வேறுபடுத்தி 6 அல்லது 8 அறைகளில் தாங்குவதுடன் சுடுகுழலுடன் நேரடியாக தொடர்புபட்டவையே.
பொதுநலவாய பிரயோகத்தில்
(commen welthuseage) thug
தொழில்நுட்ப மட்டத்தில் எல்லாக்
31

Page 18
கைத்துப்பாக்கிகளையும் குறிக்கிறது. D-5Ty6ooTLDTas "webley Mk vi” STSpb model எடுத்துக்கொண்டால் அது "pistol, revolver, webley No 1 Mk vi” என எல்லா வகையறாக்களிலும் அடங்குகின்றது. இதே போல் “pistol No 2 mk l” 6Tsigjib Gurgs Enfield revolver, browing hi-power semi automatic என்பவற்றை குறிக்கும் புரியவில்லையா? தொடர்ந்து படியுங்கள் புரியும்.
15 ம் நூற்றாண்டில் pistolகள் உருவாக்கப்பட்டன. எனினும் சூத்திரதாரியார் என்பது இதுவரை தெரியாது. 18 ம் நூற்றாண்டில் “hand held firearms'6T6ip G&T6) புழக்கத்தில் இருந்திருக்கிறது. 19ம் நூற்றாண்டில் பரிசோதனை முறையிலான revolver உருவானதாகவும் நம்பப்படுகின்றது pistol, revolver 6T6dpuf. சொற்களுக்கிடையிலான வேறுபாடும் இந்நூற்றாண்டிலேயே உருவானது
6T606)d.
pistol என்றும் சொல் பிரெஞ்சு மொழிச் சொல்லான pistol அல்லது pistolet என்பதில் இருந்து பெறப்பட்டது. எனினும் பல்வேறு மொழிப் பிரயோக ஊகங்களும் முன்வைக்கப்படுகின்றன. செக் (Czech) மொழியில் pistol எனும் போது குழல், குழாய், சுடும்குழாய் எனும் பொருளில் புழக்கத்தில் உள்ளது. ஜேர்மன் (Germen) GALDITyfullsið pischulle என்பதே pistol என்று ஆனதாகவும் கொள்ளப்படுகின்றது.
வரை
இத்தாலியில் உள்ள Pistoia என்றும் நகரிலேயே 1540 ல் இவை வடிவமைக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்ததால் pistol என அழைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது.
ஆரம்கால pistolகுதிரையின் கடிவாளத்தில் காவப்பட்டன என்றும் pommel SÐ6ð6 og pistallo 6T6ðrgp asiq6JT6Tib horse's saddle Sly (653, மொழியல் அழைக்கப்பட்டதாகவும் அதன் பெறுதியே pistol என்றும் நம்பப்படுகின்றது.
கைத்துப்பாக்கிகளின் வகைகள் 1. Single - Shot Pistols
இலகுவான எளிமையான ரகத்தை சேர்ந்தவை. ஒருமுறை சுட்ட பின் மீண்டும் மீள் நிரப்பி (reload) சுட வேண்டும். வேட்டைக்காரர்கள் பயன்படுத்தும் கட்டுத்துப்பாக்கிகளின் செயற்பாட்டை ஒத்தது. இதன் இயக்க விசை வெடிமருந்தினை அதிக அழுத்தம் கொடுத்து தீப்பற்ற வைப்பதன் மூலம் பெறப்படுகிறது.
பிற்காலத்தில் பற்சக்கரங்கள், சுருளிவிற்கள், விசைசுத்தியல்கள் என்பவற்றின் கண்டுபிடிப்புக்கு பின்னர் இவை அதிநவீன அவதாரங்களை படிப்படியாக பெற்றன. ஆனால் இன்றும் வேட்டைகாரர்களின் பயன்பாட்டுக்காக இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. யானை வேட்டைக்கு கூட இவை பயன்படுகின்றது.
2. Mult-barreled pistils
இது மீள்நிரப்பாமல் இரண்டாவது குண்டை சுடுவதற்காக இரண்டு
32

வரை
குழல்களுடன் உருவானது. இவற்றில் பல உபவகைகள் உள்ளன. ducks foot pistols, Derringers, pepper-box guns, howdah 6T60TL1606 (3u அவையாகும். சினிமா படங்களில் வரும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் இதன் வகையறாதான். 3. Revolvers - கைத்துப்பாக்கிகளின்
புரட்சிப்பள்ளி
19ம் நூற்றாண்டில் துப்பாக்கி செய்பவர்கள் தமது இலக்கை அடைந்து விட்டனர் என்பதற்கு ஆதாரம் revolver களே விரைவாக ஒன்றன்பின் ஒன்றாக குண்டுகளை சுடும் சாதனமாக இவை உருவாயின.
குண்டுகள் நிரப்பப்பட்டிருக்கும் உருளையின் அறைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருந்ததோடு இயக்க விசையை உருவாக்கும் அறையையும் தனித்தனியே கொண்டிருந்தன. குண்டைக் கொண்ட அறை சுடுகுழலுக்கு நேரே ஒரே அச்சில் வரும் போது குண்டின் பின்னால் பலமாக மோதும் சுத்தியல் வெடிமருந்தை பற்றவைத்து ஆரம்ப இயக்க விசையை தூண்ட குண்டு பாய்கிறது. பின்னர் இவை பல்வேறு உத்திகளுடன் வினைத்திறனுடன் வடிவமைக்கப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ளது வேறுகதை. 4. lever action pistols
நோர்வே நாட்டவர்களின் கைவரிசையில் உருவானது. இது வரையில் இருவகைகளே உருவாக்கப்பட்டிருந்தாலும் வினைத்திறனிலும் பயன்பாட்டிலும் சற்றும் சளைத்தவையல்ல. இவற்றில் volcanic Gugos pistol assir 1860 Gusoy
பாவனையில் இருந்தன. இவ்வற்றின் பயன்பாடு தூர்ந்து போனமைக்கு வியாபாரரீதியிலான காரணங்களே மிகை.
5.semi-automatic pistols
கைத்துப்பாக்கிகளின் வரலாற்றில் revolver களுக்கு அடுத்த படிநிலை புரட்சியை உருவாக்கியவை; பயன்படுத்த எளிதானவை. ஒரு குண்டைச் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் சக்தி அடுத்த குண்டை மீள் நிரப்பவும் உதவுகிறது
என்பதே இதன் வெற்றிக்கு காரணம்.
வகையான துப்பாக்கிகளில் Lổ6ÍTasipuð (recoiling) öğš56AJLð மேற்படி செயற்பாட்டை செய்தாலும் சற்று பெரிய சுடுகுழல் கொண்டவற்றுக்கு எரிவாயுவினால் இயங்கும் மீள்நிரப்பும் பொறிகள் பயன்படுகின்றன. உதாரணமாக desert eagleஜ சொல்ல முடியும்.
ஒரு குண்டு சுடப்பட்டதும் குண்டில் பக்கவாட்டில் வெளித்தள்ளிவிட்டு குண்டு தாங்கும் கலனி (magazine) லிருந்து அடுத்த குண்டை கண்ணிமைக்கும் நேரத்தில் சுடுவதற்கு தயாராக்கி விடுகின்றது. 6. Mechine pistols
முழுவதும் தானியங்கி முறையில்
33

Page 19
அல்லது தெரிவு செய்யப்பட்ட முறையில் இயங்கும் வகையினது ஒரேயொரு கையை மாத்திரம் பயன்படுத்த முடியும். நிச்சயமாக இராண்டாவது கையை பயன்படுத்த வேண்டியதில்லை.
இவற்றில் - glock18 mauser c 96 என்பன குறிப்பிடத்தக்கன. மிக இலேசானவை, சிறியவை, அபரிமிதமான சுடுதிறன் கொண்டவை என்பதால் கையாளுவது கடினம். கட்டுப்பாட்டை மீறிவிடக் கூடிய அபாயம் மிக்கவை.
ஒவ்வொறு வகையும் ஒவ்வொரு சிறப்பியல்பும் கொண்டது தற்போது புழக்கத்தில் இருக்கும் செல்லிடப்பேசிகள் ஒவ்வொன்றும் சிறப்பியல்பு கொண்டிருப்பதுபோல.
அமெரிக்க தேசிய துப்பாக்கிகள் சட்டம் (US National Firearms Act) இவற்றை வரை விலக்கணப்படி pistol களுக்குள் அடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Haekler and Koch VP70, Beretta13r என்பன இவற்றின் புதிய தலைமுறை வரவுகளாகும்.
கைத்துப்பாக்கிகள் எவ்வாறு இயங்குகின்றன?
கைத்துப்பாக்கிகளின் இயக்கம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு சில கலைச்சொற்கள் பற்றிய விளக்கம் அவசியமாகிறது அவை அவ்வப்போது அச்சொற்களோடு இணைந்து தரப்பட்டிருக்கின்றன.
ஒரு செயற்பாடு மாத்திரம் கொண்ட கைத்துப்பாக்கிகளில் sigkaction
வரை
handguns Tigger (6óly6oT6ð Duggögib விசைப்பகுதி) ஏற்கனவே சுருள் வில்லால் இணைக்கப்பட்டுள்ள sigslug06) (gun hammer) விடுவிக்கப்பயன்படும். இந்த சுத்தியல் மிக வேகமாக வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ள குண்டின் (cartridge) பின்புறத்தில் பலமாக மோத உயிர் காவும் குண்டின் பயணம் ஆரம்பமாகும்.
Revolver as6ss) (SGs பொறிமுறை பயன்படுத்தப்படுகின்ற போதும் ஒவ்வொரு குண்டைச் சுடும் போதும் சுடுபவர் மீண்டும் விசையை வழங்கும் சுத்தியலை சுருள் வில்லுடன் இணைக்க வேண்டும். அதாவது துப்பாக்கியை load செய்யவேண்டும். GuTg5up60p Clot Peacemaker of old West என அழைக்கப்படுகின்றது.
g60TT6) semi-automated துப்பாக்கிகள் ஒருமுறை load செய்தால் போதும் தொடர்ந்து சுட்டபடியே இருக்க முடியும். Revolver களில் 6 குண்டுகளை சுட 6 முறை load செய்ய (36.60örGLib semi-automated assissi) 6 குண்டுகளை சுட ஒரு முறை load செய்தால் போதுமானது. இதற்கு 9IG$5 g56060(yp60p mechine pistol assissi) “safe action' 6T6igub பொறிமுறை பயன்படுகின்றது. Glock தான் இதை அபரிமிதமாக பயன்படுத்துவதாய் தெரிகிறது. இங்கு சுருள்வில்லை கட்டப்படுவதில்லை.
34
 

m சுத்தியலே கட்டப்படுகிறது. ஏனையவற்றில் சுத்தியல் கட்டப்பட்டாலும் சிறப்பம்சம் என்னவெனில் பகுதியாக சக்கியேற்றப்பட்ட ஊசி. இது குத்தாது LDQgridlu (yp6060T (blind end) கொண்டது அதாவது Party tensioned firing pin. Trigger 22 அழுத்தும் போது கிடைக்கும் விசையிலிருந்தாக விடுதலையை முழுமையாக அனுபவிக்கும் ஊசி தொடர்ந்து குண்டுகளைச் செலுத்துகிறது. முதல் தரம் trigger ஜ அழுத்தும் போது என்ன நடக்குமோ அதுதான் ஜம்பதாவது குண்டைச் சுடும் போதும் trigger ஐ அழுத்தாமல் நடந்தேறுகிறது.
சிறப்பியல்புகளைப் பார்த்தால் Pre-cocked ஏற்கனவே load செய்யப்பட்ட) துப்பாக்கிகளுக்கும் தானியங்கி, பகுதியாய்த் தானியங்கி வகைகளுக்குமிடையில் சொல்வதற்கு ஏதுமில்லை. மனிதன் அல்லது சுடுபவர் load செய்கிறாரா? அல்லது துப்பாக்கி தானே load செய்கிறதா? என்பதே கேள்வி. பிரபலமான தானியங்கி pistol a56f6ð walther p38, Beretta92 6T6ðirLu6oo6Juquồ Revolver 856f6ð Ruger Redhawk, Smith and Wesson - model29 என்பவையும் இரட்டைச் செயற்பாடு கொண்டவற்றில் Enfield No 2 mk I 6T6öTLugtö குறிப்பிடத்தக்கன. வெளித் தெரியும் விசைச் சுத்தியல் கொண்டதாக
Springfield Armory XD 6T6trugb பிரசித்தம்.
என்னதான் துப்பாக்கிகள் தொழில்நுட்ப பொறிமுறை வளத்தை உள்வாங்கி வெற்றி பெற்று பயன்பாட்டில் இருந்தாலும் கொலைகருவிகள் என்ற விதத்தில் மனித குலத்துக்கு சாபக்கேடே. ஆயுதங்கள் Defence-பாதுகாப்புக்காக எனினும் Offence தாக்குதலுக்காக பயன்படுவது வருத்தமே. விண்வெளி விஞ்ஞானம் LASER துப்பாக்கிகளை உருவாக்கியிருப்பது
வரவேற்கத்தக்கதே. ஒளியின் வெவ்வேறு
மீடிறன் (frequency) கள் எஃகு, உருக்கு, 18cm தடிப்பான ஈயக்குற்றிகள் என்பவற்றை அறுத்தேறியும் போது அழித்து போக காத்திருக்கும் மனித உடல் எம்மாத்திரம்.
வாழ்க விஞ்ஞானிகள்!
வளர்க அவர்பணி!
எல்லாம் நன்மைக்கே!
விளாடிமீர்
35

Page 20
g ܗ அவனும் நானும மனதின் SQp(9Gy
பெளர்ணமி விலவில் ஆம்ஸ்ரோங்கின் காலடி தேடினான்.
நான் * : ... ஒளவையின் பாக்குரல் தேடினேன்!
அவன்
கிரகண நிலவில் ஹொட்டலில் பெரு விருந்துணர்டான் நான் கொட்டாவி பெருமூச்சு விட்டேன்!
அவன் பிறைநிலவுக்கு செய்மதிவிட்டு செய்திகள் சொன்னான். நான் விரதம் இருந்து விழாக்கள் செய்தேன்!
அவன்
கிரகண நிலவு நிழலின் சந்திப்பால் நிகழ்வதென்றான். நான் நிலவை அரவம் தீண்டிற்று என்றேன்.
குப்பைத் தொட்டிக்குள்
அவன் தேய்நிலவு குழந்தை அழுகிறது சுற்றும் புவியில் துரியனால் என்றான். தன் பதினாறு குட்டிகளுடன் நான் எட்டிப் பார்த்துச் சிரிக்கின்றது சாமியிட்டசாபம் என்றேன். பன்றி
அவன் வெண்ணிலவை ஆராய்ந்து உண்மைகள் சொன்னான். நான் பெண்மகள் என்று கவிதைகள் வரைந்தேன். அவனும்பார்த்தான் அதேநிலா நானும் பார்த்தேன் அதேநிலா நிலவு என்றும் ஒன்றுதான் பார்வையில் எமக்கு வேறு ஏன்?
தயிwைதீவு
36
 
 
 

வரை
புதிர் போட்டி அ0ை5ளுக்காத
சோ.கிருஷ்ணதாஸ்
கீழ் உள்ள புதிர்களுக்கான விடைகளை 10-08-2010 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ஒருவருட சந்தா இலவசமாக வழங்கப்படும். 1.தரப்பட்ட இலக்கங்கள் 1,77,7,7(ஒரு “1” உம், நான்கு “7” உம்) ஜப்.
பயன்படுத்தி 100 ஐ உருவாக்க வேண்டும். அதற்காக இவ் 5 இலக்கங்களுடன். அடிப்படைக் கணிதக் குறியீடுகளையும் அடைப்புக் குறியையும் பயன்படுத்தலாம் (+,-, *, +, () அவ்வாறு 100 ஐ உருவாக்கவதற்கு இரு வேறு முறைகளைத் தருக. 2தரப்பட்ட கூற்றைக் கவனத்தில் கொண்டு விடையைத் தருக.
(சராசரிப் பெறுமானங்களே தரப்பட்டுள்ளன) 14 கோழிகள் 1% நாட்களில் 1% முட்டைகள் இடும். எனின் ஒரு கோழி ஒருநாளில் எத்தனை முட்டைகளை இடும். (சராசரியாக)
3. உமது பிறந்த தினம் எது? என்ற கேள்விக்கு ஒருவர் அளித்த பதில் வருமாறு:
“நேற்று முன்தினம் எனக்கு 25 வயதாக இருந்தது. அடுத்த வருடம் எனக்கு 28 வயதாகும். இக்கூற்று வருடத்தின் ஒருநாளுக்கு உணர்மையாகும். அவர் பிறந்த தினத்தையும் (நாள், மாதத்துடன்) அவர் பதிலளித்த தினத்தையும் எழுதுக.
இதழ் 4 இல் வெளிவந்த புதிர் போட்டிக்கான விடைகள் 1.முட்டைகளை அவியவிட்டவுடன் இரு மணற்கடிகாரங்களையும இயங்கவிடுதல். 4நிமிடக்
கடிகாரம் இயங்கி முடிந்ததும் திரும்பவும் அதைத் தொடங்குதல். 7 நிமிடக் கடிகாரம் இயங்கி முடிக்கும் கணத்தில் மேலும் 1 நிமிடநேரம் 4 நிமிடக் கடிகாரத்திற்கு இருக்கும். அந்த ஒரு நிமிடத்தை 7 நிமிட மணற் கடிகாரத்தில் அளவிடல், 4 நிமிட கடிகாரம் இயங்கி முடிந்ததும் ஒரு நிமிடக் கடிகாரத்தை திருப்பி இயங்கவிடும் போது அது ஒரு நிமிடம் மட்டுமே இயங்கமுடியும். 2 இவ்வாறாக 9 நிமிடத்தை அளவிடலாம்.
5g கொண்டு 0g அல்லது 5g நிறுவையிடலாம் (2 சாத்தியம்) 5g. 10g GlassT60irG 0g, 5g, 10g, 15g 5gp606 ulsorTub (45riggsults) 5g, 10g, 20g கொண்டு 8 வகையான நிறைகளை அளக்கலாம். ஆகவே 4 நிறைகளுக்கு 32 சாத்தியங்கள் உண்டு. 3. 100 = 1000,000 இதழ் 4 இல் வெளிவந்த புதிருக்கான பரிசுபெறுபவர்; செல்வி. சி. கிருஷ்ணப்பிரியா (யா/வேம்படி உயர்தர பாடசாலை இவருக்கான (ஒரு வருட சந்தா) பரிசாக 12"வரை” அறிவியல் பல்சுவை மாசிகைகள் தொடர்ந்து அனுப்பிவைக்கப்படும்.
37

Page 21
தொடர் 6
ஒரு படிக்கும் شمسچند
சமுதாயமாகவே இருந்து வருகின்றது. ஜப்பானியர்கள் காலை நேரங்களில் வலது கையில் சூப் போன்ற $5. -6უე][60)6]] சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இடது கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டுதானிருப்பார்கள். பேரூந்தில் போனாலும் புகையிரதத்தில் போனாலும் கையில் புத்தகம் புரளும். படிப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தை நன்கு கற்றுக்கொள்ளும் அபரிமிதமான ஆர்வம் மட்டுமல்லாது வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு துறைகளை பயிற்சி முகாம்கள் அமைத்து பயின்று வருகின்றனர்.
அவர்களது பாடத்திட்டத்தில் 6, 7,8 வகுப்புக்களிலேயே விஞ்ஞானப் பாடம் பரிசோதனைக் கூடப் பயிற்சிகளுடன் நடாத்தப்படுகின்றது. விஞ்ஞான ஆசிரியர்கள் 93 சதவீதமானோர் பல்கலைக் கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர்களாகவே உள்ளனர். இதைவிட சமயம், இசை, நாட்டியம் முதலிய கலைத்துறைக்கல்விக்கும் இவர்கள் மிக முக்கிய இடம் கொடுக்கின்றனர். உதாரணமாக தரம் ஆறு மாணவர்களே கிட்டத்தட்ட மூன்று இசைக் கருவிகளில்
பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
ஜப்பான் மாணவர்களின் பாடசாலை நாட்கள் ஆண்டொன்றிற்கு 240. மாணவர்களின் வரவு நிலையும் ஒழுங்காகவே உள்ளது. 1970 இருந்து
ன் கல்வி முறை
இ ஐப்பானியர்களி
ஜப்பானின் வெற்றியின்
வரை
இதனஞ்சயன்
இரகசியம் என்ன?
மாணவ சமுதாயத்தில் 90 சதவீதமானோர் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடிக்கின்றார்கள். பாடசாலையிலிருந்து வெளிவருபவர்களில் நாற்பது சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானியக் கல்விமுறை
மாணவர்களிடம் புத்தக அறிவை
வளர்ப்பது மட்டுமல்லாது சமூக, சமய, கலாசார மற்றும் சுய கட்டுப்பாடு போன்ற வாழ்க்கை நெறிப்பாடங்களையும் கற்றுக் கொள்ள உதவுகின்றது. எல்லா மாணவர்களும் பிறரிடம் மரியாதை செலுத்த வேண்டும் என்பதை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். ஆசிரியர்களை மதிக்க வேண்டும், சக மாணவர்களுடன் பண்புடன் பழக வேண்டும் என்னும் விடையங்களுக்கு அதிமுக்கியத்துவம்
' கொடுக்கப்படுகின்றது. மாணவர்கள
ஒழுக்கம் உயர்ந்ததாக
இருக்கவேண்டும் என்று பாடசாசாலையில் எதிர்பார்க்கப்படும்
38
 

அதேவேளை தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில் தண்டனைகள் குறைந்தளவில் கொடுக்கப்பட்டு செயற்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் உணரும்படி செய்திருக்கிறார்கள்.
மாணவர்கள் தாங்களே தங்களை சுய சோதனை செய்து கொள்ளத் தூண்டுகிறார்கள். அதாவது வாரத்தில் ஒரு பாடநேரத்தில் மாணவர்கள் தங்கள் நடை, உடை, பாவனைகளை நாங்களே ஆராயவும், தங்கள் குறைபாடுகளை மனம்விட்டு
பேசவும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
பாடசாலையில் அனுமதிக்கப்படாத புகைப்பிடித்தல் போன்ற தவறுகள் இழைக்கப்படின் அத்தவறுகள் பெற்றோருக்கு தெரிவிக்கப்பபடுவதுடன் தவறு செய்பவர்களது பதிவேட்டில் கரும்புள்ளி குற்றப்பட்டு அவர்களது எதிர்காலத்தைப் பாதிக்கச் செய்துவிடும் அபாயம் உண்டு என்பதை மாணவன் உணர்ந்து தாமாகவே சிந்தித்து செயற்பட கற்றுக்கொடுக்கின்றார்கள்.
ஐப்பானியரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை இரண்டாம் உலகப்போரில் இரண்டு அணுகுண்டுகளை தனது மார்பில்
வாங்கிய பின்னும் அந்த யுத்தத்தின்
அழிவிலிருந்து நாட்டைமீட்டு தமது தொழில்நுட்ப அறிவால் உலகை பிரமிக்க வைத்துள்ளனர். யுத்தத்தில் தோற்றபின் அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் மாறிவிட்டன, புத்துணர்வு கொண்டன. அவர்களது ஆழ்மனதில் ஊறிப்போயிருக்கும் நம்பிக்கைதான் கலாசாரமாக மாறி
வரை
அவர்களது வெற்றிக்கு கரணமாயிருந்தன. அவர்களது கல்வித்தரம், அயராத உழைப்பு, உழைப்பின் நேர்மை, ஒற்றுமை இவைதான் ஜப்பானின் வளர்ச்சிப்படிக்கு காரணமாயிருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது. அரசியல், சினிமா போன்றவற்றிற்கு சமுதாயத்தில் ஒர் சிறிய இடம்தான் உண்டு.
அச் சமுதாயத்தின் எண்ணம் "வாழ்வில் முன்னேறுவது, வாழ்வில் வளர்ச்சி பெறுவது” என்பது பற்றித்தான். “வளர்ச்சித் துடிப்பு" சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் எல்லோரையும் தொட்டிருக்கும். ஒவ்வொருவரும் அவரவர் பணியை, பங்கை உணர்ந்து விருப்புடன் செயற்படுகின்றனர். இதனால் நாடு உயர்ந்திருக்கிறது. “இவ்வளவு சிறிய வருமானத்திற்கு இவ்வளவு உழைப்பா?” என்ற நோக்கில் ஜப்பானியர்கள் எதையும் அணுகுவதில்லை. “உழைப்பு ஒரு வாய்ப்பு. இல்லாவிட்டால் அந்த சிறிய வருமானமும் கூட இல்லாமல் போயிருக்கும்" என்ற உணர்வுடன் தான் அவர்கள் விடயங்களை அணுகுகிறார்கள்.
நேரத்தை பொன்னாக்கி கஷ்டப்பட்டு உழைத்து இன்று உலக வல்லரசாக விளங்கும் ஜப்பானிடம் நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.
முற்றும்
உசாவியவை: வெற்றி மனோபாவம், Dr.
M.S. உதயமூர்த்தி, கங்கை புத்தக நிலையம், 2004. மற்றும் இணையம்
39.

Page 22
வரை
நீங்களும் சந்தாதாரராகலாம்! நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். ஓராண்டுக்கான சந்தா ரூபா. 410 மட்டுமே! கீழே உள்ள மாதிரிச் சந்தாப் படிவத்தைப் பிரதி செய்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை எழுதி, சுன்னாகம் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக காசுக்கட்டளையை அனுப்பிவைப்பதன் மூலம் அல்லது கீழ்க்கணர்ட வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி பற்றுச் சீட்டை அனுப்புவதன் மூலம் “வரை” யின் சந்தாதாரராக இணையுங்கள்.
காசுக்கட்டளை அனுப்பவேண்டிய முகவரி: நிர்வாக ஆசிரியர், “வரை” வெளியீட்டகம், மகுடம் அசோசியேற்ஸ்,
இணுவில் சந்தி,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
வங்கித் தொடர்புக்கு: R. Thananjeyan
Commercial Bank - Chunnakam
A/C No. 8107.004995
சேர விரும்பும் சந்தாக்காலம்: .
βΦό . . ஒப்பம். .
"வரை"யுடனான தொடர்புகளுக்கு இ. தனஞ்சயன் - 0776701861, இ. கிருபாகரன் - 0717884331 (யாழ்ப்பாணம்), நாகராசா சரவணன் - 0777866754 (கொழும்பு), ஆ. பரமேஸ்வரன் - 0779791366 (மட்டக்களப்பு), து. ரஜிந்தன் - 0774011052 (மன்னார்).
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை” குழுமத்தினரால் மகுடம் அசோசியேற்ஸ்
வனத்தில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. நிறுவனத்தி டு டுகிறது TP. O2 74S1960
40
 


Page 23