கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரை 2010.09

Page 1


Page 2

வரை
அறிவியல் பல்சுவை ம்ாசிதை
தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரணர்டடிகள்
அள்ளுந் தொறுஞ்சுவை
உள்ளுந் தோறும்உணர்வாகும்வண்ணம்
கொள்ளும் அறம், பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப் பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!
-பாரதிதாசன் &
RS எதுவரை.? (தொடர் கட்டுரை) 03 > தமிழ் வட்டம் 05 & புரட்சிக் கவி (தொடர்) 06 as Effort Brings Success a Let's Learn to speak in 7
English இ ஈ.பிள் கோபுரம் 20 இ. கூகிள் - உடனடித் தேடல் 23 $ கவியரங்கம் -வை.சாரங்கன் 27 $ பல்பயன்தரும்) மரங்கள்-விளா 29 PS புதிர்ப் போட்டி 33 $ கடற்குதிரை 34 RS மக்செசே விருதுகள் 35 இ நாடகங்கள் - சிறுகதை 37 RS சர்வதேச கிரிக்கெட்டில் சில 39
சுவையான தகவல்கள்
நிழல்
காலங்கள் மாறும், அதனோடு பல காயங்களும் ஆறும். நாம் இழந்தது, இங்கே அழிந்தது கொஞ்சமல்ல. நாம் இழந்து தவிக்கும் இலட்சக்கணக்கான பயன்தரு மரங்கள், இனி தழைத்தோங்க வழிகள் ஏற்படுத்தப்படுமா? அல்லது பாலைவனங்களுக்கான பாதைகள் மட்டும்தானி செப்பனிடப்படுமா ? கலைந்துபோன உறவுகள் ஒரு கூட்டிற் கூடும் காலமும் வருமா? அல்லது கூடு என்பதன் அர்த்தமும் காணாமற்போகுமா?
சினந்துகொள்வதோ எந்தச் செயற்பாடுமின்றிச் சும்மாயிருப்பதோ இவற்றுக்கான தீர்வல்ல. ஆளுமையை மேம்படுத்தக்கூடிய, சமூக நோக்குடைய கல்வி தனி மனிதனையும் அவன் சார்ந்த சூழலையும் மேன்மைப்படுத்தும் எண்பது கர்ை கூடு. அந்த வகையில் பேராசிரியர் க.தேவராஜா. (பீடாதிபதி, வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடம், யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையிலும் திரு.கு.சோமசேகரம் அவர்களின் அரும் முயற்சியிலும் வளர்ந்து வரும் நிழல் நிறுவனம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் திட்டத்துடன் பயன்தரு மரங்களைப் பொது நிறுவனங்களுக்கு இலவசமாகவும் வழங்கிவருகிறது. நிழல் வளர்ந்து எம் தேசமெங்கும்
நிழல் தரட்டும். ஓரை குடிமுல்
O1

Page 3
r
சிந்திய குறள்கள்
பிறப்பைாக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பைாவ்வா செய் தொழில் வேற்றுமை யான்.
எல்லா உயிர்களுக்கும் பிறப்பியல்பு ஒரேமாதிரியேதான் உண்டு. பெருமை, சிறுமை (உயர் ஜாதி. தாழ்ந்த ஜாதி) அவர் செய்யும் தொழிலைக் கொண்டு, தொழிலின் வேறுபாடு கொண்டு அமைந்துவிட முடியாது. ஜாதி ஒன்றே தொழில்கள் பல.
The manner of birth is the same for all men. But their reputations vary, because they differ in the lives that they lead. - لر
-இரா வண்ணன்
உகை நிதி சிந்திய முத்துக்கள்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். நிலையில்லாக்காரியத்தை நிலைநிறுத்த வேண்டாம். நஞ்சுடனே ஒரு நாளும் பழகவேண்டாம் நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போகவேண்டாம் அடுத்தவரை ஒருநாளும் கெடுக்கவேண்டாம். மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே,
-உலகநாதன்
Don't tell any lie wilfully. Don't try to maintain that which cannot be sustained. Do not deal with poison or drug for whatever reason. Do not befriend people who are not in good company. Think twice before going on roads that are unfamiliar and lonely. Don't betray those who trust you. Oh! you heart please pray to Lord Murugan the Lord of Valli.
O2
 

O எதுவரை?
அன்பிற்கினிய இளைய தலைமுறையினரே!
மீண்டும் உங்களை இந்த மடலில் சந்திப்பதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சென்ற மடலில் உங்கள் முகத்தின் - கோபம் வேகம் கொண்ட முகத்தின் அற்புதத்தை கண்ணாடியில் பார்க்கும்படி சொல்லியிருந்தேன். என்ன பார்த்தீர்களா? என்ன மிகுந்த திருப்தியாக இருந்ததா? சரி . ஏதோ நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனியாவது மூர்க்கத்தனமான கோபத்தை கோப வெளிப்பாட்டை எமது கட்டுப்பாட்டில் வைத்து எமது சமநிலையை இழக்காது இருப்பதற்கு பயிற்சி செய்து கொள்வோம். உங்களது சுபாவத்திலேயே இப்படி இருக்கும் என்றால் அதனை மாற்றுவதற்கு மிகுந்த சிரமமும் முயற்சியும் அவசியம். என்றாலும் முயற்சி வெற்றிதரும்.
சரி, இன்றைய மடலில் கோபத்தை விட்டுவிட்டு
வரை
"மனத்திருப்தி" என்னும் விடயம் தொடர்பாகக் கவனம் செலுத்துவோம். "திருப்தி" என்பது மிகவும் அற்புதமான செல்வம். எமக்கு அது கிடைத்துவிட்டால் வேறு எவ்விதக் குறையும் எமக்கு உருவாகாது. அத்தகைய பெரும் செல்வத்தை நாம் அடைவதற்கு எமது மனத்தின் பரப்பளவை விசாலமானதாக, பெருமனமாக வைத்திருப்பது அவசியம். ஆம். அந்த வானத்தைபோல் மனம் படைத்த அற்புத மனிதராக நாம் ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் இந்த சின்னச் சின்னக் குறைகள் - குறுகிய மனப்பாங்குகள் யாவுமே மறைந்து விடும். ஏனையோரின் குற்றங்குறைகள் எமது பார்வைக்கு எட்டவே எட்டாது. தப்பித்தவறி எட்டிப்பார்த்தாலும் அதனைப் பொருட்படுத்தாது விட்டு விடும் நல்ல மனது நல்ல மனப்பாங்கு தானாகவே ஊற்றெடுத்து பொங்கிப் பாய்ந்து அழுக்காறு அனைத்தையும் துடைத்தழித்து விடும். பொதுவாகப் பலரிடம் மற்றவர்களின் குறைகள் தான் பெரிதாகத் தெரிகின்றன. இந்தப்
O3

Page 4
Qiang
பார்வை மாறவேண்டும். நாம் குறையுள்ளவராக இருக்கும் போது தான் ஏனையவரின் குறைகள் தெரிகின்றன. அதனைப் பெரிதுபடுத்த வேண்டும் போலத் தெரிகின்றது. பிறரின் குறைகளைப் பெரிதுபடுத்தும் மனம் என்பது “வறிய மனம்" என்று சொல்லப்படும். இந்த எண்ணமே வறுமையானது. பிறரின் குறைகள் தான் எமக்கு முதலில் தெரிகின்றது என்றால் எம்மிடம் ஏதோ குறையிருக்கின்றதென்பதே வெளிப்படையுண்மை ஆகும். நாம் நிறைவாக இருந்தால் பிறரிடம் உள்ள நல்ல அம்சங்கள் தான் எமது பார்வைக்கு முதலில் தோன்றும். சிலவேளை குறைகள் தான் தெரிந்தாலும் அதையும் ஏற்றுக்கொண்டு அவர்களை அவர்களாகவே எமது மனம் ஏற்றுக்கொண்டு விடும். இது கூட ஒருவித பயிற்சி தான். பிறரின்
நல்ல பண்புகளைப்பாராட்டும் பண்பு எம்மிடம் ஏற்பட்டு விட்டால் அதைவிட ஒரு திருப்தி வேறேதும் இல்லை. மாறாக எப்போதுமே ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது குறைகளைப் பட்டியல் படுத்தும் ஆர்வமல்லவா மேலோங்குகின்றது. இது ஒரு கிருமித்தொற்றுப் போல ஏனைய அம்சங்களை எம்மால் பார்க்க முடியாத நிலைக்கு எம்மை இழுத்துச் சென்று விடும். இது ஆபத்தானது. இது வரை எமது திருப்தி மனத்திருப்தி ஆத்மதிருப்தி எம்மில் மெல்ல அழிந்தே போய்விடும். கவனம்.
ஊகூம். திருப்தியே வரவில்லை. அடுத்த மடலில் தொடர்வோம். அது வரை விடைபெறும்.
பகீரதி கணேசதுரை ஆசிரியை, யா/ மகாஜனக் கல்லூரி
இலட்சியத்தில் தீவிர நாட்டம் ஏற்பட்டுவிட்டால் மற்றவை எளிதில் வந்துவிடும். போராட்டம் தான் ஒருவன் பெறும் படிப்பினை இந்த வாழ்க்கையில் நாம் பெறும் பெரிய நன்மை இந்தப் போராட்டப் பயிற்சியே. சொர்க்கத்திற்கு ஒரு பாதை இருக்குமானால் அது நரகத்தின் வழியாகவே இருக்கும்.
O4
 

வரை
திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
பணிழ தின்றவன் பரம ஞானி
ஆமை தின்றவன் அதைவிட பெரியவன்
இப்படிப் பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் ஒரு திருத்தம் உண்டு. பன்றி என்னும் சொல்லை பேச்சு வழக்கில் நம்மவர்கள் "பண்டி" என்று சொல்லுவார்கள். சரியான தமிழ்ச் சொல்லிலிருந்து பேசும் போது சில சொற்கள் வேறுபடுவது இயல்பே. உதாரணமாக 'வாழைப் பழம்” என்பதை எங்களில் பலர் "வாளைப்பழம்" என்றுதான் சொல்லுவோம். எங்களின் பேச்சில் ளகர, ழகர பேதம் வேறுபடுகிறது. நாங்கள் ளகர, ழகர பேதத்தைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. அதே போல் பன்றி என்ற சொல்லை நாம் பேசும் போது "பண்டி" என்னும் சொல்கிறோம். இது வழக்கில் வருகிறது. உதாரணமாக "பண்டி பயிரை அழித்துவிட்டது" என்று பேசக் கேட்டிருப்போம்.
"பண்டி தின்றவன் பரம ஞானி" என்பதில் “கோபத்தை இல்லாமற்
செய்தவன் முழுமையான ஞானி" என்பது பொருள். கோபத்தை இல்லாமல் (வராமல்) செய்தவன் சிறந்த - முழுமையான ஞானி ஆவான் என்பது பொருள் - பண்டி என்பதன் பொருள் கோபம். இது தமிழ் அகராதியில் இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் அறிஞர்கள் பண்டியென்றால் கோபம் என்னும் பொருளைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்கள்.
இரண்டாவது அடி, "ஆமை தின்றவன் அதைவிடப் பெரியவன்.” இங்கு ஆமை என்பது பொறாமை. பொறாமையை அகற்றியவன் (இல்லாமல்) பண்டி (கோபம்) தின்ற பரமஞானியை விடச் சிறந்தவனாவான் என்பது பொருள்.
கோபத்தை ஒருவன் தன்னிடம் இல்லாமற் செய்பவன் பரமஞானி. பொறாமையைத் தன்னிடமிருந்து அழிப்பவன் கோபத்தை அடக்கும் பரம ஞானியைவிடச் சிறந்தவன்.
தாதி - நீங்க ஜோக் எழுத்தாளர் எண்டு எங்கட டொக்டருக்குத் தெரிஞ்சு
போச்சு.
நோயாளி - அப்படியா! என்னைப் புகழ்ந்தாரா? தாதி - இல்லை! அவரைக் கேலி பண்ணி நீங்க எழுதுறதை நிறுத்துற
வரைக்கும் உங்களை டிஸ்சார்ச் பண்ண வேண்டாமெண்டு
சொல்லுறார்.
O5

Page 5
62ón 7: 5
புரட்சிக் கவி
திரு. சு. ஆழ்வாப்பிள்ளை
"நான் அமுதவல்லியல்லவா? மன்னவரும், அமைச்சரும் எங்கள் இருவரையும் ஒன்று சேரமல் தடுப்பதற்காக தங்களை பிறவிக்குருடன் என்று எனக்கு சொல்லிவைத்தார்கள். என்னுடைய சந்தேகங்கள் திரும்படியாக தாங்கள் இன்று நிலாவைப் பாடினீர்கள். தாமரை போன்ற உங்கள் கண்களை என்னுடைய கண்கள் பார்த்துவிட்டன.
எண்சீர் விருத்தம் "இன்னொன்று கேளாயோ அமுதவல்லி என்னிடத்தில் உன்தந்தை” என் மகட்கு முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து மூண்டதெனச் சொல்லிவைத்தான்! அதனாலன்றோ மின் ஒன்று பெண்ணென்று புவியில் வந்து விளைந்ததுபோல் விளைந்த உனதழகு மேனி இன்றுவரை நான்பார்க்க எண்ணவில்லை" என்றுரைத்தான். வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்
"காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கறைச் சேற்றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ? பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ? நேர்திருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற்போட்டால் நிறைதொழிலாளர்களுணர்வு மறைந்துபோமோ? சீரழகே தீந்தமிழே உனை என் கண்ணைத் திரையிட்டுமறைத்தார்கள்” என்று சொன்னான்.
LI.”.6)LongoL 66605 LIII “வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும் மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும் நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?
O6
 

வரை
சித்திரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக் கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும், சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை முத்தமிட்டுத்தேன் குடிக்கும் நல்ல முடிவும், உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்? தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்! குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற் பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ? என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல் சென்றுதன் தஞ்சம் தெரிவித்தாள் சேலவிழியாள்! "நன்று மடமயிலே! நான்பசியால் வாடுகின்றேன். குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்! உண்ண முடியாதே ஊரான்வோன் கூர்வாளும் வண்ண முடிச் செல்வாக்கும் வந்துமறிக்குதடி! எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான் உண்ணும் மணிக்குளத்தில் ஒடிக் கலக்காமல் நால்வருணங்கள்விதித்தார் நாட்டார்கள், அன்னவற்றில் மேல்வருணம் கோல் கொண்டு மேதினியை ஆள்வருணம் நீயன்றோ பெண்ணே நினைப்பையகற்றிவிடு! நாயென்றே எண்ணி எனை நத்தாமல் நின்று விடு!
புலவன் இளவரசியைப் பார்த்து சொல்கிறான் "இளவரசி இன்னுமொன்று சொல்கிறேன். உன்னுடைய தந்தை தான் முன்பு செய்த தீவினையால் உனக்குப் பெருநோய் (குஷ்டரோகம்) வந்தது என்று எனக்குச் சொன்னார். அதனால் தான் இன்று வரை நான் உன்னைப் பார்க்க எண்ணியதில்லை.”
ஆகாயத்திலே இருக்கின்ற கரிய முகிற் கூட்டத்தினால் சூரியன் மறைந்து விடுமா? குளத்திலே இருக்கும் சேற்றினால் தாமரை மலரினது வாசனை இல்லாமற் போய் விடுமா? எந்தப் பெரிய விதமான எதிர்ப்பு வந்தாலும் உண்மை பொய்யாக மாறிவிடுமா? பிறருடைய சூழ்ச்சி செந்தமிழை அழித்து விடுமா? தொழிலாளர்களைப் பிடித்து சிறையிலிட்டுத் துன்பப்படுத்தினாலும் அவர்களுடைய உணர்வுகள் மறைந்து போய்விடுமா? சீரழகே! தமிழ் போன்றவளே! உனை என் கண்கள் பாராதபடி திரையிட்டு மறைத்துவிட்டார்கள்.
அன்பு உணர்வினால் உணர்ச்சி வசப்பட்டு தன்னை மறந்து தன்னிடமிருந்த உணர்ச்சிகளை வாய்விட்டே சொல்லுகிறாள் இளவரசி"அதோ வானத்தை வெண்ணிலா தழுவுகிறது. அமைதியாக இருந்த சோலையில் மெய்சிலிர்க்க ஆனந்தத் தென்றல் ஆரத் தழுவுகிறதே. சித்தரித்த ஆணழகே, சென்று படர்கின்ற முல்லையினை அதை வெட்டாமல் மாமரம் தன்னுடைய கைகளால் தழுவுகிறதே. பாட்டுப் பாடிக் கொண்டு தடாகத்திலிருக்கும் அல்லி மலர்களை முத்தமிட்டுத் தேன்குடிப்பதுவும் உனக்கு உணர்ச்சிதனை உண்டாக்கவில்லையா? குளிர்ந்த சந்திரனோ என்மேல் நெருப்பை வீசுகிறான். நல்ல குணம் படைத்தவர்கள் முத்தமிட வரும் கோதையரை காதற்
O7

Page 6
Qiany
பிணமாக்கி விட்டு தாங்கள் பிழை செய்ய நினைப்பார்களா?” என்று காதலென்ற எரிகின்ற நெருப்பிற்குத் தாங்க முடியாமல் தன்னுடைய தஞ்சத்தை தெரிவித்தாள் இளவரசி புலவனிடம்.
அப்போ புலவன் உதாரன் “நன்று மயில் போன்றவளே நான் பசியால் வாடுகிறேன். எனது முன்னிலையில் மலைபோலச் சோறு குவித்திருக்கிறது. ஆனால் உண்ண முடியவில்லை. இந்த ஊரை ஆளுகின்ற மன்னனுடைய கூர்வாளும் அழகியமுடியின் செல்வாக்கும் என்னை வந்துமறிக்கிறதே. எண்ண மென்ற கடலலையில் எழுகின்ற காதலென்ற நீண்ட அலைகள் குடிக்கும் நீர் அருந்தும் குளத்தில் கலந்து விடாமல் நாட்டு மக்கள் நால்வருணத்தை விதித்தார்கள்.
மேல் வருணம், மேதினியை கோல் கொண்டு ஆளும் வருணம் என்றெல்லாம் நீ உன்னுடைய நினைப்பை அகற்றிவிட்டு என்னை யொரு நாயென்று நினைத்து நெருங்காதே.
வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொத்தாதே! பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே! கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என் உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே, போபோ மறைந்துவிடு! காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன் சாதி எனும் சங்கிலி என் தானைப் பிணித்ததடி! பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால் நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்? கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை அஞ்சுவதஞ்சாமை பேதமையன்றோ அணங்கே? ஆணிப் பொன் மேனி அதில் கிடக்கும் நல்லொளியைக் காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ? பட்டாளச் சக்கரவர்த்திபார்த்தாலும் உன்சிரிப்புக் கட்டாணிமுத்துக்குக் காலில் விழ மாட்டாரோ? என்றழுதான் விம்மி இளையான், கவியரசன் குன்றும் இரங்கும்! கொடும் பாம்பும் நெஞ்சிளகும்! ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர் பாழான நெஞ்சம் சிலசமயம் பார்த்திரங்கும்! சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறிகொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்? ரத்தவெறிகொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும் அத்தருணம் அந்த அமுதவல்லி ஏதுசொல்வாள்: "வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும் காளை உன் கைகள் எனைக் காவாமல் போகட்டும் தாளை அடைந்த இத் தையல் உள்ளம் மாறாதே! ஆதரவுகாட்டாமல் ஐய! எனை விடுத்தால் பாதரஷைபோலுன்றன் பாதம் தொடர்வதன்றி,
08

வரை
வேறு கதியறியேன். வேந்தன் சதுர்வருணம் சீறும் எனின் இந்த உடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ? ஆரத்தழுவிஅடுத்தவினாடிக்குள் உயிர் திரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்! அன்றியும் என் காதல் அமுதே! நமதுள்ளம் ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்னதாழ்வென்ன? நாட்டின் இளவரசிநான் ஒருத்தி ஆதலினால் கோட்டை அரசன் எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை! கோல்வேந்தன் என்காதற் கொற்றவனை கொல்ல வந்தால் சேல்விழியால் யான் எனது செல்வாக்கால் காத்திடுவேன்! சாதிஉயர் வென்றும், தனத்தால் உயர்வென்றும் போதாக்குறைக்குப் பொதுத்தொழிலாளர்சமுகம் மெத்த இழிவென்றும், மிகுபெரும்பாலோரை எல்லாம் கத்திமுனைகாட்டிக் காலமெலாம் ஏய்த்துவரும் பாவிகளைத்திருத்தப் பாவலனே நாமிருவர் ஆவிகளையேனும் அர்ப்பணம் செய்வோம்! இதனை நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள மிஞ்சுகின்ற காதலின் மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்! இன்னும் என்ன? என்றாள். உதாரன் விரைந்தோடி அன்னத்தைத் தூக்கி ஆரத்தழுவினான் இன்ப உலகில் இருவருமே நாள்கழித்தார்கள் பின் பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம் மாறுபடக் கண்டுமனம் பதறித் தோழியர்கள் வேறு வழியின்றிவேந்தனிடம் ஓடியே "மன்னவனே!உன் அருமை மங்கை அமுதவல்லி தன்னை உதாரணுக்குத்தத்தம் புரிந்தாளோ, காதல் எனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட மாதிரியாய்த்தோன்றுகின்றாள் மற்றிதனை மேன்மைச் சமூகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்" என்றார் அமைதியுடைய அரசன் அதன் உண்மை கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமாடத்தருகே அண்டியிருந்தான்இரவில் ஆரும் அறியாமல்!
உன்னுடைய வேல்வழியால் எந்தன் விலாப்புறத்தை கொத்தாதே. பால்போன்ற
உன்னுடைய மொழியால் பதைக்க உயிர்வாங்காதே. கண்ணாடி போன்ற கன்னத்தைக் காட்டி என் உள்ளத்தைப் புண்ணாக்கிவிடாமல் போய் மறைந்து விடு. காதல் என்ற நெருப்பால் கடலை உன்மேல் தாவச்செய்வேன். ஆனால் ஜாதி என்ற சங்கிலி என் கால்களை கட்டிப் போடுகிறது. உன்னுடைய தென்னம்பாளை போன்ற வரிசையான பல்லின் சிரிப்பை பார்த்து இன்று நான் தவறிவிடுவேனானால் நாளைக்கு அரசன்
09

Page 7
Ray
என்கின்ற நச்சுப் பாம்பினிற்கு என்ன செய்வேன். கொஞ்சும் தமிழ்த் தேனை குடிக்க வாய்ப்பில்லை. என்செய்வேன் அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சவேண்டும். அஞ்சவில்லை என்றால் அது அறிவின் குறைவு. அஞ்சவேண்டியவற்றிற்கு அஞ்சுவதுதான் அறிவு.
அழகான உன் பொன் மேனியை நீ யாருக்கும் காணிக்கை வைத்தால் பெரிய அரண்களை உடைய அரசர்கள் வரமாட்டார்களா? பட்டாளத்தை உடைய மன்னர்கள் உன் கட்டாணிமுத்திற்கு காலில் விழ மாட்டார்களா?” என்று புலவன் விம்மி விம்மி அழுத அழுகை, மலை கூட இரங்கும், கொடிய பாம்பு கூட மனமிளகும். ஏழைகளைக் கொல்வதற்காக எதிரே பார்த்துக்கொண்டிருந்த பாழான நெஞ்சும் சில சமயம் பார்த்திரங்கும்.
உயிருக்காகத் துடித்துக்கொண்டிருக்கும் ஓர் குழந்தைக்காக இரத்த வெறிகொண்டவர்களையும் நான்கு வருணம் விதித்தவர்கள் ஏன் இரங்கப்போகிறார்கள்? அதே போல இரத்த வெறி கொண்ட உன் தந்தையான இராசாவின் மனம் ஏனிரங்கப் போகிறது?
அந்த நேரம் இளவரசி அமுதவல்லி வேதனையோடு பேசினாள். “மன்னன் வாளையுருவிவந்து நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும், உன்னுடைய பாதத்தை சேர்ந்த என் உள்ளம் ஒருபோதும் மாறாது. நீ எனக்கு ஆதரவு காட்டாமல் விட்டால் உன்னுடைய பாதரஷை போல உன் பாதத் தோடு வருவதல்லால் எனக்கு வேறு கதி அறியேன். நால்வருணம் என்னைப் பார்த்துச் சீறுமென்றாலும், என்னுடைய உடல் இறந்த பின்னும் சீறுமோ? நீ என்னை ஆரத்தழுவி அரைவினாடிக்குள் நான் இறப்பினும் நான் தேன் போல் வருவேன். அன்றியும் எம்முடைய உள்ளம் ஒன்றுபட்டபின் உயர்வு என்ன? தாழ்வு என்ன? இந்த நாட்டிற்கு நான் தான் இளவரசி ஒருத்தி ஆதலினால் கோட்டை அரசன் என்னைக் கொல்வதற்கு எவ்வித சட்டமும் இல்லை.
மன்னன் என் காதலனைக் கொல்ல வந்தால் நான் எனது செல்வாக்கால் காப்பாற்றுவேன், ஜாதி உயர்வு, என்றும் தனத்தால் உயர்வென்றும், அதுவும் போதாக்குறைக்கு பொதுத் தொழிலாளர் சமூகம் மிகவும் இழிவெண்றும் பெரும்பான்மையான மக்களை கத்திணைக்காட்டி காலமெல்லாம் ஏய்த்து வருகிறார்கள். அப்படி ஏய்த்துவரும் பாவிகளைத்திருத்த நாங்கள் இருவரும் எங்கள் உயிர்களை அாப்பணம் செய்வோம். நான் உன் மேல் நெஞ்சார வைத்திருக்கும் காதலின் மேல் ஆணையாகச் சொல்கின்றேன். இதற்கு மேலும் தாமதமா?” என்றாள் எழிலரசி.
புலவன் உதாரன் விரைந்தோடிச் சென்று அன்னம் போன்ற இளவரசியை ஆரத்தழுவினான். இப்படியே யாருக்கும் தெரியாமல் இன்ப உலகில் இருவரும் நாளைக் கழித்தனர். அரண்மனைத் தோழியர்கள் இளவரசியின் செயல்களையும் உடலில் மாறுதல்களையும் கவனிக்கத் தவறவில்லை. வேறு வழியறியாத தோழியர்கள் மன்னனிடம் சென்று "மன்னவனே! உங்கள் மகள் அமுதவல்லி தன்னை உதாரணுக்குத் தத்தம்புரிந்தாளோ! காதல் என்ற இன்பக் கடலில் குளித்துவிட்ட மாதிரியாய்த் தோன்றுகிறாள். எங்களுக்குத் தெரிந்த முறைப்பாட்டை தங்களிடம் சொல்லுவது எங்கள் கடமை” என்று சொன்னார்கள்.
இதைக் கேட்ட அரசன் அமைதியுடன் இது உண்மையா என்று, கண்டறியவேண்டிக் கன்னிமாடத்தருகே யாருமறியாமல் மறைந்திருந்தான். தொடரும்.
10

Sitha was the only child of Ragupathy and Janagy. Mr. Ragupathy was a famous merchant and a millionaire too. He was also a dynamic, efficient, result oriented and experienced merchant. Since he was fed up with work and money, he realised that wealth
வரை
would arrange a very good tutor and solve the problem. He convinced his wife that they could achieve anything through effort and firm determination, but it would take time. Then he advertised in the daily news papers that he needed a well experienced tutor immediately,
Effort Brings Success
alone will not make us happy. He wanted his daughter Sitha to study well and become a doctor to serve the suffering human being.
Sitha was given all the comforts but unfortunately, she was reluctant to study, she even hesitated to go to school and join with other children. Her mother, Janagy tried her best to make her interested in her studies but she failed in all her efforts. She was very much worried and complained her husband. So he told her at once; "Don't worry Janagy, there is nothing like making efforts". Then she replied:"Okay! You are a result oriented merchant. You can solve the problem". So Mr. Ragupathy said that he
the selected tutor would be paid well and would able to enjoy other benefits also. At once many people rushed to his place. Mr. Ragupathy and his wife selected a good looking smart thirty five years old lady - tutor, with a good reputation.
Sitha was also attracted by the teacher. As the teacher was very efficient, she easily
11

Page 8
Qiang
established a rapport between Sitha and herself. The teacher brought Fairy-Tales and encouraged her to read story books. One fine day, she brought a story about "Happy and Unhappy boxes" and asked her to read it. Sitha was puzzled and asked the teacher to explain it. Then the teacher narated that it was a present given to a student who had not co-operated with his classmates and consequently unable to enjoy his school life. Then the teacher convinced Sitha that the school days are the best part of our life and we should not miss to enjoy that life. The teacher advised Sitha to prepare two boxes as mentioned in the story and put five cards about how to achieve happiness in the "Happy box' and also five cards that would make us unhappy in the "Unhappy box'. Sitha was friendly with her tutor and she loved her very much. She had confidence in her words. So Sitha wanted to know what she should do.
The teacher asked Sitha; "You do know, what makes you unhappy? Don't you?"
"Yes, when I am forced to do something I don't like.
When I hurt the feeling of anyone"
"Alright now I will read what is written in the cards. Then the teacher took five cards from the happy box and read it aloud.
Be patient Be Sweet and humble
Speak kind words Help others Always SMILE
Then she asked Sitha to take out and read the cards from the unhappy box.
Being impatient Speaking harsh and hurtful words
Unruly actions Stealing Competition and Jealously
The teacher said; "Now both of us shall try this game and find out the secret of being happy. Then she asked Sitha to take one
card and read what is written on it. Sitha Said "SMILE".
The teacher asked Sitha, "What have you to do now?"
"I Will have to 'SMILE' even
12

anybody hurt me.
"Will you do it, when you go to school?"
"Certainly I would do it, as it is your wish also" replied Sitha.
"Very good, we will meet tomorrow evening. Good night Sitha"
"Good night teacher" "Oh! You have missed one thing. You had not smiled at me"
Then at once Sitha smiled and said "Good night, my beloved teacher"
The next day when the teacher arrived, Sitha said; "I had practiced as you advised me but when one of my class-mates used harsh words, I too retorted without a smile on my lips".
The teacher encouraged her and said; "You are only a beginner, so you had succeeded in your endevour".
Then the teacher asked her to write it down on a piece of paper and put it in the unhappy box and forget about it. But always remember not to repeat it in your life. Always try to understand what went wrong.
வரை
Tell yourself that you would not repeat the same mistake and then forget the incident completely. Then the teacher asked her to take another card from the happy box. It was written in the cardBe Sweet and humble.
"Try this, you will be successful. With the encouragement of the teacher, Sitha followed the game enthusiastically and she was very happy. She also helped her friends and made them also happy. Her class-mates became very friendly with her. The parents and the school teachers observed Sitha and they all were astonished to see her progress.
Mr. Ragupathy, Sitha's father was very happy that his ambition would be realised. He told to his wife and his friends that all the children in Sitha's class were treating each other like friends - loving and caring for each other. How Marvelous! It is really a magic. Mr. Ragupathy further added, "Trust and confidence bring strength to try new efforts. Oh! See! How effort makes impossible into possible"
-Ms. Jegas.0lly (Elappal
13

Page 9
வரை
Proverbs and their meanings:
II.Necessity is the mother of invention.
The need for something forces people to find a way of obtaining it. JNeed teaches a plan.
Necessity will make you find a solution. J. Never put off till tomorrow what can be done today.
Don't postpone something you can do now. Never say die. Never give up. No man can serve two masters.
It is impossible to follow instructions from two different sources. ...No man is an island.
We all need other people. J Once bitten, twice shy.
After an unpleasant experience, people are careful to avoid something similar: ClOne good turn deserves another.
You should be helpful to someone who helps you. |One today is worth two tomorrow.
What you have today is better than what is promised or hoped for: LOne man's meat is another man's poison. People don't always like the same things. One man's trash is another man's treasure. Things useless to One may be valuable to another: Opportunity seldom knocks twice. Don't miss opportunities that come along. Il Practice makes perfect.
Doing something repeatedly is the only way to become good at it. Practice what you preach. Do yourself what you advise Others to do.
14

வரை
நேர்த்தியாய் எழுதுவோம் R
போட்டி இல. 09
. ----
ލމި . ... --
Y---
ஒருவருட சந்தாவை வெல்லுங்கள் 茎一
༽༼༽དི་
کس_.....................
இற்றைக்கு அறுபது வருடங்களுக்கு முன் டென்மார்க் கடற்படையினர்
கிரீன்லாந்து தீவுக்கண்மையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்களால் ஒரு விமானமும், விமான ஒட்டி உட்பட ஐந்து
விமானிகளும் உறைபனியில் உறைந்து கிடக்கக்
காணப்பட்டனர்.விமானத்தில் எந்த வித கோளாறும் இல்லைல. அந்த விமானிகள் விமானத்தில் இருந்த இருக்கையிலேயே இருந்த நிலையில்
காணப்பட்டனர்.
இந்த விமானம் எந்த நாட்டுக்கு சொந்தமானது என்று ஆராயப்பட்டது. அறுபது வருடங்களுக்கு முன்பு யப்பானில் இருந்து ஐந்து விமானங்கள் சென்றன என்றும், அவர்களுடன் தொடர்பு பதினைந்து நிமிடங்களில்
துண்டிக்கப்பட்ட தென்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் யப்பானிய விமானப் படையினர் பல இடங்களில் தேடுதல் நடத்தியும் கண்டு
பிடிக்க முடியாமல் போனார்கள் என்றும் கூறினார்கள். அவர்களின் விமானம்
தான் பத்து வருடங்களுக்கு முன் கிறீன்லாந்து தீவுக் கண்மையில்
கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களே! மேலே தரப்பட்டுள்ள பத்திகள் எழுத்துப் பிழைகளையோ அல்லது இலக்கணப் பிழைகளையோ கொணர்டவை. இவற்றைத் திருத்தி எழுதி, மறுபக்கத்தில் உள்ள நறுக்கினையும் பூரணப்படுத்தி எமது
முகவரிக்கு 05.11.2010 இற்கிடையில் அனுப்பிவையுங்கள். சரியான விடை எழுதி அனுப்பும் அதிஷ்டசாலி மாணவருக்கு பரிசாக (ஒருவருட சந்தா) 12 வரை மாசிகைகள் அனுப்பிவைக்கப்படும்
15

Page 10
வரை
நேர்த்தியாய் எழுதுவோம்" போட்டி இல. - 7 இற்கான பரிசைப்பெறும் அதிஷ்டசாலி மாணவர் செல்வன். சிவபாலன் ஜனகன், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்,
நேர்த்தியாய் எழுதுவோம் போட்டி இல.07 இற்கான நேர்த்தியாய் எழுதிய வடிவம்
சமுத்திரங்களில் வாழ்கின்ற தட்டையான மீன் திருக்கையாகும். திருக்கை மீனில் நூற்றுக்கணக்கான வகைகளுள்ளன. அவை யாவும் நீண்ட, மெலிந்த வாலினைக் கொண்டுள்ளன. வாலின் நுனியில் ஒன்று அல்லது இரண்டு கூர்மையான முட்களைக் கொண்டுள்ளன. எதிரியை வாலினால் அடித்தும், வாலின் முட்களால் குத்தியும் திருக்கை காயப்படுத்திவிடும். இந்த வால் நுனி முட்கள் குத்தினால் அவற்றிலிருந்து கசியும் விஷத்தன்மை கொண்ட திரவம் மிகுந்த கடுகடுப்பையும் வலியையும் ஏற்படுத்தும்.
அந்தக் காலத்து யாழ்ப்பாணத்துச் சண்டியர்கள் திருக்கை வாலை ஆயுதமாக உபயோகித்துள்ளனர். திருக்கைகள் சமுத்திர ஆழப்பகுதியில் வசிப்பன. எனவே மேல்நோக்கிப் பார்ப்பதற்கே அவற்றின் விழிகள் தலையின் மேலுள்ளன. ஏனைய மீன்களைப் போன்று திருக்கைகள் வாயினால் சுவாசிப்பதில்லை. அவ்வாறு சுவாசிக்கில் மண்ணும், சேறும் புகுந்துவிடும். அவை ஆழச் சீவிப்பதால் இந்த நிலை. எனவே திருக்கையின் விழிகளின் மேல்பக்கத்தில் இரு துவாரங்களுள்ளன. அவற்றினுடாக நிரை உட்பெற்றுச் சுவாசிக்கின்றது.
திருக்கைகள் தமது உணவாக நணர்டு, கணவாய், சிப்பி போன்றவற்றைக் கொள்கின்றன. அவற்றின் பலமான பற்கள் இவற்றின் ஒடுகளை அரிக்கும் வலிமை மிக்கன. சில திருக்கைகள் எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மணலுள் அல்லது சேற்றுள் தம்மை புதைத்துக்கொள்ளும்
யல்பின.
(3 O C Ο つ J
நர்த்தியாய் எழுதுவோம் பாட்டி இல. 09 ༼༡༽
я у-" и в J)
(, முழுப்பெயர் : . :
முகவரி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
UTTL—3FT6ðYOU . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
16
 
 

வரை
LET'S LEARN TO SPEAKN ENGLISH
ஆங்கிலத்தில் பேசப் பழகுவோம் தொடர். 5 s Ά மாதமொரு உரையாடல்
Monthly Conversation
By: Professor A.V. Manivasagar, Ph.D.
Head/Dept. of Political Science University of Jaffna
Arrival of a Guest
This is a dialog concerning the arrival of a guest Mr. Sankar in the house of Mr. Sekar.
Suthan: Hello uncle, Good Mr. Sankar: I am just coming.
morning. Please come in. Mr. Sekar: By which train?
Mr.Sankar: Good morning Suthan. Mr. Sankar: By the mail train.
How are you?
Mr.Sekar: Was it late today?
Suthan: Pretty well uncle, thanks,
what about you? Mr. Sankar: Yes, it was running late
by two hours. Mr.Sankar: I am also all right. Mr. Sekar: Suthan, call your Amma
Where is your Appa (Mummy) also. (Daddy) and Amma (Mummy)? Suthan: O.K, Appa (Daddy).
Suthan: Uncle, they are in Mr. Sankar: I have come to attend
upstairs. I'll just call them. Appa (Daddy), come down stairs. Sankar uncle from
the marriage ceremony of my friend's daughter in Point Pedro. I thought that I should take this opportunity to visit you also.
Colombo has come.
Mr.Sekar: Hello Sankar. How are
you? When did you come? Mr.Sekar: This is our pleasure
Sankar to see you after a
17

Page 11
வரை
long time. Please stay with us for a few days.
Mr.Sankar: I shall stay for two
days only as I do not have much leave to my credit.
Mr.Sekar: How is everybody?
Mr.Sankar: All are hail and hearty? My daughter always remembers all of
you.
Mr.Sekar: Why didn't you bring her also along with you?
Mr.Sankar: I was coming for a
short visit. It was not possible to bring her. Sunita had also come to stay with us for a few days along with her children. Therefore, I
promised my daughter that next time I would be bringing her also with me.
Mrs. Sekar: What would you like
to have Sankar?
Mr. Sankar: Anything.
Mrs. Sekar: Would you like to have
something cold or hot?
Mr.Sankar: I would like hot tea at
this time.
Mrs. Sekar. O.K. Sankar, you just
wash your face and hands. I shall bring your breakfast and tea in a few minutes.
Mr.Sekar: Please show me your
bathroom.
Mr.Sekar: This is our bathroom
18
 

வரை
Sankar. The towel and soap are lying near the basin. If you want the tooth paste that is also lying there.
Mr. Sankar: Thank you Sekar.
Mrs.Sekar: Sankar, please make
hurry. The breakfast is ready on the dining table and the tea is getting cold.
Mr.Sankar: Oh Here I am. NOW where is your dining table?
Mr.Sekar: Come this way. This is
our dining room.
Mr. Sankar: Oh! It is a big dining
table and a sumptuous breakfast.
Mrs. Sekar: It is nothing Sankar. I
have prepared a simple breakfast very hurriedly.
Mr. Sankar: But it is very
delicious. The tea is really hot. Thanks for all this.
Mrs. Sekar: Sankar, stay with us
for at least a few days.
Mr. Sankar: Do not worry. I will
stay with you for another two days. But I promise that when I bring my daughter next time we are going to stay with you at least for fifteen days.
Mrs.Sekar: Thanks in advance.
米率岑
The difference between a well-bred and ill-bred man is this, one
immediately attracts your liking, and the other your aversion.
You love one till you find reason to hate him, you hate the other
till you find reason to love him.
-SAMUEL JOHNSON
Wit and Humour - if any difference it is in duration lightening
and electric light. Same material apparently; but one is vivid
and can do damage, the other fools along and enjoys
elaboration.
-MARK TWAIN
19

Page 12
வரை
ரஃபிள் கேர in
iffg1 TOWØr)
உலக அதிசயங்களுள் ஒன்றான ஈ.பிள் கோபுரத்தை நீங்கள் ஏலவே அறிந்திருப்பீர்கள். இருப்பினும் வரலாறு போற்றும் இக் கோபுர வரலாற்றை சுருங்க அறிந்து கொள்வோம். பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் நகரில் இக் கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் எனும்
உலகக் கண்காட்சி விழாவிற்கு
நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது தான் இவ் ஈஃபிள் கோபுரம். 1889 மார்ச் 31"திகதி தொடக்கவிழா நடைபெற்று ஜூன் மாதம் 10 திகதி வேல்ஸ் இளவரசன் ஏழாம் எட்வேட்டால் திறந்து வைக்கப்பட்டது.
இக் கோபுரத்தை வடிவமைத்தவர் பொறியியலாளர் அலெக்சாண்டர் கஸ்ற்றேவ் ஈ.பிள்
2O
 

நிர்மாணத்திற்கு 300
(Alexsender Gustave Eiffel) { என்பவரே. அப்பொறியியலாளரின் பெயரையே இக் கோபுரத்திற்கு சூட்டியுமுள்ளனர். கஸ்ற்றேவ் ஈ.பிள் உலக கண்காட்சிக்குரிய இடமாக பாரிஸ் நகரில் ஒடும் G|Fußlgör (Seine) நதிக்கரையோரத்தில் இருந்த முன்னாள் இராணுவப் பயிற்சி முகாமைத் தேர்ந்தெடுத்து அக்கண்காட்சியின் சிகரமாக ஈஃபிள் கோபுரத்தை அமைக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டார். இக் கட்டட
(86 IGO)6)u IIT'856ft, 18,038 உருக்குத் துண்டுகள் (7300 தொன் உருக்கு), 5 இலட்சம் ஆணிகள் என்பனவும், கோபுர திட்டவரை படத்திற்கு ஒருசதுர கனவளவுள்ள 5,000 தாள்களும் பயன்படுத்தப்பட்டனவாம்.
இக் கோபுரமானது மூன்று தளங்களால் ஆக்கப்பட்டுள்ளது. முன்று தளங்களிலும் வானிலை ஆராய்ச்சி நிலையம், ஒலிபரப்பு நிலையம், உணவு விடுதிகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளமான தொலைக் காட்சி ஒளிபரப்பு கோபுரம் உட்பட இதன் மொத்த எடை 10,000 தொன்னுக்கும் மேற்பட்டதாகும். இக் கோபுரத்தின்
நிர்மாணப்பணிக்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன. இக் கோபுரத்தின் உச்சியை சென்றடைய சுமார் 1710 சுழல்படிகளும், மின் உயர்த்தி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இக் கோபுரம் முழுக்க முழுக்க உருக்கால் ஆக்கப்பட்டது என்பதால் கோபுர பராமரிப்பு கருதி ஏழாண்டுக்கு ஒரு முறை 50 தொன் நிடையுடைய பூச்சு (Paint) பயன்படுத்தப்படுகின்றது.
1887 ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட இப்பணிக்கு சுமார் ஒரு மில்லியன் பிராங்குகள் தேவைப்பட்டன. ஆனால் அரசின் நிதி ஒதுக்கீடானது 2,92,000
21

Page 13
வரை
பிராங்குகள் மட்டுமே. மேற்கொண்டு ஆன செலவினை ஈடுசெய்யும் வகையில் கஸ்ற்றேவ் ஈஃபிளிற்கு ஈஃபிள் கோபுரத்தை அவ்விடத்தில் நிறுத்திவைத்து கோபுரத்தை பார்வையிடும் மக்களின் நுழைவாயில் கட்டணத்தை 20 ஆண்டுகளுக்கு அவரே ஈஃபிளே வசூலித்துக் கொள்ளும் உரிமையை 20 ஆண்டுகள் அரசு வழங்கியது. ஆனால் அக் கோபுரம் கட்டப்பட்ட பின்னர் மிகுதி பணம் ஒர் ஆண்டிலேயே வசூலாகி விட்டதாம். ஒவ்வொரு ஆண்டும் சராசரி 47 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இக் கோபுரத்தைப் பார்வையிடுவதால் ஆண்டொன்றிற்கு 160 மில்லியன் பிராங்குகள் வசூலாகின்றன. அதுமட்டுமன்றி 20 ஆண்டு கால நிர்மாணக் கட்டடத்தை, அரசு அனுமதிப் பத்திரம் காலாவதியான பின்னும் கோபுரம் அங்கேயே நிற்க அனுமதிக்கப்பட்டது. இதற்கு காரணம் அதன் கவர்ச்சித் தன்மை மட்டுமல்லாது தொடர்புகளுக்கு இது மிகவும் பெறுமதி மிக்க தளமாக காணப்படுவதாலாகும். எனினும் 20 ஆண்டு நிர்மாணிப்பு 120 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தனது நிலையில் எவ்வித மாற்றமுமின்றி நிமிர்ந்து நிற்கும் கோபுரத்தின் வடிவமைப்பின் பெருமை கஸ்ற்றேவ் ஈஃபிளையே
சாரும்.
ஜனவரி 12 திகதி 1908” முதலாவது தொலைத்தூரத் தகவல் வானொலி கோபுரத்திலிருந்து அனுப்பப்பட்டது. தற்போது எட்டு வானொலி நிலைய நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது. ஜனவரி 3, 1951ல் தி ஒன்றினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது. 1959ல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது. 1931ல் கிறிஸ்லெர் கட்டடம் நியூயோக்கில் கட்டப்படும் வரை உயர்ந்த மனித சாதனைக் கட்டுமாணமாக ஈஃபிள் கோபுரம் திகழ்ந்தது.
இக் கோபுரத்தைக் கட்டத்தொடங்கும் போது பிரான்சிய மக்கள் அதை குறை கூறினார்கள். வெறும் இரும்புத் துண்டுகளை வைத்துக் கட்டினால் என்ன அழகாகவா இருக்கும்? எலும்புக்கூடு, ஒட்டகச்சிவிங்கி இப்படி எல்லாம் கற்பனை செய்தார்கள். ஆனால் அதே மக்கள் கோபுரம் கட்டி முடித்ததும் அதன் அழகால் பிரமித்து பெருமிதமடைந்தார்கள், அடைகிறார்கள். இன்று இது ஓர் உலக அதிசயமாகவும் பிரான்ஸ் நாட்டின் சிகரமாகவும் திகழ்கின்றது.
米来米
22

இணையத் தொழில் நுட்பத்தில் தேடல் இயந்திரங்களை தயாரித்து வெளியிடுவதில் முன்னிலையில் உள்ள கூகுள் நிறுவனம் கூகுள் உடனடித் GigsL6) (Google Instant) 6Tg)|b (35L6) இயந்திரத்தினை சென்ற வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. வழமையாக நாம் பார்க்க விரும்பும் விடயங்கள் தொடர்பான தகவல்களை தேடல் இயந்திரங்களில் தட்டச்சு செய்து என்ரர் கட்டளையினை அழுத்திய பின் நாம் பார்க்க விரும்பிய விடயங்களை கொண்டுள்ள இணையத் தளங்களை தேடல் இயந்திரம் தேடிக் கண்டுபிடித்து பட்டியலிட்டுக் காண்பிக்கும். அத்தோடு இத் தேடலுக்கு எடுத்த நேரம், எத்தனை முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன போன்ற விபரங்களையும் காண்பிக்கும். பின் இப்பட்டியலில் இருந்து இணையத்தளங்களை தெரிவு செய்து பார்வையிடுகிறோம். இவ்வாறே முன்னைய கூகுள் தேடல் இயந்திரங்கள் தொழிற்பட்டன.
புதிதாக அறிமுகப்படுத்திய தேடல் இயந்திரத்தில் புதிதாக 15 தொழில்
வரை
B2 (95GT
உடனடித் தேடல்
நுட்பங்களைப் பயன்படுத்துவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Sgsi) 60LDu LDTais Streaming Search எனும் தொழிற்பாடு அமைகிறது. இதனால் தேடல் செயற்பாடானது ஒடும் நீரோடை போல இயங்குகிறது. நாம் தேடலுக்கான சொல்லினை தட்டச்சு செய்யத் தொடங்கியவுடனேயே இவ் ஒடையில் இணைகின்றோம். இந்த ஒடையானது முதல் சொல்லிலேயே நாம் தேடும் இணையத்தளங்களை முன் உணர்ந்து பட்டியலிடுகிறது. நாம் தேடற் சொற்களை தட்டச்சு செய்யும் போதே கூகுள் உடனடித் தேடல் இயந்திரம் தேடலைத் தொடங்கி ஓரிரு எழுத்துக்களை நாம் தட்டச்சு செய்யும் போது இது என்னவாக இருக்கும் என ஊகித்து அதற்கான தளங்களை தேடல் கட்டத்திற்கு கீழே பட்டியலிடுகிறது.
பழைய முறையில் நாம் தேடல் சொற்களை முழுமையாக தேடல் இயந்திரத்தின் கட்டத்தில் தட்டச்சு செய்து பின் என்ரர் கட்டளையினை அழுத்திய பின்னரே அதற்கான இணையத்தளங்கிளின் விபரங்கள்
23

Page 14
பட்டியலிடப்படும். இதில் நாம் எதிர்பார்த்த தளம் காணப்படவில்லை எனில் மறுபடியும் தேடல் சொற்களை சரி செய்து மீண்டும் தேடல் இயந்திரத்தினை இயக்குவோம். புதிய முறையில் நாம் சொற்களை தட்டச்சு செய்யும் போதே முடிவுகள் காட்டப்பட்டு தொடர்ந்து சொற்களுக்கேற்ப மாற்றப்படுகிறது. தட்டச்சு செய்யும் போதே அதற்கான முதன்மைத்தளம் சாம்பல் நிறத்தில் காட்டப்படுகிறது. இதுதான் நாம் எதிர்பார்த்த தளமெனில் தேடல் சொல்லினை தட்டச்சு செய்வதனை நிறுத்திவிட்டு குறிப்பிட்ட தளத்தினை இயக்கலாம்.
உதாரணமாக அமெரிக்க டொலர் ஒன்றிற்கான பணமதிப்பினை அறியும் விருப்பத்துடன் இணையத்தளம் ஒன்றினை தேட விரும்புகின்றோம் எனில் அதற்காக "Exchange rates dollar to SLR' என தட்டச்சு செய்ய முடிவெடுத்து ex என தட்டச்சு செய்த உடனேயே expedia எனும் தளத்தினை பட்டியலிடுகிறது பின் exch என தட்டச்சு செய்யும் போது கூகுள் நாம் பணப்பரிமாற்ற வீதத்தினை அறிய விரும்பும் தளத்தினை தேடுகிறோம் என முன்னுணர்ந்து அவை சார்பான தன்னுடைய கணிப்பொறி தளத்தினையும் யுனிவெர்சல் கென்வேட்டர் தளம் ஒன்றினையும்
பட்டியலிட்டு காண்பிக்கிறது.
Exchange rates d 6T60Ti,
கொடுத்தவுடன் கீழுள்ள தளங்கள் மாறுகின்றன. பல்வேறு நாட்டுப் பணமதிப்பிற்கான மதிப்பு மாறல் காட்டும் தளங்கள் காட்டப்படுகின்றன. இவ்வாறு நாம் தட்டச்சு செய்யும் முன்னரோ அல்லது தட்டச்சு செய்து முடித்த அடுத்த வினாடியே நாம் என்ரர் கட்டளையை இயக்காமலே நாம் தேடும் தளங்கள் காட்டப்படுகின்றன. எனவே நாம் என்ன வேண்டும் என்று கேட்பதற்கு முன்னரே கூகுள் நாம் தேடுவதை தருகிறது. இவ் உடனடித் தேடல் தொழில் நுட்பமானது அதிவேக தேடல் முடிவுகள், மிகப் பயனுள்ள முடிவுகள், உடனடித் தீர்வு ஆகிய பயன்களை பயனாளர்களிற்கு வழங்குகின்றது. சாதாரணமாக ஒருவருக்கு தேடலை தட்டச்சு செய்வதற்கு குறைந்தது 10 நொடிகள் தேவைப்படும். சிலநேரம் பலருக்கு 30 தொடக்கம் 90 நொடிகள்
தேவைப்படும். கூகுள் உடனடித்
24
 

வரை
தேடலை பயன்படுத்தினால் ஒரு தேடலுக்கு 2 தொடக்கம் 5 வினாடகள் குறைக்கப்படுகிறது. இதனால் நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 350 கோடி வினாடிகள் மீதப்படுத்த முடிகிறது.
இணையத் தேடல் இயந்திர முறைமையில் பெரிய புரட்சி என்று கருதமுடியாவிட்டாலும் பெரிய முன்னேற்றம் என கூகுளின் உடனடித் தேடலை கருதமுடியும். Microsoft நிறுவனம் தனது Ping தேடல் இயந்திரத்தின் மூலம் கூகுளின் இடத்தினை கைப்பற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் கூகுள் இத்தொழில்நுட்பம் மூலம் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு தன் முதல் இடத்தை யாரும் கைப்பற்றிக்கொள்ள முடியாது என்று நிரூபித்துள்ளது. முதல் கட்டமாக சில நாடுகளுக்கே கூகுள் இதனை வழங்கியுள்ளது. இவ் வசதியினை பெறுவதற்கு http://www.google.com Iwebhp?scient psy தளத்திற்கு சென்று இதனை எமது S60600Tug 6lbs uSs) (Web browser) home page ஆக மாற்றுவதன் மூலம் 96)6 og Favorite list 36. இத்தளத்தினை இணைப்பதன் மூலம் தேவைப்படும் போது இத் தளத்தினை நாம் இயக்கலாம். பாலியல் வன்முறைத்
தளங்களை வடிகட்டி பார்வையிடும்
வசதியும் இதில் உண்டு. இத தளத்தினை பயன்படுத்த இணைய g) Guglia,6IsT60T Google Chrome, Internet Explorer8, Mozila firebox, Sapari egåu 16) sbgóls06ðIÚ பயன்படுத்தலாம். Opera இணைய உலவியில் இதனைப் பயன்படுத்த முடியாது. இதனைப்பற்றிய மேலதிக விபரங்களை பார்வையிடுவதற்கு http:ilwww.google.comlinstan
செல்லவும். புதிய வைரஸ்
கூகுள், நாசா, டிஸ்னி, கொக்கோகோலா போன்ற பெரிய
நிறுவனங்களை பாதித்த புதிய வைரஸ்
ஒன்று இட்போது உலகெங்கும் பரவி 6) (556 pg. 35pg Here You have
என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இந்த சொற்களை மின்னஞ்சல்களில் உள்ள விடயக் கட்டத்தில் (Subject box) கொண்டு வரும் மின்னஞ்சல்கள் மூலம் பரவுகின்றது. முதலில் உங்கள் நண்பரின் மின்னஞ்சல் முகவரியில்
25

Page 15
வரை
இருந்து வரும் மின்னஞ்சலாக உங்கள் Inbox ஐ வந்தடைகின்றது. இதில் நீங்கள் கேட்ட "பாலியல் பைல் இதோ இங்குள்ளது" என்று ஒரு PDF கோவைக்கு இணைப்பு தருகின்றது. இது உண்மையில் ஒரு PDF கோவை அல்ல .Sல என்ற துணைப்பெயருடன் உள்ள ஒரு விண்டோஸ் ஸ்கிறிப்ட் கோவையாக உள்ள ஒரு வைரஸ் கோப்பாகும்.
Sigl CSRSS.exe 6ts f கோப்பினை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவி இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் anti virus இயக்கத்தினை நிறுத்துகிறது. இது ஒருவகை bad net வைரஸ் ஆகும். ஆனால் பழைய வைரஸ்களான நிம்டா, அர்னாகோர்னிகோவா, மெலிஸ்ஸா வைரஸ் போல பரவுகின்றது. ஆர்வத்தில் அல்லது ஆசையில் இதில் இணைப்பை இயக்கியவுடன் இந்த வைரஸ் உங்கள் கணினியில் வந்து இறங்குகின்றது. அடுத்து உங்கள் மின்னஞ்சல் முகவரி புத்தகத்தில் உள்ள அனைத்து முகவரிகளிற்கும் நீங்கள் மின்னஞ்சல் அனுப்புவது போன்று இந்த வைரஸ் அடங்கிய மின்னஞ்சல்களை அனுப்புகின்றது. இந்த வைரஸ் கடந்த செப்டம்பர் 10 முதல் பரவிவருகின்றது. SANS Technology Institute என்ற நிறுவனத்தின் இணைய கண்காணிப்பு பிரிவு இந்த வைரஸ் அடங்கிய மின்னஞ்சல் ஆயிரக்
கணக்கில் பரவுவதாக அறிவித்துள்ளது. மைக் அபி நிறுவனம் இந்த வைரஸ் குறித்து அறிவதற்கு சில நாட்கள் ஆகும் என அறிவித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் Comcast என்ற கணினி நிறுவனம் தனது தனது மின்னஞ்சல் சேவையகங்களை (mail Server) நிறுத்தி விட்டது. என்றாலும் ஏற்கனவே பரவிய கணினிகளிலிருந்து இந்த வைரஸ் கோப்பு வேறு கணினிகளிற்கு பரவி வருகின்றது. இதிலிருந்து தப்புவது எப்படி?
b6)6) antivirus S6060T உங்கள் கணினியில் நிறுவுங்கள் அத்தோடு அதனை இற்றைப்படுத்திக் கொள்ளுங்கள் (update). மின்னஞ்சல் இணைப்புக்கள் எது வந்தாலும் திறப்பதற்கு முயற்சிக்காதீர்கள். அனுப்பியவருக்கு தனி மின்னஞ்சல் அனுப்பி அவரால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தானா என உறுதிப்படுத்தி பின் திறக்கவும். Here you have si6)60g) just for you என்ற விடயத் தலைப்பில் மின்னஞ்சல் இருந்தால் தாமதியாமல் அவற்றினை அழித்துவிடவும். இந்த வைரஸ் Norton Symantec antivirus நிறுவப்பட்டுள்ள கணினிகளை பாதிக்கவில்லை என்ற தகவலும் உள்ளது. எவ்வாறனெனினும் உங்கள் மின்னஞ்சல்களை முற்பாதுகாப்போடு கையாளுங்கள்.
6ђПп. й6)
26

வரை
பிரதான வாயில்கள் \ഴ്ക് எனபதை மறநது 冬三 இறகுதிர்த்து Σς பறக்கும் மனப்பறவை {{ எச்சமிட்டு விடுகிறது
தலைகளில் மற்றும் விரலிடுக்கில் OSY
ஒவ்வொரு உரோமத்தின் O () காலிடுக்கிலும் და? சவுக்கு மரங்கள் வளைந்து மண்ணைத் (5* தொடுமுணர்ச்சிகள் S
துயரித்து rS) சிறகுடைக்கின்றன ტS சேறுகலங்கித் தன்நிறம் தொலைத்த வாவியில் விழும் மின்விளக்கில் அட்டைகளின் விம்பம்
ஆழப்பதிந்துள்ளது
ஈரப்பாசியில் வழிந்தொழியும் நீர்க்குமிழினுள்ளே ஒளித்துவைத்த வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனத்தின் கொடி நள்ளிரவுத் தூக்கத்தைக் கெடுக்கிறது
தார் போட மறந்த மண்ணொழுங்கையில் ரயர் பதிக்கும் வாகனங்களின் எண்ணை ஒழுகிய புள்ளிகளின் கீழே எதிர்காலம் பதுங்கியிருக்கிறது

Page 16
வரை
இப்படியே சகலதையும் கையேந்திப் பிச்சைக்காரனாகும் பறவையின் சிறகு ஒளிமயம் தாண்டி ஜோதியாய் விரியும்
ஒற்றைக் கை ஒற்றைக் கண் பாதிமனதுடன் பாலங்கள் தாண்டி
பயணிக்க வேண்டியுள்ளது குறைப்பிரசவத்தில் ஒற்றைக் குழந்தை பெற ஒவ்வொரு உயிரின் குலையிலும் அளவெடுத்துப் பொறிக்கப்பட்ட இனத்தின் உத்தியோக இலச்சினையுடன்
பழுத்த இலைகள் பச்சையாவது பற்றி கனவுகள் நிறைந்த மணித்துளியை இரண்டறுத்து அலைவந்து கற்பழித்துப் பொகுமுன் கரையில் அத்திவாரம் இல்லாமல் கோபுரங்கள் சமைப்பது பற்றி கலையார்வலர்கள் சபதமெடுக்கின்றனர்
பேதமற்று மீண்டும் மீணடும் சகதிகளிலும் எச்சமிடும் மனப்பறவைக்குஞ்சொன்று
வை. சாரங்கன் 22.10.2006 (மட்டக்களப்பில் வாவிக்கரையிலிருந்து.)
28
 

வரை
மரங்களின் வரிசையிலே விளா அல்லது விளாம்பழம்) மரத்திற்கு என்றுமே தனியிடமுண்டு. எமது
நாட்டில் பரவலாக வளரக்கூடிய மரம் இது. இன்னொருவகையில் ஏழைகளின் பழம் என்றால் கூட மிகையாகாது. இம்மரத்திற்கான பராமரிப்பு மிகவும் குறைவு. ஆரம்பத்தில் வளர்வதை உறுதி செய்து விட்டால் போதும் பின்பு அதுவாக வளர்ந்து பூத்து காய்க்கும். தரிசு காணிகளில் இதனை நடுகை செய்து சிறந்த வருவாயைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.ஏழை மக்களது வாழ்வாதாரத்துக்கான மரமிது. பூர்வீகமும் வேறு பெயர்களும் விளா மரத்தினுடைய பூர்வீகமாக பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா இவற்றுடன் ஜாவா தீவு என்பன வுள்ளதாக அறியலாம். இது எங்களூர் மரம். விளாவினை
கலாநிதி குமிகுந்தன், தலைவர், விவசாய உயிரியல் துறை, விவசாயபீடம்,
யாழ். பல்கலைக் கழகம்.
ஆங்கிலத்தில் Wood- apple, elephant-apple, monkey fruit, LDgògp/Liò curd fruit என்றழைப்பார்கள். தமிழில் விளாம்பழம்) மரமென்று அழைக்கப்படும் இம்மரத்தை சிங்களத்தில் டிவுல் (Divul) என
அழைப்பார்.
ஓரளவுக்கு வரட்சியுடன் மல்லுக்கட்டி வாழக்கூடிய மரம் இது. வீதியோர மர IB(S6035u'ilsi) (Avenue planting) விளா மரத்திற்கும் இடமுண்டு. வீதி அகலிப்பு செய்யும் பிரதேசங்களில் வீதியை இருமருங்கிலும் அகலிப்பு செய்வதற்காக தறிக்கப்படும் மரங்களுக்கு பதிலாக இம்மரத்தை இருக்கும் இடவசதியைப் பொறுத்து இருபுறமும் நடுகை செய்யலாம்.
29

Page 17
வரை
தாவரவியலின் பக்கத்தில்
விளா மரத்திற்கு தாவரவியலின் இருசொற் பெயரீட்டு முறைக்கிணைவாக லிமோனியா அசிடிசிமா என அழைக்கின்றனர். இது பெரோனியம் எலிபண்ரம், பெரோனியா லிமோனியா என பல்வேறு பெயர்களை காலத்துக்கு காலம் கொண்டிருந்தது. தாவரவியலாளர்களின் வகைப்படுத்தலுக்கூடாக இருசொற் பெயர்கள் மாறினாலும் இம்மரம் ரூட்டேசியே (Rutaceae) குடும்பத்தின் உறுப்பினர்.
விளா மரத்தின் இயல்பு ஏறக்குறைய 9மீற்றர் உயரமாக வளரக்கூடிய கடினமான மரமிது. இம்மரத்தின் இலைகள் 5-7 சிற்றிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு சிற்றிலையும் 25-35 மி.மீ நீளமானதுடன் 10-20மி.மீ அகலமானது. இலைகளை கை விரல்களுக் கிடையில் வைத்து நெரிக்கும் போது தேசியினது வாசம் வீசும். ஆதலால் என்னவோ இம் மரம் தேசி,தோடை ஆகியன உள்ளடங்கிய ரூட்டேசியே குடும்ப உறுப்பினராக உள்ளது.
விளா மரத்தின் காய்,கனிகள் வட்டவடிவானவை. 5-9ச.மீ விட்டமுடையவை. கனியின் உட்பகுதியில் சிறிய விதைகளிருப்பினும் அதிலுள்ள சதைப்பகுதி இனிப்பாகவும்
சிலவேளைகளில் துவர்ப்பாகவுமிருக்கும் கனியின் கோது கடினமானது. இதனை
உடைப்பதும் - கடினம்.இக்கனிகளின் மேல்
யானைகளுக்கு அலாதிப் பிரியம்
என்றும் அதனை விழுங்கி பின் முழுமையான கனியாகவே மலத்துடன் வெளியேற்றும் என ஒரு கதையுண்டு. அதிலும் உடைக்காமல் உள்ளெடுக்கப்பட்ட கனியினுள் சதைப்பகுதியனைத்தும் உறுஞ்சப்பட்டபின் கனியின் கோது மட்டும் கழிவாக மலத்துடன் வெளியேற்றப்படும் எனவும் கூறுவார்கள்.
Luuar B56T L60 66DDB5 விளா மரத்திலிருந்து பெறப்படும் காயானது வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுகிறது.பழுத்த பழம் தொண்டை அழற்சியை கட்டுப்படுத்தும் குணமுடையது. நன்றாகப் பழுத்த பழத்திலிருந்து
 
 

வரை
வெளியே எடுக்கப்படும் சதைப்பகுதியை வெறுமனே உண்பார்கள். சிலர் அதற்கு சீனியும் சேர்த்து உண்ணுவதுண்டு. இன்னுஞ் சிலர் அதனை தேங்காய்ப் பாலுடன் சேர்த்து அதற்கு இனிப்பு
சுவையுஞ் சேர்த்து மென்பானமாக
அருந்துவர். இப் பழத்தின் சதையப் பகுதியை உறையவைத்து ஜஸ்கிரிம் தயாரிப்பார்கள். சமையலறையில் சட்னி தயாரிப்பதற்கும் இன்னும் ஜெலி மற்றும் ஜாம் தயாரிப்பதற்கும் விளாம்பழம் பயன்படும்.
இந்தியாவில்
விளாம்பழத்திலிருந்து சுவாசப்பை மற்றும் இதய சுகாதாரத்திற்கான பழச்சாறு தயாரிக்கிறார்கள். காயிலிருக்கும் உட்பகுதிலிருந்து தொடர்ச்சியான இருமலுக்கு தொண்டை அழற்சி,மற்றும் பல் முரசில் ஏற்படும் நோய்களுக்கான மருந்து தயாரிக்கின்றார்கள். அத்துடன் பூச்சிக் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
விளா மரத்தினது இலைகள், மரப்பட்டை,வேர் மற்றும் பழத்தினது சதைப் பகுதியிலிருந்து அனைத்து பாம்புக் கடிக்கான மருந்துகளை தயாரிக்கின்றனர். இதனது கடுமையான கோதிலிருந்து பலவகையான
கைப் பணிப் பொருட்களை தயாரிக்கின்றனர் விளா மரத்தினது மரப்பட்டை உண்ணக்கூடிய பசையை தயாரிக்க பயன்படுகின்றது. மேலும் இம்மரம் மரவேலைப்பாடுகள் செய்வதற்கு உகந்தது என கூறப்படுகின்றது.
இந்துக்களின் சமய
வைபவங்களுக்கு விளாம்பழமும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது.
இந்தோனேசிய மக்கள்
விளாம்பழத்திலுள்ள சதைப்பகுதியை பனஞ்சீனியுடன் கலந்து காலையுணவாக உட்கொள்கின்றனர். இம் மரத்தினது வேர்கள்,இலைகள் மற்றும் மரப்பட்டையில் கூமாரின்(COumarins) மற்றும் ஸ்ரீரொய்டுக்கள் இருக்கின்றன. ஒரு பழத்தில் 36% பழத்திலுள்ள சதைப்பகுதி ஆகும். அத்துடன் சதைப்பகுதியில் 3-5% பெக்ரின் இருக்கின்றது. மரத்திலிருந்தும் அதனது கிளைப்பகுதியலிருந்தும்
31

Page 18
வரை
பெறப்படும் வெள்ளை நிறமற்ற
பதார்த்தம் பசைத்தன்மையுடையது.
இந்த பசையில் 35.5% அரபினோசு மற்றும் சைலோசும், 42.7% கலக்ரோசும், உண்டு.
பழத்திலிருந்து பெறப்படும் அதாவது சதைப்பகுதியின் 100 கிராமில் புரதம் 8%,காபேவைதரேற்று 7.45%,
கல்சியம் 0.17%, பொசுபரசு
0.08%, இரும்பு 0.07% அத்துடன் ரானின்கள் 1.03% உண்டு. இத்தகைய சிறப்பியல்புகளுடைய விளாமரத்தை நடவு செய்து அதன் பல்பயன்களை பெற்றுக்கொள்வோமா? எங்களுர் மரத்தின் சிறப்பை தெரிந்து அதனை விருத்தி செய்து மரவளத்தை வளர்த்தெடுப்போம்.
米米米
பொது அறிவு
நீரிழிவு நோயைக் கண்டு பிடித்தவர்?
பெனடிக் கெஸட் (கனடா 1921)
காளானிலிருந்து தயாரிக்கும் மருந்து எது?
பெஸ்சிலிள்
ஒலிfவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
ஐரோப்பா
வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
சீனா
சேரமன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
1890
"டொக்டர் எனக்கு வயித்தில ஒப்பரேசன்
பண்ணினனிங்களெல்லே? "ம். அதுக்கென்ன இப்ப"
"தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டனின்களா?”
“போட்டனான்”
“ஒரு ரம்ளர் தண்ணி கொடுங்கோ. என்ர வயிறு
ஒழுகுதோண்டு குடிச்சு பார்க்கோணும்”
32
 

வரை
VY யுதிர் போட்டி இல.09
шfia ep. 5oo சோ. கிருஷ்ணதாஸ்
கீழுள்ள புதிர்களுக்கான விடைகளை 05-11-2010 இற்குமுன் எமது முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். சரியான விடையனுப்பிய அதிஷ்டசாலி மாணவருக்கு ரூபா 500.00 வழங்கப்படும்.
சில குதிரைகள், அதே எணர்ணிக்கையில் மனிதர்கள், மனிதர்களில் பாதிப்பேர் குதிரையின் மேல் சவாரி செல்கின்றனர். மனிதர்களில் மற்ற பாதிப்பேர் குதிரைகளை நடத்திச் செல்கின்றனர். கால்களின் மொத்த எண்ணிக்கை 100 எனின் எத்தனை குதிரைகள் இருந்தன?
கேள்விக்குறி இடப்பட்டுள்ள இடத்திலுள்ள எணர் யாது?
3 5 4 2 36 5 4. 92 8 2 2 6 6 9 8
ஒரு விட்டம் நான்கு நேர்கோடுகளால் வெட்டப்படுகின்றது. அதனால் அதிக பட்சமாக எத்தனை துணர்டுகள் கிடைக்கும்?
இதல் 7ல் வெளிவந்த புதிர் போட்டிக்கான விடைகள்
i) 8/(3-(8/3)) i) 9 பந்துகளை மூன்று பிரிவாகப் பிரிக்குக. அவற்றில் இரண்டு பிரிவை
தராசின் இரு புறமும் வைத்து நிறுவையிடுக. தராசின் நிறை அதிகரித்து காணப்படும் பிரிவிலுள்ள மூன்று பந்துகளையும் எடுக்குக. தராசு சமநிலையில் இருந்தால் நிறுவையிடப்படாத பிரிவிலுள்ள 3 பந்துகளையும் எடுக்குக. அவற்றில் இரண்டை இரண்டாவது தரமாக தராசில் இட்டு நிறுவையிடுக. நிறை கூடிக்காட்டும் பந்தே அதிகநிறையுடையது. தராசு சமநிலையில் இருந்தால் நிறுவையிடப்படாது இருக்கும் பந்து நிறைகூடியதாகும்
i) ஹரியின் தற்போதைய வயது - 35
மகனின் தற்போதைய வயது - 11
33

Page 19
வரை
கடற்குதிரை என்பது கடலில் வாழும் ஒரு வகை மீனாகும். பிற மீன்களைப் போலவே இதற்கும் செதில்களும் துடுப்புக்களும் உள்ளன. எனினும் இது மீனைப் போல் வடிவம் கொண்டதன்று. கடல் குதிரையின் வால் குரங்கின் வால் போல நீண்டும், சுருண்டும் காணப்படுகின்றது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம். உடலமைப்பை பொறுத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்றும், விரிந்தும்
காணப்ப டுகிறது. உடலில்
பக்கவாட்
டுக்
மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படு கின்றன.
சுமார் 6 செ. மீ முதல் 17 செ. மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது. முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும்
கோடுகள்
செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறிதாக இருந்தாலும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்பிக் கொள்ளும் வசதியுடையதாகவும் உள்ளது.
டைற்குதி0ை
தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது. பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை இருநூறு ஆண்கடற்குதிரைகளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல ஆறு வாரங்கள் நன்கு பேணி பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாள ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.
米米米
34
 
 

வரை
மக்சேசே விருதுகள்
ØM(A
நோபல் பரிசுக்கு உலகளாவிய மதிப்பும் அங்கீகாரமும் - உண்டென்பதை அனைவரும் அறிவர். இதற்கு அடுத்த நிலையில் உலகின் கவனத்தை ஈர்த்த பிரசித்தமான பரிசுதான் மக்சேசே பரிசாகும்.
பிலிப்பைன்ஸின் முன்னாள் சனாதிபதி றேமன் மக்சேசே(1907 1957) நினைவாக 1958 ம் வருடம் ஓகஸ்ற் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது இந்த பரிசு. 20000 அமெரிக்க டொலர்களும் சான்றிதழும் மக்சேசேயின் உருவம் பொறித்த தங்கப்பதக்கமும் இப்பரிசிலில் அடங்கும்.
அரசுப்பணி, பொதுப்பணி, சமுதாயத் தலைமை, இலக்கியமும் பொதுசனத் தொடர்புசார் கலையாக்கமும் சர்வதேச புரிந்துணர்வு, ஆகிய துறைகளில் நடுவர்களினால் பரிந்துரைக்கப்படும் ஐவருக்கு இப்பரிசு ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றது.
ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1958ல் ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் இது றொக்பெல்லர் சகோதரர்கள் நிதியத்திலிருந்து உருவாயிற்று.
பொறி திருத்துனர் (MechamC) ஆக வாழ்க்கையை தொடங்கிய
றேமன் மக்சேசே தமது எளிமை, திறமை, ஆளுமை, நிருவாகத்திறன், பொதுமக்களின் நல்வாழ்வு, சேவை மனப் பான்மை, தன்னலமற்ற தன்மை என்பவற்றைக் குறிக்கோளாக கொண்டு வாழ்ந்ததால் பிலிப்பைன்ஸ் மக்களின் அன்புக்குப் பாத்திரமானவர்.
அமெரிக்கரின் பிடியிலிருந்து 1946ல் ஜூலை 4ம் திகதி விடுதலையடைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராய் விளங்கிய காலத்தில் குழப்பத்துக்கு காரணமாயிருந்த யப்பானியருக்கு எதிரான மக்கள் படை (Hukbala hap) என்னும் அமைப்பினரை தமது அன்பாலும் அதிகாரத்தாலும் புரிந்துணர்வாலும் அடக்கி பிலிப்பைன்ஸை அமைதியும்
35

Page 20
வரை
செழிப்பும் நிறைந்த வளர்ச்சிப் பாதையிலே இட்டுச் சென்றார்.
1953 ல் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களின் 68.9 % வாக்குகளை பெற்று வெற்றி பெற்று சனாதிபதியானார் 1957 மார்ச் 17ம் திகதி நடைபெற்ற விமான விபத்தில் சாவைத் தழுவி உலக மக்களின்
உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றார். பெரும்பாலும் ஆசியர்களே மக்சேசே விருதினை இதுவரை பெற்று வந்துள்ளனர். அன்னை தெரேசா, இசைப் பேரரசி M.S. சுப்புலட்சுமி, திபெத்திய தாலாய் லாமா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
തബംzaങ്ങ്
39 ஆம் பக்கத் தொடர்ச்சி. (சர்வதேச கிறிக்கெட்டில் சில.)
ஜோர்ஜ் மற்றும் அவரது மகன் ரொன் ஹாட்லிகள் மேற்கிந்திய தீவுகளுக்கு விளையாடி இருக்க பேரன் டீன் ஹாட்லி இங்கிலாந்திற்காக 90 களில் விளையாடினார். F2005 மேயில் பஹீட்கான்
பாகிஸ்தானுக்கு விளையாடியதன் மூலம் அவர்களது குடும்பமும் இந்த பெருமையை பெற்றது. அவரது தந்தை மஜிட்கான் 63 டெஸ்ட்களை பாகிஸ்தானுக்கு விளையாடியிருந்தார். தாத்தா ஐகான்கீர் கானோ இந்தியாபாகிஸ்தான் பிரிவதற்கு முதல் இந்தியாவிற்கு 4 டெஸ்ட்களில் விளையாடியிருக்கிறார். *கடைசி விக்கட்டுக்காக பெரிய
இணைப்பாட்டங்கள் பெறப்படுவது அரிதாக நிகழும் ஒரு விடயமாகும் அதிலும் 10ம்,11ம் இலக்க துடுப்பாளர்கள் இணைந்து 100க்கு மேல் ஓட்டங்களை பெறுவது அரிதிலும் அரிது. ஒரு நாள் போட்டிகளில் இந்த சாதனை வெகு அண்மையில் பாகிஸ்தானின் முகமட் அமீர்(73ஆகி)
சையத்அஜமல் (33) அமிபோரால் 103 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்றபோது முறியடிக்கப்பட்டது. அவர்கள் முறியடித்ததும் பாகிஸ்தானில் அப்துல்ரசாக் வக்காா யுனில் பெற்ற 72 இணைப்பாட்டம் ஆகும்.
°டெஸ்ட் போட்டிகளில் இந்த
சாதனையின் சொந்தக்காரர்கள் இங்கிலாந்தின் கென ஹிக்ஸ்(63), ஜோன் சோ(59ஆகி)ஆவர். இவர்கள், 1966 இல் ஒவலில் மேற்கிந்தியாவுக்கு எதிராக 128 ஓட்டங்களை பெற்றனர்.
*டெஸ்ட் போட்டி ஒன்றின்
இனிங்ஸ்சொன்றில் மிகக்குறைந்த வயதில் இரட்டைச்சதம் விளாசிய வீரர், பாகிஸ்தானின் ஜாவிட் மியான்டாட் ஆவார். 1976-77 இல் கராச்சி டெஸ்ட்டில் நியூசிலாந்திற்கு எதிராக 206 ஓட்டங்களை பெறும்போது (அது அவரது 3வது போட்டி) அவருக்கு வயது 19 வருடமும் 141 நாட்களும் ஆகும்.
米米米
36

வரை
மணியோசை மனதுக்கு மகிழ்வையளித்தது. ஆலயச் சூழலில் நின்ற மரங்கள், சில்லென்று வீசும் காற்று இன்னும் புத்துணர்வை உண்டுபண்ணியது. பூசைகள் ஆரம்பமானது. சேமக்கலம், சங்கு, மேளம் போன்றன செய்யும் வேலைகளை எல்லாம் சீரான தாளகதியில் இயந்திரமொன்று செய்துகொண்டிருந்தது.
தனது புதிய மோட்டார் வண்டியை ஒரமாக நிறுத்திய ரங்கன் காலைக் கழுவிக்கொண்டு பக்திப்பரசவத்தில் ஆயலத்தினுள் நுழைந்தான். இருபத்திரண்டு வயதுநிரம்பிய அந்த வாலிபன், தன்னைப் பலர் கவனிப்பது போன்ற பிரமையில் எடுப்பாக நடந்தான். தனது ரீசேட்டை வேட்டிபோல இடுப்பில் கட்டி, வேட்டி இல்லையே என்ற குறையை நிவர்த்திசெய்தான். விபூதி, சந்தனம், மந்திரித்த நூல்களை அணிந்து ஒரு நவின பக்திமானாகவே காட்சி தந்தான். ஒருவரையொருவர் பார்த்து பெண்கள் தங்களை காலமாற்றத்திற்கேற்ப அலங்கரித்துக்கொள்ளத் தவறவில்லை. குட்டைப் பாவாடையுடனும் பன்னியன்களுடனும் சில பெண்கள் சினிமா நடிகைகளை
விஞ்சினர். இருந்தாலும் இந்துவுக்குரிய அடையாளங்களுடன் மந்திரித்த கயிறுகள், மாலைகள் என அவர்கள் ஆண்களைவிட தாங்களே கலாச்சாரத்தைப் பேணுபவர்கள் என
மெய்ப்பித்தனர்.
كمY
'g,C(ی
சிலர் அடிக்கடி வாசலுக்கு
வருவதும் போவதுமாய் நின்றனர். ஆனால் வெளியில் வகைவகையான காலணிகளோ காரணம் புரியாமல் கால்களுக்காகக் காத்துக்கிடந்தன. விதம்விதமான நகை ஆபரணங்கள் அவர்களுக்கு அழகைக் கொடுத்ததோ
37

Page 21
வரை
இல்லையோ அவரவர் மனதில் பயங்களைக் கொடுக்கத் தவறவில்லை. இவை எவற்றையும் கவனிக்காதவனாய், ஆனால் தன்னை பலர் கவனிப்பது போன்ற பிரமையில் மட்டும் ரங்கன் அந்த ழரீரங்கனை தரிசித்தபடி சுற்றிவந்தான்.
சுற்றி வந்தவனின் எதிரே பற்றவைக்கும் பார்வையுடன் ஒரு பாவை, சித்தபிரமை பிடித்தவன் போல ரங்கன் பார்த்துக்கொண்டேயிருந்தான். பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் போல இருந்தது. டெனிம் துணியில் இறுக்கமான பாவாடை, ரீசேட் என நவநாகரிக மகாலட்சுமியாக காட்சியளித்தாள் அந்த இளமங்கை. இருந்தும் அவ்விடத்தில் கலாச்சாரத்தை இன்னும் மதிக்கும் சில கண்கள் கூச்சப்பட்டன.
அந்த பாவையின் பார்வையும் அவன் மேல் விழுந்தது. கண்கள் சந்தித்தன, இதயங்கள் சிந்திப்பதை சில கணம் நிறுத்தின. சபல வேல்வழியால் சல்லடையாய்ப்போனவனுக்கு சுலபமாக வெளியே வர முடியவில்லை. அவளைப்பார்த்தபடியே அவனுடைய கையொன்று கையடக்கத் தொலைபேசியில் வராத குறுந்தகவலை பார்க்க விரைந்து
செயற்பட்டது. அவளும் தான் அணிந்திருக்கும் ஆடைகளையும் சரியாக இருக்கிறதா என்று இப்போதுதான் சரிபார்த்தாள். இருவரது சரீரமும் ஆலயம் தொழுவதற்குரிய கும்பிடுதல் சுற்றிவருதல், தோப்புக்கரணம் போன்ற செய்கைகளைச் சரியாகவே செய்துகொண்டிருந்தன.
அவனுடைய மனம் அவள் தனக்கே கிடைக்கவேண்டும் என்று கணக்குப் போட்டது. பூசைகள் முடிந்து பிரசாதங்கள் வழங்கியபின் தயக்கத்துடன் அவளை அணுக முற்பட்டான். அப்போது இன்னொருவன் "தர்சி சரியா (BLT6lILDIT?”
"சரி வாறன்” என்றவள் ரங்கனையும் பார்த்து “போட்டுவாறனண்ணா” என்றாள்.
இடிந்துபோனவன் சற்று நேரம் இயங்காமல் நின்றான். அப்போது எதிரே நின்ற ஒரு பெண் "என்ன பிரச்சினை ரங்கன்? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்கள்?" அதிர்ச்சி கலந்த ஏமாற்றத்திலோ என்னவோ எதிரே நிற்பவள் தன் காதலி என்றுகூட அவனுக்கு உடனே ஞாபகம்
-gaDSLUG
வரவில்லை.
வாழ்க்கை என்கிற ஆடையில்
நன்மை தீமை என்கிற இரண்டு
நூல்களும் இருக்கும்
-ஷேக்ஸ்பியர்
38

໙ຽງ
"ே2007 Des வரையான தகவல்களின் படி
ஒரு அணி வென்ற ஒரு நாள் போட்டிகளில் அதிகமாக பங்கேற்ற வீரர்களில் சனத்ஜெயசூரியா 233, முதலில் இருந்தார். தொடர்ந்து ரிக்கிபொன்டிங் 232, சச்சின் டென்டுல்க்கர் 217, இன்சமாம் உல்ஹக் 215 மற்றும் அடம்சில்கிறிச் 205, ஆகியோர் உள்ளனர். வசிம் அக்ரம் 199 போட்டிகளில் வென்றுள்ளார். 20:20 போட்டிகளில் கமரன் அக்மல் மற்றும் சொகைப் மல்லிக் பாகிஸ்தான் வென்ற 22 போட்டிகளிலும், சசிட்அவ்ரீடி 21 போட்டிகளிம் பங்கேற்றனர்(தற்போது இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன).
*உலகின் முதலாவது டெஸ்ட்போட்டியில் அவுஸ்திரேலியாவின் சார்பில் பனர்மன் 165 ஓட்டங்களை பெற்றார். அந்த இனிங்சில், அவுஸ்திரேலியா பெற்றது வெறும் 245 ஓட்டங்கள் மட்டுமே. ஒரு தனி ஆள் மொத்த ஓட்டங்களில் அதிக வீதமான ஓட்டங்களைப் பெற்ற சாதனை இதுவே. ஒரு நாள் போட்டிகளில் மேற்கிந்தியாவின் விவியன் சிச்சட்ஸ் 1984 இல் ஒல்ட்ருவட்டில் மொத்த ஓட்டங்களை 272 ல் 69.48மூ (189) தனியாக பெற்றார். 2020 இல் கிறிஸ்கெயில், மேற்கிந்தியா2009 உலகக்கிண்ண அரை இறுதியில்
101 மொத்த ஓட்டங்களில் 63ஐ(62.37மூ) பெற்றார். *டெஸ்ட் இனிங்ஸ் ஒன்றில், ஒருவர் கூட சதம் அடிக்காமல் அணி ஒன்று 500 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற 4 சந்தர்ப்பங்கள் பதிவாகி உள்ளன. அவை முறையே, நியூசிலாந்திற்கு எதிராக 1976-77 இல் இந்தியா பெற்ற 7 விக்கட் இழப்புக்கு 524 (அதிகபட்ச தனிநபர் ஓட்டம் 70), 2009 இல் போத்தில் பெற்ற 7 விக்கட்டுக்கு 520, 1997-98 இல் தென்னாபிரிக்கா பெற்ற 517 (அதிகபட்ச தனிநபர் ஓட்டம் 87) மற்றும் 1981-82 இல் மெல்பேர்னில் பாகிஸ்தான் பெற்ற 500, 8 விக்கட் இழப்புக்கு (அதிகபட்சம் 95) ஆகியவை ஆகும். *கிறிக்கெட்டில் (டெஸ்ட்கிறிக்கெட்டில்) தந்தை-மகன்-பேரன் என்று மூன்று பரம்பரையும் விளையாடிய சந்தர்ப்ப ங்கள் இரண்டு உண்டு. ஒன்று ஹேட்லி குடும்பம் மற்றது கான் குடும்பம்.
(தொடர்ச்சி 36 பக்கம்
39

Page 22
வரை
நீங்களும் சந்தாதாரராகலாம்! நீங்களும் இந்த அறிவியல் பல்சுவை மாசிகையின் சந்தாதாரராகுவதன் மூலம் எமது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும், ஓராணர்டுக்கான சந்தா ரூபா. 410 மட்டுமே! கீழே உள்ள மாதிரிச் சந்தாப் படிவத்தைப் பிரதிசெய்து அதில் கேட்கப்பட்ட விபரங்களை எழுதி, சுன்னாகம் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக காசுக்கட்டளையை அனுப்பிவைப்பதன் மூலம் அல்லது கீழ்க்கணிட வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தி பற்றுச் சீட்டை அனுப்புவதன் மூலம் “வரை” யின் சந்தாதாரராக இணையுங்கள்.
காசுக்கட்டளை அனுப்பவேண்டிய முகவரி: நிர்வாக ஆசிரியர்,
“வரை” வெளியீட்டகம், மகுடம் அசோசியேற்ஸ், Commercial Bank - இணுவில் சந்தி, Chunnakam இணுவில், A/C No. 81 07.004995
யாழ்ப்பாணம்.
வங்கித் தொடர்புக்கு: R. Thananjeyan
சந்தாய் படிவம்
திகதி . ஒப்பம். .
"வரை"யுடனான தொடர்புகளுக்கு
இ. தனஞ்சயன் - 0776701661, இ. கிருபாகரன் - 0717884331 (யாழ்ப்பாணம்), நாகராசா சரவணன் - 0777866754 (கொழும்பு), க. அன்பழகன் - 077 2092013, 077 9876937 வவுனியா, மன்னார்), ஆ. பரமேஸ்வரன் - 0779791366 (மட்டக்களப்பு).
இந்த அறிவியல் பல்சுவை மாசிகை "வரை” குழுமத்தினரால் மகுடம் அசோசியேற்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. நிறுவனத்தி (Dğ5] TP, O2, 745 1960
40


Page 23
> - 3 해월 2% 흑* 国w
*
灣鱷
密溪 劑 No
「이치히데히리에리|리히터히시리그 speIIIəN “peos, A'W'w ‘euses opeos. Jessunųnsey ogog
 sēri -> 0 : D No. It » +1om
|5||0110105 Ddo